diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0747.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0747.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2018-30_ta_all_0747.json.gz.jsonl"
@@ -0,0 +1,469 @@
+{"url": "http://globalrecordings.net/ta/language/knz", "date_download": "2018-07-19T11:59:43Z", "digest": "sha1:56IGC6E7TPYLMIICVQILQ5J6ITO2S3D4", "length": 8667, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Samoma மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: knz\nGRN மொழியின் எண்: 16271\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kalamse: Loroni)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C30840).\nSamoma க்கான மாற்றுப் பெயர்கள்\nKalamsé (ISO மொழியின் பெயர்)\nSamoma க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Samoma\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://haisathaq.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-19T11:00:10Z", "digest": "sha1:XGXFUWSSYBJNMOF2NWG7ATLWPHPBV7DB", "length": 39332, "nlines": 136, "source_domain": "haisathaq.blogspot.com", "title": "தமிழ் வாசம்: November 2010", "raw_content": "\nஇந்தோனேசியாவுக்கு இது சோதனைக் காலம். ஆழிப் பேரலையின் ஊழித் தாண்டவம் ஒருபுறம். மெராப்பி எரிமலையின் நெருப்புச் சீற்றம் மறுபுறம். பூமி எப்போது அதிரும் எரிமலை எப்போது வெடிக்கும் கணித்துச் சொல்ல முடியாதவாறு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது காலம். மின்னல் தாக்கிய இடத்தில் இடி வீழ்ந்ததைப் போல் திணறி நிற்கின்றனர் மக்கள்.\nசிங்கப்பூரைச் சுற்றியுள்ள நாடுகளில் மிகப் பெரியது இந்தோனேசியா. சுமார் 15,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டது அந்நாடு. எரிமலைகளுக்கும் அங்கே பஞ்சமில்லை. அதனால் அங்கே இயற்கைப் பேரிடர்கள் அவ்வப்போது வந்து போகும். பூமி அதிரலாம். அல்லது எரிமலை வெடிக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்தே வரலாம். அந்த நாட்டு மக்களின் உயிரை உலுக்கும் கவலை இது தான்.\nஅக்டோபர்’ 10 இறுதியில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவை நில நடுக்கம் புரட்டிப் போட்டது. ரிக்டர் அளவுகோலில் ஏழு புள்ளி ஏழு என்று பதிவாகி இருந்தது அந்த அதிர்வு. அதைத் தொடர்ந்து எழுந்தது ஆழிப் பேரலை. அது சுருட்டிக் கொண்டு போன உயிர்களின் எண்ணிக்கை 600 க்கும் அதிகம். கடலுக்கருகே இருந்த பத்துக் கிராமங்கள் காணாமல் போயின. அலையின் ஆதிக்கம் தணிந்த பிறகு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.\nபூகோள ரீதியில் இந்தோனேசியா ஆபத்தான வளைவில் அமைந்திருக்கிறது. எனவே அழையா விருந்தினர் போல அவ்வப்போது அங்கே இயற்கை பேரிடர் வருவது வாடிக்கையாயிற்று. இதற்கு என்ன காரணம்\nபுவி அமைப்பியல் படி இந்தோனேசியா அமைந்திருக்கும் பூமியின் பரப்பில் அதிகமான தட்டுக்கள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று உராய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஐரோப்பா ஆசியாக் கண்டத்தின் தெற்குப் பகுதியின் விளிம்பில் அமைந்திருக்கிறது இந்தோனேசியா. தெற்குப் பகுதியில் உள்ள ஆசியக் கண்டத்தின் தகடும், மேற்குப் பக்கத்தில் இந்தியக் கண்டத்தின் தகடும் மோதுகின்றன. அதனால் விளிம்பில் இருக்கும் இந்தோனேசியாத் தீவுகள் அதிர்வுக்குள்ளாகின்றன என்கிறார் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பயன்பெறும் புவி அமைப்பியல் துறையின் பேராசிரியர் Dr.R.R. கிருஷ்ணமூர்த்தி.\nArc Of Fire என்று சொல்லப்படும் “நெருப்பு வளைய”ப் பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் இயற்கைப் பேரிடர்கள் (பூகம்பம் அல்லது எரிமலை வெடிப்பு) அடிக்கடி ஏற்படுகின்றன என்கிறார் தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகக் கட்டவியல் துறைத் தலைவர் பேராசிரியர் Dr. செந்தமிழ்க்குமார்.\n2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலைக்குப் பிறகு சில முன்னெச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அக்டோபர்’10 - ல் ஆழிப் பேரலை வந்த போது அந்த முன்னெச்சரிக்கைக் கருவிகளால் எந்தப் பயனும் இல்லை.\nஆழிப் பேரலை முன்னெச்சரிக்கைக் கருவியின் அமைப்பு சூட்சுமம் நிறைந்தது. கடல் நீர் மட்டத்தின் மேலுள்ள கருவி, கடலுக்கடியில் புவியின் மேலுள்ள கருவியோடு தொடர்பு கொள்ளுமாறு அமைக்கப்பட்டிருக்கும். கடலின் தரைமட்டத்தில் எந்த அதிர்வு வந்தாலும் அது உடனே மிதவைக் கருவிக்குச் சமிக்ஞையை அனுப்பும். பிறகு, அங்கிருந்து அதிர்வின் நிலை செயற்கைக் கோளுக்கு அனுப்பப்படும். பின்னர் அது கண்காணிப்பு மையத்துக்கு வந்து சேரும்.\nகடலின் மேற்பரப்பில் உள்ள மிதவைக் கருவிகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றாலும், மக்களுடைய கவனக்குறைவான செயல்களால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அந்நிலையில அந்தக் கருவிகள் செயலிழந்து போகும். எனவே, முன்னெச்சரிக்கைச் சமிக்ஞை வந்து சேருவதில் தடை ஏற்படலாம் என்கிறார் முனைவர்.R.R. கிருஷ்ணமூர்த்தி.\nஆசிய வட்டாரத்தின் பிற நாடுகளைப் போலல்லாமல் இந்தேனேசியா கடலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் வந்து சேருவதற்குரிய கால அவகாசம் அங்கே குறைவு.\nபூகம்பத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை முன் பூகம்பம், முதன்மைப் பூகம்பம், பின் பூகம்பம் எனப்படும். முன் பூகம்பத்தை உணரும் போது தான் கடலுக்கடியில் உள்ள கருவி செயல்படத் தொடங்கும். சீஸ்மீக்ராப் எனப்படும் பூகம்பத்தை அளக்கும் கருவியாக இருந்தாலும், ஆழிப் பேரலை முன்னெச்சரிக்கைக் கருவியாக இருந்தாலும் இதுவே நடைமுறை. சில தருணங்களில் முன் பூகம்பம் முன்னெச்சரிக்கையைத் தாமதமாகத் தான் வந்தடையும். அதற்குள், முதன்மைப் பூகம்பம் வந்து விடும். நில அதிர்வின் வேகம் அதிகமாக இருப்பதால் முதன்மைப் பூகம்பம் சீக்கிரமாக வந்து விடும். அதை முன்னெச்சரிக்கைக் கருவிகள் உணரும் முன்னரே ஆழிப் பேரலைகள் கரையைக் கடந்து விடும் என்கிறார் பேராசிரியர். Dr. செந்தமிழ்க்குமார்.\nஅக்டோபர்’10 இரண்டாம் வாரத்தில் வந்த ஆழிப் பேரலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியது இந்தோனேசிய அரசாங்கம். வெந்த புண்ணில் வெடியை வைத்தது போல வந்தது இன்னொரு சோதனை.\nசென்ற மாத இறுதியில் ஜோக் ஜாக்கர்தாவின் மெராப்பி எரிமலை தீக் கங்குகளைக் கக்கத் தொடங்கியது. அதன் தாக்கத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70,000 க்கும் அதிகமான மக்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nபூமித்தட்டுடைய நகர்வை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்றையொன்று அழுத்தும் விதமான நகர்வு(Convergence). இன்னொன்று ஒன்றையொன்றை விட்டுப் பிரியும் நகர்வு (Divergence). இவற்றுள் கன்வெர்ஜன் என்பது ஒன்றையொன்று அழுத்தும் போது அதிக அழுத்தம் ஏற்படும். அப்போது பூமி தன்னைத் தானே சரி செய்து கொள்ளும். அந்நிகழ்வு பூகம்பமாகவோ அல்லது எரிமலையாகவோ வெளியே வரும்\nடைவர்ஜன் - ஒன்றை ஒன்றை விட்டு விலகுவது எப்போதாவது நடக்கும். அதன் விளைவாகப் பெரிய பெரிய பள்ளத்தாக்குகள் எல்லாம் உருவாகும்.\nநவம்பர்’10 5 ஆம் தேதி மீண்டும் சீற்றத்துடன் வெடித்தது மெராப்பி. அதிலிருந்து கிளம்பிய வெப்பப் புகை, சாம்பல், தீக்கனல் ஆகியன சுற்று வட்டாரத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கின. இன்னும் கூட புகைந்து கொண்டே இருக்கிறது மெராப்பி. நூற்றுக்கு மேற்பட்ட எரிமலைகளின் எச்சரிக்கை நிலையைக் கண்காணிப்பு அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.\nஎரிமலையின் சீற்றம் உச்சமடைந்த வேளையில் இந்தோனேசியாவுக்கான விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ஜக்கர்தா, ஜோக் ஜக்கர்தா விமான நிலையச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. எரிமலையின் சீற்றம் தணிந்த பிறகு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.\nஎரிமலை சீற்றத்துடன் இருக்கும் போது சல்பர் பார்டிகிள்ஸ் எனப்படும் கந்தகத் துகள்கள் வெளியாகும். அவை காற்றில் பரவி விமானத்தின் இயந்திரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். சில வேளைகளில் வானில் விமானத்தின் ஓடுபாதையைத் தாண்டியும் புகை மண்டலம் ஆக்கிரமிக்கும் போது பேரிழப்புகள் ஏற்படலாம்.\nவானில் ஒன்பதிலிருந்து பத்து கிலோ மீட்டர் உயரத்தில் தான் விமானத்தின் ஓடுபாதை அமைந்திருக்கிறது. ஆனால் எரிமலையால் உண்டாகும் புகை மண்டலம் 20, 30 கிலோ மீட்டர் உயரம் வரை பரவக்கூடும். அதனால் வெப்ப மாற்றம் ஏற்படும் சாத்தியமும் உண்டு.\nபுவி அமைப்பியல் படி எந்நேரமும் இயற்கைப் பேரிடரைச் சந்திக்கும் நாடாக இருக்கிறது இந்தோனேசியா. அதை உணர்ந்துள்ள அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து வருகிறது. எனினும் இயற்கைப் பேரிடர்கள் எப்போதும் சொல்லி விட்டு வருவதில்லை என்பது தான் மிகப் பெரிய சோகம்.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 11:42 PM 3 மறுமொழி விழுது\nஉலகப் பொருளியல் சந்தையில் கடும் பரபரப்பு. காரணம் - Currency War என்னும் \"நாணயப் போர்\". உலகின் அனைத்து நாடுகளும் தங்களுக்கென தனி நாணயத்தை நிர்ணயித்துள்ளன. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் போது அந்தந்த நாடுகளின் அல்லது பொதுவான ஒரு நாணயத்தில் அந்தப் பரிவர்த்தனை அமையும்.\nகடந்த பத்தாண்டுகளில் உலக நாடுகள் இரண்டு குழுக்களாகப�� பிரிந்து கிடக்கின்றன. ஏற்றுமதி, இறக்குமதியின் அடிப்படையில் வரும் இலாபத்தைக் கொண்டு அந்தப் பிரிவு அமைந்துள்ளது.\nஅமெரிக்கா, பிரிட்டன் ஆகியன உலகின் மற்ற நாடுகளிடமிருந்து அதிகமான பொருட்களை தருவிக்கின்றன. அது அவர்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை விட அதிகம். எனவே அவை வர்த்தகப் பற்றாக்குறையுடைய நாடுகள் (Deficit Countries) என்றழைக்கப்படுகின்றன.\nமறுமுனையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன. ஆனால், பிற நாடுகளிடமிருந்து குறைந்த அளவிலேயே பொருட்களைத் தருவிக்கின்றன. எனவே அவற்றை வர்த்தக உபரியுடைய நாடுகள் (Surplus Countries) என்று சொல்லலாம்.\nஉதாரணமாகச் சீனா, வெளிநாட்டில் இருந்து நிறையப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறது. அதன் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதியை விட அதிகமாக இருந்ததென்றால் அது வர்த்தக உபரி. அதாவது வெளியிலிருந்து அதிகப் பணம் நாட்டுக்குள் வருகிறது. அதே சமயம், ஒரு நாடு, வெளிநாட்டில் இருந்து நிறையப் பொருட்களை வாங்குகிறது. ஆனால் அதன் சொந்தப் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதியாகவில்லை என்றால் அது வர்த்தகப் பற்றாக்குறை.\nஅண்மையில், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சிறு தேக்கம். சீனா தனது நாணய மதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது தான் பிரச்சினைக்குக் காரணம் என்று சீறுகிறது அமெரிக்கா. சீனாவின் இந்தப் போக்குக்கு ஈடுகொடுக்க முடியாமல் அமெரிக்க நிறுவனங்கள் திண்டாடுகின்றன. அதனால் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பு என்று புலம்புகிறது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ள மறுக்கிறது சீனா. தன் நாணயத்தின் மதிப்பை ஏற்றினால் உள்நாட்டில் வேலையின்மை பெருகும். மக்களின் வாழ்க்கைத் தரம் வாட்டம் காணும். அதனால் நாணய மதிப்பை உயர்த்தும் போக்கை வேகமாகச் செய்ய மாட்டோம் என்று உடும்புப் பிடியாகச் சொல்கிறது சீனா.\nஉலகின் மற்ற பல நாடுகளின் நாணயத்துக்கும், சீன நாணயத்துக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. சீன நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது அந்நாட்டின் அரசாங்கம். பெரும்பாலான மற்ற நாடுகளில் அப்படியல்ல.\nஉதாரணமாக, அமெரிக்கன் டாலர், யூரோ, ஜாப்பனீஸ் யென் இவற்றை அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விழுக்காடு தொகை கொண்டு சிங்கப்பூர் டாலருக்கான மதிப்��ு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சீன நாணயத்துக்கான மதிப்பை அங்குள்ள அரசாங்கம் தான் நிர்ணயம் செய்கிறது. மாறாக, சந்தையின் போக்கு அதை நிர்ணயிப்பதில்லை.\nவளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு நாணய மதிப்பைக் குறைப்பது அல்லது போட்டி போட்டுக் கொண்டு நாணயத்தின் மதிப்பைக் கூட்டாமல் இருப்பது நாணயப் போர் (Currency War) என்று சொல்லப்படுகிறது.\n2008 ஆம் ஆண்டு பொருளியல் மந்தநிலையில் அதிகம் அடிவாங்கியது அமெரிக்கா. அந்தச் சரிவிலிருந்து அது இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்புத் தொடர்ந்து குறைந்து கொண்டே போவது அந்நாட்டைக் கடுமையான கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.\nநாணயப் போரால் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் சில நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டன. நாட்டின் ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது. வேலை வாய்ப்புகள் குறைந்து விடக்கூடாது என்ற அச்சம் அதற்குக் காரணம்.\nதாய்லந்து, பிரேசில் ஆகிய நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பு வடாமல் இருப்பதற்காகச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. வர்த்தகத்தில் என்ன லாபம் வந்தாலும் அதில் 2 விழுக்காடு வரி கட்ட வேண்டும் என்ற விதியைக் கொண்டு வந்தது பிரேசில். 15 பெர்சன்ட் வித் ஹோல்டிங் அறிமுகம் செய்தது தாய்லந்து. அதாவது அங்கே முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கும் போது அதில் 15 விழுக்காட்டைத் தாய்லந்து அரசாங்கம் எடுத்து வைத்துக் கொள்ளும்.\nஉலகின் பெரும்பாலான நாடுகளின் வர்த்தகப் பரிவர்த்தனை அமெரிக்க டாலரின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் நிதிச் சந்தையில் மிகப் பெரும் சந்தேகச் சுழல். தொடர்ந்து அமெரிக்க நாணயத்தைக் கையிருப்பாக (Reserve Currency) வைத்துக் கொள்ளலாமா அல்லது வேறு வகையில் முதலீடு செய்யலாமா அல்லது வேறு வகையில் முதலீடு செய்யலாமா என்ற யோசனையில் இருக்கிறார்கள் சில முதலீட்டாளார்கள். தனிநபர்கள் மட்டுமல்ல, சில நாடுகளுக்கும் அமெரிக்க டாலர் மீது இருந்த நம்பிக்கை சரியத் தொடங்கியிருக்கிறது. உலக அளவில் பெருமளவு வர்த்தகப் பரிவர்த்தனை அமெரிக்க டாலரின் அடிப்படையில் நடந்தாலும் ஒரு நம்பிக்கையின்மை தொக்கி நிற்கிறது.\nஎப்போதும் அமெரிக்கா டாலரிலேயே முதலீடு செய்ய��ம் இந்தியா, ஈராண்டுகளுக்கு முன்பு தடாலடியாக ஈரோவில் முதலீடு செய்யத் தொடங்கியது. காரணம் அமெரிக்க டாலரின் தொடர்ச்சியான வீழ்ச்சி. யூரோ அமெரிக்க டாலரை வீழ்த்தி விட்டு மேலே வந்து விடும் என்ற நம்பிக்கையும் அதற்குக் காரணம். ஆனால் இவ்வாண்டுத் தொடக்கத்தில் கீரிஸில் தகராறு வந்த போது யூரோவின் மீதான நம்பிக்கையும் பொய்த்துப் போயிற்று.\nஉலக நாடுகள் அமெரிக்க டாலரைத் தங்கள் நம்பிக்கைக்குரிய நாணயமாக (Reserve Currency) வைத்துள்ளன. கணிசமான அமெரிக்க டாலரைச் சீனாவும் தன் நம்பிக்கைக்குரிய நாணயமாக வைத்திருக்கிறது. எனவே நாணயப் போர் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை அச்சுறுத்திச் சாதிக்க முடியாது.\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக சைனீஸ் யுவான் 21 விழுக்காடு மேலே போயிருக்கிறது. அதே நேரம், அமெரிக்காவுடைய வர்த்தகப் பற்றாக்குறை இன்னும் அதிகமாகிப் போனதே தவிர குறையவில்லை. இன்னொன்று, அமெரிக்கா 90 நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்குறையில் தத்தளிக்கிறது. அதனால் சீனாவைக் குற்றம் சொல்லிச் சாதிக்க முடியாது. அமெரிக்காவில் நடந்த அண்மையத் தேர்தலின் போது மக்களிடம் குறை சொல்ல ஓர் ஆள் தேவை. அதற்குச் சீனாவைப் பலியாடாக்கி விட்டது.\nஆசிய வட்டாரத்தில் வேகமான பொருளியல் வளர்ச்சியைக் கொண்டுள்ள நாடு சீனா. அதன் நாணயமான யுவானை உலக நாடுகள் (Reserve Currency) நம்பிக்கைக்குரிய நாணயமாக்கும் காலம் கனியுமா\nசீன நாணய மதிப்பு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படாமல், சந்தை சக்திகளால் தீர்மானிக்கும் ஒரு நிலை வந்தால் அது சாத்தியமாகலாம். அமெரிக்கன் டாலர், யூரோ, யுவான் ஆகியன Reserve Currency ஆகலாம். காரணம் சீனாவில் பண வீக்கம் அதிகமானால் அதை அவர்களால் தாங்க முடியாது. அதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குள் சீன யுவான் Reserve Currency ஆகலாம் என்பது பொருளியல் நிபுணர்களின் முன்னுரைப்பு.\nஉலக நாடுகள் நாணயப் போர் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் G - 20 நாடுகளின் அமைச்சர் நிலைக் கூட்டம் அண்மையில் நடந்தது. நாணயப் போர் பற்றிய கிலியைப் போக்க சில முடிவுகள் அங்கே முன்மொழியப்பட்டன. நாணயத்தின் மதிப்பை நாங்களாகக் குறைக்க மாட்டோம். அதைச் சந்தைச் சக்திகளே தீர்மானிக்கலாம். நடப்பு வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறையை தேசிய உற்பத்தியுடைய பங்காக வைத்துக் கொள��வோம் என்பன அந்த மாற்றங்கள். ஆனால் இவை நடைமுறைக்கு வர இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தேவை.\nஉலக நாடுகள் தங்கள் நாணய மதிப்பின் பரிவர்த்தனை விகிதத்தைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அனைத்துலகப் பண நிதியம் (IMF) 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாணய மாற்று மதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது அதன் முக்கியக் குறிக்கோள். ஆனால் இப்போதுள்ள சூழலில் அனைத்துலகப் பண நிதியம் மட்டும் தனித்து எதையும் செய்து விட முடியாது. ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.\nஅனைத்துலகப் பண நிதியத்தைப் பொறுத்தவரையில் வளரும் நாடுகளுக்கு தற்போது பெரிய முக்கியத்துவம் இல்லை. அது பெரிய முட்டுக்கட்டை. அண்மையில் நடந்த G 20 மாநாட்டில் கூட இது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆசிய நாடுகளுக்குக் கூடுலாக ஆறு விழுக்காடு ஓட்டிங் பவர் கொடுக்கிறதுக்காக முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படியொரு சூழல் வந்தால் நல்ல முன்னேற்றம் வர வாய்ப்புண்டு.\nஜி 20 அமைச்சர் நிலைக் கூட்டத்துக்குப் பிறகு நாணயப் போர் பற்றிய பதற்றம் ஓரளவு தணிந்து வருகிறது. ஆனால் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அனைத்துலகப் பண நிதியம், உலக வங்கி ஆகியன இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு மேலும் வலுச் சேர்க்குமா\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 10:51 PM 0 மறுமொழி விழுது\n(ஹஜ்) பயணிகளின் கனிவான கவனத்திற்கு....\nஇவ்வாண்டு 2010 ஹஜ் பயணத்தை மேற்கொண்டவர்களின் நலன் கருதி புதிய சேவையை இந்திய அரசு மக்காவில் தொடங்கியுள்ளது.\nபுனிதப் பயணம் சென்றவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய அரசு, மக்காவில் முதன் முறையாக 24 மணி நேர தொலைபேசிச் சேவையைத் தொடங்கியுள்ளது.\nமக்காவில் உள்ள இந்தியன் ஹஜ் மிஷனை +966 (02) 5496000 அல்லது +966 (02) 5458000 ஆகிய எண்களில் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 2:33 AM 0 மறுமொழி விழுது\n(ஹஜ்) பயணிகளின் கனிவான கவனத்திற்கு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33551-2017-07-27-04-25-17", "date_download": "2018-07-19T11:50:38Z", "digest": "sha1:GXCNZ4CZIVTOI3GGY3SPBHB5NDQUWPUV", "length": 18232, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "தேசியப் பாடலும் மதப்பிரிவினையும்...", "raw_content": "\nதேசபக்தி - தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல\nதேசி�� கீதத்துக்குள்ளதான் தேச பக்தி ஒளிஞ்சிருக்கா\nதேசியக் கொடிக்குள் பதுங்கியிருக்கிறதா தேசபக்தி\nசஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; 7 தமிழருக்கு ஒரு நீதியா\nகாந்தியாரின் கொலையாளி கோபால் கோட்சேவின் விடுதலையும் இராசிவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலையும்\nநீதித்துறையை பிடித்தாட்டும் காவிப் பேய்\nநீதிபதிகளையும் விடாத ‘இராசி எண்’ மூடநம்பிக்கை\nபெரம்பலூர், பெரியார் அன்பர் இளைய பெருமாள் செயபால் அவர்களுடன் நேர்காணல்\nஅசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா\nநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள்\nதமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்\nஜாதி - மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஅலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nவெளியிடப்பட்டது: 27 ஜூலை 2017\nநீதிமன்றங்கள் நாட்டிலும் மக்களிடமும் சமநிலையையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது..ஆனால் சமீபமாக வந்து கொண்டிருக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் மக்களிடம் பிரிவினையை தூண்டும் வகையிலும் உள்ளது.. நீதிமன்றங்கள் ஆளும் கட்சிகளின் மதம்சார்ந்த கொள்கைகளை உறுதிசெய்யும் அமைப்புகளாக மாறிவிட்டனவா\nஒரு நீதிபதி மயில் தேசிய பறவையாக இருப்பதற்கு விளக்கம் சொல்லிவிட்டு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்று கூறுகிறார், இன்னொரு நீதிபதி திரையரங்குகளில் தேசியகீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்கிறார்.. அந்தவரிசையில் இப்போது கல்விநிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் தேசியப்பாடல் கட்டாயமாக படவேண்டுமென்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்..\nஇந்தியா என்பது பன்மை கலாச்சாரம் கொண்ட நாடு என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் எப்படி இவர்கள் நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் நமக்கெழும் முதல் அச்சம்.. 1937-ம் ஆண்டு வந்தே மாதரம் பாடலை தேசிய பாடலாக அறிவித்தபோது இந்தியா முஸ்லீம் லீக் மற்றும் ஜின்னாவிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன.. ஆனால் காந்தி மற்றும் நேருவின் ஆதரவால் தேசிய பாடலாக அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.. வரலாற்று நெடுக்க வந்தே மாதரம் பாடலுக்கு இருந்த ஆதரவை போலவே எதிர்ப்பும் இருந்திருக்கிறது.. எதிர்ப்புக்கு முதன்மை காரணம் வந்தே மாதரம் பாடலில் இந்துக்களின் தெய்வமான துர்க்கையை புகழ்வது போல இருக்கிறது இதனால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென தனது நியாயமான ஆதங்கத்தை பிற மதத்தினர் வெளிப்படுத்தினர்..\nசுதந்திரத்திற்கு பிறகான அரசுகள் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு முதல் இரண்டு பகுதிகளை மட்டும் பாடினால் போதுமே அறிவித்தன.. ஆனால் இப்போது இப்படி ஒரு தீர்ப்பின்முலம் மீண்டும் இந்தியாவில் மதரீதியிலான ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.. மேலும் பாடவிரும்பாதவர்கள் எழுத்துப்பூர்வமாக அதற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டுமென நீதிமன்றம் இந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.. விளக்கமளிக்க விரும்பத்தவர்களின் நிலை என்னவாகும் என்பது அடுத்த நமக்கெழும் கேள்வி..\nஇப்போது இப்படி ஒரு தீர்ப்பை அறிவிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தான் தேசபக்தன் என்பதை நிரூபித்தே ஆக வேண்டுமா இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தான் தேசபக்தன் என்பதை நிரூபித்தே ஆக வேண்டுமா.. நீதிமன்றங்கள் இந்தியாவில் தேசபக்தி குறைந்து விட்டதென கருதுகின்றனவா.. நீதிமன்றங்கள் இந்தியாவில் தேசபக்தி குறைந்து விட்டதென கருதுகின்றனவா.. நீதிமன்றங்கள் அப்படி ஒரு முடிவிற்கு வந்திருக்குமானால் எதை அளவுகோலாக வைத்து இந்த முடிவிற்கு வந்தன.. நீதிமன்றங்கள் அப்படி ஒரு முடிவிற்கு வந்திருக்குமானால் எதை அளவுகோலாக வைத்து இந்த முடிவிற்கு வந்தன.. என்ற ஏராளமான கேள்விகள் முன்னெழுகின்றன..\nஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் அலுவலகங்களிலோ, கல்வி நிலையங்களிலோ கொண்டாடப்படும்போது பிற மதத்தினர் பங்கேற்கவில்லை என்றால் அது மதம்சார்ந்த விஷயமாக மட்டுமே பிறரால் புரிந்து கொள்ளப்படும்.. ஆனால் வந்தே மாதரம் பாடலை பிற மதத்தினர் பாடாமல் விலகி இருக்கும்போது அவர்களின் தேசபக்தியின் மீது கேள்வி எழுப்பப்படும்.. தேசிய பாடலை பாடாதவர்கள் இந்தியர்களா என்ற கேள்வி முன்வைக்கப்படும்.. இந்தியர்களா இருக்க விரும்பாதவர்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்படும்.. இந்தியர்களா இரு��்க விரும்பாதவர்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும் பாகிஸ்தான் போகலாம் என்று மதவாதிகள் பிரச்சாரம் செய்ய தொடங்குவார்கள்..பிறகு தேசத்தின் ஒற்றுமை கேள்வி குறியாகும்..\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போதும், குஜராத் கலவரத்தின்போதும் ஆண்களின் ஆடைகள் உருவப்பட்டு இந்துவா முஸ்லிமா என்று மதவாதிகள் சோதனை செய்து அதன்முலம் படுகொலைகளை அரங்கேற்றினார்கள்..இப்போது இந்த தீர்ப்பு இந்துக்களிலிருந்து பிறமதத்தினரை வேற்றுமைப்படுத்தி காண்பிக்க ஒரு கருவியாக பயன்படபோகிறது.. அதன்முலம் அவர்களை தேசத் துரோகிகளாக சித்தரிக்க போகிறார்கள்..\nஓர் மொழி, ஓர் உணவு, ஒற்றை வரி, ஒற்றை தேர்வு, ஒற்றைப் பாடலாக நீண்டு கடைசியில் ஒற்றை மதமாகவும், ஒற்றை கலாச்சாரமாகவும் இந்த நாட்டை மாற்றுவதற்கான முன்னோட்டமாகவே இவையெல்லாம் பார்க்கப்படும் இந்த சூழலில், இவைகளுக்கெல்லாம் நீதிமன்றங்களும் துணைபோகின்றனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.kanyakumari.com/index.php/780-the-importance-of-the-doctor-s-role-inculcating-children-s-illnesses", "date_download": "2018-07-19T11:30:10Z", "digest": "sha1:NQRK2VTA3WSOTEDF7XN2S2DYQ2L35URQ", "length": 13425, "nlines": 357, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - குழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் : கலெக்டர் பிரசாந்த் வடநேரே", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nகுழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் : கலெக்டர் பிரசாந்த் வடநேரே\nPrevious Article மோடி அலை ஓய்ந்துவிட்டது, ராகுல் காந்தி அலை வீசுகிறது” திருநாவுக்கரசர் பேச்சு\nNext Article குமரி மாவட்டத்தை சேர்ந்த 842 மாணவ-மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகிறார்கள்\nகுழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் கிராமங்களில் பணியாற்றும் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.\nநாகர்கோவில், மே 09: நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு குழந்தைகள் நோய்கள் குறித்த பயிற்சி முகாம் நேற்று கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. இதன் தொடக்க விழாவுக்கு அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் சோமசேகர் தலைமை தாங்கினார். சமூக மருந்தியல் துறை பேராசிரியர் சுரேஷ்பாலன் வரவேற்று பேசினார். இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் குணசிங், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.\nசிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nகுழந்தைகள் இந்த சமூகத்தில் மிகப்பெரும் அங்கமாக திகழ்கிறார்கள். அவர்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சிறு, சிறு நோய்களுக்கு கூட டாக்டர்களாகிய நீங்கள் முக்கியத்துவம் அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதை உங்கள் கடமையாக நினைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளின் ஊட்டச்சத்து விஷயத்தில் டாக்டர்களும், பெற்றோரும் இணைந்து கவனம் செலுத்த வேண்டும். கிராமப்பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரே நேரத்தில் பல குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நோய் தாக்கம் இருந்தால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிப்பதுடன், மாவட்ட நிர்வாகத்துக்கும் அதுதொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் சம்பந்தப்பட்ட நோய் எப்படி உருவானது என்ன காரணம் என்பதை கண்டறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள முடியும். எனவே குழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் கிராமப்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நானும் ஒரு குழந்தைக்கு தந்தை என்ற முறையில் குழந்தைக���ுக்கான மருத்துவம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கும் தெரியும். எனவே இந்த பயிற்சி முகாம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.\nஇவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார்.\nPrevious Article மோடி அலை ஓய்ந்துவிட்டது, ராகுல் காந்தி அலை வீசுகிறது” திருநாவுக்கரசர் பேச்சு\nNext Article குமரி மாவட்டத்தை சேர்ந்த 842 மாணவ-மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகிறார்கள்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://photography-in-tamil.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-19T11:30:11Z", "digest": "sha1:LMFWZHXEQ5HWJTXLYYCTOYKCMBZ6WSIP", "length": 9450, "nlines": 225, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "வண்ணப் ”புகை”ப்படம் | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nLabels: Gimp, பிற்தயாரிப்பு, பிற்தயாரிப்பு பாடம்\nஇந்தப் ”புகை”ப் படங்களை பார்த்து இருப்பீர்கள்.\nபல வண்ணப்புகை எப்படி என்று பலர் கேட்டு இருந்தார்கள். கிம்ப்பில் செய்வது பற்றி இங்கே.\nமுதலில் கருப்பு பின்னணியில் வெள்ளைப்புகையை படமெடுத்துக் கொள்ளுங்கள். கிம்பில் படத்தை திறந்து Colors -> Invert செய்தால்\nவெள்ளைப் பின்னணியில் கருப்பு புகையாக மாறிவிடும்.\nஒரு Transparent லெயரை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nஇனி Gradient Blend Tool யை தேர்வு செய்து, shape:Radial என்று மாற்றிக் கொள்ளுங்கள்.\nGradient யை கிளீக்கினால் பல வண்ணத்தில் படங்கள் இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்.\nபடத்தின் நடுவில் கிளிக்கி ஒரு ஓரத்துக்கு இழுத்தால் ( Click and Drag )\nஇராமராஜனின் சட்டைப்போல் ஒரு வண்ணக் கலவை படத்தில் வரும்.\nஇனி Mode: color மாற்ற வேண்டியதுதான் பாக்கி.\nமிக மிக பயனுள்ள தகவல் நன்றி.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனித���்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://tamilsonglyricsintamil.blogspot.com/2014/08/aracha-sandhanam-chinna-thambi-1991.html", "date_download": "2018-07-19T11:18:32Z", "digest": "sha1:D5H4VBHH4HRIWTUDHGQ3V2G2Z2YH65HE", "length": 8287, "nlines": 189, "source_domain": "tamilsonglyricsintamil.blogspot.com", "title": "அரச்ச சந்தனம் - Aracha sandhanam - Chinna Thambi [1991] | Paadal Varigal and Tamil Song Lyrics in Tamil and English", "raw_content": "\nஒரு மந்திரம் செஞ்சதுப் போல்\nஅதை தேடிப் போகும் தேனீ\nஅந்த ஏழு லோகம் பார்த்திராத\nஎன் சொல்லு பலிக்கும் பாரு\nஅரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே\nஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே\nமுழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன\nஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன\nஅவ சிரிக்க நினைப்பு சிதறும்\nஅரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே\nஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே\nமுழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன\nஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன\nபுதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://timeforsomelove.blogspot.com/2009/05/15.html", "date_download": "2018-07-19T11:36:11Z", "digest": "sha1:E2LGIBJRE5FUIQC3VSXWJOB4ZAMN7EDP", "length": 19665, "nlines": 282, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 15", "raw_content": "\nஒரு 15 நிமிடம் கழித்து உள்ளே வந்தாள் சந்தியா. ரமேஷ் சோஃபாவிலே உட்கார்ந்து, டி வி யில் அமெரி���்கன் ஃபுட் பால் பார்த்துக்கொண்டு இருந்தான். உள்ளே நுழைந்த சந்தியா, நேராக கிச்சன் போனாள். 15 நிமிடத்தில் இருவருக்கும் காஃபி போட்டுக்கொண்டு வந்தாள். காஃபியை சோஃபாவுக்கு அருகில் இருந்த காஃபி டேபிலில் வைத்துவிட்டு, அவன் அருகில் அமர்ந்தாள். அவள் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் சென்று.\n\"அந்தம்மா கார் ஸ்டார்ட் ஆச்சா\n'உனக்கு ஸ்போர்ட்ஸ் சேனல் பிடிக்காதுல்ல. சேனல் மாத்தவா\n\"நான் உங்க மடியில் படுத்துக்கவா ரமேஷ்\nஅவன் சோஃபாவின் ஓரத்தில் நகர்ந்து அமர்ந்தான். சந்தியா, ரமேஷ் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள். அவளை குனிந்து பார்த்த ரமேஷ், எவ்வளவு அழகா இருக்காள் என்று நினைத்தான். சந்தியாவிற்கு பெரிய கண்கள், அழகான பெரிய உதடுகள். அவள் மீதிருந்து ஏதோ மணம் வந்தது. குனிந்து அவள் கன்னத்தில் லேசாக முத்தமிட்டான், ரமேஷ்.\n\"நீ ரொம்ப அழகா இருக்க சந்தியா\"\n\"உங்களுக்கு கவிதை எழுத்தெரியுமா, ரமேஷ்\n\"எனக்கு எதையுமே ரசிக்க மட்டும்தான் தெரியும். கவிதையா சாண்ஸே இல்லை\n\"ரசிப்பதுடன், நான் மயங்கிறார்போல கிஸ் பண்ணவும் உங்களுக்கு தெரியுது, ரமேஷ்\"\n\"எனக்கு காவியாவை அவ்வளவு தெரியாது. It is OK. You made it up now\"\n\"I know what I need to know for now. எதுவும் கிரிமினல் குற்றம் எதுவும் பண்ணியவர்போல தெரியலையே\n\"இப்போ என்ன வேணும் உனக்கு\n\"என்ன வேணுமானாலும் என்னிடம் இருந்து எடுத்துக்கலாம்\n\"American football ரூல்ஸ்ல தெரியுமா, உனக்கு\n\"இது லைவ் இல்லை, சும்மா பழைய கேம் தான் போடுறாங்க. சொல்லித்தரவா\n\"நம்ம ஊர் soccer மாதிரித்தானே 11 ப்ளேயர் விளையாடுறாங்க\n\"இது ரொம்ப வேற மாதிரி\"\n\"இப்போ ஒரு டீம், டிஃபெண்ஸ் ஆடுறவங்க, இந்த பால் இருக்குல்ல அதை 30 யார்ட் ல இருந்து \"கிக் ஆஃப்\" பண்ணுவாங்க\"\n\"அந்தப்பக்கம் கிக் பண்ணி விடுவாங்க\"\n\"அந்த அஃபெண்ஸ் ஆடுற ப்ளேயர்கள் அதை எடுத்துக்கொண்டு இந்தப்பக்கம் ஓடி வருவாங்க\"\n\"offense team இந்த எண்ட் வரை கொண்டு வந்துட்டா (100 yards) \"டச் டவுன்\" னு சொல்லுவாங்க\"\n\"6 பாயிண்ட், அவங்களுக்கு கிடைக்கும்\"\n\"அதோட, அப்புறம் 2 யார்ட்ல இருந்து இந்த கோல் போஸ்ட்க்கு இடையில் கிக் பண்ணி ஒரு கோல் போட்டுட்டா அதுக்கு ஒரு extra பாயிண்ட் கிடைக்கும். ஸோ 6 ப்ளஸ் 1 . மொத்தம் 7 பாயிண்ட் ஸ்கோர் பண்ணலாம்\"\n\"உங்களுக்காக இதெல்லாம் கேக்கிறேன் இல்லையா\nஅவள் கன்னத்தில் இன்னொரு முத்தம் கொடுத்தான். அவள் செல் பேசி அலறியது. அவள�� ஃபோனை எடுக்கவில்லை.\nLabels: அனுபவம், சமூகம், சிறுகதை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெரு��ை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\n பெண் பன்றி உங்களை காதலிக்கிறதா\nவன்முறையின் தோல்வியா சாரு அண்ணாச்சி \nநான் சொன்னதும், சொல்லாததும் நடந்தது\nநக்கீரனை லட்சம் மடங்கு நம்பவா\nரசித்த ஐயப்பன், முருகன் பாடல்கள்\nநக்கீரன் செய்தது பொறுக்கித்தனம் என்றால்\nபிரபாகரன் : ஒரு சகாப்தம்\nயார் சாவையும் வச்சு பொழைப்பு நடத்தும் விமர்சகர்கள்...\nஹீரோ ராமதாஸ், ஹீரோயின் ஜெயா\nபா ம க/ ராமதாசு தோல்வி ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி\nபார்ப்பானிடம் உள்ள ஒரு நல்ல விசயம்\nகாங்கிரஸ், ஜெ யுடன் கூட்டமைத்து ஆட்சி அமைத்தால் \nதிருநாவுக்கரசரால் ரித்தீஸ்க்கு வெற்றி வாய்ப்பு\nஜெயலலிதாவின் இந்திய அமைதிப்படை புலிகளுக்கு எதிரி\nகமலஹாஷனின் தசாவதாரம் ஹிந்தியில் படுதோல்வி\nதமிழ்மணத்தில் பெண் பதிவர்களின் உயர்தரம்\nசீமான் என்கிற முட்டாளின் உளறல்கள்\n“ரஜினி - எ வி எம்” மின் கெமிஸ்ட்ரி\n\"கலியுலக கர்ணன்\" ஜே கே ரித்தீஷ்\nதசாவதாரத்தின் தோல்வியும் சிவாஜியின் வெற்றியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ualwaysthinkof.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-19T11:21:25Z", "digest": "sha1:UZFBTWGOBGOUISRYQZXKV34HQXYWNLZL", "length": 3294, "nlines": 76, "source_domain": "ualwaysthinkof.blogspot.com", "title": "U Always Think of: May 2010", "raw_content": "\nஇந்த வலையில் உள்ள தகவல்கள் சமைக்க சுவைக்க ..\nஇன்னும் ஒரு வலை ...\nக வரிசை - ஒரு செய்யுள்\nஒரு வரிசை செய்யுள் . என்னை மிகவும் கவர்ந்த்தது இதன் பொருள் , பல முறை நான் ஆமை - முயல் கதை கேட்டுள்ளேன் . அதே கதை தூய தமிழில் எனை மெய் ...\nகோயில் சென்றேன் இறைவனை காண , நேற்று ஒருவரில்லா உன் வீட்டில் , இன்று என்ன கூட்டம் என கேட்டேன் இறைவனை . சொன்னான் , \" ...\nதனித்து விடப்பட்டேனோ, தொலைந்துபோனேனோ தெரியவில்லை ... உன் சில மணி நேர மௌனம் என் பல நாட்களை பறித்து போனதடி அன்பே .... ...\nமனமே நீ இல்லாமல் இவ்வுலகில்லை .\nநிலைமாறும் உலகில் நிலையாக என்னோடிருப்பது நீ சிந்திக்க வைப்பது நீ சிந்தனையை செயலாக மாற்றுவதும் நீ செய்த தீமையை சுட்டிகாட்டுவதும் நீ...\nநல்லவையோ தீயவையோ உன்னுள் அதை உறங்க வைக்க முடியுமே தவிர அழிக்க இயலாது தீயவையை தொடர்ந்து உறங்க வைக்க கற்றுக்கொள் , நல்லவையை என்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-781363.html", "date_download": "2018-07-19T11:50:39Z", "digest": "sha1:4PJXJS2JCWQOS3J4RHEGT4KPRPUFM42A", "length": 10170, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "திருவண்ணாமலை, போளூரில் ரயில் மறியல்: 122 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை, போளூரில் ரயில் மறியல்: 122 பேர் கைது\nகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை,போளூரில் செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 122 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nரயில் மறியல்: இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து கரக்பூர் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை திருவண்ணாமலையில் பகல் 12.30 மணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாலை 3.30 மணிக்கு திருப்பதியில் இருந்து மன்னார்குடி சென்ற ரயிலை எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n50 பேர் கைதாகி விடுதலை: இவ் விரு மறியல் சம்பவங்களில் ஈடுபட்டதாக சுமார் 50 பேரை போலீஸôர் கைது செய்தனர்.\nபோளூர் ரயில் நிலையத்தில் திருப்பதி-மன்னார்குடி ரயில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.55மணிக்கு வந்தது. இந்த ரயில் முன் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் மதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒரு பெண் உள்பட 57 பேரை டிஎஸ்பி கணேசன் தலைமையில் காவல் துறையினர் கைது செய்தனர்.\nநாம் தமிழர் கட்சியினர்: இதேபோன்று விழுப்புரத்திலிருந்து கரக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் போளூருக்கு மதியம் 12.55க்கு வந்தது. மாவட்டச் செயலாளர் பாலாஜி தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் இந்த ரயில் முன் மறியலில் ஈடுபட்டனர்.\nஇந்த ரயில் போளூரில் வழக்கமாக நிற்பது இல்லை. நாம் தமிழர் கட்சியினர் ஓடி வருவதை கண்டு டிரைவர் ரயிலை 2 நிமிடம் நிற்க வைத்தார். டிஎஸ்பி கணேசன், ரயிலை வேகமாக இயக்குமாறு ரயில் என்ஜின் டிரைவரிடம் கூறினார். 15 பேரையும் போலீஸôர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.\nஇவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nகடையடைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்த பல்வேறு தமிழ் அமைப்புகள், வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொருத்தவரை பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/apr/17/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-20-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2901851.html", "date_download": "2018-07-19T11:58:01Z", "digest": "sha1:DRYFPRJNGANZFRWF5JJ7A26H3TDAXOOA", "length": 11474, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "சரக்கு போக்குவரத்து வரி வருவாய் 20 சதவீதமாக உயரும்: அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு தகவல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nசரக்கு போக்குவரத்து வரி வருவாய் 20 சதவீதமாக உயரும்: அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு தகவல்\nமின்னணு பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டதால் புதுவை மாநிலத்தின் சரக்கு போக்குவரத்து வரி வருவாய் 2018-19-ஆம் நிதியாண்டில் 20 சதவீதமாக உயரும் என்று, அரசு ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பின் புதுவை மாநில பொதுச் செயலாளர் லட்சுமணசாமி தெரிவித்தார்.\nஇது குறித்து செய்த��யாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:\nபுதுவையில் பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. புதுவை அரசு தனிக் கணக்கு தொடங்கியதால் நிதிப் பற்றாக்குறை உருவாகியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டது.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார நடவடிக்கைகள் சுருங்கிவிட்டன. 5 ஆயிரம் ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் மாதம்தோறும் வழங்காததால், வாங்கும் சக்தி குறைந்து வியாபாரத்தின் வளர்ச்சி தடைபட்டது.\nஅரசின் சிக்கன நடவடிக்கையால் இந்த ஆண்டு ரூ.180 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கது.\nகடந்த 2013-14-இல் வரி வருவாயின் வளர்ச்சி பூஜ்ஜியமாக இருந்தது. தற்போது, வரி\nவருவாயின் வளர்ச்சி, மற்ற மாநிலங்களுக்கு இணையாக 16.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇதற்காக ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், நிதித்துறைச் செயலர் ஆகியோருக்கு பாராட்டுகள். தற்போது நடந்து முடிந்த யூனியன் பிரதேச மாநாட்டில் ஆளுநர், புதுச்சேரி அரசின் நிதி நிலைமை சீரடைந்துள்ளது என பதிவு செய்துள்ளார். மாநிலங்களுக்கான சரக்கு போக்குவரத்து பரிவர்த்தனையை மின்னணு மூலம் (இ.வே பில்) நடைமுறைப்படுத்துவதால், வரி வருவாய் 2018-19-இல் 20 சதவீதமாக உயரும்.\nமேலும், வரும் காலங்களில் நிதிப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை புதுவை அரசு விரைவாக எடுக்க வேண்டும். அரசு விதிகள், ஆணைகளுக்கு உள்பட்டு அதிகாரிகள் செயல்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் வீணாகும் சுமார் ரூ.500 கோடியை பொதுமக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிட முடியும். புதுவைக்கான தனிக் கணக்கை திரும்ப பெறச் செய்தால், மத்திய அரசு வழங்கும் நிதி 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயரும். மத்திய அரசு வழங்கிய நிலக்கரியை திரும்பப் பெற்றால் ஆண்டுக்கு ரூ.1000 கோடி புதுவை அரசுக்கு வரியில்லா வருவாயாக கிடைக்கும்.\nஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை மத்திய அரசே வழங்க நடவடிக்கை எடுத்தால், புதுவை அரசுக்கு ரூ.650 கோடி மீதமாகும்.\nமுதல்வர் நாராயணசாமி இந்தக் கருத்துகளை செயல்படுத்தினால் வரும் காலங்களில் பொதுமக்களின் நலத் திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தலாம்.\nபுதுவையில் பணிக் கலாசாரத்தை சீரமைப்பது பற்றி யாருக்கும் கவலை இல்லை. அதனால்தான் ஊழியர்கள் தாமதமாக வரும் சூழல் உள்ளது. 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி புரிந்தால் ஊழல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.\nஆனால் ஆட்சியாளர்களும், உயர் அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டியவர்களை தொடர்ந்து அதே துறையில் 5 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிய வைத்துள்ளனர். இதுவே பணி கலாசார சீரழிவுக்கு காரணம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/27/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2656927.html", "date_download": "2018-07-19T11:50:48Z", "digest": "sha1:VFHX2LIS6RSBF3QD7MRUH2RBKOBNTDKU", "length": 9422, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக மாவட்ட செயலாளர்கள் சென்னை வர திடீர் அழைப்பு- Dinamani", "raw_content": "\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் சென்னை வர திடீர் அழைப்பு\nசென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் இன்று சென்னைக்கு வரவேண்டும் என்று திடீரென அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் பரபரப்பு நிகழ்வுகளும் சிக்கல்களும் நடந்து வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் பதவி ஏற்றுக்கொண்டார்.\nஅதிமுகவின் சட்டவிதிகளின்படி தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சொல்லி தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது உரிய பதிலை பிப்.28-ஆம் தேதிக்குள் (செவ்வாய்கிழமை) அளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 17-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.\nதேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிப்பதற்கான வேலையில் தற்போது டி.டி.வி.தினகரன் ஈடுபட்டுள்ளார். சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே, இன்றைக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை தயார் செய்து, அதில் சசிகலாவின் கையெழுத்தை பெறுவதற்காக இன்று மாலை டி.டி.வி.தினகரன் பெங்களூரு செல்வார் என்று கூறப்படுகிறது.\nஇதற்கான வேலை ஒருபுறம் நடந்தாலும், மற்றொரு புறம் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு நிர்வாகிகள் செல்வதை தடுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முதல் அதிமுக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார்.\nஇந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்களை இன்று சென்னைக்கு வருமாறு திடீரென அழைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் இன்று சென்னை வருவார்கள் என்று தெரிகிறது. திடீர் அழைக்கப்புக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.\nமாவட்ட செயலாளர்கள் சந்திப்பு போயஸ் கார்டன் இல்லத்திலேயே டி.டி.வி.தினகரன் தலைமையில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.easttimes.net/2018/03/11.html", "date_download": "2018-07-19T11:44:11Z", "digest": "sha1:6KCNT4FXTA672YKSZGTEL45IMX7MAG7U", "length": 3595, "nlines": 48, "source_domain": "www.easttimes.net", "title": "ஈரானில் விமான விபத்து - 11 பேர் பலி!!! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / ஈரானில் விமான விபத்து - 11 பேர் பலி\nஈரானில் விமான விபத்து - 11 பேர் பலி\nஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம் நேற்று ஈரான் மலைப்பகுதியில் கீழ�� விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 11 பேரும் பலியாகியுள்ளனர்.\nஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்ற துருக்கி நாட்டை சேர்ந்த தனியார் விமானத்தில் 11 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த விமானம் ஈரான் நாட்டு மலைப்பகுதியில் சென்றபோது கீழே விழுந்து நொறுங்கியது.\nஇந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் பலியாகினர் எனவும், ஈரான் மலைப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருவதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து விமானம் தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மீட்புப் படையினருடன் அங்கு விரைந்து சென்று சிதறி கிடந்த 11 பேரின் உடல்களை மீட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே கடந்த மாதம் ஈரானில் நடந்த விமான விபத்தில் 66 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஈரானில் விமான விபத்து - 11 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=be51f3a34dd7a23548960a71a0b0f67c", "date_download": "2018-07-19T11:48:26Z", "digest": "sha1:VJNYHWZRQYVDNVMZHQBSHAVKBLX4TF4E", "length": 18727, "nlines": 354, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nபெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம் Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணான கண்ணே நீ கலங்காதடி யார் போனா என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி Sent from my SM-G935F using Tapatalk\nஅத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா Sent from my SM-G935F using Tapatalk\nமஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் Sent from my SM-G935F using Tapatalk\nசிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் அவன் தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன் குறு குறு என்னும் பார்வையிலே கொஞ்சும் நெஞ்சைச் சிறை செய்வேன்\n ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்...\nகண்ணா…கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை\nகண்ணில் தெரியும் வானம் கையில் வராதா புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் நானும் வாழ வழி இல்லையா பூமியில் ஏழைகளின் ஜனனம் அது கடவுள் செய்த...\n* நீ வந்த நொடி நிஜமா* நிஜமா* நீ நான் நாம் நிஜமா* ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி...\nநல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன்\nஅழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் காதல் பெண் பாவை கண் பார்வைபாட்டாகப் பாடும் Sent from my SM-G935F using Tapatalk\nஇதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ Sent from my SM-G935F using Tapatalk\nஇதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ\nஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்* அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் Sent from my...\nசொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் Sent from my...\nதாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா தொலைதூர நிலவே வா தொட வேண்டும் வானே வா Sent from my SM-G935F using Tapatalk\nமேகமே தூதாக வா அழகின் ஆராதனை தென்றலே தாலாட்ட வா இளமை முந்தாணையை Sent from my SM-G935F using Tapatalk\nபோகுதே போகுதே என் பைங்கிளி வானிலே நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே Sent from my SM-G935F using Tapatalk\nவான் வருவான் வான் வருவா......ன் பவான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் வரும்முன் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் Sent from my...\nகாற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே அலைபோல நினைவாக… சில்லென்று வீசும் மாலை நேர Sent from my SM-G935F using Tapatalk\nகேளு மகனே கேளு ஒரு கொடும கதைய கேளு**** தினம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கவுந்த கதைய கேளு* Sent from my SM-G935F using Tapatalk\nகை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன் வாழ்வு கண்டால் கண்மூடி நின்றால் காதல் கொண்டால் Sent from my SM-G935F using Tapatalk\nதாமரைப் பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே Sent from my SM-G935F using Tapatalk\nபச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ.... அள்ளி தந்த அன்னை சொல்லி தந்த தந்தை* உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது\nவெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா Sent from my SM-G935F using Tapatalk\nமுத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ Sent from my SM-G935F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "http://karudannews.com/?m=20180410&paged=2", "date_download": "2018-07-19T11:51:45Z", "digest": "sha1:N2QWZI6SJBSISXVRT5XPN46YRNIMOLMD", "length": 9707, "nlines": 74, "source_domain": "karudannews.com", "title": "April 10, 2018 – Page 2 – Karudan News", "raw_content": "\nபெண்ணின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது\nடயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் 03 பிரிவு தோட்டத்தில் 10.04.2018 அன்று மாலை 5 மணியளவில் தேயிலை மலையில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வீட்டு தேவைக்காக விறகு கொண்டுவர சென்ற ஒரு பிள்ளையின் தாயான சுந்தரலிங்கம் மல்லிகா (வயது 58) என இணங்காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டயகம பிரதேச வைத்தியசாலையில் பிரே அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தமைக்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை டயகம...\nமலையக மக்களின் முற்றுப்பெறாத பணிகளை இ.தொ.கா தீர்த்து வைக்கும்- கா.மாரிமுத்து புத்தாண்டு வாழ்த்துச்செய்தி\nமலையக மக்களின் முற்றுப்பெறாத பணிகளை இ.தொ.கா தீர்த்து வைக்கும்\nபுது வருடம் பிறக்கும் நேரம் இதுதான் – இந்த இரண்டு ராசிகாரர்களால் குடும்பத்திற்கு அதிர்ஷ்டமாம்\nஇந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது.\nமக்களின் உள்ளங்களில் சமாதானமும் இல்லங்களில் மகிழ்ச்சியும் மலரட்டும்- ஆறுமுகன் தொண்டமான் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி\nமக்களின் உள்ளங்களில் சமாதானமும் இல்லங்களில் மகிழ்ச்சியும் மலரட்டும் இலங்கை தேசத்து மக்களின் இல்லங்கள் தோறம் மகிழ்ச்சியும் உள்ளங்கள் தோறும் நிம்மதியம் நிலைபெறும் ஆண்டாக இப்புதுவருடம் அமைவதோடு சமாதானத்திற்காக ஏங்கித் தவிக்கும் அத்தனை உள்ளங்களும் சந்தோஷமடைந்து இலங்கை மனந் திருப்தி கொள்ளும் இனிய வரத்தை இந்த சித்திரைப் புத்தாண்டு தந்தருளட்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தனது சித்திரைப் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது...\nUpdate – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு – கண்டியில் சம்பவம்\nகண்டி திகன ரஜவெல 02 ரம��படவத்த பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என மெனிக்கின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபுதிதாக பிரதேச சபையினை உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்கும் நன்றி;மஞ்சுளா கிறிஸ்டிராஜ்\nபுதிதாக பிரதேச சபையினை உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணிக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுளா கிறிஸ்டிராஜ் தெரிவித்துள்ளார். நோர்வூட் பிரதேச சபையின் முதல் நாள் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புளியாவத்தை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இன்றைய (10.04.2018) அமர்வில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில் இலங்கையில் 200 வருட கால வரலாற்றினை கொண்டுள்ள இந்திய வம்சாவளி மலையக மக்கள் ஏறத்தாழ 12 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11?start=18", "date_download": "2018-07-19T11:48:49Z", "digest": "sha1:FDOP74YH3GLI2CLQDF6JAFIXXDVE5P25", "length": 170619, "nlines": 597, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம்", "raw_content": "\nநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள்\nதமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்\nஜாதி - மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஅலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nநியூ செஞ்சுரி வாசகர் சங்கம்\n142, ஜானி ஜான் கான் ரோடு, இராயப்பேட்டை, சென்னை – 14\nதொலைபேசி: 044-28482441, 26258410 மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2014\n“நான் பேனா பிடித்திருக்காவிட்டால் கத்தி பிடித்திருப்பேன்”- என்று சொன்னவர், மகாகவியும், நாடக மேதையும், நாவலாசிரியருமான மனித நேயர் விக்டர் ஹியூகோ. (1802-1885).\n“விக்டர் ஹியூகோ எழுத்துலகின் அற்புதம்... அவர் இலக்கியங்கள் எல்லாம் வாழ்வின் அனுபவ விளக்கமேயாகும். சென்ற நூற்றாண்டின் அதி மனிதர் (Superman) விக்டர் ஹியூகோ” என்று குறிப்பிடுகிறார், அவரது ‘ஏழைபடும்பாடு நாவலைத் தமிழுக்குத் தந்த யோகி சுத்தானந்த பாரதியார்.\nஎங்கும் குண்டுமாரி பொழிய, வெடி மருந்தின் நெடி காற்றிலே பரவ, பிணமலை குவிய, இரத்தம் பெருகி ஓட, வீரர்களின் போர் வெறிக் குரல்களும், காயம் பட்டவர்களின் ஓலமும் ஒலிக்க, களத்தின் நடுவே இவரது குழந்தைப் பருவம் கூடாரங்களில் கழிந்தது. நெப்போலியனின் தளபதியாக இவர் தந்தை பணியாற்றியதுதான் அச்சூழலுக்குக் காரணம்.\nஆனால், ஹியூகோவின் இளம்பருவ இதயத்தில் கவிதைக் கனலே பற்றி எரிந்துகொண்டிருந்தது;\nஓர் இலக்கிய இதழையும் நடத்தினார். இவரது தந்தையோ இவரை அரசுப் பணியில் சேர்க்கவே விரும்பினார். இளம் கவி அதற்கு ஒப்பவில்லை. “உனக்குக் கவிதையே சோறு போடட்டும் போ” என்று விரட்டிவிட்டார் தந்தை. கவிதைத் தேவி, கவிஞரைத் தனது வறுமைக் கரங்களால் வரவேற்றாள். செல்வமும், செல்வாக்கும் படைத்த குடும்பத்துப் பிள்ளை, கந்தலுடையுடன், கிடைத்த இடத்தில் படுத்துறங்கி, கிடைத்ததை உண்டு. பிச்சைக்காரன் போல் அலைய நேர்ந்தபோதும், கவிதை அவரைக் கைவிட்டுவிடவில்லை. அவர் எழுதிய 335 வரிகள் கொண்ட ஒரு நெடுங்கவிதை பிரஞ்சுக் கழகத்தினரால் பாராட்டப்பட்டு, பரிசும் பெற்று, அவரது வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. பிறகு திருமணம், குழந்தைகள், அவர்களின் மரணங்கள் என, வாழ்க்கை கொந்தளிப்பாக இருந்தாலும், ஓயாத படைப்பாற்றலால் ஹியூகோ பெரும் புகழ் பெற்றார். ஒரு நாளைக்கு 100 வரிக் கவிதை அல்லது 20 பக்க உரைநடையென வெள்ளம் போல் பெருகியது படைப்பு.\nஇவரது ‘ஹெர்நானி’ என்ற நாடகம் உலகப் புகழ்பெற்றது. ஆரம்பத்தில் முடியரசுவாதியாக இருந்த ஹியூகோ, பின்பு குடியரசுவாதியாக மாறினார். மக்கள் படும் துயரங்கள் கண்டு அவரது மனிதநேயம் எழுத்தில் சுடர்விடத் துவங்கியது. அதன் காரணமாகவே அவர் நாடு கடத்தப்பட்டார்\nஆனால், அவரது எழுதுகோல் என்றும் வற்றியதே இல்லை. நூறு நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்தார். எங்கும் மன்னராட்சி நிலவிய காலத்தில், புரட்சி முளைவிடத் தொடங்கியிருந்த அந்த நெருக்கடியான சூழலில், அவரது எழுத்துக்கள் மேல்தட்டு வர்க்கத்தைத் தோலுரித்துக் காட்டின. அதன் காரணமாக எவ்வகைத் துயர்வரினும் அதை ஏற்கத் துணிந்து நின்றார். ஹியூகோவின் ‘இளிச்ச வாயன்’ (லோம் கிரி) என்ற நாவலில், க்விப்ளேன் என்ற அநாதை, பா��ாளுமன்றத்திற்குப்போய் பேசும் எரிமலைப் பேச்சின் ஒரு சிறு பகுதியைப் பாருங்கள்.\n“குழந்தை குட்டி இருப்பவர்களே கேளுங்கள் இந்த நாட்டில் கோடி அநாதைக் குழந்தைகள் பசியாலும் பனியாலும் வாடுகின்றன. நானே அப்படிப்பட்ட குழந்தையாயிருந்தேன். பிரபுத் துவமே, உன் காலடியில் நசுங்கிக் கிடக்கும் ஏழைகளைக் கண்டு இரங்க மாட்டாயா இந்த நாட்டில் கோடி அநாதைக் குழந்தைகள் பசியாலும் பனியாலும் வாடுகின்றன. நானே அப்படிப்பட்ட குழந்தையாயிருந்தேன். பிரபுத் துவமே, உன் காலடியில் நசுங்கிக் கிடக்கும் ஏழைகளைக் கண்டு இரங்க மாட்டாயா உன் நெஞ்சம் கல்லா உன் தங்கக் கால் ஏழையின் தலைமேல் அகம்பாவத்துடன் அழுந்தி நிற்கிறது... பிரபுத்துவமே, அகம்பாவமே, அதிகாரச் செருக்கே, உன் சட்டக் கொடுமையை சௌத்வார்க் பாதாளச் சிறையில் சென்று பார்... பிரபுத்துவமே, அகம்பாவமே, அதிகாரச் செருக்கே, உன் சட்டக் கொடுமையை சௌத்வார்க் பாதாளச் சிறையில் சென்று பார் புழுவினும் கேடாக மனிதனை நடத்துகிறாய் நீ புழுவினும் கேடாக மனிதனை நடத்துகிறாய் நீ இருட் சிறை; ஈரத் தரை; கைகால் விலங்கு; ஏழைக் கிழவனொருவன் வயிற்றில் கருங்கல்... ஆ இருட் சிறை; ஈரத் தரை; கைகால் விலங்கு; ஏழைக் கிழவனொருவன் வயிற்றில் கருங்கல்... ஆ அக் காட்சியைக் கண்டு என் மனம் வெடித்தது அக் காட்சியைக் கண்டு என் மனம் வெடித்தது மூச்சுவிடக் கூட முடியாமல் ஏழைகளின் மார்பில் இரும்புக் காலை வைத்து நசுக்கும் பிரபுத்துவமே, கேள் மூச்சுவிடக் கூட முடியாமல் ஏழைகளின் மார்பில் இரும்புக் காலை வைத்து நசுக்கும் பிரபுத்துவமே, கேள் தங்க மாளிகை கட்டிப் பொங்கும் பிரபுக்களே. ஒருவாய்ச் சோற்றிற்கு ஏழைகள் படும்பாட்டை நீங்கள் அறிவீர்களா தங்க மாளிகை கட்டிப் பொங்கும் பிரபுக்களே. ஒருவாய்ச் சோற்றிற்கு ஏழைகள் படும்பாட்டை நீங்கள் அறிவீர்களா வயிற்றுக் கொடுமையால் பெண்கள் விபச்சாரச் சாக்கடையில் விழுந்து, இருபது வயதிலேயே உடல்நலம் இழந்து கிழவிகள் ஆகின்றனர். ஏழைப் பெண்கள் வயிற்றுக் கொடு மையால் மானத்தை விற்கின்றனர். சீமாட்டி களின் நாகரிக விபச்சாரமோ, சதைக் கொழுப் பால் அட்டூழியம் செய்கிறது. அதையும் என் கண்ணாரப் பார்த்தேன். உங்கள் மாளிகையில் நடக்கும் கொலைகளையும், காமக் களியாட்டங் களையும், கற்பழிவுகளையும் கண்டேன், கண்டேன் வயிற���றுக் கொடுமையால் பெண்கள் விபச்சாரச் சாக்கடையில் விழுந்து, இருபது வயதிலேயே உடல்நலம் இழந்து கிழவிகள் ஆகின்றனர். ஏழைப் பெண்கள் வயிற்றுக் கொடு மையால் மானத்தை விற்கின்றனர். சீமாட்டி களின் நாகரிக விபச்சாரமோ, சதைக் கொழுப் பால் அட்டூழியம் செய்கிறது. அதையும் என் கண்ணாரப் பார்த்தேன். உங்கள் மாளிகையில் நடக்கும் கொலைகளையும், காமக் களியாட்டங் களையும், கற்பழிவுகளையும் கண்டேன், கண்டேன் உங்கள் சிற்றறைகளின் பெரிய பயங்கர இரகசி யங்கள் கண்டு குடல் நடுங்கினேன். ஆயிரம் ஏழைகள் வாழக்கூடிய இடத்தை வளைத்து ஒரு செல்வன் மாளிகை எழுப்புகிறான். அந்த மாளிகை அலங்கார - நாகரிக- பணக்கார- பாப- நரகமா யிருக்கிறதே உங்கள் சிற்றறைகளின் பெரிய பயங்கர இரகசி யங்கள் கண்டு குடல் நடுங்கினேன். ஆயிரம் ஏழைகள் வாழக்கூடிய இடத்தை வளைத்து ஒரு செல்வன் மாளிகை எழுப்புகிறான். அந்த மாளிகை அலங்கார - நாகரிக- பணக்கார- பாப- நரகமா யிருக்கிறதே\n பசிக் கொடுமையால் அநாதைக் குழந்தைகள் மண்ணையும், கரியையும் உண்டு மாளுகின்றனர்... பிரபுக்களே உங்கள் சுகபோக லீலைகளுக்காக வரி கொடுப்பவர் யார் தெரியுமா பரம ஏழைகள், பட்டினி கிடக்கும் ஏழைகள் பரம ஏழைகள், பட்டினி கிடக்கும் ஏழைகள் அவர்கள் சாவினால் நீங்கள் பிழைக்கிறீர்கள். கோடிப் பேரை வறியராக்கி நீங்கள் வளம் பெறுகிறீர்கள். கோடிப் பேரை அடிமைகளாக்கி நீங்கள் அதிகாரச் செருக்கின் மதங்கொண்டு திரிகிறீர்கள். என்ன அவர்கள் சாவினால் நீங்கள் பிழைக்கிறீர்கள். கோடிப் பேரை வறியராக்கி நீங்கள் வளம் பெறுகிறீர்கள். கோடிப் பேரை அடிமைகளாக்கி நீங்கள் அதிகாரச் செருக்கின் மதங்கொண்டு திரிகிறீர்கள். என்ன நாளெல்லாம் பாடுபடும் தொழிலாளியின் வேர்வைப் பணம், தொந்தி யாடாத சோம்பேறிச் செல்வனுக்கோ சேர்வது நாளெல்லாம் பாடுபடும் தொழிலாளியின் வேர்வைப் பணம், தொந்தி யாடாத சோம்பேறிச் செல்வனுக்கோ சேர்வது... நீங்கள் சுத்தச் சுயநலச் செல்வச் சோம்பேறிகள்... நீங்கள் சுத்தச் சுயநலச் செல்வச் சோம்பேறிகள் நாட்டின் புல்லுருவிகள் ஏழைகளின் சதையைப் பிழிந்து, கண்ணீரைக் குடிக்கும் அசுரப் பாம்புகள்... செல்வர்களே இரங்குங்கள் பொது ஜனங்கள் விழித்துக் கொண்டு தமது உரிமையைப் பெறும் காலம் வருகிறது அரியணைகள் ஆட்டம் கொடுக் கின்றன; முடிகள் சாய்கின்றன... சமுதாயக் கப்பல் உங்கள் அட்டூழியச் சுமையால் மூழ்கிக் கொண்டிருக்கிறது. நீங்களும் அதனோடு மூழ்க நேரிடும்; உஷார் அரியணைகள் ஆட்டம் கொடுக் கின்றன; முடிகள் சாய்கின்றன... சமுதாயக் கப்பல் உங்கள் அட்டூழியச் சுமையால் மூழ்கிக் கொண்டிருக்கிறது. நீங்களும் அதனோடு மூழ்க நேரிடும்; உஷார்\nஹியூகோவின் உள்ளத்தில் வெடித்துச் சீறிய எரிமலைக் குழம்பின் ஒரு சிறு பகுதிதான் இது (இளிச்சவாயன் நாவலில்- தமிழாக்கம்- கவியோகி சுத்தானந்த பாரதியார்) இந்த அளவுக்கு வீரம் செறிந்தவராகத் திகழ்ந்தவர் ஹியூகோ. ஜனநாயகம் செழித்தோங்குவதாகவும், பேச்சுரிமை, எழுத்துரிமை கொடிகட்டிப் பறப்பதாகவும் சொல்லப்படுகிற இந்தப் புண்ணிய பாரதப் பாராளுமன்றத்தில் இப்படியொருவர் இன்று பேச முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்\nவிக்டர் ஹியூகோவின் படைப்புகள் அமரத் துவம் வாய்ந்தவை. அனைத்து மொழிகளுக்கும் சென்று மக்கள் உள்ளங்களில் அழியா இடம் பெற்றவை. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையும் தமிழில் கிடைக்கக்கூடியவையும் மூன்று நாவல்கள் மட்டுமே. ஏழைபடும்பாடு (லா மிராப்லா –Les Miserable), இளிச்சவாயன் (லோம் கிரி). இவை இரண்டும் கவியோகி சுத்தானந்த பாரதியாரால் ஆவேச நடையில் மொழிபெயர்க்கப்பட்டு 1948இல் வெளிவந்தவை. இதே ஆண்டு ப.கோதண்டராமன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளி வந்ததுதான் இந்த மரகதம், (நோத்ருதாம் தைபரி- The Hunch-back of Notre-dame). ஏழைபடும்பாடு- தனலெட்சுமி பதிப்பகத்தாலும் இளிச்சவாயன் வ.உ.சி. பதிப்பகத்தாலும் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த மரகதம் ஓர் அசாத்தியமான கதை. பிரமிக்க வைக்கும் கட்டமைப்பும், அற்புதமான பாத்திரப் படைப்புகளும் கொண்டு, நெஞ்சை நெகிழ வைக்கும் கதை. ஒரு முறை படித்தால் போதும், வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. உள்ளத்தை உலுக்கிவிடும். ஒரு மறு வாசிப்பிற் காகவும், நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவும் நான் 65 ஆண்டுகள் தவித்திருக்க வேண்டி நேர்ந்ததை நான் சொல்லியே ஆகவேண்டும். 56 ஆண்டு களுக்கு முன் என்னிடம் தமிழ் படித்த மாணவச் செல்வர்கள் சிலர் (குறிப்பாக- குன்னத்தூர் பாலு) இன்னும் என்னைச் சந்திக்கும்போது ‘நோத்ருதாம் தை பரி’ கிடைத்ததா என்று விசாரிக்கவே செய் கிறார்கள். அவர்களுக்கு ‘லோம் கிரி’யும் தெரியும், ‘கொம்ப்ராஷிகோ’வும் தெரியும். அப்படி நினைவில் அழுத்தமாய���ப் பதிந்த கதை மரகதம். ‘மரகதம்’ ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு என்பதை எந்தப் பதிப்பாளருக்கு எப்படிச் சொல்லி விளங்க வைப்பது அவர்கள் அந்த மூலப் பிரதியைத் தேடிப் பிடிக்க சிரமம் எடுத்துக் கொள்வார்களா என்ற தயக்கத்திலிருந்தேன். “நீங்கள் அவ்வளவு முக்கியம் என்று கருதினால் அதைத் தேடிப் பிடித்து புத்தகம் போட்டுவிடுவோம்” என்று நம்பிக்கை அளித்தனர் விழிகள் பதிப்பகத்தார். அவர்களுக்கு வாழ்த்து கூறத்தான் வேண்டும்.\nஅறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அமர இலக்கியம் புதுவெளிச்சம் காண் பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். ஓர் ஆவேசப் புயல் இந்த மரகதம். குவாசி மோடா, எஸ்மரால்டா இரண்டும் அற்புதமான பாத்திரப் படைப்புகள். எஸ்மரால்டா என்ற பெயர் எமரால்ட் என்ற சொல்லிலிருந்து உருவாகி யிருக்க வேண்டும். எமரால்ட் என்பது பச்சைக்கல்; மரகதமணி, இந்தப் பாத்திரத்தைச் சுற்றியே கதை நிகழ்வதால் மொழி பெயர்ப்பாசிரியர் ‘மரகதம்’ என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.\nபிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு வந்திருப்பது இதன் தனிச் சிறப்பு. இதைத் திரைப் படமாக்கிய ஹாலிவுட்காரர்கள், அந்தக் காலத்தில் தலைசிறந்த நடிகரையும், நடிகையையும் இந்த இரு பாத்திரங்களை ஏற்று நடிக்க வைத்தனர்.\n1905ஆம் ஆண்டு முதல் 1997 வரை 10 திரைப் படங்கள், 5 தொலைக்காட்சித் தொடர்கள், 5 மேடை நாடகங்கள், 3 இசைக் கோவைகள், 12 இசை- நாடகங்கள், 5 பாலே நாட்டிய நாடகங்கள், 2 பிபிசி நாடகங்கள், 10 மொழிபெயர்ப்பு நூல்கள் உருவாக்கப்பட்டிருப்பது இந்த நாவலின் சிறப்பு. இது ஆங்கில மொழிப்பட்டியல். மற்ற ஐரோப்பிய மொழிகளில் என்னென்ன ஆக்கங்கள் ஏற்பட்டிருக் கின்றன என்பது தெரியவில்லை. ஆங்கிலத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.\n1939ஆம் ஆண்டு, ‘ஆர்கேஓ ரேடியோ’ என்ற நிறுவனம் தயாரித்த The Hunch-back of Notre-dame - என்ற திரைப்படத்தில் ஹாலிவுட்டின் பிரபல குணசித்ர நடிகர் சார்லஸ் லஃப்டன் குவாசி மோடோவாகவும், தலைசிறந்த நடிகை மரீன் ஒஹாரா எஸ்மரால்டாவாகவும் நடித்திருந்தனர்.\nபாரிஸ் நகர மாதாகோயிலைப் பெயர்த்து வந்து வைத்ததுபோல, ஹாலிவுட்டில், 125 அடி உயரமும், 150 அகலமும் கொண்ட ஒரு கோயில், சிற்ப வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது இது கருப்பு-வெள்ளைப் படம். இன்னொரு கருப்பு-வெள்ளைப் படம் 1969இல் தயாரிக்கப்பட்டது. டிராகுலா, ஃபிராங்கன் ஸ்டைன் முதலிய பயங்கர பாத்திரங் களில் நடித்து வந்த லான் சேனி குவாசிமோடோ வாகவும், ருத்மில்லர் எஸ்மரால்டாவாகவும் நடித்திருந்தனர். பிரபல நடிகர் ஆன்டனி குவின் குவாசிமோடோவாகவும், அழகிய இத்தாலிய நடிகை கினா லோலோ பிரிஜிடா எஸ்மரால்டா வாகவும் நடித்திருந்த வண்ணப் படம் 1997இல் வெளிவந்தது. விக்டர் ஹியூகோ முதலில் இந்தக் கதையை நாட்டிய நாடகமாகத்தான் உருவாக்கி யிருந்தார். இதை அடியொற்றி ஒரு கார்ட்டூன் படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் 1996இல் உருவாக்கியது. மற்ற படங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதன் பாதிப்பில், மாதவன் இயக்கிய ‘மணியோசை’ என்ற திரைப்படத்தில் கல்யாண் குமாருக்கு குவாசிமோடோ வேடம் தரப்பட்டது. ஆனால், கதை வேறு. அண்மையில் வந்த பேரழகன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்த வேடம் தரப்பட்டிருந்தது. அவரது வேடமும், நடிப்பும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால், கதை வேறு.\nநம்மைத் திகைக்க வைக்கும் குவாசிமோடோ என்னும் பாத்திரம் கற்பனை அன்று. ஹியூகோ படிக்கின்ற காலத்தில், அங்குப் பணியாற்றிய கோரமான உருவம் படைத்திருந்த அன்பு நெஞ்சம் கொண்ட ஒரு பணியாளின் உருவம் என்றும் அறிகிறோம். வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: ஆரம்ப அத்தியாயங்களில் வரும் பெயர்கள் பற்றிக் கவலைப்பட வேண்டாம். பிரஞ்சு நாட்டின் பண் பாட்டுச் சூழலையும், இவர்களின் எளிமையையும், நகைச்சுவை உணர்வையும் சித்திரிக்க உருவாக்கப் பட்ட நிகழ்வுகள் அவை.\nகுவாசிமோடன், கவிஞர் கிரேங்குவார், ஜிப்சி எஸ்மரால்டா, அவளது அதிசய ஆடு திஜாலி, கேப்டர் பீபஸ், தேவாலயப் பாதிரியார் க்ளாத் பிரல்லோ, இவையே நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய பாத்திரங்கள்.\n1831 ஜனவரி 14 அன்று. பாரிஸ் நகரில் இந்த நாவல் பிரசுரம் ஆயிற்று... 183 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் படைப்பு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது இந்தக் கதையின் அடிப்படையில் ஏன் இத்தகைய கலைப் படைப்புகள் வந்தன; வந்து கொண்டிருக்கின்றன இந்தக் கதையின் அடிப்படையில் ஏன் இத்தகைய கலைப் படைப்புகள் வந்தன; வந்து கொண்டிருக்கின்றன நமது நிகழ்கால வாழ் வோடு எந்த வகையிலும் ஒரு படைப்பு தொடர் பற்றுப் போகுமென்றால், அது எவ்வளவு மகத்தான காவியம் என்றாலும், அதன் சாவு தவிர்க்க முடியாதது... காலவெள்ளத்தில் அது காணாமல் போய்விடும். மரகதம்- நமது மன ஆழங்களுக்குள் சென்று அதன் இருண்ட பக்கங் களுக்கு மேல் வெளிச்சம் வீசுகிறது. காதல்- காமம்- அன்பு-அருள் ஆகியவற்றின் அடக்கமும், ஆவேசமும் வெளிப்படும் படைப்பு இது.\n“கோட்டான் வானம்பாடியின் கூட்டுக்குள் செல்வதில்லை” என்ற குவாசிமோடோவின் வார்த்தைகள் நமக்குத் திகைப்பைத் தருகின்றன. என்ன பயங்கரமான உருவத்திற்குள்ளிருந்து எவ்வளவு பக்குவமான வார்த்தைகள்\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எல்லை உண்டு. அது வாழ்நிலையால் உருவானது; அல்லது உரு வாக்கிக் கொண்டது. அந்தந்த எல்லைகளின் விளிம்பை நோக்கிப் போவது படி கடத்தலுக்கான முயற்சி. அது ஆபத்தானது. படி தாண்டினால் கிடைப்பது சொர்க்கமோ, நரகமோ, எதுவானாலும் எல்லையில், விளிம்பில் நிற்பது ஓர் அக்கினிப் பரிட்சை... எல்லை கடத்தல் அக்கினிப் பிரவேசம் அதில், ஒருவர் எரிந்து சாகலாம், அல்லது தாவிக் குதித்துக் கடக்கலாம். அல்லது பீனிக்ஸ் பறவை யாய்ச் சாம்பலிலிருந்து புத்துயிர் பெற்று மீட்சி பெறலாம். அது அந்தந்த மனிதனின் ஆளுமையைப் பொறுத்தது. ஆனால், எல்லைகளுக்கு உள்ளே, தள்ளி இருப்பது எப்போதும் பாதுகாப்பானது; ஆபத்துகள் இல்லாதது. அவ்வாறாயின், அந்த இருப்பு உப்புச் சப்பற்றது. அது வாழ்தல் அன்று; உயிரோடிருப்பது மட்டுமே. இங்கே முக்கிய பாத்திரங்கள் எல்லை கடக்கிறார்கள். இதுதான் கதை.\nபயங்கரத் தோற்றம் கொண்ட குவாசி மோடன், கண்டவரைக் கிறங்க வைக்கும் ஆடல் அழகி எஸ்மரால்டா, கனவுகளில் மிதக்கும் பஞ்சைப் பராரியான கவிஞன் கிரேங்குவார், புகழ்பெற்ற தேவாலயக் கார்டினல் பாதிரி க்ளோத் பிரல்லோ இவர்கள் நால்வரும், ஆசைக் காற்றால் உந்தப்பட்டு எல்லை கடக்கிறார்கள். ஆண்கள் மூவரின் குவி மைய ஒளிப் புள்ளி எஸ்மரால்டா, தொட்டால் சுடும் புள்ளிச் சுடர் அது. பாதிரியார் முன் மண்டியிட்டுப் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டிய ஒருவர். பாதிரி யாராகவே இருந்துவிட்டால், அவர் யாரிடம் போவது இன்னொரு பெரிய பாதிரியாரிடம்தான் போக வேண்டியிருக்கும். ஆனால், அந்த பிரல்லோ, ஒரு ஜிப்சிப் பெண்ணின் காலடியில் விழுந்து, தன் இதயத்தின் இருட்டைத் திறந்து காட்டி, கடவுளையே காறி உமிழ முற்படும் காமக் கனல் நம்மைத் திகைக்க வைக்கிறது. எல்லை கடக்கும் வெறியில், தாவிக் குதித்துத் தீயில் காலிடறி விழுந்த கதை இது. கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் புத்த பிட்சு, நாகநந்தியடிகள், நடன நங்கை, சிவகாமியின் முன் நெஞ்சில் அறைந்துகொண்டு பேசும் காட்சி நினைவுக்கு வருகிறது.\nபாவியாய்ப் போன பாதிரியாரின் நெஞ்சுக்குள் எஸ்மரால்டா, குரூரமான தோற்றம் கொண்ட குவாசிமோடனின் நெஞ்சுக் குள்ளும் அவளே, வறுமையில் வாடும் கவிஞனின் நெஞ்சுக்குள்ளும் அவளே. ஆனால், அவளுடைய நெஞ்சுக்குள்ளே மோசக்காரப் படைத் தலைவன் கப்பித்தான் பீபஸ். இவர்களிடையே நிகழும் மோதல், மோசடி, மோகத் தீ யாரை அழிக்கின்றன எல்லாரையும் உண்மையின் கசப்பு- இவர்கள் தாண்டிய எல்லைகள் தவிர்க்க வேண்டிய எல்லைகள்- மாய எல்லைகள். இதில் மோசடி காப்டன் பீபஸ் தவிர உணர்ச்சி மயமானவர்கள் தப்பவில்லை. எல்லை கடந்தவர்கள் எரிந்துபோன அக்கினிப் பிரவேச காவியம்தான் மரகதம்.\nமரகதம் - விக்டர் ஹியூகோ\n8/எம். 139,7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41,\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2014\nஒரு மலையும், சில எலிகளும்\nதமிழ் இலக்கிய வரலாறு சங்ககாலம் முதல் தொடங்குகிறது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், இடைக்காலம், பிற்காலம் எனத் தொடர் கிறது. இதில் பிற்காலம் என்பதும் தற்காலம் என்பதும் பாரதியையே முன்னிலைப்படுத்துகிறது.\nஇந்த 20ஆம் நூற்றாண்டைப் பாரதியின் யுகம் என்றும், பாரதியார் சகாப்தம் என்றும் கூறுவர். அவரது படைப்புகளே புதிய தமிழ் இலக்கியத் தடங்களாகத் திகழ்கின்றன; தெரிகின்றன. அவரைப் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் புதிய புதிய வெளியீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.\n‘இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புகள்’ என்னும் இந்நூல் 12 ஆய்வுக் கட்டுரை களின் தொகுப்பாகும். முனைவர் அ. பிச்சை மற்றும் முனைவர் பா. ஆனந்தகுமார் இதன் பதிப்பாசிரியர்கள். பாவை பப்ளிகேஷன்ஸ் இதனை வெளியிட்டுள்ளது.\nதிண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் உள்ள பாரதியார் ஆய்வகம் நடத்திய கருத்தரங்கில் வாசித்த கட்டுரைகள் காற்றில் கலந்த பேரோசையாகி விடாமல் அவ்வப்போது அவற்றை நூல் ஆக்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வரிசையில் ஐந்தாவது தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.\n“தமிழில் நவீன காலத்துக்குரிய தேசியம், மார்க்சியம், நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் முதலான எந்தப் புதிய கருத்தியல் சார்ந்த உரை யாடலையும் நாம் பாரதியை முன்வைத்தே தொடங்க வேண்டியிருக்கிறது. பாரதி ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் தோன்றியிருந்தாலும் பழைய மரபுகளின் வேர்களை நோக்கியும், புதிய மரபுகளின் விழுதுகளை நோக்கியும் அவரது சிந்தனை பயணப்பட்டிருக்கிறது. இதன் காரண மாகப் பாரதியின் இலக்கியப் பிரதிகள் பன்முக வாசிப்பிற்கான சாத்தியங்களைப் பெற்றிருக் கின்றன. பாரதியின் படைப்புகளைப் பல்துறை சார்ந்த அணுகுமுறைகளின் அடிப்படையில் ஆராய்ந்த இந்நூல் இதற்குச் சான்றாக அமைந்துள்ளது” என்று பதிப்பாசிரியர்கள் தம் முன்னுரையில் கூறியுள்ளனர்.\nமுதல் கட்டுரை ‘தொன்மவியல் திறனாய்வு நோக்கில் பாரதியார் படைப்புக்கள்’- இதனை பேராசிரியர் க.பஞ்சாங்கம் எழுதியுள்ளார். பாரதி யார் எந்த நேரமும் தொன்மங்களைப் பேச்சோடும், வாழ்வோடும் பயன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்; இத் தொன்மங்களைக் குறித்துத் தம் சமகாலத்திற்கு ஏற்ற மதிப்பீடுகளைக் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது எனக் கட்டுரையாளர் குறிப்பிடு கிறார்.\nஅவருடைய குயில் பாட்டில் தொன்மம், கனவு, சடங்கு, கவித்துவம் ஆகிய நான்கும் மிகப் பெரிய மாயா உலகத்தைக் கட்டி எழுப்புவதைப் பார்க்க முடிகிறது. தொன்மம், கலைக் களஞ்சியம் போல் அமைந்து வினை புரியக் கூடியது என்றும், கூறுகின்றனர். குயில் பாட்டிற்கும், கண்ணன் பாட்டிற்கும் மிகப் பொருந்திப் போகிறது என்றும் ஆசிரியர் விளக்கியுள்ளார்.\nஇரண்டாம் கட்டுரையில் பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் குறியியல் பற்றி முனைவர் சி. சித்ரா ஆய்ந்துள்ளார். வடமொழியில் வியாசர் இயற்றிய மகாபாரதக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக்கொண்டு பாரதியார் படைத்த குறுங் காவியமே பாஞ்சாலி சபதம் என்றும், இது அழைப்புச் சருக்கம், குதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகில் உரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என்னும் ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது என்றும், பஞ்சாலி சபதத்தில் இடம்பெற்றுள்ள மாந்தர்களின் கூற்றுகள் வாயிலாகவும் கதைப் போக்கு வாயிலாகவும் குறியியலின் செயல்பாடு களையும் வகைகளையும் கண்டறிய முடிகிறது என்றும் ஆசிரியர் கூற���யுள்ளார்.\nபேராசிரியர் துரை. சீனிச்சாமி, பாரதியார் கவிதைகளை உளவியல் நோக்கில் ஆய்வு செய் துள்ளார். 1897ஆம் ஆண்டு எட்டயபுரம் மன்னருக்கு விண்ணப்பம் எழுதிய நாள் முதல் இறுதிவரை சுப்பிரமணிய பாரதியார் எழுதி யுள்ள கவிதைகளின் பொருண்மைகளை புறக் கருத்தியல், அக உளைச்சல் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.\n‘கனவு’ எழுதிய நான்காண்டுகளுக்குப் பிறகு ‘குயில் பாட்டு’ எழுதப்பட்டுள்ளது. காமம், காதல், பெண்நிலை, சாதியம், வைதிகம், இசை, மனக்குழப்பம், புனிதப் பேரழகு, புதிர்மை ஆகிய பல்வேறு பொருண்மைக் கூறுகளைச் சிதறவிட்டு, அவற்றினூடாகத் தன்னை வைத்துக் காணும் ஒரு வேட்கை நிரப்பியாக உள்ளது. இழப்புணர்வு களை எல்லாம் ஒன்று திரட்டி ஓர் அழகுப் பிண்ட மாகக் குயில்பாட்டில் அமைத்துள்ளார் என்றும் ஆசிரியர் கூறுகிறார்.\n‘உண்மையான கவிதை அருமையான திரவியம். அதனால் உலகம் சேமத்தை அடைகின்றது. எந்த நாட்டில் புதிய மகாகவி தோன்றுகிறானோ அந்த நாடு மகா பாக்கியம் உடையது. தமிழ் நாட்டிலே கவிதையின் புகழ் ஏறுக’ என்று பாரதியார்- கவிதையின் சிறப்பை பயனைச் சொல்கின்றார். ஆகவே, கவிதையும் கலையும் மக்களுக்காகவே- மனிதரின் வாழ்க்கைக்காகவே என்பது பாரதியின் கவிதையில் பயன்பாட்டுக் கொள்கையாகும் என்று ஆசிரியர் முடிகின்றார்.\nஇருத்தலியல் நோக்கில் பாரதியை ஆய்ந்தவர் முனைவர் சீ. சீமானம்பலம். இருத்தலியலும், நவீனத் துவமும் தம்முள் தொடர்பு கொண்டனவாகவே காணப்படுகின்றன; நவீனத்துவத்தின் கடைசிக் கோட்பாடாகக் கருதப்படும் இருத்தலியல், நவீனத் துவத்தின் முடிவாகவும் பின் நவீனத்துவத்தின் வரவுக்காகக் காத்திருந்த கடைசிக் கோட்பாடாகவும் குறிப்பிடப்படுகிறது.\nபாரதியாரைச் செவ்வியல் கொள்கை நோக்கில் முனைவர் சாரதாம்பாள் மதிப்பிட்டுள்ளார். “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன், தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்” என்று பாஞ்சாலி சபதம் முகவுரையில் பாரதியார் கூறுகிறார்.\nசெவ்வியல் இலக்கியங்களுக்குப் பின் தோன்றிய இலக்கியங்கள் தொன்மை, தலைமை, தற்சார் பின்மை போன்ற செவ்வியல் பண்புகளுக்கு இடம் கொடா. எனினும், பாரதியின் கவிதை���ள் செவ் வியல் இலக்கியப் பண்புகளுக்கு இடம் கொடுத்து நிற்கின்றன என்று ஆசிரியர் கூறுகிறார்.\nபெண்ணியம் பற்றி முனைவர் நாகநந்தினி, நவீனத்துவ நோக்கில் முனைவர் ந. இரத்தின குமார், நடப்பியல் நோக்கில் முனைவர் இரா. காமராசு, பாரதியின் கவிதையியல் பற்றி பேரா சிரியர் ப.மருதநாயகம், தலித்திய நோக்கில் அழகிய பெரியவன், மார்க்சிய நோக்கில் தேவ.பேரின்பன் ஆகியோரின் படைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுச் சிறப்புச் செய்கின்றன.\n‘மகாகவி பாரதி இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் தமிழின் முற்போக்கு சகாப் தத்தைத் துவக்கி வைத்தவர் என்ற அளவில் அவரைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அது தொடங்கி சமூக மாற்றத்துக்காகப் போராடுகிற அனைவருக்குமான தமிழ்ப்புலத்தின் தோற்று வாயே பாரதிதான்’ என்று தேவ. பேரின்பன் தம் மார்க்சிய நோக்கில் குறிப்பிட்டுள்ளார்.\n‘இப்சனின் நாடகம் ஒன்றில் வரும் கதா பாத்திரம் உறுதியான கம்பீரமான மலையைக் குறை சொல்லக் காரணங்களைத் தேடுகிறது. கடைசியில் மலையைக் குறை சொல்ல ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து உரக்கக் கூவியது: ‘மலை எலிகளை உருவாக்கி விட்டது’.\nபாரதியின் படைப்புகள் என்ற மாமேரு குறித்த ஆய்வுகள் எலிகளைத் தேடிச் சென்று விடக் கூடாது என்பதுதான் நமது வேண்டுகோள் ஆகும்’ என்று அறிஞர் தேவ.பேரின்பன் கட்டுரையை முடிக்கிறார். நமது வேண்டுகோளும் அதுதான்.\nஇலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புகள்\nபதிப்பாசிரியர்கள்: முனைவர் அ. பிச்சை & முனைவர் பா. ஆனந்தகுமார்\n142, ஜானி ஜான்கான் சாலை,\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2012\nஉலகில் எத்தனையோ சமயங்கள் தோன்றி மறைந்தாலும் இன்றைக்கும் புதுக்கோட்டையில் சாகாவரம் பெற்ற சமயம் ஒன்று உள்ளதென்றால், அஃது ‘மெய்வழி’ ஒன்றேயாகும். இதில், இன்று பல்வகைச் சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ் கின்றனர். இச்சமயத்திற்கு வேரான அடிப்படைச் சமயம் ஒன்று உண்டெனில் அது பௌத்த சமயமே யாகும். இஃது உலகோருக்கு அன்பைப் போதிக்கும் தம்ம நெறியைக் கொண்ட சமயமாகும்.\nஇன்றுள்ள எல்லாச் சமயங்களுக்கும் முந்தையதும் காலச் சக்கரத்தின் முதற்கடையாணி எனப் போற்றப்படுவதுமாகிய பௌத்தம் சிறிது நாளில் சமணமாகிய உட்பிரிவைக் கொண்டு திகழ்ந்தது. சமணமும் பௌத்தமும் தழைத்தோங்கிய இப் புதுக்கோட்டை பூமியில் அறநூல்கள் பல முகிழ்த்தன. மிதிலைப்பட்டியில் சிலப்பதிகாரம் முதல் சிறு காசாவயல் முனைவர் சு.மாதவனின் பௌத்தத் திறனாய்வு நூல்கள் வரை இந்த மண்ணிலேயே தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் ஆகும். சுருக்கமாய்ச் சொன்னால் பௌத்தமும் சமணமும் இல்லையென்றால் தமிழில் அறநூல்களே இல்லை எனலாம். அறத்தைப் போதிக்காத எவையும் நூல் களாக இருக்கமுடியாது.\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியான் மலை, சித்தன்ன வாசல், விராலிமலை, புத்தாம்பூர், அண்ணல்வாயில், இரும்பாழி; வெள்ளனூர், இன்னும் பிற இடங்களில் புத்த சமணத் துறவிகள் வாழ்ந்து மக்களுக்கு நற்றொண்டுகள் பல செய்துள்ளனர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் ‘நாலடியார்’ என்னும் மெய் வழி நூல் சமணமுனிவர் பாடிய நூலாகும். வீர சோழியமும் ஈண்டு எழுந்ததே\nபுதுக்கோட்டையில் அமைந்துள்ள இலுப்பூர் சங்ககாலத்தில் இருப்பையூர் (இருப்பை) என வழங்கப் பெற்று, இவ்வூரினை ‘விரான்’ என்னும் மன்னன் ஆண்டு வந்துள்ளான். விரான் ஆண்டதால் இப் பகுதியிலுள்ள மலைக்கு விரான்மலை எனப் பெயருண்டு. பிற்காலத்தில் இம்மலை விராலி மலை என்று மக்கள் சொல் வழக்காயிற்று.\nவிரான் மன்னனின் சிறப்பை ஐங்குறுநூறு என்னும் தமிழர் வாழ்வியல் நூல் கீழ்வருமாறு எடுத்துரைக்கும்.\n“விண்டு வன்ன வெண்ணெற் போர் விற்\nகைவண் விராஅ னிருப்பை யன்ன\nபிறர்க்கு மனையையால் வாழி நீயே.” (ஐங். 58).\nஎன்பது அப்பாடல், மேலும், நற்றிணையில்,\n“முனையெழுத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்\nமலிபுனல் வாயில் இருப்பை”, (நற்-260)\n“வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்\nபழனப் பல்புள் இரியக் கழனி, வாங்கு சினை\nமிருதத் தூங்கு துணர் உதிரும் தேர்வன்\nஎன்றும் விரான் மன்னனின் இருப்பை வானளாவிய செந்நெற்போர் குவிந்து வளம் கொழித்ததென்று ஓரம்போகியாரும் பரணரும் வாழ்த்திப் பாடியுள்ளனர். இவ்வாறு சீரும் சிறப்பும் உடைய விரான் மன்னன் தன்னை நாடிவந்தவரின் மனக்குறை போக்கி ஆறுதல் கூறவில்லை. மாறாக இருமாந்திருந்தான். ஆதலால், அம்மன்னனைக் கீழான அற்பன் எனச் சாடி, ‘மன்னனாகிய நீ மற்றவரின் மனதைத் தேற்ற வழியில்லாமல் வாழ்வதைக் காட்டிலும் மலை முகட்டில் ஏறி விழுந்து உயிர் விடலாம்’ என்று சமணமுனிவர் தமது நாலடியார் நூலில்,\n“இனியார் தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்\nதணியாத உள்ளம் உடையன்; மணிவரன்றி\nவீழும் அருவி விரான்மலை நன்னாட\nவாழின் வரைபாய்தல் நன்று.” (நாலடி-369)\nஎன்று இடித்துரைக்கின்றார். மேலும், ஆராயாமல் சுடுமொழிகளைக் கூறி அடுத்தவரைத் துன்பத்தில் ஆழ்த்தும் உன்னைக் கீழோரும் எள்ளி நகைப்பர் என்கிறார். அப்பாடலாவது,\n“கடுக்கெனச் சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம்\nஇடுக்கண் பிறர்மாட்டு உவக்கும் அடுத்தடுத்து\nவேகம் உடைத்தாம் விரான்மலை நன்னாட\nஏகுமாம் எள்ளுமாம் கீழ்” (நாலடி- 348)\nமெய்வழியாரை (பௌத்த சமணர்)ப் பொது வாக ஆதரித்த மன்னன் கொடும்பாளூரை ஆண்டு வந்த சாத்தன் இளங்கோவதிரையன், இவனது மகன் பூதி என்னும் பெருமுத்தரையன் ஆவான். இவன் கொடும்பாளூர் பூதிச்சரம் கோயிலைக் கட்டியவன் (தமிழரசன். பு.சி. புலவர், 2001, ப.85) என இக்கோயில் கல்வெட்டால் அறியலாம்.\nபெருமுத்தரையன் விரான் மன்னனால் ஒடுக்கி ஆளப்பட்டவன். விரான் மன்னன் பெருமுத்தரை யனுக்குக் கொடுந்துன்பங்களைக் கொடுத்துள்ளான். பெருமுத்தரையனின் நற்குணத்தையும் கொடைத் தன்மையையும் புகழ்ந்து போற்றும் சமண முனிவர் நாலடியாரில்,\n“மல்லன் ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்\nசெல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்\nநல்கூர்ந்தார் கண்ணும் பெருமுத் தரையரே\nசெல்வரைச் சென்றிரவா தார்” (நாலடி- 296)\nஎன்று பாடுகின்றார். மூங்கிலைப்போல ஆகாயத்தைத் தொடுமளவு நெற்பொழியுடைய விரான் மன்னனைக் காட்டிலும் வறுமையுற்ற காலத்தில் எவ்வகைச் செல்வர்களையும் சென்று இரவாத நற்பண்பு உடையவன் பெரு முத்தரையன் என்பதே இப் பாடலின் பொருளாம். ஆகவே, நாலடியார் என்னும் “மெய்வழி நூல்” புதுக்கோட்டைச் சமணர் எழுதிய நூலாகும் என்பது தெளிவாகும்.\nமேலும், இஃதே போல் “விவேக சிந்தாமணி” என்னும் மெய்வழி நூல் வெள்ளனூரில் வாழ்ந்த ஒரு சமணத் துறவியார் எழுதிய நூலாகும். காரணம் என்ன எனில்,\n‘பேரவா பெரு நட்டம்’ என்பது சமண பௌத்த நெறிகளில் ஓன்றாகும். வெள்ளனூர் என்று தற்போது வழங்கும் ஊரின் பழம்பெயர் வெள்ளை நல்லூர் என்பதாகும். இவ்வூரில் வட்டங் கச்சேரிக்கு அருகில் கிடைத்த பெரிய மகாவீரர் திரு வுருவம் புதுக்கோட்டை அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.\nஇச்சிலையை ஆராய்ச்சி செய்த அருங்காட்சி யகக் காப்பாட்சியர் செ.கோவிந்தராஜ் அவர்கள் கீழ்க்காணுமாறு விளக்கு���ிறார்.\n“இத்திருவுருவம் 3ஙூ அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட கருங்கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது. மரத்தினடியில் தாமரை மலரில் வீற்றுள்ளார் மகாவீரர். முக்குடைகளைப் பெற்றுள்ளார். இவரது அடியார்கள் இருமருங்கிலும் கவரி வீசி நிற்கின்றனர். திருவாசியும் சிங்கத் தோரணமும் உள்ளன. மரத்தில் இலை, பூ, காய், கொடி இருப்பதுடன் பூவின்மீது 3 அங்குல நீளம் உள்ள காகம் எதையோ கவ்விக் கொண்டிருக்கின்றது. கீழ்ப்பகுதியில் நரி ஒன்று காகத்தினைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இத் திருவுருவம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.” என்கிறார்.\nஇச்சிலையில் இக்காட்சி இடம்பெறக் காரணம் யாதெனில், “பேரவா பெருநட்டம்” என்னும் கருத்தை விளக்க வந்ததேயாகும். இக்கருத்தை “விவேக சிந்தாமணி” என்னும் மெய்வழி நூலின் ஆசிரியர் தமது நூலில் வரும் பாடலொன்றில் கையாண்டுள்ளார். அப்பாடலாவது,\n“சம்புவே என்னபுத்தி சலந்தனில் மீனை நம்பி\nவம்புறு வடத்தைப் போட்டு வானதைப்பார்ப்பதேனோ\nஅம்புவி மாதே கேளாய்; அரசனை அகல விட்டுப்\nஎன்பதாகும். இதன் கருத்தாவது, சம்புவாகிய நரி கரையிலே கிடக்கும் கருவாட்டுத்துண்டை உண்ணாமல் நாளை உண்ணலாம் என நினைத்து, நீரிலே வாழும் மீனைப் பிடிக்கச் சென்றது. கரையில் கிடந்த கருவாட்டைக் காகம் தூக்கிக் கொண்டது. இரண்டும் கிட்டாமல் நரி ஏமாந்தது. இஃது பேரவாவில் விளைந்த பெருநட்டம்; இஃதொருத்தி அரசனை நம்பிப் புருஷனைக் கை நழுவ விட்ட கதை போலாம். இந்நூலில் இடம்பெற்ற இக்கதை சமண பௌத்த நெறிவிளக்கக் கதையாகும். இதை மகாவீரரின் சிலையில் வடித்துள்ளனர். பிற்காலத்தில் எழுந்த சமண பௌத்தக் கொள்கை மறுப்பாளர்கள் காக்கை, நரி; பாட்டி, வடை என்று கதையையும் கொள்கையையும் மாற்றியுள்ளனர்.\nஇருப்பை விராலிமலையில் (விரான்மலை) தோன்றிய நாலடியார் நூல்போலும், வெள்ளனூரில் முளைத்தெழுந்த விவேக சிந்தாமணி போலும் எண்ணற்ற பௌத்த சமண மெய்வழி நூல்கள் இம்மண்ணில் (புதுக்கோட்டையில்) மறைந்த வரலாறாய் உள்ளன. அவற்றைத் தேடிக் கொணர்வதே நம் அனைவரின் கடமையாகும்.\n* மெய்வழிச்சாலையில் மெய்வழி மெய்ம்மறை நூல்களில் இன்றும் முதலில் வைத்துப் பாடப் பெறுவது புத்ததேவ அருக சரணமாகும். ஆதியே துணை என்பது இவர்களின் கடவுட்கொள்கை யாகும்.\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2012\nகச்சி ஒரு மூதூர்; காஞ்சிக்கு அருகிலிருந்த ஊர். கச்சி திரையனின் தலைநகர்; காஞ்சி மக்கள் வாழ்ந்த ஊர். கச்சி வணிகத்தால் சிறப்புடன் திகழ்ந்தது; காஞ்சி புலமை வளர்ச்சியால் சிறப்புடன் திகழ்ந்தது. மூதூராகவும், தலைநகராகவும் முதலில் திகழ்ந்தது கச்சி; கல்விச் சிறப்பால் மேன்மையுற்றிருந்த ஊர் காஞ்சி. கச்சியையும், காஞ்சியையும் எந்தவித வேறு பாடுமின்றி மணிமேகலையில் ஒன்றாக உருவாக்கு கிறார் சாத்தனார். காஞ்சியின் பௌத்த மத வரலாற்றைப் புலப்படுத்துவதில் மணிமேகலையின் முக்கியத் துவத்தை இங்கு ஆய்வு செய்யலாம்.\nதமிழ்மொழியின் சிறப்புக்கு அடிப்படையாகத் திகழ்வது சங்க இலக்கியங்களாகும். சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டல கேசி ஆகியவை தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்கள் ஆகும். இவற்றில் வளையாபதி, குண்டலகேசி காப் பியங்கள் குறைபாடு கொண்டவை. முழு அளவில் கிடைக்கப் பெறவில்லை. சீவகசிந்தாமணி, சமணரால் இயற்றப்பட்டது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும். மணிமேகலை பௌத்த நெறியைப் பின்பற்றிப் படைக்கப்பட்ட தாகும். மேலும் இது சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி யாகத் திகழும் காப்பியமாகும்.\nமணிமேகலையை இயற்றியவர் மதுரைக் கூல வாணிகர் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலைக் காப்பியத்திற்கு “மணிமேகலைத் துறவு” என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றிய சாத்தனார், சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் முன்னிலையில் இதனை அரங்கேற்றினார். சாத்தனார், இளங்கோ அடிகள், இவரின் சகோதரர் செங் குட்டுவன் ஆகிய மூவரும் ஒரே காலத்தவர்கள்.\nதமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை. மேலும், தலைமை மாந்தரின் பெயரைக் கொண்ட முதல் காப்பியம் மணிமேகலை. மணி மேகலைக்கு இணையான அல்லது துணையான தலைமை மாந்தர் இதில் இடம் பெறவில்லை.\nமயிலை சீனி. வேங்கடசாமி, மணிமேகலைக் காப்பியம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்டதற்கான ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.\nசேரன் செங்குட்டுவனும், மணிமேகலையின் ஆசிரியர் சாத்தனாரும் நண்பர்கள். கண்ணகியின் வரலாற்றைச் சாத்தனார் சொல்லக் கேட்டுக் கண்ணகிக்குக் கோயில் அமைத்தார் சேரன் செங் குட்டுவன். இந்த விழாவுக்கு இலங்கை வேந்தன் கயவாகு என்பவரைச் சேரன் செங்குட்டுவன் அழைத்தார். இவர் கி.பி.171 முதல் 193 வரையிலும் இலங்கையை அரசாண்டார். கயவாகுவின் நண் பனான சேரன் செங்குட்டுவனும், இளங்கோவடி களும், சாத்தனாரும் ஒரே காலத்தவர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. எனவே, மணிமேகலைக் காப்பியத்தைச் சாத்தனார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றியிருக்க வேண்டும்.\nவட இந்தியாவை குஷான் வம்சத்து அரசர் கனிஷ்கர், கி.பி.120-162 வரை ஆட்சி புரிந்து, பௌத்த சமயத்தைப் பரப்பினார். அவர் காலத்தில் மகா யான பௌத்தத்தை உருவாக்கிய நாகார்ஜுனர், கி.பி. 200-இல் வாழ்ந்தவர் என்று வரலாற்றுப் பேராசிரியர் கீத் (Prof.Keeth) கூறுகிறார். மணி மேகலையில் “சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதையில்”, தமிழ்நாட்டிலிருந்த பல்வகைச் சமயங் களைப்பற்றிக் கூறுகின்ற சாத்தனார், ஹீனயானத் திற்கு மாறுபட்ட கொள்கையை உடைய மகாயான பௌத்தத்தைப் பற்றிக் கூறாதிருப்பது, நாகார்ஜுனரது கொள்கைகள் பரவுவதற்கு முன்பே, அதாவது\nகி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மணி மேகலை இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று புலப்படுத்துகிறது.\nகி.பி.200க்குப் பிறகு தமிழ்நாட்டைக் களப்பிரர் ஏறத்தாழ கி.பி.575 வரையில் அரசாண்டார்கள். எனவே, கி.பி.200க்குப் பின்னர் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி.200-க்குள்ளேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதாவது, கடைச் சங்க காலத்திலேயே இயற்றப் பட்டவை என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறி யுள்ளார்கள். சங்கச் செய்யுள்களில் பல்லவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை. அதிலும் சிறப்பாகத் தமிழ் நாட்டு வேந்தர்களை ஆங்காங்குக் குறிப்பிட்டுச் சொல்கின்ற சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பல்லவ அரசர்களைக் கூறவில்லை. காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டின் வடபகுதியை அரசாண்ட மன்னர்களான பல்லவர்களைப்பற்றிக் கூறப்படாததால், பல்லவர் தமிழ்நாட்டிற்கு வரு வதற்கு முன்னர் “மணிமேகலை” இயற்றப்பட்டிருக்க வேண்டும். காஞ்சிபுரத்தை அரசாண்டவன் சோழ மன்னன் என்றும், அவன் “நலங்கிள்ளி” என்பவன் தம்பி “இளங்கிள்ளி” என்பவன் என்றும் மணிமேகலை கூறுகின்றது. பல்லவர் முதன்முதலில் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியது கி.பி.நான்காம் நூற்றாண்டிலென்றும், கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் சோழர்கள் சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் வலிமை பெற்றிருந்தார்களென்றும், “குமாரவிஷ்ணு” அல்லது “ஸ்க���்தவர்மன்” என்னும் பெயருள்ள பல்லவ அரசன் தமிழ்நாட்டின் வடக்கிலிருந்து வந்து முதன் முதலில் காஞ்சிபுரத்தைச் சோழரிடமிருந்து கைப் பற்றியது ஏறத்தாழ கி.பி.325 ஆம் ஆண்டென்றும் ஹீராஸ் பாதிரியார் கூறியுள்ளார். எனவே, மணி மேகலையில் கூறப்பட்டுள்ளபடி காஞ்சியை அர சாண்ட மன்னன் சோழர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆகவே, மணிமேகலை கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை விளக்க வேறு சான்றுகள் ஏதும் தேவை இல்லை என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.\nசிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவன் கோவலனின் மனைவி கண்ணகி. கோவலனின் காதலி கணிகையர் குலத்தைச் சார்ந்த மாதவி. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் “மணி மேகலை”. மரக்கலம் உடைந்து, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தன் முன்னோர்களில் ஒருவனைக் காப்பாற்றிக் கரைசேர்த்தது “மணி மேகலா தெய்வம்”, அந்த தெய்வத்தின் மீது உள்ள பக்தியின் காரணமாகத் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு “மணிமேகலை” எனப் பெயர் சூட்டினான் கோவலன். கடலில் பயணம் மேற்கொள்ளும் நல்லோருக்கு இடுக்கண் வருமாயின் அவர்களின் துயரைத் தீர்க்கும் கடற்காவல் தெய்வத்தாய் “மணிமேகலா தெய்வம்” ஆகும்.\nசிலப்பதிகாரத்தில் சமணப் பெண்துறவி கவுந்தியடிகள்; மணிமேகலையில் மாதவி, அவரின் மகள் மணிமேகலை பௌத்தத்துறவிகள் ஆவர். இந்த மூன்று பெண்துறவிகளைத் தான் தமிழ் இலக் கியத்தில் முதன் முதலில் காண்கிறோம். “யாம் அறிந்த வரையில், தமிழ்நாட்டில் பெயர்பெற்ற பௌத்த பிக்குணி “மணிமேகலை” ஒருத்தியே என்கிறார் சீனி. வேங்கடசாமி. மணிமேகலைக் காப்பியத்தில் புகார் என்ற பூம்புகார், வஞ்சி மாநகர், காஞ்சி மாநகர் ஆகிய மூன்று நகரங்களில் மணிமேகலை பௌத்த பிக்குணியாக வலம் வருகிறார்.\nமுதலில், புகார் நகரில் நடைபெற்ற இந்திர விழாவில் மாதவியும், அவள் மகள் மணிமேகலையும் கலந்து கொள்ளவில்லை. அந்நாளில் மணிமேகலை யோடு மாதவி ஆடல் பாடலில் கலந்துகொண்டு ஊர் மக்களை மகிழ்விக்கவில்லை. இவர்கள் விழாவிற்கு வராமை குறித்து ஊரார் வருந்திய நிலையில் பழிச் சொற்களும் பரவின. இந்நிலையில், தன் தோழி வயந்தமாலையிடம் மாதவி கூறுவதாகச் சாத்தனார் மாதவியின் நிலையைச் சுட்டிக் காட்டு கிறார். “பொதுவாகப் பெண்களின் கற்பு மூன்று விதமானது. இதில் முதல் வகையைச் சேர்ந்த பெண்கள், கணவன் இறந்த செய்தி கேள்விப்பட்டதும், அந்த அதிர்ச்சியிலேயே அவர்களும் உயிர்துறந்துவிடு வார்கள். இரண்டாம் வகைப் பெண்கள் கணவனோடு உடன்கட்டை ஏறி இறந்து போவார்கள். மூன்றாம் வகைப் பெண்கள் விதவையாக வாழ்ந்து, பல விதமான துன்பங்களால் தங்களுடைய உடலை வருத்திக் கொள்வார்கள். ஆனால் கண்ணகியோ, இந்த மூன்று நிலைகளையும் கடந்தவள். தன்னுடைய கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மதுரை மாநகரத்தையே எரித்துவிட்டாள்.” அப்பேற்பட்ட பத்தினி அவள். இந்த மணிமேகலை என்னுடைய வயிற்றில் பிறந்த வளாக இருக்கலாம். ஆனால் இவள் கண்ணகியையும் தன்னுடைய தாயாகவே எண்ணி மதிக்கிறாள். மாபெரும் கற்புக்கரசியான கண்ணகியின் மகளை எப்படி பரத்தமைத் தொழிலில் ஈடுபடுத்த முடியும். எனவேதான் அவளைத் தவ நெறியில் புகச் செய்வதே அல்லாது திருத்தம் இல்லாத பரத்தமைத் தொழிலில் புகுவித்தலை அவள் செய்யச் சார்தல் இல்லை. எனவே, ஐந்து வகையுடைய பெருமைமிக்க கொள் கைகளாகிய 1. கொலை தவிர்த்தல், 2. களவு செய் யாமை, 3. கள்ளுண்ணாமை, 4. காமம் சாராமை, 5. பொய் சொல்லாமை ஆகியவற்றை மேற்கொண்டு தானும், தன் மகள் மணிமேகலையும் துறவுக் கோலம் பூண்டுள்ளோம்” என்றார் மாதவி. (மணி மேகலை 2:40-75). மணிமேகலையின் துறவறத்தை முதன்முதலில் இங்குதான் சாத்தனார் குறிப்பிடு கிறார்.\nமணிபல்லவத் தீவில் புத்த பீடிகையைத் தொழுது அமுத சுரபி என்னும் பாத்திரத்தை மணி மேகலை பெற்றாள். “பசிப்பிணி என்பது ஒருவனது குடிப்பெருமையால் அமைந்த சிறப்பினைக் கெடுக்கும்; பெருமையை அழிக்கும்; கல்வி, அறிவு என்னும் பொருள் துணையையும் கைவிடுமாறு செய்யும், நாணத்தைப் போக்கும்; அழகு மிகுந்த எழிலைச் சிதைக்கும், ஆபரணங்களை அணிந்த மனைவியோடும் பிறருடைய வாயில்களில் நின்று யாசிக்கவும் செய்யும். அத்தகு பாவத்திற்குக் காரணமாக உடைய பசிப் பிணியைத் தீர்த்தவர்கள் அடைகின்ற புகழின் சிறப்பினைச் சொல்லுவதற்கு அடங்காது” என்று தீவ திலகை என்னும் தெய்வம் பசிப் பணியின் தாக்குதலால் அடையும் தன்மையினை மணி மேகலைக்கு உரைத்தாள். அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை புகார் நகருக்கு வந்து அறவண அடிகளின் அறிவுரையை ஏற்று பிக்குணிக் கோலம் பூண்டு அமுத சுரபியைக் கையில் ஏந்தி, வீதி வழியே சென்றாள். இதனைச் சாத்தனார் க���ழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.\nஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க்குறு மாக்களும்”\nஅது முதல் மணிமேகலை பௌத்தத் துறவிக் கோலம் பூண்டு அமுத சுரபியின் வாயிலாகப் பசித்தோர்க்கு உணவு அளித்தாள்.\nபின்னர் வஞ்சி மாநகர் சென்றாள் மணி மேகலை. அங்குக் கண்ணகியின் கோட்டத்தை அடைந்து தன் தாயாகிய கண்ணகியையும், தந்தை யாகிய கோவலனையும் படிவ நிலையில் வணங்கித் துதித்தாள். மணிமேகலை பல்வேறு சமயக் கருத்து களைக் கேட்டறிந்தார். அவற்றுக்கு மாற்றாக எத்தகைய கருத்தினையும் உரைக்கவில்லை மணி மேகலை. ‘பல சமயங்களின் கொள்கைகளைவிட புத்த சமயம்தான் உயர்வானது; வாழ்க்கையைப் பற்றிய பேருண்மைகளை விளக்கக்கூடியது’ என்பது அவளுக்கு அப்போது புரிந்துவிட்டது (என். சொக்கன், மணிமேகலை ப.181, 2002).\nவஞ்சி மாநகரில் உள்ள பௌத்தப் பள்ளியை அடைந்த மணிமேகலை, தந்தை வழி பாட்டனாகிய மாசாத்துவானைக் கண்டு வணங்கினாள். அவர் புத்த சமயத்துறவியாகிய நிலையை அறிந்தாள். அவரின் அறிவுரைகளை ஏற்றுக் காஞ்சி நகரை அடைந்தாள் மணிமேகலை. இது முதல் காஞ்சியின் வரலாறு தொடக்கம் பெறுகிறது. காஞ்சியில் கிள்ளியின் தம்பியான இளங்கிள்ளி என்பவன் பசுமையான இலைகளையும் பொன்னென விளங்கும் கிளைகளையும் உடைய போதி மரத்தின் கீழ் அமர்ந்த புத்த பகவானுக்குக் கட்டிய ஆலயத்தை நண்ணி வணங்கிய மணிமேகலை மலர்ப்பொழிலின் கீழ்ச் சென்று தங்கி இருந்தாள். மணிமேகலை அங்கே புத்த பீடிகையின் மீது அமுத சுரபி பாத்திரத்தை வைத்து பசிநோய்க்கு மருந்தாக விளங்கும் உணவை உட்கொள்ளுவதற்கு எல்லா உயிரும் வருமாறு அழைத்தாள். பார்வையற்றோர், காது கேளாதோர், உடல் ஊனம் உற்றோர், பாதுகாப்பு இல்லாதோர், ஊமையர், நோய்ப்பட்டோர், துறவறம் மேற் கொண்டோர், பசிப்பிணியுற்றோர், வறுமையால் வாடுவோர் எனப் பலரும், விலங்கு வகைகளும் எனப் பல்லுயிரும் உணவு அருந்திப் பசிப் பிணியைப் போக்கிக் கொண்டனர் (மணிமேகலை 28: 221 - 230).\nமணிமேகலை காஞ்சியில் அறவண அடிகளை வணங்கித் துதித்தாள். அப்போது, அறவண அடிகள் மணிமேகலைக்கு அறிவுறுத்தும் வகையில் பௌத்தக் கொள்கையைச் சாத்தனார் சுட்டிக் காட்டுகிறார்.\n9 வகையான போலிகளைப் பற்றியும், அவற்றின் தன்மைகளைப் பற்றியும் விளக்குகிறார்.\nநான்கு வகையான விருத்தங்களைப் பற்றியும் விளக்கினார்.\n1. தன்மச் சொரூப விபரீத சாதனம்\n2. தன்ம விச��ட விபரீத சாதனம்\n3. தன்மிச் சொரூப விபரீத சாதனம்\n4. தன்மிச் விசேட விபரீத சாதனம்\nமேலும் உண்மைப் பொருளைப் பற்றியும், இன்மைப் பொருளைப் பற்றியும் விளக்கினார்.\nமணிமேகலை ஏற்கெனவே துறவறம் மேற் கொண்டுவிட்டாள். அடுத்தது, மணிபல்லவத்தில் தன்முற்பிறவி செய்திகளுக்குப் பிறகு அமுத சுரபியைப் பெற்று அதன் மூலம் அவள் தானத்தில் ஈடுபட்டாள்.\nஅறவண அடிகளின் அருளால் புத்த தர்மத்தின் பெருமைகளையும், ஒழுக்கங்களையும் தெரிந்து கொண்ட மணிமேகலை புத்தர் திருவடிகளிலேயே அடைக்கலமாகச் சேருவதாகத் தீர்மானித்துவிட்டாள். புத்தபிரானின் திருவடிகளை வணங்கி, ‘அவர் சொல்லித்தந்த நெறிமுறைகளின்படி நடப்பேன். குற்றங்களை விலக்குவேன். தவ ஒழுக்கத்தையே என்னுடைய வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு வாழ்வேன்’ என்றாள். நெடுநாள் நோற்றுக் கடைசியில் காஞ்சியிலேயே காலமானாள் மணிமேகலை.\nமணிமேகலை காஞ்சிக்கு வருகை தந்தபோதே அங்குப் புத்தர் கோயில் இருந்ததைக் காட்டுகிறார் சாத்தனார்.\n“பைம்பூம் போதிப் பகவற்கு இயற்றிய\nஇங்குச் சோழ மன்னனால் இந்தப் புத்தர் கோயில் கட்டுவிக்கப்பட்டதைச் சாத்தனார் குறிப் பிடுகிறார். மணிமேகலை காஞ்சியை அடைந்த பின்னர் புத்தமத வழிபாட்டுக்கு ஏற்றவற்றை அமைத்து விழா எடுத்த செய்தியையும் காஞ்சியில் பௌத்தமதம் சிறப்பிக்கப்பட்டதையும் கீழ்க்கண்ட. பாடலடிகள் காட்டுகின்றன.\nபண்டை எம்பிறப்பினைப் பான்மையில் காட்டிய,\nஅங்கு அப்பீடிகை இது என அறவோன்,\nமாபெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு,\nஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து,\nவிழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற”\nமேலும், பௌத்த மதத்தின் மீது கொண்ட நம்பிக்கைகள் காரணமாக, அதற்கேற்ற செயல் பாடுகளை மன்னனும் புரிந்த தன்மையை மணி மேகலை சுட்டிக் காட்டுகிறது.\n“கார்வறம் கூரினும் நீர்வறம் கூராது,\nபார் அக வீதியில் பண்டையோர் இழைத்த\nகோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியொடு\nமாமணி பல்லவம் வந்தது ஈங்கெனப்\nபொய்கையும் பொழிலும் புனைமின் என்று அறைந்த\nதெய்வதம் போயபின் செய்தியாம் அமைத்தது\nஇவ்விடம் என்றே அவ்விடம் காட்ட”\nகாஞ்சி, பிள்ளையார் பாளையம் என்னும் பகுதியில் “ஸ்ரீ கருகினில் அமர்ந்தவள் அம்மன்” கோயில் உள்ளது. இக்கோயில் தனியாரிடம் உள்ளது.\nபரம்பரை தர்மகர்த்தா C.T.M. அப்பாராவ் முதலியார் அவர்களின் பராம��ிப்பில் உள்ளது. இக்கோயிலின் சன்னதியில் இரண்டு புத்த சிற்பங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று தியான நிலையில் உள்ள சிலையாகும். மற்றொன்றில் புத்தர் பூமிஸ்பரிச முத்திரை காட்டுகிறார். இச்சிலைகள் சோழர் காலக் கலையைச் சார்ந்தவை.\n12-ஆம் நூற்றாண்டில் இச்சிலைகளை உருவாக்கி யிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இரண்டு புத்த சிற்பங்களுக்கு அருகில் “மணிமேகலை”ச் சிற்பத்தின் தலைப்பகுதி மட்டும் காணப்படுகிறது. மணிமேகலைச் சிற்பத்தின் கண், மூக்கு மிகவும் சிறப்பாகவும், பொருத்தமாகவும் அமைந்துள்ளன. உதடுகள் ஆழ்ந்து அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காதுகள் முறைப்படி நீண்டு காணப்படுகின்றன. தலைமுடி அலங்காரத்துடன் தலையைச் சுற்றி வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்து முறைப்படி பொது மக்கள் இச்சிலைகளை வழிபட்டு வருகிறார்கள். இக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் “லட்சதீபம்” விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nகாஞ்சிபுரம், தலைமை மருத்துவமனையைக் கடந்து தொடர்வண்டி நிலையத்திற்குப் போகும் வழியில், “ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன்” ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமையானது. இது முற்காலத்தில் “மணி மேகலை”க் கோயிலாக இருந்தது என்று மரபுவழி நம்பிக்கை ஒன்று நிலவி வருகிறது. திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ள பகுதி முன்பு அறப்பணஞ்சேரி என வழங்கப்பட்டது. இங்கு அறவண அடிகள் வாழ்ந்து இருப்பார் என்றும் “அறவாணர் சேரி” என்பது மரூஉச் சொல்லாக அறப்பணஞ்சேரி என வழங்கப்பட்டது என்பதும் அறியலாம். மணிமேகலை என்ற அறச்சொல்லை நினைவுகூரும் வகையில், தற்போது, இந்தத் தெரு “அறம்பெருஞ்செல்வி” என அழைக்கப்படுகிறது.\nஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் பழமையான இரண்டு அரச (போதி) மரங்கள் காணப் படுகின்றன. இக்கோயில் சன்னதியின் மற்றொரு புறத்தில், S.V.நடேச முதலியார் என்பவரால் கட்டப் பட்ட “ஸ்ரீ பரஞ்சோதி அம்மன்” ஆலயமும் காணப் படுகிறது. வழிபாட்டு முறைகள் இந்து முறைப்படி நடைபெற்று வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதத்தில் திருவிழாக்கள் சிறப்பாக எடுக்கப்பட்டு, வழிபாடு நடைபெற்று வருகிறது.\nதற்போது உள்ள தர்மராஜா - திரௌபதி அம்மன் கோயிலில் முன்பு இருந்த மணிமேகலை, புத்த பிக்குணிகள் சிற்பங்கள் உடைக்கப்பட்டு மூன்று கி.���ீ. தூரத்தில் உள்ள நத்தப்பேட்டை ஏரி கரையில் போட்டுவிட்டார்கள் என்று கூறப் படுகிறது. உடைந்து, சிதைவடைந்த சிற்பங்களைத் தவிர்த்து, முழு அளவில் உள்ள மணிமேகலை, புத்த பிக்குணிச் சிற்பங்களை ஏரிகரையில் திறந்த வெளியில் வைத்து இந்து முறைப்படி வணங்கி வருகிறார்கள்.\nஇதன் மூலம், காஞ்சியில், பௌத்த மதத்தின் சிறப்பினை மணிமேகலை மிக ஆழமாகவும், அழுத்தமாகவும் தருகின்றதைக் காண்கிறோம். “தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை”யில், பௌத்த மதக் கொள்கைகள் காஞ்சியில் எவ்வாறு பரப்பப்பட்டன, வளர்க்கப்பட்டன என்ற செய்தி களையெல்லாம் மணிமேகலையால் அறிந்துகொள் கிறோம். பௌத்தத்தின் எழுச்சியினைக் காட்ட சிறந்ததொரு தலமாக காஞ்சி விளங்கியது என் பதையும் மணிமேகலையில் காண்கிறோம். இந் நேர்வுகளைக் காணும் போது, அன்றைய பௌத்த மதத்தின் செல்வாக்கினைக் கணிப்பு செய்கிறது மணிமேகலை என்பதை அறியலாம்.\nபௌத்த மதத்தையும், அதன் கொள்கைகளையும் எல்லோருக்கும் அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு மணிமேகலை இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது என்கிறார் மயிலை சீனி. வேங்கட சாமி. வடக்கில் நாளந்தாவும், தெற்கில் காஞ்சியும் பழங்கால பௌத்தவியல் ஆராய்ச்சி மையங்களாகத் திகழ்ந்தன. களப்பிரர்களின் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் தமிழக வணிகத்தின் வீழ்ச்சியும், இவ் வணிகம் பேணிப் பாதுகாத்த பௌத்த மதத்தின் வீழ்ச்சியும் ஒருங்கே படிப்படியாகத் தமிழகத்தில் நடைபெற்றன. வைணவம், சைவம் ஆகிய மதங் களின் தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் பௌத்தமும், சமணமும் தவித்தன. சமணமும், பௌத்தமும் செல்வாக்கு பெற்றிருந்த இடங்களில் தமிழகத்தில் சைவமும், வைணவமும் செல்வாக்கு பெற்றன. பௌத்தர்களின் இருப்பிடமான காஞ்சியில் பௌத்தப் பண்பாட்டுப் பெருமை படிப்படியாக நலிந்து சிதைந்தது. பௌத்தம் தொடர்பான ஆவணங்கள் சமயக்காழ்ப்பால் அழிக்கப்பட்டன.\nவ.த. இராமசுப்பிரமணியம், மணிமேகலை (மூலமும்,உரையும்)\nமுனைவர் கு. பகவதி, காஞ்சிபுரம் (கி.பி.6ஆம்நூற்றாண்டிற்கு முன்)\nமா. சந்திரமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள்\nமுனைவர் கு. சேதுராமன், பௌத்த சமயக் கலை வரலாறு\nமுனைவர்.ஜி.ஜான் சாமுவேல்,உலகளாவிய தமிழாய்வு - ஓர் அறிமுகம்\nமுனைவர் க. முருகேசன், செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்\nநேர்காணல் நா.சந்திரசேக���ன், தலைவர் போதிதர்மா சொசைட்டி, காஞ்சிபுரம்\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2012\nஅதிகாலை மதுரை - அரை கிலோ மீட்டர், அரை மணி...\nஎன்னதான் பிழைப்பதற்காக ஊர் ஊராகப் போய்த் திரிந்தாலும்கூட சொந்த ஊர் என்றால் சொந்த ஊர்தான்.\nபெரும்பாலும் மனைவி, மகளுடன் சுமை களையும் எடுத்துச் செல்வதால், வழக்கமாகக் காலையில் மதுரை சந்திப்பு ரயிலடியில் இறங்கி யதுமே ஆட்டோவொன்றைப் பிடித்து வீட்டுக்குப் போய்விடுவேன்.\nஇந்த முறை தனியே. தீபாவளிக்கெல்லாம் ஊருக்குப் போவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில், அதற்கு முன்னதாக ஒரு ஞாயிற்றுக் கிழமையையொட்டிக் கிடைத்த நாளில் எடுத்த டிக்கெட் இது, சென்னையில் இருப்பவர்களின் துரதிருஷ்டத்தின்படியே விரும்பிய ரயிலில் - பாண்டியன் எக்ஸ்பிரஸ்தான், வேறென்ன - டிக்கெட் கிடைக்காததால் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் (பேசாமல் திரு அனந்தபுரம் எக்ஸ்பிரஸ் என்றே பெயர் வைத் திருக்கலாம் - டிக்கெட் கிடைக்காததால் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் (பேசாமல் திரு அனந்தபுரம் எக்ஸ்பிரஸ் என்றே பெயர் வைத் திருக்கலாம்) மதுரைக்குச் சென்றேன். அதிகாலை 4.15 மணிக்குச் சென்றடைய வேண்டும். எப்போது சென்றடையுமோ, மதுரையில் இறங்கத் தவறி விடுவோமோ என்ற அச்சத்திலேயே இரவுத் தூக்கம் முழுவதும் போய்விட்டது.\nஒருகாலத்தில் டாக்டர்களுக்கு மருத்துவத்தைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை, ஏமாந்துவிடு வார்கள் என்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் மருத்துவத்தைத் தவிர எல்லாமும் தெரிகிறதோ என்று தோன்றுகிறது. அதேபோல, இந்த ஐ.டி. நபர் களுக்கும்கூட அடுத்தவர்களைப் பற்றி எதுவுமே தெரியாதுபோல; அல்லது தெரிந்தும் தெரியாதவர் களாக நடக்கிறார்கள் போல.\nநான் சென்ற ரயிலில் எனக்கு நடுப் படுக்கை. எதிரேயுள்ள நடுப் படுக்கையும் வயதில் மூத்த - சுமார் 65 வயதிருக்கலாம் - ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ரயில்வேயில் ஐ.ஆர்.சி.டி.சி. எந்திரத்துக்குத் தான் சொந்த அறிவும் கிடையாது, புகட்டப்பட்ட அறிவும் கிடையாதே. ஆனால், எங்கள் பகுதியிலேயே மிக இளைஞர்களுக்குக் கீழ்ப் படுக்கைகள் வழங்கப் பட்டிருந்தன. அவர்கள் இருவருமே ஐ.டி.காரர்கள். வேறொரு பெட்டியிலிருந்து வந்த இன்னோர் இளைஞரும் சேர்ந்துகொண்டார்.\nமூவருமாகத் தங்களுடைய செல்போன்களின் பெருமைகளை மாற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர், தன்னுடைய TABLET-ஐ (செல்போனாகவும் இல்லாமல் லேப்டாப் ஆகவும் இல்லாமல் இரண்டுங் கெட்டானாக உருவெடுத்துள்ள இழிபிறவி) எடுத்து வைத்துப் பெருமைகளை விளக்கியதுடன், சினிமா வெல்லாமும்கூட காட்டிக்கொண்டிருந்தார். கெரகம், அதில் யூ டியூப்பில் டவுன்லோட் செய்யப்பட்ட விவேக், சந்தானம் நகைச்சுவைகள் வேறு. தங்களுடைய புகழ்களையும் தங்கள் சாதனைகளையும் கூட அவர்கள் பட்டியலிட்டுக் கொண்டிருந்தனர்.\nஎனக்கு எதிரே இருந்த முதியவர், உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி விழுந்துகொண்டிருந்தார். இளைய சமுதாயமோ கவலையே படவில்லை. வேறு வழியுமில்லை. நானும் விதியே என அவர்களின் தற்புகழ்ப் புராணங்களைக் கேட்டுக்கொண்டு வந்தேன். எப்படியோ ஒருவரின் கடைக்கண் பார் வையில் முதியவர் பட்டுவிடவே, அவர் வேண்டு மானால் தூங்கட்டுமே எனக் கூறினார். ‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். நானும் - அவர்களில் ஒருவருடையதான - மேல் படுக்கைக்குப் போய் விடுகிறேன்’ என்று கூறித் தப்பிவிட்டேன். ஆனால், வந்த தூக்கம் போனது போனதுதான். இந்த லட்சணத்தில்தான் அதிகாலை 4 மணிக்கு இறங்க வேண்டிய அவதி.\nஅதிசயமாக அன்று சரியான நேரத்துக்கே மதுரைக்கு வந்துவிட்டது அனந்தபுரி எக்ஸ்பிரஸ். தூங்கியும் தூங்காமல் எழுந்து, மதுரைச் சந்திப்பி லிருந்து வெளியே வரும்போது, எப்போதும்போல அந்த அதிகாலையிலும் ஆட்டோ டிரைவர்கள் வரவேற்றனர் (இவர்கள் எல்லாம் எப்போது தூங்கி எப்போது விழிப்பார்கள்). நான் தனி என்பதால் அவர்களைத் தவிர்த்துவிட்டு, நீண்ட காலத்துக்குப் பிறகு, பெரியார் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன்.\nரயில் நிலையச் சந்திப்பு முன்பு போல இல்லை. நன்றாக நினைவு இருக்கிறது. ‘70-களின் கடைசி ஆண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, நாட்டுத் தொண்டுத் திட்ட மாணவனாக ரயில் நிலையத்துக்கு வருவோம் (விடுமுறையில் ஊருக்குச் செல்வதற்காகவும்தான்). இலங்கைத் தலைமன்னாரில் இருந்து ஒரே டிக்கெட் எடுத்து மதுரைக்கு நிறைய பேர் வருவார்கள். ரயில் நிலையமே நமக்கு மிகவும் ஒட்டுறவுடன் இருப்பதாகத் தோன்றும்.\nஇப்போது நிலையத்துக்குள் நுழையும் சாலையை வாய்க்கால் மாதிரி வெட்டிவிட்டு ஆட்டோக்களை மட்டும் விடுகிறார்கள். முன்புறம் முழுவதும் ‘டைல்ஸ்’ பதித்துவிட்டார்கள். ஒரு பிள்ளையார் கோவில் இரு���்தது. இப்போதும் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறதாம். என்னால் ‘சட்’டெனப் பார்க்க முடியவில்லை. அதுவும்கூட மதுரை ரயில் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களின் ரட்சிப்புதான் காரணம் என நினைக்கிறேன். வெளியே திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரங்கள். சில ஏ.டி.எம்.கள். அழகுபடுத்து கிறேன் பேர்வழி என்ற பெயரில், சகிக்க முடியாமல் என்னென்னவோ செய்திருக்கிறார்கள். ஒருவேளை இதுதான் சிலருக்கு அழகோ என்னவோ\nரயில் நிலையத்துக்கு எதிரே மங்கம்மாள் சத்திரம். பழைய கட்டடம். சாதாரண மக்கள் தங்கிக் கொள்வார்கள். முன்புறம் வெளியாக இருக்கும். சில பிச்சைக்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். வெயிலுக்கு ஒதுங்கி நிற்கலாம். இப்போது எல்லாம் உருமாறிப் போய்விட்டது. முன்புறம் இருக்கக்கூடிய அறைகள் எல்லாம் கடைகளாக மாற்றப்பட்டு விட்டிருக் கின்றன. சத்திரத்தில் கிடைக்காத வாடகை, இந்த வணிகக் கடைகளில் கிடைக்கும்தானே ராணி மங்கம்மாளே வந்தால்கூட அடையாளம் காண முடியாத அளவுக்குக் கட்டடத்தைக் காணாமல் போகச் செய்யும் அளவுக்குக் கடைகளின் விளம்பரப் பலகைகள். நவீனம்.\nமுன்பெல்லாம், அதிகாலை நேரங்களில் வழக்க மாக ஜங்ஷனிலிருந்து பெரியார் பஸ் நிலையம் (அப்போது பஸ் ஸ்டாண்ட்) செல்லும் வழியில் ஆங்காங்கே இருக்கும் தேநீர்க் கடைகளில், ஏறத்தாழ ஒரே மாதிரியான பக்திப் பாடல்கள் ஒலிக்கும். ஆனால், இப்போது ஒன்றும் காணவில்லை. இருந்த கடைகள் எல்லாமும்கூட கொஞ்சம் ‘எலைட்’டாகக் காட்சி யளித்தன.\nஅந்த அதிகாலையிலும் திருநெல்வேலி அல்வா புகழ் பிரேம விலாஸில் விற்பனையாளர்கள் சுறு சுறுப்பாக இருந்தார்கள். அல்வா சொன்ன பின், ‘மிளகு போட்ட இந்தக் காராச்சேவுதான் சார் இங்கே ஸ்பெஷல்’ என்று யோசனையும் சொன்னார்கள். 500 ரூபாய்த் தாளைக் கொடுத்தபோது, முகங்கோணாமல் சில்லறையும் தந்தார்கள்.\nஒரு காலத்தில் ஓஹோவென்றிருந்த ரீகல் தியேட்டர் தேடிப் பார்க்க வேண்டியதாக உள்ளடங்கிப் போய்க் கிடந்தது. பெரிய காரை வீடு போலத் தோன்றியது. இப்போது தங்க ரீகல் என்று பெயர். என்னென்னவோ படம் திரையிடுகிறார்கள். அப் போதெல்லாம் ஆங்கிலப் படங்கள் மட்டும்தான். வேர்ஈகிள்ஸ் டேர், கிரேட் எஸ்கேப், எஸ்கேப் டு விக்டரி, ஃபைவ்மென் ஆர்மி... எத்தனையோ படங்கள். எத்தனையோ நண்பர்களுடன். திரையரங்��ிற்கு வரும் ரசிகர்களை அவ்வளவு எளிதாக மதிப்பிட்டு விட முடியாது. சாதாரணமாகத் தோன்றக்கூடிய ஒருவர், ஆங்கிலப் படங்களைப்பற்றிய பெரும் தகவல் களஞ்சியமாகவே திகழ்வார். திரையரங்கில் முறுக்கு விற்பவர்கூட விரிவாகப் பேசுவார் (அப் போது இணையமெல்லாம் கிடையாது, அவர் களுக்குப் படிப்பறிவுகூட இருக்காது). நண்பர்கள் மனோ என்ற பால் மனோகரன் (நவம்பர் 25 ஆம் தேதி அதிகாலையில் திருச்சி அருகே நேரிட்ட சாலை விபத்தொன்றில் பால் மனோகரன் மறைந்துவிட்டார்), முரளிதரன் போன்றோருக்குத் தெரிந்த சிலர் அப் போது ரீகல் தியேட்டரில் வேலை பார்த்தார்கள். எனவே, எப்போது போனாலும், எந்தப் படத்துக்கு வேண்டுமானாலும் எங்களால் டிக்கெட் வாங்கிவிட முடியும். டிக்கெட் வாங்குகிறோமோ இல்லையோ, நிச்சயமாகப் படம் பார்த்துவிட முடியும்.\nஒருமுறை திடீரென, எந்தத் திரையரங்காக இருந்தாலும் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடுவது கட்டாயம் என்றாக்கப்பட்டது. ரீகலில் தமிழ்த் திரைப்படமா என்ற வியப்புதான் ஏற்பட்டது. பல பேர் வெறுத்து, சோகச் சித்திரமாகிவிட்டார்கள். ஆனாலும் தமிழ்ப் படங்களையும் அங்கே பார்த்தார்கள். நானும் அங்கேதான் ‘அவள் அப்படித்தான்’ பார்த்தேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடித்த இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படம். கறுப்பு வெள்ளையில் பிரமாதமான படம் (ருத்ரய்யா இயக்கிய இரண்டாவது படம், ‘கிராமத்து அத்தியாயம்’ பெரிதும் சொதப்பிவிட்டது, கல்பனாவில் ஒரு காலைக் காட்சியில் வேர்க்க விறுவிறுக்க அதைப் போய்ப் பார்த்தோம். ‘ஆத்து மேட்டுல, ஒரு பாட்டு கேட்குது’ என்றொரு பாட்டு. நன்றாக இருக்கும். படத்தில் குரல் ஒருபுறம், தலையசைப்பு, வாயசைப்பு ஒருபுறம் என ஒட்டாதிருக்கும். அந்தப் பாட்டுக்கு ஆடிய புதுமுகங்கள் இப்போது எப்படி இருப்பார்களோ தெரியவில்லை. பிறகு ருத்ரய்யாவும் கூட அவ்வளவாக சோபிக்கவில்லை). காலம்தான் எப்படியெல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறது\nபேருந்து நிலையத்தை நோக்கி நடந்தபோது, சென்னையை எள்ளி நகையாடுவதைப் போல, ஒரு குடும்பம், பேருந்துநிலையப் பக்கமிருந்து ரயில் நிலையத்தை நோக்கி நடந்துவந்துகொண்டிருந்தது. ரொம்ப ‘ரிச்’சாகப் புடைவை கட்டிக் கொண்டிருந்த குடும்பத் தலைவி, மிக இயல்பாகப் பெரிய பை யொன்றைத் தூக்��ித் தலையிலும் மற்றொரு பையை இடுப்பிலும் வைத்துச் சுமந்தபடி நடந்துவந்துகொண் டிருந்தார். கணவர், மகன், மகள் எல்லாருமே அவரவர் வலுவுக்கேற்ப ஆளுக்கொரு சுமையுடன் நடந்துகொண்டிருந்தனர். அந்தக் கணத்தில் எனக்கும் சின்ன வயதில், அப்பா, அம்மா, தம்பி, தங்கையுடன் ஊருக்குப் போன நினைவுகள் வந்துபோயின.\nகண்ணில் பட்டது கட்டபொம்மன் சிலை, முன்பெல்லாம் அடிக்கடி கட்டபொம்மனின் கையிலிருக்கும் வாள் முறிந்து விழுந்துவிடும். இப்போது எப்படி எனத் தெரியவில்லை (பகல் நேரத்தில் தற்போது நண்பர் எடுத்து அனுப்பிய படத்தில் வாள் இருக்கிறது). பெரிய சதுக்கமாகத் தோன்றிய இடம், இப்போது திட்டு மாதிரி காட்சியளிக்கிறது.\nபேருந்து நிலையம் மிகவும் சின்னதாகத் தோன்றியது, சின்னப் பிள்ளையில் பார்த்த எல்லாமே இப்போது அப்படித்தான் தோன்றுகின்றன. பெரியன வெல்லாம் சிறியனவாக, தொலைவுகள் எல்லாம் சுருக்கமாக. பேருந்து நிலையம் முழுவதும் தட்டுக்கல் பாவிவிட்டிருக்கிறார்கள். முன்னர், மழை பெய்தால் குளம் போலப் பேருந்து நிலையம் காட்சியளிக்கும். இப்போது, ஒருவேளை நீச்சல் தொட்டி போலக் காட்சியளிக்குமோ என்னவோ\nபேருந்து நிலைய நடைமேடைகளில் எல்லாம் எப்போதும்போலவே தலைக்குத் தங்கள் பொருள் களையே வைத்துக்கொண்டு, குளிருக்குப் போர்த்திக் கொண்டு நிறைய பேர் படுத்துத் தூங்கிக்கொண் டிருந்தார்கள். பெரும்பாலும் ஏதாவது வேலையாக நகருக்கு வந்துவிட்டு, முதல் பேருந்தில் ஊருக்குத் திரும்பக் கூடியவர்களாக இருக்கும். அல்லாமல் இரவு நேரம் மட்டுமே குடியிருப்பாகப் பாவித்துத் தங்கிக்கொள்ளும் கூலித் தொழிலாளர்களாகவும் பிளாட்பாரங்களில் தின்பண்டங்கள் விற்பவர் களாகவும் பிச்சைக்காரர்களாகவும் இருக்கலாம்.\nபேருந்து நிலையம் முழுவதும் முந்தைய நாள் குப்பைகள். நடைமேடைகளும் குப்பை மேடுகளைப் போலத்தான் இருந்தன. இரவோடு இரவாகக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யலாமே என்று தோன்றியது. பிறகு மிகவும் யோசித்துப் பார்க்க, இரவோடிரவாக இந்தக் குப்பையைக் கூட்டுவதால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது. போய்த் தொலை யட்டும். படுத்துறங்குபவர்களாவது விடியும்வரை நிம்மதியாக உறங்கட்டும் எனப் பட்டது.\nஇதே பேருந்து நிலையத்தில் ‘80-களில், 90-களில் மதுரைத் தினமணியில் வேலை பார்த்த காலத்தில�� எத்தனையோ நாள்கள் அதிகாலை நேரங்களைப் புத்தங்களைப் படித்துக்கொண்டே கழித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. நாவல்கள், கட்டுரைகள் என எத்தனை யெத்தனை\nஒரு காலகட்டத்தில் லூனா இருந்தது. 1800 ரூபாய்க்கு ஒரு நண்பரிடம் வாங்கியது. லிட்டர் பெட்ரோல், எட்டு ரூபாயோ என்னவோ, இரவுப் பணிக்கு மட்டுமே அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வேன். ஒரு நாள் தினமணியில் இரவுப் பணி. நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை உயரப் போவதாக அறிவிப்பு வந்தது. அப்போதெல்லாம் டி.வி.யும் கிடையாது, பிரேக்கிங் நியூஸ்களும் கிடையா. விலை உயர்வு பற்றி ஒன்று வானொலியில் சொல்லித் தெரிய வேண்டும் அல்லது நாளிதழ் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தெரிந்தவுடனே நாங்கள் எல்லாம், டேங்கை நிரப்பிக் கொள்வதற்காக, அலுவலகத்துக்கு எதிரிலேயே இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வண்டிகளுடன் சென்றோம். என்னுடைய லூனா விலும் பெட்ரோல் போட்டார்கள். என்ன கொடுமை பெட்ரோல் நிரம்பி, ஏராளமாகக் கீழே கொட்டி விட்டது பெட்ரோல் நிரம்பி, ஏராளமாகக் கீழே கொட்டி விட்டது ஏதோ, சில ரூபாய்களை மிச்சம் செய்யப் போவதாக நினைத்துக்கொண்டு, அதைவிடக் கூடுதலாக வீணாகிவிட்டது.\nபின்னால், லூனாவை வைத்துச் சமாளிக்க முடியாததால் - சரியான ஆவணங்களும் இல்லை - விற்றுவிட்டேன். அதன் பிறகு பேருந்துதான். இரவு - அல்ல - அதிகாலை 2 அல்லது 2.30 மணிக்கு வேலை முடிந்ததும், அலுவலக வாசலிலேயே பேருந்து நிறுத்தம், காத்திருந்து இரவு சேவை பேருந்தைப் பிடித்தால், தெற்குவாசல் சுற்றிப் பத்துப் பதினைந்து நிமிஷங்களிலேயே மத்திய பேருந்து நிலையம் வந்துவிடும். வீட்டுக்குச் செல்ல முதல் பேருந்து, 5 மணிக்கு மேலேதான். சில நாள்களில் 5. 15கூட ஆகிவிடும். இடம் கிடைத்தால் ஏதாவது பெஞ்சில் அமர்ந்துகொண்டு, இல்லாவிட்டால் நின்றுகொண்டே இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் படித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அலுவலகத்திலும் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்த அலுப்பால், சில நாள்களில் வெறுமனே சுற்றி வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே நேரம் கழியும். அப்போதும் இதேபோன்ற காட்சிகள் தான், கொஞ்சம் பழைய, கறுப்பு-வெள்ளைப் படத்தைப் பார்த்தது போல, இருக்கும்.\nஇந்தப் பேருந்து நிலையக் காத்திருப்பில் வெயில் காலத்தில் எதுவும் ��ோன்றாது. குளிர்காலத்தில் தான் மிகவும் கடினமாக இருக்கும். இதற்காக, போர்வையா கொண்டு செல்ல முடியும் மழைக் காலங்களை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது.\nமுன்னர் பேருந்து நிலையத்துக்குள்ளே ஆட்டோக்களைக்கூடப் பார்க்க முடியாது. இப் போது அதிகாலை என்பதாலோ, முதல் பேருந்து வந்து புறப்பட நேரமாகும் என்பதாலோ ஷேர் ஆட்டோக்களே உள்ளே வந்து சென்றன. அரசரடி, காளவாசல் என்றெல்லாம் கூவிக்கூவி அழைத்தார்கள். முதல் பஸ் வரும் நேரம் நெருங்கிவிட்டதெனக் கருதியதாலோ என்னவோ யாரும் சீண்டவில்லை.\nஇன்னும் 5 மணியாகவில்லை. அந்தக் காலத்தில் கேட்காத சப்தங்களும் கேட்கத் தொடங்கின. எங்கிருந்தோ பள்ளிவாசல் தொழுகைச் சப்தம். பஸ் நிலையத்தின் தென்புறமாக இருக்க வேண்டும். திடீர் நகர். அப்போது பெரும்பாலும் குடிசைகள், சின்னச் சின்ன வீடுகள்தான். உழைக்கும் மக்கள் வாழ்ந்துவந்தனர். இப்போது மாடிக் குடியிருப்புகள் எல்லாம் தெரிந்தன. சிறிது நேரத்தில் மற்றோரிடத் திலிருந்து தொழுகைச் சப்தம். சிறு இடைவெளியில் பஸ் நிலைய வாசலையொட்டி, கட்டபொம்மன் சிலைக்கு நேர் பின்னேயுள்ள தேவாலயத்தில் 5 மணி அடித்து, ஒலிபெருக்கியில் விவிலியத்தின் சில வரிகள் ஒலிபரப்பாயின. இதுவும் புதிதாகத்தான் இருந்தது.\nஅப்போது பேருந்து நிலையத்துக்குள் வடக்குப் புறம் சுற்றுச்சுவரையொட்டிச் சில மரங்கள் இருந்தன. வெயிலுக்கு மக்கள் ஒதுங்கி நிற்பார்கள். ஆவின் கடையொன்று இருக்கும். எப்போது பார்த்தாலும் ஒரு கூட்டம் நின்றுகொண்டிருக்கும். வடகிழக்கு மூலை வழியேயும் பேருந்து நிலையத்துக்குள் நடந்து வர வழியிருந்தது. வழியிலேயே இரு புத்தகக் கடைகள் இருந்தன. இப்போது எதுவும் இல்லை - மட்டுமல்ல - நிழல் தரும் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, வேலிச் சுவரிட்டுக் கொஞ்சம் குத்துச் செடிகளை நட்டிருக்கிறார்கள். அழகாக்கிவிட்டதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் போலும்.\nவடபுறத்தில் விலையில்லா - அல்ல - இலவசக் கழிப்பிடமாக இருந்தது, இப்போது பளப்பளா கற்கள் பதிக்கப்பட்டு நவீன கழிப்பிடமாக மாறி யிருக்கிறது. தொலைவிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. உள்ளே செல்லும் துணிவு பிறக்கவில்லை. கட்டணம் வசூலிக்கிறார்களா என்றும் தெரியவில்லை.\nமதுரை மத்திய பேருந்து நிலையத்தின் சொல்லப் படாத அடையாளமெனத் தெரிந்தது, மேற்கே இருந்த பாழடைந்த கல்லறைத் தோட்டமும் கல்லறை களும். கல்லறையின் சுற்றுச்சுவர்தான் ஆண்களுக் கான சிறுநீர்க் கழிப்பிடமாக விளங்கியது. இப் போது என்னவோ, கோட்டைச் சுவர் போல வரிசை யாகக் கடைகள் கட்டப்பட்டிருந்தன. கல்லறைகள் தெரியவில்லை, இருக்கின்றனவா, அல்லது தூர்த்து விட்டார்களா என்பதுவும் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.\nசரியாக 5 மணிக்கு முதல் பேருந்து, 59 பி சேந்த மங்கலம் செல்லும் வண்டி உள்ளே வந்துவிட்டது. அங்கே இங்கே சிதறிக் கிடந்தவர்கள் எல்லாம் திரண்டு பேருந்தில் ஏறிவிட்டார்கள். பேருந்து புறப்படவில்லை. பின்னாலேயே, இதே 59 வரிசையில் முடுவார்பட்டிக்குச் செல்லும் டீலக்ஸ் பேருந்து ஒன்றும் வந்து நின்றது. ஒரே ஒருவர்கூட ஏறவில்லை - உண்மையிலேயே ஒருவர்கூட கண்டுகொள்ளவில்லை. இரு பேருந்துகளும் ஒரேநேரத்தில்தான் புறப்பட்டன. (அப்போது, நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறிய வாசல் வழிதான் இப்போது உள்ளே நுழைகின்றன. எந்தெந்தப் பக்கங்களிலோ வெளியேறுகின்றன).\nபேருந்திலிருந்து இறங்க வசதியாக முன்புறத்தில் அமர்ந்துகொண்டுவிட்டேன். டிக்கெட் 6 ரூபாய். சென்னையில் 13 ரூபாய், 19 ரூபாய் என்று கொடுத்து விட்டு, அதையும் ‘பாஸ் பண்ணி’ அனுப்பிவிட்டு, டிக்கெட்டும் வராமல், சில்லறையும் வராமல் படும் அவதியுடன் ஒப்பிட்டுப் பார்க்க, டிக்கெட் விலை மிகவும் சல்லிசாகத் தெரிந்தது.\nஎனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் களில் ஒருவர், 100 ரூபாய்த் தாளை நீட்டி, 3 டிக்கெட் கேட்டார். ஆஹா, ‘காலங்காத்தாலே’ 100 ரூபாய் கொடுத்து டிக்கெட்டா, கடித்துத் துப்பப் போகிறார் கண்டக்டர் என்று அதிர்ச்சியுடன் காத்திருந்தால், ‘சில்லறை இல்லையா’ என்ற ஒரே கேள்வியுடன் அமைதியாகப் பெற்றுக்கொண்டு, டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்தார் கண்டக்டர்; ‘மீதி’ என்ற ஒரே கேள்வியுடன் அமைதியாகப் பெற்றுக்கொண்டு, டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்தார் கண்டக்டர்; ‘மீதி’ என்ற இளைஞரிடம் பிறகு தருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். மறுமுறை டிக்கெட் கிழிக்க முன்புறம் கண்டக்டர் வந்தபோது, ‘அண்ணே, மீதியக் கொடுங்க’ என்றார் இளைஞர் மறுபடியும். ‘அட, ஓடியா போய்விடுவேன், இறங்குமுன் வாங்கிக் கொள்’ என்பது கண்டக்டரின் பதில். ‘சீக்கிரம் கொடுத்தால் தூங்குவோம்ல’ என்று கூறிய இள��ஞர், கண்டக்டர் அந்தப் புறம் நகர்ந்ததும், ‘காலங்காத்தால பெரிய ஏழரையாப் போச்சு’ என்றொரு காமென்ட் வேறு அடித்தார். எனக்கு நிஜமாகவே இவையெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதுவே சென்னையாக இருந்திருந்தால் 100 ரூபாய்த் தாளைப் பார்த்ததுமே பேருந்தைவிட்டு இறக்கிவிட்டிருப்பார் கண்டக்டர். ஒரு சொல் கேட்க முடியாது, அப்படியே கேட்டாலும் பேருந்தில் உடன் பயணம் செய்யக்கூடிய ஒரு நபர்கூட ஆதரவாகப் பேசியிருக்க மாட்டார்.\nபேருந்து, காளவாசல் நிறுத்தத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. இந்த இடைவெளியில் ஆளில்லாமல் சென்ற டீலக்ஸ் பஸ், எங்கள் பேருந்தை ஓவர்டேக் செய்து காளவாசல் நிறுத்தத்துக்குச் சென்றுவிட்டிருந்தது தெரிந்தது. நிறைய பேர் கும்பலாக டீலக்ஸ் பேருந்தில் ஏறச் சென்றவர்கள், இந்த சாதாரண பேருந்தைப் பார்த்ததும் ஓட்டு மொத்தமாக மேலேறாமல் புறக்கணித்து நின்று விட்டனர். ஒருகணம் தயங்கிய பின் டீலக்ஸ் பேருந்து மீண்டும் ஆளில்லாமலேயே புறப்பட்டுப் போய்விட்டது. அந்த டிரைவர் ஒருவேளை திரும்பிப் பார்த்திருக்கக் கூடும், அல்லது, இது வழக்கமாக நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரிந் திருக்கவும் கூடும். என்ன காரணமோ, உண்மை யிலேயே, இந்தப் புறக்கணிப்பு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nவீடு இருக்கும் பகுதியின் நிறுத்தம் வந்ததும் இறங்கி நடந்தேன். பேருந்து நின்று நிதானமாக இறக்கிவிட்டுப் புறப்பட்டது. ஒரு காலத்தில் ஆளரவமே இல்லாமல் இருக்கும் இந்தப் பகுதியில் அந்நேரத்திலேயே சில டீக்கடைகள் திறந்திருந்தன. மத்திய பேருந்து நிலையப் பகுதியில் டீக்கடை களில் கேட்ட பக்திப் பாடல்கள், இப்போது இங்கே ஒலித்துக்கொண்டிருந்தன. வீடு செல்லும் சாலையில் நடந்தால் - முன்னர் எங்கள் வீட்டில்தான் மரங்கள் இருக்கும், இப்போது பரவாயில்லை - மேலும் பல வீடுகளில் மரங்கள்...\nபார்த்தவற்றையெல்லாம் யோசித்துக்கொண்டே நடந்துசெல்லும்போது, பஸ் நிலையத்திலிருந்தே தெரிந்த, யு.சி. ஹை ஸ்கூல் (இப்போது என்னவாகப் பெயர் மாறியிருக்கிறதோ) சுவரில் எழுதப்பட்டிருந்த விவிலிய வரி, சம்பந்தமில்லாமல், நினைவுக்கு வந்தது - ‘உன் நம்பிக்கைகள் வீண் போகாது’.\nஎன்னதான் இப்போதைக்கு சொந்த ஊரானது அன்னியமாகிவிட்டிருந்தாலும் பிழைக்கப்போன ஊரெல்லாம் சொந்த ஊராகிவிடும���, என்ன\nகாலனியம் கட்டமைத்த தேசத்தை எதிர்கொள்ளல்\nபடித்துப் பாருங்களேன்... தொகை இயல்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழாய்வுப் போக்குகள்\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2013\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2014\nஉங்கள் நூலகம் - மார்ச் 2014\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2014\nஉங்கள் நூலகம் - மே 2014\nஉங்கள் நூலகம் - ஜூன் 2014\nஉங்கள் நூலகம் - ஜுலை 2014\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2014\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2014\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2014\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2014\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2014\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2015\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2015\nஉங்கள் நூலகம் - மார்ச் 2015\nஉங்கள் நூலகம் - மே 2015\nஉங்கள் நூலகம் - ஜூன் 2015\nஉங்கள் நூலகம் - ஜூலை 2015\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2015\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2015\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2015\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2015\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2015\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2016\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2016\nஉங்கள் நூலகம் - மார்ச் 2016\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2016\nஉங்கள் நூலகம் - மே 2016\nஉங்கள் நூலகம் - ஜூன் 2016\nஉங்கள் நூலகம் - ஜூலை 2016\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2016\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2016\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2016\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2016\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2016\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2017\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2017\nஉங்கள் நூலகம் - மார்ச் 2017\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2017\nஉங்கள் நூலகம் - மே 2017\nஉங்கள் நூலகம் - ஜூன் 2017\nஉங்கள் நூலகம் - ஜூலை 2017\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2017\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2017\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2017\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2017\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2017\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2018\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2018\nஉங்கள் நூலகம் - மார்ச் 2018\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2018\nஉங்கள் நூலகம் - மே 2018\nஉங்கள் நூலகம் - ஜுன் 2018\nபக்கம் 4 / 261\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuttyrevathy.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-07-19T11:46:52Z", "digest": "sha1:A3DIY5HXGLZQTXRXAK6PQO5N36QSW4GV", "length": 9067, "nlines": 136, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: யானுமிட்ட தீ", "raw_content": "\nஅவளை அப்படியே விட்டிருக்கலாம் நீங்கள்\nமுட்டும் இரவைக் கானகத்தின் முதுகென்றும்\nமெல்ல திரளும் உதிரப்பெருக்கைக் கடலென்றும்\nகனலும் காமத்தைக் காயும் நிலவென்றும்\nஉங்களுக்கான பிரபஞ்ச நீள்வட்ட வலயத்தை\nஉடலெங்கிலும் ஆயுதம் புதைத்த வனமாகியவள்\nஎன்றறியாமல் அம்பெய்தின உங்க��் கைகள்\nவழியெங்கும் சமிக்ஞைகளால் அவளெழுப்பிய வேட்டை அம்புகளால்\nஉம்முடல் வெடித்துச்சிதறலாம் எதிர்பாராத ஒரு காலையில்\nதொடைகளுக்கு இடையே விரியும் கானகப்பாதை\nபால்வெளியாக நீளும் என்றுஅவள் வானம் வரைந்தாலும்\nஉருண்ருண்டு ஓடும் கோள்களின் கண்ணியில்\nஎந்நேரமும் சிக்கிக்கொள்ளலாம் உமது குறிகள் என்றாலும்\nநீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் தோழர்களே\nஇரை கண்ட காட்டு மிருகமொன்றின் பாய்ச்சலுடன்\nமுற்றா முகிழ்முலைகளாகி மரங்கள் பூத்துக்கொட்டும்\n‘யானுமிட்ட தீ’ ஈதென்று சூரியனைச் சுட்டும்போது\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 ஞாயிறு, மே 02, 2010\nஇன்னும் நிறைய வாசிச்சு பழகனும்னு தோணுது\n11 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:25\n12 மே, 2010 ’அன்று’ முற்பகல் 8:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n4 மாதங்கள் 3 வாரங்கள் 2 நாட்கள்\nஎதிர்முனை, புதிய இலக்கியச் சிற்றிதழ்\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவண��்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ualwaysthinkof.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-19T11:18:59Z", "digest": "sha1:55TUO2R5EQZIV6XB42QOXSIGNTQ72SQK", "length": 4504, "nlines": 83, "source_domain": "ualwaysthinkof.blogspot.com", "title": "U Always Think of: May 2011", "raw_content": "\nபல காலமாய் ஒரு மனிதன் கடவுளிடம் உரையாட வேண்டும் என தவம் இருந்தான் .\nஒரு நாள் , கடவுள் அவன் முன்னே தோன்றினார் ....\nகடவுள் : பக்தா உன் பக்தியை மெச்சினேன் .உனக்கு என்ன வேண்டும் \nமனிதன் : கடவுளே என் தவத்திற்கு செவிசாய்தமைக்கு நன்றி .எனக்கு ஒரு வரம் வேண்டும்.\nகடவுள் : என்ன வரம் வேண்டும் \nமனிதன் : நான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் .\nகடவுள் : (இந்த முறை ) ,அது கடினம் .வேறு ஏதேனும் கேள் .\nமனிதன் :கடவுளே ,நான் இம்முறை கேட்பதை நீர் கண்டிப்பாக அளிக்க வேண்டும் .\nகடவுள் : கண்டிப்பாக .\nமனிதன் : சரி .நான் நினைக்காதது நடக்க கூடாது .\nக வரிசை - ஒரு செய்யுள்\nஒரு வரிசை செய்யுள் . என்னை மிகவும் கவர்ந்த்தது இதன் பொருள் , பல முறை நான் ஆமை - முயல் கதை கேட்டுள்ளேன் . அதே கதை தூய தமிழில் எனை மெய் ...\nகோயில் சென்றேன் இறைவனை காண , நேற்று ஒருவரில்லா உன் வீட்டில் , இன்று என்ன கூட்டம் என கேட்டேன் இறைவனை . சொன்னான் , \" ...\nதனித்து விடப்பட்டேனோ, தொலைந்துபோனேனோ தெரியவில்லை ... உன் சில மணி நேர மௌனம் என் பல நாட்களை பறித்து போனதடி அன்பே .... ...\nமனமே நீ இல்லாமல் இவ்வுலகில்லை .\nநிலைமாறும் உலகில் நிலையாக என்னோடிருப்பது நீ சிந்திக்க வைப்பது நீ சிந்தனையை செயலாக மாற்றுவதும் நீ செய்த தீமையை சுட்டிகாட்டுவதும் நீ...\nநல்லவையோ தீயவையோ உன்னுள் அதை உறங்க வைக்க முடியுமே தவிர அழிக்க இயலாது தீயவையை தொடர்ந்து உறங்க வைக்க கற்றுக்கொள் , நல்லவையை என்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://veesuthendral.blogspot.com/2015/04/blog-post_9.html", "date_download": "2018-07-19T11:41:49Z", "digest": "sha1:MFZJO4YCWQZZXIQXMMNB6U3H7S6CM6TH", "length": 20089, "nlines": 717, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: ஓடியே ஒளிவதும் தகுமோ?", "raw_content": "\nதள்ளியே நின்று தன்னையே நோக்கிச்\nதுள்ளியே ஓடும் மானினை ஒத்த\nஅள்ளியே அணைத்து அகத்தினில் சூடி\nஉள்ளமே நாட உறவினைத் தேட\nமனதினைக் கவர்ந்து மறைவினில் இருக்கும்\nகனவினைக் கொடுத்த கள்வனின் முகமே\nஇனியென ஆக���ம் இவளது நிலையே\nநனித்திடும் நினைவால் நலிந்திடத் தேகம்\nவிளம் மா விளம் மா\nவிளம் விளம் மா எழுசீர் விருத்தம்.\nLabels: கவிதை எழுசீர் விருத்தம்\nவருக தோழி தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.\nபெண்மையைப் போற்றி பேசிடும் பாடல்\nதண்மையை ஊட்டித் தந்திடும் சொற்கள்\nவண்மையை உடைய வள்ளலைப் போன்றே\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nஉயர்கவி தென்றல் என்றெனை வாழ்த்த\nஇயம்பிய வார்த்தை இனிமையைக் கூட்டி\nஅயர்வினைப் போக்கி ஆற்றலை ஊட்ட\nஉயர்ந்திட வழியை காட்டிய ஆசான்\nதங்கள் வருகையும் விருத்தப்பா வாழ்த்தினையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.\nநாணத்தைத் தொலைத்த பெண்மை என்ற சொற்றொடரை அதிகம் ரசித்தேன்.\n விருத்தப்பாவிற்காக எழுதிப்பார்த்தது அவ்வளவே. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.\nநாணத்தைத் தொலைத்த பெண்மை என்ற சொற்றொடரை அதிகம் ரசித்தேன்.\nகனவினைக் கொடுத்த கள்வனின் முகமே\nநான் ரசித்த வரிகள் அருமை சகோ\nசகோ, எனது பதிவுகள் தங்களது டேஷ்போர்டில் வரவில்லையோ \nவருக சகோ. மன்னிக்கவும் சகோ. சரியாக கவனிக்கவில்லை.\nசகோ அலுவலகத்தில் இருந்தபடி வலைப்பக்கம் வருவதால் சில இடையூறுகள் .\nஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது பெண்மையை போற்றும் கவிப்பாவினை வடித்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம4\nவருக சகோ. வாழ்த்தியமைக்கு நன்றிங்க சகோ.\nதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nதிண்டுக்கல் தனபாலன் April 10, 2015 at 7:26 AM\nரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க சகோ.\nஉள்ளங் கவர் கள்வன் பற்றிய உயர்தமிழ்க்கவிதை\nவருக சகோ. வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.\nதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\n//நனித்திடும் நினைவால் நலிந்திடத் தேகம்\nதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.\nசூடியே மாலை சுந்தரி நாளை...\nஆடியே இன்ப அன்பினில் கூடி\nதங்கள் வருகையும் விருத்தப்பா வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nபடமும் படத்திற்கான உங்கள் கவிதையும் நன்று. வாழ்த்துகள்.\nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவைகூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nபேரிடி முழக்கம் சே���ுமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/12/13061997-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2719209.html", "date_download": "2018-07-19T12:03:58Z", "digest": "sha1:QS2KT7YCWPA72ZJQDJVCA6P2SIAI62UK", "length": 6806, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "13.06.1997: தில்லி உப்ஹார் திரையரங்க தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று!- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்...\n13.06.1997: தில்லி உப்ஹார் திரையரங்க தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று\nதெற்கு டெல்லியில் இருந்த உப்ஹார் திரையரங்கில் கடந்த 1997 ஜூன் 13-ல் நேரிட்ட தீ விபத்தில் 59 பேர் பலியாகினர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ல் அளித்த தீர்ப்பில், உப்ஹார் திரையரங்க உரிமையாளர்கள் சுஷில் அன்சால், கோபால் அன்சால் ஆகியோருக்கு தலா ரூ.30 கோடி அபராதம் விதித்தது.\nஅபராதத்தை செலுத்த தவறி னால் 2 ஆண்டுகள் சிறை தண்ட னையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் அபராதத் தொகையை செலுத்தி சிறை தண்டனையிலிருந்து தப்பினர்.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து தீ விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், ஆதர்ஷ் குமார் கோயல் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினர்.\nஅதில் கோபால் அன்சாலுக்கு (66) ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வயது முதுமை காரணமாக சுஷில் அன்சால் (77) விடுவிக்கப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | ���ற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php?option=com_info&id=1899&catid=40&task=info&lang=ta", "date_download": "2018-07-19T11:48:53Z", "digest": "sha1:PHFBYJE27MCH3UPOM5XN7QGYNKAJDKLL", "length": 7588, "nlines": 109, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சிறுவர் பாதுகாப்பு Occupational Therapy service for children\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nலேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை\nடொக்டர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தை\nதிருமதி எச் .பி.கே.பி. குமாரி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-08-07 11:16:54\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிர���ங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.morehacks.net/roblox-cheat-tool-unlimited-robux/?lang=ta", "date_download": "2018-07-19T11:48:37Z", "digest": "sha1:V4ICBFBQFXKI3IIDROX4VBEJWDHNUPRC", "length": 7024, "nlines": 69, "source_domain": "www.morehacks.net", "title": "Roblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux - வீடியோ ஆதாரம்", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nRoblox மிகவும் தெரியும் என்று ஒரு விளையாட்டு ஆகும் . நல்ல கிராபிக்ஸ் யாழ் ஒரு வகையான அப்படிச் சொல்லாதீர்கள். இந்த விளையாட்டு பைத்தியம் மக்கள் உள்ளது. எல்லோரும் பல வேண்டுமாம் robux ஆனால் அந்த அழகான கடினம். எங்கள் புதிய ஹேக் கருவி நீங்கள் வரம்பற்ற சேர்க்க முடியும் Robux ஒரு சில கிளிக் மூலம் விநாடிகளில்.\nRoblox Robux ஏமாற்று கருவி வரம்பற்ற பயன்படுத்த மிகவும் எளிதானது. பிழைகள் கொண்டிருப்பதோடு 100% கண்டுபிடிக்கமுடியாத. இது கிட்டத்தட்ட வாராந்திர மேம்படுத்தப்பட்டது.\nநீங்கள் விரும்பினால் எத்தனை Robux வாய்ப்புகள்\nவகைகள்: ஆன்லைன் விளையாட்டு ஹேக்\nபிப்ரவரி 16, 2014 மணிக்கு 9:46 நான்\nபிப்ரவரி 16, 2014 மணிக்கு 9:46 நான்\nபிப்ரவரி 16, 2014 மணிக்கு 9:47 நான்\nபிப்ரவரி 17, 2014 மணிக்கு 9:23 நான்\nபதில் ரத்து இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்தை பதிவு செய்ய.\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nஜி டி ஏ வி ஆன்லைன் பணம் ஹேக்\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nபிசி அல்லது மேக் போகிமொன் எக்ஸ் மற்றும் ஒய்\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nபயன்கள் உரையாடல் உளவுத்துறை ஹேக் கருவி\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nவிண்டோஸ் 10 செயல்படுத்தல் விசை பதிவிறக்க\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கர��விகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.parliament.lk/ta/business-of-parliament/parliamentary-questions", "date_download": "2018-07-19T11:44:45Z", "digest": "sha1:YTNKWYNAG2TYDYSKOACFXDRNPSBYNKHL", "length": 98000, "nlines": 629, "source_domain": "www.parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - பாராளுமன்ற வினாக்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற அலுவல்கள் பாராளுமன்ற வினாக்கள்\nபாராளுமன்ற விடயங்கள் சம்பந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகள், அவற்றிற்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள் என்பன தொடர்பாகத் தேடுவதற்கு, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்டங்களை நிரப்புங்கள்.\nகேட்டவர் : பதில் அளித்தவர் : அமைச்சு\nதயவு செய்து தெரிவு செய்க அ. அரவிந்த் குமார் அ. இராமநாதன் அடைக்கலநாதன், செல்வம் அண்ணாமலை நடேசு சிவசக்தி அதுகோரல, தலதா அபேகுணவர்தன, ரோஹித அபேசிங்க, அசோக்க அபேசேகர, சிசிர குமார அபேவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, வஜிர அப்புஹாமி, ஹெக்டர் அமரசேன, துஷார இந்துனில் அமரதுங்க, ஜோன் அமரவீர, மஹிந்த அமுணுகம, (கலாநிதி) சரத் அமுணுகம, திளும் அலகியவன்ன, லசந்த அலவத்துவல ஜே.சீ. அலுத்கமகே ஏ.ஏ. அலுத்கமகே, மஹிந்தானந்த அலுவிஹாரே, ரஞ்சித் அலுவிஹாரே, வசந்த அழகப்பெரும, டலஸ் ஆர். சமரவீர ஆர்.டீ. பிரியந்த அசோக்க இ. சாள்ஸ் நிர்மலநாதன் இராதாகிருஷ்ணன், வீ.எஸ். எச். ராஜகருணா எச்.ஈ. பிரேமச்சந்திர எச்.எச்.ஏ.டீ. இந்திக அநுருத்த எச்.விதானகே என்.எச்.சீ.எஸ். சேனாரத்ன என்.சீ. கொலொன்னே எம். இம்ரான் எம். திலகராஜா எம். முஜிபுர் ரஹுமான் எம். வேலு குமார் எம்.எச். முஹமட் நவவி எம்.எச்.எம். சல்மான் எம்.ஏ.எம். மஃறுாப் எம்.ஐ.எம். மன்சூா் எல்.டபிள்யு.சீ. விஜேசிறி எஸ். சமரசிங்க எஸ். பிரேமரத்ன எஸ்.எம். மரிக்கார் எஸ்.சீ. மாயாதுன்னே ஏ.ஆர். இஸ்ஹாக் ஏக்கநாயக்க, ரீ.பீ. கங்கந்த, துனேஷ் கஜதீர, சந்திரசிறி கணேசன், மனோ கபீர் ஹஷீம் கமகே, அனோமா கமகே, தயா கமகே, பியசேன கமலத், சிறிபால கம்மன்பில, உதய பிரபாத் கருணாதிலக்க, கயந்த கருணாநாயக்க, ரவி கலப்பத்தி, நிஹால் கவிந்த ஹேஷான் ஜயவர்தன காசிம், பைஸால் காரியவசம், அகில விராஜ் கிரிஎல்ல, லக்ஷ்மன் கிரேரு, மொஹான் லால் கீதா சமன்மலீ குமாரசிங்ஹ குணசேகர, எட்வட் குணசேகர, பத்ம உதயசாந்த குணவர்தன, எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, தினேஷ் குணவர்தன, பந்துல குமாரசிறி, ஆனந்த கே. கவீந்திரன் கே. காதர் மஸ்தான் கே.எஸ்.என். பெரேரா கே.எஸ்.எஸ். பெரேரா கே.வீ. விஜேசேகர ச. வியாழேந்திரன் சந்திரசேன, எஸ்.எம். சமரசிங்ஹ, மஹிந்த சமரவீர, ஜயந்த சமரவீர, மங்கள சம்பந்தன், ராஜவரோதயம் சரத் பொன்சேகா சரவணபவன், ஈ. சாகல ரத்நாயக்க சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா சி. சிவமோகன் சித்தார்தன், தருமலிங்கம் சியம்பலாபிடிய, ரன்ஜித் சிறீதரன், சி. சிவலிங்கம், முத்து சிஹாப்தீன், அமீர் அலி சீ.ஏ. மாரசிங்க சீ.மு. முகம்மட் இஸ்மாயில் சுமதிபால, திலங்க சுமந்திரன், எம்.ஏ. சுரேஷ், வடிவேல் சுவாமிநாதன், டி.எம். செனவிரத்ன, டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன, லக்ஷமன் செயிட், அலி ஸாஹிர் மௌலானா சொய்சா, காமினி விஜித் விஜயமுணி சேணாநாயக்க, வசந்த சேனசிங்க, சுஜீவ சேனாதிராசா, மாவை. சோ. சேனாரத்ன, ராஜித சேமசிங்க, செஹான் ஜயசிங்க, சந்திராணி பண்டார ஜயசூரிய, கரு ஜயசேகர, தயாசிறி ஜயசேக்கர, பிரேமலால் ஜயசேன, சுமேதா ஜீ. ஜயதிஸ்ஸ ஏ.என். ஜயமஹ, நலின் பண்டார ஜயரத்ன, அநுர சிட்னி ஜயரத்ன, அநுராத ஜயரத்ன, பியங்கர ஜயவர்தன, லக்கி ஜீ. ஸ்ரீநேசன் ஜே. விக்ரமரத்ன ஜே.ஏ.எஸ்.கே. ஜயகொடி டபிள்யூ. ஹெட்டிஆரச்சி டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் டி.வீ. சானக டீ.ஏ.சீ.எஸ். தசநாயக்க டீ.சீ. கமகே த சில்வா, நிமல் சிறிபால த சில்வா, மொஹான் பிரியதர்ஷன த சில்வா, ஹர்ஷ த சொய்சா, ரீ. ரஞ்ஜித் திகாம்பரம், பழனி திசாநாயக்க, அநுர திசாநாயக்க, எஸ். பீ. திசாநாயக்க, சாலிந்த திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க, நவின் திசாநாயக்க, மயந்த யஸ்வன்த் திசாநாயக்க, விமலவீர திசாநாயக்க, வீரகுமார துரைரெட்ணசிங்கம், க. துஷ்மந்த, சாரதீ தென்னகோன், ஜனக பண்டார தெளபீக், எம்.எஸ். தெவரப்பெரும, பாலித குமார தேவானந்தா, டக்ளஸ் தொண்டமான், ஆறுமுகன் நாணாயக்கார, மனுஷ நாணாயக்கார, வாசுதேவ நாவின்ன, எஸ்.பீ. பண்டாரநாயக்க, இந்திக்க பதிரண, ரமேஷ் பத்திறண, புத்திக பரணவிதான, கருணாரத்ன பர்னாந்து, அருந்திக்க பர்னாந்து, ஜோன்ஸ்டன் பர்னாந்து, ஹரின் பர்னாந்துபுள்ளே, சுதர்ஷினி பஸ்நாயக்க, தாராநாத் பாலித ரங்கே பண்டார பி.என். த சில்வா பி.எல். பண்டாரிகொட பி.பி.எம்.பி. ஜயதிலக பியதாஸ, கே.கே. பிரேமஜயந்த, ஏ.டீ. சுசில் பிரேமதாச, ஏ.டி. சம்பிக பிரேமதாஸ, சஜித் புஞ்சிநிலமே, சுசந்த பெரேரா, அஜித் பி. பெரேரா, காமினி ஜயவிக்கிரம பெரேரா, டிலான் பெரேரா, நிரோஷன் பெரேரா, லக்ஷமன் வசந்த பௌஸி, ஏ.எச்.எம். மகேஸ்வரன், விஜயகலா மத்துமபண்டார, ஆர். எம். ரஞ்சித் மலிக், சமரவிக்ரம மான்னப்பெரும, அஜித் மாரபன, திலக் முதுஹெட்டிகமகே, நிஷாந்த முத்துகுமாரண, எஸ்.சீ. முஸ்தபா, பைஸர் முஹம்மது நசீர் மெல், சிறினால் டி மொஹமட் ஹரீஸ், ஹபீப் மொஹமட் யாப்பா, அநுர பிரியதர்ஷன யோகேஸ்வரன், சீனித்தம்பி ரணசிங்க, ரொசான் ரணதுங்க பி. ரணதுங்க, அர்ஜுன ரணவக்க, பாட்டளி சம்பிக ரணவீர பீ.பி. ரதன தேரர், அதுரலியே ரத்நாயக்க, பிமல் ரத்நாயக்க, சீ.பீ. ரத்வத்தே, லொஹான் ரம்புக்வெல்ல, கெஹெலிய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, விஜயதாஸ ராஜபக்ஷ, மஹிந்த ராமநாயக்க, ரன்ஜன் ரீ.ஆர். பாலசூரிய ரீ.விஜேமான்ன றிஸாட் பதியுதீன் லான்சா, நிமல் லொக்குகே, காமினி வக்கும்புர, ஜானக வன்னிஆரச்சி, பவித்ரா தேவி விக்கிரமசிங்க, ரணில் விக்கிரமநாயக்க, விதுற விக்கிரமரத்ன, இரான் விஜித, பேருகொட விஜேசேக்கர, துலீப் விஜேதுங்க, ஏ.ஏ. விஜேமான்ன, லக்ஷ்மன் ஆனந்த விஜேரத்ன ஜே.பீ.ஆர்.கே. விஜேவர்தன, ருவன் விஜேவிக்கிரம, ஸ்ரீயாணி விதானகமகே, தேனுக வீரக்கொடி, சந்திம வீரவங்ச, விமல் வெதஆரச்சி, திலிப் வெல்கம, குமார ஹகீம், ரஊப் ஹந்துன்னெத்தி, சுனில் ஹரிசன், பி. ஹலீம், அப்துல் ஹிஸ்புல்லாஹ், எம்.எல்.ஏ.எம். ஹேரத், கனக ஹேரத், விஜித தயவு செய்து தெரிவு செய்க அ. அரவிந்த் குமார் அ. இராமநாதன் அடைக்கலநாதன், செல்வம் அண்ணாமலை நடேசு சிவசக்தி அதுகோரல, தலதா அபேகுணவர்தன, ரோஹித அபேசிங்க, அசோக்க அபேசேகர, சிசிர குமார அபேவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, வஜிர அப்புஹாமி, ஹெக்டர் அமரசேன, துஷார இந்துனில் அமரதுங்க, ஜோன் அமரவீர, மஹிந்த அமுணுகம, (கலாநிதி) சரத் அமுணுகம, திளும் அலகியவன்ன, லசந்த அலவத்துவல ஜே.சீ. அலுத்கமகே ஏ.ஏ. அலுத்கமகே, மஹிந்தானந்த அலுவிஹாரே, ரஞ்சித் அலுவிஹாரே, வசந்த அழகப்பெரும, டலஸ் ஆர். சமரவீர ஆர்.டீ. பிரியந்த அசோக்க இ. சாள்ஸ் நிர்மலநாதன் இராதாகிருஷ்ணன், வீ.எஸ். எச். ராஜகருணா எச்.ஈ. பிரேமச்சந்திர எச்.எச்.ஏ.டீ. இந்திக அநுருத்த எச்.விதானகே என்.எச்.சீ.எஸ். சேனாரத்ன என்.சீ. கொலொன்னே எம். இம்ரான் எம். திலகராஜா எம். முஜிபுர் ரஹுமான் எம். வேலு குமார் எம்.எச். முஹமட் நவவி எம்.எச்.எம். சல்மான் எம்.ஏ.எம். மஃறுாப் எம்.ஐ.எம். மன்சூா் எல்.டபிள்யு.சீ. விஜேசிறி எஸ். சமரசிங்க எஸ். பிரேமரத்ன எஸ்.எம். மரிக்கார் எஸ்.சீ. மாயாதுன்னே ஏ.ஆர். இஸ்ஹாக் ஏக்கநாயக்க, ரீ.பீ. கங்கந்த, துனேஷ் கஜதீர, சந்திரசிறி கணேசன், மனோ கபீர் ஹஷீம் கமகே, அனோமா கமகே, தயா கமகே, பியசேன கமலத், சிறிபால கம்மன்பில, உதய பிரபாத் கருணாதிலக்க, கயந்த கருணாநாயக்க, ரவி கலப்பத்தி, நிஹால் கவிந்த ஹேஷான் ஜயவர்தன காசிம், பைஸால் காரியவசம், அகில விராஜ் கிரிஎல்ல, லக்ஷ்மன் கிரேரு, மொஹான் லால் கீதா சமன்மலீ குமாரசிங்ஹ குணசேகர, எட்வட் குணசேகர, பத்ம உதயசாந்த குணவர்தன, எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, தினேஷ் குணவர்தன, பந்துல குமாரசிறி, ஆனந்த கே. கவீந்திரன் கே. காதர் மஸ்தான் கே.எஸ்.என். பெரேரா கே.எஸ்.எஸ். பெரேரா கே.வீ. விஜேசேகர ச. வியாழேந்திரன் சந்திரசேன, எஸ்.எம். சமரசிங்ஹ, மஹிந்த சமரவீர, ஜயந்த சமரவீர, மங்கள சம்பந்தன், ராஜவரோதயம் சரத் பொன்சேகா சரவணபவன், ஈ. சாகல ரத்நாயக்க சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா சி. சிவமோகன் சித்தார்தன், தருமலிங்கம் சியம்பலாபிடிய, ரன்ஜித் சிறீதரன், சி. சிவலிங்கம், முத்து சிஹாப்தீன், அமீர் அலி சீ.ஏ. மாரசிங்க சீ.மு. முகம்மட் இஸ்மாயில் சுமதிபால, திலங்க சுமந்திரன், எம்.ஏ. சுரேஷ், வடிவேல் சுவாமிநாதன், டி.எம். செனவிரத்ன, டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன, லக்ஷமன் செயிட், அலி ஸாஹிர் மௌலானா சொய்சா, காமினி விஜித் விஜயமுணி சேணாநாயக்க, வசந்த சேனசிங்க, சுஜீவ சேனாதிராசா, மாவை. சோ. சேனாரத்ன, ராஜித சேமசிங்��, செஹான் ஜயசிங்க, சந்திராணி பண்டார ஜயசூரிய, கரு ஜயசேகர, தயாசிறி ஜயசேக்கர, பிரேமலால் ஜயசேன, சுமேதா ஜீ. ஜயதிஸ்ஸ ஏ.என். ஜயமஹ, நலின் பண்டார ஜயரத்ன, அநுர சிட்னி ஜயரத்ன, அநுராத ஜயரத்ன, பியங்கர ஜயவர்தன, லக்கி ஜீ. ஸ்ரீநேசன் ஜே. விக்ரமரத்ன ஜே.ஏ.எஸ்.கே. ஜயகொடி டபிள்யூ. ஹெட்டிஆரச்சி டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் டி.வீ. சானக டீ.ஏ.சீ.எஸ். தசநாயக்க டீ.சீ. கமகே த சில்வா, நிமல் சிறிபால த சில்வா, மொஹான் பிரியதர்ஷன த சில்வா, ஹர்ஷ த சொய்சா, ரீ. ரஞ்ஜித் திகாம்பரம், பழனி திசாநாயக்க, அநுர திசாநாயக்க, எஸ். பீ. திசாநாயக்க, சாலிந்த திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க, நவின் திசாநாயக்க, மயந்த யஸ்வன்த் திசாநாயக்க, விமலவீர திசாநாயக்க, வீரகுமார துரைரெட்ணசிங்கம், க. துஷ்மந்த, சாரதீ தென்னகோன், ஜனக பண்டார தெளபீக், எம்.எஸ். தெவரப்பெரும, பாலித குமார தேவானந்தா, டக்ளஸ் தொண்டமான், ஆறுமுகன் நாணாயக்கார, மனுஷ நாணாயக்கார, வாசுதேவ நாவின்ன, எஸ்.பீ. பண்டாரநாயக்க, இந்திக்க பதிரண, ரமேஷ் பத்திறண, புத்திக பரணவிதான, கருணாரத்ன பர்னாந்து, அருந்திக்க பர்னாந்து, ஜோன்ஸ்டன் பர்னாந்து, ஹரின் பர்னாந்துபுள்ளே, சுதர்ஷினி பஸ்நாயக்க, தாராநாத் பாலித ரங்கே பண்டார பி.என். த சில்வா பி.எல். பண்டாரிகொட பி.பி.எம்.பி. ஜயதிலக பியதாஸ, கே.கே. பிரேமஜயந்த, ஏ.டீ. சுசில் பிரேமதாச, ஏ.டி. சம்பிக பிரேமதாஸ, சஜித் புஞ்சிநிலமே, சுசந்த பெரேரா, அஜித் பி. பெரேரா, காமினி ஜயவிக்கிரம பெரேரா, டிலான் பெரேரா, நிரோஷன் பெரேரா, லக்ஷமன் வசந்த பௌஸி, ஏ.எச்.எம். மகேஸ்வரன், விஜயகலா மத்துமபண்டார, ஆர். எம். ரஞ்சித் மலிக், சமரவிக்ரம மான்னப்பெரும, அஜித் மாரபன, திலக் முதுஹெட்டிகமகே, நிஷாந்த முத்துகுமாரண, எஸ்.சீ. முஸ்தபா, பைஸர் முஹம்மது நசீர் மெல், சிறினால் டி மொஹமட் ஹரீஸ், ஹபீப் மொஹமட் யாப்பா, அநுர பிரியதர்ஷன யோகேஸ்வரன், சீனித்தம்பி ரணசிங்க, ரொசான் ரணதுங்க பி. ரணதுங்க, அர்ஜுன ரணவக்க, பாட்டளி சம்பிக ரணவீர பீ.பி. ரதன தேரர், அதுரலியே ரத்நாயக்க, பிமல் ரத்நாயக்க, சீ.பீ. ரத்வத்தே, லொஹான் ரம்புக்வெல்ல, கெஹெலிய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, விஜயதாஸ ராஜபக்ஷ, மஹிந்த ராமநாயக்க, ரன்ஜன் ரீ.ஆர். பாலசூரிய ரீ.விஜேமான்ன றிஸாட் பதியுதீன் லான்சா, நிமல் லொக்குகே, காமினி வக்கும்புர, ஜானக வன்னிஆரச்சி, பவித்ரா தேவி விக்கிரமசிங்க, ரணில் விக்கிரம��ாயக்க, விதுற விக்கிரமரத்ன, இரான் விஜித, பேருகொட விஜேசேக்கர, துலீப் விஜேதுங்க, ஏ.ஏ. விஜேமான்ன, லக்ஷ்மன் ஆனந்த விஜேரத்ன ஜே.பீ.ஆர்.கே. விஜேவர்தன, ருவன் விஜேவிக்கிரம, ஸ்ரீயாணி விதானகமகே, தேனுக வீரக்கொடி, சந்திம வீரவங்ச, விமல் வெதஆரச்சி, திலிப் வெல்கம, குமார ஹகீம், ரஊப் ஹந்துன்னெத்தி, சுனில் ஹரிசன், பி. ஹலீம், அப்துல் ஹிஸ்புல்லாஹ், எம்.எல்.ஏ.எம். ஹேரத், கனக ஹேரத், விஜித\nதிகதி எல்லை : பிரதான சொல்/சொற்கள் :\nஎல்லாவற்றிலும் வினாக்கள் விடைகள் காணப்படுவது\nசட்டவாக்கம் : இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்\n1. ஆனந்த அலுத்கமகே அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகெளரவ ஆனந்த அலுத்கமகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) கண்டி மாவட்டத்தில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;\n(ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள்......\nகெளரவ ஆனந்த அலுத்கமகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) கண்டி மாவட்டத்தில் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;\n(ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;\n(iii) மேற்படி ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாது என்பதையும்;\n(iv) மேற்படி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;\n(v) கண்டி மாவட்டத்தில் காணப்படுகின்ற தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;\n(vi) கண்டி மாவட்டத்தில் காணப்படுகின்ற தேசிய பாடசாலைகளின் பௌதீக மற்றும் மனித வளங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதையும்;\nகேட்கப்பட்ட திகதி : 2017-11-18\nகேட்டவர் : ஆனந்த அலுத்கமகே\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n2. இந்திக அநுருத்த ஹேரத் அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) இந்த ஆண்டின் முதல் போகத்தில் மேல் மாகாணத்தில் பயிரிடப்பட்ட மொத்த வயற் காணிகளின் பரப்பளவு......\nகௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) இந்த ஆண்ட��ன் முதல் போகத்தில் மேல் மாகாணத்தில் பயிரிடப்பட்ட மொத்த வயற் காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;\n(ii) மேல் மாகாணத்தில் பயிரிடப்படாது தரிசு நிலமாக மாறிய வயற் காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;\n(iii) பயிரிடப்படாமல் தரிசு நிலமாக மாறிய வயற் காணிகளின் மூலம் நாடு இழந்த நெல் மெற்றிக் தொன் அளவு எவ்வளவென்பதையும்;\n(iv) பயிரிடப்பட்ட நிலையில், சேதமடைந்த வயல் காணிகளின் ஹெக்டெயார் பரப்பளவு எவ்வளவென்பதையும்;\n(v) ஏற்பட்ட சேதம் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கு/குறைப்பதற்கு எடுக்கப்பட்ட காலத்திற்குப் பொருத்தமான நடவடிக்கைகள் யாவை என்பதையும்;\n(vi) பயிர் சேதமடைந்தமையால் நிர்க்கதியான விவசாயிகளுக்கு இழப்பை ஈடுசெய்வது எப்போது என்பதையும்;\n(ஆ) (i) பயிரிடப்படாத வயல்களை வேறு பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்படுமா என்பதையும்;\n(ii) ஆமெனின், இது பற்றி சாத்தியவளக் கற்கையொன்று மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;\n(iii) மேற்படி சாத்தியவளக் கற்கையின் முடிவு யாதென்பதையும்;\nகேட்கப்பட்ட திகதி : 2017-10-13\nகேட்டவர் : இந்திக அநுருத்த ஹேரத்\nஅரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\n3. இந்திக அநுருத்த ஹேரத் அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— புத்த சாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) நாட்டினுள் அறநெறிக் கல்வியை பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;\nகௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— புத்த சாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) நாட்டினுள் அறநெறிக் கல்வியை பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;\n(ii) அறநெறி பாடசாலை அபிவிருத்திக்கென தாபிக்கப்பட்டுள்ள நிதியத்தில் உள்ள நிதித் தொகை எவ்வளவென்பதையும்;\n(iii) அந் நிதியத்தை அதிகரிப்பதற்கு 2017 ஆம் ஆண்டுக்கு வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதித் தொகை எவ்வளவென்பதையும்;\n(iv) அறநெறி பாடசாலை ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற கௌரவ சேவையை ஊக்குவித்தல், பாராட்டுதல் மற்றும் ஆசிரியர்களை மேற்படி முறைமையினுள் தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற மேம்பாட்டு நடவடிக்கைகள் யாவை என்பதையும்;\n(v) ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் மேலதிக போதனா வகுப்புகளை நடாத்துதல், பிள்ளைகள் அறநெறிப் பாடசாலைக் கல்வி நடவ���ிக்கைகளில் ஈடுபடுவதற்கு பெரும் இடையூறாக இருப்பதால், அந் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் புதிய நடவடிக்கைகள் யாவை என்பதையும்;\nஅவர் இச் சபைக்கு அறிவிப்பாரா\nகேட்கப்பட்ட திகதி : 2017-10-13\nகேட்டவர் : இந்திக அநுருத்த ஹேரத்\nஅரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\n4. இந்திக அநுருத்த ஹேரத் அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) நாட்டிலுள்ள மொத்த அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;\n(ii) நாட்டிலுள்ள மொத்த சர்வதேச......\nகௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) நாட்டிலுள்ள மொத்த அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;\n(ii) நாட்டிலுள்ள மொத்த சர்வதேச பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;\n(iii) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் எவ்வளவென்பதையும்;\n(iv) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நாட்டிலுள்ள மாகாண பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் எவ்வளவென்பதையும்;\n(v) 2016 ஆம் ஆண்டின் முதல் பகுதியினுள் வெளிவாரி மற்றும் உள்வாரி மதிப்பீட்டு முறைமையின் ஊடாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;\n(vi) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிராமிய மற்றும் பிராந்திய பாடசாலைகளில் ஆசிரியர் பணிமனைகள்/ஓய்வறைகளை நிறுவுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவென்பதையும்;\n(vii) மேற்படி கருத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;\nகேட்கப்பட்ட திகதி : 2017-10-13\nகேட்டவர் : இந்திக அநுருத்த ஹேரத்\nஅரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\n5. இஷாக் ரஹுமான் அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ இஷாக் ரஹுமான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) அநுராதபுரம் வலயக் கல்வி அலுவலகத்திற்குரிய, இல. 309, கம்பிரிஸ்வெவ கிராம அலுவலர் பிரிவு, துலானே, அ/மனாருல் உலும் மகா......\nகௌரவ இஷாக் ரஹுமான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) அநுராதபுரம் வலயக் கல்வி அலுவலகத்திற்குரிய, இல. 309, கம்பிரிஸ்வெவ கிராம அலுவலர் பிரிவு, துலானே, அ/மனாருல் உலும் மகா வித்தியாலயம் \"1000 பாடசாலைகள்\" கருத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு பாடசாலை என்பதையும்;\n(ii) இப்பாடசாலையில் சுமார் 700 மாணவர்கள் கல்வி பயிலுகின்றார்கள் என்பதையும்;\n(iii) இக்கருத்திட்டத்தின் கீழ் இப்பாடசாலைக்கு ஒரு கட்டடம் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதுடன் இற்றைவரை வேறெந்த வசதிகளும் வழங்கப்படவில்லையென்பதையும்;\n(ஆ) (i) \"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை\" எனும் கருத்திட்டத்தின் கீழேனும் இந்த பாடசாலைக்கு தேவையான வசதிகள் வழங்கப்படுமா என்பதையும்;\n(ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;\nகேட்கப்பட்ட திகதி : 2017-09-26\nகேட்டவர் : இஷாக் ரஹுமான்\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n6. ஹேஷா விதானகே அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ ஹேஷா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) கேகாலை மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தல் ஆளுகைப் பிரதேசத்திலும் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை தனித்தனியாக......\nகௌரவ ஹேஷா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) கேகாலை மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தல் ஆளுகைப் பிரதேசத்திலும் உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;\n(ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;\n(iii) கேகாலை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தற்போதுள்ள தேசிய பாடசாலைகளை முன்னேற்றுவதற்கும் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;\nகேட்கப்பட்ட திகதி : 2017-09-26\nகேட்டவர் : ஹேஷா விதானகே\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n7. வாசுதேவ நாணாயக்கார அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மாணவ மாணவிகள் க.பொ.த.......\nகௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மாணவ மாணவிகள் க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கு 04 தடவைகள் தோற்ற முடியுமென பிரதம அமைச்சர் கூற்றொன்றை வௌியிட்டார் என்பதை அறிவாரா என்பதையும்;\n(ii) எனினும் இதுவரை அது சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கவில்லையென்பதை ஏற்றுக்கொள்வார�� என்பதையும்;\n(iii) ஆமெனில், அந்த அறிவுறுத்தல்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,\nகேட்கப்பட்ட திகதி : 2017-09-22\nகேட்டவர் : வாசுதேவ நாணாயக்கார\nஅரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\n8. ரீ. ரஞ்ஜித் த சொய்சா அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகெளரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;\nகெளரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;\n(ii) மேற்படி பாடசாலைகளில் ஆரம்பநிலை மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;\n(iii) மேற்படி பாடசாலைகளில் மத்திய அரசுக்குரிய பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;\n(iv) அந்த பாடசாலைகளின் பெயர்கள் யாவை;\n(v) தமிழ் மொழிமூலம் கல்வி கற்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;\nஎன்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா\n(i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;\n(ii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை க.பொ.த.(சாதாரண தர) மற்றும் க.பொ.த (உயர் தர) பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வெறாக எவ்வளவு;\n(iii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை பொறியியல் மற்றும் மருத்துவ துறையில் கற்பதற்கு பல்கலைக்கழகங்களுக்கான தகைமைகளைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;\n(iv) சிங்கள மொழிமூல மற்றும் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கிடையே மேற்காண் பரீட்சைகளில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை சதவீதமாக எவ்வளவு;\nஎன்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா\nகேட்கப்பட்ட திகதி : 2017-09-22\nகேட்டவர் : ரீ. ரஞ்ஜித் த சொய்சா\nஅரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\n9. துஷார இந்துனில் அமரசேன அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) நிலவுகின்ற வரட்சி காரணமாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால் இழப்பீடு வழங்கப்பட்ட......\nகௌரவ துஷார இந்துனில் அமரசேன,— ���மத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) நிலவுகின்ற வரட்சி காரணமாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால் இழப்பீடு வழங்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை யாது;\n(ii) குருநாகல் மாவட்டத்தில் இவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்ட விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின்படி வெவ்வேறாக சமர்ப்பிப்பாரா;\n(iii) குருநாகல் மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை வெவ்வேறாக எவ்வளவு;\n(iv) மேற்படி இழப்பீடு வழங்கப்படுகையில் கவனத்திற் கொள்ளப்பட்ட அளவுகோல்கள் யாவை;\nஎன்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா\nகேட்கப்பட்ட திகதி : 2017-09-13\nகேட்டவர் : துஷார இந்துனில் அமரசேன\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n10. துஷார இந்துனில் அமரசேன அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை பயிர்ச்செய்கையின்போது விவசாய இரசாயனப் பொருட்களை கவனயீனமாகப்......\nகௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை பயிர்ச்செய்கையின்போது விவசாய இரசாயனப் பொருட்களை கவனயீனமாகப் பாவித்தமை காரணமாக குருநாகல் மாவட்டத்தில் இறந்த ஆட்களின் எண்ணிக்கை யாது;\n(ii) அவ்விதமாக இறந்த ஆட்கள் பதிவாகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவை;\n(iii) விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வூட்ட அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;\nஎன்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா\nகேட்கப்பட்ட திகதி : 2017-09-13\nகேட்டவர் : துஷார இந்துனில் அமரசேன\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n11. துஷார இந்துனில் அமரசேன அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) நிலவுகின்ற வரட்சி காரணமாக கமத்தொழில் மற்றும் கமநல சேவை காப்புறுதிச் சபையினால் இழப்பீடு......\nகௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) நிலவுகின்ற வரட்சி காரணமாக கமத்தொழில் மற்றும் கமநல சேவை காப்புறுதிச் சபையினால் இழப்பீடு வழங்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை யாது;\n(ii) குருநாகல் மாவட்டத்தில் இவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்ட விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின்படி வெவ்வேறாக சமர்ப்பிப்பாரா;\n(iii) குருநாகல் மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை வெவ்வேறாக எவ்வளவு;\n(iv) மேற்படி இழப்பீடு வழங்கப்படுகையில் கவனத்திற் கொள்ளப்பட்ட அளவுகோல்கள் யாவை;\nஎன்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா\nகேட்கப்பட்ட திகதி : 2017-09-13\nகேட்டவர் : துஷார இந்துனில் அமரசேன\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n12. ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) மாத்தளை மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தல் ஆளுகைப் பிரதேசத்திலுமுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை......\nகௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) மாத்தளை மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தல் ஆளுகைப் பிரதேசத்திலுமுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;\n(ii) மேற்படி தேசிய பாடசாலைகளின் பெயர்கள் யாவை;\n(iii) மாத்தளை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தற்போதுள்ள தேசிய பாடசாலைகளை மேலும் முன்னேற்றுவதற்கும் அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;\nஎன்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா\nகேட்கப்பட்ட திகதி : 2017-09-13\nகேட்டவர் : ரோஹினி குமாரி விஜேரத்ன\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n13. ரீ. ரஞ்ஜித் த சொய்சா அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் தற்போதைய தலைவரின் பெயர் யாதென்பதையும்;\nகௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் தற்போதைய தலைவரின் பெயர் யாதென்பதையும்;\n(ii) அந்தப் பதவிக்குரிய கல்வித் தகைமைகள் யாவை என்பதையும்;\n(iii) தற்போதைய தலைவர் அப்பதவிக்குரிய கல்வித் தகைமைகளுக்கு மேலதிகமாக வேறு தொழில்சார் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ளாரா என்பதையும்;\n(iv) ஆமெனின், அவை யாவை என்பதையும்;\n(v) வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;\n(vi) பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;\n(vii) தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினர் பெறுகின்ற சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் தனித்தனியாக யாவை என்பதையும்;\nகேட்கப்பட்ட திகதி : 2017-08-30\nகேட்டவர் : ரீ. ரஞ்ஜித் த சொய்சா\nஅரசியற் கட்சி : ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\n14. ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) மாத்தளை மாவட்டத்தில் மத்திய மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கை......\nகௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) மாத்தளை மாவட்டத்தில் மத்திய மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கை யாது;\n(ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் யாவை;\n(iii) தற்போது இப்பாடசாலைகளுக்கு மத்தியில் பதில் கடமையாற்றும் அதிபர்கள் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;\n(iv) தற்போது மாவட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு கல்விக் கோட்டத்தின் படி வெவ்வேறாக யாவை;\n(v) மாத்தளை மாவட்டத்தில் அதிபர் வெற்றிடங்கள் மற்றும் ஆசிரியர் வெற்றிடங் களை நிரப்புவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;\nஎன்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா\nகேட்கப்பட்ட திகதி : 2017-08-30\nகேட்டவர் : ரோஹினி குமாரி விஜேரத்ன\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n15. ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) மாத்தளை மாவட்டத்துக்கான இலங்கை கல்வி நிருவாக சேவையிலுள்ள பதவிகளின் எண்ணிக்கை யாது;\nகௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) மாத்தளை மாவட்டத்துக்கான இலங்கை கல்வி நிருவாக சேவையிலுள்ள பதவிகளின் எண்ணிக்கை யாது;\n(ii) தற்போது இப்பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களின் எண்ணிக்கை யாது;\n(iii) நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்ப அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;\n(iv) இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்காக நடாத்தப்பட்ட (வரையறுக்கப்பட்ட/திறந்த) போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களின் பெயர், முகவரி ஆகியவை யாவை;\n(v) இவர்களுக்கு குறித்த நியமனங்களை வழங்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;\nஎ���்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா\nகேட்கப்பட்ட திகதி : 2017-08-30\nகேட்டவர் : ரோஹினி குமாரி விஜேரத்ன\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n16. ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கமத் தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) 2016 ஆம் ஆண்டு கமத்தொழில் அமைச்சின் மாத்தளை கமநல அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகத்தினால்......\nகௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கமத் தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) 2016 ஆம் ஆண்டு கமத்தொழில் அமைச்சின் மாத்தளை கமநல அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டத்தின் கீழ் கலேவெல பிரதேச செயலாளர் பிரிவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஒவ்வொரு வாவிக்கும் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாட்டுத் தொகை மற்றும் நீர்பாய்ச்சப்படுகின்ற வயல் ஏக்கர்களின் அளவு யாவையென்பதையும்;\n(ii) மறுசீரமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு கமக்காரர் அமைப்பும் கிராம சேவகர் பிரிவின் பிரகாரம் தனித்தனியாக யாதென்பதையும்;\n(iii) ஒவ்வொரு ஒப்பந்தத்தின் மூலமும் மேற்படி கமக்காரர் அமைப்புகளுக்கு கிடைக்கப்பெற்ற இலாபம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;\n(iv) கமக்காரர் அமைப்பின் கணக்கிற்கு இலாபம் வரவு வைக்கப்பட்டிருப்பின், அத்தகவல்களை சபா பீடத்திற்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;\n(ஆ) (i) கமக்காரர் அமைப்புகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்திட்ட ஒப்பந்தங்கள் உப ஒப்பந்தகாரர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பின், குறிப்பிட்ட உப ஒப்பந்தங்களுக்கான உடன்படிக்கைகளை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;\n(ii) உடன்படிக்கைகளுக்கு வராமல் வாய்மூல இணக்கப்பாட்டுடன் உப ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனரா என்பதையும்;\n(iii) ஒவ்வொரு கருத்திட்டத்தின் மூலமும் கமக்காரர் அமைப்புகளுக்கு கிடைத்துள்ள அனுகூலங்கள், தரகுத் தொகைகள் எவ்வளவென்பதையும்;\n(iv) கமக்காரர் அமைப்புகளுக்கு உப ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதன் மூலம் கிடைத்துள்ள அனுகூலங்கள், தரகுத் தொகைகள் மற்றும் அது ஒப்பந்தத்தின் விகிதாசாரமாக எவ்வளவென்பதையும்;\nகேட்கப்பட்ட திகதி : 2017-08-29\nகேட்டவர் : ரோஹினி குமாரி விஜேரத்ன\nஅரசியற் கட்சி : ஐக்கிய தே��ியக் கட்சி\n17. ஹேஷா விதானகே அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ ஹேஷான் விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல கல்விக் கோட்டத்தில் தேல தமிழ் மகா வித்தியாலயம் என்ற பெயரில் பாடசாலையொன்று......\nகௌரவ ஹேஷான் விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல கல்விக் கோட்டத்தில் தேல தமிழ் மகா வித்தியாலயம் என்ற பெயரில் பாடசாலையொன்று உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;\n(ii) அப்பாடசாலையில் தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;\n(iii) தற்போது அப்பாடசாலையில் தீவிர ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றதென்பதை அறிவாரா என்பதையும்;\n(iv) அந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;\nகேட்கப்பட்ட திகதி : 2017-08-29\nகேட்டவர் : ஹேஷா விதானகே\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n18. சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) 2017 ஆம் ஆண்டில், இலங்கை ஆசிரியர் சேவையின் 3(1) தரத்திற்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக பரீட்சை......\nகௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) 2017 ஆம் ஆண்டில், இலங்கை ஆசிரியர் சேவையின் 3(1) தரத்திற்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக பரீட்சை நடாத்தப்பட்ட திகதி யாது என்பதையும்;\n(ii) தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட இப்பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;\n(iii) எனவே, பரீட்சார்த்திகளுக்கு மேற்படி எந்த மொழியிலும் விடையளிக்கக் கூடியதாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;\n(iv) ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்காக சிங்கள மொழியில் விடையளித்த விண்ணப்பதாரிகளுக்கு தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;\n(v) ஆமெனில், சிங்கள மொழிமூல வினாத்தாளுக்கும் ஆங்கில மொழியில் விடையளிக்க வேண்டுமென குறித்த பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட வர்த்தமானப் பத்திரிகையில் அல்லது வேறு வகையில் முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்ததா என்பதையும்;\n(vi) ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்காக சிங்கள மொழிமூலம் விடையளித்தல் தகைமையீனமாகுமென முன்னறிவித்தல் கொடுக்கப்படாத நிலையில், சிங்கள மொழிமூலம் விடையளித்த பரீட்சார்த்திகள் தெரிவு செய்யப்படாததன் மூலம் அநீதி நேர்ந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;\n(vii) ஆமெனில், அதற்காக எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;\nகேட்கப்பட்ட திகதி : 2017-08-08\nகேட்டவர் : சுனில் ஹந்துன்னெத்தி\nஅரசியற் கட்சி : மக்கள் விடுதலை முன்னணி\n19. ஹேஷா விதானகே அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகெளரவ ஹேஷான் விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு;\nகெளரவ ஹேஷான் விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு;\n(ii) அந்த இடங்களின் பெயர்கள் யாவை;\n(iii) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியேற்ற பின்னர் அந்த இடங்களை பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை;\nஎன்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா\nகேட்கப்பட்ட திகதி : 2017-08-08\nகேட்டவர் : ஹேஷா விதானகே\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n20. ஹேஷா விதானகே அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nகௌரவ ஹேஷான் விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) சப்ரகமுவ மாகாணத்தின் கீழ் நிருவகிக்கப்படும் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை யாது......\nகௌரவ ஹேஷான் விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—\n(அ) (i) சப்ரகமுவ மாகாணத்தின் கீழ் நிருவகிக்கப்படும் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;\n(ii) அந்தப் பாடசாலைகளின் பெயர்கள் யாவை என்பதையும்;\n(iii) சப்ரகமுவ மாகாணசபையின் தற்போதைய முதலமைச்சர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டதன் பின்னர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் உள்ளனவா என்பதையும்;\n(iv) ஆமெனில், மேற்படி பாடசாலைகளின் பெயர்கள், தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாது என்பதையும்;\n(v) சப்ரகமுவ மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட ப���ன்னர் மாவட்டத்தில் மூடப்பட்ட பாடசாலைகள் உள்ளனவா என்பதையும்;\n(vi) ஆமெனில், அந்தப் பாடசாலைகளின் பெயர்கள் யாவை என்பதையும்;\n(vii) அவ்வாறு மூடப்பட்ட பாடசாலைகளின் வளங்களிலிருந்து பயன் பெறுவதற்காக அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;\nகேட்கப்பட்ட திகதி : 2017-08-08\nகேட்டவர் : ஹேஷா விதானகே\nஅரசியற் கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி\n18 பக்கங்களுள் 1 வது\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yananwritings.wordpress.com/about/", "date_download": "2018-07-19T11:30:28Z", "digest": "sha1:V5PGW7H6ICESYSGWG5I6KKJV4T5OAZZ3", "length": 2704, "nlines": 45, "source_domain": "yananwritings.wordpress.com", "title": "About | யாணன் (yaanan)", "raw_content": "\nBio: சொந்த ஊர் என எதையும் சொல்வதில்லை. உண்மையில் சொந்தம் என்று எதுவும் யாருக்கும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் சில காலம் சில, சொந்தமானவைப் போல் தொடருகின்றன. பிரபஞ்சத்தின் உயிர்ப்பை நான் மரங்களில் தான் பார்க்கிறேன். என்னைத் தூண்டும் சக்தியாக மரங்கள் இருக்கின்றன. இதுவரை நூற்றுக்கு மேலான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். மரணத்திற்கு முன்பாக மேலும் பல நடக்கூடும். நான் எழுதும் ஆத்ம ஞான கருத்துகளே எனது அழமான நம்பிக்கை. அதுபோலவே எனது வாழ்க்கையையும் உணருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://ammanpaattu.blogspot.com/2008/10/2.html", "date_download": "2018-07-19T11:26:44Z", "digest": "sha1:OL4N2TKD5EERKJY23F53PCSIKY2KAZWN", "length": 13280, "nlines": 310, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: \"தேவி திருக்கதை\" -- 2", "raw_content": "\n\"தேவி திருக்கதை\" -- 2\n\"தேவி திருக்கதை\" -- 2\nதேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்\nசெவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்\nமுதலாக இக்கதையை மார்க்கண்டேய மாமுனிவர்\nஇதைக் கேட்க ஆவலுடன் மரக்கிளையில் வந்திருந்த��\nபறவையென வீற்றிருந்த ஜைமினி முனிவருக்கும்\nஅவர்தம் சீடருக்கும் அன்புடனே சொல்லிவைத்தார்\nசுரதனென்னும் ஓரரசன் தான் சுற்றம் செய்த துரோகத்தால்\nநாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு காட்டை அடைந்தான்\nவழியிலொரு வாணிகனைக் கண்டு செல்வதெங்கே எனக்கேட்டான்\nதன் மனைவி மக்களாலே தானுமிங்கே துரத்தப்பட்ட\nதன்சோகக் கதையொன்றை சமாதியெனும் அவ்வணிகன்\nசொன்னதனைக் கேட்ட மன்னன் ஆதரவாய் அவன் தோளில்\nகைபோட்டு நடந்தபடி அடுத்தொன்று சொல்லலானான்\n'இத்தனையும் எம்மக்கள் எமக்கிங்கு செய்திடினும்\nஇன்னுமிங்கு என் மனமும் அவர்நலனே நாடிடுதே\nஅதுகேட்ட வணிகனுமே 'எனக்குமிங்கு அந்நிலையே\nஎதுவென்று ஆராய என்னாலும் முடியவில்லை' என்றான்\nஅப்போது காட்டினிடை தவமிருந்த சுமேதசர் என்கின்ற\nமுனிவரைக் கண்டவுடன் 'இவரிடமே கேட்டிடுவோம்\nஎனவிருவரும் முடிவுசெய்து அவரடியைப் பணிந்தனராம்\nஎன்றபடி அடிபணிந்த இருவரையும் அமரவைத்து\nநீயுணர வேண்டித்தான் அன்னையவள் செய்கின்றாள்\nஅவளாடும் நாடகத்தை நானுரைக்கக் கேட்டிடுவாய்\nமூன்றுவகை அரக்கரையே மாயையிவள் அழித்திட்டாள்\nஎனச்சொல்லி விரிவாக திருக்கதையைத் தொடங்கலானார்\nதேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்\nசெவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்\n//////தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்\nசெவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்\nஅதுவும் உங்கள் மொழியில் கேட்பது எல்லாவற்றையும்விட இன்பம்\nஎங்கு சென்றாலும் வந்து பார்க்கும் உங்கள் அன்புள்ளத்துக்கு நன்றி ஆசானே\nநவராத்திரி சமயத்தில் அம்பாளின் தேவி மஹாத்மியம் படிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்பதற்காக அவளின் அருமை சரிதத்தை அழகு தமிழில் எளிமையாக தரும் VSK, தங்களுக்கு அன்னை அனைத்து நலங்களும் அருள பிரார்த்திகின்றேன்.\n//நவராத்திரி சமயத்தில் அம்பாளின் தேவி மஹாத்மியம் படிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்பதற்காக அவளின் அருமை சரிதத்தை அழகு தமிழில் எளிமையாக தரும் VSK, தங்களுக்கு அன்னை அனைத்து நலங்களும் அருள பிரார்த்திகின்றேன்.//\nஅவள் அருளாலே அவள் தாள் வணங்கி இது நிகழ்கிறது ஐயா\nதங்கள் வாழ்த்து என்னை வளப்படுத்தும்\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nகண்ணுக்குள்ள ஒன்னுருவம் கலையாம நிக்குதடி\nஎங்கும் இருப்பவள் எதிலும் இருப்பவள் \n\"தேவி திருக்கதை\" -- 10\n\"தேவி திருக்கதை\" -- 9\n\"தேவி திருக்கதை\" -- 8\nமாணிக்க வீணையேந்தும் கலைவாணிக்கு என்னென்ன பெயர்கள்...\n\"தேவி திருக்கதை\" -- 7\n\" -- 6 \"கதை முடிந்த கதை\n\"தேவி திருக்கதை\" -- 5\n\"தேவி திருக்கதை\" -- 4\n\"தேவி திருக்கதை\" -- 3\n\"தேவி திருக்கதை\" -- 2\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-07-19T11:46:38Z", "digest": "sha1:LL6GRHG3RSDMYNH2OBVT2BMPQCVSWPH4", "length": 8728, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» டெல்லி விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி?", "raw_content": "\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\n‘நாடோடிகள்-2’ வின் பிரமிக்கும் அடுத்த வெளியீடு\nஅகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு\nடெல்லி விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி\nடெல்லி விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி\nடெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை (வியாழக்கிழமை) சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சி நிவாரணம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் இன்று 16 ஆவது நாளாகவும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nவிவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை என்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், புதுச்சேரி மாநில முதலமைச்சர் வி.நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் நாடானுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யர், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பாரதி, கேரளாவின் விவசாயத்துறை அமைச்��ர் சுனில் குமார் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் பறிமுதல்\nஇலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகத்தில் சீனியப்பதர்ஹா கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 50 லட்சம் ரூபாய்\nஓரங்கட்டப்பட்ட மக்கள் வரிசையில் நான்: ராகுல்காந்தி\nஒரங்கட்டப்பட்ட மக்களின் வரிசையில் தானும் கடைசியில் நிற்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த\nதமிழகத்தில் தேசிய கட்சிக்கு இடம் கிடையாது: தம்பிதுரை\nதமிழகத்தில் எந்த தேசிய கட்சிகளுக்கும் இடம் கிடையாதென்றும், அதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்று\nபேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபனை இல்லையென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெர\nமோடி தனது மனதின் குரலை மட்டுமே முன்வைக்கிறார்: ராகுல் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி தனது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறாரென, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்கா\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\n‘நாடோடிகள்-2’ வின் பிரமிக்கும் அடுத்த வெளியீடு\nஅகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல்\nமுல்லை – கிளி. இல் இதுவரை 5442 அபாயகரமான வெடிபொருட்கள் அழிப்பு\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nபல குற்றச்செயல்களுடன் அலோசியஸிற்கு தொடர்பு\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t38060-topic", "date_download": "2018-07-19T11:44:04Z", "digest": "sha1:2ZPU7KYLN3MIZGCYUDHNC45IDPOA2OXB", "length": 18682, "nlines": 276, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மனதுக்குப் பிடித்தவருக்காக காத்திருக்கும் பிரியங்கா", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் த��ைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nமனதுக்குப் பிடித்தவருக்காக காத்திருக்கும் பிரியங்கா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமனதுக்குப் பிடித்தவருக்காக காத்திருக்கும் பிரியங்கா\nமனதுக்குப் பிடித்தவருக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருப்பேன் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.\nபேஷன் படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, பஞ்சாபி இளைஞரை மணமுடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர்தான் பிரியங்கா சோப்ரா.\nஇன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்வேன், மணமகனாக எனக்கு பிடித்த பஞ்சாபி இளைஞரை தேர்ந்தெடுப்பேன். அவர் உடல் வலிமை மிக்கவராகவும், நல்ல மனம் கொண்டவராக இருக்க வேண்டும்.\nநான் திரையுலகை சேர்ந்தவள் என்பதால் என்னைப் பற்றி வெளியாகும் சர்ச்சைகளை கண்டு கொள்ளாதவராக என் மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். முக்கியமாக பொது இடத்தில் என்னிடம் யாரும் தவறாக நடக்க முயன்றால் அந்த நபரை போட்டு பின்னி எடுக்கும் தைரியம் உள்ளவராகவும் என் உணர்வுகளை புரிந்து கொண்டு எனக்கு மரியாதை அளிப்பவராகவும் இருக்கும் இளைஞர் கிடைக்கும் வரை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்க தயாராக இருக்கிறேன்...\", என்றார்.\nசினிமா ஹீரோ போல நிஜத்திலும் ஹீரோ தேடுகிறார் பிரியங்கா. அவர் விருப்பம் நிறைவேறினால் சரி.\nRe: மனதுக்குப் பிடித்தவருக்காக காத்திருக்கும் பிரியங்கா\nRe: மனதுக்குப் பிடித்தவருக்காக காத்திருக்கும் பிரியங்கா\n@பிளேடு பக்கிரி wrote: நான் ரெடி\nRe: மனதுக்குப் பிடித்தவருக்காக காத்திருக்கும் பிரியங்கா\n@பிளேடு பக்கிரி wrote: நான் ரெடி\nRe: மனதுக்குப் பிடித்தவருக்காக காத்திருக்கும் பிரியங்கா\n@பிளேடு பக்கிரி wrote: நான் ரெடி\nஅவங்க தேடுறது பஞ்சாபி இளைஞனை பஞ்சாபியை பிளேடு என்று படித்திருந்தால் திருத்திக் கொள்ளவும்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: மனதுக்குப் பிடித்தவருக்காக காத்திருக்கும் பிரியங்கா\n@பிளேடு பக்கிரி wrote: நான் ரெடி\nஅவங்க தேடுறது பஞ்சாபி இளைஞனை பஞ்சாபியை பிளேடு என்று படித்திருந்தால் திருத்திக் கொள்ளவும்\nஅப்போ மண் மோகன் சிங்க் \nRe: மனதுக்குப் பிடித்தவருக்காக காத்திருக்கும் பிரியங்கா\n@பிளேடு பக்கிரி wrote: நான் ரெடி\nஅவங்க தேடுறது பஞ்சாபி இளைஞனை பஞ்சாபியை பிளேடு என்று படித்திருந்தால் திருத்திக் கொள்ளவும்\nபிரியங்கா என்னை லவ் பன்னிருவான்னு எல்லாருக்கும் பொறாமை\nRe: மனதுக்குப் பிடித்தவருக்காக காத்திருக்கும் பிரியங்கா\n@பிளேடு பக்கிரி wrote: நான் ரெடி\nஅவங்க தேடுறது பஞ்சாபி இளைஞனை பஞ்சாபியை பிளேடு என்று படித்திருந்தால் திருத்திக் கொள்ளவும்\nஅப்போ மண் மோகன் சிங்க் \nஅவரு இன்னும் வயசுக்கே வரலையாம்\nRe: மனதுக்குப் பிடித்தவருக்காக காத்திருக்கும் பிரியங்கா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-07-19T11:35:22Z", "digest": "sha1:DHU7ROOAUBEV32LVMXPNUPPUYUUDRM44", "length": 7252, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "“ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன் | இது தமிழ் “ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா “ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன்\n“ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன்\nஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்களின் பெயருமே, ‘ராமைய்யா வஸ்தாவையா (Ramaiya Vastavaiya)‘ தான்.\nஆனால் இரண்டுமே தமிழ்ப்படங்கள் இல்லை. ஒன்று பாலிவுட்டில். இன்னொன்று டோலிவுட்டில். ஆனால் இரண்டு படமுமே கிராமத்தில் நடப்பதாகவே கதையம்சம் கொண்டது.\nஹிந்திப் படத்தில், நாணம் மிகுந்த கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் பிரபுதேவாவால் தமிழில் 20005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. சித்தார்த்தும், த்ரிஷாவும் நடித்திருந்தனர. அதே படம் தமிழில், ஜெயம்ரவி த்ரிஷா நடிக்க ரீ-மேக் புகழ் ராஜா இயக்கத்தில், ‘சம்திங் சம்திங்’ என வெளியானது. எட்டு வருடங்களுக்குப் பின், பிரபுதேவாவே தன் படத்தை ஹிந்தியில் ரீ-மேக்குகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக கிரிஷ் குமார் நடிக்கிறார்.\nராமைய்யா வஸ்தாவையா என அதே தலைப்புக் கொண்ட தெலுங்குப் படத்திலோ, அதற்கு எதிர்மாறான முரட்டுத்தனம் மிகுந்த பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் தற்போது நடித்து வருகிறார்.\nஇரண்டு படமுமே ஜூலை மாதம் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious Postதலைவா இசை - ஒரு பார்வை Next Postகற்பழிக்கப்படும் மைனர்கள்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி\nவயலின் ‘ஞான’ சேகரன் 80\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kadamburtemple.blogspot.com/2011/11/blog-post_11.html", "date_download": "2018-07-19T11:41:49Z", "digest": "sha1:GUOBXBV46H5JRLI5DHXCQFOS4VSVGKLA", "length": 4946, "nlines": 121, "source_domain": "kadamburtemple.blogspot.com", "title": "******************** கடம்பூர் கோயில்: அன்ன வார்ப்பு விழா", "raw_content": "\nஅன்னம்பாலித்தல் என்பது இந்திய கலாச்சாரத்தில் சிறப்பாக போற்றப்பட்டு வருவது, எனவே திருக்கோயில்களில் இறைவனுக்கு அன்னத்தினால் போர்த்த படுவது வழக்கம்\nஇந்த வருடம் ஐப்பசி மாத முழு நிலவு நாளில் அமிர்தத்தினால் உருவான கடம்பூர் அமிர்தகடேசுவரருக்கு சிறப்பாக அன்னத்தினால் வார்ப்பு செய்யப்பட்டது\nபின்னர் சாற்த்தப்பட்ட அமுது கலைக்கப்பட்டு, சிறிதளவு அன்னம் உலக உயிர்கள் பசியாற ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயில் சிவதீர்த்தத்தில் கரைக்கப்பட்டு,மீதமுள்ளவை தயிர் சாதம்,புளிசாதமாக நிவேதனமாக பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.\nஉபய தாரர் -திரு நாகரத்தினம் மரியாதை செய்யப்பட்டார்.\nதிரு. தமிழ் அவர்களும் இணைந்து அன்ன வார்ப்பு உபயம் செய்தார் அன்னாபிஷேக காட்சிகள்\nபடமும் பதிவும் கடம்பூர் விஜய் at 1:37 AM\nகடம்பூர் கோயில் பட தொகுப்பு\n108 சங்கு நீராட்டல் முதல் வாரம்\nதெய்வ தரிசனத்தில் கடம்பூர் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ualwaysthinkof.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-19T11:14:47Z", "digest": "sha1:7AY7WOE7E5PLN3RCQUQEVQKCRZYUYUPG", "length": 5693, "nlines": 117, "source_domain": "ualwaysthinkof.blogspot.com", "title": "U Always Think of: May 2012", "raw_content": "\nதெரியாத அடுத்த வினாடிக்கும் ,\nஅதை யூகிக்கும் இந்த வினாடிக்கும்\nஇடையி��் உள்ளதே வாழ்கை ....\nவாழ்ந்து பார்க்கலாம் வா ...\nவிரும்பியோ விரும்பாமலோ நீ எடுக்கும் முடிவே உன் வாழ்வை அடுத்த வினாடிக்கு அழைத்து செல்கிறது .\nக வரிசை - ஒரு செய்யுள்\nஒரு வரிசை செய்யுள் . என்னை மிகவும் கவர்ந்த்தது இதன் பொருள் , பல முறை நான் ஆமை - முயல் கதை கேட்டுள்ளேன் . அதே கதை தூய தமிழில் எனை மெய் ...\nகோயில் சென்றேன் இறைவனை காண , நேற்று ஒருவரில்லா உன் வீட்டில் , இன்று என்ன கூட்டம் என கேட்டேன் இறைவனை . சொன்னான் , \" ...\nதனித்து விடப்பட்டேனோ, தொலைந்துபோனேனோ தெரியவில்லை ... உன் சில மணி நேர மௌனம் என் பல நாட்களை பறித்து போனதடி அன்பே .... ...\nமனமே நீ இல்லாமல் இவ்வுலகில்லை .\nநிலைமாறும் உலகில் நிலையாக என்னோடிருப்பது நீ சிந்திக்க வைப்பது நீ சிந்தனையை செயலாக மாற்றுவதும் நீ செய்த தீமையை சுட்டிகாட்டுவதும் நீ...\nநல்லவையோ தீயவையோ உன்னுள் அதை உறங்க வைக்க முடியுமே தவிர அழிக்க இயலாது தீயவையை தொடர்ந்து உறங்க வைக்க கற்றுக்கொள் , நல்லவையை என்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/actress-athulya-ravi-exclusive-stills-2/", "date_download": "2018-07-19T11:43:52Z", "digest": "sha1:QQELPEQMLNQUMZPR5JP25FCOM76Q5AGY", "length": 2417, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Actress Athulya Ravi Exclusive Stills - Behind Frames", "raw_content": "\n1:24 PM 80 வயதான நாடக கலைஞனாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘ சீதக்காதி ..\n1:20 PM கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சத்யராஜ் மகள்..\n80 வயதான நாடக கலைஞனாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘ சீதக்காதி ..\nகல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சத்யராஜ் மகள்..\nகடைக்குட்டி சிங்கத்துக்கு துணை குடியரசுத்தலைவர் வழங்கிய கௌரவம்..\nஇசக்கி பரத் படத்தை இயக்கும் கோலிசோடா இணை இயக்குனர்..\n80 வயதான நாடக கலைஞனாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘ சீதக்காதி ..\nகல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சத்யராஜ் மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/apr/17/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D-20-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2901919.html", "date_download": "2018-07-19T11:57:55Z", "digest": "sha1:NMCY2XK7HIDKTGXDEZELAXYGDYFRX4EA", "length": 7140, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஏப். 20-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஏப். 20-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nதிருவண்ணாம���ை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதிருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்துக்கு, ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர்.\nஎனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhealthcare.com/category/videos/", "date_download": "2018-07-19T11:12:00Z", "digest": "sha1:IVUQXXGING55A5MBTCTYFTXLZ6OXRVRK", "length": 7674, "nlines": 180, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "Videos | ஹெல்த்கேர் மாத இதழ்", "raw_content": "\nமுதுகுத் தண்டுவட வாதநீர் பாதிப்பு\nசிறுநீரகங்கள் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவது எப்படி\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகோடைக்கால வெயிலில் மயக்கம் ஏன் ஏற்படுகிறது\nமுதுகுத் தண்டுவட வாதநீர் பாதிப்பு\nசிறுநீரகங்கள் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவது எப்படி\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nமூட்டுத் த��ய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகொலஸ்ட்ரால் ஒரு சிறப்புப் பார்வை\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகொலஸ்ட்ரால் ஒரு சிறப்புப் பார்வை\nDr.மனகாவலப் பெருமாள் July 8, 2018\nDr.வினோத் குமார் பிலிப் July 8, 2018\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nDr.ஃப்ரான்சிஸ் ராய் July 8, 2018\nகோடைக்கால வெயிலில் மயக்கம் ஏன் ஏற்படுகிறது\n© உரிமை @ஹெல்த்கேர் மாத இதழ்.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://engalblog.blogspot.com/2013/12/blog-post_18.html", "date_download": "2018-07-19T11:34:37Z", "digest": "sha1:RM7R7GHLPCIMQGA3DXO6YQ4USA7W5ECL", "length": 65122, "nlines": 519, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பிரபல கொலை வழக்குகள் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுத்தகத்தில் ஏராளமான அச்சுப் பிழைகள். 2012 இல் வெளிவந்த புத்தகம்.\nகொஞ்சம் எதிர்பார்ப்புடன்தான் படிக்க ஆரம்பித்தேன்.\nபல வழக்கு விவரங்கள் விவரமாக சொல்லப் படாமல், கேட்டதை வைத்துக் கொண்டு எழுதியது போல விவரங்கள். சில வழக்குகளின் முடிவில் 'இதை அடிப்படையாக வைத்து சில பாலிவுட் படங்கள் வந்தன' என்கிறார். என்னென்ன என்று சொல்லவில்லை. (அது முக்கியமில்லை என்று சொல்லலாம். ஆனால் படிக்க முழுமை கிடைக்கவில்லையே)\nஆஷ் கொலை வழக்கு, சிங்கம்பட்டி கொலைவழக்கு, பாவ்லா கொலை வழக்கு, பகூர் கொலைவழக்கு, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, ஆளவந்தான் கொலைவழக்கு, நானாவதி கொலை வழக்கு, எம் ஜி ஆர் சுடப்பட்ட வழக்கு, விஷ ஊசி கொலை வழக்கு, மர்ம சந்நியாசி...ஆக, பத்து வழக்குகள் பற்றிய புத்தகம்.\nவிஷ ஊசி கொலைவழக்கு பற்றி மிக முன்பு குமுதத்தில் படித்திருக்கிறேன்.\nஆஷ் கொலை வழக்கு பற்றி எழுதும்போது சுப்ரமணிய சிவா தொழுநோயால் அவதிப்பட்டு சீக்கிரமே காலமானது பற்றி, நீலகண்ட பிரம்மச்சாரி இந்த வழக்கிலிருந்து வெளிவந்ததும் மறுபடியும் தேச சேவையில் ஈடுபட்டு அப்புறம் கடைசிக் காலத்தில் சுவாமி ஓம்கார் என்ற பெயரில் ஆன்மீகத்தில் ஈடுபட்டது போன்ற விவரங்களையும், வ உ சி கப்பலை நஷ்டம் வந்து ஆங்கிலேயரிடமே விற்றபோது பாரதியார் அதை 'வெட்கக்கேடு' என்று விமர்சித்தது என்று சிறு சிறு குறிப்புகள் வரைந்துள்ளார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டில் முதலும் கடைசியுமாக நிகழ்ந்த ஒரே கொலைச் சம்பவம் என்கிறார்.\nஆங்கிலேயர்களின் கல்வி அடிப்படையிலேயே கல்வி பயில ஜாமீன் பர��்பரைகளுக்கு சென்னையில் DMS வளாகம் இருக்கும் இடத்தில் நியூயிங்டன் பள்ளி இருந்ததாம்.\n1955இல் அகுஜா கொலை வழக்குக்குப் பிறகுதான் ஜூரிகள் சிஸ்டத்தை இந்தியாவிலிருந்து எடுத்தார்களாம்.\nநுண்ணுயிரியைக் கொண்டு கொலை செய்யும் கலை 1931 லேயே நடந்திருக்கிறது. அந்த வழக்கு பற்றி பகூர் கொலை வழக்கில் சொல்கிறார்.\nஅப்பாதுரை சமீபத்தில்கூட லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி எழுதியிருந்தார். இதிலும் அதே அளவு சுருக்கமாக எழுதியிருக்கிறார்.\nஎம் ஜி ஆர், எம் ஆர் ராதா சுட்டுக் கொண்ட வழக்கும் அவ்வண்ணமே.\nநாவரசு கொலை வழக்கு போலவே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட ஆளவந்தான் பற்றி விவரம்அடுத்தக் கட்டுரையில்.\nஆளவந்தான், நானாவதிக் கதையின் சம்பவங்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nமற்ற கட்டுரைகள் சீக்கிரம் சீக்கிரமாக முடிக்கப் பட்டு வந்து பத்தாவதாக மர்ம சந்நியாசிக்குள் நுழைகிறார் ஆசிரியர். அநேகமாக அந்த ஒரு வழக்கைப் புத்தகமாகப் போட நினைத்து அதனுடன்தான் மற்றவைகளையும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.\nவிஷ ஊசி கொலை வழக்கையே ஐந்தரைப் பக்கங்களில் முடித்து விடுகிறார். அப்புறம் இந்த 'மர்ம சந்நியாசி' வழக்கு விவரம்தான். ஆனால் சும்மா சொல்லக் கூடாது. படிக்க ரொம்ப சுவாரஸ்யமாய் இருப்பதும் இதுதான். விளக்கமாய் எழுதப் பட்டிருப்பதும் இதுதான்.\n1909 லிருந்து சம்பவம் தொடங்கி இறுதித் தீர்ப்பு லண்டன் பிரிவி நீதிமன்றத்திலிருந்து வந்த நாள் 1946. உச்ச நீதிமன்றம் இந்தியாவில் இல்லாததால் அந்நாட்களில் இறுதி கட்ட உச்ச வழக்குகள் இங்குதான் முடிவு செய்யப் பட்டன. எம் கே டி பாகவதர்- என் எஸ் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'க் கூட இங்கிருந்துதான் இறுதித் தீர்ப்பைப் பெற்றது.\nகிழக்கு வங்காளத்தில் இருக்கும் பாவல் ஜாமீன் இளைய சகோதரர் 25 வயது மேஜோ குமார் விடுமுறைக்காக மலை வாசஸ்தலம் சென்ற இடத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டு உறவினர் நட்புகள் பெருமளவில் கூடுமுன் அவர் மைத்துனர் குழாமால் அவசர அவசரமாக எரியூட்ட எடுத்துச் செல்லப்படும் வழியில் பெருமழை தாங்காது 'சடலத்'தை ஓரமாக வைத்து ஒதுங்கி நின்று திரும்பிவந்து பார்க்கும் நேரம் சடலம் காணோம். தேடித் பார்த்தும் தோல்வி. தங்கியிருக்குமிடம் திரும்புபவர்கள் மறுநாள் காலை வெள்ளைத் துணியால் மூடப்பட்ட ஒரு உருவத்தைக் கொண்டு போய் எரிக்கிறார்கள். செய்யவேண்டிய சாஸ்திரங்கள் எதுவும் செய்யாமலேயே. மைத்துனர் 30,000 ரூபாய்க்கு செத்தவர் பெயரில் ஒரு பாலிசி எடுத்திருக்கிறார். அதையும் மற்ற பணங்களையும் சகோதரிக்குத் தராமலே அவர் அடைகிறார். ஜமீனிலிருந்து வரும் பென்ஷன் மட்டும் மேஜோ குமார் மனைவிக்கு.\nமேஜோ குமார் உறவினர்களுக்குச் சந்தேகம் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேஜோ குமாரின் மனைவி ஒன்றும் அறியாதவராக இருக்கிறார். சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வரும் ஒரு சந்நியாசி மேஜோ குமார் போல இருக்கிறார். பின்னர் பல கட்ட விசாரணைக்குப்பின் அவர்தான் என்று முடிவெடுக்கப்பட்டாலும், ஊர் மக்களும், மேஜோ குமாரின் சகோதரிகள் ஒத்துக் கொண்டாலும், அவர் மனைவி ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.\nவழக்கு, விசாரணை, தீர்ப்பு. அவர்தான் மேஜோ குமார் என்று கடைசியில் தீர்ப்பானாலும், அந்நாட்களில் டி என் ஏ சோதனை இல்லாததால் நிரூபணங்களுக்கு நிறைய கஷ்டப்படுகிறார்கள். இந்த விவரங்கள் மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கின்றன. இறுதித் தீர்ப்பு வரும்போது மேஜோ குமாருக்கு 63 வயது.\nபத்திரிகைகளிலும், நாட்டு மக்கள் மத்தியிலும், ஏன், லண்டனிலும் கூட மிகவும் பரபரப்பாக பேசப் பட்ட வழக்கு.\nஇதைத் தழுவி நிறைய படங்கள் வந்திருக்கலாம். 'திகம்பர சாமியார்' கிட்டத்தட்ட இதன் அடிப்படையில் எடுக்கப் பட்டது என்று தெரிகிறது.\nபொதுவாகவே அந்நாட்களிலேயே ஊடகங்களின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்று சொல்லி வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்றியிருக்கிறார்கள். வழக்கைப் பாதிக்குமளவு ஊடகங்களின் (ஊடகங்கள் என்ன, செய்தித்தாள்கள்தான்) கருத்துத் தாக்கம் இருந்திருக்கிறது. உள்ளூர் மக்கள் அபிப்ராயமும் அப்படியே.\n196 பக்கம் 140 ரூபாய்\nகடந்த புத்தக சந்தையின் போது தலைப்பின் சுவாரசியம் கருதி வாங்கி, பின்பு படிக்கத் தொடங்கி, படிக்க சுவாரசியம் இல்லாமல் ஏண்டா வாங்கினோம் என்று பாதியிலேயே மூடச் செய்த புத்தகம் சார்... பரவாயில்ல உங்க பொறுமைக்கு அளவே இல்ல... படிச்சி முடிச்சிடீங்களே\nஇது என்ன சொக்க லிங்கம் இப்படி பண்ணீட்டரு..\nஇதென்னா யாரொ ஒரு நாதியத்த ஜமீன் செத்த வழக்கு ....\nதிருச்சி ராம ஜெயம்(முன்னாள் அமைச்சர் நேரு தம்பி) கொலைன்னு எழுதினா...\n10 லட்சம் காப்பி கூட விற்கும்.\nஇந்திரா கொலையை ஒட்டி டெல்லி வன்முறை அதன் தொடராக அமரிக்க வாழ் சீக்கியர் வழக்கு.. சோனிய அம்மையாருக்கு கொடுக்கபட்ட சம்மன்..ன்னு போனா...\nராஜிவ் காந்தி கொலையில் பொய் குற்றம் சாட்டப்பட பேரறிவாள்ன்.. வேண்டுமேன்றே சரியாக விசாரிக்காத கார்த்திகேயன்... 100 கோடி மக்கள் பணம் வீணான கதை..\nஇதற்கு காரன்மான முன் பின்னான அமைதிபடை அமைதி சொறியான கதை.. பிராபகரன் மரணம் \nஇவற்றில் ரா, மொசாட், கேபிஜி யின் பங்கு..\nஇப்படி நூல் இழை எடுத்தால் உலக வரலாறே எழுதலாம்.\nஇதை எல்லாம் விட்டுடு... என்ன புக் எழுதுறாங்க.\nஎதை எழுதுனா யாரும் எதுவும் கேட்க மாட்டங்களொ.. டெஸ்க் ஒர்காகவே என்ன கதையும் எழுதிக்கலாமோ... உழைப்பு தேவைபாடதோ.. அதை செய்திருக்கார் சொத்தை லிங்கம்...\nஅடுத்த 'கடந்த 30 நாட்களில்...' இதுவாகத் தான் இருக்கப் போகிறது.\nயாருக்கு எதுதெரியுமோ அதைத்தானே எழுதமுடியும். கொலை வழக்குகளில் சங்கர ராமன் கொலை வழக்கு அண்மையில் தீர்ப்பு கூறப் பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை. குற்றவாளி யாரோ.\nகொலை வழக்குகள் , கொலை மர்மங்கள், ஊகங்கள், கண்டு பிடிப்புகள் எல்லாம் படிக்க நல்ல விறு விறுதான்.\nஉங்கள் விமர்சனமும் நல்ல விறு விறுப்பு.\n\"திகம்பர சாமியார்\" வடுவூர் எழுதி வந்த கதை. சின்ன வயசிலேயே படிச்சிருக்கேன். சினிமாவா வந்ததுனு தெரியாது. ஆனால் வடுவூரோட இன்னொரு கதை, அதிலேயும் திகம்பர சாமியார் வருவார் :))) ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரி திகம்பர சாமியார். நிறைய மர்மக் கதைகளில் வருவார். அந்த இன்னொரு கதை தான் \"அறிவாளி\" சினிமாவா வந்ததாய்ச் சொல்வாங்க. படம் பார்க்கலை, அதனால் அது குறித்து நிச்சயமாய்த் தெரியாது. :))))\nபல சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும் போலிருக்கே\nதிகம்பர சாமியார் விவரங்கள் எனக்குப் புதிது\nஅருமையாக விமர்சனம் செய்து இருக்கின்றீர்கள்.\nகும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்கிற வடுவூராரின் நாவல் தான் 'திகம்பர சாமியார்' திரைப்படம் ஆயிற்று.\nஅவரது 'மேனகா'வும் திரைப்படமாக வந்திருக்கிறது.\n'திரிபுரசுந்தரி அல்லது திகம்பர சாமியார் திடும் பிரவேசம்' என்று அவரது இன்னொரு நாவலும் உண்டு.\nஇன்னொருவர் கும்பகோணத்து டி.எஸ். துரைராஜ். இவர் எழுதிய 'கருங்குயில் குன்றத்துக் கொலை'\nநாவல் தான் சிவாஜி நடித்த 'மரகதம���' திரைப்படம். (சந்திரபாபு வின் குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே' பாடல் இதில் தான்.)\nபில்லூர் செல்லத்ம்மா வழக்கு பற்றி ஏதேனும் தெரியுமா திருக்கட்டுப்பள்ளி கூத்தூர் சுப்பாராயர் வழக்கு என்று பல ஆண்டுகள் முன் கேட்ட நினைவுண்டு\n\"திகம்பர சாமியார்\" படம் நம்பியார் நடித்து இருக்கிறார். பல வேஷங்களில் வருவார். கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தேன்.\nசென்னை வரும்பொழுது வாங்கிவிட வேண்டியது தான் கிழக்கு காரர்களுக்கு வாடிக்கையாக வேண்டுமே என்று தோன்றினாலும்.\n'கடந்த 30 நாட்களில்' ஆரூடம் பலித்து விட்ட மாதிரி இருக்கே\nஜீவி. சார் சொன்னது புரியலியே..\n22/12/13 தேதியிட்ட தினமலர் வாரமலரில் பிரசுரமாகியுள்ள ஒரு துணுக்குச் செய்தி. (இது வேறு புத்தகம்)\n\"பத்திரிகையாளர், 'இந்து நேசன்' லட்சுமிகாந்தன், கொலை வழக்கில் கைதான ஜெயானந்தன், உடனே, 'அப்ரூவர்' ஆனான். சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில், பாகவதரையும், என்.எஸ்.கிருஷ்ணனையும் சந்தித்ததாகவும், நச்சுப் பாம்பை ஒழித்துக் கட்ட, என்ன செலவானாலும் ஏற்பதாகக் கூறி, அவர்கள், சதித்திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் கொடுத்தான்.\n'எங்கள் கவுரவத்திற்கும், புகழுக்கும் கேடு விளைவிக்கும் வகையில், துரோகம் செய்ய மாட்டோம் என்று, சத்தியம் செய்ய வேண்டும்...' என்று, பாகவதர் கேட்டார். அதன்படியே, உப்பு, வெற்றிலை வைத்து, சத்தியம் செய்து கொடுத்தானாம்.\nபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nபம்பாயிலிருந்து வந்த, வழக்கறிஞர் கே.எம்.முன்ஷியின் வாதத்தின் பேரில், சதி ஆலோசனை நடந்ததாக சொல்லப்படும் நாளில், ஸ்ரீராமுலு நாயுடு, பம்பாய் தாஜ் ஓட்டலில், ஆர்.கே.சண்முகம் செட்டியாருடன் இருந்தார் என்று நிரூபித்து, ஸ்ரீராமுலு விடுதலை பெற்றார்.\nமுன்ஷியின் ஒரு நாள் பீஸ், அக்காலத்திலேயே, எழுபது ஆயிரம் ரூபாய்.\nமுன்ஷியின் வாதத்தால், ஸ்ரீராமுலு விடுதலையானதைக் கண்ட என் எஸ்.கே., தானும், முன்ஷியை வழக்கறிஞராகக் வைத்துக் கொண்டார்.\nமுன்ஷியின் வாதத்தைக் கேட்டவுடன், கோர்ட்டு, தன்னையும் விடுவிக்கும் என்று, நம்பிக்கையோடு இருந்தார்.\nசதி நடந்ததாகச் சொல்லப்படுகிற நாளில், கிருஷ்ணன், மாடர்ன் தியேட்டர்சின் படப்பிடிப்பில் இருந்தார் என்று, நிரூபிக்க முயன்றார் முன்ஷி.\nஅப்போது, மாடர்ன் தியேட்டர்சின் படம் டைரக்ட் செய்து வந்தவர் எம்.வி.ராமன் என்பதால், அவர் சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டார். 'நவ., 7ம் தேதி,\nஎன்.எஸ் கிருஷ்ணன், 3மாடர்ன் தியேட்டர்சில் இருந்தார்...' என்று, சாட்சி அளித்தார் ராமன்.\n'அன்று, பக்த ஹனுமான் படத்துக்காக, ஒரு தந்திரக் காட்சி எடுத்துக் கொண்டிருந்தோம். மாலையில், என்.எஸ்.கிருஷ்ணன் வந்தார்...' என்று, கேமராமேன் பெய்லஸ்சும், 'மாலையில், மாடர்ன் தியேட்டர்சில் டிபன் சாப்பிட்டார்...' என்று, சவுண்டு இன்ஜினியர் பிள்ளையும் சாட்சி கூறினார்.\nஆனால், இந்த சாட்சிகள் எதுவும் பலிக்கவில்லை. என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், பாகவதருக்கும், ஆயுள் தண்டனை என்று, தீர்ப்பானது.\n— 'புகழ் பெற்ற வழக்குகள்' என்ற நுாலிலிருந்து...\"\nநன்றி சீனு. வாங்கி, படிக்கவேயில்லையா\nநன்றி ஜீவி ஸார்... நீங்கள் ஆரூடம் சொன்ன அன்று மாலையே நீங்கள் சொன்ன மாதிரி வந்து விட்டது\nநன்றி ஜி எம் பி ஸார். பின்னாளில் இவையெல்லாமும் புத்தகமாக வரும்\nநன்றி கோமதி அரசு மேடம்.\nநன்றி ராஜலக்ஷ்மி பரசிவம் மேடம்.\nநன்றி கீதா சாம்பசிவம் மேடம். திகம்பரசாமியார் பார்த்ததில்லை. சொல்லக் கேள்விதான்\nஜீவி ஸார்... ரெண்டு படமுமே நான் பார்த்ததில்லை. சமீபத்தில் 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' என்று கூட ஒரு படம் வந்த நினைவு\nநன்றி நாரதமுனி. நீங்கள் சொல்லும் வழக்கு விவரம் கேள்விப்பட்டதில்லை.\nமீள்வருகைக்கும், தகவலுக்கும் நன்றி கோமதி அரசு மேடம்.\nஜீவி ஸார்... நீங்கள் சொல்லுமுன் நானே சொல்லி விட வேண்டுமென்று நினைத்திருந்தேன்\nஅப்பாதுரை... 'எங்கள் ப்ளாக்' சைட் பாரில் வரும் 'கடந்த முப்பது நாட்களில் அதிகம் பேரால் படிக்கப்பட்ட பதிவு' என்ற செக்ஷனில் இதுவும் வந்து விடும் என்று ஜீவி ஆரூடம் கூறியிருந்தார். அதைத்தான் சொல்கிறார்.\nஆளவந்தார்,லக்ஷ்மிகாந்தன்,நாவரசு இதெல்லாம் படித்துப் படித்து ,ஏன்,ராஜீவ்,இந்திராகாந்தி எல்லா வழக்குகளுமே பேப்பரில் படித்துப் படித்து\nநமக்கு எல்லாம் தெரியும் என்ற தோற்றத்தை உண்டுசெய்த நாட்கள் ஞாபகம் வருகிறது.சினிமாவெல்லாம் முக்கால் பாகம் பார்க்கத் தடை உத்தரவு\nஎங்கள் வீட்டில். சினிமா ஞானம் அவ்வளவாகக் கிடையாது. அன்புடன்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க ��� போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஅலுவலக அனுபவங்கள் - டிரான்ஸ்ஃபர் மேட்டர்\nஞாயிறு 234 - பூனைப்பார்வை\nதினமணி, தி இந்து தீபாவளி மலர்கள்,லபக்தாஸ் ஃபோன், க...\nஒரு பக்கா ரசிகரின் பார்வையிலும், ஒரு பாமரனின் பார்...\nபாஸிட்டிவ் செய்திகள் - சென்ற வாரத்தில்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 131220: மீரா - பத்தாம் வகுப்ப...\nஇவரைத் தெரியுமா... - டாக்டர் ஹரி சங்கர்.\nஞாயிறு 232:: மார்கழியே வருக\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 131213:: நாங்களும் ரவுடிதான்\nஅலேக் அனுபவங்கள் 25:: எதிர்பாராத விடுமுறை தினம்.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 131206:: ஸ்ரேயா கோஷல்\nஅடை தின்ன என்ன தடை\nஞாயிறு 230: ஒற்றையடிப் பாதை\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nவாங்க பேசலாம் :) - வாங்க பேசலாம் :) வாங்க முதலில் எங்க வீட்டு தோட்டத்தில் ரெட் கர்ரன்ட்ஸ் .(red currants ) பழங்கள் இந்த வருடத்து அறுவடையில் பறவை நட்புக்கள் சாப்பிட்டு எங்களுக...\nமாறிய காலம், மாறாத கோலம் - *மாறிய காலம், மாறாத கோலம்* சுகுமார் இரண்டாவது நாளாக பள்ளிக் கூடம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். சாதாரணமாக அப்படி சொல்லக் கூடியவன் கிடையாது. ...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வ���ையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எ��்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்ல���ு பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/reviews/bairava-review-044234.html", "date_download": "2018-07-19T12:00:03Z", "digest": "sha1:AVDCYRVSZLVQFXQLJAV442THCSXZHXFY", "length": 18537, "nlines": 207, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பைரவா விமர்சனம் | Bairava Review - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர்கள்: விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதீஷ், டேனியல் பாலாஜி\nஎந்த விஜய் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இந்த பைரவாவுக்கு இருந்தது ரசிகர்களிடம். காரணம் தன்னை வைத்து படம் இயக்கி தோற்ற ஒரு இயக்குநருக்கு மீண்டும் விஜய் வாய்ப்புக் கொடுத்தது. அந்த வாய்ப்பை பரதன் எப்படி பயன்படுத்தியிருக்கிறார்\nஒய் ஜி மகேந்திரன் மேலாளராக இருக்கும் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலைப் பார்ப்பவர் விஜய். ஒய்ஜி சிபாரிசில் ரூ 64 லட்சத்தை கடனாக அந்த வங்கியில் பெறும் மைம் கோபி, அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றுகிறார். இதனால் ஒய்ஜி மகள் திருமணம் நிற்கும் நெருக்கடி. பெரும் சிக்கலுக்குள்ளாகும் ஒய்ஜி, அந்தக் கடனை வசூலிக்க விஜய்யை அனுப்புகிறார். வசூல் மன்னன் விஜய்யும் அந்தப் பணத்தை மீட்டுக் கொடுக்கிறார். ஒய்ஜி மகள் திருமணம் நடக்கிறது.\nஅந்தத் திருமணத்துக்கு, திருநெல்வேலியிருந்து பெண்ணின் தோழியாக வருகிறார் கீர்த்தி சுரேஷ்.\nகீர்த்தி சுரேஷைப் பார்த்ததுமே அவள் மீது காதல் விஜய்க்கு காதல் வந்துவிடுகிறது. கீர்த்தி சுரேஷிடம் காதலைச் சொல்ல விஜய் முற்படும் நேரத்தில், ஒரு கொலைகார கும்பல் கீர்த்தியை கொல்லப் பார்க்கிறது. இதையெல்லாம் கவனிக்கும் விஜய், அந்த கொல்லை கும்பல் பற்றி கீர்த்தியிடமே கேட்கிறார்.\nதிருநெல்வேலியில் மருத்துவக் கல்லூரி மாணவி கீர்த்தி. கல்லூரியின் முதல்வர் ஜெகபதி பாபு, கீர்த்தியின் தோழியை கொன்றுவிடுகிறார். ஆனால் பழியை கீர்த்தி மீது சுமத்த, ஜெகபதி பாபுவுக்கு எதிராக வழக்குப் போடுகிறார் கீர்த்தி. இதனால் கீர்த்தியையும் அவர் குடும்பத்தையும் தொடர்ந்து மிரட்டி வருகிறார் ஜெகபதி.\nஉடனே திருநெல்வேலிக்குப் போய் கீர்த்திக்காக ஜெகபதி பாபுவை எதிர்க்கிறார். அப்புறம் என்ன ஆகியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன\nமருத்துவப் படிப்பு நாட்டுக்கு மிக முக்கியமானது. அந்தப் படிப்பை வைத்துக் கொண்டு தனியார் கல்வி முதலாளிகள் எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் பரதன். ஆனால் சொன்ன விதம்தான் எடுபடவில்லை. ஜென்டில்மேன் ரேஞ்சுக்கு வந்திருக்க வேண்டிய படம். ஆனால் தன் ஸ்க்ரிப்டை தானே சொதப்பியிருக்கிறார் இயக்குநர்.\nபடத்தின் ஹீரோ விஜய் செம்மையாக சண்டை போடுகிறார். சண்டைக் காட்சிகளில் அவரை ரொம்பவே ரசிக்க முடிகிறது. பாட்டும் டான்சும் விஜய் படங்களின் ஸ்பெஷல். சந்தோஷ் நாராயணன் அதைக் கெடுத்திருப்பதால், இந்தப் படத்தில் விஜய்யின் சண்டைக் காட்சி மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதல். மாடுலேஷன் என்ற பெயரில் வசனங்களை இழுத்து இழுத்து பேசுகிறார். இது நன்றாக இருக்கிறது என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் அந்த இம்சையை படத்துக்குப் படம் தொடர்கிறார். தாங்க முடியலீங்ணா விஜய் இயல்பாக, தன் ஸ்டைலில் பேசினாலே நன்றாக இருக்கும். கில்லி, போக்கிரி, துப்பாக்கியில் அந்த விஜய்யைத்தானே ரசித்தார்கள்\nவிஜய்க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் ஜோடிப் பொருத்தம் நன்றாகத்தான் உள்ளது. கீர்த்தியின் இளமை, அழகு, சின்னச் சின்ன மேனரிசங்கள் ரசிக்க வைக்கின்றன.\nஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி இருவரும் வில்லன்கள். இருவரின் வில்லத்தனத்திலும் அத்தனை செயற்கை. சதீஷ் காமெடி ஓரிரு இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது. தம்பி ராமையா வீணடிக்கப்பட்டுள்ளார்.\nஒய்ஜி மகேந்திரன் பாத்திரம் அபத்தம். இப்படியா ஒரு வங்கி மேனேஜர் கடனை வசூலிக்கப் போவார்\nபடத்தின் முதல் பாதியில் அட்டகாசமாக அறிமுகமாகும் விஜய், ஒரு கால் மணி நேரம்தான் வருகிறார். ப்ளாஷ்பேக் என்ற பெயரில் ஜவ்வாய் இழுக்கிறார்கள். ஒரு அளவுக்கு மேல் போனால் சண்டைக் காட்சியெல்லாம் ரசிகனுக்கு எத்தனை நரகம் என்பதை இந்தப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nசுகுமாரின் ஒளிப்பதிவு டாப் க்ளாஸ். ஆனால் சந்தோஷ் நாராயணன்... ம்ஹூம். விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைப்பது தனி கலை. அதில் தேற சந்தோஷ் நாராயணன் இன்னும் மெனக்கெட வேண்டும். வர்லாம் வர்லாம்... மட்டும் பரவாயில்லை.\nமீண்டும் ஒரு நல்ல வாய்ப்பை கோட்டை விட்டி���ுக்கிறார் இயக்குநர் பரதன். இந்த ஸ்கிரிப்டை விஜய் கேட்காமலேயே ஒப்புக் கொண்டாரா அல்லது தெரிந்தேதான் இந்தப் படத்தைச் செய்தாரா என்பது விஜய் அபிமானிகளுக்கே கூட புரியாத புதிர்\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசிதையும் கூட்டுக் குடும்பங்கள்.. சீர்தூக்கி நிறுத்தும் கடைக்குட்டி சிங்கம்.. சபாஷ் பாண்டிராஜ்\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nஅமெரிக்காலயே தியேட்டரை அதிர வைத்த 'தமிழ் படம் 2': சிவா வேற லெவல் #TP2\nகேப்டன், ஓ.பி.எஸ். என ஊர், உலகத்தையே கலாய்ச்ச 'தமிழ் படம் 2' எப்படி இருக்கு\nஎப்படி இருக்கு மிஸ்டர் சந்திரமௌலி - ஒன்இந்தியா தமிழ் விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/7260", "date_download": "2018-07-19T11:49:36Z", "digest": "sha1:T4ABRYLEK2HLAEK3PFXIJSQPQHQV2DDK", "length": 8885, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழியும் வரலாறு", "raw_content": "\n« வாசகர் அனுபவம்,கண்ணீரைப் பின் தொடர்தல்\nகலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள் »\nவரலாற்றில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் பற்றி நான் அறிவேன். ஆனால் இங்கு வரலாற்றைப் பேணிக் காக்காமல், அதனை சொந்த லாபத்திற்காக இருக்கும் இடம் தெரியாமல் செய்யும் அவலத்தைப் பாருங்கள்.\nஇது பற்றி ஏதேனும் மேல் விபரங்கள் அறிய வேண்டுமானால், என் அண்ணன் திரு. ராமன் அவர்கள் தருவார். அங்கு சென்று புகைப்படங்கள் பல எடுத்து வந��துள்ளார்.\nஇது பற்றி தாங்கள் முடிந்த அளவு எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்பது என் விண்ணப்பம். செய்வீர்களா\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 67\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+6476+at.php", "date_download": "2018-07-19T11:53:05Z", "digest": "sha1:J63K3SP4GANHKMCMTYSZDX4XIVQQ5C27", "length": 4592, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 6476 / +436476 (ஆசுதிரியா)", "raw_content": "பகுதி குறியீடு 6476 / +436476\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 6476 / +436476\nபகுதி குறியீடு: 6476 (+43 6476)\nமுன்னொட்டு 6476 என்பது Sankt Margarethen im Lungauக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sankt Margarethen im Lungau என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sankt Margarethen im Lungau உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 6476 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Sankt Margarethen im Lungau உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 6476-க்கு மாற்றாக, நீங்கள் 0043 6476-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 6476 / +436476 (ஆசுதிரியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-19T11:42:59Z", "digest": "sha1:CQPMHLZ5ELX32SYQTRRCRSL5GBHIYH73", "length": 4292, "nlines": 57, "source_domain": "www.xtamilnews.com", "title": "ஃபேஸ்புக் | XTamilNews", "raw_content": "\nஅமலா பால் போட்டோவால் முகம் சுளித்த நெட்டிசன்ஸ்\nPic Talk: Sunset Glowing on Hot Actress நடிகை அமலா பால் ஆசை ஆசையாய் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து...\nபாலியல் த���ழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nசோனாகச்சி ரெட் லைட் ஏரியா லைவ் ரிப்போர்ட் - வீடியோ\nவீடியோ வெளியிட்ட தெலுங்கு பட நடிகை\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aalosanai.blogspot.com/2012/11/part-2-brindavana-tulasi-viratham.html", "date_download": "2018-07-19T11:54:54Z", "digest": "sha1:MIPX23WJM6IU6ME5JXBWAC4RLFMH4TK7", "length": 23542, "nlines": 155, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: PART 2, BRINDAVANA THUVADASI VIRATHAM. (25/11/2012).....பிருந்தாவன துவாதசி விரதம்..பகுதி 2.", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nசனி, 24 நவம்பர், 2012\nகணவனைக் கண்டதும், துளசி ஓடி வந்து பணிந்து வரவேற்றாள். சங்கசூடன் உருவில் இருந்த விஷ்ணு அவளிடம், தான் யுத்தத்தில் ஜெயித்து விட்டதாகவும், சிவபெருமான் விருப்பப்படியே, தேவர்களுக்கு அவர்களது அரசைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறினார்.\nதுளசி மிக மகிழ்ந்தாள். தன் கணவனுக்கு உபசாரங்கள் செய்யத் துவங்கினாள். இருவரும் ஆனந்தப்பட்டனர். துளசியின் நிலை அறிந்து சிவபெருமான், சங்கசூடனுடன் உக்கிரமாக யுத்தம் செய்யலானார். பிரளய கால அக்னி போல் ஜ்வலிக்கும் சூலாயுதத்தை அவன் மீது பிரயோகிக்க, சஙக்சூடன், இரு கரங்களையும் கூப்பி இறைவனைத் தியானித்தான். சூலாயுதம், சங்கசூடனின் தலையைத் துண்டித்தது.\nதுளசியின் அந்தப்புரத்தில், துண்டிக்கப்பட்ட தலை துளசியின் முன் வந்து விழுந்தது. அதைக் கண்ட துளசி துடித்தாள். மாயாசக்தியின் காரணமாக, அவளுக்கு அவள் வாங்கி வந்திருந்த வரங்கள் யாவும் மறந்திருந்தன.\nதன் அருகில், தன் கணவன் உருவத்தில் இருந்த விஷ்ணுவிடம், \"நீ என் கணவன் இல்லை. என்னை மோசம் செய்த நீ யார் என்பதைச் சொல்\" என்று ஆத்திரத்தோடு வினவினாள்.\nவிஷ்ணு அவளுக்குத் தன் திருவுருவைக் காட்டினார். துளசியின் கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது. மனம் கொதித்து, 'என்னை வஞ்சித்த நீ, கல்லாகப் போவாய்' என சபித்தாள்.\nவிஷ்ணு, அவளைப் பார்த்து, 'நீ முன்னர் என்னைக் கணவனாக அடைய வேண்டுமெனத் தவம் செய்தாய்.சங்கசூடனும், முற்பிறவியில் உன்னை அடைய விரும்பினான். பிரம்மன் வரம் தந்தபடி, முதலில் சங்கசூடனை மணந்தாய். இப்போது உன் தவத்திற்கு பலன் தர வேண்டிய தருணம். நீ இந்த சரீரத்தை விட்டு, என்னை அடைவாய். உன் உடல் கண்டகி நதியாகி மனிதர்களைப் புனிதப்படுத்தும். உன் உரோமங்கள், துளசிச் செடியாகி, எவ்வுலகிலும் நிலைபெறும்.\nதுளசிச் செடியிருக்கும் புண்ணியத் தலங்களில், நானும் தேவர்களும் தங்கியிருப்போம். ஆயிரம் குடம் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதைக் காட்டிலும், ஒரு குடம் துளசித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்வதே எனக்கு மிக விருப்பமாகும். துளசி மாலையைத் தரிப்பவர்கள், லக்ஷம் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுவார்கள்.\nஎன்னைக் கல்லாக சபித்தது, பலிக்கும். நான் கண்டகி நதிக்கரையில் மலையாக உருவெடுப்பேன். என்னைப் பூச்சிகள் துளைத்து,சிறு சிறு கற்களாக நதியிலே தள்ளும். அவற்றை சாளக்கிராமம் என்ற பெயரில், என் அம்சம் நிறைந்ததாகப் பூஜிப்பார்கள். அதில், ஸ்ரீலக்ஷ்மியோடு நான் சாந்நித்யம் கொண்டிருப்பேன். சாளக்கிராம பூஜை செய்பவர்கள், வேறு யாகம், பூஜை முதலிய செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவே அவற்றிற்கு ஈடாகும். ஆனால் அதை வைத்திருப்பவர்கள், மிகுந்த நியமத்தோடு இருக்க வேண்டும் ' என்று கூறினார்.\nஇதைக் கேட்ட துளசி, தன் தேகத்தை விடுத்து, திவ்ய ரூபத்தோடு ஸ்ரீ விஷ்ணுவின் திருமார்பை அடைந்தாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.\nபோரில் மாண்ட சங்கசூடன், திவ்ய தேகத்தை அடைந்து, கோலோகத்திலிருந்து வந்த விமானத்திலேறிச் சென்றான். அவன் எலும்புகள் பூமியில் சங்கு வடிவங்களாயின. சங்கு தீர்த்தம் மிக புனிதமானது. அதனால் நீராடுபவர்களது சகல பாவங்களும் நீங்கும். கார்த்திகை சோமவாரங்களில், சங்காபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் சிறப்புற நடைபெறுகிறது. சங்கு இருக்குமிடத்தில் துர்சக்திகள் தூர விலகும். வலம்புரி சங்கு இருக்குமிடத்தில், ஸ்ரீ லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.\nஇந்தப் புராணக்கதை வெவ்வேறு புராணங்களில், சிற்சில மாற்றங்களோடு கூறப்படுகிறது.\nதுளசி பூஜை செய்யும் முறை:\nதுளசி பூஜை செய்ய, துளசிச் செடி மிக அவசியம். நாம் பூஜை செய்யும் போது, பூஜை செய்யும் படம், விக்ரகம் முதலியவற்றில், தெய்வத்தை எழுந்தருளப் பிரார்த்திக்கும் 'ஆவாஹனம்' துளசிக்கு அவசியமில்லை. அதில் எப்போதும் தேவி எழுந்தருளியிருக்கிறாள். இது சகல நன்மைகளையும் தர வல்லது.\nபிருந்தாவன துளசி விரத பூஜையில், துளசி மாடத்தில், நெல்லி மரத்தின் கிளையை சேர்த்து நட்டு, பூஜை செய்வது வழக்கம். நெல்லி மரம் ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம். ஆகையால், இவ்வாறு பூஜிக்கின்றனர். துளசிச் செடியின் அடியில், ஸ்ரீ கிருஷ்ணரது பிரதிமை அல்லது சாளக்கிராமத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும். துளசி மாடத்தின் இரு புறமும் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது.\nதுளசி மாடத்துக்கு கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். மாலையாகவும் சாற்றலாம். இரு பக்கமும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பஞ்சினால் ஆன கஜவஸ்திரம் சாற்ற வேண்டும். ரவிக்கைத் துணி போன்றவற்றையும் சாற்றுகிறார்கள். புடவை கட்டி அலங்கரிப்பதும் உண்டு.\nகாலையிலிருந்து உபவாசம் இருந்து, பின்,மாலை, விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது. சிலர் காலையிலும் செய்கிறார்கள்.\nபூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். 'இன்னின்ன பலன்களுக்காக பூஜை செய்கிறேன்' என்று வேண்டுவதைக் கோரி சங்கல்பம் செய்ய வேண்டும். அதன் பின் 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். துளசி அஷ்டோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.\nஅவல் பாயசம் நிவேதனம் செய்வது சிறந்தது. இயன்ற வேறு நிவேதனங்களும் செய்யலாம். கர்நாடகாவில், இனிப்புப் பண்டங்கள் செய்து நிவேதனம் செய்கிறார்கள். மாலை வீடு முழுதும் விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்து, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.\nஅன்றைய தினம், யாராவது ஒருவருக்கு வடை பாயசத்துடன் உணவு வழங்கி, பாயசத்துடன் கூடிய பாத்திரத்தை தானம் செய்வது சிறப்பானது.\nகார்த்திகை மாதம், பிருந்தாவன துவாதசி துவங்கி, ஒவ்வொரு மாதமும் வளர்பிறை துவாதசியன்று விரதமிருந்து, துளசி பூஜை செய்து, பாயச தானம் செய்வது வழக்கம். மறுவருடம் பிருந்தாவன துவாதசியன்று விரதம் நிறைவு செய்யலாம். இவ்வாறு செய்வது மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.\nபூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. சிலர் மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.\nமாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும்.\nதுளசி தேவியைப் போற்றி, பூஜித்து,\nபடங்கள் நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 9:15\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nஅன்பர்களுக்கு வணக்கம். 'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், ந...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nஉயர் திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', யி ல் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு....\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nSRI DATTATREYA .....ஸ்ரீ தத்தாத்ரேயர்\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆக...\nருத்ராக்ஷம் என்றால் என்ன என்பதும் அதன் பயன்கள் குறித்தும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும் என்றாலும் கொஞ்சம் சுருக்கமாக, இந்தப் பதிவ...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\nஎண்ணறு வைபவ இந்த்ர விசேஷண புண்ணிய உத்தம பூரண பச்சிமக் கண்இல கும்சிவ கந்த கிருபாசன பண்ணவர் பூஜித பாத நமஸ்தே ஏரக நாயக என்குரு நா...\nPAPA HARA DASAMI(18/6/2013)...பாபஹர தசமி(பாவங்களை நீக்கும் தசமி).\nஇன்றைய தினம் (18/6/2013) 'பாபஹர தசமி'. ஒவ்வொரு வருடமும், ஆனி மாத சுக்ல பட்ச தசமி 'பாபஹர தசமி' என்று சிறப்பிக்கப்படுகிறத...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kingrajasc.blogspot.com/2014/06/blog-post_5.html", "date_download": "2018-07-19T11:46:31Z", "digest": "sha1:KQO5RQJWEGH2GE4IGQXYJJ66YHIQLGZA", "length": 9158, "nlines": 82, "source_domain": "kingrajasc.blogspot.com", "title": "இப்படிக்கு இஆரா...: பொண்ணு பாக்க போகையிலே !", "raw_content": "\nவியாழன், ஜூன் 05, 2014\n“பொண்ணு பாக்கப்போன இடத்துல இப்படி நடக்கும்னு நாங்க கொஞ்சம்கூட எதிர்ப்பாக்கல “\n“பொண்ணு புடிச்சி இருக்கா இல்லையானு நாங்க வீட்டுக்குப்போயி லெட்டர் போடுகிறோம் அப்படினு சொன்னோம் அதுக்கு அவங்களும் சரிங்க நாங்க பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் உங்க லெட்டர பார்த்துட்டு அப்புறமே பார்சல்ல அனுப்புறோம் அப்படினு சொல்லிட்டு ஒருவாய் பச்ச தண்ணிகூட குடுக்கல...\n“ பொண்ணுக்கு ஆடத்தெரியுமா பாடத்தெரியுமா னு கேட்டது ரொம்ப தப்பாப்போச்சு “\n“ நீங்க என்ன கரகாட்ட கோஷ்டியா அப்படினு வெடுக்குனு பொண்ணு கேட்டுபுட்டா “\n“பொண்ணு என்ன மாப்பிள்ளையிடம் ஏதோ சீட்டு கொடுத்துட்டுப்போறா....புடிச்சிருக்குனு எழுதி கொடுத்தாளா\n“ மண்ணாங்கட்டி ...டீ பிஸ்கட்ஸ் பஜ்ஜி எல்லாத்துக்கும் ஒரு கணக்குப்போட்டு பில் செட்டில் பண்ணிவிட்டுப்போகவும் அப்படினு எழுதியிருக்கா “\n“ இண்டர்நெட் மூல���மா பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணது தப்பாப்போச்சு “\n“ ஏன் என்ன ஆச்சு \n“சாப்பாடு கேட்டா நான் ஆபிஸ் ல இருந்து வர லேட் ஆகும் செய்முறை பக்கத்துக்கு லிங்க் கொடுத்து படிச்சுப்பாத்து செஞ்சு சாப்பிடுங்கனு சொல்லிடறா”\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் வியாழன், ஜூன் 05, 2014 7:46:00 முற்பகல்\nஇப்படித்தான் பொண்ணுங்க வெவரமா இருக்கோணும்...\nஎல்லாரும் வெவெரமா ஆயிட்டா நமக்கெல்லாம் எப்படிங்க பொண்ணு கிடைக்கும்\nஇப்பவெல்லாம் பொண்ணுங்க ரொம்ப உஷாரா இருக்காங்க.\nஎல்லாரும் உஷா ரா ஆயிட்டா நமக்கெல்லாம் எப்படிங்க பொண்ணு கிடைக்கும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅரசியல் அறிவியல் ஆயிரம் அனுபவம் ஆன்மீகம் இளைஞருக்காக உறவினரின் சந்தோஷ செய்திகள் உறவினரின் துக்க செய்திகள் எண்ணமும் எழுத்தும். கட்டுரை கவிதைகள் காதல் காலண்டர் பொன்மொழிகள் குழந்தைகள் தினவிழா கோவில்கள் சிந்தனைக்கு... சிறுகதைகள் சின்ன வயது சந்தேகங்கள் தத்துவம் தேர்தல்களம் நகைச்சுவை நட்பு நெஞ்சம் மறப்பதில்லை நெடுங்கம்பட்டு பல்சுவை பழமொழிகள் பஜனைக்கோவில் பஜனைக்கோவில் ( பாடல்கள் ) பிறந்த நாட்களை அறிவோமா புரியல.... பேசும் படங்கள் பொது பொது அறிவு மருத்துவம் ஜோக்ஸ் ஹைக்கூ Forms Funny Funny pictures Gk My family PHOTOS School VIDEOs YOGA\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mtt-news.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-19T11:10:41Z", "digest": "sha1:HDF2OIEB4MSYGQ6JMSVHB7NVZYMK3ODP", "length": 8529, "nlines": 56, "source_domain": "mtt-news.blogspot.com", "title": "முத்துப்பேட்டை செய்திகள்: அஸ்ஸலாமு அலைக்கும் முத்துப்பேட்டை வாசிகளே....", "raw_content": "\nநம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு\nஅஸ்ஸலாமு அலைக்கும் முத்துப்பேட்டை வாசிகளே....\nநான் தான் பேட்டை ரோட்டில் உள்ள குட்டியார் ஜூம்மா பள்ளி பேசுகிறேன் என்னை ஞாபகம் இருக்கா \nநான் முன்பு பழய பள்ளியாக நல்லா இருந்தேன். 15 வருடத்திற்க்கு முன்பு நம்ம ஊரில் புஹாரி சரிபு மஜ்லிஸ் ஆரம்பித்தார்கள் அப்போது ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அதிராம்பட்டினத்தை சேர்ந்த லத்திப் ஆலிம்சா தலைமையில் ஒன்று கூடி என்னை இடித்து விட்டு புதியதாக கட்டுவதற்க்கு பல வருடத்திற்க்கு முன்பு முடிவு செய்து என்னை இடித்து விட்டு என்னை புதியதாக கட்ட ஆரம்பித்தார்கள��.\nஎனக்காக வெளிநாடுகளுக்கு எல்லாம் சுற்று பயணம் செய்து பணம் வசூலித்தார்கள். ஆனால் இன்று வரை என் நிலமை என்னா என்று உங்களுக்கு தெரியும்.\nயாரவது என்னை பற்றி நினைத்து பார்த்திங்களா.\nஉங்க விட்டு கல்யாணத்திற்க்கு மட்டும் என்னை பயன்படுத்துகிறிர்கள் ( நிக்காஹ் செய்ய, விருந்து வைக்க ) என்னை முழுமையாக கட்டி முடித்து எப்போ திறப்புவிழா என்று யாரவது நினைத்து பார்த்திங்களா.\nஎனக்கு பின்னால் சில வருடத்திற்க்கு பிறகு ஆரம்பித்த பள்ளிகள் எல்லாம் புதியதாக கட்டப்பட்டு திறப்பு விழாவும் நடந்து விட்டன. ( உதரணம் : மக்கா பள்ளி, நூர் பள்ளி, ரஹ்மத் பள்ளி, ) இப்போ ஆரம்பித்த கொத்பா ஜூம்மா பள்ளி கூட அனைத்து வேலைகளும் முடியப்போகிறது. நான் மட்டும் இன்னும் கட்டட பனிகள் முடிக்கமல் எப்போ திறப்புவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கிறேண்.\nபோன வருடம் என் பள்ளியில் உள்ள ஒரு கப்ருவை சிலர் கொஞ்சம் இடித்து விட்டார்கள் அதற்க்கு கோபப்பட்ட சில அவ்லியாக்கலின் நல்லடியார்கள் போலிஸில் கேஸ் கொடுத்து அதை பெரிய பிரச்சனை ஆக்கினார்கள் அதன் பிறகு அந்த கப்ருவை மறுபடியும் நன்றாக கட்டி அதற்க்கு பாதுகாப்பு வேலியும் போட்டார்கள்.\nஆனால் நான் பல வருடம் இப்படி இருப்பதை அவர்கள் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிரார்கள். அல்லாவின் பள்ளிவாசலான என்னை விட அவர்களுக்கு அவ்லியாக்களின் கப்ரு தான் அவர்களுக்கு முக்கியமாக போய்விட்டது.\nஉங்களுக்காவது தெரியுமா எனக்கு எப்போ திறப்பு விழா என்று \nஎவர் அனுவளவும் நண்மை செய்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார்\nஎவர் அனுவளவும் திமை செய்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார் - அல் குர்ஆன்\n* என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கியவர்களுக்கு நாளை அல்லாவிடம் கடுமையானா வேதனை உண்டு அல்லாவை அஞ்சிக்கொள்ளூங்கள்\nஇன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும் இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. - அல் குர்ஆன் 2: 114\nமேலும், \"எவரொருவர் தொழுவதற்காகப் பள்ளிவாசலை உண்டாக்கினாரோ அவ���ுக்கு மறுமையில் (சுவர்க்கத்தில்) அல்லாஹ் மாளிகையை ஏற்பாடு செய்துள்ளான்\" என்பது நபிமொழியாகும்.\nமுத்துப்பேட்டை அமீரகப் பேரவை இஃப்தார் 2009\nமுத்துப்பேட்டை சார்பாக ரூ6300 மருத்து உதவி\nசெப். 15-ல் பட்டுக்கோட்டை பொறியியல் கல்லூரியில் வக...\nஅஸ்ஸலாமு அலைக்கும் முத்துப்பேட்டை வாசிகளே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newindia-tamil.blogspot.com/2008/07/blog-post_14.html", "date_download": "2018-07-19T11:47:25Z", "digest": "sha1:GJKUQNQULLBWJNJS7LLXJJLRWWNYEZHP", "length": 18157, "nlines": 65, "source_domain": "newindia-tamil.blogspot.com", "title": "Tamil: தெலுங்கானா ஆயுதப் போராட்ட வீரங்கணையின் தற்கால புரட்சிக் குரல்!", "raw_content": "\nபொதுவுடைமை - கற்போம் (3)\nமார்க்ஸ் - எங்கல்ஸ் (2)\nதெலுங்கானா ஆயுதப் போராட்ட வீரங்கணையின் தற்கால புர...\nஇடதுசாரி அரசியலும் - நமது கடமையும்\nஇந்தியப் பிரதமருக்கு ஒரு சாமானியனின் கடிதம்\nதெலுங்கானா ஆயுதப் போராட்ட வீரங்கணையின் தற்கால புரட்சிக் குரல்\nபதிவு செய்தவர்: வீராங்கனை மல்லுஸ்வராஜ்யம்\nதெலுங்கானா வீராங்கனை மல்லுஸ்வராஜ்யம் பேட்டி\n1930 ஆம் ஆண்டு நான் நல் கொண்டா மாவட்டம் கருவிரால் வட்டம் கொத்தகூடம் கிராமத்தில் பிறந்தேன். என் அப்பா எனக்கு ‘ஜூகுனு’ (மின்மினி) என்று செல்லமாய் பெயரிட்டார். எனது தாய்மாமா ஒரு காந்தியவாதி. உப்புசத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றவர். அவர்தான் எனக்கு சுதந்திரம் என்ற பொருளில் சுயராஜ்ஜியம் என்று பெயரிட்டார். எனது அண்ணன் நரசிம்ம ரெட்டி கம்யூனிஸ்டாக இருந்தார்.\n1943ம் ஆண்டு விஜயவாடாவில் நடை பெற்ற கட்சி வகுப்புக்கு அண்ணன் என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு வயது பதிமூன்று தான். அங்குதான் எனக்கு மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் கிடைத்தது. அந்த ஒரே நாவல் என்னை கம்யூனிஸ்டாக மாற்றிவிட்டது. என் அம்மாவும் அதைப்படித்தார். அவர் ஆந்திர மகாசபையில் சேர்ந்து அதன் பெண்கள் அமைப்பில் பணியாற்றினார்.\nஎங்கள் பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தனர். அம்மா தனது பெண்கள் அமைப்பின் மூலம் கோஷா எதிர்ப்பு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண் குழந்தைக ளின் கல்வி மறுப்புக்கு எதிராக போரா டினார். அன்னை மற்றும் அண்ணனின் நடவடிக்கைகள் என்னைப்பதினான்கு வயதிலேயே புரட்சிக்காரியாக மாற்றியது. ஏழைகளை அடிமைகளாக நடத் துவது, அவர்களை சர்வசாதாரணமாக சாட்ட��யால் அடிப்பதைக் கண்டித்து ஆந்திர மகாசபை நடத்திய போராட் டங்களில் அம்மாவுடன் நானும் இணைந்து கொண்டேன். விவசாயிகள் நிலம் கோரிப் போராடினர். கம்யூனிஸ்டுகள் அக்காலத்தில் ஆந்திர மகாசபை மூலமே போராடினர்.\nநிலப் பிரபுக்களின் அட்டூழியம் அதிகரித்தது. தொட்டி குமரய்யா கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து 1946ல் ஆயுதம் தாங்கிப் போராடுவதென கட்சி முடிவு செய்தது. கட்சியின் முக்கிய ஊழியர்களுக்கு மேஜர் ஜெய் பால்சிங் ஆயுதப்பயிற்சியளித்தார். அதில் நானும் பங்கேற்றேன். பின்பு நானும் பெண்களுக்கு ஆயுதமேந்தவும், சுடவும் பயிற்சியளித்தேன். தோழர் பி.சுந்தரய்யா புரட்சிக்கு ‘மக்களை எழுப்புக’ என்ற கோஷத் தைக் கொடுத்தார். ரவிநாராயண் ரெட்டி, எல்ல ரெட்டி, ரபிஅகமது, வாவிகோபாலகிருஷ்ணையா ஆகியோருடன் என்னையும் பிரச்சாரக் குழுவில் இணைத்தார்.\nசென்னை முதல் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் வரை ஆடல் -பாடல் கலை நிகழ்ச் சிகள் மூலம் பிரச்சாரம் செய்தோம். அப்போது சென்னையிலிருந்த தெலுங்கு சினிமா நடிகர்களும், சினிமா இயக்குநர்களும் தங்க இடமளித்து உதவினர். எனது ‘உய்யாலா’ பாடல்கள் மக்களைக் கவர்ந்தன. நானே எழுதிப்பாடுவேன். பின்பு மேடைகளிலும் கிராமங்களிலும் உய் யாலா பிரபலமாகிவிட்டது. மக்களை எழுப்புவதில் எனது கலைப்பணியை பல தோழர்கள் பின்பற்றினர். பின்பு நான் பிண்டிபோல் வனப்ப குதியில் மானு கோட்டை வட்டாரத் தில் பெண்கள் படையை திரட்டி அவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தேன். முந்நூறு பேர் கொண்ட பெண்கள் படையில் இரு நூறு பேர் மலைவாசிப் பெண்களாவர். அதன் பின் நான் கொரில்லா ஆர் கனைசராக்கப்பட்டேன்.\nஎங்களுக்கு கமாண்டராக மல்லுவெங்கட நரசிம்ம ரெட்டி என்பவர் இருந்தார். முடிவுகள் எடுப்பதிலும் அவற்றை நடைமுறைப் படுத்துவதிலும் அவர் மிகத்திறமை யானவர். ஐதராபாத் நிஜாமின் படை களை விரட்டியடித்தோம். ஒவ்வொரு தளமாகக் கைப்பற்றி முன்னேறினோம். பத்து லட்சம் ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி நிலங்களைப் பிரித்து விவசாயிகளுக்குக் கொடுத் தோம். போரில் ராஜக்கா என்ற கொரில்லா வீராங்கனை சுட்டுக் கொல் லப்பட்டார். எனது தலைமறைவு வாழ்க்கையில் அந்த புகழ்மிக்க வீராங்கனையான ராஜக்கா என்ற ஒரு பெயரையே சூட்டிக்கொண்டேன். குதிரை மீது ஏறி போர்க்களங்களைச் சுற்��ி வந்தேன். கம்மம், வாரங்கல் பகுதி முழுவதும் நான் ராஜக்காவாகச் சுற்றி வந்தேன். சுந்தரய்யா என்னை ஜான்சிராணி போல் தோன்றுவதாக கூறி பாராட்டினார். என்னைக் காட்டிக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்று நிஜாம் அரசு அறிவித்தது.\n1947ல் சுதந்திரம் கிடைத்தது. நேரு தலைமையில் ஆட்சி வந்தது. ‘நிஜாம் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும், நாங் கள் விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்த நிலங்களைப் பறிக்கக் கூடாது, கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய கிராமராஜ்யங்களை அங்கீகரிக்க வேண்டும்’ என்று நேருவிடம் கோரி னோம். நேரு வாக்குறுதியளித்து விட்டு துரோகம் செய்தார். 1948 செப்டம்பரில் ஐம்பதாயிரம் பேர் கொண்ட இந்திய ராணுவத்தை எங் கள் மீது ஏவினர். எங்கள் கட்சியின் கட்டளையை ஏற்று நாங்கள் ஆயுதங் களைக் கீழே வைத்தோம்.\nஇந்திய ராணுவம் எங்கள் தோழர்களை ஆயிரக்கணக்கில் சுட்டுக் கொலை செய்தது. 6000 பேர் படுகொலை செய்யப் பட்டனர். முப்பதாயிரம் பேர் குற்றுயி ரும் குலைஉயிருமாக சிதைக்கப்பட் டனர். எங்கள் கிராமராஜ்யங்களை அழித்து, விவசாயிகள் பகிர்ந்தெடுத்த நிலங்களைப் பறிமுதல் செய்து மீண்டும் நிலப்பிரபுக்களிடமே ஒப்ப டைத்து காங்கிரஸ் ஆட்சி அக்கிரம தாண்டவமாடியது. எங்கள் தெலுங்கானாப் புரட்சி, காங்கிரஸ் கட்சியால் ரத்த வெள்ளத்தி லேயே மூழ்கடிக்கப்பட்டாலும் இந் திய அரசு நிலச் சீர்திருத்த உச்ச புச்சட்டத்தை கொண்டுவரவைத்தது. வினோபா போன்றவர்களைப் பூமி தான இயக்கம் துவங்க வைத்தது. தெலுங்கானாப் போராட்டத்தால் தான் உச்ச வரம்புச் சட்டம் வந்தது. ஆனால் நிலங்கள் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேயில்லை. கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநில அரசுகளைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவ சாயிகளுக்கு நிலம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி அன்று முதல் இன்று வரை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.\nவளர்ச்சியின்றி தேசம் தேங்கி நிற்கிறது. நிலப்பிரபுத்துவம் தகர்க்கப் பட்டு நில வினியோகம் நடைபெறா மல் நாடு முன்னேறாது. உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாய நிலங்களை பத்துமடங்கு விலை கொடுத்து அபகரித்து கார்ப்பரேட் விவசாயம் செய்து வருகிறது. வாழ வழியின்றி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரு கிறது.\nமதவெறியர்கள் சனாதனத்தைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். ஆண்டான் அடிமைத்தனம், பெண் அடிமைத் தனத்தையும் நிலைநிறுத்த முயற்சிக்கி றார்கள். இதற்கெதிராக பெண்களும் ஆண்களும் இணைந்து போராட வேண்டும். சமூக விரோதிகளை எதிர்த்துப் போராட பெண்கள் பயிற்சி பெற வேண்டும். ஆயுதப் போராட் டமே வழி என்பது வெறும் கூக்குரல் தான். நாங்கள் அதை நடத்தியவர்கள். இன்றைய கடமை மக்களை ஜன நாயக முறையில் வெல்வதுதான்.\n1954ல் தோழர் ராஜேஸ்வரராவ் எனக்கும் கமாண்டர் மல்லு வெங்கட நரசிம்ம ரெட்டிக்கும் திருமணம் செய்து வைத்தார். அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிலிருந்து செயல்பட்டார். 2004ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். நான் ஆந்திர மாநிலக்குழுவில் பணியாற்றி வருகிறேன். 1981 முதல் 2007 வரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவராய் செயல் பட்டேன். எனது பணி இன்றும் தொடர்கிறது. எனக்கு 78 வயதாகி விட்டாலும் மார்க்சியம் வென்றே தீரும் என்ற நம்பிக்கையுடன் பணி யாற்றுகிறேன். அது உயிருள்ள வரை தொடரும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாதத்தின் ஒவ்வொரு முதல் ஞாயிருகளும்\nஇந்திய இடதுசாரிகளின் கூட்டம் நடைபெறும் கலந்துகொள்ள பச்சை விளக்கை சுட்டுங்கள் (in English)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tmpolitics.blogspot.com/2008/04/idmk-01.html", "date_download": "2018-07-19T11:49:05Z", "digest": "sha1:R53SU73M3TYV4QY543YIBNIRU7QCHINJ", "length": 7205, "nlines": 71, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: IDMK கட்சி துவக்க விழா வீடியோ (பகுதி-01)", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nIDMK கட்சி துவக்க விழா வீடியோ (பகுதி-01)\nதமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER\nஇந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவை மருத்துவர். இராமதாசு, அண்ணன். திருமா வளவன் என முக்கிய புள்ளிகளின் பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்.\n\"இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி\"\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 1:26 AM\nகுறிச்சொற்கள் IDMK, இந்திய தேசிய மக்கள் கட்சி\nஇந்தக்கட���சியாவது தமிழக முஸ்லிம்களைன் நலன்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எழுகிறது..\nஇந்திய தேசியம் என்ற பெயரில் உருவாகியிருக்கும் இன்னுமொரு ‘லெட்டர் பேடு' கட்சி தேர்தல் வரும் வரையாவது தாக்குபிடிக்குமா..'மவுத்தாகி' மறைந்து விடுமா\nஇயக்கம் சாராத அரசியல் விவாத மேடை. தமிழ் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் அரசியல் நிலைப்பாடு இங்கு விவாதிக்கப்படுகின்றது - என்று தங்களின் வலைப்பூ முகப்பில் குறிப்பிட்டுள்ளதை உண்மையென நிணைத்துத்தான் IDMK தொடக்கவிழா பற்றிய விமர்சன பின்னூட்டத்தை வெளியிட்டேன். ஆனால் அதை நீங்கள் பிரசுரிக்கவில்லை. காரணம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளேன். நான் எழுதிய கருத்து\nக்களில் உண்மையில்லையா அல்லது தங்களின் வலைப்பூவில் முகப்பில் எழுதியிருக்கும் வசனங்களில் உண்மையில்லையா\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_1998.05", "date_download": "2018-07-19T11:44:35Z", "digest": "sha1:ZIRGN6ZNJA6LC6KXGRD7ONRDEYERJ343", "length": 6463, "nlines": 84, "source_domain": "www.noolaham.org", "title": "களம் 1998.05 - நூலகம்", "raw_content": "\nஇதழாசிரியர் பரராஸ் வாரித்தம்பி அன்ரனி பால்ராஜ் (இணையாசிரியர்கள்)\nகளம் 1998.05 (9) (83.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஉங்கள் குரல் - நற்பிட்டிமுனை பளீஸ்\nஉய்த்தறிய வியலத பாதம் பற்றியது - றஷ்மி\nஎன்னில் செத்த காற்று - முகமட் அபார்\nசீவியம் சிறிதே - மு.சடாட்சரன்\nபுலம்பெயர்ந்துபோன விமர்சகர்களுக்கு - த.ஜெயசீலன்\nஎல்லாமே என் மனப் பயணத்தில் தான் - Giri Abamegal(ஆங்கிலம்), இ.கிருஷ்ணகுமார் (தமிழில்)\nஆதிவாசியின் தேசம் - ஓட்டமாவடி அறபாத்\nஎன் ஊரின் கதை - கருணாகரன்\nநிலா நிலா ஓடிவா - நா.சிவசிதம்பரம்\nமுட்கம்பி விடுதூது - ச.முகுந்தன்\nஅந்த ஆழச்சமுத்திர மேற்பரப்பில் - கல்லூரன்\nபீனிக்ஸ் தேசம் - த.ஜெயசீலன்\nவண்ணத்துப் பூச்சிகளின் விருந்து - சோலைக்கிளி\nதூரத்து சூரிய அஸ்தமனம்-ஒரு ஜப்பானியத் திரைப்படம் - சசி கிருஷ்ணமூர்த்தி\nதொலைபேசி உரையாடல் - வொலெ சொயின்கா, சோ.பத்மநாதன் (தமிழில்)\nஈழத்து அரசியலும் கூத்துக்கலையும்: தலித்தியப் பார்வையில் சிறுகுறிப்புக்கள் - சீவரெத்தினம்\nதகவல் யுகமும��� ஈழத் தமிழர் அரங்கும் - சி.ஜெயசங்கர்\nமழையும் இருள் - எம்.ஜ.எம்.றஷப்\nஆத்மாவின் மிக அதிகாலை நீல இருள் அவர் அவாவி நிற்கும் அதி வழி - மு.பொ\nமரையாம் மொக்கு - மருதூர் கொத்தன்\nஎனது பக்கம் - வாரித்தம்பி\nகிறுக்கல்: கவிஞர் ஜீவா.ஜீவரத்தினம் அவர்கள் நினைவாக... - அன்ரனி பால்ராஜ்\nமு.றூக்காவின் ஒரு துண்டு வானம் - எம்.ஏ.நுஃமான்\nநூல்கள் [6,973] இதழ்கள் [10,245] பத்திரிகைகள் [35,082] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767] எழுத்தாளர்கள் [3,161] பதிப்பாளர்கள் [2,503] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\n1998 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2017, 21:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/06/cinematamilcom_7.html", "date_download": "2018-07-19T11:41:54Z", "digest": "sha1:QEOQCYQWWYDML7G6G72HXRK7WCJ4RPZW", "length": 31557, "nlines": 212, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Cinema.tamil.com", "raw_content": "\n'மாட்டிறைச்சி தடை' குறித்து அரவிந்த்சாமி கருத்து..\n“ராஜமவுலி படத்தின் கதை என்னுடையது தான்” : பிரபல எழுத்தாளர் வழக்கு..\nபிரபாஸ்-துல்கர் சல்மான் கூட்டணி உருவாவது இதற்காகத்தான்..\n2000 கோடியை நெருங்கும் 'தங்கல்'\nடிச., 1-ல் \"102 நாட் அவுட்\" ரிலீஸ்\nதமிழிலும் தயாராக உள்ளது 'பியான்ட் த கிளவுட்ஸ்'\nகேன்சர் நோயாளிகளுக்கு உதவ இயக்குனர் உஷா கிருஷ்ணன் தலைமுடி தானம்\nகணித புலி ஆனந்த் குமாராக நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்\n\"செப்\" ரிலீஸ் தேதி தள்ளிப்போனது\nதக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் - அமீர்கான் நெகிழ்ச்சி\nபாகுபலி தயாரிப்பாளர்களின் அடுத்த படத்தில் சர்வானந்த்\nகோபிசந்த் படம் ஹன்சிகாவுக்கு கைகொடுக்குமா\nஆஸ்திரேலியால் துப்பாக்கி : விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஆடியோ விழாவில் சினேகனை கலாய்த்த ஜாகுவார் தங்கம்\nதென்னிந்தியாவில் 620 கோடி வசூலித்த 'பாகுபலி 2'\nஇரு சூப்பர்ஸ்டார்களின் அரசியல், ஒரு விலகல், ஒரு வருகை...\nவிஜய் டி.வியில் மீண்டும் டப்பிங் சீரியல்\nஒரு வாரத்தில் 1 கோடி பார்வை, 'ஸ்பைடர்' டீசர் சாதனை\n'மாட்டிறைச்சி தடை' குறித்து அரவிந்த்சாமி கருத்து..\nகடந்த இரண்டு வாரங்களாக 'மாட்டிறைச்சி தடை' குறித்த செய்திகள் தான் ஹாட் டாபிக் ஆக இருக்கிறது. மத்திய அரசின் இந்த தடை குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்���ு வரும் நிலையில் சினிமா துறையில் இருந்து பெரிய அளவில் ஆதரவுக்குரலோ அல்லது எதிர்ப்புக்குரலோ கிளம்பவில்லை. கமல் மற்றும் நடிகர் சித்தார்த் என விரல்விட்டு ...\n“ராஜமவுலி படத்தின் கதை என்னுடையது தான்” : பிரபல எழுத்தாளர் வழக்கு..\n'பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி வழக்கமான கமர்ஷியல் படங்களை இயக்கி வந்தாலும் அவர் மீது ஒட்டுமொத்த கவனத்தையும் திரும்ப வைத்தது அவர் இயக்கத்தில் உருவான மகதீரா தான். ராம்சரண்-காஜல் அகர்வால் நடித்த இந்தப்படத்தின் கதையையும், ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் எழுதியிருந்தார். ஆனால் சமீபத்தில் இந்தப்படத்தின் கதையை ...\nபிரபாஸ்-துல்கர் சல்மான் கூட்டணி உருவாவது இதற்காகத்தான்..\nபாகுபலி படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸை பல நிறுவனங்கள் தங்களது விளம்பர தூதராக நியமிக்க போட்டி போட்டன. ஆனால் பாகுபலி-2 வெளியாகும் வரை விளம்பர படங்கள் பக்கம் தனது கவனத்தை திருப்பாமல் இருந்தார் பிரபாஸ். தற்போது 'பாகுபலி-2' வெளியாகி பிரபாஸின் புகழை இன்னும் அதிகப்படுத்தியுள்ள நிலையில் பிரபல மொபைல் நிறுவனமான ஜியானி, பிரபாஸை ...\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் இணைந்த படம் 'இருமுகன்'. இந்தபடம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பிரபலமான தனியார் தொலைகாட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. அதன் பின்னர் 'இருமுகன்' படம் 'இண்டர்நேஷனல் ரவுடி 2017' என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியுப்பில் ...\n2000 கோடியை நெருங்கும் 'தங்கல்'\nஇந்தியாவில் கூட இப்படி ஒரு வசூலைப் பெறவில்லை, ஆனால், நம்மை விட சீன மக்கள் விளையாட்டின் மீது எந்த அளவிற்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதற்கு சீனாவில் 'தங்கல்' படத்திற்குக் கிடைத்த வெற்றியே மிகப் பெரும் சாட்சி.\nபடம் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வந்த வரவேற்பால் 'தங்கல்' படம் தற்போது வரை சீனாவில் மட்டும் 1097 கோடி ...\nடிச., 1-ல் \"102 நாட் அவுட்\" ரிலீஸ்\nபாலிவுட்டின் பிரபலமான மாஜி ஹீரோக்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர். அமிதாப், 70 வயதையும், ரிஷி கபூர் 60 வயதையும் கடந்தவர்கள். தற்போதும் இருவரும் தங்களது வயதுக்கு ஏற்ற கேரக்டரில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது அப்பா, மகனாக, 102 நாட் அவுட் என்ற படத்தில் நடிக்கிறார்கள். இதில் 102 வயது அப்பாவாக ...\nதமிழிலும் தயாராக உள்ளது 'பியான்ட் த கிளவுட்ஸ்'\nஆஸ்கர் விருது வென்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த இயக்குனர் மஜித் மஜிதி தற்போது இயக்கி வரும் 'பியான்ட் தி கிளவுட்ஸ்' (Beyond The Clouds) படத்தை தமிழிலும் உருவாக்க உள்ளார். இந்தியாவில் படமாக்கப்படும் இந்தப் படத்தை முதலில் ஹிந்தியில் மட்டுமே தயாரிக்க இருந்தார்கள். தற்போது உலக அளவில் திரையிட ஆங்கில மொழியிலும், கூடுதலாக தமிழ் மொழியிலும் தயாரிக்க ...\nகேன்சர் நோயாளிகளுக்கு உதவ இயக்குனர் உஷா கிருஷ்ணன் தலைமுடி தானம்\nகலையரசன், காளி வெங்கட், ஷாலின், வைஷாலி மற்றும் பலர் நடித்த ராஜா மந்திரி படத்தை இயக்கியவர் உஷா கிருஷ்ணன். கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் எண்ணத்தில் தன்னுடைய தலை முடியை தானம் செய்திருக்கிறார். இது பற்றி அவருடைய முகப் புத்தகத்தில் கூறியிருப்பதாவது,\n ஏன் திடீர்னு hair donation திடீர்னுலாம் இல்ல.. நிறைய தடைவை யோசிச்சிருக்கேன். கேன்சர் ...\nகணித புலி ஆனந்த் குமாராக நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்\nபாலிவுட்டில் தற்போது பயோபிக் சீசன். விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள்.... என பலரது வாழ்க்கை படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் பாட்னாவை சேர்ந்த கணித புலி ஆனந்த குமாரின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது.\nகணிதத்தில் கில்லாடியான ஆனந்த், ஐஐடி.,யில் 30 வகையான புரொகிராம் ...\n\"செப்\" ரிலீஸ் தேதி தள்ளிப்போனது\nசைப் அலிகான் நடிப்பில் உருவாகி வரும் படம் \"செப்\". ராஜ் கிருஷ்ணா மேனன் இயக்குகிறார். சைப் அலிகான் உடன் பத்மபிரியா முக்கிய ரோலில் நடிக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான \"செப்\" படத்தை தழுவி இப்படம் உருவாகி வருகிறது. சைப், சமையல் கலை நிபுணராக நடிக்கிறார். முன்னதாக இப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தார்கள். ...\nதக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் - அமீர்கான் நெகிழ்ச்சி\nதங்கல் படத்தை தொடர்ந்து அமீர்கான் நடிக்க உள்ள படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார். அமீர்கான் உடன் அமிதாப் பச்சனும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது பற்றி அமீர்கான் கூறியிருப்பதாவது... \"தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தின் கதை அருமையானது. என்னுடைய கேரக்டர் எனக்கு ...\nசண்டமாருதம் படத்தை அடுத்து அடங்காதே, ரெண்டாவது ஆட்டம், சென்னையில் ஒருநாள்-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சரத்குமார். முக்கியமாக ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் சரத்குமார், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் அடங்காதே படத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். கதைப்படி ...\nபாகுபலி தயாரிப்பாளர்களின் அடுத்த படத்தில் சர்வானந்த்\nராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் பிரசாத் தேவினேனி, ஷோபூ யர்லஹட்டா ஆகிய இருவரும் இணைந்து ஆர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரித்தனர். இரண்டு பாகங்களையும் தலா 250 கோடி செலவு செய்து தயாரித்த அவர்கள் ரூ. 1600 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளனர். இந்நிலையில், அடுத்தபடியாக ஆர்கா மீடியா நிறுவனம் சார்பில் நடிகர் ...\nகோபிசந்த் படம் ஹன்சிகாவுக்கு கைகொடுக்குமா\nபோகன் படத்திற்கு பிறகு ஹன்சிகாவின் மார்க்கெட் சரிந்து விட்டது போன்ற நிலை இருந்தபோதும், தற்போதும் அவர் கைவசம் மூன்று படங்கள் உள்ளன. மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் வில்லன், தமிழில் பிரபுதேவா நடிக்கயிருக்கும் குலேபகாவலி, தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் கெளதம் நந்தா ஆகிய படங்கள் உள்ளன. இதில் கோபிசந்துடன் நடிக்கும் தெலுங்கு ...\nஆஸ்திரேலியால் துப்பாக்கி : விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்\nவிஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளையும் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள அவரது ரசிகர்கள் படுவிமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களை தியேட்டர்களில் திரையிட்டு பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். அதேபோல் வருகிற ஜூன் 22-ந்தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் இந்த பிறந்த நாளிலும் விஜய்யின் சூப்பர் ஹிட் ...\nஆடியோ விழாவில் சினேகனை கலாய்த்த ஜாகுவார் தங்கம்\nகுருசேகரா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வளையல். இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. விழாவில், படக்குழுவினருடன் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், பாடலாசிரியர் சினேகன், லொள்ளுசபா ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா தொடங்கிய சிறிது நேரத்தில் வருகை புரிந்த இயக்குனர் பாரதிராஜா ஆடியோவை வெளியிட்டார். ...\nதென்னிந்��ியாவில் 620 கோடி வசூலித்த 'பாகுபலி 2'\n'பாகுபலி 2' திரைப்படம் வெளிவந்து 40 நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் பல தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் ஒரு மாத காலம் மட்டுமே படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 நாட்களைக் கடந்து 50வது நாளை நோக்கி படம் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த 40 நாட்களில் சுமார் 1620 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது 'பாகுபலி 2' படம். ...\nஇரு சூப்பர்ஸ்டார்களின் அரசியல், ஒரு விலகல், ஒரு வருகை...\nதென்னிந்தியத் திரையுலகின் இரு பெரும் சூப்பர்ஸ்டார்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி. தமிழில் ரஜினிகாந்தும், தெலுங்கில் சிரஞ்சீவியும் சுமார் 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக வசூல் மன்னர்களாக இருக்கிறார்கள். இருவருமே 60 வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிரஞ்சீவி 2008ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ...\nவிஜய் டி.வியில் மீண்டும் டப்பிங் சீரியல்\nசமீபகாலமாக நேரடி தமிழ் சீரியல்களுக்கு முக்கியத்தும் கொடுத்து வந்த விஜய் டி.வி., மீண்டும் டப்பிங் சீரியல் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பான இஷ்க்பாஸ் என்ற தொடரை காதலா காதலா என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்புகிறது. நேற்று முன்தினம் முதல் இதன் ஒளிபரப்பு தொடங்கியுள்ளது. திங்கள் முதல் வெள்ளி ...\nஒரு வாரத்தில் 1 கோடி பார்வை, 'ஸ்பைடர்' டீசர் சாதனை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்பைடர்'. இப்படத்தின் டீசர் கடந்த வாரம் 1ம் தேதி காலை வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களில் 'விவேகம், கபாலி' டீசர் ஆகியவற்றின் சாதனையை முறியடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.\n'சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2015/checklist-when-traveling-with-your-baby-tamil-009598.html", "date_download": "2018-07-19T11:50:44Z", "digest": "sha1:AMRNDUNWDKIFKDR5XNTSAM6TG3ZLYQRT", "length": 16282, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "பயணத்தின் போது குழந்தை அழுகிறதா? அவர்களை சமாளிக்க இதோ சில டிப்ஸ்.... | Checklist When Traveling With Your Baby- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பயணத்தின் போது குழந்தை அழுகிறதா அவர்களை சமாளிக்க இதோ சில டிப்ஸ்....\nபயணத்தின் போது குழந்தை அழுகிறதா அவர்களை சமாளிக்க இதோ சில டிப்ஸ்....\nகுழந்தையுடன் பயணிப்பது சோர்வை ஏற்படுத்தலாம். அதனால் பயணிக்கும் போது பலரும் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல தவிர்த்து விடுவார்கள். ஏனெனில் குழந்தை அழ தொடங்கி விட்டால், அதனை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.\nகுழந்தை பெறுவதற்கு முந்தைய அனைத்து ஓய்வுக்கான சுற்றுலாக்கள் மற்றும் பயணங்கள் இருந்ததை போல, தற்போது குழந்தையுன் செல்லும் போது சுற்றுலாவோ பயணமோ சிறப்பாக இருப்பதில்லை. பயணிக்கும் போது குழந்தைகளை எப்படி பராமரிக்க போகிறோம் என்ற பயத்திலேயே தான் நம் பயணம் கழியும். குழந்தைகளின் சௌகரியம், அவர்களின் தேவைப்பாடுகள், பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கை நீங்கள் கவனிக்க வேண்டும். சிறியதோ பெரியதோ, அனைத்து விதமான அவசரங்களையும் சமாளிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.\nமேற்கூறிய காரணிகளைக் கருதிய பிறகும் கூட நாம் ஏதாவது ஒன்றை மறக்கவே செய்வோம். அதனை எப்படியாவது செய்து முடிக்கும் வரை நமக்கு நிம்மதியே இருக்காது. உண்மை என்னவென்றால் குழந்தை என வரும் போது நம்மால் எதையும் விட்டு விட முடியாது. அதனால் தான் பயணிக்கும் போது குழந்தைகளை எப்படி பராமரிப்பது என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த காரணத்திற்காக நாங்கள் உங்களுக்கு சில டிப்ஸ்களையும், சில எளிய வகை பராமரிப்பு பற்றியும் கூற போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபயணிக்கும் போது அசுத்தத்தை உண்டாக்குகிற உணவாக இல்லாமல், உண்ணுவதற்கும் எடுத்துச் செல்வதற்கும் சுலபமாக உள்ள உணவுகளை எடுத்துச் செல்லுங்கள். இதனால் உணவு சுத்தம��க இருப்பதை நாம் உறுதி செய்து கொள்ள முடியும். மேலும் உணவை தேடி ஆங்காங்கே அலைய வேண்டியதில்லை. உங்கள் குழந்தைக்கு விருப்பமான நொறுக்குத்தீனிகளை அள்ளிச் செல்லுங்கள். வழியில் ரோட்டு கடையில் காணும் தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தால், சிறு குழந்தைகளுக்கு சுலபமாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.\nஉங்கள் குழந்தையின் வயது மிகவும் குறைவாக இருந்து இன்னமும் புட்டிப்பால் குடித்து வந்தால், அதற்கான உபகரணங்களை ஸ்டெரிலைஸ் செய்ய மறக்காதீர்கள். குழந்தைக்கான நாற்காலி போன்ற எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய சில உபகரணங்களை எடுத்துச் சென்றால் குழந்தை சௌகரியமாக இருக்கும்.\nவெகு சீக்கிரமாகவே குழந்தைக்கு எரிச்சல் ஏற்பட்டு அழ தொடங்கலாம். அதனால் அப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க முன்னரே நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதனால் உங்களுடன் சிறிய, கனமில்லாத விளையாட்டு பொம்மைகளை எடுத்துச் செல்லுங்கள். இதனால் பயணிக்கும் போது உங்கள் குழந்தைகளுக்கு பொழுது போகும். இது புதிய விளையாட்டு பொருட்களாக இருந்தால், குழந்தை நீண்ட நேரம் அதனை வைத்து விளையாடும். இது அவர்களின் சலிப்பை நீக்கி குதூகலப்படுத்தும்.\nநீண்ட தூர பயணம் என்றால் உங்களின் லேப்டாப் அல்லது டேப்லெட்டில் குழந்தைக்கு படங்களை போட்டு காண்பியுங்கள். இது சற்று பெரிய குழந்தைகளுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.\nபயணிக்கும் முன்பு குழந்தை மருத்துவரை சந்திக்க மறந்து விடாதீர்கள். அவர்களுக்கு தேவையான மருந்துகளை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள். மருத்துவரின் அழைப்பேசி எண்ணையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் பிளாஸ்டர், வலி நிவாரணி போன்றவைகள் அடங்கிய முதலுதவி பெட்டியையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\nகடைசியாக, வீட்டில் கடைப்பிடிக்கும் அனைத்து விதிமுறைகளையும் சுற்றுலாவிலும் கடைப்பிடிக்காதீர்கள். நெகிழ்வு தன்மையோடு இருந்து, குழந்தைகள் மகிழ்ச்சியோடு இருக்க சௌகரியமான மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதங்கும் விடுதிகளில் நடக்கும் அக்கிரமம் - பணியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nஉங்கள் வீட்டு இளவரசிகளுக்கான 10 வித்தியாசமான ட்ரெண்டிங் தமிழ் பெயர்கள்..\nசமைக்காத பச்சை பூண்டை குழந்தைக��ுக்கு கொடுப்பது பாதுகாப்பானதா\nகுழந்தைகள் எந்த காரணங்களுக்கு எல்லாம் விடாம ரொம்ப அழுவாங்க-ன்னு தெரியுமா\nகுழந்தையின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சில அற்புத உணவுகள்\nஉங்க குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா அப்ப இத சாப்பிட கொடுங்க...\nகுழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன\nகருவில் உள்ள குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க\nகுழந்தைகளின் தற்கொலை உணர்வை தூண்டும் இந்த விஷயத்தை சாதாரணமா எடுத்துக்காதீங்க\nஉங்க குழந்தை மிட் நைட்'ல அடிக்கடி அழுகுதா நல்லா தூங்கனுமா இத செய்யுங்க\nகர்ப்பமாவதற்கு முன்பே இதை செய்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்\nகர்ப்ப காலத்தில் இந்த பகுதிகளில் உண்டாகும் அரிப்பு ஆபத்தா\nசாதாரண கர்ப்பம் போலவே தெரியும் முத்துப்பிள்ளை கர்ப்பத்தால் ஆபத்து உண்டாகுமா\nRead more about: baby care baby parenting tips குழந்தைகள் குழந்தைப் பராமரிப்பு பெற்றோர் நலன்\nOct 23, 2015 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி\nஉங்க வீட்டு சமையலறையில கண்டிப்பா இருக்க வேண்டிய செடிகள் என்னென்னனு உங்களுக்கு தெரியுமா\nபாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/9241", "date_download": "2018-07-19T11:52:21Z", "digest": "sha1:ZWGTHWUYGU4EKU56NCKATIK564JFH3OO", "length": 19176, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோழன், கடிதங்கள்", "raw_content": "\n« கவி சூழுலா 2\nவிஷ்ணுபுரம் விருது, விழா »\nதங்களுடைய தஞ்சை கட்டுரையைப் படித்துவிட்டு திரு விஜய்வீரப்பன் சுவாமிநாதன் அவர்கள் எழுதிய கடிதத்தில் ” அதே போல் இந்தக் கோவிலின் தலப் (அஜித் அல்ல) புராணத்தின் படி, ஒரு சிறு யானைக் கூட நுழைய முடியாத கற்பகிரகம் வேறு எங்கும் கிடையாது. ஆனால் இவை அனைத்தும் வெளியே தெரிவதில்லை. எனக்கு தெரிந்து இணையத்தில் கூட (நிறைய பேர் எழுதுவதால்) யாரும் எழுதுவது இல்லை” என்று எழுதியிருந்தார்.\nஅதுகுறித்து ஒரு கூடுதல் தகவல், தங்களுக்குத் தெரிந்திருக்கும். யானை நுழைய முடியாத வகையிலான மாடக்கோயில்கள், திருவானைக்காவல் கோயில் உட்பட பல உண்ட���. இவற்றை நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கட் சோழன் கட்டினார். அவற்றின் பட்டியலையும் இணையத்தில் பார்க்கலாம்.\nதங்கள் மறுமொழி (ராஜ ராஜ சோழன் மாமன்னனா ) உங்கள் தளத்தில் கண்டேன். தங்கள் ஆராய்வதற்கு ஏதுவாக ஆகமங்களில் ஒவ்வொரு குலத்தவருக்கும் நிலத்தைப் பகுப்பது தொடர்பான பகுதியை உங்களுக்கு இத்துடன் இணைப்பாக அனுப்பியுள்ளேன். (காமிக ஆகமம்). கிரந்தத்தில் மூலமும் , தமிழில் பதவுரையும் உள்ளது.\nநான் ஆய்வாளனுடைய இடத்தில் நின்று இதைப்பற்றி விரிவாகப் பேசமுடியாது. நான் ஆர்வமுள்ள வாசகன் மட்டுமே. இந்த விஷயத்தில் என்னுடைய எண்ணங்களைச் சொல்கிறேன்.அவற்றை உங்கள் தரப்புடன் இணைத்து நீங்கள் யோசிக்கலாம்.\nநான் ஏற்கனவே சொன்னதுபோல ராஜராஜன் இன்றைய ஜனநாயக யுகத்தின் ஆட்சியாளன் அல்ல. அவன் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் ஆட்சியாளன். நாடுபிடித்தலும் ஒற்றைமைய ஆட்சியை உருவாக்குதலும் உபரியை மையத்தில் தொகுத்தலும் அந்த உபரியைக்கொண்டு சமூக முன்னேற்றத்துக்கான அமைப்புகளை உருவாக்குதலும்தான் உலகமெங்கும் நிலப்பிரபுத்துவத்தின் வழிமுறைகள். இதற்கு விதிவிலக்காக இருந்த எந்த மன்னனும் இல்லை.\nராஜராஜன் மட்டுமல்ல எந்த சோழ மன்னன் ஆட்சிக்கு வந்தாலும் பாண்டிய மன்னர்களை வென்று அவர்களின் அரியணையில் அமர்ந்து முடிசூடிக்கொள்ளும் வழக்கம் இருந்தது. பாண்டியர்கள் எதிர்த்தார்களென்றால் அவர்களை அழித்து அரண்மனைகளையும் நகரங்களையும் எரித்து சாம்பலாக்கினார்கள். சோழர்களின் மெய்கீர்த்திகளில் அவர்கள் எப்படியெல்லாம் சேர, பாண்டிய மன்னர்களை அழித்தனர் என்ற வர்ணனை இருக்கிறது. ராஜராஜசோழன் குமரிமாவட்டத்தின் இரணியசிங்கநல்லூரை ஆண்ட பாஸ்கர ரவிவர்மனை கொன்று நகரை கொளுத்தியழித்தான் என்றே கல்வெட்டுகள் சொல்கின்றன.\nஅதாவது சோழர்களை இன்றைய காலகட்டத்தில் வைத்துப்பார்க்கக் கூடாது. அவர்களின் மெய்கீர்த்திகளை வைத்துப்பார்த்தாலே அவர்கள் வென்ற நாடுகளை எரித்ததையும் நகரங்களை அழித்ததையும் நாம் காணலாம். தமிழகத்துக்குள்ளேயே இந்த அழிவுகளைச் செய்தவர்கள் இலங்கையிலும் கடாரத்திலும் கண்டிப்பாபக அதைச் செய்திருப்பார்கள். சேரநாட்டினனான நான் ராஜராஜன் எங்கள் ஊர் மன்னனை வென்று அழித்ததை எண்ணி இன்று கோபம் கொள்ளுவதில் பொருள் இல்லை. அது அக்கால அரசியல்.\nஅவ்வாறு வென்று வந்த பேரமைப்பே அவனுக்கு பெரும்செல்வத்தை அளித்தது. அந்தச்செல்வமே தமிழகத்தில் ஏரிகளாக, விளைநிலங்களாக, கோயில்களாக ஆகியது. அவர்களின் படையெடுப்புகளின் அழிவுகளும் ஆதிக்கத்துக்கான போர்களும் ஒருபக்கம். மறுபக்கம் இந்த ஆக்கப்பணிகள். இரண்டையும் அக்காலகட்டப்பின்னணியில் வைத்துப்பார்க்கவேண்டும் என்றே நான் எழுதினேன். அதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் மீண்டும் அவர்களை இந்தக்காலகட்ட மதிப்பீடுகளுக்குள் போட்டுப்பார்க்க முயல்கிறீர்கள்.\nராஜராஜனை அவன் காலகட்டத்தின் பிற நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுடன் ஒப்பிடவேண்டும் என்றே நான் சொல்வேன். அவன் மன்னர்களை வென்றிருக்கிறான். ஆனால் கோடிக்கணக்கில் எளிய மக்களை கொன்று குவித்திருக்கவில்லை. அவன் நாடுகளை கைப்பற்றியிருக்கிறான். ஆனால் வென்றநாடுகளில் நிலையான ஆட்சியை உருவாக்கி பெரும் நலப்பணிகளைச் செய்திருக்கிறான். சேரநாட்டின் பெரும் ஏரிகள் அவன் வெட்டியவையே. .\nஈழத்தில் ராஜராஜன் பௌத்த மத அமைப்புகளை அழித்திருக்கலாம். இன்றுபோலவே அவை அன்றும் அங்குள்ள அரச அதிகாரத்தின் மையங்களாக இருந்திருக்கலாம். ஆனால் அது மதக்காழ்ப்பின் விளைவு அல்ல. அவன் சூடாமணி விகாரம் போன்ற பௌத்த விகாரங்களை கட்டியிருக்கிறான். இன்றும் சோழர்களின் ஆலயங்களின் சுவர்களில் புத்தர்சிலைகளை நாம் காணமுடிகிறது\nஇந்த விழுமியங்கள் அக்கால அளவுகோலுக்கு முக்கியமானவை, அபூர்வமானவை. அந்த அளவிலேயே அவனை மாமன்னன் என்கிறோம். இதுவே என் தரப்பு\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nTags: திருவானைக்காவல், ராஜ ராஜ சோழன்\nபுதியவர்களின் கதைகள் -- ஹரன் பிரசன்னா\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 26\nகோவை புத்தகக் கண்காட்சி- கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://azeezbaqavi.blogspot.com/2014/01/", "date_download": "2018-07-19T11:27:44Z", "digest": "sha1:WUUKOCOI7OQMLKC5OT6MOVTZBIJCPVDA", "length": 10183, "nlines": 92, "source_domain": "azeezbaqavi.blogspot.com", "title": "COVAI ABDUL AZEEZ BAQAVI : 01/01/2014 - 02/01/2014", "raw_content": "\nஇஸ்லாம்,முஸ்லிம் சமுதாயம் சார்ந்த பதிவுகள்\nமக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை\nமக்கா பள்ளியின் இமாமின் வீடு புகுந்து அவரது நணபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.\nஅவரது மனைவி பேரக்குழந்தை தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கதே\nஆனால் தாக்கியவர்கள் அவரே சொல்வது போல அவரால மதிக்கப்படுகிற இயக்கத்தின் ஆட்களால் எனும் போது இது ஒரு செல்லச் சண்டையாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்\nசாணியடி அவருக்கு நியாயமான ஒரு பரிசுதான் அவரே ஒரு சாணியடிப் பார்டிதானே\n பாவம் ஓரிடம் பழி ஓரிடம் சென்று சேர்ந்திருகிருக்கிறது .\nஅவரை ஆதரிக்கிற மதரஸா காஷிபுல் ஹுதா - மஜ்லிலே கதமே நுபுவ்வத் போன்ற அமைப்புக்கள் எச்சரிக்கை அடைய வேண்டும்.\nLabels: மக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை\nசமீபத்தில் பேஸ்புக் வழியாக எனக்கு வந்த ஒரு கேள்வி இது \nஎங்களது ஊரின் ஆற்றங்கறையோரப் பள்ளிவாசலில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.\nஅதில் மீலாது விழாக்கள் வேண்டும் என்று அழுத்தமாக கூறப்பட்டிருந்தது.\nதமிழகத்தில் மிலாது விழாக்கள் வேண்டும் என்று நோட்டீஸ் அடித்து குரல்கொடுக்கிற சில மூத்த ஆலிம்கள் மீலாது கூடாது பித் அத என்று சொல்கிற காஷிபுல் ஹுதா காரர்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார்களே இது சரியா\nஇந்தப் பெருமக்களின் நீண்ட கால சேவையை தங்களது தேவைக்காக் அந்தக் குழப்பவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியுமா தெரியாதா\nமீலாதிற்கு எதிராக ஒரு பத்வா வெளியிட்டு தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவகளை ஒரு பேச்சிற்காகவாது எச்சரித்திருக்க்லாம். இது போன்ற கருத்துக்களை நாம் அனுமதிக்க முடியாது என பகிரங்கமாக கூறியிருக்கலாம்.\nதமிழகத்தில் ஒரு மதரஸாவின் பெயரில் இப்படி பத்வா வெளிவந்த பிறகு அந்த மதரஸாவைச் சார்ந்தவர்களோடு கொஞ்சிக் குலாவுவது அவர்களை பொது மேடையில் பாராட்டுவது சுன்னத ஜமாத்தின் ஆலிம்களுக்கு தகுமா என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு குழப்பம் தான் தீர்வா\nபொதுவாக பேஸ்புக்கில் நான் சஞ்சரிப்பது குறைவு என்றாலும் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்க்க என்னால் இயல்வில்லை.\n குழப்பம் தேவையில்லை. சில பல என அறிஞர்களை பொத்தம் பொதுவாக குறிப்பிடுவது நியாயமில்லை. மற்றவர்கள் செய்வது போல நீங்களும் பாராட்டுவது போல குத்திக் காட்ட தேவையில்லை.\nமீலாது அன்பின் அடையாளம். முஸ்லிம்க்ள் தமது தலைவரின் மீதான அன்பை வெளிப்படுத்தும் அனைத்து வழிகளிலும் வெளிப்படுத்த வேண்டும்.\nமுஸ்லிம் உம்மத்தின் பெரும் சிறப்புக்களில் ஒன்று தனது தலைவரின் மீது அலாதியான அன்பு கொண்டிருக்கிற போதும் அவர் விச்யத்தில் தடம்புரளாத சமுதாயம் இது. இன்று வரைகும் பெருமானார் விசயத்தில் உம்மத்தின் நடைமுறைகள் இதற்கு சாட்சி.\nசில காமாலைக் காரர்களின் பார்வைக் கோளாருகளுக்காக நாம் பரிதாபப்படலாம். கோபபபடத் தேவையில்ல. மேதாவிகளாகவும் சீர்திருத்த வாதிகளாகவும் காட்டிக் கொள்ள முயலும் அவர்களிடமிருந்து அல்லாஹ் ஆலிம்களையும் சமுதாயத்தையும் பாதுகாப்பானாக\n2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : இலை பரப்பிய அலை (1)\nஇது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார். (1)\nஉமர் பின் கத்தாப் (ரலி): உத்தம அரசியலின் அரிச்சுவடி (1)\nஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள் (1)\nஒரு முஹர்ரம் அனுபவம் (1)\nகதீஜா பின்து குவைலித் : எதார்த்தப் பெ���்ணியத்தின் முன்னோடி (1)\nகாதியானியும் கண்ணம்மா பேட்டையும் (1)\nகீரனூரி - பெருவாழ்வின் சொந்தக்காரர். (1)\nதாராபுரத்தில் குஜராத்திய முன்னோட்டம் (1)\nதிருமணப் பதிவுச் சட்டம் (1)\nபாபரீ மஸ்ஜித வழக்கின் தீர்ப்பு (1)\nபெண்களுக்கான இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும் (1)\nமக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை (1)\nமாற்றத்தை நோக்கி சிறுபான்மை அரசியல் (1)\nஜம்மு இறக்குமதி செய்யப்படும் இந்துத்துவ தீவிரவாதம் (1)\nஷேர் மார்க்கெட் வர்த்தகம் பற்றி (1)\nஹஜ் வியாபாரம் - பக்தியில் ஒரு சுரண்டல் (1)\nவெள்ளி மேடை منبر الجمعة\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-19T11:31:08Z", "digest": "sha1:RKTPEDHV65MDBXL5CDIDJBSMZCCCUWF3", "length": 5074, "nlines": 134, "source_domain": "ithutamil.com", "title": "இந்திரஜித் | இது தமிழ் இந்திரஜித் – இது தமிழ்", "raw_content": "\nTag: Indrajit 2017, Indrajit movie, Music director KP, இந்திரஜித், இயக்குநர் கலாபிரபு, ஒளிப்பதிவாளர் ராசாமதி, கலைப்புலி எஸ். தாணு, கெளதம் கார்த்திக், டைமண்ட் பாபு\nஇந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்\n25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்திரஜித்...\nநாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க விமர்சனம்\nநான்கு பேர் நான்கு விதமாகப் பேசுவார்களே என்ற தயக்கத்தாலேயே...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி\nவயலின் ‘ஞான’ சேகரன் 80\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineulagam.com/actresses/06/156741?ref=magazine", "date_download": "2018-07-19T11:29:38Z", "digest": "sha1:7MOWUC32XMWNOWJPQKG4E2Y2IZXPRB3Z", "length": 7081, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "என்னை பல முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள்! கண்ணீர் விட்டு அழுத இளம் நடிகை - Cineulagam", "raw_content": "\nஎந்நேரமும் கேம் விளையாடிய மகன்....உலகத்தை விட்டே அனுப்பிய தந்தை\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை... அதிர்ச்சியில் திரையுலகம்\nஎல்லாரையும் குறைசொல்லும் வைஷ்ணவி மிட்நைட் மசாலாவில் செய்த வேலையை பார்த்தீர்களா\nசர்கார் விஜய்யின் லேட்டஸ்ட் ஸ்டில் - ரசிகர்கள் மத்��ியில் வைரல்\n தற்போதைய நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nஉங்களுக்கு HIV வரவில்லையா என கேட்ட ரசிகர்- ஸ்ரீரெட்டி கொடுத்த பதிலை பாருங்க\nநேரத்திற்கு வேலைக்கு செல்ல 32 கி.மீ நடந்து சென்ற இளைஞர்...முதலாளி கொடுத்த பரிசு என்னனு தெரியுமா\nவீடு வாடகைக்கு கேட்டு வந்த நபர் செய்த காரியத்தை பாருங்கள்\nதொகுப்பாளர் பிரியங்காவுடன் மிக நெருக்கமாக நடனமாடும் நபர் யார் தெரியுமா\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nதெய்வமகள் சீரியல் புகழ் வானி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஎன்னை பல முறை நிர்வாணமாக நடிக்க வைத்தார்கள் கண்ணீர் விட்டு அழுத இளம் நடிகை\nஅண்மைகாலமாக நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். ஆனால் சில புதிரான விசயங்களும் இருக்கிறது.\nஇந்நிலையில் இளம் நடிகை குப்ரா சேட் மனம் திறந்து பேசியுள்ளார். செக்ரட் கேம்ஸ் என்ர Web Series ல் அவர் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார்.\nவாரம் ஒரு மணிநேரம் என 8 வாரங்களுக்கு மொத்தம் 8 மணி நேரம் எடுக்கப்பட்டதாம். இதன் முதல் Episode பெரும் வரவேற்பை பெற்றது. இதை இயக்குனர்கள் அனுராக் கஷ்யப், விக்ரமாதித்ய மோத்வாணியும் இயக்கியுள்ளனர்.\nஆரம்பத்திலேயே படத்தில் நிர்வாணக்காட்சி இருக்கிறது என கூறிவிட்டார்களாம். குப்ரா நிர்வாணமாக நடித்த காட்சியை சரியாக வரவில்லை என மறுபடி மறுபடி சொல்லி 7 முறை எடுத்தார்களாம்.\nஇதனால் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஆனாலும் நடித்தாராம். கடைசியில் எல்லோருமே நடிகையை மிகவும் பாராட்டினார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://engalblog.blogspot.com/2013/02/blog-post_4.html", "date_download": "2018-07-19T11:27:46Z", "digest": "sha1:7MT7ROVUK4AA5VOMERN5ZJQIIC5J6KYE", "length": 49434, "nlines": 431, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கருடா பூந்தி! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nநம்ம நெற்றியில் நிஜமாகவே எழுதித��தான் ஒட்டியிருக்குமோ \nஅம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நம்மைப் பற்றி நம்மை விட நிறைய தெரிந்து வைத்திருப்பாள்.\nஇரண்டு ரூபாய் நோட்டு ஒன்று கொடுத்து, 'அரை சேர் காராபூந்தி வாங்கி வா' என்றாள், ஒரு நாள். சுப்பராயன் ஸ்டோருக்கு அடுத்த சேட்டுக் கடையில் பண்டமும் புதிதாக நன்றாக இருப்பதுடன், கையிலும் கொஞ்சம் தூள் பக்கோடா அல்லது உதிர்ந்த மைசூர்ப் பாகு இப்படி ஏதாவது கொசுறு கொடுப்பார்கள். [அடுத்த முறை கடலூர் செல்லும் பொழுது இந்தக் கடைகள் எல்லாம் பாடலி நகைக்கடைக்கு எதிரே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.]\nகடை வீதியில் இரண்டு மூன்று படி உயரமாக ஏறிப் போய், வாங்கிக் கொண்டு, மீதி ஒரு ரூபாயை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு பின்னர் கொஞ்சம் தூள் பக்கோடாவுடன் படி இறங்கினேன், கவனம் பக்கோடாவை சிதறாமல் எப்படி வாயில் போட்டுக் கொள்வது என்பதில் இருக்கும் பொழுது, யாரோ இடது தோளில் ஒரு தட்டு தட்டி விட்டு கையில் இருந்த தாமரை / புரசை இல்லை பொட்டலத்தை பறித்துப் போய் விட்டனர்.\nஒரு முதியவர், 'என்ன கண்ணா, கருடன் கொத்திக்கிட்டு போயிடுச்சா' என்று அக்கறையுடன் விசாரிக்கத் துவங்க, இன்னொருவர் [வெறும் குரல் மட்டும் தான் நினைவு வருகிறது. பொட்டலம் போன துக்கத்தில் அக்கம் பக்கம் பார்க்க முனைந்தால் நம்மை எல்லோரும் ஏமாளி என்று சொல்வார்களோ என்ற எண்ணம் வேறு படுத்தியது] 'கருடன் எல்லாம் அப்படி செய்யாது; ஒரு கழுகு தான் இந்தப் பக்கம் அடிக்கடி வட்டம் போட்டுக் கொண்டிருந்தது' என்றார் எனக்கு ஏனோ ஆழ்வார்க்கடியான் நினைவுக்கு வந்தது - கல்கியில் பொன்னியின் செல்வன் தொடராக வந்து கொண்டிருந்த நேரம்.\nஅம்மாவிடம் போய் சொல்லும் பொழுது இதுவரை வராத ஆத்திரமும் அழுகையுமாக போட்டிபோட்டுக் கொண்டு வந்து, தொண்டையை அடைத்ததில் சப்தமே வரவில்லை. எதுவும் சொல்ல முடியவில்லை. அதற்குள் அம்மாவின் கழுகுப் பார்வை கையில் இருந்த இரண்டு கோடுகளைக் கவனித்து \" என்னடா கழுகு கொத்திண்டு போய் விட்டதா\" என்று கேட்டதுடன், \"சரி பாக்கி ரூபாய் வச்சிருக்கியா\" என்று கேட்டதுடன், \"சரி பாக்கி ரூபாய் வச்சிருக்கியா போய் நடை சிரமம் பார்க்காமல் வாங்கி வந்துடு \" என்றதுடன் கையில் ஒரு மஞ்சள் பையையும் (ஆம் - எல் ஜி மிஸ்கீ பெருங்காயம் என்று போட்டிருக்குமே அதே தான்) கொடுத்தாள்.\nஇ���்த முறை கடைக்காரர் - நம் சரித்திரம் தெரிந்ததனால் - காராபூந்தி இருந்த தட்டு சற்று நன்றாகவே கீழே போகும் படி நிறுத்துக் கொடுத்து, ஜாக்கிரதையாய் எடுத்துப் போ தம்பி\" என்றார். இப்போது தான் காராபூந்தி ஜாக்கிரதையாய் மஞ்சள் பையில் வைத்து விட்டோமே என்று வலது கை தூள் பக்கோடாவை வாயில் போட்டுக் கொள்ள முயன்ற பொழுது வலது கையில் + வலது கன்னத்தில் ஒரு பெரிய அறை. கையில் இருந்த பக்கோடா பாதி வாயிலும் பாதி ரோட்டிலும் விழ ...... வேறு என்ன மீண்டும் அழத்தான் தோன்றியது.\nமுதலில் கேட்டிருந்த இரண்டாம் குரல் இப்பொழுது பேசியது \"என்னவோ கருடன் வந்து அடித்துப் போயிற்று என்று சொன்னாயே, சரியாகக் கவனித்தாயா \" என்று நம் முதலாமவரைப் பார்த்து கேட்டிருக்க வேண்டும். அவர் \" ஓ, பார்த்தேனே, கருடனும் இல்லை, கழுகும் இல்லை - காக்காய் \" என்று நம் முதலாமவரைப் பார்த்து கேட்டிருக்க வேண்டும். அவர் \" ஓ, பார்த்தேனே, கருடனும் இல்லை, கழுகும் இல்லை - காக்காய்\" என சொன்னார் இப்பொழுது எனக்கு மீண்டும் அழுகை பீறிட்டது. ஒரு காக்காயிடம் ஏமாந்து போனோமே என்ற ஆற்றாமை தாங்கவில்லை.\nஆனால் அம்மாவிடம் போய் சொன்ன பொழுது சிரிப்பு தான் வந்தது.\nஆனால் கூடவே ஒரு சந்தேகமும் வர, தலை தெறிக்க ஓடிப் போய் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டேன் - 'ஏ - சோ' என்று எந்த ஓரத்திலாவது எழுதியிருக்கிறதா என்று\nசே... இப்படி ஆகி விட்டதே... காராபூந்தி தீரும் வரை இதே தானா...\nஎன் தங்கை வீட்டில் சாதம் பருப்பு காய்கறி என்று காகத்துக்குப் படைக்கிறார்கள். கறியை முதலில் பிரித்துத் தின்னும் காகங்களை இப்போது தான் பார்க்கிறேன்.\nகுரோம்பேட்டையில் காலையில் நடந்து கொண்டிருந்தபோது காக்கைக்கு சாதம் போட வந்த ஒரு பெண்மணியைக் கண்டவுடன் அடித்துப் பிடித்து அவரை நோக்கிப் பறந்த காக்கைகளைப் பார்த்து நான் பயந்தே போனேன். அந்தப் பெண்மணியும் கரண்டி சாதத்தை தூக்கி எறிந்து எடுத்தார் ஓட்டம். கூடவே 'சனியங்க' என்று அலறிக்கொண்டு போனார். முன்பெல்லாம் காக்கைக்கு சாதம் போடும் பொழுது 'கா கா' என்று கூவி வைத்தது நினைவுக்கு வந்தது.\nஏ.சோ = ஏமாந்த சோணகிரி.\nஅது கன்னத்தில இல்லைங்க, தலைல எழுதியிருக்கும்\nஅம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நம்மைப் பற்றி நம்மை விட நிறைய தெரிந்து வைத்திருப்பாள்.//\nநீங்கள் சொல்வது சரிதான். நம்மை நம் அம்மா நன்கு தெரிந்து வைத்து இருப்பார்கள்.\nமஞ்சள் பை, கல்கியின் ஆழவார்க்கடியான் நினைவு அருமை.\n கருடனா இருந்திருந்தா கூட கொஞ்சம் கௌரவமா இருந்திருக்கும்ல..\nஅடடா.... காராபூந்தி படம் விஜயவாடா நினைவுகளைக் கொண்டு வந்தது 50 பைசாவிற்கு ஒரு பொட்டலத்தில் நிறைய மடித்துத் தருவார் கடைக்காரர். காராபூந்தி, மிக்சர், காராசேவ் என வகை வகையாக ஐம்பது ஐமபது பைசாவிற்கு வாங்கி வருவோம் நானும் பெரியப்பாவும்\nகடைசில காக்காய் இப்படி பண்ணிடுச்சே நல்ல வேளை பக்கோடாவை எடுத்துட்டுப் போகல\nசில நேரங்களில் காக்காய் இப்படி துரத்திய அனுபவம் எங்கள் மாடியிலும் நிகழ்ந்தது.\nஅதுக்கும் பட்சணம்ன்னா ரொம்பப் பிடிக்கும் போலிருக்கு :-)\n/ கவனம் பக்கோடாவை சிதறாமல் எப்படி வாயில் போட்டுக் கொள்வது என்பதில் இருக்கும் பொழுது,/\nதப்பு உங்கள் மேல் இல்லவே இல்லை. காக்கா தட்டிவிடுமென எதிர்பார்த்தீர்களா என்ன அனுபவங்களே வாழ்க்கைப் பாடங்களாகின்றன:)\nஅப்ப ரெண்டாவது மு(அ)றையில் காராபூந்திக்கு ஆபத்திலேதானே ஆக, ரெண்டு தடவையும் தூள் பகோடா கிடைக்கலைன்னுதான் வருத்தமா ஆக, ரெண்டு தடவையும் தூள் பகோடா கிடைக்கலைன்னுதான் வருத்தமா\nஅப்போதிலிருந்தே உங்களுக்கு கருணை உள்ளம்.\nகாக்கா கருடன் எல்லாம் சாப்பிடணும் என்றே தூக்கிக் ஒண்டு வைத்துருக்கிறீர்கள்.:)\nஏமாந்த பையனுக்கு என் அனுதாபங்கள்.\n//கல்கியில் பொன்னியின் செல்வன் தொடராக வந்து கொண்டிருந்த நேரம்.//\n அறுபதுகளின் கடைசியில் இரண்டாம் முறை(\nஉங்க படத்திலே இது கருடன். இன்னிக்கு வேறொருத்தர் போட்டிருந்ததில் சிறகுகள் கறுப்பாக இருந்தது. பருந்து போலிருக்கு அது\nகடைசியில் காக்காய் கிட்டே ஏமாந்தீங்களா ஹிஹிஹி, அது சரி, பக்கோடாவை முதல்லேயே கொஞ்சம் காக்காய்க்குக் கொடுத்திருக்கலாம் இல்ல ஹிஹிஹி, அது சரி, பக்கோடாவை முதல்லேயே கொஞ்சம் காக்காய்க்குக் கொடுத்திருக்கலாம் இல்ல எங்க வீட்டில் காக்காய்க்குச் சாதம் வைத்தால் அணிலும், தவிட்டுக்க் குருவிகளும் தான் வந்து சாப்பிடுகின்றன. அம்பத்தூரில் தான் சரியாப் பத்து மணி ஆச்சுன்னா தோய்க்கிற கல்லில் வந்து உட்கார்ந்து கொண்டு கத்திக் கொண்டே இருக்கும். :)))))) இங்கே ஈ,காக்கை வருவதில்லை.\nஇந்தப் பதிவு எனக்கு இன்னிக்குத் தான் அப்டேட் ஆகி இருக்கு. ஏன் இப்படி\nமுதலி��ேயே மஞ்சள் பை கொண்டு போயிருக்கலாம் இல்லையா\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஅலேக் அனுபவங்கள் 17:: முட்டை போட்டியா\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 2 2013\nஞாயிறு 190:: அதான்டா ... இதான்டா ...\nபாசிட்டிவ் செய்திகள் 17/2 முதல் 23/2 வரை\nவெ ஆ நிர்மலா, அர்னாப், கொஞ்சும் சலங்கை, பொதிகை, மு...\nஞாயிறு - 189 :: வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்\nபாசிட்டிவ் செய்திகள் 10/2/2013 முதல் 16/2/2013 வரை...\nசிமரூபா கஷாயம் - புற்று நோய்க்கு மருந்து.\nபாசிட்டிவ் செய்திகள் 3/2/2013 முதல் 9/2/2013 வரை\nஞாயிறு 187:: காக்கை குருவி மட்டுமா\nஇந்த வாரத்து பாசிட்டிவ் செய்திகள்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nவாங்க பேசலாம் :) - வாங்க பேசலாம் :) வாங்க முதலில் எங்க வீட்டு தோட்டத்தில் ரெட் கர்ரன்ட்ஸ் .(red currants ) பழங்கள் இந்த வருடத்து அறுவடையில் பறவை நட்புக்கள் சாப்பிட்டு எங்களுக...\nமாறிய காலம், மாறாத கோலம் - *மாறிய காலம், மாறாத கோலம்* சுகுமார் இரண்டாவது நாளாக பள்ளிக் கூடம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். சாதாரணமாக அப்படி சொல்லக் கூடியவன் கிடையாது. ...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் ���ன்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்கு��்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வர��ாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்��ாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கற��� அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/miscellaneous/shocking-secret-facts-about-area-51-011256.html", "date_download": "2018-07-19T11:32:13Z", "digest": "sha1:VWITML6VXOZX7MCTMFA7K2NFX5TTT72V", "length": 19708, "nlines": 199, "source_domain": "tamil.gizbot.com", "title": "Shocking Secret Facts about Area 51 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏரியா 51 : மர்மமும், வெளியான பதில்களும்.\nஏரியா 51 : மர்மமும், வெளியான பதில்களும்.\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nடீப் வெப் : இது இண்டர்நெட் கருப்பு பக்கம்.\nதினம் 'யூஸ்' பண்றோம்.. ஆனா இது தெரியாம போச்சே..\n கூகுள், உங்களை தற்கொலை செய்து கொள்ள விடாது..\nஆஹான் ஸ்பெஷல், கூகுள் குறித்த வியப்பூட்டும் விஷயங்கள்\nஉங்க ஸ்மார்ட்போன் இதையும் செய்யும், நம்புங்கள்...\nஉலகின் மிகவும் மர்மம் நிறைந்த பகுதியாக அறியப்படும் ஏரியா 51 இல் அப்படி என்ன தான் இருக்கின்றது. அங்கு என்ன தான் நடக்கின்றது என்ற கேள்விகளுக்கு இன்று வரை அதிகாரப்பூர்வமான பதில் இல்லை.\nஇங்கு அடிக்கடி அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் வந்து செல்கின்றது. இப்பகுதியில் ஏலியன்களின் நடமாட்டம் இருக்கின்றது என ஒருப்பக்கமும், மற்றொரு தரப்பினர் இங்கு ராணுவ சோதனை மையம் இயங்கி வருகின்றது என்றும் பலத்தரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.\nஇங்கு ஏரியா 51 குறித்து பலருக்கும் தெரியாத சில தகவல்களை தான் தொகுத்திருக்கின்றோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏரியா 51 பகுதியின் உண்மை பெயர் நெவேடா டெஸ்ட் அன்டு டிரெயய்னிங் ரேன்ஜ் ஆகும். இப்பகுதியில் இரண்டாம் உலக போரின் போது அணு ஆயுத சோதனை செய்யப்பட்டது.\nஇப்பகுதியில் 1 முதல் 30 வரை பெயர் பலகைகள் இருக்கின்றன. தற்சமயம் ஏரியா 51 என அழைக்கப்படும் இடத்தில் 15 ஆம் எண் இருந்தது என்றும் பின்னாளில் இது ஏரியா 51 என அழைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.\n1997 ஆம் ஆண்டு கோஸ்ட் டூ கோஸ்ட் ஏஎம் ரேடியோ நிகழ்ச்சிக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. அழைத்தவர் தான் ஏரியா 51 பகுதியின் முன்னாள் ஊழியர் என தெரிவ��த்தார்.\nதனக்கு உதவி வேண்டும் என்றும், தான் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும், யாரோ தன்னை அழைத்து செல்வதாக கூறிய அவரது அழைப்பு சிக்னல் கோளாரால் திடீரென துண்டித்துவிட்டது.\nஏரியா 51 பகுதியாக நமக்கு தெரிவது ஐஸ்பெர்க் நுனி மட்டுமே, இதனுள் நிலத்துக்கு அடியில் எராளமான சுரங்கங்களும், பல்வேறு வசதிகளும் இருக்கின்றது.\nஏரியா 51 சார்ந்த மர்மங்களில் இவரும் இடம்பெற்றுள்ளார். பாப் லஸார் என அழைக்கப்படும் இவர் 1989 ஆம் ஆண்டு முதல் ஏரியா 51 சோதனை பகுதியின் எஸ்-4 பிரிவில் பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.\nஎஸ்-4 பரிவில் பாப் ரிவர்ஸ் இன்ஜினியரிங் மற்றும் ஏலியன் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வில் ஈடுப்பட்டிருந்ததாகவும் அச்சமயம் அவர் அங்கு அதிகப்படியான ஏலியன் விண்கலங்களை பார்த்ததாகவும், இதுகுறித்து அவர் அதிகப்படியான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nமேலும் பாப் லஸார் அளித்த தகவல்களில் ஏலியன் விண்கலம் எவ்வாறு இயங்குகின்றது என்பது குறித்த தகவல்களும் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு அவர் வழங்கிய தகவல்களில் ஒரு வகை ஏலியன் விண்கலமானது உன்னுன்பென்டியம் என அழைக்கப்படுகின்றது. இது தனிம அட்டவணையில் இருக்கும் தற்காலிக பெயர் தான் என்றும், அணு எண் 115 ஆக கொண்டுள்ள இதன் தற்காலிக சின்னம் Uup.\nஇந்த அணு எண் 115 ஆனது எதிர்ப்பு ஈர்ப்பு விளைவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகின்றது.\nஉலகில் உன்னுன்பென்டியம் 2003 ஆம் ஆண்டு தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் லஸார் இதனை 14 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.\nஇதோடு ஏலியன்கள் எவ்வாறு 100,000ஆண்டுகளாக பூமிக்கு வந்து செல்கின்றன என்பதற்கான விளக்கத்தையும் லஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த ஏலியன்களானது மிகவும் குளிர்ந்த கிரகத்தில் இருப்பதாகவும், இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றது என்றும் லஸார் தெரிவித்துள்ளார்.\nஏரியா 51 பகுதியை நேரில் பார்க்க டிகாபூ பீக் செல்ல வேண்டும். இங்கிருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் ஏரியா 51 அமைந்துள்ளது. இதனால் நேரில் பார்க்க நிச்சயம் தொலைநோக்கி தேவைப்படும்.\nமுன்னதாக வைட் சைட்ஸ் மற்றும் ஃப்ரீடம் ரிட்ஜ் என இரு இடங்��ளில் இருந்து ஏரியா 51 பகுதியை பார்க்க முடிந்தது, பின்னாளில் இவை இரண்டும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்து குறிப்பிடத்தக்கது.\nஏரியா 51 பகுதியில் பணியாற்றுபவர்களுக்கென லாஸ் வேகாசில் இருந்து தினமும் 20 விமானங்கள் ஏரியா 51 பகுதிக்கு சென்று வருவதாகவும், அவைகளில் 1000 ஊழியர்கள் அங்கு சென்று வருவதாகவும் கூறப்படுகின்றது.\nவெள்ளை நிற விமாத்தின் நடுவே சிவப்பு கோடு இருக்கும். ஜேனெட் என அழைக்கப்படும் இந்த விமானம் மட்டும் தான் ஏரியா 51 பகுதியின் வானில் பறக்க அனுமதிக்கப்படுகின்றது. ராணுவ விமானங்களுக்கு கூட இங்கு பறக்க அனுமதி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nலாஸ் வேகாஸ் நகரில் ஜானெட் என்பது ஜாயின்ட் ஏர் நெட்வர்க் ஆஃப் எம்ப்ளாயீஸ் டிரான்ஸ்போர்டேஷன் என நம்பப்படுகின்றது.\nவிமானத்தில் சென்று திரும்புவோர் யாரும் சீருடை அணிவதில்லை, அவர்கள் சாதாரண உடையில் தான் காணப்படுகின்றனர் என்பதும்\n1974 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா விண்வெளி ஓடமான ஸ்கைலேபில் இருந்து விண்வெளி வீரர்கள் ஏரியா 51 பகுதியை புகைப்படம் எடுத்தனர். பலக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் அந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் 33 ஆண்டுகளுக்கு அந்த புகைப்படம் யாராலும் கவனிக்கப்படவில்லை.\n1996 ஆம் ஆண்டு திரைப்படமான இன்டிபென்டென்ஸ் டே குழுவினருக்கு வாகனம், ஆடை மற்றும் ராணுவ தளங்களில் படப்படிப்பு நடத்த அனுமதி வழங்க அமெரிக்க ராணுவம் ஒப்புக்கொண்டது, ஆனால் ஏரியா 51 சார்ந்த குறிப்புகளை கதையில் பார்த்த பின் அனுமதி மறுக்கப்பட்டது.\nராணுவ தளத்தின் க்ரூம் ஏரி இருப்பது குறித்த தகவல்கள் பரவலாக பேசப்பட்ட போதும், அமெரிக்க அரசு இது குறித்து எவ்வித தகவலும் வழங்காமல் இருந்தது.\nஎனினும் அரசு சார்ந்த சில ஏடுகளில் ஏரியா 51 பகுதியில் யு-2 மற்றும் ஏ-12 போன்ற உளவு விமானங்களின் சோதனை நடத்தப்பட்டதாக குறிப்பு இருக்கின்றது.\nகுட்டையை குழப்பிய கூகுள் : சிதறமால் சிக்கிய வினோதங்கள்.\nதிட்டமிட்டு ஏலியன்களை மறைக்கும் அமெரிக்கா, உண்மையை போட்டு உடைத்த அதிகாரி.\nஇது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/07/padmasingh-isaac-s-aachi-masala-success-story-010303.html", "date_download": "2018-07-19T11:44:26Z", "digest": "sha1:7AC7FILXYZHSZPM5NWAB27MY627NXCIB", "length": 25401, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தமிழ்நாடு முதல் அமெரிக்கா வரை கொடிக்கட்டி பறக்கும் திருநெல்வேலி ஐசக்..! | Padmasingh Isaac’s Aachi Masala success story - Tamil Goodreturns", "raw_content": "\n» தமிழ்நாடு முதல் அமெரிக்கா வரை கொடிக்கட்டி பறக்கும் திருநெல்வேலி ஐசக்..\nதமிழ்நாடு முதல் அமெரிக்கா வரை கொடிக்கட்டி பறக்கும் திருநெல்வேலி ஐசக்..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nஅமெரிக்காவில் வென்ற ‘ஆச்சி மசாலா’..\nஐடி வேலையை உதறி தள்ளி இளநீர் விற்கும் மணிகண்டன்..\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nசீனாவின் ஐபோன் என அழைக்கப்படும் சியோமி-இன் மாபெரும் வெற்றி கதை..\nசென்னை பையன்.. தோனிக்கு போட்டி.. விடா முயற்சி.. புதிய அவதாரம் எடுக்கும் தினேஷ் கார்த்திக்\nவெறும் 1.6 லட்ச ரூபாய் முதலீட்டில் ரூ.21 லட்சம் வருமானம்.. சூப்பரான ஐடியா..\nதிருநெல்வேலியைச் சேர்ந்த ஏ.டி.பத்மாசிங் ஐசக் என்பவரால் 1995-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட நிறுவனமே ஆச்சி குழுமம். இன்று ஆச்சி மசாலா தமிழகம் மட்டும் இல்லாமல் உலகளவில் பல இந்தியர்கள் பயன்படுத்தும் மசாலா பிராண்டாக மாறியுள்ளது.\nஅதுமட்டும் இல்லாமல் அச்சி குழுமத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவதுடன் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடப்பதாக 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்துள்ளனர். எனவே ஆச்சி குழுமம் வளர்ந்த கதையினை விளக்கமாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nஆச்சி குழுமத்தின் கீழ் ஆச்சி மசாலா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பைசஸ் & ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பெஷல் ஃபுட்ஸ் பிரைவேட் ஃபுட்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் உள்ளன.\nஆச்சி நிறுவனம் துவங்குவதற்கு முன்பு பிபிஏ பட்டதாரியான பத்மாசிங் ஐசக் 50,000 ரூபாய் சம்பளத்திற்காகப் பணிபுரிந்து வந்தார். ஆனால் இவருக்கு எப்படியாவது மிகப் பெரிய ஒரு நிறுவனத்தினைக் கட்டமைக்க வேண்டும் என்று கனவு இருந்தது.\nவேலை பார்த்துக்கொண்டே ஆச்சி மசாலா நிறுவனத்தினை 1995-ம் ஆண்டுத் துவங்கிய ஐசக் முதன் முதல் ஒரே ஒரு மசாலாவினை மட்டுமே தயாரித்து வந்தார். பின்னர் 2013-ம் ஆண்டு படிப்படியாக இது 150 தயாரிப்புகளாக மாறியிருந்தன.\nமுதலில் மசாலா பொருட்கள் மட்டுமே தயாரித்து வந்த ஐசக் மசாலாவுடன், கோதுமை பொருட்கள், ஊறுகாய், புளி சாத பொடி, பிஸ்கேட் மற்றும் ஜாம் போன்றவற்றையும் தயாரிக்கத் துவங்கி இன்று சத்துணவுகள், ஆயுர்வேத பொருட்கள் போன்றவற்றையும் தயாரித்து வருகிறார்.\nஓரு முடிவை எடுத்தால் அதில் 100 சதவீத உழைப்பினை அளிப்பதில் பத்மாசிங் ஐசக்கிற்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று கூறலாம். தான் நினைத்த காரியம் முடியும் வரை சரியான தூக்கமும் இவருக்கு வராது, எப்போதும் அது பற்றியே நினைத்து இருப்பேன் என்றும் கூறுகிறார்.\nஒருவேலை தான் எதிர்பார்த்த இலக்கை அடைவதில் தோல்வி அடைந்தாலும் தனக்குத் தானே ஊக்கம் அளித்துக்கொண்டு அதில் எப்படி வெற்றிபெறுவது என்றும் விடா முயற்சியாகப் போராடுவேன் என்றார்.\nதான் புதிதாக ஒரு தயாரிப்பினை வெளியிடுகிறேன் என்றால் அதன் தரம் முதலில் என்னைத் திருப்தி படுத்தினால் மட்டுமே சந்தைக்குக் கொண்டு செல்வேன் , விற்பனை செய்வேன் என்றும் அவர் கூறினார்.\nசவால்களை எதிர்கொள்வது தனக்குப் பிடிக்கும் என்றும் அதில் வெற்ற பிறகு கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது என்றும் அது தான் தனது வெற்றிக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபல நிறுவனங்கள் ஊழியர்களின் திறன் குறைவாக உள்ளது என்று எல்லாம் பணியை விட்டு நீக்குவார்கள். ஆனால் தான் அப்படிச் செய்வதில்லை. எல்லோரிடமும் ஒரு திறமை இருக்கும். அதற்கு ஏற்றப் பணியை மாற்றி அளித்து, ஊக்கமளித்து வேலை வாங்குவதாகவும் யாரும் பணியில் இருந்து நீக்குவதில்லை என்றும் ஐசக் கூறுகிறார்.\nதனது நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணிப்புரிவதகாவும், 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிற மாநிலங்களில் இருந்து பணிப்புரிவதாகவும் அவர்களுக்கு ஏற்ற வேலை மற்றும் தங்கு��ிடம் இலவச உணவு போன்றவற்றை அளிப்பதாகவும் தெரிவித்தார்.\nபுதிய வாய்ப்புகளை நோக்கு தனது காதை எப்போதும் கூர்மையாக வைத்து இருப்பதாகவும் எந்த வாய்ப்பினையும் தவறவிட்டதில்லை என்றும், கிராமப்புற சந்தையினைப் பிடிப்பதில் மிகப் பெரிய கவனம் செலுத்தி வருவதாகவும் கூறுகிறார்.\nதற்போது 6 மாநிலங்கள் சார்ந்த மசாலாக்களை உற்பத்தில் செய்து வருவதாகவும், சர்வதேச மசாலா பொருட்களையும் தயாரித்துச் சந்தைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.\nசென்ற மூன்று ஆண்டுகளில் மட்டும் 30 சதவீத வளர்ச்சியினை ஆச்சி மசாலா பெற்றுள்ளதாகவும் தேசிய அளவில் 15 சதவீத சந்தையினைத் தன் வசம் வைத்துள்ளதாகவும், 4,000 ஏஜெண்ட், 12 லட்சம் சில்லைரை வணிகர்கள் ஆதரவுடன் 1,200 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்து வருவதாகவும் கூறினார்,\nஆச்சி மசாலா தயாரிப்புகள் ஐக்கிய அமெரிக்கா, கனடா, யு.கே, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா குடியரசு, D.R.காங்கோ, கென்யா, தன்சானியா, பப்புவா நியூ கினியா, மொசாம்பிக், மொரிஷியஸ், சீஷெல்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சவுதி அரேபியா இராச்சியம், லெபனான், இலங்கை, மாலதீவு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை புறநகரான ஆயனம்பாக்கத்தில் தினமும் 120 மெட்ரிக் டன் அளவிலான மசாலாக்களைத் தயாரிக்கும் அளவிற்கு மிகப் பெரிய தொழிற்சாலையுடன் இயங்கி வருகிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n$2,00,000 கட்டணம் செலுத்தினால் விண்வெளிக்குச் செல்லலாம்.. ஜெப் பிசோஸ் அதிரடி..\nஅலுவலகத்தில் வட்டியில்லா கடன் வாங்கப்போகிறீர்களா.. உஷார்..\nகடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேணிடியவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kishoker.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-19T11:50:43Z", "digest": "sha1:GUUBJP6NB572S6BQP32V6UM7O45JWXDS", "length": 33510, "nlines": 229, "source_domain": "kishoker.blogspot.com", "title": "கிஷோகர் IN பக்கங்கள்: இருபதுவருட தமிழ்சினிமா மர்மம் அவிழ்ந்தது!", "raw_content": "\nஇருபதுவருட தமிழ்சினிமா மர்மம் அவிழ்ந்தது\nவலையுலகத்தில ஒரு பெரிய பதிவரா ஆயிட்டோம் ( இப்புடி நானா சொல்லிக்கிட்டா தான் உண்டு. என்னோட பதிவ படிச்சிட்டு அவனவன் அடுத்த பஸ்ஸ புடிச்சு ஓடுறானே தவிர எவனும் என்னய பிரபல பதிவர்ன்னு ஒத்துக்க மாட்டேங்கிறானே ( இப்புடி நானா சொல்லிக்கிட்டா தான் உண்டு. என்னோட பதிவ படிச்சிட்டு அவனவன் அடுத்த பஸ்ஸ புடிச்சு ஓடுறானே தவிர எவனும் என்னய பிரபல பதிவர்ன்னு ஒத்துக்க மாட்டேங்கிறானே). இப்போ லேட்டஸ்டா கூட வாண்டட்டா ஒருத்தரு என்னோட பிளாக்குக்கு வந்தாரு பேரு தினகரன். நம்ம தமிழ் நாட்டு நண்பரு, நான் குடுக்கிற பத்து ரூவா காசுக்கு \"ஆள் பிடிச்சு அனுப்பும் படலம்\" திட்டத்தின் கீழ் முகநூல் நண்பர் சரவணா அவர என்னோட பிளாக்குக்கு பிளாக்மெயில் பண்ணி அனுப்பியிருந்தாரு. வந்த மனுசன் என்னோட பதிவ பாத்துப்புட்டு ரூமில போயி கதவ சாத்திக்கிட்டவர் தானாம். ரெண்டு நாளா வெளியவே வரலயாம்). இப்போ லேட்டஸ்டா கூட வாண்டட்டா ஒருத்தரு என்னோட பிளாக்குக்கு வந்தாரு பேரு தினகரன். நம்ம தமிழ் நாட்டு நண்பரு, நான் குடுக்கிற பத்து ரூவா காசுக்கு \"ஆள் பிடிச்சு அனுப்பும் படலம்\" திட்டத்தின் கீழ் முகநூல் நண்பர் சரவணா அவர என்னோட பிளாக்குக்கு பிளாக்மெயில் பண்ணி அனுப்பியிருந்தாரு. வந்த மனுசன் என்னோட பதிவ பாத்துப்புட்டு ரூமில போயி கதவ சாத்திக்கிட்டவர் தானாம். ரெண்டு நாளா வெளியவே வரலயாம் என்னோட பதிவுகள அவளவு தீவிரமா அனுபவிச்சிகிட்டு இருக்காராம். ( ரெண்டு நாளா ரத்த வாந்தி எடுப்பதாகவும் , நம்ம டாக்டர் டூலிட்டில தான் வைத்தியம் பாக்குறதாகவும் இந்த JZ உம் கோபிநாத்தும் , சரவணன் பயலும் பொரளிய கெளப்பி விட்டிருக்கானுக. நம்பாதீக என்னோட பதிவுகள அவளவு தீவிரமா அனுபவிச்சிகிட்டு இருக்காராம். ( ரெண்டு நாளா ரத்த வாந்தி எடுப்பதாகவும் , நம்ம டாக்டர் டூலிட்டில தான் வைத்தியம் பாக்குறதாகவும் இந்த JZ உம் கோபிநாத்தும் , சரவணன் பயலும் பொரளிய கெளப்பி விட்டிருக்கானுக. நம்பாதீக\nஅப்பிடியாக ஒரு பிரபல பதிவராக ஆகிவிட்ட நான் இந்த பதிவுலகுக்காக, என்னை வாழ வைக்கும் தமிழு��்காக என்ன செய்தேன் என்று பவர்ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு தூக்கம் வராமல் தவித்த ஒரு ராத்திரியில் புரண்டு புரண்டு யோசித்தேன். யோசித்ததன் விளைவாக ஒரு அற்புதமான சிந்தனை உதயமானது. அதாவது இந்த வரததாசனார், பாப்பய்யா , ஆறுமுகநாவலர் போன்ற தமிழ் பெரியார்கள் எல்லோரும் பிறமொழி நூல்களை அல்லது செய்யுள்ளகளை மொழிபெயர்த்து , அல்லது உரையெழுதி பிரபலமானதை போல நானும் ஒரு இறுக்கமான செய்யுளுக்கு பொருளெழுதி பிரபலமாகிறது என்று பக்கத்து வீட்டுக்காரனின் ரெண்டாவது மகள் மீது சத்தியம் செய்துவிட்டேன்.\nசரி எந்த இறுக்கமான செய்யுளுக்கு அல்லது பாட்டுக்கு பொருள் எழுதலாம் என்று யோசித்ததில் , இதுவரை காலமாக தமிழ் சினிமாவால் பயன்படுத்தப்பட்டு சி.எஸ் அமுதனால் தமிழ் படத்தில் தொகுக்கப்பட்டு ஆனாலும் இதுவரை தமிழாக்கம் பண்ணப்படாத \"ஓ மஹ ஸீயா.........\" என்ற பாடலை தமிழில் மொழியாக்கம் செய்து இந்த வருட இலக்கியத்துக்காக நோபல் பரிசை ரெண்டு மூட்டையில கட்டி வீட்டுக்கு கொண்டுவந்திடுறது என்று கங்கணம் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு இருக்கேன்.\nஇந்த பாடலை மொழி பெயர்ப்பதற்காக மாயன் கலண்டர், பேயன் டயரி, மொகஞ்சதாரோ ஹரப்பா ஓலைச்சுவடிகள், செத்துப்போன தாத்தாவோட வேட்டிகள் எல்லாவற்றையும் மிகக்கடுமையாக ஆரய்ந்திருப்பதற்கே கலைஞர் தலைமையில் பாராட்டுவிழா எடுப்பீர்கள் என எதிர் பார்க்கிறேன். விழா மேடைக்கு குஷ்பு வரலாமா இல்லையா என்பதை டூலிட்டில் தலைமையில் பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கலாம்\n உங்கப்பன் பெத்த மகளே ஸ்ரேயா....... உங்கப்பன் பெத்த மகளே ஸ்ரேயா.......\nபொருள் : உன் மூக்குக்குள் உன் நாக்கை விட்டு சுத்தம் செய்பவளே\n உன் அக்கா ஷகிலாவை மிஞ்சியவள்\nபொருள் : உனக்கு இருக்கும் ரெண்டு அக்காவுமே சப்ப ஃபிகருங்க\n நஷனல் பெர்மிட் லாரி ஏறி...... ஏறி.......\nபொருள் : செத்துப்போன உங்க ஆயா ஆவியாகி\nபொருள் : மே மாதத்தில் எனது வீட்டருகில் வந்து நின்று ஹீ.... ஹீ... என்று கத்தி கரைச்சல் கொடுக்கிறது.\nபொருள் : அந்த பயம் போக டைகட்டலாமோ அல்லது தைலம் தடவலாமோ சொல் கண்ணே\nபொருள் : ரத்தத்துக்குள் வந்த எலிக் காய்ச்சல் நீயடியோ\n மஹ ஸீயா.... ஓ மஹ ஸீயா......\nபொருள் : சிரங்குவந்த கையாலே நீ அரைச்ச சம்பல் சாம்பலா போனாலும்\n நீ சாய மாட்டியோ சாய மாட்டியோ\nபொருள் : ஹசிலிகூடவும் பிசிலி கூடவும்\nபொ��ுள் : எனக்கு கள்ளத்தொடர்பு இல்லன்னு சொன்னதுக்கு அப்புறமும்\nபொருள் : நான் ஜப்பான்ல வாங்கில ஜிப்பாவ எதுக்காக கிழிச்ச\nபொருள் : தைலம் தடவினாலும் டைகட்டி செண்ட் அடிச்சாலும் விளக்காத உன் பல்லோட நாத்தம் மட்டும் போகாது.\nபொருள் : இங்க வந்து பாருடா\nபொருள் : எசக்கி பொண்ண்ட்டாட்டி மொக்கராசு கூட ஓடி போறாடா...,......\nபொருள்: பூம் பூம் மாட்டுகாரன் கூட ஜல்சா பண்ணும் போதே நெனச்சண்டா.......\nபொருள் : மொக்கராசு மூக்கால அழுவான்னு.........\nபொருள் : கொய்யாத் தோப்புக்குள்ள கொண்டுபோவானோ......\nலாலக்கு லாலக்கு டோல்டப் பீமா\nபொருள் : பேட் லக்கு பேட் லக்கு டோமரு பீமா பட விக்ரம் மாதிரியே சாகப்போறான்\nமே ஹீ... மே ஹீ....\nடிஸ்கி 1: இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஆய்வுமுயற்சிக்கு பக்கபலமாய் இருந்த அல்லது பக்கா பலமாய் இருந்த பக்கத்து வீட்டுக்காரனின் ரெண்டாவது மகளுக்கும், ஆய்வின் போது எங்குதேடியும் கிடைக்காத அரிய புத்தகங்களையெல்லாம் தேடித்தந்த எங்கள் தெருவின் சொறிநாய் பீகிளுக்கும் எனது நன்றிகள்.\nடிஸ்கி 2: இந்த மொழிபெயர்ப்பு முழுப்பதிப்புரிமை உடையது. மொத்தமாகவோ , சில்லறையாகவோ வாங்கவோ விற்கவோ முடியாது. எனது மறைவுக்கு பின்னால் இந்த மொழிபெயர்ப்பை பதிப்பு செய்யும் உரிமை ஒக்ஸ்போர்ட் நிறுவனத்தாருக்கும் முன்வீட்டு முனிம்மாவுக்கும் மட்டுமே உரியது.\nடிஸ்கி 3: தமிழ் வளர்த்த என்னை வாழ்த்து \"ஏதாவது கொடுக்க\" நினைப்போர் இந்த அரிய முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த எனது நண்பர்களான JZ கோபிநாத் , டூலிட்டில், சரவணா ஆர்.எஸ்.கே, தினகரன் ரேனுகா ஆகியோருக்கு கொடுக்கவும். எனக்கு பாராட்டும் மாலையும் மட்டும் போதும்.\nடிஸ்கி 4: பதிவோட முடிவில செமத்தியான ஒரு ஆண்டியோட படத்த போட்டிருக்கான்டா என்று \"ஜொள்\" மற்றும் இன்ன பிற நொதியங்களை ஊத்திய அனைவரும் துடைத்துக்கொள்ளுங்கள். அந்த படத்தில் இருக்கும் நபர் வேறு யாருமல்ல. பாடசாலை படிக்கும் போது மாறுவேட போட்டியில் தோன்றிய சச்சின் டெண்டுல்கர்.\nநான் இத பாக்கல :P\nஆனா நீங்க வந்து போனதை நான் பாத்துட்டேன் தல\nரணகளத்திலும் ஒரு குதுகலமான பதிவு நண்பரே.\n//பத்து ரூவா காசுக்கு \"ஆள் பிடிச்சு அனுப்பும் படலம்\" திட்டத்தின் கீழ் முகநூல் நண்பர் சரவணா// சரவணா இதைப்பற்றி சொல்லவே இல்லை. லாபம் அதிகமோ\n//\"ஓ மஹ ஸீயா.........\" என்ற பாடலை தமிழில் மொழியாக்கம் செய்து இந்த வருட இலக்கியத்துக்காக நோபல் பரிசை ரெண்டு மூட்டையில கட்டி வீட்டுக்கு கொண்டுவந்திடுறது// இதை மொழி பெயர்த்த உங்களுக்கு உலகத்தில இருக்கிற எல்லா விருதையும் மூட்டையா கட்டி உங்க வீட்டுக்கே இலவசமா அனுப்பலாம். தப்பே இல்ல. பாட்ட எழுதினவன் கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டான்.\n//கலைஞர் தலைமையில் பாராட்டுவிழா எடுப்பீர்கள் என எதிர் பார்க்கிறேன்.// கலைஞர், அந்தாளு அடுத்தவங்களுக்கு பாராட்டு விழா எடுத்து பழக்கம் இல்லையே. அவருக்கு அவரே பாராட்டு விழா நடத்திக்கிறதுதானே வழக்கம்.\n///சரவணா இதைப்பற்றி சொல்லவே இல்லை. லாபம் அதிகமோ\nஇல்லாம பின்ன தலைக்கு பத்து ரூபா அது போக காலுக்கு கைக்கு கிட்னிக்குன்னு தனி தனி ரேட்டு அது போக காலுக்கு கைக்கு கிட்னிக்குன்னு தனி தனி ரேட்டு மனுஷர் ரொம்ப லம்பா சம்பாதிக்கிறார். இதைத்தான் இணையத்தில் சம்பாதிப்பது எங்கிறது.\n///இதை மொழி பெயர்த்த உங்களுக்கு உலகத்தில இருக்கிற எல்லா விருதையும் மூட்டையா கட்டி உங்க வீட்டுக்கே இலவசமா அனுப்பலாம். தப்பே இல்ல. பாட்ட எழுதினவன் கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டான்.////\nநான் புகழ், பணம் , பதவிய எதிர்பாத்து இந்த இலக்கிய சேவைய செய்யல ஆனா அவங்களாவே வந்து அடுத்த அமேரிக்க அதிபர் நீங்க தான்னு சொன்னா என்னால தட்ட முடியாது பாருங்க\n/////கலைஞர், அந்தாளு அடுத்தவங்களுக்கு பாராட்டு விழா எடுத்து பழக்கம் இல்லையே. அவருக்கு அவரே பாராட்டு விழா நடத்திக்கிறதுதானே வழக்கம்.////\nஒரு சேஞ்சுக்காக நாம இப்பிடி பண்ணித்தான் பாப்போமே அது போக \"கலைஞரது வாழ் நாளிலேயே முதன்முறையாக\" அப்டீன்னு சன் டீவில வேற வெளம்பரம் பண்ணிடலாம் இல்ல அது போக \"கலைஞரது வாழ் நாளிலேயே முதன்முறையாக\" அப்டீன்னு சன் டீவில வேற வெளம்பரம் பண்ணிடலாம் இல்ல\n//அப்பிடியாக ஒரு பிரபல பதிவராக ஆகிவிட்ட நான் //\nதல ஆகிபோச்சு , அது பிரபல பதிவர் இல்ல, ப்ராப்ள பதிவர்\nகடகம் புற்றின் மூலம்'ன்னு ரெண்டு பதிவ போட்டுபுட்டு காணாம போனவன் எல்லாம் இந்த பிரபல பதிவரோட பிளாக்குக்கு வரவே கூடாது. எங்கேய்யா \"தி நாய் ஸ்டோரி\" நீரெல்லாம் ஒரு மனுசரு நீர் தான் ஓய் பிராப்ள பதிவரு\nஉனக்கே தெரியும் நண்பா , குஞ்சாக்கோ செத்த சொகத்துல இருந்து நான் இன்னும் மீள வில்லை\n நீ ஒரு திறமையான கதாசிரியன், ஆகவே அந்த சோகத்தையும் சுகமாய் மாற்றும் ஒரு பதிவை உடனடியாக எழுதும்படி அன்புக்கட்டளை இடுகிறேன்.\nபல்லேலக்கா பாடல் உருவான விதம் பற்றி சொல்ல மறந்துட்டியே தல ..\nஒரு முறை சேலம் அருகில் ரஜினி படப்பிடிப்பின் போது ஏலக்காய் ஒன்றை மென்று கொண்டிருந்தார் , அந்த ஏலக்காய் அவரது பல்லில் மாட்டி கொண்டது , உடனே படக்குழுவினர் அந்த ஏலக்காயை நீக்குவதர்க்காக எந்த மருத்துவமனை செல்லலாம் என்று விவாதித்தனர் , ஒருவர் சேலம் செல்லலாம் என்றார் , இன்னொருவர் மதுரை என்றார் . தயாரிப்பாளர் பேசாம் மெட்ராஸ் திருச்சி போன்ற பெரிய நகரத்திற்கு செல்லலாம் என்றார் , இந்த சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு உருவாக்கப்பாது தான் பல்லில் ஏலகாய் என ஆரம்பிக்கும் இந்த பாடல்\nஆமா இது வரலாற்றுக்கு ரொப்ம முக்கியம். சம்மந்தமே இல்லாத இடத்தில வந்து சமந்தமே இல்லாம மொக்க மட்டும் போடத் தெரியுது ஒழுங்கா உக்காந்து ரெண்டு மூணு போஸ்ட் போட துப்பு கெடையாது. இன்னும் ரெண்டு நாளுக்குள்ள தி நாய் ஸ்டோரி வரல , அப்புறம் நான் வெறிநாய் ஆயிடுவேன்\nமுக்காலா முக்கா புல்லா லைலா\nமுக்காலா - முக்காலமும் உணர்ந்தவனே\nமுக்கா புல்லா - முக்காலமும் புல்லாக (fully - முழுவதுமாக ) உணர்ந்தவனே\nலைலா - பொய்யே இல்லாதவனே ( lie இல்லா ) ... இறைவனே\nநீங்கள் சொல்வது போன்ற கருத்து ஒன்று மாயன் கலண்டரில் சில இடங்களில் இருக்கிறது , ஆனாலும் குறித்த பாடலில் நான் குறிப்பட்டது போல தான் கருத்து வரும் என்று மூத்திர சந்தில் நான் கண்டெடுத்த ஓலைச்சுவடி கூறுகிறது. இதனை முனைவர் மண்ட கசாயமும் ஒத்துக்கொண்டுள்ளார்.\nஇது இப்போவாவது அவுழ்ந்துச்சேன்னு சந்தோஷ படுவியா\n*காஜல் அகர்வாலோட போட்டோவ பாத்ததும் வேற ஏதோ அவுழ போவுதுன்னு விழுந்தடிச்சு வந்தியாக்கும்.....\nஎன்ன அண்ணே பதிவு புடிக்கலியா lolன்னு குலச்சிட்டு மட்டும் போய்ட்டீக lolன்னு குலச்சிட்டு மட்டும் போய்ட்டீக ( சும்மா வெளாட்டுக்கு சொன்னேண்ணே கோவிக்காதிக ( சும்மா வெளாட்டுக்கு சொன்னேண்ணே கோவிக்காதிக) இப்போ நான் குலைக்கிறேன் Lol. ஹி...ஹி....ஹி.... வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிண்ணே\nமச்சி எப்பிடி உன்னால மட்டும் முடியுது. யாரு சொல்லாட்டியும் பரவாயில்ல நான் சொல்லுறன் நீ பிரபல பதிவர்தான்டா. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப்போச்சு. டாக்டர் டூலிட்டில கூப்பிடு\n நேரம் இருக்க��ம் போது வா ஏதோ நாலஞ்சு சில்லற காசு தாறேன்.ஹி...ஹி...ஹி..... அது சரி இங்க எதுக்கு மச்சி நம்ம டாக்டர பஞ்சாயத்துக்கு இழுக்குற\nபிளீஸ்.. படிக்கிறதோட மட்டும் நிறுத்திக்கோங்க...\nஎனக்கு பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், நடுநவீனத்துவம் எதுவுமே தெரியாது என்பதால், நான் உணர்வதை, எனக்கு தெரிந்ததை மட்டுமே எழுதுகிறேன் எனக்கு தெரியாததை , நான் தவறவிட்டதை, தவறுகளாக விடுபவைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால், அவை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் கைகட்டி வாய் பொத்தி ஐம்புலனும் அடக்கி கேட்டுக்கொள்வேன் எனக்கு தெரியாததை , நான் தவறவிட்டதை, தவறுகளாக விடுபவைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால், அவை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் கைகட்டி வாய் பொத்தி ஐம்புலனும் அடக்கி கேட்டுக்கொள்வேன்\nபெத்த மகளை விற்கும் அப்பன்கள்\nசரவணன் மீனாட்சி சாந்திமுகூர்த்தமும் விஜய் டி.வியில...\nமாசம் பூரா மனுச இறைச்சி உண்மைச் சம்பவம்\nவெள்ளைக்காரனுக்கு மட்டுமே பல்லக்கு தூக்கும் தமிழ்...\nஇருபதுவருட தமிழ்சினிமா மர்மம் அவிழ்ந்தது\nமொக்கையை மெனக்கட்டு வாசிச்ச புண்ணியவானுங்க..\nஇன்னுமா இந்த உலகம் என்ன நம்பிக்கிட்டு இருக்கு\nஇது ஒண்ணும் செய்வின இல்ல சார் பையன் இன்னிக்கு கே. டீவில டாக்டரோட \"சொறா\" படம் பாத்திட்டாப்ல... கொஞ்ச நேரத்தில சரியாயிடும் பையன் இன்னிக்கு கே. டீவில டாக்டரோட \"சொறா\" படம் பாத்திட்டாப்ல... கொஞ்ச நேரத்தில சரியாயிடும்\nகுஷ்புவின் இடுப்பை கிள்ளியது யார்\nஉலகின் மிகப்பெரிய ஜனனாயக நாட்டில் இப்படியொரு கொடூரமா ஐயகோ நெஞ்சு பொறுக்கவில்லையே , அதுவும் கலாசாரம் , பண்பாடு என்றால் என்னவெ...\n வலிக்கும்டா ஒரு சில ஜந்துக்கள் இருகுதுங்க இந்த உலகத்தில ஓவர் நைட்ல புகழ் வ ந்துட்டா போதும், தாங்க எப்பிடி இருந்தோம்...\nமுகமூடி வி.ஐ.பி ஷோவுக்கு அழைத்த அதே குழு சூர்யாவின் \"மாற்றான்\" திரைப்படத்துக்கான வி.ஐ.பி ஷோவுக்கும் அழைத்திருந்தது\nகலைஞர் டி.வி தீர்மானித்த தமிழ் சினிமாவின் எதிர்காலம்\nமுகமூடி சினிமா விமர்சனம் - பிரீமியர் ஷோ\nஅப்பிடி இப்பிடி என்று ஒரு மாதிரியாக நேற்று முகமூடி திரைப்படத்தை பிரீமியர் ஷோவுக்காக திரையிட்டார்கள். படத்தின் பிரீமியர் ஷோவுக்கான அழைப்பி...\nவிபச்சார வழக்கில் சிக்குமா சன் டி.வி குழுமம்\nஇன்னிக்கும் மணி சரியா 6 மணித்துளி��ள் 21 நிமிடங்கள் 49வது செக்கனகள் , துலா வருடம், கப்பி மாதம் சரியாக எம கண்ட நேரத்தில் சன் தொலைக்காட்சிய...\n என்னோடு சேர்த்து நாலைந்து நாய்களும்\n\"உன்ட அண்ணனுக்கு இப்ப தான்டா இருபத்தொரு வயசாகுது.... அதுக்குள்ள கலியாணமா\" \" என்னடா செய்யிறது\" \" என்னடா செய்யிறது அந்த பண்ணயாரிட ஆளுகளுக்கு ,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://planetjai.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-19T11:58:10Z", "digest": "sha1:S3OWISRZKUJXUB6IUMTOJMWSFHDRG3YD", "length": 16008, "nlines": 355, "source_domain": "planetjai.blogspot.com", "title": "Jayavel Chakravarthy Srinivasan's Blog: குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்?", "raw_content": "\nகுட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்\nகாலையில் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் அள்ளிவிழுங்கி விட்டு ஓடும் குழந்தைகள் மதிய உணவுக்கு எதையாவது டப்பாவில் அடைத்துக்கொண்டு போய் ஆறிப்போன உணவுகளை விருப்பமில்லாமல் சாப்பிட்டு வருகின்றனர். மாலையில் விளையாடும் ஆர்வத்தில் சரியாக சாப்பிடுவதில்லை. மேலும் இன்றைய குழந்தைகளுக்கு பீட்ஸாவும், பர்கரும், கார்பனேட் அடங்கிய குளிர்பானங்களும் வழங்கப்படுகின்றன. இதனால் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் பெரும்பாலான குழந்தைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கு வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கிய உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது குழந்தைகள் நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.\nவைட்டமின் சத்து குறைபாடினால் குழந்தைகள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக வைட்டமின் ஏ குறைபாடினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. எனவே வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள பச்சைக் காய்கறிகள், கேரட், மாம்பழம், பப்பாளி, மீன், ஈரல், முட்டையின் மஞ்சள் கரு, முருங்கைக்காய் போன்றவற்றை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கவேண்டும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் தோல், நரம்பு மண்டல பிரச்சினைகளை போக்க வைட்டமின் பி சத்து அவசியம். வைட்டமின் பி1, பி2, பி3, மேலும் பி6 போன்றவை அதிகம் உள்ள தானியங்கள், பச்சைக் காய்கறிகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும்.\nவைட்டமின் சி சத்து குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது. இது தோலின் நலத்திற்கும், ஸ்கர்வி என்ற நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை, கொய்யா போன்ற உணவுப் ப��ருட்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. எனவே இதுபோன்ற பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு கால்சியம் சத்து கிடைக்கச் செய்வதில் வைட்டமின் டி சத்துக்கு முக்கிய பங்கு உண்டு. இது எலும்புகள் மற்றும் பற்களில் குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது. இந்த வைட்டமின்கள் முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படுகின்றன. சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. எனவே குழந்தைகளின் உடம்பில் சூரிய ஒளி படச்செய்வதின் மூலமும் அவர்களுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும்.\nஇரும்பு சத்து, தாது உப்புகள்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு இரும்புச்சத்தும், தாது உப்புகளும் அவசியமாகும். இரும்புச்சத்தும், போலிக் அமிலமும் ரத்த சோகையை தடுக்க உதவும். எனவே தானியங்கள், பச்சை காய்கறிகள், இறைச்சி, முட்டை பால், ஈரல் போன்றவற்றை அதிகம் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.\nகால்சியமும், பாஸ்பரசும் உறுதியான பற்களுக்கும், எலும்புகளுக்கும் தேவையானதாகும். எனவே பால், பால் உணவுப் பொருட்களில் அதிகம் காணப்படுகிறது. தக்காளியில் கால்சியமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.\nஅயோடின் தாது உப்பு குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு ஏற்றது. அதேபோல் ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஏற்றது. இந்த சத்துக்கள் பால், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே இந்த வகை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது குழந்தை நல மருகள்த்துவர்களின் அறிவுரையாகும்.\nகுட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://tamilamudam.blogspot.com/2013/10/blog-post_26.html", "date_download": "2018-07-19T11:26:25Z", "digest": "sha1:H2ANETGLZ4KBALEPG5ON5T47X3TBD3PT", "length": 23572, "nlines": 486, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: யுகமாய் நீ - நவீன விருட்சத்தில்..", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nயுகமாய் நீ - நவீன விருட்சத்தில்..\nகூட்டை உடைத்துக் கொண்டு நீ\nவெளியில் வரக் கேட்டுக் கொண்டது\nவரலாற்றின் ஒரு காலக் கட்டம்\nதயக்கங்கள் உதறிச் சிறகுகள் விரித்து\nஉயர உயரப் பறந்து பொழுது\nமுகில்களுக்குப் பின் ஒளிந்து கொண்டது\nவீதியில் இறங்கி நீ நடக்கையில்\nஏனென ஏறிடும் உன் விழிகளை\nஎதிர்கொள்ள இயலாமல் நிலவு தகிக்க\nதாங்கிப் பிடிக்கக் கீழே வலையற்ற\n24 அக்டோபர் 2013, நவீன விருட்சம் மின்னிதழில்..,\nஓவியம் - நன்றி: முரளிதரன் அழகர்\nLabels: ** நவீன விருட்சம், கவிதை, கவிதை/சமூகம், சமூகம்\nதலைப்பிற்கேற்ற பொருத்தமான வரிகளும் படமும் அருமை \nசெழித்து வேர் விடும் முன்னரே\nவலி நிறைந்த வரிகள் மனதைச்\nசிலிர்க்க வைத்தன வாழ்த்துக்கள் அம்மா .\nஇனிய கவிதை வரிகள் இனியும் தொடரட்டும் .\nநவீன விருட்சத்தில் வெளி வந்தமைக்கு வாழ்த்துகள்.\nஏனென ஏறிடும் உன் விழிகளை\nஎதிர்கொள்ள இயலாமல் நிலவு தகிக்க\nகவிதையின் வரிகளும் அதற்கான படமும் அருமை அக்கா...\nயுகமாய் நீ கவிதை கலங்க வைக்கிறது.\nமலர் போனற சிறுமியர்களின் நிலை கண்டு முகிழ்ந்த கவிதை.\nநவீன விருட்சத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.\nகவிதைக் கருவும் சொல்லிச் சென்ற நேர்த்தியும்\nநவீன விருட்சத்திலும் படித்தேன்.... இங்கே மீண்டும் ஒரு முறை படித்து ரசித்தேன்.\nபுது யுகமாய் புது வெள்ளமாய்\nஅழுக்கை அடித்துச் சென்ற பிறகு தோன்றிய புதுமைப் பெண் இனியாவது நலம் பெறட்டும்.\nஅற்புதக் கவிதை படைத்த ஞானமகள்\nஅருமை. வக்கிர மனங்களின் பொறாமையை மீறி இன்னமும் கூட செழித்து வளர வேண்டும்.\nஅருமையான கவிதை... படமும்... வாழ்த்துக்கள்...\nபெண்ணியத்திற்குப் பெருமை சேர்க்கும் கவிதை - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை\nஅருமையான கவிதை. பாராட்டுக்கள். புகைப்படக் கலைதவிர கவிதை எழுதுவதும் உங்கள் கை வண்ணத்தில் பரிமளிக்கிறது. வாழ்த்துக்கள்.\nஉங்கள் கவிதையும் புகைப்படம்போல அருமை\nநவீன விருட்சத்தில் அளித்திருக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.\nநல்வாக்கின்படியே ஆகட்டும். நன்றி ஸ்ரீராம்.\nநன்றி, விருட்சம் மின்னிதழில் அளித்திருந்த கருத்துக்கும்.\nநல்ல கவிதை நல்ல ஓவியம் வாழ்த்துக்கள்.\nபெண்களின் பிரத்யட்ச நிலையை மனதில் பதிக்கிறது கவிதை\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ��கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nகல்கி தீபாவளி மலர் 2013-ல்.. - ‘நீங்கதான் என்னோட ஃ...\nயுகமாய் நீ - நவீன விருட்சத்தில்..\nகல்யாணம் கச்சேரி கொண்டாட்டம்.. - அக்டோபர் PiT\n\"மறக்கவே முடியாத ஜெயிண்ட் வீல்...\" - சுகா\nகுழந்தைப் பருவம் - ஆங்கிலக் கவிதை\nநெல்லை ‘அரசுப் பொருட்காட்சி’ - படங்கள் 25\nமகிழ்ச்சியும் துயரமும் - கலீல் ஜிப்ரான் (1)\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (31)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=117681", "date_download": "2018-07-19T11:23:49Z", "digest": "sha1:KY3VW4I3DBLFMCNV4M76NWJLANI2QWHZ", "length": 9612, "nlines": 72, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபார்சிலோனா 25-வது முறையாக லா லிகா சாம்பியனானது; மெஸ்சி ஹாட்ரிக் கோல் - Tamils Now", "raw_content": "\nடெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் திறக்கிறார் காவேரி ஆணையம் என்ன செய்கிறது காவேரி ஆணையம் என்ன செய்கிறது - மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின் - நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு - மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின் - நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு மத்திய மந்திரி பொறுப்பற்ற பேச்சு - ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்; உண்மையை மறைக்க விரும்புகிறது பாஜக மத்திய மந்திரி பொறுப்பற்ற பேச்சு - ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்; உண்மையை மறைக்க விரும்புகிறது பாஜக ராகுல் ட்விட் - அம்பேத்கர் நூலகம் அமைக்க முழக்கமிட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: ஜேஎன்யூ நிர்வாகம்\nபார்சிலோனா 25-வது முறையாக லா லிகா சாம்பியனானது; மெஸ்சி ஹாட்ரிக் கோல்\nபார்சிலோனா அணி லா லிகா கால்பந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2017-18 சீசனில் அந்த அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வீறுநடை போட்டு சென்றுக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய லா லிகா டைட்டிலை வெல்ல போதுமான புள்ளிகள் இருந்த போதிலும், அதிகாரப்பூர்வமாக கைப்பற்ற ஒரு வெற்றி தேவையிருந்தது.\nஇந்நிலையில்தான் பார்சிலோனா டெபோர்டிவோ அணியை நேற்று நள்ளிரவு எதிர்கொண்டது. ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் டெம்பெலே கொடுத்த பந்தை பிலிப்பே கவுட்டினோ கோலாக மாற்றினார். பின்னர் 37-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் டெபோர்டிவோ அணியின் லூகாஸ் பெரேஸ் ஒரு கோல் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது.\n2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், 63-வது நிமிடத்தில் டிபோர்டிவோ அணியின் எம்ரே கோலக் கோல் அடிக்க ஸ்கோர் சமநிலைப் பெற்றது. அதன்பின் 81 மற்றும் 84-வது நிமிடத்தில் சுவாரஸ் கொடுத்த பந்தை மெஸ்சி அடுத்தடுத்து கோலாக மாற்றினார். மெஸ்சியின் ஹாட்ரிக் கோலால் பார்சிலோனா 4-2 என வெற்றி பெற்றது. இந்த வெற்றிய��டன் 34 போட்டிகளில் 86 புள்ளிகள் பெற்றி பார்சிலோனா சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. இதன்மூலம் 25-வது முறை லா லிகா டைட்டிலை வென்றுள்ளது.\n2-வது இடத்தில் இருக்கும் அட்லெடிகோ டி மாட்ரிட் 35 போட்டியில் 75 புள்ளிகள் பெற்றுள்ளது. ரியல் மாட்ரிட் 34 போட்டியில் 71 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.\nபார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிக்கு இன்னும் தாலா நான்கு போட்டிகள் உள்ளது. பார்சிலோனா நான்கில் தோற்று, ரியல் மாட்ரிட் நான்கில் வெற்றி பெற்றாலும் பார்சிலோனா 86 புள்ளிகளுடன், முதல் இடத்தில்தான் இருக்கும். ரியல் மாட்ரிட் 83 புள்ளிகள்தான் பெற்றிருக்கும்.\nஅட்லெடிகோ டி மாட்ரிட் மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 84 புள்ளிகள் பெறும். இதனால் பார்சிலோனாவின் டைட்டில் உறுதியாகியுள்ளது.\nபார்சிலோனா அணி மெஸ்சி ஹாட்ரிக் கோல் லா லிகா கால்பந்து தொடர் லா லிகா சாம்பியனானது 2018-04-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் பார்சிலோனா- யுவன்டஸ் அணிகள் இன்று மோதல்\nதண்டனை தளர்வு: பார்சிலோனா அணியினருடன் பயிற்சியில் இணைந்தார் சுவாரஸ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ஒரு சம்பவத்துக்கு 200-க்கும் மேற்பட்ட வழக்கா\nதெலுங்கு தேச எம்.பியே நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணிக்கிறார்;விலைபோகும் எம்பிக்கள்\nஅம்பேத்கர் நூலகம் அமைக்க முழக்கமிட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: ஜேஎன்யூ நிர்வாகம்\nஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்; உண்மையை மறைக்க விரும்புகிறது பாஜக\nமாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/02/blog-post_13.html", "date_download": "2018-07-19T11:19:31Z", "digest": "sha1:CLP555Q7WP2QWT5UBEHBZTNNJGG2L4FU", "length": 40595, "nlines": 200, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : பாசத்துக்குரிய பங்காளி வடிவேலுவுக்கு ஒரு கடிதம்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வ��்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nபாசத்துக்குரிய பங்காளி வடிவேலுவுக்கு ஒரு கடிதம்\nபத்திரிகையாளர்களுடன் நெருக்கமான அன்பையும் நட்பையும் எப்போதும் வைத்திருக்கும் திரைப் பிரபலங்களில் வைகை ப்புயல் வடிவேலுவும் ஒருவர். அதுவும் \"வாங்க பங்காளி \" என்று அவர் அழைக்கும் அன்பில் யாரும் உருகிப் போவார்கள். அவர் படங்களை இப்போது அதிகம் பார்க்க முடியாமல் இருப்பது ரசிகர்களைபோலவே மீடியாவில் இருப்பவர்களுக்கும் பெரிய வருத்தமே.\nஇப்போது எலி படத்தில் அவர் நடிப்பதாக அறிவிப்பு வந்திருப்பதில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. இன்று வடிவேலு இருக்கும் நிலைக்கு முழுக்க முழுக்க வடிவேலு மட்டும்தான் காரணமே தவிர, வேறு யாரும் இல்லை. அதற்கு சாட்சியான சில சம்வங்களைப் பார்க்கலாம்.\nஇன்று வரைக்கும் வடிவேலுவின் சினிமா வரலாற்றில் அவர் கதையின் நாயகனாக நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசிதான். ஆனால் அதற்கு கதையில் இருந்த தொடர்ச்சியான காமெடி பெரிய பலமாக இருந்தது. அதோடு வடிவேலுவின் வெள்ளந்தியான நடிப்பும் படத்திற்கு பலம் கூட்டியது. ஆனால் இந்த உண்மையை மறந்து படத்தின் இந்த இமாலாய வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்ற எண்னம் வடிவேலுவுக்குள் எழ ஆரம்பித்தது. அங்கிருந்து தொடங்கியது அவரின் திரைச்சரிவு.\nஇந்த தகவல் அந்த நிருபருக்கு போய் அவர் தெனாலிராமன் கதையில் நடித்தால் ஏற்படும் சாதக பாதகங்களை எடுத்துச் சொன்னார். \"அண்ணே முதலில் இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து விட்டு அப்புறம் இந்த படத்தில் நடிக்கலாம். காரணம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை முழுதும் எனக்கு தெரியும். முதல் பார்ட்டை விட அசத்தலான காமெடி இருக்கு. இப்போ தெனாலிராமன் வந்தால் புலிகேசி மாதிரி இல்லைன்னு ஒரு பேச்சு வரும். காரணம் தெனாலிராமன் கதை சின்ன குழந்தைகள் வரைக்கும் படிக்கும் பாடமாக பள்ளிக்கூடத்தில் இருக்கிறது. அதனால் சுவராஸ்யம் குறைவாக இருக்கும். அதனால் புலிகேசி 2-ல் நடித்தால் இன்னும் பெரிய வெற்றி கிடைக்கும். அதன் பிறகு வேண்டுமானால் தெனாலிராமனில் நடிக்கலாம்... இப்போது தெனாலிராமன் தோற்று விட்டால் மீண்டும் நீங்கள் சரித்திரப் படத்தில் நடிக்க முடியாமலே போய் விடும்\" என்று சொல்லியும் சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தெனாலிராமனில் நடிக்க ஒப்புக்கொண்டார். படம் வெளிவந்தவுடன் வடிவேலுவின் பக்கத்தில் இருக்கும் நண்பர்களே அந்த நிருபருக்கு போன் செய்து \"அண்ணே நீங்க சொன்ன் மாதிரியே நடந்து போச்சுண்ணே... நல்லது சொன்ன கேடக் மாட்டேங்குறாரேண்ணே\" என்று வருத்தப்பட்டார்கள் என்பது வைகை புயலுக்கே தெரியாத உண்மை. இப்போது அதே கதாநாயக கனவுடன் எலி படத்தை அறிவித்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற்று மீண்டும் அவர் கோடம்பாக்கத்தில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் நமது ஆசை. ஆனால் அவர் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உணர மறுக்கிறார். அவரை ரசிகர்கள் பல வித கெட்டப்புகளில் ரசித்து கைத்தட்டியது எல்லாமே சிறு முதலீட்டுப் படங்களில் கதைக்கு இடையில் அவர் செய்த காமெடி வேடங்களைத்தான். அது மாதிரியான கேரக்டர்களைத்தான் மக்கள் ரசிக்க விரும்புகிறார்களே, தவிர அவர் ஹீரோவாக வந்து பஞ்ச் டயலாக் பேசும் காட்சிகளை அல்ல. இந்த உண்மையை எலி படமும் அவருக்கு உணர்த்தும். என்.எஸ்கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் என்று எத்தனையோ காமெடி ஜாம்பவான்கள் மக்களை சிரிக்க வைப்பதிலும் திரையுலகிற்கு தங்களை அர்ப்பணிப்பதிலும் மட்டும்தான் கவனம் செலுத்தினார்களே தவிர, பாவம் எல்லோரும் சம்பாதிப்பதில் கோட்டை விட்டனர். ஆனால் அவர்கள் இந்த உலகில் இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் குடியிருக்கிறார்கள். வாழும் காலத்திலேயே புகழ் மங்கிப் போய் விடாமல் நாளை நாமும் எப்படி நினைவு கொள்ளப்பட வேண்டும் என்பதை இன்று நாம் நடந்து கொள்வதுதான் தீர்மானிக்கிறது என்பதை பாசத்திற்குரிய பங்காளி புரிந்து கோள்ள் வேண்டும் என்பதே நமது ஆசை. வீழ்ச்சிக் காலம் முடிந்து திரையுலகில் அவர் ஆட்சிக் காலம் மீண்டும் தொடங்கட்டும் # -தேனி கண்ணன்\" class=\"_46-i img\" height=\"360\" src=\"https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s480x480/10686877_776321165754418_6406134379077383470_n.jpg\nஅந்த அதீத நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படம். ஆனால் அந்த படம் எடுக்கத் தொடங்கியதிலிருந்து இயக்குனராக தம்பி ராமையாவிற்கு வடிவேலு மூலம் கொடுக்கப்பட்ட நெருக்கடி தலையீடுகள் எண்ணிலடங்காதவை. காமெடியாக உருவாக்கப்பட்டிருந்த முழுக்கதையையும் மாற்றி தன்னை ஒரு ஹீரோவாகவே காட்ட வேண்டும் என்று பெரும் நெருக்கடி கொடுத்தார் வடிவேலு. ஆனால் தம்பி ராமையா 'பங்காளி முழு ஹீரோவாக நீங்கள் நடித்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். காமெடியனாக இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்' என்று சொல்லியும் அவரின் தலையீட்டால் படம் பப்படம் ஆனது. பெரும் கேலிக்குள்ளானது. இதில் பாதிக்கப்பட்டது வடிவேலு அல்ல. மீண்டும் தனக்கு இயக்குநராக வாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் படமெடுத்த இயக்குநர்தான் பாதிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு வடிவேலு சிங்கமுத்து பஞ்சாயத்து பரபரப்பானது. ஒட்டு மொத்த மீடியாக்களும் வடிவேலுவுக்கு ஆதராவாகத்தான் இருந்தன. தனக்கு நெருக்கமான வார இதழ் நிருபரிடம் வடிவேலுவே \"பங்காளி நீங்க எழுதுன பேட்டிதான் எனக்கு பெரிய உதவியா இருந்துச்சு\" என்று மனம் திறந்து கூறினார். அப்படியிருந்த வடிவேலு அடுத்த செய்த தவறுதான் அவரின் சினிமா வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றி விட்டது. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த நெருக்கமான நிருபர் அவருக்கு போன் செய்து \"அண்ணே கொஞ்சம் யோசிங்கண்ணே.. கலைஞர்களுக்கு அரசியல் தேவையில்லைண்ணே. இப்போதைக்கு கூட்டம் கூடுவதைப் பார்க்கும்போது சின்ன சபலம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதன் முடிவு உங்களை ஏதோ ஒரு கட்சிக்கு எதிரியாக உட்கார வைத்து விடும்\" என்று சொன்னார். ஆனால் அதைக் கேட்கும் நிலையில் வடிவேலு இல்லை.\nஆனால் முடிவு அந்த நிருபர் சொல்லி வைத்தது போலவே அமைந்தது. பாவம் திமுகவின் அரசியல் லாபத்திற்காக தன்னுடைய சினிமா கேரியரை இழந்து நின்றார் வடிவேலு. ஆனால் எந்தக் கட்சிக்காக அவர் தெருத் தெருவாக அலைந்து வாக்குச் சேகரித்தாரோ அந்த கட்சியின் குடும்பத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சினிமாக்களிலும், அந்த குடும்பத்து உறுப்பினரான உதயநிதி தான் நடிக்கும் படித்திலும் சந்தானத்திற்குதான் முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர, தங்கள் கட்சிக்கு பாடுபட்ட வடிவேலுவுக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை.\nஇதுதான் அரசியல் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்து, வடிவேலுக்கு சொல்லியும் அவர் கேட்கவில்லை. ���தன் பிறகும் நடந்த சம்பவங்கள் இன்னும் மோசமானவை. சினிமா கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலுவைப் புறக்கணிக்க ஆரம்பித்தது. அந்த நிலையிலும் அவர் தனக்கான கேரியரைத் தவற விடும் காரியத்தில்தான் இருந்தாரே தவிர, இம்மியளவு கூட தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.\nதன்னைத் தேடி வந்த சில படங்களையும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று நடிக்க மறுத்து திருப்பி அனுப்பினார். அதற்கும் தயாராக இருந்த சிலருக்கு தன்னுடைய சம்பளமாக பல கோடிகளைக் கேட்டு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி அனுப்பி வைத்தார்.\nஅப்போதும் அவருக்கு நெருக்கமான அந்த பத்திரிகையாளர் மீண்டும் அக்கறையோடு \"அண்ணே எனக்கு ஒரு ஐடியா தோணுது.. நீங்கள் புலிகேசி படத்தோட செகண்ட் பார்ட்டில் நடிக்கலாமே\" என்று யோசனை சொல்ல அது அவருக்கு பளிச்சென்று உரைத்திருக்கிறது. \"ஆமா பங்காளி நல்ல ஐடியாவாக் இருக்கு\" என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அங்கும் சம்பளம் பஞ்சாயத்து நடந்தது. ஆனால் அதற்குள் தெனாலிராமன் ஐடியாவை வைத்துக்கொண்டு ஒருவர் வந்து அவருக்கு சம்பளத்தையும் அதிகப்படுத்தி பேச அதற்கு ஒப்புக்கொண்டு விட்டார் வடிவேலு.\nஇந்த தகவல் அந்த நிருபருக்கு போய் அவர் தெனாலிராமன் கதையில் நடித்தால் ஏற்படும் சாதக பாதகங்களை எடுத்துச் சொன்னார். \"அண்ணே முதலில் இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து விட்டு அப்புறம் இந்த படத்தில் நடிக்கலாம். காரணம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை முழுதும் எனக்கு தெரியும்.\nமுதல் பார்ட்டை விட அசத்தலான காமெடி இருக்கு. இப்போ தெனாலிராமன் வந்தால் புலிகேசி மாதிரி இல்லைன்னு ஒரு பேச்சு வரும். காரணம் தெனாலிராமன் கதை சின்ன குழந்தைகள் வரைக்கும் படிக்கும் பாடமாக பள்ளிக்கூடத்தில் இருக்கிறது. அதனால் சுவராஸ்யம் குறைவாக இருக்கும். அதனால் புலிகேசி 2-ல் நடித்தால் இன்னும் பெரிய வெற்றி கிடைக்கும். அதன் பிறகு வேண்டுமானால் தெனாலிராமனில் நடிக்கலாம்... இப்போது தெனாலிராமன் தோற்று விட்டால் மீண்டும் நீங்கள் சரித்திரப் படத்தில் நடிக்க முடியாமலே போய் விடும்\" என்று சொல்லியும் சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தெனாலிராமனில் நடிக்க ஒப்புக்கொண்டார்.\nபடம் வெளிவந்தவுடன் வடிவேலுவின் பக்கத்தில் இருக்கும் நண்பர்களே அந்த நிருபருக்கு போன் செய்து \"அண்ணே நீங்க சொன்ன் மாதிரியே நடந்து போச்சுண்ணே... நல்லது சொன்ன கேடக் மாட்டேங்குறாரேண்ணே\" என்று வருத்தப்பட்டார்கள் என்பது வைகை புயலுக்கே தெரியாத உண்மை.\nஇப்போது அதே கதாநாயக கனவுடன் எலி படத்தை அறிவித்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற்று மீண்டும் அவர் கோடம்பாக்கத்தில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் நமது ஆசை. ஆனால் அவர் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உணர மறுக்கிறார்.\nஅவரை ரசிகர்கள் பல வித கெட்டப்புகளில் ரசித்து கைத்தட்டியது எல்லாமே சிறு முதலீட்டுப் படங்களில் கதைக்கு இடையில் அவர் செய்த காமெடி வேடங்களைத்தான். அது மாதிரியான கேரக்டர்களைத்தான் மக்கள் ரசிக்க விரும்புகிறார்களே, தவிர அவர் ஹீரோவாக வந்து பஞ்ச் டயலாக் பேசும் காட்சிகளை அல்ல.\nஇந்த உண்மையை எலி படமும் அவருக்கு உணர்த்தும். என்.எஸ்கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் என்று எத்தனையோ காமெடி ஜாம்பவான்கள் மக்களை சிரிக்க வைப்பதிலும் திரையுலகிற்கு தங்களை அர்ப்பணிப்பதிலும் மட்டும்தான் கவனம் செலுத்தினார்களே தவிர, பாவம் எல்லோரும் சம்பாதிப்பதில் கோட்டை விட்டனர்.\nஆனால் அவர்கள் இந்த உலகில் இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் குடியிருக்கிறார்கள். வாழும் காலத்திலேயே புகழ் மங்கிப் போய் விடாமல் நாளை நாமும் எப்படி நினைவு கொள்ளப்பட வேண்டும் என்பதை இன்று நாம் நடந்து கொள்வதுதான் தீர்மானிக்கிறது என்பதை பாசத்திற்குரிய பங்காளி புரிந்து கோள்ள் வேண்டும் என்பதே நமது ஆசை. வீழ்ச்சிக் காலம் முடிந்து திரையுலகில் அவர் ஆட்சிக் காலம் மீண்டும் தொடங்கட்டும\nLabels: கட்டுரை, சினிமா, செய்திகள், சென்னை, பிரபலங்கள், விமர்சனம், ஜோக்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமனைவி நிறைமாத கர்ப்பிணி... தவித்த தோனிக்கு உதவிய '...\nஅந்தப் பக்கம் கறுப்பு ஆடு...இந்தப் பக்கம் எலி\nதமிழகம்: அதிரவைக்கும் இளவயது கர்ப்பங்கள்\nஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த வார்த்தை சதி: ஸ்டால...\nசவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனை...\nஉணவ�� பொருளில் கலப்படத்தை கண்டறிய சுலப வழிகள்\n கடும் மன அழுத்தத்தில் கி...\n''பைபிள் எங்களிடம்...நிலம் அவர்களிடம்...குறை சொல்வ...\nபுத்தகம் படிக்க பயணப்படி...கன்னியாகுமரியில் ஒரு ஆச...\nசுகாதாரத்துறை அக்கறை காட்ட வேண்டிய ஒரு முக்கிய பிர...\nபோலி பத்திரத்தை அறிந்து கொள்வது எப்படி\nமுகப்பருவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திருநீற்றுப...\nமாஷா அண்ட் தி பியர்: குழந்தைகளின் குதூகல உலகம்\nசாதனை மனுஷி..... கலங்கவைத்த விதி... கைகொடுத்த கத்த...\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டும், சற்று குழப்பமான அடுத்த...\nபெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..\nசதம், இரட்டை சதம், முச்சதம் அடித்த கிறிஸ் கெயில்.....\nஆண்மையை அழிக்கும் பிராய்லர்: நாமக்கல்லை மிரட்டும் ...\nஅடுத்த 'சிக்ஸ் பேக்' ஹீரோ அஜித்\n15 லட்ச ரூபாய் இந்திய பைக்\nஉங்களது ஒருநாள் எப்படி இருக்க வேண்டும்\nஆஸ்கார் 2015; சிறந்த படம் உள்ளிட்ட நான்கு விருதுகள...\nகிரீன்லாந்துக்கு ஒரு செலவில்லாத இன்ப பயணம்\nஇலங்கை அதிபர் சிறிசேனவை கொல்ல முயற்சி: பரபரப்பு தக...\n110 எல்லாமே III - தான்\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nஉங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்\nசிறந்த படம் உள்பட 4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற...\n'தமிழன் போட்ட பிள்ளையார் சுழி..\n\"ஒரு ஹீரோவை, ஒரே படத்துல காலி பண்ணிட முடியாது\nமனைவி புண்ணியத்தில் தனுஷ் மாதிரி ஆகப்போறேன்: ‘மெட்...\nபோதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்\nதங்கமா வாங்கி குவிக்கிறாங்க... ஆனந்தத்தில் அரசு ஊழ...\nஸ்கூல் அட்மிஷன்: அல்லாடும் பெற்றோர்...அள்ளிக் குவி...\nபிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் இன்று - சிறப்பு பக...\nசளி, இருமலைத் துரத்தும் மிளகு\nவெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்\nஒரே படம்...ஒரே தியேட்டர்...முடிவுக்கு வந்த 1009 வா...\nஇஸ்லாமுக்கு எதிராக நாங்கள் போரிடவில்லை: சொல்கிறார்...\nவில்லனை விரைவில் வீழ்த்தினால் இந்திய வெற்றி நிச்சய...\n12 ஓவரில் ஆட்டத்தை முடித்தது நியூசி.... கிரிக்கெட்...\nஏமாறும் வாடகைத் தாய்கள்... பெண்களின் கண்ணீர் கதை\nகடலில் குளித்த பிஎம்டபிள்யூ... காப்பாற்றிய போலீஸ்\nவாதக்கோளாறுகளை விரட்ட... முடக்கத்தான் சாப்பிடுங்க\n'ஆக்டர் வேண்டுமா... டாக்டர் வேண்டுமா\nஃபேஸ்புக் காதல்: பெண்ணிடம் ஏமாந்த மிஸ்டர் மெட்ராஸ்...\nவிலையோ மலிவு... நோயோ வரவு\nஇன்னொரு மதுரை பாண்டியம்மாள்: கொல்லப்பட்டதாக சொல்லப...\nஉங்கள் அன்பு, ஆதரவுடன் நான் நலமாகவே உள்ளேன்: நடிகை...\nமீண்டும் நடுங்க வைக்கப் போகும் நூறாவது நாள்\nவைஃபை ஆன் செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்\nபாகிஸ்தான் ராணுவத்தை கிண்டலடிக்கிறதா அந்த விளம்பரம...\nஉலகக் கோப்பையை வென்றா விட்டோம்\nபுலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்\nதமிழக ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்\nதினமும் 33 கி.மீ. நடந்து வேலைக்கு செல்பவர்\nபாரம்பரியம் Vs பார்லர் - 2 பொல்லாத பொடுகு... போக்க...\nஒரே போட்டி... பல சாதனைகள்...\nபரிதாபப்பட்ட குடும்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்\nபா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி: ராமதாஸ் அறிவி...\n தடம் மாறும் மாணவிகள்... தடுமாற...\n''முறத்துல புடைக்க தெரிஞ்சாத்தான் பொண்ணு கட்டுவாங்...\nசகாயத்தின் பார்வை இங்கே திரும்புமா: பதற வைக்கும் ...\nமோசடி வழக்கில் பத்திரிகை அதிபர் கைது\nஉலகக் கோப்பை சென்டிமென்ட்ஸ்: நாட்-அவுட் 'பால்'ய நி...\nநித்தமும் பயன்படுத்தலாம் நீலகிரி தைலம்\nமஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும் போட்டோதெரப்பிக் கர...\nபனை ஓலை ரயில்வே கேட் கீப்பர்\nபுதுப்பேட்டை பார்ட் 2 வருமா அஜித் பற்றி உங்கள் கர...\n23 வயதில் ஒரு கேப்டன்\nஇந்தியா- பாகிஸ்தான் 'டாப்' யாரு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ளிய வ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் த���டங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldtamilforum.com/eelam/jaffna-municipal-council-mayor-immanuel-arnold-selected/", "date_download": "2018-07-19T11:21:21Z", "digest": "sha1:RFL6PCKSGEJPRUWRAKH7Z7XGLB2OO36C", "length": 11068, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –யாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 19, 2018 4:51 pm You are here:Home ஈழம் யாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு\nயாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு\nயாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக இமானுவேல்ட் ஆனோல்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மாநகர ஆணையாளர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.\nயாழ் மாநகரசபை பிரதி மேயராக துரை ராஜா ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஈபிடிபி கட்சி சார்பில் போட்டியாளராக களமிறக்கப்பட்ட றெமீடியஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்க கூட்டமைப்பு சார்பு ஆர்னோல்ட் முதல்வராக தெரிவாகியுள்ளார்.\nமுன்னதாக யாழ்.மாநகரசபையின் முதல்வர் தெரிவிற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் கூட்டமைப்பு 18 வாக்குகளையும்,முன்னணி 13 மற்றும் ஈபிடிபி 13 வாக்குகளையும் பெற்றிருந்தன.\nஇந்நிலையில் சமமான வாக்குகளை பெற்றிருந்த ஈபிடிபி சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி றெமீடியஸ் மற்றும் முன்னணி வேட்பாளர் மணிவண்ணன் பெயர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட போது றெமீடியஸ் தெரிவாகியிருந்தார்.\nஇந்நிலையில் பின்னராக ஈபிடிபி சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி றெமீடியஸ் மற்றும் கூட்டமைப்பின் ஆனோல்ட் இடையே வாக்கெடுப்பு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் முன்னணி இவ்வாக்கெடுப்பில் எவருக்கும் ஆதரவளிக்காது நடுநிலை வகிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ஈபிடிபி சார்பில் போட்டியிட இருந்த சட்டத்தரணி றெமீடியஸ் பின்வாங்கியதையடுத்து ஆனோல்ட் முதல்வராகியுள்ளார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதெலுங்கர் ஒருவரை யாழ்ப்பாண துணைத் தூதுவராக இந்திய ... முதல் தடவையாக தமிழர் அல்லாத ஒரு தெலுங்கர் ஒருவரை யாழ்ப்பாண துணைத் தூதுவராக இந்திய அரசு நியமிக்கிறது யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவராக இதுவரை ச...\nபெண் பிரதிநிதித்துவ தேர்தல் நேற்று செயலகத்தினால் வ... பெண் ���ிரதிநிதித்துவ நேற்று தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்டது யாழ்மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சிகள் பெற்ற விகிதாசார ஆசனங்களின் அடிப்படையில் நிய...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள... இலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள்பட 19 பேர் காயம் இலங்கையில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயமடைந்தனர்...\nஇலங்கையில் தமிழர்களுக்காக அரசால் தொடங்கப்பட உள்ள ப... இலங்கையில் தமிழர்களுக்காக அரசால் தொடங்கப்பட உள்ள புதிய தமிழ் தொலைக்காட்சி இலங்கை அரசின் சார்பாக புதிய தமிழ் தொலைக்காட்சி நிலையம் நல்லிணக்க தொலைக்கா...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇரண்டாவது இளங்கோவடிகள் விபுலானந்தர் நினைவு தினம் இன்று ஜூலை 19\nடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள்\nஇலங்கை முல்லைத்தீவில் 500-வது நாளுடன் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நிறுத்தம்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T11:53:25Z", "digest": "sha1:JWVXRJ46XLRAWWTLFXDWCG4TA5V5BF2X", "length": 190532, "nlines": 894, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "சிவாஜி பக்கம் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசிவாஜி கணேசன் பற்றிய பதிவுகள்\nசிவாஜி சகாப்தம் – 1952-இலிருந்து 82 வரை\nதிரும்பிப் பார் திர���ப்படத்தில் சிவாஜியின் நடிப்பு பற்றி எம்ஜிஆர்\nசிவாஜி பற்றி வைரமுத்து எழுதிய கவிதை\nசிவாஜி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை\nசிவாஜி, எம்ஜிஆர், பாரத் விருது\nசிவாஜி நடித்த திரைப்படங்கள் பற்றி விமர்சனங்கள், குறிப்புகள்:\nஅன்பே ஆருயிரே (Anbe Aaruyire)\nஅன்பை தேடி (Anbai thedi), அன்பை தேடி பற்றி சாரதா\nஅந்த நாள் (Andha Naal), அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது\nஅன்னையின் ஆணை விகடன் விமர்சனம் (Annaiyin Aanai)\nதெய்வ மகன் (Dheiva Magan) – விகடன் விமர்சனம்\nடாக்டர் சிவா (Doctor Siva)\nஇரும்புத் திரை (Irumbuth Thirai)\nமனோகரா(Manohara) , விகடன் விமர்சனம்\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai) , ராண்டார்கை குறிப்புகள்\nநான் பெற்ற செல்வம் (Naan Petra Selvam)\nபராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)\nசபாஷ் மீனா (Sabash Meena), சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை\nதங்கப் பதக்கம் (Thangap Pathakkam), விகடன் விமர்சனம்\nதில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்\nதிரும்பிப் பார் (Thirumbip Paar) , திரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர்\nவீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandia Kattabomman), விகடன் விமர்சனம்\nவியட்நாம் வீடு (Vietnam Veedu), விகடன் விமர்சனம், சாரதா விமர்சனம்\n29 Responses to சிவாஜி பக்கம்\n9:25 முப இல் செப்ரெம்பர் 10, 2010\nடி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்\n”வியட்நாம் வீடு ‘ சுந்தரத்தின் ‘கௌரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ‘ கண்ணா நீயும் நானுமா என்ற பாடலைப் பாட வந்த போது,\nபடத்தின் கதை,அந்தப் பாடலைப் பாடப் போகும் கதா பாத்திரத்தின் குண நலன்கள் ,மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதா பாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,\nஇன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதா பாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.\nஅந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.\n‘இன்னும் ஒரு தடவை போடுங்கள்…இன்னும் ஒரு தடவை’…என்று…பல தடவை…திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.\nஇது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது\nகாரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.\nஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை மூடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.\nஇதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர் திலகதின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.\n‘ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன\n…டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.\nபல்லவியில்…ஒரு விதமான பாவம்..ஆக்ரோஷம்…அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி.மற்ற சரணத்தில்…இன்னொரு பரிமாணம்…என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.\nஒரே வரியையே இரண்டு இடத்தில் ‘ரிபீட்’ பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.\nஉதாரணமாக ‘ நீயும் நானுமா’ என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.\nஇப்படியெல்லாம்..அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுகா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்\nநடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும்,ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும் ,தன்னடக்கத்திற்கும் ,சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக் காட்டு.\n9:27 முப இல் செப்ரெம்பர் 10, 2010\nசிவாஜிக்காக முதன் முதலில் எஸ்.பி.பி பாட வந்த போது…\nநடிகர் திலகத்திற்காக முதன் முதலாக\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்த போது …\nஎனக்காக நீங்கள் குரலை மாற்றிப் பாட வேண்டாம்..\nநடிக்கும் போது உங்கள் குரலுக்கு இசைவாக எனது நடிப்பை அமைத்துக்கொள்கிறேன் என்றாராம் சிவாஜி.\nசிவாஜி சொன்னபடி எஸ்.பி.பி. தமக்கே இயல்பான ‘நளினம் கொஞ்சும்’ நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார்.\n��னால் பாடலைக் கேட்ட போது,\nடி.எம்.எஸ்ஸின் குரலைப் போல இந்த புதிய குரல்… அதுவும் மென்மையான குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா\nஎன்று சிலர் சந்தேகப் படவும் செய்தனர்.\nஆனால் அந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்ட போது…\nஎஸ்.பி.பியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தினார் நடிகர் திலகம்.\nசந்தேகப் பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள்.\nபிரமிப்பின் மறு பெயர் தானே நடிகர் திலகம் \nஅந்தப் பாடல் …’சுமதி என் சுந்தரி’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த’ பொட்டு வைத்த முகமோ’.\nகாலப் புயலில் கலைந்து போகாத பாட்டு தீபங்களில் இன்றும் இளமை ஊஞ்சலாடும் இந்தப் பாடலும்…\nபாடல் காட்சியும் ஒரு வசந்த வரலாறு.\n6:36 பிப இல் செப்ரெம்பர் 19, 2012\nஉண்மை தான்…சிவாஜியின் நடை அழகை ரசிப்பவர்கள் இந்த பாடலில் ஒரு புது நடையை பார்க்கலாம்..குனிந்து ஜெயலிதாவின் இடுப்பு அருகில் ஒரு pose கொடுப்பாரே ..அழகு..அத்தனை அழகு\n9:29 முப இல் செப்ரெம்பர் 10, 2010\n‘செய்வன திருந்தச் செய்’ ….சிவாஜி மாண்பு\nநடிகர் திலகம் நடிக்கும் அந்தப் படத்தில் அவர் பாடுவதாக உணர்வு பூர்வமான பாடல் ஒன்று.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வனாதன் அவர்கள் மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார்.\nடி.எம்.எஸ் பாட வேண்டிய பாடல் அது என்பதால்…அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார் மெல்லிசை மன்னர்.\nமெட்டைக் கேட்டுப் பார்த்த போது டி.எம்.எஸ் முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.\nநான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இந்தப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.\nஅது மட்டுமன்றி….இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்து வரக் கூடிய விதத்திலும் இல்லை….எனவே…மன்னிக்க வேண்டும் ..இந்தப் பாடலை என்னால் பாட முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் டி.எம்.எஸ்.\n‘நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது…இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத் தான்…என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்…\nஆனால்…உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப் புலமைக்கும்…குரல் வளத்திற்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும்…\nஎனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும் என்று டி.���ம்.எஸ்ஸிடம் வேன்டுகோள் விடுத்தார் எம்.எஸ்.வி.\n..இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறீர்களோ..என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டி.எம்.எஸ்.\nஆனால்…எம்.எஸ்.வி…தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை.\n‘நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்..இந்தப் பாடலும்..உங்கள் பாடல்களில்…மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத் தான் போகிறது…’என்று சொல்லிய எம்.எஸ் வி…டி.எம்.எஸ்ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.\nபாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.\nபாடலைக் கேட்ட நடிகர் திலகம்…’உடனடியாக படப் பிடிப்பை ரத்து செய்யுங்கள்.இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்…’என்றார்.\nஅவரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்னார்.\n‘மிக மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை உருவாக்கி இருக்கிறார் எம்.எஸ்.வி அவர்கள்.\nடி.எம்.எஸ் மிகவும் அபாரமாக…இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து இருக்கிறார்.\nஇந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன்.\nடி.எம்.எஸ்ஸும், எம்.எஸ்.வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில் எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும்…அதனால் தான் படப் பிடிப்பை ரத்து செய்யச் சொன்னேன்…என்றாராம் சிவாஜி.\nசொன்னது போலவே…அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து…அந்த மெட்டையும்…டி.எம்.எஸ்ஸின் குரலில் உள்ள பாவங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம்…மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.\nஅந்தப் பாடல் எது என்று கேட்கிறீர்களா\n‘சாந்தி ‘ திரைப் படத்தில் இடம் பெற்ற ‘ யார் அந்த நிலவு…ஏன் இந்தக் கனவு\nஅந்தக் காலத்துக் கலைஞரகளின் ஆழ்ந்த தொழில் ஈடுபாட்டுக்கும்…..’செய்வன திருந்தச் செய்’ என்கின்ற தொழில் நேர்த்தியை மதிக்கின்ற மாண்புக்கும்…இந்த சம்பவம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.\n12:39 பிப இல் செப்ரெம்பர் 10, 2010\nநடிகர்திலகத்தின் தொழில் நேர்மை பற்றிய முத்தான மூன்று தகவல்களை, கொத்தாக அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.\nஇன்னும் இதுபோன்ற அபூர்வ தகவல்களை எல்லோரும் அறியத் தா���ுங்கள்.\n3:48 முப இல் செப்ரெம்பர் 13, 2010\nRV…, முடிந்தால், மேற்கண்ட இந்த மூன்று தகவல்களையும் ஒரு தனி பதிவாக போடுங்கள்.\nஅப்போதுதான் எல்லோரும் இதை எளிதில் படிக்க முடியும்.\n11:32 முப இல் செப்ரெம்பர் 23, 2010\nசிவாஜி – 25 (நன்றி : ஆனந்த விகடன்)\nசிவாஜி கணேசன்… இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்…\nசத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், ‘இனி இவர்தான் சிவாஜி’ என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது\nநடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்\n1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த ‘பராசக்தி’யில் ‘குணசேகரன்’ பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு\nசின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை\nகலைஞரை ‘மூனா கானா’, எம்.ஜி.ஆரை ‘அண்ணன்’, ஜெயலலிதாவை ‘அம்மு’ என்றுதான் அழைப்பார்\nவீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே\nதன்னை ‘பராசக்தி’ படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி\nதிருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்\nதமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் ‘வணங்காமுடி\nசிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. ‘ம���ோகரா’ நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது\nதனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்\nசிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்\nஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்\nவிநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்\nசிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. ‘பராசக்தி’ படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்\n‘ரத்தத் திலகம்’ படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி – சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு – ஒரு துப்பாக்கி\nபடப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்\nசிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி\nவிதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்\nதன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்\n‘ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி’ என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன\nஅவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை\nபிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, ‘தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்’ என்று சிவாஜியிடம் சொன்னபோது, ‘டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் ���ான்’ என்றாராம் தன்னடக்கமாக\nபெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். ‘அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்’ – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்\nகிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்\n11:48 முப இல் ஒக்ரோபர் 5, 2010\n*** RV…, முடிந்தால், இதை ஒரு தனி பதிவாக போடுங்கள். ****\nசிவாஜி தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்த வரலாறு\nஇதை பற்றி சிவாஜி சொன்னது :\n1955-ம் ஆண்டு “காவேரி”, “முதல் தேதி”, “உலகம் பலவிதம்”, “மங்கையர் திலகம்”, “கோடீஸ்வரன்”, “கள்வனின் காதலி” ஆகிய 6 படங்களில் சிவாஜி நடித்தார்.\nஇவற்றில் “மங்கையர் திலகம்” மிகச்சிறந்த படமாக அமைந்தது. சிவாஜிக்கு சித்தியாக பத்மினி நடித்தார். இருவரும் நடிப்பில் முத்திரை பதித்தனர். குறிப்பாக பத்மினி, தான் சிறந்த குணச்சித்திர நடிகை என்பதை நிரூபித்தார்.\n“கள்வனின் காதலி” கல்கி எழுதிய பிரபல நாவல். இதில் சிவாஜியின் ஜோடியாக பானுமதி நடித்தார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் வெற்றி படம். மாறுபட்ட வேடங்களில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று சிவாஜி நிரூபித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் இது.\nஇந்த சமயத்தில், சிவாஜிகணேசன் திருப்பதி சென்றார். அது, தி.மு.கழகத்தில் புயலை உண்டாக்கியது. திருப்பதிக்குச் சென்றது ஏன் என்பதை பின்னர் சிவாஜி விளக்கினார். அவர் கூறியதாவது : –\n“நான் திராவிடக் கழகத்திலோ, தி.மு.கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்தது இல்லை. பெரியாருடைய கொள்கைகளையும், அண்ணாவின் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டேன். ஆகையால் அதைப்பிரசாரம் செய்தேன். அந்தக் கொள்கைகளை நான் ஒத்துக்கொண்டேனே தவிர, கட்சி உறுப்பினராக இருந்தது இல்லை.\nஎனது குடும்பம் தேச பக்தியுள்ள குடும்பம். நாங்கள் எல்லாம் தேசியவாதிகள். அதோடு நாங்கள் இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர். மேலும், குடும்பத்தில் எல்லோரும் பக்திமிக்கவர்கள். இவை அனைத்தையும் நான் உதறித் தள்ளிவிடவில்லை. சில பகுத்தறிவுக் கொள்கைகள் எனக்கு சரி என்று பட்டது. அந்தக் கருத்துக்களை படங்கள் மூலம் சொன்னேன். அவ்வளவுதான்.\n1956-ல் ஒரு புயல் வந்து, பல இடங்களில் மக்களின் வா��்க்கை பாதிக்கப்பட்டது. “புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூலித்துக் கொடுங்கள்” என்று அறிஞர் அண்ணா கூறினார்கள். அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். விருதுநகரில், தெருவில் சென்று துண்டை விரித்து, பராசக்தி வசனம் பேசி, பணம் வசூல் செய்தேன். நிறைய பணம் சேர்ந்தது. அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, படப்பிடிப்புக்காக நான் சேலம் சென்றுவிட்டேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.\nஅப்போது, அதிக அளவில் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு அண்ணா ஒரு பாராட்டு விழா வைத்தார். சேலத்தில் இருந்த நான், சென்னையில் இருந்த என் தாயாருக்கு டெலிபோன் செய்து, “இன்று விழா நடக்கிறதே யாராவது எனக்கு அழைப்பு கொடுத்தார்களா யாராவது எனக்கு அழைப்பு கொடுத்தார்களா” என்று கேட்டேன். “இல்லை” என்று என் தாயார் கூறினார்கள்.\nஉடனே நான் சேலத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன். விழாவிற்காக என்னை கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். யாரும் என்னைக் கூப்பிடவரவில்லை. மாலை 6 மணி அளவில் தொடங்கிய பாராட்டுக் கூட்டத்தில் முதன் முதலாக எம்.ஜி.ஆரைக் கூட்டிச்சென்று, மேடையில் ஏற்றி கவுரவித்தார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நான்தான். ஆனால், எம்.ஜி.ஆர். அவர்களை அக்கூட்டத்தில் மேடை ஏற்றிப் பாராட்டுகிறார்கள்.\n” என்று அண்ணா அவர்கள் கேட்டிருக்கிறார்கள். “இல்லை; கணேசன், `வரமுடியவில்லை’ என்று சொல்லிவிட்டார் என்று அண்ணாவிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி, என்னை பாதித்தது. பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன்.\nஅண்ணன் எம்.ஜி.ஆருக்கும், கட்சிக்கும் அப்போது சம்பந்தமே கிடையாது. சின்னப்பிள்ளையில் இருந்து அந்த இயக்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்தவன் நான். என்னை ஒதுக்கி வைப்பதற்காகத்தான் இவ்வாறு செய்தார்கள். இதுதான் உண்மை. நான் பல நாட்கள் வருத்தமாக இருந்தேன். ஒரு நாள் என் நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார். “சிவாஜி ஏன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறீர்கள். திருப்பதிக்கு போய் வரலாம், வாருங்கள்” என்று அழைத்தார்.\nநான் கோவிலுக்கு அதிகம் போனதில்லை. ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். திருப்பதி கோவிலில் அதி��ாலை 4 மணிக்கு “விஸ்வரூப தரிசனம்” என்று ஒரு தரிசனம் உண்டு. அதைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்றெல்லாம் எழுதினார்கள்.\nஎனக்கு ஒரு புகலிடம் தேவைப்பட்டது. ஒரு வழிகாட்டியைத் தேடினேன். அப்போது எனக்கு ஒருவர் கிடைத்தார். அவர்தான் பெருந்தலைவர் காமராஜர். அவருடன் சேர்ந்தேன். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன்.\nஇந்த நிகழ்ச்சியால், எனது திரைப்பட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. “திருப்பதி கணேசா, கோவிந்தா” என்று சிலர் கேலி செய்த நேரத்தில், திருப்பதி ஏழுமலையான் கண் விழித்துப் பார்த்து அருள் புரிந்துவிட்டார்.\nஇதன் பிறகுதான், நான் ஸ்டூடியோவிலேயே 24 மணி நேரமும் தங்கி, மூன்று ஷிப்டாக வேலை செய்தேன். பெற்றோரை, மனைவியை பார்க்கமுடியவில்லை. குழந்தைகளைப் பார்க்கவில்லை. ஸ்டூடியோவுக்கு உள்ளேயே இருந்தேன். நான் நடித்த படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. மக்கள் பாராட்டைப் பெற்று, விருதுகள் வாங்கித் தந்தன.”\n12:34 பிப இல் ஒக்ரோபர் 5, 2010\nதிருநீறு இடாத நடிகர் திலகத்தின் முகத்தை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை\n7:14 முப இல் ஒக்ரோபர் 6, 2010\n*** RV…, முடிந்தால், இதை ஒரு தனி பதிவாக போடுங்கள். ****\nவி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய\nதிராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.\nமாநாட்டில் நடிப்பதற்காக “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார்.\nஇந்த நாடகத்தின் கதைச்சுருக்கம் வருமாறு:-\nசாதாரணக் குடிமகனாக இருந்து பெரிய மன்னனானவன்.\nமராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியபோதிலும், அவன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், அவன் கீழ் சாதி இதனால், காசியில் இருந்து காகப்பட்டர் என்ற பெரிய மதத் தலைவரை அழைத்து வந்து, சிவாஜியை சத்திரியனாக மாற்றுகிறார்கள். அதன்பிறகு தான் அவர் சிம்மாசனம் ஏற, இந்துக்கள் சம்மதிக்கிறார்கள்.\nஇப்படி செல்லும் இந்த நாடகத்தில், சிவாஜியாக எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது.\nஇந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். காங்கிரஸ் அனுதாபியாகவும், பக்தராகவும் இருந்தார். என்ன காரணத்தினாலோ, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நடிக்கவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி அண்ணாவை சந்தித்து, எம்.ஜி.ஆர். தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.\n“திராவிட நாடு” அலுவலகத்தில் தங்கியிருந்த சிவாஜி கணேசன், இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.\nஎனவே, சிவாஜியை அழைத்து, “கணேசா என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா\nஇதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி தன் காதுகளையே நம்பமுடியவில்லை. “என்ன அண்ணா சொல்கிறீர்கள் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. “என்ன அண்ணா சொல்கிறீர்கள் உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா அதுவும் சிவாஜி வேடத்தில்\n“நீ முயற்சி செய்து பார், கணேசா உன்னால் முடியும்” என்றார், அண்ணா.\nமேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, “நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.\nஅவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். “கணேசா வசனத்தைப் படித்தாயா\n” என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார்.\nஅண்ணா சிவாஜியை கட்டித்தழுவி “கணேசா நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே அரிய சாதனை” என்றார். அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.\nதிராவிட கழக மாநாட்டில், “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர். 3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார்.\n“நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா” என்று பாராட்டினார். அத்துடன், “யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்\nசிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, “இந்தப் பையன்தான். பெயர் கணேசன்” என்று அறிமுகம் செய்து வைத்தனர். “சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய் இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி” என்று பெரியார் வாழ்த்தினார்.\nபெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை “வி.சி.கணேசன்” என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் “சிவாஜி கணேசன்” ஆனார்.\n“என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர் ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப்பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜிகணேசன் ஆனேன். `சிவாஜி’ என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்டபிச்சை” என்று சிவாஜிகணேசன் தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.\n8:51 முப இல் ஒக்ரோபர் 6, 2010\nசிவாஜியின் நடிப்புக்கு ஏறக்குறைய சரிசமாய் நடித்து வநதவர் திரு.மேஜர் சுந்தர் ராஜன் அவர்கள். ஆனால் ஏனோ மேஜர் அவர்கள் பிரகாசிக்கவில்லை..அவர் ஓரம் கட்டப்பட்டார் என்பது உண்மையானது..\n11:06 முப இல் ஒக்ரோபர் 6, 2010\n1) சிவாஜியின் நடிப்புக்கு சரிசமமாக மேஜர் நடித்தார் என்பது சரிதானா. சிவாஜி நடித்த எல்லா ரோல்களிலும் மேஜர் நடித்திருக்க முடியுமா. சிவாஜி நடித்த எல்லா ரோல்களிலும் மேஜர் நடித்திருக்க முடியுமா. ஒண்ணும் வேண்டாம். தெய்வமகனில் ‘காதல் மலர்க்கூட்டம் என்று’ டூயட் பாடலுக்கு ஜெயலலிதாவுடன், மேஜரை சற்று கற்பனை செய்து பாருங்கள். மேஜர் அற்புதமான நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எல்லா ரோல்களுக்கும் சூட் ஆகமாட்டார். அதனால்தான், அவரே புத்திசாலித்தனமாக சப்போர்ர்டிங் ரோல்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு நடித்தார்.\n2) ‘மேஜர் பிரகாசிக்கவில்லை’ என்பது இன்னொரு அபத்தம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் குணசித்திர நடிகராகவும், ஏழை மற்றும் பணக்கார அப்பாவாகவும், சில படங்களில் வில்லனாகவு��் கூட கொடிகட்டிப்பறந்தார்.\n3) ‘ஓரம் கட்டப்பட்டார்’… இதுவும் அபத்தமான குற்றச்சாட்டு. எல்லா கதாநாயகர்களாலும், எல்லா இயக்குனர்களாலும் விரும்பப்பட்ட ஒரு நடிகர் அவர். குறிப்பாக அவர் நடித்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் மிகப்பெரும்பாலான படங்களில் வாய்ப்பளிக்கப்பட்டார்.\n1:49 பிப இல் ஒக்ரோபர் 6, 2010\nமேஜர் ஹீரோ இனத்தை சேர்ந்தவர் அல்லர்.Basically அவர் ஒரு நாடக நடிகர்\nபிறக்கும்போதே அப்பா வேஷத்திற்கென்றே பிறந்த சிலருள் அவரும் ஒருவர்\nதமிழில் 1930~2010 வரை தனித்தன்மை பெற்ற சினிமா நடிகர்கள்\nPingback: வி.சி.கணேசன் “சிவாஜி கணேசன்” ஆக மாறிய கதை « அவார்டா கொடுக்கறாங்க\nPingback: சிவாஜி தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்த வரலாறு « அவார்டா கொடுக்கறாங்க\n3:05 முப இல் நவம்பர் 19, 2010\n7:30 பிப இல் நவம்பர் 21, 2010\nசிவாஜி THE BOSS (விகடன் பொக்கிஷம்)\n“சிவாஜி ‘பராசக்தி’யில் நடித்துக்கொண்டிருந்த போதே ‘மனோகரா’ படத் தயாரிப்பு\nவேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்கு நான் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தேன்.\nஅந்தச் சமயத்தில், ‘மனோகரா’வில் கே.ஆர்.ராமசாமியை மனோகரனாக நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை. ‘பராசக்தி’யில் சிவாஜியின் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் சிறப்பாக இருந்ததைக் கண்கூடாகக் கண்டதனால், சிவாஜியையே மனோகரனாக நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளரான ஜூபிடர் சோமுவிடம் சொன்னேன். அதற்கான ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதற்கிடையே, சிலர் ஜூபிடர் சோமுவிடம் சென்று அவரது மனத்தைக் குழப்பினார்கள். அந்தச் சமயம், ‘பராசக்தி’ 1952 தீபா வளியன்று வெளிவந்தது. சென்னை அசோக் தியேட்டரில் ‘பராசக்தி’ வெளியான அன்றே – முதல் நாள் – அதுவும் மாட்னி காட்சிக்கு நானும் ஜூபிடர் சோமுவும் கிருஷ்ணன் பஞ்சுவுமாகப் போய்ப் பார்த்தோம்.\nபடம் முடிந்தது. சிவாஜியின் உணர்ச்சிமிக்க நடிப்பைப் பார்த்துவிட்டு, ‘யார் என்ன சொன்னாலும் சிவாஜி கணேசன் தான் மனோகரனாக நடிக்கிறார்’ என்று மெய்சிலிர்க்கச் சொன்னார் ஜூபிடர் சோமு.”\n– கலைஞர் மு.கருணாநிதி (21.8.88)\n“சிவாஜிகணேசன் ஒரு ‘தெய்வ மலர்’. திரு ‘கல்கி’ அவர்கள் ‘சிவகாமியின் சபத’த்தில் சிவகாமி பற்றி கூறும்போது, ‘அவளும், அவளுடைய கலையும் தெய்வத்திற்கே அர்ப்பணமானவை. மனி தர��களால் தொடமுடியாது’ என்கிறார். நானும் அதையே சொல்கி றேன். திரு. கணேசன் அவர்களின் கலை, தெய்வத்திற்கு அர்ப்பண மானது நாம் தூரத்தே நின்று ரசிக்கலாம்; ஆனால் அது நமக்கும் அப்பாற்பட்டது. திருஞான சம்பந்தருக்கு பாலூட்டிய தாய், இந்த நடிப்புக் கடலுக்கும் ஒரு துளி ஊட்டியிருப்பாளோ நாம் தூரத்தே நின்று ரசிக்கலாம்; ஆனால் அது நமக்கும் அப்பாற்பட்டது. திருஞான சம்பந்தருக்கு பாலூட்டிய தாய், இந்த நடிப்புக் கடலுக்கும் ஒரு துளி ஊட்டியிருப்பாளோ அதனால்தான் இவர் பேசும்போது தமிழ் அவ்வளவு இனிக்கிறதோ அதனால்தான் இவர் பேசும்போது தமிழ் அவ்வளவு இனிக்கிறதோ நான் இவரது நடிப்புத் திறனைக் கண்டு வியக்காத நாளே இல்லை. கோலார் பொன் சுரங்கம் வற்றி விட்டது என்று சொல்கிறார்களே, கிம்பர்லி வைரச் சுரங்கங்கள் வெறுமையாகிவிட்டன என்று சொல்கிறார்களே… இந்த நடிப்புச் சுரங்கம் மட்டும் வற்றுவதில்லையே\nஇந்த உயர்ந்த நடிகரின் வெற்றி இவரது உழைப்பில்தான் இருக்கிறது. ‘தெய்வ மகன்’ படத்தில் மூன்று சிவாஜிகளும் தோன்றும் ஒரு காட்சியை நான் முதன்முறையாகப் பார்த்தபோது, எனக்கே மூன்று தனிப்பட்டவர்கள் நடிப்பதாக ஒரு பிரமை ஏற்பட்டது அன்று அவர் நடிப்பின் பூரணத் துவத்தைக் கண்டேன். ஆனால் அந்த உயர்ந்தவரிடம்தான் எத்தனைப் பணிவு, எத்தனைப் பண்பு அன்று அவர் நடிப்பின் பூரணத் துவத்தைக் கண்டேன். ஆனால் அந்த உயர்ந்தவரிடம்தான் எத்தனைப் பணிவு, எத்தனைப் பண்பு\n– டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர் (21.9.69)\n“சிவாஜி கணேசனை நான் மிகவும் மதித்து, போற்றிப் பாதுகாக்கும் காரணம், அவரை எதற்கும் எப்பொழுதும் அணுகி, எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவருக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியும் எனக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும் நான் அவரிடம் சென்றுதான் நிவர்த்தி செய்து கொள்வேன். தீர ஆலோசித்து, பொறுமையாக விஷயத்தை விளக்குவதில் அவருக்கு ஈடு அவரேதான்.\nபடப்பிடிப்பு என்று வந்து விட்டால், சிவாஜி காரியத்தில் மிகவும் கண்ணாக இருப்பார். தம்மால் மற்றவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வருவதையும் சகியார். என் வாழ்வில் இவர் என்றுமே மறக்க முடியாதவர்; மறக்கவும் இயலாதவர்.”\n– நடிகை உஷாநந்தினி (22.7.73)\n“சாதாரணமாக யாருடனாவது பேச ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையாக விசாரிப்பா��் சிவாஜி.\nமற்றவர்களின் ‘மேனரிஸ’ங்களை உன்னிப்பாகக் கவனித்து வைத்துக்கொள்வார். ஒருவர் சிகரெட் பிடித்தால் கூட எப்படிப் பிடிக்கிறார் என்று பார்த்துக் கொள்வார். ஒரு முறை எந்தெந்தக் குணாதிசயங்கள் உள்ளவர்கள் எப்படி சிகரெட் பிடிப்பார்கள் என்று சுமார் 15 வகையாக சிகரெட் பிடித்துக் காட்டினார்\nஷூட்டிங்கில் தன் பாகம் எடுத்து முடிக்கும்வரையில் செட்டை விட்டு வெளியே ஒரு அடிகூடப் போகமாட்டார்.\n நீங்கள் மற்ற நடிகர்களோடு நடித்தால் ஷாட்டில் அவர்களை ஏன் ‘ஓவர் ஷேடோ’ செய்கிறீர்கள் அவர்கள் அத்தனைக் கஷ்டப்பட்டு நடித்த பிறகு உங்கள் செய்கையால் அது ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே அவர்கள் அத்தனைக் கஷ்டப்பட்டு நடித்த பிறகு உங்கள் செய்கையால் அது ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே” என்று ஒரு முறை அவரிடம் துடுக்காகக் கேட்டுவிட்டேன்.\nசிவாஜி என்னை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். “யூ ஆர் கரெக்ட் ஆனால், அதென்னவோப்பா…காமிரா முன்னால் நிற்பதை நான் ஒரு பாக்ஸிங் ரிங்கில் நிற்பது போலவே கருதுகிறேன். என்னோடு யார் நின்றாலும் அவர்களை நான் ‘வின்’ பண்ணத்தான் முயலுவேன். எனக்கு அது ஒரு ‘சாலஞ்ச்’ மாதிரி” என்றார்.\nஇது போன்ற தர்மசங்கடக் கேள்விகளை இவரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். இவருக்குக் கோபமே வராது.\nசெட்டில் இவரைச் சந்திக்கச் சென்றால், உடனே கூப்பிட்டு விறுவிறு என்று விஷயத்தைப் பேசிப் பத்திரிகையாளர்களை அனுப்பி விடுவார். பத்திரிகை அவசரம் தெரிந்தவர்\n– நிருபர் பாலா (16.11.80)\n“இனி நடிகர்களைப் பாராட்டி ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டுமானால் ‘வி.சி.கணேசன்’ என்ற பட்டத்தைக் கொடுங்கள். அதுதான் மிக உயர்ந்தது\n“‘நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்’ என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே ‘நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா\n“‘தேவர்மகன்’ ஷூட்டிங்… அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் பட��்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன் சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்… கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், ‘தத்ரூபமா அழணும்பா’ என்றிருந்தார். ‘ஷாட் ரெடி சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்… கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், ‘தத்ரூபமா அழணும்பா’ என்றிருந்தார். ‘ஷாட் ரெடி’ என்று குரல் கேட்டதுமே… ‘ஐயோ’ என்று குரல் கேட்டதுமே… ‘ஐயோ எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா… ஐயா எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா… ஐயா’ என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. ‘கட், கட்’ என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்’ என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. ‘கட், கட்’ என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான் என்னைப் பார்த்து, ‘இங்க வாடா’ என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். ‘நீ ஒருத்தன் அழுதா போதுமா… மத்தவன் யாரும் அழ வேண்டாமா என்னைப் பார்த்து, ‘இங்க வாடா’ என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். ‘நீ ஒருத்தன் அழுதா போதுமா… மத்தவன் யாரும் அழ வேண்டாமா என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா’ என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு’ என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு\n“மெட்டு���்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று கேட்டால், பாட்டுக்கு மெட்டு என்பது தான் சிறந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் அப்படித்தான் செய் தார்கள். ‘புதிய பறவை’யில் ஒரு புதுமை. படத்தில் வரும் ஒரு சோகப் பாட்டுக்கு சிச்சுவேஷ னைச் சொல்லிவிட்டுப் போய்விட் டார் டைரக்டர். கண்ணதாசனால் எவ்வளவோ முயன்றும் பாடல் எழுத முடியவில்லை. ‘நீங்கள் முதலில் மெட்டமையுங்கள். அதற்குப் பாட்டெழுதுகிறேன்’ என்று எம்.எஸ்.வி-யைக் கேட் டார். அவராலும் மெட்டமைக்க முடியவில்லை. இறுதியில் நடிகர் திலகத்தை அழைத்து, ‘இந்த சிச்சு வேஷனுக்கு ஒரு பாடல் வந்தால், நீங்கள் எப்படி நடிப்பீர்கள்’ என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் ‘எங்கே நிம்மதி’’ என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் ‘எங்கே நிம்மதி’\n– கவிஞர் வைரமுத்து (4.2.90)\n11:44 பிப இல் நவம்பர் 29, 2010\nசிவாஜி பற்றிய தகவல்களுக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்\n9:28 பிப இல் ஜனவரி 13, 2011\nஒரு தடவை சிவாஜி கணேசனுடன் தில்லி அசோகா ஹோட்டல் லிஃப்டில் உள்ளே நுழைந்ததும், ‘கண்டுக்கவே மாட்டேங்கிறானே’ என்று குறைபட்டார். ‘சார், சத்தியமா நீங்க யாருன்னு அவனுக்குத் தெரியாது’ என்று குறைபட்டார். ‘சார், சத்தியமா நீங்க யாருன்னு அவனுக்குத் தெரியாது’ என்று பதிலளித்தேன். கூட இருந்த அவர் தம்பி V.C. ஷண்முகம் சிரித்தார். அடுத்தமாடியில், ஹிந்திநடிகர் பெயின்ட்டல் உள்ளே நுழைந்தால், ‘ஆயியே ஸாப்’ என்று பல்லிளித்து வரவேற்பான். அவரை அவனுக்குத் தெரியும்.\nசிவாஜி கணேசனுக்குத் தேசியவிருது கிடைக்கவில்லையென்ற குறை நமக்கெல்லாம் உண்டு. நாம் அவர் நடிப்பைப் பல படங்களில் பார்த்துப்பார்த்துப் பழகி, அவர் நடிகர் திலகம் என்று ஒத்துக்கொண்டவர்கள். ஒருமுறை சிவாஜி நடித்து விருதுக்குப்போன ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெங்காலி ஜூரி, படம் நடுவில் ‘Atrocious Kyaa Overacting Hai’ என்று சொல்லிவிட்டு, மீதிப் படம் பார்க்காமல் வெளியேறியதையும் பார்த்திருக்கிறேன். அவருக்கு சிவாஜியின் மீது தனிப்பட்ட வெறுப்பு இருக்க நியாயமில்லை. என் மனது���்கு வருத்தமாகத்தான் இருந்தது, என்ன செய்ய அவர்களுக்கு இவர் நடிப்பு மிகையாகப்படுகிறது\n எல்லா சென்னைத் தியேட்டர்களிலும், dts/DOLBY உச்சத்தில் இருப்பதே ஒரு சான்று நம் பார்வை வேறு அவர்கள் பார்வை வேறு. சிவாஜியை மேடையில் வானளாவப் புகழ்ந்து பேசிய பிரபல வடஇந்திய நடிகர்கள் தனிப்பட்ட முறையில் மாறான கருத்துக்கொண்டவர்கள். அது எனக்குத் தெரியும்.\n6:13 முப இல் ஜனவரி 14, 2011\nதமிழ்ப்படங்கள் என்ற குறுகிய எல்லைக்குள்ளேயே நின்றுவிட்டதால், வடநாட்டிலுள்ள ஒரு சாதாரண ‘லிப்ட் பாய்’க்குக்கூட தெரியப்படாத கலைஞராக இருந்ததில் வியப்பில்லை. பெரியவர்கள், விவரம் தெரிந்தவர்கள் மட்டத்தில் அனேகமாக ஒருவேளை தெரிந்திருக்கலாம். (அதுகூட ‘லாம்’ தான். ‘ஆம்’ அல்ல).\nஇங்கே தமிழகத்தில் சிவாஜி படம் என்றாலே சற்று மிகைநடிப்புள்ள படங்களை மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பதற்காக, மத்திய தேர்வுக்குழுவுக்கு அனுப்பும்போதும் அம்மாதிரி படங்களை தேர்வு செய்து அனுப்பியது நம்மவர்கள் தவறாகக்கூட இருக்கலாம். மிகச்சாதாரண நடிப்பைக்கொண்ட ‘எங்க மாமா’ போன்ற படங்களை அனுப்பியிருந்தால் ஒருவேளை அவர்கள் சற்று விரும்பியிருக்க வாய்ப்புண்டு. (அதுவும் கூட ‘லாம்’தான் ‘ஆம்’ அல்ல). உதாரணத்துக்காக மட்டுமே எங்க மாமாவைச்சொன்னேன். மற்றபடி, அது பிரம்மச்சாரி படத்தின் ரீமேக் என்பதால் தேர்வுசெய்யப்பட வாய்பில்லை என்பதே உண்மை.\nமற்றபடி, தேசிய விருதைப்பொறுத்தவரை, அவர்கள் வைத்திருந்த அளவுகோலுக்குத்தகுந்தாற்போல இவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஒருமுறை கொடுக்கப்பட்டிருந்தால் அத்தோடு அடங்கிப்போயிருந்திக்க வேண்டிய விஷயம், ஒருமுறைகூட தரப்படாததாலோ என்னவோ, தேசிய விருது பேச்சு வரும்போதெல்லாம் இவர் பெயர் அடிபடுகிறது. ‘பெற்றிருந்தால்’ கிடைத்திருக்காத இம்மாபெரும் பேறு, ‘பெறாத்தகுதியற்றதால்’ காலத்துக்கும் நிலைத்து நின்று விட்டது.\n7:36 முப இல் ஜனவரி 14, 2011\nபாரதி மணி மேலும் கூறுகிறார்….\nஎந்த பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், தன் படத்தைத் தேர்வுக்கு அனுப்பினால், அதிர்ஷ்டத்தை நம்பியேயாக வேண்டும். முக்கியமாக மற்ற மாநிலங்களிலிருந்து வேறு நல்ல படங்கள் போகக்கூடாதென்று வேண்டிக்கொள்ளவேண்டும். பல வருடங்களில் மிகக்கடுமையான போட்டி இருக்கும். இன்னும் சி��� சமயங்களில் யாருக்குக் கொடுப்பது என்று தேடுவார்கள். மஹேஷ் பட்டின் Saaraans-ல் சிறந்த நடிகருக்காக அனுபம் கேர் பரிசீலனை செய்யப்பட்டபோது, வங்காளத்திலிருந்து கடும்போட்டியிருந்தது. நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, அனுபம் கேர் தன் வயதுக்கு மீறிய பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டார் என்பதால் ஜூரிகள் அவருக்குப் பரிந்துரைத்தனர். எனது நண்பர் M.K. ராவ், ‘வேறு போட்டியில்லாததால்தான் தபரென்ன கதெ கன்னடப் படத்தில் நடித்ததற்காக சாருஹாஸனுக்குச் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அவர் படம் முழுக்க வந்தார். அவருக்கு அதிர்ஷ்டம்” என்று சொல்வார். சிவாஜிக்கு இத்தனை வருடங்கள் கொடுக்கத் தயங்கியதைத் தன்னிடம் கொடுத்துவிட்டார்களேயென்ற சங்கோஜம் அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும்.\n6:26 முப இல் ஜனவரி 16, 2011\nசிவாஜிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்ற மிக துரதிருஷ்டவசமான விவாதத்தில் மிகுந்த தயக்கத்துடன் கலந்துகொள்கிறேன்.\nதேசிய விருதுக்கு சிவாஜி கிடைக்கவில்லை என்பதுதான் நிஜம்.\nஆறு கோடி மக்கள் அங்கீகரரித்த ஒரு மாபெரும் கலைஞனை ஆறு பேர் கொண்ட ஒரு ஜூரிகுழு அங்கீகரிக்காது விட்டதால் குடி முழுகி போக வில்லை.\nமேலும் MGR க்கு அது கொடுக்கப்பட்டபிறகு (அதுவும் ரிக்ஷாக்காரன் படத்திற்கு) அந்த விருதிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் போய்விட்டது\nஇதுவரை தேசிய விருது பெற்ற நடிகர்களை ஒரு தடவை உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி நடித்திருக்கும் ஒரு காட்சியை\n(சௌகார் ஜானகி சிவகுமாருக்கு ‘டோஸ்’ விட்டுக்கொண்டிருக்க,அதை செய்தித்தாளை கையில் வைத்துக்கொண்டு சிவாஜி கவனிக்கும் இடம்;அவர் முகத்தில் தெரியும் நகைசுவை கலந்த ஒரு பரிதாப உணர்வு) நடித்துக்காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்\nநாம் பெற்ற மிக பெரிய பேறும் ஒன்றுதான்\nஅதுதான் அவர் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து மறைந்தது\n10:07 முப இல் ஒக்ரோபர் 1, 2012\nதாங்கள் கூறியது முற்றிலும் சரியே\nஇன்றுள்ள எந்த நடிகன் அவருக்கு இணையாக\nநடிக்க இயலும் நமது அதிர்ஷ்டம்\nஅவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை\nகிடைத்திருந்தால் அது அவருக்கும் அவரது\nஇது அடியேனின் பணிவான கருத்து\nநண்பர் பரவாசுதேவன் சமீபத்தில் பகிர்ந்து கொண்ட ராஜ நாயஹம் எழுதிய ஒரு பதிவு…\nதிருச்சி ஃபெமினா ஹோட்டலில் வரவேற்பாளராக நான் இருந்த போது சிவாஜி கணேசன் அங்கு வந்து தங்கி பின் அறையை காலி செய்வதாக அவர் அறையிலிருந்து தகவல் வந்தது. அவர் கீழே லாபிக்கு வரப்போகிறார் என்ற விஷயம் அங்கு வந்திருந்த பல பேருக்கும் தங்கியிருந்த சில விருந்தாளிகளுக்கும் தெரிந்த உடன் எல்லோரும் அவரை பார்க்கிற ஆவலில் லாபி யில் லிஃப்ட்-ஐ பார்த்துக்கொண்டு அங்கே வேலை பார்த்துகொண்டிருந்த ஊழியர்களும் கூட வந்து நின்று கொண்டார்கள்.\nலிஃப்ட் திறந்தது ,. மனைவி கமலாவுடன் வெளியே வந்த சிவாஜி கணேசனுக்கு அந்த இடத்தில் கூட்டமாக பலரை பார்த்தவுடன் புன்னகையுடன் என்னை பார்த்தார். அந்த இடத்தில் அவர் தான் CENTRE OF ATTRACTION.\nஅவரை அனைவரும் ஆர்வத்தோடு பரபரப்போடு கவனிக்கும் போது அவர் ஏதேனும் A CLEVER MANEUVER GIMMICKS செய்தாக வேண்டும்.\nநான் தான் அந்த இடத்தில் அவருக்கு SUPPORTING ACTOR\nஎன்னருகில் வந்தார். என் கன்னத்தில் தட்டுவது போல ஒரு நளினமாக அவர் கை வந்தது.\nதொடர்ந்து பெருமிதமாக என்னைப்பார்த்து சிரித்து ‘OK YOUNG MAN I AM LEAVING\nஅவருடைய ஸ்டைல் நடையுடன், மனைவி கமலா பின் வர நடந்து போய் காரில் ஏறினார் .\nஅவர் அப்புறம் 9 வருடம் கழித்து இறந்த போது என் காதில் அந்த வார்த்தைகள் அவர் குரலில் ஒலித்தது ..\n1:48 முப இல் பிப்ரவரி 21, 2011\nகௌரவிக்கப்பட வேண்டிய எந்தவொரு கலைஞரும் இந்த திராவிட அரசுகளால் சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பதற்கு மிக எளிய உதாரணம் மகாகலைஞன் சிவாஜி கணேசன். உலகின் மிகச்சிறந்த கலைஞனாகக் கொண்டாடப்படவேண்டிய சிவாஜி கணேசனுக்குக் கடற்கரையில் ஒரேயொரு சிலை வைத்ததோடு அரசின் கடமை முடிந்துவிடுகிறது.\nகர்நாடகத்தில் பிரபலமாக இருந்த நடிகர் ராஜ்குமாரை இந்த மாநிலம் எப்படிக் கொண்டாடுகின்றது என்பதை யார் வேண்டுமானாலும் கர்நாடகம் வந்து பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பெங்களூரில் மட்டுமல்ல கர்நாடகம் பூராவிலுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர் பெயரில் நகர்கள்; சாலைகள், பல்வேறு இடங்களில் நினைவுச்சின்னங்கள், விருதுகள்…அவர் படங்கள் இல்லாத தெருக்கள்கூட கிடையாது என்கிற அளவுக்கு அவரைக் கொண்டாடுகிறது கர்நாடகம்.\nஆனால் திட்டம் போட்டே இங்கே சிவாஜி புறக்கணிக்கப்பட்டார். ஆரம்ப நாட்களிலிருந்தே அவர் தமது திறமையால் மட்டும்தான் நின்றாரே தவிர அவரை உயர்த்திப்பிடிக்க அரசு எதையுமே செய்யவில்லை. அவருக்கும் எம்ஜிஆருக்கும் இட���யே ஒரு போட்டி ஏற்படுத்தப்பட்டு அந்தப் போட்டியில் சிவாஜி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு எம்ஜிஆர் முன்னிலைப் படுத்தப்பட்டார். இது வெறும் வணிகப்போட்டி மட்டுமல்ல.இதையும் தாண்டிய அரசியல் வன்மம் அதில் இருந்தது. அரசியலைப் புறந்தள்ளி ஒரு கலைஞனாக சிவாஜி கொண்டாடப்பட்டிருந்தால் இன்றைய அரசியல் சீர்கேடே தமிழகத்திற்கு வந்திருக்காது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார்.\nசிவாஜி எந்தளவு எம்ஜிஆரை வைத்துப் புறக்கணிக்கப்பட்டார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஒரு படத்திற்காக அந்த வருடத்தின் சிறந்த நடிகராக மத்திய அரசினால் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்ததும் அப்போது அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் உடனடியாக டெல்லி அனுப்பப்பட்டு சிவாஜி பெயர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் ரிக்ஷாக்காரன் என்ற படத்தில் நடித்த எம்ஜிஆர் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி. இதனை நெடுஞ்செழியனே சொல்லப்போக “அப்படியானால் அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம்” என்று ‘ஒன்றும் தெரியாத’ எம்ஜிஆர் அந்தப் பட்டத்தைத் துறந்த கூத்தெல்லாம் நடந்தது.\nசிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் அரசு என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் தெரியாதவரா கலைஞர் ஆனாலும் அவர்கள் மீதான தனிப்பட்ட கோபதாபங்களை அவர் இன்னமும் மறக்கவில்லை என்பதைத்தான் அவரது மவுனம் காட்டுகிறது. இந்த இரண்டு பேரைப்பற்றிப் பேச வரும்போதெல்லாம் “என் ஆருயிர் நண்பர் சிவாஜி” என்றும் “என் ஆருயிர் நண்பர் கண்ணதாசன்” என்றும் சொல்லி அவர்களைப்பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதோடு தமது கடமை முடிந்தது என்று கலைஞர் கடந்து செல்லக்கூடாது.\nதம்மைப் பற்றி மிக மோசமாக, மிகக் கேவலமாகப் பேசிய எத்தனையோ பேரை மன்னித்து மீண்டும் தமது பக்கத்தில் சேர்த்துக்கொண்டு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தவர் கலைஞர். நாஞ்சில் மனோகரன், காளிமுத்து என்று எத்தனையோ பேரை உதாரணங்களாகச் சொல்லலாம். சிவாஜி விஷயத்திலும் கண்ணதாசன் விஷயத்திலும் கலைஞர் தமது கோபத்தை உதறித்தள்ள வேண்டும்.\nஇல்லாவிட்டால் பின்னர் வரும் அரசுகள் நிச்சயம் காலத்தால் அழியாத இந்த மகா கலைஞர்களைக் கொண்டாடும்பொழுது எத்தனையோ செய்த கலைஞர் ஏன் இதனைச் செய்யவில்லை என்ற கேள்வி நிச்சயம் எழுப்பப்படும்.\nகலைஞர��ல் ‘என் ஆருயிர் நண்பர்’ என்று புகழப்பட்ட கவியரசருக்கு கலைஞர் ஆட்சியிலிருந்தபோது ஒன்றும் செய்யவில்லை.எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததும் கவியரசரைத் தேடிச்சென்று அரசவைக்கவிஞராக நியமித்தார். இத்தனைக்கும் அன்றைக்கு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் நல்ல நட்பு இல்லை. நீண்ட காலமாக திரைப்படங்களில் கூட கண்ணதாசனைத் தவிர்த்து வாலியையும் புலமைப்பித்தனையும்தாம் பாடல்கள் எழுதவைத்திருந்தார். ஆனாலும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் சந்தர்ப்பங்களை எம்ஜிஆர் என்றைக்கும் எந்த விஷயத்திலும் கோட்டை விடுவதில்லை. கண்ணதாசனை அரசவைக்கவிஞராக ஆக்கியதில் மட்டுமல்ல, ஈழ விவகாரத்தில் எத்தனையோ குழுக்கள் இருக்க பிரபாகரனைத் தேர்ந்தெடுத்து ஆதரித்ததிலும் எம்ஜிஆர் பாராட்டப்படவேண்டிய முடிவுகளையே மேற்கொண்டார். இதற்குக் காரணம் மக்களின் மதிப்பீடு என்னவோ அதனைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு அவர் செயல்பட்டார் என்பதுதான்.\n4:21 பிப இல் ஏப்ரல் 5, 2011\nmissed the bus… சிவாஜியின் ஏக்கம்\nஒவ்வொரு சமூகத்திலும் மகத்தான கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒன்று; மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். இரண்டு; ஆட்சியாளர்களால். ஓயாத அலைகளைப் போலான மனக் குமுறலுடல்களுடனான வாழ்க்கை மெய்யான கலைஞனது. அத்தகைய மாபெரும் கலைஞனான சிவாஜிக்குள்ளும் குமுறல்கள் இருந்துள்ளன. அவரின் மறைவின் போதாவது அவரது மனக்குமுறல்களை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் இன்னொரு கலைஞனுக்கு இந்த அவலம் நேர விடாமல் தவிர்க்கவே இந்த நேர்காணல் மறு பிரசுரம் செய்யப்படுகிறது….\nஒரு கலைஞனுக்கு உண்மையான அங்கீகாரம் எனறு எதை நினைக்கிறீர்கள்\nவிருது மட்டும் திறமைக்கான முழு அங்கீகாரம் இல்லையென்றாலும், உரிய காலத்தில் அத்தகைய விருதுகள் கிடைக்காதது நல்ல கலைஞனை மனமுடையச் செய்யும் தானே…உங்கள் விஷயத்தில் எப்படி\nஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக் கொள்ளும் போதுதான் முழுமை அடைகிறான். அதுதான் அங்கீகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும் போதுதான் அதில் முழுமையாக ஒரு நடிகன் வெளிப்பட முடியும். அதுதான் அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள். …எல்லோரையுமா சிறந்த நடிகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்\nஅங்கீகாரம் கிடைப்பதற்கும் விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் இஷ்டப்பட்டுக் கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக் கொடுத்திருக்கிறார்கள். எல்லாருமா அதற்குத் தகுதியானவர்கள் ‘லாபி’ செய்து விருது வாங்குகிறார்கள். இன்னும் எப்படியெல்லாமோ நடக்கிறது.\nஒரு கலைஞனுக்கு விருது என்பது, அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவன் அதைக் கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன்.\nஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் வருத்தமும் என் மனத்தின் ஓரத்தில் விண் விண் என்று இருக்கத்தான் செய்கிறது. நானும் மனுஷன்தானே……இதை மறைத்தால் என்னைவிட அயோக்கியன் யாரும் இருக்க முடியாது.\nபால்கே விருது எப்போதோ உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும் இவ்வளவு காலம் தாமதமானதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் விருது வழங்குவதில் அரசியல் தலையீடு, பாரபட்சம் இருப்பதாகக் கருதுகிறீர்களா\nபாரட்சம் இருக்கலாம், அரசியல் தலையீடு இருக்கும் என்று நினைக்கவில்லை. நானும் அரசியலில் இருந்தவன். அப்படிச் சொன்னால் அசிங்கமாக இருக்கும். மேலும் அரசியல் தலையீடு இருக்கிறது என்று சொன்னால் அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்குமென்று தெரியவில்லை. பால்கே விருது பெரிய விருது. அது ஏன் இத்தனை நாள் எனக்குக் கிடைக்கவில்லையென்று யோசித்துப் பார்த்தபோது…..எனக்குக் கிடைத்த தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.\nஇந்த விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழு பரிந்துரைக்கும் பட்டியல் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குச் செல்கிறது. அவர் ஆசாபாசம் இல்லாதவராக இருந்தால் தகுதியானவருக்குக் கிடைக்கும். இல்லையென்றால் அவர் விரும்பும் நபருக்குத் தான் விருது செல்கிறது. இதுவரைக்கும் இப்படித்தான் நடந்தது என்று – எனக்குத் தெரியாது. தில்லியிலே இருக்கிற சர்க்கார் உத்யோகஸ்தர்கள் சொல்கிறார்கள் எனக்கு இந்த வருடம் விருது கிடைத்ததே… அதுவும் சாதாரணமாகக் கிடைக்கவில்��ை… வேறு ஒருவருக்ககுப் போய்விட்டுத்தான் என்னிடம் திரும்பி வந்திருக்கிறது. இதையும் அந்த சர்க்கார் உத்யோகஸ்தர்களே என்னிடம் சொன்னார்கள்.\nஉங்களுக்கு செவாலியே விருது அளிப்பதென்று பிரெஞ்சு அரசு முடிவு செய்த பின்னரும் அது தாமதமானதற்கு புதுவை அரசு ஆர்வம் காட்டாததுதான் காரணம் என்று கூறப்படுகிறதே… உண்மையா\nஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுதான் செவாலியே விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. கிட்டதட்ட எனது படங்கள் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனக்கு செவாலியே விருது கிடைத்த பிறகுதான் ஹாலிவுட் நடிகர் ஒருவருக்கு இந்த விருது கிடைத்தது.\nஅதாவது அவர்கள் முதலில் என்னைத்தான் Recognise செய்திருக்கிறார்கள். தேர்வுக் குழு எனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தவுடன் பிரெஞ்சு அரசாங்கம் புதுவை அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால் புதுவையிலிருந்து பதில் போகவில்லை. புதுவையை ஒருகாலத்திலே பிரெஞ்சு அரசுதானே ஆட்சி செய்தது. பிரெஞ்சுக்காரன் நம்மை ஆட்டிப் படைச்சானே என்ற கோபத்தில் அந்தக் கடுதாசியைத் தூக்கிப் போட்டுட்டாங்க போலிருக்கு. பிறகு அங்குள்ள இந்திய மக்களிடம் விசாரித்து ஒருவழியாக முடிவு செய்து பிரெஞ் நாட்டுத் தூதர் மூலமாக அந்த விருது என்னிடம் வந்து சேர்ந்தது.\nஎனக்கு அந்த விருதைக் கொடுக்க மூன்று வருடங்களாக பிரெஞ்சு அரசாங்கம் முயற்சி செய்திருக்கிறது. அதைக் கழிச்சுக் கட்டிட்டாங்க. அது யாருன்னு, எனக்குத் தெரியாது. ஆனால் புதுவையில்தான் அப்படி நடந்தது என்று தெரிந்துவிட்டது.\nசெவாலியே விருது யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. அதிலேயே 1,2,3 என மூன்று வகையான விருதுகள் உண்டு. எனக்குக் கிடைத்தது முதல்தர விருது உண்மையச் சொன்னால் அந்த விருது எவ்வளவு மதிப்ப மிக்கது என்று எனக்கு முதலில் தெரியாது. இங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை. தெய்வாதீனமாக ஒரு காரியம் நடந்தது.\nசகோதரி நடிகை ராதிகாவின் கணவர் ஒரு வெள்ளைக்காரர். அவர்தான் எனக்கு விருது கிடைத்த விஷயம் தெரிந்தவுடன் ராதிகாவிடம் செவாலியே விருது மிகப் பெரிய விருதாயிற்றே.. அது வந்த பிறகும் சிவாஜியை இன்னும் நீங்க யாரும் கண்டு கொள்ளவில்லையே… என்று கேட்டிருக்கிறார். ராதிகா அதுபற்றி கமல், ரஜினி போன்றவர்களிடம் பேச அதற்குப் பிறகுதான் அந்த விருதின் மதிப்பு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தான் ஏ.வி.எம்.சரவணன் மற்றும் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய விழா நடத்தி அந்த விருதை எனக்குத் தந்தார்கள். தில்லியிலுள்ள பிரெஞ்சு தூதர் சென்னை வந்து அந்த விருதை வழங்கினார்.\nஇதுவரை நீங்கள் நடித்த பாத்திரங்கள் உங்களுக்கே சவாலாக இருந்த பாத்திரம் எது உங்களுக்கு முழுத் திருப்தியளித்த படம் எது\nகப்பலோட்டிய தமிழன்தான் எனக்குச் சவாலாக இருந்த பாத்திரம் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வ.உ.சி-யின் புதல்வர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு “ஐயாவை நேரில் பார்த்தேன்” என்று சொன்னார். நீங்கள் கேட்டீர்களே…….அங்கீகாரம் எது என்று இதைவிட ஒரு நடிகனுக்கு பெரிய அங்கீகாரம் எதுவாக இருக்கமுடியும். எனக்கு முழுத் திருப்தியளித்த படம் தெய்வமகன், மூன்று வேடம். சிரமப்பட்டுத்தான் நடித்தேன்.\nகிட்டத்தட்ட 300 படங்களில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். குறுகிய இடைவெளிக்குள் ஒரு பாத்திரமாக உங்களை மாற்றிக் கொள்வது typical mental exercise இருந்திருக்குமே…..அதை நிங்கள் சமாளித்தது எப்படி\nஅது ஒன்றும் பெரிய காரியமில்லை. பழக்கத்தில் வருவதுதான். அன்றாடம் நமக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நடிக்கும் பாத்திரம் பற்றி சிந்திக்கவேண்டும். நமக்கு எங்கே ஓய்வு கிடைக்கும் கழிவறை அல்லது குளியலறை தான். அங்கேதான் யாரும் கதவைத் தட்டி தொந்தரவு செய்யமாட்டார்கள். அந்தச் சமயத்தில் இன்றைக்கு என்ன நடிக்கப் போகிறோம் என்று யோசனை செய்வேன். பிறகு மேக்-அப் போட்டுக் கெண்டிருக்கும்போது…. மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு சற்றே தலைசாய்த்து இருக்கும் போது… இது மாதிரி இடையிடையே கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பாத்திரங்களுக்கு மெருகேற்றுவது எப்படி என்று யோசிப்பேன். இப்படி யோசிப்பவன்தான் நடிகன். இதைவிட்டுவிட்டு எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறாரு என்கிற பாணியில் வந்தோம் நடிப்பது போல ஏதோ செய்தோம் என்று இருக்கலாமா கழிவறை அல்லது குளியலறை தான். அங்கேதான் யாரும் கதவைத் தட்டி தொந்தரவு செய்யமாட்டார்கள். அந்தச் சமயத்தில் இன்றைக்கு என்ன நடிக்கப் போகிறோம் என்று யோசனை செய்வேன். பிறகு மேக்-அப் போட்டுக் கெண்டிருக்கும்போது…. மதியம் ��ாப்பாட்டுக்குப் பிறகு சற்றே தலைசாய்த்து இருக்கும் போது… இது மாதிரி இடையிடையே கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பாத்திரங்களுக்கு மெருகேற்றுவது எப்படி என்று யோசிப்பேன். இப்படி யோசிப்பவன்தான் நடிகன். இதைவிட்டுவிட்டு எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறாரு என்கிற பாணியில் வந்தோம் நடிப்பது போல ஏதோ செய்தோம் என்று இருக்கலாமா நாம் என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தாலே போதும். கிடைக்கிற அரை மணிநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பாத்திரத்தை முழுமையாகச் செய்யவில்லையென்றால் நீங்க ஏன் நடிகன்னு சொல்றீங்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தாலே போதும். கிடைக்கிற அரை மணிநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பாத்திரத்தை முழுமையாகச் செய்யவில்லையென்றால் நீங்க ஏன் நடிகன்னு சொல்றீங்க அதைவிட தீவட்டின்னு சொல்லுங்க…. என்னைப் பொருத்தவரையில், ஆஸ்திக வார்த்தையில் சொல்வதானால் அது ஒரு வரப்பிரசாதம். சாதாரண வார்த்தையில் நன்றியறிதலோடு சொன்னால் எனக்குக் கிடைத்தது – நல்ல குரு. அவர் தந்த பயிற்சி.\nநடிப்பில் எனக்கு ஒரே ஒரு குரு தான் உண்டு. அவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. நான் சிறுவயதில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில்தான் முதலில் சேர்ந்தேன். அங்கே தான் எனது குரு பொன்னுசாமி படையாச்சியும் வேலை செய்தார். இருவர் பெயரும் ஒரே மாதிரி இருந்ததால். முதலாளி பெரிய பொன்னுசாமி என்றும் எங்கள் குரு சின்ன பொன்னுசாமி என்றும் அழைக்கப்பட்டனர். ஏழு வயதிலிருந்து ஐந்தாறு வருஷங்கள் எனக்குப் பயிற்சி தந்தவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. மறந்துவிட்டீர்களா, நான் ஒரு பெண் வேஷக்காரன் என்பதை. தலைமைப் பெண் வேஷக்காரன் நான். எங்கள் குருவும் பெண் வேஷக்காரர்தான் பெண் வேஷம் போடும் நடிகன் தான் ஆல் ரவுண்டராக வரமுடியும். முழுமையான நடிகனாகப் பரிமளிக்க முடியும்.\nநீங்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலாவது, எம்.ஜி.ஆர் போல நாமும் நல்ல பாத்திரங்களிலேயே நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லையா\nஇல்லை. நடிப்புக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லையென்று நான் நினைத்தேன். ஆனால் சம்பந்தம் உண்டு என மக்கள் நிரூபித்துவிட்டார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றிபெற்றார். He did it. I missed the bus, எனக்கு ��ரசியல் இரண்டாம்பட்சம்தான் நான் குடிகாரனாக பெண் பித்தனாக, கொலைகாரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில் நடித்தேன். அதனால்தான் 300 படங்களில் நடிக்க முடிந்தது.\nஅரசியலில் இன்று வந்துவிட்டு நாளை போய்விடுவார்கள். எத்தனை பேருக்கு பேர் இருக்கு செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அரசியலில் எனக்குப் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக சீ செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அரசியலில் எனக்குப் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வதாகக்கூட வைத்துக் கொள்ளுங்களேன்…\nஇந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் பின்னாளில் தான் புரிந்துகொண்டேன். அவர்கள் என்னை நடிகனாக மட்டும்தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்… அத்தனை பேருமா தலைவராக முடிந்தது சிலபேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லையென்றால் அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள்.\nஇது கடந்த கால அரசியல் பற்றி உங்கள் விமர்சனம் போல் இருக்கிறதே\nகடந்த கால வரலாற்றை ஏன் சொல்றீங்க…நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள். அதுவும் இப்படித்தான் நடக்கிறது நடக்கப் போகிறது.\nஒரு காலத்தில் Over Acting செய்வதாக உங்கள் மீது விமர்சனம் எழுப்பப்பட்டதே…. இப்போது அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇதயம் பேசுகிறது மணியன்தான் அப்படி எழுதினார். சிவாஜி சகாப்தம் முடிந்துவிட்டது என்று எழுதியதும் அவர்தான். திராவிடப் பாரம்பரியம் பற்றி தப்புத் தப்பாக எழுதியவர்களில் முக்கியமானவர் மணியன். அவருக்கு கலைஞர் தலைமையில் ஒரு பாராட்டுவிழா நடந்தது. அதற்கு மணியனே நேரில் வந்து அழைத்ததால் நானும் சென்றிருந்தேன். எனக்கும் அரசியலுக்கும் சம்பந்ததே இல்லை என்று மணியன் அங்கு பேசினார். நான் பேசும்போது திராவிடப் பாரம்பரியம் பற்றி விமர்சித்து எழுதியவர் இவர்தான். இப்போது அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில் இவருக்குப் பாராட்டு விழா நடக்கிறது. இதிலிருந்தே அரசியல் தந்திரம் நிறைந்தவர் என்று புரியும் என்று பேசினேன். ஐயய்யோ, நான் அப்படி இல்லை என்று மணியன் புலம்பினார். அது ப��கட்டும்.\nBad Actor ஒருவன் இருப்பான். அவனைச் சுற்றி நான்கைந்து எழுத்தாளர்கள் இருப்பார்கள். தன்னுடைய ஆளைப் பெரிய நடிகன் என்று காட்டுவதற்காக, நான்றாக நடிப்பவனை ஓவர் ஆக்டிங் என்று சொல்வார்கள், பொதுவாக நம்ம ஊரில் யாருமே தான் நல்லவன்னு சொல்லமாட்டானே..அடுத்தவனை மட்டம் தட்டினால்தான் தான் நல்லவனாக முடியும் அதுபோலத்தான் இந்த விமர்சனமும் வந்தது.\nஉங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் உங்களுக்கு இணையாக நடிப்புத் திறமை வெளிப்படுத்தியவர் யார்\nநிச்சயமாக பப்பிதான் (பத்மினி), பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம், what not எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை She is an all rounder. சின்ன வயதிலிருந்தே நானும் பத்மினியும் பழகி வருகிறோம். We are all intellectual friends. எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு. உலகிலேயே அதிகப்படங்களில் நடித்த ஒரே ஜோடி என்றால், அது நானும் பத்மினியுமாகத்தான் இருக்கவேண்டும்.\nகாமெடி, குணச்சித்திரம் வில்லன் – இவற்றில் ஒரு நடிகனுக்கு கடினமான பாத்திரம் எது\nகாமெடிதான். காமெடி நடிகனைப் போல ஒரு Creator யாரும் கிடையாது. இப்போதுள்ள இலக்கணப்படி புருவத்தைத் தூக்கி ஹா ஹா என்று சிரித்துவிட்டால் வில்லன் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் அழகா இருந்து. காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு டான்ஸ் ஆடி, இரண்டு குத்துகுத்திட்டா ஹீரோன்னு சொல்கிறார்கள். காமெடி அப்படியில்லை, அந்த வேஷம் கஷ்டமானது. எனக்கு காமெடி நல்லா வரும் ஆனால் கொடுக்கமாட்டாங்க.. வசனம் பேசுவது, ‘எமோஷன்’ எல்லாம் என்னாவது வைத்திருக்கும் கிளிசரீன் என்னாவது இதற்கெல்லாம் நான்தானே சார் கிடைத்தேன்… (சிரிக்கிறார்)\n5:23 முப இல் ஏப்ரல் 6, 2011\n‘நஞ்சுபுரம்’ இயக்குநர் சார்லஸ் கூறுகிறார்…\nதமிழ் சினிமாவின் உச்சங்களில் ஒன்று சிவாஜி கணேசன். அவருடைய பிரதான பலம், உணர்ச்சிகரமான ஏற்றத் தாழ்வுகள் கொண்ட தெளிவான வசன உச்சரிப்பு. அதுதான் அவரை வெற்றிகரமான நாடக நடிகராகவும், முதல் திரைப்படத்திலேயே உச்ச நட்சத்திரமாகவும் ஆக்கியது. ‘பராசக்தி’ என்றவுடன் நினைவுக்கு வருவது அந்த நீதிமன்ற வசனம் தான். அந்தக் காட்சியின் பெரும் பகுதி வசனங்களை ‘உரையாடல்’ என்பதைவிட ‘உரைநிகழ்த்துதல்’ அல்லது ‘உரையாற்றுதல்’ என்றே சொல்லவேண்டும். அந்த வசனம் அளவுக்கே பிரபலமான ‘���னோகரா’ மற்றும் பல படங்களில் சிவாஜி கணேசன் மிகச் சிறந்த உரைநிகழ்த்தல்களைச் செய்திருக்கிறார். படத்துக்குப் படம் அவர் நடிப்பு மெருகேறியிருக்கிறது என்றபோதும், அவருடைய முதல் படத்து கன்னிப் பேச்சை 60 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழகம் நினைவில் வைத்திருக்கிறது, பொதுச் சூழலில் புளங்குகிறது என்பது ஆச்சர்யம்தான்.\nவெறும் மேடைப் பேச்சின் மூலமே அரசியல் நடைபெறும் தமிழகத்தில், இத்தனை உணர்ச்சிகரமான பேச்சாளர் ஏன் அரசியல் மேடைகளில் வெற்றிபெற முடியவில்லை, ஏன் சிவாஜி கணேசன் ஒரு மிதமான அரசியல்வாதியாக நடந்துகொண்டார் என்பது எனக்குப் புரியாத விஷயங்களில் ஒன்று. ஒருவேளை வசனங்களைப் பாடம் செய்து நடிப்பதில்தான் அவருடைய திறமை இருக்கிறது போலும். மேடையில் சுயமாகக் கோர்வையாகப் பேசுபவர்களே பிரச்சாரத்தின் போது கவனத்தை ஈர்க்க முடியும். அரசியலில் சிவாஜி காணாமல் போனாலும், தமிழக மக்கள் அவருக்கு எத்தனைப் பெரிய இடத்தைக் கொடுத்திருந்தார்கள் என்பதை, நான் அவருடைய இறுதி ஊர்வலத்தின் போதுதான் பார்த்தேன். சிவாஜிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான மக்கள் சிறு கிராமங்களிலிருந்து வந்து, கட்டுச் சோறோடு தி.நகர் தெருக்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்த காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.\n1:49 முப இல் ஏப்ரல் 7, 2011\nகணேசன் மறையலாம்; சிவாஜி மறையவில்லை\nசரவணா பிலிம்ஸ் அதிபர் ஜி.என்.வேலுமணி தமிழ்ப் படவுலகில் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பெரிய நடிகர்களை வைத்து பாலும் பழமும், மாட்டுக்கார வேலனை ஒத்த பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதே காலகட்டத்தில் டைரக்டர் பாலசந்தரும் பெரும் நடிகர்கள் இல்லாமல் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்.\nவேலுமணிக்கு ஓர் எண்ணம் எழுந்தது. சிறிய நடிகர்களை வைத்தே பாலசந்தரால் சிறந்த படங்களைக் கொடுக்க முடிகிறதென்றால், ஏன் சிவாஜியையும், பாலசந்தரையும் இணைத்து ஒரு படத்தை எடுத்தால், அது எவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என வியாபாரக் கணக்கைப் போட்டார். அதற்கான முயற்சியை எடுத்து இருவரையும் இணைத்தார். அந்தப் படம்தான் ‘எதிரொலி’. அந்தப் படத்தில் பணியாற்றக் கூடிய வாய்ப்பை நான் பெற்றதால்தான் சிவாஜிகணேசனுடன் பழகக் கூடிய, அவரைப் புரிந்து கொள்ளக் கூடிய, அறிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்���ம் எனக்குக் கிடைத்தது.\nசிவாஜியும், இயக்குநர் சிகரத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற தாகத்தை இப்படத்தின் வாயிலாகத் தணித்துக் கொண்டார். கதையைச் சொல்ல, நடிகர் திலகத்திடம் டைரக்டர் சென்றார். ‘ பாலு முழுக்கதையையும் ஏன் சொல்றீங்க. தேவையில்லை. சும்மா அவுட் லைன் மட்டும் சொன்னா போதும். உங்களுக்குத் தெரியும் எப்படி ஒரு சிறந்த படத்தை உருவாக்க வேண்டுமென்று. அதில் நீங்கள் வெற்றியும் பெற்று வருகிறீர்கள்; நான் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்று சுருக்கமாகக் கதையைக் கேட்டுக் கொண்டார்.\nஇதில் என்ன சோகம் என்றால் எதிரொலி வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைத் தரவில்லை. சிவாஜி மக்கள் மனத்தில் நற்பெயருடன் நிலைகொண்ட நடிகர். கதைப்பாத்திரப்படி வழக்குரைஞர்; சந்தர்ப்பத்தால் பெட்டி கைமாறினாலும், அந்தப் பெட்டிக்குள் நிறையப் பணம் இருந்ததை உடையவரைத் தேடி ஏன் இவர் கொடுக்கவில்லை, அல்லது போலீசிடம் ஒப்படைக்கவில்லை திருடிக்கொள்ள எண்ணி விட்டாரோ படம் தோல்வி அடைந்து விட்டதற்கு காரணம் அப்படித்தான் சொல்லப் பட்டது.\nபாலசந்தர் பெரிய டைரக்டர் என்கிற பெயர் எடுத்திருந்தாலும், திரைப்படத் திறமையும் அறிவும் நிறைந்து இருந்தாலும் அப்போது தன்னைப் பற்றிக் கொஞ்சம் குறைத்தேதான் மதிப்பிட்டுக்கொள்வார். அந்த ‘காம்ப்ளெக்ஸ்’ அவரிடம் இருந்தது. சிவாஜியா அவர் எவ்வளவு பெரிய நடிகர், அவரிடம் எப்படிப் போய் இந்த இடத்தில் இப்படி நடிக்க வேண்டுமென்று நான் சொல்லிக்கொடுப்பது அவருக்குத் தெரியாதா என்று நினைத்துக் கொண்டு காட்சியை விளக்கிவிட்டு வந்துவிடுவார். ஒரு டைரக்டரும் கதாநாயகனும் எப்படியெல்லாம் உரையாடு வார்கள், உறவாடுவார்கள் அவருக்குத் தெரியாதா என்று நினைத்துக் கொண்டு காட்சியை விளக்கிவிட்டு வந்துவிடுவார். ஒரு டைரக்டரும் கதாநாயகனும் எப்படியெல்லாம் உரையாடு வார்கள், உறவாடுவார்கள் அப்படிப்பட்ட எந்த நெருக்கமும் இல்லாமலேதான் படப்பிடிப்பு நடக்கும். ஒருபுறம் துரு துருவென்று சிகரெட்டைப் பிடித்துக்கொண்டே டைரக்டர் நிற்பார்.\nகாட்சி தயாரானதும்,என்னை டைரக்டர் அழைப்பார்.என்னிடம்தான் அவருக்கு வேண்டிய சிகரெட் இருக்கும். அதற்காகத்தான் அழைக்கிறாரோ என்று சிகரெட்டை எடுப்பேன். இல்லை. ஷாட் ரெடி. நீ போய் சிவாஜி��ை அழைத்து வா என்பார். நான்தான்உதவி டைரக்டர்களிலேயே வயதிலும் அனுபவத்திலும் இளையவன். ஆகையினால் நான்தான் ஓடும்பிள்ளை. ஒப்பனை அறைக்கு ஓடிப்போய் ‘அண்ணன் ஷாட் ரெடி வரலாம்’ என்பேன். ‘ஏண்டா லேட்.. வா.. அந்த ‘கோட்’டை எடுத்து மாட்டிவிடு’ என்பார். நானும் அவ்வாறே செய்து அழைத்து வருவேன். தாமதம் என்பது ஐந்து, பத்து நிமிடம்தான்.\nபடப்பிடிப்பகத்துக்குள் நுழைந்தவுடன் எல்லோரும் வணக்கம் தெரிவிப்பார்கள். இவரும் பதிலுக்கு முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டே பதிலுக்குக் கனத்த குரலில் வணக்கம் சொல்வார். டைரக்டர் அருகில் வந்து, அன்று எடுக்கப் போகும் காட்சியை விவரிப்பார். உடன் இருக்கும் உதவி டைரக்டர் பாஸ்கரன் சிவாஜி பேசவேண்டிய வசனங்களைச் சொல்வார். நன்றாகக் கேட்டு, மனத்தில் இறுத்திக்கொண்டு மெதுவாகச் சொல்லிப் பார்ப்பார்.\nடைரக்டர், ஸ்டார்ட் கேமிரா சொல்லி ‘ஆக்ஷ்ன் ‘ என்று சொன்னவுடன், எங்கிருந்துதான் வருமோ, அந்த வசன உச்சரிப்பும், அதற்கேற்ற பாவங்களும் பார்த்துக்கொண்டிருக்கும் போது நமக்குப் புல்லரிக்கும். அவர்தான் சிவாஜி.\nசிவாஜியுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து “நேரம் தவறாமை, செய்யும் தொழிலே தெய்வம்” என்கிற அவ்விரு தாரகமந்திரத்தை அறிந்துகொண்டேன். அதை இன்றும் கடைப்பிடித்தும் வருகிறேன். சிங்கப்பூரில் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது நான் சரியான நேரத்திற்குச் சென்று விடுவேன். குறிப்பாக நான் முன்னின்று நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும், சரியான நேரத்திற்குத் தொடங்கி, சரியான நேரத்தில் முடித்திடுவேன். அதனால் இப்போது, அன்பழகன் நிகழ்ச்சி என்றால் சிறப்புப் பேச்சாளர் வருவதற்கு ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கி விடுவார் என சிங்கப்பூர் தமிழ் மக்களே அறிந்து கொண்டனர். அத்துடன் நான் சிங்கையில் வணிகம் செய்யும் போதும் சரியாக விடியல் ஆறு மணிக்கு முன்பே நானே கடையைத் திறந்து விடுவேன். அந்த வியாபார நேரத்தில் யாரேனும் எங்கே அழைத்தாலும் செய்கிற தொழிலை விட்டு விட்டுப் போகமாட்டேன். சிவாஜியிடம் கற்றுக் கொண்ட பாடம் என்னுடைய வாழ்க்கைக்கும் பெரிதும் பயன்பட்டது.\nகாலை ஏழு மணி கால்ஷீட் என்றால் பொதுவாக பணியாற்றுபவர்கள் எல்லோரும் ஏறத்தாழ ஏழுமணிபோல்தான் ஸ்டுடியோவிற்கு வந்த�� சேர்வோம். அதன் பின் ஏற்பாடுகளைக் கவனிப்போம். கேமிராமேனிடம் காட்சியைச் சொல்லி, விளக்குகளை நடிகர்கள் நடமாடும் இடங்களில் பொருத்தச் சொல்வோம். காட்சிக்கேற்ற உடை அணிகலன்கள், ஒப்பனை ஆகியவற்றைச் சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்வோம். காட்சியில் வைக்க வேண்டிய பொருட்கள், காட்சிக்குத் தேவையான பொருட்களைச் சேகரிப்போம்.\n‘கண்டினியூட்டி’ என்று சொல்லப்படும் தொடர்ச்சியான முன் காட்சியில் என்றோ ஒரு நாள் அதே நடிகர்கள் நடித்தபோது எடுக்கப்பட்ட படத்தை, தொடர் நடவடிக்கைக்காகப் பார்த்து வைத்துக் கொள்வோம். அதற்குள் டைரக்டர் வந்து விடுவார். அவர் ஒரு முறை எல்லாவற்றையும் சரி பார்ப்பார். தயாரிப்பு நிர்வாகியை அழைத்து நடிகர்கள் வந்துவிட்டார்களா என்று கேட்பார். நடிகர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தாலும், “ஆன் தி வே சார் ” என்று பவ்வியமாகப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்திடுவார். ஆக எப்படிப் பார்த்தாலும் படப்பிடிப்புக் கருவி இயங்கக் கிட்டத்தட்ட ஒன்பது மணியாகிவிடும். இப்படித்தான் பொதுவாக நடக்கும். இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.\nஇந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலை நேரத்தில் அலுவலகங்களில் எல்லாம் சுறுசுறுப்பாகப் பணிகள் நடந்ததுபோல், நடிகர் திலகம் அவர்களின் கால்ஷீட் என்றால் முதல்நாளே சம்பந்தப்பட்ட அனைவரும் பம்பரம்போல் சுழல ஆரம்பித்து விடுவார்கள். இன்னொரு செய்தி என்னவென்றால், மற்றவர்கள் பத்து கால்ஷீட்டுகளில் எடுப்பதை, சிவாஜி படப்பிடிப்பு என்றால் ஏழு கால்ஷீட்டுகளில் முடித்துவிடலாம். அந்த அளவிற்கு வேகமாக நடக்கும்.\nகதாநாயகனான சிவாஜியே முழு ஒப்பனையுடன் ஏழு மணி கால்ஷீட் என்றால் சரியாக ஆறு ஐம்பத்தைந்து மணிக்குத் தயாராய் இருப்பார். இவ்வாறு வேலை செய்யும்போது எவ்வளவு மகிச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கும் தெரியுமா அவருடன் பணியாற்றும் சக நடிகர்களும் கூடப் பயந்து கொண்டு சரியான நேரத்திற்குத் தயாராகி விடுவார்கள். ஆனால் எம் ஜி ஆர் படப்பிடிப்பு என்றால் பதினொரு மணிக்குத்தான் என்பார்கள்.\nபட்டுக்கோட்டையார் பாடி வைத்தாரே ” செய்யும் தொழிலே தெய்வம் ” என்று. அது சிவாஜி அவர்களைப் பார்த்துத்தான் பாடியிருப்பாரோ என்றுகூடத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு கதையின் பாத்திரமாகவே மாறிவிடுவார். காட்சிக்கு ஏற்ற மனநிலையை வரவழைத்துக் கொள்வார். அவர் நடிப்பு மிகையானது என்று வாதிடுவரும் உளர். அது ஓரளவு உண்மையாகவும் இருக்கலாம். இயல்பாக நடிப்பது என்பது ஒன்று. எதையும் மிகைப்படுத்தியே பேசியும், எழுதியும் வரும் நம் நாட்டினர் இப்படி நடித்தால்தான் ‘நடிப்பு’ என்றும் ஒத்துக் கொண்டார்கள். நடிப்பைப் பார்த்து உணர்ச்சி வசப்படுபவர்கள், கண்ணீர் சிந்துபவர்களாலே படம் ஓடியது. சிறந்த நடிகர் என்கிற விருதினை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் அவருக்கு அளித்தார்கள். நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்திய இன்னொரு நடிகர் இந்தியாவில் இல்லை. சிவாஜி நடித்த படங்களை இந்தியில் மீண்டும் எடுக்க முற்படும் போது, படத்தைப் பார்த்தபின் எத்தனையோ நடிகர்கள், சிவாஜி போல் தன்னால் செய்ய முடியாது என்று பயந்து ஓடிய வரலாறும் உண்டு.\nநடிகர் திலகத்துடன், எதிரொலி படப்பிடிப்பு நேரத்தில் எனக்கு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்புக் கிட்டியது. காரணம், நான் சிறியவன், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதோடு உறவுக்காரன் என்றுகூட நாங்கள் இருவரும் சொல்லிக் கொள்வோம். உங்களைக் கெடுத்தது டைரக்டர் பீம்சிங்தான் என்பேன். ஏண்டா அப்படிச் சொல்கிறாய் என்று கேட்பார். ஆமாம். அவர்தானே உங்களைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்று ஆஸ்திகராக்கினார். எங்கள் இயக்கத்தை விட்டு அதன்பின்தானே விலகினீர்கள். இல்லையென்றால் இன்னும் நெருக்கமாக இருப்போமல்லயா என்று கேட்பார். ஆமாம். அவர்தானே உங்களைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்று ஆஸ்திகராக்கினார். எங்கள் இயக்கத்தை விட்டு அதன்பின்தானே விலகினீர்கள். இல்லையென்றால் இன்னும் நெருக்கமாக இருப்போமல்லயா என்று சிறுவன் என்கிற பாதுகாப்பில் பேசுவேன். சிரித்துக் கொள்வார். அப்படிக் கேட்டதிலிருந்து ” நாத்திகப் பயலே ” என்று செல்லமாகத் தான் என்னை அழைப்பார். அப்படி அவர் என்னை அழைத்தபோது எனக்கு அவரிடம் உள்ள நெருக்கத்தையும் அன்பையும் நினைத்து இன்றும் மகிழ்ச்சியடைகிறேன்.\nகணேசன் நம்மைவிட்டு மறைந்து இருக்கலாம்; ஆனால் சிவாஜி மறையவில்லை, என அவர் மறைந்தபோது சிங்கப்பூரில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் நான் பாடியது நினைவுக்கு வருகிறது. அதை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்கிறேன்.\n1:47 பிப இல் செப்ரெம்பர் 30, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nரவீந்திரன் on பூவும் பொட்டும் (Poovum P…\nஜெயகாந்தனின் “… on ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்…\nGAK on அலி பாபாவும் 40 திருடர்கள…\nதுப்பறியும் சாம்பு |… on மோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto…\nகலைஞரின் படைப்புகளுக… on அபிமன்யு\nகலைஞரின் படைப்புகளுக… on திரும்பிப் பார்\nகலைஞரின் படைப்புகளுக… on மந்திரி குமாரி\nகலைஞரின் படைப்புகளுக… on பராசக்தி\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nகலைஞரின் படைப்புகளுக… on மனோகரா\nஎம்ஜியார் குதிரை பறக்கட்டுமே சிவாஜி தொப்பை வெடிக்கட்டுமே என்பதில்லை\nபாலு மகேந்திரா பற்றி சுஜாதா\nபிரபல பாடகி சொர்ணலதா(37) மரணம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kural-sakthi.blogspot.com/2017/", "date_download": "2018-07-19T11:46:13Z", "digest": "sha1:XN24E3NH6X7UFB7I7NJRCYLIM7G7NDFR", "length": 69560, "nlines": 1864, "source_domain": "kural-sakthi.blogspot.com", "title": "குரல்", "raw_content": "\nஎனக்குத் தொழில் பேச்சு..... ஆசை எழுத்து\n2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஇன்று ஒரு நட்சத்திரம் கேட்கிறேன்\nஉன் முகம் போலவே எதையும் காட்டா இருள்\nயாருமிலாத பொழுது ரகசியமாகக் கேட்பாள்\nஅவள் கண்களில் தெரிவது திருப்தியா\nஅமாவாசை வானிடம் நட்சத்திரம் கேட்பது\nசிப்பியும் சங்கும் அள்ளி வராதவர்\nதொலைவதற்கான ஆயத்தம் தேடலாக மாற\nபக்கத்து கண்ணாடியில் தற்செயலாக நோக்கிய\nஅதைத் தெரியவே தெரியாது என்றே வையுங்கள்\nதோடு மூக்குத்தியை ஆடை போல அடிப்படையாய்ப்\nபார்க்க அதனினும் கொடிதான பொழுதுகளில்\nகாதணிகள் கண்ணீரோடு சொல்லிப் போனது\nஎண்ணெய் படிந்த ஒற்றைக்கல் மூக்குத்தியிடம் அணிவிக்கும் பொழுதுக்கு\nதுணைச் சொல்லாகவே ஏற்றன. அறியாத வயதில் சுழற்றிவிட்ட திருகைக்\nகழற்றும் கொடுமை கருதியே பிழைத்தது\nதுயரங்களில் சின்னது என்ன பெரியது என்ன\nஇடையூறுஎன்னவோ குத்தும் திருகுதான் உழைப்பின் நெருப்பு தணலும் முகத்தில்\nஇருள் கடந்த நாட்கள்தான் எத்தனை முத்து பெரியம்மா எது தவறினாலும்\nஅவள் பொறுமையின் பெருமைகளில் ஒன்றாகவும்\nபறித்துச் சென்றான் குடிகார பெரியப்பன்\nகண்முன்னால் நின்று கொண்டிருக்கும் யானை\nகூரை கிடைக்காது குப்பைகளோடு பிணைந்து படர\nஎன்ற சமாதானத்தோடு புலன் தீட்டுகையில்\nகுகை இருளுக்கு வெளியே அதிரும் முழக்கங்கள்\nஇங்கோ ரும் ரும்மெனச் சுற்றுகிறது\nஉன் கயிற்றின் விட்டம் உன் உலகு\nநாம் அடித்த முளைகளின் மேலிருக்கட்டும்\nகரகரவென்று சுற்றும் சக்கரத்தின் முன்\nமுருங்கைக்கிளை சிரித்துக்கொண்டு நிமிர்ந்துவிடுகிறது பெருமழைசொரிந்த\nநம் காலடியில் உதிர்ந்து பறக்கும்\nஓராயிரமாய்க் கிழிந்து தொங்கும் வாழையிலையை வருடப்போகிறது\nஏறியிறங்கும் அணிலுக்கும் ஒண்டு இடுக்கில் நார் சேர்க்கும் காக்கைக்கும் ஆட்சேபமின்றி இடம்\nஎதற்கும் இடந்தரா எம்முடையதைப் பெருவாழ்வென்று\nஇழையத்தட்டி நகாசு கிகாசு செய்து\nநாலு கல்லோ சலங்கையோ செதுக்கி\nஅமுக்கி அமுக்கி ஓரம் மூடி\nசெய்கூலி சேதாரத்தோடு நல்ல விலை போகும்\nநல்ல விலை கொண்டு நாயை விற்பார்\nமுழம் முழமாய்ச் சுற்றி வைத்த பந்துகளிலிருந்து\nஒரு கிள்ளு கூடத்தராது ஒயர்கூடையில் பதுக்கியபடி\nதன்னை வணங்க காசு வீசும்\nபேரத்தின் எரிச்சலை வெற்றிலை எச்சிலாய்ப்புளிச்சிடும்\nமஞ்சள் சுங்கடியில் சான்னித்தியம் அருளும்\nவனத்தில் நிறைந்திருந்த வயலட் சிறு பூக்களின் பெயர் தெரியவில்லை\nவண்ணத்துப் பூச்சிக்கும் எனக்கும் அதனாலென்ன\n******************************************************** கு ளத்தின் பாடலை நீங்கள் தவளையின் குரலில் கேட்கிறீர்கள்\nஉங்கள் தூண்டில் மீனின் குரலில் கேட்க\nகண்ணாடித்தாள் போலச் சிறகு விரிக்கும் வண்ணத்துப்பூச்சி\nசற்றுமுன் கிழித்த இதயம் மறந்து போனது\nசாய்ந்து சாய்ந்து நனைக்கிறது மழை\nஅட இந்த உதிரி செவ்வந்தியும்தான்\nமழை கேட்கவேண்டும் எனத் தோன்றும் பாடல்கள்\nமெழுகுவத்தி கரைந்தே விடுமோ என்ற அச்சத்துடன்\nஇன்றைய நாசியில் அரூபமாய் இறுக்கமாய்த் தோள் சார்த்திய வயலினை\nசொட்டுச் சொட்டாய் உதிர்ந்து கொண்டிருக்கிறது\nஅவ்வளவையும் ஏந்திவிடக் கை குவிக்கிறேன்\nமழைத் துளியே உன்மீதிலான காதலைத்தான்\nபயணிக்கும் பேரன்பு உனக்கு வாய்க்காதபோதும்\nஎன் குருதியின் நீர்மை நீதானெனக்\nபைசாசத்தைக் கூட்டு சேர்த்துக் கொண்டு\nதரையோடு படர்ந்து கிடக்கிறது குப்பைக்கீரை\nகண்டு பட படக்குதென் இதயம்\nமேல் கீழாக எழுதிப் பார்த்தேன்\nஇறந்தவன் பெயரை எப��படி மாற்றுவது\nஅழகான ஒரு படத்தை முகநூலில்\nஅலைபேசி சேமிப்பில் எண்ணாக எழுத்தாக\nமுகநூல்வழி ஆட்டிப்படைக்கும் அவனிடம் சொல்ல வழியில்லை\nபாதுகாப்பாக உணர முற்படுகிறது ஒரு ஆயுதம்\nஏந்தியிருப்பவனும் எதிர்கொள்பவனும் மறைத்தும் மாற்றியும் ஏமாற்றியும் பாதுகாப்பைப் போர்த்திக்கொள்ளத் துடித்துக்கொண்டிருக்கையில்\nஆயுதத்தின் பாதுகாப்புணர்வுக்கென்ன அவசரம் ************************************************** ஆயுதங்கள் அறிவதில்லை அழிக்கவே பிறந்த கதை\n************************************************************* இது உனக்கான நேரம் என்பதை எப்படியாவது சொல்ல விரும்புகிறாய்\nநாம் வீட்டுக்குப் போகும் வழியில்\nகொண்டையன் வாய்க்கால் ஆற்றில் சேர்த்தியா\nகொடுக்காப்புளி.,அருநெல்லி, நாவற்பழத்துக்கு சற்றே பாதை விலகியும்\nநடையிலும் ஓட்டத்திலும் சேர்த்தியிலா போக்கில்\nசிதறாது சேகரிக்க முந்தி வேண்டியே\nதிடீர் பாண்டி கட்டங்கள் நேரமிழுத்தபோதும்\nகுட் டச் பேட் டச் தெரியாத தடிக்கழுதை என்று வாசலில் வண்டி ஏற்றி கம்பிச் சிறையிலிருந்து\nகட்டிடச் சிறைக்கு இடம் மாறித் திரும்பும்\nஏழுவயதுப் பெண்ணிடம் எப்படியும் சொல்லிவிடவேண்டும்\nகாலில் முள் படாத நாகரீக காலம் இது\nவண்ணக் குழம்போடு திரியும் கடவுள்\nஎந்த இரண்டு புள்ளியில் பொறி உறங்குகிறது\nமாற்றி மாற்றி உரசிக் கொண்டிருக்கிறோம்\nநேசத்தின் இலைகளின்மேல் பனி மூடிக் கிடக்கிறது\nபசிய ஒளி சுடராமல் இற்று விழுந்து விடுவோமோ\nகாற்றோ தன்னிடம் வனம் உரையாடக் காத்திருப்பதாகப்\nதப்பித் தப்பி நடக்கும் எல்லாவற்றுக்கும்\nஸ்ட்ரெப்ஸில்ஸ் தான் என் செயும்\nயாருமே இல்லை மின்சார அழைப்புமணி வைக்கத்தொடங்கிய பின்னும்\nதட்டிய ஒலியின் பிரமையில் திடுக்கிட்டு எழுமளவு\nகதவைத் தட்டும் ஒலி நம் இதயத்தில்\nகிணற்றகல இருளில் மிதந்து கொண்டிருந்த\nஉங்கள் எந்த தூரிகையிலும் இல்லாதபடி\nசாம்பிய முகத்தோடு நாள் திறப்பதன்றி\nபோக வாய்க்காத இடங்களின் பட்டியல்\nபால் சர்பத் அறிமுகப்படுத்திய தேரடி\nமுற்றுப்புள்ளிக்கு முன் உள்ள தூரம்\nபிரத்யேக வேகமும் பிரத்யேக ஆயுதங்களும் *****************************************\n******************************************** உங்களிடம் எப்படி எல்லோரும் கேள்விகளைத் தயக்கமின்றி எழுப்புகிறார்கள்\nமுனை மடிந்த அந்தப் புத்தகத்தினுள்\nஅதனாலும் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்பதில்\nதீம் படங்களை ��ழங்கியவர்: badins\nசக்தியை தேடி சக்தியோடு குரல் கொடுக்கும் வாழ்க்கை\nவண்ணக் குழம்போடு திரியும் கடவுள்\nமுற்றுப்புள்ளிக்கு முன் உள்ள தூரம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n17 1 16 முகநூலில்\n21 1 16 முகநூலில்\n21 12 15 முகநூலில்\n22 1 16 முகநூலில்\n23 12 15 -முகநூலில்\n28 12 15 முகநூலில்\n8 1 16 முகநூலில்\nஆயிஷா இரா நடராசன். சுகிர்தராணி\nபடகு விபத்து அகதிகுழந்தை மரணம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rupika-rupika.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-19T11:01:12Z", "digest": "sha1:SQ77ALYR2265MSETWPY76WTUN5ZIIDQQ", "length": 11032, "nlines": 181, "source_domain": "rupika-rupika.blogspot.com", "title": "அம்பாளடியாள்: August 2013", "raw_content": "\nகழுகுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை \nஅருந்தும் இரத்தம் ஒன்றே சொர்க்கம்\nஎன அறிந்தவர்க்கு ஏது துக்கம் \nவண்ண நிறம் அது எதற்கு\nபரிதவிக்கும் இனத்தைப் பார்த்து மேலும்\nபரிகசிக்குது இது என்ன கூத்து\nதெரிந்து கொள்ளும் எங்கள் துயரைத்\nதெரிவிப்பவர் யார் தான் இங்கே\nமது மயக்கம் மனதை மயக்க\nகொதி கொதித்துப் போனது உள்ளம் இந்தக்\nஎன்னுடைய ஆசிாியர் கவிஞர் கி. பாரதிதாசன் வலைப்பூ\nபாரதி தாசனார் பாடிய பாக்களைப் பாருற மேவும் பயன்\nவருகை தந்திருக்கும் அனைத்து நல்\nவரவும் உறவும் என்றும் தொடர என்\nமனமார்ந்த வாழ்த்துகள் .மிக்க நன்றி\nவலைத் தளத்தில் எனக்குக் கிடைத்த முதல் விருது. இதை வழங்கிய முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ......\nஎண்ணற்ற கோட்டை கட்டி என்ன பயன் கண்டோம் இங்கே கண்ணிறைந்த இயற்கை ஒன்றே காவலரணாகும் எங்கும் கண்ணிறைந்த இயற்கை ஒன்றே காவலரணாகும் எங்கும் மண்மீது உயிர்கள் வாழ மறுபிறவி தானும...\n *************************************** பூமி வறண்டிடிச்சே பூகம்பமும் கிளம்பிடிச்சே\nதன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம் -நன்கறிவீர் கள்ள மிலாத கனிவான நெஞ்சமுண்டேல் உள்ளத்திற் ...\nகிராமிய பூபாளம் உலகெங்கும் ஒலிக்கட்டும்\nகற்றவரும் மற்றவரும் வீற்றி ருக்கும் ....கலைமாலைப் பொழுதினிலே வாழ்த்துப் பாடி நற்பெயரை நான்சூட்ட வந்தே னம்மா .....நறுந்தமிழே\nகாதல் கலாட்டா கவிதைப் போட்டி\nஆண் ----------------------------------- மாலைப்பொழுதில் மயக்கும் பெண் நிலவடி அவள் சேலை கட்டி வந்த சிலையடி\nவெற்றிபெற்ற களிப்பொன்றே வாழ்வில் போதும் .....வேறுவேலை இங்கிருந்தால் பார்த்துச் செல்வீர் பெற்றவெற்றி ஒன்றினையே எண்ணி எண்ணிப் ......\nகுறளை நம்பு குறைகள் தீரும் \nஎத்தனையோ மனிதர்களைப் பாத்து விட்டோம் ...\nஎல்லோரும் நலம்வாழ ஆதரிப்போம் இயற்கை தன்னை \nதெய்வத்தின் மீதெந்த குற்றம் இல்லை ......தேடியிங்கு வந்தவெள்ளம் தந்த தொல்லை மெய்வருந்த வைப்பதுவும் சாபக் கேடே ......தேடியிங்கு வந்தவெள்ளம் தந்த தொல்லை மெய்வருந்த வைப்பதுவும் சாபக் கேடே \nபாவலர் பயிலரங்கில் நான் தொடுத்த வெண்பா மாலை\n(இரு விகற்ப நேரிசை வெண்பா) தந்தை தாய் தந்தை பொருளீட்டித் தந்தெம்மைக் காத்திடினும் இந்த உலகத்தில் எப்போதும் தந்தை பொருளீட்டித் தந்தெம்மைக் காத்திடினும் இந்த உலகத்தில் எப்போதும்\nஉதவும் கரங்களே ஒன்று கூடுவீர்\nஎங்கெங்கோ நடிகைக்கும் கோயில் கட்டி ......இருக்கின்ற பொருள்தந்து மகிழ வைத்தார் தங்கத்தைக்...\nகழுகுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை \nநான் பெற்ற விருதுகள் (2)\nபோற்றித் திரு அகவல்கள் (37)\nமூச்சுக் காற்று மூன்றின் தொடர்.... (2)\nவலைப் பதிவர் திருவிழா போட்டிக் கவிதை 2015 (1)\nஇவ்விருதினை வழங்கியவர் திரு .துரை செல்வராஜு ,நன்றி\nஅன்போடு இந்த விருதை எனக்கு வழங்கிய நிலாவன்பனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇவ் விருதினை வழங்கிய வை .கொபலகிருஹ்ணன் ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் .\n(தமிழ்விரும்பி )லக்ஸ்மி அம்மா வழங்கிய இந்த விருதுக்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineulagam.com/cinema/06/156788", "date_download": "2018-07-19T11:39:12Z", "digest": "sha1:RZZIK47DPKWVCI3XTWFV5SWYIMS5XETK", "length": 6958, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல் - Cineulagam", "raw_content": "\nசின்னத்திரை நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதற்கு பின் இப்படி ஒரு சோக கதையா\nசர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தொட்டு கூட பார்த்திடாதிங்க....பெரிய ஆபத்து\nபிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ\nஎந்நேரமும் கேம் விளையாடிய மகன்....உலகத்தை விட்டே அனுப்பிய தந்தை\nஎல்லாரையும் குறைசொல்லும் வைஷ்ணவி மிட்நைட் மசாலாவில் செய்த வேலையை பார்த்தீர்களா\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்க���்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nநேரத்திற்கு வேலைக்கு செல்ல 32 கி.மீ நடந்து சென்ற இளைஞர்...முதலாளி கொடுத்த பரிசு என்னனு தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை... அதிர்ச்சியில் திரையுலகம்\nபிக்பாஸ் வீட்டில் அனைவரது உண்மைமுகம் இதுதானா\nதெய்வமகள் சீரியல் புகழ் வானி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nகண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது\nசமூகவலைதளத்தில் ஒரே நாளில் இந்தியா முழுக்க பிரபலமானவர் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தின் டீசர், பாடல் இவரை நடிகையாக உயர்த்தியது. காரணம் அந்த கண் அசைவுகள் தான்.\nஇதனால் அவருக்கு லட்சக்கணக்கான எண்ணிக்கையில் ரசிகர்கள் சேர்ந்தார்கள். பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. மேலும் பாலிவுட் சினிமாவில் இருந்த வாய்ப்பு வர அதை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளாராம்.\nஇந்நிலையில் அவர் அண்மையில் நடித்த சாக்லேட் விளம்பரத்தில் நடித்திருந்தார். இதில் அவரை பார்த்ததும் ரசிகர்கள் குஷியானார்கள். அத்துடன் இவர் அழகுக்காக மூக்கில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் தற்போது அதை வைத்து விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇது பற்றிய உண்மையை அவர் வெளியிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineulagam.com/films/06/156775", "date_download": "2018-07-19T11:31:12Z", "digest": "sha1:4O6PP43XOEXSFZEXOLOTNUYO4CXHS7ZC", "length": 6586, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா படத்திற்கு நிகரான வசூலா தமிழ்ப்படம்-2! முதல் நாள் வசூல் முழு விவரம் - Cineulagam", "raw_content": "\nஎந்நேரமும் கேம் விளையாடிய மகன்....உலகத்தை விட்டே அனுப்பிய தந்தை\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை... அதிர்ச்சியில் திரையுலகம்\nஎல்லாரையும் குறைசொல்லும் வைஷ்ணவி மிட்நைட் மசாலாவில் செய்த வேலையை பார்த்தீர்களா\nசர்கார் விஜய்யின் லேட்டஸ்ட் ஸ்டில் - ரசிகர்கள் மத்தியில் வைரல்\n தற்போ��ைய நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nஉங்களுக்கு HIV வரவில்லையா என கேட்ட ரசிகர்- ஸ்ரீரெட்டி கொடுத்த பதிலை பாருங்க\nநேரத்திற்கு வேலைக்கு செல்ல 32 கி.மீ நடந்து சென்ற இளைஞர்...முதலாளி கொடுத்த பரிசு என்னனு தெரியுமா\nவீடு வாடகைக்கு கேட்டு வந்த நபர் செய்த காரியத்தை பாருங்கள்\nதொகுப்பாளர் பிரியங்காவுடன் மிக நெருக்கமாக நடனமாடும் நபர் யார் தெரியுமா\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nதெய்வமகள் சீரியல் புகழ் வானி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nசூர்யா படத்திற்கு நிகரான வசூலா தமிழ்ப்படம்-2 முதல் நாள் வசூல் முழு விவரம்\nதமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்தை தொடர்ந்த உச்ச நட்சத்திரம் என்றால் சூர்யா தான். ஆனால், இவரின் சமீபத்திய படங்கள் ஏதும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.\nஇதனால், இவரின் மார்க்கெட் முன்பு போல் இல்லை, இந்நிலையில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் இந்த வாரம் பொங்கலுக்கு வந்தது.\nஇப்படத்திற்கு எப்படி ஒரு வரவேற்பு பொங்கல் தினத்தில் இருந்ததோ, அதே அளவு வரவேற்பு இன்று வெளியான தமிழ்ப்படம்-2விற்கும் இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nஎப்படியும் தமிழகத்தில் இப்படம் ரூ 5 கோடி வரை முதல் நாள் மட்டுமே வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1874829", "date_download": "2018-07-19T11:14:56Z", "digest": "sha1:3JYANCR7VVLSV6347ENAS27OXXNFFGG4", "length": 15633, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "செம்பட்டி சந்தையில் ஆடுகள் விலை உயர்வு| Dinamalar", "raw_content": "\nசெம்பட்டி சந்தையில் ஆடுகள் விலை உயர்வு\nசெம்பட்டி, சமீபத்திய மழை, விலையில்லா ஆடு திட்ட அமல் போன்றவற்றால், செம்பட்டி சந்தையில் ஆடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு வரை, ஆத்துார், செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, கொடைரோடு பகுதிகளில், போதிய மழை இல்லாததால் மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்தனர். கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் கிடைக்கவில்லை.\nபெரும்பாலோர், பராமரிக்க முடியாமல் கால்நடைகளை விற்கும் அவலம் ஏற்பட்டது. சமீபத்திய மழையால், கிராமங்களில் புல், பூண்டு அடர்ந்து வளர்ந்துள்ளது. மக்காச்சோள சாகுபடியும் நடக்கிறது. இதனால் விவசாயிகளிடம் கால்நடைகள் வளர்க்கும் ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச ஆடுகள் வழங்கும் திட்டமும், மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது வாரச்சந்தைகளில் ஆடுகளின் விலை 70 சதவீதத்திற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.\nசெம்பட்டி சந்தையில், ஆத்துார், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களைச்சேர்ந்த பலர், நேற்று ஆடு, மாடு வாங்குவதற்காக குவிந்தனர். விலை அதிகரிப்பால், அரசு திட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டில் பயனாளிகளால் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆடுகளை வாங்க முடிந்தது.\nபயனாளி பழனியம்மாள் கூறுகையில், ''கடந்தாண்டைவிட, ஆடுகளின் விலை குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இலவச ஆடுகள் திட்டத்தில், அரசு ஒதுக்கீடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். விலை அதிகரிப்பு காரணமாக, 4 ஆடுகளுக்கு பதிலாக 2 ஆடுகள் மட்டுமே வாங்க முடிந்தது'' என்றார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா��்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radio.kanapraba.com/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-19T11:13:32Z", "digest": "sha1:2FS362NSVA6A5WFTUIBXHAEFTUEVKQCV", "length": 83751, "nlines": 373, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "நினைவுப்பதிவு – றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழ் சினிமாவின் முகங்களில் ஒன்றை இழந்து\nவிட்டோம் என்று நடிகை காந்திமதி இறந்த போது குறிப்பிட்டேன். அதையே நடிகர்\nவினுச்சக்ரவர்த்தி இழப்பிலும் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு நமது\nகிராமியச் சூழலில் வாழ்ந்து பழகியவர் போன்ற முக வெட்டும் குணாதிசியமும்\nகொண்டவர். பட்டைத் திருநீறும், குங்குமமும் முகத்தில் மிளிர, வேட்டி\nசட்டையும் கொண்ட அவரின் உருவ அமைப்பு மேலும் அதைப் பலமாக்கும்.\n“டேய் ���ின்னவனே” “ஆங்” , “களுத” இப்படியான சின்னச் சின்ன வசன வெளிப்பாட்டிலும் தன் முத்திரைச் சிரிப்பிலும் கெத்தாகத் தனக்கான ஆளுமையை உருவாக்கியவர்.\nவினுச்சக்ரவர்த்தி என்றால் “ரோஜாப்பூ ரவிக்கைக்காரி” பட சர்ச்சையும் வந்து விடும்.\nஇந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று அவர் உரிமை கோர இன்னொரு பக்கம்\nநடிகர் விஜய் கிருஷ்ணராஜ் தானே உரிமையாளர் எனவும் பேட்டிகள் வந்ததுண்டு.\nஇருவருக்குமே ரோஜாப்பூ ரவிக்கைக்காரி தான் முதல் படம். படத்தின்\nஎழுத்தோட்டத்தில் மூலக்கதை ஆவனஹள்ளி ஶ்ரீகிருஷ்ணா எனவும், திரைக்கதை, வசனம்\nகிருஷ்ணா (விஜய்கிருஷ்ணராஜ்) என்றே வந்திருக்கும். நடிகர் குழுவில்\nஅறிமுகத்தில் வினு என்ற வினுச்சக்ரவர்த்தி காணப்படுகிறார்.\nகதையின் நதிமூலத்தைத் தேடினால் ஒரு சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது. நடிகர்\nசிவகுமாரின் நூறாவது படமாக முதலில் வினுச்சக்ரவர்த்தி கதை எழுதிய\nவண்டிச்சக்கரம் படமே அமைய இருந்ததாம். இந்தப் படத்துக்காக மைசூருக்குப்\nபடப்பிடிப்பு வேலைகளுக்குப் போன போது “பரசங்கத கெண்டே திம்மா” என்ற\nகன்னடப்படத்தைப் பார்த்து தமிழுக்கு ஏற்றாற் போல ரோசாப்பூ ரவிக்கைக்காரி\nகன்னடப்பட இயக்குநர் புட்டன்ன கனகல் இன் உதவியாளராக இருந்தவர் வினுச்சக்ரவர்த்தி.\nவண்டிச்சக்கரம் மூலம் கதாசிரியராகவும், சில்க் ஸ்மிதாவையும் அறிமுகப்படுத்தியவராகவும் இருந்தார்.\nஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தாலும் வினுச்சக்ரவர்த்தியின் உண்மையான\nநடிப்புப் பரிமாணத்துக்குத் தீனி கொடுத்தவை ஒரு சிலவே. ஆரம்ப காலத்தில்\nஅவர் நடித்த “கோபுரங்கள் சாய்வதில்லை” அப்பன் பாத்திரம் இன்றும் மறக்க\nமுடியாது. பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களிலேயே அமுக்கப்பட்டார்.\nஜனரஞ்சகப் படைப்புகளில் அண்ணாமலை படத்தில் நல்ல குணம் கொண்ட எம்.எல்.ஏ ஆக\nவந்து ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.\nசின்னத்தாயி படத்திலும் ஒரு சிறப்பு வேடம் கிட்டியது இவருக்கு https://youtu.be/U–iPe2s6vI\nதான் இயக்குநர் ஆக வேண்டிய கனவில் இருப்பதாகச் சொன்னவர் அந்த வாய்ப்பே இல்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார்.\nஎன்.கே.விஸ்வநாதன் இழப்பில் சில நினைவுகள் 🎬\nதன்னுடைய பெரியப்பா என்.கே.விஸ்வநாதன் காலமானதாக நண்பர் Ars Senthilarasu பகிர்ந்திருந்த அஞ்சலி இடுகையைக் காலை காண நேரிட்டது.\nஎன்.கே.விஸ்வநாதன் நான்கு தசாப்தங்கள் திரையுலகில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக அறியப்பட்டவர்.\nஎண்பதுகளின் திரைப்பிரியர்களுக்கு குறிப்பாக இராம.நாராயணன் படங்கள்\nபலவற்றின் வழியாக இவரை அறிந்திருப்பார். இராம நாராயணன் படங்களில் தந்திரக்\nகாட்சிகள், இரட்டை வேடக் காட்சிகளை எல்லாம் இன்றைய தொழில் நுட்ப உள்வாங்கல்\nஇல்லாத காலத்தில் இருந்தே தன்னுடைய ஒளிப்பதிவு வித்தையால் காட்சி வடிவம்\nஎடுப்பவர் என்ற பெருமையைத் தன்னகத்தே கொண்டவர்.\nஒரே ஆண்டில் இரு படங்களினூடாக அறிமுகமானர். ஆபாவாணனின் பிரமாண்டப் படைப்பான\n“இணைந்த கைகள்” படம் அதிலொன்று. இந்தப் பட அனுபவம் குறித்து நான்\nஆபாவாணனோடு எடுத்த வானொலிப் பேட்டியில்\nஅதே 1990 ஆம் ஆண்டில் இன்னொரு மாறுபட்ட படம் “பெரிய வீட்டுப் பண்ணக்காரன்” ஐ இயக்கினார். இது சங்கிலி முருகன் தயாரிப்பு.\nசங்கிலி முருகன் படங்களில் பாண்டி நாட்டுத் தங்கம், எங்க ஊரு காவக்காரன்\nபோன்றவை T.P.கஜேந்திரன் இயக்கியவை. கங்கை அமரன் இயக்கம் ஏனோ அந்தப்\nபடங்களில் இல்லை. கங்கை அமரன் இயக்கிய படங்களாகவே இன்று பலர் அவற்றைக்\nகருதுகிறார்கள். இவற்றோடு சங்கிலி முருகன் தயாரித்து என்.கே.விஸ்வநாதன்\nஇயக்கிய பெரிய வீட்டுப் பண்ணக்காரன், நாடோடிப் பாட்டுக்காரன் போன்றவையும்\nஅடங்கும். இவற்றுக்கு இளையராஜா இசை, சங்கிலி முருகன் தயாரிப்பு என்பதால்\nகங்கை அமரன் இயக்கம் என்ற எடுகோள் தோன்றியிருக்கும்.\nஅம்சங்கள் ஏற்பாடு செய்யாமலேயே நடிகர் விஜய்காந்துக்கு ஒரு கோடி சம்பளம்\nகொடுத்து சங்கிலி முருகன் ஒப்பந்தம் செய்த படம் “பெரிய மருது”. அந்த 1994\nஆம் ஆண்டு ஒரு கோடி ரூபா என்பது இன்றைக்குப் பல கோடி பெறும். அப்போது அது\nஅந்தப் படத்தின் இயக்கமும் என்.கே.விஸ்வநாதன் தான்.\nசங்கிலி முருகன் தயாரித்த முதல் படம் “கரிமேடு கருவாயன்” பட நாயகன்\nவிஜய்காந்த் அப்போது பணம் வாங்காமல் நடித்ததற்காக நன்றிக் கடனாக இருக்கக்\nஎன்.கே.விஸ்வநாதன் எண்பதுகள், தொண்ணூறுகளில் ஏராளம்\nபடங்களுக்கு ஒளிப்பதிவாளர், இன்னும் பல படங்களுக்கு இயக்குநராக\nஇருந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.\nPosted in Uncategorized Tagged நினைவுப்பதிவு Leave a Comment on என்.கே.விஸ்வநாதன் இழப்பில் சில நினைவுகள் 🎬\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nமெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது ��ற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்.\nஇன்று எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்வுகள் வருவது வெறுமனே கண் துடைப்பல்ல அந்த மாபெரும் கலைஞனுக்கான மானசீக அஞ்சலி என்பதை அதே உணர்வோடு பார்ப்பவர்கள் உய்த்துணர்வார்கள்.\nமெல்லிசை மாமன்னர் குறித்த வரலாற்றுப் பகிர்வையோ அல்லது அவரின் பாடல்கள் குறித்த ஆழ அகலத்தையோ பேச இன்றொரு நாள் போதாது. அவர் தந்தது இசைப் பாற்கடல் அல்லவோ\nஎம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்த இறப்புச் சேதி கேட்ட போது என் மனத்தில் இருந்த இசைத்தட்டு இந்த “எரிகனல் காற்றில் உள்ளம் கொள்ளும் போலே” பாடலைத் தான் மீட்டியது.\nஇசைஞானி இளையராஜா இசையில் “ஒரு யாத்ரா மொழி” படத்துக்காக மலையாளத்தின் மறைந்த பாடலாசிரியர் கிரிஷ் புத்தன்சேரி வரிகளில் ஒலித்த பாடல் இது.\nஇதே பாடலை இளையராஜா பாடும் இன்னொரு வடிவமும் உண்டு. அந்த வகையில் ஒரே பாடலை இரு வேறுபட்ட இசையமைப்பாளர் பாடிய புதுமையும் இந்தப் பாடலில் நிகழ்ந்திருக்கிறது.\nதமிழ்த் திரையிசையில் அசரீரிப் பாடல்கள் என்று சொல்லக் கூடிய, கதையோட்டத்தின் பின்னணியில் ஒலிக்கும் பாடலாகவோ அல்லது கதை மாந்தரின் அவலத்தைப் பிரதிபலிக்கும் குரலாகவோ கொணர்ந்தளிக்கும் சிறப்பு எம்.எஸ்.விஸ்வநாதன் குரலுக்கு உண்டு.\n“எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே” என்று சிவகாமியின் செல்வன் படத்தில் தன்னுடைய இசையிலாகட்டும், “உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா” என்று வெள்ளி விழா படத்தில் வி.குமாரின் இசையிலாகட்டும் “விடை கொடு எங்கள் நாடே” என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலாகட்டும் மெல்லிசை மன்னரின் குரல் தன்னிசையில் மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித்துவமாக மிளிர்ந்திருக்கிறது இம்மாதிரியான அசரீரி என்று நான் முன்மொழிந்த பாடல்களில். இங்கே நான் கொடுத்தது சில உதாரணங்கள் தான்.\nஇந்தப் பாடல்களின் எம்.எஸ்.வி அவர்களின் குரலைத் தாண்டிய உணர்வு ரீதியான பந்தம் தான் நெருக்கமாக இருக்கும். அந்தந்தப் பாடல்களை அவர் கொடுத்த விதத்தை மீளவும் மனத்திரையில் அசை போட்டு உணர முடியும் இதை.\nபிற இசைமைப்பாளர் இசையில் நிறையப் பாடிய இசையமைப்பாளர் என்று புகழ் வாய்த்த எம்.எஸ்.வியின் குரல் இளையராஜாவின் இந்த “எரிகனல் காற்றில்” பாடலாக வெளிப்படும் போது இன்றைய அவரின் இன்மையைப் பிரதிபலிக்கும் அசரீரிப் பாடலாகவே என் மனம் உள்ளார்த்தம் கொள்கிறது.\nமெல்லிசை மாமன்னருக்கு என் இதய அஞ்சலிகள்\nபுகைப்படம் நன்றி : மாலைமலர்\nPosted in Uncategorized Tagged எம்.எஸ்.வி, நினைவுப்பதிவு 5 Comments on \"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nசிங்கப்பூர் ஒலி படைப்பாளினி பாமா நினைவில்\nஇணையம் தந்த புண்ணியத்தில் உலக வானொலிகளைக் கேட்க ஆரம்பித்த போது தொடர்ந்து பதினைந்து வருடங்களாக நேசத்தோடு நான் நேயராக இணைந்திருக்கும் வானொலி சிங்கப்பூர் ஒலி.\nஇத்தனை ஆண்டுகளில் பல்வேறுபட்ட குரல்களை சிங்கப்பூர் ஒலி அலை வழியாகக் கேட்டிருந்தாலும் ஒரு சில குரல்களை இத்தனை ஆண்டுகளாகக் கேட்டு ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததிருக்கிறது. அதில் முதன்மையாமையானவர் நிகழ்ச்சிப் படைப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் அவர்கள்.\nவானொலியில் தான் படைக்கும் நிகழ்ச்சிகளில் பொருந்தமான கோர்வையில் பாடல்களைக் கொடுக்கும் போதும், விளம்பரக் குரல்களின் போதும், நேயர்களுடனான கலந்துரையாடலின் போதும் தனித்துவமாக மிளிர்ந்தவர் இவர்.\nநேயர் கலந்துரையாடலின் போது மென்மையாகவும், கருத்தைச் சிதறவிடாம அணைத்துக் கொண்டு போவதில் சமர்த்தர். நேயர்களின் கருத்தை உள்வாங்கிய பின் அதிகாரத்தனம் இல்லாது தன் கருத்தை இசைவாகக் கொடுப்பார். இதனால் மாறுபட்ட கருத்தோடு வருபவர் கூட இவரின் கருத்தை உள்வாங்கும் பக்குவத்தை ஏற்படுத்துவார்.\nசிங்கப்பூர் ஒலி நாடகங்கள் பலவற்றில் பாமா குறித்த பாத்திரமாகவே மாறி நடித்திருந்ததை எல்லாம் ரசித்திருக்கிறேன். ஒருமுறை வசந்தம் தொலைக்காட்சியின் சிறப்பு நாடகத்திலும் இவரைப் பார்த்ததாக ஞாபகம்.\nகடந்த தீபாவளி ஒலி சிறப்பு நாடகத்தில் “வழக்கமா பண்றதை விட நான் பயங்கரமான வேஷம் ஒண்ணு போடப் போறேன்” என்று முன்னோட்டம் சொன்ன போது மனதுக்குள் சிரித்தேன்.\nசிங்கப்பூர் வானொலியின் போக்குவரத்துத் தகவலில் பாமாவின் குரல் அடிக்கடி ஒலிக்கும் போது அம்மாவின் கனிவான ஆலோசனை போன்றிருக்கும்.\nசில மாதங்களுக்கு முன் சிங்கப்பூரின் புகழ் பூத்த மருத்துவர் ஒருவரின் இறப்பு அஞ்சலி செய்யும் போது அந்த மருத்துவர் பாமா தான் நிகழ்ச்சின் செய்பவர் என்று அறியாது அவரின் நிகழ்ச்சியைச் ச���லாகித்துப் பேசியதை நெகிழ்வோடு சொன்னார்.\nஒலிப்படைப்பாளர்களுடன் சம்பாஷிக்கும் போது ஐய்யய்யோ என்று வெட்கப்பட்டு ஒலிக்கும் பாமாவின் குரலில் அப்பட்டமான குழந்தைத்தனம் ஒட்டியிருக்கும்.\nசிங்கப்பூர் ஒலி படைப்பாளி, நேசத்துக்குரிய பாமா அவர்களின் இறப்புச் செய்தியை அறிந்து அதிர்ச்சியடைகிறேன்.\nநேயர்களுடன் பண்பாகவும், மென்மையாகவும் பழகிய பாமா அவர்களின் குரல் மனதை விட்டு நீங்காது நிறைந்திருக்கிறது எனது ஆழ்ந்த அஞ்சலிகளை நேயர்களில் ஒருவனாகப் பகிர்கிறேன்.\nPosted in Uncategorized Tagged நினைவுப்பதிவு 2 Comments on சிங்கப்பூர் ஒலி படைப்பாளினி பாமா நினைவில்\nஎண்பதுகளில் வெற்றிகரமாக இயங்கிய இயக்குநர்களில் பத்திரிகை ஊடகங்களின் கமரா கண்ணில் அகப்படாதவர்களில் ஆபாவாணன், கே.ரங்கராஜ் வரிசையில் மூன்றாவதாக அமீர்ஜானையும் சேர்க்கலாம்.\nஅமீர்ஜானின் குருநாதர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இறந்தபோது தொலைக்காட்சிகளின் அஞ்சலிப் பகிர்வுகளில் கூட அவரின் பகிர்வு இடம்பெறவில்லை.\nஅதிக ஆர்ப்பாட்டமில்லாது பல வெற்றிப்படங்களை அளித்த படைப்பாளி என்ற வகையில் அமீர்ஜான் முக்கியத்துவம் பெறுகிறார். கே.பாலசந்தர் கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த போது முழு நீள மசாலாப் படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமே முதல் தயாரிப்பாக “நெற்றிக்கண்” படத்தை ரஜினியை நாயகனாக வைத்து இயக்கும் பொறுப்பை அளித்தார். தொடர்ந்து கமலை வைத்து “எனக்குள் ஒருவன்” படத்தைத் தயாரித்த போது அதற்கும் எஸ்.பி.முத்துராமன் தான் இயக்குநர்.\nஎஸ்.பி.முத்துராமன் தவிர கவிதாலயா தயாரிப்பில் ஏராளமான படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெறுபவர் அமீர்ஜான். பூவிலங்கு படத்தில் ஆரம்பித்த இயக்கம், கவிதாலயா நிறுவனம் இளையராஜாவோடு இணைந்த இறுதிப் படமான “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை” படம் கூட அமீர்ஜான் இயக்கத்திலேயே வெளிவந்த பெருமை உண்டு.\nகே.பாலசந்தர் முழு நீள மசாலாப்படம் இயக்குவதில்லை என்ற கொள்கைக்கு மாற்றீடாக அமீர்ஜானைப் பயன்படுத்தினாரோ என்று எண்ணுவேன்.\nகே.பாலசந்தர் போன்றே அமீர்ஜானும் இசையமைப்பாளர் நரசிம்மனுக்குச் சிறப்பான வாய்ப்புகள் கொடுத்தவர். “புதியவன்” படத்தின் அனைத்துப் பாடல்களுமே வி.எஸ்.நரசிம்மனின் சாகித்தியத்தில் உச்சமாக அமைந்தவை. வண்ணக் கனவுகள் படத்துக்கும் அவரே இசை.\n“அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது”என்று நட்பு படத்திலும், தர்மபத்தினி படத்துக்காக ” நான் தேடும் செவ்வந்திப் பூ இது”, “போட்டேனே பூவிலங்கு” பாடலோடு பூவிலங்கு படத்திலும், “சொர்க்கத்தின் வாசல்படி” என்று உன்னைச் சொல்லிக் குற்றமில்லை படத்துக்காகவும் இணைந்த இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் அமீர்ஜான் கூட்டணியில்\n“இரு வழியின் வழியே நீயா வந்து போனது” பாடல் உச்ச விளைச்சல். அந்தப் பாடலோடு படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியதோடு அமீர்ஜானுக்கு முத்திரைப் படமாக அமைந்தது அவரின் இயக்கத்தில் கவிதாலயா தயாரிப்பில் வந்த “சிவா”. இந்தப் படம் டைகர் சிவா என்ற தலைப்பில் வெளிவரவும் பரிசீலனையில் இருந்தது.\nதனது எழுபதாவது வயதில் அமீர்ஜான் இன்று காலமாகிவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.\nஅமீர்ஜானின் கலையுலக வாழ்வு குறித்த முழுமையான பகிர்வு இங்கே கிடைக்கிறது\nPosted in Uncategorized Tagged இயக்குநர் ஸ்பெஷல், நினைவுப்பதிவு Leave a Comment on இயக்குநர் அமீர்ஜான் மறைவில்\nமீசை முருகேஷ் என்ற குணச்சித்திரம்\nநீண்ட நாட்களாக மீசை முருகேசைக் காணவில்லை இறந்திருப்பாரோ என்று நினைத்திருந்த வேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சகோதர ஒளிபரப்பான புதுயுகம் தொலைக்காட்சியின் விசேட பேட்டி ஒன்றில் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.\nஆஜானுபாகுவான உருவமும், எங்களூர் கந்தசுவாமி கோயிலின் கடா வாகனத்தின் கொம்பு போன்ற வளைந்து நீண்ட முறுக்கு மீசை தான் மீசை முருகேஷ் இன் அடையாளம். படங்களில் இவர் தோன்றி நடிக்கும் காட்சிகளில் சிரிக்கும் போது உடம்புதான் இன்னும் வேகமாக ஆடும்.\nகண்கள் குவித்து இவர் சிரிக்கும் அழகைப் பார்க்கும் போது சொந்தக்காரத் தாத்தாவாகச் சொந்தம் கொண்டாடுவார்.\n“உயிரே உனக்காக” படம் தான் இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.\nஇடையில் நிறையப் படங்கள் குறிப்பாக எண்பதுகளின் தமிழ் சினிமாவில் மீசை முருகேஷ் தவிர்க்கமுடியாத குணச்சித்திரம்.\nஆண்பாவம் படத்தில் சீதாவின் தந்தையாக வந்து இன்னும் அழுத்தமாக மனதில் பதிந்தார். http://youtu.be/PKYE8GryHfo\n“பூவே உனக்காக” படத்தில் விஜய், சார்லி வீடு தேடி வரும்போது “பாட்டும் நானே பாவமும் நானே” பாடி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர். அந்தக் காட்சியின் ஆரம்பம் வைதேகி காத்திருந்தாள் படத்தில் இரவானதும் வெள்ளைச்சாமி விஜய்காந்த் பாட ஆரம்பித்ததும் ஊரே அமைதியாகக் கேட்கும் காட்சிக்கு நேரெதிராக அமைக்கப்பட்டிருக்கும்.\nமீசை முருகேஷ் அவர்கள் தேர்ந்த வாத்தியக்காரர். அவருக்கு எண்ணற்ற வாத்தியக்கருவிகளை வாசிக்கும் ஆளுமை உண்டு. சொல்லப்போனால் ஜலதரங்கம் என்ற வாசிப்பை நான் முதன்முதலில் பார்த்ததே இவர் எண்பதுகளில் பங்கேற்ற ஏதோவொரு மேடை நிகழ்ச்சியின் வீடியோ வழியாகத்தான்.\nகே.பாலசந்தருக்கு இம்மாதிரி ஆளுமைகளைக் கண்டால் குஷி பிறந்து தன்னுடைய படங்களில் ஏதாவதொன்றில் ஒரு கதாபாத்திரம் ஆக்கிவிடுவார். அது போலவே. உன்னால் முடியும் தம்பி படத்திலும் மீசை முருகேஷ் அவர்களின் தந்தை கொண்டிருந்த தொழிலான தவில் வாத்தியக்காரராக வந்து சிறப்பித்திருப்பார்.\nபுதுயுகம் தொலைக்காட்சிப் பேட்டிக்கு வந்திருந்தார். காலமாற்றத்தில் உடம்பு இலேசாக உருக்குலைந்திருந்தாலும் ஆள் மாறவில்லை.\nஐரோப்பாவில் தன்னுடைய இசைக்கச்சேரியை முடித்துவிட்டுத் திரும்பும் போது திடீர் ஏற்பாடாகத் தென்னாபிரிக்காவில் கச்சேரி செய்ய இவரை வற்புறுத்தி அழைத்துப் போனார்களாம். தென்னாபிரிக்காவில் இறங்கி விமான நிலையத்தில் இருந்து காரில் போகும் போது விபத்துக்குள்ளாகிப் பலத்த காயங்கள் ஏற்பட்டு வருடக்கணக்கில் முடங்கிப் போனாராம்.\nஅந்தப் பேட்டியின் ஆரம்பத்தில் அவர் தொலைந்த ரகசியத்தைச் சொல்லிவிட்டு கலகலப்பாகப் பேட்டியைத் தொடர்ந்தார்.\nமீசை முருகேஷ் அவர்கள் 85 வயதைத் தொட்டாலும் அவரின் இருப்பு மனதில் சந்தோஷத்தை வருவித்தது அப்போது.\nகடந்த சனிக்கிழமை மீசை முருகேஷ் காலமாகிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டபோது முன் கொண்ட சந்தோஷத்தைக் குழப்பியது செய்தது அவரின் பிரிவு தந்த துயர். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.\nமீசை முருகேஷ் குறித்து @tkadaibench தயாரித்த சிறு காணொளி\nபுதுயுகம் தொலைக்காட்சியில் மீசை முருகேஷ் இன் பேட்டி\nPosted in Uncategorized Tagged நினைவுப்பதிவு 2 Comments on மீசை முருகேஷ் என்ற குணச்சித்திரம்\nஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்\nஒரு இயக்குநரின் தோளின் இருபுறமும் பயணிக்க வேண்டியவர்களில் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக மு��்கியமானது. கட்புலனை கைவரப்பெறாதோர் எவ்வளவு தூரம் காட்சியோட்டத்தில் இழைந்திருக்கும் வசனத்தையும் அத்தோடு நயமாகப் பொருந்தியிருக்கும் இசையமைப்பையும் உள்வாங்கி அந்தக் கலைப்படைப்பைக் கச்சிதமாக உணர முடியும் வல்லமை கிட்டும் பாங்கிலேயே ஒலியைக் கேட்டு நுகரமுடியாதோருக்கு ஒரு ஒளிப்பதிவாளரின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுகின்றது.\nஇவற்றுக்கும் மேலாக ஒரு இயக்குநரின் மனக்கண்ணில் ஓடுவதை உள்ளது உள்ளவாறோ அல்லது அதற்கும் மேலாகவோ கச்சிதமாகத் தன் கேமராக் கண்ணுக்குள் அடக்கும் ஒளிப்பதிவாளரே இயக்குநரின் ஜீவனாக நின்று தொழிற்படுகின்றார்.\n“அழகிய கண்ணே உறவுகள் நீயே” பாடல் ஒன்றே போதும் உதிரிப்பூக்கள் படத்தில் பொதிந்திருக்கும் வலியை இயக்குநரின் சார்பில் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பங்கு போட்டுக்கொண்டு செய்த கைங்கர்யத்தை. http://www.youtube.com/watch\nஅந்தப் பாடலில் அந்தப் பாடலில் விளையாடும் குழந்தை, சோப்பு போட்ட எரிச்சலோடு துள்ளிக் கொண்டே குளிக்கும் அண்ணன்காரன், துன்பச்சுமையை அப்படியே தன் முகம் வழியே வாக்குமூலம் பகிரும் இவர்களின் தாய் என்று அந்தப் பாடலின் காட்சியோட்டத்தின் சில துளிகளே ஒரு நாவலின் பல்வேறு பக்கங்களைத் திரட்டித் தந்தது போல.\n35 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இந்த “உதிரிப்பூக்கள்” படத்தின் வாயிலாகத் தம் நேர்மையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர் மகேந்திரன், இசையமைப்பாளர் இளையராஜா இவர்களோடு சில நாட்களுக்கு முன்னர் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.\nஇயக்குநர் மகேந்திரனைப் பொறுத்தவரையில் அசோக்குமார் கிடைத்திராவிட்டாலும் இன்னொரு ஒளிப்பதிவாளரைத் தன்னுடைய படைப்பாற்றலின் நிலைக்கண்ணாடியாகத் தான் வரித்திருப்பார். அவரின் முதற்படமான முள்ளும் மலரும் படமே இதற்குச் சாட்சி. முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா படம் எடுக்கும் போதே சில பல தயாரிப்புச் சிக்கல்கள் மற்றும் இவரும் சொந்தமாகப் படம் இயக்கும் முனைப்போடு கிளம்பியது அடுத்த படமான உதிரிப்பூக்கள் படத்தில் அசோக்குமாருடன் மகேந்திரன் இணைய அச்சாரம் வைத்தது.\nதொடர்ந்து பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு என்று தொடர்ந்தது மகேந்திரன் – அசோக்குமார் கூட்டணி. இதில் நெஞ்சத்த��க் கிள்ளாதே அசோக்குமாருக்குத் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். நண்டு படம் இயக்குநர் மகேந்திரனை மீறித் தயாரிப்பாளர் கைமா பண்ணிச் சிதைத்திருந்தாலும் அந்தப் படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி, மஞ்சள் வெய்யில் பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் ஏமாற்றாமல் இன்னும் அந்தப் படத்தின் பேர் சொல்ல வைக்கும். அதே போல் ஜானி படத்தின் தொழில்நுட்பச் சிறப்பில் அசோக்குமாரும் பங்கெடுத்துக் கொண்டார். அசோக்குமாரின் ஒளிப்பதிவுத்திறனை மகேந்திரனே கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். இளையராஜாவின் பாடல்கள் தரம் குன்றாது இந்தக் கூட்டணியால் மிளிர்ந்தன.\nமுதல் 3D திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தது இவருக்குக் கிட்டிய இன்னொரு மகுடம் எனலாம்.\nபி.வாசு இயக்கிய படங்கள் பலவற்றில் ரவீந்திரன் முக்கிய ஒளிப்பதிவாளர். ஆனால் நடிகன், கட்டுமரக்காரன், மன்னன் போன்ற படங்களில் அசோக்குமாரும் பங்கு போட்டார். பவித்திரனின் சூரியன் படமும் ஷங்கரின் ஜீன்ஸ் படமும் அசோக்குமாரின் காமெராவின் பிரம்மாண்டத்தை உணர்த்தி நிற்கின்றன. குறிப்பாக சூரியன் படத்தை தியேட்டரில் அந்தக்காலத்தில் பார்த்தபோது கிட்டிய காட்சி அனுபவம் இன்னும் மனசுக்குள் ஒட்டியிருக்கு.\nஒளிப்பதிவாளர்கள் இயக்குநராவது திரையுலகம் காணும் நிகழ்வு. அசோக்குமார் இயக்குநராக “காமாக்னி” என்ற படத்தை ஹிந்தியில் இயக்கியபோது இசைத் தோள் கொடுத்தவர் இளையராஜா.\nதொடர்ந்து “அன்று பெய்த மழையில்” படத்தை இயக்கினார். அந்தப்படம் அப்போது பரபரப்பான சில்க் இன் கவர்ச்சி அலையால் வெகுவாகக் கவனிக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு இசை தாயன்பன். இவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனோ ஒரு சில படங்கள் தான் தாயன்பனுக்குக் கிட்டியது.\nதெலுங்குத் திரை ரசிக உலகம் மறக்காத காதல் படங்களில் அசோக்குமார் இயக்கிய “அபிநந்தனா” படம் முக்கியமானது. இது வழக்கமான அசோக்குமாரின் கவர்ச்சி, பாலியல் ஈர்ப்பு சார்ந்த படங்களில் இருந்து மாறுபட்ட அழகான காதல் கதை. கார்த்திக், ஷோபனா போன்றோர் நடித்த இந்தப் படம் தமிழில் “காதல் கீதம்” என்ற பெயரில் மொழி மாறியது. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே அட்டகாச ரகம். இந்த மெட்டுகள் அன்பின் முகவரி, சிறைப்பறவை போன்ற படங்களின் ��ாடல்களாகவும் வந்திருக்கின்றன. காதல் கீதம் படத்தில் “மஞ்சள் அந்தி வேளையோ”, “வாழ்வா சாவா”, “பெண்மை கொண்ட மெளனம்” எல்லாம் அந்தக் காலத்து இளைஞரின் காதல் கீதங்கள்.\nபின்னர் கங்கை அமரன் வசனம்,பாடல்கள் எழுதிய “தம்பிக்கு ஒரு பாட்டு” படம் இயக்குநராக அசோக்குமார் இளையராஜாவோடு சேர்ந்த முக்கிய படங்களில் ஒன்று என்பதற்கு இந்தக் கூட்டணியில் விளைந்த பாடல்கள் முக்கிய காரணம். “தை மாசம் கல்யாணம் அன்று காதல் ஊர்கோலம்” ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா பாடிய தெள்ளமுதல்லவா அது.\nஒளிப்பதிவாளராக, இயக்குநராக அசோக்குமார் நினைவுகூரப்படுவார் அவர் பணியாற்றிய முன் சொன்ன படங்களுக்காக.\nபிற்சேர்க்கையாக ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமாரின் ஒளியோவியத்தில் இருந்து\nபருவமே புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே)\nஅள்ளித்தந்த பூமி அன்னையல்லவா ( நண்டு)\nகாற்றில் எந்தன் கீதம் (ஜானி)\nPosted in Uncategorized Tagged நினைவுப்பதிவு 4 Comments on ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்\nபோன ஜூன் மாசம் தான் சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்து போனவர் இப்படித் தன் 45 வது வயதில் திடீரென்று நம்மைவிட்டு மறைவார் என்று யார்தான் நினைத்திருப்பார்கள். சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்த கலைஞர்களை வானொலிப் பேட்டி காணும் சந்தர்ப்பம் வாய்த்த போது மாண்டலின் ஶ்ரீநிவாஸ் ஐ வானொலிப் பேட்டியெடுக்கவே பெரிதும் முனைந்தேன். ஆனால் அவரின் வருகை விழாவுக்கு முந்திய நாள் என்பதாலும் வேறு சில தனிப்பட்ட காரணங்களாலும் பேட்டி தவிர்க்கப்படவே, அடுத்தமுறை வருவார் தானே என்று காத்திருந்தேன்.\nமிக இளவயதிலேயே சாதித்துக் காட்டியதாலோ என்னமோ சீக்கிரமே நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டார் என்ற பேரதிர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை.\nமாண்டலின் ஶ்ரீநிவாஸ் என்ற ஆளுமை 90 களின் ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட போது அப்போது சினிமா இசையைத் தவிர வேறெதையும் தொடாத என்னைக் கேட்க வைத்தது அவரின் வாத்திய இசைத் தொகுப்பு ஒன்று. கொழும்பின் பம்பலப்பிட்டி கிறீன்லாண்ட்ஸ் ஹோட்டலில் தூசு படிந்த ஒலி நாடாவை வாங்கி வந்து போட்டுக் கேட்ட நினைவுகள் இன்னும் என் மனக்கிணற்றில் தேங்கியிருக்கின்றன.\nஇளையராஜாவோடு சேர்ந்து இவர் பணியாற்றிய அந்தச் சிறப்பு அனுபவங்களையும் பேட்டி வழியாகத் தேக்கி வைக்க நினைத்திருந்தேன்.\nமாண்டலின் இசையை நம் வானொலி நிகழ்ச்சிகளில் மன அமைதியைத் தரும் பகிர்வுகளுக்குப் பின்னணி இசையாய் ஒலிக்கவிட்டுக் கொடுப்போம். இனிமேல் அது ஒலிக்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகமே வெளிக்கிளம்பிச் சஞ்சலப்படுத்தும்.\nPosted in Uncategorized Tagged நினைவுப்பதிவு 3 Comments on மாண்டலின் ஶ்ரீநிவாஸ் நினைவில்\nஇராம நாராயணன் ஒரு சினிமாத் தொழிற்சாலை\nதமிழ் சினிமா இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் காலமான செய்தி வந்திருக்கிறது.\nஇராம நாராயணனைப் பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் இன் நீட்சியாகவே பார்க்கும் அளவுக்கு அவர் கொடுத்த படங்களில், பரவலாக சினிமா ரசிகனுடைய கவனத்தை ஈர்த்தவை பிராணிகளை வைத்து அவர் இயக்கிய துர்கா போன்ற படங்கள்.\nஉலக சினிமாத்தரம் என்று இன்று ஒருவகையான கெளரவ முத்திரையைப் தமக்குத் தாமே சூட்டித் திரியும் ரசிக மகாஜனங்களைத் தாண்டி, தியேட்டருக்கு வந்து பார்க்கும் அடிமட்டத்து உழைக்கும் வர்க்கத்திலிருந்து, சிறுவர், குடும்பத் தலைவிகள் ஈறாக அனைவரையும் திரையரங்குக்கு இழுக்கும் வகையில் படங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.\nகிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமா உலகில் இயங்கிய அவர் சினிமாவில் தொடாத கதைகளே இல்லை எனுமளவுக்கு அவரின் படைப்புலகம் பரந்தது.\nஎண்பதுகளிலே தொழிலாள வர்க்கத்தின் குரலாக, சமூக நீதி சார்ந்த தொனியில் ஒலித்த அவரின் சிவப்பு மல்லி, இது எங்கள் நாடு போன்ற படங்கள். இன்றைய விளம்பர யுகத்தில் விருதுக்கு ஏற்றி வைக்கக்கூடிய அளவுக்கு நடுத்தர வர்க்கத்தின், ஏழைகளின் பாட்டை முன்னுறுத்தி எடுத்த சுமை, சோறு போன்ற படங்கள். இவற்றைப் பார்க்கும் போது இராம நாராயணனின் இன்னொரு பரிமாணம் புரியும்.\nமுன் சொன்ன படங்கள் வழியாக பொருளாதார ரீதியாகப் பெரிதாகச் சாதிக்க முடியாத சூழலில் அவர் நகைச்சுவைப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார். மன்மத ராஜாக்கள் போன்ற படங்களின் வழியாக நகைச்சுவை சார்ந்த படங்களை இயக்கிய போது\nமணந்தால் மகாதேவன், சகாதேவன் மகாதேவன் போன்ற படங்கள் அவருக்கு உச்ச பட்ச வெற்றியைக் கொடுத்தன.\nஎன்பதுகளிலே படம் கொடுத்துப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் தங்கி நின்று படம் பண்ண வேண்டிய சூழலைக் கண்டிப்பாகச் சந்தித்தி��ுப்பர். ஆனால் இராம நாராயணன், விசு போன்ற மிகச் சில இயக்குனர்களே இளையராஜா இசை கொடுத்த படங்களை இயக்கியிருந்தாலும் அதில் மட்டும் தங்கியிராது தனித்து வெற்றியைக் கொடுத்துச் சாதித்தவர்கள்.\nசங்கர் கணேஷ் இசை இரட்டையர்கள் நிறையக் கொடுத்த படங்கள் இராம நாராயணனின் படங்களாகத் தானிருக்கும். அது போல சங்கர் கணேஷ் இருவரும் பிரிவு ஏற்பட்டுத் தனித்தனியாக இசையமைத்த வேளை இருவருக்கும் மாறி மாறித் தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்திருந்தார்.\n“தங்கர்பச்சனுக்கும் இராம நாராயணனுக்கும் என்ன வித்தியாசம்\nமுன்னவர் மனிதர்களை மிருகங்களைப் போல வதைத்து எடுப்பார், பின்னவர் மிருகங்களை மனிதர்களாக்கிப் படம் எடுப்பார்” என்று சாரு நிவேதிதா எழுதியது ஞாபகம் வருகிறது. நகைச்சுவைப் படங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்த இராம நாராயணன் அடுதுக் கையில் எடுத்தது மிருகங்களும் சிறுவர்களும், கூடவே சாமிப்படங்கள். அப்போது சுட்டிக் குழந்தையாக பேபி ஷாம்லியின் சினிமா வரவு இராம நாராயணனுக்கும் பேருதவியாக அமைந்திருக்கும்.\nமுன்னர் இவர் பக்திப் படங்களைக் கொடுத்திருந்தாலும்\nஆடி வெள்ளி படத்தின் வெற்றி தான் இவருக்கு பக்திப் படங்களைத் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என்ற பலத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.\nஅதன் தொடர்ச்சியாக அவர் இயக்கிய படங்களில் துர்கா, தைப்பூசம், செந்தூரதேவி, ஈஸ்வரி போன்ற படங்கள் பரவலான ஈர்ப்பை அப்போது பெற்றவை அதையும் தாண்டி நிறையப் படங்கள் இதே பாணியில் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஅம்மன் படங்களென்றால் இராம நாராயணன் தான் என்னுமளவுக்கு\nராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிக் குவித்திருக்கிறார்.\nஎனக்குத் தெரிந்து ஒரே கட்சியில் தொடர்ந்து அந்தக் கட்சி வென்றாலும் தோற்றாலும் அங்கேயே தங்கி நின்ற மிகச் சில திரைக் கலைஞர்களில் இவரும் ஒருவர். தி.மு.கவிலேயே எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்றைய ஜெயலலிதா காலம் வரை தொடர்ச்சியாகத் தங்கியிருக்கிறார். இந்தப் பண்பு மிகச் சிலரிடமே இருந்திருக்கிறது.\nகலைஞர் எண்பதுகளில் நிறையப் படங்களுக்குக் கதை வசனம் எழுதிய காலத்திலும் இவர் தி.மு.க வில் இருந்தாலும் வீரன் வேலுத்தம்பி, மக்கள் ஆணையிட்டால் போன்ற மிகச் சில படங்களே இராம நாராயணனுக்கு வாய்த���திருக்கின்றன.\nஇவருடைய படங்களில் குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டான போது வந்த படங்களில் எஸ்.எஸ்.சந்திரன் நடித்த பாத்திரங்களின் வாயிலாக அந்தக் கால அரசியல் எள்ளல் மிகுந்திருந்தது. உதாரணம் சகாதேவன் மகாதேவன்\nதிரையிலகுக்கு வந்த புதிதில் ஶ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி இராம நாராயணன் இன்னொரு இயக்குனர் நண்பரான எம்.ஏ.காஜாவோடு படங்களைத் தயாரித்திருந்திருந்திருக்கிறார். இருவரும் அதே தயாரிப்பு நிறுவனம் வழியாக மாறி மாறிப் படங்களைத் தயாரித்திருந்திருக்கின்றனர். அப்படி வந்த படங்களில் ஒன்று தான் எண்பதுகளில் மறக்க முடியாத திரைச் சித்திரம் எம்.ஏ.காஜாவின் “ஒரு விடுகதை ஒரு தொடர்கதை”. இந்தப் படம் தான் கங்கை அமரன் இசைத்து வெளிவந்த முதல் படம்.\n” நாயகன் அவன் ஒரு புறம்”, “விடுகதை ஒன்று” போன்ற அருமையான பாடல்கள் இருக்கும்.\nபின்னர் ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக நேரடிப் படங்களை இயக்கியும், மொழி மாற்றுப் படங்களைத் தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறார். பிரபல ஆங்கில, தெலுங்குப் படங்களை இவரின் தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக வெளியிட்டு கொழுத்த வெற்றியையும் பெற்றிருக்கிறார்.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஒரு சில நடிகர்கள் தவிர எண்பதுகளின் நாயகர்களை இயக்கிய பெருமை இராம நாராயணனைச் சேரும். குறிப்பாக விஜய்காந்த், எஸ்.வி.சேகர், மோகன், நிழல்கள் ரவி போன்றோருக்கு இவரின் படங்கள் மறுபிரவேசமாகவும் வெற்றியாகவும் அமைந்தவை. அர்ஜூனஒத் தமிழுக்கு முதலில் இயக்கியவர் இவரே.\nராமராஜன் இவரின் உதவியாளராக இருந்திருக்கிறார்.\nகடைசியாக வந்த ஆர்யா சூர்யா உட்பட 125 படங்களை இயக்கியிருக்கிறார். நிறையப் படங்களை இயக்கிய இயக்குனர் என்ற வகையில் இவருக்கு ஒரு சாதனையும் உண்டு.\nதிரைப்படத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தயாரித்த தென்பாண்டிச் சீமையிலே படத்துக்கு இவர் தான் கதை, வசனம்.\n2008 இல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவர் இருந்த வேளை, கர்நாடகாவில் தொடர்ச்சியாக தமிழ்த்திரைபடங்கள் திரையிடும் அரங்கங்கள் தாக்கப்பட்டவேளை திரையுலகினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்திய வேளை அவரை நமது வானொலிக்காகப் பேட்டி காண அழைத்த மறு நிமிடமே வானலைக்கு வந்திருந்தார். அந்தப் பேட்���ியின் சுட்டி இது.\nஒருவன் தான் சார்ந்த துறையில், தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தன்னுள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இது எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும் இதுவே நிலைத்திருத்தலின் அடிப்படையும் கூட. அந்த வகையில் இராம நாராயணனை நான் ஒரு சினிமாத் தொழிற்சாலையாகவே பார்க்கிறேன், இன்று அந்தத் தொழிற்சாலை நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறது.\nஇராம நாராயணன் குறித்து நிறைய எழுதலாம். இவ்வளவும் என் காலை வேளை ஒரு மணி நேர ரயில் பயணத்தின் செல்லிடப் பேசி வழியாக எழுதியது மட்டுமே.\nPosted in Uncategorized Tagged இயக்குநர் ஸ்பெஷல், நினைவுப்பதிவு 4 Comments on இராம நாராயணன் ஒரு சினிமாத் தொழிற்சாலை\nஇயக்குனர் குரு தனபால் நினைவில்\nஇயக்குனர் குரு தனபால் இறந்த செய்தியை உண்மைத்தமிழன் அண்ணாச்சியின் நிலைத்தகவல் மூலம் சற்று முன்னர் அறிந்து கொண்டேன். எங்கள் காலத்தவர்கள், அவர்கள் எங்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் கலைத்துறையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீது கொண்ட நேசம் குறையாது. அப்படித்தான் இயக்குனர் குரு தனபால் மீதான நேசமும் கூட.\nஉன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் திரைப்படம் 1992 ஆம் ஆண்டின் உன்னதமான பாடல்களை இசைஞானி அளிக்க,குரு தனபால் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தின் பாடல்களில் “என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி” பாடல் இன்றளவும் மறக்க முடியாத பாடலாக ஏதோ ஒரு வானொலியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும். கார்த்திக் உடன் நடித்த நாயகி மோனிஷா சிறிது காலத்தில் விபத்தில் மாண்டு போனது துரதிஷ்டம். அந்தப் படம் நடிகை சசிகலாவுக்கும் மீள் வரவாக அமைந்தது. படத்தில் எல்லாவித வெற்றிகரத் துணையும் இருந்தும் தோல்விப்படங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.\nகுரு தனபால் இன் மீள் வரவு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சத்யராஜ் நாயகனாக “தாய் மாமன்” படத்தின் வழியாக வெற்றிகரமாக அமைந்தது. அந்தப் படம் வந்த வேளை சத்யராஜ், மணிவண்ணன் போன்றோர் வை.கோபால்சாமி மீதும் ம.தி.மு.க மீதும் அளவற்ற நேசத்தோடு இயங்கிய நேரம். அந்தப் படத்தில் சத்யராஜ் நடை, உடை பாவனை கூட வை.கோ போன்று இருக்கும். வெள்ளை வேஷ்டி. சட்டையோடு கழுத்தில் கருப்புத் துண்டு மாட்டிய சத்யராஜ் இன் முழுப்படம் மட்டுமே கொண்ட “தாய் மாமன்” திரைப்படத்தின் முழு அ��வு விளம்பரம் பொம்மை போன்ற அன்றைய சினிமா இதழ்களில் வெளியிடப்பட்ட அளவுக்கு சண்டைக் கோழியைத் தூக்கிக் கொண்டு நிற்கும் சத்யராஜ் ஐ மட்டுமே முக்கியத்துவப்படுத்தியிருந்தது. சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்னன் ஆகிய முவரும் சேர்ந்து அதகளம் பண்ணிய படங்களில் முதல் இரண்டு படங்கள் என்றால் என் தேர்வில் தாய் மாமன் படமும் மாமன் மகள் படமும் தான் இருக்கும்.\nதாய் மாமன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வந்த மாமன் மகள் திரைப்படமும் சத்யராஜைப் பொறுத்தவரை அவருக்குப் பேர் சொன்ன படம்.\nஅந்தக் காலகட்டத்தில் துணிச்சலாக ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை நோக்கிய அரசியல் எள்ளல்களை சத்யராஜும், மணி வண்ணனும் செய்ததை இன்றைய சூழலில் நினைத்துப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு இந்த இரண்டு படங்களிலும் நிரம்பியிருக்கும். தமிழ் சினிமாவின் அரசியல் நையாண்டிப் படங்களில், வேறொரு தளத்தில் வைத்துக் கொண்டு பூடகமாகத் தம் கருத்தைச் சொன்ன படங்களில் சிறப்பான படங்கள் இவை.\nகுரு தனபாலுக்கான சரியான பாதையாகத் தான் அவரின் அடுத்த சுற்றில் அமைந்தத தாய்மாமன், மாமன் மகள் ஆகியவை இருந்தன. இவ்வளவுக்கும் தேவா (தாய் மாமன்), ஆதித்யன் ( மாமன் மகள்) ஆகிய இசையமைப்பாளர்களை வைத்துத் தான் இவ்விரண்டு படங்களைக் கொடுத்திருந்தார்.\nதொடர்ந்து குரு தனபால் இயக்கிய படம் பெரிய இடத்து மாப்பிள்ளை. ஜெயராம் , கவுண்டமணி கூட்டணியில் நகைச்சுவை இதிலும் கலக்கலாக இருக்கும். ஆனால் அதற்குப் பின்னர் குரு தனபாலின் இடம் வெறுமையாகிப் போனது. சுயேட்சை எம்.எல்.ஏ படத்தின் வழியாக அவரின் மூன்றாவது சுற்றும் எடுபடவில்லை.\nகுரு தனபாலைப் பொறுத்தவரை தொண்ணூறுகளின் சினிமாவை நேசித்தவர்களுக்கு அவர் யாரென்றே தெரியாமல் அவரின் திரைப்படங்களான மாமன் மகள், மற்றும் தாய் மாமன் படங்களின் வழியாக மெச்சியிருப்பர். இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் மாமன் மகள் படத்தின் காட்சிகள் வரும் போது வாய்விட்டுச் சிரிப்பேன். அந்த அளவுக்கு காலத்தால் மறக்கடிக்கப்படாத அல்லது கால மாற்றத்தில் ரசனை மாறாத எள்ளல்களும், லொள்ளுகளும் நிரம்பிய சிரிப்புக் கலவை அது. சமூகத்தைச் சந்தோஷப்படுத்துபவன் வாழ்க்கை பெரும்பாலும் அதுவாக இராது என்பது போலவே இவரின் இறுதிக்காலமும் இருந்ததாக அறிகின்றேன்.\nஇயக்குனர் குரு தனபாலுக்கு என் அஞ்சலிகள்.\nPosted in Uncategorized Tagged நினைவுப்பதிவு 2 Comments on இயக்குனர் குரு தனபால் நினைவில்\nகவிஞர் வாலியின் பாடல்களோடு சிறு பயணம் ⛳️\nமெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி M.L.V 90\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n🥁 இசைமைப்பாளர் தேவேந்திரனின் இசைப்பயணம் 🎸 🎼 நிறைவுப் பாகம் 🎻\n🎻 இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎸 ஆண்களை நம்பாதே ❤️\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.com/community/01/180033?ref=archive-feed", "date_download": "2018-07-19T11:38:18Z", "digest": "sha1:HT26T7UO7MPGGYJ2ZY2WCBDACGEVQSE7", "length": 7105, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மலையகத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மலையகத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு\nதமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு மலையகத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிலையில், இந்த நிகழ்வு ஹட்டன், நீக்ரோதாரம விகாரையில் இன்று காலை நடைபெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு விகாரையின் பிரதான தேரர் சங்கைக்குறிய மாகம விமலதேரரினால் நடத்தப்பட்டுள்ளது.\nமேலும், நிகழ்வில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என மூவின இனத்தவர்களும் கலந்து கொண்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலருத் கலந���து கொண்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/05/05/the-saravana-bhavan-story-007753.html", "date_download": "2018-07-19T11:30:34Z", "digest": "sha1:4T5CW7R5MCTMEAOINLYXJ3XZZT6KOSFB", "length": 29230, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'சரவணபவன்'..! | The Saravana Bhavan Story - Tamil Goodreturns", "raw_content": "\n» ரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'சரவணபவன்'..\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'சரவணபவன்'..\nகுஜராத் பாரம்பரிய படத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு வெளியிட்டு ஆர்பிஐ அதிரடி..\nஹோட்டல் புக்கிங் நிறுவனத்தைக் கைப்பற்றும் பேடிஎம்.. என்ன திட்டம்..\nஜிஎஸ்டிக்கு பின் ஷாப்பிங், ஹோட்டல்களில் இப்படியும் மோசடி நடக்கிறது. உஷாரா இருங்க..\n250 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த OYO ரூம்ஸ்..\nஹோட்டல்களில் இப்படியும் மோசடி நடக்கிறது.. உஷாரா இருங்க..\n25 மடங்கு அதிக நஷ்டத்தில் OYO ரூம்ஸ்..\nஇந்தியாவின் மிகச்சிறந்த ஆடம்பர ஹோட்டல்: தி லீலா பேலஸ்\nஒருவர் ராஜகோபாலிடம் மதிய உணவைச் சாப்பிட டி. நகருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது ஏனென்றால் கே.கே நகரில் ஒரு ஹோட்டல் கூட இல்லை என்று வருத்தப்பட்ட போது திரு. P.ராஜகோபால் ஒரு ஹோட்டலை தொடங்கினார். இப்போது அது தென்னிந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய ஹோட்டல்களின் சங்கிலித் தொடராக வளர்ந்துள்ளது.\nவெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதால் P. ராஜகோபாலின் கதையைக் கேட்கும் போது ஒரு திரைப்படத்தில் இருந்து நேரடியாக வெளியில் வந்ததைப் போன்ற உணர்வு வருகிறது.\nஅடிமட்டத்திலிருந்து பிரமிக்கத்தக்க வளர்ச்சி, ஒரு தனி மனித சாம்ராஜ்யம், குற்றம், கட்டுக்கடங்கா உணர்ச்சி, அதிகாரம் என மற்றும் பல முழுமையான விஷயங்களைக் கொண்டது இவரது வாழ்க்கை.\nதற்போது சரவணப் பவனுக்கு இந்தியாவில் 33 க்கும் அதிகமான கிளைகளும் மற்றும் கடல் கடந்து வெளிநாடுகளில் 47 கிளைகளும் உள்ளன. அவர் தனது சுயசரிதையில் \"நான் எனது இதயத்தை வெற்றியின் மீது பொருத்திவிட்டேன்\" என்று கூறுகிறார்.\n1947 - ஆம் ஆண்டு ஒரு மண் குடிசையில் பிறந்த ராஜகோபால் தமிழ்நாட்டிலுள்ள புன்னையாடி என்ற கிராமத்திலிருந்து வந்தவர். அவருடைய கிராமத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லை.\nஏழாம் வகுப்போடு அவர் பள்ளிப் படிப்பிலிருந்து நின்று விட்டார். வயிற்றுப் பிழைப்புக்கு சம்பாதிப்பதற்காக ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். மேசைகளைத் துடைக்கும் வேலையைச் செய்து அங்கேயே தரையில் தூங்குவாராம் ராஜகோபால்.\nடீ - சாமானியர்களின் ரத்தம்\nமெதுவாக டீ போட கற்றுக் கொண்டார். விரைவில் ராஜகோபால் ஒரு மளிகைக் கடையில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலையில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ராஜகோபால் அவருடைய அப்பா மற்றும் மைத்துனரின் உதவியோடு சொந்தமாக ஒரு மளிகைக் கடையைத் திறந்தார். வியாபாரத்தில் அதுவே அவரது முதல் அனுபவம்.\nகடையை நடத்த அவர் நிறையச் சவால்களைச் சந்தித்தார். திட்டமிட்டபடி வேலைகள் நடக்கவில்லை, இளைஞரான ராஜகோபாலுக்கு ஒரு கடையை நடத்துவதென்பது மிகவும் கடினமாக இருந்தது.\nஆனாலும் அவர் தனது மனோதிடத்தால் எல்லாச் சவால்களையும் ஜெயித்தார். பிறகு அவரது நிலைமை மேம்பட ஆரம்பித்தது.\n1979 ஆம் ஆண்டு அவரது மளிகைக் கடையில் ஒரு விற்பனையாளருடன் மேலே சொல்லப்பட்ட உரையாடல் நடந்தது. இந்த உரையாடல் தான் 1981 ஆம் ஆண்டுச் சரவணபவன் பிறப்பதற்குக் காரணமானது.\nஅந்தக் காலத்தில் வெளியே சாப்பிடுவது நாகரிகம் என்பதை விட அத்தியாவசியமாக இருந்தது. வெளியிடங்களில் சாப்பாட்டிற்கு இருந்த தேவையை உணர்ந்த ராஜகோபால் அந்த வியாபாரத்தில் குதித்தார்.\nதரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி\nஆரம்பகாலம் முதலே ராஜகோபால் உணவின் சிறந்த தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தினார். இப்போது இருப்பது போல இந்த வார்த்தைகளெல்லாம் முக்கிய நடைமுறையாக ஹோட்டல்களில் இல்லாத ஒரு காலத்திலேயே அவர் அதையெல்லாம் கடைபிடித்தார்.\nஅவரிடம் மட்டமான சமையல் பொருட்களைப் பயன்படுத்தும்படியும் மற்றும் பணியாளர்���ளுக்குக் குறைந்த சம்பளத்தைக் கொடுக்கும்படியும் ஆலோசனை கூறிய ஒருவரை ராஜகோபால் திட்டி அனுப்பி விட்டார்.\nதொடக்கக் காலத்தில் சிறந்த தரமான உணவை கொடுப்பதற்காக ஹோட்டலை நஷ்டத்திற்கு நடத்த வேண்டி வந்தது. ஒவ்வொரு மாதமும் சுமார் ரூபாய் 10,000 நஷ்டமடைந்தார். ஆனால் காலப்போக்கில் அவருடைய நற்பெயர் வளர்ந்து நஷ்டங்கள் லாபங்களாக மாறின.\nசரவணபவனின் வெற்றியின் ரகசியம் நல்ல தரமான உணவை பரிமாறுவதில் மட்டுமில்லை. அங்கு வேலை செய்யும் பணியாளர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதிலும் மற்றும் பணியிடத்தின் உயர் தரத்திலும் உள்ளது.\nராஜகோபால் தட்டின் மீது வாழையிலையைப் பரப்பி அதன் மீது உணவு பரிமாறும் பழக்கத்தைத் தொடங்கினார். அது ஏற்கனவே வேறொருவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுகிறோமே என்கிற வாடிக்கையாளர்களின் சஞ்சலத்தைப் போக்கியதோடு பணியாளர்களுக்குத் தட்டுக்களைக் கழுவும் வேலையையும் சுலபமாக்கியது.\nராஜகோபால் உணவில் முடி விழுந்திருக்கிறது என்கிற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வராமலிருக்கப் பணியாளர்களுக்கு மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டச் செய்தார்.\nமேலும் அது பணியாளர்களுக்குக் கண்ணியமான தோற்றத்தையும் அளித்தது. அடுத்த நாள் காலையில் வேலையைப் பாதிக்கும் என்பதால் பணியாளர்களில் யாரும் பின்னிரவு நேரங்களில் சினிமா பார்க்க அனுமதிக்கப்படவில்லை.\nராஜகோபால் செய்த முதல் விஷயம் அவரது பணியாளர்களுக்கு அளித்த வேலை பாதுகாப்பு. அவர் தனது பணியாளர்களுக்குத் தங்குமிட வசதியை அளித்தார் மற்றும் அவர்களின் சம்பளத்தையும் உயர்த்தினார்.\nமேலும் அவர் கிராமத்தில் குடும்பங்களை உடைய பணியாளர்கள் அவர்களின் குடும்பங்களைப் பார்த்து வருவதற்காக வருடாந்திர ஊக்கத் தொகையையும் கொடுத்தார். ஒவ்வொரு திருமணமான பணியாளருக்கும் இரண்டு குழந்தைகள் வரை கல்வி உதவியை அளித்தார். ஒரு பணியாளருக்கு உடம்பு சரியில்லை என்றால் அவரைக் கவனித்துக் கொள்ள இரண்டு பேரை அனுப்பினார்.\nஒரு பணியாளரின் நலன் அவருடைய குடும்ப நலத்தில் உள்ளது. உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காகப் பணியாளர்களையும் அவரது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.\nஇப்படித் தொடர்ந்து சிறப்பான முயற்சி மற்றும் திட்டங்களுடன் சென்னை கேகே நகரில் 14-12-1981ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட சரவணபவன் இன்று உலகின் பல இடங்களிலும் விரிவடைந்து தற்போது 91 கிளைகளுடன் வெற்றிச் சாம்ராஜியமாக உள்ளது.\nகடைசியாகச் சரவணபவன் 04-03-2016ஆம் ஆண்டு நெதர்லாந்து, ஆம்ஸ்டரடேம் பகுதியல் தனது 9வது கிளையைத் திறந்ததுள்ளது.\nதூத்துக்குடியில் இருந்து வந்த இளைஞன் சென்னையில் துவங்கிய முதல் ஹோட்டல் வெற்றியின் மூலம் இன்று சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டாலர்.\n2009 ஆம் ஆண்டுச் சாந்தாராம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nசாந்தாராம் என்பவர் ராஜகோபாலின் உதவி மேலாளர்களில் ஒருவருடைய மகளான ஜீவஜோதி என்பவருடைய நெருங்கிய நண்பர். ராஜகோபால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.\nஆனால் ஜீவஜோதியோ சாந்தாராம் மீது ஆர்வமாக இருந்தார். பலமுறை எச்சரித்த பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் சாந்தாராம் கடத்தப்பட்டார்.\nசில நாட்களுக்குப் பின்னர்ச் சாந்தாராமின் உடல் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜகோபால் தான் கொலை செய்தார் என்பதற்குச் சாட்சியம் இல்லாததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎஸ்பிஐ வங்கியின் விவசாயிகளுக்கான கிசான் மேளா..எப்போது, சலுகைகள் என்ன\nஎல்பிஜி மானியத்திற்கு மாற்று வழியை ஆராய்ந்து வரும் நிதி ஆயோக்..\nஅதிசயம்.. ஆச்சர்யம்.. இந்தியாவில் 50 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gfoehl+at.php", "date_download": "2018-07-19T11:22:07Z", "digest": "sha1:CI6I2L6V5BSOO33I7WQM3HFJEQ5HK2AK", "length": 4455, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gföhl (ஆசுதிரியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நா���்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Gföhl\nபகுதி குறியீடு: 2716 (+43 2716)\nமுன்னொட்டு 2716 என்பது Gföhlக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gföhl என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gföhl உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2716 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Gföhl உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2716-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2716-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Gföhl (ஆசுதிரியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+Colaman+tivukal.php", "date_download": "2018-07-19T11:48:28Z", "digest": "sha1:ZM3BWPDQ673F2VZ3IIZTC465H5PQLLRC", "length": 11399, "nlines": 22, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி சொலமன் தீவுகள்", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி சொலமன் தீவுகள்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nமேல்-நிலை கள / இணைய குறி சொலமன் தீவு��ள்\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சு��ிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாக்கடோனியக்மார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00677.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, சொலமன் தீவுகள் 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00677.8765.123456 என்பதாக மாறும்.\nமேல்-நிலை கள / இணைய குறி சொலமன் தீவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-1-2-2018/", "date_download": "2018-07-19T11:30:27Z", "digest": "sha1:V7QG7DKRADL6W2TPEBCFCVCIHVMGCNNJ", "length": 14989, "nlines": 141, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 1/2/2018 தை (19) வியாழக்கிழமை | Today rasi palan 1/2/2018 - Aanmeegam", "raw_content": "\nமேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமிதுனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nகடகம்: மாலை 4.38 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 4.38 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். இனிமையான நாள்.\nதுலாம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில�� வேலைச்சுமை இருந்தாலும் உங்கள் மரியாதைக் கூடும். மதிப்புக் கூடும் நாள்.\nவிருச்சிகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nதனுசு: மாலை 4.38 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4.38 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமீனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உங்களைச் சுற்றி யிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகை களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9) ஞாயிற்றுக்கிழமை...\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nAadi koozh | ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ்...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம்...\nஎந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t47272-topic", "date_download": "2018-07-19T11:31:05Z", "digest": "sha1:PROTQG6X67NYTX4EQZDXHGU4EJ543VCU", "length": 15796, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'டான்' ஷாருக்கும், நான்கு அழகிகளும்!", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; ��ொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\n'டான்' ஷாருக்கும், நான்கு அழகிகளும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n'டான்' ஷாருக்கும், நான்கு அழகிகளும்\nஒரே நேரத்தில் நான்கு உலக அழகிகளுடன் இணையும் ஷாருக் கான்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் புதிய சாதனை படைக்கவுள்ளார். ஒரே நேரத்தில் நான்கு முன்னாள் உலக அழகிகளுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார் ஷாருக்.\nஅமிதாப் பச்சன் நடித்த டான் படத்தின் ரீமேக்கில் ஷாருக் கான் நடித்து பெரும் ஓட்டம் ஓடியது அப்படம். இப்போது அதன் 2ம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் ஷாருக்.\nஇப்படத்தில் ஷாருக் கானுக்கு லாரா தத்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஜோடிகளாக நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் முன்னாள் உலக அழகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்னும் கெஸ்ட் ரோலில் படத்தில் காட்சி தரப் போகிறார்கள்.\nஇப்படி ஒரே படத்தில் நான்கு முன்னாள் அழகிகள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். நான்கு உலக அழகிகளுடன் ஜோடி போட்டு நடித்த முதல் நடிகர் என்ற ப���யரும் ஷாருக் கானுக்கு வரப் போகிறது.\nடான் படத்தை விட மிகப் பிரமாண்டமாக இந்த டான்-2 இருக்கும் என்கிறார்கள்.\nடான் படத்தைத்தான் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பில்லா என்று மாற்றி எடுத்தனர். சமீபத்தில் அதை அஜீத் அதே பெயரில் ரீமேக் செய்து நடித்தார். இப்போது பில்லா 2ம் பாகத்திலும் அஜீத் நடிக்கவுள்ளார் என்பது நினைவிருக்கலாம்\nRe: 'டான்' ஷாருக்கும், நான்கு அழகிகளும்\nRe: 'டான்' ஷாருக்கும், நான்கு அழகிகளும்\n@புவனா wrote: நாட்டுக்கு ரொம்ப முக்கியம்\nஆமாமா ,,,அப்புறம் ச்பெக்ட்ராம் ஊழல் முக்கியமா தங்கச்சி \nRe: 'டான்' ஷாருக்கும், நான்கு அழகிகளும்\n@புவனா wrote: நாட்டுக்கு ரொம்ப முக்கியம்\nRe: 'டான்' ஷாருக்கும், நான்கு அழகிகளும்\nஅப்பொழுது உலக அழகிகள், இப்பொழுது உலக கிழவிகளாகிவிட்டார்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: 'டான்' ஷாருக்கும், நான்கு அழகிகளும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://msahameed.blogspot.com/2014/03/blog-post_15.html", "date_download": "2018-07-19T11:37:50Z", "digest": "sha1:RQCQKLZ6F6WENVDC2DUBKDSKRMITRR4P", "length": 27548, "nlines": 135, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: சிரித்து வாழ வேண்டும்!", "raw_content": "\nநோய் குணமாவதற்கு மிக எளிதான, செலவற்ற வழி நன்றாகச் சிரிப்பது என்று இன்று மருத்துவத்துறையில் கூறுகிறார்கள். அதனைத்தான் நம் முன்னோர்கள் “வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்று சொன்னார்கள்.\nநாம் சாதாரணமாக சிரித்துவிட்டுப் போகிறோம். ஆனால் ஒரு சிரிப்பினால் நம் உடலில் எவ்வளவு விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா\n நிறைய மாற்றங்கள் நம் உடலில் நடைபெறுவதற்கு தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அதிர்ஷடவசமாக அந்த மாற்றங்கள் அனைத்தும் நம் உடலுக்கு நன்மை பயக்கின்றன.\nநோய் எதிர்ப்பு சக்தியை உடலில் பலப்படுத்துவது முதல் நம் ஆற்றல் அளவை (Energy Level) அதிகப்படுத்துவது வரை பல நல்ல மாற்றங்களை சிரிப்பு ஏற்படுத்துகிறது. மேலும் நம் மனஅழுத்தத்தைக் குறைத்து மனதை இலேசாக்குகிறது. நம் உடலிலுள்ள வலியைக் கூட சிரிப்பு குறைக்கிறது.\nநன்றாக வயிறு வலிக்கச் சிரித்தால், அல்லது விழுந்து விழுந்து சிரி���்தால் அடுத்த 45 நிமிடங்களுக்கு நம் உடல் முழுவதும் ரிலாக்ஸ் ஆகிவிடுகிறது. மன அழுத்தம், பதட்டம், படபடப்பு போன்றவை ஓடிப் போய் விடுகின்றன. நம் தசை நார்களின் இறுக்கம் குறைந்து இலேசாகிப் போகின்றன.\nஇது எப்படி நம் உடலில் நிகழ்கிறது நாம் வாய் விட்டுச் சிரிக்கும்பொழுது “மகிழ்ச்சி’‘க்கான ஒரு வேதியியல் பொருள் சுரக்கும். அதுதான் என்டார்ஃபின். இந்த என்டார்ஃபின் சுரந்தால் நம் உடல் நல்ல நிலைக்கு வந்துவிடும்.\nஅதே சமயம் வேறு ஒரு செயலும் சிரிக்கும்பொழுது நடக்கிறது. மன அழுத்தத்தைத் தரக்கூடிய ஹார்மோன்கள் சுரப்பது குறைக்கப்படுகிறது. ஒரு புறம் என்டார்ஃபின் என்ற மகிழ்ச்சிப் பொருள் சுரக்கிறது. மறுபுறம் மன அழுத்த ஹார்மோன்கள் சரப்பது மட்டுப்படுத்தப்படுகிறது.\nஅத்தோடு நாம் மேலே கூறியவாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது எப்படி\nசிரிக்கும்பொழுது நம் உடல் தூண்டப்பட்டு கிருமிகளை எதிர்க்கும் ஆண்டிபாடிகள் உஷார் ஆக்கப்படுகின்றன. இவை உடனே செயலில் குதிக்கின்றன. இவை களத்தில் இறங்கினால் உடலில் நோய்க் கிருமிகளை அண்ட விடுமா\nஆக, என்டார்ஃபின் சுரப்பு, மன அழுத்த ஹார்மோன்கள் மட்டுப்படுத்தப்படுதல், ஆண்டிபாடிகள் களத்தில் குதித்தல் – இந்த மூன்று நிகழ்வுகளால் நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கப்படுகிறது.\nஅனைத்தையும் நேர்மறையாக (Positive) எடுப்பவர்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.\nஉடலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும் “சிரிப்பு யோகா” என்றொரு யோகா கற்றுத் தரப்படுகிறது.\nஅதாவது, சிரிப்புப் பயிற்சியும், சில யோகா முறை மூச்சுப் பயிற்சிகளும் இணைக்கப்படுவதுதான் இந்தச் சிரிப்பு யோகா என்பது. இதனுடைய முக்கிய நோக்கம் நம் உடலுக்குள் பிராண வாயுவின் (ஆக்ஸிஜன்) அளவை அதிகப்படுத்துவதுதான்.\nகுழந்தைகள் கள்ளங்கபடமில்லா உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் சிரிப்பும் அப்படித்தான். குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் அதிகமதிகம் சிரிக்கிறோம். ஆனால் வயதாக, வயதாக நம் சிரிப்பு குறைந்துகொண்டே போகிறது.\nகுழந்தைகள் ஒரு நாளைக்கு 300 முதல் 400 தடவை சிரிக்க முடியும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. ஆனால் இதுவோ வயது வந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு 15 தடவை என்று குறைந்துவிடுகிறது.\nஇதனை ஈடு கட்���ுவதற்காக மனோதத்துவவியலாளர்கள் வலுக்கட்டாயச் சிரிப்பை ஊக்குவிக்கிறார்கள்.\n“வலுக்கட்டாயச் சிரிப்பு சக்தி மிக்கது. எப்பொழுதும் கிடைக்கக் கூடியது. செலவே இல்லாதது. இதனை வயது வந்தவர்கள் செய்து வந்தால் அவர்களின் “மூடு” (மனப்போக்கு) நன்றாக மாறும். அதாவது அவர்கள் நல்ல மனநிலைக்கு வருவார்கள். மனோ ரீதியாக நல்ல விளைவு ஏற்படும்” என்று மனோதத்துவப் பேராசிரியர் சார்லஸ் ஷேஃபர் கூறுகிறார்.\nஇவர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஃபேர்லெய் டிக்கின்சன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவர் சிரிப்பு சம்பந்தமாக இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.\nஷேஃபர் சில மாணவர்களை வைத்து ஒரு சோதனை நடத்தினார். அவர்களிடம் அவர்களின் மனப்போக்கை (மூடு) அறிவதற்காக தொடராக சில கேள்விகளைக் கேட்டார். பிறகு அவர்களை ஒரு நிமிடம் நன்றாகச் சிரிக்கச் சொன்னார். பிறகு அவர்களின் மனப்போக்கைப் பரிசோதித்தார்.\nஷேஃபர் கேட்ட கேள்விகளுக்கு சிரிப்பதற்கு முன்பு மாணவர்கள் சொன்ன பதில்களை விட சிரிப்புக்குப் பின் அவர்கள் சொன்ன பதில்கள் மிகச் சிறப்பாக இருந்தன.\n“மூளை சிரிக்க வேண்டும் என்று உடலுக்குக் கட்டளை பிறப்பித்தவுடன், நம் உடல் எதைப் பற்றியும் கவலைப்படாதாம். அது என்டார்ஃபின்களை உடனே சுரந்து தள்ளி விடும். மன அழுத்தம் குறைந்து விடும். சிரிப்பு என்ற உடல் சார்ந்த செயலுக்கு மனரீதியான செயல்தான் மனஅழுத்தக் குறைவு என்பது” என்கிறார் பேராசிரியர் ஷேஃபர்.\nஆக, சிரிப்பு என்பது ஆரோக்கியத்தின் முதலீடு.\nசிலருக்கு சிரிப்பு என்பது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறும்பொழுது வேறு சிலருக்கோ சிரிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால், சிரிப்பின் மகிமையை உணர்ந்தால் அறிமுகமில்லாத நபர்களைப் பார்த்தும் நாம் புன்னகைப்போம்.\nசிரிப்பினால் ஏற்படும் இன்னொரு பலன், சிரிக்கும்பொழுது முகத்தின் தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. இது முகத்தின் அழகு அதிகரிக்கக் காரணமாகிறது.\nசிரிப்பதனால் உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வயிறு குலுங்கச் சிரிப்பது வயிற்றுக்குப் பயிற்சியாக மாறுகிறது. நீண்ட சிரிப்பின் மூலம் உடலில் அதிக கலோரி எரிந்து விடும். அத்தோடு சிரிக்கும்பொழுது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது. இது உணவு எளிதாக ஜீரணிக்க உதவுகிறது.\nசிரிப்பு நமது ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவசரமான நமது வாழ்க்கையில் சிரிக்கக் கூட நமக்கு நேரமில்லை. டென்ஷன் நமது ஆயுளை வீழ்த்துகிறது. இங்கேதான் சிரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.\nநிராசையிலிருந்து சிரிப்பு நம்மை விடுவிக்கிறது. கவலைகளைக் காற்றில் பறக்க விட சிரிப்பால் மட்டுமே முடியும். சிரிப்பு கோபத்தின் தீயை அணைக்கிறது. சோகத்தை அகற்றி உள்ளத்தை கிளர்ச்சியடையச் செய்கிறது. இதயத் துடிப்பை சாதாரணை நிலைக்கு கொண்டு வர சிரிப்பு உதவுகிறது. எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் உறுதியை சிரிப்பு தருகிறது.\nமனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள ஒரு பெரிய கொடைதான் “ஹியூமர் சென்ஸ்” என அழைக்கப்படும் நகைச்சுவை உணர்வு. நகைச்சுவையான ஒரு செயலைக் கண்டாலோ அல்லது வார்த்தைகளைக் கேட்டாலோ சிரிக்க முடிவதே ஒரு பாக்கியம்தான்.\nயாரைக் கண்டாலும் சிரிக்கும் நபர்கள் எங்கும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து விடுவார்கள். இரண்டு நபர்களுக்கு இடையேயான அகலத்தைக் குறைக்க சிரிப்பால் முடியும். சிரிக்காத நபர்களுடன் யாரும் எளிதில் நெருங்கமாட்டார்கள். அவர்களை சிடுமூஞ்சி என்றழைப்பார்கள்.\nசிரிப்பவர்களால் எங்கும் நல்லுறவுகளை ஏற்படுத்த முடியும். அவர்கள் சமூகத்தில் விரைவில் பிரபலமாகி விடுவார்கள்.\nசிறந்த ஆளுமையின் அடையாளமாக சிரிப்பு விளங்குகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு நேர்முகத் தேர்விற்குச் செல்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். “ஃபஸ்ட் இம்ப்ரஷன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரஷன்’‘ எனக் கூறுவார்கள். அதாவது, முதலில் ஒருவரிடத்தில் ஏற்படுத்தும் தாக்கமே சிறந்ததாகும்.\nஇங்கே உங்களது கல்வித் தகுதிகளை விட உங்களது மிடுக்குத்தனத்திற்கே அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். காரணம், ஒரே தகுதிகளைக் கொண்ட பலர் நேர்முகத் தேர்விற்கு வந்திருப்பார்கள். அவர்களில் சிறந்த நபரைத் தேர்வு செய்யும் அளவுகோலாக அவர்களின் ஆளுமைத்திறன் கவனத்தில் கொள்ளப்படும். ஆளுமைத்திறனுக்கு ஆக்கம் கூட்டும் சிரிப்பு உங்கள் முகத்தில் மலர்ந்தால் நீங்கள் மிடுக்கான நபர் என்பது நேர்முகத் தேர்வை நடத்துபவர்களுக்கு புரிந்து விடும். உங்களது ஒரு சிரிப்பில் அதிக மதிப்பெண்களை நீங்கள் தட்டிச் செல்லலாம்.\nஇஸ்லாம் சிரித்து மகிழ்ந்து இருப்பதற்குத் தடை ஏ���ும் விதிக்கவில்லை. இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நகைச்சுவை இழையோடியது. சிரிப்பு இடம் பெற்றிருந்தது.\n“உள்ளங்கள் சோர்வடைந்திருக்கும்பொழுது உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சியாக (ராஹத்தாக) வைத்திருங்கள்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)\nஎப்பொழுதும் ‘உர்’ என்று இறுக்கமாக இருக்க இஸ்லாம் இயம்பவில்லை. மனித மனம் இப்படியிருந்தால் மரத்துப் போய் விடும். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு எவ்வளவு அவசியமோ அதே போல் மகிழ்ச்சியும் அவசியம்.\nஅல்லாஹ் அனுமதித்த வழியில் சிறிது நேரம் சிரித்து மகிழ்ந்து இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சிரிப்பே வாழ்க்கையாகி விடக் கூடாது. அது அடுத்தவர்களின் மனதை நோகடிப்பதாக ஆகி விடக்கூடாது.\nஜாபிர் பின் சமுரா (ரலி) அறிவிக்கின்றார்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அவர்களின் தோழர்கள் சில நேரம் கவிதை பாடுவார்கள். சில நேரம் ஜாஹிலிய்யாக் கால விஷயங்களைக் கூறிச் சிரிப்பார்கள். அதை அண்ணலார் ஒருபோதும் தடுத்ததில்லை.\nகருணை நபி (ஸல்) அவர்கள் தங்கள் கடைவாய்ப் பல் தெரியுமளவுக்கு சிரித்துள்ளார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்.\nகஅப் இப்னு மாலிக் (ரலி) பின்வருமாறு அறிவிக்கின்றார்:\nசங்கை நபி (ஸல்) அவர்களுக்கு சந்தோஷமேற்பட்டால் அவர்களது முகம் பிரகாசிக்கும். அது பௌர்ணமி நிலவின் துண்டு போல் ஜொலிக்கும். (புஹாரீ, முஸ்லிம்)\nநானிலம் போற்றும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு இடையிலும் மிகப் பெரும் நகைச்சுவையாளராக விளங்கினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகின்றார்.\nஆயிஷா (ரலி) அறிவிப்பதைப் பாருங்கள்:\n“ஒரு நாள் எனது வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், ஸவ்தாவும் இருந்தனர். நான் ஹரீரா என்ற உணவைச் செய்தேன். அதைக் கொண்டு வந்து ஸவ்தாவிடம் உண்ணும்படி கூறினேன். அதற்கவர் எனக்கு விருப்பமில்லை என்று கூறினார். நீ சாப்பிடாவிட்டால் உனது முகத்தில் பூசுவேன் என்று கூறினேன். இது எனக்கு சாப்பிட்டுப் பழக்கமில்லை என்று கூறினார். நான் அந்த மாப்பண்டத்தை எடுத்து அவளின் முகத்தில் பூசினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கும் அவளுக்கும் இடையில் அமர்ந்திருந்தார்கள். என்னைப் பிடித்துக் கொள்வதற்காக அவர்களது முழங்கால்களைத் தாழ்த்தினார்கள். நான் ���ப்பண்டத்தை எடுத்து எனது முகத்திலும் பூசினேன். நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.” (அபூயஃலா)\n“நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்னகைப்பவரை நான் கண்டதில்லை” என்று அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலி) கூறுகின்றார். (திர்மிதி, அஹ்மத்)\n“உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான், திர்மிதி)\nஆக, சிரிப்பு நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆரோக்கியத்தைத் தருகிறது. நோயைப் போக்குகிறது. மொத்த குணநலனையும் மாற்றிவிடுகிறது.\nநல்ல ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் நன்றாகச் சிரியுங்கள். அதேவேளையில் தனியாக அமர்ந்தோ, அளவுக்கதிகமாகவோ சிரித்து விடாதீர்கள். நம்மை தவறாகக் கருதிவிடுவார்கள்\nவிடியல் வெள்ளி பிப்ரவரி 2014\nATMல் பணம் எடுக்கும்பொழுது கவனிக்க வேண்டிய ஒரு முக...\nதுளிரில் சிறப்புடன் நடந்து முடிந்த உலக வரலாற்று பு...\n“வேர்கள்” & “எனது பயணம்” நூலாய்வு விழா\nகாந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு - 2\nதிருக்குர்ஆனோடு நமக்கு என்ன தொடர்பு\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_13.html", "date_download": "2018-07-19T11:14:08Z", "digest": "sha1:2BWNYKRA4FCTUAIOPFQXNXY36VPG2UXJ", "length": 12631, "nlines": 241, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "நான் சமீபத்தில் சுட்டவை | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nமேலே நீங்கள் பார்ப்பதெல்லாம் என் நண்பரின் இணயத்தளத்திற்காக நான் சுட்ட புகைப்படங்கள் ஆப்டிமைஸ் செய்யப்பட்டவை எனவே தெளிவு சிறிது குறைவாக இருக்கும்... ஆனால் லைட்டிங், ஃப்ரேமிங் போன்றவற்றை நீங்கள் கவனிக்கலாம்\nபோன காமிரா பதிவை படிச்சுட்டு செல்லா நீங்க என்ன காமிராவில்எடுத்தீங்கன்னெல்லாம் கேட்காதீங்க. நம்ம கிட்ட ஒரு சாதாரண சின்ன ஒலிம்பஸ் SP - 500 uz டிஜிட்டல் காமிரா தான் இருக்கு நீங்கள்ளாம் தூரிகையை விட ஓவியத்தை ரசிப்பவர்கள் என்ற தைரியத்தில் தான் நானும் கொஞ்சம் தயங்கிக் கொண்டே என் படங்களை இங்கே வெளியிடுகிறேன்\nஅது சாதாரண விசயம். புகைப்படஎடிட்டிங் பாடத்தில் விளக்குவேன்\nஇந்த காமிராவும் நான் காசு கொடுத்து வாங்கியதில்லை.எனக்கு அன்பளிப்பாக நியூயார்க், லாங் ஐலண்டில் வாழும் என் மாமா பெண் அனுசுயா அன்புடன் கொண்டுவந்து கொடுத்தது\nஆமா. உங்க கேமராவை எந்த கேமராவை வச்சு படம் புடிச்சீங்க\nபகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nஅறிவிப்பு: போர்ட்ராய்ட் புகைப்படப் போட்டி ஆரம்பம்\nZOOM LENS - சில டிப்ஸ்\nகோவை ரேஸ்பாருங்க... சில காட்சிகள் - பகுதி 1\nஎன் காமிராவில் சிக்கிய பிரபலம்.. யார் இவர்\nநேயர் விருப்பம்.. போர்ட்ராய்ட் டிப்ஸ்\n*** ஆகஸ்ட் புகைப்படப் போட்டி அறிவிப்பு \nஅறிவி்ப்பு: அடுத்த மாத புகைப்படப் போட்டி... நடுவர்...\nஉங்கள் போட்டிப் புகைப்படங்கள் -என் பார்வையில்\nPiT's - ஜூலைப் படங்கள் - சில கருத்துக்கள்\nபுகைப்பட போட்டி முடிவுகள் - ஜூலை படம்\nநன்றி நன்றி நன்றி - மெகா புகைப்படப் போட்டியில் 50 ...\n'தமிழில் புகைப்படக் கலை' - ஜூலைப் போட்டி - படங்களி...\nதமிழ் வலைப்பதிவர்களின் புகைப்படக் கண்காட்சி ஆரம்பம...\nகோடு போட்டா ரோடு போடு\nஒரு முக்கிய அறிவிப்பு: புகைப்படப்போட்டி - நீட்டிப்...\n\"தமிழில் புகைப்படக் கலை\" நடத்தும் புகைப்படப் போட்ட...\nமூன்றுக்குள்ளே காட்சி இருக்கு ராமைய்யா\nபுகைப்படம் எடுக்கலாம் வாங்க : பகுதி -1 (காமிராவைப...\nஒளியிலே தெரிவது தேவதையா - படங்காட்ட பத்து சூட்சமங்...\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத��தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilamudam.blogspot.com/2013/04/blog-post_29.html", "date_download": "2018-07-19T11:05:46Z", "digest": "sha1:UITM3NA3XVRPFBQP5G2RSOYUVKCJC2TR", "length": 24144, "nlines": 447, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: கொல்கத்தாவின் ஒரு நடைபாதையிலிருந்து.. - சமகால ஆங்கிலக் கவிதை - அதீதத்தில்..", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nகொல்கத்தாவின் ஒரு நடைபாதையிலிருந்து.. - சமகால ஆங்கிலக் கவிதை - அதீதத்தில்..\nகூடைக்குள், கந்தல் பொதி மேல்.\nதடதடக்கும் சரக்கு வண்டியைத் தவிர.\nஉன் அன்னை அதோ இருக்கிறாள்\nசுள்ளிகளால் தீ மூட்டிக் கொண்டு.\nஅவளது முகம் கரிப் புழுதியாலும்\nதன் ரிக்ஷாவின் சுமையை இழுக்க\nஅழுத்தி மிதித்தக் காலடித் தடங்களாய்\nஉன்னை மட்டும் படமாக்கிக் கொள்கிறேனே.\nவேண்டாம், திறக்காதே உன் கண்களை\nஎன் புகைப்படத்துக்கும் என் நினைவுகளுக்கும்.\n15 ஏப்ரல் அதீதம் இதழுக்காகத் தமிழாக்கம் செய்யப்பட்டக் கவிதை.\nஇக்கவிதை பின்னர் ஃபெமினாவிலும், அப்போது அதன் ஆசிரியராய் இருந்த கமலா தாஸ் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு, வெளியானது. கவிதையைப் பாராட்டியதோடு, தொடர்ந்து நிறைய எழுதுமாறு ஊக்கம் கொடுத்திருக்கிறார் கவிஞருக்கு, தன் கைப்பட எழுதியிருந்த கடிதத்தில்.\nLabels: ** அதீதம், கவிதை, மொழிபெயர்ப்பு இலக்கியம்\nகவிஞ்ர் சுனந்தா சதீஷ் அவர்கள் கவிதை நன்றாக இருக்கிறது.\nகவிதையின் உண்மை சுடுகிறது. அம்மாவின் அடுப்பு போல. இப்படியொரு படமும் எடுத்து அதற்கான கவிதையும் தயாராக எழுதிவிட்டாரே.\nஉங்கள் மொழிபெயர்ப்பு அருமை ராம்லக்ஷ்மி.வாழ்த்துகள்.\nகவிதை சித்திரமாக மனக்கண்ணில் விரிகிறது பொருத்தமான படத்துடன் படிக்கையில் வெகு இனிமை பொருத்தமான படத்துடன் படிக்கையில் வெகு இனிமை உங்கள் தோழியான கவிஞர் சுனந்தாவிற்கு நல்வாழ்த்துகள் + பாராட்டுகளைச் சேர்ப்பித்து விடுங்கள்\nஅருமையான சித்திரக் கவிதை அழகு...\n/ உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்./ எங்கோ படித்தமாதிரி இருக்கிறதா.\nபடமும் படத்திற்கேற்ற கவிதையும் அழகு. ஆங்கிலக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் உங்கள் பணி தொடரட்டும்......\nகவிதை (மொழிபெயர்ப்பு) அருமை. சுடும் உண்மைகள்.\nமனத்தைக் கலங்கடிக்கும் வரிகள். ஒரு நடைபாதைவாசியின் குழந்தை அதன் வாழ்க்கையில் நிம்மதி காணக்கூடிய ஒரே தருணம் இது எத்தனை அழகாக அதைத் தன் கவிதையால் தாலாட்டித் தூக்கம் தொடரச் செய்கிறார் கவிஞர். காட்சி மனம் பிசைந்தாலும் கவிதை தேற்றுகிறது. மிக அழகான கவிதைக்கும் அதன் கரு சிதையாமல் அற்புதமாய் மொழிபெயர்த்தத் தங்களுக்கும் இனிய பாராட்டுகள் ராமலக்ஷ்மி.\nஉங்கள் தோழியின் கவிதையும்,தங்களின் மொழிப்பெயர்ப்பும் அருமை அக்கா..\nகுழந்தையின் அம்மாவின் முகத்தில் அப்பிக்கிடக்கும் கரிபோல சுடுகின்றது.\nகவி மொழிபெயர்புடன் படமும் அருமை.\nஉங்கள் வலைப்பூவில். நன்றி GMB sir.\nஅழகான கருத்துரைக்கு நன்றி கீதமஞ்சரி.\nமிக்க நன்றி வல்லிம்மா. இந்தப்படம் இணையத்திலிருந்து எடுத்தது. மனக்கண்ணால் எடுத்த படத்தைக் கவிதையாக வடித்திருக்கிறார்.\nநடைபாதையிலிருந்து கவிதை மிகச் சிறப்பு. மொழிபெயர்ப்புக் நன்றே மகிழ்ச்சி ராமலக௸மி. வளரியில் பயன்படுத்திக் கொள்ளலாமா\nநல்லது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்���ோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nகொல்கத்தாவின் ஒரு நடைபாதையிலிருந்து.. - சமகால ஆங்க...\nதூறல்:12 - பெங்களூரில்.. கம்ப இராமாயண முற்றோதல், ப...\nநட்சத்திரக் கனவு - 'கல்யாண் நினைவுப் போட்டி' பரிசு...\nஅதிகாலை நேரமே.. - சூர்யோதயம் - கபினி [பாகம் 2]\nஎன் பாட்டியின் வீடு - பண்புடன் இணைய இதழில்.. - கமல...\nவிஜய - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்\nபரிசலோட்டி பன்னீர் - படம் மீட்டெடுத்த காவேரிக்கரை ...\nபூக்களைப் படமாக்குவதில் என்ன பெரிய கிரியேட்டிவிட்ட...\nசிரிப்பு (சிறுகதை) - அமீரகத் தமிழ் மன்றம் 13_ஆம் ஆ...\n - ஏப்ரல் மாத PiT போட்டி\nநன்றி ரியாத் தமிழ்ச் சங்கம் - கல்யாண் நினைவு - உல...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (31)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://timeforsomelove.blogspot.com/2010/12/10-1.html", "date_download": "2018-07-19T11:31:43Z", "digest": "sha1:SPMMDMXX5FO3YGAASOZ6V2PKLDXEC6G3", "length": 26454, "nlines": 285, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: எனக்குப்பிடித்த 10 ப்ளஸ் ரஜினி படங்கள்-பகுதி1", "raw_content": "\nஎனக்குப்பிடித்த 10 ப்ளஸ் ரஜினி படங்கள்-பகுதி1\nதோழர் பாலா இந்த தொடரை எழுதச்சொல்லிக்கேட்டு ரொம்ப நாளாச்சு. எழுதலாம் எழுதலாம்னு காலம் கடந்து போயிடுச்சு. நான் வள வளனு எழுதாமல் எந்த ரஜினி படமெல்லாம் பிடிக்கும்னு சொல்லிடலாம்னு எழுத ஆரம்பிக்கிறேன்.\nபொதுவாக சினிமா பற்றி கரைத்துக்குடித்த, உலக சினிமா பத்தி பத்தி பேசும் மேதாவிகளுக்குப் பிடிக்காத படங்கள் எல்லாம் எனக்குப்பிடிக்கும். தரமே இல்லாத இயக்குனர்கள்னு இவர்கள் சொல்லும் இயக்குனர்கள் வாசு, சுரேஷ் கிருஷ்ணா, ஷங்கர் போன்றவர்கள் இயக்கிய ரஜினி படங்கள் என்னை நெறையவே கவர்ந்ததுண்டு. பிடிக்கிறதை பிடிக்கும்னு சொல்வது என்னுடைய இஷ்டம், என் உரிமை, யார் என்னை கேக்கமுடியும்\n இதுல பிடிக்க என்ன இருக்கு என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில்கூறி அதை என்னால் நியாப்படுத்த முடியாது. எனக்கு நீல நிறம்ம் பிடிக்கும்னா, ஏன் னு கேட்டால் என்ன சொல்றது\n150 கோடி செலவழிச்சு எடுத்த பிரமாண்டமான படம். பயங்கரமான ஹைப் இருந்தும் இந்தப்படம் என்னை ஏமாற்றவில்லை, அதுவே இதன் பிரதான வெற்றி.\nபொதுவா பெரிய பட்ஜெட்னு வரும்போது எளிதாக சொதப்பிவிடுவதுதான் வழக்கம். ஆனா நம்ம ஷங்கர் இன்னொரு முறை வெற்றிவாகை சூடிட்டார் என்னைக்கேடால் ஸ்லம்டாக் மில்லியனருக்கு பதிலா ஏ ஆர் ரகுமானுக்கு எந்திரன் இசைக்கு ஆஸ்கர் கொடுத்து இருக்கனும் .\n நடிகைகளை ரசிப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காத மேட்டர். நெஜம்மாதாங்க. ஆனா 37 வயசான நம்ம ஐஸை ரசிக்காம இருக்க முடியலை. நம்ம ஐஸை ராவணனில் பார்க்கும்போது ஏதோ வடக்கத்திக்காரி மாதிரி தெரிஞ்சது, ஓவெர் ஆக்ஷன்..சுத்தமாப் பிடிக்கலை. ஆனா எந்திரனில் நம்ம ரஜினியோட பார்க்கும்போது, நம்ம ஊர் மாமி மாதிரி ஐஸும் அழகாயிடுச்சு. ஐசுக்கு குரல் கொடுத்தவங்களுக்குத்தான் க்ரிடிட்ல பாதியைக் கொடுக்கனும்.\nரஜினினு எடுத்துக்கிட்டா எந்திரன்ல சிட்டி 1 தான் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர், அடுத்து நம்ம சனா, பாடல்கள் கேட்கவும் பார்க்கவும், கொஞ்சம் தத்துவம்.\nசிட்டி-2 மாதிரி ரஜினியை ஏற்கனவே பார்த்தாச்சு 3 முகம், அலெக்ஸ் பாண்டியன் மற்றும் ஜான் கேரக்டர்ஸ். ஆனால் சிட்டி-1 கேரக்டர் ஒரு புதிய மனிதன் பூமிக்க��� வந்த கதை\nஅப்புறம் எந்திரனில் கடைசியில் வரும் க்ராஃபிக்ஸ்லாம் நமக்கு பிடிக்கலைங்க.\nஷங்கர் நிச்சயமா ஒரு ரஜினி ரசிகரா இருந்து இருக்கனும் நான் நம்புறேன். இல்லைனா சிவாஜில உருவாக்கிய ஒரு ரஜினியை அவர் உருவாக்கியிருக்க முடியாது. சிவாஜில பிடிச்சதுனு சொல்லப்போனால் நம்ம மொட்டைபாஸு ரஜினிதான் பெஸ்ட்டு அப்புறம் விவேக் ரஜினி காமெடி, ஸ்ரேயா ரஜினி ஜோடிப்பொருத்தம், பாடல்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும். ரஜினி பொதுவாக டூயட்ல ரொம்ப ஷையாத்தான், ஜெண்டிலாத்தான் நடிப்பார், நம்ம ஷங்கர் என்ன மாயம் பண்ணீனாருனு தெரியலை ரஜினி காதல் சக்கரவர்த்தி மாதிரி கிளப்பிட்டாரு, டூயட் மற்றும் காதல் சீன்களில். பிடிக்காததுனு பார்த்தா அந்த கனல் கண்ணனோட ஒரு ஃபைட், அப்புறம் அந்த கார்ச்சேசிங். சிவாஜி, காலத்தால் அழியாத ஒரு காவியம்தான். படத்திலேயே உங்களுக்கு பிடிச்ச ச்க்கண்ட் பெஸ்ட்னு கேட்டால், அந்த முதலிரவு சீன்ல ரஜினி, சிவாஜியா, எம் ஜியாரா, கமலா கடைசியில் சூப்பர் ஸ்டாரா கிளப்புவது.\nகே எஸ் ரவிக்குமார் ரஜினியோட வேலை செய்யும்போது மட்டும், எப்படி இவ்ளோ திறமையானவரா மாறிவிடுகிறார்னு தெரியலை. படையப்பால பெரிய ப்ளஸ் என்னனா ஒரு மாதிரியான ஒரிஜினல் ஸ்டோரி.\nபடத்தில் ரொம்ப பிடிச்சது, கிக்கு ஏறுதே பாடல் மற்றும் அதில் உள்ள தத்துவங்கள். அப்புறம் சிவாஜி- ரஜினி காட்சிகள்.\nபிடிக்காதது என்னனா, சுத்தி சுத்தி வந்தீக பாட்டு படமாக்கியவிதம் பிடிக்கலை. படையப்பா நிச்சயம ஒரு சிறப்பான படம்தான்.\nyoung ரஜினியைவிட வயதான தாடிவச்ச ரஜினிதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச ரஜினி :)\nபாஷால எனக்கு முதல் பாதிதான் (மாணிக்கம்) சூப்பரா இருந்துச்சு. அப்புறம் மறுபடியும் ஜெயில்ல இருந்து ரகுவரன் வந்த பிறகு மறுபடியும் நல்லாயிருந்துச்சு. பாஷா ரஜினி சுமாராத்தான் பிடிச்சது எனக்கு.\nரொம்பப் பிடிச்ச சீன்னா, அந்த காலேஜ் பிரின்ஸிபல்ட்ட பேசி சீட் வாங்கிற சீன் (ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி), அப்புறம் ஆனந்த் ராஜ்ட்ட அடி வாங்குறது, திருப்பிக் கொடுக்கிறது (உள்ளே போ ஒரு ஹீரோட்ட என்ன வில்லத்தனம் ஒரு ஹீரோட்ட என்ன வில்லத்தனம்), ரெண்டாம் பாதியில், நக்மாவை மணவரையில் பாஷாவப் போயி, அழைத்து வருவது, அதைத்தொடர்ந்து தங்கமகன் பாடல் ஆரம்பம்.\nஎஸ் பி எம் ரஜினியை வைத்து பலபடங்களில் சாதித்ததை சுரேஷ் கிருஷ்ணா சில படங்களில் சாதித்துவிட்டார்.\nபிடிக்காதது.. பாஷால பிடிக்காத சீன்னு எதுவும் பெருசா இல்லை.\nமீதி அடுத்த பதிவில்.. இதென்ன வள வள னு போகும்போல இருக்கு :(\nLabels: அனுபவம், திரைப்படம், திரைவிமர்சனம், மொக்கை\nஇன்னிக்கும் என் கணிப்பு தேறிடும்னு தோணுது, ஆனால் இது சினிமா அப்படிங்கிறதுனால இங்கே வராது. தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.\nஇன்னிக்கும் என் கணிப்பு தேறிடும்னு தோணுது, ஆனால் இது சினிமா அப்படிங்கிறதுனால இங்கே வராது. தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.\n உங்க வருகைக்கு நன்றி :)\nகு.கு ஒப்புதல் வழங்கியதை முன்னிட்டு, மாபெரும் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யுமாறு, கு.ஜ.மு.க அமைப்பாளர்களை வேண்டுகிறேன்\nகு.கு ஒப்புதல் வழங்கியதை முன்னிட்டு, மாபெரும் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யுமாறு, கு.ஜ.மு.க அமைப்பாளர்களை வேண்டுகிறேன்\nஎல்லாம் பார்த்தது. படையப்பாவே பிடித்தது.\nஇந்தப் பதிவிலேயே சொல்லிக் கொள்கிறேன்:)\nஉங்களுக்கும் கயல்விழிக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)\nஎல்லாம் பார்த்தது. படையப்பாவே பிடித்தது.\nஇந்தப் பதிவிலேயே சொல்லிக் கொள்கிறேன்:)\nஉங்களுக்கும் கயல்விழிக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த “கிசு கிசு” படி, கமல்-கெளதமி நட்பு மற்றும் உறவு முறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் கமலஹாஷன் ஒரு ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nபதிவுலகில் பெண்பதிவர்களுக்கு பிரச்சினை பிரச்சினை ப...\nமிஷ்கின் என்ன கொஞ்சம் லூசா\nசாருவைப் போல கமலும் ஒரு வலைதளம் ஆரம்பிக்கலாம்\nசன் டி வி யின் ஈனப்பொழைப்பு\nஎனக்குப்பிடித்த 10 ப்ளஸ் ரஜினி படங்கள்-பகுதி1\nஇன்றைய பதிவுலகில் வினவு, மாற்று, அடுத்து\nடாக்டர் ஷாலினியின் கட்டுரை -ஆண்குறி இத்யாதி\nகாதலிப்பது எளிது- நெஜம்மாவே ஒரு உண்மைக்கதை\nஇதெல்லாம் பெரிய அநியாயம்ங்க , மீனு அவர்களே\nஅவர் என்ன போதை மருந்து தயாரிச்சாரா, சார்\nகேள்வியும் நானே பதிலும் நானே (4)\nநந்தலாலா முழுநீள விமர்சனம்-கின்னஸ்க்கு பரிந்துரை\nசாரு எழுத்து வர வர கழுதைபோல போகுதா\nகடலை கார்னர் 65 (18+ ஒன்லி)\nதத்துப்பித்து பிரபாகரருக்கு சூப்பர் ஸ்டார் பதில்கள...\n சார்லி சாப்ளினை மிமிக் செய்யலை...\nதமிழ்நாட்டில் ஏன் \"அம்பேத்கார்கள்\" உருவாகவில்லை\nராம்கோபால் வர்மாவின் ரத்தசரித்திரம்-2 படுதோல்வி\nநடிகர் விஜய் ஒரு இடியட்டா\nநா��ும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப ரகசியங்கள்\nசெக்ஸ் என்கிற என்றுமே அடங்காத ஆசை\nகண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/02/blog-post_1168.html", "date_download": "2018-07-19T11:23:39Z", "digest": "sha1:5TSB4IO3LPI2XQ5F66UCRC525QF5I4ES", "length": 19374, "nlines": 180, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்\nபவர்ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது.\nபரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.\nபவரஸ்டாரின் மெயில் ஐ.டி.gmail@powerstar. com\nஒரு நாள் பவர்ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.\n2012-ல் உலகம் நிச்சயம் அழியாது. ஏனெனில் பவர்ஸ்டார் 3 வருட வாரன்டியோடு ஒரு லேப்டாப் வாங்கியிருக்கிற ார்.\nபவர்ஸ்டார் ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் -ப்ளூடூத் வழியாக.\nபவர்ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர்ஸ்டார் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.\nபவர்ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டா ர். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.\nகிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோத , ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர்ஸ்டாரிடமிருந்து இருந்து வந்திருந்தன.\nபவர்ஸ்டார் தனது தோட்டத்தின் மூன்று மூலைகளிலும் நான்குகிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக \nநோக்கியா விளம்பரத்தில் கைகுலுக்கிக்கொள்ள ும் இரண்டு கரங் கள் யாருடையவை என்பது பவர்ஸ்டாருக்கு மட்டுமே தெரியும்.\nரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோத ு, அதை முதன்முதலில் பவர்ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர்ஸ்டார் குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில்.\nரொனால்டினோ: என் காலால் ஒருமுறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்...\nபவர்ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா\nகடவுள் பவர்ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை பவர்ஸ்டார்.’\nபவர்ஸ்டார் ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.\nஒருமுறை பவர்ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக ்கும்போதுதவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது . சுவிஸ் பேங்க் உருவானது.\nபவர்ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்க ள்.\nசார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர்ஸ்டாரின் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.\nபவர்ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறைதினமான கதை இதுதான்.\nதிண்டுக்கல் தனபாலன் February 02, 2013\nஹா... ஹா... முன்பு இதே போல் சூப்பர் ஸ்டார்... இப்போது பவர் ஸ்டார்...\nசிறிது நேரம் சிரித்து கொண்டிருக்கலாம்... நன்றி...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசாப்ட்வேர் கணவனும் அவரது மனைவியும்\nநான் யார் யாரைக் கடிக்கணும்\nபயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...\nசூப்பர் ஸ்டாரின் பேட்டி - பகுதி 2\nசூப்பர் ஸ்டாரின் பேட்டி - பகுதி 1\n\"ஒண்ணும் அவசரம் இல்லை... ஒரு பதினைந்து நாள் இருந்த...\nயாருய்��ா ஒரே வேலைக்காக ரெண்டு பேரைப் போட்டது\nஇன்னும் இரண்டு நாள் தங்கிச் செல்லலாமே\nமுடி வளர எளிய மருத்துவம்..\nMobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு\nபடகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டு வந்தேன...\nநிறைய முஸ்லிம்களின் பெயர்கள் ஹிந்து பெயர்களே...\nநாராயணசாமி நீ கர்ப்பமாக இருக்கிறாய்\"\nநாராயணசாமி ஒரு இயற்கை விஞ்ஞானி.\n நம் மண்ணின் மாண்பை காப்ப...\n\"கற்பனைத் திறம்\" மிக்க ஆட்கள் தேவை\nஎருமை என்ன கொடுக்கும் - \"ஹோம் வொர்க்\"\nமதுவிலக்கு தமிழ்நாட்டில் அமல்படுத்த படுமா\nசேரனின் வெற்றிக்கொடி கட்டு - கதையல்ல நிஜம்.\nஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை....\n1GB மெமரி கார்டை 2GB மெமர் கார்டாக மாற்ற\nவரலாற்றின் இணையற்ற நாயகன் - ஆபிரகாம் லிங்கன்\nஎனக்கிருப்பது ஒரு ஒரு அன்பான மனைவி\n15 நாளில் முதலீட்டை இருமடங்காக திருப்பி தருவதாக கூ...\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\nஉடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை. . .\nஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள்\nகுழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வ...\nசரவணா ஸ்டோர்ஸ் - பிரம்மாண்டமாய் இது விளம்பரம் அல்...\nஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது\nநாள்பட்ட மூட்டு வலி இருக்கா\nஅடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால்\nநாராயணசாமிக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.\nதமிழ் திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் \nசிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா...\nநான் உனக்கு ஒட்டு போடவில்லை,அதனால் நீ எனக்கு முதலம...\nபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்\nகமலுக்கு அன்போடு ஒரு கடுதாசி… இல்ல கடிதம்\nஇது வெறும் ஸ்கூல் டெஸ்ட் அப்பா\nYou tube பணம் சம்பாதிக்க\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வ��்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ளிய வ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/08/blog-post_17.html", "date_download": "2018-07-19T11:24:03Z", "digest": "sha1:KR2YFU6ELRPZIRCCRN5RDAB5U7EPHWAI", "length": 26007, "nlines": 193, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : கூகுளை வழிநடத்தப்போகும் சென்னை தமிழர்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nகூகுளை வழிநடத்தப்போகும் சென்னை தமிழர்\nகூகுளுக்கு புதிய தாய் நிறுவனம் ஆல்பபெட் உதயம்; சுந்தர் பிச்சை புதிய சி.இ.ஓ\nஇணைய உலகின் புகழ் பெற்ற நிறுவனமான கூகுளின் அமைப்பில் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஆல்பபெட் எனும் புதிய தாய் நிறுவனம் உதயமாகியுள்ளது. கூகுள் இதன் துணை நிறுவனமாக இயங்கும் என்றும், இதன் சி.இ.ஓவாக இந்தியரான சுந்தர் பிச்சை செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னணி தேடியந்திரமாக விளங்கி வரும் கூகுள் , தேடல் தவிர வீடியோ, பிரவுசர், ஆண்ட்ராய்டு இயங்குதளம் என பலதுறைகளில் வியாபித்துள்ளது, மேலும் கூகுள் பல ஆய்வு பிரிவுகளையும் பெற்றுள்ளது. பல் துணை நிறுவனங்களையும் பெற்றுள்ளது. இணைய உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க சாம்ராஜ்யமாக கூகுள் விளங்குகிறது.\nஇந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் புதிய சீரமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆல்பபெட் எனும் புதிய தாய் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தாய் நிறுவனத்தின் கீழ் துணை நிறுவனமாக ���ூகுள் இயங்கும். கூகுளின் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ், தாய் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பார். கூகுளின் துணைத்தலைவரான சுந்தர் பிச்சை இனி கூகுள் நிறுவன சி.இ.ஓ.வாக செயல்படுவார்.\nதேடல் பிரிவு தவிர, யூடியூப், குரோம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவை கூகுள் கீழ் இயங்கும். முதலீடு மற்றும் ஆய்வு பிரிவுகள், ஸ்மார்தோம் பிரிவான நெஸ்ட், டிரோன் பிரிவு உள்ளிட்டவை ஆல்பபெட் கீழ் இயங்கும். இணை நிறுவனரான செர்ஜி பிரின், தாய் நிறுவனத்தின் தலைவராக செயல்படுவார்.\nகூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ், இந்த சீரமைப்பு பற்றி நிறுவன வலைப்பதிவில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சீரமைப்பிற்கான நோக்கத்தையும் விளக்கி உள்ளார்.\nகூகுளில் உள்ள மகத்தான வளர்ச்சி வாய்ப்புகளில் கவனம் செலுத்த இந்த சீரமைப்பு உதவும் என்று அவர் கூறியுள்ளார். எங்கள் நிறுவனம் இன்று சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. எனினும் இதை மேலும் எளிமையானதாகவும், கணக்குகள் நோக்கில் வெளிப்படையானதாகவும் ஆக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகூகுள் வழக்கமான நிறுவனம் அல்ல என்றும், அதே விதத்தில் தொடர விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகூகுளின் புதிய சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சை, சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி கராக்பூரில் படித்தவர். பின்னர் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையில் உயர் கல்வி பெற்றார். 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த அவர், மிக வேகமாக அந்நிறுவனத்தில் உயர் பதவிக்கு வந்தார். கூகுள் நிறுவனர்களின் நம்பிக்கையை பெற்ற சுந்தர் பிச்சை, அதன் மூத்த துணைத்தலைவரானார். தற்போது சீரமைக்கப்பட்ட பிறகு கூகுளின் சி.இ.ஓ.வாக ஆகியிருக்கிறார்.\nகூகுளின் புதிய சீரமைப்பு, நிறுவனத்திற்குள் உள்ள மகத்தான வாய்ப்புகள் மீது கவனம் செலுத்த உதவும். இதில் சுந்தர் பிச்சை முக்கிய அங்கம் வகிப்பார். சுந்தர் பிச்சையின் ஆற்றல் மற்றும் ஈடுபாடு, எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ள லார் பேஜ், சுந்தர் பிச்சை போல திறமை வாய்ந்த ஒருவர், கூகுள் நிறுவனத்தை வழிநடத்த கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்றும் பாராட்டியுள்ளார்.\nஏற்கனவே முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்டின் சி.இ.ஓ.வ��க, இந்தியரான சத்யா நாதெள்ள இருக்கும் நிலையில், கூகுளின் சி.இ.ஓவாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.\nலாரி பேஜின் அறிவிப்பு; https://abc.xyz/\nLabels: Google, Technology, அரசியல், அறிவியல், கட்டுரை, செய்திகள், சென்னை, பிரபலங்கள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஇந்திய அணி 7 ரன்களை எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகளை ...\nரஜினி, கமல் இல்லாத 80 -களின் சந்திப்பு\nமாமன்னர் ராஜேந்திரச் சோழனின் சாதனைகள்: பள்ளிகளில் ...\nகைவிட்ட பிள்ளைகள்... வற்றாத காதல்... கணவரை இடுப்பி...\nசட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி தரத் தயார...\nவிஜயகாந்துதான் அடுத்த முதல்வர்: அடித்து சொல்லும் ...\nசர்வே முடிவு: அடுத்த முதல்வர் யார்\nஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் ஒரு அதிச...\nசிரிப்பு மருத்துவர் கலைவாணர் என்.எஸ்.கே நினைவு தின...\nஇந்திய விளையாட்டில் தயான் சந்த் எனும் சகாப்தம்\n தனிஒருவன் = திரைவிமர்சனம்\nதோனி டெஸ்ட் போட்டியில் இருந்து விரைவில் ஓய்வு பெற ...\nவெளிநாட்டு மண்ணில் சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்திய வி...\nஆயுள் காக்கும் 10 கட்டளைகள்\nஅமெரிக்காவில் தமிழ்குழந்தையை அடித்து கொன்ற குஜராத்...\nஇனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆ...\nநிலவுக்கு சென்று வர கட்டணம் எவ்வளவு தெரியுமா\nஉசேன் போல்ட்டை கீழே தள்ளிவிட்ட கேமராமேன் (வீடியோ):...\n3 பேரை திருமணம் செய்ததும் அம்பலம் : உண்மையை கூறிவி...\nபள்ளம் இங்கே... பல கோடி எங்கே\nவாழ்க்கையை பங்கு போட்ட கல்லூரி பேராசிரியையை கொலை ச...\nதாயின் மரணம் மனதை மாற்றியது : திருடிய பணத்தை திரும...\nஒரே நாளில் 100 கோடி பயனாளிகள்; பேஸ்புக் புதிய சாதன...\nநக்சல் தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குடு...\nமின்னல்வேகத்தில் 8 ஆயிரம் ரன்களை கடந்த டி வில்லியர...\nகண்தானத்திற்கு வழிகாட்டிய ஒரு 'ப்ளைண்ட் வாக்\nஜாமீனில் வந்த 3 பேரும் படுகொலை: ஒருவரின் தலையை து...\nஇலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் தீர்மானம்: அமெரிக்காவி...\nசேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...\nசேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...\nசேது சமுத்திரத் திட்டம்: நே���்று இன்று நாளை...\nசங்ககாராவை கவுரவித்த விராட் கோலி\nகபாலி படத்தில் ரஜினியின் கெட்டப் ரகசியங்கள்\nதிரையுலகின் மன்னன்... ராஜாதி ராஜா...\nகிருபானந்த வாரியார் பிறந்த தின பகிர்வு\nடிரஸ்ட் ஹாஸ்பிடல். இது மக்கள் மருத்துவமனை\nகொள்ளையடிக்கும் நிலைமைக்கு உயர்ந்த வெங்காய விலை\nஈவ் டீஸிங் ஆசாமியிடம் சண்டையிட்ட துணிச்சல் பெண்; ட...\nமலை மனிதன் – தசரத் மாஞ்சி\nகருணாநிதி கையில் திமுக இல்லை: யாரிடம் இருக்கிறது எ...\nவிஜயகாந்த்: வில்லன் முதல் எதிர்க்கட்சி தலைவர் வரை....\nபிறந்த நாள் சூளுரை: விஜயகாந்த் அழைப்பு\nஇலங்கை பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றிய இஷாந்த் சர்மாவு...\nகாலே தோல்விக்கு கொழும்புவில் பழி தீர்த்தது இந்தியா...\nஉசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் : இடுப்பு வலி சிறு...\nசென்னையை விட்டு நடிகர் பார்த்திபன் வெளியேறியது ஏன்...\nகல்விக் கடனுக்கான சிறப்பு இணையதளம்\nபீனிக்ஸ் பெண்ணாய் சிலிர்த்தெழுந்த அருணிமா\nஎஸ்.பி.ஐ. வங்கி தோற்றது: வழக்கறிஞராக மாறி வாதிட்டு...\nபேரவைக்கு வந்த ஜெ.வை குளிர வைத்த சபாநாயரின் கவிதைய...\nமோடியின் அதிரடி திட்டம், அடல் பென்ஷன் திட்டம்… ...\nநீ நல்ல மனசுக்காரன்யா; வெற்றியோடு வருவ': ஆ.ராசாவை ...\nஇளங்கோவனுக்கு எதிராக போராட வேண்டாம்: ஜெயலலிதா வேண்...\nவிவசாயிகளின் நிலம் ராஜீவ் அறக்கட்டளைக்கு விற்கப்பட...\nகொலைக்கு காரணமான 2 ஆயிரம்... பெண் டாக்டரை கொன்ற ...\nமெட்ராஸ் டூ சென்னை: 4 நிமிடங்களில் தெரிந்து கொள்ளு...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\n”அர்விந்த் சுவாமி சந்தோஷமா இருக்கான் \nசச்சினுக்கு பிறகு சங்ககாராவுக்கு நடுவர்களும் மரியா...\nடெஸ்ட் அரங்கில் ஆயிரம் சிக்சர் அடித்து இந்தியா சாத...\nகிரிக்கெட்: இந்தியாவை எதிர்த்து இங்கிலாந்தில் ஆர்ப...\n“ஹேய்... நான் அவள் இல்லை\n - கோவளத்தில் நடந்த கொடூரக் ...\nதிருமாவளவனைக் கொலை செய்ய திட்டமிட்டுக் காத்திருந்த...\nராஜபக்சேவை மூக்குடைத்த பிரதமர் ரணில்\nஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய்... வசூலிப்பது யார் த...\nகூகுளைவிட துல்லியமான தேடல் பொறி - சவால் விடும் 16...\nசிறந்த நடிகையாக பெயர் வாங்கணும்: சொல்கிறார் த்ரிஷ...\n24 படத்தில் ஹீரோவும் சூர்யா வில்லனும் சூர்யா\n - இயக்குனர் ரஞ்சித்திடம் மன...\nவிஷாலுக்கு நோ... சரத்குமாருக்கு ஓகே...\nநிர்வாக மாற்றத்துடன் சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி...\n��ந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு\nரோஜாவை விரட்டிச் சென்று கைது செய்த போலீஸ்\nசிறைக்கு அனுப்பிவைத்த செல்ஃபி மோகம்\nபேமெண்ட் வங்கிகள் என்றால் என்ன... எப்படி செயல்படும...\nஹெல்மட் பிரச்னைக்கு புதிய தீர்வு : ஜனாதிபதி தட்டிக...\nநம்பர் 1 உசேன் போல்ட் - பிறந்த தின சிறப்பு பகிர்வு...\nசுங்க வரி அதிர்ச்சியளிக்கும் உண்மை.\nமுகத்தை மறைக்காத பெண்கள் கல்லால் அடித்து கொலை: ஐ.எ...\nபொதுவுடமை போராளி ப.ஜீவானந்தம் என்கிற தோழர் ஜீவா\nஉதவும் மனப்பான்மை விளையாட்டு வீரர்கள்: இந்திய கிரி...\nநடிகை அனுஷ்கா அதிகரித்த உடல் எடை எவ்வளவு தெரியுமா\nஇளையராஜா பாடல்களை பயன்படுத்த 5 நிறுவனங்களுக்கு நிர...\nமங்குச்சனியின் பாதிப்புகளை அகற்றும் ஒற்றை சனீஸ்வரர...\nஉலகிலேயே முதல் முறை : சூரிய சக்தியில் இயங்கும் கொச...\nதிருடர்களை பிடிக்க 'உசேன் போல்ட்' ஆன மதுரை ஆசிரிய...\nசில மணிநேரங்களில் சாதனை படைத்த புலி\nநகரியில் நடிகை ரோஜா திடீர் கைது\nரஜினி சரத்குமார் சந்திப்பில் நடந்ததென்ன\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ளிய வ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineulagam.com/cinema/06/156789", "date_download": "2018-07-19T11:35:58Z", "digest": "sha1:AOMSZEHPBLNGT3NAHA7MD6SKU7YTWCJR", "length": 6966, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "இளைஞர்களை ஈர்த்த இந்த பிரபல ஜோடிக்கு இத்தனை கோடி விலையாம்! அசரவைத்த தகவல் - Cineulagam", "raw_content": "\nசின்னத்திரை நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதற்கு பின் இப்படி ஒரு சோக கதையா\nசர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தொட்டு கூட பார்த்திடாதிங்க....பெரிய ஆபத்து\nபிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ\nஎந்நேரமும் கேம் விளையாடிய மகன்....உலகத்தை விட்டே அனுப்பிய தந்தை\nஎல்லாரையும் குறைசொல்லும் வைஷ்ணவி மிட்நைட் மசாலாவில் செய்த வேலையை பார்த்தீர்களா\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nநேரத்திற்கு வேலைக்கு செல்ல 32 கி.மீ நடந்து சென்ற இளைஞர்...முதலாளி கொடுத்த பரிசு என்னனு தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை... அதிர்ச்சியில் திரையுலகம்\nபிக்பாஸ் வீட்டில் அனைவரது உண்மைமுகம் இதுதானா\nதெய்வமகள் சீரியல் புகழ் வானி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇளைஞர்களை ஈர்த்த இந்த பிரபல ஜோடிக்கு இத்தனை கோடி விலையாம்\nசினிமாவில் இருக்கும் பிரபலங்கள் சிலர் காதல் வலையில் விழுந்திருக்கிறார்கள். கணவன் மனைவியாக சேர்ந்து வாழும் பல பிரபலங்களை உதாரணமாக சொல்லலாம்.\nஇதில் பாலிவுட் சினிமாவில் சிலர் சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறார்கள். அண்மையில் பாஹி 2 படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் டைகர் ஷிராஃப், திஷா படானி. இப்படம் நல்ல வசூல் அள்ளியது.\nஇளைஞர்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல வரவேற்பு. இவர்களுக்குள் காதல் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல எண்ணெய் நிறுவனம் ஒன்று தங்கள் விளம்பரங்களில் நடிக்க அணுகியுள்ளது.\nஅவர்கள் ரூ 5 ��ோடி சம்பளம் கேட்டார்களாம். உடனே அந்த நிறுவனம் சற்றும் யோசிக்காமல் ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். அவர்கள் விரைவில் இந்த விளம்பரத்தில் நடிக்கவுள்ளார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:310", "date_download": "2018-07-19T11:39:00Z", "digest": "sha1:DLBME4SHJUJW2ZIV3Z3E26QBURW7MXCI", "length": 16844, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:310 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,973] இதழ்கள் [10,245] பத்திரிகைகள் [35,082] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,161] பதிப்பாளர்கள் [2,503] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [55,766] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2017, 07:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/53775.html", "date_download": "2018-07-19T11:32:38Z", "digest": "sha1:FBVC4D4DMDJD2GVTYMSJIGFJ52S5WR6K", "length": 18434, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரியங்கா சோப்ராவுக்கு வெற்றி கிடைக்குமா? | priyanka chopra select People's Choice Awards", "raw_content": "\nகுஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு `போட்டோவை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தீர்கள் `போட்டோவை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தீர்கள்' - மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த பள்ளி லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி' - மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த பள்ளி லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மின் கட்டணத்தை யார் செலுத்துவது' - கலாம் கட்டடத்தில் நடக்கும் மோதல் `குற்றம் செய்யாமல் ஜாலியாக ஜெயிலுக்குப் போகலாம்' - கலாம் கட்டடத்தில் நடக்கும் மோதல் `குற்றம் செய்யாமல் ஜாலியாக ஜெயிலுக்குப் போகலாம்’ - ஜெயில் டூரிஸத்துக்குப் பச்சைக��கொடி காட்டிய கேரளா `ஷூட்டிங் இடையில பார்க்க வர்றேன்'னு சொல்லியிருக்கார்’ - ஜெயில் டூரிஸத்துக்குப் பச்சைக்கொடி காட்டிய கேரளா `ஷூட்டிங் இடையில பார்க்க வர்றேன்'னு சொல்லியிருக்கார்’ - `தெய்வம் தந்த வீடு' மேக்னா ரிட்டர்ன்\n``சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கை வேண்டும்\" - விஷ்ணுப்ரியாவின் தந்தை கோரிக்கை பள்ளிக் கட்டடம் இடிந்துபோனதால் இ-சேவை மையத்தில் பாடம் பயிலும் மாணவர்கள்\" - விஷ்ணுப்ரியாவின் தந்தை கோரிக்கை பள்ளிக் கட்டடம் இடிந்துபோனதால் இ-சேவை மையத்தில் பாடம் பயிலும் மாணவர்கள் அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\nபிரியங்கா சோப்ராவுக்கு வெற்றி கிடைக்குமா\nமுன்னாள் உலக அழகி பிரியங்காசோப்ரா பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் அழகியும், பாலிவுட் டாப் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்க தொலைகாட்சித் தொடர் 'கோண்டிகோ' வில் நடித்து வருகிறார், இதன் மூலம் சர்வதேச அளவில் அவரது புகழ் உயர்ந்துள்ளது. அதிக பார்வையாளர்களைக் கவர்ந்த தொடர் என்ற பெருமையும், இத்தொடருக்கு உள்ளது.\nதற்போது பீப்பிள்ஸ் சாய்ஸ் எனும் விருதுப்பட்டியலில் மனம் கவர்ந்த டிவி தொடர் நடிகை என்ற விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நடித்த முதல் வருடத்திலேயே, முதல் முறையாக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தனக்குப் பெருமையாக உள்ளது என பிரியங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nமேலும் பிரியங்கா சோப்ராவிற்கு ஓட்டுப் போட விரும்புகிறவர்கள், பீப்பிள்ஸ்சாய்ஸ்.காம் என்ற இணையதளத்திலும், ஃ பேஸ் புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள் மூலமும் தங்கள் ஆதரவை அக்டோபர் 22 க்குள் தெரிவிக்கலாம். இவ்விருதிற்கான முடிவுகள் ஜனவரி 6 அன்று அறிவிக்கப்படும்.\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\nமேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n`போட்டோவை ஏன் ஃபேஸ்புக்க���ல் பதிவுசெய்தீர்கள்' - மாணவர்களுக்கு தண்டனை கொடு\n`` `பசங்க' படத்துல விஜய் சேதுபதிதான் கமிட் ஆனார்...ஆனா, விமல் நடிச்சார்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nபிரியங்கா சோப்ராவுக்கு வெற்றி கிடைக்குமா\nநடிகர்சங்கத்தின் மொத்த ஓட்டுகள் பற்றிய விவரம்\nகுடும்பப் பெண்களுக்கு அறிவுரை கூறும் தமன்னா\nவிஷால்அணி மீது கடும்நடவடிக்கை-தேர்தல்அறிக்கையில் சரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2015/08/01/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-19T11:40:41Z", "digest": "sha1:YCYL6GESSZYUFBAMXVFTON7JDWH2UPFR", "length": 18753, "nlines": 296, "source_domain": "lankamuslim.org", "title": "தமிழ் சமூகத்தோடு இணைந்து போகின்ற எழுச்சி அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது | Lankamuslim.org", "raw_content": "\nதமிழ் சமூகத்தோடு இணைந்து போகின்ற எழுச்சி அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது\nதமிழ் சமூகத்தோடு இணைந்து போகின்ற எழுச்சி பெற்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,\nமுஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் புதிய யுகம் பிறந்திருக்கின்றது.எல்லாவற்றுக்கும் மேலாக சகோதர தமிழ் சமூகத்தோடு முரண்பாட்டு அரசியலைச் செய்யாமல் கைகோர்த்துக் கொண்டு போகின்ற எழு���்சி பெற்ற வியூகமாக அது இருக்கும்.\nசரித்திரத்திலே அதிகாரத்தில் பங்கெடுக்காமல் இதுவரை ஒதுங்கி தங்களுடைய அரசியலை தனியே செய்து கொண்டிருந்த தமிழ் அரசியல் தரப்பினரை கிழக்கில் ஆளும் அதிகார வர்க்கமாக மாற்றிக்காட்டிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு.\nஇந்தத் தேர்தலின் மூலம் கடந்த 10 12 வருடகாலமாக முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வந்த இருண்ட யுகம் இல்லாமலாகிவிடுமநாட்டுப் பற்று என்ற போர்வையில் போலித்தனமாக முழு சர்வதேசத்தையும் பகைத்துக் கொள்ளுகின்ற ஒரு வெளிநாட்டுக் கொள்கையைத்தான் மஹிந்த கடைப்பிடித்தார்.\nவெளிநாட்டு முதலீடுகளை எல்லாம் தடுக்கின்ற ஒரு விதமான குருட்டு ராஜதந்திரத்தை கைக்கொண்ட ஆட்சியாளர்களை நாங்கள் விரட்டியடித்திருக்கின்றோம் என்றார்.-அததெரண\nஓகஸ்ட் 1, 2015 இல் 6:15 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மஹிந்தவின் நிழலில் தீவிரவாதம் அரங்கேருகின்றது: ரவி\nசுதந்திரத்தையும் -தேசிய, மத நல்லிணக்கத்தை பாதுகாப்பேன்: ஜனாதிபதி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்பட அவரின் அமைப்பை சேர்ந்த பலர் கைது \nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\n« ஜூலை செப் »\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு lankamuslim.org/2018/07/18/%e0… https://t.co/9fvGmEsqdk 1 day ago\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு lankamuslim.org/2018/07/18/%e0… 1 day ago\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு lankamuslim.org/2018/07/18/%e0… 1 day ago\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/tag/herbal-refreshing/", "date_download": "2018-07-19T11:39:13Z", "digest": "sha1:PX5JKK3YRGQXZET3UZWV73VCCICPAGNS", "length": 4374, "nlines": 57, "source_domain": "www.xtamilnews.com", "title": "Herbal Refreshing | XTamilNews", "raw_content": "\n7 நாளில் உடல் எடையை குறைக்க உதவும் இந்த இயற்கை டீயை குடிங்க\n5 நாளில் உடல் எடையை குறைக்க உதவும் இந்த இயற்கை டீயை குடிச்சு பாருங்க – வீடியோவை பார்த்துவிட்டு உங்கள்...\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nசோனாகச்சி ரெட் லைட் ஏரியா லைவ் ரிப்போர்ட் - வீடியோ\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nவீடியோ வெளியிட்ட தெலுங்கு பட நடிகை\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isaiarasi.blogspot.com/2008/01/blog-post.html", "date_download": "2018-07-19T11:13:40Z", "digest": "sha1:XE3SUJXRPCPPRDP3TYAO5UHNH6AS2254", "length": 8044, "nlines": 142, "source_domain": "isaiarasi.blogspot.com", "title": "இசையரசி: வெள்ளைக்குயில் சுசிலாம்மா - எஸ்.பி.பி", "raw_content": "\nஇன்னிசையரசி பி.சுசீலா அவர்களின் பாடல்களில் மெய்மறந்து கரைந்து போகும் உள்ளங்களின் துடிப்புகள் இந்த வலைப்பூவின் பதிவுகள்.\nவெள்ளைக்குயில் சுசிலாம்மா - எஸ்.பி.பி\nஎஸ்.பி.பி யின் அபிமான வெள்ளைக்குயில் சுசிலாம்மா.\nசுசிலாம்மாவை பற்றி நாம் சொல்றதுக்கு முன் டாக்டர் எஸ்.பி.பி. அவர்களை சுசிலாம்மா எப்படி கவர்ந்தார்கள் என்பதை என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் பல தடவை\nகுறிப்பிட்டுள்ளார்கள் ரசிகர்கள் அனைவரும் கேட்டிருக்க முடியும். இருந்தாலும் இந்த 2008 புதுவருடத்தில் முதல் தேதியன்று ஒரு பேட்டியில் அவர் சுசில்லாம்மாவை பற்றி குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வெள்ளைக்குயிலின் குரலைப் பற்றி அவர் அப்படி என்னதான்\n நீங்களே கேளுங்களேன். இந்த ஒரு நிமிட பதிவையே ராகவன் சாரின் \"இசையரசி\" தளத்தில் என்னுடைய முதல் பதிவாக பதிந்து உங்கள் மகிழ்ச்சியில் கலந்து கொண்டு நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.\nவாங்க ரவி. இசையரசி வலைக்குழுமம் வரவேற்கிறது. கானா பிரபாவின் சார்பாகவும் ராஜேஷின் சார்பாகவும் உங்களை வரவேற்கிறேன்.\nவந்ததும் பாடும் நிலா பாலு அவர்கள் குரலில் இசையரசி பற்றிக் கேட்க வைத்து விட்டீர்கள். நன்றி. :)\nராகவன் சார், வந்தோம்ல சுசீலாம்மாக்கு மரியாதை செய்யாமல் இருந்த்தோம்னா என்ன அர்த்தம்னேன் இது லேட்டஸ்ட் பிட் ஒலி கோப்பு சார். பாலுஜியை பத்தி இதுல பேசக்கூடாது என்று தான் இருந்தேன் (அதற்கு தான் தனியா தளம் இருக்கே) இருந்தாலூம் என்னால் உடனே முடியல அதனால் உடனடி பதிவாக இது. அப்புறம் கோப்பில் டிஸ்டர்பன்ஸ் இருக்கும் அது ரிலே மிஸ்டேக். கண்டுக்க்காதீங்க சார்.\nஎடுத்த எடுப்பிலேயே ஒலிக்கோப்���ு போட்டு அசத்தீட்டீங்க. மிக்க நன்றி\nபிரபா சார், உங்க ஊர்ல நடைபெற்ற சிட்னி கான்செர்ட் பற்றியும் 2 வரி சொல்லியிருக்கிறார். ஒரு மணி நேரம் ஓடும் ஒலிக்கோப்பாக பின்னர் பா.நி.பா வில் தனிபதீவாக வழங்கப்படும். அதை கேளுங்க சார். உங்கள் எல்லோரின் வாழ்த்துக்கள் நன்றி.\nசோலை புஷ்பங்களே...என் சோகம் சொல்லுங்களேன்..\n\"பூப்பூக்கும் மாசம் தை மாசம்\" கதாநாயகி வரிசை 4 - க...\nயார் யார் யார் அவள் யாரோ\nவெள்ளைக்குயில் சுசிலாம்மா - எஸ்.பி.பி\nஎம் எஸ் வி (2)\nசுசீலா p.susheela p.சுசீலா (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kamalalayan.blogspot.com/2010/08/thirunangaiyarin-eluthukal.html", "date_download": "2018-07-19T11:28:23Z", "digest": "sha1:XLAZS2ARCVM2HGVGT76QKKBGNRT624BE", "length": 7292, "nlines": 85, "source_domain": "kamalalayan.blogspot.com", "title": "என் சிந்தனைகள்: thirunangaiyarin eluthukal......", "raw_content": "\nமூன்றாம் உலகம் என்ற வார்த்தை அரசியல் சார்ந்த ஒரு சொல்லாடல் என்பதே கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை எனது புரிதலாக இருந்தது. ஆனால் மூன்றாம் பாலினம் ஆக இருக்கும் திருநங்கையர் நடுவே எழுதும் முனைப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று அறிந்த பின் இந்தச் சொல்லாடலின் மற்றொரு முனை என் மனதில் பதிந்தது.ப்ரியா பாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்ற நாவலை வாசித்த பொது கூட இந்த உண்மை அவ்வளவு ஆழமாக மனதில் பதியவில்லை.அவர்களில் எழுத்தார்வம் உள்ள சிலரை உற்சாகப் படுத்த வேண்டும் என்றும் எழுதுக்களை சார்ந்த ஒர் உரையாடல் நிகழ்வு நடத்த வேண்டும் என்று ப்ரியா பாபு அழைப்பு விடுத்த போதும் கூட அதன் முழுப் பரிமாணமும் பிடிபடவில்லை.ஆனால் அந்த நிகழ்வின்போது தங்கள் ஏன் எழுத விரும்புகின்றனர்,அவ்வாறு எழுத விடாமல் அவர்களைத் தடுக்கும் சுவர்கள் எவை,எப்படி அந்தச் சுவர்களைத் தகர்ப்பது,எதை எழுதப் போகிறோம்,எப்படி எழுதலாம்,எழுதியவற்றை எப்படி நூலுருவில் கொணர்வது என்றெல்லாம் ஒரு நூறு கேள்விகளுடன் வந்திருந்த அவர்களின் நடுவே பேச முற்பட்ட போதுதான் அந்தப் பொருள் சார்ந்த என் அறியாமைகளை உணர முடிந்தது.எனக்குப் பிடித்த சில படைப்புகள்,அவை சார்ந்த சில உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களால் அதில் பெருமளவு ஈடுபாடு காட்ட முடியவில்லை என்பதை உணர்ந்தேன்.அந்த அசிரத்தை ஏன் என்ற கேள்விக்கான விடையை ப்ரியா பாபுவே கடைசியில் சொன்னார்.இலக்கியப் படைப்புகள் என்று எதையும் இ���்னும் படிக்காதவர்கள்,படிக்கக் கிடைக்காதவர்கள்,படிக்க நேரமும் உகந்த வாழ்க்கை சுழலும் வாய்க்கaதவர்கள் வாழ்க்கையின் கோரப் பல்சக்கரங்களின் நடுவே அரைபட்டுக் கிடப்பவர்கள் என்ற நிலையில் எப்படி அவர்களால் நமது \"உன்னத' இலக்கியங்களில் ஈடுபாடு காட்ட முடியும்இந்த நிலையில் என்ன எழுதலாம்,எப்படி எழுதத் தொடங்கலாம்,என்னென்ன வடிவங்களைக் கையில் எடுக்கலாம் என்ற பல கேள்விகளும் அதற்கான விடைகளும் அவர்களின் நடுவேதான் இருப்பதாக உணர்ந்தேன்.எனஊடன் வந்திருந்த கருத்தாளர்களும் அதே உணர்வைத் தான் அடைந்திருப்பார்கள்.ஒரு விதை ஊன்றப் பட்டிருக்கக் கூடும்;அவ்வளவுதான்.அது முளைத்துத் துளிர்த்து,பூவும் காயும் கனியும் என்று வளர்ந்தொங்குவது என்றுஇந்த நிலையில் என்ன எழுதலாம்,எப்படி எழுதத் தொடங்கலாம்,என்னென்ன வடிவங்களைக் கையில் எடுக்கலாம் என்ற பல கேள்விகளும் அதற்கான விடைகளும் அவர்களின் நடுவேதான் இருப்பதாக உணர்ந்தேன்.எனஊடன் வந்திருந்த கருத்தாளர்களும் அதே உணர்வைத் தான் அடைந்திருப்பார்கள்.ஒரு விதை ஊன்றப் பட்டிருக்கக் கூடும்;அவ்வளவுதான்.அது முளைத்துத் துளிர்த்து,பூவும் காயும் கனியும் என்று வளர்ந்தொங்குவது என்றுவிடை தெரியாத கேள்வியாகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.\n'என்னை பற்றி'யின் கீழ் எனது விவரங்கள்..\nஎனது புத்தகங்களில் இருந்து.. (4)\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://planetjai.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-07-19T11:58:46Z", "digest": "sha1:5ZXKJ5XDUAQ5DJ7R4FNSRPA7WVWXHH2G", "length": 15898, "nlines": 371, "source_domain": "planetjai.blogspot.com", "title": "Jayavel Chakravarthy Srinivasan's Blog: கண்களை பாதுகாக்க சில பயிற்சிகள்.......!", "raw_content": "\nகண்களை பாதுகாக்க சில பயிற்சிகள்.......\nபெரும்பாலான நேரத்தை கம்யூட்டர் அல்ல்து டி விக்கள் முன் அமர்ந்து செலவிடும் நாம் கண்களை ஆரோக்கியமாக வைத்து, அதன் களைப்புகளை நீக்க உடற்பயிற்சி மிக அவசியம்.\nஅப்படி கண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய முறைகள் இதோ:\n1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை மூடி, உள்ளங்கையால் கண்களை மூடிகொள்ளவும்.\nஅவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும்.\nமுக்கியமா��� கண்களை மூடும் போது இருட்டாக இருப்பதால், அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.\n2. கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.\n3. குளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள் மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.\n4. மெதுவாக மூன்று விரல்களால் இரண்டு கைகள் கொண்டு மேல் கண் இமைகள் மீது அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.\n5. அமைதியாக உட்கார்ந்து பின்னர் கண்களை இடஞ்சுழியாகவும் பின் வளஞ்சுழியாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.\n6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.\n7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.\n8. எதிரில் உள்ள சுவர் மீது நோக்கியபடியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தல், பின் பழகிவிடும்.\n9. கண் அசைவுகளை கீழ், மேல் என செய்யவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.\n10. எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது. நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கணனி முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய வைட்டமின்கள்\nவெந்நீர்குடிப்பதின் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்ம...\nபுதினா (Mentha spicata) - மருத்துவ பயன்\nகண்களை பாதுகாக்க சில பயிற்சிகள்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/news/international/520/20180511/129672.html", "date_download": "2018-07-19T11:46:05Z", "digest": "sha1:GIZM4P76UXYSOH3MW2OFAYMYPBLA6NOU", "length": 2820, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன-ஜப்பானிய-தென்கொரிய அரசுத் தலைவர்கள் கூட்டத்துக்கு ஐநா தலைமைச் செயலாளர் வரவேற்பு - தமிழ்", "raw_content": "சீன-ஜப்பானிய-தென்கொரிய அரசுத் தலைவர்கள் கூட்டத்துக்கு ஐநா தலைமைச் செயலாளர் வரவேற்பு\nஅண்மையில், ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 7ஆவது சீன-ஜப்பானிய-தென்கொரிய அரசுத் தலைவர்கள் கூட்டத்துக்கு ஐநா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் வரவேற்பு தெரிவித்துள்ளதாக ஐநா தலைமைச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்பீபன் துஜாரிக் 10ஆம் நாள் கூறினார்.\nவட கிழக்காசியாவின் பல்வேறு நாடுகள் கூட்டு உறுதி மூலம், தமது பிரதேசங்களின் தொடர்ச்சியான அமைதி மற்றும் செழுமையின் பாதையை மேலும் சிறப்பாக நனவாக்க வேண்டும் என்றும் துஜாரிக் கூறினார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilamudam.blogspot.com/2012/12/blog-post_1522.html", "date_download": "2018-07-19T11:31:15Z", "digest": "sha1:VZQ7W6F74KDALNKLYBVK5DDFRPA6YYED", "length": 19887, "nlines": 418, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: புத்தாண்டு வாழ்த்துகள்", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nLabels: பேசும் படங்கள், வாழ்த்துகள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் பதிவர் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..\nபுதிய நம்பிக்கைகளில் புதிய விடியல் விடியட்டும். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ���த்துகள்.\nவித்யாசாகரின் எழுத்துப் பயணம் January 1, 2013 at 10:16 AM\nஅர்த்தம் செறிந்த வரிகளும் பார்க்கப் பார்க்க பேசும் படங்களுமாய் உங்களின் பயணம் வெற்றிகளின் வழியே மிக நீண்டுள்ளது சகோதரி. அதற்கான என் வாழ்த்துக்களும் அன்பும் வணக்கமும்..\n//மனிதம் தழைத்து அன்பும் அமைதியும் நிலவட்டும்//\nஉங்களது பிரார்த்தனையை அப்படியே வழி மொழிகிறேன்.\nபுத்தாண்டு கவிதை அருமை ராமலக்ஷ்மி.\nகவிதை ரொம்ப நல்லா இருக்குங்க. இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\nநல்லதே நடக்கட்டும். நன்றி ஸ்ரீராம்.\nநன்றி தங்கள் முதல் வருகைக்கும்.\nஉங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nகொட்டு மேளங்கள் - மைசூர் தசரா (Mysore Dasara) படங்...\nமைசூர் தசரா (Mysore Dasara) 2012 - ஊர்வலத்தில் கலை...\nபெங்களூர் சாகித்யோத்சவா - 'ஆகஸ்ட் 15' ஒரு அறிமுகம்...\nமைசூர் செயின்ட் ஃபிலோமினா தேவாலயம் - கிறுஸ்துமஸ் வ...\nதினகரன் வசந்தத்தில்.. 'புகைப்படப் பிரியன்' மெர்வின...\nஈரமாய் இருக்கட்டும் தூரிகை - பண்புடன் புகைப்படப் ப...\nதூறல்:10 - பொதிகையில் ‘பொ��்னான முதுமை’; இளம் கலைஞர...\nபூவாகிக் காயாகி.. - தோட்டத்தில் மாதுளை\nகுழந்தைத்தனம்தான், ஆயினும் மிக இயல்பானதே - சாமுவேல...\nRED FRAMES; SBI நூற்றாண்டு; டிசம்பர் PiT.. போட்டிக...\nமல்லிகை மகளில்..- வனத்தில் திரிந்த வாழ்த்துக் குரல...\nகுங்குமம் தோழியில் ‘என் ஜன்னல்’ - பிடித்த நூல், தள...\nஅடைக்கோழி - தினமணி கதிர் சிறுகதை\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (31)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tmpolitics.blogspot.com/2008/10/blog-post_09.html", "date_download": "2018-07-19T11:50:35Z", "digest": "sha1:AVHQBBWTZZASO2CIUZE7R6HZHHTIM6U6", "length": 25045, "nlines": 66, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: பொடாச் சட்டமும் பொதுத்தேர்தல் அணி சேர்க்கையும்!", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nபொடாச் சட்டமும் பொதுத்தேர்தல் அணி சேர்க்கையும்\nஜம்முவும் காஷ்மீரும் தீப்பற்றி எரியக் காண்கிறோம். பல்லாயிரக் கணக்கான ஜம்மு மக்கள் இந்துத்துவ அடையாளத்தை உயர்த்திப்பிடித்து விதீக்கு வந்து போராடுகிறார்கள். பொருளாதாரத் தடைவித்து சரக்குகளின் இயக்கத்தைத் தடுத்து காஷ்மீர் மக்களைத் தவிக்கச் செய்கிறார்கள். சாலைகள் மறியல், ரயில் பாதை மறியல், சட்ட மறுப்பு இயக்கம், வரிகொடா இயக்கம்- ஐந்து வயது குழந்தை கூடக் காவிக்கொடியேற்றி ஊர்வலத்தில் முழக்கமிடுவதை தொலைக்காட்சிகள் காட்டுகின்றன.\nசுருங்கச்சொன்னால் காஷ்மீரை ஐம்மு பகைநாடாகப் பார்க்கிறது. ஐம்முவின் மக்கள் மதவெறி அரசியலுக்குத் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டார்கள். இதன் எதிரொலி காஷ்மீர்த் தீவிரவாதிகளிடம் வெளிப்படுகிறது.இந்தக் கொதி நிலையை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் அங்கங்கள் (குறிப்பாக விசுவ இந்து பரிசத்) பெரும்பங் காற்றியுள்ளன.\nபாரதிய ஜனதாக் கட்சி இந்தச் சூழலில் தந்திரமான முறையில் சற்று விலகியே நின்றுகொண்டிருக்கிறது. உண்மையில் அது மிகப்பெரிய அரசியல் ஆதாயத்தை ஈட்டியுள்ளது.பா.ஜ.க.வின் குறிக்கோள்கள் இரண்டு:முதலாவது, ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற இந்தியர் எனும் அடையாளத்தை அழித்து இந்துத்துவ இந்தியர் என்ற மனப்பாங்கை உருவாக்கி வலுப்பெறச் செய்வது.இண்டாவதாக,மத்திய அரசின் வசம் அதி காரத்தை மேன்மெலும் குவித்துக் கொள்வது.இந்த இரண்டு குறிக்கோள் களையும் இணைத்து இந்துத்துவ பாசிசக் கொள்கை என்று கூறலாம்.முதலாவது குறிக்கோளான இந்துத்துவ அடையாளத்தை வலுப் படுத்தும் பணியை ஜம்முவில் விசுவ இந்துபரிசத் செய்து வருகிறது.\nஇது அமர் நாத் செல்லும் இந்து பக்தர்களின் பிரச்சினை என்ற வகையில் இன்று இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இரண்டாவது குறிக்கோளான அதிகாரக் குவிப்பை நிறைவேற்றிக் கொள்ள வருகிற நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்ள விருக்கிறது. தனக்கு வாக்களித்தால் மட்டுமே இந்தியாவின் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிட்டும் என்ற செய்தியை அக்கட்சி பலவகைகளிலும் பரப்பி வருகிறது.\nகுறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டமாகிய பொடா எனும் கொடிய அடக்குமுறைச் சட்டத்தின் மூலம்தான் முஸ்லிம்களையும், பிறவகை உரிமை கோரும் சக்திகளையும் நசுக்கி ஒடுக்க முடியும் என்று அது பிரச்சாரம் செய்து வருகிறது.\nகாங்கிரஸ் கட்சியும் அதன் ஆதர��ுக் கட்சிகளும் பொடாச் சட்டத்தை விலக்கியதன் மூலம் நாட்டை மிகவும் பலவீனப்படுத்திவிட்டன என்பது அதன் வாதம். இந்தப் பலவீனத்தின் விளைவாகவே அண்மையில் நாடு முழுவதிலும் வெடிகுண்டுகள் வெடித்தன என்றும், காஷ்மீர் முஸ்லிம்கள் அமர்நாத் யாத்திரைக்குத் தடை போடுகிறார்கள் என்றும் அக்கட்சி பேசி வருகிறது.மோடியின் ஆட்சியில் உள்ள குசராத் மாநிலத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாகக் காட்டி வந்தார்கள் பா.ஜ.க.வினர். இப்போது அங்கும் ஏராள மான குண்டுகள் வெடித்திருக்கின்றன. இதற்கு பா.ஜ.க.வினர் என்ன சொல்கிறார்கள் தெரியுமா\nமத்தியில் பொடாச் சட்டம் தேவையில்லை என ஒதுக்கிவிட்ட காங்கிரஸ் கூட்டணியரசு குசராத் மாநில சட்டமன்றம் நிறைவேற்றி யுள்ள பொடா போன்ற ஒரு சட்டத்துக் கும் இதுவரை ஒப்புதல் தர மறுக்கிறதாம். இதனால்தான் பயங்கரவாதிகளை மோடியால் முற்றாக ஒடுக்க முடிய வில்லையாம்.ஆக மதவெறியை வளர்த்துப் பெரிய நெருப்பாக எரியச் செய்வதும் இவர்களே. பிறகு அதையே காரணமாகக் காட்டி அடக்குமுறை செய்ய அதிகாரம் கேட்பவர்களும் இவர்களே.காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தமிழகக் கூட்டாளியான தி.மு.க.வுக்கும் இதற்கு மாற்றான ஜனநாயக, மதச்சார்பற்ற திட்டம் ஏதுமில்லை. எந்த நல்ல கொள்கையிலும் ஊன்றி நிற்காமல் இவர்கள் தவறு மேல் தவறிழைத்துத் தனிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.பொதுவுடைமைக் கட்சிகள் இந்தக் கொள்கையற்ற மக்கள் விரோத காங்கிரஸ் கூட்டணியை எதிர்ப்பது என்ற சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். பா.ம.க.வினர் தி.மு.க.வை எதிர்ப்பது என்ற அளவில் நிற்கிறார்கள். ஆனால் தவிர்க்கவியலாதவாறு இவர்களும் காலப் போக்கில் காங்கிரசுக்கு எதிர்நிலையெடுக்க வேண்டிவரும்.இக்கட்சிகளெல்லாம் அடுத்து செய்யவேண்டிய முக்கியமான பணிகள் உண்டு.\nஅவை, அ.தி.மு.க. குறித்து உடனடியாக ஒரு தெளிவான நிலையெடுப்பதும், குறைந்தபட்ச பொதுத்திட்ட அடிப்படையில் ஒரு கூட்டணியைத் தமிழக அளவில் தொடங்கி வளர்த்தெடுப்பதுமாகும்.அனைத்திந்திய அளவில் காங்கிரசையும், பா.ஜ.க.வையும் மக்கள் விரோத கட்சிகளாகப் பார்க்கும் இடதுசாரியினர் தமிழக அளவில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டையும் அவ் வாறே ஒதுக்கித்தள்ளத் தயங்கலாகாது. தமிழக மக்கள் மத்தியிலேயே அப்படி ஒதுக்கிவிடும் மனநிலை உருவாகி யிரு��்கும் நிலையில் இடதுசாரிகளும், பா.ம.க. போன்ற சமூக நீதிக் கட்சிகளும் முடிவெடுப்பதில் காலந்தாழ்த்தலாகாது.\nகாங்கிரசும், தி.மு.க.வும் மக்களிடம் அம்பலப்பட்டு பலவீனமடைந்திருப்பது போலவே ஜெயலலிதாவும் பெருமள வுக்குப் பலவீனப்பட்டு தனிமைப் பட்டுள்ளார். அவர் மீண்டும் மக்கள் மத்தியில் நல்லபெயர் எடுப்பதற்காகவும், ஒரு பெரிய சக்தி என்று தன்னை மீண்டும் நிறுவிக்கொள்வதற்காகவும் முயன்று வருகிறார். இதன்பொருட்டு இடதுசாரிகளோடும், பா.ம.க.வோடும் உறவாடத் தயார் என்று அறிவிக்கிறார். அவர் அரசியல் மறுவாழ்வு பெற இக் கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்கலாகாது.\nஅவரால் இவர்களுக்கு மதிப்பில்லை. இவர்களால்தான் அவருக்குப் பெருமை சேரும். அனைத்திலும் மேலாக எந்தக் காரணத்திற்காக இடதுசாரிகளும், ஜனநாயகவாதிகளும் பா.ஜ.க.வை எதிர்க்கிறார்களோ அக்காரணம் ஜெயலலிதாவுக்கும் பொருந்துவதாகும். அது எவ்வாறெனப் பார்ப்போம்.முதலாவது, பொதுவாழ்வில் இந்துத்துவ மனப்பான்மையை நுழைத்து வளர்ப்பது. இது பா.ஜ.க. என்கிற ஒரு கட்சிக்கு மட்டுமே உரிய தன்மையன்று.\nமராத்திய மாநிலத்தின் சிவசேனைக் கட்சிக்கும் இதே தன்மை உள்ளது. ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வும் இந்த சிவசேனை போன்றதே.அடுத்ததாக அதிகாரக் குவிப்பு நோக்கம். இதன் வெளிப்பாடாக அமைவது பொடாச் சட்டம் குறித்த நிலைப்பாடு. இதில் அத்வானியும், ஜெயலலிதாவும் நூற்றுக்கு நூறு ஒத்த கருத்துடையவர்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை. அத்வானி போலவே இவரும் வெளிப்படையான பொடாச் சட்ட ஆதரவாளர்.\nகாங்கிரஸ் கட்சி ஒளிவுமறைவாக செய்யப் பார்க்கும் அடக்குமுறையை அத்வானி, ஜெயலலிதா, மோடி போன்றோர் நேரடியாகவும் ஆணவமாகவும் செய்யக்கூடியவர்கள்.உரிமை கோரும் அனைத்துப் பிரிவினரையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது என்பதனால் இந்தப் பொடா குறித்து இன்னும் சற்று விளக்கமாகப் பார்க்க வேண்டும்.பொடாச் சட்டத்தை விலக்கிவிடுவதாக வாக்குறுதியளித்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது.\nபிறகு அதன்படியே விலக்கிக்கொள்ளவும் செய்தது. பொடாச் சட்டததின் சில கொடிய பிரிவுகள் குற்றப்பிரிவுச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன என்பது அதிர்ச்சி தரும் உண்மையாகும். ஆனால் அதுபோன்ற ஒரு கொடுஞ்சட்டம் வேறுபெயரில் மராட்டிய மாநிலத்திலு��், கர்நாடகத்திலும் இன்றுவரை நடைமுறையில் இருந்துவருகிறது. அதனை நீக்க காங்கிரஸ் கூட்டணி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, அதே போன்ற அடக்குமுறைச் சட்டம் ஒன்று தங்களுக்கும் தேவை யென்று வேறு பல மாநிலங்களும் முடிவு செய்து மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முயற்சி செய்து வருகின்றன. குசராத், இராசஸ் தான், ஆந்திரம், உத்தரப்பிரதேசம், ஆகிய மாநிலங்கள்தான் இவை.\nஇவற்றுள் இராசஸ்தானிலும், ஆந்திரத் திலும் இச்சட்ட முன்வடிவு சட்டமன்றத் தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக மத்திய அரசின் ஒப்புதல் கோரி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்திலும், குசராத்திலும் இச்சட்டங் கள் சட்டமன்றங்களில் வாக்களிப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.கட்டமைப்பு மூலம் நிகழ்த்தப்படும் குற்றங்களைத் தடுக்கும் சட்டம்\nஎன்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாநிலச் சட்டங்கள் அனைத்தும் பொடாச் சட்டத்தின் கொடிய தன்மைகள் வாய்க்கப்பெற்றமையே. அக்கொடிய அம்சங்கள் வருமாறு:1. கவால்துறை அதிகாரி (சித்திரவதை மூலம்) பெற்றுத்தரும் ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்கப்படும்.2. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் குற்றம் செய்தவராகவே நடத்தப்படுவார். குற்றம் செய்தார் என்று நிரூபிப்பது அரசு வக்கீலின் கடமையல்ல.3. பிணையில் வெளிவருவதற்குப் பெரிய தடைகள் உண்டு. விளைவாக விசாரணையின் போது நீண்ட காலம் சிறையில் கழிக்க வேண்டிவரும்.இந்தக் கொடிய தன்மைகள் கொண்ட பொடாச் சட்டத்தைக் காங்கிரஸ் கூட்டணி அரசு அனைத்திந்திய அளவில் ஒழிப்பதுபோல் காட்டிவிட்டு மாநில அளவில் வேறுபெயரில் மெல்ல மெல்ல உள்ளே நுழைய வழிசெய்து கொண்டு வருகிறது.\nஇந்த மோசடியை சட்டத்துறை வல்லுநர் ஏ.ஜி.நூரனி ஒரு கட்டுரை மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். (ஃபிரண்ட்லைன், 29-08-08). கட்டு ரையின் தலைப்பு: \"மாறுவேடமணிந்த பொடா\".இந்நிலையில், \"மாறுவேட மெல்லாம் தேவையில்லை. நான் நேரடியாகவே சொல்கிறேன். பொடா நாட்டுக்குத் தேவை.\" என்று எக்காளமிடும் ஜெயலலிதா குறித்து நாமும் நேரடியாகவே இப்படிச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்:\n\"இவர் இந்துத்துவ மனப்பான் மையில் ஊறியவர். அடக்குமுறைக் கொள்கையை ஆணவத்தோடு அறிவித்துக் கடை��்பிடிப்பவர். எனவே இவரோடு கூட்டணி என்பதும் பா.ஜ.க.வோடு கூட்டணி என்பதும் ஒன்றுதான்.\"- மருதமுத்து\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://veesuthendral.blogspot.com/2012/04/blog-post_25.html", "date_download": "2018-07-19T11:18:15Z", "digest": "sha1:SQORVH5OUAIQZF5BB2CT5PYIPELRJ5WM", "length": 29862, "nlines": 819, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: உயிர்மூச்சின் எதிரொலியாய் ...!", "raw_content": "\nஎப்படி இவளால் முடிகிறது .\nஎது வேண்டும் கேட்ட போது\nபத்தியமிருந்து , பாதி இரவு\nஎன்ன தெரியும் - அவர் பார்வையில்\nஅழுகுமுன் பிணம் எடுக்க வேண்டும் .\nவாங்கப்பா என்றான் - மகன்\nஅருகில் வந்துப் பார்த்த மகள்\nஏனப்பா இப்படி எங்களை அனாதையாய்\nஅத்திப் பூ பூத்தது போல்\nவாங்கப்பா என்றான் - மகன்\nஅருகில் வந்துப் பார்த்த மகள்\nஏனப்பா இப்படி எங்களை அனாதையாய்\nசொல்ல வார்த்தைகள் இல்லை தோழி\nமனதை உறைய வைத்து உருக்கும் வரிகள் கவிதையில்\nஎப்போதோ எங்கேயோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்வுற்ற சாவிலும் பிரியாத - அன்புத் தம்பதிகளின் செய்திகளை உங்கள் கவிதை வரிகளில் நிழற் படமாய்க் காணுகின்றேன்\nஅருமையான கவிதை அக்கா.. ரசித்தேன்..\n(ஏறக்குறைய இதே நிகழ்வு என் பெரியப்பா-பெரியம்மா வாழ்விலும் நடந்தது...குழந்தைகள் சற்று பெரியவராய் இருந்தால் அது தூய காதலாய் உலகுக்கு தெரியும்..இல்லாவிட்டால் சுயநலமாய் முடிந்துவிடும்...)\nசூழலை அப்படியே கண் முன் நிறுத்திப் போகிறது\nஇதுபோல் நிகழ்வு நடந்ததை கண்டிருக்கிறேன்.அன்றில் பறவைகள் போன்றதுதான் அவர்களின் காதல் போலும்.\n உணர்வுகளின் ஊர்வலத்தை கவிநயமிக்க வார்த்தைகளால் வெளிப்படுத்திக் கலங்க அடித்து விட்டீர்கள்.. கொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்படி இறப்பிலும் இணைபிரியாக் காதல் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்படி இறப்பிலும் இணைபிரியாக் காதல் கிடைப்பதற்கு நண்பர் சபாபதி சொன்னது போல அன்றில் பறவைகள் நண்பர் சபாபதி சொன்னது போல அன்றில் பறவைகள் மனம் நெகிழச் செய்து விட்டீர்கள் தென்றல்\nஅந்த அன்புடன் வாழ ஆசைபடுவோம்...\nஅன்றில் பறவை போல் ஒரு காதலை இலக்கியமாகி விட்டீர்கள் சசிகலா\nஅருமையான கவிதை நன்றி சகோதரி\n//அத்திப் பூ பூத்தது போல் இதைப் போன்ற உண்மைக்காதல் சாட்சியாய் வாழ்கிறது ///\nஉண்மைகாதல் அத்திப் பூ போலத்தான் மலரும்.\nமனதை நெகிழ வைத்தது உங்களது பதிவு\nஆகா அக்கா உணர்வுகள் எதிரொலிக்கும்\nதங்கள் உடன் வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் கருத்து சரியானதே தங்கள் வருகையும் தெளிவு படுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nஐயா வணக்கம் வரிகளோடு ஒன்றி விட்டதற்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகையும் தெளிவு படுத்தும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nவருக வசந்தமே எல்லோருக்கும் அந்த கொடுப்பினை வாய்ப்பதில்லையே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nஐயா வணக்கம் தங்கள் பின்னூட்டம் கண்டு நெஞ்சம் கனக்கிறது . என்ன செய்வது ஐயா தமிழுக்காக , எங்களுக்காக தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன் .\nஐயா வணக்கம் தங்கள் வருகையும் எனக்கு ஆசீர்வாதமாய் அமைந்த தங்கள் வரிகளும் கண்டு மகிழ்ந்தேன் ஐயா . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .\nதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதங்கைக்கு வணக்கம் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .\nதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nஅன்பின் உச்சத்தைக் காட்சியாய் விவரித்துவிட்டீர்கள் சசி.கொடுத்து வைத்தவர்கள்.இப்படி ஒரு அன்பு கிடைக்குமாவென்று மனம் ஏங்குகிறது \nஎன் வலைப்பூவுக��கு வருகை தாருங்களேன்-\nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவைகூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://worldtamilforum.com/tamilnadu/pollachi-tombstone/", "date_download": "2018-07-19T11:19:12Z", "digest": "sha1:A66YWRGRGTUTYNSDZB4LP5JJ7IRXGEZC", "length": 13581, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –பொள்ளாச்சி அருகே, ஆன திகம்பரேஷ்வரர் கோயிலில் அபூர்வ நடுகல் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 19, 2018 4:49 pm You are here:Home தமிழகம் பொள்ளாச்சி அருகே, ஆன திகம்பரேஷ்வரர் கோயிலில் அபூர்வ நடுகல் கண்டுபிடிப்பு\nபொள்ளாச்சி அருகே, ஆன திகம்பரேஷ்வரர் கோயிலில் அபூர்வ நடுகல் கண்டுபிடிப்பு\nபொள்ளாச்சி அருகே, ஆன திகம்பரேஷ்வரர் கோயிலில் அபூர்வ நடுகல் கண்டுபிடிப்பு\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது ஆனைமலை. இங்கிருந்து ஒன்றரை கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது ஆன திகம்பரேஷ்வரர் கோயில். இங்குள்ள பெத்த நாச்சியார் அம்பாள் சன்னதி பின்புறம் உள்ள புதரில் மிகப்பெரிய நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. போரில் வீர மரணம் அடைந்தவரின் நினைவாக, அவரது வீரத்தை பேற்றும் வகையில் நடுகல் எடுக்கப்பட்டு, அக்கல்லில் வீரனின் வீரக்கதையை சிற்பமாகச் செதுக்கி வழிபடுவது பண்டைய மரபு.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇந்த நடுகல்லில் சற்றே வித்தியாசமாக இரண்டு வீரர்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடுகல்லை கண்டெடுத்த, ராஜபாளையம் தனியார் கல்லூரி வரலாற்று உதவிப் பேராசிரியர் பி. கந்தசாமி கூறியதாவது: நான் தற்போது ராஜபாளையத்தில் பணியில் இருந்தாலும், பொள்ளாச்சி கல்லூரி ஒன்றில் 2 ஆண்டு பணியாற்றினேன். பல்வேறு வரலாற்று ஆய்வுகள் செய்துள்ளேன்.\nசத்தியமங்கலம், பவானி, ஆனைமலை, நீலகிரி மலைகள் என பலதரப்பட்ட பகுதிகளில் இதுவரை 252 நடுகற்களை கண்டெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளேன். அப்படி ஆனைமலையில் நிறைய நடுகற்கள் கிடைத்துள்ளன. இங்குள்ள பெருமாள்கரட்டில் பல இரும்புப் பொருட்கள் (திப்புவின் காலத்தியது), மற்றும் மூன்றடுக்கு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை, கோவையில் உள்ள தமிழ்நாடு தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஇப்படிப்பட்ட நடுகற்கள் கிடைப்பது அபூர்வம். பொதுவாக நடுகற்களில் ஒரு வீரர் அல்லது இரண்டு வீரர்கள் உருவம் மட்டுமே இருக்கும். இது இரண்டு வீரர்கள், மூன்று பெண்கள், ஒரு சிறுவன் என உருவம் பொறித்து காணப்படுகிறது.\nஇரண்டு வீரர்கள் எதிரிகளுடன் மோதி வீரமரணம் அடைந்ததன் நினைவாகவும், அவர்கள் இறந்ததை அறிந்து அவனுடனே இரண்டு பெண்கள், அவர்களின் மகன் ஒருவன் இறந்ததன் நினைவாகவும், அவர்களை தேவலோகப் பணிப்பெண் வாழ்த்தி அழைத்துக் கொண்டு மேலோகத்துக்கு செல்வது போலவும் செதுக்கப்பட்டிருக்கிறது.\nஇது 16-ம் நூற்றாண்டு விஜயநகர அரசு காலத்தியதுபோல் தெரிகிறது. இதை ஆய்வுக்கு உட்படுத்தினால் இன்னும் பல சரித்திர செய்திகள் வெளிவரக்கூடும். இதை ஆய்வுக்கு உட்படுத்தி தொல்பொருள் துறையினர் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nபொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 16-ம் நூற்றாண்டைச் சேர... பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரர்களின் நடுகல் கண்டுபிடிப்பு பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ஆன திகம்பரேஷ்வரர் கோயில் பின்பு...\nகன்னியாகுமரியில் அமைந்திருக்கும் சிதறால் குகைக் கோ... கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் சிதறால் குகைக் கோயில் தமிழகத்தின் பாரம்பரியத்தை, கலாசாரத்தைப் பறைசாற்றும் பல கோயில்களும், வரலாற்றுச் சின்னங்களும் ...\nதிருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்... திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு விஜய நகர பேரரசர் காலத்து ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல...\n... நாமக்கல் ஒரு வரலாற்றுப்பார்வை கொங்கு நாட்டின் பகுதியாக வரலாறு முழுவதும் இருந்துள்ளது. தகடூர் அதியமான்களின் ஆட்சிப் பகுதியிலும் பின்னர் கொங்கு சோ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின��� வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇரண்டாவது இளங்கோவடிகள் விபுலானந்தர் நினைவு தினம் இன்று ஜூலை 19\nடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள்\nஇலங்கை முல்லைத்தீவில் 500-வது நாளுடன் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நிறுத்தம்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/user/60644", "date_download": "2018-07-19T11:11:56Z", "digest": "sha1:YJKCU2FUIE4I2BHMWO5LRXLJI5ESMZMZ", "length": 4246, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " bhagya lakshmi - அறுசுவை உறுப்பினர் - எண் 60644", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 43 வாரங்கள் 3 நாட்கள்\n30 நிமிடங்கள் 11 sec முன்பு\nஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/vikram-vedha-100th-day-celebration-photos/", "date_download": "2018-07-19T11:46:21Z", "digest": "sha1:IBTDV6WZKXMSQSGGRLAOFP75YOOXJ7M6", "length": 2598, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Vikram Vedha 100th Day celebration photos", "raw_content": "\n1:24 PM 80 வயதான நாடக கலைஞனாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘ சீதக்காதி ..\n1:20 PM கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சத்யராஜ் மகள்..\n80 வயதான நாடக கலைஞனாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘ சீதக்காதி ..\nகல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சத்யராஜ் மகள்..\nகடைக்குட்டி சிங்கத்துக்கு துணை குடியரசுத்தலைவர் வழங்கிய கௌரவம்..\nஇசக்கி பரத் படத்தை இயக்கும் கோலிசோடா இணை இயக்குனர்..\n80 வயதான நாடக கலைஞனாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘ சீதக்காதி ..\nகல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சத்யராஜ் மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-19T11:23:28Z", "digest": "sha1:ILDA6V7ILLP5AHA752Q2AM3MRN6D2LVH", "length": 5763, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக வெளிப்படுத்துங்கள் – கனியவள தொழிற்சங்கம் கோரிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஎரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக வெளிப்படுத்துங்கள் – கனியவள தொழிற்சங்கம் கோரிக்கை\nஎரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக பிரசித்தப்படுத்துமாறு கனியவள தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இது தொடர்பில் அதிகாரிகள் இன்று எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்க எதிர்ப்பார்ப்பதாக கனியவள பொது பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் டீ.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதன்படி இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் பெற்றோல் 92 ஒக்டேய்ன் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும் 95 ஒக்டேய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவாலும்இ சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.\nஇதேநேரம் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் மாதாந்தம் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஇந்த விலை அதிகரிப்புக்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எண்ணெய் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிராம சேவையாளர் பதவிக்��ு 2000 வெற்றிடங்கள்\nபங்காளதேஷ் உயர்ஸ்தானிகர்- பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு\nமுன்னாள் எம்.பி.க்களுக்கு விஷேட சலுகை\nஅத்தியாவசியமானது புகையிரத சேவை: கைச்சாத்தானது சிறப்பு வர்த்தமானி\nஈவா வனசுந்த பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilucc.com/2015/12/22/annanthambi8/", "date_download": "2018-07-19T11:33:42Z", "digest": "sha1:B7V2567F6VXMJ32UHEMVOWPVSJXD6B7V", "length": 6236, "nlines": 93, "source_domain": "www.tamilucc.com", "title": "நல்லா பேசுற கள்ள போதகர் | Chicago Tamil Church", "raw_content": "\nநல்லா பேசுற கள்ள போதகர்\nநல்லா பேசுற கள்ள போதகர்\nஅண்: என்ன தம்பி, அப்செட்டா இருக்கிறமாதிரி இருக்கு. யாரும் ஏதாவது சொன்னாங்களா\nதம்பி: வெளி ஊர்ல இருந்து இங்கு பிரசங்கம் பண்ண வந்த, எனக்கு தெரிஞ்ச பிரசங்கியார் ஒருவர் எங்க வீட்டுல தங்கியிருக்காருண்ணே.\nஅண்: அட அதுக்குப் போய் ஏம்பா சோகமா இருக்க. சந்தோஶப்பட வேண்டிய விஶயம் தானே\nதம்பி: சந்தோஶமாதானண்ணே இருந்தேன், அவரு இப்படில்லாம் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி\nஅண்: நீ சங்கடப்படும்படியா அப்படி என்னதாம்பா சொன்னாரு\nதம்பி: என்னுடைய சில பாவங்களை சுட்டிக்காட்டினாரு, அத கேட்டு என் மூடே ஸ்பாயிலாயிட்டுண்ணே. இவரு மத்த போதகர் மாதிரி இல்லண்ணே, கள்ள போதகரா இருப்பாரோன்னு தோணுது.\nஅண்: அவர் சொல்றதுல… ஏதாவது நீ செய்யாத காரியம் இருக்குதா தம்பி\nதம்பி: கரெக்டா நா செய்கிற காரியத்தைதான் சொன்னாரு. ஆனா… அதுக்குப்பதிலா ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசியிருந்தா எவ்வளவு சந்தோசமா இருந்திருக்கும்\nஅண்: இப்படித்தான் சிலர் “சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்கு திரளாக சேர்த்துக்கொண்டு சத்தியத்திற்கு செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும்காலம் வரும்”ன்னு ௨தீமோத்தேயு ௪:௩,௪ல்ல பவுல் சொல்லியிருக்கிறாரே.\nதம்பி: ஆனா அதுக்காக இப்படி பாவத்தையெல்லாம் சுட்டிக்கட்டின்னா கஶ்டமாயிருக்குல்லண்ணே.\nஅண்: ௨தீமோத்தேயு௪:௨ல்ல பவுல் தீமோத்தேயுவுக்கு “நீடிய சாந��தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி கடிந்துகொண்டு புத்திசொல்லு”ன்னுதானே சொல்றாரு இப்படித்தான் ௨.சாமுவேல் ௧௨:௧௩ல்ல நாத்தான் தாவீது செய்த பாவத்தை கண்டித்து உணரச் செய்தபோது தாவீது மனம் திரும்பினானே. அப்போ நாத்தான் கள்ள தீர்க்கதரிசின்னு சொல்றியா இப்படித்தான் ௨.சாமுவேல் ௧௨:௧௩ல்ல நாத்தான் தாவீது செய்த பாவத்தை கண்டித்து உணரச் செய்தபோது தாவீது மனம் திரும்பினானே. அப்போ நாத்தான் கள்ள தீர்க்கதரிசின்னு சொல்றியா நம்முடைய பாவத்துல இருந்து விடுதலை பெறுவதற்கு உதவாமல், நம்மை சமாதானப்படுத்தி ஆறுதல் சொல்றவுங்கதான் உண்மையிலேயே கள்ள போதகர்கள்.\nதம்பி: ஆமாண்ணே, இப்பதான் புரிஞ்சுது. இருந்த என்னுடைய கவலையெல்லாம் போயிட்டுண்ணே.\nஅண்: ரொம்ப சந்தோஶம் தம்பி, கர்த்தருக்கு சித்தமானா பிறகு சந்திக்கலாம்.\nஇந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fedoraproject.org/wiki/Ta_IN/FedoraMain", "date_download": "2018-07-19T12:05:42Z", "digest": "sha1:OMFWQXQFZMV5QAEW43F4VVMUC7M7YVBY", "length": 3670, "nlines": 54, "source_domain": "fedoraproject.org", "title": "Ta IN/FedoraMain - Fedora Project Wiki", "raw_content": "\nhttp://fedoraproject.org என்ற இணைய முகவரியில் ஃபெடோராவை பற்றி கற்று அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். ஃபெடோரா திட்டத்தின் விக்கி பயனர்கள் மற்றும் வல்லுனர்களை இணைக்கும் ஒரு பாலமாக இருக்கும். நீங்கள் பல தகவல்களை தேடலாம் அல்லது நீங்களும் சேர்க்கலாம். எழுதும் அனுமதிக்கு நீங்கள் EditGroup வில் இருக்க வேண்டும்.நீங்கள் இதில் சேர வேண்டுமென்றால் WikiEditing பக்கத்தில் உள்ள தகவல்களை பார்த்து இணையலாம்.\nநீங்கள் ஃபெடோரா ஆவணமாக்குதலை பார்க்கலாம் அல்லது எங்கள் ஃபெடோரா சமூகத்துடன் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் ஃபெடோராவில் தற்போது என்ன நடைபெறுகிறது என்பதை அறிய வாரந்திர செய்திகள் அறிக்கைகளில் பார்க்கவும்.\nஃபெடோரா தூதுவர்கள் ஃபெடோரா சந்தைப்படுத்தல் Fedora Bug Triaging\nஃபெடோரா சோதித்தல் ஃபெடோரா அடைவு சேவையகம் ஃபெடோரா உட்கட்டமைப்பு\nப்ளேனட் ஃபெடோரா ஃபெடோரா இணையதளங்கள் ஃபெடோரா கலைவேலைகள்\nஃபெடோரா மொழிபெயர்ப்பு WikiEditing ஃபெடோரா விளையாட்டுகள்\nஅனைத்து திட்டங்களையும் பார்க்கவும்... அனைத்து சிறப்பு ஆர்வலர்கள் குழு (SIGs)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-3-2-2018/", "date_download": "2018-07-19T11:31:14Z", "digest": "sha1:CW7VBJZMLW32ILT6BBKMQ6RDVFKW7WHS", "length": 16043, "nlines": 141, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 3/2/2018 தை (21) சனிக்கிழமை | Today rasi palan 3/2/2018 - Aanmeegam", "raw_content": "\nமேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.\nமிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பர். வெற்றி பெறும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் சந் தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nசிம்மம்: இரவு 8.44 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர் வதால் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர் களின் நட்பை இழக்க வேண்டி வரும். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். இரவு 8.44மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள் வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தி யம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பாச மழைப் பொழிவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோ கத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனை பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nமகரம்: இரவு 8.44 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்ட மிட்டது ஒன்றாகவும், நடப் பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் உயரதிகாரி குறைக் கூறுவார். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nகும்பம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். இரவு 8.44 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nமீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வரு வார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தொட்டது துலங்கும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 4/2/2018 தை (22) ஞா��ிற்றுக்கிழமை | Today rasi palan 4/2/2018\nஇன்றைய ராசிபலன் 1/5/2018 சித்திரை 18 செவ்வாய்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 23/4/2018 சித்திரை (10) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 22/4/2018 சித்திரை (9) ஞாயிற்றுக்கிழமை...\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nAadi koozh | ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ்...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nபங்குனி உத்திர திருவிழா வரலாறு | Panguni uthiram...\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://azeezbaqavi.blogspot.com/2009/02/", "date_download": "2018-07-19T11:28:54Z", "digest": "sha1:AZDBS7INH2SUSQYVJPE64WOCW4XKMZAX", "length": 7535, "nlines": 80, "source_domain": "azeezbaqavi.blogspot.com", "title": "COVAI ABDUL AZEEZ BAQAVI : 02/01/2009 - 03/01/2009", "raw_content": "\nஇஸ்லாம்,முஸ்லிம் சமுதாயம் சார்ந்த பதிவுகள்\nலஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம்கள் சங்கம் (லிபாஸ்)\n\"முஸ்லிம் சமூகத்தில் பிரிவினைச் சக்திகள் - அவர்களை எதிர் கொள்ளும் வழிகள் என்ற தலைப்பில்\" ஆலிம்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வருகிற மார்ச் 17 ம் தேத்தி செவ்வாய்கிழமை காலை 9:30 மணியளவில் மதுரை அன்னாநகரரில் உள்ள ஸ்டார் பார்க் கல்யாண மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இந்நிகழ்சியில்\nதிருவனந்தபுரம் ஜாமியா பலாஹிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் , வேலூர் பாக்கியாத்தின் முன்னாள் பேராசிரியர் பையலூர் செய்யது முஸ்தபா அவர்கள் பிரதானமாக கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய விசயங்களில் நமது தரப்பிற்கான சான்றுகள் என்ன எப்படி என்ற தலைப்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். இது தவிர பிரிவினை வாதிகளை எதிர் கொள்ளும் நடைமுறை உத்திகள் குறி���்தும் அவர்களுடை முரண்பாடுகள் பற்றியும் தகவல்கள் பறிமாறிக் கொள்ளப்பட இருக்கின்றன.\nஅண்ணல் அஃலா ஹஜ்ரத் நினைவு விழா\nஅன்று மாலை தென்னிந்தியாவின் மார்க்கக் கல்விக்கு தன்னிகரற்ற சேவை செய்த அண்ணல் அஃலா ஹஜ்ரத அவர்களின் நினைவு விழா பாகவிகள் சந்திப்பு \"தென்னிந்திய முஸ்லிம்களின் வாழ்வில் அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களின் தாக்கம்\" என்ற தலைப்பிலான கருத்தரங்கமாவும் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்சியில் வேலூர் அல்பாகியாதுஸ்ஸாலிஹாத்தின் முன்னாள் முதல்வர் , பி.எஸ்.பி ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் உள்ளிட்ட பெருந்தகைகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.\nஆர்வமுள்ள ஆலிம்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.\nஉங்களுக்கான வசதிகள் செய்வதற்கு வசதியாக உங்களது வருகையை மார் 15 க்குள் அலை பேசி வழியாக பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nநிகழ்சியில் மர்ஹூம் கமாலுத்தீன் ஹஜ்ரத் வாழ்கை ஒரு வகுப்பறை நூல் வெளியிடப் படும் (இன்ஷா அல்லாஹ்)\n2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : இலை பரப்பிய அலை (1)\nஇது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார். (1)\nஉமர் பின் கத்தாப் (ரலி): உத்தம அரசியலின் அரிச்சுவடி (1)\nஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள் (1)\nஒரு முஹர்ரம் அனுபவம் (1)\nகதீஜா பின்து குவைலித் : எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி (1)\nகாதியானியும் கண்ணம்மா பேட்டையும் (1)\nகீரனூரி - பெருவாழ்வின் சொந்தக்காரர். (1)\nதாராபுரத்தில் குஜராத்திய முன்னோட்டம் (1)\nதிருமணப் பதிவுச் சட்டம் (1)\nபாபரீ மஸ்ஜித வழக்கின் தீர்ப்பு (1)\nபெண்களுக்கான இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும் (1)\nமக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை (1)\nமாற்றத்தை நோக்கி சிறுபான்மை அரசியல் (1)\nஜம்மு இறக்குமதி செய்யப்படும் இந்துத்துவ தீவிரவாதம் (1)\nஷேர் மார்க்கெட் வர்த்தகம் பற்றி (1)\nஹஜ் வியாபாரம் - பக்தியில் ஒரு சுரண்டல் (1)\nவெள்ளி மேடை منبر الجمعة\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://haisathaq.blogspot.com/2009/12/", "date_download": "2018-07-19T11:02:16Z", "digest": "sha1:IBHP6WV2G3EIBWI3UF32WXGUTB46JLOF", "length": 77332, "nlines": 186, "source_domain": "haisathaq.blogspot.com", "title": "தமிழ் வாசம்: December 2009", "raw_content": "\nஉலகம் 2009 - பகுதி 3\nஇந்த ஆண்டு ஜப்பானில் ஒரு வரலாற்றுத் திருப்பம். அது நடந்தது ஆகஸ்ட் மாதம். அப்போது அங்கு நாடாளுமன்றத் தேர்தல். சுமார் ஐம்பது ஆண்டு காலச் சரித்திரம் அந்தத் தேர்தலில் மாற்றம் க��்டது. இதுநாள் வரை எதிர்த் தரப்பாக இருந்த ஜனநாயகக் கட்சிக்கு மகத்தான வெற்றி.\nஜப்பான் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 480. ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது 308 இடங்கள். அக்கட்சியின் வரலாற்றில் இது ஒரு மாபெரும் திருப்பு முனை. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஜனநாயகக் கட்சி.\nமுன்னைய பிரதமர் தாரோ அஸோவின் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு இம்முறை பேரிழப்பு. இந்த ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி 119 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. சென்ற தேர்தலில் அக்கட்சி 300 க்கும் அதிகமான இடங்களை வெற்றி கொண்டது.\nமிதவாத ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத பேரிடி. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முன்னையப் பிரதமர் தாரோ அஸோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஜப்பானின் புதிய பிரதமராக யூகியோ ஹட்டோயாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 327 உறுப்பினர்கள் ஹட்டோயாமாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nபிலிப்பீன்சில் இந்த ஆண்டு கடுமையான சோதனை. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீசியது \"கெட்சானா\" சூறாவளி. விளைவு. கடுமையான மழை. அதைத் தொடர்ந்து வெள்ளம்.\nதலைநகர் மணிலாவின் எண்பது விழுக்காட்டு இடங்களில் வெள்ளக்காடு. ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஆறே மணி நேரத்தில் பெய்து கெடுத்தது.\nபிலிப்பீன்ஸ் தண்ணீரில் மிதந்தது. அங்குள்ள மக்கள் கண்ணீரில் மிதந்தனர்.\nமுந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். தலைநகர் மணிலா உள்ளிட்ட 24 மாநிலங்களில் பேரிடர் நிலையை அறிவித்தது பிலிப்பீன்ஸ் அரசாங்கம்.\nபிலிப்பீன்சைத் தொடர்ந்து இந்தோனேசியாவிலும் இந்த ஆண்டு சோதனைக் காலம். அவ்வப்போது அதிர்ந்தது பூமி. ரிக்டர் அளவில் 5 புள்ளிகளைத் தாண்டின அதிர்வுகள். சிலமுறை சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பின்னர் பேரழிவு எதுவும் இல்லாமல் அது மீட்டுக் கொள்ளப்பட்டது.\nஅவ்வப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தோனேசிய நில நடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூரிலும் உணரப்பட்டது.\n2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை எங்கே நடத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில்.\nஒலிம்பிக் போட்டிகளை நடத்தச் சாதகமான அம்சங்கள் கொண்ட நகரங்களாக அமெரிக்காவின் சிக்காக்கோ, ஸ்பெயினின் மாட்ரிட், ஜப்பானின் டோக்கியோ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஆகிய நான்கு நகரங்கள் பட்டியலில் முன் நின்றன. ஆனால், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்குக் கிடைத்தது அந்த அரிய வாய்ப்பு.\nதென்அமெரிக்க நாடு ஒன்றில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் முறை. ஒலிம்பிக் வாய்ப்பு பெற்றதையடுத்து பிரேசில் முழுவதும் ரசிகர்கள் ஆடிப்பாடி உற்சாகமாகக் கொண்டாடினர்.\n2007 ஆம் ஆண்டின் இறுதியில் உலகப் பொருளியலை ஆட்டங்காணச் செய்தது நிதிச் சுனாமி. அதுபோன்ற ஒரு நிகழ்வு இந்த ஆண்டு நவம்பரில். ஆனால் இம்முறை பாதிப்பட்டது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஒன்றான துபை.\nநவம்பர் இறுதி வாரத்தில் Dubai World நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது உலகச் சந்தைகளை ஆட்டங்காண வைத்தது. Dubai World முதலீட்டு நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் கடன் உள்ளது. அதனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கேட்டது. அதன் எதிராலியாக உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்.\nசில நாட்களுக்குப் பிறகு 26 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தது Dubai World. அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் ஒரு மீட்சி.\nDubai World ன் கடனுக்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்று அறிவித்தது துபை அரசாங்கம். அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் மீண்டும் ஒரு சறுக்கல். இறுதியில் அருகிலுள்ள அபூதாபி கைகொடுத்தது. துபை வேர்ல்டின் கடனைத் திருப்பிச் செலுத்த பத்து பில்லியன் டாலர் தருவதாக அறிவித்தது அபூதாபி.\nஇந்த ஆண்டின் அமைதிக்கான நொபேல் பரிசைப் பெற்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதும் பல்வேறு விமர்சனங்கள்.\nஒபாமா உலக மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முயன்று வருகிறார். அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க பாடுபடுகிறார். எனவே, அவருக்கு நொபேல் பரிசு என்று அறிவித்தது விருதுக் குழு.\nஇந்தப் பரிசைப் பெறத் தன்னை விட அதிகம் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று ஒபாமா குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தான், ஈராக் போர் பற்றியும் அவர் பேசினார��. ஆயுத மோதல்களுக்கு எப்படிப்பட்ட விலை கொடுக்க வேண்டி வரும் என்பதை தாம் அதிகம் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.\nஆப்கானிஸ்தான் போருக்குக் கூடுதலாக முப்பதாயிரம் அமெரிக்கப் படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். அமைதிக்கான நொபேல் விருது பெற்றவர் ஏன் போரை ஆதரிக்கிறார் என்ற கேள்வியை எழுப்பியது விமர்சன வட்டாரம்.\nஅதற்கு விருது மேடையிலேயே பதிலளித்தார் ஒபாமா. பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றச் சில நேரங்களில் போரிட வேண்டியது அவசியம் என்றார் அவர். அணு ஆயுதங்களை ஒழிப்பதிலும், பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்களிலும் தமது லட்சியங்கள் நிறைவேறும்போது, இந்த விமர்சனம் முற்றிலுமாக மறைந்து விடும்' என்றார் ஒபாமா.\nவேதியலுக்கான நொபேல் பரிசைப் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட் ராமகிருஷ்ணன். அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர். அமெரிக்காவின் தாமஸ் ஸ்டீட்ஸ், இஸ்ரேலின் யெடா யோனத் ஆகியோரும் ராமகிருஷ்ணனோடு அந்த விருதைப் பகிர்ந்து கொண்டனர். புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் அவர்களுடைய ஆய்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஇந்த ஆண்டின் இறுதியில் உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தது பருவநிலை மாநாடு. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் அது நடந்தது. உலக நிறுவனத்தில் அங்கம் பற்றுள்ள அத்தனை நாடுகளும் அந்த மாநாட்டில் சங்கமம். உயர்ந்து வரும் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்துவது, காற்றுத் தூய்மையைக் குறைப்பது, இயற்கையைக் காப்பாற்றத் திட்டங்கள் வகுப்பது ஆகியன மாநாட்டின் முக்கிய நோக்கம். ஆனால் அது நிறைவேறியதா\nவளர்ச்சியடைந்த நாடுகள் தாங்கள் வெளியேற்றும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துவது குறித்து சட்டப்படி எந்த முடிவும் தீர்மானத்தில் இல்லை என்று குற்றம் சாட்டின வளரும் நாடுகள்.\nகரியமில வாயு வெளியேற்றத்தை சட்ட ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது 1997-ம் ஆண்டின் \"கியோட்டோ\" ஒப்பந்தம். அது 2012-ம் ஆண்டு நிறைவடைகிறது. ஆனால் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்தப் பதிலும் புதிய தீர்மானத்தில் இல்லை என்பது ஏழை நாடுகளின் குமுறல்.\nபருவ நிலை மாநாட்டின் இறுதி அறிக்கை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தைக் கட்டுப்படுத்த அனைத்துலக, தேச��ய அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கியது. அத்துடன் வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் அதை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தது.\nஇருப்பினும் மாநாட்டில் சட்ட ரீதியில் அனைத்து நாடுகளையும் ஒப்புக் கொள்ள வைக்கும் தீர்மானம் எட்டப்படவில்லை. அதற்கு மாறாக சட்ட நிர்பந்தம் இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஏழை நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் கோபன்ஹேகன் மாநாட்டின் மூலம் எந்த முழுமையான செய்தியும் உலகுக்குக் கிடைக்கவில்லை.\n இப்படிக் கலவையான உணர்வுகளைத் தந்து விட்டு விடைபெறுகிறது 2009. பிறக்கவிருக்கும் புத்தாயிரத்தின் பத்தாவது ஆண்டு மகிழ்ச்சியை நிறைவாகக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது நம்பிக்கை. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 12:02 AM 0 மறுமொழி விழுது\nஉலகம் 2009 - பகுதி 2\nஇவ்வாண்டு(2009) மே மாதம் நடந்த முக்கியச் சம்பவங்கள் இரண்டு. அவை நடந்தது வெவ்வேறு திசைகளில். ஆனால் உலகின் எல்லாத் திக்குகளிலும் கலவையான எதிரொலிகள்.\nஇலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த உள் நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது இவ்வாண்டின் மே மாதம் மூன்றாம் வாரத்தில். அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக ஒடுக்கப்பட்டனர். அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாக அறிவித்தது இலங்கை ராணுவம். போர் உக்கிரமான வேளையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். இறுதிக் கட்டத் தாக்குதலில் பலியான உயிர்களின் எண்ணிக்கை முப்பதாயிரம் என்பது புள்ளி விவரம். அந்தப் பட்டியலில் அடங்காதது எத்தனை ஆயிரமோ என்று வினா எழுப்புகிறது விமர்சன வட்டாரம்.\nமுந்நூறாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாயினர். இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த அவர்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். காரணம் போர். ஆபத்துக்குப் பாவமில்லை என்று அவர்கள் தஞ்சமடைந்தது இடைக்கால நிவாரண முகாம்களில். இப்போது படிப்படியாக அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள் என்று சொல்கிறது இலங்கை அரசாங்கம்.\nவிடுதலைப் புலிகளுக்கு எத��ரான இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏராளம். அவை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எழுந்தன அவ்வப்போது சில குரல்கள். இதுவரை எந்தப் பதிலும் கிட்டவில்லை. விடிவு காலம் எப்போது என்று காத்துக்கிடக்கிறது இலங்கையின் சிறுபான்மைச் சமூகம்.\nஇதற்கிடையே இலங்கை அரசியலில் ஓர் எதிர்பாராத திருப்பம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தியவர் இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் ஃபொன்சோகா. அவர் இப்போது அதிபர் ராஜபக்ஷவுக்கு எதிராக அரசியல் களத்தில். போரின் வெற்றிக்குப் பிறகு அரசாங்கம் தம்மை அலட்சியம் செய்கிறது என்று கூறி பதவியைத் துறந்தார் திரு.ஃபொன்சேகா. அடுத்து அவர் பார்வை அரசியலின் பக்கம் திரும்பியது.\nஅடுத்த மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் திரு.ஃபொன்சேகா. நேற்று வரை ஓரணியில் இருந்தவர்கள். இப்போது நேரெதிராக அரசியல் களத்தில். என்ன முடிவு என்பதைக் காணக் காத்திருக்கிறது உலகம்.\nமே மாதம் இந்தியாவில் பலமாக வீசியது அரசியல் அனல். அப்போது தான் அங்கு நடந்தது நாடாளுமன்றத் தேர்தல். அதன் முடிவில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்கள் ஒரு சாரார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மீண்டும் ஒரு நிலையற்ற ஆட்சி வரப்போகிறது. இப்படிப் பலப்பல யூகங்கள். ஆனால் நடந்தது வேறு மக்கள் வழங்கியது தெளிவான தீர்ப்பு.\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வாகை சூடியது ஆளும் காங்கிரஸ். இந்தியா முழுமைக்கும் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. சுமார் 71 மில்லியன் பேர் அதில் வாக்களித்தனர். 1991-க்குப் பிறகு மக்களவையில் மீண்டும் 200க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ். அக்கட்சி தலைமையிலான கூட்டணி வென்ற இடங்கள் 243. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கூட்டணி 160 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இந்தியாவின் அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கப் போவது நாங்கள் என்று முழக்கமிட்ட மூன்றாவது அணி காற்றில் கரைந்த கற்பூரம் ஆனது. அது வெற்றி கொண்ட தொகுதிகள் 79.\nஇலங்கைப் பிரச்சினை உச்சத்தில் இருந்த வேளையில் இடம் பெற்றது இந்திய நாடாளுமன்றத் தேர்தல். அதன் தாக்கம் தமிழகத்தில் கடுமையாக எதிரொலிக்கும் என்ற அனுமான���் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் அங்கும் தலை கீழ் மாற்றம். தமிழகத்தை ஆளும் தி.மு.க கூட்டணி 28 இடங்களை வன்றது. எதிர்த்தரப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 12 தொகுதிகளைக் கைப்பற்றியது.\nஇந்திய அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றிய காங்கிரசின் திரு.மன்மோகன் சிங் மீண்டும் இந்தியாவின் பிரதமரானார்.\nஜுன் மாதம் நடந்த ஏர் ஃபிரான்ஸ் விமான விபத்து உலக மக்களை கதி கலங்க வைத்தது. பிரேசில் தலைநகர் ரி யோடி ஜெனிரோவில் இருந்து பாரிசுக்குப் புறப்பட்டது அந்த விமானம். அட்லாண்டிக் கடலின் மீது பறந்த வேளையில் மின்னல் தாக்கத்துக்கு இலக்கானதால் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் இருந்த ஊழியர்கள், பயணிகள் மொத்தம் 228 பேருடன் கடலில் விழுந்தது ஏர் ஃபிரான்ஸ் விமானம்.\nதகவல் அறிந்ததும் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் எவரையும் காப்பாற்ற முடியவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு சிலருடைய சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. அவர்களையும் அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல். காரணம் அவை அழுகிப் போயிருந்தன. தேடும் பணியில் கிடைக்கப் பெற்ற சடலங்கள் சொற்பம். கிடைக்காமலேயே போய் விட்ட உடல்கள் அதிகம். 75 ஆண்டுகளாக பயண சேவையாற்றி வரும் ஏர் ஃபிரான்ஸ் வரலாற்றில் அது மிகப் பெரும் விபத்து.\nஜுன் மாதம் ஈரானில் தேர்தல் காலம். மீண்டும் அதிபராகத் தேர்வு பெற்றார் மஹ்மூத் அஹ்மத் நிஜாதி. ஆனால் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.\nஈரான் தேர்தல் விதிப்படி பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேல் பெற்றவர்கள் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவர். அந்த அடிப்படையில் திரு. அஹ்மத் நிஜாதி 64.8 விழுக்காடு வாக்குகள் பெற்றதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். அதை எதிர்த்தரப்புப் போட்டியாளர் திரு. மீர் ஹுஸைன் மூஸவி மறுத்தார். வாக்களிப்பிலும், வாக்கு எண்ணிக்கையிலும் மோசடிகள் நடந்தன என்பது அவருடைய குற்றச்சாட்டு.\nபாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் மரணமடைந்தது இந்த ஆண்டின் ஜுன் மாதத்தில். அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் நிறைந்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஜாக்ஸனின் குடும்ப மருத்துவரே தவறான ஊசி மூலம் அவருடைய உயிரைப் பறித்து விட்டார் என்பது குற்றச்சாட்டுகளில் முக்கியமானது.\nஜாக்சன் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகள் ஏற்���டுத்திய பக்க விளைவு தான் மரணத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. எது எப்படி ஆயினும், வறுமையின் வெறுமையான பக்கக்களில் இருந்து தன் திறமையால் உலகின் உச்சத்துக்குச் சென்ற பெருமை மைக்கேல் ஜாக்ஸனுக்கு உண்டு. அவருடைய மரணம் இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பு. மரணம் நடந்த இரு வாரங்களுக்குப் பிறகு நடந்த ஜாக்ஸனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு கண்ணீர் சிந்தியவர்கள் அதற்குச் சாட்சி.\nஇந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சூரிய கிரகணம் வந்தது இந்த ஆண்டின் ஜுலை மாதத்தில்.\nசூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைக்கப்படும். இவ்வாறு பூமியின் சில பாகங்களைச் சந்திரன் மறைப்பதால் நிழல் தோன்றும். அதன் காரணமாக பகலிலேயே இருள் ஏற்படும். அதற்குப் பெயர் சூரிய கிரகணம். இந்த ஆண்டின் சூரிய கிரகணம் சுமார் 6 நிமிடங்கள் வரை நீடித்தது.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 11:54 PM 0 மறுமொழி விழுது\nஉலகம் 2009 - பகுதி 1\n2009 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் உலகம். பரபரப்பும், பரிதவிப்பும் நிறைந்த மற்றோர் ஆண்டாக விடை பெற்றுச் செல்கிறது 2009. நினைவுப் பெட்டகத்தில் உறைந்து கிடக்கும் தகவல்களை மீண்டும் ஒருமுறை மீட்டிப் பார்ப்போமா\nஉலக அரசியல் சரித்திரத்தில் புதிய அத்தியாயம் இந்த ஆண்டில் ஆரம்பம். ஆம். சுமார் ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்கக் கருவறையில் இருந்த கனவு, வடிவம் பெற்றது இந்த ஆண்டில் தான்.\nஅமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றார் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் பிரதிநிதியாகப் பார்க்கப்படும் பராக் ஒபாமா. அவர் அமெரிக்காவின் 44 ஆவது அதிபர். வெள்ளை மாளிகக்குள் அடியெடுத்து வைத்த முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமை அவரைச் சேர்ந்தது.\nஅதேவேளை, ஆப்கானிஸ்தான், ஈராக் போர் காரணமாக உலக அளவில் சரிந்து கிடந்தது அமெரிக்காவின் கௌரவம். அதைக் காப்பாற்றும் பொறுப்பு அதிபர் ஒபாமாவின் கைகளில். பொருளியல் நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த அமெரிக்காவை அவர் தூக்கி நிறுத்துவார் என்பது வாக்களித்த மக்களின் நம்பிக்கை. அதற்கு வலுச் சேர்த்தார் அதிபர் ஒபாமா.\nபதவியேற்ற சிறிது நாட்களில் 789 பில்லியன் டாலர் பொருளியல் ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான விவாதத்துக்குப் பிறகு நிறைவ��றியது அந்த மசோதா. அதன் மீதான வாக்கெடுப்பில் 61 க்கு 37 என்ற விகிதத்தில் உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைப் பதிவு செய்தனர். முக்கிய எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் 3 உறுப்பினர்களும் ஊக்குவிப்புத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர். அது, அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கை தந்த திருப்பம்.\nகலைத் துறையைப் பொறுத்த அளவில் ஆசியாவுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான அங்கீகாரம். பெப்ரவரியில் \"Slumdog Millionaire\" திரைப்படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். இந்திய இசைக்கலைஞர் ஒருவர் அந்த விருதைப் பெற்றது அதுவே முதல் முறை. Slumdog படத்தில் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்ற மற்றோர் இந்தியர்.\nSlumdog Millionaire தவிர்த்து, ஆசியாவில் தயாரிக்கப்பட்ட வேறு சில படைப்புகளும் இவ்வாண்டில் ஆஸ்கர் கௌரவம் பெற்றன. ஆகச் சிறந்த பிறமொழி படத்துக்கான விருதைப் பெற்றது Departures என்னும் ஜப்பானியத் திரைப்படம். La Maison En Petits Cubes என்ற இன்னொரு ஜப்பானியப் படைப்பு ஆகச் சிறந்த வரைகலை குறும்படத்துக்கான விருதை வென்றது. இந்தியாவில் படமாக்கப்பட்ட Smile Pinky என்னும் விளக்கப்படமும் ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இணைந்து கொண்டது.\nஅரசியல், கலை இவற்றை அடுத்து வருகிறது விளையாட்டு. ஆனால், இது வினையான விளையாட்டு. மார்ச் 3 ஆம் தேதி பாகிஸ்தானில் வெடித்த குண்டு அந்த வினையின் வேதனைக்குரிய எதிரொலி.\nபாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடச் சென்ற இலங்கை அணியினரைக் குறிவைத்து நடத்தப்பட்டது தாக்குதல். வீரர்கள் யாருக்கும் இழப்பில்லை. ஆனால் சல்லடையாகிப் போனது அவர்கள் சென்ற பஸ். எனினும், தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பறிபோயின எட்டு உயிர்கள். அவர்கள் அத்தனை பேரும் பாகிஸ்தானியப் போலீசார்.\nதாலிபான்களை நோக்கி நீண்டன குற்றக் கரங்கள். அதன் தொடர்பில் கைது செய்யப்பட்டார் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர். மேலும் அறுவரைத் தேடி வருவதாக அறிவித்தது பாகிஸ்தானியக் காவல்துறை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இலங்கையில் செயல்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்திருப்பார்களோ\nஇவ்வளவுக்குப் பிறகும் களமிறங்கி விளையாடுமா இலங்கை. மூட்டை முடிச்சுகளோடு பாகிஸ்தானை விட்டு வெளியேறியது. கிரிக்கெட் தொடரையும் புறக்கணித்தது. ஒட்டு மொத்த பேரிழப்பு விளையாட்டு ரசிகர்களுக்கு.\nஅன்று தொடங்கிய வேட்டுச் சத்தம் பாகிஸ்தானில் இன்று வரை ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போதும் விட்டுவிட்டும் வெடித்துக் கொண்டே தான் இருக்கின்றன குண்டுகள். பலியாவது என்னவோ அப்பாவி உயிர்கள் தான். அமெரிக்காவின் நெருக்கமான தோழராகத் திகழ்கிறது பாகிஸ்தான். அது தாலிபான்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் அவ்வப்போது வெடிக்கச் செய்கிறார்கள். எப்போது பூ மழையோ...\nஅடுத்து நம் கவனத்துக்குரிய அம்சம் - மலேசியாவில் நடந்த தலைமை மாற்றம். அது நடந்தது ஏப்ரலில். மலேசியாவின் ஆறாவது பிரதமராகப் பொறுப்பேற்றார் திரு.நஜீப் அப்துல் ரசாக். அதற்கு ஏதுவாக மலேசியா ஆளுங்கட்சியான அம்னோவின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். முன்னைய பிரதமர் திரு.அப்துல்லாஹ் அஹ்மத் படாவி பதவி விலகியதைத் தொடர்ந்து திரு.நஜீப் மலேசியாவின் பிரதமரானார்.\nதமது 23 ஆம் வயதிலேயே மலேசிய அரசியலில் அடியெடுத்து வைத்தவர் திரு.நஜீப். சென்ற ஆறு ஆண்டுகளாக மலேசியாவின் துணைப் பிரதமராகவும் சேவையாற்றியவர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய அரசியலில் தனி முத்திரை பதித்து வருகிறார் திரு.நஜீப். இவர் மலேசியாவின் இரண்டாவது பிரதமரான திரு.அப்துல் ரசாக்கின் மகன். பொருளியல் நெருக்கடியும், உள்நாட்டு அரசியல் குழப்பங்களும் அதிகரித்திருந்த வேளையில் திரு.நஜீப் பிரதமராகப் பதவியேற்றார்.\nமலேசியாவை அடுத்து மியன்மாரிலும் ஓர் அரசியல் புயல். அது வீசியது மே மாதத் தொடக்கத்தில். மியன்மாரில் நடப்பது இராணுவ ஆட்சி. மக்களாட்சியைக் கொண்டு வர வேண்டுமென்று போராடுகிறார் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி. அதற்கு இசைய மறுத்த இராணுவம் அவரை இல்லக் காவலில் வைத்தது. அந்தத் தண்டனை முடியும் தருவாயில் மீண்டும் ஒரு சோதனை.\nவிதிகளை மீறி தமது வீட்டில் அமெரிக்கர் ஒருவரை இரகசியமாகத் தங்க வைத்தார் என்பது குற்றச்சாட்டு. ஏரியில் நீந்தியபடியே அந்த அமெரிக்கர் ஆங் சான் சூச்சி வீட்டுக்குள் நுழைந்தார் என்றது இராணுவம். விசாரணை முடிவில் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது ஆங் சான் சூச்சி. பின்னர் அது பாதியாகக் குறைக்கப்பட்டது.\nஅடுத்த ஆண்டு மியன்மாரில் நடக்கவுள்ள தேர்தலில் ஆங் சான் சூச்சியின் பங்களிப்பைத் தடுக்கும் நோக்கில் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சூச்சியின் வீட்டில் நுழைந்த அமெரிக்கருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எவ்வித நிபந்தனையுமின்றி சூச்சியை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 11:45 PM 0 மறுமொழி விழுது\nசென்ற ஆண்டின் இறுதியில் உலகைச் சுழற்றி அடித்த பொருளியல் சுனாமி தற்போது தான் ஓயத் தொடங்கியுள்ளது. இப்போது மீண்டும் ஓர் ஓலம். இம்முறை அந்தக் குரல் எழுந்திருப்பது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஒன்றான துபாயில் இருந்து. நவம்பர்’09 இறுதி வாரத்தில் துபாய் அரசாங்கத்திற்குச் சொந்தமான Dubai World ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது உலகச் சந்தைகளை ஆட்டங்காண வைத்தது. Dubai World முதலீட்டு நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் கடன் உள்ளது. அதனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கேட்டது. இந்தத் திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்\nகுறுகிய காலகட்டத்துக்குள் அதிக வளர்ச்சியைப் பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தினார்கள். ஆனால் உலகப் பொருளியல் நெருக்கடி அவர்கள் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டது. எதிர்பார்த்த வருமானம் வந்து சேரவில்லை. அதனால் வெளி நாட்டு வங்கிகளிடம் வாங்கிய கடனுக்குரிய வட்டியைச் செலுத்த முடியவில்லை. முதலைத் திருப்பித் தரவேண்டிய நிர்ப்பந்தம். வருமானத்துக்கும், இலாபத்துக்கும் இடையே விழுந்தது பெரிய பள்ளம். இதுவே துபாய் நிதி நெருக்கடிக்குரிய அடிப்படக் காரணம்.\nஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் துபாய் சற்று வித்தியாசமான நாடு. மேற்குலகின் சாயலை உள்வாங்கிக் கொண்டு செழித்து முன்னேறிய வளைகுடாப் பிரதேசம். விண்ணை முட்டும் கட்டடங்கள். நுகர்வோரை மயக்கும் வணிக வளாகங்கள். கேளிக்கைப் பூங்காங்கள் என்று அதன் சிறப்பை அடுக்கிக் கொண்டே போகலாம். மத்திய கிழக்கின் பிற நாடுகளோடு ஒப்பிடும் போது துபாயில் எண்ணெய் வளம் குறைவு. இருப்பினும் அந்த நாடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்தது எப்படி\nஐக்கிய அரபுச் சிற்றரசில் மொத்தம் 7 மாநிலங்கள். தலைநகரம் அபுதாபி. துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன்,ஃபுஜைரா, மற்றும் ராசல்கைமா என்பன மற்ற மாநிலங்கள். இவற்றில் துபாயில் எண்ணெய் வளம் மிகக் குறைவு. இன்னும் இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எண்ணய் என்பது வரலாற்றில் குறிப்பிடப்படும் ஒரு பொருளாகிப் போய்விடும்.\n1998 ல் துபாயின் பொருளாதார வளர்ச்சி இரண்டு விழுக்காடு. அதை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் திட்டம். அதன் பொருட்டு மூன்று துறைகளில் கவனம் செலுத்தத் தீர்மானித்தது துபாய் அரசாங்கம். ஒன்று வர்த்தகம். இரண்டாவது கட்டுமானத்துறை. ஹோட்டல்ஸ், உல்லாசத் தலங்கள், வணிக வளாகங்கள், கேளிக்கைப் பூங்காக்கள் ஆகியவற்றைக் கட்டி வெளிநாட்டினரை ஈர்க்கலாம் என்று கணித்தது. மூன்றாவதாக மத்திய கிழக்கின் வணிகக் கேந்திரமாக துபாயை உருவாக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய தொலைநோக்கு.\nபொருளியலைப் பெருக்கும் அத்தனை காரியங்களிலும் கவனம் செலுத்தினார்கள். அதற்குக் கிடைத்தது கை மேல் பலன். சென்ற ஆண்டு துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணெய் வருவாய் 6 விழுக்காடு மட்டுமே. மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் சாராத நாடு துபாய் மட்டுமே என்ற நிலையை படிப்படியாக எட்டிப் பிடித்து விட்டார்கள்.\nகட்டடக் கட்டுமானம் மூலம் துபாய்க்குக் கிடைக்கும் வருமானம் 22 விழுக்காட்டுக்கும் அதிகம். வர்த்தகம் மூலம் வருவது கிட்டத்தட்ட 16 விழுக்காடு. பல்வேறு நிதிச்சேவைகளின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் 11 விழுக்காடு. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் துபாயின் தலையில் விழுந்தது பேரிடி.\nDubai World என்ற அரசாங்க முதலீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதி அல் நகீல். கட்டுமானத்துறையில் இந்நிறுவனம் தான் ஜாம்பவான். உலகின் மற்ற நாடுகளில் கிளை பரப்ப ஆசைப்பட்டது Dubai World. விளைவு, வெளிநாடுகளில் தங்கள் முதலீடுகளைப் பெருக்கினார்கள். லண்டனில் ஒரு துறைமுகம். நியூயார்க்கில் ஒரு வணிக வளாகம். இப்படிப் படிப்படியான விரிவாக்கம். கொட்டத் தொடங்கியது பணமழை.\nசுபயோக சுபதினத்தின் இராகு காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டது நிதிச்சுனாமி. அதில் சிக்குண்டது துபாய். இந்த ஆண்டின் ஃபிப்ரவரியில் சுற்றுலா வருமானம் சுருங்கியது. பணப் புழக்கம் குறைந்தது. மக்கள் வாங்கும் திறனை இழந்தனர். முன் கை நீட்டியவர்கள் முட்டுக்கையை நீட்ட வேண்டிய கட்ட��ய நிலை. கட்டுமானத்துறையும் ஆட்டம் கண்டது. சொத்துச் சந்தை படுத்து விட்டது. கிட்டத்தட்ட 60, 70 விழுக்காடு அளவுக்கு பெரும் வீழ்ச்சி. இதனால் நிறையக் கட்டுமானத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு. வேலையிழப்பு. இப்படி அடிக்கு மேல் அடி.\nதுபாயின் பொருளியல் வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்த Dubai World இப்போது கடன் சுமையால் தத்தளிக்கிறது. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்டிருக்கிறது. தனக்குள்ள 26 பில்லியன் டாலர் கடனை மாற்றியமைக்கும் யோசனைகளை வெளியிட்டது. அதன் மூலம் பங்குச் சந்தைகள் ஓரளவுக்கு நிமிர்ந்துள்ளன. Dubai World ன் கடனுக்குப் பொறுப்பேற்க முடியாது என்று துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியைப் போன்ற நிலையை மீண்டும் உருவாக்குமா\nஅப்படி ஒப்பிட முடியாது. அமெரிக்க நிதிச் சுழலில் ஏற்பட்ட இழப்பு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். துபாயில் அப்படியல்ல. 60 பில்லியன் டாலர் தான். சரி. இனி என்னாகும் அமெரிக்க அரசாங்கம் நிதியைக் கொடுத்து நிறுவனங்களைக் காப்பாற்றியது போல் துபாயில் நடக்குமா அமெரிக்க அரசாங்கம் நிதியைக் கொடுத்து நிறுவனங்களைக் காப்பாற்றியது போல் துபாயில் நடக்குமா அப்படிச் செய்ய முடியாது என்று துபை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்து விட்டது. காரணம் அவர்களிடம் இருக்கும் கையிருப்பும் குறைவு. ஆனால் அபுதாபி அரசாங்கம் நிச்சயம் ஏதாவது செய்யும் என்பது பொருளியல் நிபுணர்களின் நம்பிக்கை. காரணம், Dubai World கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் முதலில் பாதிக்கப்படுவது அபுதாபி வங்கிகள் தான். எனவே இக்கட்டான சூழலில் அவர்கள் கை கொடுப்பார்கள் என்பது நிபுணர்களின் கணிப்பு.\nவர்த்தகம் என்பது இருவழிப் பாதை. அதில் லாபம் வரும் போது அதன் பலனை அனுபவிக்கும் நிறுவனங்கள், நஷ்டம் வரும் போது மட்டும் அரசாங்க உதவியைக் கோருவது பிரச்சினைக்குரிய தீர்வல்ல என்பது சில பொருளியல் நிபுணர்களின் கருத்து.\nDubai World ன் கடனுக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது என்று அறிவித்தது தீர்க்கமான முடிவு என்பது சில நிபுணர்களின் கூற்று. முதலீடு செய்யும் போதே, அதனால் வரக்கூடிய வருமானமோ, நஷ்டமோ இரண்டையும் தாங்கிக் கொள்ளும் மனப்போக்குடன் தான் முதலீடு செய்ய வேண்டும். அதில் லாப���் வந்தால் எங்களுக்கு. நஷ்டம் வந்தால் நாட்டில் உள்ள அரசாங்கம் ஈடுகட்டி விடும் என்று எதிர்பார்த்து முதலீடு செய்யும் மனப்போக்கை மாற்ற வேண்டும்.\nதுரதிருஷ்டவசமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட அந்த மனப்போக்கை அவங்க கண்டிக்கலை, தடுக்கவும் இல்லை. இதனால என்னாச்சு லாபம் வந்தால் எனக்கு. நஷ்டம் வந்தால் வரி செலுத்தும் மக்களுக்கு என்ற மனப்பான்மை வளர்ந்துடுச்சு. துபாய் அரசாங்கம் அந்தப் போக்கை இப்போ துண்டித்தாங்கன்னா அது நல்ல முடிவு என்பது சில பொருளியல் நிபுணர்களின் வாதம்.\nதுபாயில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி உலகின் மற்ற நாடுகளைப் பாதிக்கும் வாய்ப்புகள் உண்டா\nபெரிய பாதிப்புகள் இருக்கும்ன்னு சொல்ல முடியாது. எந்த ஒரு முதலீடு செய்தாலும் அதில் நஷ்டம் வருவதற்குரிய வாய்ப்புகள் இருக்கத் தான் செய்யும். சகித்துக் கொள்ளக் கூடிய அளவு நஷ்டம் வரும் அபாயங்கள் இருக்கிறதே ஒழிய, 2008 நிதி நெருக்கடி மாதிரி வருவதற்கான சாத்தியங்கள் இல்லை.\nஐரோப்பா கண்டத்தின் சில வங்கிகள் துபையின் சில நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்திருக்கின்றன. Dubai World உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்களும் கடன் சுமையைச் சரிவரப் பூர்த்தி செய்ய முடியாத நிலை இப்போது. இதனால் ஐரோப்பிய நாட்டின் சில வங்கிகளுக்குப் பிரச்சினை ஏற்படும் அபாயம் உண்டு.\nஇன்னொரு கோணத்தில் பார்த்தால் இந்தியா, சைனா போன்ற வளரும் நாடுகளுக்குச் சில பாதிப்புகள் வரலாம். எப்படி Dubai World அரசாங்கத்தின் ஓர் அங்கம். அதனால தாங்கள் கொடுத்த கடனுக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்கும் என்று நம்பினார்கள். இப்போது அந்த நம்பிக்கை பொய்யாகிப் போயிற்று. இதனால் Dubai World நிலைகுத்திப் போகும் அபாயம் இருப்பதைப் புறக்கணிக்க முடியாது. அப்படி ஒரு நிலை வரும் போது அதை ‘சாவரின்ட் டிஃபால்ட்’ என்று வர்ணிப்பார்கள். அதாவது நாடே போன்டியாகிடுச்சு. நாங்க பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்ற மாதிரி. இதனால் வளரும் நாடுகள் அரசாங்க அங்கத்தின் மூலமாக கடன் பெற முயற்சித்தால், வெளிநாட்டு வங்கிகள் கடன் கொடுக்க ரொம்பப் பயப்படுவாங்க. துபாய்ல நடந்த மாதிரி இங்கேயும் ஆயிடுமோன்னு. இது வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் முக்கியமான தாக்கமாக இருக்கக் கூடும்.\nஆசிய வட்டார நாடுகளுக்கு சிங்கப்பூர் ஒரு வர்த்தகக் கேந்திரமாகத் திகழ்கிறது. அதைப் போல மத்திய கிழக்கு வட்டாரத்தில் தான் முன்னிற்க வேண்டும் என்பது துபாயின் இலக்கு. அதை நோக்கிய பயணத்தில் இப்பாது பெரிய தடங்கல். இதிலிருந்து துபாய் மீளும் சாத்தியம் இருக்கிறதா\nசிங்கப்பூர் வந்த அளவுக்கு குறுகிய காலகட்டத்தில் துபை மத்திய கிழக்கு வட்டாரத்தில் வணிகக் கேந்திரமாக மாறி விட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தப் பாதையில் முன்னேறி வந்து வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதையும் புறந்தள்ளி விடமுடியாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் நெருக்கடி அந்த வளர்ச்சியைக் கொஞ்சம் பாதிக்கத் தான் செய்யும்.\nஓராண்டு, ஈராண்டு சொல்லப் போனால் ஐந்து ஆண்டுகள் இந்த வளர்ச்சி தேக்கமடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த நெருக்கடியை துபாய் அரசாங்கம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள், முதலீடு செய்பவர்களுக்குரிய பாதுகாப்புகள் ஆகியவற்றைக் குறுகிய காலத்தில் அவர்கள் உருவாக்கினால் அந்தத் தேக்கத்தையே ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடியும். அதற்குரிய அணுகுமுறையும் அரசாங்கத்தின் கொள்கைப் போக்கும் மாறுகிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி மாறினால் இந்தத் தேக்கத்தையே அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல முடியும்.\nநிலையற்ற பொருளியல் சந்தையில் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. ஏற்றத் தாழ்வுகளைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை முதலீட்டாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் அனந்தநாகேஸ்வரன். சிங்கப்பூரில் செயல்படும் ஜுலியர் பேயர் வங்கியின் மத்திய கிழக்கு முதலீட்டு ஆலோசகராக இவர் பணியாற்றி வருகிறார்.\nகுறுகிய காலத்திற்குள் அதிக லாபம் எடுக்க வேண்டும் என்ற இருக்கும் வரைக்கும் எந்த முதலீட்டிலும் நஷ்டம் உண்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆதலால் இனிமேல் துபாய் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும், உள்நாட்டிலும் சரி. வெளிநாட்டிலும் சரி. முதலீடு செய்யும் போது அந்த முதலீட்டில் நஷ்டம் அடையவதற்கான சாத்தியக் கூறுகள் எவ்வவளவு அப்படி நஷ்டம் வந்தால் தாங்கிக் கொள்ள முடியுமா அப்படி நஷ்டம் வந்தால் தாங்கிக�� கொள்ள முடியுமா எவ்வளவு காலத்துக்குள் நாம் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். என்பது பற்றி நிதானமாக திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். அப்படிச் செய்வதால் நஷ்டம் வந்தாலும் அவங்களால ஏற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்து நல்ல முறையில் பல நாட்கள் லாபம் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் குறுகிய கால கட்டத்தில் அதிக லாபம் என்ற மனப்பான்மையை அதிகம் பார்க்கிறோம். அது தான் மிகப் பெரிய அபாயம். முதலீட்டுக்கான ஆபத்து துபாயிலோ, சிங்கப்பூரிலோ, சீனாவிலோ இல்லை. அது குடிகொண்டிருப்பது நம்முடைய மனதில் தான் என்பது டாக்டர். அனந்த நாகேஸ்வரன் சொல்லும் செய்தி.\nசங்கடமான காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்வது தான் மனித வாழ்க்கக்கு ஆதாரம். இந்த நியதி உலக நாடுகளுக்கும் பொருந்தும். துபாயைச் சுற்றிலும் எண்ணெய் வளமிக்க நேசநாடுகள் இருக்கின்றன. அவர்கள் இந்த நெருக்கடியை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். எனவே சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல துபாய் மீண்டும் எழுந்துவரும் என்பது இப்போதைய நம்பிக்கை. அது நனவாகுமா என்பதைக் காலம் கணித்துச் சொல்லும்.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 9:16 AM 2 மறுமொழி விழுது\nஉலகம் 2009 - பகுதி 3\nஉலகம் 2009 - பகுதி 2\nஉலகம் 2009 - பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%88-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-07-19T11:24:02Z", "digest": "sha1:JXIZLBOFMGHSPMIDT52MGBL3K7ZC7GGF", "length": 24080, "nlines": 224, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஈ.பி.டி.பி யே மகேஸ்வரனை படுகொலை செய்தது;துவாரகேஸ்வரன்!!", "raw_content": "\nஈ.பி.டி.பி யே மகேஸ்வரனை படுகொலை செய்தது;துவாரகேஸ்வரன்\nமுன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி கட்சியினரும் , யாழில்.உள்ள நான்கு பிரபல வர்த்தகர்களும் உள்ளனர் என மகேஸ்வரின் சகோதரரும் , ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் ,\nஈழமக்கள் ஜனநாயக கட்சியை சார்ந்தவர்களும் , அக் கட்சியின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தாவும் மகேஸ்வரனை படுகொலை செய்வதற்கு பல தடவை���ள் முயற்சித்தார்கள்.\nயாழ்.காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தினுள் வைத்து சுட்டுப்படுகொலை செய்வதற்கு 2000ஆம் ஆண்டு முயற்சித்தார்கள்.\nபின்னர் இளவாலை சென் அன்ரனிஸ் தேவாலயத்திற்கு அருகில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போது ஈ.பி.டி.பி. கட்சியை சேர்ந்த திருலோகநாதன் என்பவரால் சுடப்பட்டார். அதில் மகேஸ்வரன் உயிர்தப்பி இருந்தார்.\nஅதன் பின்னர் ஊர்காவற்துறை பகுதிக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பி கட்சியினர் தாக்குதலை மேற்கொண்டதில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.\nகுறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதாரவாளர்களை காப்பற்ற சென்ற மகேஸ்வரன் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவர் உயிர் தப்பி இருந்தார்.\nபின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு மார்கழி மாதம் காரைநகர் சிவன் கோவில் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழாவின் போது கோயிலில் வைத்து மகேஸ்வரனை படுகொலை செய்ய முயற்சித்தார்கள். அதிலும் அவர் உயிர் தப்பி இருந்தார்.\nஅதன் பின்னரே கொழும்பில் வைத்து சுட்டுபடுகொலை செய்யப்பட்டார்.\nமகேஸ்வரனை படுகொலை செய்த வசந்தன் என அழைக்கப்படும் வெலேன்ரைன் என்பவர் முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர். பிறகு அமைப்பில் இருந்து விலகி ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து இயங்கினார்.\nமகேஸ்வரனுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் முரண்பாடுகள் காணப்படவில்லை. அக்கால பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி “அல்மீசா” எனும் கப்பல் ஊடாக பொருட்களை ஏற்றி இறக்கும் வியாபாரம் செய்து வந்தார்.\nஅதன் ஊடாக யாழில் உள்ள பிரபல வார்த்தகர்கள் நால்வருடன் நட்பு கொண்டு அவர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள்.\nஅந்த வர்த்தக வியாபாரத்திற்கு வியாபர ரீதியாக மகேஸ்வரன் போட்டியாக இருந்தார். ஏற்கனவே தனி ஒரு மனிதனாக அரசியலில் ஈ.பி.டி.பி.யினருக்கு போட்டியாக இருந்தமையால் , வர்த்தக மற்றும் அரசியல் போட்டியாளனை இல்லாதொழிக்கவே மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டார்.\nமகேஸ்வரனை படுகொலை செய்த நபருக்கு உதவியாக வந்த அரியாலையை சேர்ந்த நபர் அன்றைய தினம் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருந்தார். அவரது சடலத்தை அறியாலைக்கு கொண்டு வர உதவியது ஈ.பி.டி.பி.யினரே.\nஅதேபோன்று கொலையாளி சார்பில் சட்டத்தரணியை நியமித்தமை , சட்டத்தரணிக்கான கொடுப்பனவுகளை கொடுத்தமை அனைத்துமே ஈ.பி.டி,பி.யினர்.\nஎனவே மகேஸ்வரின் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டியமை , படுகொலை செய்தமை , கொலையாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கியமை ,உதவியமை என அனைத்தையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தான்.\nதற்போது எனக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு உள்ளனர். போலி முகநூல்கள் ஊடாகவும் , பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் ஊடாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதுடன் அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகின்றனர். என தெரிவித்தார்.\nஇலங்கையில் 37 குட்டிகளுடன் சிக்கிய ராஜ நாகம்… வைரலாகும் அதிசய காணொளி 0\nகழுகில் பறந்து வந்து பரவசமூட்டிய திருமண ஜோடிகள்: விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nஉயிரிழந்த தாய்… அறியாத மழலைகள் செய்யும் விளையாட்டு நெஞ்சை பிழியும் காணொளி…\nபைக்கில் தரதரவென பெண்ணை இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சி வீடியோ 0\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலாவுடனான நேர்காணல் – கொழும்பிலிருந்து நேரலையாக…(வீடியோ) 0\nஇலங்கையில் 37 குட்டிகளுடன் சிக்கிய ராஜ நாகம்… வைரலாகும் அதிசய காணொளி\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா��� படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://manakkuthirai.blogspot.com/2013/08/blog-post_22.html", "date_download": "2018-07-19T11:29:34Z", "digest": "sha1:HWUUBNGQXQ5MGTYNAGZTZUDPUNMXSOSP", "length": 13995, "nlines": 142, "source_domain": "manakkuthirai.blogspot.com", "title": "மனக்குதிரை: நான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே...", "raw_content": "\n◘◘ எரியும் நீராய் என்னுள் நான் ◘◘\nநான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே...\nதமிழ் வலைப்பூக்களைப் பற்றி சென்ற வருடம் வரை எதுவுமே தெரியாத எனக்கு, இந்த வருடம் தான் இந்த வலைப்பூவைப் பற்றியும், அதிலில் நம் சொந்த பதிவுகளை வெளியிடுவதன் மூலம் நம்மை நாமே சந்தைப்படுத்திக் கொள்ளலாமென்றும் தெரியும். இருந்தாலும் சென்ற வருடம் எந்த பதிவையும் இடுகின்ற தகுதி எனக்கிருந்ததாக நான் யோசித்தே பார்த்ததில்லை.\nஇந்த வருடம் எனக்கு கொஞ்சம் முகநூலில் அதிகம் நட��புகள் கிடைத்ததாலும், அவர்களில் அதிக பேர் தமிழில் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிப்பதையும் கவனித்து நானும் எதேச்சையாக முகநூலில் தமிழில் எழுத ஆரம்பித்து, பிறகு ஈரோடு கதிர் அண்ணன் எழுத்துக்களால் கொஞ்சம் அதிகமாகவே கவரப்பட்டு இந்த வலைப்பூவிற்குள் நானும் வந்தேன். மனக்குதிரை என்றும் தலைப்புமிட்டு எழுத ஆரம்பித்தேன். (இந்தக் குதிரைக்கு கடிவாளம் கிடையாது)\nநானும் என் சொந்த எழுத்துகளை மட்டுமே எழுதுகின்றேன். இன்னும் இருபது பதிவுகளைக் கூடவும் தாண்டவில்லை (இதுதான் இருபதாவது பதிவு). ஆனாலும் நான் “ஈரோடு புத்தகத் திருவிழா- துவக்க நாள் 03.08.13” என்ற தலைப்பில் எழுதி இருந்த பதிவை அண்ணன் சதீஸ் சங்கவி அவர்கள் படித்துவிட்டு என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார்.\nஇரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா சென்னையில் நடைபெற இருப்பதாகவும், நானும் அவசியம் இதில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். எனக்கு கொஞ்சம் அல்ல, நிறையவே ஆச்சர்யம். நான் இது போன்ற விழாவிற்கு தகுதியானவன் தானா என்று மிகவும் யோசித்தேன். இருந்தாலும் என்னை எப்படியோ கண்டுபிடித்து அழைத்த அவருக்காகவே, விளம்பரதாரர்கள் சொல்வது போல் 99 % நான் வருவதாக அப்பொழுதே உத்திரவாதம் அளித்தேன்.\nஇருந்தாலும் நேற்று வரை கொஞ்சம் இரு மனதாகவே இருந்தேன். சதிஸ் சங்கவி அண்ணின் இந்த விழா தொடர்பான தகவல்களை அவர் வலைப்பூவில் படித்துக் கொண்டே இருந்ததால் கொஞ்சம் அதிகமே கவரப்பட்டு இன்று முழு மனதாக விழாவிற்கு செல்வதென்று முடிவும் செய்தேன். சென்னைக்கு சென்றாதாகவும் இருக்கட்டும், விழாவில் கலந்து கொண்டதாகவும் இருக்கட்டுமென்று அண்ணன் சதிஸ் சங்கவி அவர்களிடம் என் வருகையை உறுதி செய்தேன்.\nநாளை மனது மாறினானும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்று இன்றே இரயில் பயணத்திற்கான முன் பதிவையும் செய்து, மின்னணு பயணச்சீட்டையும் பெற்றுக் கொண்டேன். நான் சென்னை சென்றது இதுவரை இரண்டு முறை. முதல் முறை நான் கல்லூரி படிக்கும் பொழுது (2008), இரண்டாவது முறை அலுவலக வேலையாக (2010). அதற்கும் மேல் இதுவரை எனக்கும் சென்னைக்கு வேலை இல்லை, என்னாலும் சென்னைக்கும் ஒரு வேலையும் இல்லை.\nஇந்த விழாவில் சேட்டைக்காரன் அவர்கள் எழுதிய “மொட்டைத் தலையும் முழங்காலும்” என்ற நூலும், சதீஸ�� சங்கவி அவர்கள் எழுதிய “இதழில் எழுதிய கவிதைகள்” என்ற நூலும், மோகன்குமார் அவர்கள் எழுதிய “வெற்றிக்கோடு” என்ற நூலும் வெளியிடப்போவதாக விழா நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படுள்ளது.\nஇப்பொழுது தான் மூன்றாவது முறையாக சென்னைக்கு அதுவும் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்காக (01.09.13) செல்ல இருக்கின்றேன். “நான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே” என்று மதியம் முதல் நிறைய பேரிடம் என் வாய் உளரிக்கொண்டே இருக்கின்றது...\nஎழுதியது தினேஷ் பழனிசாமி வகைகள் அனுபவம், கட்டுரை, வலைப்பதிவர்கள் திருவிழா நாள் Thursday, August 22, 2013\nகடிவாளம் இல்லா குதிரையை காண ஆவலுடன் உள்ளேன்... சந்திப்போம்...\nவருக வருக என அன்போடு வரவேற்கிறோம்...\nசென்னையில் பார்க்கலாம் உங்க மூனாவது தடவைல, மொத தடவையா\nபின்னூட்டமிட்ட அனைத்து நட்புகளுக்கும் நன்றிகள்.. சென்னையில் நிச்சயம் சந்திப்போம்...\nசந்திக்க வருகிறது அந்நாளில் ......\nபயனளித்த பண்ணைக் குட்டை- நீரின்றி அமையாது உலகு\nநான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே...\nஊட்டிக்குப் பயணம்…. சுற்றுலாவாக அல்ல....\nஏம்பா..... இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை கூடவா பேசாம(...\nஈரோடு புத்தகத் திருவிழா 2013 - துவக்க நாள் 03.08.1...\nபயனளித்த பண்ணைக் குட்டை- நீரின்றி அமையாது உலகு\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்- பாரதி கிருஷ்ணகுமார்\n‘ஒன்பதாம் திசை’ சிறுகதைத் தொகுப்பு வாசித்த பின்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilscreen.com/tag/hansika/", "date_download": "2018-07-19T11:32:14Z", "digest": "sha1:5ZTN2GJLHWCFX6ZTF4E7YLUKVZCJLMAX", "length": 6123, "nlines": 87, "source_domain": "tamilscreen.com", "title": "hansika Archives - Tamilscreen", "raw_content": "\nஅய்யோ… பாவம்… ஹன்சிகாவுக்கு வந்த நிலைமையைப் பார்த்தீங்களா\nகடந்த வருடம் வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஹன்சிகாவுக்கு தற்போது மார்க்கெட் இல்லை. மொத்த சம்பளத்தில் 90 சதவிகிதத்தை கருப்புப்பணமாக மும்பையில்...\nபொங்கலை முன்னிட்டு இன்று (12-ஆம் தேதி) வெளியாகி இருக்கும் மூன்று படங்களில் குலேபகாவலி படத்தின் நிலைமைதான் கவலைக்கிடம். பிரபுதேவாவின் நண்பரும், நயன்தாராவின் மானேஜருமான ராஜேஷ் தயாரித்த படம் இது. பிரபுதேவாவும் நயன்தாராவும்...\n – எப்படி இருந்த ஹன்சிகா இப்படி ஆயிட்டாரே…\nசில வருடங்களுக்கு முன்புவரை ஹன்சிகா தமிழில் பிசி நடிகையாக இருந்தார். அப்போது முன்னணி ஹீரோக்க;ள சிலரை கையில் வைத்திருந்தார். எனவே அவர்களின் சிபாரிசு ஹன்சிகாவுக்கு...\nஜெயம் ரவி நடிக்கும் ‘போகன்’ படத்திலிருந்து…\nநடிகைகளின் செல்போன் தகவல்களை திருடும் ஹேக்கர்ஸ்… – பீதியில் நடிகர், நடிகைகள்….\nசெல்போனில் அந்தரங்கமான விஷயங்களை... ஆபாசமான விஷயங்களை வைத்திருப்பது ஆபத்தானது என்று தெரிந்தும் பலரும் தங்களுடைய செல்போனை ஆபாச தகவல் கிடங்காகவே பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட தகவல்கள்...\nஅடைந்தால் நயன்தாரா அல்லது, ஹன்சிகா… – மீண்டும் காதல்வலையை கையில் எடுத்த சிம்பு…\nசக நடிகைகளைப் பற்றி சில ஹீரோக்களே வதந்திகளைக் கிளப்பிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது திரையுலகில் வழக்கமான ஒன்றுதான். தனக்கு நெருக்கமாக உள்ள மீடியாவை அழைத்து செய்தியை...\nஅண்ணாச்சி கடையும்… ‘அடச்சீ’ உடை தமன்னாவும்….\nபொதுவாகவே சமுதாயத்தில் நடிகைகளுக்கு அத்தனை மரியாதை இல்லை. மக்களின் மனதில் பாலியல் தொழிலாளிகளுக்கு பக்கத்து இருக்கைதான் நடிகைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த எண்ணத்தை மக்கள் மனதிலிருந்து...\nஉதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிக்கும் மனிதன் படத்தின் – Official Trailer\nஒவ்வொரு மரமும் மரகதம்; ‘மரகதக்காடு’ படம் சொல்லும் பாடம்…\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nகடைக்குட்டி சிங்கம்… – டிவி சீரியல் கதை சினிமாவாக ஜெயித்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/03/blog-post_43.html", "date_download": "2018-07-19T11:14:46Z", "digest": "sha1:LUFYTMFFREHIW5RKT3XBYKLQJSYUMGWF", "length": 34760, "nlines": 197, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : சிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ !", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nசிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ \nஎதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதை சாதித்து காட்டிய லீ குவானின் மறைவு சிங்கப்பூர் மக்களிடையே மட்டுமல்லாது, உலக அளவிலும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள��ளது.\nலீ குவான் யூ நவீன சிங்கப்பூரைச் செதுக்கியவர். சிங்கப்பூர் ராபல்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பல்வேறு தீவுகளைக்கொண்ட சில நூறு சதுரகிலோமீட்டர்கள் கொண்ட சிறிய தேசம் அது. ராபல்ஸ் கட்டுப்பாடுகள் அற்ற துறைமுகமாகச் சிங்கப்பூரை மாற்றினார். இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்வரை இருந்தது. லீ குவான் யூ நான்கு தேசியகீதங்கள் பாடுகிற அளவுக்கு நாட்டில் இந்த ஐம்பது வருட காலத்துக்குள் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.\nலீ, செல்வம் வளம் மிகுந்த பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட தொழிற்துறையில் இயங்குகிற குடும்பத்தில் வளர்ந்தவர். தங்கத்தட்டில் ஏந்திப் பிள்ளையைக் கொண்டாடினார்கள். அவரின் இளம்வயது முதலாளித்துவக் காதல், பொருளாதார வீழ்ச்சியின்பொழுது விழுந்தது. குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருந்தது. அம்மா எண்ணற்ற வேலைகள் செய்து குடும்பத்தைக் கரை சேர்த்தார்.கேம்ப்ரிட்ஜில் படிக்கப்போன லீக்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி அதிர்ச்சியை அதிகரித்தது. பட்டங்கள் பெற்று நாடு திரும்பிய சூழலில், உலகப்போரில் ஜப்பான், பிரிட்டனைப் பந்தாடியது அவருக்கு இங்கிலாந்து மீதிருந்த காதலை அடித்து நொறுக்கியது.\nஜப்பானுக்குப் போரில் வேலை பார்த்து அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். சோசியலிசம் மீதான காதல் அரும்பி மறைந்திருந்தது.இங்கிலாந்து உலகப்போருக்குப் பின்னர் மீண்டும் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. PAP கட்சியை, தோழர்களோடு இணைந்து ஆரம்பித்தார் அவர். டோய்ன்பீ-யின் நூல்களை வாசித்தது பெரிய மாற்றத்தை அவருக்குள் உண்டாக்கியது. படைப்பாற்றல் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை மாற்றியமைப்பார்கள் என்கிற சிந்தனை ஆழமாக அவருக்குள் வேர்விட்டிருந்தது. ஜெர்மனி உலகப்போருக்குப் பின்னர் வலிமையான அரசாங்கத்தால் படிப்படியாக அற்புதமாக எழுந்தது அவரின் எண்ணத்தை வலுப்படுத்தியது.\nமுதல் முதலாகப் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது நடந்த தேர்தலில் அவரின் கட்சி ஒப்புக்கு போட்டியிட்டு நான்கு தொகுதிகளை வென்றது. மலேசியாவின் பிரதமர் எங்களோடு நீங்கள் இணையுங்கள் என்று அழைத்தார். லீ அதை முன் வைத்து, தேர்தலில் பிரிட்டனுக்கு எதிராக விடுதலை மற்றும் மலேசிய இணைப்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் கட்சி அமோக வெற்றிப் பெற்றது. மலேசியாவுடன் இணைந்தபிறகு சிக்கல்கள் ஆரம்பித்தன.\nஇயற்கை வளங்களோ, தங்களைப்போல ஒரே இனமாகவோ இல்லாத சிங்கப்பூர் மக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் எழுந்தன.ஒரு கட்டத்தில் பெரும் கலவரங்கள் வெடித்தன. சிங்கப்பூர் தனிதேசமாக உருவான பொழுது அது நீடித்து நிற்காது என்பதே பலரின் பார்வையாக இருந்தது. \"பெருத்த துயரத்தோடு தான் இந்தப் பிரிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் \" என்று சொல்லிவிட்டு லீ சிலகாலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். பின்னர் எழுந்து வந்தார்.லீ தனக்கென்று பாதைகள் வகுத்துக்கொண்டார்.\nஜனநாயகம் என்றெல்லாம் பெரிதாக வாய்த் திறக்கக்கூடாது. தேசத்தின் தேவைகள் முக்கியம். மூன்றுவகையாக மக்களை வடிவமைத்தார். நல்ல தலைவர்கள் மேலே இருப்பார்கள்,சிறந்த அதிகார வட்டம் அடுத்து இருக்கும்,மீதமிருக்கும் மக்கள் சுய மற்றும் சமூகக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளவேண்டும். தேசம் உருப்படும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. கூடவே எப்பொழுதும் தன்னைச் சீனா சாப்பிடலாம் என்கிற அச்சம்துளிர்க்கவே வலுவான ராணுவத்தை இஸ்ரேலின் உதவியோடு அமைத்துக்கொண்டார்கள். அரசு செய்கிற செலவில் கால்வாசி ராணுவம்\nசான் பிரான்சிஸ்கோ பங்குச்சந்தை மூடுவதற்கும், ஜெர்மனியின் ஜூரிச் பங்குச்சந்தை திறப்பதற்கும் இடையே அரைநாள் அளவுக்கு இடைவெளி இருப்பதை நெதர்லாந்தில் இருந்து பொருளாதார ஆலோசனை சொல்ல வந்த ஆல்பர்ட் வின்செமியஸ் கவனித்துச் சொன்னார். இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் பங்குச்சந்தை ஆரம்பிக்கப்பட்டது. பெரிய தொல்லைகள் தராமல் தொழில் தொடங்க கதவுகள் திறந்து விடப்பட்டன. வரி விதிப்பு அளவுகள் குறைவாக இருந்து, முதலீட்டாளர்களின் சொர்க்கமானது சிங்கப்பூர்\nபல பில்லியன் டாலர்களை இருக்கிற பத்துக்கும் குறைவான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கினார். பள்ளிகளில் கல்வி அரசு கவனித்து வழங்குவதாக மாறியது. வெளிநாட்டில் இருப்பவர்கள் படிக்க வந்தால் கிட்டத்தட்ட இலவசம் என்று கூவிக்கூவி அழைத்தார்கள். படித்த பின்பு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் மூன்று ஆண்டுகள் கட்டாய வேலை ஒப்பந்தம் காத்திருக்கும். இப்படி உலகம்முழுக்கவும் இருந்து சிறந்த திறமைகள் வந்து சேர்ந்தன. சேரிகள் புதிய கட்டடத்திட்டங்களின் மூலம் காலி செய்யப்பட்டன. வசதியான வீடுகள்கட்டித்தரப்பட்டன. இலவசம் இல்லையென்றாலும் படிப்படியாக மக்களிடம் இருந்து அவர்களின் வருமானத்தில் இருந்துபோட்ட பணம் மீட்டெடுக்கப்பட்டது.\nசின்னத் தேசம் என்பதும், ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தியும் நகர்ந்ததால் ரோட்டில் கார்கள் ஓடத் தடைகள் சுற்றி வளைத்து விதிக்கப்பட்டன. பத்து சதவிகித நிலப்பரப்பு இயற்கைப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது. உலகம் முழுக்க இருந்து நாட்டுக்குள் நடைபெற்றபெரும்பாலான தொழில்களை அரசாங்கம் கவனித்துக்கொண்டாலும், அவற்றின் மேலாண்மையைச் செயல்படுத்த எண்ணற்ற சுதந்திரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். கட்டாயப் PF திட்டத்தின் கீழ் எல்லாச் சம்பளக்காரர்களின் சேமிப்பில் ஐம்பது சதவிகிதம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் நோக்கி செலுத்தப்பட்டது.\nகேள்விகள் கேட்கிற எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை என்று குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் கேள்விகள் கேட்காமல் சிறை வரவேற்கும். நீதி என்றெல்லாம் பேச முடியாது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். சீனப்பாரம்பரியம் கொண்டவர்கள்தான் எண்பது சதவிகிதத்துக்கும் மேலே கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். கல்லூரிகளிலும் பெரும்பாலான உதவித்தொகைகள் அவர்களுக்கே சென்று சேர்கிறது. பாதி ஜனநாயகம் கொண்டிருக்கும் இந்தத் தேசத்தில் ஆளுங்கட்சியான லீயின் கட்சியை எதிர்த்து பெரும்பாலும் வேட்பாளர்கள் நிற்க மாட்டார்கள்.\nஇப்பொழுது லீயின் மகன் கோலோச்சுகிறார். நாட்டின் பரப்பளவு லீ குவான் யூ போட்ட பாதையில் விரிந்து கொண்டே செல்கிறது. உலகிலேயே வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களின் சொர்க்க பூமியாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அதற்காகத் தியாகங்கள் சிலவற்றை மக்களைச் செய்யவைத்த அதிகார சூத்திரதாரியான லீ, ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியதும் நல்ல பலன் தந்தது. அவர் தண்ணீருக்குக் கூடப் பக்கத்துத் தேசத்தை நம்பிக்கொண்டிருந்த மண்ணைத் தலைநிமிர்ந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக மாற்றிய திருப்தியோடு விடை பெற்றுக்கொண்டார்.\n\"ஆசியாவின் இருண்ட ம��லையில் இருக்கும் பாவப்பட்ட சிறிய சந்தை \" எனப்பட்ட சிங்கப்பூர், 'பொருளாதாரப்புலி' என்கிற பெயரை அவரின் பணிகளால் பெற்றது. எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதைச் சாதித்த சிங்கப்பூரின் நிஜ நாயகன் அவர்.\nLabels: அரசியல், உலகம், கட்டுரை, தலைவர்கள், நிகழ்வுகள், வரலாறு, வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nவலியவன் - படம் எப்படி\nநியூசிலாந்தை 'அண்டர்ஆர்ம்' பந்துவீசி ஏமாற்றி ஜெயித...\nபஞ்சரே ஆகாத ரைனோ டயர் பற்றித் தெரியுமா\nஇணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்\nவங்கிகளுக்கு தொடர் விடுமுறை... இஎம்ஐ செலுத்துபவர்...\nநடுவானில் இந்திய விமானத்தை கடத்த முயன்ற பாகிஸ்தான்...\nகடனில் மின்வாரியம் : பாலபாரதி வெளியிட்ட அதிர்ச்சி ...\nபணம் கொடுத்தால் வேலை... வலை வீசும் மோசடிக் கும்பல்...\nபதவி உயர்வுக்குப் பிறகு... உங்களைப் பட்டை தீட்டும்...\nஇந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை\n“பெரிய ஹீரோக்களோடு நடிக்க நேரமில்லை\nஇதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டியா\nகோச்சடையானுக்கு கடன் தந்த ஆட் பியூரா நிறுவனத்துக்...\nகூட்டத்திற்கு வந்திருக்கும் மக்களின் முதல்வர்களே.....\nகுஷ்பு காங்கிரஸில் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என ...\nஆள் கடத்தல் பணத்தில் ஸ்ரீலங்காவுக்கு டூர் சென்ற அத...\nவாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: 27ல் வீட்டிற்கே செ...\n உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் ...\nKFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர்...\nபாவம் செய்த பதினொரு லட்சம் பேர்\n'தீ'யா பயிற்சி எடுத்த இந்தியாவுக்கு ஸ்லெட்ஜிங்தான்...\n\"தண்ணீர் கேட்டேன்... வாயில் சிறுநீர் கழித்தார்கள்....\nபிடிக்காத படத்திற்கு ரசிகர்கள் பணத்தை திருப்பி கேட...\nபிட் அடிப்பதிலும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்\nஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும...\nசிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ \nமார்ச் 24: உலக காசநோய் தினம்...\nஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15 ஆண்டுகளாக தொடரை இ...\n'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' பட விவகாரம்: ரஜினிகாந்த்...\nமெத்தன ப���க்கால் தாகம் தணிக்கும் பாட்டில் தண்ணீர்\n''வாகாப் ரியாஸ் அபராதத்தை நான் கட்டுகிறேன்'' லாரா ...\n'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு\nஇந்தியா- ஆஸ்திரேலியா மோதல்; பொய்யான மோடியின் கணிப்...\nகால்களில் விரல்கள் இல்லாத கப்தில்\nதென்ஆப்ரிக்க அணியின் சோகக் கதை மாறியது\nகிரிக்கெட் பார்க்க சைக்கிளில் பயணம்... சச்சின் வீட...\nவாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்\nபேசும் வார்த்தைகள் பணமாகிறது..அந்த பணம் என்ன செய்க...\n'திகில்' கிளப்பும் தென் மாவட்ட கொலைகள்\nகாதலர்களை குறிவைக்கும் கயவர்கள்...காரைக்குடியில் அ...\nநேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் ச...\nமார்ச் 17: கல்பனா சாவ்லா - விண்ணைத்தொட்ட தேவதை பிற...\nஒரு தலைவன் எப்படி பேச வேண்டும்\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nபன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம...\nநான் உனக்கு பாய் பிரண்ட்தான்...பெண் காவலரிடம் `வழி...\nகாதலியை மணந்த காதலன்... வீடு புகுந்து மகளை கடத்திய...\nபொது பிரச்னை... சச்சினின் முதல் குரல்\nமர்மமான பைக்... டெலிபோன் சீக்ரெட்...\nவிவசாயிகளின் நண்பன் நானா, கருணாநிதியா\nமார்ச் 15: ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட தினம் இன்று\nதட்டுத்தடுமாறி முதல் சதம் அடித்த அகமத்: காலிறுதியி...\nஅன்று செய்திகள் வாசித்தோம்... இன்று வாட்ஸ் அப்பில்...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nஅதிபர் தேர்தலில் தோல்வி ஏன்\nஇயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தினம் ச...\nஅப்பா பேசும் நிலையில் இருந்தால் பணத்தை வாங்கியிருக...\nமோடியை எச்சரிக்கும் ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை...\nகற்பை இழக்க விரும்பாத அருணா... தினேஷின் கண்ணை மறைத...\nவேலையில்லா பட்டதாரி - தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும்...\n'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக...\nசேவை வரி அதிகரிப்பு... துண்டு விழும் குடும்ப பட்ஜெ...\nநோயாளிக்கு இறுதிச்சடங்கு விளம்பரம்: ஃபேஸ்புக் தந்த...\nஹிந்தியில் டிப்ஸ்: பேட்ஸ்மேன்களை குழப்பும் தோனியின...\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசி...\nடூத்பேஸ்ட்டைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்\nஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்\nகிரிக்கெட் செய்த கைமாறு: வங்கதேச வீரர் மீது பாலியல...\nஎனக்கு கிடச்ச மிகப்பெரிய வாழ்த்து - மிர்ச்சி செந்த...\n��டுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்: அதிர்ச்சி ...\nகேலிக்கு இலக்கானவரை கொண்டாடும் இணையம்; நெகிழ வைக்க...\nமாதவிடாய் நாட்களில் பெண்கள் பூக்களை தொடக்கூடாதா\nஇது அந்தக் கால ‘சிங்கம்’\nசிங்கத்தை பிடரியில் அடித்து வீழ்த்தியது வங்கதேசம்\nதிருமணத்துக்கு முன்...கவனிக்க வேண்டிய 10 ஃபைனனான்ஷ...\nஅடுத்த அத்திப்பட்டியாக மாற காத்திருக்கும் கிராமங்க...\nபடிப்பு திணிப்பாக இருக்கக் கூடாது\nஇதழியல் நாயகன் 'அவுட் லுக்' வினோத் மேத்தா...\nமுடங்கி வரும் மூங்கில் கூடை விற்பனை\nபிளாஸ்டிக் கழிவுகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம...\nவரன் தேடுவதில் கிளர்ச்சி செய்த இந்துஜா\nசும்மா சும்மா வாழ்த்து சொல்லிக்கிட்டு... கடுப்பேத்...\nஓயாத’ வேலை உயிருக்கு ஆபத்தா\nநிர்பயா ஆவணப் படத்தில் பேட்டி கொடுக்க ரூ 40 ஆயிரம்...\nகீப்பர் பேட் இல்லாமல் விக்கெட்கீப்பிங் செய்த 'தல'\nபேட்டை சுழற்றினார் தோனி... இந்திய அணி அபார வெற்றி ...\nதொடரும் பள்ளி வேன் விபத்து: அலட்சியத்தில் அதிகாரிக...\nஎப்படி தட்டி கேட்க முடியும்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ளிய வ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineulagam.com/films/06/156778", "date_download": "2018-07-19T11:44:57Z", "digest": "sha1:RXKUTZSFFHDXY6IBB63KGOC5T6F3O4KO", "length": 7540, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினிகாந்த்துடன் இணைந்த பிரபல மலையாள நடிகர் - Cineulagam", "raw_content": "\nநடிகை சுனைனாவா இது, ஏன் இப்படி ஆகிவிட்டார்- கொடூரமான புகைப்படம் பாருங்கள்\nரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\nநடிகை ப்ரியங்காவின் தற்கொலைக்கு காரணமான கணவர்.... வெளியான உண்மையை....\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n நள்ளிரவு 12 மணிக்கு கொடுத்த பெரும் அதிர்ச்சி அதிர்ச்சியான மக்கள் இசை பாடகர்\nஎந்நேரமும் கேம் விளையாடிய மகன்....உலகத்தை விட்டே அனுப்பிய தந்தை\nதொகுப்பாளர் பிரியங்காவுடன் மிக நெருக்கமாக நடனமாடும் நபர் யார் தெரியுமா\nவிஜய் படத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nசர்கார் விஜய்யின் லேட்டஸ்ட் ஸ்டில் - ரசிகர்கள் மத்தியில் வைரல்\nதெய்வமகள் சீரியல் புகழ் வானி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nரஜினிகாந்த்துடன் இணைந்த பிரபல மலையாள நடிகர்\nரஜினி தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், கலையரசன், மேகா ஆகாஷ், யோகி பாபு என ஒரு பட்டாளமே களமிறங்குகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.\nபடத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைப்பெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் அதே லொக்கேஷனில் தான் நடைபெறுகிறது என்றாலும் ரஜினி சென்னை திரும்பி விட்டார். ஏனெனில் அந்த படப்பிடிப்பு வருகிற 20ம் தேதி தான் தொடங்கவுள்ளது.\nஇந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு நண்பனாக கலையரசன் நடிக்கிறார். இதேபோன்று ரஜினிக்கு நண்பனாக மலையாள ந��ிகரான பகத் பாசில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் வில்லன் விஜய் சேதுபதிக்கும், பகத் பாசிலுக்கும் இடையிலான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.\nமேலும் பகத் பாசில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adiraipirai.in/archives/3593", "date_download": "2018-07-19T11:44:31Z", "digest": "sha1:W5JDVPD7NDWZODBDYQZYXPO5B22WKKW5", "length": 11144, "nlines": 168, "source_domain": "adiraipirai.in", "title": "ஊரெல்லாம் தேர்தல் பேச்சு! நாளை விடிஞ்சா போச்சு! - Adiraipirai.in", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇந்திய தேச மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. வேட்பாளர்கள் முதல் வாக்காளர்கள் வரை அனைவரும் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று தீர்மாணிக்கும் இந்த நாளுக்காக காத்துள்ளனர். 10 ஆண்டுகாலமாக ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.க கட்சிக்கும் இத்தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது.\nமோடி அலையை நம்பி நம்பிக்கையுடன் களம் இரங்கி இருக்கும் பா.ஜ.க ஒரு பக்கம், ராகுல் காந்தியின் இளம் புரட்சியான அரசியல் வியூகத்துடனும் தொடர்ந்து இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தைரியத்துடன் களம் இரங்கியுள்ள காங்கிரஸ் மறுபக்கம், இருப்பினும் புதிய முயற்ச்சியுடனும் மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களின் ஆதரவுடன் தனியாக களம் இரங்கியுள்ள ஆம் ஆத்மி இன்னொறு பக்கம்.\nஇப்படி பல முனை போட்டியாக உள்ள நம் தேசத்தில் தேர்தல் கனிப்புகளுக்கு பஞ்சம் இல்லை. வந்த கணிப்புகள் யாவும் நம்ப முடியாத அளவிற்க்கு உள்ளன. சென்ற பாராளுமன்ற தேர்தலில் இது போன்று வெளியான கணிப்புகள் பொய்யாய் போயின. எனவே ஊடங்களின் கருத்து கணிப்புகள் மக்கள் மத்தியில் கருத்து திணிப்புகளாகவே கருதப்படுகின்றன.\nஅதுபோல் நம் தொகுதியான தஞ்சை தொகுதியில் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்களுக்கும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கு.பரசுராமன் அவர்களுக்கும் மத்தியில் கருத்துகனிப்புகளை சேகரிக்கும் போது கடும் போட்டி நிலவியதாக கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது போன்ற பல தரப்பட்ட அரசியல் சூழல்களில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. தஞ்சையில் குந்தவை நாச்சியார் கல்லூரியில் தேர்தல் முடிவுகள் எண்ணப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக ஊர் முழுவதும் பல முக்கங்களில், நண்பர்கள் சந்திப்பில், திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த அரசியல் பேச்சுக்கள் நாளையுடன் முட்டுக்கட்டை போட்டாற் போல் நின்று விடும்…….\nஆக்கம்: ஜஹபர் அலியின் மகன் நூருல் (அதிரை பிறை)\nமாநில அளவில் தடம் பதித்தது அதிரை AFCC\nபுதிய 100 ரூபாய் மாதிரியை அறிமுகம் செய்தது RBI\nஅதிரையில் குடிகாரர்களின் கூடாரமாகிய கல்விக்கூடத்தின் அவல நிலை\nஅதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன வசதி கொண்ட புதிய இணையதளம் அறிமுகம்\nஇந்திய ஹஜ் பயணிகள் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்ல தடையில்லை\nFIFA உலக கோப்பை 2018 போட்டியில் பிரான்ஸ் வெற்றி\nஅதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன...\nஅதிரையில் குடிகாரர்களின் கூடாரமாகிய கல்விக்கூடத்தின் அவல நிலை\nஇந்திய ஹஜ் பயணிகள் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்ல...\nபுதிய 100 ரூபாய் மாதிரியை அறிமுகம் செய்தது RBI\nஅதிரை ரயில்பணிகள் தொடங்க முதல் முக்கிய காரணமாக இருந்த அஹமது...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2015/07/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-07-19T11:45:25Z", "digest": "sha1:F37ULT5POPYGDGNITZUZGXO6OAGJHC7O", "length": 20138, "nlines": 297, "source_domain": "lankamuslim.org", "title": "முஸ்லிம் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடாதது ஏன் ?? | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடாதது ஏன் \nபாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்கள்தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ள நிலையில், முஸ்லிம் கட்சிகள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடாடது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதேர்தலுக்கு இன்னமும் 18 நாட்களே உள்ள நிலையில் அக் கட்சிகளிடமிருந்து தேர்தல் விஞ்ஞாபனங்கள இதுவரை வெளிவராமை குறித்து விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. “முஸ்லிம் அரசியல் கட்சிகளிடம் அரசியல் ரீதிய��ன கொள்கைகள் இருந்தால்தானே தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்க முடியும்” என்கிறார் சமூக ஆர்வலரான எஸ்.எல்.எம். ஹனிபா.\nபிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வருகின்றன.\nசில மாவட்டங்களில் ஐ.தே.முன்னணியுடன் இணைந்து தமது வேட்பாளர்களை இந்த தேர்தலில் நிறுத்தியுள்ளபோதிலும் ஒரிரு மாவட்டங்களில் இக்கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன. “இத்தகைய நிலைப்பாடு அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது” என்கிறார் முன்னாள் சேருவில உள்ளுராட்சி சபையின் தலைவரான ஏ.கே.எம். பௌஸி.\nஐ.தே. முன்னணியின் தேர்தல் அறிக்கையில் தங்களது யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் தங்களுக்கு என தனியான தேர்தல் அறிக்கை தேவை இல்லை என இந்த முஸ்லிம் கட்சிகள் கருதுகின்றன.\nஆனால், இது முஸ்லிம் கட்சிகளின் தனித்துவத்தை இழப்பதாக அமையும் என்கிறார் புத்தளத்தை சேர்ந்த பாத்திமா ஷரிக்கா. தமது கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பான அநேகமான யோசனைகள் ஐ.தே. முன்னணியின் தேர்தல் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகிறது.\nஇதன் காரணமாக தமது கட்சி தனியான தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை என அக் கட்சியின் செயலாளரான வை.எல்.எஸ். ஹமீத் தெரிவிக்கிறார். இதனால் முஸ்லிம் கட்சியின் தனித்துவம் இழக்கப்படும் என்ற விமர்சனத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.-\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« யாகூப் மேமன் தூக்கு இந்திய அரசின் திட்டமிட்ட கொலை: மேமன் வழக்கறிஞர்-Audio\nமுஜாவுடன் கோத்தாவுக்கு நெருக்கமான தொடர்புக்கு என்னிடம் ஆதாரம் உண்டு :ரஞ்சன் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்பட அவரின் அமைப்பை சேர்ந்த பலர் கைது \nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\n« ஜூன் ஆக »\nஒடுக்குமுறையில் ஈடுபட்ட எகிப்து இராணுவத்திற்கு சட்ட பாதுகாப்பு lankamuslim.org/2018/07/18/%e0… https://t.co/9fvGmEsqdk 1 day ago\nதென்கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர் தாக்கப்படுவதாக எதிரணி குற்றச்சாட்டு lankamuslim.org/2018/07/18/%e0… 1 day ago\nஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு lankamuslim.org/2018/07/18/%e0… 1 day ago\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t82729p25-3", "date_download": "2018-07-19T11:47:52Z", "digest": "sha1:XBSDOXXTIJIWGT4TUZ6UKVCRTNRBKZNE", "length": 45194, "nlines": 592, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கொலவெறி '3' - சினிமா விமர்சனம் - Page 2", "raw_content": "\nபுத்தகங்கள�� வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலா��ும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nகொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nநடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு\nஎழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்\nதயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்\nபெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.\nஆனால் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா... இருக்கத்தானே செய்யும்), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது\nஇன்னொன்று, அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய அமெச்சூர்த்தனம், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை 3-ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்\nஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.\nப்ளஸ்டூ படிக்கும் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷுக்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய். இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக் கதை.\nஎல்லோரும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் ���டம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.\nட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் செம. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்த திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.\nஅதென்னமோ தொடர்ந்து தனுஷு்ககு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்டியிருக்கிறார். இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும் பாடு... வாவ்\nநடிப்பா இயக்கமா... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல\nஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது. இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள் அம்மணி\nஇயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா\nசந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.\nஇடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை (நண்பன் ஒருவனைத் தவிர).\nஅடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது\nஅனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப் பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது.\nவேல்ராஜின் கேமரா அருமை. கோலா பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது.\nரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அருண் wrote: நாங்க காச செலவு பண்ணி 3 வதா ஒரு ஆள் சுருதி யையும் பார்த்துட்டு வந்தோம்..\nசுருதிய போட்டுட்டு ஸ்ருதிய பார்த்தா இன்னும் பெட்டாரா தெரியுதாமே அருண் நிஜமாகவா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nசுருதிய போட்டுட்டு ஸ்ருதிய பார்த்தா இன்னும் பெட்டாரா தெரியுதாமே அருண் நிஜமாகவா\n சுருதி கொஞ்சம் குறைஞ்சாலும் ஸ்ருதிய பார்க்க முடியாது..\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nசுருதிய போட்டுட்டு ஸ்ருதிய பார்த்தா இன்னும் பெட்டாரா தெரியுதாமே அருண் நிஜமாகவா\n சுருதி கொஞ்சம் குறைஞ்சாலும் ஸ்ருதிய பார்க்க முடியாது..\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nதம்பி இது பெரிய பசங்க எரியா பொ போயி அந்தபக்கம் ஜெடிக்ஸ் சேனல் பாரு\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nதம்பி இது பெரிய பசங்க எரியா பொ போயி அந்தபக்கம் ஜெடிக்ஸ் சேனல் பாரு\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nஜேன் செல்வகுமார் wrote: சரிங்க அண்ணா.........\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nதம்பி இது பெரிய பசங்க எரியா பொ போயி அந்தபக்கம் ஜெடிக்ஸ் சேனல் பாரு\n இன்னைக்கு ஜென் மாட்டி கிட்டாரு..\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n///ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@கார்த்திக்.எம்.ஆர் wrote: மயக்கம் என்ன பரவாயில்லை என்று சொல்லுவேன்..\nகொடுமைங்க.. ஸ்ருதி ஹாசன் அழுகிற காட்சிகளில் சிரிப்பு தான் வந்தது..\nஅதுவும் முதல் காட்சிக்கே சென்று 110 ரூபாய் செலவழித்த வருத்தம் வேறு.. மற்றபடி தனுஷ் நடிப்பு நன்று.. சிவ கார்த்திகேயன் என்னும் சில காட்சிகள் வந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அதி wrote: படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா\nபெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nமாணவர்களை கெடுக்கும் மகத்தான பணியை செய்யும் இந்த செம்மலுடன் இப்ப புதிய கூட்டணியாக கமலின் மகளும் சேர்ந்தில் வியப்பில்லை.\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அதி wrote: படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா\nபெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...\nஅது என்ன கூட ரா.ரா.\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அதி wrote: படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா\nபெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...\nஅது என்ன கூட ரா.ரா.\nஎன் பார்வையில் பொது இடங்களில் பெண்கள் அமைதி காப்பர் என்பதே பொதுக் கருத்து...அது மாறியதால் 'கூட' சேர்த்தேன் ஆதிரா அவர்களே...\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அதி wrote: படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா\nபெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...\nஅது என்ன கூட ரா.ரா.\nஆணாதிக்கம் ஆணாதிக்கம் - விடாதீங்க ஆதிரா - நல்லா கேளுங்க.\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அதி wrote: படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா\nபெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...\nஅது என்ன கூட ரா.ரா.\nஆணாதிக்கம் ஆணாதிக்கம் - விடாதீங்க ஆதிரா - நல்லா கேளுங்க.\nவீணா உங்க பேனா ஆதிக்கம் செலுத்தினா நா இருப்பேனா இங்க\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அதி wrote: படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா\nபெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...\nஅது என்ன கூட ரா.ரா.\nஎன் பார்வையில் பொது இடங்களில் பெண்கள் அமைதி காப்பர் என்பதே பொதுக் கருத்து...அது மாறியதால் 'கூட' சேர்த்தேன் ஆதிரா அவர்களே...\nஇந்தப் பொது கருத்துக்கு ரொம்ப வயசு ஆயிடுச்சே ரா.ரா.....\nபுதுக் கருத்து சொல்லிட்டுப் போன முண்டாசுக்காரன் பரம்பரை இல்லையா நீங்க\nமோதி மிதித்து விடு பாப்பா\nமுகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா\nஎன்று கூறிச் சென்றானே. இது பற்றி ...\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அதி wrote: படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா\nபெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...\nஅது என்ன கூட ரா.ரா.\nஆணாதிக்கம் ஆணாதிக்கம் - விடாதீங்க ஆதிரா - நல்லா கேளுங்க.\nஏற்கனவே இங்கே கொழுந்து விட்டு..... தூபம் வேறா...\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அதி wrote: படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா\nபெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...\nஅது என்ன கூட ரா.ரா.\nஎன் பார்வையில் பொது இடங்களில் பெண்கள் அமைதி காப்பர் என்பதே பொதுக் கருத்து...அது மாறியதால் 'கூட' சேர்த்தேன் ஆதிரா அவர்களே...\nஇந்தப் பொது கருத்துக்கு ரொம்ப வயசு ஆயிடுச்சே ரா.ரா.....\nபுதுக் கருத்து சொல்லிட்டுப் போன முண்டாச���க்காரன் பரம்பரை இல்லையா நீங்க\nமோதி மிதித்து விடு பாப்பா\nமுகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா\nஎன்று கூறிச் சென்றானே. இது பற்றி ...\nமுட்டாசு வார்த்தையில் பட்டாசு வெடிக்கும் காலமிதுதான்...இருந்தும் சில இடங்களில் நான் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே...\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அதி wrote: படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா\nபெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...\nஅது என்ன கூட ரா.ரா.\nஆணாதிக்கம் ஆணாதிக்கம் - விடாதீங்க ஆதிரா - நல்லா கேளுங்க.\nஏற்கனவே இங்கே கொழுந்து விட்டு..... தூபம் வேறா...\nஅவரு சாம்பிராணிப் புகைய ஆப் பண்ணி அந்தப் பக்கம் போடுங்க...\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@ரா.ரா3275 wrote: வீணா உங்க பேனா ஆதிக்கம் செலுத்தினா நா இருப்பேனா இங்க\nபடத்தில இருக்கற ஆணாதிக்கத்தைப் பார்த்து பெண்களே பொங்கிடுவாங்கன்னு தான நீங்க சொல்ல வந்தீங்க\nஅத க்ளியரா கேளுங்கன்னு ஆதிராட்ட சொன்னேன்.\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@ரா.ரா3275 wrote: வீணா உங்க பேனா ஆதிக்கம் செலுத்தினா நா இருப்பேனா இங்க\nபடத்தில இருக்கற ஆணாதிக்கத்தைப் பார்த்து பெண்களே பொங்கிடுவாங்கன்னு தான நீங்க சொல்ல வந்தீங்க\nஅத க்ளியரா கேளுங்கன்னு ஆதிராட்ட சொன்னேன்.\nஆமாமா...சரியான ஆள் கிளியர் நீங்கதான்...\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அதி wrote: படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா\nபெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...\nஅது என்ன கூட ரா.ரா.\nஎன் பார்வையில் பொது இடங்களில் பெண்கள் அமைதி காப்பர் என்பதே பொதுக் கருத்து...அது மாறியதால் 'கூட' சேர்த்தேன் ஆதிரா அவர்களே...\nஇந்தப் பொது கருத்துக்கு ரொம்ப வயசு ஆயிடுச்சே ரா.ரா.....\nபுதுக் கருத்து சொல்லிட்டுப் போன முண்டாசுக்காரன் பரம்பரை இல்லையா நீங்க\nமோதி மிதித்து விடு பாப்பா\nமுகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா\nஎன்று கூறிச் சென்றானே. இது பற்றி ...\nமுட்டாசு வார்த்தையில் பட்டாசு வெடிக்கும் காலமிதுதான்...இருந்தும் சில இடங்களில் நான் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே...\nஇது ஒரு வாததிற்குத்தான். நானும் அதே பஞ்சாங்கம் தான்.\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\n@அதி wrote: படம் பார்த்துவிட்டீர்களா ரா.ரா\nபெண்கள் கூட கத்துவார்கள்போல படம் கடித்தால்...\nஅது என்ன கூட ரா.ரா.\nஎன் பார்வையில் பொது இடங்களில் பெண்கள் அமைதி காப்பர் என்பதே பொதுக் கருத்து...அது மாறியதால் 'கூட' சேர்த்���ேன் ஆதிரா அவர்களே...\nஇந்தப் பொது கருத்துக்கு ரொம்ப வயசு ஆயிடுச்சே ரா.ரா.....\nபுதுக் கருத்து சொல்லிட்டுப் போன முண்டாசுக்காரன் பரம்பரை இல்லையா நீங்க\nமோதி மிதித்து விடு பாப்பா\nமுகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா\nஎன்று கூறிச் சென்றானே. இது பற்றி ...\nமுட்டாசு வார்த்தையில் பட்டாசு வெடிக்கும் காலமிதுதான்...இருந்தும் சில இடங்களில் நான் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே...\nஇது ஒரு வாததிற்குத்தான். நானும் அதே பஞ்சாங்கம் தான்.\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nநேற்றுதான் படம் பார்த்தேன் முதல் பாதி கியூட் லவ் இரண்டாம் பாதி ...... நோ கமெண்ட்ஸ்\nஇருந்தாலும் தனுஷை கொல்லாமல் விட்டுருக்கலாம்\nRe: கொலவெறி '3' - சினிமா விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilakkiyainfo.com/2018/07/05/", "date_download": "2018-07-19T11:29:16Z", "digest": "sha1:ESUCOL33U47MKSXSU6IIF3MP4SALUFZE", "length": 36257, "nlines": 224, "source_domain": "ilakkiyainfo.com", "title": "July 5, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் ப���ையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n’ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1)தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து ��ே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\nநிர்வாணமாக ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)ஆடைகளற்ற நிர்வாண நிலையில் உள்ள ஒருவரை அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகர் காவல் அதிகாரி ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் [...]\nவகுப்பறையில் மாணவியை தனக்கு மசாஜ் செய்ய வைக்கும் ஆசிரியர் வைரலாகும் வீடியோ\nவகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே மாணவியை வைத்து தனக்கு மசாஜ் செய்ய வைக்கும் பெண் ஆசிரியரின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. தெலுங்கானா மாநிலம்\n : 88 வயது பென்ஸ் கனவை 88வது வயதில் நிறைவேற்றிய விவசாயி…\nதமிழகத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற 80 ஆண்டு கால கனவை, தனது 88வது பிறந்தநாளில் நிறைவேற்றியிருக்கிறார். இந்த நெகிழ்ச்சியான\nயாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு\nஜீலை 5 ஆம் திகதி புலிகளினால் கரும்புலி நாளாக கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதிகளில் எழுச்சியாக நடைபெற்று வந்தன.ஆயினும் யுத்தம் முடிவடைந்த பின்னர்\nஆபாச நடனமாடிய மகள்களுக்கு தாய் கொடுத்த சன்மானம்….\nஸ்பெயின் நாட்டில், இளம் பருவத்தில் இருக்கும் சகோதரிகள் இருவரும் தங்களின் அறைக்குள்ளே பாடல் ஒன்றைப்போட்டு ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அந்த நடனத்தை அவர்க��் காணொளியாக பதிவு செய்துக்\nமூட நம்பிக்கை அன்று தொடக்கம் இன்று வரை மக்கள் மத்தியில் குறைவதாக இல்லை. இதற்கு சிறந்த எடுத்து காட்டாக காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.\nகார் விபத்தில் சிக்கிய சிறுமி – நெஞ்சைப் பதைபதைக்கவைக்கும் வீடியோ காட்சி\nஉத்தரப்பிரதேசத்தில், வேகமாக வந்த கார் முன் சிறுமி பாய்ந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், கார் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது.\nஅரசாங்கத்திற்கு இடைஞ்சலின்றி அமைச்சுப் பதவியிலிருந்து விலக விஜயகலா தீர்மானம்\nசிறுவர் விவகார இராஜாங்க அமைச்சுப்பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தான் தனது தவறை உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற\n80வது பிறந்த நாளை கொண்டாடிய வெண்ணிற ஆடை மூர்த்தி\nபிரபல காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வக்கீல் படித்த மூர்த்தி, கலை மீதுள்ள ஆர்வத்தால் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, இயக்குனர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ படத்தின்\nபிரபாகரனுக்கு பணம் – கருணாவுக்கு பதவி – இராணுவ தளபதிக்கு சிறை – விஜயகலா பற்றி பேசலாமா\nவிஜயகலா மகேஸ்வரனின் புலிகள் பற்றிய கருத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கியதேசியக் கட்சியும் அரசாங்கமும், தானும், ஜனாதிபதியும் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்\nஆவா குழுவை தேடி வேட்டை ஆரம்பம் யாழ். பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து:மன்னார், வவுனியாவிலிருந்து மேலதிக பொலிஸாரும் அழைப்பு\nயாழ். மாவட்டத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆவா குழுவை முற்றாக ஒழிக்கும் நோக்கில் விஷேட பொலிஸ் நடவடிக்கைகள்\nஇட்லித் தட்டு, இச்சு தா, குளிக்க உதவி… பிக்பாஸில் புதிய கலாட்டாக்கள் (பிக்பாஸ் சீசன் 2 : 16ம் நாள்-வீடியோ)\nஆங்கிலக் கலப்பு இல்லாமல் தமிழ் மொழியை உரையாடுதல், நீர் சிக்கனம் ஆகிய சமூகநலன் சார்ந்த இரண்டு சவால் போட்டிகள் இன்று பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்டன. சமூக\nஇலங்கையில் 37 குட்டிகளுடன் சிக்கிய ராஜ நாகம்… வைரலாகும் அதிசய காணொளி\nமுல்��ைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வ���்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் பே��ராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/tag/governor/", "date_download": "2018-07-19T11:46:50Z", "digest": "sha1:QMY2ULYZPLZHX7GBQPIKNV4BHMRVTHQN", "length": 13196, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "Governor | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"governor\"\n44 நாள்கள் கோடை விடுமுறைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) திறக்கப்படுகிறது\nஇந்திய தேசமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஆதார் விவகாரம், அயோத்தி விவகாரம், முஸ்லிம் பலதார மண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கோடைக்கால விடுமுறைக்கு பிறகு உச்ச நீதிமன்றம்...\n’ஆளுநரின் இந்த செயல் அவரது தனிப்பட்ட உள்நோக்கத்தை வெளிக்காட்டுகிறது’\nஜனநாயக நெறிமுறைகளுக்கு சவால்விடும் ஆரோக்கியமற்ற முன்மாதிரிகளை மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உருவாக்கி வருவதாக திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக...\nநிர்மலாதேவி வழக்கு: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்; முருகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி; குவியும்...\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பிஹெச்.டி. மாணவர் கருப்பசாமி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை ஏப்.27ஆம் தேதிவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணிபுரிந்து வந்த...\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nv=OVNzQ2Fmi6c&t=1065sஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\nநிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை; துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சோதனை\nபேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரியான சந்தானமும் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளார்.அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி,...\n’சர்ச்சைகளின் நாயகர் பன்வாரிலால் புரோஹித்’\nபல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக்கின்ற பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக...\nஇதையும் பாருங்கள் : ஓட விட்ட பெரியார்இதையும் படியுங்கள் : பாஜகவுக்கு வரிசைக் கட்டி வரும் பிரச்சினைகள்இதையும் படியுங்கள் : கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி –...\nநிர்மலாதேவி விவகாரம்: ‘சிபிசிஐடி கூடுதல் டிஜிபியை மாற்றியதன் பின்னணி இதுதான்’\nநிர்மலாதேவி விவகாரத்தில் நிச்சயமாக நியாயம் கிடைக்காது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை...\nஇதையும் படியுங்கள் : “செக்ஸ் ஊழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்”இதையும் பாருங்கள் : மனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படிஇதையும் படியுங்கள் : இம்சை அரசன் 24 ஆம் புலிகேசியில்...\n’உங்கள் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன்’\nபெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கோரியுள்ளார்.அருப்புக்கோட்டையிலுள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி...\n123...6பக்கம் 1 இன் 6\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/31130-2016-07-02-08-31-48", "date_download": "2018-07-19T11:35:35Z", "digest": "sha1:VCDHK4QYCKWAQ6EJAKIW5SXVXLSG7BMS", "length": 26478, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "ஒரே கல்", "raw_content": "\nநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள்\nதமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்\nஜாதி - மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணா��ிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஅலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nவெளியிடப்பட்டது: 02 ஜூலை 2016\nவருடம் 2010. செப்டம்பர் 10. வெள்ளிக் கிழமை.\nமழை சீசன் என்பதால், சொத சொதவென மழை தூறிக்கொண்டிருந்தது\nநடக்கப்போகும் விபரீதம் எதுவும் தெரியாது, அன்றும் வழக்கம்போல் நர்மதா, வயது 24, சீக்கிரமாக எழுந்து தன் அலுவலகத்திற்கு கிளம்ப ஆயத்தமானாள். ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்ல, தினமும் ஆறரை மணிக்கு வேகமாகச் செல்லும் மின்சார ரயிலைப் பிடித்தால்தான் விடி ஸ்டேஷன் சென்று அங்கிருந்து பதினைந்து நிமிடங்கள் நடந்து அலுவலகம் சென்றடைய முடியும்.\nஒருநாள் தாமதமாகச் சென்றாலும் அவளுடைய ப்ராஜெட் மானேஜர் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வான்.\nநர்மதாவின் தந்தை தன் மகளை, ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு குர்லா ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு விட்டுச் சென்றார். அப்போது காலை ஆறு பத்து. சீசன் டிக்கெட் வைத்திருக்கும் நர்மதா விடுவிடுவென ஸ்டேஷன் ஓவர் பிரிட்ஜில் ஏறி, அங்கிருந்தபடியே விடி வேக வண்டிக்கான பிளாட்பாரம் எது என்று நோட்டமிட்டாள். மூன்றாவது பிளாட்பாரம் என்று இண்டிகேட்டர் பார்த்து உறுதி செய்து கொண்டு, அதில் இறங்கி அப்போதுதான் பிளாட்பாரத்தில் மெலிதாக திரள ஆரம்பித்திருந்த கூட்டத்தினரின் நடுவே சென்று நின்று கொண்டாள்.\nஎலெக்ட்ரிக் ரயில் வேகமாக வந்து நின்றதும், நர்மதா அவசரமாக ஓடிச் சென்று லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறி, உடனே வலது கையினால் நடுவில் ஆதாரமாக இருக்கும் பெரிய கம்பியைப் பிடித்துக்கொண்டு உள்ளே உட்கார இடம் இருக்கிறதா என்று பார்த்தாள்.\n‘பம்’ என்று ஹாரன் அடித்து எஞ்சின் கிளம்பியபோது, ஒருத்தன் அசுர வேகத்தில் ஓடிவந்து நர்மதாவை கூரிய அரிவாளால் கழுத்தைச் சீவிவிட்டு எதிர் திசையில் ஓடிச்சென்று மறைந்தான்.\nநர்மதா கழுத்து துண்டாகி ரத்தம் பீறிட்டு தெறிக்க, ரயிலினுள் சரிந்து விழுந்து துடி துடித்து இரண்டு வினாடிகளில் இறந்து போனாள்.\nசக பயணிகள் அதிர்ந்துபோய் உடனே அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.\nகுர்லா வரும் மின்சார ரயில்களின் டிராபிக் நிறுத்தப்பட்டு, நர்மதாவின் உடல், அருகிலுள்ள ஹாஸ்ப��டலுக்கு அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டது.\nநர்மதாவின் அம்மா, அப்பா ஓடிவந்து அவள் பிணத்தைப் பார்த்து கதறி அழுதனர்.\nசெய்தி தீயாகப் பரவி, டி.வி.சேனல், பத்திரிகைத் துறையினர் கூடிவிட்டனர். அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்தன. சட்டசபை தேர்தலில் மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட உதிரிக் கட்சிகளிலிருந்து, லெட்டர் பேட் பொட்டல கட்சிகளும் காரசாரமாக அறிக்கைகள் வெளியிட்டன. மஹாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என ஒப்பாரி வைத்தன. பிண அரசியல் செய்தனர். எதிர்க் கட்சித்தலைவர் நர்மதாவின் வீட்டிற்கே சென்று துக்கம் விசாரித்தார். அறுபது வயதான நர்மதாவின் தந்தை மங்கள் பாண்டே அரசாங்க உத்தியோகம் பார்த்து ஒய்வு பெற்றவர். மிக உக்கிரமான சக்கரை நோயினால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்.\nகொலை ரயில்வே ஸ்டேஷனில் நடந்ததால், விசாரணை ரயில்வே போலீஸின் பொறுப்பு என்று மாநில அரசாங்கம் முதல் இரண்டு தினங்கள் மெத்தனமாக இருந்துவிட்டு, பிறகு ஹைகோர்ட் எச்சரித்தபிறகு, எட்டு வகையான போலீஸ் படையை களத்தில் இறக்கிவிட்டது. மஹாராஷ்டிர முதல்வர் நர்மதா கொலை சம்பந்தமாக எதிர்க் கட்சியின் ஏகப்பட்ட கேள்விக் கணைகளை சட்டசயையில் சமாளிக்க வேண்டியிருந்தது.\nபோலீஸ் எவ்வளவோ முயற்சி செய்தும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. மக்களும் இந்த துயரச் சம்பவத்தை மறந்து விட்டனர்.\nமகள் கொலை செய்யப்பட்ட சோகத்தில் நர்மதாவின் அம்மாவும் இறந்துவிட்டாள். மங்கள் பாண்டே தனித்து விடப்பட்டார்.\nவருடம் 2016. ஜூன் 30, வியாழக்கிழமை காலை பத்து மணி.\nகுர்லா ஈஸ்ட் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தேஷ்பாண்டே அன்றைய சாம்னா தினசரியை மேய்ந்து கொண்டிருந்தார். அப்போது தாடி மீசையுடன் ஒரு வயதானவர் தயங்கித் தயங்கி உள்ளே வந்தார். இன்ஸ்பெக்டரின் முன் அமர்ந்து, “நான் ஒரு கொலை செய்து விட்டேன். என்னைக் கைது செய்யுங்கள்” என்றார்.\nஇன்ஸ் அதிர்ந்து, “என்னது கொலையா நீங்க யாரு, உங்க பெயரென்ன நீங்க யாரு, உங்க பெயரென்ன\n“என் பெயர் மங்கள் பாண்டே...ஆறு வருஷத்துக்கு முன்னால குர்லா ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் நர்மதா என்கிற பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப் பட்டாளே...அவள் என் ஒரே மகள். அவளை கூலிப்படை வைத்து கொலை செய்தது அவள் அப்பாவாகிய நான்தான்.”\nஇன்ஸ் தேஷ்பாண்டே உடனே சுதாரித்துக்கொண்டு சுறுசுறுப்பானார். தன் அனுபவத்தினால் ஒரே கல்லில் பல மாங்காய்கள் விழச் செய்யும் புத்திசாலி அவர். ‘இவன் என் ஜாதிக்காரன். இவனை காட்டிக் கொடுக்காமல் வேறு வகையில் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா பார்க்கலாம்’ என்று நினைத்தார்.\nதவிர, இந்தக் கேஸ் குர்லா வெஸ்ட் இன்ஸ்பெக்டர் ஏக்நாத் கேல்கருக்கு போக வேண்டியது. அவர் நேர்மையானவர். நேர் கோட்டில் இந்தக் கொலைக் கேஸை முடித்து நல்ல பெயரையும் தட்டிச் சென்றுவிடுவார். பதவி உயர்வும் கிடைத்து விடலாம். அவரிடம் இவரை போக விடக்கூடாது என்று தீர்மானித்தார்.\n“ஐயா நீங்க இதப்பத்தி வேறு யாரிடமாவது சொன்னீங்களா\n“இதுவரை இல்லை. நான் தனிமையில் குற்ற உணர்ச்சியில் கடந்த ஆறு வருடங்களாக தவித்துக் கொண்டிருந்தேன். சர்க்கரை நோயினால் முழங்காலுக்கு கீழே என் வலது காலை வெட்டி எடுத்து விட்டனர். உண்மையை ஒப்புக்கொண்டு, தண்டனையை ஏற்றுக்கொள்ள இன்று நேரில் வந்துள்ளேன்.”\nதன் தொள தொள பைஜாமைவைத் மடித்து, ஜெய்ப்பூர் காலைக் காண்பித்தார்.\n“ஐயா உங்களைப் பார்த்தா ரொம்ப நல்லவரா தெரியறீங்க. நாம ஒரே ஜாதி. ஒருவேளை நாம் உறவினராகக்கூட இருக்கலாம்.... நம்ம ஜாதில ஜெயிலுக்குப் போனா ரொம்ப அவமானம். உங்க அட்ரஸை சொல்லுங்க, இன்று இரவு எட்டு மணிக்கு உங்க வீட்டுக்கு வரேன். மத்தத நாம நேர்ல பேசிக்கலாம்.”\nமங்கள் பாண்டே சற்றே குழம்பினார். பின்பு இரவு எட்டு மணிக்கு தான் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு விடைபெற்றார்.\nஇரவு எட்டு மணிக்கு சரியாக தேஷ்பாண்டே மப்டியில் மங்கள் பாண்டே வீட்டிற்கு சென்றார்.\nவீடு விஸ்தாரமாக அழகாக இருந்தது. வீட்டை ஏற இறங்கப் பார்த்த தேஷ்பாண்டே, “இவ்வளவு பெரிய வீட்டில் தனிமையாக இருக்கிறீர்களே” என்றார்.\n“ஆமாம்... இந்தத் தனிமையும், குற்ற உணர்ச்சியும்தான் என்னை வாட்டுகிறது....இந்த வீடு என் மாமனார் என் திருமணத்தின்போது எனக்கு கொடுத்த சொத்து. நான் இறப்பதற்கு முன் இதை எதாவது ஒரு அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துவிட வேண்டும்.”\n“நாம் பாண்டே வம்சம். நாம் தவறுகள் செய்ய முடியாது. எதற்காக உங்கள் மகளை கொன்றீர்கள்\n“நன்றாகச் சொன்னீர்கள்...எனக்கும் ஜாதிப்பற்று ரொம்ப அதிகம். அந்தப் பற்றினால்தான் என் ஒரே மகளையும் கொலை செய்தேன். அவள் தன்��ுடன் வேலை செய்யும் மரியசகாயம் என்கிற கிறிஸ்துவ பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தாள். அவன் தமிழ் நாட்டின் தூத்துக்குடியைச் சேர்ந்தவன். அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கவில்லை. அவனைக் கொல்லத்தான் ஸ்கெட்ச் போட்டேன். ஆனால் அதற்குள் நர்மதா அவனுடன் ஓடிவிடும் திட்டத்தில் இருந்தாள். நான் உடனே பஷீர்பாய்கிட்ட மூன்று லட்சம் பேசி நாள் குறித்து என் மகளை முடித்தேன். ஒருவேளை நான் ஜாதித்திமிர் இல்லாது பொறுமை காட்டியிருந்தால் இன்றைக்கு என் மனைவி உயிருடன் இருந்திருப்பாள். பேரன் பேத்திகளுடன் நான் சந்தோஷமாக இருந்திருப்பேன்.”\n“உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்த வயதில் நீங்கள் போலீஸ், கேஸ், கோர்ட் என்று கஷ்டப் பட நான் விடமாட்டேன். நம் ஜாதிக்காகத்தானே கொலை செய்தீர்கள் பழசை மறந்துவிட்டு நாளை முதல் என் வீட்டிற்கு வந்து விடுங்கள். நீங்கள் என் அப்பா மாதிரி. நான் உங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறேன்.”\nமங்கள்பாண்டே இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. வெடித்து அழுதார்.\nதேஷ்பாண்டே மனதில், இவ்வளவு பெரிய வீட்டை தான் எப்படியாவது எழுதி வாங்கிவிட வேண்டும்... என்கிற வெறி தலைக்கேறியது. அதை அவர் இன்னும் சில மாதங்களில் சாதித்தும் விடுவார்.\nஅன்று இரவு அவர் மனைவி, “என்னங்க நம்ம ஜாதின்னு அவரைக் காப்பாற்றப் போய் நீங்க ஏதாவது ஆபத்துல மாட்டிக்காதீங்க” என்றாள்.\n“அட போடி முட்டாள்... வீட்டை எழுதி வாங்கியவுடன், ஸ்லோ பாய்சன் எதுக்கு இருக்கு அதுக்கு முன்னால அவர் தன் மகளை கொலை செய்ததை கோர்வையாக எழுதி வாங்கி அதை நோட்டரைஸ்\n“அவர்தான் தூக்குமேடைக்கும் போகத் தயாராக இருக்கிறாரே அப்புறம் எதுக்கு எழுதி வாங்கணும் அப்புறம் எதுக்கு எழுதி வாங்கணும்\n“இவர்கிட்ட பெரிய வீடு மாதிரி, பஷீர்பாய்கிட்ட பெரிய தோட்டம் இருக்காதா என்ன\nதேஷ்பாண்டே எடுத்தது ஒரே கல்தான். ஆனாலும் பல மாங்காய்கள் சீக்கிரம் அவருக்கு விழுந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thenoos.blogspot.com/2015/12/karthigai-deepam-recipes.html", "date_download": "2018-07-19T11:31:50Z", "digest": "sha1:7GABSCVX23JEBMBTD5HLUL53PDCUTQ6S", "length": 32834, "nlines": 304, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ் , KARTHIGAI DEEPAM RECIPES.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில�� என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 2 டிசம்பர், 2015\nகார்த்திகை தீபம் ரெசிப்பீஸ் , KARTHIGAI DEEPAM RECIPES.\n1.கார்த்திகை அவல் வெல்லப் பொரி\n6.ஃப்ரூட்ஸ் & நட்ஸ் அவல்\n7.வெல்லஅவல் பால்அவல் தேங்காய் அவல்.\n1.கார்த்திகை அவல் வெல்லப் பொரி.\nதேவையானவை :- அவல் – 2 கப், வேர்க்கடலை – 1 கைப்பிடி, பொட்டுக்கடலை – 1 கைப்பிடி, தேங்காய் – சின்ன கீத்து. வெல்லம் – அரை கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன். ஏலப்பொடி – 1 சிட்டிகை.\nசெய்முறை :- வெறும் வாணலியில் வேர்க்கடலை, பொட்டுக்கடலையை வறுத்து ஒரு பௌலில் போடவும். நெய்யில் தேங்காயை சின்ன ஸ்லைசாக வெட்டி நன்கு வதக்கி க்ரிஸ்பானதும் எடுக்கவும். அவலை கொஞ்சம் கொஞ்சமாக நெய்யில் பொரித்து எடுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டிப் பாகுவைத்து அதில் ஏலப்பொடி சேர்த்து அவல் தேங்காய் வேர்க்கடலை பொட்டுக்கடலையைப் போட்டுப் புரட்டி உடனே இறக்கவும். வெல்லப்பாகு எல்லாப் பக்கமும் படுவது போல கரண்டியால் அவல் மிக்ஸரை கிளறி விடவும். லேசாக ஆறியதும் கரகரப்பாக இருக்கும் . நிவேதிக்கவும்.\nதேவையானவை :- பச்சரிசி – அரை கப், புழுங்கல் அரிசி – அரை கப், உளுந்து – ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு – அரை கப், துவரம் பருப்பு – அரை கப் மிளகு – 20, தேங்காய் – ஒரு துண்டு பல் பல்லாக நறுக்கவும். உப்பு – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை :- பச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் களைந்து ஊறவைக்கவும். பாசிப்பருப்பு துவரம் பருப்பை தனியாகக் களைந்து ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியதும் முதலில் புழுங்கல் அரிசி பச்சரிசி உளுந்தை கரகரப்பாக அரைத்து அதில் பாசிப்பருப்பு துவரம்பருப்பை சேர்த்து அரைக்கவும். மிளகைத் தட்டிப் போட்டு உப்பு சேர்த்துக் கலக்கி தோசைக்கல்லில் அடையாகத் தட்டவும். இதன் மேல் தேங்காய்ப் பல்லுகளைப் பதித்து சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வேகவைத்து இறக்கி வெல்லம் வெண்ணெயோடு நிவேதிக்கவும்.\nதேவையானவை :- நாட்டு எள்ளு – 1 கப், வெல்லம் – 1 கப். பச்சரிசி – ஒரு கைப்பிடி.\nசெய்முறை:- எள்ளைக் களைந்து காயவைத்து வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டுப் பொரிக்கவும். அரிசியை ஊறவைத்து வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும். இத்துடன் தூள் செய்த வெல்லம் நாட்டு எள்ளுப்பொரி சேர்த்து நன்கு சுற்றி சுற்றி எடுத்து உருண்டை செய்து நிவேதிக்கவும்\nதேவையானவை :- கம்பு – 1 கப். வெல்லம் – 1 கப். வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்.\nசெய்முறை :- கம்பை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு பூப்போலப் பொரிந்ததும் எடுத்துப் பொடிக்கவும். வேர்க்கடலையையும் வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். வெல்லத்தைத் தட்டிப் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு வைத்து இதில் கம்பு வேர்க்கடலை கலவையைப் போட்டுக் கிளறி உருண்டைகள் பிடித்து நிவேதிக்கவும்.\nதேவையானவை :- பொரி – 4 கப் பொட்டுக்கடலை – அரை கப், வெல்லம் – 1 கப். ஏலப்பொடி – 1 சிட்டிகை.\nசெய்முறை :- பொட்டுக்கடலையை லேசாக வறுத்து பொரியுடன் போடவும். வெல்லத்தை கெட்டிப் பாகு காய்ச்சி ஏலப்பொடி சேர்க்கவும். இதில் பொரி பொட்டுக்கடலைக் கலவையை போட்டுக் கிளறி உடனடியாக உருண்டைகள் பிடிக்கவும். நிவேதிக்கவும். . ( உருண்டை பிடிக்கும்போது கையில் ஒட்டினால் சிறிது அரிசிமாவைத் தொட்டுக் கொள்ளவும். )\n6. ஃப்ரூட்ஸ் & நட்ஸ் அவல்.:-\nதேவையானவை :- அவல் – 1 கப், ஆப்பிள் – 1 ( சின்னம் ), மாதுளை முத்துகள் – 1 கைப்பிடி, விதையில்லாத பேரிச்சம்பழம் – 4, கொப்பரை – 1 துண்டு, வறுத்த பாதாம், முந்திரி – தலா 6, தேன் – 2 டேபிள் ஸ்பூன். குங்குமப்பூ – 1 சிட்டிகை. கல்கண்டு – 1 டேபிள் ஸ்பூன். ஏலப்பொடி – 1 சிட்டிகை.\nஅவலை சுத்தம் செய்து ஒரு பௌலில் போடவும். அதில் தோலோடு துண்டுகள் செய்த ஆப்பிள், மாதுளை முத்துகள் சேர்க்கவும். வறுத்த பாதாம் முந்திரியை துண்டுகள் செய்து சேர்க்கவும். கொப்பரையை மெல்லிய ஸ்லைசாக செய்து சேர்க்கவும். கல்கண்டை சேர்க்கவும். பேரீச்சம் பழத்தை நான்காக துண்டு செய்து போடவும். ஏலப்பொடியைத் தூவவும். தேனில் குங்குமப்பூவைக் கலந்துவிட்டு மேலாக ஊற்றிக் கிளறி சிறிது நேரம் வைத்திருந்து நிவேதிக்கவும்.\n8. வெல்ல அவல், பால் அவல், தேங்காய் அவல். :-\nவெல்ல அவல் :- தேவையானவை – சிவப்பரிசி அவல் – 1 கப், நாட்டுச் சர்க்கரை – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை.\nசெய்முறை :- அவலைக் களைந்து வடிகட்டி சிறிது தண்ணீர் தெளித்து ஊறவைக்கவும். அதில் நாட்டுச் சர்க்கரை, ஏலப்பொடி தேங்காய்த் துருவல் , உப்பு கலந்து நிவேதிக்கவும்.\nபால் அவல் :- தேவையானவை :- ரோஸ் அவல் – 1 கப் , தேங்காய் – அரை மூடி. பனங்கற்க��்டு – 1டேபிள் ஸ்பூன்.\nசெய்முறை:- தேங்காயைக் கீறி பனங்கற்கண்டுடன் போட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அரை கப் பால் எடுக்கவும். ரோஸ் அவலை சுத்தம் செய்து இந்தப் பாலை ஊற்றிக் கிளறி பத்து நிமிடம் கழித்து நிவேதிக்கவும்.\nதேங்காய அவல் :- கைகுத்தல் அரிசி அவல் – 1 கப், தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன். கடுகு – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 ஆர்க், எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன்\nசெய்முறை :- கைகுத்தல் அரிசி அவலைக் களைந்து வடிகட்டி லேசாகத் தண்ணீர் தெளித்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். இதில் உப்பையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் , கருவேப்பிலை சேர்த்து வதக்கி அதில் அவல் தேங்காய்க் கலவையைக் கொட்டிக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.\n9. பொரி பூந்தி சாலட்\nதேவையானவை :- பொரி – 1 கப், காரா பூந்தி – அரை கப், துருவிய காய்கறிக் கலவை – அரை கப் ( காரட், பீட்ரூட் ), சின்ன வெங்காயம் – 1 துருவவும். கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி, மிளகு சீரகப் பொடி – கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு – சில துளிகள்.\nஒரு பௌலில் துருவிய காய்கறிக் கலவை, துருவிய வெங்காயம் பொடியாக அரிந்த கொத்துமல்லித்தழையைப் போட்டு மிளகு சீரகப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். பரிமாறும் சமயம் இதில் காராபூந்தியையும் பொரியையும் சேர்த்துக் கலக்கி உடனே பரிமாறவும்.\nதேவையானவை :- பிசினரிசி ( ஜவ்வரிசி ) – 1 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், பால் 2 கப். சர்க்கரை – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10.\nசெய்முறை :- பாசிப்பருப்பை பதமாக வேகவைத்து இறக்கவும். ஒரு வாணலியில் நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸைப் பொரித்தெடுக்கவும். அதில் மிஞ்சும் நெய்யில் பிசினரிசியைப் போட்டு வறுக்கவும். பிசினரிசி பொரிந்ததும் ஒரு கப் கொதிநீர் விட்டு வேகவைக்கவும். வேகும்போதே பாசிப்பருப்பையும் 2 கப் பாலையும் சேர்க்கவும். பிசினரிசி கண்ணாடி போல வெந்ததும் சீனி சேர்த்துக் கரைந்து கொதித்ததும் இறக்கவும். இதில் ஏலப்பொடி, முந்திரி கிஸ்மிஸ் தேங்காய்த் துருவல் கலந்து நிவேதிக்கவும்.\nடிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் 3. 12. 2015 க��முதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nடிஸ்கி 2. தீபாவளி பலகார ரெசிப்பீஸை பாராட்டி எழுதிய கம்பரசம்பேட்டை என். சாம்பமூர்த்தி அவர்கட்கும், வேலூர் சி. எஸ். ஆனந்திக்கும் மனமார்ந்த நன்றி. \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:24\nலேபிள்கள்: கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ், KARTHIGAI DEEPAM RECIPES\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ ��ட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். NAVATHANYA RECIPES\nநவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். 1. கவுனரிசி:- தேவையானவை:- கவுனரிசி - 1 ஆழாக்கு சீனி - 1/2 ஆழாக்கு துருவிய தே...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி ரெசிப்பீஸ் & கோலங்...\nகார்த்திகை தீபம் ரெசிப்பீஸ் , KARTHIGAI DEEPAM REC...\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/06/4tamilmedia_8.html", "date_download": "2018-07-19T11:39:09Z", "digest": "sha1:4XEPUFBI6C2FPKTSIZP2ERCM2SXTZXDO", "length": 19511, "nlines": 174, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "4TamilMedia செய்திகள்", "raw_content": "\nஇன்னொரு குஷ்புவாகிறார் நடிகை கஸ்தூரி\nதிருமுருகன் காந்தியின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம்\nவடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையில் உண்மைக்கு மாறான விடயங்கள்: பொ.ஐங்கரநேசன்\nநாட்டின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படுகின்றது: மஹிந்த அமரவீர\nமுஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்: ராஜித சேனாரத்ன\nஐ.நா. செயலாளர் நாயகம்- பிரதமர் சந்திப்பு\nஉலகில் எங்கும் காணமுடியாதளவு தியாகமும் மனிதாபிமானமும் இலங்கையர்களிடம் உண்டு: மைத்திரிபால சிறிசேன\nஎடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எங்களால் பாதிப்பில்லை: ஓ.பன்னீர்செல்வம்\nகுடியரசுத் தலைவர் தேர்தல் வரும் யூலை மாதம் 17ஆம் திகதி; தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஉலகளாவிய ரீதியில் இராணுவத் தளங்களை அதிகரிக்க சீனா முயல்கின்றது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு\nகத்தார் விமானசேவை போக்குவரத்து உரிமம் ரத்தானதில் திணறி வரும் சர்வதேச பயணிகள்\nஈரான் தலைநகர் டெஹ்ரானில் துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 3 பேர் பலி\nஇன்னொரு குஷ்புவாகிறார் நடிகை கஸ்தூரி\nஅரசியலுக்கு வருவதற்கு முன்பே நாட்டு அரசியலை போட்டு போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார் குஷ்பு.\nதிருமுருகன் காந்தியின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம்\nதமிழக அரசினால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ‘மே 17 இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம் ...\nவடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக���கையில் உண்மைக்கு மாறான விடயங்கள்: பொ.ஐங்கரநேசன்\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்திய குழு, சமர்பித்துள்ள அறிக்கையில் உண்மைக்கு மாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வடக்கு ...\nநாட்டின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படுகின்றது: மஹிந்த அமரவீர\nநாட்டிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்: ராஜித சேனாரத்ன\n‘முஸ்லிம் மக்கள் மீது அண்மைய நாட்களில் தாக்குதலை நடத்துபவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும். அவர்களைக் கைது செய்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்’ என்று சுகாதார அமைச்சரும் ...\nஐ.நா. செயலாளர் நாயகம்- பிரதமர் சந்திப்பு\nஅமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்றோனியோ குற்றீஸ்சை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஉலகில் எங்கும் காணமுடியாதளவு தியாகமும் மனிதாபிமானமும் இலங்கையர்களிடம் உண்டு: மைத்திரிபால சிறிசேன\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணமுடியாதளவு தியாகமும் மனிதாபிமானமும் இலங்கை மக்களிடம் காணப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஎடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எங்களால் பாதிப்பில்லை: ஓ.பன்னீர்செல்வம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுக்கு தங்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் தேர்தல் வரும் யூலை மாதம் 17ஆம் திகதி; தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதற்போதையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் யூலை மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஉலகளாவிய ரீதியில் இராணுவத் தளங்களை அதிகரிக்க சீனா முயல்கின்றது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு\nபாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இராணுவத் தளங்களை அதிகரிப்பதன் மூலம��� உலகளாவிய ரீதியில் தனது இராணுவத்தை விரிவாக்க சீனா முயற்சி செய்கின்றது ...\nகத்தார் விமானசேவை போக்குவரத்து உரிமம் ரத்தானதில் திணறி வரும் சர்வதேச பயணிகள்\nISIS உட்பட தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டின் பேரில் சவுதி அரசு தனது நாட்டில் செயற்பட்டு வரும் கத்தார் ...\nஈரான் தலைநகர் டெஹ்ரானில் துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 3 பேர் பலி\nஇன்று புதன்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மேற்கொள்ளப் பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ISIS இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. நன்கு திட்டமிட்டு ISIS போராளிகள் ...\n'சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2018-07-19T11:14:22Z", "digest": "sha1:NUKTI5FIMHUKBJS66VDAEN5U5BXRE5P4", "length": 21927, "nlines": 105, "source_domain": "annasweetynovels.com", "title": "பூந்தோட்டத்தில் காதல் கண்ணம்மா.. – Anna sweety novels", "raw_content": "\nஎன்னவெல்லாமோ சொல்லி செய்து அம்மாவை சம்மதிக்க வைத்து இந்த விடுமுறைக்கு அல்லிகுளம் வந்துவிட்டாள் மஹிமா. அது அவளது தந்தையின் பூர்வீகம். அப்பாவின் தாயார் அப்பாவிற்கு 5 வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார், இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அப்பாவின் தந்தை தன் முதல் மனைவியின் மகனை பள்ளி ஹாஸ்டல்களிலேயே வைத்து வளர்த்திருந்தார். பள்ளி விடுமுறையிலும் அப்பா செல்லுமிடம் அவரது தாய் வழி பாட்டி வீட்டிற்குதானாம்.\nஆக அப்பாவிற்கு மனதில் தன் தகப்பனாரின் மீது ஒரு வெளிப்படுத்த விரும்பாத கோபம் உண்டு. அதனால் சொந்த ஊருக்கு மிக அத்தியாவசிய தேவை என்றாலொழிய செல்வதே இல்லை. அதனால் வெறும் 100கிலோமீ��்டர் தொலைவில் உள்ள தூத்துக்குடியில் வசித்தாலும் மஹிமாவிற்கு அல்லிகுளம் விஜயம் அபூர்வத்திலும் அபூர்வம்.\nஅப்பா அப்படி விலக்கினாலும் அவரது தம்பிகள் அதாவது தாத்தாவின் இரண்டாம் மனைவியின் மகன்களுக்கு அப்பா ஒரு ஹீரோ. இவள் அவர்கள் வம்ச இளவரசி. தரையில் கால்படாமல் தாங்குவார்கள். அதனால் அவர்கள் மீது மஹிமாவிற்கு எப்போதும் அதிக ஈடுபாடு.\nஅதிலும் கடைகுட்டி சித்தப்பா அமுதன் இவளை விட நாலு வயதே மூத்தவர். மனதளவில் அவர் இவளுக்கு அண்ணனே. அதனால் கல்லூரி விடுமுறையில் அவர் அல்லிகுளம் வரும் நாட்களில் இவளுக்கும் அங்கு சென்று லூட்டி அடிக்க ஆசை.\nஇப்பொழுதுதான் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது. ஊரில் பெரியவீடு என்று இவர்கள் குடும்பத்திற்கு பெயர். காரணம் இவர்கள் ஜமீன் வம்சமாம்.\nஇன்று அதெல்லாம் பழக்கத்தில் இல்லை என்றாயினும் ஊரின் முக்கிய சொத்துக்கள் அனைத்தும் இவர்களுடையது என்பதாலும், பெரும்பாலான அல்லிகுளவாசிகள் அதில் எதாவது ஒன்றில் வேலை செய்பவர்கள் என்பதாலும் இவர்கள் குடும்பத்திற்கு இப்படி ஒரு பெயர்.\nஇன்றும் ஊரில் ஏதோ திருமணம். தாத்தா கண்டிப்பாக செல்ல வேண்டும். அப்பாவை பொறுத்தவரை அவரது சின்னம்மா எப்படியோ, இவளை அவரும் கொண்டாடுவார்தான். பெண்பிள்ளை இல்லாத அவருக்கு இவள் பிரியம். இவளும் அப்பாமா என்றுதான் அவரை அழைப்பாள்.\nஆக இன்று அந்த கல்யாணத்திற்கு தாத்தா, அப்பாமா, சித்தப்பா அமுதன் புடை சூழ மஹிமா ஆஜர்.\nமுதல் வரிசையில், அப்பாமாவிற்கும் சித்தப்பாவிற்கும் நடுவில் அமர்ந்து கொண்ட மஹிமாவிற்கு ஏதோ குறுகுறுப்பு தோன்ற அன்னிச்சையாய் அத்திசை நோக்கினாள். அவன்.\nயாரோ என்று எளிதாய் அலட்சிய படுத்த முடியாத அளவிற்கு இருந்தது அவன் வசீகரம். அவளை வருடும் அவன் பார்வை மனதிற்குள் பூபாளம்.\n வழக்கமாக இப்படி யாராவது உறுத்துப்பார்த்தால் எரிச்சல் பொங்கும் இவளுள். இதுவென்ன புதுசாய்…பூபாளம்…சங்கீதம்….\nஅவன் உடை நேர்த்தி, இவளை நேராக பார்க்கும் அவன் பார்வை, நிச்சயம் அவன் அல்லிகுளத்தை சார்ந்தவன் இல்லை என்றது.\nஅதன்பின் அவன் இருந்த புறமே மஹிமா திரும்பவில்லை.\nஅன்று மாலை இவள் விருப்பத்திற்கு இணங்க அமுதன் சித்தப்பா இவளை ஆற்றங்கரைக்கு அழைத்துப்போனார். மிக அருகில் தான் அவ்விடம் என்பதால் நடந்து தான் சென்றனர். சென்று திரும்���ும் நேரம் அல்லிகுளம் பேருந்து நிறுத்தத்தின் அருகிலிருந்த அந்த ஊர் கிணற்றை சுற்றி படு கூட்டம். என்னவாயிற்று\nசென்று பார்த்தால் ஒரு பெண் ‘ஓ’ வென கதறிக்கொண்டிருக்க பலரும் பலதும் சொல்லிக்கொண்டிருந்தனர். விஷயம் இதுதான். ஊரில் நடந்த திருமணத்திற்கு வந்த பெண்களில் ஒரு பெண், பேருந்திற்காக காத்திருந்த வேளையில் எதேச்சையாக கிணற்றை எட்டிப்பார்க்க அந்நேரம் பார்த்து அவளது கழுத்தாரம் கழன்று கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.\nபோட்டிருக்க நகையே போதாது என சொல்லும் மாமியார், உள்ளதும் தொலைந்துவிட்டது என்று சொன்னால் தொலைத்துவிடுவார் என அழுது புரண்டு கொண்டிருந்தாள் அந்த ஒல்லிப்பெண்.\nபார்க்க மஹிமாவிற்குமே பரிதாபமாக இருந்தது. ஆனால் ஊரின் அனைத்து கிணறைவிட இது படு ஆழம் என இவளுக்கும் தெரியும். பின் என்ன செய்ய முடியும்\nஅதே நேரம் அந்த அவன் அங்கு வந்தான். நீள ஷாட்ஸும், டீ சர்டுமாக வந்தவன், விஷயம் அறிந்தவுடன் தன் டீ ஷர்டை கழற்றி அருகிலிருந்த தன் நண்பணிடம் கொடுத்தவன் பலரின் எதிர்மறையான அறிவுரையையும் மீறி கிணற்றுக்குள் தொங்கிக் கொண்டிருந்த ஏற்றத்தின் கயிறை பிடித்து உள்ளே இறங்கினான்.\nகிணற்றை சுற்றி மனித கூட்டம்…கிணற்றின் உள்ளே வெளிச்சமே இல்லை. நீர் அளம்பும் சத்தம் மட்டுமே கேட்டது. 2 மணி நேரத்திற்கு பின் அந்த ஆறு பவுன் ஆரத்துடன் வெளியே வந்தான் அவன்.\nநீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் கண்கள் சிவந்திருந்ததை தவிர எந்த சோர்வும் அவனிடம் இல்லை.\nஆற்றிற்கு செல்லவென எடுத்து வந்திருந்த தன் டவலை அவனிடம் நீட்டினாள் மஹிமா. வாங்கி துடைத்துக்கொண்டவன், டவலை திரும்பி கொடுக்கும் போது மட்டும் இவள் கண்களை தன் பார்வையால் ஒரு நொடி ஊடுருவினான். அது காந்த புலம். களம் இவள் மனம்.\nநோ…. அறிவு அலராமிட முகத்தில் அலட்சிய பாவம் கொணர்ந்தாள்.\nஅவன், தன் டீ சர்டை அணிந்து கொண்டு அவ்விடத்தைவிட்டு அகன்றான்.\nஅன்று இரவு படுக்கையில் விழும்போது மனமெங்கும் அவன் ஞாபகம். அந்த வசீகர பார்வை. உதவும் குணம். அலட்டலில்லா பழகு முறை. மன கண்னில் பல முறை ஊர்வலம்.\nஅவன் இவளைப்போல இங்கு யார் வீட்டிற்கோ வந்திருக்கிறான். அல்லிகுளகாரர்கள் அனைவரும் உறவினர்கள். அந்த வகையில் அவர்களின் உறவினன் இவளுக்கும் உறவினனாகத்தான் இருப்பான். அவன் இவளுக்கு உறவினன். ம��ம் ஜிவ்வென்றது.\nஅடுத்து சில நாட்கள் இவள் நினைவுகளில் மட்டும் அவன் நடை பயின்றான். கண்களுக்கு காட்சி தரவில்லை.\nதன் ஊருக்கு திரும்பி போயிருப்பானாய் இருக்கும். சிறு ஏமாற்றமும், பெரு நிம்மதியும் அவளுள்.\nஅன்று மாலை இவளும் அமுதன் சித்தப்பாவும் இவர்களது தென்னந்தோப்பிற்கு வாக்கிங் சென்றனர்.\nசில நூறு ஏக்கர் பரப்பளவில் இருந்த தோப்பின் நடுவில் ஒரு சிறு குன்று உண்டு. குன்று என்பதைவிட மாபெரும் பாறை என்று சொல்லலாம். அதன் மீது தனக்கு பிடித்த அத்தனை விஷயங்களையும் கொண்டு சென்றிருக்கும் சாக்பீஃஸால் எழுதி வைத்துவிட்டு வருவாள் மஹிமா. அது அவள் வழக்கம்.\nஅன்றும் அதைத்தான் ஓடி ஓடி செய்து கொண்டிருந்தாள். அந்த அவனை குறித்து எழுத வேண்டும் என்று மனம் அலை பாய்ந்தாலும் பெயர் தெரியாதவனை பற்றி என்ன எழுத அதோடு சித்தப்பா என்ன சொல்வார்\n“ஏய்…..அமுதா…..என்னடா இத்தன மணிக்கு இந்த பக்கம்….\nசத்தம் கேட்க திரும்பி பார்த்தால் அந்த அவன், இவளுக்கு அண்ணன் முறை வரும் ப்ரகாஷுடன்..\nஅந்த அண்ணன் சித்தப்பாவை பார்க்க, புதியவன் இவளை.\nஅவன் முகத்தில் இவளைக் கண்டதும் வந்த உணர்வு. அவன் இவளை பார்க்க தவித்திருப்பான் போலும். திட்டமிட்டு இங்கு வந்திருக்கிறான்.\nமனதளவில் வானத்தில் பறந்தாள் மஹிமா. ஆனாலும் அவன் காண முறைத்தாள். இது வேண்டாம் மஹி என்று எச்சரித்த அறிவு காரணம்.\n“மஹிக்கு இங்க வரது பிடிக்கும்….நம்ம தோப்புக்குள்ள வேற யாரு வர போறா…. அதான் வந்தோம்…ஹலோ…நான் அமுதன் …நீங்க….” சித்தப்பா புதியவனுடன் கை குலுக்கினார்.\n“நான் நவீன்…சுதீஷ் ஃப்ரெண்ட்…..” அவ்வளவுதான் அவள் காதில் கேட்டது. சுதீஷ் ப்ரகாஷின் தம்பி என்று இவளுக்கு ஞாபகம். அடுத்து ஆண்கள் மூவருமாய் சற்று விலகி சென்று பேச …இவளுக்கு சுள்ளென்றது.\n“ஹலோ…இது என் சித்தப்பா…என் கூடதான் இருப்பாங்க…சும்மா ஆளாளுக்கு வந்து கூப்டா…”\nஅதிர்ந்து போய் பார்த்தான் நவீன். சித்தப்பாவோ முகம் கொள்ளா சந்தோஷத்துடன் “அவ அப்டிதான்….அவ இங்க இருக்க வரைக்கும் அவள தனியா விட்டுட்டு நான் வர முடியாதே….” என்றவர் இவளிடமாக திரும்பி நம்ம க்ரவுண்ட்ல நைட் மேட்ச் போடலாம், நீயும் வான்னு கூப்டுறாங்க மஹி.”\n“நோ….அதெல்லாம் முடியாது…” இவள் முடிவு அறிவித்தாள்.\n“அ…து நீங்களும் அங்க வந்து மேட்ச் பாருங்களேன்…..மேம்���.போரடிக்காது…..” அவன்\n“எங்க வீட்டு பொண்ணுங்க….ஆறு மணிக்கு மேல எங்க வீட்டு வாசல்படிகட்டுக்கே வர மாட்டோம்…ஊர்ல கேட்டு பாருங்க பெரிய வீட்டை பத்தி சொல்வாங்க…” இருந்த இல்லாத திமிரை சேர்த்து வைத்து சொன்னாள் மஹிமா.\nஇவனை இதற்குமேல் தன் மன எல்லைக்குள் அனுமதிக்க கூடாது….\nஅவள் அடுத்தபுறம் அகன்று சென்றாள்.\nதன் உடல் நடுங்குவதை உணர்ந்தாள் மஹிமா. முதன் முறை ஒருவரை இத்தனை தூரம் மனம் புண்பட பேசியிருக்கிறாள் என்பதாலா அல்லது அவனை இழக்கிறாள் என்பதாலா.. அல்லது அவனை இழக்கிறாள் என்பதாலா..\nஅடுத்து விடுமுறை முடிந்து தூத்துகுடி செல்லும்வரை அவன் ஞாபகம் அவ்வப்போது வந்தாலும், அதன் பின்பு இயல்புக்கு வந்திருந்தாள் மஹிமா.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nகாதலாம் பைங்கிளி தொடர் முடிவுறவும் “மன்னவன் பேரைச் சொல்லி ” பதிவிட முயலுகிறேன் . நன்றி\nகாதல் வெளியிடை முழு தொடர்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 16\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 15\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 14\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 13\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 12\nAfroz on மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை…\nDevi on மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை…\nDevi on மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை…\nDevi on மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை…\nDevi on மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://engalblog.blogspot.com/2014/03/blog-post_22.html", "date_download": "2018-07-19T11:21:14Z", "digest": "sha1:KXTKEPO2BKUGCCYSE5DHV2KCZGFZHCUK", "length": 42235, "nlines": 425, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\n3) பார்வை இழப்பு மற்றும் மண வாழ்வில் ஏமாற்றத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, பார்வையற்ற இசை ஆசிரியராக சாதித்து வரும், மஞ்சுளா\n) கடலில் குளிக்க இறங்கி தத்தளிக்கும் பலரையும் அலையில் பாய்ந்து கரை சேர்த்துக் காப்பாற்றும் ரியல் ஹீரோ இதுவரை இவர் கடலில் நீந்திக் காப்பாற்றியவர்கள் 300 பேருக்கும் மேல் இதுவரை இவர் கடலில் நீந்திக் காப்பாற்றியவர்கள் 300 பேருக்கும் மேல்\n5) இதய மாற்று ��ிகிச்சையாளர்களுக்கு செயற்கை இதயம் ரெடி\nLabels: எங்கள் கண்ணில்பட்டவரை கடந்தவார பாஸிட்டிவ் செய்திகள்.\nவழக்கம்போல் ஒவ்வொரு செய்திகளும் அருமை.. செயற்கை இதயம் - சூப்பர்..\nவழக்கம்போல் ஒவ்வொரு செய்திகளும் அருமை.. செயற்கை இதயம் - சூப்பர்..\nஇங்கு கைத்தறி உள்ளது போல சேலம், நாமக்கல் ஊர்களில் வீட்டுக்கு வீடு விசைத்தறி தான்... சந்திரிகா, மஞ்சுளா, வெங்கடேஷ் + மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nதடைகளை தகர்த்து படிப்பில் முன்னேறும் மஞ்சுளா ,சந்திரிகா ,மணிமேகலை மூவரும் சாதனைப் பெண்கள்தான் .\nகடற்குதிர வெங்கடேசுக்கு தள்ளுவண்டிக் கடை போடா அனுமதி தந்தால்அவருக்கும் ,மறவர்களுக்கும் நல்லது .\nசெயற்கை இதயம் எவ்வளவு ,மலிவாக இருந்தால் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nவெங்கடேசன் போன்றவர்களை தீயணைப்பு துறை போன்றவற்றில் பணியாற்ற சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்.\nஅனைத்து செய்திகளும் நம்பிக்கை தந்த செய்திகள்.....\nநம்பிக்கை தரும் பாசிட்டிவ் செய்திகள்.....\nவாழ்வில் நம்பிக்கை ஒளி தருபவர்கள் இருக்கிறார்கள் நாம்தான் குறைகளையே பூதாகாரமாக்கி அவநம்பிக்கையில் உழல்கிறோம். வாழ்த்துக்கள்\nமஞ்சுளா குறித்த செய்தியை வேறோர் இடத்திலும் படித்த நினைவு. :)) எல்லாமே அருமையான செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து பதிவிட்டு வரும் உங்களுக்கும் சேர்த்து வாழ்த்துகள்.\nசந்திரிகா போன்ற பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து, அதில் ஆர்வம் கொண்டு ,படிப்பது பெருமையளிக்கிறது.அவருக்கு என் வாழ்த்துக்கள்.\nகண்ணில்லாமல் பி.ஏ. படிக்கும் மனிமேகளிக்கும், அவர் அண்ணனுக்கும் என் வாழ்த்துக்கள்.\nஎதை இழந்தாலும், தன்னம்பிக்கை இழக்காமல் வெற்றி பெற்ற மஞ்சுளாவிற்கு என் வாழ்த்துக்கள்.மூவாயிரம் பேருக்கு மேல் காப்பாற்றிய வேங்கடஷுக்கு ஒரு சபாஷ்.\nசெயற்கை இதயம் பெரிய வரப்பிரசாதம்.\nநல்ல செய்திகள். ஐந்தாவது புதிய தகவல்.\nசந்திரிகாவின் கற்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.\nபாசிடிவ் எண்ணங்கள் வாழ வைக்கும் மணிமேகலை மற்றும் அவர் அண்ணன் இருவரையும். வாழ்க்கையில் இதே நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்.\nஇசை ஆரிரியர் மஞ்சுளா அவர்கள் தன்னம்பிக்கையை கை விடாத இசை அரசிதான்.\nஒரு தடவை காசு வாங���கிட்டோம்னு வச்சிக்குங்க... அடுத்த தடவை எவன் கடல்ல விழுவான்... தூக்கினா எவ்ளோ காசு தருவாங்கன்னு மனசு அலைய ஆரம்பிச்சிடும்’’ என்று கூறினார் வெங்கடேஷ்.//\nமற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட வெங்கடேஷ் வாழ்க\nகார்மட்' இதயம், அறிவியல் கண்டுபிடிப்பில் ஓர் அரிய வரம்\nசெய்ற்கை இதயம் அரிய வரம் தான். பசுவின் திசுமூலம் தயார் செய்வது என்றால் எப்படி\nபசுவை வதைக்காமல் திசுவை எடுத்து என்றால் நல்ல கண்டுபிடிப்பு.\nநல்ல செய்திகளை தேடி தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதிங்க கிழமை 140331:: உகாதி பச்சடி.\nபாஸிட்டிவ் செய்திகள் மார்ச் 29, 2014\nவெள்ளிக்கிழமை வீடியோ 140328 :: ஒரு தாய் மக்கள்\nஅலேக் அனுபவங்கள் - விஸ்வநாதம் (தொடர்ச்சி)\nதிங்க கிழமை 140324::மலையாள அவியல்.\nஞாயிறு 246:: கவிஞர்களே வாருங்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140321 :: டால்பின்\nஅலேக் அனுபவங்கள் - விஸ்வநாதம்.\nதிங்க கிழமை. 140317 அதை ஏன் கேக்குறீங்க\nகடந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140314:: திமிங்கிலம்\n2. முதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி...\nமுதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி அர...\nதிங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி\nஞாயிறு 244:: மோடோ ஜி\nவெள்ளிக்கிழமை வீடியோ 140307 :: தொண்டுகிழமே\nதிங்க கிழமை 140303:: வெந்தயக்கீரை உசிலி\nஞாயிறு 243 :: பார்த்தவுடன் நினைத்தது என்ன\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nவாங்க பேசலாம் :) - வாங்க பேசலாம் :) வாங்க முதலில் எங்க வீட்டு தோட்டத்தில் ரெட் கர்ரன்ட்ஸ் .(red currants ) பழங்கள் இந்த வருடத்து அறுவடையில் பறவை நட்புக்கள் சாப்பிட்டு எங்களுக...\nமாறிய காலம், மாறாத கோலம் - *மாறிய காலம், மாறாத கோலம்* சுகுமார் இரண்டாவது நாளாக பள்ளிக் கூடம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். சாதாரணமாக அப்படி சொல்லக் கூடியவன் கிடையாது. ...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒ���ு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://static.videozupload.net/page/2", "date_download": "2018-07-19T11:55:14Z", "digest": "sha1:RT6YN6IEKLI55PBNUBGYF4G2UULL2OGC", "length": 3368, "nlines": 65, "source_domain": "static.videozupload.net", "title": "VideozUpload", "raw_content": "\nசொல்வதெல்லாம் உண்மையிலிருந்து வெளியேற்றப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் | Tamil Cinema | Kollywood News\n2.0 படத்தை ஆந்திராவில் வெளியிட தடை சோகத்தில் ரஜினி | Tamil cinema news | Cinerockz\nTamil Rockers vs Tamil Cinema Troll அய்யா ….. இம்புட்டு நாளா எங்கய்யா இருந…\nநெப்போலியன் நடிக்கும் Hollywood திகில் படம் பற்றி தெரியுமா\nபுதுமண தம்பதிகளை கோவிலுக்கு அனுப்புவதன் பின்னணி என்ன தெரியுமா | Tamil Cinema News Latest Seithigal\nபெண் ஆசிரியரை நிர்வாணமாக்கி ஒரே நாளில் 10 முறை கற்பழித்த பிச்சைக்காரன் | Tamil Cinema Latest News\nகிரிக்கெட்டில் இருந்து MS Dhoni திடிர் ஓய்வு | Tamil cinema news | Cinerockz\nகோபத்துடன் வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன் திடுக்கிடும் தகவல் \nபிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி \nகல்லூரி மாணவரை மிரட்டி செக்ஸ் வைத்த Facebook ஆண்ட்டி | Tamil Cinema Latest News\n நந்தினி சீரியல் பார்த்து பரிதாபமாக உயிரை விட்ட சிறுமி Tamil Cinema News Latest\n நந்தினி சீரியல் பார்த்து பரிதாபமாக உயிரை விட்ட சிறுமி Tamil Cinema News Latest\nVJ ரம்யா யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/sme/startups-with-up-rs-10-crore-investment-will-get-tax-concess-011045.html", "date_download": "2018-07-19T11:32:24Z", "digest": "sha1:KO2AVIHI5RXI7GZ6ST5XUWWNDJUQPNRU", "length": 18015, "nlines": 179, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க முதலீடு பணத்திற்கு வரி விலக்கு அளிக்க முடிவு...! | Startups with up to Rs 10 crore investment will get Tax concession - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க முதலீடு பணத்திற்கு வரி விலக்கு அளிக்க முடிவு...\nஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க முதலீடு பணத்திற்கு வரி விலக்கு அளிக்க முடிவு...\nபிரபு நடித்த கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய விளம்பரத்திற்கு ரெட் மார்க் போட்ட வங்கி அதிகாரிகள் சங்கம்\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கதவை திறந்த மும்பை பங்குச்சந்தை..\nபிரஷ்ஷர்கள் வேலை செய்ய விரும்பும் 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்\nஸ்விகியின் அதிரடி திட்டம்.. விட்டிற்கு பால் டெலிவரி\nஸ்டார்ட்அப் முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றும் எஸ்பிஐ வங்கி..\nஉங்கள் நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்குவது எப்படி\nஸ்டார்ட்அப் துவங்கும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது..\nஇந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்குவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக 10 ரூபாய் வரை முதலீடு செய்து ஆரம்பிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த 10 கோடி ரூபாய் வரம்பானது முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மூலமாகப் பெறும் முதலீடும் அடங்கும்.\nபங்கு பிரீமியம் மீதான வருமான வரி விலக்குப் பிரிவு 56 ன் கீழ் தகுதியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளது.\nகாமர்ஸ் மற்றும் தொழில் துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏஞ்சல் முதலீட்டாளர் ஒருவர் 2 கோடி ரூபாய் அல்லது ஆண்டு வருவாய் 25 லட்சம் வரை ஸ்டார்டஅப் நிறுவனத்தில் முதலீடு செய்து பெறும் போது 100 சதவீதம் வரை முதலீட்டின் மீது வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.\nஇந்த மசோதா திருத்தங்களை ஸ்டார்ப்அப் நிறுவனங்களுக்காகச் செய்ததன் மூலம் ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்களுக்கு எளிதாக நிதியைத் திரட்ட உதவும் மற்றும் அதிக வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று தொழிலாளர் துறை அமைச்சக தெரிவித்துள்ளது.\nதொழிலாளர் துறை இந்தச் சட்ட திருத்தங்களைச் செ���்யாததற்கு முன்பு வருமான வரி சட்டப் பிரிவு 56-ன் கீழ் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்த நிதிகள் குறித்து நோட்டிஸ் அனுப்பப்பட்டு வந்துள்ளது.\nஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சலுகைகளைப் பெற இண்டர் மினிஸ்ட்ரியல் சர்ட்டிபிகேஷன் போர்டை அனுக வேண்டும். இதற்கான கெசட் அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஸ்டார்ட்அப் முதலீடுகள் வரி விலக்கு startups investment sme\nஎஸ்பிஐ வங்கியின் விவசாயிகளுக்கான கிசான் மேளா..எப்போது, சலுகைகள் என்ன\nசென்செக்ஸ் 218 புள்ளிகளும், நிப்டி 10,937 புள்ளிகளாகவும் சரிவு\nஜூன் மாத மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 5.77% ஆக உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/the-owner-of-the-dharna-had-been-in-front-of-the-hospital-with-his-dead-bull-307914.html", "date_download": "2018-07-19T11:15:25Z", "digest": "sha1:U4QJL4U6SGYSWNPG4WUZNLO2CW22H2RY", "length": 8737, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்படியுமா தர்ணா செய்வது… புதுவையில் பரபர… - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஇப்படியுமா தர்ணா செய்வது… புதுவையில் பரபர…\nதனது இறந்த மாட்டை வைத்துகொண்டு மருத்துவமனை முன்பு மாட்டின் உரிமையாளர் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு\nபுதுச்சேரி தொண்டமாநத்தம் பகுதியில் சுந்தரம் என்பவர் தனது மாட்டு பண்ணையில் உள்ள மாடுகளுக்கு புதுச்சேரி அரசு கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுள்ளார் . தடுப்பூசி போடப்பட்ட பத்து மாடுகளில் ஒரு மாடு மட்டும் மயங்கிய நிலையில் இருந்துள்ளது .\nஇப்படியுமா தர்ணா செய்வது… புதுவையில் பரபர…\nசீனியர்கள் இல்லாமல் ராகுல் உருவாக்கிய புதிய காரிய கமிட்டி-வீடியோ\nவெள்ளிக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிக்குமா பாஜக அரசு\nகொடுமையிலிருந்து தப்பி ஓடிய கணவரை பிடித்து காதை துண்டித்த மனைவி-வீடியோ\nடெல்லி அருக�� கட்டிடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலி-வீடியோ\nதாய் குளிப்பதை படம் பிடித்த நண்பனை கொன்ற வாலிபர்-வீடியோ\nநாளை தொடங்குகிறது நாடாளுமன்றம் கூட்டத்தொடர்-வீடியோ\nபுதிய 100 ரூபாய் நோட்டு மாதிரிகளை வெளியிட்டது ரிசர்வ் வாங்கி-வீடியோ\nபறக்கும் போதே திடீரென விமானம் தீ பிடித்ததால் பயணிகள் பதற்றம்-வீடியோ\nஆபாச படம் பார்த்து சிறுமியை 5 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம்-வீடியோ\n19ஆம் தேதி திருப்பதிக்கு வாங்க...பக்தர்களுக்கு ரமண தீட்சதலு பரபரப்பு அழைப்பு-வீடியோ\nபிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விபத்து-வீடியோ\nஅப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது குழந்தை-வீடியோ\nமீண்டும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தெலுங்கு தேசம் முடிவு-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109356-worst-condition-of-madurai-corporation-swimming-pool.html", "date_download": "2018-07-19T11:36:18Z", "digest": "sha1:VEH3ONRKLGVLPTHPPOZSCYHZLO2MP3W7", "length": 21934, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "சுகாதாரமற்ற நிலையில் மதுரை நீச்சல்குளம்: மீட்குமா மாநகராட்சி..? | worst condition of Madurai corporation swimming pool", "raw_content": "\n`ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\n`போட்டோவை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தீர்கள்' - மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த பள்ளி `ரஜினியின் கருத்து எங்கள் கட்சிக்கு பலத்தைச் சேர்க்கும்' - அமைச்சர் உதயகுமார் பேச்சு லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி' - மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த பள்ளி `ரஜினியின் கருத்து எங்கள் கட்சிக்கு பலத்தைச் சேர்க்கும்' - அமைச்சர் உதயகுமார் பேச்சு லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மின் கட்டணத்தை யார் செலுத்துவது' - கலாம் கட்டடத்தில் நடக்கும் மோதல் `குற்றம் செய்யாமல் ஜாலியாக ஜெயிலுக்குப் போகலாம்' - கலாம் கட்டடத்தில் நடக்கும் மோதல் `குற்றம் செய்யாமல் ஜாலியாக ஜெயிலுக்குப் போகலாம்’ - ஜெயில் டூரிஸத்துக்குப் பச்சைக்கொடி காட்டிய கேரளா `ஷூட்டி���் இடையில பார்க்க வர்றேன்'னு சொல்லியிருக்கார்’ - ஜெயில் டூரிஸத்துக்குப் பச்சைக்கொடி காட்டிய கேரளா `ஷூட்டிங் இடையில பார்க்க வர்றேன்'னு சொல்லியிருக்கார்’ - `தெய்வம் தந்த வீடு' மேக்னா ரிட்டர்ன்\nசுகாதாரமற்ற நிலையில் மதுரை நீச்சல்குளம்: மீட்குமா மாநகராட்சி..\nமதுரை காந்தி அருங்காட்சியகத்துக்கு அருகே உள்ளது 'மாநகராட்சி நீச்சல்குளம்'. ஒரு மணிநேரத்துக்கு இருபது ரூபாய், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இடம் எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் சுகாதார ரீதியாக மிகவும் பின்தங்கியே உள்ளது இந்த நீச்சல் குளம்.\nஇந்த மாநகராட்சி நீச்சல் குளத்தின் உண்மை நிலை அறிய நமது குழுவினருடன் பயணப்பட்டோம். நாம் சென்ற நேரம் மழை வேறு சாரலாகப் பெய்து சூழலை இதமாக்கியது. சரி, சாரலுடன் நீந்தலாம் என எண்ணிய நமக்கு அங்கு சென்றதுமே தூக்கிவாரிப் போட்டது. ப்ளாஸ்டிக் குப்பைகளும் காய்ந்த இலைகளும் மழை நீர், நீச்சல் குளத்து நீர் என கலந்து அழுக்கடைந்து பச்சை பசேலென்று இருந்தது. குளம்தான் இந்த லட்சணத்தில் உள்ளது என்று குளத்தில் இறங்குவதற்கு முன்பு ஷவர் பண்ணலாம் என சென்றால் அங்கு பைப்புக்கு பதில் வெறும் துளைகளே இருந்தன.அங்கிருந்தவர்களிடம் கேட்டதற்கு, ’அப்படியே இறங்குப்பா’ என நமக்குப் பெரும் அறிவுரைகள் கிடைத்தன.\nசரி, குளத்தில் இறங்கித்தான் பார்ப்போமே என இறங்கினால் எதிரி நாட்டு வீரன் கத்தியுடன் நிற்பது போல நம்மை வரவேற்றன அங்கிருந்த உடைந்த ’டைல்ஸ்கள்’. நீச்சல்குளம் நல்ல விசாலமாக இருந்தாலும் அதன் பராமரிப்பு ரொம்பவும் மோசமாகவே இருந்தது. குளத்துக்குள் இறங்கப் பயன்படும் இரும்பு படிகளோ துருப்பிடித்தும் சில படிகள் சிதறிய நிலையிலும் கைகளைப் பதம்பார்க்கும் வண்ணம் இருந்தன. சிறிது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் பாதுகாப்புக்காக ஆட்கள் தேவையான அளவுக்கு இருந்தனர்.\nஅடுத்ததாக குழத்தைகள் விளையாடும் நீச்சல்குளத்தின் நிலையோ இன்னும் மோசமாகக் காட்சியளித்தது. அங்கு நமது கனுக்கால் அளவுக்குக்கூட தண்ணீர் இல்லை. மொத்தத்தில் நன்றாக நீந்தலாம் எனப் போனால் அதன் சூழ்நிலை நம்மை இருபது நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்க விடவில்லை. இறுதியாக ஒரு டைவ் அடித்து முடித்துக்கொள்ளலாம் என எண்ணி டைவ் அடித்தோம் நாம் க��தித்த இடத்தில் பெயர்ந்திருந்த டைல்ஸ் நமது இடது காலின் நகத்தின் சிறு பகுதியை அக்குளத்தில் குளித்தற்காக பரிசாக வாங்கிக்கொண்டது.\nஒரு வழியாக எழுந்து உடைமாற்றும் அறைக்குச் சென்றோம். பெயருக்குத்தான் அந்த அறை இருந்ததே தவிர யாரும் அதற்குள் செல்லமுடியாதபடி அதன் மேற்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. நிற்கக்கூட இடம் இல்லாமல் உடைந்துபோன இரும்புப் பொருள்களும், கழிப்பறை கோப்பைகளும் நிறைந்திருந்ததன. குளத்தைவிட்டு வெளியேறி அதன் சுற்றுப்புற நடைபாதையில் இறங்கினால், \"டெங்கு நிச்சயம்\" எனப் பாராட்டு பெறும் அளவுக்கு இருந்தது அப்பகுதியின் சுகாதாரம். இந்த நீச்சல்குளத்தை நன்முறையில் பராமரித்தால் மாநகராட்சிக்கு வருவாய் லாபத்துடன், மக்களுக்கும் ஒரு பயனுள்ள விஷயமாக அமையும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு எடுத்து இதைச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nசுகாதாரமற்ற நிலையில் மதுரை நீச்சல்குளம்: மீட்குமா மாநகராட்சி..\n24 வயதில் 18 வழக்குகள் - வடசென்னை விஜியின் கதை\nகன்னியாகுமரியைப் புரட்டிப்போட்ட மழை, காற்று\n`டோக்கன், குறுஞ்செய்தி மூலம் பொருள் தரக் கூடாது' - ஆர்.கே.நகர் வணிகர்களுக்கு தேர்தல் ஆணையம் கறார் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bakrudeenali.blogspot.com/2013/10/blog-post_12.html", "date_download": "2018-07-19T11:47:47Z", "digest": "sha1:3RY6ZYERNNOZOWOPCTEXDM54BVZW2M73", "length": 11430, "nlines": 110, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "மக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது", "raw_content": "\n��க்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\nமக்காவில் ஹஜ்ஜ் புனித யாத்திரை இன்று மீனா வில் இருந்து தொடங்குகிறது. நாளை அராபா தினம் ஆகும்.\nசட்டத்திற்கு விரோதமாக அதாவது அரசு அனுமதி இல்லாமல் யாரும் ஹஜ்ஜ் செய்ய முற்படுபட வேண்டாம் என சவூதி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nஏனெனில் மக்காவில் கட்டிட விரிவாக்க வேலை நடைபெறுவதால் அதிக அளவிலான ஹாஜிகள் கூடும் போது இடையூறு ஏற்படும் என கருதுகின்றனர்.\nஇதுவரை சட்டத்திற்கு விரோதமாக மக்காவிற்குள் நுழைய முற்பட்ட 1,106 ஹாஜிகளை சிறப்பு பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது. இவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க உள்ளனர். மேலும் 593 வாகன ஓட்டுனர்களையும், 2,296 அடையாளம் தெரியாத நபர்கள் அதாவது எந்தவித சான்றும் இல்லாதவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nதாய்ப்f நகரிலிருந்து மலைக்குன்று வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்ற ஒரு நபர் காரில் சென்று கொண்டிருக்கும் போது மலை உச்சியிலிருந்து அவரது கார் கவிழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.\nபோலிஸ் அதிகாரிகள் அனைத்து வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சட்டத்திற்கு விரோதமாக நுழையும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜித்தா போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.\nகுவைத் நாட்டை சார்ந்த ஒரு நபர் குர்பானிக்கான கூப்பன்களை விற்று வந்ததை அறிந்த போலிஸ் அவரை உடனே கைது செய்து அவரிடமிருந்த 65,000 சவூதி ரியாலை கைப்பற்றினர்.\nமேலும் மக்கா நகருக்குள் யாரேனும் அல்லது எந்த கம்பனி நபர்களும் உணவு பொட்டலங்கள் கொடுத்தால அதனை வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் அப்படி சாப்பிட முற்ப்பட்டால் அந்த உணவு காலாவதி தேதியை பார்த்து சோதனை செய்து பின்னர் சாப்பிடவும், சந்தேகம் படும்படி இருக்கும் நபர்களிடமிருந்து எதுவும் வாங்கி சாப்பிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவ���்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nவிடுமுறைக்கு சொந்த ஊருக்கு போறிங்களா\n\"மோட்டு தெரிஞ்சா, உடனே கிளம்பி வீட்டிற்கு வந்து வ...\nசொந்த பந்தத்தில் திருமணம் செய்யலாமா\nமக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஆயிரத்திற்கும்...\nஹஜ்ஜை முன்னிட்டு, மக்காவிற்கு திருட்டுத்தனமாக நுழை...\nஎல்லா வகையான HP Printer க்கான மென்பொருள்களை இலவசமா...\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/72102/", "date_download": "2018-07-19T11:42:40Z", "digest": "sha1:RVSHMETVO2OQCPXX3OGWA55ZOAUEOUSF", "length": 30805, "nlines": 183, "source_domain": "globaltamilnews.net", "title": "இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் – – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் –\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் –\nஇனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா\n‘இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா’ கட்டாயப்படுத்தி சிறைச்சாலை பேரூந்திலிருந்து சங்கீதா பொலீஸாரால் கீழே இறக்கப்படும் போது தந்தையிடம் அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது இவ்வாறுதான்.தாய் இன்றி நிர்க்கதியான தனது மகள் தன்னை தன்னோடு இருங்கள் என்று ஏக்கத்தோடு கெஞ்சிய போது ஆனந்தசுதாகரின் உணர்வுகள் எப்படியிருந்திருக்கும் வார்த்தைகளால் அதனை எழுதமுடியவில்லை. மகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும் பதிலாக வழங்கிவிட்டு தலையை குனிந்து கொண்டார் அந்த தந்தை. இந்தக்காட்சிகள் அங்கிருந்த பலரின் கண்களையும் கலங்கவைத்தது.\n2008 ஆம் ஆண்டு பிலியந்தலை பேரூந்து குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக இருந்த சச்சிதானந்தம் ஆனந்தசுதாகருக்கு கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.\nஎனவே சங்கீதா பிறந்தது முதல் தனது தந்தையின் அரவணைப்பை இழந்தாள்.பத்து வயது வரை தாய் யோகராணியுடன் வாழ்ந்த சங்கீதா தனது அப்பாவை பற்றி கேட்கும்போதெல்லாம்அப்பா கொழும்பில் இருகின்றார் வருவார் வருவார் என இதுவரை ஆறுதல் சொல்லி வந்த அம்மாவும் இல்லை,\nஎனவேதான் கொழும்பிலிருந்து வந்த அப்பா என்றாலும் தங்களோடு இருக்க வேண்டும் என்பதே சங்கீதாவின் விருப்பம். ஆனாலும் பத்து வயதேயான சங்கீதாவுக்கு தனது தந்தையின் நிலைமைகள் புரியவில்லை. ஆயுள் தண்டனையின் விளக்கம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை இதனால்தான் நீங்களாவது எங்களோடு இருங்கள் அப்பா, நாளான்றைக்கு (நாளை மறுதினம்) வருவீங்கள்தானே என்ற கேள்விகள் எழுகின்றன.\n2008 ஆம் ஆண்டு ஆனந்தசுதாகர் கைது செய்யப்படும் போது சங்கீதா தாயின் கருவில் எட்டு மாத சிசு, சங்கீதாவின் அண்ணன் கனிதரனுக்கு இரண்டு வயது, இருவரும் விபரம் தெரிந்த நாள் முதல் தந்தையை சிறைக்குள்ளேயே பார்த்திருக்கின்றனர்.\nதனது கு��ந்தைகளை ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து நெற்றியில் முத்தமிட்டு பாசத்தை பரிமாற இடையில் இருந்த கம்பிகள் ஆனந்தசுதாகருக்கு தடையாகவே இருந்து வந்தன. ஏனைய பிள்ளைகள் போன்று தாங்களும் அப்பாவுடன் செல்லமாக சண்டை பிடிக்க வேண்டும், கடைக்கும் கடற்கரைக்கும் செல்ல வேண்டும், கோயில் திருவிழாவுக்கு போகவேண்டும், அங்கு அப்பாவுடன் சண்டையிட்டு விளையாட்டுப் பொருட்களை வாங்கவேண்டும், அப்பா அம்மா என எல்லோருடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட வேண்டும், பண்டிகை காலத்தில் முற்றத்தில் அப்பாவுடன் வெடி கொளுத்தி விளையாட வேண்டும்.அப்பாவின் தோளில் முதுகில் ஏறி சுற்றவேண்டும், அப்பாவின் மடியிலிருந்து சாப்பிட வேண்டும் போன்ற எல்லா ஆசைகளும் இப் பிஞ்சுகளிடமும் இருந்ன ஆனால் அரசியல் கைதி என்ற ஒரு சொல் அதனை அப்படியே குழி தோண்டி புதைத்துவிட்டது.\nசங்கீதாவின் அம்மம்மா சொன்னார் பாடசாலைக்கு ஏனைய குழந்தைகள் தங்களது அப்பாக்களுடன் வரும் போது கனிதரனும் சங்கீதாவும் ஒரு வித ஏக்கத்தோடு பார்பார்கள் என்றும் அந்த பார்வை தாங்களும் இவ்வாறு அப்பாவோடு பாடசாலைக்கு வரவேண்டும் என்பதாகவே இருக்கும் என்றும் சொன்னார். இப்படி இந்தக் குழந்தைகளிடம் எண்ணற்ற ஏக்கங்கள்.\nகடந்த 15 ஆம் திகதி தாய் இறந்த பின்பு தந்தையை அழைத்து வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுது. அதன் போது அப்பா வருவார் என்ற செய்தி அவர்களிடத்தில் கூறப்பட்ட போது தாயின் பிரிவு துயரிற்குள்ளும் குழுந்தைகளின் முகங்களில் மலர்ச்சி ஏற்பட்டதாக உறவினர்கள் சொன்னார்கள். அப்பா வரும் போது அம்மாவும் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் எண்ணியிருக்கலாம்\nமுதல் முதலாக தனது குழந்தைகளை ஆரத் தழுவி கட்டியணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் தனது மனைவின் மரணத்தில்தான் இடம்பெறும் என்று ஆனந்தசுதாகர் ஒரு போதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. தாயின் இறுதி நிகழ்வில் குழந்தைகள் இருவரும் தாயின் உடலை பார்த்த தருணங்களை விட தந்தையின் முகத்தை பார்த்த தருணங்களே அதிகம்.\nமரணச்சடங்கு நடந்துகொண்டிருக்கும் போது அடிக்கடி தந்தையுடன் சென்று ஒட்டிக்கொள்ளும் காட்சிகள் குழந்தைகளின் தந்தை மீதான ஏக்கத்தை வெளிப்படையாகவே காட்டி நின்றது\nஇறுதி ஊர்வலம் கனிதரன் கொள்ளிக்குடத்துடன் சுடுகாடு நோக்கி நடக்கின்றான். அப்போது அவனின் எண்ணங்கள் தான் திரும்பி வரும் போது அப்பா வீட்டில் இருக்க வேண்டும் என்பதே, கடவுளே நான் சுடலைக்கு சென்று திரும்பி வரும்வரை அப்பாவை வீட்டில் வைத்திரு என்று வேண்டிக்கொண்டு சென்றதாக சொன்னான்.\nஆனாலும் அவனது வேண்டுதல்கள் நிறைவேறவில்லை, அவன் வீடு வந்த போது தந்தை மீண்டும் சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இது அவனது மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. சுடுகாட்டுக்குச் சென்று ஆவலோடு திரும்பியவன் முதலில் கேட்டது அப்பா எங்கே என்றுதான். இது ஒருபுறமிருக்க\nதாயின் உடல் சுடலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்க தந்தையின் சிறைச்சாலை பேரூந்து கொழும்பு மகசீன் நோக்கி செல்ல தயாரான போது அதற்கிடையில் கிடைத்த சிறிது நேரத்தில் ஆனந்தசுதாகர் தனது மகளை அரவணைந்து மடியில் வைத்துக்கொள்கின்றார்.\nமுதன் முதலாக அப்பாவின் மடியில் அமர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு சங்கீதாவுக்கு அம்மாவின் மரணத்தில் கிடைக்கிறது. தனது மனைவியின் மரணத்தில் தனது மகளை பத்து வயதில் மடியில் இருத்திக்கொள்கின்றார் ஆனந்தசுதாகர். அப்பாவின் மடியில் இருந்துகொண்டே அவரின் முகத்தை ஏக்கத்தோடு பார்க்கின்றாள் சங்கீதா. அவளின் பார்வை அப்பாவின் மடியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகவே காணப்பட்டது.\nஅம்மா இல்லா வீட்டில் இருப்பதனை விட அப்பாவுடன் சிறைசாலையில் இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கும் என்று எண்ணியிருப்பாளோ என்னவோ ஆனந்தசுதாகர் சிறைச்சாலை பேரூந்தில் ஏற்றப்பட்ட போது சங்கீதாவும் அவருடன் பின்தொடர்ந்து அந்த பேரூந்தில் ஏறிய காட்சி உணர்வுகளின் உச்சக் கட்டமாக இருந்தது.\nஇந்தக் காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. தந்தையை பிரிய மனமில்லாத அந்தப் பிஞ்சுக்கு தாயில்லாத இந்த வெளி உலகத்தை விட தந்தையிருக்கும் சிறைச்சாலை தனக்கு மகிழ்ச்சியை தரும் என எண்ணியமை கல் மனதையும் கசிய வைத்த சம்பவமாகவே காணப்பட்டது.\nஎல்லோரும் கண்கலங்கி நிற்க எதையும் அலட்டிக்கொள்ளாதவளாக சிறைச்சாலை பேரூந்துக்குள் ஏறிவிட்டாள் சங்கீதா. சற்றும் இதனை எதிர்பார்த்திராத காவல் கடமையில் இருந்த பொலீஸாருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தங்களை சுதாகரித்துக்கொண்டு சங்கீதாவை சிறைச்சாலை பேரூந்திலிருந்து கட்டாயமாக இறக்கிவிடுகின்றனர்.\nசங்கீதா இறக்கப்படுகின்ற போது தந்தையிடம் அப்பா இனி அம்மாவும் இல்லை, நீங்களாவது எங்களோடு இருங்கள் எனவும் நாளான்டைக்கு வருவீங்கள்தானே எனவும் கேட்கும் அந்த தருணம் வேதனையின் உச்சக் கட்டமாக இருந்தது. ஆனந்தசுதாகர் மகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும் பதிலாக வழங்கி விட்டு தலையை குணிந்துகொள்கின்றார். பேரூந்து புறப்பட்டுச் செல்கின்ற போது சங்கீதா விரக்தியாய் வெறுமையாய் தெருவில் நின்றாள்.\nதனது கணவருக்கு கடந்த வருடம் ஆயுள் தண்டனை வழங்க முன் அரசின் உதவி மூலம் கிடைத்த வீட்டுத்திட்டத்தை தானும் ஒரு கூலியாளாக நின்று துவிச் சக்கர வண்டியில் சீமெந்து பைக்கற்றுக்களை சுமந்து சென்று மிகவும் கடினமாக உழைத்து வீட்டை கட்டியிருக்கின்றார் யோகராணி வீடு கட்டும் போதெல்லாம் அவர் அடிக்கடி சொல்வது கணவர் சிறையில் இருந்து வந்தவுடன் அவருக்கு எந்த வேலைகளும் வைக்க கூடாது அவர் வந்து உழைத்து பிள்ளைகளை நன்றாக பார்க்க வேண்டும் என்றே. ஆனால் கடந்த வருடம் கணவருக்கு ஆயுள் தண்டை தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் யோகராணி முற்றிலும் உடைந்து விடுகின்றார். அவரிடம் இருந்த தன்னம்பிகையும் தகர்ந்து விடுகிறது இந்த சூழலில் நோய் அவரை பலமாக தொற்றிக்கொள்கிறது. இறுதியில் கடந்த 15-03-2018 அன்று இ்நத உலகத்தை விட்டே சென்றுவிடுகின்றார்.\nஇப்பொழுது அந்த இரண்டு குழந்தைகளும் நிர்க்கதியாய் உள்ளனர். வயோதிக அம்மம்மாவுடன் அவர்களின் வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கிறது.\nசுமார் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைப்பட்டுள்ளனர். ஆனால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பலர் இன்றும் சிறைசாலைகளில் அரசியல் கைதிகளாக வாடுகின்றனர். அவர்களின் குடும்பங்களோ சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றனர். எனவே இந்த அரசியல் கைதிகளின் விடயத்தில் ஒரு இறுதி தீர்மானத்திற்கு அரசு வரவேண்டும் அதற்கான அழுதத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும், இல்லை எனில் வருங்காலத்தில் இன்னும் பல சங்கீதாக்களும், பல கனிதரன்களும், பல யோகராணிகளும் உருவாகலாம்\nமுகவரி- D4 மருதநகர் கிளிநொச்சி\nகைது – 2008 ஆம் ஆ���்டு\nசம்பவம் – 2008 ஆம் ஆண்டு பிலியந்தலை பேரூந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்\nதீர்ப்பு – 2017 -11-08, கொழும்பு மேல் நீதிமன்றினால், 93 குற்றச் சாட்டுக்கள், ஆயுள் தண்டனை\nமனைவி – ஆனந்தசுதாதகர் யோகராணி( வாணி)\nமுகவரி- D4 மருதநகர் கிளிநொச்சி மருதநகர் கிளிநொச்சி\nபிள்ளைகள் – மகன் – ஆனந்தசுதாகர் கனிதரன் வயது 12,தரம் 07 இல் கல்வி கற்கின்றார்\nமகள் – ஆனந்தசுதாகர் சங்கீதா வயது 10, தரம் 05 இல் கல்வி கற்கின்றார்\nஇருவரும் – கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றனர்\nTagsஅம்மம்மா ஆனந்தசுதாகருக்கு ஆயுள் தண்டனை சங்கீதா பயங்கரவாத தடைச் சட்டத்தின் முன்னாள் போராளிகள்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nமகிந்த அரசின் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட UK MP இயன் பெஸ்லி இடை நிறுத்தம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு ஆளுநர், பொதுச் சேவை ஆணைக்குழுவின், விண்ணப்பம் கோரும் செயன்முறைக்கு இடைக்கால தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமருடனும் எதிர்க்கட்சி தலைவருடனும் உடன்படிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில் நியாயம் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் அலோசியஸ் – கசுன் பலிசேனவின் விளக்க மறியல் மீண்டும் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்தள விமான நிலைய பேச்சுவார்த்தை, வர்த்தக கொடுக்கல் வாங்கல் மட்டுமே…\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் சத்தியப் பிரமாண நிகழ்வு\nஇந்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி காங்கிரஸ் மனு\nமகிந்த அரசின் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட UK MP இயன் பெஸ்லி இடை நிறுத்தம்.. July 19, 2018\nவடக்கு ஆளுநர், பொதுச் சேவை ஆணைக்குழுவின், விண்ணப்பம் கோரும் செயன்முறைக்கு இடைக்கால தடை… July 19, 2018\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமருடனும் எதிர்க்கட்சி தலைவருடனும் உடன்படிக்கை : July 19, 2018\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில் நியாயம் இல்லை… July 19, 2018\nஅர்ஜூன் அலோசியஸ் – கசுன் பலிசேனவின் விளக்க மறியல் மீண்டும் நீடிப்பு July 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\n���ோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaniniariviyal.blogspot.com/p/free-magazine.html", "date_download": "2018-07-19T11:39:34Z", "digest": "sha1:HS4NF5VFDKZOCLXGAH7BLBPZRBGV3CCQ", "length": 5707, "nlines": 82, "source_domain": "kaniniariviyal.blogspot.com", "title": "கணினி அறிவியல் மாணவர்களுக்காக: இலவச இதழ்கள்", "raw_content": "*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***\nஅனைத்து Back Volume Magazine னை இங்கு தரவிக்கம் செய்துக்கொள்ளாம்\nமுக்கியமான லினக்ஸ் Distribution இயங்குதளங்களை கணினியில் நிறுவ கீழ் வரும் இணைப்புகளை காணவும்.\nRED HAT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nLINUX MINT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nUBUNTU லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nDEBIAN லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nகாரைக்குடி, சிராவயல்புதூர், தமிழ்நாடு, India\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.\nஅன்பார்ந்த வாசர்களே, பதிவுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் மூலமாகவோ,மின்னஞ்சல் மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம்.\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nபொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம...\nபொத��வாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார...\nபொ துவகவே ஒரு சில நேர ங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்ய...\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nகூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது . 'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று க...\nUNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=1024:--7&catid=62:-2016", "date_download": "2018-07-19T11:16:27Z", "digest": "sha1:4OQSTM6PCIW3BKYHF3YA3JWMGSXAMIOL", "length": 23697, "nlines": 87, "source_domain": "kaviyam.in", "title": "c யாவரும் கேளிர் -7", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nமரபின் மீது மரியாதை நவீனத்தின் மீது நம்பிக்கை\nபதினைந்து வருடங்கள் இருக்கும். கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா நிகழ்ச்சி என ஞாபகம். சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர் என அவரது பெயரை அறிவிக்கிறார்கள். மலேசியர்களுக்கே உரித்தான பெரிய பெரிய பூக்கள் அச்சிடப்பட்ட, முழுக்கை ஸ்லாக் சட்டை அணிந்த அவர் மேடையேறுகிறார்.\nபரிசு பெறுபவர் முப்பத்தி ஐந்து அல்லது நாற்பது வயதுக்காரராக இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மேடையேறியவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். காதோரம் வெள்ளி முளைத்திருந்தது. ஆனால் அவர் பரிசைப் பெற்றுக்கொண்டு அரங்கத்தைப் பார்த்து முகம் மலரச் சிரித்தது வசீகரமாக இருந்தது.\nமேடையிலிருந்து இறங்கி வந்தவரின் கையைப் பற்றி இழுத்துக் குலுக்கினேன். என் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட மலர்ச்சியோடு ‘மாலனா’ என்றொரு வியப்பும் அவர் முகத்தில் ஏறிக் கலந்து கொண்டது.\nஅது முதல் சந்திப்பு. அப்போதே நான் அவரது வானத்துவேலிகளைப் படித்திருந்தேன். ஆனால் அப்போது விரிவாகப் பேசும் சூழல் இல்லை. அவரைப் பலரும் சூழ்ந்து நின்று வாழ்த்த காத்திருக்கும் நேரத்தில் விரிவாக நூல் விமர்சனம் செய்வது நாகரிகம் இல்லை எனத் தோன்றியது. நகர்ந்துவிட்டேன்.\nபின்னர் அவருக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். சிலாகித்து எழுதப்பட்ட பாராட்டுக் கடிதம் என்றதை சொல்ல முடியாது. விமர்சன வரிகளும் இருந்தன. பரிசு பெற்ற ‘ஊசி இலை மரம்’ என்ற சிறுகதையின் பொருளும், மொழியும், அமைப்பும் வானத்துவேலிகளிலிருந்து பெரிதும் மாறுபட்டிருப்பதைச் சுட்டிய அந்த அஞ்சல், அதற்குப்பின் வருடங்கள் மட்டுமல்ல, வாசிப்பும் இருக்கிறது என்று குறிப்பிட்ட ஞாபகம் இருக்கிறது.\nபிறகு கடிதங்கள் பரிமாறிக் கொண்டோம். அந்தக் கடிதங்கள் எனக்கு மலேசிய இலக்கியங்களின் அறிமுகமாக அமைந்தன. சண்முக சிவா, சீ.முத்துசாமி, கோ.புண்ணியவான் போன்றவர்களது எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாகக் காரணமாக இருந்தவர் ரெ.கார்த்திகேசுதான்.\nமலேசிய இலக்கிய வரலாற்றை எழுதும் வாய்ப்பைப் பல தருணங்களில் பெற்றவர் ரெ.கார்த்திகேசு. சிங்கப்பூரில் நடந்த உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு, கோவையில் நடந்த தாயகம் கடந்த தமிழ் மாநாடு, சாகித்ய அகாதெமி வெளியிட்ட இலக்கிய வரலாறு நூலில் மலேசிய இலக்கிய வரலாற்றுப் பகுதி, இவை தவிர மலேசிய இலக்கியம் குறித்து மலேசியாவில் வெளியான பல நூல்கள், கருத்தரங்கக் கட்டுரைகள் எனப் பலமுறை அவர் மலேசிய இலக்கிய வரலாறு பற்றி எழுத அழைக்கப்பட்டிருக்கிறார்.\nஇதுபோன்ற வாய்ப்புப் பெற்றவர்கள் செய்யும் பாரபட்சமான செயல்கள் இலக்கிய வரலாறு நெடுக இறைந்து கிடக்கின்றன. புதுமைப்பித்தனைக் கொண்டாடுபவர்கள் கல்கியை இருட்டடிப்புச் செய்வார்கள். க.நா.சு வெளியிடும் பட்டியலில் பெரும்பாலும் இடதுசாரி எழுத்தாளர்கள் இடம் பெற மாட்டார்கள். சுந்தர ராமசாமி குழுவினர் வைரமுத்துவையோ, கண்ணதாசனையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கசடதபற மரபில் வந்தவர்கள் வானம்பாடிகளை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வைரமுத்து ஒருமுறை சொன்னதுபோல, என் ரசிகர்கள் என் இருமலைக் கூட சங்கீதம் என்பார்கள். என் விமர்சகர்கள் என் சங்கீதத்தைக் கூட இருமல் என்பார்கள். இது இலக்கிய உலகில் நெடுநாளாக இருந்து வரும் வியாதி. தமிழகம் அளவிற்கு இல்லை என்றாலும் மலேசியாவிலும் பல இலக்கியக் குழுக்கள் உண்டு. எழுத்தாளர்களிடையே மனவேறுபாடுகள் உண்டு. ஒருவர் புகழ் பெற்றவராக இருப்பது ஒன்று மட்டும் போதுமே மாச்சரியம் ஏற்படுவதற்கு. அதுவும் ரெ.கா. மலேசியாவிற்கு அப்பாலும் அறியப்பட்ட எழுத்தாளர். சில எழுத்தாளர்களுக்கு அவர் மீதும், எல்லா எழுத்தாளர்களைப் போலவே அவருக்கும் சில மலேசிய எழுத்தாளர்களோடு முரண்பாடுகள் இருந்ததுண்டு. ஆனால் அவர் வரலாறு எழுத வாய்ப்புக் கிடைத்த தருணங்களில், குறிப்பாக அயலகத்தில் மலேசிய இலக்கியத்தை அறிமுகப்படுத்தக் கிடைத்த வாய்ப்புகளில் அவர் யாரையும் இருட்டடிப்புச் செய்ததில்லை. ஒதுக்கி வைத்ததில்லை. ஓரங்கட்டியது இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்களை விட்டுக்கொடுக்காமல் கூடப் பேசுவார். இதற்கு ஒரு விசால மனம் வேண்டும்.\nநானும் அவரும் சில போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்து படைப்புக்களைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். புதிதாக எழுதுகிறவர்கள், குறிப்பாக இளைஞர்கள் மீது அவருக்கு தனிப் பரிவு உண்டு. மலேசிய இலக்கியம் புதிய பொருளில், புதிய நடையில் புதிய வடிவில் எழுதப்பட வேண்டும் என்ற பார்வை அவருக்கு இருந்தது. அந்த உந்தல்தான் பாலமுருகன் என்ற இளம் எழுத்தாளர் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ என்ற நாவலை அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசுக்குரியதாகத் தேர்வுசெய்ய அடிப் படையானது.\nமலேசிய இலக்கியம் புதிய பரிமாணங்களைப் பெறவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அவர் மலேசிய தமிழ் எழுத்தின் யதார்த்தங்களையும் அறிந்திருந்தார். தமிழக எழுத்துக்களின் தாக்கத்தில்தான் மலேசிய இலக்கியம் எழுந்தது. மு.வ. அகிலன் எழுத்துக்கள்தான் ஆரம்ப கால எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தன. இன்று அந்த ஆதர்சம் வேறு சில எழுத்தாளர்களாக இருக்கலாம். மலேசிய இலக்கியத்தின் டி.என்.ஏ (ஞிழிகி) தமிழக எழுத்துலகிலிருந்துதான் பெறப்பட்டது என்ற தெளிவையும் அவர் பெற்றிருந்தார்.\nமரபின்மீது மரியாதையும் நவீனத்தின்மீது நம்பிக்கையும் கொண்டிருந்த அவரது மனதை அவரது கதைகளில் மட்டுமல்ல செயல்களிலும் பார்க்கலாம். கணினியில் தமிழ் மின்னஞ்சல் வாய்ப்பு களையும், இணையத்தில் தமிழ் புழங்கும் வசதிகளையும் ஏற்படுத்தித் தந்த நாடு மலேசியா. ஆனால் மலேசியர்களில் பலர் மின்னஞ்சல், இணைய இதழ்கள், வலைப்பூக்களுக்கு வரக் காலம் பிடித்தது. அதிலும் கார்த்திகேசு தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இப்போதும் மின்னஞ்சல் எழுதுவதையே ஒரு சாதனையாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள். ஆனால் கார்த்திகேசு தனது நூல்களை மின்னூலாக வெ��ியிடும் நவீனத் தொழில் நுட்பம்வரை ஆர்வம் காட்டினார்.\nஅவரது ‘நாளைக்கு’ என்ற சிறுகதைத் தொகுதியை என்னுடைய திசைகள் (ஷ்ஷ்ஷ்.tலீவீsணீவீரீணீறீ.வீஸீ) மின்னூலாக வெளியிட்டது. அதன் முன்னுரையில் அவர் எழுதுகிறார்; ‘மாலனும் நானும்கூட பழைய தலைமுறைக்காரர்கள் தான். அச்சிட்ட நூல்களின் மேல் பாசம் மிக்கவர்கள். அவற்றை அணைத்தும் முகர்ந்தும், நுகர்ந்தும் வளர்ந்தவர்கள். அவற்றை உயிராய் மதித்தவர்கள். அவற்றை நிராகரிக்க இன்றும் மனம் இல்லாதவர்கள். இருந்தும் என்ன காலவெள்ளமும் உண்மையான நீர்வெள்ளமும் நம் காலம் முடிந்து புதிய காலம் பிறக்கிறது என்பதை உணர்த்தியவாறே இருக்கின்றன. நாம் தலை வணங்காமல் இருக்க முடியுமா காலவெள்ளமும் உண்மையான நீர்வெள்ளமும் நம் காலம் முடிந்து புதிய காலம் பிறக்கிறது என்பதை உணர்த்தியவாறே இருக்கின்றன. நாம் தலை வணங்காமல் இருக்க முடியுமா ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டெழுதிய பெரும் புலவர்களும், அவர்களுடைய மாணவர்களும் அச்சின் தொடக்கத்தில் இப்படித்தான் கவலைப்பட்டிருப்பார்கள். ஆனால் காலம் அதனை இயல்புப் படுத்திவிடவில்லையா\nநற்பேறாக நானும் கையெழுத்திலிருந்து கணினி எழுத்துக்கு உரிய காலத்தில் மாறினேன். முதலில் நன்றி சொல்ல வேண்டியது கணினிக் கலைஞர் முத்துநெடுமாறனுக்குத்தான். நான் அவருடைய முரசு அஞ்சல் மென்பொருளைப் பயன்படுத்திய முதல் தனியார் வாடிக்கையாளன் என்று அவர் எனக்கு மேடையில் பரிசு வழங்கினார் (2015). பெருமையாகவும் இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. அவர் எனக்குக் கணினி எழுத்தறிவித்தவர். நானல்லவா அவருக்கு ‘குரு தட்சணை’ வழங்கியிருக்க வேண்டும்\nஇப்போது மாலன் என்னுடைய சிறுகதைகளை மின்னூலாகப் பதிப்பிக்கிறார். இதுவும் ஒரு புதிய தொடக்கமே. ஒரு காசும் செலவில்லை. (மறைமுகச் செலவுகள் இருக்கும், மறுக்கவில்லை). எளிய முறையில் காரியம் நடக்கிறது. தூரம் ஒரு பொருட்டல்ல. இந்தியாவின் சென்னையில் உள்ள அவரை மலேசியாவின் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள நான் சென்று பார்க்கவேண்டிய அவசியம் ஏதுமில்லை. என் வீட்டில் அமர்ந்தவாறே மின்னஞ்சலில் தொகுத்து அனுப்புகிறேன். அவர் கணினியின் முன்னமர்ந்தவாறே தொழில் நுணுக்கத் தேவைகளைக் கவனிப்பார். எல்லாம் முடிந்தவுடன் ‘பதிப்பி’ என்று கணினிக்குக் கட்டளை அனுப்புவார���. அது பதிப்பிக்கும். உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் உடனே அதனைப் பெற்றுப் பார்க்கலாம். என்ன ஓர் அதிசய உலகம் இப்போது நம் கையில் இருப்பது அதிசய விளக்கு. கணினியின் முன் நாம் எல்லாருமே அலாவுதீன்கள்.\nமலேசிய எழுத்தாளர் சங்கம் ரெ.கார்த்திகேசுவின் பெயரில் இந்தாண்டு முதல் நிறுவியுள்ள சிறுகதைப் பரிசை நடுவராகக் கடமையாற்றித் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. அதன் பொருட்டும், நாவல் பயிலரங்கு நடத்தவும், நான் செப்டம்பர் மாத இறுதியில் மலேசியா சென்றிருந்தேன்.\nஅப்போது அவர் உடல் நலம் குன்றியிருப்பதாக செய்தி அறிந்து அவரை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தேன். அவர் சொன்னார்; ‘தெளிவாகப் புரிகிறது மாலன். உடல், மனம், ஆத்மா என்ற வேறுபாடுகள் புரிகின்றன. உடலுக்குத்தான் வலி. ஆனால் மனம் நிறைவாக இருக்கிறது. என் மகிழ்ச்சிக்கு குடும்பம், நான் பார்த்த பணிகள், என் எழுத்து, உங்களைப் போன்ற நண்பர்கள் எல்லோரும் காரணமாக இருந்திருக்கிறீர்கள். வாழ்க்கை எனக்கு நல்ல பரிசுகளையே அளித்து வந்திருக்கிறது’\nஅவர் வீட்டை விட்டு வெளியேறி வந்தபோது என் மனதில் ஒரு வரி ஓடி மறைந்தது. மனதால் வாழ்தலன்றோ வாழ்க்கை.\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.padasalai.net/2018/02/tntet.html", "date_download": "2018-07-19T11:36:53Z", "digest": "sha1:37IVZULSNEND74CT6RCT7T5HXBVRPKKI", "length": 13528, "nlines": 453, "source_domain": "www.padasalai.net", "title": "TNTET : ஆசிரியர் பணி நியமனங்களில் வெய்ட்டேஜை தொடர தமிழக அரசு முடிவு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nTNTET : ஆசிரியர் பணி நியமனங்களில் வெய்ட்டேஜை தொடர தமிழக அரசு முடிவு\nஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர தமிழக அரசு முடிவு\nதமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டது. வெயிட்டேஜ் முறைக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால், அந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nவெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததையடுத்து வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஎனினும், ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் இருக்குமா அல்லது வெயிட்டேஜ் முறையே தொடருமா அல்லது வெயிட்டேஜ் முறையே தொடருமா என்ற குழப்பம் நிலவி வந்தது.\nஇந்நிலையில், ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் முறையை தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும். அத்துடன், 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் படிப்பு மதிப்பெண்கள் சேர்த்து கணக்கிடப்பட்டு தரவரிசை தயாரிக்கப்படும்.\nவெயிட்டேஜ்யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சொன்னாரே இது தான் அதுவா,, இந்த பாவம் அவர்களை சும்மா விடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/05/tamil-news-online-tamil-news_7.html", "date_download": "2018-07-19T11:21:33Z", "digest": "sha1:NKOY6VJAMW35WMUO36DKYLAW73HQSC7G", "length": 25372, "nlines": 171, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\nகொளுத்தும் வெயிலில் உச்சகட்ட பிரசாரம்...இன்னும் ஆறே நாள் ஓட்டுப்பதிவிற்கு எல்லா ஏற்பாடுகளும் தயார்\nஉ.பி. மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உணவுக்கு... பஞ்சம் 2 ஆண்டுகளாக பொய்த்த பருவமழை\nபிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால்...கேள்வி சோனியாவை கைது செய்யாதது ஏன் என்கிறார்\nநான்கு சுவர்களுக்குள் முடங்கிய ஜெ., அரசு: மதுரையில் ராகுல் சாடல்\nகட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது: மதுரையில் ஸ்டாலின் உறுதி\nதமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான கவுன்ட் டவுன்... துவக்கம்\nஅட்சய திருதியை தங்கம் விற்பனை தேர்தல் ஆணைய கெடுபிடியால் 'டல்'\nபொதுப்பணி துறை திட்டங்க���் முதல்வர் ஜெயலலிதா பட்டியல்\nகொளுத்தும் வெயிலில் உச்சகட்ட பிரசாரம்...இன்னும் ஆறே நாள் ஓட்டுப்பதிவிற்கு எல்லா ஏற்பாடுகளும் தயார்\nதமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு பெற, இன்னும் ஆறு நாட்களே உள்ளன. அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்வதில், தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதி களிலும், 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்று காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு, இன்னும் எட்டு நாட்களே உள்ள தால், அனைத்து கட்சி தலைவர்களும், தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். சுயேச்சை ...\nஉ.பி. மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உணவுக்கு... பஞ்சம் 2 ஆண்டுகளாக பொய்த்த பருவமழை\nமஹோபா: நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், உ.பி., மாநிலம், புந்தேல்கண்ட் பகுதியில், வறட்சி பாதிப்பு மிக மோசமாகியுள்ளது. 'பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டும்' என அங்கு ஆய்வு செய்துள்ள தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததாலும், 'எல் நினோ' எனப்படும் பருவநிலை மாறுபாட்டின் தாக்கத்தாலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப் பட்டவையாக, ஏற்கனவே ...\nபிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால்...கேள்வி சோனியாவை கைது செய்யாதது ஏன் என்கிறார்\n''ஊழல் செய்தவர்களை, சிறைக்கு அனுப்புவேன் எனக் கூறி, ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கியுள்ள சோனியாவை கைது செய்வதற்கு தைரியம் உள்ளதா,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோருக்கு இதில் தொடர்புள்ளதாகவும், பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து, இந்த ...\nநான்கு சுவர்களுக்குள் முடங்கிய ஜெ., அரசு: மதுரையில் ராகுல் சாடல்\nமதுரை, :''நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு, தமிழகத்திற்கு தேவையில்லை. தமிழகத்தில் எல்லா மட்டங்களிலும் ஊழல் மலிந்துள்ளது,'' என, மதுரையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய காங்., துணை தலைவர் ராகுல் சாடினார்.\nஅவர் பேசியதாவது:அரசியலில் இரு வகை தலைவர்கள் உள்ளனர். ஒரு வகை தலைவர்கள், கடலை நோக்கி செல்லும் ஆறுகளை போல மக்களை நோக்கி செல்லக் கூடியவர்கள்; மக்களுடன் கலந்துரையாடுவர். அவர்களிடம் இருந்து பிரச்னைகளை தெரிந்து கொள்வர்; மக்களிடம் செல்லும் போது பலவற்றை தலைவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.மற்றொரு வகை தலைவர்கள், ...\nகட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது: மதுரையில் ஸ்டாலின் உறுதி\nமதுரை,:''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.\nகாங்.,- தி.மு.க., கூட்டணி சார்பில் மதுரை மேனந்தலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:நானும், ராகுலும் ஒரே சிந்தனை உள்ளவர்கள். என்னை பொறுத்தவரை தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். அவரை பொறுத்தவரை சகோதர மனப்பான்மை நிலவ நினைப்பவர். காங்.,- தி.மு.க., இணைந்து மத்தியிலும், மாநிலத்திலும் பல திட்டங்களை, சாதனைகளை நிகழ்த்தின. ஜனாதிபதி தேர்வு, பிரதமரை உருவாக்கியது, பொருளாதாரத்தை தலைநிமிர செய்தது, நல்லாட்சி, மதசார்பற்ற ஆட்சி ...\nதமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான கவுன்ட் டவுன்... துவக்கம்\n'தினமலர் - நியூஸ் 7' நடத்திய கருத்துக்கணிப்பின் இறுதி முடிவுகளை, இன்று வெளியிடு கிறோம். இந்த முடிவுகள், ஒரு புதிய அரசியல் சூழல் நோக்கிய நகர்வை முன்னிலைப் படுத்துகின்றன.\nஅந்த நகர்வின் தாக்கம், இந்த தேர்தலில் ஓரளவிற்கு தெரியும் என்றாலும் இரு திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தையும் உடைக்கும் அளவிற்கான வேகத்தை பெறவில்லை. ஆனால், தமிழக கட்சிகளின் சுதந்திர போக்கு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு உழைப்போடு தொடருமானால், நிச்சயம் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.இந்த மாற்றத்திற்கான அறிகுறி, கருத்துக் கணிப்பு புள்ளி விவரங்களின் மூன்று அம்சங்களில் இருந்து ...\nசென்னை: தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.,ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.\nதாம்பரம் தொகுதி வேட்பாளர் எஸ். ஆர். ராஜாவை ஆதரித்துதி.மு.க.,தலைவர் கருணாநிதி தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பேசியதாவது:தமிழக மக்கள் தி.மு.க.., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் எனவிரும்புகின்றனர். இது நடக்க வேண்டுமானால் தொண்டர்கள் அயராது உழைத்து தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கடசி வேட்பாளர்களை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.. இவ்வாறு அவர் பேசினார். ...\nஅட்சய திருதியை தங்கம் விற்பனை தேர்தல் ஆணைய கெடுபிடியால் 'டல்'\nதேர்தல் ஆணைய கெடுபிடிகளால், நடப்பாண்டு அட்சய திருதியைக்கு, தங்கம் விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் உள்ள, 35 ஆயிரம் நகை கடைகளில், தினமும் சராசரியாக, 1,000 கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன. 'தீபாவளி மற்றும் அட்சய திருதியை சுப தினங்களில், தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும்' என்ற எண்ணம், சில ஆண்டுகளாக, தமிழக மக்களிடம் நிலவி வருகிறது. தங்க நகை கடைகளும், வாடிக்கையாளர்களை கவர, சுப தினங்களில், குறைந்த செய்கூலி, தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கும். இதனால், தங்கம் வாங்க பலரும், நகை கடை களுக்கு சென்று முன்பதிவு ...\nபொதுப்பணி துறை திட்டங்கள் முதல்வர் ஜெயலலிதா பட்டியல்\nசென்னை:பொதுப்பணித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை ஆகியவற்றில், 110வது விதியின் கீழ் அறிவித்து, நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் விவரத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.\nஅவரது அறிக்கை:ஐந்தாண்டு காலத்தில், சட்டசபையில், 110வது விதியின் கீழ், பொதுப்பணித் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை சார்பில் நிறைவேற்றிய திட்டங்களின் விவரங்கள் வருமாறு:பொதுப்பணித் துறை* காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நீர்வள அமைப்புகளைவலுப்படுத்தி, ...\n'சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித ���ரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/movie-review/56824-pasanga-movie-review.html", "date_download": "2018-07-19T11:42:04Z", "digest": "sha1:HVAK4HTICUL44UILRZ3N5UOHJVLCCA5Q", "length": 27030, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறதில்லை... கேட்ட வார்த்தையைத்தான் பேசுறாங்க! பசங்க 2 - விமர்சனம்! | Pasanga 2 Movie Review!", "raw_content": "\n`ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\n`போட்டோவை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தீர்கள்' - மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த பள்ளி `ரஜினியின் கருத்து எங்கள் கட்சிக்கு பலத்தைச் சேர்க்கும்' - அமைச்சர் உதயகுமார் பேச்சு லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி' - மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த பள்ளி `ரஜினியின் கருத்து எங்கள் கட்சிக்கு பலத்தைச் சேர்க்கும்' - அமைச்சர் உதயகுமார் பேச்சு லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மின் கட்டணத்தை யார் செலுத்துவது' - கலாம் கட்டடத்தில் நடக்கும் மோதல் `குற்றம் செய்யாமல் ஜாலியாக ஜெயிலுக்குப் போகலாம்' - கலாம் கட்டடத்தில் நடக்கும் மோதல் `குற்றம் செய்யாமல் ஜாலியாக ஜெயிலுக்குப் போகலாம்’ - ஜெயில் டூரிஸத்துக்குப் பச்சைக்கொடி காட்டிய கேரளா `ஷூட்டிங் இடையில பார்க்க வர்றேன்'னு சொல்லியிருக்கார்’ - ஜெயில் டூரிஸத்துக்குப் பச்சைக்கொடி காட்டிய கேரளா `ஷூட்டிங் இடையில பார்க்க வர்றேன்'னு சொல்லியிருக்கார்’ - `தெய்வம் தந்த வீடு' மேக்னா ரிட்டர்ன்\nகுழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறதில்லை... கேட்ட வார்த்தையைத்தான் பேசுறாங்க பசங்க 2 - விமர்சனம்\nஏ.டி.ஹெச்.டி. என்று சுருக்கமாகச் சொல்லப்படும் அட்டென்ஷன் டெபிஷிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் என்கிற குழந்தைகளின் குறைபாட்டை பின்னணியாகக் கொண்டு இப்போதைய கல்வி முறை, பகட்டான நகரவாழ்வுக்கு ஆசைப்பட்டு இயல்பு வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நிலை, குழந்தைவளர்ப்பு முறை என பல விஷயங்களை நெஞ்சில் தைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.\nமுனீஸ்காந்த் வித்யா, கார்த்திக் குமார் பிந்துமாதவி ஆகிய தம்பதியினருக்கு ஒரே சமயத்தில் குழந்தை பிறக்கிறது. அதற்கும் முன்னும் பின்னுமான சம்பவங்களின் உணர்ச்சிக் கோர்வைதான் படம். வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆறுமாதம் ஆகும்போதே பள்ளிக்கூடத்தில் சேர்க்க விண்ணப்பம் வாங்குவது, நிறைமாதமான பிறகு, உங்கள் குழந்தை என்னவாக வரவேண்டும் என்கிற மருத்துவரின் கேள்விக்கு உடனடி அவசர விவாதத்துக்குப் பின் டாக்டர் என்று பதில் சொல்கிறார்கள். உடனே அருகிலிருக்கும் சோதிடர் இந்தத் தேதியில் இத்தனை மணிக்கு அறுவைசிக்கிச்சை செய்து குழந்தைப்பிறப்பு வைத்தால் அது நடக்கும் என்று சொல்ல, அவர் சொன்ன நேரத்தில் பிரசவம் நடக்கிறது.\nஇப்படி வளரும் குழந்தைகள் மிகவும் சுட்டிகளாக இருக்கின்றன. வருடத்திற்கொரு பள்ளி மாறவேண்டியிருக்கிறது. வீடும் மாறவேண்டியிருக்கிறது. வீட்டிலும் அவர்களால் பல தொல்லைகள். இதனால் மனம் வெறுத்த அத்தம்பதியினர் குழந்தைகளை விடுதியில் சேர்க்கிறார்கள்.\nஅதன்பின் அவர்களுக்கு இதுதான் சிக்கல் என்பதை மருத்துவர் தமிழ்நாடனாக நடித்திருக்கும் சூர்யா கண்டுபிடித்துச் சொன்னபிறகு நடக்கும் விசயங்களே கதை.\nமுனிஸ்காந்த் வித்யா தம்பதியின் மகனாக நடித்திருக்கும் நிஷேஷூம், கார்த்திக்குமார் பிந்துமாதவி தம்பதின் மகளாக நடித்திருக்கும் வைஷ்ணவி ஆகிய இருவரும் போட்டிபோட்டு நடித்து மனதைக் கவருகிறார்கள். விடுதியில் அவர்களை விட்டுவிட்டுப்போனதும் அவர்களுடைய தவிப்பு... உருக்கம்\nசென்னைப் பெருநநகரத்து உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவர்கள், குழந்தை பிறப்பு முதல் வளர்க்கிற வரை எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர்களுக்கே தெரியாமல் பின்தொடர்ந்து சென்று எடுத்தது போலக் காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.\nஇரண்டு தம்பதிகளை வைத்துக்கொண்டு உயர்நடுத்தரமக்களின் அன்றாட நடைமுறை, அவர்களின் ஆசை ஆகியனவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முனீஸ்காந்துக்கு இருக்கும் பணக்காரவியாதி அவ்வப்போது வாய்விட்டுச் சிரிக்கவைக்கப் பயன்��டுகிறது.\nசூர்யா, அமலா பால் என்ற ஸ்டார் கேஸ்டிங்கை வீணாக்காமல் நல்ல மெசேஜ் சொல்ல பயன்படுத்தியிருக்கிறார்கள். முஷ்டியை முறுக்கும் ஆக்க்ஷன் ஹீரோவாக அசத்துவது சூர்யாவுக்கு கை வந்த கலை. ஆனால், இந்தப் படத்தில் குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் ஜாலி மருத்துவராகவும் ஸ்கோர் செய்திருக்கிறார். குழந்தைகளின் சுட்டித்தனத்தை ரசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கதைக்குள் அவர் வந்தாலும் அந்த ரசனை குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.\nஇயக்குநர்கள் சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், ராமகிருஷ்ணன், இசையைமப்பாளர் சிற்பி, இமான் அண்ணாச்சி, நமோநாராயணா உட்பட பல கௌரவத் தோற்றங்கள். சமுத்திரக்கனி தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்குக் கூட்டிப்போகும் நேரத்தில், குழந்தையின் ஆசிரியர் தனியார் பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க விண்ணப்பம் வாங்க நெடிய வரிசையில் காத்திருக்கும் காட்சியும் அப்போது அரசுவேலைகளில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலேயே சேர்க்கவேண்டும் என்று அரசாணை வரவேண்டும் என்று சொல்லும்போதும் அப்ளாஸ் அள்ளுகிறது.\nகுழந்தைகள் கெட்டவார்த்தை பேசுவதில்லை கேட்டவார்த்தையைத்தான் பேசுகிறார்கள், மதிப்பெண்களை விதைக்காதீர்கள் மதிப்பான எண்ணங்களை விதையுங்கள் உள்ளிட்ட பல வசனங்கள் சாட்டையடி\nஅமலா பாலை வைத்து தனியார் பள்ளிகளின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை நறுக் சுருக்காகச் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் நடக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்கள் போட்டியில் இந்தக்குழந்தைகள் பங்கெடுக்க அவர்களே வெற்றிபெறுகிறார்கள் என்று காட்சி வைக்காமல் வித்தியாசமாக வைத்து பாராட்டைப் பெறுகிறார் பாண்டிராஜ்.\nஇசையமைப்பாளர் அரோவ்கெரோலி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பங்களிப்பு படத்துக்குப் பலம்.\nகுழந்தைகள் சாலையில் ஆம்புலன்ஸ் போகும்போது அப்படியே நின்று அவர்களுக்காகக் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்யும் காட்சிகளில் சிலிர்க்கவைக்கிறார்கள். அப்படியான சிலிர்ப்பு அத்தியாங்கள் படம் நெடுக இருக்கின்றன.\nபசங்க-2... இது குழந்தைகள் படமென்று சொல்வதைக் காட்டிலும், இது பெற்றோருக்கான பாடம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\nமேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n`போட்டோவை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தீர்கள்' - மாணவர்களுக்கு தண்டனை கொடு\n`` `பசங்க' படத்துல விஜய் சேதுபதிதான் கமிட் ஆனார்...ஆனா, விமல் நடிச்சார்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nகுழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறதில்லை... கேட்ட வார்த்தையைத்தான் பேசுறாங்க பசங்க 2 - விமர்சனம்\nயப் டிவி பஜார்... பிரீமியம் வீடியோக்களின் தொகுப்பு..\n‘இந்தியால குளிக்க ஷாம்புவும் குடிக்க கோலாவும் நாமளே தயாரிச்சுக்க முடியாதா’ - பூலோகம் விமர்சனம்\nசென்னை அணியை வாங்கிய விஜயகாந்த் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://engalblog.blogspot.com/2009/11/blog-post_9351.html", "date_download": "2018-07-19T11:13:41Z", "digest": "sha1:FY7XRQG2LL6PUIG7QZZCBQQNAHQBP5XD", "length": 49140, "nlines": 460, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பார்த்ததில் கேட்டதில் ரசித்தது, நினைத்தது... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபார்த்ததில் கேட்டதில் ரசித்தது, நினைத்தது...\nசினிமாக்களில் பல அபத்தங்கள் உண்டு. பாடல்களே முதல் அபத்தம். ஆனால் இனிமையான அபத்தம்\nசண்டைக்காட்சிகள் மனதின் வக்கிரங்கள் என்று தோன்றும். நம்மால் செய்ய முடியாத ஒன்றை செய்வதால் வரும் கவர்ச்சி சண்டைகள், பாடல்கள். கதாநாயகனோ கதாநாயகியோ மலை உச்சியில் பாடும் பாட்டைக் கேட்டு அடுத்தவர் போய் அவரைக் காப்பாற்றி விடுவார்கள் ஜப்பான் எக்ஸ்போ கண்காட்சியில் எங்கோ ஒரு மூலையில் தம்பி MGR பாடும் \"உலகம் உலகம்\" பாடல் கேட்டு அண்ணன் MGR \"ஆ....என் தம்பி குரல் கேக்குது..\" என்று தேடத் தொடங்கி, ஒன்று சேர்வார்கள். ஹிந்தி ஆராதனா படத்தில் ராஜேஷ் கன்னா ஜீப்பில் பாடிக் கொண்டே வருவதை ஷர்மிளா தாகூர் ரயிலில் வந்த படியே கேட்பார்...\nஆராதனா பற்றி இன்றும் நாளையும் CNN IBN சேனலில் அந்தப் படம் எப்படி சூப்பர் ஹிட் ஆனது என்று ஒருமணி நேர படம் காட்டினார்கள். நம் வலைப் பக்கப் பதிவுகளுக்கு Subject தேடுவது போல அவர்களும் எதையாவது காட்டி ரசிக்க வைக்கிறார்கள்...அதில் சொல்லப் பட்ட சில விஷயங்கள்...\n1) அந்த 'மேரே சப்னோங்கி' பாடல் காட்சி எடுக்கப்பட்ட போது தனித் தனியாகத்தான் எடுத்தார்களாம். ஷர்மிளா சத்யஜித் ரே படத்துக்கே டேட்ஸ் தந்து விட்டதால் பிரச்னையாம்.\n2) ராஜேஷ் கன்னா அப்போது புது முகமாக இருந்தாலும் அந்தப் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ஆனாராம். அந்த ஜோடி ரசிகர்களைக் கவர்ந்ததால் அதன் பின்னரும் அமர்ப்ரேம், டாக் போன்ற படங்களில் ஜோடி தொடர்ந்ததாம். ஷர்மிளா இந்த திடீர் ஹிட்டினால் தன் கர்ப்பமாகும் திட்டத்தையே தளளி வைத்தாராம்\n3) S. D. பர்மன் தன் அபிமானப் பாடகர் முஹம்மத் ரபியை தெரிவு செய்து வைத்திருக்க, அந்தப் படத்தை முடித்து வைத்த அவர் மகன் R. D. பர்மன் தன் அபிமானப் பாடகர் கிஷோரை வைத்து மிச்சப் பாடல்களை முடித்தாராம். கிஷோர் காட்டில் அதற்கப்புறம் தான் நல்ல மழையாம்.\n4) கிஷோர் தன் முதல் பில்ம்பேர் அவார்டும், ஷர்மிளாவும் பில்ம்பேர் அவார்ட் அந்தப் படத்துக்கு வாங்கினார்களாம்.\nCNN IBN சேனலில் இன்றோ நாளையோ இரவு பத்து மணிக்கு போடுவார்கள். நேரம் இருந்தால் பாருங்கள். அந்தப் படத்தில் வரும் ராஜேஷ் கன்னாவை இப்போது பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும் அந்தப் படம் வந்த பிறகு அவர் கார்க் கண்ணாடியில் பெண் ரசிகர்கள் லிப்ஸ்டிக் கரையாக இருக்குமாம்....அந்த அளவு பெண் ரசிகைகள் அவர்மீது பைத்தியமானார்களாம் ...\nகார் என்றதும் ஞாபகம் வருகிறது... இந்த ஸ்விஃப்ட் கார் விளம்பரம் கொஞ்சம் ஓவர் இல்லை...பைனாகுலர் வைத்துப் பார்த்து பார்த்து ரோடு கிராஸ் செய்கிறாராம்...அப்படியும் மோதறா மாதிரி ஒரு ஸ்விஃப்ட் கார் தாண்டுதாம்...அட...\nபோன சீசனை விட இந்த சீசன�� அதிக மழை என்கிறது செய்தி... அதிகபட்சம் ஏழு நாள் பெய்திருக்குமா மழை அதற்குள் இது அதிகம் என்றால்...\"இந்த முறை வெயில் ரொம்ப அதிகம்ங்க\" என்று வருடா வருடம் அலுத்துக் கொள்ளும் பொது ஜனம்... அது போல இருக்க முடியாது...ஏனென்றால் வானிலை மையம் சொல்லும் தகவல் இது...என்ன பெய்து என்ன..நிக்கிறதுதான் நிக்கும். மிச்சம்லாம் வழக்கம்போல கடலுக்குதான்...\nமழையோ வெயிலோ குளிரோ அதனால் சீசனுக்கு சீசன் பத்து பேராவது இறந்துவிடுவதாக நியூஸ் வந்து விடுகிறது...மரணத்துக்கு காரணம்தான் வேண்டும்...நேரம் வந்து விட்டால்...\nஅது ஆண்டு 1970. நாகையிலிருந்து நாங்க பாலிடெக்னிக் மாணவர்கள், திருச்சிக்கு இண்டஸ்ட்ரீ விசிட் போயிருந்தோம் - அவசரம் அவசரமாக - விசிட் முடித்துவிட்டு, எல்லோரும் ஓடினோம் - மெயின் கார்ட் கேட் அருகே உள்ள தியேட்டருக்கு. அடிச்சு பிடிச்சு உள்ளே போய் - ஆராதனா படத்தை (முக்கியமாக ஷார்மிளா - பாரீடா ஜலால் ஆகியோரை) தரிசித்து, பக்திப் பரவசத்துடன், மழையில் நனைந்தவாறு - ரயில்வே ஸ்டேஷன் ஓடி வந்து, ரயில் பிடித்து நாகை திரும்பினோம் ஆராதனாதான் நான் நாகைக்கு வெளியே பார்த்த முதல் இந்திப் படம்.\nகௌதம் தெரியாத விஷயத்தைச் சொன்னா என்ன சொல்றது.ஆனா ஆராதனா படப் பாடல்கள் கேட்டிருக்கேன்.\"மேர ஷப்புனாங்கி\"ன்னு தொடங்கும்.\n”ன்ற உங்க பின்னூட்டத்த பாத்துட்டு உங்க இடத்துக்கு வர்றேன்....\nநீங்களும் பதிவுக்கு மேட்டர் தேடி இப்ப்டி கண்டத எழுதுறீங்களா நீ என் ஜாதிடா செல்லம்.. வா வா...\n“மேரெ சப்புனோக்கி...” பாடல் தவிர மற்றதெல்லாம் அந்நியமாக உள்ளது ..\nஹேமா... என்ன இது, ஆராதனா பற்றி தெரியாதா...என்ன சோகம் அது சரி என்ன பின்னூட்டத்துக்கு பதில் சொல்றதை சத்தமில்லாம நிறுத்திட்டீங்க...\nபின்னூட்டத்துனால இப்படிக் கூட ............... வருமா (கோடிட்ட இடத்துல என்ன வார்த்தை வரும் சொல்லுங்க...)\nஉட்கார்ந்து யோசிச்சா வாழ்க்கையே ரொம்ப அபத்தமாதான் இருக்கு. கடவுள் சத்தமில்லாமப் புன்னகைக்கிறார்...\n//ஆ....என் தம்பி குரல் கேக்குது..\" என்று தேடத் தொடங்கி, ஒன்று சேர்வார்கள்.//\nஅந்தத் தம்பி ஒவ்வொரு பாட்டுக்கு ஒவ்வொரு குரலில் பாடுவார்\n/உட்கார்ந்து யோசிச்சா வாழ்க்கையே ரொம்ப அபத்தமாதான் இருக்கு./\nசினிமாக் கொட்டாயில அல்லது டிவி முன்னாலேயே எப்போது உட்கார்ந்து யோசிச்சா அப்படித்தான் தோணும்\nஅப்பப்ப வெ��ியில வந்து நின்னுக்கிட்டும் யோசிச்சுப் பாருங்க\nநாளை நமதே படத்துல 'நான் ஒரு மேடைப் பாடகன்' என்ற பாடல்...கண்ணனுக்கு SPB குரல்... MGR க்கு TMS குரல்...சரணத்துல ரெண்டு பேர் குரலையும் MGR தானே பாடிடுவார்...\n//அப்பப்ப வெளியில வந்து நின்னுக்கிட்டும் யோசிச்சுப் பாருங்க\nஅங்க நிற்கறீங்க சார் நீங்க....நல்ல பதில்.\nபின்னூட்டத்துனால இப்படிக் கூட ............... வருமா\nநீஙக் சொல்லுங்க எது கரெக்டுன்னு...\n(கண்டிப்பா வித்தியாசமான நேர்மையான பின்னூட்டம் உங்களுக்கு நிறைய நண்பர்களை சேர்க்கும்..\nடெம்ப்ளேட் பின்னூட்டம் நண்பனை. ..:-)\nநீங்க கொடுத்துள்ள லிஸ்ட்டுல \"ஆர்வம். நட்பு\" ரெண்டையும் நாங்க டிக் செய்வோம்.... நாங்கள் நினைத்த்ததும் கூட அதேதான்.. கூட \"ஆதாயம்\" என்றும் சேர்த்துக் கொள்ளவும்\nஆராதனா சென்னை 'ஆனந்த்' தேயேட்டரில் ஓடோ ஓடு\nஎன்று ஓடிய படம். R D பர்மன், கிஷோர் குமார் combination\nதான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். அந்த படத்தின்\nவெற்றிக்குப்பின் ராஜேஷ்கன்னா கார் எங்கு சென்றாலும் சில தீவிர\nரசிகர்கள் அவர் காரில் படிந்த தூசியை எடுத்து விபூதிபோல\nR.D. Burman இசை என்று நமக்கெல்லாம் தெரியும். ஆனால் படத்தில் இசை S.D.Burman என்றுதான் வரும் நினைவிருக்கிறதா\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவரும்,... ஆனா .... வர்ராது\nஅதாகப் பட்டது ... அனானியான நான்\nபார்த்ததில் கேட்டதில் ரசித்தது, நினைத்தது...\nபடைப்பாற்றல் - மிகவும் எளிது\nஉள்ளம்கவர் ஆட்டக் காரர்கள் 3\nஇது பழமொழியா - பட்ட மொழியா\nஅதான் அடி வாங்கலை இல்லே...விடுங்க..\n.சின்னப் புள்ளத் தனமா இருக்கு...\nஎங்கள் வலை பாடங்கள். 01\nசென்ற நூற்றாண்டின் இசை மேதைகள் 02\nசென்ற நூற்றாண்டின் இசை மேதைகள் 01 GNB\nடும் டாம் - வாக்கெடுப்பு\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவி��� அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nவாங்க பேசலாம் :) - வாங்க பேசலாம் :) வாங்க முதலில் எங்க வீட்டு தோட்டத்தில் ரெட் கர்ரன்ட்ஸ் .(red currants ) பழங்கள் இந்த வருடத்து அறுவடையில் பறவை நட்புக்கள் சாப்பிட்டு எங்களுக...\nமாறிய காலம், மாறத கோலம் - *மாறிய காலம், மாறாத கோலம்* சுகுமார் இரண்டாவது நாளாக பள்ளிக் கூடம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். சாதாரணமாக அப்படி சொல்லக் கூடியவன் கிடையாது. ...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சி���்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்ப���யசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://engalcreations.blogspot.com/2010/06/blog-post_28.html", "date_download": "2018-07-19T11:51:15Z", "digest": "sha1:LV326H45QVVTD6JB7SJYVE3J5QYR5QTL", "length": 11713, "nlines": 208, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: ஏரிக்கரை இயற்கை எழில் படம்.", "raw_content": "\nஎங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.\nஏரிக்கரை இயற்கை எழில் படம்.\nசொன்னபடி அனுப்பிய swiss lake போட்டோ.\n(எங்கள் கமெண்ட்: ஹேமா நீங்க இங்கே சென்று பார்த்ததுண்டா\nஹேமா, ஸ்விட்சர்லாண்டில் இருக்கிறாரா. இது பாசல் என்னும் ஊரில் இருக்கும் ஏரி.\nவல்லிசிம்ஹன், ராமலக்ஷ்மி இருவரது கேமிராவிலும் ஏதோ மந்திரம் இருக்கிறது என்று தோன்றும் அளவு அழகாகவும் துல்லியமாகவும் இருக்கும். ராமலக்ஷ்மி எடுத்த படங்கள் எப்போதிலிருந்தோ பார்த்து ரசித்து வருகிறேன். தற்சமயம் நாச்சியார் வலைத் தளத்திலும் படங்கள் பார்த்து ரசிக்கிறேன். பாராட்டுக்கள் வல்லிசிம்ஹன்.\nகுரோம்பேட்டைக் குறும்பன் June 28, 2010 at 9:40 PM\nபடத்தைப் பார்க்கும் பொழுதே குளிர் அடிக்கிறது.\nபடங்களின் அழகுக்குப் பாதிக்கு மேல் காரணம் அந்த காட்சிகள் தான்.\nஸ்விட்சர்லாண்டில் பல காட்சிகள் மெய்மறக்கவைக்கும்.\nமகனிடம் அப்படியே பிக்சர் போஸ்ட் கார்ட் மாதிரி அழகா இருக்குமா என்றதும் அவன் சிரித்துவிட்டான். இதுதாம்மா ஒரிஜினல் என்று இன்னும் சொல்லுவான்.நன்றிப்பா.\nஅங்கே வெயில் அடிக்கும் நாட்களில் அந்த ஊர் மக்கள் அந்தவெய்யிலை அனுபவிப்பதைப் பார்க்கும் போது,அந்த நினைவு\nநீங்கள் சொல்லும் வாக்கியத்தின் அருமை புரிய வைக்கிறது.\nநன்றி மாதவன். உங்கள் படைப்புகளைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.\nஇங்கே 'கிளிக்'கி, எங்கள் Blog வாருங்கள்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nஅன்புள்ள எங்கள் ப்ளாக், முன்பே பயமுறுத்தினபடி இப்போ ஒரு பாட்டைப் பாடி....:) அனுப்பி இருக்கிறேன் . கேட்கும்படி இருந்தால் பதிவிடவும். உங்கள்...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' ஜி மெயில் :\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் ���னுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nமுட்டை வடிவம் :: ஸ்ரீமாதவன்\nமுட்டை வடிவம் :: வைபவி.\nஏரிக்கரை இயற்கை எழில் படம்.\nமுட்டை வடிவம் :: பெயர் சொல்ல விருப்பமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://shaanavas.wordpress.com/category/e%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-07-19T11:40:59Z", "digest": "sha1:J2SDKN7M2RPYLF2MK6UNSDNKLOZC6U3Y", "length": 14480, "nlines": 133, "source_domain": "shaanavas.wordpress.com", "title": "eசை | ரோஜாக்", "raw_content": "\nஉயிரோசை.காம் – ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்\nசிங்கப்பூர் கிளிஷே – 11\nசிங்கப்பூர் இலக்கிய விருதுகள் -2014\n“சிந்தனை” -வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சி\nசிங்கப்பூர் சிறந்த உணவகங்கள் விழா -2014\n- நாகூர் முப்பெரும் விழா சிறப்பு மலர் கட்டுரை\nதங்கப்புல்வெளி விருந்து(ஜூலை-2014 மாத உயிர்மை இதழ் கட்டுரை )\npandiammalsivamyam on பாடித் திரிந்த பறவைகள்\npandiammalsivamyam on முகவரி மாறும் கல்லறைகள்\nPosted: செப்ரெம்பர் 16, 2011 in அழைப்பிதழ், இலக்கிய சர்ச்சை, உயிர்மை, கடிதம், கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, eசை\nபாண்டித்துரை + 65 82377006\nபூங்குன்ற பாண்டியன் +65 83602341\nPosted: திசெம்பர் 2, 2010 in அழைப்பிதழ், உயிர்மை, கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, eசை\nPosted: நவம்பர் 11, 2010 in அழைப்பிதழ், இலக்கிய சர்ச்சை, உயிர்மை, கடிதம், கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, eசை\nகுறிச்சொற்கள்:2011, இந்திரஜித், உயிர்மை, சிங்கப்பூர், புத்தககண்காட்சி, மனுஸ்யபுத்திரன்\nPosted: ஒக்ரோபர் 15, 2010 in கடிதம், கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, eசை\nகடந்த ஞாயிறு ‘03.10.2010’ அன்று சிங்கப்பூரில் புதிய இணைய இதழ் ‘தங்கமீன்’ துவக்கி வைக்கப்பட்டது.\nவிழா கச்சிதமாக நடந்தது. திரு விசயபாரதி விழாவை வழிநடத்தினார், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது நிகழ்வு 10 நிமிட தாமதத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று அவ்வப்போது பேச்சாளர்களின் நேரத்தை ஒட்டி அறிவிப்பு செய்தது ரசிக்கும்படி இருந்தது. எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் பேசும்போது விக்கிபீடியாவில் குறைந்த மக்களே பேசக்கூடிய மொழிக் கட்டுரைகளை ஒப்பு நோக்க தமிழில் கட்டுரைகள் குறைவாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றார். திரு சுப. திண்ணப்பன் விண்மீன் கடல்மீன் தரையில் தங்கமீன் என்று வர்ணித்து, இந்த தங்கமீன் மனதில் தங்கவேண்டும் என்றார். திரு அழகியபாண்டியன் அதிகப்படியான உள்ளடக்கங்களை தொடர்ந்து கட்டிக்காக்க இயலுமா என்று கேள்வி எழுப்பித் தொடர்ந்து பாலுமணிமாறன் கட்டிகாப்பார் என்றார். திரு.செ.ப.பன்னீர்செல்வம் இணைய பத்திரிகை ஆரம்பிக்க தகுந்த சூழல் சிங்கப்பூரில் இருந்தபோதும் இதோ அதோ என்று சொன்னார்கள். ஓரான் லாவா ச்ககாப் சக்கப் தற்போது பாலு அதை நிறைவேற்றிக் காட்டிவிட்டார். நம் சந்ததிகளுக்கு நாம் எதையாவது கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் சரிதானே என்றார். திரு ஜோதிமாணிக்கவாசகம் வாள்முனையை விட பேனா முனை கூர்மையானது என்று சொல்வார்கள் இப்போது எலியின் சிணுங்கல் அதைவிடக் கூர்மையாகிவிட்டது என்றார். திரு.ராம.கண்ணபிரான், ரத்தினசபாபதி, சபா ராஜேந்திரன் மற்றும் தொலைக்காட்சி நடிகர் மதியழகன், நல்லு தினகரன் ஆகியோர் வாழத்திப்பேசினர்.\nசிறப்புரை ஆற்றிய திரு அருண்மகிழ்நன் -கொள்கை ஆய்வுக் கழகத் தலைவர்- தன்னுடைய 10 வருடக் கனவை திரு.பாலுமணிமாறன் நிறைவேற்றி விட்டதாகச் சொன்னார். குழுக்களுக்குள்ளும் உள் வட்டங்களிலும் இதை அடக்கி விடாமல் சிங்கப்பூரிலுள்ள பல ஊடகங்களின் செயல்பாட்டுத் தளமாக இது விளங்க வேண்டும் என்றார்.\nதனக்கும் 10 வருடக் கனவு இது என்ற எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், அருண் மகிழ்நன் இருவரும் இணைய இதழை துவக்கிவைத்தனர்.\nசிங்கப்பூர் ஊடகங்களில் கேளிக்கைகளுக்கும் நுகர்ப் பொருட்களின் மீதான வேட்கைக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்று http://www.thangameen.com கிளிக் செய்யக் கூட்டத்தினர் ஆர்வத்துடன் பரபரத்தார்கள்.\nவழக்கம்போல திரு சாரு அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினையுடன், ‘தங்கமீன்’ சிணுங்க ஆரம்பித்துவிட்டது.\nபிரபஞ்சன் மற்றும் ஷாஜியின் வருகை-in Singapore)\nPosted: ஏப்ரல் 20, 2010 in அழைப்பிதழ், சிறுகதை, நாவல், eசை\nகதை சொல்வது மாதிரி இருக்கிறதல்லவா…\nசிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளில் முத்திரை பதித்த பிரபஞ்சனின் படைப்புகள்தான் இவைகள்.\nதமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரை சிறந்த எழுத்தாளர் என்று கௌரவித்துள்ளது.\nஎன்னற்ற இலக்கிய மரியாதை பெற்றவர்.\nஅழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திர படைப்பு, மனித நேயத்தை உன்னதப்படுத்தும் லட்சியம் இவரது எழுத்தின் சிறப்பு…\nமனித சுபாவம் எல்லா எல்லா காலங்களிலும். எல்லா தேசத்துக்கும் இலக்கியத்தின் கருப்பொருளாக இருந்து வருவதை பார்க்கிறோம். உருவம், யுக்திகள் மாறலாம். இது மட்டும் மாறுவதில்லை. மனித சுபாவத்தில் இத்தனை சுழிப்புகள் இருப்பதாலோ என்னவோ, இத்தனை காதல் இத்தனை காரியங்கள் இங்கு சாத்தியமாகின்றன.\nபல ஆயிரம் மைல்களை கடந்து வந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலேயே பிறந்த தமிழனுக்குள்ளும் செயல்பட்ட மனித சுபாவத்தை உடைத்துப் பார்த்த இவரது நாவல் ”வானம் வசப்படும்” சாகித்திய அகடாமி பரிசு பெற்றது.\nசிறுகதைகள், நாவல்களும் ஒரு அனுபவத்துளி மட்டுமல்ல அது ஒரு முழு வாழ்வின் சிறு துளி. அதில் கூறப்பட்ட தளங்களுக்குள்ளே ஒரு முழு வாழ்வை நம் நினைவில் விரித்துக்கொள்ள முடிந்த எழுத்துக்கள் பிரபஞ்சனுடையவை…\nஎதிர்வரும் வெள்ளி (23.04.2010) மாலை 6.30மணிக்கு தேசிய நூலகத்திலும்\nதிங்கள் (26.04.2010) மாலை 7.00மணிக்கு ஆங் மோ கியோ நூலகத்திலும்\nபிரபஞ்சன் மற்றும் ஷாஜியின் நினைவுகளை நிரப்பிக்கொள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aalosanai.blogspot.com/2012/11/skantha-shasti-18112012.html", "date_download": "2018-07-19T11:49:33Z", "digest": "sha1:VETQCIZQ34YKTVTIA7QJ3PPW7EE4624Y", "length": 35284, "nlines": 239, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: SKANTHA SHASTI (18/11/2012).....ஸ்கந்த சஷ்டி", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nஞாயிறு, 18 நவம்பர், 2012\nஎண்ணறு வைபவ இந்த்ர விசேஷண\nபுண்ணிய உத்தம பூரண பச்சிமக்\nகண்இல கும்சிவ கந்த கிருபாசன\nபண்ணவர் பூஜித பாத நமஸ்தே\nஏரக நாயக என்குரு நாயக\nதாரக நாயக ஷண்முக நாயக\nகாரக நாயக கதிதரு நாயக\nபாரக நாயக பாத நமஸ்தே\n(ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் அருளிய தௌத்தியம்(திருவடித் துதி)\nஆறுமுகக் கடவுள் மாயையின் மகனான சூரனை முடித்து, விண்ணோரையும் மண்ணோரையும் வாழ்வித்தருளிய கந்தசஷ்டிப் பெருவிழா முருகன் திருத்தலங்கள் தோறும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.\nஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை மறுநாள் துவங்கி வரும் ஆறு நாட்களே கந்த சஷ்டி விரத தினங்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றன. ஆறாவது நாளான சஷ்டி திதியே கந்த சஷ்டி, மஹாஸ்கந்த சஷ்டி என்று போற்றப்படுகிறது. அன்றைய தினமே, முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்து பக்தர்களை வாழ்வித்தருளினார். கந்த சஷ்டி ஆறுதினங்களும் முருகப்பெருமான் விரதமிருந்து, ஆறாவது நாள் சூரசம்ஹாரம் செய்ததால், கந்த சஷ்டி விரதம் இருப்பது, முருகப்பெருமானின் அருளால், இம்மை, மறுமைப் பயன்க��ை எளிதில் பெற்றுத் தரவல்லது.\nவான் மகிழ வந்த ஆறுமுகமான பொருள், ஆறுபடை வீடமர்ந்து, அன்பர் நெஞ்சமெல்லாம் கொண்டாடி மகிழ, வேண்டும் வரமும் வீடுபேறும் தந்தருளும் நன்னாளே கந்த சஷ்டிப் பெருவிழா.\nமுருகப்பெருமானின் தேவியாகிய தெய்வானை அம்மையே சஷ்டி தேவி. மூலப்ரகிருதியான சக்தி தேவியின் ஆறு அம்சமானவள் சஷ்டிதேவி. பிரம்மதேவனின் மானஸபுத்திரி. மஹாவிஷ்ணுவின் கண்களிலிருந்து தோன்றியதால், விஷ்ணு ஸ்வரூபிணி. புத்ரபாக்யம் தருபவள். மஙகள சண்டிகை என்று போற்றப்படுபவள். குழந்தைகளுடன் இருப்பவள். குழந்தைகளுக்கு வரும் நோய்களைப் போக்குபவள். குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளை நல்குபவள். பதினாறு மாத்ருகா தேவியருள் பிரசித்தமானவள். சித்த யோகினி.\nஓம் ஹ்ரீம் ஷஷ்ட்டீ தேவ்யை நம:\nஎன்பது தேவியின் மூல மந்திரம். இதை இயன்ற அளவு தினம் ஜபிக்க, அம்மையின் அருளால் புத்ரபாக்யம் உண்டாகும்.\nசட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பிரபலமான வாக்கியம். சஷ்டியில் விரதம் இருக்க கருப்பையில் குழந்தை வளர்ந்து, புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பதே இதன் பொருள். சஷ்டி விரதம் புத்திரபாக்கியம் தர வல்லது. கந்த சஷ்டி ஆறு தினங்களும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட, வேண்டுவனவற்றை எல்லாம் பெறலாம்.\nதெய்வானை அம்மைக்குகந்த சஷ்டி திதியே, முருகப்பெருமானுக்கும் உகந்தது. ஆறாவது திதியாக வரும் சஷ்டி திதி ஆறுமுகக் கடவுளைப் போற்றித் தொழ மிகவும் ஏற்றது. ஆறு என்ற எண்ணுக்கும் முருகபெருமானுக்கும் நிரம்பத் தொடர்பு உண்டு. சரவணப் பொய்கையில் ஆறு நெருப்புப் பொறிகள், ஆறு தாமரை மலர்களில், ஆறு குழந்தைகளாக அவதரிக்க, ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும், உமாதேவியார் ஒன்று சேர்க்க, ஸ்கந்தப் பெருமான், ஆறுமுகமும், பன்னிருகரமும் கொண்டு அன்பர் மகிழும் உருக்கொண்டார். அறுகோண யந்திரமும், ஷடாக்ஷர மந்திரமும் கொண்டு, பக்தர்களை ஞான மார்க்கத்தில்'ஆற்றுப்' படுத்தி, அருள் புரியும் வள்ளல் பெருமான் குமரக் கடவுள்.\nமுருகப்பெருமான், திருக்கை வேல், முருகப்பெருமானின் வடிவே ஆகும். வேல் கொண்டே, முருகப்பெருமான் சூரனை முடித்தார். முருகப்பெருமானைத் தரிசனம் செய்யும் போது, வேலைத் தரிசனம் செய்துவிட்டுப் பின், முருகனைத் தரிசனம் செய்ய வேண்டுமென்பது மர��ு. கீழிருந்து மேலாக, வேலைத் தரிசனம் செய்து, பின், பாதாதி கேசமாக, சுப்பிரமணியரை சேவிக்க வேண்டும். கந்த சஷ்டியில், வேலுக்கும் மிக விமரிசையாகப் பூஜைகள் செய்யப்படுகின்றன.\nஅடிப்புறம் அகன்றும், நுனி கூர்மையாகவும் உள்ள வேல், அறிவு, ஞானம் ஆகியவற்றின் குறியீடாகும். வேலின் பெருமைகள் அளவிடற்கரியது.\nவீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட\nதீரவேல் செவ்வேள் திருக்கைவேல்- வாரி\nகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றும்\nஎன்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பெருமான் புகழ்கிறார்.\nஏரகமும் நீங்கா இறைவன் கை\nசூர்மா தடித்த சுடர் இலைய\nஎன்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் புகழ்ந்துரைக்கிறார்.\nவேலை வணங்குவதே வேலை என்றிருப்போரின் வாழ்வில் குறைகள் ஏதும் வாராது. வேலாயுதம் என்ற பெயரே முருகப்பெருமானைக் குறிப்பதாகும்.\nசூரனை வெல்ல, உமாதேவியாரால் முருகப்பெருமானுக்கு வழங்கப்பட்டது சக்திவேல். இன்றைக்கும் சிக்கல் திருத்தலத்தில், வேல்நெடுங்கண்ணி அம்மையிடம் இருந்து, சிங்காரவேலர் வேல்வாங்கும் வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சூரனை அழிப்பதற்காக, அம்மையிடம் இருந்து வேல் வாங்கிய முருகனின் திருமுகத்தில், அதன் வீர்யம் தாங்காமல், முத்துமுத்தாக வியர்வை துளிர்ப்பது கலியுக அதிசயம். பட்டுத்துணி வாங்கி வந்து கொடுத்து, அதில், முருகனின் வியர்வையை ஒற்றியெடுக்கச் செய்து அதை இல்லத்தில் வைத்து வழிபடுவோர் அநேகம்.\nதிருநெல்வேலியில் 1803ல் கலெக்டராக இருந்த லூசிங்டன் என்பவர், இது குறித்து கிண்டலாக, 'எங்கே உங்கள் தெய்வத்தின் வியர்வையைக் காட்டுங்கள்' என்று கூறியதும், முருகன் மீதிருந்த மலர் மாலைகள் யாவும் அகற்றப்பட்டு,புதுத்துணி போர்த்தப்பட்டது. சிறிது நேரத்தில், எம்பெருமான் திருமுகத்திலிருந்து வழிந்த வியர்வையால், அந்தத் துணி முழுவதும் நனைந்திருந்தது. இதைக் கண்ட அவர், முருகன் மேல் பெரும்பக்தி கொண்டு, காணிக்கையாக அரும்பெரும் செல்வத்தை வாரி வழங்கினார் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.\nகந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை:\nஇந்த விரதம் இருப்போர், முருகன் திருக்கோவிலுக்கு வந்து எம்பெருமானுடன் சேர்ந்து இருப்பது ஒரு முறை. இல்லங்களிலும் விரதம் இருக்கலாம்.\nகோவில்களில் வந்து விரதம் எடுப்போர், தீபாவளி அமாவாசை தினமே கோவிலுக்கு வந்து விடுவர். தீபாவளி அமாவாசை மறுதினம் முருகன் திருத்தலங்களில் காப்புக் கட்டும் விழா நடக்கிறது. முருகப்பெருமானுக்கும் பக்தர்கள் பலருக்கும் காப்புக் கட்டி விழா துவங்குகிறது. சூரனை முடிக்க விரதமிருக்கும் குகக்கடவுளோடு சேர்ந்து பக்தர்கள் அனைவரும் விரதமிருக்கின்றனர். விழாவின் ஐந்தாம் நாள் 'வேல்வாங்கும் விழா' நடைபெறுகிறது. அம்மையின் கையிலிருந்து முருகன் சக்திவேல் பெற்று, சூரனை சம்ஹாரம் செய்ய புறப்படுகிறார். கந்தசஷ்டியில், மாமரவடிவாய் நின்ற சூரனைப் பிளந்து, இரு கூறான மரம், சேவலும் மயிலுமாக மாற, அவற்றிற்கும் அருள்புரிந்து, சேவற்கொடியோனாகவும், மயில் வாகனனாகவும் பக்தர் மனம் உகக்க ஏற்றருள் புரிகிறார்.\nகந்த சஷ்டி ஆறு நாட்களும், பாலும் பழமும் உண்டு விரதம் இருப்பது சிறந்தது. அதை விடவும், ஆறு நாட்களும், தினம் ஆறு மிளகையும் ஒரு குவளை தண்ணீரும் மட்டுமே அருந்தி விரதம் இருப்போர் உண்டு. ஆறாவது நாள் சூரசம்ஹாரம் முடிந்து, மறுநாள், பெரும்பாலான கோவில்களில், முருகப்பெருமானுக்கு, விசேஷ அபிஷேகங்கள் செய்து, தங்க/வெள்ளி கவசம் சாற்றி, பாவாடை நைவேத்யம் (பெரிய தட்டில், சிறிதளவே தயிர் கலந்த சாதம் வைத்து நிவேதித்தல்) நடைபெறுகிறது. அதைத் தரிசித்து,, பிரசாதம் பெற்ற பின்பே, வீடு சேர்ந்து, உற்றார் உறவினருக்கு உணவளித்து விரதம் முடிப்பர். திருச்செந்தூர் உள்ளிட்ட திருத்தலங்களில், எம்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.\nஇல்லங்களில் விரதம் இருப்போரும் இம்முறையிலேயே விரதம் இருக்க வேண்டும். இயலாதோர், ஒரு வேளை மட்டும் உணவு உண்ணலாம். ஆலய தரிசனம் தினம் செய்வது அவசியம். தினந்தோறும், இருவேளை குளித்து, பகலில் உறங்காதிருக்க வேண்டும். முருகக்கடவுளின் திருவுருவப்படத்துக்கு பூஜை செய்தல் அவசியம். சஷ்டி தினத்தன்று மாலையில், சூரசம்ஹாரம் நிறைவடைந்த பின், பால்பாயசம் நிவேதித்தல் சிறந்தது. ஆறு நாட்களும், கந்த புராணம் படிப்பது கட்டாயம். அது இயலாதவர்கள், கந்தர் கலிவெண்பா பாராயணம் செய்வது சிறந்தது. ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அருளிய கந்தர் கலிவெண்பாவுக்கு இங்கு சொடுக்கவும். திருப்புகழ் பாடல்களைப் பாடித்துதிப்பது மிகச் சிறந்தது.\nஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய முதல்வன் புராண முடிப்பு கந்தபுராணத்தின் சாரமே. அன்பர்கள் இதையும் பாராயணம் செய்து நிறைந்த பலன் பெறலாம்.அதைக் கீழே கொடுத்திருக்கிறேன்.\nசந்திர சேகரன் தழற்கண்ணே பொறி\nவந்தன வாறவை மாசில் கங்கைசார்ந்து\nஐந்துடன் ஒன்றுஅணை குழவி ஆகிஆறு\nஅந்தநன் மாதர்கள் அமுதம் உண்டவே(1)\nஉண்டவை பலபல உருவங் காட்டுபு\nபண்டுமை யாலொரு படிவ மாய்அவன்\nகண்டென அருத்தமுது உண்டு காமர்செய்\nஅண்டஒண் கயிலைசென்று அடல் செய்யுமால்(2)\nஆடலில் வெஞ்சுவர் அசுவம் ஏறியது\nஈடணை அம்புலி இரதம் ஊர்ந்தது\nமூடமில் இந்திரன் முதலி னோர்கரி\nசேடனை ஊர்ந்தது செம்பொற் சேயரோ(3)\nசெங்க ருடன்புலி சீயம் ஓதிமம்\nசங்குறழ் ஏறுழை சரபம் ஆடிஇவர்ந்து\nஎங்கணும் ஏகியது எழில்கொள் எந்நில\nமங்கைய ரும்விழை மகிமைப் பிள்ளையே(4)\nபிள்ளைமை நீத்தொரு பெருவ யோதிகம்\nஉள்ளவ னாய்ச்சுரர் உலகை நன்குசெய்\nஉள்ளம்டு அங்ஙனம் உலாவி னான்வன\nநள்ளிடன் அடைந்துகின் னரஞ்செய் தானவன்(5)\nசெய்யதன் ஓசையிற் சேர்வி லங்குபுள்\nமெய்யைம றந்தன வேய்ங்குழ ற்தொனி\nஐயன்எ ழுப்பினன் அகல்உண் மாதர்கள்\nமையல்செய் விரகமுள் வருந்த நாளுமே(6)\nமேலடர் அண்டமும் மேய சேயவன்\nமாலுடல் வரையிடை வந்து வானவர்\nபாலுறு வலிகளைப் பாறச் செய்துதன்\nவாலிருந் தைவத வடிவு காட்டினான்(7)\nகாட்டலும் சதமகன் கடவு ளேஎமை\nவாட்டொரு சூரனை மடித்துக் காவெனக்\nகேட்டவன் அஞ்சல்மின் கிருபை செய்துமென்று\nஆட்டரன் பாற்படை அரசை வாங்கினான்(8)\nவாங்கிமற் கணத்தொடு மகிவந் தோதியும்\nவீங்குமெய்க் கயமுகன் தனையும் வீட்டுபு\nபாங்குடைச் சிங்கனும் பானு கோபனும்\nனீங்கிடக் கண்டவர் நிருபற் கீண்டனன்(9)\nகீளவைப் பரிகொடி யாய்க்கி ளர்ந்தன\nஆளொரு வரையடைந்து அருணை யான்புகழ்\nவாளன கண்ணியை மணந்து விண்புரந்து\nஆளெயில் மான்மணந் தான்ச யம்புவே(10)\nகந்தசஷ்டி கவச பாராயணம் கட்டாயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் 6 முறை பாராயணம் செய்ய, ஆறு நாட்கள் முடிவில் முப்பத்தாறு முறை பாராயணம் செய்ததாகும். இது மேலான பலன்களை அளிக்க வல்லது.\nசஷ்டிதேவியைப் பூஜை செய்ய வேண்டுவோர், வேல் அல்லது திருவுருவப்படத்தை வைத்து, முறைப்படி பூஜை செய்யலாம். மஹா ஸ்கந்த சஷ்டி என்று போற்றப்படும், இன்றைய தினம் பூஜை துவக்கி, ஒரு வருட காலம் வரை, ஒவ்வொரு சுக்ல சஷ்டி தினத்தன்றும் பூஜை செய்ய, மழலைப்பேறு கட்டாயம் வாய்க்கும்.\nவிரத தினங்களில், இனிய வார்த்தைகளைப் பேசுதலும், இயன்ற வரையில் மௌனம் கடைபிடித்தலும் மிகச்சிறந்தது. ஆறு நாட்களும் விரதமிருக்க இயலாதோர் ஸ்கந்த சஷ்டியன்று மட்டுமாவது விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் உபவாசம் இருந்து, பூஜை செய்து, ஆலய தரிசனம் செய்த பின் உணவருந்தலாம்.\nமுருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இம்மை, மறுமைப் பயன்களைத் தரவல்ல, இவ்விரதம் கடைப்பிடிப்பது, எல்லாத் துன்பங்களையும் நீக்கி விடும் மகிமை வாய்ந்தது.\nமாயையே சூரன், அதை நீக்கி ஞான வழிகாட்டும் எம்பிரான் முருகன். இம்மைப் பயன்களோடு, பிறவிப்பயனான ஆத்மஞானம் அடைவிக்கும் எம்பெருமான் முருகனடி போற்றி,\nபடங்கள் நன்றி: கூகுள் படங்கள்\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at முற்பகல் 10:02\nஅய்யர் 18 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:13\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nஅன்பர்களுக்கு வணக்கம். 'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், ந...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nஉயர் திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', யி ல் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு....\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர���ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nSRI DATTATREYA .....ஸ்ரீ தத்தாத்ரேயர்\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆக...\nருத்ராக்ஷம் என்றால் என்ன என்பதும் அதன் பயன்கள் குறித்தும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும் என்றாலும் கொஞ்சம் சுருக்கமாக, இந்தப் பதிவ...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\nஎண்ணறு வைபவ இந்த்ர விசேஷண புண்ணிய உத்தம பூரண பச்சிமக் கண்இல கும்சிவ கந்த கிருபாசன பண்ணவர் பூஜித பாத நமஸ்தே ஏரக நாயக என்குரு நா...\nPAPA HARA DASAMI(18/6/2013)...பாபஹர தசமி(பாவங்களை நீக்கும் தசமி).\nஇன்றைய தினம் (18/6/2013) 'பாபஹர தசமி'. ஒவ்வொரு வருடமும், ஆனி மாத சுக்ல பட்ச தசமி 'பாபஹர தசமி' என்று சிறப்பிக்கப்படுகிறத...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-07-19T11:47:59Z", "digest": "sha1:FOHM54D32OHXMQOHPWXE5ZKBT4A5SYZW", "length": 8852, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "» சசிகலாவின் கணவருக்கு பிடியாணை: சி.பி.ஐ.நீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\nமூங்கிலாற்றில் சட்டவிரோதக் காடழிப்பு: பிரதேச செயலாளர் பொலிஸில் முறைப்பாடு\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழையோம் என்கிறது மஹிந்த அணி\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nசசிகலாவின் கணவருக்கு பிடியாணை: சி.பி.ஐ.நீதிமன்றம் உத்தரவு\nசசிகலாவின் கணவருக்கு பிடியாணை: சி.பி.ஐ.நீதிமன்றம் உத்தரவு\nசொகுசுக்கார் இறக்குமதி வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.\nஇன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n1994 ஆம் ஆண்டு லெக்சஸ் என்னும் சொகுசு காரை இறக்குமதி செய்ததாக கூறி, 1.62 கோடி ரூபாவை மோசடி செய்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. நீதிமன்றம், கடந்த 2010 ஆம் ஆண்டு சசிகலாவின் கணவர் உட்பட மேலும் இருவருக்கு சிறைத்தண்டனை விதித்திருந்தது.\nஇதை தொடர்ந்து சி.பி.ஐ தமது கோரிக்கைகளை ஏற்று சீராக விசாரிக்கவில்லை என்று தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றில் நடராஜன் தரப்பு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, குறித்த வழக்கு மீள் விசாரணைக்கு உட்படுத்தபட்டு வந்தது.\nஇந் நிலையில் கடந்த 17 ஆம் திகதி (நொவம்பர்), குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துகொண்ட உயர் நீதிமன்றம், இவர்களுக்கான 2 வருட சிறைத்தண்டனையை உறுதி செய்து நடராஜனை சரணடையும்படி உத்தரவிட்டிருந்தது.\nஆனால் இதுவரையில் அவர் சரணடையாத நிலையில், சி.பி.ஐ. நீதிமன்றம் குறித்த பிடியாணையை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் சந்திப்பு\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவுக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பின\nநிர்மலாதேவி விவகாரம்: விசாரணைகளை விரைவில் நிறைவுசெய்ய உத்தரவு\nமாணவர்களை தவறாக வழிநடத்திய குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கை,\nதமிழக அரசு அடுத்த தேர்தலில் படுதோல்வி காணும்: சசிகலாவை சந்தித்த பின் தினகரன்\nதமிழகத்தை ஆளும் தற்போதைய அரசு, அடுத்து வரும் தேர்தலில் படுதோல்வி காணுமென ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்ப\nபுதிய சட்டம் விஜய் மல்லையாவை தண்டிக்குமா\nவங்கி மோசடியில் ஈடுபட்டு தப்பியோடிய விஜய் மல்லையாவின் சொத்துக்களை, புதிய சட்டத்தின் கீழ் பறிமுதல் செ\nமோசடிகள் தொடர்பிலான விசேட நீதிமன்றிக்கு புதிய நீதிபதிகள்\nவிசேட மேல் நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பினால் இன்று (வெள்ளிக்கிழமை)\nமூங்கிலாற்றில் சட்டவிரோதக் காடழிப்பு: பிரதேச செயலாளர் பொலிஸில் முறைப்பாடு\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழையோம் என்கிறது மஹிந்த அணி\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\n‘நாடோடிகள்-2’ வின் பிரமிக்கும் அடுத்த வெளியீடு\nஅகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல்\nமுல்லை – கிளி. இல் இதுவரை 5442 அபாயகரமான வெடிபொருட்கள் அழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-2/", "date_download": "2018-07-19T11:11:17Z", "digest": "sha1:BUGJ5AHX4F2333OWSSCGN5OV6DHPI56J", "length": 29241, "nlines": 318, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வெளியானது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைபுலிகளின் 110 தளபதிகள் விபரம்கள் வெளியாகின!!", "raw_content": "\nவெளியானது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைபுலிகளின் 110 தளபதிகள் விபரம்கள் வெளியாகின\nவெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:\nஆதவா ( செயற்பாடு தெரியாது)\nஅகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),\nஅம்பி ( செயற்பாடு தெரியாது)\nஅராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),\nஆர்யன் ( செயற்பாடு தெரியாது)\nபேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),\nபாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),\nV.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )\nLt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)\nபாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )\nபாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )\nபாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)\nபாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),\nபாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )\nபவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)\nபாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)\nபாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )\nLt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)\nஎழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )\nஎழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )\nவன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )\nகோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)\nகரிகரன் ( செயற்பாடு தெரியாது)\nஇளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )\nஇளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)\nஇளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)\nஇளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )\nஇளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)\nஇளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)\nஇளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )\nஇளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)\nஇன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)\nஇரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)\nஇசைபிரியா ( ஊடக பிரிவு)\nஜவான் ( புலிகளின் குரல் வானொலி)\nஜெயராஜ் ( நிதிப் பிரிவு )\nகாந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)\nகண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)\nகங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)\nகரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)\nகருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )\nகினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)\nகிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)\nகுயிலன் ( இராணுவ புலனாய்வு)\nகுமரன் ( பால்ராஜின் மைத்துனர்)\nகுணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)\nகுட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)\nலோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )\nமாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )\nமஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )\nமலரவன் (நிர்வாக சேவை )\nமனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)\nமணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)\nமாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )\nமிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )\nமோகன் அங்கிள் (கடற்புலிகள் )\nமுகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )\nநடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)\nநாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )\nநளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )\nநளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )\nநீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )\nநிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய்\nநிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்த���ர்)\nநிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )\nபஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )\nபரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)\nDr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)\nபூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)\nபூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)\nபிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)\nபுரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )\nபுரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)\nரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)\nராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )\nராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)\nபுதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)\nCol.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)\nரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)\nரஜித்தன் (மணலாறு மாவட்டம் )\nரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)\nS.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)\nசக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)\nசத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)\nசெல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )\nசிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)\nசித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)\nLt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)\nதிலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)\nதிலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )\nதுவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)\nவாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)\nவீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)\nLt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)\nவேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)\nவேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)\nவினிதா (நடேசனின் மனைவி )\nயோகன் / சேமணன் (அரசியல் துறை)\nயோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்- ( வீடியோ) 0\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்- (- வீடியோ) 0\nபீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்… தடியால் எழுப்பிய போலீஸ் பிறந்ததின சிறப்புப் பகிர்வு 0\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஇலங்கையில் 37 குட்டிகளுடன் சிக்கிய ராஜ நாகம்… வைரலாகும் அதிசய காணொளி\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நட���்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/10154-2018-03-18-20-58-20", "date_download": "2018-07-19T11:54:16Z", "digest": "sha1:IBI6GC5GKR4IHXH2RYPOR2O42XAP4P64", "length": 5104, "nlines": 81, "source_domain": "newtamiltimes.com", "title": "அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி\tFeatured\nஅண்ணா அறிவாலயத்திற்கு சென்றார் தி.மு.க தலைவர் கருணாநிதி. கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி . அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து வந்தார்.\nஇந்நிலையில் இன்று 18-ம் தேதி இரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். அவரை செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் பலர் வரவேற்றனர்.\nமூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் அண்ணா அறிவாலயம் வந்துள்ள கருணாநிதி, அவரது அறைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு மீண்டும் கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினார்.\nMore in this category: « திராவிட நாடு விவகாரம் : செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் பல்டி\t2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல் »\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது : நிர்வாகம் திட்டவட்டம்\nகடலுக்குள் புதைந்த தங்க குவியல்: 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nநடிகைகள் பட்டியல் : நடிகை ஸ்ரீ ரெட்டி வீசும் புது குண்டு\nமேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nமத்திய அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 131 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%9F%E0%AE%BF20%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-07-19T11:55:40Z", "digest": "sha1:XLDUJOYKCYGTOZFNSMG7TJVAI2335YN7", "length": 4162, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: முத்தரப்பு டி20 போட்டி,வங்கதேசம், இலங்கை தோல்வி\nசனிக்கிழமை, 10 மார்ச் 2018 00:00\nமுத்தரப்பு டி20 போட்டி: வங்கதேசத்திடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி\nஇந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான நிதாஹாஸ் கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 214 ரன்கள் குவித்தது. பெரேரா 74 ரன்களும், மெண்டிஸ் 57 ரன்களும் எடுத்தனர்.\nஇந்த நிலையில் 215 ரன்கள் எடுத்தால் என்ற கடினமான இலக்கை விரட்டிய வங்கதேசம், ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி இருவரும் சேர்த்து 90 ரன்களை குவித்தனர். அடுத்து ஆட வந்த வீரர்களும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால் இந்த அணி 19.4 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இலங்கைக்கு அதிர்ச்சியை கொடுத்தது\nஇணைப்பில் உள்ளவர்கள்: 134 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/2016/08/sri-kannan-kalinga-narthana-purappadu.html", "date_download": "2018-07-19T11:41:48Z", "digest": "sha1:6GBZUW4CBST6QGRU3K4UX42WTXW7GU5L", "length": 10620, "nlines": 231, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Kannan Kalinga Narthana purappadu 2016 (கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*)", "raw_content": "\nஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான். பெரியாழ்வார் கண்ணனிடத்திலே அளவு கடந்த பிரேமையாலே வடமதுரையிலே பிறந்த கண்ணபிரானை திருக்கோட்டியூரிலே பிறந்ததாக கொண்டாடுகிறார்.\nவண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*\nகண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*\nஎண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*\nகண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே.\nதிருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தவளவில் அங்குள்ளவர்கள் எல்லோரும் அளவுகடந்த ஆநந்தமடைந்து, எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்ளவே அவ்விரண்டும் கீழேவிழுந்து ஒன்று சேர்ந்து அந்தத் திருமாளிகையின் முற்றம் முழுவதையும் சேறுமயமாக ஆக்கிவிட்டன ~ என கண்ணனது பிறந்த நேர கொண்டாட்டங்களை பாடுகிறார் நம் பட்டர்பிரான். [திராவிட வேதா எனும் அற்புத இணையத்தில் இருந்து - சுவாமி அண்ணங்கராச்சாரியார் உரை.]\nதிருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இன்று காலை [27.8.2016] ஸ்ரீகிருஷ்ணர் சேஷவாஹனத்தில் புறப்பாடு கண்டுஅருளினார். தள்ளித்தளர் நடையிட்டு இளம்பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலாவிநோதங்களை நினைவுகூறும் விதமாக காளிங்கநர்த்தனம் புரியும் அழகான குட்டிகண்ணன் சேஷவாஹனத்தில் பக்தர்களுக்கு அருள்செய்தார். பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்து, வாழ்ந்து, நாம் அறிவுபெற நல்லமுதமாம் 'ஸ்ரீபகவத்கீதையை' அருளிய கண்ணபிரானின் திருவடிகளைபற்றியவருக்கு, நிர்ஹேதுக க்ருபை உடையவனான எம்பெருமான் எல்லாநலன்களையும் தானேஅளித்து, நம்மை பாதுகாப்பார்.\n\"வடமதுரைப் பிறந்த தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே.\" : வடமதுரையிலே அவதவதரித்த, மாலையணிந்த, தோள்களையுடைய கண்ணனைத் தவிர நமக்கு வேறொரு புகலில்லை. அவன்தாள்களே சரணம்.\nஎம்பெருமான் திருவடிகளேசரணம்; ஜீயர் திருவடிகளே சரணம்;\nகேசவன் நம்பி பிறந்தினில் ** people celebration at ...\n* Alavandar Sarrumurai * தூய்நெறிசேர் எதிகட்கிறைவன...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/user/60648", "date_download": "2018-07-19T11:12:33Z", "digest": "sha1:U6IM5FQ4DFKN5H4L72HPR4JIRRLGV2MM", "length": 4210, "nlines": 97, "source_domain": "www.arusuvai.com", "title": " Kirushnan - அறுசுவை உறுப்பினர் - எண் 60648", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 43 வாரங்கள் 1 நாள்\n30 நிமிடங்கள் 48 sec முன்பு\nஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-07-19T11:40:07Z", "digest": "sha1:MM6VF7SHZIWIBOQRJ3RGGKPMRHWIHSO4", "length": 4044, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "மலைப்பகுதியில் விமானம் மோதி கோர விபத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nமலைப்பகுதியில் விமானம் மோதி கோர விபத்து\nஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி நோக்கி பயணித்த விமானம் ஈரான் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர்.\nஇவ்வாறு விபத்துக்குள்ளாகியது துருக்கி நாட்டின் தனியார் விமானமாகும். இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து அதிக மழை காரணமாக ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி: 58 வெளிநாட்டினரை வெளியேற்றிய ஐரோப்பிய நாடு\nஅண்டார்டிகாவில் முதல் ஆய்வுக்கு பிரிட்டன் அனுப்பும் மஞ்சள் நீர்மூழ்கி கலன்\nசசிகலாவினால் தீபாவின் உயிருக்கு ஆபத்து- தீபாவின் கணவர் பொலிஸில் முறைப்பாடு\nபோலந்தில் இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு\nஅமெரிக்காவுடன் பொருளாதார உடன்பாட்டுக்கு தயாராகும் ஜப்பான்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:315", "date_download": "2018-07-19T11:44:12Z", "digest": "sha1:5RJVEJTTWCM5LSOHRM24VNQIYHBSIOMB", "length": 16816, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:315 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,973] இதழ்கள் [10,245] பத்திரிகைகள் [35,082] ப��ரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,161] பதிப்பாளர்கள் [2,503] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [55,766] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2017, 07:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.com/2018-04-08", "date_download": "2018-07-19T11:14:58Z", "digest": "sha1:4Y6TLX3FLDKCQBT3M3YZ7NNG2WPNQMMU", "length": 17615, "nlines": 276, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n37 வருடங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை எப்படியிருந்தது\nஅதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு\nஸ்ரீமத் சந்திரசேகர சுவாமியின் 70ஆவது அவதாரத் திருநாள் விழா\nபதவியை துஸ்பிரயோகம் செய்யும் சம்பந்தன்\nயாழில் படையினர் வசமுள்ள காணியை விடுவிக்க நடவடிக்கை\nமீன்பிடி குடும்பங்களுக்கு 300 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு\nவிடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு இராணுவத்துக்குத் துணைபோனவர்களுடன் கூட்டு: ஐங்கரநேசன் ஆதங்கம்\nபிள்ளையானின் கட்சிக்கும் மு.காவுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் அம்பலம்\nக.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கில பாடத்திற்கான அடைவு மட்டம் குறைவு\nவவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி\nபிரதமரை எதிர்த்த அமைச்சர்கள் விவகாரம் : நாளை இரவு கூடுகிறது சுதந்திரக் கட்சியின் மத்திய குழு\nவெள்ளவத்தையை சேர்ந்த தமிழ் யுவதி உட்பட ஐவர் பரிதாபமாக பலி\nநந்திக்க���ல் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட இராணுவ கண்காணிப்பு முகாம்\nரணிலை எதிர்த்தவர்களுடன் தொடர்ந்தும் இணைந்திருக்க முடியாது: ஐதேகவினார் கிடுக்குப்பிடி\nமோடி அதிரடி அறிவிப்பு : சார்க் அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறி\nபதுளையில் 17 வயதுடைய யுவதிகள் செய்த காரியம்\nஇலங்கை அரசியலில் மூக்கை நுழைக்கும் சீனா\nசாதாரண தர பரீட்சை பெறுபேறு மீளாய்வு கால அவகாசம் நீடிப்பு\nவீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் பாரியளவில் அதிகரிப்பு\nசரியான மாற்றம் இல்லையென்றால் ரணிலின் கட்சிக்கு தோல்வி உறுதி: திஸ்ஸ அத்தநாயக்க ஆருடம்\nஇலங்கை வீரர்களுக்கு சூரிச் விமான நிலையத்தில் வாழ்த்து தெரிவித்த ஈழத்தமிழர்கள்\nசம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையா\nபேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் இலங்கையில்\nபிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்\nகல்முனை முஸ்லிம்கள், தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்\nபதவி விலகினார் மலிக் சமரவிக்ரம\nரணிலுக்குப் பின் ஐ.தே.கவின் தலைவர் பதவியை எதிர்பார்க்கும் முக்கியஸ்தர்\nஇலங்கைத் தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும்\nபுதுவருடத்தை கொண்டாட தயாராகும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nநந்திக்கடல் களப்பில் இருவர் கைது\nசாதனை படைத்த தமிழ் மாணவியை தேடிச் சென்ற நாமலின் செயல்\nபிரித்தானிய பரிசு பொதியை நம்பி 20 லட்சம் ரூபாவை இழந்த யுவதி\nவெளிநாடு செல்ல விரும்பும் முன்னாள் போராளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nரணிலின் வெற்றிக்கு மைத்திரியே காரணம்: விமல் வீரவங்ச\nநான் என்றுமே தமிழர்களின் பக்கம்\nமகிந்த ஆட்சி காலத்தில் நடந்தவற்றை அம்பலப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்\nதேயிலை மலையிலிருந்து வீழ்ந்த வான் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்\nயாழ் மாணவனின் விபரீத முடிவால் பறி போன உயிர் - அதிர்ச்சியில் பெற்றோர்\nபுதுவருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக் குளத்திலிருந்து துப்பாக்கி மீட்பு\nகாணி தகராறு: கத்தியால் குத்திய நபருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு\nரணிலின் ஜாதகம் பலமாக இருக்கின்றது\nஜே.வி.பிக்கு கரம் கொடுக்குமா மஹிந்த அணி\nஇரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nபிரதமருக்கு எதிராக வாக்களித்��வர்கள் போட்டுள்ள புதிய திட்டம்\nஇலங்கையின் குறித்த பகுதியொன்றின் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஅமைச்சர் மங்களவுக்கு ஐ.தே.கட்சியில் உயர்மட்டப் பதவி\n இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nயாழ்.மிருசுவில் பகுதியில் மயிரிழையில் உயிர் தப்பிய 18 வயது இளம் பெண்\nஐக்கிய தேசிய கட்சியில் இணையும் முக்கிய அரசியல் பிரபலங்கள்\nதனிமையிலிருந்த பெண்களிடம் கைவரிசையை காட்டிய நபர்\nஅமைச்சரவை மறுசீரமைப்பு: உயர்மட்டம் தீவிர ஆலோசனை\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்\nஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை\nஇலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதில் புதிய நடைமுறை\nவடக்கு கிழக்கில் மீள் எழுச்சி பெறும் மாற்று அரசியல் கட்சிகள் தாக்கு பிடிக்குமா தமிழ் தலைமைகள்..\nதுமிந்த மற்றும் மஹிந்த ஆகியோரை பணி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nரணிலின் வெற்றிக்குப் பின்னால் மறைந்திருக்கும் கோடிகள்\nதேசிய அரசாங்கத்திற்குள் மீளவும் குழப்பம் ஐக்கிய தேசிய முன்னணி விடுத்துள்ள எச்சரிக்கை\nகூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து விளக்குகிறார் சுமந்திரன் எம்.பி.\nஇலங்கையின் போர் வெற்றிதினம் நிறுத்தப்பட காரணம் என்ன\nஇலங்கையில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள்\nசுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு மஹிந்த பகிரங்க அழைப்பு\nகப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்படுவதற்கு இதுதான் காரணமா\nபாரியதொரு புற்றுநோயாக உருவெடுத்துள்ள மதமாற்றம்\nவிடுதலைப் புலிகள் குறித்து சீமான் - வைகோ இடையே தொடரும் பனிப்போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://static.videozupload.net/page/4", "date_download": "2018-07-19T11:54:56Z", "digest": "sha1:75CJMPBQDQDO4T53OPKUXLRC5F2NEZUS", "length": 3378, "nlines": 67, "source_domain": "static.videozupload.net", "title": "VideozUpload", "raw_content": "\nசென்னையில் பட்டபகலில் பெருகிவரும் திருநங்கைகளின் அட்டுழியம் | Tamil Cinema News | TAMIL SCREEN\nவயசான காலத்துல குழந்தை பெத்த பிரபலங்கள் | Tamil kisu kisu | Latest tamil cinema news\nஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கார்த்தி அறிவிப்பு – Tamil Cinema News | Kollywood News\nஆம் நான் காதலிக்கிறேன் அதற்கு என்ன இப்போது பிரபல நடிகை ஓபன் டாக் – Tamil Cinema News\nமிகவும் மோசமான நிலையில் உள்ள நடிகை பறவை முனியம்மா கேட்கவே பரிதாபமாக உள்ளது – Tamil Cinema News\nநடிகர் சந்தானம் தற்போதைய சொத்து மதிப்பு தெரியுமா \nபிணத்துடன் உறவு கொண்டு கர்ப்பமான பெண் ஊழியர்\nநடிகர் மகளின் தற்போதைய நிலைமை | Tamil cinema update\nஓவியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஉடை மாற்றும் அறையில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் | Tamil Cinema News Kollywood News\nபணத்துக்காக இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட் செய்த தமிழ் நடிகைகள் | Tamil Cinema News | Kollywood News\nஉடலுறவின் போது பெண்களின் உணர்ச்சியை தூண்டுவது எப்படி தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2015/", "date_download": "2018-07-19T11:09:45Z", "digest": "sha1:WUPFQZHEHA5FXJ7KWN7QXNQDGKDKDK4K", "length": 229859, "nlines": 618, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: 2015", "raw_content": "\n‘நடிகைகளின் கதை’ என்கிற தலைப்பில் தொடர் எழுத வேண்டும் என்று ‘தினகரன் வசந்தம்’ இதழுக்காக கேட்டதுமே சந்தோஷத்தில் விசிலடிக்க ஆரம்பித்தேன். ஏனெனில் அந்த டைட்டிலுக்கு வெகுஜன இதழ்களிலும், வாசகர்கள் மத்தியிலும் இருக்கும் மவுசு அத்தகையது.\nபுகுந்து விளையாடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து கூவச்சொன்ன கதையாக சில நிபந்தனைகளை விதித்தார்கள். அவற்றில் முக்கியமானது நடிகைகள் என்பதால் எங்குமே கொஞ்சம் ‘அப்படி இப்படி’ என்று எல்லை மீறி எழுதிவிடக்கூடாது என்பதுதான். ஒவ்வொரு நடிகையின் வாழ்க்கையிலும் நாம் உணரவேண்டிய படிப்பினை ஒன்றாவது இருக்கும். அதை ஹைலைட் செய்துக் காட்ட வேண்டியதே தொடரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்கள்.\nஅசைவத் தலைப்பில் சைவத்தொடரை அசுவாரஸ்யமாகதான் ஆரம்பித்தேன். தொடரின் நான்காவது வாரம் வந்த ஒரு போன்கால் நினைவுகூறத்தக்கது. அரசியல் கட்சியொன்றின் மாநிலப் பொறுப்பில் இருந்தவர் பேசினார். ‘மம்தா மோகன்தாஸ் பற்றி எழுதியிருக்கீங்க. அவங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்க இயக்கம் செய்யும்’. அட, நாம எதிர்ப்பார்க்காத ஏரியாவிலிருந்தெல்லாம் ரெஸ்பான்ஸ் வருதே என்று குஷியானேன். பற்றிக்கொண்டது உற்சாக நெருப்பு. அந்த உற்சாகத்தின் அளவு, நாற்பது வாரங்களுக்கு நீண்டது.\nஇத்தொடரில் மறக்க முடியாத அத்தியாயம் ஸ்ரீவித்யாவைப் பற்றி எழுதியது. ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்ததுமே லேசாக மூளைக்குள் பல்பு அடித்தது. எனவே அப்படம் வெளிவருவதற்கு முன்பே ஸ்ரீவித்யாவின் கதையை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவிட வேண்டும் என்கிற அக்கறையில் எ���ுதி வெளியிட்டோம். பரவலான பாராட்டுகளை பெற்ற அத்தியாயம் அது.\nஇந்திய நடிகைகள், தமிழ் நடிகைகள் என்கிற குறுகிய எல்லை அமைத்துக் கொள்ளாமல் உலகளவில் ஏதோ ஒரு காரணத்துக்காக பேசப்படுகிற நடிகைகள் என்று பலரையும் அறிமுகம் செய்தோம். இப்போது நூலாக்குவதற்காக மொத்தமாக வாசிக்கும்போதுதான் தெரிகிறது, கிட்டத்தட்ட எல்லா நடிகைகளின் கதையையுமே ஏதோ ஒரு சரடு இணைக்கிறது என்று.\nதொடராக எழுதத் தொடங்கியதிலிருந்தே வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வந்துக் கொண்டே இருக்கும். ‘சில்க்கின் கதையை எப்போது எழுதுவீர்கள்’. எங்களுக்கும் எழுத ஆசைதான். ஆனால் எழுதக்கூடாது என்று விடாப்பிடியாக ஒரு லட்சுமணரேகையை எங்களுக்கு முன்பாக வரைந்துக் கொண்டோம். ஏனெனில் சில்க்கின் கதையை அறியாத தமிழரே இருக்க முடியாது. பல்வேறு கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் வந்த கதை அவருடையது. அதுவுமில்லாமல் ‘நடிகைகளின் கதை’யில் சில்க் என்பது க்ளிஷேவான விஷயமாக இருக்கும் என்கிற தயக்கமும் இருந்தது. எனினும் சில்க்கை தவிர்க்க முடியுமா என்ன. ஃபிலிம்பேர் இதழில் (1984 டிசம்பர்) தன் திரையுலக வாழ்வின் உச்சத்தில் இருந்தபோது சில்க் கொடுத்திருந்த நேர்காணலை அப்படியே தமிழாக்கம் செய்து கடைசி அத்தியாயமாக கொடுத்தோம். அரிதான அந்த பேட்டி சில்க்கின் ஆளுமையை வாசகர்கள் யூகித்துக்கொள்ள வழிவகுக்கும்.\nஇந்நூல் அச்சுக்கு செல்ல தயாராகும் நேரத்தில் இன்னொரு இனிய திருப்பம். ஷகிலா, ‘தினகரன் வெள்ளிமலர்’ இதழுக்காக நேர்காணல் தர ஒப்புக்கொண்டார். ‘ஷகிலா பேசுகிறேன்’ என்கிற தலைப்பில் வெளியான அந்த நேர்காணல், திரைக்குப் பின்னான ஷகிலாவை அச்சு அசலாக வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஷகிலா குறித்த பல கற்பிதங்களை உடைத்திருக்கும் அந்த பேட்டியையே இந்நூலின் முதல் அத்தியாயமாக சேர்த்திருக்கிறோம்.\nஇந்த நூலின் தலைப்பில் வேண்டுமானால் ‘கதை’ இருக்கலாம். ஆனால் இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நூறு சதம் நிஜம்.\n- ‘நடிகைகளின் கதை’ நூலின் முன்னுரை\nவண்ணத்திரையில் நான் கண்ட முதல் நாயகியான ஸ்ரீதேவிக்கு இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.\nபக்கங்கள் : 192 விலை : ரூ.150/-\nவெளியீடு : சூரியன் பதிப்பகம்\n229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,\nஇன்று காலை காபியோடு தினத்தந்தியை பருகிக் கொண்டிருந்தபோது ‘சன் லைஃப்’ மியூசிக் சானலில் ‘பூங்காற்று’ நிகழ்ச்சி வரவேற்பரையை நிறைத்துக் கொண்டிருந்தது.\n‘பாண்டி நாட்டுத் தங்கம்’ படத்திலிருந்து ‘சிறு கூட்டுலே’ பாட்டு. வாசித்துக் கொண்டிருந்த செய்திகள் மறந்து மனசு வேறெங்கோ பறக்க ஆரம்பித்தது. அடுத்து ‘அதிசயப் பிறவி’யில் இருந்து ‘உன்னைப் பார்த்த நேரம்’. சமையலறையிலிருந்து அம்மா குரல் கொடுத்தார். “இப்போவெல்லாம் யாரு இது மாதிரி பாட்டு போடுறாங்க.... இந்தப் படமெல்லாம் உங்க அப்பாவோட ரங்கா தியேட்டருலே பார்த்தேன்”. ‘அம்மன் கோயில் கிழக்காலே’விலிருந்து ‘பூவை எடுத்து ஒரு மாலை’. விஜய்காந்த் ரசிகையான அம்மா உருகிப் போனார். சமையலை மறந்துவிட்டு பாடல்களை கேட்க அமர்ந்துவிட்டார்.\nஇதெல்லாம் வெறும் பாடல்கள் அல்ல. நினைவுகள்\nடீனேஜில் இருந்தபோது ஒரு மழைக்கால நள்ளிரவு. மறுநாள் காலையில் நான் என்னவாக இருக்கப் போகிறேன் என்று தெரியாத நிச்சயமற்ற சூழல். எல்லா வகையிலும் தோற்றுப்போன எனக்கு எதிர்காலமே இல்லை என்பது மட்டும் தெரிந்திருந்தது. சூடாக தேநீர் அருந்திக் கொண்டே மண்ணாங்கட்டி மூளையின் துணைகொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டேப்ரிக்கார்டரை ஆன் செய்தார் டீ மாஸ்டர். ‘தாலாட்டுதே வானம்... தள்ளாடுதே மேகம்’. ஜெயச்சந்திரனின் குரலில் இளையராஜாவின் மேஜிக். பாடல் தொடங்கிய நொடியிலிருந்து அடுத்த நான்கு நிமிடங்களுக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை. பாடல் முடிந்ததுமே, புதியதாக பிறந்தவனாய் உணர்ந்தேன். கடந்துப்போன பதினேழு வருடங்கள் அத்தனையையும் மறந்தேன். மழை நனைத்த வயலாய் மனசு பளிச்சென்று ஆனது. இன்று நான் நானாக இருப்பதற்கு அந்த நாலு நிமிடங்களே காரணம்.\nபுத்தனுக்கு போதிமரத்தின் அடியில் கிடைத்த ஞானம் இப்படியானதாகதான் இருந்திருக்க வேண்டும். பிற்பாடு பல நண்பர்களோடு பேசிப் பழகும்போது நிறைய பேர் இதே போன்ற அனுபவத்தை ஏதோ ஒரு பாடல் மூலம் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடிந்தது. அத்தனை பாடல்களுமே இளையராஜா இசையமைத்தவை என்பதுதான் ஆச்சரியமான ஒற்றுமை.\nகடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் என் வாழ்நாளின் படுமோசமான நாட்களை கடந்தேன். ஆகஸ்ட் 24 அன்று என்னுடைய பிறந்தநாள் என்பதையே ஃபேஸ்புக்கில் வந்து குவிந்த வாழ்த்து��ள் மூலம்தான் உணர்ந்தேன். என் குடும்ப விளக்கு அணைந்துவிடுமோ, குழந்தைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்கிற பதட்டத்தில் மனநலம் பிறழ்ந்து சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. தேக்கி வைத்த கண்ணீர், எந்நிமிடமும் அணையாய் உடைய தயாராக இருக்க நடைப்பிணமாய் ஆனேன். அந்த மனநிலையில் வண்டி ஓட்டும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் எந்நேரமும் கூடவே இருந்தார் அண்ணன் சிவராமன்.\nஅவர் உடன் இல்லாத பொழுதுகளில் எந்நேரமும் மொபைலிலும், கணினியிலும் சேகரிக்கப்பட்டிருந்த இளையராஜாதான் ஹெட்செட் மூலமாக என்னை மீட்டார். என்னைப் பொறுத்தவரை இயேசுவை மாதிரி இளையராஜாவும் ஒரு மீட்பர். மிகைப்படுத்தி சொல்வதாக தோன்றலாம்.\nராகம், தாளம் என்று இசை பற்றிய எந்த அறிவும் இல்லாத பாமரனான எனக்கு தாயின் அன்பையும், தந்தையின் அக்கறையையும் இளையராஜாவின் இசை அளித்தது. குஞ்சுக்கு தாய்ப்பறவை தரும் கதகதப்பையும், பாதுகாப்பையும் வழங்கியது என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள் ஆனால், இதுதான் உண்மை. எழுதியோ, பேசியோ இந்த உணர்வுகளை யாருக்கும் கடத்தவே முடியாது. ஒவ்வொருவருமே இம்மாதிரி சூழலை எதிர்கொள்ளும் அனுபவம் மட்டுமே நான் சொல்லவருவதின் பேருண்மையை எடுத்துக் காட்டும்.\nபல முறை இணையத்தளங்களிலும், நண்பர்களுடனான விவாதங்களிலும் எது எதற்கோ இளையராஜாவை லூசுத்தனமாக கிண்டலடித்திருக்கிறேன். கேணைத்தனமாக திட்டியிருக்கிறேன். அதற்காகவெல்லாம் இப்போது வருந்த வேண்டியதில்லை. என் தகப்பன் மீது நான் என்ன உரிமை எடுத்துக் கொள்வேனோ, அப்போதெல்லாம் அதே போன்ற உரிமையைதான் அவர் மீதும் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று புரிகிறது. என்னுடைய இரத்தத்திலும், உடலின் ஒவ்வொரு செல்லிலும் இளையராஜா இருக்கிறார் என்கிற புரிதலுக்கு இப்போது வந்திருக்கிறேன். அறுவைச்சிகிச்சை செய்துகூட அவரை என்னிடமிருந்து அகற்ற முடியாது.\nஇளையராஜாவுக்கு நாம் வெறும் ரசிகர்கள் அல்ல. அவரது இசை, ரசிப்பு என்கிற அற்ப எல்லையை எல்லாம் என்றோ தாண்டிவிட்டது. உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்துவிட்ட மேதைமை அவரது இசை. ஒவ்வொரு தமிழனுமே மகிழ்ச்சியாக இருக்கும்போது அவனுடைய மகிழ்ச்சியின் அளவை பன்மடங்கு கூட்டுவதும், துயரத்திலிருக்கும்போது அதிலிருந்து அவனை மீட்டெடுக்கும் வ��்லமையும் இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இதை மறுப்பவர்களுக்கு கேட்கும் சக்தி இல்லையென்று அர்த்தம்.\nகடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன் நான். நமக்கு கற்பிக்கப்பட்ட எந்த கடவுளுமே இதுவரை எந்த அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டியதில்லை. நம் கண் முன்னால் ஒரு புல்லை கூட பிடுங்கிப் போட்டதில்லை. ஆனால், கடவுளைவிட மேன்மையான சொல் எந்த மொழியிலும் இல்லாததால் இளையராஜாவை இப்போதைக்கு கடவுள் ஸ்தானத்தில்தான் வைக்க விரும்புகிறேன். அவரை நாம் இழக்கும் நாள்தான் நிஜமாகவே தமிழ் சமூகம் ஈடு இணை செய்ய முடியாத இழப்பினை சந்திக்கும் நாளாக இருக்கும்.\nசமீபத்தில் வெளிவந்த ‘CREED’ படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன் ஓர் அபாரமான வசனத்தை பேசியிருப்பார். “காது கொடுத்து கேள். எப்போதும் நீ பேசிக்கொண்டே இருந்தால் எதையுமே கற்க முடியாது”. நம்முடைய இடியட் பாக்ஸ்கள் எப்போதும் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. அவையும் கற்பதாக தெரியவில்லை. அவற்றை உபயோகிப்பவனும் எதையும் கற்கமுடியுமென்று தோன்றவில்லை.\nநம்மிடையே வாழும் கடவுளை அவமதிக்கும் எவனுக்கும் பரலோகத்திலும் கூட பாவமன்னிப்பு இல்லை\nஆண்டு அனுபவித்தவர் அறுபது வயதில் சுயசரிதை எழுதுகிறார் என்றால் புரிகிறது. இன்னும் நாற்பதை கூட எட்டாத ஷகிலா ஏன் எழுதியிருக்கிறார்\nசந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள சென்னையில் அவர் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு சென்றோம். ஒரு பிரபலமான நடிகை வசிக்குமிடம் என்பதற்கு எந்தவித அடையாளமும் அற்ற எளிமையான வீடு. சாதாரண பெண்களை போலவே ‘சிம்பிளாக’, ‘ஹோம்லி’யாக இருக்கிறார் ஷகிலா. கழுத்தில் காதில் மூக்கில் பொட்டு தங்கம் இல்லை.\nஒரு முறை பி.சி.ஸ்ரீராம் சார் சொன்னார். ‘உங்களை மாதிரி ஆளுங்களோட வாழ்க்கையில் இருந்துதான் மக்கள் கத்துக்க வேண்டிய பாடங்கள் இருக்கு. உங்களுக்கு நடந்த நல்லது கெட்டதுகளை எழுதணும்...’\nஅவர் சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது. நீண்டகாலமாகவே உங்களைப் போன்ற பத்திரிகை நண்பர்கள் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எல்லாரிடமும் ‘எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றி எழுத நான் அன்னை தெரசாவும் இல்லை’ என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையும் சரி. நான் நடித்த படங்களும் சரி. போலியானவை. அதற்காகவே எழுதத் தயங்கினேன். எழுத���னால் உண்மையை மட்டுமே எழுதவேண்டும்.\nஇந்நிலையில் திடீரென்று ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்தது. மளமளவென்று எழுதிவிட்டேன்.\nநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோமே இதே வீட்டில்தான். அப்பா, ரெக்ரியேஷன் தொடர்பான வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா, ஹவுஸ் ஒயிஃப். அப்பாவுக்கும் சரி. அம்மாவுக்கும் சரி. இவர்கள் செய்துக் கொண்டது பரஸ்பரம் மறுமணம். அப்பாவின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை என் சொந்த சகோதர சகோதரிகள் என்றுதான் என்னுடைய 12வது வயது வரை நினைத்துக் கொண்டிருந்தேன். என் அம்மாவுக்கு மூன்று பிள்ளைகள்.\nஅருகிலிருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது என் ஸ்கூல் சீனியர்களாக இருந்த சோனியாவும் (இப்போது நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி), டிங்குவும் பயங்கர ஃபேமஸ். காரணம் அவர்கள் இருவரும் அப்போது சக்கைப்போடு போட்ட ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் நடித்திருந்தார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த பிரபலமே என்னை சினிமாவை நோக்கி ஈர்த்தது.\nடீன் ஏஜில் என் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சினிமாக்காரர்கள் ஒரு சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். சரத்குமார் நடித்த ‘நட்சத்திர நாயகன்’ படம் அது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் முத்தாய்ப்பான காட்சி. அதைத் தொடர்ந்தே நிறைய படங்களில் நடித்தேன். இரண்டாயிரம் ஆண்டின் காலக்கட்டத்தில்தான் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.\nபடிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. பாப் கட்டிங் வெட்டிக் கொண்டு டிவிஎஸ் சேம்பில் கோடம்பாக்கம் முழுக்க சுற்றுவேன். ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டால் ஸ்கூலுக்கு லீவு போடலாம் என்பதே எனக்கு ஆகப்பெரிய ஆறுதலாக இருந்தது. ‘படிப்புதான் வரலை. நடிப்பாவது வரட்டும்...’ என்று அப்பாவும் தடை போடவில்லை. அதுவுமின்றி அப்போது குடும்பமும் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. சினிமாவில் நான் நடித்ததால் காசு நிறைய கிடைத்தது. எனவே குடும்பத்தில் என்னை என்கரேஜ் செய்தார்கள்.\n‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு தங்கச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் எனக்கு கொடுக்கப்பட்ட உடை மிகச் சிறியதாக இருந்தது. அதிர்ச்சியில் உறைந்துப் போனேன். ஷாட் ரெடி ஆனதுமே சில்க் மாடியி��் இருந்து இறங்கி வந்தார். அவரைப் பார்த்ததுமே கூடுதல் அதிர்ச்சி. என்னைவிட மிகச்சிறிய ஆடை அணிந்திருந்தார். அவரிடம் சங்கடத்துடன், ‘அக்கா, உங்க உள்ளாடையெல்லாம் வெளியே தெரியுது...’ என்றேன். சில்க் என்னை கண்டுக்கொள்ளவே இல்லை. இயக்குநர் உடனே, ‘பெரிய ஸ்டார்கிட்டே இப்படியெல்லாம் பேசக்கூடாது...’ என்றார்.\nசீன் படி நான் சில்க்குக்கு காஃபி கொடுக்க வேண்டும். அவர் என்னை அறைய வேண்டும். கேமிரா ரோல் ஆகத் தொடங்கியது. ‘அக்கா காஃபி...’ என்று நான் கோப்பையை நீட்ட, பதிலுக்கு சில்க் பளாரென்று நிஜமாகவே அறைந்தார். எனக்கு அவமானமாகி விட்டது. நான் அவரிடம் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு வன்மத்தில் அறைந்துவிட்டார் என்று கோபப்பட்டு படப்பிடிப்பை விட்டு வெளியேறினேன்.\nதயாரிப்பாளரும், இயக்குநரும் பின்னர் என்னை சமாதானப்படுத்தி ‘டைமிங்’ பற்றியெல்லாம் பாடமெடுத்தார்கள். சில்க் வேண்டுமென்றே அடிக்கவில்லை என்று புரியவைத்தார்கள். அதன்பிறகு சில்க் என்னிடம் அன்பாக நடந்துக் கொண்டார். என்னை பிரத்யேகமாக அவர் வீட்டுக்கு அழைத்து லஞ்ச் கொடுத்தார். ஷூட்டிங்கில் எனக்காக நிறைய சாக்லேட் வாங்கி வைத்திருப்பார்.\nநான் நடித்த படங்கள் கமர்ஷியலும் அல்ல. ஆர்ட் ஃபிலிமும் அல்ல. ஏதோ ஒரு வகையில் மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமைந்தவை. பதினைந்து லட்சத்தில் படம் எடுப்பார்கள். முப்பது லட்சத்துக்கு பிசினஸ் ஆகும். பிசினஸ் ஆன தொகையைவிட பன்மடங்கு வசூல் ஆகும். அந்த படம் தொடர்பான அத்தனை பேருக்குமே நிச்சய லாபம். இன்றுவரை அம்மாதிரி படங்களில் நடித்தது தொடர்பாக எனக்கு எந்தவிதமான குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ சிறிதுமில்லை.\nஒருமுறை படப்பிடிப்பு முடிந்து கேரளாவில் இருந்து சென்னைக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தேன். ஒரு புதுத் தயாரிப்பாளர் வந்து கால்ஷீட் கேட்டார். ஐந்து நாள் நடித்தால் போதும் என்றார். அவரை நிராகரிக்க எனக்கு ஒரு லட்சம் சம்பளம், மூன்று நாள்தான் நடிக்க முடியும் என்றேன். அவரோ உடனே ஒரு லட்ச ரூபாயை என் கையில் அட்வான்ஸாகவே கொடுத்து விட்டார்.\nமூன்று நாள் ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது கூடுதலாக இரண்டு லட்சம் கொடுத்தார். ஒருநாளைக்கு ஒரு லட்சம் என்னுடைய சம்பளம் என்று அவர் நிர்ணயித்து வைத்திருக்கிறார். என்னுடைய வேல்யூ அந்தான் என்று எனக்கு அப்போதுதான் தெரிய வந்தது.\nநான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் என்னுடைய அம்மாவும், அக்காவும் எடுத்துக் கொண்டார்கள். குடும்பத்துக்காகதான் சம்பாதித்தேன். உறவுகளையும், நட்புகளையும் பேணி வளர்க்க கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்தேன். ஆனால், அவர்கள் என்னை ‘பி’ கிரேடு நடிகையாகதான் பார்த்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் வெறும் ‘ஏடிஎம் மெஷின்’. என் குடும்ப நிகழ்வுகளில் நான் கலந்துக் கொள்வதைகூட அவர்கள் அவமானமாக கருதினார்கள்.\nஎனக்கு ஆதரவாக இருந்த அப்பாவும் காலமான பிறகு மிகவும் தனிமையை உணர்ந்தேன். நண்பர்கள், உறவுகள்... என அத்தனை பேரும் தொடர்ச்சியாக சொல்லி வைத்தது போல முதுகில் குத்திக்கொண்டே இருந்தார்கள். துரோகங்கள் பழகிவிட்டது. எப்படியிருந்தாலும் நான் வாழ்ந்துதானே ஆகவேண்டும். என்னுடைய உலகத்தை நானே உருவாக்க தீர்மானித்தேன்.\nஇப்போது நான் வசித்து வருவது ஒரு காடு. இந்த காட்டின் ஒவ்வொரு மரத்தையும் நானே நட்டிருக்கிறேன். எல்லாமே என்னுடைய தேர்வுதான் என்பதால் காசு பணம் இருக்கிறதோ இல்லையோ மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னை ஒரு திருநங்கை அவரது மகளாக தத்தெடுத்திருக்கிறார். அவர் பெயர் கிருபாம்மாள். நான் ஒரு திருநங்கையை என்னுடைய மகளாக தத்தெடுத்திருக்கிறேன். அவரது பெயர் தங்கம். ரத்த உறவில்லாத இந்த உறவுகளின் பாசத்திலும், அன்பிலும் முன்பு எப்போதுமே உணர்ந்தறியாத பாதுகாப்பினையும், மகிழ்ச்சியையும் பெறுகிறேன்.\nஇளையராஜாவின் இசை என் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இசையைத் தவிர்த்து என்னுடைய பொழுதுபோக்கு ப்ளே ஸ்டேஷனில் கேம்ஸ் விளையாடுவது. சினிமா பார்ப்பது அரிது. தமிழில் கமல் சார் படங்களை தியேட்டருக்கு போய் பார்ப்பேன். அது தவிர்த்து ‘நார்னியா’, ‘ஹாபிட்’ மாதிரி ஹாலிவுட் ஃபேண்டஸி படங்களை விரும்பி ரசிப்பேன். மாற்று சினிமாவாக மதிக்கப்படும் உலகப்படங்கள், கொரியப்படங்கள் எனக்கு விருப்பமானவை. பெரிய கலெக்ஷனே என்னிடம் இருக்கிறது.\nகாமிக்ஸ் பிடிக்கும். ஃப்ளைட்டில் பயணிப்பது அறுவை என்பதால் எப்போதுமே ரயிலில் செல்வதையே விரும்புவேன். அம்மாதிரி பயணங்களுக்காக கையில் எடுத்துச் செல்வது டிங்கிள், ஆர்ச்சீஸ் மாதிரி காமிக்ஸ் புத்தகங்களைதான். ஒவ்வொரு முறை புத்தகக��� கடைக்கு போகும்போதும் குறைந்தது மூவாயிரம், நாலாயிரம் ரூபாய்க்கு காமிக்ஸ்களை மொத்தமாக அள்ளி விடுவேன். காமிக்ஸ் படித்துதான் என்னுடைய ஆங்கில அறிவே வளர்ந்தது.\nபயணங்கள்தான் என்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கின்றன. மாதக் கணக்கில் காடுகளில் தங்கி வனவிலங்குகளை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. மசினகுடி போய் விசாரித்துப் பாருங்கள். ஷகிலா அங்கே ரொம்ப ஃபேமஸ். பழங்குடியினரின் வீடுகளில் தங்கி, நாட்கணக்கில் காட்டு வாழ்வை வாழ்வேன். இந்தியா முழுக்க இருக்கும் எல்லா காடுகளுக்கும் சென்று வாரக் கணக்கில் வாழ்ந்துவிட்டு வரவேண்டும் என்பது என் லட்சியம்.\nஎன்னைப் போன்ற பெண்கள், ஆண் இனத்தையே வெறுப்பார்கள் என்றொரு பொதுப்புத்தி இருக்கிறது. அது தவறு. ஆண்களை நான் பாசிட்டிவ்வாகதான் பார்க்கிறேன். துரோகம், நயவஞ்சகம் மாதிரி குணங்கள் ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானதுதான். என்னை சந்திக்கும் ஒவ்வொரு ஆணிடமும் என் அப்பாவை தேடுகிறேன். நான் ஒரு depended child. ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது ஆதரவை மட்டுமே. வயதில் மூத்தவர்களாக இருந்தால் அண்ணன் என்றும், இளையவர்களாக இருந்தால் தம்பி என்றும் அழைக்கிறேன். பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை என்பார்கள். ஆண்கள் இல்லாமல் இருந்தால் மட்டும் உலகம் இருந்து விடுமா\nகடவுள் நம்பிக்கை உண்டு. அந்த கடவுள் அல்லாவோ, இயேசுவோ, கிருஷ்ணரோ அல்ல. கடவுள். அவ்வளவுதான். அவருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவேன். அவருடைய முகவரி தெரியாது என்பதால் போஸ்ட் செய்வதில்லை. கடவுள் என்பதால், நான் கடிதத்தில் என்ன எழுதுகிறேன் என்று அவருக்கு தெரியாமலேயா போகும் சமீபத்தில் கூட பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாடும் மக்களை காக்க கோரி கடிதம் எழுதினேன். இம்மாதிரி ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதியிருக்கிறேன். கடவுளிடம் பேசுவதற்கு கடிதங்கள் உதவுகின்றன. எனக்கும் கடவுளுக்கும் மத்தியில் இடைத்தரகர்கள் யாரும் இருப்பதை நான் விரும்புவதில்லை.\nநடிக்க வாய்ப்பு குறைந்தவுடனேயே டைரக்டர் ஆகிவிட வேண்டும் என்கிற ஆசை நிறைய பேருக்கு வரும். எனக்கு அப்படியெல்லாம் இல்லை. ஏற்கனவே ‘ரொமாண்டிக் டார்கெட்’ என்றொரு படம் இயக்கியிருக்கிறேன். டைரக்ஷன் ரொம்பவும் டென்ஷன் பிடித்த வேலை. எனவே இனி டைரக்ட் செய்யும் ஐடியா இல்லை.\nநா���ாக எப்போதுமே யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. என்னை தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே ஆரம்பக் காலத்திலிருந்து ஒப்புக்கொண்டு வருகிறேன். இப்போதும் யாராவது வந்து கேட்டால் நடித்துக் கொடுக்கிறேன்.\nஎனக்கு காமெடி பிடிக்கும். என்றாலும் எல்லா வேடங்களிலும் நடிக்க ஆசை. ஷகிலா என்பவள் வெறும் கவர்ச்சி நடிகை அல்ல. எனக்குள் இருக்கும் கலையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறேன். கிடைத்தால், நான் யார் என்பதை மக்களுக்கு நிரூபிப்பேன்.\n(நன்றி : தினகரன் வெள்ளி மலர்)\nசென்னையில் நிகழ்ந்திருப்பது செயற்கைப் பேரழிவு\nகடந்த வாரத்தில் சென்னையை சின்னாபின்னமாக்கிய வெள்ளம், இயற்கைப் பேரழிவு அல்ல. செம்பரம்பாக்கம் ஏரி நீரை வெளியேற்றுவதில் அரசு நிர்வாகம் செய்த குளறுபடியே சென்னை நகரை மூழ்கடித்தது.\nநவம்பர் இறுதியில் சர்வதேச வானிலை ஆய்வு அமைப்புகள் தமிழக அரசு தலைமையை எச்சரித்திருந்தன. டிசம்பர் 1 மற்றும் இரண்டு தேதிகளில் 500 மி.மீ அளவுக்கு சென்னையில் மழை பொழியலாம் என்று அவ்வமைப்புகள் கணித்திருந்தன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை செயலருக்கு செம்பரம்பாக்கம் நீரின் அளவை 22 அடியிலிருந்து 18 அடியாக குறைக்கச் சொல்லி பரிந்துரைத்தார்கள். இதன் மூலம் மேலும் பொழியும் கனமழையை எதிர்கொண்டு அடையாறு ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்தினை தவிர்க்கலாம் என்றார்கள். ஆனாலும், நவம்பர் 26 முதல் 29ந் தேதி வரை அடையாறு ஆற்றில் மிகக்குறைவான நீரேதான் பாய்ந்துக் கொண்டிருந்தது.\nஏனெனில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பரிந்துரை கோப்பு, கோட்டையில் தூங்கிக் கொண்டிருந்தது. நமக்குக் கிடைத்த தகவல்களின் படி பொதுப்பணித்துறை செயலர், தலைமைச் செயலரின் உத்தரவுக்காக காத்திருந்தார். தலைமைச் செயலர் யாருடைய அனுமதிக்காக காத்திருந்தார் என்பது இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது. இதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சரியான திட்டமிடுதல் இல்லாமல் பக்ராநங்கல் அணையை திறந்துவிட்டபோது பஞ்சாப் எத்தகைய பேரழிவைச் சந்தித்ததோ அதற்கு இணையான பேரழிவினை இன்று சென்னை சந்தித்திருக்கிறது.\nசெம்பரம்பாக்கம் நீர்த்தேக்க அணை மொத்தமாக நிரம்பி, தண்ணீர் தளும்பும்வரை அதன் கதவு திறக்கப்படவில்லை. சென்னை���ிலும் ஏற்கனவே கணித்தபடி கனமழை பொழியத் தொடங்கியது. “டிசம்பர் ஒன்று அன்று இரவு நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 33,500 கன அடி நீரைதான் திறந்துவிட்டோம் என்று மாநில அரசு கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறது. ஆனால், உண்மை நிலவரம் திறந்துவிடப்பட்ட நீர் இதைவிட இருமடங்கு என்பதுதான். கூடவே அத்தனூர் ஏரியின் நீரும் விநாடிக்கு 5,000 கன அடி அளவுக்கு திறந்துவிடப்பட்டதால் அடையாறு அழிவாறாக ஆனது” என்பது பொதுப்பணித்துறை வட்டாரத்திலிருந்து நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.\n“இந்த மோசமான நீர் நிர்வாகக் குளறுபடிகளின் காரணமாகவே டிசம்பர் 2 மற்றும் 3 இரு தேதிகளிலும் அடையாறில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக நீர் வெள்ளமென பயணித்தது” என்று வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மூத்த ஐஏஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர், “தாங்களாகவே முடிவெடுக்க தைரியமில்லாத முதுகெலும்பில்லாத அதிகாரிகளை பெற்றிருப்பதற்கான பலனைதான் சென்னை நகரம் அனுபவித்திருக்கிறது. இந்த துரதிருஷ்ட வேளையிலும் நல்ல வேளையாக முழுக்கொள்ளளவை எட்டிய நீர்த்தேக்கம் உடைந்து பாய்ந்து மொத்த ஊர்களையும் நாசமாக்கவில்லை. அதுவரை நிம்மதி” என்றார்.\n“சென்னையிலும் புறநகரிலும் ஏற்பட்டிருக்கும் இந்த கொடுமையான பாதிப்பை, செம்பரம்பாக்கம் தண்ணீரை வெளியேற்றுவதில் ஒழுங்கான நிர்வாகத்தை கையாண்டிருந்தால் தவிர்த்திருக்கலாம்” என்று மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸைச் சேர்ந்த புரொபஸர் எஸ்.ஜனகராஜன் சொல்கிறார். “செம்பரம்பாக்கம் ஏரியை அரசு தனியான ஒரு நீர்த்தேக்கமாக மட்டும் கருதக்கூடாது. அந்த ஏரி அடையாறு ஆற்றோடு மட்டுமின்றி மேலும் தோராயமாக 200 நீர்நிலைகளோடு தொடர்புடையது. அதனால்தான் விநாடிக்கு 33,500 கன அடி நீரை அங்கிருந்து திறந்துவிட்டாலும் கூட, அந்நீர் சைதாப்பேட்டையை அடையாறு வழியாக அடையும்போது 60,000 கன அடியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நிர்வாகத்துக்கு இந்த இயல்பான நிகழ்வு தெரிந்துத் தொலைக்காததால் மக்கள் அதற்கான விலையை தந்திருக்கிறார்கள்” என்றும் அவர் விளக்கினார்.\nசென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் மட்டும் ஏரி, குளம், ஆறு என்று உத்தேசமாக 3,600 நீர்நிலைகள் உண்டு. இவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக (நதிநீர் இணைப்பு மாதிரி) செய்துவிட்டால் தோராயமாக 30 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை இவற்றில் தேக்க முடியும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் வராமலும் எதிர்காலத்தில் காக்க முடியும் என்கிற யோசனையையும் ஜனகராஜன் முன்வைக்கிறார்.\nஇந்த பேரழிவின் விளைவு இவ்வளவு மோசமாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மக்களுக்கு -– குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு - எவ்வித வழிகாட்டுதலோ எச்சரிக்கையோ விடுக்கப்படவில்லை. மேலும், சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் அத்தனை பேருடைய செல்போனும் அணைத்துவைக்கச் சொல்லி ‘யாராலோ’ அறிவுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வயர்லெஸ் மூலம் மட்டுமே அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அவதிக்குள்ளான மக்கள் உடனடியாக உள்ளூர் காவல்துறையினரின் உதவியை கோர முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதைப்பற்றியெல்லாம் விளக்கங்களை கேட்க தலைமைச் செயலரையும், பொதுப்பணித்துறைச் செயலரையும் தொடர்புகொள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்த அத்தனை முயற்சிகளும் பலனை எட்ட முடியவில்லை. விடையறிய முடியாமல் நம் முன் நிற்கும் கேள்விகள் இவைதான்.\n1) அபாய அளவை எட்டிய பிறகும் செம்பரம்பாக்கம் நீரை திறந்துவிடாமல் யாருடைய உத்தரவுக்காக அதிகாரிகள் காத்திருந்தார்கள்\n2) இப்போது நடந்திருக்கும் பேரழிவுக்கு யாராவது பொறுப்பேற்பார்களா\n3) இனியாவது நீர்த்தேக்கங்களை பாதுகாப்பான முறையில் நிர்வகிக்க அரசு முறையான வழிகாட்டுதல்களை உருவாக்குமா\n4) மழைவெள்ளக் காலத்தில் இதுபோல பெரியளவில் தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும்போது மக்களுக்கு தகுந்த காலத்தில் எச்சரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா\n- 09-12-15 அன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வெளிவந்திருக்கும் செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்\n“யார் யாரோ வர்றாங்க. தேவருக்கு நூற்றாண்டு விழான்னு ஆரம்பிக்கிறாங்க. பேஷா செய்யலாமேன்னு சொல்றேன். போயி கலந்து பேசிட்டு உடனே வர்றோமுன்னு கிளம்புறாங்க. அவ்வளவுதான். அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியாது. தமிழ் சினிமாவுக்கு தேவர் எவ்வளவு பங்களிப்பு செஞ்சிருக்காரு. எவ்வளவு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்காரு. எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரு. வள்ளலா வாரி வாரி வழங்கியிருக்காரே. கருத்து கட்சி வேறுபாடுகளை மறந்து எல்லாருமா சேர்ந்து எவ்வளவு பிரும்மாண்டமா நடத்திக் காட்டியிருக்கணும். மறந்துவிடக்கூடிய மனிதரா அவரு. வயசு மட்டும் ஒத்துழைச்சிருந்தா நானே ஆடி, ஓடி செஞ்சிருப்பேன்” கலைஞானத்தின் கண்களில் கடந்தகாலம் நிழலாடுகிறது.\nஎட்டு வயதில் டூரிங் தியேட்டரில் முறுக்கு விற்றுக் கொண்டிருந்த கலைஞானம், பிற்பாடு முப்பது படங்களுக்கு கதை எழுதி, நூற்றுக்கணக்கான படங்களின் திரைக்கதை விவாதங்களில் பங்குபெற்று, தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தேவரின் கதை இலாகா அவ்வளவு பிரபலம். திரைப்படத்தின் டைட்டிலிலேயே ‘கதை : தேவர் கதை இலாகா’ என்று பெயர் வரும்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்வார்கள். அந்த பிரசித்தி பெற்ற கதை இலாகாவின் தூண்களில் ஒருவராக இருந்தவர் கலைஞானம்.\nசாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் குறித்த தன்னுடைய நினைவலைகளை தினகரன் தீபாவளி மலருக்காக பகிர்ந்துக் கொண்டார்.\n“எல்லாம் தேவரோட ஆசி. நான் நல்லா இருக்கணும்னு முதல் சந்திப்பிலேயே விரும்பினவரு அவரு. அப்போதான் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டிருந்தேன். சிவம்னு ஒருத்தரு தேவரண்ணனோட குழுவில் இருந்தவரு. அவர்தான் என்னை அண்ணன் கிட்டே அழைச்சிட்டுப் போனாரு.\nகே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நான் எழுதிக்கொடுத்த படங்களோட பேரையெல்லாம் வரிசையா சொன்னவரு, ‘இதையெல்லாம் நீதானே எழுதினே’ன்னு கேட்டாரு. ‘ஆமாம்’னு சொன்னேன். ‘கோபாலகிருஷ்ணனே அருமையா கதை சொல்லுவாரு. அவரையே நீ கதை சொல்லி அசத்தியிருக்கே. கெட்டிகாரன் தாம்பா’ன்னு பாராட்டினாரு.\nகொஞ்ச நேரம் பேசிட்டு, குடும்ப நிலவரத்தை விசாரிச்சாரு. அப்போ நான் பெருசா சம்பாதிக்கலை. அதை சொன்னதும், ‘அடப்பாவி, இவ்வளவு ஹிட்டு கொடுத்துட்டு இன்னும் ஒண்ணும் சேர்த்து வைக்கலையா\nஉடனே தன்னோட தம்பிகிட்டே சொல்லி பத்தாயிரம் ரூபாய் எடுத்துக்கிட்டு வரச் சொன்னாரு. என் கையிலே கொடுத்து, ‘இது வெறும் அட்வான்ஸ்தான். இதை எடுத்துட்டு ஊருக்குப் போய் ஏதாவது நிலபுலன் வாங்கி போட்டுட்டு வா. எதிர்காலத்துக்கு உதவும். மத்ததையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்’னு சொன்னாரு. இப்படிதான் நான் தேவர் கிட்டே சேர்ந்தேன்.\nதேவரோட இருந்த ஒவ்வொருத்தருக்கும் இதுமாதிரிதான் அனுபவம் இருக்க���ம். அறிமுகமானவுடனேயே ஒருத்தர் மேலே அளவில்லாமே அக்கறை காட்ட தேவராலே மட்டும்தான் முடியும்.\nதேவர் கிட்டே வேலைக்கு சேர்ந்ததுமே தினமும் ஒரு கதை சொல்ல சொல்லுவாரு. கதை இலாகாவை சேர்ந்தவங்களுக்கு இது மட்டும்தான் வேலை. நாங்க சொல்லிக்கிட்டே இருப்போம். அவரு கேட்டுக்கிட்டே இருப்பாரு. பிடிக்கலைன்னா துப்பிடுவாரு. பிடிச்சிருந்தா உடனே ஓக்கே பண்ணி வெச்சுப்பாரு. ஏதாவது படம் படப்பிடிப்பிலே இருந்தாகூட கேப் விடமாட்டார். நாங்க அடுத்தடுத்த படத்துக்கு கதை சொல்லிக்கிட்டே இருக்கணும். எங்களையெல்லாம் ஆசையா ‘டேய் கதைக்காரனுங்களா...’ன்னுதான் கூப்பிடுவாரு.\nஅவரும் சுவாரஸ்யமா கதை சொல்லுவாரு. அண்ணன் சொல்ல ஆரம்பிச்சாருன்னா நேரம் போறதே தெரியாது. அவரோட வாழ்க்கையோட ஒவ்வொரு அங்குலத்தையும் மனசு திறந்து எங்களிடம் சொல்லியிருக்காரு.\nசின்ன வயசுலே அண்ணன் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்பை நல்லா பலமா வெச்சிருப்பாரு. கோயமுத்தூர் ராமநாதபுரம் பகுதியிலே ‘மாருதி உடற்பயிற்சி நிலையம்’னு இருந்துச்சி. அங்கேதான் அண்ணன் பயிற்சி பண்ணுவாரு. அவருக்கு சினிமாவிலே பெரிய ஸ்டண்ட் கலைஞரா வரணும்னு ஆசை. அங்கேதான் எம்.ஜி.ஆரும் உடற்பயிற்சி செய்ய வருவார். இப்படியாக ரெண்டு பேருக்கும் நட்பு மலர்ந்துச்சி.\nஅண்ணன் மாச சம்பளத்துக்கு ஜூபிடர் பிக்சர்ஸ்லே வேலைக்கு சேர்ந்துட்டாரு. ஷூட்டிங் இருந்தாலும் சரி. இல்லைன்னாலும் சரி. அவருக்கு மாசாமாசம் சரியா சம்பளம் வந்துடும். ஆனா அப்போ எம்.ஜி.ஆர் காண்ட்ராக்டுலே இல்லை. அதனாலே அவருக்கு வேலை இருந்தாதான் காசு. குடும்ப கஷ்டம்.\nஒருமுறை தேவரண்ணன் எம்.ஜி.ஆர் வீட்டு வழியா நடந்து போய்க்கிட்டிருக்காரு. அப்போ எம்.ஜி.ஆரோட தாய் சத்யாம்மா தெருவிலே மிரண்டுப்போய் நின்னுக்கிட்டிருந்தாங்க. என்ன்ன்னு இவரு கேட்டிருக்காரு. ‘காசு வாங்கிட்டு வர்றேன்னு முதலாளியை பார்க்க ராமச்சந்திரன் போயிருக்கான். அவன் வந்து காசு கொடுத்தப்புறம்தான் அரிசி வாங்கி சமைக்கணும். இப்பவே இருட்டிடிச்சி. புள்ளை பசியோட வருவான். என்ன செய்யுறதுன்னு தெரியலை’ன்னு அம்மா சொல்லியிருக்காங்க. தேவருக்கு அப்படியே ஒரு மாதிரி ஆயிடிச்சி.\nஉடனே தன்னோட வீட்டுக்கு ஓடிப்போனவரு சமையலறைக்கு போய் அரிசிப்பானையிலே இருந்து அரிசியை எடுத்து தன்னோட சட்டை, டவுசர் பாக்கெட்டில் எல்லாம் நிரப்பிக்கிட்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்கு ஓடியிருக்காரு. அந்த அரிசியை கொடுத்து சீக்கிரமா சோறு வடிச்சி வைங்கம்மான்னு சொல்லியிருக்காரு.\nநைட்டு வீட்டுக்கு வந்துப் பார்த்த எம்.ஜி.ஆர், சாதம் தயாரா இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கார். சத்யாம்மா என்ன நடந்ததுன்னு மகன் கிட்டே சொல்லியிருக்காங்க. அப்படியே நெகிழ்ந்துப் போயிட்டாராம் எம்.ஜி.ஆர்.\nபிற்பாடு எம்.ஜி.ஆரை வெச்சி தேவர் எப்படி அதிகப் படங்கள் தயாரிச்சாருங்கிறதுக்கு இந்த சம்பவம் ஒரு முக்கியமான காரணம். ஒருத்தரு மேலே ஒருத்தரு அவ்வளவு அன்பு ஆரம்பத்துலேருந்தே வெச்சிருந்தாங்க.\nதேவருக்கு கல்யாணமாகி குழந்தைகள்லாம் பிறந்திருந்தது. சினிமாவையெல்லாம் மறந்துட்டு கோயமுத்தூரில் பால் கடை நடத்திக்கிட்டிருந்தாரு. நேர்மையா வியாபாரம் பார்க்குறவரு என்பதால் பிசினஸ் நல்லா இம்ப்ரூவ் ஆச்சி. பழைய சினிமா ஆளுங்க அப்பப்போ வந்து தேவரை பார்த்து பேசிட்டு போவாங்க. அப்படிதான் ஒருமுறை கேமிராமேன் விஜயனும், நடிகர் எஸ்.ஏ.நடராஜனும் பேசிக்கிட்டிருந்தாங்க.\nபேச்சுவாக்கிலே நாமளே படம் தயாரிக்கலாம்னு திட்டம் தீட்டினாங்க. மூணு பேரும் காசு போட்டு படக்கம்பெனி ஆரம்பிச்சாங்க. பால் வியாபாரத்துலே சேர்த்த காசை தேவரண்ணன் முதலீடா போட்டாரு.\nபடம் பேரு ‘நல்ல தங்கை’. எஸ்.ஏ.நடராஜனே நடித்து இயக்கினார். கதை, வசனம் ஏ.பி.நாகராஜன். நம்பியார், ராஜசுலோசனா, மாதுரிதேவின்னு நடிக நடிகையர் எல்லாம் ஸ்டார்ஸ். படம் பூஜை போட்ட அன்னிக்கே நல்லா வியாபாரம் ஆச்சி. நல்லா வளர்ந்துக்கிட்டிருந்த நேரத்துலே ஒரு பிரச்சினை. பார்ட்னர் ஒருத்தர் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ புதுமுக நடிகை ஒருத்தர் கிட்டே நடந்துக்கிட்டு, விஷயம் தேவரண்ணன் காதுக்கு வந்துச்சி. இப்படியே போச்சின்னா தன்னோட பேரும் கெட்டுப் போயிடும்னு தேவர் போய் அவரோட சண்டை போட்டாரு. அடிதடி லெவலுக்கு போக அப்புறம் எல்லாரும் வந்து சமரசம் பண்ணி, தேவரண்ணன் தன்னோட பங்கை பிரிச்சி வாங்கிக்கிட்டாரு.\nசினிமா ஃபீல்டுக்குள்ளே நுழையணும்னு ஆசைப்பட்டு இப்படி ஆகிப்போச்சேன்னு அவருக்கு வேதனை. ஏ.பி.நாகராஜன்தான் சமாதானப்படுத்தி, ‘நீங்களே தேவர் பிலிம்ஸ் என்கிற பேருலே படக்கம்பெனி ஆரம்பிக்கலாமே’ன்னு யோசனை சொன்னாரு. தேவருக்க��� படக்கம்பெனி ஆரம்பிக்கிற ஐடியாவை விட கம்பெனிக்கு ஏ.பி.என். சொன்ன பேரு ரொம்ப புடிச்சிருந்தது. குடும்பத்தை அப்படியே சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. தி.நகரில் சின்னதா ஒரு ஆபிஸ் போட்டாரு. இப்படிதான் புகழ்பெற்ற தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தோன்றிச்சி.\nமுதல் படமே எம்.ஜி.ஆரை வெச்சிதான் தயாரிக்கணும்னு முடிவு பண்ணியிருந்தாரு. அதுதான் ‘தாய்க்குப் பின் தாரம்’. படம் எடுக்குறப்பவே தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கதையோட முடிவு விஷயத்தில் சின்ன மனஸ்தாபம். இதனாலே அடுத்து ரஞ்சனை வெச்சி நீலமலைத் திருடன் எடுத்தாரு தேவர். இதுவும் வெற்றிப்படம் தான்னாலும் ‘தாய்க்குப் பின் தாரம்’ அடைந்த வெற்றியை தொட முடியலை. அடுத்து ‘செங்கோட்டை சிங்கம்’னு ஒரு படம். இது ஓடலை. ஜெமினியை வெச்சி ‘வாழவைத்த தெய்வம்’ எடுத்தாரு. சுமாராதான் போச்சி. ‘யானைப்பாகன்’, ‘கொங்கு நாட்டு தங்கம்’னு அடுத்தடுத்து ரெண்டு ஃபெய்லியர்.\nதேவர் ஃபிலிம்ஸ்லே கலகலத்துப் போயிடிச்சி. இனிமேல் தேவர் அவ்வளவுதான்னு எல்லாரும் அவரை விட்டு விலக ஆரம்பிச்சாங்க. எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கோயமுத்தூருக்கே திரும்பப்போய் ஏதாவது தொழில் செஞ்சி பிழைச்சுக்கலாம்னு அண்ணன் முடிவெடுத்திருக்காரு. அப்போதான் நாகிரெட்டி நிலைமையை கேள்விப்பட்டு கூப்பிட்டு அனுப்பியிருக்காரு. ‘நீங்க தொடர்ந்து சினிமா தயாரிக்கணும்’னு சொல்லி அவரோட ஸ்டுடியோவில் எந்த வேலையா இருந்தாலும் செஞ்சுக்கலாம். காசு பத்தியெல்லாம் பிற்பாடு பேசிக்கலாம்னு சொல்லிட்டாரு.\nசரி. ஒருமுறை முயற்சிக்கலாம்னு அண்ணனும் சாங்ஸ் ரெக்கார்ட் பண்ணிட்டு வேலையை தொடங்கினாரு. அப்போ எம்.ஜி.ஆருக்கு கால் உடைஞ்சிருந்த சமயம். யதேச்சையா அண்ணனும், அவரும் வாகினி ஸ்டுடியோவில் எதிர்படுறாங்க. ஏற்கனவே இருந்த மனஸ்தாபத்தாலே அஞ்சு வருஷம் பிரிஞ்சிருந்த நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் கட்டி தழுவிக்கிறாங்க. தன்னைப் பத்தி பேசாம, எம்.ஜி.ஆரோட நலனைப் பத்தி மட்டுமே விசாரிச்சிக்கிட்டிருந்தாரு தேவர்.\nஅப்போ எம்.ஜி.ஆர் செஞ்ச ஒரு காரியம் மகத்தானது. தேவரை தன்னோடவே தன் வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போனார். அவரோட தாய் சத்யபாமா படத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் மவுனமா நின்னாங்க. ‘அண்ணா என் தாய் மீது ஆணை. இனிமேல் நீங்க எப்போ என்னை கே��்டாலும் கால்ஷீட் இல்லைன்னு சொல்லமாட்டேன்’னு சத்தியம் பண்ணினாரு.\nசத்தியபாமா தாய் சொர்க்கத்திலிருந்தே தேவரை ஆசிர்வதிச்சிருக்கணும். உடனே தான் எடுத்துக்கிட்டிருந்த படத்துக்கு எம்.ஜி.ஆரை ஹீரோவா போட்டாரு. தேவர், படத்துக்கு வெச்ச பேரை பார்த்தோம்னா, அவரு எவ்வளவு பெரிய குசும்புக்காரருன்னு தெரியும். எம்.ஜி.ஆர் செய்த சத்தியத்தை நினைவுறுத்தும் விதமா ‘தாய் சொல்லைத் தட்டாதே’ன்னு பேரு வெச்சாரு.\nஅதில் தொடங்கி அடுத்தடுத்து எம்.ஜி.ஆரை வெச்சி பதினாறு படம் தயாரிச்சாரு. எம்.ஜி.ஆர் படம் எடுக்கலைன்னா தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேனரில் மிருகங்களை வெச்சி படம் எடுப்பாரு. பக்திப்படம் எடுப்பாரு. இந்திக்கெல்லாம் போய் ராஜேஷ்கண்ணாவை வெச்சு ‘ஹாத்தி மேரா சாத்தி’யெல்லாம் எடுத்து வெற்றிக்கொடி நாட்டினார். தேவர் பிலிம்ஸ் என்றால் நாடு முழுக்க தெரியுமளவுக்கு கம்பெனியை வளர்த்தார். கதையை முதல்லேயே பக்காவா ரெடி பண்ணி வெச்சுக்கிட்டு குறுகிய காலத்துலே படப்பிடிப்பை முடிச்சி நாற்பது, நாற்பத்தஞ்சி நாளில் முழுப்படத்தையும் எடுத்துடுவாரு. உழைப்புக்கு தாராளமா ஊதியம். அதே நேரத்தில் வேலையில் கறாரான கண்டிப்புங்கிறதுதான் தேவரோட ஃபார்முலா.\nதன் கூட இருக்குறவங்களும் தன்னை மாதிரியே முன்னேறனும்னு நெனைக்கிற பரந்த மனசு. என்னை தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்க்க விரும்பினார் தேவர். ‘எல்லாத்தையும் நானே கூட இருந்து முடிச்சிக் கொடுக்கறேன்’னு வாக்கும் கொடுத்தார். நானும் உற்சாகமா போய் முதன்முதலா ரஜினியை ஹீரோவா புக் பண்ணினேன். வில்லன் வேஷம் பண்ணிக்கிட்டிருக்குறவரை ஹீரோவாக்குறியே, சரிபடாதுன்னு தேவர் விலகிட்டாரு. அவரு பேச்சை கேட்கலைன்னு என் மேலே கோவம் கூட பட்டாரு.\nஎப்படியோ கஷ்டப்பட்டு ‘பைரவி’ படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணினேன். முதல் காட்சி முடிந்ததுமே தேவரண்ணன் கூப்பிட்டு அனுப்பினாரு. ‘நீ ஜெயிச்சிட்டடா’ன்னு சொன்னாரு. எனக்கு குழப்பமாயிடிச்சி. இப்போதானே முதல் காட்சியே முடிந்திருக்கு, அண்ணன் நம்மளை சமாதானப்படுத்த சொல்றாரோன்னு நெனைச்சேன். ‘நீங்க படம் பார்த்த அதே தியேட்டர்லேதாண்டா நானும் மாறுவேஷத்துலே பார்த்தேன். படம் பிரமாதம். நீ ஜெயிச்சிட்டே’ன்னு திரும்பச் சொன்னாரு. அப்போதான் அண்ணன் என் மேலே எவ்வளவு அக்கறையா இருந��திருக்காருன்னு தெரிஞ்சது.\nநான் இந்தப் படத்தை தயாரிச்சிக்கிட்டிருந்த நேரத்துலே தினமும் பூஜையிலே உட்கார்ந்து, நான் ஜெயிக்கணும்னுதான் முருகனை வேண்டிக்கிட்டிருந்திருக்காரு. தயாரிப்பாளர் ஆயிட்டதாலே பொம்பளை, தண்ணீன்னு கெட்ட பழக்க வழக்கம் பக்கமா போறேனான்னு ஆளுங்களை வெச்சி கண்காணிச்சி இருக்காரு. அப்படியெல்லாம் இல்லைன்னு தெரிஞ்சதும்தான் என்னோட வெற்றியையே அங்கீகரிச்சாரு.\nஎந்த ரஜினியை வெச்சி படம் பண்ணக்கூடாதுன்னு அண்ணன் எனக்கு சொன்னாரோ, அதே ரஜினியை வெச்சி மூணு படம் அடுத்தடுத்து பண்ணனும்னு ஆசைப்பட்டாரு. என்னை கதைகூட ரெடி பண்ணச் சொன்னாரு. அந்த படம்தான் ‘தாய் மீது சத்தியம்’.\nஅதுக்காக அவரோட ஆபிசுக்கு போய் வந்துக்கிட்டு இருந்தேன். ஊட்டியிலே அமிதாப்பச்சனை வெச்சி தேவர் எடுத்துக்கிட்டிருந்த படத்தோட ஷூட்டிங். அதுக்கு கிளம்பிக்கிட்டிருந்தார். ஆபிஸில் அப்போ கொஞ்சம் கையாடல் மாதிரி ஊழல்கள் நடந்து, தேவரண்ணன் கொஞ்சம் மனவருத்தத்தில் இருந்தார். ஒரே நேரத்துலே மூணு படம் எடுக்கற டென்ஷன் வேற. முருகன் படத்துக்கு முன்னாடி நின்னு, “ஏண்டா என்னை இப்படி சோதிக்கறே சீக்கிரமா என்னை கூப்பிட்டுக்கடா”ன்னு மனமுருக வேண்டினார். எனக்கு அப்படியே பக்குன்னு ஆயிடிச்சி.\nமூணு நாள் கழிச்சி செய்தி வந்தது. எங்களை வாழவைத்த தெய்வம் எங்களை விட்டுப் போனது. அவர் கேட்டுக்கிட்ட மாதிரியே முருகன் அவரை அழைச்சிக்கிட்டான். இத்தனைக்கும் தேவரண்ணனுக்கு அப்போ வயசு வெறும் அறுபத்தி நாலுதான். நாற்பது வயசுலேதான் அவரோட சினிமா வாழ்க்கையே தொடங்கிச்சி. மிகக்குறுகிய காலத்தில் அப்படியொரு அமரப்புகழை அடைந்த மகத்தான சாதனையாளர் அவர். சினிமா எப்படி எடுக்கணும்னு கத்துக்கணும்னா, தேவர் என்னவெல்லாம் செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டாலே போதும். ஒரு மனிதன் எப்படி வாழணும்னாலும் அவருதான் எல்லாருக்கும் பாடம்”\n(நன்றி : தினகரன் தீபாவளி மலர் 2015)\nகவர்ச்சி பாதி, அதிரடி மீதி\nஉலகை காக்க வருகிறார் உலகநாயகன்...\n‘திருப்பதிக்கே லட்டு’, ‘திருநெல்வேலிக்கே அல்வா’, ‘ரஜினிக்கே ஸ்டைலு’, ‘மோடிக்கே ஃபாரின் டூரு’ மாதிரியான க்ளிஷேவான விஷயம்தான் ‘தினகரன் வெள்ளிமலர்’ வாசகர்களுக்கு ஜேம்ஸ்பாண்டை அறிமுகப்படுத்துவதும். நீங்களெல்லாம் சாதா வாசகர்களா என்ன, உலக வாசகர்கள் இல்லையா. உங்களுக்குத் தெரியாத எதை நாங்கள் புதியதாக எழுதிவிட முடியும்\nவிதவிதமான துப்பாக்கிகள், எல்லா ‘சைஸிலும்’ பேரழகிகள், நவீனரக கார்கள், மிடுக்கான கோட் ஷூட், கொடூரமான வில்லன்கள், கொலை நடுக்கம் ஏற்படுத்தும் ஆக்ஷன் காட்சிகள், ரத்த அழுத்தத்தை எகிறவைக்கும் சேஸிங் சீன்... இதெல்லாம் இல்லாமல் என்ன ஜேம்ஸ்பாண்ட் படம்\nஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக உலகம் ஜேம்ஸ்பாண்டை ரசித்துக் கொண்டேதான் இருக்கிறது. நம் தாத்தாவும் ஜேம்ஸ்பாண்ட் ரசிகராக இருந்தார். நம் அப்பாவும் 007க்கு வெறியராக இருந்தார். நமக்கும் அந்த பிரிட்டிஷ் உளவாளி மீது அத்தனை மோகம். தலைமுறைகளை கடந்த ரசனை இது. ஒவ்வொரு படம் வெளிவரும்போதும், அந்தந்த காலக்கட்டத்தின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டு ஜேம்ஸ்பாண்ட் தன்னை சாஃப்ட்வேர் மாதிரி அப்டேட் செய்துக் கொள்கிறார் என்பதே அவரது நிஜமான வெற்றி.\nநியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பார். உயரிய லட்சியங்களுக்காக உயிரை பணயம் வைப்பார். தீயவர்களுக்கு தீ. அதிவேகமாக காரை ஓட்டும் அதே அனாயசமான ஸ்டைலை, அழகிகளை ஓட்டும்போதும் காட்டுவார். நவீன ஆயுதங்களை கையாளுவதில் ராட்சஸன். உலகம் சுற்றும் வாலிபன். இனம், மொழி, நாடு, அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர். இத்தகைய கல்யாண குணங்கள் கொண்ட மாப்பிள்ளையை யாருக்குதான் பிடிக்காது\nஉலக வரலாற்றை கிமு, கிபி என்று பிரிப்பதைக் காட்டிலும் இ.உ.போ.மு, இ.உ.போ.பி என்று வகைபடுத்துவதுதான் நியாயம் (குழம்பாதீர்கள் இரண்டாம் உலகப்போருக்கு முன், பின் என்பதின் சுருக்கம்தான்). உலகம் அதுவரை சந்தித்திராத வகையில் ஹிட்லர் என்கிற மாபெரும் வில்லன் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா என்று வகைதொகை இல்லாமல் வல்லரசு நாடுகளின் வலிமையை அசைத்துப் பார்த்தான். அயலுறவு, உள்நாட்டுப் பாதுகாப்பு என்று உலகநாடுகள் பல விஷயங்களை கவலையோடு மீள்பரிசோதனை செய்தது அந்த சந்தர்ப்பத்தில்தான். எதிர்காலம் குறித்த அச்சம் அரசுகளுக்கு மட்டுமின்றி, சாதாரண சிவிலியன்களையும் பாடாய் படுத்தியது. அர்த்தமில்லா அச்சம், பனிமூட்டமாய் உலகை சூழ்ந்திருந்த காலக்கட்டம் அது.\n“எங்களையெல்லாம் காப்பாத்த ஒரு வேலாயுதம் வரமாட்டானா” என்று யாரோ ஓர் அபலை கூக்குரலிட்டிருக்க வேண்���ும். ‘வேலாயுதம்’ சற்று தாமதமாக 2011ல்தான் இளைய தளபதி விஜய் மூலமாக வந்தார். ஆனால் 1953லேயே சூப்பர் ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் வந்துவிட்டார். ஜேம்ஸ் மட்டுமல்ல. இன்று (சினிமாவிலும் நாவல்களிலும்) உலகை காக்கும் ஏராளமான சூப்பர் ஹீரோக்கள் இரண்டாம் உலகப் போருக்கு பிறகே பிறந்தார்கள். ‘தீயவர்களால் பிரச்சினையா” என்று யாரோ ஓர் அபலை கூக்குரலிட்டிருக்க வேண்டும். ‘வேலாயுதம்’ சற்று தாமதமாக 2011ல்தான் இளைய தளபதி விஜய் மூலமாக வந்தார். ஆனால் 1953லேயே சூப்பர் ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் வந்துவிட்டார். ஜேம்ஸ் மட்டுமல்ல. இன்று (சினிமாவிலும் நாவல்களிலும்) உலகை காக்கும் ஏராளமான சூப்பர் ஹீரோக்கள் இரண்டாம் உலகப் போருக்கு பிறகே பிறந்தார்கள். ‘தீயவர்களால் பிரச்சினையா எங்க கிட்டே வாங்க’ என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.\nஜேம்ஸை பிரசவித்தவர் பிரபல நாவலாசிரியர் இயான் ஃப்ளெமிங். அந்த காலத்தில் ராபர்ட் ஃப்ளெமிங் & கோ என்கிற வங்கி, ஐரோப்பாவில் ரொம்ப பிரபலம். அந்த வங்கியின் உரிமையாளர் குடும்பத்தில்தான் ஃப்ளெமிங் பிறந்தார். இவர், முனிச் மற்றும் ஜெனிவா பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வங்கித் தொழிலை கவனிக்க தயாரான நிலையில்தான் இரண்டாம் உலகப் போர் வந்தது. நாட்டை காக்க ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒருவராவது இராணுவசேவைக்கு போவது அப்போது கடமையாக இருந்தது. ஃப்ளெமிங், அச்சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் கடற்படையில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார். தன்னுடைய பணியில் மகத்தான சாகஸங்களை நிகழ்த்தி, இங்கிலாந்தின் ஹீரோவாக வேண்டும் என்று தினம் தினம் கனவு கண்டார். அதற்கான சந்தர்ப்பங்கள் சரியாக வாய்க்காத நிலையில் தன் கனவுகளை கதைகளாக மூளைக்குள் அடுக்கத் தொடங்கினார். தன்னுடைய சகப்பணியாளர்களிடம் போர் முடிந்தபிறகு ஓர் உளவாளியை நாயகனாக்கி நாவல் எழுதப்போவதாக சொல்லுவார். கதையின் சம்பவங்களாக தன்னுடைய கனவுகளை விவரிப்பார்.\nபோர் முடிந்தது. அட்வெஞ்சரான பணிகள் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற சலிப்பில் கடற்படைப் பணியில் இருந்து ஃப்ளெமிங்கும் விலகினார். சாகஸமானப் பணியை தேடி பத்திரிகையாளர் ஆனார். சில ஆண்டுகளில் அதுவும் வெறுத்துப் போக, போர்க்கால கனவுகளை தூசுதட்டி நாவல் எழுத உட்கார்ந்தார்.\nஎன்ன எழுதுவது என்று திட்டவட்டமான ஐடியாவே இல்��ை. என்னதான் சிந்தித்தாலும் மப்பாகவே இருந்தது. தன்னையே ஹீரோவாக கருதி எழுத ஆரம்பித்தார். இயல்பிலேயே மந்தமானவராக அமைந்துவிட்ட ஃப்ளெமிங், தன்னுடைய ஹீரோவையும் மிஸ்டர் மந்தமாக உருவாக்க விரும்பினார். அவனுக்கு என்ன பெயர் சூட்டுவது என்றும் தெரியவில்லை. தன் பெயரை சூட்டி, தன் குடும்பப் பாரம்பரியத்தையே கேவலப்படுத்தவும் மனமில்லை. மொக்கையான வேலையை செய்பவருக்கு மொக்கையான பெயர்தான் இருக்கும். அதுமாதிரி எந்த சுவாரஸ்யமுமில்லாத வேலையை செய்துக் கொண்டிருப்பவர் ஒருவரின் பெயரை சூட்டலாம் என்கிற முடிவுக்கு வந்தார். அக்காலத்தில் அமெரிக்காவில் பறவையியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் இருந்தார். நாள் கணக்கில் ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் அந்த வேலைதான் இருப்பதிலேயே மொக்கையான வேலை என்று முடிவுகட்டிய ஃப்ளெமிங், அவரது பெயரையே தன்னுடைய ஹீரோவுக்கு நாமகரணம் செய்தார். இந்த பெயரை கேட்டாலே, கேட்பவருக்கு மந்தமான ஃபீலிங் உருவாகும் என்று நம்பவும் செய்தார். அந்த பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட்.\n‘எம்.ஐ-6’ என்கிற ரகசிய பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனத்தை தன் புனைவில் சிருஷ்டித்தார். 007 என்பது அதன் உளவாளியான ஜேம்ஸ்பாண்டின் ரகசியக் குறியீட்டு எண். தான் விரும்பி உண்ணும் உணவு, லிமிட்டாக சிப்பும் ‘சரக்கு’, ஸ்டைலாக ஊதும் சிகரெட்டு, நாகரிகமாக அணியும் உடை அனைத்தையுமே ஜேம்ஸுக்கு சொந்தமாக்கினார். ஆனால், ஃப்ளெமிங் திட்டமிட்டது மாதிரியாக இல்லாமல் ஜேம்ஸ்பாண்ட் சுவாரஸ்யமாக உருவானான். ஃப்ளெமிங்தான் ஜேம்ஸ். ஜேம்ஸ்தான் ஃப்ளெமிங். வேண்டுமென்றால் தலைவர் ஸ்டைலாக புகை பிடிக்கும் இந்தப் படத்தைப் பாருங்கள். புரியும்.\n1953ல் ஜேம்ஸ்பாண்ட் நாவல் நாயகனாக பிறந்து, சரியாக பதினோரு ஆண்டுகள் கழித்து 1964ல் ஜேம்ஸை உருவாக்கிய ஃப்ளெமிங் மறைந்தார். அவர் உயிரோடு இருக்கும்போதே அவர் உருவாக்கிய ஹீரோவை வெள்ளித்திரையில் கிடைக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது. 1962ல் ‘டாக்டர் நோ’ படம் மூலமாக, நாவலில் சாகஸங்கள் செய்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், சினிமாவுக்கும் தாவினார்.\nஃப்ளெமிங்கின் காலத்துக்குப் பிறகு ஜான் காட்னர், ரேமண்ட் பென்ஸன், கிங்ஸ்லி அமிஸ், செபஸ்டியன் ஃபாக், ஜெஃப்ரி டேவர் என்று ஏராளமான எழுத்தாளர்கள் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களையும், சிறுகதைகள��யும் எழுதியிருக்கிறார்கள். காமிக்ஸ், டிவி சீரியல், வீடியோ கேம்ஸ், சினிமா, மொபைல் அப்ளிகேஷன்கள் என்று ஜேம்ஸ் இடம்பெறாத வடிவமே கிடையாது.\nஹாலிவுட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க இருக்கும் எல்லா வுட்டு மாஸ் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்ட் தாக்கத்தில் இருந்து தப்பவே முடியாது. சினிமாக்களில் மட்டுமல்ல. நம்மூர் சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் வரும் துப்பறியும் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்டின் பரம்பரைதானே அந்தகால ஜெய்சங்கர் படங்கள்தான் ஜேம்ஸ்பாண்டின் நேரடி உல்டா என்று நினைக்காதீர்கள். லேட்டஸ்ட் ‘வேதாளம்’, ‘தூங்காவனம்’ வரைக்கும்கூட ஜேம்ஸின் பாதிப்பு ஹீரோவுக்கு இல்லாமலா இருக்கிறது அந்தகால ஜெய்சங்கர் படங்கள்தான் ஜேம்ஸ்பாண்டின் நேரடி உல்டா என்று நினைக்காதீர்கள். லேட்டஸ்ட் ‘வேதாளம்’, ‘தூங்காவனம்’ வரைக்கும்கூட ஜேம்ஸின் பாதிப்பு ஹீரோவுக்கு இல்லாமலா இருக்கிறது லேடி ஜேம்ஸ்பாண்டு கூட உண்டு தெரியுமா லேடி ஜேம்ஸ்பாண்டு கூட உண்டு தெரியுமா\nஓக்கே, கமிங் டூ த பாயிண்ட். இந்த வரலாற்று ஆராய்ச்சி எதற்கென்றால் இன்று முதல் ஜேம்ஸ்பாண்ட் இந்தியாவை காக்கவும், கலக்கவும் வருகிறார் ‘ஸ்பெக்டர்’ மூலமாக. ‘ஸ்பெக்டர்’ என்றால் Special Executive for Counter Intelligence, Terrorism, Revenge and Extortion என்பதன் சுருக்கம். அதற்கு அர்த்தம் தேடி ரொம்ப காய வேண்டாம். மக்களுக்கும் எதிரான மொள்ளமாறி அமைப்பு என்று புரிந்துக் கொண்டால் போதும்.\nஐரோப்பாவில் போன மாதமும், அமெரிக்காவில் இம்மாத தொடக்கத்திலும் வெளியாகிவிட்ட ‘ஸ்பெக்டருக்கு’ கறாரான விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள்தான் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அறிவுஜீவி விமர்சகர்களை வழக்கம்போல புறந்தள்ளிவிட்டு ஜேம்ஸை கொண்டாடித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். வசூல் மழை கொட்டோ கொட்டுவென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. ‘ஸ்பெக்டர்’ இந்தியாவில் வெளியான பிறகு இந்த மழை, சுனாமியாகக்கூடும் என உலக சினிமா வானிலை ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த குமணன் என்பவர் ஜோஸியம் சொல்லியிருக்கிறார்.\nஜேம்ஸ்பாண்ட் சினிமா வரிசையில் இது 24வது திரைப்படம். மெக்ஸிகோவின் ‘டே ஆஃப் டெட்’ திருவிழாவில் ஆரம்பக்கும் காட்சியில் தொடங்கி, இறுதி வரை விறுவிறுப்பாக படம் போகிறது என்று ஜேம்ஸ் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். ‘ட்ஜாங்கோ அன்செய்ன்ட்’ படத்துக்காக ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோப் வால்ட்ஸ்தான் வில்லன் என்பது எதிர்ப்பார்ப்புகளை எகிறச் செய்கிறது. செக்ஸ் பாம் மோனிகா பெலூச்சியின் தாராளக் கவர்ச்சி, தீபாவளிக்குப் பிந்தைய போனஸாம். இப்படத்தின் பாண்ட் கேர்ளான லியா சீடோக்ஸும் சும்மா கும்மென்று இருப்பதாக படம் பார்த்தவர்கள் வெட்கத்தோடு சொல்கிறார்கள்.\nமுந்தைய ஜேம்ஸ் படமான ‘ஸ்கைஃபால்’தான் இதுவரை வந்த ஜேம்ஸ் படங்களிலேயே வசூலை அதிகமாக வாரிக் குவித்தது. அதை இயக்கிய சாம் மெண்டிஸே ‘ஸ்பெக்டரையும்’ இயக்கியிருக்கிறார்.\nரைட்டு. நாம் பேசிப்பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஜேம்ஸ் படங்கள் பேசுவதற்கானவை அல்ல. பார்த்து ரசித்து கொண்டாடி தீர்ப்பதற்கானவை. ஹேப்பி ஜேம்ஸ் டே\n(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)\nசுப்பாண்டியை உங்களுக்கு தெரியுமென்றால் நீங்கள் ‘பூந்தளிர்’ வாசகராக இருக்கக்கூடும். உங்கள் வயது முப்பத்தைந்தை தாண்டிவிட்டது என்று அர்த்தம். இல்லையேல் நீங்கள் ‘டிங்கிள்’ வெறியர். ரைட்\nசுப்பாண்டி ஒரு தெனாலிராமன். அல்லது தெனாலிராமன்தான் சுப்பாண்டி. வெடவெடவென்று ‘காதலன்’, ‘இந்து’ காலத்து பிரபுதேவா தோற்றம். கோமுட்டி தலை. காந்தி காது. இந்திராகாந்தி மூக்கு. ராஜாஜி முகவாய். என்று ஆளே ஒரு தினுசாகதான் இருப்பான். சுப்பாண்டி ஒரு வேலைக்காரன். ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள். முதலாளி ஏவிவிடும் வேலைகளை ஏடாகூடமாக செய்வான் என்பதுதான் அவன் கதைகளில் இருக்கும் முரண்.\nஇந்திய காமிக்ஸ் உலகம் எட்டியிருக்கும் அதிகபட்ச உயரங்களில் சுப்பாண்டிக்கும் கணிசமான இடம் உண்டு. சுப்பாண்டியின் தாய்வீடு தமிழ்நாடு என்பதுதான் தமிழராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விஷயம். ஆனால், நிலபிரபுத்துவத்துவ மேலாதிக்கத்தின் வெறியாட்டம்தான் சுப்பாண்டி கதைகள் என்பதை இதுவரை எந்த கம்யூனிஸ்டும் கண்டுபிடிக்காததால் ‘டிங்கிள்’ முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக சுப்பாண்டியை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.\n‘டிங்கிள்’ வாசிப்பவர்களுக்கு பழக்கமான விஷயம்தான். டிங்கிள் பதிப்பகமே வெளியிடும் காமிக்ஸ் கதைகள் தவிர்த்து, வாசகர் படைப்புக்கும் அவ்விதழில் முக்கியத்துவம் உண்டு. வாசகர்கள் எழுதியனுப்பும் கதைகளுக்கும் சின்சியராக ஓவியம் வ���ைந்து வெளியிட்டு கவுரவப்படுத்துவார்கள்.\nஅம்மாதிரி 1983ஆம் ஆண்டு ஜனவரி இதழில் திருச்சியைச் சேர்ந்த வாசகர் பி.வரதராஜன் என்பவர் எழுதி அனுப்பிய மூன்று கதைகளின் அடிப்படையில்தான் சுப்பாண்டி பிறந்தான். அந்த வரதராஜன் தற்போது சென்னையில் வசிப்பதாக டிங்கிள் குறிப்பிடுகிறது.\nஇந்த சுப்பாண்டியை உருவாக்குவதற்கு வரதராஜனுக்கு அனேகமாக ‘பதினாறு வயதினிலே’ சப்பாணி இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன். சிறுவயதில் சுப்பாண்டியை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு பின்னணி இசையாக ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பதை போன்ற பிரமை இருக்கும்.\nசுப்பாண்டியின் கதைகளை வாசிக்கும்போது வெடிச்சிரிப்பு எல்லாம் ஏற்படாது. ஆனால், நினைத்து நினைத்து புன்னகைக்கக்கூடிய ‘சரக்கு’ நிச்சயமாக இருக்கும். சரியாக சொல்லப்போனால் கிரேஸி மோகன் பாணி அதிரடி ஜோக் அல்ல, யூகிசேது டைப் புத்திசாலித்தனமான காமெடி.\nபல மேடைப்பேச்சுகளிலும், பட்டிமன்றங்களிலும் சுப்பாண்டியின் ஜோக்குகளை பேச்சாளர்கள் தங்கள் பாணியில் பேசுவதை கேட்டிருக்கிறேன். Source material சுப்பாண்டிதான் என்று எனக்கு தெளிவாகத் தெரியும். ஒரு பிரபலமான பெண் பேச்சாளர் ஒரு மேடையில் பேசும்போது சொன்ன ஒரு தெனாலிராமன் கதை, தெனாலிராமன் கதையே கிடையாது. அது சுப்பாண்டியின் கதை. சுப்பாண்டியை தெனாலியாக்கி சொன்னார். ஆனால், பேச்சாளர்களிடம் போய் சண்டையா போட முடியும்\nImitation is the best form of praising என்று விளம்பரத்துறை பாடம் எடுக்கும்போது சொல்லுவார்கள். ஒரு நல்ல படைப்பு என்பது நம்மை inspire செய்து, நாமறியாமலேயே அதை வேறெங்கோ imitate செய்ய வைக்கும். அம்மாதிரியான inspirationதான் அந்த படைப்பாளிக்கு செய்யப்படும் மரியாதைகளிலேயே தலைசிறந்தது.\nஎதையோ சொல்லவந்து, எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்.\nவிஷயம் என்னவென்றால் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வந்துகொண்டிருக்கும் சுப்பாண்டியின் சாகசங்களை விசேஷத் தொகுப்புகளாக வெளியிட ‘டிங்கிள்’ முடிவெடுத்திருக்கிறது. அதுவும் நம் தமிழிலேயே வெளிவருகிறது என்பதுதான் நமக்கான விசேஷம்.\nமுதல் இதழ் வெளிவந்து கடைகளில் கிடைக்கிறது. விலை ரூ.80. முழு வண்ணத்தில் தரமான தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது. அட்டை பளபள கிளாஸி லேமினேஷனில் பளிச்சிடுகிறது. திரும்பவும் இத��ல்லாம் ரீபிரிண்ட் ஆக வாய்ப்பேயில்லை என்பதால் கிடைக்கும்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்காக சுப்பாண்டியை சேகரியுங்கள்.\nவழக்கமாக டிங்கிள் கிடைக்கும் கடைகளில் ‘சுப்பாண்டியின் சாகசங்கள்’ கிடைக்கும். சென்னையில் எங்கு கிடைக்கிறது என்று தெரியாவிட்டால் மயிலாப்பூர் லஸ் கார்னர் நேரு நியூஸ் மார்ட்டில் வாங்கிக் கொள்ளலாம்.\n‘சம்பவாமி யுகே யுகே’ நாடகம் நடக்கிறது.\nநாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.\nநாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).\nசோவிடம் விவரம் கேட்கிறார். மத்திய மாநில அரசுகளை விமர்சித்து சில வசனங்கள் நாடகத்தில் இடம் பெற்றிருந்ததாகவும், ஸ்க்ரிப்டை வாசித்த அரசு அதிகாரிகள் லைசென்ஸ் வழங்க மறுத்ததாகவும் சொன்னார். இதையடுத்து காமராஜருக்கும், சோவுக்கும் விவாதம் வலுக்கிறது.\n“பொறுப்பில்லாமே கண்டதையும் எழுதினா எவன் லைசென்சு கொடுப்பாண்ணேன்\n“வண்டி ஓட்ட லைசென்சு கொடுக்கிறதுங்கிறது, உங்களுக்கு ஓட்டத் தெரியும்னுதான். அந்த வண்டியை எடுத்துட்டுப் போய் எவன் மேலேயோ மோதி விபரீதம் ஆயிடிச்சின்னா அதுக்கு லைசென்ஸ் கொடுத்தவனா பொறுப்பு\n“எனக்கு ஓட்டத் தெரியுமா தெரியாதான்னு நீங்களே இருந்து பார்த்திருந்தாதானே தெரியும். பாதியிலே வந்துட்டு இப்படி பேசுறது சரியா\nஇதைத் தொடர்ந்து காமராஜர் கோபமாக கிளம்புகிறார். நாடகத்தை நடத்தும் சபாவினருக்கு தர்மசங்கடம். நாடகம் பார்க்க வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி. நாட்டின் முதல்வரையே ஒரு சின்னப்பையன் எதிர்த்து, மரியாதை இல்லாமல் பேசுவதா என்று. அதே நேரம், இந்த சம்பவம்தான் சோவை துணிச்சல் மிக்கவராகவும், கறாரான அரசியல் விமர்சகராகவும் பிரபலப்படுத்தியது.\nசோவின் தந்தையார் காமராஜர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர். எனவே, காமராஜரிடம் மன்னிப்பு கேட்காமல் வீட்டுக்கு வந்தால் சே��்க்க மாட்டேன் என்று கூறிவிட்டார். சோ, பணிபுரிந்த அலுவலகமான டி.டி.கே.வும் இதேரீதியான நிபந்தனையை விதித்திருந்தது.\nபிற்பாடு காமராஜரை பார்த்து தன்னிலை விளக்கம் சொல்ல சோ முயற்சிக்கிறார்.\n அப்படி இல்லைன்னா நீங்க சோவே இல்லைங்கறேன்” என்று தன் பெருந்தன்மையை காமராஜர் காண்பித்தார்.\nஇந்த நிகழ்வுக்குப் பிறகு ‘சோ பேசுகிறார்’ என்று தமிழகத்தில் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பரபரப்பான பேச்சாளராகிறார். அவ்வகையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை பேசவேண்டியிருக்கிறது.\nபார்ப்பனீயச் சிந்தனைகளின் மொத்த உருவம் சோ. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களிடமோ அப்போது திராவிட சுயமரியாதை இயக்கக் கருத்துகள் நாடி, நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருந்தன.\nசோ பேசப்பேச மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு. எழுந்து ஒருமையில் கோஷமிடத் தொடங்கினார்கள்.\n“இப்படியெல்லாம் மேடையிலே பேச உனக்கு வெட்கமா இல்லையாடா” என்று ஒரு மாணவர் சூடாக கேட்டார்.\n“பேசுறது என்னடா... தைரியமா எழுதக்கூட செய்வேன்” என்று பதிலடி கொடுத்தார் சோ.\n“நீ எழுதுனா எந்த பத்திரிகை பிரசுரிப்பான் எவன் படிப்பான்\n“எவனும் பிரசுரிக்கலேன்னா நானே பத்திரிகை ஆரம்பிச்சி எழுதறேன். எவனும் படிக்கலேன்னா நானே அதை படிச்சிக்கறேன்”\nஅடுத்த சில நாட்களில் ‘தி ஹிந்து’ பத்திரிகையில், “நான் பத்திரிகை தொடங்கலாமா” என்றொரு விளம்பரத்தை தமிழிலேயே கொடுத்தார். அதுதான் அந்த ஆங்கில நாளிதழில் வெளிவந்த முதல் தமிழ் விளம்பரம் என்கிறார்கள். அந்த விளம்பரத்தை கண்டு பத்தாயிரம் பேர் ‘தொடங்குங்கள்’ என்று சோவுக்கு கடிதம் எழுதினார்களாம் (அதென்ன ‘பத்தாயிரம்’ கணக்கு என்று தெரியாது. ‘முகம்மது பின் துக்ளக்’ படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்தபோதும் ‘பத்தாயிரம்’ பேர் தந்தி அனுப்பியதாக சொல்வார்).\nபத்திரிகை நடத்துமளவுக்கு தனக்கு பொருளாதார பலமில்லை என்று சோ தயங்கிக் கொண்டிருந்தபோது, விகடன் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு தங்கள் brandக்கு தொடர்பில்லாத வகையில், ஆனால் பின்னணியில் இருந்து ‘துக்ளக்’ தொடங்க உதவியிருக்கிறார்கள்.\n‘ஆறு மாதத்தில் தொடங்கிவிடலாம்’ என்று விகடன் சொன்னபோது, “முடியாது. பதினைந்தே நாளில் ‘துக்ளக்’ வந்தாக வேண்டும். இல்லையேல் பத்திரிகையே வேண்டாம்” ���ன்றாராம் சோ.\n1970, ஜனவரி 14 அன்று ‘துக்ளக்’ முதல் இதழ் வெளிவந்தது.\nஎண்பதுகளின் இறுதியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக சோவை எஸ்.எஸ்.சந்திரன் எடுத்த பேட்டியில் இந்த விவரங்கள் விரிவாக உள்ளன.\nசோ இதே கதையை வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார். அல்லது எழுதியிருக்கிறார். ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ தொடரில் நண்பர்களிடம் கட்டிய ஐந்து ரூபாய் பெட்டுக்காக தொடங்கப்பட்ட பத்திரிகை ‘துக்ளக்’ என்று சொல்லியிருப்பார். தொடர்ச்சியாக வாசிக்காததால் ‘குமுதம்’ தொடரில் என்னவென்று எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. நூலாக வெளிவந்த பின்தான் வாசிக்க வேண்டும்.\nமோடி அரசின் செயல்பாடுகளை கண்டித்து தான் பெற்ற சாகித்திய அகாதெமி விருதினை திருப்பியளிப்பதன் மூலம் இப்போது ஊடகங்களின் மஞ்சள் வெளிச்சத்துக்கு வந்திருப்பவர் எழுத்தாளர் நயன்தாரா சாஹல். இவரைக் குறித்த இந்த அறிமுகக் கட்டுரை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘தினகரன் வசந்தம்’ இதழில் வெளியானது.\nநயன்தாராவின் கதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் இந்திய உயர்வர்க்கத்தின் ஆண்களும், பெண்களும்தான். அவரால் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்து மனிதர்களையோ, ஏழைகளையோ, சாதிய பாகுபாடுகளால் ஒடுக்கப்பட்டவர்களையோ கதைகளாக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களோடு அவர் பழகியதே இல்லை. இதை அவர் மீதான விமர்சனமாக நிறைய விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், இந்திய அரசியல் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும், தன்மைகளையும் இவரளவுக்கு நேர்மையாக எழுத்தில் முன்வைத்தவர் வேறு யாருமில்லை.\n“நான் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்ல. அரசியல் செய்திகளை எழுதக்கூடிய பத்திரிகையாளரும் கூட. நான் திட்டமிட்டு அரசியல் பின்னணியை எழுத்தில் கொண்டு வருவதில்லை. நான் வாழ்வில் சந்தித்த மனிதர்களும், சம்பவங்களும் அரசியல் தொடர்பானவை மட்டுமே. அவற்றை மட்டுமே எனக்கு எழுதத் தெரிந்திருக்கிறது” என்று தன் எழுத்துகளை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் நயன்தாரா சாஹல்.\nஇந்தியாவின் நெம்பர் ஒன் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு இவருடைய தாய்மாமன். ஐக்கிய நாடுகள் சபைக்கு சுதந்திர இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட முதல் தூதரான வ��ஜயலஷ்மி பண்டிட்தான் அம்மா. இந்திராகாந்திக்கு அத்தை மகள். பிறந்து வளர்ந்ததெல்லாம் அலகாபாத்தில் இருக்கும் நேருவின் பாரம்பரிய பரம்பரை வீடான ஆனந்தபவனத்தில்தான். இவரது எழுத்துகளில் அரசியலும், வரலாறும் கலந்திருப்பதில் ஆச்சரியமென்ன\nஅப்பா ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் அந்த காலத்தில் பிரபலமான வக்கீல். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியமான ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான். நேரு குடும்பம் ஆயிற்றே. அடிக்கடி சுதந்திரப் போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை செல்ல வேண்டியிருக்கும். அம்மாதிரி சிறைப்பட்டிருந்த ஒரு நேரத்தில் திடீரென மரணமடைந்தார். அப்போது நயன்தாராவுக்கு வயது பதினேழுதான். ஒரு அக்காவும், ஒரு தங்கையும் இருந்தார்கள். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகள் நேரு குடும்பத்துக்கு சோதனையானவை. கிட்டத்தட்ட எல்லோருமே சிறைக்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக போய்விட்டு வருவார்கள். எனவே குழந்தைகளாக இருந்தவர்கள் அவர்களாகவே வளர்ந்தார்கள். பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் வெளியூர்களில்தான்.\nமேற்கத்திய பாணி குடும்ப வாழ்க்கையை பின்பற்றும் நேரு குடும்பத்தில் பிறந்ததால் நுனிநாக்கு ஆங்கிலமும், ஐரோப்பிய நடை உடை பாவனைகளுமாக ஸ்டைலாக வலம் வந்தார் நயன்தாரா. இந்திய சமூக மரபில் பெண்கள் பலியாடுகளாய் வளர்க்கப்படுவதை வெறுத்தார். பெண்களுக்கான தனித்த அடையாளத்தை தர ஆண்கள் மறுப்பதாய் நினைத்தார். அவருடைய இளமைக் காலத்தில் ஐரோப்பாவில் தொடங்கிய பெண்ணிய சிந்தனை போக்கு இவருக்குள் ஆழமாக ஊடுருவியது. இதனாலேயே என்னவோ திருமண வாழ்க்கை தடுமாற்றம் கண்டது. இரண்டு விவாகரத்துகளுக்கு பிறகு மூன்றாவதாக அந்தகால ஐ.சி.எஸ் (இன்றைய ஐ.ஏ.எஸ் மாதிரி) அதிகாரியான மங்கத்ராயை மணந்தபிறகுதான் வாழ்க்கை சமநிலைக்கு வந்தது.\nஅரசியல் மட்டத்தில் இவருக்கும், இவருடைய தாயாருக்கும் இருந்த செல்வாக்கை சொந்த மாமன் மகளான இந்திராகாந்தி பிரதமர் ஆனதும் அடித்து நொறுக்கினார். இத்தாலிக்கான இந்திய தூதராக நயன்தாரா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே அந்த ஆணையை திரும்பப் பெற்றார் புதியதாக பதவிக்கு வந்திருந்த இந்திராகாந்தி. இவ்வாறாக நேருவின் தங்கை ��ுடும்பம் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. இந்திராவின் அதிரடி வளர்ச்சியை உண்மையில் யாருமே யூகிக்க முடியவில்லை. நேருவின் மரணத்துக்குப் பிறகு அதிரடியாய் மிகக்குறுகிய காலத்தில் காங்கிரஸையும், இந்தியாவையும் அவர் கைப்பற்றிய கதையை பிற்பாடு ‘இந்திராகாந்தி, எமர்ஜென்ஸ் அண்ட் ஸ்டைல்’, என்று என்று நூலாய் எழுதினார். தன் மாமன் மகளை எட்ட நின்று பார்வையாளராய் ஆச்சரியமாய் அவர் பார்த்த அனுபவங்கள்தான் அந்த நூல். இதையே கொஞ்சம் பிற்பாடு புனைவு பாணியில் ‘இந்திராகாந்தி : ஹெர் ரோட் டூ பவர்’ என்று நாவலாகவும் எழுதி வெளியிட்டார். இந்திரா முதன்முதலாக ஆட்சியை இழந்த நேரத்தில் முதல் நூல் வெளிவந்தது. நாவல் வெளிவரும்போது மீண்டும் அவர் ஆட்சியை கைப்பற்றியிருந்தார். எனவே இரண்டு நூல்களும் எத்தகைய பரபரப்பை அந்த காலத்தில் ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.\nஅரசியலும் வரலாறும்தான் ஆர்வம் என்றாலும் புனைவு மீது அலாதி ப்ரியம் கொண்டவர் நயன்தாரா. தன் குடும்பத்தின் சிறை நினைவுகளை ‘ப்ரிஸன் அண்ட் சாக்லேட் கேக்’ என்று 1954ல் அவர் எழுதிய நினைவலைகள், ஆங்கில இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக அவருக்கு அரசியல் அலசல் கட்டுரைகளையும், நூல்களையும் எழுததான் வாய்ப்புகள் நிறைய கிடைத்தது. ஒரு கட்டத்தில் இந்த நான்ஃபிக்ஷன் உலகில் இருந்து வெளிவரவேண்டும் என்கிற வேட்கையோடு தொடர்ச்சியாக நாவல்கள் எழுத ஆரம்பித்தார். இந்திய மேல்தட்டு வர்க்கம் குறித்த சித்திரம் மிக துல்லியமாக இவரது கதைகளில் இடம்பெற்றது. உலகளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பெண் எழுத்தாளர்களுக்கே சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் நயன்தாராவும் ஒருவர்.\nஇவரது எழுத்துகளில் சம்பவங்களும், பாத்திரங்களும் வேண்டுமானால் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் அந்த வர்க்கத்திலும் கூட பெண்கள் மீதான ஒடுக்குமுறை இருப்பதை துணிச்சலாக விமர்சித்தார். பெண்களுக்கான சுதந்திரம் குறித்த உரிமைக்குரலை தொடர்ச்சியாக பதிவு செய்து வந்திருக்கிறார். கடைசியாக அவர் எழுதிய நாவலில் கூட இந்திய பெண்கள் எப்படி உன்னதமான உயரத்தை எட்டக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என்கிற விவாதமே பிரதானமாக இருந்திருக்கிறது. எட்டு நாவல்கள், ஏராளமான சிறுகதைகள் (இவை தொகுப்பாக வந்ததாக தெரியவில்லை), அரசியல் விமர்சன கட்டுரைகள் உள்ளிட்ட அபுனைவு நூல்கள் ஒன்பது என்கிற எண்ணிக்கைகளில் இவரது எழுத்துகள் நூலாக அச்சாகியிருக்கின்றன.\nஅரசியலில் இருந்து திட்டமிடப்பட்டு இவர் வெளியேற்றப் பட்டிருந்தாலும் இந்தியாவின் பல உயரங்களை இவர் தொடமுடிந்திருக்கிறது. 1972ல் இருந்து 75 வரை சாகித்ய அகாதெமியின் (ஆங்கில இலக்கியப் பிரிவு) ஆலோசகராக பதவி வகித்தார். இந்திய ரேடியோ மற்றும் டிவிக்கான வர்கீஸ் கமிட்டியின் உறுப்பினராக 77-78 ஆண்டுகளில் இருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுசபையின் இந்திய பிரதிநிதியாக செயல்பட்டிருக்கிறார். குடிமக்கள் உரிமைகளுக்கான யூனியன் அமைப்பில் துணைத்தலைவராக பணிபுரிந்திருக்கிறார்.\n1985ல் இங்கிலாந்தின் புனைவுக்கான சிங்க்லேர் விருது, 1986ல் சாகித்திய அகாதெமி, 1987ல் காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான விருது என்று தேசிய, சர்வதேச விருதுகள் ஏராளம் இவரது வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது. அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸிலும் இவரது இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஎண்பத்தேழு வயதாகும் நயன்தாரா சாஹல், தற்போது டெஹ்ராடூனில் வசிக்கிறார். பெண்ணியம், அடிப்படைவாதம், இனவாதம் முதலியவற்றை காரசாரமாக விமர்சித்து எழுதும் பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குனரும், மனித உரிமைப் போராளியுமான கீதா சாஹல் இவருடைய மகள்தான்.\nஇந்த கட்டுரை, சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரைட்டர்ஸ் உலா’ நூலின் ஓர் அத்தியாயமாகவும் இடம்பெற்றிருக்கிறது.\nதமிழ் திரையுலகின் வரலாற்று சாதனையாளரான தேவருக்கும் ஆங்கிலத்துக்கும் எட்டாம் பொருத்தம். இருந்தாலும் வாழ்வின் கடைசிநாள் வரை அம்மொழியோடு விடாது மல்லு கட்டிக் கொண்டிருந்த பயில்வான் தேவர். தமிழிலும், இந்தியிலும்தான் படங்கள் தயாரித்தார் என்றாலும் ஆங்கிலப் படங்கள் மீதுதான் அவருக்கு அத்தனை மோகம். 1930களில் தொடங்கி 70கள் வரை வந்த முக்கியமான ஆங்கிலப் படங்கள் அத்தனையையுமே தேவர் பார்த்து ரசித்திருக்கிறார். சில ஹாலிவுட் படங்களின் கருவை எடுத்துக்கொண்டு, தமிழில் புதுசாக தன்னுடைய கதை இலாகாவை கதை தயார் செய்யச் சொல்லி படமும் எடுத்திருக்கிறார்.\nசென்னைக்கு வந��து சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆரம்பக் காலம். கம்பெனிக்காக வங்கி அக்கவுண்டு ஓபன் செய்திருந்தார். தமிழ் சினிமாவின் புரொடியூஸர் அல்லவா தமிழில் கையெழுத்து போட்டால் கெத்தாக இருக்காது என்று ஆங்கிலத்தில் கையெழுத்து போட பழகிவந்தார்.\n‘செக்’ புத்தகத்தில் அவர் போடும் கையெழுத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருமுறை அவசரப் பணத்தேவைக்காக ஒரு செக் கிழித்து எழுதி பையனிடம் கொடுத்து அனுப்பினார். வங்கியில் கையெழுத்து வேறு மாதிரியாக இருக்கிறது என்று திருப்பி அனுப்பினார்கள்.\nதேவரே நேரடியாகப் போய் கையெழுத்து போட்டார். ஒத்துக் கொள்ளவில்லை. “என் காசை வெச்சுக்கிட்டு எனக்கு கொடுக்க மாட்டேங்கறீங்களேடா. பாவிகளா” என்று பயங்கர கலாட்டா செய்தவர், கடுப்பில் தன்னுடைய வங்கி அக்கவுண்டையே குளோஸ் செய்து மொத்தப் பணத்தையும் எடுத்துவிட்டார். அதில் தொடங்கி அவருக்கு வங்கி, செக் போன்ற விஷயங்கள் என்றாலே அலர்ஜி.\nகோடம்பாக்கமோ மும்பையோ... தேவர், யாருக்கு அட்வான்ஸ் கொடுப்பதாக இருந்தாலும் கத்தையாக மடியில் கட்டிய பணத்தைதான் எடுத்துக் கொடுப்பார். செக் கொடுப்பதில்லை என்பதின் பின்னணிக் காரணம் இதுதான்.\nபடப்பிடிப்பில் நடிக நடிகையர் ‘டிமிக்கி’ கொடுத்தால் தேவர், வில்லனாக மாறிவிடுவார். ஆனால்- அவரிடம் அனுமதி கேட்டு லீவு வாங்கினால், வள்ளலாக வாரி வழங்குவார்.\nசரோஜாதேவிக்கு மறுநாள் அவசரவேலைகள் இருந்தன. தயங்கித் தயங்கி தேவரிடம் கேட்டார். “அண்ணே கொஞ்சம் வீட்டு வேலைகள் இருக்கு. நாளைக்கி நான் இல்லாம ஷூட்டிங் அட்ஜஸ்ட் பண்ணிக்கறீங்களா கொஞ்சம் வீட்டு வேலைகள் இருக்கு. நாளைக்கி நான் இல்லாம ஷூட்டிங் அட்ஜஸ்ட் பண்ணிக்கறீங்களா\nதேவருக்கு அப்போதுதான் அட்வைஸ் செய்திருந்தார்கள். யாராவது தமிழில் பேசினாலும் ஆங்கிலத்திலேயே பதில் சொல்லுங்கள். மொழி வசமாகும் என்று.\nதேவர், பளீரென்று சொன்னதைக் கேட்டு சரோஜாதேவிக்கு மயக்கமே வந்துவிட்டது.\n“ஓக்கே. டும்மார்ரோ ஐ வில் மேரேஜ் யூ”\nஅதாவது ‘மேனேஜ்’ செய்துக் கொள்கிறாராம்.\nஎழுபதுகளின் தொடக்கத்தில் இந்தியில் அவர்தான் ‘ஹாட்’ பீஸ். இருபது ஆண்டுகள் கழித்து அவரது மகளும் பாலிவுட்டில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்தார். அந்த நடிகைக்கு கட்டுமஸ்தாக இருக்கும் தேவரின் மீது ஒரு கண��. மனுஷனும் அப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் பணத்தை ‘தண்ணீ’யாக அள்ளி எறிவார். இவரை மடக்கிப் போட்டால் ஈஸியாக தமிழ் திரையுலகில் நுழைந்துவிடலாம், எம்.ஜி.ஆருக்கு ஜோடி சேரலாம் என்று கணக்கு போட்டார் அந்த நடிகை. தேவர், அந்த நடிகையை வைத்து பிரும்மாண்டமான ஒரு இந்திப்படத்தை அப்போது தயாரித்துக் கொண்டிருந்தார்.\nபடப்பிடிப்பில் வேண்டுமென்றே தேவரை உரசுவது, தொட்டுத் தொட்டுப் பேசுவது என்று காஜூ ஏற்றிக் கொண்டிருந்தார். ஏகபத்தினி விரதனான தேவர், ஒரு முறை டென்ஷன் ஆகி கத்தினார்.\n“சீ. டோண்ட் டச் ஐ. முருகன் ஒன்லி டூ வைஃப். மீ டச் ஒன்லி மை வைஃப்”\nதேவரின் தமிழ் கற்பு ஒழுக்கத்தை வியந்தவாறே, அந்த நடிகை அதற்குப் பிறகு அவருக்கு தொல்லை கொடுக்கவில்லை.\n‘நீதிக்குப் பின் பாசம்’ படப்பிடிப்பு. வெள்ளைக்காரர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேவரின் யூனிட்டும் தேவர் மாதிரியேதான். ஆங்கிலம் என்றால் அலர்ஜி. எனவே, வெள்ளைக்காரர்கள் ஏதாவது கேட்டுவிட்டு, அதற்கு பதில் சொல்ல முடியாமல் மானபங்கம் ஆகிவிடுமோ என்று அஞ்சிக்கொண்டே வேலை பார்க்கிறார்கள்.\nபடப்பிடிப்பு இடைவேளையில் திடீர் திருப்பம். அந்த வெள்ளைக்காரர்களோடு தேவர் ஜோவியலாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார். அவர்களும் தேவருக்கு சல்யூட் வைத்து, கைகுலுக்கி பாராட்டிவிட்டு, டாட்டா காண்பித்துவிட்டுச் செல்கிறார்கள்.\nதூரத்தில் இருந்து எம்.ஜி.ஆர் இந்த அதிசயத்தைப் பார்த்து அசந்துக் கொண்டிருந்தார்.\nஅருகில் வந்த தேவரிடம் எம்.ஜி.ஆர் கேட்டார்.\n“மொதலாளி, அவங்களோட என்ன பேசிக்கிட்டிருந்தீங்க\n“படம் பத்தி சில தகவல்கள் கேட்டானுங்க முருகா. சொன்னேன்”\n“என்ன கேட்டாங்க, நீங்க என்ன சொன்னீங்க\n“படத்தோட கதையை கேட்டாங்க. தலைப்பை சொன்னேன். கதை புரிஞ்சிடுச்சி, நல்லாருக்கு. சூப்பருன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க”\n“ஆமாம். ‘தி ஜட்ஜ் பேக் ஆஃப் லவ்’ அப்படின்னேன். அசந்துட்டானுங்க ஆங்கிலேயனுங்க”\nஅனேகமாக அன்று புரட்சித்தலைவருக்கு காய்ச்சல் வந்திருக்க வேண்டும்.\n“போட்டா இவளைதான் போடணும்” கதையின் முதல்வரியிலேயே முடிவெடுத்து விட்டான் நரேந்திரன்.\nகிரிமினாலஜி படிக்கும் மாணவனான அவனுக்கு அன்று காலைதான் திடீரென்று இந்த எண்ணம் தோன்றியது.\nவகுப்பில் புரொபெஸர் திரும்பத் திரு��்ப வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருந்தார்.\n“எந்த ஒரு குற்றச் செயலுக்கும் ‘மோட்டிவ்’ நிச்சயமிருக்கும். மோட்டிவ் எந்தவொரு குற்றச் சம்பவமும் நடைபெற வாய்ப்பே இல்லை”\nலேசாக குழம்பினாள். தனக்குப் பின்னால் வேறு யாரையாவது பார்த்து சிரிக்கிறானோ என்று திரும்பிப் பார்த்தாள். யாருமே இல்லை. அங்கே யாருமே இல்லை.\n“ரேப்புக்கு மோட்டிவ் கிடையாதே சார்” நரேன்தான் சந்தேகம் கேட்டான்.\n“ரேப்புதான்டா மோட்டிவ்” புரொபஸர் கிண்டலாக சொன்னார்.\nவகுப்பே கொல்லென்று சிரித்தது. அவமானத்தை உணர்ந்தான். கொல்லென்ற சிரிப்பு நிற்காமல் தொடர, அவமானம் கோபமானது. கைவிரல்கள் உதறின. கண்கள் சிவந்தன.\n‘யாரென்று தெரியாத ஒருவன் தன்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறான்\nஇவன் அவளை நோக்கி புன்னகைப்பதை நிறுத்தவே இல்லை.\nதொப்புளில் இருந்து ஒன்றரை சாண் இறக்கி கொசுவம் வைத்திருந்தாள். எப்படி இது சாத்தியம்\nஎன்ன அனாடமியோ. ஒன்றும் புரியவில்லை.\n“இல்லைங்க சார். பல சம்பவங்களுக்கு மோட்டிவ்வே இருக்குறதில்லை” இவன்தான் மறுத்தான்.\n“இருவது வருஷமா நான் எவ்வளவு கேஸ் ஸ்டடி படிச்சிருப்பேன். மோட்டிவ் இல்லாத ஒரே ஒரு கிரிமினல் ரெக்கார்ட் கூட இந்தியாவிலேயே இல்லை. அப்படி இருக்கிறதா இருந்தா அது முடிவுபெறாத கேஸா இருக்கும்” புரொபஸர் மறுத்தார்.\nஅவளை நோக்கி இவன் நடக்கத் தொடங்கினான்.\nஇவன் அவளை நெருங்க நெருங்க அவளது முகத்தில் அப்பட்டமாய் அச்சம் தெரிந்தது. சுற்றும் முற்றும் மலங்க மலங்க பார்த்தாள்.\nகண்ணுக்கெட்டிய தூரம் வரை ஈ, காக்காய் இல்லை.\n“எனவேதான், போலிசும் டிடெக்டிவ்வும் எந்த கேசை எடுத்தாலும் முதலில் மோட்டிவ் என்னன்னு கெஸ் பண்ணிப்பாங்க. அந்த ரூட்டுலே கிரிமினலை தேட ஆரம்பிக்கிறதுதான் ஈஸி”\nசட்டென்று அவளது முகத்தில் மந்தகாசமான புன்னகை ஒன்று விரிந்தது. உதடு திறந்து சிரிக்க ஆரம்பித்தாள். டார்க் ரெட் லிப்ஸ்டிக். இப்போது நரேந்திரன் ஜெர்க் ஆனான். ஒருவேளை அயிட்டமோ\n“கையும் களவுமா ஸ்பாட்டுலேயே கிரிமினல் மாட்டிக்கிட்டா\n“மாட்டிக்கிட்டவனை பிடிச்சி ‘மோட்டிவ்’ என்னன்னு விசாரிச்சி கண்டுபிடிப்பாங்க. கோர்ட்டுலே குறிப்பிட்ட குற்றத்தை செய்ய குற்றவாளிக்கு என்ன மோட்டிவ்வுன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிச்சாதான் பிராசிக்யூசன் வின் பண்ணதா அர்த்தம்”\nபரந்து விரிந்���ிருந்த அவளது மெகாசைஸ் மார்பைத் தொட்டு இடப்புறமாக சுட்டிக் காட்டினாள். கைவிடப்பட்ட ஒரு வீடு தெரிந்தது. சந்தேகமேயில்லை.\n“எனக்கு சரியா படலை சார். மோட்டிவ் இல்லாத க்ரைம் சாத்தியம்தான்னு நினைக்கிறேன். காம்யூவோட நாவல்ல கூட...”\nபுரொபஸர் இம்முறை கோபப்பட்டார். “கிரிமினல்ஸையும், கேஸையும் கரைச்சுக் குடிச்சி இவ்வளவு புக்ஸ் எழுதினவனுங்க முட்டாளு. அதையெல்லாம் படிச்சி உங்களுக்கு கத்துக்கொடுக்கிற நான் கேணையன். எடக்குமடக்கா கேள்வி கேட்குற நீ மட்டும்தான் புத்திசாலியாடா\nமறுபடியும் கொல்லென்ற சிரிப்பு. கொலைவெறி வந்தது நரேனுக்கு. ஆட்டு மந்தைகள். என்ன பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களோ அதை அப்படியே மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தி எடுக்கும் மந்திகள். என்னைப் பார்த்து சிரிக்க இவனுங்களுக்கு என்ன யோக்கியதை\nஅவளோடு சேர்ந்து அவனும் நடந்தான். இதுவரை இருவரும் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. இவனுக்கு எந்த மோட்டிவ்வும் இல்லை. அவளுக்கு\n‘கொல்’லென்ற சிரித்த மந்திகளில் ஒருவனையாவது ‘கொல்’ என்று உள்மனம் ஆணையிட்டது. கொன்றுவிட்டால் ‘கொல்’லென சிரித்ததால்தான் கொன்றான் என்பது மோட்டிவ் ஆகிவிடும்.\nமோட்டிவ்வே இல்லாமல் ஒருவனையோ/ஒருவளையோ போட்டால் என்ன\nஅந்த மஞ்சள் புடவையோடு சேர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறானே நரேன். அதற்கு மோட்டிவ், வகுப்பறையில் அவனுக்கு நடந்த அவமானம்தான். அரை அடி நீளத்துக்கு பளபளக்கும் பொருளை உடைக்குள் மறைத்து வைத்திருந்தான்.\nஅந்த கட்டிடம் இருளடைந்து போயிருந்தது. அடிக்கடி இங்கே வந்து செல்பவள் என்பது அவளது இயல்பான நடவடிக்கைகளில் தெரிந்தது. சொந்த வீட்டுக்குள் பிரவேசிப்பவளைபோல விறுவிறுவென நடந்தாள். லேசான படபடப்போடு இவனும் பின் தொடர்ந்தான்.\nவீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாய் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு ஈ, காக்காய் கூட...\nஅந்த பழையவீட்டின் வரவேற்பரை முழுக்க செடிகொடிகளால் நிறைந்திருந்தது. நேராகப் போய் ஓர் அறையை திறந்தாள். பூட்டியிருந்த அந்த அறைக்கதவுக்கான சாவி, அவளிடம் இருந்தது என்பதுதான் ஆச்சரியம்.\nதிரும்பிப் பார்த்து இவனை வரும்படி சைகை செய்தாள். கொஞ்சம் தயக்கமாக உள்ளே நுழைந்தான். ‘பொருள்’ இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான்.\nஅந்த அறை முதலிரவு அறையை போல அலங���கரிக்கப்பட்டிருந்தது. மெழுகுவர்த்தி ஒன்று பாதி எரிந்த நிலையில் மங்கிய மஞ்சள் வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டிருந்தது.\nதயக்கத்தை விட்டான். அறைக்குள் நுழைந்தவன் கட்டிலை எட்டி அமர்ந்தான்.\nஒருவிரலை உயர்த்திக் காட்டி ‘ஒரு நிமிஷம்’ என்பதாக சைகை செய்தவள், பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.\nஅவசரமாக உடைக்குள் மறைத்திருந்த ஆயுதத்தை எடுத்து தலையணைக்கு கீழே வைத்தான். அவள் வந்ததுமே கட்டியணைத்து, மெதுவாக கத்தியை எடுத்து, வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கும் இடுப்பில் ஒரு சொருகு சொருகி, திருகி....\nமோட்டிவ்வே இல்லாத பச்சை படுகொலை.\nமோட்டிவ்வே இல்லாமல் ஒரு கொலை செய்யவேண்டும் என்கிற சிந்தனைதான் இதற்கு மோட்டிவ். அப்படியெனில் அது எப்படி மோட்டிவ் இல்லாத கொலையாகும்\nதிடீர் குழப்பம் அவனைச் சூழ, அவள் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது.\nமண்டைக்குள் பூச்சி தாறுமாறாய் பறந்தது. அனிச்சையாய் தலையை தொட்டான். கெட்டியாய் ரத்தம் கொழகொழத்தது. முகத்தில் அடர்சிகப்பு வழிய அதிர்ச்சியாய் திரும்பினான்.\nஅவளது முகத்தில் அடையாளம் காணமுடியாத கோபம். கண்கள் சிவந்திருந்தாள். கையில் நீளமான சுத்தியல். மீண்டும் சுத்தியலை தலைக்கு மேலே தூக்கி, இன்னொரு தட்.\nமூளை சிதறுவதற்கு முன்பாக சிந்தித்தான். “என்னை கொல்ல இவளுக்கு என்ன மோட்டிவ்\nஅறிவியலாளர்களை கவுரவிக்க இந்திய தேசம் எப்போதுமே தவறியதில்லை. அறிவியல் அறிஞர் ஒருவர் இந்தியாவின் ஜனாதிபதி என்றபோது உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியது. அப்துல்கலாமின் வாழ்க்கை நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் பாதை. தமிழ்நாட்டின் சிறிய ஊரில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் ராஷ்டிரபதி பவனில் அமர்ந்து நாட்டையே வழிநடத்த முடியும் என்கிற இந்த வாய்ப்பு வேறு நாடுகளில் அமைவது கடினம்.\nஇந்த வாய்ப்புக்குப் பின்னால் இருந்த டாக்டர் கலாமின் கடின உழைப்பும், கனவும் அவரை எப்படி சரியான வழியில் நடத்தியது என்பதை ‘எனது பயணம்’ நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். எண்பது வயதைக் கடந்தவர் தன்னுடைய தனித்துவ அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வது என்பது இன்றைய இளைய தலைமுறைக்கு அரிதாகக் கிடைக்கக்கூடிய பொக்கிஷம். ஏராளமான சம்பவங்கள் நிறைந்த நீண்டகால வாழ்வின் அனுபவங்களை நம் மனதுக்கு அப்படியே கடத்தும் நெருக்கமான மொழியமைப்பில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கூடு விட்டு கூடு பாய்ந்ததைபோல புத்தகத்தை படித்து முடிக்கும்போது, வாசித்த ஒவ்வொருவருமே நம்மை கலாமாக உணர்கிறோம்.\nதன் வாழ்வில் கண்டடைந்த மிகப்பெரிய பாடமாக கனவினை சொல்கிறார் கலாம். “ஒருவர் தன் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்” என்று தன் வாழ்வின் வெற்றி ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறார்.\nஇந்தியர் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் மகத்தான சாதனைகளை படைத்து பெருவாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலாம், கடைசியாக நூலை முடிக்கும்போது என்ன சொல்கிறார் தெரியுமா\n“கடக்க வேண்டிய தூரம் இன்னும் கணிசமாக இருக்கிறது”\nநூல் : எனது பயணம்\nஎழுதியவர் : ஏ.பி.ஜே. அப்துல்கலாம்\nதமிழில் : நாகலட்சுமி சண்முகம்\nவெளியீடு : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்,\n7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச்,\n“1998ஆம் ஆண்டில் பொக்ரானில் இந்தியா தனது இரண்டாவது அணுவெடிப் பரிசோதனையை நடத்தியபிறகு, அதன் உருவாக்கத்தில் பங்காற்றியிருந்த எனக்குப் பல்வேறு பட்டப் பெயர்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகும், ஜனாதிபதியாக எனது பதவிக்காலம் முடிந்து பல வருடங்களுக்குப் பிறகும் என்னோடு எப்போதும் தங்கி வந்துள்ள ஓர் அடைமொழி ‘ஏவுகணை மனிதன்’ என்பதுதான். நான் அவ்வாறு அழைக்கப்படும்போது அது எனக்குப் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், ஓர் அறிவியல் மனிதனாக என்னை நான் கருதிக் கொண்டிருக்கையில், அப்பெயர் ஒரு குழந்தையின் சாகசக் கதாநாயகனின் பெயரைப் போல ஒலிக்கிறது”\nபாகுபலி மீது பாலியல் வழக்கு\nபாகுபலி என்னவெல்லாம் அநியாயத்தை அவந்திகாவுக்கு செய்திருக்கிறான் பாருங்கள். அவந்திகா அறியாமலேயே அவளுடைய கைகளில் ஓவியம் வரைகிறான். Intruded her privacy.\nபாம்பை ஏவிவிட்டு அவளை சில விநாடிகள் உறையச் செய்கிறான். கத்தி காட்டி மிரட்டுவதை போல பாம்பை காட்டி மிரட்டியிருக்கிறான்.\nஇச்சையை வெளிப்படுத்தும் நடனம் ஆடுகிறான். அவள் கூந்தலை கலைக்கிறான். உடுத்தியிருந்த ‘போராளிக்கான’ உடையை அவிழ்க்கிறான். ‘பெண்மை’ புலப்படுமளவுக்கு அவளது உடையை செதுக்குகிறான் (அவந்திகா என்ன சிற்பமா). சாயங்களை சேகரித்து ��ண்ணுக்கு மை தீட்டுகிறான். உதட்டுக்கு சாயம் பூசுகிறான். அவளை பெண்மை (). சாயங்களை சேகரித்து கண்ணுக்கு மை தீட்டுகிறான். உதட்டுக்கு சாயம் பூசுகிறான். அவளை பெண்மை () செய்கிறான். அவளை நாணப்படுத்துகிறான். அவனது இறுக்கத்தில் அயர்ந்துப் போகிறாள். உச்சக்கட்டமாக விலங்கை போல ஒரு பெண் பழக்கப்படுத்தப்படுகிறாள்.\nநம் அறிவுஜீவிகள் கொஞ்சம் அட்வான்ஸாகதான் சிந்திக்கிறார்கள்.\nஆனானப்பட்ட பல்லாலதேவனையே சமாளித்துவிட்ட பாகுபலியால் நம்மூர் இண்டெலெக்ச்சுவல்களை சமாளிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.\nஇந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் நாயகன், நாயகியின் இடுப்பைப் பிடித்து வலுக்கட்டாயமாகதான் இழுக்க வேண்டுமா என்று எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி, என்னுடைய ஒருநாள் இரவு தூக்கத்தை முற்றிலுமாக பறித்துக் கொண்டிருக்கிறது.\n‘அவந்திகா, துணிச்சல்மிகு போராளி’ என்று போடப்பட்ட பன்ச்சிலேயே ‘பணால்’. ‘போராளி’ என்கிற வார்த்தையை கேட்டதுமே/வாசித்ததுமே இணையப் போராளிகள் போர்ப்பரணி பாடத் தொடங்கிவிட மாட்டார்களா\nநிச்சயமாக பாலியல் குற்றம்தான். பாகுபலி மீது இ.பி.கோ 375 பாய்வதுதான் நியாயம். முடிந்தால் இந்த ஆபாசமான காம வெளிப்பாட்டை படம் பிடித்த ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் மீதும் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம்.\nஇதோடு நிறுத்திவிடக்கூடாது. ‘சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ’ என்று பாடிக்கொண்டே வாளை நீட்டி அச்சுறுத்தி, விஜயசாந்தியை பணியவைத்த சூப்பர் ஸ்டாரில் தொடங்கி ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ ஹரிதாஸ் வரைக்கும் நம் சினிமாவில் நடந்த அத்தனை பாலியல் பலாத்காரங்களையும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். குறிப்பாக பெண்ணியவாதிகளுக்கு இந்த கடமை இருக்கிறது. ஓர் அவந்திகாவுக்கு நடந்த அவலம் இனிமேல் இன்னொரு அவந்திகாவுக்கு நடக்கக்கூடாது என்றால், அவந்திகாவை மாதிரியே நாமெல்லாம் போராளிகளாக, ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களாக (குறைந்தபட்சம் ஃபேஸ்புக்கிலாவது) மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஅட்லீஸ்ட் இதுபோல இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த ஆயிரக்கணக்கான சினிமாக்களில் நடந்த பாலியல் பலாத்காரங்களை, மோட்டுவளையை பார்த்து சிந்தித்து கண்டுபிடித்து நாம் ���ெளிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு தற்கொலை மூடில் இருந்த ரேகாவை வலுக்கட்டாயமாக இழுத்து உதட்டோடு உதடு கிஸ் அடித்த கமல்ஹாசனை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு ஸ்டேட்டஸாவது போடவேண்டும். அதற்கு குறைந்தபட்சம் முன்னூறு கமெண்டு, மூவாயிரம் ‘லைக்’காவது விழுந்தால்தான் ஆண்மய்யப்பட்ட இந்திய சமூக விழுமியங்களின் மீது நாம் சிறுநீராவது கழித்த அறிவுலகச் செயல்பாட்டினை நிகழ்த்த முடியும்.\nஎருதினை அடக்கும் காட்சிக்கு கூட கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட காட்சியைதான் காட்டியாக வேண்டும் என்கிற அறம், ஏற்கனவே இந்தியாவில் இருக்கிறது. விலங்குகள் காட்சிகளில் இடம்பெறுமாயின், ‘இந்தப் படத்தில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்று ஸ்லைடு போட்டு காட்டவேண்டியது அவசியம் என்று இந்திய தணிக்கைத்துறை வலியுறுத்துகிறது.\nநிலைமை அப்படியிருக்கையில் விலங்கினைவிட பெண்கள் மட்டமா என்கிற அடிப்படைக்கேள்வி நமக்கு இங்கே எழுகிறது. முதற்கட்டமாக இனிமேல் சினிமாக்களில் இதுபோன்ற பாலியல் பலாத்கார காதல் காட்சிகள் இடம்பெறுமாயின், அவை கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட இமேஜ்களாகதான் இருக்கவேண்டும் என்கிற கோரிக்கையை நோக்கி நம் போராட்டம் துவங்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இடம்பெறக்கூடிய அவ்வாறான காதல் காட்சிகளில் ‘புகை பிடிப்பது புற்றுநோயை வரவழைக்கும்’ என்பதுபோல, ‘பெண்ணை வலியுறுத்தி காதல் செய்வது, இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும்’ என்கிற எச்சரிக்கை திரையின் கீழே பொறிக்கப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு.\nஇந்த சீரிய சிந்தனையை தூண்டிய கட்டுரை : 'பலாத்கார பாகுபலி'யும் அவிழ்க்கப்பட்ட அவந்திகாவும்\nஇன்று இயக்குனர். நேற்று ரசிகர். நாளை\n“டேப்ரிக்கார்டரில் கேசட்டை ரீவைண்ட் பண்ணுற மாதிரி, லைஃபையும் ரீவைண்ட் பண்ண முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்” ‘முதல்வன்’ படத்தில் சுஜாதா எழுதிய டயலாக். இதேதான் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் ஒன்லைனர். டைம் மெஷினில் கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் பயணிக்க முடியும். கதாநாயகனின் வாழ்க்கையில் இந்த டைம் மெஷின் எப்படி விளையாடியது என்பதுதான் கதை.\nதமிழில் எல்லா வகையிலும் படங்கள் எடுக்கப்படுகின்றன. சயன்ஸ் ஃபிக்ஷன் மட்டும் கொஞ்சம் அரிதுதான். ஏனெனில் ‘எந்திரன்’ மாதிரி படங்கள் எடுப்பதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படும். சிக்கனமான பட்ஜெட்டில், பளிச்சென்று அனைத்துத் தரப்பையும் கவரும் வண்ணம் இந்த அறிவியல்புனை படத்தை இயக்கியிருக்கிறார் ஆர்.ரவிக்குமார்.\nஇவரையே டைம் மெஷினில் உட்காரவைத்து கடந்த காலத்துக்கு வண்டியை ஓட்டச் சொன்னோம். இருபத்து மூன்று வருடங்களுக்கு பின்பாக போய் பிரேக் போட்டார். காலம் அங்கிருந்து நிகழ்காலம் நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது.\n“திருப்பூர் சிவன் தியேட்டர். எட்டு, ஒன்பது வயசு இருக்கும். ‘தேவர் மகன்’ படம் ஓடுது. முதன்முதலா தனியா படம் பார்க்குறேன். பயமாயிருக்கு. ஆயாதான் வாராவாரம் இங்கே என்னை படம் பார்க்க கூப்பிட்டுக்கிட்டு வருவாங்க. இப்போ நான் கொஞ்சம் பெரிய பையன் ஆயிட்டேன்னு ஆம்பளைங்க க்யூவில்தான் டிக்கெட் கொடுக்கறாங்க.\nஇந்த தியேட்டரை சுற்றிதான் என்னோட வாழ்க்கையே. இங்கேதான் அப்பா நூல் வியாபாரம் பார்க்குறாரு. வீடும் பக்கத்துலேதான். நைட்ஷோ இங்கே படம் ஓடுறப்போ, வீட்டுலே சத்தம் கேட்கும். சினிமா ஓடுற சத்தம்தான் எனக்கு தாலாட்டு.\n50 பைசாவுக்கு கடையில் ஃபிலிம் கிடைக்கும். ரஜினி, கமல், எம்.ஜி.ஆர், சிவாஜின்னு அவங்க நடிச்ச ஃபிலிமெல்லாம் வாங்கி வெச்சுப்பேன். 80 வாட்ஸ் பல்பை புரொஜெக்டர் மாதிரி யூஸ் பண்ணி சுவத்துலே படம் காட்டுவேன். நான் காட்டுற படத்தை ரசிக்கிற ரசிகை என் தங்கச்சி காயத்ரிதான். பானைக்குள்ளே பழைய ஸ்பீக்கரை வெச்சி, சிவன் தியேட்டர்லே வர்றமாதிரி சவுண்ட் எஃபெக்ட் ரெடி பண்ணுவேன். ‘ஹோம் தியேட்டர்’னா என்ன அர்த்தம்னு தெரியாத வயசுலேயே, என் வீட்டை தியேட்டரா மாத்தினேன்.\nகொஞ்சம் வளர்ந்ததுமே, பிரெண்ட்ஸ் கிட்டே மூவி கேமிரா ஓசி வாங்கி மனசுக்கு பட்ட காட்சியை எல்லாம் படம் பிடிச்சேன். இதுலேயும் சோதனை எலி என் தங்கச்சிதான். எனக்கு படம் பிடிக்கத் தெரியும்னு எல்லாரும் நம்ப ஆரம்பிச்சதுக்கப்புறமாதான் எனக்கு நம்பிக்கை வந்தது.\nவாசிச்ச நல்ல கதைகளை எல்லாம் குறும்படங்களா எடுக்க ஆரம்பிச்சேன். உள்ளூர்லே நடக்கிற விழாக்களில் அதை திரையிடுவேன். சினிமா எடுக்கணும்னுலாம் அந்த கட்டத்துலே ஐடியாவெல்லாம் இல்லை. பிடிச்சிருந்தது, செஞ்சேன். அப்பாவோட பிசினஸை வளர்க்குறதுதான் அப்போ எதிர்கால லட்சியமா இருந்தது.\nஒரு தனியார் தொலைக்காட்சியில் குறும்படங்களுக்கான போட்டி நடந்தப்போ விளையாட்டா கலந்துக்கிட்டேன். தொழில்நுட்பம்னா என்னன்னு அப்போதான் தெரிஞ்சுது. இயக்குனர் நலன்குமாரசாமியோட அறிமுகமும் அப்போதான் கிடைச்சுது.\nநலன், அப்போ டிவி சீரியல் டைரக்ட் பண்ணிக்கிட்டிருந்தாரு. அவரோட அசோசியேட்டா என்னை சேர்த்துக்கிட்டாரு. அவருக்கு ‘சூது கவ்வும்’ வாய்ப்பு வந்ததுமே, ஸ்க்ரிப்ட் எழுத கிளம்பிட்டாரு. அந்த சீரியலை நான் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சேன். மாசாமாசம் நல்ல சம்பளங்கிறதாலே வீட்டுலே இதுக்கு எதிர்ப்பு எதுவுமில்லே.\n‘சூது கவ்வும்’ படப்பிடிப்பு ஆரம்பிக்கறப்போ கூப்பிட்டார். எதையும் யோசிக்காம போய் சேர்ந்துட்டேன். இன்ச் பை இன்ச்சா அங்கே எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.\nஅந்த படத்தோட தயாரிப்பாளர் சி.வி.குமார் ஜாலியா பேசிக்கிட்டிருந்தப்போ, ஒருநாள் யதேச்சையா இந்த படத்தோட ஒன்லைனரை சொன்னேன். “நல்லா இருக்குப்பா. ஸ்க்ரிப்ட் பண்ணி எடுத்துட்டு வா”ன்னு சொன்னாரு.\nகதை எழுதி, திருத்தி, நண்பர்களோட பேசி திரும்பத் திரும்ப எழுதி... இந்த பிராசஸே 500 நாள் ஆயிடிச்சி. தயாரிப்பாளருக்கு திருப்தின்னதும் வேலையை ஆரம்பிச்சோம். அதாவது... ஒன்றரை வருஷம் எழுதின கதையை வெறும் ஒன்றரை மாசத்துலே எடுத்தோம்.\nலாபகரமா படம் எடுக்கணும்னா இதுதான் வழி. வேலையை தொடங்குறதுக்கு முன்னாடி பக்காவா எல்லாத்தையும் எழுதி வெச்சிக்கணும். படப்பிடிப்புக்கு போய் திணறக்கூடாது. எனக்கு தெரிஞ்ச ஃபார்முலா இதுதான்.\nபடம் இப்போ ஹிட் ஆயிடிச்சி. ஆனால், கதை எழுதறப்பவும் சரி. படம் எடுக்கறப்பவும் சரி. ரொம்ப பேருக்கு இதோட வெற்றியில் சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. ரசிகர்கள் அரவணைச்சுக்கிட்டாங்க.\nஎனக்கு பெரிய சந்தோஷம் என்னன்னா, இப்போ எனக்கு கிடைக்குற பாராட்டுகளை பார்த்து அப்பா ராஜேந்திரனுக்கு ரொம்ப சந்தோஷம். என் வயசு பசங்க எல்லாம் கல்யாணம், தொழிலுன்னு செட்டில் ஆயிட்டாங்க. தன்னோட பையன் மட்டும் இப்படி கேமிராவை தூக்கிட்டு சுத்தறானேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாரு. என்னோட வெற்றி, என்னைவிட என் குடும்பத்துக்குதான் ரொம்ப முக்கியம்.\nடைரக்டர் ஆயாச்சு. இப்பவும் நடுத்தர வாழ்க்கைதான். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறே��்னு அப்பா உழைச்சிக்கிட்டு இருக்காரு. வாழ்க்கை முழுக்க உழைச்ச ஆளு. அவருக்கு சீக்கிரமா ஓய்வு கொடுத்து, ராஜா மாதிரி பார்த்துக்கணும்.\nஅடுத்த படம் பற்றி நான் அவசரப்படலை. இதே படத்துக்கு இரண்டாம் பாகம்னு எல்லாரும் பேசுறாங்க. எடுக்கறதுக்கு ஸ்கோப் இருக்கு. ஆனா, நல்ல கதை தோணி, அதை பக்காவா ரெடி பண்ணிக்கிட்டுதான் அடுத்து பண்ணலாம்னு இருக்கேன். நம்ம பக்கம் காத்தடிக்குதுன்னு, வர்ற வாய்ப்பை எல்லாம் வாரி போட்டுக்கிட்டு, எடுத்தேன் கவிழ்த்தேன்னு சரியா வேலை பார்க்கலைன்னா பேரு கெட்டுடும் இல்லையா\nடைம் மெஷின் நிகழ்காலத்துக்கு வந்து நிற்பதற்கும், ரவிக்குமார் பேசி முடிப்பதற்கும் சரியாக இருந்தது.\nஅதே திருப்பூர் சிவன் தியேட்டர். அன்று ரவி, ‘தேவர் மகன்’ பார்த்த அதே தியேட்டரில்தான் ‘இன்று நேற்று நாளை’ ஓடுகிறது.\n‘ஹவுஸ்ஃபுல் போர்டு’ வெளியே தொங்குகிறது\n(நன்றி : தினகரன் வெள்ளி மலர்)\nகிறங்கடிக்கும் கண்கள். ரோஸ் நிறம். சுண்டினால் சிவப்பார். ஒல்லியான உடல்வாகு அந்த சின்னப் பெண்ணை நெடுநெடுவென காட்டியது. பதினேழு வயது. “ஹேய், பார்க்குறதுக்கு மாலாஸ்ரீ மாதிரி இருக்கேடி” என்று தோழிகள் ஏற்றிவிட்டதால் எந்நேரமும் சினிமா கனவு.\nபெங்களூர் கல்யாண் நகரைச் சேர்ந்த அந்த பெண்ணின் உண்மைப் பெயரே அதுதானா என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், ‘ரேஷ்மா’ பிரபலமானவர்தான். ஒருவேளை அவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.\nஅவர் ‘நடித்த’ நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றுகூட ‘யூ’ சான்றிதழ் பெற்றதில்லை. அதனால் அவரை நீங்கள் டிவியிலும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் சென்னைக்கு வந்திருந்தால், நகரெங்கும் ஒட்டப்படும் போஸ்டர்களில் ஒருவேளை இவரைப் பார்த்திருக்கலாம். மாநகரத்தின் நுழைவாயிலிலேயே பரங்கிமலையில் ஒரு தியேட்டர் உண்டு. அப்போதெல்லாம் அந்த தியேட்டரில் வாராவாரம் ரேஷ்மா ரசிகர்கள் அலைமோதுவார்கள். அரங்கம் ஹவுஸ்ஃபுல் ஆகி, நின்றுக்கொண்டே படம் பார்ப்பார்கள். பெரும்பாலும் மலையாளம்தான். சில நேரங்களில் தமிழில் டப்பிங் செய்து போடுவார்கள். இந்தப் படத்துக்கு எல்லாம் மொழியா முக்கியம்\nசினிமா நடிகை ஆகவேண்டும் என்கிற லட்சியம் மட்டும்தான் ரேஷ்மாவுக்கு இருந்தது. ஆவதற்கு என்ன தகுதி வேண்டும், யாரை அணுக வேண்டும் எதுவுமே தெரியாது.\nபெங்களூரில் இருந்த பிரபல நடிகர்களின் வீட்டுக்கு முன்பாக போய் நிற்பார். காரில் போகும்போதும், வரும்போதும் யதேச்சையாக பார்த்து, “இந்தப் பெண் அழகாக இருக்கிறாளே, நம்ம படத்தில் ஹீரோயின் ஆக்கிடலாமே” என்று முடிவெடுப்பார்கள் என நினைப்பு. செக்யூரிட்டிகள், இவரை விரட்டி விரட்டி அடிப்பார்கள்.\nஅடுத்து சில சினிமா கம்பெனிகளின் முகவரியை எப்படியோ பெற்று, ஒவ்வொரு அலுவலகமாக படியேறி இறங்கினார். சினிமாவின் இன்னொரு முகம் தெரிந்தது.\n“இங்கெல்லாம் உனக்கு சான்ஸே கிடைக்காது. நடிக்க வைக்கிறேன்னு சொல்லி, அதைத் தவிர்த்து எல்லாத்துக்கும் யூஸ் பண்ணிப்பானுங்க. மைசூர்லே நிறைய சூட்டிங் நடக்கும். அங்கே போய் ட்ரை பண்ணு. துணை நடிகையாவாவது நடிக்கலாம்”\nமைசூரில்தான் அப்போதெல்லாம் நிறைய தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குப் போய் வேடிக்கை பார்ப்பார். படப்பிடிப்புக் குழுவில் இருக்கும் யாரைப் பார்த்தாலும், “அண்ணா, நான் நல்லா நடிப்பேண்ணா. உங்க படத்துலே நடிக்கை வைங்கண்ணா” என்று கெஞ்சுவார்.\nகுறைந்தது ஐநூறு பேரிடமாவது கெஞ்சி இருப்பார். சில பேர் திட்டி அனுப்பி விடுவார்கள். சில பேர் ஜொள்ளு விடுவார்கள். சிலர் வேறு நோக்கத்துக்காக அழைப்பார்கள்.\nஒரே ஒரு படத்தில் கூட கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் வாய்ப்பு கூட ரேஷ்மாவுக்கு கிடைத்ததே இல்லை.\nஒருநாள். ஏதோ மலையாள சினிமா படப்பிடிப்பு. மலையாளத்தின் பெரிய நடிகர் நடித்துக் கொண்டிருந்தார். கக்கத்தில் பையை அமுக்கிக் கொண்டு துணை நடிகர்களை அதிகாரமாக ஆணையிட்டுக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தார் ரேஷ்மா. வழக்கமாக எல்லாரிடமும் கேட்பதைப் போல அவனிடமும் வாய்ப்பை கேட்டார். ஏற இறங்கப் பார்த்தான். கண்களில் திருட்டுத்தனம் டாலடித்தது.\n“இந்தப் படத்துலே சான்ஸ் இல்லை. ஆனா வேற ஒரு படத்துக்கு ஹீரோயின் தேவைப்படுது. கேரளாவிலே ஷூட்டிங். அஞ்சே அஞ்சு நாள் நடிச்சிக் கொடுத்தா போதும்”\nவிவரம் புரியாத ரேஷ்மா, “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்று நன்றியுணர்ச்சியில் நா தழுதழுத்தார்.\n“இனிமே அண்ணான்னு கூப்பிடாத. மாமான்னு கூப்பிடணும். நைட்டு வந்து பாரு” சொன்னவன், தான் தங்கியிருந்த லாட்ஜ் முகவரியை எழுதிக�� கொடுத்தான்.\nரேஷ்மா, மீள முடியாத புதைகுழியில் விழுந்த நாள் அதுதான்.\nஅவன் சொன்ன படத்துக்காக கேரளா போனார். ஐந்து நாட்கள் கால்ஷீட். ஆனால், மூன்றே நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டார்கள். கேமிராமேன், டைரக்டர் என்றெல்லாம் ஒரு படத்துக்கு தேவையான அத்தனை பேரும் இருந்தார்கள். ஆனால் காஸ்ட்யூமருக்கு மட்டும் வேலையே இல்லை.\nமுதல் நாள் நடிக்கும்போது ரேஷ்மாவுக்கு அழுகையாக வந்தது. மறுநாளில் இருந்து சகஜமானார். முழுக்க நனைந்தபிறகு முக்காடு போடுவது முட்டாள்தனம் அல்லவா\nதயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பரமதிருப்தி. சம்பளத்தை கவரில் கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்தார். ஒரு லட்ச ரூபாய். இதுவரை ரேஷ்மா, கனவில் கூட நினைத்துப் பார்த்திராத தொகை. “சினிமாவில் நடிச்சா நிறைய காசு கிடைக்கும்னு தெரியும். இவ்வளவு காசா” என்று வாய் பிளந்தார்.\n“ஷகீலா மாதிரி பெரிய நடிகையா வருவேம்மா. மாசத்துக்கு ரெண்டு படமாவது எடுப்பேன். ஷூட்டிங் இருந்தா போன் பண்ணுறேன். வந்துடு” என்று ஆசிர்வதித்தார் தயாரிப்பாளர்.\nஅன்றிலிருந்து அடுத்த சில வருடங்களுக்கு ரேஷ்மா, படப்பிடிப்பிலேயே பிஸியாக இருந்தார். ஷகிலாவோடு இணைந்து இவர் நடித்த பல படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. ஷகிலா, சிந்து, ஜோதிஸ்ரீ என்று இத்துறையில் முன்னணியில் இருந்த நடிகைகளோடு இணைந்து ரேஷ்மா நடித்த ‘சிலகம்மா’ ப்ளாக்பஸ்டர் ஹிட். ஆனால், தான் நடித்த ஒரு படத்தை கூட ரேஷ்மா தியேட்டருக்கு போய் பார்த்ததே இல்லை.\nதிடீரென்று ஒரு நாள் ரேஷ்மாவுக்கு படப்பிடிப்பே இல்லை. மறுநாள் போன் வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம். அதன்பிறகு அவரை நடிக்க யாருமே கூப்பிடவில்லை. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள், ‘இந்த’ மாதிரி படங்களால், தாங்கள் நடிக்கும் படங்கள் ஓடுவதில்லை என்று பிரச்சினை செய்ததால், ‘அந்த’ மாதிரி படங்கள் எடுப்பது முற்றிலுமாக நின்றுவிட்டது.\nஆறேழு ஆண்டுகள் கழிந்தன. 2007ஆம் ஆண்டு. கொச்சின் புறநகர்ப் பகுதியான காக்கநாட்டில் இருந்த ஓர் அப்பார்ட்மெண்டில் ரேஷ்மாவும், கூட சிலரும் கைது செய்யப்பட்டார்கள். பொது இடத்தில் பாலுறவுக்கு வற்புறுத்தி மற்றவர்களை அழைத்தது உள்ளிட்ட பிரிவுகளில் ரேஷ்மா மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அப்போது அவர் மீது நட���்த காவல்துறை விசாரணையே மிக அசிங்கமாக இருந்ததாக, ஒரு வீடியோ இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. கோர்ட்டில் பெயில் வாங்கிக் கொண்டு பெங்களூருக்கு போனவர்தான்.\nஇன்றுவரை ரேஷ்மா எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. உயிரோடு இருக்கிறாரா என்றும் தெரியாது. அவர் தலைமறைவான போது அவருக்கு வயது இருபத்தைந்துக்குள்தான் இருக்கும்.\nகலைத்துறையில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை யாருக்கு வேண்டுமானால் வரலாம். ஆனால்- முறையான பயிற்சியோ, சரியான வழிகாட்டுதலோ, போதுமான பாதுகாப்புப் பின்னணியோ இல்லாதவர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு ரேஷ்மாவின் வாழ்க்கையே பாடம்.\n(நன்றி : தினகரன் வசந்தம்)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nசென்னையில் நிகழ்ந்திருப்பது செயற்கைப் பேரழிவு\nகவர்ச்சி பாதி, அதிரடி மீதி\nபாகுபலி மீது பாலியல் வழக்கு\nஇன்று இயக்குனர். நேற்று ரசிகர். நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t123080-topic", "date_download": "2018-07-19T11:23:33Z", "digest": "sha1:NWLCVF3RIPPKTEPQGGUTOHRH7HWUDQ7N", "length": 27706, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சண்டிவீரன் – அழகான கிராமத்துக் கதை", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nசண்டிவீரன் – அழகான கிராமத்துக் கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசண்டிவீரன் – அழகான கிராமத்துக் கதை\n‘மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும்’ #சண்டிவீரன் படத்தின் முடிவில் சொல்லப்பட்ட கருத்து. இந்த கருத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதையில் காதல், இரண்டு ஊர்களின் பகை, மனிதர்களின் பிடிவாதம் போன்றவற்றை அச்சு அசல் அதே கிராமத்து சாயலில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.\n‘நய்யாண்டி’ கொடுத்த அடியில் இருந்து மீண்டு, ஒருவழியாகத் தனது பழைய பாணிக்கே திரும்பியிருக்கிறார்.\nஅதேபோல், ‘இரும்புக் குதிரை’ எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், அடுத்ததாக ஒரு வெற்றியைக் கொடுத்தே தீர வேண்டும் என்று ஜிம்மிலேயே கதியாய் கிடந்த அதர்வா முரளிக்கு, இயக்குநர் பாலா மூலமாக கிடைத்தது இந்த அற்புதமான வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். படத்தை இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் மூலமாகத் தயாரித்திருக்கிறார்.\n‘கயல்’ படத்திற்குப் பிறகு இளைஞர்களின் கனவுக் கன்னியாகிவிட்ட ஆனந்திக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு தான் என்றாலும், கயலை ஒப்பிடும் போது கதையில் அவருக்கான இடம் சற்று குறைவு தான்.\nதஞ்சாவூர் அருகே இரண்டு சிறிய கிராமங்கள். இரு கிராமங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சனையால் பல வருடங்களாகப் பகை. காரணம் இரு கிராமங்களையும் இணைக்கிறது ஒரு குளம். அந்த ஊரில் அதிக செல்வாக்கு மிக்கவர் மில்லுக்காரர். ஒவ்வொரு முறையும் ஏலத்தில் அந்தக் குளத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பக்கத்து கிராமத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்.\nஇந்தப் பகையால் உருவான கலவரத்தில், சிறிய வயதிலேயே தன் தந்தையை இழந்து விட்ட அதர்வா, வளர்ந்த பின்னர் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய ஒரு சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்.\nகுடும்ப வறுமை, மில்லுக்காரரின் மகளுடன் (ஆனந்தி) காதல் , பக்கத்து கிராமத்தில் தண்ணீர் பிரச்சனையால் வாடும் நண்பர்களின் குடும்பம் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அதர்வா எடுக்கும் முடிவுகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் படத்தின் சுவாரஸ்யங்கள்.\nஎன்ன தான் உடம்பை ஏற்றி முஷ்டி முறுக்கினாலும், அதர்வா நடிப்பில் எப்போதும் ஒரு குழந்தைத் தனம் அப்பட்டமாக வெளிப்படும். அது அந்தக் கதாப்பாத்திரத்தின் தன்மையைக் கெடுப்பதற்குக் காரணமாக இருந்து வந்தது. ஆனால் இந்தப் படத்தில் அந்தப் பிரச்சனை இல்லை. அதர்வாவின் கதாப்பாத்திரமே அப்படி தான் அமைந்துள்ளது. ஒரு கிராமவாசியாக படம் முழுவதும் கலகலப்பாகவும், அப்பாவியாகவும் வலம் வருகிறார்.\nமலாய் மொழில் பேசுவதாகக் கூறி “அக்கு அக்கு சிந்தாவா” என்று பழைய பாடலைப் பாடி கிராமத்துக்காரர்களை ஏமாற்றுவது, ஆனந்தியை விரட்டி விரட்டி காதல் வலையில் விழ வைப்பது என படத்தில் முதல் பா��ி முழுவதும் கலகலப்பு சேர்க்கும் அதர்வா, இரண்டாம் பாதியில் ஏலத்தில் மில்லுக்காரருடனான போட்டி, பக்கத்து கிராமத்து மீதான கரிசனம், கலவரத்தை தடுக்க எடுக்கும் அதிரடி முடிவுகள் என கதாப்பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஆனந்தி… பார்த்தவுடனே அள்ளிக் கொஞ்சும் குழந்தை முகம். “அப்பா யாரோ ஒரு பையன் எனக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டே இருக்காம்பா” என்று அப்பாவிடம் அப்பாவியாகக் கூறுவதும், “ரோத்தான் அடி வாங்குனா புள்ளப் பொறக்காதாமே” என்று அதர்வாவிடம் வம்பிழுப்பதுமாக, ஸ்கூல் பெண் கதாப்பாத்திரத்தில் குழந்தைத்தனமாகவே நடித்திருக்கிறார். நடிப்பை வெளிப்படுத்த அழுத்தமான காட்சிகள் இல்லை என்பது தான் குறை. மற்றபடி க்ளோசப் காட்சிகளில் ஆனந்தி எப்போதும் போல் ரசிக்க வைக்கிறார்.\nஅடுத்ததாக, மில்லுக்காரராக மலையாள நடிகர் லால் நடித்திருக்கிறார். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை லால் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டும் வகையில் அவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் கிளைமாக்சில் அவரது கதாப்பாத்திரம் சற்றே காமெடி ஆக்கப்பட்டாலும் கூட கதைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று சொல்லலாம். நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகின்றது.\nபிஜி முத்தையா ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள் அழகு. குறிப்பாக கூகுள் எர்த்தைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வைத் தரும் அந்த ‘டாப் ஆங்கிள் வியூ’ அவ்வளவு அழகு. கதைப்படி அடிக்கடி அந்தக் குளத்தை காட்ட வேண்டிய சூழ்நிலையில் ஒவ்வொரு முறையும், அதை வெவ்வேறு கோணங்களில் காட்டி படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் ஒளிப்பதிவு செய்திருப்பது அருமை.\nஅதே போல், சபேஷ் – முரளி இசையில் பாடல்கள் அனைத்தும் அந்த வட்டார வழக்கின் சொல்லாடல்களுடன், கிராமியத்தைத் தழுவி வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அது சற்குணம் படத்தின் தனித்துவம் என்றும் சொல்லலாம். (நய்யாண்டியைத் தவிர)\nஒரு கிராமத்தின் வீண் பிடிவாதத்தால் இன்னொரு கிராமத்தில் தண்ணீருக்காக மக்கள் படும் அவதியையும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார் இயக்குநர். படம் பார்க்கும் நமக்கு அது படம் என்பதையும் மீறி தண்ணீர் தராத கிராமத்தின் மேல் ஆத்திரமும், அவதிப்படும் மக்கள் மீது பரிதாபமும் மேலோங்குகிறது.\nவெட்டுக்குத்து இரத்தம் சதை என எதுவும் இல்லாமல் சுமூகமாகக் கொண்டு சென்று, “கர்நாடகா தண்ணீர் குடுக்கலங்கம்போது நமக்கு எப்படி கோவம் வருது. அது மாதிரித்தான அவிங்களுக்கும்” என்று கிராமவாசிகளை உணர வைத்த போது நமக்கும் அப்பாடா என்று தோன்றுகிறது.\nஆனால், சிங்கப்பூரில் ஓவர் ஸ்டேயில் இருந்த குற்றத்திற்காக ரோத்தான் அடி வாங்கும் அதர்வா, போலி பாஸ்போர்ட் மூலமாக ஊருக்கு வருவதாகப் படத்தில் வைக்கப்பட்ட காட்சிகள் கதைக்குத் தேவையில்லாத ஒன்றாகத் தான் தோன்றுகின்றது.\n“சிங்கப்பூரில சீனாக்காரனையே தூக்கிப் போட்டு மிதிச்சவன் நான்” என்று விருமாண்டி படத்தில் கமல் கூறுவார்.\nஅதன் தாக்கமோ என்னவோ இந்தப் படத்தில், அதர்வா சிங்கப்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் ஊருக்கு வந்ததை பெரிய சாதனையாகக் கருதி அந்தக் கிராமமே “ஏப்பு செட்டிங் பாஸ்போர்ட்டுல வந்தியாம்ல” “ஏப்பு ரோத்தான குதிர மூத்திரத்துல ஊறப்போட்டு அடிப்பாகளாம்ல” “ஏப்பு ரோத்தான குதிர மூத்திரத்துல ஊறப்போட்டு அடிப்பாகளாம்ல” என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறது.\nஅந்தக் காட்சிகளால் கதாப்பாத்திரத்தின் தன்மைக்கோ அல்லது கதைக்கோ எந்த ஒரு தொடர்பும் இல்லாத போது எதற்காக அந்தக் காட்சிகள் வைக்கப்பட்டன என்பதை இயக்குநரிடம் தான் கேட்க வேண்டும். அந்தக் காட்சிகளால் வீணாக இன்று சிங்கப்பூரில் படம் வெளியிடத் தடைபட்டது தான் மிச்சம்.\nமற்றப்படி, முழுக்க முழுக்க கிராமிய சூழலில் அமைந்து நல்ல கருத்தைச் சொல்லும் இந்தப் படம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சண்டிவீரன் – அழகான கிராமத்துக் கதை\n//அந்தக் காட்சிகளால் கதாப்பாத்திரத்தின் தன்மைக்கோ அல்லது கதைக்கோ எந்த ஒரு தொடர்பும் இல்லாத போது எதற்காக அந்தக் காட்சிகள் வைக்கப்பட்டன என்பதை இயக்குநரிடம் தான் கேட்க வேண்டும். அந்தக் காட்சிகளால் வீணாக இன்று சிங்கப்பூரில் படம் வெளியிடத் தடைபட்டது தான் மிச்சம்.//\nஓஹு .. அதனால் தான் தடையா ... இப்போ தெரியுது ...\nஇந்த படத்தை பற்றி நிறைய நண்பர்கள் நன்றாக உள்ளதாக வலை தளங்களில் சொல்கிறார்கள் .\nநல்ல படம் என்றால் பார்த்துவிடனும் ..\nRe: சண்டிவீரன் – அழகான கிராமத்துக் கதை\nநல்ல படம் என்றால் பார்த்துவிடனும் ..\nRe: சண்டிவீரன் – அழகான கிராமத்துக் கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kamalalayan.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-19T11:12:50Z", "digest": "sha1:JFRYPMUQSU7F52A6FZUNSY3NFWABG7J3", "length": 19719, "nlines": 93, "source_domain": "kamalalayan.blogspot.com", "title": "என் சிந்தனைகள்: March 2010", "raw_content": "\nஇன்றொரு புதிய உலகம்....தினசரி வேலைகளின் அழுத்தம் காரணமாக இந்தப் பதிவுகளில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை.இன்று எனது துணைவியாரின் \"பாடினியார்\"வலைப் பக்கங்களில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.ஒரு வாசகன் ஆக என்னை மாற்றிக் கொண்டு படிக்கையில் அவரின் பதிவுகள் மிகவும் மகிழ்ச்சி தரும் விதத்தில் இருந்தன.ஒரு பெண்,தாய்,மனைவி,மகள் என்ற பல பரிமாணங்கள் அவரின் பதிவுகளில் வண்ணங்கள் காட்டுகின்றன.பிரசவ வேதனை மிக்க ஒரு நாளில் தன பக்கத்துப் படுக்கையில் சின்னப்பொண்ணு என்று ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பதிவையும் கவனத்தில் வைத்திருந்து இதனை வருடம் சென்ற பிறகும் உயிர்ப்புடன் எழுத்துவடிவம் தர முடிந்தது பெரும் வியப்புத் தரும் விஷயம்.தான் பார்க்கும் படங்கள்,தன இளமைக்கால நினைவுகள்,குடும்பம் என்கிற ஒரு வெளியில் கடந்து செல்லும் இனிமையும் வலியும் மிக்க நேரங்கள், வெளியில் பயணங்களில் காண நேர்ந்த காட்சிகளும் மனிதர்களும் ...என்று பன்முகம் கொண்டவை ஜெயந்தியின் பதிவுகள்.அவருக்குள் ஒரு படைப்பாளி இருப்பதை எப்போதோ உணர்ந்திருக்கிறேன். \"அதுவும்....\"என்ற தலைப்பில் நான் எழுத்து வடிவம் தந்த சிறுகதை அவர் சொன்ன அவரின் சிறுவயது அனுபவம்தான்.சின்ன வயதில் பாட்டி வீட்டில் அவரின் பிரியத்திற்குரிய பூனை ஒன்று ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகும் அவர் அங்குப் போனதும் ஓடி வந்து மடியில் ஏறி விளையாடும் சிறு நிகழ்வுதான் கதை.அவரே எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.என்றாலும் என் சிறுகதைகளில் மிகச் சிறப்பாக வடிவம் பெற்ற ஒருசில கதைகளில் இதுவும் ஒன்று. தன தனிமை துயரம்,தன கனவுகள்,நடைமுறை வாழ்கையில் தன முயற்சிகள்,இடையூறுகள் பற்றிக் கவலைப்படாமல் தன பாதையில் தளராமல் நடைபோடும் துணிவு என்று அவரின் பண்ப��கள் மிளிரும் வலைப் பக்கங்கள்.சில நிகழ்வுகள் நானும் உடனிருன்தவை என்றாலும் அவர் எழுத்தில் வாசிக்கும்போது மிகப் புதிய ஒரு காட்சி மனக்கண்ணில் எழுகிறது.ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீடு தன்னுள் ஒரு நடமாடும் உணர்வுக்களஞ்சியம் ஒன்றைக் கொண்டிருக்கிறது.அதன் தரிசனம் நம் கண்களில் படாமலே போகும் நிலை பல சமயங்களில் ஏற்பட்டு விடுகிறது.இயந்திர மயமான இன்றைய வாழ்கையில் அற்பக் கவலைகளால் மனதில் இருப்பதைக் கூடப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் உழன்று கொண்டிருக்கிறோம்.எதிர்பாராமல் தொடர்ந்த பல நாட்கள் மழைக்குப் பின் திடீர் என்று ஒரு நாள் காலைச் சூரியனின் வருகையின் பரவசம் இன்று தெரிந்த உலகில் கிடைக்கிறது.அறிந்த பழைய உலகமே கூடப் புதிய வடிவமும் வண்ணமும் காட்டி நிற்கிறது.நாம் தவற விட்ட உன்னத நிமிடங்கள் குறித்த குற்ற உணர்வும் கூட நம்மை உறுத்துகிறது.ஒரு எளிய மன உலகம்வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.\"பாடிநியாரின்\"மன உலகம் அதுதான்.........................\nபடைப்புகளின் பின் உறைகிற வலிகள்\nபடைப்புகளின் பின் உறைகிற வலிகள் பற்றிப் பேச முற்படும் பொது வாசகனின் மனநிலைகள் பலவிதமானவை.கண்காணாத இடங்களில் கரும்புத் தோட்டங்களில் உழைத்து வாடும் கூலிகள் பற்றிப் பாடுகிற பாரதி நம் முன்னோடி.தேயிலைத் தோட்டங்களில் பிழைப்புத் தேடித் போன மனிதர்களின் சோகங்கள் \"எரியும் பனிக்காடு\"நாவலில் ரத்தமும் சதையுமாய் இடம் பெற்றிருக்கின்றன.மொழிபெயர்த்த இரா.முருகவேளின் தமிழ்நடையில் முன் எப்போதோ கூலிகள் சிந்திய ரத்தவாடை அடிப்பதை படிக்கும் வாசகர் உணர முடியும்.பிஜித் தீவில் கூலிகள் ஆகப் பிழைக்கப் போன நம் தமிழ்ப்பெண்கள் சிந்தும் கண்ணீர் பாரதியை விம்மி விம்மி விம்மி விம்மி அழச் செய்தது.அந்தக் கவிதையின் தாக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் துயரப்படும் பெண்களின் காப்பாளர் ஆகத் தன்னைக் கற்பித்துக் கொள்ளும் சுப்பலக்ஷ்மி என்ற பாட்டி பற்றி மைதிலி சிவராமன் எழுத்து வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன. ஆழி சூழ் உலகு நாவல் படிக்கும் ஒருவர் ஆழ்கடலில் கட்டுமரங்கலேறிச் சென்று மீன்கள் பிடிக்கத் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மீனவ மக்களின் துயரக் கடலில் மூழ்கிப் போவார்.\"அந்த தூரத்து மலைகளின் நடுவே யாரோ மெல்ல விசும்பி அழும் குரல் கேட்டு\"'உங்கள் மனம் நடுங்கச் செய்வார் நா.பா.நோயால் துடிக்கும் கணவனின் பசிப்பிணியைத் தீர்க்கத் தன கற்பைப் பணயம் வைக்கும் மனைவி புதுமைப்பித்தனின் எழுதுகோலில் உயிரோவியமாய் எழுவாள். \"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம்,எம் குன்றும் உடையேம்;இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் எந்தையும் இல்லாமல்,எம் குன்றும் இல்லாமல் வாடி நிற்கிறோம்\"என்று மனம் நோகும் பாரி மகளிரின் சோகம் நம்மணப் பரப்பில் கொண்டு வரும் வெண்ணிலா கண்ணீர் சிந்தி வருவதை அறிவது சிரமமாய் இருக்காது.இப்படிப் படைப்புகளின் பின்னால் உறைந்து கிடக்கிற வலிகள் எண்ணற்றவை.எழுதும் படைப்பாளிகளின் உயிரைத் தின்று வடிவம் கொள்கிரவை. \"என் உயிரைக்கொட்டி நான் இசைத்த பாடல் உனக்குக் கேட்காமல் போனது எப்படி\" என்று வியக்கிறது ஜூலிஸ் புசிக்கின் மனம்..........இந்த \"நிலம் மறுகும் நாடோடிகளின்\" துரப்பாடல்களை இசைக்கும் \"கண் தெரியாத இசைஞ்ன்\" யார் கண்ணிலும் படாமலே மறைந்து போவதை எப்படி எழுதுவது\" என்று வியக்கிறது ஜூலிஸ் புசிக்கின் மனம்..........இந்த \"நிலம் மறுகும் நாடோடிகளின்\" துரப்பாடல்களை இசைக்கும் \"கண் தெரியாத இசைஞ்ன்\" யார் கண்ணிலும் படாமலே மறைந்து போவதை எப்படி எழுதுவது\nவாழ்க்கையின் துகள்கள்.... ஒரு குறும்படமும், நூலும்...\nமார்ச் பன்னிரண்டாம் தேதி அன்று மைதிலி சிவராமன் தன பாட்டி எழுதிய டயரி மற்றும் பல குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய \"வாழ்க்கையின் துகள்கள்'என்ற புத்தக வெளியீடு நடை பெற்றது,அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உமா சக்கரவர்த்தி என்ற வரலாற்று ஆய்வாளர் எடுத்த ஒரு குறும்படமும் திரை இடப்பட்டது.சுப்பலக்ஷ்மி என்ற பாட்டி தன மன உணர்வுகளை ஒரு இரண்டு வருட காலம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தினமும் எழுதி வந்திருக்கிறார்.தன மகள் பங்கஜத்தை சாந்தி நிகேதன் கல்வி நிலையத்தில் படிக்க வைக்க வேண்டும் என்ற அவரின் கனவு நனவாகவில்லை.ஏற்கனவே தன இரண்டு மகன்களைப் பரி கொடுத்த துயாம் தாங்காமல் அவர் வலிப்பு நோயாளி ஆக இருப்பவர்.அவரின் கணவர் கோபாலக்ருஷ்ணன் பிரிட்டிஷ் அரசின் சால்ட் இன்ஸ்பெக்டர் ஆக வேலை செய்தவர்.எனவே அவர் வேலை பார்த்த இடங்கள் எல்லாம் மனித நடமாட்டம் இல்லாத கடற்கரை ஓர ஊர்கள்.பெரிய வீடு.ஆனால் கணவர்,மனைவியும் மகளும் ஆக மூன்றே பேர��தான்.கணவர் வேலை நிமித்தம் நீண்ட தூரப் பயணங்களில் மாதக்கணக்கில் போய் விடும் நேரங்களில் சுப்பலக்ஷ்மி மகளுடன் தனிமையில் உசன்று கொண்டிருப்பார்.மகளின் படிப்புக்காக சென்னை வரும் அவர் எழுதிய குறிப்புகளின் ஊடே ஒரு துயரமிக்க பெண்ணின் கதை உருக்கொள்கிறது.வெண்ணிலாவின் பால் ஒளியில் மனம் பரி கொடுக்கிறார்.பறவைகளின் குரல்களில் ,செடிகொடிகளின் அழகில் இரவு வானின் மாயத் தோற்றங்களில் மனம் தொய்கிறார்.அவரின் ஒரே நண்பர் கிரேஸ் சாமுவேல் எழுதும் கடிதங்கள் மட்டுமே அவருக்கு ஆறுதல்.அப்போது நடந்த விடுதலைப் போராட்டங்களில்,சென்னைக் கடற்கரைக் கூட்டங்களில்,பாரதி கவிதைகளில் அவரின் ஈடுபாடு தன கூண்டில் இருந்து விடுபட்டு வெளியே வர அவராக உருவாகிய வெளியாக இருக்கிறது.அந்த வாழ்க்கையின் துகள்கள்தான் எத்தனை வீறு கொண்டவையை இருக்கின்றனபுத்தக வாசிப்பும் அவரின் மிகப் பெரிய வெளியாக இருந்திருக்கிறது.அன்று சென்னைப் பல்கலைக்கழக நூலகர் ஆக இருந்த,பிற்பாடு இந்தியாவின் நூலகத்தந்தையாக விளங்கிய எஸ்.ஆர்.ரங்கநாதன் சுப்பலக்ஷ்மியின் ஆர்வத்தை உணர்ந்து அவரை நூலக உறுப்பினர் ஆக அனுமதிக்கிறார்.இடைவிடாமல் படித்துக் கொண்டே இருந்த சுப்பலக்ஷ்மியின் வாசிப்புப் பட்டியல் நம்மைப் பிரமிக்க வைக்கும்.ஆம்,பள்ளிக்கூடம் பக்கமே போக வைக்காத ஒரு பெண்ணின் வாசிப்பு அவ்வளவு ஆழமானது என்றால் யாரால் நம்ப முடியும்புத்தக வாசிப்பும் அவரின் மிகப் பெரிய வெளியாக இருந்திருக்கிறது.அன்று சென்னைப் பல்கலைக்கழக நூலகர் ஆக இருந்த,பிற்பாடு இந்தியாவின் நூலகத்தந்தையாக விளங்கிய எஸ்.ஆர்.ரங்கநாதன் சுப்பலக்ஷ்மியின் ஆர்வத்தை உணர்ந்து அவரை நூலக உறுப்பினர் ஆக அனுமதிக்கிறார்.இடைவிடாமல் படித்துக் கொண்டே இருந்த சுப்பலக்ஷ்மியின் வாசிப்புப் பட்டியல் நம்மைப் பிரமிக்க வைக்கும்.ஆம்,பள்ளிக்கூடம் பக்கமே போக வைக்காத ஒரு பெண்ணின் வாசிப்பு அவ்வளவு ஆழமானது என்றால் யாரால் நம்ப முடியும்ஆனால் அது உண்மை.அந்த வரலாற்றுப் புத்தகத்தை உடலுடனும் உயிருடனும் பார்த்தது போன்ற உணர்வைத் தந்தது குறும்படம்.யுரைந்து போக வாய்த்த நிகழ்வு...................\n'என்னை பற்றி'யின் கீழ் எனது விவரங்கள்..\nஎனது புத்தகங்களில் இருந்து.. (4)\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோ�� சோகக் கதை\nபடைப்புகளின் பின் உறைகிற வலிகள்\nவாழ்க்கையின் துகள்கள்.... ஒரு குறும்படமும், நூலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-63/17701-2011-12-06-23-07-53", "date_download": "2018-07-19T11:40:37Z", "digest": "sha1:5SFGUJCF37SF7TIKDJZF5IOEC3DQGXND", "length": 68398, "nlines": 338, "source_domain": "keetru.com", "title": "இந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nதன் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய 13 பேரை இந்த அரசு பச்சை படுகொலை செய்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. காயம்பட்ட பல பேர் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கின்றார்கள். அவர்கள் மீண்டு வந்தாலும்…\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nதமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து...\nகடைசிப் பதிவேற்றம்: வியாழக்கிழமை 19 ஜூலை 2018, 14:49:00.\nகாரல்மார்க்ஸ் 200ஆவது பிறந்த நாள் ஆண்டு இது. மார்க்சியம் குறித்த விவாதங்கள், மறு வாசிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்குமிடையே வரலாற்று ரீதியான உறவுகள் உண்டு. பெரியார் சோவியத்…\nநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள்\nதமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்\nஜாதி - மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஅலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\nமலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும்,…\n‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்\n“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், த���ண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர்…\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nதிருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு\n இன்றைய தினம் உங்களால் அடியேனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும்…\nசுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா\n(மத்தியசட்டமன்ற விவாதங்கள் ,தொகுதி III , 1945, மார்ச்சு 29, அ.ப.2265-66) மாண்புமிகு…\nகாங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி\nதீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம்…\nதொழிலாளர் நலத்துறை (துணை மானியக் கோரிக்கை குறித்து)\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 27, மார்ச்சு 1945, பக்கங்கள் 2138-41.)…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nஇந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்\n1. பாதுகாப்பற்ற உடலுறவில் எச்.ஐ.வி உள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.\n2. பரிசோதிக்கப்படாத இரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.\n3. சுத்தம் செய்யப்படாத ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதால் பரவலாம்.\n4. எச்.ஐ.வி. உள்ள கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்குப் பரவலாம்.\n1. பரிசோதிக்கப்பட்ட இரத்தத்தையே பயன்படுத்துதல்.\n2. சுத்திகரிக்கப்பட்ட அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தகூடிய ஊசிகளை பயன்படுத்துதல்\n3. பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுரையை பயன்படுத்துதல்.\nஉலகம் முழுவதும் எச்.ஐ.வி.,எய்ட்ஸ் நோயின் தாக்கம் இருந்தாலும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் எச்.ஐ.வி. ,எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகம் இருக்கிறது இதற்கு என்ன காரணம்\nஉலக சுகாதார நிறுவனம் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் பரவுவதற்கான பல காரணங்களை கூறியுள்ளது. 1) சந்தை பொருளாதாரம், 2) கல்வியறிவின்மை, 3) ஆண், பெண் பாலின வேறுபாடு (ஆணாதிக்கம்), 4) ஊடகங்களின் தாக்கம், 5) வறுமை, 6) அடிப்படை மதவாத பிற்போக்கு தனங்கள் ஆகியவையாகும்.\nமேற்கண்ட காரணங்களை வைத்து எச்.ஐ.வி. நோய் தடுப்பு திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். ஆனால் இந்தியாவில் எச்.ஐ.வி. நோய் தடுப்பு திட்டங்கள் முறையாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை தற்போது இந்தியாவில் செயல்படுத்தப்படும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் ஏகாதிபத்திய உலகமய கொள்கைகளுக்கு சேவை செய்வததை நோக்கமாக கொண்டுள்ளது. எய்ட்ஸ் தடுப்பு சட்டங்களில் அரசு-தனியார் பங்கேற்பு ஊக்குவிக்கப்படுகிறது. பெரும்பாலும் நோய் தடுப்பு திட்டங்கள் தொண்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்படுகின்றன.\nஐந்து நட்சத்திர கேளிக்கை விடுதிகள் என்ற பெயரில் மறைமுகமாக பாலியல் தொழில் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு வரிவிலக்கு வேறு அளிக்கப்படுவது வெட்கக்கேடு*\nமருத்துவத் துறையில் ஆங்கில மருத்துவ (அலோபதி) ஆதிக்கம்\nதமிழகத்தில் மொத்தமுள்ள 1421 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 391 நிலையங்களில்தான் சித்தா பிரிவு உள்ளது. துணை சுகாதார நிலையங்கள் 8683 -ல் ஒன்றில் கூட சித்தா பிரிவு கிடையாது. ஒரு லட்சம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்றும் அதில் 5000-1, பேருக்கு ஒரு ஆங்கில மருத்துவர் என்றும் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு லட்சம் பேருக்கு ஒரு சித்த மருத்துவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படுகின்றனர். மருத்துவக் கல்லூரிகளும் வட ஆங்கில மருத்துவ கல்லூரி 17 என்றால் சித்த மருத்துவக் கல்லூரி இரண்டே இரண்டு தான். அதையும் தற்போது தனியாரிடம் தாரைவார்த்து விடத் தொடக்கிவிட்டனர்.\nதமிழகத்தில் சித்த மருத்துவம் புறக்கணிக்கப்படுவது போலதே தான் இந்தியா முழுவதும் நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவங்களான ஆயுர்வேதம், யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் போன்றவைகள் புறக்கணிக்கப்பட்டு ஆங்கில மருத்துவத்தின் (அலோபதி) ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. மத்திய அரசின் நிதிநிலை அற���க்கையிலும் கூட பொதுநலத் திட்டத்திற்கு ரூ.274,0- கோடி ஒதுக்கியுள்ளனர். அதில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற உள்நாட்டு மருத்துவத்திற்கு ஒதுக்கியது வெறும் 86 கோடி ரூபாய்தான். இவ்வாறு உள்நாட்டு தேசிய மருத்துவம் புறக்கணிக்கப்பட்டு அந்நிய ஆங்கில மருத்துவம் (அலோபதி) ஆதிக்கம் புரிவதற்கான காரணம் என்ன\nஅரசியல் பொருளாதாரத்துறைகளில் அந்நிய ஆதிக்கம்\n1947-ல் ஆட்சி அதிகாரம் உள்நாட்டு ஆளும் வர்க்கங்களின் கைகளில் மாற்றப்பட்ட பிறகு பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் தூக்கியெறியப்படாததோடு அமெரிக்கா போன்ற பல்வேறு ஏகாதிபத்தியங்களின் மறைமுக ஆதிக்கத்திற்காக போட்டிக்களமாக இந்தியா மாற்றியமைக்கப்பட்டது. அதாவது காலனிய இந்திய அரைக்காலனியாக மாற்றப்பட்டது. தொழில் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தன. அதுபோலவே மருத்துவத்துறையிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சியாக ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உள்நாட்டு (தேசிய) மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவை புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.\n90 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசு அதுவரை கடைப்பிடித்துவந்த கலப்புத் பொருளாதாரக் கொள்கை சேம நல அரசுக் கோட்பாடு ஆகியவற்றைக் கைவிட்டு (சோசலிச வேடத்தைக் கலைத்துவிட்டு) உலகமயம், தனியார்மயம், தாரளாமயக் கொள்கைகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டது. காரணம் உலகளவில் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் வீழ்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியும் தனது தலைமையில் ஒரு ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பை உருவாக்கும் நோக்கத்தில், இந்தியாவைத் தனது புதிய காலனியாக மாற்றியமைப்பதற்காக உலகவங்கி, சர்வேதச செலவாணிநிதியும் போன்ற தன் கைப்பாவை அமைப்புகள் மூலமாக உலகமயக் கொள்கைகளை அமல்படுத்த நிர்ப்பந்தித்தது. அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணிந்தே பழக்கப்பட்ட ஆளும்வர்க்கங்களும் இந்திய அரசும், உலகமயக் கொள்கைகளையும் கட்டமைப்புச் சீர்த்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொட§கியது.\nஇதன்படி அரசாங்கமானது உற்பத்தி வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளிலிருந்து வெளியேறிவிட வேண்டும். பொதுத்துறையில் உள்ள தொழில் நிறுவனங்கள், நிதித்துறை, வங்கி, ஆயுள்காப்பீடு போன்ற துறைகளை தனியாரிடம் (அந்நியரிடம்) ஒப்படைத்து விடவேண்டும். மேலும் அரசு தனது நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்காக கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதைத் கைவிட்டு அவற்றை தனியாரிடம் தாரை வார்த்துவிட வேண்டும். அதாவது இத்துறைகளை உள்நாட்டுப் பெருமுதலாளிகளிடமும் பன்னாட்டு முதலாளிகளிடமும் ஒப்படைத்துவிடவேண்டும்.\nமேற்கூறிய கொள்கைகளைத்தான் 91 ஆம் ஆண்டுகளிலிருந்து இந்திய அரசு தொய்வின்றி தொடர்ந்து அமல்படுத்திவருகிறது. இதன் விளைவாகவே அனைத்து துறைகளிலும் தனியார்மயம் வணிகமயம் ஆகியவை தலைவிரித்தாடுகின்றது. தொழில்,வர்த்தகம் மட்டுமல்லாது கல்வி, மருத்துவம் சுகாதாரம் போன்ற எல்லாத் துறைகளிலும் தனியார்மயம் வணிகமயம் கொடிகட்டிப் பறக்கிறது. அதாவது தனியார்மயம் என்ற பெயரில் அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கம் கோலோச்சுகிறது. இதன் விளைவே அந்நிய ஆங்கில மருத்துவம் (அலோபதி) ஆதிக்கம் செலுத்துவதும், தேசிய, பாரம்பரிய மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவை நசுக்கப்படுவதுமாகும். இந்தப் பொதுப் போக்கின்ட ஒரு பகுதியே பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரி தனியார் மயமாக்கப்படுவதும் வணிகமயமாக்கப்படுவதுமாகும்.\nமருத்துவத் துறையில் தனியார்மயம் வணிகமயம்\nமருத்துவத்துறையில் மருத்துவமனைகள் அமைப்பது, மருந்து உற்பத்தியில் ஈடுபடுவதும், மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதும் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் ஏகாதிபத்தியங்களின் ஆணைகளுக்கிணங்க இந்திய அரச பன்னாட்டு உள்நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு திறந்துவிட்டு வருகிறது. காச நோய், தொழுநோய், குடும்பக்கட்டுப்பாடு ஆகியவற்றை தவிர்த்து மற்ற அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. மேற்கூறியவை கூட தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.\nமருத்துவத் துறையில் அந்நியக் கம்பெனிகள் தலையிடுவதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பு 51 சதவீத்திலிருந்து 2000 த்தில் 71 சதவீதமாகவும், 2002-ல் 100 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு முதலீட்டுக்கான வரம்புகள் முமுமையாக நீக்கப்பட்டுவிட்டன. கடந்த 2002-ல் பாஜக ஆட்சியின்போது “தேசிய நலக் கொள்கை” என்ற பேரிலும் தற்போதைய மன்மோக��் கும்பலின் ஆட்சியில் “அரசு தனியார் பங்கேற்பு” எனும் பேரிலும் மருத்துவத்துறையில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.\nதனியார் மற்றும் பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவமனைகள் அமைப்பதற்கு, நகர்ப்புறங்களின் பிரதானப் பகுதியில் மிகக் குறைந்த விலையில் அரசாங்கம் நிலம் வழங்குகிறது. (ஒரு ஏக்கர் ஒரு ரூபாய்க்கு) பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகள் உயர்தொழில்நுட்பக் கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் கான்ட்ராக்ட் முறைகள் மூலமும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பேரிலும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளிலும்கூட உபயோகிப்பாளர் கட்டணம் எனும் பேரில் அரசாங்க கஜானாவை நிரப்புவதற்கு மக்களின் கோவணத்தையும் பிடுங்குகின்றனர். இன்று மருத்துவத்துறை 85 சதவீதம் தனியார் மயம் ஆக்கப்பட்டிருப்பது உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான். இவ்வாறு மருத்துவத்துறை தனியார் மயம், வணிக மயமாக்கப்படுவது ஏழை எளிய மக்கள் மருத்துவ உதவியின்றி நோயினால் மடிவதற்கும், மருத்துவ ஆராய்ச்சித் துறையில் ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்திற்கும், உள்நாட்டு மருத்துவம் அழிவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.\nமருந்து உற்பத்தியில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இருந்த தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பை நீக்கியது மட்டுமல்லாது, உலக வர்த்தக சபையின் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. அரசின் அனுமதியின்றியே பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் தொழில் தொடங்க முடியும். 1970 ஆம் ஆண்டின் இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்படி மருந்து உற்பத்தி செய்முறைகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கப்பட்டுவருகிறது. மேலும் மருந்து விலைக்கட்டுப்பாட்டு ஆணையத்தையும் முழுமையாக மூடிவிட்டது. எனவே மருந்து உற்பத்திலும் ஆராய்ச்சியிலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தைக் கொண்டு வருகின்றன.\nஇன்று உலகளவில் மருந்து உற்பத்தியில் அமெரிக்கா,ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் 80 சதவீதத்திற்குமேல் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவைகளின் ஆராய்ச்சி மேற்கத்திய நாடுகள�� மையமாகக் கொண்டே உள்ளன. மூன்றாம் உலக நாடுகள் மீது அவர்களின் மருந்துகள் திணிக்கப்படுகின்றன. உள்நாட்டு மருந்துக் கம்பெனிகள் பன்னாட்டுக் கம்பெனிகளால் விழங்கப்படுகின்றன. உயிர்காக்கும் மருந்துகளின் விலை பன்மடங்கு உயர்த்திவிற்கப்பட்டு பல்லாயிரம்கோடி ரூபாய்களை பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன. மருந்து ஏகபோகத்தின் மூலம் மருத்துவத்துறை முழுவதையும் நமது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிடுகின்றன. எனவே ஏழை எளிய மக்களின் உயர்வாழும் உரிமை பறிக்கப்படுவதுடன் உள்நாட்டு ஆங்கில மருத்துவத்தையும் கட்டுப்படுத்தி, பாரம்பரிய மருத்துவமும் புறக்கணிக்கப்பட்டு படிப்படியாக அழிக்கப்படும்.\nஉயர்கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு, கல்வியை சர்வதேசத்தரத்திற்கு உயர்த்துகிறோம் எனும் பேரில் பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களுக்குத் திறந்துவிடுகிறது. மருத்துவக் கல்வி உள்ளிட்டு அனைத்து உயர் கல்வியிலும் பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் கடைபரப்புகின்றன. இன்று அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் செயல்படும் 169 கல்வி நிறுவனங்களில் 104 நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகும். இவைகள் அரசாங்கத்தின் சட்ட விதிகளை மதிப்பதே கிடையாது. கல்விக் கட்டணங்களை உயர்த்துவதும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவர்களைச் சேர்ப்பது, ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம், மாணவர்களிடம் அதிகக் கட்டணம் என மாணவர்களை[யம் பெற்றோர்களையும் கொள்ளையடிக்கின்றன. இதுபோன்ற கல்வி நிறுவனங்களின் நோக்கம் கல்விச்சேவை வழங்குவது அல்ல. மாறாக பட்டங்களை விற்கும் கல்விக்கடை நடத்துவதே*\nஇவ்வாறு உயர் கல்வியில் குறிப்பாக மருத்துவக்கல்வியில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது நாட்டின் சுதந்திரமான ஆராய்ச்சிக் கல்வியை அழித்துவிடும். ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் அடிமைத்தனத்தைக் கற்றுக் கொடுக்கும். சுயத்தை இழந்து காயடித்த காளைகளாக மாணவர்கள் மாற்றப்படுவர். மருத்துவத் துறையில் சித்தா உள்ளிட்ட உள்நாட்டு மருத்துவம் படிப்படியாக பன்னாட்டு கம்பெனிகளால் அழிக்கப்படும்.\nமத்தியில் ஆளும் மன்மோகன் கும்பலின் ஆட்சி நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதும், அரசாங்க நிதித் துறைகள் உற்பத்தி ��ுறைகள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஏலம் போட்டு தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது.\nஅண்மையில் நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா பேசும்பொழுது “அரசுடைமையாக்கும் காலம் மலையேறிவிட்டது. இது தாராளயுகம். இக்காலக்கட்டத்தில் பின்நோக்கு செல்ல முடியாது” என்று கூறி மன்மோகன் கும்பலின் கயமைத்தனத்தை பரைசாற்றிவிட்டார். இன்று தனியார் மயம் சந்தைமயத்தின் தலைமையாகத் திகழ்ந்த அமெரிக்க ஏகாதிபத்திய நாட்டிலேயே தனியார் நிறுவனங்கள் சரிந்து விழுந்து மீளமுடியாது தவிக்கும் பொழுது, அரசு தலையிட்டு லட்சக்கணக்காக கோடி டாலர்கள் நட்ட ஈடு கொடுத்து காப்பாற்ற வேண்டியுள்ளது. தனியார்மய முழக்கம் ஓழிந்து அங்கே தேசியமய முழக்கம் வெடித்து கிளம்புகிறது. இந்தச் சூழ்நிலையில் மன்மோகன் கும்பல் தனியார்மயம் எனும் பேரில் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு நாட்டைதிறந்துவிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பா.ஜ.க. மற்றம் இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் எதிர்ப்பதுபோல் நாடகமாடுகின்றன. உண்மையில் நாடாளுமன்றவாதக் கட்சிகள் அனைத்தும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் தேசத் துரோக கட்சிகள் தான். அவைகள் நயவஞ்சகமாக மக்களை ஏமாற்றுகின்றன.\nமத்திய மாநில அரசுகள் நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலனியாக மாற்றுவதை எதிர்த்தும், உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்ளைகள் மூலம் நாட்டின் மருத்துவம், கல்வி, சுகாதாரம் போன்ற சேவைதுறைகளை தனியார்மயம்., வணிகமயம் ஆக்குவதை எதிர்த்து பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளை அரசுடைமையாக்க வேண்டும். இதன் மூலம் மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தை தகர்த்தெறிய வேண்டும். மேலும் ஆங்கில மருத்துவம் தான் சிறந்தது. அனைத்து நோய்களுக்கும் தீர்வு காண்பது என்று சொல்வதும் உண்மையல்ல. எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, தோல் நோய்கள் போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவம் தலைசிறந்த மருத்துவமாகத் திகழ்கிறது.\nஎனவே இன்று நாட்டு மக்களுக்குத் தேவை ஆங்கில மருத்துவம் மற்றும் உள்நாட்டு மருத்துவமுறைகளை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்கி வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கு ஏகாதிபத��திய ஆதிக்கத்தை வீழ்த்தி நாட்டில் ஒரு உண்மையான சுதந்திர ஆட்சியை மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதன் மூலம் மட்டுமே இதை நம்மால் சாதிக்க முடியும்.\nசமுக நலத்திட்டங்களும் தனியார் மயம்\nஇந்திய அரசு நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மக்கள்; மீது வரிச்சுமைகளைச் சமத்துவதோடு, சமூக நலத் துறைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றதுறைகளைத் தனியார் மயமாக்குவது மற்றும் வணிக மயமாக்குவதன் மூலம் மக்கள் மீது நெருக்கடிகளின் சுமைகளைத் திணிக்கிறது.\nமருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைகளிலும் தனியார் மயம் மிகப்பெரும் கேடுகளை உருவாக்கிவருகின்றன. மத்திய அரசாங்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைத்து மக்களிடமே கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டு வருகிறது. கொள்ளை நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பதையும் கூட தனியாரிடம் தாரைவார்த்து விட்டது. நோய்த்தடுப்பு மருந்துகளே குழந்தைகளின் உயிரை பலிவாங்குகின்றன. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மருத்துவமனைகளோ, மருத்துவர்களோ கிடையாது. இப்பட்ஜெட்டில் கிராமப்புறங்களில், சிறு நகரங்களில் மருத்துவமனை கட்டுவதற்குத் தனியாருக்கு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளனர். மேலும் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத் என்ற ஒரு மோசடித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அறிவுசார் சொத்துவரிமையை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்துவிட்டு மருந்துப் பொருட்களின் விலையைப் பன்மடங்கு உயர்வதற்கு இந்திய அரசு வழிவகுத்துவிட்டது. இவ்வாறு அரசாங்கம் மருத்துவத்துறையிலும் தனியாரை அனுமதித்து மக்களின் உயிர்வாழும் உரிமையையும் பறித்து வருகிறது.\nசுகாதாரத்துறையிலும் இதே நிலைமைகள் தான். குடிநீர் வழங்குவது, நகரைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்தும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைத்து வருகிறது. ஆறுகள், குளங்கள் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, குடிநீரும் கூட விலையாக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிறுவனங்களில் வேலை செய்யும் சுகாதாரத் தொழிலாளர்களின் நிரந்தர வேலையும் கூட பறிக்கப்பட்டு ஒப்பந்தமுறை புகுத்தப்படுகிறது.\nவீட்டுக்கொரு கழிப்பறைத் திட்டம் செயல்படுத்தப்படவேயில்லை. மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் கொடுமைகள் தொடர்கின்றன.\nஇவ்வாண்���ு நிதிநிலை அறிக்கையில் சமுகநலத் துறைகளுக்கு ரூ. 17,000 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறுகிறது. கல்விக்கு 5 சதவீதம், சுகாதாரத்திற்கு 3 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்றக் கோரிக்கைகளுக்குப் பதிலாக அதில் பாதி அளவே ஒதுக்கியுள்ளது. மேலும் தற்போது நாட்டின் பணவீக்கத்தையும் கணக்கிலெடுத்தால் உண்மையில் ரூ.17,000 கோடி ரூபாயைவிடக் குறைவாகத்தான் இத்துறைகளுக்குக் கிடைக்கும்.\nஎனவே கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளைத் தனியார் மயமாக்கிவட்டு, அதிக நிதி ஒதுக்கீடு என்று கூறுவது, மன்மோகன் கும்பல் மக்களுக்கு செய்யும் ஒரு மாபெரும் மோசடியேயாகும். சமூக நலத்துறைகள் அனைத்தையும் அரசாங்கமே ஏற்று, வணிகமயம் ஒழிக்கப்படுவது ஒன்றுதான் உண்மையான சமூக நீதியாகும\n2005ஆம் ஆண்டு புதிய காப்புரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் எய்ட்ஸ் முதல், காசநோய், மலேரியா, நீரிழிவு உள்ளிட்ட எல்லா நோய்களுக்கான மருந்துகளும் எட்டாக்கனியாகிவிடும். அது இந்திய மக்களை மட்டுமின்றி மலிவான இந்திய மருந்துகளை சார்ந்து உயிர்வாழும் ஏழை நாட்டு மக்களையும் மரணத்திற்கு தள்ளிவிடும்.\nஏன்னென்றால் இந்தியாவில் மொத்த மருத்து உற்பத்பத்தியின் கணிசமான பகுதி ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. முக்கியமாக யூனிசெப். ஐ.நா. மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் மூலம் 87 ஏழை நாடுகளில் விநியோகிக்கப்படுகின்றன.\nஉலகம் முழுவதும் நுகரப்படும் எய்ட்ஸ் நோய்க்கான மருத்துகளில் 80ு சதவீதமும், எச்.ஐ.வி. கிருமியுடனேயே பிறக்கும் குழந்தைகளுக்கான மருந்தில் 92 சதவீதமும் இந்தியாவிலிருந்து தான் அனுப்பபடுகின்றன. பல்வேறு நோய்களுக்கான மூல மருந்துகளை (ழுநநேசiஉ னுசரபள) இந்திய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு தருவதால்தான் உலகின் மருந்து தொழிற்சாலை , ஏழை நாடுகளின் மருந்துக்கடை என்ற நற்பெயர்களை இந்தியா ஈட்டியிருக்கிறது. இதையெல்லாம் நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nதமிழகத்தை ஆளும் ஜெயலலிதா ஆட்சி புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்வதிலும், சமூக நலத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் தனியார்மயக் வணிகமயம் ஆக்குவதில் கடந்த திமுக ஆட்சி போட்ட வழிதடத்திலேயே பயணம் செய்கிறார். மருத்துவதுறையில் அரசு தனியார் பங்கேற்பு ஊக்குவிக்கப்பட��ம் என்று கூறுகிறார். இதன் நோக்கம் படிப்படியாக பொது (அரசு) மருத்துவமனைகளுக்கு மூடுவிழா நடத்தி தனியார் மருத்துவமனைகளுக்க சேவை செய்வதும் மருத்துவ துறையை வணிகமயமாக்குவதுதான். இவ்வாறு மருத்துவம் தனியார் மயமாக்கப்படுவது பாரம்பரிய சித்தா போன்ற மருத்துவத்திற்கு வேட்டுவைக்கும் திட்டம்தான்.\nதமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தை சுகாதார துறையில் முன்னோடி மாநிலமாக மாற்றுவோம் என்றும், சுகாதார துறையில் காலிப்பணியிடங்களை இல்லாத நிலை உருவாக்குவோம் என்று கடந்த சட்டமன்ற கூட்டதொடரின்போது அறிவித்தார் வரவேற்க கூடியதுதான்* அதே நேரத்தில் தமிழக முதல்வர் மத்திய அரசின் திட்டமான அரசு-தனியார் பங்கேற்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தகூடாது. தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் வழங்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசின் அடிப்படை சலுகைகளான வருங்கால வைப்புநிதி, மருத்துவ காப்பீடு போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்தியாவில் 31 சதவீத மாணவர்கள் எய்ட்ஸ் நோய் பற்றியும் அதனை தற்காத்து கொள்வதும் தொடர்பான அனைத்து விதமான தகவல்களையும் அறிந்தவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் அதே சதவீத ஆசிரியர்களை எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டியுள்ளது. ஐ.நா. ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (யு என் எப்பிஏ) நடத்திய ஆய்வின் படி பருவக்கல்வி திட்டத்தில் (ஏஇபி) 31 சதவீத மாணவர்கள் ஏஇபி திட்டத்தில் இல்லாத 20 சதவீத மாணவர்களும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பற்றி முழுமையாக தெரிவித்துள்ளனர். அவர்கள் எச்.ஐ.வி. எந்தவித வழிகளில் பரவுகிறது என்பதை அடையாளம் காண்பவர்களாக இருந்தனர்.\nஅதே நேரத்தில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எச்.ஐ.வி. வைரஸ் பரவும் நிலை மற்றும் கர்ப்பம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து போதிய விழிப்புணர்வு திறன் பெறவில்லை. இவ்விசயம் தொடர்பாக அவர்கள் மேலும் விழிப்புணர்வுத் தகவல்களை அறிந்தும் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என நிபுணர்கள் சுட���டிக் காட்டினர். எச்.ஐ.வி. மற்றம் கர்பத்தை தவிர்ப்பது தொடர்பான முறைகளை மாணவர்கள் மிகக் குறைந்த அளவே அறிந்திருந்தனர்.\nதாமாக முன்வந்து எச்.ஐ.வி சோதனை நடைமுறை ரகசியம் காக்கும் உரிமை மற்றும் அது தொடர்பான விசயங்கள் குறித்து மாணவர்களை அதிக அளவில் அறிந்து கொள்ள வேண்டியது என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீடுகளில் மனைவிகளை அடிக்கப்படுவதை குறிப்பிட்ட சதவீத ஆசிரியர்கள் நியாயப்படுத்தினர். குறிப்பிட்ட சூழலில் மனைவிகள் அடிக்கப்படுவது நியாயப்படுத்தப்படும் என 40 சதவீத மாணவர்கள் தெரிவித்தனர்.\nஏஇபி கல்வித் திட்டத்தில் உள்ள 14-18 வயதுக்கு உட்பட்ட பருவ மாணவர்களை மற்றும் மாணவிகள் 19,666 பேரிடமும் ஏஇபி அல்லாத 2301 பேரிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 5 மாநிலங்களில் 200 பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்டு அறிக்கை முடிவு வெளியிடப்பட்டுள்ளது.\nஎனவே எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவுவது என்பது தனி நபர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல; இது சமூக பொருளாதார காலச்சார அரசியல் பிரச்சனையாகும். எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயை பரவுவதை கட்டுப்படுத்த வேண்டுமானால் வளரும் இளம் பருவத்தினருக்கு பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். பாரதி கூறியதை போல் ‘கற்பு’ என்று வரும்போது அதை ஆண், பெண் இருவருக்கும் பொதுவில் வைக்க வேண்டும். நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கலச்சாரத்தை ஒழிக்க வேண்டும். திருமண வயது வந்த ஆண், பெண் இருவருக்கும் தாங்களின் வாழ்க்கை துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையை கொடுக்க வேண்டும். மணவிலங்கு உரிமை பெண்களுக்கு குறிப்பாக விதவைகளுக்கு, மறுமணம் செய்துகொள்ளும் உரிமை பெண்கள் கல்வி கற்கும் உரிமை, ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு புதிய ஜனநாயக பண்பாட்டை உருவாக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய சீரழிவு பண்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மட்டுமல்ல சமூகத்தில் மற்ற எல்லா சீர்கேடுகளும் ஒழிந்து போகும். அதற்கு புரட்சிக்கர ஜனநாயக சகதிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.\n- ம.சேரலாதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://singaimurasu.blogspot.com/2007_05_06_archive.html", "date_download": "2018-07-19T11:23:41Z", "digest": "sha1:GTAN7KKNOVF26L5PTS5TEBUF7JAXISZM", "length": 4805, "nlines": 81, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு: 2007-05-06", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\nசுப்பிரமணியன் ரமேஷின் \"சித்திரம் கரையும் வெளி\" கவிதைத்தொகுப்பும்\nஎம். கே.குமாரின் \"மருதம்\" சிறுகதைத்தொகுப்பும் வருகிற 19, சனிக்கிழமையன்று மாலை ஐந்து மணியளவில் பீஷான் நூலகத்தில் வெளியீடு காண்கின்றன.\nசிங்கப்பூரின் மூத்த படைப்பாளரும் சிறந்த இலக்கிய விமர்சகருமான திரு. இராம கண்ணபிரான் அவர்களும், பல்வேறு திறனாய்வுகள் படைத்த முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்களும், கவிஞர் திரு. ரெ.செல்வம் அவர்களும் எழுத்தாளர்/கட்டுரையாளர்/வழக்கறிஞர் திருமதி. ரம்யா நாகேஸ்வரன் அவர்களும் இப்புத்தகங்களை அறிமுகப்படுத்தி தங்களது வாசகப்பார்வையை பகிர்ந்துகொள்ள விழைந்துள்ளனர்.\nநண்பர்களைனைவரும் தங்களது குடும்பத்துடன் இந்நிகழ்வில் பங்குகொள்ள வேண்டுகிறோம்.\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nஎழுத்தாளர் பிரபஞ்சன் சிங்கப்பூர் வருகிறார்\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nஎளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்\nநூல் வெளியீடு - அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/apr/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2901824.html", "date_download": "2018-07-19T11:59:30Z", "digest": "sha1:SSDFDFAJNFAZ3WVYMGBGVPPVY32ARKLW", "length": 8318, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இலுப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம்: பொதுமக்கள் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஇலுப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம்: பொதுமக்கள் கோரிக்கை\nநாகை மாவட்டம், பொறையாறு சங்கரன்பந்தல் இலுப்பூர் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வ���டுத்துள்ளனர்.\nதரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூரில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. திருவிளையாட்டம், மேமாத்தூர், நல்லாடை, வேலம்புதுக்குடி, திருவிடைக்கழி, பெரம்பூர், ஆயப்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிப் பகுதிகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைப் பெற்று செல்கின்றன்ர்.\nஇங்கு 3 மருத்துவர்களும், 4 செவிலியர்களும் பணியில் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் முற்றிலும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு மேற்கூரைக் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்துள்ளன. இதனால், அசம்பாவித சம்பங்களை தவிர்க்கும் வகையில், இக்கட்டடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளுக்கு அருகில் உள்ள சித்த மருத்துவ கட்டடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயினும், இந்தக் கட்டிடத்தில் போதுமான அளவு இடவசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.\nஇதனால், மயிலாடுதுறை, காரைக்கால் அல்லது தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஎனவே உடனடியாக பழுதடைந்தக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/specials/world-tamils/2017/jun/12/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2719193.html", "date_download": "2018-07-19T12:00:34Z", "digest": "sha1:BIDBSAY5INTDTMFGMG5BQON7XXF2SUWG", "length": 17574, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "நியூஜெர்சியில் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர்\nநியூஜெர்சியில் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா\nநியூஜெர்சி மாநிலம், எடிசன் நகரிலுள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஏழாம் ஆண்டு விழா, ஞாயிறு, மே 14 அன்று, எடிசன் ஜே.பி. ஸ்டீபன்ஸ் உயர்நிலைப்பள்ளிக் கலையரங்கில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.\nகாலை 10 மணிக்குத் தொடங்கி, எட்டு மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் சுமார் நானூறு மாணவர்கள் பங்குகொண்டு, இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்க, இவ்விழா தமிழ்ப்பள்ளியைக் கொண்டாடும் விழாவாக மட்டுமல்லாமல், தமிழ் மொழி, தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாட்டைக் கொண்டாடும் விழாவாகவும் அமைந்தது.\nமற்று உடலினால் பலராய் காண்பார், \"\nஎன பாரதிதாசன் கூறியதை நினைவூட்டுகின்ற வகையில், விழாவிற்கு பெருந்திரளாக மக்கள் வந்திருந்தனர். மலர் மாலைகள், தமிழ் ஆளுமைகளின் ஓவியங்கள் என மேடை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nபள்ளிக்குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்தை மேடையில் பாட, அதைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய கீதமும் இசைக்கப்பட, ஆண்டு விழா இனிதே துவங்கியது. தமிழ்ப்பள்ளி மூத்த ஆசிரியை ஆன்னி ஜெயராம் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர்கள், விசாலாட்சி நாகராஜன், ராஜேஷ் பன்னீர்செல்வம், சௌமியா பாலசுப்ரமணியன், பாலா தனசேகரன், யசோதா கிருஷ்ணராஜ், குரு ராகவேந்திரன், இந்திரா கண்ணன், மற்றும் ஆனந்த் தமிழரசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.\nமூன்று முதல் பதினாறு வயது வரையிலான சுமார் 425 குழந்தைகள் கவிதை ஒப்புவித்தல், பாடுதல், நடனம் ஆடுதல், நாடகத்தில் நடித்தல் என ஐம்பதற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டனர். இவ்வருடம் நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் புதிய கிளையான பார்சிபனி நகரப் பள்ளி மாணவர்களும், விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.\nகவிதை ஒப்புவித்தல் நிகழ்ச்சிகளில், ஆத்திசூடி பாக்கள், திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை உடல் மொழி, முகபாவனைகளோடு மாணவர்கள் ஒப்புவித்தனர். ஆண்டு விழாவில், ஏராளமான மழலையர், மொழிப்பற்று, திரைப்படப் பாடல்களை மாணவர்கள் இன்புற்றுப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.\nவிழா நெடுக, பல வகையான நடனங்களும் அரங்கேறின. குழந்தைப் பருவ பாடல்களுக்கும், கிராமிய மண்வாசனை வீசும் நாட்டுப்புறப் பாடல்களுக்கும், இந்திய தேசபக்தி பாடல்களுக்கும், இளைஞர் எழுச்சியை ஆதரித்த ஜல்லிக்கட்டு பாடல்களுக்கும், வாழ்வோடு பிணைந்துவிட்ட திரைப்பட பாடல்களுக்கும், பரத நாட்டியம், குத்து ஆட்டம், ஹிப் ஹாப், திரை நடனம், நவீன நடனம் என்று பல பாணிகளில் மாணவர்கள் நடனமாடினர். குறிப்பாக, பறையாட்டம், தீச்சட்டியாட்டம், கும்மியாட்டம், காவடியாட்டம் போன்ற தமிழர் மரபு நடனங்கள் காண்போரின் கவனத்தைக் கவர்ந்தது.\nஇருபத்தைந்திற்கும் மேற்பட்ட குறு நாடகங்களும் அரங்கேறின. பீர்பால், தெனாலிராமன் கதைகள், திருக்குறள், ஆத்திசூடி நீதிக்கதைகள், சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற வள்ளல் பாரி-புலவர் கபிலர் நட்புக்கதை, மக்கள் கவிஞர் இன்குலாப் இயற்றிய பல ஔவையார்கள் பற்றிய நாடகம், சுற்றுபுறச் சூழலைப் பேணும் கதைகள், இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகார கதைகள், அரசியல் சார்ந்த கதைகள், அறிவியல் புனைவுக் கதைகள் என பல விதமான நாடகங்களில் மாணவர்கள் நடித்தனர்.\nநியூஜெர்சி வாழ் தமிழ்க் குழந்தைகள், ஆங்கிலத்தை முதல் மொழியாக படிக்கின்ற போதும், தமிழில் அழகுற ஆடியதும், பாடியதும், பொருள் புரிந்து நாடகத்தில் நடித்ததும் கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.\n“அகரம் முதலாம் தமிழெனுந் தேன்\nஅடுத்த தலைமுறைக் கதுகொண்டு சேர்,”\nஎன்ற வாசகத்தையே குறிக்கோளாக கொண்டு, 2010-ஆம் ஆண்டில் லாப-நோக்கமற்ற அமைப்பாக நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, நியூஜெர்சியில் வாழும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை வெற்றிகரமாகப் பயிற்றுவித்து வருகிறது. தொடக்கத்தில் 65 மாணாக்கர்களையும் 12 தன்னார்வலர்களையும் கொண்டிருந்த இப்பள்ளி, தற்போது 65 தன்னார்வலர்களின் உதவியுடன் சுமார் 425 மாணவர்களுக்குத் தமிழ்ச் சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறது.\nதமிழ்ப்பள்ளி வெற்றிகரமாக இயங்கிட உறுதுணையாக நிற்கும் அனைத்து தன்னார்வலர்களின் தொடர் சேவையைப் பள்ளி முதல்வர் சாந்தி தங்கராஜ் போற்றினார். மேடையில் அவர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.\nஹார்வர்ட் தமிழ் மொழி அமர்வின் முக்கியத்துவத்தைப் பறைச்சாற்றும் நிகழ்ச்சியாகவும் இவ்விழா அமைந்தது. பிரபல வலைப்பதிவர் PK சிவக்குமார், பள்ளி தன்னார்வலர் சரவணக்குமார், முதல்வர் சாந்தி தங்கராஜ் ஆகியோர் பார்வையாளர்களை நன்கொடைகள் வழங்குமாறு கோரிக்கைவிடுத்தனர். தமிழ்ப்பள்ளியின் சந்தைப்படுத்தல் குழுவின் உதவியுடன், ஒரே நாளில் 7500 டாலர் நிதியும் (சுமார் 5 லட்சம் ரூபாய்) திரட்டப்பட்டது.\nமே 14 அன்னையர் தினத்தை முன்னிட்டு, முதல்வரின் வேண்டுகோளிற்கிணங்க பார்வையாளர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைத்து தாய்மார்களையும் பாட்டிமார்களையும் கரவொலியுடன் வாழ்த்தினர். அன்னையர் சிறப்பைப் போற்றும் மாணவர் குறுநாடகம் ஒன்றும் அரங்கேறியது.\nஇவ்வாண்டு விழா வெற்றிகரமாக நடைபெற, பல நிறுவனங்களும் நிதி தந்து உதவின. ஓட்டல் சரவணபவன் காலை/மாலை சிற்றுண்டியும், மதிய உணவும் மலிவு விலைக்குத் தந்து உதவியது.\nஆண்டு விழாவின் இறுதியில் அரங்கேறிய ஆசிரியர்கள் நடித்த “பண்ணையாரம்மாவும் பருந்துக் கூட்டமும்” என்ற அரசியல் நையாண்டி நாடகம் பார்வையாளர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியது.\nமுடிவில், தமிழ்ப்பள்ளியின் துணைமுதல்வர் லக்ஷ்மிகாந்தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உதவிய அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் நன்றி கூறினார். ஒலிப்பெருக்கியில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட, கூத்தும் கும்மாளமும் மகிழ்ச்சியுமாக நீடித்த பள்ளியின் ஏழாம் ஆண்டு விழா சிறப்பாக நிறைவுபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:316", "date_download": "2018-07-19T11:53:19Z", "digest": "sha1:MIYNUDVC2664MJJTJOCR2TQQULUWNUTM", "length": 15880, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:316 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,973] இதழ்கள் [10,245] பத்திரிகைகள் [35,082] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767]\nபகுப்பு��்கள் : எழுத்தாளர்கள் [3,161] பதிப்பாளர்கள் [2,503] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [55,766] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2017, 07:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/02", "date_download": "2018-07-19T11:37:10Z", "digest": "sha1:FKOWQWFSX5ET6LKOUHFPIH6Y7ZKRE7ZP", "length": 13395, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "February | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்க மரைன் படைப்பிரிவு பிரதி தளபதி சிறிலங்காவில் – உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு\nஅமெரிக்க கடற்படையின் பசுபிக் மரைன் படைப்பிரிவின் பிரதிக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரையன் கவனோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு Feb 28, 2017 | 16:10 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜெனிவா உரையில் காலஅவகாசம் கோராத சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தருமாறு பகிரங்க கோரிக்கையை விடுக்கவில்லை.\nவிரிவு Feb 28, 2017 | 15:11 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிரான்ஸ் செனட் உறுப்பினர்கள் சம்பந்தனை சந்திப்பு\nபிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nவிரிவு Feb 28, 2017 | 1:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெனிவாவில் இன்று காலஅவகாசம் கோருவார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று உரையாற்றவுள்ளார். இதன்போது, 2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ந��ைமுறைப்படுத்த மேலதிக காலஅவகாசத்தை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரிவு Feb 28, 2017 | 0:43 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் – கூட்டமைப்புக்குள் பிளவு\nஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்ததுவதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Feb 28, 2017 | 0:25 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n“இதயத்தில் இடம்பிடித்த நாடு சிறிலங்கா” – மங்களவிடம் மனம் திறந்த ஐ.நா பொதுச்செயலர்\nஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Feb 28, 2017 | 0:05 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்\nசிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப்பை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது.\nவிரிவு Feb 28, 2017 | 0:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபயிற்சியை முடித்து வெளியேறியது சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவு\nசிறிலங்கா கடற்படையின் முதலாவது மரைன் படைப்பிரிவு பற்றாலியன், பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா கடற்படையின் மரைன் படையணியின் அணிவகுப்பை பார்வையிட்டு, அவர்களுக்கான சின்னங்களை இன்று அணிவித்தார்.\nவிரிவு Feb 27, 2017 | 15:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபருடன் கூட்டமைப்பு சந்திப்பு – காணிகள் விடுவிப்பு குறித்து பேச்சு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.\nவிரிவு Feb 27, 2017 | 14:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா குறித்த தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இம்முறையும் அமெரிக்காவே ஏனைய இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து முன்வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, கொழும்பு ஆங்��ில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 27, 2017 | 4:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2014/03/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-19T11:30:40Z", "digest": "sha1:K7SDRMGDCHF4BRB5GZFOFYIPLVK23IUF", "length": 10939, "nlines": 109, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "முதல் குழந்தை -இரண்டாவது குழந்தை வித்தியாசம் – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nமுதல் குழந்தை -இரண்டாவது குழந்தை வித்தியாசம்\nஅந்தக்காலத்தில் நாங்கள் 5 வயதில்தான் பள்ளிக்கூடம் சேருவோம். அதுவரை வீட்டில் கொட்டம் அடித்துக்கொண்டு ஆடிபாடிக் கொண்டிருப்போம். திருமணங்கள், பண்டிகைகள் கொண்டாட உறவினர் வீடு, ���ோவில் குளம் என்று அம்மா எங்கு போனாலும் கூடவே போவோம். அ, ஆ கூட வீட்டில் சொல்லித் தரமாட்டார்கள். ஆங்கிலம் என்பது நாங்கள் அறியாத ஒன்று ஐந்தாம் வகுப்பில்தான் ஆங்கில எழுத்துக்கள் சொல்லித் தருவார்கள். நாள் முழுவதும் கொண்டாட்டம்தான். கவலையில்லாத காலம்.\n வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லையென்றால் எட்டு ஒன்பது மாதத்திலேயே டே கேர் மையத்தில் விட்டுவிடுகிறார்கள். அங்கும் அவை சந்தோஷமாக இருக்க முடியாது. அவர்களின் ஆளுகையில் அந்தக் குழந்தை தனது சுதந்திரத்தை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பிக்கிறது. அம்மா கொடுத்தனுப்பும் உணவு என்றாலும் அம்மாவின் பாசம் அரவணைப்பு கிடைக்காது.\nஇதெல்லாம் காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாம். காலம் மாறி வருகிறது. அதனால் இப்படி என்று காரணம் காட்டலாம். ஆனால் வீட்டிற்கு வந்த பின்பாவது அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும். அந்த வசதியை, சின்ன சுகத்தை குழந்தைகளுக்கு நாம் கொடுக்கலாம், இல்லையா\nமுதல் குழந்தை எப்போதும் சில வருடங்களுக்கு குழந்தையாக இருக்கும் – அதாவது அதற்கு தம்பி அல்லது தங்கை பிறக்கும்வரை. தம்பி தங்கை பிறந்துவிட்டால் அடுத்த நொடி அது அக்கா (அ) அண்ணா ஆகிவிடும். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் புதிதாகப் பிறந்த குழந்தையின் மேல் அக்கறை காட்டத் துவங்குவார்கள். முதல் குழந்தை தான் ஓரம் கட்டப்படுவதாக நினைக்க ஆரம்பிக்கும். இதனால் சில குழந்தைகள் உடல் இளைத்து காணப்படுவார்கள். இவர்களை செவலை குழந்தைகள் என்பார்கள்.\nஅக்கா அண்ணா இரண்டாவது குழந்தை பள்ளிக்கூடம் பொறாமை போட்டி முதல் குழந்தை\nPrevious Post தோல்வி நல்லது\nNext Post கூடப்பிறந்தவர்களுக்குள் போட்டி, பொறாமை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« பிப் ஏப் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nATM - இல் பணம் வரவில்லையா\nஎனது முத��் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://static.videozupload.net/page/5", "date_download": "2018-07-19T11:54:50Z", "digest": "sha1:IRAHVGOCOTD6MXV6M372BDVO7RESQ3NK", "length": 2968, "nlines": 68, "source_domain": "static.videozupload.net", "title": "VideozUpload", "raw_content": "\nசமுத்திரகனி – யின் மனைவி யார் தெரியுமா \nகேரளா பெண்களின் மார்பகம் அழகாக இருக்க இதுதான் காரணமாம் Tamil Cinema News TAMIL SCREEN\nகூட படுத்தால்தான் படத்துல வாய்ப்பு நடிகைகள் ஓபன் டாக் | Tamil Cinema News | Kollywood Tamil News\nதவறான நேரத்தில் கிளிக் ஆன படங்கள்..\nஅனுமோகன் மகன் யார் தெரியுமா \nபுற்று நோயால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகைகள் | Tamil Cinema News | Kollywood News | Tamil Rockers\nஉல்லாசமாக இருக்க 2 மணி நேரத்துக்கு 3 லட்சம் கேட்கும் நடிகை | Tamil Cinema News | Kollywood News\nஅந்த மாதிரியான வேடங்களில் நான் நடிக்க தயார் சிருஷ்டி டாங்கே அதிரடி அறிவிப்பு – Tamil Cinema News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/balloon-movie-press-meet-photos-16-12-17/", "date_download": "2018-07-19T11:45:03Z", "digest": "sha1:MWJX2E7M7G3HLZOOYB3B5VLGQTWDMXA7", "length": 2570, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Balloon Movie Press Meet Photos - 16.12.17 - Behind Frames", "raw_content": "\n1:24 PM 80 வயதான நாடக கலைஞனாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘ சீதக்காதி ..\n1:20 PM கல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சத்யராஜ் மகள்..\n80 வயதான நாடக கலைஞனாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘ சீதக்காதி ..\nகல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சத்யராஜ் மகள்..\nகடைக்குட்டி சிங்கத்துக்கு துணை குடியரசுத்தலைவர் வழங்கிய கௌரவம்..\nஇசக்கி பரத் படத்தை இயக்கும் கோலிசோடா இணை இயக்குனர்..\n80 வயதான நாடக கலைஞனாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘ சீதக்காதி ..\nகல்வி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த சத்யராஜ் மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:317", "date_download": "2018-07-19T11:52:02Z", "digest": "sha1:75KQ6CS5Y3I42LJA27PLKMK2HZ7XXQTK", "length": 16466, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:317 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,973] இதழ்கள் [10,245] பத்திரிகைகள் [35,082] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,161] பதிப்பாளர்கள் [2,503] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவ���யில்கள் : நூலகத் திட்டம் [55,766] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2017, 07:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/03", "date_download": "2018-07-19T11:36:46Z", "digest": "sha1:DVNYAYNWKGKVEZM5DOD5BGDNP3SUKYUW", "length": 14045, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம்\nசிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா மீதான கடன் சுமை அதிகரித்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைச் சமன்செய்து அதன் மூலம் தன் மீதான நிதி நெருக்கடியைக் குறைப்பதற்கு சிறிலங்கா முயற்சிக்கிறது.\nவிரிவு Mar 31, 2017 | 12:48 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nதிருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1.3 பில்லியன் ரூபாவை கொடையாக வழங்குகிறது ஜப்பான்\nதிருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1.3 பில்லியன் ரூபாவை கொடையாக வழங்க முன்வந்துள்ளது. திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஜப்பான் வழங்கவுள்ளது.\nவிரிவு Mar 31, 2017 | 12:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் முக்கிய பதவி\nஇறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொதுஉதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Mar 31, 2017 | 2:23 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவிரைவில் இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Mar 31, 2017 | 2:09 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகொழும்பு, காங��கேசன்துறை, திருமலை துறைமுகங்களில் இந்தியா முதலிடலாம் – அர்ஜூன ரணதுங்க\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில். சிறிலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Mar 31, 2017 | 2:01 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை காப்பாற்ற முனைந்த அரச சட்டவாளர்\nபோரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றத்துக்கு அழைப்பது தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.\nரஷ்யாவிடம் போர்க்கப்பல் கொள்வனவு சாத்தியமல்ல – சிறிலங்கா கடற்படை\nரஷ்யாவிடம் இருந்து ஜிபாட் 3.9 ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை சிறிலங்கா கடற்படை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா கடற்படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 31, 2017 | 0:40 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகீத் நொயார் கடத்தல் – 6 சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுதலை\n2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயாரைக் கடத்திச் சென்று தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nவிரிவு Mar 30, 2017 | 12:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஉண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச\nசிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.\nவிரிவு Mar 30, 2017 | 12:27 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுலிகளுக்கு எதிரான போரின் போது வேவு பார்த்தது இந்திய விமானம் – ஒப்புக்கொள்கிறது இந்தியா\nவிடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 30, 2017 | 2:24 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2014/02/21/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T11:05:05Z", "digest": "sha1:7WHYP6P3IYX6L6TOALPISKJRGGMU6MJY", "length": 10277, "nlines": 112, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "பூச்சி இனங்களின் கண்கள் – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nநோய்நாடி நோய்முதல் நாடி – 31\nநமக்குக் கண்கள் இருப்பதுபோலவே விலங்குகளுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண்கள் இருக்கின்றன. இவைகள் நம்மைப் போலவே பார்க்குமா நாம் கண்களை பயன்படுத்தும் வகையிலேயே இவைகளும் பயன்படுத்துமா\nபூனைக்கண் என்று சிலரை குறிப்பிடுகிறோம். உண்மையில் பூனையின் கண் அமைப்பு பற்றி யோசித்திருக்கிறோமா அத்தனை பெரிய யானைக்கு ஏன் இத்தனை சிறிய கண்கள் அத்தனை பெரிய யானைக்கு ஏன் இத்தனை சிறிய கண்கள் இப்படியெல்லாம் என்றைக்காவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா இப்படியெல்லாம் என்றைக்காவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா இதோ இந்தவாரம் இதுபற்றி பேசலாம், வாருங்கள்.\nமனிதர்களின் கண்களைவிட விலங்குகள், பூச்சிகளின் கண்கள் மிகவும் வித்தியாசமானவை. இரவிலும் அவைகளுக்கு கண்கள் தெரியவேண்டும் ஆகையால் பயன்பாடுகளும் அமைப்பும் வித்தியாசமானவைதான். பெரும்பாலான பூச்சி இனங்களுக்கு கூட்டுக் கண்கள் எனப்படும் compound eyes இருக்கின்றன. இவற்றைத் தவிர கூடுதலான கண்களும் இருக்கின்றன. இந்தக் கூடுதல் கண்கள் simple eyes (Ocelli) எனப்படுகின்றன. தேனீ, வண்ணத்துப்பூச்சி, வீட்டு ஈ, வெட்டுக்கிளி இவற்றிற்கு இரண்டு பெரிய கண்கள் இருப்பது போலத் தெரியும். ஆனால் இவை பல ஆயிரக்கணக்கான குட்டிகுட்டியான கண்கள் (ommatidia) அல்லது கண்களின் பகுதிகள்தான். இந்தக் கண்களின் எண்ணிக்கை பூச்சியின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.\nதொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைப்பைத் தொடரவும்\nகூட்டுக் கண்கள் பட்டுப்பூச்சி பூச்சி இனங்கள் பூனைக் கண்கள் யானைக் கண்கள்\nPrevious Post குழந்தைகள் பொய் சொல்லுவதில் பெற்றோரின் பங்கு\nNext Post கண்ணிலே நீரெதற்கு\nOne thought on “பூச்சி இனங்களின் கண்கள்”\n1:35 பிப இல் பிப்ரவரி 22, 2014\nகண்களைப்பற்றிய கண்ணான பதிவு பாராட்டுக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜன மார்ச் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://saratharecipe.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-07-19T11:27:08Z", "digest": "sha1:XVKBSUUNDIB52ILWX4FITWHB5ONC3J2X", "length": 8576, "nlines": 159, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: ஹெல்த் கேர் பத்திரிக்கையில் என்னுடைய கதம்ப பொரியல் ரெசிபி !", "raw_content": "\nஹெல்த் கேர் பத்திரிக்கையில் என்னுடைய கதம்ப பொரியல் ரெசிபி \nஏப்ரல் 2017 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய கதம்ப பொரியல் ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த ஆறு மாதங்களாக என்னுடைய ரெசிபிகள் ஹெல்த் கேர் பத்திரிக்கையில் வந்து கொண்டிருக்கிறது. கதம்ப பொரியல் ஆறாவது ரெசிபி ஆகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் April 19, 2017 at 8:42 PM\nவாழ்த்து சொன்ன அணைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றி.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -20 கொத்தமல்லி - 50 கிராம் மிளகு - 3 மேஜைக்கரண்டி சீரகம் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு க...\nஹெல்த் கேர் பத்திரிக்கையில் என்னுடைய கதம்ப பொரியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://static.videozupload.net/page/6", "date_download": "2018-07-19T11:54:47Z", "digest": "sha1:B2G5ZWTZ2HGUK4SJX2MOY6FVQBIQ4LUG", "length": 3027, "nlines": 69, "source_domain": "static.videozupload.net", "title": "VideozUpload", "raw_content": "\nகுடி போதையில் நடிகர் நடிகைகள் போடும் ஆட்டத்தை பாருங்கள் | Tamil Rockers | Tamil Cinema News\nகுண்டானதால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்ட நடிகர் நடிகைகள் | Tamil Cinema News | Tamil Rockers | news\nமகளிடம் தாய்பால் குடித்த தந்தை யார் தெரியுமா \nசெய்தி வாசிப்பாளர்களின் மனைவிகள் யார் தெரியுமா | Tamil Cinema News | Tamil Rockers | kollywood News\nஇதுதான் கரும்பு தின்னக் கூலி புது காதலருக்கு BMW கார் பரிசளித்த நயன்தாரா புது காதலருக்கு BMW கார் பரிசளித்த நயன்தாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2018-07-19T11:26:40Z", "digest": "sha1:FGXBSSRM3OUCJUA27YD5JTY76XGAACNS", "length": 6981, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலோகொஸ் நோர்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலோகொஸ் நோர்டே (Ilocos Norte) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், இலோகொஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள நான்கு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் லாவோஅக் ஆகும். இம்மாகாணத்தில் 557 கிராமங்களும், 21 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் இமீ மார்கோஸ் ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக இலோகொஸ் நோர்டே மாகாணத்தின் சனத்தொகை 593,081 ஆகும்.[2] இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,467.89 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 38ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 48ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் ஆகிய மூன்று பிரதான மொழிகளும் பேசப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் பட��ப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1934", "date_download": "2018-07-19T11:25:53Z", "digest": "sha1:AEU3AKHQDJZN5WGOABLPWYXYRWVFBL3S", "length": 5194, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1934\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1934 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1931 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1939 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1936 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1932 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1933 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1935 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1930 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1937 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1938 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/health/tips/2015/tricks-learn-from-super-sleepers-010045.html", "date_download": "2018-07-19T11:53:29Z", "digest": "sha1:JXHXK6F27F6Z6MZKLCTTRS7DTRWJIFFR", "length": 13892, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிலர் படுத்தவுடன் நன்கு உறங்கிவிடுவார்கள், அதற்கு இவையெல்லாம் தான் காரணம்! | Tricks To Learn From Super Sleepers- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிலர் படுத்தவுடன் நன்கு உறங்கிவிடுவார்கள், அதற்கு இவையெல்லாம் தான் காரணம்\nசிலர் படுத்தவுடன் நன்கு உறங்கிவிடுவார்கள், அதற்கு இவையெல்லாம் தான் காரணம்\nஉலகிலேயே எவன் மிகவும் நிம்மதியாக இருக்கிறான் என்பதை அவன் உறங்குவதை வைத்தே சொல்லிவிட முடியும். உறக்கமற்றவன் என்றும் நிம்மதியாக இருந்ததில்லை. தொழில்நுட்ப ���ளர்ச்சி, உயர்பதவி என சில காரணங்கள் கூறி, அதனால் தான் சரியாக உறங்குவதில்லை என சிலர் குற்றம் கூறலாம். ஆனால், நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள் தான் நமது உறக்கத்தை கெடுக்கிறது.\nபொறந்த மேனியா தூங்குறதுனால என்னென்ன நன்மையெல்லாம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nநம்மை போலவே வேலை செய்யும் சிலர் நன்கு உறங்குவார்கள், படுத்ததும் சில நிமிடங்களில் உறங்கிவிடுவார்கள். நமக்கு மட்டுமின்றி அவர்களுக்கு மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது என்ற கேள்வி பலருக்கு எழலாம். அதற்கு நீங்கள் சிலவற்றை அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதங்களது ஸ்மார்ட் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களை இரவு முன்கூட்டியே ஆப் செய்து வைத்துவிடுவார்கள். மேலும் இவர்கள் தங்கள் அறையில் உறங்கும் அரை மணிநேரத்திற்கு முன்பாகவே விளக்குகளையும் ஆப் செய்துவிடுகிறார்கள்.\nதினமும் சரியான (அ) ஒரே நேரத்தில் உறங்க செல்லும் பழக்கம் அவர்களுக்கு இருக்கிறது. இது தன்னைப்போல் அந்த நேரத்தில் தினமும் அவர்களுக்கு உறக்கம் வர காரணமாக இருக்கிறது.\nநல்ல உறக்கம் வேண்டும் எனில், உங்கள் படுக்கையறை வெப்பமாக இருக்க கூடாது. இது உடலை அசௌகரியமாக உணர செய்கிறது. எனவே, அறையை குளுமையான வைத்துக் கொள்ளுங்கள்.\nஇரவு மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கு சரியான தூக்கம் வராது. மேலும் காலை அசதியாக இருக்கும். நன்கு உறங்குபவர்கள் இரவில் அதிகம் குடிப்பதில்லை.\nநன்கு உறங்கும் பழக்கம் உடையவர்கள், இரவு கடினமான உணவை எடுத்துக் கொள்வதில்லை. செரிமானத்திற்கு இலகுவான உணவை தான் உட்கொள்கிறார்கள். இதுவும் அவர்கள் நன்கு உறங்குவதற்கு ஓர் முக்கிய காரணியாக இருக்கிறது.\nஇரவு நன்கு உறங்குபவர்கள், அவர்களது கவலைகளை படுக்கையறைக்கு எடுத்து செல்வதில்லை.\nமேலும் இரவு நன்கு உறங்குபவர்கள், அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதுவும், இரவு நல்ல உறக்கம் வர ஓர் முக்கிய காரணியாகும்.\nஇது தான் மிகவும் முக்கியமான காரணம். நன்கு உறங்கும் நபர்கள், தினமும் அவர்களது உடலுக்கு வேலை தருகின்றனர். வெறுமென, கணினி, டிவ���, மொபைல் முன்னே அமர்ந்து நாட்களை கழிப்பதில்லை. நமது வீட்டில் எவ்வளவு நேரம் கழித்து படுக்க போனாலும், உடனே உறங்குபவர் அம்மா தான். ஏனெனில், அவர் தான் பெரும்பாலும் நமது வீட்டில் அதிகம் உடலுக்கு வேலை கொடுத்து பணிபுரியும் நபர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதங்கும் விடுதிகளில் நடக்கும் அக்கிரமம் - பணியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nஇந்த 5 இடத்த தொட்டாலே போதும்... தூக்கம் சும்மா பிச்சிக்கிட்டு வருமாம்...\nபைசா செலவில்லாம உடனே வெள்ளையாகணுமா... அப்போ இங்கே ஓடி வாங்க...\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nபுரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமே வரலையா... இத செய்ங்க... நிம்மதியா தூங்குவீங்க...\nநைட் தூங்க முடியாம அவஸ்தைப்படுறீங்களா அப்ப இத நாக்குக்கு அடில வையுங்க..\nகுழந்தையை தூங்க வைக்க ரொம்ப சிரமப்படறீங்களா... இப்படி செய்ங்க... உடனே தூங்கிடும்...\nஆபிஸ்ல உக்காந்தாலே தூக்கம் தூக்கமா வருதா\nநைட் இந்த உணவுகளை சாப்பிடுங்க.. நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்...\nஇரவில் குழந்தைப் போல தூக்கத்தைப் பெற உதவும் அற்புத பானங்கள்\nஇரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தடுக்கும் சில விஷயங்கள்\nதூங்குறதுக்கு முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா\nஎந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது எனத் தெரியுமா\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nசுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/gossips/thala-gossip-043952.html", "date_download": "2018-07-19T12:00:22Z", "digest": "sha1:NDPK34BOJPZRNGCTNO5ZTAFX3NIF2E4C", "length": 9102, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிற மொழிகளிலும் கவனம் செலுத்தும் தல நடிகர்! | Thala Gossip - Tamil Filmibeat", "raw_content": "\n» பிற மொழிகளிலும் கவனம் செலுத்தும் தல நடிகர்\nபிற மொழிகளிலும் கவனம் செலுத்தும் தல நடிகர்\nதளபதி, சண்டக்கோழி, வெளிச்சம் என்று சில ஹீரோக்களுக்கு அக்கட தேசத்திலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. ஆனால் தல நடிகருக்கு அப்படி எதுவும் இல்லை.\nஇதனால் பெரிய புரடியூசர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு மொழிக்கு மட்டும் நம்பி அவ்வளவு பணம் போட யோ��ிக்கிறார்களாம்.\nஎனவே இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் படம் பிற மொழிகளிலும் ரிலீஸ் செய்து ஹிட்டாக்க முயற்சிக்கிறாராம். அதனால்தான் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளுக்கும் பொருந்துவது போல காஸ்டிங் அமைக்கப்பட்டுள்ளது.\nசம்பளத்தை குறைச்சாலும் இதுக்கு தீர்வு கிடைக்கும். அதை செய்வாரா தல\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஇந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\n பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://techguna.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-07-19T11:06:38Z", "digest": "sha1:LT7YV3RTBO3VCOEL7AEJILB22U3TJPDA", "length": 7573, "nlines": 86, "source_domain": "techguna.com", "title": "உங்கள் படத்தை கார்டூனாக மாற்ற ஒரு செயலி - Tech Guna.com", "raw_content": "\nHome » மொபைல் » உங்கள் படத்தை கார்டூனாக மாற்ற ஒரு செயலி\nஉங்கள் படத்தை கார்டூனாக மாற்ற ஒரு செயலி\nஎப்போதும் உங்க சாதாரண படத்தை பார்த்து சலித்து போயிடுச்சா. உங்கள் படங்களை அழகான கார்டூன் வடிவில் மாற்ற ஒரு மொபைல் செயலி இருக்கிறது.\nமொமென்ட் கேம் என்ற இந்த மொபைல் செயலி மூலம் உங்கள��� படத்தை நீங்கள் அழகான கார்டூன் வடிவ படமாக மாற்றலாம். பெண்கள் என்றால் பார்பி கேர்ள் போல கார்டூன் வடிவில் உங்களை தோன்ற செய்ய வேண்டுமோ அல்லது ஆணாக இருந்தால் பேட் மேன் போல கம்பிரமாக உங்களை தோன்ற செய்ய வேண்டுமோ, உங்கள் மனதுக்கு பிடித்த வகையில் எப்படி வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கார்டூனை உருவாக்கிக்கொள்ளலாம்.\nமொமென்ட் கேம் அப்ளிகேஷன் மூலம் உருவாக்கப்பட்ட கார்டூன்\nகாதுகள் நீளமாக வேண்டுமா, கண்கள் பெரிதாக தெரிய வேண்டுமா. உள்ளே கொடுக்கபட்டிருக்கும் வடிவமைப்புகளை நீங்கள் தெரிவு செய்வதின் மூலம் உங்கள் படங்களில் அழகிய தோற்றங்களை பெற முடியும். இதை நீங்கள் சமுக வலையில் பகிர நினைத்தாலும் , பகிர்ந்துகொள்ளலாம்.\nதரவிறக்கம் செய்ய : கூகிள் ப்ளே | ஆப்பிள் போன்\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nandroid அப்ளிக்கேஷன் மொபைல்\t2014-12-03\nTagged with: android அப்ளிக்கேஷன் மொபைல்\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nப்ளு டூத் மூலம் டயர்களை கண்காணிக்கலாம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா\nவிண்வெளியில் தயாராகும் முதல் ஆபாச படம்\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nப்ளு டூத் மூலம் டயர்களை கண்காணிக்கலாம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா\nவிண்வெளியில் தயாராகும் முதல் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aalosanai.blogspot.com/2013/01/thai-kruthigai-special-post-2112013.html", "date_download": "2018-07-19T11:53:27Z", "digest": "sha1:U4F6HVUUZNH4QXKDYWBBFNSGLR5ICCSO", "length": 29382, "nlines": 217, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: THAI KRUTHIGAI SPECIAL POST (21/1/2013).....அறுவர் வளர்த்த ஆரமுது.....(தை கிருத்திகை சிறப்புப் பதிவு)", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nஞாயிறு, 20 ஜனவரி, 2013\nTHAI KRUTHIGAI SPECIAL POST (21/1/2013).....அறுவர் வளர்த்த ஆரமுது.....(தை கிருத்திகை சிறப்புப் பதிவு)\nமுத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்\nமுப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்\nபட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்\nபட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே\nதிக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்\nசித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்\nகுத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை\nகுத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.\nதை மாதத்தில் வரும் விசேஷ தினங்களில் முக்கியமான ஒன்று தை கிருத்திகை. ஞானஸ்வரூபமான எம்பெருமான் முருகனின் திருஅவதாரம் நிகழ்ந்தபொழுது, முருகப்பெருமானைப் போற்றி வளர்த்த ரிஷி பத்தினிகள் அறுவரே கார்த்திகைப் பெண்கள். அவர்கள் அறுவரும், முருகனருளால் வானமண்டலத்தில், நட்சத்திரங்களாக அருளுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று, திருமுருகனை வழிபாடு செய்வோர், முருகனருளால், வேண்டியவை எல்லாம் கிடைக்கப்பெறுவது கண்கூடு.\nஇந்தப் பதிவில், திருமிகு கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணத்தில், கந்தப் பெருமானின் திருஅவதாரப்படலம் மற்றும் சரவணப்படலத்திலிருந்து சில செய்யுள்களை, அவற்றின் பொருளுடன் பார்க்கலாம்.\nகந்த புராணம், திருஅவதாரப் படலம்.\nவளஞ்செறி இனைய பாலால் வான்சர வணமாம் பொய்கைத்\nதளஞ்செறி பதும மொன்றில் சராசரம் யாவுங் காப்பான்\nஉளஞ்செறி கருணை யெய்தி ஒப்பிலாக் குமர மூர்த்தி\nஇளஞ்சிறு மதலை போல இனிதுவீற் றிருந்தான் மன்னோ.\nசரவணப்பொய்கையில் உள்ள மிகுந்த தளங்கள் (இதழ்கள்) உள்ள தாமரை மலர் ஒன்றில், இந்த உலகம் யாவையும் காக்கும் பரம்பொருளான முருகப்பெருமான், தமக்கு நிகரென்று எவருமில்லாத குமரமூர்த்தி, தம் உள்ளம் நிறைந்த கருணையால், சிறு குழந்தையாகி இனிது வீற்றிருந்தார்.\nதீர்த்திகைக் கங்ககை தன்னில் திகழ்சர வணத்தில் வந்த\nமூர்த்திகைக் குழவி யேபோல் முதற்புரி யாடல் நோக்கி\nஆர்த்தி யுறாத உள்ளத் தரிமு���ல் அமரர் யாருங்\nகார்த்திகைத் தெரிவை மாரை விளித்திவை கழற லுற்றார்.\nநீர் நிரம்பித் திகழும் சரவணப்பொய்கையில், குழந்தையாகத் தோன்றித் தன் முதல் திருவிளையாடலை நிகழ்த்தியருளிய(இதன் பின் பற்பல திருவிளையாடல்களை முருகப்பெருமான் நிகழ்த்தி அருளப்போகிறார் என்பதால் இதை முதற்புரியாடல் என்று குறிக்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள்) முருகப்பெருமானை கண்டதால் மகிழ்வுற்ற உள்ளத்துடன், திருமால் முதலான அமரர்கள் யாவரும், அவரை வளர்ப்பதற்காக, கார்த்திகைப் பெண்களை அழைத்தனர்.\nசாற்றருஞ் சரவ ணத்தில் சண்முகத் தொருவ னாகி\nவீற்றிருந் தருளு கின்ற விமலனோர் குழவி போலத்\nதோற்றினன் அவனுக் குங்கள் துணைமுலை அமுத மூட்டிப்\nபோற்றுதிர் நாளு மென்ன நன்றெனப் புகன்று வந்தார்.\nதிருமால் முதலான அமரர்கள் யாவரும், கார்த்திகைப் பெண்களை நோக்கி, 'சரவணப்பொய்கையில், ஆறுமுகத்துடன் உதித்தருளிய சண்முகப்பெருமானை, பாலூட்டி சீராட்டி வளர்த்து வருவீர்களாக'\nமறுவறும் ஆர லாகும் மாதர்மூ விருவர் தாமும்\nநிறைதரு சவர ணத்தின் நிமலனை அடைந்து போற்ற\nஉறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுகோன் ஆத லாலே\nஅறுமுக வொருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான்.\nகார்த்திகைப் பெண்கள் அறுவரும், சரவணப் பொய்கையை அடைந்து, சண்முகப்பெருமானை வேண்ட, அடியவர்களுக்கு வேண்டுவனவற்றை அருளும் முருகப்பெருமான் அவர்களுக்கு உதவும் பொருட்டு ஆறு சிறு குழந்தைகளாக உருக்கொண்டார்.\nஆறுரு வாத லோடும் அறுவரும் மகிழ்ந்து வேறு\nவேறுதா மெடுத்துத் தத்தம் வியத்தகு துணைமென் கொங்கை\nஊறுபா லமுதம் அன்னோற் குதவலும் முறுவல் செய்து\nமாறிலா அருளால் ஆற்ற வருந்தினன் போல வுண்டான்.\nஆறு கார்த்திகைப் பெண்களும் ஆறு சிறு குழந்தைகளாக உருக்கொண்ட ஆறுமுகப்பெருமானை ஆளுக்கொருவராக எடுத்து, வாரியணைத்து மகிழ்ந்து, பாலூட்டினர். முருகப்பெருமானும், தம் மாறாத அருட்திறனால், முறுவல் செய்து, பாலுக்காக வருந்தி அழும் குழந்தை போல், பாலருந்தினார்.\nஅழலெனும் மீன வர்க்கத் தறுவருங் குமரன் ஆடல்\nமுழுவது நோக்கி நோக்கி முதிருமற் புதநீ ரெய்திக்\nகுழவிக ளென்றே உள்ளங் கோடல்விட் டகலா தஞ்சி\nவழிபடு கடவு ளோரில் போற்றினர் மனங்கொள் அன்பால்.\nகார்த்திகைப் பெண்கள் அறுவரும், குமரப்பெருமான் குழந்தையாகப் புரிந்த திர���விளையாடல்களை, முழுவதும் பார்த்து பார்த்து, ஆனந்தித்து, அந்த அற்புதங்களில் திளைத்து, ஆறு உருக்கொண்ட பெருமானை குழந்தைகளென்று சீராட்டி வளர்த்தாராயினும், மனத்துள், பயபக்தியுடன் வழிபடத்தகுந்த பரம்பொருள் என்று உணர்ந்து அன்பால் போற்றினர்.\nசரவ ணந்தனில் தனதுசேய் ஆறுருத் தனையும்\nஇருக ரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்\nதிருமு கங்களோ ராறுபன் னிருபுயஞ் சேர்ந்த\nஉருவம் ஒன்றெனச் செய்தனள் உலகமீன் றுடையாள்.\nசரவணப் பொய்கையில், தனது குழந்தையான முருகப்பெருமானின் ஆறு உருவங்களையும், தம் இருகரங்களால் உமாதேவியார் அன்புடன் எடுத்து சேர்த்து அணைத்தார். அவ்வாறு செய்து, திருமுகங்கள் ஆறும் பன்னிரு தோள்களும் சேர்ந்த ஒரு உருவமாக, கந்தப்பெருமானாக, ஒருங்கு செய்தருளினார்.\nகந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள்\nமைந்தன்எனும் பெயராகுக மகிழ்வால்எவ ரேனும்\nநுந்தம்பக லிடைஇன்னவன் நோன்றாள்வழி படுவோர்\nதந்தங்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான்.\nசிவனாரும் உமாதேவியாரும் கார்த்திகைப் பெண்களை நோக்கி, 'கந்தனை நீங்கள் போற்றி வளர்த்த காரணத்தால், முருகப்பெருமானுக்கு, கார்த்திகேயன் என்னும் திருநாமம் ஏற்படும்' என்று மகிழ்ந்து அருளினர். மேலும், சிவனார் கார்த்திகைப் பெண்களுக்கு நட்சத்திரப் பதவி அளித்து, 'உங்கள் நட்சத்திரம் வரும் நன்னாளில், விரதமிருந்து, முருகப்பெருமானை வேண்டி வழிபடுவோருக்கு வேண்டும் வரமெல்லாம் வழங்கி முக்தியும் அருளுவோம்' என்று ஆசி கூறினார்.\nஇத்துணை சிறப்புமிக்க கார்த்திகை நட்சத்திர தினத்தில், முருகபக்தர்கள் யாவரும், முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுகின்றனர். கிருத்திகை நட்சத்திர தினங்களில் ஆடி கிருத்திகை, தை கிருத்திகை ஆகிய இரண்டும் சிறப்பு மிக்கவை. தக்ஷிணாயனத் துவக்கமான, ஆடி மாதத்தில் வருவதால், ஆடி கிருத்திகையும், உத்தராயணத் துவக்கமான தை மாதத்தில் வருவதால் தை கிருத்திகையும் சிறப்புப் பெறுகின்றன. ஒரு வருடத்தில், ஆடி கிருத்திகை துவங்கி, தை கிருத்திகை வரை மாதந்தோறும் கிருத்திகை விரதமிருந்து வழிபடுவோருக்கு தீராத் துயர் தீரும் என்பது நம்பிக்கை.\nஏகாதசி விரதம் இருக்கும் முறையிலேயே கார்த்திகை விரதமும் இருக்க வேண்டும். கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி நட்சத்திர தினத்தன்று ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும். பின், கார்த்திகை நட்சத்திர தினம் முழுவதும் உபவாசமிருந்து, மறு நாள் ரோகிணி நட்சத்திரத்தன்று அதிகாலையில் பாரணை செய்ய வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்ய இயலாதோர், கார்த்திகை நட்சத்திர தினத்தன்று, முழு உபவாசம் இருந்து, கந்தப்பெருமானின் துதிகளை பக்தியுடன் பாடி, பூஜை செய்து, மாலையில், திருக்கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு வந்து ஏதேனும் எளிய உணவு அருந்தலாம். உணவில் உப்பில்லாமல் இருப்பது சிறந்தது. அன்று முழுவதும் கோபப்படாமல், அதிகம் பேசாமல் உபவாசம் இருப்பது சிறந்தது.\nகிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானை வழிபட உதவும், ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய கராவலம்ப ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.\nவேல் முருகன் கோலோச்சும் திருத்தலங்கள் தோறும் தை கிருத்திகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தெப்பத் திருவிழாக்கள், தேர்ப்பவனிகள் முதலியன சிறப்புற நடத்தப்படுகின்றன. பக்தர் கூட்டம் கொண்டாடிப் போற்றும் சிங்கார வேலன், அருள்மழை பொழிந்து, நம் எல்லோரையும் வாழ்வித்து வழி நடத்த வேண்டுவோம்.\nகிருத்திகை விரதமிருந்து, எல்லாம் வல்ல கந்தப்பெருமானின் அருள் பெற்று,\nபடங்கள் நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 8:09\nஇராஜராஜேஸ்வரி 30 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:02\nதைமாத கிருத்திகை பற்றி சிறப்பான தகவல்களைப்பகிர்ந்திருக்கிறீர்கள்..\nதைமாத கிருத்திகை பற்றி சிறப்பான தகவல்களைப்பகிர்ந்திருக்கிறீர்கள்..\nதாங்கள் தரும் ஊக்கங்களுக்கு மிக்க நன்றி.\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் கா��்க\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nஅன்பர்களுக்கு வணக்கம். 'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், ந...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nஉயர் திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', யி ல் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு....\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nSRI DATTATREYA .....ஸ்ரீ தத்தாத்ரேயர்\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆக...\nருத்ராக்ஷம் என்றால் என்ன என்பதும் அதன் பயன்கள் குறித்தும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும் என்றாலும் கொஞ்சம் சுருக்கமாக, இந்தப் பதிவ...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\nஎண்ணறு வைபவ இந்த்ர விசேஷண புண்ணிய உத்தம பூரண பச்சிமக் கண்இல கும்சிவ கந்த கிருபாசன பண்ணவர் பூஜித பாத நமஸ்தே ஏரக நாயக என்குரு நா...\nPAPA HARA DASAMI(18/6/2013)...பாபஹர தசமி(பாவங்களை நீக்கும் தசமி).\nஇன்றைய தினம் (18/6/2013) 'பாபஹர தசமி'. ஒவ்வொரு வருடமும், ஆனி மாத சுக்ல பட்ச தசமி 'பாபஹர தசமி' என்று சிறப்பிக்கப்படுகிறத...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aanmeegam.co.in/tag/aanmeegam-tips/page/2/", "date_download": "2018-07-19T11:44:18Z", "digest": "sha1:WQ5K3LJAF6Y72ZQW6TERNR4LLS4FVWV5", "length": 11285, "nlines": 195, "source_domain": "aanmeegam.co.in", "title": "Aanmeegam Tips | Arthamulla Aanmeegam | Spirituality Tips", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 27/2/2018 மாசி (15), செவ்வாய் கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 26/2/2018 மாசி (14), திங்கள்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 24/02/2018 மாசி (12), சனிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 22/2/2018 மாசி (10) வியாழக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 21/2/2018 மாசி (9) புதன்கிழமை | Today...\nஇன்றைய ��ாசிபலன் 20/2/2018, மாசி (8) செவ்வாய் கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 19/2/2018, மாசி (7) திங்கள்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 18/2/2018 மாசி (6) ஞாயிற்றுக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 2/17/2018, மாசி 5, சனிக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 16/2/2018 மாசி (4) வெள்ளிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 15-02-2018, வியாழக்கிழமை | Today rasi...\nஇன்றைய ராசிபலன் 14/2/2018 மாசி (2) புதன்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 12/2/2018 தை (30) திங்கட்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 9/2/2018 தை (27) வெள்ளிக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 8/2/2018 தை (26) வியாழக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 5/2/2018 தை (23) திங்கட்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 4/2/2018 தை (22) ஞாயிற்றுக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 3/2/2018 தை (21) சனிக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 2/2/2018 தை (20) வெள்ளிக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 1/2/2018 தை (19) வியாழக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 31/1/2018 தை (18) செவ்வாய்க்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 30/1/2018 தை (17) செவ்வாய்க்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 29/1/2018 தை (16) திங்கட்கிழமை |Today...\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...\nஇன்றைய ராசிபலன் 28/1/2018 தை (15) ஞாயிற்றுக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 27.1.2018 தை (14) சனிக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 26/1/2018 தை (13) வெள்ளிக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 24/1/2018 தை (11) புதன்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 22/1/2018 தை (9) திங்கட்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 21/1/2018 தை (8) ஞாயிற்றுக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 20/1/2018 தை (7) சனிக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 19/1/2018 தை (6) வெள்ளிக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 18/1/2018 தை 5 வியாழக்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 17/1/2018 தை ( 4 ) புதன்கிழமை | Today...\nஇன்றைய ராசிபலன் 13/1/2018 மார்கழி (29) சனிக்கிழமை |...\nநல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள் | Best...\nஇன்றைய ராசிபலன் 12/1/2018 மார்கழி (28) வெள்ளிக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 11/1/2018 மார்கழி (27) வியாழக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 10/1/2018 மார்கழி (26) புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 8/1/2018 மார்கழி (24) திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 7/1/2018 மார்கழி (23) ஞாயிற்றுக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 5/1/2018 மார்கழி (21) வெள்ளிக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 4/1/2018 மார்கழி (20) வியாழக்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 3/1/2018 மார்கழி (19) புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 2/1/2018 மார்கழி (18) செவ்வாய்க்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 1/1/2018 மார்கழி (17) திங்கட்கிழமை...\nஇன்றைய ராசிபலன் 31/12/2017 மார்கழி (16)...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஇன்றைய ராசிபலன் 30/12/2017 மார்கழி (15) சனிக்கிழமை |...\nஇன்றைய ராச��பலன் 29/12/2017 மார்கழி (14) வெள்ளிக்கிழமை...\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nAadi koozh | ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ்...\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nபுரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்\nதிருநெல்வேலி: அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t49872-topic", "date_download": "2018-07-19T11:06:24Z", "digest": "sha1:ZRW2EINLWGMT7XSOWEOI3DY3VJZIPOY3", "length": 14816, "nlines": 174, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நீதான்…!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட���டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஅந்த வானம் இந்த பூமி\nஎல்லாமே நீதான் என் அன்பே\nஅது சரி – – –\nகன்னட மூலம் : பிரகாச ஹலகேரி\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: அருமையாக உள்ளது\nநண்பன் wrote: அருமையாக உள்ளது\n படத்தின் கீழ் இருக்கும் கவிதையா\nநண்பன் wrote: அருமையாக உள்ளது\n படத்தின் கீழ் இருக்கும் கவிதையா\nமுதலில் கவிதையை ரசித்தேன் பிறகும் கவிதையை ரசித்தேன் ஆகவே அனைத்தும் அருமையாக உள்ளது பாஸ்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--��லைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kamalalayan.blogspot.com/2012/03/", "date_download": "2018-07-19T11:06:35Z", "digest": "sha1:K6ZLJNAVGMHCM2SMCAULDNGHWCAAK2TV", "length": 5341, "nlines": 81, "source_domain": "kamalalayan.blogspot.com", "title": "என் சிந்தனைகள்: March 2012", "raw_content": "\nசூடாமணி ராகவனும் ராமகிருஷ்ண மடமும்..என்ற இந்தப் பதிவு மறைந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி பற்றியது.தமிழின் ஆகச் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான சூடாமணி,தனது மறைவிற்குப் பின்தான் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.அவரின் பங்கு மார்கெட் வருமானம் சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு மேல் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்,ராமகிருஷ்ண மட தர்ம ஆஸ்பத்திரி, வாலண்டரி ஹெழ்த் செர்விசெஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் நன்கொடையாகப் பெற்றுள்ளன.இது இப்போதைய நன்கொடை.ஏற்கெனவே ஒரு நாலரை கோடி சூடாமணியின் வீட்டை விற்று வந்த பணத்தில் இந்த மூன்று நிறுவனங்களும் பெற்றுள்ளன.அவரின் எழுத்துகளில் மனம் பரி கொடுத்தவர்கள் பலருள் நானும் ஒருவன்.ஒரே ஒரு முறை அவருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.புதிதாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டவர்களுக்காக அவருடைய சிறுகதை ஒன்றை சிறு நூலாக்க அனுமதி கேடு அவருடன் பேசினேன்.\"என்னோட கதைல அப்படி எதுவும் இதுக்குப் பொருத்தமா இருக்கிற மாதிரித் தெரியலை.ஆனா,உங்களுக்கு அப்படி எதானு கிடைச்சு பயன்ப ட்டா ரொம்ப சந்தோசம்.அவ்வளவுதானே\"இதுதான் அவரின் பதில்.அவரின் நாவல்\"இரவுச் சுடர்\",நாடகம் \"இருவர் கண்டனர்\"இன்னும் நூற்றுக் கணக்கான அவரின் மணி மணியான சிறு கதைகள் எல்லாம் இலக்கிய உலகம் கொண்டாடும் படைப்புகள் என்றால் நாம் மேலே கண்ட அவரின் நன்கொடைகள் இந்த சமூகம் கொண்டாட வேண்டிய பங்களிப்புகள்.எதனை நாம் பெரிதாகக் கருதுவது\"இதுதான் அவரின் பதில்.அவரின் நாவல்\"இரவுச் சுடர்\",நாடகம் \"இருவர் கண்டனர்\"இன்னும் நூற்றுக் கணக்கான அவரின் மணி மணியான சிறு கதைகள் எல்லாம் இலக்கிய உலகம் கொண்டாடும் படைப்புகள் என்றால் நாம் மேலே கண்ட அவரின் நன்கொடைகள் இந்த சமூகம் கொண்டாட வேண்டிய பங்களிப்புகள்.எதனை நாம் பெரிதாகக் கருதுவது\n'என்னை பற்றி'யின் கீழ் எனது விவரங்கள்..\nஎனது புத்தகங்களில் இருந்து.. (4)\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://msahameed.blogspot.com/2017/", "date_download": "2018-07-19T11:27:35Z", "digest": "sha1:QJGBPQZELENH4NEYUZXSNVSWUWCZ6PQF", "length": 64289, "nlines": 336, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: 2017", "raw_content": "\nமுஹம்மத் ஸாதிக் அலீ அவர்கள் எழுதிய ‘எளிய முறை கணிதம்’ - எனது அணிந்துரை\nஎன் அருமை நண்பர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்களின் கன்னி முயற்சி இது. அதுவும் புதிய முயற்சி. சமுதாயத்திற்குத் தேவையான அரிய முயற்சி.\nநூலாசிரியர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்கள் இது போன்று பல துறைகளில் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருப்பவர். நேர நிர்வாக நிபுணர்.\nதுபையில் ஒரு முறை இவர் நேர மேலாண்மை வகுப்பு எடுக்கும்பொழுதுதான் நான் முதன் முதலாக இவரைப் பார்த்தேன். அப்பொழுது எந்த அறிமுகமும் இல்லை. இருந்தும் நான் மின்னஞ்சலில் கேட்டவுடன் பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை உடனே அனுப்பி எனக்கு உதவினார்.\nநான் “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” நூல் எழுதும் முயற்சியில் இருந்த நேரம் அது. அவர் அனுப்பித் தந்தது எனக்கு மிக்க உதவியாக இருந்தது. பல புதிய பார்வைகளைத் தந்தது.\nநூலாசிரியர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்களைக் கண்டு பல முறை நான் வியந்திருக்கிறேன். தன் தொழிற்பணிப் பளுவுக்கு இடையில் நேரத்தை நன்கு நிர்வாகம் செய்து சமுதாயப் பணிகளைச் செய்வதோடு, சமுதாயத்திற்குப் பலனளிக்கும் வகையில் இம்மாதிரி புதிய முயற்சிகளை அவர்கள் செய்து கொண்டிருப்பது என்னை மாதிரி சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு உள்ளபடியே உத்வேகம் அளிக்கிறது.\nஎளியமுறை கணிதம் மூலம் மாணவச் செல்வங்களுக்கு மிக எளிதாக கணிதம் பயில ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்நூல். கணித வாய்ப்பாடு என்பது பல மாணவர்களுக்கு கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பாடுகளை எளிய முறையில் மனப்பாடம் செய்வதற்கு நிறைய உத்திகளைச் சொல்லும் இந்நூல் ஒர வரப்பிரசாதமாக அமையும் இன்ஷா அல்லாஹ்.\nநூலாசிரியரின் இந்நூல் பெரும் வெற்றி பெற்று, இதேபோன்று சமுதாயத்திற்குப் பலனளிக்கும் வகையில் பல நூல்களை அவர் எழுதிட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.\nகஃபூருக்கு திடீரென்று ஒரு செய்தி வருகின்றது:\n‘‘இன்னும் 24 மணி நேரத்தில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்\n மரணத்தை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே\nஇனி கஃபூருக்கு 24 மணி நேரம்தான் இருக்கிறது.\nஅவர் இந்த 24 மணி நேரத்தை எப்படி செலவழிப்பார் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.\nநகரத்தில் அலைந்து திரிந்து ‘ஜாலியாக ஷாப்பிங்’ செய்து கொண்டிருப்பாரா நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருப்பாரா நல்ல ஆடை அணிந்து கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக்கொண்டிருப்பாரா\nசப்த நாடியும் ஒடுங்கி நல்ல பிள்ளையாகி விடுவார். அதுவரை இருந்த அலட்டல்களெல்லாம் அடங்கிப் போய் விடும். ஒரே ஓர் எண்ணம்தான் அவருள் எங்கும் வியாபித்திருக்கும். அது – அல்லாஹ்\nஅவரது ஒவ்வொரு நொடியும் மதிப்பு மி���்கதாகிவிடும். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே இருக்கும்.\nஒரு நொடியைக் கூட அல்லாஹ்வின் ‘திக்ர்’ இல்லாமல் அவர் செலவழிக்கமாட்டார். ஒரு சிறு பாவத்தைக்கூட செய்யமாட்டார்.\nஇப்பொழுது நமது நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். அது கஃபூரை விட மோசமானது.\n கஃபூருக்காவது 24 மணி நேரம் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. நமக்குத் தெரியுமா நாம் எப்பொழுது மரணமடையப் போகிறோம் என்று யாருக்காவது தெரியுமா நாம் எப்பொழுது மரணமடையப் போகிறோம் என்று யாருக்காவது தெரியுமா அடுத்த நிமிடமே நமக்கு மரணம் வரலாம்.\nஅதனால்தான் நாம் ஒவ்வொரு தொழுகையையும்; தொழும்பொழுது இதுதான் நமது இறுதித் தொழுகை என்று எண்ணித் தொழ வேண்டும் என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பினார்கள்.\n‘‘மகிழ்ச்சியை மண் மூடிப் புதைக்கும் ஒன்றை அதிகமாக நினைவு கூருங்கள். (அதுதான்) மரணம்’’ என்று அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)\n‘‘கப்றுக் குழியில் இருக்கும் மனிதர்களோடு உங்களையும் எண்ணிப் பாருங்கள்’’ என்று மேலும் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)\nநாளை மறுமையில் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும்பொழுது, முதல் நிலைக் கேள்விகள் அனைத்தும் நமக்கு அருளப்பட்ட அளவிலா மதிப்புடைய நேரத்தைச் சுற்றித்தான் இருக்கும்.\n‘‘நீங்கள் கணக்கு கேட்கப்படும் முன் உங்களை நீங்களே கணக்கு கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் மதிப்பிடப்படும் முன் உங்களை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் உங்களைக் கணக்கு பார்த்துக்கொண்டால், நாளை நடக்கும் கேள்வி கணக்கு இலகுவாக இருக்கும். அந்த நாளில் (காட்சி தருவதற்காக) உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள்: ‘‘அந்த நாளில் நீங்கள் (அல்லாஹ்வின் முன்) கொண்டு வரப்படுவீர்கள். (அப்பொழுது) உங்களது ஒரு ரகசியமும் மறைக்கப்படாது (69:18)’’ என்று உமர் (ரலி) அவர்கள் உரைத்தார்கள்.\n(‘இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்’ நூலிலிருந்து.)\nLabels: இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்\nஉமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:\n“உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்து விட்டு,\n“அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வ அஷ்ஹது அ��்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.” (முஸ்லிம்)\nதிர்மிதீயில் இடம் பெற்ற ஹதீஸில் கீழ்க்கண்ட துஆவும் சேர்த்து கூறுமாறு வந்துள்ளது:\n“அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்” (யாஅல்லாஹ், பாவமன்னிப்பு தேடுபவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிடுவாயாக பரிசுத்தமானவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிடுவாயாக பரிசுத்தமானவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிடுவாயாக\nசொர்க்கம் கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல; அதுவும் எட்டு வாசல்கள் திறந்து வைக்கப்பட்டு அழைக்கப்படுவது என்றால்… அந்த பாக்கியம் இந்த மிகச் சிறிய அமலால் கிடைத்து விடுகிறது. அதற்காக எந்தத் தொகையும் செலவழிக்க வேண்டியதில்லை. எந்தச் சிரமும் படவேண்டியதில்லை.\nஇந்தச் சிறிய நற்செயலுக்குப் போய் இவ்வளவு பெரிய சொர்க்கத்தை அல்லாஹ் வழங்கிடுவானா என்று நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் கருணை மிக விசலானமானது. அதையும் இந்த நபிமொழியே நமக்கு உணர்த்திக் காட்டுகிறது.\nதிருக்குர்ஆனில் நரகத்தைப் பற்றியும் அதன் வாசல்களின் எண்ணிக்கை பற்றியும் இப்படி வந்துள்ளது: “நிச்சயமாக, (ஷைத்தானைப் பின்பற்றும்) அவர்கள் அனைவருக்கும் நரகம்தான் வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் ஆகும்.” (15:44)\nசொர்க்கவாசிகளுக்கு சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் என்று திருக்குர்ஆனில் (39:73) பொதுவாக வந்துள்ளது. ஆனால் சொர்க்க வாசல்களின் எண்ணிக்கையைப் பற்றி திருக்குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை. எனினும் நபிமொழிகளில் சொர்க்க வாசல்களின் எண்ணிக்கை எட்டு என வந்துள்ளது. இந்த நபிமொழியிலும் எட்டு வாசல்கள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nநரகத்தின் வாசல்களை ஏழாக அமைத்த அல்லாஹ், சொர்க்கத்தின் வாசல்களையும் ஏழு என அமைக்கவில்லை. மாறாக, ஒன்றை அதிகமாக்கி, எட்டு என அமைத்து, எனது கோபத்தை விட கருணையே விசால���ானது; எனது அருளே அதிகமானது என்பதை உணர்த்துகிறான். எனவே அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்று சொர்க்கம் செல்ல இந்த இலகுவான துஆவை உளூவிற்குப் பிறகு ஓதி வருவோமாக\nஅஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றொழித்ததை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல்.\n(சம்மதமா... சம்மதமா... என்ற மகஇக பாடலின் ராகம்)\nசொல்லிது உன்னால் முடியுமா - நீ\nஉண்டு உறங்கும் விலங்கினமா - இல்லை\nஅஸ்ஸாமில் நடந்த அக்கிரமம் - அதைக்\nசொந்த மண்ணில் அகதியடா - அது\nதேசமாடா... இது தேசமாடா... - முஸ்லிம்\nகுடித்த பாலின் ஈரம் கசிய\nமாற்றம் வரத்தான் போகுதடா - இது\nமுன்பொரு காலம் இருந்ததடா - நினைத்தால்\nபோதுமடா... இது போதுமடா... - நாங்கள்\nகுடித்த பாலின் ஈரம் கசிய\nமாற்றம் வரத்தான் போகுதடா - இது\nஜும்ஆ தினத்தின் சிறப்புகளும், நன்மைகளும்\nநல்ல தினம், தலைமை தினம்\nதூய தினத்தின் உத்தமம் அறிந்தால்\n‘என் மீது இந்நாளில் ஸலவாத்தை அதிகரியுங்கள்;\nவெள்ளிக் கிழமை சிறப்பானது போன்று\nவெள்ளி சுபுஹு ஜமாஅத்தும் சிறப்பானது\nவெள்ளிதோறும் ஓதும் கஹ்ஃபு சூரா\nவெளிச்சம் கொடுக்கும் - அதன் மூலம் கப்ரின்\nஜும்ஆவுக்காக என்று குளித்தால் அது நன்மை\nஅதற்கென்று ஆடையணிந்தால் அது நன்மை\nதலைக்கு எண்ணை தேய்த்தால் அது நன்மை\nபள்ளிக்குச் சென்று மனிதர்களைத் தாண்டிச் செல்லாமல்\nஅமர்ந்தால் அது நன்மை - அவற்றிற்கு\nபத்து நாட்களின் சிறு பாவங்கள்\nஇமாம் மேடையேறினால் ஏட்டை மடிப்பார்கள்\nஇமாம் உரை கேட்க பள்ளிக்குள் அமர்வார்கள்\nஅதன்பின் வருபவர்கள் அன்றைய பட்டியலில்\nஇடம் பெற முடியா இழப்பாளர்கள்\nஜும்ஆவுக்கு வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும்\nஒரு வருடம் நோன்பு, தொழுகையின் நன்மை\nமுற்கூட்டியே வருபவருக்கு மொத்த நன்மை\nமுன்வந்தவர்கள் முன்வரிசையில் அமர வேண்டும்\nபின்வந்தவர்கள் பின்வரிசையில் அமர வேண்டும்\nநேரம் போக்காமல் திக்ரு, ஸலவாத்தும்\nஈரக் கண்களுடன் துஆவும் இறைஞ்சவேண்டும்\nஈருலக வெற்றி தரும் இறைமறை ஓத வேண்டும்\nஅந்நாளில் உண்டு ஒரு நேரம்\nஅந்நேரம் எதுவென்று அறிவிக்கவில்லை அல்லாஹ்\nஆனால் அஸ்றுக்குப் பின்னுள்ள அறுதி நேரத்தில்\nஅதனால் அந்நாளில் அருமை துஆக்களை அதிகரிப்போம்\n10.11.2017 அன்றைய அமீரக ஜும்ஆ உரையிலிருந்து.\nஎனது பார்வையில் ‘துரோகி’ - நூருத்தீன்\nபுதிய விடியல் ஆகஸ்ட் 16-31, 2017 இத���ில் சகோதரர் நூருத்தீன் அவர்கள் எழுதிய நூலாய்வுரை\nஅக்கிரமமான அந்தச் சிறைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை... அதென்ன அக்கிரமமான சிறைச்சாலை\nசிறைச்சாலை அமைந்துள்ள நிலம் பக்கத்து நாட்டுக்காரனுக்குச் சொந்தமானது. உலக மகா தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி அங்கு அடைத்து வைக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்களோ குற்றத்திற்குச் சம்பந்தமே இல்லாதவர்கள். உள்நாட்டுச் சிறைகளில் அவர்களை அடைத்தால், மனித உரிமை, மண்ணாங்கட்டி என்று யாராவது தேவையில்லாத கூக்குரல் எழுப்புவான்; மனித உரிமைச் சங்கம், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்று வேலை மெனக்கெட்டு அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுப்பார்கள். பிறகு மிருகத்தைப் போல் கைதிகளை அடித்துச் சாத்தி துவைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவையெல்லாம் அனாவசிய தடங்கல்கள்... என்று அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட அநீதக் காரணங்கள். அதனால் கியூபா தீவில், குவாண்டனாமோ பகுதியில் அமெரிக்கா தனக்கான ஒரு சிறைச்சாலையை அமைத்துக் கொண்டது. ‘தீவிரவாதிகள்’ என்று அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்டவர்களால் அக் கொட்டடி நிரப்பப்பட்டது. 9/11 நிகழ்விற்குப் பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுள் மிகப் பெரும் வேதனை இது.\nஅங்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டார் அமெரிக்க இராணுவ வீரர் டெர்ரி சி ஹோல்ட்புரூக்ஸ். எத்தனையோ நூறு பேரில் அவர் ஒருவர். ஆனால் அவர் நூற்றில் ஒருவர் ஆனதுதான் விந்தை. இராணுவத்தினரை அங்கு அனுப்பும் முன் நியூயார்க் நகரில் அவர்களது மூளையை வழக்கம்போல் சலவை செய்யும் டிடர்ஜென்ட் ஹோல்ட்புரூக்ஸை சரியாக வெளுக்காமல் போனது. அங்கு ஆரம்பித்ததுதான் அவரது முதல் திசை மாறல். சரியான திசைக்கான மாறல்.\nகாட்டுமிராண்டிகளையும் மனிதகுல விரோதிகளையும் உலக மகா தீவிரவாதிகளையும் சமாளித்து, உரிய முறையில் கவனித்து நல்ல பாடம் புகட்டப்போகிறோம், சேவையாற்றி அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் குவாண்டனாமோ மண்ணில் வந்து இறங்கிய ஹோல்ட்புரூக்ஸுக்கு முதல் நொடியிலேயே அதிர்ச்சி. அந்நாட்டு மண், தட்ப வெப்பம், அபாய ஜந்துக்கள் புழங்கும் சூழலில் அமைந்துள்ள சிறை என்று திரைப்படக�� காட்சி போல் புழுதி பறக்க விரிகிறது அவரது அனுபவம். கொடுங்கோல் சிறை அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில் நிகழும் உலக மகா அயோக்கியத்தனம், அவர் கற்பனை செய்திருந்ததற்கு மாறாக ஒழுக்கத்தையும் இணக்கத்தையும் இறைவழிபாட்டையும் மேற்கொண்டுள்ள முஸ்லிம் கைதிகள் என்று அவர் கண்டதெல்லாம் பேரதிர்ச்சி.\nகைதிகளின் உடைமையான குர்ஆன் கழிவறையில் வீசப்படுவது, விசாரணை என்ற பெயரில் பெண் காவலரின் மாதவிடாய் இரத்தத்தை முஸ்லிம் ஆண் கைதியின் முகத்தில் தேய்ப்பது போன்ற செயல்கள் அவருக்குள் ஏற்படுத்திய விளைவுகளைக் குறிப்பிட பேரதிர்ச்சி என்ற சொல் போதாது. ஆனால் அத்தகு கடும் சூழ்நிலையிலும் மனிதாபிமானத்திற்கு சற்றும் தொடர்பற்ற சித்திரவதைகளுக்கு நடுவிலும் அந்த முஸ்லிம் கைதிகள் கட்டிக் காத்த ஒழுங்குமுறைதான் ஹோல்ட்புரூக்ஸினுள் பல வினாக்களை எழுப்பியது. ஆவலைத் தூண்டியது. தேடலுக்கு வித்திட்டது. யார் இவர்கள் அதென்ன அரபு மொழி அப்படி என்னதான் சொல்கிறது இவர்களின் இஸ்லாம்\nஅவ்வினாக்களுக்கான விடைகள் அச்சிறைக் கம்பிகளுக்குப் பின்னிருந்து கிடைக்கின்றன. தெளிவு பிறக்கிறது. அமெரிக்க அதிகாரிகளிடம் பட்டம் கிடைக்கிறது: ‘துரோகி’\nஇஸ்லாத்தின் மீது ஆகப் பெரிய களங்கத்தைச் சுமத்தி அதை வேரறுக்க நினைக்கும் வல்லரசின் திட்டத்திற்கு எதிர்மாறாய் அவர்களின் படைவீரர்களுள் ஒருவரான அவரிடம் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாம் அவரது வாழ்வியல் நெறியானது.\nஎந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த முஸ்லிம் கைதிகள் அவரிடம் மதத்தைத் திணிக்கவில்லை. இஸ்லாத்தை வற்புறுத்தவில்லை; முஸ்லிமாகிவிடு என்று அறிவுறத்தவும் இல்லை என்பதுதான் இதிலுள்ள அற்புதம். தாங்கள் கற்றறிந்த இஸ்லாத்தைக் கொடுமையான அச்சூழலிலும் அக்கைதிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். எவ்வித சமரசமும் புரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்\nதிரைப்படம் போல் விறுவிறுப்பான நிகழ்வுகள், காட்சி விவரிப்புகள் என்று உள்ளத்தைத் தொடும் அருமையான அனுபவம் இந்நூல். தமிழ் வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதில் முக்கியப் பணி ஆற்றியுள்ளது இலக்கியச்சோலை டீம். நிறைய உழைத்துள்ளார் சகோதரர் M.S. அப்துல் ஹமீது. பாராட்டுகளும், நன்றியும் அவர்களுக்கு உரித்தாவன. ஆனால் அச்சுப் பிழைகள் ஒரு குறை. அவற்றை திருத்தி சீரான முறையில் மறுபதிப்பை அவர்கள் வெளியிட வேண்டும் என்பது என் பேரவா.\nஃபாசிசக் கொள்கையை பாடையில் ஏற்றுவோம்\nதொடை நடுங்கிப் படை கொண்டு\nதுவண்டு விடுவோம் என்று எண்ணினாயா\nதனி இடம் தக்க வைத்த\nபாரதத்தைப் பிளவு படுத்தும் உன்\nபரம ஏழைகளையும் பரிதவிக்க விட்டாய்\nபண முதலைகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து\nபயங்கரவாதத்தை ஒழிப்பேன் என்றாய் – நீ\nநோட்டின் பெயரால் கொன்றாய் – உன் பரிவாரம்\nமாட்டின் பெயரால் மனிதனைக் கொல்கிறான்\nவெறுப்பை விதைத்து வெப்பத்தைக் கூட்டுகிறான்\nமக்களைப் பிளவு படுத்துகிறான் - ஆக\nகறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்றாய்\nகறுப்பு நாளல்ல – நீ\n1912ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்திலிருந்து 'டைட்டானிக்' கப்பல் கிளம்பியபோது, 'கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது' என்று இந்தக் கப்பலின் கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் இறுமாப்புடன் சொன்னார். இந்தப் பெருமையுடனும், அகங்காரத்துடனும் கிளம்பிய ‘உலகிலேயே நகரும் பிரம்மாண்ட அரண்மனை’ என்று பறைசாற்றப்பட்ட அந்தக் கப்பல், வெறும் ஜந்தே நாளில் பனிப் பாறையில் மோதி தனது முதல் பயணத்திலேயே சமாதியானது. அந்தக் கப்பலில் பயணம் செய்த 2223 பேரில் 1517 பேர் நடுக்கடலில் கடுங்குளிரில் மூழ்கி மாண்டனர்.\nஇது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் எத்தனையோ அகங்காரம் கொண்டோர் அவமானப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றனர். ‘அன ரப்புகுமுல் அஃலா’ என்று கொக்கரித்த சிம்மாசன அகம்பாவம் தலையில் முறுக்கேறிய ஃபிர்அவ்ன், நீரை வரவழைப்பதே நான்தான் என்று எக்களித்த ஃபிர்அவ்ன் அந்த நீரிலேயே மூழ்கிப் போனான். செல்வச் செருக்கில் தன்னை விட்டால் ஆளில்லை என மார் தட்டிய காரூன் போன்றவர்கள் இறைத் தண்டனைக்காளாகி சிறுமைப்பட்டு மாண்டனர்.\nபெருமைக்குரியவன் அல்லாஹ் மட்டுமே. அவன் தன்னை ‘முதகப்பிர்‘ (பெருமைக்குரியவன்) என்று அழைக்கிறான். அனைத்துப் பெருமைகளுக்கும் சொந்தக்காரனான அல்லாஹ் மட்டுமே முதகப்பிர். எதிலும் முழுமை, அளவின்மை, வரையறையின்மை, கட்டுப்பாடின்மை என்பது அவனுக்கு மட்டுமே உடையது. ஆகவே அவன் பெருமைப்பட முழுத் தகுதியும் அருகதையுமுடையவன்.\nஅவனுடைய படைப்பினங்கள் ஒன்றுக்கும் அந்த உரிமை இல்லை. ஒரு முஃமினின் அத்தியாவசிய பண்பு பணிவு. எவனது உள்ளத்தில் அனைத்துப் பெருமைகளுக்கும் உரிமை படைத்தவன் வல்ல அல்லாஹ் ஒருவன்தான் என்ற எண்ணம் மேலோங்குகிறதோ அவன் எப்பொழுதும் பணிந்து நடப்பான். செருக்கு கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் தனக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை உணர்ந்து வாழ்வான்.\nபணிவு மனிதனை உயர்த்தும். ஆணவம் மனிதனைத் தாழ்த்தும். ‘எவர் அல்லாஹ்வுக்கு பணிந்தாரோ அவரை அல்லாஹ் உயர்த்துவான். மேலும் எவர் பெருமை கொண்டாரோ அவரை அல்லாஹ் தாழ்த்துவான்’என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அல்-முஃஜம் அல்-அவ்ஸத்)\n“நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, “பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே” என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பாளர்: ஹாரிஸா பின் வஹ்பு, நூல்: புகாரீ)\n“பணிவு கண்ணியவான்களின் குணங்களைச் சார்ந்தது. இறுமாப்பு நீசர்களின் குணங்களைச் சார்ந்தது. மனிதர்களில் அந்தஸ்தால் உயர்ந்தவர் தனது அந்தஸ்தைப் பாராதவராவார். அவர்களில் சிறப்பால் உயர்ந்தவர் தனது சிறப்பைப் பாராதவராவார்’என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.\nஇறைவனை நாம் புகழ்வதால் இறைவனுடைய தகுதி கிஞ்சிற்றும் உயர்ந்து விடப் போவதில்லை. மாறாக, நமது தகுதிதான் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயரும்.\nநமக்கு எது கிடைத்தாலும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று திருப்தியுறும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால், நமக்குக் கிடைக்கும் எந்த வெற்றியும் நம்மால் ஆனது அல்ல, இறைவன் நம் மீது கொண்ட கருணையினாலேயே என்ற பரந்த மனப்பான்மைக்கு வந்து விட்டால் ஆணவம், அகங்காரம், பெருமை என்று அனைத்துமே நம்மை விட்டு பறந்து விடும்.\n“எவரது உள்ளத்தில் அணுவளவு மமதை உள்ளதோ அவர் சுவர்க்கம் புக மாட்டார்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அருளினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)\n‘பெருமை என்பது உண்மையை மறுப்பதும் மனிதர்களை அற்பமாகப் பார்ப்பதுமாகும்’ என்று பெருமைக்கு விளக்கம் அளித்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் பணிவுடனேயே வாழ்ந்தார்கள். பணிவையே மக்களுக்கு போதித���தார்கள். அகங்காரம், பெருமை, கர்வம் போன்றவற்றைக் கொண்டு மக்களை எச்சரித்தார்கள். அவர்களின் பணிவு காரணமாக அல்லாஹ் அவர்களை ஈருலகிலும் உயர்த்தினான்.\nஎனவேதான் பெருமையை மனிதனுக்கு ஹராமாக்கியது இஸ்லாம். அதனைப் பாவமாகப் பார்ப்பதுடன் அதற்குத் தண்டனைகளையும் விதித்துள்ளது. பெருமைக்காரர்கைளையும், ஆணவக்காரர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.\nமேலும் உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே மேலும் பூமியில் கர்வமாக நடக்காதே மேலும் பூமியில் கர்வமாக நடக்காதே நிச்சயமாக அல்லாஹ் பெருமையாக நடப்பவர், பெருமையடிப்பவர் எவரையும் நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 31:18)\nநூல் வலம் - ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி 2017\nநேற்று (04.11.2017) ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியைக் காண சென்றிருந்தேன். எப்பொழுதும் போல பிரம்மாண்டமான ஏற்பாடுகள். நேர்த்தியாக, கச்சிதமாக அனைத்தையும் செய்திருக்கிறார்கள். தொழுகைக்காக கீழ் தளத்திலும், மேல் தளத்திலும் பெரிய இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.\nஇலட்சக்கணக்கான புத்தகங்களை எப்படி பார்வையிடுவது என்ற மலைப்பில் நகர்ந்தேன். அனைத்து கடைகளையும் நம்மால் ஒரே மூச்சில் பார்த்து விட முடியாது.\nஇந்திய பதிப்பகங்களின் கடைகள் அடங்கியுள்ள Hall No. 7க்குச் சென்றேன். ஒவ்வொரு கடையாக ஏறி புத்தகங்களைப் பார்வையிட ஆரம்பித்தேன். திடீரென்று எதிரில் புக் லேண்ட் பதிப்பகம் தென்பட்டது. சகோதரி ஜெசீலா பானு அவர்கள் முகநூலில் எழுதியது நினைவுக்கு வந்தது. அவரது நூல் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று எழுதியிருந்தார்.\nஅங்குள்ள பணியாளரிடம், “தமிழ் நூல்கள் எங்கே இருக்கின்றன’‘ என்று கேட்டேன். “இங்கே தமிழ் நூல்கள் கிடையாது” என்றார். நான் ஜெசீலா பானு அவர்களின் நூல் விவரத்தைச் சொன்னேன். அவருக்குத் தெரியவில்லை. அவர் இன்னொரு பணியாளரிடம் கேட்டார். அவர் உடனே அந்த நூலைக் காட்டித் தந்தார். “நம் நாயகம்” என்ற நூல். அதனை வாங்கி விட்டு அடுத்த கடைக்குள் நுழைந்தேன்.\nதமிழ் நூல்கள் எங்காவது கண்ணுக்குத் தென்படுகிறதா என்றும் பார்த்துக்கொண்டே சென்றேன். எங்கும் தென்படுகிற மாதிரி தெரியவில்லை. லிபி பதிப்பகம் என்ற மலையாள நூல்கள் கடையில் எனக்குப் பிடித்த “இஸ்லாமும் நேர மேலாண்மையும்” என்ற மலையாள நூலை வாங்கி��ேன்.\nஅடுத்தடுத்த கடைகளுக்கு நகர்ந்தபொழுது தாருஸ்ஸலாம் பதிப்பகக் கடை (Darussalam International Islamic Bookshop - UAE) தென்பட்டது. இங்கே நல்ல நல்ல இஸ்லாமிய நூல்கள் கிடைக்குமே என்று உள்ளே நுழைந்தேன். அருமையான தலைப்புகளில் பல நூல்கள் அங்கே வீற்றிருந்தன. Strategies of Prophet Muhammad PBUH என்ற நூலை வாங்கினேன். அங்கே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது. ஒரு பக்கத்தில் தமிழ் நூல்களை வைத்திருந்தார்கள்.\nபின்னர் International Islamic Publishing House - Saudi Arabia கடைக்குள் நுழைந்தேன். அங்கும் அருமையான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான ஆங்கில நூல்கள் விரவிக் கிடந்தன. Psychology from the Islamic Perspective என்ற நூலை வாங்கினேன். அங்கும் இதர மொழி நூல்களை பிரிவு பிரிவாக வைத்திருந்தார்கள். எதிர்பார்த்தது போலவே TAMIL என்ற பெயர்ப்பலகையின் கீழ் சில தமிழ் நூல்கள் இருந்தன.\nமலையாள பதிப்பக உலகின் ஜாம்பவான் DC Books பல கடைகளைப் போட்டிருந்தார்கள். கூட்டம் அங்கே அலை மோதியது. அங்கும் தமிழ் நூல்கள் இருக்கின்றனவாம் என்று என் நண்பர் முஹம்மது ஆதில் சொன்னதை வைத்து அங்கு சென்று தமிழ் நூல்களைத் தேடினேன். ஒன்றும் இல்லை. அங்குள்ள பணியாளர்களிடம் விசாரித்தபொழுது தமிழ் நூல்கள் இல்லை என்று சொன்னார்கள். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் ஏராளமான நூல்கள் அங்கே இருந்தன.\nவழக்கம் போல் மலையாள பதிப்பகங்கள் அதிகம் பங்கேற்றிருந்தன. அங்கெல்லாம் மலையாளிகளின் கூட்டம் அலைமோதியது. குடும்பத்துடன் வந்து தங்கள் பிள்ளைகள் விரும்பிக் கேட்கும் நூல்களை பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆங்காங்கே தமிழ் ஒலிகளும் கேட்டன. தமிழ் குடும்பங்களும் வந்திருந்தார்கள்.\n‘மாத்யமம்’ மலையாள நாளிதழ் கடை போட்டு, அன்றைய நாளிதழை இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘மாத்ருபூமி’ மலையாள நாளிதளின் கடையையும் கண்டேன். ‘மீடியா ஒன்’ மலையாள தொலைக்காட்சியும் கடை போட்டு, மலையாள இளவல்களை செய்தி வாசிக்க வைத்து ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்கள். மலையாள மக்கள் குதூகலத்துடன் அதனைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். மலையாள வானொலி பண்பலை Flowers FM கடையையும் காண நேர்ந்தது.\nமலையாளிகளுக்கு வருடா வருடம் இது ஒரு பாக்கியமாகவே அமைந்துள்ளது. சொந்த நாட்டில் கூட அவர்கள் வாங்க முடியாத நூல்களையெல்லாம் அவர்கள் இங்கே சாதாரணமாக வாங்கலாம். கணிசமான மலையாள முஸ்லிம் பதிப்பக ��டைகளும் காணக் கிடைத்தன. அமீரகத்திலுள்ள மலையாள வானொலி பண்பலைகளிலும் இந்தப் புத்தகக் கண்காட்சி குறித்த விளம்பரம் செய்யப்படுகிறது.\nஇதேபோன்று தமிழ் பதிப்பகக் கடைகள் எப்போது வரும் என்ற ஏக்கம் இதயத்துள் எழாமல் இல்லை. ‘இலக்கியச்சோலை’ பதிப்பகம் கடந்த வருடங்களில் ‘தேஜஸ்’ மலையாளப் பதிப்பகத்துடன் சேர்ந்து கடை போட்டிருந்தது. இந்த வருடம் சில காரணங்களால் ‘தேஜஸ்’ பதிப்பகம் கடை போடாததனால் ‘இலக்கியச்சோலை’ நூல்களும் இல்லாமல் போனது.\nதமிழ் மக்கள் அதிகமாக இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரிய வேண்டும். அவர்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். அவர்களின் அதீதமான வருகையும், வாசிப்புப் பழக்கமும் மட்டுமே இனி வருங்காலங்களில் தமிழ் பதிப்பகத்தாரை இங்கே கடைகள் எடுப்பதற்கு தூண்டுகோலாக அமையும்.\nஇந்த ஏக்கத்துடன் நேரமாகிவிட்டதால் விடைபெற மனமில்லாமல் கண்காட்சியை விட்டு வெளியேறினேன். புத்தகக் கடலில் மூழ்கி மூச்சுத் திணறி நனைந்து வெளிவந்த உணர்வு.\nமுஹம்மத் ஸாதிக் அலீ அவர்கள் எழுதிய ‘எளிய முறை கணித...\nஜும்ஆ தினத்தின் சிறப்புகளும், நன்மைகளும்\nஎனது பார்வையில் ‘துரோகி’ - நூருத்தீன்\nஃபாசிசக் கொள்கையை பாடையில் ஏற்றுவோம்\nநூல் வலம் - ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி 2017...\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://satrumun.blogspot.com/2007/07/blog-post_5728.html", "date_download": "2018-07-19T11:27:39Z", "digest": "sha1:ELGJZW7K7ERWYPQJRN6QLE42AGZKJEKL", "length": 20343, "nlines": 437, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: இட்லியிலிருந்து ஊத்தப்பத்துக்கு...", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nநடுவானில் விமானத்தில் இறந்த குழந்தை.\nகூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: மேலும் 2 கல்லூ...\n'சென்னை-28' பட விழாவையொட்டி 32 அணிகள் மோதும் கிரிக...\n1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ராஜகோபுரத...\nநீதிபதிகளை கழுதை என்று திட்டியவர்.\nபிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு: ஆகஸ்ட் 7ல் விசாரண...\n\"பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு போராடுவேன்\" - கனிமொழி\nதேவகோட்டை அருகே வன்முறை; பதட்டம்\nதிருமணமாகாதவருக்கு சாராயம் கொடுத்து \"கு.க\" ஆபரேஷன்...\nதுபாய்: குர்ஆன் விருது விழா\nபிளசண்ட் ஸ்டே: நான்கு தளங்களை இடிக்க நீதிமன்றம் ஆண...\nவிருந்தினர் மாளிகையில் திடீர் பவர்கட்: கலாம் தவிப்...\nஇந்திய இராணுவ தலைமை தளபதியாக தீபக் கபூர் நியமனம்\nகிரண்பேடி விவகாரம்: அடிமட்ட காவலர்கள் ஏமாற்றம்\nபாக்.பாபர் ஏவுகணை சோதனை: இந்தியாவின் பிரமோஸிற்கு ப...\nகனிமொழி,இராஜா எம்பியாக உறுதிமொழி எடுத்தனர்\nகோவா: கவிழ்கிறது காங்கிரஸ் அரசு\nகனிமொழிக்கு மந்திரி பதவி; ராகுலுக்கும் முக்கியத்து...\nஇந்தியா: மீண்டும் உயருமா பெட்ரோல் டீசல் விலைகள்\nதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்\n கலாமுக்கு புகழாரம் - க...\nநீதிபதியை \"சார்\" என அழைத்தால் போதும்\nமேலும் ஒரு சர்ச்சையில் எய்ம்ஸ்\nமலேசிய வலைப்பதிவர்கள் மீது கெடிபிடி முடுக்கிவிடப்ப...\nஃபேஸ்புக் மீது மோசடி வழக்கு\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nLabels: ஆளுமை, இந்தியா, வித்தியாசமானவை\nகுடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் பதவியேற்றதை அடுத்து, சுவையான ஊத்தப்பம் செய்யும் பணியில் ராஷ்டிரபதி பவன் சமையல் கலைஞர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.\n\"அப்துல் கலாம் இட்லி, தோசை, சாம்பார் வகைகளையே விரும்பி உண்பார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த வரை ராஷ்டிரபதி பவன் \"டைனிங் டேபிள்' தயிர் சாதம், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றால் நிரம்பி வழியும்\" என்று நினைவு கூர்ந்தார் ராஷ்டிரபதி பவன் மூத்த அதிகாரி.\n72 வயதான பிரதிபா பாட்டீலுக்கு பிடித்த உணவு ஊத்தப்பம் மற்றும் பருப்புக் கூட்டு. அவருக்குப் பிடிக்காதது கீரை மற்றும் உருளைக்கிழங்கு.\n\"பிரதிபாவுக்கு எளிமையான உணவுதான் மிகவும் பிடிக்கும். எண்ணெய் மற்றும் நறுமணப் பொருள்கள் அதிகம் சேர்க்காமல் சமைத்த உணவை அவர் விரும்பி உண்பார்\" என்றார் ஜெய்ப்பூர் ஆளுநர் மாளிகை தலைமை சமையல் கலைஞர் கைலாஷ்.\nஅப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது, ராஷ்டிரபதி தலைமை நிர்வாக அதிகாரிக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தார். அதாவது, ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சமையல் செய்யப்படும் பொது சமையல் கூடத்திலேயே, தனக்கும் சமையல் செய்ய வேண்டும். தனக்காக தனி சமையல் கூடத்தைப் பயன்படுத்த���் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.\nஅதே போல், இரவில் தான் உணவு சாப்பிடும் வரை மற்ற ஊழியர்கள் காத்திருக்கக் கூடாது. உணவு பரிமாறுவதற்கு ஒருவர் மட்டும் போதும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அப்துல் கலாம் பிறப்பித்திருந்தார்.\nகலாமுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து, அவரிடம் 4 ஆண்டுகள் செயலராக இருந்த பி.எம். நாயர் கூறியது:\nவழக்கமாக நள்ளிரவு 1 அல்லது 1.30 மணிக்குத் தான் கலாம் தூங்கச் செல்வார். இருந்தாலும் காலை 6.30 மணிக்கே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவர்.\nகடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 14 அன்று காலை 8.40 மணிக்கு எனது டேபிளில் இருந்த போன் ஒலித்தது. மறுமுனையில் அப்துல் கலாம். மிஸ்டர் நாயர், எனது படுக்கை அறை ஒழுகுவதால் இரவு முழுவதும் தூங்கவில்லை. அதை சரி செய்து கொடுங்களேன் என்று வழக்கமான மெல்லிய குரலில் பேசினார்.\n//கடந்த 2003-ம் ஆண்டு ஜூலை 14 அன்று காலை 8.40 மணிக்கு எனது டேபிளில் இருந்த போன் ஒலித்தது. மறுமுனையில் அப்துல் கலாம். மிஸ்டர் நாயர், எனது படுக்கை அறை ஒழுகுவதால் இரவு முழுவதும் தூங்கவில்லை. அதை சரி செய்து கொடுங்களேன் என்று வழக்கமான மெல்லிய குரலில் பேசினார்.//\nஎன்னை நான் கிள்ளிப் பார்த்தேன். இது கனவல்ல\nபடிக்க மகிழ்வாக இருந்த்து. உத்தமர் ஒருவர் காலத்தில் நானும் வாழ்கிறேன்.\nஇதுக்கு ஒண்ணும் மெனக்கெடவேணாம். இட்லி மாவையே\nரெண்டு நாள் புளிக்க வச்சாப்போதும்.\nவயசான காலத்துலே ரொம்ப எண்ணெய் நல்லதுக்கில்லே(-:\n//இரவு முழுவதும் தூங்கவில்லை. அதை சரி செய்து கொடுங்களேன் என்று வழக்கமான மெல்லிய குரலில் பேசினார். //\n இந்தியாவின் முதல் குடிமகனின் வீடு ஒழுகியதா\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/leadership-quality-1.html", "date_download": "2018-07-19T11:50:07Z", "digest": "sha1:VTZG4JWUYI4QQK6WSUGYTTIENN4HCCJ5", "length": 18361, "nlines": 213, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: LEADERSHIP- QUALITY 1", "raw_content": "\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன���றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள���ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/04/500-350.html", "date_download": "2018-07-19T11:06:49Z", "digest": "sha1:JGHEDJJGWBBXOFXRKP4EQAWK225OZ2KE", "length": 20835, "nlines": 187, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி; ஒரே வீரர் 350 ரன்கள் எடுத்தார்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி; ஒரே வீரர் 350 ரன்கள் எடுத்தார்\nமுதல் தர கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் 350 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதனால் எதிரணி 500 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇங்கிலாந்தில் நேஷனல் கிளப் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நன்ட்விச் நகரில் நடந்த ஆட்டத்தில், கேல்டி அணியுடன் நான்ட்விச் அணி மோதியது. இந்த போட்டியில் நன்ட்விச் அணியின் வீரர் லியாம் லிவிங்ஸ்டன் 138 பந்துகளில் 350 ரன்களை அடித்து உலக சாதனை படைத்தார். இந்த 350 ரன்னில் 34 பவுண்டரிகளும், 27 சிக்சர்களையும் லிவிங்ஸ்டன் விளாசினார். 123 பந்துகளில் முச்சதம் அடித��தும் பிரமிக்க வைத்தார் லிவிங்ஸ்டன்.\nஇந்த அதிரடியால் நான்ட்விச் அணி 45 ஓவர்களில் மொத்தம் 579 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த கேல்டி அணி 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நான்ட்விச் அணி 500 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 21 வயதே நிரம்பிய லிவிங்ஸ்டன் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்\nஇதற்கு முன் ஹைதராபாத் நகரில் நடந்த போட்டியில் புனித. ஜான்ஸ் கல்லூரி வீரர் நிகிலேஷ் சுரேந்திரன் 334 ரன்கள் எடுத்ததுதான் உலக சாதனையாக இருந்தது. சர்வதேச போட்டிகளை பொறுத்த வரை இலங்கை அணிக்கு எதிராக இந்திய வீரர் ரோகித் சர்மா 264 ரன்கள் எடுத்தது உலக சாதனையாக உள்ளது.\nLabels: உலகம், கட்டுரை, காதல், செய்திகள், நிகழ்வுகள், பிரபலங்கள், விளையாட்டு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியம...\nமே மாதம்... குஷியில் ஹவுஸ் ஓனர்கள்\nஉத்தம வில்லன்’ - பட முன்னோட்டம்\nநெட் நியூட்ராலிட்டி: இணையவாசிகளை மாட்டிவிட்ட டிராய...\nநிலநடுக்க ஆபத்தில் சென்னை உள்ளிட்ட 38 இந்திய நகரங்...\nஜெயலலிதா வழக்கும் சர்ச்சைக்குள்ளான பவானி சிங்கின் ...\nஇந்திய மக்கள் மகிழ்ச்சி பெற செய்ய வேண்டியது என்ன\nமகளுக்கு ஏன் 'இந்தியா' என பெயர் சூட்டினேன்- ஜான்டி...\nஜெ. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பவானி சிங் நீ...\nமேக்கேதாட்டு பிரச்னை: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க...\nஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை...\nயார் கையில் எத்தனை படங்கள்... டாப் ஹீரோக்களின் அடு...\nசாம்பார் சாதம் சாப்பிடும் கணவரை தேடும் ஸ்ருதிஹாசன்...\nபாக்யராஜ் வீட்ல விசேஷங்க... சாந்தனுக்கு டும் டும் ...\nஅறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிகள்\nவிஸ்டன் விருதை பெறும் முதல் இந்திய கிரிக்கெட் வீரா...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம்: இந்தியா ம...\nஇணைய நட்சத்திரங்களை உருவாக்கும் பட்டறை யூடியூப்புக...\n45 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் மசோதா வெற்றி: திருச...\nஆண்க���் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த பெண்\n‘எல் நினோ’வினால் இந்த ஆண்டு மழையின் அளவு குறையும்\nமனைவியின் நகையை விற்று படமாக்கிய ரே\nஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே நினைவு தினம்...\n(திருட)வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்\nசெம்மரக் கடத்தல்...ஸ்டார் ஹோட்டல்...சினிமா... கோடி...\n”ரஜினியும் நானும் ஏன் தியாகம் பண்ணணும் \nஏப்ரல் 23: உலக புத்தக தினம்\nநில மசோதா: ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை; அர...\nசெம்மரக் கடத்தலில் 'பருத்திவீரன்' சரவணன் கைதானதாக ...\nஏழை, ஏன் ஏழையாகவே இருக்க மாட்டான்\n'பிரஷர்' ஏற்றும் ப்ளெக்ஸ் போர்டு தேவையா\nசெம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்...\n'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வி...\nசூப்பர் ஓவரில் விளையாட இந்திய வீரர்களுக்கு 'தில்' ...\nஇவ்வளவுதான் அமெரிக்க ஹாலிவுட் படங்கள்…வாட்ஸப் கலாட...\nநதி போல ஓடனும்...தன்னம்பிக்கை கருணாகரன்\nமாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாப...\nஐம்பது வயதில் அசத்தல் வெற்றி\n“விக்ரம் போன் நம்பர் என்னிடம் இல்லை\nசாதி கலவரத்துக்கு காரணமான ப்ளெக்ஸ் போர்டு\nஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி...\n'கங்குலி இல்லையாம்.. அப்போ ரவி சாஸ்திரியா\nஇந்திய மக்களின் மனம் கவர்ந்த ஐ.பி.எல். அணி சென்னைத...\nபணத்தை வாங்கிட்டு கேஸை வாபஸ் வாங்கிடு \nசிக்கனத்தின் விலை பயணிகள் உயிரா\nஓ காதல் கண்மணி - படம் எப்படி \nகாஞ்சனா 2 - படம் எப்படி\n' ‘பிளைட்’ பார்த்தசாரதி மர்ம மரணம...\nசவால் விட்டார் சாரதா... சமாளித்தார் மனோரமா\nஅமிதாப் வாங்கித் தந்த ஆட்டோ\nமன்மத வருடம் புதன் பலன்கள்\nஉயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும...\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் 9வது அணி\nஐ.பி.எல்: சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் ...\nநோ ஹெல்மெட்; நோ பெட்ரோல்\nதோனி பற்றிய யுவராஜ் தந்தை விமர்சனம்: அனுஷ்காவுக்கா...\nதிரையை மிரட்டிய ஃப்யூரியஸ் 7... உலகின் டாப் 10 கார...\n119 காலி பணியிடத்தை நிரப்ப கோடிக்கணக்கில் லஞ்சம் ...\nமக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை\nசிக்ஸ்பேக் சீக்ரெட் சொல்லும் அதர்வா\nபாராட்டுங்கள், கேலி செய்யாதீர்கள், மன்னிப்புக் கேள...\nவேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி ...\nசுகன்யா சம்ரிதி, பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட்: யார...\n'ராவணன் போல தோனி கதை முடிவடையும்' - யுவராஜ் தந்தை...\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்...\nராகிங் புல் - உலக சினிமா\nஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன\nபழைய டயரிலும் பணம் பார்க்கும் பெல்ட் சிவா\nதிருட்டு கேமரா வைத்திருப்பதை நாமும் கண்டுபிடிக்கலா...\nஏப்ரல் 7: நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள் - அவரிட...\nஏப்ரல் 7: ஹென்றி ஃபோர்ட் நினைவுநாள் இன்று.\n'ஜென்டில்மேன் கேம்' என்ற பெருமையை இழக்கும் கிரிக்க...\nகோடீஸ்வரர்களை உருவாக்கும் அரசின் சாதனை\nவேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்\nஇலங்கையை வழிக்கு கொண்டு வருவது எப்படி\nகிரிக்கெட் வீரர்கள் காதலிப்பதிலும் வல்லவர்கள்...\nதமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் ராமதாஸ்: ஒ...\nபெற்றோரே... குழந்தைகளின் பேச்சுக்கு காதுகொடுங்கள...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ளிய வ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldtamilforum.com/historical_facts/avvaiyar-history/", "date_download": "2018-07-19T11:42:15Z", "digest": "sha1:LCECL2CIAGW3DVCLP5XBDQFX45AP36VA", "length": 40107, "nlines": 251, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஔவையார் வரலாறு! - World Tamil Forum -", "raw_content": "\nJuly 19, 2018 5:12 pm You are here:Home வரலாற்று சுவடுகள் ��வையார் வரலாறு\nஅவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பெண் பால் புலவர் இருந்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் அவ்வையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் இருந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nமுதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால அவ்வையார். இவர் தொண்டை நாட்டு மன்னர் அதியமானுக்கு நல்ல நண்பர். நீண்ட நாள் வாழ்வைத் தரும் நெல்லிக் கனியை மன்னர் அதியமான் தான் உண்ணாது அவ்வை நீண்ட நாள் வாழ வேண்டும் எனக் கருதி கொடுத்தார் என்பது வரலாற்றுக் கதை. இந்த அவ்வையார் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களை பாடியுள்ளார்.\nபக்திக் கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது அவ்வையார். இவர் பாடிய விநாயகர் அகவலைத்தான் விநாயகரை வழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர். இது மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்த பொருளுடையது. அதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர்.\nமூன்றாவது அவ்வையார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். சங்ககால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர். இரண்டாம் அவ்வையார் பக்தர்களோடு வாழ்ந்தவர். மூன்றாம் அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்தவர். குழந்தைகளுக்காக நீதி நூல்களை எழுதியவர். சிறுவயதில் மனப்பாடம் செய்து கொண்டு, வயதான பின்பு பொருளைத் தெளிவாக உணரும் நிலையில் அமைந்தவை இவர் பாடல்கள்.\nநான்காவது அவ்வையார் தனிப் பாடல்கள் மிகுதியாகப் பாடியவர். முருகன் குழந்தை நிலையில் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று அவ்வைப் பாட்டியிடம் கேட்க, அவன் மரத்தை உலுப்ப, பழங்கள் மண்ணில் விழ, பழத்திலுள்ள மண்ணை நீக்க அவ்வை ஊத, ‘பழம் சுடுகிறதா பாட்டி, என்ற கதையுடன் தொடர்புடைய அவ்வையார். இவர் மிகச் சிறந்த கருத்துள்ள தனிப் பாடல்களைப் பாடியுள்ளார்.\nஅவ்வையாரின் நூல்களில் 7 மட்டுமே கிடைத்துள்ளன அவை :\nநாலு கோடிப் பாடல்கள் (4 Kodi Padalkal)\nஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்ற போது அப்புலவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார். “நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்” இயற்ற வேண்டும�� என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்” என்று அவர்கள் கூறினராம். இதைக் கேட்ட ஔவையார், “இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்” என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்.\n“மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று\n“உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்\n“கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே\n“கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்\nஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண்பாற் புலவர். ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும் போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.\nஔவையார் அங்கவை சங்கவை மணம் முடித்தவர்\nஔவையார் கதையில் வரும் புலவர்\nஎன்று பாகுபடுத்திக் காணமுடிகிறது. சங்க கால புலவர் அவ்வை அதியமான் காலத்தில் வாழ்ந்தவர், அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர், கபிலரின் நன்பனான பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரின் திருமணத்திற்கு முயற்ச்சி மேற்கொண்டவர்கள் அவ்வையும், கபிலரும் ஆவர்.\nசங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல முதுமைக் கோலத்தவர் அல்லர். இளமை ததும்பும் விறலி இவர் பாடிய 59 பாடல்கள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளன. சங்கப் புலவர் பாடல் தொகை வரிசையில் இவர் 9 ஆம் இடம் பெற்றுள்ளார்.\nஒளவை என்ற சொல்லின் பொருள் :\nஔவை அல்லது அவ்வை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது. ஔவை என்பது மூதாட்டி அல்லது தவப் பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும். பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கிற்றுப் போலும்.\nஔவையார், சங்ககாலப் புலவர் :\nகாலந்தோறும் வாழ்ந்த ஔவையார் என்னும் புலவர்களில் இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப��� பாடல்கள்.\nகாலந்தோறும் வாழ்ந்த ஔவையார் என்னும் புலவர்களில் இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார். ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டு விட்டுப் பார்த்தால், சங்க நூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.\nஔவையின் தோற்றப் பொலிவு :\nபலரது உள்ளப் பதிவில் இருக்கும் கிழவிப் பருவம் சங்ககால ஔவைக்கு இல்லை. அதியமான் தன்னை அழைத்ததாக இவரது பாடலில் உள்ள தொடர் இவரது இளமை எழிலைக் காட்டுகிறது. ஔவை ஒரு விறலி. மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். மை தீட்டிய கண்களும், வாட்டமான நெற்றியும் கொண்டவள். எடுப்பான இடுப்பில் அழகிய அணிகலன்களை அணிந்திருந்தாள்.\nஔவையாரால் பாடப்பட்ட புலவர்கள் :\nஔவையார் அதியமான் போன்றோரைப் பாடியது மட்டுமன்றி, அவரது காலத்தில் அல்லது அவரது காலத்திக்கு முன் வாழ்ந்த இரண்டு புலவர்களைத் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.\nவெள்ளி வீதியார் என்னும் பெண் புலவர் தன் காதலனைத் தேடிக் கொண்டு சென்றது போல, தலைவி ஒருத்தி தன் தலைவன் இருக்குமிடத்துக்கே செல்ல விரும்பினாளாம்.\nஅதியமான் அன்று ஒருநாள் எழுவரை வென்று அவர்களது ஏழு முடிகளை மார்பில் அணிந்து கொண்டதை ஔவையால் பாட முடியவில்லையாம். இன்று அதியமான் கோவலூரை அழித்ததை, பரணர் பாடினாராம்.\nஔவையாரால் பாடப்பட்ட அரசர்கள் :\nசேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்.\nவாய்மொழி முடியன் களிற்றில் உலா வருவானாம்.\nஅதியர் கோமான் என்று அதியமானையும், அவன் மகன் எழினியையும், ஔவை போற்றுகிறார்.\nகோசர் பறை முழக்கியும், சங்கு ஊதியும் வரி தண்டுவது போல அலர் தூற்றினார்களாம்.\nஔவையார் காட்டும் அதியமான் – அதியமானை ஔவையார் பலவாறாகப் போற்றிப் புகழ்ந்துள்ளார் :\nஅதியமானின் முன்னோர் தன் நாட்டுக்குக் கரும்பைக் கொண்டுவந்து பயிரிட்டனர்.\nவேல்���டை வீரர் மழவர் பெருமகன்.\nஅதியமான் கோட்டை அகழியில் முதலைகள் இருந்தன.\nகுதிரை, யானை, தோல் படைகள் பயிற்சி மிக்கவை.\nதடியடிக்கு அஞ்சாத பாம்பு போன்றவன்.\nபிறந்த மகனைக் கண்டபோதும் இவனது சினக்கண் மாறவில்லை.\nநண்பர்களிடம் குளிக்கும் யானை போல் அடங்குவான். பகைவர்களிடம் மதம் பிடித்த யானை ஆகிவிடுவான்.\nவீட்டுக் கூரையில் செருகி வைக்கப்பட்டுள்ள தீக்கடைக்கோல் வீட்டை எரிக்காமல் உதவுவது போல் உதவுபவன்.\nமான் கூட்டத்தில் மறப்புலி போன்றவன்.\nஒரு நாளைக்கு எட்டு தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் செய்த தேர்போல் வலிமை மிக்கவன்.\nகுழந்தையின் மழலை போன்ற என் பாடலைப் போற்றியவன்.\nஎன்றாலும் அவன் தீ. அதில் குளிர் காயலாம்.\nஅதியமான் பரிசில் தரக் காலம் கடத்தினான்.\nஅதியமான் பரிசில் தரக் காலம் கடத்தினாலும் யானைக் கையில் இருக்கும் சோற்றுக் கவளம் போல அது பயன்படும்.\nகள் கொஞ்சமாக இருந்தால் ஔவைக்குக் கொடுத்துவிடுவானாம். அதிகமாகக் கிடைத்தால் ஔவை பாடப் பாட உண்டு மகிழ்வானாம்.\nவெள்ளி வட்டிலில் உணவு படைப்பான்.\nஔவையார், அங்கவை சங்கவை மணம் முடித்தவர் :\nஔவையார் பலரில் ஒருவர் பாரிமகளிர் அங்கவை, சங்கவை என்பவர்களை மலையரசனான தெய்வீகன் என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தவர். இத்திருமணம் பற்றிக் கூறும் பாடல்கள் சில உள்ளன.\nபாரி சங்க கால அரசன். பாரிமகளிர் அவனது மக்கள். “அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்” எனத் தொடங்கும் பாரிமகளிரின் பாடல் ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அவர்களது பெயர் அங்கவை, சங்கவை என்னும் குறிப்பு சங்கப் பாடல்களில் இல்லை. பாரியிடம் வாழ்ந்த புலவர் கபிலர். போரில் பாரி மாண்டான். கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார். பார்ப்பாருக்கு மணம் முடித்து வைக்க அழைத்துச் செல்கிறார் விச்சிக்கோ பாரி மகளிரை மணம் செய்து கொள்ள மறுத்து விட்டான். இருங்கோவேள் என்பவனும் மறுத்துவிட்டான் எனவே கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பானுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டுத் தான் வடக்கிருந்து உயிர் துறந்தார். இவை சங்கப்பாடல் தரும் செய்திகள்.\nஔவையார் (சமயநூல் புலவர்) :\nஔவையார் என்னும் பெயருடன் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சமய நோக்கு உள்ளவராகக் காணப்படுகிறார்.\nஎன்னும் இவரது நூல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன.\nதமிழறியும��� பெருமான் கதை :\nதமிழறியும் பெருமான் கதை என்பது ஔவையாரோடு தொடர்புடைய கதைகளில் ஒன்று. தமிழறியும் பெருமான் என்பது ஒரு பெண்ணின் பெயர். அரசகுமரனும் அரசகுமரியும் காதலர்கள். வில்லன் ஒருவனால் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் பேய் வடிவம் கொண்டு ஒரு சத்திரத்தில் தங்கி அங்கு வந்து தங்குவோரையெல்லாம் அச்சுறுத்தி முடுக்கிக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஔவையார் அந்தச் சத்திரத்தில் தங்கினார். பேய்கள் வழக்கம் போல் அச்சுறுத்தத் தொடங்கின. பெண்பேய் கல்வியில் வல்ல பேய். இந்தப் பேய் “எற்றெற்று” என்று சொல்லிக் கொண்டு, காலால் எற்றி ஔவையாரை அறைய வந்தது. ஔவையார் அந்தப் பேயின் வரலாற்றை முன்பே அறிந்தவர். அந்தப் பேய் வரும் போது நான்கு பாடல்கள் பாடினார். அவற்றுள் ஒன்று\nவெண்பா இருகாலில் கல்லாளை, வெள்ளோலை\nகண்பார்க்கக் கையால் எழுதாளை – பெண்பாவி\nபெற்றாளே பெற்றாள், பிறர்நகைக்கப் பெற்றாள்,என்(று)\nஇப்படி நான்கு பாடல்கள். பேய் ஔவையை எற்ற வர, ஔவை பேயை எற்றப் போவதாகப் பாடினார். பேய் நடுங்கி ஔவையின் காலில் விழுந்து வணங்கியது. ஔவை அந்தப் பேயின் எதிர்கால வாழ்க்கையை எடுத்துரைத்தார். அவர் வாக்குப்படி பெண்பேய் தமிழறியும் பெருமான் எனப் போற்றப்படும் பெருமாட்டியாகப் பிறந்தது. அவளது முற்பிறவிக் காதலன் விறகு வெட்டியின் மகனாகப் பிறந்து விறகு வெட்டிக் கொண்டிருந்தவனைக் கண்டு காதல் கொண்டு திருமணம் நடந்தேறியது.\nஇங்குக் காட்டப்பட்டுள்ள பாடல் 16-17ஆம் நூற்றாண்டினது ஆகலாம். ஔவையார் (சிற்றிலக்கியப் புலவர்) ஔவையார் பாடிய நூல் என்னும் குறிப்போடு இரண்டு நூல்கள் உள்ளன.\nஅசதிக்கோவை என்னும் நூல் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையாரால் பாடப்பட்டது.\nஅசதி என்பது அசதி என்னும் ஊரில் வாழ்ந்த பெருமகனைக் குறிக்கும். ஔவைக்குக் கூழ் கொடுத்து அவரது அசதியைப் போக்கினானாம் ஒருவன். ஔவையார் அவனது பெயரைக் கேட்டாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். அவன் தந்தை பெயரைக் கேட்டாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். ஊர் எது என்றாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். உன் குடிசை எங்கே இருக்கிறது என்றாராம். ஐவேல் இருக்கும் குடிசை என்றானாம். இந்தக் கற்பனைக் கதை வழியே வள்ளலின் பெயர் அசதி என்றும், அவனது ஊர் ஐவேல் என்றும், அசதியைப் பாடிய நூல் அசதிக்கோவை என்றும் கூறப்படுகிறது. இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. சில பாடல்கள் சிதைவாகக் கிடைத்துள்ளன. அகத்துறைப் பாடல்களாக அவை உள்ளன.\nஅற்றாரைத் தாங்கிய ஐவேல் அசதி அணிவரைமேல்\nமுற்றா முகிழ்முலை எவ்வாறு சென்றாள்\nகற்றார்ப் பிரிவும் கல்லாதவர் ஈட்டமும் கைப்பொருள்கள்\nஅற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே\nஆய்ப்பாடி ஆயர்தம் ஐவேல் அசதி அணிவரையில்\nகோப்பாம் இவள் எழில் கொங்கைக்குத் தோற்றிய காடிரண்டும்\nசீப்பாய்ச், சிணுக்கிரியாய், சிமிழாய். சின்ன மோதிரமாய்\nகாப்பாய், சதுரங்கமாய், பல்லக்கு ஆகிக் கடைப்படவே.\nபந்தன் அந்தாதி என்னும் நூல் ஔவையாரால் பாடப்பட்டது என அந்த நூலின் குறிப்பு கூறுகிறது. அந்த நூலின் உள்ளே வரும் பாடல்களை எண்ணிப் பார்க்கும் போது இந்த நூல் எந்த ஔவையாராலும் பாடப்படவில்லை என்பது தெளிவாகும். இந்த நூலில் உள்ள ஒரு பாடல் ஔவையாரையே குறிப்பிடுகிறது. இதனால் ஔவையார் பெயரில் யாரோ ஒரு புலவர் இந்த நூலைச் செய்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.\nஇந்த நூலில் காப்புச் செய்யுள் ஒன்றும், 100 வெண்பாக்களும் உள்ளன.\nஇயல் வணிகன் பந்தனைப்போல் ஒப்பு ஆரே சொல்வீர் என ஔவை இவனைப் புகழ்ந்துள்ளார்.\nதுரை என்னும் ஆங்கிலேயர் காலச் சொல் இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nநாகன் காவிரிப்பூம்பட்டினத்து வணிகன். இவன் நாகன் பந்தன் எனவும் போற்றப்படுகிறான். இவனது தந்தை நாகந்தை. பந்தன் நாகலோகம் சென்று வாணிகம் செய்தான். அப்போது அவனுக்கு நாகராசன் பெருஞ் செல்வத்தோடு இரண்டு அரிய பொருள்களையும் அளித்தான். போர்த்திக் கொண்டால் இளமை மாறாதிருக்கும் பொன்னாடை ஒன்று. உண்டவர் நீடூழி காலம் வாழச் செய்யும் நெல்லிக்கனி மற்றொன்று. பொன்னாடையை ஔவைக்குக் கொடுத்ததுடன் நெல்லிக்கனியில் பாதியைத் தான் தின்று விட்டு, மீதிப் பாதியையும் ஔவைக்குக் கொடுத்தான். பெற்று மகிழ்ந்த ஔவை (பந்தனந்தாதி பந்தன் நவமணிமாலை) ஆகிய நூல்களைப் பாடினார்.\nகி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன்\nஅகம், புறம், நற்றிணை, குறுந்தொகை\nசேர சோழ பாண்டியர், நாஞ்சில் வள்ளுவன் முதலானோர்\nகி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன்\nஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை\nஔவை குறள், விநாயகர் அகவல்\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n... அதியமான் கோட்டை வரலாறு அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் ...\nவள்ளல் பாரி வேள் வரலாறு... வள்ளல் பாரி வேள் வரலாறு... வள்ளல் பாரி வேள் வரலாறு வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தில் பி...\n... பாண்டிய மன்னன் வரலாறு பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுர...\n... சேர மன்னர்களின் வரலாறு சங்ககாலச் சேரர் ஆட்சி - சேர மன்னர்களின் வரலாறு : தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது....\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nஇரண்டாவது இளங்கோவடிகள் விபுலானந்தர் நினைவு தினம் இன்று ஜூலை 19\nடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள்\nஇலங்கை முல்லைத்தீவில் 500-வது நாளுடன் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நிறுத்தம்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineulagam.com/actresses/06/156748?ref=right-popular", "date_download": "2018-07-19T11:36:24Z", "digest": "sha1:HMR4NACIUMGQV26MPBXTEXTIGW2SBK4B", "length": 7097, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் படத்திற்கு முன்னாலேயே வா! பிரபல நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி நடனம்! வெளியான வீடியோ - Cineulagam", "raw_content": "\nசின்னத்திரை நடிகை தூக்குப்போட்டு தற்க��லை செய்துகொண்டதற்கு பின் இப்படி ஒரு சோக கதையா\nசர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தொட்டு கூட பார்த்திடாதிங்க....பெரிய ஆபத்து\nபிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்\nபாலியல் கொடுமை செய்பவனுக்கு இப்படி இருக்கனும் தண்டனை சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ\nஎந்நேரமும் கேம் விளையாடிய மகன்....உலகத்தை விட்டே அனுப்பிய தந்தை\nஎல்லாரையும் குறைசொல்லும் வைஷ்ணவி மிட்நைட் மசாலாவில் செய்த வேலையை பார்த்தீர்களா\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nநேரத்திற்கு வேலைக்கு செல்ல 32 கி.மீ நடந்து சென்ற இளைஞர்...முதலாளி கொடுத்த பரிசு என்னனு தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை... அதிர்ச்சியில் திரையுலகம்\nபிக்பாஸ் வீட்டில் அனைவரது உண்மைமுகம் இதுதானா\nதெய்வமகள் சீரியல் புகழ் வானி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nதமிழ் படத்திற்கு முன்னாலேயே வா பிரபல நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி நடனம் பிரபல நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி நடனம்\nநடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் எப்போதும் துடிப்பாக இருப்பவர். அரசியல் குறித்து தொலைக்காட்சி விவாதங்களிலும் ஊடகங்களிலும் கருத்து தெரிவித்து வருகிறார்.\n90 களின் ஒரு நேரத்தில் பல படங்களில் நடித்தவர். தற்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். நாளை வெளிவர இருக்கும் தமிழ் படத்தில் கூட நடித்துள்ளார்.\nதற்போது இன்ஸ்டாகிராமில் டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=05-09-14", "date_download": "2018-07-19T11:21:07Z", "digest": "sha1:WBQAGI6JPM6TWK23H64PNVFZCJYDQ4HV", "length": 19765, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From மே 09,2014 To மே 15,2014 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nசபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம்போர்டு ஜூலை 19,2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு; மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஜூலை 19,2018\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: மோடி ஜூலை 19,2018\nநீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு தவறுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல: ஜவேத்கர் ஜூலை 19,2018\nநம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக ஆதரவு ஜூலை 19,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\nமங்காத்தா எதிர்பார்த்தபடி மந்த்ரா எல்லாரையும் முந்திக் கொண்டு முன்னேறினாள். மங்காத்தாவுக்கு ஒரே எரிச்சல். தன் \"கமால்' வேலையைக் காட்ட, தம் பிடித்து மந்த்ராவை அணுகியவள், தன் முழங்கையினால் மந்த்ராவை ஒரு இடி இடித்தாள். அவ்வளவுதான். பாவம் மந்த்ரா. மங்காத்தாவின் அந்த இடியை சமாளிக்க முடியாமல், தடுமாறித் தரையில் விழுந்தாள். மங்காத்தா ரிப்பன் அறுத்துக் கொண்டு ..\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\nஅறையினுள்ளே குறட்டை ஒலி கேட்டது. ஓசைப்படுத்தாமல் கதவைத் திறந்தான். அங்கு ஓர் அழகிய பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் அரச குமாரியாகத் தான் இருக்க வேண்டும். அவள் மடியில் தனது தலையை வைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தது அந்தக் கொடிய மிருகம்.மூன்றாவது வேட்டைக்காரன் தாமதிக்கவில்லை. அந்த மிருகத்தின் தலையை ஒரே வீச்சில் சீவித் தள்ளினான். தனக்கு விடுதலை கிடைத்ததில் அந்த இளவரசிக்கு ..\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\nகுதிரைச் சக்தி என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அதை இயந்திர சக்தியை மதிப்பிடவும், அளவிடவும் பயன்படுத்திய முதல் மனிதர் ஜேம்ஸ்வாட்.மனித சக்தியால் செய்யக் கூடிய பணிகளை இயந்திரங் களைக் கொண்டு செய்தால் மனிதர்களின் நேரமும், உழைப்பும் மீதமாகும் என்றும் சிந���தித்த விஞ்ஞானி ஜேம்ஸ்வாட் ஆவார்.பெரும்பாலான விஞ்ஞானிகளைப் போலவே ஜேம்ஸ்வாட்டும் ஒரு சாதாரண வியாபாரி யின் ..\n4. அந்த ஏழு நாட்கள்\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\nமகாராஷ்டிர மாநிலத்தில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும், நிறைவும் இருந்து கொண்டே இருக்கும். இதனை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒருவர் இதில் ஏதோ சூட்சுமம் இருப்பதாக நினைத்தார்.ஒருநாள் ஞானியிடம் சென்று, \"\"தங்களால் மட்டும் எப்படி எந்நேரமும் சாந்தம், அமைதி, புன்னகை என்று இருக்க முடிகிறது சுவாமி'' என்று கேட்டார்.இந்தக் ..\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\nவாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்கொத்தி, கொத்தி, மரங்கொத்திஅழகான சிவந்த நிற அலகுடன் காணப்படும் மரங்கொத்தி பறவைகள் மரங்களில் அமர்ந்து கொண்டு மரங்களின் பட்டைகளை கொத்திக் கொண்டிருப்பதை பார்க்கலாம். இந்த பறவைகளுக்கான உணவு அந்த மரப் பட்டைகளில் இருக்கிறது. மரப்படைகளின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் புழு, பூச்சிகளை தேடிப்பிடித்து இவை ..\n6. எடை என்ன தெரியுமா\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\nஇங்கிலாந்து நாட்டை அரசி எலிசபெத் அரசாண்டு கொண்டிருந்த காலம். அப்போது அவருடைய அவையிலே கவிஞர்களும், போர்ப்படைத் தலைவர் களும், கப்பற்படைத் தலைவர்களும் கூடியிருந்தனர்.சர் வால்டர் ராலி என்பவர் கப்பற்படைத் தலைவர்களில் ஒருவர். அவர் அமெரிக்காவிலிருந்து புகையிலையைக் கொண்டு வந்தார். அவர் புகை பிடிக்கும் பழக்கத்தையும் கற்றுக் கொண்டு இருந்தார்.ஒரு தடவை அவர் அரசியோடு ..\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\nபஸ்களில் பயணம் செய்யும் போது சிலர் வாந்தி எடுப்பர். இதற்குக் காரணம் நம் காதுகளின் உட்பகுதியில் மூன்று அரை வட்ட வடிவக் குழாய்கள் உள்ளன. இவை மூளையுடன் ஒரு நரம்பின் மூலம் நேரடித் தொடர்பு கொண்டவை. இந்தக் குழாய்கள் சிலருக்கு மிகவும் நுண்ணியதாக அமைந்து விடுவதுண்டு. தொடர்ச்சியான பயணத்தில் இக்குழாய்கள் மிக அதிகமாக அதிர்வடைகின்றன. இதனால், அருகில் உள்ள வேகஸ் நரம்பும் ..\n8. எப்படி வந்தது அம்மா தினம்\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\nஅமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண், அன்னா ஜார்விஸ். தாயார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஆனால், அவரின் தாயார் நோய் வாய்ப்பட��டு 1905ம் ஆண்டு மே மாதத்தில் இறந்து விட்டார். அன்னா ஜார்விஸ் துடித்தார். தன்னை போலவே மற்றவர் களும் போற்ற வேண்டும் என்று நினைத்து தேசிய அளவில் 1907ம் ஆண்டு ஓர் இயக்கத்தை தொடங்கினார்.அதற்கு அமெரிக்காவில் 1911ம் ..\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\nஒரு மனிதனை நோக்கி சந்தர்ப்பம் எவ்வாறு எப்போது வருகிறது எப்படி நழுவிப் போய்விடுகிறது என்பதைப் பற்றி சிற்பம் ஒன்று வடிக்க ஆசை வந்தது கிரேக்க நாட்டைச் சேர்ந்த சிற்பி ஒருவருக்கு. அப்படியே சிலை ஒன்றையும் வடித்தார் அவர்.அந்தச் சந்தர்ப்பச் சிலைக்கு இரண்டு இறக்கைகள் இருந்தன. முன்னந் தலையில் நிறைய கூந்தல் இருந்தது. ஆனால், பின்னந்தலை வழுக்கையாக இருந்தது. இதனிடையே அச்சிலை ..\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\nபதிவு செய்த நாள் : மே 09,2014 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-07-19T11:44:23Z", "digest": "sha1:YT4SRSRQKPROUAR53VRIYAJJ26PEYQ46", "length": 5067, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஐந்து நாட்களின் பின் சடலமாக மீட்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nமீன்பிடிக்க கடலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஐந்து நாட்களின் பின் சடலமாக மீட்பு\nமீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடுப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஐந்து நாட்களின் பின்னர் இன்றைய தினம்(13) சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.\nகுறித்த மீனவர் கடந்த-09 ஆம் திகதி மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றிருந்தார். அவரது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் முன்னர் கரை ஒதுங்கிய போதிலும் குறித்த குடும்பஸ்தர் தொடர்பான எதுவித தகவலும் வெளியாகவில்லை.\nஇதனையடுத்துச் சக மீனவர்கள் இணைந்து குறித்த மீனவரைக் கடலுக்குள் சென்று தேடிய போதும் எதுவும் தெரியவராத நிலையிலேயே இன்று அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.\nவடமராட்சி கிழக்கு கட��டைக்காடுப் பகுதியைச் சேர்ந்த யூலி அலக்சன்(வயது-38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.\n‘பிரிக்ஸ்’ அமைப்பின் 8வது பிரிக்ஸ் மாநாடு சீனாவில்\nகாணாமல்போனோர் சட்டத்தை மீளப்பெற வேண்டும் - இராணுவத்தை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு\nஅதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்\n93 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் \nமக்கள் மனதை வெல்வதே இராணுவத்தினரின் இலட்சியம் - கட்டளைத் தளபதி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:318", "date_download": "2018-07-19T11:45:42Z", "digest": "sha1:4CKR2TWLFSS35QUACAD26JO2QKYIDDIG", "length": 16144, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:318 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,973] இதழ்கள் [10,245] பத்திரிகைகள் [35,082] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,161] பதிப்பாளர்கள் [2,503] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [55,766] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2017, 07:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2012/02/27/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-07-19T11:12:16Z", "digest": "sha1:DW5USP6SCLRWX5G66RPBXYOM26XC7IQ7", "length": 19189, "nlines": 122, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "பனிக் காலத்தில் பாப்பாவின் பட்டு மேனிப் பராமரிப்பு: – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nபனிக் காலத்தில் பாப்பாவின் பட்டு மேனிப் பராமரிப்பு:\nகுழந்தை பிறந்தவுடனே கொழு கொழு என்று இருக்கும். சிலநாட்களில் அதன் உடலில் இருக்கும் நீர் வற்றி சருமம் உலர்ந்து மெலிதாகிவிடும். இதனை “அரை வற்று” என்பார்கள். நாளாக ஆக, குழந்தை மெது மெதுவே உடல் தேறும். எல்லாக் குழந்தைகளுமே இந்த மாற்றத்திற்கு உள்ளானாலும் பனிக் காலத்தில் பிறக்கும் குழந்தைகளின் சருமப் பரமாரிப்பு என்பது சற்று கடினமானதுதான். புதுத் தாய்மார்களுக்கு பாப்பாவை பாதுகாக்க பல்வேறு குறிப்புகளைச் சொல்லவே இந்தக் கட்டுரை.\nபிறந்த குழந்தைகளின் இளம் சருமம் சிறிது வறண்டே காணப்படும். குளிர் காலத்தில் பாப்பாவின் சருமம் வெகு சீக்கிரம் ஈரப்பதத்தை இழந்துவிடும். பனிக் காலத்தில் சில்லென்ற காற்றும் அதில் இருக்கும் குறைந்த ஈரப் பதமும் சேர்ந்து சருமத்தை வறண்டு போகச் செய்யும். இதனால் குழந்தைகளின் சருமத்தில் நீர் வறண்டு தோல் உரியவும் ஆரம்பிக்கும். மேலும் தோல் சிவந்தும் காணப்படும்.\nகுழந்தையை குளிர் தாக்காமலிருக்க ஸ்வெட்டர், குல்லா முதலியவற்றை போட்டே வைப்பதால், இளம் சருமத்தில் சின்ன சின்ன தடிப்புகள் (heat rashes) ஏற்படலாம். முதலில் பருத்தியால் ஆன உடையைப் போட்டுவிட்டு, பிறகு கம்பளி உடையைப் போடுங்கள். குழந்தையின் இளம் சருமத்திற்கு பருத்தி ஆடையே சிறந்தது. இதற்கு மேல் கம்பளி ஸ்வெட்டரைப் போடுவதால் குழந்தையின் சருமமும் பாதுகாப்பாக இருக்கும். குளிரும் தாக்காது.\nநாப்கின்கள் போடுவதற்கு முன்மாய்ச்சரைசர் தடவவும். ஒவ்வொருமுறை நாப்கின் மாற்றும் போதும் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் ஒரு மிருதுவான துணியை நனைத்து பாப்பாவை நன்றாகத் துடைக்கவும். மாய்ச்சரைசர் தடவி பிறகு நாப்கின் கட்டவும். ஒரே நாப்கின்னை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.\nஅதிக சூடான தண்ணீர் வேண்டாம். மிதமான சூட்டில் குழந்தையைக் குளிப்பாட்டவும். குழந்தைக்கு பயன்படுத்தும் சோப்பு, எண்ணெய் முதலியவை அதிக வாசனை இல்லாததாக இருக்கட்டும். சூடு நீர் குழந்தையின் இளம் சருமத்தை உலர்த்தி விடும்; அதிக வாசனைப் பொருட்கள் குழந்தையின் உடம்பில் ஊறும் எண்ணைப் பசையைப் போக்கிவிடும். பேபி ஆயில��� குளிப்பாட்டும் தண்ணீரில் சில துளிகள் கலந்து விடவும். குளிப்பாட்டிய பின் ஈரம் போக குழந்தையின் உடம்பைத் மிருதுவாகத் துடைக்கவும். மிக மிக மெல்லிய உறுத்தாத டவலை பயன் படுத்தவும். குழந்தையின் சருமத்திற்கு ஏற்ற லேசான வாசனையுள்ள சிறந்த மாய்ச்சரைசர் தடவவும். நான்கு அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை மாய்ச்சரைசர் தடவுவதால் சருமம் பொலிவாக இருக்கும். பாப்பாவின் பட்டு மேனி பாதுகாப்பாக இருக்கும்.\nபெரியவர்களைப் போலவே சிறு குழந்தைகளுக்கும் பனிக் காலத்தில் உதடுகள் வெடிக்கும். உடம்பிற்குத் தடவும் மாய்ச்சரைசர் உதட்டுக்கும் நல்லது. பாப்பாவின் பவள உதடுகளில் துளியே துளி மாய்ச்சரைசெர் தடவுங்கள். பாப்பா உதடுகள் மின்னச் சிரிக்கும் சிரிப்பிற்கு ஈடு இணை ஏது\nஆயுர்வேதம் குழந்தைகளின் சருமப் பராமரிப்புக்கு பல விதமான மூலிகைகளை சிபாரிசு செய்கிறது. இவை தலை முறை தலைமுறையாக குழந்தைகளின் மேனிப் பராமரிப்புக்கு என்றே உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றன. ஆயுர்வேத புத்தகங்களிலும் இந்த மூலிகைகளைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.\nஆலிவ் ஆயில்: வைட்டமின் ஈ நிரம்பிய இது, சருமத்தை பராமரித்து , போஷாக்களித்து பலவிதமான சரும நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இந்த ஆயில் நுண்ணுயிர் கொல்லியாகவும் (antimicrobial), சருமத்திற்கு இதமளிப்பதாகவும் இருப்பதால் பாப்பாவின் சருமம் ஆரோக்கியமாகவும், மெத்து மெத்தென்றும் இருப்பதற்கு உதவுகிறது. தினமும் குழந்தைக்கு ஆலிவ் ஆயில் தடவி குளிப்பாட்டுவதால் குழந்தையின் சருமம் மிக மிக மிருதுவாக இருக்கும்.\nபாதாம் ஆயில்: குழந்தையின் இளம் உடலை ஈரப் பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.\nபாலா (country mallow) எனப்படும் மூலிகை பாப்பாவின் தளிர் மேனியை நோய் கிருமிகள் தாக்காமல் காக்கிறது.\nலிகோரைஸ் (Licorice) ஒரு வித வேர். இதன் சாற்றை உடம்பில் தடவினால் அரிப்பு, வீக்கம், தோல் சிவப்பாதல் முதலியவற்றை நீக்கும்.\nமெந்தியம்: குழந்தையின் சருமத்தில் இருக்கும் ஈரப்பசையை காக்கும் ஒரு அற்புதமான இயற்கையான மாய்ச்சரைசெர் மெந்தியம். இன்றைக்கும் பாட்டி வைத்தியத்தில் மெந்தியத்திற்கு ஸ்பெஷல் இடம் இருக்கிறது. பச்சைப் பயறு மற்றும் மெந்தியம் சேர்த்து அரைத்து சோப்பிற்கு பதிலாக அந்தக் காலத்தில் உபயோகப் படுத்தியதால் தான் இன்றைக்கும் பாட்டிமார்கள் அழகாக இருக்கிறார்கள் பல வீடுகளில் இன்றைக்கும் குழந்தைக்கு குளிப்பாட்டும்போது பச்சைப் பயறு மாவையே பயன்படுத்துகிறார்கள்.\nஆலோ வேரா எனப்படும் கற்றாழை சாறு: இது மிகப் பிரபலமான அழகு சாதனங்களிலும், பேபி கேர் பொருட்களிலும் உபயோகப் படுத்தப்படும் ஒரு மூலிகை. ஆயுர்வேதத்திலும் இதன் உபயோகம் அளவிடமுடியாதது. சரும நோய், தீக்காயங்கள், புண்கள் ஆகியவற்றிற்கு இது ஒரு சிறந்த நோய் நிவாரணியாக செயல் படுகிறது. பாப்பாவின் பட்டு மேனியை நோய் கிருமிகள் அண்டா வண்ணம் பாதுகாக்கும் இது.\nகுழந்தைக்கான பராமரிப்புப் பொருட்கள் வாங்கும்போது மேற்கண்ட பொருட்கள் அடங்கியுள்ள லோஷன், கிரீம் எனப் பார்த்து வாங்குங்கள். இந்தப் பனிக் காலத்திலும் உங்கள் கண்மணி வாடாமல் அன்று பூத்த புஷ்பம் போலே இருப்பாள். புது பாப்பாவுக்கும், புது தாய்மார்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nPrevious Post தேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜன மார்ச் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/rajasekar-070504.html", "date_download": "2018-07-19T11:20:14Z", "digest": "sha1:TSU4WS5ECBI4MYMBEZQRFBFNLBTGNTM4", "length": 11317, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உடம்பு எப்படி இருக்கு? | Dr Rajasekar re enters Kollywood - Tamil Filmibeat", "raw_content": "\n» உடம்பு எப்படி இருக்கு\nடாக்டர் ராஜசேகர் மீண்டும் தமிழுக்கு வருகிறார். அவர் தயாரித்து, நடித்த எவடத்தே நக்கேண்டி படம் உடம்பு எப்படி இருக்கு என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.\nவித்தியாசமான படத் தலைப்புக்குப் பெயர் போனவர் டாக்டர் ராஜசேகர்.\nமதுரைக்கார டாக்டரான இந்த நடிகர் நடித்த தெலுங்குப் படம் தமிழில் டப் ஆகி வந்தபோது அந்தப் படத்துக்கு இதுதாண்டா போலிஸ் என்று பெயர் வைத்தபோது படம் ஹிட் ஆனதோ இல்லையோ, டைட்டில் செம பிக்கப் ஆகி அமர்க்களப்படுத்தியது.\nஅந்த வரிசையில் இப்போதும் செமையான டைட்டிலுடன் மறு வருகை புரிகிறார் டாக்டர் ராஜேசகர். உடம்பு எப்படி இருக்கு ஒரு குடும்பப் படம். அதாவது, ராஜசேகரின் மனைவி ஜீவிதா இயக்க, ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள்கள் ஷிவானி, சிவாத்மிகா ஆகியோர் தயாரித்துள்ளனர்.\nராஜசேகர்தான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். தம்பியும், நடிகருமான செல்வா வசனம் எழுதியுள்ளார். அப்படீன்னா இது குடும்பப் படம்தானே.\nபடப்பிடிப்பு ஆரம்பமாகி விட்டது. தெலுங்கு ஒரிஜினலை ஜீவிதாவும், சமுத்ராவும் சேர்ந்து இயக்கியிருந்தனர். படம் அங்கு சூப்பர் ஹிட். அதே கதையை இப்போது தமிழுக்கும் கொண்டு வருகிறார்கள்.\nஅரசியலுக்கு இளைஞர்கள் நிறைய வர வேண்டும். அங்கு அசுத்தமடைந்திருக்கும் சூழலை துடைத்து அதற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதையாம்.\nஅரசியல் களம்தான் படத்தின் கதைக்களம் என்பதால் படத்தில் அடிதடி, அடாவடிக்குப் பஞ்சம் இருக்காது என நம்பலாம். படத்தில் இன்னொரு முக்கிய விஷயமும் உண்டு. அதாவது கவர்ச்சி இமயம் முமைத்கானின் காரசார ஆட்டமும் படத்தில் இருக்கிறதாம்.\nஅடிச்சுத், துவைத்து அதகளப்படுத்துங்க ராசா\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன��� உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nஸ்ரீ ரெட்டியின் புகார்கள் ஆதாரம் அற்றது : நடிகர் கார்த்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ulavan.wordpress.com/2013/07/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T11:49:32Z", "digest": "sha1:DNE3EPMR6Q65ZZGSYKG3HNDUJEM7AMW7", "length": 8873, "nlines": 68, "source_domain": "ulavan.wordpress.com", "title": "சிம்பு, ஹன்சிகா ஒப்புதல்: காதலிப்பது உண்மைதான் | உழவன்", "raw_content": "\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசிம்பு, ஹன்சிகா ஒப்புதல்: காதலிப்பது உண்மைதான்\nநாங்கள் காதலிப்பது உண்மைதான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக்கொண்டுள்ளனர். வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியானது. இருவரின் காதல் பற்றி சில வாரங்களாக கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. ‘ஹன்சிகாவை காதலிக்கிறீர்களா என்று சிம்புவிடம் கேட்டபோது, ‘என் ஆத்மா சம்மதித்தால் எதுவும் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஹன்சிகாவிடம், ‘சிம்புவை காதலிக்கிறீர்களா என்று சிம்புவிடம் கேட்டபோது, ‘என் ஆத்மா சம்மதித்தால் எதுவும் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஹன்சிகாவிடம், ‘சிம்புவை காதலிக்கிறீர்களா என்று கேட்டபோது மறுத்துவந்தார். இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்தபோதுகூட ‘சிம்புவை காதலிக்கவில்லை என்று அவர் பதில் அளித்திருந்தார்.\nஇந்நிலையில் ஹன்சிகா இன்று காலை 6 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவை காதலிப்பதாக கூறியிருக்கிறார். இதையடுத்து கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. டுவிட்டரில் அவர் கூறும்போது, ‘என் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பலவித வதந்திகள் பரவி வருகிறது. அதை நான் சரி செய்ய விரும்புகிறேன். ஆமாம், நான் எஸ்.டி.ஆரை (சிம்பு) காதலிப்பது உண்மைதான். அது எனது தனிப்பட்ட வாழ்க்கை. யாரும் அதுபற்றி பேச வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஹன்சிகாவின் இந்த மெசேஜை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எடுத்து போட்டதுடன் அவரும் கருத்து வெளியிட்டிருக்கிறார். ‘ஆமாம், ஹன்சிகாவை காதலிப்பது உண்மைதான். எங்களது இருவீட்டு பெற்றோரும் சந்தித்து பேசி எங்கள் திருமணம் பற்றி முடிவு செய்வார்கள். எங்களது தனிப்பட்ட விருப்பத்துக்கு மதிப்பளித்து யாரும் இதில் தலையிட வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.\n« மகள் வல்லுறவு தந்தை கைது பாலியல் வல்லுறவு தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு சென்ற பெண்ணுக்கு சிறை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவேலூர் மருத்துவமனையில் பெண் பேய் \nஆடை அவிழ்த்து அம்மணமாக்கி தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தும் மலையாளிகள்.\nகாதலி உடை மாற்றும்போது வீடியோ எடுத்து காசு உழைக்கும் காதலன் \nஇஸ்ரேலிய பெண் இராணுவத்தினரின் அரை நிர்வாண ஆட்டம் வெளியான வீடியோவால் பரபரப்பு (Video, Photo)\nமுயலின் கள்ளத் தொடர்பு அம்பலம்\nஇவர்கள் எப்படி பெண்ணைக் கையாள்கிறார்கள் என்று பாருங்கள்\nகவர்ச்சி நடிகை நமிதாவின் வெளிவராத கவர்ச்சிகரமான வீடியோக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+00212.php", "date_download": "2018-07-19T11:52:04Z", "digest": "sha1:TUI2274ONY76PNIZT3LI2MDJXBRCVWEO", "length": 10680, "nlines": 20, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் +212 / 00212 / 011212", "raw_content": "தொலைபேசி எண் +212 / 00212\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nதொலைபேசி எண் +212 / 00212\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் ���ீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாக்கடோனியக்மார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இந்தியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0091.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://albinsonjg.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-19T11:11:36Z", "digest": "sha1:Q7WTAMG5ZFU5AINTATI5UUMBTEYTWTQI", "length": 25437, "nlines": 350, "source_domain": "albinsonjg.blogspot.com", "title": "albinson.JG: March 2010", "raw_content": "\nதேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய\nகணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இரு���்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது.\nஉதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல் இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம்.\nMy Computer ல் விண்டோஸ் XP இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு சென்று அங்கு\n\\Windows\\System32\\Drivers\\etc என்ற கோப்புறைக்குள் சென்று அங்குள்ள hosts என்ற கோப்பை Notepad ல் திறந்து கொள்ளுங்கள்.\nஅந்த கோப்பின் கடைசி வரிக்கு சென்று அங்குள்ள 127.0.0.1 localhost என்ற வரிக்கு அடுத்த வரியில் 127.0.0.2 www.youtube.com எனவும், மற்றொரு தளத்தை Block செய்ய 127.0.0.3 www.sitename.com (உங்களுக்கு வேண்டியபடி) டைப் செய்து host கோப்பை சேமித்து. மூடி விடவும்.\nகணினியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதும். இனி அந்த குறிப்பிட்ட தளங்கள் உங்கள் கணினியில் திறக்காது.\nவெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஆன்லைன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சேவையினை மைக்ரோசாப்ட் வரும் புத்தாண்டு முதல் தர முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் விண்டோஸ் அஸூர் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற பெயரில் இந்த சேவை கிடைக்கும்.\nஇன்டர்நெட் மூலம் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளையும், பைல்கள் சேவ் செய்து வைக்க டிஸ்க் இடத்தையும் பெற தற்போது மக்கள் விரும்பு கின்றனர். இதனால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். எனவே இன்டர்நெட் சேவையினைக் கட்டணம் செலுத்திப் பெறுவது போல, இந்த சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுப் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன் பரீட்சார்த்த அடிப்படையில் தந்து வந்தது. தற்போது இதனை முழுமையான கட்டமைப்பில் தர முடிவு செய்து, ஜனவரி 1 முதல் இதில் இறங்குகிறது. சென்ற வாரம் நடைபெற்ற மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் வல்லுநர்களின் ஆண்டுக் கூட்டத்தில், அப்பிரிவின் தலைவர் ரே ஓஸி அறிவித்தார்.\nமுதல் மாதத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். பிப்ரவரி முதல் பயன்படுத்தப்படும் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையில் மைக்ரோசாப்ட் நிச்சயம் பெரிய அளவில் இயங்க முடியும். தாமதமாகத்தான் இதனை மைக்ரோசாப்ட் இயக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே அமேஸான் (Amazon.com Inc) கட்டணம் பெற்றும் கூகுள் இலவசமாகவும் இந்த சேவையினை ஓரளவிற்கு வழங்கி வருகின்றனர்.\n1. திடீர் திடீரென எழுந்து வரும் பாப் அப் விளம்பரங்களிலிருந்து பொருட்களை வாங்க முயற்சிக்க வேண்டாம். ஸ்பேம் மெயில்களில் வரும் விளம்பரங்கள் எல்லாம் வேறு எதற்கோ உங்களை மாட்ட வைத்திடும் விளம்பரங்களே.\n2. உங்களுடைய இமெயில் முகவரி, இல்ல முகவரி, பேங்க் அக்கவுண்ட் எண், அதன் இணையதளத்தில் நீங்கள் பயன்படுத்தும் பெயர், பாஸ்வேர்ட் மட்டுமின்றி, உங்களுக்குத் தெரிந்த மற்றவர்களின் மேற்படி தகவல்களையும் வெப்சைட்டில் தரும் முன் பலமுறை யோசிக்கவும். உங்கள் பணம் சார்ந்த தகவல்களை தரவே வேண்டாம்.\n3. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க் கிழமையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வெப்சைட்டில் தரும் பேட்ச் பைல்களைக் கொண்டு, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திட மறக்க வேண்டாம்.\n4. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்து இயக்காமல் இன்டர்நெட் தளங்களை பிரவுஸ் செய்திட வேண்டவே வேண்டாம். அண்மைக் காலத்திய அப்டேட் வரை பெற்ற பின்னரே,கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடவும்.\n5. பயர்வால் ஒன்றை இன்ஸ்டால் செய்திடாமல் இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்ள வேண்டாம்.\n6. மற்றவர்களின் கிரெடிட் கார்ட் எண், பேங்க் அக்கவுண்ட் எண் இவற்றைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம். இது வீணான பழியையும் கொண்டு வந்து சேர்க்கும்.\n7. இணையத்தில் உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைப் பயன்படுத்துகையில், அந்த தளம் தோன்றுகையில் டாஸ்க் பாரின் சிறிய பேட் லாக் போன்ற படம் தெரிந்தால் மட்டுமே தரவும். அல்லது அதன் முகவரியில் அந்த தளம் பாதுகாப்பானது என்பதற்கான அடையாளத்தைத் தேடவும். பெரும்பாலும் இதன் முகவரிகள் https: என எஸ் (s) என்ற எழுத்தையும் சேர்த்துக் கொண்டு தொடங்கும்.\n8.நைஜீரியா அல்லது மற்ற பிரபலமாகாத நாடுகளின் பேங்கர்கள் அல்லது பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உங்களுக்கு வரும் இமெயில்களைப் படிக��காமலேயே நீக்கிவிடுங்கள்.\n9.இதனை பார்வேர்ட் செய்திடுங்கள் என்று வரும் மெயில்களை அலட்சியம் செய்துவிடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி கெட்ட பெயர் எடுக்காதீர்கள். எல்லாம் ஏமாற்றுவேலை.\n10. உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் மற்றும் முக்கிய நாட்களின் தேதிகளை பாஸ்வேர்டாகப் பயன்படுத்த வேண்டாம்.\nஇது என்ன பத்து கட்டளையா என்று கேட்கிறீர்களா இன்னமும் சில பாதுகாப்பிற்கான வழிகள் உள்ளன. ஆனால் குறைந்த பட்சம் இதனைப் பின்பற்றவும்\nநீங்க இன்னும் 20 வருஷம் கழிச்சு எப்படி இருப்பீங்க..\nநம்ம நமீதா இன்னும் 20 வருஷம் கழிச்சு எப்படி இருப்பாங்க...\nநமீதா 20 வருடம் கழித்து\nஇதுக்கு ஒரு சின்ன மென்பொருள் இருக்கு. இதுல உங்க பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை கொடுத்தீங்கன்னா, 10 வினாடில நீங்க இன்னும் 20 வருஷம் கழிச்சு எப்படி இருப்பீங்கன்னு காட்டுது. இதுக்கு நீங்க ஸ்டைலா உள்ள புகைபடத்தையோ, புரொஃபைல் லுக் உள்ள புகைப்படத்தையோ தேர்ந்தெடுக்கக் கூடாது. சாதாரணமா பாஸ்போர்ட்க்கு எப்படி போஸ் கொடுத்திருப்பீங்களோ அந்த மாதிரி புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோட புகைபடத்திற்கு சரியாக வராது. அப்புறம் என்ன உடனே முயற்சியில இறங்குங்க......\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள தொடர்பில் மென்பொருளை பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளவும். இப்பொழுது மென்பொருளை நிறுவிக் கொள்ளவும். மென்பொருளை RUN பண்ணக் கூடாது. அதனுள் இருக்கும் PROPHECYMASTER.dll FILE லை COPY செய்துகொண்டு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES -> LUXAND -> PROPHECYMASTER FOLDER ரினுள் சென்று PASTE செய்யவும். அப்பொழுது ORIGINAL FILE லை REPLACE பண்ண வேண்டுமா என்று கேட்கும் அதற்கு YES என்று கொடுக்கவும். இப்பொழுது மென்பொருளை RUN பண்ணவும். SERIAL NUMBER கேட்டால் உங்கள் பெயரையும், கீழே 111111111111111 என்று கட்டம் முழுவதும் கொடுக்கவும். அவ்வளவுதான் இப்பொழுது நீங்கள் மென்பொருளை பயன்படுத்தலாம்.\nபென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க..\nஎனக்கு தெரிந்த கணிப்பொறி நுணுக்கங்களை என்னால் முடிந்த அளவுக்கு நண்பர்களுக்கு பகிர்த்துகொள்வது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://kamalalayan.blogspot.com/2013/03/", "date_download": "2018-07-19T11:21:03Z", "digest": "sha1:FJFI4CMVPDWQZJG6QTJNB46D7LWRFLG3", "length": 16433, "nlines": 95, "source_domain": "kamalalayan.blogspot.com", "title": "என் சிந்தனைகள்: March 2013", "raw_content": "\nமணிமேகலை என்ற தமிழ்க்காப்பியம் என்னை மிகவும் கவர்ந்த மரபு இலக்கியங்களில் ஒன்று.சிலம்பின் வழி அதன் தொடர்ச்சியாகவும் சககவிஞன் ஒருவரின் படைப்பாகவும் அமைந்த காவியம் இது.இரட்டைக் காப்பியங்கள் என்று புகழ் பெற்ற இலக்கியங்கள் இந்த இரண்டும்.மாதவி என்ற ஒரு தனிச் சிறப்பு மிக்க பெண்ணின் மகளாகப் பிறந்து மணிபல்லவத் தீவில் தன முற்பிறவி பற்றி அறிகிறாள். இளவரசன் உதயகுமாரன் தன மீது கொண்ட காதலை ஏற்க மறுத்துத் துறவறம் பூண முடிவு செய்கிறாள். அன்றைய தமிழ்ச் சமூகத்தில் சமணமும்,பௌத்தமும் மிகுந்த செல்வாக்குடன் இருந்ததால் அந்தத் தத்துவ அடிப்படையில் பௌத்தத் துறவியாகி மக்களின் பசிப்பிணி தீர்க்க அமுதசுரபி ஏந்துகிறாள்.கொலைப்பழிக்கு ஆளாகி சிறைவாசம் செய்ய நேர்கிறது. எந்த இடையூரையும் பொருட்படுத்தாமல் தன இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு போய் க் கொண்டிருப்பாள் மணிமேகலை.நேற்று ஒரு அறிக்கையின் மீது என் கவனத்தை நண்பர் ஒருவர் ஈர்த்தார்.இந்தியாவின் விவசாயிகள் மக்கள் தொகையில் சுமாராக ஐம்பது சதம்பேர் இருக்கலாம் என்றும் அவர்களுக்கு ஜீவாதாரமாக விவசாயம் இருந்தாலும் அதன் இன்றைய உற்பத்தித் திறன் மிகக்குறைவு என்பதால் அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்பது போலவும் கருத்து வெளிப்பட்டிருந்தது.இன்று பிரதமரும் ப.சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளும் சொல்லுவது இதைதான்.இவ்வளவு பெரிய விவசாய நாட்டில் மிகப் பிரமாண்டமான மனித ஆற்றலும் எண்ணற்ற இயற்கை வளங்களும் வற்றாத கங்கை,பிரம்மபுத்திரா போன்ற ஜீவ நதிகளும் நிறைந்த நாட்டில் இப்படி ஓர் அவல நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள்.உலக மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் அந்த மக்களைப் பார்த்து விவசாயத்தில் நஷ்டம் வந்தால் அதை விட்டு விட்டு வேறு தொழில் செய்யப் போக வேண்டியதுதானே என்று இந்த நாடு சொல்கிறது.இன்று இந்த இருளின் நடுவே மனிமேகளை போன்று ஓர் இலட்சிய தீபம் ஏந்திய கைகள் எங்கேஒவ்வொரு இருட்டுக்குப் பின்னும் ஒரு விடியல் வரும் என்கிறார்களே அது உண்மையாஒவ்வொரு இருட்டுக்குப் பின்னும் ஒரு விடியல் வரும் என்கிறார்களே அது உண்மையாஎன்று வரும் அந்த விடியல்\nஇன்று உதயசங்கர் பேசினார்.வசூரில் இருந்து கவிப்பித்தன் சொன்ன தகவலும் சேர்ந்���ு சில சிந்தனைகளைக் கிளறின.குழந்தைகள் மீதான கரிசனம் இன்று அதிகம் ஆகியிருப்பது பற்றி உதயசங்கரின் கட்டுரையை மையமாக வைத்து நான் ஒரு இடுகையில் பதிவு செய்திருந்தேன்.அது பற்றி நண்பர் விமலன் ஒரு வரிக்கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார்,படைப்பு மனநிலைகள் ஒரு நேரம்போல மறுநேரம் இருப்பது இல்லை.ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை நமக்கு எண்ணற்ற படிப்பினைகளைத் தருகிறது.ஒவ்வொரு நிகழ்வும் படைப்பாளிகளின் மனக்கடலில் பெரும் அலைகளைத் தோற்றுவிக்கக் கூடியவையாக இருக்கின்றன எந்த ஒரு நிகழ்வும் இந்த சமூக அமைப்பின் விலைபொருள் என்ற வகையில் இந்த அமைப்பின் அரசியலும் அந்தப் படைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் ஒரு பங்கு வகிக்கின்றன .எனவே ஒரு சமூகப் பொறுப்பு உள்ள எழுத்தாளன் தனது படைப்பில் இந்த மனித வாழ்க்கையைப் பாதிக்கும் எந்த ஒரு விசயத்தைப் பற்றியும் ஒரு கரிசனத் தொடுதான் எழுதியாக வேண்டும்.ஆனால் கலைப்படைப்பின் நுட்பங்கள்,அழகியல் அம்சங்கள் கொண்ட படைப்பாக அது இருக்க வேண்டும்.இது ஒன்றும் அவ்வளவு எளிதான விசயமாக இருப்பதில்லை.எவ்வளவோ படைப்புகள எழுதிய பிறகும் எழுத உட்காரும் ஒவ்வொரு முறையும் இது பெரிய போராட்டமாகவே இருக்கிறது.படிக்கக் கிடைக்கிற ஒவ்வொரு நல்ல படைப்பும் நமது போதாமையை உணர்த்துவதாக இருக்கிறது.இவ்வளவு நாளாக எழுதியும் நாம் இப்படி ஒரு படைப்பைத் தந்து விட முடியவில்லை என்பது ஒரு சோகம்தானேவெள்ளம்போலக் கிளம்பி வரும் எண்ணங்களைத் திட்டவட்டமான வடிவில் அழகியலுடன் தர முடியுமாவெள்ளம்போலக் கிளம்பி வரும் எண்ணங்களைத் திட்டவட்டமான வடிவில் அழகியலுடன் தர முடியுமாபாரதி வேண்டிய அந்த \"மந்த்ரம் போல் வேண்டுமடா சொல் ஒன்று\" என்பது நிறைவேறுமாபாரதி வேண்டிய அந்த \"மந்த்ரம் போல் வேண்டுமடா சொல் ஒன்று\" என்பது நிறைவேறுமாஅலைமோதுகிற இந்த அகக் கடலில் மூழ்கி மூச்சுத் திணறும் போதுதான் இந்த அவஸ்தையின் பரிமாணம் பிடிபடுகிறது.ஆனால்..அந்த ஒரு சொல் பிடிபடும் காலம் எப்போது\nகுழந்தைகள் சார்ந்த சிந்தனைகள் நிறைந்த நூல்கள் சமீப காலமாக நிறைய வந்து கொண்டிருக்கின்றன.சமூகத்தின் கவனம் குழந்தைகளின் மீது கொஞ்சம் திரும்பி இருக்கிறதென்றே சொல்ல வேண்டும்.இவற்றைப் படிப்பதன் பயன் என்ன என்றால் நமது வீட்டுக் குழந்தைகளின் மீது நமது கவனம் இன்னும் சற்றுக் கூடுதலாகப் பதிவதுதான்.என் அனுபவத்தில் எங்கள் பேரனுடன் செலவழிக்கும் நேரம் எல்லாம் மிகப் புதிய அனுபவங்களைத் தந்து செல்கிற பொழுதுகளாக இருக்கின்றன.தோழர் உதயசங்கர் இளைஞர் முழக்கம் இதழில் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் இந்த வகையில் பல ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டி விடுவதாக இருக்கிறது.\"குழந்தைகளின் அற்புதஉலகில் \"என்ற தலைப்பில் அவர் கடந்த 24 மாதங்களாக எழுதிக் கொண்டு வருகிறார்.இந்த மாதக் கட்டுரை கல்வியின் அரசியல் பற்றிப் பேசுகிறது.இந்த அரசியல் நமது வாழ்வின் எல்லா அம்சங்களையும் பாதிப்பதாக இருக்கிறது. தங்களின் பள்ளி ஆசிரியருக்கு \"எங்களை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க\" என்று கேட்டு மாணவர்கள் எட்டுப் பேர் எழுதும் கடிதம் தான் அதே தலைப்பில் வந்துள்ள குறுநூல்.எழுத்தாளர் சாஜகான் தமிழில் கொண்டு வந்த இந்த நூலை மதுரை \"வாசல்\"பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.இந்தப் புத்தகம் பற்றிய தன சிந்தனைகளை எப்போதும் போல போல் உதயசங்கர் ஆழ்ந்த கேள்விகளை எழுப்பி முன்வைக்கிறார்.\"ஒருவகையில் இது தோற்றுப் போனவர்களின் முழக்கம்.தங்களைத் தோற்கடித்த கல்விமுறைக்கு எதிரான பரணி .கூட்டாகக் கற்பது அரசியல்,தனியாகக் கற்பது சுயநலம் என்று எச்சரிக்கிறது\"என்று நூலின் கருத்துகளை முன்வைத்து விவாதிக்கிறார் உதயசங்கர்.குழந்தைகளுடன் வாழ்வது என்பது எவ்வளவு மகத்தான விஷயம் என்று இப்போதுதான் புரிபடத் தொடங்குகிறது.....தொடர்ந்து யோசிப்போம்.\nஇன்று காலை ஹுயுகோ சாவேஸ் காலமானார் என்ற செய்தி தெரிந்தது.லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் உதிர்ந்து விட்டது.அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்திற்கு எதிராக லத்தின் அமெரிக்க நாடுகளைத் திரட்டி ஒரு மாற்றுப் பாதை வகுக்க முயன்று அதில் ஓரளவு வெற்றிகளையும் அடைந்த வீரர் அவர்.ஆனால் அவரின் முயற்சிகள் முழுமை அடையும் முன்பே மறைந்து விட்டார்.தொடர்ந்து மார்க்சியம் உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தி என்று நிரூபித்தவர் அவர்.\n'என்னை பற்றி'யின் கீழ் எனது விவரங்கள்..\nஎனது புத்தகங்களில் இருந்து.. (4)\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/34151-2017-11-14-02-08-29", "date_download": "2018-07-19T11:46:43Z", "digest": "sha1:L3WAEIUVXTLSOBWPAS2AQPTXMQLBCYUO", "length": 29202, "nlines": 304, "source_domain": "keetru.com", "title": "“அறம்” செய்ய விரும்பு – தமிழ்த் திரையுலகமே!", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nதன் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய 13 பேரை இந்த அரசு பச்சை படுகொலை செய்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. காயம்பட்ட பல பேர் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கின்றார்கள். அவர்கள் மீண்டு வந்தாலும்…\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nதமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து...\nகடைசிப் பதிவேற்றம்: வியாழக்கிழமை 19 ஜூலை 2018, 14:49:00.\nகாரல்மார்க்ஸ் 200ஆவது பிறந்த நாள் ஆண்டு இது. மார்க்சியம் குறித்த விவாதங்கள், மறு வாசிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்குமிடையே வரலாற்று ரீதியான உறவுகள் உண்டு. பெரியார் சோவியத்…\nநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள்\nதமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்\nஜாதி - மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஅலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\nமலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும்,…\n‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்\n“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர்…\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nதிருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு\n இன்றைய தினம் உங்களால் அடியேனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும்…\nசுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா\n(மத்தியசட்டமன்ற விவாதங்கள் ,தொகுதி III , 1945, மார்ச்சு 29, அ.ப.2265-66) மாண்புமிகு…\nகாங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி\nதீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம்…\nதொழிலாளர் நலத்துறை (துணை மானியக் கோரிக்கை குறித்து)\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 27, மார்ச்சு 1945, பக்கங்கள் 2138-41.)…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\n“அறம்” செய்ய விரும்பு – தமிழ்த் திரையுலகமே\nயார் யாரெல்லாமோ வஞ்சித்தது இந்த இயக்குனரைத்தானா படம் பார்க்கத் தொடங்கியதிலிருந்து இப்போது வரைக்கும் இந்த கேள்வி துரத்திக்கொண்டே இருக்கிறது.\nஅறம் = அற்புதம். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் இரசிகர்களின் உயிரோட்டமான வெளிப்படுத்தல்கள். கைதட்டல், உச் கொட்டல், விசும்பல் என படம் முடியும்வரை திரையரங்கம் உயிர்ப்போடு இருந்தது.\n“சபாஷ்...” இயக்குனர் கோபி நைனார் அவர்களே\nலாரி தண்ணீரை மக்களின் தேவைக்கு விநியோகிக்கும் அதிகாரம் இல்லாத கலெக்டர் (கலெக்டர் என்றால் ‘மாவட்ட ஆட்சியர்’ என்று பொருள்...) ஆழ்குழாய் கிணறுக்காகத் தோண்டிய குழிக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற சொந்த முயற்சி எடுக்கிறார். எப்படி எடுக்கலாம்) ஆழ்குழாய் கிணறுக்காகத் தோண்டிய குழிக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற சொந்த முயற்சி எடுக்கிறார். எப்படி எடுக்கலாம் என்று கேட்டு அவர���மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் அதிகார வர்க்கத்தின் மக்கள்விரோதப் போக்குதான் படம்.\nபிரச்சினை என்னவென்றால், இப்படி குழிகளுக்குள் விழுகிறவர்களை மீட்க இந்தியாவில் நவீன கருவிகள் இல்லை. கயிறு, கம்பி போன்ற கதைக்குதவாதப் பொருட்களே உள்ளன. கயிற்றைப் பொருத்தமட்டில் உள்ளிருக்கும் குழந்தைக்கு அது தன்னைக் காப்பதற்கான கருவி என்று கண்டுணரும் பக்குவம் இருக்க வேண்டும். அப்படி பக்குவமிருக்கிற குழந்தையும் மயக்கமடையாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் போச்சு.\nகம்பி என்பது அதன் கொக்கி உடலின் எந்த பாகத்தில் மாட்டுகிறதோ அதைப் பொறுத்துதான் உயிருடன் மீட்பதற்கான உத்தரவாதமும்.\nசரி, உசிலம்பட்டி அருகேயுள்ள கிராமத்து இளைஞர் இதற்கான ரோபோ கருவி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறாராம். அது ஏன் இந்தியாவிற்கானதாக மாறவில்லை படம் இந்தியாவின் அறிவியல் கொள்கையை கேள்விக்குட்படுத்துகிறது.\nஇரசியா இன்றைக்கு பெரிய வல்லரசாக இருக்கலாம். ஆனால், புரட்சி நடந்த புதிதில் அங்கு மக்களுக்கான எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை. இன்றைக்கு அது உயர்ந்து நிற்பதற்கான காரணம் புரட்சியின் மூலம் உருவான அரசு, முன்முயற்சிகளை ஊக்குவித்து புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதுதான்.\nஉடனடியாக மருத்துவர் போகமுடியாத ஒரு தீவில் பிரசவ வலியால் துடிக்கும் ஒருவருக்கு அங்கிருக்கும் வானொலி நிலையத்தின் உதவியோடு பேறு காலம் பார்க்கும் கதை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கக் கூடும். (இந்த இரசிய கதையை சங்கர் கொஞ்சம் உல்டா பண்ணியிருப்பார்) உயிரோடு விளையாடுவதுதான். ஆனால் முயற்சிக்காமல் உயிரிழப்புகளை வேடிக்கைப் பார்ப்பதைவிட முயற்சித்து காப்பாற்ற முடிந்தால் சிறப்பு என்பதே மக்கள் நலன் பேணும் அரசுகளின் கொள்கை.\n எனது கடமை உயிரிழப்புகளைத் தவிர்ப்பதல்ல; மாறாக, இழப்பீடுகளுக்குப் பணத்தை கொடுத்து பிரச்சினையைத் தீர்ப்பதுதான் என்ற அலட்சியம் அதிகார வர்க்க அரசின் கொள்கை.\nஇதை மிகத் தெளிவாக படமாக்கியிருக்கிறார்கள்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் காட்டூர் (இது இயக்குனரின் சொந்த ஊர்) என்பது அடிப்படை வசதிகள் எட்டாத தொலைதூரத்திலிருக்கும் ஒரு கிராமம். குடிநீருக்கே டூ வீலர எடுத்துட்டு பல மைல் போகணும். அங்கிருக்கும் கவிதையான எளிய குடும்ப��்தான் சிறுமி மகாலட்சுமி உடையது. கபடி ஆட்டக்காரனாக இருந்து சோத்துக்கு பெயிண்டராக மாறிய அப்பா ராமச்சந்திரன் துரைராஜ், பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்கும் அம்மா சுனு லட்சுமி, கோச் இல்லாத இயல்பான நீச்சல் வீரனான அண்ணன் காக்கா முட்டை ரமேஷ்.\nஅந்த ஊர் கவுன்சிலர் மூடாமல் விட்டுவைத்திருந்த ஆழ்குழாய்க் குழியில் சிறுமி மகாலட்சுமி விழுந்துவிட அவளை உயிரோடு மீட்க களமிறங்குகிறார் கலெக்டர் நயன்தாரா.\nகுழிக்குள் விழுந்த குழந்தையை மீட்க அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத இந்தியாதான் உலக வல்லரசுகளுக்கு ஈடாக ராக்கெட் விட்டுக் கொண்டிருக்கிறது என்கிற முரண்பாட்டை கதை எளிதாக மக்களுக்கு உணர்த்துகிறது.\nவாய்ப்பு கிடைக்கும்போது சிக்சர் அடிப்பதில் கில்லாடி நயன் என்பது தெரியும். ஆனால், இந்த படம் அப்படியில்லை. இவ்வளவு சவாலான கேரக்டரை விரும்பி, ஏற்று நடித்திருப்பதற்கே அவரைப் பாராட்ட வேண்டும். முழுக்க முழுக்க அரசியல். அதிலும் அவருக்கு நடப்பு அரசியலையும் அரசியல்வாதிகளையும் கடுமையாக விமர்சிக்கும் பாத்திரம். “...முதலில் மூடவேண்டியது இந்த அரசியல்வாதிகளான பாதாளச் சாக்கடைகளைத்தான்..” என்பது போன்ற வசனங்கள். இதுபோன்ற பாத்திரங்களை ஏற்கிற முன்னணி கதாநாயகர்களே பல நெருக்கடிகளை சந்திக்கும்போது, தயக்கமில்லாமல் இதை ஏற்றிருகிக்கிறார் என்றால் அவருக்கு இந்த கதையின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. விளாசியிருக்கிறார்.\nநடிப்பில் யாரும் குறை வைக்கவில்லை. ஆனால், இதில் நடித்திருக்கும் பலரும் பல்வேறு படங்களில் சொதப்பியவர்கள்தான். வேல ராமமூர்த்தி இருக்கிறார். ஒருசில படமே நடித்திருந்தாலும் அவரது நடிப்பில் கொஞ்சம் மிகை தெரியும். இதில் அப்படியில்லை என்றால் இயக்குனர் எல்லாரையும் செம்மையாக செதுக்கியிருக்கிறார் என்று பொருள்.\nகிராமத்து எளிய மக்களையும் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தையும் காட்சிப்படுத்துவதில் அப்படியொரு இயல்பு. வெவ்வேறு வகையான மக்களை வெளிபடுத்துகிற விதமாக வசனம், உடை, பாவனை என எல்லாமும் கச்சிதம்.\nஇயக்குனர் வித்தைக்காரர். இவரது இரண்டு கதைகளை ஏற்கனவே திருடியிருக்கிறார்கள். திருடியவர்கள் தமது செல்வாக்கால் அதை மூடி மறைத்துவிட்டனர். அதில் ஒருவர் பெரிய புரட்சிக்காரரும் கூட. திருடர்கள் பிரபலங்களாக இருந்ததால் இவர் (கோபி நைனார்) பொய் சொல்கிறாரோ என்று பலரும் சந்தேகித்தனர். “இவ்வளவு அழகான திறமைசாலி பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று உணர்த்திவிட்டார் இயக்குனர்.\nபடத்தின் கதையைப் போலவே இசையும் (ஜிப்ரான்), ஒளிப்பதிவும் (ஓம் பிரகாஷ்) அவ்வளவு கச்சிதம். சூப்பர் நண்பர்களே\n‘நினைத்த மாதிரி படம் எடுத்துவிட முடியாது’ என்று சினிமாவில் சொதப்புகிற முற்போக்காளர்கள் சொல்வார்கள். “இல்லை, மிகத் தெளிவாக எடுக்கலாம்” என்று மெய்ப்பித்திருக்கிறார் கோபி நைனார். ஆகவே நாம், தமிழ்த் திரையுலகமே “அறம்” போல் படம் செய்ய விரும்பு என உற்சாகமாக குரல் கொடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://manakkuthirai.blogspot.com/2013/08/5.html", "date_download": "2018-07-19T11:18:25Z", "digest": "sha1:3Y6CBL65YPIEOGLEDCPKINRHF5QNCIYZ", "length": 5499, "nlines": 98, "source_domain": "manakkuthirai.blogspot.com", "title": "மனக்குதிரை: கீச்சுகள் 5", "raw_content": "\n◘◘ எரியும் நீராய் என்னுள் நான் ◘◘\nமுற்றுப்புள்ளி வைத்து விட்டதால் மட்டும் அந்த வாக்கு (வாக்கியம்) முற்றுப்பெற்றதாய் ஆகிவிட முடியாது...\nசில கேள்விகளுக்கு , சில கேள்விகளே பதிலாக அமைகின்றன.\nநல்ல புத்தகங்களை 'விற்பதில்' உள்ள பெருமையை விட, அதில் உள்ளதைக் 'கற்பதில்' தான் மிகவும் பெருமை..\nஎன்ன ஒரு உடன்பாடுடன் முரண்பாடு\nசில்லறை- நாணயம்.., இரண்டுமே கிட்டத்தட்ட ஒரு பொருள் தந்தாலும், அதனுடன் மனிதனைச் சேர்த்தால்\nகற்பனை என்பதும் இப்பொழுது விற்பனைப் பொருள் ஆகிவிட்டது... சினிமாக்களில், மேடைகளில், காவியங்களாய், ஓவியங்களாய், இன்னும்.....\nவலைகளில் மாட்டிக் கொண்டால் மீள்வது சிரமம்தான்... எலியானாலும் , மனிதனானாலும் (இணையம்)\nஎழுதியது தினேஷ் பழனிசாமி வகைகள் கீச்சுகள், சிந்தனை நாள் Sunday, August 04, 2013\nபயனளித்த பண்ணைக் குட்டை- நீரின்றி அமையாது உலகு\nநான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே...\nஊட்டிக்குப் பயணம்…. சுற்றுலாவாக அல்ல....\nஏம்பா..... இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை கூடவா பேசாம(...\nஈரோடு புத்தகத் திருவிழா 2013 - துவக்க நாள் 03.08.1...\nபயனளித்த பண்ணைக் குட்டை- நீரின்றி அமையாது உலகு\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்- பாரதி கிருஷ்ணகுமார்\n‘ஒன்பதாம் திசை’ சிறுகதைத் தொகுப்பு வாசித்த பின்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://msahameed.blogspot.com/2013/09/blog-post_7713.html", "date_download": "2018-07-19T11:20:29Z", "digest": "sha1:46OZJES7DIVKER4HEA7MKAOB2PLWI5VU", "length": 15147, "nlines": 121, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: ஹுனைன் தந்த பாடம்!", "raw_content": "\nவெற்றியை மனதில் உறுதிப்படுத்திக்கொண்டு முஸ்லிம் படை ஹுனைன் நோக்கிப் புறப்பட்டது. மொத்தம் 12,000 பேர் கொண்ட படை. மதீனாவிலிருந்து வந்த 10,000 பேரும், மக்காவில் வைத்து புதிதாக இணைந்த 2000 பேரும் அதில் இருந்தனர்.\nஅதிக எண்ணிக்கையிலான படை அகம்பாவத்திற்குக் காரணமானது. ஹுனைன்வாசிகளின் எதிர்த்தாக்குதலுக்கு முன்பு முஸ்லிம்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மலை உச்சியிலிருந்து முஸ்லிம்கள் மீது பயங்கர தாக்குதல் நடைபெற்றது. அம்புகள் அணை கடந்த வெள்ளம் போல் முஸ்லிம்கள் மேல் பாய்ந்து வந்தன. முஸ்லிம்கள் சிதறியோடினர்.\nஅம்புகளைத் தொடர்ந்து காலாட்படைத் தாக்குதல் ஆரம்பமானது. என்ன நடக்கிறது என்று கூட முஸ்லிம்களுக்கு அறிய முடியவில்லை. ஒரே அல்லோலகல்லோலம்\nஅதற்கு முந்திய நாள் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்பு தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தவர்களும் முஸ்லிம் படையில் இருந்தனர். முஸ்லிம்கள் தோற்று ஓடுவதைப் பார்த்த அவர்களுக்கு அவர்களின் பழைய பகையுணர்வு மீண்டும் தலை தூக்கியது.\nஅண்ணலாரின் படைக்கு ஏற்பட்ட தோல்வி அபூஸுஃப்யானின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திற்று. களிப்புற்ற அவர் இவ்வாறு கத்தினார்: “இந்தப் புறமுதுகு ஓட்டம் கடலில் சென்றுதான் முடியும்\nஷைபா இப்னு உஸ்மான் அளவு கடந்து பேசினான். அவனது உள்ளத்திலிருந்தது வெளியே வந்தது இவ்வாறு இருந்தது: “இன்று நான் முஹம்மதைப் பழிக்குப் பழி வாங்குவேன்.”\nஇன்னொரு ஆள் சொன்னான்: “இன்று எல்லா மாயாஜாலங்களும் முடிவுக்கு வந்தன.”\nசூழ்நிலை ஓட்டத்தை அனுசரித்து நிலைப்பாடு மாறுவது பொதுவாக உள்ளதுதானே… மக்காவில் சூழ்நிலை மறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குச் சாதகமாக இருந்தபொழுது அவர்களுடன் ஒன்று கூடியவர்கள் அடுத்த நாளே ஹுனைனில் மாறிவிட்டனர். அவர்கள் உருவாக்கிய பீதி உறுதியான உற்ற தோழர்களையே தடுமாற வைத்தது. நம்பிக்கையான நபித்தோழர்களைக் கூட நடுங்க வைத்தது.\nமுஸ்லிம்கள் சிதறி ஓடியபொழுது பிடித்து நிற்க வேண்டும் என்ற உணர்வு சிறிய அளவு நபித்தோழர்களுக்கே உண்டானது.\nஅகிலங்களின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் உறுதியுடன் நின்றார்கள். அவர்களின் புன���த நபித்துவப் பணி தொடங்கி 20 வருடங்களாயிற்று. இதுவரை எதிர் சக்திகளிடம் எந்தச் சமயத்திலும் அடிபணிந்ததில்லை. வெற்றி, அல்லது வீரமரணம்\nஒரு கூட்டம் அன்சாரிகளும், சில முஹாஜிர்களும், ஒரு சில உறவினர்களும் அண்ணலாருடன் கூட நின்றார்கள்.\nஎதிரிகளின் பக்கம் ஹவாசின், ஸகீஃப் ஆகிய கோத்திரங்களின் படையினர் மலைக்குன்றுகளின் முகடுகளில் நின்று இறங்கி வந்தனர். கண்ணில் கண்ட முஸ்லிம்களையெல்லாம் வெட்டிக் கொன்றனர்.\nகடுமையான, மிகக் கொடுமையான அந்தச் சூழ்நிலையிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாகனத்தில் உறுதியுடன் தளராமல் நின்றார்கள். ஒரு சமயம் எதிரிகளுக்கிடையில் பாய்ந்து தாக்க முனைந்தார்கள். அன்னாரின் ஒன்றுவிட்ட சகோதரர் அபூஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் (ரலி) அண்ணலாரைத் தடுத்து விட்டார்.\nஅப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரலி) அண்ணலாருடன் இருந்தார். முஸ்லிம்களைத் திரும்ப அழைக்குமாறு அப்பாஸிடம் அண்ணலார் சொன்னார்கள். அப்பாஸ் இவ்வாறு உரக்கக் கூறினார்:\n“முஸ்லிம்களுக்கு அபயமும், உதவியும் நல்கிய அன்சாரித் தோழர்களே மர நிழலில் உறுதிப் பிரமாணம் எடுத்த முஹாஜிர்களே மர நிழலில் உறுதிப் பிரமாணம் எடுத்த முஹாஜிர்களே ஓடி வாருங்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதோ உயிருடன் இருக்கிறார்கள்.”\nஅப்பாஸின் சப்தம் அந்தப் பள்ளத்தாக்கெங்கும் ஒலித்தது. அப்பாஸ் இவ்வாறு மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை அழைத்துக்கொண்டேயிருந்தார்.\n முஸ்லிம் அணியில் அந்த அழைப்பு அற்புதமான மாற்றத்தை உண்டாக்கிற்று.\nஅகபாவில் அண்ணலாரின் அருமைக் கரம் பற்றி உறுதிமொழி எடுத்தவர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். தங்களின் மக்களையும், செல்வத்தையும் பாதுகாப்பது போல் அண்ணலாரைப் பாதுகாப்போம் என்று அவர்கள் வாக்களித்திருந்தார்கள்.\nஹுதைபியாவில் உறுதிமொழி எடுத்தவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். மரணம் வரை மஹ்மூது நபிகளாருடன் போராடுவோம் என்று அவர்கள் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.\nஅப்பாஸின் சப்தம் அவர்களின் காதுகளிலல்ல, கல்புகளில் ஊடுருவி ஒலித்தது. மனங்கள் சாந்தமாயின. அவை ஒரே திசையை நோக்கித் திரும்பின. அண்ணலாரைச் சுற்றிலும் அருமைத் தோழர்கள் அணி அணியாய் திரள ஆரம்பித்தனர்.\nஅவர்களின் இதயங்களில் இப்பொழுது ஆள்கூட்டத்தின் அகம்பாவம் இல்லை, அத���வேகம் இல்லை. அல்லாஹ்வின் நம்பிக்கையும், திட உறுதியும் மட்டுமே குடிகொண்டிருந்தன.\nமுஸ்லிம்கள் அனைத்தையும் மறந்து போராடினார்கள். வெற்றி பெற்றார்கள்.\nஹுனைன் யுத்தம் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லிற்று: ஆள் கூட்டங்கள் தோல்வியைத் தழுவும். அல்லாஹ்வின் மேல் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள்.\nஇக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.\nஅதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.\nஅண்ணலாரின் கேள்வியும், அன்சாரிகளின் பதிலும்\nநயவஞ்சகர்களுக்கு நபிகளார் தந்த பாடம்\nபெருமானார் முன்னறிவிப்பு செய்த பாரபட்சம்\nபால் சுரக்கும் மடியிலும் இரத்தம் கேட்கும் கொசு\nகருத்துவேறுபாடுகளைக் களைய என்ன வழி\nகுழந்தைகளைக் குறி வைக்கும் விளம்பரங்களும், விபர...\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nநவீன அபூஜஹ்ல்களுக்கு ஒரு நினைவூட்டல்\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://planetjai.blogspot.com/2013/10/12-7-25.html", "date_download": "2018-07-19T11:52:43Z", "digest": "sha1:4NQNT6SWHPGCJSPJDKHOYFNWN6MWQMGN", "length": 31404, "nlines": 369, "source_domain": "planetjai.blogspot.com", "title": "Jayavel Chakravarthy Srinivasan's Blog: 12 ஏக்கர்... 7 மாதங்கள்... 25 லட்சம்... பணம் காய்க்கும் பந்தல்...", "raw_content": "\n12 ஏக்கர்... 7 மாதங்கள்... 25 லட்சம்... பணம் காய்க்கும் பந்தல்...\n'புதுப்புது யுக்திகளைப் புகுத்தி, புத்திசாலித்தனமாக செயல்படுவர்களுக்கு... விவசாயம், பொன்முட்டையிடும் வாத்துதான்’ என்பதை நிரூபித்து வருகிறார், எழுபத்து இரண்டு வயதைக் கடந்த மூத்த விவசாயி 'கேத்தனூர்’ பழனிச்சாமி. கேத்தனூர், ஆறு, குளம், வாய்க்கால்... என இயற்கை நீராதாரத்துக்கு வாய்ப்பில்லாத ஊர். ஆயிரத்து இருநூறு அடிக்கும் கீழே போய்விட்ட நிலத்தடி நீர்மட்டம். வறண்டு கிடக்கும் பாசனக் கிணறுகள்... இப்படியான சூழலிலும் 'பந்தல்’ விவசாயத்தில் முடிசூடாத மன்னராக அரை நூற்றாண்டு காலம் அசத்தி வரும், பழனிச்சாமியின் வெற்றிச் சூத்திரத்தை அறிந்து கொள்ள... திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் கிராமத்தில் உள்ள அவரது பண்ணைக்குப் பயணித்���ோம்.\n''இந்த மாட்டுக்கு மூக்கணாங் கயித்தை மாத்தப்பா; இந்தக் கன்னுக்குட்டிய புடிச்சு வேப்பமர நிழல்ல கட்டப்பா...''\n-தொழுவத்தில் நின்றபடி வேலையாட்களிடம் சொல்லிக் கொண்டிருந்த பழனிச்சாமி, நம்மைக் கண்டதும், வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்...\n''எங்களுக்கு மொத்தமா 75 ஏக்கர் நிலம் இருக்கு. பருத்தி, கொண்டைக் கடலை, கோதுமை, கம்புனு ஒரு காலத்துல மானாவாரி வெள்ளாமையில கொடிகட்டிப் பறந்த ஊருங்க இது. இப்போ, கிணத்துப் பாசனத்தை நம்பித்தான் வண்டி ஓடுது. 50 வருஷத்துக்கு முன்ன கொடைக்கானலுக்குப் போயிட்டிருந்தேன். அப்போ, ஒரு இடத்துல கல்பந்தல் போட்டு திராட்சை சாகுபடி பண்ணிட்டுருந்தாங்க. அப்போதான், பந்தல் விவசாயத்தைப் பத்தியே தெரிஞ்சிகிட்டேன். உடனே, என் தோட்டத்துல பந்தல் போட்டு, திராட்சையைப் போட்டேன். நல்ல வருமானம் கிடைச்சுது. அதனால, என்னை 'திராட்சைத் தோட்டத்துக்காரர்’னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. 88-ம் வருஷம் வரைக்கும் திராட்சை சாகுபடிதான். கூடவே, கத்திரி, தக்காளி, மிளகாய்னு காய்கறி விவசாயமும். 89-ம் வருஷத்துல இருந்து பந்தல்ல காய்கறி சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். இப்போ, நாலு ஏக்கர்ல பாகல், மூணு ஏக்கர்ல பீர்க்கன், நாலு ஏக்கர்ல புடலை, ஒரு ஏக்கர்ல கோவைக்காய்னு மொத்தம் 12 ஏக்கர்ல பந்தல் விவசாயம் செய்றேன்.\nஆரம்பத்துல, லாரி லாரியா உரத்தைக் கொண்டு வந்து கொட்டி, ரசாயன விவசாயம்தான் செஞ்சேன். அதேமாதிரி, வீரியமான பூச்சிக்கொல்லிகளைத்தான் தெளிச்சுட்டிருந்தேன். பகல் முழுக்க என் பண்ணையில பவர் ஸ்பிரேயர் ஓடுற சத்தம் கேட்டுக்கிட்டேதான் இருக்கும். ஒவ்வொரு முறையும் கணக்கு பாக்குறப்போ, உற்பத்திச் செலவுதான் அதிகமா இருந்துச்சு. லாபம் கம்மியா இருந்துச்சு. 'செலவை எப்படி குறைக்கலாம்’னு பலர்கிட்ட யோசனை கேட்டுட்டிருந்த சமயத்துலதான், நம்மாழ்வார் பத்திக் கேள்விப்பட்டேன். அவரைத் தேடிப்போய் சந்திச்சுப் பேசி பல தகவல்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். 'இயற்கை விவசாயம்தான் லாபகரமான விவசாயத்துக்கு ஒரே தீர்வு’னு முடிவு செஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுட்டேன்.\nபஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலம், அரப்பு-மோர் கரைசல்னு இயற்கை இடுபொருட்களை நானே தயாரிச்சு, பயிர்களுக்குக் கொடுத்ததுல நல்ல பலன் கிடைச்சது. அப்படியே, சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துகிட்டு பயிற்சி எடுத்த பிறகு, முழுக்க முழுக்க இயற்கைக்கு மாறிட்டேன். கலப்பின பசுமாடுகளைக் குறைச்சுட்டு, காங்கேயம் மாடுகளை வாங்கினேன். அதுங்களோட சாணம், மூத்திரத்தை வெச்சு, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அமுதக்கரைசல்னு எல்லா இடுபொருட்களையும் தயாரிக்கிறேன்'' என்ற பழனிச்சாமி... புடலை பந்தலுக்குள் அழைத்துச் சென்றார்.\nபந்தலுக்குள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த முற்றிய வெளிர் பச்சை நிற குட்டைப்புடலங்காய்களைப் பறித்து, சிறிய தள்ளுவண்டிகளில் சில பெண்கள் கொட்ட, அதை அப்படியே களத்து மேட்டுக்கு உருட்டி சென்று கொண்டிருந்தனர், சில ஆண்கள். அந்த பந்தலுக்குள் நின்றவாறே, பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார், பழனிச்சாமி.\nஅதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.\n'நடவு செய்ய வேண்டிய நிலத்தை உழுது, கல்தூண்களை ஊன்றி கம்பிகளைக் கட்டி பந்தல் அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைக்க கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்ச ரூபாய் வரை செலவாகும். ஒருமுறை கல்பந்தல் அமைத்து விட்டால்... கம்பிகள் 50 வருடம் வரையிலும், தூண்கள் 100 வருடங்களுக்கு மேலும் பயன்தரும். பந்தல் அமைத்த பிறகு, 16 அடி இடைவெளியில் தென்வடலாக பார் அமைத்து, சொட்டு நீர்ப்பாசனக் கருவிகளைப் பொருத்திக் கொள்ளவேண்டும். ஏக்கருக்கு தலா, ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை 12 டன் தொழுவுரத்தில் கலந்து, பார் பாத்திகளுக்குள் தூவி... 5 அடி இடைவெளியில் இரண்டரை அடி அகலம் கொண்ட வட்டக்குழிகளை அமைக்க வேண்டும்.\nபுடலை 200 நாள் பயிர். தரமான நாட்டு விதைகளை (ஏக்கருக்கு 400 கிராம் தேவைப்படும்) அரைலிட்டர் பஞ்சகவ்யாவில் இட்டு, 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழல் தரையில் பரப்பி, உலர வைக்க வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்யும் போது முளைப்புத்திறன் அதிகரிக்கும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் என்ற கணக்கில் படுக்கை வசமாக நடவு செய்து... ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் பாசனம் செய்யவேண்டும். நடவு செய்த 16-ம் நாளில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.\nவளர்ச்சிக்குப் பிண்ணாக்கு... பூச்சிக்கு புளித்த மோர்\nஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும், ஒவ்வொரு செடியின் தூரிலும் அரை லிட்டர் பிண்ணாக்குக் கரைசலை ஊற்ற வேண்டும். நடவு செய்த 18-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு, 250 மில்லி அரப்பு-மோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, அனைத்து செடிகள் மேலும் படும்படி விசைத்தெளிப்பான் மூலம் புகைபோல் தெளிக்க வேண்டும். 23-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து செடிகள் மேல் செழிம்பாகத் தெளிக்க வேண்டும்.\nநடவிலிருந்து 20 நாட்களுக்கு ஒரு முறை, 100 மில்லி புளித்த மோர், 50 கிராம் சூடோமோனஸ் ஆகிய இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தேவைப்படும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். இது இலைப்பேன் மற்றும் அசுவிணி உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, செடிகள் ஒரே சீராக வளர உதவி செய்கிறது. நடவு செய்த 60-ம் நாளுக்குப் பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 200 மில்லி புளித்த மோர், 100 கிராம் சூடோமோனஸ் என அளவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைத் தெளித்து வந்தால், சாம்பல் நோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கள் இருக்காது.\n26, 27-ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம், ஆறு லிட்டர் மீன் அமிலம், 70 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து ஒவ் வொரு செடிக்கும் அரைலிட்டர் அளவுக்கு நேரடியாக ஊற்ற வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாக செயல்படும். 30-ம் நாளுக்குள் கொடிகளை கொம்பில் படர விட வேண்டும். கொம்புக்குப் பதிலாக கெட்டியான காடா நூலை கம்பியில் இழுத்துக்கட்டியும் படரவிடலாம். திசைமாறிப்போகும் கூடுதல் பக்கக் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.\n60-ம் நாளில் 100 மில்லி அரப்பு-மோர் கரைசல், 100 மில்லி தேங்காய்ப்பால், 100 மில்லி இளநீர், இவற்றுடன் 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால், பெண்பூக்கள் உதிராமல் இருப்பதோடு, பூஞ்சண நோய்த் தாக்குதலும் இருக்காது.\nபந்தலுக்கு உள்பகுதியில் இரண்டு, மூன்று இடங்களில் விளக்குப் பொறிகளைக் கட்டித் தொங்க விட்டால், பச்சைப்புழுக்கள், காய்துளைப்பான்கள் போன்றவைக் கட்டுப்படும். பந்தலுக்குள் இரண்டு மூன்று இடங்களில் 'சிறிய அரிக்கேன்' விளக்கு வடிவத்தில் உள்ள இனக்கவர்ச்சிப் பொறிகளைக் கட்டித் தொங்கவிட்டால், பந்தல் காய்கறிகளைத் தாக்கும் குளவிகளைக் கட்டுப்படுத்தலாம் இந்தப் பொறிக்குள் சென்று மாட்டிக் கொண்டு அவை இறந்துவிடும்.\nஇதே பராமரிப்புதான் அனைத்து வகை பந்தல் காய்கறிகளுக்கும். ஆனால், பாகலுக்குக் கொஞ்சம் கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். புடலை சாகுபடியில், நடவு செய்த 65-ம் நாளில் இருந்து காய்களைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 140 நாட்கள் வரை காய்ப்பு இருக்கும். சராசரியாக ஏக்கருக்கு 40 டன் அளவுக்கு விளைச்சல் இருக்கும். நாட்டுப்புடலை என்பதால், அடுத்த போகத்துக்கு உரிய விதைகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.மீண்டும், மீண்டும் விதைக்காக செலவு செய்வது மிச்சம்'\n26 லட்ச ரூபாய் லாபம்\nசாகுபடிப் பாடம் முடித்த பழனிச்சாமி, ''ஒரு கிலோ புடலை சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. ஒரு ஏக்கர்ல விளையற 40 டன் காய்கள் மூலமா, 200 நாள்ல கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் வருமானமா கிடைக்கும். நான் நாலு ஏக்கர்ல புடலை போட்டிருக்கேன். அது மூலமா 24 லட்ச ரூபாய் கிடைக்கும். சாகுபடிச் செலவு\n10 லட்ச ரூபாய் போக... 14 லட்ச ரூபாய் லாபம். நாலு ஏக்கர்ல பாகல் இருக்கு. ஏக்கருக்கு சராசரியா 25 டன் விளைச்சல் இருக்கும். இதுவும் சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகும். நாலு ஏக்கர் பாகல் மூலமா 15 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.\n10 லட்ச ரூபாய் சாகுபடிச் செலவு போக 4 லட்ச ரூபாய்க்கு மேல் லாபம்\nமூணு ஏக்கர்ல பீர்க்கன் இருக்கு. ஏக்கருக்கு 30 டன் கிடைக்கும். இதுவும் கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. மூணு ஏக்கர்லயும் சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல 9 லட்ச ரூபாய் செலவு போக, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம்.\nஒரு ஏக்கர்ல கோவைக்காய் இருக்கு. இதுல ஏக்கருக்கு 30 டன் மகசூல் கிடைக்கும். இது கிலோ 20 ரூபாய்க்கு விலைபோகுது. இதன் மூலமா 6 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். 3 லட்ச ரூபாய் செலவு போக மூணு லட்ச ரூபாய் லாபம்.\nஆகமொத்தம் 12 ஏக்கர்ல இருந்து, 25 லட்ச ரூபாய்க்கு மேல லாபமா கிடைக்குது. வியாபாரிகள் என் தோட்டத்துக்கே வந்து காய்களை வாங்கிட்டுப் போறதால போக்கு வரத்துச் செலவுகூட இல்லை'' என்ற பழனிச்சாமி,\n''இவ்வளவு வருமானத்தைப் பாக்கும்போது மலைப்பா இருக்கலாம். ஆனா, இந்த வெற்றிக்குக் காரணம் தினமும் நான் பந்தலுக்குள்ள போய் பாத்துப் பாத்து தேவையான இயற்கை இடுபொருளைக் கொடுக்குறதுதான். நிலம், நீர், நுணுக்கமான விவசாய அறிவு இருந்தா போதும்... எந்தப் பகுதியில வேணும்னாலும் பந்தல் விவசாயம��� செய்து, யார் வேணும்னாலும் ஜெயிக்க முடியும்'' என்று நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார்.\n12 ஏக்கர்... 7 மாதங்கள்... 25 லட்சம்... பணம் காய்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=114018", "date_download": "2018-07-19T11:30:59Z", "digest": "sha1:GZWYP6JJ76UCQRQ56Y6RZAZX2QMRWEAM", "length": 10932, "nlines": 85, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன் - Tamils Now", "raw_content": "\nடெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் திறக்கிறார் காவேரி ஆணையம் என்ன செய்கிறது காவேரி ஆணையம் என்ன செய்கிறது - மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின் - நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு - மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின் - நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு மத்திய மந்திரி பொறுப்பற்ற பேச்சு - ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்; உண்மையை மறைக்க விரும்புகிறது பாஜக மத்திய மந்திரி பொறுப்பற்ற பேச்சு - ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்; உண்மையை மறைக்க விரும்புகிறது பாஜக ராகுல் ட்விட் - அம்பேத்கர் நூலகம் அமைக்க முழக்கமிட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: ஜேஎன்யூ நிர்வாகம்\nதமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – தமிழ்நாடு வெதர்மேன்\nகடந்த நவம்பர் 30-ந் தேதி ஒக்கி புயல் தாக்கியதற்கு பின் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து குளிர்காலம் தொடங்கி விட்டது. இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர உள்ளது.\nஇந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடலில் வருகிற 25-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.\nமேலும் குமரி கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஎனவே அந்தமான் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\n���து குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து இருப்பது:-\nகிழக்குதிசையில் இருந்து காற்று கிளம்பவுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் 21ந்தேதி முதல் 24ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது\nவங்காள விரிகுடா கடலில் எந்தவிதமான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைக்கும் இப்போது வாய்ப்பு இல்லை. ஆதலால், இந்த மழையை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் உருவாகும் மழை என நினைக்க வேண்டாம்.\nஇந்த மழை என்பது கிழக்கில் இருந்து வரும் காற்றால் உருவாகும் மழையாகும். நாளை முதல் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் மழை இருக்கும். பெரும்பாலான கடற்கரைப்பகுதிகளில் நாளையில் இருந்தே மழை தொடங்கிவிடும்.\nஉள்மாவட்டங்களில் ஒரு நாள் மட்டுமே மழை இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் கடற்கரை பகுதிகளிலேயே அதிகமான மழை இருக்கும்.\nசென்னையைப் பொருத்தவரை குறைந்தபட்சம் 2 நாட்களுக்காவது மழை பெய்யக்கூடும். ஆனால், கனமழைக்கோ, மிககனமழைக்கோ வாய்ப்பு இல்லை. மழையை அனுபவியுங்கள். அடுத்த 4 நாட்களுக்கு சென்னையில் இருப்பவர்கள் வெளியே செல்லும் போது, மறக்காமல் ரெயின் கோட், அல்லது குடையை உடன் எடுத்துச் செல்லவும.\nதமிழக கடலோர மாவட்டங்கள் தமிழ்நாடு வெதர்மேன் மழைக்கு வாய்ப்பு 2017-12-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தின் தென்பகுதியில் மழை பெய்யும்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. ஆனால் மழை வரும்; தமிழ்நாடு வெதர்மேன்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம் புதுசேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய புயல் சின்னத்தால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ஒரு சம்பவத்துக்கு 200-க்கும் மேற்பட்ட வழக்கா\nதெலுங்கு தேச எம்.பியே நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணிக்கிறார்;விலைபோகும் எம்பிக்கள்\nஅம்பேத்கர் நூலகம் அமைக்க முழக்கமிட்ட மாணவ���ுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: ஜேஎன்யூ நிர்வாகம்\nஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்; உண்மையை மறைக்க விரும்புகிறது பாஜக\nநீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு மத்திய மந்திரி பொறுப்பற்ற பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://veesuthendral.blogspot.com/2012/08/blog-post_21.html", "date_download": "2018-07-19T11:23:15Z", "digest": "sha1:JLPGY3M46MNBJ2AHZUGYQAQOIQ5C4XCS", "length": 22200, "nlines": 715, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: ஐடியா மாமி !", "raw_content": "\nஅலமு : சசி .....சசி\nசசி : வாங்க மாமி என்ன காலையிலேயே .\nஅலமு : எல்லாம் உன்னால வந்ததுமா. நீ தான சொன்ன புத்தக வெளியீட்டு விழா இருக்குனு. உனக்கே தெரியும் நான் எங்க வெளிய போனாலும் புதுசா ஒரு புடவை எடுத்துடுவேன்னு .\nசசி : அதனால என்ன எடுத்துட்டிங்களா\nஅலமு : அத ஏன்டி மா கேட்குற... காலைல மாமாவுக்கு சட்டை அயன் பண்ணிட்டு இருந்தேன்டிமா. அந்த நேரம் பார்த்து தெருவுல மாச மாசம் தவண முறையில புடவை குடுப்பானே அவன் போய்ட்டு இருந்தான். நான் ஏங்க புடவை ....ஏங்க புடவைனு கூப்பிட்டேன். பாத்ரூம்ல குளிச்சிட்டு இருந்த உங்க மாமா என்னடி ஆச்சினு அப்படியே ஓடி வர. தெருவுள போனவனும் அப்படியே நிக்க ஒரே கூத்தா போச்சுடிமா. அதனால இன்னக்கு லீவ போடு நாம திநகர் போய்ட்டு வந்துடலாம் சரியா.\nசசி : ஹா ஹா சரிங்க மாமி.\nஅட... ராஜி எழுதற மாதிரி உரையாடல்லயும் புகுந்து விளையாடறீங்களே தென்றல். படங்கள் மனசைப் பறிச்சிடுச்சு.\nகவிதையா இருக்கே கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்னு நினைத்தேன் தங்களை அட போட வைத்ததில் மகிழ்ச்சி நன்றிங்க.\nஓஹோ...கத அப்படி போகுதா...அலமுக்கு மட்டும்தானா புடவை....\nபுத்தக வெளியீட்டிற்கு வருபவரே புதுப்புடவை என்றால் விழாவின் நாயகி எப்படி வருவாங்கன்னு பாத்துக்கவேண்டியதுதான்... அதை தான் இங்கு சொல்லாம சொல்லி இருக்காங்க சசி.... பாப்போம்...நேருல வருவாங்கத்தானே அந்த அலமு... பாராட்டுக்கள் அழகிய உரை ஆடல்...ஆடை அலங்காரம்..காரமில்லா புகைப்படம்... விளம்பரமில்லாமல் விளம்பரத்தை போட்டு அசத்திவிட்டீர்கள் சசி கலா..... உங்களின் யுத்தியை வெகுவாக பாராட்டுகிறேன்....\nநாயகி எல்லாம் இல்லங்க மிகச்சாதரணமானவள் தான் சசி.\nஹா ஹா ஹா கவிதையிலிருந்து நகைச்சுவைக்கு மாறியாச்சா.. பேஷ் பேஷ் ரொம்ப நன்ன இருக்கு TM 4\nதங்களை சிரிக்க வைத்ததில் சந்தோஷம்.\nஉரையாடல் பாணியில் அசத்தல் பதிவு எழுத இன்னொரு ஆள் இருக்கு போல ராஜி அக்காவிற்கு பிறகு\nஆமாங்க நேற்று ராஜியிடம் பேசியதன் விளைவே .\nகவிதை,நகைச்சுவை ரெண்டுமே அழகா எழுதுறீங்க சசி.. கலர் கலரா புடவை அணிவகுப்பு ஒவ்வொன்னும் வாங்க ஆசையை தூண்டுதே... சூப்பர்..\nஆமா சகோ எனக்கும் ஒரு புடவை வாங்கனும்னு ஆசையா தான் இருக்கு.\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nஅக்கா கலக்கல் டிசைன் .. எல்லாத்துலையும் ஒன்னு பார்சல்\nஆமா பா இங்க ஒரு புடவைக்கே இந்த கதி.\nஆமாங்க பெண் பதிவர்களுக்கு ஏதோ என்னால முடிந்தது.\nசகோதரி ராஜியிடம் பேசியதற்கே, இப்படி ஒரு நல்ல போட்டியா \nநன்றி சகோ... (TM 8)\nபோட்டி இல்லங்க இந்த பதிவு மூலமா நாங்க பேசிக்கிறோம்.\nசின்ன குட்டி தேவதைகளை குட்டி புடவைகளில்\nபார்க்க கொள்ளை அழகு போங்க.\nஇதில இரண்டவது நீங்க தேத்திட மாட்டீங்க \nஆமா சகோ ஒரு முயற்சி தான்.\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nஅக்கா உங்க பதிவு மாறுபட்டதா இருக்கு மாமி போல அந்த வாண்டு எவ்வளவு அழக புடவை உடுத்த்யுண்டு இருக்கா அவளுக்கு திருஷ்டி பட்டுட போவுது நன்னா சுத்தி போடுங்கோ .. சரி சரி சிறப்ப எழுதி இருக்கேள் பதிவர் சந்திப்புல நன்னா அசத்துங்கோ வாழ்த்துகள் ....\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.\nசகோ அந்த குழந்தை யாருனே தெரியளம்மா.\nயதார்த்தமா இருக்கு, தொடர்ந்து எழுத முயற்சி செய்யலாமே..\nபுடவைகளும் அழகு,உங்கள் பதிவு போல்\nகுட்டி குட்டி தேவதைகள்.. அழகோ அழகு..\nகுட்டித் தேவதைகளின் அணிவகுப்பு கலக்கல்.\nசசிகலா... நீங்கள் தி நகர் போய் வந்ததும்\nஅதையும் ஒரு பதிவா போட்டுவிடுங்கள்...\nரங்கநாதன் தெரு ஜவுளிகடைகள்அறிவிப்பு : தென்றல் சசிகலா அவர்களின் நூல் வெளியீட்டு விழா நடப்பதால் அனைத்து புடவைகளும் விற்றுத் தீர்ந்த்விட்டன.\n26 ந் தேதிக்குப் பிறகு வரவும்\nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவைகூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:319", "date_download": "2018-07-19T11:47:31Z", "digest": "sha1:TOKFRYXRWQHMXB3TJLHNKIGU2LLYGNQE", "length": 16144, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:319 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,973] இதழ்கள் [10,245] பத்திரிகைகள் [35,082] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [657] சிறப்பு மலர்கள் [1,767]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,161] பதிப்பாளர்கள் [2,503] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [55,766] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2017, 07:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/65972-sabash-naidu-half-film-is-ready.html", "date_download": "2018-07-19T11:49:55Z", "digest": "sha1:O3FWVPH2RUHH2B23MBMEG3SBJSM5HF23", "length": 18637, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாதி ரெடி! சபாஷ் நாயுடு படம் பற்றி சொல்லும் கமல்! | Sabash Naidu Half Film is ready", "raw_content": "\n`ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\n`போட்டோவை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தீர்கள்' - மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த பள்ளி `ரஜினியின் கருத்து எங்கள் கட்சிக்கு பலத்தைச் சேர்க்கும்' - அமைச்சர் உதயகுமார் பேச்சு லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி' - மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த பள்ளி `ரஜினியின் கருத்து எங்கள் கட்சிக்கு பலத்தைச் சேர்க்கும்' - அமைச்சர் உதயகுமார் பேச்சு லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மின் கட்டணத்தை யார் செலுத்துவது' - கலாம் கட்டடத்தில் நடக்கும் மோதல் `குற்றம் செய்யாமல் ஜாலியாக ஜெயிலுக்குப் போகலாம்' - கலாம் கட்டடத்தில் ���டக்கும் மோதல் `குற்றம் செய்யாமல் ஜாலியாக ஜெயிலுக்குப் போகலாம்’ - ஜெயில் டூரிஸத்துக்குப் பச்சைக்கொடி காட்டிய கேரளா `ஷூட்டிங் இடையில பார்க்க வர்றேன்'னு சொல்லியிருக்கார்’ - ஜெயில் டூரிஸத்துக்குப் பச்சைக்கொடி காட்டிய கேரளா `ஷூட்டிங் இடையில பார்க்க வர்றேன்'னு சொல்லியிருக்கார்’ - `தெய்வம் தந்த வீடு' மேக்னா ரிட்டர்ன்\n சபாஷ் நாயுடு படம் பற்றி சொல்லும் கமல்\nகடந்த மாதம் 6ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்புடன் தொடங்கியது கமலின் 'சபாஷ் நாயுடு'. தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தின் வெளிநாட்டு போர்ஷனுக்கான ஷூட்டிங் முடிந்த நிலையில்,தற்போது சென்னைக்குத் திரும்பியுள்ள கமல் டீம், வெளிநாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் வரைக்குமான 'போஸ்ட் புரொடக்ஷன்' வேலைகளையும் விரைவாக முடித்திருக்கிறது.\nதமிழ், தெலுங்கில் ‘சபாஷ் நாயுடு’ எனவும், ஹிந்தியில் ‘சபாஷ் குண்டு’ எனவும் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் 42 நிமிட காட்சிகளும், ஸ்ருதிஹாசன் பங்குபெற்ற பாடல் ஒன்றும் எடிட் செய்யப்பட்டுவிட்டதாக கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார். விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடி.கே.ராஜீவ்குமாருக்குப் பதிலாக கமலே இயக்கி, அவரே நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், மனு நாராயணன், பிரம்மானந்தம் (தமிழ், தெலுங்கு), சௌரப் சுக்லா (ஹிந்தி) உட்பட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கும் சபாஷ் நாயுடுவுக்கு, ஜெய கிருஷ்ணா கம்மாடி ஒளிப்பதிவு செய்கிறார்.\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\nமேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n`போட்டோவை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தீர்கள்' - மாணவர்களுக்கு தண்டனை கொடு\n`` `பசங்க' படத்துல விஜய் சேதுபதிதான் கமிட் ஆனார்...ஆனா, விமல் நடிச்சார்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n சபாஷ் நாயுடு படம் பற்றி சொல்லும் கமல்\nஅமெரிக்க ஜிம்மில் எடை குறைக்கும் மேடி\n“மகிழ்ச்சி” ரஜினியின் “நெகிழ்ச்சி” தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://static.videozupload.net/page/8", "date_download": "2018-07-19T11:54:36Z", "digest": "sha1:XLH37ESLL5QHI67TT4QLIBFQHRVDZRH6", "length": 2166, "nlines": 71, "source_domain": "static.videozupload.net", "title": "VideozUpload", "raw_content": "\nஎலும்பு கோபால் ஜனகராஜ் ஆனது எப்படி தெரியுமா சினிமா வாய்ப்பு கிடைத்ததே சுவாரசியம் -Tamil Cinema News\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம் || Tamil Cinema News\nவெளிச்சத்திற்கு வந்த பிக் பாஸ் ரைசா உண்மை முகம்\nபோதை பொருள் கடத்தலில் தொடர்புடைய காஜல் — கோலிவுட் மற்றும் டோலிவுட் அதிர்ச்சி || Tamil Cinema News\nதங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக் கூடாது ஏன் தெரியுமா\nவெள்ளி விழா நாயகன் ‘மைக்’ மோகன்… வீழ்த்திய அந்த நடிகை | Tamil Cinema News |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-070215.html", "date_download": "2018-07-19T11:30:50Z", "digest": "sha1:CEFQ6KISVTIKU6EHZM3LCUEEGM2EHA47", "length": 8962, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் ஷூட்டிங்கில் அஜீத்! | Ajith is back in shooting! - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் ஷூட்டிங்கில் அஜீத்\nமுதுகுவலியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டு, ஓய்வில் இருந்து வந்த அஜீத் மீண்டும்ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.\nஇளம் வயதில் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததில் அஜீத்தின் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டது.அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்தாலும் இப்போதும் கூட அடிக்கடி முதுகு வலி வந்துஅவதிப்பட்டு வருகிறார்.\nமுதுகுவலியைப் போக்க ஏகப்பட்ட மருந்து, மாத்திரைகளை உட்கொண்டுதான் அவர் படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விசாகப்பட்டனத்தில் கிரீடம் பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டுநடித்தபோது கடுமையான முதுகுவலி ஏற்பட்டு துடித்தார் அஜீத்.\nஉடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் அஜீத். அப்பல்லோமருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அஜீத், பின்னர் வீட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு ஓய்வில் இருந்து வந்தஅஜீத் இப்போது குணமடைந்துள்ளார்.\nஇதையடுத்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். திரிஷா, ராஜ்கிரண், சரண்யா, அஜீத் ஆகியோர்சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர்.\nமுதுகுவலி சுத்தமாக இல்லை என்று உறுதியான நிலைக்கு வந்த பின்னர் மிச்சமுள்ள சண்டைக் காட்சிகளைபடமாக்க உள்ளனராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/television/top-most-beautiful-tamil-tv-serial-actresses-2016-043830.html", "date_download": "2018-07-19T11:57:43Z", "digest": "sha1:YRBWWYFR5GEA2PM763IKWMPDQVP7QOME", "length": 20087, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சத்யாவா? ஷிவன்யாவா? 2016ல் அழகில் அசத்திய சீரியல் ஹீரோயின் யார்? | Top Most Beautiful Tamil TV serial Actresses 2016 - Tamil Filmibeat", "raw_content": "\n 2016ல் அழகில் அசத்திய சீரியல் ஹீரோயின் யார்\n 2016ல் அழகில் அசத்திய சீரியல் ஹீரோயின் யார்\nகாலங்கள் கடந்தாலும் சீரியல்களில் வரும் ஹீரோயின்கள் மாறப்போவதில்லை. ஒரு சீரியலில் நடித்தால் போதும் 5 ஆண்டுகளுக்கு கவலையிருக்காது. ஆயிரக்கணக்கான எபிசோடுகள் நிறைவடைந்த பின்னர்தான் சீரியல்கள் முடியும்.\nசீரியல் நாயகிகளை தங்களின் குடும்பத்தில் ஒருத்தியாகவே பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். சீரியல் நாயகிகளின் உண்மை பெயரே மறந்து போய் கடைசியில் சீரியல் பெயரே நிலைத்து விடும்.\nஇந்தி டப்பிங் சீரியல்தான் என்றாலும் இரவு 10 மணிக்கு மகுடி சத்தம் கேட்காத வீடுகளே இருக்காது. காரணம் ஷிவன்யா. கார்த்திக் உடன் ரொமான்ஸ் ஆகட்டும், பெற்றோர்களை கொன்றவர்களை பழி வாங்குவதகாட்டும் அப்ளாஸ் அள்ளுகிறார் ஷிவன்யாவாக நடிக்கும் மவுனி ராய். ஐஸ்வர்யா ராயை உச்சரித்த உதடுகள் இப்போது மவுனி ராய் பெயரை ஜெபிக்கத் தொடங்கி விட்டன.\nசன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் தொடரின் நாயகி சத்யாவிற்கு நிறைய இளைஞர் பட்டாளங்கள் ரசிகர்களாக உள்ளன. டிவி சீரியல்கள் பார்க்காத இளசுகளை பார்க்க வைத்த வாணி போஜன், சத்யாவாகவும், லட்சுமி வந்தாச்சு தொடரில் லட்சுமியாகவும் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.\nகல்யாணம் முதல் காதல்வரை பிரியா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகி பிரியா பவானி சங்கர் கடந்த சில மாதங்கள் வரை இளசுகளின் உள்ளங்களை வசீகரித்தவர். திடீரென்று சீரியலில் இருந்து விலகினார் பிரியா. அவரது ரசிகர்கள்தான் மனம் ஒடிந்து போனார்கள்.\nஒரு பிரியா போனால் என்னஈ அதே போல அழகாய் இன்னொரு பிரியவை இறக்குமதி செய்வோம்ல என்று களமிறக்கியுள்ளது கல்யாணம் முதல் காதல்வரை குழு. இந்த பிரியவும் அழகில் அசத்துகிறார். நடிப்பும் அந்த பிரியாவிற்கு சற்றும் குறைவில்லாத ரகம்தான். இந்த பிரியா 2016 ம் ஆண்டின் புதுவரவு என்றாலும் வந்த வேகத்தில் ரசிகர்களை ஈர்த்து விட்டார் பிரியா.\nபிரியமானவள் தொடரில் அவந்திகா, பூமிகா, கவிதா என 3 மருமகள்கள் இருந்தாலும், இசைப்பிரியா என்ற 4வது மருமகளின் வருகை 2016ல் புது வரவு. இசைப்பிரியாவின் துறு துறு பேச்சு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.\nசன் டிவியில் நாதஸ்வரம் சீரியலில் மலராக வந்து கவர்ந்த ஸ்ருதிகா, 5 ஆண்டுகள் மலராகவே வாழ்ந்தார். நாதஸ்வரம் தொடர் முடிந்த உடன் குலதெய்வம் தொடங்க, அலமுவாக வந்து இல்லத்தரசிகளை கவர்கிறார் ஸ்ருதிகா. அசால்டான நடிப்பு, அமைதியான பேச்சு என வந்து செல்லும் அலமுவிற்கு நாதஸ்வரத்தை விட குலதெய்வத்தில் வேலை குறைவுதான்.\nசரவணன் மீனாட்சி - மீனாட்சி\nசரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனிலும் ரக்ஷிதாதான் மீனாட்சி. இரண்டாவது சீசனில் பாவா���ை தாவணியில் வந்து ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த மீனாட்சி, மூன்றாவது சீசனில் மதுரைக்கார பெண்ணாக லண்டன் ரிட்டர்ன் மாடர்ன் மீனாட்சியாக வலம் வருகிறார்.\nசன் டிவி தென்றல் தொடரில் நடித்து ஸ்ருதியாக நடித்தவர், அபூர்வ ராகங்கள் தொடரில் வந்து அசத்தி வருகிறார் ஸ்ருதி. விஜய் டிவியில் ஆபிஸ், ஜீ தமிழ் டிவியில் அன்னக்கொடியும் 5 பெண்களும் தொடரில் வக்கீலாக நடித்து வருகிறார்.\nசன்டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடரில் வாணியின் சின்ன மருமகளாக நடிக்கும் பூஜாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கௌதம் உடனான கொஞ்சல், மாமியார் மீதான மரியாதையை நடிப்பில் வெளிப்படுத்துகிறார். திருமணத்திற்கு பின்பு ஓரகத்தி டிம்பிளை சமாளிப்பதில் ஆகட்டும், குழந்தைக்காக ஏங்குவதில் ஆகட்டும் அவ்வப்போது தலைகாட்டினாலும் நடிப்பை வெளிப்படுத்துகிறார் பூஜா.\nபாசமலர்கள் தொடரில் அண்ணன் தங்கைகள் பாசம் இப்போது மாமனார் மருமகள் சண்டையாக மாறியுள்ளது. பழைய நட்சத்திரங்கள் காணாமல் போய்விட்டனர். புதிய நட்சத்திரங்களுக்காக எபிசோடு அதிகரித்து விட்டது. தாமரை குடும்பம் காணாமல் போய் இப்போது பாரதி குடும்பமே பாசமலர் குடும்பமாகிவிட்டது. பாரதி புதுமுகம் என்றாலும் நடிப்பில் முதிர்ச்சி காட்டுகிறார்.\nசன் டிவியில் பிற்பகல் நேரத்தில் ஓளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் சந்திராவாக நடிக்கும் ஹீரோயின் அழகு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல் என்பதால் சந்திராவுக்கு அதிக ரசிகர்கள் இல்லத்தரசிகளே.\nஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் தலையணை பூக்கள் தொடரின் நாயகி நிஷா, டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இப்போது சீரியல் நாயகியாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் பார்த்த முகம்தான் என்றாலும் சீரியல் நாயகியாக அழகான தோற்றத்துடன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.\nரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் இப்போது பூமிகா குடும்பம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. மலைஜாதிப் பெண்ணாக நடித்த போது கோணல் கொண்டையும், புடவை கட்டும் ரசிகர்களை ஈர்த்தது. இப்போது மாடர்ன் பெண்ணாகிவிட்டார் பூமிகா. பூமிகாவின் நடிப்பு கவர்வதலேயே டாப் 5 சீரியலில் இடம் பெற்றுள்ளது வம்சம்.\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n2016 பிளாஷ்பேக்: இல்லற பந்தத்தில் இணைந்த சின்னத்திரை நட்சத்திரங்கள்\nபிளாஷ்பேக் 2016: பாலிவுட்டை அதிர வைத்த சீனியர்களின் விவாகரத்துகள்\nபிளாஷ்பேக் 2016: பிரம்மச்சரியத்திற்கு குட்பை சொன்ன திரையுலக பிரபலங்கள்\n2016 ஆண்டின் கனவுக்கன்னி யார்\nஅத்தனையும் வெறும் பில்டப் மட்டும் தானா கோப்ப்ப்ப்பால்\nபெருமை, மகிழ்ச்சி, சிறப்பு, சண்டை, ஏமாற்றம்: 2016ல் கோலிவுட் ஒரு பார்வை\nகோலிவுட் 2016... செம்ம்ம அடி வாங்கிய ஹீரோக்கள்\nஇந்த ஆண்டின் டாப் டென் மெகா ஹிட் படங்கள்\nநாங்க திருந்தவே மாட்டோம்... 2016லும் அடம் பிடிக்கும் சீரியல் வில்லிகள்\nசிநேகா, கவுதமி, சதா... 2016ல் சின்னத்திரைக்கு வந்த சினிமா ஹீரோயின்கள்\nசீரியல் டிஆர்பிக்காக ஆள் கடத்தல், தலைமறைவு 2016லாவது முடிவுக்கு வருமா\nகுஷ்பு, ஊர்வசி, கீதா, லட்சுமி ராமகிருஷ்ணன் 2016ல் சர்ச்சையை கிளப்பிய டிவி பஞ்சாயத்துக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://techguna.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-19T11:04:42Z", "digest": "sha1:QEB6DB7YL5XRXSJTVHQ47LONXOJKK3AZ", "length": 7751, "nlines": 87, "source_domain": "techguna.com", "title": "வாட்ஸ் ஆப் மோகத்தில் அதிகரிக்கும் விவாகரத்துகள் - Tech Guna.com", "raw_content": "\nHome » மொபைல் » வாட்ஸ் ஆப் மோகத்தில் அதிகரிக்கும் விவாகரத்துகள்\nவாட்ஸ் ஆப் மோகத்தில் அதிகரிக்கும் விவாகரத்துகள்\n600 மில்லியன் பயனாளர்களை கொண்ட வாட்ஸ் ஆப் மோகத்தால் இத்தாலி நாட்டில் விவாகரத்து அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.\nஇத்தாலியன் வழக்கறிஞர��� அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், பெரும்பாலான தம்பதிகள் வாட்ஸ் ஆப் குறுந்தகவல்களை ஆதரமாக வைத்துகொண்டு விவாகரத்து கோருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. தங்களிடம் விவாகரத்துக்குகாக கோரும் பல தம்பதிகள், தங்கள் வாழ்கை துணைவரின் மேல் இருந்த நம்பிக்கையை இழந்ததற்கு காரணமாக சமுக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் செய்திகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇது போல் இங்கிலாந்தில் கடந்த 2012 ம் ஆண்டு எடுத்த ஆய்வு முடிவுகளும் இதே கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது.\nஇன்று வளர்ந்து வரும் சமுக வலை தளங்கள் பல நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டாலும், கடைசியில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன.அதற்காக வளர்ந்து தொழில்நுட்பபதை பயன்படுத்தாமல் புறக்கணித்து ஒதுக்குவது சரியாகிவிடாது.\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nபேஸ்புக் வாட்ஸ் ஆப்\t2014-11-28\nTagged with: பேஸ்புக் வாட்ஸ் ஆப்\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nப்ளு டூத் மூலம் டயர்களை கண்காணிக்கலாம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா\nவிண்வெளியில் தயாராகும் முதல் ஆபாச படம்\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nப்ளு டூத் மூலம் டயர்களை கண்காணிக்கலாம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா\nவிண்வெளியில் தயாராகும் முதல் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2012/11/", "date_download": "2018-07-19T11:22:40Z", "digest": "sha1:6NSLTSLMZQGISWD5M757WRFBIVMIAALL", "length": 131594, "nlines": 376, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: November 2012", "raw_content": "\nஈசாப் ஏன் விலங்குகளை வைத்து குட்டிக்கதைகள் எழுதினார்\nஏனெனில் விலங்குகள் ‘அவதூறு கேஸ்’ போடாது. 66-ஏ பாயாது.\nஇதே டெக்னிக்கில்தான் யான் மார்டேலும் ‘லைஃப் ஆஃப் பை’ எழுதினார். பாராட்டுகள் குவியும்போது தாங்க முடியாவிட்டாலும் தலைதாழ்த்தி, சிரமேற்கொண்டு வாங்கிக் கொள்கிறோம். விமர்சனம் என்றதுமே காததூரம் ஓடுகிறோம். திரும்ப ஓடிவந்து விமர்சகர்களின் முகத்தில் நாலு குத்தும், குத்தினால்தான் தூக்கம் வருகிறது.\nஉள்ளம் என்பதே ஓர் உருவகம். கடவுள் மாதிரி. அறிவியல் பூர்வமாக இப்படி ஒன்று நம் உடலில் இருப்பதை நிரூபிக்க முடியாது. ஆனால் பகுத்தறிவாளர்களும் கூட உள்ளம் என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்வது நகைமுரண் (இருவர் உள்ளம் – வசனம் : கலைஞர்). இல்லாத ஒன்றை அடக்கி, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வாழ்க்கை முழுக்க கொடூரமான போர் நடத்திக்கொண்டே இருந்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. உள்ளம் என்கிற உருவகத்துக்கு ஓர் உருவம் கொடுத்துப் பார்த்தால் என்ன எலி, பூனை உருவங்கள் ஒத்து வருமா எலி, பூனை உருவங்கள் ஒத்து வருமா சாது மிரண்டால் காடு கொள்ளாது. பார்க்க சப்பையாக இருப்பவர்கள் கூட அவர்களை, அவர்களே சூப்பர்மேனாகதான் கருதிக் கொள்கிறார்கள். எனவே புலியாக பொதுமைப்படுத்தி உருவகப்படுத்திக் கொள்ளலாம்.\nஇப்படியெல்லாம் தத்துவக் கருமாந்திரங்களை எல்லாம் சிந்திக்க அவகாசமின்றி, கடாசிப் போட்டுவிட்டாலும் லைஃப் ஆஃப் பை மிகச்சிறந்த திரைப்படம்தான். ஒரு புலியும், மனிதனும் மட்டும் இருநூற்றி இருபத்தியேழு நாட்கள் நடுக்கடலில் சிறிய படகில் உயிரை கையில் பிடித்து வாழ்கிறார்கள். survival of the fittest தோற்கிறது. இந்த சுவாரஸ்யமான ஒன்லைன் போதாதா\nதைவானில் பிறந்து ஹாலிவுட்டில் படமெடுப்பவராக இருந்தாலும் இந்தியக் களத்தில் இந்தியர்களைவிட சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதில் ஆங் லீ தனித்துத் தெரிகிறார். நாற்பதாண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி இப்படித்தான் இருந்திருக்கும் என்று ரெஃபரென்ஸ் பார்த்து சித்தரித்து விடலாம். ஆனால் மனிதர்களை அசலாக தோற்றத்திலும், செயலிலும் காட்டுவது ராட்சஸ வேலை. யாரும் எளிதில் நினைத்துப் பார்த்துவிட முடியாத சாதனைகளை அனாயசமாக செய்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.\nமனிதர்களை விடுங்கள். விலங்குகளுக்கு வருவோம். இயக்குனர் நினைத்தமாதிரியாக நடிக்கும் விலங்குகள் சாத்தியமா என்ன ஒரு காட்சியில் கூட அனிமேஷன் உருவம் என்கிற எண்ணம் வந்துவிடாதபடி படம் முழுக்க புலி உறுமுவதிலும், பாய்வதிலும், கம்பீரநடை நடப்பதிலுமாக தொழில்நுட்பத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.\n‘எனக்குள்ளே ஒரு மிருகம் தூங்கிக்கிட்டிருக்கு’ எனும் அரதப்பழசான பஞ்ச் டயலாக்கை அடிக்காத ஆளே இல்லை. படமும் அதைதான் சொல்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புலி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது முழிக்கும்போது, ரிங்மாஸ்டராக மாறி அதை அடக்கிப்பழக வேண்டும். இல்லையேல் அப்புலி உங்களை கொன்றுவிடும். கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரி கொஞ்சம் பிசகினாலும் ‘பாபா’ மாதிரி பக்திப்படம் ஆகிவிடும் ஆபத்து இந்த கதைக்கு உண்டு. இந்த கதையும் கூட ஒரு ‘புலி’தான். ரிங்மாஸ்டரான இயக்குனர் அதை எப்படி தனக்கு வாகாக பழக்கியிருக்கிறார் என்பதை திரையில் பாருங்கள். நீங்களே அறியாத உங்கள் உள்ளத்தில் மறைந்துக் கிடக்கும் ரகசிய அறைகளின் ஆச்சரியக் கதவுகளை நிச்சயம் திறந்துவிடும். இப்படம் உங்களை விமர்சிக்கிறது. உங்களுக்கு கோபம் வந்துவிடக் கூடாதே என்கிற நல்லெண்ணத்தில் புலியை வைத்து கதை சொல்கிறது. யாருமே தவறவிடக்கூடாத படம் என்று மட்டும் பரிந்துரைக்கிறோம்.\nஇப்படம் மூலமாக ஆஸ்கர் ஜூரிகளிடம் அனாயசமாக தன்னுடைய விசிட்டிங் கார்டுகளை அள்ளித் தெளித்திருக்கிறார் ஆங் லீ.\nதொடர்பில்லாத பதிவு : துரத்துதலும், ஓட்டமும்\nகலைஞரின் 80வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் என்று நினைவு. சென்னை சின்னமலையில் நடந்தது. பேசியவர்கள் எல்லாருமே கலைஞரை வானளவு புகழ்ந்து அமர்ந்தார்கள். வீரபாண்டியார் எழுந்தார். “எங்களுக்கு நீங்கள் எல்லாமே செய்திருக்கிறீர்கள். ஆனால் பெரியார், அண்ணா சொன்னதைத் தவிர்த்து புதிய சிந்தனைகளை நாம் உருவாக்கி இருக்கிறோமா என்று சுயபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும். திராவிட இயக்க சிந்தனைகளை காலத்துக்கு ஏற்ப மாற்றி, புதிய சிந்தனைகளை உருவாக்கும் பணியை நீங்கள்தான் செய்யவேண்டும். நீங்களும், பேராசிரியரும் அவற்றை உருவாக்கும் பணிகளை இனி மேற்கொள்ள வேண்டும்”\nகலைஞரின் முகத்தில் மகிழ்ச்சியா, வருத்தமா என்று தெரிந்துக்கொள்ள முடியாத ரி��ாக்ஷன். மேடையில் அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். கட்சி, ஆட்சி போதும். தமிழ் சமூகத்துக்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக கலைஞரை நோக்கி வீரபாண்டியார் தைரியமாக சொன்னார்.\nஇந்த தைரியம் கட்சியில் வீரபாண்டியாருக்கு அதிகம். தலைவரோடு அடிக்கடி முரண்படும் மூத்த கட்சிக்காரர். ஆனால் அதே நேரத்தில் தலைவரை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. கலைஞரின் முரட்டு பக்தன். எழுபதுகளின் இறுதியில் அதிமுக திமுகவை அதிகமாக குற்றம் சாட்டியது பூலாவரி சுகுமாரன் கொலை சம்பவத்தில்தான். அதில் நேரடியாக தொடர்புடையவர் என்று வீரபாண்டியாரால் தலைமைக்கு தர்மசங்கடம். சொத்துப் பிரச்னை. பங்காளிகளுக்குள் பகை. அது கட்சிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவிட்டதே என்று வீரபாண்டியாருக்கு மனவருத்தம். பூலாவரியில் இன்றுவரை வீரபாண்டியாரின் பங்காளிகள்தான் அவரது கண்களில் விரல்விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த ஊரான பூலாவரி கிராமம் தொடங்கி, வீரபாண்டி ஒன்றியம், சேலம் மாவட்டம் வரை இவரும், இவருடைய உறவுக்காரர்களும்தான் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆள்வது வழக்கம். இம்மாதிரியான தனிப்பட்ட நிரந்தர நெருக்கடியையும் தாண்டிதான் கட்சியை சேலம் மாவட்டத்தில் அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் ‘சேலம்’ என்கிற பெயரையே அம்மாவட்ட திமுகவினர் மறந்துவிட்டார்கள். கலைஞரின் வருகையின் போது “வீரபாண்டியாரின் மாவட்டத்துக்கு வரும் தலைவரே வருக” என்று பேனர் வைத்து அமர்க்களம் செய்வார்கள்.\nவீரபாண்டியாரின் அரசியல் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் சகஜம். ஐந்து ஆண்டுகள் உச்சியில் இருப்பார். ஐந்து ஆண்டுகள் மிகமோசமான பள்ளத்தில் வீழ்ந்துக் கிடப்பார். சாகும் வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டுமென்பது அவருக்கு விதிக்கப்பட்ட விதி. எப்படிப்பட்ட நெருக்கடியிலும் கட்சியையும், தலைவரையும் விட்டுக் கொடுத்ததில்லை என்பது அவரது வாழ்நாள் சாதனை. எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் வீரபாண்டியாருக்கு ஒரு சோதனை என்றால் கலைஞர் நொறுங்கி விடுவார். வீரபாண்டியாரின் மகனுடைய அகால மரணத்தின் போதும் சரி. அநியாய வழக்குகளால் சிறைக்கொடுமையை வீரபாண்டியார் சந்திக்க நேரும் போதும் சரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனைய��ல் அவதிப்படும்போதும் சரி. கலைஞரின் கண்கள் உடனடியாக கலங்கி விடும். முரட்டுத் தொண்டன் மீதான தலைவரின் விவரிக்க முடியாத ஒரு வகை காதல் அது. அதனால்தான் என்னவோ கலைஞரின் மனச்சாட்சியான முரசொலி மாறன் மறைந்த அதே நவ.23லேயே அவருடைய பிரியத்துக்குரிய தம்பியான வீரபாண்டியாரும் மறைந்திருக்கிறார்.\nதமிழகத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் அடையாளங்கள் ஒவ்வொன்றாக மறையும் நேரம் இது.\nஐ.நா. சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஐ.நா.வில் மனிதநேயம் தொடர்பான பிரச்னைகளை கவனித்துக் கொள்ளும் குழு இது. இந்தக் கூட்டத்தில் ஒரு வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. “மரணத்தண்டனை விதிக்கப்படுவது உலகம் முழுவதும் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்”\nநிறவெறி தேசங்கள் என்று கருதப்படும் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்திருக்கின்றன. தீர்மானத்தை முழுமூச்சாக எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், மரணத் தண்டனையை எதிர்த்த காந்தியை தேசப்பிதாவாக கொண்டாடும் நாடுமான இந்தியாவின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் இன்னொரு ஜனநாயக நாடு அமெரிக்கா. அகிம்சையைப் போதித்த புத்தபகவானை வணங்கும் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளும் எதிர்த்திருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் எதிர்த்து வாக்களித்திருப்பதாக தெரிகிறது.\nஏன் எதிர்த்தோம் என்பதற்கு இந்தியா விளக்கமும் கொடுத்திருக்கிறது. “ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சட்ட நடைமுறைகளை வகுத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. இதில் குறுக்கிடுவது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்” என்று இந்தியா தனது எதிர்ப்புக்கான நியாயத்தை பேசியிருக்கிறது. அவ்வப்போது அண்டை நாடுகளிடம் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசியாவின் தாதா ‘இறையாண்மை’ குறித்துப் போதிப்பது கருப்பு நகைச்சுவைதான்.\n“மரணத்தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்கிற ஒருவரி தீர்மானம் தவிர்த்து பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இத்தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் போன்ற வலியுறுத்தல்கள் குறித்து இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.\nஇந���தியாவைப் பொறுத்தவரை ‘மரணத் தண்டனை’ என்பது ஊடகங்களுக்கு தரும் ஃப்ளாஷ் நியூஸ். அரசோ, எதிர்க்கட்சிகளோ சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் மக்களை மடைதிருப்ப ‘மரணத்தண்டனை’ உதவிக் கொண்டிருக்கிறது. மாநில அளவில் கலைஞர் ஆட்சியாகட்டும், ஜெயலலிதா ஆட்சியாகட்டும். இவர்களுக்கு ‘என்கவுண்டர்’ எப்படி உதவுகிறதோ அதுபோல மத்திய ஆட்சியாளர்களுக்கு மரணத்தண்டனை. மனித உரிமை, கருத்தியல், கொள்கை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்ப்பை அரசோ, மரணத்தண்டனைக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடும் குடிமக்களோ முன்வைப்பதில்லை. ‘தீவிரவாதிகளை எப்படி கட்டுப்படுத்துவதாம்’ என்று ‘வெயிட்’டான காரணத்தை முன்வைத்து, மூளையை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு தூக்குத்தண்டனைக்கு ‘ஜே’ போடுகிறார்கள். வருடா வருடம் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் இராணுவத்துக்கும், மற்ற பாதுகாப்பு அமைப்பினருக்கும் ஒதுக்கப்படுகிறதே.. அவற்றுக்கு முறையான கணக்கிருக்கிறதா.. அவர்கள் ஒழுங்காக வேலைபார்த்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மாட்டார்களா.. தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முன்பாக நம் உளவு அமைப்புகள் தூங்கிக் கொண்டிருந்தனவா.. என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப நமக்கு துப்பில்லை.\nஎனவேதான் கிட்டத்தட்ட திருட்டுத்தனமாக திடீரென்று கசாப்பை தூக்கிலிட்டிருக்கிறார்கள். மரணத்தண்டனை என்பது நியாயமான நீதியென்று பெருமிதமாக மார்தட்டிக் கொள்பவர்களுக்கு இந்த திருட்டுத்தனம் அவசியமில்லை. கசாப்பை தூக்கிலிடும் தேதியை வெளிப்படையாக அறிவித்தால் தீவிரவாதிகள் ஜெயிலைத் தகர்த்து கசாப்பை தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள் என்றெல்லாம் அரசு அஞ்சியதா என்ன.. அவ்வளவு பலவீனமாகவா இந்தியா இருக்கிறது கசாப்பின் தூக்குத்தண்டனையை ரகசியமாக நிறைவேற்றியதற்கு ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தை இந்தியா சொல்ல வேண்டும்.\nவிரைவில் பாராளுமன்றத் தேர்தலை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக குஜராத் தேர்தலில் பாஜகவோடு பலப்பரிட்சை நடத்தியாக வேண்டும். இத்தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலின் ‘ட்ரைலர்’ என்று பாஜக பிரச்சாரம் செய்யும். அரசின் மீது தொடர்ச்சியாக ஊழல் கணைகளை ஏவிக்கொண்டிருந்த எதிர்க்கட்சியான பாஜக இனி ஊழலைப் பற்றிப் பேச அருகதையில்லை என்பதை அக்கட்சியின் தலைவர் கட்கரி நிரூபித்துவிட்டார். எனவே அடுத்து அவர்கள் எய்யப்போகும் அம்பு ‘கசாப்’தான் என்பதை பா.ஜ.க.வின் அரசியலை எடைபோடுபவர்கள் எளிமையாக யூகிக்க முடியும். அந்த வாய்ப்பை தர காங்கிரஸ் தயாராக இல்லை. ஒத்த வீட்டுக்கு துண்டு போட்டு போகும் பெரிய மனுஷன் கணக்காக அசிங்கமான முறையில் கசாப்பை தூக்கிலிட்டு விட்டது. மும்பையில் தெருவெங்கும் கொண்டாட்டமாம். கொஞ்ச நாட்களுக்கு தேசியவெறி தலைக்கேறி மக்கள் அரசு சார்பாக சிந்திக்கத் தொடங்குவார்கள். முன்பு இதேபோன்ற தேசியவெறியை கார்கில் போர் வாயிலாக கிளப்பி பாஜக ஆட்சிக்கு வந்தது நினைவிருக்கலாம். இவையெல்லாம் வெளிப்படையாக யூகிக்கக்கூடிய விஷயங்கள். காங்கிரஸுக்கு கசாப்பை தூக்கிலிட்டதன் மூலமாக கிடைக்கக்கூடிய மறைமுக பலன்கள் என்னவென்று தெரியவில்லை.\nஎனவேதான் பதறிப்போய் குஜராத் படுகொலை புகழ் நரேந்திரமோடி அவசர அவசரமாக ‘அப்சல் குருவுக்கு எப்போ’ என்று கேட்கிறார். காங்கிரஸ் அதையும் உடனடியாக செய்ய தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் பேச்சின் வாயிலாக அவர்களது ‘மூட்’ புரிகிறது. “கசாப்புக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது. கசாப்போடு நாம் நின்றுவிட முடியாது. அப்சல் குருவுக்கான தண்டனையையும் விரைவுப்படுத்த வேண்டும்” என்கிறார். பேசுவது காங்கிரஸ் பொதுச்செயலரா அல்லது பாஜகவின் தலைவர்களில் ஒருவரா என்பதே தெரியாத அளவுக்கு திக்விஜய்சிங்கின் பேச்சு அமைந்திருக்கிறது. சிறுபான்மையினர் விஷயத்தில் பாஜகவோடு ஒப்பிட்டு காங்கிரஸை தூக்கிப்பிடிக்க இனி நமக்கு காரணங்கள் எதுவுமில்லை. இது இஸ்லாமியருக்கு எதிரான நடவடிக்கை என்று பிரச்சாரப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் பாஜகவும், காங்கிரஸும் ஒற்றுமையாகவே இருக்கின்றன. பாஜகவின் செய்தித் தொடர்பாளரான முக்தார் அப்பாஸ் நக்வி, “நாட்டின் எதிரி தண்டிக்கப்பட்டுள்ளான்” என்று கருத்து சொல்லியிருப்பதின் மூலம் இதை புரிந்துக் கொள்ளலாம். ஒருவகையில் கசாப்பின் தூக்கு, இஸ்லாமிய சகோதரர்களுக்கு நிம்மதியையும் தந்திருக்கலாம். தொண்டையில் சிக்கிய மீன்முள்ளாய் கசாப் அவர்களுக்கு உறுத்திக் கொண்டிருந்தான்.\nநாட்டின் பாதுகாப்பை விட, அரசியல் பிரதி���லன்கள்தான் இங்கே மரணத்தண்டனையை தீர்மானிக்கின்றன. மரணத்தண்டனையை விட ஆபத்தான அம்சம் இது. மனிதநேயத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை எதிர்த்துக் கொண்டே இருப்பது நமது கடமை.\nதொடர்புடைய முந்தையப் பதிவுகள் :\nதூக்குத் தண்டனை – எதிர்வினைகள்\nமரண தண்டனையை ஆதரிப்பவர்கள் காட்டுமிராண்டிகள்\nமுகம் மாறும் தமிழ் சினிமா\nசிந்தனைகள், தொழில்நுட்பம், திறமை, அணுகுமுறை, வியாபாரம் ஆகிய எல்லாவற்றிலும் தமிழ் சினிமாவில் புது வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது\nதிரையரங்குகளில் திருவிழாக்கோலம். படம் பார்த்தே ஆக வேண்டும் என்று நீண்டவரிசையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் . குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் மக்கள் வெள்ளம். படம் பார்த்த குழந்தைகள் மீண்டும் அதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். படத்தில் ஹீரோ திரையில் தோன்றியதில் தொடங்கி, படத்தின் இறுதிக்காட்சிவரை கைதட்டல், விசில், ஆரவாரம்.எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன இம்மாதிரி காட்சிகளைப் பார்த்து\nவெகுநாட்களுக்குப் பிறகு சில மாதங்களுக்குமுன் இவற்றைப் பார்க்க முடிந்தது.\nகாணாமல் போன சூப்பர் ஸ்டார்ஸ்\nஇத்தனை உற்சாகமும் குதூகலமும் ஏற்படுத்திய இந்தப் படம் ரஜினியோ, கமலோ அல்லது வேறு சூப்பர் ஸ்டார்களோ நடித்த படமல்ல. படத்தின் நாயகன் சிக்ஸ்பேக் உடற்கட்டு கொண்ட ஆணழகனுமல்ல. பின் யார்\nநாம் அன்றாடம் தொல்லையாக நினைக்கும் ‘ஈ’தான் ஹீரோ. தமிழ்/தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட ‘நான் ஈ’ திரையில் பாய்ந்திருக்கும் புது வெள்ளத்தின் ஓர் அடையாளம். தியாகராஜ பாகவதர் காலத்தில் துவங்கிய ஹீரோக்களின் சகாப்தம், காலம் காலமாக எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-சூர்யா என்று தொடர்ந்துகொண்டிருக்கிறது. கதாநாயக பிம்பத்தின் வழிபாடு அதிகமுள்ள தென்னிந்திய சினிமாவில் மிகச்சிறிய பூச்சியான ‘ஈ’தான் ஹீரோ என்பதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் இயக்குனர் ராஜமவுலியின் துணிச்சலான முயற்சிக்கு மக்கள் கொடுத்த பேராதரவு புதிய சிந்தனைகளை அவர்கள் வரவேற்கத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சான்று. புதிய, துணிச்சலான முயற்சிகளை புதுமுக இயக்குனர்கள் மேற்கொள்ளத் ���ூண்டுகோலாக இப்படத்தின் வெற்றி அமைந்திருக்கிறது.\nஹீரோ என்பதற்கான இலக்கணங்கள் மாறிவிட்டன. ஹீரோ என்றால் அழகிய முகவெட்டு, ஸ்டைலான நடை உடை பாவனைகள் இருக்க வேண்டும் என்ற நிலைமாறி வருகிறது. ‘சுப்பிரமணியபுரம்’ போன்ற படங்கள் வந்தபோதே மீண்டும் இயக்குனர்களின் படங்களுக்கான பருவம் துவங்கி விட்டது. முப்பதாண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் போன்றவர்கள் முன்னெடுத்த இந்தப் போக்கினை, பின் சேரன், தங்கர்பச்சான், கரு. பழனியப்பன் போன்ற இயக்குனர்கள், ஏன் பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்கள்கூட வளர்த்தெடுத்தார்கள். இப்போது ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்காமல், இயக்குனர்களே மேக்கப் போட்டு நாயகர்களாகி விடுகிறார்கள். சமீப ஆண்டுகளில் இயக்குனராக அறிமுகமாகி, நடிகர்களாகவும் சசிக்குமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் தடம் பதித்தார்கள். சசிக்குமார் நடித்த ‘சுந்தர பாண்டியன்’ ஏ, பி, சி என்று மூன்று வட்டாரத் திரையரங்குகளிலும் வெற்றி பெற்றது.\nபெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட், நட்சத்திரப் பட்டாளம் இதெல்லாம் அவசியப்படாமல் சிறிய பட்ஜெட்டில் சின்சியராக எடுக்கப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. புதுமுக ஹீரோவான உதயநிதி ஸ்டாலின் நடித்த, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருப்பதைக் கவனிக்கலாம். அதே நேரத்தில் தமிழ் சினிமாவின் வசூல் ராஜாக்களாக அறியப்பட்ட பெரிய ஹீரோக்களின் படங்கள் வணிகரீதியாக தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வி வருகின்றன.\nசிறு பட்ஜெட் திரைப்படங்கள் ஜெயிப்பது மட்டுமல்ல, சினிமாவின் வழக்கமான கதை சொல்லும் முறையை உடைத்தெறிந்திருக்கின்றன. ‘அட்டகத்தி’, ‘மதுபானக்கடை’ போன்ற படங்கள் ஓர் உதாரணம். கதை சொல்லாமல் சம்பவங்களைத் தொகுத்து, காட்சியனுபவங்களை ரசிகர்களுக்கு கடத்தும் இந்தப் புதிய அணுகுமுறைக்கு விமர்சகர்களும், ரசிகர்களும் ‘சபாஷ்’ சொல்கிறார்கள்.\n\"வழக்கமான ஃபார்முலா படங்களின் மீது எனக்கே பெரும் சலிப்பு இருக்கிறது. என் படம் புதுசாகத் தெரியவேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு செய்யவில்லை. உள்ளடக்கத்துக்காக அது பேசப்பட வேண்டுமென்று மட்டுமே நினைத்தேன். ஒரு ஹீரோவுக்காக படத்தை யோசிப்பது எனும்போது தரம் கேள்விக்குறி ஆகிவிடுகிறது. படத்தின் உள்ளடக்கம��தான் ஹீரோ, பட்ஜெட் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் தீர்மானிக்க வேண்டும். ஒரு படைப்பாளி முதலில் தீர்மானிக்க வேண்டியது எதை எடுக்கப் போகிறோம் என்பதைத்தான்\" என்கிறார், ‘மதுபானக்கடை’ படத்தின் இயக்குனரான கமலக்கண்ணன். சினிமா பின்னணியில் இல்லாமல், விளம்பரப்பட உலகில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் இவர்.\nஎண்ணெய் காணாத தலையும் மழிக்கப்படாத முகமும் மடித்துக் கட்டிய கைலியுமாக ஹீரோக்கள் தரையிறங்கி வந்து விட்டார்கள். ஆனால் இன்னமும் நாயகிகளை கவர்ச்சிப் பதுமைகளாக, கதாநாயகர்களோடு வெளிநாட்டு லொக்கேஷன்களில் இடுப்பை வெட்டி வெட்டி டூயட் பாடுபவர்களாகவே வைத்திருக்கிறது தமிழ் சினிமா. டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, சாவிதிரி, விஜயக்குமாரி, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, ராதிகா ஏன் ஸ்ரீ தேவி காலம் வரைகூட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளே சினிமாவாகியிருக்கின்றன. இப்போதும் தொலைக்காட்சிகளில் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மெகாத் தொடர்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சமகாலத் தமிழ் சினிமா கதாநாயகிகள் மீது இன்னும் கடைக்கண் வைக்கவில்லை. அரிதிலும் அரிதாக சில முயற்சிகள் துவங்கியிருக்கின்றன என்பது உண்மைதான். பெண் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஆரோகணம்’ திரைப்படத்தில் நாயகன் இல்லை. கதையின் மையம் நாயகியை சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. இந்தச் சிறு பட்ஜெட் படம் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ரசிகர்களின் ஆதரவு முழுதாகக் கிடைக்கவில்லை.\nபடத்தின் உள்ளடக்கம் மாறியிருப்பது மட்டுமின்றி, தொழில்நுட்பரீதியாகவும் தமிழ் சினிமா பல படிகள் முன்னேறியிருக்கிறது. முன்பெல்லாம் சிறப்பாகப் படமெடுக்கும் படங்களை, ‘ஹாலிவுட் தரம்’ என்று பத்திரிகைகள் பாராட்டும் . இப்போது ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் கலைஞர்களையே தமிழ்ப் படங்களுக்கும் பணியாற்ற அழைக்கிறார்கள்.\nஇவ்வாண்டு தொடக்கத்தில் வெளிவந்த, ‘அம்புலி’ திரைப்படம் தொழில்நுட்பரீதியாக தமிழுக்கு மைல்கல். தமிழின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படம் இது. அதாவது பைனாக்குலரில் ஒரு காட்சியைக் காண்பதைப்போன்ற அனுபவத்தை திரையில் நீங்கள் உணரலாம். இரட்டை இயக்குனர்களான ஹரிஷங்கர், ஹரிஷ்நாராயணன் இணைந்து இயக்கினார்கள். இ���ர்கள் முன்னதாக இயக்கிய, ‘ஓர் இரவு’ இந்தியாவின் முதல் ‘வ்யூ பாய்ண்ட்’ திரைப்படம். அதாவது கதாபாத்திரத்தின் பார்வையில் கேமரா கோணம் இருக்கும்.\nஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் இடையேயான தொழில்நுட்ப இடைவெளி வெகுவாக சுருங்கிவிட்டது\" என்கிறார் ஹரிஷ்நாராயணன்.\nஅம்புலி’க்காக ‘ஹாரிபாட்டர்’ திரைப்படத்தில் பணிபுரிந்த ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அழைத்து உடன் பணியாற்றினோம். ‘நீங்களே எங்களுக்கு இணையாகத்தானே பணியாற்றுகிறீர்கள்’ என்று நம்முடைய தொழில்நுட்பக் கலைஞர்களை அவரே பாராட்டினார். தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக தொழில்நுட்பம் விரைவாக உலகமெங்கும் பரவுகிறது. ஆனால் படத்தின் உள்ளடக்கரீதியாக அவர்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசமுண்டு. இந்த வித்தியாசம் கலாச்சாரம் தொடர்பானது. இது தொழில்நுட்பத்தை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடியதாக இல்லை\" என்று விளக்கினார் ஹரிஷ்நாராயணன்.\nடிஜிட்டல் கேமராவின் வருகை, படமாக்கத்தில் ஒரு புலிப்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. ‘வழக்கு எண் 18/9’ போன்ற திரைப்படங்கள், டிஜிட்டல் கேமராவின் பலன்களை நன்கு பயன்படுத்தியிருக்கின்றன. ஃபிலிமில் எடுக்கும் காலதாமதத்தை டிஜிட்டல் கேமராக்கள் தவிர்க்கின்றன. அனிமேஷன் நுட்பங்களுக்கு அணுக்கமாக இருக்கிறது, படமாக்கல் தொடர்பான செலவுகளை மிச்சப்படுத்துகிறது, சிரமங்களை தவிர்க்க முடிகிறது.\nடிஜிட்டல் சினிமா தொடர்ந்து முன்னோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. பல புதிய கேமராக்களின் மூலம் அது தன்னை செழுமைப்படுத்திக்கொண்டே வருகிறது. கண்ணை மூடி திறப்பதற்குள்ளாக எல்லாம் மாறிப்போச்சுன்னு சோல்லுவாங்களே... அந்த மாதிரி, ஒரு தூக்கம் போட்டுவிட்டு வந்து பார்த்தால் எல்லாம் மாறிவிடுகிறது இங்கே. தொழில்நுட்பம் அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே போகிறது. அதன் சாத்தியங்கள் படைப்பாளிகளுக்கிருந்த பல தடைகளை உடைத்துப் போடுகிறது. பொருளாதாரம் சார்ந்த சுமைகள் குறையத் துவங்கிருக்கின்றன. குறைந்த முதலீடுகளில் தரமான திரைப்படங்களை உருவாக்கிட முடியும் இப்போது\" என்று டிஜிட்டல்மயமானதின் பயன்கள் என்ன என்பதைப் பற்றிப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.\nடிஜிட்டல் தொழில்நுட்பம் இசையிலும் செயல்பட ஆரம்பித்ததன் பலன், ��ளைஞர்களுக்கு சாதகமாக அமைந்தது. யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், விஜய் ஆண்டனி, கே எனப் பல இளைஞர்கள் அடுத்தடுத்து தமிழ் திரையிசை உலகில் நுழைந்திருக்கிறார்கள். இன்று தமிழ் இசையமைப்பாளர்களின் சராசரி வயது 25தான் இருக்கும் என்றால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.\nஇசை அமைப்பாளர்களைப்போல இளம் பாடகர்களும் கவிஞர்களும் வரத்தான் செய்கிறார்கள். என்றாலும் நிலைத்து நிற்க அவர்கள் பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது.\nவாலியும், வைரமுத்துவும் அமைத்த களத்தில்தான் நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக தமிழ் சினிமா இசையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக குத்துப்பாட்டு கலாசாரம் கோலோச்சியது. பாடல் வரிகளில் ஆங்கிலக் கலப்பும் அவசியமென்றார்கள். தவிர்க்க முடியாமல் நாங்களும் இதையெல்லாம் எழுத வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு இப்போது நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது. அதே வாலி-வைரமுத்து கால நிலைமை மீண்டும் திரும்பியிருக்கிறது\" என்று தற்போதையச் சூழலை விவரிக்கிறார் கவிஞர் பா.விஜய்.\nதமிழ் சினிமாவில் மீண்டும் துவங்கியிருக்கும் கவிதைப்பாதை, அடுத்த தலைமுறை நவீனமொழிநடைக் கவிஞர்களை ஊக்கப்படுத்துகிறது. மதன் கார்க்கி குறிப்பிடத்தக்க பாடலாசிரியராக வளர்ந்து வருகிறார். இசையின் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு ஈடு கொடுக்கும் மொழியை சமகாலக் கவிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.\nதிருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்காக ஆவலோடு காத்திருப்பதைப் போல திரையரங்குகளில், ‘பொட்டி’க்காகக் காத்திருந்த காலங்கள் ஒன்றுண்டு. குறித்த நேரத்தில் ‘பொட்டி’ வராமல் போனதில் கொதிப்படைந்த ரசிகர்கள், தியேட்டரையே அடித்து நொறுக்கி கலவரமெல்லாம் நடந்த காலம் உண்டு. பொட்டி என்பது படத்தின் ஃபிலிம் சுருள் கொண்ட தகரப்பெட்டி.\nஇப்போது நவீனத் தொழில்நுட்பம் இந்தத் தகரப்பெட்டிகளைப் பரணுக்கு அனுப்பி விட்டது. ரீல் என்ற ஃபிலிம் சுருளே கிடையாது. திரைப்படம் டிஜிட்டல் ஆகிவிட்டதால் சேட்டிலைட் மூலமாகவும், ஹார்டு டிஸ்க் மூலமாகவும் திரையிடும் நவீன புரஜெக்டர்கள், சிறுநகரங்களில் இருக்கும் அரங்குகளுக்குக்கூட வந்துவிட்டன.\nடிஜிட்டல் நுட்பம் காரணமாக ஒளி மட்டுமல்ல, ஒலியின் தரமும் கூடியிரு���்கிறது. டால்பி, டிடிஎஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வந்தபிறகு திரையில் தெரியும் காட்சிகளின் இடத்துக்கு நாமே நேரில் செல்வதற்கு இணையான அனுபவத்தை தருகிறது. அரங்கு முழுக்க ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டு, காட்சிகளுக்கேற்ப ஒலி தனித்தனியாக வருகிறது. சமீபத்தில் வெளியாகிய த்ரில்லர் திரைப்படமான, ‘பீட்ஸா’ 7.1 சர் ரவுண்ட் ஒலியமைப்பில் படம் பார்ப்பவர்களை திகில் படுத்துகிறது. முதல் வரிசையில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகனின் இதயத்துடிப்பை வேகப்படுத்தும் சத்தம் இனி திரையில் இருந்துதான் வருமென்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. புரஜெக்டர் ரூமில் இருந்தும் ‘டமால்’ என்று சத்தம் வரும்.\nபாலிவுட்டைப்போல கோலிவுட்டிலும் மல்ட்டிப்ளக்ஸ் கலாச்சாரம் உருவெடுத்து இருப்பது சமீபகாலப் போக்கு. நல்ல சூழலில் படம் பார்க்கும் அனுபவம்தான் திருட்டு டிவிடி மாதிரியான இத்தொழிலுக்கு எதிரான விஷயங்களைத் கட்டுப்படுத்த உதவும். மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணமும் அதிகம் என்பதால், தயாரிப்பாளர் எதிர்பார்க்கும் லாபமும் விரைவில் கிடைக்கிறது. தமிழகத்தில் அடுத்த சில வருடங்களில் மல்ட்டிப்ளக்ஸ் என்று சொல்லக்கூடிய நவீன திரையரங்குகள் நிறைய தோன்றும்\" என்கிறார், டிஸ்னி-யூடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தென்மண்டல தலைமைப் பொறுப்பிலிருக்கும் தனஞ்செயன்.\nசென்னையில் அபிராமி மல்ட்டிப்ளக்ஸ் போன்ற திரையரங்குகள் செவன் ஸ்டார் வசதி என்று குறிப்பிடும் சில வசதிகளை உருவாக்கியிருக்கின்றன. அதாவது போனிலோ, இண்டர்நெட்டிலோ குடும்பத்தோடு படம் பார்க்க வருகிறோம் என்று தகவல் கொடுத்துவிட்டால் போதும், அவர்களே காரில் வந்து அழைத்துச் சென்று, திருப்தியாகப் படம் பார்த்து, வீட்டுக்குத் திரும்புவது வரை பார்த்துக் கொள்வார்கள். என்ன, காசுதான் கொஞ்சம் ஜாஸ்தி.\nசமீப ஆண்டுகளில் திரையரங்குகளில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான புரட்சியாக ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை குறிப்பிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் சத்யம் சினிமாஸ் இந்த முறையை அறிமுகப் படுத்தியபோது, ‘Q is dead’ என்று அறிவித்து, விளம்பரப்படுத்தியது. அதாவது இனிமேல் யாரும் சினிமா டிக்கெட்டுக்கு வரிசையில் நிற்கவேண்டாம் என்பது பொருள். முதல் நாள், முதல் காட்சிக்கு இரும்புக் கிராதிகளால் பிணைக்கப்பட்ட சிறைச்சாலை மாதிரியான டிக்கெட் கவுண்டர்கள் இன்று பெருமளவில் ஒழிந்துவிட்டன. தீபாவளிக்கு சொந்த ஊரான திண்டுக்கல்லுக்குப் போகும் ரசிகன், சென்னையிலிருந்தே ஆன்லைன் மூலமாக அந்த ஊரில் இருக்கும் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியாக,‘துப்பாக்கி’ படத்துக்கு முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் முன்பதிவு வந்துவிட்டதால், ‘பிளாக்’ டிக்கெட் விற்பவர்கள் என்கிற இனமே கிட்டத்தட்ட அழிந்துவிட்டது.\nதிரையரங்குகள் மல்ட்டிப்ளக்ஸ்களாக மாறிக்கொண்டிருக்கும் அதே நேரம் டிக்கெட் கட்டணம் 120 ரூபாயாக மாறிவிட்டது. பத்து ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் இனி சினிமாவில் மதிப்பில்லை. சிறுநகரங்களில் இருக்கும் தியேட்டர்களில்கூட டிக்கெட் கட்டணம் ஐம்பது ரூபாய்க்கும் மேலாக நிர்ணயிக்கப்படுகிறது. அதிலும் பெரிய படங்கள் வரும் சூழலில் 200 ரூபாய் என்றுகூட வெளிப்படையாகவே நிர்ணயிக்கிறார்கள். சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஒரு சராசரிக் குடும்பம் படம் பார்க்க, ஒரு முழு ஆயிரம் ரூபாய் நோட்டை செலவழிக்க வேண்டியிருக்கிறது.\nஇவை எல்லாவற்றையும் விட தமிழ் சினிமாவில் பாயும் புது வெள்ளம் ஒன்றுண்டு. சின்னத்திரையில் குறும்படங்களை இயக்கியவர்களுக்கு வெள்ளித்திரை தனது அகலமான கதவை திறந்து வைத்ததோடு இல்லாமல், சிகப்புக் கம்பளமும் விரித்து வரவேற்றிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் சினிமாவில் வேலை பார்த்தவர்கள் அல்ல. சினிமா படமெடுக்க வேண்டுமென்று ஊரைவிட்டு ஓடிவந்தவர்கள் அல்ல. சாஃப்ட்வேர் புரோகிராம்மர்கள், கல்லூரி மாணவர்கள், மார்க்கெட்டிங் பணியாளர்கள் என்று கலந்துகட்டி இருக்கிறார்கள். திரைமொழியை தொடர்ச்சியாகப் படங்கள் பார்ப்பதின் மூலமாக கற்றுக் கொண்டவர்கள்.\nபாலாஜி, ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற குறும்படம் மூலம் பேசப்பட்டவர். அதையே நீட்டி, முழுநீளத் திரைப்படமாகவும் எடுத்து இயக்குனர் ஆகியிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ், த்ரில்லர் திரைப்படமான சக்கைப்போடு போடும் ‘பீட்ஸா’ படத்தின் மூலம் குறிப்பிடத்தக்க இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். நளன் எனும் குறும்பட இயக்குனரும் அடுத்து வெள்ளித்திரையில் நுழைந்திருக்கிறார்.\nசாதாரண ரசிகர்களாக இதுவரை இருந்த இந்தப் புதியவ���்களின் வருகை, சினிமாவின் வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்து, வேறு தளத்துக்குக் கொண்டுசெல்லும் என்கிற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.\n(நன்றி : புதிய தலைமுறை)\nட்விட்டர் கைதுகள்.. தூண்டும் விவாதங்கள்\nநாள் : 17 நவம்பர் 2012, மாலை 5 மணி\nஇடம் : பி.எட்.அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை\nசைபர் சட்டங்கள் - முறைப்படுத்தவா\n- வழக்கறிஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்\n- சையது, சேவ் தமிழ்சு இயக்கம்\nஇணைய உலகிலும் கருத்துரிமைக்கு சாவுமணி அடிக்கும் அரசு\n- ராதிகா கிரி, ஊடகவியலாளர்\nவிவாதங்கள் நடத்துவது: கருத்தை மாற்றவா\nசமூக வலைத்தளங்கள் தொடர்பான இப்பிரச்சினையில் தங்களது பார்வைகள்\n- யுவகிருஷ்ணா, கார்ட்டூனிஸ்ட் பாலா, நிர்மலா கொற்றவை, உண்மைத்தமிழன்\nஎதிர்கொள்வது எப்படி - கலந்துரையாடல்\nதேசத்துரோகியான ஒரு காவல்துறை அதிகாரியை, நேர்மையான உளவுத்துறை அதிகாரியான விஜய் விசாரணை செய்கிறார். அவருடைய அலுவல்ரீதியான துப்பாக்கியையும், ஒரு இல்லீகல் துப்பாக்கியையும் டேபிள் மீது எடுத்து வைக்கிறார். உளவுத்துறை அதிகாரி ஏதாவது ‘பஞ்ச்’ டயலாக் அடித்துவிடுவாரோ என்கிற மரண அச்சத்தில், தேசத்துரோகி இல்லீகல் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறார். க்ளைமேக்ஸிலும் நேர்மையற்ற ஒரு மிலிட்டரி அதிகாரி, இதே பஞ்ச் டயலாக் பயத்தில் இதே போல தற்கொலை செய்துக் கொள்கிறார். சூப்பர் ஸ்டார் சிவாஜியின் ‘ஆபிஸ் ரூம்’ காட்சிகள் நினைவுக்கு வருகிறது.\nவழக்கமான விஜய் ஃபார்முலா படமல்ல இது என்பதற்கு இக்காட்சிகளே அத்தாட்சி. திருப்பாச்சி காலத்தில் தனக்கே தனக்கென்று உருவான தனித்துவ ஃபார்முலாவை உடைக்கும் துணிச்சலான முயற்சியை ‘நண்பன்’ ஒப்புக்கொண்டபோதே விஜய் தொடங்கிவிட்டார். துப்பாக்கியில் இது முழுமை பெற்றிருக்கிறது. எவ்வளவு நாளைக்குதான் தமிழ்நாட்டிலேயே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருப்பது என்கிற அலுப்பு அவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். துப்பாக்கி தெலுங்கிலும் ஹிட் அடிக்கும் என்கிற செய்தி தேனாக காதில் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படலாம். கேரளாவிலும் ஹிட். இந்திய தேசிய உணர்வுகொண்ட திரைப்படம் என்பதால் எஃப்.எம்.எஸ்.ஸிலும் கதறக் கதற கல்லா கட்டப்போகிறது. இந்த தீபாவளி ‘தள’தீபாவளி.\nஇளையதளபதிக்கு வரு��ா வருடம் வயது குறைந்துக்கொண்டே போகிறது. மிக விரைவில் அவர் குழந்தை நட்சத்திரமாக மாறிவிடுவாரோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்மார்ட்டில் கில்லி, ஆக்ஷனில் போக்கிரி என்று துப்பாக்கி முழுக்க முழுக்க விஜய் ஷோ. முழுநீஈஈஈள திரைப்படமென்றாலும், இன்னும் கொஞ்ச நேரத்துக்கு தளபதியை ஸ்க்ரீனில் பார்த்துக்கொண்டே இருக்கமாட்டோமா என்று படம் முடிந்ததும் ஏக்கம் பிறக்கிறது.\nஏழாம் அறிவு மொக்கையாகி விட்டதால், துப்பாக்கியின் திரைக்கதையை சிரத்தையெடுத்து செதுக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக இண்டர்வெல் பிளாக் மரண மாஸ். ஒரு காட்சியில் நாயை ஸ்க்ரீனில் பார்த்து தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. இராம.நாராயணனின் முந்தைய நாய், குரங்கு, பாம்பு ரெக்கார்டுகளை எல்லாம் இக்காட்சியில் அசால்ட்டாக உடைத்து எறிந்திருக்கிறார் முருகதாஸ். படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி ஹீரோவுக்கும், இயக்குனருக்குமே ஒதுக்கப்பட்டு விட்டதால், பிரும்மாண்டமான ஸ்க்ரிப்டுக்கு கருக்காக செலவு செய்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் பிரதிபாகாவேரி மாதிரியான பெரிய கப்பல் வெடிக்கும்போது, ஊசிப்பட்டாசு வெடிப்பதைப் போல ஃபீலிங். போலவே போஸ்ட் ப்ரொடக்ஷன் ஏனோதானோவென்று இருக்கிறது. நேற்று வந்த நாளைய இயக்குனர்களே இந்த மேட்டரில் கலக்கிக் கொண்டிருக்கும்போது, தமிழின் சுபாஷ்கய்யான முருகதாஸ் இன்னமும் ரமணா, கஜினி காலத்திலேயே தேங்கிப் போய் கிடக்கிறார்.\nஹீரோயின் காஜல். வழக்கம்போல தொட்டுக்க ஊறுகாய்தான். இருந்தாலும் மணம், குணம், நெடி நிரம்பிய காரமான மிளகாய் ஊறுகாய். எப்போதும் ‘ஹாட்’டாக சுர்ரென்று இருக்கிறார். முதல் இரவில் புதுக்கணவன் உதடை கடித்து வைத்துவிடுவானோ என்று பதட்டப்படும் புதுப்பொண்ணை மாதிரியே எல்லா சீனிலும் பரபரவென்று ரியாக்ஷன். முத்தத்துக்கு தயாராகி உதடுகளை தயார்படுத்தும் அழகுக்காகவே காஜலுக்கு பாரதரத்னா வழங்கலாம். இவர் தோன்றும் முதல் காட்சியிலேயே, உடன் படம் பார்த்த தோழர் ஒருவர் ‘pad வைத்திருக்கிறாரா’ என்று அவதூறான சந்தேகத்தைக் கிளப்பினார். இதற்காகவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்ததில் ‘ஒரிஜினல் டெவலப்மெண்ட்’தான் என்பதை இறுதியில் ஊர்ஜிதம் செய்துக்கொள்ள முடிந்தது. சந்தேகம் கிளப்பிய தோழரை 66-ஏவில் உள்ளே தள்ளலாம்.\nவாராது வந்த மாமணியாய் இளையதளபதி ஓர் ஒரிஜினல் ஹிட் அடிக்கும்போது திருஷ்டிப் படிகாரமாய் ஹாரிஸ் ஜெயராஜ். ‘கூகிள் கூகிள்’ (இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) பாடலைத் தவிர்த்து, வேறெதுவும் செல்ஃப் எடுக்கவில்லை. கூகிள் பாடலில், ஷங்கர் ஸ்டைலில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒரு காட்சியில் தோன்றுகிறார். விஜய் படமாச்சே என்று, க்ளைமேக்ஸுக்கு முன்பு குத்து, குத்துவென ஒரு குத்துப்பாட்டை எதிர்ப்பார்த்தால், ஒரு சோகையான டூயட். மெலடியான தேசபக்திப் பாடலும் (ஜேசுதாஸ்) படம் முடிந்தபிறகே வருகிறது. எவ்வளவு மரணமொக்கையான விஜய் படமென்றாலும் பாடல்கள் மட்டும் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பும். துப்பாக்கியில் பாடல்களும், பின்னணி இசையும் பரிதாபம். முருகதாஸின் ரமணாவுக்கு இசைஞானியின் பின்னணி இசை நினைவுக்கு வந்து ஏங்கவைக்கிறது.\nவில்லன் வெயிட் என்பதால் ஹீரோ அதைவிட வெயிட்டாகிறார். கடைசியில் ‘என்னை அடிச்சியே கொல்லு’ என்று விஜய் சவால்விட, வில்லனுக்கு பக்கத்தில் இருப்பவர் ‘வேணாம். ஏதோ தந்திரம் செய்றான். அவனை உன்னாலே அடிக்க முடியாது’ என்று தரும் பில்டப்தான் ஒரிஜினல் ஹீரோயிஸம். இத்தனை காலமாக விஜய் பக்கம் பக்கமாக பேசிய பஞ்ச் டயலாக்குகள் எவ்வளவு வீண் என்பதை அவர் உணர்ந்திருப்பார்.\nஇஸ்லாமியத் தீவிரவாதம், இந்திய தேசப்பக்தி என்று வழக்கமான பலகீனமான ஜல்லிதான். என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால் பரபரப்பான திரைக்கதை, விஜய்யின் பெர்ஃபாமன்ஸ் என்று ’போர்’ அடிக்காமல் துப்பாக்கியை பார்க்க முடிகிறது. பொதுவாக விஜய் படங்களை குழந்தைகள் வெகுவாக ரசிப்பார்கள். இப்படம் இளைஞர்களை டார்கெட் வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ‘வயலன்ஸ்’ கொஞ்சம் அதிகமென்றும் தோன்றியது. முந்தைய விஜய்யின் வயலண்ட் படங்களிலெல்லாம் ஆக்ஷன் ரசிக்கவைக்கும், திகில்படுத்தாது. துப்பாக்கியில் வெளிப்படும் ரத்தமும், புல்லட் சத்தமும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. விஜய் படத்துக்குதான் கொஞ்சம் புதுசு.\nதுப்பாக்கி : குறி கச்சிதம்\nபுயல் : இரண்டு டயரிக்குறிப்புகள்\n1966. நவம்பர் 3. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். அன்று விடுமுறை தினமா அல்லது புயல் காரணமாக விடுமுறை விட்டிருந்தார்களா என்று நினைவில்லை.\nபுயல் சென்னையை தாக்கப் போகிறது என்று பரபரப்பு. நாளிதழ்கள் மட்டுமே அப்போது செய்திகளை அறிய ஒரே வழி. விடுதி அறையில் ரேடியோ இல்லை. நண்பர்களோடு அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ஓங்கி வளர்ந்த மரங்கள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. விளம்பர ஹோர்டிங் பலகைகள் காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தன.\nமாடிக்குப் போய் மழையைப் பார்க்கலாம் என்று திடீர் ஆசை. பேய்மழை கொட்டிக் கொண்டிருந்தது. அசுர காற்றும் தன் பங்குக்கு தாண்டவமாடியது. அறை சன்னல்கள் படபடவென்று அடித்துக் கொண்டன. காற்றின் வேகம் தாங்காமல் சில சன்னல்கள் பிய்த்துக்கொண்டும் பறந்தன. வெளிச்சமுமில்லை. எதைப் பார்த்தாலும் ஒரு மாதிரியாக ‘க்ரே’வாகவே தெரிந்தது. இருந்தாலும் புயலை ‘லைவ்’வாக பார்க்கும் எங்கள் ஆசையை எதுவுமே தடுக்கவில்லை.\nஉயரமான அலைகளோடு ஒரு கப்பல் தத்தளித்துக் கொண்டிருந்ததை கடலில் பார்த்தோம். கப்பலையும் விட உயரமாக அலைகள் சீறின. காற்று அக்கப்பலை கரைக்குத் தள்ளிக்கொண்டு வந்தது. கப்பலோ மீண்டும் கடலுக்குள் செல்ல அடம் பிடித்தது. இந்தத் தள்ளு முல்லு நீண்டநேரம் நடந்தது. வென்றது இயற்கையே. துறைமுகத்துக்குத் தெற்கே செத்துப்போன திமிங்கிலத்தை மாதிரி கரை தட்டி நின்றது அந்தக் கப்பல்.\nஅதே நேரம் SS Damatis என்கிற பெரிய கப்பல் ஒன்று புயலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு எதிரே மெரீனாவில் கரை தட்டியது. மூன்றாவதாக ஒரு கப்பலும் தென்சென்னை கடற்பகுதியில் கரை ஒதுங்கியது.\nபிற்பகல் புயல் வலுவிழந்தது. ஆனாலும் காற்று பலமாகவே வீசியது. மெரீனாவில் கரை ஒதுங்கிய கப்பலைப் பார்க்கப் போனோம். சூறைக்காற்றால் மணல் பறந்து ஊசியாக எங்கள் உடம்பில் குத்தியது. எங்களது விடுதித் தோழர் ஒருவரிடம் கேமிரா இருந்தது. அவர் கப்பலை படம் எடுத்தார். Damatis கப்பல் ஒரு பக்கமாக மணலுக்குள் புதைந்து மாட்டிக் கொண்டிருந்தது.\nபிற்பாடு அந்த கப்பலை அங்கிருந்து முழுமையாக அகற்ற முடியாமல், அதனுடைய இரும்பு பாகங்கள் கடலுக்குள்ளேயே நீட்டிக் கொண்டிருந்தன. கடலில் குளிப்பவர்கள் அடிக்கடி அப்பகுதியில் இரும்பு கிராதிகளுக்கு இடையே சிக்கி மரணமடைவார்கள். இந்நிலை நீண்டகாலத்துக்��ு நீடித்தது.\nஅப்போதெல்லாம் சென்னைப் பல்கலைக்கழக கட்டிடத்தில் நாங்கள் தேர்வு எழுதும்போது, புயலில் சிக்கிய அந்த கப்பலின் அமானுஷ்யமான தோற்றம் அடிக்கடி நினைவுக்கு வந்து திகில்படுத்தும்.\n2012. அக்டோபர் இறுதி நாள். அடைமழை. ‘நிலம்’ புயல் வெறித்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. புயலால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக, கடமையே கண்ணென்று அலுவலகத்தில் இருந்தேன். ட்விட்டர் மூலமாகதான் மழை பெய்கிறதா, காற்று அடிக்கிறதா என்பதை தெரிந்து கொண்டிருந்தேன்.\nமூன்று மணி வாக்கில் நண்பர் நரேன் கைபேசியில் அழைத்தார். “என்னய்யா ரிப்போர்ட்டர் நீ. கப்பல் ஒண்ணு பெசண்ட் நகரில் கரை ஒதுங்கிக் கிடக்குது. நீ பாட்டுக்கு ஆபிஸ்லே கம்முன்னு உட்கார்ந்திருக்கேன்னு சொல்றீயே” என்று உசுப்பிவிட்டார்.\nரோஷத்துடன் இரு சக்கர வாகனத்தை உதைத்து, பெசன்ட்நகர் நோக்கிக் கிளப்பினேன். புயல் காற்று, பெருமழை இதுவெல்லாம் மக்களை எவ்வகையிலும் அச்சப்படுத்தவில்லை என்பதைப் போக்குவரத்து நெரிசல் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இயற்கைச் சீற்றங்கள் என்றால் முன்பெல்லாம் மக்கள், கூடுகளில் தஞ்சம் புகும் பறவைகள் போல வீடுகளில் முடங்கிக் கிடப்பார்கள். மழையோ, வெயிலோ தன் கடமை பணி டிராபிக் ஜாமில் முடங்கிக் கிடப்பதே என்று இப்போதெல்லாம் எந்நேரமானாலும் சாலைகளில் தவம் கிடக்கிறார்கள். சென்னை நகரம் சாதாரண நாட்களிலேயே ரொம்ப அழகு. அதிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் சென்னை ரொம்ப ரொம்ப அழகு. போதாக்குறைக்கு இப்போது புயல்மழை வேறு.\nஇப்படிப்பட்டச் சூழலில் பைக்கில் செல்வது கிட்டத்தட்டத் தற்கொலை முயற்சிதான். பெசன்ட் நகர் கடற்கரையை நெருங்கியபோதுதான் தெரிந்தது, என்னை மாதிரி ஆயிரக்கணக்கானவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று. அரசு எவ்வளவுதான் புயல் பற்றி எச்சரித்தாலும், புயலை நேரில் பார்க்கவேண்டும் என்கிற ஆவலில் குடும்பம், குடும்பமாக ஆட்டோவில் கடற்கரைக்கு வரும் கூத்தை என்னவென்று சொல்லி ஜீரணித்துக் கொள்வது\nபோதாக்குறைக்கு கப்பல் ஒன்று கரை ஒதுங்கி விட்டது. சொல்லவும் வேண்டுமா ஆளாளுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் போனை போட்டு, “மச்சான், இங்கே ஒரு கப்பல் கரை ஒதுங்கிக் கிடக்குது. வர்றீயா ஆளாளுக்கு தெரிந்தவர்களுக்கு எல்���ாம் போனை போட்டு, “மச்சான், இங்கே ஒரு கப்பல் கரை ஒதுங்கிக் கிடக்குது. வர்றீயா” என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடலை பார்த்தால் கிட்டத்தட்ட சுனாமி மாதிரி சீறிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கோ வேடிக்கை பார்க்கும் வெறி.\nகரை ஒதுங்கி நின்ற கப்பல் கருப்புச் சாத்தான் மாதிரி தோற்றத்தில் பயமுறுத்தியது. பெயர் மட்டும் சாந்தமாக வைத்திருக்கிறார்கள். ’பிரதிபா காவேரி’யாம். ஆயில்/கெமிக்கல் டேங்கர் வகை கப்பல் இது. நல்லவேளையாக கப்பலில் ‘சரக்கு’ எதுவுமின்றி காலியாக இருந்ததால் பெரிய பிரச்சினை இல்லை. புயலில் தடுமாறி, அலைமோதி வந்து கடலோரமாக செருகிக் கொண்டிருக்கிறது. கரையிலிருந்து கடலுக்குள் நூறு, நூற்றி ஐம்பது மீட்டர் தூரத்தில் கப்பல். சில சிப்பந்திகளுக்கு உள்ளே காயம் பட்டிருக்கிறது. அலைமோதிக்கொண்டிருந்த கடலில் தீரமாக சில மீனவ இளைஞர்கள் படகு ஓட்டி, காயம்பட்டவர்களைக் காப்பாற்றி அழைத்து வந்து, ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.\nதொலைக்காட்சி சேனல்கள் கேமிராவும், கையுமாக குவிந்துவிட்டாலும் படமெடுப்பது மிகச்சிரமாக இருந்தது. ஆளையே தள்ளும் காற்றுக்கு கேமிரா தாக்குப்பிடிக்குமா அப்படியும் சில துணிச்சலான டி.வி.க்கள் ‘லைவ்’ செய்ய ஆரம்பித்தன.\n“சொல்லுங்க சார். நீங்க என்ன பார்த்தீங்க”\n“நான் கரையோரமா வந்துக்கிட்டிருந்தேனா... அப்போ திடீர்னு கப்பல் கரையை நோக்கி அப்படியே தடுமாறி வந்துக்கிட்டிருந்திச்சி...”\nபாவம் மக்கள். எந்த சேனலை வைத்தாலும் இதே “நீங்க என்ன பார்த்தீங்க\nகேமிரா செல்போனை யார்தான் கண்டுபிடித்ததோ என்று நொந்துகொண்டேன். தாஜ்மகாலுக்கு முன் நிற்கும் தோரணையில் மக்கள் ஆளாளுக்கு கப்பல் முன்பாக நின்று தங்கள் செல்போனில் தங்களையே படம் பிடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.\n“கப்பலுக்குள்ளாற உசுருக்கு நிறைய பேர் போராடிக்கிட்டிருக்காங்க, ஏதோ எக்ஜிபிஸன் பார்க்குற மாதிரி எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்துட்டானுங்க...” என்று ஒட்டுமொத்தமாக மக்கள், மீடியா என்று எல்லோரையும் சேர்த்து திட்டிக் கொண்டிருந்தார் ஒரு வயதான பெண். கரையோரமாக கடலுக்கு நெருக்கமாக இருக்கும் குடிசை ஒன்றில் வசிக்கிறவர். இன்னும் சில நேரங்களில் புயல் கரையை கடக்கும்போது, இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். அதனால்தான் அவருக���கு உயிரின் அருமை தெரிந்திருக்கிறதோ என்னமோ.\n(நன்றி : புதிய தலைமுறை)\n66-A : ஏன் எதிர்க்க வேண்டும்\nஇந்தியாவில் சட்டங்களை எழுதுபவர்கள் மற்றும் திருத்துபவர்களின் சட்ட அறிவைக் குறித்து நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. பல்வேறு நாடுகளின் சட்டங்களை வாசித்தவர்கள். இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்பதையெல்லாம் நாம் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு நம் சமூகம் குறித்த சரியான புரிதல் இருக்கிறதா என்பதுதான் நம்முடைய சந்தேகம். ஒரு புதிய சட்டத்தின் மூலமோ, சட்டத் திருத்தத்தின் மூலமோ அதிகாரத்தில் இருப்பவர்கள் சாதாரண மனிதர்களை மிக சுலபமாக பழிவாங்க முடிந்தால் அந்த சட்டமோ, சட்டத் திருத்தமோ எவ்வளவு அபத்தமானது.. ஆபத்தானது\nபெங்களூரில் மாலினி என்ற பெண் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தார். இவருக்கும், இவரது காதலருக்கும் ஏதோ தகராறு. வாய்ச்சண்டை போட்டு காதலர் பிரிந்துச் சென்றதும் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் இட்டார். “மகிழ்ச்சியான நாள் இன்று. கேர்ள்ஃப்ரண்டை பிரிந்துவிட்டேன். சுதந்திரநாள் வாழ்த்துகள்”. மாலினி தற்கொலை செய்துக் கொண்டார். காதலரின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இந்த தற்கொலைக்கு தூண்டுதல் என்று காவல்துறை கருதி, அவர்மீது இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அனேகமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோடு, வேறு சில தண்டனைகளும் கிடைக்கலாம்.\nஅடிக்கடி இந்தியாவில் சைபர் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்துவது தொடர்கதை ஆகிவிட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தோடு ஒப்பிடுகையில் சைபர் சட்டத்தின் தண்டனை ஒப்பீட்டளவில் அதிகம். ஐ.டி. சட்டம் 66-ஏவின் படி “causing annoyance or inconvenience electronically” என்று குறிப்பிடப்படும் குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை (இதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் மேலும் சில ஆண்டுகள்) வழங்கப்படுகிறது. இதில் annoyance என்று சொல்லப்படுவதற்கு என்ன வரையறை என்கிற தெளிவு இல்லை. கலைஞரை யாராவது திட்டினால் நான் irritate ஆவேன். அவ்வாறு திட்டியவரின் மீது 66-ஏவின் படி வழக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றால் இது என்ன நீதி\n‘துப்பாக்கி திரைப்படம் மொக்கை’ என்று எனக்கு தோழர் கார்க்கி ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். அதை நம்பி நாலு பேருக்கு நானும் ஃபார்வேர்ட் செய்கிறேன். இதனால் இளையதளபதி விஜய் மன உளைச்சல் அடைந்தால், அவர் கார்க்கி மீதும் என் மீதும் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை காவல்துறையும், நீதித்துறையும் ஏற்றுக்கொள்ளவைக்கும் செல்வாக்கும், அதிகாரமும் விஜய்க்கு உண்டல்லவா மேலும் இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டவரை கைது செய்ய வாரண்ட் அவசியமில்லையாம்.\n66-ஏ என்னவோ இண்டர்நெட்டில் ஈடுபடும் காமன்மேன்களை மட்டும்தான் அடக்கும் என்று நினைத்தோ என்னவோ ஊடகங்கள் போதுமான எதிர்ப்பைத் தெரிவிப்பதில்லை. ஒருவகையில் குஷியாக கூட இருப்பதாகத் தோன்றுகிறது. பொதுவாக பத்திரிகைகளில் எழுதப்படுவதற்கு ‘அவதூறு வழக்கு’கள் தொடுக்கப்படுவது வழக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ‘அவதூறு வழக்கு’ இன்று நாடு முழுக்க பிரபலமாகியிருக்கிறது. அவதூறு வழக்கு என்பது கிட்டத்தட்ட விசாரணைக் கமிஷன் மாதிரி. பெரியதாக செய்கூலி, சேதாரம் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் இணையத்தில் எழுதுபவர்கள் மீது மட்டும்தான் 66-ஏ பாயுமென்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.\nஇன்று அச்சில் வரும் எல்லா ஊடகங்களுமே இணைய வடிவையும் கொண்டிருக்கிறது. அவ்வகையில் எந்த ஒரு பத்திரிகையின் மீதும், தொலைக்காட்சி சேனல் மீதும் 66-ஏ-வை பாயவைக்க முடியும். “any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred or ill will, persistently by making use of such computer resource or a communication device” என்றுதான் சட்டம் கூறுகிறது. இந்த communication device என்கிற பதம் வெறுமனே இணையத்துக்கு மட்டுமல்ல. டிவி, மொபைல்போன் ஆகியவற்றுக்கும் கூட பொருந்தும் இல்லையா எனவே 66-ஏ என்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமின்றி, ஊடகங்களுக்கும் கூட அச்சுறுத்தல்தான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கட்டுரை எழுதியதற்காக அந்த பத்திரிகையின் நிருபரில் தொடங்கி ஆசிரியர், பதிப்பாளர் அத்தனை பேரும் மூன்று வருட சிறைத்தண்டனை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.\nஇந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்கிற வகையில் 66-ஏ-வை எதிர்க்க அனைவருமே (ஊடகங்களும் சேர்த்துதான்) கடமைப்பட்டவர்கள் ஆகிறோம்.\nதவறாமல் வாசிக்கவும் : 66-ஏ குறித்த அய்யா தருமியின் பதிவு\nஅமெரிக்கா தனது அதிபரை நவம்பர் 6ம் தேதி தேர்தெடு���்கிறது.யார் அதிபர் ஆனால் இந்தியாவுக்கு நல்லது\nநவம்பர் 6ம் தேதி அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கப் போகிறது. தேர்ந்தெடுக்கப்படப் போவது அமெரிக்க அதிபர்தான் என்றாலும், அவர் அடுத்த நான்காண்டுகளுக்கு உலகின் பல முக்கியமான விஷயங்களைத் தீர்மானிப்பவராக இயங்குவார் என்பதுதான் வரலாறு ஒபாமா, ரோம்னி இந்த இருவரில் யார் வந்தால் இந்தியாவிற்கு நல்லது\nபல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் அலுவல்கங்களில் நடக்க வேண்டிய பணிகளையும், விற்பனை தொடர்பான ஃபாலோ அப் பணிகளையும் செலவைக் குறைப்பதற்காக அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. இதில் கணிசமான பணிகள் இந்தியாவில் உள்ள பிபிஓ கம்பெனிகளுக்கு கிடைக்கின்றன. நம் இளைஞர்கள் பலருடைய வேலை வாய்ப்புக்கள் இதைச் சார்ந்திருக்கின்றன. அதே போல் பல மென்பொருள் வேலைகளும். இந்த விஷ்யத்தில் இந்த ஒருவரின் நிலை என்ன\nஅவுட்சோர்சிங் பணிகளால் அமெரிகாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய வேலைளை கணிசமாக இந்தியா அள்ளிக்கொண்டு போகிறது என்கிற ஒபாமாவின் அலட்டலுக்கு அமெரிக்காவிலேயே பெரிய ஆதரவில்லை. அதனால் ஒபாமாவே இந்த விஷயத்தை ஒரு அளவுக்கு மேல் பிரமாதப்படுத்தமாட்டார்.\nரோம்னியைப் பொறுத்தவரை தொழில் வர்த்தகப் பின்புலத்தில் வந்தவர் என்பதால், இந்தியாவுடனான இப்போதைய அமெரிக்க வணிக உறவை ஆதரிப்பவராகவே அவர் இருக்கிறார். அவரது சொந்த நிறுவனமே கூட பல இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. குறிப்பாக அவரது நிறுவனம் நிறைய ‘அவுட்சோர்ஸ்’ பணிகளை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. இந்திய நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் பணிகள் குறித்த ஒபாமாவின் கருத்துக்கு நேரெதிரான கருத்து கொண்டவராகவே ரோம்னியை சித்தரிக்கிறார்கள்.\nஅவுட்சோர்சிங் குறித்த ஒபாமாவின் கருத்துக்கள் இந்தியர்களுக்கு எதிரானது என்கிற பார்வை காரணமாக, இந்திய ஊடகங்கள் ஒபாமாவால் இந்தியாவுக்கு பிரயோசனமில்லை என்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான வணிக உறவு வழக்கத்தை விடவும் அதிகமாகவே பலப்பட்டிருக்கிறது என்று டெமாக்ரடிக் கட்சியினர் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். ஒபாமாவின் அதிகாரப்பூர்வமான முதல் இந்திய விஜயத்தின் போது, அவர் நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களை தன்னோடு அழைத்துவந்து இந்தியாவுக்கு ஏராளமான தொழிற்வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்\nரோம்னி அமெரிக்காவின் டாலர் மதிப்பு சர்வதேச அளவில் வீழ்ந்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதற்கெல்லாம் சீனாவின் வியாபாரக் கொள்கைகள் காரணமாக இருப்பதாக ஆதங்கப்படுகிறார்.\nயார் அடுத்த அதிபரானாலும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். சீனாவா, இந்தியாவா என்று வரும்போது பல அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவையே விரும்புகிறார்கள். ஆனால் அவர்களே வெறுத்தாலும் அவர்கள் பொருளாதாரத்தைச் சீனா தன் கைக்குள் வைத்திருக்கிறது எனபது இன்னொரு யதார்த்தம்.\nஒபாமா, ரோம்னி இருவருமே தேர்தல் பிரச்சாரங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம். இந்தியா அமெரிக்காவின் நம்பகமான நாடுகளில் ஒன்று என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அயல்நாட்டு கொள்கை பற்றிய விவாதத்தில் இருவரும் மிகக்கவனமாக இந்தியாவைப் பற்றி தவறாக ஏதும் பேசிவிடக் கூடாது என்று தவிர்த்திருக்கிறார்கள்.\nஆனால் ஆப்கானிஸ்தான், ஈர்ராக் ஆகிய நாடுகளிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளும் போது அமெரிக்கா என்ன நிலை மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்து பல விஷயங்கள் தீர்மானமாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் போது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற டம்மி அரசாங்கத்தை அமெரிக்கா அங்கு விட்டுச் செல்லுமானால் அதை பாகிஸ்தான் இந்தியாவிற்க்கு எதிராகப் பயன்படுத்தும் என இந்தியா நினைக்கிறது. அதே போல் இந்தியாவின் கைப்பாவைகளை ஆட்சியில் அமர்த்திவிட்டுப் போகுமானால் அது பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலைப் பாதிக்கும் என பாகிஸ்தான் நினைக்கிறது. இதை எப்படி அமெரிக்கா பாலன்ஸ் செய்யப் போகிறது என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்.\nஇன்னொரு விஷ்யம் ஈரான். இந்தியா, ஈரானிலிருந்து கச்சா கச்சா எண்ணெய் பெறுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறது,. ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்த ஒரு திருப்தியான உடன்பாட்டுக்கு ஒபாமாவின் இந்திய வருகையின்போது இருநாடுகளும் வந்தன. ஆனால் சில காலமாக ஒபாமாவின் கறார்த்தனத்தால் நாம் விரும்பிய அளவு எதிர்ப்பார்க்கும் அளவு எண்ணெயை ���ரானிலிருந்து இறக்குமதி செய்யமுடியவில்லை. இந்த பற்றாக்குறையால் இந்தியாவில் எரிபொருள் விலையேற்றம் தவிர்க்க இயலாத விஷயமாகி விட்டது. ஈரானிய எண்ணெயை மற்ற நாடுகளுக்கு விற்கும் விவகாரத்தில் ஒபாமாவை விட தான் கறாராக இருக்கப் போவதாக ரோம்னி அறிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட வகையில் நமக்கு கெட்ட சகுனம். ரோம்னி இஸ்ரேலின் ஆதரவாளர். இஸ்ரேலின் நலன்களுக்காக இரான் தாக்கப்பட வேண்டும் என்ற நிலையை அவர் எடுத்தால் அது நம் நிலையை இன்னும் சிக்கலாக்கும்.\nகடந்த நான்காண்டுகளில் ஒபாமா அரசு H1B விசா வழங்கும் விஷ்யததில் முன்பிருந்த அரசுகளைவிடத் தாராளமாக நடந்து கொள்வதற்கில்லை. ஆனால் இந்திய அறிவியலாளர்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்க அவரது கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது. கல்விக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களையும், அங்கேயே விசாவில் பணியாற்றும் பட்டதாரிகளுக்காகவும் பயன்தரும் வண்ணமாக குடிபெயர்வு விதிகளை தளர்த்துவேன் என்று ஒபாமா வாக்குறுதி தருகிறார். ரோம்னியைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம். ரோம்னி தனது பிரசாரத்தின் போது வெளியிட்ட ஒரு கருத்து இந்தியர்க்ளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சட்ட ரீதியாக குடியேறியவர்களின் துணைவர், குழந்தைகளுக்கு வழங்கப்ப்டும் விசா எண்ணிக்கைகள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்த இருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். எச்1பி விசா குறித்த புதிய கொள்கைகளை அவர் முன்வைத்தால் மட்டுமே, அதைக் குறித்துத் தெளிவாக முடிவுக்கு வரமுடியும்\nஅமெரிக்கா வாழ் இந்தியர்கள் :\nஅமெரிக்கா வாழ்இந்தியர்கள் எவை எவற்றை முதன்மையானப் பிரச்னைகளாக கருதுகிறார்கள் என்பதை அடையாளம் காண்பதில் இரு வேட்பாளர்களுமே கொஞ்சம் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். வணிகம், குடி பெயர்தல், இந்திய தேசிய பாதுகாப்பு, அணுக்கொள்கை என்று ஏராளமான பிரச்னைகளில் அமெரிக்காவின் அணுக்கத்தை இந்தியர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். எனவேதான் சமீபமாக அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் தாமாக முன்வந்து இந்தியர்கள் இணையும் போக்கு அதிகரிக்கிறது. அனீஷ் சோப்ரா, கால் பென் போன்றோர் ஒபாமாவின் நிர்வாகத்தில் பணியாற்றுகிறார்கள். பாபி ஜிண்டால், நிக்கி ஹாலி போன்றோர் ரிபப்ளிகன் கட்சியின் ஆளுநர்கள். இவர்களைப் போலவே நிறைய அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆளுகையில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.\nகடைசிக்கட்ட நிலவரத்தின் படி ஒபாமா மீண்டும் வந்தால் இந்தியாவுக்கு நல்லது என்று பெரும்பாலான அமெரிக்காவாழ் இந்தியர்கள் கருதுகிறார்கள். இவர்களில் நாலில் மூவர் ஒபாமாவுக்கு ஓட்டளிக்கப் போவதாகவே கணக்கெடுப்புகள் வாயிலாகத் தெரிந்திருக்கிறது.\nஇறுதியாக யார் வெல்வார்கள் எனப்து முக்கியமில்லை. கற்பனைகள் ஏதுமின்றி எதிர்காலத்தை எதிர்கொள்ளப் பழகுவோம்.\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nமுகம் மாறும் தமிழ் சினிமா\nட்விட்டர் கைதுகள்.. தூண்டும் விவாதங்கள்\nபுயல் : இரண்டு டயரிக்குறிப்புகள்\n66-A : ஏன் எதிர்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://albinsonjg.blogspot.com/2011/03/", "date_download": "2018-07-19T11:16:19Z", "digest": "sha1:SZO5BDXK4XF2YNANZS4FEZ7ENOZLU6F7", "length": 21858, "nlines": 107, "source_domain": "albinsonjg.blogspot.com", "title": "albinson.JG: March 2011", "raw_content": "\nகிராபிகல் கால்குலேட்டர் ஒன்றைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் 4 என்ற ஆட் ஆன் புரோகிராம் உதவுகிறது. இதில் நாம் கணிதச் செயல்பாடுகளை (equations) அமைக்கையில், ஒவ்வொரு நிலையாக அவை எப்படி செயல்படுகின்றன எனக் காணலாம்.\nஇதனால், இந்தச் செயல்பாடுகள் எப்படி கணக்கிடுதலை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறி யலாம். இது கற்கின்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.\nமேலும் இந்த கால்குலேட்டரில் பல ஈக்குவேஷன்கள் பதியப்பட்டே கிடைக் கின்றன. குறிப்பாக ஜியோமெட்ரி மற்றும் கெமிஸ்ட்ரி பாடங்களுக்கானவை நிறைய கிடைக்கின்றன.\nநம் தேவைக்கேற்ப செட் செய்திட real and complex numbers, degrees, radians அல்லது gradians, ஆகிய பிரிவுகள் உள்ளன. மேலும் நமக்கு எத்தனை டெசிமல் இலக்கத்தில் விடை வேண்டும் என்பதனையும் செட் செய்து கொள்ளலாம்.\nArea, pressure, temperature, velocity, time மற்றும் length ஆகிய பிரிவுகளுக்கான அலகுகளை மாற்றிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது.\nஇந்த புரோகிராம் கைகளில் எழுதுவதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், ஒர்க்ஷீட் ஏரியாவில் நாம் நேரடியாகவே, ஈக்குவேஷன்களை எழுதி அமைக்கலாம்.\nFamilyID=9caca7225235401c8d3f9e242b794c3a என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.\nஇதில் 32 மற்றும் 64 பிட்களுக்கென தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன\nMicrosoft Visual Basic பற்றி சில பேர் அறிந்து இருந்தாலும் பெரும் பாலானோர் அறிந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நமக்கு விரும்பிய எந்தவொரு மென்பொருளையும் வடிவமைத்து கொள்ள முடியும். இதில் நீங்கள் மென்பொருள் உருவாக்க நினைத்தால் அதற்கு தேவையான code உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்க வேண்டும்.சரி இன்றைய முதல் பாடத்தை அடிப்படையில் இருந்து ஆரம்பித்தால் அது அவ்வளவு நல்ல இருக்காது.ஆகவே இதன் அடிப்படைகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன்.\nஇந்த புத்தகம் இலங்கையில் தரம் 11 ( க.பொ.த.(சாதாரண தரம்) )மாணவர்களுக்கு விருப்ப பாடங்களில் ஒன்றாகிய தகவல் தொழில்நுட்பம் என்ற பாடத்தில் கற்பிக்கப்படுகிறது. இந்த புத்தகம் உங்களுக்கும் பயன்தரும் என்று நினைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.\nபுத்தகத்தை Download செய்ய.மீண்டும் சந்திப்போம்\nஉங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.\nஅப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது\nஅதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.\nமுதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண��டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.\nஇந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.\nஅடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,\nஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.\nமாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்\nஉங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் ஹாக் செய்யாமல் தடுக்க\nஎவ்வளவு தான் பாதுகாப்பாக நாம் ஜிமெயிலை உபயோகித்தாலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் பாஸ்வேர்ட்களை அறிந்து நம்முடைய கணக்கை முடக்கிவிடுவதால் நம்முடைய ஜிமெயிலும் பறிபோகிறது மற்றும் பெரும்பாலும் நாம் உபயோகித்து கொண்டிருக்கும் கூகுள் தளங்களான பிளாக்கர்,யூடியுப்,ஆர்குட் போன்ற தளங்களில் நம் கணக்கை நாம் இழக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே நம்முடைய ஜிமெயில் கணக்கை எப்படி பாதுக்காப்பாக உபயோகிப்பது என்று கீழே பாருங்கள்.\nமுதலில் உங்கள் ஜிமெயிலை திறந்து அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.\nஅடுத்து வரும் விண்டோவில் Personal பகுதியில் உள்ள Using 2-step verification என்பத�� க்ளிக் செய்யவும்.\nஅடுத்த விண்டோவில் மூன்று கட்டங்களாக இந்தசெயல் பாடு பிரிக்கபட்டிருக்கும்.\nமுக்கியமான ஒன்று இதை ஆக்டிவேட் செய்யும் போது உங்கள் பர்சனல் மொபைல் போனை நீங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nஅந்த பக்கத்தில் உள்ள Set up 2-Step Verification என்ற பட்டனை அழுத்தவும்.\nஅந்த பட்டனை க்ளிக் செய்ததும் உங்களுக்கு அடுத்த கட்டம் ஓபன் ஆகும் அதில் உள்ள Select Phone என்பதை க்ளிக் செய்து உங்கள் Phone மாடலை தேர்வு செய்யுங்கள்.\nஅதில் குறிப்பிட்டுள்ள மூன்று வகை போனாகவும் இல்லை என்றால் கீழே உள்ள Other- Use another Phone என்பதை தேர்வு செய்யுங்கள். பெரும்பாலனவர்கள் மற்ற மொபைல்களை உபயோகிப்பதால் இந்த வகை போன்களில் எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை தொடர்கிறேன்.\nமேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல உங்கள் விவரங்களை தேர்வு செய்து கீழே உள்ள Send code என்ற பட்டனை அழுத்தவும்.\nஉடனே உங்கள் மொபைலுக்கு கூகுளில் இருந்து ஒரு SMS வரும். அந்த எண்ணை குறித்து கொண்டு இங்கு கீழே இருக்கும் Code என்ற இடத்தில் கொடுத்து அருகில் உள்ள Verify என்ற பட்டனை அழுத்தவும்.\nஅடுத்து உங்கள் மொபைல் verify செய்யப்பட்டது என்ற செய்தியுடன் கீழே உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.\nஒருவேளை இந்த போன் வேலை செய்யவில்லை அல்லது திருடப்பட்டுவிட்டது என்றால் என்ன பண்ணுவது அதற்க்கு Next என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.\nஅடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு 10 verification number இருக்கும் அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுடைய போன் வேலை செய்யாமல் இருந்தால் இந்த நம்பர்களை வைத்து உங்கள் அக்கௌண்டில் உள் நுழையலாம். இந்த ஒவ்வொரு நம்பரிலும் ஒருமுறை மட்டுமே உள் நுழைய முடியும்.\nஅடுத்து அங்கு உள்ள சிறிய கட்டத்தில் (yes i have copied) டிக் குறியிட்டு கீழே உள்ள Next பட்டனை அழுத்தவும்.\nஅடுத்து வரும் விண்டோவில் உங்களின் வேறு ஒரு மொபைல் எண்ணை கொடுத்து Next க்ளிக் செய்யவும்.\nஅடுத்து வரும் பக்கத்தில் உள்ள NEXT பட்டன் க்ளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் உள்ள Turn on 2-Step Verification என்பதை க்ளிக் செய்யவும்.\nஉங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அதில் OK என்பதை கொடுத்து விட்டால் உங்களுக்கு ஜிமெயில் லாகின் பக்கம் வரும் அதில் உங்களுடைய ID , PASSWORD கொடுத்தவுடன் உள்ளே செல்லாமல் இன்னொரு பக்கம் செல்லும் அதே நேரத்தில் உங்கள் மொபைலுக்கும் ஒர��� SMS வரும்.\nஅதை குறித்து அந்த பக்கத்தில் சரியாக கொடுத்து கீழே உள்ள சிறிய கட்டத்தை டிக் செய்து VERIFY பட்டனை அழுத்திவிடவும்.\nஇதே கணினியில் நீங்கள் 30 நாள் லாகின் செய்து கொள்ளலாம். வேறு புதிய கணினிகளில் லாகின் செய்ய முயன்றால் பாஸ்வேர்ட் மட்டும் கொடுத்தால் மட்டும் போதாது உங்கள் மொபைலுக்கு வரும் verification எண்ணையும் கொடுக்கவேண்டும்.\nஅப்பொழுது தான் லாகின் செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் லாகின் செய்ய முயலாமல் உங்களுக்கு இந்த verifiaction நம்பர் SMS வந்தால் யாரோ ஒருவர் உங்கள் கடவுச்சொல்லை அறிந்து உள்ளார் அவர் லாகின் செய்ய முயற்சி செய்கிறார் என அர்த்தம் உடனே உங்களின் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள்.\nஇப்பொழுது உங்களின் ஜிமெயில் மிகவும் பாதுக்காப்பாக நீங்கள் உபயோகித்து கொள்ளலாம்.\nஉங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்\nஉங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் ஹாக் செய்யாமல் த...\nஎனக்கு தெரிந்த கணிப்பொறி நுணுக்கங்களை என்னால் முடிந்த அளவுக்கு நண்பர்களுக்கு பகிர்த்துகொள்வது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t8640-topic", "date_download": "2018-07-19T11:33:44Z", "digest": "sha1:3WTCTJGR2P5RHTTEQHTHYXATZHNDIUDX", "length": 12912, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நடிப்புக்கு முழுக்குப்போடும் நிலா..", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசி���ால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஅடுத்த சிம்ரன் என்று எஸ்.ஜே. சூர்யாவால் ஆரூடம் சொல்லப்பட்ட நிலா, தனக்கென்று சொல்லிக்கொள்ளும்படியாக எந்த வெற்றிப் படமும் இல்லாமலேயே பட உலகிலிருந்து விடை பெறுகிறார். எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே, அர்ஜுனின் மருதமலை ஆகிய சில படங்களில் நடித்த இந்த மெல்லிடை அழகி, தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் ஜகன்மோகினி படம்தான் தன் கடைசிப் படமாக இருக்கும் என்று சொல்கிறார்.\n நடிப்பு போரடிக்கிறதாம். படங்களில் நடிக்கும் ஆசை எதுவும் இப்போது இலையாம். சொல்லப்போனால் ஷூட்டிங்குக்குப�� போகவே பிடிக்கவில்லை என்றும் சொல்கிறார்.\nநடிப்புக்கு முழுக்குப் போடும் நிலா இனி என்ன செய்யப்போகிறார் நியூயார்க்கில் ஹோட்டல் பிசினஸ் செய்துவரும் இவர், இப்போது புது தில்லியில் புதிய கிளை ஒன்றைத் தொடங்குகிறார். இனி முழுக்க முழுக்க ஹோட்டல் தொழிலில் கவனம் செலுத்துவதாகத் திட்டமாம்.\nதொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து, வாய்ப்புக்கள் கதவைத் தட்டிக்கொண்டிருந்தால் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பாரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T11:40:04Z", "digest": "sha1:W3T6M6SMWQENSRNYWRZ3QEFKVZIJKO7R", "length": 11350, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "என்திசை வீசா தென்றல் | இது தமிழ் என்திசை வீசா தென்றல் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கதை என்திசை வீசா தென்றல்\nவசந்தம் போய் கோடையும் வந்து விட்டது.\nதுவைக்கப் பட்ட கருஞ்சேலையாய் சாலை ஈரத்தில் மின்னிக் கொண்டிருந்தன. வழுக்கிக் கொண்டிருக்கும் வாகனங்களின் மறுபுறம் செவ்வண்ண தென்றலாய் அவள். நான் பார்க்க.. நான் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் தென்றல் பேருந்தில் ஏறும் வரை. மழைக் காலத்தில் சாரல் தானே அடிக்கும்.. எங்கிருந்து தென்றல் வந்தது என என்னால் யோசிக்க முடியவில்லை.\nஒருவேளை செவ்வண்ணம் என்னுள் வானவில்லை தோற்றுவித்திருக்கலாம். கடைசியில் நானுமா ஆனால் வெளியில் தெரிந்தால் தானே நான் நாண வேண்டி இருக்கும் என பீறிட்டு எழும் கவிதை எழுதும் ஆசையையும் அடக்கிக் கொண்டேன்.\nநான் சாப்பிடும் அளவு குறைகிறதா, தூக்கம் சரியாக வருகிறதா,காதல் பாட்டு பிடிக்கிறதா என என்னை உள்நோக்கி பார்த்தேன். வானவில்லும், மழையும் ஒருங்கே தெரிந்தது.ம்ம்..நடப்பவை எல்லாம் இயற்கைக்கு மாறாகவே நடக்கின்றன.\nஅக்னி நட்சத்திரம் அனைத்தையும் எரித்து விடுவது என தீர்மானித்து விட்டது போலும். பாவம் என்னை அன்று தாக்கிய தென்றல் முக்காடு போட்டு கொண்டு ‘தேமோ’வென வெயிலில் சென்றுக்கொண்டிருந்தது.பாரதியார் பாடல் எல்லாம் என்னவளுக்கு பரீச்சயம் இல்லை போலும். பெரும்பாலும் அவள் பா���ம் பார்த்தே நடக்கிறாள்.நான் பின் தொடர்கிறேன் என்று எப்படி தான் நான் தெரியப்படுத்துவேன்\nஅலையோ அலை என அலைந்து,தென்றலைக் குறித்து எந்தவொரு தொல்லை தரும் நண்பர்களின் உதவியுமில்லாமல் தெரிந்துக் கொண்டேன். தென்றலின் வழியில் எந்த இடைஞ்சலும் இல்லை என தெரிந்துக் கொண்டு அகமகழிந்த நொடியில் வசந்தம் பிறந்தது.\nபருவங்கள் மாறுகின்றன.ஆனால் இன்னும் முதல் படியிலேயே நின்றுக் கொண்டிருக்கிறேன்.எவ்வளவு நாள் தான் இப்படியே என்னையும் மீறி கண்கள் கலங்கி விடும் போல.எவரையோ பார்ப்பது போல் அவள் என்னை ஒரு முறை பார்த்து விட்டாலும் கூட போதும்.ஒரு நம்பிக்கை துளிர்க்கும். ச்சே..இந்த வெயிலும்,வியர்வையும் என்னை மேலும் சோர்வும்,எரிச்சலடைய செய்கின்றன.இன்று கூட அவள் திரும்பவில்லை எனில்..நினைத்து பார்க்கவே அழுகை,அழுகையாக வருகிறது.\nசடசடவென்று ஆலங்காட்டி மழை திடீரென பெய்தது. இருக்கும் வெப்பத்தை மேலும் கிளறுகிறது.மழை நல்லதுக்கு தான் என்றாலும், அவளும் நனைவாளே என்று கவலையாக இருந்தது.ஆனால் அவளோ மிக குதூகலமாய்,முகத்தில் வழிந்த நீரை வழித்து வானத்தை நோக்கி வீசி எறிந்தாள்.எவ்வளவு அழகு ஒரு குழந்தையின் துள்ளல் போல ஒரு குழந்தையின் துள்ளல் போல\nசட்டென்று மழை நின்றது.கிளறப்பட்ட வெப்பம் மட்டும் அலையாய் எழுகின்றது.துப்புக் கெட்ட மழை. ஊருக்கும் நல்லது செய்யவில்லை. என்னவளையும் அதிக நேரம் மகிழ்விக்கவில்லை. என்னை பார்க்காத அவள் மகிழ்ச்சியில் வானத்தை பார்த்தாள்.ஆனால் இந்த மழையோ..\nஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்..\nஅவ்வ்.. ஒருவேள இப்படி இருக்குமோ அவள் கண்டுக்கொள்ளவில்லை என்பதால் சுட்டெரிக்கும் ஆதவன் மனம் வருந்தி அழ,பிறகு என்னவள் பார்த்தவுடன் அழுகையை நிறுத்தி இருக்குமோ\nPrevious Postதனிமை Next Postகெளரி வீட்டு பஞ்சாங்கம்\nசோலோ இசை – ஒரு பார்வை\nகொடி இசை – ஒரு பார்வை\nகவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி\nவயலின் ‘ஞான’ சேகரன் 80\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன ���ஸ்.ஏ.சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kamalalayan.blogspot.com/2014/03/", "date_download": "2018-07-19T11:20:17Z", "digest": "sha1:MZP6O4NAGTXRU4TDFC2IL47OW2AXF74G", "length": 5496, "nlines": 80, "source_domain": "kamalalayan.blogspot.com", "title": "என் சிந்தனைகள்: March 2014", "raw_content": "\nகனவுகள் சிறகு விரிக்கும் காலம்\nஇந்த ஆண்டின் இரண்டாவது பதிவு இது.எனது புத்தகம் \"தமிழ் நாட்டில் தேவதாசிகள்' வெளியாகி பரவலான கவனம் பெற்றுள்ளது.முனைவர் சதாசிவம் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தின் மொழியாக்கம் இது.இது தவிர கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டீபன் ஹாகிங் வரலாற்று நூலையும் எழுதி அதை வையவி பதிப்பகம் மூலம் வெளியிட்டு உள்ளேன். பல புதிய முயற்சிகள் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.கனவுகள் சிறகு விரிக்கும் காலம் இது.இந்த மாத \"புதிய புத்தகம் பேசுது' மற்றும் \"உங்கள் நூலகம் 'இதழ்களில் எனது நூல் அறிமுகக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன.சதத் ஹசன் மாண்டோ வின் சிறுகதைகளை நண்பர் உதயசங்கர் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.உருது மொழியின் இணையற்ற படைப்பாளியான மாண்ட்டோ கதை உலகம் துயரம் நிரம்பியது.இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் இரத்தம் தோய்ந்த வாழ்க்கைப் பதிவுகள் அவை.அந்தக் கொந்தளிப்பை,அதன் வலியை ,உக்கிரத்தை வெடிப்புறப் பேசுகிற கதைகள் இவை.படிக்கிற போதே நம் குருதியை உறையச் செய்பவை..மதம் என்னும் பேயின் வெறியாட்டம் எப்படி இருக்கும்,என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என்று அறியவும் உணரவும் இக்கதைகள் தம்முள் எண்ணற்ற வழிகளை திறந்து விடுகின்றன.உள்ளே நுழைந்து நாம் கவனிக்கத் தொடங்கினால் போதும்.நமது மனச்சான்று விழித்துக் கொள்ளும்.அதன் குரல் நம்மைத் தூங்க விடாது.இந்தப் பூமியில் இனி மானுடம் மதத்தின் பேரால் மோதி மடியாத காலம் வருமா என்று நம்மை ஏங்கச் செய்து விடுகிற கதைகள் இவை.நல்ல கனவுகள் நனவாகும் காலம் வருமா\n'என்னை பற்றி'யின் கீழ் எனது விவரங்கள்..\nஎனது புத்தகங்களில் இருந்து.. (4)\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nகனவுகள் சிறகு விரிக்கும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sirumuyarchi.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-19T11:40:30Z", "digest": "sha1:56GLMH7XZ3IEWTMTHSW4QMGFP7ND2PU5", "length": 34096, "nlines": 270, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: ஒன்றிப்படிங்க விளங்���ும்....", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nமுல்லை என்னை வழக்கொழிந்த தமிழ் சொல் சிலவற்றை எழுதுமாறு தொடருக்கு அழைத்திருக்கிறார்கள்.. உண்மையில் நம்மையும் அறியாமல் பல வார்த்தைகளை மறந்துவிட்டிருக்கிறோம்.. மகனிடம் தமிழில் பேசு என்று வலியுறுத்தும் என்னிடம் அவன் திரும்பி கேட்கும் போது தான் நான் ஆங்கிலமே கலந்து எத்தனை பொருட்களைக் குறிப்பிடுகிறேன் என்று உணர்ந்தேன்..நிறங்களை தமிழில் குறிப்பிடுவது குறைந்துவிட்டது. சின்னப்பிள்ளையா இருந்தப்பல்லாம் பச்ச வாளியில் தண்ணி பிடிச்சு வைச்சிருக்கேன் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தவள் தான் எப்ப மாறிவிட்டேன்னு தெரியவே இல்லாமல்..க்ரீன் பக்கெட் நிறைய தண்ணீர் பிடிச்சுவைன்னு சொல்றேன். இப்ப ஆங்கில வார்த்தைகலப்பும் இந்தி வார்த்தைக்கலப்பும் எக்கசக்கமாகிவிட்டது.\nஎங்க ஆச்சி நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது குளிப்பாட்டி விடுவாங்க.. அப்போதெல்லாம் முதுகுப்பக்கம் சோப்பு போட்டுவிடனும்ன்னு \" பொறத்தக்காட்டுன்னு\" சொல்வாங்க.. புறம் என்றால் பின்புறம்ன்னு அர்த்தம்பட சொல்வாங்கன்னு நினைக்கிறேன். அதை அவங்க சொல்லும்போது அழகா இருக்கும்..\nஎன் மாமியார் சமையலுக்கு அளவு சொல்லும்போது அரைப்படி காப்படி அரைக்காப்படி என்று கணக்குகளை சொல்வாங்க.. எனக்கு அவை குழப்பத்தை உண்டு செய்யும்..இப்ப கொஞ்சம் புரிகிறது. அம்மா உழக்கால்( ஆழாக்கு) அளப்பதால் அரை உழக்கு கால் உழக்கு என்றும் சொல்வாங்க.. இப்ப பலரும் டம்ளர் கணக்கு ஒரு டம்ளர் இரண்டு டம்ளர்ன்னு சொல்வதைக் கேட்டிருக்கேன்.\nமேற்கொண்டு என்ன வார்த்தை என்று யோசிச்சிட்டே இருந்தேன் அப்பத்தான் முல்லையே ஒரு யோசனை சொன்னாங்க.. உடனே நான் ..\" நல்ல ஐடியான்னு \" சொன்னேன்.. பாருங்க நான் நல்ல யோசனைன்னு சொல்லவே இல்லையே.. :)கிழமைகளை நாம தமிழில் சொல்வதும் குறைந்தே வருகிறது என்று தோன்றுகிறது. இவையெல்லாமும் ஒரு நாள் வழக்கொழிந்த வரிசையில் வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.\nபடிக்கும் போது சரியாப் படிக்கலைன்னா.. நல்லா ஒன்றிப் படிச்சால்ல நீ எங்க பாட்டுக்கேட்டுக்கிட்டு ... வாய்பாத்துக்கிட்டு படிச்சான்னு ��ிட்டுவாங்க.. அந்த ஒன்றி படிக்கிறது இப்பல்லாம் நாம் பயன்படுத்துவது இல்லைன்னு நினைக்கிறேன்..\nஎன்ன முழிக்கிற... சொன்னது விளங்குச்சா இல்லையான்னு கணவர் கேப்பாங்க.. விளங்கிக்கொள்ளுகிற என்ற வகையில் விளங்கிச்சா என்பது நல்ல சொல் தானே... நான் யாரையும் கேட்பது புரிஞ்சுதான்னு தான்.. இப்படியாக என் ஞாபகத்துக்கு வந்த சில வார்த்தைகளை இங்கே தந்திருக்கேன்.. இங்கே யாரோ பதிவர் எல்லோரையும் ஞாபகத்தை நியாபகம்ன்னு சொல்லாதீங்கன்னு சொல்லிட்டிருந்தாங்க அது யாருன்னு இப்ப ஞாபகம் இல்லைங்க.. :)\nபி.கு .. இதெல்லாம் வழக்கொழிந்தவைகளே இல்லை நீங்க தான் பயன்படுத்தலைன்னு சொல்லாதீங்க.. அப்படி ஆகிடுச்சோன்னு நினைச்சுக்கிட்டுப் போட்டிருக்கேன்.\nரொம்ப நாளா பதிவு போடாத கோபிநாத்,\nஊடால பின்னூட்டப்பதிவு போட்ட அபி அப்பாவையும் பதிவிட அழைக்கிறேன்..\nஅவர் வித்தியாசமா ஒரு பதிவு போடுவதாக சொல்லி இருக்கிறார்.\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 12:04 PM\nஇருப்பினும் நீங்கள் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.\nஆகா பின் குறிப்பு சேர்த்துட்டுப்ப்பார்த்தேன் ஜமால் நீங்களும் சொல்லி இருக்கீங்க.. :))\nஇது ஒரு நல்ல முயற்சியா இருக்கே... மக்கள் தொலைக்காட்சில இதுமாதிரி தமிழ் வார்த்தை விளையாட்டு ஒன்று நடக்கும். எங்க வீட்ல அதை பார்க்கவே முடியாது. அவங்களும் (நிகழ்ச்சியில்) அதிகம் வடசொல் கலந்தே தான் பேசுவாங்க... எப்படியோ ஆனா நீங்க வழக்கொழிந்திடுமோன்னு பயந்தே எழுதி இருக்கீங்களே.. இது மாதிரி எவ்வளவு வார்த்தைகள் இருக்கு உதாரணத்துக்கு 'வணக்கம்' என்கிற வார்த்தையை ஒரு நாளைக்கு எத்தனை தடவை பயன் படுத்துறோம். கைபேசில கூட ஹலோ தானே... எங்க வீட்ல இன்னும் அடுத்த தலைமுறை வராததால எங்க தலைமுறைல மறந்து போனதைப் பற்றி விரைவில் வருகிறேன்.\nஓ..பேசிக்கிட்டிருந்ததையே போட்டுட்டீங்களா...யோசனை-ன்னு சொல்லலை..அப்போ அதுவும் ஒரு வழக்கொழிந்த சொல், அதையும் லிஸ்ட்-லே சேர்த்துடுங்கன்னு நான் சொன்னதை.. ஆனா, இப்போதான் தோணுது..யோச்னைன்றது தமிழ்ச் சொல்தானான்னு..கருத்து-ன்னும் சொல்லலாம் இல்லையா\n//பி.கு .. இதெல்லாம் வழக்கொழிந்தவைகளே இல்லை நீங்க தான் பயன்படுத்தலைன்னு சொல்லாதீங்க.. அப்படி ஆகிடுச்சோன்னு நினைச்சுக்கிட்டுப் போட்டிருக்கேன்.//\n:-)) அதான் ஜமால் சொல்லிட்டாரே\nபல நல்ல சொற்களைத் தெரிந்துக் கொள்ள உதவுகிறது/ நினைவுப் படுத்திக் கொள்ளவும் தான்\nஇந்த தொடர் பதிவின் மூலம்\n\"ஊடால பூர்ராண்டா\"ன்னு சினிமா தியேட்டர் கவுண்டர்ல கேட்டிருப்பீங்க, அடுத்து நாம நெல் முற்றியதும் அறுவடைக்கு முன்னே \"பாம்பும் நோவாம கம்பும் நோவாம போட்டா என்ன\" என பாட்டி ஒரு தடவை கேட்டாங்க\nஅதுக்கு என்ன அர்த்தம்ன்னா \"ஊடு பயிர்\" அதாவது உளுந்து, பயறு அந்த நேரத்திலே விதைத்தால் அது முளைத்து வரும் முன்னமே கதிர் அறுத்து விடலாம். அதன் பின்னே அந்த விவசாயி கால் பட்டு அழுந்தி கிடக்கும் அந்த விதைகள் அந்த அடிப்பகுதி வைக்கோலை இயற்கை உரமாக கொண்டு மேலே வரும்.\nஇப்படி செய்வதால், தண்ணீர் மிச்சம், உரம் மிச்சம், தவிர நெல்லுக்கும் ஒரு பிரச்சனையும் வராது, அந்த ஊடு பயிருக்கும் நல்லது.\nஅதான் பாம்புக்கும்\"நோகாமல்\" அதாவது வலிக்காமல், கம்புக்கும் நோகாமல்\"ன்னு சொன்னாங்க பாட்டி\n அது தான் தியேட்டர் வாசல்ல \"ஊடால பூர்ரான்\"ன்னு ஆகி போச்சு\nஊடு,ஊடால - இடை, இடையே\nஉஷ் அப்பாடா மூச்சு வாங்குது\n’ஒன்றிப் படி’ இன்றும் உண்டு.\n’அப்புரம்...’ அப்படின்னு சுவாரஸ்யமா இழுத்தா ‘அப்புரம் வந்தது சப்பரம், கதையா சொல்றேன். போய் வேலையைப் பார்’னுட்டிடுவாங்க:))\n\"ஒன்றிப் படி, விளங்குச்சா, பொறத்தகாட்டு\"... ம் இதெல்லாம் என் சிறுவயதில் வழக்கில் இருந்து இப்பொழுது வழக்கில் குறைந்து விட்ட சொற்கள். இன்னும் எனக்கு \"அரைப்படி காப்படி அரைக்காப்படி\" குழப்பம் தான். ஆழாக்கு தான் புரியும்\nமக்கள் தொலைக்காட்சி நிறைய தமிழ் சேவை செய்யறாங்க அயன்கார்த்தி குழந்தைகளுக்கா பட்டாம்பூச்சியில் ஒரு பொண்ணு அழகா குழந்தைகளை தமிழில் பேசவைக்கிறாங்க..:)சீக்கிரமே பதிவு போடுங்க..\nமுல்லை.. நான் எதுக்கும் பின் குறிப்பு போட்டிருவொம்ன்னு எடிட் செய்துகொண்டிருந்தப்ப தான் ஜமால் வந்து பின்னூட்டம் போட்டுட்டார்.. நான் எழுதிட்டு இங்க திரும்பினா கமெண்ட் விழுந்திருக்கு..\nயோசனையை பத்தி யோசிச்சு குழம்பி தான் அதுக்கு ஹைலைட் போடலை..\nஊடால நீங்க ஒரு பதிவையே பின்னூட்டமா போட்டுட்டீங்களே அபி அப்பா.. :)\nபொறவாசலும் எங்க ஆச்சி சொல்வாங்க.. ராமலக்ஷ்மி.. நாம ஒரு ஊருக்காரங்க ஆச்சே (நெல்லை) அதனால் நம்ம வழக்குகள் ஒன்றாக இருந்திருக்கு.. அப்பரம் சப்பரம் கூட உண்டுப்பா இப்பயும்.. :)\nஅமுதா.. ஒவ்வொரு தடவையும் அதை விளக்கம் கேட்டுட்டு மறந்துடுவேன்.. சில சமயம் கண்ணளவு தான்ம்மான்னு மாமியார் சொன்னா.. இது நல்லாருக்கே அந்த அளவே போட்டுக்கலாம் ன்னு சொல்லிடுவேன்.. :)\nஅப்துல்லா .. விளங்கிடுச்சா.. அப்ப ஒன்றிப்படிச்சீட்டீங்க போல.. :) நன்றி.\n\"அரைப்படி காப்படி அரைக்காப்படி\" எல்லாமே எனக்கு ‘அத்துப்படி’:)\nஆகா அருமை ராமலக்ஷ்மி உங்க முத்திரை பின்னூட்டம் பெற்றேன் ...\nஆமா மானிப்படின்னு ஆரம்பிச்சா நான் அத்தை ஏனிப்படின்னு சொல்லிட்டு உழக்கை அவங்க கையிலேயே குடுத்துடுவேன்..\nஎன் பேத்தி அன்று 'மணி என்ன தாத்தா' என்று கேட்டாள். நான் ஒம்போது என்று சொன்னேன். ஒம்போதா அப்படின்னான்னு கேட்டாள். 'நாளை திங்கட்கிழமை. ஹோம் ஒர்க் எல்லாம் செய்தாச்சா' என்று கேட்டேன். அதற்கு அவள் நாளை Monday தாத்தா' என்று கேட்டேன். அதற்கு அவள் நாளை Monday தாத்தா\nஇன்னும் கொஞ்ச நாளில் குழந்தைகளுக்கு Spoken Tamil தனியாக கற்றுத் தரவேண்டும் என நினைக்கிறேன்\n\"அரைப்படி காப்படி அரைக்காப்படி\" எல்லாமே எனக்கு ‘அத்துப்படி’:)\nஆமாமாம். இன்னும் எங்க அம்மா மானிப்படி அப்படினு ஆரம்பிச்சா ஆழாக்கு கணக்கு தான் வாங்குவேன். உழக்கும் கேட்டிருக்கேன். \"உழக்கு மாதிரி உட்கார்த்துட்டு இருக்காதே...\" அப்படீனு :-)) எனக்கு உழக்கு உலக்கையோட குழம்பிடும் :-))\nஅவன், இவன் மாதிரி ’உவன்’...னு ஒரு வார்த்தை இருக்குங்றது எந்தனை பேருக்குத் தெரியும்...\nஎனக்கும் இந்த காலேரெக்கால், முக்கால் படி எல்லாம் குழப்பம் தான்.\nநான் உங்க பதிவை ஒன்றிப்படிச்சேன் விளங்கிடிச்சு.பாராட்டுக்கள்\nநல்லாவே ஒன்றிப் படிச்சேன்.. நல்லா பிரிஞ்சுது ஹி ஹி நல்லா புருஞ்சுது:)\nநீங்கள் சொல்லிய படி ஒன்றிப் படிச்சதனால நன்றாக விளங்குச்சி. மறந்து போன பழை வார்த்தைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர வச்சிட்டிங்க நன்றி ;)\nநன்றி, வணக்கம், மண்ணிக்கவும்.. இந்த வார்த்தைகளையே மறந்துட்டாங்க..என்னத்தை சொல்ல\nசகாதேவன் ... வீட்டில் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறோமாதலால்.. அந்த நிலை வராது என்று நம்புவோம்.. :)\nயட்சன்... எங்க பதிவெல்லாம் படிக்கிறீங்களா.. \nபுதுகைத்தென்றல், நாகை சிவா, பழமைபேசி.. நன்றி :)\nபூர்ணிமா, கோபிநாத், மங்கை உங்களுக்கும் என் நன்றிகள்.\nகாலரைக்கா, அரையரைக்கா, முக்காலரைக்கா - அரிசி போட்டுக்கோ, ஒரு வீசம் உளுந்து போடு என்று எங்க ஆச்சி எங்கம்மாவிடம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.\nஇன்னும் நிறைய உங்களின் நினைவடுக்குகளிலிருந்து மீட்டு எழுதியிருக்கலாம்.\n//என் மாமியார் சமையலுக்கு அளவு சொல்லும்போது அரைப்படி காப்படி அரைக்காப்படி என்று கணக்குகளை சொல்வாங்க.. எனக்கு அவை குழப்பத்தை உண்டு செய்யும்//\nஅதான, உங்கள சமைக்கச் சொன்னா குழப்பம்தான இருக்கும் :):):)\nவெயிலான் நல்லா சொன்னீங்க.. எனக்கு நினைவு அடுக்குன்னு ஒன்னு இல்லவே இல்லை.இருந்தால்ல அதை தூசி தட்டி எடுக்கலாம்..மறதி கேஸு நான்.. :)\nசரிதான் ராப் அவங்களே சமைச்சு சாப்பிட சொல்லி இருந்தா .. எத்தனை சாப்பிடனும்ன்னு மட்டும் குழம்பி இருப்பேன்..\n200 பதிவுகள் கடந்த சிறுமுயற்சி - திகில்காட்சிகள் ந...\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://techguna.com/tag/android/", "date_download": "2018-07-19T11:42:04Z", "digest": "sha1:J4252DEQWXP3D5WYJDHBU5S4OO4TNGEG", "length": 5584, "nlines": 59, "source_domain": "techguna.com", "title": "android Archives - Tech Guna.com", "raw_content": "\nஆன்ட்ராய்டு N – புதிய வசதிகள்\nஉலகில் உள்ள ஸ்மார்ட் போன்களை இயக்கி கொண்டிருக்கும் இயங்கு தளங்களில் ஆன்ட்ராய்டுக்கு முக்கிய பங்கு உண்டு. இது கூகிளின் துணை நிறுவனமாக இருப்பதாலும், பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருப்பதாலும் ஆன்ட்ராய்டு ஃபோன்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கூகிள் ஆன்ட்ராய்டு பதிப்புகளை அவ்வபோது புதிது புதிதாக வெளியிட்டு கொண்டே இருக்கிறது.\tRead More »\nஇப்போ உங்க ஸ்மார்ட் போன்லயே படம் எடுத்து எடிட் செய்ய முடியும்\nஸ்மார்ட் போன்களில் இன்று சிறிய பார்ட்டி முதல் கல்யாணம், காதுகுத்து வரை படம் பிடித்து விட முடியும். இதற்கு காரணம் திறன் வாய்ந்த கேமரா, இலகுவான பயன்பாடு போன்றவைகளை சொல்லலாம். சரி ஒரு பக்கம் ஷூட்டிங் வேலைகளை முடித்துவிட்டாலும், எடிட்டிங் வேலைகளை செய்ய என்ன\tRead More »\nஉங்கள் படத்தை கார்டூனாக மாற்ற ஒரு செயலி\nஎப்போதும் உங்க சாதாரண படத்தை பார்த்து சலித்து போயிடுச்சா. உங்கள் படங்களை அழகான கார்டூன் வடிவில் மாற்ற ஒரு மொபைல் செயலி இருக்கிறது.\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nப்ளு டூத் மூலம் டயர்களை கண்காணிக்கலாம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா\nவிண்வெளியில் தயாராகும் முதல் ஆபாச படம்\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nப்ளு டூத் மூலம் டயர்களை கண்காணிக்கலாம்\nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா\nவிண்வெளியில் தயாராகும் முதல் ஆபாச படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-07-19T11:30:23Z", "digest": "sha1:66C2R7QFRUHLT4Q4I6XAUUMYQQ35TSFS", "length": 15913, "nlines": 130, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: மண்டேலாவைப் போற்றுபவர்களே! தமிழீழத்தையும் போற்றுங்கள்!", "raw_content": "\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 திசம்பர் 2013 கருத்திற்காக..\nஇதழுரை, அகரமுதல இணைய இதழ்\nமுதுமையில் இறந்திருந்தாலும் நலங் குன்றி யிருந்து இறப்பை எதிர்நோக்கியவர் என அறிந்திருந்தும் ஆன்றோர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு உலகெங்கும் துயர அலையை எழுப்பி யுள்ளது.\nஎதனால் அவர் நலங்குன்றிப் போனார் இன மக்களுக்காக ஏற்ற சிறைவாழ்க்கைதானே காரணம் இன மக்களுக்காக ஏற்ற சிறைவாழ்க்கைதானே காரணம் சிறையில் சுண்ணாம்புக்கல் உடைக்கும் வேலை பார்த்ததால் அல்லவா நுரையீரல் தொற்று நோய்க்கு ஆளானார், அல்லறுற்றார், நலமிழந்தார் சிறையில் சுண்ணாம்புக்கல் உடைக்கும் வேலை பார்த்ததால் அல்லவா நுரையீரல் தொற்று நோய்க்கு ஆளானார், அல்லறுற்றார், நலமிழந்தார் இல்லையேல் நலத்துடன் மேலும் வாழ்ந்திருப்பார் அல்லவா இல்லையேல் நலத்துடன் மேலும் வாழ்ந்திருப்பார் அல்லவா எனவே, நோய்வாய்ப்பட்டு மறைந்தாலும் மக்கள் பணியினால் பிணிக்காளாகி மறைந்த மாமனிதர், மண்டேலா அவர்கள் எனலாம்.\nகுற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வ��னைச்\nசுற்றமாச் சுற்றும் உலகு. (குறள் 1025)\nஎன்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவாக்கிற்கேற்ப வாழ்ந்த ஆன்றோர் மண்டேலா அவர்கள். இன நலனுக்காக இன்னல்களை இனிமையாக எதிர்நோக்கி மக்கள் உள்ளங்களில் குடிகொண்ட இனநலத்தலைவர் மண்டேலா அவர்கள்.\nமண்டேலாவைப் போற்றுநர் அவரது எண்ணத்திற்கும் செயலுக்கும் மாறாக இருந்து கொண்டு அவரை வாழ்த்துவதில் பயனில்லை. உண்மையிலேயே அவரைப் பாராட்டுவதாக இருந்தால் அவர் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தாரோ அந்தக் கொள்கையை ஏற்பதாகத்தான் பொருள். அவரது கொள்கைக்கு உடன்பாடில்லை; ஆனால், அந்தக் கொள்கைக்காக வாழ்ந்தமையால் பாராட்டுகிறோம் என்பது போலியான செயல்பாடே\nமண்டேலா நிற வெறிக்கு எதிராகப் போராடினார் என்றால் அந்த நிறத்தை உடைய தம் இனத்திற்காகப் போராடினார் என்றுதானே பொருள் இன நலனுக்காகப் போராடிய தலைவரைப் போற்றுபவர்கள், இன நலனுக்காகப் போராடும் பிறரையும் போற்றத்தானே செய்ய வேண்டும்\n“அவர் காந்தியவாதி; அதனால் போற்றுகிறோம்” என்று சொன்னார்கள் என்றால் அது கடைந்தெடுத்த பொய்யாகத்தான் இருக்கும். “இன்னாசெய்யாமை(அகிம்சை)’ வடிவம் என்பது மண்டேலாவைப் பொறுத்தவரை ஒரு நடைமுறை உத்தியாக மட்டுமே இருந்தது. ஆனால் இது பலராலும் காந்திய வழி என்று தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது” எனப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளதையும் சான்றாகக் கொள்ளலாம்(தமிழில் தீக்கதிர் இதழில் வந்ததை ஆயுதஎழுத்து வலைத்தளத்தில் காணலாம்).\n“அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும், நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழும் விடுதலை வாழ்வை, மக்கள் நாயகத்தை நான் கனவு காண்கிறேன். இந்தக் கனவை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தேவைப்பட்டால் இதற்காகச் சாகவும் ஆயத்தமாக இருக்கிறேன்” என்பதுதான் நெல்சன் மண்டேலாவின் வாக்குமூலம். எனவே, மண்டேலாவைத் தொழுபவர்கள், தம் மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்களையும் தொழ வேண்டுமல்லவா\nதம் மக்கள் சம உரிமையுடன் வாழ இவர் நடத்திய போராட்டம் எப்படி யிருந்தது\nஆப்பிரிக்கத் தேசியப் பேராயத்தின் படையைத் தலைமை தாங்கி மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்திய ஆயுதப் போராளிதான் மண்டேலா. அப்போது, மனித உரிமை மீ���ல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, அமெரிக்காவும் மண்டேலாவை எதிர்த்துப் பயங்கரவாத முத்திரை குத்தியதும் வரலாறுதான். அமெரிக்காவுக்குள் நுழைவதற்குள் சூலை 2008 வரை மண்டேலாவுக்கு தடை நீடித்திருந்ததும் வரலாறுதான். ஆனால், வரலாற்றின் உந்துதலால், காலம் திரும்பியுள்ளது. அன்றைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் வேறு வகை முத்திரை குத்தியவர்களும் பாராட்டுகிறார்கள். ஆனால், இந்தப் பாராட்டு உண்மையாக அமைய என்ன செய்ய வேண்டும் இன நலப் போராளி மண்டேலா பற்றிய மதிப்பீட்டை மாற்றிக் கொண்டதுபோல் இனநலனுக்காகப் போராடும் ஈழ மக்களைப் போற்ற வேண்டும் இன நலப் போராளி மண்டேலா பற்றிய மதிப்பீட்டை மாற்றிக் கொண்டதுபோல் இனநலனுக்காகப் போராடும் ஈழ மக்களைப் போற்ற வேண்டும் நாட்டு மக்களுக்காக இன்னுயிர் நீத்த ஈழப் போராளிகளை வணங்க வேண்டும் நாட்டு மக்களுக்காக இன்னுயிர் நீத்த ஈழப் போராளிகளை வணங்க வேண்டும் நாட்டு மக்கள் நலனுக்காகவே நாளும் வாழும் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரனை மதிக்க வேண்டும் நாட்டு மக்கள் நலனுக்காகவே நாளும் வாழும் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரனை மதிக்க வேண்டும் ஆதலின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் ஆதலின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவே, இதுவரை செய்த தவறுகளும் குற்றங்களும் அதனால் நேர்ந்த இனப்படுகொலைகளும் போதும்\nநிறவெறி ஆட்சி முடிவிற்கு வந்தபோதும் என்ன சொன்னார் மண்டேலா “ஆயுதப்போராட்டத்தை நாம் நிறுத்தி வைக்கிறோம்; ஆனால் அதே நேரத்தில் ஆயுதப்போராட்டத்தை நாம் கைவிட்டுவிடவில்லை” என்றுதானே நாட்டுமக்களிடையே வீர உரையாற்றினார் “ஆயுதப்போராட்டத்தை நாம் நிறுத்தி வைக்கிறோம்; ஆனால் அதே நேரத்தில் ஆயுதப்போராட்டத்தை நாம் கைவிட்டுவிடவில்லை” என்றுதானே நாட்டுமக்களிடையே வீர உரையாற்றினார் (முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பொழுது ஆயுதங்களை மெளித்தது நினைவிற்கு வருகிறதா (முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பொழுது ஆயுதங்களை மெளித்தது நினைவிற்கு வருகிறதா) மேற்கு வங்கத்திற்கு வந்தபொழுதும் தன்னைப் புரட்சியாளனாகத்தானே குறிப்பிட்டார்) மேற்கு வங்கத்திற்கு வந்தபொழுதும் தன்னைப் புரட்சியாளனாகத்தானே குறிப்பிட்டார் மறப்போராளி சுபாசு சந்திர போசு அவர்களைத்தானே, தான் பின்பற்றும் நாயகனாகக் குறிப்பிட்டார். ஆனால், அதே மறப்போராளி சுபாசு சந்திரபோசு அவர்களின் வழியில் செயல்படும் ஆயுதப் போராளிகளைப் ‘பயங்கரவாதிகளாக’ முத்திரை குத்துவது ஏன்\nஎனவே இனநலத்திற்காக அறவழி போராடி, அதனால் பயனின்றி, ஆயுதவழிப் போராளியாக மாறிய மண்டேலாவை மதிப்பவர்கள் இன நலனுக்காக, நாட்டு நலனுக்காக, நாட்டு மக்கள் நலனுக்காக, வேறு வழியின்றிப் போராட்டப் பாதையில் செல்ல வேண்டி வந்தவர்களை மதிக்க வேண்டும்; அதற்கான காரணங்களைப் புரிந்து கொண்டு, அவற்றை உடனே களைய முயல வேண்டும். உரிமைக்காகப் போராடுபவர்கள்மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடக்கூடாது. பன்னாட்டு அவை என்பது அதிகாரம் மிக்க சில நாடுகளின் கைப்பாவையாக இல்லாமல், அனைத்து நாடுகளின் உரிமைகளையும் பேணுவதாகவும் உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளை மீட்டுத் தருவதாகவும் இருக்க வேண்டும்.\nஎனவே, மண்டேலாவை நிறவெறிக்கு எதிரான போராளியாகப் பார்க்காமல், இனஉரிமை மீட்புப் போராளியாகப் பார்க்க வேண்டும். ஆதலின்\nஇன உரிமைப் போராளிகளை மதியுங்கள்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 2:00 PM\nLabels: அகரமுதல, இதழுரை, தமிழீழம், போற்றுங்கள், மண்டேலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2013/08/", "date_download": "2018-07-19T11:48:19Z", "digest": "sha1:LVP4JCVVMCJHO5QHZZQ2IE3PBMS4VHCA", "length": 59900, "nlines": 655, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: August 2013", "raw_content": "\nகுடிநீர் சீராக வழங்கக் கோரி அதிரை பேரூராட்சி அலுவல...\n [மர்ஹூம் தியாகி S.S. இப்ராஹீம் அவர...\nபிலால் நகர் பள்ளியில் நடைபெற்ற மற்றுமொரு எளிய திரு...\n [ கோமண்டை அஹமது ஜலாலுதீன் அவர்களின...\n [ ரெஜினா ஸ்டோர் நூர்தீன் அவர்கள் ]...\nநள்ளிரவில் பெய்த மழையால் குளுமையாக காட்சியளிக்கும்...\nமரண அறிவிப்பு [ சபுரன் ஜெமீலா அவர்களின் பெரிய தகப்...\nஅமீரகம் ஃபுஜேராவில் உள்ள சுமார் 560 வருட பழமையான ம...\nஅதிரையில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து...\nஅதிரை காவல்துறையின் அன்பான அழைப்பை ஏற்று அனைத்து ம...\nஎம்.ஜி.ஆரின் 'தாலுகா கனவு' அதிரையில் நனவாகுமா \nஅதிரை ஈசிஆர் சாலையிலுள்ள மதுபானக்கடைகளை அகற்றக்கோர...\nஅதிரையில் இருவேறு இடங்களில் நடைபெற்ற வாகன விபத்தில...\nதஞ்சைலிருந்து செல்லக்கூடிய இரயில்களின் கால அட்டவணை...\nஇரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்த சிறுவனுக��கு உத...\nஅரபிக்கல்லூரியின் கட்டிட வளாகத்தை தூய்மைப் படுத்து...\nகழிவுகளை அள்ளுவதற்காக அதிரை பேரூராட்சிக்கு இரு வாக...\nசென்னை நியூ காலேஜின் 60 வது ஆண்டு வைர விழா அறிவிப்...\nஇந்திய அரசை ஜனநாயகத்திற்கு துணைநிற்க வலியுறுத்தி அ...\nபள்ளிக்கு லுங்கி அணிந்து வர தடை \nஅதிரையை அசத்திவரும் மந்தி விருந்து \nஇன்று ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம்.\nபிலால் நகர் பள்ளியில் நடைபெற்ற எளிய திருமணம் \nஅதிரையில் திருமண வீட்டை தேடி வரும் குப்பை வண்டி கு...\nசவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் நான...\nஅமெரிக்காவில் மரணமடைந்த அதிரைச் சிறுமியின் உடல் இன...\nTNTJ அதிரைக் கிளை வழங்கிய கல்வி உதவித்தொகை \nஅதிரையில் தி.மு.க நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தி...\nமஹல்லாவாசிகளுக்கு TIYA வின் நன்றி அறிவிப்பு \nஅதிரை பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ள PFI ன் ஆர...\nஅதிரை அருகே ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான எதிரொல...\nமுத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் யாகம் \nஅதிரையில் நடந்த எளிய திருமணங்கள் \nஅதிரையில் கட்டிமுடித்தும் திறக்கப்படாமல் இருக்கிற ...\nஅதிரை அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் குழந்தை உட்பட இ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோருடன் நெஞ்...\nஅதிரைக்கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்களோடு ஒரு அழகி...\nரெட் கிராஸ் பொது அமைப்பின் சேவை விருது பெற்ற அதிரை...\nபட்டுக்கோட்டையில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்...\nஅதிரை காட்டுப்பள்ளித் தெருவில் உள்ள நெய்னாபிள்ளை த...\nஅதிரை நியூஸின் அமெரிக்கா வாசகர் M.M.S. சிராஜ் அவர்...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொண்டா...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொண்டா...\nஅதிரை பைத்துல்மாலில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின வி...\n [ வண்டிப்பேட்டை பெட்ரோல் பங்க் முக...\nஅதிரை பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்த...\nஅதிரை காவல் நிலையத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின...\nஉலகெங்கிலும் உள்ள அதிரை நியூஸ் வாசகர்களுக்கு அன்பா...\nதி மு கழக முன்னோடி முகம்மது யூசுப் அவர்களின் இல்லத...\n1973-ல் வியட்நாம் போரின் போது காட்டில் பதுங்கியவர்...\nஅதிரை நூலகம் - ஓர் பார்வை \nவிளையாட்டு வீரர் - வீராங்கனை���ளுக்கு விளையாட்டு ஊக்...\nதொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 14.5 லட்...\nமரண அறிவிப்பு [ சுரைக்கா கொல்லை ]\nஅதிரை செக்கடிமோடு நண்பர்களின் பெருநாள் மந்தி [ புக...\nஅதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகளில் பேச இயலாத - ...\nஅதிரை சுட்டிக்குழந்தைகளின் குதூகல பெருநாள் கொண்டாட...\nநார்வேயில் வசிக்கும் அதிரையர்களின் பெருநாள் சந்திப...\nதிடல் தொழுகைக்கு திரண்டுவந்த அதிரை மக்கள் \nஅதிரை கடற்கரை ஜும் ஆ பள்ளி முஹல்லாவாசிகளின் பெருநா...\nஅதிரையில் பெருநாள் தொழுகை சிறப்பாக கொண்டாடப்பட்டது...\nலண்டன் நார்பெர்ரி பார்க்கில் அதிரையர்களின் பெருநாள...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரையர்களின் பெருநாள் ச...\nஅதிரையில் வெளுத்து வாங்கியது மழை \nஅதிரையில் நாளை பெருநாள் என அறிவிப்பு \nஆதம் நகர் மஹல்லா நிர்வாகிகளின் பெருநாள் வாழ்த்துச்...\nதுபை வாழ் அதிரைச்சகோதரர்களின் ரூமில் நடந்த பெருநாள...\nசவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரையரின் பெருநாள் சந்த...\nலண்டன் வாழ் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு [ புக...\nதுபாய் ஈத்காவில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில்...\nஅதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை...\nஆஸ்பத்திரித்தெரு புதுப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு ...\nதுபையில் நாளை நோன்புப்பெருநாள் என அறிவிப்பு \nவிளையாட்டு மைதானத்தில் நடந்த AFFA வின் இஃப்தார் நி...\nலண்டன் நார்பெர்ரி ஹாரா பள்ளியில் நடைபெற்ற இஃப்தார்...\nஅதிரை நெசவுத்தெரு சங்கத்தின் பெருநாள் வாழ்த்துச்செ...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச...\nஅதிரையில் பெருநாளை ஒட்டி ஆடு, கோழி, வான்கோழி இறைச்...\nஅதிரை அல்அமீன் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழி...\nABM ரியாத் கிளையின் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை...\nஅதிரை லாவண்யா மஹாலில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில்...\nஅதிரையில் நண்பர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி \nஅதிரை A.J. பள்ளிவாசல் நிர்வாகிகளின் அன்பான வேண்டுக...\nஅதிரை பைத்துல்மாலின் ஜூலை மாத சேவைகள் மற்றும் செயல...\nபெரிய ஜும்மாப் பள்ளியின் இஃப்தார் நிகழ்ச்சியில் AA...\nஆலடித்தெரு முகைதீன் ஜும்மாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச...\nமரண அறிவிப்பு [ மர்ஹூம் V.T. வாவூப்பிள்ளை மரைக்காய...\nதுபாயில் வேட்டி அணிந்து சென்ற இந்தியருக்கு மெட்ரோ...\nஅமீரகத்தில் அயராது உழைக்கும் அதிரை பைக��� மெஸ்ஸஞ்சர்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nகுடிநீர் சீராக வழங்கக் கோரி அதிரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் \nநமதூர் கடல் கரைத்தெரு,ஹாஜா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு கடந்த 5 நாட்களாக குடிநீர் சீராக வழங்கப்படுவதில்லை எனக் கோரி அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.\nதகவல் அறிந்த அதிரை காவல் துறைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு முற்றுக்கையிட்டோரிடமும் பேரூராட்சி ஊழியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்தப் பேச்சுவார்த்தையின்படி இன்று முதல் மாலை 5 மணிக்கு கடல் கரைத்தெரு அதன் உட்பட்ட பகுதிக்கும், காலை 7 மணிக்கு ஹாஜா நகர் அதன் உட்பட்ட பகுதிக்கும் குடிநீர் வழங்கப்படுமென்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.\nஇந்த முற்றுகை போராட்டத்தால் இந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.\n [மர்ஹூம் தியாகி S.S. இப்ராஹீம் அவர்களின் மகன் ]\nகீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் தியாகி சி.சு. முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகனாரும் மர்ஹூம் பரோஸ்கான் என்கிற ஹல்லாஜி,அப்துல் ஹமீது,அன்சாரி,அப்துல் கபூர் ஆகியோரின் சகோதரரும் சேட் என்கிற S.அகமது இப்ராஹீம் அவர்களின் தகப்பனாரும் சி.மு.முகம்மது நூர்தீன்,J.ரியாஸ்கான் ஆகியோரின் மாமனாருமாகிய I.சுலைமான் அவர்கள் இன்று [ 31-08-2013 ] காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nபிலால் நகர் பள்ளியில் நடைபெற்ற மற்றுமொரு எளிய திருமணம் \nஅதிரை பிலால் நகர் பள்ளியில் இன்று [ 30.8.2013 ] மாலை 4.30 மணியளவில் இந்திய தௌஹீத் ஜமாத் அதிரை நகரத் தலைவர் கமாலுதீன் அவர்கள் இல்லத்திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இதில் மார்க்க பிராச்சாரகர் அப்துல் ஹமீது அவர்கள் எளிய திருமணம் குறித்து சிறப்பு ச்சொர்ப்பொழிவு நிகழ்த்தினார். வரவேற்ப்புரை மற்றும் எளிய திருமணம் நடத்திடும் முறைபற்றி அதிரை தாரூத் தௌஹீத் செயலாளர் ஜமீல் M.சாலிஹ் சிற்றுரை நிகழ்த்தினார். ஜமாத்தார்கள் முன்னிலையில் இனிதே இந்நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\n [ கோமண்டை அஹமது ஜலாலுதீன் அவர்களின் மனைவி ]\nபெரிய நெசவு தெருவைச் சார்ந்த மர்ஹூம் கோமண்டை அஹமது ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், காதிர் முகைதீன், அஜ்மல்கான், ஹபீபுல்லாஹ் ஆகியோரின் தாயாருமான ஜெய்புனிஷா அவர்கள் இன்று [ 30-08-2013 ] காலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று [ 30-08-2013 ] மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\n [ ரெஜினா ஸ்டோர் நூர்தீன் அவர்கள் ]\nபுதுக்குடி நெசவு தெருவைச் சார்ந்த மர்ஹூம் சேக் நூர்தீன் அவர்களின் பேரனும்,மர்ஹூம் முகம்மது யூசுப் அவர்களின் மகனாரும், அக்பர் அலி அவர்களின் சகோதரரும்,முகம்மது அஸ்லம்,அபுல் ஹசன் ஆகியோரின் தகப்பனாரும் முஜாஹிதீன் அவர்களின் மாமனாரும்,முகம்மது அலி,நெய்னா முகம்மது ஹாஜா,நெய்னா முகம்மது, அப்துல் முத்தலீஃப், அப்துல் முனாப்,முகம்மது காசீம் நூர் முகம்மது ஆகியோரின் மச்சானுமாகிய ரெஜினா ஸ்டோர் உரிமையாளர் நூர்தீன் ஜவஹர் அவர்கள் இன்று [30/08/2013]காலை M.S.M. நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று [30/08/2013] இஷாஹ் தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்..\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nபுதுமனைத் தெருவைச் சார்ந்த மர்ஹூம் மு..வா. செ. முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.அ செ.முஹம்மது ஹசன் அவர்களின் மனைவியும் மர்ஹூம் மு.அ.முஹம்மது இப்ராஹீம், மர்ஹூம் மு.அ.முஹம்மது அஸ்ரஃப், மு.அ.சம்சுதீன் ஆகியோரின் தாயாருமாகிய , ஜுலைகா அம்மாள் அவர்கள் இன்று [29/08/2013]இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை [ 30-08-2013 ] காலை 8.30 மணியளவில் மரைக்கபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nகீழத்தெருவைச் சார்ந்த கோட்டூரார் விறகுகடை மர்ஹூம் கமாலுதீன் அவர்களின் மனைவியும், ஜாகிர் ஹுசைன், ஹாஜா, ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாரும் , அஹ்லன் டெய்லர் சர்புதீன் அவர்களின் மாமியாருமாகிய ஜெய்தூன் பீவி அவர்கள் நேற்று [ 28-08-2013 ]இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று [ 29-08-2013 ] காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nநள்ளிரவில் பெய்த மழையால் குளுமையாக காட்சியளிக்கும் அதிரை [ புகைப்படங்கள் ] \nஅதிரையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கடும் வெப்பதால் தவித்து வந்த அதிரை மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்துள்ளன. குளு குளுவென மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும் அதிரையில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமரண அறிவிப்பு [ சபுரன் ஜெமீலா அவர்களின் பெரிய தகப்பனார் ] \nபுதுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் அ.மு. அப்துல் காசிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் கறீம், அ.மு. அப்துல் ரெஜாக், அப்துல் சமது ஆகியோரின் சகோதரரும், அ.மு. ஜெய்லானி, அ.மு. நூரானி ஆகியோரின் தகப்பனாரும், கேப்டன் ஜூனைத், பரக்கத் அலி, ஹாஜா முகைதீன் ஆகியோரின் மாமனாரும், அஜ்மல்கான், ஜபருல்லாஹ்கான், நெய்னாகான், அஹமது அனஸ், லியாகத் அலி, ஹாஜா செரிப் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், நிசாத், சேக், டிக்காக்கான், காத்திப்கான், ஆசிப்கான், யாசிம், நாதிம் ஆகியோரின் அப்பாவும், பேரூராட்சியின் 10 வது வார்டு உறுப்பினர் சபுரன் ஜெமீலா அவர்களின் பெரிய தகப்பனாருமாகிய அ.மு. அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று [ 28-08-2013 ]காலை 8 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின��� ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஅமீரகம் ஃபுஜேராவில் உள்ள சுமார் 560 வருட பழமையான மண் பள்ளி \nஇந்த மண் பள்ளி வாசல் ஃபுஜேராவில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் குர்ஃபகான் கடல் கரை அருகில் உள்ள அல் பிதாயா எனும் ஊரில் ஒரு மலை அடிவாரத்தில் அமைதி சூழ அமைந்துள்ளது.\nசுமார் 50 சதுர அடியே ஆனா நிலப்பரப்பில் நான்கு கோபுரங்களை ஒரே தூணில் தாங்கி நின்றபடி அழகிய பழமைத் தோற்றத்தில் காண்போரை கவரும் வண்ணம் அமையப் பெற்று இருப்பதே இதன் தனிச்சிறப்பு.\nஇப்பள்ளி வெறும் களிமண்ணாலும் மலைக்கற்க்களைக் கொண்டும் கட்டப்பட்டு இருக்கிறது.\nஐவேளைத் தொழுகை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்பள்ளியில் தற்போது பங்களாதேசை சேர்ந்த ஹாஃபிஸ் அஹமது என்பவர் இமாமாக உள்ளார்.\nஇப்பள்ளியை பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆராய்ந்தும் இப்பள்ளி கட்டிய சரியான வருடத்தை இதுவரை கண்டு பிடிக்க முடிய வில்லை.ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி இந்த மண்பள்ளி 1446 ஆம் ஆண்டில் கட்டியிருக்கலாம் என்பதாக சொல்லப்படுகிறது.\nபல தலைமுறையாய் இருந்து வரும் இப்பள்ளியை கட்டியது யார் என்று சரிவரத்தெரியாத புரியாத புதிராக உள்ளது என்று அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.\nஅமீரகத்தில் வசிப்போர்கள் அவசியம் ஒரு முறையேனும் பார்க்கவேண்டிய இந்த மண்பள்ளி துபையிலிருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.\nஅதிரையில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தி.மு.க அழைப்பு \nஎதிர் வரும் [ 05-09-2013 ] அன்று காலை 10.30 மணியளவில் அதிரையில் நடைபெற இருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள நகர தி.மு. கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.\nஅதிரை காவல்துறையின் அன்பான அழைப்பை ஏற்று அனைத்து மஹல்லா நிர்வாகிகள் பங்கேற்பு \nஅதிரை காவல்துறையின் அன்பான அழைப்பை ஏற்று இன்று [ 27-08-2013 ] மாலை 6 மணியளவில் நமதூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற மத நல்லிணக்க கூட்டத்தில் அதிரை அனைத்து மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nபட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் செங்கமலக்கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் எதிர்வரும் 12-09-2013 அன்று நடைபெற உள்ள ‘விநாயகர் சதுர்த்தி’ ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதங்ளும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அனைத்து மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள் தங்களுடைய ஒத்துழைப்பை நல்கவேண்டும் என்று அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டன.\nஇந்தக்கூட்டத்தில் அதிரை அனைத்து மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள், பள்ளிவாசல்களின் நிர்வாக கமிட்டியினர், தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலந்துகொண்ட அனைவரையும் அதிரை காவல்துறையினர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.\nஎம்.ஜி.ஆரின் 'தாலுகா கனவு' அதிரையில் நனவாகுமா \nதாலுகா அலுவலகம் அமைய தகுதியுள்ள ஊரா அதிரை \n வரலாற்றுகளில் முக்கிய பங்கு வகிக்கும் கடைமடைப் பகுதியான அதிரை பண்டைய கால வணிக வியாபாரத்தில் சிறந்து விளங்கின. பெரும்பாலான வணிகர்கள் தங்களுடைய வியாபாரமாக தேங்காய், மீன், நண்டு, கருவாடு, இறால் போன்ற விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தனர் - வருகின்றனர். அதுமட்டுமா தமிழகத்தில் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யக் கூடிய ஊர்களில் அதிரையும் ஒன்று என்பது கூடுதல் சிறப்பாகவே இருந்து வருகிறது.\nஇவ்வூரில் கஸ்டம்ஸ் அலுவலகம், வானொலி நிலையம், துறைமுகம், நூலகம், தமிழக அளவில் புகழ் பெற்ற கல்லூரி, தொழிற்பயிற்சிக் கூடங்கள், மேல்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், இரயில் நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம், வானிலை ஆராய்ச்சி நிலையம், கடலோரப் காவல் படை அலுவலகம், எரிபொருள் விற்பனை நிலையங்கள், சார்பதிவாளர் அலுவலகம், துணை மின் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், மத்திய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்டவை அடங்கும். மேலும் இப்பகுதியை சுற்றி மகிழங்கோட்டை, தொக்காளிக்காடு, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், ஆண்டிக்காடு, கொள்ளுக்காடு, மருதங்க வயல், கூடலிவயல், ஏரிபுறக்கரை, கீழத்தோட்டம், பழஞ்சூர், மளவேனிக்காடு, ராசியங்காடு, முடிச்சிக்காடு, மஞ்சவயல், நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை உட்பட்ட கிராமங்களில் சுமார் மூன்று லட்சம் வரை மக்கள் தொகையை கொண்ட பரந்த பகுதியாக விரி���்து காணப்படுகின்றன.\nஇவ்வளவு சிறப்புகளைப் பெற்ற பகுதியில் ‘தாலுகா அலுவலகம்’ இல்லாதது பெறும் குறையாக இருக்கின்றது. அதிரையில் வசிக்கும் ஒருவர் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திலிருந்து தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு ஆட்டோ அல்லது இரண்டு பஸ்கள் மாறி சுமார் 20 கி.மீ., தூரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதிரைக்கே இந்த கதி என்றால் அதிரையின் பகுதியை சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிக்கக் கூடியவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் \n ], வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகள் பெறவும், பட்டா மாறுதல், ரேஷன் கார்டு தொடர்பான குறைகளுக்கும், நலத்திட்ட உதவிகள் பெறவும், நிலத்தை அளவீடு செய்வதற்கும் நீண்ட தூரத்தில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதோடு மட்டுமல்லாமல் அங்கே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது.\nதாலுகா அலுவலக வாசலில் டோக்கன் பெறுவதற்காக காத்திருந்து வரிசையில் நிற்க வேண்டும். அந்த டோக்கனில் குறிப்பிடப்படும் நாட்களில்தான் அங்கே நாம் செல்ல வேண்டும். அதன்படி செல்கின்ற அன்றைய தினமும் நாள் முழுக்க காத்திருந்த பிறகே சான்று பெற முடியும்.\nநீண்ட தூரத்தை கருத்தில் கொண்டு வேலை செல்லும் பொதுமக்களும், வயோதியர்களும், கல்லூரி, பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் சான்று பெறுவதற்காக தாங்கள் பணி புரிகின்ற நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டே தாலுகா அலுவலகத்துக்குச் செல்கின்றனர். இந்த பணிக்காக சிலர் இடைத்தரகர்களிடம் தங்களின் பணத்தை இழப்பதும் அவ்வப்போது உண்டு.\nஇப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, அதிரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும். இதற்காக அதிரையில் கடந்த 1981 ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேலத்தெருவில் புதிதாக கட்டப்பட்டிருந்த நீர் தேக்க தொட்டியிணை திறந்து வைப்பதற்காக காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிரை மாநகருக்கு வருகை புரிந்தார். அப்போது எம்ஜிஆர் அவர்கள் தனது சொற்பொழிவின் இடையே, விரைவில் அதிரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகாவாக மாற்றப்படும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மாபெரும் கூட்டத்தில் பகிரங்கமாகவே அறிவித்தார். அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களும் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாலுகா அலுவலகம் விரைவில் நம் பகுதியில் வர இருக்கின்றதை எண்ணி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் நீண்ட கரஒலியை எழுப்பி அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.\nஅறிவிப்பு செய்து 32 ஆண்டுகள் கடந்துவிட்டன...\nஎன உருவாகி இருந்தாலும் அதிரை அதிரையாகவே இருக்கின்றன அதன் வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியே [ மெய்யாலுமே பஸ்டாண்டு இல்லிங்க :) ] காணப்படுகின்றன.\nஎம்.ஜி.ஆர் அவர்களின் 'தாலுகா கனவு' அதிரையில் நனவாகுமா \nமேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மஸ்தான் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் K.S.M. அப்துல் வஹாப், மர்ஹூம் K.S.M. சேக்தாவூது, K.S.M. பகுருதீன், K.S.M. புஹாரி ஆகியோரின் மருமகனும், S.M. ரபி முஹம்மது, S.M. முத்து மரைக்கான், S.M. ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், இப்ராஹிம்சா, ஜாபர் அலி ஆகியோரின் மைத்துனரும், ஜெஹபர் சாதிக் அவர்களின் தகப்பனாருமாகிய நாகூர் பிச்சை என்கிற அஹமது அனஸ் அவர்கள் நள்ளிரவில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று [ 27-08-2013 ] காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஅதிரை ஈசிஆர் சாலையிலுள்ள மதுபானக்கடைகளை அகற்றக்கோரி TMJK கட்சியினர் ஆர்ப்பாட்டம் \nதமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று [ 26-08-2013 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.\nஈசிஆர் சாலையோரத்தில் உள்ள மதுபானக் கடைகளை அப்புறப்படுத்தக்கோரியும், அதிரைப்பகுதியில் அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளை தடுக்கும் நோக்கில் சாலைகளின் பிராதானப் பகுதியில் வேகத்தடை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் AJ. ஜியாவுதீன், தலைமை கழக செயலாளர் A.K.N ஷாஜஹான், மாநில பொருளாளர் N.S.M. நஜ்முதீன் ஆகியரோடு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிரை அன்வர் மற்றும் அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம் ஆகியோர் மதுவின் தீமை குறித்து சிற்றுரை நிகழ்த்தினார்கள்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.\nஅதிரையில் இருவேறு இடங்களில் நடைபெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயம் \nஅதிரை கடற்கரைத் தெருவை சார்ந்தவர் ஜஹாங்கீர் வயது [ 36 ]. சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் இவர் தனது விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இன்று காலை ஈசிஆர் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் முத்துப்பேட்டைக்கு செல்லும் போது பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்தார்.\nஅவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்ததை அடுத்து பலத்த காயமடைந்த ஜஹாங்கீரை சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். வாகனத்தை ஒட்டிச்சென்றவரும் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டது.\nஅதேபோல் இன்று காலையில் மற்றொரு விபத்து அதிரை ஈசிஆர் சாலையில் முத்தம்மாள் தெரு ஆர்ச் அருகில் நடந்தன. அச்சாலையில் எதிர் எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கடற்கரைத்தெருவை சார்ந்த ஹுசைன் அவர்களின் மகன் வயது [ 17 ] பலத்த காயங்களுடன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு வாகனத்தில் வந்த ஏரிபுறக்கரையைச் சேர்ந்த சதிஸ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதகவலறிந்த அதிரை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.\nதஞ்சைலிருந்து செல்லக்கூடிய இரயில்களின் கால அட்டவணை \nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/34054", "date_download": "2018-07-19T11:20:21Z", "digest": "sha1:VLCG54CEIEJVXAKN6WQJAF5MG44OUH2D", "length": 6420, "nlines": 125, "source_domain": "www.arusuvai.com", "title": " pls help me - 34054 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › பேறு காலம் - குழந்தை வளர்ப்பு › குழந்தை வரம் வேண்ட���வோர்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nபெங்களூரில் குழந்தை பாக்யம் பெற நல்ல மருத்துவமனை சொல்லுங்கள்\nபெங்களூரில் குழந்தை பாக்யம் பெற நல்ல மருத்துவமனை சொல்லுங்கள்,எங்களுக்கு திருமணம் ஆகி 9 வருடம் ஆகுது,இன்னும் குழந்தை இல்லை.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஎனக்குப் பதில் தெரியாது. சில இழைகளைக் கண்டுபிடித்தேன். உதவுகிறதா என்று பாருங்கள்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமிக்க நன்றி ,நான் அந்த இழைகளை பார்த்து முயற்சி செய்கிறேன்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\nகுழந்தையின்மை & மாதவிடாய் பிரச்சினை\nகுழந்தை பிறந்த பின் முலம்\n38 நிமிடங்கள் 36 sec முன்பு\nஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 16 sec முன்பு\n3 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.battinews.com/2017/11/arrest.html", "date_download": "2018-07-19T11:39:05Z", "digest": "sha1:65BR6VMZBJNW6BMMHUQ5Z4XWZIMVWYEQ", "length": 14996, "nlines": 56, "source_domain": "www.battinews.com", "title": "மட்டக்களப்பில் உயர்தர மாணவர்கள் ஏழு பேரும் ஒரு பெண்ணும் கைது ! ஆண் உறைகள், கஞ்சா மீட்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (354) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (30) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (24) ஏறாவூர் (443) ஓட்டமாவடி (60) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (223) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (284) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (267) கிரான் (155) கிரான்குளம் (52) குருக்கள்மடம் (40) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (284) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (34) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (272) செங்கலடி (2) செட்டிபாளையம் (40) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவ���்தை (4) தம்பிலுவில் (119) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (57) தாழங்குடா (51) திராய்மடு (15) திருக்கோவில் (322) திருப்பெருந்துறை (16) துறைநீலாவணை (112) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (80) பட்டிருப்பு (97) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (52) புளியந்தீவு (28) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (138) பெரியநீலாவணை (4) பேத்தாளை (16) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (115) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (20) மாங்காடு (15) மாமாங்கம் (16) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (138) வவுணதீவு (389) வாகரை (250) வாகனேரி (12) வாழைச்சேனை (429) வெருகல் (34) வெல்லாவெளி (147)\nமட்டக்களப்பில் உயர்தர மாணவர்கள் ஏழு பேரும் ஒரு பெண்ணும் கைது ஆண் உறைகள், கஞ்சா மீட்பு\nமட்டக்களப்பு, தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸாருக்கு இன்று (திங்கட்கிழமை) முற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nதாண்டவெளி,பாரதீ வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டதுடன் அங்கிருந்து பெண் ஒருவரையும் ஏழு இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வருபவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா, சிகரட்டுகள் போன்ற போதைப்பொருட்களையும் பாவித்து வந்துள்ளனர்.\nமேலும் இச் சுற்றிவளைப்பின்போது ஆண் உறைகள், கஞ்சா உட்பட பல பொருட்களையும் மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தனது மகனை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், மாணவன் ஒருவன் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nகைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பில் உயர்தர மாணவர்கள் ஏழு பேரும் ஒரு பெண்ணும் கைது \nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமகளின் தகாத செயற்பாடு; கோபத்தில் வீட்டை கொளுத்திய தந்தை \n31 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களுக்குத் தடை\nமனைவி, குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கைத் தமிழர்\nமட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம் \nவித்தியாசமான முறையில் ஆடை அணிந்துசென்ற பெண்ணிற்கு நேர்ந்த கதி\n வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் எச்சரிக்கை \nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_72.html", "date_download": "2018-07-19T11:51:06Z", "digest": "sha1:HSAHG4SDOAME2M2CW4WRPAM4INKSQ24P", "length": 3324, "nlines": 47, "source_domain": "www.easttimes.net", "title": "எகிப்தில் குண்டு வெடிப்பு; அலெக்சாண்டிரியா மக்கள் அச்சத்தில் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / எகிப்தில் குண்டு வெடிப்பு; அலெக்சாண்டிரியா மக்கள் அச்சத்தில்\nஎகிப்தில் குண்டு வெடிப்பு; அலெக்சாண்டிரியா மக்கள் அச்சத்தில்\nஎகிப்தில் அலெக்ஸான்டிரியா நகர பொலிஸ் உயரதிகாரியை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஎகிப்து நாட்டின் அலெக்ஸான்டிரியா நகர பாதுகாப்புத்துறை உயரதிகாரியாகவும், பொலிஸ் மேஜர் ஜெனரலுமான மொஸ்தபா அல்-நேம்ர் இன்று தனது பாதுக்காப்பு அதிகாரிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது வீதியோரம் நின்றிருந்த ஒரு காரில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் பொலிஸ் உயரதிகாரியும் கார் சாரதியும் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.\nமேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர் என எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஇன்னும் இரு நாட்களில் எகிப்தில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றைய குண்டுவெடிப்பு சம்பவத்தால் அலெக்ஸான்டிரியா நகர மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\nஎகிப்தி��் குண்டு வெடிப்பு; அலெக்சாண்டிரியா மக்கள் அச்சத்தில் Reviewed by East Times | Srilanka on 7:08:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/12/tamilwin-latest-news-plus-9-more_11.html", "date_download": "2018-07-19T11:28:33Z", "digest": "sha1:DG4PSFBXLNSLWDQTELZ2B3KWOCUFI66T", "length": 16706, "nlines": 166, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamilwin Latest News: “இலங்கையை கண்டித்து ...” plus 9 more", "raw_content": "\nபேருந்து விபத்தில் ஒருவர் பலி\nமக்கள் கவிஞன் மஹாகவி ...\n208 கிலோ கிராம் எடையில் பிடிபட்ட கடல் ...\nபுதிதாக தலைதூக்கத் தொடங்கியுள்ள ...\nசிவனொளிபாத மலை பயணத்துக்கான பாதை ...\nட்ரம்ப்பிற்கு கிடைத்த பரிசு ...\nஅதிகரித்து வரும் யானைகளின் ...\nஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பாடல் அமைச்சினால்.\nபேருந்து விபத்தில் ஒருவர் பலி\nஅவிசாவலையிலிருந்து கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்து பேருந்து ஒன்று இன்று(11) விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்சாரதியின் கவனயீனமும் ,பேருந்து வேகக் கட்டுப்பாட்டை மீறியமையே விபத்துக்கான காரணம் என.\nமக்கள் கவிஞன் மஹாகவி ...\nயாழ்.இந்தியத் துணைத் தூதரகம் அகில இலங்கை அமுதசுரபிக் கலாமன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த மக்கள் கவிஞன் மஹாகவி பாரதியார் பிறந்த தின விழா இன்று (11) யாழ். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெற்றது.விழாவின் தொடக்கமாக.\n208 கிலோ கிராம் எடையில் பிடிபட்ட கடல் ...\nசீனாவில் ஆமைகளின் இறைச்சியை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளதுகுறித்த செய்தியினை அந்நாட்டு ஊடகம் ஒன்று அறியப்படுததியுள்ளது.சீனாவின் தேசிய பாதுகாப்பு விலங்கு என்ற பட்டியலிடப்பட்டுள்ளவைகளில் ஒன்றாக கடல் ஆமை.\nபுதிதாக தலைதூக்கத் தொடங்கியுள்ள ...\nகிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியிலுள்ள எட்டாம் ஒழுங்கையில் குழுவினர் சிலர் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மதுபோதையில் காணப்பட்ட சிலர் ஒன்றினைந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது.\nகடுவளை - ஹேவாகம பிரதேசத்தில் நீர்க்குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் குறித்த வீதியின் ஒருபகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக லபுகம தொடக்கம��� கொழும்பு வரை நீர் விநியோகிக்கும் குறித்த குழாய்.\nசிவனொளிபாத மலை பயணத்துக்கான பாதை ...\nசிவனொளிபாத மலை பருவகால யாத்திரை எதிர்வரும் 13.12.2016 அன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் பாதை புணரமைப்பு பணியினை பொதுமக்கள் ஒன்றினைந்து முன்னெடுத்துள்ளனர்.குறிப்பாக ஹட்டன் , மஸ்கெலிய பிரதான வீதியிலும் , மஸ்கெலிய நல்லத்தன்னி.\nட்ரம்ப்பிற்கு கிடைத்த பரிசு ...\nஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், சிரியாவுக்கு எதிராக செயற்படுகின்ற முறையின் காரணமாக மூன்றாவது உலக பேர் ஏற்பட கூடும் என, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு.\nஅதிகரித்து வரும் யானைகளின் ...\nபொலனறுவையில் இறந்த நிலையில் காணப்பட்ட யானையொன்று பொலிஸாரினால் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.யானை இறந்ததற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனினும் குறித்த யானைக்கு 25 வயது இருக்கலாம் என.\nஇலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால் அதிகளவான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 16 வீதத்தினால்.\n'சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://static.videozupload.net/page/9", "date_download": "2018-07-19T11:54:31Z", "digest": "sha1:2G3THA5XJPNNMF6HW2S5ECPAAMD357UY", "length": 3182, "nlines": 71, "source_domain": "static.videozupload.net", "title": "VideozUpload", "raw_content": "\nஓவியாவை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற துடிப்பது ஏன் || Tamil Cinema News\nசசிகலாவை கண்ட இடத்தில் சுட்டுத்தள்ளுங்கள் சிறையில் அதிரடி latest tamil political news\nகமல்ஹாசன் செய்வது நல்ல மனிதனுக்கு அழகில்லை – ஜே.கே.ரித்தீஷ் || Tamil Cinema News\nமார்க்கெட்டை தக்கவைக்க நடிகைகள் செய்யு��் வேலையை பாருங்கள் | Tamil Cinema News | Tamil Rockers\nபாகுபலியால் பலியான தொழிலதிபர் — மும்பையில் அதிர்ச்சி || Tamil Cinema News\nஅடங்காமல் திரியும் நடிகை ஸ்ருதி கமலுக்கு வந்து வாச்சிருக்கு\n‘காலா’ படத்தின் அதிகாரப்பூர்வ பட்ஜெட் வெளியாகியுள்ளது || Tamil Cinema News\nபிக் பாஸ் பரிசு இத்தனை கோடியா அதான் இப்படி அடிச்சிகிட்டு சாகுதுங்க அதான் இப்படி அடிச்சிகிட்டு சாகுதுங்க\nஅஜித்திற்கு கோவில் கட்டும் ரசிகர்கள் || Tamil Cinema News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.blogarama.com/internet-blogs/1290046-goldtamil-blog/23200228-enatu-varalaril-mukkiya-itattai-pititta-patam-vikram-veta-vijay-cetupati-nekilcci", "date_download": "2018-07-19T12:07:31Z", "digest": "sha1:QXCTHHGCC3BWUG7OF554AIR2TRW3BCLD", "length": 5633, "nlines": 68, "source_domain": "www.blogarama.com", "title": "எனது வரலாறில் முக்கிய இடத்தை பிடித்த படம் `விக்ரம் வேதா' - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி", "raw_content": "\nஎனது வரலாறில் முக்கிய இடத்தை பிடித்த படம் `விக்ரம் வேதா' - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி\nபுஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் `விக்ரம் வேதா' படம் எனது வரலாறில் முக்கிய இடத்தில் இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறினார்.\nபுஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது.\nவிஜய் சேதுபதி - மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.\nஇதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் - காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா' படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.\nஇதில் விஜய் சேதுபதி பேசும் போது,\nஎனக்கு தெரிந்தவரை, தர்மதுரை படத்திற்கு பிறகு, எனது நடிப்பில் 100 நாட்களை கடந்து ஓடும் படமாக `விக்ரம் வேதா' அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும், பல்வேறு விதத்தில் பாராட்டிய படம் தான் `விக்ரம் வேதா'. ஆனால் இந்த படத்தால் சுயநலமாக நான் அடைந்தது என்னவென்றால், மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன். என்னை வேறுவிதமாகக் காட்டி மக்களிடம் கொண்டு சேர்த்த புஷ்கர் - காயத்ரிக்கு நன்றி. அதே போல் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வரலாறு என்று ஒன்று எழுதினால் அதில் இந்த படம் முக்கிய இடத்தில் இருக்கும் என்றார்.\nஎனது வரலாறில் முக்கிய இடத்தை பிடித்த படம் `விக்ரம் வேதா' - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/37024", "date_download": "2018-07-19T11:40:13Z", "digest": "sha1:7237EZ6R2AH7PEWDOMVSBAGS3TQYY4I5", "length": 22981, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபுகோகா ஒரு கடிதம்", "raw_content": "\n« புறப்பாடு 10 – கரும்பனையும் செங்காற்றும்\nரப்பர் – கடிதம் »\nமசானபு ஃபுகோகாவின் “ஒற்றை வைக்கோல் புரட்சி” வாசித்தவுடன் இதை எழுதுகிறேன்.\nபுத்தகத்தின் ஆரம்ப பக்கங்களிலேயே தெரிந்துவிட்டது என் வாழ்வின் மிக முக்கியமான புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என. முக்கியமாக ஃபுகோகா தன் தாவரவியல் ஆராய்ச்சியாளர் பணியை உதறி விடக் காரணமாயிருந்த தருணம் கிட்டத்தட்ட ஒரு காவிய நிகழ்வு போல கண் முன்னே விரிந்தது.\nஇள வயதிற்கே உரித்தான பெருங்கனவு கொண்டு இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். பல சமயம் கூடத்திலேயே மயங்கி விழுகிறார். கிடைத்த ஓய்வு நேரங்களில் நகரில் சுற்றும்போது தற்செயலாக பெண் பிரபலங்களை சந்திக்கிறார். இயல்பாக அவர்களது சிறு சிறு அற்பத்தனங்களையும் கீழ்மைகளையும் கண்டு கடந்து செல்கிறார். திடீரென கடும் குளிர்க் காய்ச்சலால் அவதிப்பட்டு மரண விளிம்பு வரை சென்று மீள்கிறார்.\nநோயிலிருந்து மீண்டதும் அவரது வாழ்க்கை மொத்தமாய் மாறிப் போகிறது. மரணத்தின் முன் வாழ்க்கையின் மதிப்பென்ன என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.இரவு பகலாக நிம்மதியற்று அலைகிறார்.\nஇப்படியாக ஓர் நாள் இரவு முழுவதும் அலைந்து ஓர் மலைச் சரிவில் மயங்கி விழுகிறார். பொழுது புலர்கிறது உறக்கமும் விழிப்பும் அற்ற நிலையில் அவருக்கு ஏற்படும் அனுபவம் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. காலைப் பனி மெதுவாக விலக ஒரு பறவை தீனமான குரலில் ஒலியெழுப்பியபடி சிறகடித்து மேலே பறக்கிறது.அந்தக் கணத்தில் எல்லாமே தெளிவாகி விடுகிறது தன் வாழ்க்கை எதை நோக்கியென. தன் வாழ்க்கை மட்டுமல்ல மானுட வாழ்க்கை செல்ல வேண்டிய திசையும் புலப்பட்டு விடுகிறது. தன்னிச்சையாக அவர் “இந்த உலகில் எதுவுமே இல்லை��� என கூறுகிறார். எல்லாமே தெளிவடைந்து விடுகிறது.\nபின்னாளில் தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் இத்தரிசனத்தை வைத்தே முடிவெடுக்கிறார். அவரது தரிசனத்தை சுருக்கமாக இப்படிக் கூறலாம்.\n1) மனித மனம் எதையுமே அறிந்திருக்கவில்லை. வாழ்க்கையின் பொருளென்பது நம் அறிதலுக்கு அப்பாற்பட்டது. நாம் செய்ய வேண்டியது கிடைத்த வாழ்க்கையை எளிமையாக இயற்கையோடு ஒத்திசைந்து வாழ்வது தான்.\n2) ஒன்றைப் பகுத்தாராயும் போதே நாம் உண்மையிலிருந்து விலக ஆரம்பிக்கிறோம். நவீன அறிவியல் சிபாரிசு செய்யும் பகுத்தாராயும் முறையென்பது துண்டுபட்ட அறிதல் முறை. அது இயற்கையின் சமன்குலைவுக்கே வழிவகுக்கும்.\n3) நாம் குழந்தைகளுக்குரிய களிப்புடன் அணுகும் போதே இயற்கை தன்னைத் திறந்து காட்டுகிறது. அதற்கு நாம் நம் பகுத்தாராயும் நோக்கால் இயற்கையை அறிய முடியாதென்பதை உணர வேண்டும். அப்படி உணர்ந்து இயற்கையோடு இயைந்து வாழும் மனிதன் என்றேனும் ஓர் நாள் இயற்கையை அறிந்து கொள்வான்.\n4) அனைத்து வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணம் நம்முடைய சார்பு மனநிலையே. ஒன்றை இன்பம் என்று நினைப்பதாலேயே தவிர்க்கவே முடியாமல் மற்றொன்று துன்பத்தின் எல்லைக்குள் சென்று விடுகிறது. அதன் பின் வாழ்க்கை இன்ப துன்பத்தின் போராட்டக் களமாக மாறி விடுகிறது. இதை அபராமான எளிமையுடன் ஓரிடத்தில் ஃபுகோகா சொல்லிச் செல்கிறார். தனது ஆராய்ச்சியாளர் பணியின் பிரிவு உபச்சார விழாவின் போது இவ்வாறாகக் கூறுகிறார். “நமக்கு இப்பக்கத்தில் கப்பல்துறை மேடை உள்ளது. அப்பக்கத்தில் பாலந்தாங்கி எண்.4 உள்ளது. இப்பக்கம் வாழ்க்கை உள்ளது என்று நீங்கள் எண்ணினால், அப்பக்கம் இறப்பு உள்ளது. இறப்பை நீங்கள் தவிர்க்க எண்ணினால், இப்பக்கம் வாழ்க்கை உள்ளது என்பதை மறக்க வேண்டும். இறப்பும் வாழ்க்கையும் ஒன்றுதான்.” இது எனக்கு ஒரு சீனப் பழமொழியை நினைவு படுத்தியது. “One Happiness scatters a Thousand Sorrows”.\nஇத்தரிசனங்களை வாழ்க்கையின் எல்லாத் தளங்களுக்கும் விரிதெடுத்துச் செல்கிறார். இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு, வணிகக் கலாச்சாரம், மனித நுகர்வு, என விரித்து சென்று இறுதியாக ஞானத்தின் பாதையாகவும் கூறி முடிக்கிறார்.\nஇதில் எனக்கு ஒரு முக்கியமான சிக்கல் ஒன்றுள்ளது. ஒரு கோணத்தில் அவர் மனித சிந்தனையை முற்றாக நிராகரிப்பதாகவே படுக���றது. சிந்திப்பதால் நாம் உண்மையை நெருங்கவே முடியாது . ஏனென்றால் உண்மை சிந்தனைக்கு அப்பாற்பட்டது, மானுடனால் அறிய முடியாதது. மனிதன் செய்ய வேண்டியது அந்ததந்தக் கணத்தில் எளிமையாக இயற்கையோடு இயைந்து வாழ்வது மட்டுமே என்கிறார். 100 சதவீத மக்களும் வேளாண்மையில் ஈடுபடுவதுதான் சரியானது எனகிறார்.\nஆனால் அவரது இயற்கை வேளாண்மை முறையில் சறுக்கல்கள் ஏற்படும் போதெல்லாம் சிந்தனையின் வாயிலாகவே முன்னகர்கிறார். உதாரணமாக முதல்முறையாக அவர் ஆரஞ்சு மரங்கள் பயிரிடும் போது ஏற்பட்ட அழிவுகளுக்குப் பிறகு 8 வருடம் அறிவியல் வேளாண்மைக்கும் இயற்கை வேளாண்மைக்கும் இடையே உள்ள உறவைக் குறித்து ஆராய்ந்த பிறகே மீண்டும் விவசாயத்திற்கு வருகிறார்.\nஅதேபோல் புத்தகங்களைப் பற்றிய அவரது கருத்துக்கள். “தங்களுக்குப் புரியாததால் தான் மக்கள் படிக்கிறார்கள். ஆனால் அப்புரிதலைப் பெற படிப்பு அவர்களுக்கு உதவப் போவதில்லை.” எனக் கூறுகிறார். ஆனாலும் இதை அவர் இந்தப் புத்தகத்தின் வாயிலாகவே சொல்கிறார்.\nஇந்த முரண்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வதெனத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் மேற்கூறியதரிசனங்களெல்லாம் உயர் தத்துவத்தளங்களைச் சேர்ந்ததா சிந்தனையின் எல்லைகளை உனர்ந்தவர்களுக்காக கூறப்பட்டவையா சிந்தனையின் எல்லைகளை உனர்ந்தவர்களுக்காக கூறப்பட்டவையா இதை நேரடியாக “அப்படியே” பொருள் கொள்ளக் கூடாதா இதை நேரடியாக “அப்படியே” பொருள் கொள்ளக் கூடாதா தங்களின் விளக்கங்கள் தெளிவைத் தருமென நம்புகிறேன்.\nஎது எப்படியோ ஃபுகோகாவின் பல கவித்துவ வரிகள் மீண்டும் மீண்டும் சிந்தித்து விரிவுபடுத்திக் கொள்ள வேண்டியவை. உதாரணமாக மனிதனின் பேதபுத்தியைப் பற்றிய கீழ்க்கண்ட வரிகள்:\n” மக்கள் பூமியில் இருந்து கண்களை வானத்திற்கு திருப்பி விண்மீன்கள் தெரிகிறது என்று நினைக்கின்றனர். பசுமையான இலைகளில் இருந்து ஆரஞ்சுபழத்தை பிரித்து வைத்துவிட்டு, தங்களுக்கு இலைகளின் பச்சை வண்ணமும், பழத்தின் ஆரஞ்சு வண்ணமும் தெரியுமென சொல்கின்றனர். ஆனால் ஆரஞ்சையும் பச்சையையும் வேறுபடுத்திப்பார்க்க ஒருவர் தொடங்கியதும், உண்மையான வண்ணங்கள் மறைந்துவிடுகின்றன.”\nஒரு மகத்தான புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஜெ\nஃபுகோகாவின் சிந்தனை என்று நீங்கள் எடுத்துக���கொள்வதை சரியாக வரையறுத்துக்கொள்ளாததே சிக்கல் என நினைக்கிறேன்.\n பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவாகி வந்த எந்திரவியல் சார்ந்த அணுகுமுறையையும், அதன் விளைவான நிரூபணவாத அறிவியலையும்தான். இப்பிரபஞ்சத்தை ஒரு பெரும் இயந்திரமாக உருவகித்து அதை பற்பல பகுதிகளாகப்பிரித்து ஆராய்ந்து முடிவுகளுக்கு வருவது, அதனடிப்படையில் தீர்வுகளை உருவாக்குவதும் அவரால் நிராகரிக்கப்படுகின்றன. இயற்கையையும் பிரபஞ்சத்தையும் முற்றிலும் பிழையாக புரிந்துகொள்ள அது வழிவகுக்கும் என நினைக்கிறார். அவற்றை ஒட்டுமொத்தமாக ஒரு முழுமையுடன் மட்டுமே உணரமுடியும், நாம் வாழும் வாழ்க்கைக்கான தேவைக்கு ஏற்ப நம் எல்லைக்குள் உள்ளவற்றை மட்டுமே புரிந்துகொள்ளமுடியும் என்கிறார். அவர் தர்க்கசிந்தனை என்று சொல்லி நிராகரிப்பது இதைத்தான்.\nஆனால் ஒரு விவசாயியாகச் செயல்படும்போது பட்டறிவின் விளைவாகக் கிடைக்கும் நடைமுறைஞானத்தை அவர் நிராகரிப்பதில்லை. அது விவசாயியின் சொத்து என்றே நினைக்கிறார். அந்த ஞானம் அழிந்துவிடலாகாது என்றும் சொல்கிறார். அவர் விவசாயப் பிரச்சினைகளைப்பற்றிச் சிந்திப்பது அந்த தளத்தில்தான். ஆப்பிள்மரங்களைப்பற்றியும் நெல்வயலில் கோழிகள் மேயவேண்டியதைப்பற்றியும் அவர் புரிந்துகொள்வது இவ்வாறாகத்தான்.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 6\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 15\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2013/11/", "date_download": "2018-07-19T11:25:34Z", "digest": "sha1:QT7EZRXUNL7OYAZ7JPOFS57LD3PIC42C", "length": 155706, "nlines": 356, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: November 2013", "raw_content": "\nசென்னையின் ஆதிவாசிகள் யாரென்ற சர்ச்சைக்கு விடை காண முடியாத விவாதங்கள் கடந்த அரைநூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. நகரமாக நாகரிகமடைந்த சென்னை ‘தலித்’ மக்களின் உழைப்பாலும், உணர்வாலும் உருப்பெற்ற நகரம் என்கிற கோணத்தை, தகுந்த ஆதாரங்களோடு ஜெயமோகனின் ‘வெள்ளை யானை’ வெளிப்படுத்துகிறது.\nநாவலை இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. சோம்பலின் காரணமாக தினம் இருபது, இருபத்தைந்து பக்கங்கள் என பாதியைதான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன். வரும் சனிக்கிழமை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. அதற்குள்ளாக முழுமையாக வாசித்துவிடவேண்டும் என்று ஆசை. அடுத்த இருநாட்களில் ‘சோம்பேறித்தனம்’ தற்காலிகமாகவாவது விலகவேண்டும். வாசித்தவரையில் இது ஜெயமோகனின் முக்கியமான படைப்பு பங்களிப்பாகதான் தோன்றுகிறது.\nஇந்நூல் திராவிட இயக்கத்தின் தோற்றம், இருப்பை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கக்கூடும் என்று நாவல் வெளிவருவதற்கு முன்பாக நண்பர் ஒருவர் கணிப்பாக சொன்னார். இதுவரை எனக்கு அப்படி தோன்றவில்லை. ஒருவேளை இறுதி அத்தியாயம் நெருங்கும்போது ஏதாவது ‘உள்குத்து’ வைத்திருப்பாரோ என்னமோ\nதிராவிட இயக்கம் பார்ப்பனரல்லாதவர்களுக்கான இயக்கம் என்றாலும், சாதிய படிநிலையில் பழகிவிட்ட சமூகமரபின் காரணமாக, அந்த ‘பார்ப்பனரல்லாதவர்களில்’ தலித்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். பா���்ப்பனரல்லாத முற்பட்ட சாதியினர், சுதந்திரம் பெற்ற சில வருடங்களிலேயே தன்னிறைவை அடைந்துவிட்ட நிலையில் அறுபதுகளில் தொடங்கி தங்கள் உரிமைகளுக்காக போராடும் பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கம் திராவிட இயக்கத்தில் தொடர்ந்து வருகிறது. எனவே இன்றைய நிலையில் திராவிட இயக்கத்தை பிற்படுத்தப்பட்டோரின் இயக்கம் என்றுகூட குறிப்பிடலாம் அல்லது விமர்சிக்கலாம். தர்மபுரி, மரக்காணம் நிகழ்வுகளுக்கு திராவிட இயக்கங்கள் காட்டிய எதிர்வினைகளின் தீவிரத்தை ஒப்பிட்டுப் பார்த்து இம்முடிவுக்கு யாருமே சுலபமாக வரலாம்.\nசாதியை சகட்டுமேனிக்கு கேள்விக்குள்ளாக்கும் இன்றைய உலகமயமாக்கல் சூழலிலும் கூட தலித்களுக்கான இடம் முற்போக்கு இயக்கங்களான திராவிட இயக்கங்களில் கூட சிறுபான்மையாகதான் (பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளில்தான்) கிடைக்கிறது.\nஇந்த நடைமுறை பின்னணியோடு ‘வெள்ளை யானை’யை வாசிப்பதே சரியாக இருக்கும். இந்நாவல் சென்னையை உருவாக்கிய ‘தலித்’களின் பங்களிப்பையும், அந்தப் பங்களிப்புக்கு உரிய பலன் அச்சமூகத்துக்கு கிடைக்காத அவலத்தையும் சுட்டுவதாகவே புரிந்துக்கொள்கிறேன். இதை சொல்லும்போது, இது திராவிட இயக்கத்தை எதிர்ப்பதான தோற்றத்தை தருமே தவிர, உண்மையான நோக்கம் அதுவாக இருக்காது என்று நம்புகிறேன்.\nமுந்தைய ஜெயமோகன் படைப்புகளோடு ஒப்பிடுகையில் ‘இலக்கியத்தன்மை’, ‘படைப்பூக்கம்’ மாதிரியான உன்னதங்கள் இதில் குறைவாக இருப்பதாக தீவிர இலக்கிய வாசகர்கள் கருதக்கூடும். என்னைப்பொறுத்தவரை இதில் அம்மாதிரி கற்பிதங்களை காட்டிலும், அவருடைய எழுத்து நாலுகால் பாய்ச்சலில் செயல்வேகத்தோடு கூடியிருப்பதாக கருதுகிறேன். வர்ணனைகளும், உருவகங்களும், குறியீடுகளும் மட்டுமே இலக்கியம் ஆகிவிடாது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.\nஒரு நிகழ்வில் இந்த நாவலை குறிப்பிட்டு, இது ஒரு நாவலாக இல்லாமல் ‘திட்டமாக’ உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கவிஞர் சங்கரராமசுப்பிரமணியன் குறிப்பிட்டார். அது பாராட்டா அல்லது எதிர்விமர்சனமா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் திட்டமிடாமல் ஒரு சிறு ஹைக்கூவை கூட எழுதமுடியாது என்பதுதான் என் புரிதல்.\nவெள்ளை யானைக்கு ஆவணத்தன்மை சற்று கூடுதலாகவே இருக்கிறது. ஆவணங்கள் இலக்கியமாகுமா என்று விவாதித்த�� இனி நம் நேரத்தை போக்கிக் கொள்ளலாம் :-)\nநல்ல ஐடியா. எல்லோருக்குமே குறைந்தது இரண்டு உலகங்கள் இருக்கிறது. இரண்டாம் உலகம் என்பது கனவாக இருக்கக்கூடும். அல்லது மனப்பிறழ் காரணமாக தாமே உருவாக்கிக்கொள்ளக் கூடிய இன்னொரு உலகாகவும் இருக்கலாம். சுலபமாக மற்றவர்களுக்கு வார்த்தையால் கூட சொல்லி புரியவைக்க முடியாத இரண்டாம் உலகத்தை திரையில் காட்சிகளாக்கி காட்டுவது என்கிற சவாலை செல்வராகவன் முயற்சித்திருக்கிறார்.\nகனவுலகம் எல்லாருக்குமே பாதுகாப்பான உலகம். அந்த உலகின் இயக்கத்தை கனவு காண்பவன் தன் கையில் இருக்கும் ரிமோட்டால் கட்டுப்படுத்தலாம். நாம் நினைத்த பெண்ணை காதலிக்கலாம். நமக்கு பிடிக்காதவனை ரஜினி ஸ்டைலில் பறந்து பறந்து அடிக்கலாம். ஆடி காரில் உலா வரலாம். தம் அடிக்கலாம். பீர் குடிக்கலாம். அயல்நாட்டு அழகிகளோடு ஜல்சா செய்யலாம். கனவு காண பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா. கனவுகள் அந்தரங்கமானவை. கனவு முடிந்து விழித்தபிறகு பெரும்பாலும் அவை நினைவில் நிற்பதில்லை. தான் கண்ட கனவு என்று யாராவது விடும் கதை அனேகமாக புனைவாகதான் இருக்கும். முக்கியமாக கனவுக்கு வண்ணமில்லை. கருப்பு வெள்ளையில்தான் கனவு இருக்குமென்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனக்கெல்லாம் கனவு வந்தே கால் நூற்றாண்டு இருக்குமென்பதால், அது கருப்புவெள்ளையா, வண்ணமா, சினிமாஸ்கோப்பா என்பதெல்லாம் நினைவிலேயே இல்லை. மேலும், கனவில் ‘ஒலி’ உண்டா என்கிற குழப்பமும் இருக்கிறது. இப்படியிருக்கையில் அப்துல்கலாம் போன்றவர்கள் கனவுகாண சொல்லும்போது, அது எப்படி இந்திய இளைஞர்களுக்கு சாத்தியமாகும் என்று அயர்ச்சிதான் ஏற்படும்.\nஇது ஒரிஜினல் கனவு. பகல் கனவு என்றொன்று உண்டு. சும்மா உட்கார்ந்து மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, பைக்கில் பயணிக்கும்போதோ, டாய்லெட்டில் இருக்கும்போதோ சுய இன்பம் மாதிரி நாமாக ‘விஷூவல்’ அமைத்து, சிந்தனையிலேயே ஓட்டும் ஃபிலிம் இன்னொரு வகை கனவு. ஆண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் இவ்வகை கனவுகள் அவர்களது பாலியல் வறட்சிகளுக்கு பசுமை பாய்ச்சக்கூடிய தன்மை கொண்ட கனவுகளாகவே இருக்கக்கூடும். இம்மாதிரி கனவிலேயே காலத்தை ஓட்டினால், பொழைப்பு நாறிவிடுமென்று பாலகுமாரன் அடிக்கடி எழுதுவார்.\nசெல்வராகவன் காட்�� விரும்பிய இரண்டாம் உலகம் கனவாகவோ அல்லது மனப்பிறழ்வாகவோ இருக்கிறது என்கிற கோணத்தில் பார்த்தேன். அப்படியும் படம் ஓக்கே ரகம் கூட இல்லை.\nஇது நிஜமாகவே ‘பண்டோரா’ மாதிரி கிரகம் என்று அவர் எடுத்திருந்தால் அதற்கான உழைப்போ, ரசிகனுக்கு பரிமாறப்பட வேண்டிய ஃபேண்டஸியான உணர்வோ திரையில் தென்படவில்லை. ‘அவதார்’ எடுப்பதற்கான டெக்னாலஜி வரும்வரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு கருவை அடைகாத்து சுமந்து, அதுவரை திரைக்கதையை செதுக்கிக் கொண்டிருந்தார் கேமரூன் என்பார்கள். செல்வராகவன் இரண்டாம் உலகத்துக்காக இன்னும் சிலவருடங்கள் பிள்ளைத்தாய்ச்சியாகவே இருந்திருக்கலாம்.\nபடம் பார்த்த கவிஞர் ராஜசுந்தரராஜன் புது ‘கான்செப்ட்’ சொன்னார். ஒரு உலகம் திராவிட உலகம். மற்றொன்று ஆரிய உலகம். அனுஷ்காவுக்கு அதனால்தான் ‘வர்ணா’ என்று பெயர் என்றார். அவரது இந்த பார்வைக்காகவே இன்னொரு முறை ஆரிய-திராவிட அரசியல் படமாக இதை அணுகிப் பார்த்தால் வேலைக்காகுமா என்று பார்க்கவேண்டும்.\nஅனுஷ்கா ஆண்ட்டி ஆகிவிட்டார். தொப்பை குலுங்க அவர் ஓடியாடி சண்டை போடுவதை காண அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருக்கிறது. ஒருவேளை அதனாலேயே கூட படம் பிடிக்கவில்லையோ என்னவோ\nஇந்தியப் பத்திரிகையுலகில் பணிபுரியும் இளம் பத்திரிகையாளர்களின் Idol Journalistகளில் ஒருவரான தருண் தேஜ்பாலுக்கு என்ன நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். செய்தியை வாசித்தவுடனேயே ஆத்திரம்தான் வந்தது. ஆத்திரம் அறிவிழக்கச் செய்யும். என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மிக இழிவான மொழியில் ஒரு நிலைத்தகவல் இட்டிருந்தேன். அதை வாசித்த என்னுடைய நலம் விரும்பியான, தமிழ் இதழியல் துறையில் மரியாதையாக மதிக்கப்படும் மூத்தப் பத்திரிகையாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னை கடுமையாக கண்டித்தார். தன் துறையின் இளையவர்கள் தடம் மாறிச் செல்லும்போது ஒரு ஆசான் எதை செய்யவேண்டுமோ அதைதான் அவர் செய்தார். ஏன் அவ்வளவு கேவலமான மொழியை பயன்படுத்தினேன் என்று கொஞ்சம் விரிவாக சிந்தித்துப் பார்த்தேன்.\nஒரு மனிதனையோ, இயக்கத்தையோ, லட்சியத்தையோ, கொள்கையையோ வீழ்ச்சி அடைய செய்யவேண்டுமானால் ஓர் ஆதிகாலத்து தந்திரம் இருக்கிறது. மண், பொன், பெண். நாகரிக உலகில் மண்ணைக் காட்டி மயக்குவது இன்று கடினம். அப்படி மயங்கியவர்கள் நில அபகரிப்பு வழக்குகளில் உள்ளே இருக்கிறார்கள். பொன்னுக்கு மயங்கியவர்கள் ஊழல் வழக்கில் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டைக் காட்டிலும் மூன்றாவதான ‘பெண்’தான் ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக வீழச்செய்கிறது. இதுதான் என்றுமே வெல்லக்கூடிய பிரம்மாஸ்திரமாகவும் இருக்கிறது.\nஉலகம் தோன்றியதிலிருந்தே ஆண்கள் இந்த விஷயத்தில் அயோக்கியர்கள் என்பதால் மிகச்சுலபமாக அவர்களை வீழ்த்த முடிகிறது. சபலத்துக்கு ஆட்பட்டவன் எவ்வளவுதான் திறமைசாலியாகவோ, நல்லவனாகவோ இருந்துத் தொலைத்தாலும்.. பல்லாண்டுகள் கடினப்பட்டு அவன் உருவாக்கிய உழைப்புக் கோட்டை ஒரே புகாரில் சுக்குநூறாக உடைகிறது.\nநிறைய உதாரணங்களை பட்டியலிட முடியும். கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த அற்புதமான திராவிட இயக்கம் எந்தெந்த சந்தர்ப்பங்களில் பிளவுப்பட்டது என்பதை கொஞ்சம் கூர்மையாக கவனித்தால், ‘பெண்ணுடல்’ அரசியல் ஆயுதமாகவும் பயன்பட்டதை உணர்ந்துகொள்ளலாம். உலகளவில் பார்த்தோமானால் சமகால உதாரணங்களாக ஆனானப்பட்ட கிளிண்டனும், ஜூலியன் அசாஞ்சேவுமே கூட இந்த தாக்குதலுக்கு தப்பவில்லை.\nகுறிப்பாக அரசியல், சினிமா, ஊடகம் மூன்று துறைகளிலும் ஒருவரை முற்றிலுமாக அழித்தொழிக்க பெண் புகார் குற்றச்சாட்டு போதுமானது. நம்மூரில் கூட சமீபத்தில் இரு ஊடக குழுமங்களுக்கு இடையே நடந்த பனிப்போரில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்பது நமக்கே தெரியும்தானே.. இணையத்திலும்கூட சில இலக்கியவாதிகள் இதனால்தானே ‘டவுசர்’ கழட்டப்பட்டார்கள் தன் நிழலைக்கூட நம்பாதவர்கள் மட்டுமே தங்கள் இமேஜை நல்லபடியாக வரலாற்றில் பதியவைக்க முடியும்.\nஉறுதிப்படுத்தப்பட்ட சில அரண்மனை ரகசியங்களை இதுமாதிரி பொதுவிடங்களில் பகிர்ந்துக்கொள்ள முடியாது. ஆனால் உறுதியாக சொல்ல முடியும். உறுதியானவர்களை உடையவைக்க காலம் காலமாக ‘காமம்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயக்குனர் மதுர்பண்டார்க்கரின் திரைப்படங்கள் சில இப்பிரச்சினையை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது.\nதருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டு வருவதற்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக, ஓர் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசினார். பவா செல்லத்துரையின் பதினைந்து வயது மகனுக்கு சொல்வதைப்போல, எல்லாருக்குமாக ‘அட்வைஸ்’ செய்தார். குறிப்பாக இலக்கியம், சினிமா உள்ளிட்ட கலைத்துறைகளில் பிரபலம் அடைபவர்களுக்காக அவருடைய பேச்சு அமைந்தது. “வளர்ந்து வருபவர்கள் ‘பெண்’ விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையாக இருங்கள். மொத்த உழைப்பும் வீணாகிவிடும். இது என் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்த உண்மை” என்றார். பாலுமகேந்திரா சொன்னதுமே நிறைய பேர் சிரித்தார்கள். அவரும் புன்முறுவலோடு சொன்னாலும், அதற்குப் பின்னான அவரது நிரந்தர வேதனையை உணர்ந்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் அவருக்கு சமூகத்தில் இருக்கும் இமேஜ் அதுமாதிரியானது. ஏதாவது பழைய பாலுமகேந்திரா படங்களின் பாடல்களை டிவியில் போடும்போது, அவரை சிலாகித்துப் பேசுவேன். அம்மாவுக்கு கோபம் வரும். “அந்தாளு ஒரு அயோக்கியன்” என்பார்கள். அம்மாவை சொல்லியும் குற்றமில்லை. ஷோபா தலைமுறை ஆட்கள் இப்படித்தான் பேசுவார்கள்.\nதனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது மூத்தப் பத்திரிகையாளர்களும் பாலுமகேந்திரா சொன்ன அட்வைஸைதான் எனக்கும் சொல்வார்கள். “இந்த துறையிலே ரொம்ப ஈஸியா கிடைக்கும் தம்பி. இந்த வேலையோட தன்மை அப்படி. சோத்து மூட்டைக்குள்ளே பெருச்சாளி பாய்ஞ்சா மாதிரி பாய்ஞ்சிடாதே. லைஃபே ஸ்பாயில் ஆயிடும்” என்பார்கள். சொன்னவர்கள் பெரும்பாலும் அவர்கள் லைஃபை ஏதோ ஒரு கட்டத்தில் ‘ஸ்பாயில்’ செய்துக்கொண்டவர்கள்தான். அனுபவம்தான் பெரிய ஆசான். தற்காலிக மகிழ்ச்சியையும், அதன் பிறகான முடிவேயில்லாத துயரத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் சொன்னால் சரியாகதானிருக்கும். கொஞ்சம் அதீதமாக இருந்தாலும், ‘ஆணாகப் பிறப்பதே பாவம்’ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இம்மாதிரி குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பொதுவில் அவமானப்படுகிறார்கள் என்பதோடு பிரச்சினை முடிந்துவிடுவதில்லையே. காலத்துக்கும் குடும்பத்தில் இருப்பவர்களின் முகத்தில் எப்படி விழிப்பார்கள்\nதருண் மீது புகார் கொடுத்த பெண், தருணின் மகளுக்கு தோழர் என்கிறார்கள். எப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் :-(\nதருண் தேஜ்பாலின் தற்போதைய வீழ்ச்சி, கிளிண்டனுக்கு விரிக்கப்பட்ட ‘கண்ணி’ மாதிரி இருக்கக்கூடுமோ என்று எனக்கு உறுதியான சந்தேகம் இருக்கிறது. இதற்காக பு��ார் கொடுத்த பெண்ணை நான் கொச்சைப்படுத்துவதாக அர்த்தமில்லை. புகார் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படியொரு ‘நிகழ்தகவு’க்கும் வாய்ப்பிருப்பதை நாம் பரிசீலித்தாக வேண்டும். இன்னும் ஆறு மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ‘Sting operation’க்கு பேர்போன தெஹல்காவும், அதனுடைய ஆசிரியரும் என்னென்ன பூதங்களை, விளக்கைத் தேய்த்து வெளிவரச் செய்வார்களோ என்கிற அச்சம் ஏராளமானோருக்கு இருக்கக்கூடும். இந்த குற்றச்சாட்டு தெஹல்காவை முடக்கச் செய்யும் முயற்சியாக கூட இருக்கலாம். முறையாக புகார் தெரிவிக்கப்படாத நிலையில் அவசரம் அவசரமாக கோவா முதல்வர் இப்பிரச்சினையில் காட்டும் கூடுதல் ஆர்வத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. எனவேதான் தெஹல்காவை காக்க தன்னை தற்காலிகமாக தியாகம் செய்துக் கொண்டிருக்கிறார் தருண் தேஜ்பால்.\nமீண்டும் பாலுமகேந்திராவுக்கே வருகிறேன். பல நிகழ்ச்சிகளில் அவர் ஒரு படத்தின் காட்சியை விவரித்துச் சொல்வார். ஒரு கலைஞன் தன் எதிரியிடம் சொல்வானாம். “என்னை என்ன வேண்டுமானாலும் அவதூறாக திட்டிக்கொள். அதில் உண்மை இருக்கலாம். ஆனால் என் உழைப்பை மட்டும் பழிக்காதே. நான் அதற்கு விசுவாசமாக இருக்கிறேன்”\nதருண் தேஜ்பால் மீது எனக்கு இன்னமும் மரியாதை இருக்கிறது.\nஅந்த காலத்தில் விகடகவி புதூர் வைத்தியநாத அய்யர் என்றொருவர் இருந்தார். ஒரே நேரத்தில் பத்து விஷயங்களை கவனித்து எதிர்வினை ஆற்றும் ஆற்றல் பெற்ற தசாவதானியாம் அவர். காமெடி வெண்பாக்கள் நிறைய இயற்றுவாராம். அவருடைய கவிதைகளை பத்திரிகைகள் சீண்டவில்லை என்றோ அல்லது வேறு ஏதாவது காரணமோ தெரியவில்லை. திடீரென்று ஒரு பத்திரிகை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தார். ஆனந்த விகடன்.\nஉலகமும், தேசமும் சீரியஸாக சிடுமூஞ்சித்தனமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ‘சிரி’யஸாக இயங்கியது விகடன். அரசு வேலையை உதறி சுயத்தொழில்தான் என்று தன்னம்பிக்கையோடு களமிறங்கியிருந்தார் இளைஞரான திருத்துறைப்பூண்டி சுப்ரமணியன் ஸ்ரீனிவாசன். மெயில் ஆர்டர் பிசினஸ் தொடங்கினார். அதாவது ‘துட்டு’ அனுப்பினால், வினோதமான பொருள் உங்கள் வீடு தேடி வரும். ஒரு ரூபாய்க்கு நூறு பொருள் மாதிரி கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் ஸ்ரீனிவாசனின் மெயில் ஆர்டர் பிசினஸ் சக்கைப்போடு போட்டது. இந்த தொழ��லை அபிவிருத்தி செய்ய பத்திரிகைகளில் விளம்பரம் தரவேண்டும். அன்றிருந்த விளம்பர ஏஜென்ஸிகள் அடித்த கொள்ளை கமிஷனைப் பார்த்து, ஏற்கனவே இருந்த பிசினஸோடு அட்வர்டைஸிங் ஏஜென்ஸியையும் சேர்த்து செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீனிவாசன்.\nஇப்படித்தான் விளம்பரத் தேவைக்காக விகடனும், புதூர் வைத்தியநாத அய்யரும் ஸ்ரீனிவாசன் என்கிற எஸ்.எஸ்.வாசனுக்கு அறிமுகமானார்கள். ஒரு நாள் விளம்பரம் தருவதற்காக அய்யரை பார்க்க வந்திருந்தார் வாசன். சிரிக்க சிரிக்க பத்திரிகை நடத்தும் அய்யர் அன்று சீரியஸாக இருந்தார். “இனிமேல் விளம்பரம் கொடுக்க வேற பத்திரிகை பார்த்துக்கோப்பா. செலவு கட்டுப்படி ஆவலை. தனியாளா ஓடியாடி நடத்துறதுக்கும் கஷ்டமாயிருக்கு. ஆனந்த விகடனை இழுத்து மூடறதா இருக்கேன்”\nவாசன் யோசித்தார். நாமே நடத்தினால் என்ன. இதுதான் வாசனின் ஸ்டைல். விளம்பரம் கொடுக்க விளம்பர ஏஜென்ஸிகள் எதற்கு. நாமே நடத்திவிட்டு போகலாமே. விளம்பரங்களை வெளியிட பத்திரிகைகளை ஏன் தொங்கவேண்டும். நாமே பத்திரிகை நடத்தலாமே. அய்யரிடம் பேரம் பேசினார். ஒரு எழுத்துக்கு இருபத்தைந்து ரூபாய் என்று கணக்கு போட்டு, ‘ஆனந்தவிகடன்’ என்கிற எட்டு எழுத்துகளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து வாங்கினார். இது எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. இன்று ஆனந்தவிகடன் ஒரே ஒரு பிரதியின் விலையே இருபது ரூபாய்.\nவாசன் கைக்கு மாறியதுமே பத்திரிகையும் மாறத்தொடங்கியது. சித்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், பத்திரிகைக்கு அஸ்திவாரமாக அய்யர் கருதிய ‘ஆனந்தம்’ மட்டும் அப்படியே இருந்தது. சிரிக்க வைக்கும் பத்திரிகை, சித்திரங்களும் அபாரம் என்று ஊர் பேசியது. வாசனுக்கு முழுமையான திருப்தி கிடைக்கவே கிடைக்காது. தன்னுடைய பத்திரிகையில் இடம்பெறும் எழுத்துகளும் சூப்பர் என்று எல்லோரும் பேசவேண்டும் என்று முயற்சித்தார். கல்கியை பிடித்தார். சிறந்த எழுத்தாளர்களுடன், சிறந்த ஓவியர்கள் என்கிற கூட்டணிதான் விகடனின் வெற்றி ஃபார்முலா. நல்ல எழுத்துகளை மிக நல்ல வடிவத்தில் வாசகர்களுக்கு வழங்கவேண்டும் என்கிற அமரர் வாசனின் தரக்கொள்கையை இன்றுவரை நூற்றாண்டை நெருங்கும் விகடன் அப்படியே கடைப்பிடித்து வருகிறது.\nஅதே நேரம் மாற்றங்களுக்கும் விகடன் அஞ்சியதே இல்லை.\nஐம்பதுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட திராவிட எழுச்சியின் போது விகடன் அடைந்த மாற்றம் முக்கியமானது. வெகுஜன வாசகர்களை கவரும் எளிய தமிழில் திராவிட எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கியிருந்தார்கள். இந்த மாற்றத்தை உணர்ந்துக்கொள்ளாத அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பாத பத்திரிகைகள் பலவும் பொலிவிழந்தன. எண்ணற்ற பத்திரிகைகள் மக்கள் செல்வாக்கினை இழந்து கடையை இழுத்து பூட்டிக்கொண்டது. அரசியல்ரீதியாக காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தாலும் திராவிட தாக்கத்தை ஏற்றுக்கொண்டு, கவுரவம் பார்க்காமல் விகடனில் இந்த புதுத்தமிழ் நடையை புத்திசாலித்தனமாக புகுத்தினார் வாசன்.\nஎழுபதுகளிலும், எண்பதுகளிலும் ரேடியோ-டிவி போட்டிகளை விகடன் தன்னுடைய புகைப்படக் கலைஞர்களின் திறமையைக் கொண்டு சமாளித்தது. ரேடியோவாலும், அந்தகால டிவியாலும் செய்யமுடியாத நேரடிகள அனுபவ சாகஸங்களை ஜூ.வி. மாதிரியான இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸ பத்திரிகையை அறிமுகப்படுத்தி செய்தது. திரைப்படங்களும் ‘கலர்’ ஆகி பத்திரிகைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் நீடித்த இந்த காலத்தில் வாசனின் புதல்வர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஒரு பத்திரிகையில் செய்யக்கூடிய எல்லா சாத்தியங்களையும் கையாண்டு வெற்றிகண்டார்.\nஇப்போது மூன்றாவது தலைமுறை. வாசனின் பேரன் பா.சீனிவாசன் பொறுப்பிலிருக்கிறார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பத்திரிகைகளுக்கு பல்முனை போட்டி. மில்லெனியமின் ஆகச்சிறந்த புரட்சியான இணையத்தை மரபான அச்சுப் பத்திரிகைகள் எப்படி எதிர்கொண்டு, தங்கள் இருத்தலியத்தை தக்கவைத்துக்கொள்ளப் போகின்றன என்கிற கேள்விக்கு விடைகாணவேண்டிய காலம். தன் பங்காக ஆனந்த விகடன் 3D அனுபவத்தை வாசகர்களுக்கு முன்வைத்திருக்கிறது.\nதொண்ணுறுகளில் ஸ்டீரியோகிராம் தொழில்நுட்ப முறையில் பின்னட்டையில் 3Dயை அறிமுகப்படுத்தியது விகடன். இப்போது ரெட், சியான் அனாக்லிப் கண்ணாடிகளை அணிந்து நேரடியாகவே விகடனில் அச்சிடப்படும் படங்களையும், ஓவியங்களையும் முப்பரிமாணத்தில் பார்க்கக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். விகடனுக்கு மட்டுமின்றி, தமிழ் இதழியலுக்கே நாலுகால் பாய்ச்சலை உருவாக்கித்தரும் முக்கியமான மாற்றம் இது. நீளம், அகலம் என்று இருபரிமாணத்தில் அடங்கியிருந்த வாசிப்புக்கு, ��ழத்தை உணரக்கூடிய கூடுதலான இன்னொரு பரிமாணத்தை சேர்த்திருக்கிறார்கள். விகடன் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இத்தொழில்நுட்பத்தை எப்படி தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதையெல்லாம் எதிர்காலம் முடிவு செய்துக்கொள்ளட்டும். ஆனால், அனைவராலும் தமிழ் பத்திரிகைத்துறையில் இது எழுந்து நின்று இருகைதட்டி பாராட்டப்பட வேண்டிய முக்கியமான புரட்சி.\nஇந்த கனவை சாத்தியமாக்க விகடன் குழுவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்திருக்க வேண்டும். குறிப்பாக ரெஜிஸ்ட்ரேஷன் பார்க்கவேண்டிய அச்சு ஊழியர்கள், இமைக்க மறந்து வேலை பார்த்திருப்பார்கள். லே-அவுட் பணியாளர்களும் ஒன்றுக்கு பத்துமடங்கு உழைப்பை செலுத்தியிருப்பார்கள். 3டி பக்கங்களுக்காக எடிட்டோரியல் குழுவினர் கற்பனையை தாறுமாறாக பறக்க செய்திருப்பார்கள். ஒட்டுமொத்தமாக விகடன் தாத்தாவுக்கு அட்டென்ஷனில் ஒரு சல்யூட்.\nஓராண்டுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து திரும்பிய நண்பர் ஒருவர் 3டியில் அச்சிடப்படும் பத்திரிகை ஒன்றை காட்டினார். என் கையில் கூட கொடுக்காமல் மிகக்கவனமாக அவரே பக்கங்களை புரட்டிக் காண்பித்தார். Word’s most beautiful என்கிற அப்பத்திரிகையை கண்ணாடி போட்டு பார்த்தபோது, முதன்முதலாக ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னபோது ஏற்பட்ட பரவசத்தை மீண்டும் அடைந்தேன். “இதெல்லாம் உங்க ஊருக்கு வர்றதுக்கு இன்னும் நாற்பது, ஐம்பது வருஷம் ஆவும்” என்றார். ஏக்கத்தோடு “ம்” கொட்டினேன். வெறும் இருபது ரூபாய் செலவில் அந்த ஏக்கத்தை இவ்வளவு சீக்கிரமாக விகடன் தாத்தா போக்குவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. 3டி விகடன் இதழ் கடைக்கு வந்த அன்று மாலை, அதே ‘ஐ லவ் யூ’ பரவசத்தை இரு மடங்காக உணர்ந்தேன். என்ன இருந்தாலும் என் தாய்மொழியில் 3டியை பார்க்கிறேன் இல்லையா. கல்வெட்டு, பட்டயம், ஓலைச்சுவடி, பேப்பர் என்று மரபான எல்லா அச்சு ஊடகவடிவங்களையும் தாக்குப்பிடித்து வாழும் என் தமிழ், முப்பரிமாண தொழில்நுட்பத்துக்கும் தயாராகிவிட்டதை காணும்போது எழும் உணர்ச்சியலைகளுக்கு அளவேயில்லை. ஒரே ஒரு குறைதான். எண்பது ஆண்டுகளாக விகடன் தாத்தா எல்லா மாற்றங்களையும் உள்வாங்கி, விதம்விதமாக தன் கெட்டப்பை மாற்றிக்கொண்டிருக்கிறார். 3டியில் அவரை ஒரு முழுப்பக்கத்துக்கு காட்டியிருக்க வேண்டாமா விகடன் ஓவியர்கள் அப்புறம், ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு இன்னொரு கோரிக்கை. தயவுசெய்து ‘டைம்பாஸ்’ இதழையும் 3டி வடிவில் வெளியிட ஆவன செய்யவும். எவ்வளவு செலவு ஆனாலும் சரி. ஆவலோடு காத்திருக்கிறோம்.\nஅ-னா, ஆவன்னா வாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே உற்ற தோழனாக இருந்த ஆனந்த விகடன் மீது, சில ஆண்டுகளாக கடுமையான மனக்கசப்பு இருந்தது. ‘ஆனந்தம்’ போய், ‘அழுமூஞ்சி’ விகடனாக அதுமாறிவிட்டதால் ஏற்பட்ட கடுப்பு. ஜூ.வி.தான் அரசியலுக்கு என்று தண்ணீர் தெளித்துவிட்டபிறகு, ஆ.வி.யிலும் ஏன் பக்கம் பக்கமாக, குறிப்பாக கலைஞரை மட்டும் குறிவைத்து வன்மமான அரசியல் என்று ஓர் ஆதங்கம். கலைஞர் தாத்தாவும், விகடன் தாத்தாவும் சமகாலத்தவர்கள்தானே ஒரு தாத்தாவை இன்னொரு தாத்தா இப்படி ஏதோ சொத்துத்தகராறு மாதிரி தனிப்பட்ட முறையில் அளவுதாண்டி தாக்கலாமா என்று கோபம். அதனாலேயே நான்கு ஆண்டுகளாக விகடனை காசு கொடுத்து வாங்குவதில்லை. அலுவலகத்துக்கு வந்து புரட்டுவதோடு சரி (அரசியல் கட்டுரைகளை ஏறெடுத்தும் பார்க்கவே மாட்டேன்).\nதாத்தாவுக்கும் பேரனுக்குமான இயல்பான ஊடல்தான் அது. விகடன் தாத்தா மீதிருந்த அந்த கோபம் இந்த 3டியால் மொத்தமாக ஓடியே போய்விட்டது. என்ன இருந்தாலும் நம்ம தாத்தா இல்லையா\nசமீபத்தில் குஜராத்தில் நடந்த வல்லபாய் படேல் சிலை அடிக்கல் நாட்டுவிழாவில் “சர்தார் வல்லபாய் படேல் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். அவர் இருந்த கட்சியில் நானும் இருப்பதற்காக பெருமைப்படுகிறேன்” என்று பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.\nஆனால் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அவரை ‘மதச்சார்பு கொண்டவர்’ என்று நேரடியாக குற்றம் சாட்டியதாக ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டி அத்வானி குற்றம் சாட்டுகிறார். இதெல்லாம் காங்கிரஸ் – பாஜக இடையிலான அரசியல் சடுகுடு. யார் வெல்லுவார்கள் என்பதை காலம் முடிவு செய்துக்கொள்ளட்டும்.\nஅத்வானி குறிப்பிடுகிற புத்தகம் எம்.கே.கே. நாயர் என்கிற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய மலையாளப் புத்தகம். அது ஆங்கிலத்தில் ‘The story of an era told without ill will’ என்று மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு சுவாரஸ்யமான அத்தியாயத்தின் ஒரு பகுதி :\nஏப்ரல் 30, 1948. இந்திய ராணுவம் ஹைதராபாத்திலிருந்து முற்ற���லுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. உடனடியாக ஹைதராபாத் நிஜாமின் ‘ரஜாக்கர்கள்’ எனப்படும் ஆயுதக்குழு நிஜாம் பிரதேசம் மொத்தத்தையும் தங்கள் ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டனர். மக்களை கடுமையாக சித்திரவதை செய்யத் தொடங்கினர் ரஜாக்கர்கள்.\nமவுண்ட்பேட்டன் இடத்தை காலி செய்ததுமே கவர்னர் ஜெனரலாக இராஜாஜி பதவியேற்றுக் கொண்டார். ஹைதராபாத்தின் அபாயநிலையை இராஜாஜி, நேரு மற்றும் படேல் மூவரும் உணர்ந்திருந்தனர். எனவே இராணுவத்தை அனுப்பி நிஜாமின் கொட்டத்தை அடக்கவேண்டுமென்று படேல் துடித்துக் கொண்டிருந்தார்.\nஇதற்கிடையே நிஜாம் தன்னுடைய பிரதிநிதியை பாகிஸ்தானுக்கு அனுப்பி நல்லுறவு ஏற்படுத்த முயற்சித்தார். தன்னுடைய அரசுப் பணத்தில் கணிசமான தொகையை பாகிஸ்தானுக்கு கொடுத்தார். அமைச்சரவை சந்திப்பில் இந்த நிலவரத்தை படேல் விலாவரியாக எடுத்துரைத்தார். ஹைதராபாத்தில் நடக்கும் வன்முறை வெறியாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர இராணுவத்தை அனுப்பவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுவாக கனிவாகவும், அமைதியாகவும் பேசக்கூடிய தன்மை கொண்ட நேரு திடீரென எரிச்சலடைந்தார். தன்னிலை இழந்த நிலையில் வல்லபாய் படேலை நோக்கி, “நீங்கள் ஒரு முழுமையான வகுப்புவாதி. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டேன்” என்று குரல் உயர்த்தி சொன்னார். படேல் ஆவேசப்படவில்லை. அமைதியாக அறையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.\nஹைதராபாத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது. கவர்னர் ஜெனரலான இராஜாஜி இந்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். நேருவையும், பட்டேலையும் இணக்கமாக போகவைக்க முயற்சித்தார். அரசியல் ஆலோசனை அதிகாரியான வி.பி.மேனனை அழைத்துப் பேசினார். இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த நிமிடத்திலும் ஆணை கிடைத்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிட முடியுமென்றும் இராஜாஜியிடம் மேனன் சொல்கிறார். அடுத்த நாளே நேருவையும், பட்டேலையும் சந்திப்புக்காக இராஷ்டிரபதி பவனுக்கு வரவழைத்தார் இராஜாஜி. வி.பி.மேனனும் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார்.\nஇராஷ்டிரபதி பவனுக்கு வந்துக் கொண்டிருந்த நேரத்தில் மேனனிடம் ஒரு கடிதம் கையளிக்கப்பட்டது. திருவாங்கூர் மற்றும் கொச்சியை இந்தியாவில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்திய ஐ.சி.எஸ். அதிகாரி பட்ச் என்பவ���் இந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தார். பிரிட்டிஷ் ஹைகமிஷனரிடம் இருந்து வந்த அந்த கடிதம், ஹைதராபாத்தில் கன்னியாஸ்திரிகள் சிலர் ரஜாக்கர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளானதை கண்டித்து வந்திருந்தது. மேனன் இந்த கடிதத்தை அப்படியே இராஜாஜியிடம் கொடுத்தார்.\nநேரு, படேல் வருகைக்குப் பிறகு சந்திப்பு தொடங்கியது. இராஜாஜி தனக்கேயுரிய பாணியில் ஹைதராபாத் நிலைமையை கவலையோடு பேசினார். இந்தியாவின் இறையாண்மையை காக்கும் வகையில் நடவடிக்கை வேகமாக இருக்கவேண்டுமென்கிற தொனி இராஜாஜியின் பேச்சில் இருந்தது. நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் இந்தியா எதிர்கொள்ளக்கூடிய அழுத்தங்களை நேரு வலியுறுத்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நேருவின் பேச்சை முழுமையாக கேட்ட இராஜாஜி, பொறுமையாக தன்னிடம் மேனன் கொடுத்த பிரிட்டிஷ் ஹைகமிஷனரின் கண்டனக் கடிதத்தை தருகிறார்.\nகடிதத்தை வாசித்ததுமே நேருவின் முகம் மாறுகிறது. கோபத்தில் சிவக்கிறார். கன்னியாஸ்திரிகளை கூட விட்டுவைக்காத ரஜாக்கர்களின் கொடுஞ்செயல் அவரது உறுதியான இதயத்தை அசைத்துவிட்டது. கைகளால் வேகமாக மேசை மீது குத்தியபடியே குரலுயர்த்தி சொன்னார்.\n“இனியும் நாம் பொறுக்க முடியாது. அவர்களுக்கு பாடம் கற்பித்தே தீரவேண்டும்”\nநேருவிடமிருந்து இராஜாஜி எதிர்ப்பார்த்தது இதைதான். வி.பி.மேனனை பார்த்து இராஜாஜி சொல்கிறார்.\n“மேனன், இராணுவ தலைமை அதிகாரியை களமிறங்கச் சொல்லுங்கள்”\nஆணை கிடைத்ததுமே மேனன் செயல்படத் தொடங்கினார். இராணுவ ஜெனரலுக்கு செய்தி பறந்தது. கவலையோடு தன்னுடைய தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் நேரு. தன் நிலையை ஆசுவாசப்படுத்திக்கொள்ள தேனீர் அருந்தினார். நேருவின் நிலையை கண்ட இராஜாஜி புன்னகையோடு அவரிடம் சொல்கிறார்.\n“கொடுமையான வலி ஏற்படுமென்றாலும் வேறு வழியில்லை. அறுவைச் சிகிச்சை செய்து, கேன்சர் கட்டியை நாம் அகற்றித்தான் ஆகவேண்டும்”\nஎண்பதுகளில் ஆட்டோ இளைஞர்களின் கனவு வாகனமாக இருந்தது. படித்துவிட்டோ அல்லது படிப்பில் கோட்டை விட்டோ திரிந்துக் கொண்டிருந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வரப்பிரசாதமாக ஆட்டோக்கள் அமைந்தன.\nஅப்போதெல்லாம் சாதாரணமாக காணக்கூடிய காட்சி இது.\n“ஆட்டோ ஓட்டுறேன்” பதில் சொல்லும்போதே பெருமிதம் தென்படும். கேள்வி கேட்டவரும் பையன் பொறுப்பாதான் இருக்கான் என்று திருப்திப்படுவார்.\nஆட்டோ ஓட்டுபவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைத்து வந்தது. எங்கள் தெருமுக்கில் இருந்த ஒரு குடும்பம் காலம் காலமாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஸ்டேண்டில் குதிரைவண்டி வைத்திருந்தார்கள். மவுண்ட் டூ மடிப்பாக்கம் ட்ரிப்புக்கு நாற்பத்தி ஐந்து காசு கொடுத்து நானேகூட பயணித்திருக்கிறேன். அந்த குதிரைவண்டி குடும்பத்தில் வந்த இளைஞர் எண்பதுகளின் மத்தியில் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார். கொஞ்ச நாளிலேயே சொந்த ஆட்டோ. இன்னும் சில காலம் கழித்து ரெண்டு ஆட்டோ கூடுதலாக வாங்கி வாடகைக்கு விட்டார். வீடு கட்டினார். கல்யாணம் முடித்து செட்டில் ஆனார். இப்போது வேறெங்கோ இடம்பெயர்ந்து டிராவல்ஸ் நடத்தி, பங்களா கட்டி பக்காவாக செட்டில் ஆகிவிட்டதாக கேள்வி.\nஅப்போதைய ஆட்டோக்காரர்கள் பெரும்பாலும் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தில் இருப்பார்கள். அவர்களது தம்பிகள் வேலையில்லாமல் இருந்தால் டி.ஒய்.எஃப்.ஐ.யாகவோ அல்லது படித்துக் கொண்டிருந்தால் எஸ்.எஃப்.ஐ.யாகவோ இருப்பார்கள். சென்னையில் எம்.எம்.டி.ஏ.காலனி மற்றும் புழுதிவாக்கம் மா.கம்யூ அலுவலகங்கள் (அதாவது கொஞ்சம் பெரிய சைஸ் அறை) நமக்கு பரிச்சயமானது இதுபோன்ற தோழர்களால்தான். பொதுவாகவே அந்த காலத்தில் நாம் பார்த்தவர்களில் நான்கில் ஒருவராவது கட்சி வேறுபாடுகளை தாண்டி இடதுசாரி சிந்தனை கொண்டவர்களாக இருந்தார்கள். எண்பத்தி ஒன்பது தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு தமிழகத்தின் இந்த பொதுவுடைமை போக்கும் முக்கியமான காரணமாக இருந்தது.\nசி.ஐ.டி.யூ-வுக்கு அடுத்தபடியாக ஆட்டோக்காரர்களில் பெரும்பாலானோர் திமுகவின் தொ.மு.ச.காரர்களாக இருந்தார்கள். சி.ஐ.டி.யூ தோழர்களாக இருந்தவர்களும் கூட தீக்கதிர் படிப்பதற்குப் பதிலாக தினகரன் படிப்பார்கள். ‘யார்’ படத்தில் ரஜினிகாந்த் தினகரன் வாசித்ததுதான் இதற்கு காரணமாக இருந்திருக்கிறது. அக்காலக்கட்டத்து சினிமாக்களில் வரும் நாளிதழாக பெரும்பாலும் தினகரன் இருக்கும் அல்லது மக்கள்குரல் இருக்கும்.\nஅந்நாளைய ஆட்டோக்காரர்கள் தீவிரமான ஈழ ஆதரவாளர்கள். மத்திய அரசின் போக்குக்கு பெரும்பாலும் எதிரானவர்கள். எனவேதான் ஈழ ஆதரவுப் போராட்டங்களோ, பொதுப் பிரச்சினைகளுக்காக பாரத் பந்த் மாதிரி பெரி�� வேலைநிறுத்தங்கள் நடந்தபோதோ நகரத்தை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்தார்கள்.\nஅருமையாக கானா பாடுவார்கள். இளையராஜா ரசிகர்கள். பிரபு, ராம்கி மாதிரி அந்த காலத்து இளைய ஹீரோக்களின் தாக்கம் கொண்டவர்கள். எனவேதான் ஸ்டைலுக்காக கோடையிலும்கூட கழுத்தில் மஃப்ளர் சுற்றிக்கொண்டு ஆட்டோ ஓட்டினார்கள். காக்கி பேண்டும், கலர்ச்சட்டையுமாக டீக்கடைகளில் அரசியல் பேசிக்கொண்டிருப்பார்கள். சவாரி வந்துவிட்டால் வண்டியில் மாட்டி வைத்திருக்கும் காக்கிச்சட்டையை மாட்டிக் கொள்வார்கள். அச்சட்டைக்கு பட்டன் போடமாட்டார்கள். கண்டிப்பாக ‘பேட்ஜ்’ விசிபிள் செய்துக் காட்டுவார்கள்.\nஏரியாவில் ஸ்டேண்ட்காரர்கள் ஹீரோவாக மதிக்கப்பட்டார்கள். ஏதாவது வம்பு, தும்பு என்றால் முதலில் வந்து நின்று நியாயம் கேட்பார்கள். குறிப்பாக பெண்களிடம் வம்பு செய்யும் ரோமியோக்களுக்கு இவர்கள்தான் வில்லன். ஏரியா பெண்களை (கிழவியிலிருந்து குமரிவரை – வயசு பாகுபாடில்லாமல்) பாதுகாக்கும் எல்லைச்சாமிகள். யாராவது மருந்து குடித்துவிட்டாலோ, தீக்குளித்துவிட்டாலோ முதலுதவிக்கு முதலில் வந்துக் கொண்டிருந்தவர்கள்.\nஅந்தகால ஆட்டோக்காரர்களை நினைத்தால் ‘ஆயுத பூஜை’யும் இயல்பாகவே நினைவுக்கு வரும். அதகளமான காலம். லைட் மியூசிக் கச்சேரியெல்லாம் வைத்து ஏரியாவையே எண்டெர்டெயின் செய்வார்கள்.\n‘பாட்ஷா’ வெளிவந்த தொண்ணூறுகளின் மத்திய காலக்கட்டம்தான் ஆட்டோக்காரர்கள் உச்சத்திலிருந்த காலமென்று தோன்றுகிறது. இந்த சமூகநிலையை அழகாக கமர்சியல் ஆக்கியது ரஜினி-சுரேஷ்கிருஷ்ணா கூட்டணி. சூப்பர்ஸ்டார், நக்மாவை ‘உஷார்’ பண்ணியதைக் கண்டு கவரப்பட்டதாலோ, என்னவோ அதன்பிறகு நிறைய ஆட்டோக்காரர்கள் ரோமியோக்களாக மாறிவிட்டார்கள். பெண்களை கேலி செய்தவர்களை இவர்கள் தட்டிக்கேட்ட காலம் போய், இவர்களில் நிறைய பேரே ‘ஈவ் டீசிங்’ சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், ரெண்டாயிரங்களின் தொடக்கத்திலும் நிறையமுறை கேட்டவார்த்தை “ஆட்டோக்காரனோடு ஓடிப்போயிட்டா”\nசமூக அநீதிகளை எதிர்க்கும் பொறுப்பான சிகப்பு மனிதர்கள் எப்போதிலிருந்து சமூகவிரோதிகளாய் அடையாளம் காணப்பட்டார்கள் என்பதை சரியாக கணிக்கமுடியவில்லை. லோக்கல் அரசியல்வாதிகளுக்கு அடியாட்களா��� எப்போதிலிருந்து பணியாற்றத் தொடங்கினார்கள் என்பதையும் கவனிக்கத் தவறிவிட்டேன். இன்று ஆட்டோக்காரர்களுக்கு சமூகத்தில் கவுரவமான இடம் இருப்பதாக தெரியவில்லை. குடிகாரர்களாகவும், பெண்பித்தர்களாகவும், ரவுடிகளாகவும், அடாவடிக்காரர்களாகவுமே பொதுப்புத்தியில் உறைந்துப் போயிருக்கிறார்கள்.\nஒரு காலத்தில் நம்மால் ஹீரோக்களாக மதிப்பீடு செய்யப்பட்டவர்கள், அம்மதிப்பீட்டிலிருந்து வீழ்ந்துக்கொண்டே போவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.\n‘ஷாப்பிங்’ செய்ய ரங்கநாதன் தெருவிலும், டவுன்ஹால் ரோட்டிலும் லோலோவென்று அலைந்துக்கொண்டிருந்த தமிழர்கள், இப்போது குஷியாக மால்மாலாக திரிகிறார்கள்.\nசமீபத்தில் சென்னையில் துவக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய மால் அது. சுமார் இருபத்தைந்து லட்சம் சதுர அடி பரப்பில், சென்னை மாநகருக்குள் ஒரு குட்டி ஹைடெக்நகரமாக உருவாகியிருக்கிறது. சாதாரண துணிக்கடையில் தொடங்கி, ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது. திருவிழா போல ஜெகஜ்ஜோதியாக அந்த மால் அமைந்திருக்கும் பகுதியே ஜொலிக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, அங்கே ஏதோ மாநாடு நடப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.\nசில வருடங்களுக்கு முன்பு இம்மாதிரி காட்சி அபூர்வம். பண்டிகைக் காலங்களில் ஒவ்வொரு நகரின் ஏதோ ஒரு தெருதான் பரபரப்படையும். அத்தெருவில் வரிசையாக கடைகள் இருக்கும். ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கி நமக்குத் தேவையானதை, திருப்திப்படும் விலையில் கறாராக பேரம் பேசி வாங்குவோம்.\nஅந்த காலம் மலையேறிவிட்டது. நுகர்வுக் கலாச்சாரத்தின் செல்லப் பிள்ளையாக நகரங்கள் தோறும் மால்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இந்திய நகரங்களில் நவீன அரண்மனைகளின் வடிவத்தில் புதுசு புதுசாக ஏராளமான மால், கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் –அதே நேரம் பர்ஸை பலமாக பதம் பார்க்கும் நோக்கிலும்- உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் பெருநகரமான சென்னையை தாண்டி கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை என்று அடுத்தடுத்த மட்டத்தில் இருக்கும் நகரங்களிலும் மால் கலாச்சாரம் பரவி வருகிறது.\nஒரே கூரையின் கீழ் சூரியனுக்கு கீழே இருக்கும் எல்லாமே கிடைக்குமென்ற நம்பிக்கையை மால்கள் உருவாக்குகின்றன. அயல்நாட்டு செண்ட் பாட்டிலில் தொடங்கி, மதுரை மல்லிவரை மாலில் வாங்கலாம். marketing for all என்கிற வார்த்தையே mall என்று சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. விற்பனையை வெறும் வியாபாரமாக அணுகாமல் வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு பாணியில் வழங்குவதுதான் மால்களின் அடிப்படை ஐடியா. இதனால்தான் மால் அனுபவத்தை shoppertainment என்கிற புதிய கலைச்சொல்லை உருவாக்கி குறிப்பிடுகிறார்கள்.\nதினம் தினம் பல லட்சம் பேர் மால்களில் குவிகிறார்கள். பல்லாயிரம் கோடிகளில் பணம் புரளுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே சுமார் நூற்றி இருபதுக்கும் புதிய மால்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட நாற்பது மால்கள் மூடுவிழா கண்டிருக்கின்றன என்பதுதான் இங்கே கவனித்தக்க அம்சம்.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக நகரில் ஆங்காங்கே இயங்கும் கடைகளில் தெருத்தெருவாக ஏறி இறங்கி, மூட்டுவலியால் அவதிப்படும் தங்கள் வாடிக்கையாளர்களை கண்டு கண்ணீர் விட்டு கதறிய வியாபாரிகள் கண்ட தீர்வுதான் ‘மால்’. ஒரே வளாகத்தில் எல்லா கடைகளும் என்கிற இந்த ‘ஐடியா’வுக்கு வயது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள். ரோம் நகரில் கி.பி. நூறாம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்ட ‘டிராஜன்ஸ் சந்தை’தான் உலகின் பழமையான மால். ஒரே கட்டிடத்தில் என்றில்லாமல் பக்கத்து, பக்கத்து தெருக்களை இணைத்து ஒரே ஷாப்பிங் வளாகமாய் (நம்மூர் பர்மா பஜார் மாதிரி) உலகெங்கும் நிறைய உருவாகியிருக்கின்றன. இஸ்தான்புல் சந்தை (58 தெருக்களை இணைத்து சுமார் 4000 கடைகள்), பத்து கிலோ மீட்டருக்கு நீளும் டெஹ்ரானின் சந்தை என்று நூற்றாண்டுகள் கண்ட மால்கள் நிறைய உண்டு.\nபதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில்தான் மழையோ, வெயிலோ படாமல் பாதுகாப்பான ஷாப்பிங் வசதியை உருவாக்கும் எண்ணம் வணிகர்களுக்கு வலுத்தது. பாரிஸ் நகரில் 1628ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மார்ச்சே தே என்பேண்ட் ரோஹ்ஸ், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் நகரில் 1774ல் இயங்கத் துவங்கிய ஆக்ஸ்போர்ட் கவர்ட் மார்க்கெட் போன்ற மால்கள் இன்னும்கூட சேவையை தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 1785ல் துவக்கப்பட்ட கோஸ்தினி த்வார் மால்தான் இன்றைய மால்களின் வடிவத்துக்கு முன்னோடியாக அமைந்தது.\nஸ்பென்ஸர் & கம்பெனி நிறுவனம், சென்னையில் சுமார் எண்பது தனித்தனி பிரிவுக்கடைகளை ஒன்று சேர்த்து, இந்தியாவின் முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோராக துவக்கிய ஸ்பென்ஸர் பிளாஸாதான் நம் நாட்டின் முதல் மால் ஆக கருதப்படுகிறது (1895). தொடங்கப்பட்ட காலத்தில் தெற்காசியாவின் பெரிய ஷாப்பிங் மால் ஆகவும் இதுவே இருந்தது. 1990ல் புனரமைக்கப்பட்டு துவக்கப்பட்ட ஸ்பென்சர் ப்ளாஸா அன்றையக் காலத்தில் சென்னை நகரில் தரிசித்தே தீரவேண்டிய தலமாக இருந்தது.\n“படிக்கும் காலத்தில் ஊரைவிட்டு வந்து சென்னையில் தங்கியிருந்தேன். தொண்ணூறுகளின் ஸ்பென்ஸர் பிளாஸா, அல்ஸா மால் போன்றவைதான் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வாரயிறுதிகளின் வேடந்தாங்கல். பெரும்பாலும் வேடிக்கைதான். மாதத்துக்கு ஒரு முறை டீஷர்ட் மாதிரி ஏதாவது வாங்கினால் அபூர்வம். ஒவ்வொரு முறை இந்த மால்களுக்குள் நுழையும்போதும் கண்களை விரித்துக்கொண்டு ஆச்சரியமாக ஆசை ஆசையாக சுற்றுவேன்.\nஇன்றைய சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியை எல்லாம் பார்க்கும்போது இருபது வருடங்களுக்கு முன்பு நான் கண்டு ஆச்சரியப்பட்ட மால்கள் எல்லாம் மால்தானா அல்லது பெட்டிக்கடைகளா என்று சந்தேகம் வருகிறது. ஷாப்பிங் கட்டமைப்பு, வசதிகள் விஷயத்தில் நாம் மிகக்குறுகிய ஆண்டுகளிலேயே பலநூறு மடங்கு முன்னேறியிருக்கிறோம்” என்கிறார் டெல்லியில் நிம்பஸ் நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரியும் ரவீந்திரன்.\nகட்டமைப்பு விஷயமெல்லாம் ஓக்கேதான். ஆனால் உண்மையிலேயே மால்கள் நம் நாட்டில் வெற்றி அடைந்திருக்கிறதா என்றால் சந்தேகம்தான். நெரிசலற்ற பார்க்கிங், முழுக்க குளிர்சாதனம், எஸ்கலேட்டர் வசதி, விழாக்கள் நடத்துவதற்குரிய வளாகம், திரையரங்குகள், டிபார்ட்மெண்ட் கடைகள், அழகு நிலையம், ஆடை விற்பனை அங்காடிகள், வீடியோ கேம்ஸ், உணவகங்கள் என்றெல்லாம் பொழுதுபோக்கையும், ஷாப்பிங்கையும் இணைத்து திட்டமிடுபவர்கள், இதை நடைமுறைக்கு கொண்டுவரும்போது செயல்பாட்டில் கோட்டை விட்டு விடுகிறார்கள். அவர்கள் எதிர்ப்பார்க்கும் விதமாக ‘கலர்ஃபுல் காம்பினேஷனில்’ கடைகள் அமைவதில்லை. ஒரு எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைக்கு, அடுத்து பெண்களின் உள்ளாடை விற்கும் கடை என்பதுமாதிரி எகனைமொகனையாய் அமைந்துவிடுகிறது.\nஎப்படியாவது துண்டு போட்டு பெரிய மால்களில் இடம்பெற்றுவிடும் ச��ல்லறை விற்பனையாளர்கள் போதுமான விற்பனை செய்யமுடியாமல் அல்லாடுகிறார்கள். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இண்டர்நேஷனல் பிராண்ட் அந்தஸ்துடைய பொருட்களையே வாங்க விரும்புகிறார்கள். இவற்றை விற்கும் ஏற்கனவே பிரபலமாகிவிட்ட பெரிய நிறுவனங்களோடு சரிக்கு சமமாக வளர்ந்துவரும் சிறிய நிறுவனங்களும் போட்டியிட வேண்டியிருக்கிறது. மட்டுமில்லாமல் மால்களில் இயங்கி கிடைக்கும் லாபத்தில் 25 முதல் 35 சதவிகிதம் வரை, இங்கே இருப்பதற்காகவே செலவிட வேண்டியிருக்கிறது என்பது சில்லறை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய சுமையாக இருக்கிறது.\nசென்னையில் தனியாக கட்டிடம் கட்டி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு சில்லறை விற்பனை நிறுவனம், ஆசை ஆசையாக பிரும்மாண்டமாக கட்டப்பட்ட ஒரு மாலில் இடம்பெற்று குடியேறினார்கள். “எங்களது வழக்கமான வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம். பெரிய இடத்தில் வியாபாரம் செய்வதால், விலையை கூட்டி விற்கிறோமோ என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள்” என்று அந்நிறுவனத்தின் நிர்வாகி நம்மிடம் கூறினார்.\nவாரயிறுதிகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் மால்களில் கூடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் ‘ஷாப்பிங்’ செய்வதைவிட உணவருந்தவும், பொழுதுபோக்கவும்தான் விரும்புகிறார்கள். சினிமா திரையரங்கங்கள் இடம்பெற்றிருக்கும் மால்களிலேயே கூட்டம் அதிகமாக இருப்பதை நாம் கவனிக்கலாம். ஆனால் அந்த கூட்டமும் குறையத் தொடங்கியிருக்கிறது என்கிறார் சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ரமேஷ்.\n“மல்ட்டிப்ளக்சுகளிலேயே இவ்வசதிகள் வந்துவிட்டது. வசதியான சூழலை அனுபவிக்க மாலுக்கு வருபவர்கள் மைனாரிட்டிதான். மற்ற திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்காத பட்சத்திலேயே மால்களில் இருக்கும் திரையரங்குகளுக்கு கூட்டம் சேருகிறது. ஆனால் திரையரங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய்தான் பார்க்கிங் கட்டணம். மால்களுக்கு வந்துவிட்டால் மூன்று மணி நேரத்துக்கு 50 ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. வாரயிறுதிகளில் இன்னும் கூடுதல் கட்டணம். கார் பார்க்கிங்கெல்லாம் கொள்ளை. படம் பார்க்க டிக்கெட்டுக்கு செலவிடும் காசையே பார்க்கிங்குக்கும் செலவிட வேண்டுமானால் எப்படி எனவேதான் ஆரம்பத்தில் மால்களில் சினிமா பார்க்க இருந்த ஜோர் இப்போது குறைந்துவருகிறது” என்று லாஜிக்கலாக பேசுகிறார் ரமேஷ்.\nஏற்கனவே மால்களுக்கு வந்தவர்களை திரும்பத் திரும்ப வரவைப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. ஆனால் அம்மாதிரி திரும்ப வரவைக்கவிடாமல் பார்க்கிங் கட்டணம் பயமுறுத்துகிறது. பொழுதுபோக்கு, உணவு, சினிமா, பேஷன் ஆகிய நான்கும்தான் மால்களின் வெற்றிக்கான கச்சிதமான ஃபார்முலா. இவை சரியான விகிதத்தில் கலந்திருக்கும் மால்கள் மக்களை கவரவே செய்கின்றன. சென்னையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்கு சராசரியாக 70,000 பேர்வரை தினமும் வருகிறார்கள். ஆனால் மால்களுக்கு வருகிற கூட்டத்தை எதையாவது வாங்கச் செய்வது எப்படி என்கிற ரகசியம் புரியாமல்தான் விற்பனையாளர்கள் மண்டையை குழப்பிக் கொள்கிறார்கள்.\nமால்களுக்கு வந்துவிட்டு வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு செல்வதை ‘விண்டோ ஷாப்பிங்’ என்கிறார்கள். இதுதான் மால்களின் வெற்றிக்கு அச்சுறுத்தலான விஷயம். “ஷாப்பிங் மால்களுக்கு ஷாப்பிங் பண்ணதான் வரணும்னு இல்லை. வீட்டுலே போர் அடிச்சாலே வந்துடலாம். சும்மா கொஞ்ச நேரம் கடைகளை வேடிக்கை பார்த்துட்டு, டைம்பாஸ் பண்ணலாம். வேணும்னா எதுவாச்சும் சாப்பிட்டுட்டு போகலாம். எதுவும் வாங்கலேன்னு நம்பளை யாராவது போலிஸ்லேயா புடிச்சி கொடுக்கப் போறாங்க” என்று நக்கலாக கேட்கிறார் சேலத்தை சேர்ந்த சுபாஷ். இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த சமீபத்தில் ரம்ஜான் பண்டிகை நேரத்தில் அகமதாபாத் மால் ஒன்றில், உள்ளே நுழையவே நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றதுமே வழக்கமாக வரும் கூட்டமும் கூட சிதறி ஓடியதுதான் மிச்சம்.\nமெட்ரோ நகரங்களை தவிர்த்து அடுத்தக்கட்ட நகரங்களிலும் மால்கள் நிறைய திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கை படுமோசம். மதுரையின் பெரிய மாலான விஷால்-டி-மால் இரண்டரை லட்சம் சதுர அடியில், ஐந்து தளங்களோடு பிரும்மாண்டமாக திறக்கப்பட்டது. வாரநாட்களில் தினத்துக்கு சராசரியாக 500 பேரும், வாரயிறுதிகளில் 800 பேரும்தான் வருகிறார்கள் என்று அங்கே கடை வைத்திருக்கும் ஒருவர் கூறுகிறார். இங்கே ஐனாக்ஸ் தியேட்டர் திரைகள் திறக்க அரசு அனுமதிக்கு காத்தி���ுக்கிறார்கள். ஒருவேளை தியேட்டர் திறந்தபின் கூட்டம் வரலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.\n“பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க இளைஞர்கள் வருகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடுகிறது. ஆனால் பொருள் வாங்குவது குறைவுதான். அடிக்கடி வர ஆரம்பிப்பவர்கள் வாங்க தொடங்குவார்கள் என்று நம்புகிறோம். அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்” என்கிறார் இந்த மாலின் பொதுமேலாளரான செந்தில்குமார்.\nபெங்களூரை சேர்ந்த ஏசியாபேக் என்கிற நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, நாட்டில் நாற்பது சதவிகித மால்கள் வெற்றிகரமாகவே இயங்குகின்றன. பெரிய மால்கள் உடனடியாக வெற்றி காண்பது சாத்தியமில்லை. ஆனால் அடுத்த சில வருடங்களில் ‘மால் ஷாப்பிங்’ சொகுசை அனுபவிப்பவர்களால் இந்த கலாச்சாரம் பெருகும் என்று நம்பலாம்.\n2005-06 ஆண்டுகளில் உத்தேசிக்கப்பட்ட மால்களே இப்போது ஆங்காங்கே துவக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதியதாக மால்களை உருவாக்க யாரும் இப்போது திட்டமிடுவதில்லை. ஏற்கனவே திறக்கப்பட்ட மால்களில் கூட கடைகள் காலியாகவே இருப்பதால், அதை குடியிருப்பாகவும், அலுவலகத்தேவைக்காகவும் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇப்போதைய தேக்கநிலைக்கு நாட்டின் பொருளாதார மந்தநிலையும் ஒரு காரணம். தவிர்த்து சில்லறை விற்பனை முறைகளில் நாம் இன்னும் புதியதொழில்நுட்பங்களுக்கு மாறாத நிலையும் பிரதான காரணம். நம் மக்கள்தொகை மற்றும் இன்றைய நகரமயமாக்கல் வளர்ச்சியை கணக்கிடும்போது இந்தியாவில் இரண்டாயிரம் மால்கள் வரை இயங்க முடியும். சில்லறை விற்பனையில் அந்நிய முதலீடு குறித்த மத்திய அரசின் சமீபத்திய கொள்கை முடிவு, மந்தமாகிவிட்ட மால் கலாச்சாரத்தை சரிக்கட்டிவிடும் என்றொரு நம்பிக்கை உருவாகியிருக்கிறது.\nஇப்போதைக்கு கொஞ்சம் பணம் வைத்திருப்பவர்கள் வசதியாக ‘ஷாப்பிங்’ செய்ய மால்களை நாடுகிறார்கள். நடுத்தர வர்க்கம் ‘விண்டோ ஷாப்பிங்’குக்காக மால்களில் குவிகிறார்கள். ஏழைகள் அண்ணாந்து பார்த்துக்கொண்டே பெருமூச்சு விடுகிறார்கள். இந்த நிலை மாறினால்தான் மால்கள் வாழமுடியும். இதற்கு மால் நடத்துபவர்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அயல்நாடுகளில் மால்கள் எப்படி இயக்கப்படுகின்றனவோ, அதே முறையை அப்படியே இங்கும் காப்பி & ப��ஸ்ட் செய்யக்கூடாது. நம் மண்ணுக்கேற்ற முறையில் சில மாற்றங்களை சிந்திக்க வேண்டும். வேடிக்கை பார்க்கவரும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணமான விற்பனைமுறைகளை விற்பனையாளர்கள் முயற்சிக்க வேண்டும். பார்க்கிங் கொள்ளை கட்டணத்தை நிறுத்த வேண்டும். இதெல்லாம் நடக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை நாமும் ‘விண்டோ ஷாப்பிங்’ செய்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.\nஆரம்பத்தில் கோயில்கள். பின்னர் சுற்றுலாத் தளங்கள், பீச், பார்க், கண்காட்சிகள், மியூசியங்கள், சினிமா, தீம்பார்க். இப்போது மால்கள். நாம் வேடிக்கை பார்க்கவும், பொழுதைப் போக்கவும் எப்போதும் ஏதாவது ஒன்று தயாராகதான் இருக்கிறது. ஆனால் இப்போது பொழுதுபோக்கு கொஞ்சம் கொஞ்சமாக காஸ்ட்லி ஆகிக் கொண்டிருக்கிறது. அதுதான் திருவள்ளுவர் தீர்க்கதரிசனத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார். “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை”\nஎப்படி மனசுக்குள் வந்தாரென்றே தெரியவில்லை. வசதியாக சப்பணம் போட்டு அமர்ந்துவிட்டார் தன்வி வியாஸ். குஜராத்தி பெண்களுக்கே உரிய உயரமும், உடற்கட்டும் அசலாக அமைந்திருக்கிறது. கிராஃபிக் டிசைனரான தன்வி, வதோதரா என்கிற சிறுநகரில் பிறந்து அடித்துப் பிடித்து எப்படியோ குறிப்பிடத்தக்க அழகிப்போட்டியான மிஸ் ஃபெமினாவில் முடிசூட்டிக் கொண்டார்.\nதமன்னா கலர். ஆரம்பகால நமீதா உடல். சராசரி இந்தியப் பெண்களுக்கே உரிய மங்களகரமான முகம். சிரிக்கும்போது கன்னத்தில் கிளாமராக குழி விழுகிறது. உதடுகள் ஹாட்டின் வடிவம். சாராயத்தில் ஊறவைத்த கண்கள். பார்த்ததுமே டக்கீலாவை கல்ப் அடித்தது மாதிரி உடலெல்லாம் கிறுகிறுக்கிறது. கிட்டத்தட்ட 'கொமரம்புலி’ நிகேஷா பட்டேல் லுக். நமீதா, நிகேஷா, தன்வி என்று அடுத்தடுத்து குஜராத்தி அழகிகள் தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக கவர்ச்சி சுனாமி கிளப்பிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இங்கே மோடி அலை அடிக்குமோவென்று அச்சப்பட வேண்டியிருக்கிறது.\nஆர்.எம்.கே.வி., ஹீரோ சைக்கிள்ஸ், பேண்டலூன்ஸ், ஜேபி சிமெண்ட்ஸ் என்று குறிப்பிடத்தக்க டிவி கமர்சியல்களில் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் சினிமா வாய்ப்பு மட்டும் ஏனோ அவருக்கு போக்கு காட்டிக் கொண்டேயிருக்கிறது.\n’டைரக்டர் ஆஃப் காதலில் விழுந்தேன்’ பி.வி.பிரசாத்தின் எப்படி மனசுக்குள் வந்தாய்’ என்கிற மரணமொக்கை படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ இந்த பேரழகியின் பெருமையை தமிழர்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அழகை ஆராதிக்கும் டோலிவுட் இவரை வாரியணைத்துக் கொண்டிருக்கிறது. ’மிஸ்டர் சின்மயி’ ராகுல்ரவீந்தர் (மாஸ்கோவின் காவிரி, விண்மீன்கள்) நாயகனாக நடித்து வந்திருக்கும் ‘நேனு ஏம் சின்ன பிள்ளனா’ என்கிற மரணமொக்கை படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ இந்த பேரழகியின் பெருமையை தமிழர்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அழகை ஆராதிக்கும் டோலிவுட் இவரை வாரியணைத்துக் கொண்டிருக்கிறது. ’மிஸ்டர் சின்மயி’ ராகுல்ரவீந்தர் (மாஸ்கோவின் காவிரி, விண்மீன்கள்) நாயகனாக நடித்து வந்திருக்கும் ‘நேனு ஏம் சின்ன பிள்ளனா’ படத்தில் நடிப்புக்கும், கவர்ச்சிக்கும் ஸ்கோப் இருக்கும் ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படமும் ஃபேமிலி டிராமா மொக்கைதானென்றாலும் தன்வி தனியாக கவனிக்கப்படுமளவுக்கு செம பெர்ஃபார்மண்ஸ் கொடுத்திருக்கிறார். தாவணி, சேலை, சுடிதார், மாடர்ன் ட்ரெஸ் என்று எந்த அலங்காரத்திலும் எடுப்பாக இருக்கிறார்.\n‘நேனு ஏம் சின்ன பிள்ளனா’ என்கிற தெலுங்கு டைட்டில் வெளிப்படுத்தும் அறச்சீற்றக் கேள்விக்கு படத்தின் ஒரு காட்சியில் ‘பாடி’ லேங்குவேஜில் பதிலளித்திருக்கிறார் தன்வி. அந்த டைட்டிலுக்கு ‘நான் என்ன சின்னப் பொண்ணா’ என்கிற தெலுங்கு டைட்டில் வெளிப்படுத்தும் அறச்சீற்றக் கேள்விக்கு படத்தின் ஒரு காட்சியில் ‘பாடி’ லேங்குவேஜில் பதிலளித்திருக்கிறார் தன்வி. அந்த டைட்டிலுக்கு ‘நான் என்ன சின்னப் பொண்ணா’ என்று அர்த்தம். தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையை தனியாக அழைத்து சேலை, ஜாக்கெட்டை துறந்து டூ-பீஸில் தன்வி தோன்றும் அதிரடிக் காட்சியில் ரசிகர்கள் கோரஸாக ‘நூவ்வு சின்னப் பிள்ளா லேது’ (நீ சின்னப் பொண்ணு கிடையாது) என்று கத்துகிறார்கள்.\nதென்னிந்தியாவில் ஒரு ‘ரவுண்டு’ கட்ட வாய்ப்பிருக்கிறது. தெலுங்கின் மஞ்சு சகோதர்கள், தமிழின் சிம்புகள் க்ரூப்பில் சிக்காமல் இருக்கும் பட்சத்தில்.\nதமிழின் எழுத்துருவை ரோமன் வடிவில் எழுதலாம் என்று ஒரு நாளிதழில் யோசனை கூறியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். முதலில் ‘எழுத்துரு’ என்று ஜெ��மோகன் பயன்படுத்துவதே தவறு. எழுத்துரு என்பது font. இதை பலர் சுட்டிக் காட்டிய பிறகும் இன்னமும் எழுத்துருவையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.\nஜெயமோகன் ஒரு புது யோசனையை சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்கிறோமா இல்லையாவென்று விவாதிப்போம் என்று அவரது அபிமானிகள் சொல்லி வருகிறார்கள். மிக ஜாக்கிரதையாக ‘டிஸ்கி’ போட்டு ‘ஜெயமோகனின் கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால்’ என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். அரங்கசாமி போன்ற விஷ்ணுபுர பக்தர்களை குறை சொல்ல எதுவுமில்லை. ‘வெள்ளை காக்கா பறக்கிறது’ என்று ஆசான் சொன்னால், ‘ஆமாம்’ போட்டுவிட்டு செல்கிறவர்கள்தான்.\nஜெயமோகனை போலவே நான் ஒரு யோசனை சொல்கிறேன். இதை விவாதிப்போமா நண்பர்களே\nபுவி சூடேறுதல் காரணமாக வருடாவருடம் வெயில் ஏறிக்கொண்டே போகிறது. கடுமையான வெக்கையில் உடைகள் உடலுக்கு பெரும் துன்பமாக படுகிறது. எனவே தமிழ் சமூகம் உடையணிய வேண்டுமா என்று தோன்றுகிறது. அந்தமானில் கூட பழங்குடி சமூகத்தினர் உடை அணிவதில்லை.\n‘உடைகள் வேண்டாம்’ என்று நான் கூறியிருப்பது புது யோசனை. பைத்தியக்காரத்தனமான யோசனைதான். கேட்டதுமே என்னை செருப்பால் அடிக்க வேண்டும் என்றுகூட நான்கு பேருக்கு தோன்றும். ஆனாலும் அந்தமானில் உடை அணிவதில்லை, ஆப்பிரிக்காவில் மேலாடை கிடையாது என்று உதாரணங்கள் காட்டி என்னுடைய கேணைத்தனமான யோசனைக்கு தர்க்கரீதியாக சில பக்கங்களுக்கு என்னால் பலம் சேர்க்க முடியும். ஜெயமோகன் செய்துக் கொண்டிருப்பது இதைதான். இந்த விவகாரத்தில் மட்டுமல்ல. அவர் எந்த சிந்தனையை முன்வைத்தாலும் இப்படி அரைகுறையாகதான் இருக்கும். ஏனெனில் ஜெயமோகன் தன்னை சிந்தனையாளர் என்று கருதிக்கொள்ளும் சராசரி. எழுதத் தெரிந்தாலே சிந்தனையாளர் ஆகிவிடலாம் என்கிற அபத்தமான ஆபத்தான முடிவுக்கு நிறையபேர் வந்துவிட்டதுக்கு இவரொரு முக்கிய காரணம். புண்ணாக்கு விற்பவரெல்லாம் தொழிலதிபர் என்று சொல்லிக்கொள்கிற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. சிந்தனையாளர் என்றால் இந்தியாவில் புத்தர், பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள்தான். ஜெயமோகன்கள் இந்த லெவலா என்று உங்கள் மனச்சாட்சியிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.\nதமிழுக்கு பெரும் பங்காற்றியவர் என்று ஜெயமோகன் அவரை அவரே சொல்லிக் கொள்கிறார். சமகால தமிழிலக்கியத்தில் அவர் தவிர்க்கமுடியாதவர் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தே கிடையாது. ஜெயமோகனின் நாவல்களும், சிறுகதைகளும் சிறப்பானவை. வேறெவரையும் விட அதிகமாக உழைத்து அசுரவேகத்தில் நிறைய பக்கங்களை எழுதிக் குவிக்கிறார். இன்னும் ஒரு இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு சிறுபத்திரிகை வாசகர்கள் ஜெயமோகனை நினைவு வைத்திருப்பார்கள். ஆனால் இது மட்டும் தமிழுக்கு பெரும் பங்கு ஆற்றிவிட்டதற்கு போதுமானதல்ல. வெறும் எழுத்து மட்டுமே பங்களிப்பாகிவிடாது இல்லையா எழுத்தை தாண்டி பாரதியார், உ.வே.சா போன்றவர்கள் பங்களித்தார்கள் என்றால் அது ஏற்றுக்கொள்ளத் தக்கது. எழுத்தின் மூலம் சில நிரந்தர வாசகர்களை ஜெயமோகன் பெற்றிருக்கிறார். சினிமாவில் எழுதி நிறைய பணம் சம்பாதிக்கிறார் என்பதைத் தாண்டி ஜெயமோகனால் தமிழ் என்ன வளம் பெற்றிருக்கிறது. தெருத்தெருவாக சைக்கிள் ஓட்டி குழந்தைகளுக்கு தமிழ் கணிமை சொல்லிக் கொடுக்கும் புதுவை பேராசிரியர் இளங்கோவன் போன்றவர்கள்கூட இவ்வளவு கர்வமாக தமிழுக்கு பங்காற்றியதாக சொல்லிக்கொள்வதில்லையே\nசில குறிப்பிடத்தக்க நாவல்களையும், சிறுகதைகளையும், அச்சுபிச்சுவென்று அரசியல் பேசும் கட்டுரைகளையும் எழுதியிருப்பதால் மட்டுமே தமிழுக்கென்றிருக்கும் வரிவடிவம் வேண்டாம் என்று சொல்லும் தகுதி ஜெயமோகனுக்கு வந்துவிடவில்லை. தமிழ் மொழியை சீர்த்திருத்தவும், அடுத்தடுத்த தளங்களுக்கு எப்படி கொண்டுச் செல்லலாம் என்கிற கவலையையும் கல்வியாளர்களும், ஆய்வாளர்களும் ஏற்கனவே பல்லாண்டுகளாக பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக யோசித்து வருகிறார்கள். பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிகளை சமர்ப்பித்தும் வருகிறார்கள். முகுந்த், நாகராஜன் மாதிரி தமிழ் படித்த அடுத்த தலைமுறை இளைஞர்கள், தங்கள் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி எதிர்கால எந்திரங்களில் எப்படியெல்லாம் தமிழை சாத்தியப்படுத்தலாம் என்றும் உழைத்தும் வருகிறார்கள். எனவே தமிழின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு, ஜெயமோகன் முழு ஈடுபாட்டோடு மலையாளப் படங்களுக்கு வசனம் எழுதும் வேலையை பார்க்கலாம்.\nபெரியார் தொடங்கி வா.செ.குழந்தைசாமி வரை இதே யோசனையை சில வேறுபாடுகளுடன் முன்பே சொல்லி விவாதிக்கப்பட்ட கருத்து என்று வ��ிகட்டிய புளுகுமூட்டையை வேண்டுமென்றே அவிழ்த்துவிடுகிறார் ஜெயமோகன். பெரியார் எங்குமே தமிழுக்கு பங்காற்றப் போவதாக சொல்லி எழுத்துச் சீர்த்திருத்தத்தை அமல்படுத்தவில்லை. அவர் பத்திரிகை நடத்தி வந்தவர். அச்சுக் கோர்ப்பதில் ஏற்படும் வீணான செலவையும், நடைமுறை சிக்கல்களையும் உத்தேசித்தே ‘பெரியார் தமிழ்’ உருவானது. ரோமன் போதும். தமிழ் வரிவடிவம் வேண்டாமென்று பெரியாரா சொன்னார் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியின் யோசனை எழுத்து வடிவம் தொடர்பானது. கொம்பு, சுழி போன்றவற்றை நீக்கி எழுத்துகளை எளிமைப்படுத்தும் பட்சத்தில் கற்றல் எளிமையாக இருக்கும். கணினி தொடர்பான எந்திரங்களுக்கு தமிழை கொண்டுவருவதற்கு உதவியாகவும் இருக்குமென்பது பேராசிரியரின் யோசனை. அவர்களுக்கு இணையாக தன்னையும் தானே ஒப்பிட்டுப் பேசுவது அற்பத்தனமின்றி வேறில்லை. சீண்டுவதற்காக சொன்னேன் என்று சொல்லுபவரிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்\nஅடுத்து இந்த யோசனையை சொல்லியதற்காக தமிழகமே பற்றியெரிவது போன்ற மாயையை ஜெயமோகனும், அவரது சிஷ்யக்கோடிகளும் திட்டமிட்டு இணையத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை எங்குமே ஜெயமோகனின் கொடும்பாவி எரிக்கப்படவில்லை. பேரணி நடத்தி ‘ஜெயமோகன் ஒழிக’ என்று யாரும் கோஷமிடவில்லை. இதெல்லாம் நடக்கும் என்பதுதான் ஜெயமோகனின் எதிர்ப்பார்ப்பு. ‘அவர் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டார், அவ்வளவு ஒர்த்தும் இல்லை’ என்று வெறும் கண்டனத்தோடு தமிழர்கள் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் இந்துமுன்னணி ஜெயமோகனை அச்சுபிச்சுவென்று வெறேதோ விவகாரத்துக்காக திட்டி வைத்த ஒரு பேனரை தன் வலைத்தளத்தில் போட்டு, என்னை எப்படியெல்லாம் திட்டுகிறார்கள் பாருங்கள் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.\n‘தி ஹிந்து’ தமிழ் நாளேட்டின் அலுவலகத்துக்கு கூட்டமாகப் போய் கலாட்டா செய்தார்கள், வன்முறை செய்தார்கள் என்றெல்லாம் காமெடி செய்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய தத்துவ மரபின் பிள்ளைகள். பதினைந்து பேர் என்பதை கூட்டமென்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியுமென்றே தெரியவில்லை. இவர்களது ‘சிகரெட் பிடிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது’ சுவிசேஷக் கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கையை பார்த்து பழகிவிட்டவர்களுக்கு பதினைந்து பேர் என்பதும் பெரும் கூட்டமாக தெரிகிறது. தமிழுக்காக அணி திரளவேண்டுமென்றால் லட்சங்களில்தான் தமிழர்கள் அணிதிரள்வார்கள் என்பது வரலாறு.\nதங்களுக்கு மடத்தனமாக பட்ட ஒரு யோசனையை கண்டித்து சம்பந்தப்பட்ட கட்டுரையை வெளியிட்ட நாளேட்டின் ஆசிரியரிடம் கண்டனக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள் சுபவீ தலைமையிலான தமிழார்வலர்கள். இது ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கைதான். இது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்று ஒரு கோஷ்டி ஊளையிடுகிறது. தி ஹிந்து நாளேட்டின் ஆசிரியருக்கு, அன்று கடிதம் கொடுக்க வந்த அனைவருமே பழக்கமானவர்கள்தான். அந்த பத்திரிகையே கூட பதினைந்து பேர் கொண்ட பெரும் கூட்டம் தங்களை அச்சுறுத்தியாக கூறவில்லை. கண்டனக் கடிதம் கொடுக்கவந்தவர்களை மதித்து ஆசிரியரே நேரில் பெற்றுக் கொண்டிருக்கிறார். இம்மாதிரி சர்ச்சைக்குரிய கட்டுரைகளோ, கருத்துகளோ வரும் சமயங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் போனிலோ, நேரிலோ எதிர்வினையை யாராவது செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘நடிகையின் கதை’ தொடர் வந்தபோது, குமுதம் அலுவலகத்துக்கு சண்டை போடும் நோக்கில் வந்த நடிகர்-நடிகையரை அப்போதைய ஆசிரியர் மாலன் வரவேற்று, அவர்கள் தரப்பு நியாயத்தை கேட்டறிந்தார். சமீபத்தில் புதிய தலைமுறை அலுவலகத்துக்கு கூட முன்னூறு பேர் கொண்ட கும்பல் மொத்தமாக லாரியில் வந்திறங்கியது. அவர்களை அழைத்து தன்மையாக பேசி, அவர்கள் தரப்பை கேட்டறிந்து அனுப்பினார்கள். இது வழக்கமாக நடக்கக்கூடிய விஷயம்தான். ‘மாட்டுக்கறி’ மேட்டரில் நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதைப் போன்ற சம்பவமாக பதினைந்து பேர் கூடி கடிதம் கொடுத்ததை ஜெயமோகனின் கும்பல் ஒப்பிட்டுப் பேசுவது விளம்பரவெறியே தவிர வேறல்ல.\nதிடீரென்று பெரியாரின் பகுத்தறிவு என்னானது என்று ஜெயமோகனுக்கு பெருங்கவலை ஏற்பட்டிருக்கிறது. அதை பெரியாரின் விசுவாசிகள் பட்டுக் கொள்வார்கள். ஏதாவது ‘தத்துபித்து’வென்று உளறிக்கொட்டி, அந்த அபத்தத்தை கண்டு ஊரெல்லாம் கைக்கொட்டி சிரிக்கும்போதெல்லாம் இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி ‘நானும் ரவுடிதான்’ என்று ஜீப்பில் ஓடிப்போய் ஏறிக்கொள்வார் ஜெயமோகன்.\nஎதிர்வினை நாகரிகமாக இருக்கவேண்டுமென்று திரும்பத் திரும்ப ஜெயமோகனின் ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், யாராவது அநாகரிகமாக திட்டுங்களேன் என்று கெஞ்சுவதைப் போல இருக்கிறது. ஒரு காட்டுமிராண்டிக்குழு நாகரிகம் பெற்று, அவர்களுக்குள் மொழி உருவாகி, அது சீர்பெற்று, எழுத்துவடிவம் தோன்றி, இலக்கணம் உருவாகி, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு, ஓலைச்சுவடிகளில் இயங்கி, தாள்களில் எழுதப்பட்டு, தட்டச்சில் தட்டப்பட்டு, கணினிகளில் உள்ளீடப்படுவது வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் வாழ்வது என்பது ஒரு மகத்தான வரலாறு. அந்த வரலாற்றை கொச்சைப்படுத்துவதைப் போன்ற கருத்தை வேண்டுமென்றே சீண்டலுக்காக சொல்லுவது என்பது, எப்படியோ தன் பெயரை நல்லபடியாகவோ, கெட்டபடியாகவோ யாராவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற அற்ப எதிர்ப்பார்ப்பே தவிர வேறில்லை.\nசெத்த மொழியான சமஸ்கிருதத்தை இப்போது இந்திய ஞான மரபாளர்கள் ஆங்கில லிபியில் வாசித்து, மனப்பாடம் செய்கிறார்கள். அப்படியிருக்கையில் தமிழை மட்டும் தனி வரிவடிவத்திலேயே தமிழர்கள் இன்னும் வைத்திருக்கிறார்களே என்கிற பொச்செரிச்சல்தான் இந்த ‘எழுத்துரு’ யோசனைக்கு பின்னாலிருக்கும் நிஜமான சூட்சுமம் என்று நாம் கருத வேண்டியிருக்கிறது.\nபோனவாரம் ஏதோ ஒரு சேனலில் நைட்ஷோவாக ‘எங்க சின்ன ராசா’ பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதே கிளுகிளுப்பை உண்டாக்கும் தன்மை வேறெந்த படத்துக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான். இவ்வளவு துல்லியமான விவரணைகள் கொண்ட காட்சிகளை அமைக்கும் இயக்குனர் இனிமேல் புதிதாக பிறந்துதான் வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் பாக்கியராஜ்.\nபாக்கியராஜின் சின்னம்மாவாக நடித்த சரஸ்வதியின் நடிப்பு ரோபோத்தனமாகவும், மேக்கப் மாறுவேடப்போட்டி தரத்திலும் இருந்ததைத் தவிர்த்து பெரிதாக குறைசொல்ல வேறெதுவுமில்லை. படம் வெளியாகி இருபத்தாறு ஆண்டுகள் கழித்தும் இன்னும் ‘கொண்டச் சேவல்’ காதுக்குள்ளே கூவிக்கொண்டே இருக்கிறது. ‘மாமா உனக்கொரு தூதுவிட்டேன்’ மாதிரி மெலடியெல்லாம் இனிமேல் சாத்தியமாகுமா தெரியவில்லை. எனக்கு ஃபேவரைட், க்ளைமேக்ஸ் ஜில்பான்ஸான ‘தென்பாண்டி சீமை ஓரமா’தான். மியூசிக் சேனல்களில் காணக்கிடைக்காத இந்த பாட்டுக்காகவே எப்போது படம் போட���டாலும் முழுசாக பார்த்துவிடுவது உண்டு. பாக்யராஜின் காஸ்ட்யூமும், டான்ஸும் பக்காவாக அமைந்த பாடல் இது.\nரொம்ப நாட்களாகவே இப்படத்தின் இசை இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் பிரமாதமாக இருந்தால் அது இளையராஜாவாகதான் இருக்கும் என்கிற பொதுப்புத்திக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. சங்கர் கணேஷ் என்று கொஞ்ச வருஷம் முன்புதான் தெரிந்தது. ‘கொண்டச்சேவலாக’ ஹிட்டடித்ததைவிட, இந்தி ‘பேட்டா’வில் ‘கோயல் சி தேரி போலி’யாகதான் அந்த ட்யூன் மரண ஹிட்.\nமுதன்முதலாக இந்தப் படத்தை பார்த்தபோது (அப்போ பத்து வயசு தான்), ராதாவின் இளமைக் கொந்தளிப்பை கண்டு வியந்து அசந்து விட்ட ஜொள்ளின் ஈரம் இன்னமும் காயவில்லை. இப்போது படத்தைப் பார்க்கும்போது அதே அளவிலான ஜொள்ளு வடிகிறது எனும்போது என் இளமை மீதான தன்னம்பிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘தாலி குத்துது. கழட்டி வைடி’ என்று பாக்யராஜ் சொல்லும்போது புரியாமல், சின்ன வயசில் ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தது. பின்னாளில் அனுபவப்பூர்வமாக அதே சூழலை எதிர்கொள்ள நேரிட்டபோதுதான், பாக்யராஜ் ஏன் எண்பதுகளில் தமிழ்ப்பெண்களின் ‘ஐடியல் ஹஸ்பண்ட்’ ஆக பார்க்கப்பட்டார் என்பது புரிகிறது.\nவயக்காட்டில் வேலை பார்க்கும் பாக்யராஜ், வேலைக்கு இண்டர்வெல் விட்டு கிணத்துமேட்டு ஷெட் ரூமில் ‘மேட்னி ஷோ’ ஆடுவதை பார்க்கும்போது இப்போதும் வெட்கம் வருகிறது. க்ளைமேக்ஸில் வரும் வாய்ஸ் ஓவர் பார்த்திபனுடையது. படம் முழுக்கவே டயலாக்கில் பாக்யராஜ் பிச்சி உதறியிருந்தாலும், ராதா வாந்தியெடுத்ததுமே அவர் சொல்வதுதான் ஹைலைட்டான டயலாக். “யோவ் மண்ணாங்கட்டி. மாமனார் வீட்டுக்குப் போயி மாப்பிள்ளையோட இந்த வீரதீர செயலை சொல்லிட்டு வாய்யா”\nயதேச்சையாக இன்று ‘எங்க சின்ன ராசா’வை கூகிளிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, இது கன்னட ரீமேக்காம். 1969ல் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் ராஜ்குமாரும், சரோஜாதேவியும் நடித்திருக்கிறார்கள். சரோஜாதேவியை கிணத்துமேட்டு ரூமில் ராஜ்குமார் எப்படி புரட்டியெடுத்திருப்பார் என்பதை கற்பனை செய்துப் பார்த்தாலே பகீரென்று கலங்குகிறது அடிவயிறு. ராஜ்குமாருக்கு மூக்கு வேறு முழ நீளத்துக்கு தும்பிக்கை மாதிரியிருக்கும்.\n1981ல் ஜீதேந்திரா – ஹேம��ாலினி ஜோடியாக நடித்து ‘ஜோதி’யாக இந்தியிலும் வந்திருக்கிறது. நம்மாளு ‘எங்க சின்ன ராசா’வாக்கி எட்டுத் திக்கும் வெற்றிமுரசிட்ட பிறகு மீண்டும் இந்தியில் அனில்கபூர், மாதுரிதீக்ஷித் நடிப்பில் ‘பேட்டா’வானது (‘தக்கு தக்கு கர்னே லகா’ மார்பை தூக்கி தூக்கி மாதுரி பாடும் பாட்டு நினைவிருக்கிறதா அப்போதெல்லாம் சூப்பர்ஹிட் முக்காப்புலாவில் எப்பவுமே டாப்பில் இருக்கும்). தெலுங்கில் வெங்கடேஷ்-மீனா நடித்து ’அப்பாய்காரு’, கன்னடத்தில் மீண்டும் ரவிச்சந்திரன்-மதுபாலா இணைந்து ‘அன்னய்யா’, கடைசியாக 2002ல் ’சந்தன்’ என்று ஒரியாவிலும் இதே ஸ்க்ரிப்ட் தேய தேய ஓடியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாமே வெற்றிதான். ஒரே ஸ்க்ரிப்ட் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, எடுக்கப்பட்டபோதெல்லாம் ‘ஹிட்’டிக்கொண்டே இருந்திருக்கிறது என்பது இமாலய ஆச்சரியம். மறுபடியும் யாராவது இன்றைய வடிவில் ரீமேக்கினாலும் ஹிட்டு நிச்சயம்.\nமிக சாதாரணமான ஒன்லைனரை கொண்ட இந்த ஸ்க்ரிப்ட் எப்படி தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே குவித்துக்கொண்டிருக்கிறது என்று ஆழமாக யோசித்தால், மிகச்சுலபமாக அந்த வெற்றி ஃபார்முலாவை கண்டுபிடித்துவிடலாம். செண்டிமெண்ட் + க்ரைம் + செக்ஸ். இந்த சமாச்சாரங்கள் இல்லாமல் எடுக்கப்படும் படங்கள் வெற்றியடைந்தால், அதற்கு வேறு ஏதோ சிறப்புக் காரணங்கள் இருக்கக்கூடும். வெற்றியடைந்த படங்கள் எல்லாவற்றிலுமே இது இருந்திருக்கிறது என்பதை மல்லாக்கப் படுத்து யோசித்தால் உணர்ந்துக் கொள்ளலாம்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://azeezbaqavi.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-07-19T11:18:11Z", "digest": "sha1:BPPWOF6KYKZHFC5O6MTX46LFTTO2CCRM", "length": 6954, "nlines": 79, "source_domain": "azeezbaqavi.blogspot.com", "title": "COVAI ABDUL AZEEZ BAQAVI : ஒரு முஹர்ரம் அனுபவம்", "raw_content": "\nஇஸ்லாம்,முஸ்லிம் சமுதாயம் சார்ந்த பதிவுகள்\n15 வருடங்களுக்கு முன் ஒரு ஆஷூரா நாளன்று மாலை ஒரு வீட்டிற்கு துஆ வுக்கு அழைக்கப்பட்டேன்.\nஅந்த வீட்டில் டைனிங் டேபிளில் பேப்பர் விரித்து அதில் முழுக்க மணலை பரப்பி அதன் நடுவில் மூன்று செம்புக்களில் பூமால��� சுற்றி பால் தண்ணீர் ஜூஸ் மூன்றும் வைத்திருந்தார்கள். மணலில் சந்தணம் தெளிக்கப்பட்டிருந்தது.\nஎனக்கு ஒன்றும் புரிய்வில்லை. நெடுநேரம் கழித்த பிறகு தான் கர்பலா களத்தை அவர்கள் \"செட்\" செய்திருப்பது புரிந்தது.\nஆசூரா நாட்களில் கர்பலாவைப் பற்றி இமாம்கள் பேசுவதே மக்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம் என்று புரிய வந்தது. அதன் பிறகு ஆசூரா வின் சிறப்பிற்கும் கர்பலாவிற்கும் சம்பந்தமில்லை என்பதை வலியுறுத்த்த ஆரம்பத்தேன். மக்களில் பலரும் தாங்கள் இத்தனை காலமாக ஆஷீரா என்றால் ஹுசைனாரின் நாள் என்று கருதிக் கொண்டிருந்த்ததாக தெரிவித்தனர்.\nஆஷூரா அன்று மேற்சொன்ன அனுபவம் கிடைத்தற்கு அடுத்த வாரமே மஹல்லா மக்களை குடும்பத்தோடு அழைத்து இனிமேல் எதை செய்வதாக இருந்தாலும் தீனின் கருத்தை அறிந்து செய்யுங்கள் என்று அறிவுறுத்தினேன். அல்லாஹ்வின் கிருபையால் நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு விசயத்திற்கும் இமாமின் கருத்தை அறிந்து செயல்படுகிற பழக்கம் மக்களிடம் ஏற்பட்டது.\nகர்பலா இஸ்லாமிய வரலாற்றில் நடந்த மிகுந்த துன்பமான ஒரு அரசியல் நிகழ்வு என்றாலும் அதைப் பற்றி அதிகமாக பேசுவது வழி தவறிய ஷியாக்களின் நடைமுறைகளுக்கு வலுவேற்றுவதாக அமைந்து விடும் என்று நான் கருதுகிறேன்.\nLabels: ஒரு முஹர்ரம் அனுபவம்\n2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : இலை பரப்பிய அலை (1)\nஇது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார். (1)\nஉமர் பின் கத்தாப் (ரலி): உத்தம அரசியலின் அரிச்சுவடி (1)\nஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள் (1)\nஒரு முஹர்ரம் அனுபவம் (1)\nகதீஜா பின்து குவைலித் : எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி (1)\nகாதியானியும் கண்ணம்மா பேட்டையும் (1)\nகீரனூரி - பெருவாழ்வின் சொந்தக்காரர். (1)\nதாராபுரத்தில் குஜராத்திய முன்னோட்டம் (1)\nதிருமணப் பதிவுச் சட்டம் (1)\nபாபரீ மஸ்ஜித வழக்கின் தீர்ப்பு (1)\nபெண்களுக்கான இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும் (1)\nமக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை (1)\nமாற்றத்தை நோக்கி சிறுபான்மை அரசியல் (1)\nஜம்மு இறக்குமதி செய்யப்படும் இந்துத்துவ தீவிரவாதம் (1)\nஷேர் மார்க்கெட் வர்த்தகம் பற்றி (1)\nஹஜ் வியாபாரம் - பக்தியில் ஒரு சுரண்டல் (1)\nவெள்ளி மேடை منبر الجمعة\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kamalalayan.blogspot.com/2015/03/", "date_download": "2018-07-19T11:04:24Z", "digest": "sha1:G46SLJYQ3DQGH2ZXEQDIW54ZOCRMULCO", "length": 5234, "nlines": 80, "source_domain": "kamalalayan.blogspot.com", "title": "என் சிந்தனைகள்: March 2015", "raw_content": "\nஇலக்கியத்தின் பயன் என்ன என்பது குறித்து எப்போதும் ஏராளமான கருத்துகள் காலம் காலமாக இலக்கிய வாதிகளாலும் விமர்சகர்களாலும் கூறப் பட்டு வருகின்றன.முதல் நாவல் ஆசிரியர் மாயவரம் முன்சீப் வேதநாயகரின் கருத்துப்படி \"சுவையும்,பயனும் அளிப்பது எதுவோ அதுதான் இலக்கியம் \".ஆனால் இன்று நவீன இலக்கியவாதிகள் இக்கருத்தில் பெரும்பாலும் உடன்படுவதில்லை.எழுத்து இந்த சமூகத்தின் எந்த அம்சத்தையும் எந்த விதத்திலும் மாற்றியமைக்கப் போவதில்லை என்பது அவர்கள் கருத்து.இலக்கியம் நேரடியாக எந்த மாற்றத்தையும் கொண்டு வரச் சக்தியற்றதாக இருக்கலாம்.ஆனால்,சமூக மாற்றம் வேண்டிப் போராடும் போராளிகளுக்கு உத்வேகம் அளிப்பது,உந்து சக்தியாக இருப்பது இலக்கியமே.உலகெங்கிலும் பெரும் புரட்சியாளர்கள் தங்கள் பணிகளுக்கு உத்வேகம் அளித்த சக்திகளில் முதல் இடத்தைப் புத்தகங்களுக்கு குறிப்பாக மாபெரும் இலக்கியப் படைப்புகளுக்கே அளித்து வந்திருப்பதை நாம் பார்க்க முடியு.ம் .அங்கிள் டாம் இன் காபின் என்ற நாவல் அமெரிக்க கறுப்பின அடிமைகளின் விடுதலைக்கு வித்திட்டது.கார்க்கியின் \"தாய்\"நாவல் சோவியத் ரஷ்யாவின் புரட்சியில் ஆற்றிய பங்கு உலகறிந்த ஒன்று.வால்டேரும் ரூச்சோவும் பிரெஞ்சுப் புரட்சியின் பெரு நெருப்பில் எண்ணெய் வார்த்த இலக்கியவாதிகள்.இப்படி உலகம் முழுவதும் இலக்கியம் ஆற்றிய பங்கு குறித்த எடுதுக்காட்டுகளைப் பார்க்க முடியும்.பார்க்க வேண்டும்.\n'என்னை பற்றி'யின் கீழ் எனது விவரங்கள்..\nஎனது புத்தகங்களில் இருந்து.. (4)\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://solvendhan.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-07-19T11:05:16Z", "digest": "sha1:56AAGKVHO4XRBQEW6VWOEMXS5OJLCPUK", "length": 37731, "nlines": 159, "source_domain": "solvendhan.blogspot.com", "title": "சொல்வேந்தன் சிந்தனைத் துளிகள்: ஜோதிடமும் சோதனையும்", "raw_content": "\nமகாபாரதம், இராமாயணம், கந்தபுராணம் போன்றவற்றை சிறுவயதில் நான் தேவாங்கர் செம்மல் வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி (சேலம்) அவர்களின் பிரசங்கம் மூலமே முழுமையாக அறிந்து கொண்டேன். அவரின் விரிவான விளக்கமான அலசல்களே புராணங்களின் பால் என்னை கவர்ந்திழுத்தவை. அவரை எனது முதற்குரு என்று சொன்னாலும் மிகையாகாது.\nபிப்ரவரி 8 ஆம் தேதி அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழாவில் கும்பாபிஷேகம் என்றால் என்ன அதை ஏன், எப்படி, எதற்கு செய்கிறோம் என விளக்கவுரையுடன் ஒவ்வொரு சடங்குகளையும் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்,\nஒரு இடைவேளை கிடைத்தபோது என்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவரின் மருமகன் புலவர் கி.பிள்ளார் செட்டி அவர்கள் என் ஆசிரியர் என்பதால் இன்னாரின் மாணவன் என எளிதில் அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது. பின்னர் அவர் எழுதிய தேவாங்க சிந்தாமணி பற்றிய எனது நன்றியினைச் சொல்லிக் கொண்டேன். வாழ்வில் பல கட்டங்களில் அந்நூல் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறதென்பதால் அதற்குரிய நன்றியை தெரிவித்துக் கொண்டு தற்பொழுது அவர் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார் என விசாரித்தேன்.\n“தேவாங்க பாரதம்” என்ற நூலை எழுதுவதில் ஈடுபட்டுள்ளதாகச் சொன்னார். மகாபாரதத்தின் மூல ஓலைச் சுவடிகள் சேலத்தில் ஒரு மடத்தில் இருப்பதாகவும், அதைக் கொண்டே இராஜாஜி தலைமையில் பலர் ஒன்றிணைந்து ஆராய்ந்து கும்பகோணம் மஹாபாரதப் பதிப்பு தொகுத்து வெளியிடப்பட்டதாக சொன்னார். அந்த மூல ஓலைச் சுவடிகளின் ஆய்வில் அவர் தற்போது ஈடுபட்டிருப்பதாகவும், அதில் இருக்கும் எங்கள் குல முன்னவரான தேவலர் மற்றும் தேவாங்கர் குலச் சிறப்புகளை வெளிக் கொணர ஆய்வுகள் செய்து கொண்டிருப்பதாக விவரித்துக் கூறினார்.\nஅப்பொழுதுதான் நான் செய்த சிறிய ஆய்வான பாரதப் போர் நடந்தது ஆடி மாதமா மார்கழி மாதமா ஓர் ஆய்வு. என்ற கட்டுரையை அவரிடம் கொடுத்து அவர் கருத்தை அறிய வேண்டும். நான் எடுத்தாண்ட தகவல்கள் மூல ஓலைகளில் எப்படி உள்ளன என்று அறிய வேண்டிய ஆவல் உண்டானது. அவரிடம் விஷயத்தை விவரித்தேன்.\nஅவர் சொன்னது மார்கழி மாதத்தில் தான் போர் நடந்தது என்று பண்டிதர்கள் சொல்லி இருப்பதைச் சொன்னா. நான் என் கட்டுரையின் கோணமான கிரக நிலைகளைப் பற்றி விளக்கினேன். சூரிய / சந்திரன் ரோகிணியில் இருக்கும் பொழுது வரும் அமாவாசை வைகாசியில் தானே வரும் என்பதையும், செவ்வாய் வக்கிர கதி விளக்கம், மற்றும் சுக்கிரன் நிலை பற்றியும் விளக்கினேன். பிறகு நான் எடுத்துள்ள ஆத���ரம் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் \"மஹாபாரதம்\" ஆங்கில மொழி பெயர்ப்பு, அதன் தமிழாக்கத்தில் ஈடுபட்டுள்ள அருட் செல்வப் பேரரசு பற்றியும் விளக்கினேன். அதன் பின்பு கிருஷ்ணர் தூது சென்ற ஸ்லோகத்தின் பொருள்படி கிருஷ்ணர் கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் புறப்பட்டார் என்று வருகிறது. ரேவதி நட்சத்திரம் கார்த்திகை மாதம் வளர்பிறை 12 ஆம் நாள்தான் வரும். அந்தக் கணக்குப்படி பார்க்க, கிருஷ்ணன் தூது நடக்க 13 + 8 நாட்களை கூட்டினாலேயே மார்கழி பிறந்து விடுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினேன். அதன் பின்னர் கிருஷ்ணர் திரும்பி போர் ஆரம்பித்திருந்தால் போர் தை மாதம் அல்லவா ஆரம்பித்திருக்கும் என கொக்கியைப் போட்டேன்.\nஅதன் பின்னர் பீஷ்மர் சொன்ன ஸ்லோகத்தைக் குறிப்பிட்டேன்\nஅஷ்ட - எட்டு பஞ்ச - ஐந்து சதம் - நூறு\n158 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்ததாக பீஷ்மர் சொல்லுகிறார் என்று எனக்குப் படுகிறது, ஆனால் மொழி பெயர்ப்பாளர்கள் ஏன் 58 நாட்கள் என்று சொல்லுகிறார்கள் எனப் புரியவில்லை என்றும் கேட்டேன்.\nஅப்பொழுது அவருக்கு ஓய்வு நேரம் முடிந்து விட தன் பிரசங்கத்தைத் தொடரச் சென்றார்.\nபிரசங்கம் செய்ய ஆரம்பித்தவர், எடுத்தவுடனேயே, தன்னுடைய மருமகன் புலவர் கி,பிள்ளார் செட்டி அவர்களின் மாணவன் நான் என்பதைப் பொதுவில் அறிமுகப்படுத்தி, பின்னர் இன்று இந்த சிறுபிராயத்தவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது, நிறைய ஆணித்தரமான வாதங்களுடன் ஜோதிடம், கிரக நிலைகள் எல்லாம் சொன்னார். நான் வயதானவன். என்னால் இவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா என பீடிகைப் போட்டுவிட்டு...\nஇப்பொழுது நான் ஒரு கதை சொல்லப் போகிறேன் என்று ஆரம்பித்தார்,\nஒரு காலத்தில் ஒரு நாட்டு அரசனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்தவுடன் அந்த நாட்டில் இருந்த மிக உயர்ந்த ஜோதிட ஆசானை அழைத்த மன்னன், குழந்தையின் ஜாதகத்தைக் கணித்துச் சொல்லச் சொன்னான்.\nஜோதிடர் சொல்லிவிட்டுப் போன பிறகு மன்னனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இதே நேரத்தில் பிறந்த அத்தனைக் குழந்தைகளுக்கும் இந்த யோகம் இருக்குமல்லவா அவை தன் மகனின் பாதையில் குறுக்கிடக் கூடாதே என்று கவலை வந்தது. உடனே அந்த நேரத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொல்ல ஆணையிட்டான்.\nஆசான் ஜாதகம் கணித்துவிட்டு மன்னனிடம், மன்னா இந்த உங்களுடைய மகனுக்கு ஒரு யோகம் இருக்கிறது. இவன் உங்களைப் போல பலமடங்கு உயர்ந்தவனாக ஒரு பேரரசசானகத் திகழ்வான் எனச் சொன்னார்.\nமொத்தம் ஐந்து வேறு குழந்தைகள் பிறந்திருந்தன. நான்கு குழந்தைகளை வீரர்கள் கொல்ல, ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு அதன் தந்தை தலைமறைவாக அண்டை நாட்டுக்கு தப்பியோடி விட்டான்.\nஇத்தோடு கதையை நிறுத்திய அவர் இப்பொழுது தாமரைச் செல்வனுக்கு இந்தக் கேள்வி...\nஇருபத்தி ஐந்து ஆண்டுகள் ஓடின. ஜோதிடர் சொன்ன மாதிரியே மன்னன் மகன் பேரரசன் ஆகிவிட்டான். ஜோதிடரின் சீடனுக்கு தப்பிப் போன அந்தக் குழந்தை என்ன ஆகியிருக்கும் என யோசனை வந்தது. ஜோதிடரிடம் அவன் வினவ ஜோதிடரும் அவனும் தீவிரத் தேடலின் மூலம் அந்தக் குழந்தை இருக்குமிடம் அறிந்து அவனைப் பார்க்கப் போனார்கள்.\nஅங்கே அவன் நாடக மேடையில் ஒரு அரசனாக நடித்துக் கொண்டிருந்தான், சகல பரிவாரங்களோடு.\nஇரவு வீட்டுக்குத் திரும்பும்போது இல்லாள் உங்களுக்கு இது அவசியமா என்று கேட்க, நான் விளக்கினேன்.\nஒரே நேரத்தில், ஒரே கோள் அமைப்புகளுடன் பிறந்த அவர்களில் ஒருவன் நிஜ ராஜாவாகவும் இன்னொருவன் நாடக ராஜாவாகவும் இருக்கிறான். அப்படியானால் அவன் விஷயத்தில் யோகம் ஏன் பலிதம் ஆகவில்லை. அல்லது அந்த ஜோதிடமே தவறா இந்தக் கேள்விக்கான பதிலை நாளை எனக்கு அவர் தரவேண்டும் என விண்ணப்பித்தார்.\nசட்டென்று நானும், உங்களின் உத்தரவு நாளை பதில் தரவேண்டும் என்பதால் நாளை பதிலுடன் வருகிறேன் என்று பணிந்தேன்.\nஇவரிடம் தாங்கள் முனைவர் பட்டம் பெறுவதற்காக பலர் வந்து உதவி பெற்று பட்டம் பெற்று உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் செய்நன்றி யறியா பலரை இவர் பார்க்க நேர்ந்ததைப் பற்றி தன்னுடைய புத்தகங்களில் எழுதி இருக்கிறார். ஒரு பெரிய விசயத்தைப் பற்றிப் பேசும் பொழுது அவர் என்னைப் பற்றிப் புரிந்து கொள்ள விரும்புகிறார் என நினைக்கிறேன். எனக்கு அப்பொழுதே பதில் தெரியும் என்றேன்.\nஎன்ன பதில் என்பதையும் என் மனைவிக்கு விளக்கினேன். மனைவி அப்படியானால் உடனே பதில் சொல்லி இருக்கலாமே என்றாள்.\nநாளை இக்கதையை அவர் மீண்டும் சொன்னால், அவர் விருப்பப்படியே பதிலளிப்பேன் என்றேன்.\nஅவர் எனக்கு ஒரு நாள் அவகாசம் அளித்திருக்கிறார். அப்பொழுதே நான் பதில் அளித்தால் அது முரட்டுத்தனமாகி விடும். அவர் நாளை பதில் அளிக்கச் சொல்ல சரியான காரணம் இருக்கிறது, நாளை கும்பாபிஷேகம் நடக்கும். நாளை ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். அந்நேரத்தில் அந்தப் பதில் வரவேண்டும் என்பது அவரின் எண்ணமாகவும் இருக்கலாம் அல்லது ஆண்டவன் சித்தமாகவும் இருக்கலாம்.\nமறுநாள் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவரது பிரசங்கம் மீண்டும் ஆரம்பமானது. நான் ஒரு ஓரத்தில் அமர்ந்து அங்காள பரமேஸ்வரியின் அற்புதங்கள் என்ற அந்தப் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஒரு இடத்தில் நிறுத்திய அவர் மீண்டும் அந்தக் கதையைக் கூறினார்.\n கதையைக் கூறி விட்டு இதை நமது அம்மனின் அருளுக்குப் பாத்திரமான நண்பர் தாமரையிடம் விடுவிக்கக் கேட்டிருந்தேன் என்றார்.\nநான் எழுந்து முன்னே வந்தேன். ஐயாவின் உத்தரவிருந்தால் விடுவிக்கக் காத்திருக்கிறேன் என்றேன்.\nஅவர் மீண்டும் கூட்டத்திற்கு என்னை அறிமுகம் செய்தார். தன்னுடைய மருமகனின் மாணவன் என்று சொல்லி ஒலிவாங்கியை என்னிடம் ஒப்படைத்தார்.\n“ஐயா நான் உங்கள் மருமகனின் மாணவன் என்பதை விட, இன்னொரு சிறந்த அறிமுகம் உண்டு எனக்கு, நான் சிறுவயதில் இருந்தே உங்கள் பிரசங்கங்கள் கேட்டு வளர்ந்தவன்.\n1977 ஆம் டிசம்பர் மாதம்.. மார்கழி காலை பிரசங்கத்தின் போதுதான் முதன் முதலாக உங்கள் குரலைக் கேட்டேன்.\nஆழியில் புக்கு முகர்ந்து கொடு.. அதாவது கடலில் இறங்கி அதில் ஒரு குவளையேனும் அள்ளி உலகிற்குக் கொடு என்பதையே சிரமேற் கொண்டு, “வைணவக் கடலாகிய” உஙகளிடம் பெற்ற சிறு அறிவு எனக்கு தெளிவிப்பதைச் சொல்கிறேன்.\nஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்... ஆழியில் புக்கு முகர்ந்து கொடு என்ற உங்கள் குரல் இன்னும் காதில் அப்படியே இருக்கிறது.\nஇந்தக் கதையை கேள்விகளின் மூலமே அலசலாம்.\nஒரு நேரத்தில் ஆறு குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஆறும் வெவ்வேறு இடத்தில், குலத்தில், செல்வாக்கில் பிறந்தன.\nஜாதகம் மட்டுமே எல்லாம் என்றிருந்தால் ஸ்தான பலங்களின் படி எல்லா குழந்தைகளும் அரச குடும்பத்தில் மட்டுமே அல்லவா பிறந்திருக்க வேண்டும்\nஉலகில் ஒரே சமயத்தில் பல்வேறு ஆன்மாக்கள் பிறவி எடுக்கின்றன. புழு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என பல உயிர்களும் பிறக்கின்றன. இதற்குக் காரணம் என்ன\nஆக முக்கியக் காரணம் என்ன வென்றால் அது ���ர்மபலன் ஆகும். கர்மபலனின் படியே ஒருவன் அரச குடும்பத்திலும் பிறர் பிறகுடும்பங்களிலும் பிறந்தனர்.\nஆக ஜாதகமே, கிரக நிலைகளே எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் என்ற வாதம் அதனோடே முடிந்து போகிறது.\nஅப்படியானால் கிரகங்கள், கிரக நிலைகள், ஜாதகம் இவற்றின் பலன் என்ன என்பது என்பது அடுத்த கேள்வி.\nஜாதகன் தன் பிதாவை விட 10 மடங்கு சிறப்புறுவான் என்பான். இது பித்ருஸ்தானத்தை விட ஜென்மஸ்தானம் வலிமையாக விளங்குவதைக் கொண்டு அறியப்படுகிறது.\nகிரகங்கள் உபகாரணமாக அமைகின்றன, கர்மபலனை அடைய அவை உதவுகின்றன அவ்வளவே. உங்கள் கர்மபலன்கள் மூல காரணம். கிரகங்கள் அவற்றின் உபகாரணம்.\nஇதை விளக்கவே இந்தக் கதை உதவுகிறது, இந்தக் கதையின்படி யோகம் எப்படிப் பட்டது என்றால்,\nபிதாவின் நிலை 10 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 10 = 100\nஇதைக் கணிதத்தைக் கொண்டு எளிதாக விளக்கலாம்.\nமிச்சம் நான்கு குழந்தைகளின் அப்பாக்கள் அரசனுக்காக உயிர்விடும் / உயிர்விட்ட சிப்பாய்கள். ஆக அவர்களின் குழந்தைகளும் பேரரசு ஆசை கொண்ட அரசனுக்காக பிறந்த உடனேயே உயிர் கொடுத்தார்கள்.\nபிதாவின் நிலை 1 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 1 = 10\nபிதாவின் நிலை 0 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 0 = 0\nஅரசனின் மகன் 10 மடங்கு உயர்ந்து பேரரசன் ஆனான்.\nஆக கர்மபலனின்படி 6 குழந்தைகள் பிறக்கின்றன.\nநாடக ராஜாவின் அப்பா, சிறு வேஷங்களில் நடிக்கும் நடிகன். அவன் மகனும் 10 மடங்கு உயர்ந்து ராஜபார்ட் ஆனான்.\nஒரு சின்ன இழை இத்தனைச் சம்பவங்களையும் கோர்த்து இருக்கிறது. அரசனுக்கு சந்தேகம் வந்தபோது அவன் அதை உடனடியாக ஜோதிடரிடம் அந்தச் சந்தேகத்தைக் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை.\nஆக கிரக பலன் என்பது நாம் எப்படி நமது கர்ம பலன்களை அனுபவிக்கப் போகிறோம் என்பதைக் காட்டுகிறது. அது நமது கர்ம பலன்களை காட்ட முடியாது. அதை ஜோதிடர்கள் குறிப்பாலும் தன் ஞானத்தாலும் மட்டுமே அறிய முடியும்.\nஇப்பொழுது இன்னும் சற்று ஆழ நோக்குவோம்.\nதன்னைப் போலவே இன்னொரு அரசனின் மகன் மட்டுமே இப்படி ஒரு அமைப்புடன் பிறந்திருக்க முடியும் என அவன் எண்ணி இருக்கலாம் எண்ணவில்லை. அப்படி எண்ணி இருந்தால் மற்ற நாட்டு மன்னர்களுடன் ஆரம்பத்திலேயே பகை வ ஏற்பட்டு அரசனின் மகன் இறக்க நேரிட்டிருக்கலாம்.\nகீதையில் ஞான யோகத்தை விட எளிதானது கர்ம யோகம் என்கிறான் கண்ண���். காரணம் இந்த மாயைதான்.\nஅதையும் விட்டு தன் மகனின் எதிரிகளைக் களைந்து விட வேண்டும் என முடிவெடுத்தான் அல்லவா அதுதான் மாயையின் விளைவு. அந்த ஒரு சின்ன மாயையால் ஆறு ஜாதகர்களும் அவர்களுக்கு உரிய பலன்களைப் பெற்றார்கள்.\nஆக அந்த யோகம் ஆறு பேர் விஷயங்களிலும் பலித்தது. கிரகபலன்கள் வெவ்வேறாகத் தோன்றினாலும் ஒரே மாதிரியாகவே இருந்தன. இந்தத் தோற்ற மயக்கம் நமக்குப் பல நேரங்களில் நடக்கிறது.\nநாம் செய்யும் ஒரு செயல் நல்லதா கெட்டதா என்பது இம்மாயையால் நமக்குத் தெரிவதில்லை.\nஅதனாலேயே கர்மத்தை மட்டுமே செய் என்கிறான் பகவான். நம் மனமெனும் தேரின் சாரதியாக மனசாட்சியாக கண்ணனே வீற்றிருக்கிறான். அந்த மனசாட்சி சொல்வதை மட்டுமே கேட்டு அந்தச் செயல்களைச் செய். அவற்றால் உண்டாகும் பலன்களைப் பாராதே. அவை மாயையின் காரணமாக நல்லவையாகவோ அல்லது கெட்டவையாகவோ தோன்றலாம். அதன் விளைவு உனக்கு இழப்பாகவோ அல்லது இலாபமாகவோ தோன்றலாம். ஆனால் அவை அத்தனையும் மாயை. பலரின் கர்மபலன்களை பிணைக்கும் மாயவலை. அதில் மனசாட்சியில் அமர்ந்த ஆண்டவனின் சமர்ப்பணத்திற்கு உன்னை ஆட்படுத்திக் கொள். உனது கர்ம வினைகள் அத்தனையும் தானே அற்றுப் போய் அவன் விருப்பப்படி அவனடி சேர்வாய்,\nஆக இக்கதை எனக்குத் தெளிவாக்கிய நீதி\nகிரகங்கள் நமது வழியைத் தீர்மானித்தாலும் நமது இலக்கை நம் கர்மாவே தீர்மானிக்கிறது.\nஆகவே நம் மனத்தில் சாட்சி பூதமாக அமர்ந்திருக்கும் இறைவனின் வழிகாட்டுதல்படி வெற்றியோ, தோல்வியோ, நன்மையோ, தீமையோ கர்மங்களை தயங்காமல் விருப்புடன் செய்வோம். அதுதான் உய்ய ஒரே வழி...அத்தனைக் கர்மங்களையும் அது தொலைத்து முக்தி அளிக்கும் எளிய வழி அதுவே”\nவிடையைச் சொன்ன பிறகு ஐயா தன் உரையைத் மீண்டும் தொடங்கினார்..\nவாதம் என்று ஒன்று உண்டு.. விதண்டாவாதம் என்று ஒன்று உண்டு..\nவாதம் என்றால் சத்தியம் வெளிப்படும். நான் எழுப்பிய கேள்விக்கு கி்ட்டத்தட்ட சரியான விடை அளித்து தான் விதண்டாவாதி அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் தாமரைச் செல்வன்,\nவிதண்டாவாதம் என்றால் சண்டை வெளிப்படும்\nஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஐந்தாம் இடத்தைச் சொல்லுவார்கள். லக்கினத்தில் இருந்து ஐந்தாம் பாவகம் பூர்வ புண்ணியம் எனப்படும் . இந்த ஸ்தான பலம் நோக்கப்படும். ஜன்ம ஸ்தானத்தின�� பலமும் நோக்கப்படும்.\nஇதே போல் ஒன்பதாமிடம் என்பது ஒன்பதாம் பாவத்தை பிதா(தகப்பனார்) ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், என்று சிறப்புடன் அழைக்கப்படும்.\nஇந்த யோகம் பலனளிக்க ஜென்ம லக்ன பலமும், பூர்வ புண்ணிய பலமும் தேவைப்படுகிறது. அப்பலன் இல்லாவிடில் யோகம் பலனளிக்காது என யோகங்கள் பற்றிய தன் விளக்கத்தையும் அளித்தார்.\nபத்தாம் பாவத்தை ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், என்று சிறப்புடன் அழைக்கப்படும். இந்த பத்தாம் பாவம் அமைந்த ராசியதிபதி கர்மாதிபதி என்று அழைக்கப்படுவார்.\nஇந்த ஒன்பதாம் இடம் மற்றும் பத்தாம் இட அமைப்பினால்தான் இந்த யோகம் உண்டாகிறது.\nஅவர் நினைத்திருந்தால் என்னை தவிர்த்திருக்கலாம். எதையாவது சொல்லித் தட்டிக் கழித்திருக்கலாம். அல்லது என்னை பின்னர் வரச் சொல்லி இருக்கலாம்.\nஅதன் பிறகு பிரசங்கம் முடிந்த பின்னர், என்னை அழைத்து தன் முகவரியை அளித்து மூன்று மாதங்களுக்குப் பின் என் குறிப்புகளை கொண்டு வந்து அளிக்கச் சொன்னார்.\nஎன்னைச் சோதித்ததும் அல்லாமல் எனக்கும் ஒரு அறிமுகத்தை உண்டாக்கித் தந்தார். தான் செலவிடும் நேரம் உரிய மதிப்பைப் பெறுமா என்பதையும் சோதித்துக் கொண்டார் என்றே கருதுகிறேன்.\nகிரகங்கள் நமது வழியைத் தீர்மானித்தாலும் நமது இலக்கை நம் கர்மாவே தீர்மானிக்கிறது.\nநம் மனத்தில் சாட்சி பூதமாக அமர்ந்திருக்கும் இறைவனின் வழிகாட்டுதல்படி வெற்றியோ, தோல்வியோ, நன்மையோ, தீமையோ கர்மங்களை தயங்காமல் விருப்புடன் செய்வோம்.\nமூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் அனிருத் கட்டுரைப் போட்டியில் இவ்வருடம் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறான். அவன் எழுதி...\nஜல்லிக்கட்டு - காளை வளர்ப்பின் விஞ்ஞான நோக்கு - பகுதி 1\nதமிழரும் காளைகளும் காளைகள் வளர்ப்புப் பிராணிகள் என்பர் பலர். ஆனால் காளைகள் தமிழனைப் பொருத்தவரை வளர்ப்புப் பிராணிகள் அல்ல. காளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://suvanappiriyan.blogspot.com/2013/04/blog-post_20.html", "date_download": "2018-07-19T11:52:05Z", "digest": "sha1:5C4SFBJGDXTIU5BJBKA7WOGRDMZ3RTDX", "length": 20545, "nlines": 211, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: ரியாத்தில் புதிய மருத்துவ மனை உதயம்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண���மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nரியாத்தில் புதிய மருத்துவ மனை உதயம்\nமன்னர் அப்துல்லா 500 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவ மனையை வரும் ஏப்ரல் 28 ந்தேதி திறந்து வைக்கிறார். இந்த மருத்துவ மனைக்கு முகமது பின் அப்துல் அஜீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இம் மருத்துவ மனையைக் கட்டி முடிக்க 455 மில்லியன் ரியால் செலவு பிடித்துள்ளது. 120000 ஸ்கொயர் மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை விஸ்தாரமாக உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ளது.\nஐந்து அடுக்கு மாடி வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவ மனையில் 15 ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன. ரேடியாலஜி யூனிட், மம்மோக்ராம் ஸ்கிரீன் செக்ஷன், தீப்புண்களுக்கான விசேஷ பிரிவு, இரத்த வங்கி, பிஸியோதெரபி பிரிவு, அவசர சிகிச்சைக்காக 102 படுக்கைகள் கொண்ட தனி பிரிவு, என்று அனைத்து வசதிகளையும் ஒரு சேராக கட்டிமுடித்துள்ளனர். அமெரிக்க மருத்துவ மனைகளின் மாதிரியைக் கொண்டு இந்த புதிய மருத்துவ மனை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ மனையின் கீழ்ப் பகுதி அலுவலகங்கள், மருத்துவ குறிப்புகள் அடங்கிய அறை, நூலகம், ரேடியாலஜி பிரிவு, குழந்கைள் பிரிவு, உடலுறவு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பிரிவு, பல் மருத்துவம், நீரிழிவு, சிறுநீரக, தோல் நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் என்று தனித் தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்பட தயார் நிலையில் உள்ளது.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு மருத்துவ மனையை திறக்க மன்னர் அப்துல்லா வருவதால் வழிகள் அடைக்கப்படாது. வழி நெடுக தோரணங்கள் இல்லை. 'வாழ்க ஒழிக' கோஷம் இல்லை. இதனை அறிவுறுத்த பல லட்சம் செலவில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படவில்லை. மன்னர் வருவதும தெரியாது: அவர் திறந்து வைத்து விட்டு போவதும் தெரியாது. அவர் காருக்கு முன்னால் மூன்று நான்கு கார்களும் பின்னால் மூன்று நான்கு கார்களும் ஒரே கருப்பு நிற கலரில் பாதுகாப்புக்காக செல்லும். இதைத்தவிர வேறு படாடோபங்கள் எதையும் என்னால் காண முடியவில்லை.\nஅதே நேரம் நம் தாய் தமிழ் மண்ணில் இத்தகைய ஒரு மருத்துவ மனை திறந்து வைக்கப்பட்டால் ஆளும் கட்சியினர் பண்ணும் கூத்துக்கள் எந்த அளவு சாமான்ய மனிதனை பாடாய்ப்படுத்தும் என்பதை இந்த செயதியை படிக்கும் போது நினைத்துக் கொண்டேன்.\nஉடனே அம்மா விசுவாசிகளான ரத்தத்தின் ரத்தங்கள் என்மேல் கோபப்பட வேண்டாம். நம்ம தாத்தா கலைஞர் திறந்து வைத்தாலும் உடன் பிறப்புகளும் இதே அடாவடியைத்தான் செய்யப் போகின்றனர்.. நாம் எல்லாவற்றிற்கும் பழகிக் கொண்டு விட்டோம். வேறு வழியில்லை..... :-)\nதகவல் உதவி: அரப் நியூஸ்\nஇந்தியாவில், தலித் மக்களுக்கு எதிரான சாதி அடக்குமுறையை கண்டிக்கும் தீர்மானம், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது. தலித் ஒடுக்குமுறைக்கு எதிராக, இந்திய அரசை கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டமை, ஐரோப்பிய பாராளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். தீர்மானத்தையொட்டி நடந்த விவாதத்தில், \"மனித உரிமைகள் சம்பந்தமான சட்டங்களை பொருட்படுத்தாமைக்காக\", இந்திய அரசு கடுமையாக கண்டிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநிலத்தில், தலித் மக்களின் கிராமங்கள் தாக்கப்பட்டு, 1500 பேர் வீடிழந்த சம்பவம், இந்த தீர்மானத்தில் முக்கியமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில், தலித் பெண்கள், உயர்சாதி காடையர்களினால் பாலியல் வல்லுறவுக்குள்ளான கொடுமைகளும் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும், இது போன்ற அக்கிரமங்களையும், அநீதியையும், இனியும் ஐரோப்பிய ஒன்றியம் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை என்பதை இந்திய அரசுக்கு எச்சரிக்கும் வண்ணம், அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.\nஐரோப்பிய பாராளுமன்றத்தில், இந்தியாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக இங்கே வாசிக்கலாம்:\nரியாத்தில் ஒருமருத்துவமனை என்ற விசயம் ஒரு கட்டுரையாக வெளியிடும் அளவிற்கு முக்கியமானதா அரபி கொட்டாவி விட்டால் கூட கட்டுரை எழுதுவீர்களா அரபி கொட்டாவி விட்டால் கூட கட்டுரை எழுதுவீர்களா தமிழ்நாட்டில் இதைவிட சிறந்த மருத்துவமனைகள் நிறைய உள்ளது. சத்திய சாய்பாபா அனந்தப்புரில் அற்புதமான ஒரு இலவச மருத்துவமனையை நடத்தி வருகிறார். அறிவீர்களா ஐயா தமிழ்நாட்டில் இதைவிட சிறந்த மருத்துவமனைகள் நிறைய உள்ளது. சத்திய சாய்பாபா அனந்தப்புரில் அற்புதமான ஒரு இலவச மருத்துவமனையை நடத்தி வருகிறார். அறிவீர்களா ஐயா என் இப்படி அரேபிய அடிமைகளாக அடிமைகளாக ..........களாக ......களாக இருக்கின்றீர்கள்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nஉலக கோப்பையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால்\nஉலக கோப்பையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால் ஃப்ரன்ஸ் அணியில் 15 பேர் ஆஃப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் 7 முஸ்லிம்கள் இந்த அணியில் உள்ள...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nகுமரி, கோவையில் மீண்டும் தலை தூக்கும் இந்துத்வா\nமனிதனின் படைப்பின் ரகசியம் - ஓர் ஆய்வு\nஈ.வெ.ராமசாமி பெரியார் ஒரு வஹாபியா\nஓரினச் சேர்க்கைகளை அங்கீகரிக்கும் நாடுகள்\nமுகமது நபியிடம் மன்னிப்பு கேட்ட படத் தயாரிப்பாளர்\nமஹாத்மா காந்தி ஒரு சாதி வெறியரா\nரியாத்தில் புதிய மருத்துவ மனை உதயம்\n'புதிய ஜனநாயகம்' பத்திரிக்கையில் மோடி சம்பந்தமாக.....\nகடைந்த வெண்ணெய் மோர் புகா\nயாதும் ஊரே யாவரும் கேளீர்\nஸ்வீடனில் பாங்கு சொல்ல அனுமதி கிடைத்துள்ளது\nபோலியோ ஒழிப்புக்கு 30 மில்லியன் டாலர்\nசங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்...\nவிருதுநகரில் ஒரு வியத்தகு மனிதநேயப்பணி\nபொது பல சேனா எதிர்பார்ப்பது என்ன\nஇன்றும் சாதிகள் இருக்குதடி பாப்பா\nமார்க்கத்தை சொல்லும் வழி முறை இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://suvanappiriyan.blogspot.com/2016/09/blog-post_55.html", "date_download": "2018-07-19T11:28:31Z", "digest": "sha1:FGX7M32YYOL3BY4N5N5B4HXN74R4BTAA", "length": 22254, "nlines": 257, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: இஸ்லாமிய குழந்தைகளுக்கு குர்ஆன் பாடமெடுக்கும் இந்து!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஇஸ்லாமிய குழந்தைகளுக்கு குர்ஆன் பாடமெடுக்கும் இந்து\nஇஸ்லாமிய குழந்தைகளுக்கு குர்ஆன் பாடமெடுக்கும் இந்து\nஆக்ரா: உ.பி.,யில் மேற்கு பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், 35 முஸ்லிம் குழந்தைகளுக்கு குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார்.\nஉ.பி.,யின் ஆக்ராவின் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த பூஜா குஷ்வாகா என்ற மாணவி, கோவில் வளாகத்தில், முஸ்லிம் குழந்தைகளுக்கு இலவசமாக குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார்.\nஇது தொடர்பாக பூஜாவிடம் குரான் படிக்கும் 5 வயது சிறுமியின் தாயார் ஒருவர் கூறுகையில், இந்த வயதில், மாணவியின் திறமையை பார்த்து ஆச்சர்யமாக உள்ளது. எனது குழந்தைக்கு இந்த மாணவி ஆசிரியையாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளதுது. அந்த சிறுமியின் ���தம் குறித்த எண்ணம் எனக்கோ மற்ற சிறுமிகளின் பெற்றோர்களுக்கோ வரவில்லை\" எனக்கூறினார்.\nபூஜா குஷ்வாகா கூறுகையில், \"பல வருடங்களுக்கு முன், முஸ்லிம் தந்தைக்கும், இந்து மதத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்த சங்கீதா பேகம் என்ற பெண், குழந்தைகளுக்கு குரான் கற்பித்து வந்தார். இதில் ஆர்வமடைந்த நான் அந்த வகுப்பில் கலந்து கொண்டேன். அதில் குரானை மற்றவர்களை விட நன்கு கற்றுக்கொண்டேன்\" எனக்கூறினார்.\nசில குறிப்பிட்ட காரணங்களால் சங்கீதா பேகத்தால் குரான் வகுப்பை தொடர முடியவில்லை. இதனையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் பூஜா குஷ்வாகா, குரான் வகுப்புகளை தொடங்கினார்.\nபூஜா தொடர்ந்து கூறுகையில், என்னிடம் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் கொடுக்க பணம் இல்லை. நானும் பணம் வாங்க விரும்பவில்லை. குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வீட்டில் போதிய இடம் இல்லாத காரணத்தினால் பெரியவர்களின் ஆலோசனைப்படி கோவில் இடத்தில் கற்பித்து வருகிறேன் என்றார். பூஜாவின் மூத்த சகோதரியும் அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இந்தி மற்றும் பகவத் கீதை கற்பித்து வருகிறார்.\n70 வயதாகும், இஸ்லாம் மத தலைவர் ஒருவர் கூறுகையில், \"இந்த நகரில் சமூக நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு ஆசிரியர் என்பவர் ஆசிரியரே. அதில் அவரது மதம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. யாராவது அரபிக் மொழி கற்பதையோ, குரான் வாசிப்பதையோ இஸ்லாம் மதம் எதிர்க்கவில்லை\" என்றார்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nஉலக கோப்பையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால்\nஉலக கோப்பையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால் ஃப்ரன்ஸ் அணியில் 15 பேர் ஆஃப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் 7 முஸ்லிம்கள் இந்த அணியில் உள்ள...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\n\"உயிர் காக்கும் இரத்த தானம்\"\nஇந்து முன்னணி நபர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு\nபார்பனன் நலமாக வாழ வன்முறையில் ஈடுபடுகிறாயே\nபிச்சை புகினும் கற்கை நன்றே\nகாவிகளின் அழிவு ஆரம்பம் - ஜோதி மணி\nதங்கையை சீரழித்த கயவனின் தலையை கொய்த அண்ணன்\nகோவை கலவரம் அன்றும் இன்றும்\nகோவை கலவரம் பற்றி சமூக ஆர்வலர் ஸ்வரா மூர்த்தி\nடேஷ் பக்தர்களா அல்லது பீஃப் பிரியாணி பக்தர்களா\nஇந்து முன்னணியை தடை செய்ய இந்துக்கள் கோரிக்கை\nராம கோபாலனுக்கும் அர்ஜூன் சம்பந்துக்கும் சமர்ப்பணம...\nகோவை கலவரம் சம்பந்தமாக திருநாவுக்கரசர் விளக்கம்\nஇன்னும் சில நாட்களில் இதே போன்ற செய்தி வரும்\nஇந்து முன்னணி அல்ல இது திருட்டு முன்னணி\nகோவையில் கலவர நாய்களால் தாக்கப்பட்ட போலீஸ்\nஇது தமிழகம்... இனியாவது திருந்துங்கள் இந்து முன்னண...\nபிரியாணிக்காக கலவரம் செய்த பிச்சைக்காரர்கள்\nசங்பரிவார பிரியாணி திருடர்களுக்���ு செருப்படி....\nமொபைல் கடையில் திருடும் டேஷ் பக்தர்கள்\nசவுதி அரேபியாவுக்கு இன்று நேஷனல் டே\nஜெ அரசு, கருப்புவை நெருங்குவதற்கு அஞ்சுவது ஏன்\nஊடகங்களை மிரட்டும் பார்பன வெறியை முறியடிப்போம்\nதமிழக அரசு யாருக்கு துணை நிற்கிறது ஐயோ தமிழா\nமாலேகான் கொலைக் குற்றவாளி பிரக்யாசிங் தற்போது....\nசமஸ்கிரதத்தை தெய்வ மொழியாக மாற்றத் துடிக்கும் பாரத...\nராம்குமார் கொலை பின்னணி - காணொளி\nஈழத் தமிழர்களிடத்தில் சாதிகள் இல்லை என்பது உண்மையா...\nஅவசியம் காண வேண்டிய காணொளி\nராம்குமார் சாவுக்கு காரணமான அந்த \"மின்சார ஒயர்\"\nஇனி உவைசியின் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடுவார்.\nஆர்எஸ்எஸ் அலுவலகம் முற்றுகை - தமிழ் ஆர்வலர்கள்\nராம் குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளாராம்\nபஹ்ரைன் பிரதமரின் கடல் கடந்த மனித நேயம்\nகல்லூரி மாணவன் பிரவீனின் தற்கொலை உணர்த்துவதென்ன\nகர்நாடகா கலவரத்து காரணம் காவிரி அல்ல\nரவிச்சந்திரன் முஹம்மது சாதிக்காக மாறிய வரலாறு\nஜப்பான் பொண்ணு ரகுமானை தமிழில் வரவேற்கிறது\nசெப்டம்பர் 17, இன்று பெரியார் பிறந்த தினம்.\nஒட்டகங்களை வெட்டுவதை தடை போட முடியாது\nதொழிலாளர் பிரச்னைகளை சவுதியில் சந்திப்பது எவ்வாறு\n'நீங்கள் மாட்டுக் கறி சாப்பிட்டதால் கற்பழித்தோம்'\nஇதோ வந்து விட்டோம் எங்கள் இறைவா\nகுஜராத்தில் மாமூல் தராததால் ஹூசைன் அடித்து கொல்லப்...\nகர்னாடகாவில் இந்திய ஒருமைப்பாடு பல்லிளிக்கிறது\nகாவி பயங்கரவாதிகளை கைது செய்\nதங்கம் வென்ற மாற்றுத் திறனாளி\nசுவாதி கொலை வழக்கின் மர்மங்களை உடைக்கும் தமிழச்சி\nதலித்களை ஒதுக்கி விட்டு முஸ்லிம்களை தேடி வரும் விந...\nநரேந்திர மோடி ராணுவத்தை நடத்தியவன் செய்த தொழில்\nஅடடே... மீன்களை பிடிக்க புதிய டெக்னிக்....\nதஞ்சையில் விநாயகர் சதுர்த்தியில் பரபரப்பு\nஆண்டிப் பட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம...\nசவுதியில் ருசியான கோழிக்கு அலை மோதும் கூட்டம்\nகுஜராத் ஒளிர்கிறது என்று பீலா விட்ட மோடியின் பித்த...\nஇஸ்லாமிய குழந்தைகளுக்கு குர்ஆன் பாடமெடுக்கும் இந்த...\nமனித நேயத்துடன் நடந்து கொண்ட முஸ்லிம்கள்\nஇந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 67 வருடங்கள் ஆகி...\nஇமயம் டிவியில் பிஜே அவர்களின் பேட்டி.....\nபனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பெட்ரோல் பாம்கள்\nஅம்பானி அதானி முன்னே���்றக் கழகம்\nகுலக் கல்வியை சந்தடி சாக்கில் நுழைக்கும் மோடி அரசு...\nகாயிதே மில்லத்தைப் பற்றி பேசும் பள்ளிச் சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vikneshravi.blogspot.com/2012/01/blog-post_31.html", "date_download": "2018-07-19T11:21:44Z", "digest": "sha1:KGGYOSAAMWVDBYG354BVR5EPB4WFAQSZ", "length": 22269, "nlines": 190, "source_domain": "vikneshravi.blogspot.com", "title": "பொறியாளர் விக்னேஷ் ரவி: உங்க பசங்க எப்படி ...நல்ல எதிர்காலம் அவர்கள் கையில் ...உங்களால் கண்காணிக்க மட்டுமே முடியும் ,,,", "raw_content": "\nநாகரீக வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியினால் மட்டும் இல்லை. R.விக்னேஷ்\nதமிழினம் தன் மானம் ,,,,,,\n/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /\nஉங்க பசங்க எப்படி ...நல்ல எதிர்காலம் அவர்கள் கையில் ...உங்களால் கண்காணிக்க மட்டுமே முடியும் ,,,\nஉங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் கணினி பாதுகாப்பானதா \nஇணையம் என்னும் சமுத்திரத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக உலவ விடுவது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கடினமாக உள்ளது . கட்டுப்பாடு அல்லாத இணைய வசதி என்றுமே குழைந்தைகளுக்கு பாதுகாப்பாக இருந்தது இல்லை .உங்கள் கணினியில் உள்ள இணைய வசதியை பாதுகாப்பாக வைத்திருக்கா விடின் அது உங்கள் குழந்தையின் பாதுகாப்போடு சமரசம் செய்து கொள்வதற்கு நிகரானதாகும் .\nஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புவர் ஆனால் பலருக்கும் இதை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்று தெரிந்திருக்க வாய்ப்பிலை உங்கள் குழந்தையின் ஆன்லைன் செயல்பாட்டை நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க பல இலவச பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள் (parental Control Software ) இணையத்தில் இருக்கின்றது .அவ்வாறு ஒரு மென்பொருள் தான் (parental Control Software ) எனப்படும் பெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள்\nபெற்றோர் கட்டுப்பாட்டு மென்பொருள் உங்கள் குழந்தைகள் செல்லும் பொருத்தமற்ற தளங்கள் காணொளிகள் மற்றும் படங்களை தானாகவே தடை செய்து விடும்\nஇந்த மென்பொருளை உபயோகிக்க முன் உங்கள் குழந்தையின் வயதை கணக்கில் எடுக்க வேண்டும் . எந்த நேரம் அவர்கள் இணையத்தில்இருப்பார்கள் , இண்டர்நெட் பயன்பாடு என்ன வகை. ��ோன்றவற்றை கவனத்தில் கொண்டு இந்த மென்பொருளை நீங்கள் உபயோகப் படுத்தலாம்\nஅடிப்படையில், இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியில் நடக்கும் எந்த ஒரு செயல் பாட்டையும் கண்காணித்து நிறுத்த முடியும் .\nஇதன் பிரதான வசதிகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது .\nஃபிஷிங், ஆபாசம் , சூதாட்டம், போதை, வன்முறை / வெறுப்பு / இனவாதம், தீம்பொருள் / ஸ்பைவேர் உள்ளிட்ட மேற்பட்ட 70 பிரிவுகள், மற்றும் இணையத் தளங்களை தடுக்க முடியும் .\nஅனைத்து முக்கிய தேடல் இயந்திரங்களிலும் பாதுகாப்பான தேடல்களைப் பெற முடியும் .\nகுறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இணைய இணைப்பு இருக்கும் படி மாற்றி அமைக்கலாம்\n\"எப்போதும் அனுமதிக்க\" மற்றும் \"எப்போதும் தடை\" என்ற விருப்ப பட்டியலை இணையத்திற்கு ஏற்றவாறு செயல் படுத்தலாம்\nசாட் மற்றும் ஆபாச உரையாடல்கள் தானாகவே தடை செய்யும் வசதி\nசிறுவர்களை இணையத்தில் கண்காணிப்பது அல்லது பாதுகாப்பது பெற்றோருக்கு ஒரு சவாலான பணியாக உள்ளது. ஆனால் இந்த இலவச பெற்றோர்கட்டுப்பாட்டு நீங்கள் உங்கள் குழந்தையின் தோள் அருகே இருந்து பாதுகாப்பது போன்ற சௌகர்யத்தை தரும் .உங்கள் குழந்தையை பாதுகாப்பாக கண்காணிப்பதற்கும் அவர்கள் நடவடிக்கையை உளவு புரிவதற்கும் பாரிய இடைவெளி உள்ளது . எனவே இந்த மென்பொருள் மூலம் உங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடாமல் அவர்கள் பாதுகாப்பாக இணயத்தில் உலவ வழி செய்யலாம் .கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்\nதரவிறக்கச் சுட்டி உங்க பசங்க எப்படி ...நல்ல எதிர்காலம் அவர்கள் கையில் ...உங்களால் கண்காணிக்க மட்டுமே முடியும் ,,,,உங்க விக்னேஷ்\nவிவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்கள் பதிவுகளுடன் எம்மை பின் தொடர்க ,,,,,,\nஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துவது ஓர் உளவியல் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன ஓர் உளவிய���் அணுகல்.,,,,,,கல்வி என்பது என்ன எதற்காக கல்வி கற்க வேண்டும் எதற்காக கல்வி கற்க வேண்டும்\nநாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில்...\nஉலகால் அறியப்படாத ரகசியம் என்ற புத்தகத்தில் இருந்து. ஆசிரியர் M .S . UTHAYAMOORTHI ...\nநீ விரும்பியதை செய். உன் உள்ளுணர்வு சொல்வதை கேள். உன்னை நம்பு. உன் மனம் கூறுவதை கவனி. எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உ...\nகாடுவெட்டி ஜெ குரு----வன்னியர் சங்கம்\nகுடிச்சா குடும்பத்தையே நடத்த முடியாது... நாட்டை எப்படி ஆள்றது'' கடுகடுக்கிறார் \"காடுவெட்டி குரு” – இந்த வாரம் ஆனந்த விகடனில...\n2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : முன்னாள் ஜனாதிபதி கலாம் உறுதி,,,,,,,\nஅருப்புக்கோட்டை : \"\"இந்தியா 2020 ல் வளர்ந்த நாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை,'' என,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூ...\n1000 கோடி 50 கோடி உழல் பண்றவனை உதைச்சா சரி ஆகிடும் ,,,,,,,,\nஉலகத்தமிழர் நெட்வொர்க் அதிர்ச்சி தகவல் ,,,,,, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் ஜூஸ் ஒலிம்பிக் போட்...\nஉங்க பசங்க எப்படி ...நல்ல எதிர்காலம் அவர்கள் கையில...\nமலையாளிகளுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்க...\nஇன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரியவில்லை...\nஉங்களிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்டது ஒரு கேள்வி...\nசீனாவின் அடுத்த முகம் ,,,,,,\nஇன்ஜினியரிங் மாணவர்கள் தற்கொலை ....என்ன காரணம்,,,...\nநமக்கு தெரிந்த புக் இது தான,,,,\nசிந்தித்து ஓட்டு போடுங்கள் ,,,,,,குடிமக்களே ,,,,,,...\nடேய் நாங்க இதுக்கும் கலரா பரப்புவோம்\n'கிங் மேக்கர்',,,,,,,,,தமிழ் நாட்டில் உங்கள் கால்ப...\nஇப்படியே நாடு போனா நாம்பளும் லைன்ல நிக்கவேண்டியதுத...\nஅக்கா பொறை ஏறிடப்போவுது பாத்து,,,,,\nபோதி தர்மரைப் போன்ற மருத்துவ குணம் புதைந்து கிடந்த...\nஎங்க சந்திப்பு இப்படி தான்.........\nபார்த்து இன்னும் சிறிது காலத்தில் இந்தியாவே மாறிட ...\nதமிழகமக்களை இவர்களிடமிருந்து யார் மீட்பார்,,,,,,,,...\nமனிதன் பொறுமையிழந்து விட்டால் அதற்கு யார் காரணமோ அ...\nஅப்படியே இலங்கைக்கு போ சுடுவாங்க. ஜெய்ஹிந்த்னு சொல...\nஆயுதம் எங்களுக்கு கண்காட்சி பொருள் ,,,,,இந்தியா\nநாங்க இப்படி தான் எப்பவுமே ,,,,,,,,,\nஇங்க உள்ள வைரஸ் அழிக்க முடிந்தால் உதவுங்கள் ,,,,,,...\nமனது என்ற ஒன்றில் ஊனம் இல்லாவிடில் ,,,,,,\nதூணாய் நின்ற தமிழன் துரும்பானதற்கான காரணத்தை அலசும...\nசொந்தமா யோசிக்க தெரியாத வடநாட்டு கொலவெறி கும்பல் \"...\nஇன்றைய வார்த்தை எந்திர வார்த்தை அன்றைய வார்த்தை மந...\nஇப்படியே போன நாளைய தலைமுறைக்கு நாம் வழிகாட்டி ஆகிவ...\nஇலங்கையிலிருந்து தமிழகத்தை குறி வைக்கிறதா சீனா உளவ...\nஇந்தியா சீனா இடையே மோதல் வருமா\nதமிழக மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் ஊடகங்கள்\nஇந்தியாவை நெருங்கும் கொடிய நோய் - ராஜபக்ஸேவாக மாறு...\nஅமெரிக்க உளவு துறைக்கு ஆப்படிக்கும் கேங்\nசினிமா & சின்னத்திரை மூலம் சீரழியும் பாரம்பரிய கலை...\nதமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈ...\nசார் டேக் action கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க ,,,,,,,...\nரொம்ப நல்ல நடிப்பாரு போல ப இவுரு ,,,,,,,,,,,,,,,,,...\nஊழல் வழக்கு: விசாரணையை நிறுத்த கோரி எஸ்.எம்.கிருஷ்...\nடி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் கேமிராவில் ப...\nகுடியரசு ,,,,,,இப்போ குடிமகன் அரசு ஆகிடும் போல ,,,...\nமீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்கள்..மத்திய அரசுக்க...\nமாணவர்களுக்கு விருப்பமில்லாத பாடங்களை பற்றி மூளைச்...\nPost titleதேர்வு வழிகாட்டி – தொடர் 1 – “புத்திசாலி...\nபொறியியல் பட்டப்படிப்பில் ஏழை மாணவர்களுக்கு 5% இடஒ...\nதமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி பேசுகிறேன்\nபூமிக்கு எல்லை போட்டது யார்\nஏழை மக்களுக்கு CLEARCD - யை குறித்து அறிமுகம் செய்...\nகுறவர்கள் நம் நாட்டின் முந்தய அடையாளம்,,,,,,,,,,,,...\nதமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய இலங்கை ...\nதமிழக போலீஸ்-ன் சிறப்பு ;;;;;;;;;;இது சிரிப்புக்க...\nசிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள...\nகூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு: மக்களுடன் பேச்சு...\nசமூக வலைப்பின்னல்களி(Social Networks)லிருந்து நம்ம...\nஎங்கும் அழிவுகளை ஏற்படுத்தும் பொறாமை உணர்ச்சி,,,,,...\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nஉனக்கு அரசியல் பிடித்தால் ,,,,,,,,,,,,,அரசியலை மாற...\nநியுட்டன் விதி ,,,,,,மாணவருக்கு தேவையா,,,,,,\nஎன் வாழ்வில் ஒரு நாள் திருவண்ணாமலை,,,,,,,,,,,,\nஎனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நான் அரசியல்வாதி இல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lifenatural.life/2014/12/", "date_download": "2018-07-19T11:37:54Z", "digest": "sha1:6LVDDVSHNSOZU5BSVAPHEK4PBUTEUMR5", "length": 8024, "nlines": 138, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: December 2014", "raw_content": "\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nAug.F.Reinhold எழுதிய ‘Louis Kuhne’s Facial Diagnosis’ என்ற புத்தகத்தின் பக்கங்கள் 101-102 லிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.\nமூன்று எல்லை வரையறைக் கோடுகள்\nஇயற்கையான, எளிய மற்றும் சத்துக்கள் அடங்கிய உணவு வகைகளை விரும்பி உண்ணக் கூடிய வகையில் பசி உணர்வு ஏற்படுதல், உடலும் மனமும் நல்ல நிலையில் இருப்பதற்கான அறிகுறி. வயிறு முழுமையாக நிரம்பும் முன்னரே திருப்தி ஏற்பட வேண்டும். வயிறு நிரம்பியபடியான அல்லது அடைத்துக் கொண்டு இருக்கும்படியான சங்கடமான உணர்வு எழக்கூடாது. செரிமானம் அமைதியாகவும், நாம் உணர முடியாத வகையிலும் இருக்க வேண்டும்.\nதாகம் ஏற்படும் போது, பழங்கள் அல்லது நீர் அருந்துவதற்கான விருப்பம் மட்டுமே எழ வேண்டும்.\nசிறுநீர், தெளிவாகவும், பொன்னிற மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். அது இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் போன்ற வாசனை அற்றதாக இருக்க வேண்டும். ஆவியானவுடன், கட்டியாக மாறக்கூடாது. வெளியேறும் பொழுது, எந்த வலியும் இல்லாமல் எளிதாக இருக்க வேண்டும்.\nLabels: Tamil , இயற்கை வாழ்வியல்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/94743/news/94743.html", "date_download": "2018-07-19T11:50:12Z", "digest": "sha1:IDOCTEU3YROWE4DL35L5MUHACLILKU7U", "length": 8898, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்நாடகாவில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nகர்நாடகாவில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது\nகர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் சிந்தனூர் நகரில் உள்ள சிவில் கோர்ட்டில் நீதிபதியாக பணிபுரிந்தவர் சரணப்பா சஜ்ஜன்.\nமூத்த நீதிபதியான இவர் முன் ஒரு கல்வி நிறுவன வழக்கு விசாரணைக்கு வந்தது. அல்சூரைச் சேர்ந்த கல்வி நிறுவனத்தின் தலைவராக 1975–ம் ஆண்டு காசிநாத் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை நீதிபதி சரணப்பா விசாரித்து வந்தார். அப்போது வழக்கை முடித்து வைக்க நீதிபதி சரணப்பா, காசிநாத்திடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.\nஅவ்வளவு தொகை தன்னால் தர இயலாது என்று காசிநாத் தெரிவித்தார். இதனால் கடைசியாக ரூ.1 லட்சம் வேண்டும் என்று நீதிபதி கூறிவிட்டார்.\nஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத காசிநாத் இதுபற்றி கர்நாடக ஐகோர்ட்டு லஞ்ச ஒழிப்பு பறக்கும் படையினரிடம் புகார் தெரிவித்தார்.\nஇதையடுத்து லஞ்ச ஒழிப்பு படையினரின் அறிவுரைப்படி காசிநாத் கடந்த 2014–ம் ஆண்டு நீதிபதி சரணப்பா சஜ்ஜனிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை சரணப்பா சஜ்ஜன் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினரிடம் அவர் கையும், களவுமாக சிக்கினார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு பறக்கும் படையினர் விசாரித்து வந்தனர்.\nலஞ்சப்புகாரில் சிக்கியதால் நீதிபதி பதவியை கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்தார். தான் லஞ்சம் வாங்கவில்லை என்றும் அவரிடம் கடன் தான் வாங்கினேன் என்றும் நீதிபதி மறுத்தார்.\nஇதற்கிடையே நீதிபதி சரணப்பா தலைமறைவானார். இதைத் தொடர்ந்து போலீசாரும், ஐகோர்ட்டு லஞ்ச ஒழிப்பு பறக்கும் படையினரும் நீதிபதியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த நீதிபதி சரணப்பா சஜ்ஜனை போலீசார் நேற்று சிந்தனூர் நகரில் கைது செய்தனர்.\nபோலீசார் கைதான நீதிபதியை உடனே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nஇதற்கிடையே நீதிபதி சரணப்பா மீது மேலும் பல புகார்கள் கூறப்பட்டன. பல வழக்குகளில் அவருக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் இடைத்தரகர்களாக பாபுராவ் பிராதா, கவுசிக் ஜாகிர்தார் ஆகியோர் செயல்பட்டதாக கூறப்பட்ட��ு. இவர்கள் கடந்த 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31–ந்தேதி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thanimaram.com/2013/03/11.html", "date_download": "2018-07-19T11:43:44Z", "digest": "sha1:4L6Q5MP6ZJXN5I7G23SX6CGD7VB6EVKA", "length": 19754, "nlines": 195, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: விழியில் வலி தந்தவனே-11", "raw_content": "\nஇணைத்தலைமை நாடுகளின் இரகசிய கழுத்தறுப்பும் ,இனவாத கொள்கை வகுப்பாளர்களின் இறையாண்மை என்ற இத்துப்போன இனவெறியின் தூண்டுதலும் ,அந்த இனவாத கோஷம் கொண்ட கொக்கரிப்பின் கூட்டத்தலைவன் கொண்டுவந்த நாம் வெல்வோம்(அப்பி திணுவெமு) என்ற அரசியல் கோஷம்.\nஇலங்கையில் தனித்துவ ஈழத்தின் இன்னொரு இனத்தின் இருப்பை மாவிலாறு என்ற மாயை ஊடாக யுத்த ஆற்றினை மடை திறந்த போது\nநாட்டில் யுத்தம் தீவிரமாகியது .\nஎல்லோரும் ஈழப்போராட்டாத்தில் போராடவேண்டும் .அப்போதுதான் ஒரு இலட்சியத்தீர்வு கிடைக்கும்.\nஎனவே போராட வலுவுள்ள அனைவரும் போராடவேண்டும் என்று வன்னியில் விடுதலைப்புலிகள் கொண்டு வந்த இறுக்கமான கட்டுப்பாட்டை தொடர்ந்து ,வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் போராட்டத்தில் இணையவேண்டும் என்ற நிலை.\nஇருப்பே கேள்வியாகும் போது வேற மார்க்கம்\nஅப்படி இணைய மறுக்கின்றவர்களை கட்டாயமாக போராட்டத்தில் இணைக்கும் வேலையும் நடைபெற்றது.\nவடகிழக்கு மாகாண முதல்வர் என்ற பொம்மை ஆட்சியை ஈழத்தில் வரதராஜாப்பெருமாள் மூலம் முன்னர் இந்தியன் கொள்கை வகுப்புக்கூட்டம் உலகநாடுகளுக்கு சொல்லிக்கொண்டே ஈழத்தில் உருவாக்கிய குழுவான ENDF போல இங்கும் பலர் தானாக மு���்வந்து இணைந்தாலும் ,சிலர் புலிகளின் கண்களில் தண்ணிகாட்டிவிட்டு காடு வாய்க்கால் என்று ஒழிந்து திரிந்தனர்.\nஎங்கும் இது பற்றிதான் ஒரே பேச்சு . இனவாத தென் இலங்கை ஊடகமும் ,அதன் அரச இயந்திரமும் இதை வலுக்கட்டயமாக பிள்ளை பிடிகாரர்கள் என்று உலகநாட்டுக்கு பிரச்சாரம் செய்கின்றது என்பதைப்போல அவனை இயக்கம் பிடித்துகொண்டு போச்சாம் ,இவரின் பெட்டையை இயக்கம் பிடிச்சுகொண்டு போச்சாம்.என்ற செய்திகள் தான் முதன்மை பெற்றது.\nஇந்த நிலையில் தான் ஒரு நாள் சுகி ரகுவிடம் கேட்டாள் .ஏன் ரகு உங்களுக்கு பிரச்சனை வரும்தானே உங்கள் வீட்டில் எத்தனை பேர் யாரும் மண்மீட்புப் போராட்டத்தில் இருக்கிறாங்களா யாரும் மண்மீட்புப் போராட்டத்தில் இருக்கிறாங்களா என்று அவள் கேள்விகள்.போராட்ட மண்ணிலும் மதரசுப்பட்டிணம் போல காதல் பூக்கும் தானேஎன்று அவள் கேள்விகள்.போராட்ட மண்ணிலும் மதரசுப்பட்டிணம் போல காதல் பூக்கும் தானே\nஇல்லை சுகி எங்கள் வீட்டில் நான் தான் தங்கமகன் .போராடப்போகவேண்டும் நாடு என்னிடம் இருந்து எதை எதிர்பார்க்கின்றதோ அதைச் செய்ய விதியின் பாதையில் விரல் பிடித்து இன்னும் சில நாட்களில் போய்விடுவேன்.\nமண்ணுக்கு தலை வணங்கி போகும் மண்ணின் மைந்தர்கள் ஒன்றும் திராவிடம் என்று சொல்லிக்கொண்டு ஈன அரசியல் செய்யும் தலைவர்கள் போல இல்லை .\nஇந்த நூற்றாண்டில் புறநானுறும் ,கலிங்கத்துப்பரணியையும் வரலாற்றில் மீண்டும் பதிந்த வருகின்ற இனம் ஈழத்துச் சந்ததி என்பதை படிப்பிக்கும் போது \nபாவைகள் யாரும் அன்பில் கட்டி அடிமை கொள்ளாதீர்கள் புதிய பாதை போகும் போது நம் உறவுகளை என்று எழுதிச் சொன்னவர்கள். என்ன ஆனார் என்று அன்று அந்தப்பள்ளியில் மேல் வகுப்பில் படித்தவர்களுடன் இருந்து எதேட்சையாக கேட்ட வார்த்தையும் மீள் ஞாபகம் வர நினைவூட்டியபோது http://poonka.blogspot.fr/2013/02/5.html.\nசுகியின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டியது ஈழத்தில் தமிழனாகப் பிறந்த பாவச்சுமையை எண்ணி\nஏன் ரகு நீங்கள் என்னை விரும்பினால் நான் அப்பாவிடம் சொல்லி உங்களுக்கு பிரச்சனை வராமல் செய்யலாம் தானே\nஅப்போது அவளிடம் சுயநலம் இருந்தது திமுகாபோல குடும்பத்துக்காக கொள்கையை விற்பவர் அல்ல தன் தந்தை என்பதைப்புரியாத பேதை அவள் நீ என்னை லவ் பண்ணு உன்னை போராட்டத்துக்கு போகாமல் காப்பத்துகின்றேன்.என்று பகல்கனவு கண்டாள்\nநீங்க ஒன்றும் பிரச்சனை வராமல் செய்யவேணாம் .உண்ணவிரதம் இருந்து தமிழ்தலைவன் என்று பட்டத்துக்காக உலகநாட்டுக்கு படம் காட்டிய தலைவர் போல நினைக்காமல் உங்க அப்பாவை விடுங்க அது போதும். நான் என் வழியில் செயல்படுகின்றேன்.\nஅப்ப ரகு என் மேல உங்களுக்கு எப்பவும் விருப்பம் வராதா\nவிரும்பம் வராது என்று இல்லை சுகி .உங்களுக்கு எத்தனை தரம் சொல்லுறது உங்கள் வீட்டில் இந்த காதலுக்கு சம்மதிப்பாங்களா\nநிச்சயம் இல்லை.எனவே நானும் உங்களை விரும்பி அதன் பிறகு பிரிந்தால். அது எனக்கும் கஸ்டம் ,உங்களுக்கும் கஸ்டம்.\nஅதனால நான் ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை.\nநல்ல நண்பனாக உங்கள் சுகதுக்கங்களில் கைபிடித்து வருவேன் எதிர்பார்ப்பு இல்லாத திறந்த சுதந்திரமான இருவழிப்பாதை நட்பினைப்போல எப்பவும் .\nநல்ல ப்ரண்டா இருப்பன் லவ் எல்லாம் வேண்டாம்.\nஇதற்கு மேல் அவனுடன் காதல் யுத்தம் செய்ய அந்த மங்கைக்கு சக்தி இல்லை.\nஅது உங்கள் சுதந்திரம் பிரெஞ்சு நாட்டைப்போல ஆனால் நான் உங்களை எப்பவும் விரும்புவன் ரகு நெஞ்சம் எல்லாம் நீயே என்று \nஅட்லீஸ் ப்ரண்டா இருப்பன் என்றாவது சொன்னீங்களே அதுவே போதும்.\n\"உங்களை நினைத்து நான் சில கவிதைகள் எழுதியிருக்கேன். என் ஆசை ,நேசம் ,தேடல், விரகதாபம் ,எல்லாம் விளம்பி நிற்கும் அந்த கவிதைகள் காலத்துயரில், இனவாத யுத்த மழையில் ,காகிதங்கள் களவாடப்பட்டாலும் காற்றில் என் யாசகம் கையில் கிடைக்கும் காதலனே\nஅந்தக்கொப்பியை என் பிரண்ட் கிட்ட கொடுத்துவிடுறன் நீங்கள் அவசியம் படித்துப்பார்க்கவேண்டும்.லங்கா ராணி போல \nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 3/13/2013 01:34:00 pm\nMANO நாஞ்சில் மனோ said...\nமண்ணுக்கு தலை வணங்கி போகும் மண்ணின் மைந்தர்கள் ஒன்றும் திராவிடம் என்று சொல்லிக்கொண்டு ஈன அரசியல் செய்யும் தலைவர்கள் போல இல்லை//\nநெருப்பில் சாட்டையை முக்கி அடிக்கும் வரிகள்..\nமண்ணுக்கு தலை வணங்கி போகும் மண்ணின் மைந்தர்கள் ஒன்றும் திராவிடம் என்று சொல்லிக்கொண்டு ஈன அரசியல் செய்யும் தலைவர்கள் போல இல்லை//\nநெருப்பில் சாட்டையை முக்கி அடிக்கும் வரிகள்..\n13 March 2013 18:37 //வாங்க் ம்னோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ சூடாகம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்\nநன்றி வ்ருகைக்கும் கருத்துரைக்கும்.தனபாலன் சார்.\nம்ம் நிஜம் தான் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா\nவிழியில் வலி தந்தவனே -18\nவிழியில் வலி தந்தவனே -14\npanna cotta செய்வது எப்படி\nசோளம் சூப் செய்வது எப்படி\nவிழியில் வலி தந்தவனே -10\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://koshasrini.blogspot.com/2013/12/blog-post_27.html", "date_download": "2018-07-19T11:19:44Z", "digest": "sha1:PQJFXU4GNWEFN6CWSMBIRS6BL7RNKBJP", "length": 36309, "nlines": 182, "source_domain": "koshasrini.blogspot.com", "title": "KOSHASRINI: சிவகவசம்", "raw_content": "\nசிவகவசம் என்பது பாண்டிய மன்னன்னான வராமதுங்கர் என்பவர் காலத்தில் அவரால் இயற்றப்பட்ட செய்யுளாகும். இதை விடபமுனி எனும் முனிவர் பத்ராயு எனும் ஒரு அரசகுமாரனுக்கு அருளுபதேசம் செய்ய அதை வராமதுங்கர் என்ற பாண்டிய மன்னன் தாம் எழுதிய சிவபெருமானின் புண்ணியக் கதைகளை எடுத்துரைக்கும் பிரம்மோத்ர காண்டம் எனும் நூலின் ஒரு பகுதியாக செய்யுள் வடிவில் இயற்றினார் என்பதும் செய்தியாகும்.\nகவசம் என்றாலே காக்கும் ஒரு தடுப்பு அரண் போன்றதாகும்.\nசிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர் என்பதினால் அவருடைய அந்த ஐந்து முகங்களைக் குறிப்பிட்டு உடலின் ஒவ்வொரு பாகத்தை காக்குமாறும், நான்கு திசைகளில் இருந்தும் வரும் ஆபத்துக்களில் இருந்தும் தம்மைக் காப்பாற்றுமாறு சிவபெருமானை வேண்டி துதிக்கும் மந்திர பாடலாகும். இதை பாராயணம் செய்தால் பஞ்சமா பாதகங்கள், பகைகள், வறுமை போன்றவை விலகி அதை பாராயணம் செய்பவர்களுக்��ு ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.\nமந்திர சக்தி வாய்ந்த சிவகவசத்தை திங்கள் கிழமைகளிலும் பிரதோஷ தினங்கள் அன்றும் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் பல பலன்கள் கிடைக்கும் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்.\nஅகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,\nதுகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம்\nதகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த\nமகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க\n(பிரபஞ்சத்தின் மூல நாயகர், ஞான வடிவம், ஆனந்த ஸ்வரூபிணி, பூமி முதல் விண்ணுலகம் வரை பறந்து கிடக்கும் உயிர் அணுக்களின் ஜீவன், மரணம் அடைந்தப் பின் எம்மை உம்முள் அட்கொள்பவரான சிவபெருமானே, இந்த பூமியில் எந்த தீமையும் என்னை சூழாமல் காத்து அருள வேண்டும் )\nகுரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித்\nதரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடாவண்ணம் காப்போன்\nநிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்ய\nவிரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க.\n(ஓஹ் என்ற ஒலியை எழுப்பி ஓடிவரும் நீரைப் போலல்லாது, மௌன நீரோடையாக பயிர்களில் பாய்ந்து, உணவைத் தந்து உயிர்களைக் காப்பவரே, அலையலையாக வரும் மேகக் கூட்டத்தின் வழியே மழையாக வந்து மலை மீது பொழிய, பாய்ந்து வரும் அந்த நீரின் வெள்ளத்தில் விழுந்து இறந்து விடாமல் எம்மை நீங்களே காத்து அருள வேண்டும். )\nகடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள்தீயால்\nஅடலைசெய்து அமலை தாளம் அறைதர நடிக்கும் ஈசன்\nஇடைநெறி வளைதாபத்தில் எறிதரு சூறைக் காற்றில்\nதடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க\n(பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட யுக முடிவில், அனைத்து உலகத்தையும் தெய்வீகத் தீயினால் பொசுக்கி அவற்றால் உன் மேனியில் திருநீர் எனும் அரிதாரம் பூசி நிற்கையில், பார்வதி தேவியார் தாளம் போட, அதில் மயங்கி நடனமாடும் சிவபெருமானே, வளைந்து வளைந்து வந்து தீ போன்ற வெப்பம் தரும் சூரைக் காற்றினால் உன் வரவு தடைபடாமல் இருக்க, பெரும் கடல்போல உள்ள இவ்வுலகில் எம்மைக் காத்தருள வேண்டும்)\nதூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்\nபாயுமான் மழுவினோடும் பகர் வரத அபயங்கள்\nமேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின்னனைய தேசும்\nஆயதற் புருடன் எம்மைக் குணதிசை யதனில் காக்��\n(தூய்மையான மூன்று கண்களையும், சுடர்விட்டு எரியும் பொன்னிறம் போன்ற நான்கு திருமுகங்களையும் கொண்டவரே, பாயும் மானைப் போன்ற மழுவாளினையும் (ஒருவித ஆயுதம்), வரத மற்றும் அபய முத்திரைகளையும் காட்டும் நான்கு புஜங்களையும் (கைகள்), மின்னலைப் போல ஒளிவிடும் மேனியையும் கொண்டவருமான தத்ரூப புருஷரானவரே, கிழக்கு திசையில் நின்றவாறு என்னைக் காத்திடுவீர்)\nமான்மழு சூலம் தோட்டி வனைதரு நயன மாலை\nகூன்மலி அங்குசம் தீத் தமருகம் கொண்ட செங்கை\nநான்முகம் முக்கண் நீலநள் இருள் வருணம் கொண்டே\nஆன்வரு மகோர மூர்த்தி தென்திசை யதனில் காக்க\n(பாயும் மானைப் போன்ற மழுவாள், சூலம், கோடரி போன்றவற்றுடன் ருத்திராக்ஷ மாலை, கூனனைப் போல வளைந்து நிற்கும் அங்குசம், தீ, தமருகம் (டமாரம்) போன்றவற்றை ஏந்திய சிவந்த கைகளுடன், மூன்று கண்களை கொண்ட நான்கு திருமுகங்களுடன் காட்சி தருபவரே, கருநீல நிறத்திலான எருதின் மீது அமர்ந்து உள்ள ஐம்முகத்துள் ஒன்றான அகோர முகத்தைக் கொண்டவரே, தெற்குத் திசையில் நின்றவாறு எம்மைக் காத்திடுவீர்)\nதிவள்மறி அக்க மாலை செங்கை ஓர் இரண்டும் தாங்க\nஅவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தொடு அபயம் தாங்கக்\nகவின் நிறை வதனம் நான்கும் கண் ஒரு மூன்றும் காட்டும்\nதவளமா மேனிச் சத்தியோ சாதன் மேல் திசையில் காக்க\n(தாவுகின்ற மானையும், ருத்ராக்ஷ மாலையையும் இரு கைகளும் ஏந்தி நிற்க, ஒளிமயமான இன்னும் இரு திருக்கைகள் அபய முத்திரையைக் காட்டி நிற்க, ஐம்முகங்களுள் ஒன்றாக மேற்கு நோக்கிய முகமும் கொண்டவரே, மூன்று கண்களையும் அளவற்ற அழகுடைய நான்கு முகங்களும் கொண்டவரே, மேற்கு திசையில் நின்று எம்மைக் காத்திடுவீர்)\nகறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்\nஅறைதரும் தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப்\nபொறைகொள் நான்முகத்து முக்கண் பொன்னிற மேனியோடும்\nமறைபுகழ் வாமதேவன் வடதிசையதனில் காக்க\n(ரத்தம் தோய்ந்த மழு வாள், மான், அபய முத்திரை சின்னம், ருத்திராக்ஷ மாலை போன்றவற்றை ஏந்தி நின்றவாறு நான்கு சிவந்த திருக்கைகளை காட்டி, ஜொலிக்கும் பொன் போன்ற முக்கண்களுடன் சாந்தமான நான்கு திருமேனிகளைக் (முகங்கள்) காட்டுபவரே, வேதங்கள் போற்றிப் புகழும் வாமதேவ மூர்த்தியே (சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றே வாமன் என்பது ), வட திசையில் நின்றிருந்���ு எம்மை நீர் காத்தருள வேண்டும்)\nஅங்குசம் கபாலம் சூலம் அணிவரத அபயங்கள்\nசங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித்\nதிங்களின் தவள மேனித் திருமுகம் ஐந்தும் பெற்ற\nஎங்கள் ஈசான தேவன் இருவிசும்பு எங்கும் காக்க\n(வரத சின்ன முத்திரை காட்டி, அங்குசம், கபாலம், சூலம், மான், பாசக் கயிறு, ருத்திராஷம், டமாரம் போன்றவற்றை பத்து கரங்களிலும் ஏந்தி, சந்திரனைப் போன்ற வெண் நிற திருமேனியின் ஐந்து திரு முகங்களில் ஒரு முகத்தை வடகீழ்த்திசை நோக்கி வைத்துள்ள மூர்த்தியே, தேவலோகம் வரை படர்ந்திருக்கும் அனைத்து இடங்களிலும் எம்மை நீர் காத்து அருள வேண்டும்)\nசந்திர மவுலி சென்னி (தலை) தனிநுதல் கண்ணன் நெற்றி\nமைந்துறு பகன்கண் தொட்டோன் வரிவிழி அகில நாதன்\nகொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி\nஅந்தில் செங்கபோலம் தூய ஐம்முகன் வதனம் முற்றும் (சந்திரமௌலீஸ்வரர் எனும் சிவபெருமான் எங்கள் தலையையும், நெற்றிக் கண் கொண்ட மூர்த்தியானவர் எம் நெற்றியையும், கண் கூசும் ஒளி தரும் சூரியனின் ஒளியையே பறித்த பரமசிவனார் விழிகளையும், பூங் கொத்துக்களின் வாசனைகளை உணரும் சக்தி மிக்க நாசிகளையும், எமது காதுகளையும் நான்கு வேதங்களையும் அருளிய நாயகன் சிவபெருமான் காக்க, எமது கபாலத்தை கபால மூர்த்தியும், எம் முகத்தை ஐம்முகத்தைக் கொண்டவனான சிவபெருமானே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும்)\nவளமறை பயிலும் நாவன்நா, மணி நீல கண்டன்\nகளம் அடு பினிகபான கையினை தரும வாகு\nகிளர்புயம் தக்கன் யாகம் கொடுத்தவன் மார்பு தூய\nஒளிதரு மேருவில்ல உதரம் மன்மதனைக் காய்ந்தோன்\n(வேதங்களை உச்சரிக்கும் நாவினை கொண்ட நீல நிறக் கழுத்தோனான வேத மூர்த்தி எம் கழுத்தினையும், போரில் பினாகம் என்னும் வில்லை கையில் ஏந்திய தர்மவாகு எனும் சிவபெருமான் எமது கைகளையும் தோளையும் காத்தருள, தக்கன் யாகத்தை அழித்த மூர்த்தியானவர் எம் மார்பினையும், காமதேவனை தகனம் செய்த பேரொளி தரும் மேரு மலையான் எம் வயிற்றினையும் தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )\nஇடைஇப முகத்தோன் தாதை உந்தி நம் ஈசன் மன்னும்\nபுடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில் வாமம்\nபடர் சக தீசன் சானு பாய்தரும் இடப கேது\nவிடைநெறி கணைக்கால் ஏய்ந்த விமலன் செம்பாதம் காக்க\n(யானை முகத்தோனி���் தந்தையானவர் என் வயிற்றையும், அதே சர்வேஸ்வரன் தொடைப் பகுதியின் மேல்புற இடையையும், குபேரனின் தோழரும் ஐந்து முகங்களில் ஒன்றை இடப்புறத்தை நோக்கிக் காட்டி நிற்கும் வாம முகத்தவருமான சிவபெருமான் எம் தொடையையும் காக்க, படமெடுத்தாடும் பாம்பு போல படர்ந்து விரிந்துள்ள ஜகத்தின் ஈசன் எம் முழங்கால்களையும், எம் கணுக்காலை பாய்ந்து வரும் ரிஷபத்தின் (நந்தி) தலைவனானவர் காத்து அருள, விமலன் எனும் மூர்த்தியானவர் எம் பாதத்தையும் தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )\nவருபவன் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம்\nபொருவரு வாம தேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம்\nசெருமலி மழுவாள் அங்கைத் திரியம்பகன் நாலாம் யாமம்\nபெருவலி இடப ஊர்தி பிணியற இனிது காக்க\n(வேதங்கள் கூறும் பதினோரு ருத்ரர்களில் ஒருவரான பவன் (சிவபெருமானின் இன்னொரு பெயர்) முதற் ஜாமத்திலும் , மஹேஸ்வரன் எனும் ஈஸ்வரன் இரண்டாம் ஜாமத்தின் பின் பகுதியிலும், முனிவர் போன்ற உருவிலான வாமதேவர் (சிவபெருமானின் இன்னொரு பெயர்) மூன்றாம் ஜாமத்திலும், மழுவாயுத்தை ஏந்திய திரியம்பகனாதர் (சிவபெருமானின் இன்னொரு பெயர்) நாலாம் ஜாமத்திலும் காத்து அருள இடபத்தில் பவனி வரும் மூர்த்தியானவர் எம் சரீரம் பிணிகளால் (வியாதிகள்) பீடிக்கப்பட்டு சோர்வடையாமல் அந்தந்த ரூபங்களில் தனித் தனியே இருந்தவாறு காத்தருள வேண்டும்.\nகங்குலின் முதல் யாமத்துக் கலைமதி முடித்தோன் காக்க\nதங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க\nபொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க\nபங்கமில் நாலாம் யாமம் கவுர்தன் பதியே காக்க\n(இரவின் முதற் ஜாமத்தில் பிறைசூடிய மூர்த்தியும் இரண்டாம் ஜாமத்தில் கங்காதர மூர்த்தியும் (கங்கையை தலையில் கொண்டுள்ள) எம்மை காத்து அருள வேண்டும். மூன்றாம் ஜாமத்தில் ஜடா மகுட மூர்த்தி காக்க, பங்கமே இல்லாத நாலாம் ஜாமத்தில் உமை எனும் பார்வதியின் கணவரான உமாபதி வந்து எம்மைக் காக்க வேண்டும்)\nஅனைத்துள காலம் எல்லாம் அந்தகன் கடிந்தோன் உள்ளும்\nதனிப்பெரு முதலாய் உள்ள சங்கரன் புரமும் தாணு\nவனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும்\nநினைத்திடற் கரிய நோன்மை சதாசிவ நிமலன் காக்க\n(அனைத்து காலங்களிலும் காலத்தை நிர்ணயிக்கும் கால சம்ஹார மூர்த்தி எம்மைக் காத்து வர, காலத்தின் உட்பகுதியில் தனித்தன்மை வாய்ந்த சங்கரரும் (சிவபெருமானின் இன்னொரு பெயர்), வெளிப்புறத்தில் தாணு (சிவபெருமானின் இன்னொரு பெயர்) மூர்த்தியும், நடுப்புறத்தில் ஆன்மாக்களை தன்னுள் அடக்கி வைத்துள்ள பசுபதி நாதர் (பசு என்பது ஆன்மாவைக் குறிக்கும் இன்னொரு சொல்) எனும் சிவபெருமானும், மற்ற இடத்தில் என்றுமே (சதா என்பது என்றுமே என்பதின் வாய் மொழிச் சொல்) நினைவில் சுழன்றுகொண்டிருக்கும் சதாசிவ முர்த்தியும் எம்மை தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )\nநிற்புழி புவனநாதன், ஏகுழி நிமலன், மேனி\nபொற்புறும் ஆதி நாதன், இருப்புழி பொருவி லாத\nஅற்புத வேத வேத்தியனும், துயில்கொள்ளும் ஆங்கண்\nதற்பர சிவன், விழிக்கின் சாமள ருத்திரன் காக்க\n(யாம் நிற்கும் இடங்களிலெல்லாம் புவனநாதரும், நடக்குமிடமெல்லாம் மாசற்ற நிர்மலனாதனும் (நிர்மலம் என்பது மாசின்மை மற்றும் மனக் கவலை அற்றவர் என்ற பொருளை தருவதினால் நிர்மலமானவர் என சிவபெருமானின் இன்னொரு பெயராக அமைந்தது), உடலழகினை முதலும் முடிவுமே இல்லாத அனைத்தையுமே படைத்த அந்த ஆதி மூர்த்தி காக்க, இருக்குமிடமெல்லாம் வேதங்கள் புகழும் வேத மூர்த்தி சிவபெருமான் காக்க, உறங்கும்போதேல்லாம் பரம்பொருளான பரமசிவன் காக்க, விழித்திருக்கும் நிலையில் சியாமள ருத்ரர் எனும் சிவபெருமான் தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு எம்மைக் காத்தருள வேண்டும்)\nமலைமுதல் துருக்கம் தன்னில் புராரி காத்திடுக மன்னும்\nசிலைமலி வேட ரூபன் செறிந்த கானகத்தில் காக்க\nகொலையமர் கற்பத்து அண்ட கோடிகள் குலுங்க நக்குப்\nபலபட நடிக்கம் வீர பத்திரன் முழுதும் காக்க\n(அடி மலை முதல் அதன் மேல் முகட்டுவரை (முகட்டு என்பது மலை உச்சியின் பெயர்) புராரிக் கடவுள் காக்க வேண்டும். காட்டினில் என்னை விட்டுப் பிரியாமல் இருந்து வில்லேந்திய வேட வடிவ மூர்த்தி காக்க, பேரழிவைத் தரும் பிரளயகாலத்தில் அண்டகோடிகள் நடுங்குமாறு நடனமாடும் வீரபத்திரர் (சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழில் ஆற்றுகையில் ஆணவாதி மலங்களை அழிப்பதற்காக ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து வீரபத்திரரைப் படைத்தார் என்பது புராணக் கதை) என��னை முற்றிலுமாக சூழ்ந்திருந்து காக்க வேண்டும்)\nபல்உளைப் புரவித் திண்தேர் படுமதக் களிறு பாய்மா\nவில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்தியும் எண்ணில்கோடி\nகொல்லியல் மாலை வைவேல் குறுகலர் குறுகும் காலை\nவல்லியோர் பாகன் செங்கை மழுப்படை துணித்து மாய்க்க\n(கழுத்து மயிரினையுடைய குதிரைகள் பூட்டிய தேர்கள், மதம் பிடித்தது போன்ற மத யானைகள், பாய்ந்து செல்லும் குதிரைகள், வில்லேந்திய கோடிக்கணக்கான படைவீரர்கள் என அனைவருடன் சேர்ந்து கூர்மையான வேலுடன் பகைவர்களை அழித்திடும் வள்ளியின் நாயகனை படைத்த சிவப்பு நிறக் கைகளைக் கொண்டவரின் திருக்கரத்தில் இருக்கும் மழு ஆயுதம் என்னைக் காக்கட்டும் )\nதத்துநீர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப்\nபைத்தலை நெடிய பாந்தள் பல்தலை அனைத்தும் தேய்ந்து\nமுத்தலை படைத்த தொக்கும் மூரிவெம் கனல் கொள் சூலம்\nபொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க\n(படமெடுத்தாடும் ஆதிசேஷன் எனும் நாகம் படுத்துக் கிடக்கும் பாய்ந்து வரும் கடலையே தன் ஆடையாக போர்த்தி , பூமியையே தாங்கி நின்ற கடவுளை உம் முத்தலைகளுக்குள் அடக்கியவரே, அந்த வலிமைகளை அடக்கிய தீய எண்ணம் கொண்ட கயவர்களை அழித்து மகிழ்ச்சியைத் தரும் உம்முடைய சூலம் எம்மைக் காத்து அருளட்டும் )\nமுடங்குளை முதலாய் நின்ற முழுவலிக் கொடிய மாக்கள்\nஅடங்கலும் பினாகம் கொல்க என்று இவை அனைத்தும் உள்ளம்\nதிடம்பட நினைந்து பாவம் தெறும் சிவகவசம் தன்னை\nஉடம்படத் தரிப்பை யானால் உலம்பொரு குலவுத் தோளாய்\n(பிடரி மயிருடைய சிங்கத்தை ஒத்த வலிமை மிக்க தோள்களைக் கொண்டு கொடிய மிருகங்களையெல்லாம் பினாகம் என்கிற வில்லால் கொல்வது போல, இருதயத்தில் சிவனையே வைத்து உறுதியுடன் தியானித்தால், அனைத்து பாவங்களையும் வெல்லும் சிவகவசத்தை ஒருவர் அணிந்து கொள்வாரேயானால் (பாராயணம் செய்வது என்பது பொருள்) )\nபஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்\nஅஞ்சலில் மறலியும் அசூசி ஆட்செயும்\nவஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும்\nதஞ்சம் என்றிதனை நீ தரித்தல் வேண்டுமால்\n(இப்படியாக பாராயணம் செய்பவர்களது பஞ்சமா பாதகங்கள் அனைத்துமே நீங்கும், சுற்றி உள்ள பகைகளும் விலகும், பயமின்றியும் வாழலாம், கொடிய வியாதிகள் விலகும், வறுமை எனும் தரித்திரம் தொலையும்).\nசிவனால் சிவனைத்தே��ி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி\nவேத உபநிஷத் மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை, அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும், உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து\nஎன் நினைவுக்கு வந்தவை .....\n( என் அனுபவங்கள் இல்லை )\n51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்\nஎட்டு நிலைகளைக் குறிக்கும் கணபதி மூர்த்திகள்\nஶிவனது பத்தாயிரம் நாமங்கள் ... (101-200)\nஶிவனின் பத்தாயிரம் நாமங்கள் .. श्री साम्बसदाशिवायु...\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்...\nவிநாயகர் காரிய சித்தி மாலை\nஅகத்தியர் அருளிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பஞ்சரத்ன ஸ்த...\nஸ்ரீ ருத்ரம் - லகு ந்யாஸம் : நமகம் : சமகம்\nश्री गणेषाथर्वषीर्षम् . ஸ்ரீ கணபதி அதர்வஸீர்ஷ உபநி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/you-quit-i-quit-lakshmi-menon-s-campaign-against-smoking-033561.html", "date_download": "2018-07-19T11:16:26Z", "digest": "sha1:DHD4AHZAEDFCPKRA66US7HLHKBXTWHVP", "length": 10636, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீங்க நிறுத்தினா.. நானும் நிறுத்துவேன்! - 'குப்குப்' பிரியர்களை கெஞ்சிக் கேட்கும் லட்சுமி மேனன் | You quit; I quit: Lakshmi Menon's campaign against smoking - Tamil Filmibeat", "raw_content": "\n» நீங்க நிறுத்தினா.. நானும் நிறுத்துவேன் - 'குப்குப்' பிரியர்களை கெஞ்சிக் கேட்கும் லட்சுமி மேனன்\nநீங்க நிறுத்தினா.. நானும் நிறுத்துவேன் - 'குப்குப்' பிரியர்களை கெஞ்சிக் கேட்கும் லட்சுமி மேனன்\nதமிழ் சினிமாவின் அதிர்ஷ்டலட்சுமியாகத் திகழும் லட்சுமி மேனன் ஒரு பக்கம் படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே, சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியத்தில் இறங்கியிருக்கிறார்.\nஅது... வீட்டில், தெருவில், கடை வாசலில், பொதுவெளியில் என பேதமின்றி பீடி, சிகரெட், சுருட்டு என புகைத்துத் தள்ளுவோருக்கு எதிரான பிரச்சாரம்தான்.\n'நீங்க நிறுத்தினா... நானும் நிறுத்துவேன்' என்ற வாசகத்துடன் இந்த பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் லட்சுமி. அப்படின்னா.. புகைப்பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தை நிறுத்தினால், லட்சுமி மேனன் தன்னிடமுள்ள கெட்ட பழக்கம் எதையாவது விட்டுவிடுவாராம்.\nலட்சுமி மேனன் சொல்வதைப் போலவே, ஒவ்வொருவரும் தங்களின் அன்புக்குரியவர்களிடம், 'எனக்காக புகைப்பழக்கத்தை விடுங்கள்.. உங்களுக்காக எனது கெட்ட பழக்கம் எதையாவது கைவிடுகிறேன்,' என்று சொல்ல வேண்டும்.\nஇந்தப் பிரச்சாரத்தின் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் அன்புக்குரிய அப்பா, சகோதரன், கணவன், காதலனின் புகைப்பழக்கத்தை அடியோடு ஒழிக்க முடியும். இது உண்மையிலேயே ஒரு நல்ல பிரச்சாரம் என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன்.\nபத்து சதவீதம் பலன் தந்தால் கூட இது நல்ல பிரச்சாரம்தான்\nசர்கார் போஸ்டர் பிரச்சனையாகிய நேரத்தில் பிக் பாஸில் தம்மடிப்பது பற்றி பேசிய கமல்\nசர்கார் போஸ்டரில் சிகரெட்... விஜய் மீது போலீஸில் புகார்\nஅந்த விளம்பரத்தில் நடிச்ச குழந்தை இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க..\nதம்மடித்து மூக்கு வழியாக புகைவிடும் அமலா பால்: வைரலான வீடியோ\nநான் புகைப்பிடிக்கத் துவங்கியதற்கு காரணம் ஒரேயொரு நபர்: கமல் ஹாஸன்\nதம்மடிக்கும் சீன்... சமந்தாவுக்கு விநியோகஸ்தர்கள் கண்டனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: smoking lakshmi menon லட்சுமி மேனன் புகைப்பழக்கம் பிரச்சாரம்\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\nவடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nஸ்ரீ ரெட்டியின் புகார்கள் ஆதாரம் அற்றது : நடிகர் கார்த்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ulavan.wordpress.com/2014/04/16/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2018-07-19T11:47:23Z", "digest": "sha1:RPEG3FDPGYUQTDRNNUAMYCUYAR7SM4CP", "length": 8530, "nlines": 66, "source_domain": "ulavan.wordpress.com", "title": "இறந்த கோழிகளுடன் உறவுகொண்ட இளைஞன் கோழிகளை சமைத்து உண்டு மகிழ்ந்த குடும்பம் | உழவன்", "raw_content": "\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலை��ெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇறந்த கோழிகளுடன் உறவுகொண்ட இளைஞன் கோழிகளை சமைத்து உண்டு மகிழ்ந்த குடும்பம்\nசமையலுக்காக கொல்லப்பட்ட கோழிகளுடன் இளைஞன் ஒருவர் உடலுறவுகொண்டுள்ளான். அக்கோழிகளை அந்த இளைஞனின் குடும்பம் மகிழ்ச்சியாக சமைத்து உண்ட சம்பவமொன்று அண்மையில் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 17 வயதான இளைஞனே கோழிகளுடன் உறவுகொண்டுள்ளான். இவனது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 23 வயதான டையமகட்ஸோ மரடொலா என்ற யுவதி சமையலுக்காக இரு கோழிகளை கொன்று சுத்தம் செய்யயுமாறு தனது அயலவரான மேற்படி இளைஞனிடம் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் இளைஞன் திரும்பி வராததால் சம்பவ இடத்திற்கு மரடொலோ சென்ற போது இளைஞன் இறந்த கோழிகளுடன் உறவுகொண்டிருந்துள்ளார். மற்றைய கோழியைiயும் சோதனை செய்தபோது அக்கோழியுடனும் இளைஞன் உறவில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. தனது கண்களாலே இளைஞனின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மரடொலா வேறுகோழிகளை வாங்குவதற்கும் பணம் கேட்டுள்ளார். அத்துடன் இளைஞனுக்கு மனநிலை சரியில்லை அவருக்கு உதவிகள் தேவை எனக் கூறியுள்ளார். ஆனால் கோழிக்கான பணத்தைக் கொடுத்த இளைஞனின் குடும்பம் இளைஞனினால் உறவுக்குட்படுத்தப்பட்ட கோழிகளை இரவுச் சாப்பாடாக சமைத்துண்டுள்ளனர். இது குறித்து மேற்படி இளைஞனின் 19 வயதான சகோதரி கூறுகையில், எனது சகோதரின் நடவடிக்கை எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அந்த கோழிகளை நாங்கள் இரவுச் சாப்பாடாக சமைத்து மகிழ்ச்சியாக உண்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்\nFiled under: இணையதளம், உழவன்۞, செய்திகள், தகவல், Uncategorized |\n« மயக்க மருந்து கொடுத்து நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேர் கர்ப்பிணிப் பெண் செய்தியாளரை கற்பழிக்க உத்தரவிட்ட எம்.பி யால் பரபரப்பு (Photos,Video) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவேலூர் மருத்துவமனையில் பெண் பேய் \nஆடை அவிழ்த்து அம்மணமாக்கி தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தும் மலையாளிகள்.\nகாதலி உடை மாற்றும்போது வீடியோ எடுத்து காசு உழைக்கும் காதலன் \nஇஸ்ரேலிய பெண் இராணுவத்தினரின் அரை நிர்வாண ஆட்டம் வெளியான வீடியோவால் பரபரப்பு (Video, Photo)\nமுயலின் கள்ளத் தொடர்பு அம்பலம்\nஇவர்கள் எப்படி பெண்ணைக் கையாள்கிறார்கள் என்று பாருங்கள்\nகவர்ச்சி நடிகை நமிதாவின் வெளிவராத கவர்ச்சிகரமான வீடியோக்காட்சி\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-07-19T11:38:39Z", "digest": "sha1:BBFBD5QLV4E5WOQ74KGA44QVTQLOUDFH", "length": 7900, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» பிரித்தானியாவின் தீவிரவாத எதிர்ப்பு கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்: கோர்பின்", "raw_content": "\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\n‘நாடோடிகள்-2’ வின் பிரமிக்கும் அடுத்த வெளியீடு\nஅகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவின் தீவிரவாத எதிர்ப்பு கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்: கோர்பின்\nபிரித்தானியாவின் தீவிரவாத எதிர்ப்பு கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்: கோர்பின்\nதீவிரவாத எதிர்ப்பு தொடர்பில் பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.\nதீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையானது அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் அமைக்கப்பட வேண்டும் எனவும், முஸ்லிம்களை மாத்திரம் குறிவைக்கும் வகையில் இருக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கை முஸ்லிம்களையே குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே கோர்பின் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.\nபிரெக்சிற்: பார்னியர் – டொமினிக் ராப் இடையே முதல் சந்திப்பு\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் பிரெக்சிற் செயலாளர் டொமினிக் ராப்-இற்கும், ஐரோப்பிய ஒன்ற\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபிரித்தானியாவில் தமிழர் ஒருவர் துணிச்சலான முறையில் கொள்ளையர்களின�� துப்பாக்கி முனையில் இருந்து தப்பிய\nபிரெக்சிற்றுக்கு ஆதரவான பிரசார குழுவினருக்கு அபராதம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவான பிரெக்சிற் பிரசார குழுவினருக்கு 61 ஆய\n- உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை\nபிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிப்பது தொடர்பான வாக்கெடுப\nஇலங்கையின் மனித உரிமை செயற்பாட்டில் முன்னேற்றமில்லை: பிரித்தானியா\nமனித உரிமைகள் குறித்து பிரித்தானியாவின் கூடுதல் அக்கறைக்கு உள்ளாகியுள்ள மற்றும் மனித உரிமைகள் செயலாக\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\n‘நாடோடிகள்-2’ வின் பிரமிக்கும் அடுத்த வெளியீடு\nஅகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல்\nமுல்லை – கிளி. இல் இதுவரை 5442 அபாயகரமான வெடிபொருட்கள் அழிப்பு\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nபல குற்றச்செயல்களுடன் அலோசியஸிற்கு தொடர்பு\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-07-19T11:30:57Z", "digest": "sha1:X6H4QPNGPLAC4LCYGRQYHVMISBKGGKCO", "length": 7831, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» மூன்று மொழிகளில் வெளியீட்டுக்கு தயாராகும் பரத்தின் ‘பொட்டு’", "raw_content": "\nபூநகரியில் 10.675 மில்லியன் செலவில் அபிவிருத்தி\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\n‘நாடோடிகள்-2’ வின் பிரமிக்கும் அடுத்த வெளியீடு\nஅகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு\nமூன்று மொழிகளில் வெளியீட்டுக்கு தயாராகும் பரத்தின் ‘பொட்டு’\nமூன்று மொழிகளில் வெளியீட்டுக்கு தயாராகும் பரத்தின் ‘பொட்டு’\nபரத், நமீதா நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள படம் ‘பொட்டு’. இப்படத்தை வடிவுடையான்இயக்கியிருக்கிறார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.\nமுழுக்க முழுக்க திகில் படமாக உருவாகியிருக்கும இந்த படத்தில் பரத் இப்படத்தில் பெண் வேடத்திலும் நடித்துள்ளார்.இப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 90 நாட்களே நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.அத்தோடு, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஅதன்படி, தமிழில் பொட்டு என்ற பெயரிலும், தெலுங்கில் பொட்டூ என்ற பெயரிலும், இந்தியில் பிந்தி என்ற பெயரிலும் இப்படம் வெளியாகவிருக்கிறது. தற்போது அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.\nஉதயநிதி ஸ்டாலினின் ‘நிமிர்’ இசை வெளியீட்டு விழா\nமூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் வு குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வ\nதிருமணத்திற்கு பின் நமீதா வெளியிட்ட வீடியோ\nகடந்த சில தினங்கள் முன்பு திருமணம் செய்து கொண்ட நடிகை நமீதா. தற்போது திருமணத்திற்கு பின்பு தனது டுவ\nநமீதாவின் திருமணத்தை புறக்கணித்த ஜூலி\nநமீதாவின் திருமணத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அழையாத வீட்டிற்கு தான் எப்படி செல்வது எ\nகோலகலமாக நடைபெற்ற நமீதா-வீரேந்திர சவுத்திரி திருமணம்\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நமீதா, தெலுங்கு சினிமா இயக்குனரான வீரேந்திர சவுத்திரி ஆகியோர் இன்று\nவைரலாகப் பரவும் நமீதாவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல நடிகை நமீதா, தெலுங்கு சினிமா இயக்குனரான வீரேந்திர சவுத்திரியுடன் திருப்பதியில் நாளைய தினம் திர\nபூநகரியில் 10.675 மில்லியன் செலவில் அபிவிருத்தி\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\n‘நாடோடிகள்-2’ வின் பிரமிக்கும் அடுத்த வெளியீடு\nஅகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல்\nமுல்லை – கிளி. இல் இதுவரை 5442 அபாயகரமான வெடிபொருட்கள் அழிப்பு\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வ���ற்றி\nபல குற்றச்செயல்களுடன் அலோசியஸிற்கு தொடர்பு\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-19T11:14:35Z", "digest": "sha1:KM4VAJEZEW2PAFMVBR244QXC54NR7FR2", "length": 28593, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தாய்லாந்து குகையில் மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்: இதுவரை நடந்தது என்ன?", "raw_content": "\nதாய்லாந்து குகையில் மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்: இதுவரை நடந்தது என்ன\nதாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய மீட்புப் பணியாளர்கள் 4 சிறுவர்களை பாதுகாப்பாக நேற்று மீட்டு வந்தனர்.\nமீதம் உள்ள சிறுவர்களை மீட்கும் பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.\nதேர்ச்சி பெற்ற இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் ஒவ்வொரு சிறுவருடனும் நீந்தி, நீரில் மூழ்கிய கடினமான குகைப்பாதையைக் கடந்து சிறுவர்களை அழைத்து வந்தனர். இதையடுத்து, மீட்பு வீரர்களின் காற்றுக் குடுவையை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் காரணமாக நேற்றிரவு மீட்புப் பணி தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.\nதிங்கள்கிழமை காலை குகை வாயிலில் நிலவும் பரபரப்பு, மீட்புப் பணி விரைவில் தொடங்கவுள்ளதைக் காட்டுகிறது.\nதாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.\nகுகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டதை அறிந்துகொண்ட அதிகாரிகள், அரசை உஷார் படுத்தியதை அடுத்து அவர்களைத் தேடும் பணி அன்றிரவே தொடங்கியது.\nஅவர்கள் உள்ளே சென்றிருந்த நிலையில், திடீரெனப் பெய்த பெருமழையும், அதையடுத்து குகைக்குள் பாய்ந்த காட்டு வெள்ளமும் குகையின் வெளியேறும் வாயில்களை அடைத்துக் கொண்டதால், இந்த 13 பேர் அணி, ஒதுங்குவதற்கு சற்று மேடான இடத்தைத் தேடி குகைக்குள் பின்னோக்கிச் சென்றதாகத் தெரிகிறது.\nஆனால், வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.\nஇந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.\n9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.\nசிறுவர்களோடு அவர்கள் நிகழ்த்திய உரையாடல் அடங்கிய விடியோ பதிவு ஒன்றும் வெளியானது, எல்லோருக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்தது.\nஎனினும், குகையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஒன்று சிறுவர்கள் முக்குளிக்கக் கற்றுக் கொண்டு வெள்ளம் சூழ்ந்த குகையை நீந்திக் கடக்கவேண்டும் அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்கவேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் அறிவித்தது.\nஅப்போதுதான் மீட்புப் பணி அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை என்பதை உலகம் உணர்ந்தது.\nஒருபுறம் குகையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து இறைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டது. மறுபுறம் குகையின் ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர்.\nநான்கு மாதமும் இப்படியே உணவும் மருந்தும் சப்ளை செய்து அவர்களை காத்திருக்கச் செய்யலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறை ஒரு முக்குளிக்கும் வீரர் குகைக்குள் சென்று திரும்புவது மிகக் கடினமான, ஆபத்தான, பல மணி நேரம் பிடிக்கும் பயணமாக இருந்தது.\nசிக்கிக் கொண்ட சிறுவர்களும், பயிற்சியாளரும் குகையில் இருந்து எழுதி அனுப்பிய கடிதங்கள் மனதை உருக்கின.\nதாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.\nஇது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது.\nதாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர்.\nகுகையின் உள் பகுதி சில இடங்களில் 33 அடி உயரம் வரை இருந்தாலும், சில இடங்கள் மிகவும் குறுகலானவை. மீட்புப் பணியாளர்கள் தங்கள் காற்று உருளையையோடு அந்த இடங்களை நீந்திக் கடப்பது கடினம். எனவே, அவர்கள் தங்கள் உருளையை கழற்றி எடுத்துக் கொண்டுதான் அந்த இடங்களைக் கடக்க முடியும்.\nஇந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது.\nஅதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.\nசிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீ்ட்பு வீரர் சுமந்து வருவார். ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பான். மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும்.\nநாங்கள் கண்டறியப்பட்ட தருணம் அற்புதமானது’ – தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்\nதாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி.. திகில் த்ரில் அனுபவம் – (படங்கள், வீடியோ) 0\nதாய்லாந்து குகைக்குள் 10 மீட்பு- மீதமுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம் – வைரலாகும் வீடியோ 0\nஇறக்கும் தறுவாயில் புகைப்படம்… மக்கள் மனதை உருக்கிய நியூயார்க் சோயி\nஎப்படி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்: தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில் 0\nநச்சு வாயு தாக்குதல் நடத்தி 13 பேரை கொன்ற 7 ஜப்பானியர்களுக்கு ஒரே நாளில் தூக்கு\nஇலங்கையில் 37 குட்டிகளுடன் சிக்கிய ராஜ நாகம்… வைரலாகும் அதிசய காணொளி\nமுல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே: வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்\nஜூலை 13 வெள்ளிக்கிழமை: நினைக்கப்படவேண்டியவர்களின் நினைவு தினம்\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர் (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\nபிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்\nவெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி… பிக் பாஸில் இதெல்லாம் யாரு: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்: பிக்பாஸ் சீசன் 2 : EPISODE 08 | DAY 7 ஏழாம் நாள்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nஅண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]\nஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னி��்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://singaimurasu.blogspot.com/", "date_download": "2018-07-19T11:23:20Z", "digest": "sha1:SRXOH3PAXGZUUNQFN7PNR4E2WT2JXKLJ", "length": 4316, "nlines": 86, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\nமே மாதத்தின் முதல் வாரத்தில் வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில் நடைபெறவிருக்கிறது.\nநூல்: பள்ளி கொண்டபுரம் (நாவல்)\nஇந்த நாவலைப் படித்து எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. வாசகர்கள் அவரவர் விமரிசனப்பார்வையை வாசிப்பதுடன்\nநாள்: 8-5-11 ஞாயிறு மாலை\nஇடம்: அங் மோ கியோ நூலகம், முதல் மாடி டொமேட்டோ அறை\nஅன்புடன், சித்ரா ரமேஷ் சார்பில் ஜெயந்தி சங்கர்\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nஎழுத்தாளர் பிரபஞ்சன் சிங்கப்பூர் வருகிறார்\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nஎளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்\nநூல் வெளியீடு - அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://sujathadesikan.blogspot.com/2006/01/", "date_download": "2018-07-19T11:42:05Z", "digest": "sha1:QOES2YULN6KHHIDQZ5YW36ZXLWBNTF6X", "length": 33865, "nlines": 317, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: January 2006", "raw_content": "\nபுத்தகக் கண்காட்சிக்கு இரண்டு முறை போனேன். அங்கு வாங்கிய புத்தகங்களள பற்றிச் சொல்ல போவதில்லை பயப்படாதீர்கள்.\n* புத்தகக் கண்காட்சி பின்வாயிலில் ஓர் இளைஞர் நம்முடைய பெயரை அரிசி, கடுகு போன்றவற்றில் எழுதி (ரூ 20/= ) ஒரு சாவிக் கொத்தில் போட்டுத் தருகிறார். இந்த முறை இது புதுசு. அதைக் கடந்து வந்தால் டெல்லி அப்பளம், சூப், ஆவின் கடை, மிளகாய் பஜ்ஜி என்று சுவாரசியமாக இருக்கிறது. முதல்முறை போனபோது இருந்த அருமையான விவேகானந்தா காப்பி (விலை 6/-) இரண்டாவது முறை போன போது இல்லை.\n* உள்ளே வந்தால் எது நல்ல புத்தகம் (அல்லது எனக்குப் பிடித்த புத்தகம் எது) என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். இந்த முறை ஒன்று கண்டுபிடித்தேன், புத்தகம் 100 பக்கம் என்றால் அதனுடைய விலை ரூ 50/-; 200 பக்கம் என்றால் ரூ100/=. கெட்டியட்டை என்றால் ஒரு ரூ20/= சேர்த்துக் கொள்ளுங்கள்.\n* நக்கீரன் பத்திரிகையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய, 'இந்து மதம் எங்கே போகிறத���' அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியது புத்தக வடிவில் நன்றாகப் போகிறது. \"சார், எனக்கு ஒரு இந்து மதம்(' அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியது புத்தக வடிவில் நன்றாகப் போகிறது. \"சார், எனக்கு ஒரு இந்து மதம்()\" என்று பலரும் விரும்பி வாங்குவது நம்பிக்கையைத் தருகிறது. அர்த்தமுள்ள இந்து மதம், அப்துல் கலாம், காந்திஜியின் (\"அந்த முப்பது ரூபாய் புத்தகம் ஒன்னு கொடுப்பா)\" என்று பலரும் விரும்பி வாங்குவது நம்பிக்கையைத் தருகிறது. அர்த்தமுள்ள இந்து மதம், அப்துல் கலாம், காந்திஜியின் (\"அந்த முப்பது ரூபாய் புத்தகம் ஒன்னு கொடுப்பா\") சத்திய சோதனை நன்றாகப் போகிறது.\n* ஒரு கடையில் ஆன்மிகம் என்ற பிரிவில் மஞ்சள் அட்டை போட்ட பெரிய கீதையும், தி.க வெளியீடான கீதையின் மறுபக்கமும் இருந்தது. இந்த முறை, கடைகளைத் தேர்வு செய்ததில் விதி விளையாடியிருக்கிறது என்று நினைக்கிறேன். ரமணர், BVB ஸ்டால் பக்கத்தில் தி.க ஸ்டால்; ஒஷோ ஸ்டால் பக்கத்தில் R.K.Mutt ஸ்டால். Marxist ஸ்டால் பக்கத்தில் Venture Capitalist.\n* பெரும்பாலும் கூட்டம் ஆங்கிலப் புத்தகக் கடைகளில்தான் பார்த்தேன். நேஷனல் புக் டிரஸ்ட் கடையில் ஒரு தமிழ் கதைப் புத்தகத்தை ஒரு அம்மா வாங்கியவுடன் உடன் வந்திருந்த சின்ன பையன் \"Mummy, do you want me to read this book\" என்று சந்தேகத்துடன் கேட்டது. பில் போடுபவர் பில் போடலாமா வேண்டாமா என்று ஒரு நிமிடம் குழம்பினார்.\n* உங்கள் புத்தகங்களை யாரும் போட முன்வரவில்லை என்றால் நீங்களே ஒரு பதிப்பகத்தை ஆரம்பிக்கலாம். பல புத்தகங்கள் அப்படித்தான் வந்திருக்கிறது. வலைப்பதிவு ஆரம்பிப்பதைப் போல் :-)\n* விகடன், குமுதம் ஸ்டாலில் நல்ல கூட்டம். புத்தகங்கள் விலையும் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. ஆனால் வாங்குகிறார்கள். leonardo da vinci ஓவியங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு நாளிதழ் சைஸுக்கு, கிட்டத்தட்ட 1000 பக்கங்கள். விலை 9800/= (ஆட்டோ செலவு 100ரூபாய் ஆகும்). அதேபோல் ஓலைச்சுவடி போல் திருக்குறள் புத்தகத்தை நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். வித்தியாசமாக இருந்தது.\n* சமையல் குறிப்பு, ஆன்மிகம், பணம் பண்ண என்ன வழி, கோபப்படாமல் இருப்பது எப்படி, இருபத்தி நான்கு மணிநேரத்தை இருபத்தி ஐந்து மணி நேரமாக ஆக்குவது எப்படி, நீங்களும் ஒரு அறிவாளி/விஞ்ஞானி, வெற்றி பெற 100 வழிகள், 1008 பழமொழிகள்/விடுகதைகள், தென்னலி ராமன், முல்லா கதைகள் போன்ற புத்தகங்களை ஒதுக்கினால் மீதி உள்ள புத்தகங்களை தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (BAPASI) ஸ்டாலில் (அல்லது அலுவலகத்தில்) அடக்கிவிடலாம்.\n* பல தமிழ் புத்தகங்கள் ஆங்கில புத்தகத்திலிருந்து சுட்டது அல்லது தழுவி எழுதப்பட்டது என்று அதன் தலைப்பையும், உள்ளே இருக்கும் சரக்கையும் பார்த்தாலே தெரிகிறது. இல்லாவிட்டால் இது போல் தலையணை சைஸ் புத்தங்களை எழுத முடியாது. அடுத்த முறையாவது நல்ல தமிழ் புத்தகங்கள் வந்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம். காலச்சுவடில் ஓரளவு நல்ல புத்தகங்கள் இருக்கிறது. பல ஸ்டால்களில் புத்தகத்தின் அட்டை மட்டுமே நன்றாக இருக்கிறது.\n[ படம் உதவி ஹரன் பிரசன்னா - நன்றி ]\nசுஜாதா அவர்கள் சென்னை ( கிண்டி) MIT கல்லூரி வெள்ளி விழா மலரில் எழுதிய கட்டுரையை தேடிக்கொண்டிருக்கிறேன். ஆங்கில கட்டுரை என்று நினைக்கிறேன். அந்த கட்டுரையின் பிரதியை யாராவது வைத்திருந்ததல் எனக்கு அனுப்புங்கள். மகிழ்ச்சியடைவேன்.\nசில MIT நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்.\nவிடுபட்டுபோன வி.சி - தம்பி\nநண்பர் அதியமான் சில வாரங்களுக்கு முன் அம்பலம் அரட்டையில் முன்பு எப்போதோ படித்த ஒரு விஞ்ஞான சிறுகதையை உயிர்மை வி.சி தொகுப்பில் காணவில்லை என்றார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அந்த கதையின் அவுட்லைனையும் சொன்னார். பிறகு சுஜாதாவிடம் பேசிக்கொண்டிருந்த போது அது முன்பு கணையாழியில் எழுதியது என்று நினைக்கிறேன் என்றார்.\nஅடுத்தவாரம் அதிர்ஷ்டம் என் பக்கம் அடித்தது. 1977 ஆகஸ்ட் மாதம் கணையாழியில் அந்த கதை கண்டுபிடித்தேன். கதையின் பெயர் தம்பி.\nபடிக்க விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.\nஅடுத்த உயிர்மை வி.சி பதிப்பில் இந்த கதை இடம்பெறும். நண்பர் அதியமானுக்கு என் நன்றி.\n[ Update 21st Jan 2006] நண்பர் ஸ்ரீகாந்த் 'தம்பி'யின் ரிஷிமூலத்தை ஆராய்ந்து ஒரு பதிவு போட்டிருக்கிறார். அது இங்கே\nஸ்ரீரங்கம் போக முடியாதவர்கள் இங்கே செல்லவும்.\nபடம் 1, படம் 2\nசனிக்கிழமை உயிர்மையின் இரண்டாவது கூட்டம், இரண்டு கூட்டமாக நடந்தது. எனக்கு இந்தக் கூட்டங்களில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. இவர்கள் உலகம் வேறு; என் உலகம் வேறு. இந்தக் கூட்டத்திற்கு போனதற்கு இரண்டு காரணங்கள்- ஒன்று, நண்பர் மனுஷ்யபுத்திரனின் அழைப்பு; மற்றொன்று நான் பெரும் மதிப்பு வைத்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர திரு.நல்லக்கண்ணு அவர்களுடைய பேச்சைக் கேட்க.\nகூட்டம் நான் போனபோது ஆரம்பித்திருந்தது. எழுத்தாளர்களின் புத்தகங்களை நல்லக்கண்ணு வெளியிட, அதைப் பற்றி மதிப்புரை என்று கூட்டம் போய்க்கொண்டிருந்தது. எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகத்தை பி.ஏ.கிருஷ்ணன் பாராட்டியும் சில இடங்களில் உள்ள மொழிபெயர்ப்புக் குறைகளையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டி தன் பேச்சை முடித்துக்கொண்டார். அப்போது பின்வரிசையில் உள்ள பெண்கள்(பத்து நிமிடம் முன்பு வந்தவர்கள்) திடீர் என்று எஸ்.ராமகிருஷ்ணன் தங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு சத்தம் போட்டனர். ( கூச்சல் போட்டார்கள் என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகமாக இருக்கும் ).\n'சண்டக் கோழி' என்ற படத்தில் 'குட்டிரேவதி' என்று பெயர் வைத்து வசனம் எழுதியதைக் கண்டிக்கிறோம் என்றார்கள். துப்பட்டாவைத் தூக்கிக் காண்பித்து ஏதேதோ பேசினார்கள். அப்போது எஸ்.ராமகிருஷ்ணன் மைக்கை பிடித்து, அந்தப் படத்தில் அந்தக் குறிப்பிட்ட வசனம், தான் எழுதியதில்லை என்று சொல்லி அதற்கு, தான் பொறுப்பேற்க முடியாது என்றார். \"நீங்கள் வேண்டுமென்றால் படத்தில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் உங்கள் கண்டனத்தைச் சொல்லுங்கள்\" என்றார். அதை வந்திருந்த பெண் கவிஞர்கள் எற்றுக்கொள்ள மறுத்தார்கள். சிலர் இந்தக் கூட்டத்தைத் தயவுசெய்து நடத்த விடுங்கள் என்று கேட்டது 'செவிடன் காதில் சங்கு' என்ற பழமொழியை நினைவுப்படுத்தியது.\nஅப்போது மேடை ஏறிய ஒருவர் (பெயர் ரமேஷ் என்று பிறகு தெரிந்துகொண்டேன், அவர் புத்தகமும் நேற்று வெளியிடப்பட்டது), 'மாலதி மைத்திரியை’ப் பற்றி எழுதியிருந்தால் நான்கு தலைகள் உருண்டிருக்கும் என்று பேசினார். பின்னர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கேட்டுக்கொண்டதற்குப் பின்னர் வெளியே சென்றார்கள். புக்பாயிண்ட் வெளியே போய் நின்று ஸ்பீச் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை வேடிக்கை பார்க்க கூட்டம் சேர்ந்தது.\nவெளியே ஒரு காமெடிக் கூட்டம்; உள்ளே இரு சீரியஸ் கூட்டம் என்று வந்திருந்தவர்கள் எதைக் கேட்பது என்று கொஞ்சம் குழம்பினார்கள். பெண் கவிஞர்கள் வெளியே பேசிமுடித்துவி���்டு கூட்டத்தைப் பார்த்து, \"எங்களுக்கு இப்போது ஆதரவு அளித்தது போல் அடுத்தகட்டப் போராட்டத்திற்கும் ஆதரவு அளிக்க வேண்டும்\" என்று சொன்னவுடன் எல்லோரும் நழுவினார்கள்.\nஎனக்கு ஒரே வருத்தம் இதுதான் - இவ்வளவு எழுதி, படித்த இவர்களுக்கு ஒரு stage etiquette தெரியவில்லை. 80 வயது நிரம்பிய நல்லக்கண்ணு என்ற ஒரு சிறந்த மனிதருக்குமுன் இவ்வளவு கூத்தும் நடைபெற்றது. அரசியலை விட மிக மோசமான சாக்கடை என்று இவர்கள் நிருபித்துக்காட்டினார்கள்.\nதமிழ் முரசு - செய்திகள்/படங்கள் : 1, 2, 3, 4, 5, 6, 7\n[இந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி, புகைபடங்கள் - நன்றி தமிழ்முரசு. ஒரு மாறுதலுக்கு செய்தியைத் திரிக்காமல் அப்படியே போட்ட தமிழ்முரசுக்கு ஒரு சபாஷ்\nஇதை பற்றி மாலன் பதிவு: எஸ்.ராவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nசுஜாதாவின் நூல்கள் வெளியீட்டு விழா\nவெள்ளிக்கிழமை மாலை சுஜாதாவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அதை பற்றி நான் எழுதுவதை விட மற்றவர்கள் எழுதுவதே சிறப்பு. அந்த விழாவை பற்றி ஆசாத் அருமையாக எழுதியிருக்கார். அதை இங்கு படிக்கலாம்\nதினமலரில் அதை பற்றிய சிறு குறிப்பை இங்கு காணலாம்.\nநான் அந்த விழாவில் வைரமுத்து வெளியிட 'சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்' என்ற புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். அதை பற்றி வைரமுத்து பேசினார். (நான் பேசவில்லை பயப்படாதீர்கள் )\nஅடுத்த நாள் விழாவில் சீரியஸான காமெடிகள் பல நடைபெற்றன. எழுதிக்கொண்டிருக்கிறேன். சீக்கிரம் பதிவில் போடுகிறேன். காத்திருங்கள்.\n[ Update 1: 9th Jan 2005, 10:45am ] இந்த நிகழ்ச்சி பற்றி அந்திமழையில் வந்திருக்கும் குற்ப்பு.\n[ எனக்கு என் புகைப்படத்தை அனுப்பி வைத்த என் நண்பர் சாமிநாதன் மற்றும் புகைப்படத்தை எடுத்த உப்பிலிக்கு நன்றி ]\nஇரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்\nஉயிர்மை பதிப்பகம் 2006ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இரண்டு பெரும் புத்தக வெளியீட்டு விழாக்களை ஜனவரி 6-7 தேதிகளில் அடுத்தடுத்த தினங்களில் நடத்தவிருக்கிறது.\nஜனவரி 6 அன்று மாலை சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் மாலை ஆறு மணிக்கு சுஜாதாவின் பத்துப் புத்தகங்கள் ஒரே மேடையில் வெளிடப்படுகின்றன.\n1.சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம், 2.திரைக்கதை பயிற்சிப் புத்தகம்,\n4.சுஜாதாவின் மர்மக் கதைகள் (முழுத் தொகுப்பு),\n6.புதிய நீ��ிக் கதைகள் ஆகிய புதிய நூல்களுடன்\nஆகிய நூல்கள் மறுபதிப்பாகவும் வெளிவருகின்றன.\nஇவ் விழாவில் வைரமுத்து, இயக்குனர் ஷங்கர், ரா.கி.ரங்கராஜன், ஜெயமோகன், மதன், கு.ஞான சம்பந்தன், வாஸந்தி, திலகவதி, சுதாங்கன், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நூல்கள் குறித்து சிறப்புரையாற்றுகின்றனர்\nஜனவரி 7ஆம் தேதி மாலை சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 10 நவீன எழுத்தாளர்களின் பத்து நூல்களை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது.\n3.ஜீ. முருகனின் 'சாம்பல் நிற தேவதை',\n4.கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' (நாட்டுப் புற பாலியல் கதைகளின் தொகுப்பு),\n6.மு. சுயம்புலிங்கத்தின்' நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்',\n7.எம்.யுவனின் 'கை மறதியாய் வைத்த நாள்',\n8.'கு.அழகிரிசாமி கடிதங்கள்' (கி.ராவுக்கு எழுதியது),\nநூல்களை பி.ஏ.கிருஷ்ணன், யுவன் சந்திர சேகர், நாஞ்சில் நாடன், பிரேம், ஆர்.நல்லக்கண்ணு, சுகுமாரன், பாவண்ணன், பிரபஞ்சன், ஞானக்கூத்தன், எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு உரையாற்றுகின்றனர். விழா குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் அழைக்கலாம். 044-24993448.\nஇவ்விழாவில் வெளியிடப்படும் நூல் போக சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எஸ். ராமகிருஷ்ணனின் புதிய நாவலான 'உறுபசி', ஜெயமோகன் எழுதிய பேய்க்கதைகள் தொகுப்பான 'நிழல்வெளிக் கதைகள்' லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த 'அன்னா அக்மதோவா கவிதைகள்' உள்ளிட்ட பல நூல்களை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது.\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nவிடுபட்டுபோன வி.சி - தம்பி\nசுஜாதாவின் நூல்கள் வெளியீட்டு விழ���\nஇரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilscreen.com/sahoo-news/", "date_download": "2018-07-19T11:11:46Z", "digest": "sha1:PN3MR2UTZJ7TD3OEGACACBSZ26HZY3EK", "length": 8083, "nlines": 69, "source_domain": "tamilscreen.com", "title": "சாஹூ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் ஸ்ரத்தா கபூர்! - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsசாஹூ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் ஸ்ரத்தா கபூர்\nசாஹூ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் ஸ்ரத்தா கபூர்\nபாகுபலியின் இமாலய வெற்றியைத் தொடர்ந்துப் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் சாஹூ. முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் சூழலில், படத்தின் கதாநாயகியாக ஸ்ரத்தா கபூர் உறுதிச் செய்யப்பட்டுள்ளார்.\nஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் ஒரு அதிரடி திரைப்படம் சாஹூ.\nஇத்திரைப்படத்திற்காக மிகப்பெரிய செட்டுகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டுள்ளது.\nகதாநாயகி தேர்வு சம்பந்தமாக பல்வேறு ஊகங்கள் உலவி வந்த நிலையில், அதன் தயாரிப்பாளர்கள் வம்சி மற்றும் பிரமோத், இப்படத்தின் கதாநாயகியை அறிவித்திருக்கிறார்கள். படத்தின் நாயகி ஸ்ரத்தா கபூர். ஆம், ஹசீனா பார்க்கர் படநாயகியே சாஹூவில் பிரபாசுடன் திரையைப் பகிர்ந்துக்கொள்ள இருக்கிறார்.\nஆஷிக்-2 படத்தின் மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட ஸ்ரத்தா கபூர், இயக்குனர் SS ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்புகளான பாகுபலி திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத, நிறைவான இடத்தைப் பிடித்த பிரபாஸின் காதல் நாயகியாக இதில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான வம்சி மற்றும் பிரமோத், இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளனர்.\n“ஸ்ரத்தா கபூர் கதைக்கு மிகவும் பொருத்தமான தேர்வு, அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி. இது பிரபாஸ் நடிக்கும் முதல் ஹிந்திப் படம் என்பதால் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது என்றும், பரபரப்பான-விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளுக்கு குறைவிருக்காது” ” என தெரிவித்துள்ளனர்.\nசாஹூ குடும்பத்தில் ஸ்ரத்தா கபூரை பரவசத்துடன் வரவேற்கும் தயாரிப்பாளர்கள், பிரபாஸ்-ஸ்ரத்தா ஜோடி வெள்ளித்திரையில் ஏற்படுத்தவிருக்கும் சுவராஸ்யத்தை வெகுவாக எதிர்நோக்கி காத்திருப்பதாகக் கூறுகின்றனர்.\nபாகுபலி – 2 வெளியீட்���ுடன் இரசிகர்களின் பார்வைக்காக வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸர், வெகுவான வரவேற்பைப் பெற்றதுடன், ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் கிளப்பி இருக்கறது.\nதிரைபடத்துறையின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குனராக, ஒளிப்பதிவை மதி ஏற்றுக்கொள்ள, திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nநீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்க, அமிதாப் பட்டாச்சார்யா பாடல்கள் எழுத, சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கிறார்.\nசுஜீத் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படம், அடுத்த ஆண்டு திரைக்கு வரவிருக்கிறது.\nஇத்திரைப்படத்தை UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர்.\n‘பண்டிகை’ கிருஷ்ணா நடிக்கும் களரி”\nஅரசியல் படத்தில் கருணாநிதியின் பேரன் அருள்நிதி…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\n1000 கோடி ரூபாய் வசூல்…. – பாகுபலி 2 புதிய சாதனை\nஒவ்வொரு மரமும் மரகதம்; ‘மரகதக்காடு’ படம் சொல்லும் பாடம்…\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nகடைக்குட்டி சிங்கம்… – டிவி சீரியல் கதை சினிமாவாக ஜெயித்தது எப்படி\n‘பண்டிகை’ கிருஷ்ணா நடிக்கும் களரி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vettipaiyal.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-07-19T11:53:11Z", "digest": "sha1:J3ATQNYHBZ2IMBPPPT2567PKOBA5PJQ4", "length": 45689, "nlines": 439, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: ஜட்ஜா போகறீங்களா? சில டிப்ஸ்", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nஇப்ப எல்லாம் எந்த டீவி சேனல் பார்த்தாலும் ரியாலிட்டி ஷோனு ஒண்ணு நடத்தி உயிர வாங்கறானுங்க. அதுலயும் அந்த நிகழ்ச்சிகள்ல வர நடுவர்கள் பண்ற அலும்பு தாங்கல. ஜட்ஜா இருக்குறதுக்கு ஒரே தகுதி பிரபலமா இருக்குறது தான். இப்ப தான் வலைப்பதிவு ரொம்ப பிரபலம் ஆகிட்டு வருதே, இந்த நிலைமைல இங்க நம்ம ஆளுங்களை கூப்பிட்டா, இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு நீங்க ஒதுங்கிடக்கூடாதுனு சொல்லித் தர தான் இந்த பதிவு.\nஒரு பா��்டுப் போட்டிக்கு உங்களை ஜட்ஜா கூப்பிட்டா என்ன எல்லாம் கமெண்ட் குடுக்கலாம்னு பார்க்கலாம்.\n1. ”பல்லவி நல்லா இருந்தது. சரணம்ல விட்டுட்டீங்க” இந்த இடத்துல பல்லவி நல்லா இருந்தது, சரண்யாவை விட்டுட்டீங்கனு சொல்லி மாட்டிக்க கூடாது. உங்களுக்கு தெரிஞ்ச ஒரே பல்லவி , சகாதேவன் மகாதேவன்ல S.V. சேகருக்கு ஜோடியா நடிச்சவங்களா இருக்கலாம். அதெல்லாம் வெளிய காட்டிக்க கூடாது\n2.“ஸ்ருதி சேரல”. இந்த இடத்துல வடிவேல் ஸ்டைல்ல ”சுரூதி” சேரலனு சொல்லி மாட்டிக்க கூடாது. கொஞ்சம் ஸ்டைலா சொல்லனும்.\n3.”டெம்போ இல்லை” - உங்களுக்கு தெரிஞ்ச டெம்போ வீடு காலி பண்றதுக்கு பயன்படுத்துற டெம்போவா இருக்கலாம். திடீர்னு டெம்போ மறந்து போய் “லாரி இல்லை”னு சொல்லிடாதீங்க. அப்பறம் வீட்டுக்கு ஆட்டோ வரும்.\n4.“பீட்ட விட்டுட்டீங்க” - பீட்டர் விட்டுட்டீங்க இல்ல. இது Beatஅ விட்டுட்டீங்க. அப்படியே ஸிங் மிஸ் ஆகிடுச்சினும் சேர்த்துக்கலாம்.\n5. “பிட்ச் சரியில்லை” - நம்மளுக்கு தெரிஞ்சது க்ரிக்கெட் பிட்ச் மட்டுமா இருக்கலாம். இருந்தாலும் தைரியமா சொல்லுங்க. தப்பி தவறி சேப்பாக்கம் ஸ்டேடியம் பிட்ச் மாதிரி இருக்கணும்னு சொல்லி மாட்டிக்காதீங்க.\nஇப்படி எதுவுமே சொல்ல தெரியலை. பயமா இருக்குனு ஃபீல் பண்ணீங்கனா, இதை பயன்படுத்துங்க. இது தான் பிரம்மாஸ்திரம்.\nரொம்ப சீரியஸா முகத்தை வெச்சிட்டு கேளுங்க.\n உங்க ரேஞ்சுக்கான பாட்டே இல்லை இது. I was expecting more from you. You disappointed me\" அப்படினு தமிழும் இங்கிலீசும் கலந்து அடிங்க.\nஇப்ப டான்ஸ் போட்டிக்கு ஜட்ஜா கூப்பிட்டா.\nஇதுல ரெண்டு விதம் இருக்கு. ஒண்ணு ஜோடியா ஆடறது. அடுத்து தனியா ஆடறது.\nமுதல்ல ஜோடியா ஆடறதைப் பார்ப்போம்\n1. ”கெமிஸ்ட்ரி சரியில்லை”. உங்களுக்கு பிடிக்காதது கணக்கு பாடமா இருக்கலாம். அதுக்காக சரியா கணக்கு பண்ணலனு சொல்லிடாதீங்க. நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க. இது தான் முக்கியம். திடீர்னு தமிழ் பற்று வந்து வேதியியல் சரியில்லைனு சொல்லிடாதீங்க.\n2. கோ-ஆர்டினேஷன் இல்லை (அ) சிங்க் இல்லை - இங்க வாய் தவறி சில்க் இல்லைனு சொல்லிடக் கூடாது. இதுக்கும் யாரும் காரணம் கேட்க மாட்டாங்க.\n3. எக்ஸ்பிரஷன் சரியில்லை. இதுக்கு வந்து, டான்ஸ் நல்லா இருந்தது, ஆனா எக்ஸ்பிரஷன் மிஸ்ஸிங்னு சொல்லணும். இது பொதுவா நல்லா ஆடறவங்களுக்கு ஆப்பு வைக்க பயன்படுத்தலாம்.\n4. கான்செப்ட் இல்லை - போட்டிக்கு எப்படியும் ஏதாவது கான்செப்ட் சொல்லுவாங்க. பழைய பாட்டு, குத்து பாட்டு, வெஸ்டர்ன், டூயட் இப்படினு. நல்லா டான்ஸ் ஆடினா, டான்ஸ் நல்லா இருந்தது கான்செப்ட் இல்லைனு சொல்லணும். நல்லா ஆடலனா கான்செப்ட் நல்லா இருந்தது, டான்ஸ் எங்கனு கேட்கனும். அதை கேட்டதும் அவுங்க அப்படியே தலை குனிஞ்சி நின்னுடுவாங்க. நாம கெத்து காட்டணும்.\nஇது எல்லாத்தை விட ரொம்ப சுலபமானது, ”எனக்கு பிடிக்கல. நீங்க நல்லா ஆடினீங்க. எல்லா ஜட்ஜுக்கும் பிடிச்சிருக்கு, ஆடியன்ஸுக்கும் பிடிச்சிருக்கு, என் வீட்டு நாய் குட்டிக்கு கூட பிடிச்சிருக்கு. ஆனா எனக்கு பிடிக்கல. எனக்கு டான்ஸ் தெரியாதுடா”. அப்படினு சொல்லிக் கூட மார்க் போடலாம். ஆனா அப்ப அழுகணும். இல்லைனா ஆட்டய விட்டு தொரத்திடுவாங்க.\nஇப்ப தனியா ஆடற டான்ஸ்க்கு ஜட்ஜா போனா என்ன எல்லாம் கமெண்ட்ஸ் கொடுக்கலாம்னு பார்க்கலாம்.\n1. ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க - இது தைரியமா அடிச்சி விடலாம். அதை டான்ஸ் ஆடினவங்க கிட்டயே கேட்கலாம். ”ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க தானே கரெக்டா இல்லையா”னு கேட்கனும். அவுங்களும் பப்பரப்பேனு பார்த்துட்டு என்ன பண்றதுனு தெரியாம, ஒரு வேலை நிஜமாவே எதையோ மிஸ் பண்ணிட்டமோனு நினைச்சி தலையை ஆட்டிடுவாங்க. ஊரே நம்மல பார்த்து, இவன் பெரிய ஆளுடானு நினைச்சிக்கும்.\n2. எனர்ஜி குறைஞ்சிடுச்சி - இதுக்கு குசும்பனைக் கேட்டா இன்னும் தெளிவா விளக்கம் கொடுப்பாரு.\n3. சாங் செலக்ஷன் - உங்க திறமைக்கு ஏத்த பாட்டு இது இல்லை. இன்னும் நல்ல பாட்டா செலக்ட் பண்ணிருக்கணும்னு சொல்லணும். எந்த பாட்டா இருந்தாலும் கவலைப் படாம சொல்லுங்க. கலந்துக்கறவங்களும் ரொம்ப பெருமையா காமிராவைப் பார்ப்பாங்க.\n4. ஒரிஜினாலிட்டியை கெடுத்துட்டீங்க - பாதி பேர் பிரபு தேவா பாட்டைத் தான் ஆடுவாங்க. எப்படியும் அவரை விட நல்லா ஆடினாலும் நாம தைரியமா அடிச்சி விடலாம். அவர் எப்படி ஆடியிருந்தாரு, பாட்டோட ஒரிஜினாலிட்டியே கெடுத்துட்டீங்க அப்படினு அலப்பற கொடுக்கணும்.\nஇது எல்லாத்தையும் விட சுலபமானது, ”என்ன பண்ணீங்க I didnt expect this from you. ஸ்டெப் மிஸ் பண்ணிட்டீங்க, சிங் இல்லை, சாங் செலக்ஷன் சரியில்லை. போன ரவுண்ட்ல எப்படி ஆடினீங்க. I expected more from you. I am totally disappointed\" இப்படினு சொல்லி அந்தர் பண்ணிடணும். தொர இங்கிலிபிஸெல்லாம் பேசுதுனு எல்லாரும் அப்படியே மெர்சலாயிடுவாங்க. டான்ஸ் ஆடினவங்க சோகமா நடந்து போவாங்க. உடனே பேக் க்ரவுண்ட்ல ஒரு சோக மியூசிக் போட்டுடுவாங்க. அப்படியே அவுங்க அழாம போனா கூட தலைல ஒரு தட்டு தட்டி அழ வெச்சிடுவாங்க. நமக்கு கவலை இல்லை\nஇது எல்லாம் எங்களுக்கு பயன்படாதுனு ஃபீல் பண்றீங்களா சிறுகதைப் போட்டிக்கு உங்களை ஜட்ஜா போட்டா எப்படி எல்லாம் கமெண்ட் கொடுக்கலாம்னு அடுத்த பதிவுல பார்க்கலாம்... விடு ஜூட்...\nபி.கு : ஊர்ல இருந்து மனைவி, குழந்தை எல்லாம் வந்துட்டாங்க. அதனால ஆன்லைன்லயோ வலையுலகிலோ அதிகம் பார்க்க முடியாது. பாப்பா ஏதாவது தட்டி சிஸ்டம் ரீஸ்டார்ட் பண்ணிடறாங்க. அதனால GTalkல எப்பவும் ஆன்லைன்ல இருக்குற மாதிரி தெரியும். நீங்க பிங் செய்து நான் ரெஸ்பாண்ட் செய்யலைனா தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nLabels: நகைச்சுவை, மொக்கை, லொள்ளு, வெட்டி பேச்சு\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\n:))) கரெக்டா சொன்னீங்க அதுவும் இந்த பாட்டு போட்டி ஜட்ஜுங்க தொல்லை தாங்க முடியலை...\n//அதனால GTalkல எப்பவும் ஆன்லைன்ல இருக்குற மாதிரி தெரியும். நீங்க பிங் செய்து நான் ரெஸ்பாண்ட் செய்யலைனா தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.///\nஹா ஹா ...இதை ரொம்பவே ரசிச்சேன்.....:))))))))\n இந்த இடம் சான்ஸே இல்ல.\n//நல்லா ஆடலனா கான்செப்ட் நல்லா இருந்தது, டான்ஸ் எங்கனு கேட்கனும். அதை கேட்டதும் அவுங்க அப்படியே தலை குனிஞ்சி நின்னுடுவாங்க. நாம கெத்து காட்டணும்//\n--இப்படி இப்படி தான் பின்னூட்டம் போடணும்னு பதிவு போட்டுருங்க--\nமொக்கையா ஆடினாலும் அவன் ஆட்டத்துல இருக்கணும்னு நினைச்சா \"அவன் கிழிச்சிட்டான்\" ன்னு அலர்ற மாதிரி சொல்லலாம்.\nரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பதிவு பாக்க ரொம்ப மகிழ்ச்சி.....பாப்பாவுக்கு விண்டர் வரதுள்ளே நல்ல ஊரை சுத்தி காட்டுங்க :-).\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nநன்றி பாஸ்.. இந்த பட்டை, நாமம் எல்லாம் எதுவும் இல்லாத மாதிரி வசதி கொடுங்களேன்.\n:))) கரெக்டா சொன்னீங்க அதுவும் இந்த பாட்டு போட்டி ஜட்ஜுங்க தொல்லை தாங்க முடியலை...//\nவாங்க தல... ஆமாம். இப்ப வீட்ல வந்துட்டதால, இதெல்லாம் பார்க்க வேண்டியதா போயிடுச்சி. இதை விட ஒரு கொடுமை திருமதி செல்வம், மேகலானு ரெண்டு நாடகம் பார்க்க சொல்லி கொடுமைப் படுத்தறாங்க. கேட்டா உங்க ப்ளாக் அளவுக்கு அது மொக்கை இல்லைனு சொல்றாங்க...\n//அதனால GTalkல எப்பவும் ஆன்லைன்ல இருக்குற மாதிரி தெரியும். நீங்க பிங் செய்து நான் ரெஸ்பாண்ட் செய்யலைனா தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.///\nஹா ஹா ...இதை ரொம்பவே ரசிச்சேன்.....:))))))))\nதினமும் வீட்ல போய் பார்க்கும் போது நாலு அஞ்சி பேர் பிங் பண்ணிருக்காங்க. நான் பார்க்கும் போது எல்லாரும் ஆஃப் லைன்ல இருக்காங்க. நடுவுல எத்தனை பேர் பிங் பண்றாங்கனு வேற தெரியல. அதான் பதிவுல சொல்லியாச்சி :)\nஆமாங்க வித்யா. அதை மிஸ் பண்ணிட்டேன்.. எடுத்து கொடுத்ததுக்கு நன்றி ஹை :)\n இந்த இடம் சான்ஸே இல்ல.\nவாங்க பாஸ்... உங்க ப்ரஃபைல் ஃபோட்டோ நல்லா இருக்குது...\n//நல்லா ஆடலனா கான்செப்ட் நல்லா இருந்தது, டான்ஸ் எங்கனு கேட்கனும். அதை கேட்டதும் அவுங்க அப்படியே தலை குனிஞ்சி நின்னுடுவாங்க. நாம கெத்து காட்டணும்//\n--இப்படி இப்படி தான் பின்னூட்டம் போடணும்னு பதிவு போட்டுருங்க--\nகுசும்பனோட பின்னூட்ட டெம்ப்ளேட் பதிவு பயங்கர ஃபேமஸாச்சே :)\nமொக்கையா ஆடினாலும் அவன் ஆட்டத்துல இருக்கணும்னு நினைச்சா \"அவன் கிழிச்சிட்டான்\" ன்னு அலர்ற மாதிரி சொல்லலாம்.\nஎன்னங்க இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டீங்க. அதை அப்படி சொல்லக் கூடாது. அதுக்கும் இப்படி நிறைய டெக்னிகல் டேர்ம்ஸ் இருக்கு. அதை இன்னொரு பதிவுல பார்க்கலாம் ;)\nரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பதிவு பாக்க ரொம்ப மகிழ்ச்சி.....பாப்பாவுக்கு விண்டர் வரதுள்ளே நல்ல ஊரை சுத்தி காட்டுங்க :-).\nமிக்க நன்றி ஹர்ஷினி அம்மா. எப்படியும் ஃபால் கலர் பார்க்க வைட் மௌன்டைன்ஸ் போவோம். இந்த வீக் வேலை இல்லைனா ஊர் சுத்த கிளம்பினாலும் கிளம்பிடுவோம் :)\n//இதை விட ஒரு கொடுமை திருமதி செல்வம், மேகலானு ரெண்டு நாடகம் பார்க்க சொல்லி கொடுமைப் படுத்தறாங்க. கேட்டா உங்க ப்ளாக் அளவுக்கு அது மொக்கை இல்லைனு சொல்றாங்க...//\nதன்னுடைய ப்லாக் மொக்கை என்பதை ஒத்துக் கொள்ள முடியாத, பெண்கள் நடித்து பெண்களால் விரும்பி பார்க்கப்படும் பெண்களுக்கான இந்த சீரியல்களை இவ்வாறு விமர்சிக்கும் ஆணீய சிந்தனையை கன்னா பின்னாவென கண்டிக்கிறே��்.\nஹிஹி... எல்லாரும் பேசறாங்களே நம்மளாலயும் முடியுதானு கொஞ்சம் ட்ரை பண்ணி பாத்தேன்.. வேறொண்ணுமில்ல. :)\nஅப்புறம் அந்த விஸ்வத்தோட அம்மா (குயிலி) எதுக்கு 10 ரூபா குடுத்தா 1000 ரூபாக்கு நடைக்கறாங்க\nதங்கத்துல பொறிச்சதை எனக்கு கொடுத்துடுங்க. அவுங்களுக்கு எல்லாம் பிரிண்ட் அவுட் போதும் ;)\n//இதை விட ஒரு கொடுமை திருமதி செல்வம், மேகலானு ரெண்டு நாடகம் பார்க்க சொல்லி கொடுமைப் படுத்தறாங்க. கேட்டா உங்க ப்ளாக் அளவுக்கு அது மொக்கை இல்லைனு சொல்றாங்க...//\nதன்னுடைய ப்லாக் மொக்கை என்பதை ஒத்துக் கொள்ள முடியாத, பெண்கள் நடித்து பெண்களால் விரும்பி பார்க்கப்படும் பெண்களுக்கான இந்த சீரியல்களை இவ்வாறு விமர்சிக்கும் ஆணீய சிந்தனையை கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்.\n//ஹிஹி... எல்லாரும் பேசறாங்களே நம்மளாலயும் முடியுதானு கொஞ்சம் ட்ரை பண்ணி பாத்தேன்.. வேறொண்ணுமில்ல. :)//\n//அப்புறம் அந்த விஸ்வத்தோட அம்மா (குயிலி) எதுக்கு 10 ரூபா குடுத்தா 1000 ரூபாக்கு நடைக்கறாங்க\nஅப்பறம் எப்படி நாடகத்தை அத்தன நாள் ஓட்டறது\nவாங்க தல, இதுதான் நீங்க Work from home பண்ற லட்சணமா\njosh பத்தல - இது பாட்டு டான்ஸ் ரெண்டுக்குமே சொல்லணும்- அர்த்தமெல்லாம் கேக்கப்படாது..\nஅப்புறம் செலக்ட் பண்ண வேணாம்னு முடிவு பண்ணிட்டா - THis is not your best, you can better than this, this is not your day அப்படின்னு ஏதாவது சொல்லி அவங்கள அழ விட்டு Waitlist பண்ணலாம்..\nஇந்த வெட்டி நாமக்கல்லானது என்ன மாயம்னு எனக்கு புரிய மாட்டேங்குனு கேட்டேன்லா.. புத்திக்கு எட்ட மாட்டேங்கு.. கொஞ்சம் விளக்கப்பு..\nவாங்க தல, இதுதான் நீங்க Work from home பண்ற லட்சணமா\nபாஸ்... அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை... எட்டு டூ பத்து இந்த நிகழ்ச்சி :)\njosh பத்தல - இது பாட்டு டான்ஸ் ரெண்டுக்குமே சொல்லணும்- அர்த்தமெல்லாம் கேக்கப்படாது..\nஅப்புறம் செலக்ட் பண்ண வேணாம்னு முடிவு பண்ணிட்டா - THis is not your best, you can better than this, this is not your day அப்படின்னு ஏதாவது சொல்லி அவங்கள அழ விட்டு Waitlist பண்ணலாம்..\nதப்பான நேரத்துல இந்த கேள்வி கேட்டுடறீங்க. நான் மிஸ் பண்ணிடறேன்.\n2007 ஆரம்பத்துல புது ப்ளாகர் வந்துச்சு. பழைய ப்ளாகர்ல இருந்து புதுசுக்கு மாத்தறேனு சிபி அண்ணன் என் ப்ளாகை அவர் கணக்குக்கு மாத்தி, ஏதோ கோக்கு மாக்கு ஆகிடுச்சி. அது வரைக்கும் எழுதுன பதிவு எல்லாம் அவர் பேருக்கு மாறிடுச்சி :)\nபாப்பா ஏதாவது தட்டி சிஸ்டம் ரீஸ்டார்ட் பண்ணிடறாங்க.\nஅதெப்பிடி ரீஸ்டார்ட் அமுக்கிதானே நாங்க எல்லாம் ரீஸ்டார்ட் செய்யறோம்\nஆமாங்க, கொடுமை இந்த ஜட்ஜா இவங்க பண்ணுர ரவுசுங்க, பாவம் புள்ளைங்க\nகலா மாஸ்டர் உங்க ப்ளாக் படிப்பவராக இருந்தால்\nஅடுத்த மானாட மயிலாடவுல நீங்க கூட ஆடலாம் \nஹா ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பர் பாஸ்\nஓ அப்படியா சங்கதி.. சரி சரி. பதில் சொன்னமைக்கு நன்றி ஹை\n//பாப்பா ஏதாவது தட்டி சிஸ்டம் ரீஸ்டார்ட் பண்ணிடறாங்க. அதனால GTalkல எப்பவும் ஆன்லைன்ல இருக்குற மாதிரி தெரியும். //\nஹிஹிஹி.. பொய் சொல்லலாம் அதுக்காக இப்படியா பாப்பா இப்போதைக்கு இங்க வந்து பேச மாட்டானு என்னா வேணாலும் சொல்லிடறது.. நடத்துங்க\nபாப்பா ஏதாவது தட்டி சிஸ்டம் ரீஸ்டார்ட் பண்ணிடறாங்க.\nஅதெப்பிடி ரீஸ்டார்ட் அமுக்கிதானே நாங்க எல்லாம் ரீஸ்டார்ட் செய்யறோம்\nஅது கொஞ்ச நாள்ல உங்களுக்கே புரியும் ;)\nகீ போர்ட்ல அவ்வளவு விஷயம் பண்ண முடியுமானு அவுங்க அது மேல ஏறி உக்காரும் போது தான் தெரியும் ;)\n// மங்களூர் சிவா said...\nஅதெல்லாம் செலக்ட் பண்ண சொல்ல வேண்டியது ;)\nஆமாங்க, கொடுமை இந்த ஜட்ஜா இவங்க பண்ணுர ரவுசுங்க, பாவம் புள்ளைங்க\nஆமா தல... அதைப் பார்த்து தான் இந்த பதிவே :)\nகலா மாஸ்டர் உங்க ப்ளாக் படிப்பவராக இருந்தால்\nஅடுத்த மானாட மயிலாடவுல நீங்க கூட ஆடலாம் \nமக்கள் அந்த கொடுமையை வேற அனுபவிக்கணுமா\n// நாஞ்சில் நாதம் said...\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா சூப்பர் பாஸ்\nஇவ்வளவு முக்கியமானதை எப்படி விட்டேன்\nஓ அப்படியா சங்கதி.. சரி சரி. பதில் சொன்னமைக்கு நன்றி ஹை\n//பாப்பா ஏதாவது தட்டி சிஸ்டம் ரீஸ்டார்ட் பண்ணிடறாங்க. அதனால GTalkல எப்பவும் ஆன்லைன்ல இருக்குற மாதிரி தெரியும். //\nஹிஹிஹி.. பொய் சொல்லலாம் அதுக்காக இப்படியா பாப்பா இப்போதைக்கு இங்க வந்து பேச மாட்டானு என்னா வேணாலும் சொல்லிடறது.. நடத்துங்க\nஆனால் ரொம்ப நன்றாக இருந்துச்சு ..\nஉங்கக்கிட்ட இருந்து இன்னும் அதிகமா எதிர்பார்க்கறோம்.\nமொக்கையை குறைச்சிட்டு துறைச்சார்ந்த பதிவுகள்.\nஉங்க எழுத்து நடை சுவாரசியம் தான் ஆனாலும் ஏதோ எங்கயோ மிஸ் ஆகுது. அதை மட்டும் கண்டுபிடிச்சி சேர்த்து விட்டுட்டா, உங்களை அடிச்சிக்க முடியாது. Anyways, all the best.\nசிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிடிச்சு தல...சூப்பராகீதுபா...\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் ந��்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்\nமுன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே\n மணி 5:30 ஆச்சு... எழுந்திரி\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா இப்படி உயிர வாங்கற 7 மணிக்கு தான முகூர...\nமுன்குறிப்பு: சிரிக்க மட்டுமே... சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் ய...\nஎனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்: 1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள...\n\"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாத...\nஅதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிம...\nஉன்னை போல் ஒருவன் - மாத்தி யோசி\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) ���ொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21646&cat=3", "date_download": "2018-07-19T11:34:51Z", "digest": "sha1:7AH34TSWYLZ5PKLZQE3FLNYH6PEQC5GV", "length": 23714, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கோடி வளமருள்வாள் கோடிவனமுடையாள்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nதஞ்சை ராஜராஜேச்சரம் எனும் பெரிய கோயிலுக்கு பெருந்திருவிழாக்கள் நிகழும்போதும், மகா கும்பாபிஷேகங்கள் நிகழும்போதும், அப்பெருநகரத்தில் திகழும் நான்கு மகாகாளி கோயில்களுக்கு பலி பூஜை செய்வித்த பின்புதான் மேற்குறித்த விழாக்கள் தொடக்கம் பெறும். தஞ்சை நகரத்தின் மேற்கு கோட்டை வாயிலில் திகழும் கோட்டை வாயிற் காளி கோயில், விஜயாலய சோழன் ஸ்தாபித்த நிசும்பசூதனி எனும் வடபத்ரகாளி கோயில், சோழப்பெருவேந்தர்கள் காலத்தில் ரெளத்திர மகாகாளம் எனும் பெயரில் விளங்கிய கீழ்திசை குயவர் தெருவில் உள்ள மகாகாளி கோயில், தஞ்சை நகரத்துக்கு வரும் கோடிவனமுடையாள் பெருவழி எனும் நெடுஞ்சாலை அருகில் திகழும் கரந்தை கோடியம்மன் கோயில் ஆகிய நான்கு காளி கோயில்களே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான ஆலயங்களாகும். இந்த நான்கு காளி கோயில்களும் கி.பி. 9ம் நூற்றாண்டு காலகட்டத்தில் எடுப்பிக்கப் பெற்றவை என்பதை கல்வெட்டுச் சாசனங்கள் மற்றும் பழந்தடயங்கள் மூலம் அறிய இயலுகின்றது.\nதஞ்சை நகரத்தின் புறநகராக விளங்கும் கருந்திட்டைக்குடிக்கும், வெண்ணாற்றுக்கும் இடையில் கோடியம்மன் கோயில் எனற பெயரில் இக்காளி கோயில் உள்ளது. பழங்காலத்தில் இது வனப்பகுதியாக இருந்ததால் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுச் சாசனமான்று இதனைக் கோடிவனம் எனக் குறிப்பிடுகின்றது. இங்கு கோயில் கொண்டுள்ள வடவாயிற் செல்வியான மாகாளியை கோடிவனமுடையாள் என்றும், இவ்வனத்தின் வழியே சென்ற பழங்கால நெடுஞ்சாலையை கோடிவனமுடையாள் பெருவழி என்றும் அச்சாசனமே குறிக்கின்றது. வடக்கு நோக்கி அமைந்த அழகான இவ்வாலயத்தின் கருவறை சாலாகார விமானத்துடன், அர்த்த மண்டபம் மகாமண்டபம் ஆகிய கட்டுமானங்களுடன் இணைந்து காணப்பெறுகின்றது. திருச்சுற்றில் பண்டு அப்பகுதிய��ல் திகழ்ந்து முற்றிலுமாக அழிந்துபோன சிவாலயமொன்றின் தெய்வத் திருமேனிகளான இரண்டு பைரவ மூர்த்தங்கள், இரண்டு அம்பிகையின் திருமேனிகள், துர்காதேவி எனப் பல தெய்வ உருவங்களைத் தற்போது பிரதிட்டை செய்துள்ளனர் கோடி வனமுடையாள் எனப்பெறும் தேவி கருவறையில் எட்டுத் திருக்கரங்களுடன் வீராசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி நல்குகின்றாள்.\nஅம்பிகையின் திருமேனி சுதையால் வடிக்கப் பெற்றதாகும். மிகத் தொன்மைக் காலத்திலிருந்து சில குறிப்பிட்ட காளிதேவியின் திருவடிவங்களையும், சில வைணவ ஆலயங்களில் மூல மூர்த்தியையும் படாசாதனம் என்ற முறையில் சுண்ணாம்புச் சுதையாலேயே வடிப்பது மிகத் தொன்மையான கோயிற்கலை மரபாகும். அவ்வகையிலேயே இங்கும் அம்மரபு போற்றப் பெறுகின்றது. தீச்சுடர்கள் ஒளிரும் திருமகுடத்தோடு கையில் திரிசூலம், வாள், கேடயம், மணி, கபாலம் பாசம் போன்ற ஆயுதங்களைக் கையில் தரித்தவளாக அமர்ந்த கோலத்தில் திகழும் கோடியம்மனின் திருமேனி, செம்மாந்த கோலத்துடன் காட்சி நல்குகின்றது. அர்த்த மண்டபத்தில் கருவறையின் வாயிலின் இருமருங்கும் பல்லவர் காலத்துக்குரிய மிகப் பழமையான இரண்டு அமர்ந்த கோல தேவியின் கற்சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ஒரு தேவி தன் இடக்காலை மடித்தும், வலக்காலைத் தொங்கவிட்ட நிலையிலும் நான்கு திருக்கரங்களோடு கம்பீரமாக அமர்ந்துள்ளாள். ஜடாபாரம் விரிந்து திகழ்கின்றது. காதுகளில் பத்ரகுண்டலங்கள் காணப்பெறுகின்றன. வல மேற்கரத்தில் கத்தியும், இட மேற்கரத்தில் கபாலமும் உள்ளன.\nஇட முன்கரத்தை தொடையின் மீது இருத்தியும், வல முன்கரத்தால் அபயம் காட்டியும் அம்பிகை திகழ்கின்றாள். மார்பில் பாம்பாலான உரக கச்சையைத் தரித்துள்ளாள். மற்றொரு பாம்பாலான யக்ஞோபவீதம் எனும் மார்பணி காணப் பெறுகின்றது. கையிலும், தோளிலும் அணிகலன்கள் இடம்பெற்றுள்ளன. அவள் தரித்துள்ள ஆடை அழகுடன் திகழ்கின்றது. திருமுகம் கருணையின் வடிவமாகவே காட்சி நல்குகின்றது. மற்றொரு புறம் உள்ள தேவியின் சிலா வடிவமும் பல்லவர்கால கலை அமைதியுடன் அமைந்துள்ளது. இத்தேவி தாமரை பீடத்தின் மேல் இடக்காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளாள். தலையில் சிகை ஜடாபாரமாக விரிந்து திகழ்கின்றது. ஒரு காதில் குழையும், ஒரு காதில் பிரேத குண��டலமும் தரித்துள்ளாள். வலமேற்கரத்தில் திரிசூலமும், இடமேற்கரத்தில் கபாலமும் உள்ளன. இடமுன்கரத்தை தொடையின் மீது அமர்த்தியுள்ள இத்தேவி வலமுன் கரத்தால் அபயம் காட்டுகின்றாள். இவள் அணிந்துள்ள யக்ஞோபவீதம் கபாலங்கள் கோர்க்கப் பெற்றதாகத் திகழ்கின்றது.\nஅணிகலன்களும் இடுப்பாடையும் இத்தேவிக்கு மேலும் அழகூட்டுகின்றன. இவ்விரண்டு தேவிகளின் திருவடிவங்களை தற்காலத்தில் பச்சைக்காளி பவளக்காளி எனக் குறிப்பிட்டு வழிபட்டு வருகின்றனர். பேரழகு வாய்ந்த இந்த இருதேவிகளும் தேவி வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் யோகினிகள் ஆவர். அறுபத்து நாலு யோகினிகளுடன் காளிதேவியின் கோயிலை அமைப்பதும், காலபைரவர் பைரவி ஆகியோருடன் அத்தேவியருக்கு கோயில் அமைப்பதும் உண்டு. இந்தியாவில் யோகினிகளுடன் அமைந்த கோயில்கள் ஒரு சிலவே. தமிழகத்தில் இருந்த ஓரிரு கோயில்களும் அழிந்து அவற்றின் எச்சங்களாக ஒரு சில யோகினிகளின் திருவடிவங்களே நமக்குக் கிடைக்கின்றன. கோவைக்கு அருகில் ஒரு கோயிலும், தஞ்சைக்கு அருகில் ஒரு கோயிலும் இருந்ததற்கானத் தடயங்கள் கிடைத்துள்ளன. அத்தகைய திருக்கோயில்களில் இடம்பெறும் அறுபத்துநான்கு யோகினிகளின் திருமேனிகளை பின்வரும் பெயர்களால் குறிப்பிடுவர் திவ்ய யோகி, மகா யோகி, சித்த யோகி, கணேஸ்வரி, பிரேதா சிபிகினி, காளராத்ரி, நிசாசரி, ஜங்காரி, ஊர்துவ வேதாளி, பிசாசி, பூதடாமரி, ஊர்த்துவகேசி, விருபாக்ஷி, சுஷ்காங்கி, நரபோஜினி, ராக்ஷசி, கோரரக்தாக்ஷி, விஸ்வரூபி, பயங்கரி, வீரகௌமாரி, கீசண்டி, வராகி, முண்டதாரிணி, பிராமரி, ருத்ர வேதாளி, பீஷ்கரி, திரிபுராந்தகி, பைரவி,\nதுவம்சனி, குரோதி, துர்முகி, பிரேதவாகினி, கட்வாங்கி, தீர்க்கலம் மோஷ்டி, மாலினி, மந்திரயோகினி, காலாக்னி, கிறாமணி, சக்ரி, கங்காளி, புவனேச்வரி, பட்காரி, வீரபத்ரேசி, தூம்ராக்ஷி, கலகப்பிரியை, கண்டகி, நாடகி, மாரி, ஏமதூதி, கராளினி, கௌசிகி, மர்த்தனி, எக்ஷி, ரோமஜங்கி, பிரஹாரிணி, ஸஹஸ்ராக்ஷி, காமலோலா, காகதமாஷ்டரி, அதோமுகி, தூர்சடி, விகடி, கோரி, கபாலி, விஷலங்கினி என்ற திருநாமங்களால் அறுபத்து நாலு யோகினிகளையும் தொண் நூல்கள் குறிப்பிடுகின்றன. தஞ்சை கருந்திட்டைக் குடியில் உள்ள பராந்தகசோழன் காலத்து கல்வெட்டொன்றில் கோடிவனமுடையாள் திருக்கோயிலை நந்தி மாகாளி கோயில் எனக் குறிப்பிடு���தோடு அக்கோயிலின் இருபது நாள் பூசை உரிமை ஆத்திரையன் சீதரன் என்பானுக்கு வழங்கப் பெற்றதாகவும் கூறுகிறது. நந்தி மகாகாளம் என்ற இந்த கோயிலோடு இணைந்தோ அல்லது அருகிலோ அறுபத்துநான்கு யோகினிகளுக்கான கோயில் அமைந்திருந்து பிற்காலத்தில் முற்றிலுமாக அழிந்துள்ளது. அதில் இடம் பெற்றிருந்த இரண்டு யோகினிகளின் அரிய திருமேனிகளே தற்போது அங்கு இடம் பெற்றுள்ளன.\nகி.பி.846ல் சோழப்பேரரசன் விஜயாலயன் தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்ட பிற்கால சோழராட்சியைத் தோற்றுவித்தான். அவன் புதிய தலைநகரைத் தோற்றுவிக்கும்போது நிசும்ப சூதனி எனும் தேவியின் கோயிலை எடுத்த பிறகே நகரை நிர்மாணித்தான் என கன்னியாகுமரி பகவதி கோயிலில் உள்ள சோழர் கல்வெட்டு கூறுகின்றது. பின்பு ராஜேந்திரசோழனின் பத்தாம் ஆட்சியாண்டில் (கி.பி.1024), கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரைத் தோற்றுவித்து தஞ்சை நகர மக்களை அங்கு புலம்பெயரச் செய்தான். அதன் பிறகு தஞ்சையின் முக்கியத்துவம் சற்று குறையலாயிற்று. சோழராட்சியின் இறுதியில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டை வென்று தஞ்சையையும், உறையூரையும் முற்றிலுமாகத் தீயிட்டு அழித்தான். அழிந்த தஞ்சைப் பகுதியில் மீண்டும் பாண்டியனின் தளபதி தொண்டைமான் என்பவரால் புதிய குடியிருப்புகளும், நரசிம்மர் கோயிலொன்றும் அமைக்கப்பெற்றன.\nஅப்பகுதிக்கு சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் எனவும் பெயரிட்டான். அது தொடர்ந்து புதிய தஞ்சை நகரம் மீண்டும் பொலிவு பெறலாயிற்று. சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலத்தின் தோற்றம் பற்றி விவரிக்கும் தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள பாண்டியனின் கல்வெட்டில் அதற்கென அளிக்கப்பெற்ற நிலங்கள் பற்றி கூறும்போது கோடிவனமுடையாள் எனும் தேவியின் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. வரலாற்றுச் சிறப்புடைய கோடியம்மன் கோயிலும், அதில் இடம்பெற்றுள்ள இரண்டு யோகினிகளின் திருமேனிகளும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தஞ்சை செல்லும் அன்பர்கள் கோடியம்மன் கோயில் சென்று தேவியை வழிபடுவதோடு அங்கு திகழும் இரண்டு அரிய யோகினிகளையும் தரிசனம் செய்யுங்கள். அது மறக்க இயலா அனுபவமாக நிச்சயம் அமையும்.\n- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசாய்நாதர் நிகழ்த்திய அற்புதம் : பரவசத்தில் பக்தர்\nசிறப்பான வாழ்வருளும் சின்ன சடையம்மன்\nமணக்கோலம் கண்ட உப்பூர் விநாயகர்\nபக்தர்களுக்கு ஸ்ரீ சாயிநாதர், அருளிய உபதேச மந்திரங்கள்\nபார்த்தசாரதி நின் பாதமே கதி.\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\nபல்வேறு பகுதியில் இருந்து ஏமன் தலைநகருக்கு இடம்பெயரும் மக்கள்: உயிர்வாழ போராடும் காட்சிகள்\nதாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதை எண்ணி பிரார்த்தனை\nதிறமைகளை வளர்ப்பது மூலம் கோடை விடுமுறையை செலவிடுகின்றனர் சீன மாணவர்கள்\nதமது வயிற்றில் அதிக தர்பூசணியை வைத்து தாமே வெட்டி சாதனை படைத்த அஸ்ரிதா ஃபர்மேன்\nலண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=01-11-13", "date_download": "2018-07-19T11:23:45Z", "digest": "sha1:DYW57DO4I5STYM6SJWOUCESXV5A2X6PW", "length": 20303, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஜனவரி 11,2013 To ஜனவரி 17,2013 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nசபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம்போர்டு ஜூலை 19,2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு; மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஜூலை 19,2018\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: மோடி ஜூலை 19,2018\nநீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு தவறுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல: ஜவேத்கர் ஜூலை 19,2018\nநம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக ஆதரவு ஜூலை 19,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\n\"மயிலே, மயிலே என்றால் இறகு போடாது. நாம்தான் பிடுங்க வேண்டும்' என்று நினைத்தான் ஹெர்குலிஸ்.ஒரே தாவாகத் தாவி அந்தப் படகில் அமர்ந்தான். தன் கையிலிருந்த கதையை ஓங்கினான். \"\"படகை ஓட்டுகிறாயா இல்லை இங்கேயே உன்னைக் கொன்று போடவா'' என்று மிரட்டினான்.நடுங்கிய படகோட்டி, அவனை மறுகரையில் சேர்த்தான்.கையில் பெரிய கதையுடன் பெருமிதமாகப் பாதாள உலகத்திற்குள் நுழைந்தான் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\nமுன்னொரு காலத்தில் காட்டை அடுத்துக் குடிசை ஒன்று இருந்தது. அந்த குடிசையில் ஆடு ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஏழு குட்டிகளைப் போட்டது. அந்தக் குட்டிகள் ஓடியாடி விளையாடின. இதைப் பார்த்து மகிழ்ந்தது ஆடு.வழக்கம் போல், உணவை தேடி வர, தாய் ஆடு வெளியே புறப்பட்டது. அப்போது அந்த ஆடு, குட்டிகளைப் பார்த்து, \"\"என் அன்புக் குழந்தைகளே உங்களுக்கு உணவு கொண்டு வர காட்டிற்குச் செல்கிறேன். ..\n3. சிறுவர் - சிறுமியர் வைக்கும் பொங்கல்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\nதமிழர்களின் வாழ்வினில் மிகவும் முக்கியமானது விவசாயம். அதற்கு உதவியாக இருப்பவர்களுக்கும் விவசாயத்திற்குமான தொடர்பு விழாதான் பொங்கல் பண்டிகை. தமிழர்களால் உற்சாகமாக, கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் உயிரோட்டத்தை கிராமங்களில் தான் காணமுடியும்.சிறுவர் - சிறுமியர் வைக்கும் பொங்கலா என ஆச்சரியப்பட்டீர்கள் தானே...தொடர்ந்து படியுங்கள்...புதுசாகும் வீடு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\nகுருஷேத்திரப் போர் முடிவடைந்தது. அந்தப் போரில் கவுரவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். புத்திரர்களை இழந்ததால், மிகவும் மனம் உடைந்து போயிருந்தாள் கவுரவர்களின் அன்னையான காந்தாரி. ஆகவே, அவள் எப்போதும் அழுது கொண்டும், புலம்பிக் கொண்டும், சந்தோஷமின்றி இருந்தாள். அவள் நிலையைத் தாங்க முடியாத எல்லாரும் கிருஷ்ணனிடம் வந்து காந்தாரிக்கு ஆறுதல் சொல்லும்படிக் கேட்டுக் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\nவாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்கையை தட்டி நோயை விரட்டுவோம்கையை தட்டி நோயை விரட்டுவோம்பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை பாராட்ட கை தட்டுகிறோம். இப்படி கைதட்டி ரசித்து சிரிப்பதன் மூலம், எந்த நோயும் நம்மை அண்டாமல் விரட்டலாம். இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பு வந்து மரணமடைகின்றனர். இதய நோய் பாதிப்புக்கு ஆளாவதில், உலகத்திலேயே இந்தியர்களுக்குத் தான் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\nஒரு மரத்தின் கிளையில், காக்கா கூடு கட்டியிருந்தது. அந்த கூட்டில் இரு முட்டைகள் இட்டிருந்தன. அடைகாத்தால் குஞ்சு பொரிந்து விடும். இரு குஞ்சுகளையும் கொஞ்சிக் குலாவலாம், பேணி வளர்க்கலாம் என்று ஆசையுடன் இருந்தது காக்கா.அன்று திடீரென்று பலத்த காற்று வீசியது. ஆடிக் காற்றில், அம்மியும் பறக்கும் என்பார்களே... அது மாதிரியான காற்று. பல மரங்களை வேரோடு பிடிங்கி எறிந்து விட்டது. ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\nஅந்த அடர்ந்த காட்டில் தாகத்தினால் வாடிய நரி ஒன்று அங்குமிங்கும் நீர் தேடி அலைந்தது. ஓரிடத்தில் நீர் நிலை ஒன்று காணப்பட்டது. அதைக் கண்ட நரி பெரிதும் மகிழ்ச்சி அடைந்தது. அதில், இறங்கித் தண்ணீரைக் குடித்துவிட வேண்டும் என்று தீர்மானித்தது.இயல்பிலேயே எச்சரிக்கை மிக்க நரி, \"ஒருவேளை இந்த நீர் நிலையில் முதலை போன்ற கொடிய நீர்வாழ் உயிரினங்கள் இருந்தால் நம்மைக் கொன்று ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\nபொங்கலுக்கு குறிப்பிட்ட அளவுகளில் தானியங்களை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. இந்த விகிதாசாரப்படி தயாரிக்கப்படும் பொங்கலை \"முனையகரன் பொங்கல்\" என்று அழைப்பர்.முனையகரன் என்ற அரசன்தான் இந்த விகிதாசாரத்தை அறிமுகப்படுத்தியவன் என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த பெயர். ஐந்து பங்கு அரிசி, மூன்று பங்கு பருப்பு, இரண்டு பங்கு நெய் என்ற அளவில் பொங்கலிட்டு, சூரியனுக்கு ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\nபொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை நாள். பழைய, உபயோகமற்ற பொருட்களை ஒரு ஓரத்தில் போட்டு, தீ வைத்து அழிப்பதால், தீமைகள் விலகும் என்பது மக்களின் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\nபொங்கல் அன்று பொங்கல் வைத்த பானையை முற்றிலுமாக காலிசெய்ய கூடாது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. சிறிதளவாவது மிச்சம் வைத்து மறுநாள் மேற்கொள்ளப்படும் காணும் பொங்கல் பூஜைக்காக வைத்து கொள்வது வழக்கம். அடுத்த நாள் காணும் பண்டிகை. இது பெண்களுக்கு உரிய பண்டிகை. முந்தினநாள் பொங்கல் பானையில் கட்டி வைத்திருந்த அந்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வீட்டிலுள்ள வயது முதிர்ந்த சுமங்கலி ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/health/food/2015/people-who-should-not-eat-ginger-009893.html", "date_download": "2018-07-19T11:56:26Z", "digest": "sha1:ANH3KXPEXZCX4QI5KWJFGLRFEYQCADDH", "length": 13119, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "யாரெல்லாம் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது என்று தெரியுமா? | People Who Should Not Eat Ginger- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» யாரெல்லாம் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது என்று தெரியுமா\nயாரெல்லாம் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது என்று தெரியுமா\nஅன்றாட உணவில் தினமும் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு தான் இஞ்சி. ஏனெனில், இது செரிமானத்தை சீராக்க சீரிய முறையில் உதவுகிறது. மேலும் இது வயிறு சார்ந்த கோளாறுகள், உடல் எடை குறைக்க, வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க என பல வகைகளில் நமக்கு நன்மை அளிக்கிறது.\nதொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் நிகழும் மாற்றம் என்ன தெரியுமா\nஆனால், சில உடல்நல பிரச்சனைகள் கொண்டுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்கள் இஞ்சியை தவிர்க்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது. அது ஏன் அதற்கான காரணம் என்ன அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை பற்றி இனிக் காண்போம்...\nஇஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇஞ்சியில் சக்திவாய்ந்த இயற்கை வினையூக்கிகள் இருக்கின்றன. இவை கர்ப்ப காலத்தின் போது வலியை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இது கருச்சிதைவு ஏற்படுத்த கூட வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் கூறுகிறார்கள். எனவே, கர்ப்பிணி பெண்கள் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது என கூறப்படுகிறது.\nஉடல் எடை குறைவாக உள்ளவர்கள்\nஇஞ்சி உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு ஓர் சிறந்த உணவு. ஏனெனில் இது பசியை குறைக்க செய்யும் தன்மை உடையது. மேலும் கொழுப்பை கரைக்கும் தன்மையையும் இது கொண்டுள்ளது. எனவே, உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இஞ்சியை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.\nஇரத்த கோளாறு உள்ளவர்களும் இஞ்சியை உணவில் சேர்த்த��க் கொள்ள வேண்டாம் என அறிவுரைக்க படுகிறார்கள். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவல்லது. இரத்தக் கோளாறுகளுக்கு மருந்துகள் உட்கொள்ளும் நபர்கள் இஞ்சியை தவிர்க்க வேண்டும். இல்லையேல் இது மருந்துகள் முழுமையாக செயல்படாமல் போய்விடும்.\nஇரத்த அழுத்தம், நீரிழிவு, போன்ற உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் இஞ்சியை தவிர்த்து விடுவது நல்லது. இது உடலில் அந்த மருந்துகளின் தாக்கம் சரியான அளவில் செயல்படாமல் போக செய்கிறது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் எடுக்கும் மருந்துகளின் வீரியத்தை இது குறைத்துவிடுகிறது.\nஇஞ்சி நிறைய சத்துக்கள் கொண்டுள்ள ஓர் நல்ல உணவுப் பொருள். தினமும் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது தான். ஆயினும், நாம் மேற்கூறிய இந்திய நான்கு வகை சார்ந்தவர்கள் இஞ்சியை தவிர்க்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதங்கும் விடுதிகளில் நடக்கும் அக்கிரமம் - பணியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nவெள்ளரிக்காயை ஏன் தோல் சீவி சாப்பிடக் கூடாது... அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்... அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா... அதுக்கு ஏன்னு தெரியுமா\n20 - 40 வயது வரை உடம்பு சும்மா கின்னுன்னு வெச்சிக்கணுமா... அப்போ இத சாப்பிடுங்க...\nதாம்பத்திய வாழ்க்கை இனிக்க, உலர் திராட்சை எப்படி சாப்பிடலாம்\nகால் கட்டைவிரல் இப்படி ஆகுறதுக்கு என்ன காரணம் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடலாம்\nஆண்களின் நினைவாற்றலை அழிக்கும் உணவுகள்\nமூட்டு வலி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nகொழுப்பைக் கரைக்கும் ஹார்மோனை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்\nபாலை விட அதிகமாக கால்சியம் இருக்கும் உணவுகள்\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nசுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி\nபாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/model-promotes-waterproof-sony-xperia-z1-ifa-006158.html", "date_download": "2018-07-19T11:19:56Z", "digest": "sha1:FX3ZD2TIDZVZA5TXOXFSWIPFPXITGK5B", "length": 10519, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "model promotes waterproof sony xperia z1 ifa - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதண்ணீரில் அழகிகளுடன் சோனி மொபைல் விளம்பரம்\nதண்ணீரில் அழகிகளுடன் சோனி மொபைல் விளம்பரம்\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nசோனி எக்ஸ்பீரீயாவின் முதல் ஆண்ட்ராய்ட் ஓ ஸ்மார்ட்போன்\nசென்ற வாரத்தின் டாப் ஸ்மார்ட்போன்கள்\nசோனி எக்ஸ்பீரியா எம் டியுல் சிம் ஆன்லைனில்\n20 மெகாபிக்சல் கேமரா சோனி மொபைல் இந்தியாவுக்கு விரைவில்\nசோனி எக்ஸ்பீரியா Z1 இன்டர்நெட்டில் கசிந்த படங்கள்\nசோனி எக்ஸ்பீரியா Z அல்ட்ரா வாட்டர் புரூப் போன் விற்பனையில்\nசோனி நிறுவனம் 20.7 மெகாபிக்சல் கேமரா கொண்ட தனது எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போனை பெர்லினில் நடக்கும் IFA 2013 வர்த்தக கண்காட்சியில் வெளியிட்டது. சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இது தான்.\nவாட்டர் புரூப் டெக்னாலஜி கொண்ட ஸ்மார்ட்போனை சோனி நிறுவனம் IFA 2013 விழாவில் நீச்சல் உடை அணிந்த அழகிகளுடன் விளம்பரபடுத்தி வருகிறது. எக்ஸ்பீரியா Z1ன் வாட்டர் புரூப் டெக்னாலஜியை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தண்ணீரில் அழகிகள் இந்த ஸ்மார்ட்போனை விளம்பரபடுத்துகின்றனர்.\nசோனி எக்ஸ்பீரியா Z1 சிறப்பம்சங்கள்\n5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,\n2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,\nஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்\nகீழே உள்ள சிலைட்சோவில் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போனை அழகிகள் விளம்பர படுத்தும் வீடியோ மற்றும் படங்களை பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅழகிகளுடன் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன்.\nஅழகிகளுடன் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன்.\nஅழகிகளுடன் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன்.\nஅழகிகளுடன் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன்.\nஅழகிகளுடன் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன்.\nஅழகிகளுடன் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன்.\nஅழகிகளுடன் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன்.\nஅழகிகளுடன் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன்.\nஅழகிகளுடன் சோனி எக்ஸ்பீரியா Z1 ஸ்மார்ட்போன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் ��ெய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/music/logitech-announces-music-accessories-for-iphone-aid0190.html", "date_download": "2018-07-19T11:20:45Z", "digest": "sha1:TDFEVVU22W7LRPZHLEPIH3PDH4LCNKIT", "length": 9933, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "Logitech announces music accessories for iPhone | லாஜிடெக்கின் ஐபோன் ஆக்ஸசெரீஸ்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலாஜிடெக்கின் வயர்லெஸ் பூம்பாக்ஸ் மற்றும் ஹெட்போன்\nலாஜிடெக்கின் வயர்லெஸ் பூம்பாக்ஸ் மற்றும் ஹெட்போன்\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்\nதேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்\nஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ\nலாஜிடெக் நிறுவனம் கணினிகளுக்கும், டேப்லட்டுகளுக்கும் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கும் இசைக்கான டிஜிட்டல் அக்சஸரிகளை வழங்குகிறது. லாஜிடெக் நிறுவனம் வழங்கும் இந்த இசைப் பேழைகளில் இசை கேட்பது நமக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும். அந்த வகையில் தடையில்லாமல் இசை வழங்கும் லாஜிடெக் வயர்லஸ் ஹெட்போன் மற்றும் வயர்லஸ் பூம்பாக்ஸ் போன்றவற்றை களமிறக்க இருக்கிறது.\nஇந்த புதிய வயர்லஸ் ஹெட்போன் மற்றும் பூம்பாக்ஸ் இசை பேழை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என நம்பலாம். அடிப்படையில் லாஜிடெக் வயர்லஸ் பூம்பாக்ஸ் மற்ற எந்த ஒரு டிவைசோடும் இணையும் தன்மை கொண்ட ஒரு வயர்லஸ் ஆடியோ ஸ்பீக்கர் ஆகும். இந்த பூம்பாக்ஸை நமது மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் மற்றும் டாப்லட்டுகளோடு எளிதில் இணைக்க முடியும்.\nஇணைத்த பின் நமது டேப்லட் அல்லது ஸ்மார்ட்போன் ரிமோட் கன்ட்ரோல் போல செயல்படும். இந்த பூம்பாக்ஸில் உள்ள பேட்டரி 6 மணி நேரம் தாங்கும் திறன் கொண்டது. மேலும் இந்த பூம்பாக்ஸை நாம் பொது கூட்டங்களிலும், விருந்துகளிலும் பயன்படுத்தலாம். நமது ஸ்மார்ட்போன் மூலம் இந்த பூம்பாக்ஸை கட்டுப்படுத்தி இசையை தவழ விடலாம். அதனால் விருந்துகளும் கூட்டங்களும் கலகலப்பாக இருக்கும்.\nலாஜிடெக் வயர்லஸ் ஹெட்போனை எடுத்துக் கொண்டால் இதன் பேட்டரி 6 மணி நேரம் தாங்கும் திறன் கொண்டது. மேலும் இதை எந்தவொரு மியூசிக் சாதனத்திலும் இணைக்க வயர் தேவை இல்லை. ஐபேட், ஐபோன் மற்றும் ஐபோட் போன்ற பேழைகளில் இதன் மூலம் இசை கேட்பது மிக சிறப்பாக இருக்கும். மேலும் இது இரைச்சலையும் போக்கும். மேலும் இந்த இரண்டும் மிக விரைவில் சந்தைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nவந்த தகவலின் படி பூம்பாக்ஸ் ரூ.8,600க்கு வயர்லஸ் ஹெட்போன் ரூ.3,350க்கும் விற்கப்படும் என்று நம்பலாம். ஆனால் இப்போது இவை இரண்டும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சந்தைகளில் கிடைக்கிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aalosanai.blogspot.com/2012/10/part-3-navarathiri-golu-16102012-to.html", "date_download": "2018-07-19T11:39:06Z", "digest": "sha1:KAZ5WV2MS4T4Y2QJVIDVFRFCYHWCHMEY", "length": 24265, "nlines": 202, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: PART 3, NAVARATHIRI GOLU (16/10/2012 TO 24/10/2012)....நவராத்திரி கோலங்களும் நிவேதனங்களும்.", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nதிங்கள், 15 அக்டோபர், 2012\nசென்ற இரு பதிவுகளின் தொடர்ச்சி.............\nநவராத்திரி 9 தினங்களும் இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி ஸ்வரூபிணியான அம்பிகையைப் பூஜிப்பதால் கிடைக்கும் பலன்கள் அளவிடற்கரியது. தினமும் பூஜை செய்வதோடு, இயன்றவர்கள்,தாம்பூலத்தில் கீழ்க்கண்டவற்றை வைத்துத் தருவது சிறப்பு:\nஒன்பது நாளும், தாம்பூலத்தில், வாழை, மா, பலா, கொய்யா, மாதுளம்பழம், நாரத்தை, பேரீச்சம்பழம், திராட்சை முதலிய பழங்களை வைத்துத் தரலாம்.\nஇரண்டு, மூன்று வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, முறுக்கு, சூரணம், திரட்டுப்பால், வடகம், வறுவல் ஆகியவற்றைத் தந்து உண்ணச் செய்வது, தேவி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியை மகிழ்வித்து எல்லா நலன்களையும் பெற்றுத் தரும்.\nநவராத்திரி முதல் மூன்று தினங்கள் ஸ்ரீ துர்க்கையாகவும், அடுத்த மூன்று தினங்கள் ஸ்ரீ லக்ஷ்மியாகவும், நிறைவான மூன்று தினங்கள் மஹாசரஸ்வதியாகவும் அம்பிகை பூஜிக்கப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். நவராத்திரி முதல் நாள், அஸ்த நட்சத்திரம் சேர்ந்து வந்தால், அன்றைய தினம் அம்பிகையை பூஜிப்பது மிகுந்த புண்ணிய பலன்களைத் தரவல்லது என்று 'தேவி பாகவதம்' சொல்கிறது. மூல நட்சத்திரம், ஸ்ரீ சரஸ்வதிக்குரியதென்பதால் அன்றே சரஸ்வதி ஆவாஹனம் செய்வது வழக்கம்.\nநவராத்திரி பூஜையின் போது ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரியின் அர்க்கள ஸ்தோத்திரம் சொல்வது மஹாஸ்தோத்திரம் படித்த நன்மையைத் தரும் என்று பலஸ்ருதி கூறுகிறது. ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.\nபூஜையின் போது,புனுகு கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகில்பட்டை, பன்னீர் ஆகிய வாசனைப்பொருட்களை சமர்ப்பிப்பது சிறப்பு. இவையே 'அஷ்டகந்தம்' என்று சிறப்பிக்கப்படுகின்றன. இவற்றை, வீட்டுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு தருவது பல மடங்கு நற்பலன்களைத் தரும். நவராத்திரி விரதம் இருக்க நினைப்பவர்கள், ஒரு வேளை மட்டும் உணவு அருந்தலாம். மஹா நவமி அன்று பால் பழம் மட்டு அருந்தி, விஜய தசமி அன்று, பூஜை முடித்த பிறகு, விருந்தினர்களுக்கு உணவளித்து விட்டு உணவு கொள்வது சிறப்பு.\nநவராத்திரி ஒன்பது நாளும் போட வேண்டிய கோலங்கள், செய்ய வேண்டிய நிவேதனங்கள் இவற்றைப் பார்க்கலாம்.\nமுதல் நாள் அரிசி மாவினால் புள்ளிக் கோலம்.\nஇரண்டாம் நாள் கோதுமை மாவினால் கட்டங்கள் கோலம்.\nமூன்றாம் நாள் முத்து கொண்டு மலர்க்கோலம் .\nநான்காம் நாள் அக்ஷதையினால் படிக்கட்டுகள் கோலம்.\nஐந்தாம் நாள் கடலையினால் பறவைக் கோலம்.\nஆறாம் நாள் துவரம் பருப்பினால் தேவியின் திருநாமம்.\nஏழாம் நாள் பூக்களினால் திட்டாணிக் கோலம்.\nஎட்டாம் நாள் காசுகளினால் பத்மக் கோலம்.\nஒன்பதாம் நாள் கற்பூரத்தால் ஆயுதக் கோலம்.\nஇவற்றில் முத்துக்களினால் மலர்க்கோலம் இப்போது இயலாத ஒன்று (இயன்றவர்கள் செய்யலாம்). எனவே, அதற்குப் பதிலாக, பாசிமணி முத்துக்களாலோ, அல்லது ஊற வைத்த ஜவ்வரிசி கொண்டோ கோலமிடலாம்.\nஒரு சுத்தமான தாம்பாளத்தில், கோலத்தை வரைந்து கொண்டு, காது குடையும் பட்சினால் (buds), ஜவ்வரிசிப் பசையை லேசாகத் தடவ வேண்டும். பின், ஊற வைத்த ஜவ்வரிசியை கோணி ஊசியால் ஒவ்வொன்றாக எடுத்து கோலத்தின் மேல் வைக்க வேண்டும். நன்றாக ஒட்டிக் கொள்ளும். காய்ந்த பின், விருப்பமானால் கலர் கொண்டு அலங்கரிக்கலாம். இவ்வாறு மலர்க் கோலம் போட்டு, அதன் நடுவில் கற்பூரம் வைத்து ஏற்றி, ஆரத்தி காண்பிப்பது சிறப்பு.\nதிட்டாணி என்பது, மரத்தைச் சுற்றி அமைக்கப்படும் வட்ட வடிவ மேடை. அந்த வடிவத்தில் கோலமிடுவதே திட்டாணிக் கோலம்.\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய நிவேதனங்களை, கிழமை வாரியாகவும், திதி வாரியாகவும் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். சௌகர்யப்படி செய்து கொள்ளவும். எந்த அட்டவணையைப் பின்பற்றினாலும் அதையே முறையாகப் பின்பற்றவும்.\nபுதன் புதினா, கொத்துமல்லி சாதம்\nவெள்ளி ரவா லட்டு, அவல் பாயசம்\nஞாயிறு கோதுமை அல்வா/ போளி\nஇந்த வருடம், நவராத்திரி, செவ்வாயன்று தொடங்குகிறது. ஆகவே, மற்றொரு செவ்வாய் கிழமை மஹா நவமியன்று சரஸ்வதி பூஜை. அன்று முப்பருப்பு வடை, எல்லா வகையான கலவை சாதங்கள் செய்வது வழக்கம். சில வீடுகளில், விஜய தசமியன்று, மஹாநைவேத்தியமும், வெண்ணை, இலை வடகம் ,சுக்கு வெந்நீரும் நிவேதனமாக வைக்கிறார்கள்.\nபிரதமை நெய் சாதம், வெண்பொங்கல் மூக்குக் கடலை சுண்டல்\nதுவிதியை வெல்லப் பாயசம், சர்க்கரைப் பொங்கல் பாசிப்பருப்பு சுண்டல்\nதிரிதியை புளியோதரை, பால் பாயசம். கடலைப்பருப்பு சுண்டல்\nசதுர்த்தி கற்கண்டு சாதம், பிடி கொழுக்கட்டை. மொச்சை சுண்டல்\nபஞ்சமி தயிர் சாதம், பஞ்சாமிர்தம். வேர்க்கடலை சுண்டல்\nஷஷ்டி எள் சாதம், தேன் சேர்த்த நிவேதனம். எள் பொடி\nசப்தமி தேங்காய் சாதம், பனங்கற்கண்டு சேர்த்த பால். (வெண்) காராமணி சுண்டல்\nஅஷ்டமி எலுமிச்சை சாதம், சொஜ்ஜி அப்பம். பாசிப்பயறு சுண்டல்\nநவமி பால் சாதம், கோசுமல்லி, நீர் மோர் பட்டாணி சுண்டல்\nதசமி நவதானிய வடை/அடை, மாவிளக்கு\nஇரண்டு நிவேதனங்கள் குறிப்பிடப்பட்ட இடத்தில், சௌகரியத்தைப் பொறுத்து, இரண்டுமோ அல்லது ஒன்று மட்டுமோ செய்து கொள்ளலாம்.\nஒன்பது நாளும் பூஜிக்க வேண்டிய பூக்கள், ரத்தினங்கள், அதற்கு மாற்றாகக் கொடுக்க வேண்டியவற்றைக் கீழே கொடுத்திருக்கிறேன். ரத்தினங்கள் கொடுப்பது இப்போது இயலாது. ஆகவே, அவை உங்கள் தகவலுக்காக. ரத்தினங்களுக்கு மாற்றுப் பொருட்களை, இயன்றவர்கள், ஒருவருக்கேனும் வைத்துக் கொடுப்பது நல்லது.\nந��ள் மலர்கள் ரத்தினங்கள் ரத்தினங்களுக்குப் பதிலாக\nமுதல் நாள் மல்லிகை, வில்வம் மாணிக்கம் சோழி\nஇரண்டாம் நாள் துளசி, முல்லைப்பூ முத்து குன்றிமணி\nமூன்றாம் நாள் செண்பகப்பூ, மரு பவழம் தட்டைப்பவளம்\nநான்காம் நாள் ஜாதி மரகதம் கிளிஞ்சல்\nஐந்தாம் நாள் வாசனைத் தைலங்கள் கனக புஷ்பராகம் செப்பு\nஆறாம் நாள் பாரிஜாதம், செம்பருத்தி வைரம் பதுமை\nஏழாம் நாள் தும்பை நீலம் அம்மானை\nஎட்டாம் நாள் மருதோன்றி கோமேதகம் பந்து\nஒன்பதாம் நாள். தாமரைப்பூ வைடூரியம் கழற்சிக்காய்.\nஅடுத்த பதிவில், இவ்வாறு நவராத்திரி தினங்களில், அம்பிகையை முறையாகப் பூஜிப்பதால் ஏற்படும் நற்பலன்களைப் பார்க்கலாம்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at முற்பகல் 11:37\nஅய்யர் 15 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:57\nதங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா.\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nஅன்பர்களுக்கு வணக்கம். 'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், ந...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nஉயர் திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', யி ல் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு....\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து ச��ய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nSRI DATTATREYA .....ஸ்ரீ தத்தாத்ரேயர்\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆக...\nருத்ராக்ஷம் என்றால் என்ன என்பதும் அதன் பயன்கள் குறித்தும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும் என்றாலும் கொஞ்சம் சுருக்கமாக, இந்தப் பதிவ...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\nஎண்ணறு வைபவ இந்த்ர விசேஷண புண்ணிய உத்தம பூரண பச்சிமக் கண்இல கும்சிவ கந்த கிருபாசன பண்ணவர் பூஜித பாத நமஸ்தே ஏரக நாயக என்குரு நா...\nPAPA HARA DASAMI(18/6/2013)...பாபஹர தசமி(பாவங்களை நீக்கும் தசமி).\nஇன்றைய தினம் (18/6/2013) 'பாபஹர தசமி'. ஒவ்வொரு வருடமும், ஆனி மாத சுக்ல பட்ச தசமி 'பாபஹர தசமி' என்று சிறப்பிக்கப்படுகிறத...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ammanpaattu.blogspot.com/2007/04/11.html", "date_download": "2018-07-19T11:46:11Z", "digest": "sha1:OO7PQFJN2BWSK5H7XGQXGFEU2Z7OHKSM", "length": 15433, "nlines": 345, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: \"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" 11", "raw_content": "\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" 11\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" 11\nபக்தியாய் உன் பாதம் நித்தம் தெரிசித்த\nசீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்\nசேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று\nபேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல்\nபிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன\n\"ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த\nஎன் அன்னை ஏகாம்பரி நீயே\"\nஅழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்\nஅம்மை காமாக்ஷி உமையே. 11\n அடுக்கடுக்காய் வரங்கள் கேட்க ஆரம்பிக்கிறார் கூடவே, இதுவரை எந்த இலக்கணமும், சீர்மையும் இல்லாமல் பாடியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறார்.]\nஅம்மனைப் பார்த்தபிறகு பிழை வர வாய்ப்பேஎது.\nஅதிலும் ஏதாவது நன்மை இருக்கும்.\nஅற்புதமாக இருக்கிறது எஸ்.கே சார்.\nSK ஐயா, விளக்கம் ப்ளீஸ்\n//ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த\nஎன் அன்னை ஏகாம்பரி நீயே\"//\nஅதை அப்படியே படமெழுதி வலைப்பூவில் வைத்திட்ட\nஎம் நண்பர் SK நீரே\nஅருமையான படம் SK; அன்னை ஒற்றைக் காலில் நின்று நெக்குருகினாலும், ஞானச் சுடர் ஜொலிக்கின்றது அவள் திருமுகத்தில்\nஅடுத்தது லலிதா நவரத்தின மாலை எழுதலாமா ஆனால் எனக்கு அர்த்தம் முழுவதும் தெரியாது. நான் என்ன செய்ய வேண்டும்\nஅடுத்தது லலிதா நவரத்தின மாலை எழுதலாமா ஆனால் எனக்கு அர்த்தம் முழுவதும் தெரியாது. நான் என்ன செய்ய வேண்டும் ஆனால் எனக்கு அர்த்தம் முழுவதும் தெரியாது. நான் என்ன செய்ய வேண்டும்\nலலிதா நவரத்தின மாலை எழுதி, இயன்ற வரை பொருள் சொல்லலாமே உதவிக்கு நிறைய அன்பர்கள் இருக்கிறோம் உதவிக்கு நிறைய அன்பர்கள் இருக்கிறோம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே என்று துவக்குங்கள்\nஇல்லை, எளிதான பக்திப் பாடல்களாகத் ஒன்றிரண்டு துவங்கி, பின்னர் லலிதா நவரத்தின மாலை சொன்னாலும் நலமே\nகலியன் என்பவன் இக்க்கலியுகத்தின் அரசன் ஆவான்.\nநமக்கு இப்பிறப்பில், இக்கலியுகத்தில் பிறந்ததால் வரக்கூடிய இன்பதுன்பங்களை அளிப்பவன் இவனே.\nஇவன் தன்னை அணுகாவண்ணம் ஒரு வரம் கேட்கிறார் இந்த பக்தர்.\nஇதைப் படிப்பவர்களையும் காமாக்ஷித்தாய் காப்பாற்றுவாள் என்பதும் உட்பொருள்.\nஇதுபற்றி, விரும்பினால் விவரமாக ஒரு தனிப்பதிவு பிறகு இடுகிறேன்.\nஉங்களுக்கு மனதில் தோன்றும் அம்மன் பதிகங்களை இட்டு வாருங்கள்.\nஅன்பு.ரவி இருக்கையில் என்ன கவலை\nகுமரன், ஆசான் வேறு உடனிருக்கின்றனர்.\nஅன்னையின் பெருமையை அனைவரும் பாடுவோம்\nநீங்கள் சொல்லியிருக்கும் கருத்தும் மிக அற்புதமாய் இருக்கிறது.\nதாயவள் தயவிருக்க, அருளுக்குக் குறைவேது\nஅன்னையின் இந்தப்படம் கிடைத்தது ஒரு அற்புதமான அனுபவம், அன்பு.ரவி\nபதிவதற்கு ஒரு சில மணித்துளிகளுக்கு முன்னரே இது அவளருளால் கிடைத்தது\nதங்கள் ஆலோசனைக்கு நன்றி திரு. க ர ச (KRS)\nதிரு வி எஸ் கே அய்யா, திரு குமரன் ,\nதங்கள் ஆலோசனைக்கும், உதவிக்கும் நன்றி\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\n ஜகம் நீ, அகம் நீ\nஅலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" 12\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" 11\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" -- 10\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" [9]\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\"-- 8\nஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் [7]\nஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் - 6\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" 5\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" -- 4\nஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் - 3\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" 2\n\"காமாக்ஷி அம்மன் விருத்தம்\" -1\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%93%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2018-07-19T11:37:50Z", "digest": "sha1:7FG2Q6EPWYZZSQXE6KWYAPRBOTCU4LB5", "length": 6863, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "» ஓஹி சூறாவளி இலங்கைக்கு அப்பால் சென்றாலும், மழைக்கான வாய்ப்பு", "raw_content": "\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\n‘நாடோடிகள்-2’ வின் பிரமிக்கும் அடுத்த வெளியீடு\nஅகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு\nஓஹி சூறாவளி இலங்கைக்கு அப்பால் சென்றாலும், மழைக்கான வாய்ப்பு\nஓஹி சூறாவளி இலங்கைக்கு அப்பால் சென்றாலும், மழைக்கான வாய்ப்பு\nஓஹி சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்த சூறாவளி தொடர்ந்தும் இலங்கைக்கு அப்பால் நகர்வதால் இலங்கைகு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலியீன் தெரிவித்தார்.\nஎனினும் வடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்வதற்குரிய வாய்புள்ளதாகவும் அவர் கூறினார்.\nமேலும் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வலுவான காற்று வீசும் எனவும், கடல் பகுதிகளை பொறுத்தளவில் சற்று கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.\nவானிலை தொடர்பான மேலதிக தகவல்களை தருகின்றார் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலியீன்.\nஅடுத்த சில நாட்களில் அடை மழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கை முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்ட\nஓஹி சூறாவளியைவிட மஹ���ந்த சூறாவளியின் தாக்கம் அதிகம்: ஹரிசன்\nஓஹி சூறாவளியைவிட மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்படுத்தப்பட்ட சூறாவளியினாலேயே நாட்டுக்கு பாரிய பாதிப்புகள் ஏ\nஇலங்கையை நோக்கி மற்றுமொரு புயல்\nஇலங்கையின் கொழும்புக்கு மேற்காக நிலைகொண்டிருந்த ஓஹி சூறாவளி தற்போது அரேபிய கடல்நோக்கி நகர்ந்துள்ள நி\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\n‘நாடோடிகள்-2’ வின் பிரமிக்கும் அடுத்த வெளியீடு\nஅகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல்\nமுல்லை – கிளி. இல் இதுவரை 5442 அபாயகரமான வெடிபொருட்கள் அழிப்பு\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nபல குற்றச்செயல்களுடன் அலோசியஸிற்கு தொடர்பு\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bakrudeenali.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-07-19T11:47:34Z", "digest": "sha1:QPXMABDUZXJUCD7FAMFLMVVHO3SQOHGG", "length": 16506, "nlines": 212, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "பிரபல சவூதி கம்பெனி, மும்பையில் ஏப்ரல் மாதம் நேர்முக தேர்வு நடத்துகிறது !", "raw_content": "\nபிரபல சவூதி கம்பெனி, மும்பையில் ஏப்ரல் மாதம் நேர்முக தேர்வு நடத்துகிறது \nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nஅக்னிச்சிறகுகள் -அப்துல் கலாம் E Book\nசவூதியில் இக்காமா திருடு போய்விட்டதா... கவலை வேண்ட...\nவீட்டு டாக்டர் கையேடு - மின் புத்தகம்\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசி...\nபிரபல சவூதி கம்பெனி, மும்பையில் ஏப்ரல் மாதம் நேர்ம...\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "http://kashyapan.blogspot.com/2011/08/blog-post_22.html", "date_download": "2018-07-19T11:37:47Z", "digest": "sha1:A2QKKEPTPYFTCD2SLLCGLMQ74INOUEIZ", "length": 18255, "nlines": 193, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan: டாக்டர் கிரண் பேடி அவர்களே! உங்களுக்கு என்னவாயிற்று...?", "raw_content": "\nடாக்டர் கிரண் பேடி அவர்களே\nடாக்டர் கிரண் பேடி அவர்களுக்கு என்னவாயிற்று\n80ம் ஆண்டுகளில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் படிப்பு முடிந்தவுடன் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நான் கிரண் பேடி போன்று ஆகவேண்டும் என்பார்கள். இந்தியபெண்களின் ஆதர்சமாக திகழ்ந்தவர்.டென்னிஸ் விளையாட்டில் ஆசிய சாம்பியன்.\nகாவல் துறையில் ஒரு பெண் அடையமுடிந்த மிகச்சிறந்த பதவியை அலங்கரித்தவர். திகார் சிறையில் சீர்திருத்தங்களை கோண்டுவந்தவர்.அதற்காக \"மகசே\" விருதினப் பெற்றவர்.சர்வதேச காவல் துறையில் ஐ.நா மூலம் பல மாற்றங்களைக் கொண்ட��வந்தவர். போதை மருந்து ஒழிப்பதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.\nஇவ்வளவு இருந்தும்பெண் என்றஒரேகாரனத்தால் அவர் பெயர் நிராகரிக்கப்பட்டு அவரைவிட குறைந்த பணி மூப்பு உடையவர் மேல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.\nசமூக செவையில் ஈடுபட்டார். தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் குழந்தைகள், குடும்பங்கள் ஆகியோரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டர். காவல் துறை வாங்க மறுத்த புகார்களை பெற்று அதன்மீது நடவடிக்கை எடுக்க அரசை அணுகுவார். லஞ்ச லாவண்யமற்ற ஒரு அமைப்பை உருவாக்க வெண்டுமென்ற வேட்கையை வளர்த்துக்கொண்டார்.\n2ஜி அலைகற்றை,காமன் வெல்த் ,ஊழல் களின் பிரும்மாண்டம் அவரைத் திடுக்கிட வைத்தது.அதனை எதிர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கினார்.\"அன்ன ஹசாரே\" யின் அறிமுகம் கிடைத்தது.அவருடைய குழுவில் இணைந்தார். அவருடைய அறிவார்ந்த அனுபவமும், அவருக்கு என்று உள்ள மரியாதையும் அந்த குழுவிற்கு பலத்தைக் கொடுத்தது.\nசந்தடி சாக்கில் அரசு ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி \"லோக் பால்\" மசொதவைக்கொண்டுவந்துள்ளது. இது ஊழலை ஒழிப்பதைவிட ஊழல் பெர்வழிகளை தப்பிக்க வைக்கும் மசோதாவாகும். அதற்கு மாற்றாக \"ஜன லோக் பால்\" என்ற மசோதாவை \"அன்னா \" குழு வைத்துள்ளது. இதனை ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்ற வேண்டும்.இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதம் என்று \"அன்னா \" அறிவித்தார். முட்டாள்தனமாக அரசு அவரைக் கைது செய்தது.ஊடகங்கள் போட்ட வெற்றுக் கூச்சலில் அப்பாவி ஜனங்கள் தெருவுக்கு வந்துள்ளனர்.\" விடுதலிசெய்யப்பட்டார்\"அன்னா \" .\nதிகார் சிறையின் முன் ஆயிரக்கணக்கில்மக்கள் கூடினர். ஆவேசமிக்க மக்கள்முன் தலைவர்கள் பேசினர். தலைவர்களும் ஆவெசமாகப் பெசினர் .\nகிரண் பேடியும் பெசினார்.\"அன்னா தான் இந்தியா இந்தியாதான் அன்னா\nகாங்கிரஸ் கட்சியின் தலவர் பரூவா \" இந்திரா தான் இந்தியா இந்தியாதான் இந்திரா\" என்றார்.இந்தியமக்கள் இந்திராவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான தண்டனையை கொடுத்தார்கள்.\nடாக்டர் கிரண் பேடி அவர்களுக்கு என்னவாயிற்று\n80ம் ஆண்டுகளில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் படிப்பு முடிந்தவுடன் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நான் கிரண் பேடி போன்று ஆகவேண்டும் என்பார்கள். இந்தியபெண��களின் ஆதர்சமாக திகழ்ந்தவர்.டென்னிஸ் விளையாட்டில் ஆசிய சாம்பியன்.\nகாவல் துறையில் ஒரு பெண் அடையமுடிந்த மிகச்சிறந்த பதவியை அலங்கரித்தவர். திகார் சிறையில் சீர்திருத்தங்களை கோண்டுவந்தவர்.அதற்காக \"மகசே\" விருதினப் பெற்றவர்.சர்வதேச காவல் துறையில் ஐ.நா மூலம் பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர். போதை மருந்து ஒழிப்பதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.\nஇவ்வளவு இருந்தும்பெண் என்றஒரேகாரனத்தால் அவர் பெயர் நிராகரிக்கப்பட்டு அவரைவிட குறைந்த பணி மூப்பு உடையவர் மேல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.\nசமூக செவையில் ஈடுபட்டார். தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் குழந்தைகள், குடும்பங்கள் ஆகியோரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டர். காவல் துறை வாங்க மறுத்த புகார்களை பெற்று அதன்மீது நடவடிக்கை எடுக்க அரசை அணுகுவார். லஞ்ச லாவண்யமற்ற ஒரு அமைப்பை உருவாக்க வெண்டுமென்ற வேட்கையை வளர்த்துக்கொண்டார்.\n2ஜி அலைகற்றை,காமன் வெல்த் ,ஊழல் களின் பிரும்மாண்டம் அவரைத் திடுக்கிட வைத்தது.அதனை எதிர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கினார்.\"அன்ன ஹசாரே\" யின் அறிமுகம் கிடைத்தது.அவருடைய குழுவில் இணைந்தார். அவருடைய அறிவார்ந்த அனுபவமும், அவருக்கு என்று உள்ள மரியாதையும் அந்த குழுவிற்கு பலத்தைக் கொடுத்தது.\nசந்தடி சாக்கில் அரசு ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி \"லோக் பால்\" மசொதவைக்கொண்டுவந்துள்ளது. இது ஊழலை ஒழிப்பதைவிட ஊழல் பெர்வழிகளை தப்பிக்க வைக்கும் மசோதாவாகும். அதற்கு மாற்றாக \"ஜன லோக் பால்\" என்ற மசோதாவை \"அன்னா \" குழு வைத்துள்ளது. இதனை ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்ற வேண்டும்.இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதம் என்று \"அன்னா \" அறிவித்தார். முட்டாள்தனமாக அரசு அவரைக் கைது செய்தது.ஊடகங்கள் போட்ட வெற்றுக் கூச்சலில் அப்பாவி ஜனங்கள் தெருவுக்கு வந்துள்ளனர்.\" விடுதலிசெய்யப்பட்டார்\"அன்னா \" .\nதிகார் சிறையின் முன் ஆயிரக்கணக்கில்மக்கள் கூடினர். ஆவேசமிக்க மக்கள்முன் தலைவர்கள் பேசினர். தலைவர்களும் ஆவெசமாகப் பெசினர் .\nகிரண் பேடியும் பெசினார்.\"அன்னா தான் இந்தியா இந்தியாதான் அன்னா\nகாங்கிரஸ் கட்சியின் தலவர் பரூவா \" இந்திரா தான் இந்தியா இந்தியாதான் இந்திரா\" என்றார்.இந்தியமக்கள் இந்திராவுக்கும் காங்���ிரஸ் கட்சிக்கும் கடுமையான தண்டனையை கொடுத்தார்கள்.\nதிகார் சிறை கிரண் பேடியின் வாழ்விலும் முக்கியமான ஒரு இடம் அல்லவா\nமக்களின் ஆவேசம் தான் இன்றைய சந்தோஷம். அது இல்லாததால் தான் என்ன வேண்டுமானாலும் செய்து தப்பித்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் புற்று போல் வளர்ந்து கொண்டு இருக்கிறது\nயோசிக்க வைக்கிறது உங்களின் பதிவு சார்....அருமையான பதிவு....\nரொம்ப நாட்களாக பதிவுகள் இல்லயே\nமதுரை வரும்போது தொடர்பு கொள்வதாக சொன்னீர்கள். விருதுநகர் சென்றீர்களா\nஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி\nசட்டென்று விலகிவிட முடியாமல் யோசிக்க வைக்கிறீர்கள். தாண்டி ஓடமுடியவில்லை. சிந்தைக் கவர்ந்த பதிவு.\nடாக்டர் கிரண் பேடி அவர்களுக்கு என்னவாயிற்று\nடாக்டர் கிரண் பேடி அவர்களே\n\"தெய்வத் திருமகள் \"---விமரிசனமல்ல ....\nதனிப் பயிற்சி மையங்களும்-தனியார் பள்ளிகளும்...\nபாலு மஹேந்திரா என்ற அறிவார்ந்த மனிதர்...\nநடிகர் வீரப்பனும் வாழைப்பழ காமிக்ஸ்ஸும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karmayogi.net/?q=mj_jan2004_2", "date_download": "2018-07-19T11:57:03Z", "digest": "sha1:LHAIRQKYCPFGUVZDMSGKPFFGM42T7EFH", "length": 16708, "nlines": 284, "source_domain": "karmayogi.net", "title": "02.லைப் டிவைன் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2004 » 02.லைப் டிவைன்\n(சென்ற இதழின் தொடர்ச்சி....) கர்மயோகி\n12. ஆனந்தம் - விளக்கம்\nபராமுகம் ஆகியவை மூன்று உணர்வுகள்.\nஇது நம் பரிணாமத்திற்குரிய ஏற்பாடு.\nவலியோ, சந்தோஷமோ நமக்குப் பழக்கம்.\nநாம் அவ்வுணர்வை அனுபவிக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.\nஒரு குறிப்பிட்ட செயலுக்கு ஒரு குறிப்பிட்ட உணர்வு என்ற நிர்ப்பந்தம் இல்லை.\nஒரு குறிப்பிட்ட செயல் வலி யையோ,\nநாம் பழக்கத்திற்கு எதிரானதை உணரலாம்.\nநாம் வலிபட்ட இடத்தில் சந்தோஷம் அனுபவிக்க முடியும்.\nநம் ஆனந்த-ஆத்மாவுக்கு நீங்காத இன்பமுண்டு.\nஆனந்தம் அதன் மாறாத அனுபவம்.\nஅது நம் உண்மையான பரந்த ஆத்மா.\nமேலெழுந்த நம் மனம் வலி, சந்தோஷத்தை அனுபவிக்கிறது.\nநம் ஜீவன் ஆனந்தமனுபவிப்பது நமக்குப் பழக்கமாகலாம்.\nஇது நடந்தால் பெரு வெற்றி.\nஇது ஆழ்ந்த சுய ஆட்சி.\nஇவ்வகையாகச் சுய ஆட்சி பூரணம் பெறுகிறது.\nசந்தோஷமாக விலகியிருப்பதைவிட இது பெரியது.\nநமது மேல் மனம் பழக்கத்திற்கு உட்பட்டது.\nகுறையான அனுபவத்��ை விரும்பி ஏற்பதாகும் அது.\nநாம் சொல்வது குறையை நிறையாக்குவதாகும், பொய்யை மெய் ஆக்குவதாகும்.\nஆன்மீக ஆனந்தம் இரட்டைகளை உணர்வதை மாற்றவல்லது.\nசந்தோஷமும், வலி யும் அப்படிப்பட்டவை.\nநம்முள் உணர்ச்சி மண்டலம் உண்டு.\nஇவை மாறாதவை என நாம் தவறாக நினைக்கிறோம்.\nநரம்பு மண்டலம் இப்பொய்யை நம்புகிறது.\nவெற்றி, ஜெயம், மரியாதை, அதிர்ஷ்டம் என்பவையுண்டு.\nசர்க்கரை இனிப்பதுபோல் அவை சந்தோஷம் தரும்.\nதோல்வி, நஷ்டம், ஏமாற்றம், அவமானம், தரித்திரம் போன்றவை அவை.\nவிளக்கெண்ணெய் கசப்பதைப்போல் அவை வருத்தம் தரும்.\nஇவை உண்மையென உணர்வு அறிகிறது.\nஇவையில்லை என்பது உண்மையைப் பொய் என்பதாகும்.\nஅனுபவம் அதேபோலிருப்பது அதற்கு அவசியம்.\nவாழ்வு வழக்கத்திற்குரியது என்பது இயற்கையின் இயல்பு.\nபல்வேறு அனுபவங்களைப் பெற இயற்கை மனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமனத்தின்மூலம் இயற்கை மாற்றங்களை நாடுகிறது.\nமனம் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரும்.\nபழக்கத்தை ஏற்பது நம் இஷ்டம்.\nஒரு பழக்கத்தை மனம் முடிவாக ஏற்கலாம்.\nஅதற்காக மனம் உணர்வுக்கு அடிமையாகிறது.\nமனம் பழக்கத்தை ஏற்கும் நிர்ப்பந்தமில்லை.\nதோல்வி, அவமானம், நஷ்டம் அதற்குப் பொருட்டன்று.\nஅவற்றை மனம் அசையாமல் ஏற்கலாம்.\nஉடலுக்கோ, உணர்வுக்கோ மனிதன் அடிமையில்லை.\nமனிதன் உடலாலும், உணர்வாலும் சிக்கலில் உள்ளான்.\nஅது மனிதனைப் புற உலகின் அடிமையாக்கும்.\nபுற ஸ்பர்சத்தை மறுத்தால் மனிதனுக்கு விடுதலையுண்டு.\nதான் எதைச் செய்யவேண்டும் என்பதைத் தானே நிர்ணயிப்பான்.\nதான் விரும்புமாறு உலகைச் சந்திக்கும் உரிமை அவனுக்குண்டு.\nஎல்லாம் இறைவன் செயலென நாம் அறிவோம். நமக்கு முக்கியமான விஷயங்களில், இறைவனிடம் செயலை ஒப்படைப்பதற்குப் பதிலாக, நாமே பெரிய பொறுப்பை ஏற்று பெரிய ஆர்வத்துடன் செயல்படுகிறோம். நம்மால் எதுவும் முடியவில்லை என்ற பின்னரேதான், \"இனி நடப்பது நடக்கட்டும். எல்லாம் அவன் செயல்'' என்போம். முடியாது என்றபொழுது \"அவன் செயல்'' என்று சொல்வதைப்போல், \"எல்லாம் என்னால் முடியும்'' என்றபொழுதும், \"எல்லாம் அவன் செயல்'' என்று அவனிடம் நம் பொறுப்பை ஒப்படைத்து, செயலில் ஆர்வம் காண்பிப்பதற்குப் பதிலாக, அவனிடம் காரியத்தை ஒப்படைக்க ஆர்வம் காண்பிப்பது நல்லது.\nமுடியும் என்றாலும் அவன் செயல் எனில் அவன் செயல்படுவான்.\nசிலருக்கு ஒரு நல்லது செய்தவுடன் வாழ்வு நமக்குப் பல நல்லவற்றைச் செய்யும். வேறு சிலருக்குக் கெடுதல் செய்தால் வாழ்வு முன்போலவே தொடர்ந்து பல நல்லவற்றைச் செய்யும். நெருங்கியவர்களும், தூரத்து நண்பர்களும் இதற்கு உட்பட்டவர்கள். இதற்கு முடிவான கட்டம் நம்முள் உள்ளது. நம்மிடம் உள்ள சில நல்ல அம்சங்களுக்கு நல்லது செய்தாலும், சில கெட்ட அம்சங்களுக்குக் கெட்டதைச் செய்தாலும் உடனே பல நல்ல காரியங்கள் நடைபெறும்.\nநல்லதற்கும் கெட்டதற்கும் நல்ல பலனுண்டு.\n‹ 01. யோக வாழ்க்கை விளக்கம் V up 03.இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2004\n01. யோக வாழ்க்கை விளக்கம் V\n07.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயா, பிரகிருதி, சக்தி\n10. இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tmpolitics.blogspot.com/2006/09/tmmk-new_19.html", "date_download": "2018-07-19T11:45:06Z", "digest": "sha1:CTY6NPHE6IO6MJEC2WAIBBGS5WU47ADJ", "length": 35698, "nlines": 107, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: திமுக விற்கு ஆதரவு - தமுமுக அறிவிப்பு (TMMK NEW)", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nதிமுக விற்கு ஆதரவு - தமுமுக அறிவிப்பு (TMMK NEW)\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக விற்கு ஆதரவு - தமுமுக அறிவிப்பு\nதமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் பத்திரிகையாளர் சந்திப்பில்\nகோவை செப்டம்பர் 17,2006 கோவை ஆத்துப்பாலம் ஜே.பி. மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தலைவர் பேராசிரியர் எம், ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் தமுமுக தலைவர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமுமுக அதன் அமைப்பு நிர்நய சட்டத்தின்அடிப்படையில் தேர்தலில் போட்டியிடாது என்றும் ஆனால் வரும் இடைத்தேர்தலிலும் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்கும் என்றும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெறிவித்தார். அத்துடன் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதா வீட்டை முஸ்லிம்களை திரட்டி வரும் செப்டம்பர் 22 ம் தேதி மாலை முற்றுகையிடப்போவதாகவும் , முஸ்லிம்கள���க்கு தனி இட ஒதுக்கீட்டை வலியுருத்தி டெல்லியில் பேரணி நடத்த போவதாகவும் கோவையில் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கி உடணடியாக குற்றவாளியை கைது செய்யவேண்டும் என்றும் கூறினார்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமாநிலச் செயற்குழுக் கூட்ட தீர்மானங்கள்\nதமுமுக மாநிலச் செயற்குழு மேடையில் தலைவர்கள்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தனது செயற்குழுவில் எடுத்த தீர்மானங்களின் நகல் (பத்திரிகையாளர்களுக்கு வழங்கியது)\n1. மாநிலச் செயலாளர் அப்துர் ரஹீம் அவர்கள் மரணத்திற்கு இரங்கல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் மவ்லவி பி. அப்துர் ரஹீம் அவர்கள் மே 3, 2006 அன்று தேர்தல் பிரச்சார பணிக்கு இடையே சாலை விபத்தில் மரணமடைந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமுமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து வடசென்னை மாவட்ட தொண்டர் அணிச் செயலாளராக பணியாற்றி அதன் பின்னர் மாநில தொண்டர் அணிச் செயலாளராகவும் பின்னர் மாநிலச் செயலாளராகவும் ஏற்றம் பெற்ற அப்துர் ரஹீமின் இழப்பு கழகத்திற்கும், சமுதாயத்திற்கும் மிகப் பெரும் இழப்பாக இச்செயற் குழு கருதுகின்றது. தன்னலமற்ற முறையில் அனைவருடன் இன்முகத்துடன் பழகும் அப்துர் ரஹீம் ஆற்றிய அளப்பெரும் பணிகளில் அழைப்பு பணி, சுனாமி நிவாரணப் பணிகள், டெல்லி போராட்டம், குஜராத் கலவரம் மற்றும் பூகம்பம் முதலியவற்றை நெகிழ்ச்சியுடன் இச்செயற்குழு திரும்பி பார்க்கின்றது. அப்துர் ரஹீம் அவர்களது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. அப்துர் ரஹீம் அவர்களுடன் சாலை விபத்தில் இறந்த ஒட்டுனர் பைசுர் ரஹ்மான் மற்றும் அப்துர் ரஹீம் அவர்களது நண்பர் மவ்லவி சமியுல்லாஹ் ஆகியோரின்குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. சமுதாயப்பணிகளுக்கிடையே இன்னுயிரையும் நீத்த இந்த மூன்று சகோதரர்களின் மறுவாழ்விற்கு மாநில செயற் குழு இறைவனிடம் இறைஞ்சுகின்றது.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இச்செயற்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்க���றது.\n3. திமுக அரசுக்கு பாராட்டு\nசட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை மிக வேகமாக நிறைவேற்றி வரும் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இச்செயற்குழு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வண்ணத் தொலைக்காட்சி பொட்டி,\nஏழைகளுக்கு நிலம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு காட்டி வரும்அதே வேகத்தில் சிறுபான்மையினருக்கு வாக்களிக்கப்பட்ட தனி இடஒதுக்கீடு உடனடியாக கிடைக்க கலைஞர் அரசு உடனே ஆவணச் செய்ய வேண்டுமென இச்செயற் குழு கேட்டுக் கொள்கிறது.\n4. ஜெயலலிதா வீடு முற்றுகைப் போராட்டம்\nஅப்பழுக்கற்ற முறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பணியாற்றி வரும் தமிழக முதல்வர் கருணாநிதியின் முதன்மைச் செயலாளர் முனீர் ஹோடாவை தேச துரோகி என்றும், அப்துன் நாசர் மதானி தப்பிக்க வழிவகைச் செய்தார் என்று அவதுறாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது. ஜெயலலிதாவின் சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து வரும் செப்டம்பர் 22 மாலை அவரது வீட்டை முற்றுகையிடுவதென இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.\n5. அப்பாவி முஸ்லிம் விசாரணை சிறைவாசிகள் உடனே விடுதலைச் செய்யப்படவேண்டும்\nஎட்டாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை உடனே விடுதலைச் செய்ய ஆவனச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு தமிழக அரசை இச்செயற்குழு கோருகின்றது. முஸ்லிம்கள் விசாரணைசிறைவாசிகள் தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணை 2 மாதக் காலத்திற்குள் முடிக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\n6. உள்ளாட்சி தேர்தல் தமுமுக போட்டியிடாது\nதமுமுக அமைப்பு நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத அமைப்பாக தமுமுக செயல்படும். உள்ளாட்சி தேர்தலிலும் தமுமுக போட்டியிடாது.\n7. உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு தமுமுக ஆதரவு\nவரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென இச்செயற்குழு முடிவுச் செய்கிறது.\n8. மதுரை மத்திய தொகுதி\nமதுரை மத்திய தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை தமுமுக ஆதரித்து பிரச்சாரம் செய்யும்\n9. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி டெல்லியில் பேரணி\nஅகில இந்தி�� அளவில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க ஆவணச் செய்யப்படுமென ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்த ஆவணச் செய்யப்படாதை வருத்தத்துடன் இச்செயற்குழு பதிவுச்செய்கிறது. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தலைநகர் டெல்லி வரும் மார்ச் 2007ல் பேரணி நடத்துவதெனவும் இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.\n10. குண்டு வெடிப்பு வழக்குகளுக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை\nசமீப காலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகள் மிகப் பெரிய ஐயத்தை நாட்டு மக்களிடம் தோற்றுவித்துள்ளது. சமூக நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும்மத்தியில் நடைபெற்று வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய பயங்கரவாதம் நடைபெறுவதாக இச்செயற் குழு கருதுகின்றது.டெல்லி ஜும்ஆ பள்ளிவாசல், வாரணாசி, மும்பை மற்றும் மலேகான் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறைக்கும், சங்பரிவார் அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் இவை குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும். இதற்காக நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு விசாரணை செய்ய வேண்டுமென இச்செயற்குழு கோருகின்றது.\n11. இஸ்ரேலுடன் துதரக உறவை துண்டிக்க வேண்டும்\nலெபனான் மற்றும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் பயங்கரவாத நடவடிக்கைகளைநடத்திவருகின்றது. சர்வதேச பயங்கராதத்திற்கு துணையாக இருக்கும் அந்த இஸ்ரேலுடன் இந்திய அரசு து£தரக உறவை துண்டிக்க வேண்டுமென்றும், டெல்லியில் இருக்கும் இஸ்ரேல் து£தரை வெளியேற்ற வேண்டும் என்றும் இச்செயற்குழு மத்திய அரசு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.\n12. முத்துப்பேட்டை பொய் வழக்கை வாபஸ் வாங்குக\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சென்ற அதிமுக ஆட்சியில் செப்டம்பர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் ஊர்வல கலவரத்தில் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது. அவ்வழக்குகளை தமிழக அரசி���் வாபஸ் பெறவேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. முத்துப்பேட்டையில் ஆண்டு தோறும் விநாயகர் ஊர்வலத்தின் போதும் ஏற்படும் பதட்டத்தை தணிக்க மாற்றுப் ஊர்வல பாதையை அரசு உடனே வரையறுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\n13. ஊடகங்கங்களுக்கு நிதானம் தேவை\nபத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பல நேரம், விசாரணைகளுக்கு முன்பே யூகங்களை செய்திகளாக்கும் போக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கின்றது. இதனால் பலரும் பாதிக்கப்படும் நிலையில் முஸ்லிம் சமூகம் மிக அதிகமாகவே பாதிக்கப்படுகின்றது. எனவே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி துறை நண்பர்கள் மிகுந்த கவனத்துடன் மிக பொறுப்புடன் தங்கள் பணிகளை தொடர வேண்டுமென இச்செயற்குழு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.\nஇலங்கையில் சிங்கள அரசின் பொறுப்பின்மையும், விடுதலைப்புலிகளின் துன்புறுத்தலும் அங்கு மூன்றாவது சமூகமாக வாழும் முஸ்லிம்கள் பெரும் இழப்புகளுக்கு இலக்காகியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களின் வாழ்வுரிமை காக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச சமூகத்தை¢இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\n15 கோவையில் கொலைச்செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக\nகோவையில் ஜேப்படி திருடர்களின் அட்டகாசம் அதிகரிப்பது கவலையளிக்கிறது. கடந்த செப்டம்பர் 16 அன்று பேரூந்தில் பயணம் செய்த ஃபைசல் ரஹ்மான் என்பவரை பிக்பாக்கெட் கொள்ளையர்கள் படுகொலை செய்தது அதிர்ச்சி அளிக்கின்றது. படுகொலைச் செய்யப்பட்ட பைசல் ரஹ்மான் குடும்பத்திற்கு ரூ2 லட்சம் கருணைத் தொகையும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. கோவை பிக்பாக்கெட் திருடர்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\n13. சென்னைக்கு துணை நகரம் தேவை\nசென்னை மாநகர மக்களின் நலன்களுக்காவும், எதிர்கால வசதிகளுக்காகவும் சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கும் திட்டத்தை அரசியல் குறுக்கீடுகளை பொருட்படுத்தாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.\n14. பெப்சி கோக்கிற்கு தடை வேண்டும்\nமக்கள் உ���ல் நலனுக்கு பெரும் கேடுவிளைவிக்கும் பெப்சி, கோகோ கோலா பானங்களை உடனடியாக தடைச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கோருகின்றது.\n15. தர்மபுரி ரயில் பாதை இருவழியாக்கப்பட வேண்டும்\nஒருவழிப் பாதையாக இருக்கும் ரயில் பாதையை தர்மபுரியில் இருவழிப் பாதையாக மாற்றினால் தர்மபுரியிலிருந்து வடமாநிலங்களுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து செல்ல ஏதுவாக இருக்கும். எனவே தர்மபுரி வழியாக சேலம் முதல் பெங்களுர் வரைச் செல்லும் ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற இச்செயற்குழு கோருகின்றது.\nதர்மபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டையில் 100 வருடங்களாக வசித்துவரும் முஸ்லிம் குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்ய தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.\n17. சூலுர்ர் ஜமாஅத் நிலம் மீட்கப்பட வேண்டும்\nகோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் சூலூர் சுன்னத் ஜமாஅத்திற்குச் சொந்தமான இடத்தை 3 1ஃ2 ஏக்கர் இடத்தை லஷ்மி மற்றும் மூன்று நபர்களால் அ.இ.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஊடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற வஃக்பு போர்டின் உத்தரவையும் நீதிமன்ற உத்தரவையும் அமல்படுத்தாத மாவட்ட அதிகாரிகளை வன்மையாக இச்செயற்குழு கண்டிக்கின்றது. பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி உடனடியாக மாவட்ட நிர்வாகம் மீட்டுத்தர வேண்டும் என்று இச்செயற்குழு கோருகின்றது.\n18. கோவைக்கு பாஸ்போர்ட் அலுவலகம் தேவை\nகோவை மாவட்டத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு கோருகின்றது.கோவை மாவட்டம் உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு பாஸ்போர்ட் விசாரணை வந்தால் காவல்துறையைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகள் திட்டமிட்டு அலைக்கழிப்பதை செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, தவறு செய்யும் பாஸ்போர்ட் விசாரணை (உளவுத்துறை) அதிகாரிகளை தண்டிக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\n19. விமான நிலையத்தில் கெடுபிடி\nபணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் முஸ்லிம்கள் விமான நிலையங்களில் முஸ்லிம்கள் என்கிற ஒர�� காரணத்திற்காக விசாரணை என்கிற பெயரில் கடும் சோதனைகளும், சந்தேகம் என்கிற பெயரில் பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கைகளும் இழக்காக்கப்படுவதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\n20. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிரசண்ட் நகர் பள்ளிவாசலில் 2001 டிசம்பர் மாதம் அப்துர் ரஷீத் கொலைச் செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறையினர் உண்மை குற்றவாளிகளை உடனே கைதுச் செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.இந்த வழக்கில் பொய்குற்றம் சுமத்தப்பட்ட அப்துர் ரஷீத் அவர்கள் மகன் முகைதீன் பிச்சையை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட ரூ 2 லட்சம் அரசு உதவி தொகையை உடனே வழங்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கோருகின்றது.\n22.தரம் உயர்த்தப்பட்ட தமிழ்வழி பள்ளிக்கூடங்களில் மானியம் அளிக்கப்படாத வகுப்புகளுக்கு மானியம் வழங்க அரசு உடனே ஆவணச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.\n23. அரசு மற்றும் அரசு உதவிப் புரியும் கல்லுர்ரிகளில் நீண்டகாலமாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய அரசு முன்வந்துள்ளது வரவேற்கத் தக்கது. அதே நேரம் அறிவியல் துறை ஆசிரியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற எழுதப்படாத விதிமுறை பின்பற்றப்படுகிறது. தமிழ், அரபி, உருது, வரலாறு உள்ளிட்ட துறைகளுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nசெய்திகள் மற்றும் புகைப்படம் : சகோ.கோவை தங்கப்பா\nஇஸ்லாம் முஸ்லிம் அரசியல் காரைக்குடி கோவை இராமநாதபுரம்\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 1:33 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thenoos.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-19T11:34:07Z", "digest": "sha1:VSLBYPW5TWSJKXWW4OJYEE7WNJPBDJYO", "length": 45605, "nlines": 581, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: November 2010", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nசெவ்வாய், 30 நவம்பர், 2010\nகாய்ந்த பட்டாணி - 1 கப்\nபெரிய வெங்காயம் - 1 நறுக்கியது\nதக்காளி - 1 நறுக்கியது\nபூண்டு - 4 (விரும்பினால்)\nமிளகாய��ப் பொடி - 1 டீஸ்பூன்\nமல்லிப் பொடி - 1 டீஸ்பூன்\nகரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுந்து - 1 டீஸ்பூன்\nசோம்பு - 1/4 டீஸ்பூன்\nபட்டை - 1 இன்ச் துண்டு\nஇலை - 1 துண்டு\nகல்பாசிப்பூ - 1 துண்டு\nஎண்ணெய் - 5 மிலி\nகாய்ந்த பட்டாணியை கழுவி 8 மணி நேரம் ஊறவைக்கவும். ப்ரஷர் குக்கரில் 4., 5 விசில் வரும் வரை வேகவைக்கவும். ஒரு பானில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து., சோம்பு போட்டு சிவந்ததும்., பட்டை., கல்பாசிப்பூ., இலை போடவும். பெரிய வெங்காயம்., தக்காளி., பூண்டு போட்டு., நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள்., மல்லித்தூள்., மஞ்சள்தூள்., கரம் மசாலா போட்டு உப்பு சேர்க்கவும். கடைசியாக வெந்த பட்டாணியை போட்டு நன்கு கிளறவும். 5 நிமிடம் மசாலா நன்கு சேரும் வரை வைக்கவும். சூடாக எடுத்து தயிர் சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:55 5 கருத்துகள்:\nதிங்கள், 29 நவம்பர், 2010\nசுண்டைக்காய் - 1 கப்( இரண்டாக நறுக்கியது)\nபதமாக வேகவைத்த துவரம் பருப்பு - 1/2 கப்\nபெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது\nதக்காளி - 1 துண்டுகளாக்கியது\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமல்லித்தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1 சிட்டிகை\nபுளி - 1 நெல்லிக்காய் அளவு\nஉப்பு - 1 டீஸ்பூன்\nபெருங்காயம் - 1 சிட்டிகை\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுந்து - 1/2 டீஸ்பூன்\nஜீரகம் - 1/2 டீஸ்பூன்\nகருவேப்பிலை - 1 இணுக்கு\nஎண்ணெய் - 10 மிலி\nபானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து., சீரகம் போட்டு சிவந்ததும்., பெருங்காயம்., கருவேப்பிலை ., வெங்காயம்., தக்காளி., சுண்டைக்காய் போட்டு நன்கு வதக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து சாறெடுத்து இதில் உப்பு சேர்த்து ஊற்றவும். மஞ்சள்பொடி., மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி போட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் துவரம் பருப்பை சேர்த்து 10 நிமிடங்கள் சிம்மில் வேகவிடவும். சுண்டைக்காய்கள் மென்மையானதும் சாதம் மிளகு அப்பளத்துடன் அல்லது தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளப் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:13 6 கருத்துகள்:\nவியாழன், 25 நவம்பர், 2010\nசிக்கன் - லெக் பீஸ் மற்றும் எலும்பு நீக்கிய சதைப் பகுதி.\nபப்பாளி விழுது - 1 டீஸ்பூன்.\nமிளகாய் பொடி - 3 டீஸ்பூன்\nசோள மாவு - 2 டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு வி��ுது - 2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன்\nரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை\nகாயவைத்த வெந்தயக் கீரை :- 1 டீஸ்பூன் (விரும்பினால்)\nபொறிக்க எண்ணெய் - 50 மிலி.\nசிக்கன் துண்டுகளை நன்கு கழுவி நீர் இல்லாமல் வைக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது., பப்பாளி விழுது., மிளகாய்ப்பொடி., சோள மாவு., உப்பு., முட்டை ., ரெட் ஃபுட் கலர் ., வெந்தயக் கீரை பொடி சேர்த்து நன்கு பிசையவும்.. நன்கு மூடி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். எண்ணெயைக் காயவைத்து பொன்னிறமாகும் வரை பொறிக்கவும்.. வட்டமாக நறுக்கிய வெங்காயம்., பச்சைமிளகாய்., எலுமிச்சை துண்டுகளோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:53 6 கருத்துகள்:\nசெவ்வாய், 23 நவம்பர், 2010\nOATS VEG UTHAPPAM.. ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்..\nதோசை மாவு - 1 கப் அல்லது\nபுது தயிர் - 1 கப் + ஆட்டா - 1/2 கப்\nபொடித்த ஓட்ஸ் - 1 கப் ( க்விக்கர் (அ) சஃபோலா)\nபெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது\nதக்காளி - 1 பொடியாக அரிந்தது\nகாரட் - 1 பொடியாக துருவியது.\nபச்சை மிளகாய் - 1 பொடியாக அரிந்தது\nகொத்துமல்லி - 1 கைப்பிடி பொடியாக அரிந்தது\nகருவேப்பிலை தளிராக - 5 இணுக்கு பொடியாக அரிந்தது.\nபொடியாக அரிந்த பீன்ஸ் 2., குடைமிளகாய் 1/4 பாகம்., முட்டைக்கோஸ் சிறிது - விரும்பினால்.\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 20 மிலி\nதோசை மாவுடன் ஓட்ஸ் பொடியை சிறிது நீரும் உப்பும் சேர்த்துக் கலக்கவும். அல்லது ஆட்டாவுடன் தயிர்., ஓட்ஸ்பொடியை கட்டிகளில்லாமல் உப்பும் நீரும் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து ஒரு டேபிள்ஸ்பூன் மாவை ஊற்றவும்.. காய்கறிகளை ஒன்றாக நன்கு கலக்கி ஒரு கைப்பிடி எடுத்து ஊத்தப்பத்தின் மேல் தூவவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும். ஒரு மூடியை போட்டு இரண்டு நிமிடம் வெந்ததும் திருப்பிவிடவும். திரும்ப எண்ணெய் ஊற்றவும். பொன்னிறமானதும் எடுத்து சுட சுட கொத்துமல்லி., கருவேப்பிலை சட்னியுடன் பரிமாறவும். நல்ல கலராக., வாசனையுடன் கூடிய தோசை.. டயட்டில் இருப்பவர்களுக்கும் ., லன்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:47 4 கருத்துகள்:\nவெள்ளி, 19 நவம்பர், 2010\nபுளி - 1 தக்காளி அளவு உருண்டை\nஉப்பு - 2 டீஸ்பூன்\nகருவேப்பிலை - 1 இணுக்கு\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுந்து - 2 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்\nபெருங்காயம் - 1 இன்ச் துண்டு\nவெந்தயம் - 1/2 டீஸ்பூன்\nவறுத்த வேர்க்கடலை சுத்தம் செய்தது - 1 டேபிள் ஸ்பூன்\nதூள் வெல்லம் - 1 டீஸ்பூன்\nநல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.\nபுளி., உப்பை இரண்டு கப் தண்ணீரில் ஊறப் போடவும். நன்கு கரைத்து புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும்.. மிளகாய்களை இரண்டாகக் கிள்ளி விடதை நீக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து., கடலைப் பருப்பு., பெருங்காயம்., வெந்தயம் போடவும். அவை சிவந்ததும் மிளகாய்., கருவேப்பிலை போடவும். புளிச்சாறை மஞ்சள்தூளுடன் கலந்து ஊற்றவும். நன்கு கொதிக்க வைத்து கெட்டியாகும் போது வெல்லத்தூள் சேர்க்கவும். அவ்வப்போது கிண்டி விடவும். ஓரங்களில் எண்ணெய் பிரியும் போது வேர்க்கடலையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். நன்கு ஆறிய பின் காற்றுப் புகாத கண்டெயினர்களில் வைக்கவும்.. தேவைபடும்போது சாதத்தில் போட்டு கிளறவும். இத்துடன் பொரித்த அப்பளம், தேங்காய்த்துவையல்., அவித்த முட்டை, சிப்ஸ் சேர்த்து பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:21 7 கருத்துகள்:\nவியாழன், 18 நவம்பர், 2010\nONION TOMATO SALAD.. வெங்காயம் தக்காளி சாலட்..\nவெங்காயம் தக்காளி சாலட் :-\nபச்சை மிளகாய் - 1 அல்லது 2\nமஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1/8 டீஸ்பூன்\nவெங்காயத்தை தோலுரித்து சன்னமாக வெட்டவும். தக்காளியையும் பச்சை மிளகாயையும் சன்னமாக வெட்டவும்.. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து நன்கு குலுக்கவும். 10 நிமிடம் ஊறவைக்கவும். சப்பாத்தி அல்லது ஃப்ரைட் ரைஸ். அல்லது பொரித்த அப்பளம் அல்லது அப்பளப் பூவுடன் பரிமாறவும்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:16 3 கருத்துகள்:\nபுதன், 17 நவம்பர், 2010\nபாகற்காய் - 250 கிராம்\nமிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 100 மிலி பொறிக்க..\nபாகற்காய்களைக் கழுவி மிக மெல்லிய வட்டங்களாக வெட்டவும். உப்பு ., மிளகாய்ப் பொடியைப் போட்டு நன்கு குலுக்கவும்.. 5 நிமிடம் ஊற விடவும்.\nஎண்ணெயைக் காயவைத்து நன்கு ப்ரவுன் ஆகும்வரை பொறித்தெடுக்கவும். சாம்பார் சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:21 4 கருத்துகள்:\nதிங்கள், 15 நவம்பர், 2010\nBUTTER FISH GRAVY.. விரால் மீன் குழம்பு..\nவிரால் மீன் குழம்பு :-\nவிரால் மீன் - 250 கிராம்.\nசின்ன வெங்காயம் - 10\nபுளி - 1 எலுமிச்சை அளவு\nஉப்பு - 2 டீஸ்பூன்\nமிளகாய்ப்பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்\nமல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்\nமஞ��சள் பொடி - 1/4 டீஸ்பூன்\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nவெந்தயம் - 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய் - 20 மிலி.\nமீனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகள் செய்யவும். வெங்காயம் ., பூண்டு தக்காளியை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காய வைத்து சோம்பு ., வெந்தயம் தாளிக்கவும்.. அது பொரிந்ததும் வெங்காயம்., பூண்டு., தக்காளி, கருவேப்பிலையைச் சேர்க்கவும். புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்துச் சாறெடுத்துக் கொள்ளவும். உப்பை இதனுடன் சேர்க்கவும். பானில் புளிக்கரைசல்., மிளகாய்ப் பொடி., மல்லிப் பொடி., மஞ்சப்பொடியை சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.. சிறிது கெட்டியானதும் மீன் துண்டுகளைச் சேர்க்கவும். 5 நிமிடங்கள் வெந்தவுடன் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:59 4 கருத்துகள்:\nசனி, 13 நவம்பர், 2010\nKING FISH FRY.. வஞ்சிரம் மீன் வறுவல்..\nவஞ்சிரம் மீன் வறுவல் :-\nவஞ்சிரம் மீன் - 1/2 கிலோ., ஸ்லைசாக வெட்டி நன்கு கழுவவும்.\nமிளகாய்ப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்\nஉப்பு - 2 டீஸ்பூன்\nஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு..\nமிளகாய்ப்பொடி., மஞ்சள் பொடி., உப்பை ஒரு தட்டில் நன்கு கலக்கவும். மீனின் எல்லாப் பக்கங்களிலும் படுமாறு நன்கு பிரட்டவும். பானில் சிறிதளவு எண்ணெயில் சின்ன தீயில் நன்கு மொறுமொறுப்பாகும் வரை வறுத்து சாம்பார் சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:15 8 கருத்துகள்:\nசெவ்வாய், 9 நவம்பர், 2010\nஉளுந்து - 1 கப்\nகல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப்\nஉப்பு - 1 சிட்டிகை\nஉளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு. திருமணங்கள்., தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:34 11 கருத்துகள்:\nதிங்கள், 1 நவம்பர், 2010\nவறுத்து சுத்தம் செய்த வேர்க்கடலை - 1 கைப்பிடி.\nகாரட் பொரியல் - 1 டேபிள் ஸ்பூன்\nகொத்து மல்லித் துவையல் - 2 டீஸ்பூன்\nசாட் மசாலா - 1 சிட்டிகை\nஒரு பவுலில் இது மூன்றையும் கலந்து சாட் மசாலாவை தூவி சாப்பிடவும். நல்ல ஹெல்தியான மாலை ந���ர சிற்றுண்டி இது ..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:09 3 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். NAVATHANYA RECIPES\nநவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். 1. கவுனரிசி:- தேவையானவை:- கவுனரிசி - 1 ஆழாக்கு சீனி - 1/2 ஆழாக்கு துருவிய தே...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nOATS VEG UTHAPPAM.. ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்..\nONION TOMATO SALAD.. வெங்காயம் தக்காளி சாலட்..\nBUTTER FISH GRAVY.. விரால் மீன் குழம்பு..\nKING FISH FRY.. வஞ்சிரம் மீன் வறுவல்..\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாக���ாஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thenoos.blogspot.com/2013/04/manaththakkaaik-kiirai-mandi-solanum.html", "date_download": "2018-07-19T11:34:13Z", "digest": "sha1:HVL3R7MF4ZORQKWNFRN76LJSRRJ3JGMV", "length": 21119, "nlines": 310, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: MANATHTHAKKAALIK KEERAI MANDI. (SOLANUM NIGRUM. ). மணத்தக்காளிக் கீரை மண்டி.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 19 ஏப்ரல், 2013\nமணத்தக்காளிக்கீரை மண்டி::- ( நீர்ச் சாறு)\nமணத்தக்காளிக் கீரை மண்டி :-\nமணத்தக்காளிக் கீரை அல்லது பொன்னாங்கண்ணிக் கீரை அல்லது அரைக்கீரை, அல்லது முளைக்கீரை அல்லது அகத்திக் கீரை. - ஒரு கட்டு.\nசின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.\nஅரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப்\nதேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் நைசாக அரைக்கவும்.\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nஉளுந்து - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nவரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும்.\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nகீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொறிந்ததும், வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும். 2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும். கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.\nவெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு, அரைத்த தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். இதை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். சூப் போல அப்படியேயும் குடிக்கலாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:18\nதிண்டுக்கல் தனபாலன் 19 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 5:40\nஇல்லை தனபால். தேங்காய்ப் பால் ஊற்றினால் கசக்காது\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அ��சிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ். தேவையானவை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 4, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - 1, உப்பு - ...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nபெருமாள் அமிர்த கலசம்:- தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், வெல்லம் – ஒரு கப், சீரகம் – கால் டீஸ்பூன், நெய்...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். NAVATHANYA RECIPES\nநவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். 1. கவுனரிசி:- தேவையானவை:- கவுனரிசி - 1 ஆழாக்கு சீனி - 1/2 ஆழாக்கு துருவிய தே...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nPEANUT CHUTNEY. வேர்க்கடலைச் சட்னி( மல்லாட்டைச் சட...\nIDDLI UPMA. இட்லி உப்புமா\nINSTANT MANGO PICKLE. பச்சரிசி மாங்காய் ஊறுகாய்.\nCUCUMBER THAYIRPPACHADI .வெள்ளரிக்காய் தயிர்ப்பச்ச...\nFRUIT GHEER. பழப் பாயாசம்.\nCHICKEN TUKADA சிக்கன் துக்கடா.\nDRIED MANGO SAMBAR மாவற்றல் சாம்பார்.\nALOO TOMATOR ஆலு டமாட்டர்.\nCOCONUT MILK KANJI . தேங்காய்ப்பால் கஞ்சி\nBROAD BEANS SAMBAR. அவரைக்காய் சாம்பார்.\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2011/10/vaazhviyal-unmaikal-aayiram-431-440-431.html", "date_download": "2018-07-19T11:46:04Z", "digest": "sha1:QXGKZC53SHIAENAF63LAT6TUCHDX3E6I", "length": 5195, "nlines": 133, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: Vaazhviyal unmaikal aayiram 431-440: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 431-440", "raw_content": "\nவாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்\nபதிவு செய்த நாள் : 21/10/2011\n431 குடி தழுவி ஆளுவோர் வழியில் உலகம் நிற்கும்.\n432 நல்லாட்சியில், மழையும் விளைச்சலும் நன்றாய் அமையும்.\n433 ஆளுவோருக்கு வெற்றி தருவது படையன்று; செங்கோன்மையே.\n434 முறையான ஆட்சியே ஆளுவோரைக் காக்கும்.\n435 எளிமையின்மையும் நீதி இன்மையும் ஆள்வோரை அழிக்கும்.\n436 குடிகளைக் காக்க குறைகளைக் களைதல் அரசின் பணி.\n437 மிகவும் கொடியவரைத் தண்டித்தல் களைபிடுங்குவது போன்றதே.\n438 கொலையாளியிலும் கொடியோர் மக்களை அலைக்கலைக்கும் ஆட்சியாளா.;\n439 ஆட்சி அதிகாரத்தால் பொருள் பெறுபவர் வழிப் பறியாளர் போன்றவரே.\n440 நாள்தோறும் முறைசெய்யா ஆட்சியாளர் அழிவர்.\n(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 421 – 430)\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 4:39 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-07-19T11:47:22Z", "digest": "sha1:7CYA5QBP6PMN2ZBY45W6HVZ6E2VKBXB3", "length": 31077, "nlines": 150, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: முதல்வருக்குத் தண்டனை – எண்ண ஓட்டங்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்", "raw_content": "\nமுதல்வருக்குத் தண்டனை – எண்ண ஓட்டங்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்\nமுதல்வருக்குத் தண்டனை – எண்ண ஓட்டங்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 செப்தம்பர் 2014 கருத்திற்காக..\nஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது செய்த தவறுகளுக்காகப் பதவிப் பொறுப்பில் இல்லாத பொழுது தண்டிக்கப் பெறும் பொழுது பதவிக்கு இழுக்குவராது. இப்பொழுது புரட்சித்தலைவி செல்வி செயலலிதா முந்தைய முதல்வர் நிலையில்(ஆனி 17, 2012 / சூலை 1, 1991 முதல் பங்குனி 22, 2017 / ஏப்பிரல் 4, 1996 வரை) இருந்த பொழுது வருவாய்க்கு மீறி உரூபாய் 66 கோடி சொத்து வைத்து இருந்தமையால் (புரட்டாசி 11, 2045 / செப். 27, 2014 அன்று)4 ஆண்டுக்காலம் சிறைத்தண்டனையும் உரூபாய் 100 கோடி தண்டத்தொகை விதிக்கப்பட்டும் உள்ளார். உடன் குற்றம் சாட்டப்பட்ட திருவாளர்கள் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஒவ்வொருவரும் தனித்தனியே 4 ஆண்டுச் சிறைத்தண்டனையும் உரூபாய் 10 கோடி தண்டத் தொகையும் விதிக்கப்பட்டனர். செல்வி செயலலிதா, இப்பொழுது முதல்வராக இருக்கும் பொழுது தண்டனை விதிக்கப்பட்டதால் தமிழ்நாட்டிற்குக்களங்கமாகப் பார்க்கப்படுகிறது.\nஊழல் தடுப்புச் சட்டம் 13(2), 13(1)(ஈ) ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109 இன் கீழும், 120 இன் கீழும் நடைபெற்ற வழக்கில் இவர்கள்தண்டிக்கப்பட்டுள்ளனர்.இத்தண்டனையுடன் 6 மாதச்சிறைத்தண்டனையும் 10,000 உரூபாய் ஒறுப்புத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளன. சிறைத்தண்டனை 4 ஆண்டுத்தண்டனையுடன் இணைந்த தண்டனை. எனவே, கூடுதலாகச் சிறையில் இருக்க வேண்டிய தேவையில்லை.எனினும் ஒறுப்புத்தொகை 100 கோடி, பத்து கோடி ஆகியவற்றை உரியவர்கள் செலுத்தத்தவறினால், முறையே, ஓராண்டும், ஆறு திங்களும் கூடுதலாகச் சிறையில் இருக்க வேண்டும்.\nமுதல்வர் பொறுப்பில் தண்டனை பெறும் அவலநிலை ஏன் ஏற்பட்டதுசிறப்பு நீதிமன்றத்தில் விதிக்கப்படும் தண்டனை என்பது ஒறுப்புத்தொகை என்ற அளவில் அல்லது உடனே பிணை பெறும் வகையில் குறைவாக இருக்கும் என எதிர்பார்த்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். தண்டனை குறைவாக இருந்தாலும் முதல்வர் பொறுப்பில் இருக்கும் பொழுது தண்டிக்கப்படுவது தமிழ்நாட்டிற்கு மானக்கேடு என எண்ணி இருக்க வேண்டும். தீர்ப்பு நாளன்று முதல்வர் பொறுப்பில் இருந்து விடுபட்டு, அவர்கள் எண்ணுவதுபோல் சிக்கல் இல்லையெனில் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கத்திட்டமிட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால் தொலைநோக்குப்பார்வை இல்லை என்றாகிறது. அருகிலுள்ள வழக்குரைஞர்கள், அன்பர்கள், அதிகாரிகள் இதனை ஊகித்திருந்தாலும் -முன்னர், இவ்வாறு தண்டனை பெற்றால் மாற்று ஏற்பாடு என்ன செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டதால்தானே சிலர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். எனவே, – சொல்லி இருக்க மாட்டார்கள். பொறுப்பில்இருப்பவர், தானே இரு வகை வாய்ப்பையும் எண்ணிப்பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.\nதமிழ்நாட்டின் முதல்வர் கருநாடக மாநிலத்தில் கருநாடக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுக் கருநாடகச் சிறையில் இருப்பதும் இழுக்குதான். ஆனால், தமிழ் -கன்னட அடிப்படையில் தண்டனை வழங்கியிருப்பதாகக் கூறுவது பொருந்தாது. கருநாடக முதல்வராக இருந்த சித்தலிங்கப்பா எடியூரப்பா (Bookanakere Siddalingappa Yeddyurappa) அங்கே தண்டிக்கப்பட்டிருக்கிறார். கருநாடக அமைச்சராக இருந்த சனார்த்தனன் அங்கே இன���னும் சிறையில் இருக்கிறார். ஒரு வேளை தீர்ப்பு வேறுவகையாக இருந்தால் கன்னடப் பெண்மணி என்பதால் உரிய தண்டனை வழங்கப்பெறவில்லை எனக் கூறவும் ஆளிருப்பர். எனவே, மொழி அடிப்படையில் கூறுவது பொருந்தாது.\nகாவிரிக்காக உரிமைக்குரல் கொடுத்துப் போராடுவதால் தண்டிக்கப்பட்டார் என்பது ஒரு சாரார் கூற்று.\nஅப்படி எல்லாம் இல்லை. 18 ஆண்டுகளாக நீதிமன்றப் பணிகளை இழுத்தடித்ததால்தான் தண்டனை என்பது மற்றொரு சாரார் எண்ணம்.\nஊழல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டதுஎன்று நீதிபதியே தெரிவித்து இருப்பதால் வேறு உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது என்பது ஒரு சாரார் எண்ணம்.\nஇனப்படுகொலை செய்த சிங்கள அரசிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தது, இராசீவு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவிகளுக்கு விடுதலை வழங்க முற்பட்டது, இனப்படுகொலையாளிகளை நீதிமன்றத்தின்முன் நிறுத்த வேண்டும் என வாதிட்டு வருவது, தமிழ் ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டுவது போன்ற தமிழக நலன் சார்ந்து மத்திய அரசிற்கு எதிராகப் போராடி வருவதால் தண்டிக்கப்பட்டதாக உலகளாவிய தமிழர்களிடையே எண்ண ஓட்டம் உள்ளது.\nமத்திய அரசு வழக்கின் ஒரு தரப்பாக இருந்திருந்தால் கண்டிப்பாக இவ்வாறு செய்திருக்கும்.எனவே, அதற்கான வாய்ப்பு இல்லை. மேலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி யோன் மைக்கேல் குன்ஃகா (John Michael Cunha) நேர்மையானவர் என்பதாலும் இதற்கான வாய்ப்பு இல்லை என்பது மறு தரப்பு எண்ணம்.\nஅ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பெரிய கட்சிகளை ஒடுக்கி விட்டால் தமிழக ஆட்சியில் அமரலாம் எனக் கனவு கண்டு பாசக திட்டமிட்டுச் செயலாற்றுகிறது என்பதும் குற்றச்சாட்டு.\nபாசகவிற்கு இந்தக் கனவு இருக்கலாம். ஆனால், அதனால் இதனை நிறைவேற்றத் தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள். எனினும் குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க ஆவலாக இருக்கும். என்றாலும் இந்தத் தீரப்பில் அதன் தலையீடு இருக்காது என்பது நீதியின் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் எண்ணம்.\nமுதல்முறை ஆட்சியில் இருந்தபொழுது தவறு செய்ததாகத்தானே குற்றச்சாட்டு. அதன்பின் இரு முறையும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றுதானே பொருள் அதற்கு ஏன் தண்டிக்க வேண்டும் அதற்கு ஏன் தண்டிக்க வேண்டும் யார்���ான் ஊழல் செய்யவில்லை என்று பரிவு அலை பரவும் எண்ண ஓட்டமும் ஒரு சாராரிடையே உள்ளது.\nஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இத்தண்டனை முதலடியை எடுத்து வைப்பதாக எடுத்துக் கொள்ளலாமே அடுத்து நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளில் பிறருக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதே என்ற எண்ண ஓட்டம் உள்ளவர்களும் உள்ளனர்.\nவிடுமுறை நாள் தொடர்ச்சியாக வரும் வகையில் தீர்ப்பு நாளை வைத்ததும் திட்டமிடப்பட்ட செயலாக எண்ணப்படுகிறது.\nதமிழகக் காவல்துறைக்கும் இந்த வழக்கம் உண்டே கைதுப் படலம் என்பதே வெள்ளியன்றுதானேஅல்லது விடுமுறை நாளுக்கு முதல்நாளன்றுதானேஇருக்கும். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்னும் பொழுது இந்த முறையைத்தானே கருநாடகமும் பின்பற்றி யிருக்கும் என்பதும் மறு தரப்பு எண்ணம்.\nகுறைந்த அளவு தண்டனை கொடுத்திருக்கலாமே பிணையில் செல்லக் கூடாது என்பதற்குத்தானே கூடுதல் தண்டனை என்பதும் ஆளும் கட்சியினரின் எண்ணம். அதிக அளவு தண்டனை கொடுக்கவில்லையே பிணையில் செல்லக் கூடாது என்பதற்குத்தானே கூடுதல் தண்டனை என்பதும் ஆளும் கட்சியினரின் எண்ணம். அதிக அளவு தண்டனை கொடுக்கவில்லையே இடைநிலையில்தானே வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தில் கூடுதலளவு தண்டனை கொடுக்க வாய்ப்பு உள்ள பொழுது குறைந்த தண்டனை ஏன் தரவில்லை என்று எப்படிக் கேள்வி கேட்கமுடியும் என்பது மாற்றுக் கட்சியினரின் வினா\nபெண் என்று பாராமல் அகவையை நோக்காமல் பிணைகூட மறுக்கிறார்களே என்பதும் கட்சியாளர்கள் எண்ணம். நோயுற்ற தந்தையைப் பார்க்க விடுப்பு கேட்டாரே நளினிஅவர் பெண்ணில்லையா அகவையில் மூத்தவர்கள் எத்தனை பேர் சிறைகளில் உள்ளனர் அகவையில் மூத்தவர்கள் எத்தனை பேர் சிறைகளில் உள்ளனர் காரணமின்றி அரசியல் காரணங்களுக்காக மட்டும் அடுத்தடுத்துக் குண்டர் சட்டத்தின்கீழ்த் தமிழகத் தலைவர்களைத் தண்டிக்கவில்லையா காரணமின்றி அரசியல் காரணங்களுக்காக மட்டும் அடுத்தடுத்துக் குண்டர் சட்டத்தின்கீழ்த் தமிழகத் தலைவர்களைத் தண்டிக்கவில்லையா அரசியல் காரணங்களுக்காக, நீண்டகாலம் தமிழகத் தலைவர்களைச் சிறைகளில் தள்ளவில்லையா அரசியல் காரணங்களுக்காக, நீண்டகாலம் தமிழகத் தலைவர்களைச் சிறைகளில் தள்ளவில்லையா மாற்றுக்கருத்து சொல்பவர்கள்மீது அவதூறு வழக்குகள் பாயவில்லையா மாற்றுக்கருத்து சொல்பவர்கள்மீது அவதூறு வழக்குகள் பாயவில்லையா தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் உண்ணாநோன்பு இருந்தபொழுதும் கருணை சிறிதும் காட்டப்படாமல் துன்புறுத்தப்படவில்லையா தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் உண்ணாநோன்பு இருந்தபொழுதும் கருணை சிறிதும் காட்டப்படாமல் துன்புறுத்தப்படவில்லையா சட்டத்தின் முன் யாவரும் சமம் என்னும் பொழுது இதுபோன்ற காரணங்களால் பரிவு காட்டுமாறு முறையிடுவது சரியல்ல என்பதே பிற கட்சியாளர்கள் எண்ணம்.\nசெய்தித்தாள்களையே படிக்க மாட்டேன் என்றவர் இன்று செய்தித்தாள்களை எழுத்தெண்ணி மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. எதற்கெடுத்தாலும் நான், நான் என்றவர், இன்று அவ்வாறு சொல்லமுடியாத சூழல் நிகழ்ந்து விட்டது. எனவே, சிறையில் சில நாள்கள் இருந்தாலும் தன் மறைமுக ஆட்சியிலும் அல்லது மீண்டும் ஆட்சிவாய்ப்பு கிட்டும் பொழுது் அப்பொழுதும் இதுவரை செய்த தவறுகளை எண்ணிப் பார்த்து அனைத்து மக்களுக்கான நல்லாட்சி தருவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்பது கட்சி சார்பற்ற நல்லோர்கள் எண்ணம்,\nஇப்படி இருவேறுபட்ட எண்ண ஓட்டங்கள் மக்களிடையே உள்ளன. எனினும் நம் நாட்டில் ஊழல் அடிப்படையில் தலைவர்களை வெறுக்கும் தொண்டர்கள் இல்லை என்பதாலும் கட்சித்தலைமைக்கு அடிமையாக இருப்பவர்களே கட்சித் தொண்டர்கள் என்பதாலும், கட்சி மட்டத்தில் இப்போதைக்கு எந்தப் பாதிப்பும் செல்வி செயலலிதாவிற்கு வராது.\nஅதே நேரம் பொது மக்களிடையேயும் உலகத் தமிழர்களிடையேயும் தண்டனையைக் கேட்ட பொழுது ஏற்பட்ட பரிவு அலை கட்சியினரின் வன்முறைப் போராட்டங்களால் குறைகிறது என்பதையும் கட்சியினர் உணர வேண்டும். சொன்னால் போராடுவதற்குத் தொண்டர்கள்இருக்கும் பொழுது இவர்களை இனப் படுகொலையில் இருந்து ஈழத்தமிழர்களைக் காப்பதற்காகவும் இனப்படுகொலைகாரர்களைத் தண்டிப்பதற்காகவும் பயன்படுத்தத் தவறியதைக் கட்சிகளின் தலைமைகளும் உணர வேண்டும்.\nமக்கள் செல்வாக்கால் தண்டனையை அல்லது விடுதலையை முடிவெடுக்கலாம் என்றால் யாருக்கும் தண்டனை கிடைக்காது. நீதிமன்றங்களும் தேவையில்லை.அல்லது குற்றமற்றவர்கள் செல்வாக்கில்லாக் காரணத்தால் தண்டிக்கப் பெறுவர். அர��ியல் போராட்டங்களுக்காகச் சிறை செல்பவர்கள் தண்டனையை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறிருக்க வேறு காரணங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டால் அதனை நீதிமன்றம் மூலம்தான் முறியடிக்க வேண்டுமே தவிர, வீதியில் போராடி அல்ல\nசிறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்தாம் நிலையான தலைவி என்னும் பொழுது எதற்காக வன்முறைகள் தற்கொலைகள் மேல் முறையீடு வாய்ப்பு இருக்கும் பொழுது அதுவரை காத்திராமல் ஆர்ப்பாட்டங்கள் ஏன் மேல் முறையீட்டில் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வராமல் போவதன் காரணம் என்ன மேல் முறையீட்டில் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வராமல் போவதன் காரணம் என்ன இத்தகைய வன்முறைப் போராட்டங்கள் நீதி மன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டால் அல்லது நீதிமன்றத்தை வன்முறை மூலம் பணிய வைக்கும் முயற்சிகளாகக் கருதப்பட்டால் எதிர்மறையான விளைவுதானே ஏற்படும் இத்தகைய வன்முறைப் போராட்டங்கள் நீதி மன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டால் அல்லது நீதிமன்றத்தை வன்முறை மூலம் பணிய வைக்கும் முயற்சிகளாகக் கருதப்பட்டால் எதிர்மறையான விளைவுதானே ஏற்படும் எப்படி இருந்தாலும் வெளியே வருவார் அல்லது இருந்த இடத்தில் இருந்தே ஆட்சி செய்வார் என்னும்பொழுது ஆர்ப்பாட்டங்கள் எதற்கு எப்படி இருந்தாலும் வெளியே வருவார் அல்லது இருந்த இடத்தில் இருந்தே ஆட்சி செய்வார் என்னும்பொழுது ஆர்ப்பாட்டங்கள் எதற்கு எங்கே இருந்தாலும் அவர்தான் தலைவி என்னும் பொழுது பதற்றம் ஏன்\nகலைஞர் ஆட்சிக்கு வந்தால் மறுநாளிலிருந்தே ஆட்சி கலைக்கப்படும் என்பதுபோன்ற பரப்புரை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும். அதே நேரம் செல்வி செயலலிதா ஆட்சி இழந்தால் மறுநாளிலிருந்தே மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று பரப்பப்படும். இப்பொழுதும் அதே போல் அவர் மீண்டும் வருவர் என்ற நம்பிக்கை அவரது கட்சியினரிடமும் அச்சம் பிறரிடமும் உள்ளது. அச்சத்தின் காரணமாகத்தான் அவர் தண்டனை பெற்றதை ஏதோ ஒரு மூலையில் மிகச்சுருக்கமாகநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் வேண்டும் எனக்கூறும்நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. அவர் குற்றமற்றவர் என்றால் மேல்முறையீட்டில் விடுதலையாகி ஆட்சி அமைப்பதை வரவேற்கத்தானே வேண்டும். ஆனால், அதற்காக இப்பொழுதே வன்முறைகளில் ஈடுபடுவது இன்னலுக்குள்ளாகும் மக்கள���ல் அக்கட்சியை ஒதுக்கும் போக்கிற்குத் தள்ளுகிறது என்பதை உணர வேண்டும்.\nஎனவே, அ.இ.அ.தி.மு.க. கட்சியினர் அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும். கட்சித்லைமையும் இது குறித்து அறிக்கை விட்டு அமைதி வழியில் தொண்டர்களைத் திருப்ப வேண்டும். இல்லையேல் கட்சிக்குத்தான் பின்னடைவு என்பதை உணர வேண்டும்.\nசலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்\nஎன்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கினை ஆட்சியில் உள்ளவர்களும் அதிகாரிகளும் பணம் சம்பாதிக்க எண்ணுபவர்களும் உணர வேண்டும்.\nஅழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்\nபிற்பயக்கும் நற்பா லவை. (திருக்குறள் 659)\nஎன்னும் நம்பிக்கை அனைவருக்கும் வேண்டும்.\nகுற்றமற்றவர்கள் தண்டிக்கப் பெறாமலும் குற்றவாளிகள் தண்டிக்கப் பெறவும் இருக்கும்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 11:20 AM\nLabels: akaramuthala, அகரமுதல, இலக்குவனார் திருவள்ளுவன், ஊழல், தண்டனை, முதல்வர், வன்முறை\nஇயலிசை நாடகச் செல்வர், இலட்சிய நடிகர் இராசேந்திரன்...\nஅனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும...\nசங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு. ஆயிரத்திற்கு ...\nசங்கப் பொன்மொழிகள் 1: நெல் பல பொலிக\nஉலகளாவிய தமிழ்க்கல்வி – 2 : இலக்குவனார் திருவள்ளுவ...\nபண்புடையார்ப் பட்டுண்டு உலகம் – இலக்குவனார் திருவள...\nஉலகளாவிய தமிழ்க்கல்வி – 1 : இலக்குவனார் திருவள்ளுவ...\nமுதல்வருக்குத் தண்டனை – எண்ண ஓட்டங்கள் : இலக்குவனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venthayirmanasu.blogspot.com/2010/07/", "date_download": "2018-07-19T11:56:50Z", "digest": "sha1:G3FHOF3L34W3HHCVACNV4HAK3NMBQYJB", "length": 56715, "nlines": 220, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: July 2010", "raw_content": "\nசிலிர்க்க வைத்த சிங்கார சென்னை. (1945)\nஇளமையிலும் முதுமையிலும் அழகான எமி நாங்கள் படித்த கான்வென்ட் பள்ளியில் பார்த்த வெளி நாட்டு கன்னியாஸ்திரிகளைப் போல் முதுமையில் எமி. இளமையில் ஒரு சிறு குறை கூட சொல்ல முடியாத அழகு.\nஆர்யா நகைச்சுவையிலும் கலக்குகிறார். படத்தில் அவருக்கு மிகக் குறைந்த ஆடை செலவு. நடனத்தின் நடுவில் கையோடு கை கோர்த்து எமி காதலை வெளிப்படுத்தும் இடத்தில் அதிர்வை அழகாக காண்பிக்கிறார். நடனத்திலும் அந்தக் கால நடனம் ரசிக்கலாம். அதிலும் ஆடிக் கொண்டே துணி மூட்டையை ஒருவருக்கொருவர் கை மாற்றும் இடம் அழகு.\nநாசருக்கு நடிப்பில் வேலை குறைவு. ஆர்யாவுடன் மோதும் போது ஆசிரியருக்காக தோற்றது போல் நடிப்பதை புரிந்து கொண்டு அவருக்கு மட்டும் கேட்கும் தொனியில் அதை உறுதிப் படுத்தும் இடத்தை நடிப்புக்கு உபயோகித்துக் கொண்டார்.\nவில்லனாக வருபவர் படகில் எமி இறங்க கை கொடுக்கும் படகுக் காரனின் விரல்களை ஷூவால் அழுத்தும் பொழுதே படத்தின் வில்லன் என்று அடையாள படுத்தப் பட்டு விடுகிறார். எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்று உறுமும் போது தமிழ் வில்லன்களை நினைவு படுத்துகிறார்.\nஹனீபா காமெரா கண்டதும் சிலையாக நிற்பதும், அதைக் கண்டதும் எமி கேமரா திசை மாற்றுவதும் நல்ல நகைச்சுவை. மலையாளத்தில் இருந்து வந்தாலும் தமிழ் ரசனைக்கு மிகவும் பொருந்திப் போன ஹனீபா இறந்தது வருத்தமாக இருக்கிறது.\nபாடல்களில் ஜி வீ பிரகாஷ் தூள் பரத்தி இருக்கிறார். பின்னணி இசையும் ஒரு சில இடங்கள் தவிர மீதி இடங்களில் சிறப்பு. நீரவ் ஷா காமெரா கண்ணுக்கு குளுமை. இருந்தாலும் 1945 உம் 2010 உம் மாறி மாறி வருவதால் முன்னதுக்கு கருப்பு வெள்ளையும் பின்னதுக்கு வண்ணமும் சேர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று மனதில் பட்டது. ஆனால் பெரும் பகுதி 1945 இல் நடப்பதால் வேண்டாம் என யோசித்திருக்கலாம். மேலும் எமியின் அழகு வண்ணத்தில் தான் மிளிரும் .இங்கே எமியின் ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு முறை கை குலுக்கி விடலாம்.\nபடத்தில் நான் ரசித்த இயக்குனருக்கு ஷொட்டு கொடுக்கும் இடங்கள்:\n... சென்ட்ரல் ஸ்டேஷன் இல் இருக்கும் கூட்டத்தில் ஆர்யா வைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறும் எமி, போலீஸ் திடீரென ஓடி வருவதைப் பார்த்ததும் கொஞ்சம் ஒளிந்து பின் அவர்கள் வேறு திசையில் ஓடுவதைப் பார்த்ததும் அந்த திசையில் பார்வையை செலுத்தி ஆர்யாவை சட்டென கண்டுபிடிக்கும் இடம்.\n...வானுயர்ந்த கடிகாரத்தை உடைத்து கீழே வந்து விழும் ஒருவனைக் கண்டதும் நொடிப் பொழுதில் அங்கிருப்பது ஆர்யா எனப் புரிந்து நண்பன் சடுதியில் பிறருக்கு முன் பாய்ந்து ஆர்யாவை அடையும் இடம்.\n...மருத்துவமனையில் 'கபீர்' என்ற பெயரைக் கேட்டதும் பரிதியின் நண்பன் என்று இனம் கண்டு கொண்டு விரையும் இடத்திலும், 'துறையம்மா ' பள்ளியில் இருந்து கொடி நாளுக்கு நன்கொடை கேட்க வந்த மாணவியைப் பார்த்ததும் அது தன் பெயரில் பரிதி ஏற்படுத்திய பள்ளி என்று உணர்ந்து கொள்ளும் இடத்திலும் எமி பழைய நினைவுகளிலேயே பிக்ஸ் ஆகி விட்டதை காட்ட முடிந்தாலும் எதற்காக இடையில் வர முயற்சி செய்யவே இல்லை என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.\nஆர்யா இப்படியே படம் பண்ணிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இடை இடையே ஒரு கம்மேர்ஷியல் படம் பண்ணலாம்.\nமிகவும் ரசித்து பார்த்த மதராச பட்டினம் எமி இறுதி முறையாக அமர்ந்த படியே சரியும் போது வழக்கம் போல் எழுந்து விட மாட்டார்களா என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துவது உண்மை.\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.\nஇந்த வார விகடனின் 'பொக்கிஷம்' பகுதியில் புதிய வார்ப்புகள் பட விமர்சனம் வந்திருக்கிறது. \" பல இயக்குனர்களால் பல முறை அலசப்பட்ட கரு தான். ஆனால் எடுத்துக் கொண்ட கதை .... ஒரே சீராகச் சொல்லி இருப்பதால் இந்த படம் தனித்து இருக்கிறது. அந்த வரிகளை களவாணி பட விமர்சனத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n' என்று கதாநாயகியைப் பார்த்து கேட்பதற்கு எந்த உள்ளர்த்தமும் இல்லை என்று காட்டுவதற்காக பத்து வயதுப் பெண்ணைப் பார்த்து கேட்பதாக காட்டப்படுகிறது. அந்த பெண் வெட்கத்தோடு சொல்வது அழகு. பெண்களின் அந்த வெட்கமும் ஆண்களின் நியாயமான வீரமும் உலக மயமாக்குதலால் நாம் இழந்த குடும்பச் சொத்து. பஸ்ஸில் போகும் பெண்களில் முதல் சீட் பெண்ணுக்கு வலது கண்ணும் பின் சீட் பெண்ணுக்கு இடது கண்ணும் அடிக்கும் போது விமல் கிராமத்து விடலையை கண் முன் கொண்டு வருகிறார் .\nகிராமங்களில் பெருசுகள் சின்னப் பெண்களைப் பார்த்து கேட்கும் சொலவடை தான் இது. இங்கே 'என்னைக் கட்டிக்கிறையா' என இளைஞன் விமல் கேட்பதில் உருவாகிறது கதை.\nகதாநாயகி ஓவியா அந்தக் கால ஷோபாவை நினைவு படுத்துகிறார். கள்ளங் கபடற்ற முகம். தெளிவான உணர்வு வெளிப்பாடு. இளவரசு வயலில் நாற்று நடத் தொடங்கி வைக்க அழைத்ததும் பாவாடையை தூக்கி செருகிய படி வயலில் இறங்கி நடும் போது கொள்ளை கொள்கிறார்.\nசரண்யா தான் திரையில் வரும் நேரங்களில் எல்லாம் அனைவரையும் ஆக்ரமிக்கிறார். துபாயிலிருந்து திரும்பிய கணவனிடம் அடி உதை பெற்ற போதும் ஜன்னலோரம் நின்றபடி 'ஆனி போய்ஆடி போய் ஆவணி வந்திட்டா என் பையன் டாப்பா வருவான்' என்னும் போதும் மகன் திருமணம் முடித்து வந்த போது ' என்னப்பா வீட்டு கிரக பிரவேசத்துக்கும், மகன் கல்யாணத்துக்கும் ஒ���ே சாப்பாடா போட்டுட்டியா' என ஒருவர் கேட்கும் சின்ன சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கலவர நிலையை சகஜமாக்கும் போதும் சரண்யா ஜொலிக்கிறார்.\nஇளவரசு விமலின் தந்தை பாத்திரத்தை உணர்ந்து கொஞ்ச நேரம் வந்தாலும் படிக்கல்லாய் கதையின் தரத்தை உயர்த்துகிறார். அவர் நீண்ட காலத்திற்கு பிறகு ஊர் திரும்பும் சமயம் மகனை அவல நிலையில் கண்ட கசந்த மன நிலையை சிறிதும் புரிந்து கொள்ளாமல் 'கோடாலி தைலம் வாங்கி வந்தியா' 'சரக்கு கொண்டு வந்திருக்கியா' 'சரக்கு கொண்டு வந்திருக்கியா' என சுற்றம் கேட்கும் போது நடிப்பில் வசனம் இல்லாமலே விசனம் காட்டுகிறார்.\nவில்லன் திருமுருகன். கோபக்கார அண்ணன், வேகமாக உணர்ச்சி வயப் பட்டாலும் பெரியவர்கள் சொன்னதும் அடங்கும் போதும், இறுதியில் விமலுடன் இணக்கமான காட்சியிலும் இயல்பாக செய்கிறார். உடல் அசைவுகளில் காட்டும் உணர்வு முகத்தில் கொண்டு வர பயிற்சி இன்னும் கொஞ்சம் வேண்டும். படத்தின் இணை இயக்குனர்.\nகஞ்சா கருப்பு காமெடி. அறிமுகமாகும் உர மூட்டை கடத்தல் காட்சி தவிர மீதி இடங்களில் எல்லாம் என்ன நடக்கும் என்று முன்பே ஊகிக்க முடிவதால் ரொம்ப ரசிக்க முடியவில்லை.\nகதாநாயகன் மட்டும் மப்ளர் சுற்றி முகம் மறைத்து பகைவர்களின் ஊருக்கு திரு விழா காண சென்றாலும் கூட இருக்கும் நண்பர்களை வைத்து கண்டு பிடிக்காமல் இருப்பது.\nபோன்று இருந்தாலும் படம் முடிந்ததும் மறுபடி பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.\nநாடோடி ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார் இரண்டு பேரை. தமிழ் உதயம் அண்ட் மீ .\nதமிழ் உதயம் ஜஸ்ட் லைக் தட் உடனே தனக்கிருந்த ஒரு அனுபவத்தின் மூலம் எழுதி முடித்து விட்டார். அவர் ஒரு அனுபவங்களின் குவியல் என்று நினைக்கிறேன்.\nஎன் பாட்டுக்கு ஒரு ஓரத்தில கதைன்ற பேர்ல ஏதோ எழுதிக்கிட்டு இருந்தா ஒரு கற்பனை சூழ்நிலையைக் கொடுத்து எழுதச் சொல்லி விட்டார், நாடோடி. சூழ்நிலை இன்னான்னா ,\nபழைய மன்னர்களின் ஆட்சியில் நீங்கள் இருந்தால் ( நீங்கள் எந்த ஒரு கேரக்டராகவும் எடுத்து கொண்டு எழுதலாம், மன்னரகவோ, ராணியாகவோ, பிரஜையாகவோ) அந்த அனுபவத்தை பகிரவும்.\nராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க அனா சூனா (அசகாய சூரர் )மன்னர் காலத்திய பிரஜை நான். அவரது ஆட்சியில் பசி என்று ஒருவர் இருந்ததில்லை. அவரது அரண்மனையை கடக்கும் ஒருவர் பசியோடு இருந்தால் அரண்மனைக்குள் சென்று அதற்கென இருக்கும் நீள் தாழ்வாரத்தில் அமர்ந்து வேண்டுமட்டும் உண்டு வரலாம்.\nநீருக்கு என்றுமே தட்டுப்பாடு இருந்ததில்லை. ஓடைகளும், சோலைகளும் கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை தான்.\nமாதம் ஒரு முறை அரசர் தன் மனைவியுடன் அரண்மனை மாடத்துக்கு வந்து குடி மக்களுக்கு தரிசனம் தருவார். அரசர் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்று காண இயலாது. . ஆனால் அவரைக் கண்டு விட்டால் அடுத்த ஒரு மாதத்துக்கு அதைப் பற்றியே தான் பேச்சாக இருக்கும்.அவரின் தங்க நிறம், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் , அவரின் புன்சிரிப்பு என்று பேச்சு எங்கு தொடங்கினாலும் அரசரிடம் போய் தான் நிற்கும். சுத்தமான காற்று, உடல் சுகம் கெடுக்காத நீர், வயிறு நிறைய உணவு இவ்வளவும் கிடைத்த நான் தேவை இல்லாத ஒரு காரியம் செய்தேன்.\nஒரு கால இயந்திரத்தில் ஏறினால் இருநூறு ஆண்டுகள் தாண்டி 2010 க்கு வந்து விடலாம் என்று ஒருவர் சொல்ல, ஆசைப்பட்டு ஏறி விட்டேன். ஒரு மூன்று மணி நேரத்துக்கு மட்டும் 2010 இன் உலகத்தில் சுற்றி வரலாம் மூன்று மணி நேரம் முடியுமுன் கால இயந்திரத்தில் ஏறி விட வேண்டும். என்று மிகவும் எச்சரிக்கப் பட்டு ஆசையின் உந்துதலால் ஏறி விட்டேன்.\nகால இயந்திரம் என்னை நெல்லையில் கட்ட பொம்மன் நகரில் எட்டு திக்கும் போகும் சாலைகளின் நடுவில் கொண்டு வந்து விட்டது . கொஞ்ச நேரத்தில் கண்களில் ஒரு பரிதவிப்பு மேலிட்டது. காரணம் வட்டம் வட்டமாக போட்டு இருக்கிற சாலையில ஒரு திசையில பார்க்கும் போது பின் பக்கமாக வந்து ப்ப்பாஆ னு சங்கு ஊதுகிறான். அதற்கு வழி விட்டு ஒதுங்கும் முன் மூணாவது திசையில இருந்து சத்தமே இல்லாமல் ஒரு பெரிய ரதம் மஞ்சள் நிறத்தில் மணல் சுமந்து வந்து பக்கத்தில் நிற்கிறது. . இது சரிப்படாது, மெல்ல ஓரமாக நடக்க ஆரம்பித்தேன்.\nஒரு பெரிய பழச் சோலை. ஆனால் பழங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசையாக அடுக்கப் பட்டு இருந்தன. வண்ண வண்ணமாக நீர் குடுவைகளில் அடைக்கப் பட்டு தூக்கில் தொங்குவது போல் தொங்க விடப் பட்டிருந்தன. உடனே என் அடிவயிறை பசி கிள்ள நேராக சென்ற நான் பழங்களில் ஒன்றை எடுத்து கடித்த படி ஒரு நீர் குடுவையை உருவினேன். அடுக்கி வைக்கப் பட்ட பழங்கள் சரியத் தொடங்கின.\nஅதன் அருகே நின்றிருந்த மனிதன் \"என்ன வேணும் சொல்லுங்க இப்படி நீங்களா எடுக்க கூடாது. வேற என்ன வேணும்\" எனக் கேட்டான். ரொம்ப நல்ல மனிதனாக இருக்கிறானே என்று எண்ணிய படி \" ஆறு செந்நிற பழங்களும் , இரு குடுவை வண்ண நீரும் கொடுங்கள்\" என்றேன். மேலும் கீழும் பார்த்தபடி நான் கேட்டதை எடுத்துக் கொடுத்தான். ஒரு பழத்தை கடித்தபடி நடக்க ஆரம்பித்தேன்.\nஓடி வந்து என் தோளருகே அழுத்திப் பிடித்தவன் \" ஏஏய் நீ வந்ததில் இருந்தே சரி இல்லை. பழமும் கூல் ட்ரிங்க்ஸ் ம் வாங்கிட்டு பணம் கொடுக்காம போறே நீ வந்ததில் இருந்தே சரி இல்லை. பழமும் கூல் ட்ரிங்க்ஸ் ம் வாங்கிட்டு பணம் கொடுக்காம போறே\n\"அப்பறம், ஓசிக்கு கொடுக்கவா அடுக்கி வச்சிக்கிட்டு காத்துக்கிட்டு இருக்கோம்.\"\n\"என்னிடம் பணம் இல்லை. இந்தக் கணையாழியை வேண்டுமானால் வைத்துக் கொள்\"\nஎன்றதும் என்ன நினைத்தானோ கணையாழியை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தவன் இன்னும் ஆறு பழங்களும் வண்ண நீரும் ஒரு பையில் போட்டுக் கொடுத்தான்.\nகண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் இருந்த கட்டடங்களைப் பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தேன். வேகமாக என்னைக் கடந்த தேரை ஒத்த ஒன்று புகை மேக மண்டலத்தை உருவாக்கி மறைந்தது. சிறிது நேரம் என்னை சுற்றி இருப்பவர் ஒருவரும் தெரியவில்லை. புகை நுரையீரலை நிறைக்க இருமத் தொடங்கினேன். அந்த ஊர்தியின் வெளியே ஒரு ஐம்பது பேர் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஅதை அதிசயித்து பார்த்த படியே வந்தேன். அங்கே ஒரு முள் மரம் பூத்திருந்தது. அடடா முள் மரத்தில் பூவா ஆச்சர்யமாக அருகில் போனேன். முள் மரம் முழுவதும் காகித மலர்கள். வாசமில்லா மலர்கள். நான் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு சிறுவன் கண்ணாடி பையில் இருந்து எதையோ எடுத்து வாயில் போட்டு பையை வீசினான். அது எஞ்சி இருந்த ஒரு முள் மரக் கிளையில் போய் அழகாக இடம் பிடித்தது. ஓஹோ முள் மரம் பூத்ததன் ரகசியம் இது தானா\nநடந்து வந்து கொண்டு இருக்கும் போதே நடுத் தெருவில் ஒருவனைப் போட்டு ஒன்பது பேர் அடித்து நொறுக்கிக் கொண்டு இருந்தார்கள். அவன் ஓலமிட்டு அழுது கொண்டு இருந்தான். அவர்கள் இரங்குவதாயில்லை. உரலில் உலக்கையை போடுவது போல் ஒருவன் மாற்றி ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான். எனக்குள் ஒரு பய உணர்வு பரவியது. கடந்து செல்லும் ஆட்களில் ஒருவரும் தட்டிக் கேட்பதாயில்லை.நான் அவர்கள் அருகே சென்று \"பாவமில்லையா ஒருவனை ஒன்பது பேர் அடிக்கிறீர்களே ஒருவனை ஒன்பது பேர் அடிக்கிறீர்களே இன்று அவனை அனுப்பி நாளை அவன் நண்பர்களை அழைத்து வரச் சொல்லி மோதிப் பாருங்கள் \" என்றேன். அவர்களில் ஒருவன் நாக்கைத் துருத்திய படி கையில் உள்ள தடியை உயர்த்தி என்னைப் பார்த்து \"ஓடிப் போய்டு\" என்றான். அலறி அடித்து ஓடிய நான் இன்னும் இரண்டு மணி நேரம் மீதம் இருந்தும் ஓடிப் போய் கால இயந்திரத்தில் ஏறினேன். உயிர் பயத்தில் உறைந்து போய் எங்கள் அரசரின் மாளிகை வாசலில் போய் பொத்தென விழுந்தேன்.\n (இது நான் ஒரு வழியாக எழுதி முடித்து கூறியது)\n'கனவே கலையாதே ' என்னும் கவித்துவமான தலைப்பில் தொடர் பதிவுக்கு நான் அழைக்கும் மூவர்,\nமரண நிமிடங்கள் - நிறைவு பாகம்\n யாருட்ட இருக்கு அவ்வளவு பணம் .\"\n\"டேய், இப்படி சொன்னா எப்படிடா அவர் நல்லா இருக்கிறப்ப உழைச்சதை எல்லாம் நமக்கு தானடா செலவு செஞ்சாரு தனக்குன்னு ஒத்த பைசா எடுத்து வைக்காத மனுஷன்டா அவரு. \"\nதன் மனைவி மகனிடம் கெஞ்சிக் கொண்டு இருப்பதை வருத்தத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார் ராஜன்.\n\"சரி எப்படியாவது ஐம்பதாயிரம் புரட்டறேன் மீதிய தம்பிகிட்ட வாங்கிக்கோ.\" தந்தையைக் காப்பாற்ற பங்கு போட்டுக் கொண்டு இருந்தான். எப்படியோ உருண்டு புரண்டு பணத்தைப் புரட்டி ராஜனைக் காப்பாற்றி விட்டாள் அவர் மனைவி.\nகைத்தாங்கலாக காரில் இருந்து இறக்கி வீட்டிற்குள் கூட்டி வந்தாள். வீட்டிற்கு வந்த பின் தான், தான் செய்த முட்டாள்தனம் முழுவதும் புரிந்தது ராஜனுக்கு . பென்ஷன் தொகை அவரது மருந்துக்கே முழுவதும் செலவாக வீட்டுச் செலவுக்கு தாயை கெஞ்ச வைத்துக் கொண்டு இருந்தார்கள் மகன்கள் இருவரும்.\n\"டேய் பெரியவனே, மஞ்ச மசாலா வாங்க கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு போடா\"\n\" போம்மா , உன்னோட பெரிய ரோதனையா போச்சு, எப்ப பாரு கொடு கொடு னு உசிரை வாங்கறே. \" தன் இரத்தத்தை பாலாக்கி தந்த தாயை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி இருந்தான்.\n\" அவர் வாங்கின தெல்லாம் உங்களுக்கு தானடா கொடுத்தாரு.\"\n\"ஆமா கொடுத்தாரு . கொடுத்ததை போல பத்து மடங்கு புடிங்கிடுவாரு போலிருக்கு. \"\nமகனும் நல்லவன் தான். அப்பா திடீர்னு அஞ்சு லட்சம் கொடுத்ததும் மேல பாதிக்கு கடனை போட்டு ஒரு வீட்டை வாங்கி விட்டான். அவன் நிதி நிலைமை அவனை கல் நெஞ்சக் காரனாய் ஆக்கி விட்டது\nராஜனுக்கு எப்போதுமே வெளிப்படையாய் பேசி பழக்க மில்லை. தன் மனைவி ஒவ்வொரு முறை மகன்களிடம் உதவி கேட்பதும் அவர்கள் உதறிப் போவதையும் கவனித்துக் கொண்டிருந்தார். \"உடம்பு கொஞ்சம் நல்லா ஆனதும் மறுபடியும் வேலைக்கு போய் விட வேண்டியதுதான். இந்த பயல்கள்ட வாங்கின பணத்தை எல்லாம் தூக்கி வீசிடணும்.\" என்று மனதுக்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தார். என்ன வேலை பார்ப்பது என்ற சிந்தனையிலே நேரத்தை போக்கி கொண்டு இருந்தார்.\n\" ஐயா சுகமா இருக்கீங்களா\n\" வாய்யா சிதம்பரம், வியாபாரம் நல்லா போகுதா\n\"ஏதோ போகுது. இப்போ தான் எந்தக் கடை தொறந்தாலும் உடனே தெருவுக்கு நாலு கடை தொறந்து போடுதான். \"\n\"உனக்கு கடைக்கு உதவிக்கு ஆள் தேவைப்படுதாய்யா \"\n\"யாரும் சின்ன பையங்க வேலை தேடிட்டு இருக்காங்களா\n\"இல்லப்பா, எனக்கு தான் நேரமே போக மாட்டேங்குது. உன் கடைக்கு வந்தா வேலையும் பார்த்தாப்பல ஆச்சு நாலு ஆளைப் பார்த்தாப்ல இருக்கும்.\"\n\"போங்கையா உங்களுக்கு எப்பவும் விளையாட்டு தான்.உடம்ப நல்லா பார்த்துக்கோங்க ஐயா\"\nவருபவர் போவோரிடம் எல்லாம் ராஜன் தனக்கு வேலை வாய்ப்பு தேடி அழைப்பு விடுவதும் அவர்கள் அதை விளையாட்டாய் நினைத்து சிரித்து பேசி போவதும் வழக்கம் ஆகியது. திடீரென்று அவருக்கு தனது நண்பன் பாரதி, ஹோட்டல் வைத்து இருப்பது நினைவு வந்தது,\n\"வீட்டுக்குளேயே இருக்கிறது ரொம்ப அசதியா இருக்கு கொஞ்சம் காலாற நடந்துட்டு வரேன்\" என்று சொன்னபடி மனைவியின் சொல்லுக்கு காத்திருக்காமல் வேகமாக நடந்தார்.\nஓட்டமும் நடையுமாக பெண்கள் வேலைக்கு போய் கொண்டு இருந்தார்கள். குழந்தைகளை மூட்டைகளாய் உள்ளே அடைத்து, மேலே அவர்களின் பைகளை அடைத்து ஆட்டோக்கள் விரைந்து கொண்டு இருந்தன. தன்னைத் தவிர எல்லோரும் அவசர கதியில் இருப்பது போல் இருந்தது.\nகுரல் கேட்டதும் தான் ஹோட்டல் பாரதியை தாண்டி தான் சென்று விட்டது புரிந்தது.\n\"உன்னை பார்க்க தானப்பா வந்தேன்.\"\n\"வா உள்ளே வா. \"\n\"தம்பி மாஸ்டர்ட ஸ்ட்ராங் ஆ ஒரு காபி போடா சொல்லு\"\n\"உட்காரு ராஜன், உடம்பு இப்போ எப்படி இருக்கு, பேத்தி என்ன சொல்றா\"\n\"எல்லோரும் நல்லா இருக்கோம். எனக்கு உன் ஹோட்டல்ல ஒரு வேலை வேணும்ப்பா\" நேரிடையாக விஷயத்துக்கு வந்தார். அவர் நடந்த விஷயங்களை சொல்ல சொல்ல \"இங்க வாப்பா இது உன் ஹோட்ட��் \" என்று சொல்லி எழுந்து கல்லாவில் அவரை உட்கார வைத்தார். அன்றிலிருந்து தொடங்கியது அவரது பணி. ஆனால் அவருக்கு தான் அந்த வேலை சரிப்பட்டு வரவில்லை. ஒவ்வொரு நாளும் பில் தொகைக்கும் கல்லா தொகைக்கும் கணவன் மனைவி சண்டை தான். ஒரு நாளும் ரெண்டும் ஒத்து இருந்ததே இல்லை. முதல் நாள் பாரதி வியாபார நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். அடுத்தடுத்த நாட்களில் அவர் குரலில் சலிப்பு தெரிந்ததால் துண்டு விழும் தொகையை ராஜன் தன் பையில் இருந்து போடத் தொடங்கினார். ஒரு மாதம் முடியும் போது இது தனக்கு சரிப்பட்டு வராது எனத் தோன்ற நண்பனிடம் சொல்லி நின்று கொண்டார்.\nரொம்ப யோசனைக்கு பிறகு பழகிய வேலை தான் தனக்கு சரிப்படும் என்று முடிவுக்கு வந்தார். தான் வேலை செய்த அலுவலகத்திலேயே மாதம் மூவாயிரம் சம்பளத்துக்கு நிறைய பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறார். அதிகாரி எவ்வளவோ சொல்லியும் தான் வேலையை விட்டு நின்றது நெருஞ்சி முள்ளாய் உறுத்தியது. வேற வழி இல்லை அவரைப் பார்க்க சென்றார்.\n\"வாங்க ராஜன் நல்லா இருக்கீங்களா\n\"நல்லா இருக்கேன் சார், சார் இடம் ஒரு உதவி கேட்டு வந்தேன். எவ்வளவோ நடந்து போச்சு சார், நான் வேலையை விட்டு இருக்க கூடாது. எல்லாம் கிடைச்சிடுச்சுனு ஒரு நிறைவு கிடைச்சது. இப்போ புரட்டி போட்ட மாதிரி இருக்குது சார், எதுவுமே இல்லாத மாதிரி ஆகிடுச்சு. \" கண்களில் நீர் துளிர்க்க உடம்பு லேசாக குலுங்கியது.\n\"ரிலாக்ஸ் ராஜன் , ரிலாக்ஸ். நாங்கல்லாம் இருக்கோமே எதுக்கு கவலைபடுறீங்க. எல்லாம் சரி செய்திடலாம். இப்போ நான் என்ன உதவி செய்யணும் சொல்லுங்க. \"\n\"எனக்கு நம்ம ஆபீஸ்ல வேலை வேணும் சார், வேற எந்த வேலையும் எனக்கு செய்ய தெரியல. இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் எப்படியும் வேலை செய்யணும் சார், என் பையன்கள் எனக்கு செலவு செய்ததை திருப்பிக் கொடுக்கவாவது நான் வேலை செய்யணும் . தயவு செய்து எனக்கு எப்படியாவது வேலை போட்டுத் தாருங்கள்\"\nஅதிகாரியின் கைகளை பிடித்துக் கொண்டு குலுங்கி அழுதார். விருது பெற்றபோது இருந்த கம்பீரம் கலைந்து இறைஞ்சும் போது செத்து விடலாமா என்று இருந்தது. இந்த மரண நிமிடங்கள் யாருக்கு வரக் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.\n\"கண்ணத் தொடச்சுக்கோங்க ராஜன், இன்னைக்கே வேலையில சேருங்க. உங்க அனுபவம் எங்கள் சொத்து. அது திரும்ப கிடைச்சதில எனக்கு ரொம்ப சந்தோஷம்.\nஎல்லாம் சரி ஆயிடும். சந்தோஷமா போய் வேலையை ஆரம்பியுங்க. \" என்றார்.\nதன் வீட்டில் கிடைக்காத பாதுகாப்பு இங்கே கிடைத்ததாக உணர்ந்தார்.\nஇனிமேலாவது மனைவி சொல்லும் போது கொஞ்சம் யோசிப்போம்னு நினைத்தபடியே வேலையில் மூழ்கி உற்சாகமானார். \"எல்லாம் சரி ஆயிடும்\" எவ்வளவு பாதுகாப்பு தரும் சொற்கள் என்று எண்ணிய படியே மாலையில் வீடு நோக்கி மெல்ல நடைபோடத் தொடங்கினார்.\nமரண நிமிடங்கள் - பாகம் இரண்டு\nவிருது பெரும் நாளும் வந்தது. உடம்பெல்லாம் ராஜனுக்கு பரபரப்பாக இருந்தது. தான் செய்யும் பணி கௌரவிக்க படும்போது வரும் சுகமே தனி தான். அந்தக் காலத்தில் அரசனைப் புகழ்ந்து பாடிய கவிகள் பரிசு பெரும் போது இப்படித் தான் உணர்ந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார்.\nவிழா முடிந்து வந்த பிறகு வீட்டில் நல்ல விருந்து ஒன்று ஏற்பாடு செய்து நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்து. மகிழ்வித்தார். தான் முடிவு செய்தது போலவே அடுத்த ஒரு மாதத்தில் பணி ஓய்வுக்கு எழுதிக் கொடுத்தார். மகன்களுக்கு அதில் சந்தோஷம் தான் என்றாலும் அவர் மனைவி ஒரு வித கலக்கத்துடனே இருந்தாள்.\nபணி ஓய்வும் வந்தது. அலுவலகத்தில் பணி ஓய்வு பெரும் விழாவில் அனைவரும் புகழ புகழ ஒரு வித போதை தலைக்கேறியது போல் இருந்தது. அவர் நினைத்துக் கொண்டார் நல்ல வேளை விருப்ப ஓய்வு எடுத்து விட்டோம். திடீர்னு நமக்கு ஏதாவது ஆகி விட்டால் இந்த புகழ் வார்த்தைகள் எல்லாம் கேட்காமலே போய் இருப்போம்.\nஅலுவலகம் தந்த பணம் அனைத்தையும் இரண்டு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்தார். மனைவி \" எல்லாத்தையும் எடுத்துக் கொடுக்காதீங்க. நமக்குன்னு கொஞ்சமாவது இருக்கட்டும்.\" என்று சொல்ல சொல்ல \" ஏன் இப்படி சுயநல வியாதி ஆகிப் போனே எனக்கு கிடைக்கிற பென்ஷன் நமக்கு போதாதா எனக்கு கிடைக்கிற பென்ஷன் நமக்கு போதாதா \" என்று அவள் வாயை அடைத்தார். சொல்லப் போனால் தன்னை \"பாரி வள்ளலாகவே \" நினைத்துக் கொண்டார். எல்லாக் கொண்டாட்டங்களும் முடிந்து அவரவர் வேலையை அவரவர் பார்க்கத் தொடங்கி விட்டனர்.\nஆரம்பத்தில் சுகமாகத் தோன்றிய ஓய்வு நாளாக நாளாக பாரமாக ஆனது. முக்கி முக்கி வேலை பார்த்தாலும் பதினோரு மணிக்கு மேல் வேலை எதுவும் இல்லை. மனைவிக்கு உதவி செய்வது கௌரவக் குறைச்சல் என்று இருந���த மன நிலை மாறி மனைவிக்கு ஒத்தாசை செய்ய போனார். \" ரெண்டு பேர் இருக்கிற வீட்டில எனக்கே வேலை இல்லை. இதுல ஒத்தாசைக்கு வரீங்களாக்கும். ரெண்டு சின்ன பிள்ளைகளோட திண்டாடினேனே அந்தக் காலத்தில, அப்ப உதவிக்கு வந்து இருக்கலாம். \" தான் பணியில் இருக்கும் போது அதிக மரியாதை கொடுத்த மனைவி இப்பொழுது மதிக்காதது போல் தோன்றுகிறது.\nஇந்த எண்ணத்தால் இப்பொழுது எல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வரத் தொடங்கி விட்டது. இந்த சண்டையை தவிர்க்க காலை பதினோரு மணிக்கு எல்லாம் ஓரமாக துண்டை உதறிப் போட்டு தூங்கத் தொடங்கினார். பகலில் உறங்கியதால் இரவில் உறக்கம் வராமல் தவிக்கத் தொடங்கினார்.\nவேலைக்கு போய் வந்த போது அலுப்பில் எப்போது படுத்தோம் எப்போது தூங்கினோம் என்பதே தெரியாது. அதெல்லாம் அந்தக் காலம். நடு ராத்திரியில தூக்கம் வராமல் முழித்து இருப்பது கொடுமையாக இருக்கிறது. தவிர்க்க முடியாமல் மனைவியை நெருங்கி அணைத்து காதில் முணுமுணுத்தார், \" ஏய் மனுஷன் தூக்கம் வராம தவிச்சுக்கிட்டு இருக்கேன். நிம்மதியா தூங்கிட்டு இருக்கே. \"\n\"ச்சும்மா இருங்க, காலம் போன காலத்தில இது வேற \nவேலை இல்லாமல் இருப்பதால் நேரத்திற்கு சாப்பிட முடியவில்லை. ஒழுங்கற்ற உணவு,\nஒழுங்கற்ற உறக்கம், ஒளிந்திருந்த வியாதிகள் ஒவ்வொன்றாக வெளி வரத் தொடங்கின. தனது முடியாமையை சொல்லிய போதெல்லாம் மனைவி முணுமுணுக்கத் தொடங்கியதால், சொல்லாமலே மருத்துவரிடம் போகத் தொடங்கினார், நாளாக நாளாக போகாமலே, வேதனையை சகித்துக் கொள்ள தொடங்கினார். அவரது உடல் மெல்ல மெல்ல மெலியத் தொடங்கியது. கொஞ்ச நாளில் எடை இழப்பு அதிகமானது. முதுகில் வலி அதிகரித்தது. ஒரு நாள் வலி தாங்க முடியாமல் மருத்துவ மனைக்கு சென்றவரை உடனடியாக அட்மிட் செய்து வீட்டுக்கு தெரிவித்தார்கள்.\nஎன்னவோ ஏதோ என்று பதறி வந்தவர்களிடம் \"உடனடியாக அறுவை சிகிச்சை செய்யணும் சுமாரா ஒரு லட்ச ரூபா தேவைப்படும், பணம் தயாரானதும் சொல்லுங்க, அவர் ரொம்ப ஆபத்தில இருக்கார். \" டாக்டர் சொல்லிக் கொடுத்த வசனத்தை சொல்லி முடித்தது போல் அடுத்த நோயாளியை பார்க்க போனார்.\n உங்களுக்கு என்ன ஆச்சு. ஏன் என்னிட்ட கூட சொல்லாம தனியா வந்தீங்க.\" அலறத் தொடங்கினாள் ராஜனின் மனைவி.\nசெல் போனில் மகனை அழைத்தாள் \" டே, ரகு உங்க அப்பாக்கு உடம்புக்��ு முடியலடா, தனியா வந்து ஆசுபத்திரியில படுத்து இருக்கார், உடனடியா ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்றார். ஒரு லட்ச ரூபா வேணுமாம்டா\" சொல்லும் போதே ஓவென்று அழத் தொடங்கினாள்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\nமரண நிமிடங்கள் - நிறைவு பாகம்\nமரண நிமிடங்கள் - பாகம் இரண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2012/05/01/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-07-19T11:35:00Z", "digest": "sha1:RWLXJVQRQI2EREDTNPPRTJTIWB477MQ2", "length": 18856, "nlines": 125, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "ஆரவாரமில்லாத ஒரு அற்புத சேர்த்தி உற்சவம் – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nஆரவாரமில்லாத ஒரு அற்புத சேர்த்தி உற்சவம்\nதிருவரங்கத்தில் இன்று (30.04.2012) நடைபெற்ற ஆரவாரமில்லாத ஒரு அற்புத சேர்த்தி உற்சவம்\nஅரங்கனோடு அற்புதமாக கலந்தவர்கள் தாயார் ரங்கநாயகி, காவிரி, கமலவல்லி , சேரகுலவல்லி, ஆண்டாள், துலுக்கநாச்சியார் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர்.\nஇதில் அரங்கன் திருவரங்கத்திற்கு வரும் முன்னமேயே ரங்கநாயகித் தாயார் எழுந்தருளி அரங்கன் அமர்ந்தபின் வெளிப்பட்டவள். காவிரியும் அரங்கன் வருவதற்கு முன்னமேயே அவனுக்கு தன்னையே ஒரு மாலைப்போல் இட்டு ஒரு மணல்திட்டை ஏற்படுத்தியவள். இவர்களைத் தவிர ஏனையோர் அரங்கன் எழுந்தருளியபிறகு கலந்தவர்கள்.\nஇராமன் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார் . இவர் இராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான ‘புனர்வசு’ அன்று அவதரித்தவர். இவரது இராமபக்தி அளவற்றது. இராமயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்திருக்கின்றார். சில கட்டங்களில் கொதித்தெழுந்து தன் சேனைகளுடன் இராவணனுடன் யுத்தம் செய்ய, காலக்ஷேபத்தில் மெய்மறந்து, புறப்பட்டிருக்கின்றார். இத்தனைக்கும் இவருக்கு ‘திடவ்ரதன்’ என்று பெயர்.. மாமன்னன்.. சோழ, பாண்டிய அரசுகள் மீது ��டையெடுத்து அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கின்றார்.\n‘இராம” என்னும் நாமம் இவரை மெய்மறக்க செய்திருக்கின்றது. அனைத்தையும் மறந்து, அவன் ஒருவனை மட்டுமே சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள். இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள். இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்றே அழைக்கப்படுகின்றது. இராமன் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்க்கு இராமன் ஆராதித்த அரங்கன் மீது எவ்வளவு ஆசையிருக்கும் மற்ற ஆழ்வார்க்கு இல்லாத ‘பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப்பெருமான் மற்ற ஆழ்வார்க்கு இல்லாத ‘பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப்பெருமான் இவர் பாட ஆரம்பித்த முதல் பாடலே அரங்கனை முன்நிறுத்திதான்.\n”இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி\nஅணிவிளங்கும் உயர்வெள்ளையணையை மேவி –\nதிருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி\nதிரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் –\nகருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்\nகண்ணினைகள் என்று கொலோகளிக்கும் நாளே\n(மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ) என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார் அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்யம். இந்த தாபமிருந்தால் போதும் – அவன் செயல்பட தொடங்கிடுவான்.\nராஜா குலசேகரருக்கு அரங்கனோடும் அவன்தம் அடியாரோடும் என்று பித்தாகி பிணைந்து நிற்போம் என்று மிக ஆசை. வைணவ குழாமோடு கூத்தாட ஆசை. அரச பொறுப்பு குறுக்கே நின்றது. அமைச்சர்களின் ஒரு சூழ்ச்சி, குலசேகர மன்னனின் அரசப் பற்றை அறுத்தது. அரங்கன் பற்று மிகுந்தது.\nஇதில் அமைச்சரின் சூழ்ச்சியெல்லாம் அரங்கனின் சித்தமே. இவர் அரங்கனுக்காக ஏங்கினார���. . அவன் அதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தி அவராக எல்லாம் துறக்கும்படியாக செய்து அவனருகே இழுத்துக்கொண்டார். இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அரங்கனுக்கு நிகர் அரங்கனே..\nஆழ்வாராதிகள் தொடங்கி பூர்வாச்சாரியர்கள் ஏன் இன்று வரை யாரை எப்படியெப்படி இழுத்துக் கொள்ள வேண்டுமோ அவர்களை அவர்களாகவே வரும்படி செய்வான் இந்த மாயவன் யாராவது ”தான்தான்” ; என்று அகங்காரம் கொண்டால் அவர்களாகவே அவர்கள் கண்களைக் குத்திக்கொள்ளும்படியும் செய்வான் யாராவது ”தான்தான்” ; என்று அகங்காரம் கொண்டால் அவர்களாகவே அவர்கள் கண்களைக் குத்திக்கொள்ளும்படியும் செய்வான்\nஅரங்கனை அனுதினமும் தரிசித்த குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை. யாரை எண்ணி எண்ணி அவரும் அவரது மகளான குலசேகரவல்லியும் ஏங்கினார்களோ அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறுப்பெற்றார். அரங்கன் மனமுவந்து ஏற்ற அடியாள் இந்த குலசேகரவல்லி. இந்த அரங்கனின் அடியாள் ஆண்டாளுக்கு முன்னோடி. இந்த அரங்கனின் அடியாள் ஆண்டாளுக்கு முன்னோடி. ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தான் அரங்கன்.. ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தான் அரங்கன். இன்றும் கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி இன்றும் கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி அரையர்கள் பெருமாள் திருமொழி ஸேவிக்க ஜனங்கள் மத்தியில் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று ஏகஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள் இருவரும் அரையர்கள் பெருமாள் திருமொழி ஸேவிக்க ஜனங்கள் மத்தியில் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று ஏகஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள் இருவரும் அதிகம் ஆரவாரமில்லாத இந்த அற்புத சேர்த்தி உற்சவம் அர்ச்சுனன் மண்டபத்தில் இன்று 30.04.2012 நடைபெற்றது. பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் இந்த சேரகுலவல்லிக்கு பொன்னாலானத் திருமேனியே செய்து வைத்தான். இந்த விக்ரஹம் மிலேச்சர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் கோவிலார்கள் பஞ்சலோகத்தில் செய்துள்ளார்கள். குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே அதிகம் ஆரவாரமில்லாத இந்த அற்புத சேர்த்தி உற்சவம் அர்ச்சுனன் மண்டபத்தில் இன்று 30.04.2012 நடைபெற்றது. பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் இந்த சேரகுலவல்லிக்கு பொன்னாலானத் திருமேனியே செய்து வைத்தான். இந்த விக்ரஹம் மிலேச்சர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் கோவிலார்கள் பஞ்சலோகத்தில் செய்துள்ளார்கள். குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே. இவரால் இயற்றப்பட்டதுதான் ‘முகுந்த மாலை” என்னும் அற்புத ஸமஸ்கிருத துதி. இவரால் இயற்றப்பட்டதுதான் ‘முகுந்த மாலை” என்னும் அற்புத ஸமஸ்கிருத துதி\nபல்லாண்டு பாடும் பாகவதர்கள் கூட்டத்தில் பாடுவதையும், ஆடுவதையும், அவர்களோடு மன்னன் என்ற பற்று அறுத்து பாகவதன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றார் குலசேகரப் பெருமான்..\nPrevious Post உலகின் நம்பர் ஒன் ‘‘ஓலே”\nNext Post வீட்டு வைத்தியம் – பாகம் 2\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஏப் ஜூன் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nATM - இல் பணம் வரவில்லையா\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/sandhya-4.html", "date_download": "2018-07-19T11:39:51Z", "digest": "sha1:N2QDTGB6EYRBNWN3WR5JUNPAPRQPLPO2", "length": 10645, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவர்ச்சி சந்தியா! | Telugu producers lure Sandhya to go for glamour - Tamil Filmibeat", "raw_content": "\nகாதல் சந்தியாவை கவர்ச்சி சந்தியாவாக பார்க்க தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் ஆசைப்படுகிறார்கள்.இதற்காக தனி டப்பும் கொடுக்க தயாராக இருக்கிறார்களாம்.\nகாதல் மூலம் தமிழ் ரசிகர்களை வசீகரித்த சந்தியா, தெலுங்கிலும் தனி ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார்.காதல் படம் தெலுங்கில் டப் ஆனபோது தமிழைப் போலவே தெலுங்கிலும் செமையாக வசூலை அள்ளிக்குவித்தது.\nஇதனால் சந்தியாவைத் தேடி நிறைய தெலுங்குப் படவாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அந்த நேரத்தில்மலையாளத்தில் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் தெலுங்குப் பட வாய்ப்புகளை ஏற்கமுடியாத நிலை.\nஇப்போது மலையாளத்தில் அதிக படங்கள் இல்லாமல் இருக்கிறார் சந்தியா. தமிழிலும் அவர் நடித்து வரும்வல்லவன் ரொம்ப காலமாக தயாரிப்பில் உள்ளது. கூடல் நகர் படப்பிடிப்பும் தாமதமாகி வருகிறது.\nஇதனால் தெலுங்கில் நடிக்கலாம் என முடிவு செய்த சந்தியா முதல் கட்டமாக தெலுங்கு பேசக் கற்றுக் கொண்டார்.முன்பை விட இப்போது நன்றாகவே தெலுங்கு பேசுகிறாராம் சந்தியா.\nசந்தியா தெலுங்கில் நடிக்க ஆயத்தமாகி விட்டார் என்ற தகவல் கிடைத்ததுமே தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள்சந்தியாவுக்கு போன் போட ஆரம்பித்து விட்டனர். நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளதாம். ஆச்சரியம்என்னவென்றால் அதில் முக்கால்வாசிப் படங்களில் கிளாமர் காட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள்கூறுவதுதான்.\nஇதைக் கேட்டதும் குழம்பிப் போயுள்ளாராம் சந்தியா. யோசிக்க வேண்டாம், கிளாமர் காட்டினால் அதற்குதனியாக டப்பு கொடுத்து விடுகிறோம் என தெலுங்குத் தயாரிப்பாளர்கள் ஆசை காட்டி வருகிறார்களாம்.\nஇதனால் என்ன செய்வது என்று சந்தியா குழம்பியுள்ளாராம். குடும்பக் குத்து விளக்காக இருப்போமா அல்லதுபெட்ரோமாக்ஸ் ஆகி விடலாமா என்பதுதான் சந்தியாவின் குழப்பத்திற்குக் காரணம்.\nஅடக்க ஒடுக்கமான கேரக்டரில் வந்து போய்க் கொண்டிருக்கும் சந்தியாவை கிளாமர் லேடியாக திரையில் பார்க்கரசிகர்களும் ரெடியாகத்தான் இருக்கிறார்கள்.\nசந்தியா என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ\nசம்பளத்தை தானம் செய்த சிவகார்த்திகேயன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சன��்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.lifenatural.life/2013/12/foxtail-millet-pongal-hot.html", "date_download": "2018-07-19T11:24:55Z", "digest": "sha1:L57JWA4TFFISMRFI5G2GP264DUK5NK7N", "length": 7049, "nlines": 155, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Foxtail Millet Pongal (Hot)", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/kulanthaipperu-thallipokum-penkalukkaaka-sila-thakavalkal", "date_download": "2018-07-19T11:34:38Z", "digest": "sha1:YILE5S6NE3VW2JRT4CDR7XAGSH3BBSSK", "length": 11926, "nlines": 218, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைப்பேறு தள்ளிப்போகும் பெண்களுக்காக சில தகவல்கள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைப்பேறு தள்ளிப்போகும் பெண்களுக்காக சில தகவல்கள்..\nகுழந்தைப்பேறு நெடு நாட்களாகத் தள்ளிப் போகும் நபரா நீங்கள்.. இதோ உங்களுக்காக சில தகவல்கள்..\nபெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். இன்று, பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டிதான் (Polycystic Ovary Syndrom) முதல் காரணம்; இதை தடுக்க ரத்த இன்சுலின் அளவைக் குறைக்க வேண்டும். மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர, வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது; கருமுட்டையானது கர்ப்பப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருப���தும் காரணமாயிருக்காது.\n‘பாலி சிஸ்டிக் ஓவரி’ என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம் உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic Foods) உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும்தான். இவை தவிர, பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவையல், கறுப்புத்தோல் உளுந்து சாதம் ஆகியவை ஹார்மோன்களைச் சீராக்கி, இந்த பிசிஓடி பிரச்னையைத் தீர்க்க உதவும். சுடு சாதத்தில், வெந்தயப் பொடி ஒரு டீஸ்பூன் அளவில் போட்டு, மதிய உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது.\nமாதவிடாய் வரும் சமயம், அதிக வயிற்று வலி உள்ள பெண்கள், சோற்றுக் கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதங்களுக்குச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிய வெங்காயத்தை 50 கிராம் அளவுக்காவது உணவில் சேர்ப்பது,(Polycystic Ovary Syndrom) பிரச்னையைப் போக்க உதவும்.\nகருத்தரிப்பதில் தைராய்டின் பங்கு கணிசமானது. சரியான அளவுக்கு தைராய்டு சுரப்பு இல்லையென்றாலும், கருத்தரிப்பு தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு,`அகர் அகர்’ எனப்படும் வெண்ணிறக் கடல் பாசி ஆகியவற்றைச் சேர்ப்பது, தைராய்டு பிரச்னையைச் சீராக்க உதவும். கடுகு, முட்டைக்கோஸை அதிக அளவில் எடுத்துக்கொள்வதும் தைராய்டு சீராக உதவும்.\nகுழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை. இந்தக் கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட, எண்ணெய்ச் சத்து அதிகம் இல்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nகுழந்தைப்பேறு நெடு நாட்களாகத் தள்ளிப் போகும் பெண்கள், கொத்துமல்லிக் கீரையை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்த���யை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xtamilnews.com/tag/free-dth/", "date_download": "2018-07-19T11:46:21Z", "digest": "sha1:RKS3WJO5DNX33M5YBJMXWOM5OFOPZURF", "length": 4950, "nlines": 63, "source_domain": "www.xtamilnews.com", "title": "Free DTH | XTamilNews", "raw_content": "\nஇந்திய டிடிஹச் சேவையும் அதன் வளர்ச்சியும் ஒரு சிறப்பு பார்வை\nஇந்தியாவில் டிடிஹச்-யில் முதலில் கால் பதித்தது டிஷ் டிவி இந்த டிடிஹச் சேவை வருகைக்கு பிறகு இந்தியாவில் மொத்த டிடிஹச்களின்...\nமுற்றிலும் இலவசமாக 70+ தொலைக்காட்சிகளை காணலாம்\nTamil FTA Channels தமிழ் கட்டணம் இல்லா FTA தொலைக்காட்சி சேனல்களின் விவரங்கள் தமிழ் நண்பர்கள் C & KU...\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nசோனாகச்சி ரெட் லைட் ஏரியா லைவ் ரிப்போர்ட் - வீடியோ\nவீடியோ வெளியிட்ட தெலுங்கு பட நடிகை\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் ‘ஹாட் கிளிக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ammanpaattu.blogspot.com/2007/04/9.html", "date_download": "2018-07-19T11:44:55Z", "digest": "sha1:AUSYP52CMVZTVMPR26VZIM2GFGKZQP73", "length": 12352, "nlines": 301, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: \"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" [9]", "raw_content": "\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" [9]\nஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் [9]\nமுன்னையோர் ஜென்மாந்திரம் என்னென்ன பாவங்கள்\nமெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி\nஏழை நான் செய்த தாய் பிழைத்து அருள் தந்து\nசின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே\nசிந்தனைகள் என் மீது வைத்து நீ நல்பாக்கியம் அருள்\nஅன்ன வாஹனமேறி ஆனந்தமாக அடியேன்\nஎன் முன் வந்து நிற்பாய்\nஅழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்\nஅம்மை காமாக்ஷி உமையே [9]\n[சண்டை போட்டுக் களைத்துவிட்டான் பக்தன் வெட்கமாக இருக்கிறது தெருவில் புரண்டு சண்டை போட்டதற்கு வெட்கமாக இருக்கிறது தெருவில் புரண்டு சண்டை போட்டதற்கு 'எல்லாம் என் பாவம்தான்' எனத் தாயைப் பார்த்துக் கேட்கிறான் 'சரி, சரி நடந்தவை நடந்தவையாகாவே இருக்கட்டும்1 நீ உன் அன்ன வாஹனத்தில் ஏறி சீக்கிரமாக வா' எனக் கட்டளை வேறு' எனக் கட்டளை வேறு தாயிடம் அல்லாமல் வேறு எங்கு இவ்வளவு உரிமை எடுத்துக் கொள்ள முடியும் தாயிடம் அல்லாமல் வேறு எங்கு இவ்வளவு உரிமை எடுத்துக் கொள்ள முடியும்\nபாலும் நீரும் கலப்படமாய் இருந்தாலும் மொத்தமும் தள்ளி விடாது, நீரை மட்டும் தள்ளிப் பாலை மட்டும் கொள்ளும் அன்னம்.\nஅது போல், அடியேன் பாவங்களை மட்டும் தள்ளி, அன்பை மட்டும் கொள்பவள் அன்னை அல்லவா\nஅதான் போலும் சிம்ம வாகனம் சொல்லாது, அன்ன வாகனம் ஏறி வரச் சொல்கிறார். அருமையான பாடல் SK ஐயா\nஎவ்வளவு திட்டி இருக்கிறார் இவர் அன்னையை\nஇதற்கப்புறமும் சிம்ம வாஹனத்தில் வரச் சொல்லுமளவிற்கு அவர் என்ன பைத்தியமா\nஅன்னையவள் விட்டாலும், சிம்மம் விடுமா\nஅதனால்தான் அன்னத்தில் வரச் சொல்லுகிறார்.\nஅப்படியே, கத்திக் கத்தி பசி[அன்னம்] எடுத்து விட்டது என்பதை நினைவும்படுத்தி\nஉங்களது சிறப்பு விளக்கங்கள் மிகவும் சுவை, ரவி\nஎன் வேண்டுகோளுக்கு தாங்கள் செவி சாய்த்ததிற்கு நன்றி். இனி மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் நலம��க இருக்கும். என் இணையத்தின் விலாசம் anbuthozhi.blog@gmail.com.\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\n ஜகம் நீ, அகம் நீ\nஅலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" 12\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" 11\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" -- 10\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" [9]\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\"-- 8\nஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் [7]\nஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் - 6\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" 5\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" -- 4\nஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் - 3\n\"ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்\" 2\n\"காமாக்ஷி அம்மன் விருத்தம்\" -1\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ammanpaattu.blogspot.com/2007/06/11-241-271.html", "date_download": "2018-07-19T11:34:44Z", "digest": "sha1:CUASLMR3EVMQFKPDJ4O2LJVTL75MPQM3", "length": 13369, "nlines": 321, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: \"மாரியம்மன் தாலாட்டு\" -- 11 (241 -- 271]", "raw_content": "\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 11 (241 -- 271]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 11 (241 -- 271]\nஎத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்\nஆயி உமையவளே ஆஸ்தான மாரிமுத்தே\nபாரமுத்தை நீயிறக்கிப் பாலகனைக் காருமம்மா\nகாரடி பெற்றவளே காலுதலை நோகாமல்\nசொற்கேளாப் பிள்ளையென்று தூண்டில் கழுவில் வைத்தாய்\nகழுதனக்கு மோர்வார்க்க கட்டழகி யுண்டுபண்ணாய்\nநல்லதங்காளை யுண்டுபண்ணாய் நற்கழுவுக்கு மோர்வார்க்க\nஉரியில் தயிர்வார்க்க உத்தமியே யுண்டுபண்ணாய்\nஉன் -மருமகளைக் காத்தார்ப்போ லிவ்வடிமையைக் காருமம்மா\nஎவ்வளவு நேரமம்மா ஏறெடுத்துப் பாருமம்மா\nகடுகளவு நேரமம்மா கண்பார்க்க வேணுமம்மா [250]\nகடைக்கண்ணால் நீபார்த்தால் கடைத்தேறிப் போவேனம்மா\nபாரளந்தோன் தங்கையரே பாலகனைக் காருமம்மா\nபேரரசி மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா\nமகமாயி மாரிமுத்தே மைந்தர்களைக் காருமம்மா\nபெற்றவளே மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா\nஆணழகி மாரிமுத்தே அடிமைகளைக் காருமம்மா\nபூணாரம் கொண்டவளே பிள்ளைகளைக் காருமம்மா\nபாரமெடுக்கவோ அம்மா பாலனா லாகுமோதான்\nபூணாரந் தானெடுக்க பிள்ளையா லாகுமோதான்\nவருத்தப் படுத்தாதே மாதாவே கண்பாரும் [260]\nபாலன் படுந்துயரம் பாக்கியவதி பார்க்கிலையோ\nமைந்தன் படுந்துயரம் மாதாவே பார்க்கிலையோ\nகுழந்தை படுந்துயரம் கொம்பனையே பார்க்கிலையோ\nசிற்றடிகள் படுந்துயரம் தேவியரே பார்க்கிலையோ\nபூணார முத்திரையைப் பெற்றவளே தானிறக்கும்\nஆபரண முத்திரையை ஆத்தா ளிறக்குமம்மா\nஇறக்கிறக்குந் தாயாரே எங்களைக்காப் பாற்றுமம்மா\nஅடிமைதனைக் காப்பாற்றி யாணழகி நீயிறக்கும்\nகுப்பத்து மாரியரே கொலுவிலங் காரியரே\nகொலுவிலங் காரியரே கோர்த்தமுத்து நீயிறக்கும்\nகோர்த்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே [271]\n//எவ்வளவு நேரமம்மா ஏறெடுத்துப் பாருமம்மா\nகடுகளவு நேரமம்மா கண்பார்க்க வேணுமம்மா//\nஇதுக்கு மேலேயும் அவள் பாக்காம இருக்கத் தான் முடியுமோ\nமிக அழகான வரிகள் SK\n//உன் -மருமகளைக் காத்தார்ப்போ லிவ்வடிமையைக்//\nமாரியம்மன் தாலாட்டில் இது எனக்கு ஒரு மலைப்பாகவே இருக்கிறது ரவி.\nஇதில் குறிப்பிட்டிருக்கும் மருமகள் கூட, அப்படி ஏதோ ஊரில் வழங்கும் கதைதான் என நினைக்கிறேன்.\nஇவற்றையெல்லாம் ஆராய்ந்து, தொகுத்து, ஒரு தொடராக, \"மாரியம்மன் திருக்கதைகள்\" என எழுதவேண்டும் என ஒரு ஆசை பிறந்திருக்கிறது.\n[நீங்க கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என சமாளித்திருக்கிறேன்\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\n\"மாரியம்மன் தாலாட்டு\" 12 [272-300]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 11 (241 -- 271]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 10 [213-240]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 9 [181-210]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 8 [151-180]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 7 [121 - 150]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 6 [91-120]\nமாரியம்மன் தாலாட்டு\" -- 5 [61-90]\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 4\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 3\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 2\n\"மாரியம்மன் தாலாட்டு\" -- 1\nகற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://dhans.adadaa.com/2007/11/06/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-19T11:49:25Z", "digest": "sha1:OQPKLDSNX57BFWL3DOYQLCHWMTIYFZS5", "length": 5953, "nlines": 71, "source_domain": "dhans.adadaa.com", "title": "பொய்யில் உண்மை – உண்மையில் பொய் | கிறுக்கல்கள்", "raw_content": "\nபொய்யில் உண்மை – உண்மையில் பொய்\nசிறிதள���ும் உண்மை இல்லா விட்டால்.\nகடுகளவும் பொய் இருந்து விட்டால்.\nஇது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய்\n8 Responses to “பொய்யில் உண்மை – உண்மையில் பொய்”\nசிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.\nகடுகளவும் பொய் இருந்து விட்டா\nசிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://engineer2207.blogspot.com/2007/09/", "date_download": "2018-07-19T11:06:27Z", "digest": "sha1:6MBVVJL5IVY3BWBDUO6MF5CXUAUFNV2Q", "length": 13179, "nlines": 288, "source_domain": "engineer2207.blogspot.com", "title": "THe WoRLD oF .:: MyFriend ::.: September 2007", "raw_content": "\nநெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்.. நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன்.. தவித்தேன்..\n186. பாசமலர் கவிதை - தங்கச்சிக்கு வாழ்த்து\n185. G3 பிறந்தநாளுக்கு நானும் G3 பண்ணிட்டேன்\nகங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்\n186. பாசமலர் கவிதை - தங்கச்சிக்கு வாழ்த்து\nஉன்னை முந்த வேண்டுமே என்ற\nஉன் புன்னகையில் வாய் மொழி மறந்த\nஇந்த அண்ணனும் ஒரு புறம்\nஉன் பாதையில் இருக்கும் கற்கள் உன்னை காயப்படுத்த அல்ல உன்னை செதுக்கு வதற்காக. நாளைய சரித்திரத்தின் நாயகி நீ. இன்று போல் என்றும் புன்னையுடன் வாழ்க நீ பல்லாண்டு.\nபி.கு: பாசத்துக்குறிய அண்ணன் ஒருத்தர் \"அனு\"ப்பிய கவிதை இது. அந்த அண்ணனுக்கும் அனுமதியில் இதை இங்கே பதிக்கிறேன். :-)\n185. G3 பிறந்தநாளுக்கு நானும் G3 பண்ணிட்டேன்\nசொர்.. சொர்.. சொர்ணாக்காவோட பிறந்தநாள் இன்னைக்கு.. ஆனால் யாருமே அவங்க மாதிரி G3 பண்ணி போடாமல் சொந்தமா மூளையை கசக்கி பதிவு போடுறீங்கன்னு வருத்ததுல இருக்காங்க. வ்ருத்தப்பட வச்சிடுவோமா நாங்கள்\nஇது சொர்ணாக்கா பிறந்தநாளுக்கு அவங்களே வாங்கிக்கிட்டாங்க.. (நமக்கெல்லாம் இதுல பங்கு தரக்கூட மாட்டேன்னு சொலிட்டாங்க. கோப்ஸ் & K4K, வந்து கொஞ்சம் என்னன்னு கேளுங்கப்பா)\nஇவங்களோடு இவங்க சாப்பிடுற உணவை ஒப்பிட்டோம்ன்னா, இவங்களை விட அந்த உணவு பொருட்கள்தான் பெருசா தெரியும். இவங்க விஷயத்துல இது மட்டும் எப்படி சாத்தியம் ஆகுது ஒரே கேள்விகுறியா இருக்குப்பா.. :-P\nஇந்த சாக்லேட்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கிறது யாருன��னு கண்டுபிடிங்க பார்க்கலாம்\nஇது அவங்க பிறந்த நாளுக்கு நாமெல்லாம் வங்கி கொடுத்த கேக். அவங்க வயசை யாரு சரியா கண்டுபிடிக்கிறாங்கன்னு பார்ப்போமா\nஇவங்க தட்டையும் காலி செய்துட்டு மத்தவங்க தட்டுலேயும் பாயுறதுல இவங்க கெட்டிக்காரங்க. :-D\n பரணி அண்ணாவும் வேதா அக்காவும்தான் இவங்க. இன்னைக்கு சென்னை ப்ளாக்கர் மீட்டிங்ல G3 பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க போகுதாம். எனக்கு கிடைத்த சி.ஐ.டி. தகவலின்படி உங்க ரெண்டு பேருக்கும் தூக்க மருந்து கொடுத்துட்டு உங்க உணவையும் இவங்களே காலி பண்ண போறாங்கலாம். அண்ணா & அக்கா, ஜாக்கிரத்தை. :-D\nஈட்டிங் குவின் @ சொர்ணாக்கா @ G3...\nஇவங்க ஒரு தங்க கம்பி (யாருப்பா அங்கே ஒரு பவுனு எவ்வளவுன்னு கேட்கிறது\nஅடுத்த வருடம் மூவரா கொண்டாட வாழ்த்துக்கள்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா\nஜில்லென்று ஒரு மலேசியாவில் புதுசு\nபயமறியா பாவையர் சங்கத்தில் புதுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://haisathaq.blogspot.com/2009/", "date_download": "2018-07-19T11:15:21Z", "digest": "sha1:VDE42CVFOSQ2DOFXSFUJ2EH4VTC5C7FX", "length": 103295, "nlines": 230, "source_domain": "haisathaq.blogspot.com", "title": "தமிழ் வாசம்: 2009", "raw_content": "\nஉலகம் 2009 - பகுதி 3\nஇந்த ஆண்டு ஜப்பானில் ஒரு வரலாற்றுத் திருப்பம். அது நடந்தது ஆகஸ்ட் மாதம். அப்போது அங்கு நாடாளுமன்றத் தேர்தல். சுமார் ஐம்பது ஆண்டு காலச் சரித்திரம் அந்தத் தேர்தலில் மாற்றம் கண்டது. இதுநாள் வரை எதிர்த் தரப்பாக இருந்த ஜனநாயகக் கட்சிக்கு மகத்தான வெற்றி.\nஜப்பான் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 480. ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது 308 இடங்கள். அக்கட்சியின் வரலாற்றில் இது ஒரு மாபெரும் திருப்பு முனை. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஜனநாயகக் கட்சி.\nமுன்னைய பிரதமர் தாரோ அஸோவின் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு இம்முறை பேரிழப்பு. இந்த ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி 119 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. சென்ற தேர்தலில் அக்கட்சி 300 க்கும் அதிகமான இடங்களை வெற்றி கொண்டது.\nமிதவாத ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத பேரிடி. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முன்னையப் பிரதமர் தாரோ அஸோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஜப்பானின் புதிய பிரதமராக யூகியோ ஹட்டோயாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். நா���ாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 327 உறுப்பினர்கள் ஹட்டோயாமாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nபிலிப்பீன்சில் இந்த ஆண்டு கடுமையான சோதனை. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீசியது \"கெட்சானா\" சூறாவளி. விளைவு. கடுமையான மழை. அதைத் தொடர்ந்து வெள்ளம்.\nதலைநகர் மணிலாவின் எண்பது விழுக்காட்டு இடங்களில் வெள்ளக்காடு. ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஆறே மணி நேரத்தில் பெய்து கெடுத்தது.\nபிலிப்பீன்ஸ் தண்ணீரில் மிதந்தது. அங்குள்ள மக்கள் கண்ணீரில் மிதந்தனர்.\nமுந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். தலைநகர் மணிலா உள்ளிட்ட 24 மாநிலங்களில் பேரிடர் நிலையை அறிவித்தது பிலிப்பீன்ஸ் அரசாங்கம்.\nபிலிப்பீன்சைத் தொடர்ந்து இந்தோனேசியாவிலும் இந்த ஆண்டு சோதனைக் காலம். அவ்வப்போது அதிர்ந்தது பூமி. ரிக்டர் அளவில் 5 புள்ளிகளைத் தாண்டின அதிர்வுகள். சிலமுறை சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பின்னர் பேரழிவு எதுவும் இல்லாமல் அது மீட்டுக் கொள்ளப்பட்டது.\nஅவ்வப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தோனேசிய நில நடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூரிலும் உணரப்பட்டது.\n2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை எங்கே நடத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில்.\nஒலிம்பிக் போட்டிகளை நடத்தச் சாதகமான அம்சங்கள் கொண்ட நகரங்களாக அமெரிக்காவின் சிக்காக்கோ, ஸ்பெயினின் மாட்ரிட், ஜப்பானின் டோக்கியோ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஆகிய நான்கு நகரங்கள் பட்டியலில் முன் நின்றன. ஆனால், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்குக் கிடைத்தது அந்த அரிய வாய்ப்பு.\nதென்அமெரிக்க நாடு ஒன்றில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் முறை. ஒலிம்பிக் வாய்ப்பு பெற்றதையடுத்து பிரேசில் முழுவதும் ரசிகர்கள் ஆடிப்பாடி உற்சாகமாகக் கொண்டாடினர்.\n2007 ஆம் ஆண்டின் இறுதியில் உலகப் பொருளியலை ஆட்டங்காணச் செய்தது நிதிச் சுனாமி. அதுபோன்ற ஒரு நிகழ்வு இந்த ஆண்டு நவம்பரில். ஆனால் இம்முறை பாதிப்பட்டது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஒன்றான துபை.\nநவம்பர் இறுதி வாரத்தில் Dubai World நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்ப�� வெளியிட்டது. அது உலகச் சந்தைகளை ஆட்டங்காண வைத்தது. Dubai World முதலீட்டு நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் கடன் உள்ளது. அதனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கேட்டது. அதன் எதிராலியாக உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்.\nசில நாட்களுக்குப் பிறகு 26 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தது Dubai World. அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் ஒரு மீட்சி.\nDubai World ன் கடனுக்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்று அறிவித்தது துபை அரசாங்கம். அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் மீண்டும் ஒரு சறுக்கல். இறுதியில் அருகிலுள்ள அபூதாபி கைகொடுத்தது. துபை வேர்ல்டின் கடனைத் திருப்பிச் செலுத்த பத்து பில்லியன் டாலர் தருவதாக அறிவித்தது அபூதாபி.\nஇந்த ஆண்டின் அமைதிக்கான நொபேல் பரிசைப் பெற்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதும் பல்வேறு விமர்சனங்கள்.\nஒபாமா உலக மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முயன்று வருகிறார். அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க பாடுபடுகிறார். எனவே, அவருக்கு நொபேல் பரிசு என்று அறிவித்தது விருதுக் குழு.\nஇந்தப் பரிசைப் பெறத் தன்னை விட அதிகம் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று ஒபாமா குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தான், ஈராக் போர் பற்றியும் அவர் பேசினார். ஆயுத மோதல்களுக்கு எப்படிப்பட்ட விலை கொடுக்க வேண்டி வரும் என்பதை தாம் அதிகம் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.\nஆப்கானிஸ்தான் போருக்குக் கூடுதலாக முப்பதாயிரம் அமெரிக்கப் படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். அமைதிக்கான நொபேல் விருது பெற்றவர் ஏன் போரை ஆதரிக்கிறார் என்ற கேள்வியை எழுப்பியது விமர்சன வட்டாரம்.\nஅதற்கு விருது மேடையிலேயே பதிலளித்தார் ஒபாமா. பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றச் சில நேரங்களில் போரிட வேண்டியது அவசியம் என்றார் அவர். அணு ஆயுதங்களை ஒழிப்பதிலும், பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்களிலும் தமது லட்சியங்கள் நிறைவேறும்போது, இந்த விமர்சனம் முற்றிலுமாக மறைந்து விடும்' என்றார் ஒபாமா.\nவேதியலுக்கான நொபேல் பரிசைப் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட் ராமகிருஷ்ணன். அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர். அமெரிக்காவின் தாமஸ் ஸ்டீட்ஸ், இஸ்ரேலின் யெடா யோனத் ஆகியோரும் ராமகிருஷ்ணனோடு அந்த விருதைப் பகிர்ந்து கொண்டனர். புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் அவர்களுடைய ஆய்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஇந்த ஆண்டின் இறுதியில் உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தது பருவநிலை மாநாடு. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் அது நடந்தது. உலக நிறுவனத்தில் அங்கம் பற்றுள்ள அத்தனை நாடுகளும் அந்த மாநாட்டில் சங்கமம். உயர்ந்து வரும் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்துவது, காற்றுத் தூய்மையைக் குறைப்பது, இயற்கையைக் காப்பாற்றத் திட்டங்கள் வகுப்பது ஆகியன மாநாட்டின் முக்கிய நோக்கம். ஆனால் அது நிறைவேறியதா\nவளர்ச்சியடைந்த நாடுகள் தாங்கள் வெளியேற்றும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துவது குறித்து சட்டப்படி எந்த முடிவும் தீர்மானத்தில் இல்லை என்று குற்றம் சாட்டின வளரும் நாடுகள்.\nகரியமில வாயு வெளியேற்றத்தை சட்ட ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது 1997-ம் ஆண்டின் \"கியோட்டோ\" ஒப்பந்தம். அது 2012-ம் ஆண்டு நிறைவடைகிறது. ஆனால் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்தப் பதிலும் புதிய தீர்மானத்தில் இல்லை என்பது ஏழை நாடுகளின் குமுறல்.\nபருவ நிலை மாநாட்டின் இறுதி அறிக்கை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தைக் கட்டுப்படுத்த அனைத்துலக, தேசிய அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கியது. அத்துடன் வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் அதை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தது.\nஇருப்பினும் மாநாட்டில் சட்ட ரீதியில் அனைத்து நாடுகளையும் ஒப்புக் கொள்ள வைக்கும் தீர்மானம் எட்டப்படவில்லை. அதற்கு மாறாக சட்ட நிர்பந்தம் இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஏழை நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் கோபன்ஹேகன் மாநாட்டின் மூலம் எந்த முழுமையான செய்தியும் உலகுக்குக் கிடைக்கவில்லை.\n இப்படிக் கலவையான உணர்வுகளைத் தந்து விட்டு விடைபெறுகிறது 2009. பிறக்கவிருக்கும் புத்தாயிரத்தின் பத்தாவது ஆண்டு மகிழ்ச்சியை நிறைவாகக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது நம்பிக்கை. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 12:02 AM 0 மறுமொழி விழுது\nஉலகம் 2009 - பகுதி 2\nஇவ்வாண்டு(2009) மே மாதம் நடந்த முக்கிய��் சம்பவங்கள் இரண்டு. அவை நடந்தது வெவ்வேறு திசைகளில். ஆனால் உலகின் எல்லாத் திக்குகளிலும் கலவையான எதிரொலிகள்.\nஇலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த உள் நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது இவ்வாண்டின் மே மாதம் மூன்றாம் வாரத்தில். அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக ஒடுக்கப்பட்டனர். அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாக அறிவித்தது இலங்கை ராணுவம். போர் உக்கிரமான வேளையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். இறுதிக் கட்டத் தாக்குதலில் பலியான உயிர்களின் எண்ணிக்கை முப்பதாயிரம் என்பது புள்ளி விவரம். அந்தப் பட்டியலில் அடங்காதது எத்தனை ஆயிரமோ என்று வினா எழுப்புகிறது விமர்சன வட்டாரம்.\nமுந்நூறாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாயினர். இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த அவர்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். காரணம் போர். ஆபத்துக்குப் பாவமில்லை என்று அவர்கள் தஞ்சமடைந்தது இடைக்கால நிவாரண முகாம்களில். இப்போது படிப்படியாக அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள் என்று சொல்கிறது இலங்கை அரசாங்கம்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏராளம். அவை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எழுந்தன அவ்வப்போது சில குரல்கள். இதுவரை எந்தப் பதிலும் கிட்டவில்லை. விடிவு காலம் எப்போது என்று காத்துக்கிடக்கிறது இலங்கையின் சிறுபான்மைச் சமூகம்.\nஇதற்கிடையே இலங்கை அரசியலில் ஓர் எதிர்பாராத திருப்பம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தியவர் இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் ஃபொன்சோகா. அவர் இப்போது அதிபர் ராஜபக்ஷவுக்கு எதிராக அரசியல் களத்தில். போரின் வெற்றிக்குப் பிறகு அரசாங்கம் தம்மை அலட்சியம் செய்கிறது என்று கூறி பதவியைத் துறந்தார் திரு.ஃபொன்சேகா. அடுத்து அவர் பார்வை அரசியலின் பக்கம் திரும்பியது.\nஅடுத்த மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் திரு.ஃபொன்சேகா. நேற்று வரை ஓர���ியில் இருந்தவர்கள். இப்போது நேரெதிராக அரசியல் களத்தில். என்ன முடிவு என்பதைக் காணக் காத்திருக்கிறது உலகம்.\nமே மாதம் இந்தியாவில் பலமாக வீசியது அரசியல் அனல். அப்போது தான் அங்கு நடந்தது நாடாளுமன்றத் தேர்தல். அதன் முடிவில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்கள் ஒரு சாரார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மீண்டும் ஒரு நிலையற்ற ஆட்சி வரப்போகிறது. இப்படிப் பலப்பல யூகங்கள். ஆனால் நடந்தது வேறு மக்கள் வழங்கியது தெளிவான தீர்ப்பு.\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வாகை சூடியது ஆளும் காங்கிரஸ். இந்தியா முழுமைக்கும் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. சுமார் 71 மில்லியன் பேர் அதில் வாக்களித்தனர். 1991-க்குப் பிறகு மக்களவையில் மீண்டும் 200க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ். அக்கட்சி தலைமையிலான கூட்டணி வென்ற இடங்கள் 243. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கூட்டணி 160 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இந்தியாவின் அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கப் போவது நாங்கள் என்று முழக்கமிட்ட மூன்றாவது அணி காற்றில் கரைந்த கற்பூரம் ஆனது. அது வெற்றி கொண்ட தொகுதிகள் 79.\nஇலங்கைப் பிரச்சினை உச்சத்தில் இருந்த வேளையில் இடம் பெற்றது இந்திய நாடாளுமன்றத் தேர்தல். அதன் தாக்கம் தமிழகத்தில் கடுமையாக எதிரொலிக்கும் என்ற அனுமானம் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் அங்கும் தலை கீழ் மாற்றம். தமிழகத்தை ஆளும் தி.மு.க கூட்டணி 28 இடங்களை வன்றது. எதிர்த்தரப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 12 தொகுதிகளைக் கைப்பற்றியது.\nஇந்திய அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றிய காங்கிரசின் திரு.மன்மோகன் சிங் மீண்டும் இந்தியாவின் பிரதமரானார்.\nஜுன் மாதம் நடந்த ஏர் ஃபிரான்ஸ் விமான விபத்து உலக மக்களை கதி கலங்க வைத்தது. பிரேசில் தலைநகர் ரி யோடி ஜெனிரோவில் இருந்து பாரிசுக்குப் புறப்பட்டது அந்த விமானம். அட்லாண்டிக் கடலின் மீது பறந்த வேளையில் மின்னல் தாக்கத்துக்கு இலக்கானதால் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் இருந்த ஊழியர்கள், பயணிகள் மொத்தம் 228 பேருடன் கடலில் விழுந்தது ஏர் ஃபிரான்ஸ் விமானம்.\nதகவல் அறிந்ததும் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் எவரையும் காப்பாற்ற முடியவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு சிலருடைய சடலங்களை மட்���ுமே மீட்க முடிந்தது. அவர்களையும் அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல். காரணம் அவை அழுகிப் போயிருந்தன. தேடும் பணியில் கிடைக்கப் பெற்ற சடலங்கள் சொற்பம். கிடைக்காமலேயே போய் விட்ட உடல்கள் அதிகம். 75 ஆண்டுகளாக பயண சேவையாற்றி வரும் ஏர் ஃபிரான்ஸ் வரலாற்றில் அது மிகப் பெரும் விபத்து.\nஜுன் மாதம் ஈரானில் தேர்தல் காலம். மீண்டும் அதிபராகத் தேர்வு பெற்றார் மஹ்மூத் அஹ்மத் நிஜாதி. ஆனால் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.\nஈரான் தேர்தல் விதிப்படி பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேல் பெற்றவர்கள் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவர். அந்த அடிப்படையில் திரு. அஹ்மத் நிஜாதி 64.8 விழுக்காடு வாக்குகள் பெற்றதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். அதை எதிர்த்தரப்புப் போட்டியாளர் திரு. மீர் ஹுஸைன் மூஸவி மறுத்தார். வாக்களிப்பிலும், வாக்கு எண்ணிக்கையிலும் மோசடிகள் நடந்தன என்பது அவருடைய குற்றச்சாட்டு.\nபாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் மரணமடைந்தது இந்த ஆண்டின் ஜுன் மாதத்தில். அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் நிறைந்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஜாக்ஸனின் குடும்ப மருத்துவரே தவறான ஊசி மூலம் அவருடைய உயிரைப் பறித்து விட்டார் என்பது குற்றச்சாட்டுகளில் முக்கியமானது.\nஜாக்சன் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகள் ஏற்படுத்திய பக்க விளைவு தான் மரணத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. எது எப்படி ஆயினும், வறுமையின் வெறுமையான பக்கக்களில் இருந்து தன் திறமையால் உலகின் உச்சத்துக்குச் சென்ற பெருமை மைக்கேல் ஜாக்ஸனுக்கு உண்டு. அவருடைய மரணம் இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பு. மரணம் நடந்த இரு வாரங்களுக்குப் பிறகு நடந்த ஜாக்ஸனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு கண்ணீர் சிந்தியவர்கள் அதற்குச் சாட்சி.\nஇந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சூரிய கிரகணம் வந்தது இந்த ஆண்டின் ஜுலை மாதத்தில்.\nசூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைக்கப்படும். இவ்வாறு பூமியின் சில பாகங்களைச் சந்திரன் மறைப்பதால் நிழல் தோன்றும். அதன் காரணமாக பகலிலேயே இருள் ஏற்படும். அதற்குப் பெயர் சூரிய கிரகணம். இந்த ஆண்டின் சூரிய கிரகணம் சுமார் 6 நிமிடங்கள் வரை நீடித்தது.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 11:54 PM 0 மறுமொழி விழுது\nஉலகம் 2009 - பகுதி 1\n2009 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் உலகம். பரபரப்பும், பரிதவிப்பும் நிறைந்த மற்றோர் ஆண்டாக விடை பெற்றுச் செல்கிறது 2009. நினைவுப் பெட்டகத்தில் உறைந்து கிடக்கும் தகவல்களை மீண்டும் ஒருமுறை மீட்டிப் பார்ப்போமா\nஉலக அரசியல் சரித்திரத்தில் புதிய அத்தியாயம் இந்த ஆண்டில் ஆரம்பம். ஆம். சுமார் ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்கக் கருவறையில் இருந்த கனவு, வடிவம் பெற்றது இந்த ஆண்டில் தான்.\nஅமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றார் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் பிரதிநிதியாகப் பார்க்கப்படும் பராக் ஒபாமா. அவர் அமெரிக்காவின் 44 ஆவது அதிபர். வெள்ளை மாளிகக்குள் அடியெடுத்து வைத்த முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமை அவரைச் சேர்ந்தது.\nஅதேவேளை, ஆப்கானிஸ்தான், ஈராக் போர் காரணமாக உலக அளவில் சரிந்து கிடந்தது அமெரிக்காவின் கௌரவம். அதைக் காப்பாற்றும் பொறுப்பு அதிபர் ஒபாமாவின் கைகளில். பொருளியல் நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த அமெரிக்காவை அவர் தூக்கி நிறுத்துவார் என்பது வாக்களித்த மக்களின் நம்பிக்கை. அதற்கு வலுச் சேர்த்தார் அதிபர் ஒபாமா.\nபதவியேற்ற சிறிது நாட்களில் 789 பில்லியன் டாலர் பொருளியல் ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான விவாதத்துக்குப் பிறகு நிறைவேறியது அந்த மசோதா. அதன் மீதான வாக்கெடுப்பில் 61 க்கு 37 என்ற விகிதத்தில் உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைப் பதிவு செய்தனர். முக்கிய எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் 3 உறுப்பினர்களும் ஊக்குவிப்புத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர். அது, அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கை தந்த திருப்பம்.\nகலைத் துறையைப் பொறுத்த அளவில் ஆசியாவுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான அங்கீகாரம். பெப்ரவரியில் \"Slumdog Millionaire\" திரைப்படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். இந்திய இசைக்கலைஞர் ஒருவர் அந்த விருதைப் பெற்றது அதுவே முதல் முறை. Slumdog படத்தில் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்ற மற்றோர் இந்தியர்.\nSlumdog Millionaire தவிர்த்து, ஆசியாவில் தயாரிக்கப்பட்ட வேறு சில படைப்புகளும் இவ்வாண்டில் ஆஸ்கர் கௌரவம் பெற்றன. ஆகச் சிறந்த பிறமொழி படத்துக்கான விருதைப் பெற்றது Departures என்னும் ஜப்பானியத் திரைப்படம். La Maison En Petits Cubes என்ற இன்னொரு ஜப்பானியப் படைப்பு ஆகச் சிறந்த வரைகலை குறும்படத்துக்கான விருதை வென்றது. இந்தியாவில் படமாக்கப்பட்ட Smile Pinky என்னும் விளக்கப்படமும் ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இணைந்து கொண்டது.\nஅரசியல், கலை இவற்றை அடுத்து வருகிறது விளையாட்டு. ஆனால், இது வினையான விளையாட்டு. மார்ச் 3 ஆம் தேதி பாகிஸ்தானில் வெடித்த குண்டு அந்த வினையின் வேதனைக்குரிய எதிரொலி.\nபாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடச் சென்ற இலங்கை அணியினரைக் குறிவைத்து நடத்தப்பட்டது தாக்குதல். வீரர்கள் யாருக்கும் இழப்பில்லை. ஆனால் சல்லடையாகிப் போனது அவர்கள் சென்ற பஸ். எனினும், தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பறிபோயின எட்டு உயிர்கள். அவர்கள் அத்தனை பேரும் பாகிஸ்தானியப் போலீசார்.\nதாலிபான்களை நோக்கி நீண்டன குற்றக் கரங்கள். அதன் தொடர்பில் கைது செய்யப்பட்டார் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர். மேலும் அறுவரைத் தேடி வருவதாக அறிவித்தது பாகிஸ்தானியக் காவல்துறை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இலங்கையில் செயல்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்திருப்பார்களோ\nஇவ்வளவுக்குப் பிறகும் களமிறங்கி விளையாடுமா இலங்கை. மூட்டை முடிச்சுகளோடு பாகிஸ்தானை விட்டு வெளியேறியது. கிரிக்கெட் தொடரையும் புறக்கணித்தது. ஒட்டு மொத்த பேரிழப்பு விளையாட்டு ரசிகர்களுக்கு.\nஅன்று தொடங்கிய வேட்டுச் சத்தம் பாகிஸ்தானில் இன்று வரை ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போதும் விட்டுவிட்டும் வெடித்துக் கொண்டே தான் இருக்கின்றன குண்டுகள். பலியாவது என்னவோ அப்பாவி உயிர்கள் தான். அமெரிக்காவின் நெருக்கமான தோழராகத் திகழ்கிறது பாகிஸ்தான். அது தாலிபான்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் அவ்வப்போது வெடிக்கச் செய்கிறார்கள். எப்போது பூ மழையோ...\nஅடுத்து நம் கவனத்துக்குரிய அம்சம் - மலேசியாவில் நடந்த தலைமை மாற்றம். அது நடந்தது ஏப்ரலில். மலேசியாவின் ஆறாவது பிரதமராகப் பொறுப்பேற்றார் திரு.நஜீப் அப்துல் ரசாக். அதற்கு ஏதுவாக மலேசியா ஆளுங்கட்சியான அம்னோவின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். முன்னைய பிரதமர் திரு.அப்துல்லாஹ் அஹ்மத் படாவி பதவி விலகியதைத் தொடர்ந்து திரு.நஜீப் மல���சியாவின் பிரதமரானார்.\nதமது 23 ஆம் வயதிலேயே மலேசிய அரசியலில் அடியெடுத்து வைத்தவர் திரு.நஜீப். சென்ற ஆறு ஆண்டுகளாக மலேசியாவின் துணைப் பிரதமராகவும் சேவையாற்றியவர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய அரசியலில் தனி முத்திரை பதித்து வருகிறார் திரு.நஜீப். இவர் மலேசியாவின் இரண்டாவது பிரதமரான திரு.அப்துல் ரசாக்கின் மகன். பொருளியல் நெருக்கடியும், உள்நாட்டு அரசியல் குழப்பங்களும் அதிகரித்திருந்த வேளையில் திரு.நஜீப் பிரதமராகப் பதவியேற்றார்.\nமலேசியாவை அடுத்து மியன்மாரிலும் ஓர் அரசியல் புயல். அது வீசியது மே மாதத் தொடக்கத்தில். மியன்மாரில் நடப்பது இராணுவ ஆட்சி. மக்களாட்சியைக் கொண்டு வர வேண்டுமென்று போராடுகிறார் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி. அதற்கு இசைய மறுத்த இராணுவம் அவரை இல்லக் காவலில் வைத்தது. அந்தத் தண்டனை முடியும் தருவாயில் மீண்டும் ஒரு சோதனை.\nவிதிகளை மீறி தமது வீட்டில் அமெரிக்கர் ஒருவரை இரகசியமாகத் தங்க வைத்தார் என்பது குற்றச்சாட்டு. ஏரியில் நீந்தியபடியே அந்த அமெரிக்கர் ஆங் சான் சூச்சி வீட்டுக்குள் நுழைந்தார் என்றது இராணுவம். விசாரணை முடிவில் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது ஆங் சான் சூச்சி. பின்னர் அது பாதியாகக் குறைக்கப்பட்டது.\nஅடுத்த ஆண்டு மியன்மாரில் நடக்கவுள்ள தேர்தலில் ஆங் சான் சூச்சியின் பங்களிப்பைத் தடுக்கும் நோக்கில் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சூச்சியின் வீட்டில் நுழைந்த அமெரிக்கருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எவ்வித நிபந்தனையுமின்றி சூச்சியை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 11:45 PM 0 மறுமொழி விழுது\nசென்ற ஆண்டின் இறுதியில் உலகைச் சுழற்றி அடித்த பொருளியல் சுனாமி தற்போது தான் ஓயத் தொடங்கியுள்ளது. இப்போது மீண்டும் ஓர் ஓலம். இம்முறை அந்தக் குரல் எழுந்திருப்பது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஒன்றான துபாயில் இருந்து. நவம்பர்’09 இறுதி வாரத்தில் துபாய் அரசாங்கத்திற்குச் சொந்தமான Dubai World ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது உலகச் சந்தைகளை ஆட்டங்காண வைத்தது. Dubai World முதலீட்டு நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் கட��் உள்ளது. அதனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கேட்டது. இந்தத் திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்\nகுறுகிய காலகட்டத்துக்குள் அதிக வளர்ச்சியைப் பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தினார்கள். ஆனால் உலகப் பொருளியல் நெருக்கடி அவர்கள் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டது. எதிர்பார்த்த வருமானம் வந்து சேரவில்லை. அதனால் வெளி நாட்டு வங்கிகளிடம் வாங்கிய கடனுக்குரிய வட்டியைச் செலுத்த முடியவில்லை. முதலைத் திருப்பித் தரவேண்டிய நிர்ப்பந்தம். வருமானத்துக்கும், இலாபத்துக்கும் இடையே விழுந்தது பெரிய பள்ளம். இதுவே துபாய் நிதி நெருக்கடிக்குரிய அடிப்படக் காரணம்.\nஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் துபாய் சற்று வித்தியாசமான நாடு. மேற்குலகின் சாயலை உள்வாங்கிக் கொண்டு செழித்து முன்னேறிய வளைகுடாப் பிரதேசம். விண்ணை முட்டும் கட்டடங்கள். நுகர்வோரை மயக்கும் வணிக வளாகங்கள். கேளிக்கைப் பூங்காங்கள் என்று அதன் சிறப்பை அடுக்கிக் கொண்டே போகலாம். மத்திய கிழக்கின் பிற நாடுகளோடு ஒப்பிடும் போது துபாயில் எண்ணெய் வளம் குறைவு. இருப்பினும் அந்த நாடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்தது எப்படி\nஐக்கிய அரபுச் சிற்றரசில் மொத்தம் 7 மாநிலங்கள். தலைநகரம் அபுதாபி. துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன்,ஃபுஜைரா, மற்றும் ராசல்கைமா என்பன மற்ற மாநிலங்கள். இவற்றில் துபாயில் எண்ணெய் வளம் மிகக் குறைவு. இன்னும் இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எண்ணய் என்பது வரலாற்றில் குறிப்பிடப்படும் ஒரு பொருளாகிப் போய்விடும்.\n1998 ல் துபாயின் பொருளாதார வளர்ச்சி இரண்டு விழுக்காடு. அதை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் திட்டம். அதன் பொருட்டு மூன்று துறைகளில் கவனம் செலுத்தத் தீர்மானித்தது துபாய் அரசாங்கம். ஒன்று வர்த்தகம். இரண்டாவது கட்டுமானத்துறை. ஹோட்டல்ஸ், உல்லாசத் தலங்கள், வணிக வளாகங்கள், கேளிக்கைப் பூங்காக்கள் ஆகியவற்றைக் கட்டி வெளிநாட்டினரை ஈர்க்கலாம் என்று கணித்தது. மூன்றாவதாக மத்திய கிழக்கின் வணிகக் கேந்திரமாக துபாயை உருவாக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய தொலைநோக்கு.\nபொருளியலைப் பெருக்கும் அத்தனை காரியங்களிலும் கவனம் செலுத்தினார்கள். அதற்குக் கிடைத்தது கை ��ேல் பலன். சென்ற ஆண்டு துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணெய் வருவாய் 6 விழுக்காடு மட்டுமே. மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் சாராத நாடு துபாய் மட்டுமே என்ற நிலையை படிப்படியாக எட்டிப் பிடித்து விட்டார்கள்.\nகட்டடக் கட்டுமானம் மூலம் துபாய்க்குக் கிடைக்கும் வருமானம் 22 விழுக்காட்டுக்கும் அதிகம். வர்த்தகம் மூலம் வருவது கிட்டத்தட்ட 16 விழுக்காடு. பல்வேறு நிதிச்சேவைகளின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் 11 விழுக்காடு. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் துபாயின் தலையில் விழுந்தது பேரிடி.\nDubai World என்ற அரசாங்க முதலீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதி அல் நகீல். கட்டுமானத்துறையில் இந்நிறுவனம் தான் ஜாம்பவான். உலகின் மற்ற நாடுகளில் கிளை பரப்ப ஆசைப்பட்டது Dubai World. விளைவு, வெளிநாடுகளில் தங்கள் முதலீடுகளைப் பெருக்கினார்கள். லண்டனில் ஒரு துறைமுகம். நியூயார்க்கில் ஒரு வணிக வளாகம். இப்படிப் படிப்படியான விரிவாக்கம். கொட்டத் தொடங்கியது பணமழை.\nசுபயோக சுபதினத்தின் இராகு காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டது நிதிச்சுனாமி. அதில் சிக்குண்டது துபாய். இந்த ஆண்டின் ஃபிப்ரவரியில் சுற்றுலா வருமானம் சுருங்கியது. பணப் புழக்கம் குறைந்தது. மக்கள் வாங்கும் திறனை இழந்தனர். முன் கை நீட்டியவர்கள் முட்டுக்கையை நீட்ட வேண்டிய கட்டாய நிலை. கட்டுமானத்துறையும் ஆட்டம் கண்டது. சொத்துச் சந்தை படுத்து விட்டது. கிட்டத்தட்ட 60, 70 விழுக்காடு அளவுக்கு பெரும் வீழ்ச்சி. இதனால் நிறையக் கட்டுமானத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு. வேலையிழப்பு. இப்படி அடிக்கு மேல் அடி.\nதுபாயின் பொருளியல் வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்த Dubai World இப்போது கடன் சுமையால் தத்தளிக்கிறது. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்டிருக்கிறது. தனக்குள்ள 26 பில்லியன் டாலர் கடனை மாற்றியமைக்கும் யோசனைகளை வெளியிட்டது. அதன் மூலம் பங்குச் சந்தைகள் ஓரளவுக்கு நிமிர்ந்துள்ளன. Dubai World ன் கடனுக்குப் பொறுப்பேற்க முடியாது என்று துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியைப் போன்ற நிலையை மீண்டும் உருவாக்குமா\nஅப்படி ஒப்பிட முடியாது. அமெரிக்க நிதிச் சுழலில் ஏற்பட்ட இழப்பு டிரில்லியன் டாலருக்க��ம் அதிகம். துபாயில் அப்படியல்ல. 60 பில்லியன் டாலர் தான். சரி. இனி என்னாகும் அமெரிக்க அரசாங்கம் நிதியைக் கொடுத்து நிறுவனங்களைக் காப்பாற்றியது போல் துபாயில் நடக்குமா அமெரிக்க அரசாங்கம் நிதியைக் கொடுத்து நிறுவனங்களைக் காப்பாற்றியது போல் துபாயில் நடக்குமா அப்படிச் செய்ய முடியாது என்று துபை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்து விட்டது. காரணம் அவர்களிடம் இருக்கும் கையிருப்பும் குறைவு. ஆனால் அபுதாபி அரசாங்கம் நிச்சயம் ஏதாவது செய்யும் என்பது பொருளியல் நிபுணர்களின் நம்பிக்கை. காரணம், Dubai World கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் முதலில் பாதிக்கப்படுவது அபுதாபி வங்கிகள் தான். எனவே இக்கட்டான சூழலில் அவர்கள் கை கொடுப்பார்கள் என்பது நிபுணர்களின் கணிப்பு.\nவர்த்தகம் என்பது இருவழிப் பாதை. அதில் லாபம் வரும் போது அதன் பலனை அனுபவிக்கும் நிறுவனங்கள், நஷ்டம் வரும் போது மட்டும் அரசாங்க உதவியைக் கோருவது பிரச்சினைக்குரிய தீர்வல்ல என்பது சில பொருளியல் நிபுணர்களின் கருத்து.\nDubai World ன் கடனுக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது என்று அறிவித்தது தீர்க்கமான முடிவு என்பது சில நிபுணர்களின் கூற்று. முதலீடு செய்யும் போதே, அதனால் வரக்கூடிய வருமானமோ, நஷ்டமோ இரண்டையும் தாங்கிக் கொள்ளும் மனப்போக்குடன் தான் முதலீடு செய்ய வேண்டும். அதில் லாபம் வந்தால் எங்களுக்கு. நஷ்டம் வந்தால் நாட்டில் உள்ள அரசாங்கம் ஈடுகட்டி விடும் என்று எதிர்பார்த்து முதலீடு செய்யும் மனப்போக்கை மாற்ற வேண்டும்.\nதுரதிருஷ்டவசமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட அந்த மனப்போக்கை அவங்க கண்டிக்கலை, தடுக்கவும் இல்லை. இதனால என்னாச்சு லாபம் வந்தால் எனக்கு. நஷ்டம் வந்தால் வரி செலுத்தும் மக்களுக்கு என்ற மனப்பான்மை வளர்ந்துடுச்சு. துபாய் அரசாங்கம் அந்தப் போக்கை இப்போ துண்டித்தாங்கன்னா அது நல்ல முடிவு என்பது சில பொருளியல் நிபுணர்களின் வாதம்.\nதுபாயில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி உலகின் மற்ற நாடுகளைப் பாதிக்கும் வாய்ப்புகள் உண்டா\nபெரிய பாதிப்புகள் இருக்கும்ன்னு சொல்ல முடியாது. எந்த ஒரு முதலீடு செய்தாலும் அதில் நஷ்டம் வருவதற்குரிய வாய்ப்புகள் இருக்கத் தான் செய்யும். சகித்துக் கொள்ளக் கூடிய அளவு நஷ்டம் வரும் அபாயங்கள் ���ருக்கிறதே ஒழிய, 2008 நிதி நெருக்கடி மாதிரி வருவதற்கான சாத்தியங்கள் இல்லை.\nஐரோப்பா கண்டத்தின் சில வங்கிகள் துபையின் சில நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்திருக்கின்றன. Dubai World உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்களும் கடன் சுமையைச் சரிவரப் பூர்த்தி செய்ய முடியாத நிலை இப்போது. இதனால் ஐரோப்பிய நாட்டின் சில வங்கிகளுக்குப் பிரச்சினை ஏற்படும் அபாயம் உண்டு.\nஇன்னொரு கோணத்தில் பார்த்தால் இந்தியா, சைனா போன்ற வளரும் நாடுகளுக்குச் சில பாதிப்புகள் வரலாம். எப்படி Dubai World அரசாங்கத்தின் ஓர் அங்கம். அதனால தாங்கள் கொடுத்த கடனுக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்கும் என்று நம்பினார்கள். இப்போது அந்த நம்பிக்கை பொய்யாகிப் போயிற்று. இதனால் Dubai World நிலைகுத்திப் போகும் அபாயம் இருப்பதைப் புறக்கணிக்க முடியாது. அப்படி ஒரு நிலை வரும் போது அதை ‘சாவரின்ட் டிஃபால்ட்’ என்று வர்ணிப்பார்கள். அதாவது நாடே போன்டியாகிடுச்சு. நாங்க பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்ற மாதிரி. இதனால் வளரும் நாடுகள் அரசாங்க அங்கத்தின் மூலமாக கடன் பெற முயற்சித்தால், வெளிநாட்டு வங்கிகள் கடன் கொடுக்க ரொம்பப் பயப்படுவாங்க. துபாய்ல நடந்த மாதிரி இங்கேயும் ஆயிடுமோன்னு. இது வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் முக்கியமான தாக்கமாக இருக்கக் கூடும்.\nஆசிய வட்டார நாடுகளுக்கு சிங்கப்பூர் ஒரு வர்த்தகக் கேந்திரமாகத் திகழ்கிறது. அதைப் போல மத்திய கிழக்கு வட்டாரத்தில் தான் முன்னிற்க வேண்டும் என்பது துபாயின் இலக்கு. அதை நோக்கிய பயணத்தில் இப்பாது பெரிய தடங்கல். இதிலிருந்து துபாய் மீளும் சாத்தியம் இருக்கிறதா\nசிங்கப்பூர் வந்த அளவுக்கு குறுகிய காலகட்டத்தில் துபை மத்திய கிழக்கு வட்டாரத்தில் வணிகக் கேந்திரமாக மாறி விட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தப் பாதையில் முன்னேறி வந்து வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதையும் புறந்தள்ளி விடமுடியாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் நெருக்கடி அந்த வளர்ச்சியைக் கொஞ்சம் பாதிக்கத் தான் செய்யும்.\nஓராண்டு, ஈராண்டு சொல்லப் போனால் ஐந்து ஆண்டுகள் இந்த வளர்ச்சி தேக்கமடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த நெருக்கடியை துபாய் அரசாங்கம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள், முதலீடு செய்பவர��களுக்குரிய பாதுகாப்புகள் ஆகியவற்றைக் குறுகிய காலத்தில் அவர்கள் உருவாக்கினால் அந்தத் தேக்கத்தையே ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடியும். அதற்குரிய அணுகுமுறையும் அரசாங்கத்தின் கொள்கைப் போக்கும் மாறுகிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி மாறினால் இந்தத் தேக்கத்தையே அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல முடியும்.\nநிலையற்ற பொருளியல் சந்தையில் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. ஏற்றத் தாழ்வுகளைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை முதலீட்டாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் அனந்தநாகேஸ்வரன். சிங்கப்பூரில் செயல்படும் ஜுலியர் பேயர் வங்கியின் மத்திய கிழக்கு முதலீட்டு ஆலோசகராக இவர் பணியாற்றி வருகிறார்.\nகுறுகிய காலத்திற்குள் அதிக லாபம் எடுக்க வேண்டும் என்ற இருக்கும் வரைக்கும் எந்த முதலீட்டிலும் நஷ்டம் உண்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆதலால் இனிமேல் துபாய் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும், உள்நாட்டிலும் சரி. வெளிநாட்டிலும் சரி. முதலீடு செய்யும் போது அந்த முதலீட்டில் நஷ்டம் அடையவதற்கான சாத்தியக் கூறுகள் எவ்வவளவு அப்படி நஷ்டம் வந்தால் தாங்கிக் கொள்ள முடியுமா அப்படி நஷ்டம் வந்தால் தாங்கிக் கொள்ள முடியுமா எவ்வளவு காலத்துக்குள் நாம் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். என்பது பற்றி நிதானமாக திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். அப்படிச் செய்வதால் நஷ்டம் வந்தாலும் அவங்களால ஏற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்து நல்ல முறையில் பல நாட்கள் லாபம் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் குறுகிய கால கட்டத்தில் அதிக லாபம் என்ற மனப்பான்மையை அதிகம் பார்க்கிறோம். அது தான் மிகப் பெரிய அபாயம். முதலீட்டுக்கான ஆபத்து துபாயிலோ, சிங்கப்பூரிலோ, சீனாவிலோ இல்லை. அது குடிகொண்டிருப்பது நம்முடைய மனதில் தான் என்பது டாக்டர். அனந்த நாகேஸ்வரன் சொல்லும் செய்தி.\nசங்கடமான காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்வது தான் மனித வாழ்க்கக்கு ஆதாரம். இந்த நியதி உலக நாடுகளுக்கும் பொருந்தும். துபாயைச் சுற்றிலும் எண்ணெய் வளமிக்க நேசநாடுகள் இருக்கின்றன. அவர்கள் இந்த நெருக்கடி���ை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். எனவே சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல துபாய் மீண்டும் எழுந்துவரும் என்பது இப்போதைய நம்பிக்கை. அது நனவாகுமா என்பதைக் காலம் கணித்துச் சொல்லும்.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 9:16 AM 2 மறுமொழி விழுது\nதிரு.ராஜ சேகர ரெட்டி நினைவாஞ்சலி.\nமுதலில் நம்புவதற்குச் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் காணவில்லை. நக்சல்கள் கடத்தியிருக்கலாம் என்று ஊகங்களை வெளியிட்டன ஊடகங்கள். அப்போதிருந்தே என் மனம் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. ஓர் ஆளுமை மிகுந்த தோற்றம். எவரையும் எளிதில் வசீகரித்து விடும் இயல்பான தன்மை. எப்போதும் சிரிக்கும் அதரங்கள். அவற்றுக்குப் பொட்டிட்டாற் போன்று கருணையுள்ள கண்கள். எடுத்த கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பது பற்றிய விசாலமான தொலைநோக்குப் பார்வை. இப்படித் தான் அவர் அறிமுகமானார் எனக்கு.\n2006 ஆம் ஆண்டின் இறுதியில் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகர் சபை ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொள்ள வந்திருந்தார் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அவருடன் சில அமைச்சர்களும். ஒரு கலந்துரையாடலுக்குப் பிறகு அவருடனான நேர்காணல். சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீண்டது அந்தப் பேட்டி. ஆனால் அந்த இனிமையான பொழுதை நினைக்க நினைக்க இன்றும், என்றும் நெஞ்சினிக்கும்.\nவழக்கமாக இந்திய அரசியல் தலைவர்கள் காட்டும் மனோபாவம் திரு.ஒய் எஸ் ஆரிடத்தில் இல்லை. கருத்தரங்கு மண்டபத்திலேயே நேர்காணல். அதற்கென பிரத்யேக அறை எதுவும் இல்லை. எங்களைச் சுற்றிலும் நின்ற தொழில் முனைவர்கள் தங்களுக்குள் ஏதோதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் நேர்காணல் மிகச் சரியாகக், கச்சிதமாக அமைந்தது. வந்த பதில்களும் பிசிறில்லாத அக்மார்க் சுருக்.\nவினாக்களை வசீகரமான புன்னகையோடு உள் வாங்கிக் கொண்டு, ஆந்திராவில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை அவர் பட்டியலிட்டார். கையில் எந்தப் புள்ளி விவரமும் இல்லை. சிங்கப்பூரில் இருந்து தொழில் செய்ய நாடுபவர்கள் எந்நேரமும் என் அலுவலகத்தின் கதவுகளைத் தட்டலாம். அவர்களுக்காக வந்து வாசல் திறப்பது நானாகக் கூட இருக்கலாம் என்றார்.\nஅது நிதர்சனமான சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட நித்திய வா��்த்தைகள். பிறகு, ஆந்திராவில் முதலீடு செய்த சில சிங்கப்பூர்த் தொழில் முனைவர்களிடம் பேசிக் கொண்ட போது அவர்கள் ஒய் எஸ் ஆரின் கருத்தை மெய்ப்பித்தார்கள்.\nஇன்று அந்தத் திருவாளரின் அகால மரணம் ஆந்திர மாநில அரசியலில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மெய்யான உண்மை. மருத்துவம் படித்த திரு.ஒய் எஸ் ஆரின் வாழ்க்கைப் பாதை மலர் விரிப்பில் வளர்ந்த நந்தவனம் அல்ல. முட்களும், புயல்களும் நிறைந்த போர்ககளமாகவே இருந்தது. 1978 ல் தமது 29 ஆம் வயதில் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் துணையமைச்சர். இது வெறும் தொடக்கம் தான். இவர் தான் ஒய் எஸ் ஆர் என்று அண்ணாந்து பார்க்க வைத்த அவருடைய சாதனைகள் சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தளிர்விடத் தொடங்கின.\nஆந்திர அரசியலில் யாரும் அசைக்க முடியாத வல்லமை தமக்குண்டு என்ற திரு.சந்திரபாபு நாயுடுவின் ஆசைக்கு ஆப்படித்தது திரு.ஒய் எஸ் ஆரின் பாதயாத்திரை. 2003 ல் அவர் மேற்கொண்ட அந்தப் பயணம் தெலுங்கு தேச ஆட்சிக்கு வைத்தது மிகப் பெரிய வேட்டு. ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அவர் சுற்றிச் சுழன்று கடந்த தூரம் 1400 கி.மீ.\nஅதைத் தொடர்ந்து 2004 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திரு.ஒய் எஸ் ஆர் ஆட்சிக்கு வருகிறார். அதிலிருந்து அவர் தன் ஆளுமையைக் கூட்டி எடுத்த விஸ்வரூபம் இந்திய அரசியலை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. காங்கிரஸ் தலைமையை அவரிடமே திடப்படுத்தி வைத்தது.\nதொடர்ந்து எந்த காங்கிரஸ் முதல்வரும் ஐந்தாண்டு பதவியைப் பூர்த்தி செய்ய முடியாது என்ற ஆந்திர அரசியல் சரித்திரத்தை மாற்றிக் காட்டிய பெருமை திரு.ஒய் எஸ் ஆருக்கு உண்டு. காலஞ்சென்ற நீலம் சஞ்சீவ ரெட்டி, காசா பிரமானந்த ரெட்டி ஆகியோருக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணை ஏறிய பெருமையும் ராஜசேகர ரெட்டிக்கு உண்டு.\nஇது வெறுமனே அரசியல் சாதுர்யத்தால் விளைந்த வெற்றியல்ல. மக்களின் ஆதரவும், அவர்களின் அன்பும் கட்டியெழுப்பிய வாக்கு வங்கி, வாங்கித் தந்த வெற்றி என்பதை ஒய் எஸ் ஆரின் எதிரிகள் கூட சந்தேகமின்றி ஒப்புக் கொள்வர்.\nதிரு. ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டால் இரண்டு விஷயங்களைத் தவிர்க்க இயலாது.\n1.அவர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது போல இலவசத் திட்டங்கள் இதுவரை ஆந்திர அரசியல் பாராத புதுக் கணக்கு. அவற்றால் அரசின் நிதி ஊதாரித்தனமாகச் செலவிடப்படவில்லை என்பது நிதர்சனம். இலவசம் பெற்ற ஏழைகள் தங்கள் வாழ்வில் எற்றம் தந்த நாயகராக அவரைப் போற்றுகிறார்கள் என்பதை இன்று கண்கூடாகப் பார்க்கலாம். ஏழை, எளியவர்ள், விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதி, மின்சாரம் போன்றவற்றை வழங்கி அவர்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்தார்.\n2. ஆந்திராவில் பயன்பாடு இல்லாத தரிசு நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. அதில் அரசுக்குக் கிடைத்த வருமானம் சுமார் 1500 கோடி ரூபாய். இதைவிட அதிகமான தொகையை முதல்வரும் அவர் சார்ந்த கட்சித் தலைவர்களும் அடித்துக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.\nதிரு.ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் ஏற்படுத்தி இருக்கும் அதிர்வலை இந்திய அரசியலுக்குப் புதுசு. செய்தி கேட்ட சுமார் 80 பேர் அதிர்ச்சியில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தானாகவே மாய்த்திருக்கிறார்கள். வாழ்ந்த வரை நல்லவராக வாழ்ந்தார் என்பதற்கு உதாரணமாக இந்த இழப்புகள் சுட்டிக் காட்டப்படலாம்.\nஇவையெல்லாவற்றையும் தாண்டி திரு.ராஜசேகர ரெட்டியின் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் அவர் போன்ற நல்ல தலைவர்கள் இன்னும் அதிகமானவர்களை உருவாக்குவதன் மூலமே ஆந்திர அரசியல் அல்ல, இந்திய அரசியல் சுபிட்சம் பெறும் என்ற உண்மையும் அதில் அடங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 12:46 AM 0 மறுமொழி விழுது\nபடிமம், குறியீடு என இரண்டு வார்த்தைகள் உண்டு. நான் புதுக்கவிதையில் குறியீடு பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். படிமம் என்பது அரூபத்தை நுண்பொருளை அதாவது கண்ணுக்கு தெரியாததை காட்டுவது. குறியீடு என்பது கேமரா போல கண்ணுக்கு தெரிவதை மனதிற்கு புரிவதைப் போலச் சொல்வது.\nஇந்த குறியீடு என்பது 20-ம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கிய புரட்சியில் தான் கண்டுபிடித்தார்கள். இலக்கியத்தில் இது முக்கியமான கண்டுபிடிப்பு. விஞ்ஞானத்தில் வானொலி, தொலைக்காட்சி போல.\nஎன்னை புதுக்கவிதை எழுதுபவன் என்கிறார்கள். நான் இளங்கலை வகுப்பு படிக்கு��் போது மரபு வெறியன். என்னுடைய பேராசிரியர் ஒருமுறை சர்ரியலிசம் என்ற வார்த்தையைச் சொன்னார். ரியலிசம் தெரியும், கம்யூனிசம் தெரியும், அதென்ன சர்ரியலிசம் என்று கேட்டேன். அது 1954ம் ஆண்டு. புதுக்கவிதை வராத காலம். புதுக்கவிதை தகாத காலம்.\n“ரியலிசம் என்பது நாம் பழகுவது. இந்தச் சமூகம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பது. ஒருவரைப் பார்த்தால் வணக்கம் சொல்வது போல. சர்ரியலிசம் என்பது மனது என்ன நினைக்கிறதோ அது. உதடு வணக்கம் சொன்னாலும், மனதிற்குள் இவன் ஏன் வந்தான்\nரியலிசம்மாக எழுதுவது எழுத்தல்ல. உள்மனதில் இருப்பதை எழுதுவதுதான் எழுத்து. உண்மையைச் சொன்னா அடிப்பானேன்னு பயந்தா நீ படைப்பாளியா இருக்கவே முடியாது.\nமுள்ன்னா குத்தும். அதுதான் அதனுடைய இயல்பு. அதற்காக முள்ளைத் திட்டக் கூடாது. ரோஜாவுக்கு என்ன மதிப்போ,அதே மதிப்புதான் முள்ளுக்கும். அது செடிக்குப் பூவுக்குப் பாதுகாப்பு. தேனீக்கு ஏன் கொடுக்கு நீ போய் எடுப்பேன்ங்கறதாலதான். அது ஒரு பாதுகாப்பு.\nபுதுக்கவிதை புரியாதது என்ற குற்றச்சாட்டே புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. யாருக்குப் புரியலை என்பதே முக்கியம். திருமூலர் எல்லாருக்கு புரியுதா தேசிக விநாயகம் பிள்ளை புரியலைன்னு அவருடன் சண்டைக்குப் போக முடியுமா தேசிக விநாயகம் பிள்ளை புரியலைன்னு அவருடன் சண்டைக்குப் போக முடியுமாபுரிந்த இடத்தில் படித்து விட்டு புரியாத இடத்தில் ஒரு வணக்கம் போட்டுவிட்டுப் போய்விட வேண்டும். நமக்குப் புரிஞ்சாதான் படிப்போம்னா நாம எப்ப வளர்றதுபுரிந்த இடத்தில் படித்து விட்டு புரியாத இடத்தில் ஒரு வணக்கம் போட்டுவிட்டுப் போய்விட வேண்டும். நமக்குப் புரிஞ்சாதான் படிப்போம்னா நாம எப்ப வளர்றது நம்ம கூடவே 60 வருசம் இருக்கற மனைவியைப் புரிஞ்சுக்கிட்டோமா\n அது என்னன்னெ தெரியாமதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிறைய பேரிடம் கேட்டுப்பாருங்க. வாழ்ரக்கைன்னா என்ன பதில் சொல்லத் தெரியாது. அது தெரியாமலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. ‘வாழ்க்கை என்பது என்னைப் பொறுத்தவரை. . . வாழ்க்கை என்பது என்னவென்று புரிந்து கொள்ளத் தரப்படுகிற ஒரு வாய்ப்பு.’\nஇலக்கணமில்லாதது புதுக்கவிதை என்பது தவறான பார்வை. மரபுக்கவிதை, புதுக்கவிதை என்கிற சொற்களே எனக்குப் பிடிக்காதது. கவிதை. . . அவ்வளவுதான்\n2000 வருசத்த��க்கு முன்னால எழுதின கவிதை மாதிரித்தான் எழுதுவேன்னு பிடிவாதம் பிடிச்சா எக்ஸிபிஷன்ல போய்தான் உக்காந்துக்கணும். காலத்துக்குத் தகுந்த மாதிரி எழுதினாதான் படிப்பான். அப்பதான் நிக்கும். காலம் மாறிருச்சு. அதையே நாமளும் எழுத முடியாது. ஆங்கிலத்தில் ஒரு ஷேக்ஸ்பியர்தான். தமிழில் ஒரு கம்பன்தான். பாரதியைப் பிடிக்கும் என்பதால் பாரதிதாசன் பாரதி போலவேயா எழுதினார் மாற்றம் ஏற்படணும். மாறாதது கல்லு. மாறுறவன்தான் மனுசன்.\nநான் வெண்பா எழுதுறன்னே ஒருத்தன் உக்காந்தான்னா.அவன்தான் வெண்பாவுக்கு முதல் எதிரி. சிலேடையெல்லாம் வித்தை. கலையல்ல. கம்பியிலே ஏன் சைக்கிள் ஓட்டறே ரோட்ல ஓட்டிட்டுப் போ வார்த்தை விளையாட்டும் கம்பியில் சைக்கிள் ஓட்டுவதைப் போலதான். கவிதையல்ல.\nஒரு நேர்காணலில் என்னிடம் கேட்டார்கள். மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ன வித்தியாசம் நான் சொன்னேன். மரபுக் கவிதை பெரிய வீடு. புதுக்கவிதை சின்ன வீடு. சின்ன வீட்டின்மேல் கொஞ்சம் ஈர்ப்பு அதிகமாகத்தான் இருக்கும்.\nமரபுக் கவிதையில் யாப்பை வைத்து ஏமாற்ற முடியும். புதுக்கவிதையில் ஏமாற்ற முடியாது. கருத்தை நேரடியாக சொல்லியாக வேண்டும். நாம ஒண்ணு நெனைப்போம். ஆனா எழுதும்போது யாப்பு வராது. யாப்பு சரியா இருந்தா நம்ம மனசுல இருந்தது வந்திருக்காது. மனசுல இருக்கறத எழுதணும். அழகியலுக்காக யாப்பைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nகவிதை என்றால் கண்ணுக்குக் காட்டுவதுதான். அப்ஸ்ட்ராக்டிவ்வாகச் சொல்லக் கூடாது. உடல்நலம் என்பதை சொன்னால் புரியாது. ஒரு பயில்வான் படத்தைக் காட்டுவது எளிதாகப் புரிய வைக்கும். ஒரு பெண் பார்க்கிறாள். உடனே இதயம் வலிக்கிறது. இதை எப்படிச் சொல்வது ‘தேன் தடவிய கத்தி இதயத்தில் பாய்ந்தது போல. . . . கம்பன் மகா கவிஞன், ஆனால் அவனுக்கே இந்த கான்செப்ட் தெரியாது.\nஎல்லாக் கவிஞர்களும் புதுக்கவிதை எழுதுகிறார்கள். ஆனால் மரபைத் தெரிந்து கொண்டு புதுக்கவிதை எழுதலாம். சோகமாக ஒரு விஷயத்தைச் சொல்ல தூங்கலோசை. பளார்னு ஒரு விஷயத்தைச் சொல்லணும்னா செப்பலோசை. அதுக்காக எண்சீர் விருத்தத்தையே எல்லாத்துக்கும் எழுதாதீங்க. கம்பராமாயணத்தில் சூர்ப்பணகை வரும்போது கம்பன் கையாள்கிற விருத்தம் வேறு. . . தாடகையை அறிமுகம் செய்யும் போது கையாள்கிற விருத்தம் வேறு. இந்த inner form பலருக்குத�� தெரியாது.\nபழையதை மதியுங்கள். அங்கிருந்து சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அங்கேயே நின்று விடாதீர்கள். நல்ல படைப்புக்களை எடுத்து ஆராய்ச்சி செய்யுங்கள். ஏன் அது நல்லா இருக்குன்னு. வாழ்க\n(‘கவிதைச் சிறகுகள்’ நடத்திய ‘கவிக்கோ அப்துல் ரகுமான் விருது’ வழங்கும் விழாவில் கவிக்கோ அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து. . .)\nபதிவர் ஸதக்கத்துல்லாஹ் at 9:33 AM 7 மறுமொழி விழுது\nஉலகம் 2009 - பகுதி 3\nஉலகம் 2009 - பகுதி 2\nஉலகம் 2009 - பகுதி 1\nதிரு.ராஜ சேகர ரெட்டி நினைவாஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiy.blogspot.com/2014/10/blog-post_11.html", "date_download": "2018-07-19T11:35:13Z", "digest": "sha1:L77PEZCYOAO5Y6FP5LTNU6RPWBIRZGQR", "length": 33979, "nlines": 282, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இன்னொரு மலாலா : \"கம்யூனிஸ்டுகளுக்கு\" நோபல் பரிசு கிடைப்பதில்லை!", "raw_content": "\nஇன்னொரு மலாலா : \"கம்யூனிஸ்டுகளுக்கு\" நோபல் பரிசு கிடைப்பதில்லை\nஇந்த வருடம் (2014) சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்த மலாலா பற்றி, உலகம் முழுவதும் எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பாகிஸ்தானிய சிறுமியை விட, மகளிர் கல்விக்கு அதிகளவு பங்களிப்புச் செய்த இன்னொரு மலாலா பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. அவருடைய பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தான் இருக்கும்: மலாலை ஜோயா பெயரில் மட்டுமல்ல, அரசியல் செயற்பாடுகளிலும் ஒற்றுமை உண்டு. அவர் இன்றைக்கும் பலத்த உயிராபத்துகளுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nபாகிஸ்தானிய மலாலா, தாலிபானால் சுடப் பட்ட காரணத்திற்காக மட்டும், மேற்குலக நாடுகளினால் அரவணைக்கப் படவில்லை. அவர் ஒரு சிறுமி. அதனால், மேற்குலக அரசியல் அபிலாஷைகளை அவரின் தலைக்குள் இலகுவாக திணிக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டிஷ் மகாராணி என்று உலகின் மிகப் பெரிய தலைவர்கள் எல்லோரும் சிறுமி மலாலாவை சந்தித்துப் பேசி விட்டார்கள். கடைசியில் நோபல் பரிசும் கொடுத்தாகி விட்டது. இனிமேல் அவர் மேலைத்தேய \"அபிவிருத்தி\" திட்டங்களின் உள்ளூர்ப் பிரதிநிதியாக கௌரவிக்கப் படுவார். அடுத்த பல தசாப்தங்களுக்கு, பாகிஸ்தானில் மேற்கத்திய கொள்கைகளை நடைமுறைப் படுத்த உதவுவார்.\nஆப்கானிஸ்தானி மலாலா, மேற்குலக அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். வயது முப்பதுக்கு மேலே இருக்கும். ஏற்கனவே இடதுசாரி அரசியல் நிறுவனங்களில் சுறுசுறுப்பாக செயற்பட்டு வருபவர். அதனால், அப்படியான ஒருவர் தனது கொள்கைகளை இலகுவில் மாற்றிக் கொள்ள மாட்டார். ஏகாதிபத்திய நலன்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு உதவ மாட்டார்.\nநோபல் கமிட்டி மட்டுமல்ல, சர்வதேச சமூகம் இன்னொரு மலாலாவை கண்டுகொள்ளாமல் விட்டமைக்கு காரணம் இருக்கிறது. மத அடிப்படைவாத தாலிபான்கள் மட்டுமல்ல, ஜனநாயகவாதிகளான மேற்குலக கனவான்களும், \"கம்யூனிஸ்டுகள்\", \"சோஷலிஸ்டுகள்\", \"இடதுசாரிகள்\" போன்றோரை விரும்புவதில்லை. \"கம்யூனிஸ்டுகளுக்கு\" சர்வதேச அங்கீகாரமும், நோபல் பரிசும் கிடைப்பதில்லை.\nஆப்கானிஸ்தான் ஒரு காலத்தில் சோஷலிச நாடாக இருந்தது என்பதையும், அங்கு சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடந்தது என்பதையும், இன்று பலர் மறந்து விட்டிருக்கலாம். எண்பதுகளுக்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறை, அதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கவும் மாட்டார்கள். ஆனால், அந்தக் காலங்களில் பெண்களுக்கு பெருமளவு சுதந்திரம் இருந்தது. பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் ஊக்குவித்தார்கள். முக்காடு அணியாத, முகத்தை மூடாத பெண்கள், பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று, பல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள். அந்தப் பொற்காலம் இனிமேல் திரும்பி வரப் போவதில்லை.\nசோஷலிச அரசாங்கத்தை பாதுகாத்து வந்த சோவியத் இராணுவம் வெளியேறியதும், கடும்போக்கு மதவாதிகளான முஜாகிதீன் குழுக்கள் ஆட்சியைப் பிடித்தன. முஜாகிதீன்கள் பிற்போக்குவாத மதவெறியர்களாக மட்டும் இருக்கவில்லை. கிரிமினல்கள், போதைவஸ்து கடத்தல்கார்கள், போன்ற சமூக விரோதிகள் தம்மை புனிதப் போராளிகளாக காட்டிக் கொண்டார்கள். அவர்களுடன் ஒப்பிடும் பொழுது, பிற்காலத்தில் வந்த தாலிபான்களுக்கு ஒரு அரசியல் சித்தாந்தம் இருந்தது என்பது மட்டுமே வித்தியாசம். மற்றும் படி, தாலிபான் செய்ததையே, முஜாகிதீன்களும் செய்தார்கள். பெண்கள் கல்வி கற்பதை அவர்களும் தடை செய்திருந்தார்கள்.\nபாகிஸ்தானில், ஆப்கான் அகதி முகாம்களில், சோஷலிச சிந்தனை கொண்ட பெண்கள் ஒன்று கூடி நிறுவனமயப் பட்டனர். RAWA (Revolutionary Association of the Women of Afghanistan) என்ற பெயரில் உருவான புரட்சிகரப் பெண்கள் அமைப்பு, அகதி முகாம்களில் வாழ்ந்த சிறுமிகளுக்கு கல்வி புகட்டுவதற்காக பாடசாலைகளை நடத்தியது. ஓர் உத்தியோகபூர்வமற்ற பள்ளிக்கூடத்தில் படித்த அகதிச் சிறுமி, பிற்காலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வருவார் என்பதை, அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், ஆப்கானிஸ்தானில் அந்த அதிசயம் நடந்தது.\nஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்த நேரம், அவர்கள் பெண்களின் கல்வி உரிமையை மறுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மகளிர் பாடசாலைகள் அனைத்தும் மூடப் பட்டிருந்த காலத்தில், இரகசியமாக சில இடங்களில் பாடசாலைகள் நடந்து கொண்டிருந்தன. தாலிபான்களின் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது, RAWA அமைப்பு, ஆப்கான் சிறுமிகளுக்கு கல்வி புகட்டி வந்தது. தாலிபான் ஆட்சிக் காலத்தில், இரகசியமாக இயங்கி வந்த பாடசாலை ஒன்றில், மலாலை ஆசிரியையாக பணியாற்றினார்.\nஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக புரிந்த வன்முறைகளை, RAWA ஆவணப் படுத்தியது. இரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட வீடியோ ஆவணங்கள், பாகிஸ்தான் ஊடாக வெளிநாடுகளுக்கு கடத்தப் பட்டன. அவற்றைத் தான், CNN தனது செய்திகளில் போட்டுக் காட்டி வந்தது. அதற்குப் பிறகு தான், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் கொடுங்கோன்மை பற்றி உலகம் அறிந்து கொண்டது.\nஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, தாலிபான்களை வெளியேற்றிய பின்னர், \"லோயா ஜிர்கா\" எனப்படும் ஆப்கான் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட்ட மலாலை, மக்களால் தெரிவு செய்யப் பட்டு, பாராளுமன்ற பிரதிநிதியாக அமர்ந்திருந்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த முன்னாள் யுத்தப் பிரபுக்கள், மத அடிப்படைவாதிகள், பிற்போக்குவாதிகள் மத்தியில், மலாலை ஒரு துணிச்சலான, நேர்மையான அரசியல்வாதியாக அமர்ந்திருந்தார்.\nமலாலை தாலிபான்களை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம், முன்னாள் முஜாகிதீன் குழுக்கள், நிலப்பிரபுக்கள், மதத் தலைவர்கள், போன்ற பல ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடினார். \"இங்கே அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், முஜாகிதீன் யுத்தப் பிரபுக்களாக இருந்த காலத்தில் புரிந்த போர்க்குற்றங்களுக்காக, சர்வதேச நீதிமன்றத்தினால் தண்டிக்கப் பட வேண்டும்...\" என்று மலாலை பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதற்கு நேரடியாக பதிலளிக்காத பிற்போக்குவாதிகள், \"மலாலை ஒரு கம்யூனிஸ்ட்\nமுன்னாள் யுத்தப் பிரபுக்களை கிரிமினல்களாக குற்றம் சாட்டிய மலாலையின் பேச்சு, அதிகாரத்தில் இருந்த மத அடிப்படைவாதிகளை ஆத்திரமூட்டியது. பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொலைப் பயமுறுத்தல் விடுத்தனர். அதனால், பாராளுமன்ற கூட்டங்களில் கூட கலந்து கொள்ள முடியாமல், வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐ.நா. படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில், காபுல் நகரில், அடிக்கடி வீடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமையில் வாழ்ந்து வருகின்றார்.\nஆப்கானிஸ்தான் போன்றதொரு அபாயகரமான நாட்டில், இத்தனை பெரிய ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். ஒரு பெண்ணாக அத்தனை சவால்களையும் சமாளித்து அரசியல் நடத்துவது சாதாரண விடயம் அல்ல. உண்மையில், பாகிஸ்தானிய மலாலாவுக்கு பதிலாக, ஆப்கான் மலாலைக்கு நோபல் பரிசு கிடைத்திருந்தால், அந்தப் பரிசுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டிருக்கும்.\n \"கம்யூனிஸ்டுகள்\" எந்தளவு நல்லவர்கள், வல்லவர்களாக இருந்தாலும், உலகம் அவர்களை கண்டுகொள்வதில்லை. \"கம்யூனிஸ்டுகளுக்கு\" நோபல் பரிசு கிடைப்பதில்லை. உண்மையிலேயே அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலிபான் போன்ற மத அடிப்படைவாதிகளையும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியவாதிகளையும் மக்களின் எதிரிகளாக நம்பும் அனைத்து அரசியல் ஆர்வலர்களையும் உலகம் புறக்கணித்து வந்துள்ளது.\nமாலாலை பல உலக நாடுகளில் நடந்த கலந்துரையாடல்கள், பொதுக் கூட்டங்களில் பங்குபற்றி வந்துள்ளார். ஆனால், ஒபாமாவோ அல்லது பிரிட்டிஷ் மகாராணியோ அவரைக் கூப்பிட்டு கௌரவிக்கவில்லை. மேற்குலக நாடுகளில் மலாலையை அழைத்து வந்து, அவரை மக்களுக்கு அறிமுகப் படுத்தியவர்கள் இடதுசாரி அமைப்புகள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.\nLabels: ஆப்கானிஸ்தான், தாலிபான், பெண் விடுதலை, மலாலா, முஸ்லிம் பெண்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //பள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"அசல் கம்யூனிச\" மே 17 இயக்கத்திடம், தமிழ் மக்களின்...\nயார் இந்த சுப்பிரமணிய சாமி\nஹாங்காங் : மறைக்கப்பட்ட கம்யூனிச எழுச்சியும், பிரி...\nகம்யூனிசத்தை எதிர்க்கும் சமூக விரோதிகளின் கவனத்திற...\nஅனைவருக்கும் இலவச மருத்துவம், அது தாண்டா \"கம்யூனிச...\nபுதுக்குடியிருப்பில் தரகு முதலாளிய இராணுவத்தின் ஆட...\nஅனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்...\nகுர்திஸ்தான்: ஜனநாயக சோஷலிச மாற்றுக்கான பரிசோதனைச்...\nபோலி இஸ்லாமியவாதிகளும் முதலாளிகளின் கைக்கூலிகளே\nஇன்னொரு மலாலா : \"கம்யூனிஸ்டுகளுக்கு\" நோபல் பரிசு க...\nயேமன் குண்டுவெடிப்பு : அமெரிக்காவுக்கு ஆபத்தில் உத...\nகொபானி : சிரியாவில் \"குர்து மக்களின் முள்ளிவாய்க்க...\nபிரான்ஸ் : உலகின் முதலாவது பேரினவாத அரசு தோன்றிய ந...\nஓநாய் அம்மா நனைகிறதென்று அப்பாவித் தமிழ் ஆடுகள் அழ...\n3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்...\nசொந்த இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு எதிரான போலித் ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T11:51:16Z", "digest": "sha1:EIDFL7W7WKTBJPIUKRPVGNUDZRTFRPTW", "length": 6150, "nlines": 99, "source_domain": "tamil.starlivenews.com", "title": "சில்லி சிக்கன் – Tamil News", "raw_content": "\nHome / சமையலறை / சில்லி சிக்கன்\nசிக்கன் – அரை கிலோ\nஎண்ணெய் – தேவையான அளவு\nமிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்\nசிக்கனை நன்றாக சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு பூண்டு, பச்சை மிளகாய் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மிளகாய்த்தூள், அரைத்த விழுது இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கிளறி வைக்கவும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் கலவையை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து கிளரி நன்கு வேக வைக்கவும். சிக்கன் வெந்து நன்கு சுண்டி வந்தவுடன் இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்.சுவையான சில்லி சிக்கன் ரெடி .\nPrevious கருவாட்டு மசாலா குழம்பு\nNext செட்டிநாட்டு சிக்கன் பிரியாணி\nதேவையான பொருள்கள்: நாட்டு கோழி – ஒரு …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nகல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.trendstime.in/?p=51", "date_download": "2018-07-19T11:08:18Z", "digest": "sha1:2XNZ5553R2YUVZV3Z7KSDJ36ZQSWJPGQ", "length": 5825, "nlines": 44, "source_domain": "tamil.trendstime.in", "title": "முதலிரவில் கணவன் மனைவி எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்..! – Trendstime தமிழ்", "raw_content": "\nமுதலிரவில் கணவன் மனைவி எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்..\nதிருமணபந்தத்தில் ஈ���ுபடும் ஆண் / பெண் , பின்பு கணவன் , மனைவியாக மாறியா பின்பு அன்று கூடுவதே சாந்திமுகூர்த்தம் அல்லது முதலிரவு எண்டு கூறுவார்கள்.முதலிரவு என்றவுடன் பால் ,பழம் , என நினைப்பது சினிமாவின் மோகம்தான். ஆனால் இப்போதைய Hi-Tech உலகில் அனைவருக்கும் தேய்ந்த விஷயம் தன இந்த முதலிரவு.\nபொதுவாக முதலிரவு சமயத்தில் ஒரு பெண் என்ன நினைக்கிறாள் என்றும் அவளைப்பற்றி ஆண் என்ன நினைக்கிறான் என்பது பற்றியும் காண்போம்.\nபொதுவாக பெண்களுக்கு முதலிரவு சமயத்தில் அதிகமாக பேசவே விரும்புவார்கள். ஆண்கள் அதற்கு இடம் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம் என்றால் முதலிரவு சமயத்தில் ஒருவரை ஒருவர் நன்றாக பேசி புரிந்துகொள்ளவே பெண்கள் விரும்புவார்கள்.\nதிருமணமான அன்று இரவே முதலிரவு என்பதால் அன்றைய நிகழ்ச்சிகள் பற்றியும் தனக்கு பிடித்தது பற்றியும் பேச ஆசைப்படுவார்கள் பெண்கள் . நீங்கள் போனில் எவ்வளவு பேசினாலும் முதலிரவு சமயத்தில் பெண்களுக்கு கூச்சமாகவே இருக்கு. பெண்களுக்கு முழுமையாக தம்,பத்திய வலு முறைகள் தெரிவது இல்லை.ஆகவே அதைப்பற்றி நீங்கள் கூறவேண்டும் .மேலும் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் . அதைத்தொடர்ந்து சிறு சிறு விளையாட்டுகள் செய்ய வேண்டும் .இதையே பெண்கள் விரும்புவார்கள். ஆனால் இதை மட்டும் நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் மனைவிக்கு அன்று உடலுறவு வேண்டாம் என்று கூறினாலோ அல்லது நினைத்தாலோ நீங்கள் கட்டாயப்படுத்த வேண்டாம் .\nமுதலிரவு சமயத்தில் பெண்களை மென்மையாக கையாள்வதையே அவர்கள் விரும்புவர்கல்.இவ்வாறு செய்தல் உங்கள் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.\nCategoriesஉறவுகள் Tagsமுதலிரவில் கணவன் மனைவி எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்..\nPrevious PostPrevious எந்த நாள் உடலுறவு கொண்டால் சீக்கிரம் கர்ப்பமாக முடியும்..\nNext PostNext காய்கறி எப்படி வாங்குவது..\nதமிழிலிருந்துதான் ஆங்கிலம் வந்தது, உலகின் தாய்மொழி தான் என நிரூபிக்கப்பட்டது, ஆதாரம் இதோ..\nஇன்றைய பேஷன் : முற்றிலும் பெண்களுக்காக..\nபேஷன் உலகம் : உங்களுக்காக…\nகோயம்புத்தூர் : சுற்றுலா தலங்கள் ..\nசென்னையில் உள்ள சுற்றுலா இடங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilamudam.blogspot.com/2013/05/2013-pit.html", "date_download": "2018-07-19T11:04:56Z", "digest": "sha1:KTVJGYCLEMZ3E5NTBOMWTSYVJGQUXXFZ", "length": 21327, "nlines": 422, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: ஆன்மாவின் இசை - மே 2013 PiT போட்டி", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஆன்மாவின் இசை - மே 2013 PiT போட்டி\nஆன்மாவின் இசை சிரிப்பு என்பார்கள். தன்னிகரற்ற அந்த இசையை, முகம் மலர்ந்த புன்னகையை, மனம் நிறைந்த சிரிப்பைக் காட்சிப்படுத்திடக் கேட்கிறது மே PiT போட்டி.\n”புன்னகை, சந்தோஷம் , மகிழ்ச்சி, ஆனந்தம்,குதூகலம்,கலகலப்பு.. இப்படி எது வேண்டுமானாலும் இருக்கட்டும்..’ என்கிறார் நடுவர் கருவாயன் என்ற சுரேஷ்பாபு, அறிவிப்புப் பதிவில். “இன்றைக்கு இருக்கின்ற பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலைகளில் நாம் சந்திக்கின்ற அனைவருமே ஒரு வித இறுக்கமான முகங்களையே பார்க்கின்றோம்..முகம் உர்ர் என இருந்தால் யாருக்காவது பிடிக்குமா என்ன...” எனக் கேட்கிறார்.\n எந்த ஒரு மன இறுக்கத்தையும் மாற்றிடும் சக்தியாக, மனக் கவலைகளைப் போக்கிடும் மருந்தாக புன்னகையும் சிரிப்பும் இருப்பதை மறுக்க முடியுமா\nகுழலூதும் பாலக் கிருஷ்ணர் போல அபிநயம் பிடிக்கிறார் :)\n‘கூடுமானவரை புன்னகை இயல்பானதாக இருக்கட்டும்’ என நடுவர் சொல்லியிருப்பதையும் நினைவில் கொள்க.\nபடம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 20-5-2013\nஇதுவரை வந்த படங்களைக் காண இங்கே செல்லலாம். உங்கள் கருத்துகளை வழங்கி ஊக்கம் தரலாம்.\nLabels: PiT பகிர்வு, அனுபவம், ஃபோட்டோ போட்டி-(PIT)\nபடங்கள் அருமை. 20 வயது வரைதான் கவலையின்றி மனம் விட்டுச் சிரிக்க முடிகிறது என்று தோன்றுகிறது. குழந்தையுடன் சிரிக்கும் தாய் வி.வி.\nதிண்டுக்கல் தனபாலன் May 8, 2013 at 8:20 PM\nநாலும் ஐந்தும் மனதை மிகவும் கொள்ளை கொண்டன...\nநானும் எனது Profile படத்தை அனுப்பி வைக்கலாம் என்று நினைக்கிறேன்... ஹிஹி... சும்மா...\nகவலை இல்லாமல் சிரிக்கும் சிரிப்பு ஆன்மாவின் இசைதான். தலைப்பு அருமை.\nபடங்கள் எல்லாம் கள்ளமில்லா சிரிப்பு அருமை.\nபுன்னகை பொன் நகை..... போட்டியில் பங்குபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nமலர்ச்சியும் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன படங்கள். மனதிலிருந்து வரும் மகிழ்ச்சியைக் குழந்தைகள் சுலபமாக வெளிக்காட்டுகின்றன. அம்மாவும் குட்டிக் குழந்தையும் பெஸ்ட்.மனதுக்கு நிறைவுதரும் போட்டியாக இருக்கப் போகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் May 9, 2013 at 6:27 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்���டுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...\n ஐந்தாவது படம் மனம் அள்ளிக்கொண்டது. பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.\nபடங்களை விட்டு பார்வை பிரிய நேரமெடுத்தன.\n3, 4, 5 படங்கள் அருமை..கலந்து கொள்ள போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nதோற்றப் பொலிவு, கூடுதல் வசதிகளுடன் NEW FLICKR - இப...\nஉன்னிடத்தில் என்னை விட்டு.. - ரோஜாப் பூந்தோட்டம் -...\nமெய்யெனப்படுவது.. - கீற்று மின்னிதழில்..\n‘மலரே.. முகம் காட்டு..’ - பன்னீரில் நனைந்த பூக்கள்...\nகோடை மழை – ‘மட்சுவோ பாஷோ’ ஜப்பானியக் கவித்துளிகள்\nஆன்மாவின் இசை - மே 2013 PiT போட்டி\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருத...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்���ம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (31)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilscreen.com/veeradevan-movie-news/", "date_download": "2018-07-19T11:31:32Z", "digest": "sha1:D6ODXFIQWC4MHFOKBG7YFN4XDF27BD5G", "length": 6387, "nlines": 69, "source_domain": "tamilscreen.com", "title": "கிராமத்தைத் தாக்கும் நச்சு நாகரிகம்... - Tamilscreen", "raw_content": "\nHomeNewsகிராமத்தைத் தாக்கும் நச்சு நாகரிகம்…\nகிராமத்தைத் தாக்கும் நச்சு நாகரிகம்…\n“வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்” என்று பசும்பொன் தேவர் சொன்ன வார்த்தையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் – “வீரத்தேவன்”.\nஇந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.\nஇவர் அகில இந்திய அளவில் கார்த்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லாவிதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் கதாநாயகனாகும் முதல் படம் இது.\nகதாநாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப்பெண். அந்த மாவட்ட கதைக்களம்.\nஅதற்கேற்ற தமிழ் பேசத்தெரிந்த கதாநாயகி. அந்த வட்டார பழக்க வழங்கங்களை அறிந்தவர் என்பதால் அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினோம் என்கிறார் இயக்குநர்.\nமற்றும் கராத்தே கோபாலன், வீரன்செல்வராசு, எம்.ஜி.சிவகுமார், மெய்ராஜன், ஜவஹர் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபாடல்கள் – யுகபாரதி, சினேகன், வீரன்செல்வராசு\nகலை – சுப்பு அழகப்பன்\nநடனம் – அசோக் ராஜா, பாரதி அகர்வால்\nஸ்டன்ட் – ஆக்ஷன் பிரகாஷ்\nஜி.எஸ்.மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கராத்தே கோபாலன் தயாரிக்கிறார்.\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – வீரன்செல்வராசு\nபடத்தை பற்றி இயக்குநரிடம் கேட்டோம்..\nநாகரிகம் என���ற நச்சு இன்று நகரத்திலிருந்து நகர்ந்து கிராமப்புறங்களையும் தாக்கி கொண்டிருக்கிறது. இந்த கால கட்டத்திலும் உயிர்ப்புடன் இருப்பது குடும்ப உறவுகளை தாங்கி நிற்கிற கிராமப்புறங்கள் தான். கிராமப்புற மக்களின் உறவுகள், அதில் உள்ள சிக்கல்கள், ஆசை, அன்பு, கோபம் போன்றவையை காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து உருவாக்கி உள்ளோம்.\nபடத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை படத்தின் தலைப்புக்கேற்ப ஆக்ஷன் படமாக உருவாக்கி உள்ளோம்.\nபடத்தின் படப்பிடிப்பு மதுரை, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது.\n‘சக்க போடு போடு ராஜா‘ இசை வெளியீட்டு விழாவில்…\nகேவலமாக இருக்கிறான் கொடி வீரன்…. – முத்தையாவை திரையுலகமே புறக்கணிக்க வேண்டும்…\nஒவ்வொரு மரமும் மரகதம்; ‘மரகதக்காடு’ படம் சொல்லும் பாடம்…\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nகடைக்குட்டி சிங்கம்… – டிவி சீரியல் கதை சினிமாவாக ஜெயித்தது எப்படி\n‘சக்க போடு போடு ராஜா‘ இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velang.blogspot.com/2013/03/blog-post_14.html", "date_download": "2018-07-19T12:01:01Z", "digest": "sha1:QJANO4H5XUBVTLU35XDY5CRFCH4XHTOL", "length": 7139, "nlines": 184, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-இணைய இணைப்பை துண்டிக்க", "raw_content": "\nLabels: இணைய இணைப்பு.வேலன்.சாப்ட்வேர்.internet off.velan.software\nஇணைய இணைப்பை துண்டிக்கவும் மீண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இணைப்புகொடுக்கவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாஸ்க்பாரில் கெடிகாரம் பக்கத்தில் இதனுடைய ஐ -கான் அமரந்துகொள்ளும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇதில் உள்ள Turn off the internet கிளிக் செய்திட உங்கள் இணைய இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் இணைப்பு தேவைப்படுகின்றது என நினைத்தால் அந்த குறிப்பிட்ட நேரத்தினை செட்செய்துகொள்ளவும்.கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇதில் உள்ள Settings கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது இணைய இணைப்பிற்கு நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து்க்கொள்ளலாம். மீண்டும் நீங்கள் பாஸ்வேரட்கொடுத்தால் தான் இணைய இணைப்பு பெற முடியும்.\nஇதன் மூலம் நீங்கள் வெளியில�� சென்றுள்ள சமயம் வேறு யாராவது உங்கள் இணைய இணைப்பினை தவறாக பயன்படுததுவதை தடுக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் வேலன்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்:-பாண்ட்களை பார்க்க -விண் பாண்ட் வியூ-பாகம்-2...\nவேலன்:-பாண்டுகளை கண்டு பிடிக்க.FontPage-பாகம் 1\nவேலன்:-வீடியோ கன்வர்டர் -J.Video Converter\nவேலன்:-e-Pub புத்தகங்களை படிக்க e-pub reader\nவேலன்:-கேமரா பேக் -Camera Bag.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/movie-review/43136.html", "date_download": "2018-07-19T11:38:50Z", "digest": "sha1:7FS7LWTQ7GTI4YEMLRIBQYCENOKT6RM4", "length": 23244, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "கத்தி - சினிமா விமர்சனம் | கத்தி - சினிமா விமர்சனம, சினிமா விமர்சனம் - கத்தி, கத்தி, விஜய், சமந்தா, ஏ.ஆர்.முருகதாஸ், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், அனிருத், விவய்சாயிகள், தண்ணீர் பிரச்னை , கதிரேசன், ஜீவானந்தம்", "raw_content": "\n`ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு அண்ணாநகரும் 25 லட்சம் ரூபாயும்... 50 நாள்கள் கடந்தும் அவிழாத மர்ம முடிச்சு\n`போட்டோவை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தீர்கள்' - மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த பள்ளி `ரஜினியின் கருத்து எங்கள் கட்சிக்கு பலத்தைச் சேர்க்கும்' - அமைச்சர் உதயகுமார் பேச்சு லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி' - மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த பள்ளி `ரஜினியின் கருத்து எங்கள் கட்சிக்கு பலத்தைச் சேர்க்கும்' - அமைச்சர் உதயகுமார் பேச்சு லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n`மின் கட்டணத்தை யார் செலுத்துவது' - கலாம் கட்டடத்தில் நடக்கும் மோதல் `குற்றம் செய்யாமல் ஜாலியாக ஜெயிலுக்குப் போகலாம்' - கலாம் கட்டடத்தில் நடக்கும் மோதல் `குற்றம் செய்யாமல் ஜாலியாக ஜெயிலுக்குப் போகலாம்’ - ஜெயில் டூரிஸத்துக்குப் பச்சைக்கொடி காட்டிய கேரளா `ஷூட்டிங் இடையில பார்க்க வர்றேன்'னு சொல்லியிருக்கார்’ - ஜெயில் டூரிஸத்துக்குப் பச்சைக்கொடி காட்டிய கேரளா `ஷூட்டிங் இடையில பார்க்க வர்றேன்'னு சொல்லியிருக்கார்’ - `தெய்வம் தந்த வீடு' மேக்னா ரிட்டர்ன்\nகத்தி - சினிமா விமர்சனம்\nதிருடன் 'கத்தி�� பிடிக்கும் விஜய், குடிநீர்க் கொள்ளையைத் தடுக்க தலைவன் கத்தியை நீட்டினால்... என்ன ஆகும்\nஇரட்டை வேட ஆள்மாறாட்டக் கதை. அதில், விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் பின்னணி காட்டி, சமூக அக்கறை விதைத்திருக்கிறார்கள். 'மாஸ்’ ஹீரோவைக்கொண்டு 'கமர்ஷியல்’ கலாட்டாக்களுடன் நிதர்சன அரசியலையும் பேச முயற்சித்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ் கார்ப்பரேட் நிறுவனங்களின் அசுர அரசியல், அப்பாவி விவசாயிகளை நசுக்கும் கடன், மோசடி தொழிலதிபர்களைப் போஷிக்கும் வங்கிகள், ஊடகங்களின் அராஜகங்கள் என, பின்பாதி முழுக்க ஆவேசம்\nண்ணா.... 'இளைய தளபதி’ங்ளாண்ணா இது '2ஜி-ன்னா என்ன.. வெறும் காத்துய்யா... அதுலேயே ஊழல் பண்ணின தேசம் இது’, 'ஒருத்தன் 5,000 கோடி கடன் வாங்கிட்டு, திரும்பக் கட்ட முடியாதுனு சொல்வான். அவனை இந்த நாடு ஒண்ணும் பண்ணாது; ஆனா 5,000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி, பணத்தைக் கட்டலைனா அவனை தற்கொலை செய்யவெச்சிரும்’, 'ஒருத்தன் 5,000 கோடி கடன் வாங்கிட்டு, திரும்பக் கட்ட முடியாதுனு சொல்வான். அவனை இந்த நாடு ஒண்ணும் பண்ணாது; ஆனா 5,000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி, பணத்தைக் கட்டலைனா அவனை தற்கொலை செய்யவெச்சிரும்’ என ஆவேசத்துடன் நடப்பு அரசியல் பேசுகிறார். அட, இந்த மாதிரி எல்லாம் பேசி உங்களைப் பார்த்தது இல்லையே ப்ரோ\n'அழகா இருக்கிற சமந்தா, படத்தில் எங்கே இருக்காங்க’ எனக் கும்பலில் தேடவெச்சுட்டீங்களே தாஸ¨’ எனக் கும்பலில் தேடவெச்சுட்டீங்களே தாஸ¨ கோட் -சூட் அமுல் பேபி வில்லனாக நீல் நிதின் முகேஷ். வேலைக்கு ஆள் அனுப்புவதுபோல விஜய்யைக் காலி பண்ண ரௌடிகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்... அம்புட்டுத்தேன்.\nசிறையின் ப்ளூபிரின்ட் பார்த்து விஜய் ஸ்கெட்ச் போடுவது, 'காயின்’ கேமில் ரௌடி கும்பலைச் சிதறடிப்பது, 'செத்த பிறகு எங்களுக்குத்தான் முதல்ல சொல்லணும்’ என்று ஊடக உள்குத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பது என பின்பாதியின் ஒவ்வோர் அத்தியாயமும் அசத்தல். ஆனால், அதற்கு முன் காமாசோமாவெனக் கடக்கும் முன்பாதியைப் பொறுமையாகப் பொறுத்தருள முடியவில்லை முருகா நீர்வளச் சுரண்டலை வார்த்தைப் புள்ளிவிவரங்களிலேயே கடந்திருக்க வேண்டுமா நீர்வளச் சுரண்டலை வார்த்தைப் புள்ளிவிவரங்களிலேயே கடந்திருக்க வேண்டுமா ஒரு பாட்டில் கோலாவுக்காக நீர், மண், விவசாயம் போன்றவை சீரழிக்கப்படுவதை, பளீர் பொளேர் காட்சிகளாகப் பதிவுசெய்திருந்தால், இடைவேளையின்போது தியேட்டரின் கோலா விற்பனையிலேயே பாதிப்பு உண்டாக்கியிருக்குமே\nசென்னை மக்களைத் தவிக்கவைக்கும் திட்டங்கள் எல்லாம் ஜோர்தான். ஆனால், அந்தக் குழாய் ஆபரேஷன் செம காமெடி. மிகச் சில சீனியர் சிட்டிசன்கள் ஒரு பாட்டில் பெட்ரோலுடன் அரசு இயந்திரத்தையே இறுக்கி முறுக்குவது... மொக்க பிளான் முருகேசு. ஊடகங்களை விஜய் புரட்டியெடுக்க, 'கோலா விளம்பர ஃப்ளாஷ்பேக்’கைச் சொல்லி தியேட்டரிலேயே கலாய்க்கிறார்கள். அம்மாம் பெரிய கம்யூனிச சித்தாந்தத்தை ஒரு இட்லியை வைத்து சொல்வதை... சட்னிகூட நம்பாது சாரே\nஹீரோயிச பில்டப் பின்னணியில் மட்டும் மாஸ் காட்டுகிறது அனிருத்தின் பின்னணி இசை. பாடல்களில் 'செல்ஃபி புள்ள...’, 'பக்கம் வந்து...’ இரண்டும் ஹிட் மிக்ஸ். கிராம வறட்சி, கார்ப்பரேட் வளர்ச்சி, குழாய் கிளர்ச்சி என எந்த ஆங்கிளிலும் பளிச் ஸ்கோப் பிடிக்கிறது ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு.\nநிலத்தை, நீர் ஆதாரத்தை, விவசாயிகளைக் காக்க, புத்தியைத் தீட்டச் சொல்லுது 'கத்தி’\n- விகடன் விமர்சனக் குழு\nகத்தி - சினிமா விமர்சனம\nசினிமா விமர்சனம் - கத்தி\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\nமேட்டூர் அணை... காவிரி காப்பானின் ஆச்சரியக் குறிப்புகள்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n`போட்டோவை ஏன் ஃபேஸ்புக்கில் பதிவுசெய்தீர்கள்' - மாணவர்களுக்கு தண்டனை கொடு\n`` `பசங்க' படத்துல விஜய் சேதுபதிதான் கமிட் ஆனார்...ஆனா, விமல் நடிச்சார்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜி���ி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nகத்தி - சினிமா விமர்சனம்\n''அது 'கத்தி' அல்ல... காப்பி\nஆசையா காக்கிச் சட்டை... ஆரம்பம் ஆக்ஷன் வேட்டை\n“அஜித்துக்குத் தெரியாத அந்த ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+225419+td.php", "date_download": "2018-07-19T11:33:11Z", "digest": "sha1:DRM4UKVO7GLYUPY7OPC5GCQVHQDHX6CM", "length": 4444, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 225419 / +235225419 (சாட்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Baguirmi\nமுன்னொட்டு 225419 என்பது Baguirmiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Baguirmi என்பது சாட் அமைந்துள்ளது. நீங்கள் சாட் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சாட் நாட்டின் குறியீடு என்பது +235 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Baguirmi உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +235 225419 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Baguirmi உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, ���ொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +235 225419-க்கு மாற்றாக, நீங்கள் 00235 225419-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 225419 / +235225419 (சாட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/televisions/samsung-series-4-32k4000-80-cm-32-inches-hd-flat-tv-black-price-pqZbrN.html", "date_download": "2018-07-19T11:57:16Z", "digest": "sha1:AB7HYYNOO4LS3DIAGYKJ7SZ3EO4SDW6T", "length": 18650, "nlines": 419, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக்\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக்\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக் சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக்அமேசான் கிடைக்கிறது.\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 20,199))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே டிபே 32 Inches\nரெப்பிரேஷ் ரேட் 60 hertz\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் mp3_audio\nஇந்த தி போஸ் Yes\nசாம்சங் செரிஸ் 4 ௩௨க்௪௦௦௦ 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட பிளாட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://engineer2207.blogspot.com/2008/09/", "date_download": "2018-07-19T11:09:30Z", "digest": "sha1:C5RYI22STYNVAAHUJKHIL45HSVTZVT3G", "length": 8229, "nlines": 243, "source_domain": "engineer2207.blogspot.com", "title": "THe WoRLD oF .:: MyFriend ::.: September 2008", "raw_content": "\nநெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்.. நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன்.. தவித்தேன்..\nதிருமண வாழ்த்துக்கள் மங்களூர் சிவா - பூங்கொடி\nகங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்\nதிருமண வாழ்த்துக்கள் மங்களூர் சிவா - பூங்கொடி\nவீக்-எண்ட் ஜொல்லு புகழ் சிவா கடந்த சில வாரங்களாக கவிப்பேரரசு வைரசிவா ஆனதுக்கு காரணம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். இப்போது நீங்க இந்த வாழ்த்து பதிவை படிக்கும் போது குமாரன் சிவா திருவாளர் சிவாவாக மாறியிருப்பார். வாழ்க்கை துணையாக ஜெர்மன் புகழ் பூங்கொடி அண்ணி வரும் இந்நல்ல நேரம் இத்தம்பதியருக்கு நல்ல பலன்களுடன், நோய் நொடியின்றி, வாழ்க்கை முழுதும் ஒருவருக்கு இன்னொருவர் விட்டுக்கொடுத்து சந்தோஷமாக வாழ பிரார்த்திபோமாக.\nசிவா அண்ணா - பூங்கொடி அண்ணி\nஜில்லென்று ஒரு மலேசியாவில் புதுசு\nபயமறியா பாவையர் சங்கத்தில் புதுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-31-20/1651-2013-sp-339/25336-2013-10-29-10-41-46", "date_download": "2018-07-19T11:40:16Z", "digest": "sha1:YFHTQBRKYKKFMVAYB53MPARXTB5HRZRD", "length": 27047, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "நம்பிக்கை எப்போதும் உடனிருக்கிறது!", "raw_content": "\nபாதுகாப்பான அணு உலை உலகில் உள்ளதா..\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\n இடிந்தகரை பகுதியில் 08-03-2016 இரவு நடந்தது என்ன\nமாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம்\nகுற்றப் பரம்பரைச் சட்டமும் பெருங்காம நல்லூர் பேரெழுச்சியும்\nநாம் அச்சப்படவேண்டிய கல்பாக்கம் அணுஉலை\nநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள்\nதமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்\nஜாதி - மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஅலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nவெளியிடப்பட்டது: 29 அக்டோபர் 2013\nஉங்களுடைய குடும்பப் பின்னனி பற்றி சொல்லுங்கள்\nஅம்மா ஒரு சமூக வளர்ச்சித் துறையில் பணியாற்றினார். அப்பாவும் சமூக ஆர்வலர்தான். ஆனால் புள்ளியியல் துறையில் பணிபுரிந்தார். இரண்டு பேருமே ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அதனால் எளிமையாக வாழ்ந்தோம். இப்பொழுதும் அப்படித்தான் வாழ்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேரையும் நான் அப்படித்தான் வளர்க்கிறேன்.\nநீங்கள் வளர்ந்து வரும்போது உங்கள் எதிர்காலம் குறித்த என்ன கற்பனை செய்து வைத்திருந்தீர்கள்\nஎன்னைச் சுற்றி புத்தகங்களுடனும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என வீட்டில் பயந்தார்கள். ‘நான் யாருடைய குடும்பத்திற்கும் பொருந்தமாட்டேன்’ என நினைத்தேன். அப்பொழுதுதான் வசமாக மாட்டினார் உதயகுமார்.\nஉதயக்குமாருடன் உங்கள் முதல் சந்திப்பைப் பற்றி கூறுங்கள்\nஎங்கள் நண்பர் ஒருவர்தான் உங்களுக்குப் பொருத்தமானவர் ஒருவர் இருக்கிறார் என்று கூறி பெயரை மட்டும் அறிமுகப்படுத்தினார். அவர் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். ஒருநாள் நேரில் சந்திப்பதற்காக இருவரும் முயன்றோம். நான் வெள்ளைப் புடவை நீண்ட ��லை முடியுடனும் இருப்பேன் என்று என்னுடைய அடையாளத்தை சொல்லி நான் அவருக்காக சாலையில் ஆட்டோவில் காத்துக் கொண்டிருந்தேன். அவரும் வெள்ளை சட்டை ஜீன்ஸ் பேண்ட்டுடன் வருவேன் என்று அடை யாளத்தை சொன்னார். அதிகம் பயத்துடன்தான் தெருவில் போகிற எல்லா வாகனத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘அவர் சொன்ன அடையாளத்துடன் ஒருவர் நான்தான் உதயக் குமார்’ என்றால் ஓடிவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. பிறகு என்னுடைய தோழி வீட்டுக்கு போய்விட்டேன். சிறிது நேரம் கழித்து அழைப்பு மணி அழைத்து கதவைத் திறந்து ‘என்ன வேண்டும் எனக் கேட்டேன். அவர் ‘மீரா யார்’ எனக் கேட்டார் ‘நான் தான்’ என்றவுடன் ‘நான் உதயக்குமார்’ என்றார். மிகவும் எளிமையாகவும் கருப்பாகவும் இருந்தார். 1987ல் அறிமுகம் ஆகி 1992ல் கல்யாணம் நடந்தது.\nஇளம் வயதிலேயே உதயகுமார் அணு உலை எதிர்ப்பாளராக இருந்தாரா\n1987லிலேயே ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று கையெழுத்து இயக்கம் நடத்தியிருக்கிறார். நான் கூட கையெழுத்து போட்டிருக்கிறேன். நண்பர் களிடையே பல துறைகளைப்பற்றி விவாதம் நடத்தும் ‘எறும்புகள்’ என்ற ஒரு இயக்கத்தை நடத்தினார். இளம் வயதிலேயே பல இயக் கங்களில் செயல்பட்டிருக்கிறார்.\nஅணு உலை எதிர்ப்புத் திட்டத்திற்கு என்ன விதமான செயல் திட்டம் வைத்திருந்தார்\n1987லே உலகில் உள்ள அணு உலைகளைப் பற்றி தெரிந்து கொண்டு அது தொடர்பாக பத்திரிக்கை களிலும் பொதுவிவாத மேடைகளிலும் அது பற்றி பேசினார். ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த அசுரனை சந்தித்து பூவுலகு இதழில் தொடர்ந்து எழுதினார். ‘ஃப்யூச்சர்’ வெளிநாட்டி தழிலும் எழுதினார்.\nகூடங்குளப் போராட்டத்தில் பெண்களின் முன்னெடுப்புப் பற்றி என்ன நினைகிறீர்கள்\nதன்னிச்சையாக பெண்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைத்து விடுகிறார்கள். அதனால் எப்பொழுதும் பெண் என்பவள் இரண்டாம வளாக நடத்தப்படுகிறாள். அந்த மக்கள் அங்கே படிக்கவில்லை. ஆனால் கல்கத்தா போன்ற மொழி தெரியாத ஊருக்கெல்லாம் போய் அங்கே உள்ளவர்களிடம் பேசிவிட்டு வந்திருக்கிறார்கள். ஈகோ இல்லாத அந்த மக்கள் மணியடிக்காம லேயே அங்கு வந்து, கூட்டத்தில் பங்குகொள் கிறார்கள். மிகவும் ஆச்சரியமானவர்கள். இவர் களை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.\nநீங்கள் நடத்தும் பள்ளிக்��ு பின்னால் இருக்கும் சித்தாந்தம் என்ன\nதேர்வை நோக்கிய மனப்பாட கல்வியாக இருக்கக் கூடாது. உலகில் உள்ள அனைத்தையும் எதிர் கொள்கிற பக்குவத்தைக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆங்கிலம் ஆங்கிலம் என இல்லாமல் தமிழ்-ஆங்கிலம் என கற்றுக் கொடுக்கிறோம்.\nகூடங்குளப் பிரச்சனையை ஒட்டி உங்கள் பள்ளிக்கு சில குழந்தைகளை பெற்றோர்கள் படிக்க அனுப்பவில்லை. அந்த குழந்தைகள் திரும்பி வர வாய்ப்பிருக்கிறதா\nஇந்தக் குழந்தைகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அருமையான குழந்தைகள். என்னை விட்டுப் போக மாட்டேன் என்று அவர்கள் அம்மாக்களிடம் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் சில பேர் அவன் போராட்டத்திற்கு ‘பணம் வாங்கிட்டு பள்ளிக்கூடம் நடத்துகிறான்’ என்று கூறி அவர்கள் குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழை வாங்கிக்கொண்டு போனார்கள். சில பேர் ‘இவ பெண் தானே பள்ளியை மூடிட்டு ஓடிடுவான்னு’ நினைத்தார்கள். கடினமான இந்தக் காலகட்டத்திலும் பள்ளியை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எதிர்நீச்சல் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nகூடங்குள மக்கள் மீதான போலீஸ் தடியடியின்போது நீங்கள் உதயகுமாரை தொடர்புகொள்ள முடிந்ததா\nசிறிது நேரம் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தது. அப்பா கைதாவார் என்றவுடன் பெரிய பையன் அழத்தொடங்கினான். சின்னவன் ‘அப்பா இனிமேல் வர மாட்டாரா’ எனக் கேட்டான். கைதாகாமல் இருக்க வேண்டும் என நினைத்தேன். கைதானால் சித்திரவதை செய்து பயமுறுத்து வார்கள். கைது, சித்திரவதை அடுத்த தலைமுறை போராட்டங்களை முன்னெடுக்காமல் செய்யும் யுக்திதான். ஒரு போராட்டத்தில் எந்த வித பாதிப்பில்லாமல் கிடைக்கும் வெற்றிதான் அடுத்த தலைமுறையை போராடத் தூண்டும்.\nஒரு சிறு வன்முறை கூட நடக்காமல் 500 நாளைக் கடந்து எப்படி இந்தப் போராட்டம் தொடர்கிறது\nமீனவ மக்கள் கடல், மீன் என இயற்கையுடன் வாழ்பவர்கள். அதீத அன்பும் கோபமும்தான் அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரிந்தது வாழ்வு, சாவு மட்டும்தான். இதற்கிடையே அவர்களுக்கு எந்த வேறுபாடும் கிடையாது. கடலில் மீன் கிடைக்கவில்லை என்றால் கூட பார்த்துக் கொள்ளலாம் என மனநிறைவடை வார்கள். உதயகுமாரின் எதிர்பார்ப்பற்ற அன்பைப் புரிந்து கொண்டார்கள். உதயகுமார் யோகா, காந்திய வழி என அமைதியை விரும்புபவர். அதன���லேயே அவர் அனைவரையும் அதையே பின்பற்ற வைத்தார். அதனாலேயே இத்தனை நாட்களாகப் போராட்டத்தைக் கொண்டு சொல்ல முடிந்தது. எல்லோரையும் விவாதப் பொருளாக மாற்ற முடிந்தது.\nகூடங்குளப் பிரச்சனை சம்பந்தமாக நாடார் களும் மீனவர்களும் பிளவுபட்டிருப்பதாக ஆரம்பத்தில் செய்தி வந்ததே. இப்போதைய நிலைமை என்ன\nஎல்லோரும் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்கள். சிலர் இதுகுறித்த புரிதலின்றி இருந்தார்கள். பின்பு தான் அவர்களுக்கு உண்மை புரிந்தது. இப்பொழுது அனைவரும் இணைந்து போராடு கிறார்கள். கூடங்குளம் மருத்துவமனையில் ஒரு முறை குழந்தையுடன் இருந்த பெண்ணிடம் கேட்டேன். உங்கள் ஊரில் அணு உலை வருகிறதே என்றேன். அதற்கு அவர் “நாங்கள் நாடார், எங்களை ஒன்றும் செய்யாது” என்றார்.\n‘அணு உலைக்கு நாடார், மீனவர் தெரியாதும்மா” என்றேன். அவர்கள் வாழ்வை அழிப்பதற்கு எப்படி எல்லாம் மூளைச் சலவை செய்திருக் கிறார்கள். பின்பு என்னுடன் அவர்கள் நன்றாகப் பழக ஆரம்பித்தார்கள். பின்புதான் கூடங்குள அணு உலை குறித்து முழு உண்மைகளையும் அவர்களுக்குப் புரிய வைத்தேன்.\nஅணு உலை வேண்டாம் என்பது நம் எல்லோருடைய எண்ணம்.இன்றைய சூழ்நிலையைப் பார்க்கும்பொழுது அணு உலை செயல்படும் சூழல் நிலவுகிறதே\nகட்டாயம் நூறு சதவீதம் அணு உலை மூடப்படும். ஒட்டு மொத்த தமிழகமும் சேர்ந்து கூடங்குளத்தை மூடவைக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்காகத்தான் போராட்டம் இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டது என நினைக்கிறேன். ஏன், நாம் சூரிய ஒளி கொண்டு மின்சாரம் தயாரிக்கக் கூடாது உலகம் முழுவதும் இது சாத்தியப்பட்டிருக்கிறது. நீர், காற்று, சூரிய ஒளி மட்டும் தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள். எனவே மாற்றத்தை எதிர்பார்ப்போம்.\nஉங்கள் வீட்டிற்கு வருகிற சட்டப் பிரச்சனை களை எப்படி எதிர் கொள்கிறீர்கள்\nபோலீஸ்காரர்கள் பல நாட்கள் தொடர்ந்து வந்து வந்து விசாரித்தார்கள். முதலில் பிரச்சனைகளைப் பற்றி பயந்தேன். மக்களுடைய பாதுகாப்பும் அன்பும் அவருக்கு இருப்பதால் இப்போது பயம் இல்லை. ‘நாம் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் கவலைப்பட வேண்டாம்’ என அவர் நம்பிக்கை கொடுத்தார். அந்த நம்பிக்கைதான் எங்களுக்கு எப்போதும் இருக்கிறது.\nஉதவி: தோழர் முகிலன், கவிஞர் ஜி.எஸ். தயாளன், கவிஞர் என்.டி. ராஜ்குமார், பத்திரிகைய���ளர் ரோஸ்ஆன்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuttyrevathy.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-19T11:49:44Z", "digest": "sha1:FKX2PUPNC7JVR5437NTNYLAZ674X6Q6R", "length": 66243, "nlines": 153, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: February 2010", "raw_content": "\nநீலவேணியின் இருபத்தியொராவது பிறந்த நாளன்று அசோக்கைச் சந்தித்தாள். மீனாவை தன் வீட்டில் கொண்டுவந்து விட வந்தவன் அவளுக்கும் மென்மையாகத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தான். அசோக் அவள் தோழி மீனாவின் சகோதரன். மழை கொட்டிக் கொண்டு இருந்த ஒரு நாள் மீனா தன் வீட்டிற்கு வந்த போது தவறவிட்டுச் சென்ற குறிப்பு நோட்டை எடுத்துச் செல்ல வந்திருந்தான். மழை வலுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அவனிடம் வீட்டிலிருந்த அனைவரும் பரவாயில்லை, மழை குறைந்ததும் போகலாம் என்று கூறியதும் தான் அவனுக்குப் பருக காபி தந்த போது அவன் தயக்கத்துடனும் அவசியமில்லையே என்ற பாவனையுடனும் வாங்கி வேகவேகமாகக் குடித்தான். இருப்புக் கொள்ளாமல் தவித்த அவனது இருப்பு எனக்கு மழையில் வெயிலாய் நீண்ட நாட்களுக்கு என்னுள் சுடர்விட்டுக் கொண்டே இருந்தது. பின்னாட்களில் அவனுக்குள் பற்றிக்கொண்ட காதலை அவன் பலமுறைகளில் தோழியின் நோட்டுப் புத்தகத்தில் கடிதங்களாக மறைத்து வைத்தும் அவள் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சைக்கிளில் திரும்புகையில் காத்திருந்து அவனும் சைக்கிளில் உடன் வந்தும் தன்னை அவளுக்குள் செலுத்திக்கொண்டே இருந்தான். நீலவேணி அதை ஏற்றுக்கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. அது இருவர் வீட்டிற்கும் தெரிந்தால் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள்.\nஅவர்கள் வாழ்ந்த அந்த ஊர் சிறு நகரத்தை ஒத்தது. எல்லோரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்தனர். ஊர் சதுர வடிவில் சாலைகள் நான்கு முனைகளிலும் முட்டிக் கொள்வதுடன் இரு கரைகளிலும் வளைந்த முதுகுகளையுடைய மரங்களையும் கொண்டிருந்தன. சதுரத்தின் ஒரு மூலையில் அம்மன் கோயில் ஒன்று அதிக அளவில் பெண்கள் கூடுவதாயும் எப்போதும் இரைச்சலுடனும் இருக்கும். மற்ற பகுதிகளில் மரங்களில் வந்தமர்ந்து ஆக்கிரமிக்கும் பறவைகளின் இரைச்சலை தவிர பெரிய சப்தஙக்ளையோ கூச்சலையோ காணமுடியாது. மாலை விரைவிலேயே அந்த ஊருக்குள் வந்து விடுவது போல மரங்கள் அந்த ஊரை கூரையிட்டுக் ���ொண்டு இருக்கும். இளவயது பெண்கள் வேலை நிமித்தமும் படிப்பு நிமித்தமும் வெளியே செல்பவர்கள் விரைவில் திரும்பிவிடுவர்.\nகல்லூரிப்படிப்புக்குப் பின் ஒரு சிறிய நிறுவனத்தில் உடை வடிவமைப்பாளராகச் சேர்ந்தாள் வேணி. அவளுக்கு அதுவே பிடித்தமான பணியாக இருந்தது. அதில் அவளே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஈடுபாடுடையவளாகி விட்டாள். பணியிலிருந்து வீடு திரும்ப எட்டு மணி ஆகிவிடும். ஊர்ச்சதுரம் இருட்டிலும் மரங்களின் அடர்ந்த கருப்பிலும் உறைந்து போய்விடும். அம்மாதிரியான மாலைகளை அசோக் தனதாக்கிக் கொண்டான். ஏதோ மரத்தின் பின்னிருந்து பாய்ந்து இழுத்து மறைவில் வைத்து முத்தமிடுவதில் அசுரனாய் இருந்தான். ஒவ்வொரு நாளும் அம்மாலையை நோக்கியே நகர்ந்தது. அல்லது மாலையில் தான் அந்த நாள் தொடங்குவதாக இருந்தது அவளுக்கு. அன்றைய இரவு முழுதும் அவள் பெற்ற முத்தம் என்ன வகை என்பதாயும் அதன் தித்திப்பு எவ்வளவு ஆழமானது என்பதாயும் படுக்கையில் புரண்டு புரண்டு யோசிக்க இனிமையானதாயும் உடலெங்கும் கவனமான பாதிப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. உடலின் வேறு பகுதிகளை தொடுவதற்கான அவனுடைய ஆவல் அங்குலம் அங்குலமாய் வளர்ந்து கொண்டிருந்தது என்பதை நீலா கவனிக்கத் தவறவில்லை. அசோக் மட்டும் தான் அவளை நீலா என்று அழைப்பான்.\nகாமத்துக்கும் காதலுக்குமான வேறுபாட்டை அறியாத பரவச வெளியாக மட்டுமே இருந்திருக்கிறது. திடீரென வெட்கை வீசும். எதிர்பாராத கணத்தில் மழையடிக்கும். எல்லோரின் தொடுகையிலிருந்தும் தூரத்தில் இருக்கும். பொதுவாக வீட்டில் யாருமே தொட்டுப் பேசுவதே இல்லை. வயது வந்த பெண்ணிடமிருந்து உலகமே விலகி இருப்பது போல தோன்றும். விடலையான மனம் கொண்ட உறவினர்கள் செய்யும் சில்மிஷங்கள் வீட்டினர் அறியாமல் தன் மீது பாயும் போதோ உடல் தன் மீது ஏதோ பறவையின் எச்சம் விழுந்து விட்ட எரிச்சலைக் கொடுக்கும். மற்ற படி உடலே சிந்தனையை முழுக்க முழுக்க மூடிக்கொள்ளும். உடல் அல்லாததை மனம் சிந்திப்பதே இல்லை எனும் அளவிற்கு இருந்த உடலை அசோக் அற்புதமான முன் தயாரிப்புகளுடன் தொட்டான். பரபரவென கூரையைப் பிரிப்பது போல அவசரப்படவில்லை. செடிக்கு நீரூற்றும்போது ஒவ்வொரு இலையையும் நீரால் கழுவி நீவி விடுவது போல் நடந்து கொண்டான். மனித கைகளின் ஆதரவான தொடுகையை��ே அறியாத உடல் அவன் பிடிகளில் தன் உணர்நரம்புகளை எல்லாம் வேகமாக நீட்டிக்கொண்டு வளர்ந்தன.\nஒரு ஞாயிறு மாலை அவன் அப்பா திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார் என்று வீட்டிற்கு வந்து கூறினாள் மீனாவிற்கும் வேணிக்கும் தோழியான குண்டு கனகா. வேணியும் தன் அப்பாவுடன் செய்தி அறிந்த பத்து நிமிடத்திற்குள் மீனாவின் வீட்டிற்குச் சென்றனர். மீனா வேணியைப் பார்த்ததுமே அவளின் இதயம் வெடிக்கும் படியாக ஓலமிட்டு அழுதாள். அவளுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ எனும்படியாக அவள் அழுவதும் மயங்கிவிழுவதுமாக இருந்தாள். மீனாவின் அம்மா தலைவிரி கோலமாக இறந்தவர் உடலைப் பார்த்தவாறே சுவர்சாய்ந்து இருந்தார். அசோக் வேணியின் கண்களைச் சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்தான். அவன் கண்கள் ஏற்கெனவே சிவந்த கரைகளை உடைய கலங்கிய குளமாக இருந்தது. வீட்டை இருள் அப்பிக் கொண்டது. உறவினர் வரும்வரை இறுதிச்சடங்குகளுக்குக் காத்திருக்க வேண்டும் என்று மீனாவின் தாய் மாமா முடிவெடுத்திருந்தார். வீட்டினை ஓலம் சுழன்று சுழன்று வந்தது. கூட்டம் வாயிலையும் சாலைகளையும் அடைத்துக் கொண்டது. மீனா வேணியின் கைப்பிடியை விடவே இல்லை. அவளின் நிலைமையைக் கண்டு வேணியின் கண்களில் அவளை அறியாமலேயே கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அங்கு பரவிய இறந்தவர் உடலிலிருந்து புறப்பட்ட மணமும் அறையில் கமழ்ந்த ஊதுவர்த்தி வாசனையும் சேர்ந்து அது ஒரு பழக்கமில்லாத வாசனையாகி வயிற்றைப் பிரட்டியது. மீனாவை அந்நிலையில் விட்டுவிட்டு நகர வேணிக்கு இயலவே இல்லை.\nநடுநிசிக்குப் பின் நெருங்கிய சில உறவினர் மட்டுமே இறந்தவர் உடலைச் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். மீனா முழுதுமாய் மயங்கிப் போய்க் கிடந்தாள். மீனாவின் அத்தை ஒருவர், அவரை கரிசல் குளம் அத்தை என்றே அழைப்பார்கள். மீனாவின் தந்தை மீது மிகவும் பாசம் உடையவர். அவர் தான் பழைய நினைவுகளை எல்லாம் கூறிக் கூறிப் புரண்டழுதார். எல்லோரும் சேர்ந்து அவரைக் கட்டுப்படுத்தி வேறு ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.\nவீட்டின் பின்னாலிருந்த கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற வேணியை அசோக் இருளுக்குள்ளிருந்து கையை நீட்டி இழுத்தான். அவளை இறுக்கிக் கொண்டு கண்ணீரா எச்சிலா என்றறியாத அளவிற்கு அவள் முகத்தை ஈரமாக்கினான். வேணி அவன் நிலைமையால் எல்லாவ��்றிற்கும் அவனை அனுமதித்தாள். பின் அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு இடப்புறமாய் திறந்த அறைக்குள் அவளை அழைத்துச் சென்று கதவுகளைத் தாழிட்டு அவளுடைய உடலுக்குத் தன்னை முழுதுமாகப் பரிச்சயப்படுத்தினான். மரணத்தின் அச்சமும் அது தந்த கலக்கமும் அவனை அதை செய்யத் தூண்டியிருக்கவேண்டும் என்று வேணி நினைத்தாள். வேணியும் மழைக்குத் திறந்து கொடுக்கும் காட்டைப் போல முழுமையாகத் தன் உடலை நனைய அனுமதித்தாள். அது காமமா, காதலின் வெளிப்பாடா, மரணத்துயரைப் பகிர்ந்து கொள்வதற்கான அனுசரனையா என்றெல்லாம் யோசித்தாலும் அது அவளின் அத்தகையதொரு முதல் அனுபவமாய் அவளுக்குள் பதிந்துவிட முற்றிலும் தகுதியானதாக இருந்தது.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 புதன், பிப்ரவரி 17, 2010 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஅதிகாலையில் அந்தத் தொடர்வண்டி நிலையம் தூக்கச்சடவில் இருக்கும் குழந்தையைப் போல நச்சரிப்புகளுடன் இருப்பதாகப் பட்டது நீலவேணிக்கு. தன்னுடைய பெட்டிகளை இடம் தேடி வைத்தப் பின் படிப்பதற்கென்று சில நூல்களை மட்டும் வெளியே வைத்துவிட்டு அமர்ந்தாள். இன்னும் நாற்பத்தியெட்டு மணி நேரம் அந்தத் தொடர்வண்டியில் பயணம் செய்வது குறித்து அலுப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. வானூர்தியில் பயணச்சீட்டு கிடைக்காததால் இந்தப் பயணம். தன் தொழில் நிமித்தமான ஒரு நேர்காணலுக்கான தேதியில் அவள் சரியாகச் சென்று சேர வேண்டியிருந்ததால் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு தொடர்வண்டியில் பயணப்பட்டாள். வண்டி நகரத்தொடங்கியது. பருவம் ஒன்றும் மோசமில்லை. இனிமையான குளிர் காற்று சன்னலோரம் சிறகடித்துக் கொண்டே இருந்தது, மனதிற்கு இளைப்பாற்றுவதாக இருந்தது. கோடை வெயிலில் இதே தொடர்வண்டியில் பயணம் செய்யும் போது கூரையின் வழியாக வெப்பமே மழையைப் போல பெய்துகொண்டிருக்கும். நல்லவேலையாக ஜன்னலோரப் பயணம்.\nஅவளுக்கு எதிரே முப்பது வயது மதிக்கத் தக்க ஓர் ஆண் அமர்ந்து நீண்ட நேரமாகக் கண்மூடி அயர்ந்திருந்தான். வேணிக்கு விசித்திரமாகப் பட்டது. வண்டிப் பெட்டிகளில் இன்னும் கூச்சல் ஓயவில்லை. அங்கும் இங்குமாக ஆட்கள் நகர்வதும் அடுத்தவர் இருப்பின் கவனமின்றி உரையாடல் நிகழ்த்துவதுமாக எல்லா அறைகளும் இணைந்து ஒரே வீடாக ஆகிக் கொண்டிருந்தது. அதற்குள் தனக்கு அருகே இர���ந்த நான்கு பேரைக் கொண்ட ஒரு வட இந்தியக் குடும்பம் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத் தொடங்கியிருந்தது. ஒவ்வொரு பொட்டலமாய்ப் பிரித்து எல்லோரும் பரிமாறிக் கொள்ளத்தொடங்கியிருந்தனர். ஒவ்வொரு பொட்டலத்தையும் அவர்கள் பிரிக்கும் போதும் ஒவ்வொரு வகையான வாசனை அங்கு பரவியது. பெட்டியில் இருந்த எல்லோரும் தங்கள் கடைக்கண்களால் அவர்களின் உணவு வகைகளை நோட்டமிட்டனர். தங்களுக்கும் ஏதோ உண்ண வேண்டும் போல உணர்வு ஏற்பட்டது போலும். வண்டியில் விற்றுக் கொண்டு வரும் ஏதேதோ நொறுக்குத் தீனிகளையும் பொழுதைப் போக்கும் உணவு வகைகளையும் வாங்கி வயிற்றை ஆற்றினர். இப்பொழுதும் எதிரே இருந்தவன் அதே போல கண்மூடி அமர்ந்திருந்தான்.\nஅவனை நிதானமாக நோட்டமிட்டாள் வேணி. அவன் அணிந்திருந்த வெங்காய நிறப் பருத்திச் சட்டையினூடே மார்புக்குள் நெரிந்து கொண்டிருந்த மயிர்கள். சிறிதாய் தாடி வளர்த்திருந்தான். தலைமுடி அக்கறையில்லாமல் பறந்துகொண்டிருந்தது. அடர்த்தியான புருவம் செதுக்கப்பட்டது போல் வரையப்பட்டிருந்தது. முகத்தில் ஓயாத சிரிப்பு என்பது அந்த மெளனமான நிலையிலும் தென்பட்டது. வேணி எழுந்து கழிவறைக்குச் சென்று தன் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். நூல்களைப் படிப்பதற்கு முன்பான ஆயத்தங்கள் மன அளவிலும் உடல் அளவிலும் அவளுக்கு நிறைய தேவைப்படும். முகம் கைகால்களை ஈரப்படுத்திக் கொள்வாள். படிக்கும்போது ஊடே தின்று கொண்டிருப்பதற்கு கடலை அல்லது பொரி போன்றவற்றை அருகில் வைத்துக் கொள்வாள். கிட்டத்தட்ட உடல் முழுதும் புத்தகங்களிலிருந்து சொற்களை வாங்கிக் கொள்ளத் தயாராகிவிடும். இதற்குப் பின் தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை இருந்த இடம் விட்டு அகலாம்ல் அவளால் வாசிக்க முடியும். தொடர்வண்டியின் கழிப்பறையில் கண்ட தன் முகம் ஏதோ ஒரு கிராமத்துப் பெண்ணின் முகம் போலவும் அவள் இடையறாத அலைக்கழிப்பில் இருப்பது போலவும் சட்டென்று நினைவுக்கு வந்து மறைந்தது.\nதன் இருக்கைக்கு வந்து அமரும்போது எதிரில் இருந்த அந்த ஆள் விழித்திருந்தான். அவள் தன் இருக்கையில் விட்டுச் சென்ற புத்தகங்களை கையில் எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான். அது அவளுக்கு கொஞ்சமாய் எரிச்சலைக் கொடுத்தாலும் அவளுக்கு அவனைப் பிடித்துப் போயிருந்தது.\n‘மன்னிச்சுக்குங்க, இஸபெல் ஆலண்டேவா...கைகளைக் கட்டுப்படுத்த முடியல\n‘என்னடா, ஒரு ஆம்பிள பெண் எழுத்தாளர வாசிக்கிறாருன்னு நினைக்கிறீங்க இல்லையா\n‘இவங்களோட தீவிர ரசிகன் நான். இவங்களோட இவா லூனா படிச்சிருக்கீங்களா கதைய அடுத்தடுத்து மாற்றி அடுக்கிக் கொண்டே போவாங்க. இவங்க தன்ன ஒரு கத சொல்லின்னு சொல்றாங்க. என்னைய கேட்டா கதைய நிகழ்த்துறவங்க. உண்மைக்கும் புனைவுக்கும் இடையில வித்தியாசமே இல்லன்னு நம்பவச்சிருவாங்க’\nபொதுவாக வேணிக்கு அதிகமாகப் பேசும் ஆண்களைப் பிடிப்பதே இல்லை. உலகின் எல்லா மூலை முடுக்கிலும் எந்த விதத் தயக்கமுமின்றி நுழையக்கூடிய ஆண்களால் தங்கள் அறிவு வெளிப்பட வெளிப்பட பீற்றிக் கொள்வதில் என்ன இருக்கிறது என்று தோன்றும். ஆலெண்டேவின் நூல்கள் அவளை அவனுடன் நெருக்கமாக்கின. தன்னை மனோகர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான். மனோ என்றே கூப்பிடுங்கள் என்று சகஜமானான். பாம்பைப் பழக்கும் இனக்குழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அத்தகைய இனக்குழுக்களை நாடு முழுதும் தேடி அலைந்து அவர்களுடன் வசித்து அம்மக்கள் கையாளும் தொழில்நுட்பங்களைக் கண்டறிவதுமாக இருக்கிறான் என்று கூறினான். பேசும்போது தெளிவான உச்சரிப்பை ஏற்படுத்த விரும்பிய முயற்சியில் முகம் ஏதோ விநோதமான களையைத் தந்தது.\nஇருவரும் ஒன்றாகவே வந்து வண்டியில் ஏறியது போல ஒன்றாக உண்டனர். ஒன்றாகத் தேநீர் வாங்கிப் பருகினர். ஒருவரையொருவர் இணக்கமாக்கிக் கொண்டனர். கடந்த காலம் பற்றிய நிகழ்வுகளையும் சென்று சேர விரும்பிய இடம் பற்றியும் பகிர்ந்து கொண்டனர். உரையாடல்களுக்கிடையே இருந்த மெளனம் கூட ஒருவரையொருவர் முழுவதுமாக அறிந்திருந்த இருவருடையதாக இருந்தது. பொழுது நகர்ந்து நாளின் எல்லையைத் தொட்டது. இரவு என்பது முற்றிலும் தனக்கேயானது என்பதைப் போல ஓடிக்கொண்டிருந்தது வண்டி. உறக்கத்தின் போது நழுவி கீழே விழுந்த போர்வையை அவன் இழுத்துப் போர்த்திவிட்டு உறங்கச் சென்றான் என்பதை அரைத் தூக்கத்திலும் கவனித்தாள். கண்மூடிய போது அவளை ஒரு கனவு அழுத்தியது. அவள் மல்லாக்கப் படுத்திருக்கத் தடிமனான பாம்பு ஒன்று அவள் தலையிலிருந்து மெதுவாக அவள் மீது கீழ் நோக்கி நகர அவள் எந்த ஒரு தருணத்திலும் பாம்பின் மூச்சுடன் தன் மூச்சு உரசி பாம்பைச் சீண்டாமல் இர��ப்பதற்காக தன் மூச்சை அடக்கி அது, கால் வழியாக வெளியேறும் வரை காத்திருந்து அது நகர்ந்ததும் பெருமூச்சிட விழித்துக் கொள்கிறாள்.\nமறுநாள் காலை அவளுக்கு முன்பாகவே எழுந்திருந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தான் மனோ. அவள் எழுந்ததும் மென்மையாக சிரித்துவிட்டு, காலை உணவு வாங்கி வைத்திருப்பதாகக் கூறிவிட்டுத் தொடர்ந்து படிக்கத் தொடங்கினான். பெட்டியில் இருந்தவர்கள் தொடக்கத்தில் இருவரின் நடவடிக்கைகளையும் அந்நியர்களைப் போல கவனித்தனர். அவ்விருவரும் தம் உலகில் முற்றிலுமாகத் தொலைந்தப் பின் அவர்களை அப்படியே மறந்து விட்டனர்.\nமனோ பேசும்போது கண் நோக்கிப் பேசினான். தன்னையே முன்வைக்கும் குணமழிந்து எல்லோரின் இருப்பையும் பொருட்படுத்தியதான எண்ணங்களே அவன் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்ததாகப் பட்டது. அவளுடன் பேசுகையில் அவள் உடல் மீறிய உரையாடலையும் அதே சமயம் அவள் உடலைப் பொருட்படுத்திய ஒரு கண்ணோட்டத்தையும் கொண்டிருந்தான். அவள் அவனை கவனிக்காத சமயங்களில் அவன் தன்னை உற்று கவனித்துக் கொண்டிருக்கின்றானோ என்று தோன்றினால் அவன் நன்கு உறங்கிக் கொண்டிருப்பான். இப்படி இருநாட்களும் திளைப்பாகவும் விழிப்பாகவும் இருந்தது. அவள் உடல் ஒரு காட்டைப் போல அவள் வாழ்க்கையினும் பெரிதாக மாறிக் கொண்டே இருந்தது. கட்டறுந்த கொடிகளாய் அவளுடைய உணர்ச்சிகள் மரமேறின. மரங்களின் தடித்த அடிமரங்கள் வெளிப்படுத்த முடியாத ரகசியங்களுக்குள் புதைந்திருந்தன. மண்ணையும் உயிரையும் இணைக்கும் உடலுக்குள் கூக்குரலிட்டுச் சிறகடிக்கும் பறவையின் உணர்வைத்தந்துகொண்டிருந்தான். அடுத்த இரவும் வந்தது.\nகழிவறைக்குச் சென்று திரும்பியவள் மனோ பெட்டியின் நுழைவாயிலில் காற்று அவன் தலைமுடியை களியாட்டம் கொள்ளுமாறு நிற்கக் கண்டாள். புன்னகைத்தவாறே இவளும் சென்று அவனருகில் நின்றாள். எதிரே நிலவு வானில் நகர்ந்து கொண்டிருந்தது. சாம்பலாய் பூத்திருந்த வானில் நிலவு வெள்ளியாய் மின்னியது. அதுவும் வண்டிக்கு இணையாக வேகமாய் ஓடியது போலவும் தோன்றியது. மலைத் தொடர்கள் பின்னணியில் கருமையாய் உயர்ந்திருந்தன. குளிர் காதருகில் காற்றாய் கீறியது. தனது துப்பட்டாவை சுழற்றிப் போர்த்திக் கொண்டாள். இருவரும் பேசாமலேயே மெளனமாய் நீண்ட நேரம் அங்கேயே நின்றாற்ப���ல இருந்தது. ’உள்ள போலாமா’ என்று கேட்டாள். அந்தக் கூட்டத்துக்குள்ள ரொம்ப நெருக்கடியா இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் நிக்கலாமே’ என்று கேட்டாள். அந்தக் கூட்டத்துக்குள்ள ரொம்ப நெருக்கடியா இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் நிக்கலாமே’ என்றவன் அவளின் இடது கையைப் பற்றி அவளை அருகிழுத்து நெஞ்சிலும் இதழிலும் முத்தமிட்டு அவளை தோளோடு அணைத்துக் கொண்டான். இவள் அவனை அருகிழுத்து இதழில் மீண்டும் முத்தமிட்டாள். இதழ் கொஞ்சம் நுங்கைப் போல சுவைத்தது. அருகில் அணக்கம் கேட்க தோள்பக்கம் திரும்பினாள். ஓர் ஏழைப் பெண் கையில் குழந்தையுடன் அருகே ஒரு சிறுமி, அவளின் மகளாக இருக்க வேண்டும், ஒரு புறம் அழுகிய கொய்யாவை வாயடைத்துக் கடித்துக் கொண்டிருக்க இரந்து நின்றனர். இருவரும் விலகிக் கொண்டனர் வெட்கம் நிறைந்த புன்னகையுடன். *\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 திங்கள், பிப்ரவரி 15, 2010 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமுக்கியமான சில பத்திரிகைகளையும் செய்தித்தாள்களையும் தவிர மற்றவற்றைப் படிப்பதைக் குறைத்துக் கொண்டே வருகிறேன். ஏனெனில் அவற்றின் பின்னுள்ள நம்பகத்தன்மை எனக்குக் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் இது தான் சம்பவம் என்று உரைக்கப்பட்ட செய்தியின் பின்னால் மறைந்து கிடக்கும் உண்மை மிகவும் தாமதமாகக் கிடைக்கிறது. ஆகவே எந்தச் செய்தியின் மீதான எனது நம்பகத் தன்மையும் முற்றிலுமாக எனக்கு இல்லாமல் ஆகிவிட்டது. அல்லது செய்தியின் வரிகளுக்கிடையே நான் வேறொன்றை வாசிக்கும் கண்களை வளர்த்துக் கொள்வதில் முனைந்திருக்கிறேன்.\nகாதலர் தினத்தை எதிர்த்து இந்து மக்கள் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது தினமணியில் வெளியான செய்தி. இன்றைய யதார்த்தத்தில் சாதிக்கலப்பு நடைபெறும் சாத்தியம் அதிகமுடையது காதலர் திருமணத்தில் தான். ஆகப்பட்ட வழிகளிலெல்லாம் இதை தடுத்து விட்டால் இந்து மதத்தின் சனாதனத்தைக் காப்பாற்றி விடலாம் இல்லையா\nபொதுவாகவே மஹாஸ்வேதா தேவி முதல் அருந்ததி ராய் வரை, ஏன் இந்தியர்களாக அறியப்பட்ட உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கூட உலகப்பொது அரங்கில் இந்தியப் பிரச்சனைகளைப் பேசும் போது அவற்றின் மையமாகவும் மூலமாகவும் சாதியமைப்பு இருக்கிறது என்று பேசத் தயங்��ுகிறார்கள். ஏனெனில் அவர்களாக எழுத்தாளர்களாக எழுந்து வந்ததெல்லாம் மேல் சாதித்தளத்திலிருந்து தானே கிரிஷ் காசரவல்லி என்ற முக்கியமான கன்னட திரை இயக்குநரிடம், ‘நீங்கள் பொதுவாக மற்றவர்களிடம் விரும்பாதது என்ன கிரிஷ் காசரவல்லி என்ற முக்கியமான கன்னட திரை இயக்குநரிடம், ‘நீங்கள் பொதுவாக மற்றவர்களிடம் விரும்பாதது என்ன’ என்ற கேள்வியை முன்வைத்த டெஹல்கா பத்திரிகையிடம், ‘மற்றவர்களிடம் காணப்படும் சாதி குறித்த முற்சாய்வு நிலைகள்’ என்று கூறியிருப்பதே கூட எனக்கு அவரின் நுண்மாண் நுழைபுலம் என்று வியக்கத் தோன்றுகிறது.\nசென்ற வார ’த வீக்’ பத்திரிக்கையின் முகப்புக் கதை 95 வயது நிறையும் குஷ்வந்த் சிங் பற்றியது. நிறைந்த பாலியல் சுகங்களுடனும் பெண்களுடனான அவரது உறவுகளையும் தூக்கிப் பிடித்த கதை. 95 வயது நிறைந்த எழுத்தாளர் தன் படைப்பாற்றலுக்குப் பின் ஆதாயமாக்கிக் கொள்வது இவை மட்டும் தானா என்ற சலிப்பு தோன்றுகிறது.\nதினமணியில் ஞாயிறு தோறும் வரும் புதிய பகுதி ‘தமிழ்மணி’ என்பது. சில மாதங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க ஒரு பகுதி. தமிழ் மொழியினை நுணுகி ஆராய்ந்த மரபார்ந்த படைப்பாளிகளையும் நவீன படைப்பாளிகளையும் அதே சமயம் நவீன படைப்பாளிகளையும் பற்றிய குறிப்புகளாகவும் பத்திகளாகவும் வெளிவருவது அரிய தகவல்களை தருவதுடன் இன்றைய காலத்துடனான பொருத்தப்பாடுகளையும் உணர்த்துகிறது.\nமூலை முடுக்கெல்லாம் உண்மைகளையும் சத்தியங்களையும் மொழிவது போய் எங்கோ மூலை முடுக்குகளில் மட்டுமே அவை காணக் கிடைப்பதாய் பத்திரிக்கைகள் ஏன் மாறிவிட்டன\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 திங்கள், பிப்ரவரி 15, 2010 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇருபத்தியோராம் நூற்றாண்டின் கவிதைச் செல்நெறிகள் என்ற பொருளில் ஒரு நாள் கருத்தரங்கை கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் சாகித்ய அகாடமியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் இரவிச்சந்திரன் அவர்களின் அழைப்பின் பெயரில் நானும் சென்றிருந்தேன். பேசப்பட வேண்டிய பொருளும் காலகட்டமும் பொருத்தமானதாக இருந்தாலும் ஏனோ அங்கு அதன் தொடக்கத்தைக் கூட நிகழ்த்திட முடியாத ஒரு சூழலைத் தான் வானம்பாடிகள் ஓங்கியிருந்த அந்த அரங்கம் கொண்டிருந்தது.\nவானம்பாடிகளின் கவிதை இயக்கத்திற்கு இணையாகவும் எதிராகவும் மறுத்தும் நிறைய இயக்கங்கள் தோன்றி செழுமையான மொழியையும் அரசியலையும் எட்டிவிட்ட இக்காலக்கட்டத்தில் வானம்பாடிகள் என்ற இயக்கம் முதுமையை எய்துவிட்ட ஓர் இயக்கமாகவே தோன்றுகிறது. வெளிப்படையாகப் பேசுவோம், வெடிப்புறப் பேசுவோம் என்ற முழக்கங்களோடு இருந்தாலும் கவிஞன் என்ற ஆளுமையையும் கவிதையின் அர்த்தப்பாட்டையும் கவிதையின் சமூகப் பங்கெடுப்பையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மனோநிலையை இன்றும் அவர்களிடம் காண நேர்ந்தது அவர்களின் அவலநிலைக்கு ஒரு சான்று. முற்போக்கான கருத்துகளைக் கொண்ட கவிதைகள் என்ற அடைமொழியுடன் அவர்கள் எழுதுவது எனக்கென்னவோ தினமலரில் இடம்பெறும் துணுக்குக் கவிதைகளைப் போன்று தாம் இருக்கின்றன. அதுமட்டுமன்றி, ஒருவரின் கவிதையில் இடம்பெற்ற ‘வாடகைத் தாய்’ என்ற சொல்லுக்கு மேடையில் இருந்த புவியரசு அவர்கள் கொல்லென்று சிரிக்க அரங்கத்திலிருந்தோரும் சிரித்து வைக்க ஓர் அந்நியமாதலை என்னால் உணர முடிந்தது.\nவானம்பாடிகள் கவிதை இயக்கமும் என்னைப் பொறுத்த வரை ஒரு கவிதைப் போக்கு அவ்வளவே. அது மாதிரியான வேறு வேறு நவீன சிந்தனைப் போக்குகளுடன் கிளர்ந்தெழுந்த கவிதை இயக்கங்கள் எல்லாம் இன்று தீவிரப்பட்டிருக்கையில் ஓய்ந்து போனதே வானம்பாடிகள் என்பதை நாம் ஒத்துக்கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அதே சமயம் அன்று நவீனக் கவிதை என்று சொல்லப்பட்ட இடத்திலேயே அது நிற்கவில்லை. மொழியை பரிசோதனை வடிவத்தில் கையாண்டு கவிதை படைத்தளித்தப் போக்கும், மொழியை அக மலர்ச்சிக்குப் பயன்படுத்திப் புறஎழுச்சியை உருவாக்கிய கவிதைப் போக்கும் ஒரே சமயத்தில் இணையாகச் செயல்பட்டுள்ளன. மொழியை ஒரு சொகுசாகக் கருதிய இடத்திலிருந்து நகர்ந்து அதை ஒரு சமூக அசைவாக நோக்கிய இடத்திற்கு நகர்த்தி வந்த படைப்பாளிகள் எல்லோருமே அந்த வானம்பாடிகள் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாகித்ய அகாடமியின் மைய நாற்காலியில் அமர்ந்து கொண்டதாலே தங்களின் சித்தாந்தத்தை அங்கிருந்தே திணித்துவிட முடியும் என்ற ஒற்றை நம்பிக்கையில் இன்னும் அந்த இயக்கம் பாடிக்கொண்டிருப்பது வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய விஷயம்.\nமற்ற மாநிலங்களில் இது போல இல்லை. தங்களின் மொழியில் நிகழும�� நவீனத்தையும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் முதன்மையாகப் பறைசாற்றிக்கொள்வதில் அவர்கள் பின் தங்குவதில்லை. அதுமட்டுமல்லாமல் சாகித்ய அகாடமி விருதுபெற்று மற்ற இந்திய மொழிகளுக்கு ஆக்கம்பெறும் தமிழ்ப் படைப்புகளை வாசித்து அவற்றின் தரம் குறித்து எள்ளி நகையாடுவார்கள் என்பதும் ஐயமில்லை.\nநூறு பேருக்கும் மேலான மாணவர்கள் நிறைந்த அரங்கில் கவிதை என்பதற்கு வழங்கப்படும் முகவுரையும் செல்நெறிகளும் அவையில்லை என்பதே என் ஆதங்கம். பழமொழிகளைப் புரட்டிப்போட்ட வரிகளோ, ஒரு சிந்தனையின் புதிய ஆனால் மலிவான பதிவையோ எந்த வகையான ஒரு சொல் அல்லது நடை லயமும் அற்ற வடிவத்தில் எழுதி வாசிப்பது, அரசியல் அரங்கங்களின் வடிவங்களாய்ப் பொதியப்பட்ட தொலைக்காட்சி கவியரங்கங்களில் இடம்பெறும் அதே தொனியில் இரண்டிரண்டு முறைகள் வாசிக்கப்படும் வரிகள், திரைப்பாடலாசிரியர்கள் எழுதுவதே கவிதை வரிகள் என்ற சராசரி மனிதனின் சமரசங்களை ஏற்ற மொழியின் பதிவு, என்ற ரீதியில் கவிதை என வழங்கப்பட்டதும் கவிதையாக நம்பப்படுவதும் காலத்தின் தேக்க நிலை போல தோன்றியது.\nவானம்பாடிகள் குறிப்பிடும் புரட்சி என்பது வெறுமனே பேச்சளவில் இருப்பது. செயளவிலும் இயக்க அளவிலும் அவை வடிவுறாமல் இருப்பதற்குக் காரணமாக இதில் ஈடுபடும் ஒவ்வொருவரும் எவ்வாறு தத்தம் புகழுக்காக அங்கீகாரத்திற்காக அதிகாரத்திற்காக சமரசங்களுக்குச் சரணடைந்தார்கள் என்பதை வரலாறு அறியும் அல்லது அவர்கள் பெற்ற விருதுகள் வழியேயும் அறியக்கூடும். இவர்களின் ஆளுமையின் குறைபாடாகவே இவர்களின் குரல்கள் ஒலித்ததாகத் தோன்றுகிறது. அரங்கில் ஒலிக்கும் தற்காலிக சபாஷ்களுக்காகவும் ‘உச் உச்’களுக்காகவும் கவிதை வாசிக்கும் இவர்கள் கோவையைப் பீடித்த நோய்களைப் போன்று தோன்றினர்.\nஒடுக்கப்பட்ட மக்களின் குரலென்று தங்களைக் கூறிக்கொள்ளும் இவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் என்று தம்மை முன்மொழியும் இவர்கள் தம்மைக் கூவிக்கூவி இவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு சமூகப்பிரக்ஞை அழுத்தமாக இல்லை. மேலோட்டமான பொருள் விளையாட்டுகள் தாம் இருக்கின்றன. பிரச்சார முழக்கங்களைப் போலவும் இன்றைய சுவரொட்டிகளில் ஒலிக்கும் கோஷங்களைப் போலவுமே இருக்கின்றன.\nஅன்றைய நிகழ்வு குறித்த எனது சில எதிர்வின��கள்:\n1.புவியரசு அவர்கள், ’நாங்கள் இப்படித்தான் எழுதுவோம், பூடகமாய் எழுதவேண்டிய அவசியம் எமக்கில்லை’ என்று மேடையில் கையடித்துப் பேசியது மாணவர்களை எதிரிகளாகக் கருதியா அல்லது அழைக்கப்பட்டிருந்த கவிஞர்களான சுகுமாரன், உமா மஹேஷ்வரி, என்னைப் போன்றவர்களை எதிரிகளாகக் கருதியா என்று தெரியவில்லை\n2.எல்லோர் சொல்லிலும் விளையாடிய இறுமாப்பு கவிஞர்களின் ஆளுமைக்குப் பொருத்தமானது என்பதை உருவாக்கியது திராவிட இயக்கமா அல்லது அதன் மரபைத் தூக்கிச் சுமக்கும் வானம்பாடிகளுக்கே உரியதா\n3. மாணவர்கள் வானம்பாடி இயக்கத்தின் போக்கைப்பற்றித் துளியும் அறியாதவர்கள் என்பதும் ஏன், நவீனக் கவிதை குறித்த எந்தப்பரிச்சயமுமே அவர்களுக்குத் துறையிலிருந்து வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதும் தெளிவானது.\n4. 1971 –ல் கோவையில் தொடங்கி இன்னும் ஓர் நோயைப் போல இலக்கியத்தையும் சமூகத்தையும் பீடித்துக் கொண்டிருக்கும் வானம்பாடியை வளர்த்தெடுப்பதைக் காட்டிலும் வேறு பணிகளை சாகித்ய அகாடமி கையிலெடுக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.\n5. மேடையில் ஓய்ந்து போன குரலில் உணர்ச்சி வயப்பட்ட வானம்பாடிகளைப் பார்க்கும்போது அக்கவிஞர்களின் உடல் நலம் குறித்தும் அவர்களைக் கவிஞர்களாகக் கொண்ட நமது சமூக நலம் குறித்தும் அநியாயத்திற்குக் கவலை கொண்டேன்.\n6. எல்லாவற்றிலும் வேதனையானது, பாரதியார், பாரதிதாசன் பெயரைச் சொல்லிச்சொல்லி இவர்கள் தம்மை அவர்களின் வாரிசுகளாக ஆக்கிக் கொண்டது தான்.\nஎன்றாலும் கோவைக்கு மேற்கொண்ட பயணம் விரயமாகவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சூழல் இயற்கையின் அழகுகள் அசையக் கூடியது. கண் முன்னே மயில்கள் பறந்து திரிவதையும் சாலைகளை முயல்கள் கடப்பதையும் புதருக்குள்ளிருந்து குயில்கள் பறந்து வெளியேறுவதையும் நேரடியாகக் காணலாம். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் ’தோற்றுப்போனவர்களின் பாடல்’ கவிதைத் தொகுப்பை வாசிக்க நேரம் கிட்டியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர் முத்துக்குமாரைச் சந்திக்க முடிந்தது. வேறென்ன வேண்டும், என் போன்றவர்க்கு\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வியாழன், பிப்ரவரி 11, 2010 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/component/k2/itemlist/user/952-superuser?start=15", "date_download": "2018-07-19T11:53:28Z", "digest": "sha1:SW76LYBPNNCXVO2YGH4N2VCZQERUJDER", "length": 23214, "nlines": 114, "source_domain": "newtamiltimes.com", "title": "Super User", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018 00:00\nஒரு நாள் கிரிக்கெட் : தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவ��ு ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.\nஇந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 18 பந்துகளை எதிர்க்கொண்டு 2 ரன்களில் அவுட் ஆனார்.\nஇதனையடுத்து ஷிகர் தவானும், விராட் கோலியும் இந்திய அணிக்கு ரன் சேர்க்கும் பணியை தொடங்கினார்கள். 17.4 வது ஓவரில் இந்தியா இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 44 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின்னர் விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் அவுட் ஆனார். டோனியுடன் விளையாடிய விராட் கோலி 71 ரன்களில் அவுட் ஆனார்.\nஇங்கிலாந்து பந்து வீச்சாளர் அடில் ரஷித் இந்தியாவின் முக்கிய விக்கெட்களை வீழ்த்தி, கட்டுக்குள் வைத்தார். விராட் கோலி அவுட் ஆன பின்னர் களமிறங்கிய வீரர்களும் அவர்களுடைய பங்கிற்கு இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தார்கள். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 256 ரன்களை எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்த இந்த ஜோடி 4.4-வது ஓவரில் பிரிந்தது. ஜேம்ஸ் வின்ஸ் 27 ரன்களில் ஹர்திக் பாண்டியாவால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஜோய் ரூட் களம் புகுந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய பேர்ஸ்டோ ( 30 ரன்கள், 13 பந்துகள், 7 பவுண்டரிகள்) தாகூர் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்.\nஇதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், ஜோய் டூட்-உடன் கை கோர்த்தார். இந்தியாவின் பந்து வீச்சை சிறிதும் சிரமமின்றி எதிர்கொண்ட இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி இங்கிலாந்து அ��ியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய அணியினர் எவ்வளவோ முயன்றும் பலனளிக்காததால், 44.3 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோய் ரூட் சதம் அடித்து போட்டியை நிறைவு செய்தார். மோர்கன் 88 ரன்கள் குவித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.\nஇந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று கோப்பையை கைப்பற்றியது.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018 00:00\nகாங்கிரஸ் காரிய கமிட்டியில் அதிரடி மாற்றம்\nகாங்.,காரியக்கமிட்டியை மாற்றி அமைத்துள்ளார் காங்., தலைவர் ராகுல்.இது குறித்து கூறப்படுவதாவது:\nஅனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கட்சியின் காரியக் கமிட்டியை மாற்றி அமைத்துள்ளார் கட்சி தலைவர் ராகுல் .\nஇதன்படி ராகுல், சோனியா, மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத் ஆகியோர் கமிட்டிஉறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் மல்லிகார்ஜூனே கார்கே, சித்தராமையா, ஏ.கே.அந்தோணி, உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.காரியக்கமிட்டியின் நிரந்தர அழைப்பாளர்களாக ஷீலா தீட்சித், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018 00:00\nபுதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகிறது\nரிசர்வ் வங்கி, புதிய, 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட உள்ளது.\nஇவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய பிரதேசத்தின் தேவாஸ் நகரில் உள்ள கரன்சி அச்சகத்தில், புதிய, 100 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளது. வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்த கரன்சி, தற்போது உள்ள, 100 ரூபாய் நோட்டின் அளவை விட குறைவாகவும், புதிய, 10 ரூபாயை விட சற்று பெரிதாகவும் இருக்கும்.\nஅதில், குஜராத்தில், சரஸ்வதி நதிக் கரையோரம் அமைந்துள்ள, 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, உலகப் புகழ் பெற்ற, ராணி படிக்கல் கிணறு படம் இடம்பெற்றுள்ளது.\nபுதிய, 100 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தாலும், பழைய, 100 ரூபாய் நோட்டு செல்லுபடியாகும். ரிசர்வ் வங்கி, புதிய, 100 ரூபாய் நோட்டை அடுத்த மாத துவக்கத்தில் வெளியிடும் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ப��து, தேவாஸ் அச்சகத்தில் தான், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018 00:00\nபசு வன்முறையாளர்களை தண்டிக்க புதிய சட்டம் : உச்ச நீதிமன்றம் யோசனை\nபசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக வன்முறை தாக்குதல் நடத்துபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அதிகரித்து வரும் கும்பல் வன்முறையாளர்களைத் தண்டிப்பதற்கு நாடாளுமன்றம் புதிய தண்டனைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக, நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக சேர்ந்து அப்பாவிகளை அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதே போல, குழந்தை கடத்தல் என்ற வதந்திகளால் அப்பாவிகளை கும்பலாக அடித்துக்கொலை செய்யும் சம்பவங்களும் நடந்துவருகின்றன. இப்படி பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி துஷர் காந்தி, தெஹ்சீன் பூனவாலா என்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கும்பல் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் ஒழுங்குக்கு அரசாங்கம்தான் பொறுப்பு. ஆகையால், நாடு முழுவதும் கும்பல் வன்முறைகளை கையாள்வதற்கு நாடாளுமன்றம் புதிய தண்டனை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறினர்.\nமேலும், கொடூரமான கும்பல் வன்முறை புதிய விதிகளாக மாறுவதை அனுமதிக்க முடியாது. அவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இது போன்ற வன்முறை சம்பவங்களில் மாநில அரசுகள் செவிமடுக்காமல் இருக்க கூடாது.\nசட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள முடியாது. யாரும் தங்களை தாங்களே சட்டமாக்கிக்கொள்ள முடியாது\" என்று கும்பல் வன்முறை சம்பவங்களுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅதோடு, நாடு முழுவதும் பசு பாதுகாப்பு பெயரில் நடைபெறும் வ��்முறைகளை ஒழிப்பதற்கு உச்ச நிதிமன்ற நீதிபதிகள் வழிகாட்டு விதிகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018 00:00\nசினிமாகாரங்களுக்கு புத்தியே கிடையாது - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு\nடி.ஆருக்கு மட்டுமல்ல சினிமா காரங்களுக்கே அவ்வளவாக புத்தி இருக்காது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விஜய் நடித்துவரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.\nஏனென்றால் அதில் விஜய் புகைபிடிப்பது போல் காட்சி இருந்தது. இதுகுறித்து பேசியிருந்த டி.ராஜேந்தர் இவ்வளவு பேசும் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது புகையிலைக்கு தடை விதித்திருக்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார். அதேபோல் டி.ஆரின் மகன் சிம்பு இதுகுறித்து அன்புமணியிடம் விவாதிக்க தயார் என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் பாமக தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணியிடம், ஏன் நீங்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது புகையிலைக்கு தடை விதிக்கவில்லை என டி.ஆர் கேள்வி கேட்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதுகுறித்து பேசிய அன்புமணி புகையிலைக்கு தடை விதிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை, ஆனால் குட்காவிற்கு சுகாதாரத் துறையால் தடை விதிக்க முடியும். அதனால்தான் நான் அமைச்சராக இருந்தபோது குட்காவை தடை செய்தேன். புகையிலையை தடை செய்ய வேண்டுமென்றால் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், வர்த்தக துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும். இருந்தபோதிலும் புகையிலைகள் மீது, அதனால் வரும் அபாயங்களை வரைய வேண்டும் என உத்தரவிட்டதே நான் தான்.\nஅது இன்று முதல் நடைமுறையில் உள்ளது. அப்படி இருக்கும் வேளையில், இது குறித்து நான் பல முறை விளக்கமளித்து விட்டேன். ஆனால் விடாமல் இதனை டி.ஆர் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு காரணம் டி.ஆருக்கு மட்டுமல்ல சினிமா காரங்களே கனவு உலகத்தில் வாழ்பவர்கள், அவர்களின் சிந்தனை வேறு மாதிரியாக இருக்கும்.\nசுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு அவ்வளவாக புத்தி சரியாக இருக்காது என அதிரடியாக பேசினார் அன்புமணி.\nபக்கம் 4 / 2097\nஇணைப்பில் உள்ளவர்கள்: 127 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinkarasan.blogspot.com/2012/06/blog-post_5679.html", "date_download": "2018-07-19T11:42:15Z", "digest": "sha1:EGJDPPMNVFGP5ZQDIXHOP37S4CVR5ETB", "length": 12163, "nlines": 98, "source_domain": "thinkarasan.blogspot.com", "title": "அரசன்: நரம்புத் தளர்ச்சிக்கு", "raw_content": "\nஎன்னைச் சுற்றி நடக்கும் விவாதங்களின் தொகுப்பு\nஅசுவகெந்தி எனும் அமுக்குராகிழங்கு 550 கிராம், ஏலக்காய் 35 கிராம், சுக்கு 35 கிராம், மிளகு 35 கிராம், அரிசித்திப்பிலி 35 கிராம், ஓமம் 35 கிராம், அதிமதுரம் 35 கிராம், சீரகம் 35 கிராம் ஆகியவை\nசெய்முறை: அமுக்குரா கிழங்கை பசும்பாலில் வேக வைத்து சுத்தி செய்து காயவைத்து தூள் செய்து கொள்ள வேண்டும். மற்ற சரக்குகளை (சுக்கு, அதிமதுரம் தவிர) லேசாக வறுத்து தூள் செய்து கொள்ள வேண்டும். சுக்கையும் அதிமதுரத்தையும் தனித்தனியாக லேசாக மேல் தோலை நீக்கி தூள் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் எல்லாவற்றையும் ஒன்று கலந்து சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\nசிறியவர்கள் 1 ஸ்பூன் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு பால் சாப்பிட வேண்டும். பெரியவர்கள் 1½ ஸ்பூன் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு பால் சாப்பிட வேண்டும்.\nஇதுபோல 1½ மாதம் சாப்பிட நரம்புத்தளர்ச்சி, பலஹீனம், அஸ்திவெடை, பித்தபாண்டு, பசிமந்தம், மயக்கம் ஆகியவை தீரும். ஒல்லியான உடல் உள்ளவர்கள் மேற்சொன்ன அளவை நெய்யில் குழைத்துச் சாப்பிட வேண்டும். கணைய நோயினால் இளைத்து மெலிந்து போன குழந்தைகளுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டு பால் சாப்பிட பூரண குணமேற்படும்.\nமுருங்கைப்பூ, தேற்றான்கொட்டை, நிலப்பனைக்கிழங்கு, பூமி சர்க்கரைக் கிழங்கு, நீர்முள்ளி விதை, பாதாம் பருப்பு, சாலமிசிரி, சாரப்பருப்பு, பிஸ்தா பருப்பு, கசகசா இவைகளை 10 கிராம் வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேற்றான்கொட்டை, நிலப்பனைக் கிழங்கு, பூமி சர்க்கரைக்கிழங்கு இவைகளைப் பாலில் புட்டவியல் செய்தும் மற்ற சரக்குகளை அப்படியே வெயிலில் நன்றாகக் காயவைத்து தூள் செய்துகொள்ளவும். இரண்டுத் தூள்களையும் நன்றாகக் கலந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சொர்ண பஸ்பம், வெள்ளி பஸ்பம், லிங்க செந்தூரம் இவைகளையும் சேர்த்து 65 மில்லி கிராம் அளவு வெள்ளைக் கற்கண்டுத் தூள் 1\\4 ஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டு பால் சாப்பிட வேண்டும். இப்படிச்செய்துவந்தால், உடம்பில் உஷ்ணம் தணிந்து, விந்து, நாதம் இவைகளின் நீர்த்த தன்மை நீங்கி, கெட்டித் தன்மை அடையும். நரம்புத் தளர்ச்சி நீங்கி, உடலில் சுறுசுறுப்பும் தெம்பும் கூடும்.\nகசகசா, வாதுமைபருப்பு, வால்மிளகு, கற்கண்டு, ஓரிதழ்தாமரை சமுலம் இவைகள் ஐந்தையும் சம எடை எடுத்து, கசகசா, வாதுமை பருப்பு, வால்மிளகு, ஓரிதழ்தாமரை இவைகளை நன்றாக காயவைத்துத் தூள் செய்து, கற்கண்டையும் தூள்செய்து நன்றாக கலக்கும்படி கலந்து கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் அளவு தூளைப் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இது விசேஷமான தாது புஷ்டியைக் கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியும் போகும். உடலுறவு சிறப்பாக இருக்கும். இதுபோல் இன்னும் நிறைய அனுபவ முறைகள் உள்ளன.\nகுறிப்பு: சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. சர்க்கரை வியாதிக்கு மருந்து சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம்.\nநான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.\nகண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.\nசில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.\nதேவையான பொருட்கள்: அசுவகெந்தி எனும் அமுக்குராகிழங்கு 550 கிராம், ஏலக்காய் 35 கிராம், சுக்கு 35 கிராம், மிளகு 35 கிராம், அரிசித்திப்பிலி 35 ...\nஎங்கு கேட்டாலும் மோடி... மோடி.. என்றே பேசுகிறார்களே யாரிந்த மோடி இணையத்தில் தேடியபோது நிறைய எதிர்வாதக் கருத்துகள் கிடைத்தாலும், தின...\nபூம்புகார் - பழைமையான நாகரிக நகரம்\nநாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய ந...\nஆம். நான் ஏகலைவன் (ஏகலவ்யன்). நான் தனிமனிதனல்ல, என் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருக்கிறது. நான் தனி மரம் அல்ல தோப்பு\nபாண்டவர்கள் மகாபாரதப் போரில் வென்ற முறையை பலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு முறைக்குப் பலமுறை பாண்டவர்கள் விதிமுறைகளை வளைத்து , ...\nஇராமாயணம் ஒரு ஆய்வு | தோழர்களின் புரட்டு வேலை\nஇராமாயணம் ஒரு ஆய்வு என்ற ஒரு நூலை, ஆண்டு மலர்ப் புத்தகம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்ததற்காக தோழர் ஒருவர் எனக்குப் பரிசாகத் தந்தார். இராம...\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://velang.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-19T11:51:40Z", "digest": "sha1:OGA4CBP5OVIP3HAGH2GHPLZMWIPWBIRE", "length": 29125, "nlines": 258, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: September 2012", "raw_content": "\nவேலன்:-புகைப்படங்களை எளிதில் பார்வையிட Sage Thumbs\nபுகைப்படங்கள் நமக்கு வெவ்வேறு பார்மெட்டுக்களில் கிடைக்கும். தம்ப்நெயில் வியு போடும் சமயம் நமக்கு சில பார்மெட்டுவகைகள்தான் தெரியவரும். ஆனால் சில வகை பார்மெட் புகைப்படங்களை அதற்காக உள்ள அப்ளிகேஷனில் சென்றுதான் திறந்துபார்க்க முடியும்.. ஆனால் இந்த சின்ன சாபட்வேரினை நாம் பதிவிறக்கம் செய்துவிட்டால் புகைப்படங்களை நாம் சுலபமாக பார்வையிட முடியும். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுடைய புகைப்படத்தினை ரைட் கிளிக்செய்யவும்.கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் நாம் Sage thumbs கிளிக் செய்ய நமது புகைப்படத்தின் வியு தெரியவரும். அதன் கீழேயே அதனை நாம் எந்த வகையாக மாற்றவிரும்புகின்றோமோ அதற்கான ஆப்ஷன்களும் கிடைக்கும்.புகைப்படத்தினை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றும் வசதியும் இதிலேயே தரப்பட்டுள்ளது.\nமேலும் எந்த எந்த பார்மெட்டு புகைப்படங்களை நீங்கள் திறக்க விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டுக்க்ளை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே ஆப்ஷனில் அதைகொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇதில் உள்ள பிறவசதிகள் உங்கள் வசதிக்காக கீழே கொடுத்துள்ளேன்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nபோட்டோக்களில் விதவிதமான மாறுதல்கள் கொண்டு வர இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 16 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து உங்கள் கணிணியில் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதன் வலதுபுறம் உங்களுக்கு உங்கள் புகைப்படத்தின் அனைத்து விவரங்களும் தெரியவரும். உங்கள் புகைபடம் உள்ள போல்டர். அது எடுக்கப்பட்ட நேரம்.தேதி எந்த வகையான கேமராவால் எடுக்கப்பட்டது.புகைப்படத்தின் கேமரா செட்டிங்ஸ் என பலவிவரங்கள் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇதன் மேல்புறத்தில் உங்களுக்கு 11 வகையான டேப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். கீழ��� உள்ள் விண்டோவில் பாருங்கள்.\nபுகைப்படத்தினை தேர்வு செய்ய இந்த காலத்தினையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதில் பிரிண்டிங் வசதி படங்களை பெரியதாக்கிபாரத்த்ல்.சுற்றுதல் என பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇதில் சூம் வசதி கொடுக்கப்பட்டுள்ளதால் நாம் விரும்பும் இடத்தினை பெரியதாக்கி பாரக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇதில் பில்டரில் பலவகையான டேப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் புகைப்படத்தினை நாம் விரும்பும் வாறு மாற்றிக்கொள்ளலாம்.Invert.Grascale.Gausian Blur.Mean Removal.Moire.Random Giler.Morlan.Black and White.Pixelate.Sphere.Swirl.Time Wrap.Water என பல பில்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nநான் வாட்டர் பில்டரை உபயோகித்து படத்தினை மாற்றிஉள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஒரு புகைப்படத்தினை தேர்வு செய்து கொண்டு இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆப்ஷன்களையும் ஒவ்வொன்றாக பயன்படுத்திப்பாருங்கள்.. பிடித்திருந்ததை தனியாக சேவ் செய்தோ - பிரிண்ட் எடுத்தோ வைத்துக்கொள்ளுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள\nஆங்கில இலக்கணத்தை நாம் தமிழ் மூலம் எளிதில் அறிந்து கொள்ள இந்த தளம் நமக்கு உதவுகின்றது. இந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.இந்த தளம் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள Tences Dictionary கிளிக் செய்து Verb -ஐ தட்டச்சு செய்யவும். உங்களுக்கு உங்களுடைய Verb ஆனது Simple Tense, Continuous Tense,Perfect Tense.Perfect Continuous Tense என 12 மில்லியன் வார்த்தைகள் தொகுத்துள்ளார்கள்.\nஅடுத்து Principal Part of Verbs கிளிக் செய்ய verb வகைகளை பட்டியலிட்டுள்ளார்கள்.\nஅடுத்துள்ள Simple Sentences கிளிக் செய்ய சுமார் 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு தமிழ் ஆங்கில விளக்கம் கொடுத்துள்ளார்கள்..\nஅடுத்துள்ள Proverb கிளிக் செய்ய சுமார் 300 பழமொழிகள் தமிழ் -மற்றும் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்கள்.இதில் உள்ள சர்ச் பாக்ஸில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதற்கான பழமொழியை தமிழில் அறியலாம். தமிழில் தட்டச்சு செய்து அதற்கான பழமொழியை ஆங்கிலத்தில் அறியலாம். மொத்தத்தில் ஆங்கிலம் பயில விரும்புவோர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஇணையத்தில் பதிவிட வசதியாக வீடியோ பைல்களை திரைப்படங்களை பெரும்பாலும் MKV File பார்மெட்டில் பதிவிடுவார்கள்.இந்த வீடியோ பைல்களை சில பிளேயர்கள் சப்போர்ட் செய்யாது. எனவே இதற்கென உள்ள இந்த எம்.கே.வி.பிளேயரை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் நம்மிடம் உள்ள எம்.கே.வி. பைலை தேர்வு செய்து ஓடவிடலாம்.சில வீடியோ படங்களை பார்க்கும் சமயம் வீடியோ முதலிலும் ஆடியோ பிறகும் ஒலிக்கும. சில வீடியோக்களில் ஆடியோ முதலிலும் வீடியோ அதன்பிறகும் வரும். இதனால் நாம் பார்க்கும் வீடியோ படம் முழு திருப்தியை தராது.இவ்வாறான வீடியோ பைல்களின் ஆடியோவினை நாம் இதில் உள்ள Audio டேபினை கிளிக் செய்து இதில் உள்ள Audio delay +0.1 Second கிளிக் செய்து ஆடியோ ஒலிக்கும் நேரத்தை கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஅதைப்போலவே இதில் உள்ள கண்ட்ரோல் டேபினை கிளிக்செய்து கீழ்கணட கன்ட்ரோல்களை நாம் எளிதில் நிறைவேற்றிக்கொள்ளலாம்.\nஇனி MKV பார்மெட்டில் உள்ள வீடியோவினை பார்க்க வேறு வீடியோ தேடி ஓடாமால் இந்த பார்மெட்டிலேயே பார்த்து ரசிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருததுக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவிதவிதமான பிடிஎப் ரீடர்கள் இருந்தாலும் புதியதாக இந்த ரீடரும் உள்ளது.6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும. இதில் நமது கணிணியில் உள்ள பிடிஎப் பைலை தேர்வு செய்யவும். இப்போது இடதுபுறம் உங்களுக்கு Table of Contents கிடைக்கும. நமது புத்தகத்தில் உள்ள பக்கங்கள் தெரியவரும்.\nமுழு ஸ்கிரீன் அளவிற்கும் நாம் புத்தகத்தை படிக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nபுத்தகத்தின் முழுஅளவினையும் நாம் பார்க்கலாம். ஒவ்வொரு புக்கமாகவும் பார்க்ககலாம். புத்தகத்தின எழுத்துரு அளவு தெரியவில்லையென்றால் ஜீம் செயதும் புத்தகத்தை படிக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nவலதுபுறம் புத்தகத்தின் முதல் பக்கம் தெரியவரும்.இதில் புத்தகத்தின் ஓரமாக கர்சரை கொண்டு சென்றால் அடுத்த பக்கம் திரும்பும்.நாம் புத்தகம் நேரடியாக படிக்கையில் புத்தகத்தை திருப்புவதுபோல் இதிலும் நாம் புத்தகத்தின் பக்கங்களை திருப்பி படிக்கலாம். கீழே உள்ள விண்:டோவில் பாருங்கள்.\nஇதில் உள்ள View Tab கிளிக் செய்ய புத்தகத்தின் பக்கங்களின் முழு அளவு --தம்ப்நெயில் வியு -மற்றும் கலர் செட்டிங்குகளையும் நாம் காணலாம்.இதன் மூலம் பக்கங்களுக்கு வேண்டிய நிறங்களை கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nபடிப்பதற்கு அருமையாகவும் -பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் உள்ளது.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nதனக்கு கிடைத்த Sunshine Blogger Award விருதினை எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் பகிர்த்துகொடுத்துள்ளார்கள் சகோதரி மஞ்சுபாஷினி அவர்கள்.அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nசகோதரி மஞ்சுபாஷினி அவர்களின் முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்:-பழைய -புதிய தமிழ் திரைப்பட பாடல்கள் தொகுப்பு\nLabels: தமிழ், திரைப்படம், வேலன்..ராகங்கள்.லதாங்கி.இசை.நடிகர்கள்..velan.tamil.film.lathangi.ragam. / Comments: (19)\nதிரைப்பட பாடல் ஒன்றை தேடும் சமயம் இந்த இணையதள முகவரி கிடைத்தது. திரைப்பாடல் என பெயரிட்டுள்ள இந்த இணையதளம் காண\nஇங்கு கிளிக்செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில வீடு.இசை,திரைப்படங்கள்.பாடல்கள்.நடிகர்கள்.வருடம்.தொகுப்புகள் என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளளார்கள்.இதில் இசையை கிளிக் செய்தால் உங்களுக்கு இசையமைப்பாளர்களின் பெயர்கள் வரும்.அவர்கள் இசையமைத்த படங்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை தெரியவரும் தேவையான இசைஅமைப்பாளர் பெயரை கிளிக செய்து பாடலை தேர்வு செய்யலாம்.திரைப்படங்களின் பெயரை கிளிக் செய்தால் உங்களுக்கு அகர வரிசையில் படங்கள் தெரிய வரும்.தேவையான படங்களை தேர்வு செய்யலாம்.நான் பார்மகளே பார் படத்தினை தேர்வு செய்துள்ளேன்.\nபாடகர்கள் வரிசையில் அவர்கள் பாடிய மொத்த பாடல்களையும் தொகுத்துள்ளார்கள். தொகுப்புகளில் இசையமைப்பாளர்களின் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்கள். ராகங்கள் நமக்கு தெரியும். இதில் இளையராஜாவின் பாடல்களை ராகங்கள் வரிசையில் இணைத்துள்ளார்கள். நான் லதாங்கி ராகத்தில் வந்துள்ள பாடலை கீழே கொடுத்துள்ளேன்.\nபாடல்களை கேட்பதற்கு இதிலேயே ப்ளேயர்கள் கொடுத்துள்ளார்.\nபாடல்களை கேட்டுப்பாருங்கள். நண்பர்களுக்கும் சொல்லுங்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்:-கணிணி ஜாதக குறிப்பு அறிந்துகொள்ள\nநமது பிற்நதநாள் குறிப்பினை கொடுத்தால் நமது முழுஜாதகத்தினையும் கணித்துகொடுத:துவிடுவார்கள். அதுபோல இந்த சின்ன சாப்ட்வேரினை நமது கணிணியில் இன்ஸ்டால் செய்து அதனை கிளிக் செய்தால் நமது கணிணியின் மொத்த விவரமும் நமக்கு வந்துவிடும்;4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள விண்டோ கிளிக் செய்ய மேலே உள்ள விண்டோ உங்களுக்கு ஓப்பன் ஆகும்.\nஇதில் window machine.sensors.usb bus.network.spd.volumes.modems.pci bus..பலவித டேப்புகள் கிடைக்கும். எந்த விவரம் தேவையோ அந்த டேபினை கிளிக் செய்ய அதன் உள்டேப் விவரங்களும் நமக்கு கிடைக்கும் இதனை காப்பிசெய்தும் வைத்துக்கொள்ளலாம்.\nகணிணி பழுது பார்ப்பவர்களுக்கு இந்த சின்ன சாப்ட்வேர் வரபிரசாதமாகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்:-புகைப்படங்களை எளிதில் பார்வையிட Sage Thumbs...\nவேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள\nவேலன்:-பழைய -புதிய தமிழ் திரைப்பட பாடல்கள் தொகுப்ப...\nவேலன்:-கணிணி ஜாதக குறிப்பு அறிந்துகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venthayirmanasu.blogspot.com/2012/07/", "date_download": "2018-07-19T11:49:39Z", "digest": "sha1:TTTWIF3RHZIMO5GVPN4D7DET7A2GAO6W", "length": 10651, "nlines": 93, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: July 2012", "raw_content": "\n\"மறு பக்கம் \" புத்தக விமர்சனம்\n\"மறு பக்கம் \" ஆசிரியர் பொன்னீலன் சாஹித்ய அகடமி விருது பெற்றவர்.\nஆசிரியர் பற்றி சில வரிகள் :\n\"அண்ணாச்சி\" எனக்கு 1980 இல் அறிமுகமானவர்.. அழகிய முகத்தில் \"மீசை \" என்னும் கிரீடம் அணிந்திருப்பவர். அந்த பெரிய முறுக்கு மீசைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் குழந்தைத்தனம் தவழும் முகம்.. கலை இலக்கிய பெரு மன்றம் நடத்திய ���ரு பயிற்சி முகாமில் தான் அறிமுகம்.. உலகில் ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று .சொல்வார்கள். அப்படிப்பட்ட எழுவரில் என்னை போல் இருக்கும் மற்றொருவர் அண்ணாச்சியின் மூத்த மகள் அமுதா.. அதுவே அவருடன் என்னை இன்னும் இறுக்கி இணைத்தது.. 1972 இல் மறு பக்கம் நாவலுக்கான தகவல்களை தேடத் தொடங்கி .இருக்கிறார். இடையில் வேறு சில பணிகள் . கடந்த ஆண்டு புத்தகம் வெளியானது..\nஇனி நாவலை பற்றி :\n18 , 19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த \"தோள் சீலை \" போராட்டத்தை பற்றி அறிந்த பொன்னீலன் அவர்கள் அதை பற்றிய தகவல்களை 1972 முதல் சேகரிக்க .தொடங்குகிறார் நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி நூலகம்,, சென்னை கன்னிமரா நூலகம் இவருக்கு பேருதவி செய்கின்றன. அதையும் 20 ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்ட உருவாக்கப் போராட்டத்தையும் இணைத்து \"மறு பக்கம் \" என்ற இந்த நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்\n1982 இல் நடந்த மண்டைக்காடு மதக் கலவரத்தை தனியாக பார்க்காமல் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக பார்க்கிறார்.. இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன் உள்ள காலத்திற்கும் பிந்திய கால கட்ட நிகழ்சிகளுக்கும் இடையேயான ஊடாட்டம் ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் குழப்பமாக .இருந்தது அந்தந்த கால கட்டங்களின் கதா பாத்திரங்களின் பெயர்களை அழுத்தமாக பதித்துக் கொண்டதால் அவருடனேயே பயணிக்க முடிந்தது..\nமண்டைக்காடு கலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ள வரும் சேது தன் தாயை பற்றியும் தகவல் அறிய ஆவலாய் இருக்கிறான். பள்ளி வாத்தியாரான தன் தந்தை பள்ளி மாணவியான தன் தாயை மணந்து கொண்டதால் அதைப்பற்றி வெளிப்படையாக யாரிடமும் விசாரிக்க முடியாமல் திணறுகிறான். தன் தாயைப் போன்ற ஜாடையுடைய ஒரு பெண்ணை பின் தொடர்ந்து விசாரிக்கும் போது அவர் தான் தன் சித்தி என்பதை யாருடைய உதவியும் இல்லாமல் கண்டு பிடிக்கும் இடம் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.\nகலவரத்துக்கு பயந்து மக்கள் கடலுக்குள் சாடும் பொது கிறிஸ்துவத்தில் மோயீசன் செங்கடலை பிளந்து ஜனங்களை காப்பாற்றியதை குறிப்பிட்டு அரபிக்கடல் ஒரு வேளை அடி பணிய மறுத்து விட்டதோ என்கிறார். இப்படி சில இடங்களில் ஆசிரியர் தன் கடவுள் நம்பிக்கையின்மையை தொட்டுச் செல்கிறார்.\nமீனவர்களுக்கும் நாடார்களுக்குமான இனக் கலவரம் அப்படியே திசை திர���ப்பப்பட்டு இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமான மதக் கலவரமாக மாற்றப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார். \"கடலில் தாழ்த்த \" அழைத்து வருபவனை புத்திசாலித்தனமாக காப்பாற்றும் இடத்தில் இரண்டு இனத்திலும் இளைஞர்கள் வேகத்துடனும் பெரியவர்கள் விவேகத்துடனும் வளைய வருவதை பார்க்க முடிகிறது.\nவரலாற்று நிகழ்வுகளை அழுத்தமாக பதிய வைத்த ஒரு நாவல் திடும்மென முடிந்தது போல் இருந்தது. இன மதக் கலவரத்துக்கு முடிவு ஏது அது தொடர்கதை தான் என்பதனால் இருக்கலாம். கொஞ்சம் பெரிய புத்தகம் தான் மிரண்டு விடாதீர்கள். வாசிக்க தொடங்கியதும் ஆசிரியரை அலைபேசியில் அழைத்தேன். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் இருப்பதாகவும் நாவலை முடித்து விட்டு பேசும் படியும் கூறினார். விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன். பிரார்த்தனையில் ஆசிரியருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் . எனக்கு இருக்கிறதே\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\n\"மறு பக்கம் \" புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viruntu.blogspot.com/2011/08/3.html", "date_download": "2018-07-19T11:46:02Z", "digest": "sha1:43JN6N2Q7A5KHOD6XRA5PXQFAPHZ23QT", "length": 7080, "nlines": 92, "source_domain": "viruntu.blogspot.com", "title": "viruntu: திருப்பூவணம் -- 3 -- கடவுளரும் பிறரும் ...", "raw_content": "\nதிருப்பூவணம் -- 3 -- கடவுளரும் பிறரும் ...\nஎடுத்த எல்லாப் படங்களையும் இணையத்துக்கு ஏற்றபடித் தயார்செய்ய முடியவில்லை. அதனால் இதுவே திருப்பூவணம் பற்றிய கடைசிப் பதிவு.\n1. அநுமன் ... பக்தர்கள் தங்களின் வேண்டுதலையோ \"ஸ்ரீராமஜயம்\" என்ற சொல்லையோ எழுதித் தொடுத்த காகித மாலையுடன் ... . ('சிவன் கோயிலில் அநுமன், கிருஷ்ணன் எல்லாரெயும் பாக்கறோம்; அந்தக் காலத்துலெ சைவமும் வைணமும் எணைஞ்சுதான் இருந்திருக்கணும்' என்று அன்புமீனாவும் கமலியும் சொல்லிக்கொண்டார்கள்.)\n2. அநுமனுக்கு அடுத்த பக்கம் பொன்னனையாள் சித்தனாய் வந்த மன்மதன் போன்ற சிவனுடைய கன்னத்தைக் கிள்ளிய சிலை.\n3. தேவார மூவரும் மணிவாசகரும் ...\n4. அறுபத்து மூவருள் சிலர் ... . எல்லாரையும் படம் பிடித்தாலும் இ��ுட்டிலிருந்து வெளிக்கொணர நிறைய நேரம் தேவைப்படும். அதனால் ஒரு சிலர் மட்டுமே இங்கே ... .\n5. அம்மை செந்தர்ய நாயகி இருப்பிடத்துக்குச் செல்லும் வழி ... . மிகவும் அழகான துப்புரவான பாதை பரந்த திறந்த வெளி. நூற்றுக்கணக்கான பேரை உட்காரவைத்துச் சொற்பொழிவு செய்ய வசதியான இடம்போல பரந்த திறந்த வெளி. நூற்றுக்கணக்கான பேரை உட்காரவைத்துச் சொற்பொழிவு செய்ய வசதியான இடம்போல சுற்றுச் சுவர் முழுவதும் ஒழுங்காக, அழகாக எழுதிவைக்கப்பட்ட நல்ல நல்ல சொற்கள். எடுத்துக்காட்டாக ... \"அன்பு வாழ வைக்கும். ஆசை தாழ வைக்கும்.\" முனைவர்கள் காளைராசனும் கண்ணனும் செய்த \"கைங்கர்ய\"மோ சுற்றுச் சுவர் முழுவதும் ஒழுங்காக, அழகாக எழுதிவைக்கப்பட்ட நல்ல நல்ல சொற்கள். எடுத்துக்காட்டாக ... \"அன்பு வாழ வைக்கும். ஆசை தாழ வைக்கும்.\" முனைவர்கள் காளைராசனும் கண்ணனும் செய்த \"கைங்கர்ய\"மோ\nஇயன்றால் ... கட்டாயம் திருப்பூவணம் கோயிலுக்குப் போய்ப் பாருங்கள். மிக மிக அழகான துப்புரவான கலையழகு நிறைந்த கோயில்\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து August 16, 2011 at 12:19 AM\nஅழகான படங்கள். சமீபத்தில் தான் நாங்கள் திருப்பூவணநாதரை தரிசித்து வந்தோம். மன நிறைவையும் அமைதியையும் அள்ளித் தரும் அழகிய நாதர் அவர்....நன்றி அம்மா.\nஅது எப்படி தெய்வீகக்களையை மட்டும் ஃபோட்டோ எடுத்தீர்கள்\nஇன்னும் போகலை; பார்க்கலாம், நேரம் வாய்க்கிறதானு படங்கள் அருமையாக வந்திருக்கின்றன. வாழ்த்துகள் அம்மா.\nபிள்ளையார் சதுர்த்தி -- 2\nபிள்ளையார் சதுர்த்தி -- 1\nதிருப்பூவணம் -- 4 -- பிறரும் நாயன்மாரும் ...\nகம்பு, தினை, கேழ்வரகு ... என்னவெல்லாம் செய்யலாம்\nபெருங்காயப் பெட்டி -- பழம்பெருமை ...\nகலிப்படம் -- அணில்கொறித்த ஆப்பில் பழம் ...\nகுறும்(பு) பிள்ளைத் தமிழ் ...\nதிருப்பூவணம் -- 3 -- கடவுளரும் பிறரும் ...\nகலிப்படம் -- \"கைராட்டையே ஆயுதம் ...\" ...\nகம்பு -- செய்வோமா இதில் வெண்பொங்கல்\nதினை -- கூழோ, எதுவோ ...\nபாயசம் -- தினைப் பாயசம் ...\nகலிப்படம் -- விட்டேற்றி ...\nசட்னி -- தேங்காய் + ஆப்பிலுடன் ...\nகூல (== தானிய 'grains') வகையில் சில ...\nமதுரை -- மாறிய மதுரையும் ... சென்னைக் கொசுறும் ......\nபுடைவைகள் ... பலவிதம் ...\nதிருப்பூவணம் -- 2 -- கோயிலின் உள்ளே தூண்கள்\nதிருப்பூவணம் -- 1 -- வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2017/03/blog-post_1.html", "date_download": "2018-07-19T11:49:05Z", "digest": "sha1:INTH5KP7BWQMP562AXHCT2DHIS5CAJ6E", "length": 28071, "nlines": 243, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபாய் ஸாலிக் டோல்கேட் பற்றி கூடுதல் தகவல்...", "raw_content": "\nபுதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி \nதுபாயில் தங்க நிறத்தில் தகதகக்கும் பிரேம் ( Frame ...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nஅதிரை அருகே வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய் பொட...\nஇந்தோனேஷியாவில் இளைஞரை விழுங்கிய மலைப்பாம்பு (வீடி...\nமரண அறிவிப்பு ( சுல்தான் ஆரிப் அவர்கள் )\nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை தேவையில்ல...\nஅதிரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு \nமரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )\nதுபாயில் கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ் காலக்கெடு நாளை...\n தனக்கு தானே தண்டனை விதிப்...\nஅமெரிக்கா விசா உள்ள இந்தியர்கள் அமீரகத்தில் நுழைய ...\nஅதிரையில் மஜக பொதுக்கூட்டம் அறிவிப்பு; 11 வது வார்...\nஅதிரை அருகே வாகன விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் ப...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்த...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\nதஞ்சை மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள் விற்பனை: ரூ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் ( படங்க...\nகள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர...\nபத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு \nஅதிரை அருகே விபத்தில் மாணவர் பலி \nதுபாய் அரசு வேலைவாய்ப்புகளில் 50 சதவீத ரோபோட்டுக்க...\nதுபாய் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு \nஅதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரசாரக் கூட...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.3.50 லட்சம் ...\nஅதிரையில் BSNL சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் ம...\nஅமீரகத்தில் 10 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து \nஅல் அமீன் ஜாமிஆ பள்ளியில் தினமும் இலவச ஐஸ் மோர் வி...\nகாதிர் முகைதீன் கல்லூரி 62 வது ஆண்டு விழா நிகழ்ச்ச...\n25 வருட தொடர் முயற்சிக்குப் பின் டிரைவிங் லைசென்ஸ்...\nஷார்ஜாவில் ஏப்.1 ந்தேதி முதல் பகல் நேர இலவச பார்க்...\nதுபாயில் ஜீடெக்ஸ் ஷாப்பர் நிகழ்ச்சியையொட்டி 1 மணிந...\nஅமெரிக்காவில் முதல் விபத்தை சந்தித்த டிரைவர் இல்லா...\nஅதிரை அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு \nசவூதியில் பொது மன்னிப்பு அறிவிப்பை அடுத்து இந்திய...\nகாதிர் முகைதீன் கல்லூ���ியில் வேதியியல் மன்ற ஆண்டு வ...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர்...\nமரண அறிவிப்பு ( கறிக்கடை தமீம் அன்சாரி அவர்கள் )\nஅதிரையில் மீனவர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள அ...\nஅதிரையில் அதிகரிக்கும் திருட்டு: வர்த்தகர்கள், பொத...\nஅஞ்சலகத்தில் ரூ.50 ல் சேமிப்பு கணக்கு துவக்கிய பயன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மழலையர் பட்டமளிப்பு ...\nஇளைஞர் கைதை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈ...\nஏப்-2, 30 தேதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் கனிவான வேண்...\nஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்: ஆட்...\nஅதிரை பேரூர் 11 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள்...\nஅதிரை ஈசிஆர் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து வி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பொருளியல் மன்ற ஆண்டு வ...\nகுழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nபேராவூரணியில் ஆறடி உயரத்தில் குலை தள்ளிய அதிசய வாழ...\nதுபாயில் ஸ்காலர்ஷிப், பரிசு மழைகளுடன் துவங்கும் ஜீ...\nஅதிரை பள்ளிகளில் குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பு ...\nஅதிரை சிறுமிக்கு டெங்கு பாதிப்பு \nஉலக தண்ணீர் தினம்: அதிரையில் என்.சி.சி மாணவர்கள் வ...\nஅதிரையில் துணிகரம்: ஷோரூம் ஷட்டரை உடைத்து பைக் திர...\nஉலக தண்ணீர் தினம்: பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்பு...\nபறக்கும் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு \nஅபுதாபியில் கார் ஸ்டண்ட் வித்தையில் ஈடுபட்ட இளைஞர்...\nபட்டுக்கோட்டையில் நாளை (மார்ச்.23) மின்நுகர்வோர் க...\nஅமீரக போக்குவரத்து சட்டங்களில் புதிய மாறுதல்கள் \nஅதிரை பேரூர் 14வது வார்டில் மனிதநேய ஜனநாயகக் கட்சி...\nஅமெரிக்காவில் எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய ...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட...\nஅமீரகத்தின் பல பகுதிகளை குளிர்ச்சியூட்டிய மழை (படங...\nஅரிய வகை வண்ணத்துப் பூச்சியை கொன்றவருக்கு சிறை தண்...\nஉம்மல் குவைனை தொடர்ந்து அஜ்மானிலும் அதிரடி ஆஃபர் அ...\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் \nஇறுதிக் கட்டத்தில் புனித மக்கா, மதினா அல் ஹரமைன் ர...\nஅதிரையில் TNTJ கிளை-2 சார்பில் 3 இடங்களில் தெருமுன...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இதழியல் பயிலரங்க நிகழ்...\nசவூதியில் வெளி���ாட்டவர்கள் நேரடியாக வியாபாரம் செய்ய...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறையின் பயிற்சி...\nஇலவச தாய் - சேய் வாகனம் (102) மற்றும் அவசரகால வாகன...\nதுபாயில் பைக் மெஸஞ்சர்களுக்கான புதிய சட்டங்கள் அறி...\nசவுதியில் 90 நாட்கள் பொது மன்னிப்பு அறிவிப்பு \nஉம்மல் குவைனில் ஒரு நாள் மட்டும் 50% போக்குவரத்து ...\nஇயல்பு நிலைக்குத் திரும்பியது 'டூ' (DU) தொலைத்தொடர...\nஅமீரகத்தில் 'டூ' (Du) தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு ...\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்காதீர...\nஜீமெயில் கணக்குகளில் இருந்து இனி தாயகத்திற்கு பணம்...\nதமிழறிஞர் அதிரை அஹமத்க்கு 'தமிழ்மாமணி' விருது அறிவ...\nஅதிரையில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்: நேர...\nஅர்ஜென்டினாவில் ஒளிரும் பச்சை நிற தவளை கண்டுபிடிப்...\nஅபுதாபியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 'கட்அவுட...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் பய...\nஇந்தியாவின் மானத்தை வானில் பறக்கவிட்டு ஏர் இந்தியா...\nஹஜ் செய்திகள்: இந்த வருட ஹஜ் யாத்திரைக்கு ஈரானியர்...\nஅபுதாபியில் ஒரே மேடையில் 129 புதுமண தம்பதிகளுக்கு ...\nதுபாய் முழுவதும் 200 மின்-கார் சார்ஜிங் ஸ்டேசன்கள்...\nராஸ் அல் கைமாவில் ஒரே நாளில் 51 மோட்டார் சைக்கிள்க...\nபழஞ்சூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு ...\nதஞ்சையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல...\nஅதிரையில் அதிசயம்: 1 கிலோ ஆட்டுக்கறி ₹ 400 க்கு வி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅதிரை அருகே நகை பணம் திருட்டு ( படங்கள் )\nஅமீரகத்தில் மின்சாரம், தண்ணீர், மொபைல், இண்டெர்நெட...\n20 திர்ஹத்தில் எமிரேட்ஸ் விமானத்தில் உலகைச் சுற்றி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ��� முஹம்மது )\nதுபாய் ஸாலிக் டோல்கேட் பற்றி கூடுதல் தகவல்...\nதுபையின் அமுதசுரபிகளாக பார்க்கிங் கட்டணங்களும் டோல்கேட்களும் விளங்குகின்றன என்றால் மிகையல்ல, அது யாருக்கு என்பதும் தெரிந்த ஒன்றே\nஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் உள்ளது போல் கடந்த 2017 பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையிலேயே அடுத்தடுத்து அமைந்துள்ள அல் ஸபா (Al Safa) மற்றும் அல் பர்ஸா (Al Barsha) ஸாலிக் கேட்டுகளில் (Salik Toll Gates) தனித்தனியாக 4 திர்ஹம் என மொத்தம் 8 திர்ஹங்கள் ஒவ்வொருமுறையும் வெட்டப்படுகின்றதும் அறிந்ததே ஆனால் இதிலிருந்து தப்பித்து மாற்றுப்பாதையில் எவ்வாறு பயணிப்பது என்பது குறித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸாலிக் கேட்டுகள் குறித்தும் தற்போது கூடுதல் விபரங்கள் வெளியாகியுள்ளன.\nஅதிவேக போக்குவரத்து நெடுஞ்சாலையான ஷேக் ஜாயித் சாலையில்,\n1. பெரும் வணிக நிறுவனங்களும், சர்வதேச வணிகர்களும் பயனுறும் வகையில் வாகனங்களின் போக்குவரத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் அல் ஸபா, அல் பர்ஸா என பிரித்து ஸாலிக் கட்டணம் வெட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.\n2. அபுதாபி அமைத்து விரைவில் திறக்கப்படவுள்ள ஷேக் முஹமது பின் ராஷித் எனும் புதிய 62 கி.மீ நெடுஞ்சாலை இரு எமிரேட்டுகளின் எல்லையான ஷைஹ் சொஹைப் (Saih Shoaib) என்ற இடத்தில் நிறைவுறுவதாலும், இதில் வரும் துபை, ஷார்ஜா மற்றும் பிற எமிரேட்டுகள் செல்ல வேண்டிய வாகனங்கள் ஷேக் ஜாயித் சாலை வழியாக செல்ல வேண்டியுள்ளதால் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடனும்,\n3. அல் ஸபா மற்றும் அல் பர்ஸா ஸாலிக் பிரிக்கப்பட்டுள்ளதால் ஷேக் ஜாயித் சாலைகளை பயன்படுத்துவோர் மாற்றுப்பாதைகளான அல் கைல் ரோடு (Al Khail Road), ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு (Sheikh Mohammed Bin Zayid Road) மற்றும் எமிரேட்ஸ் ரோடுகளை (Emirates Road) தேர்ந்தெடுப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஸாலிக்கை தவிர்க்க உதவும் மாற்றுப் பாதைகள்:\n1. கர்ஹூத் பிரிட்ஜ் (Garhoud Bridge) (மக்தூம் பிரிட்ஜை) தவிர்த்துவிட்டு துபை கிரீக் ரோடு (Dubai Creek Road) செல்ல விரும்புபவர்கள் ஷிண்டாக டனலை (Shindhaga Tunnel) பயன்படுத்தலாம்.\n2. மக்தூம் பிரிட்ஜ் (Maktoum Bridge) அருகிலுள்ள மிதவை பாலத்தை (Floating Bridge) பயன்படுத்துவது மற்றொரு வழி.\n3. ராஸ் அல் கோர் (Ras Al Khor Road) மற்றும் அல் கைல் ரோடுகளை (Al Khail Road) பயன்படு���்தியும் ஸாலிக்கை தவிர்க்கலாம்.\nஸாலிக் கேட்டுகள் அமைவிடம் குறித்த விபரங்கள்:\nஅனைத்து ஸாலிக் டோல்கேட்டுகளிலும் ஒவ்வொரு முறை கடந்து செல்லும் போதும் 4 திர்ஹம் கணக்கிலிருந்து வெட்டப்படும்.\n(சனிக்கிழமை முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிமுதல் அடுத்த நாள் காலை 6 மணிவரையும், வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிமுதல் அடுத்த நாள் காலை 9 வரையும் ஸாலிக் கட்டணம் இல்லை)\n(அல் மம்ஸார் சவுத் மற்றும் நார்த் கேட்டுகள் வழியாக ஒரு மணிநேரத்திற்குள் அதே திசையில் (On Same Direction Only) பலமுறை சென்றாலும் ஒரு முறை மட்டுமே ஸாலிக் கட்டணம் வெட்டப்படும்)\n7. அல் மம்ஸார் நார்த் (Al Mamzar North)\n(அல் மம்ஸார் சவுத் மற்றும் நார்த் கேட்டுகள் வழியாக ஒரு மணிநேரத்திற்குள் அதே திசையில் (On Same Direction Only) பலமுறை சென்றாலும் ஒரு முறை மட்டுமே ஸாலிக் கட்டணம் வெட்டப்படும்)\nகுறிப்பு: ஏர்போர்ட் டனல் மற்றும் மம்ஸரில் அமைக்கப்பட்டுள்ளவை புதிய ஸாலிக் டோல்கேட்டுகளாகும்.\nஸாலிக் கட்டணத்திலிருந்து முழுவிலக்குப் பெற கீழ்க்காணும் வகைகளின் கீழ் வரும் மாற்றுத்திறனாளிகள் துபை போக்குவரத்து துறையிடம் (RTA) விண்ணப்பித்து சிறப்பு அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.\n1. மனநல குறைபாடு உள்ளவர்கள் (Mental disabilities)\n2. உடல்நல குறைபாடு உள்ளவர்கள் (Physical disabilities)\n3. ஆட்டிஸம் எனும் மதி இறுக்கம் உள்ளவர்கள்\n4. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். (Visual disabilities)\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரிய���ன மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.e-activo.org/ta/el-presente-para-nestudiantes-chinos/", "date_download": "2018-07-19T11:22:50Z", "digest": "sha1:5UN6EMM3NZOZGOYJMMR7WKEW2LIL4HE5", "length": 15090, "nlines": 153, "source_domain": "www.e-activo.org", "title": "ஸ்பானிஷ் நிகழ்காலம் அறிய. | eactivo | குடியேறுபவர்கள் ஸ்பானிஷ்", "raw_content": "\nஇந்த சொற்கள் எளிதாக இருக்கும்:\nஇது உண்மையில் தாள் எங்கள் சீன இலக்கணம் தொடக்க மாணவர்கள் ஆகிறது. நாம் நீ சொற்கள் ஸ்பானிஷ் வேலை எப்படி புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன். எப்போதும் ஒரே வேலை, Aprende என்றால் தற்போது, நீங்கள் மட்டுமே மற்ற நேரங்களில் முடிவுகள் கற்று கொள்ள வேண்டும்.\nEspañol இயக்கத்திலுள்ள மூலம் இந்த வேலை ஒரு கீழ் உரிமம் கிரியேட்டிவ் காமன்ஸ் கற்பித்து-NoDerivs கிரியேட்டிவ் 3.0 Unported உரிமம்.\nகுறிச்சொற்கள்: A1 , சீன , ஸ்பானிஷ் , இலக்கணம்\n4 கருத்துகள் “எங்கள் சீன மாணவர்கள்”\nமார்ச் 13, 2013 செய்ய 17:37\nஉங்கள் தளம் மற்றும் உங்கள் திட்டம் வாழ்த்துக்கள். நான் நேசித்தேன்.\nபிப்ரவரி 8, 2014 செய்ய 12:21\nநான் பலகை விளையாட்டுகள் மகிழ்ச்சி கண்டுபிடித்திருக்கிறார்கள் மற்றும் நான் இந்த பெரும் பணியை செய்ய மிகவும் பெருமைப்படுகிறேன். நான் விரைவில் poderles ஒத்துழைப்பு நம்புகிறேன்.\nகூடும் 20, 2014 செய்ய 4:50\nஉங்கள் மதிப்புமிக்க பொருட்களை மிகவும் நன்றி. இந்த ஆண்டு நான் ஒரு சீன மாணவர் என்ற அதிர்ஷ்டம் இல்லை (பரிமாற்றம் இருந்து வருகிறது) நாம் ஒரு பெரிய வேலை செய்யவில்லை\nகூடும் 31, 2014 செய்ய 21:38\nஉங்கள் கருத்து Alejandra மிகவும் நன்றி. என்று எங்கள் குறிக்கோள் ஆகும், மாணவர்கள் எங்கள் மொழியை கற்று மற்றும் ஆசிரியர்கள் அவர்களை எங்கள் பொருட்களை கொண்டு உதவ முடியும் என்று.\nமின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தொடர்ந்து எனக்கு தெரிவி.\nமின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் என்னை அறிவிக்குமாறு.\neactivo நாம் அந்த வளங்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வலைப்பதிவு, பயிற்சி, செய்தி, நாங்கள் ஸ்பானிஷ் கற்றல் கற்பித்தல் சுவாரசியமான கருதுகின்றனர் என்று பிரதிபலிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள்.\nஸ்பானிஷ் உடற்பயிற்சிகள் செயலில் அடுக்கு\nஸ்பானிஷ் சொத்துக்களை Videocasts ஸ்பானிஷ் பேச\nசெயலில் ஸ்பானிஷ் பாட்கேஸ்ட்ஸ் ஸ்பானிஷ் அறிய\nDelia மற்றும் Begona பாட்கேஸ்ட்ஸ்\nமாதம் தேர்வு அக்டோபர் 2016 (1) நவம்பர் 2015 (1) கூடும் 2015 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (1) ஆகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) கூடும் 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (2) டிசம்பர் 2013 (1) நவம்பர் 2013 (1) அக்டோபர் 2013 (1) செப்டம்பர் 2013 (1) ஆகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (2) கூடும் 2013 (1) ஏப்ரல் 2013 (1) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (1) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (1) டிசம்பர் 2012 (1) அக்டோபர் 2012 (2) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) ஜூன் 2012 (1) கூடும் 2012 (1) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (2) நவம்பர் 2011 (4) ஆகஸ்ட் 2011 (3) ஜூலை 2011 (1) ஜூன் 2011 (1) அக்டோபர் 2010 (1)\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஸ்பானிஷ் உங்கள் கருத்தை வெளிப்படுத்த\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஎன்ன நான் போது சொல்கிறேன் ...\nA1 A2 கல்வியறிவு பி 1 B2 C1 C2 சீன படிப்புகள் நகைச்சுவையான அகராதிகள் எழுது கேட்க ஸ்பானிஷ் ஸ்பானிஷ் ஆய்வு வெளிப்பாடுகள் இலக்கணம் ஆண்கள் மொழிகளை படங்கள் விளையாட்டு கல்வியறிவு அளவீடுகள் கடிதங்கள் கைந்நூல் (பாடப்புத்தகம்) பெண்கள் தேசிய பெயர் ஸ்பானிஷ் பெயர்கள் செய்தி வார்த்தைகள் போட்காஸ்ட் கவிதை அறிக்கை தொழிலை வழிமுறையாக வளங்களை தன்னாட்சி சமூகங்கள் subjunctive மாணவர் வேலை படியெடுத்தல் videocast பாஷாஞானம் அரபு\nபுதிய உள்ளீடுகளை பெற கீழே பட்டியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 63 மற்ற சந்தாதாரர்கள்\nஇங்கே நீங்கள் பயிற்சிகள் மற்ற வலைத்தளங்களில் காணலாம், அகராதிகள், வலைப்பதிவுகள், podcasts மற்றும் நாள் உங்கள் நாளில் உங்களுக்கு உதவும் என்று நடைமுறை தகவல்களை பகுதிகளில் இணைப்புகள். ஆசிரியர்கள் சுவாரஸ்யமான வலைப்பதிவுகள் மற்றும் பத்திரிகைகளில் இணைப்புகள் ஒரு தேர்வு கண்டுபிடிக்கும்.\nநீங்கள் கீழே உள்ள இணைப்புகளை தேவை எல்லாம்.\nஸ்பானிஷ் தீவு பள்ளி. விளையாட்டு, வீடியோக்கள் மற்றும் ஊடாடும் பயிற்சிகள் ஸ்பானிஷ்\nPracticaespañol, பயிற்சி, அளவீடுகள், வீடியோக்கள், உண்மையான செய்தி\nபயிற்சிகள் ஸ்பானிஷ் இன்ஸ்டியூடோ செர்வாந்தேஸ்\nகல்லூரி செர்வாந்தேஸ் அளவில் ஸ்பானிஷ் அளவீடுகளும்\nராயல் ஸ்பானிஷ் அகாடமி அகராதி\nகாலின்ஸ் அகராதி ஆங்கிலம் / ஸ்பானிஷ்\nஇரண்டாம் தாய்மொழிகள் மற்றும் குடியேற்றம்\nஸ்பானிஷ் பல்வேறு உச்சரிப்புகள் விளையாட\nபக்கத்தில் எந்த வார்த்தையை கிளிக் இரட்டை அல்லது ஒரு வார்த்தை தட்டச்சு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://saratharecipe.blogspot.com/2016/09/potato-masala.html", "date_download": "2018-07-19T11:34:09Z", "digest": "sha1:WTRNTCGBAUAPAZPXYNDCMQFI3BR36CUQ", "length": 11886, "nlines": 199, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: உருளைக்கிழங்கு மசாலா / Potato Masala", "raw_content": "\nஉருளைக்கிழங்கு மசாலா / Potato Masala\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு\nசாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nபெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - 1\nஉருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து சிறிது நேரம் ஆறவிடவும். நன்கு ஆறியதும் தோலுரித்து மசித்து வைக்கவும்.\nவெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்..\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம் போடவும். பெருஞ்சீரகம் பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.\nபிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.\nமசாலா வாடை போனதும் மசித்து வைத்துள்ள கிழங்குகளை சேர்க்கவும்.\nமசாலா கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான உருளைக்கிழங்கு மசாலா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்.\nஒரு வாரத்திற்குப் பிறகு நேற்று தான் உருளைக் கிழங்கு மசாலா செய்தேன்..\nதக்காளி தவிர்த்து செய்முறை எல்லாம் இதேதான்\nநேற்றிரவு செய்தேன்... ஏறக்குறைய இதே செய்முறைதான்.... சாம்பார் பொடி சேக்கலை... கொஞ்சமே கொஞ்சம் மிளகாய் பொடி சேத்துக்கிட்டேன்... உரைப்புக்காக....\nநல்ல செய்முறை விளக்கம் அம்மா...\nகாலையில் பரோட்டாவுக்கு சும்மா அடிபுளி யா இருக்கும் போல \nம்ம் நல்லது செய்து பார்க்கிறேன் தொடர வாழ்த்துகள் \nமுதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து கருத்திடுங்கள்.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டி��்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -20 கொத்தமல்லி - 50 கிராம் மிளகு - 3 மேஜைக்கரண்டி சீரகம் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு க...\nஉருளைக்கிழங்கு மசாலா / Potato Masala\nபாதாம் பர்பி / Badham Burfi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://emadal.blogspot.com/2003/11/blog-post_15.html", "date_download": "2018-07-19T11:46:04Z", "digest": "sha1:VIJFHG4BS6MDYTHLOAZGLWUV4AHDKAT6", "length": 18382, "nlines": 174, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nகோகிலத்தம்மாவை விட குஞ்சரத்தம்மா அதிர்ஷ்டசாலி என்பதைக் காலம் அம்மண்ணில் காட்டியது.\nஅண்ணாவிற்கு வேலை குதிர்த்தது. பெரிய உத்யோகம் என்று சொல்வதற்கில்லை. செட்டியார் தயவால் இராமனாதபுரம் ராஜா அறக்கட்டளை ஆபீசில் கணக்கதியாரியாக வேலை கிடைத்தது. அந்தக் காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயி��் நிர்வாகத்திற்கு பல்வேறு ராஜாக்கள் அறக்கட்டளை அமைத்து நிதி உதவி செய்து வந்தனர். அதில் இராமனாதபுரம் ராஜாவின் 'சேதுபதி அறக்கட்டளையும்' ஒன்று. அண்ணாவின் மூதாதையர்களில் பலர் சேதுபதி சமஸ்தானத்திலும், செட்டிநாட்டிலும் கணக்கர்களாக வேலை பார்த்து வந்தனர். செட்டிநாடு என்பது சோழ மண்ணிலிருந்து புலம் பெயர்ந்த வணிக குலத்தவர்களைக் கொண்டதுதான் எனினும். காலப்போக்கில் ஒரு ராஜாங்கம் நடத்துகிற அளவிற்கு அந்த மண்ணில் சொத்து இருந்தது. செட்டி நாட்டு ராஜா என்ற வழக்கு உண்டு. அந்தணர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தங்களது குலத்தொழிலான வேதம் ஓதுதலை ஒதுக்கிவிட்டு பிற தொழில்களில் ஈடுபட ஆரம்பித்தனர். ஆயினும் பண்டைய ராஜ விஸ்வாசம் இருந்ததால் கணக்குத் தொழிலுக்கு வந்தாலும் அதை ராஜாக்களிடமே செய்து வந்தனர்.\nமதுரை மீனாட்சி கோயிலில் அண்ணாவிற்கு வேலை கிடைத்ததில் மற்ற எல்லோரையும் விட நந்துவிற்குத்தான் மிக்க மகிழ்ச்சி.\nஒவ்வொருமுறையும் அண்ணாவுடன் மதுரைக் கோயிலுக்குப் போகும் போது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். கட்டளை ஆபீஸ் ஆடி வீதியில் இருந்தது. மேற்குக் கோபுர வாசலுக்கு அருகாமையில். அருகில் கோமடம் உண்டு. நந்துவிற்குத்தான் கன்றுகள் என்றால் பிடிக்குமே அங்கு நிறையக் கன்றுகள் உண்டு. அந்தப் பெரிய பிரகாரம் அவனுக்கு ஒரு மாபெரும் வெளியைத் தந்தது. பார்க்குமிடமெல்லாம் பரந்த வெளி. உயர நோக்கினால் வானுயர கோபுரங்கள். தடுக்கி விழுந்தால் கலையின் அதீத செயல்பாட்டில் விழ வேண்டியிருக்கும். நோக்க, நோக்க உயர்வு. எண்ணத்தில் உயர்வு, சிந்தனையில் உயர்வு. செயலில் நளினம். ஆக்கத்தில் நுணுக்கம் என்பது போன்ற நுணுக்கமான சூட்சுமமான பல விஷயங்கள் அவனையறியாமல் அக்கோயில் வளாகம் அவனுக்குத் தந்தது.\nஅண்ணா வேலை முடிந்ததும் நந்துவைக் கோயிலுக்கு இட்டுச் செல்வார். சுவாமி சந்நிதி அவனுக்கொரு கலைக்களஞ்சியம். உள்ளே நுழையும் போதே அங்கொரு பெரியவர் பெரிய விசிறி கொண்டு போவோர் வருவோருக்கு விசிறிக் கொண்டு இருப்பார். அதுவொரு பொதுப்பணி. அவர் முகத்தில் ஒரு சாந்தமும், திருப்தியும், மலர்ச்சியும் எப்போதும் இருக்கும். அவருக்கு 60 வயதிற்கு மேலாக இருக்கலாம். ஆனால் அந்த மிகப்பெரிய கலையழகு மிக்க, பட்டுக் குஞ்சலங்கள் கொண்ட விசிறியை சளைக்க��மல் வீசிக்கொண்டிருப்பார். யாராவது இரக்கப்பட்டு அவருக்கு காசு கொடுத்தால் பணிவுடன் வாங்கிக் கொண்டு மடியிலிருந்து முன்பே தயாரித்து வைத்திருக்கும் சின்ன விபூதிப் பொட்டலத்தை பிரசாதமாகக் கொடுப்பார். அவரின் அன்பும், பணிவும் நந்துவை வெகுவாகக் கவர்ந்தன. எளிமை கண்டு இரங்கும் குணம் அன்று ஆழப்பதிந்தது அவன் மனதில்.\nசுவாமி சந்நிதியைச் சுற்றி திருவிளையாடல் காட்சிகள் சுதைச் சிற்பங்களாக இருக்கும். அண்ணா இவனுக்கு ஒவ்வொறு கதையாகச் சொல்வார். அதில் திருப்புவனக் கதை ஒன்றும் இருப்பது கண்டு அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. மதுரையை ஆண்ட பாண்டியனுக்கு அவன் ஆட்சியின் எல்லை எவ்வளவு என்று தெரியவில்லை. அது அவ்வளவு பரந்து இருந்தது. எனவே திரு ஆலவாய் அண்ணலிடம் வேண்டினான். இரக்கம் கொண்ட ஈஸ்வரன் ஒரு பாம்பு வடிவம் எடுத்து முதலில் மதுரையின் எல்லையைக் காட்டினார். அது சுதைச் சிற்பமாக உள்ளது. பாம்பின் தலை திருப்புவனம் ஆற்றின் அக்கரையிலுள்ள நாவல் மரத்தோப்பில் ஆரம்பிக்கும். ஊரெல்லாம் சுற்றி விட்டு அது மீண்டும் திருப்புவனத்தில் வந்து முடியும். அது போதும் நந்துவிற்கு தானொரு 'மதுரை உள்வட்டம்' என்று சொல்லிக்கொள்வதற்கு நந்து நிறையக் கதை சொல்வான். அந்தப் பழக்கம் அவனுக்கு அண்ணாவிடமிருந்து வந்திருக்க வேண்டும்.\nஅண்ணா ஸ்வாமி சந்நிதியில் நிற்பதை விட பிரகாரத்தில் இருக்கும் 'லக்ஷ்மி' சந்நிதியிலே கிடப்பார். இவர் வைணவரென்ற காரணமல்ல. கையில் காசு இருக்காது. 'மலரின் மேவு திரு' அனுக்கிரகம் பண்ண வேண்டும் என்று வேண்டிக் கொள்ளத்தான். ஆனால், லக்ஷ்மி சந்நிதி பெரிது. எப்போதும் கூட்டம் இருக்கும். ஆனாலும் நந்துவிற்கு அதே பிரகாரத்திலிருக்கும் ஒரு அழுக்குப் பிடித்த சந்நிதியின் மீதுதான் ஈர்ப்பு அதிகம். அந்தச் சந்நிதி சரஸ்வதியின் சந்நிதி. அழுது வழிந்து கொண்டு ஒரு அகல் விளக்கு எரியும். எப்போதாவது யாராவது சூடம் ஏற்றுவார்கள். அப்போது சரஸ்வதி அவனுக்கு காட்சியளிப்பாள். ஒரு கணம், ஒரு பொழுது, ஒரு நொடி. அதுதான் அவனுக்குக் கிடைக்கும் காட்சி. அதன் பலா பலன்கள் என்ன வென்பது போகப்போக அவன் வாழ்வில் தெரிந்தது.\nசிவன் சந்நிதியின் மாபெரும் பிரம்மிப்பு எட்டு வெள்ளைக் கல் யானைகள்தான். அண்ணா கல் யானைக்கு கரும்பு கொடுத்த சித்தர் கதை சொல்வார். கல்ய���னையின் அழகைச் சொல்லி மாளாது. தேங்காய் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் என்று நம்ப வைக்கும் தத்ரூபம் சித்தர்களின் செயல்பாடுகள் அவனுள் ஒரு சூட்சும உலகைக் காட்டின. சிவனடியார்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளும் பண்பைத் தந்தன.\nஅம்மா அன்றிலிருந்து மீனாட்சி பக்தையானாள். மதுரையிலிருந்து ஒரு பெரிய மீனாட்சி படம் வீட்டு சுவாமி ரூமில் வந்து இறங்கியது. மீனாட்சியின் ஆட்சி 'பத்ம நிலையத்தில்' தொடங்கியது.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\n......020 அண்ணா வழக்கம் போல் இ...\n......018 ஆற்றில் வெள்ளம் வந்த...\n......017 ஆற்று வெள்ளம் வடிய ப...\nமுற்றுப்புள்ளி இன்று முற்றுப்புள்ளி என்னை ...\n ஒரு நண்பர் சமீபத்தில் மெரினா டாட் காம் என...\nAlpha males வாரமொரு வலைப்பூ அப்படின்னு ஒரு தலைப...\n......016 ஊமையன் சோர்ந்து போய்...\nகொதி உலையில் இது உங்களுக்கு சாப்பிடற நேரமா ...\n காலனியான நாடுகள் எவ்வளவுதான் காலனித்...\nமொத்தம் 9 பேர் தேர்வில் இதுவரைக் கலந்து கொண்டுள்ளீ...\n என் மீதும் என் கவிதை மீதும்...\n......014 கோகிலத்தம்மாவை விட க...\n......012 அம்மா அன்று பருப்பு ...\nகல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்\n கடந்த சில நாட்களாக பல முக்கிய ...\n கொஞ்ச நாளா காணாப்போனதற்கு மன்னி...\nதிசைகளும் அது சுட்டும் திசைகளும் திசைகள் நவம்பர...\nபரகால நாயகியின் காதலர்களுக்கு..... பாசுர மடல் வ...\n......010 அந்த வீடு நீண்டு கிட...\nவியட்நாமிய நினைவுகள் 006 வியட்நாமிய நினைவுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mtt-news.blogspot.com/2009/06/blog-post_07.html", "date_download": "2018-07-19T11:27:19Z", "digest": "sha1:6XMRYSNL65UOMPGRVQJ5N4IJT2GKFVVW", "length": 5591, "nlines": 45, "source_domain": "mtt-news.blogspot.com", "title": "முத்துப்பேட்டை செய்திகள்: துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு சிறப்பான வரவேற்பு", "raw_content": "\nநம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு\nதுபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு சிறப்பான வரவேற்பு\nதுபாய் சர்வதேச விமான நிலையம் முனையம் 3ல் வேலூர் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக துபாய் வருகைபுரிந்த எம். அப்துல் ரஹ்மானுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிகச் சிறப்பான வரவேற்ப�� அளிக்கப்பட்டது.\nஇவ்வரவேற்பு நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் நூஹு சாஹிப், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி, இணைச்செயலாளர்கள் ஹமீதுர் ரஹ்மான், ஹமீது யாசின், பொருளாளர் எம். அப்துல் கத்தீம், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஆம்பூர் ரியாஸ் அஹ்மத், ஈமான் சங்க நிர்வாகிகள், முத்துப்பேட்டை அமீரகப் பேரவை, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர், தேரிழந்தூர் தாஜுத்தீன் குழுவினர்,ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், துபாய் தமிழ்ச் சங்கம், யுஏஇ தமிழ்ச் சங்கம், புரவலர்கள், உலமாப் பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nதன்னுடைய வெற்றிக்காக பிரார்த்தித்த அனைத்து நல்லுங்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்.\nகுர்ஆன் மனைபோட்டி மற்றும் ஹத்தனா முகம் விழா சிறப்ப...\nமுத்துப்பேட்டையில் கல்வியில் அதிக மதிப்பென் பெற்ற ...\nவேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்ம...\nஇரண்டாம் ஆண்டு குர் ஆன் மனைப் போட்டி மற்றும் ஹத்தன...\nமுத்துப்பேட்டை அமீரகப்பேரவை நடத்தும் (MP) சந்திப்ப...\nதுபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு முத்த...\nமுத்துப்பேட்டை நல சங்கம் வேலூர் எம்.பி. அப்துல் ர...\nதுபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு சிறப...\nமுத்துப்பேட்டையில் பரபரப்பு (கோயில் திருவிழாவில் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.trendstime.in/?tag=%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-07-19T11:24:29Z", "digest": "sha1:ETUICI5NHTL6IYHHHNFZXNPQBAXWMAWW", "length": 4002, "nlines": 33, "source_domain": "tamil.trendstime.in", "title": "எந்த நாள் உடலுறவு கொண்டால் சீக்கிரம் கர்ப்பமாக முடியும்..! – Trendstime தமிழ்", "raw_content": "\nTag: எந்த நாள் உடலுறவு கொண்டால் சீக்கிரம் கர்ப்பமாக முடியும்..\nஎந்த நாள் உடலுறவு கொண்டால் சீக்கிரம் கர்ப்பமாக முடியும்..\nபுதிதாக திருமணம் ஆனவர்கள் கேட்கும் ஒரு கேள்வி 30 நாட்களில் மாதவிடாய் வருகிறது. எப்போது உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது தான் அந்த கேள்வி. 31வது நாள் மாதவிடாய் வருகிறத��� என்றால் எப்போது உடலுறவு கோவத்து எப்போது கரு தரிப்பது என்ற குழப்பம் பல பெண்களுக்கு உண்டு.\nஇதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் . நீங்கள் மாதவிடாய் நிறத்தை சையாக தெரிந்து வைக்க வேண்டும்.பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சரியாக 20 -32 நாட்களில் வரும்.சில பெண்களுக்கு சற்று சில மாறுபாடுகள் இருக்கும்.\nஒரு பெண் மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்து 14ம் நாள் முடிந்த பிறகு அவர்களது கரு முட்டை வெளிவரும். இந்த முட்டை வெளியேறி 24மணி நேரத்துக்குள் கரு முட்டையை விந்தணு சந்தித்தால் கண்டிப்பாக குழந்தைப்பேறு கிடைக்கும்.\nஆணின் விந்தானது பெண்ணின் யோணியில் உட்செலுத்தப்பட்டு 72மணி நேரம் உயிரோடு இருக்கும். ஆகா நீங்கள் கருத்தரிக்க வேண்டும் என்றால் சரியாக மாதவிடாய் தொடங்கிய முதல் நாளில் இருந்து சரியாக 11வது நாள் கழித்து நீங்கள் உடலுறவில் ஈடுபடவேண்டும்.\nதமிழிலிருந்துதான் ஆங்கிலம் வந்தது, உலகின் தாய்மொழி தான் என நிரூபிக்கப்பட்டது, ஆதாரம் இதோ..\nஇன்றைய பேஷன் : முற்றிலும் பெண்களுக்காக..\nபேஷன் உலகம் : உங்களுக்காக…\nகோயம்புத்தூர் : சுற்றுலா தலங்கள் ..\nசென்னையில் உள்ள சுற்றுலா இடங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venthayirmanasu.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-19T11:57:06Z", "digest": "sha1:ET7G3DE45WJRP72BGCVWLASYE25WOG6W", "length": 12058, "nlines": 91, "source_domain": "venthayirmanasu.blogspot.com", "title": "chella நாய்க்குட்டி: July 2013", "raw_content": "\n\"அஞ்ஞாடி\" என்னும் பூமணியின் நாவலை வாசித்து முடித்தேன். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். யாரிடமும் சொன்னால் எப்படி அவ்வளவு பெரிய புத்தகத்தை வாசித்து முடித்தீர்கள் என்று கேட்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு மாதம் வைத்து வாசித்து சுவைத்தேன். வாசித்து முடித்து எழுத தொடங்கினால் சில சுவையான விஷயங்கள் விட்டுப் போகும் என்பதால் ரசித்தவற்றை அவ்வப்பொழுதே எழுதி வைத்தேன்.\n\"அஞ்ஞாடி\" பெயர் புதுமையாய் இருந்தது. போகப் போகத் தான் ஒரு குறிப்பிட்ட இனத்தில் அம்மாவை \"அஞ்ஞா\" என்று அழைக்கும் வழக்கமும் \"அஞ்ஞாடி\" என்பது \"அம்மாடி\" என்பதாய் இருக்குமோ என்பதும் புரிந்தது. ஆண்டி , மாரி என்று இரண்டு நண்பர்கள். சிறு வயதில் அவர்கள் அடிக்கும் லூட்டியில் ஆரம்பிக்கிறது கதை. மாரி வண்ணான் குடும்பத்தை சேர்ந்தவன். அவனோடு சரிக்கு சமமாய் பழக விடாததால் வீட்டுக்குத் தெரிய���மல் போய் சேர்ந்து விளையாடுகிறான் ஆண்டி. அவர்கள் விளையாடும் விதவிதமான விளையாட்டுக்கள் இன்னொரு பிறவி எடுத்து கிராமத்தில் ஒரு சிறுவனின் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது.\nவேக வேகமாக வளர்ந்து இளைஞர்கள் ஆகி திருமணம் முடித்து கதை போகும் போது ஆசிரியர் இன்னும் மீதி பக்கங்களில் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவல் எழுகிறது. 75 பக்கங்களில் மாரி மரணிக்கும் போது அடடா சின்ன வயதில் தான் போகப் போவதை அறிந்து தான் வாழ்க்கையை அவ்வளவு வேக வேகமாக வாழ்ந்து முடித்தானோ என்று பரிதாபம் ஏற்படுகிறது.\nஒரு குறிப்பிட்ட இனம் தங்களை கோயில் இருக்கும் தெருவுக்குள்ளேயே விடாமல் தடுப்பதை எதிர்த்து எந்த நீதி மன்றத்தின் ஆதரவும் கிடைக்காமல் 100 குடும்பங்கள் உள்ள ஒரு கிராமம் முழுவதுமாக கிறிஸ்துவ மதத்துக்கு மாற விரும்புவதைப் பார்க்கும் போது ஜாதியின் பெயரை சொல்லி மனிதர்களுக்கும் ஏற்றதாழ்வு காட்டும் சமுதாயம் என்று தான் திருந்துமோ என்று ஆற்றாமை இயல்பாய் எழுகிறது.\nஇறந்து பேயாய் சுற்றுபவர்கள் தங்கள் பேரன்களை சந்திக்கும் இடம் நல்ல கற்பனை. விட்டலாச்சாரியார் படம் பார்த்த எபக்ட் .பனை மரத்தில் தன் வாலை சுற்றி பற்றிக் கொண்டு கதை சொல்லும் பேயை நேரில் பார்த்தது போலவே இருந்தது.\nகடவுளர்கள் இயேசுவின் தாய் மாதா, முருகன் , வள்ளி மூவரும் சந்தித்து உரையாடுவதாக வருவது யதார்தத்தை நகைச்சுவை உணர்வு கலந்து சொல்லப் பட்டதாக இருக்கிறது.\nசாகித்திய அகடமிக்கு பரிந்து உரைக்கப்பட்ட நாவல். பக்கங்கள் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாமோ ஆனாலும் ஆசிரியரின் இமாலய முயற்சி அதீத பாராட்டுக்கு உரியது. எந்த நல்ல நாவலைப் படித்து முடித்தாலும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இப்பொழுதும் ஏற்பட்டதால் இந்த பகிர்வு. கீழே உள்ளது புத்தகம் வாசிக்க முடிவெடுத்ததும் நான் பார்த்த ஒரு வலைத்தளத்தில் எனக்கு பிடித்த வரிகள். உங்களுக்கும் பிடிக்குதா பாருங்களேன் ஆனாலும் ஆசிரியரின் இமாலய முயற்சி அதீத பாராட்டுக்கு உரியது. எந்த நல்ல நாவலைப் படித்து முடித்தாலும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இப்பொழுதும் ஏற்பட்டதால் இந்த பகிர்வு. கீழே உள்ளது புத்தகம் வாசிக்க முடிவெடுத்ததும் நான் பார்த்த ஒரு ���லைத்தளத்தில் எனக்கு பிடித்த வரிகள். உங்களுக்கும் பிடிக்குதா பாருங்களேன் \" அஞ்ஞாடியில் நூற்றாண்டுகளின் காலச்சித்திரம் தீட்டி அதற்குள் ஒரு கதையை வைத்து கதைக்குள் இன்னும் பல கதைகளையும் கனவுகளையும் வைத்து வாசகனின் பாஷையிலே பேசி... பூமணி உயரத்தை தொட்டிருக்கின்றார். என்னை மாதிரி வாசகர்கள் அந்த உயரத்தைத் தொடுவதற்குத் தோதாக படிக்கட்டுகள் , பிடித்தேற பக்கவாட்டு கைப்பிடிகள், அங்கங்கே மூச்சு வாங்கும் போது சற்று இளைப்பாற்ச் செல்ல திண்டுகள் என்று திட்டமிட்டு அமைத்துள்ளார். அஞ்ஞாடி மொத்தத்தையும் 22 பாகங்களாகப் பிரித்து ஒன்றிலிருந்து இன்னொன்று போக அளவாக படிக்கட்டுகளை அமைத்து ஓய்வெடுக்க திண்டுகளை அமைத்திருந்தாலும் சில பகுதிகள் மிக செங்குத்தாக இருக்க , என்னைப் போன்ற வாசகர்களுக்கு மூச்சுத் திணறத் தான் செய்கிறது. \"\nஎல்லாம் தொட்டு தொட்டு அரை குறையாக விட்டது போல் இருக்கிறதா. விளம்பரத்தில் அனு சொல்லுவது போல \"யாங் புத்தகத்தை வாசித்து பார்த்து ரசிங்க \"விளம்பரம்னு சொன்னதும் ஒரு விஷயம் ஞாயபகம் வருது. இடை இடையே நான் ரசித்த விளம்பரங்களை நான் குறிப்பிடுவது உண்டு. தற்சமயம் நான் ரசிக்கும் விளம்பரம் \"DAIRY MILK SILK\" என்ன ஒரு அழகான காட்சி அமைப்பு. அதில் வருபவர்களின் முக பாவம். சிக்னலில் கிடைக்கும் நிமிட இடை வெளியில் பரிமாறிக் கொள்ளும் உணர்வுப் பரிமாற்றம். அந்த பெண்ணின் சிரிப்பு ரொம்ப அழகாக இருக்கிறது.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவுலகின் மேயராக்க உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள் \nஎனக்கு புத்துணர்வூட்டும் பன்னாட்டு முகங்கள்\nஅன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டியில் கிடைத்த பரிசு\nவிமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vasanthamfm.lk/tag/baahubali/", "date_download": "2018-07-19T11:43:18Z", "digest": "sha1:POAARER5PMMHYX6PRCJUSKQDH4H36X4J", "length": 5434, "nlines": 40, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "Baahubali Archives - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nமீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி\nஇந்திய சினிமாவை மட்டுமில்லாமல் உலக சினிமாவையே மூக்கின் மேல் கை வைக்க வைத்த படம் தான் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி. இரு பாகங்களாக வெளிவந்த இப்படம் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என யாரும��� எதிர்ப்பார்க்கவில்லை. குறிப்பாக முதல் பாகம் முதலில் யாராலும் கவனிக்கப்படவில்லை. அதை அதன் இசை வெளியீட்டு … Read More »\nபாகுபலி ஸ்டண்ட் முயற்சி செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி (வீடியோ உள்ளே)\nராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் ஸ்டண்ட், சிஜி ஆகியவற்றிக்காக பெரிதும் பேசப்பட்டது. தற்போது கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் குடிபோதையில் பாகுபலியில் வருவது போல யானை மீது ஏறி நிற்கும் ஸ்டண்டை முயற்சித்து, அதை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். முதலில் யானைக்கு பழங்கள் கொடுத்து அதனிடம் நெருங்க … Read More »\nசீன மொழியில் பாஹுபலி (வீடியோ இணைப்பு )\n ராஜமௌலியின் அடுத்த யுத்தம் ஆரம்பம்\nபாகுபலி 2 படம் வெளிவந்து 50 நாட்கள் கடந்து விட்டது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பிரம்மாண்டமாக வெளிவந்து சாதனை படைத்தது. பலரும் பாராட்டிய இப்படம் ரூ 1500 கோடி வசூலை தாண்டியது. பின் இதன் வசூல் சாதனையை அமீர்கானின் தங்கல் முந்தியது. தற்போது சீனாவில் இப்படம் … Read More »\nபாகுபலி பிரபாஸின் அடுத்த படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா\nநடிகர் பிரபாஸ் பலருக்கும் பாகுபலியாகவே தெரிகிறார். அப்படியான ஒரு எண்ணத்துக்கு கொண்டுவந்தது இயக்குனர் ராஜமௌலி தான். 5 வருடங்களை ஒரே படத்திற்காக ஒதுக்கினார் பிரபாஸ். பாகுபலி படத்திற்காக அவர் பெற்ற சம்பளம் ரூ 20 கோடி தான். படம் ரூ 1000 கோடியை எட்டியதால் தனியாக அவருக்கு … Read More »\nபாகுபலி 600 கோடி வசூல், ஆனால் கையில் காசில்லாமல் தவித்த பிரபாஸ்..\nபாகுபலி படத்தின் முதல் பாகம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அது நடந்தது. படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்து தற்போது பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் பாகுபலி முதல் பாகத்திற்கு பிரபாஸ் பெற்ற சம்பளம் 20 … Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://zeyaan.blogspot.com/2011/08/blog-post_6946.html", "date_download": "2018-07-19T11:28:49Z", "digest": "sha1:TCDMXAGVZTKCPBKCTS546KGAVUYWHNW5", "length": 11723, "nlines": 124, "source_domain": "zeyaan.blogspot.com", "title": "கழிவறையில் உடலுறவில் ஈடுபட்ட பெண் கையை இழந்தார் | யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பதிவு...!!!", "raw_content": "\nகழிவறையில் உடலுறவில் ஈடுபட்ட பெண் கையை இழந்தார்\nநியூசிலாந்து பெண் ஒருவர் விடுமுறையை கழிக்க ஐரோப்பிய நாடான குறோடியா இல் உள்ள பல்மிசானா மரீனா தீவுக்கு வ���க்கு சுற்றுலா சென்ற போதே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nபல்மிசானா மரீனா இல் குறித்த பெண் படகு சவாரி செய்தபோது பிருத்தானிய மைனர் ஒருவருடன் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவசர அவசரமாக கப்பலின் கழிவறைக்கு சென்று உடனடி காபி போல உடனடி உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்\nஉடல்புணர்ச்சியின் போது ஓர் கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட பெண் வேகமாக எகிறிய போது அவரின் கை கழிவறை சிங் இல் பட்டு அது உடைந்து அவரின் கையில் ஏறியது.\nமயக்கி கீழே சரிந்த அவரைப் பார்த்த பிருத்தானிய வாலிபர் அரைகுறை ஆடைகளோடு ஆற்றில் பாய்ந்து நீந்தியே ஓடிவிட்டார்.\nதகவல் அடிப்படையில் அப் பெண்ணை மீட்ட பொலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆறு மணிநேர அறுவை சிகிச்சை நடைபெற்ற போதும் அப் பெண் தனது கையை இழக்க நேர்ந்தது.\nபொலிசாரின் விசாரனையின் போது அப் பெண் நியூசிலாந்தை சேர்ந்த அமி எனவும் 20 வயதானவர் என்றும் தெரியவந்துள்ளது. பெண் மயக்க நிலையில் இருக்கின்றமையால் பிருத்தானிய மைனர் குஞ்சின் விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.\nதீவை சுத்திப்பார்க்க போன அம்மணி தேவையில்லாததுகளை சுத்தி பார்த்ததால் ஏற்பட்ட விபரீதம் தான் இது\nஉலகிலேயே பெரிய மார்பகங்கள் - படங்கள் இணைப்பில்\nChelsea Charms எனும் பெண் உலகிலேயே பெரிய மார்பகங்கள் உடையவர் என்ற பெருமையை பெற தயாராகி வருகிறார். பெரிய மார்பகங்களுக்கான கின்னஸ் சாதனையை ந...\nஆண்களை ஆண்கள் மேட்டர் செய்வது இலங்கையில் அதிகரிப்பு...\nஇலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் ப...\nபெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை பயன்படுத்த அனுமதி வேண்டுமாம்\nபெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கூறி சீனாவை சேர்ந்த அயா யுன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள...\nவீரர்களின் உடல் பசி தீர்க்க SEX பொம்மைகள் வழங்கிய கிட்லர் - படங்கள் இணைப்பில்\nநாஜி படை வீரர்களுக்கு செக்ஸ் பொம்மைகளை வழங்க ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ரகசியமாக உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.\nதிருடனை அடித்துப்போட்டு கற்பழித்த பெண் - படங்கள் இணைப்பில்\nரஷியாவின் Meshchovsk நகரில் சிகை அலங்கார நிலையம் வைத்திருந்தவர் தான் இந்த 28 வயதாகும் ஆல���ஜா எனும் பெண். இவரது கடையில் திருடும் நோக்கோடு ...\nசரசு அக்கா இடிக்க, நிராயுதபாணி ஆனேன் - உண்மை சம்பவம்\n2008 ம் ஆண்டு என நினைக்கிறேன், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். சமாதான காலத்தில் திறக்கப்பட்ட வடக்கையும்...\nதாய்லாந்து அழகிகள் - HD படங்கள்\nஅழகுக்கு பெயர் போன தாய்வானில் 2011 ற்கான மிஸ் தாய்வான் போட்டி 13 ஆகஸ்ரில் நடைபெற்றது. அதிலே கலந்து மக்களை கெலிப்படையச் செய்த அழகிகளின் படங...\nஎனது வலைப்பூவை .com ஆக்க எண்ணியுள்ளேன். ஆதரவளிக்கும் உங்களின் கருத்து\nஇன்றைய புகைப்படம் நெல்சன் மண்டேலா\nஉன் வீட்டு ரோஜா மொட்டு\nஎப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது\nமனிதன் நினைத்திருந்தான் வாழ்வு நிலைக்குமென்று... கடவுள் நினைத்துக் கொண்டான் பாவம் மனிதன் என்று...\nநேசிக்கும் முன் பல தடவை யோசி, ஆனால் நேசித்த பின்னர் யோசிக்காதே, அது நேசிக்கப்பட்ட இதயத்தை காயப்படுத்திவிடும்\nபிளைட் எடுக்கிற நேரம் ஆச்சு.... ரன்வேய் இல நிண்டு பந்து அடிக்கிற தம்பியவ கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ.......\nசிவப்பு சட்டை போட்ட அக்கா இடிக்காம கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ பாப்பம்.. நானும் பாக்கிறேன் அப்பவில இருந்து என்னை இடிச்சு கொண்டு தான் நிக்கிறியள்\nரைட் ரைட்... அண்ணை பிளைட் ஐ எடுங்கோ.....\nஎனது பதிவுகளை மின் அஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://engalblog.blogspot.com/2010/09/blog-post_30.html", "date_download": "2018-07-19T11:42:27Z", "digest": "sha1:VZ23G4I2YS7P6H323GLTZRIRPRJ5PT5Y", "length": 51960, "nlines": 454, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எந்திரன் - திரைத்துறை தீபாவளி! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஎந்திரன் - திரைத்துறை தீபாவளி\nஅக்டோபர் ஒன்று.... 'சிவாஜி'யின் பிறந்தநாள். அந்த நாளில், 'சிவாஜி' ராவ் நடித்த 'சிவாஜி' படத்தின் அடுத்த படமாகிய, 'எந்திரன்' திரைக்கு வருகின்றது திரையுலகினர், தமிழக பொதுமக்களில் பெருஜனம், இங்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும், ஜப்பானிலும், இன்னும் வெளி நாட்டிலும் கூட 'அட, என்னதான் ஆகும்' என்று பார்த்துக் கொண்டிருக்கும் நாள்.\nநாம் கொண்டாடாவிட்டாலும், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு விழாவை கொண்டாடும்போது, நாம் ஆர்வமாக கவனிப்பதில்லையா...அது போல சிலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nலேசான, பலத்த, மிக பலத்த பொறாமையுடன் சிலர் நடக்கும் கூத்தை பார்த்துக் கொண��டிருக்கிறார்கள்.\nரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரெஹ்மான் போன்ற மூன்று பெரும்புள்ளிகளுடன் விளம்பரங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலக்கும் சன் பிக்சர்ஸ் இணைந்தால் பிரம்மாண்டத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் கேட்க வேண்டுமா என்ன\nசுஜாதாவின் கதை. அவர் இருந்திருந்தால் என்னென்ன சொல்லியிருப்பாரோ இன்னும் என்னென்ன அவர் பாணியில் மெருகேற்றியிருப்பாரோ\n) நடிப்பதாக இருந்து, பின்னர் கமல் கைக்கு வந்து, முடிவாக ரஜினி நடித்திருக்கிறார்.\nமுதன் முதலாக விஞ்ஞானியாக நடிக்கும் ரஜினிக்கு முதல் முறை ஜோடி சேரும் ஐஸ்வர்யா சம்பளம், இந்திய திரையுலக கதாநாயகிகள் வரலாற்றில் முதல் முறை ஆறு கோடியாம்.\nசென்னையில் மட்டும் நாற்பது திரை அரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், தமிழகம் முழுவதும் ஐநூறு அரங்குகளில் வெளியாவது சாதனை. அது முறியடிப்பது முந்தைய ரஜினி படமான சிவாஜியின் சாதனையை..\nமும்பை ஆரோரா திரை அரங்கம் ஆறேழு நாட்களாய் திரையரங்கை மூடி வைத்து, இந்தப் படத்துக்கு என்று ஸ்பெஷலாகத் தயாராகிறதாம்.\nரஜினிக்கு ஜப்பான் ரசிகர்கள் ஏராளம் என்பது தெரிந்ததே நேபாளிலிருந்து ஒரு ரசிகர் இவர் படம் வெளியாகும் முதல் நாளே பார்க்க என்று சென்னை வந்துள்ளாராம்\nஎந்திரன் பற்றி எழுதாத பத்திரிகைகள், ப்ளாக்ஸ், காட்டாத சேனல்கள் குறைவு. அதிகமாக விலை போகக் கூடிய இப்போதைய பொதுப்போக்கு எந்திரன் பற்றிய செய்திகள்.\nசன் பிக்சர்ஸ் படம் என்ற போதும் எல்லா சேனல்களிலும் பிட்டு பிட்டாய் டிரெயிலர்கள் காண்பிக்கப் படுகின்றன.\nடிரெயிலருக்கே டிரெயிலர், முன் பதிவுக்கு முன்னோட்டம், முன் பதிவை டிவியில் காண்பிப்பது என்று ஒன்றொன்றும் ஆர்ப்பாட்டமாகச் செய்வது இதன் பிரம்மாண்டத்தைப் பறை சாற்ற\nதமிழக அரசு இதன் வெளியிடு நாளுக்கு விடுமுறை விடாதது ஒன்றுதான் குறை (விடுமுறையும் வேறு வகையில் வந்துவிட்டதோ (விடுமுறையும் வேறு வகையில் வந்துவிட்டதோ) முன்பதிவு ஆரம்பித்த முதல் சில மணிநேரங்களிலேயே, முதல் மூன்று வாரங்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டதாக சேனல்கள் சொல்கின்றன.\nகன்னியாகுமரியில் தொடங்கி அக்டோபர் ஒன்றாம் தேதி சென்னையில் முடியும் வண்ணம் எந்திரன் பற்றி ஒரு ரத யாத்திரை நடந்து வருவதை ஆங்கில சேனல் ஒன்று காட்டியது. கூடவே அமிதாப் தன் 'அருமை நண்பர்' ரஜினி பற்றி ச���லாகித்துச் சொல்வதையும், நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் தென் இந்தியக் காலாச்சாரம் பற்றி பேசியதையும் கேட்க முடிந்தது.\nகீழே பசித்த புலி என்று பயந்து மரத்தில் ஏறினால், மரக் கிளையில் மலைப் பாம்பு, பயந்து பக்கத்தில் தண்ணீரில் குதிக்கலாம் என்றால் முதலை என்ற நிலையில் மேலே உள்ள தேன் கூட்டிலிருந்து கசிந்த ஒரு துளி தேனை நாக்கில் சுவைத்த மனிதன், 'ஆஹா என்ன ருசி' என்று நினைத்தது போல பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ...\n என்ன ருசி' என்று நினைத்தது போல பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... ///\nபார்ப்போம். அக் 1 தேதி எல்லாம் தெரிஞ்சிடும்.\nஅமாம்.. 'ஆசைதான் அழிவிற்கு காரணம்'.\nஎதில் உண்மையான 'சுகம்', 'மகிழ்ச்சி' இருக்கிறது என்பதை அறியாமல் பலர் வாழ்கிறார்கள்..\nஅந்த கடைசி உதாரணம் பலே\n//பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... //\n ஒருவேளை, எந்திரன் ரிலீஸால் இந்து-முஸ்லிம் ஒற்றுமைகூடப் பலப்படலாம், யார் கண்டது\n//பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... //\nகாஸ்ட்ரோல் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \n//கீழே பசித்த புலி என்று பயந்து மரத்தில் ஏறினால், மரக் கிளையில் மலைப் பாம்பு, பயந்து பக்கத்தில் தண்ணீரில் குதிக்கலாம் என்றால் முதலை என்ற நிலையில் மேலே உள்ள தேன் கூட்டிலிருந்து கசிந்த ஒரு துளி தேனை நாக்கில் சுவைத்த மனிதன், 'ஆஹா என்ன ருசி' என்று நினைத்தது போல பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... //என்னதான் இருந்தாலும் இது உமக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா என்ன ருசி' என்று நினைத்தது போல பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ... //என்னதான் இருந்தாலும் இது உமக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா சிவாஜி படத்தில் கதை என்று பார்த்தால் ஆயிரம் முறை தமிழ் படவுலகும், எட்டு முறை ஷங்கரும் அரைச்ச அதே மாவுதானே. Robot படத்துக்கு ஓவர் பில்ட் அப் குடுத்துகிட்டு இருக்காங்க, ஆனாலும் செலவு அதிகம் செய்யாமல் எந்த சப்தமும்/ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எந்த புயல், ஸ்டார் யாரும் இல்லாமல் வந்த களவாணி, அங்காடித் தெரு போன்ற படங்கள் மக்களின் மனதை கொள்ளையடித்துச் சென்றன. இந்தப் படம் அந்த அளவுக்��ாவது ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுமா சிவாஜி படத்தில் கதை என்று பார்த்தால் ஆயிரம் முறை தமிழ் படவுலகும், எட்டு முறை ஷங்கரும் அரைச்ச அதே மாவுதானே. Robot படத்துக்கு ஓவர் பில்ட் அப் குடுத்துகிட்டு இருக்காங்க, ஆனாலும் செலவு அதிகம் செய்யாமல் எந்த சப்தமும்/ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எந்த புயல், ஸ்டார் யாரும் இல்லாமல் வந்த களவாணி, அங்காடித் தெரு போன்ற படங்கள் மக்களின் மனதை கொள்ளையடித்துச் சென்றன. இந்தப் படம் அந்த அளவுக்காவது ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுமா\nரஜனிபடம் பிடிக்காதுன்னு சொன்னாலும்....அவர்ல ஏதோ ஒரு கவர்ச்சி.படம் பார்த்தே ஆகணும்.\nஇன்னுமா இந்தப்படம் ரிலீஸ் ஆவல புலி வருது புலி வருது புலி வருது...\nபடம் சகிக்காது. (ட்ரெயிலர் பார்த்தேன்.. காபி அடித்தாலும் ரசிக்கும்படியாக காபி அடிக்க வேண்டாமோ யக்\nஆனால் எக்கச்சக்கமா பணம் குவிக்கும் (ரஜினி சங்கர் தலைவிதி அப்படி; ஜனங்க தலைவிதி இப்படி)\nஇந்தப் படத்தோட ரிடையர் ஆவாரா சூப்பரு\nதமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் இந்தப் படம்னாராமே சூப்பரு\n///முதன் முதலாக விஞ்ஞானியாக நடிக்கும் ரஜினிக்கு...\nநான் முதல் நாள் தளபதிக்கு அப்புறம் இப்போதோ தான் ரஜினி படம். பார்ப்போம் சிலபேருக்கு அங்கே மச்சம் என்பார்கள் - ரஜினிக்கு உடம்பே கருப்பு - அப்புறம் மச்சம் பற்றி கேட்கவேண்டும். நானும்தான் கட்டக்கருப்பு, ஒரு மறுதலாக்காவது ஏதோ கொஞ்சம் நல்லது நடக்கலாம். அட போங்கையா\nஎங்க ஊர்ல எப்ப ரிலீஸ்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க... ம்ம்ம்... சூப்பர் ஹிட் தான் நோ டவுட்... ஆனா கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமா create பண்ணிட்டாங்களோனு தோணுது...\n// ஹுஸைனம்மா said... ஆமாம் ஒருவேளை, எந்திரன் ரிலீஸால் இந்து-முஸ்லிம் ஒற்றுமைகூடப் பலப்படலாம், யார் கண்டது ஒருவேளை, எந்திரன் ரிலீஸால் இந்து-முஸ்லிம் ஒற்றுமைகூடப் பலப்படலாம், யார் கண்டது\n அதுவும் - நம்மை ஊராய விட்டு வேடிக்கை பார்ப்பது அரசியல்வாதிகள் முதல் / ஆன்மிகவாதிகள் வரை என்று இருக்கும்போது\n\"பாப்ரி மஜீத்\" நிகழ்வு நடந்தபோது நான் பெங்களூரில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். என்னுடன் வேலை பார்த்த \"முஹமத் சுஹைல்\" என்ற அலுவலக நண்பரை ஒரு நாள் போல் நான் வசித்த கிழக்கு பெங்களுரிலிருந்து Bull Temple ரோட்டில் இருந்த என் அலுவலகத்துக்கு அழைத்து செல்வேன். அவருக்கு வண்டி ஓட்ட த��ரியாது. மேலே சொன்ன விஷயம் நடந்து அவர் வசித்த Fraser Town ஏரியா ஒரே களேபரம். அவரை எந்த ஒரு பிரச்சினையும் இன்றி அழைத்து போனது நேற்று கோர்ட் நியூஸ் பார்த்தபோது நினைவுக்கு வந்தது.\nசிவாஜி கணேசன் அவர்களின் பாவ மன்னிப்பு பட பாடலில் வருவது போல்\n\"எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்\nபாயும் மீன்களில் படகினை படைத்தான்\nஎதனை கண்டான் \"மதம்\" தனை படைத்தான் \nகண்ணதாசனின் இந்த வரிகளை கூட ஒத்துக்கொள்ளாத உலகம் \"மனம்\" தனை படைத்தான் என்று மாற்றி வைத்தது \n\"எந்திரன்\" சூப்பர் என்று விமர்சனங்கள் குவிகின்றன. கூட்டம் அடங்கிய பின் நிச்சயம் பார்த்துவிட எண்ணியுள்ளேன்.\nமுதல் நாள் முதல் ஷோ இல்லாவிட்டாலும் நேற்று பார்த்தாகிவிட்டது. முழுக்க முழுக்க ஷங்கர் படம். ரோபோ ரஜினி கலக்கல். ரொம்ப நாளுக்கு பின் வில்லன் போல் அதுவும் 'மேம்மே\" கத்திக்கொண்டு வரும்போது அந்தக்கால வில்லன் ரஜினியை தொலைத்துவிட்டோமோ என்று வருத்தம்.\nஆடு புலி ஆட்டம், மூன்று முடிச்சு - ரஜினி என்னிடம் நல்ல கதை இருக்கு உங்களை வில்லனாக பரிணமிக்க \nநான் ரெடி நீங்கள் ரெடியா \nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஎந்திரன் - திரைத்துறை தீபாவளி\nசிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nஹரியுடன் நான், கேபி, எம் எஸ் வி..\nவானத்தில் தெரிந்த அதிசயக் காட்சி\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏத��தோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nவாங்க பேசலாம் :) - வாங்க பேசலாம் :) வாங்க முதலில் எங்க வீட்டு தோட்டத்தில் ரெட் கர்ரன்ட்ஸ் .(red currants ) பழங்கள் இந்த வருடத்து அறுவடையில் பறவை நட்புக்கள் சாப்பிட்டு எங்களுக...\nமாறிய காலம், மாறாத கோலம் - *மாறிய காலம், மாறாத கோலம்* சுகுமார் இரண்டாவது நாளாக பள்ளிக் கூடம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். சாதாரணமாக அப்படி சொல்லக் கூடியவன் கிடையாது. ...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் த��த்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *கண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://saratharecipe.blogspot.com/2013/03/blog-post_4313.html", "date_download": "2018-07-19T11:25:21Z", "digest": "sha1:NWYD5JDMWNGNNJFJE7RI7C6JTGNU7MN5", "length": 11062, "nlines": 183, "source_domain": "saratharecipe.blogspot.com", "title": "சாரதா சமையல்: சிக்கன் ப்ரைட் ரைஸ்", "raw_content": "\nபரிமாறும் அளவு - 3 நபருக்கு\nபாஸ்மதி அரிசி - 2 கப்\nசிக்கன் - 200 கிராம்\nபீன்ஸ், காரட், கோஸ், காப்சிகம் - 1 கப்\nசோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி\nசில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி\nமிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி\nஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 5 மேஜைக்கரண்டி\nசிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். காய்களை நீளமாக வெட்டி கொள்ளவும். பூண்டை துருவி கொள்ளவும்.\nஅரிசியில் தண்ணீர், உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து சாதத்தில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும். சாதம் உதிரியாக இருக்க வேண்டும்.\nகடாயை அடுப்பில் வைத்து சிறிது 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு நன்கு வேகும் வரை ப்ரை செய்து தனியாக எடுத்து வைக்கவும்.\nகடாயை கழுவி விட்டு மீண்டும் அடுப்பில் வைத்து 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறவும். வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.\nவாயகன்ற கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி ��ூடானதும் பூண்டை போட்டு வதக்கவும். அதன் பின் காய்களை போட்டு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.\nசாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து இறக்கவும்.\nஅஜினமோடோ உப்பு கொஞ்சம் சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்.\nசாதம் மிச்சமானால் அதை ப்ரைட் ரைஸ் செய்ய உபயோகிக்கலாம்.\nகாய்கள் முக்கால் பாகம் வெந்தால் போதுமானது.\nஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar\nஇந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலா...\nவெங்காய வடகம் / Onion Vadagam\nஇப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்...\nசாம்பார் பொடி / Sambar Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு...\nஆப்பம் - மற்றொரு முறை\nபரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள் - இட்லி அரிசி - 200 கிராம் வெள்ளை முழு உளுந்து - 50 கிராம் பச்சரிசி - 200 கிராம...\nகொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி ம...\nநான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுட...\nபுளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...\nபுடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - புடலைங்காய் - 400 கிராம் கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக்கரண...\nபருப்பு துவையல் / Paruppu Thuvaiyal\nதேவையான பொருட்கள் - துவரம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி தேங்காய் து...\nதேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -20 கொத்தமல்லி - 50 கிராம் மிளகு - 3 மேஜைக்கரண்டி சீரகம் - 3 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு க...\nஎள்ளுப் பொடி / Ellu Podi\nஇட்லிப் பொடி / Idly Podi\nசாம்பார் பொடி / Sambar Podi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-19T11:28:34Z", "digest": "sha1:QGYTKTKNV6ADN45LB52DNRKUWE3NBQMG", "length": 5447, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உணர்ச்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உணர்ச்சி யின் அர்த்தம்\nஉடலில் அல்லது மனத்தில் ஏற்படும் நிலையை அறிவதால் ஏற்படும் அனுபவம்; தொடுவதை அறியும் திறன்.\n‘கட்டைவண்டியின் ஆட்டம் தொட்டிலில் போட்டுத் தூங்கவைப்பது போன்ற உணர்ச்சியை எனக்குத் தந்தது’\n‘கால் மரத்துப்போய் உணர்ச்சியே இல்லாமல் ஆகிவிட்டது’\n(மனத்தால் அனுபவிக்கும் கோபம், அன்பு, பரிவு, பொறாமை போன்ற) நிலை.\n‘நாம் வெகு எளிதாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடுகிறோம்’\n‘இந்தக் கதையில் ஒரு தாயின் உணர்ச்சிகளை ஆசிரியர் அழகாகச் சித்தரிக்கிறார்’\n‘இன்றைய விழாவில் அமைச்சர் உணர்ச்சி ததும்பப் பேசினார்’\nகுறிப்பிடப்படும் தன்மை அல்லது இயல்பைக் கொண்டிருக்கும் அல்லது வெளிப்படுத்தும் நிலை.\n‘அவருக்கு அபாரமான நகைச்சுவை உணர்ச்சி\n‘காட்டைப் பற்றிய அவரது விவரிப்பில் அழகுணர்ச்சி வெளிப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/members/kala_sv.3077/latest-activity", "date_download": "2018-07-19T11:48:50Z", "digest": "sha1:WRYYZEFPUREKYJ6RSYVXQ44MSAWWOCFS", "length": 5848, "nlines": 83, "source_domain": "www.penmai.com", "title": "kala_sv's latest activity | Penmai Community Forum", "raw_content": "\nHi, அருமையான கதை. நல்ல முடிவு. அனைத்து கதாபாத்திரங்களுமே மனதில் நிற்கின்றன. வாழ்த்துக்கள் (y)(y)\n சோகக் காட்சிகள் எல்லாம் ஒரேயடியா முடியட்டும்ன்னு மொத்தமா எழுதிட்டேன் இனி ஹாப்பி மொமண்ட்ஸ் மட்டுமே இனி ஹாப்பி மொமண்ட்ஸ் மட்டுமே\n - 9 ஞ��பகம் முழுவதும் நீயே - 10 கருத்து திரி\nமக்களே... இங்க பெரும்பாலும் யாரும் படிக்கிறதில்லன்னு அப்டேட் போட மறந்துட்டேன் இதோ செங்குளத்தின் அடுத்தடுத்த அத்தியாயங்கள்...\nHi Friends, கடைசி எபி நெருங்க நெருங்க பதற்றமா இருக்கு. ஒவ்வொருத்தரின் உணர்வுகளையும் சரியா சொல்லணும், கதையை நினைச்ச மாதிரி...\nஞாபகம் முழுவதும் நீயே - 8 கருத்து திரி\nஞாபகம் முழுவதும் நீயே கதையின் அடுத்த பதிவுடன் வந்து விட்டேன் பிரண்ட்ஸ். படித்து விட்டு எப்படி இருந்ததுனு சொல்லிட்டு போங்க. ஞாபகம்...\nHi Friends, here is the next update. karuvarai sontham - 36 மிருதுளா - கெளதம் - தேஜா க்கு என்ன தொடர்ப்பு என்பதை தவிர, மற்ற எல்லா...\n - 3 கருத்து திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-mazhaikaalam-by-goms.17361/", "date_download": "2018-07-19T11:35:03Z", "digest": "sha1:XC6M73RV34STT4P7VGUVPDDMH3SHWUVP", "length": 14554, "nlines": 355, "source_domain": "www.penmai.com", "title": "மழைக்காலம் - Mazhaikaalam By Goms | Penmai Community Forum", "raw_content": "\nஉங்கள் அனைவரின் அன்பும் ஆதரவுடனும் எனது மூன்றாவது கதையை தொடங்குகிறேன்\nகதையின் தலைப்பு - \"மழைக்காலம்\"\nமனிதனின் வாழ்வில் எத்தனையோ பருவங்கள் உண்டு. அவற்றுள் இளமை ததும்பும் கல்லூரி பருவமே பசுமையானது, குளுமையானது, இனிமையானது. பள்ளி என்னும் கூட்டில் புத்தகபுழுக்கலாக இருந்தவர்கள் சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் வண்ணத்து பூச்சிகளாய் மாறும் காலம் கல்லூரிக் காலமே\nவிருப்பு, வெறுப்பு, நட்பு, பகை, பாசம், காதல் என்று பல நிகழ்வுகளைக் கொண்டது இந்த கல்லூரிக் காலம்.\nகாலங்கள் பல கடந்தாலும் நெஞ்சத்தில் 'நினைவுகள்' என்ற புத்தகத்தை புரட்டும் போது பனியில் நனைந்த புது மலரை போல் பசுமைமாறாத மழைக்காலமாய் திகழ்வது கல்லூரிக் காலமே\nஅப்படிப்பட்ட கல்லூரிக் காலத்தை பற்றிய கதை தான் இந்த \"மழைக்காலம் \"\nஇந்த கதையை படித்து, அதன் நிறை குறைகளை கூறுங்கள்.\n அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.. அடுத்த கதை என்று சொல்வதை விட பழைய கதையை தொடர வந்திருக்கிறேன்.. எஸ்.. ஒரு வழியாக மழைக்காலம் கதையை தொடர போகிறேன்.......................... எல்லோரும் ஜோரா கை தட்டுங்க பார்ப்போம்..\nசிறு சிறு மாற்றங்களுடன் புது பொலிவுடன் கதையை முதலில் இருந்து பதிவு செய்கிறேன்...\nமுன்பு இந்த கதையை 50 பகுதிகள் வரை எழுதியிருந்ததை edit செய்து 50 பகுதிகளை 20 பகுதிகளாக சுருக்கி உ���்ளேன்.. முன்பு ஒரு எபிசோட் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் தான் பதிவு செய்தேன்.. இப்பொழுது ஒரு எபிசொட்-க்கு குறைத்து பதினைந்து பக்கங்களாக மாற்றவும் அது 20 எபிசோட் தான் வந்தது..\n” கதையை பதிப்பகத்திற்கு அனுப்பி உள்ளதால் அதன் லின்க்ஸ் அனைத்தையும் டெலிட் பண்ணிவிட்டேன்.. சாரி பிரெண்ட்ஸ்..\nஇந்த கதைக்கும் உங்கள் அன்பையும் ஆதரவையும் எப்பொழுதும் போல் தருவீர்கள் என்று நன்புகிறேன்..\nஇதோ முதல் ஐந்து பகுதிகளுக்கான பதிவு...\nசாரல் 1 to 5\nநாளை முதல் ஒரு பதிவிற்கு ஒரு பகுதி தான் பா போஸ்ட் செய்வேன்..\nஉங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் பதியவும்...\nஉங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,\nஉங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் பதியவும்...\nஉங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,\nநேற்றைய பதிவையும் சேர்த்து இன்று பதிகிறேன் பா..\nஇதோ அடுத்த இரண்டு பதிவுகள்...\nஉங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் பதியவும்...\nஉங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,\nஇதோ அடுத்த இரண்டு பதிவுகள்...\nஉங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் பதியவும்...\nஉங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,\nஇதோ அடுத்த இரண்டு பதிவுகள்...\nஉங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் பதியவும்...\nஉங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,\nமழைக்காலம்: குழந்தைகளின் ஆரோக்கியத்திற&a Health and Kids Food 1 Dec 13, 2016\nமழைக்காலம் – `தள்ளுவண்டி’ ஆகாமல் தப்பிப்ப Cars and Bikes 0 Nov 18, 2014\nமழைக்காலம் – `தள்ளுவண்டி’ ஆகாமல் தப்பிப்ப\nஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால்\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nஆடி மாதத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nகோடி நன்மை தரும் ஆடி வெள்ளி வழிபாடு\nதிரும்பத் திரும்பத் தோல்வியைத் தழுவியவ\nசெங்குளம் - nivetha.j - கமெண்ட்ஸ்..\n‘மா’: கற்பிதம் அல்ல பெருமிதம்\nமௌனமே உன் பார்வையால் கொல்லாதே\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ennulagam.blogspot.com/2006/03/89.html", "date_download": "2018-07-19T11:31:26Z", "digest": "sha1:75IIFB2CMBG53Q6OPQMGBTFNCFJTLWPZ", "length": 31265, "nlines": 227, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: திரும்பிப் பார்க்கிறேன் 89", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nஅடுத்த இரண்டு நாட்களில் வேறு ஆட்களை வைத்து ஆண்டெனாவை வெற்றிகரமாக பொருத்தி முடித்து தொலைக்காட்சிப் பெட்டியை உபயோகிக்கத் துவக்கினோம்.\nரூபவாஹினியில் அழகான செந்தமிழில் தமிழ் செய்திகளை வாசிக்கக் கேட்டபோது ஆனந்தமாக இருந்தது. மற்றபடி பெரும்பாலான நிகழ்ச்சிகள் சிங்களத்தில் இருந்ததால் சிறிது நாட்களிலேயே அலுத்துப் போனது.\nவானம் தெளிவாக இருக்கும் நாட்களில் சென்னை தொலைக்காட்சி ஒளிபரப்பு கிடைப்பதுண்டு. கலர் பெட்டியில் கறுப்பு வெள்ளை ஒளிபரப்பு\nஎன்னுடைய வீட்டுக்கார அம்மையார் ஆரம்பத்தில் தினமும் ஆறு மணியானதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண வந்தார்கள். நாளடைவில் ஒன்றும் விளங்காத சிங்கள நிகழ்ச்சிகள் அலுப்பை ஏற்படுத்த அவர்களுடைய வரவு வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் என குறைந்து பிற்பாடு சுத்தமாய் நின்றுப்போனது.\nநாமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாமே என்ற நப்பாசையில்தான் ஆண்டெனாவையே அடிக்க சம்மதித்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு அவர்களுடைய நடவடிக்கைகள் அதற்குப் பிறகு வெகுவாக மாறிப்போயின\nநின்னா குத்தம் உக்கார்ந்தா குத்தம் என்று சொல்வார்களே அதுபோல் எதற்கெடுத்தாலும் அவர்களுடைய தலையீட்டால் எங்கள் இருவருடைய நிம்மதியே போய்விட்டது என்று சொல்லும் அளவுக்கு ஆகிப்போனது நிலமை.\nஇரவு படுக்கச் செல்லுமுன் இலங்கை வானொலி ஒலிபரப்பும் இரவு நேர பாடல்களைக் கேட்காமல் என்னால் இருக்க முடியாது. என்னுடைய மூத்த மைத்துனர் கப்பலில் இருந்து கொண்டு வந்த ஸ்டீரியோ செட்டில் ஒலி அளவை எத்தனைத்தான் குறைத்தாலும் வீட்டிற்கு வெளியே அதுவும் இரவு நேரத்தில் கேட்காமல் இருக்காது.\nஅதற்காக, ஒரு நாள் நான் அலுவலகத்துக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கையில் என்னை வழிமறித்து, ‘பத்து மணிக்கு லைட்ட அணைச்சிட்டு படுத்துறணும்.. இது குடும்பம் நடத்தற வீடு கும்மாளம் போடற வீடு இல்லை’ என்று என்னுடைய வீட்டுக்காரர் சொன்னதுதான் last straw\nஅதற்கு முன்பு ‘சார், வண்டிய கேட்டுக்கு வெளியவே ஆஃப் பண்ணிட்டு வீட்டுக்குள்ள தள்ளிக்கிட்டுத்தான் வரணும், மேலே குழந்தை அதிகமா ஆட்டம் போடுது. கீழ இருக்க முடியலை, கண்டிச்சி வைங்க, பால் ரொம்ப தண்ணியாருக்கு உங்க வொய்ஃப் சும்மானாவாவது அடிக்கடி புகார் பண்றாங்க கொஞ்சம் சொல்லி வைங்க, அப்படி, இப்படியென்று தினம் ஒரு புகார் கூறியபோதெல்லாம் பொறுத்துக் கொண்ட நான் இது குடும்பம் நடத்தற வீடு என்று என்னையும் என் மனைவியையும் சேர்த்து கூறியது சற்றே தரக்குறைவான பேச்சாக தோன்றவே.., ‘சரி சார்.. இந்த மாசக் கடைசிக்குள்ள வீட்ட காலி பண்ணிடறேன்.’ என்று கூறிவிட்டு அலுவலகம் புறப்பட்டுச் சென்றேன்.\nஎன்னுடைய கிளை திறந்து சுமார் ஆறு மாதங்கள் ஆகியிருந்த நிலையில் அலுவலக வேலை நெட்டி முறிந்தது. தினமும் இரவு எட்டு மணிக்கு முன்பாக அலுவலகத்தை விட்டு இறங்க முடியாத சூழ்நிலையில் வீட்டைத் தேடி அலைய வேண்டிய வேலையும் சேர்ந்துக்கொண்டது..\nதுவக்க நாளன்று என்னுடைய பொது மேலாளர் சாங்ஷன் செய்துவிட்டு சென்ற எல்லா கடன்களுக்கான விண்ணப்பங்கள், அதைச் சார்ந்த படிவங்கள், கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் வாடிக்கையாளர்களிடத்திலிருந்து பெற்று என்னுடைய வட்டார மேலாளருக்கு அனுப்ப ஏறத்தாழ எல்லாமே சாங்க்ஷன் ஆகி வந்தன.\nஆகவே அக்கடன்களை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பட்டுவாடா செய்யும் வேலை வேறு சேர்ந்துக்கொள்ள முன் பின் யோசிக்காமல் ஏண்டா வீடு காலி பண்ணிடறேன்னு சொன்னோம் என்று தோன்றியது.\nஅத்துடன் இனி வீடு மாறுவதென்றால் வீட்டுக்காரர் வசிக்காத வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று வேறு ஏற்கனவே தீர்மானித்திருந்ததால் பிரச்சினை மேலும் சிக்கலாகிப்போனது.\nநான் ஒரு பக்கம், பாய் ஒரு பக்கம் என ஒரு வார காலத்திற்கு வீடு வேட்டை நடத்தினோம். இதற்கிடையில் என் மனைவி மீண்டும் கர்ப்பமாகி இருந்ததால் அருளானந்தர் நகரை விட்டு செல்லவும் மனமில்லாமல் அருளானந்தர் நகர் எல்லைக்குள்ளாகவே நடந்த எங்களுடைய ஒரு வார வீடு தேடும் படலம் தோல்வியில் முடிவடைந்தது..\nஆனால் எங்களுடைய அதிர்ஷ்டம் மாதக் கடைசிக்கு இனியும் ஒரு வாரம் இருந்த சூழ்நிலையில் நான் முற்றிலும் எதிர்பாராதிருந்த திசையிலிருந்து உதவி வந்தது.\nநான் சென்னையிலிருந்த சமயத்தில் வாரம் ஒரு முறை மட்டுமே கோவில் வழிபாட்டிற்க்கு செல்வது வழக்கம். ஆனால் தஞ்சையில் காலை பத்து மணிக்குதான் அலுவலகம் என்பதாலும் அருளானந்தர் நகருக்கு மாற்றலாகி வந்த வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே எங்களுடைய பங்கு தேவாலயம் இருந்ததால் அநேகமாக வாரத்தில் எல்லா நாளுமே காலை வழிபாட்டுக்கு செல்வதை வழக்��மாகக் கொண்டிருந்தேன்.\nஅப்படி தினமும் நான் செல்லும்போதெல்லாம் என்னுடைய பங்கு குருவைப் பார்த்து புன்னகையுடன் காலை வணக்கும் கூறிவிட்டு செல்வது வழக்கம். அவருக்கு என்னைப் பற்றி லேசாக அறிந்திருந்தாலும் ஒரு நாள் என்னை ஆயருக்கு அறிமுகப்படுத்திய எங்களூர் பாதிரியார் அவருக்கு என்னை நேரிடையாக இன்னார் என்று அறிமுகப்படுத்தியதிலிருந்து எங்கள் இருவருக்குமிடையே நட்பு சற்றே நெருக்கமானது.\nநாளடைவில் அவராகவே முன் வந்து என்னுடைய வங்கியில் அவருடைய பங்கு கணக்கைத் துவக்கி வரவு செலவு செய்ய ஆரம்பித்தார். அவருடைய பங்கு அலுவலகம் நான் என்னுடைய அலுவலகம் செல்லும் பாதையிலேயே இருந்ததால் அவருடைய கணக்கில் வரவு வைக்கவேண்டிய காசோலைகள் இருந்தால் முந்தைய நாளே எனக்கு தொலைபேசி செய்வார். நானும் வரும் வழியில் அதைப் பெற்றுக்கொண்டு செல்வேன்.\nஅப்படி ஒரு நாள் அவரைச் சந்திக்கச் சென்றபோது என்னுடைய வீட்டுப் பிரச்சினையை அவரிடம் கூறினேன். அவர் நான் இப்போது தங்கியிருக்கும் வீட்டுக்காரரை நன்றாகத் தெரிந்திருந்ததால், ‘ஐயோ சார். அவர் வீட்லயா இருக்கீங்க அவர் சரியான சிடுமூஞ்சியாச்சே\nஎனக்கு வியப்பாகிப் போனது. ‘என்ன ஃபாதர் நீங்கதான் ஒரு விழாவுல அவர இந்திரன் சந்திரன்னு புகழ்ந்தீங்க நீங்களே இப்படி சொல்றீங்களே\nஅவர் நான் தமாஷ் செய்கிறேன் என்று புரிந்துக்கொண்டு உரக்கச் சிரித்தார். ‘வேற என்ன பண்ண சொல்றீங்க ஜோசப் அவர் நம்ம பேரவைத் தலைவர். அவர பத்திய உண்மைகளை அரங்கத்துல சொல்லவா முடியும் அவர் நம்ம பேரவைத் தலைவர். அவர பத்திய உண்மைகளை அரங்கத்துல சொல்லவா முடியும் சரி அத விடுங்க. உங்களுக்கு எவ்வளவு வாடகையில வேணும் சரி அத விடுங்க. உங்களுக்கு எவ்வளவு வாடகையில வேணும்\nநான் என்னுடைய வங்கியில் எனக்கு வீட்டுக்கான வாடகையை அவர்களே கொடுத்துவிடுவார்கள் என்று கூறி அதற்குண்டான தொகையையும் கூறினேன். உடனே அவர், ‘பரவாயில்லையே.. அப்படீன்னா நீங்க கவலைய விடுங்க.. நாளைக்கு காலைக்குள்ள அருளாநந்தர் நகர்லயே வீட்டுக்காரர் இல்லாத ஒரு வீட்ட புடிச்சிக் குடுக்கறதுக்கு நான் பொறுப்பு. கவலைப் படாம போங்க.’ என்றார்.\nஎனக்கு அப்போதும் நம்பிக்கையில்லை. இருந்தாலும் அவர் சொல்கிறாரே என்று, ‘சரி ஃபாதர். கிடைச்சா நல்லதுதான்.’ என்று கூறிவிட்டு என் அலு���லகம் சென்றேன்.\n அன்று மாலையே அவர் என்னை அழைத்து, ‘சார், அருளானந்தர் நகர் கோடியில ஒரு தனி வீடு இருக்கு. வீட்டுக்காரர் மெட்றாஸ்ல இருக்கார். கேர்டேக்கர் நம்ம பங்கு ஹைஸ்கூல்லதான் டீச்சரா இருக்கார். அவருக்கு உங்கள பத்தி தெரிஞ்சிருக்கு. நான் சொன்னதும் உடனே சரின்னுட்டார். நீங்க ஆறுமணிக்குள்ள வந்தா சாவிய வாங்கி வீட்ட பாக்கலாம்.’ என்றார்.\nஆறு மணி என்ன, இப்போதே வருகிறேன் என்று என்னுடைய காசாளரிடம் (என்னுடைய உதவி மேலாளரை கிளை துவங்கிய மூன்று மாதத்திலேயே உங்களுடைய வர்த்தக அளவுக்கு உதவி மேலாளர் தேவையில்லை என்று வேறொரு கிளைக்கு மாற்றிவிட்டார் என்னுடைய வட்டார மேலாளர்.) கூறிவிட்டு புறப்பட்டுப் போய் என் மனைவியையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.\nஅந்த வீட்டைக் கட்டி இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தன. நான் சென்னையில் வசித்து வந்த வீடுகளைப் போலவே சகல வசதிகளும் இருந்தன. வீட்டின் மொத்த அளவு ஆயிரம் சதுர அடிகளுக்கும் சற்றே கூடுதல். தனி வீடு. சுமார் 5000 ச.அடி நிலப் பரப்பில் கட்டப்பட்டிருந்தது. வீட்டின் பின்புறம் மற்றும் மேற்கே இருந்த காலி இடத்தில் வீட்டில் முன்பு வசித்தவர்கள் இட்டுச் சென்ற காய்கறி மற்றும் பூச் செடிகள். நிலத்தின் மூலையில் கிணறு..\nவீட்டில் ஒரேயொரு குறை அக்கம்பக்கத்தில் ஒரு வீட்டைத் தவிர வேறு வீடுகளே இல்லாததுதான்.\nவீட்டின் முன்புறத்தில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு காலி மைதானம்.. மாலையில் சிறுவர்கள் வந்து விளையாடும் நேரம் தவிர அது காலியாக கிடந்தது. நாங்கள் சென்ற நேரத்தில் மாலைச் சூரியன் மேற்கே மறைவது மிகவும் அழகாய் தெரிந்தது..\nவீட்டிற்கு மேற்கே இருந்த வீடு என்னுடைய வீட்டு உரிமையாளருடைய சகோதரருடையது. அதுவும் சுமார் 10000 ச.அடி நிலப்பரப்பில் கட்டப்பட்டிருந்தது. வீடு வெளியிலிருந்து பார்ப்பதற்கு சுமார்தான் என்றாலும் வசதியாக இருந்தது. தகப்பனில்லாத வீட்டில் மூத்த மகன் கராத்தே வகுப்பு நடத்த வீட்டின் முகப்பில் இருந்த வெற்று நிலத்தை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அவரும் அவருடைய தாயும் ஒரு சகோதரியும் மட்டும் இருந்தனர்.\nநானும் என் மனைவியும் வீட்டைப் பார்த்து முடித்த திருப்தியுடன் அடுத்திருந்த ஒரே வீடான வீட்டிற்கு சென்று அவர்களை சந்தித்தோம். ஆனால் அவருக்கும் என்னுடைய வீட்டுக்கார���ுக்கும் ஏதோ மனத்தாங்கல் போலிருக்கிறது. அதனால்தான் வீட்டுப் பராமரிப்பை அவரிடம் அளிக்காமல் தன்னுடைய மனைவி வீட்டாரிடம் ஒப்படைத்திருக்கிறார் என்னுடைய வீட்டுக்காரர்.\nஇருந்தாலும் எங்களை வரவேற்று உபசரித்து, ‘வீடு தனியாக இருக்கிறதே என்று கவலைப்படாதீர்கள். இங்கே திருடர் பயமெல்லாம் இல்லை. காத்தோட்டமா நல்லா வசதியாத்தான் கட்டி வச்சிருக்கார் என் கொழுந்தன். என்ன, ஆள்தான் கொஞ்சம் முசுடு. ஆனாலும் அவர் எப்பவாச்சும்தான் வருவார். அவரோட மச்சினன் பொறுப்புலதான் வீட்டை விட்டிருக்கார். அவர் ரொம்ப நல்ல மனுஷன்.. நீங்க தைரியமா வாங்க. நாங்க பக்கத்துலதான இருக்கோம்.. என்றார் வீட்டுத்தலைவி..\nஅவர்களுடைய பதிலில் திருப்தியடைந்த நாங்கள் இருவரும் அம்மாத இறுதியில் புதிய வீட்டில் குடிபுகுந்தோம்..\nஅவ்வீட்டில் இருந்த ஒன்றரையாண்டு காலத்தில் பல நல்லதும் நடந்தது சில கெட்டதும் நடந்தது..\nசார், இதுலதான் சொன்னேன். ஆர்சீவ்ஸ் எதையும் காணோமே பழையதை எப்படிப் படிப்பது\nஉஷா நீங்க குறிப்பிட்ட இடுகைக்கு போகாம http://ennulagam.blogspot.com க்கு போய் பாருங்க. பழையவைன்னு இதுக்கு முன்னாலருக்கற எல்லா இடுகைகளுக்கும் இருக்கும்.\n//‘பத்து மணிக்கு லைட்ட அணைச்சிட்டு படுத்துறணும்.. இது குடும்பம் நடத்தற வீடு கும்மாளம் போடற வீடு இல்லை//\nகரெக்டா சொன்னீங்க. நான் காலி பண்ணதுக்கப்புறம் அந்த வீடு ரொம்ப நாளா காலியாவே இருந்தது..\nஅதுக்கப்புறம் அவர் என்னை தேவாலயத்துல பார்த்தபோதெல்லாம் கண்டுக்கவே மாட்டார்..\nசக மனிதர்கள நேசிக்க முடியாமதவர் கடவுளை மட்டும் எப்படி நேசிச்சாரோ.. நான் சந்தித்த மனிதர்களுள் விசித்திரமான மனிதர் அவர்..\nவீட்டுக்காரரின் பேச்சில் பிழை இருக்கிறது. குடித்தனம் இருக்குற வீடுன்னு எல்லாம் பேசுறது பொருப்புள்ள பெரிய மனுசன் பேசுற பேச்சு இல்லை. அதுவும் ஒரு அதிகாரியைப் பாத்து...மனைவி மக்களோட இருக்குறவரப் பாத்து....யாராயிருந்தா என்ன...ஏன் சொல்லனும்\nகுடியிருப்பவர் அதிகாரியோ சாமான்யனோ அவனும் மனிதந்தானே. மிராசுதார் பரம்பரை என்றால் எல்லோரையும் அடிமைகள்போல பார்க்கவேண்டுமா என்ன நான் வேறு சில பண்ணையார்களையும் மிகப் பெரிய மிராசுதார்களையும் தஞ்சையில் இருந்த சமயத்தில் சந்தித்திருக்கிறேன். ஆனால் இவரைப் போன்ற (ஆணவம் என்று சொல்ல முடியாது.. சில சம��ங்களில் நல்லவர்போல் பேசுவார்) ஒரு totally unpredictable personality சந்திக்கவேயில்லை..\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/10155-2018-03-18-21-02-37", "date_download": "2018-07-19T11:54:21Z", "digest": "sha1:IRAYOKXEKXEQDH6QXCDGYC2BTACOP75P", "length": 6129, "nlines": 81, "source_domain": "newtamiltimes.com", "title": "பத்ம விருதுகள் : தமிழ்க பரிந்துரை நிராகரிப்பு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபத்ம விருதுகள் : தமிழ்க பரிந்துரை நிராகரிப்பு\nபத்ம விருதுகள் : தமிழ்க பரிந்துரை நிராகரிப்பு\tFeatured\nபத்ம விருதுக்காக, தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள், 7 கவர்னர்கள், 14 மத்திய அமைச்சர்கள் அளித்த பரிந்துரைகள் எதுவும் விருது பட்டியலில் இடம்பெறவில்லை என தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக உள்துறை அமைச்சக ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தகவல்: 2018 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் ஜனவரி 25ல் அறிவிக்கப்பட்டது. இதற்காக மாநில அரசுகள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் இணையமைச்சர்கள் என விருதுக்கு 35,595 பரிந்துரைகளை வழங்கினர். இதிலிருந்து 84 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவர்கள் 10 பேர் கொண்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டனர்.\nஆனால், தேர்வான 84 பேரில், தமிழகம், அரியானா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா,உத்தரகாண்ட், பீஹார், ராஜஸ்தான் மற்றும் டில்லி அளித்த பரிந்துரைகளை தேர்வு குழு நிராகரித்துள்ளது. இந்த விருதுக்காக தமிழகம் 6, பரிந்துரைகளை வழங்கியிருந்தது.\nஇதேபோல், சில மாநில கவர்னர்கள் , மத்திய அமைச்சர்கள் ஜெட்லி, மேனகா , பிரகாஷ் ஜாவேத்கர், ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளும் ஏற்கப்படவில்லை .\nபத்ம விருதுகள்,தமிழ்க பரிந்துரை ,நிராகரிப்பு,\nMore in this category: « நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\tதிருச்சியில் பரவலாக மழை : பயிர்கள் சேதம் »\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது : நிர்வாகம் திட்டவட்டம்\nகடலுக்குள் புதைந்த தங்க குவியல்: 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nநடிகைகள் பட்டியல் : நடிகை ஸ்ரீ ரெட்டி வீசும் புது குண்டு\nமேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nமத்திய அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை��ில்லா தீர்மானம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 131 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_4134.html", "date_download": "2018-07-19T11:57:27Z", "digest": "sha1:O7A4KCCC5BZLKNMW4E3G6D47TG4FL2N7", "length": 36865, "nlines": 214, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: தமிழகத்துக்கு பெருமை:", "raw_content": "\nஒரு தமிழ் மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை:\n\"தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன்.\nஅதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும்... என்று தெரிகிறது.\nஇதன் மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக் கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர்.\nஇன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது\nபலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் \nஇதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,\nபடிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.\nதஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.\nஇந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..\nஎட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.\nதற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.\nஇந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்\n1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண��டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.\nபெரிய கோயிலின் விமான வடிவமைப்பு\n180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.\nஅதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.\nகருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.\nஇரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.\nஇறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.\nஅரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.\nமேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது. \nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி ம��ற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மே���்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viruntu.blogspot.com/2010/12/blog-post_07.html", "date_download": "2018-07-19T11:56:03Z", "digest": "sha1:D2V3TV2YGUIIXKZMU5MPM5PGCQLZXFFQ", "length": 5577, "nlines": 93, "source_domain": "viruntu.blogspot.com", "title": "viruntu: வித்தியாசமான பழம் ...", "raw_content": "\nஇதன் பெயர் ஆங்கிலத்தில் persimmon. தமிழில் பெர்சிம்மன் என்று சொல்லலாம்.\nஇதில் இரண்டு வகை. ஒரு வகை fuyu. இது தட்டையாகவும் உருண்டும் இருக்கும்.\nஆப்பில் (apple) போல நறுக் நறுக் என்று இருக்கும்.\nஇன்னொரு வகை hachiya. இது கூம்பு வடிவில் இருக்கும். கொழ கொழ என்று குழைந்து பழுக்காவிட்டால் ... சாப்பிட்டுச் சுவைக்க முடியாதது. கச்சை வாழைக்காயைச் சாப்பிட்டதுபோல் இருக்கும். இது பழுக்கும் வரை பொறுமை தேவை\nசரி. நான் என்ன செய்தேன் அப்படியே சாப்பிட்டேன்\n1. பெர்சிம்மன் (persimmon) பழங்களைக் கழுவி எடுத்துக்கொள்ளவும். விருப்பமான அளவு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\n2. (சோய் Soy) தயிர்ப்ப்பச்சடி செய்யவும்\n பழம் தரும் நல்ல மருந்து, இனிப்பின் எல்லை, கடுகின் காரம், மிளகாயின் மிடுக்கு, கண்ணுக்கினியது, ... ... ... \nகளாக்காய் மாதிரி ஊறுக்காயும் போடலாமோ பழுக்காததை வைச்சுத் தான்\nFuyu வகையை ஊறுகாய் செய்யலாம். ... காத்திருக்க எனக்குத்தான் பொறுமை இல்லை பழத்தைப் பார்த்த உடனே சுவைக்க ஆசை பழத்தைப் பார்த்த உடனே சுவைக்க ஆசை\nஅந்த hachiya வகை பழுக்காவிட்டால் அரிப்பு ரொம்ப. அதை மாற்ற எண்ணெய், உப்பு, காரம் இப்படிச் சீராடணும். அது பழத்தின் சத்தைக் குறைக்குமோ என்று தயக்கம். செய்து பார்க்கிறேன். குறிப்புக்கு நன்றி, கீதா\nஅன்றும், இன்றும், என்றும் ...\nகூழ் -- வித்தியாசமான கூழ் ...\nமதுரை -- அன்றும் இன்றும்...\nஇட்டிலி -- வேற மாதிரி இட்டிலி ...\nகாலையும் நீயே ... மாலையும் நீயே ...\nரசம் -- எளிமையான ரசம்\nகீனுவா -- காய்க் கலவையுடன்...\nகஞ்சி -- கீனுவா ... கஞ்சி\nவித்தியாசமான கிழங்கு -- மரவள்ளி\nகுப்பை கொட்டிய ஒரு காலை நேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/10/16/news/26630", "date_download": "2018-07-19T11:18:28Z", "digest": "sha1:4C6HRFXWXUAXEBF2ZQLXUHQAHMT5TBSQ", "length": 8761, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாரதூரமானது – மகிந்த எச்சரிக்கை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாரதூரமானது – மகிந்த எச்சரிக்கை\nOct 16, 2017 | 2:29 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nமத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாரதூரமான விடயம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nமத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவை, தங்காலை சிறைச்சாலையில் நேற்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.\n“ நாட்டையும் அதன் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டியது மக்களின் உரிமை.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கும், மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கும் குத்தகைக்கு விட தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nவெளிநாடு ஒன்றுக்கு மத்தல விமான நிலையத்தை குத்தகைக்கு விடுவது பாரதூரமான விடயம். ஏனெனில் அதனைச் சுற்றியுள்ள வான்பரப்பு முழுவதும், அதன் கட்டுப்பாட்டின் கீழ் சென்று விடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: அம்பாந்தோட்டை, மத்தல\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்��டுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி 0 Comments\nசெய்திகள் அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம் 0 Comments\nசெய்திகள் கோத்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\nமனோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\nமனோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\nமனோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\nமனோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-07-19T11:49:10Z", "digest": "sha1:X6TNCFEO5BAEW4HOEYBC7H2DBETIYC2T", "length": 10645, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, இமாசலப் பிரதேசம் , இந்தியா\nமாவட்டம் பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேச���்)\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• அஞ்சலக எண் • 174001\n• தொலைபேசி • +01978\nபிலாசுப்பூர்[3] (ஆங்கிலம் - Bilaspur, Himachal Pradesh)என்ற நகரம், இந்திய மாநிலமான இமாசலப் பிரதேசத்தின், பிலாஸ்ப்பூர் மாவட்டத்திலுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2208 அடிகள் உயரமுடையதாக உள்ளது. கோடைகாலத்தில் வெயில் கடுமையாகவும், குளிர்காலத்தில் பனி அதிகமாகவும் இருக்கும் காலநிலைச்சூழலைப் பெற்றிருக்கிறது.\nசத்லெச்சு ஆறும், கோபிந்து சாகர் (Gobind Sagar) அணையும் இங்கு இருக்கிறது.ஒவ்வொரு வருடமும், அக்டோபர்,நவம்பர் மாதங்களில் அணை நிரம்பி காணப்படும். அதனால், அம்மாவட்ட சுற்றுலாத் துறையினர் பல்வேறு நீர்சறுக்கு விளையாட்டுகளை நிகழ்த்துவர். இதன் மக்கள் தொகை , 2005 கணக்கின்படி, 13058 ஆகும்.[4] அதில் 50.07% ஆண்கள், 49.93%. பெண்கள் அடங்குவர்.\n7 ஆம் நூற்றாண்டில் இந்த ஊர், தலைநகராக திகழ்ந்தது. இதனை காலுர்(Kahlur) என்றும் அழைப்பர். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்த ஊர், பஞ்சாப் மாநிலத்தின் பகுதியாக இருந்தது.1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, அக்டோபர் 12 ஆம் நாளன்று, 1948 ஆம் ஆண்டுஇதனை ஆண்ட அரசர் (ler, HH Raja Sir Anand Chand) ,இந்திய அரசோடு, தன் நிலப்பகுதிகளை இணைத்தார். இந்திய தலைமை ஆளுநரால் இது தனிமாநிலமாக சூலை1ஆம் நாளன்று,1954 ஆம் வருடத்தில் இருந்தது.பின்னர், இந்திய நாடளுமன்றத்தில் இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஒரு மாவட்டப்பகுதியாக அறிவிக்கப்ப்பட்டது. கோபிந்து சாகர் அணை உருவாக்கலின் போது, இந்த பண்டைய ஊர், சத்லஜ் ஆற்று நீரில் மூழ்கடிக்கப்பட்டது. அதன் அருகே இந்த புதிய நகரம் உருவானது.\nபிலாசுப்பூர் மாவட்ட அரசின் முகவரி\nKeylong · லாஹௌல் மற்றும் ஸ்பிதி\nஇமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2017, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/38516", "date_download": "2018-07-19T11:42:25Z", "digest": "sha1:IPFXDZN3GGYJK5CD7DJ3JZRKYZXGMVTP", "length": 51284, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்", "raw_content": "\n« கைக்குட்டைகள்- அரவிந்த்குமார் சச்சிதானந்தம் [மறுவடிவம்]\nஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\nவணக்கம். பன்னிரண்டு சிறுகதைகளையும் படித்த���விட்டேன். பன்னிரண்டுமே பன்னிரண்டு முத்துகள். எல்லாமே ஏதோ ஒருவகையில் என்னைக் கவர்ந்தன. கதைகள் முன்வைக்கப்பட்டிருக்கும் கோணங்களும் களங்களில் உள்ள புதுமையும் நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கின. படித்து சில நாட்கள் உருண்டோடிவிட்டன என்றாலும் ஏழெட்டு சிறுகதைகள் மனத்துக்குள்ளேயே வளையவந்தபடி உள்ளன. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இவற்றில் சில மறந்துபோனாலும் மூன்று கதைகளாவது நினைவிலேயே தங்கியிருக்கும். வெளிவரும் காலத்திலேயே இவற்றை நான் வாசித்தவன் என்கிற மகிழ்ச்சி எனக்குள் எப்போதும் இருக்கும்.\n”உறவு” பலவகைகளிலும் முக்கியமான கதை. ஒரு வைரக்கல்லைப்போல இந்தக் கருவைக் கண்டடையும் பேறு ஒரு தொடக்கநிலை படைப்பாளிக்குக் கிடைத்திருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம். மிகை என்பதே எங்கும் இல்லை. இரண்டு வெவ்வேறு புள்ளிகளிலிருந்து இயக்கப்படும் இக்கதையில் உள்ள சமநிலையை எண்ணிஎண்ணி மனத்துக்குள் மகிழ்கிறேன். சந்தானம் ஒரு புள்ளி. முருகண்ணன் ஒரு புள்ளி. இருவருமே முன்னும்பின்னுமாக மேகமலைக்குப் பிழைக்க வந்தவர்கள். இருவரும் மேகமலையைப் பார்க்கும் பார்வை வேறுவேறு விதமானவை. வாழ்க்கையைப் பார்க்கும் விதமும் வேறுவேறுவிதமானவை. விலைமகளாக இருந்தாலும் மனைவியாக ஏற்றுக்கொண்டு உள்ளார்ந்த நிறைவோடு வாழ்பவன் ஒருவன். மனைவியை சந்தேகக்கண்ணோடு பார்த்துப்பார்த்து விலைமகளாகிவிடுவாளோ என வாழ்க்கையை ரணமாக்கிக்கொள்கிறவன் இன்னொருவன். காட்டுக்குள் எல்லா மரங்களும் நின்றிருப்பதைப்போல வாழ்க்கை எல்லாப் பார்வைகளுக்கும் களமாக விரிந்துசெல்கிறது.\nவாழ்க்கை எல்லாவற்றையும் தொகுத்தபடியே செல்கிறது. சரி, தப்பு என எதையும் அது வலியுறுத்தவில்லை. பகுத்துக்கொண்டு பகையை உருவாக்கிக்கொள்வதெல்லாம் நம் மனம் நிகழ்த்தும் ஆட்டம். அக்கறை, அன்பு, உரிமையோடு காட்டும் ஈடுபாடு மட்டும் முருகண்ணனுக்குப் போதும். அவற்றோடு நிறைவுகாணமுடியாதபடி சந்தானத்தை சந்தேகம் பிடித்தாட்டுகிறது. டெஸ்டிமோனாவைக் கொல்லத் தூண்டிய அதே சந்தேகம் மீனாட்சியை விரட்டியடிக்க சந்தானத்தைத் தூண்டுகிறது. கஞ்சியைக் குடித்தாலும் அமுதம் பருகிய ஆனந்தத்தோடு ஒருவன் இருக்கிறான். கையில் கிடைத்த இனிப்பையே விஷமாக இருக்கக்கூடுமோ என்கிற சந்தேகத்தோடு இன்னொருவன் தூக்கி வீசுகி��ான். எதோ ஒரு புதையுண்ட நகரத்தை அகழ்ந்தெடுத்ததுபோல தனசேகரின் மனம் இக்கதையைக் கண்டடைந்திருக்கிறது.\nமானுட மனத்தில் படிந்திருக்கும் கசட்டை அடையாளம் காட்டும் கதை சிவா கிருஷ்ணமூர்த்தியின் ‘யாவரும் கேளிர்’. நாடுவிட்டு நாடு போனாலும் விடாது பின்தொடர்கிற சாதிவிருப்பத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் கதை. தடுமாறி கீழே விழுகிற தருணத்தில் மிக இயல்பாக அம்மா என்று அலறுவதைப்போல சாதிவிருப்பமும் மிக இயல்பாக ஒட்டிக்கொண்டே மனிதனைப் பின்தொடர்கிறது.\nகதை நிகழும் பின்னணி, கதைக்கு ஒரு கூடுதலான வலிமை. இது ஓர் அழகான முரண். சாதி அரும்பி பூத்து குலுங்கும் நம் மண் அல்ல, கதையின் களம். வேறொரு கலாச்சாரம் நிலவும் மண்ணான லண்டன் இக்கதையின் களம். மணவாழ்க்கையைப் பற்றிய வரையறைகள் அங்கே வேறு விதமானவை. ஆண்பெண் பழகுதலுக்கு எவ்விதமான தடையுமில்லாத சமூகம் அது. தேர்வுகள் சுதந்திரமானவை. திருமணம் செய்துகொள்கிற ஆணும் பெண்ணும் மட்டுமே, தம் வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட சுதந்திர நாட்டம் மிகுந்த ஒரு கலாச்சாரச்சூழலில் வாழ்கிற ஒரு ஆணும் பெண்ணும் அந்தக் கலாச்சாரத்தின் சாரமான எந்த அம்சத்தையும் உள்வாங்கிக்கொள்வதில்லை. லண்டன்வாசம் என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஓரிடம். அவ்வளவுதான். யாவரும் கேளிர் என்ற பண்பாட்டின் சாரம் நகைப்புக்கிடமாகிவிடுகிறது. லண்டன் வேலை வேண்டும். லண்டன் பணம் வேண்டும். லண்டன் வாசம் வேண்டும். லண்டன் பயணம் வேண்டும். லண்டன் பண்பாடுமட்டும் வேண்டாம் என்றால் அது வேடிக்கை அல்லாமல் வேறென்ன ஒரு பெரிய பயணம், நீண்ட உரையாடல்கள், இறுதியில் மகனுக்காக பெண்பார்க்கும் படலம் எல்லாவற்றையும் நிகழ்த்தும் கதையில் இரண்டு தளங்கள் உள்ளன. மனத்தில் அட்டைபோல ஒட்டிக்கிடக்கும் சாதிவிருப்பம் ஒரு தளம். சூழலிலிருந்து எதையும் கற்க விரும்பாத அறியாமை இன்னொரு தளம்.\n”காகிதக்கப்பல்” அளவில் மிகச்சிறியதென்றாலும் அழுத்தம் மிகுந்த கதை. தினையின் தலையில் தேங்கியிருக்கும் பனித்துளியில் தொலைவிலிருக்கும் பனையைக் காட்டும் வள்ளுவர் காலத்து உவமை நினைவுக்கு வருகிறது. இது கதையல்ல. ஒரு காட்சி. காட்சி கூட அல்ல. ஒரு குரல். நம் நெஞ்சில் அது மோதி, பிறகு வரலாற்றில் மோதி உடைத்து வீழ்த்தும் நினைவுத்துண்டுகள்தான் ���ண்மையான கதை. எனக்கு ஒரு துண்டு நினைவுக்கு வரும். இன்னொருவருக்கு இன்னொரு துண்டு நினைவுக்கு வரும். இப்படி ஆளாளுக்கு ஒரு துண்டு. இந்த எல்லாத் துண்டுகளையும் இணைத்தாலும் இன்னும் நீண்டுகொண்டே செல்லக்கூடிய நீண்ட கதை. இப்படியும் ஒரு கதை இருக்கட்டும். நம் காலத்து வரலாற்றுக்குற்ற உணர்வை எதிர்காலத்துக்கு உணர்த்த, இப்படி கதைகளைத்தான் விட்டுச் செல்லவேண்டும்.\n‘தொலைதல்’ ஹரன் பிரசன்னாவின் கதைகளில் முக்கியமான ஒன்று. ஏற்கனவே இவர் எழுதிய பல கதைகளைப் படித்திருக்கிறேன். கதைமொழியும் உரையாடலும் லயத்தோடு கூடிவரும் படைப்புகளைக் கொடுப்பவர்களில் முக்கியமானவர். ஒருவன் வீட்டைவிட்டு தொலைந்துபோகிறான். பதின்மூன்று ஆண்டுகள் கழித்துத் திரும்பி வருகிறான். அவனை வீடு எப்படி எதிர்கொள்கிறது என்பதை விவரிக்கிறது கதை. அவன் ஏன் ஓடிப் போனான் என்பதில் ஒருமித்த கருத்து யாரிடமும் இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு கதையும் கருத்தும் இருக்கின்றன. அவன் காதலித்த பெண்ணை மணக்க அவன் தாயாரும் அண்ணனும் ஏற்கவில்லை. திடீரென ஒரு கட்டத்தில் அந்தக் காதலியே அவனை ஏற்கவில்லை. இன்னொருவனை மணந்துகொண்டுவிட்டாள். இந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் அவனை ஊரைவிட்டு வெளியேற்றிவிட்டன. ஒரு நினைவை அழிக்கவோ அல்லது மறக்கவோதான் ஒருவன் ஊரைவிட்டு ஓடுகிறான். தராசில் ஒரு தட்டில் இருக்கிற எடைக்கு நிகராக இன்னொரு தட்டில் எடையை வைக்கும்போது சமமாகி, பிறகு கூடுதல் எடை ஏறியதும் அழுந்தி தரையோடு தரையாக படிந்து அசைவில்லாமல் இருப்பதுபோல, மனத்தையும் அசைவில்லாமல் வைத்திருக்க ஒரு வழிதேடி அவன் தொலைந்துபோகிறான். மேலும் மேலும் விசித்திரமான அனுபவங்களால் புதிய புதிய நினைவுகள் அவனை வந்தடைகின்றன. புதிய நினைவுகளின் பாரம் பழைய நினைவை அகற்றிவிட்டதாக அவன் நினைத்துக்கொள்கிறான். இனி, இந்த மனத்துக்கு அசைவில்லை என்ற எண்ணம் கொடுத்த தூண்டுதல் காரணமாகவோ அல்லது வேறு காரணம்பற்றியோ அவன் வீட்டுக்கு மீண்டும் திரும்பி வருகிறான். அம்மா, அண்ணன், அக்கா என இருந்த குடும்பத்தில் மேலும்மேலும் புதிய உறுப்பினர்கள் வந்து நிறைந்திருக்கிறார்கள். இரவு உணவுக்குப் பிறகு, உரையாடலின் உற்சாகத்தில் அவன் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறான். “வாஹினியை ஒருதடவையாவது நினைச்சியா இல்லயா” ��ன்ற அக்காவின் கேள்வி அவனை நிலைகுலைய வைத்துவிட்டது. தராசின் மறுதட்டில் அவன் சேகரித்துவைத்திருந்த எடை எல்லாம் சரிந்து, மீண்டும் பழைய தட்டு உயர்ந்துவிடுகிறது. அவன் மீண்டும் தொலைந்துவிடுகிறான். மனிதர்களிடமிருந்து நாம் தொலைந்துபோகலாம். ஆனால் நம் நினைவுகளிலிருந்து நாம் தொலைந்துபோகமுடியுமா” என்ற அக்காவின் கேள்வி அவனை நிலைகுலைய வைத்துவிட்டது. தராசின் மறுதட்டில் அவன் சேகரித்துவைத்திருந்த எடை எல்லாம் சரிந்து, மீண்டும் பழைய தட்டு உயர்ந்துவிடுகிறது. அவன் மீண்டும் தொலைந்துவிடுகிறான். மனிதர்களிடமிருந்து நாம் தொலைந்துபோகலாம். ஆனால் நம் நினைவுகளிலிருந்து நாம் தொலைந்துபோகமுடியுமா கதையின் இறுதிப்பகுதியில் தொலைந்துபோனவனைப்பற்றி நான்கு பெண்கள் நான்குவிதமாக யோசிக்கும் அல்லது பேசிக்கொள்ளும் பகுதி முக்கியமான இடம். நான்கு தரப்புகளிலும் உண்மையும் இருக்கலாம். ஊதிப் பெருக்கிய கருத்தும் இருக்கலாம். வாழ்க்கை எல்லாவற்றுக்கும் களமாக இருக்கிறது.\nவேதா எழுதிய ”பீத்தோவன் ஆவி” உரையாடல் வழியாகவே ஒரு புதிரை விடுவிக்க முயற்சி செய்யும் கதை. மினியாப்பொளிஸ் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியனுக்கும் அங்கே வரும் இன்னொரு பெண்ணுக்கும் இடையே நிகழும் சந்திப்பு இயற்கையாக உள்ளது. இசைபற்றிய உரையாடல் மெல்ல மெல்ல மேற்கத்திய இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் இடையிலான வேறுபாடுகளை அலசும் உரையாடலாகவும் விளக்கம் தேடலாகவும் மாறுகிறது. இசை வளர்ந்து வளர்ந்து ஓர் உச்சத்தை அடைவதுபோல உரையாடலும் வளர்ந்துவளர்ந்து ஓர் உச்சத்தை அடைகிறது. அதுவே கதையின் உச்சம். மனசை நிரப்பும் ஆற்றல் இசையின் மிகப்பெரிய சக்தி. இதில் பிறர் இயற்றிய இசை என்றும் அல்லது நாம் இயற்றிய சொந்த இசை என்றும் அகங்காரம் கொள்ள அல்லது ஆதங்கப்பட ஒன்றுமில்லை. பீத்தோவன் இசையை இசைக்கும்போது, சில மணித்துளிகளாவது பீத்தோனாக மாறுவதும் பீத்தோனாகவே வாழ முடிவதும் மிகப்பெரிய பேறு. இசையை முன்வைத்து இந்தக் கதை விரிந்துசென்றாலும், இசையைத் தாண்டிய தளமும் இதற்கு உள்ளது. இது கலையைப்பற்றிய கதை. வாழ்க்கையையே கலையாக மாற்றி வாழ முயற்சி செய்பவர்களைப்பற்றிய கதை. ஒவ்வொருவர் மனத்திலும் ஓர் ஆதர்சம். இன்னொன்றாக மாறும் ஆதர்சம். அது இல்லாதவர்கள் உலகத்தில் இருக்கிறார்களா என்ன\nஎடுத்துரைப்புமுறையால் படிப்பவர்களைக் கட்டிப்போடவல்ல சிறுகதை “வாயுக்கோளாறு”. ஞானமும் ஞானமற்ற பித்தும் ஒரே மனத்தில்தான் அக்கம்பக்கத்தில் குடியிருக்கின்றன. ஆனால் ஞானத்தை அடையாளம் காண்பவன் பித்தை அடையாளம் காண்பதில்லை. பித்தை அடையாளம் காண்பவன் ஞானத்தை அடையாளம் காண்பதில்லை. இது புதிர்தான். வாழ்க்கை இப்படிப்பட்ட ஆயிரமாயிரம் புதிர்களால் நிறைந்தது. உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன், உயிர்வளர்த்தேனே என்னும் திருமூலரின் வரிக்கு, ஏராளமான புதிரான விளக்கங்கள் உண்டு. உபாயங்கள் ஏராளமானவை. நாம் அறிந்த உபாயம் நம்மைக் காப்பாற்றும்போது நாம் அறியாத உபாயம் நம்மைக் கைவிட்டுவிடுகிறது. வாயுத்தொல்லையிலிருந்து நம்மை மீட்டு உயிர்த்திருக்கும் உபாயத்தை சதாகாலமும் உபதேசிக்கும் கணபதி சார் அறிந்திராத ஓர் உபாயத்தின் காரணமாக உயிர் துறக்க நேர்கிறது. முன்வாசல் வழியாக மரணம் வந்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கும்போது சந்தடியில்லாமல் பின்வாசல் வழியாக வந்து நிற்கிறது மரணம். ஞானம் ஓர் ஊன்றுகோல்தானே தவிர, உயிரைக் காப்பாற்றித் தரும் மந்திரக்கோலல்ல. இந்த உண்மையை காலம் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவர் வழியாக உணர்த்தியபடியே இருந்தாலும் மனிதமனம் அதைப் பொருட்படுத்தாது கடந்துசென்றபடியே இருக்கிறது. மீண்டும்மீண்டும் ஞானத்தின் அபத்தத்தை அடையாளப்படுத்தும் இத்தகு கதைகள் எழுதப்படுவதற்கான அவசியமும் உருவானபடியே இருக்கிறது. ஜானகிராமன் காலத்தில் ஓர் அக்பர் சாஸ்திரி என்றால், நம் காலத்தில் ஒரு கணபதி சார்.\n”வாசலில் நின்ற உருவம்” மரணத்துக்கு வெகு அருகில் உள்ள ஒருவருடைய எண்ணப்போக்கில் அமைந்த கதை. சத்தங்களால்மட்டுமே உணரப்படும் உலகமாக வீடும் வெளியும் மாறிவிடும் நோய்ப்படுக்கையின் தீவிரத்தை நுட்பமாக உணர்த்துகிறது. தனது தாத்தாவின் மரணத்தையும் தந்தையின் மரணத்தையும் அவருக்கு இயல்பாகவே நினைவுக்கு வருகிறது. உயிரோடு இருப்பவர்களின் புறக்கணிப்புகளுக்கு இடையில் நிகழ்ந்த அந்த மரணம் தனக்கும் நேரக்கூடுமோ என்கிற அச்சம் அவரை வாட்டுகிறது. ஆனால் அவர் அச்சத்துக்கு நேர்மாறாக அவருடைய மகன் கவனித்துக்கொள்கிறான். தலைமுறைகளாக தொடர்ந்துவந்த புறக்கணிப்புத்தன்மைய��� அவன் அணுகுமுறை தடுத்து நிறுத்துகிறது. அந்த அணுகுமுறை தனக்கான ஒன்றல்ல, அடுத்த தலைமுறைக்காக என்கிற தெளிவை அக்கணம் அவருக்கு உணர்த்துகிறது. அந்த ஞானத்தை அவர் அடையவேண்டும் என்பதற்காகவே காத்திருந்ததுபோல, அதுவரை வாசலிலேயே நின்றிருந்த உருவம் அவரை நெருங்கிவருகிறது.\n”சோபானம்” இசையுலக மாந்தர்களைப் பின்னணியாகக் கொண்ட ஒரு சிறுகதை. கரீம்கான் கான்சாகிபாக வளர்ந்து, வெற்றிபெற்ற கலைஞனாக வலம்வந்து, சங்கீதம் என்பது திறமையாகப் பாடுவதல்ல, பாட்டின் அடியாழங்களில் நீந்தி அடையத்தக்க வேறொன்று என்ற ஞானோதயம் பெற்று, அந்த ஞானம் சித்தியடைந்த கணத்தில் உயிர்துறக்கும் மாபெரும் கலைஞனின் சித்திரத்தை சிறுகதை முன்வைக்கிறது. மிக அழகாகவும்ம் கச்சிதமாகவும் நெய்யப்பட்ட துணியைப்போல காட்சிகள் நெய்யப்பட்டுள்ளன. கான்சாகிப், அலங்கோலமாகிப்போன அவர் சீடன் என ஒருபக்கத்தையும், ராஜமையர், உற்சாகம் ததும்பும் அவர் சீடன் இன்னொரு பக்கத்தையும் தொட்டுக்காட்டி, அரவிந்தரின் அழைப்பையேற்று ரயில் பயணம் மேற்கொள்ளும் கான்சாகிப் வழியிலேயே சிங்கப்பெருமாள் ஸ்டேஷனில் இறங்கி, ஆளற்ற அண்டவெளியை நோக்கி இசைத்துவிட்டு உயிர்துறப்பதைக் காட்டி முடிவெய்துகிறது. முழுமை அடையாத இசையை உயிரைக் கொடுத்து முழுமை செய்கிறார் அல்லது இசையின் உதவியோடு ஓரிடத்தைக் கடந்துகடந்து, அதன் கடைசிப்புள்ளியை தன் உயிரைக் கொடுத்து கடந்துவிடுகிறார். கலைஞனின் உயிர் கலையை முழுமை செய்கிறது.\nராஜகோபாலனின் “கன்னிப்படையல்” எளிய மனிதர்களின் கையறு நிலையையும் இடையறாத நம்பிக்கையையும் ஒருசேர முன்வைக்கும் சிறுகதை. மகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்காக நீதி கேட்டு நீதிமன்றத்தின் படிகளில் காத்திருக்கும் தந்தையின் ஆதங்கத்தை தழுதழுக்கப் பகிர்ந்துகொள்கிறது. பணமும் செல்வாக்கும் உள்ள பக்கம் சாய்கிற அதிகாரம் அந்தத் தந்தையை தள்ளிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது. நம்பகமான உரையாடல்களும் காட்சியமைப்பும் பாத்திரங்களும் கதைக்கு பக்கபலமாக உள்ளன. திருமணமாகாமல் இறந்துபோகும் இளம்பெண்களின் சவ அடக்கத்தின்போது செய்யப்படும் ஒரு சடங்கு கன்னிப்படையல். அதைச் செய்யமுடியாமல் தவிக்கும் தந்தையின் மனக்குமுறல் நெகிழ்ச்சியோடு பதிவாகியுள்ளது. கன்னிப்படையல் சடங்குபற்��ிய குறிப்பு கதையை உயிரோட்டம் மிகுந்த ஒன்றாக மாற்றிவிடுகிறது.\nபிரகாஷ் சங்கரனின் ”வேஷம்” புலிக்களி ஆடும் கலைஞன் ஒருவனைப்பற்றிய கதை. முதல்காட்சியில் தாளவேகத்துக்கு இணையாக சுழன்றும் பாய்ந்தும் வளைந்தும் சுழன்றுசுழன்று மிரட்டும்வகையில் ஆடி கூட்டத்தினரின் கவனத்தை ஈர்க்கும் கலைஞன் இறுதிக் காட்சியில் நம் கழிவிரக்கத்தைத் தூண்டும்வகையில் தற்கொலை செய்துகொள்கிறார். கான்சாகிப் உயிர்துறப்பதையும் புலிக்கலைஞன் உயிர்துறப்பதையும் ஒருகணம் இணைத்துப் பார்த்துக்கொள்கிறேன். இன்னொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச்செல்லும் அருந்துணை இசை. அந்த இசையின் துணையோடு அந்த உலகின் வாசல் தெரியாமல் எங்கெங்கோ அலைந்துவிட்டு ஒவ்வொரு நாளும் திரும்பிவிடுகிறான் இசைக்கலைஞன். புகைமயமான அப்பயணத்தின் ஏதோ ஓர் அபூர்வமான கணத்தில் அவன் பிரக்ஞை அந்த வாசலைக் கண்டடைகிறது. அதைத் தொட்டு நுழைய அது அவன் உயிரையே விலையாகக் கேட்கிறது. லயம்கூடிய உச்சத்தில் அவன் சட்டென உயிரையே கொடுத்து அந்த உலகத்துக்குள் நுழைந்துவிடுகிறான். அந்த இன்னொரு உலகத்துக்குள் செல்வதற்கு வழியில்லாமல் தடுமாறுகிறான் புலிக்கலைஞன். அவனை பார்வையாளர்கள் புறக்கணிக்கத் தொடங்கும் கணத்திலேயே அவன் இயற்கைமரணம் நெருங்கிவிட்டது. அடுத்து நிகழ்வதெல்லாம் அவன் உடல்மரணம்தான்.\nமரணத்தைப்பற்றிய இன்னொரு முக்கியமான சிறுகதை ”வாசுதேவன்”. சுய உணர்வே இல்லாமல் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பவன் வாசுதேவன். அவன் சேர்த்துவைத்திருந்த பணம் அவனுடைய மருத்துவத்துக்கு உதவியாக இருக்கிறது. பணம் கரைந்துபோன தருணத்தில் மாற்று மருத்துவத்தில் நாட்டம் வந்து ஆயுர்வேதத்தை நாடுகிறார் வாசுதேவனின் தந்தை. மருத்துவம் செய்ய வந்த இரு பயிற்சி மருத்துவர்கள் முதலில் அருவருப்படைந்தாலும் நாட்கள் கழியக்கழிய ஈடுபாட்டோடு மருத்துவம் செய்கிறார்கள். அவர்களில் ஒருவன் முதல்கட்ட மருத்துவத்தின் இறுதியின் வாசுதேவன் பிரச்சினைக்கு எந்த மருத்துவமும் சரியாக வராது என தன் மனத்தில் தோன்றும் எண்ணத்தை வாசுவின் தாயிடம் பகிர்ந்துகொள்கிறான். அப்படி உண்மையைப் போட்டு உடைத்தது பெரிய பிழை என மற்றொருவன் அவனிடம் அலுத்துக்கொள்கிறான். நாலைந்து நாள் இடைவெளிக்குப் பிறகு வாசுவின் மரணச்செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. நிகழ்ந்தது கருணைக்கொலையா அல்லது இயற்கைமரணமா என்பது புதிரான அம்சமாக முன்வைக்கப்படுகிறது. பொம்மைகளின் கழுத்தைத் திருகி விளையாடும் குழந்தையின் நடவடிக்கையைப்பற்றிய குறிப்பொன்று கடைசிப்பகுதியில் உள்ளது. அது கதைக்கு இரண்டு திறப்புகளைக் கொடுக்கிறது. நிகழ்ந்தது கருணைக்கொலை என்பது ஒரு திறப்பு. பிறப்பு, இறப்பு, வாழ்க்கை எல்லாமே குழந்தைவிளையாட்டுபோல. மாபெரும் ஒரு விளையாட்டின் ஒரு பகுதியே எல்லாம். நம்மை பொம்மைகளாக்கி கடவுள் ஆடும் விளையாட்டு என்பது இன்னொரு திறப்பு.\nமனிதன் செய்யும் பயணத்தைவிட மனிதமனம் செய்யும் பயணம் இன்னும் நீண்டது. இன்னும் விரிவானது. இன்னும் சிக்கலானது. இன்னும் ஆழமானது. மனத்துக்கு ஒரு வடிவம் என்பதில்லை. ஒருகணத்தில் அது கிளைக்குக்கிளை தாவும் குரங்குபோல. மறுகணத்தில் அது சுதந்திரமாக வட்டமடித்துப் பறக்கும் பறவைபோல. இன்னொரு கணத்தில் மண்ணைத் துளைத்துச் செல்லும் புழுப்போல. அதன் பயணம் எந்த அளவுக்குப் புதிரானதோ, அதே அளவு புதிரானது அது மேற்கொள்ளும் வடிவம். நாகநாதர் அந்தோனிப்பிள்ளை ஒரு பேருந்தில் பயணம் செய்கிறார். அவர் மனம் இறந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் பயணம் செய்கிறது. இரண்டு பயணங்களையும் ஒரு புள்ளியில் இணைக்க முயற்சி செய்கிறது சிவேந்திரனின் ”பயணம்” சிறுகதை.\nமிளகாய், வெங்காயம், புகையிலை நடக்கூடிய தோட்டத்தில் பனையை நடமுடியாது என்ற கொள்கையை உடையவர் பிள்ளை. அது ஒரு முக்கியமான சொல். அவரை அடையாளப்படுத்தும் சொல். மதத்தை மாற்றுப்பயிராக எண்ணுகிறார் அவர். வீடு பார்க்க என்று நாயக கந்தையில் தேவாலயத்துக்குப் பக்கத்தில் சென்றவர் புரோக்கர் சொன்ன அடையாளங்களை மனத்தில் வைத்துக்கொண்டு தேடல்வேட்டையில் இருந்தவர் தற்செயலாகச் சந்தித்த பழைய காலத்து நண்பன் பீற்றரைப் பார்த்துவிட்டு வேறு எதற்காகவோ வந்ததாகச் சொல்லிவிட்டு திரும்பிவிடுகிறார். இந்தக் கோணல் பயணம் அவர் மனக்கோணலை அம்பலப்படுத்திவிட்டு முற்றுப் பெறுகிறது. வெட்டினாலும் சுட்டாலும் சிங்களவண்ட அடிமனதில் பயமும் மரியாதையும் இருக்கும் என்று நம்புகிற பிள்ளை, பீற்றரின் நெருக்கத்தை நிராகரிப்பதற்கான காரணம் புரியாத புதிராக இருக்கிறது.\nபன்னிரண்டு சிறுகதைகள் எனக்களித்�� வாசிப்பனுபவத்தைத் தொகுத்துப் பார்த்துக்கொள்ளும் முயற்சியே இந்த நீண்ட கடிதம். குறைகள் இல்லாமலில்லை. அவற்றைக் களைந்து உயரும் திறமையை இவர்கள் மிகவிரைவாகவே பெறவேண்டும் என்று விரும்புகிறேன். கண்டிப்பாகப் பெறுவார்கள். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. பிற படைப்புகளின் வாசிப்புப்பயிற்சியோடு தன் சொந்தப் படைப்புகளை அணுகும் கணத்தில் பலவீனமான புள்ளிகள் கண்ணில் பட்டுவிடும். அக்கணத்தில் அவர்கள் தம்மைத் திருத்திக்கொள்வார்கள்.\nஉறவு, காகிதக்கப்பல், தொலைதல், வாசலில் நின்ற உருவம், சோபானம், கன்னிப்படையல், வாசுதேவன் ஆகிய சிறுகதைகளை என் மனம் மீண்டும்மீண்டும் அசைபோட்டபடியே இருக்கிறது.\nஎல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nபுகழ்பெற்ற எழுத்தாளராக இருந்த நீங்கள் என் படுகை கதையை வாசித்துவிட்டு அறியப்படாத இளம் எழுத்தாளனாக இருந்த எனக்கு எழுதிய நீண்ட கடிதத்தைப்பற்றி நேற்று அஜிதனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தக்கடிதம் அக்காலகட்டத்தில் காதல்கடிதங்களை விட இனிமை கொண்டதாக இருந்தது. இருபத்தைந்தாண்டுகள் சென்று விட்டன. கால்நூற்றாண்டு\nஉங்கள் கவனம் இந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கமூட்டும் நினைவாக இன்னொரு கால்நூற்றாண்டுக்காலம் நீடிக்குமென நினைக்கிறேன். குறிப்பாக உங்கள் தீவிர வாசகரான கெ.ஜெ.அசோக் குமாருக்கு\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nதெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் – பாவண்ணன்\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nசுனீல் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ -கடிதங்கள்\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்\nTags: பாவண்ணன், புதியவர்களின் ஆக்கங்கள்\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 40\nஐயாறப்பனை அழிப்பது - கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/57425", "date_download": "2018-07-19T11:51:18Z", "digest": "sha1:JHTUK7AODALYGPTCOHCZKHGNU63AVQUP", "length": 61981, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 40", "raw_content": "\n« அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nபெண் எழுத்தாளர்கள் – மனுஷ்யபுத்திரன் »\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 40\nபகுதி ஏழு : கலிங்கபுரி\nஅர்ஜுனன் அரண்மனைக்கட்டடங்களின் நடுவில் சென்ற கல்வேயப்பட்ட பாதையில் ஓடி மடைப்பள்ளிகள் இருந்த பின்கட்டை நோக்கிச்சென்றான். சரிந்து சென்ற நிலத்தில் படிகளை அமைப்பதற்குப்பதிலாக சுழன்றுசெல்லும்படி பாதையை அமைத்திருந்தார்கள். கீழே மரக்கூரையிடப்பட்ட மடைப்பள்ளியின் அகன்ற கொட்டகைகளின்மேல் புகைக்கூண்டுகளில் இருந்து எழுந்த புகை ஓடைநீரிலாடும் நீர்ப்பாசி போல காற்றில் சிதறிக்கரைந்துகொண்டிருந்தது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் உரசிக்கொள்ளும் ஒலியும் பேச்சொலிகளும் கலந்த இரைச்சல் கேட்டது.\nஅவன் மடைப்பள்ளியின் மையக்கொட்டகையை அணுகி தயங்கி ��ின்றான். அதுவரை அந்த இடத்துக்கே அவன் வந்ததில்லை. அவன் ஒருபோதும் காணாதவற்றாலானதாக இருந்தது அப்பகுதி. மிகப்பெரிய செம்புநிலவாய்கள் அரக்கவாய்கள் திறந்து சாய்த்துவைக்கப்பட்டிருந்தன. காதுகள் கொண்ட வெண்கல உருளிகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு பெரிய தூண்போல நின்றன. செம்புக்குட்டுவங்கள், செம்புத்தவலைகள், பித்தளைப்போணிகள், மண்வெட்டிகளைவிடப் பெரிய மிகப்பெரிய கரண்டிகள், கதாயுதங்களைப்போன்ற சட்டுவங்கள்…\n” என்று கையில் பெரிய சட்டுவத்துடன் சென்ற ஒருவர் கேட்டார். “அண்ணா” என்று அர்ஜுனன் தயங்கியபடி சொன்னான். “அண்ணாவா” என்று அர்ஜுனன் தயங்கியபடி சொன்னான். “அண்ணாவா அண்ணாவின் பெயரென்ன” என்று அவர் முகத்தைச்சுருக்கி அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “பீமசேனன்” என்றான் அர்ஜுனன். “பீமசேனனா அப்படி எவரும் இல்லை… ரிஷபசேனன் என்று ஒருவர் இருக்கிறார். சமையற்காரர்” என்றார் அவர். அருகே வந்த இன்னொருவன் உடனே அர்ஜுனனை அடையாளம் கண்டுகொண்டான். “இளவரசே, தாங்களா அப்படி எவரும் இல்லை… ரிஷபசேனன் என்று ஒருவர் இருக்கிறார். சமையற்காரர்” என்றார் அவர். அருகே வந்த இன்னொருவன் உடனே அர்ஜுனனை அடையாளம் கண்டுகொண்டான். “இளவரசே, தாங்களா” என்ற பின் “இளவரசர் இளையபாண்டவர்…” என்று மற்றவரிடம் சொல்லிவிட்டு “வணங்குகிறேன் இளவரசே” என்றான். “என் பெயர் நாரன்… இவர் பிருகதர்… தாங்கள் இங்கே எதற்காக வந்தீர்கள்” என்ற பின் “இளவரசர் இளையபாண்டவர்…” என்று மற்றவரிடம் சொல்லிவிட்டு “வணங்குகிறேன் இளவரசே” என்றான். “என் பெயர் நாரன்… இவர் பிருகதர்… தாங்கள் இங்கே எதற்காக வந்தீர்கள்\n“அண்ணாவைப் பார்க்க வந்தேன்” என்றான் அர்ஜுனன். “பீமசேனர்தானே வாருங்கள், நானே காட்டுகிறேன்” என்று அவன் அழைத்தான். “பார்த்து வாருங்கள் இளவரசே, இங்கெல்லாம் வழுக்கும்.” அந்த பெரிய முற்றத்தில் விரவிக்கிடந்த பலவகையான பாத்திரங்கள் வழியாக அவர்கள் சென்றார்கள். “இவை ஏன் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன வாருங்கள், நானே காட்டுகிறேன்” என்று அவன் அழைத்தான். “பார்த்து வாருங்கள் இளவரசே, இங்கெல்லாம் வழுக்கும்.” அந்த பெரிய முற்றத்தில் விரவிக்கிடந்த பலவகையான பாத்திரங்கள் வழியாக அவர்கள் சென்றார்கள். “இவை ஏன் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன” என்றான் அர்ஜுனன். “���ரவில் கழுவி இங்கே வைத்துவிடுவோம். வெயிலில் நன்றாகக் காய்ந்தால் பாசிபிடிக்காது… எந்தப்பாத்திரத்தையும் ஒருநாள் வெயிலில் காயவைக்காமல் எடுக்கக்கூடாதென்பது தலைமை பாசகரின் ஆணை. அவரை தாங்கள் சந்திக்கலாம். அவர் பெயர் மந்தரர். இப்போது நூற்றியிருபது வயதாகிறது. இன்று அவர்தான் பாரதவர்ஷத்திலேயே பெரிய பாசகநிபுணர்.”\nஅந்த முற்றம் அத்தனை பெரிதாக இருக்குமென அர்ஜுனன் எண்ணியிருக்கவில்லை. ஆயிரக்கணக்கான பெரியபாத்திரங்கள் அங்கே வானம் நோக்கி வாய்திறந்து வெயில்காய்ந்தன. “மதியவெயில் ஏறியபின் மிகக்கவனமாக வரவேண்டும். பாத்திரங்கள் சூடாகி பழுத்திருக்கும். காலில் பட்டால் கொப்பளித்துவிடும்… வாருங்கள். காலை கவனித்து வைக்கவேண்டும்” என்று நாரன் உள்ளே அழைத்துச்சென்றான். நூற்றுக்கணக்கான தூண்கள் காடுபோல செறிந்து நின்ற விரிந்த கொட்டகைக்குள் ஏராளமானவர்கள் அமர்ந்து வேலைசெய்துகொண்டிருந்தனர். அவனை யாரோ கண்டு “இளைய பாண்டவர்” என்றதும் அங்கே ஒலித்துக்கொண்டிருந்த பேச்சொலிகள் அவிந்தன. கண்கள் அர்ஜுனனைச் சூழ்ந்தன.\n“இங்கே சாதாரணமாக ஆயிரம்பேர் வேலைசெய்வார்கள் இளவரசே” என்றான் நாரன். “காய்கறிகளை நறுக்குவது, மாவு பிசைவது. வெல்லம் நுணுக்குவது என்று ஏராளமான வேலைகள் உண்டு. இங்கே பெரும்பாலும் பெண்கள்தான். சமையல் கற்றுக்கொள்ள வருபவர்களையும் வயதானவர்களையும் இங்கே அமரச்செய்வோம்…” அவர்கள் அங்கே என்னென்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கணக்கிடவே முடியாது என்று அர்ஜுனன் எண்ணினான். ஒரு பெண் பருப்பை சிறிய துளைத்தட்டு ஒன்றில் போட்டு அரித்துக்கொண்டிருந்தாள். அதை அவன் பார்ப்பதைக் கண்டதும் “பெரிய பருப்பையும் சிறியபருப்பையும் இருவகை அரிப்புகளால் களைந்துவிட்ட்டால் ஒரே அளவுள்ள பருப்புகள் எஞ்சும். அவையே சுவையானவை” என்றான் நாரன்.\nதரைமுழுக்க ஏதோ ஒரு பசைத்தன்மை இருந்தது. “மாலையில் சுண்ணம் போட்டு உரசிக்கழுவுவோம். ஆயினும் காலையில் சற்றுநேரத்திலேயே ஒட்டத் தொடங்கிவிடும்” என்று நாரன் சொன்னான். “ஏதோ ஒன்று சொட்டிக்கொண்டே இருக்கும். தேன், வெல்லப்பாகு, அரக்கு, காய்கறிகளின்பால் ஏதாவது… வழுக்கும்.” விதவிதமாக காய்கறிகளை வெட்டினர். நீள்துண்டுகளாக கீற்றுகளாக சதுரங்களாக. அவர்களின் கைகளில் இருந்த விரைவு வில்லாள���யின் விரல்களுக்கு நிகரானது என அர்ஜுனன் எண்ணினான். அவர்கள் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வேறெங்கோ பார்த்துக்கொண்டும் மிகக்கூர்மையான கத்திகள் நடுவே விரல்களைச் செலுத்தி நறுக்கிக்கொண்டிருந்தனர்.\nபுளித்தவாடை எழுந்த ஒரு கூடத்துக்குள் நுழைந்தனர். பெரிய யானைக்குட்டிகள் போல கரிய கலங்கள் அங்கே இருந்தன. “இங்கே மோர் உறைகுத்துகிறோம். அவையெல்லாம் பீதர்களின் களிமண்கலங்கள்…” என்றான் நாரன். “இங்கே ஒருநாள் வேலைசெய்பவர் பின் வாழ்நாளில் எப்போதுமே மோரும் தயிரும் உண்ணமாட்டார்…” அகன்ற இடைநாழிக்கு இருபக்கமும் பெரிய கூடங்களுக்கான வாயில்கள் திறந்தன. “இது நெய்யறை. பீதர்கலங்களில் நெய்யை வைத்திருக்கிறோம். இப்பக்கம் அக்காரப்புரை. மூன்று வகையான வெல்லங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. கரும்புவெல்லம், ஈச்சம்பனைவெல்லம், யவனர்களின் கிழங்குவெல்லம்.” அர்ஜுனன் முகத்தைச் சுளித்து “மதுவாசனை எழுகிறது” என்றான். “ஆம் இங்கே ஒரு கலத்தை சற்றே மறந்துவிட்டுவிட்டால் தூயமதுவாக அது மாறிவிடும்” என்று நாரன் நகைத்தான்.\nஉலோகஒலிகள் கேட்கத் தொடங்கின. நாரன் “இது மணப்பொருட்களுக்கான அறை. சுக்கு, மிளகு, சீரகம் என ஐம்பத்தாறு வாசனைப்பொருட்களை இங்கே வைத்திருக்கிறோம். அஹிபீனாவும் ஃபாங்கமும் கூட இங்கே சமையல்பொருட்கள்தான். பீதர்நாட்டு வேர்கள் சில உள்ளன. விபரீதமான வாசனைகொண்டவை. ஆனால் மதுவுடன் உண்ணும் சில உணவுகளுக்கு அவை இன்றியமையாதவை” என்றான். அப்பாலிருந்து வெம்மையான காற்று வந்தது. “அடுமனைக்குள் செல்கிறோம். தங்கள் தமையனார் அங்குதான் இருக்கிறார்” என்றான் நாரன்.\nபெரிய முற்றம்போல விரிந்துகிடந்த அடுமனையின் கூரையை மிக உயரமாகக் கட்டியிருந்தனர். இரண்டடுக்குக் கூரையின் நடுவே பெரிய கூம்புகள் உள்நோக்கிச்சென்று புகைபோக்கியில் முடிந்தன. கீழே இரண்டாமடுக்குக் கூரைக்கு நடுவே இருந்த பெரிய இடைவெளி வழியாக வெளிக்காற்று உள்ளே வந்தது. நான்குபக்கமும் விழிதிருப்பிய இடங்களில் எல்லாம் தீக்கொழுந்துகள் சீறி எழுந்து துடிக்க பெரிய கலங்களையும் உருளிகளையும் நிலவாய்களையும் ஏந்திய அடுப்புகள் அருகே தோலால் ஆன அடியாடை மட்டும் அணிந்த சமையற்காரர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். “வாருங்கள் இளவரசே” என்றான் நாரன்.\nஅடுப்புகள் பன்��ிரண்டு நீண்ட வரிசைகளாக இருந்தன. ஒவ்வொரு வரிசைக்கு முன்னாலும் பாத்திரங்களையும் பொருட்களையும் கொண்டு வருவதற்கான உந்துவண்டிகள் வந்துபோவதற்கான கருங்கல்தளம் இருந்தது. அடுப்புகளுக்குப் பின்பக்கம் அதேபோன்ற இன்னொரு பாதையில் விறகுவண்டிகள் உருண்டுவந்தன. அடுப்பின் இருபக்கமும் மண்ணால் ஆன நாலைந்து படிகள் மேல் ஏறிச்சென்று நிற்பதற்கான பீடங்கள். அவற்றுக்கு அருகே கரண்டிகளை நாட்டி நிறுத்துவதற்கான மரத்தாலான நிலைகள். எல்லா அடுப்புகளின் இருபக்கமும் இரும்பாலான தூண்கள் நடப்பட்டு நடுவே இரும்புச்சட்டகம் பதிக்கப்பட்டிருந்தது.\nபீடங்களில் ஏறி நின்றவர்கள் மரத்தாலான பிடி போட்ட செம்புச் சட்டுவங்களால் உருளிகளில் வெந்துகொண்டிருப்பனவற்றை கிளறினர். கரண்டிகளாலும் அரிப்பைகளாலும் புரட்டினர். சகட ஓசையுடன் விறகுவண்டிகளும் பொருள் வண்டிகளும் வந்து அவற்றை இறக்கிச் சென்றன. அடுப்பின் பின்பக்கம் எரிகோளன் நின்று நெருப்பைப் பேணினான். அடுப்பின் முன்பக்கம் அடுநாயகங்கள் நின்று சமையலை நிகழ்த்தினர். எல்லா அடுப்புகளும் சர்ப்பங்கள் போல சீறிக்கொண்டிருந்தன. “ஏன் சீறுகின்றன” என்றான் அர்ஜுனன். “அவற்றுக்கு அடியில் குழாய் வழியாக காற்று வருகிறது. வெளியே பத்து யானைகள் நின்று சக்கரத்துருத்திகளை சுழற்றிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் இருந்து காற்று வந்து விறகை வெண்ணிறத்தழலாக எரியச்செய்கிறது” என்றான் நாரன்.\nஅர்ஜுனன் பீமனைக் கண்டுவிட்டான். எதிர்மூலையில் பெரிய மண்குதிர் ஒன்றின் முன் பீமன் நின்றிருந்தான். அர்ஜுனன் அருகே சென்று “அண்ணா” என்றான். பீமன் திரும்பிப்பார்த்து கண்களால் நகைத்துவிட்டு இரு என சைகை காட்டினான். அவன் முன் இருந்தது பெரிய சிதல்புற்று என்றுபட்டது. சிவந்த மண்ணால் ஆன கூம்பில் பல இடங்களில் வட்டமான துளைகள் இருந்தன. அவையெல்லாமே கனத்த மண்தட்டுகளால் மூடப்பட்டிருந்தன. பீமன் ஒரு மண்தட்டை அதன் மரத்தாலான பிடியைப்பிடித்து எடுத்து வைத்துவிட்டு மரப்பிடி போட்ட நீண்ட செம்புக்கம்பியின் முனையில் இருந்த கொக்கியால் உள்ளிருந்து சுடப்பட்ட அப்பங்களை எடுத்து பெரிய மூங்கில்கூடையில் போட்டான்.\n“உள்ளே அவற்றை அடுக்கி வைத்திருக்கிறீர்களா” என்றான் அர்ஜுனன். “இல்லை, உள்ளே கம்பிகள் இருக்கின்றன. அவற்றில�� ஒட்டிவைத்திருக்கிறேன். அவற்றில் நேரடியாக அனல் படக்கூடாது. இவை உறையடுப்புகள். இவற்றின் மண்சுவர்கள் மிகச்சூடானவை. அந்தச்சூடு காற்றில் வந்து இவற்றை சமைத்துவிடும்.” வெளியே நீட்டிக்கொண்டிருந்த மரக்கைப்பிடியை பிடித்து இழுத்து ஒவ்வொரு கம்பித்தடுப்பாக விலக்கி பின்னிழுத்து மேலும் கீழே சென்று அங்கிருந்த கம்பி அடுக்குளில் வெந்த அப்பங்களை எடுத்தான். அவன் ஒரு துளைக்குள் இருந்த அப்பங்களை எடுத்துமுடித்ததுமே அந்தக்கூடையை அவ்வழியாக வந்த வண்டியில் தூக்கிவைத்து கொண்டுசென்றார்கள். “அங்கே போஜனமந்திரத்தில் நான்காயிரம்பேர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் பீமன்.\nமீண்டும் கீழிருந்தே கம்பித்தடுப்புகளை உள்ளே தள்ளி நீள்வட்டமாக தேன்தட்டு போல பரப்பப்பட்ட கோதுமைமாவை அந்தக் கம்பியால் எடுத்து உள்ளே அடுக்குவதை அர்ஜுனன் கண்டான். நூறு அப்பங்களை அடுக்கி முடித்ததும் மூடிவைத்துவிட்டு “இது பொறுமையாகச் செய்யவேண்டிய பணி. அம்புவிட்டு மனிதர்களைக் கொல்வது போல எளிதல்ல. கண்ணும் காதும் மூக்கும் நாக்கும் கையும் ஒன்றாகவேண்டும். சித்தம் அந்த ஐந்து புரவிகளையும் நடத்தவேண்டும்” என்றான்.\n“இதோ இந்த அடுப்பில் பன்னிரண்டு அடுகலங்கள் உள்ளன. பன்னிரண்டிலும் பன்னிரண்டு பதங்களில் அப்பங்கள் வெந்துகொண்டிருக்கின்றன. மூக்கைக்கொண்டு எந்த அடுகலம் வெந்துவிட்டது என்று அறியவேண்டும். உடனே இந்தத் தட்டை விலக்கி அனல் வாயை மூடிவிட்டு மூடியைத் திறந்துவிடவேண்டும். சற்று தாமதித்தாலும் அப்பம் கருகிவிடும்” என்றான். “கூடவே அடுகலங்களின் மேலே பார்த்துக்கொண்டும் இருக்கவேண்டும். சில அடுகலங்கள் அதிக வெப்பம் கொண்டு சிவந்துபழுத்துவிடும்.” அர்ஜுனன் “நீங்கள் சாப்பிட்டுப்பார்ப்பீர்களா” என்றான். “சமைக்கும்போது சாப்பிடக்கூடாது. வயிறு நிறைந்தால் உணவின் வாசனை பிடிக்காமலாகும். நாவில் சுவையும் மறக்கும். சுவையறிவது மூக்கைக்கொண்டுதான். ஆனால் நாக்குதான் மூக்குவழியாக அச்சுவையை அறிகிறது.”\nபக்கத்தில் ஒரு பெரிய பித்தளை உருளியை இருகாதுகளிலும் கனத்த சங்கிலிகளை மாட்டி மேலிருந்த இரும்புச்சட்டத்தில் கட்டினார்கள். பின்னர் அச்சங்கிலியுடன் இணைந்த சக்கரத்தைச் சுற்ற உருளி மேலெழுந்தது. ஒருபக்கம் அதை மெல்லப்பிடித்து அப்படியே அசைத்து முன்னால் வந்து நின்ற வண்டியில் அமரச்செய்து அதன் காதுகளை வண்டியின் கொக்கிகளுடன் இணைத்தபின் பெரிய செம்பு மூடியால் அதை மூடி தள்ளிக்கொண்டு சென்றனர். “எந்தப் போர்க்கலையைவிடவும் நுட்பமானது இது. சற்று பிசகினாலும் உருளி கவிழ்ந்துவிடும். அங்கிருக்கும் அனைவரும் வெந்து கூழாகிவிடுவார்கள்” பீமன் சொன்னான்.\n“நீங்கள் போர்க்கலையை வெறுக்கத் தொடங்கிவிட்டீர்கள் அண்ணா” என்றான் அர்ஜுனன். “ஆம், மனிதர்களைக் கொல்வதைப்போல இழிசெயல் ஒன்றுமில்லை. இங்கே நின்று அன்னம் எழுவதைக் கண்ட ஒருவன் உடல் என்பது எத்தனை மகத்தானது என்பதை உணர்வான். ஒரு தலையை கதையால் உடைக்க சிலநொடிகள் போதும். அந்தத் தலையை அதன் தாய் பெற்று உணவூட்டி வளர்த்து எடுக்க எத்தனை நாட்களாகியிருக்கும். எத்தனை அடுமனையாளர்களின் உழைப்பால் அந்த உடல் வளர்ந்து வந்திருக்கும்” பீமன் அடுத்த அடுகலத்துக்குள் இருந்து அப்பங்களை எடுக்கத் தொடங்கினான். “மூடர்கள். வெற்று ஆணவம் கொண்ட வீணர்கள். படைக்கலம் ஏந்தி நிற்கும் மனிதனைப்போல கீழ்மகன் எவனும் இல்லை.”\n” என்றான் அர்ஜுனன். “ஆம், அவரும் அப்படித்தான் இருந்தார். இந்த அடுமனை வழியாக நான் அடைந்த மெய்யறிவை பாரதவர்ஷம் முழுக்கச் சுற்றி அவர் இப்போதுதான் அடைந்திருக்கிறார்” என்றான் பீமன். “நான் இந்த அடுமனையில் அனல்முன் நிற்கையில் மட்டும்தான் மானுடனாக உணர்கிறேன். என் கையால் அன்னம் பிறந்து வரும்போது என் உடல் சிலிர்க்கிறது. இதோ பன்னிரண்டு கருவறைகள். பன்னிரண்டு கருவாய்கள். உள்ளிருந்து நான் எடுப்பவை சின்னஞ்சிறு மதலைகள். புத்தம்புதியவை. அவை சற்றுநேரத்திலேயே மானுட உடலாகின்றன. மண்ணில் வாழத்தொடங்குகின்றன.”\n“நீங்கள் மாறிவிட்டீர்கள் அண்ணா” என்றான் அர்ஜுனன். “வளர்ந்துவிட்டேன். அன்னையிடமும் பெரியதந்தையிடமும் சொல்லிவிட்டேன். நான் சமையல்பணியை மட்டும்தான் செய்யவிருக்கிறேன். என் குருநாதர் மந்தரர்தான். அவரைப்போல அன்னம் வழியாக பிரம்மத்தை அறிந்தேன் என்றால் நான் முழுமைகொண்டவன்” பீமன் சொன்னான். “நீயும்தான் வளர்ந்துவிட்டாய். உன்னிலிருந்த அந்தச் சிறுவன் இந்த ஒன்றரை வருடங்களில் மறைந்துவிட்டான். எப்போது நீ கல்விச்சாலையை விட்டு விலகினாயோ அப்போதே ஆண்மகனாக ஆகத்தொடங்கிவிட்டாய்.” அர்ஜுனன் புன்னகையுட���் “அன்னை என்ன சொன்னார்கள்” என்றான். “சிரித்துக்கொண்டு பேசாமலிருந்தார்கள். ஆனால் பெரியதந்தை எழுந்து நின்று கைகளைத் தட்டிக்கொண்டு நடனமிட்டு சிரித்துக் கொண்டாடினார். சரியான முடிவு மைந்தா என்று என்னை அணைத்துக்கொண்டார். விழிகளிருந்தால் நான் செய்திருக்கக்கூடிய பணி அதுவே. அன்னமே பிரம்மம் என்கின்றன உபநிடதங்கள். அடுமனை பிரம்மலீலை நிகழும் இடம். அது ஒரு தவச்சாலை என்றார்” என்று பீமன் சொன்னான்.\nசிரித்தபடி “அவர் உணவை இங்குவந்து மல்யுத்தவீரர்களுடன் அமர்ந்து உண்ணவே விரும்புவார். அவருக்கு உணவு பரிமாற இங்கே உள்ளவர்கள் முந்துவார்கள். நான் அந்த வாய்ப்பை எவருக்கும் அளிப்பதில்லை. உணவும் உண்பவனும் ஒன்றாகும் இருமையற்ற பெருநிலை அவர் உண்ணும்போதுதான் நிகழும்” என்றான் பீமன். “நான் அங்கே உணவறையை உனக்குக் காட்டுகிறேன். பல்லாயிரம் கைகள் வாய் என்னும் வேள்விகுண்டத்துக்கு அவியிடுவதைக் காணலாம். உள்ளே எரியும் நெருப்பு பிரம்ம ரூபனாகிய வைஸ்வாநரன், புடவியெங்கும் ஆற்றலை அன்னமாக்குபவன். அன்னத்தை ஆற்றலாக்குபவன். அன்னத்தை தன் ஊர்தியாகக் கொண்ட காலரூபன்.” பீமன் அங்கே வந்த ஒருவரிடம் “பீஜரே, இதைப்பார்த்துக்கொள்ளும்” என்றபின் அர்ஜுனனிடம் “வா” என்று சொல்லி நடந்தான்.\nபெரிய இடைநாழிகளில் வண்டிகள் செல்வதற்கான பன்னிரண்டு கல்பாதைகள் போடப்பட்டிருந்தன. எட்டுபாதைகளில் வண்டிகளில் உணவு சென்றுகொண்டிருந்தது. நான்குபாதைகளில் ஒழிந்த வண்டிகள் வந்துகொண்டிருந்தன. ஆவியெழும் அப்பங்கள், சோறு, வஜ்ரதானியக் களி, நெய்மணம் எழுந்த பருப்பு, கீரை… “பின்காலையில் இருந்தே அங்கே மதியஉணவுப் பந்திகள் தொடங்கிவிடும். பின்மதியம் வரை அவை நீடிக்கும்.” அர்ஜுனன் சிரித்து “பந்திக்கு முந்துபவர்கள் இருப்பார்களே” என்றான். “சுவையறிந்தவன் முந்தமாட்டான்” என்றான் பீமன். “முந்திவந்து உண்பது ஒரு சுவை என்றால் பிந்திப்பசித்து வந்து உண்பது வேறொரு சுவை. இரண்டுமே பேரின்பம்.”\nபெரிய வண்டி ஒன்றை சுட்டிக்காட்டி பீமன் சொன்னான் “அஷ்டஃபலம். எட்டு காய்கறிகள். பூசணிக்காய், கும்பளங்காய், வெள்ளரிக்காய், வழுதுணங்காய், புடலங்காய், வாழைக்காய், கருணைக்கிழங்கு, முக்கிழங்கு. எட்டும் எட்டுவகைக் காய்கள். பூசணிக்காய், கும்பளங்காய், வெள்ளரிக்காய் மூன்றும் நீர்த்தன்மை கொண்டவை. வழுதுணங்காய், புடலங்காய் இரண்டும் விழுதுத்தன்மைகொண்டவை. பிற மூன்றும் மாவுத்தன்மை கொண்டவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை, ஒவ்வொரு வாசனை. அவை வேகும் நிலையும் வேறு வேறு. அதற்கேற்ற அளவுகளில் நறுக்கவேண்டும். அதற்கேற்ற சரிநிலைகளில் கலக்கவேண்டும். அஷ்டஃபலம் அமைந்து வருவதென்பது ஒரு மகத்தான இசை நிகழ்வதுபோல என்று பெரியதந்தையார் சொன்னார். நான் சமைத்த அஷ்டஃபலத்தை உண்டுவிட்டு நீ பிரம்மத்தை நெருங்குகிறாய் குழந்தை என்று என்னை வாழ்த்தினார்.”\nமுதல் அன்னமண்டபத்தில் இரண்டாயிரம்பேர் உண்டுகொண்டிருந்தனர். ஓசையிலாது ஓடும் வெண்கலத்தாலான சக்கரங்கள் கொண்ட வண்டிகளில் கொண்டுசெல்லப்பட்ட உணவை பரிசாரகர்கள் விளம்பிக்கொண்டிருக்க பந்திக்கு இருமுனையிலும் இரு சாலைப்பிள்ளைகள் நின்று அன்னவரிசையை மேற்பார்வையிட்டு ஆணைகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். “இங்கே திங்கள் கிழமையும் வெள்ளிக்கிழமையும் ஊனில்லாத சாத்வீக உணவுதான். பிறநாட்களில் ஊனும் ஊன்நெய்யும் கொண்ட ராஜச உணவு” என்றான் பீமன். “சாத்வீக உணவுண்ணும் நாட்களில்தான் இத்தனை பேச்சுக்குரல் இருக்கும். மற்றநாட்களில் வாயின் ஒலி மட்டும்தான்.”\nஉண்ணும் முகங்களை நோக்கியபடி அர்ஜுனன் நடந்தான். விழித்த கண்கள், உணவை நோக்கி குனிந்த உடல்கள், உண்ணும்போது ஏன் இத்தனை பதற்றமாக இருக்கிறார்கள், ஏன் இத்தனை விரைவுகொள்கிறார்கள் அஸ்தினபுரியில் ஒருநாளும் உணவில்லாமலானதில்லை. ஆயினும் உணவு அந்த விரைவைக் கொண்டுவருகிறது. எல்லா விலங்குகளும் ஆவலுடன் விரைந்து உண்கின்றன. உணவு அற்றுப்போய்விடும் என அஞ்சுபவர்களைப்போல. அதையே பீமன் சொன்னான் “அவர்கள் அத்தனை பேருமே விரைந்து உண்கிறார்கள். தீ அப்படித்தான் அன்னத்தை அறிகிறது. இங்கிருந்து நான் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கு இது ஒரு பெரும் வேள்விக்கூடமென்று தோன்றும்.”\nபந்திகளுக்கு ஓரமாக அர்ஜுனனை அழைத்துச்சென்று சிறிய ஓர் அறையை அடைந்தான் பீமன். “இதுதான் குருநாதர் இருக்குமிடம். அவரால் இப்போது நடமாடமுடியாது. பத்தாண்டுகளுக்கு முன்புவரை அடுகலம் முன்னால் அவரே நிற்பார். அவரைச் சந்தித்ததும் நீ அவரது பாதங்களைப் பணிந்து வணங்கவேண்டும். உனக்கும் என்றாவது மெய்யறிதல் கிடைக்கலாம்.” அர்ஜுனன் “அவர் சூதர் அல்லவா” என���றான். “நீ நோயுற்றிருக்கிறாய் என்பதற்கான சான்று இந்தக் கேள்வி. உனக்கு மருத்துவன் தேவை. ஞானம் தீ போன்றது. அது பிறப்பைப் பார்ப்பதில்லை. அறிவை நமக்களிப்பவன் இறைவன். அவன் பாதங்களின் பொடிக்கு நிகரல்ல நால்வேதங்களும்.”\n“நிகரற்ற சமையல்ஞானி அவர்” என்றான் பீமன். “அவரைப்பற்றி இப்போதே நூற்றுக்கணக்கான புராணங்கள் உலவுகின்றன. அவர் சமைக்காத ஊனுணவை தொடமாட்டேன் என்று துர்க்கையே சன்னதம் வந்து சொன்னாள் என்று சென்ற மாதம் ஒரு சூதர் சொல்லிக்கொண்டிருந்தார்” என்றான் பீமன். “நான் அவரைப்பற்றி பெரியதந்தையிடமிருந்துதான் அறிந்தேன். சேவகன் சுக்குநீரை கொண்டுவரும்போதே மந்தரர் கைபட்ட சுக்குநீர் என்று சொல்லிவிட்டார். வெறும் சுக்குநீர். அதில் ஒருவரின் கைநுட்பம் இருக்குமென்றால் அவர் மனிதனல்ல தேவன் என்று தெளிந்தேன்.”\n“ஞானியின் கைபட்டால் எதுவும் தெய்வமாகும் என அவரைக் கண்டபின்புதான் அறிந்தேன். அவர் பாதங்களைப் பணிந்து எனக்கு மெய்மையை அருளுங்கள் தேவா என்று கேட்டேன். என்னை அணைத்து என் தலையில் கைகளை வைத்தார். பின்னர் வெற்றிலையில் களிப்பாக்குடன் சற்றே வெல்லமும் சுக்கும் இரண்டுபாதாம்பருப்புகளும் வைத்து சுருட்டி அளித்தார். அதற்கிணையான சுவையை இன்றுவரை நான் அறிந்ததில்லை. ஒவ்வொருநாளும் அதை நானே செய்துபார்க்கிறேன். அது தெய்வங்களுக்கு அருகே நின்றுகொண்டிருக்கிறது. என் கையில் மானுடச் சுவையே திகழ்கிறது” பீமன் சொன்னான்.\n“ஆனால் ஒருநாள் அவரை நானும் சென்றடைவேன் என்று உணர்கிறேன். அந்தச்சுவை என் நாவில் அழியாமல் பொறிக்கப்பட்டிருக்கிறது. கவிஞன் நாவில் எழுத்தாணியால் பொறிக்கப்பட்ட ஓங்காரம் போல. அது என்னை வழிநடத்தும். ஒருவேளை நான் இன்னும் கனியவேண்டியிருக்கலாம். ஆனால் குருவருள் எனக்குண்டு. ஏனென்றால் இருபதாண்டுகளாக அவர் எவருக்கும் நேரடியாக கற்பிப்பதில்லை. என்னை அவரது பாதங்களுக்குக் கீழே அமரச்செய்து கற்றுத்தந்தார். என்னை அவர் தேர்ந்தெடுத்தார் என்று இங்கே பிற சூதர்கள் சொன்னார்கள். அப்படியென்றால் நான் இப்பிறவியிலேயே பிரம்மத்தை அறிவேன். வீடுபேறு பெறுவேன்.”\nசிறிய அறையில் ஈச்சை நாரால் ஆன சாய்வுநாற்காலியில் மந்தரர் சாய்ந்து படுத்திருந்தார். அங்கிருந்து பார்க்கையில் மொத்தப் பந்தியும் தெரிந்தது. அவர் கைக���ை மார்புடன் அணைத்துக்கொண்டு தொங்கிய கீழ்தாடையுடன் தளர்ந்த இமைகளுடன் அரைத்துயில்கொண்டவர் போல உணவுண்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தார். “அவருக்கு மைந்தர்களும் சிறுமைந்தர்களும் உள்ளனர். நான்கு தலைமுறை மைந்தர்கள் சமையல்செய்கிறார்கள். அத்தனைபேருக்கும் இல்லங்கள் உள்ளன. ஆனால் அவர் இங்கே பகலெல்லாம் உணவுண்பவர்களை நோக்கி அமரவே விரும்புவார். இது அவரது தவம்” என்றான் பீமன் மெல்லிய குரலில்.\nஉள்ளே சென்று அவர் முன் நின்றபோதும் அவர் அசையவில்லை. பீமன் “வணங்குகிறேன் குருநாதரே” என்றான். அவரது விழிகள் திரும்பின. பழுத்த நெல்லிக்காய் போல அவை நரைத்திருந்தன. சுருக்கங்கள் செறிந்து செதிலாகிவிட்டிருந்த உடலிலும் முகத்திலும் புன்னகை ஒளியுடன் எழுவதை அர்ஜுனன் கண்டான். மோவாய் விழுந்து பல்லே இல்லாத வாய் திறந்து உதடுகள் உள்ளே மடிந்து ஆடின. அமரும்படி கை காட்டி அர்ஜுனனை நோக்கி இது யார் என்று சைகையால் கேட்டார். “இவன் என் தம்பி, இளையபாண்டவனாகிய அர்ஜுனன்” என்றான் பீமன். அர்ஜுனன் குனிந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்க அவர் அவன் தலையில் கையை வைத்து சொல்லின்றி வாழ்த்தினார்.\nபீமன் அவரது கால்களின் கீழ் அமர்ந்துகொண்டு அவரது பாதங்களைப்பிடித்து தன் மடிமேல் வைத்துக்கொண்டு விரல்களை மெல்ல இழுத்து நீவத்தொடங்கினான். “இன்றுதான் இவன் சமையலறைக்குள் வருகிறான் குருநாதரே. சமையல் என்பது ஒரு ஞானமார்க்கம் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்” என்று உரத்த குரலில் சொன்னான். அவர் உதடுகள் இலைநுனிகள் போல பதற ஏதோ சொன்னார். அர்ஜுனன் பீமனை நோக்க “எல்லா செயலும் ஞானமார்க்கமே என்று சொல்கிறார்” என்றான் பீமன்.\nவெளியே பந்திமுடிந்து அனைவரும் எழுந்துகொள்ளும் ஒலி கேட்டது. அவர் தலைதூக்கி இலைகளைப் பார்த்தார். “சமைப்பவன் எப்போதும் எச்சில் இலைகளைப் பார்க்கவேண்டும் என்று சொல்வார். எவை எஞ்சுகின்றன எவை உண்ணப்பட்டுள்ளன என்பதுபோல அவனுக்கு அறிவை அளிக்கும் இன்னொன்றில்லை என்பார். ஒருமுறைகூட அவர் எச்சில் இலைகளை பார்க்காமலிருந்ததில்லை” என மெல்லிய குரலில் பீமன் சொல்லிவிட்டு அவரிடம் உரக்க “அஷ்டஃபலம் இன்று நன்றாக வந்திருக்கிறது” என்றான். அவர் சொன்னதை உடனே அர்ஜுனனிடம் “ஆனால் கருணைக்கிழங்கில் பாதிக்குமேல் நீர் தேங்குமிடங்களில் விளைந்தவை என்கிறார்” என்றான்.\nபுன்னகையுடன் அவர் ஏதோ சொன்னார். “சுவையை மனிதர்கள் இழந்துவருகிறார்கள். ஏராளமான உணவு சுவையை அழிக்கிறது என்கிறார்” என்றபின் பீமன் “குருநாதரே, இவனுக்கும் தாங்கள் மெய்மையை அருளவேண்டும்” என்றான். அவர் புன்னகையுடன் திரும்பிப்பார்த்தபின் கையைத் தூக்கி வாழ்த்துவதுபோல சொன்னார். “மெய்யறிவை அடையும் நல்வாய்ப்புள்ளவன் நீ என்கிறார். உன் கண்களில் அது தெரிகிறதாம். உன் ஞானாசிரியன் உன்னைத் தேடிவருவான் என்கிறார்.” அவர் சிரித்துக்கொண்டே ஏதோ சொல்ல பீமன் “உன்னைப்போன்றே பெருங்காதலன் ஒருவனே உனக்கு ஞானமருள முடியும் என்றும் அவன் உனக்கு தோள்தழுவும் தோழனாகவே இருக்கமுடியும் என்றும் சொல்கிறார். தோழன் வடிவில் குருவை அடைபவன் பெரும் நல்லூழ் கொண்டவன் என்கிறார்” என்றான் பீமன்.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 13\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 68\nTags: அர்ஜுனன், கலிங்கபுரி, நாவல், பீமன், மந்தரர், வண்ணக்கடல், வெண்முரசு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 50\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற��கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/televisions/cheap-uhd+televisions-price-list.html", "date_download": "2018-07-19T11:44:32Z", "digest": "sha1:ZWS2JB4PMJ3SAO4FRQ4G5GJOI7N6JZTF", "length": 26601, "nlines": 565, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண உஹத் டெலிவிசின்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்��ி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap உஹத் டெலிவிசின்ஸ் India விலை\nவாங்க மலிவான டெலிவிசின்ஸ் India உள்ள Rs.29,994 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. சாம்சங் ௫௫ஜ்ச௯௦௦௦ 55 இன்ச்ஸ் சுஹட் டிவி Rs. 1,89,994 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள உஹத் டிவி உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் உஹத் டெலிவிசின்ஸ் < / வலுவான>\n27 ரூ குறைவான கிடைக்கக்கூடிய உஹத் டெலிவிசின்ஸ் உள்ளன. 4,81,631. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.29,994 கிடைக்கிறது மிசிரோமஸ் ௫௦க்௨௩௩௦ 124 கிம் 49 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி கோல்ட் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nமிசிரோமஸ் ௫௦க்௨௩௩௦ 124 கிம் 49 இன்ச் உஹத் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி கோல்ட்\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nஇன்டெக் இவ்௪௨௧உஹ்ட் 106 கிம் 42 ௪க் அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 42 Inches\n- டிஸ்பிலே டிபே 42 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nமிசிரோமஸ் ௪௨கி௦௦௫௦உஹ்ட் 106 கிம் 42 லெட் டிவி அல்ட்ரா ஹட ௪க் ஸ்மார்ட்\n- சுகிறீன் சைஸ் 42 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.6729166667\nகாமே ல்ஸ்௮௦௪௨ப ௪க் உஹத் 106 68 கிம் 42 டடப டெக்னாலஜி பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 42 Inches\n- டிஸ்பிலே டிபே 42 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ \"16:9\"\nஹ்யுண்டாய் ஹை௪௩௮௨கி௪ஸ் 43 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே 43 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nமிசிரோமஸ் ௧௦௯சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி ௪௩எ௯௯௯௯உஹ்ட் ௪௩எ௭௦௦௨உஹ்ட்\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09, Zoom\nமிசிரோமஸ் ௪௩எ௯௯௯௯உஹ்ட் 43 இன்ச்ஸ் ௪க் ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09, Zoom\nலாயிட் லெ௪௨உஹ்ட் 42 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 42 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nலாயிட் அல்ட்ரா லெ௪௨உஹ்ட் 42 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 42 Inches\n- டிஸ்பிலே டிபே 42 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nலாயிட் லெ௫௦ உஹத் 127 கிம் 50 ௪க் அல்ட்ரா ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே 50 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nமிசிரோமஸ் ௫௦க்௨௩௩௦உஹ்ட் 49 இன்ச் அல்ட்ரா ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே 49 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.6729166667\nI க்ராஷ்ப் ௫௫ஸ்௭௧உஹ்ட் 139 கிம் 55 ௪க் அல்ட்ரா ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nI க்ராஷ்ப் ௪௯ஸ்௭௧உஹ்ட் 124 கிம் 49 ௪க் அல்ட்ரா ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஇன்டெக் இப்ம௫௫௧உஹ்ட் 5 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஹ்யுண்டாய் ஹை௫௦௮௨கி௪ஸ் 50 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே 50 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nலாயிட் லெ௫௦உஹ்டன் 50 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே 50 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nகாமே ல்ஸ்௮௦௫௫ப ௪க் உஹத் 139 7 கிம் 55 டடப டெக்னாலஜி பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே 55 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ \"16:9\"\nசாம்சங் ௪௦ஜூ௬௦௦௦ உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் லெட் டிவி 40 பழசக்\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசாம்சங் ௪௮ஜூ௬௦௦௦ உஹத் ௪க் பிளாட் ஸ்மார்ட் லெட் டிவி 48 பழசக்\n- சுகிறீன் சைஸ் 48 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nஇன்டெக் இப்ம௬௫௦உஹ்ட் 6 5 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே 65 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகாமே ல்ஸ்௮௦௬௫ப ௪க் உஹத் 165 கிம் 65 டடப ட��க்னாலஜி பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 65 Inches\n- டிஸ்பிலே டிபே 65 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ \"16:9\"\nபானாசோனிக் வீரா த் ௫௫க்ஸ்௭௦௦ட் 55 இன்ச்ஸ் உஹத் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசோனி பிறவியே கட் ௫௫ஸ்௮௫௦௦க் 55 இன்ச்ஸ் உஹத் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே 55 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nசாம்சங் செரிஸ் 9 ௫௫ஜ்ச௯௦௦௦ 140 கிம் 5 சுஹட் ௪க் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர்\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே 55 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aanmeegam.co.in/tag/kadagam-sani-peyarchi/", "date_download": "2018-07-19T11:47:01Z", "digest": "sha1:OPJA7SFLETNFZ5QMQXGVMHCFUDPQFTXO", "length": 4661, "nlines": 96, "source_domain": "aanmeegam.co.in", "title": "kadagam sani peyarchi Archives - Aanmeegam", "raw_content": "\nAadi koozh | ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ்...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nஎந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்\nAadi Amavasai viratham | ஆடி அமாவாசையும் பித்ருக்கள்...\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://emadal.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-19T11:47:44Z", "digest": "sha1:KWETBGQVVBJZMPC5T5QQKAX2BNJPSE3L", "length": 30823, "nlines": 171, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: 10/01/2012 - 11/01/2012", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nசூப்பர் சிங்கர் ஜூனியர் இறுத்திச் சுற்றுக்கான உற்சாக விழியம் (ப்ரோமோ) மிக நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது\nஇங்கு காட்டப்படும் சித்திரம், இவர்கள் குழந்தைகள். இன்னும் வெகுளித்ட்த்னம் உள்ளது என்பது. உண்மைதான். ஆனால், நிகழ்ச்சியில் இவர்களுக்குக் கொடுக்கப்படும் உடை பெரியவர்களுக்கான உடை. இவர்கள் ஒரு காதில் கடுக்கன், இவர்களது நடை, உடை, பாவனை எல்லாம் பெரியர்கள் எனும் தோற்றத்தைத் தர முயல்பவை. இதுவொரு முரண்பாடு.\nநான் சிறுவனாக வளர்ந்த ஊரில் கோரக்கன் கோயில் என்றொன்றுண்டு. ஆசையாக வளர்த்த கடாவை அங்கு கொண்டு வந்து கோரக்க சித்தருக்கு காணிக்கையாக வெட்டுவார்கள். பார்க்க பரிதாபமாக இருக்கும். ஏனோ, இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 குழந்தைகளைப் பார்க்கும் போது இது நினைவிற்கு வருகிறது. பாருங்களேன், பிரகதி, சுகன்யா இருவரும் முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்றவர்கள். சுருதி சுத்தமாகப் பாடக்கூடியவர்கள். ஆனால் நேற்று சென்னையின் ஏதோவொரு மாலில் கட்டுக்கடங்காத ஒரு கூட்டத்தின் முன்னிலையில், ‘பாடு’ என்று சொன்னபோது, இத்தனை நாள் கற்ற வித்தையும் காற்றில் பஞ்சாய் பறக்க. ஒருவருக்கு மேல் ஒருவர் என்று இத்தனை நாள் மெருகேற்றி வந்த இசை, ‘இவளுக்கு நான் என்ன குறைச்சல்’ எனும்படி படுமோசமாகப் போனது. நேற்றுப்பாடிய ஐவரில், யாழினி மட்டும்தான் ஏதோ சுமாராகப்பாடினார். ஏன் இந்த பலிகடா விளையாட்டு பாவம் இவர்கள் ஒரு contained environmentல் தங்களுக்குள் சிரித்து மகிழ்ந்து கற்றுத்தேறி, தேர்ந்த மூன்று நடுவர்களின் கூர்மையான பார்வையிலும், ஒரு தேர்ந்த குரல் விற்பன்னரின் கண்காணிப்பிலும் பாட்டுப்பாடி திறமை வளர்த்துவிட்டு, இவையெல்லாம் எதற்கு என்றால், இசை ஞானம் அதிகமற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் இராகம், பேதமற்ற வெறும் ‘குத்துப்பாட்டு’ பாடத்தான் என்றால், something is terribly wrong என்று எண்ணத்தோன்றுகிறது. சென்ற பருவத்திலும் இப்படித்தான் சத்ய பிரகாஷ், பூஜா, சந்தோஷ், ஸ்ரீநிவாஸ் இவர்களெல்லாம் படிப்படியாய் முன்னேறி வந்த பின் திடீரென்று பொதுமக்களின் ஓட்டுக்கு மன்றாடு என்று force செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. They miserably failed\nஇசையின் நுணுக்கமறிந்த ஒரு சூழலில் உருவாக்கப்பட்ட ஒரு தேர்வை கட்டக்கடைசியில் ஒன்றுமே அறியாத பொதுமக்கள் முடிவிற்குக் கொண்டு வரவேண்டிய கட்டாயமென்ன\nபொதுமக்களுக்கான இசை, எனவே பொதுமக்கள்தான் தீர்மானிக்க வேண்டுமென்று சொல்லமுடியாது. ஏனெனில் அந்த மெல்லிசையை அவர்களுக்கு அளிக்கும் composers களுக்கு நல்ல இசை ஞானம் உண்டு. இளையராஜா தன்னை ‘இசை ஞானி’ என்று சொல்லிக்கொள்கிறார். ஏ.ஆர்.ரகுமானுக்கு கர்நாடக, ஹிந்துஸ்தானி இசையின் நுணுக்கங்கள் நன்றாகத்தெரியும். அவர்களோடு பணிபுரியத்தான் இக்குழந்தைகள் தயார்படுத்தப்படுகின்றனர். பொது மக்களுக்கான இசை மேடையில் பாட இவர்கள் தயார்படுத்தப்படவில்லை.\nமக்கள் ஓட்டுப்போடும் போது ஏர்டெல் கம்பெனிக்கு வருமானம் வருகிறது என்று சொல்லலாம். உண்மை என்னவெனில், ஒரு வருடமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் ஏர்டெல் இந்த ஒரு நாள் ஓட்டு தரும் வருமானத்தை நம்பி செயல்படவில்லை. 10 லட்சம் ஓட்டு என்றால், அனைத்தும் ஏர்டெல் சம்பாத்யம் என்று கொள்ள முடியாது. இணையம் மற்றும் வேறு, வேறு கம்பெனிகளுக்கு வருமானம் பிரிக்கப்படுகிறது என்பதே உண்மை. மேலும் விஜய் டிவி இவ்வளவு மூலதனம் போட்டு இதை நடத்துவதற்குக்காரணம் இந்நிகழ்ச்சியின் பாப்புலாரிடியை வைத்து வரும் விளம்பர வருமானம் என்பதைக் குறிவைத்தே என்று சொல்லலாம். உண்மை என்னவெனில், ஒரு வருடமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் ஏர்டெல் இந்த ஒரு நாள் ஓட்டு தரும் வருமானத்தை நம்பி செயல்படவில்லை. 10 லட்சம் ஓட்டு என்றால், அனைத்தும் ஏர்டெல் சம்பாத்யம் என்று கொள்ள முடியாது. இணையம் மற்றும் வேறு, வேறு கம்பெனிகளுக்கு வருமானம் பிரிக்கப்படுகிறது என்பதே உண்மை. மேலும் விஜய் டிவி இவ்வளவு மூலதனம் போட்டு இதை நடத்துவதற்குக்காரணம் இந்நிகழ்ச்சியின் பாப்புலாரிடியை வைத்து வரும் விளம்பர வருமானம் என்பதைக் குறிவைத்தே\nஇப்படி பொதுமக்கள் பார்வைக்கு என்று வருவதால் சின்னக்குழந்தைகளுக்கு ’மேக் அப்’ அது இதுவென்று போட்டு, ‘பிஞ்சிலே பழுக்க வைக்க முயல்கிறார்கள். பாவம், கௌதம் எனும் கிராமத்துச் சிறுவனின் அழகே அவனது தமிழ்ப் பண்பாடுதான். அவனது கூச்சம், மரியாதை, வெகுளித்தனம் இவை கூடிய திறமை இதுதான் அவன் முத்திரை. அவனை மாலில் வைத்து அங்குள்ள இளம் பெண்களுக்கு பிளையிங் கிஸ் கொடு என்று பாவனா சொல்லிப்பழக்குவது கொஞ்சம் வக்கிரமாகப��பட்டது இதே போல்தான், கட்டுபட்டியான முஸ்லிம் குடும்பத்திலிருந்து வரும் ஆஜீத்தை இப்போது காதலிக்கு எப்படி propose செய்வது என்று பழக்கப்படுத்துவது குட்டிக்குழந்தைகளின் மனதில் வக்கிர எண்ணங்களைப் புகுத்துவது போல் படுகிறது. ஆஜீத்தின் அம்மா, கல்யாணம் ஆகும் சில கணங்களுக்கு முன்புவரை தன் கணவன் யாரென்று தெரியாமல்தான் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். ஒரு தலைமுறையில் இத்தனை மாற்றமா இதே போல்தான், கட்டுபட்டியான முஸ்லிம் குடும்பத்திலிருந்து வரும் ஆஜீத்தை இப்போது காதலிக்கு எப்படி propose செய்வது என்று பழக்கப்படுத்துவது குட்டிக்குழந்தைகளின் மனதில் வக்கிர எண்ணங்களைப் புகுத்துவது போல் படுகிறது. ஆஜீத்தின் அம்மா, கல்யாணம் ஆகும் சில கணங்களுக்கு முன்புவரை தன் கணவன் யாரென்று தெரியாமல்தான் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். ஒரு தலைமுறையில் இத்தனை மாற்றமா இது எதற்காக விஜய் டிவி இதை ஏன் முனைந்து செய்ய வேண்டும்\nஒருவகையில் இந்நிகழ்ச்சியின் மூலமாக குழந்தைகளின் பாடும் திறம் கண்டுபிடிக்கப்பட்டு சினிமா தொழிலுக்கு நல்ல பாடகர்கள் கிடைக்கிறார்கள் என்பது உண்மை. இந்நிகழ்ச்சி பார்ப்பதன் மூலம் நடுவர்களுடன் சேர்ந்து பொதுமக்களின் இசைத்திறன் வளர்கிறது என்பதும் உண்மை. இவ்வளவிற்கும் ஈடாக மேலே சொன்ன விஷயங்கள் காவு கொடுக்கப்படுக்கின்றன இங்குதான் கர்நாடக சங்கீத பாரம்பரியத்திற்கும், சினிமாப்பாரம்பரியத்திற்குமுள்ள வித்தியாசம் அப்பட்டமாகத்தெரிகிறது. கர்நாடக இசையின் சாகித்ய கர்த்தாக்கள் இறைவனுக்காகப் பாடினார்கள். ஆன்ம வளர்ச்சியூட்டும் கீதங்களை உருவாக்கினர். அக்கீர்த்தனைகளைப்பாடும் போது மனது சுத்தமாகிறது, ஆன்மநேயம் வளர்கிறது, மனிதன் பூரணமாகிறான். ஆனால் அல்லும் பகலும் கொச்சையான பொருளுள்ள சினிமாப்பாடல்களை இக்குழந்தைகள் பாடும் போது காம இச்சை வளர்கிறது. காமம் உள்ளமெங்கும் குடிபோகிறது. எளிமையே தோற்றமாக இந்நிகழ்ச்சிக்கு வந்து பாடிய சுகன்யா எங்கே இங்குதான் கர்நாடக சங்கீத பாரம்பரியத்திற்கும், சினிமாப்பாரம்பரியத்திற்குமுள்ள வித்தியாசம் அப்பட்டமாகத்தெரிகிறது. கர்நாடக இசையின் சாகித்ய கர்த்தாக்கள் இறைவனுக்காகப் பாடினார்கள். ஆன்ம வளர்ச்சியூட்டும் கீதங்களை உருவாக்கினர். அக்கீர்த்தனைகளைப்பாடும் போது மனது சுத்தமாகிறது, ஆன்மநேயம் வளர்கிறது, மனிதன் பூரணமாகிறான். ஆனால் அல்லும் பகலும் கொச்சையான பொருளுள்ள சினிமாப்பாடல்களை இக்குழந்தைகள் பாடும் போது காம இச்சை வளர்கிறது. காமம் உள்ளமெங்கும் குடிபோகிறது. எளிமையே தோற்றமாக இந்நிகழ்ச்சிக்கு வந்து பாடிய சுகன்யா எங்கே இப்போது அல்ட்ரா மாடர்னாக டிரஸ் செய்து கொண்டு குத்துப்பாட்டு பாடும் சுகன்யா எங்கே இப்போது அல்ட்ரா மாடர்னாக டிரஸ் செய்து கொண்டு குத்துப்பாட்டு பாடும் சுகன்யா எங்கே இழந்தது எது\nசின்னத்திரையின் நல்ல நிகழ்ச்சிகளிலொன்று சூப்பர் சிங்கர் 3 எனும் தமிழகத்தின் ‘செல்லக்குரலுக்கான தேடல்’ நிகழ்ச்சியாகும் மெல்லிசை என்பது நீண்ட பரிணாமத்தைத் தமிழ் மண்ணில் கண்டிருக்கிறது மெல்லிசை என்பது நீண்ட பரிணாமத்தைத் தமிழ் மண்ணில் கண்டிருக்கிறது ’கூத்தாடிகள்’ என்று சமூகம் புறக்கணித்த ஒரு துறை மெல்ல, மெல்ல வளர்ந்து சமூக, அரசியல் வளர்ச்சிக்குத் துணை போகும் அளவிற்கு இக்காலக்கட்டத்தில் மாறியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தே சினிமாவால் மாறிவிட்டது. எம்.ஜி.ஆருக்குப் பின் தான் ஒரு ரொனால்டு ரீகனும், Arnold Schwarzenegger ம். அடுத்து கர்நாடக மெட்டில் மட்டுமே அமைந்திருந்த சினிமா இசை மெல்ல, மெல்ல பிற இசை பாணிகளையும் தனதாக்கிக் கொண்டு இன்று மெல்லிசையாக மலர்ந்திருக்கிறது. இவ்வளர்ச்சியின் உச்சம்தான் ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கார் பரிசுகள். இது தமிழ்ச் சினிமா இசையின் உலக அங்கீகாரம். எனவே இந்தச் சினிமா இசையை கிளிப்பிள்ளை போல் வந்து ஒப்புவிக்கும் போட்டியல்ல சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சி. மெல்லிசையின் நெளிவு சுளிவுகளை முறையாகப் புரிந்து கொண்டு அதைக் கிரகித்து வளரும் கலைஞர்களின் பரிணாமத்தைக் காட்டும் நிகழ்ச்சியே சூப்பர் சிங்கர் 3.\nஎனவே இனிமேலும் தந்த கோபுரத்தில் நின்று கொண்டு இது பற்றிப் பேசுவது இழிவு என்பது போன்ற அறிவுஜீவிதப்பார்வை தவிர்க்கப்பட வேண்டும். வெறும் மொட்டுக்களாக இந்நிகழ்ச்சிக்கு வரும் சிறுவர், சிறுமிகள் இன்று உலகம் முழுவதும் மணம் வீசும் மலர்களாக இந்நிகழ்ச்சியால் மலர்ந்துள்ளர். நல்ல உதாரணம், எவ்வித இசைப்பின்னணியும் இல்லாத ஆஜீத் இன்று சூப்பர் சிங்கராக உலா வருவது. வெறும் கனவை மட்டும் கையில் வைத்து மழலை பேசும் சிறுமியாக நுழைந்து இன்று சூப்பர் சிங்கராகியிருக்கும் யாழினி. பாலக்காட்டு குக்கிராமம் ஒன்றிலிருந்து சின்ன முடிச்சுடன் வரும் சிறுமி போல் உள்ளே நுழைந்து வெற்றியின் உச்சத்தில் இருக்கும் சுகன்யா\nவன அட்டை (wild card) முடிவுகள் வந்துவிட்டன. எதிர்பார்த்தது போலவே ஆஜீத்தும், யாழினும் தேர்வாகியுள்ளனர். அது எப்படி எதிர்பார்த்த படியே முடிவு வருகிறது ஏதோ சில்மிஷம் இருக்கிறதோ விஜய் டிவி என்றுமே இந்த விஷயத்தில் ஒளிவு மறைவின்றி நடந்து கொண்டதில்லை. சென்ற பருவத்திலும் சொதப்பியது. மக்கள் ஓட்டு என்று அது சொல்லும் எண்ணிக்கைகளை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். வெளிநாடுகளில் நடக்கும் இத்தகைய நிகழ்வில் ஓட்டு போடப்போட எல்லோருக்கும் தெரியவரும். இதை மறைக்கத்தான் புதிய நடுவர்கள் மதிப்பீடு எனும் கோல்மால். Anyway, both Aajeeth and Yazini deserve this honour\nஇந்த செட்டுப் போடுவது, கேமிரா அமைப்பது இதிலெல்லாம் இன்னும் விஜய் டிவி வளரவேண்டும். மேடை இவ்வளவு இருட்டாக எங்கும் கண்டதில்லை. Pretty gloomy\nஆனாலும் இந்த நிகழ்ச்சியின் இசைத்திறம் அளவிட முடியாத உயர்ந்த இடத்தில் நிற்கிறது. அது தமிழ்நாட்டின் இசைப்பாரம்பரியத்தைச் சுட்டுவதாகத் தோன்றுகிறது வெளிநாட்டு நிகழ்ச்சிகளோடு ஒப்பு நோக்கும் போது இது எங்கோ உயரத்தில் நிற்கிறது. எத்தனை திறமைகள், என்னென்ன குரல்வளம். தமிழ்நாடே பெருமிதப்படும் அளவிற்கு இருக்கிறது. சங்கம் தொடங்கி இன்றுவரை வந்தாரை வாழவைக்கும் பூமியாக தமிழ்நாடு உயர்ந்தோங்கி நிற்கிறது. இந்நிகழ்ச்சியிலும் கனவுகளோடு ஆந்திரா, கேரளா, இலங்கை (வெளிநாட்டு இலங்கையர்) போன்ற இடங்களிலிருந்து குழந்தைகள் வந்து நல்ல தமிழ் பேசக்கற்றுகொண்டு, தமிழ்ப் பாடல்களை நல்ல உச்சரிப்போடு பாடுவது பெருமைக்குரிய விஷயம். இந்திய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்வது இந்தியத் தேசியத்தின் நல்லூழ்\nஇந்நிகழ்ச்சி மிகவும் தோழமையோடு நடைபெறுவது சிறப்பு. போட்டி இருந்தாலும் பொறாமை இல்லாமல் குழந்தைகளும், தாய்மார்களும் நடந்து கொள்வது தமிழகம் எவ்வளவு முன்னேறிவிட்டது என்பதைக் காட்டுகிறது காதல் திருமணம் என்ற ஒரே காரணத்திற்காக கேரள முஸ்லிம் குடும்பமொன்று தன் பெண்ணை தூர விலக்கிவிடுகிறது. இக்காதலர்களை தமிழகம் வாழ வைத்து, அவர்களது குழந்தையை சூப்பர் சிங்கராக்கி, இன்று இக்க��டும்பத்தை இப்பிரபல நிகழ்ச்சியின் மூலம் ஒன்று சேர்த்து வைத்துள்ளது. அந்த வகையில் குடும்பத்தோடு காணத்தக்க ஒரு நிகழ்ச்சி இது\nமுறையான தேர்வில் பாலக்காட்டு பாட்டுக்குயில் சுகன்யா, அமெரிக்காவின் அபூர்வக்குரல் பிரகதி, தூத்துக்குடியின் இசை முத்து கௌதம் இருக்கின்றனர். இன்று இம்மூவருடன் யாழினி, ஆஜீத் சேர்கின்றனர். நல்ல தேர்வு. போட்டி கடுமையாக இருக்கும். ஆஜீத்தும், யாழினும் crowd pullers. இவர்களோடு தாக்குப்பிடிக்கக்கூடியவர் பிரகதி மட்டும்தான். ஆனால் சில நேரம் அவரை நம்ப முடிவதில்லை. சுகன்யா தத்தித்தத்தி நடந்து ஒரு தேர்ந்த இசைஞராகிவிட்டார். முறையான அளவு கோலில் இவரும், பிரகதியும் தான் சம அளவில் நிற்கின்றனர். பிரகதிக்கு ‘டைட்டில்’ முக்கியமில்லை. அதுவே அவரது ப்ளஸ் பாயிண்ட். சுகன்யா டைட்டிலுக்காக எந்த அளவு கஷ்டத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்.\nகௌதம் இவர்கள் போல் அல்லாமல், இயற்கையான குரல் வளத்தால் முன்னேறி வருபவர். ஆஜீத் ஒரு இசைப்புயல். 4 லட்சத்துச்சொச்சம் ஓட்டு வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இவரது ஓட்டு மட்டும் சென்ற பருவத்தின் மொத்த ஓட்டு எண்ணிக்கைக்கு அதிகமாம். எனவே இது கௌதம் அவர்களுக்கு பெரிய (புதிய) சிக்கலை உருவாகியுள்ளது.. அவர் நிலைப்பாடு ஆட்டம் கண்டுள்ளது. யாழினி ‘டைட்டிலை’ வெற்றி கொள்ளும் குழந்தை என்று சொல்ல முடியாது. அவள் இன்னும் வளர வேண்டும். 60 லட்சம் வீடு யாருக்கு சரியாகப் பொருந்தும் என் மதிப்பீட்டில், சுகன்யா, கௌதம், யாழினி இவர்களுக்கு. பொறுத்திருந்து பார்ப்போம். நிறைய சொதப்பல்களை இன்னும் காண வேண்டி வரலாம் :-)\nதீபம் தொலைக்காட்சியின் ‘இலக்கியச் சோலை’யில் நா.கண்ணன்\nஎழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் லண்டன் வந்திருந்த போது தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் விம்பம் இணைந்து நடத்திய இலக்கிய நிகழ்ச்சியின் தொலைக்காட்சி வடிவம். பி.ஏ.கிருஷ்ணனின் எழுத்து விமர்சிக்கப்பட்டு அவருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வை தீபம் தொலைக்காட்சி ஒளிவடிவாக்கி இலக்கியச் சோலை எனும் நிகழ்ச்சியின் மூலமாக இங்கு வழங்குகிறது. அதன் முதல் பகுதி இது\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nதீபம் தொலைக்காட்சியின் ‘இலக்கியச் சோலை’யில் நா.கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ennulagam.blogspot.com/2006/08/blog-post.html", "date_download": "2018-07-19T11:42:11Z", "digest": "sha1:YFWM2BXURIWUTPGRNDDKBWOHZPHIQHQK", "length": 20752, "nlines": 284, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: விடுமுறை அறிவிப்பு", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nநன்றாக விடுமுறையை குடும்பத்துடன் மகிழ்சியாக அனுபவிக்க வாழ்த்துக்கள் \nகோவி.கண்ணன் said... //நன்றாக விடுமுறையை குடும்பத்துடன் மகிழ்சியாக அனுபவிக்க வாழ்த்துக்கள் \nஇப்போ தான் கொஞ்சம் சந்தோசமா விடுமுறையை அனுபவிக்கலாம்னு பார்த்தா\nகோவி..நீங்க என்னடானா குடும்பத்துடன் மகிழ்ச்சியா() அனுபவிக்கச் சொல்லி அவருடையா விடுமுறை மூடையே கெடுத்துருவீங்க போல...\nநம்ப சங்கத்திலிருந்து லோன் கேட்கலாம்னு இருக்கோம், அதுக்குள்ள சார் விடுமுறைக்கு போகின்றார், பரவாயில்லை திரும்ப வரும்போது வாங்கிடுவோம் விடக்கூடாது.\n5-நாட்கள் கழித்து \"திரும்பிப்பார்\"க்க வாருங்கள்,\nவிடுமுறையை \"சந்தோசமாக\" அனுபவிக்க வாழ்த்துக்கள்.\nசூரியன் விடுமுறை எடுக்கக் கூடாது \nஇது என்னுடைய ஈ-மெயிலின் தொடர்ச்சி. நான் சுமார் 4 வருடங்களாக நொய்டாவில் குடியிருந்தேன்.3 மாதங்களுக்கு முன்பு பெங்களூர்-க்கு மாறுதலாகி வந்துள்ளேன். நான் முதலில் இங்கு வந்தேன். பின் என் மனைவி சொந்த ஊரிலிருந்து என் மாமனருடன் நொய்டா சென்று வீட்டை காலி பண்ணி, இங்கு வந்து சேர்ந்தாள்.வீடை காலி செய்யும்பொது ஒரு மாச முன்பணத்தை(ரூ 6000) வீட்டு உரிமையாளரிடம் திருப்பி கேட்டோம்.அவர் தர மறுத்து விட்டார். ஏனெனில் 7ஆம் தேதியாகி விட்டது.னான் வீட்டை 6ஆம் தேதிதான் வாடகைக்கு எடுத்திருந்தேன்,\"ஆனால், அது முதல் தேதியிலிருந்துதான் கணக்கு. உங்கள் கனவரிடம் வீட்டை வாடகைக்கு எடுக்கும்போதே சொல்லிவிட்டேன்\" வீட்டு உரிமையாளர் என் மனைவியிடம் சொல்லிவிட்டர். இதை என் மனைவி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்த உடன்,னான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு வழியாகப் பேசியதில், அரை மாத வாடகையை அரை(கால்) மனத்துடன் திருப்பி கொடுக்க ஒப்பு கொண்டார். கடைசி 2 மாத மின் கட்டனத்தை கழித்துக் கொண்டு, ரூ 2000-க்கான செக் கொடுத்தார். அடுத்த 1 மணி நேரத்தில் இரயில்மூலம் பெங்களூர்-க்கு புறப்படவிருந்ததால், அவரிடம் பணமாகத்தன் வேண்டும் என்று கேட்க முடியவில்லை.\nவீட்டின் உரிமையாளருக்��ு ரூ 2000-ஐ திருப்பி கொடுக்க விரும்பவில்லை என்பதர்க்காகத்தான் இவ்வளவு கதையும்.\nஇங்கு அந்த செக்கை பெங்களூரில் டெபாசிட் செய்தால் என் கணக்கில் வரவு வைப்பதற்க்கு 10/15 நாட்கள் ஆகும் என்பதால், அந்த செக்கையும், வேறொரு செக்கையும், கூரியர் மூலமாக நொய்டாவிலுள்ள நான் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கிக்கு 14-ஜூன் அன்று அனுப்பினேன்.\n20-ஆம் தேதி என் வங்கி கணக்கை இன்டெர்னெட் மூலாமக செக் செய்ததில், என்னுடய இன்னொரு செக் பாசாகி என் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது.ஆனல் இந்த ரூ 2000க்கான செக் வரவு வைக்கப்படவில்லை. ஈ-மயில் மூலமக வங்கியில் விசாரித்ததில், அந்த செக் தங்களுக்கு வரவே இல்லை என்று பதில் தந்தனர்.அந்த செக் \"திரும்பவும்\" இல்லை என்றும் சொன்னார்கள்.\nவீட்டு உரிமையாளரை பலமுறை தொலைபெசியில் தொடர்பு கொன்டால், தொலைபெசியை அணைத்து விடுகிறார்.என்னுடன் நொய்டாவில் வேலை பார்த்தவரின் மூலம தொடர்பு கொன்டு, அவரை நேரில் பார்த்து அந்த செக்கின் எண்ணையும் தெரிவித்து தன்னுடைய கணக்கில் பற்று வைகப்பட்டுள்ளதா என்று பார்க்கச் சொன்னேன்.அவர் சரியான் பதில் எதுவும் சொல்லவில்லை என்று\nஎன்னுடன் வேலை பார்த்தவர் சொன்னார்.அவருக்குதான் அந்த பணத்தைக் கொடுக்கவே மணம் இல்லையெ.பிறகு அவர் எப்படி பார்ப்பார்.\nஅந்த செக்கை என் வங்கியிடமிருந்து கண்டுபிடித்து தரச் சொல்லி வாங்குவதுதான் ஒரே வழி. இதற்க்கு எளிதான வழி இருந்தால் சொல்லுங்கள்.\nகடந்த ஒரு மாசமாக யோசித்து பார்த்து ஒன்றும் எனக்கு புலப்படவில்லை. அப்புறம் உங்கள் நியாபகம் வந்தது.\n8 வருடங்களுக்கு முன்பு இதெ பெங்களூரில் BSNL-உடன் கன்ஸ்யூமர் கோர்ட் மூலமாக சண்டையிட்டு வெற்றி பெற்றென். 4 மாசங்களுக்கு முன்பு கடன் அட்டை சம்பந்தமாக RBI ஓம்புட்ச்பெர்சனுக்கு புகார் பதிவு செய்தேன். அந்தப் பணம் திரும்பி வரும் என்று நினைகிறேன்.\nநீங்கள் வங்கியில் பணி புரிவதால் உஙகளால் இதற்க்கு ஏதாவது ஆலோசனை சொல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்.\nஅப்ப எங்க பிடுங்கல்கள் இல்லாம போரடிக்கப்போகுது :-)))))\nநல்லா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க. மறந்தும் மசால்வடை சாப்பிடவேணாம்:-)))\nநல்லபடியா விடுமுறையை முடிச்சுட்டு வாங்க சார். வாழ்த்துக்கள்\nநான் விடுப்புன்னு சொன்னது என்னோட ப்ளாகுக்கு வேலைக்கில்ல.\nகோவாவுல ஒரு பேங்கர்ஸ் செமினார். 3,4,5ன்னு மூனு நாளைக்கு. பிசினஸ் கம் ப்ளெஷர் ட்ரிப் மாதிரி இருந்தது. கொஞ்சம் புகைப்படங்களுடன் உங்களிடமும் பகிர்ந்துக்கொள்கிறேன்.\nகண்ணனுக்கு நான் அளித்த பதிலைப் படியுங்கள். புரியும்.\nநீங்க என்னடானா குடும்பத்துடன் மகிழ்ச்சியா() அனுபவிக்கச் சொல்லி அவருடையா விடுமுறை மூடையே கெடுத்துருவீங்க போல...//\n குடும்பத்தோட போனா ஜாலியா இருக்க முடியுமா கண்ணன்\nநம்ப சங்கத்திலிருந்து லோன் கேட்கலாம்னு இருக்கோம், //\n நாளைய பதிவ படிச்சிட்டு சொல்ங்க. லோன் கிடைக்கறதொன்னும் அவ்வளவு லேசில்லங்க..:(\nவிடுமுறையை \"சந்தோசமாக\" அனுபவிக்க வாழ்த்துக்கள்.\nவிடுமுறைன்னு சொல்ல முடியாட்டாலும் ஜாலியாத்தான் போச்சி பொழுது..\n ஆனா இது கொஞ்சம் ஒவரோன்னு தோனுது..\nஇருந்தாலும் கேக்கறதுக்கு நல்லாதான் இருக்கு ஹி..ஹி..\nசூரியனுக்கும் விடுமுறைதான்.. என்ன பண்றது நான் தங்கிய விடுதியில் நாளொன்றுக்கு இண்டர்நெட் வசதிக்கு ரூ.700 நான் தங்கிய விடுதியில் நாளொன்றுக்கு இண்டர்நெட் வசதிக்கு ரூ.700\nநான் விடுப்புன்னு அறிவிப்புதானெ கொடுத்தேன். கேக்கலையே.. :)\nஇனிமே விடுப்புல போகணும்னா முறையா அப்ளை பண்றேன்.\nநல்ல அனுபவம்.. சொல்றேன்.. இன்னையிலருந்து ஒரு மூனு நாள் குட்டி தி.பா மாதிரி இருக்கும்.. படங்களுடன்..\nஉங்களுடைய கேள்விக்கு சரியா பதில் சொல்ல கொஞ்சம் டைம் வேணும். ஒங்களுக்கு தனியா மெய்ல் பண்றேன்..\nஅப்ப எங்க பிடுங்கல்கள் இல்லாம போரடிக்கப்போகுது :-)))))//\nஆனா நெட் வசதிக்கு ஹோட்டல்ல டிமாண்ட் பண்ணத பார்த்ததும் கொஞ்சம் போயிருச்சி\nநல்லா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க.//\nநான் ஆசைப்பட்டிருந்தாலும் நா தங்கன எடத்துல கிடைச்சிருக்காது..\nவாழ்த்துக்கள் - வாங்க சீக்கிறம்..\nகோவா பயணம் நிறைவு பதிவு\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://exammaster.co.in/tnpsc-group-4-cum-vao-exam-18-lakhs-applicatant-has-been-applied/", "date_download": "2018-07-19T11:35:20Z", "digest": "sha1:YJRIGJK5QU7OVVPPEWLORU2H5432BZJ2", "length": 11489, "nlines": 150, "source_domain": "exammaster.co.in", "title": "TNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nநீட்’ தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு\nமேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு\nTNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்\nTNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் | குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பதவிகளுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். நேற்று மாலை வரை 17 லட்சம் விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணம் ரூ.100-ஐ இதுவரை செலுத்தாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த 15-ந்தேதி(நாளை) நள்ளிரவு வரை அவகாசம் உள்ளது. விண்ணப்பித்த அனைவரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் APPLICATION STATUS என்ற இணைப்பினை ‘கிளிக்’ செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இணைய வங்கி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியே பணம் செலுத்தியும் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை எனில், online payment verification என்ற இணைப்பில் அவர்களது பண பரிமாற்றம் குறித்த விவரங்களை அப்டேட் செய்து APPLICATION STATUS மீண்டும் சரிபார்க்கவும். அதில் அனைத்து பண பரிமாற்ற முயற்சிகளும் தோல்வி அடைந்து இருந்தால் வருகிற 15-ந்தேதிக்குள் மீண்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். தோல்வி அடைந்த பண பரிமாற்றத்துக்கான தொகை சரிபார்ப்பிற்கு பின்னர், அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அஞ்சலகம் மற்றும் இந்தியன் வங்கி செலுத்துச்சீட்டு மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்கள் மேற்படி விவரங்களை ‘Application status’ என்ற இணைப்பில் கோரப்படும் விவரங்களை சமர்ப்பித்து 20.12.2017 வரை காத்திருந்து தங்களது விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளவும். அதன்பின்னரும், நீங்கள் செலுத்திய தேர்வுக்கட்டணம் ஏற்கப்படவில்லை எனில் தாங்கள் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டின் நகலினை apdtech2014@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 26-ந்தேதிக்கு முன்னர் அனுப்பவும். தொழில்நுட்ப காரணம் உள்பட எந்த ஒரு காரணத்திற்காகவும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த இயலாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல. மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் (பொறுப்பு) மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNewer Postசிலவரிச் செய்திகள் – 5\nOlder PostTRB நவ 7ம் தேதி வெளியிடப்பட்ட பாலிடெக்னிக்விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T11:31:27Z", "digest": "sha1:P5WYDSJ4GCGM6V5E7JHMBOVLPFJPNOUH", "length": 8913, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சீ.வீ.கே.சிவஞானம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் விரைவில் முடிவடைகிறது…\nவடக்கு மாகாண சபையின் கால...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண காணி அமைச்சின் அலுவலகம் கிளிநொச்சியில்….\nவடக்கு மாகாண காணி அமைச்சின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறெமிடியஸின் குற்றச்சாட்டும் – சிவஞானத்தின் தன்னிலை விளக்கமும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவை தஞ்சமடையவோ இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்கும் தேவையோ எனக்கு இருக்கவில்லை..\nஇந்தியத் துணைத் தூதுவர் உயர்திரு யு.நடராஜன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையை ஒரு சர்வதேச நீதிப்பொறிமுறை முன் முற்படுத்தமாறு ஐ.நா ���னித உரிமை பேரவையிடம் வடமாகாணசபை கோரியுள்ளது\nசையிட் அல் ஹூசைன் அவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபைக்கான . நல்லூர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சபையில் 20 வது திருத்தம் விவாதத்திற்கு வருகிறது:-\nஅனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே தினத்தில்...\nமகிந்த அரசின் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட UK MP இயன் பெஸ்லி இடை நிறுத்தம்.. July 19, 2018\nவடக்கு ஆளுநர், பொதுச் சேவை ஆணைக்குழுவின், விண்ணப்பம் கோரும் செயன்முறைக்கு இடைக்கால தடை… July 19, 2018\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமருடனும் எதிர்க்கட்சி தலைவருடனும் உடன்படிக்கை : July 19, 2018\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில் நியாயம் இல்லை… July 19, 2018\nஅர்ஜூன் அலோசியஸ் – கசுன் பலிசேனவின் விளக்க மறியல் மீண்டும் நீடிப்பு July 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karmayogi.net/?q=mj_jan2004_7", "date_download": "2018-07-19T11:58:36Z", "digest": "sha1:MWZDTXSTLW2Q2JKW3JSNZ5OUF7DL7BS4", "length": 33344, "nlines": 131, "source_domain": "karmayogi.net", "title": "07.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயா, பிரகிருதி, சக்தி | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2004 » 07.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயா, பிரகிருதி, சக்தி\n07.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயா, பிரகிருதி, சக்தி\nபிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயா, பிரகிருதி, சக்தி\n(இராணிப்பேட்டை தியான மையத்தில் 15.8.2003 அன்று திருமதி. வசந்தா லக்ஷ்மி நாராயணன் நிகழ்த்திய உரை)\nநாம் சமூகத்தை பிரம்மத்திற்கு ஒப்பிடுவோம். நாம் சமூகத்தைப் பார்ப்பது இல்லை. மனிதனைப் பார்க்கிறோம். உண்மை என்னவென்றால் மனிதன் சமூகத்தின் பகுதி. மனிதனே சமூகம்.நாம் சமூகத்தைப் பார்க்கமுடிவது இல்லை. ஆனால் சர்க்காரை அறிவோம். நம் அனுபவத்திற்கு சர்க்கார் உண்மை. வெள்ளிடை மலை. சமூகம் உண்மை இல்லை. நாட்டில் பெரிய ஸ்தாபனங்களான ரயில்வே, நெய்வேலி, கல்லூரி போன்றவற்றை காண்கிறோம். அவை சக்தி வாய்ந்தவை. நாடெங்கும் பரவி உள்ளன. நாம் நெய்வேலியை நெய்வேலியாகக் காண்கிறோமே தவிர சமூகத்தின் வெளிப்பாடாகக் காண்பது இல்லை. ஒரு பெரிய பாக்டரிக்குப் போனால் முதல் கேள்வியாக இதற்கு யார் முதலாளி என்று கேட்கிறோம். நாம் காணும் ஸ்தாபனங்களுக்கு எல்லாம் யார் முதலாளி என்று நமக்குக் கேட்கத் தோன்றுவது இல்லை. அந்த முதலாளி சமூகம். சமூகத்தினுடைய முதலாளி பிரம்மம். எல்லையில் ராணுவம் நாட்டைப் பாதுகாக்கிறது. உள்நாட்டுக் கலவரங்களை போலீஸ் அடக்குகிறது.ஏர்போர்ட், துறைமுகம், ரயில்வே, பஸ், லாரி, மக்களையும் பொருட்களையும் ஏற்றிச் செல்வது நமக்கு நிதர்சனம். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும், ஆயிரக்கணக்கான கல்லூரிகளும், இலட்சக்கணக்கான பட்டதாரிகளை உற்பத்தி செய்கின்றன. படிப்பு நாட்டில் பரவுவது தெரிகிறது. சமூகம் கண்ணில்படுவது இல்லை. அறிஞர்கள் சர்க்காரைச் சமூகம் என்கிறார்கள். ராணுவம், கப்பற்படை, விமானப்படை, சர்க்காரால் அமைக்கப்பட்டன என்பதால், சர்க்காரை உற்பத்தி செய்த சமூகத்தால் அவை மறைமுகமாக ஏற்படுத்தப்பட்டன. அவை சமூகமாகும். பெரிய ஸ்தாபனங்கள் ராட்சசனாக வீற்று இருக்கின்றன, அவையும் சமூகம். அவை அதன் அங்கங்கள். மனிதன், குழந்தை, குடிமகன், கிழவன், மேதை, எளியவன் ஆகிய அனைவரும் சமூகம். இவை சமூகம் எனில் என் குடும்பம் சமூகம், நானே சமூகம். இருப்பினும் இந்த வினோதமான சமூகம் தெரியவில்லை. அறிவிற்குப் புலப்படுவது கண்ணிற்��ுப் புலப்படுவது இல்லை. என் கண்ணுக்குத் தெரியாத பிரம்மம், என் அறிவிற்குப் புலப்படாத பிரம்மம் ஆத்மாவிற்குத் தெரிகிறது. எனக்கும் அது தட்டுப்படுகிறது. இவற்றையெல்லாம் சேர்த்தால் மறைந்த ஆத்மா விழித்து பிரம்மத்தை அறியும்.\nபிரம்மம் என்னும் சத்தியம் என்ன\nநமக்குப் பல அம்சங்கள் உள்ளன. பிரம்மத்திற்கும் அது உண்டு. நாம் சமூகத்தை, கடை, ரோடு, போஸ்ட் ஆபீஸ், துறைமுகம் என்று காண்பதுபோல் பிரம்மத்தையும் பல ரூபங்களில் காண்கிறோம். மரபில் கூறும் மூன்று அம்சங்களை ஸ்ரீ அரவிந்தரும் கூறுகிறார்.அவற்றை ஆத்மா, புருஷா, ஈஸ்வரா என்று கூறுவோம். ஆத்மாவை பிரம்மம் எனவும் கூறுவதுண்டு. ஆத்மாவை ஆங்கிலத்தில் Self என்கின்றனர். பிரம்மம் எனவும் கூறுகிறோம். புருஷன் என்பது ஜீவன், ஈஸ்வரன் என்பவன் படைப்பவன். சமூகத்தில் இவற்றை பார்லிமெண்ட், மந்திரி சபை, நிர்வாகம் என்பவற்றிற்கு ஒப்பிடலாம். ஆத்மா சிந்தனையால் படைக்கிறது, புருஷன் தீவிரமாகச் செயல்படுகிறது. ஈஸ்வரன் சிந்தனையால் படைத்து தீவிரமாகச் செயல்படுத்துகிறான். பார்லிமெண்ட் சட்டம் இயற்றுகிறது. அவை நாட்டை முன்னேற்றும் சட்டங்கள். மந்திரிசபை தீவிரமான திட்டங்களை உருவாக்குகிறது. நிர்வாகம் திட்டங்களை அமல்படுத்துகிறது. மனிதனிடம் ஒப்பிட்டுப் பார்ப்போம். அவன் மனம் சிந்தனையால் படைக்கிறது எனில் எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுகிறோம். அவன் உணர்ச்சி வேலை செய்கிறது. தீவிரமான திட்டங்களைச் செயல்படுத்துகிறது. பெரிய வாய்ப்போ, ஆபத்தோ வரும்போது க்ஷணத்தில் அவன் செயல்படுகிறான். அது ஆழ்மனச் செயல், திட்டமிட்டு நிதானமாகச் செயல்படுவது மனம். ஆழ்மனம், மேல் மனமானால் எந்நேரமும் நாம் அப்படிச் செயல்பட்டால் யோகம் நிறைவேறும். ஆத்மா கடந்தது. புருஷன் பிரபஞ்சத்திற்கு உரியவன். தனி மனிதன், ஈஸ்வரன். இம்மூன்றையும் சேர்த்து ஒரே சமயத்தில் வெளியிடுவது பிரம்மம். ஒருவன் தன்னை உலகத்துக் குடிமகனாகக் கருதி நாட்டிற்குத் தலைமைதாங்க முன்வருவது அதுபோன்றது. இம்மூன்றும் மனிதனில் சேர்ந்து ஒரே சமயத்தில் செயல்படுவது பிரம்மம் செயல்படுவது ஆகும்.\nகடந்த நிலையையும் பிரபஞ்சத்தையும் ஒன்றாகக் காணும்போது சத் பிரம்மம் என்ற சத் புருஷன் முழுமையாக வெளிப்படுகிறது. மறுபுறம் நாம் பிரபஞ்சத்தைக் காண்கிறோம். அது அறிவிற்குப் புலப்படுவது இல்லை. புருஷன் பிரகிருதியாகிறது. பிரம்மம் சிருஷ்டிக்கின்றது. அனந்த குணமானவன், குணமாகிறான் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். நமது ஆராய்ச்சிக்கும், அறிவிற்கும் இது பொருத்தமாக இல்லை. வாழ்வில் உதாரணங்கள் இல்லாமல் இல்லை.கிரியாஊக்கி, தான் கலந்துகொள்ளாமல் இரசாயன மாறுதலை உண்டுபண்ணுகிறது. ஒரு பந்தை மேலே வீசினால் அது மீண்டும் கீழே வருகிறது. அது எப்படிக் கீழே வருகிறது என்று தெரியவில்லை. சைபீரியாவிலிருந்து வேடன்தாங்கலுக்கு வரும் பறவைகளுக்கு யார் வழி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. நாடு என நாம் கூறுவது என்ன என்று அறியாதபோது ஒரு தலைவனை அது தேர்ந்தெடுக்கும் வழி என்ன என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. நீர் 0°வரும்போது ஐஸ்கட்டிகள் உற்பத்தியாகின்றன. எப்படி என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. நீர் 0°வரும்போது ஐஸ்கட்டிகள் உற்பத்தியாகின்றன. எப்படி பொட்டல்காடு, பேக்டரி, கம்பெனி ஆகிறது. ஒருவர் உற்பத்தி செய்கிறார் எனில் எப்படி பொட்டல்காடு, பேக்டரி, கம்பெனி ஆகிறது. ஒருவர் உற்பத்தி செய்கிறார் எனில் எப்படி கம்ப்யூட்டரைப் பார்த்தால் திடீரெனப் படங்களும், எழுத்துகளும் வருகின்றன. சட்டம் தெரியாதவரை நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி என்று தெரிந்தால் ஆச்சரியம் இருக்காது. நமக்குத் தெரிந்ததைச் சம்பந்தமில்லாத இடங்களில் பொருத்திப் பார்ப்பது நம் வழக்கம். எலக்டிரிக் பல்பில் எண்ணை எங்கு விடுகிறார்கள் என்று கேட்பது உண்டு. பால் பாயிண்ட் பென்னில் இங்க் போட முயலலாமா கம்ப்யூட்டரைப் பார்த்தால் திடீரெனப் படங்களும், எழுத்துகளும் வருகின்றன. சட்டம் தெரியாதவரை நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி என்று தெரிந்தால் ஆச்சரியம் இருக்காது. நமக்குத் தெரிந்ததைச் சம்பந்தமில்லாத இடங்களில் பொருத்திப் பார்ப்பது நம் வழக்கம். எலக்டிரிக் பல்பில் எண்ணை எங்கு விடுகிறார்கள் என்று கேட்பது உண்டு. பால் பாயிண்ட் பென்னில் இங்க் போட முயலலாமா கால்பந்து விளையாடும்போது வாலிபால் என நினைத்து பந்தைக் கையால் தொடலாமா கால்பந்து விளையாடும்போது வாலிபால் என நினைத்து பந்தைக் கையால் தொடலாமா வீட்டில் மேடைப் பிரசங்கம்போல் முழங்கலாமா வீட்டில் மேடைப் பிரசங்கம்போல் முழங்கலாமா காப்பி, டீயில் உப்பு போடவேண்டும் என்று வற்புறுத்தலாமா காப்பி, டீயில் உப்பு போடவேண்டும் என்று வற்புறுத்தலாமா புருஷன் புரிகிறது, பிரகிருதி புரிகிறது எனில் இரண்டும் சேர்ந்த முழுமை இந்தச் சட்டப்படிப் புரியாது. காரணம் காரியத்தில் முடிவதைக் காண்கிறோம். சாப்பிடாவிட்டால் உடல் இளைப்பதைப் பார்க்கிறோம். அசுத்தத்தில் வியாதி உற்பத்தியாகிறது, தெரிகிறது. கல்லைக் கண்ணாடியில் வீசினால் கண்ணாடி உடைகிறது. என்ன நடக்கிறது என்பது தெளிவு; எப்படி எனத் தெரிவது இல்லை. கண்ணாடி ஏன் உடையவேண்டும் என்று நாம் நினைப்பது இல்லை. எப்படி இந்தக் காரணம் அந்தக் காரியத்தில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்பத் தோன்றவில்லை. உயர்ந்த காரியங்களில் இது புரிவது குறைவு. காரியம் சிறியது ஆனால் கண்ணுக்குப் புலப்படுவது இல்லை. காரியம் பெரியது, ஆனால் மனத்திற்குப் பிடிபடுவது இல்லை. துளி உப்பு அத்தனைச் சாப்பாட்டிற்கும் ருசி தருகிறது. இவ்வளவு பெரிய உடல் கண்ணுக்குத் தெரியாத முள் தாங்கமுடியாத வலியைத் தருகிறது. புரட்டாசியில் மழை பெய்கிறது. சூரியனும், சந்திரனும் தவறாமல் உதயம் ஆகிறார்கள். நாம் அதை அறிவது இல்லை. எலக்ஷன் எப்படிப் போகும், விலைவாசி எப்படி மாறும் என்று தெரியாது. நாம் ஆத்மாவையும், கடவுளையும் கண்டபின்னும் உலகில் அவை செயல்படுவது விளங்குவது இல்லை. ஆன்மா பொருட்களில் வெளிப்படுகின்றது என்றாலும், ஆன்மாவே பொருள் என்றாலும் அவை நமக்கு மந்திரம்போல் இருக்கின்றன. நமக்கு இன்று தெரியவில்லை என்பதால் தெரியமுடியாது என்பது இல்லை, கண்டுகொள்ள முடியாது என்பது இல்லை. Phoneஇல் பேசுபவருக்கு phone எப்படி வேலை செய்கிறது என்று தெரியாமல் இருக்கலாம், ஆனால் இன்ஜினியருக்குத் தெரியும். நாம் சாப்பிட்டது ஜீரணம் ஆவது எப்படி என விஞ்ஞானம் அறியும், டாக்டருக்குத் தெரியும்.நமக்குத் தெரியாது, நாம் தெரிந்துகொள்ள முயலவில்லை என்பதால் தெரியவில்லை. முடிவை ஏற்கிறோம், முடிவு எப்படி வந்தது என்ற கேள்வியை எழுப்புவதில்லை. வாழ்வில் தெரியும் சுவடுகளை நாம் அலட்சியம் செய்கிறோம். சத்தியஜீவியத்திற்குப் புரிவதை மனத்தால் புரிய முயல்வதால் நமக்குப் புரிவது இல்லை. ஓரிடத்திலுள்ள சட்டத்தை அடுத்த இடத்தில் பின்பற்ற நாம் பிடிவாதம் செய்வதால் நமக்குப் பல விஷயங்கள் புரிவது இல்லை. வீட்டில் இருப்பதைப்போல் ஆபீசில் இருப்பது இல்லை. கல்லூரியிலிருந்து ஆபீசிற்கு வந்தவுடன் கல்லூரியில் இருப்பதுபோல் officeஇல் இருக்கப் பிடிவாதம் செய்பவர்கள் உண்டு. அது பிரச்சினையை உற்பத்தி செய்யும். படிப்பு என்றால் என்ன சம்பளம் வரும் என்று கேட்கிறோம். தன்னை அலங்காரம் செய்யும் பெண் செலவை நினைக்கமாட்டாள். பெண் என்றால் முதல் கேள்வி சீதனம், அழகு. குழந்தை சந்தோஷமாக விளையாடினால் இதனால் என்ன வரும் என்று கேள்வி கேட்பது இல்லை. நம் குழந்தை நமக்கு முக்கியம், அழகு இல்லை. நாம் ஏற்றுக்கொண்டவற்றுள் நியாயமாகப் பேசுவோம், ஏற்றுக் கொள்ளாதவற்றுள் நியாயமாகப் பேசுவது இல்லை. அறிவிற்குப் பொருத்தமான நியாயத்தை மனம் ஏற்றுக்கொண்டால் ஆண்டவன் புரியும். இந்த அத்தியாயத்தில் 15, 20 வகைகளில் கண்மூடியாக இருக்கும் கேள்விகளுக்கு பகவான் பதில் அளிக்கிறார்.\nஆண்டவன் அறிவிற்குப் புலப்படாததில்லை :\nஆண்டவன் அதற்குரிய முறைக்குப் புரியும். வேறு முறைகளுக்குப் புரியாது. முழம் போட்டு இமயமலையை அளக்கமுடியாது. சங்கிபோட்டும் அளக்க முடியாது. T.Vஎப்படி செய்கிறார்கள் என்று அறிய தினசரி பேப்பர் படித்தாலோ, பாட புத்தகங்களைப் படித்தாலோ புரியாது. 1800இல் மிஸ்டர் எவரெஸ்ட் என்றவர் கணித முறைப்படி இமாலயத்தின் உயரத்தைக் கணக்கிட்டார். விஞ்ஞானம் படித்தால் ப.ய. எப்படி வேலை செய்கிறது என்று தெரியும்.\nசத் புருஷன் அனந்தமானது. அதன் வாழ்வும், செயலும் அனந்தமானவை. நம் மனம் சிறியது. அறிவின் அனுபவம் குறுகியது. சிறிய மனமும், குறுகிய அறிவும் அனந்தமான சத் புருஷனை அறிவது அறிவிற்குப் பொருத்தமாகாது. இந்தக் கட்டெறும்பு அந்த மத யானையைக் கட்டுப்படுத்த முடியாது. ஏழையால் வீடு கட்ட முடியாது என்பது இல்லை. சோம்பேறித்தனத்தை ரசிப்பவனால் நிச்சயமாக வீடு கட்டமுடியாது. உள்ளூரில் பெருந் தலைவன் ஆர்ப்பாட்டமாக இருப்பதால் நாட்டிற்குத் தலைவனாக முடியாது.நட்சத்திரங்களைக் கண்டு வியந்து கவி எழுதலாம், வான சாஸ்திரம் பயில டெலஸ்கோப் இல்லாமல் முடியாது. 300 ஆண்டுகளுக்குமுன் நாம் தாஜ்மஹாலைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அதன் அழகை நேரில் போய்ப் பார்க்கவேண்டும். Photo வந்தபின் தெரிந்தது. பிரம்மத்தைப் பற்றி அறிய நம் முறைகள் பொருத்தம் இல்லை. பொருத்தமான முறைகள் உள்ளன. நம் முறைகள் பொருத்தம் இல்லை என்று அறிவதே அறிவு. நமக்கு உ���கம் புரியவில்லை என்றால் அதை மாயை எனக் கூறத் தோன்றுகிறது, கற்பனை என்கிறோம். குறுக்கே நிற்பது அறியாமை. உலகம் செழிப்பானது, செறிவானது, அதன் நிர்வாகம் அற்புதம். மனித அறிவு சிறியது, நம் முறைகள் குறுகியவை. அவை தடை. பருத்தி புடவையாவது அற்புதமான சிக்கலான முறை. பட்டுப்புடவை நெய்வதும், அதன் ஜரிகைகளும் நூற்றுக்கணக்கான வருஷங்களாக எழுந்தவை. பட்டுப்பூச்சியிலிருந்து பட்டு வருகிறது என்று தெரிவதால் மட்டும் பட்டுப்புடவை நெய்வது புரியாது. நம் அறிவு அரைகுறையான அறியாமை. விஞ்ஞானம் பெரியது. அலைகடல் போன்றது. நம் சிற்றறிவிற்கு அவை எட்டா. பகுத்தறிவு அனுபவத்தால் வருவது. மரம், செடி, கொடி, ஜடம், ஆகியவற்றைப் பற்றிய அனுபவம் பகுத்தறிவு. குறுகிய வட்டத்திற்கு உரிய நிலை இல்லாத அனுபவம் தரும் அறிவு அது. தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடுகிறது, மரம் காய்க்கிறது, விலங்கு குட்டிப் போடுகிறது, இவற்றைக் கண்டு அறிவு சில முடிவுகளுக்கு வருகிறது. அதன்படி பிரபஞ்சத்தை மனம் அறிய முயலுகிறது. இந்த அனுபவத்தைக் கடந்து செல்ல மனத்தால் இயலாது. இதற்கு எதிரானதை மனம் தவறு என்று கூறும். கிராமத்து மனிதன் ரேடியோ கேட்கிறான், phoneஇல் பேசுகிறான், காரைப் பார்க்கிறான். ஒலி 1000 மைல்கள் போகும் என்றோ, வண்டி தானே நகரும் என்றோ, அவனால் நினைக்க முடியாது. அவனுடைய அனுபவம் வேறு, நவீன காரணங்கள் வேறு. பிரம்மம் 1000 நிலைகளுக்கு உரியது. அறிவு அதை மறுக்கும். படிக்காதவனுக்குப் பார்த்தது, கேட்டது புரியும்; நாள், தேதி, கிழமை, புரியாது.படித்தவன் மனம் படிக்காதவனுக்குப் புரியாது. படித்தவன் மாதம், தேதி, வருஷத்தை அறிந்தவன்; அது படிக்காதவனுக்குப் புரியாது. காயம் தானே குணம் அடையும், பிளாஸ்திரி போட்டால் காயும், தலைவலிமாத்திரையால் போகும். நாம் அறிந்தவற்றால், நாம் அறிந்தவற்றைக்கொண்டு இவ்வளவையும் புரிந்துகொள்ள முடியாது. நாம் இவற்றைப் பொருட்படுத்துவது இல்லை, அவை புதிர். மேலே போகப் போக புரிவது குறைவு. பாட்டையும், பேச்சையும் கேட்கிறோம். நாமும் பேசுகிறோம். பேச்சு, பாட்டு எழுவதை நாம் விளக்க முடியுமா கல்லும், மண்ணும் அசைவது இல்லை; விலங்குகள் ஓடுகின்றன; பறவைகள் பறக்கின்றன. உயிரில்லாதவை அசைவது இல்லை. பறவை பறக்கின்றது எனப் புரிகிறது. கார் தானே ஓடுகிறது; விமானம் பறக்கின்றது; அவற்றை நம்மால் விளக்க முடியுமா கல்லும், மண்ணும் அசைவது இல்லை; விலங்குகள் ஓடுகின்றன; பறவைகள் பறக்கின்றன. உயிரில்லாதவை அசைவது இல்லை. பறவை பறக்கின்றது எனப் புரிகிறது. கார் தானே ஓடுகிறது; விமானம் பறக்கின்றது; அவற்றை நம்மால் விளக்க முடியுமா நாயின் படத்தை ஒருவன் வரைகிறான்; நமக்கு வரைய முடியவில்லை; அவன் எப்படி வரைந்தான் என்று நமக்கு விளங்குவது இல்லை. மந்திரம் விஷத்தை முறிக்கிறது, அது புரியாது. மந்திரம் ஆத்மாவில் எழுகிறது, பேச்சு உயிரிருந்து வருகிறது, நமக்கு மந்திரம் புரியாது.\nபகவான் யோகம் சுதந்திரத்திலாரம்பித்து சுதந்திரத்தால் வளர்ந்து சுதந்திரத்தில் பூரணம் பெறுகிறது.\nஒரு விஷயமாக அக்கறையும், நினைவுமிருக்கிறதா என அறிய ஒரு வழியுண்டு. வேறு காரியத்தில் ஈடுபட்டுள்ள பொழுது இக்காரியம் நினைவு வந்தால் அக்கறையிருப்பதாக அர்த்தம்.மணிக்கொரு முறை சமர்ப்பணம் செய்ய ஏற்றுக் கொண்டவர்கள் அக்கறையில்லாதவர்களானால், இந்த முடிவை அரை மணி நேரத்தில் மறந்துவிடுவார்கள்.\nபெரிய காரியத்தைச் சிறிய முறையில் பூர்த்தி செய்ய முடியாது.\n‹ 06.அஜெண்டா up 08.அன்பர் கடிதம் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2004\n01. யோக வாழ்க்கை விளக்கம் V\n07.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயா, பிரகிருதி, சக்தி\n10. இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11?start=21", "date_download": "2018-07-19T11:48:38Z", "digest": "sha1:ZRI5IWCIUGZDRNYMBWBMPA23PVCA6M6B", "length": 163905, "nlines": 549, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம்", "raw_content": "\nநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள்\nதமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்\nஜாதி - மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஅலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nநியூ செஞ்சுரி வாசகர் சங்கம்\n142, ஜானி ஜான் கான் ரோடு, இராயப்பேட்டை, சென்னை – 14\nதொலைபேசி: 044-28482441, 26258410 மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2012\nஉலகில் எத்தனையோ சமயங்கள் தோன்றி மறைந்தாலும் இன்றைக்கும் புதுக்கோட்டையில் சாகாவரம் பெற்ற சமயம் ஒன்று உள்ளதென்றால், அஃது ‘மெய்வழி’ ஒன்றேயாகும். இதில், இன்று பல்வகைச் சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ் கின்றனர். இச்சமயத்திற்கு வேரான அடிப்படைச் சமயம் ஒன்று உண்டெனில் அது பௌத்த சமயமே யாகும். இஃது உலகோருக்கு அன்பைப் போதிக்கும் தம்ம நெறியைக் கொண்ட சமயமாகும்.\nஇன்றுள்ள எல்லாச் சமயங்களுக்கும் முந்தையதும் காலச் சக்கரத்தின் முதற்கடையாணி எனப் போற்றப்படுவதுமாகிய பௌத்தம் சிறிது நாளில் சமணமாகிய உட்பிரிவைக் கொண்டு திகழ்ந்தது. சமணமும் பௌத்தமும் தழைத்தோங்கிய இப் புதுக்கோட்டை பூமியில் அறநூல்கள் பல முகிழ்த்தன. மிதிலைப்பட்டியில் சிலப்பதிகாரம் முதல் சிறு காசாவயல் முனைவர் சு.மாதவனின் பௌத்தத் திறனாய்வு நூல்கள் வரை இந்த மண்ணிலேயே தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் ஆகும். சுருக்கமாய்ச் சொன்னால் பௌத்தமும் சமணமும் இல்லையென்றால் தமிழில் அறநூல்களே இல்லை எனலாம். அறத்தைப் போதிக்காத எவையும் நூல் களாக இருக்கமுடியாது.\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியான் மலை, சித்தன்ன வாசல், விராலிமலை, புத்தாம்பூர், அண்ணல்வாயில், இரும்பாழி; வெள்ளனூர், இன்னும் பிற இடங்களில் புத்த சமணத் துறவிகள் வாழ்ந்து மக்களுக்கு நற்றொண்டுகள் பல செய்துள்ளனர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் ‘நாலடியார்’ என்னும் மெய் வழி நூல் சமணமுனிவர் பாடிய நூலாகும். வீர சோழியமும் ஈண்டு எழுந்ததே\nபுதுக்கோட்டையில் அமைந்துள்ள இலுப்பூர் சங்ககாலத்தில் இருப்பையூர் (இருப்பை) என வழங்கப் பெற்று, இவ்வூரினை ‘விரான்’ என்னும் மன்னன் ஆண்டு வந்துள்ளான். விரான் ஆண்டதால் இப் பகுதியிலுள்ள மலைக்கு விரான்மலை எனப் பெயருண்டு. பிற்காலத்தில் இம்மலை விராலி மலை என்று மக்கள் சொல் வழக்காயிற்று.\nவிரான் மன்னனின் சிறப்பை ஐங்குறுநூறு என்னும் தமிழர் வாழ்வியல் நூல் கீழ்வருமாறு எடுத்துரைக்கும்.\n“விண்டு வன்ன வெண்ணெற் போர் விற்\nகைவண் விராஅ னிருப்பை யன்ன\nபிறர்க்கு மனையையால் வாழி நீயே.” (ஐங். 58).\nஎன்பது அப்பாடல், மேலும், நற்றிணையில்,\n“முனையெழுத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்\nமலிபுனல் வாயில் இருப்பை”, (நற்-260)\n“வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்\nபழனப் பல்புள் இரியக் கழனி, வாங்கு சினை\nமிருதத் தூங்கு ��ுணர் உதிரும் தேர்வன்\nஎன்றும் விரான் மன்னனின் இருப்பை வானளாவிய செந்நெற்போர் குவிந்து வளம் கொழித்ததென்று ஓரம்போகியாரும் பரணரும் வாழ்த்திப் பாடியுள்ளனர். இவ்வாறு சீரும் சிறப்பும் உடைய விரான் மன்னன் தன்னை நாடிவந்தவரின் மனக்குறை போக்கி ஆறுதல் கூறவில்லை. மாறாக இருமாந்திருந்தான். ஆதலால், அம்மன்னனைக் கீழான அற்பன் எனச் சாடி, ‘மன்னனாகிய நீ மற்றவரின் மனதைத் தேற்ற வழியில்லாமல் வாழ்வதைக் காட்டிலும் மலை முகட்டில் ஏறி விழுந்து உயிர் விடலாம்’ என்று சமணமுனிவர் தமது நாலடியார் நூலில்,\n“இனியார் தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்\nதணியாத உள்ளம் உடையன்; மணிவரன்றி\nவீழும் அருவி விரான்மலை நன்னாட\nவாழின் வரைபாய்தல் நன்று.” (நாலடி-369)\nஎன்று இடித்துரைக்கின்றார். மேலும், ஆராயாமல் சுடுமொழிகளைக் கூறி அடுத்தவரைத் துன்பத்தில் ஆழ்த்தும் உன்னைக் கீழோரும் எள்ளி நகைப்பர் என்கிறார். அப்பாடலாவது,\n“கடுக்கெனச் சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம்\nஇடுக்கண் பிறர்மாட்டு உவக்கும் அடுத்தடுத்து\nவேகம் உடைத்தாம் விரான்மலை நன்னாட\nஏகுமாம் எள்ளுமாம் கீழ்” (நாலடி- 348)\nமெய்வழியாரை (பௌத்த சமணர்)ப் பொது வாக ஆதரித்த மன்னன் கொடும்பாளூரை ஆண்டு வந்த சாத்தன் இளங்கோவதிரையன், இவனது மகன் பூதி என்னும் பெருமுத்தரையன் ஆவான். இவன் கொடும்பாளூர் பூதிச்சரம் கோயிலைக் கட்டியவன் (தமிழரசன். பு.சி. புலவர், 2001, ப.85) என இக்கோயில் கல்வெட்டால் அறியலாம்.\nபெருமுத்தரையன் விரான் மன்னனால் ஒடுக்கி ஆளப்பட்டவன். விரான் மன்னன் பெருமுத்தரை யனுக்குக் கொடுந்துன்பங்களைக் கொடுத்துள்ளான். பெருமுத்தரையனின் நற்குணத்தையும் கொடைத் தன்மையையும் புகழ்ந்து போற்றும் சமண முனிவர் நாலடியாரில்,\n“மல்லன் ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்\nசெல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்\nநல்கூர்ந்தார் கண்ணும் பெருமுத் தரையரே\nசெல்வரைச் சென்றிரவா தார்” (நாலடி- 296)\nஎன்று பாடுகின்றார். மூங்கிலைப்போல ஆகாயத்தைத் தொடுமளவு நெற்பொழியுடைய விரான் மன்னனைக் காட்டிலும் வறுமையுற்ற காலத்தில் எவ்வகைச் செல்வர்களையும் சென்று இரவாத நற்பண்பு உடையவன் பெரு முத்தரையன் என்பதே இப் பாடலின் பொருளாம். ஆகவே, நாலடியார் என்னும் “மெய்வழி நூல்” புதுக்கோட்டைச் சமணர் எழுதிய நூலாகும் என்பது தெளிவாகும்.\nமேலும், இஃதே போல் “விவேக சிந்தாமணி” என்னும் மெய்வழி நூல் வெள்ளனூரில் வாழ்ந்த ஒரு சமணத் துறவியார் எழுதிய நூலாகும். காரணம் என்ன எனில்,\n‘பேரவா பெரு நட்டம்’ என்பது சமண பௌத்த நெறிகளில் ஓன்றாகும். வெள்ளனூர் என்று தற்போது வழங்கும் ஊரின் பழம்பெயர் வெள்ளை நல்லூர் என்பதாகும். இவ்வூரில் வட்டங் கச்சேரிக்கு அருகில் கிடைத்த பெரிய மகாவீரர் திரு வுருவம் புதுக்கோட்டை அருங்காட்சியகத்திற்குக் கொண்டுவரப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.\nஇச்சிலையை ஆராய்ச்சி செய்த அருங்காட்சி யகக் காப்பாட்சியர் செ.கோவிந்தராஜ் அவர்கள் கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.\n“இத்திருவுருவம் 3ஙூ அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட கருங்கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது. மரத்தினடியில் தாமரை மலரில் வீற்றுள்ளார் மகாவீரர். முக்குடைகளைப் பெற்றுள்ளார். இவரது அடியார்கள் இருமருங்கிலும் கவரி வீசி நிற்கின்றனர். திருவாசியும் சிங்கத் தோரணமும் உள்ளன. மரத்தில் இலை, பூ, காய், கொடி இருப்பதுடன் பூவின்மீது 3 அங்குல நீளம் உள்ள காகம் எதையோ கவ்விக் கொண்டிருக்கின்றது. கீழ்ப்பகுதியில் நரி ஒன்று காகத்தினைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இத் திருவுருவம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.” என்கிறார்.\nஇச்சிலையில் இக்காட்சி இடம்பெறக் காரணம் யாதெனில், “பேரவா பெருநட்டம்” என்னும் கருத்தை விளக்க வந்ததேயாகும். இக்கருத்தை “விவேக சிந்தாமணி” என்னும் மெய்வழி நூலின் ஆசிரியர் தமது நூலில் வரும் பாடலொன்றில் கையாண்டுள்ளார். அப்பாடலாவது,\n“சம்புவே என்னபுத்தி சலந்தனில் மீனை நம்பி\nவம்புறு வடத்தைப் போட்டு வானதைப்பார்ப்பதேனோ\nஅம்புவி மாதே கேளாய்; அரசனை அகல விட்டுப்\nஎன்பதாகும். இதன் கருத்தாவது, சம்புவாகிய நரி கரையிலே கிடக்கும் கருவாட்டுத்துண்டை உண்ணாமல் நாளை உண்ணலாம் என நினைத்து, நீரிலே வாழும் மீனைப் பிடிக்கச் சென்றது. கரையில் கிடந்த கருவாட்டைக் காகம் தூக்கிக் கொண்டது. இரண்டும் கிட்டாமல் நரி ஏமாந்தது. இஃது பேரவாவில் விளைந்த பெருநட்டம்; இஃதொருத்தி அரசனை நம்பிப் புருஷனைக் கை நழுவ விட்ட கதை போலாம். இந்நூலில் இடம்பெற்ற இக்கதை சமண பௌத்த நெறிவிளக்கக் கதையாகும். இதை மகாவீரரின் சிலையில் வடித்துள்ளனர். பிற்காலத்தில் எழுந்த சமண பௌத்தக் கொள்கை மறுப்பாளர்கள் காக்கை, நரி; பாட்டி, வட��� என்று கதையையும் கொள்கையையும் மாற்றியுள்ளனர்.\nஇருப்பை விராலிமலையில் (விரான்மலை) தோன்றிய நாலடியார் நூல்போலும், வெள்ளனூரில் முளைத்தெழுந்த விவேக சிந்தாமணி போலும் எண்ணற்ற பௌத்த சமண மெய்வழி நூல்கள் இம்மண்ணில் (புதுக்கோட்டையில்) மறைந்த வரலாறாய் உள்ளன. அவற்றைத் தேடிக் கொணர்வதே நம் அனைவரின் கடமையாகும்.\n* மெய்வழிச்சாலையில் மெய்வழி மெய்ம்மறை நூல்களில் இன்றும் முதலில் வைத்துப் பாடப் பெறுவது புத்ததேவ அருக சரணமாகும். ஆதியே துணை என்பது இவர்களின் கடவுட்கொள்கை யாகும்.\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2012\nஅதிகாலை மதுரை - அரை கிலோ மீட்டர், அரை மணி...\nஎன்னதான் பிழைப்பதற்காக ஊர் ஊராகப் போய்த் திரிந்தாலும்கூட சொந்த ஊர் என்றால் சொந்த ஊர்தான்.\nபெரும்பாலும் மனைவி, மகளுடன் சுமை களையும் எடுத்துச் செல்வதால், வழக்கமாகக் காலையில் மதுரை சந்திப்பு ரயிலடியில் இறங்கி யதுமே ஆட்டோவொன்றைப் பிடித்து வீட்டுக்குப் போய்விடுவேன்.\nஇந்த முறை தனியே. தீபாவளிக்கெல்லாம் ஊருக்குப் போவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில், அதற்கு முன்னதாக ஒரு ஞாயிற்றுக் கிழமையையொட்டிக் கிடைத்த நாளில் எடுத்த டிக்கெட் இது, சென்னையில் இருப்பவர்களின் துரதிருஷ்டத்தின்படியே விரும்பிய ரயிலில் - பாண்டியன் எக்ஸ்பிரஸ்தான், வேறென்ன - டிக்கெட் கிடைக்காததால் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் (பேசாமல் திரு அனந்தபுரம் எக்ஸ்பிரஸ் என்றே பெயர் வைத் திருக்கலாம் - டிக்கெட் கிடைக்காததால் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் (பேசாமல் திரு அனந்தபுரம் எக்ஸ்பிரஸ் என்றே பெயர் வைத் திருக்கலாம்) மதுரைக்குச் சென்றேன். அதிகாலை 4.15 மணிக்குச் சென்றடைய வேண்டும். எப்போது சென்றடையுமோ, மதுரையில் இறங்கத் தவறி விடுவோமோ என்ற அச்சத்திலேயே இரவுத் தூக்கம் முழுவதும் போய்விட்டது.\nஒருகாலத்தில் டாக்டர்களுக்கு மருத்துவத்தைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை, ஏமாந்துவிடு வார்கள் என்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் மருத்துவத்தைத் தவிர எல்லாமும் தெரிகிறதோ என்று தோன்றுகிறது. அதேபோல, இந்த ஐ.டி. நபர் களுக்கும்கூட அடுத்தவர்களைப் பற்றி எதுவுமே தெரியாதுபோல; அல்லது தெரிந்தும் தெரியாதவர் களாக நடக்கிறார்கள் போல.\nநான் சென்ற ரயிலில் எனக்கு நடுப் படுக்கை. எதிரேயுள்ள நடுப் படுக்கையும் வயதில் மூத்த - சும���ர் 65 வயதிருக்கலாம் - ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ரயில்வேயில் ஐ.ஆர்.சி.டி.சி. எந்திரத்துக்குத் தான் சொந்த அறிவும் கிடையாது, புகட்டப்பட்ட அறிவும் கிடையாதே. ஆனால், எங்கள் பகுதியிலேயே மிக இளைஞர்களுக்குக் கீழ்ப் படுக்கைகள் வழங்கப் பட்டிருந்தன. அவர்கள் இருவருமே ஐ.டி.காரர்கள். வேறொரு பெட்டியிலிருந்து வந்த இன்னோர் இளைஞரும் சேர்ந்துகொண்டார்.\nமூவருமாகத் தங்களுடைய செல்போன்களின் பெருமைகளை மாற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர், தன்னுடைய TABLET-ஐ (செல்போனாகவும் இல்லாமல் லேப்டாப் ஆகவும் இல்லாமல் இரண்டுங் கெட்டானாக உருவெடுத்துள்ள இழிபிறவி) எடுத்து வைத்துப் பெருமைகளை விளக்கியதுடன், சினிமா வெல்லாமும்கூட காட்டிக்கொண்டிருந்தார். கெரகம், அதில் யூ டியூப்பில் டவுன்லோட் செய்யப்பட்ட விவேக், சந்தானம் நகைச்சுவைகள் வேறு. தங்களுடைய புகழ்களையும் தங்கள் சாதனைகளையும் கூட அவர்கள் பட்டியலிட்டுக் கொண்டிருந்தனர்.\nஎனக்கு எதிரே இருந்த முதியவர், உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி விழுந்துகொண்டிருந்தார். இளைய சமுதாயமோ கவலையே படவில்லை. வேறு வழியுமில்லை. நானும் விதியே என அவர்களின் தற்புகழ்ப் புராணங்களைக் கேட்டுக்கொண்டு வந்தேன். எப்படியோ ஒருவரின் கடைக்கண் பார் வையில் முதியவர் பட்டுவிடவே, அவர் வேண்டு மானால் தூங்கட்டுமே எனக் கூறினார். ‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். நானும் - அவர்களில் ஒருவருடையதான - மேல் படுக்கைக்குப் போய் விடுகிறேன்’ என்று கூறித் தப்பிவிட்டேன். ஆனால், வந்த தூக்கம் போனது போனதுதான். இந்த லட்சணத்தில்தான் அதிகாலை 4 மணிக்கு இறங்க வேண்டிய அவதி.\nஅதிசயமாக அன்று சரியான நேரத்துக்கே மதுரைக்கு வந்துவிட்டது அனந்தபுரி எக்ஸ்பிரஸ். தூங்கியும் தூங்காமல் எழுந்து, மதுரைச் சந்திப்பி லிருந்து வெளியே வரும்போது, எப்போதும்போல அந்த அதிகாலையிலும் ஆட்டோ டிரைவர்கள் வரவேற்றனர் (இவர்கள் எல்லாம் எப்போது தூங்கி எப்போது விழிப்பார்கள்). நான் தனி என்பதால் அவர்களைத் தவிர்த்துவிட்டு, நீண்ட காலத்துக்குப் பிறகு, பெரியார் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன்.\nரயில் நிலையச் சந்திப்பு முன்பு போல இல்லை. நன்றாக நினைவு இருக்கிறது. ‘70-களின் கடைசி ஆண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, நாட்டுத் தொண்டுத் திட்ட மாணவனாக ரயில் நிலையத்துக்கு வருவோம் (விடுமுறையில் ஊருக்குச் செல்வதற்காகவும்தான்). இலங்கைத் தலைமன்னாரில் இருந்து ஒரே டிக்கெட் எடுத்து மதுரைக்கு நிறைய பேர் வருவார்கள். ரயில் நிலையமே நமக்கு மிகவும் ஒட்டுறவுடன் இருப்பதாகத் தோன்றும்.\nஇப்போது நிலையத்துக்குள் நுழையும் சாலையை வாய்க்கால் மாதிரி வெட்டிவிட்டு ஆட்டோக்களை மட்டும் விடுகிறார்கள். முன்புறம் முழுவதும் ‘டைல்ஸ்’ பதித்துவிட்டார்கள். ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. இப்போதும் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறதாம். என்னால் ‘சட்’டெனப் பார்க்க முடியவில்லை. அதுவும்கூட மதுரை ரயில் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களின் ரட்சிப்புதான் காரணம் என நினைக்கிறேன். வெளியே திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரங்கள். சில ஏ.டி.எம்.கள். அழகுபடுத்து கிறேன் பேர்வழி என்ற பெயரில், சகிக்க முடியாமல் என்னென்னவோ செய்திருக்கிறார்கள். ஒருவேளை இதுதான் சிலருக்கு அழகோ என்னவோ\nரயில் நிலையத்துக்கு எதிரே மங்கம்மாள் சத்திரம். பழைய கட்டடம். சாதாரண மக்கள் தங்கிக் கொள்வார்கள். முன்புறம் வெளியாக இருக்கும். சில பிச்சைக்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். வெயிலுக்கு ஒதுங்கி நிற்கலாம். இப்போது எல்லாம் உருமாறிப் போய்விட்டது. முன்புறம் இருக்கக்கூடிய அறைகள் எல்லாம் கடைகளாக மாற்றப்பட்டு விட்டிருக் கின்றன. சத்திரத்தில் கிடைக்காத வாடகை, இந்த வணிகக் கடைகளில் கிடைக்கும்தானே ராணி மங்கம்மாளே வந்தால்கூட அடையாளம் காண முடியாத அளவுக்குக் கட்டடத்தைக் காணாமல் போகச் செய்யும் அளவுக்குக் கடைகளின் விளம்பரப் பலகைகள். நவீனம்.\nமுன்பெல்லாம், அதிகாலை நேரங்களில் வழக்க மாக ஜங்ஷனிலிருந்து பெரியார் பஸ் நிலையம் (அப்போது பஸ் ஸ்டாண்ட்) செல்லும் வழியில் ஆங்காங்கே இருக்கும் தேநீர்க் கடைகளில், ஏறத்தாழ ஒரே மாதிரியான பக்திப் பாடல்கள் ஒலிக்கும். ஆனால், இப்போது ஒன்றும் காணவில்லை. இருந்த கடைகள் எல்லாமும்கூட கொஞ்சம் ‘எலைட்’டாகக் காட்சி யளித்தன.\nஅந்த அதிகாலையிலும் திருநெல்வேலி அல்வா புகழ் பிரேம விலாஸில் விற்பனையாளர்கள் சுறு சுறுப்பாக இருந்தார்கள். அல்வா சொன்ன பின், ‘மிளகு போட்ட இந்தக் காராச்சேவுதான் சார் இங்கே ஸ்பெஷல்’ என்று யோசனையும் சொன்னார்கள். 500 ரூபாய்த் தாளைக�� கொடுத்தபோது, முகங்கோணாமல் சில்லறையும் தந்தார்கள்.\nஒரு காலத்தில் ஓஹோவென்றிருந்த ரீகல் தியேட்டர் தேடிப் பார்க்க வேண்டியதாக உள்ளடங்கிப் போய்க் கிடந்தது. பெரிய காரை வீடு போலத் தோன்றியது. இப்போது தங்க ரீகல் என்று பெயர். என்னென்னவோ படம் திரையிடுகிறார்கள். அப் போதெல்லாம் ஆங்கிலப் படங்கள் மட்டும்தான். வேர்ஈகிள்ஸ் டேர், கிரேட் எஸ்கேப், எஸ்கேப் டு விக்டரி, ஃபைவ்மென் ஆர்மி... எத்தனையோ படங்கள். எத்தனையோ நண்பர்களுடன். திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை அவ்வளவு எளிதாக மதிப்பிட்டு விட முடியாது. சாதாரணமாகத் தோன்றக்கூடிய ஒருவர், ஆங்கிலப் படங்களைப்பற்றிய பெரும் தகவல் களஞ்சியமாகவே திகழ்வார். திரையரங்கில் முறுக்கு விற்பவர்கூட விரிவாகப் பேசுவார் (அப் போது இணையமெல்லாம் கிடையாது, அவர் களுக்குப் படிப்பறிவுகூட இருக்காது). நண்பர்கள் மனோ என்ற பால் மனோகரன் (நவம்பர் 25 ஆம் தேதி அதிகாலையில் திருச்சி அருகே நேரிட்ட சாலை விபத்தொன்றில் பால் மனோகரன் மறைந்துவிட்டார்), முரளிதரன் போன்றோருக்குத் தெரிந்த சிலர் அப் போது ரீகல் தியேட்டரில் வேலை பார்த்தார்கள். எனவே, எப்போது போனாலும், எந்தப் படத்துக்கு வேண்டுமானாலும் எங்களால் டிக்கெட் வாங்கிவிட முடியும். டிக்கெட் வாங்குகிறோமோ இல்லையோ, நிச்சயமாகப் படம் பார்த்துவிட முடியும்.\nஒருமுறை திடீரென, எந்தத் திரையரங்காக இருந்தாலும் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடுவது கட்டாயம் என்றாக்கப்பட்டது. ரீகலில் தமிழ்த் திரைப்படமா என்ற வியப்புதான் ஏற்பட்டது. பல பேர் வெறுத்து, சோகச் சித்திரமாகிவிட்டார்கள். ஆனாலும் தமிழ்ப் படங்களையும் அங்கே பார்த்தார்கள். நானும் அங்கேதான் ‘அவள் அப்படித்தான்’ பார்த்தேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடித்த இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படம். கறுப்பு வெள்ளையில் பிரமாதமான படம் (ருத்ரய்யா இயக்கிய இரண்டாவது படம், ‘கிராமத்து அத்தியாயம்’ பெரிதும் சொதப்பிவிட்டது, கல்பனாவில் ஒரு காலைக் காட்சியில் வேர்க்க விறுவிறுக்க அதைப் போய்ப் பார்த்தோம். ‘ஆத்து மேட்டுல, ஒரு பாட்டு கேட்குது’ என்றொரு பாட்டு. நன்றாக இருக்கும். படத்தில் குரல் ஒருபுறம், தலையசைப்பு, வாயசைப்பு ஒருபுறம் என ஒட்டாதிருக்கும். அந்தப் பாட்டுக்கு ஆடிய புத��முகங்கள் இப்போது எப்படி இருப்பார்களோ தெரியவில்லை. பிறகு ருத்ரய்யாவும் கூட அவ்வளவாக சோபிக்கவில்லை). காலம்தான் எப்படியெல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறது\nபேருந்து நிலையத்தை நோக்கி நடந்தபோது, சென்னையை எள்ளி நகையாடுவதைப் போல, ஒரு குடும்பம், பேருந்துநிலையப் பக்கமிருந்து ரயில் நிலையத்தை நோக்கி நடந்துவந்துகொண்டிருந்தது. ரொம்ப ‘ரிச்’சாகப் புடைவை கட்டிக் கொண்டிருந்த குடும்பத் தலைவி, மிக இயல்பாகப் பெரிய பை யொன்றைத் தூக்கித் தலையிலும் மற்றொரு பையை இடுப்பிலும் வைத்துச் சுமந்தபடி நடந்துவந்துகொண் டிருந்தார். கணவர், மகன், மகள் எல்லாருமே அவரவர் வலுவுக்கேற்ப ஆளுக்கொரு சுமையுடன் நடந்துகொண்டிருந்தனர். அந்தக் கணத்தில் எனக்கும் சின்ன வயதில், அப்பா, அம்மா, தம்பி, தங்கையுடன் ஊருக்குப் போன நினைவுகள் வந்துபோயின.\nகண்ணில் பட்டது கட்டபொம்மன் சிலை, முன்பெல்லாம் அடிக்கடி கட்டபொம்மனின் கையிலிருக்கும் வாள் முறிந்து விழுந்துவிடும். இப்போது எப்படி எனத் தெரியவில்லை (பகல் நேரத்தில் தற்போது நண்பர் எடுத்து அனுப்பிய படத்தில் வாள் இருக்கிறது). பெரிய சதுக்கமாகத் தோன்றிய இடம், இப்போது திட்டு மாதிரி காட்சியளிக்கிறது.\nபேருந்து நிலையம் மிகவும் சின்னதாகத் தோன்றியது, சின்னப் பிள்ளையில் பார்த்த எல்லாமே இப்போது அப்படித்தான் தோன்றுகின்றன. பெரியன வெல்லாம் சிறியனவாக, தொலைவுகள் எல்லாம் சுருக்கமாக. பேருந்து நிலையம் முழுவதும் தட்டுக்கல் பாவிவிட்டிருக்கிறார்கள். முன்னர், மழை பெய்தால் குளம் போலப் பேருந்து நிலையம் காட்சியளிக்கும். இப்போது, ஒருவேளை நீச்சல் தொட்டி போலக் காட்சியளிக்குமோ என்னவோ\nபேருந்து நிலைய நடைமேடைகளில் எல்லாம் எப்போதும்போலவே தலைக்குத் தங்கள் பொருள் களையே வைத்துக்கொண்டு, குளிருக்குப் போர்த்திக் கொண்டு நிறைய பேர் படுத்துத் தூங்கிக்கொண் டிருந்தார்கள். பெரும்பாலும் ஏதாவது வேலையாக நகருக்கு வந்துவிட்டு, முதல் பேருந்தில் ஊருக்குத் திரும்பக் கூடியவர்களாக இருக்கும். அல்லாமல் இரவு நேரம் மட்டுமே குடியிருப்பாகப் பாவித்துத் தங்கிக்கொள்ளும் கூலித் தொழிலாளர்களாகவும் பிளாட்பாரங்களில் தின்பண்டங்கள் விற்பவர் களாகவும் பிச்சைக்காரர்களாகவும் இருக்கலாம்.\nபேருந்து நிலையம் முழுவதும் முந்தைய ந��ள் குப்பைகள். நடைமேடைகளும் குப்பை மேடுகளைப் போலத்தான் இருந்தன. இரவோடு இரவாகக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யலாமே என்று தோன்றியது. பிறகு மிகவும் யோசித்துப் பார்க்க, இரவோடிரவாக இந்தக் குப்பையைக் கூட்டுவதால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது. போய்த் தொலை யட்டும். படுத்துறங்குபவர்களாவது விடியும்வரை நிம்மதியாக உறங்கட்டும் எனப் பட்டது.\nஇதே பேருந்து நிலையத்தில் ‘80-களில், 90-களில் மதுரைத் தினமணியில் வேலை பார்த்த காலத்தில் எத்தனையோ நாள்கள் அதிகாலை நேரங்களைப் புத்தங்களைப் படித்துக்கொண்டே கழித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. நாவல்கள், கட்டுரைகள் என எத்தனை யெத்தனை\nஒரு காலகட்டத்தில் லூனா இருந்தது. 1800 ரூபாய்க்கு ஒரு நண்பரிடம் வாங்கியது. லிட்டர் பெட்ரோல், எட்டு ரூபாயோ என்னவோ, இரவுப் பணிக்கு மட்டுமே அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வேன். ஒரு நாள் தினமணியில் இரவுப் பணி. நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை உயரப் போவதாக அறிவிப்பு வந்தது. அப்போதெல்லாம் டி.வி.யும் கிடையாது, பிரேக்கிங் நியூஸ்களும் கிடையா. விலை உயர்வு பற்றி ஒன்று வானொலியில் சொல்லித் தெரிய வேண்டும் அல்லது நாளிதழ் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தெரிந்தவுடனே நாங்கள் எல்லாம், டேங்கை நிரப்பிக் கொள்வதற்காக, அலுவலகத்துக்கு எதிரிலேயே இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வண்டிகளுடன் சென்றோம். என்னுடைய லூனா விலும் பெட்ரோல் போட்டார்கள். என்ன கொடுமை பெட்ரோல் நிரம்பி, ஏராளமாகக் கீழே கொட்டி விட்டது பெட்ரோல் நிரம்பி, ஏராளமாகக் கீழே கொட்டி விட்டது ஏதோ, சில ரூபாய்களை மிச்சம் செய்யப் போவதாக நினைத்துக்கொண்டு, அதைவிடக் கூடுதலாக வீணாகிவிட்டது.\nபின்னால், லூனாவை வைத்துச் சமாளிக்க முடியாததால் - சரியான ஆவணங்களும் இல்லை - விற்றுவிட்டேன். அதன் பிறகு பேருந்துதான். இரவு - அல்ல - அதிகாலை 2 அல்லது 2.30 மணிக்கு வேலை முடிந்ததும், அலுவலக வாசலிலேயே பேருந்து நிறுத்தம், காத்திருந்து இரவு சேவை பேருந்தைப் பிடித்தால், தெற்குவாசல் சுற்றிப் பத்துப் பதினைந்து நிமிஷங்களிலேயே மத்திய பேருந்து நிலையம் வந்துவிடும். வீட்டுக்குச் செல்ல முதல் பேருந்து, 5 மணிக்கு மேலேதான். சில நாள்களில் 5. 15கூட ஆகிவிடும். இடம் கிடைத்தால் ஏதாவது பெஞ்சில் அமர்ந்துகொண்டு, இல்லாவிட்டால் நின்றுகொண்டே இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் படித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அலுவலகத்திலும் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்த அலுப்பால், சில நாள்களில் வெறுமனே சுற்றி வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே நேரம் கழியும். அப்போதும் இதேபோன்ற காட்சிகள் தான், கொஞ்சம் பழைய, கறுப்பு-வெள்ளைப் படத்தைப் பார்த்தது போல, இருக்கும்.\nஇந்தப் பேருந்து நிலையக் காத்திருப்பில் வெயில் காலத்தில் எதுவும் தோன்றாது. குளிர்காலத்தில் தான் மிகவும் கடினமாக இருக்கும். இதற்காக, போர்வையா கொண்டு செல்ல முடியும் மழைக் காலங்களை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது.\nமுன்னர் பேருந்து நிலையத்துக்குள்ளே ஆட்டோக்களைக்கூடப் பார்க்க முடியாது. இப் போது அதிகாலை என்பதாலோ, முதல் பேருந்து வந்து புறப்பட நேரமாகும் என்பதாலோ ஷேர் ஆட்டோக்களே உள்ளே வந்து சென்றன. அரசரடி, காளவாசல் என்றெல்லாம் கூவிக்கூவி அழைத்தார்கள். முதல் பஸ் வரும் நேரம் நெருங்கிவிட்டதெனக் கருதியதாலோ என்னவோ யாரும் சீண்டவில்லை.\nஇன்னும் 5 மணியாகவில்லை. அந்தக் காலத்தில் கேட்காத சப்தங்களும் கேட்கத் தொடங்கின. எங்கிருந்தோ பள்ளிவாசல் தொழுகைச் சப்தம். பஸ் நிலையத்தின் தென்புறமாக இருக்க வேண்டும். திடீர் நகர். அப்போது பெரும்பாலும் குடிசைகள், சின்னச் சின்ன வீடுகள்தான். உழைக்கும் மக்கள் வாழ்ந்துவந்தனர். இப்போது மாடிக் குடியிருப்புகள் எல்லாம் தெரிந்தன. சிறிது நேரத்தில் மற்றோரிடத் திலிருந்து தொழுகைச் சப்தம். சிறு இடைவெளியில் பஸ் நிலைய வாசலையொட்டி, கட்டபொம்மன் சிலைக்கு நேர் பின்னேயுள்ள தேவாலயத்தில் 5 மணி அடித்து, ஒலிபெருக்கியில் விவிலியத்தின் சில வரிகள் ஒலிபரப்பாயின. இதுவும் புதிதாகத்தான் இருந்தது.\nஅப்போது பேருந்து நிலையத்துக்குள் வடக்குப் புறம் சுற்றுச்சுவரையொட்டிச் சில மரங்கள் இருந்தன. வெயிலுக்கு மக்கள் ஒதுங்கி நிற்பார்கள். ஆவின் கடையொன்று இருக்கும். எப்போது பார்த்தாலும் ஒரு கூட்டம் நின்றுகொண்டிருக்கும். வடகிழக்கு மூலை வழியேயும் பேருந்து நிலையத்துக்குள் நடந்து வர வழியிருந்தது. வழியிலேயே இரு புத்தகக் கடைகள் இருந்தன. இப்போது எதுவும் இல்லை - மட்டுமல்ல - நிழல் தரும் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, வேலிச் சுவரிட்டுக் கொஞ்ச��் குத்துச் செடிகளை நட்டிருக்கிறார்கள். அழகாக்கிவிட்டதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் போலும்.\nவடபுறத்தில் விலையில்லா - அல்ல - இலவசக் கழிப்பிடமாக இருந்தது, இப்போது பளப்பளா கற்கள் பதிக்கப்பட்டு நவீன கழிப்பிடமாக மாறி யிருக்கிறது. தொலைவிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. உள்ளே செல்லும் துணிவு பிறக்கவில்லை. கட்டணம் வசூலிக்கிறார்களா என்றும் தெரியவில்லை.\nமதுரை மத்திய பேருந்து நிலையத்தின் சொல்லப் படாத அடையாளமெனத் தெரிந்தது, மேற்கே இருந்த பாழடைந்த கல்லறைத் தோட்டமும் கல்லறை களும். கல்லறையின் சுற்றுச்சுவர்தான் ஆண்களுக் கான சிறுநீர்க் கழிப்பிடமாக விளங்கியது. இப் போது என்னவோ, கோட்டைச் சுவர் போல வரிசை யாகக் கடைகள் கட்டப்பட்டிருந்தன. கல்லறைகள் தெரியவில்லை, இருக்கின்றனவா, அல்லது தூர்த்து விட்டார்களா என்பதுவும் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.\nசரியாக 5 மணிக்கு முதல் பேருந்து, 59 பி சேந்த மங்கலம் செல்லும் வண்டி உள்ளே வந்துவிட்டது. அங்கே இங்கே சிதறிக் கிடந்தவர்கள் எல்லாம் திரண்டு பேருந்தில் ஏறிவிட்டார்கள். பேருந்து புறப்படவில்லை. பின்னாலேயே, இதே 59 வரிசையில் முடுவார்பட்டிக்குச் செல்லும் டீலக்ஸ் பேருந்து ஒன்றும் வந்து நின்றது. ஒரே ஒருவர்கூட ஏறவில்லை - உண்மையிலேயே ஒருவர்கூட கண்டுகொள்ளவில்லை. இரு பேருந்துகளும் ஒரேநேரத்தில்தான் புறப்பட்டன. (அப்போது, நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறிய வாசல் வழிதான் இப்போது உள்ளே நுழைகின்றன. எந்தெந்தப் பக்கங்களிலோ வெளியேறுகின்றன).\nபேருந்திலிருந்து இறங்க வசதியாக முன்புறத்தில் அமர்ந்துகொண்டுவிட்டேன். டிக்கெட் 6 ரூபாய். சென்னையில் 13 ரூபாய், 19 ரூபாய் என்று கொடுத்து விட்டு, அதையும் ‘பாஸ் பண்ணி’ அனுப்பிவிட்டு, டிக்கெட்டும் வராமல், சில்லறையும் வராமல் படும் அவதியுடன் ஒப்பிட்டுப் பார்க்க, டிக்கெட் விலை மிகவும் சல்லிசாகத் தெரிந்தது.\nஎனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் களில் ஒருவர், 100 ரூபாய்த் தாளை நீட்டி, 3 டிக்கெட் கேட்டார். ஆஹா, ‘காலங்காத்தாலே’ 100 ரூபாய் கொடுத்து டிக்கெட்டா, கடித்துத் துப்பப் போகிறார் கண்டக்டர் என்று அதிர்ச்சியுடன் காத்திருந்தால், ‘சில்லறை இல்லையா’ என்ற ஒரே கேள்வியுடன் அமைதியாகப் பெற்றுக்கொண்டு, டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்தார் கண்டக்டர்; ‘மீதி’ என்ற ஒரே கேள்வியுடன் அமைதியாகப் பெற்றுக்கொண்டு, டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்தார் கண்டக்டர்; ‘மீதி’ என்ற இளைஞரிடம் பிறகு தருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். மறுமுறை டிக்கெட் கிழிக்க முன்புறம் கண்டக்டர் வந்தபோது, ‘அண்ணே, மீதியக் கொடுங்க’ என்றார் இளைஞர் மறுபடியும். ‘அட, ஓடியா போய்விடுவேன், இறங்குமுன் வாங்கிக் கொள்’ என்பது கண்டக்டரின் பதில். ‘சீக்கிரம் கொடுத்தால் தூங்குவோம்ல’ என்று கூறிய இளைஞர், கண்டக்டர் அந்தப் புறம் நகர்ந்ததும், ‘காலங்காத்தால பெரிய ஏழரையாப் போச்சு’ என்றொரு காமென்ட் வேறு அடித்தார். எனக்கு நிஜமாகவே இவையெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதுவே சென்னையாக இருந்திருந்தால் 100 ரூபாய்த் தாளைப் பார்த்ததுமே பேருந்தைவிட்டு இறக்கிவிட்டிருப்பார் கண்டக்டர். ஒரு சொல் கேட்க முடியாது, அப்படியே கேட்டாலும் பேருந்தில் உடன் பயணம் செய்யக்கூடிய ஒரு நபர்கூட ஆதரவாகப் பேசியிருக்க மாட்டார்.\nபேருந்து, காளவாசல் நிறுத்தத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. இந்த இடைவெளியில் ஆளில்லாமல் சென்ற டீலக்ஸ் பஸ், எங்கள் பேருந்தை ஓவர்டேக் செய்து காளவாசல் நிறுத்தத்துக்குச் சென்றுவிட்டிருந்தது தெரிந்தது. நிறைய பேர் கும்பலாக டீலக்ஸ் பேருந்தில் ஏறச் சென்றவர்கள், இந்த சாதாரண பேருந்தைப் பார்த்ததும் ஓட்டு மொத்தமாக மேலேறாமல் புறக்கணித்து நின்று விட்டனர். ஒருகணம் தயங்கிய பின் டீலக்ஸ் பேருந்து மீண்டும் ஆளில்லாமலேயே புறப்பட்டுப் போய்விட்டது. அந்த டிரைவர் ஒருவேளை திரும்பிப் பார்த்திருக்கக் கூடும், அல்லது, இது வழக்கமாக நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரிந் திருக்கவும் கூடும். என்ன காரணமோ, உண்மை யிலேயே, இந்தப் புறக்கணிப்பு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nவீடு இருக்கும் பகுதியின் நிறுத்தம் வந்ததும் இறங்கி நடந்தேன். பேருந்து நின்று நிதானமாக இறக்கிவிட்டுப் புறப்பட்டது. ஒரு காலத்தில் ஆளரவமே இல்லாமல் இருக்கும் இந்தப் பகுதியில் அந்நேரத்திலேயே சில டீக்கடைகள் திறந்திருந்தன. மத்திய பேருந்து நிலையப் பகுதியில் டீக்கடை களில் கேட்ட பக்திப் பாடல்கள், இப்போது இங்கே ஒலித்துக்கொண்டிருந்தன. வீடு செல்லும் சாலையில் நடந்தால் - முன்னர் எங்கள் வீட்டில்தான் மரங்கள் இருக��கும், இப்போது பரவாயில்லை - மேலும் பல வீடுகளில் மரங்கள்...\nபார்த்தவற்றையெல்லாம் யோசித்துக்கொண்டே நடந்துசெல்லும்போது, பஸ் நிலையத்திலிருந்தே தெரிந்த, யு.சி. ஹை ஸ்கூல் (இப்போது என்னவாகப் பெயர் மாறியிருக்கிறதோ) சுவரில் எழுதப்பட்டிருந்த விவிலிய வரி, சம்பந்தமில்லாமல், நினைவுக்கு வந்தது - ‘உன் நம்பிக்கைகள் வீண் போகாது’.\nஎன்னதான் இப்போதைக்கு சொந்த ஊரானது அன்னியமாகிவிட்டிருந்தாலும் பிழைக்கப்போன ஊரெல்லாம் சொந்த ஊராகிவிடுமா, என்ன\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2012\nபடித்துப் பாருங்களேன்... தொகை இயல்\nஎளிதான ஆய்வுப்பொருள் என்ற தவறான கண்ணோட்டத்தில் நவீன இலக்கிய வகைமை களான நாவல், சிறுகதை, கவிதை, இதழியல் ஆகியனவும் நாட்டார் வழக்காறுகளும் இன்று தமிழியல் ஆய்வில் செல்வாக்கு பெற்று விட்டன.\nஇப்போக்கிலிருந்து விலகி நின்று, செவ்விலக்கியங்களை மையமாகக் கொண்டு, அவ்வப்போது தரமான ஆய்வுகளும் வெளிவருகின்றன. இவ் வரிசையில் பாண்டுரங்கனின் இந்நூல் இடம் பெறுகிறது.\nபல்வேறு ஆய்விதழ்களில் வெளியான எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பாக, இந்நூல் அமைந்துள்ளது. அவற்றுள் முதல் இரண்டு கட்டுரைகளைத் தவிர, ஏனைய கட்டுரைகள் எட்டுத்தொகை நூல்களை மையமாகக் கொண்ட ஆய்வாக அமைந்துள்ளன.\nஎட்டுத்தொகை என்ற பெயருக்கு ஏற்ப எட்டு நூல்களின் தொகுப்பாக, சங்க இலக்கியம் அமைந் துள்ளமை அனைவரும் அறிந்த செய்திதான். எட்டுத் தொகை நூல்களைக் கற்போரும், ஆய்வு செய்வோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஓர் அடிப்படையான செய்தியை இந்நூலாசிரியர் ஆங்காங்கே நினை வூட்டிச் செல்கிறார் (பக்: 36,49,70). அவற்றுள் பின்வரும் பகுதியை மேற்கோளாகக் காட்டுவது பயனுடையதாக இருக்கும்.\nஇன்று நமக்குக் கிடைத்துள்ள சங்கப் பாடல்கள் அனைத்தும் ஒரு காலத்தில் பாடப்பட்டவை அல்ல; அப்பாடல்கள் ஓர் ஊரினர் அல்லது ஒரு நாட்டினரால் பாடப் பட்டவை அல்ல. தமிழ்நாட்டின் பல இடங் களில் வாழ்ந்த புலவர்கள், பல்வேறு தொழில் களில் ஈடுபட்டிருந்த புலவர்கள் சங்கப் பாடல் களைப் பாடியுள்ளனர். இவர்களுள் சிலர் அரசர்களாக ஆட்சி செலுத்தியுள்ளனர். இப் பாடல்கள் எல்லாம் பாடப்பட்ட காலத்தி லேயே தொகுக்கப்படவில்லை; பாடப்பட்ட காலத்திற்கும் அவை தொகைநூல்களாகத் தொகுக்கப்பட்ட காலத்திற்கும் இடையில் பெரிய கால இடைவெளி இருந்திருத்தல் வேண்டும் (பக்:36).\nதமிழில் தொகை நூல்கள் குறித்த நான்கு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் இடம்பெற்றுள்ள செய்திகளை, ‘பாடப் பட்ட காலம்’, ‘தொகுக்கப்பட்ட காலம்’, ‘தொகுப்பு நெறி’ என்ற தலைப்புகளில் அறிமுகம் செய்து கொள்ளலாம்.\nகி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முடிய உள்ள காலமே சங்ககாலம். சங்ககாலத்திற்கு முற்பட்டவரே தொல்காப்பியர். கி.மு.ஆறாம் நூற்றாண்டிலிருந்தே தமிழிலக்கியம் வளரத் தொடங்கியுள்ளது. பழங்குடிச் சமூக அமைப்பி லிருந்து விலகி வந்து அரசுகள் உருவாகிக் கொண் டிருந்த மாறுதல் நிகழும் காலமாக (Transitional Period) சங்ககாலம் இருந்தது.\nசங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, சில பாடல்கள் அரசுகள் உருவாகாத காலத்தில் பாடப்பட்டவை என்பது புலனாகிறது. பெருங் கற்படைப் பண்பாடு (Megalithic Culture), முதுமக்கள் தாழி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்வு, பிராமிக் கல்வெட்டுகள் ஆகிய தொல்லியல் சான்றுகள்\nசங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றுடன் ஒத்துப் போகின்றன. பதுக்கை, முதுமக்கள் தாழி குறித்த சங்கப் பாடல்கள் அரசுகள் உருவாகாத காலத்தில் பாடப்பட்டவை.\nகளவு வாழ்க்கை, தழை ஆடையைக் கையுறை யாகத் தலைவியிடம் தலைவன் கொடுத்தல், வெறி யாடல் என்பன சங்க இலக்கியச் செய்திகளை மானுட வியல் அணுகுமுறையில் ஆராய்ந்தால் இனக்குழு வாழ்க்கையின் எச்சங்களையே இப்பாடல்கள் பதிவு செய்துள்ளதை உணர முடியும்.\nஇனக்குழுக்களை வென்று குறுநில மன்னர்கள் ஆளத் தொடங்கினர். இவர்களையடுத்து, சேர, சோழ, பாண்டிய மரபினர் உருவாகினர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே மூவேந்தர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் நிலைபெற்று விட்டதை அசோகனின் பாறைக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. இச் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இனக் குழு வாழ்வின் எச்சங்களும், அரசு உருவாக்கமும் கொண்ட ஒரு சமூக அமைப்பில்தான் எட்டுத்தொகை நூல்கள் உருவாயின என்று கூற முடியும். சந்தை வேண்டி இனக்குழுக்கள் தமக்குள் போரிட்டதாக விவாதத்துக்குரிய ஒரு கருத்தையும் ஆசிரியர் எழுதி யுள்ளார் (பக். 182).\nமூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்தமை குறித்த செய்தி கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட ‘இறையனார் களவியல் உரை’யில் இடம்பெற���றுள்ளது. எட்டுத்தொகை நூல்களைக் கடைச் சங்க நூல்கள் என்று இந்நூல் குறிப்பிடுகிறது. ஆனால் பத்துப்பாட்டை சங்க நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை. சங்க நூல் என்று எட்டுத்தொகை நூல்களைக் குறிப்பிடும் போக்கு ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகிவிட்டதை இதனால் அறிய முடிகிறது.\nஎட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் இறையனார் களவியல் உரை இந்நூல்கள் தொகுக்கப் பட்ட காலத்தைக் குறிப்பிடவில்லை. கே.என். சிவராசப் பிள்ளையின் கருத்துப்படி ஐந்து தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனாரே தொகுப்புப் பணியைச் செய்திருக்க வேண்டும்.\n‘முதல் பாண்டியப் பேரரசை நிறுவிய கடுங் கோன் மரபினர் உருவாக்கிய மதுரைத் தமிழ்ச் சங்கமே தொகுப்புப் பணியில் ஈடுபட்டது’ (பக்: 117). இவர்களைத் தொடர்ந்து சேர மரபினர் இப் பணியில் ஈடுபட்டு, ‘பதிற்றுப் பத்து’, ‘ஐங்குறு நூறு’ என்ற இரு நூல்களைத் தொகுத்தனர்.\nஇறையனார் களவியல் உரை எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் அனைத்தையும் குறிப்பிடு வதன் அடிப்படையில் பார்த்தால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கு முன்பே தொகுக்கும் பணி முற்றுப் பெற்றிருக்க வேண்டும்.\nதனித்தனியாகச் சிதறிக் கிடந்த பாடல்களைத் தொகுக்கும்போது அகம், புறம் என்று திணையடிப் படையில் மட்டுமின்றி, எண்ணிக்கை அடிப்படை யிலும் தொகுத்துள்ளனர். இது குறித்து இறை யனார் களவியல் உரை,\nஅவர்களால் (449 புலவர்கள்) பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், என்று இத் தொடக்கத்தன.\nஎன்று குறிப்பிடுகிறது (பக்.50). நானூறு என்ற எண்ணிக்கையில் நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய நான்கு நூல்களும், ஐந்நூறு எண்ணிக்கையில் ஐங்குறுநூறும், நூறு எண்ணிக்கையில் பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது எண்ணிக்கையில் கலித்தொகையும், எழுபது எண்ணிக் கையில் பரிபாடலும் தொகுக்கப்பட்டுள்ளன.\nகுறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியன அடியளவில் தொகுக்கப்பட்டுள்ளன. குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகளையும், நற்றிணை ஒன்பது முதல் பன்னிரண்டு அடிகளையும், அகநானூறு பதின்மூன்று முதல் முப்பத்தொன்று அடிகளையும் க��ண்டுள்ளன. இம்மூன்று நூல்களும் உள்ளடக் கத்தில் தம்முள் வேறுபாடு கொண்டவையல்ல.\nஇவை ஒருவரால் அல்லது ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட ஒரு குழுவால் எழுதப்பட்டிருக்க வேண்டும் (பக். 50). இத்தொகுப்புகள் தொகுக்கப் பட்ட பின்னரே திணை, துறையைப் பற்றிய பதிவுகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் (பக்:50, 52). அக நானூற்றுத் தொகுப்பில் திணைப் பகுப்பு தெளிவாக உள்ளது. இது குறித்து,\nஒற்றைப் படை எண்களாக வரும் பாடல்கள் பாலை; 2,8..... என முடியும் பாடல்கள் குறிஞ்சி; 4, 14..... என முடியும் பாடல்கள் முல்லை; 6, 16..... என முடியும் பாடல்கள் மருதம்; 10,20..... எனப் பூச்சியங்களில் முடியும் பாடல்கள் நெய்தல். இப்பகுப்புப் பற்றி மூலச்சுவடிகளில் மூன்று வெண்பாக்கள் உள்ளன. மேலும், இந்நூல் களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. மூலச்சுவடிகளில் உள்ள இப்பகுப்புகளை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் ஆளுகின்றார். எனவே இம்முத்திறப் பகுப்பு நச்சினார்க் கினியருக்கும் முற்பட்டது என்பதில் ஐய மில்லை (பக்: 53).\nஎன்று குறிப்பிட்டு விட்டு ‘மூலம்’ (பனுவல்), ‘திணைப் பகுப்பு’, ‘நூல் உட்பிரிவு’ என மூன்று படிநிலை வளர்ச்சிகளை அகநானூற்றுத் தொகுப்புக் காட்டு கிறது.\nஇதன் அடுத்த கட்டமாகத் திட்டமிட்ட வகையில் திணை வகுக்கப்பட்டு, தொகுக்கப்பட்ட நூல்களாக ஐங்குறுநூறும், கலித்தொகையும் அமைகின்றன.\nஐந்திணைகள் ஒவ்வொன்றுக்கும் குறைந்த அடி வரையறையுடன் கூடிய, நூறு, நூறு பாடல்கள் தனித்தனியாகத் தொகுக்கப்பட்ட நூலாக ஐங்குறுநூறு அமைந்துள்ளது. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை எனத் திணை வரிசை மாறியமைந்துள்ளது.\nஐங்குறுநூற்றைப் போன்றே திணையடிப் படையில் திட்டமிட்டுத் தொகுக்கப்பட்ட நூலாகக் கலித்தொகை அமைகிறது. ஆனால், ஐங்குறுநூறில் ஒவ்வொரு திணைக்கும் நூறு பாக்கள் இடம் பெற்றுள்ளது போன்று ஒரே சீரான எண்ணிக்கை அளவில் பாடல்கள் தொகுக்கப்படவில்லை. இது வரை நாம் பார்த்த தொகைநூல்கள் அகவற்பாவால் ஆனவை. ஆனால் கலித்தொகை கலிப்பாவால் ஆனது. வைதீகச் சமயத்தின் தாக்கம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றுவிட்டதைக் கலித்தொகைப் பாடல்கள் சில உணர்த்துகின்றன.\nபதிற்றுப்பத்து, திட்டமிட்ட தொகுப்பாக அமைகிறது. சேர மன்னர்களைப் ப��்றிய நூறு பாடல்களின் தொகுப்பாக இது தொகுக்கப்பட்டு உள்ளது. இந்நூல் குறித்து,\nஒன்றோடொன்று தொடர்பில்லாத- பொருள் இயைபில்லாத - தனிநிலைச் செய்யுட்களைத் தொகுத்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று, ஒரே மரபைச் சேர்ந்த பத்து அரசர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பான பதிற்றுப் பத்து பழைய உரையுடன் கிடைத்துள்ளது. இன்றுள்ள நிலையில் அது முழுமையாகக் கிடைக் காமல், குறைநூலாக உள்ளது. அதன் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்க வில்லை என்பர் இந்நூலை முதன்முதலில் பதிப்பித்த உ.வே. சாமிநாதையர் (பதிற்றுப் பத்து, 1957: ஏஐ). ஆனால், ஜான் மார் இந் நூலின் பத்துகளின் இறுதியில் இடம் பெற்றுள்ள பதிகங்களை ஆராய்ந்து, இவ்வாறு காணாமல் போன பத்துகள் முதல் பத்தும் இப்போது ஏழாம் பத்து எனக் குறிக்கப்பெறும் பத்திற்கு முந்திய பத்தும் ஆகும் என்பர். அதாவது, இன்று 9-ஆம் பத்தாகக் கொள்வதை நூலின் இறுதியான 10-ஆம் பத்தாகக் கொள்ள வேண்டும் என்பது அவர் கொள்கை. அவருடைய கொள்கையின்படி இன்றுள்ள பதிற்றுப் பத்து, 2,3,4,5,6,8,9,10, பத்துகளைக் கொண்டதாகும். அதாவது, முதல் பத்தும், ஏழாம் பத்தும் கிடைக்கவில்லை (The Eight Anthologies, 1985:273-274). காணாமல்போன முதல் பத்து உதியன் சேரலாதனுக்குரியது. பத்தாம் பத்து சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குரியது என்பர் ச. வையாபுரி பிள்ளை (இலக்கியச் சிந்தனைகள், தொகுதி, ஐ -1989:190). ஆனால், ஜான்மார் அவர்களின் கருத்தின்படி, காணாமல்போன ஏழாம் பத்து அந்துவன் சேரல் பற்றியதாகும். பத்தாம் பத்து இளஞ் சேரல் இரும்பொறை பற்றியதாகும்.\nஎன்கிறார் ஆசிரியர் (பக்: 58-59). புறத்திணையில் அமைந்த தனிநிலைப் பாடல்களின் தொகுப்பான புறநானூறு அடி வரையறையோ, திணை வரை யறையோ இன்றித் தொகுக்கப்பட்டுள்ளது. ஜான் மார் என்பவரது கருத்துப்படி, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில்தான் புறநானூற்றின் தொகுப்புப் பணி நிறைவு பெற்றிருக்க வேண்டும். (ஆனால் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையனார் களவியல் உரையில் ‘புறநானூறு’ குறிப்பிடப்பட்டுள்ளது.)\nஓரளவுக்குத் திட்டவட்டமான தொகுப்புமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகக் கருதும் ஜான்மார் சேர, சோழ, பாண்டியர் என்று மூவேந்தர் வைப்புமுறை மாறி சேர, பாண்டிய, சோழர் என்று பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.\nஎட்டுத்தொகை நூல்களில் இசைத் தமி��் நூலாகப் பரிபாடல் அமைந்துள்ளது. எழுபது பரிபாடல் என்று இறையனார் களவியல் உரை குறிப்பிட, இருபத்துநான்கு முழுப்பாடல்களும், ஒன்பது பாடல் உறுப்புகளுமே இன்று கிட்டி யுள்ளன. சேர மரபினர் அல்லது பல்லவ மன்னரின் ஆதரவோடு இத்தொகுப்பு தொகுக்கப்பட்டிருக்கலாம்.\nசங்க இலக்கியப் புலவர்கள், அரசர்கள், வள்ளல்கள் பட்டியல்களில் சோழ நாட்டினர் மிகுதியாக இருந்தும், சோழர்கள் தொகுப்புப் பணியை மேற்கொள்ளாமை நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. அதற்குரிய காரணங்கள் இனிமேல் ஆராயப்படுதல் வேண்டும்.\nஎன்று எதிர்கால ஆய்விற்கான ஒரு கருத்தை முன் வைக்கிறார் (பக்:66).\nதிணைக்கோட்பாடு என்ற தலைப்பில் திணைப் பகுப்பு தொடர்பான சில அடிப்படைச் செய்தி களைக் கூறும் ஆசிரியர் திணைமயக்கம் குறித்து,\n“பாடல்கள் திணைமயக்கமாக அமையும் போது, உரையாசிரியர்கள் பெரும்பாலும் அப்பாடல்களுக்கு முதற்பொருள் அடிப் படைகளில்தான் திணை வகுத்துச் சென்றுள்ளனர்.” (பக்:80)\nஎன்று கூறுகிறார். இதனையடுத்து முடிவுரையாக,\nகுறிஞ்சித்திணை எனப் பதிப்பிக்கப்பட்ட பாடல்களில் திணை மயக்கம் மிகுதியாக உள்ளது. 39 குறிஞ்சித்திணைப் பாக்களில் (குறுந்தொகை 17, நற்றிணை 17, அகநானூறு 5) நெய்தல் பின்புலத்தில் குறிஞ்சியின் உரிப் பொருள் மயங்கியுள்ளது; முல்லையும் குறிஞ்சியும் மயங்கிக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் திணைக்கோட்பாடு எவ்வளவு சிக்கலானது என்பதனை எமக்குத் தெளிவுபடுத்துகின்றன. குறிஞ்சித் திணைப் பாக்கள் முழுவதையும் ஒன்றாகத் தொகுத்து நுண்ணாய்வு செய்யும்போது, மேலும் பல விளக்கங்கள் கிடைக்கலாம்.\nஎன்று குறிப்பிடுகிறார் (பக்: 81,82). இவ்வியலின் தொடர்ச்சி போன்று ‘நெய்தல் திணை’ என்ற கட்டுரை அமைந்துள்ளது.\nதொல்காப்பிய அகத்திணை இயலின் எட்டாவது நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையின் அடிப்படையில், “தலைவியின் பிரிவுத்துன்பம் கட்டுக்குள் அடங்காமல் வெளிப்படுவது நெய்தல் திணையின் உரிப்பொருள் என்பது தெளிவு” (பக்:87) என்று கூறிவிட்டு, முல்லைத் திணையில் இடம்பெறும் பிரிவுக்கும் நெய்தல் திணை இடம் பெறும் பிரிவுக்கும் இடையிலான வேறுபாட்டை,\nஆற்றியிருக்கும் நிலைமாறித் தலைவியின் ஆற்றாமை வரம்புகளைக் கடந்து வெளிப் படுமாயின், அது நெய்தல்திணை ஆகி விடுகின்றது. கண்ணீரைத் தாங்கி ���ிறுத்துதல் முல்லைத்திணை என்றால், கண்ணீர் விடுதல் நெய்தல் திணை ஆகும். தலைவியின் இரு வேறு நிலைகளை அவ்வத்திணைகளின் பின்புலம் விளக்கி விடுகின்றது. முல்லைத் திணையின் பின்புலம் தலைவிக்கு நம்பிக் கையைத் தோற்றுவிக்கின்றது. ஆனால், நெய்தல்திணையின் பின்புலம் தலைவிக்கு நம்பிக்கையின்மையைத் தோற்றுவிக்கின்றது.\nஎன்கிறார் (பக்:88). குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று நூல்களிலும் 213 பாடல்கள் நெய்தல் திணைக்கு உரியனவாகப் பதிப்பிக்கப் பட்டுள்ளன என்றும், இது விழுக்காற்று அடிப் படையில் 17.75 ஆகுமென்றும் கூறிவிட்டு, சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பிரிவு குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்:\nமுல்லைத்திணையும் ஒரு வகையில் பிரிவு தான்; ஆனால், அத்திணையில், நம்பிக்கை இழையோடுகின்றது.\nதலைவன், தலைவி ஆகிய இருவர் கூற்று களும் முல்லைத் திணையில் இடம்பெறு கின்றன.\nபாலைத்திணையிலும் தலைவன், தலைவி ஆகிய இருவர் கூற்றுகளும் இடம்பெறு கின்றன.\nதலைவனைப் பிரிவதால் தலைவிக்கு ஏற்படும் மனத் துயரம், பிரிந்து செல்லும் தலைவனின் மனநிலை போன்றவை பாலைத் திணைப் பாடல்களில் இடம் பெறுகின்றன. நெய்தல் திணை ஒன்றில்தான் தலைவியின் துயரம் மட்டுமே புனைந்துரைக்கப்படு கின்றது. (பக்: 89,90)\nஅடுத்து, திணைப்பகுப்பில், உரிப்பொருளை விட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இறுதியாகப் பின்வரும் மூன்று கருத்துகளை முடிவுரையாக முன்வைக்கிறார்.\nபெரும்பான்மையான பாடல்கள் நெய்தல் நில வருணனை காரணமாகவே நெய்தல் திணையில் வைக்கப்பட்டுள்ளன (பக்: 101).\nநெய்தல் திணையில் நெய்தல் நிலத்திற்குரிய இரங்கல் உரிப்பொருளைக் கொண்டுள்ள பாடல்கள் மிகச் சிலவாகவே உள்ளன. இரங்கு வதாகப் பாடும்போதும், தலைவியின் இரங்கலே சிறப்பிக்கப்படுகின்றது (மேலது).\nநெய்தல் நிலம் கடலோடு தொடர்புடைய தாயினும், மீன் வேட்டம் பற்றிப் பேசப்படு கிறதே ஒழிய, அயல்நாட்டுக் கடல் பயணம் பற்றி நெய்தல் திணைப்பாக்களில் பேசப்பட வில்லை என்பது எண்ணத்தக்கது (மேலது).\nபல்வேறு ஆய்விதழ்களில் எழுதப்பட்ட கட்டுரை களின் தொகுப்பு என்பதால் கூறியது கூறல் ஆங் காங்கே இடம்பெறுகிறது. கட்டுரைகளின் தொகுப் பாக ஒரு நூல் அமையும்போது, இது தவிர்க்க முடி யாத ஒன்றுதான். கட்டுரைகளின் அடிக்குறிப்புகள் ஆசிரியரின் கடும் உழைப்பையும், அறிவுத் தேட்டத் தையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. விவாதத்துக் குரிய கருத்துகள் இந்நூலில் இடம்பெற்று மேலும் ஆய்வுக்கான களங்களை உருவாக்கியுள்ளன. இந் நூலின் முன்னுரையில் (பக்: ஓஓ) இடம்பெற்றுள்ள,\n1920-40 களுக்குப் பின்னர் அதாவது ரா. இராகவைய்யங்கார், மு.இராகவைய்யங் கார் போன்றவர்களின் காலத்தின் பின்னர் சங்க இலக்கியங்கள் பற்றிய இத்தகைய ஆய்வுகள் மிகக் குறைவாகவே இருந்தன. இதற்குப் பிரதான காரணம் திராவிடக் கருத்துநிலை வளர்ச்சியின் பின்னர் சங்க காலம் ஆரியக் கலப்பற்ற தமிழ்ப் பண் பாட்டின் பொற்காலமாகக் கருதப்பட்ட மையாகும்.\nஆனால், சங்க காலம் பற்றிய காய்தல், உவத்தலற்ற, ஆழமான, அகலமான, புலமைக் கட்டுப்பாடுடைய ஆராய்ச்சிகள் இப் பொழுது மீள வரத்தொடங்கிவிட்டன என்பதனை எடுத்துணர்த்தும் ஒரு சிறு குறியீடாகவே இத்தொகுதியினைப் பார்க் கின்றேன். நண்பர் பாண்டுரங்கன் கூறுவன எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியா தெனினும் அவற்றை அவர் எடுத்துக்கூறும் புலமை நேர்மை, ஆய்வுக் கடப்பாட்டுணர்வு, ஆழமான தேடல் ஆகியவற்றுக்காக அவரை வாழ்த்துதல் நமது கடன்.\nநண்பர் பாண்டுரங்கன், என் போன்றவர்கள் இளைப்பாறும் நிலைக்கு வந்துவிட்டோம். இவற்றுக்கான விடைகளை நமது மாண வர்கள் தரவேண்டும்; தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.\nஎன்ற கா. சிவத்தம்பியின் கூற்று இந்நூலின் சிறப்பையும், எதிர்கால ஆய்வின் தேவையையும் சுட்டிக் காட்டுகிறது.\nதொகை இயல் (அ.பாண்டுரங்கன்) (வெளியீடு : தமிழரங்கம், புதுச்சேரி)\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2012\nகாலனியம் கட்டமைத்த தேசத்தை எதிர்கொள்ளல்\nஐரோப்பியர் ‘இந்தியா’என்று இன்று அழைக்கப் படும் நிலப்பகுதியில் ஊருடுவியதன் மூலம், இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விரிவான உரையாடல் நிகழ்த்தும் தேவை நம்முன் உள்ளது. காலனியம் எனும் சமூகப் பொருளாதார மற்றும் பண்பாட்டு நிகழ்வு குறித்துப் பல்பரிமாணப் பதிவுகளை இன்றைய கண்ணோட்டத்தில் செய்ய வேண்டும்.அவ்வகையான செயல்பாட்டிற்கு ஆவணமாக காதரீன் மேயோவின் ‘இந்திய மாதா’நூல் தொடர்பான உரையாடல்கள் உதவும். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளவற்றை நமது புரிதலுக்காகப் பின்வரும் வகையில் தொகுத்துக்கொள்வோம்.\n- 1858 ��ல் இந்தியா என்ற முழுநிலப் பகுதியும் பிரித்தானிய மகாராணியின் ஆட்சியதிகாரத்துக்கு வந்தது. 1799இல் திப்பு சுல்தானின் வீழ்ச்சி யோடு பிரித்தானியர் அதிகாரத்தைக் கைப் பற்றினாலும் அதனை முழுமையான விதத்தில் அதிகாரத்துக்கு உட்படுத்துவதற்கு சுமார் அறுபது ஆண்டுகள் அவர்களுக்குத் தேவைப் பட்டன. அடுத்த எழுபது ஆண்டுகளில், அவர் களது ஆட்சி அதிகாரத்துக்கு எதிரான குரல் உருப்பெற்று வளர்ந்து விட்டது. 1920களில், பிரித்தானியருக்கு எதிரான உள்ளூர் மக்களின் குரலைப் பண்பாட்டு நோக்கில் ஒடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கென பிரித் தானியர் வேண்டுகோளின் அடிப்படையில், அமெரிக்கப் பெண்மணியான மேயோ எழுதியதுதான் ‘இந்திய மாதா’.\n- மேயோவின் நூலில் செய்யப்பட்டிருக்கும் விமர்சனங்களை, ஓர் உளவாளியின் குரல் என்று கருதினாலும் அதில் உண்மை நிகழ்ச்சிகள் இல்லாமல் இல்லை எனும் கருத்தை முதன்மைப் படுத்தியது கோவை அய்யாமுத்து அவர்களின் ‘மேயோ கூற்று மெய்யா-பொய்யா\n- “பிரித்தானியரின் கேவலமான உளவாளி மேயோ. அவரது நாவில் பொய்களே தொண்ணூறு சதவீதம். சீர்திருத்தம் செய்ய வேண்டியது பத்து சதவீதச் செய்திகள் இடம்பெற்றுள்ளன” என்று வ.ரா. கூறுகிறார். மேயோவின் பொய்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தியச் சமூகம் குறித்த மிக விரிவான உரையாடலை முன்வைக்கும் நூல்தான் வ.ராமசாமியான வ.ரா அவர்களின் ‘மாயா மேயோ’ எனும் நூல்.\n- மேயோவின் நூலில் எந்தவித அடிப்படையான புரிதலும் இல்லை. வெறும் புளுகு மூட்டை என்னும் கண்ணோட்டத்தில் மேயோவின் நாடான அமெரிக்காவில் நிகழும் பல்வேறு தகவல்களைத் தொகுத்து அவற்றோடு ஒப்பிடும் போது இந்தியாவின் நிகழ்வுகள் ஒன்றும் பெரிதில்லை என்று கருதும் சி.எஸ். ரங்கய்யர் அவர்களின் ‘இந்திய பிதா’ எனும் நூல்.\n- எவ்விதம் பிரித்தானிய அரசு மேயோவை அவர்களது ஆட்சிச் சிறப்பு குறித்து நூல் எழுதச் செய்தார்களோ அதைப்போல் இந்திய அரசு, மேயோ நூல் எழுதப்பட்டதன் பின்னுள்ள பரிமாணங்கள் குறித்த விரிவான ஆய்வே மனோரஞ்சன் ஜா அவர்களின் ‘காதரீன் மேயோவும் இந்தியாவும்’ எனும் நூல்.\nவெவ்வேறு கண்ணோட்டங்களில் எழுதப்பட்ட மேற்குறித்த ஐந்து நூல்களையும் தொகுத்து, இவ் வகையான தொகுப்பாக இன்று எதற்காக வெளியிட வேண்டும் இத்தொகுப்பு மூலம் வாசகன் எதைப் பெறப் போகி���ான் இத்தொகுப்பு மூலம் வாசகன் எதைப் பெறப் போகிறான் இன்றைய சமூகச் சூழலின் புரிதலுக்கு இத்தொகுப்பு எந்த வகையில் உதவும் இன்றைய சமூகச் சூழலின் புரிதலுக்கு இத்தொகுப்பு எந்த வகையில் உதவும் எனப் பல்வேறு கேள்விகளை முன்வைக்க முடியும். இக்கேள்விகளுக்கான உரையாடலாக இப்பகுதியைப் பயன்படுத்திக்கொள்வோம். இக்கேள்விகளைப் பின்காணும் கருத்தியல் சார்ந்த அணுகு முறைகளோடு இணைத்துக் காணும் தேவையுள்ளது.\n- ‘இந்தியா’ எனும் பல்மொழி, பல் இனம், பல் சூழல் உள்ள நாடு யாந்திரீகமாகக் கட்டப் பட்ட வரலாற்றைப் புரிந்துகொள்வதன் அவசியம்,\n- ‘நாடு’ எனும் கருத்துநிலை, எந்தெந்த நிலையில் பல்வேறு வகைப்பட்ட சிந்தனை யாளர்களாலும் புரிந்துகொள்ளப்படுகிறது,\n- தேசியம் எனும் கருத்துநிலையைக் காலனியம் எவ்வாறு உருவாக்கியது,\n- மொழி, மதம் ஆகியவற்றின் செயல் பாடுகள் எவ்வகையில் அமைகின்றன-\nஆகிய பிற குறித்து இன்றைய பின்புலத்தில் புரிந்து கொள்வதற்கு இத்தொகுப்பு உதவும்.\nகாலனியத்தின் மூலம் ‘நாடு’ எனும் கருத்தாக்கம் கட்டப்பட்டதன் மூலமாக, மேற்குறித்த மொழி, இனம், தேசியம் ஆகிய பிற கருத்தாக்கங்கள் புதிய தன்மையில் உருப்பெறுகின்றன. இவ்விதம் உருப்பெற்றவற்றை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்த வெவ்வேறான கண்ணோட்டங்கள் உருவாகின்றன. தமிழ்ச்சூழலில் உருவான கண்ணோட்டங்களையும் ‘இந்திய அரசு’ என்பது சுதேசிகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தபின், மேற்குறித்த தன்மையை எப்படி எதிர்கொண்டது என்பது குறித்துப் பதிவானவற்றையும் இத்தொகுப்பில் ஒட்டுமொத்தமாக வாசிக்கமுடிகிறது. இந்த வாசிப்பில் முதன்மையாக முன்னெழும் மனப் பதிவுகளாகப் பின் கண்டவற்றைக் கூறலாம்.\n- பெரியார் எனும் ஈ.வெ.ராமசாமி மேற்குறித்த கருத்துநிலைகளை எவ்வகையில் எதிர்கொண்டார் என்பது தொடர்பான உரையாடல்,\n- காந்திய ஈடுபாடு உடைய, ‘தேசம்’ என்பதைப் புனிதமாகக் கருதிய வ.ரா. எதிர்கொண்ட முறைமை மற்றும் இக் கருத்துநிலை சார்ந்த பிறர் எதிர்கொண்ட நிலை,\n- தேசத்தைக் கட்டிக்காக்க பின்னால் உருவான இந்திய அரசு எதிர்கொண்ட பாங்கு...\nமேற்குறித்த தன்மைகளை விரிவாகப் புரிந்து கொள்ள இத்தொகுப்பு அடிப்படை ஆவணமாகிறது. காலனியச் செயல்பாட்டை அதன்கீழ் இருந்து அனுபவித்தவர்கள் மேற்கொண்ட கண்ணோட்டங் களை இன்றைய பொருத��தப்பாட்டுடன் அணுகும் கடமை நம் முன் உள்ளது.\nபெரியார் மேயோவின் நூல் குறித்த உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்த காலச்சூழலில் தேசியம் என்பது குறித்து எழுதிய விளக்கம் பின்வரும் வகையில் அமைகிறது.\n“சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால், இந்தியாவில் தேசியம் என்கிற பதமே தப்பான வழியில், மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத்தார், அதாவது - மேல்சாதியார் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தரகர் களாக இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியாலும் பாமர மக்களை ஏமாற்றிச் சிலர் பிழைக்க உபயோகிக்கப்பட்டு வரும் ஒரு பாதகமும் அபாயமுமுள்ள அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்.\nஇன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தேசியமென்பது மக்களின் ‘தத்துவார்த்த இயல்’ என்பதில் கடவுள், மோட்சம், நரகம் என்கிற வார்த்தைகள் எப்படி அர்த்தமற்றவையாகவும் புரோகிதக் கூட்டமும், பாதிரிக் கூட்டமும், முல்லாக் கூட்டமும், சந்நியாசிக் கூட்டமும் பாமரமக்களிடம் சமயத்திற்கு ஒரு அர்த்தமும் சந்தர்ப்பத்துக்கு ஒரு கருத்துமாய்ச் சொல்லி, அவர்களை ஏமாற்றிப் பிடுங்கித்தின்று, சோம்பேறிகளாய் இருந்து-நோகாமல் வாழ்வதற்காக செய்துகொண்டிருக்க உபயோகப்பட்டு வருகின்றன என்று அறிய முடிகிறது. அதேபோல் தேசிய மென்னும் பதமும் சரீரப்பிரயாசை ஒரு சிறிதும் எடுத்துக்கொள்ள இஷ்டமில்லாமல் நெஞ்சத்தில் அழுக்குப்-படாமல், பாமரர்களை ஏமாற்றிப் பிழைக்கவும் கீர்த்திபெறவும் கண்டுபிடிக்கப்பட்ட சாதனமாகும்.\nஇந்தப் பதமானது, ஆங்கில பாஷையில் நேஷனல் என்கின்ற பதத்தின் மொழிபெயர்ப்பு என்கின்ற முறையில் ஏற்பட்டதே தவிர, மற்றபடி அது இந்தியாவின் வேறு எந்த பாஷையிலும் எந்தச் சமூகத்திலும் இருந்ததல்ல வென்றே சொல்லலாம்.” (குடி அரசு. 19.5.1929)\n‘தேசம்’ குறித்து மிகுந்து அக்கறை கொண்டு, காலனியச் செயல்பாடுகளை எதிர்கொண்ட பலரும் பெரியார் வரையறை செய்துள்ள தேசம் பற்றிய புரிதல் உடையவர்கள் என்று கருத முடியவில்லை. இந்தப் பின்புலத்தில் பெரியார் வழியில் செயல்பட்ட தோழர் கோவை. அய்யாமுத்து அவர்கள் காதரீன் மேயோவின் இந்தியா என்ற தேசத்தின் மீதான விமரிசனங��களை எதிர் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். உளவாளி சொல்லும் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் அல்லது நேர்மையாக மதிப்பீடு செய்யும் பக்குவம் பெரியாரின் வழிப்பட்ட ‘தேசம்’ குறித்த கருத்தியல் சார்ந்தவர்களுக்கு உருவானது. இந்தப் புரிதல் இன்றும் கூட வெகுசன வெளியில் இருக்கிறதா என்பது அய்யமே. பின்நவீனத்துவக் கருத்துநிலைகள், தமிழ்ச் சூழலில் முதன்மைப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டபோது, பெரியார் நிலைப்பாடுகள் அக்கருத்துநிலையை வலுப்படுத்த உதவின என்பதை இங்கு இணைத்துப் பார்க்கலாம். எனவே மேயோவின் குற்றச்சாட்டுகளை பெரியார் வழிநின்று தமிழ்ச்சமூகம் எதிர்கொண்டது. இவ்வகையான அணுகுமுறை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் நிகழவில்லை என்பதைப் பதிவு செய்வது அவசியம். இன்றைய இந்தியச் சமூகநிலை குறித்து ஆய்வாளர் ராஜ்கவுதமனின் பதிவைப் பெரியாரின் அன்றைய கருத்துநிலையோடு இணைத்துப் பார்க்கலாம். இன்றும் இந்தியாவிற்குப் பெரியார் பெரிதும் தேவைப் படுகிறார். அந்த வகையில் இத்தொகுப்பு மீண்டும் அச்சாவது சரியே. இந்தச் சமூகம் குறித்த ராஜ்கவுதமன் பதிவு வருமாறு:\n“இந்தியர் ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் சாதியம்” என்னும் இனக்குழு மனப்பாங்கு பிராமணியத்தால் கட்டப்பட்டுள்ளது. இதற்கு வைதீக வருணாசிரம தருமம் அடிச்சட்டம். வேளாண்மைக் கலாசார உறவுகளோடும், பொருளாதார உற்பத்திமுறையோடும், உற்பத்தி முறையின் சக்திகளான வர்க்கங்களோடும் ஊடும் பாவுமாய்ப் பின்னப்பட்டது இந்தியச் சாதியம். இதன் பிறப்பிடங்களாகக் குலம், குடி, இனம், குருதி உறவு, வருணம் எனப் பலவாக இருந் தாலும் இதனைக் கண்காணித்துப் பராமரித்துப் பலன் அடைந்து வந்தது பிராமணியமே. இந்தியச் சாதியத்தை ஆராய்ந்த பெரும்பாலானவர்கள் இப்பிளவை முன்வைத்துள்ளனர். சாதி வரிசையில் தலைமையிடம் பிடித்த சிறுபான்மை பிராமணர் களுக்கு மேல் மானிடர் யாருமில்லை. கோவில் களும் கடவுள்களும் மட்டுமே இருந்தன; இருக் கின்றன. அவற்றுக்குக் கீழே அவற்றிற்குத் தானம் வழங்கிப் பராமரித்த வேளாளர்களுக்கு நிலங்கள் மீது காலனியாட்சி உரிமை இருந்தது. இவையும் அரசர்களால் வழங்கப்பட்டவை. வேளாளர்க்கும் கீழே வணிகர், விவசாய உழைப்பாளிகள், குத்தகைதாரர்கள், வீரர்கள், கூலிப்படைகள், கைவினைச் சாதிகள், தீண்டா தார் எனப்பட்ட தலித் சாதியினர் இயங்கினார்கள். நிலவுடைமை, விளைச்சல், நீர், உழைப்பு ஆகியவற்றுக்கு உடைமைகொள்ள உரிமை பெற்ற சாதிக்குழுக்களை நோக்கியே அடுத்தடுத்த சாதிகள் நகர்ந்தவண்ணம் இருந்தன என்பது இந்திய - தமிழக வரலாறு”.-(ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக மாற்றமும். முன்னுரை: 2009)\nமேற்குறித்த விவரணங்கள் சார்ந்து இந்தியா என்று பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட நிலப்பகுதியில் சாதி, மதம் ஆகியவை செயல்பட்டதன் ஒரு வடிவமே தேசமாக உருவானது. அவ்வகையான தேசம் குறித்த விரிவான விமர்சனங்களை பிரித்தானியர்களின் உளவாளி காதரீன் மேயோ முன்வைத்தார். உளவாளி முன்வைத்த காரணத்தினால் அது பொய்யாகிவிடுமா அவரின் கருத்துகளை எதார்த்தத்தோடு உரசிப்பார்க்கும் பணியைப் பெரியாரியச் சிந்தனை நமக்கு வழங்கியது. அதற்கான அரிய ஆவணமாக இந்தத் தொகுப்பு அமைந்திருக்கின்றது.\nவ.ரா. என அறியப்படும் வ.ராமசாமி குறித்து நான் முன்னர் எழுதிய பகுதி ஒன்றை அப்படியே கீழே தருகிறேன்.\n“1917 தொடங்கி தொடர்ச்சியாகத் தமிழ் நாட்டில் பத்திரிகையாளராகச் செயல் பட்டவர். சுதந்திரன், தனவைசிய ஊழியன் , தமிழ்நாடு, பாரததேவி, நவயுகம் என்ற பத்திரிகை களோடு நேரடித் தொடர்பு கொண்டவர். சுதந்திரச் சங்கு, மணிக்கொடி, காந்தி, தினமணி, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் தொடர்ச்சியாக விரிவான விவரணக் கட்டுரைத் தொடர்களை எழுதியவர்.\nபாரதியோடு சில ஆண்டுகள் வாழ்ந்தவர். காங்கிரஸ் கட்சிச் செயல்பாடுகளில் ஈடுபட்ட போது, பாரதியை வாய்க்கும் இடமெல்லாம் அறிமுகப்படுத்தியவர். ‘மகாகவி’ பாரதி என்ற பட்டத்தை நிலைநிறுத்தியவர்.\nகாந்தியாரைத் தெய்வமாக வணங்கியவர். காந்தியமே விடுதலைக்கு வழியெனப் பிரசாரம் செய்தவர். கிறித்துவப் பின்புலச் சீர்திருத்த வாதம், பிரம்ம சமாஜ சீர்திருத்தவாதம் என்ற வளர்ச்சியில் காந்திய சீர்திருத்தவாதத்தை வரித்துக் கொண்டவர். பகுத்தறிவுச் சீர்திருத்த வாதம் செயல்படத் தொடங்கிய காலத்தில், காந்திய சீர்திருத்தவாதத்தை, அதற்கு மாற்றாக முன்வைத்தவர்.” (தமிழியல் ஆய்வு: கருத்து நிலைத் தேடல் எனும் கட்டுரை நூல் தொகுப்பில் உள்ள ‘பிரசுரிக்கப்படாத ஒரு பிரதியின் எழுதப் படாத கதை’ எனும் கட்டுரை 2001: 24).\nவ.ரா. எனும் மனிதர் குறித்த மேற்குறித்த புரிதலோடு அவர் காதரீன் மேய��வை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதிய நூலை அணுகலாம். அந்த நூலில் வ.ரா.வின் பதிவு பின்வருமாறு:\n“ஹிந்து விதவைகளைப் பற்றி மேயோ கேவல மாக எழுதியிருக்கிறார் என்று ஹிந்துக்கள் ஆத்திரப்படுவதில் பிரயோசனமில்லை. மேயோ விதவைகளைப்பற்றிப் பொய் எழுதியிருக்கிறார் என்று கொண்டு ஹிந்து சீர்திருத்தக் காரர்கள் மனம் நோக வேண்டாம். ஹிந்து விதவைகளின் பண்டை இலட்சியம் எப்பொழுது அழிந்து போயிற்றோ, அதன்பின்னர் அவர்களுடைய திக்கற்ற நிலைமை மட்டும் மிகுதியாக நிற்பது அநியாயமாகும். ஹிந்து ஜனசமூகமே, தற்போது தனது கட்டுக்குலைந்து, தனது பண்டைத் தன்னடக்க இலட்சியங்களை உதறித் தள்ளிவரும் பொழுது, ஹிந்து ஆண்மக்கள் தங்கள் விதவைகளின் பரிதாப நிலையைக் கண்டும் அவர்களுடைய நிலைமையின் சீர்திருத்தத்தில் நாட்டம் கொள்ளாமலிருந்தால் மேயோ சொல்லவேண்டியதில்லை, அது எல்லோருக்கும் எளிதிலே தெரிந்துவிடும் - ஹிந்து ஜன சமூகத்தின் உயிர்ச்சத்து விரைவில் அழிந்துபோகும். ஒழுங்கற்ற முறைகளில் நபர்கள் தங்கள் விருப்பங்களைக் கட்டுப் பாடின்றிப் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டால், அந்த ஜன சமூகம் பாழ்பட்டுப் போய்விடும். பண்டை நாகரிகங்கள் உலகத்தில் அழிந்து போன வகை இதுதான். ஹிந்துமக்கள் விழித்துக் கொள்ளுவார்களாக” (இந்நூல். ப. 487)\nமேயோவின் அனைத்துக் கருத்துகளையும் மறுக்கும் வ.ரா., விதவைகள் குறித்த மேயோ பதிவை, அனுதாபத்தோடு அணுகுகிறார். அதில் அவர் கூறும் ‘ஹிந்து’ என்பவன் யார் அதன்பின் உள்ள வருணம் குறித்து வ.ரா. என்ன கருதுகிறார் அதன்பின் உள்ள வருணம் குறித்து வ.ரா. என்ன கருதுகிறார் இவை பற்றியெல்லாம் நாம் அறியமுடியவில்லை. கலப்புமணம் செய்து கொண்ட வ.ரா. பெண்கள் குறித்து தமிழ்ப் புனை கதையுலகில் எழுதிய அளவிற்கு இன்னொரு வரைக் கூறமுடியாது. இருந்தாலும் ‘ஹிந்து’ என்ற நம்பிக்கையுடையவராக இருக்கிறார். இது பாரதி, காந்தி வழி உருவான கருத்துநிலை. இந்த மனநிலையிலிருந்து அவர் தேசத்தைக் கட்டமைக்கிறார். அந்த தேசத்தை மேயோ இழித்துரைப்பதாகக் கோபப்படுகிறார்.\nஇந்தத் தொகுப்பில் கோவை அய்யாமுத்து, வ.ரா. என்ற இரு முரண்பட்ட கருத்துநிலைகளை நாம் எதிர் கொள்கிறோம். இரண்டு மனிதர்களும் நேர்மை யானவர்கள். உண்மை மீது நம்பிக்கையுடையவர்கள். ஆனால் இவர்கள் க��்டமைக்கும் ‘தேசம்’ வேறு வேறானது. இதில் எந்த தேசத்தை நாம் வரித்துக் கொள்ளவேண்டும் என்ற உரையாடலுக்கு இத் தொகுப்பு அடிப்படையாக அமையும்.\nஇத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ள சி.எஸ். ரங்கய்யர் நூல், ஆழமான தத்துவப் பின்புலங்களின்றி மேயோவை, மேயோ பாணியில் எதிர்கொள்ளும் நூல். அரசியல் சொல்லாடல்களை எளிமைப்படுத்திக் காணும் உரையாடல்களைக் கொண்டிருக்கிறது. அவர் மாதா என்றால் இவர் பிதா என்கிறார். அவ்வளவே.\n‘மனோரஞ்சன்ஜா’ நூல் (வெங்கடசாமிநாதனால் மொழிபெயர்க்கப்பட்ட) மிகவும் சுவையான பின்புலம் கொண்டது. பிரித்தானியர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரான காதரீன் மேயோவை நியமித்து, அன்றைய இந்தியா குறித்து எழுதச் சொன்னார்கள். அவர்களின் நோக்கம், பிரித்தானியர்களின் ஆட்சியைக் கட்டிக்காப்பதற்கு மேயோ எழுதுவது உதவும் என்பது. இதே கண்ணோட்டத்தில், பிரித்தானியர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, தங்கள் அதிகாரச் செயல்பாட்டை நியாயப்படுத்தவேண்டும். அதற்காக, மேயோ,குறித்த புலன்விசாரணை சார்ந்த ‘ஆய்வு’நூலை எழுதுவதற்கு மனோரஞ்சன்ஜாவை நியமித்தார்கள். இருவரும் ஒரே நோக்கத்தில் செயல்பட்டிருக்கிறார்கள். அரச அதிகாரம் என்பது ஒரே கருத்துநிலை உடையது என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. இந்த நூலில் மேயோவை உளவாளி என்று நிரூபிக்கும் முயற்சி முதன்மையாக வெளிப் பட்டுள்ளது. அவர் முன்வைத்திருக்கும் விமரிசனங்களை எளிதாகப் புறக்கணிக்கிறார் இந்த ஆய்வாளர். வழக்கமான கல்விப்புலம் சார்ந்த ஆய்வு முறையில் அமைந்திருக்கும் இந்நூல், துப்பறியும் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது.இந்திய ஆளும் வர்க்கத்தின் சொல்லாடல்கள் நியாயப்படுத்தப்பட்டு, இந்திய ‘தேசம்’ காப்பாற்றப்பட்டுள்ளது. தனக்கிட்ட கட்டளையை முறையாக நிறைவேற்றியுள்ளார்மேயோவும் அவ்விதம் செயல்பட்டாலும் பல்வேறு எதார்த்தங்களைப் பதிவு செய்தார்; ஆனால் ஜா, மேயோ என்ற பத்திரிகையாளரைப் பற்றிய ஆய்விலேயே முழுக்கவனம் செலுத்தியுள்ளார்.அவரது கருத்துகள் மீது ஜா கவனம் குவிக்கவில்லை.\n1925-30 ஆண்டுகளில் இந்தியாவில் ‘இரட்டை யாட்சி’ முறை நடைமுறைக்கு வந்த சூழலில் இந்தி யாவின் நிலைமைகளை மதிப்பீடு செய்த காலனியப் பார்வை, தேசம் எனும் கருத்தாக்கத்தை நம்பாத பார்வை, தே��த்தை நம்பிய பார்வை, பொய்யான தேசத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறும் பார்வை என்று பல கோணங்களில் இத்தொகுப்பு செயல்படுகிறது. இத்தொகுப்பு காலனியம் குறித்த நவீன ஆய்வுக்கு உதவும் அரிய தரவாக அமைகிறது. இதனை வெளிக் கொண்டுவரும் விடியல் பதிப்பகப் பணி வரலாற்றில் நினைக்கப்படும்.\nஇம்முயற்சியை முன்னெடுத்த தோழர் விடியல் சிவா இன்றில்லை. இக்கட்டுரையின் முதல் ஐந்து பக்கங் களை எனது கையெழுத்தில் எழுதிக் கொண்டிருந்த போது சிவா மறைந்து கொண்டிருந்தார். இந்தத் தொகுப்பு பற்றி என்னிடம் சிவா நிறையப் பேசினார். மேயோ குறித்து வ.ரா.வின் நூலை நான் கொடுத்தேன். அப்போது, இத்தொகுப்புக்கு நான் ஓர் அறிமுகம் எழுத வேண்டுமென்று கேட்டார். நான் இப்போது எழுதி விட்டேன். அவர் இல்லை. அவர் இருக்கும்போதே எழுதி இருக்கவேண்டும். அதைச் செய்யாத குற்ற உணர்வு இந்த நூல் வழியாக என்னுள் பதிந்துவிட்டது.\n(குறிப்பு: விடியல் பதிப்பகம் வெளியிட உள்ள ‘இந்திய மாதா’ எனும் நூலிற்கு எழுதிய அறிமுக உரை)\nஎழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2012\nஉலகெங்கும் அறிவியல் முன்னேற்றம் வியக்கத் தக்க வளர்ச்சிகளை மிக விரைவில் தோற்றுவித்த காலம் பொதுவுடைமை மேதைகள் கார்ல் மார்க்சும், பிரடெரிக் ஏங்கல்சும் வாழ்ந்த காலம். அவர்கள் இருவரும் உலகில் எந்த நாட்டில் சிறு முரண் அசைவு ஏற்பட்டாலும் அதனைக் கூர்ந்தாய்ந்து, அது மானுட விடுதலைப் போராட்டமா என்று தெளிவுபடுத்துவதில், அப்போராட்டத்தை ஆதரித்துக் கருத்துரைப்பதில் மிகவும் முனைப்பாக இயங்கினர்.\nஇவ்வாறு உலகத்தையே அலசியாய்ந்த ஆனானப் பட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் சவாலாக விளங்கிய ஒரு நாடு இந்தியாதான். அவ்வாறு இந்த மேதைகளுக்கே சவாலாக நின்ற ஒரு ‘கூறு’ கெட்ட கூறு சாதிதான்\nஎந்த நாட்டிலும், அரசியல், பண்பாடு போன்ற தடங்களில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி மறு மலர்ச்சியை, பொதுவுடைமையை நடைமுறையில் காண முயன்றாலும் முடியும்; இந்தியாவில் மட்டும் இயலாது என்ற சூழல்தான் - பத்தொன்பதாம் நூற்றாண்டில் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியில், பண்டித அயோத்திதாசர், டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ராமசாமி, பொது வுடைமையாளர்கள் ம.சிங்காரவேலர், ப.ஜீவானந்தம் ஆகியோர் ஆற்றிய சாதி ஒழிப்புப் பணிகள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கன.\nசாதி ஒழிப்புப் பணியில் இந்தியாவில் குறிப்பிடத் தக்க அளவுக்குச் சிறப்பிடம் பெற்ற தமிழ்நாட்டில் இந்த 21-ஆம் நூற்றாண்டில் சாதி மோதல் என்பது வியப்புக்கும் வேதனைக்கும் உரியது.\nதருமபுரி மாவட்டம், செல்லன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் திவ்யா (வயது - 20), அருகிலுள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் இளவரசன் (வயது - 23) ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தை விரும்பாத பெண்ணின் தந்தை நாகராஜ் நவம்பர், 7ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டதையொட்டி, அப்பகுதியில் வன்முறை வெடித்தது. அதே நாளில் மாலை நான்கு மணி அளவில் தருமபுரி அருகிலுள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நத்தம் காலனி, அண்ணாநகர் புதுக்காலனி, கொண்டப்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் தலித் மக்கள் வாழும் 270 வீடுகள் மேல்சாதியினரால் தீவைத்துக் கொளுத்தப் பட்டன; வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அவை ஏழு கோடி மதிப்பு பெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை.\nஇந்த இழிசெயல் எவ்வளவு நச்சார்ந்தது என்பதை உணர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அந்த நிகழ்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகிற வேளையில், ஓர் அரசியலாளர் தலித் இளைஞர்கள் திட்டமிட்டு மற்ற சாதிப் பெண்களைக் காதலித்து ஏமாற்றிப் பொருளாதார ஆதாயம் தேடு வதாகவும், அதற்காக சில தலித் அமைப்புகள் இயக்கமே நடத்துவதாகவும் கருத்து கற்பித்து வருகிறார்.\nஇவ்வாறு, காதலிப்பதை - அதாவது, பிற சாதிப் பெண்ணைக் காதலிப்பதையெல்லாம் குற்றம் சாட்டு வதே தவறு; இது சமூக நீதிக்கு எதிரான செயல்\nஇன்று விஞ்ஞானம் ஏராளமாக முன்னேறி, ‘உலகில் உயர்ந்த பண்பாடு எங்கள் பண்பாடு’ என்று பெருமையடித்துக் கொள்ளும் இந்தியாவில், நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட தீய நிகழ்வுகள் நிகழ்வது வெட்கக் கேடானது.\nஇந்த தர்மபுரி மாவட்ட நிகழ்வு என்பது திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்ததாகப் புலப் படவில்லை. இதுபோன்ற சாதி வேறுபாடுகளை மனத்தில் கொள்ளாது இயல்பாகக் காதல்வயப் பட்டு திருமணம் செய்து கொள்ளும் நேர்வு எப் போது நடந்திருந்தாலும் உடனிகழ��வாக இந்த வன் முறையும் நடந்திருக்கும் என்றே தோன்றுகிறது.\n“சோஷலிஸ்டுகள் அல்லது சோஷலிஸம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளில் சாதி மிக முக்கியமானது. இதனை எதிர்கொள்ளாமல் புரட்சியை வென்று அடைய முடியாது. புரட்சிக்கு முன் சாதிப் பிரச்சினையைக் கவனத்தில் கொள்ளத் தவறினால் புரட்சிக்குப் பின் சாதியைக் கவனத்தில் கொண்டு, அதில் நம் சிந்தையை மூழ்கச் செய்ய வேண்டியிருக்கும்” என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.\nசாதி, மத, பண்பாட்டுத் தளங்களில் சீர்திருத்தம் கொள்ளாது, நம் மண்ணில் சமத்துவம் காண இயலாது. இதனை எல்லாச் சாதிகளிலும் உள்ள உழைப்பாளி வர்க்கம் உணர வேண்டும். இத்தகைய பிற்போக்குத்தனமான வன்முறைகள் தொடர்ந்து நிகழ்வது ஒடுக்கப்படுவோர் மட்டுமின்றி ஒடுக்கு வோர், அதற்கு உடந்தையாக இருப்போர், அதைக் கண்டும் காணாது வாளாவிருப்போர் - இவர்களின் அடுத்த தலைமுறையினர்களுக்கும் துன்பத்தை விளைவிக்கும் என்பதை எல்லாத் தரப்பினர்களும் கவனத்திற்கொண்டு உரிய தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழாய்வுப் போக்குகள்\nபதினெட்டாம் நூற்றாண்டு புதுச்சேரியில் சாதி\nநிலவொளியில் தன்மீது சித்திரங்களை எழுதிப் பார்க்கும் கவிதை\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2013\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2014\nஉங்கள் நூலகம் - மார்ச் 2014\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2014\nஉங்கள் நூலகம் - மே 2014\nஉங்கள் நூலகம் - ஜூன் 2014\nஉங்கள் நூலகம் - ஜுலை 2014\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2014\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2014\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2014\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2014\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2014\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2015\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2015\nஉங்கள் நூலகம் - மார்ச் 2015\nஉங்கள் நூலகம் - மே 2015\nஉங்கள் நூலகம் - ஜூன் 2015\nஉங்கள் நூலகம் - ஜூலை 2015\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2015\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2015\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2015\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2015\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2015\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2016\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2016\nஉங்கள் நூலகம் - மார்ச் 2016\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2016\nஉங்கள் நூலகம் - மே 2016\nஉங்கள் நூலகம் - ஜூன் 2016\nஉங்கள் நூலகம் - ஜூலை 2016\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2016\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2016\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2016\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2016\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2016\nஉங்கள் ந��லகம் - ஜனவரி 2017\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2017\nஉங்கள் நூலகம் - மார்ச் 2017\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2017\nஉங்கள் நூலகம் - மே 2017\nஉங்கள் நூலகம் - ஜூன் 2017\nஉங்கள் நூலகம் - ஜூலை 2017\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2017\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2017\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2017\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2017\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2017\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2018\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2018\nஉங்கள் நூலகம் - மார்ச் 2018\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2018\nஉங்கள் நூலகம் - மே 2018\nஉங்கள் நூலகம் - ஜுன் 2018\nபக்கம் 5 / 261\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kishoker.blogspot.com/2011/10/mastercard.html", "date_download": "2018-07-19T11:58:18Z", "digest": "sha1:GBFGBLC7JBTREEKPHS3A2FPSIYDOZQWO", "length": 26827, "nlines": 121, "source_domain": "kishoker.blogspot.com", "title": "கிஷோகர் IN பக்கங்கள்: மானத் தமிழரும் Mastercard உம்...!", "raw_content": "\nமானத் தமிழரும் Mastercard உம்...\nஇந்த பதிவின் தலைப்பை பார்த்ததுமே , அனேகமான மக்கள் ஒரேயடியாக சாடுவது போல நான் ஒன்றும் புலம் பெயர் தமிழர்களை சாடிவிட போகிறேன் என்று கல் எடுக்க வேண்டாம். இலங்கையின் அரசியல் மாற்றத்திலும் சரி பொருளாதார மாற்றத்திலும் சரி புலம்பெயர் தமிழர்களின் பங்கு கணிசமானது.\nஆனாலும் விடுமுறையில் வரும் சில புலம்பெயர் தமிழர்கள் அடிக்கும் காமடிகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அத்தோடு ஏற்கனவே மானாடவும் மயிலாடவும் பார்த்து ரம்பா அக்கா போலவும், நமீதா மச்சி போலவும் ஆடை அணிய ஆரம்பித்திருக்கும் எம் தமிழ்க் குல கொழுந்துகளை தூண்டி விடும் விதமாக , தாங்களும் தங்கள் பிள்ளைகளும் (ஒரு சிலர்) அரைகுறை ஆடைகள் சகிதம் நகர்வலம் வருவது நரகாம்சமாக இருக்கிறது.\nஅவர்கள் கேட்கலாம் \"நாங்கள் எப்படி உடுத்த வேணும் எண்டு எங்களுக்கு தெரியும், உங்கட வேலய பாருங்கோ எண்டு\". அப்படியானோர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் கலாசாரம் சீரழியுது, இந்த இலங்கை தமிழ் பெட்டையள் இப்ப சரியில்ல என்று குறைசொல்ல வேண்டாமே. (இது எப்படி இருக்கு எண்டா மகள் நீலாம்பரி பெருமாள் மலையாள படங்களில் \"ஜல்சா\" பண்ணிக்கொண்டு இருக்க யாழ்ப்பாண பெண்களின் கலாசாரம் குறித்து கவலைப் படுகின்ற வரத ராஜ பெருமாளது நிலை போன்றது)\nஅது போக வெளிநாடுகளில் நீங்கள் தான் ஏதோ கலாசார காவலர்கள் போல ஆர்ப்பாட்டங்கள் செய்யவேண்டாமே \"கற்றபின் அதன் படி ஒழுகுக\" போல் சொல்வது போல் ஒழுக வேண்டாமா \"கற்றபின் அதன் ப��ி ஒழுகுக\" போல் சொல்வது போல் ஒழுக வேண்டாமா இருந்தும் சிலர் உண்மையிலேயே கலாசாரத்தை பற்றி கவலையும் படுகிறார்கள். எனக்கு தெரிந்து ஒரு குடும்பம் \"சுவிஸ்\" இல் இருந்து அடிக்கடி இலங்கைக்கு விடுமுறையில் வருவார்கள். அவர்கள் சுவிஸில் இருக்கும் போது அனேகமாக \"ஜீன்ஸ், டீ-சேர்ட்\" தான் அணிவார்கள். ஆனால் இலங்கைக்கு வந்ததும் போகும் வரை பாவாடை, சட்டை தான். விடலை பருவத்தில் இருக்கும் மகள் கூட கணுக்கால் வரை பாவாடை அணிந்து ஆச்சரிய படுத்துவார். நான் ஒரு தடவை அவரிடம் \"இது போல் ஆடை அணிந்து பழக்கமா இருந்தும் சிலர் உண்மையிலேயே கலாசாரத்தை பற்றி கவலையும் படுகிறார்கள். எனக்கு தெரிந்து ஒரு குடும்பம் \"சுவிஸ்\" இல் இருந்து அடிக்கடி இலங்கைக்கு விடுமுறையில் வருவார்கள். அவர்கள் சுவிஸில் இருக்கும் போது அனேகமாக \"ஜீன்ஸ், டீ-சேர்ட்\" தான் அணிவார்கள். ஆனால் இலங்கைக்கு வந்ததும் போகும் வரை பாவாடை, சட்டை தான். விடலை பருவத்தில் இருக்கும் மகள் கூட கணுக்கால் வரை பாவாடை அணிந்து ஆச்சரிய படுத்துவார். நான் ஒரு தடவை அவரிடம் \"இது போல் ஆடை அணிந்து பழக்கமா இதை ஒரு நாகரீக குறைவாக உணர்கிறீர்களா\" என்று. அந்த 16 வயது பெண்ணின் பதில் பக்குவமானது. \"இங்கு இவ்வாறு அணியாமல் , அரை குறையாக உடுத்துவது தான் நாகரீக குறைவு\". இந்த 16 இன் புத்தி சில 61 களுக்கு கூட வருவது கிடையாது.\nஅதுக்காக நான் உங்களை ஒளவையார் போல ஆடை உடுத்த சொல்லவில்லை. உங்கள் மார்புகளை ஃபிளாட் போட்டு விற்பதையாவது நிறுத்தலாமே. தொப்புளில் நீங்கள் கடுக்கண் குத்தியிருந்தால் அதை உங்கள் கணவருக்கு மட்டும் காட்டினால் சந்தோஷ படுவார். எங்களுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. அத்தோடு \"நைட்டி\" என்பது இரவில் போட்டு உறங்குவது. அதை வீதிகளில் போட்டு அலைவதை நீங்கள் நாகரீகம் என்றால், மன்னித்து கொள்ளுங்கள் நான் இன்னமும் கூர்ப்பே அடையவில்லை\nஅடுத்தது இந்த வேற்று மொழி மோகம் (இது பற்றி நிச்சயம் ஒரு தனி பதிவுக்கு தேவை இருக்கின்றது). நீங்கள் எங்கு வாழினும் தமிழர்கள். அந்தந்த நாட்டு மொழிகள் தமிழ் தெரியாத ஒருவனுடன் உரையாட மட்டுமே. அதை ஏன் நீங்கள் இங்கு வந்தும் , எம்மோடு பேசும் போதும் தொடர்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் தங்களுக்குள்ளேயே வேற்று மொழிகளில் உரையாட அனுமதிக்கிறீர்��ள் அல்லது ஆசைப் படுகிறீர்கள் (இது பற்றி நிச்சயம் ஒரு தனி பதிவுக்கு தேவை இருக்கின்றது). நீங்கள் எங்கு வாழினும் தமிழர்கள். அந்தந்த நாட்டு மொழிகள் தமிழ் தெரியாத ஒருவனுடன் உரையாட மட்டுமே. அதை ஏன் நீங்கள் இங்கு வந்தும் , எம்மோடு பேசும் போதும் தொடர்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் தங்களுக்குள்ளேயே வேற்று மொழிகளில் உரையாட அனுமதிக்கிறீர்கள் அல்லது ஆசைப் படுகிறீர்கள் இவ்வாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு ஏன் தனி நாடும் இவ்வாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு ஏன் தனி நாடும்\nஎனது உறவுகளில் கூட இவ்வாறான மூளை சுகமில்லாததுகள் இருக்கின்றன. \"அப்பம்மா ஸீ தெயா....\" , \"சே ஹலோ டூ அப்பப்பா..\" என்று பிஞ்சு மனதுகளில் நஞ்சை விதைக்கும் இதுகளை காலிடுக்கில் சுட வேண்டாமா (ஓவரா கடுப்பாகிறனோ\nஎனது உறவினர் சிலர் மலேசியா (கடல் மார்க்கமாய்) மூலம் அவுஸ்ரேலியா சென்று ஒருவருடமும் ஆகவில்லை. \"கிறிஸ்மஸ் தீவிலேயே \" எட்டு மாதங்கள் இருந்தார்கள். இப்போது என்னவென்றால் கடைசி மகனுக்கு தமிழ் தெரியாதாம். 13 வயது மகனுக்கு தமிழ் மறக்கிறதாம். இதுகளை என்ன செய்வது எண்ணை கொப்பரையில் போட வேண்டாமா எண்ணை கொப்பரையில் போட வேண்டாமா (#####$$$***&^$% -கெட்டவார்த்தை தணிக்கை செய்யப்பட்டுள்ளது)\nஎனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 17 வருடங்களின் பின்னர் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த வருடம் விடுமுறையில் வந்திருந்தார். அவரிடம் நான் உண்மையில் எதிர் பார்த்தது \" திஸ் பிளேஸ் சோ ஹொட் யா..\" , \"நாங்க ஒன்லி பீட்சா பேர்கர் தான்\", \"அக்சுவலி றைஸ்ஸ நான் கண்டு ஃபிஃப்டீன் இயர்ஸ் ஆச்சு\", \"றூம்ல ஏசி இல்லயா\". இதுகளை தான். ஆனால் நடந்ததோ எதிர்மாறு. அவரது நடவடிக்கைகலள் கண்டு அதிர்ந்தே போனேன். ஒரு நாட்டுப் புற விவசாயின் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். வந்து நின்ற ஒரு மாதமும். அவரை பார்த்த பலர் சொன்னது இது தான், \" 17 வருடம் வெளிநாட்டில் இருந்தீங்க எண்டு நம்ப முடியவில்லை, ரொம்ப எளிமையாக இருக்குறீர்கள்\". புறப்படும் போது மறக்காமல் தனது இரண்டு வயது மகனுக்கு \"தமிழ் அரிச்சுவடி\" முதற்கொண்டு தமிழ் புத்தகங்களாய் வாங்கிச் சென்றார்.\nஅவர் இங்கிருந்த கால பகுதியில் தான் இது நிகழ்ந்தது இந்த காமடி....\nநானும் அந்த நண்பரும் தேனீர் குடிப்பதற்காக கடைத்தெருவுக்கு (மன்னார் நகரப்பகுதி) சென்றிருந்தோம். எனது அறிவுக்கு எட்டிய வரை மன்னாரில் இரண்டு பல்பொருள் அங்காடிகள் தவிர வேறு எதிலும் \"கிரடிற் காட், வீசா காட்\" மூலமாக பணம் செலுத்தும் வசதிகள் இல்லை. நாங்கள் போயிருந்தது நாளுக்கு சுமாராக ஆயிரம் ரூபா வியாபாரம் ஆகக்கூடிய ஒரு சிறிய கடை.\nஅங்கு எங்களைத் தவிர வேறொரு புலம்பெயர் தமிழர் குடும்பம் ஒன்றும் இருந்து தேனீர் அருந்திக் கொண்டு இருந்தது. தேனீர் அருந்தி முடிந்ததும் கடைக்காரரை நோக்கி சென்ற அந்த குடும்பத்தின் தலைவர் என மதிக்கத்தக பெரியவர், \"கான் யூ..... கான் யூ ப்ளீஸ்....\" என்று இழுத்தார். அவரை கடைக்காரர் ஏதோ ஜந்துவைப் பார்ப்பது போல பார்த்தார். நானும் தான்\nபின்பு அந்த கடைக்காரருக்கு ஆங்கிலம் விளங்காது எண்டு (கண்டுபிடிச்சிற்றாராம்) தெளிந்தவராய் (உண்மையில் அவர் ஆங்கிலம் பேச எத்தனித்தது எங்களுக்கு படம் காட்ட தான்.) தனது பையிலிருந்து பணத்தை எடுத்தவர் எங்களை பார்த்தவர் , ஏதோ நினைத்தவராய் தனது பண பையினுள் கைவிட்டு சில தகடுகளை எடுத்தார். (அத்தனையும் வீசா, டெபிற், கிரடிற் காட்டுக்கள்) \"எவளவு நீங்க வீசா காட் எடுப்பியளா நீங்க வீசா காட் எடுப்பியளா\" எனக்கு பகீர் என்றது. அந்த கடையின் முதலாளி மேசையில் இருந்தவை இவை தான் \"பீடா தட்டு, ஒரு இனிப்பு போத்தல், சிகரட் பெட்டி\". இவற்றில் எதை அவர் \"காட் தேய்க்கின்ற இயந்திரமாக\" நினைத்தாரோ எனக்கு இன்னமும் விளங்கவில்லை.\nஅதற்கு அந்த கடைக்காரரின் பதிலைக் கேட்க வேண்டுமே.... அந்த கடைக்காரரின் பேச்சு மொழி மட்டக்களப்பு பிரதேசச் சார்பானது. \"யென்ன ஸார்...... எங்ட கடைய பாத்த ஒங்கலுக்கு வீசா காட் எடுக்கிர கட போலவா கிடக்கு.. சும்மா பகிடி விடாம காச தாங்க பொஸ்ஸா.... (சிரிக்கிறார்) நீங்க வெளிநாடு எண்டு உங்கட உடுப்ப பாக்கவே தெரியுது.இப்பிடி \"காட்டை\" காட்டி நிரூபிக்கணும் எண்டு இல்ல பொஸ்ஸா......\" அந்த பெரியவரது மூக்கு உடைந்து விழுந்து எங்கோ தெறித்து ஓடியது. எனக்கு ஒரு நமட்டு சிரிப்பு தான் வந்தது.. ஆனாலும் ஏதோ ஒரு கொலைவெறி மேலிட பெரிதாய் \"ஹா... ஹா...\" என்று சிரித்து விட்டேன். எதற்கு இந்த வெட்டி பந்தா அந்த கடைக்காரரின் பேச்சு மொழி மட்டக்களப்பு பிரதேசச் சார்பானது. \"யென்ன ஸார்...... எங்ட கடைய பாத்த ஒங்கலுக்கு வீசா காட் எடுக்கிர கட போலவா கிடக்கு.. சும்மா பகிடி விடாம காச தாங்க பொஸ்ஸா.... (சிரிக்கிறார்) நீங்க வெளிநாட�� எண்டு உங்கட உடுப்ப பாக்கவே தெரியுது.இப்பிடி \"காட்டை\" காட்டி நிரூபிக்கணும் எண்டு இல்ல பொஸ்ஸா......\" அந்த பெரியவரது மூக்கு உடைந்து விழுந்து எங்கோ தெறித்து ஓடியது. எனக்கு ஒரு நமட்டு சிரிப்பு தான் வந்தது.. ஆனாலும் ஏதோ ஒரு கொலைவெறி மேலிட பெரிதாய் \"ஹா... ஹா...\" என்று சிரித்து விட்டேன். எதற்கு இந்த வெட்டி பந்தா வெளிநாட்டு வாழ்க்கை என்பது என்ன பி.எஸ்.சி யா வெளிநாட்டு வாழ்க்கை என்பது என்ன பி.எஸ்.சி யா , எம்.கொம். மா\nஇதை தவிர கூற முடியாத பல அட்டூழியங்கள் இது போதாது என்று இங்குள்ளவர்கள் போடும் ஆட்டம் அப்பப்பா.... அதற்கு ஒரு தனி பதிவே வேண்டும்.\nஇங்கு நான் குறிப்பிட்டது 95% புலம் பெயர் தமிழர்களை பற்றித்தான், மிகுதியான் அந்த நல்வாழ்க்கை வாழும் 5% ற்குள் நீங்களோ , உங்கள் சொந்தங்களோ அடங்கினால், நீங்கள் நிம்மதியாக உறங்கலாம். ஏனென்றால்....\nஅப்படீங்கிறான் ஒரு கவிஞன். (ஹி ..... ஹி ... நான் தாங்க அது..)\nஅன்பின் பீரிஸ்.. உங்கள் ஆதரவிற்கும் , பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி. இண்லியில் ஏற்கனவே பதிவு செய்து விட்டேன், தமிழ்மணத்தில் நிலுவையில் இருக்கின்றது. உங்கள் ஆதரவு தொடர்ந்தும் வேண்டும்\nஎங்கள் ஊரில், மற்றும் இலங்கையின் பல பாகங்களில் \"BOSS\"என்ற ஆங்கில வார்த்தையை வர்த்தகர்கள் பொஸ்ஸா என்று பாவிப்பது வழக்கம்\n//அதுக்காக நான் உங்களை ஒளவையார் போல ஆடை உடுத்த சொல்லவில்லை. உங்கள் மார்புகளை ஃபிளாட் போட்டு விற்பதையாவது நிறுத்தலாமே. தொப்புளில் நீங்கள் கடுக்கண் குத்தியிருந்தால் அதை உங்கள் கணவருக்கு மட்டும் காட்டினால் சந்தோஷ படுவார். எங்களுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.// எனக்கும் மிகவும் பிடித்த கருத்து. என் கருத்தும் இதுவே.\nபிளீஸ்.. படிக்கிறதோட மட்டும் நிறுத்திக்கோங்க...\nஎனக்கு பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், நடுநவீனத்துவம் எதுவுமே தெரியாது என்பதால், நான் உணர்வதை, எனக்கு தெரிந்ததை மட்டுமே எழுதுகிறேன் எனக்கு தெரியாததை , நான் தவறவிட்டதை, தவறுகளாக விடுபவைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால், அவை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் கைகட்டி வாய் பொத்தி ஐம்புலனும் அடக்கி கேட்டுக்கொள்வேன் எனக்கு தெரியாததை , நான் தவறவிட்டதை, தவறுகளாக விடுபவைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால், அவை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் கைகட்டி வாய் பொத்தி ஐம்புலனும் அடக்கி கேட்டுக்கொள்வேன்\nஜேம்ஸ் கமறூன் படத்தில் டாக்டர் விஜய் \nநாஸ்திகனுக்கு பேய் பயம் வருமா\nகோடி ரூபாய்க்கு கூப்பிட்ட \"பவர் ஸ்ரார்\".. \nமானத் தமிழரும் Mastercard உம்...\nஇந்த குட்டையில் பாறாங்கல் போட்டவர்கள் - \"A.R.V.லோஷ...\nமொக்கையை மெனக்கட்டு வாசிச்ச புண்ணியவானுங்க..\nஇன்னுமா இந்த உலகம் என்ன நம்பிக்கிட்டு இருக்கு\nஇது ஒண்ணும் செய்வின இல்ல சார் பையன் இன்னிக்கு கே. டீவில டாக்டரோட \"சொறா\" படம் பாத்திட்டாப்ல... கொஞ்ச நேரத்தில சரியாயிடும் பையன் இன்னிக்கு கே. டீவில டாக்டரோட \"சொறா\" படம் பாத்திட்டாப்ல... கொஞ்ச நேரத்தில சரியாயிடும்\nகுஷ்புவின் இடுப்பை கிள்ளியது யார்\nஉலகின் மிகப்பெரிய ஜனனாயக நாட்டில் இப்படியொரு கொடூரமா ஐயகோ நெஞ்சு பொறுக்கவில்லையே , அதுவும் கலாசாரம் , பண்பாடு என்றால் என்னவெ...\n வலிக்கும்டா ஒரு சில ஜந்துக்கள் இருகுதுங்க இந்த உலகத்தில ஓவர் நைட்ல புகழ் வ ந்துட்டா போதும், தாங்க எப்பிடி இருந்தோம்...\nமுகமூடி வி.ஐ.பி ஷோவுக்கு அழைத்த அதே குழு சூர்யாவின் \"மாற்றான்\" திரைப்படத்துக்கான வி.ஐ.பி ஷோவுக்கும் அழைத்திருந்தது\nகலைஞர் டி.வி தீர்மானித்த தமிழ் சினிமாவின் எதிர்காலம்\nமுகமூடி சினிமா விமர்சனம் - பிரீமியர் ஷோ\nஅப்பிடி இப்பிடி என்று ஒரு மாதிரியாக நேற்று முகமூடி திரைப்படத்தை பிரீமியர் ஷோவுக்காக திரையிட்டார்கள். படத்தின் பிரீமியர் ஷோவுக்கான அழைப்பி...\nவிபச்சார வழக்கில் சிக்குமா சன் டி.வி குழுமம்\nஇன்னிக்கும் மணி சரியா 6 மணித்துளிகள் 21 நிமிடங்கள் 49வது செக்கனகள் , துலா வருடம், கப்பி மாதம் சரியாக எம கண்ட நேரத்தில் சன் தொலைக்காட்சிய...\n என்னோடு சேர்த்து நாலைந்து நாய்களும்\n\"உன்ட அண்ணனுக்கு இப்ப தான்டா இருபத்தொரு வயசாகுது.... அதுக்குள்ள கலியாணமா\" \" என்னடா செய்யிறது\" \" என்னடா செய்யிறது அந்த பண்ணயாரிட ஆளுகளுக்கு ,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuttyrevathy.blogspot.com/2010/04/blog-post_19.html", "date_download": "2018-07-19T11:47:55Z", "digest": "sha1:5ABCJ2RGJ2DB63BJYUMKWAZIJTYE3KFP", "length": 27461, "nlines": 144, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: பெண்ணின் பாலியல் மொழி", "raw_content": "\nஉடலும் பொருளும் - 1\nஇக்கட்டுரைத் தொடரை எழுதுவதற்கான நோக்கமென்பது பெண்ணெழுத்தின் பாலியல் மொழி என்பது இன்றைய நிலையில் எத்தகைய ஊக்கத்தையும் பொருத்தப்பாட��டையும் பெற்றிருக்கிறது என்பதை அறிவதாகும். நிறைய வகையான கருத்தியல் தளங்களைக் கடந்து வந்த தமிழக அரசியலில் பெண்ணிய பாலியல் மொழி எவ்வளவு தட்டையானதாக இருக்கமுடியும் என்பதற்கான உதாரணங்களையும் நாம் தற்பொழுது உணர்ந்தும் கண்டும் கொண்டிருக்கிறோம். அவ்வாறான தட்டையான மொழியை ஒரு பெண் படைப்பாளி கையாளும் போது, நுண் அரசியலை எடுத்தாள்வதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டியங்கும் நவீன தமிழ்க் கவிதையில் எந்தவிதமான அதிர்வையும் உருவாக்க முடியாமல் போகிறது என்பதையும் பேசாமல் இருக்க இயலாது.\nஉடல் மொழி என்பது உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி எழுதுவது மட்டுமே அன்று. உடல் உறுப்புகளை அவற்றின் உச்சமான வடிவில் உச்சரித்தாலும் அவை அர்த்தம் பெறாமல் போகும் அரசியலை சுமக்கத் தொடங்கிய காலகட்டத்தை நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பதும் அதற்கு உரிய விளக்கம் சொல்லும் பொறுப்பையும் ஏற்காத படைப்பாளிகளாகப் பெண்கள் இருப்பதும் சரியான பெண்ணியவாதத்தை முன்வைப்பதாக இருக்காது. ஏற்கெனவே நான் பலமுறை குறிப்பிட்டிருப்பது போல ‘பெண்’ என்ற ஒற்றை அடையாளம் மலிவாகி விட்டது இன்று. அதாவது சென்ற பத்தாண்டுகளில் தமிழக அரசியல், சமூக, இலக்கியத் தளங்களில் ஏற்பட்ட இயக்க மாறுபாடுகள் பெண்ணியக் கருத்தியலை வேறுவிதமாகச் செழுமையூட்டி இருக்கின்றன. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் எந்தப் பெண் என்றாலும் ‘பெண்’ என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடங்கக் கூடியவள் என்று வாதிடும் பெண்ணியம் காலாவதியாகி விட்டது. நானும் அத்தகைய ஒற்றை அடையாள நிலையிலிருந்து நகர்ந்தும் வளர்ந்தும் வந்து விட்டதுடன் மற்ற சமூகச் சூழலில் உள்ள பெண்களுக்கும் இதே மாற்றமும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளதை சமீப கால அரசியல் சமூக வளர்ச்சிகள் உறுதி செய்கின்றன.\nகவிதை தனது ஒய்யாரக் கொண்டைகளுடனும் தாழம்பூக்களுடனும் ஆதிக்க சமூகத்தினரின் மடியில் இருந்த பொழுதெல்லாம் நவீன தமிழ்க் கவிதை தனது எலும்புகளால் முட்டி முட்டி உடைத்து நகர்ந்து வெளியே எம்பிக் குதித்திருக்கிறது. நவீன தமிழ்க் கவிதை என்பதன் முதல் எழுச்சியும் கருவும் அவ்வியக்கம் சார்ந்த கவிஞர்களே கூட தம் சுய சாதி அதிகார நிலைகளை எவ்வளவு எள்ளி நகையாடினார்கள் என்பதன் வழியும் தன் உடலை எந்த அளவுக்கு அதிகாரச் சிதைவுக்கு உள்ளாக்கினார்கள் என்பதன் வழியும் புரிந்து கொள்ள முடிகிறது. நான் மேலே குறிப்பிட்டிருப்பது ஆதிக்க சமூகத்திலிருந்து வந்த ஆண் கவிஞர்களின் முனைப்பு என்பதை முன்வைத்துத் தான். அப்பொழுது எழுத்து மொழி ஒடுக்கப்பட்டவருக்கு வந்து சேர்ந்திருக்க வாய்ப்பில்லை அது ஆண் என்றாலும் பெண் என்றாலும். ஆனால், ஒடுக்கப்பட்டவரின் குரலுக்கான செருமல்களையேனும் கொண்டிருந்த ஆதிக்க சமூக ஆண்படைப்பாளிகளின் பெயர்களைத்தான் இன்றைய நவீன தமிழ்க் கவிதை தன் வரலாற்றில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.\nஇந்நிலையில் பெண் கவிதை என்பது அவ்வரிசையில் இணைய வேறு உத்திகளையும் வடிவங்களையும் முனைப்புகளையும் கைக்கொண்டது. சாதி உணர்வைத் தன் நாடி நரம்பெல்லாம் பாய்ச்சலாகக் கொண்டிருக்கும் இந்தியாவில் பெண் கவிதையில் கையாளப்படும் உடல் கவிஞரின் உடல் என்றே வைத்துக் கொள்வோம். அது அக்கவிஞரின் குரல் என்றும் வைத்துக் கொள்வோம். இந்நிலையில் அந்த உடல் என்ன விதமான பாலியல் அங்கீகாரங்களுக்காக ஏங்குகிறது என்பதும் எந்த விதமான ஆண்களின் பாலியல் குற்றங்களை தனக்கான அதிகாரங்களாகவும் உரிமைகளாகவும் முன்வைக்கிறது என்பதும் இன்று நம்முன் தலையுயர்ந்து நிற்கும் கேள்விகள். அதாவது, அந்தக் கவிதையில் விளக்கப்படும் அர்த்தப்படும் பெண் கவிஞரின் உடல் சமூக பொருளாதார அரசியல் அதிகாரங்களைத் துய்த்த பின்பும் அதன் வழியாக பெறமாட்டாத பாலியல் அதிகாரத்தையே முன் வைக்கிறதா அல்லது எந்த அதிகாரத்தையும் இன்னும் பெற்றிடாத ஏன், கல்வி அல்லது எழுத்து மொழிக்கான வாய்ப்பைக் கூட பெற்றிராத ஒரு பெண்ணின் சார்பாய் நின்று அவள் உடலுக்கான அதிகாரங்களை அர்த்தப்படுத்தும் சொற்களுடன் உருவாகி வருகிறதா என்பது மிக மிக முக்கியம். இன்றைய நமது பெண்ணிய மைதானம் என்பது தாழ்த்தப்பட்ட பெண்கள், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பெண்கள், பாலியல் நிலையை உறுதிப்படுத்தப் போராடும் அரவாணிகள் என்று முதல் முறையாக எழுத்தைத் தம் குரலாக்கும் பெண்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் பேசும் அரசியலுக்கான இயக்கங்களைக் கண்டடைந்திருக்கிறது. அவர்களின் மொழி அரசியலைப் புரிந்து கொள்வதும் அவற்றிற்கான அதிகார இழப்பைத் தனக்குத் தானே தன் உடலுக்குத் தந்து கொள்வதும் அல்லது அவர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர போராடுவதுமான மொழியைக் கவிதைகள் பாடுகின்றனவா என்பதும் நோக்கற்பாலது, தோழியரே இந்தச் சவாலை ஏற்க பெண்ணியக் கவிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் தயாராக இருக்கிறோமா\nபாலியல் சுதந்திரமும் உரிமையும் அதிகாரமும் வேறு வேறு சமூகப் பின்னணியிலிருக்கும் பெண்களுக்கு வேறு வேறாக இருப்பதை உணர்கிறேன். அதாவது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த ஓர் ஆண் கொண்டிருக்கும் மிகுதியான பாலியல் அதிகாரங்களையும் விடுதலைகளையும் கோரிப்பெறுவதாகவே உள்ளது. இத்தகைய சாதி அதிகாரம் மிக்கப் பெண்ணுக்கு தன்னையும் விட அதிகாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் பெண்ணின் பாலியல் உரிமை குறித்து சற்றும் கவலையோ அக்கறையோ இருப்பதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைச் சுகிப்பதற்கான உரிமையும் அதிகாரமும் மட்டுமே விடுதலை உணர்வு என்றாகி விடாது. அத்தகைய உரிமையும் அதிகாரமும் பெறாத கடைக்கோடிப் பெண்களுக்குக் கூட தன் எழுத்தும் அதன் பொருளும் எத்தகைய உரிமையையும் அதிகாரத்தையும் பேச முடியும் என்ற அக்கறையுடன் மலரும் எழுத்து சமூகத்திலிருந்து தனித்து நிற்காது. அத்தகைய அக்கறையுடைய எழுத்திற்கான சமூக எதிர்ப்பு என்பதும் விமர்சனப்பூர்வமானதே அன்றி அவதூறானதாக இருக்க முடியாது. அதுமட்டுமன்றி, பாலியல் விடுதலை என்பது தன்னுடலை பல ஆண்களுக்குக் கொடுப்பதற்கான விழைவும் அதற்கான உரிமையும் அதிகாரமுமே என்று ஓர் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண் எண்ணிக்கொண்டிருப்பதும் எந்த ஓர் அடிப்படையான சாதி அதிகாரமுமற்ற ஒரு பெண் பல நிலை அதிகாரங்களிலிருக்கும் ஆண்களிடமிருந்தும் அதாவது போலீஸ், அரசு, கலாசாரக் காவலர், கணவன், சமூகத்தின் பிற ஆண் அதிகாரிகள் போன்றோரின் வன்புணர்வுகளிலிருந்தும் தனது ஒற்றை உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபடும் யதார்த்தம் என்பதும் எவ்வளவு முரண்பாடாயிருக்கிறது பாருங்கள், தோழியரே\nஎனது தோழி முத்தழகு கவிதைகள் எழுதுபவள். இன்னும் அவை தொகுப்பாக வெளிவரவில்லை. அவளைப் பற்றிச் சொல்வதென்றால் தன் உடலைத் தானே ஆள்பவள். காமம் சார்ந்த ஒழுக்கங்கள் உடையவள் அல்ல. ஆனால் தன் உடல் குறித்த ஒழுங்குகளும் அறங்களும் பயில்பவள். ஆணின் உடலுக்கும் பெண்ணின் உடலுக்கும் இடையே நிலவும் பாலியல் சமன்பாடுகளையும் அதிகார விதிகளையும் தகர்ப்பவள். தனது பாலியல் அதிகாரத்தை அடுத்தவர் மீது ஏவாதவள். பெண்ணின் பாலியல் நுகர்ச்சியையும் விடுதலையையும் ஒரே புள்ளியில் இணைப்பவள். உடலைத் தாவரப் புல்லாகவும் மாமிசப் பட்சிணியாகவும் மாற்றிப் பார்ப்பவள். ‘பெண்ணின் உடலுக்குள் ஆணின் உடலை உறங்க வைக்க இயலும். ஆணின் உடலுக்குள் பெண்ணின் உடல் அடங்காது என்பது இயற்கையின் கணிதம்’ என்பாள். எந்த ஆணுடன் என் உடல் இணைய விரும்புகிறது என்பதை வேறெந்த ஆணோ பெண்ணோ தீர்மானிக்க இயலாது என்பாள். சமூகத்தின் அடித்தளம் வரை அவள் உடல் ஈடுகொடுப்பதான புரிதலையும் அதற்கான மொழிகளையும் கொண்டவள். யோனி, குறி, முலைகள் போன்றவற்றிற்குச் சிறப்பான அர்த்தங்களையும் மொழி வடிவங்களையும் தருபவள். அவை நேரடியான சொற்களாக இல்லாமல் தற்கால அரசியல் அர்த்தங்களால் அவற்றின் வரைவடிவங்களைச் சொற்களாக்குபவள். உடல் மொழியும் பாலியல் மொழியும் வேறு வேறு என்பாள். உடல் மொழியினும் பாலியல் மொழி சமூக, அரசியலின் கவித்துவ வெளிகளைக் கண்டடையும் மொழி என்பாள். பாலியல் மொழி அரசியல் கருத்தியல்களைச் செரித்து உள்வாங்கிய உடலின் மொழி என்பாள். இது சரியாக இருக்கலாம்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 திங்கள், ஏப்ரல் 19, 2010\nபொட்டிலடிக்கும் ஆரம்பம். இன்னும் சற்று எளிய மொழியைப் பயன்படுத்தலாம் என்கிற தாழ்ந்த கருத்தை முன்வைக்கிறேன். முத்தழகு என்கிற எடுத்துக்காட்டும் அதற்கான உங்கள் கடைசி வரியான // இது சரியாக இருக்கலாம் // என்கிற multi posibiliy ஏற்புத்தனம் மும் தான் இதன் மொத்த அடித்தளமாய் இருக்க வேண்டும். நன்றி.\n20 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 10:07\nநல்ல செறிவான பதிவு. மிகத் தீரமான கருத்துக்கள்.\n21 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 10:05\n///பாலியல் சுதந்திரமும் .......வ்வளவு முரண்பாடாயிருக்கிறது பாருங்கள், தோழியரே\n29 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:12\nகருத்து எவ்வளவு நன்றாக இருந்தாலும் -எளிய நடையில் சொன்னால் தான் -வெகு ஜன மக்களை உங்கள் கருத்து அடையும்\n29 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 10:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடலை மொழியும் மரபு - 4\nஅந்தத்தாய் ஒரு கொலை செய்தாள்\nகாபியும் வன்முறைத் திரைப்படங்களும் - 3\nபெண்ணுடல் ஓர் இயந்திரம் - 3\nஆண் உடல் - 2\nஉடலைப் ப��்றிய குறிப்புகள் - 2\nஉடலைப் பற்றிய குறிப்புகள் - 1\nகவிதை ஒரு மோகனமான கனவு\nதமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் - 2\nஎனது உடல் இரைச்சலுடைய நகரம்\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/5-10-5-sloga-5-5-trees-are-supperior.html", "date_download": "2018-07-19T11:56:34Z", "digest": "sha1:4EXP4NBWW7OSDAB6BMPY3G7QNDNTKUQF", "length": 19913, "nlines": 187, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: விருட்ச ஆயுர்வேதம் ஸ்லோகம்", "raw_content": "\nLabels: மரங்கள் நமக்கு வரங்கள்\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இய��்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=31631", "date_download": "2018-07-19T11:32:05Z", "digest": "sha1:KRV7Q5HCSP6S76PJMIDZ3LXCBKJCK7WD", "length": 8989, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்தின் அநேக இடங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்! - Tamils Now", "raw_content": "\nடெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் திறக்கிறார் காவேரி ஆணையம் என்ன செய்கிறது காவேரி ஆணையம் என்ன செய்கிறது - மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின் - நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு - மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின் - நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு மத்திய மந்திரி பொறுப்பற்ற பேச்சு - ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்; உண்மையை மறைக்க விரும்புகிறது பாஜக மத்திய மந்திரி பொறுப்பற்ற பேச்சு - ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்; உண்மையை மறைக்க விரும்புகிறது பாஜக ராகுல் ட்விட் - அம்பேத்கர் நூலகம் அமைக்க முழக்கமிட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: ஜேஎன்யூ நிர்வாகம்\nதமிழகத்தின் அநேக இடங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில், வட கிழக்கு பருவமழை காலம் வருகிற 31-ந் தேதி வரை உள்ளது. பொதுவாக, தென் மேற்கு பருவ மழையை விட, வட கிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகத்தில் அதிக மழை பெய்யும். இந்த ஆண்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்துள்ள நிலையில், சென்னை உள்பட வட மாவட்டங்களில் போதுமான அளவு மழை பெய்யவில்லை.\nகடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஆங்காங்கே அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று அதிகாலை மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரத���திலும் சற்று பலத்த மழை பெய்தது.\nஇந்நிலையில், தமிழகம்-இலங்கை இடையே வங்க கடலில் இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று (வியாழக்கிழமை) தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், சென்னை உள்ளிட்ட வட சென்னை மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .\nஇன்று மழை காற்றழுத்த தாழ்வு நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென் மேற்கு பருவ மழை மழை மழை பெய்யும் வட கிழக்கு பருவமழை வானிலை ஆய்வு வானிலை ஆய்வு மையம் 2014-12-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇடியுடன் கூடிய மழை தமிழகம், புதுச்சேரியில் பெய்ய வாய்ப்பு;வானிலை ஆய்வு மையம்\nதென் மேற்கு பருவ மழை ஆரம்பம்; மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடியை தாண்டியது\nகாற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட: 3-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது\nபுதிய காற்றழுத்த தாழ்வுநிலை; மழை இல்லை ;சென்னை வானிலை ஆய்வு மையம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ஒரு சம்பவத்துக்கு 200-க்கும் மேற்பட்ட வழக்கா\nதெலுங்கு தேச எம்.பியே நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணிக்கிறார்;விலைபோகும் எம்பிக்கள்\nஅம்பேத்கர் நூலகம் அமைக்க முழக்கமிட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: ஜேஎன்யூ நிர்வாகம்\nஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்; உண்மையை மறைக்க விரும்புகிறது பாஜக\nநீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு மத்திய மந்திரி பொறுப்பற்ற பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/11/03/news/27035", "date_download": "2018-07-19T11:04:43Z", "digest": "sha1:HIHBNCC4TB5OT2WQNDW3KS2WL5NZXIT3", "length": 8567, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவுக்கு மூன்று ரோந்துப் படகுகளை வழங்குகிறது அவுஸ்ரேலியா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுக்கு மூன்று ரோந்துப் படகுகளை வழங்குகிறது அவுஸ்ரேலியா\nNov 03, 2017 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்காவுக்கு மூன்று ஸ்டபி கிர��ப்ட் வகை படகுகளை (Stabicraft vessels) அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது. நேற்றுக்காலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், சிறிலங்கா அஅதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த போது இதற்கான உறுதி மொழியை அளித்துள்ளார்.\nசிறிலங்கா கடலோரக் காவல்படையின் பயன்பாட்டுக்காகவே, அதிவேக ஸ்டபி கிராப்ட் படகுகளை அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது.\nஇவை, கரையோர நடவடிக்கைகளுக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவுஸ்ரேலியப் பிரதமர் கூறியுள்ளார்.\nஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகள், போதைப்பொருட் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்காவின் ஒத்துழைப்புக்கும் அவுஸ்ரேலியப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே சிறிலங்கா கடற்படைக்கு மூன்று அதிவேக ரோந்துப் படகுகளை அவுஸ்ரேலியா வழங்கியிருந்தது. இந்தநிலையில், மேலும் மூன்று அதிவேக ரோந்துப் படகுகளை வழங்கவுள்ளது.\nTagged with: அவுஸ்ரேலியா, ஸ்டபி கிராப்ட்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி 0 Comments\nசெய்திகள் அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம் 0 Comments\nசெய்திகள் கோ��்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\nமனோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\nமனோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\nமனோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\nமனோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/259", "date_download": "2018-07-19T11:33:00Z", "digest": "sha1:NBKL6IVFQRXYG5BPRNUPGD3FDTRG55JL", "length": 14547, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின்நவீனத்துவம் புதிதா?- ஒரு கடிதம்", "raw_content": "\n« ஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்\nமகாபாரதம் -ஒரு கடிதம் »\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nபின் நவீனத்துவம் போன்ற புத்தம்புதிய விஷயங்களை உடனுக்குடன் இறக்குமதிசெய்து படித்தால்தான் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியுமா என்ன… பின்நவீனத்துவ எழுத்துமுறைகள் இப்போது பிரபலமாக இல்லை என்று நீங்களே இன்னொரு கட்டுரையில் சொல்கிறீர்கள்.. [தமிழ்ச்சிறுகதை பற்றிய டைம்ஸ் மலர் கட்டுரையில்]\nநான் இப்பகுதியில் பின்நவீனத்துவம் குறித்து எழுதவந்ததைப்பற்றி விளக்கவேண்டும். ஒருவர் ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றிய ஒரு விவாதத்தின் பகுதியாக கேட்ட வினாவுக்கு பதிலிறுத்தேன், அவ்வாறு மேலும் சில கேள்விகளுக்கு பதிலிறுக்க நேர்ந்தது.\nபின்நவீனத்துவம் ஒரு ‘அதிநவீன’ கோட்பாடு அல்ல. சிலகாலங்களுக்கு முன் மொழியியல் மானுடவியல் உளவியல் முதலிய சில துறைகளில் உருவான சில புதிய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு சமகாலச் சிந்தனைகளை விளங்கிக்கொள்ள முயன்றார்கள். அவ்வாறாக உருவகிக்கபப்ட்ட ஒரு கண்ணோட்டமே பின்நவீனத்துவம் என்பது. இன்றைய சூழலில் பழைய நவீனத்துவ சிந்தனைப்போக்கின் பல அம்சங்கள் காலாவதியாகிவிட்டன என்றும், இன்றைய சிந்தனைகளின் பின்நவீனத்துவப் போக்கு உள்ளது என்றும், முன்வைக்கபப்ட்டது. அந்த ஆய்வுகளையே நாம் பின்நவீனத்துவ அணுகுமுறை என்கிறோம்.\nஇந்தக் கோணத்தில் நமது சமகால சிந்தனைகளையும் எழுத்துக்களையும் ஆராய்வது நமக்கு சில புதிய விளக்க���்களை அளிக்கக் கூடும். ஆகவே அதை அறிந்துகொள்வது அவசியமானது. மற்றபடி இவை இன்றைய ‘புத்தம்புது’ சிந்தனைகள் என்றோ , ‘உலகமே பின்நவீனத்துவ பாணியில் சிந்திக்கிறது’ என்றோ சொல்வது மிக அபத்தமான கூற்றாகும்.\nசென்ற பத்துவருடங்களில் பின்நவீனத்துவ சிந்தனைகள் சார்ந்து முன்வைக்கப்பட்ட அணுகுமுறைகளும் கருத்துமுறைகளும் பெரும்பாலும் மறுக்கபப்ட்டுவிட்டன. பின்நவீனத்துவ அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு எழுதப்பட்ட சோதனை இலக்கிய முயற்சிகள் பின்தங்கிவிட்டன. இன்று அது ஒரு ‘மோஸ்தர்’ அல்ல. ஒரு அறிவுத்தளம் மட்டுமே.\nஇலக்கியப் படைப்புகளை படித்து அறிய கோட்பாட்டு அறிமுகமே தேவை இல்லை. படைப்புகள் அளிக்கும் மொழிச்சித்திரத்தை வாழ்க்கையனுபவம்போலவே விரித்துக் கொள்ளும் கற்பனை தேவை. அப்படைப்புகளில் வெளிபப்டும் நுட்பமான உள்ளர்த்தங்களை வாழ்க்கையில் போட்டுப்பார்த்து அறியும் கூர்மை தேவை. நவீன இலக்கிய வடிவங்களில் ஓர் அறிமுகம் இருப்பதும் நல்லது.\nஆனால் இலக்கியப் படைப்புகளை சமூக,அரசியல் சூழல்களில் வைத்து மதிப்பிட்டு நோக்கவும் விவாதிக்கவும் கோட்பாடுகளின் உதவி தேவை. பெரும்பாலும் இக்கோட்பாடுகள் மொழியியல் தத்துவம் மதம் அரசியல் அறிவியல்துறைகள் போன்று இலக்கியமல்லாத ஒரு துறையின் கருவிகளை இலக்கியத்தின் மீது பிரயோகித்துப் பார்ப்பவையாகவே உள்ளன. இலக்கியம் மீதான பல கோணங்களினாலான ஆய்வுக்கு இவை உதவும். அவ்வளவுதான்.\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nTags: இலக்கியம், கடிதம், பின்நவினத்துவம\nஉள்ளங்கை » Blog Archive » அறிவு ஜீவிகளின் செல்லப் படுத்தல்கள்\n[…] ஜெயமோஹன் தன் வலைப்பதிவில் எழுதியுள்ள ஒரு விளக்கத்திலிருந்து பிய்த்த […]\nஎஸ்.வி.ஆர் சொல்லும் ‘சிக்கல்கள்’ என்ன\nராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கர��த்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t1811-topic", "date_download": "2018-07-19T11:36:56Z", "digest": "sha1:RDM6QL4GQVEPSY5DF52Q6ZMW7KF25VMC", "length": 14549, "nlines": 132, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சினேகாவின் ஆசை!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nநடிகை சினேகாவிற்கு ஒரு சின்ன ஆசை அது என்ன என்பதை அவரே சொல்கிறார், கேளுங்கள். சரத்குமாருடன் \"விடியல்', பிரசாந்துடன் \"பொன்னர் சங்கர்', தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் ஒரு படம் என தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்.\nபத்து வருடங்களாக நல்ல படங்களில், நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். எனக்குப் பிடித்த நடிகர்களில் கமல்ஹாசன் ரொம்பவும் குறிப்பிடத்தக்கவர். நடிகைகளில் ராதிகாவை ரொம்பப் பிடிக்கும். ரஜினி ஸாரின் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆனால் அது எப்போது நிறைவேறும் என்பது எனக்குத் தெரியவில்லை.\nநிறைய பேர், \"உங்களுக்கு எப்போது திருமணம்'' என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு எனக்கு நடிப்பில் மட்டும்தான் ஆர்வம். திருமணம் அதற்கான நேரம் வரும்போது நடக்கும். அது காதல் திருமணமா, அல்லது பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணமா என்பதை இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது'' என்கிறார்.\nசொல்லிட்டாலும் விளங்கிடும் போய் ஒழுங்க நடிச்சுக்காட்டு பார்கிறம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகி���ும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kingrajasc.blogspot.com/2012/11/blog-post_2707.html", "date_download": "2018-07-19T11:37:46Z", "digest": "sha1:NYF234CTJTGFXFJWGJXUBX4UTSQFWJVM", "length": 7297, "nlines": 41, "source_domain": "kingrajasc.blogspot.com", "title": "இப்படிக்கு இஆரா...: புனித அந்தோணியார் பஜனைக்கோவில்_நெடுங்கம்பட்டு", "raw_content": "\nசனி, நவம்பர் 17, 2012\nநெடுங்கம்பட்டு கிராமத்தில் மூதாதையர்களால் துவக்கப்பட்டு இன்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் ”புனித அந்தோணியார் பஜனைக்கோவில்”மிகவும் பழமை வாய்ந்த்தது. பல்வேறு நிலைகளில் இருந்த இக்கோவில்23.02.1993அன்று புதுப்பிக்கப்பட்டு ஆண்டுதோரும் ஆடிமாதம் இரண்டாம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் திருத்தேர் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.\nதிங்கட்கிழமை அன்று ஊருக்கு தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் முன்னோர்களுக்கு காட்சியளித்த இடத்தில் சிறப்பு வழிபாடும், பெரிய ஏரியில் அன்னதானமும் வழஙகப்படும்.வழிபாடுகளில் யாவரும் கலந்துக்கொள்ளலாம். இவையாவும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெறும்.\nசெவ்வாய் கிழமை காலை 7.30 மணியளவில் பஜனைக்கோவிலில் சிறப்பு திருப்பலி நடைபெறும். தொடர்ந்து அன்று முழுவதும் சிறப்பு ஜெப வழிபாடுகள் செய்யப்படும். மாலை9.00 மணியளவில் வாணவேடிக்கைகளுடன் புனித அந்தோணியாரின் ஆடம்பரத் திருத்தேர்பவனி தொடங்கி அதிகாலையில் தேர்பவனி முடிவுபெறும்.\nதொடர்ந்துவரும் ஞாயிறு அன்று திருவிழாவிற்கான வரவு செலவுகள் சரிபார்க்கப்பட்டு திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட\nநிறை -குறைகளை கேட்டறிந்து அடுத்த ஆண்டுகளில் குறைகள் களைய கருத்துக்கள் கேட்டறிந்து குறிப்பெடுத்து ஆவணப்படுத்தப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nJohn Simon C திங்கள், நவம்பர் 19, 2012 8:57:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅரசியல் அறிவியல் ஆயிரம் அனுபவம் ஆன்மீகம் இளைஞருக்காக உறவினரின் சந்தோஷ செய்திகள் உறவினரின் துக்க செய்திகள் எண்ணமும் எழுத்தும். கட்டுரை கவிதைகள் காதல் காலண்டர் பொன்மொழிகள் குழந்தைகள் தினவிழா கோவில்கள் சிந்தனைக்கு... சிறுகதைகள் சின்ன வயது சந்தேகங்கள் தத்துவம் தேர்தல்களம் நகைச்சுவை நட்பு நெஞ்சம் மறப்பதில்லை நெடுங்கம்பட்டு பல்சுவை பழமொழிகள் பஜனைக்கோவில் பஜனைக்கோவில் ( பாடல்கள் ) பிறந்த நாட்களை அறிவோமா புரியல.... பேசும் படங்கள் பொது பொது அறிவு மருத்துவம் ஜோக்ஸ் ஹைக்கூ Forms Funny Funny pictures Gk My family PHOTOS School VIDEOs YOGA\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://manakkuthirai.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-19T11:15:00Z", "digest": "sha1:BVGNXHJTDAJMMNI7S2VI4EHWEEC46QM3", "length": 4028, "nlines": 85, "source_domain": "manakkuthirai.blogspot.com", "title": "மனக்குதிரை: மழை விருந்தாளி", "raw_content": "\n◘◘ எரியும் நீராய் என்னுள் நான் ◘◘\nஎழுதியது தினேஷ் பழனிசாமி வகைகள் கவிதை, கீச்சுகள், ஹைக்கூ நாள் Wednesday, August 07, 2013\nபயனளித்த பண்ணைக் குட்டை- நீரின்றி அமையாது உலகு\nநான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே...\nஊட்டிக்குப் பயணம்…. சுற்றுலாவாக அல்ல....\nஏம்பா..... இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை கூடவா பேசாம(...\nஈரோடு புத்தகத் திருவிழா 2013 - துவக்க நாள் 03.08.1...\nபயனளித்த பண்ணைக் குட்டை- நீரின்றி அமையாது உலகு\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்- பாரதி கிருஷ்ணகுமார்\n‘ஒன்பதாம் திசை’ சிறுகதைத் தொகுப்பு வாசித்த பின்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://photography-in-tamil.blogspot.com/2009/11/blog-post_17.html", "date_download": "2018-07-19T11:38:33Z", "digest": "sha1:KSGVNXZ4HTGHEI5EQWVFM3CPA5CGLZWJ", "length": 9432, "nlines": 217, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "சில நீட்சிகள் | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nபுகைப்பட ஆர்வலர்களுக்கான இலவச நீட்சிகள் FireFox உலாவியில் பல இருக்கின்றன. நான் அதிகம் பாவிக்கும் இரண்டு இங்கே\nபுகைப்படங்களை தேடுவதற்கான நீட்சி இது. ஒரு படத்தை அல்லது படத்துக்கான நிரலை அளித்தால், இதே போன்ற படங்களை வலையில் தேடித் தரும்.படத்துக்கான Google என்று கூறலாம். உதாரணதிற்கு எனது இந்தப் படத்தை இங்கே தேடினால், ஆறு இடங்களில் சுட்டு போட்டு இருக்கிறார்கள் என்று காட்டுகிறது .\nஇவர்கள் மேல் திருட்டு வழக்குப் போடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன் :-)\nபிகாஸாவில் Screen Shot எடுப்பது பற்றிய இடுகை இங்கே. இது அதை விட எளிது. FireFoxல் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.\nசில அழகான பிற்சேர்க்��ைகளும் செய்ய முடியும்.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஉள்ளரங்கு புகைப்படக் கலை 001\n2009 நவம்பர் மாத போட்டி, நிபந்தனைகள் சில தளர்வுகள்...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://suriyakathir.com/2017/05/23/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1/", "date_download": "2018-07-19T11:12:35Z", "digest": "sha1:EJBTDJ5NJ7CTDA5N47QMN2F5BBQTV3NM", "length": 13403, "nlines": 112, "source_domain": "suriyakathir.com", "title": "சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம் – sangili pungili kathava thora review – Suriya Kathir", "raw_content": "\n»அபியும் அனுவும் abiyum anuvum பி.ஆர்.விஜயலட்சுமி\n»கருப்பி புத்தக விமர்சனம் – karupi book review\n»நாக் ஸ்டூடியோஸ் – knack studios\n»அண்டாவ காணோம் – andava kanom\n»வனமகன் விமர்சனம் – vanamagan review\n»ரங்கூன் விமர்சனம் – Rangoon Review\nசங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம் – sangili pungili kathava thora review Reviewed by Momizat on May 23 . எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ முடியாமல் செத்துப்போன மனிதரின் ஆவிக்கும், எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசைப்படும் இளைஞனுக்கும் இடையே நடக்கிற யுத்தமே ‘சங எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ முடியாமல் செத்துப்போன மனிதரின் ஆவிக்கும், எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசைப்படும் இளைஞனுக்கும் இடையே நடக்கிற யுத்தமே ‘சங Rating: 0\nசங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம் – sangili pungili kathava thora review\nஎதிர்பார்த்த வாழ்க்கையை வாழ முடியாமல் செத்துப்போன மனிதரின் ஆவிக்கும், எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசைப்படும் இளைஞனுக்கும் இடையே நடக்கிற யுத்தமே ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் கதைக் கரு. இதை காமடி முலாம் பூசி திரைக்கதையாக நமக்குத் தந்திருக்கிறார் இயக்குநர் ஐக்.\nசிறு வயது முதலே வாடகை வீட்டில் வசித்து வந்து, அதனால் ஏற்பட்ட அவமானங்களையும், வலிகளையும் துடைத்தெறிய, எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும். அந்த வீட்டில் தன் அம்மாவை குடியமர்த்தி, ராணிபோல் பார்க்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் உழைத்து வரும் ஜீவா (படத்தில் வாசு), தான் விரும்பியதுபோலவே ஒரு மாளிகை வீட்டை வாங்க முடிவெடுக்கிறார். ஆனால், வீட்டின் விலையோ மிக அதிகம். எனவே, விலையைக் குறைத்து வாங்கவேண்டும் என்பதற்காக, அந்த வீட்டில் பேய் இருப்பதுபோல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, வீட்டை யாருமே வாங்க விடாமல் தடுத்து, இறுதியாக, தான் விரும்பிய விலைக்கே அந்த மாளிகையை வாங்கி, அங்கே அம்மாவோடு குடியேறுகிறார்.\nஆனால், “இந்த வீடு எனக்குச் சொந்தமானது. நீங்கள் சட்டத்திற்குப் புறம்பாக இந்த வீட்டை வாங்கியிருக்கிறீர்கள். எனவே, இந்த வீட்டில் நீங்கள் குடியிருக்க முடியாது” என ஜீவாவையும், அம்மாவையும் விரட்ட முனைகிறார் அங்கே ஏற்கனவே குடியிருந்து வரும் தம்பி ராமையா.\nஒரு வழியாக பஞ்சாயத்து பேசி, இரண்டு குடும்பத்தாரும் அதே வீட்டில் தனித்தனியாக வசித்துக் கொள்ள முடிவெடுக்கப்படுகிறது. ஆனால், ஒருவரை ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான திட்டமும் மறைமுகமாக நடத்தப்படுகிறது.\nவீட்டை குறைந்த விலையில் வாங்குவதற்காக எப்படி பேய் நாடகத்தை அரங்கேற்றினாரோ, அதே பாணியை மீண்டும் கடைபிடித்து, வீட்டில் பேய் இருக்கிறது என்பதற்கான நாடகங்களை ம���ண்டும் அரங்கேற்றி, தம்பி ராமையாவை வீட்டை விட்டு வெளியேற வைக்கிறார் ஜீவா. இந்த பேய் நாடகத்திற்கு ஜீவாவிற்கு உதவி செய்கிறார் சூரி. இதற்கிடையில் தம்பி ராமையாவின் மகள் ஸ்ரீதிவ்யாவுக்கும் ஜீவாவுக்கும் காதல் அரும்பிக் கொள்கிறது.\nதம்பி ராமையா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அந்த வீட்டில் நிஜமாகவே பேய் இருக்கிற விஷயம் தெரிய வருகிறது ஜீவாவிற்கு. மீண்டும் தம்பி ராமையாவை வீட்டிற்கு அழைத்து வந்து, இரண்டு குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தால், அந்தப் பேய், வீட்டைவிட்டு வெளியேறிவிடும் என குறி சொல்கிறார் கோவை சரளா.\nஜீவாவின் சமாதான அழைப்பை ஏற்று தம்பி ராமையா மீண்டும் அந்த வீட்டில் வசிக்க முடிவெடுத்தாரா, இரண்டு குடும்பத்தாரும் ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்களா என்பதைச் சொல்கிறது க்ளைமாக்ஸ்.\nஇது திகில் படமா இல்லை நகைச்சுவைப் படமா என்கிற கேள்விக்கு எவரும் பதில் சொல்ல முடியாதபடிக்கு, இரண்டையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார் இயக்குநர் ஐக்.\nபேய்ப்படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது என்கிற பொதுவான சினிமா விதியை இந்தப் படமும் மீறவில்லை.\nஜீவாவின் அம்மாவாக வரும் ராதிகாவின் நடிப்புக்கு சபாஷ்.\nவழக்கமான தமிழ்ச் சினிமா நாயகிக்கான வேடத்தை, எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் அப்படியே செய்து முடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா.\nசூரியின் காமடிகளில் சில ரசிக்கும்படியாகவே இருக்கின்றன.\nதம்பி ராமையாவின் இரட்டை அர்த்த வசனங்கள், குடும்பத்தோடு படம்பார்க்க வருபவர்களை முகம் சுழிக்க வைக்கும்.\nபேய்ப் படத்திற்கான பின்னணி இசையை சிறப்பாகவே வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் விசால் சந்திரசேகர்.\nசத்தியன் சூரியனின் ஒளிப்பதிவு பாராட்டும்படியாக இருக்கிறது.\nஇயக்குநர் சொன்னதுபோலவே தனக்கான பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் ஜீவா.\nவழக்கமான பேய்க் கதை என்பதாலும், நம்பும்படியான காட்சி அமைப்புகள் இல்லை என்பதாலும், படத்தோடு முழுமையாக ஒன்ற முடியவில்லை.\nபேயாக வரும் ராதாரவியால் எவ்வித பயமும் வரவில்லை.\nஜீவா, ஸ்ரீதிவ்யா காதலில் அழுத்தம் இல்லை.\nகாமடிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், அதுவே படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது.\nஅபியும் அனுவும் abiyum anuvum பி.ஆர்.விஜயலட்சுமி\nஅபியும் அனுவும் abiyum anuvum பி.ஆர்.விஜயலட்சுமி\nகருப்பி புத்தக விமர்சனம் – karupi book review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_4110.html", "date_download": "2018-07-19T11:54:38Z", "digest": "sha1:TZPIVV5ESAOU6GWWT6K6SOPTHR3AEZ24", "length": 32947, "nlines": 205, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்!!!!", "raw_content": "\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஉலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு\nபாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.\nஅமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.\nஇந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.\nஇந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.\nஇது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்\nவிஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற, அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன.\nகார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.\nஎளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.\nபிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.\nஇதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடர���ஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார் ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். \"தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்\nஅதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-\"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான் கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான் பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது.\"\nஅணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில்\nசற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:\n\"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்ட���யும் இணைத்துள்ளேன்.\"\nநவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.\nவிஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)\nஇதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)\nசெர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.\nஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீ��்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2013/", "date_download": "2018-07-19T11:20:20Z", "digest": "sha1:SLDJIFVK7IFQBJCTHEE4P3MI4T5LGRW4", "length": 163637, "nlines": 2268, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: 2013", "raw_content": "\nபோதும் நிறுத்து உந்தன் பெண்ணின் படைப்பு\nபெண் பூவை காட்டி ஆளைத்தின்னும் சேலை நெருப்பு..\nபெண்ணின் சொல்ல���க்கு அட என்ன மதிப்பு\nஅவள் சொல்லுக்கடியில் பொய்யும் நஞ்சும் கொட்டிக்கிடக்கு\nநெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே\nஆண்கள் எல்லாம் மணல் வீடுகள்\nபெண்கள் வந்து விளையாடுங்கள் விளையாடுங்கள்\nபெண்கள் வந்து விளையாடுங்கள் விளையாடுங்கள்\nபூவுக்கு அடியிலும் நாகமுண்டு இது விஞ்ஞானம் சொல்கின்ற உண்மை\nபூவைத்தும் நாகங்கள் அலைவதுண்டு இது என்ஞானம் காண்கின்ற உண்மை\nகாதல் வந்தால் குயிலைப் போல கொஞ்சி கொஞ்சி கத்துவாள்\nகாலம் வந்தால் கொக்கை போல கண்ணைமட்டும் கொத்துவாள்.\nஇறைவா பூமி வந்தால் நீ பெண்ணை கண்டு ஓடுவாய்\nபாவம் ஆண்கள் என்று நீ சொல்லி சொல்லி பாடுவாய்\nபெண் என்றால்.......... எல்லாம் பொய்கள்தானா..........\nநெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே\nகண்கள் கலங்குதே கலங்குதே இது நியாயமா...மா.....\nகாற்றென நானும் இருந்தேனே பெரும்புயலாக நீ என்னை செய்தாய்,\nபூவென நான் உன்னை நினைத்தேனே ஒரு பூகம்பம் போல் வந்து சென்றாய்.\nசந்தர்ப்பங்கள் மாறும்போது சத்தியத்தை கொல்வதா\nபச்சோந்திக்கும் உங்களுக்கும் பந்தபாசம் உள்ளதா\nமிருகம் என்னில் ஒன்று நான் உன்னால் இன்று கண்டேனே\nகாதல் இல்லா கிரகம் இனி என்னைக்கொண்டு சேர்ப்பேனே.\nநெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே\nகண்கள் கலங்குதே கலங்குதே.. இது நியாயமா...மா.....\nபோதும் நிறுத்து உந்தன் பெண்ணின் படைப்பு\nபெண் பூவை காட்டி ஆளைத்தின்னும் சேலை நெருப்பு..\nபெண்ணின் சொல்லுக்கு அட என்ன மதிப்பு\nஅவள் சொல்லுக்கடியில் பொய்யும் நஞ்சும் கொட்டிக்கிடக்கு\nநெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே\nஆண்கள் எல்லாம் மணல் வீடுகள்\nபெண்கள் வந்து விளையாடுங்கள் விளையாடுங்கள்.....ஏய்....\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nபோடு போடு சவுண்டு பட்டையதான் உரிக்கனும்டா\nஹேய் ஆடு ஆடு ரவுண்டு செவில் எல்லாம் பிரிக்கனும்டா\nஹேய் வானத்துக்கே வெடி வச்சு பார்ப்போமடா\nஹேய் மேகமெல்லா மேளத்த வாசிக்க ம்\nதாளத்த வாசிக்க ஆட்டத்த ஆரம்பிப்போம்…\nஅடடாடா ஆரம்பமே… இப்போ அதிருடுடா…\nஅடடாடா ஆகாயமே… இப்போ அலருதுடா…\nஹேய் சொல்லி வச்சு அடிச்சா\nகை புள்ளி வச்சு புடிச்சா\nநம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே\nஏமாந்தவனாம் அட போடா உன் சட்டமே\nநீ ஏத்தி பூவா வெதச்சாலே\nஅந்த வித கடவுள் கொடுப்பானுடா…\nஅடடாடா ஆரம்பமே… ஹோய் இப்போ அதிருடுடா… ஹோய���\nஅடடாடா ஆகாயமே…ஹோய் இப்போ அலருதுடா… ஹோய்\nபோடு போடு சவுண்டு பட்டையதான் உரிக்கனும்டா\nஹேய் ஆடு ஆடு ரவுண்டு செவில் எல்லாம் பிரிக்கனும்டா\nஹேய் நேத்திருந்த ராஜாதி ராஜனெல்லாம்\nஇன்னைக்கு கனவில்ல இதுதான்டா நிஜமானது\nஹேய் உன்னை சுத்தி பூ போட\nஆளிருக்கும் புகழ் பாட வரைக்கும்\nநாம் ஆசைபட்ட அதுக்காக வாழ்த்துனும்டா\nஅடடாடா ஆரம்பமே… இப்போ அதிருடுடா…\nஅடடாடா ஆகாயமே… இப்போ அலருதுடா…\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nஇல்ல நெஞ்சுக்குள்ளே இங்கிலிஷ் தமிழ் கட்சி\nஎன் தேகத்திலே ஸ்பேனிஷ் நிறம் மச்சி\nதேன் திக்கின்ற வெயினிஷ் இதழ் மச்சி\nஉன்னை சுத்தி ஒரு இருட்டு திரை தைச்சி\nசில முத்தங்களில் நெருப்பில் சுட வச்சி\nநான் தந்ததுமே அதிரும் உன் உச்சி\nயார் எனக்கும் மேலே இல்லை\nநான் அடையா முடிய எல்லை\nஒரு ஆணை போல அனுதினம் மேரேஜ்ச்\nஎது வேனுன்னாலும் எல்லைகள் மீறுச்சு\nயார் சொன்ன போதும் ஆட்டங்கள் ஆடுச்சு\nஉன்னை சொட்டுவிடும் தீயா இதழ்ச்சு\nஉன்னை காயம் செய்யும் காலை குணம் வச்சு\nஎன்னை தீண்டிவிட்டாய் விசமாய் இருந்துச்சு\nநான் மென்மை இல்லா மடல்\nதிமிர் மட்டும் தான் என் கண்கள்\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nமுடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி\nமுடியாதுனு சொல்ல கூடாது மை பேபி\nமுடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி\nமுடியாதுனு சொல்ல கூடா மை பேபி\nகன்ஃபிஸும் ஆச்சு பீல் பண்ணிட்டேன்\nடபுள் எக்ஸல் ஆக லவ் பண்ணிட்டேன்\nமுடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி\nமுடியாதுனு சொல்ல கூடாது மை பேபி\nஉன்னை நிலவுனு ரிலா விட்டேன்\nஅங்க இங்க என்ன தொடவா செஞ்சேன்\nகவிதை கிவிதை என்ன பீலிம்மா போட்டேன்\nஅவள இவள என்ன கதையா விட்டேன்\nஉரியா கயிறா என்னு எத நான் சொன்னே\nராமன் நானு நானும் சொல்லமாட்டேன்\nஆனா உன்னை தாண்டி செல்லமாட்டேன்\nஅடி உன்ன என்ன டேட்டிங்கா கூப்பிட்டேன்\nமிட் ரேஞ்சுல மீட்டிங்கா கேட்டேன்\nதண்ணி போடுற பார்டிக்கா கூப்பிட்டேன்\nவீக் எண்டுல வீட்டுக்கா கூப்பிட்டேன்\nஒரு மாதிரி உன்னையா பாத்தேன்\nரெண்டு பேருல ரூம்மா போட்டேன்\nலவ்வ சொல்லு சொல்லு இப்ப தானே\nசொன்னதெல்லாம் செய்யலாம் அப்புறம் தானே\nமுடியாதுன்னு சொல்ல முடியலையே… ஐ லவ் யூ\nமுடியாதுன்னு சொல்ல முடியலையே… ஐ லவ் யூ\nஉன்னால ஹார்ட்டும் சுருங்கி போச்சு\nலவ் பண்ண ஏனோ ஏங்கிருச்சு\nஉன் பேரை சொல்லி துடிச்சிருச்சே...\nஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது...\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nபாடியவர்கள்: ரஞ்சித், ஸ்வேதா மோகன், விஜய் யேசுதாஸ்\nஹேய் அலையுது கலையுது மறையுது தெரியுது\nஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது\nமேல் எல்லா வெடிக்குது வாடா\nமேல் எல்லாம் தெரிக்குது போடா\nமஞ்சள் வெயில் பச்ச மரம் டா…\nமேல் எல்லா வெடிக்குது வாடா\nமேல் எல்லாம் தெரிக்குது போடா\nமஞ்சள் வெயில் பச்ச மரம் டா…\nஎவனும் தனியா பொறந்து வரல\nதடுக்கி விழுந்தா திரும்பி எழுந்தா\nபோடா.. அதபத்தி எனக்கு என்னடா…\nபோ போ போ போடா\nஹேய் அலையுது கலையுது மறையுது தெரியுது\nஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது\nநம் நட்ப சேத்து சேத்து\nஅதில் நட்பே வர்ணம் ஆச்சு\nநீ தான்டா எந்தன் மூச்சு\nஅங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே\nஅங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே\nஅங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே\nமிளகாப்பூ போல என்னுள ஆ…\nஅங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே\nஅங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே\nஅங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே\nஅவுக அட அவுக உள்ள மனசில் நுழைஞ்சு மருக\nகழுக இந்த கழுக அவ கடிச்ச நினைச்சு கருக\nஎன் நினைப்பில் குதிக்கிறேனே என் மனசில் குளிக்கிறானே\nஎன்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே\nஎன் மனசு கன்னாபின்னா ஆசையினாலே\nஅத்துக்கிட்டு ஓடுது பார் உங்கப்பன் தன்னாலே\nஎன் மனசு கன்னாபின்னா ஆசையினாலே\nஅத்துக்கிட்டு ஓடுது பார் உங்கப்பன் தன்னாலே\nவர வர அடிக்கடி சிரிக்கிறேன்\nநகம் கடிக்க கத்து தந்தானே\nஅங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே\nஅங்யாடே அங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே\nஅங்யாடே அங்யாடே ஹேய் ஏய் அங்யாடே அங்யாடே...\nஉன்னாலே மெய் மறந்தேன் நின்றேனே\nமை விழியில் மயிலோடுதான் வந்தேனே\nஇடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே\nமொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே…\nஇது போதும் ஒஹோ… எப்போதும் ஒஹோ…\nஉன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே\nஇது போதும் ஒஹோ… இது போதும் ஓஹோ ஹோ…\nஉன்னாலே மெய் மறந்தேன் நின்றேனே\nமை விழியில் மயிலோடுதான் வந்தேனே\nஇடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே\nமொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே…\nஇது போதும் ஒஹோ… எப்போதும் ஒஹோ…\nஉன் தோழில் சாய்ந்து கொள்ள வந்தேனே\nஇது போதும் ஒஹோ… இது போதும் ஓஹோ ஹ��…\nசில்லென ஒரு மழை துளி...\nஇசை: ஜி.வி. பிரகாஷ் குமார்\nபாடியவர்கள்: அல்போன்ஸ் ஜோசப், கிளிடன் சிரிஜோ, ஜி.வி.பிரகாஷ் குமார்\nதனே நா நானே நா நானே….\nசில்லென ஒரு மழை துளி\nஅட கருப்பட்டியே என் சீனி கெழங்கே\nஎன் கண்ணு குட்டியே கம்மாக் கரையில் நீ\nகண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா\nகொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு\nஎன்று என் விழிகள் அய்யய்யோ என்கிறது\nகோடை கால மழை வந்து போன பின்னும்\nசாலை ஓர மரம் தன்னாலே நீர் சொட்ட\nஹோ ..ஹே .. உன்னாலே ..உன்னாலே…\nஅடி பெண்ணே… அடி பெண்ணே காத்திருந்தால்\nகாதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி\nமீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா\nமீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா\nநிழல் கூட அழகின் கதவே\nஒரு நாளும் குறையாத ஒஹோ\nபுது போதை கண்ணோரம் தந்தாயே\nஅணைத்தாலும் அணையாத ஒரு தீயாய்\nஹே பேபி என் ஹார்ட்ட விட்டு...\nவரிகள்: கானா பாலா, நா.முத்துக்குமார்\nஇசை: ஜி.வி. பிரகாஷ் குமார்\nபாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார், கானா பாலா\nஹே பேபி என் ஹார்ட்ட விட்டு\nமே சம் டே என் லைப்ப விட்டு\nலவ் என்றால் டாம் & ஜெர்ரி போல\nலைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல\nவெச்சேனே கரண்ட் மேல கால\nமேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா\nஹே பேபி என் ஹார்ட்ட விட்டு\nமே சம் டே என் லைப்ப விட்டு\nலவ் என்றால் டாம் & ஜெர்ரி போல\nலைப் என்றால் ரோலர் கோஸ்டர் போல\nவெச்சேனே கரண்ட் மேல கால\nமேரேஜ் இஸ் மேட் இன் ஹெவென்’னு யாரு சொன்னா\nலா… லா… லாயி… லாயி….\nஹே பாப்பா ஏ சோக்கு பாப்பா\nஹே லூசு நீ பூட்ட போட்டு\nகிளப்புல கீழ படுக்க வெச்சா\nசொம்புல தண்ணி குடிக்க வெச்சா\nமேரேஜ்’ஜு மச்சான் கலீஜுனு பேஜாரு தாண்டா\nதெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்தான்\nஅவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான்\nஅழக காட்டி போடுறாளே கேடி வேஷம்தான்\nவருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்தான்\nஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு சப்போர்ட்டு\nகைல கொடுத்துபுட்டா ஒன் இயர் வாரன்ட்டி\nகாலம் புல்லா தரமாட்டா எனக்கவ காரண்டி\nஇமையே இமையே விலகும் இமையே...\nஇமையே இமையே விலகும் இமையே\nவிழியே விழியே பிரியும் விழியே\nஎது நீ எது நான்\nபுரியும் நொடியில் பிரியும் கனமே\nபனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமா…\nஇதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா\nஇமையே இமையே விலகும் இமையே\nவிழியே விழியே பிரியும் வி���ியே\nஎது நீ எது நான்\nபுரியும் நொடியில் பிரியும் கனமே\nசிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து\nவரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று\nஆசை ஆசை தூக்கம் விற்று தானே...\nபடம் : திருப்பதி ஏழுமலை வெங்கடேச\nஒரு கட்டில் வாங்க ஆசை\nநாக்கை விற்று தேனை வங்கி\nநீரை விற்று தாகம் வங்கி\nபூவை விற்று வாசம் வங்கி\nதாயை விற்று பாசம் வங்கி\nபூட்டை விற்று சாவி வாங்கும்\nநீரினில் வாழும் மீன்களின் கூட்டம்\nஅந்த நீரினில் வேகும் மீன்களும்\nஅளவுக்கு மீறி ஆசைகள் வந்தால்\nவரவுக்கு மீறி செலவுகள் வந்தால்\nபணம் போட்ட பாதையில் தானே\nமனிதன் பசிக்கு கோழிகள் இரை தான்\nகோழி பசிக்கு புழு இரை தான்\nபுழுவின் பசிக்கு மண் இரை தான்\nஉறவில் வந்தது விரைவில் முடியும்\nஆசையை ஆசை தின்று விடும்...\nஎன்ன ஒரு என்ன ஒரு அழகியடா...\nஎன்ன ஒரு என்ன ஒரு அழகியடா\nகண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா\nஎன்ன ஒரு என்ன ஒரு அழகியடா\nகண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா\nமனச தாக்குற மின்னலும் அவ தான்\nமழையில் தெரியும் ஜன்னலும் அவ தான்\nகனவில் பூக்குற தாமர அவ தான்\nகதையில் கேக்குற தேவத அவ தான்\nஎன்ன ஊரு என்ன பேரு கேக்கலடா\nஎங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா\nமுன்னாடி அவளும் பின்னாடி நானும்\nஒரு முற திரும்பி பாத்தா என்ன\nதுண்டான மனச ஒண்ணாக்கத் தானே\nஎன்ன ஒரு என்ன ஒரு அழகியடா\nகண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா ஆ...\nராகு காலத்தில நல்ல நேரம் வருமா\nஇஞ்சு இஞ்சா இடைவெளி கொறைஞ்சு\nஇங்கிலாந்து ராணி போல தங்கத்துல எழச்சு\nஅவளை பார்க்கிற யாருமே அவளை\nமறந்தும் கூட மறப்பது சிரமம்\nபீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி\nபீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி\nஎன்ன ஒரு என்ன ஒரு அழகியடா\nகண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா\nவா என் அழகே வா என் உயிரே வா\nவா என் உயிரே வா என் அழகே வா\nஎன் மயிலே ஓ... வா\nஹோ தில்லை நகரா தேரடி தெருவா\nசாரதாஸு கூரப் பட்டுச் சேல\nவெக்கப் பட்டு எனை தேடு\nஹே தன்னந்தனியா வாழ்வது பாவம்\nமனசில் கட்டுறேன் மாளிக வீடு\nவாசல் கோலம் வந்து நீ போடு\nபீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி\nபீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி\nகொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா\nஎங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா\nவா என் அழகே வா என் உயிரே வா\nவா என் உயிரே வா என் அழகே வா\nஎன் மயிலே ஓ... வா\nஇசை : G . V . பிரகாஷ்குமார்\nபாடியவர்கள் : விஜய் & சந்தானம்\n ப்ரோ க்கு ஒரு பாங்கு...\nமை சாங்க நீ கேளுங்கணா\nஅண்ணா அண்ணா சரியா புரியலனா\nமை சாங்க நீ கேளுங்கணா\nஹே \"ஆ\" னானா \"ஊ\" னானா உன் ஆல தேடி போவ\nநீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ\nஅவ லேட்டா தான்ணா டாட்டா சொல்வா\nஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கனா\nமனச நீ கொஞ்சம் தேத்திக்கணா\nமை சாங்க நீ கேளுங்கணா\nலவ் ல மாட்டிகிட்டா சேத்துல சிக்கிடும்னா\nஅப்படி விழுந்த நான் எழுந்துட மாட்டேன்னா\nமனச நீ கொஞ்சம் தேத்திக்கணா\nமை சாங்க நீ கேளுங்கணா\nசாட்டர்டே டேட்டிங்னு கூட்டிட்டு போவானா\nஆக்டிங் ஆக்டிங்குனா ஐயோ ஆஸ்கர் ஆக்டிங்குனா\nஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப் ஆகிடுணா\nஸ்கூட்டில ஏத்திக்குவா டெட் எண்டு பாத்துக்கணா\nகைய வீசி நீயும் தான் கண்ணாம்பூச்சி ஆடுவ\nபட்டவன் சொல்லுறேன் காதலே வேணாம்னா\nமனச நீ கொஞ்சம் தேத்திக்கணா\nமை சாங்க நீ கேளுங்கணா\nரொம்ப ஹே... ஹே... ஹே... ணா...\nஹே \"ஆ\" னானா \"ஊ\" னானா உன் ஆல தேடி போவ\nநீ வேணான்னு போனானா தேவதாசா ஆவ\nஅவ லேட்டா தான்ணா பாய் பாய் சொல்வா\nபின்னால டோன்ட் டோன்ட் கோ\nமனச நீ கொஞ்சம் தேத்திக்கணா\nமனச நீ கொஞ்சம் தேத்திக்கணா\nஇசை : G . V . பிரகாஷ்குமார்\nபாடியவர்கள் : ஹரிச்சரன் & பூஜா ,Vaidyanath, Zia Ulhaq\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nதலைவா தலைவா சரிதம் எழுது தலைவா\nஉயிரே உயிரே உயிரை உனக்கு தரவா\nஎழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்\nதொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nதலைவா தலைவா தலைவா தலைவா\nதலைவா தலைவா தலைவா தலைவா தலைவா\nஎதிரிகள் எதிரிகள் தம் தம்\nஅலறிட அலறிட தம் தம்\nஅனலென புறப்படு தம் தம் தோழா\nகெட்டதை கண்டதும் தம் தம்\nபட்டென சுத்திட தம் தம்\nகட்டளை இட்டிடு தம் தம் தோழா\nபிறர் துன்பம் தன துன்பம் போல் எண்ணினால்\nவரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்\nவருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்\nஉன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை\nஉதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை\nதலைவா தலைவா உயிர்நீ தலைவா\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nஒருவிழி எரிமலை தம் தம்\nமறுவிழி பனிமலை தம் தம்\nஇவனுக்கு நிகரில்லை தம் தம் தோழா\nநிலமது அதிர்ந்திட தம் தம்\nகடலது பொங்கிட தம் தம்\nகர்ஜனை புரிவான் தம் தம் தோழா\nஉச்சத்தை தொடவேண்டும் முன்ன���று நீ\nபத்தோடு பதினொன்று நீ இல்லையே\nபேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதானே நீ\nதலைவா தலைவா உயிர்நீ தலைவா\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nதலைவா தலைவா சரிதம் எழுது தலைவா\nஉயிரே உயிரே உயிரை உனக்கு தரவா\nஎழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்\nதொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nதளபதி தளபதி நீதான் என்றும் தளபதி\nதளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி\nபடம் : தலைவா இசை : ஜீ வீ பிரகாஷ் குமார்\nபாடியவர்கள் : பென்னி தயாள் , Sheezay\nபாடல்வரி: நா. முத்துகுமார் , சைந்தவி\nபயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்\nஅரங்கம் அதிரும் தருனம் அரங்கேற்றம் முடியட்டும்\nஅதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்\nபுகழது பரவட்டும் தமிழா தமிழா\nஉயர நீ பறந்திடு தமிழா தமிழா\nதா... மிழா... பா... சாங்கா...\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ\nஐ ஒ ஓ ஓள ஃ\nகசட தபர யரல வளழ\nஙஞந னமண தமிழா நான்\nஎங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா\nஇந்த பூமியை அதிரவைப்போம் பசங்க\nதிருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு\nசென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்\nகாஞ்சி பட்டு சேல பசு மாடு சுத்தும் சாலை\nநாத்து நடும் வேளை பாட்டு படிப்போம்\nஎங்கள் மயிலாட்டமும் கெஞ்சம் ஒயிலாட்டமும்\nமெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா\nபொஷ் மி சன் லைக்க ரெண்டு காலு குதிர\nஆலம் தெரியாமல் மச்சி கால நீயும் விடுர\nஆட்டம் போட போதும் நாம தங்கமான பசங்க\nபோட்டினு வாந்தா கிழிக்கும் தமிழ் பசங்க\nபுலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா\nபோட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா\nஎன் ஒவ்வோரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா\nஊருக்குள்ள நம்மபோல செல்லபுள்ள யாருடா\nபூப்போல் இட்லி தோச அட முருகி வச்ச மீச\nகூழா குடிக்க ஆச பச்ச தமிழன்\nவெலுத்து வச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி\nகபடி கபடி போட்டி வீர தமிழன்\nவெற்றி கொடி நாட்டுவோம் தமிழா\nசங்க தமிழ் பாட்டிலும் திருக்குரல் ஏட்டிலும்\nமுக்குலித்து மூழ்கிவிட வா வா வா\nஎங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா\nஇந்த பூமியை அதிரவைப்போம் நாங்க தமிழ் பசங்க...\nஇசை : ஜீ வீ பிரகாஷ் குமார்\nபாடியவர்கள் : ஜீ வீ பிரகாஷ் குமார் , சைந்தவி\nயார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nகாற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது\nயார் எந்தன் வார்த்தை மீ���ு மௌனம் வைத்தது\nஇன்று பேசாமல் கண்கள் பேசுது\nநகராமல் இந்த நொடி நீள\nஎந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே\nஇந்த நெருக்கம் நான் கொல்லுதே\nஎந்தன் ஆளானது இன்று வேறானது\nயார் இந்த சாலை ஓரம்...\nதீர தீர ஆசை யாவும் பேசலாம்\nமெல்ல தூரம் விலகி போகும் வரையில்\nஎன்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்\nஇங்கு துன்பம் கூட இன்பம் என்று\nஎந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது\nயார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது\nஇன்று பேசாமல் கண்கள் பேசுது\nமண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே\nஅது மலையில் விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே\nவைரம் போல பெண்ணின் மனது உலகிலே\nபுதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே\nஎன் பாதையில் இன்று உன்காலடி\nயாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது\nஇன்று பேசாமல் கண்கள் பேசுது\nநகராமல் இந்த நெடி நீல\nஎந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே\nஎந்தன் ஆறானது இன்று வேரானது\nபடம் : மூன்று பேர் மூன்று காதல்\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர்கள் : ரமேஷ் விநாயகம்\nகானல் நீரீல் மீன்கள் துள்ளி\nகாதல் செய்யும் இம்சை போல\nஆசை ஏணி பாம்பு உள்ளே\nபோதும் போதும் அந்த இன்பம்\nவேறு என்ன வேண்டும் அன்பே\nவிரும்பிய உன்னைத் தொட்ட காற்றும்\nவழியில் தொலையாமல் என்னைத் தொடுமோ\nமழை மழை மழை ஓ மழை...\nபடம் : மூன்று பேர் மூன்று காதல்\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர்கள் : ரமேஷ் விநாயகம்\nபாடல்வரி: கார்த்திக், ஸ்வேதா மேனன்\nமழை மழை மழை ஓ மழை\nஎன்னை மட்டும் நனைக்கும் மழை\nவிட்டு விட்டு துரத்தும் மழை\nபெண்ணே நீதான் என் மழை\nநான் உன்னைப் பார்த்த நாளிலே\nஜன்னல் தாண்டிப் பெய்தது மழை\nநீ என்னைப் பார்த்த நாளிலே\nமின்னல் மின்னி வந்தது மழை\nஅலைஅலை எனத் தாக்குதே மழை தாக்குதே மழை தாக்குதே\nநினை நினை எனக் கேட்குதே மனம் கேட்குதே மனம் கேட்குதே ஐயோ\nஅணை அணை என கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே\nஅடிக்கொருமுறை கொஞ்சுதே உனைக் கொஞ்சுதே ஐயோ\nநீ அடங்காத என் ராட்சசி\nநீ எனைக் கொல்லும் வனதேவதை\nநீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்\nநான் என் மீதியைக் கண்டேனெனக் கூவினேன்\nநெஞ்சமென்னும் தீவுக்குள்ளே காதல் பூக்க\nவானும் மண்ணும் தீயும் நீரும்\nநீயும் நானும் காதலாகி மேவியாட\nநீ எனக்காகவே உருவானவள் சிநேகிதி\nஎன் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி\nநேற்றை கொன்று இன்றை வென்று\nஉன்னைத் தொட்டு என்னைத் தொட்டு\nகாதலாகி என்ன பேசும் ஈரக் காற்று...\nபடம் : மூன்று பேர் மூன்று காதல்\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர்கள் : ரமேஷ் விநாயகம்\nஸ்டெப் த பாட்டு ஸ்டெப் த பாட்டு\nஇந்த பாட்டு வேணாம் தலைவா\nபர்ஸ்ட்டு லவ்வு நினைப்பு வாருதே\nஇந்த பாட்டு வேணாம் தலைவா\nஎன்னமோ ஆகிறேன் இந்த பாட்டால தான்\nஅவளை தான் தேடி கண்ண மூடி\nவிடு விடு விடு விடு தலைவா\nஇந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல\nவிடு விடு விடு விடு தலைவா\nஇந்த பாட்ட பாடாம இருக்க முடியல\nராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே\nராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே\nசந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா\nஎன்னாளும் நீங்காத ஏக்கம் இது\nசங்கீதம் போல இந்த மண்மீது\nசட்டென்று ஈர்கின்ற பாட்டு இது\nசிரித்தேன், அழுதேன், இந்த பாட்டில் கரைந்தே போனேன்\nயார் அவன் ராகத்தில் சோகத்தை மீட்டி சொன்னான்\nயார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்\nசந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான்\nஎட்டித்தான் பார்க்ன்கிற மாயம் இது\nமுன்னாடி போனாழும் பின்னாடி போனாழும்\nஎங்கேயும் கேட்கின்ற கானம் இது\nபுதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்\nஸ்டெப் த பாட்டு ஸ்டெப் த பாட்டு\nஇந்த பாட்டு வேணாம் தலைவா\nfirst-u லவ்வு நினைப்பு வாருதே\nஇந்த பாட்டு வேணாம் தலைவா...\nஇசை : பிரகாஷ் நிக்கி\nபாடியவர்கள் : ரணினா ரெட்டி\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்\nஉன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்\nகாலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன\nகடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்\nபூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்\nதீயாய் மாறும் தேகம் தேகம்\nஉன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்\nவாழ்வின் எல்லை தேடும் தேடும்\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்\nஉன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்\nஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து\nஇரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்\nநான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்\nஎன் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்\nநான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு\nநீயும் நானும் சேர்ந்தே கேட்போம்\nதாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்\nகாலம் நேரம் தாண்டி வாழ்வோம்\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணி��் ஒரம்\nஉன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்\nகாலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன\nகடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்\nபால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்\nநம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்\nவீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்\nதனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்\nதீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே\nதூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு\nஉன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்\nவாசல் தூணாய் நானும் ஆனேன்\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்\nஉன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்\nகாலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன\nகடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்...\nஎன்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்...\nபாடல் : என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்...\nஎன்னுள்ளே என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்\nஇருதய அறையிலே ஒரு பாரமாய் மாறினாள்\nசில மாற்றம் அவள் வார்த்தையில்\nஎன்னுள்ளே என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்\nஇருதய அறையிலே ஒரு பாரமாய் மாறினாள்\nகணத்திலே காதல் கலைய கனவிலே நானும் அழுதேன்\nகணத்திலே காதல் கலைய கனவிலே நானும் அழுதேன்\nநிஜத்திலே நிழலும் அறைய நெருப்பிலே நானும் விழுந்தேன்\nநீ சென்றாய்... ஏன் வந்தாய்...\nஎன்னுள்ளே என்னுள்ளே ஒரு சுமை என வாழ்கிறாய்\nஒரு சுமை என வாழ்கிறாய்\nஇருதய அறையிலே ஒரு கானலா மாறி\nபாத சுவடிலே பருவம் சொன்னேன்\nபாத சுவடிலே பருவம் சொன்னேன்\nநீ வந்தாய்... ஏன் சென்றாய்...\nஎன்னுள்ளே என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்\nஇருதய அறையிலே ஒரு பாரமாய் மாறினாள்\nசில மாற்றம் அவள் வார்த்தையில்\nஎன்னுள்ளே என்னுள்ளே ஒரு சுமை என வாழ்கிறாய்\nஒரு சுமை என வாழ்கிறாய்\nஇருதய அறையிலே ஒரு கானலா மாறி\nஎன்னுள்ளே என்னுள்ளே ஒரு சுமை என வாழ்கிறாய்\nஇருதய அறையிலே ஒரு கானலா மாறி...\nபடம் : காதலுக்கு மரியாதை\nபுது சந்தோசம் வரும் நாளோ\nரதி நம் வீட்டில் பிறந்தாளோ,\nசின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்\nமுத்த மழை கன்னம் விழ நனைந்தளே\nகொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே\nபுது சந்தோசம் வரும் நாளோ\nரதி நம் வீட்டில் பிறந்தாளோ,\nகைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்\nகண்களை பின்புறம் வந்து மூடுவாள்\nசெல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்\nதோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்\nஉறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்\nஅங்கும் இங்கும் துள்ளி ஒடுவாள்\nபூவெல்லாம் இவள் போல அழகில்லை\nபூங்காற்று இவள் போல சுகமில்லை\nஇது போல சொந்தங்கள் இனி இல்லை\nஇவள் தானே நம் தேவதை\nபுது சந்தோசம் வரும் நாளோ\nரதி நம் வீட்டில் பிறந்தாளோ,\nநடக்கும் நடையில் ஒரு தேர் வலம்\nசிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்\nகண்ணில் மின்னும் ஒரு காவியம்\nமனதில் வரைந்து வைத்த ஒவியம்\nநினைவில் நனைந்து நிற்கும் பூவனம்\nஎன்றும் எங்கும் இவள் ஞாபகம்\nஇவள் போகும் வழியெங்கும் பூவவேன்\nஇரு பக்கம் காக்கின்ற கரையவேன்\nஇவள் ஆடும் பொன் ஊஞ்சல் நானாவேன்\nபுது சந்தோசம் வரும் நாளோ\nரதி நம் வீட்டில் பிறந்தாளோ,\nசின்ன சின்ன ஆசையில் சித்திரங்கள் வரைந்தாள்\nமுத்த மழை கன்னம் விழ நனைந்தளே\nகொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே\nபுது சந்தோசம் வரும் நாளோ\nரதி நம் வீட்டில் பிறந்தாளோ,\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nவசந்த சேனா வசந்த சேனா...\nவசந்த சேனா வசந்த சேனா\nவசியம் செய்ய பிறந்தவள் தானா\nநீயிள்லாது நான் என்ன நானா\nஒ மதன சேனா மன்மத சேனா\nஎன்னக்குள் எதையோ திருடி சென்றானா\nகாதல் ஊருக்கு வழி இதுதான சேனா\nஅணுவாய் அணுவணுவாய் என் அழகை குடித்தவனே\nஅணு சக்தியாய் இருந்து என் உயிரை வளர்த்தவனே\nகாதல் சங்கிலியால் சிறையில் அடைத்தவளே\nஅடிமை சாசனத்தை எழுதி கேட்டவளே\nஎன் இமைகள் இரண்டை விடுமுறைக்கு அனுப்பி\nஇதயம் நிரம்பிய கஜானா போல\nகாதல் இது தானே , தோழி காதல் தோழி\nஉயிரில் உயிர் புதைத்து புதையல் எடுத்தவளே\nஉருவம் இனி எதற்கு என விளக்கம் கொடுத்தவளே\nபொய்யால் ஒரு மொழியில் என் மெய்யை வளைத்தவனே\nகொய்யாதொரு கனியை கண்ணால் கொய்தவானே\nபகலை சுருக்கிட இரவை தொடர்ந்திட யுக்தியை வகுத்திடு நாயகியே\nகனிவாய் பிறந்தொரு துளியாய் விழுந்திட\nகாதல் இது தானே , தோழா காதல் தோழா...\nபாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன்\nநாம் என்பதும் அதுவரை அது வரைதான்\nவாழ்வு என்பது ஒரு முறை ஒரு முறை\nசாவென்பதும் ஒரு முறை ஒரு முறை\nகாதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்\n என் அன்பே நீயா பேசியது\n என் அன்பே தீயை வீசியது\nகண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி\nஅன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி\nநீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது\nஏதோ நான் இருந்தேன், என் உள்ளே காற்றாய் நீ கிடை���்தாய்\nகாற்றை மொழி பெயர்த்தேன், அன்பே சொல் மூச்சை என் பரிதாய்\nஇரவு இங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே\nஉடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே\nஉறுகினான் நான் உறுகினேன், இன்று உயிரில் பாடி கருகினேன்\nநீயா பேசியது என் அன்பே நீயா பேசியது\nவேரில் நான் அழுதேன், என் பூவும் சோகம் உணரவில்லை\nவேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை\nஉனக்கு என்றே உயிர் கொண்டேன், அதில் ஏதும் மாற்றம் இல்லை\nபிரிவேன்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை\nமறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா\n என் அன்பே நீயா பேசியது\n என் அன்பே தீயை வீசியது\nகண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி\nஅன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி\nநீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது\nசெம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே\nசெவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு\nகல்யாண மாலை கொண்டு வாரேன்\nமஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்\nசெம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே\nமலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு\nகல்யாண மாலை கொண்டு வா வா\nமஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா\nதினசரி நான் பார்த்த தாமரப்பூவும்\nதிருமுகம் காட்டாது போனதென் பாவம்\nஊர் தடுத்தும் யார் தடுத்தும்\nஓயாது நானும் கொண்ட மோஹம்\nஎன்றும் நானும் கொண்ட மோஹம்\nசெம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே\nசெவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு\nகல்யாண மாலை கொண்டு வா வா\nமஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா\nஆ ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ\nஹா ஆ ஆ ஆஅ ஆ ஆ ஆ ஆ\nநான் வழங்கும் பூ முடிக்க\nஎன் விரலால் பொட்டு வைக்க\nஇருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து\nஇடைவெளி இல்லாமல் போனது காத்து\nநான் திரும்பி வரும் வரைக்கும்\nநீரின்றி வாடும் இள நாத்து\nஓடை நீரின்றி வாடும் இள நாத்து\nசெம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே\nமலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு\nகல்யாண மாலை கொண்டு வாரேன்\nமஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்\nகல்யாண மாலை கொண்டு வா வா\nமஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா...\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nஒன்னும் புரியல செல்ல தெரியல...\nஒன்னும் புரியல செல்ல தெரியல\nகண்ணு முழியில கண்ட அழகுல\nபத்து விரலுல தொட்ட நொடியில\nவிட்டு விட்டு ரெக்கை முளைக்குது\nநெஞ்சுக் குழி அடைக்குது மானே\nஅலையிர பேயா அவளது பார்வை\nஎன்ன தாக்குது வந்து என்ன தாக்குது\nபரவுர நோய அவளது வாசம்\nஎன்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது\nஅவளது திரு மேனி வேறி கூட்டுது\nஅவளிடம் அடி வாங்க வழி காட்டுது\nஅவ என்ன பேசுவா அத எண்ண தோனுது\nஅவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது\nகதிர் அருவாளா மனசயும் கீறி\nதுண்டு போடுறா என்ன துண்டு போடுறா\nகலவர ஊரா அவ ஊருமாரி\nகுண்டு போடுறா செல்ல குண்டு போடுறா\nவிழியில் பல நூறு படம் காட்டுறா\nஅறுவது நிலவாக ஒளி கூட்டுறா\nஅவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது\nஅவ எட்டி போனதும் புத்தி அட மாருது\nஹேய் ஹேய் யேலே லே...\nஒன்னும் புரியல செல்ல தேரியல\nகண்ணு முழியில கண்ட அழகுல...\nவா வா கதை போச\nஅய்யய்யய்யே... ஓ... ஓ... அய்யய்யய்யே...\nஉன்னை முதல் முறை கண்ட நெடியில்\nஅன்று விழுந்தவன் இன்னும் எழும்பல\nகரை சேர நீயும் கையில் ஏந்த வா\nஉயிர் காதலோடு நானும் நீந்தவா\nவரும் கற்பனை தந்தது மீதி\nகண்கள் இருப்பது உன்னை ரசித்திட\nகைகள் இருப்பது தொட்டு அனைத்திட\nஎதர்க்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்\nதுணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்\nஇள நெஞ்சினில் இன்பமும் கூட\nவா வா கதை போச\nஒன்னும் புரியல செல்ல தெரியல...\nஒன்னும் புரியல செல்ல தெரியல\nகண்ணு முழியில கண்ட அழகுல\nபத்து விரலுல தொட்ட நொடியில\nவிட்டு விட்டு ரெக்கை முளைக்குது\nநெஞ்சுக் குழி அடைக்குது மானே\nஅலையிர பேயா அவளது பார்வை\nஎன்ன தாக்குது வந்து என்ன தாக்குது\nபரவுர நோய அவளது வாசம்\nஎன்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது\nஅவளது திரு மேனி வேறி கூட்டுது\nஅவளிடம் அடி வாங்க வழி காட்டுது\nஅவ என்ன பேசுவா அத எண்ண தோனுது\nஅவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது\nகதிர் அருவாளா மனசயும் கீறி\nதுண்டு போடுறா என்ன துண்டு போடுறா\nகலவர ஊரா அவ ஊருமாரி\nகுண்டு போடுறா செல்ல குண்டு போடுறா\nவிழியில் பல நூறு படம் காட்டுறா\nஅறுவது நிலவாக ஒளி கூட்டுறா\nஅவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது\nஅவ எட்டி போனதும் புத்தி அட மாருது\nஹேய் ஹேய் யேலே லே...\nஒன்னும் புரியல செல்ல தேரியல\nகண்ணு முழியில கண்ட அழகுல...\nஎல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க\nயானையோடு சேத்து நாங்க நாழு பேருங்க\nநம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது\nதும்பிக்கைய நம்பி எங்க காலோ ஓடுது\nஎன்ன எது நடந்தாலும் சிரிப்போமே\nஅல்லி கோடுப்பது நீங்க மதிப்போமே\nவீதியேல்லாம் சுத்தி வித்த காட்டுரோமுங்க\nவேளியில காட்ட போல வாழுரோமுங்க\nயானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க\nஎங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க\nபாடியவர்கள்: K.J.ரஞ்சித், ஸ்ரேயா கோஷல்\nசெல்லும் போதே சுகம் தாலல\nஇது போல் ஒரு வார்த்தையே\nஅவ சொன்ன சொல்லே போதும்\nசெல்லும் போதே சுகம் தாலல\nஇது போல் ஒரு வார்த்தையே\nஅம்மையவ சொன்ன சொல் கேக்கல\nஅப்பனவன் சொன்ன சொல் கேக்கல\nரெண்டு போர ஒன்னா பாத்தேன்\nஅட சொன்ன சொல்லே போதும்\nசொன்ன பின்னே யேது துன்பம்\nஅவ சொன்ன சொல்லே போதும்\nசெல்லும் போதே சுகம் தாலல\nஇது போல ஒரு வார்த்தையே\nநீ யெப்போ புள்ள சொல்ல...\nநீ யெப்போ புள்ள சொல்ல போறாய்\nதப்பென்ன செஞ்சன் தல்லி போறாய்\nநீ யெப்போ புள்ள சொல்ல போறாய்\nதப்பென்ன செஞ்சன் தள்ளி போறாய்\nநீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு\nசொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு\nநீ யெப்போ... நீ யெப்போ...\nநீ யெப்போ புள்ள சொல்ல போறாய்\nபக்குவமா சோறாக்கி பட்டினியை நீ போக்கி\nபெத்தவள கண்ணு முன்னே கொண்டு வாந்த நேத்து\nஎன்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம்\nஎன் மேலே என்ன பூவே ரோசா\nமுள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம்\nவேரேன்ன செஞ்ஜே மோசம் மோசம்\nநீ யெப்போ... நீ யெப்போ...\nநீ யெப்போ புள்ள சொல்ல போறாய்\nவெள்ளி நீலா வானோட வெத்தலயும் வாயோட\nஎன் உலகம் உன்னோட என்று இருந்தேனே\nயம்மாடி யென்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல\nஉன் மேலே தப்பே இல்ல இல்ல\nஎன்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல\nசெத்தேனே இப்ப மெல்ல மெல்ல\nநீ யெப்போ... நீ யெப்போ...\nநீ யெப்போ புள்ள சொல்ல போறாய்\nநீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு\nசொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு\nநீ யெப்போ... நீ யெப்போ...\nநீ யெப்போ புள்ள சொல்ல போறாய்...\nபடம்: கண்ணா லட்டு திங்க ஆசையா\nபாடியவர்கள்: நவீன், ராகுல் நம்பியார், ரஞ்சித், சுசித்ரா\nமாமா... வில் யு மாமா... வில் யு\nயே உன்னத்தான் பார் என்னத்தான்\nநா பொண்ணு தான் போல் மின்னத்தான்\nதோல்பின்னத் தான் யார் என்னத்தான்\nநீ கெஞ்சத்தான் நா கொஞ்சத்தான்\nநீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்\nதேன் தின்னத்தான் யார் என்னத்தான்\nகைய விடாம எவன்டா வெச்சுப்பான்\nகண்ண கசக்கிடாம எவனடா வச்சுப்பான்\nஎலி பெறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா\nகொடியே... காட்டு பச்சை கொடியே\nரெடியே... நாங்க இப்ப ரெடியே\nநீ சொன்னப்படியயே நிப்போம் காலுக்கடியே\nயா... ஐ வோன பூம்ப் பூம்���் பூம்ப் பூம்\nமாமா... இங்க வந்தவன் போனவன்\nஎன்ன புத்தம் புது சித்திரமா பாரு\nமாமா... இங்க சித்திரம் பத்திரம\nபொத்தி பொத்தி வச்சிருக்குர ஆளு\nஎன்ன சுத்தி வரும் மூனு பேரில் யார\nநீ கெஞ்சத்தான் நா கொஞ்சத்தான்\nநீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்\nதேன் தின்னத்தான் யார் என்னத்தான\nஇன் பின் safety பின் இன் பின் அவ்ட்\nயார விட்டு யார சேர ரெம்ப ரெம்ப டவ்ட்\nமெல்ல நட மெல்ல நட மேனியும் என்னாகும்\nசுந்தரி நீ... சுந்தரன் நான் சேர்ந்தால் திருவோனம்\nசென்பகமே... சென்பகமே... தென் பொதிகை சந்தனமே\nயே... உளா வரும் நிலா நான் தான்டா\nநீ என்னை தீண்டிட தடா போயேண்டா\nவிரல் படா புறா நான் தான்டா\nஆசபடி தான் எவனடா வெச்சுப்பான்\nஎலி பெறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா\nயா... ஐ வோன பூம்ப் பூம்ப் பூம்ப் பூம்\nமாமா... இங்க வந்தவன் போனவன்\nஎன்ன புத்தம் புது சித்திரமா பாரு\nமாமா... இங்க சித்திரம் பத்திரம்\nபொத்தி பொத்தி வச்சிருக்குர ஆளு\nஎன்ன சுத்தி வரும் மூனு பேரில் யாரு\nநீ மிஞ்சத்தான் நா நஞ்சத்தான்\nதேன் தின்னத்தான் யார் என்னத்தான்...\nபாடியவர்: மலேசியா வாசுதேவன், S.ஜானகி\nவெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்\nவெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்\nபூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு\nவெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்\nகைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது\nகாதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது\nசாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு\nபஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு\nவெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்\nவெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்\nபூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு\nவெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்\nஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்\nகண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்\nபாசம் உள்ள தர்மம் இத பாவமின்னு சொல்லாது\nகுருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது\nபுத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்\nசாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்\nவெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்\nவெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்\nபூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு\nவேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே\nவெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம்...\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nமழையும் நீயே வெயிலும் நீயே...\nஇசை : மரகத மணி\nகுரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்\nமழையும் நீயே வெயிலும் நீயே\nநிலவும் நீயே நெருப்பும் நீயே\nஅடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா\nஇது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா\nசரசம் பயிலும் விழியில் வருமே\nஇது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா\nதனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே\nபார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை\nதோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோன நிலை\nகலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்\nகடல்னீர் அலைபோல் மனமும் அலையும்\nகருனீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்\nஎரியும் விரகம் அதிலே தெரியும்\nஏகாந்தம் இந்த ஆனந்தம் இதன் எல்லை யாரறிவார்\nஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார்\nமுதலாய் முடிவாய் இங்கு என்றும்\nசெந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே\nஎன் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே\nதென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்\nகண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்\nகன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே\nஎன்ன இனிக்கிது அந்த நினைவிதுவே\nநீலக்கருங்குயிலே தென்னஞ் சோலை குருவிகளே\nகோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே\nமாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்\nசாலை வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nபாடியவர்கள்: ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் & மகாநதி சோபனா\nசின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே\nசின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே\nதேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா\nகளவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா\nகண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா\nகண்ணால் கண்டால் நீ சொல்லு\nஉன் காதில் விழுவென் நீ சொல்லு\nசின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே\nநிலா நிலா காதல் நிலா\nஉலா உலா வா வெண்ணிலா\nபாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா\nதோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா\nஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா\nஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பார்த்தாயா\nகண்ணால் கண்டால் நீ சொல்லு\nஉன்காலில் விழுவேன் நீ சொல்லு\nசின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே\nஎங்கே எங்கே விண்மீன் எங்கே\nபகல் வானிலே நான் தேடினேன்\nஅங்கே இங்கே காணோம் என்று\nஅவளின் வீடு எங்கே பார்த்தாயா\nஅவளின் உள்ளும் சென்று பார்த்தாயா\nதூறல் போடும் அவளின் முகிலே\nஉயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா\nதீயில��� விட்டுப் போனவள் பார்த்தாயா\nகண்ணால் கண்டால் நீ சொல்லு\nஉன் காலில் விழுவேன் நீ சொல்லு\nதேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா\nகளவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா\nகண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா\nகண்ணால் கண்டால் நீ சொல்லு\nஉன் காதில் விழுவென் நீ சொல்லு\nசின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே...\nதோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்\nதோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்\nவாழ்வை சுமையென நினைத்து – தாயின்\nஉரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்\nஉணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த\nதோல்வி நிலையென நினைத்தால் மனிதன்\nவிடியலுக்கில்லை தூரம் – விடியும்\nமனதில் இன்னும் ஏன் பாரம் – உன்\nநெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்\nகண்ணில் இன்னும் ஏன் ஈரம்\nஉரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்\nஉணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த\nதோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்\nவாழ்வை சுமையென நினைத்து – தாயின்\nவிடியலுக்கில்லை தூரம் – விடியும்\nமனதில் இன்னும் ஏன் பாரம்\nநெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்\nகண்ணில் இன்னும் ஏன் ஈரம்\nயுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்\nரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்\nஉரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்\nஉணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த\nயுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்\nரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்\nஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\nஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\nபாவம் என்று வந்தாள் மாது\nநெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்\nதண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்\nகெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்\nஇமைகளும் சுமையடி இள மயிலே\nதேகம் யாவும் தீயின் தாகம்\nதாகம் தீர நீதான் மேகம்\nகண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது\nநெஞ்சு பொறு கொஞ்சம் இரு\nமன்மத அம்புகள் தைத்த இடங்களில்\nஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\nஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nபாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்\nதோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\nதோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\nமடி மீது தூங்க சொல்கிறாய்\nதோள் மீது சாய்ந்து கொள்கிறாய்\nநெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்\nஉயிர் வரை சென்று தின்கிறாய்\nமெழுகு போல் நான் உருக���னேன்\nஎன் கவிதையே என்னை காதல் செய்வாய்\nஎன் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்\nஉன் பதில் என்ன அதை நீயே சொல்லடி\nஒரு துளி நீர் வேண்டி நின்றேன்\nஅடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்\nசிலுவைகளை நான் சுமந்து நின்றேன்\nசுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்\nவிழிகள் ஓரம் நீர் துளியை\nமகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்\nசொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்\nகருப்பு நிறத்தில் கனவு கண்டேன்\nகாலை நேரத்தில் இரவு கண்டேன்\nஎன் அருகில் வந்து நில்லு\nமின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்\nதனி அறையில் அடைந்து விட்டேன்\nசிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்\nஅலைகள் அடித்து தொலைந்து விடும்\nதீவை போல மாட்டிக் கொண்டேன்\nஇறுதி சடன்கில் மிதிகள் படும்\nபூவை போல் கசங்கி விட்டேன்\nதாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்\nதாயும் இங்கு எனக்கு இல்லை\nஎனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்\nLabels: கவிஞர் தாமரை பாடல் வரிகள்\nஎன் மடியில் பூத்த மலரே\nஅன்பு கொண்ட செல்லக் கிளி\nகண்ணில் என்ன கங்கை நதி\nஎன் மடியில் பூத்த மலரே\nLabels: கவிஞர் தாமரை பாடல் வரிகள்\nபாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா\nபெண்ணே உன் மேல் பிழை\nஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி\nஎன் உயிரை உயிரை நீ ஏந்தி\nஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி\nஇனி நீதான் எந்தன் அந்தாதி\nஏதோ ஒன்று என்னை ஈர்க்க\nமூக்கின் நுனி மர்மம் சேர்க்க\nநீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ\nநீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ\nஎன்னோடு வா வீடு வரைக்கும்\nஎன் வீட்டை பார் என்னை பிடிக்கும்\nஇவள் யாரோ யாரோ தெரியாதே\nஇவள் பின்னால் நெஞ்சே போகாதே\nஇது பொய்யோ மெய்யோ தெரியாதே\nஇவள் பின்னால் நெஞ்சே போகாதே\nஉன்னை தாண்டி போகும் போது\nவீசும் காற்றின் வீச்சு வேறு\nநில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே\nநீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே\nகேட்டால் அது காதல் இல்லை\nஎன் ஜீவன் ஜீவன் நீதானே\nஎன தோன்றும் நேரம் இதுதானே\nநீ இல்லை இல்லை என்றாலே\nஎன் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே\nLabels: கவிஞர் தாமரை பாடல் வரிகள்\nஅன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா...\nஅன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா\nஅந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா\nஅன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா\nஅந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா\nஒன்றல்ல நீ செய்த தியாகம்\nநான் வெல்வதே ஒரு தாயின் சபதம்\nவெந்து நீ வெந்த சோறு போட்டாயே\nவ��கு தூரமாய் எங்கோ போனால் என்ன\nஎன்னை நினைச்சு உருகும் தாயே\nஉந்தன் சபதம் முடிஞ்சு வருவேன்\nஅன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா\nஅந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா\nஒன்றல்ல நீ செய்த தியாகம்\nநான் வெல்வதே ஒரு தாயின் சபதம்...\nLabels: அம்மா பாடல் வரிகள்\nபடம்: ஆயிரம் நிலவே வா\nதேவதை இளந்தேவி உன்னைச் சுற்றும் ஆவி\nதேவதை இளந்தேவி.. உன்னைச் சுற்றும் ஆவி\nஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பெயரைச் சொல்லாதோ\nஆற்று மணல் மேடெங்கும் நாம் வரைந்த கோலங்கள்\nகாதல் சோதனை இரு கண்ணில் வேதனை\nஒரு வானம்பாடி தேகம் வாடிப் பாடும் சோகம் கோடி\nதேவதை இளந்தேவி உன்னைச் சுற்றும் ஆவி\nலல லாலலால லாலலால லாலலால லாலலால லா\nஎந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா\nஇது கண்ணீர் ராத்திரி என் கண்ணே ஆதரி\nஇவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி நீதான் எந்தன் பாதி\nதேவதை இளந்தேவி உன்னைச் சுற்றும் ஆவி\nலாலல லலலாலா லாலலால லாலா\nலாலலாலலாலா லாலலாலலா லா லாலலால லாலா...\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nஅழகாகச் சிரித்தது அந்த நிலவு...\nபாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி\nஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு\nஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது\nஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு\nஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது\nஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு\nஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது\nஆ: நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்\nபூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்\nபெ: நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்\nகாற்றே உனைப் பார்த்ததும் கை சேர்த்தேன்\nஆ: மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே\nபெ: நானே என் இதயத்தைத்தானே எடுத்துக் கொடுத்தேனே\nஆ: பனி தூங்கும் ரோஜாவே\nபெ: எனை வாங்கும் ராஜாவே\nஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ.. நாணமென்ன அச்சமென்ன\nஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு\nஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது\nபெ: உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்\nஆ: கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்\nகாதல் போரட்டமே நான் பார்த்தேன்\nபெ: மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம்\nஆ: நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும்\nபெ: இள மாலைப் பொழுதாக\nஆ: இரு நெஞ்சம் இனிதாக\nபெ: இனிமை வழியும் இளமை இதுவோ.. இரு விழி சிவந்திட\nஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு\nஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது\nஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு\nஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nஎது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்...\nபாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்\nஎது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்\nஅது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்\nகூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்\nநீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்\nவா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு\nஎது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்\nஅது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்\nகூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்\nநீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்\nவா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு\nவானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு\nபஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு\nசாம வேதம் நீ ஓது.. வாடைத் தீயில் கூவும்போது\nவா.. இனி தாங்காது.. தாங்காது\nகண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக\nசுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்\nஅது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்\nகூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்\nநீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்\nவா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு\nகள்ளத் தீயும் ஒண்ணாச்சு.. காதல் நெஞ்சில் உண்டாச்சு\nகண்ணில் இன்று முள்ளாச்சு.. அதிலே தூக்கம் போயாச்சு\nபாரிஜாத உன் தேகம் பார்க்கப் பார்க்க போதையேறும்\nகையோடு கை சேர.. மெய்யோடு மெய் சேர\nசுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்\nஅது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்\nகூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்\nநீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்\nவா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு\nஎது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்\nஅது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்\nகூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்\nநீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்\nவா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு...\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nஹேய் எகிருது அதிருது புரியுது தெரியுது...\nசில்லென ஒரு மழை துளி...\nஹே பேபி என் ஹார்ட்ட விட்டு...\nஇமையே இமையே விலகும் இமையே...\nஆசை ஆசை தூக்கம் விற்று தானே...\nஎன்ன ஒரு என்ன ஒரு அழகியடா...\nமழை மழை மழை ஓ மழை...\nஎன்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்...\nவசந்த சேனா வசந்த சேனா...\nஒன்னும் புரியல செல்ல தெரியல...\nஒன்னும் புரியல செல்ல தெரியல...\nநீ யெப்போ புள்ள சொல்ல...\nமழையும் நீயே வெயிலும் நீயே...\nஅன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா...\nஅழகாகச் சிரித்தது அந்த நிலவு...\nஎது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nMovie name : வியாபாரி Music : தேவா Singer(s) : ஹரிஹரன் Lyrics : ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடிய...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங���...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nபடம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வரிகள் - வைமுத்து எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவ...\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி...\nபடம்: புதிய பறவை இசை: விஸ்வநாதன்–ராமமூர்த்தி பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்கே நிம்மதி எங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tmpolitics.blogspot.com/2008/04/blog-post_6640.html", "date_download": "2018-07-19T11:38:22Z", "digest": "sha1:JYFXJMAB3CRWHR4PWZAADXJ6P3I63KRC", "length": 6257, "nlines": 58, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: துபாயில் காயல் நல மன்ற கூட்டம்", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nதுபாயில் காயல் நல மன்ற கூட்டம்\nஏப்.18இல் அமீரக கா.ந.மன்ற பொதுக்குழு\nஐக்கிய அரபு அமீரகங்களில் செயல்பட்டுவரும் காயல் நல மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம், இம்முறை அமீரகத் தலைநகர் அபுதாபியில், மன்றத்தின் உறுப்பினர் ஹாஜி மக்ப+ல் அஹ்மது பி.இ. இல்லத்தில், 04-04-08 வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணியளவில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு, மன்றத்தின் மூத்த உறுப்பினரும், துணைத் தலைவருமான ஹாஜி இம்தியாஸ் அஹ்மது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் துவக்கமாக மவ்லவீ ஹாபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nஎதிர்வரும் 18-04-08 வெள்ளிக்கிழமை, மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை அல்குசைஸ் தவார் பூங்காவில் நடத்துவது. இதற்கான செலவினங்களில் பெரும்பகுதியை செயற்குழு உறுப்பினர்களே மனமுவந்து ஏற்றுக் கொள்வது.\nபதிந்தவர் முதுவை ஹிதாயத் நேரம் 7:49 AM\nகுறிச்சொற்கள் அபுதாபி, காயல்பட்டணம், செயற்குழு, துபாய்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://velang.blogspot.com/2012/12/blog-post_1.html", "date_download": "2018-07-19T12:00:53Z", "digest": "sha1:WL7C26IUUYBSGYQ4437NYMADV7BZHR6V", "length": 13279, "nlines": 331, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-பிறந்தநாள் வாழ்த்து.", "raw_content": "\nஅனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில்\nபோவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்\nமுடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று\nஇதுவரை சுமார் 20,00,000 பார்வையாளர்கள்\nஎனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த\nமகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த\nஇணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.\nஅந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.\nபதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது பிறந்தநாள்\n02.12.2012.தொடர்ந்து உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஅன்பு மாப்பிள்ளைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nயோவ் ....நீர் சொல்லாமல் போனாலும் எனக்கு தெரியும் ஓய் ...\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வேலன் சார்\"வாழ்க வளமுடன்\".\nஎல்லா நலமும் வளமும் பெற்று நீடுழீ வாழ வாழ்த்துகின்றேன்.\nஅன்பு மாப்பிள்ளைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nயோவ் ....நீர் சொல்லாமல் போனாலும் எனக்கு தெரியும் ஓய் ...\nநன்றி மாம்ஸ்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..\nநன்றி சகோதரி..தங்கள்வருகைககும் வாழ்த்துக்கும் நன்றி...\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வேலன் சார்\"வாழ்க வளமுடன்\".ஃஃ\nநன்றி தாமஸ் ரூபன் சார்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ந்னறி..\nநன்றி நண்பர் Ganpat அவர்களே...\nநன்றி கோபால கிருஷ்ணன் சார்..\nஎல்லா நலமும் வளமும் பெற்று நீடுழீ வாழ வாழ்த்துகின்றேன்.\nதங்க்ள வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முஹம்மது நியாஜ் சார்...\nசாளரங்கள் பல திறந்து புதிய ஒளி பரவ வித்திட்ட அன்பு நண்பருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் பல.\nசாளரங்கள் பல திறந்து புதிய ஒளி பரவ வித்திட்ட அன்பு நண்பருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் பல.\nஅண்ணா ,தாமதமான வாழ்த்துக்கு மன்னிகவும் ,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .உங்களுக்கு எல்லா வளமும் ,மகிழ்ச்சியும் கொடுப்பராக \nவேலன்:-2012-ல் அதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nவேலன்:-PSD படங்களை JPG படமாக மாற்ற\nவேலன்:- கிருஸ்துமஸ் மரத்தினை லாக்ஆன் ஆக வரவழைக்க\nவேலன்:- ஐந்து கிருஸ்துமஸ் சாப்ட்வேர் பணிகள் ஒரே ச...\nவேலன்:-வீடியோக்களை காப்பி செய்ய(Video Capturer)\nவேலன்:-வீடியோபைல்களை அனிமேஷன் படமாக மாற்ற\nவேலன்:-ஓரே சாப்ட்வேரில் விதவிதமான கால்குலெட்டர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/did-aishwarya-rai-say-no-dhanush-043911.html", "date_download": "2018-07-19T12:00:33Z", "digest": "sha1:ULGPPW4EMV6T6MJHODQACUEHU6SHXNHY", "length": 9671, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷுடன் நடிக்க மறுத்தாரா ஐஸ்வர்யா ராய்? | Did Aishwarya Rai say NO to Dhanush? - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷுடன் நடிக்க மறுத்தாரா ஐஸ்வர்யா ராய்\nதனுஷுடன் நடிக்க மறுத்தாரா ஐஸ்வர்யா ராய்\nசென்னை: விஐபி 2 படத்தில் நடிக்க தனுஷ் ஐஸ்வர்யா ராயை அணுகியதாகவும் அவர் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனுஷ் நடிப்பில் ஹிட்டான விஐபி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இதிலும் அமலா பால் தான் ஹீரோயின். படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nகஜோலின் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு தனது மாமா ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராயிடம் தனுஷ் கேட்டாராம். அதற்கு ஐஸ், அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nஐஸ்வர்யா ரஜினியுடன் சேர்ந்து நடிக்கவே பல முறை மறுத்தார். பின்னர் மாமனார் அமிதாப் பச்சன் கூறிய பிறகே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐஸ்வர்யா மறுத்த பிறகே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கஜோலை அணுகினார்களாம்.\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nவிஐபி படத்தின் கதை திருட்டு வழக்கில் ஜெயித்த தனுஷ்\nபேக்கப் சொல்லியாச்சு... சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்\nமாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்\nஅப்பாாாா பாாாா அழகுடா நம்ம தளபதி: டிடி, தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து #HBDThalapathiVIJAY\nகாலாவுக்கு முன்பில் இருந்தே நானும், தனுஷும் டச்சில் உள்ளோம்: ஹூமா குரேஷி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nகலை இயக்குநர் ஜேகே என���னும் என் இனிய நண்பர்\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t34928-topic", "date_download": "2018-07-19T11:39:22Z", "digest": "sha1:OLH3ZMSMT52SG667RPEVS6L2CQ3LDIEC", "length": 16177, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'கட் அன்ட் ரைட்' திரிஷா!", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் ���ீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\n'கட் அன்ட் ரைட்' திரிஷா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n'கட் அன்ட் ரைட்' திரிஷா\nதிரிஷா நடித்து அறிமுகமாகும் முதல் இந்திப் படத்தில் அவருக்கு அட்டகாசமான கேரக்டராம். கறாரான நகராட்சி ஆணையராக வருகிறாராம் திரிஷா.\nஅவருக்கும், நாயகன் அக்ஷய் குமாருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் முக்கியக் கதையாம்.\nபிரியதர்ஷன் இயக்க, அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்கிறார் திரிஷா இப்படத்தில். இது அவருக்கு முதல் இந்திப் படம். இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்.\nபிரியதர்ஷன்தான் சினிமாவுக்கு திரிஷாவை அறிமுகப்படுத்தியவர். எனவே இந்தியிலும் தனக்கு நல்ல அறிமுகத்தை பிரியன் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் திரிஷா. இப்படத்தை தயாரித்திருப்பவர் அக்ஷய்குமார்.\nமகாராஷ்டிராவின் பல்தான் நகரில் சாலை கான்டிராக்டராக இருக்கிறார் அக்ஷய் குமார். சுத்தமான மராத்திக்காரர். டிப்பிக்கல் மராத்தியாக இருப்பவர். கையில் ஒரு கைப்பை, குடை சகிதம் எங்கும் செல்பவர்.\nமறுபக்கம் நாயகி திரிஷா. அதே நகரின் நகராட்சி ஆணையராக வருகிறார் த��ரிஷா. படு கறரானாவர். ரூல் புக்கில் என்ன உள்ளதோ அதை மட்டுமே செய்வார். லஞ்சம், ஊழல் என்றால் கண்களிலும், காதுகளிலும் நெருப்பைக் கக்குபவர்.\nஅறிவுப்பூர்வமாக எதையும் அணுகும் திரிஷாவுக்கும், எப்போதும் ஒருவித டென்ஷனுடனேயே இருக்கும் அக்ஷய்குமாருக்கும் இடையே நடக்கும் மோதல்கள், பின்னர் ஏற்படும் காதல் என படம் முழுக்க படு கலாய்ப்பாக இருக்குமாம்.\nஇந்தப் படத்தில் திரிஷாவுக்கு நடிக்கவும், ஆடவும், குத்தாட்டம் போடவும் போதுமான வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறாராம் பிரியதர்ஷன். எனவே இந்தப் படம் தனக்கு இந்தியில் நல்ல பிளாட்பார்ம் அமைத்துத் தரும் என்ற பெரும் நம்பிக்கையி்ல் உள்ளார் திரிஷா.\nRe: 'கட் அன்ட் ரைட்' திரிஷா\nஇந்தப் படம் தனக்கு இந்தியில் நல்ல பிளாட்பார்ம் அமைத்துத் தரும் என்ற பெரும் நம்பிக்கையி்ல் உள்ளார் திரிஷா.\nபிளாட்பார்ம் அமைஞ்சா பரவாஇல்ல பிளாட்பாமுல நிக்க போறாங்க ஜாக்கிரத\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: 'கட் அன்ட் ரைட்' திரிஷா\nஇந்தப் படம் தனக்கு இந்தியில் நல்ல பிளாட்பார்ம் அமைத்துத் தரும் என்ற பெரும் நம்பிக்கையி்ல் உள்ளார் திரிஷா.\nபிளாட்பார்ம் அமைஞ்சா பரவாஇல்ல பிளாட்பாமுல நிக்க போறாங்க ஜாக்கிரத\nRe: 'கட் அன்ட் ரைட்' திரிஷா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://emadal.blogspot.com/2004/04/038.html", "date_download": "2018-07-19T11:26:38Z", "digest": "sha1:I7VHON46IYNHB2UYLHLPA2SII3UBPVYW", "length": 16739, "nlines": 163, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: வைகைக்கரை காற்றே!......038", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nகாஞ்சிப் பெரியவர் அந்த ஊருக்கும் வந்தார் என்று சொல்வது பிழை. காஞ்சிப் பெரியவரின் புகழ் ஓங்கியிருந்த காலமது. ஆனால் அந்த ஊரின் புகழ் பல நூற்றாண்டு சரித்திர மாற்றத்தில் குறைந்திருந்ததும் உண்மை. காஞ்சிப்பெரியவர் அந்த ஊரின் புகழறிந்தே வந்திருக்கிறார் என்பது போகப்போகத் தெரிந்தது. அந்த ஊர் ஜனங்களுக்கு தங்கள் ஊரின் பெருமை தெரியாது இருப்பதும் அப்போதுதான் புரிந்தது.\nதமிழ் மண்ணில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் காலம் காலமாக தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. போர்க்காலங்கள், அன்னியர் ஆட்சிக்காலங்கள் போன்ற காலக்கட்டங்களில் நமது பெருமை பற்றி அதிகம் பீற்றிக் கொள்ள முடியாது. அன்னியர்கள் எப்போதும் ஆக்கிரமித்த மக்களை தாழ்வு மனப்பான்மையிலேயே வைத்திருக்க முயல்வர். பின் அதுவே பழகிப்போய் சுய கௌரவம் என்பது ஒரு காலக்கட்டத்தில் முற்றும் அழிந்து போய் விடுகிறது. நந்து வளர்ந்த காலத்தில் 200 வருட ஆங்கில ஆட்சி தமிழ் மக்களின் சுயத்தை ஏறக்குறைய அழித்திருந்தது. பல்வேறு பெரியவர்கள் இழந்த பெருமையை மீண்டும் மக்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தனர். பாரதியார், வள்ளலார், காஞ்சிப்பெரியவர் போன்றோர் சமயப் பின்புலத்தில் பண்டைய பெருமையைக் கொண்டு வந்தனர். தந்தை பெரியார் சமயத்தை மறுதலிப்பதின் மூலம், இந்து ஆளுமையின் பிடியிலிருந்து சாதாரணனை விடுவிப்பதின் மூலம் அவனுக்கொரு புதிய அடையாளத்தைத் தர முயன்று வந்தார். சுயமரியாதை இயக்கம் உச்சத்தில் இருந்தது. அண்ணாவும் சகாக்களும் அரசியல் நோக்குடன் அவ்வியக்கத்திலிருந்து பிரிந்திருந்தனர். அவர்கள் தமிழனுக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுப்பதில் தீவிரமாக முனைந்திருந்தனர். அது சமயச்சார்பு இல்லாமல் இருந்தது. பெரியார் தர முயன்று கொண்டிருந்த ஆங்கில மொழி ஆதரவு இன்றி இருந்தது. தமிழ் மொழி, தமிழினம் என்ற பொது அடையாளத்தை அது வலியுறுத்தியது. அது காட்டுத்தீ போல் பரவிக்கொண்டிருந்தது.\nஆனால் பெரியார் பாசறையிலிருந்து இவர்கள் வந்ததால் பிராமண எதிர்ப்பை இவர்களால் ஆரம்ப காலக்கட்டத்தில் ஒதுக்க முடியவில்லை. பிராமணர்கள் தமிழர் அல்லாதோர் என்ற பிரம்மையை பிராமணர்களிடையேயும் உருவாக்கி வைத்திருந்தனர். அது அவர்களுக்கொரு மயக்கத்தை தந்திருந்தது. வீட்டில் தமிழ்தான் எல்லோரும் பேசுகிறார்கள். பண்டைய குருகுல வாழ்வு முற்றும் அழிந்திருந்தது. குலக்கல்வி என்பதும் அழிந்து போயிருந்தது. அதை மீண்டும் கொண்டு வர முயன்ற ராஜாஜியின் முயற்சி தி.மு.கவினரால் முறியடிக்கப்பட்டு அரசியல் பிழையாகிப் போனது. புதிய ஜனநாயக கல்விமுறை அமுலுக்கு வந்திருந்தது. எனவே பசு மடத்தில் வேதம் சொல்லித்தர முன்வந்த கனபாடிகளுக்கு ஆதரவு இல்லாமல் போயிருந்தது. ஆயினும், திராவிடக்கழகம் தொடர்ந்து பிராமண எதிர்ப்பை ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தது. அவர்களின் ம���க்கிய இலக்காக சனாதன தர்மம் பேசும் காஞ்சி மடம் இருந்தது. இந்த இயக்கத்தின் பெருத்த மக்கள் ஆதரவிற்கு முன் எதிர்நீச்சல் போடும் ஒற்றைப்போராளியாகக் காஞ்சிப்பெரியவர் இருந்தார்.\nஅவரை நந்து பார்த்த போது அவர் போராளி போல் தெரியவில்லை. நோயாளி போல் இளைத்து துரும்பாய் இருந்தார். அவர் கோயில் நந்தவனத்தில் தங்குவதாக ஏற்பாடாகியிருந்தது. அவருக்கென்றொரு சின்னக்குடில் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. அவரது குடிலுக்கு 50 அடி தள்ளி அந்த ஊர் ஜனங்கள் கூடியிருந்தனர். வெறும் வேடிக்கை பார்க்க மட்டுமில்லாமல் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யலாமே என்ற எண்ணமும் காரணமாக இருந்தது. முனிகளில் அவர் மாமுனியாகத் திகழ்ந்தார். அவருக்கு கைங்கர்யம் செய்தால் தம் பழம்வினை அறுந்து போகும் என்று மக்கள் நம்பினர். அவரிடம் யாராவதொருவர் அவ்வப்போது போய் பேசி விட்டு வந்தனர். ஒரு கை இடுப்பிலும், இன்னொரு கை வாய் பொத்தியும் இருந்தது நந்துவிற்கு வேடிக்கையாக இருந்தது. முதலில் போனவருக்கு பல்வலி என்று நினைத்தான். பின்னால்தான் தெரிந்தது எல்லோருமே அப்படிச் செய்தது. அது சபை மரியாதை என்பது போகப் போகத்தெரிந்தது. நந்து கோமா மாமிகிட்ட போய் நின்று கொண்டான். மாமி மடிசாரில் கூடுதல் அழகாக இருந்தாள்.\n இவர் ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்கார்\n\"அவர் எங்கடா சாப்பிடறார். ஏதோ ஜீவனை வைச்சிருக்க ஒரு வாய். அதிலே பாவாக்காய் அது இதுன்னு உப்பு சப்பில்லாத சாப்பாடு வேறு.\"\n\"நம்ம மாதிரி அவர் சாப்பிட மாட்டாரா\n\"ஊகூம். நமக்கு பால், தயிர், நெய் இல்லாட்ட சாப்பாடு இறங்க மாட்டேங்கிறது. அவர் சாமியாரச்சே அப்படிச் சாப்பிட முடியுமா\n மதுரை ஆதீனம் நன்னா சாப்பிட்டு கொழு, கொழுன்னு இருக்காரே\" என்றான். இந்த மதுரை ஆதீனத்தைப் பார்த்தது ஒரு கதை\n\"நேக்கு அதெல்லாம் தெரியாது. இவர் சாப்பிடறதில்லை. இவர் மகான்.\"\nஊமையனிடம் சொல்லி பெரிய ஓடுகால் பிரத்தியேகமாக பெரியவருக்காக வெட்டி வைத்திருந்தனர். பெரியவர் ஆற்றில் நீராட வரமாட்டேன் என்று சொல்லி விட்டார். அந்த ஊர் ஜனங்களுக்கு தாங்கள் ஏதோ அபச்சாரம் செய்து விட்டோ மென்று தோன்றியது. இதை எப்படிப் பெரியவரிடம் முறையிடுவது யார் பூனைக்கு மணி கட்டுவது\nஅக்கிரகாரத்தில் செல்வாக்கு உள்ளவர் கிருஷ்ணய்யர் ஒருவர்தான். அவர் சாதாரணமாகப் பேசுவதே யார���க்கும் புரியாது. இப்போது முறைப்பாடோ டு காஞ்சிப்பெரியவரிடம் பேசச்சொன்னால் உள்ளதும் புரியாமல் போய்விடும். இருந்தாலும் அவரையே பேசச்சொன்னார்கள். ஆனால் அவர் சமயோஜிதமாக, அவரது மச்சினன் கோபாலனை அனுப்பிவிட்டார். கோபால மாமாதான் கிருஷ்ணய்யரின் அத்தனை நிலபுலன்களையும் பராமரித்து வந்தார். கிராமத்து சனங்களுடன் ஊடாடி, ஊடாடி அவருக்கு பேச்சுத்திறமையும், தைர்யமும் வந்திருந்தன.\n\"பெரியவாள் ஏன் ஆத்திலே குளிக்காமல் கோயில் கிணத்திலே குளிக்கிறார்ன்னு ஊர் ஜனங்கள் கேக்கிறா\nதன் குடிலிருந்து தலையை வெளியே நீட்டினார் பெரியவர்.\n\"கோபலய்யர்\" என்றார் மடத்து ஆசாமி.\n\"சாயந்தரமா காரணம் சொல்லறேன். எல்லாரையும் போய் அவா, அவா வேலையை கவனிக்கச் சொல்லு\" என்று உத்திரவிட்டார் பெரியவர்.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karmayogi.net/?q=mj_jan2004_9", "date_download": "2018-07-19T11:37:32Z", "digest": "sha1:4AZNFPN5CSCRCE6KX5WXQ4TT7CCM6EHN", "length": 14151, "nlines": 141, "source_domain": "karmayogi.net", "title": "09.பிரார்த்தனை பலிக்க வேண்டும் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2004 » 09.பிரார்த்தனை பலிக்க வேண்டும்\nதம்பி - மனிதன் சிறியவன், விஷயங்கள் சிறியன. அப்படி இருக்கும்பொழுது பெரும் பணம், அளவுகடந்து, தொடர்ந்து வரும் என்பது புரியவில்லை. அத்துடன் ஏன் அப்படி வரவேண்டும், எதற்காக, எப்படி எனப் புரியவில்லை.\nஅண்ணன் - இது சமூகத்தைப் பற்றிய உண்மையில்லை. பிரம்மத்தை பற்றிய தத்துவம். சமூகத்தில் வெளிப்படும் அளவில்தான் நாம் அதைப் புரிந்துகொள்ள முடியும்.\nதம்பி - பணம் தவிர வேறு விஷயத்தில் இத்தத்துவம் வெளிப்பட்டுள்ளதா\nஅண்ணன் - எல்லா விஷயங்களுக்கும் இது உண்மை. பேச்சு, மொழி என்ற இடத்தில் மட்டும் தெளிவாக இதைக் காணலாம்.உலகில் செயல்கள், அசைவுகள் நிகழ்கின்றன. நாம் பொருள்களைக் காண்கிறோம். மரம், செடி, கொடி, வீடு, ஆகியவற்றைக் காண்கிறோம். மனிதன் சிலவற்றை உற்பத்தி செய்கிறான். இயற்கை சிலவற்றை உற்பத்தி செய்கின்றது. அவை உற்பத்தியாகும் சட்டம் இது.\n. முதலில் ஓரளவு உற்பத்தியாகும்.\n. பிறகு, ஒரு கட்டத்தைத் தாண்டிய பிறகு அபரிமிதமாக உற்பத்தியாகும்.\n. அவை மனிதனின் உபயோகத்திற்கு என நாம் நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.\n. அப்படி ���ற்பத்தியாகும் பொருள்களில் சிலவற்றை மனிதன் பயன்படுத்துவதால் அவன் தன் கண்ணோட்டத்தில் அவற்றைக் கருதுகிறான்.\n. நதியும், மலையும், தாவரங்களையும் இயற்கை மனிதனுடைய உபயோகத்திற்காக உற்பத்தி செய்யவில்லை. அவை சிருஷ்டியின் பகுதிகள்.\n. ஒரு கட்டத்தைத் தாண்டியபின், உற்பத்தி அனந்தமாவது இயற்கை நியதி.\n. நாம் மொழியில் இதைக் காணலாம்.\n. இன்று பணத்தில் அத்தன்மை வெளிப்படுகிறது என நான் கூறுகிறேன்.\nதம்பி - பிரம்மம் முழுமையானது, தன்னை முழுமையாகவே கொடுக்கவல்லது என்பதன்றோ இத்தத்துவம்\nஅண்ணன் - இந்த விஷயத்தில் சமூகமும், பிரம்மமும் ஒன்றே. காற்று அபரிமிதமாக உள்ளது. மனிதன் சுவாசிக்க சிறிதளவு - ஒரு துளி - பயன்படுத்திக்கொள்கிறான். அதுபோல் மொழி உலகில் அபரிமிதமாக உள்ளது. இன்று மனிதன் ஓயாமல் பேசலாம், எழுதலாம், முடிவில்லாமல் உற்பத்தி செய்யலாம். தேவைப்படும் அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறோம். அதுபோல் எதிர்காலத்தில் பணம் அபரிமிதமாக உற்பத்தி செய்யப்படும். தனி மனிதன் எந்த அளவு பணம் வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தானே உற்பத்தி செய்துகொள்ளலாம். பிரம்மம் தன்னை முழுமையாகக் கொடுக்கிறது. நாம் நிலைக்குரியவாறு பகுதியாகப் பெறுகிறோம். சமூகம் முழு பணத்தைப் பெற்றுள்ளது.அதனால் பிரம்மம்போல் தன் முழு பணத்தையுமேதான் ஒருவருக்குக் கொடுக்க முடியும். பகுதியாகத் தர சமூகத்தால் முடியாது. மனிதன் தன்னை பகுதிக்கு உட்படுத்திக்கொண்டால், அவனால் பகுதியை மட்டுமே பெற முடியும். விடுதலை பெற்ற மனிதன் சமூகத்தின் அத்தனைச் செல்வத்திற்கும் உரியவன். சமூகம் கொடுக்கத் தயாராக இருக்கிறது, கொடுக்கிறது. நாம் பெறத் தயாராகவேண்டும். காற்றையும், பேசும் மொழியையும் அப்படிக் கொடுத்துவிட்டது. இனி பணத்தை அப்படித் தரும் என்பதே தத்துவ விளக்கம்.\nதம்பி - இத்தத்துவம் பணத்தைக் கடந்து மற்றவற்றிற்கும் பயன்படுமன்றோ\nஅண்ணன் - அறிவு, உணர்வு, சந்தோஷம், புதுக் கருத்துகள், புது விளையாட்டுகள், என எந்த விஷயமும் எதிர்காலத்தில் அபரிமிதமாக உற்பத்தியாகும். இதை practical concept of infinity ஜடத்தில் அனந்தம் எனலாம்.\nதம்பி - ஷேக்ஸ்பியரைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் எழுதும்பொழுது, இலக்கியம் பேரிலக்கியமாவதை எழுதுகிறார். அங்கு இதைக் குறிப்பிடுகிறார். இயற்கை நோக்கத்தைத் துறந்தபின் சிருஷ்டியின் நிலை உயர்வதாக எழுதுகிறார். We touch here the bottom.....Nature's creativity becomes purposeless.\nஅண்ணன் - ஒரு காரணத்திற்காக உற்பத்தி செய்யும்வரை அளவோடு உற்பத்தி செய்கிறோம். காரணமேயில்லாமல் உற்பத்தி செய்வது அனந்தம். அப்பொழுது அனந்தமாக உற்பத்தி ஆகும் என இலக்கியத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பணத்தை நம் உபயோகத்திற்காக உற்பத்தி செய்யும்வரை பற்றாக்குறையிருக்கும். எந்தக் காரணமும் இல்லாமல் உற்பத்தி செய்தால், செய்வது அனந்தமானால், அளவு அனந்தமாகும். சமூகம்,பிரம்மத்தை, பணத்தில் வெளியிட ஆரம்பித்துவிட்டால், இனி பணம் அபரிமிதமாக உற்பத்தியாகும். அதன்பின் பிரம்மத்தைப்போல் சமூகத்தால் பணத்தை அளவுகடந்தே மனிதனுக்குத் தரமுடியும். அளவு, லிமிட், என்பவை பணத்திற்கு அதன்பிறகு இல்லை.\nதம்பி - பிரம்மம் சக்தியாகி, ரூபமாகிறது. நாம் ரூபத்தைக் காண்கிறோம். ரூபத்தைக் கடந்து சக்தியைப் பார்த்தால் அளவு விரிவடைகிறது. சக்தியைக் கடந்து பிரம்மத்தைக் கண்டால், அது அனந்தமாகிறது.\nஅண்ணன் - அதுவே தத்துவம். நாம் பணத்தை ரூபாய், நோட்டு என்ற ரூபங்களில் காண்கிறோம். பணத்தை உற்பத்தி செய்த சக்தி இந்த ரூபங்களுக்குப் பின்னால் உள்ளது.அது பிரம்மாண்டமானது, பிரவாகமாக எழும். அந்த சக்தி உலகம் முன்னேறும்பொழுது அளவுகடந்து முன்னேறியுள்ளது. அதற்குப் பல காரணங்களுண்டு.அறிவு, விஞ்ஞானம், டெக்னாலஜி, ஆகியவை காரணம். முக்கியமாக இன்று கம்ப்யூட்டர் காரணம்.\nதம்பி - கம்ப்யூட்டர் பணத்தை விரைவாக அனுப்புகிறது.\nஅண்ணன் - வேகம் பணத்தை விரிவுபடுத்தும்.\nதம்பி - அது வியாபாரிக்குத் தெரியும்.\nஉயர்ந்த நிலையைத் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவருவது படைப்பு, சிருஷ்டி.\n‹ 08.அன்பர் கடிதம் up 10. இதுவோ உம் ரௌத்திரக் கருணை\nமலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2004\n01. யோக வாழ்க்கை விளக்கம் V\n07.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயா, பிரகிருதி, சக்தி\n10. இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kamalalayan.blogspot.com/2009/12/bhaarathi-pirantha-naal.html", "date_download": "2018-07-19T11:24:35Z", "digest": "sha1:2INL5N34OVJASOIVICLV6H7JXZPNS57K", "length": 5877, "nlines": 87, "source_domain": "kamalalayan.blogspot.com", "title": "என் சிந்தனைகள்: bhaarathi pirantha naal...............!", "raw_content": "\nஇன்று மகாகவி பாரதி பிறந்த நாள்.தமிழ் மொழிக்குப் புது ரத் தம் பாய்ச்சிய சில பெரியோருள் பாரதி ஒரு சிகரம்.அவரின் பாடல்களை இன்று வானொலியும் தொலைக்காட்சிய���ம் வெளிப்படுத்தி கொண்டிருந்தன.அமரத்துவம் வாய்ந்த கவிதை மலர்களைப் பூக்கச் செய்த குறிஞ்சி மலர்ச் செடி அவர்.வசன கவிதையும்,சிறுகதை வடிவ முயற்சிகளும்,கார்ட்டூன்களும் அவர் தமிழுக்கு அறிமுகம் செய்த புதிய வடிவங்களில் சில. எத்தனை விதமாய் யோசித்தாலும் அந்தக் கவி உள்ளம் முற்றிலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாக இல்லை.இன்றைய வாழ்க்கைச் சூழல்களை மனதில் கொண்டு அவரை ஏதாவது ஒரு முத்திரை குத்தி சிமிழுக்குள் அடைக்கப் பார்க்கிறவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எதிலும் அடங்காமல் அந்தக் கவி உள்ளம் நிற்பதிலும்,நடப்பதிலும்,பறப்பதிலும் லயித்துக் கிடந்திருக்கிறது.காற்று சற்று வேகமாய் வீசினால் கூட காற்றே,மெதுவாய் வீசு என்று வேண்டிக் கொள்வதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறது. மனிதர்கள் எருமைகளைப் போல் ஈரத்தில் உழன்று கிடக்கிறார்கள் என்று நொந்து கொள்கிற உள்ளம் அந்த உள்ளம்.நமது கரங்களில், கண்களில் சொற்களில் சிந்தனைகளில்,எல்லாவற்றிலும் மின்னல் சொடுக்குக என்று வேண்டிய கவி மின்னல் அது.சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இறங்காத மனிதர்களைச் சாடும் சவுக்கு அது.படிக்கும் போதே மனப் பரப்பில் அமுத மழை போல் பொழியும் கவி மழை அது.நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று உணர்த்திய வழிகாட்டி அவர்.இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உணர்வை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படுத்தும் சீர்மிகு சிந்தனைகளின் களஞ்சியம் அது.வேறென்ன சொல்ல\n'என்னை பற்றி'யின் கீழ் எனது விவரங்கள்..\nஎனது புத்தகங்களில் இருந்து.. (4)\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://msahameed.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-19T11:41:28Z", "digest": "sha1:WS6QUOHKTTVAVG4MKBX6A5PUKVM65QQA", "length": 26366, "nlines": 185, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: அற்புதங்களிலெல்லாம் அற்புதம்!", "raw_content": "\nஇன்னும் (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்தச் சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் (உதவியாளர்களை எல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்துக்) கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.\n(அப்படி) ��ீங்கள் செய்யாவிட்டால் – அப்படிச் செய்ய திண்ணமாக உங்களால் முடியாது. மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு இறைவனையும் அவன் வேததத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்கு சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (சூரா அல் பகரா 2: 23, 24)\nபுனித ரமலான் நம்மைத் தழுவிச் சென்று கொண்டிருக்கிறது. இம்மாதத்தில்தான் அகிலத்திற்கு அல்லாஹ்வின் அருள்மறை வந்திறங்கியது.\nஅருள்மழை பொழியும் இம்மாதத்தில் இரவுகள் தோறும், உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இறையில்லங்களிலும் திருக்குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். அந்த அழகிய ரீங்காரம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.\nமுஸ்லிம்கள் ரமலானில் இரவு நேரத் தொழுகைகளில் நிற்கும்பொழுது, இமாம் இந்தக் குர்ஆனைப் பாராமலேயே ஓதுவார்.\nஇப்படி குர்ஆனை மனனம் செய்து கொண்டவர்கள் கொஞ்சநஞ்சமல்ல, இலட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் உள்ளனர்.\nஉலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானோருக்கு அரபியில் பேசத் தெரியாது. இருந்தும் சிரமப்பட்டு இந்தக் குர்ஆனைக் கற்கின்றனர். அதன் ஒவ்வொரு வார்த்தைகளையும் பிழையின்றி உச்சரிக்க பயிற்சி எடுக்கின்றனர்.\nஇது ஏதோ மதத்தின் பெயரால், உணர்ச்சியின் உந்துதலினால் திடீரென்று ஏற்பட்ட ஒன்று அல்ல.\nகுர்ஆன் இறங்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே அது மனனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த முதல் நாளிலிருந்தே அதனை மனனம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.\nஉலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களிடம் நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகின்றது.\n‘கடவுளின் வார்த்தைகள்’ என்று கூறிக் கொண்டு பிற மதங்களும் தங்கள் வேதங்களை பிரஸ்தாபிக்கின்றன. அனால் திருக்குர்ஆன் மக்களை உருவாக்கிய அளவுக்கு வேறு எந்த வேதங்களும் மக்களை உருவாக்கியதாகச் சரித்திரம் இல்லை.\nதிருக்குர்ஆன் ஒன்றுதான் உலகிலேயே அதிகமாகப் படிக்கப்பட்டு வரும் கிரந்தம் திருக் குர்ஆன் ஒன்றே அதன் உள்ளடக்கம் முழுவதும் மனனம் செய்யப்பட்ட வேதம். வேறு எந்தக் கிரந்தங்களிலும் அதன் உள்ளடக்கம் முழுவதும் மனனம் செய்யப்படுவதில்லை.\nஉலகிலேயே அதிகமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்ட ஒரு வேதம் என்றால் அது திருக்குர்ஆன் தான்\nஇவ்வளவு சிறப்புகளைக் கொண்ட திருக்குர்ஆன் இன்னும் சில அற்புதங்களையும் கொண்டுள்ளது.\nஅரபி மொழியில் வந்த முதல் நூலே திருக்குர்ஆன்தான் 14 நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. இருந்தும் என்ன... 14 நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. இருந்தும் என்ன... அதன் மொழிநடை, அது வெளிவந்த பொழுது உள்ள அதே வீச்சில் இன்றும் வீற்றிருக்கின்றது.\nஅரபி மொழியில் வந்த முதல் நூல் மட்டும் அல்ல, இன்று வரை அரபி மொழியில் வெளிவந்துள்ள நூல்கள் அனைத்தை விடவும் மிகச் சிறந்த நூல் திருக்குர்ஆன்தான். உலகம் அழியும் வரை இதே நிலைதான். இதில் எள்ளளவும் மாற்றம் ஏற்படப் போவதில்லை.\n அது முடியும் வரை திருக்குர்ஆன் இந்த மனித குலத்திற்கு கட்டளையிட்டுக் கொண்டேயிருக்கும். வழிகாட்டிக் கொண்டேயிருக்கும்.\nஅதன் மொழிநடை, இலக்கிய நடை ஒப்பிட முடியாத அழகு கொண்டது. 14 நூற்றாண்டுகள் கழிந்தும் அதன் மொழிநடையில், இலக்கிய நடையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. அதன் அழகு குலையவே இல்லை.\nஅதன் உள்ளடக்கம் எள்ளளவும் மாறவில்லை. இதுதான் இறைமறையின் தனிச் சிறப்பு. அற்புதங்களிலெல்லாம் அற்புதம் திருக்குர்ஆன் என்பதற்கு இதை விடச் சான்றுகள் வேண்டுமோ...\nஅது கூறும் விஞ்ஞான உண்மைகள் பலவற்றை பல நூற்றாண்டுகள் கழித்து இன்று அறிவியலாளார்கள் உண்மை என்று நிரூபிக்கின்றனர். அது கூறிய எந்தக் கூறுகளும் இதுவரை மறுக்கப்படவில்லை.\nஅது பண்டைய கால வரலாறுகளை வரிசையாகக் கூறுகிறது. அரேபியப் பாலைவனத்தில் அழிந்து பட்ட ஆது சமூகத்தாரைப் பற்றிக் கூறுகிறது. வேறு எந்தவொரு வரலாற்று நூலும் இதுவரை அவர்களைப் பற்றிக் கூறிடவில்லை.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, அது நம்பிக்கைகளின் தொகுப்பாக மிளிர்கிறது. வாழ்க்கை வழிகாட்டியாக திகழ்கிறது.\nதிருக்குர்ஆன் காலத்தைக் கடந்தது என்று விசுவாசிகளுக்குத் தெரியும். ஏனெனில் இது காலத்தைப் படைத்த அந்த வல்ல நாயனின் வார்த்தை. மேலும் அந்த வல்ல ரஹ்மானே இது காலத்தைக் கடந்துதான் வாழும் என்று வாக்களித்திருக்கிறான்.\nதிருக்குர்ஆனில் என்னதான் உள்ளது என்று அறிய விழைபவர்கள் இன்னும் கூடுதலாகச் சில உண்மைகளைத் திருக்குர்ஆனிலிருந்து அறியலாம்.\nஅகிலத்திற்கெல்லாம் அருட்கொடையாக வந்துதித்த அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்கள் எந்தப் பள்ளிக்கும் சென்று பயிலவில்லை. எந்த ஆசிரியரிடமும் கல்வி கற்கவில்லை. எப்படிப் படிக்க வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று கூட அவர்களுக்குத் தெரியாது.\nஅவர்கள் காலத்தில் கவிதைக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தும் அவர்களுக்குக் கவிதையில் ஆர்வம் இல்லை. பின்பு எப்படி அது நிகழ்ந்தது...\nதங்களது 40வது வயதில் இந்த அற்புதக் குர்ஆனின் வார்த்தைகளை அழகுற ஓத ஆரம்பித்தார்கள்...\nஅண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்களின் வார்த்தைகளை ஹதீஸ்கள் என்கிறோம். அவைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அனால் திருக்குர்ஆனின் வார்த்தைகள் ஹதீஸ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கின்றது.\nநபிமொழிகளும் அளந்தெடுத்த வார்த்தைகளில் இலக்கிய நடையில் இருக்கும். அனால் அது வேறு பாணி. இது வேறு பாணி. மேலும், தெளிவாக ஹதீஸ்கள் ஒரு மனிதரின் வார்த்தைகளே.\nஹதீஸ்களில் மனித உணர்ச்சிகள் இழையோடக் காணலாம். சூழ்நிலைகளின் தாக்கங்கள் அவைகளில் பிரதிபலிக்கக் காணலாம்.\nஅனால் அல்லாஹ்வின் அருள்மறை மனித உணர்ச்சிகள், சூழ்நிலைகள், இன்ன பிற காரணங்களின் தாக்கங்களிலிருந்து அப்பாற்பட்டது.\nஇறைமறை இருபத்தி மூன்று வருட காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்டது. அது விரிவான பல தலைப்புகளில் பேசுகிறது. பல பிரச்னைகளைத் தொடுகிறது.\nஅதிகமான தலைப்புகளை ஒரே நூல் பேசும்பொழுது அதில் சில முரண்பாடுகள் தோன்றலாம். ஆனால் அல்லாஹ்வின் அருள்மறையில் எந்தவித முரண்பாடும் இல்லை.\nஅண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது 23 வருட தூதுத்துவ வாழ்க்கையைத் தனிமையில் கழிக்கவில்லை. அவர்கள் ஒரு குகையில் ஒதுங்கி, தனிமையில் இருந்து இந்த அற்புதத்தைப் படைக்கவில்லை.\nஅவர்களுக்கு நபிப் பட்டம் கிடைப்பதற்கு முன் அவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை ஹிரா குகையில் தனிமையில் இறைவனைத் தியானித்துக் கழித்தார்கள்.\nஅனால் தூதுத்துவம் அவர்களுக்குச் சாட்டப்பட்ட பின்பு, அவர்களது வாழ்க்கையே ஒரு போராட்டம் ஆனது. முதலில் மக்கத்து அரபிகளிடமிருந்து தொல்லைகள். பின்னர் யூதர்களிடமிருந்து தொல்லைகள்.\nஇதற்கிடையில் போர்கள், அத்தோடு இஸ்லாத்தைப் பிறருக்கு எத்தி வைத்தல், அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல், அப்பப்பா... எத்தனையெத்தனை வேலைகள்\nஇவ்வளவு வேலைகளுக்கிடையில்தான் வஹீ மூலம் திருக்குர்ஆன�� வசனங்கள் அவர்களுக்கு இறக்கப்பட்டு, பின்னர் தொகுக்கப்பட்டன.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் இந்தக் குர்ஆனால் மிகவும் கவரப்பட்டார்கள். நடு இரவில் தனிமையில் மணிக்கணக்கில் நின்று தொழுவார்கள். தொழுகையில் மெய் மறந்து திருக்குர்ஆனை ஓதிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று வணங்குவார்கள்.\nஅற்புதங்களிளெல்லாம் அற்புதம் இந்தத் திருக்குர்ஆன் என்று அறிஞர்கள் பாகம், பாகமாக எழுதுகிறார்கள்.\nஇந்த வேதத்தைத் திறந்த மனதுடன் படிப்பது என்பது இதனை விசுவாசிப்பது ஆகும்.\nஉண்மையை உண்மையாகவே தேடுபவர்களுக்கு இந்தக் குர்ஆன் வழிகாட்டும்; அவர்களது கேள்விகளுக்கு விடைகள் சொல்லும்; அவர்களது குழப்பங்களை நீக்கும்; அவர்களது பிரச்னைகளைத் தீர்க்கும்\nமுதல் வசனத்திலிருந்து முடிவு வரை ஒவ்வொரு வசனமும் ‘இது இறைவனின் வார்த்தைதான்’ எனப் படிப்போருக்குப் பறை சாற்றுகிறது.\nஇதனை அலட்சியம் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையையே அலட்சியம் செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.\nஇக்கட்டுரை விடியல் வெள்ளி ஜனவரி 2000 மாத இதழில் நடுப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.\nஅதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.\nதேன்சிட்டு: சந்தடியில்லாமல் சிந்து பாடும் சங்கப் ப...\nஃபாசிஸ்டுகள் ஏற்றிய பாகிஸ்தான் கொடி - நயவஞ்சக வரல...\nஎன்று முடிவுக்கு வரும் இந்தச் சிறுபான்மை வேட்டை\nவேர்கள் - மொழிபெயர்த்தோன் உரை\nமக்கள்தொகைப் பெருக்கம் : தீர்வு என்ன\nஇஸ்லாம் : சந்தேகங்களும் தெளிவுகளும்\nமனித இனத்திற்கெதிரான குற்றம் - பேரா. அ. மார்கஸ் அவ...\nசிறையில் எனது நாட்கள் - தி ஹிந்து துணை ஆசிரியர் சி...\nஇம்பாக்ட் பக்கம் - பாகம் 2\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (CRIME AGAINST HUMANI...\nவாய் குறித்த ஆரோக்கிய குறிப்புகள்\nகாந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு - 2\nகாந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு - 1\nசமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது\nதுபையில் தியாகத் திருநாள் குதூகலம்\n“என் மகளைக் கொன்றது யார்\nகுத்துவதாய் இருந்தால் இனி நெஞ்சில் குத்துங்கள்\nஅண்ணலார் அருளிய அடிப்படை தத்துவம்\nஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் - பதிப்புரை (ச...\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்த...\nஇஸ்லாமியப் பார்வையில் நே�� நிர்வாகம்: வாசகர் கருத்த...\nஅமீரகம் - ஷார்ஜாவில் 30ஆவது புத்தக கண்காட்சி\nகண்போன்ற காலத்தை பொன்னென்று எடுத்துக்காட்டி...\nகருணை நபி கற்றுத் தந்த தற்காப்பு\nநேரத்திட்டமில்: வெற்றியடைய 10 சுலபமான வழிகள்\nநேரத்தை நல்ல முறையில் நம் வாழ்வில் பின்பற்ற சில வழ...\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 10\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 9\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 8\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 7\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 6\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 5\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 4\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 3\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 2\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 1\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://msahameed.blogspot.com/2015/01/34.html", "date_download": "2018-07-19T11:44:39Z", "digest": "sha1:TMYDRFDJJUOA4BGLGSJW5KQP5VXHNQ5C", "length": 12541, "nlines": 122, "source_domain": "msahameed.blogspot.com", "title": "வேர்களைத் தேடி...: மீடியா உலகில் முஸ்லிம்கள் – 34", "raw_content": "\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 34\nவானொலி நிலையங்கள் (Radio Stations)\nஇன்று தனியார் நிறுவனங்கள் FM என்ற பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கு அரசு அனுமதியளித்துள்ளது.\nதேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடனும், பொருளாதாரத்துடனும் நாமும் பண்பலை நிலையங்களை பாங்காக நடத்தலாம். இன்று பெரும்பாலான பண்பலை வானொலிகள் பெரும்பாலும் சினிமா பாடல்களையும், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையுமே நடத்தி வருகின்றன.\nஇந்த நிலையை மாற்றி சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சிகளை நாம் கொடுக்கலாம். அன்றாடச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அழகுற நடத்தலாம். சிறந்த மருத்துவர்களைக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு மருத்துவ தீர்வுகள் வழங்கலாம்.\nமக்கள் அறிய வேண்டிய சட்டங்கள், மனித உரிமை குறித்த விவரங்கள் போன்றவற்றை சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்களைக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வூட்டலாம்.\nஇப்படி பல பயனுள்ள நிகழ்ச்சிகளை அதி�� பொருட்செலவில்லாமல் இந்தப் பண்பலை வானொலி நிகழ்ச்சிகள் மூலம் நடத்த முடியும்.\nமனிதவளப் பயிற்சி (Manpower Training)\nமுஸ்லிம் சமுதாயத்திற்கு இப்போதைய தேவை ஊடக வல்லுனர்களும், ஊடகத்தை நடத்திச் செல்லும் தொழில்நுட்ப வல்லுனர்களும்தான். அவர்களை நாம் பலப்பல வழிகளில் உருவாக்கலாம்:\n1. நமது மாணவர்களை இதழியல் மற்றும் வெகுஜனத் தொடர்பு (Journalism and Mass Communication) கல்விப் பாடத்திட்டத்தைப் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அவர்களைத் தரமான பயிற்சிக் கூடங்களுக்கு அனுப்புவதில் நாம் கவனம் எடுக்கவேண்டும்.\n2. நமக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் (Print and Visual Media) தரமான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். காட்சி ஊடகத்திற்குத் தேவையான படம் இயக்குதல் (Film Direction), நெறிப்படுத்துதல் (Editing), வீடியோகிராஃபி போன்ற பாடத்திட்டங்களில் சேர்வதற்கு நாம் நமது மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.\n3. இந்தப் பாடத்திட்டங்களில் சேர்வதற்கு ஆர்வமுள்ள ஏழையான, தகுதியுள்ள மாணவர்களுக்கு நாம் கல்வி உதவித்தொகை அளித்து உதவ வேண்டும்.\n4. இளங்கலை மாணவர்களுக்கு இதழியல் பயிற்சி முகாம்களை (Journalism Orientation Camps) நடத்தி அவர்களுக்கு இந்தக் களத்தை அறிமுகப்படுத்துவதுடன், ஆர்வமும் படுத்தவேண்டும்.\n5. முஸ்லிம் நாளிதழ்களிலும், பருவகால இதழ்களிலும் பணி புரியும் பத்திரிகையாளர்களுக்கு புத்துணர்ச்சி பயிற்சி முகாம்கள் (Refresher Courses) ஏற்பாடு செய்யவேண்டும். நல்ல தரமான இதழியல் வல்லுனர்களை அழைத்து அந்த முகாம்களில் பாடம் நடத்தவேண்டும். இதனால் நமது முஸ்லிம் பத்திரிகைத்துறையின் தரம் தானாக உயரும்.\n6. அர்ப்பணிப்புடன் ஊடகத்துறையில் அயராது உழைக்கும் முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கவேண்டும்.\n7. வசதியும், வாய்ப்பும் உள்ள நமது பத்திரிகை உரிமையாளர்கள் அல்லது ஊடகக் குழுக்கள் ஊடகப் பள்ளிகளை (Media Schools) ஆரம்பித்து தரமான முஸ்லிம் இதழியலாளர்களை உருவாக்கலாம். அங்கே தரமான தொழில்நுட்பம், இஸ்லாமியப் பார்வை, சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று சமுதாயத்திற்குத் தேவையானவற்றை பாடத்திட்டங்களில் சேர்க்கலாம். இதனால் ஏனோதானோவென்று இல்லாமல் சமுதாயக் கடமையையுணர்ந்த, அர்ப்பணிப்பு உணர்வுள்ள, அயராது உழைக்கும் மனப்பான்மையுள்ள ஊடகவியலாளர்கள் உருவாகுவார்கள்.\n இந்த ஊடகக் கண்மணிகள்தான் இப்போத��ய சமுதாயத்தின் தேவை.\nஇனி ஒரு நாளிதழையோ, பருவகால இதழையோ தொடங்குவதற்கு சட்ட ரீதியாக என்னென்ன செய்யவேண்டும் என்பதை அடுத்த தொடரில் காண்போம்.\nLabels: மீடியா உலகில் முஸ்லிம்கள்\nகாந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு – 1\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்: வாசகர் கருத்த...\nரணபூமியில் ரத்தம் சிந்திய ரச்சேல்\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 40\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 39\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 38\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 37\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 36\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 35\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 34\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 33\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 32\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 31\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 30\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 29\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 28\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 27\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 26\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 25\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 24\nமீடியா உலகில் முஸ்லிம்கள் – 23\n2014ல் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலக்க...\nஇஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் (7)\nஇஸ்லாம் வென்றெடுத்த ஷாம் (1)\nசிறையில் எனது நாட்கள் (2)\nபிடித்த பிறர் கட்டுரைகள் (1)\nமனதோடு மனதாய் (நூல்) (2)\nமனித இனத்திற்கெதிரான குற்றம் (2)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் (40)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://omsathuragiri.blogspot.com/2013/01/blog-post_593.html", "date_download": "2018-07-19T11:36:12Z", "digest": "sha1:CVQYBICTKLUTTHMPYDFH2XCJS2RUAED3", "length": 29854, "nlines": 332, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம்", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nகவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.\nஇவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், க���ழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்\nஅங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை\nபந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி\nபந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா\nமயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்\nஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள\nகட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே\nஓம் கெளம் கெளமார்யை நம:\nஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:\nஓம் சிகி வாஹனாயை வித்மஹே\nஅம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.\nவிஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.\nசக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:\nதமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.\nஓம் வை வைஷ்ணவ்யை நம:\nஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:\nஓம் ச்யாம வர்ணாய வித்மஹே\nபன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.\nஅம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.\nகலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பா��். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.\nவராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .\nதண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.\nசுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.\nசுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.\nமுசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்\nகனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:\nஓம் வாம் வாராஹி நம:\nஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:\nஇந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே\nமணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.\nஇந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.\nஇவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிரு���்கும்.\nஅங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை\nஇந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:\nஓம் ஈம் இந்திராண்யை நம:\nஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:\nஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே\nஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.\nபதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே\nஇவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.\nகறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.\nசூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை\nமுண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா\nசூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.\nநிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே\nரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா\nசாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.\nஓம் சாம் சாமுண்டாயை நம:\nஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:\nஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே\nகன்னித்தன்மையை தாய்மைக்கு இட்டுச்செல்லலாம். அதற்கு அனுமதி ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு. ஆனால்,கன்னித்தன்மையை களங்கப்படுத்தக் கூடாது. (அப்படி களங்கப்படுத்தினால் களங்கப்படுத்துபவனுக்கு மேற்கூறிய சப்தகன்னிகைகளின் வரங்களில் ஏதாவது ஒன்று மட்டுமாவதை இழந்தே ஆக வேண்டும் என்பது சாபம்) இவர்களின் அவதார நோக்கமும் தங்களுடைய முழுமையான சக்தியோடு விளங்கிடுதல் மற்றும் ஆண்மைசக்தி எனப்படும் சிவமூலத்தை துணையாகக் கொள்ளாததும் இவர்களின் சிறப்பாகும்.\nசப்தகன்னியர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல;��ண்களுக்கும் ஒரு பலமே\nசப்த கன்னியரை, அன்புடன் மனதால் நினைத்தாலே போதும். நம் அன்னையாக, உயிர் தரும் தோழியராக, அன்பும், அபயமும், அருளும் அற்புத தேவிய\nகணவன் மானைவி ஒற்று மை வாழ எ ண்ணிடம் ஓரு ...\nவசியம் மந்திரம் சித்தியாக செயல் முறைநண்பர்களே\nமந்திரம் படிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி ...\nகுபேர வஷ்ய மந்திரம் செல்வசெழிப்பை தரும் அரு...\nமங்களம் தரும் ஸ்ரீதுளசி முன்னொரு காலத்தில் சங்க...\nசப்தக்கன்னிகள் தொடர்ச்சி ..... r 3.கௌமாரிகவுமாரி...\nஸ்ரீ வராஹி அர்ச்சனை ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீ...\nபராசக்தி எடுத்த தசமகாவித்யா அவதாரங்களில் ஒன்பதாவதா...\nவரம் தரும் அதி சூட்சும சண்முக மந்த...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ���...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/08_28.html", "date_download": "2018-07-19T11:55:59Z", "digest": "sha1:N5AY4G3MMOGQECE4STX5ORAI77DBAFPZ", "length": 44016, "nlines": 240, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: இந்திய வரலாறு-08", "raw_content": "\nஹிந்து மதத்தின் வரலாறு பற்றி கடந்த பதிவில் பார்த்தோம். ஹிந்து மதம் உருப்பெற்று செழிப்படைந்தது வேதகாலத்தில் தான். வேத காலத்தின் வரலாறு மற்றும் வேதங்கள் பற்றி இனி விரிவாக பார்க்கலாம். வேதகாலம் என்பது மனிதன் முழுமையான நாகரிகம் அடைந்தபிறகு உருவான காலமாகும். அதாவது உலோக காலத்திற்கு பிறகு வந்த காலம். இது கிமு 2000 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம். வேத காலம் வட இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. ஹிந்து மதத்தின் வேராக கருதப்படும் வேதங்கள் இயற்றப்பட்டது இகாலக்கட்டதில் தான்.\nவேதங்கள் என்பவை இந்து மதத்தின் அடிப்படையாக அறியப்படும் நூல்களில் சிலவாகும் மேலும் காலத்தால் மிகவும் பழமையானது. இன்றும் வேதங்களில் சில நடைமுறையில் இருக்கின்றன. வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழி சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும்.என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம்,பொருள், இன்பம், வீடு என்பர்). என்பனவாகும்.\nவேதங்கள் வேதமொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது.இம்மொழி சம்ஸ்கிருத மொழியின் முன்னோடி. தேவநகரி என்றும் அழைக்கபடுகிறது,வேதங்கள் இன்றள���ும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது .விஜநகர ஆட்சியில் புக்க அரசர் காலத்தில் வாழ்ந்த சாயணாசாரியர் என்னும் பதினாலாவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாஷா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.\nஇது சமய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உலகின் மிக பழமையான நூல்களிலும் ஒன்று.வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.\nவேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு:\nசம்ஹிதை - தொகுப்பு; \"மந்திரங்கள்\" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)\nபிரமாணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்\nஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்\nஉபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.\nயசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சப்த பிரமாணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். சதபத பிராம்மணம் சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.\nகாலம் காலமாக வாய்வழியாகவே பின்பற்றப்பட்டு வந்த சுலோகங்கள் கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனாச்சார்யர் வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். ரிக்வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. முதல் இரண்டு பாகங்களும் \"கர்ம கண்டங்களாகவும்\", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்)அல்லது அனுபவத்துக் குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு.\nவேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும்.இதனை ஞான கா��்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.\nஇந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று.மேலும் நான்கு வேதங்களில் மிகவும் பழமையானது. இயற்றப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வேத கால சமஸ்கிருதம் அல்லது தேவநகரி மொழியில் எழுதப்பட்ட மந்திரங்களை கொண்டது.\nரிக்வேதம் முழுவதும் செய்யுட்களாக உள்ளது. சிறப்பான ஏழு சந்தங்களால் அமையப்பட்டது . அவைகள் காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பிரஹதி, விராட், த்ரிஷ்டுப்,ஜகதி ஆகும். இதில் காயத்திரி சந்தஸ் அதிக புழக்கத்தில் உள்ளது.\nரிக்வேதம், வேதகால சமசுகிருதத்தில் 1,028 சுலோகங்களால் இயற்றப்பட்டுள்ளது .இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் (பகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. ஒரு கடவுள் கொள்கை, பல கடவுள் கொள்கை மற்றும் இயற்கையை கடவுளாக கொண்டு பெரும்பாலான சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளன. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.\nமுக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் அசுர இனத்தாருக்கும் மற்றும் இமயமலைவாசிகலான கிராதர இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.\nரிக் வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள் அக்னி, இந்திரன், சோமன் என்போராவர்.இவர்களைவிட மித்திரன், வருணன், அஷ்வினிதேவர்கள், விஷ்ணு, உருத்திரன், தேவர்களின் குருவான பிரகஸ்பதி, பிரிதிவி, சூரியன், வாயு, மழை, அத்ரி, அந்தரிச்சன், துவஷ்டா, சரஸ்வதி,அதிதி, நான்கு திசைகள், நீர், நதிகள், மலைகள் போன்ற கடவுளர்களும், இந்நூலில் போற்றப்படுகிறார்கள்..\nவசிட்டர், விசுவாமித்திரர், பரத்துவாசர், வாமதேவர், அகத்தியர், கிரத்சமத், கக்ஷிவான்,தீர்க்கதமா, கோதமர், வேதாதிதி, சியாவாஷ்வ, மதுசந்தா, அபாலா (பெண் முனிவர்), அஷ்டக்,பிரஸ்கண்வர், ஜமதக்கினி, அயாஸ்வா, அஜிகர்த்தன், கன்ஹஷேப், பராசரர், சக்தி மற்றும் அத்ரி போன்ற முனிவர்களை பற்றிய குறிப்புகளும் உள்ளன.\nரிக் வேத்த்தில் திவோதாஸ், சுதாஸ், மனு, புரூரவா, நகுசன், யயாதி, மாந்தாதா, புரு, குசிக்,திரிச்சு மற்றும் குசிகர் போன்ற அரசர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.\nரிக்வேத்தில் குறிப்பிடப்படும் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், அதிதி, இந்திரத் தாய்கள்,இந்திராணி, ஊர்வசி, கக்ஷிவான் மகள் கோஷா, ஜுஹூ, தட்சிணா, நிபாவரி, யமீ வைஸ்வதி,ராத்திரி, லோபமுத்ரா [அகத்தியரின் மனைவி], வசுக்கரனின் மனைவி, வாக், விவ்ருஹா,விஷ்பல, விஸ்வவாரா, சசி, சஷ்வதி, சிகண்டினி, காஷ்யபி, சிரத்தா காமயானி, ஸர்மா[ பெண் நாய்], சார்ப்ப ராக்ஞி, சிக்தா, சுதேவி மற்றும் சூர்யா.\nரிக்வேத கால மக்கள் சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்து வந்தாலும், பசுக்கள், குதிரைகள்,ஆடுகள் ஆகியவைதான் பெருஞ்செல்வமாக கருதினர். அவர்களிலே மாமிச உணவு உண்ணாதவர்கள் எவரும் இல்லை எனலாம். ’புலால் இல்லாமல்’ மதுயர்க்கமே (உணவே)இருக்கமுடியது. ரிக்வேத கால இறைச்சி உண்ணும் மக்கள் முக்கியமாக பசு, குதிரை, ஆடு மற்றும் செம்மறியாட்டின் இறைச்சியை உண்டனர். பலவிதமான பசு ரசமும் [பசுக்குழம்பும்]அவர்களுடைய முக்கிய உணவாகும். ’சுரபி பக்வம் மாம்ஸ்’ என்ற சொறொடர் (சமைக்கப்பட்ட மணங்கமழும் இறைச்சி) இதையே தெளிவு படுத்துகிறது. பால், தயிர் மற்றும் நெய்யும் முக்கியமானது என்றாலும் ‘புரோடாஷ்’ என்பது அவர்களுக்கும், அவர்கள் வணங்கும் தேவர்களுக்கும் விருப்பமான உணவாகும். தென் இந்தியாவின் முதன்மையான உணவான அரிசி பற்றி ரிக் வேத்த்தில் எந்த குறிப்புகளும் காணப்படவில்லை. சவ்வரிசி முதன்மையான உணவு, வறுத்த தாணியத்தை ‘தானா’ என்றும், தினை மாவை ’கரம்ப’ என்றும், ரொட்டியை ‘அபூப்’ என்றும், அழைத்து அதை உண்டனர். மேலும் பழ வகைகளும் உண்டனர்.\nஆரிய மக்கள் வாழம் இருப்பிடங்களை ‘கிராமங்கள்’ என்றும், ராஷ்டிரங்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. கிராமத் தலைவரை ‘கிராமணி’ என்றும், ராஷ்ட்டிரத் தலைவரை ‘ராஜா’என்றும் அழைத்தனர். ’சாம்ராட்’, ஸ்வராட், ஷாஸ், ஈஷான், பதி, பூபதி, பூதி மற்றும் நிருபதி என்ற சொற்களால் ராஜாவை அழைத்தனர். ராஜாவின் மகன்களை ராஜபுத்திரர்கள் என்றழைத்தனர். அவர்களிடையே சபை, சமிதி, போன்ற சமூக அமைப்புகள் இருந்தன. சமூகத் தலைவர்களை ‘குல்ப்’ (கு��த்தலைவர்) என்றும் ’விரஜாபதி’ (சமூகத்தலைவர்), ’கணபதி’ஆகியவர்கள் குற்ற வழக்குகள், சிவில் வழக்குகளில் விசாரித்து நீதி வழங்கினர். ரிக் வேதத்தில் புரோகிதர் (பிரதமர்) பணிகள், வேள்வி செய்வதும், செய்வித்தலும் மற்றும் மத தொடர்பான விடயங்களில் மன்னனுக்கு ஆலோசனை எவ்வாறு கூறுவது போன்று பல குறிப்புகளும் உள்ளன.\nyajus \"வேள்வி\" + veda \"அறிவு\" என்பவற்றின் சேர்க்கையே யசுர் வேதம்.\nஇந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.\nயசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை\nஇரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன.கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.\nகிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை:\nஎன்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன.\nசுக்கில யசுர்வேதம் முனிவர் யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை:\nஎன்பனவாகும். வட இந்தியாவிலும், குசராத்திலும், நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில்,இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் ��ான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.\nமிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.\nsāman \"கிரியைகளுக்கான மந்திரங்கள்\" + veda \"அறிவு\" ), என்பது சாம வேதம் ஆகும். இந்து சமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக்வேத்த்திற்கு அடுத்த்தாக இது இரண்டாம் நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்\nஅதர்வண வேதம் நான்கு வேதங்களுள் ஒன்றாகும் மேலும் இது நான்காவது வேதமாக கருதப்படுகிறது. அதர்வண வேத கூற்று படி பிரம்மதேவர் இவ்வுலகத்தை படைத்தார் பின் அதர்வன் - அங்கிராசா என்ற இரண்டு முனிவர்களை படைத்தார் அவர்களால் இயற்றப்பட்டது அதர்வண வேதம் என்பது கூற்று. அதர்வண வேதத்தில் கடவுள் பற்றிய பல சுலோகங்கள் தந்திரங்கள் மற்றும் பல மருத்துவ குறிப்புகள் உள்ளன.\nஇவாறாக நான்கு வேதங்களும் வகைபடுதப்பட்டு அவற்றில் சில இன்றளவும் நடைமுறையில் உள்ளன. ஆதி காலத்தில் ஓதப்பட்ட வேடங்களில் இன்று இருப்பவை மிக சொற்பமே. அவற்றில் இருக்கும் தத்துவங்களும், கருத்துக்களும் ஏராளம். எகிப்திய, மெசபடோமியா நாகரிகத்திற்கு ஒப்பானதாக நம் நாகரிகம் இருந்தாலும் வரலாற்றில் அவற்றிற்கு இருக்கும் ஆதாரங்கள் சொற்பமே.\nவேதங்களை தொடர்ந்து வேதங்களுக்கு பின் வந்த உபநிடதங்கள் மற்றும் இதிகாசங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்���ுகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்த��ம் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.cri.cn/news/international/520/20180512/130159.html", "date_download": "2018-07-19T11:45:31Z", "digest": "sha1:A2KL6IZNB2VOSTH5DAKTWSWE2AXCEWE4", "length": 2733, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "அணு ஆயுதமின்மையால் வட கொரியாவுக்கு உதவி - தமிழ்", "raw_content": "அணு ஆயுதமின்மையால் வட கொரியாவுக்கு உதவி\nவட கொரியா கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை நனவாக்கினால், வட கொரியாவின் வளர்ச்சிக்கு உதவியை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ 11ஆம் நாள் தெரிவித்தார்.\nவட கொரிய அதியுயர் தலைவர் கிம் ஜ்ங் உன்னுடன், ஆழமான முறையில், சிக்கல் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இப்பேச்சுவார்த்தை பயனுடையதாக இருத்ததாக போம்பியோ கூறினார்.\nஜூன் 12ஆம் நாள் சிங்கப்பூரில் கிம் ஜ்ங் உனை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 10ஆம் நாள் தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.trendstime.in/?p=57", "date_download": "2018-07-19T11:07:40Z", "digest": "sha1:KRV5P4WB3UNYHTTXDB26HESWYI2L6CXQ", "length": 8626, "nlines": 55, "source_domain": "tamil.trendstime.in", "title": "செய்துபாருங்கள் ..! கிச்சன் டிப்ஸ் உங்களுக்காக ..! – Trendstime தமிழ்", "raw_content": "\n கிச்சன் டிப்ஸ் உங்களுக்காக ..\nகாபி வாசனை தூக்கலாக இருக்க , காபி டிகாக் ஷன் போட்ட உடன் அதை அப்படியே எடுத்து காபி கலக்காமல், அந்த டிகாக் ஷனை சுட வைத்து பின் காபியில் கலந்தால்போதும் ..\nஅரைப்படி மாவில் செய்த இடியாப்பத்துக்கு, 1 கப் துவரம்பருப்பு, 10 காய்ந்தமிளகாய், உப்பு, பெருங்காயம், அரை மூடி தேங்காய் சேர்த்து அரைத்து தாளித்த தூளை சேர்த்து வதக்கினால் உசிலி இடியாப்பம் ரெடியாகி விடும்.\nமாம்பழ மில்க் ஷேக் செய்யும் போது குளிர்ந்த பால் பாதியளவும், கன்டென்ஸ்டு மில்க் பாதியும் கலந்து தயாரித்தால் சுவை அபாரமாக இருக்கும்.\nபச்சரிசி தோசைக்கு ஓம இ���ையை சேர்த்து அரைத்தால் மணமும் சுவையும் கூடும்.\nகார்ன்ஃப்ளேக்ஸை உப்பு, காரம் சேர்த்து தாளித்த தயிரில் கலந்து உண்டால் அருமையாக இருக்கும்.\nஅடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் கார்ன்ஃப்ளேக்ஸ் தூளை மாவுடன் கலந்து விடுங்கள். அடை மாவு கெட்டியாவதுடன், அடை அதிக சுவையுடனும் மிருதுவாகவும் இருக்கும்.\nகோதுமை உப்புமா செய்யும் போது கொதிக்கும் தண்ணீரில் சிறிது வெந்த பாசிப்பருப்பை சேர்த்துப் பின் கோதுமை ரவையைப் போட்டு உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.\nஹோட்டலில் ரவா தோசை மொறுமொறு என்று இருக்கும். வீட்டில் செய்தால் ஒழுங்கான உருவத்தில் வராது. அதற்கு ரவையை நன்றாக வறுத்து அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துப் பின்னர் மற்றப் பொருட்களுடன் கலந்து வார்த்தால் ஹோட்டலில் உள்ளது போல மொறுமொறு தோசை தயார்.\nபலாக்கொட்டையை வேகவைத்து தோலுரித்து, சிறுதுண்டுகளாக்கி, கடுகு தாளித்து காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு, வெங்காயம், உப்பு, பெருங்காயம், தேங்காய்த்துருவல், கொத்தமல்லித் தூவினால் பலாக்கொட்டை சுண்டல் தயார்.\nஎலுமிச்சை ரச வண்டல் மீந்து விட்டால், அதில் தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கி, கொஞ்சம் சோம்பு போட்டுத் தாளித்து செய்தால் சாப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.\n* உளுந்து வடை செய்யும் போது மாவில் சிறிதளவு சேமியாவைத் தூள் செய்து போட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும்.\nகோதுமை மாவு 1 கப், மைதா மாவு 1/2 கப், வறுத்த உளுத்தம் மாவு 1 டீஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் ருசியாக இருக்கும். வெடிக்காது. எண்ணெய் குடிக்காது.\nசாம்பார் பொடி செய்யும்போது சிறிதளவு சுக்கை தட்டி போட்டுக் கலந்து அரைத்தால், வாசனையும் கூடும். பருப்பினால் உண்டாகும் வாயுவையும் தடுக்கும்.\nவெங்காய வடகம் செய்யும்போது எலுமிச்சை இலை, நார்த்தை இலை, தூதுவளை, வல்லாரை, துளசி, புதினா போன்ற மூலிகைகளை சேர்த்து செய்தால் சுவையும், மணமும் கூடும்.\nசப்பாத்தி குருமாவில் பைனாப்பிள் பழத்துண்டுகள், திராட்சை சேர்த்தால் வித்தியாசமான சுவை கிட்டும்.\nசிறிது எண்ணெயில் மிளகாய் வற்றலை வறுத்து, அதனுடன் தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டையும் சேர்த்து வதக்கி, அதனுடன் சிறிது புளி, உப்பு, வெல்லம் சேர்த்து அரை���்தால் அருமையான இஞ்சித் துவையல் தயார்.\nCategoriesஆரோக்கியம், கிச்சன் கார்னர் Tagsசெய்துபாருங்கள் .. கிச்சன் டிப்ஸ் உங்களுக்காக ..\nPrevious PostPrevious காய்கறி எப்படி வாங்குவது..\nNext PostNext வெங்காயத்தை, தேனில் ஊறவைத்து சாப்பிட கிடைக்கும் பலன்கள்..\nதமிழிலிருந்துதான் ஆங்கிலம் வந்தது, உலகின் தாய்மொழி தான் என நிரூபிக்கப்பட்டது, ஆதாரம் இதோ..\nஇன்றைய பேஷன் : முற்றிலும் பெண்களுக்காக..\nபேஷன் உலகம் : உங்களுக்காக…\nகோயம்புத்தூர் : சுற்றுலா தலங்கள் ..\nசென்னையில் உள்ள சுற்றுலா இடங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/06/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A6-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2610954.html", "date_download": "2018-07-19T11:51:47Z", "digest": "sha1:XLN7JEFJPVXTEAMZ7BINWBLMLKXEPHBH", "length": 6408, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "டிச.6: ராமேசுரவத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nடிச.6: ராமேசுரவத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு\nபாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலம், ராமேசுவரம் திருக்கோயில் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nடிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களை சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம், தனுஷ்கோடி, பாம்பன், குந்துகால் தெற்கு கடலோர பகுதிகளில் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்���ெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://annasweetynovels.com/placeholder-image-4/", "date_download": "2018-07-19T11:04:14Z", "digest": "sha1:JCSIBUODDDPU763RXYWZJ3EPU57NA5IC", "length": 2960, "nlines": 56, "source_domain": "annasweetynovels.com", "title": "Placeholder Image – Anna sweety novels", "raw_content": "\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nகாதலாம் பைங்கிளி தொடர் முடிவுறவும் “மன்னவன் பேரைச் சொல்லி ” பதிவிட முயலுகிறேன் . நன்றி\nகாதல் வெளியிடை முழு தொடர்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 16\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 15\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 14\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 13\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 12\nAfroz on மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை…\nDevi on மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை…\nDevi on மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை…\nDevi on மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை…\nDevi on மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://koshasrini.blogspot.com/2017/10/koshasrini_22.html", "date_download": "2018-07-19T11:14:16Z", "digest": "sha1:LXKPIBD3JBOZFI3UI2A653DWLHY2EZ4O", "length": 6349, "nlines": 82, "source_domain": "koshasrini.blogspot.com", "title": "KOSHASRINI: KOSHASRINI", "raw_content": "\nஅடியேனால் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டி அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள, அடியேனால் உண்டுபண்ணப்பட்ட வலைப்பூ, KOSHASRINI.\nஅனைத்து வலைப்பதிவர்களுக்கும் மிக்க நன்றி.\nஇதில் காணப்படுபவை யாவும் வேத உபநிஷத் மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை, அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும், உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை. அவை யாவும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவை. என் நேர்க்காட்சியுணர்வுகளும் உள்ளன.\nஎன்னுடைய அனுபவங்களை, சிந்தனைகளை, எண்ணங்களை, நான் அறிந்தவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள, எனக்குப் பிடித்த, என் உயிரோடு ஒன்றாகிப் போன, என்னைச் சிந்திக்க வைத்த சில ஆக்கங்களை ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.\nஎன்னுடைய வாழ்வில், குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும், எனது பிரத்யோக ஆன்ம���க பயணங்களையும், புகைப்படுங்களுடன் ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.\nஉங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது, பதிவுகளை படித்து உணர்ந்து, உங்களுடைய தனித்தன்மைவாய்ந்த கருத்துகளை ஆலோசனைகளை அந்தந்த பதிவுகளின் அடிப்பாகத்தில் பகிர்ந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.\nமேலும் புகைப்படங்கள் இணையதளம் / வலைத்தளத்திலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டது. அந்த வலைப்பதிவாளர்களுக்கு மிக்க நன்றி. முக்கிய பங்கு \"Google Images\".\n..... என்றும் அன்புடனும். அருளுடனும் அடியார்க்கும் அடியேன் ஸுப்ரஹ்மண்ய ஸ்ரீநிவாசன்\nசிவனால் சிவனைத்தேடி சிவசக்திஐக்யமாக சிவனருளைநாடி அலையும் சிவபக்கிரி\nவேத உபநிஷத் மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை, அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும், உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து\nஎன் நினைவுக்கு வந்தவை .....\n( என் அனுபவங்கள் இல்லை )\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு.\nஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதி\nGreat Thanks ... மிகமிக்க நன்றி\nஶிவனின் பத்தாயிரம் நாமங்கள் .. தொடர்கிறது\nஸ்ரீ தக்ஷின காளிகா அபராத க்ஷமாபண ஸ்தோத்திரம்\nகர்மவினைகளை அடியோடு நீக்கும் கிரிவல விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2018-07-19T11:54:13Z", "digest": "sha1:ORAVBLOE3VHV2PWQKKWAYAHHZSRDPAYA", "length": 7346, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "» லோககாந்தனின் ‘யாழ்தேவி’ திரைப்பட ட்ரெயிலர்", "raw_content": "\nமூங்கிலாற்றில் சட்டவிரோதக் காடழிப்பு: பிரதேச செயலாளர் பொலிஸில் முறைப்பாடு\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழையோம் என்கிறது மஹிந்த அணி\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nகாவிரி விவசாயிகளுக்குத் தடையற்ற நீர்ப்பாசனம்: முதலமைச்சர் உறுதி\nலோககாந்தனின் ‘யாழ்தேவி’ திரைப்பட ட்ரெயிலர்\nலோககாந்தனின் ‘யாழ்தேவி’ திரைப்பட ட்ரெயிலர்\nராஜஸ்டோன் நிறுவனத்தின் தயாரிப்பில், கந்தசாமி லோககாந்தனின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள ஈழத்து திரைப்படம் ‘யாழ்தேவி’.\nபெயருக்கு ஏற்றது போல, யாழ் மண்ணின் வாசனையுடன் படம் தயாராகியிருக்கின்றது என்பதை அவர்கள் வெளியிட்டிருக்கும் ட்ரெயிலரைப் பார்த்தாலே தெரிகின்றது.\nசங்கர், க்ரிஷ், நிரோஷா, மிதுனா மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்திற்கான இசையினை சி.சுதர்சன் அமைத்திருந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வும் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.\nஇந்நிலையில், படம் எதிர்வரும் சில மாதங்களில் இலங்கை மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஉலகில் மிகச் சிறந்த ரயில் பயணங்களில் யாழ்தேவி தெரிவு\nஉலகில் மிகச் சிறந்த 18 ரயில் பயணங்களில் இலங்கையிலுள்ள ‘யாழ்தேவி’ ரயில் பயணமும் தெரிவு செ\nகௌரவக் கொலையாளிகளுக்கு தமிழகத்தில் மரணதண்டனை\nதமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கர் கொலைக்கான தீர்ப்பு இன்று திருப்பூர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளத\nஇலங்கையின் முன்னணி தமிழ் இசையமைப்பாளர் முகமட் சமீலின் இசையில் வெளிவந்த பாடலொன்றை அண்மையில் காணொளிப்ப\nயாகம் திரைப்படத்தின் இசை வெளியீடு\nஇயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த புதுமுக இயக்குநர் நரசிம்மா இயக்கியுள்ள யாகம் திரைப்படத்தின் இச\n‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nமூங்கிலாற்றில் சட்டவிரோதக் காடழிப்பு: பிரதேச செயலாளர் பொலிஸில் முறைப்பாடு\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழையோம் என்கிறது மஹிந்த அணி\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nபூநகரியில் 10.675 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\n‘நாடோடிகள்-2’ வின் பிரமிக்கும் அடுத்த வெளியீடு\nஅகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 25 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bakrudeenali.blogspot.com/2014/05/vacation-end-of-service.html", "date_download": "2018-07-19T11:45:43Z", "digest": "sha1:SGK5Q2USDUMRKCIQZFIFQGK43MY5IEYN", "length": 24883, "nlines": 245, "source_domain": "bakrudeenali.blogspot.com", "title": "Vacation மற்றும் End of service மணி கணக்கிடுவது எப்படி?", "raw_content": "\nVacation மற்றும் End of service மணி கணக்கிடுவது எப்படி\nநீங்கள் சவூதியில் எந்த ஒரு கம்பனியில் வேலை செய்தாலும் Vacation மற்றும் End of service என்பது கண்டிப்பாக உண்டு.\nகம்பனியில் வேலை பார்க்கும் எந்த ஒரு நபரும் தன்னுடைய பணிக்கால இடையில் vacation (Leave ) செல்ல விரும்புபவர்கள் இதனை பெற தகுதியுடையவர். அதாவது \"ஒரு வருடத்திற்கு 21 நாள் சம்பளம்\" வேக்கசன் மணியாக கிடைக்கும். இதனை அவர் வெக்கேசன் லீவில் செல்லும்போது கிடைக்கும். 5 வருடத்திற்க்கு மேலாக பணி புரிந்து வந்தால் அவருக்கு வெக்கேசன் பணம் வருடத்திற்க்கு 30 நாள் சம்பளமாக கணக்கிடப்படும்.\nவேலை பார்த்த வருடம்: 1 வருடம்.\nஅப்படியானால் அவருக்கு கிடைக்கும் வெக்கேசன் மணி\nஆகையால் ஒரு வருடத்திற்கு SR 1,400/- கிடைக்கும்.\nஇந்த வெக்கேசன் மணி என்பது ஒவ்வொரு தடைவையும் வெக்கேசன் செல்லும் போது கிடைக்கும்.\nதாம் வேலை பார்க்கும் கம்பனியின் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப விரும்புபவர்கள் இதனை பெற தகுதி பெற்றவராவார்.\n(அதாவது தாம் வேலை பார்க்கும் கம்பனியிலிருந்து Exit அல்லது Transfer பெற்று செல்ல விரும்புபவர்கள் இதனை பெற முடியும்)\nஇது வருடத்திற்கு 15 நாள்கள் சம்பளமாக ஒதுக்கப்படும்.\nபொதுவாக இதனை இரு வகையாகயாக பிரிக்கலாம்:\n1. பணியாளர் தானே முன் வந்து தன்னுடைய வேலையை ராஜினமா செய்தல்.\n2. முதலாளி தன்னுடைய பணியாளரை வேலையை விட்டு நீக்குதல்.\n1. பணியாளர் தானே முன் வந்து தன்னுடைய வேலையை ராஜினமா செய்தல்.\nகீழே உள்ள அட்டவனையை பார்த்தது தெரிந்து கொள்ளவும்.\nபணியாளர் தன்னுடைய வேலையை 2 வருடத்திற்குள் ராஜினாமா செய்தால் அவருக்கு \"எந்த ஒரு சர்வீஸ் பணமும் கிடைக்காது\"\nபணியாளர் தன்னுடைய வேலையை 2 வருடத்திலிருந்து 5 வருடத்திற்குள் ராஜினாமா செய்திருந்தால் அவருக்கு \" மூன்றில் ஒரு பங்கு\" சர்வீஸ் பணம் கிடைக்கும்.\nஉதாரணமாக ஒருவர் 3 வருடம் வேலை செய்திருந்தால்\nபணியாளர் தன்னுடைய வேலையை 5 வருடத்திலிருந்து 10 வருடத்திற்குள் ராஜினாமா செய்திருந்தால் அவருக்கு \" மூன்றில் இரண்டு பங்கு\" சர்வீஸ் பணம் கிடைக்கும்.\nஉதாரணமாக ஒருவர் 8 வருடம் வேலை செய்திருந்தால்\nபணியாளர் தன்னுடைய வேலையை 10 வருடத்திற்கு அப்புறம் ராஜினாமா செய்திருந்தால் அவருக்கு முழு சர்வீஸ் பணம் கிடைக்கும்.\nஉதாரணமாக ஒருவர் 12 வருடம் வேலை செய்திருந்தால்\n2. முதலாளி தன்னுடைய பணியாளரை வேலையை விட்டு நீக்குதல்:\n���ுதலாளி தன்னுடைய பணியாளரை 5 வருடத்திற்குள் வேலையை விட்டு நீக்கினால் \" வருடத்திற்கு 15 நாள் சம்பளம்\" சர்வீஸ் பணமாக கிடைக்கும்.\nஉதாரணமாக ஒருவர் 3 வருடம் வேலை செய்து நீக்கி இருந்தால்..\nமுதலாளி தன்னுடைய பணியாளரை 5 வருடத்திற்கு பின் வேலையை விட்டு நீக்கினால் \" வருடத்திற்கு 30 நாள் சம்பளம்\" சர்வீஸ் பணமாக கிடைக்கும்.\nஉதாரணமாக ஒருவர் 8 வருடம் வேலை செய்து நீக்கி இருந்தால்..\nசர்விஸ் மணி கணக்கிடும் போது சம்பளம் என்பது \" சம்பளம் + வீட்டு வாடகை படி + போக்குவரத்து படி\" ஆகிய வற்றையும் கூட்டி கிடைப்பதே ஆகும்.\nஇதில் தொலைபேசி படி, உணவு படி அடங்காது.\nமேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கேட்க்கவும்\nபல்சுவைப் பூக்கள் 24 May 2014 at 23:49\nவணக்கம்.நான் சவுதியில் கடந்த 5 வருடங்களாக ஒரு கம்பெனியில் டெலிபோன் டெக்னீசியனாக.பணிபுரிந்து வருகிறேன்.இதில் முதல் 4 வருடம் எனது கபிலின் அண்ணனின் பெயரில் டிரைவர் விசாவில் வந்து பணிபுரிந்தேன். இப்பொழுது என் கபீலின் பெயரில் டெகனீசியனாக மாற்றப்பட்டு பணிபுரிகிறேன் இப்பொழுது என் கபீலிடம் என்னுடைய சர்வீஸ் மணியை கேட்டதற்க்கு அவன் தர முடியாது என்று.கூறுகிறான். நான் எப்படி எனது பணத்தை அவனிடமிருந்து பெறுவது.ஆலோசனை.கூறுங்கள்\nபல்சுவைப் பூக்கள் 25 May 2014 at 22:37\nசர்வீஸ் மணி என்பது நீங்கள் பணி முடித்து நாட்டுக்கு செல்லும் போது தான் கிடைக்கும். உங்கள் கபில் மற்றும் அவரது அண்ணன் இருப்பது ஒரே கம்பெனி தானே வேறு வேறு கம்பெனி என்றால்.. அவரது அண்ணனிடம் 4 வருடம் பணி புரிந்ததற்க்கான சர்வீஸ் மணியை கேட்பது உங்களுடைய உரிமை.\nஇருவரும் ஒரே கம்பெனி என்றால் பணி இறுதியில் தான் கிடைக்கும்.\nஅவ்வாறு அவர்கள் தர மறுத்தால் நீங்கள் Labor Office ல் complaint செய்யலாம். தொலைபேசி எண்ணுக்கு கீழே உள்ள லின்க் ஐ சொடக்கவும்.\nதங்கள் தகவலுக்கு நன்றி.கம்பெனி என் னுடைய கபில் பெயரில் செயல்படுகிறது.அவனது அண்ணனுக்கு சம்பந்தம் இல்லை.கபிலின் அண்ணன் பெயரிலே என்னை இந்த கம்பெனிக்கு அழைத்து வந்தான்.\nபல்சுவைப் பூக்கள் 26 May 2014 at 06:29\nஓ அப்படியா.. நல்லது. நீங்கள் தற்போது வேக்கேசன் செல்ல நினைத்தால் உங்களுடைய கபிலிடம் வேக்கேசன் மணி பெற முடியும். சர்வீஸ் மணி என்பது இறுதியில் தான் கிடைக்கும்.\nஇது.வரை நான் 2 முறை வேக்கேசன் சென்ற���ள்ளேன்.எந்த பணமும் கிடைக்க வில்லை.முதல் வேக்கேசன் 3 1/2 வருடம் கழித்து.இரண்டாவது வேக்கேசன் அடுத்த 8 மாதத்தில் சென்றேன். இதில் ஒரு முறை மட்டுமே டிக்கட் பைசா கிடைத்துள்ளது.நீங்கள் கூறிய முறைகள் முன்பு எனக்கு தெரியாது.\nநான் இப்பொழுது அவனிடம் எக்ஸிட் கேட்டுறிக்கேன்.அதுவும் கிடைக்குமான்னு தெரியாது.\nபல்சுவைப் பூக்கள் 26 May 2014 at 12:17\nவெக்கேசன் மணி மற்றும் சர்விஸ் மணி கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று சவூதி தொழிலார் சட்டம் சொல்லுகிறது எனவே அதனை பெறுவது நமது கடமை. அவ்வாறு அவர்கள் தரமறுத்தால் தொழிலாளர் நீதிமன்றத்தில் முறையிடலாம். கட்டாயமாக கிடைக்கும்.\nஅதே போல் எக்ஸிட் என்பதையும் அவர்களால் தடுக்க முடியாது. முதலில் நீங்கள் உங்கள் கம்பனிக்கு எக்ஸிட் தர சொல்லி கடிதம் கொடுத்து 30 நாட்கள் ஆகியும் அவர்கள் தர வில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகலாம். பெரும்பாலான பணியாளர்கள் நீதிமன்றத்தை அணுக யோசிக்கின்றனர். நீதிமன்றம் தொழிலாளர் நலனை பாதுகாக்குமே தவிர அவர்களுக்கு ஆதராவாக நீதிமன்றம் செயல்படாது என்பதை உறுதியாக நம்பலாம்.\nமிக்க நன்றி.நீங்கள் கூறியது போல் செய்கிறேன்.ஆனால் லேபர் ஆபீஸ் சென்றால் நமக்கு ஏதும் பிரச்சனை வருமா.கபில் நான்.இந்த கம்பெனியில் பணிபுரியவே இல்லை.நான் அவன் அண்ணனின் டிரைவராக தான் இருந்தேன் என்று கூறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.\nபல்சுவைப் பூக்கள் 28 May 2014 at 11:52\nஎங்கு வேலை பார்த்தாலும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தர மறுப்பது குற்றமாகும். ஒரு தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகிய உடன் முதலாளிக்கு பயம் ஏற்பட்டுவிடும். அதன் பின்னர் முதாலாளி தொழிலாளியை ஒன்றும் செய்ய இயலாது. இதில் நீதிமன்றம் தலையீடு இருப்பதால் அனைத்தும் மிக எளிதாக, விரைவாக முடிந்து விடும்.\nநண்பரே என்னுடைய அடுத்த பதிவின் தலைப்பு \" தொழிலாளர்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும் எங்கெங்கு எவ்வாறு முறையிடலாம்\nநாம் நேரில் சென்று தான் முறையிட வேண்டும் என்பதில்லை. ஆன்லைன் மூலமும் முறையிடலாம். இதன் மூலம் நிறைய தொழிலாளர்கள் தீர்வு கண்டுள்ளனர்.\nநன்றி அண்ணா உங்களின் அடுத்த பதிவிற்காக.காத்திருக்கிறேன்.\nE.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்\nமுன்பெல்லாம் E.B ஆ���ீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்...\nஇந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின் வகைப்பாடுகள்: இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம் இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள் இ...\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது\nவங்கி கடன் வட்டி விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது.. வீட்டுக் கடன் , கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்...\nமூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர்: காலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டி...\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nமனித நடத்தையை புரிந்துக்கொள்ளல் -உளவியல் புத்தகம்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்\nWhisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்: இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில...\nLock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க\nநீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே ...\nஆதர் அடையாள அட்டை ஆன்லைன் மூலம்\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளத...\n\"எண்ணங்கள்\" உளவியல் மின் புத்தகம் தரவிறக்கம் (ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தி)\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\n“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக...\nமத்திய அமைச்சரவை அதிகார பூர்வ இலாக்கா பட்டியல்:\nசவூதி நாட்டினருக்கேன்று ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளின்...\nகிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வுக்கு விண்ணப்பம் ...\nசவூதியில் உங்களுடைய இக்காமா எண்ணில் வேறு ஒருவரது ...\nமக்களவை தேர்தல் 2014 முடிவுகள்\n\"உயர் கல்வி வழிகாட்டி\" மின் புத்தகம்.\nVacation மற்றும் End of service மணி கணக்கிடுவது எப...\nஉங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்களை எமக்கு அனுப்பவும்\nஅரசாங்க சம்பந்தமான விண்ணப்ப படிவங்கள் (1)\nமின் புத்தகங்கள் தரவிறக்கம் (26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kishoker.blogspot.com/2012/06/blog-post_23.html", "date_download": "2018-07-19T11:49:21Z", "digest": "sha1:WV72CEU4VMZ5JDIR5HHFSHY7T2VEL4XK", "length": 57101, "nlines": 184, "source_domain": "kishoker.blogspot.com", "title": "கிஷோகர் IN பக்கங்கள்: அமலா பால் ! அஞ்சலி தேவி ! எந்த ஃபிகர் ஒஸ்தி?", "raw_content": "\nஉன்னய போயி யாரென்னு கேட்டுட்டாரே எங்க தாத்தா\nஎனக்கு இந்த அமலா பாலை ரொம்ப பிடிக்கும் என்பதைவிட , ஒரு ஈர்ப்பு என்று சொல்லலாம். அந்த காந்த கண்களும் , அவித்த இறால் போல் இல்லாமல் நம்மில் ஒருத்தி போல் அந்நியமில்லாமல் இருக்கும் அந்த தோலின் நிறமும் , பக்கத்துவீட்டு ஃபாரின் ஃபிகர்போல அந்த பரிட்சையமான முகமும் ரொம்பவே அழகு. அன்று ஒருநாள் நானும் எனது தாத்தாவும் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது \"வேட்டை\" படத்தில் வரும் \"பப்பரப்பா...\" பாடல் போய்க்கொண்டிருந்தது. பாடல் முடியும்வரைக்கும் பேசாமல் இருந்த தாத்தா பாடல் முடிந்ததும் \"கடைசிவரைக்கும் ஹீரோயினை காட்டாமல் கூட ஆடுற பொண்னை காட்டியே பாட்ட முடிச்சிட்டானேப்பா\" என்றார். எனக்கு வந்ததே கோபம், \"தாத்தா அவர் தான் ஹீரோயின் \" என்று அமலா பாலை சுட்டிக்காட்டி சொன்னேன். அவர் அதை ஏற்கும் படியாய் இல்லை. திருவள்ளுவர் முப்பாலில் அமலா பாலைப்பற்றி பாடாதது ஒன்றைத் தவிர வேறு என்ன குறை காணமுடியும் அமலா பாலிடம். நானும் முடிந்தளவு வாதிட்டு பார்த்தேன் , முடியல\nஆனால் தாத்தாவின் பார்வை வேறுமாதிரி இருந்தது. அவருக்கு அவரது காலத்து கனவுக்கன்னியான அஞ்சலி தேவிதான் அழகி, பேரழகி , உலகழகி எல்லாமே. அஞ்சலா தேவியிலிருந்து அங்குலம் நகரவில்லை தாத்தா. யோசித்துப் பார்த்தேன், என்னதான் காஜல் அகர்வால், அமலா பால் என தேவைதைகளாக வலம் வந்தாலும் எமது தாத்தாவின் தலைமுறை அவர்களை அழகிகளாக ஏற்க தயாராகவே இல்லை.\nஅதுபோல என்னதான் பேரழகிகளாகவே இருந்தாலும் அந்த கறுப்பு வெள்ளை திரையைத்தாண்டி எனது தாத்தா காலத்து கனவுக்கன்னிகளை என்னாலோ அல்லது எமது தலைமுறையாலோ ரசிக்கமுடிவதில்லை. ரசிக்க விருப்பமும் இல்லை எமது தலைமுறை சமகாலத்தில் நிகழ்கின்ற மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பயணிக்க தயாராய் இருக்கின்றது, அது எமக்கு தேவையாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் எனது தாத்தாவின் தலைமுறையில் பலருக்கு தமது காலமே பொற்காலம் எமது தலைமுறை சமகாலத்தில் நிகழ்கின்ற மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பயணிக்க தயா���ாய் இருக்கின்றது, அது எமக்கு தேவையாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் எனது தாத்தாவின் தலைமுறையில் பலருக்கு தமது காலமே பொற்காலம் அந்தக் காலத்திலிருந்து வெளிவர விருப்பமில்லை, இப்போதைய நடிகர்களோ அல்லது சினிமாவோ அவர்களது பார்வையில் வெறும் ஆடம்பரத்தையும், திறமையற்ற நடிக நடிகைகளைக் கொண்டிருக்கிறது என்பதே அவர்களது அனுமானம்.\nஇந்த நிலையில் நான் அஞ்சலி தேவியைப்பார்த்து \"வாவ்வ்வ்வ்வ்வ்வ்.......... வட் எ ஃபிகர்\" என்று வாயைப்பொளந்தாலோ, அல்லது எனது தாத்தா தலைமுறை அமலா பாலைப்பார்த்து \"என்ன பொண்ணுடா\" என்று மெய்மறந்தாலோ எப்படி இருக்கும்\" என்று வாயைப்பொளந்தாலோ, அல்லது எனது தாத்தா தலைமுறை அமலா பாலைப்பார்த்து \"என்ன பொண்ணுடா\" என்று மெய்மறந்தாலோ எப்படி இருக்கும் இந்த ஒரு தலைமுறை தாண்டிய ரசனையுணர்வை தந்தது சமீபத்தில் நான் பார்த்த \"தி ஆர்டிஸ்ட்\" திரைப்படம். பொதுவாக நான் எந்த படத்தின் விமர்சனமும் எழுதுவது கிடையாது. ( ஏன்னா எழுதத்தெரியாது) . ஏதாவது ஒரு படம் என்னை எந்தவகையிலாவது பாதித்தாலோ அல்லது எனது உணர்வுகளை தூண்டினாலோ ஒழிய ஒரு திரைப்படம் பற்றி நான் எழுதுவது கிடையாது. அந்தவகையில் நான் கடைசியும் முதலுமாக எழுதிய ஆங்கில பட விமர்சனம் \"தி ரைற்\". நம்ம JZ, குமரன் தம்பி ( இந்த ஒரு தலைமுறை தாண்டிய ரசனையுணர்வை தந்தது சமீபத்தில் நான் பார்த்த \"தி ஆர்டிஸ்ட்\" திரைப்படம். பொதுவாக நான் எந்த படத்தின் விமர்சனமும் எழுதுவது கிடையாது. ( ஏன்னா எழுதத்தெரியாது) . ஏதாவது ஒரு படம் என்னை எந்தவகையிலாவது பாதித்தாலோ அல்லது எனது உணர்வுகளை தூண்டினாலோ ஒழிய ஒரு திரைப்படம் பற்றி நான் எழுதுவது கிடையாது. அந்தவகையில் நான் கடைசியும் முதலுமாக எழுதிய ஆங்கில பட விமர்சனம் \"தி ரைற்\". நம்ம JZ, குமரன் தம்பி () எல்லோரும் உலாவருகிற இடத்தில நான் ஆங்கில படத்துக்கு விமர்சனம் எழுதினால் அப்புறம் அவய்ங்களுக்கு என்ன மரியாதை) எல்லோரும் உலாவருகிற இடத்தில நான் ஆங்கில படத்துக்கு விமர்சனம் எழுதினால் அப்புறம் அவய்ங்களுக்கு என்ன மரியாதை ஆனாலும் இந்த படம் பாத்ததுக்கு அப்புறம் நானும் ஏதாவது இந்த படத்தை பத்தி விமர்சனம் சாரி... நாலு வரி வாந்தி எடுக்கலாம்னு நினைக்கிறேன். ஏம்பா JZ ஆனாலும் இந்த படம் பாத்ததுக்கு அப்புறம் நானும் ஏதாவது இந்த படத்தை பத்த��� விமர்சனம் சாரி... நாலு வரி வாந்தி எடுக்கலாம்னு நினைக்கிறேன். ஏம்பா JZ கோவிச்சுகாத என்ன உன் ரேஞ்சுக்கு என்னால முடியாதுன்னு எனக்கு தெரியும், ஆனாலும் நானும் ஏதாச்சும் ட்ரை பண்ணிட்டு போறனே\nஎனக்கு தமிழில் கறுப்பு வெள்ளை படம் பார்க்கவே பிடிக்காது. அதிலும் பாதி புரியாத ஆங்கிலப்படத்தில் கறுப்பு வெள்ளையென்றால் பொண்ணு சிரிச்சிடும் என்பதற்காகவே அந்த பக்கமே போவது கிடையாது. எனது ஆங்கில ரசனை இப்படியிருக்க எதுவுமே பேசாத படம் என்றால் அந்தப் பக்கம் போவேன்னு நெனைக்கிறீங்க சத்தம் வராது என்ற காரணத்துக்காகவே உலகப்புகழ் \"சார்ளி சாப்ளின்\" வீடியோக்களை பார்ப்பதே கிடையாது. இந்த நிலையில் தான் எனது நண்பன் விக்கியின் உபயத்தில் அவனது வீட்டில் இந்த \"தி ஆர்டிஸ்\" பார்க்ககிடைத்தது. இப்போது படத்துக்குள் போகலாம்.\nஎல்லாரும் சீட் பெல்ட்டை போடுங்கப்பா.........\nபிரஞ்சு திரைப்படமான இந்த படத்தி இயக்குனர் ஹசானாவிசியஸ், வார்னர் பிரதர்ஸ் இந்த படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். 2011 வெளியான இந்த திரைப்படம் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் பத்துபிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு ஐந்து விருதுகளை அதுவும் மிக முக்கியமான ஐந்து விருதுகளை வென்றிருக்கிறது. சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடைவடிவமைப்பாளர், சிறந்த பின்னணி இசை ஆகிய அதிமுக்கிய விருதுகளை அள்ளியிருக்கிறது இந்த ஆர்டிஸ்ட். இந்த \"தி ஆர்டிஸ்ட் \" படம் தான் சிறந்த படம் என்ற ஒஸ்கார் விருதை வெல்லும் முதலாவது பிரஞ்சு படம். அது போல் இந்த படத்தின் நாயகனான ஜேன் துயர்டன் தான் சிரந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வெல்லும் முதலாவது பிரஞ்சு நடிகராக இருக்கிறார். எனக்கொரு கவலை என்னவெனில் சிறந்த நடிகை விருதைக்கூட இந்த படத்தின் நாயகியான பெரனீஸ் பெஜோவுக்கு கொடுத்திருக்கலாம். தேர்ந்த நடிப்பு.\nமுதலில் படத்தின் பின்னணி பற்றி பார்த்துவிடலாம் . 1927க்கு முந்தைய காலகட்டத்தில் \"பேசும் படங்கள்\" (சைலண்ட் மூவீஸ்) என்ற திரைப்படங்கள் தான் நடைமுறையில் இருந்தன. அதாவது கதாபாத்திரங்கள் பேசாது. தங்களது முகபாவனை, உடல் அசைவிகளின் மூலமே தங்களது உணர்வுகளை, தாங்கள் சொல்லவந்த விடயத்தை சொல்லியாகவேண்டும் என்ற சவாலான பணியை செய்துவந்த திரைப்படங்கள். இசை கூட எந்த திரையரங்கில் திரயிடுகிறார்களோ அந்த திரையரங்குகளில் நேரடியாக ( லைவ்வாக) வாசிப்பார்கள். இந்த விடயம் இந்த படத்தை பார்த்து தான் எனக்கு தெரியும்.\nபடத்தின் கதை இது தான் 1920களில் பிரபலமான ஹீரோவாக வலம் வருகிறார் ஜோர்ஜ் வலன்ரைன் ( ஜேன் துயர்டன்). கிட்டத்தட்ட தனிக்காட்டு ராஜாவாக புகழுடனும் செல்வத்துடனும் வலம் வருகிறார். செல்லுமிடமெல்லாம் விசிறிகள் கூட்டம், செல்வாக்கு. நம்ம சுப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு அண்ணனுக்கு புகழ். பொது இடமொன்றில் பேட்டி கொடுத்துக்கொன்டிருகையில் ஹீரோயின் பெப்பி மில்லரின் ( பெரனீஸ் பெஜோ) அறிமுகம் கிடைக்கிறது. அந்த இடத்தில் கொஞ்சம் கில்மாத்தனமாக ஒரு சம்பவம் நடந்துவிட ( ரொம்ப ஜோசிக்காதிங்க , ஜஸ்ட்டு ஒரு கிஸ்ஸு) மீட்டியாக்களில் இருவரும் கிசுகிசுக்கப்படுகின்றனர். சில நாட்களின் பின்னர் துணைநடிகையாக சினிமாவுக்குள் நுழையும் பெப்பி மில்லரோடு நம்ம ஹீரோ ஜோர்ஜுக்கு நட்பு மலர்கிறது. இருவரும் சேர்ந்து படங்களில் நடிக்கிறார்கள். நம்ம பசங்க சொல்லவது போல் ஜஸ்ட் நட்பாக இருந்த நட்பு காதலாக கனிந்து சிவந்து , வெடித்து, பழுத்து , பஞ்சாமிர்தமாகிறது. மில்லருக்கு ஜோர்ஜ் சினிமாவில் நடிக்க டிப்ஸ் எல்லாம் கொடுக்கிறார். அதிலும் பின்னாளில் பெப்பி மில்லர் பிரபலமாக காரணமாகவிருக்கும் \"பியூட்டி டொட்\" என்கின்ற உதட்டுக்கு மேல் ஒரு மச்சம் என்பதை செயற்கையாக வைத்துவிடுகிறார். ( போடா... இதெல்லாம் நாங்க எங்க சிம்ரன் அக்கா கிட்டவே பாத்துட்டோம்)\nபின் 1927இல் சினிமாவிலும் ஜோர்ஜ் வலன்டைன் வாழ்விலும் பெரும் மாற்றம் ஒன்று நடக்கிறது. தொழினுட்ப வளர்ச்சியால் சினிமாவில் ஒலியையும் சேர்த்து படம் தயாரிக்க படத்தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட ஆரம்பிக்கின்றன. கிட்டத்தட்ட சைலண்ட் மூவிகளின் ஆட்டம் ஒரு முடிவுக்கு வருகின்ற காலப்பகுதி. வலன்டைனின் ஆஸ்தான படத்தயாரிப்பு நிறுவனமான கினோகிராஃப் ( கார்த்திக்கு ஸ்டூடியோ கிறீன் போல) இனிமேல் தாங்கள் சைலண்ட் மூவிகளை தயாரிப்பதில்லை என அறிவிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளாத ஜோர்ஜ் \"மக்கள் அதை விருப்ம மாட்டார்கள், அவர்களது விருப்பம் சைலண்ட் மூவிகள் தான்\" என்று அதிருப்தியாகி கூறி அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார். அத்தோடு நிற்காமல் தனது சொந்த செலவில் ஒரு சைலண்ட் திரைப்படம் ஒன்றை த��ாரிக்கவும் செய்கிறார். இந்த நிலையில் 1929களில் உலகில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு வலன்டைனும் பலியாகிறார். அவரது சொந்த தயாரிப்பு படம் வென்றால் மட்டுமே அவரது பொருளாதாரம் நிலைத்து இருக்கும். இல்லாவிட்டால் சோத்துக்கு சிங்கி என்ற நிலை வலன்டைன் தனது தயாரிப்பில், தான் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் , பெப்பி மில்லர் நடிக்க கினொகிராஃப் தயாரிக்கும் முதலாவது ஒலி, ஒளி படம் வெளியாகும் நாளன்று வெளியாக இருக்கிறது.\nஇரண்டு படங்களும் வெளியாகின்றது. வலன்டைனுக்கு நமது மக்களை பற்றிய அறிவு குறைவு, பழைய ரொட்டி மேல் மிஞ்சிய மரக்கறிகளை போட்டு புதிய உணவு பிட்ஸா என்று கொடுத்தாலே பாய்ந்து பாய்ந்து வாய்க்குள் தள்ளுபவர்கள். உண்மையிலேயே புதிதாக ஒரு மாற்றம் வந்தால் விடுவார்களா என்ன பெப்பி மில்லரின் படம் பிய்த்துக் கொண்டு போக வலன்டைனின் படம் \"சகுனி\" போல் காற்று வாங்க ஆரம்பிக்கிறது. ஒத்த படத்தில் தான் இதுவரை சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் புகழ் அத்தனையும் இழக்கிறார் வலன்டைன். உலகம் மாறி விட்டது என்று உணர்ந்தாலும் அந்த மாற்ரத்துக்குள் போகவிடாமல் அவரது பழமை விரும்பும் மனதும், சமுதாயத்தின் மேல் உள்ள கோபமும் தோற்று விட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மையும் தடுக்கின்றன. இந்நிலையில் வலன்டைனின் மனைவியும் அவரைவிட்டு பிரிந்து போய்விடுகிறார்.\nசைலண்ட் மூவி என்ற வட்டத்தில் இருந்து வெளிவரமுடியாமல் தவிக்கிறார் வலன்டைன். 1927களில் படங்களில் ஒலி புகுத்தப்பட்டபோது சார்லி சாப்ளின் கூட \" மௌனம் என்பது அழகானது , அதை உங்கள் ஒலிகளால் கெடுத்துவிடாதீர்கள்\" என்று தனது பங்குக்கு புலம்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே மனநிலையில் தான் இருக்கிறார் வலன்டைனும்.\nஇந்த உலக மாற்றங்களாலும், தனது தோல்வியாலும் உடைந்து போகும் வலன்டைன் ரொம்பவே நொந்துபோகிறார். தனது ஆடைகள் உட்பட தனது சொத்துக்கள் அத்தனையும் விற்கிறார்.கிட்டத்தட்ட ஓட்டாண்டியாகிறார். தனது கடைசிபடம் வெளியாகி ஐந்துவருடங்களாகியும் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார். இந்த காலப்பகுதியில் பெப்பி மில்லர் \"மச்சக்கன்னியாக\" உலகப்பிரபலம் ஆகிறார். அதாவது ஜோர் வலன்டைன் எந்தளவு பிரபலமாக இருந்தாரோ அந்தளவு பிரபலமடைகிறார் மில்லர். நம்ம ஏஞ்சலினா ஜீ��ி போல் அத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் போராடிய வலன்டைன் ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார். பின்னர் மில்லரால் அவர் சீர்திருத்தப்பட்டாரா அத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் போராடிய வலன்டைன் ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார். பின்னர் மில்லரால் அவர் சீர்திருத்தப்பட்டாரா புதிய மாற்றத்தை ஏற்றுக்கொண்டு ஒலி ஒளி கொண்ட நவீன படத்தில் நடித்தாரா என்பதே மீதி கதை.\n1. 1. முதலில் இந்த 21ம் நூற்றாண்டில் , கிட்டத்தட்ட அழிந்துவிட்ட \"பேசும் படம்\" ஒன்றை கையில் எடுத்ததற்காகவே இயக்குனர் ஹசானாவிசியசுக்கு ஒரு சிலையே வைக்கலாம். காட்சிக்கு காட்சி இயக்குனர் கைவண்ணம். அந்தக்கால உடை, கட்டடங்கள், நடைஉடை பாவனை, வசன உச்சரிப்புக்கள் என்று மனிதர் ரொம்பவே மினக்கட்டிருக்கிறார். பாத்திரப்படைப்பு , காட்சியமைப்பு என்பன முதல் தரம். விருதுக்கு கேள்வியே இல்லாமல் தகுதியானவர்.\n2. அடுத்து பாத்திர தெரிவுகள் ஜோர்ஜ் வலன்டைன் பாத்திரத்துகென்றே பிறந்தவர் போல துயர்டன், பெப்பி மில்லர் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் பெரனீஸ் பெஜோவும் கண்ணுக்குள் நிற்கிறார்கள். துயர்டனுடன் வரும் அவரது நாய் கூட \"அடடே\" போட வைக்கிறது. அந்த வாகன ஓட்டுனர், துயர்டனின் ஆஸ்தான இயக்குனராக வருபவர் என அத்தனை பேரும் பாத்திரங்களுடன் கன கச்சிதமாக பொருந்துகிறார்கள்.\n3. ஒளிப்பதிவாளர் கியுலோம் ஷிஃப்மன் விருது கிடைக்காவிட்டாலும் தன் கமிரா மூலம் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறார். கறுப்பு வெள்ளை படத்தை கூட கலர் கலராய் காட்டியிருக்கிறார். அன்னி சோஃபி பியான், மிஷேல் ஆகியோரது படத்தொகுப்பு படத்தின் ஓட்டத்துக்கு பக்கபலம். இயக்குனர் ஹசானவிசியஸ் கூட படத்தொகுப்பில் பங்காற்றியிருக்கிறார் ( டைரக்டர் டச் என்றது இது தானா) . இசையமைப்பாளர் லூடோவிச் போர்ஸ் நிச்சயம் விருதுக்கு உரியவர். 1927களில் வாழ்ந்த அனுபவத்தை தருகிறது இசை.\n4. படத்தை தூக்கி நிறுத்துவது துயர்டன், பெஜோ ஆகியோரது நடிப்பு. முதலில் துயர்டன்..........\n* பேசமுடியாது, கத்தமுடியாது, பஞ்ச் அடிக்க முடியாது ஆனால் சொல்லவந்ததை சொல்லியாகவேண்டும், சிவாஜிகணேசனையும், கமலஹாசனையும் தவிர எமது நடிகர்களில் எவருக்காவது இந்த நிபந்தனைகளை சொன்னால் அடுத்த ஃபிளைட்டில் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் துயர்டன் மிரட்டியிருக்கிறார். ஆச்சரியமாகட்டும் சரி, நக்கலாகட்டும் சரி, குழப்பநிலையாகட்டும் சரி அவரது உணர்வுகளை முகம் பேசுகிறது. இமைகளை தூக்கி , வாயை ஒரு பக்கமாக சுழித்து அவர் காட்டும் முகபாவனைகளுக்கே நாலைந்து ஆஸ்கார் குடுங்கப்பா.......\n*அறிமுக காட்சியில் மேடையில் தோன்றி அட்டகாசம் பண்ணும் காட்சிகள் அற்புதம், திரையரங்குக்கு வெளியே பேட்டி கொடுக்கும் போது காட்டும் நகைச்சுவை முகபாவம் பழுத்த நடிப்பு.\n* ஒரு காட்சியில் திரைக்கு பின்னாலிருந்து பெப்பி மில்லர் ஆடுவார் , அவரது கால்கள் மட்டுமே வெளியே தெரியும் . அந்த கால்களின் நடன அசைவுகளை பின்பற்றி துயர்டன் ஆடும் இடமும், துயர்டனை கண்டவுடன் பெஜோ காட்டும் அதிசயம் கலந்த முகபாவமும் கவிதை. அதோடு இவற்றை கவனித்த இயக்குனர் , துயர்டனோடு இணைத்து கிசுகிசுக்கப்பட்ட பெண் இவள் தான் என் தெளிந்து காட்டு முகபாவம் செம...செம...செம......\n* தனது படம் தோல்வியானவுடன் தொடர்ந்து வரும்காட்சிகளில் காட்டும் சோகமும், ஒரு கட்டத்தில் தனது வீடு தீப்பிடிக்கையில் தானும் மில்லரும் சேர்ந்து நடித்த படத்தின் பிரதியை தேடி அதை அடைந்ததும் , கட்டிப்பிடித்துக்கொண்டு சாயும் காட்சியும் அற்புதம்.\n* அது போக துயர்டன் வரும் ஒவ்வொரு காட்சியும் நடிப்பு...நடிப்பு...நடிப்பு மட்டுமே......\n அந்த குறும்புத்தனமான நடிப்புக்கு எவளவும் கொடுக்கலாம். ( நீ சொல்லுவ, பணம் குடுக்கிறது தயாரிப்பளர், அவர் சொல்லணுமிடா). கதாபாத்திரத்துகு கனகச்சிதமான நடிப்பு.\n*அறிமுக காட்சியில் துயர்டனை இடித்துவிட்டு மிரளும் போதும் சரி , தன்னையும் துயர்டனையும் இணைத்து பத்திரிக்கையில் கிசு கிசு வந்த பொழுது அதை படப்பிடிப்பு தளத்தின் காவலாளியிடம் பெருமையாக காட்டுகையில் அதை அவன் கவனிக்காமல் நகரும் போது தனது மூக்கு உடைந்துபோனதை சமாளிக்கும் போது காட்டும் முகபாவமாகட்டும் சரி அம்மணி வரும் காட்சி எங்கும் வியபித்து இருகிறார்.\nநான் ரசித்து , படம் சோகமாக போனாலும் சிரித்த காட்சிகள்........\n* தனது ஆஸ்தான படப்பிடிப்பு தளம் மூடப்பட்டதும் மில்லரின் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வரும் துயர்டனை வழியில் கண்டு பேசும் பெஜோ, துயர்டன் விடபெற்று செல்லும் போது விசில் அடித்து கூப்பிட்டு ஒரு நடனம் ஆடி காட்டுவார், அழகு...அழகு...அப்படியொரு அழகு\n*தனது வாகன சாரதியிடம் துயர்டன் கேட்பார் \"உனக்கு நான் எத்தனை மாதங்கள் சம்பளம் தரவில்லை\" அதற்கு சாரதி \"சுமார் ஒரு வருடம்\" என்று சொல்லிவிட்டு அசால்டாக தனது வேலைகளை செய்துகொண்டிருப்பார். எதிர்பார்த்திராத அதே நேரம் துயர்டன் மீது அந்த சாரதி கொண்டிருக்கும் விசுவாசத்தை காட்டும் காட்சியமைப்பு , பிரமாதம்.\n* பெஜோவின் கால்களை கவனித்து துயர்டன் ஆடும் காட்சி\n* துயர்டனுக்கு வாய்ப்பு தராவிட்டால் நான் உங்களது படத்தில் நடிக்க மாட்டேன் என்ற தொனியில் தனது பட இயக்குனரிடம் கூறுவார் பெஜோ இயக்குனர் மௌனமாக இருக்க தொடர்ந்து சில பேசும் பெஜோ ஒரு கட்டத்தில் முகத்தையும் சிறு பிள்ளைகள் கோவிப்பது போல் வைத்துக்கொண்டு 'நான் உன்னை மிரட்டுகிறேன், அது உனக்கு புரிகிறதா\" என்பாரே இயக்குனர் மௌனமாக இருக்க தொடர்ந்து சில பேசும் பெஜோ ஒரு கட்டத்தில் முகத்தையும் சிறு பிள்ளைகள் கோவிப்பது போல் வைத்துக்கொண்டு 'நான் உன்னை மிரட்டுகிறேன், அது உனக்கு புரிகிறதா\" என்பாரே \n* ஒரு காட்சியில் துயர்டனின் மேலங்கிக்குள் தனது ஒரு கையை விட்டு ( மேலங்கி மட்டும் தனியாக மாட்டியிருக்கும், நோ துயர்டன்) தன்னை துயர்டன் அணைப்பது போல் பெஜோ ஃபீல் பண்ணும் ஒரு காட்சி, செம ரொமான்டிக்.\nஇப்படியாக படத்தில் நான் ரசித்த காட்சிகள் ஏராளம். படத்தை பார்த்து முடித்ததும் ஒரு கறுப்பு வெள்லை படத்தை , அதுவும் வசனமே இல்லாத படத்தை நேரம் போவதே தெரிமாமல் நான் பார்த்துக்கொண்டு இருந்தேனா என்று எனக்கெ ஆச்சரியம். இங்கு தான் நான் ஆரம்பத்தில் சொன்ன \"அஞ்சலி தேவியை பார்த்து வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....\" என்கிற சம்பவம் ஒத்துப் போகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்றொரு பழமொழி சொல்வார்கள். பழமைய கழித்து விட முடியாத நாயகனின் மனப்போராட்டத்தை தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கிறது படம்.\nஎன்னைக் கேட்டால் புதியன புகுதல் என்பதை ஏற்றுக்கொள்வேன் ஆனால் பழையன கழிதல் என்ற கருத்துக்கு சம்மதமாய் சாயமாட்டேன். காரணம் இந்த \"தி ஆர்டிஸ்ட்\" என்ற திரைப்படத்தை பொறுத்தவரை படத்தின் பாணி பழையது, படத்தின் போக்கு பழைய திரைப்படங்களின் போக்கை ஒத்தது ஆனாலும் அவற்றை கைவிடாமல் புதியனவற்றை புகுத்தி அதாவது புதிய தொழிநுட்பம், புதிய தொழிநுட்ப கருவிகள் என்பனவற்றை ப���ன்படுத்தி இதோ ஐந்து விருதுகளும் வென்று விட்டார்கள். ஆக நான் சொன்னது சரிதானே புதியன புகுதல் நன்று பழையன கழிதல் நன்றன்று, காரணம் பழமைகள் எமது அடையாளம்.\nடிஸ்கி 1 : டேய் வெள்ளக்காரன் புதுமையை புகுத்தி பழமையை மீழ கொண்டுவந்தான் அப்டீன்றதுக்காக தமிழ்நாட்டுல யாராச்சும் \"1960 காலத்து நடிகைக்கு பிகினி போட்டு துபாயில சாங் எடுக்கிறேன் சார்ன்னு\" கெளம்பிடாதிங்கடா.....\nடிஸ்கி 2 : எனக்கொரு சந்தேகம் இப்போதும் இதே பேசும் படம் தான் நடைமுறையில் இருந்திருந்தால் இந்த பஞ்ச் அடிப்பவர்கள், ஏய்...ஏய்...ஏய்..ஏய்.... என்று ரயில் விடுபவர்கள் எல்லோரும் எப்படி பொழப்பு பார்த்திருப்பார்கள்\nடிஸ்கி 3 : நண்பா JZ நீயி இந்த படத்துக்கு பதிவு போட்டுருப்பன்னு தெரியும், ஆனாலும் எனக்கு புடிச்சிருந்து அது தான் நானும் போட்டேன். தப்பா ஏதாச்சும் இருந்தா கால வாரிவுட்டிராத நட்பு\nLabels: ஆங்கில திரைப்பட விமர்சனம், எனக்கு பிடித்த சினிமா\nஎனக்கு சார்லிசப்ளினை விட வேற ஊமைப்படங்கள் தெரியாது பாஸ். ஆனால் உன்னோட பதிவில இருந்து நல்லாத்தான் இருக்கும் என்று தெரியுது. கண்டிப்பா பார்க்கனும். இங்கிலிசு தெரியாத எனக்கு இப்பிடி படம் எடுத்தாங்க என்றால் ரொம்ப சந்தோசம் மச்சி.\nஒவ்வொருத்தனோட ரசனையும் வேறும் படும் மச்சி, அதனால நான் சாதாரணமா எந்த படத்தையும் யாருக்கும் சிபாரிசு பண்றது கிடையாது. ஆனா இந்த படம் நீ கட்டாயமா பாக்கணும் நண்பா, நம்ம போல இங்கிலீசு தெரியாதவங்கள பத்தியும் யோசிச்சு படம் எடுக்க ஆள் இருக்கத்தான் செய்யுது.\n உங்கள் விமர்சனத்தை பார்த்தால் இப்போதே பார்க்கணும் போல இருக்கு பாஸ். வேறு இது போன்ற நல்ல படங்கள் இருந்தால் அதன் விமர்சனங்களையும் எழுதுங்கள் மிகவும் ரசனையுடன் எழுதுறீங்க பாஸ்.\nஏது இது அழகான விமர்சனமா போச்சுடா, ஆனாலும் தாங்ஸ்ணே, உங்களது பாராட்டுக்கும் பின்னூடத்துக்கும். கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தான், பார்த்து விடுங்கள். நமக்கு இந்த விமர்சனம் எழுத தெரியாது நண்பா. ஆனால் நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பேன்.எப்போதாவது எனக்கு மனதுக்கு எந்த படமாவது பிடித்திருந்தால் அல்லது என்னை பாதித்ஹ்டிருந்தால் இப்படித்தான் விமர்சனம் என்ற பெயரில் வாந்தி எடுத்து வைப்பேன்.\n நீயி இந்த படத்துக்கு பதிவு போட்டுருப்பன்னு தெரியும், ஆனாலும் எனக்கு புடிச்சிருந்து அது தான் நானும் போட்டேன். தப்பா ஏதாச்சும் இருந்தா கால வாரிவுட்டிராத நட்பு\nஇது என்ன கொடுமை நண்பா நான் படம் பார்த்தேன், ரசித்தேன்.. ஆனா பதிவு எல்லாம் எழுதலை.. நீங்க கலக்குறீங்க\nஅடிக்கடி நல்ல படம் பார்க்க நேர்ந்தால் எழுதித் தள்ளுங்க பாஸ்\nஒரு ஆங்கில படத்து விமர்சனத்துக்கு JZ கைல பாராட்டா எனக்கு இன்னிக்கு நாள் நல்லாயிருக்கு போல. நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பேன் நண்பா, ஆனால் எல்லாத்துக்கும் பதிவு எழுதணும்னு தோணுறது இல்ல. எழுதவும் தெரியாது.ஹி...ஹி...ஹி... அதுக்கு தான் ஜாம்பவான் நீ இருக்கியே\nஎன்னை படத்தில் மிகவும் கவர்ந்த விஷயம் பேர்ஸின் இசைதான்.. இந்த மாதிரி சைலன்ட் படம்னாலே அதுக்கு அழுத்தம் கொடுக்கறதும், காட்சிக்கு காட்சி பக்கபலமாக அமைவதும் இந்த அக்மார்க் இசையே\nஅதுக்கு BAFTA, Oscar, Golden Globe முணும் கிடைச்சது மிகப் பொருத்தம் :)\nஸ்பெயினிடம் பிரான்ஸ் படுதோல்வி... #வருத்தம்:(\n100வது மேட்சில் விளையாடி 2 கோல்களைப் போட்டிருக்கும், சத்தமில்லாமல் சாதிக்கும், சண்டை போடாமல் சமாதானம் காக்கும், ரியல் மட்ரினதும், ஸ்பெயினினதும் மத்தியகளத்தின் முதுகெலும்பாய் இருக்கும் அண்ணன் அலோன்சோவுக்கு வாழ்த்துக்கள்\nநானும் வீட்டில் கறுப்பு கொடி கட்டியிருக்கேன் # மீ டூ வருத்தம்\nரியல் மட்ரிட்டில் எனக்கு புடிச்ச பய அலன்சோ தான், நல்லா ஆடுறான் பய புள்ள. எங்க பார்சிலோனா பயலுக இனியெஸ்டா, சாவி, பப்ரிகாஸ், சேர்யியோ எல்லோருமே என்ஞினாட்டம் வேல செய்றாங்க இல்ல, அப்போ ஸ்பெயின் நல்லா ஆடத்தானே செய்யும். பை திவே போர்த்துக்கல்லுக்கும் , ரொனால்டோவுக்கும் ஆப்பு கன்ஃபோர்ம்.\nரொம்ப நல்ல படம் பாஸ்.. ஆஸ்கார் வாங்குன அப்ப பார்த்தது...பதிவை படிக்கும் போது திரும்பவும் படம் பார்த்த மாதிரி இருந்திச்சு..\nஇப்பவும் ஊமை படங்கள் இருந்திருந்தால் இப்ப இருக்கிற ஹீரோக்கள் யாருமே தலை எடுத்து இருக்க மாட்டார்கள்..\n உங்களது பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி.\nஇந்த வசனத்தை ஊமைபடங்களில் எப்படி நடித்து காட்டியிருப்பார்கள் \"ண்ணா....... ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேங்கண்ணா...\"\nமத்த நண்பர்கள் சொன்னா மாதிரி விமர்சனம் அருமை நண்பா தொடர்ந்து எழுதவும். ஆனால் அஞ்சலி தேவி போட்டோக்கு பதிலா வேற நடிகை போட்டோவ ஏன் போட்��ிருக்கீங்க\n அஞ்சலி தேவின்னு கூகிள்ள தேடினேன் , இந்த படம் தான் வந்துச்சு. அக்சுவலா.... எனக்கு அஞ்சலி தேவி எப்புடி இருப்பாங்கன்னே தெரியாது. ஹி...ஹி...ஹி....\nvery simple \"அஞ்சலி தேவி\" அஞ்சலி தேவி மாதிரி இருப்பாங்க\nமூக்கு பொடப்பா இருந்தா இப்புடியெல்லாம் யோசிக்க தோணும், அறுத்துடுறேன் அறுத்து\nபிளீஸ்.. படிக்கிறதோட மட்டும் நிறுத்திக்கோங்க...\nஎனக்கு பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், நடுநவீனத்துவம் எதுவுமே தெரியாது என்பதால், நான் உணர்வதை, எனக்கு தெரிந்ததை மட்டுமே எழுதுகிறேன் எனக்கு தெரியாததை , நான் தவறவிட்டதை, தவறுகளாக விடுபவைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால், அவை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் கைகட்டி வாய் பொத்தி ஐம்புலனும் அடக்கி கேட்டுக்கொள்வேன் எனக்கு தெரியாததை , நான் தவறவிட்டதை, தவறுகளாக விடுபவைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால், அவை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் கைகட்டி வாய் பொத்தி ஐம்புலனும் அடக்கி கேட்டுக்கொள்வேன்\nநாலுலேர்ந்து ரெண்டு போனா மிச்சம் ரெண்டு\nலங்கோடு தெரிய வேட்டி கட்டுறவன் எல்லாம் ராஜ்கிரண் ஆ...\n \" ஜஸ்ட் 39999 ருபீஸ் ஒன...\n வண்டிய நேரா உக்ரேனுக்கு ஓட்ரா\nகுஷ்புவின் இடுப்பை கிள்ளியது யார்\n நீங்கள் ஒரு அற்பப் புழு\n நீங்கள் ஒரு அற்பப் புழு\nமொக்கையை மெனக்கட்டு வாசிச்ச புண்ணியவானுங்க..\nஇன்னுமா இந்த உலகம் என்ன நம்பிக்கிட்டு இருக்கு\nஇது ஒண்ணும் செய்வின இல்ல சார் பையன் இன்னிக்கு கே. டீவில டாக்டரோட \"சொறா\" படம் பாத்திட்டாப்ல... கொஞ்ச நேரத்தில சரியாயிடும் பையன் இன்னிக்கு கே. டீவில டாக்டரோட \"சொறா\" படம் பாத்திட்டாப்ல... கொஞ்ச நேரத்தில சரியாயிடும்\nகுஷ்புவின் இடுப்பை கிள்ளியது யார்\nஉலகின் மிகப்பெரிய ஜனனாயக நாட்டில் இப்படியொரு கொடூரமா ஐயகோ நெஞ்சு பொறுக்கவில்லையே , அதுவும் கலாசாரம் , பண்பாடு என்றால் என்னவெ...\n வலிக்கும்டா ஒரு சில ஜந்துக்கள் இருகுதுங்க இந்த உலகத்தில ஓவர் நைட்ல புகழ் வ ந்துட்டா போதும், தாங்க எப்பிடி இருந்தோம்...\nமுகமூடி வி.ஐ.பி ஷோவுக்கு அழைத்த அதே குழு சூர்யாவின் \"மாற்றான்\" திரைப்படத்துக்கான வி.ஐ.பி ஷோவுக்கும் அழைத்திருந்தது\nகலைஞர் டி.வி தீர்மானித்த தமிழ் சினிமாவின் எதிர்காலம்\nமுகமூடி சினிமா விமர்சனம் - பிரீமியர் ஷோ\nஅப்பிடி இப்பிடி என்று ஒரு மாதிரியாக நேற்று முகமூடி திரைப்படத்தை பிரீமியர் ஷோவுக்காக திரையிட்டார்கள். படத்தின் பிரீமியர் ஷோவுக்கான அழைப்பி...\nவிபச்சார வழக்கில் சிக்குமா சன் டி.வி குழுமம்\nஇன்னிக்கும் மணி சரியா 6 மணித்துளிகள் 21 நிமிடங்கள் 49வது செக்கனகள் , துலா வருடம், கப்பி மாதம் சரியாக எம கண்ட நேரத்தில் சன் தொலைக்காட்சிய...\n என்னோடு சேர்த்து நாலைந்து நாய்களும்\n\"உன்ட அண்ணனுக்கு இப்ப தான்டா இருபத்தொரு வயசாகுது.... அதுக்குள்ள கலியாணமா\" \" என்னடா செய்யிறது\" \" என்னடா செய்யிறது அந்த பண்ணயாரிட ஆளுகளுக்கு ,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kuttyrevathy.blogspot.com/2016/02/", "date_download": "2018-07-19T11:54:04Z", "digest": "sha1:VNTYPFD7AAV2QO5RFY5GOICHZX7UKCHI", "length": 28972, "nlines": 140, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: February 2016", "raw_content": "\nவீரம் மிகு பெண், ஷீதல் சாதே\nஷீதல் சாதே, இந்தியப் புவிப்பரப்பின், அம்பேத்கர் பூமியின் மிகவும் முக்கியமான பாடகி. \"என் பாடல்களே என் எதிர்ப்பு வடிவம்\" என்று சொல்லும் இவரை, ஆனந்த் பட்வர்த்தனின் \"ஜெய் பீம்\" ஆவணப்படத்தைப் பார்த்தவர்கள் அறிந்திருக்கக் கூடும். உண்மையான வீரம், கேட்பவர்களின் எலும்புக்கூட்டை உலுக்கும் குரல் எனத் தனித்துவம் கொண்டது. இவர் மேடைகளில் பாடக்கேட்கையில் கண்ணீரும் வீரமும் ஊற்றெடுப்பதை உணராமல் இருக்கமுடியாது. இப்படியாக இந்தியா சினிமா பாடகர்கள் மட்டுமில்லாமல் ஆங்காங்கே மேடைப்பாடகர்களையும் போராளிப்பாடகர்களையும் கொண்டிருப்பதால் தான் இசை என்பதன் தத்துவம், எல்லா சாதி, மதம், பால், வர்க்க அடையாளங்களையும் அழிப்பதாகவும் இருக்கிறது. மராத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்காக அவர் பாடும் பாடல்கள் இங்கே. மொழி புரியாமலேயே உணர்வுகளைக் கடத்திவிடும் குரல். கம்பீரம். பெருங்கருணை. விழிப்புணர்வு.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 சனி, பிப்ரவரி 06, 2016 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: தலித்தியம், பாடல்கள், ஷீதல் சாதே\nதமயந்தியின் சிறுகதை உலகம் பற்றி பிரபஞ்சன்\nநடைபாதை ஓரத்தில் ஒரு பூ பூத் திருக்கிறது. நான் தினமும் நடக்கும் பாதை அது. நேற்று அது இல்லை. யாருக்காக அது பூத்துள்ளது அந்த இருவருக்காக என்று தோன்றுகிறது. நேற்று சந்தித்து நட்புகொண்டு, நேசம் கொண்ட அந்த இருவருக்காக என்று நாம் நம்ப என்ன வழக்கு அந்த இருவருக்காக என்று தோன்றுகிறது. நேற்று சந்தித்து நட்புகொண்டு, நேசம் கொண்ட அந்த இருவருக்காக என்று நாம் நம்ப என்ன வழக்கு பின் ஏன் பூக்க வேண்டும், பூ பின் ஏன் பூக்க வேண்டும், பூ அந்த இருவரின் சிநேகத்தில் மகிழ்ந்து அதைப் பாராட்டி வரவேற்கும் முகத்தான் அந்தப் பூ பூக்கிறது. உலகம் முழுக்க, மண் மேல் பூக்கள் ஆயிரம் ஆயிரமாய் ஏன் மலர வேண்டும் அந்த இருவரின் சிநேகத்தில் மகிழ்ந்து அதைப் பாராட்டி வரவேற்கும் முகத்தான் அந்தப் பூ பூக்கிறது. உலகம் முழுக்க, மண் மேல் பூக்கள் ஆயிரம் ஆயிரமாய் ஏன் மலர வேண்டும் அன்பின் நேச மனத்தைக் கொண்டாடத்தான். சரி. மலர்கள் ஏன் வாடி உதிர வேண்டும் அன்பின் நேச மனத்தைக் கொண்டாடத்தான். சரி. மலர்கள் ஏன் வாடி உதிர வேண்டும் அந்த இருவர் ஒரு வரையொருவர் பகைத்துப் புண்படுத்தி விலகும்போதெல்லாம் மலர்கள் வாடுகின்றன. உதிர்ந்து போகின்றன.\nமலர் உதிர்வது என்பது மனம் உதிர்வது. மனம் உதிரும்போதெல்லாம் பதைத்துப் போகிறார் தமயந்தி. ஏன் மனிதர்கள் பிணக்கு கொள்கிறார்கள் இருவேறு தேசத்து ராணுவக்காரன் மாதிரி ஏன் பகைக்கிறார்கள் இருவேறு தேசத்து ராணுவக்காரன் மாதிரி ஏன் பகைக்கிறார்கள் பங்காளி கள் மாதிரி ஏன் வழக்கு பேசுகிறார்கள் பங்காளி கள் மாதிரி ஏன் வழக்கு பேசுகிறார்கள் எதிரிகள் போல ஏன் வதை செய்ய வேண்டும் எதிரிகள் போல ஏன் வதை செய்ய வேண்டும் சொற்களை எறிந்து ஏன் காயப்படுத்த வேண்டும் சொற்களை எறிந்து ஏன் காயப்படுத்த வேண்டும் புறக்கணிப்பு, அவமானம் என்பதெல்லாம் ஒரு கூரை யின் கீழ் தாம்பத்யம் என்ற பெயரில் நிலை பெற வேண்டும்தானா புறக்கணிப்பு, அவமானம் என்பதெல்லாம் ஒரு கூரை யின் கீழ் தாம்பத்யம் என்ற பெயரில் நிலை பெற வேண்டும்தானா தமயந்தி இந்தக் கேள்விகளோடு பயணம் செய்கிறார். எழுதும்போதும் இதையே எழுதுகிறார். எவையெல்லாம் அவரை இம்சிக்கிறதோ அவைகளை அவர் எழுதுகிறார். எனெனில் அவர் எழுத்தாளர்.\nதமயந்தியை 1980-களின் கடைசிப்பகுதியில், அவர் கதைகளின் வழியே சந்திக்க நேர்ந்தது. அவசியம் படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என்பதை முதல் சில சிறுகதைகளிலேயே நினைக்க வைத்தார். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். கணவன், மனைவி, காதலன், காதலி, தந்தை, மகள், நண்பர், நண்பி என்கிற உறவுகளின் பிணைப்பு, எவ்வாறு நாளடைவில் வன்மம் கொள்கிறது வன்முறை ஒரு வாழ்க்கை நிகழ்வே போல எப்படி உருமாற்றம் அடைந்து பெண்களைச் சிதைக்கிறது என்கிற புலத்தைத் தமயந்தி அளவுக்குக் காத்திரமாகச் சொன்னவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே ஆவார்கள். அவருக்குக் கூடி வந்திருக்கிற கலைத் திரட்சியும், வடிவ நேர்த்தியும், மொழி ஆளுமையும் தனித்வம் பொருந்தியவை.\nஅண்மையில் வெளிவந்திருக்கும் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்’ என்கிற தமயந்தியின் சிறந்த கதைகளைக் கொண்டிருக்கும் தொகுதியில் ‘முகம்’ எனும் கதை இப்படி ஆரம்பிக்கிறது:\n‘காலைல எழும்பி முகம் கழுவிவிட்டு பல் விளக்கி வாய் கொப்பளிச்சிட்டு கண்ணாடி பார்த்து தலையைக் கோதலாம்னு பார்த்தப்பத்தான் முகத்தைக் காணோம்னு புரிஞ்சுது. சட்டுனு ஏதோ ஒண்ணு பதைபதைக்க இன்னொரு முறை கெளரி கண்ணாடிய உத்துப் பாக் குறா. கண்ணு, மூக்கு, உதடு, நாடி எதுவுமே இல்லாம வெறும் சதைக் கோளமா இருக்கிற முகத்தை பார்த் தாலே மிரட்சியா இருந்துச்சு. கண்ணே இல்லாம எப்படி பார்க்க முடியுதுனு சத்தியமா இவளுக்குத் தெரியல...’\nதமயந்தி கதைகளின் மையம் அல்லது அகம் இப்படி இருக்கிறது. என்ன பண்ண முப்பது நாளில் சிவப்பழகு பண்ணிக்கொண்ட பெண்ணைப் பற்றி, சீவி சிங்காரித்து வாசலில் ஸ்கூட்டர் சப்தத்தை எதிர்பார்த்து நிற்கும் குமாரிகள் பற்றி, நேத்திக்கு வாங்கின புடவைக்கு மேட்சாக பிளவுஸ் பிட் கிடைக்காத கவலையில் தோய்ந்த திருமதிகள் பற்றி எழுத நிறைய பேர்கள் இருக்கிறார்களே\nதமயந்தி, பெரும்பகுதி நிஜமானப் பெண்களின் பிரதிநிதியாக எழுத வந்து, நிஜமான பிரச்சினைகளை எழுதுகிறார்.\nபிடிக்காத பாடத்தை எடுக்கச் சொல்லிப் பெண்களை வற்புறுத்தி காலேஜில் சேர்த்துவிட்டு ஆசைகளைக் கருகச் செய்த அப்பன்களை யார் எழுதுவது கடைசி செமஸ்டர் முடிக்கும் முன்பாக ‘இவன்தான் மாப்பிள்ளை’ என்று ஒரு கேனயனைக் கொண்டு வந்து நிறுத்திய தந்தைமார்களை யார் எழுதுவது\n‘பக்கி மவள… தூரம் பட்ட துணியை பேப்பர்ல சுத்தி யாருக்கும் தெரியாம கொண்டு போடு’ என்கிற மாமியாரை யார் எழுதுவது.\n‘கனவுல சில்வியா ப்ளாத் தினமும் வர்றா. பாதி புரியுற ஆங்கில கவிதைகளச் சொல்றா. ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு. ஒரு தடவ பாலாஜியோட லேப்டாப்ல சில்வியா ப்ளாத்னு அடிச் சோன்ன இணையதளம் விரிய ஆரம் பிச்ச நேரம், அவன் பின்னந்தலைல தட்டி ‘‘என்ன பண்ணிட்டு இருக்க... டிபன் எடுத்து வை’’ன்னான். சில்வியா ப்ளாத் அவன் சொன்னதை இணையத்துலேர் ருந்து பார்த்துகிட்டே இருந்தா. அவ முகம் மாறின மாதிரி தோணுச்சு கெளரிக்கு.\nஅவளுக்குப் பாட ஆசை. வாயைத் திறந்தால் ‘‘என்னடி கரையுற காக்கா மாரி’’ன்பான் அவன். அதான் அந்த கேன யன்தான். அவனின் இன்னொரு பெயர் கணவன், இந்த தேசத்தில். இவர்களைத் தொழ வேண்டும் பெண்கள். தொழும் பெண்கள், பெய்யென்றால் மழை பெய் யும். ஆமாம் பெய்யும். பெய்யெனச் சொன்னால் மாடுகூடப் பெய்யாதே\nதமயந்தி கோபக்காரர் எல்லாம் இல்லை. அவர் கோபம் சமூகம் சார்ந்த கோபம். அந்தக் கோபம், கலாபூர்வமாக மாறி சிறுகதை இலக்கியமாகவும் மாறுவதால், அற்புதமான நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துவிடுகிறது. வன் முறைக்கு - சகலவிதமான வன்முறை களுக்குமான எதிர்குரலை, கதைகளின் ஊடாகவும் உள்ளோட்டமாகவும் மாற்றி நல்ல வாசிப்புக்கு வடிவம் தருகிறார் அவர். விடுதலையைத் தமயந்தி அவர் கண்ணோட்டத்தில் முன் வைக்கிறார்.\nஓர் அழகிய கதை ஒன்றைப் பார்ப்போம். சமூக அக்கறையும் மனித நேயமும் கொண்ட அவள் செய்தி சேகரிக்கக் கிராமம் செல்கிறாள். வசந்தி என்கிற பெண் பேசுகிறாள். எங்கள் ஊருக்கு அருகில் ஒரு காடு. அது எங்களுக்குத் தாய். அதில் ஏதோ ஆராய்ச் சிக்கூடம் கட்ட நினைக்கிறது அரசு. பழனி அண்ணன் தலைமையில் ஊர் போராடுகிறது. போராட்டக்காரர்களைப் போலீஸ் கடுமையாகத் தாக்கிச் சிறை பிடிக்கிறது. தலைமறைவான பழனியண் ணனுக்குக் குடிக்க நீர் கொடுக்கிறது வசந்தி குடும்பம். மாபெரும் குற்றம் அல்லவா அது பழனியைத் தேடி வந்த காவலர்கள், அவள் தந்தையைக் கொல்கிறார்கள். அவளை இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி… வசந்தியின் கர்ப்பப்பையே கிழிகிறது. வசந்தி தன் அனுபவத்தை கேட்பவள் மனம் பதறச் சொல்லிக்கொண்டு போகிறாள். இதனுடே, அந்த ஏழைக் குடும்பம் வெளிப்படுத்தும் விருந்தோம்பல் அற்புதமாகப் பதிவு செய்யப்படுகிறது. அவள், எழுந்து தரையில் அமரப் போகிறாள். அவசரமாகப் பாய் விரிக்கப்படுகிறது. ‘‘நீங்க கறி மீன்லாம் சாப்பிடுவீங்களா பழனியைத் தேடி வந்த காவலர்கள், அவள் தந்தையைக் கொல்கிறார்கள். அவளை இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி… வசந்தியின் கர்ப்பப்பையே கிழிகிறது. வசந்தி தன் அனுபவத்தை கேட்பவள் மனம் பதறச் சொல்லிக்கொண்டு போகிறாள். இதனுடே, அந்த ஏழைக் குடும்பம் வெளிப்படுத்தும் விர��ந்தோம்பல் அற்புதமாகப் பதிவு செய்யப்படுகிறது. அவள், எழுந்து தரையில் அமரப் போகிறாள். அவசரமாகப் பாய் விரிக்கப்படுகிறது. ‘‘நீங்க கறி மீன்லாம் சாப்பிடுவீங்களா’’ என்கிறாள் ஒரு பெண்.\nஇதற்கிடையில் செய்தி சேகரிப்புப் பெண்ணுக்குக் காதில் இன்னொரு குரல் - முரளியின் குரல் ஒலிக்கிறது.\n‘‘ஊருக்கு நியாயம் கெடைக்கச் செய்வாளாம்... வீட்ல இட்லிகூட கெடைக்க வைக்க முடியலையே.’’ அலைபேசி சிணுங்கியது.\n‘‘என்ன போனை எடுக்க மாட்டியா உனக்கென்ன கவலை... நாங்க இருந்தா என்ன செத்தா என்ன உனக்கென்ன கவலை... நாங்க இருந்தா என்ன செத்தா என்ன\nடிராவல் பண்ணாதனு சொல்றாங்க டாக்டர். சனியன். லீவு போடறியா.. சாதாரணமா வத்தக் குழம்பு சுட்ட அப்பளம்னு உள்ள பொண்டாட்டியைக் கட்டியிருக்கணும்...\nவசந்தியின் கதையோடு, அதே தரத் தில் இன்னொரு, அதே வன்முறைக்கு ஆளான செய்தி சேகரிப்பாளர் கதையும் இணைகிற ரசாயனம் அருமையாக இணைந்த, தமிழில் முக்கியமான கதை இது.\nஅன்பைத் தேடி அன்பைத் தவிர வேறு எதுவும் புழங்காத ஓர் உலகத் தில் ஒரு குழந்தையாக அலைய விரும்புகிறார் தமயந்தி. கிடைத்திருக்கும் இந்த அழகிய உறவை, அழகிய வாழ்க்கையை ஏன் விகாரப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்.\nஉண்மைதான். எத்தனை அழகியது இந்தக் குளிர் காலை, இந்த அருவி, இந்த நதி, இந்த நிலவு... இந்த அழகுகளோடு மனித குலம் ஏன் இணைந்துக்கொள்ளக் கூடாது என்கிறார் தமயந்தி. ஆமாம். ஏன் நாம் அழகாகக் கூடாது\nதமயந்தியின் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்’ சிறுகதை தொகுப்பை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 புதன், பிப்ரவரி 03, 2016 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும், சிறுகதை, தமயந்தி, பிரபஞ்சன்\nஎல்லாம் அறிந்தவனான ரோஹித்தும் அந்த நீலக்கயிற்றின் சுருக்கில் தலையை இறுக்கிக் கொண்டான் நட்சத்திரங்களைக் கண்களிலிருந்து உதிர்த்துவிட முடிவெடுத்தவன் சில நட்சத்திரங்களைத் தந்து போகப் போராடினான் செட்டைகளைத் தன் மீதே மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டான் உடலுக்கும் இதயத்திற்கும் இடையே பயணம் தூரமாகிப் போக அவன் சூரியனைத் தன் தலைமீதே சுமந்து நடந்தான் விடுதலையின் பதாகை வானமாகி மேலே எழும்பிக் கொண்டேயிருந்தது\nஒ��ு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு அவன் கனவுக்கோட்டை எதையும் வாங்கவிரும்பவில்லை புதிய வீடும் சாளரங்களும் கட்டவிரும்பவில்லை கடனும் பசியும் சில நூல்களும் அவன் தனக்கான கூரையைத் தேடினான் உயரமான கூரைக்கு ஏறிப்போக ஏணியைத் தேடினான் ஏணியின் மீதேறும்போதெல்லாம் கூரை மேலெழும்பிச் சென்றது எழும்பி மேலே சென்று கொண்டே இருந்தது ஏணியின் தேவையின்றி கூரையின் கீழ் வாழ்ந்தவர்கள் அவனுக்கு ஏணி அவசியமற்றது என்றனர் ஏணியைப் பறித்து மடித்து உடைத்தனர்\nகூரை உடையவர்களுக்கு ஏணி அவசியப்படாதவர்களுக்கு கடவுள் எதுக்கென அவனை இல்லாமல் ஆக்கினேன்\n* (சென்னையில் சனவரி 24, 2016 அன்று, Pranjya ஒருங்கிணைத்திருந்த Zero Apologies கவிதை வாசிப்பு நிகழ்வில் வாசிக்கப்பட்டது.)\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 செவ்வாய், பிப்ரவரி 02, 2016 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: கடவுள், கவிதை, குட்டி ரேவதி, ரோஹிக் வெமூலா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவீரம் மிகு பெண், ஷீதல் சாதே\nதமயந்தியின் சிறுகதை உலகம் பற்றி பிரபஞ்சன்\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக���கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://makizhnirai.blogspot.com/2015/04/what-is-rationalism.html", "date_download": "2018-07-19T11:35:39Z", "digest": "sha1:KY55HRX5W25RQYGPGWTO4Z3HXRI7F77O", "length": 75285, "nlines": 370, "source_domain": "makizhnirai.blogspot.com", "title": "மகிழ்நிறை : பகுத்தறிவு என்றால் எங்க பாஸ்!!", "raw_content": "சனி, 25 ஏப்ரல், 2015\nபகுத்தறிவு என்றால் எங்க பாஸ்\nஎல்லா சாதியையும் தானே சொல்லிருக்கார்\nஇந்தமுறை தொடர்பதிவு என அறிவிக்காமலே ஒரு தொடர்பதிவை தொடங்கிவைத்திருக்கிறார் தமிழன் சகா:) ஒரு மாதம் கழித்து வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறேன். வகுப்புக்கு தாமதமாக வந்த மாணவனை வெளியே நிறுத்தி கடினமான கேள்வி கேட்பதை போல பகுத்தறிவாளர்கள் பதில் சொல்லுங்க சொல்லிப்புட்டார். பெரியார், ஏங்கல்ஸ், மார்க்ஸ் அளவு நமக்கு சொல்லத் தெரியாட்டியும், நம்ம மணிவண்ணன் அய்யா ஸ்டைல சொல்லலாம்னு பார்க்கிறேன். தமிழனின் இந்த பதிவை படித்துவிட்டால் கீழ் உள்ள பதிவு கொஞ்சம் தெளிவா புரியும்னு நினைக்கிறேன்.\nரகுவீரன் பகுத்தறிவாளர்களிடம் கேட்க நினைத்த கேள்வியை வீரமணியிடம் கேட்டபோதே அந்த கேள்விகள் பிசுபிசுத்துப் போய்விட்டதென்பது என் கருத்து. பகுத்தறிவு என்றால் என்ன என்று தான் எல்லோரும் நினைக்கிறார்களோ புரியவில்லை. கடவுள் மறுப்போ, வெறும் பிராமண மறுப்பு மட்டுமே பகுத்தறிவில்லை என்பதே என் புரிதல். எல்லோரும் பிறப்பால் சமம் என்பதுதான் பெரியார் சொல்ல வந்த விசயத்தின் சாரம். இது ரகுவீரன் அவர்களுக்கு புரிவில்லை என்றால் பரவாயில்லை. நிறைய கருப்புச்சட்டைகாரர்களுக்கே புரியவில்லை என்பது தான் வருந்த வேண்டிய விஷயம். அர்த்தம் புரியாமல் ஆகமவழிபாடுகள் செய்வதுதற்கு சற்றும் குறையாததாக வறட்டுத்தனமாய் இன்னும் பிராமணர்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருப்பதும். இன்னும் மோசமாய் இங்கு தலைகீழாய் ஆட்டம் போடும் ஆதிக்க சாதியினரை பார்க்கவே செய்கிறேன். பெரியார் இருந்திருந்தால் நிச்சயம் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார். அந்த ���ுணிச்சல் இல்லாத இன்றைய பல கருப்புசட்டைகள் அந்த கோவிலில் அப்படி விளக்கு போடுவது தான் முறை என்பது போல பிராமணர்களை எதிர்ப்பதுதான் பகுத்தறிவு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னவென்பேன். எனவே முதல் கேள்விக்கான என் பதில் பெரியாரின் காலத்தில் மிக ஆதிக்கம் மிக்கதாய் பிராமணியம் இருந்ததால் அவர் அதற்கு எதிராக குரல் கொடுத்தார், இன்றும் சில ஒரிஜினல்() பகுத்தறிவாளர்கள் இன்றைக்கு ஆதிக்கத்தில் இருக்கிற சாதிக்கு எதிராக கேள்வி கேட்பவராகவே இருக்கிறார்கள்.\nமூன்றாவது கேள்விக்கும் சேர்த்து முதல் கேள்வியில் பதில் சொல்லிவிட்ட போதும், நறுக்குனு ஒரு பதிவு இருக்கு. இதையும் ரகு சார் கருத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் படித்துபாருங்கள்;.\nபூணூல் அறுத்து எறிவதோ, அல்லது தாலி அறுப்பதோ அவரவர் பயன்படுத்தியதை அவரரவர் அறுத்தெறிந்தால் அது அவர்கள் உரிமை, அடுத்தவர் கழுத்தில் கை வைப்பது மனித உரிமை மீறல். அம்புட்டுதான்.\nசரி விடுங்க, ராகுவீரன் அய்யாவிற்கும், தமிழன் சகாவிற்கு நான் சொல்லிக்கொள்ள ஆசைபடுவதொன்று உண்டு. அது\" மனிதனை மதிக்கத்தெரியாதவன் பகுத்தறிவாளனே அல்ல, அவர்களிடம் கேள்வி கேட்டு நீங்கள் பெரும் விடைகள் எப்படி சரியானதாய் இருக்கமுடியும்\".\nசொல்ல நிறைய இருக்கு. நேரம் போதவில்லை. மீண்டும் வருகிறேன். இப்போதைக்கு இம்புட்டுதான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பகுத்தறிவு, பெரியார், மதுரை தமிழன்\nதிண்டுக்கல் தனபாலன் 25 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:59\nமிக சரியாகவும் அதே நேரத்தில் மிக தெளிவாகவும் உங்கள் கருத்தை தெரிவித்து இருக்கிறீர்கள் அதற்காக உங்களுக்கு எனது தனிப்பட்ட பாராட்டுக்கள்\nநமது தமிழக பகுத்தறிவுவாதிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையும் மற்றும் சாதியை சார்ந்தவர்களை மட்டும் பழித்துரைப்பது ஏன் என்று கேட்டால் அதற்கு இந்த போலி பகுத்தறிவு வாதிகள் சொல்லுவது இந்த பிராமனர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி நாசம் செய்கிறார்கள் எனவே அவர்களின் ஆதிக்கத்தை ஒழித்துகட்ட வேண்டும் அதன் பின்தான் மற்ற சாதியினர் என்று என சூளுரைக்கின்றனர்.. இந்த போலி பகுத்தறிவு வாதிகள் சொல்வது உண்மை என்று எடுத்து கொண்டால் கூட இந்த இந்த ஜாதியினர் இந்தியாவில் மட்டும்தான் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர் ஆனா���் மேலைநாடுகளும் இதே மாதிரிதானே வேறு மதங்களின் பெயரை சொல்லி உலகத்தை அழித்து தங்கள் ஆதிக்கத்தை செய்து வருகின்றனர் அப்படி என்றால் இவர்களைதானே முதலில் அழித்து ஒழிக்க வேண்டும் அதன்பிந்தான் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும், ஆனால் இப்படி பகுத்தறிவுவாதிகள் செய்யமாட்டார்கள் அதற்கு இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு தைரியம் வருவதில்லை\nGeetha M 25 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 9:28\nசரியான பதில்பா..புரிந்து கொள்ளாமல் பெரியாரை தூற்றுவதே வாடிக்கையாகிப்போய் விட்டது..இது பிராமணீய ஆதரவாளர்களுக்கு வசதியாய் போய்விட்டது...\nசெ செந்தழல் சேது 25 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 12:31\nஅதே பேஸ்புக்கில் முனைவர் ஜீவா என்றொருவரின் \" பூணூல் அறிக்கப்படவில்லையென்கிற அறிக்கையை வெளியிட தமிழருக்கு ஏன் தயக்கமென்றே தெரியவில்லை\nபெரியாரிடம் ஒருவர் கேள்வி கேட்டார், அவரை மாட்டிவிட வேண்டும் என்று.\nஅவரின் பதில், யாரெல்லாம் அடுத்தவர் உழைப்பில் உண்டு களிக்கிறார்களோ அவர்கள் தான் பிராமணர்கள் என்றார்.\nநல்லவர் எல்லா இடத்திலும் உண்டு,\nஅவர் அல்லவர்களைத் தான் சாடினார், அரசியல் பன்னும் அறிவீளிகளை அல்ல.\n'ரகுவீரன் பகுத்தறிவாளர்களிடம் கேட்க நினைத்த கேள்வியை வீரமணியிடம் கேட்டபோதே அந்த கேள்விகள் பிசுபிசுத்துப் போய்விட்டதென்பது என் கருத்து' அருமை மைதலி. மதுரைத் தமிழனின் இந்தப் பதிவை அங்கேயே படித்தருந்தாலும், “வாதத்துக்கு மருந்துண்டு, பிடிவாதத்துக்கு மருந்து ஏது“ ன்னு போயிட்டேன். மதுரைத் தமிழன் பெரும்பாலும் சரியாகவே சிந்திக்கக் கூடியவர்தான். பகுத்தறிவு வாதிகளுக்கு அவர் எதிரியல்ல என்றே இப்போதும் நினைக்கிறேன். வீரமணிமேல் உள்ள கோபத்தில் மொத்தப் பகுத்தறிவு வாதத்தையும் கேலிசெய்யும் யாரோ ஒருவரின் கேள்விகளை இவர் ஏன் எடுத்துப் போட்டார் என்னும் கவலையும் எனக்கு வந்தது. “குளத்துமேல கோவிச்சுக்கிட்டு...“ எனும் நம்ம ஊர் சொலவடைதான் நினைவுக்கு வந்தது. இருந்தாலும் நீ இதற்குப் பதில் சொன்னதும் மகிழ்ச்சிதான்.\nபெரியாரைக் கிண்டல் செய்பவர்கள், மற்ற தென்மாநிலங்களோடும் வடமாநில “மூடத்தனத்தின் முடைநாற்றமடிக்கும்“ வழக்கங்களோடும் தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பார்த்து, பெரியாருக்கு நன்றியோடு வாழக்கடமைப் பட்டவர்கள் என்பதை உணர வேண்டும். பெரியாரோடு ���னக்கும் சில கருத்து வேறுபாடுகள் உண்டுதான். அது தந்தைக்கும் மகனுக்கும் உள்ளதைப் போன்றது. அவரை இழிவு செய்ய நினைப்பவர் யாராயினும் அறிவுபூர்வமாகச் சிந்திக்க மறுப்பவரே அன்றி வேறல்லர். அவர் படத்தில் சிறுநீர்கழித்த மற்றும் செருப்பாலடித்த ஜந்துக்கள், இதை உணராத மூடர்களன்றி வேறல்லர். நாய் நம்மைக் கடிக்கிறது என்பதற்காக நாமும் அதைக் கடிக்க முடியுமா என்ன\nஒரு விஷயம் மைதிலி, சங்கராச்சாரி கைதை எதிர்த்து, டெல்லியில் மூன்று முன்னாள் பிரதமர்கள் உண்ணாவிரதமிருந்த நாட்டில், சங்கராச்சாரி கைதான தமிழகத்தில் பெரிய அளவிற்கு எதிர்ப்பு இல்லாததன் காரணம் இந்தக் கிழவனின் கருத்துப் பரவல்தான் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.\nவீரமணியிடம் ஏராளமான பலவீனங்கள் உண்டு. அவற்றைக் கொண்டு, பெரியாரை விமர்சிக்க முடியாது என்பதை முதலில் உணரவேண்டும். இந்த சொத்தைக் கேள்விகளைப் போல மூடபக்தர்களிடம் மதவெறி-சாதிவெறி மூர்க்கர்களிடம் கேட்க நமக்கும் ஓராயிரம் கேள்விகள் உண்டு. அதைத்தான் பெரியார் 96வயதிலும் மூத்திரப் பையைச் சுமந்துகொண்டு ஊர்ஊராய்த் திரிந்து கேட்டுக்கொண்டே இருந்தார்... அவருக்குப் பதில் சொல்ல முடியாதவர்கள்தான் செருப்பை அப்போதும் எறிந்தார்கள், இப்போதும் எறிகிறார்கள். இந்தக் கேள்விகளாலோ இவர்களின் சிறுநீராலோ அந்த எரிமலையை அணைத்துவிட முடியாது\nஆனால், உன் பாணியில் பதில் சொன்னதை ரசித்து வரவேற்கிறேன்.\n“நல்ல எழுத்தாளர்கள் சோம்பேறிகளாகவும், வணிக எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள்“ என்ற “காலச்சுவடு“ இதழ் நிறுவனர் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் பொன்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும் - மன்னிக்கவும், த.ம.5\nவருண் 25 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 6:42\n.***17. பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன் சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா\nசாதிய அடையாளங்களை நியாப்படுத்தும் ரகுவீரன் ஆண்மை இருக்கா னு ரகுவீரன் குரைத்துவிட்டு.. இப்போ ஜாதிய அடையாளங்களை நியயப்படுத்துகிறது..\nபாப்பான் பஜனை செய்வான். மத்தவன் இவன் குப்பையை அள்ளனும் ஏன்னா நெறி அமைத்து வைத்து இருக்காம் ஏன்னா நெறி அமைத்து வைத்து இருக்காம்\nகரந்தை ஜெயக்குமார் 25 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்��கல் 6:57\nமனிதனை மதிக்கத்தெரியாதவன் பகுத்தறிவாளனே அல்ல,\nபெரியார் பாம்பை விட மோசமாக இருந்ததை அடிக்க சொன்னார்,அதையே இன்றும் செய்தால் ,அது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம் :)\nசெ செந்தழல் சேது 25 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 10:24\nதோழர் முத்துநிலவன் அவர்களின் கருத்திற்கு உடன்படுகிறேன் . மீண்டும் பழைய கருவாட்டுக் கதையை பின்னூட்டமாக்கியிருக்கிறார் தோழர் மதுரை தமிழன் . உலக நாடுகளின் மத ஒடுக்குமுறையென்பது \" பிரிவினை\" இந்துத்துவம் இந்தியத்தின் ஒடுக்குமுறை என்பது \"வகுப்புப்பிரிவினை வாதம்\" இரண்டிற்கும் வேறுபாடுண்டு, பகுத்தறிவென்பது இவைகளைத்தையும் எதிர்ப்பதுதான்.\nசெ செந்தழல் சேது 25 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 10:27\nபாம்பின் தலை வெட்டினாலும் வெட்டிய தலையை முழுதாய் களையாமல் விட்டால் அதுவே மீண்டும் கொத்தும் என்பது பாம்பின் குணம் பகவான்ஜி தோழரே,\nஎனது பெயரையும் குறிப்பிட்டு சொல்லியதால் பதிலளிக்கிறேன் வருண். 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பார்ப்பன ஆதிக்க நிலை என்பது வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு.\nபெரியார் மற்றும் திராவிட கொள்கைகளினால் மட்டுமே கடந்த 20 ஆண்டுகளில் பல பின் தங்கிய வகுப்பினரின் அடுத்த தலைமுறைக்கு கல்வி மற்றும் பொருளாதார உயர்வு கிடைத்துள்ளது.\nஇப்போது இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது நமது தலைமுறையினரின் வேலை. மற்ற வகுப்பினருக்கு கிட்டிய அந்த வாய்ப்பு இன்னும் தலித்களுக்கு கிடைக்கவில்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. இன்னும் 50 ஆண்டுகள் இப்படியே இருந்தாலும் அந்த நிலை மாறாது.\nஎவ்வளவு தலித்துகள் IT கம்பெனிகளில் வேலை பார்க்கிறார்கள் எவ்வளவு தலித்துகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கிறார்கள். விடை பூஜ்ஜியம். இதனை மாற்றுவது முக்கியமா இல்லையா என்பதை படிப்பவர்களின் கருத்துக்கே விடுகிறேன்.\nஇதனை மாற்ற வேண்டும் என்றால் அன்றைக்கு பார்ப்பனர்களை எதிர்த்த அதே வேகத்துடன் மற்ற ஆதிக்க சாதிகளை இப்போது எதிர்க்க வேண்டியது அவசியம்.\nநமது முன்னோர்கள் நடந்து சென்றார்கள், மாட்டு வண்டியில் சென்றார்கள். அவர்களது உழைப்பால் நாம் காரில் செல்கிறோம். நமது அடுத்த தலைமுறையினரை நாம் நமது உழைப்பால் ஃப்ளைடில் பயணம் செல்ல வைக்க வேண்டும். அவர்களை காரிலேயே பயணம் செல்ல வைப்பது நமக்கும் இழுக்கு நமது முன்ன���ர்களுக்கும் இழுக்கு.\nவருண் 26 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 10:25\nசத்யபிரியன்: எதுக்காக இந்த லெக்ச்சர் கொடுக்குறீங்கனு தெரியவில்லை ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க..யாரும் யாரு பூனூலையும் அறுக்கவில்லை ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க..யாரும் யாரு பூனூலையும் அறுக்கவில்லை ரகுவீரன் பூனூலை எவன் அத்தான் ரகுவீரன் பூனூலை எவன் அத்தான் சும்மா எவன் தாலியையோ எவனோ அத்தால் எனக்கென்னனு பார்ப்பானுக இருக்காமல், பொங்கி, சும்மா கேள்வி கேக்கிறேன்னு பொய் குற்றச்சாட்டை வைக்கக்கூடாது சும்மா எவன் தாலியையோ எவனோ அத்தால் எனக்கென்னனு பார்ப்பானுக இருக்காமல், பொங்கி, சும்மா கேள்வி கேக்கிறேன்னு பொய் குற்றச்சாட்டை வைக்கக்கூடாது சொல்லப்போனால் பார்ப்பனர்களைப் பத்தி எவனும் கவலைப்படவில்லை. இவனுக இருந்தால் என்ன செத்தால் என்னனு பதிவுலகில் அவன் அவன் அவனவன் வேலையைப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.\nமேலும் தேவையான நேரத்தில் உயர்சாதி முட்டா திராவின்களையும் அவனுக சாதி வெறியையும் விமர்சிச்சுக் கொண்டுதான் இருக்கிறோம். அது உங்கள் பார்வைக்கு தெரியவில்லைனா, அதுக்கு நாங்க என்ன பண்ணுறது\nசும்மா கெடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டினு திடீர்னு, பரோபகாரி (இவருக்கு என்ன வேணும்னு தெரியவில்லை) இந்தாளு போயி எவனோ முகநூலில் வைத்த ஒப்பாரியைக் கொண்டு வந்து போட்டது மட்டுமல்லாமல், இவருக்கு உள்ள தாலி செண்டிமெண்ட், இந்துமதப் பற்றால், தேவையே இல்லாமல் இஸ்லாமியப் பெண்களின் பர்தாவை இழுனு சண்டை மூட்டி விடுவது.. இதெல்லாம் செய்றவன் யாரு) இந்தாளு போயி எவனோ முகநூலில் வைத்த ஒப்பாரியைக் கொண்டு வந்து போட்டது மட்டுமல்லாமல், இவருக்கு உள்ள தாலி செண்டிமெண்ட், இந்துமதப் பற்றால், தேவையே இல்லாமல் இஸ்லாமியப் பெண்களின் பர்தாவை இழுனு சண்டை மூட்டி விடுவது.. இதெல்லாம் செய்றவன் யாரு வேலை வெட்டியில்லாத மூளை வளர்ச்சியில்லாத \"நீங்கள் சொல்லும்\" அதே திராவிடன் தான் செய்கிறான். இந்த வேலை செய்வது பார்ப்பான் இல்லை வேலை வெட்டியில்லாத மூளை வளர்ச்சியில்லாத \"நீங்கள் சொல்லும்\" அதே திராவிடன் தான் செய்கிறான். இந்த வேலை செய்வது பார்ப்பான் இல்லை அதை மொதல்ல புரிஞ்சுக்கோங்க. So your lecture is not warranted here at all.That's the whole point. Otherwise why would I care about you or your opinions\nஎல்லா சாதியைத் தான் சொல்லியிருக்கார் என்ன பிரச்சனை என்றால் பார்ப்பனர் எல்லோரும் தம் சாதிக்கு இது பொருந்தாது சூத்திரர் தான் சாதிவெறியாடுகின்றனர் எனவும், சூத்திரர் எல்லோரும் தம் சாதிக்கு இது பொருந்தாது பார்ப்பனர் தான் சாதி வெறியூட்டுகின்றனர் எனவும் விரல் காட்டிக் கொண்டோ மறுகையால் கைகுலுக்கிக் கொண்டு சாதீயம் வளர்ப்பது தான்.. முதலில் சாதீயம் பற்றி பேசுவோர் தம் வீட்டில் இருந்து சாதீயம் ஒழிக்கத் தொடங்கட்டும். சாதீயக் குறியீடுகளான பூணூலோ கடுக்கனோ வட்டார மொழியோ அல்லாவற்றையும் விட்டொழியுங்கள், அடுத்து மற்ற சாதி சனத்தோடு மண உறவு கொள்ளுங்கள். இரண்டையும் செய்ய முடியவில்லையா பொத்திக் கொண்டு பேசாமல் இருங்கள், சாதியை ஒழிப்பது பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்..\nகடந்த 20 அல்லது முப்பது வருடங்களில் அநேக பார்பன குடும்பங்கள் மிகவும் மாறிவீட்டன எனக்கு தெரிந்த பல பிராமிணப் பெண்கள் மிக அதிக அளவில் அடுத்த சாதி மதம் இனம் தாண்டி திருமணங்கள் புரிந்து கொண்டனர் & புரிந்து கொண்டும் இருக்கின்றனர் என்பது உண்மைதான். அதே நேரத்தில் இன்னும் பழமையான பழ்க்க வழக்கங்களை கைகொண்ட பழமைவாதி பிராமின் களும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஔ வேளை பெரியாருக்கு பின் அவரைபோல சீர்திருத்த வாதி அவரது இயக்கத்தை தொடர்ந்து இருந்தால் அந்த நிலமையிலும் மாற்றம் எளிதில் வந்து இருக்கலாம் ஆனால் அது நீங்கள் சொன்னதுது போல திராவிட கழங்களில் இந்த பகுத்தறிவு மாட்டிக் கொண்டு அது புதைக்கப்ட்டுவிட்டது போலத்தான் இருக்கிறது\nதிராவிடக் கழகங்களில் கூட பல பிராமீன் மருமகள்கள் வந்திருக்கின்றனர். திராவிடக் கழகங்கள் பெரியாருக்கு பின் அப்படி ஒரு பிராமீன் எதிர்ப்பரசியலை செய்ததாக எனக்குப் படவில்லை. திராவிடக் கழகங்களில் தலைவராகவும் பிராமீன் பெண் வந்திருக்கின்றாரே. ஆக திராவிடக் கழகங்கள் பிராமீனை வறுத்துக் கொண்டு இருப்பதாக சொல்லப்படுவது என்பது பச்சைப் பொய் என்பதே என் வாதம். திமுக தோற்றத்தின் போதே பிராமீன் ஆட்களின் சுவராஜ்ய கட்சி ஆதரவு தந்ததும் விபி ராமன் போன்றோர் திமுக கொறாடா உறுப்பினராக வந்ததும் கூட உண்டு.\n பிராமீன்கள் மட்டுமல்ல தேவர்கள், செட்டியார்கள், கவுண்டர்களில், வன்னியர்களில், நாடார்களில் கூட நானறிந்து பலரும் ��ேறு சாதியினரை மணந்துள்ளனர். இது தான் உண்மை. அதே போல அந்த சாதிகளினைப் பற்றிக் கொண்டு இருப்போரும் உள்ளனர்.\nஇதில் சில சூட்சும சங்கதிகளை நீங்கள் அவதானிக்க வேண்டும்.. எப்போது ஜாதியை விட்டுக் கொடுக்கின்றார்கள் எனில், தமது மரபார்ந்த ஊர்களில் இருந்து வெளியூருக்கோ வெளிநாடுக்கோ புலம்பெயரும் போது, அங்கு தம்மளவிலோ தம்மைவிடவோ பொருளாதார வசதி மிக்க, மற்றும்/அல்லது அரசியல், அதிகார மட்டத்தில் செல்வாக்குடைய மாற்றுச் சாதியினரை மணக்கத் துணிகின்றனர். இது தான் எதார்த்தாம் இதில் பிராமீன் பிராமீனல்லாதோர் என்ற பேதமில்லை. ஆனால் இவை யாவும் உள்ள பட்சத்திலும் தலித்களை மட்டும் பிராமீனோ, பிராமீனல்லாதோரோ மணக்க தயக்கம் காட்டுகின்றனர்.\nஇன்று பிராமீனையல்ல நாம் எதிர்ப்பது பிராமீனால் உருவாக்கப்பட்ட ஜாதியத்துவம், இந்துத்வம் ஆகியவற்றையே நாம் எதிர்க்கின்றோம். அந்த ஜாதியத்துவம், இந்துத்வம் ஆகியவற்றுக்கு அகில இந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் நெய்யூற்றி வேள்வி வளர்ப்போரில் பெரும்பங்கினர் பிராமீன் கூடவே பனியா. தமிழகம் உட்பட சூத்திரர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பிராமீன் + பனியா அரசியல் ஏகாதிபத்தியோடு சற்சூத்திரர் மற்றும் சற்சூத்திரராக முயல்வோருகளில் சிலரும் ஆதரவு தருகின்றனர். ஆழமாக நோக்குங்கள் புரியும்... \nநாம் ஒரு பிராமீன் பிராமீனாக இருப்பதால் மட்டும் எதிர்க்கவில்லை, அல்லது பிராமீனோடு சேர்ந்து ஜாதித்துவம் மதத்துவம் வளர்க்கும் பிராமீனல்லாதோரை அடிவருடி என திட்டவில்லை. ஆனால் ஒரு பிராமீன் பூணூல் தரித்துக் கொண்டும், பிராமீனல்லாதோர் அப் பூணூலுக்கு வக்கலாத்து வாங்குவதையும் தான் எதிர்க்கின்றோம்.\nஇங்கே பூணூல் என்பது ஒரு ஜாதிய குறியீடு மதக் குறியீடல்ல என்பதை காண்க ஒருவேளை இந்து எனப்படுவோர் எல்லோருக்கும் பூணூல் அணியும் அனுமதி இருந்தால், அப்போது பூணூலை எதிர்க்க மாட்டோம். இந்து எனப்படுவோர் எல்லோருக்கும் கோவில் மந்திரம் ஓதுவது முதல் சமூக அந்தஸ்து சரிசமமாக தரப்பட்டால் அப்போது யாம் எதிர்க்க மாட்டோம். அப்படி தரப்படும் பட்சத்தில் சூத்திரர் சற்சூத்திரர் தலித் என்ற பேதம் தானாகவே போய்விடும்.\nஏனெனில் பிராமீனுக்கு இணையாக அனைவரும் வந்த பிறகு பிராமீனுக்கு அடுத்த இரண்டாம் இடத்துக்கு போட்டி ���ோடுவதற்கு சற்சூத்திரரோ சற்சூத்திராக ஆக முனைவோரோ இருக்க மாட்டார்களே \n புரியவில்லை என்றால் தொடர்ந்து பேசுவோம்.\nவருண் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது எனது நோக்கமல்ல. எனது குறைகளை போக்கி என்னை திருத்திக் கொள்வதே எனது நோக்கம்.\nயாரும் யாரு பூனூலையும் அறுக்கவில்லை\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது இது. நேரமிருந்தால் படித்து பாருங்கள்.\n78 வயது முதியவரையும், 12 வயது சிறுவனையும் அடித்துவிட்டால் சாதி ஒழிந்து விடுமா\nஎனது சிந்தனை உங்களுக்கு நாற்றமாக தோன்றலாம். தவறிருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.\nமற்றபடி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.\nஐயா, ஒரு முதியவரை வீம்பாக அடிக்கும் அளவுக்கு தமிழன் இருப்பான் என்று நான் நம்பவில்லை.\n\"மயிலாப்பூரில் அர்ச்சகரின் பூணுல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் பின்னணியில் வெளிவராத உண்மைகள்:\nசென்னை மயிலாப்பூரை சேர்ந்த அர்ச்சகர் விஸ்வநாதனை தாக்கிய கும்பல் ஒன்று அவரது பூணுலை அறுத்ததாக செய்தி வெளியானது. இந்த சம்பவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்களும், நாளேடுகளும் செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படும் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் விஸ்வநாதன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பூணுல் அறுப்பு உள்ளிட்ட அரசியல் எதுவும் இல்லை என்பதே உண்மை. கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழா அன்று மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள விநாயகருக்கு பூஜை செய்வது தொடர்பாக ஒரு பக்தருக்கும், அர்ச்சகர் விஸ்வநாதனின் மகனும் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகருமான சண்முகநாதனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சாமிக்கு அலங்காரம் செய்வதில் திறமைசாலியான அந்த பக்தர் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்துள்ளார். இதற்கு ஒரு உபயதாரர் உதவியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர் சண்முகநாதன் சாமி சிலையை தொட்டு பூஜை செய்வதற்கு உங்களுக்கு உரிமையோ, அருகதையோ இல்லை, அதை வைதீக பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறி அந்த பக்தரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பக்தர் மாலை போட்டிருந்ததால் பதில் கூறாமல் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று திரும்பிய அந்த பக்தர் நேற்று முன்தினம் மாலையை கழட்டியுள்ளார். அன்றைய தினமே சிலரை ஏற்பாடு செய்து சண்முகநாதன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். அப்போது காரணீஸ்வரர் கோவில் சாவியை வாங்க சண்முகநாதனின் வீட்டிற்கு சென்ற விஸ்வநாதனை தவறுதலாக அந்த கும்பல் தாக்கியுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் கூச்சலிட்டதால் அந்த கும்பல் தப்பியோடியது. இந்த சம்பவத்தை விஸ்வநாதனின் இரண்டாவது மகனான அர்ச்சகர் மங்கலநாதன், திட்டமிட்டு பூணூலை அறுத்ததாக அரசியல் சாயம் பூசினார். இதற்கு வலுவூட்டும் வகையில் அசோக் நகரில் ஒரு முதியவரின் பூணூலை ஒரு கும்பல் அறுத்துவிட்டு ஓடிவிட்டதாக கதை புனையப்பட்டது. (இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது). இந்து மதத்தின் பிரதிநிதி தாங்கள் தான் என்று கூறும் பார்ப்பனர்களின் பிரதிநிதியான சண்முகநாதனின் அடாவடித் தனம் மயிலாப்பூருக்கே தெரிந்த விஷயம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காரணீஸ்வரர் கோவில் நடை ஒரு நாள் கூட காலை 6 மணிக்கு முன்னதாக திறக்கப்பட்டதில்லை. இன்று கூட அந்த கோவில் 7 மணிக்கு தான் திறக்கப்பட்டது. இந்த கோவில் மாதவ பெருமாள் கோவில் நிர்வாக அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அவர் காரணீஸ்வரர் கோவில் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை. சாமி சிலைகளை தொட்டு பூஜை செய்ய பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதாக எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை. தெருவோர நடைபாதையில் உள்ள பிள்ளையாருக்கு பூஜை செய்த பக்தரிடம் சண்முகநாதன் மோதியது பிராமணீய ஆதிக்கத்தின் வெளிப்பாடே. சிலைகளை வைத்து பூஜை செய்வது இந்நாட்டின் பூர்வீக மக்களின் வழிபாட்டு முறையாகும். இது ஆரியர்களின் வருகைக்கு முன்பே இந்தியாவில் இருந்துள்ளது என்பதற்கு ஏராளமான வரலாற்று சான்றுகள் உள்ளன. இந்த உண்மை மிதவாதிகளாக இருக்கும் பெரும்பான்மை பக்தர்களுக்கு தெரிந்தால் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேறுவதை தவிர வேறுவழியில்லை.\"\nபயனுள்ள விவாதங்கள். நல்ல ஒரு சிந்தனையை உண்டாக்கி பகிர்ந்தமைக்கு நன்றி.\nவருண் 27 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 9:26\nசத்ய பிரியன்: நீங்க சொல்லும் செய்தி, ஹிந்து, எக்ஸ்ப்ரெஸ், தினமணி, தினமலர்ல எல்லாம் காணோம் செலெக்டிவா ஒரு சில \"பத்திரிக்கைகளில்\" மட்டும் வந்து இருக்கு. அப்படியே அதுமாதிரி எதுவும் நடந்து இருந்தால், அவனுகளைப் பிடிச்சு 2 வருடம் உள்ள போடுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதுபோல் அடாவடித்தனத்தை எல்லாம் நான் ஒரு போதும் சப்போர்ட் பண்ணவில்லை. சட்டப்படி அவர்களைத் தூக்கி உள்ளே போடணும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கில்லை.\nஅன்பின் இனிய வலைப் பூ உறவே\nஇனிய \"உழைப்பாளர் தினம்\" (மே 1)\nஜோதிஜி திருப்பூர் 9 மே, 2015 ’அன்று’ முற்பகல் 10:18\nபெரியார் என்பவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்த வாதி. நீங்க சொன்ன அத்தனை கருத்துக்களும் மிக மிக அற்புதம். ஏற்புடையதே. பெரியார் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்து மக்கள் கொண்டுள்ள கடவுள் நம்பிக்கைகள் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை வீரமணி உணர்ந்துள்ளரா என்பது மில்லியன் டாலர் கேள்வி என்பது மில்லியன் டாலர் கேள்வி எங்கே இவர்கள் கோட்டை விட்டார்கள் எங்கே இவர்கள் கோட்டை விட்டார்கள் அதன் பின்னால் உள்ள காரணங்கள் என்ன\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஅன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nப��ரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகரந்தை அண்ணா, தமிழன் சகா, மற்றும் இனியாச்செல்லம் உங்க அன்பிற்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதுவரை செதுக்கியவை (யாரைன்னு கேட்காதிங்க)\nபகுத்தறிவு என்றால் எங்க பாஸ்\nதானாவும், நானாவும் சேர்த்த கூட்டம்ங்க இவங்க\nஒருவாரமா இந்தப்படங்கள் தான் ஓடிகிட்டிருக்கு\nபெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது\nஉலகமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்ப...\nஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்ப...\n“வலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய மின்தமிழ்...\nசாக்லேட் என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது...\nநானும் ரௌடி (நடிகை) தான்- நயன் தாரா\nகடும் மழை தயவால் நான்கு நாள் தீபாவளி விடுமுறை கிடைத்தது. நானும் ரௌடி தான் படம் பார்த்தேன். குறைந்த பட்ஜெட் வித்தியா...\nஇது டீத்தூள் பதிவு அல்ல:) மூன்று அறிமுகங்கள் பற்றிய பதிவு roses தான் இவர்கள் மூவரும் ஆனா அதில ரெண்டுபேர் படபட பட்டாசு. ஒருத்தர் அம...\nமன்னர்களுக்குத் தான் கோட்டையா என்ன நம்ம நட்புக்கும் கோட்டை உண்டு. நாம் எழுதும் தமிழுக்குக் கோட்டை உண்டு. நம் தமிழ்ப் பதிவுலக...\nஇணையத் தமிழே சகம் வெல்க\nஒரு தீபாவளிக்கு திரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களுக்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்...\nஅண்ணா பல்கலைக்கழகம் (1) அப்பத்தா (1) அமிலம் (1) அரசியல் (6) அறிவியல் (4) அனுபவம் (46) ஆங்கிலத் திரைப்படம். (1) ஆங்கிலம் (6) ஆசை. (1) ஆண் (1) ஆண்ட்ரு இவன்ச்கி (1) ஆயிஷா (1) ஆர்யா (1) ஆவி (1) இசை (5) இட்லி (1) இணையத்தமிழ் பல்கலைகழகம். (3) இரங்கல் (1) இளமதி (1) இளையராஜா (1) ஈழம் (2) உடன்படிக்கை (1) உத்தாரா உன்னிக்கிருஷ்ணன் (1) உப்புமா கவிதை (1) உளவியல் (4) எட்வர்ட் சிசர் ஹாண்ட்ஸ் (1) எரிவாயு (1) என் மகள். என் மருமகள். (1) என்னமோ எதோ (1) க்வெல்���ிங் (1) கணக்கு (1) கணினியில் தமிழ் வளர்ச்சி (1) கத்தி (1) கதை (5) கம்யூனிஸ்ட் (4) கமல் (1) கயல் (1) கல்வி (26) கலாம் (1) கலைகள் (1) கவனிக்க வேண்டியவை (5) கவிதை (76) காங்கரஸ் (1) காதல் (17) காதல் போயின் காதல். (1) காமெடி (2) காயத்ரி வீணை (1) கார்த்திக் சரவணன் சகோ (1) கார்வர் (2) காலை பரபரப்பு (3) கிரேஸ் பிரதீபா (1) கிறிஸ்துமஸ் (1) குழந்தைகள் (11) குறும்படம் (1) குறும்பா (3) குஷ்பு (1) கே.எஸ்.ரவிக்குமார் (1) கைப்பை (1) கோச்சடையான் (1) கோப்பை (1) கோலங்கள் (1) சந்தனப்பேனா (1) சமூகம் (2) சாதி (1) சாதிவாரி கணக்கெடுப்பு (1) சாம் (1) சாம் அண்ணா (1) சாமானியன் (1) சாலை (1) சிறுகதை (2) சினிமா (2) சீனி (1) சும்மா (6) சுய ஆய்வு (1) சுயபரிசோதனை (3) செல்பி (1) சென்னை மழை (3) சேகுவேரா (2) ட்ராஜெடி (1) ட்விட் (1) டி.அர்.பி. (1) டெக்னாலஜி (1) தமிழ் (1) திரைப்பார்வை (2) திரையிசை (1) தீபிகா படுகோன் (2) துணுக்கு (1) துளசி அண்ணா (1) தூக்கம் (1) தூய்மை இந்தியா (1) தேசப்பற்று (1) தொடர்பதிவு (1) தோற்றல் (1) நகரம் (2) நகைச்சுவை (1) நகைசுவை (1) நட்பு (2) நடிகர் சங்கம் (1) நண்பர்கள் (1) நந்தன் ஸ்ரீதர் (1) நம்பர் ப்ளேட். (1) நயன்தாரா (1) நலமா (1) நன்றி (1) நாசா (1) நிலவன் அண்ணா (1) நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா (2) நினைவுப்பரிசு (1) நெரிசல் (1) நோபல் பரிசு (2) ப்ராமணியம் (1) பகுத்தறிவு (2) பணம் (2) பதிவர் சந்திப்பு. (5) பதிவர் விழா கட்டுரைப்போட்டி (3) பதிவர் விழா மரபுக்கவிதைப்போட்டி (1) பதிவுத்திருட்டு. (1) பயணம் (1) பரிசு (2) பரிசுப்போட்டி (1) பள்ளி வாகனம் (1) பாடகர்கள் (1) பாடகிகள் (1) பாடல் (2) பிசாசு. (1) பிரபுசாலமன் (1) பிள்ளையார் (1) புத்தகங்கள் (3) புத்தகம் (1) புத்தாண்டு (1) புதிய எழுத்துரு (1) புதுக்கோட்டை (1) புதுகை (1) புரவி (1) புலி (1) புவி வெப்பமடைதல் (1) பெண் (2) பெண் ரசனைகள் (1) பெண்கல்வி (1) பெண்ணியம் (2) பெப்ஸி (1) பெரியார் (7) பொதுஅறிவு (12) போட்டோஷாப் (1) மதச்சார்பின்மை (1) மது(கஸ்தூரி) (1) மதுரை தமிழன் (1) மழலை (1) மழை (7) மனிதம் (1) மார்கழி (1) மின்சிக்கணம் (1) மின்னல்வரிகள் (1) முங்கில் காற்று (1) முதுமை (1) மூங்கில் (1) மைக்கூ. (1) மொழிபெயர்ப்பு. (1) மோடி (3) யூத் (1) ரஜினி (2) ராஜேஷ் லக்கானி (1) ரோடு (1) லிங்கா (1) லிமரிக் (1) லேடீஸ் ஹாஸ்டல் (1) வசனங்கள் (1) வடிவேலு (1) வயலின் (1) வர்க்கம் (2) வரலாறு (1) வரலாறு. (1) வளரிளம்பருவம் (1) வாழ்க்கை (1) விகடன் (1) விளம்பரம் (2) விஜய் (2) விஜய் . வடிவேலு (1) விஜய் சேதுபதி (2) வீதி கலை இலக்கியக் களம். (1) வெங்கட் நாகராஜ் (1) வெண்ணிலா (1) வைக்கம் விஜயலட்சுமி (1) ஜனநாதன் (1) ஸ்ருதி ஹாசன் (1) Bhopal (1) Chernobyl (1) craft (1) diy (1) earth hour (1) etc (1) GIVE IT UP (1) IPHONE (1) selfie (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://planetjai.blogspot.com/2012/11/blog-post_10.html", "date_download": "2018-07-19T11:58:38Z", "digest": "sha1:UFMK4MKWZWJSNCQ2XSO4DV6V4R2FAIYJ", "length": 17529, "nlines": 382, "source_domain": "planetjai.blogspot.com", "title": "Jayavel Chakravarthy Srinivasan's Blog: பொடுகை நீக்க வீட்டிலேயே எண்ணெய் செய்யுங்களேன்...", "raw_content": "\nபொடுகை நீக்க வீட்டிலேயே எண்ணெய் செய்யுங்களேன்...\nகுளிர் காலம் வந்தாலே கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. இது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான். இத்தகைய பொடுகை நீக்க பல வழிகள் உள்ளன. மேலும் இந்த பொடுகுத் தொல்லை நீண்ட நாட்கள் நீடித்தால், முகப்பரு, சரும வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே பொடுகு இருந்தால், சாதாரணமாக நினைக்காமல், அதனை உடனடியாக நீக்க முயற்சிக்க வேண்டும். அதிலும் ஒரு முறை அதனை நீக்க முயற்சித்தால், அது மறுமுறையும் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அது சருமத்தை பாதிப்பதற்கு முன், பொடுகை நீக்கிவிட வேண்டும்.\nஅதற்கு சிறந்த வழி எண்ணெய் மசாஜ் தான். மேலும் அந்த பொடுகை நீக்குவதற்கு நிறைய எண்ணெய்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அது என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை பயன்படுத்தி பொடுகை நீக்குங்கள்.\nதேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு\nஅனைத்து வீடுகளிலுமே தேங்காய் எண்ணெய் இருக்கும். அந்த தேங்காய் எண்ணெயை வைத்து சூப்பராக பொடுகை நீக்கலாம். அதிலும் அந்த தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை சாற்றை கலந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த கலவையை தலையில் தடவி, விரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதிலும் இதனை குளிப்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் செய்ய வேண்டும்.\nதயிர், பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு\nபொடுகை நீக்கும் பொருட்களில் சிறந்தது தான் தயிர். இது பொடுகை மட்டும் நீக்குவதோடு, கூந்தலை மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாற்றும். பாதாம் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து, வறட்சியை நீக்கும். எலுமிச்சை இறந்த செல்கள் மற்றும் பொடுகை போக்கும். ஆகவே அந்த மூன்று பொருட்களையும் கலந்து, தலைக்கு குளிப்பதற்கு முன் 1 மணிநேரம் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.\nகுளிர் காலங்களில் எண்ணெய் மிகவும் அவசியமானதாக இருக்கும். ஏனெனில் அப்போது சரும வறட்சி அதிகமாக இருக்கும். இதனால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்றவை அதிகம் ஏற்படும். எனவே அப்போது செம்பருத்தியை கொதிக்கும் நீரில் போட்டு, பின் அதனை அரைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பின் அதனை குளிர வைத்து, இதவில் படுக்கும் போது தலைக்கு தடவி தூங்கி, மறுநாள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும்.\nவெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய்\nவெந்தயம் பொடுகை எளிதில் நீக்கிவிடும். அதற்கு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, பின் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் கலந்து, தலைக்கு தடவி, 2 மணிநேரம் ஊற வைத்து, பிறகு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மையால், பொடுகு நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். பின் கூந்தலும் வலுவடையும்.\nகூந்தல் வறட்சியை போக்கும் எண்ணெய்களில் நல்லெண்ணெயும் சிறந்த ஒன்று. இந்த எண்ணெயை அடிக்கடி தடவி வந்தால், வறட்சி நீங்கி, பொடுகு வராமல் இருக்கும். அதிலும் இதனை லேசாக சூடேற்றி, வேண்டுமென்றால் எலுமிச்சையை சேர்த்து கலந்து, தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்தால், கூந்தல் நன்கு பொலிவோடு பொடுகின்றி இருக்கும்.\nபற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கும் உணவுகள்\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\nபொடுகை நீக்க வீட்டிலேயே எண்ணெய் செய்யுங்களேன்...\nஅடுப்பங்கரையும் அசத்தலான பாதுகாப்பான அழகு நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://singaimurasu.blogspot.com/2005/07/blog-post_112125782765854967.html", "date_download": "2018-07-19T11:07:42Z", "digest": "sha1:MP2NDQ4QCYY3HMFOSX6JZ2JGOAPTG7NR", "length": 5732, "nlines": 42, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு: இலக்கியம் என்றால் என்ன?", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\nநல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படும் போது மனிதக் குரல் களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்க���ன்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப் பட்டு தங்களையே நகல் களாக்கிக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டே போகிறார்கள்.\nமனிதமுகங்கள் வேறுபடுவதைப்போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகளும் வேறுபடுகின்றன. வேறு பட வேண்டும். தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும் சமூகத்திற்கோ, பெரியார்களுக்கோ, கெட்ட பெயருக்கோ புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும் போது அதில் தனித் துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் கவர்ச்சியும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையையும் தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும்(பிறர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கும் அடிப் படையாக இருக்கும் பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத் தான் இருக்கும்.\nநன்றி: 'அம்மா வந்தாள்' -ஐந்திணைப்பதிப்பகம் (நாவலின் பின் அட்டையில் பிரசுரமாகியுள்ளது)\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nதயவுசெய்து தாய்மையைக் கொச்சைப் படுத்தாதீர்கள்\nஅனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து\nஉலகத் தமிழ் இலக்கியத்தில் சிங்கப்பூரின் இடம்\nதொடர் நேசிப்பின் சில பகிர்வுகள்\nகவிஞரேறு திரு. அமலதாசன் நூல்வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.sampspeak.in/2011/11/thiruputkuzhi-divyadesam-kandome.html", "date_download": "2018-07-19T11:30:03Z", "digest": "sha1:S7WHWE3WE3NGWY6OAFMYNFEFLJ62EAQ2", "length": 9039, "nlines": 220, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruputkuzhi Divyadesam Kandome", "raw_content": "\nதிருப்புட்குழி திவ்யதேசம் : 'மரதகத்தை புட்குழியெம் போரேற்றை'\nசமீபத்தில் திருப்புட்குழி சென்று பெருமாளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.\nதிருப்புட்குழி திவ்யதேசம் சென்னையில் இருந்து சுமார் 90 கி மீ தொலைவில் உள்ளது. ஸ்ரீபெரும்பூதுரை கடந்து வேலூர் பெங்களூர் செல்லும் பாதையில் பயணித்தால், பிரதான சாலையில், கச்சி செல்லும் வெள்ளை கேட் தாண்டியவுடன் வரும் மேம்பாலத்தை தாண்டி சுமார் 10 கி மீ பயணித்தால் பாலுசெட்டி சத்திரம் வரும். இங்கே பிரதான சாலையில் இருந்து இடது புறம் திரும்பி சுமார் அரை கி மீ தூரத்திலேயே திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் வாசலிலே உள்ள குளம் 'ஜடாயு தீர்த்தம்' என வழங்கப் படுகிறது. வித்யாசமாக த்வஜஸ்தம்பம் குளக்கரை அருகே கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது. கொடிமரத்துக்கு பின்னல் பிரதான கோபுரம் உள்ளது.\nஇங்கு பெருமாள் ஜடாயுவுக்கு (புள்) மோக்ஷம் கொடுத்த திருத்தலம் ஆனதால் திருப்புட்குழி குளக்கரையில் ஜடாயுவுக்கு சன்னதி உள்ளது. உள்ளே மூலவர் விஜயராகவப் பெருமாள் பரமபதத்தில் இருக்கும் நிலையில் வீற்றிருந்த திருகோலத்தில் சேவை சாதிக்கிறார். மூலவர் ஜடாயு சம்ஸ்காரம் செய்யும் தாபத்தை தாங்க முடியாமல் ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம் வலமாக மாறி எழுந்து உள்ளனர். தாயார் : மரகத வல்லி தாயார்.\nதிருமங்கை மன்னன் தனது பெரிய திருமொழியில் {இரண்டாம் பத்து - ஏழாம் திருமொழி} - \"அலங்கெழுதடக்கை ஆயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் என்னும் * புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும்\" - எனவும் \"பெரிய திருமடலில்\" - \" மரதகத்தை புட்குழியெம் போரேற்றை\" எனவும் மங்களாசாசனம் செய்துள்ளார் .\nகுளம், கொடிமரம், கோபுரம் காண்க\nகோவிலின் உள்ளே, சந்நிதியின் அருகே\nதிருமஞ்சனம் கண்டு அருளும் அவசரம்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://tamilscreen.com/tag/editor-ruben/", "date_download": "2018-07-19T11:43:21Z", "digest": "sha1:A5TVVNYDKHDUQDGUPRZWMW3UVEH56WAK", "length": 2622, "nlines": 50, "source_domain": "tamilscreen.com", "title": "Editor: Ruben Archives - Tamilscreen", "raw_content": "\nஅஜித் ஆக ஆசைப்படுகிறாரா விக்ரம்….\nசினிமாவில் யார் எப்போது உச்சத்துக்குப் போவார்கள்.... யார் அதளபாதாளத்தில் சறுக்கிவிழுவார்கள் என்பதை கணிக்கவே முடியாது. அமராவதி படத்தில் அறிமுகமானபோது இத்தனை உயரத்துக்குப்போவோம் என்று அஜித்தே...\nவிக்ரம், தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ பொங்கலுக்கு ரிலீஸ்…\nகலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தமன்னா...\nவிக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ – Movie Gallery\nஒவ்வொரு மரமும் மரகதம்; ‘மரகதக்காடு’ படம் சொல்லும் பாடம்…\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nகடைக்குட்டி சிங்கம்… – டிவி சீரியல் கதை சினிமாவாக ஜெயித்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/07/17.html", "date_download": "2018-07-19T11:13:23Z", "digest": "sha1:7FOKBRNMDSK3PAEAETDME2LUEMAF3VD3", "length": 15154, "nlines": 139, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : முதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் மேயராகும் 17 வயது மாணவி", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nமுதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் மேயராகும் 17 வயது மாணவி\nபிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் கவுரவ மேயர் பதவி அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஒரு நாள் மேயராகப் போகும் அம்மாணவியின் பெயர் சுனந்தா கயர்வர். இவர் மத்திய பிரதேச மாநிலம் உக்ஜைன் மாவட்டம் நக்தா என்ற நகரைச் சேர்ந்தவர். 17 வயதான சுனந்தா பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து நக்தா நகரில் முதல் மாணவியாக வந்துள்ளார்.\nஇதனால், சுனந்தாவை கவுரவிக்கும் பொருட்டு அவருக்கு ஒரு நாள் மேயர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகரின் மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார். மேலும், மாணவ, மாணவிகளை கல்வியின் மேல் ஆர்வம் கொள்ளச் செய்யும் திட்டத்தினாலும் இக்கவுரவ மேயர் பதவி வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nவரும் 28-ந்தேதி செவ்வாய்க்கிழமை பதவியேற்க இருக்கும் மாணவி சுனந்தா அன்று காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில் அமர்ந்து மேயர் பணிகளை கவனிப்பாராம். அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றே, இந்த ஒருநாள் மேயர் திட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார்.\n25-ந்தேதி மேயர் பதவியில் அமரும் மாணவி சுனந்தா அன்றைய தினம் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவில் சாலை அமைக்கும் திட்டத்தில் கையெழுத்திடுகிறார்.\nதந்தை தொழிற்சாலையில் பணிபுரிகிறார். தாய் அங்கன்வாடி ஊழியர். சுனந்தாவின் உடன் பிறந்தோர் மொத்தம் 4 பேர். தான் என்ஜினீயராகி குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம் என்று சுனந்தா தெரிவித்தார்.\n மற்றவர்களும் வாசித்துப் பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள். நல்ல கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே \nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், பிரபலங்கள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nAMWAY நிறுவனம் - சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.\nநம்ம அரசியல்வாதிகளும் பஞ்ச் பேசினா , எப்படி இருக்க...\nபீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்...\nசெல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Impo...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள...\nபேஸ்புக் ஓனர் \"மார்க் ஜூகர்பெர்க்\" ஒரு தமிழர் \nவறுமையிலும் சாதித்த ஈழச் சிறுமி.\nஎன்றென்றும் வாலி - நீங்க நினைவுகள்.\nகிறிஸ்துவ மதபோதகர் செய்த செக்ஸ் அலம்பல்கள்\nகாதலில் விழுந்த பெண்களைக் கண்டறிய சில வழிகள்…\nபூமிக்கு கீழே இருப்பவையும் நில உரிமையாளருக்கே சொந்...\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nஎன் சுடிதாரை எடுத்து போட்டுக்காதீங்க\n\"\"அண்ணி நீங்க இப்ப ரொம்ப அழகு..''\nஇன்றைய இளைஞர்களின் ரோல் மாடல் - சிவகார்த்திகேயன்....\nஒரே கேபிள் வயரில் + , -\nமகேந்திர சிங் தோனி - மிஸ்டர் கூல்\nதாய்ப்பால் விற்கும் ஏழை தாய்மார்கள்\nமனிதாபிமானம் மறந்த பெரு நிறுவன வணிக வளாகங்கள். வால...\nமனதைத் தொட்ட உண்மைக் கதை \nசிணுங்கலைக் காண எழுந்து வந்தான் சூரியன்\nஅருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில், பவளமலை\nசிங்கம் - 'சுக்குக் காபி' சூர்யா\nநான் வேண்டாத தெய்வம் இல்லை.\nநாமக்கல் மாவட்ட கல்வி நிறுவனங்கள்\nநாராயணசாமி வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார்\nகாற்று இல்லாமலே, காற்றாலை மின்சாரம்\nடீச்சர் 'A' படம் பார்த்தாங்க..\nகாசு , பணம் , துட்டு , மணி, மணி ,\nஅடிச்சிட்டு அடிச்சிட்டு \"நீ ரொம்ப நல்லவனு\" சொல்லனு...\nவெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க\nசச்சினை பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் சொன்னவை...\nதலைமுடி உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nராஜ்ய சபா தேர்தலில் தேமுதிக-வின் தோல்வி எதனால்\nமுதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் மேயராகும் 17 வயது மா...\nஆயிரம் வருடங்களுக்கு ம���ன் நடந்த தேர்தல் \nரூ.400ல் சோலார் விளக்கு = : மாணவன் சாதனை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ளிய வ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/11/03/news/27038", "date_download": "2018-07-19T11:06:36Z", "digest": "sha1:PHWIHGYRP2WTLH7X3BQIL7WHYVYMSQGL", "length": 8455, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அடுத்து கொழும்பு வருகிறது பாகிஸ்தான் போர்க்கப்பல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅடுத்து கொழும்பு வருகிறது பாகிஸ்தான் போர்க்கப்பல்\nNov 03, 2017 | 1:21 by கார்வண்ணன் in செய்திகள்\nபாகிஸ்தான் கடற்படையின், போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் பயணமாக, நாளை மறுநாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nபிஎஸ்என் சைய்ப் (PNS SAIF) என்ற, ஸ்வோர்ட் வகையைச் சேர்ந்த, சீனத் தயாரிப்பு போர்க்கப்பலே கொழும்புக்கு வரவுள்ளது.\nசிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், நல்லெண்ணப் பயணமாக பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு வரவுள்ளதாக, பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.\nகொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சி, விள���யாட்டு உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் என்றும், எதிர்வரும் 6ஆம் திகதி வரவேற்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: பாகிஸ்தான், பிஎஸ்என் சைய்ப்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி 0 Comments\nசெய்திகள் அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம் 0 Comments\nசெய்திகள் கோத்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\nமனோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\nமனோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\nமனோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\nமனோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.com/politics/01/180040?ref=archive-feed", "date_download": "2018-07-19T11:26:32Z", "digest": "sha1:PNVH22LOAWTUZMMS6N3GKEZBYHQ64QR2", "length": 8907, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "மொறவெவ பிரதேச சபையின் கன்னியமர்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமொறவெவ பிரதேச சபையின் கன்னியமர்வு\nமொறவெவ பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்ட பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nதிருகோணமலை மொறவெவ பிரதேச சபைக்கான முதலாவது அமர்வு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிலையில், தலைவர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக ஜகத் வேரகொட ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டதுடன், வாக்கெடுப்பும் நடைபெற்றது.\nதலைவர் தெரிவில் மேலதிக இரண்டு வாக்குகளால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி தெரிவு செய்யப்பட்டதுடன், உப தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த சாலிய ரத்னாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇதன்போது, மொறவெவ பிரதேச சபைக்கு தெரிவாகியிருந்த 16 உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதேவேளை, குறித்த பிரதேச சபையை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததாகவும், பலத்த பாதுகாப்புடன் தலைவர் தெரிவு நடைபெற்றதாகவுத் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியவை இணைந்து மொறவெவ பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக���கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.com/security/01/180030?ref=archive-feed", "date_download": "2018-07-19T11:37:24Z", "digest": "sha1:B7XTJDZ33IXLBLJY52DW47RGQRZURJZC", "length": 8131, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களினால் 39பேர் பலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபுத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களினால் 39பேர் பலி\nகடந்த புத்தாண்டு காலப்பகுதியில் வாகன விபத்துக்கள் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், கடந்த 12ம் திகதி தொடக்கம் பொலிசார் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.\nஇதன் ஒருகட்டமாக குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய கடந்த 12ம் திகதி தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நாடு முழுவதும் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதே போன்று புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தைச் செலுத்த முற்பட்டு விபத்துக்குள்ளானவர்களில் 39 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nமேலும் பலர் காயங்களுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/bairava-release-50-plus-countries-044172.html", "date_download": "2018-07-19T11:59:55Z", "digest": "sha1:C5YZMESUMMLGVTGGA35PKQID2WGPBIFK", "length": 10148, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்யின் பைரவா... முதல் முறையாக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ரிலீஸ்! | Bairava to release in 50 plus countries - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்யின் பைரவா... முதல் முறையாக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ரிலீஸ்\nவிஜய்யின் பைரவா... முதல் முறையாக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ரிலீஸ்\nவிஜய்யின் கேரியரிலேயே முதல் முறையாக பைரவா படத்தை 50-க்கும் அதிகமான நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிடுகிறார்கள். இவற்றில் பெரும்பாலான நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nபரதன் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா வரும் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக உலகெங்கும் வெளியாகிறது.\nஇந்தப் படத்தின் வியாபாரம் இதுவரை எந்த விஜய் படத்துக்கும் இல்லாத அளவுக்கு ஆகியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nதமிழகத்தில் 400 அரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் கணிசமான அரங்குகளில் வெளியாகிறது.\nசர்வதேச அளவில் 50-க்கும் அதிகமான நாடுகளில் இந்தப் படம் வெளியாவதாக இதன் வெளியீட்டாளர்களான ஏ அன்ட் பி குரூப் அறிவித்துள்ளனர்.\nஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, கென்யா, உகான்டா, ஜாம்பியா, டான்சானியா, போட்ஸ்வானா, காங்கோ, எத்தியோப்பியா, ருவாண்டா போன்ற நாடுகளில் பைரவாவை வெளியிடுகிறார்களாம்.\nஅல்பேனியா, உக்ரைன், மெக்ஸிகோ, லிதுவேனியா, லாட்வியா, போலந்து மற்றும் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ போன்ற நாடுகளிலும் பைரவா வெளியாவதாகத் தெரிவித்துள்ளனர்.\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட��’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதி விஜய் சந்தித்த ரோதனைகள்\nஏன்பா தம்பி தம்மடிச்சன்னு நானே விஜய்யை கேட்கிறேன்: டி. ராஜேந்தர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://aanmeegam.co.in/tag/aadi-velli/", "date_download": "2018-07-19T11:24:50Z", "digest": "sha1:T7LTO7HHS3DJJQ3FGNTUGIJ6V4BJAZQB", "length": 4577, "nlines": 98, "source_domain": "aanmeegam.co.in", "title": "aadi velli Archives - Aanmeegam", "raw_content": "\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nAadi koozh | ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ்...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nபுரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://karmayogi.net/?q=mj_sep2002_6", "date_download": "2018-07-19T11:59:08Z", "digest": "sha1:EG76BHAEQQTJDWQO7IV2KFQ5VOOC5TQJ", "length": 40421, "nlines": 296, "source_domain": "karmayogi.net", "title": "06.சரணாகதி என்ற முறையின் தத்துவமும், நடைமுறையும் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2002 » 06.சரணாகதி என்ற முறையின் தத்துவமும், நடைமுறையும்\n06.சரணாகதி என்ற முறையின் தத்துவமும், நடைமுறையும்\nசரணாகதி என்ற முறையின் தத்துவமும், நடைமுறையும்\n(சென்னை மாம்பலம் தியான மையத்தில் 24.4.2002 அன்று திருமதி விஜயா நாராயணன் நிகழ்த்திய உரை)\nகுறைந்த முயற்சியில் அதிகப் பலன் தருவது சிறந்த முறை.\nஎதையும் செய்யாமல் எல்லாவற்றையும் பெறுவது சரணாகதி.\nஇது உண்மையானால், இதன் தத்துவம் என்ன இங்கு வெளிப்படும் சக்தி எது\nஎதுவுமேயில்லாமல் எல்லாமாக இருக்கும் பிரம்மதத்துவம் இது.\nஇதன் சக்தி சலனத்தின் சக்தி. அது முழுமையான சலனம்.\nமுழுச் சலனத்திற்கு முழு சக்தியுண்டு. நம் இலக்கை முழுமையாகப் பெறும் சக்தி அது.\nமுழுமையாகத் தன்னையழித்து, முழுமையாகக் குறிக்கோளை ஏற்பது அது.\nகுழந்தை தாயாரை நம்புவதும், நாம் சமூகத்தை ஏற்பதும் அது போன்றதே.\nநாமுள்ள இடத்தில் நாம் பகுதியான முன்னேற்றம் பெறுகிறோம். சொந்த முயற்சிக்குப் பலன் பகுதி.\nஅடுத்த கட்டம் போக முயல்பவர் சொந்த முயற்சியால் போக முடியாது. அடுத்த கட்டம் உதவாமல் அதைச் சாதிக்க முடியாது.\nமுடிவான கட்டத்தையடைய நம் முயற்சியில் நம்பிக்கையைக் குறைத்து அக்கட்டத்தின் உதவியைப் பெறுதல் அவசியம்.\nஅதுபோல் மனிதன் எல்லாக் கட்டங்களையும் கடந்து செல்லலாம். சத் புருஷனையும் அதுபோல் கடக்கலாம். இதைச் சாதிக்க தன் முயற்சியில் நம்பிக்கையை முழுவதும் இழந்து, மேல்நிலை தடையின்றி நம்மில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.\nயோகம் அதைச் சரணாகதி என்று கூறும். முழுப்பலனுக்கு முழுச்சரணாகதி தேவை.\nபிரம்மத்திற்குத் தன்னை அர்ப்பணிப்பதே தத்துவம். எதுவுமேயில்லாதவன் எல்லாமாக மாறுவது பலன்.\nபுதியதைக் கற்க முனையவேண்டும். முழுவதும் கற்றுக் கொண்டால் அது தானே செயல்படும். இது ஆழ்மனச் செயல்.\nமனம் திறமையால் நிறைந்த நேரம் ஆழ்மனம் செயல்படும். இது சரணாகதி போன்றது. மனம் ஆழ்மனத்திற்கு தன்னையறியாமல் செய்யும் சரணாகதியிது.\nநாம் வளர்ந்து சமூகத்தை ஏற்கும்பொழுது முயன்று அத்துடன் சேருகிறோம். நாளானால் சமூகத்துடன் இசைவாக இணைகிறோம். இதுவும் மனிதன் சமூகத்திற்குச் சரணடைவதாகும்.\nசமூகம் நம் தலைவன். நாளடைவில் நாம் கற்றதை (automatic) இயல்பாக்குவது சமூகத்தின் ஆழ்ந்த உணர்ச்சி. அதேபோல் பரமாத்மா இட���விடாது நமக்குத் தெய்வீக வாழ்வை சூசகமாக அறிவிக்கிறார். ஆன்ம விழிப்புள்ளவன் தன்னையறியாமல் சூசகமாக அறிவதற்குப் பதிலாக, பரமாத்மா கூறுவதைத் தெளிவாக முழுமையாக அறிய முயல்கிறான். இதுவும் மெதுவாக நடப்பது. இதற்குப் பதிலாக பரமாத்மாவே நம் வாழ்வை ஏற்று இயல்பாக நடத்தும்படி நாம் சரணாகதியை மேற்கொள்ள வேண்டும்.\nமுனைந்து கற்பது காலத்திற்குரியது. சரணாகதி அதைத் துரிதப்படுத்தும், நாம் எந்த அளவு பரமனை அறிகிறோமோ, அந்த அளவு வேகம் அதிகமாகும். இது காலத்தைக் கடக்கும். சரணாகதி பூரணமடைய நாம் அடுத்த மூன்றாம் கட்டத்தை அடைய வேண்டும். அங்கு காரியம் க்ஷணத்தில் முடியும்.\nசரணாகதியை யோகத் தத்துவப்படி அறிய வேண்டும். எல்லா யோகத் தத்துவப்படியும் அறிதல் சிறப்பு. அவை,\n- ஜடமும், ஆன்மாவும் ஒன்றே.\n- சத்தும், அசத்தும் சேர்ந்தது பிரம்மம்.\n- பாதாளமும், பரமனும் பாமரனில் இணையும்.\n- பிரபஞ்சமும், பிரம்மமும், மனிதனில் சேர்கின்றன.\n- கண்டமான அகந்தை அகண்டத்தால் கிரகிக்கப்படுகிறது.\n- அறிவு உணர்விலிருந்து விலகி ஞானமாகிறது.\n- ஹிருதயச் சமுத்திரம் நம் வாழ்வை ஏற்கிறது.\n- பிரகிருதி புருஷனின் சக்தி.\n- ஆனந்தம் பொருள்களில் வெளிப்பட்டுப் பேரானந்தமாகிறது.\n- உலகை உற்பத்தி செய்த மாயை தன்னை மறந்த ஆண்டவனுக்கு நினைவுபடுத்தி, அவன் தேடிய ஆனந்தம் தருகிறது.\n- மனம் உடலுடன் கலந்ததிலிருந்து விழித்து, வாழ்விலிருந்து விடுபட்டு, தன்னிலிருந்தும் விடுபட்டு சத்திய ஜீவியத்தைக் காண்கிறது.\n- அகந்தை கரைந்து சைத்தியப் புருஷனாகி, பிரபஞ்சம் முழுவதும் பரவி மீண்டும் சக்தியும் ஜீவியமும் சேர்கின்றன.\n- ஜடம் சத்தின் ஆனந்தமான சச்சிதானந்தம்.\n- ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இணைந்து பிரம்மமாகின்றன.\n- எழுவகை அஞ்ஞானம் கரைகின்றன.\n- மேல்மனம் உள்மனம்வழி அடிமனத்தையடைகிறது.\n- இலட்சியம் எல்லா நிலைகளையும் கடந்து இருப்பதில் முடிகிறது.\n- திருவுருமாற்றம் உலகை பூலோகச் சுவர்க்கமாக்குகிறது.\n- பிரம்மத்திற்கு அஞ்ஞானம் சலிப்பு தருகிறது.\nஇத்தனை முறைகளையும் ஒரே முறையில் காண்பது அம்முறையை முழுமையாக்கும். எந்த முறையிலும் சில தத்துவங்களே வெளிப்படும். எல்லாத் தத்துவங்களும் எல்லா முறைகளிலும் வெளிப்படாது. சரணாகதியினுள் எல்லாத் தத்துவங்களும், எல்லா முறைகளும் உள்ளன. சரணாகதிக்கு மட்டுமே இ���்தத் தகுதியுண்டு. எனவே அது முறை மட்டுமன்று, மூலமுமாகும்.\nசரணாகதி வாழ்வில் எங்கும் காணப்படுகிறது. ஆனால் எங்கும் முழுமையாக இல்லை.\n- உடல் நம் வேலையை எடுத்து இயல்பாகச் செய்வது சரணாகதியாகும்.\n- சமூகமே தன்னையறியாதது. மனிதன் சமூகத்திற்குள் அவனையறியாமல் கிரகிக்கப்படுகிறான். இதுவும் சரணாகதியே.\n- இவற்றை ஆயிரமாயிரம் பகுதிகளாகப் பிரிக்கலாம்.\n- பரமாத்மாவின் அந்தரங்க அழைப்பு இதைச் சேர்ந்ததே.\n- பிரம்மம் வாழ்வில் தன்னையிழந்து, தேடிக் கண்டுபிடித்து ஆனந்தம் பெற முயல்வதற்கு மனிதன் இறைவனுக்கு விரும்பிச் சரணடைவது உதவும்.\nசரணாகதியின் பல்வேறு நிலைகள் :\nமனத்தில் எண்ணமாகவும், உயிரில் உணர்வாகவும், உடலில் உடலுணர்வாகவும் மனிதனிருக்கிறான்.\nசரணாகதி பூர்த்தியாக மனம், உயிர், உடல் சரணடைய வேண்டும். ஆத்மாவும் சரணடைய வேண்டும்.\nநம் கரணங்கள் சரணடையுமுன்னே, அவற்றின் செயல்கள் சரணடைய வேண்டும்.\nஅச்செயல்கள் அக்கரணங்களிலும், அவற்றின் சூட்சுமப் பகுதிகளிலும் உள்ளன.\nஎண்ணம் மனத்தின் செயல். சூட்சும மனத்தில் எண்ணம் impulse உந்துதலாகவுள்ளது.\nஅதேபோல் உயிரும், உடலும் செயல்படுகின்றன.\nமனத்தின் எண்ணம், உயிரில் வேகமாகவும், உடலில் அசைவாகவும் எழும்.\nசூட்சும உடல், சூட்சும உயிர், சூட்சும மனத்தில் எண்ணம் முன் கூட்டி எழும். எழுபவை உந்துதல்களாகும்.\nஎண்ணம் உலகத்திற்குரியது. வெளியிலிருந்து நம்முள் நுழைகின்றன.\nபிரபஞ்சத்திலும் மனம் உண்டு. எண்ணம் அங்கெழுந்து மனத்தையடைகிறது.\nமனத்திலுள்ளவை அனைத்தும் ஜீவனுக்குரியவை. ஜீவனின் 8 பகுதிகளும் - 4 கரணங்களும், அவற்றின் சூட்சுமப் பகுதிகளும் - பிரபஞ்சத்திலும் உண்டு. மனித நிலைக்கேற்ப அவை பிரபஞ்சத்தினின்று அவனை வந்தடைகின்றன. சமூகச் செய்திகள் நம் வீட்டிற்கு வருவது போன்ற செயல் அது.\nஉள்ளும் புறமும் நாம் பிரபஞ்சத்தை ஏற்குமிடத்தில் சரணாகதியை ஆரம்பிக்க வேண்டும். உள்ளுணர்வின் உந்துதல்கள், பிரபஞ்சத்தின் உந்துதல்கள் சந்திக்குமிடத்தில் அகமும், புறமும் ஒன்றாகும். அவை எல்லாச் சூட்சும லோகங்களிலும் பூர்த்தியாகி உந்துதல் எழாவிட்டால், மேல் மனத்திற்கு வாராவிட்டால் சரணாகதி பூர்த்தியாகும்.\nஇன்றுள்ள இடத்திலிருந்து இலட்சியத்தையடையும்வரை யாத்திரை மனித முயற்சி. அது மனிதத் திறமையின் முயற்சி. முயற்சியும��, திறமையும் சரணாகதியால் அன்னையை அடைவது அருள், பேரருளாவதாகும்.\nநாம் தேடாததைச் சாதிப்பதில்லை. நாம் அறியாததையும் அடைவதில்லை.\nதெரிவது சாதனைக்கு உதவாது, தடையாகும். தேடுவது எதிர்ப்பாகும்.\nசாதனைக்குத் தெரிவதும், தேடுவதும் அவசியம். அவை இரண்டும் தடை.\nசாதனை என்பது தீவிரமான தெளிவான ஆர்வம். ஆனால் அது பற்றற்றதாகும்.\nநாம் நாடுவதை நமக்கு உற்பத்தி செய்துவிட்டு பிரம்மம் அகலும். தான் குறையாமல் நமக்குத் தேவையான அனைத்தும் தருவது பிரம்மத்தின் தன்மை.\nபிரம்மம் செய்வதைச் சரணாகதி செய்யும். அதனால்தான் பலன் அதிகம். பற்றற்று தீவிரமாக நாடுவது சரணாகதியின் நிபந்தனை.\nமனத்தின் எண்ணத்திலாரம்பித்து 6 கட்டங்கள் தாண்டி உடலின் சூட்சும உந்துதல்வரை சரணாகதிக்குரிய சட்டம் இதுவே.\nஎண்ணம் முதல் (gross thought) உடலின் சூட்சும உந்துதல்வரை (subtle physical impulse) இந்த அளவுகோல் விரிந்து செயல்படும். இங்கெல்லாம் செயல்படுபவர்க்கு இதன் விபரம் தெளிவாகத் தெரியும்.\nஎதைச் சாதிக்க வேண்டுமோ அந்த எண்ணத்தைச் சமர்ப்பணம் செய். சமர்ப்பணம் உயர்ந்தால் சாதனை உயரும்.\nஅடுத்த அடுத்த கட்டங்கட்குப் போகலாம். சாதனையும் உடன் வரும். முடிவான நிலையில் மனத்தின் உந்துதல் மனத்தில் எழும்பொழுது அது காத தூரத்திலிருப்பது தெரியும். அது மனத்துள் நுழையும் முன் அதைத் தடுக்க வேண்டி சமர்ப்பணம் செய்ய வேண்டும்.\nஅலைகடல் போன்று அமைதி உள்ளே நுழையும். அது உள்ளிருந்தும் எழவல்லது. அதன்பின் சமர்ப்பணமில்லை. சாதிக்க வேண்டியது சாதனையைப் பற்றிச் செய்தி வருமுன் முடிந்துவிடும்.\nசமர்ப்பணம், சரணாகதி பலிக்காதவருக்கு முயற்சி மலை ஏறுவதுபோல்.\nமுதல் தடையைக் கடந்தவருக்குச் சமர்ப்பணம், சரணாகதி தரும் வாய்ப்புகள் அனந்தம். இவை பெருஞ் சாதனைகள் ஆனாலும், முடிவான யோகமன்று.\nதான் விரும்புவதை நாம் அறிவோம். பிறரைத் திருப்திப்படுத்த விரும்பலாம். நல்ல நேரம் மனம் தானே மலரும். எதுவானாலும், இவை சுபாவத்தின் ஒரு வெளிப்பாடு. அதைச் சமர்ப்பணம் செய்தால் ஒருவருக்கு அதைவிட உயர்ந்தது இல்லை.\nசுபாவத்தில் பலிப்பது அபிப்பிராயம், முடிவு ஆகியவற்றிற்கும் பலிக்கும்.\nவசதியான வாழ்விற்கும், யோகச் சித்திக்கும் இடையில், மனம் நிறைந்த வளமான வாழ்வுண்டு. இது அர்த்த புஷ்டியானது, பெரியது. நான் கூறுபவை இவ்வாழ்வுக்குரியவை.\nசரணாகதி, சமர்ப்பணம் பத்தவர்கள் உயர்ந்த மனவளத்தை நாடினால் என் கருத்துகள் பயன்படும்.\nசந்தோஷம், சமர்ப்பணமானால் பெரியவை நடக்கும். அந்த சந்தோஷம் நாம் பெறும் சுறுசுறுப்பல்ல. பேரானந்தப் பெரு வெள்ளத்தின் ஆரம்பமான ஆன்மீக ஆனந்தமாகும் (felicity).\nஅடுத்த தாழ்ந்த கட்டத்தில் கவலை சமர்ப்பணமானால் குதூகலமாகும்.\nசிறிதளவு இதேபோல் வலி ஆனந்தமாகும்.\nசமர்ப்பணம் கனவிலும் பலித்து அதன் போக்கை மாற்றும்.\nகதையின் போக்கும் அன்பர் சமர்ப்பணத்திற்கு இசைவது அனுபவம்.\nசூட்சும லோகத்தில் காலத்தின் கதி பகுத்தறிவை ஏமாற்றும்.\nகுறைகளைச் சமர்ப்பணம் செய்வது :\nகுறை என்பது குணக்குறை. சுலபமாக அழியக்கூடியதில்லை. நிரந்தரமாக நீங்குவது எளிதன்று.\nசமர்ப்பணம் பலிப்பவருக்கு, இதுவும் பலிக்கும்.\nகுறைகளின் பெயர் நீண்ட பட்டியல். பெருமை, அவசரம், பயம், பேராசை, குறுக்கே பேசுவதென ஆயிரம் உண்டு.\nபெருமை, வீண் பெருமையைக் கருதுவோம். வீண்பெருமை தம் குறை என அறிந்து, சமர்ப்பணத்தால் அதை விலக்க ஒருவர் முயன்றால், கீழ்கண்டவை அவர் முன் படிப்படியாகத் தோன்றும்.\n- விரும்பி முயலும் சொந்த எண்ணம்.\n- நம்மை அறியாமல் பெருமையை நம்முள் நாடுபவை நம்மை மீறி எழுவது.\n- நாம் சும்மாயிருக்கும்பொழுது, பிறர் சொல்வதால் நாம் பழையபடி நடப்பது.\n- எண்ணத்தின்பின் உணர்ச்சி உந்துவது.\n- அதேபோல் உணர்ச்சியின் அடியில் உடல் தானே இயங்குவது.\n- எண்ணமும், உணர்வும், உடலசைவுகளும் அடங்கியபின் சூட்சும மனத்தில் எண்ணம் உந்தும்.\n- அதேபோல் உணர்விலும், உடலும் சூட்சுமத்தில் உந்துதல்கள் எழுவது.\nநம்முள் இத்தனைக் கட்டங்களில் எழுவனவற்றைக் காண்பது முதலில் அவசியம்.\nசமர்ப்பணத்தால் ஒவ்வொன்றாகக் களைவது அடுத்தது.\nசிரமப்பட்டு அகத்தால் வென்றதை, அர்த்தமற்ற புறச்செயல் அழிப்பது மனித சுபாவம்.\nஇது நம் பங்கு. இதை நாமே செய்யவேண்டும். அன்னையிடம் இதையும் விட்டுவிட்டேன் என்று பேசக்கூடாது.\nகடைசிக் கட்டம்வரை வெற்றிகரமாக வந்த ஒருவர் கடைசிக்கட்ட உந்துதலைக் காண்பார் - it is the subtle physical impulse.\nஇதுபோல் மனத்துள் தொலைதூரத்திலுள்ள உந்துதலைப் பொருட்படுத்தாததே வழக்கம். இந்த லேசான உந்துதலுக்கு முதற்கட்ட எண்ணத்தின் வலுவுண்டு.\nஇந்தக் கட்டத்திற்கு வந்தவர்க்கு இது தெரியும். அவரால் அதை மறுக்க முடியும். அடுத்த கட்டத்தில் சமர்ப்பண��ும் செய்ய முடியும்.\nஅதைச் சமர்ப்பணம் செய்தால் அதுவே பெருமையின் முடிவு.தொலை தூரத்திலுள்ளவர்க்கு ஆள்மூலம் செய்தி அனுப்புவதை மாற்றி போனில் பேசுவது இந்தச் சமர்ப்பணம்.\nசமர்ப்பணத்திற்குத் தேவையான தியானம் :\nஸ்ரீ அரவிந்தர் அதை all inclusive concentration ஜீவ நிஷ்டை என்கிறார்.\nஅதன் மையங்கள் இரண்டு. 1) தலைக்குமேல் 2) நெஞ்சுக்குப் பின்னால்.\nநம் நிஷ்டைக்கு மனம், நெஞ்சு, மூலாதாரம் மையங்கள்.\nஒரு கரணத்தில் உள்ள நிஷ்டையிது.\nஇம்மூன்று கரணங்களிலும் நிஷ்டை எழுந்தால் மையம் நகர்ந்து நெஞ்சுக்குப் பின்னால் போகும்.\nஅதுவே ஸ்ரீ அரவிந்தருடைய இரகஸ்யம். அதை வெளிப்படையாக்கினார்.\nஇந்த முறையை ஏராளமான சிறுபகுதிகளாகப் பிரித்து முன்பக்கங்களில் எழுதி முடியாத காரியத்தை முடிக்க முயன்றேன்.\nநெஞ்சுக்குப் பின்னால் நிஷ்டை என்பது ஆண்டவனை உணர்வால் ஏற்பதாகும். தலைக்கு மேல் தெரிவது ஆன்மீகம் அறிவதாகும்.\nThe Life Divine புரிவது அந்த அறிவு, அது மனம் விரிவடைவதாகும். தலையே பெரியதாவதுபோல் தெரியும்.\nஅன்னை முன் நிற்பதும், சமாதி தரிசனம் செய்வதும் நெஞ்சை அதுபோல் நிரப்பும். உயர்ந்த உணர்வெழுந்து உணர்வு செறிந்து பூரிக்கும்.\nக்ஷணமானாலும், இந்த அனுபவம் ரிஷிகள் அறியாதது.\nநந்தா இருமுறை 15 நாள் பிரதமரானார். 1½ வருஷம் வாடகை தரவில்லை என அவரை வீட்டைவிட்டுக் காலி செய்தனர். பிரதமராக உயர்வதும் வாடகை தாராது.\nசாதனைக்கு முயற்சி தேவை. முயற்சி சாதனைக்குத் தடை என்பது முரணானது.\nஉடலாலானவன் உழைக்கிறான். உணர்வாலானவன், உற்சாகமாக உழைக்கிறான், அறிவாளி அறிவால் உழைக்கிறான். இது தவிர்க்க முடியாதது. அவசியம்.\nமுயற்சி அவசியம் என்பதும், முயற்சியை முழுவதும் செலவிட வேண்டும் என்பதும் அவசியம்.\nதிறமைசாலி சுறுசுறுப்பானால் அவன் சாதனை பலிக்கும். முயற்சியும், திறமையில்லாதவனுக்கில்லாத வாய்ப்பு இவனுக்குண்டு. அவனுக்குச் சரணாகதியுண்டு.\nதிறமையையும் சுறுசுறுப்பையும் சரணம் செய்தால் பலன் முன்னதாக வரும்.\nவேலையின் பலனைச் சரணம் செய்யலாம். வேலையைச் சரண் செய்யலாம். திறமையைச் சரண் செய்யலாம். நோக்கத்தைச் சரண் செய்யலாம். அதேபோல் வேலையின் ஜீவியத்தைச் சரண் செய்யலாம். ஜீவன் அடுத்தது.\nவேலையின் பலனை, வேலையிலிருந்து பிரிக்கத் தெரிய வேண்டும். அதேபோல் திறமையை வேலையிலிருந்து பிரிக்க முடிய வேண்டும���. தொடர்ந்தால் வேலையின் ஜீவியத்தையும், ஜீவனையும் பிரித்துச் சரண் செய்ய முடியும்.\nஇதைச் செய்ய முடியுமானால் வேலை, உரிய நேரத்திற்குக் காத்திராமல், உடனே முடியும்.\nஒருவருக்கு 10 கட்ட உயர்வு காத்திருக்கும். ஒரு கட்டம் சமர்ப்பணத்தால் உடனே முடிந்தால் 30 ஆண்டில் முடிய வேண்டிய 10 கட்டங்களும் அதேபோல் முடிக்கலாம்.\n30,000 ஆண்டில் பிறக்க இருக்கும் சத்திய ஜீவன் 30 ஆண்டில் பிறப்பான் என பகவான் கூறுவது இம்முறை. ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தம் ஆகியவற்றை நாம் சரண் செய்யவேண்டும் என்கிறார்.\nசரணாகதிக்கு இத்திறன் எப்படி வருகிறது\nஜடத்திலிருந்து பிரம்மத்திற்குப் போகும்பொழுது ஒவ்வொரு குணமாக விலகி ரூபம், சக்தி, அறிவு, ஞானம் - முடிவில் பிரம்மம் எந்தக் குணமுமில்லாதது என்று அறிகிறோம்.\nசரணாகதி ஒவ்வொரு திறமையாக விட்டுவிடுகிறது - வேலையின் பலன், வேலை, திறமை, நோக்கம், ஜீவியம் - முடிவில் பிரம்மம்போல் எதுவுமில்லாமலிருக்கிறது. சரணாகதி பிரம்மத்தைப் பின்பற்றுகிறது.\nசரணாகதி என்ற முறையின் தத்துவம், பிரம்மத்தின் தத்துவம்.\nஎண்ணத்திலாரம்பித்த சரணாகதி, உணர்ச்சியைக் கடந்து, உடல் உணர்வுக்குப் போய், சூட்சும உலகில் மீண்டும் எண்ணம், உணர்வு, உடலுணர்வைச் சரணம் செய்யும் பொழுது பூர்த்தியாகிறது.\nஎந்த விஷயத்திலாவது சரணாகதி இதுபோல் பூர்த்தியானால், அவருக்கு அடுத்தடுத்த கட்டங்களுண்டு.\n\"நல்லாயிருக்கு'' என மனிதன் சொல்லும்பொழுது, அவன் உள்ளத்தின் ஆழத்தைத் தொடுகிறது எனப் பொருள். அதை அழிக்க அவன் வெட்கப்படுகிறான்.\nஉள்ளத்தைத் தொடுவது உயிருக்கு உயிரானது.\n‹ 05.சாவித்ரி up 07.அபரிமிதமான செல்வம் ›\n06.சரணாகதி என்ற முறையின் தத்துவமும், நடைமுறையும்(Contd.)\nUnder the sub-heading - சமர்ப்பணத்திற்குத் தேவையான தியானம் :\nBullet Point No.18 - line 1, - வேலையிலி ருந்து - வேலையிலிருந்து\ndo. do. 2, - வேலையிலி ருந்து - வேலையிலிருந்து\ndo. 24 - line 2 - எதுவுமில்லாமலி ருக்கிறது.-\nபிரம்மத்தைப் பின்பற்றுகிறது. - to be joined.\nபொழுது பூர்த்தியாகிறது. - to be joined.\n06.சரணாகதி என்ற முறையின் தத்துவமும், நடைமுறையும்\n7th point - அறிவு உணர்விலி ருந்து - அறிவு உணர்விலிருந்து\n12th point - கலந்ததிருந்து விழித்து, வாழ்விலி ருந்து -\n22nd do. - சலி ப்பு - சலிப்பு\nUnder the heading - சரணாகதியின் பல்வேறு நிலைகள் :\npoint no.9 - வெளியிலி ருந்து - வெளியிலிருந்து\nUnder the heading - சரணாகதியின் சாதனை :\nPoint no.8 - உடலி ன் - உடலின்\nPoint no.10 - line no.3 - தூரத்திலி ருப்பது - தூரத்திலிருப்பது\nPoint no.12 -பலி க்காதவருக்கு - பலிக்காதவருக்கு\ndo. do. 24 - குறைகளைச் சமர்ப்பணம் செய்வது : - to be separated\nUnder the sub-heading குறைகளைச் சமர்ப்பணம் செய்வது -\nUnder the sub-heading - சமர்ப்பணத்திற்குத் தேவையான தியானம் :\ndo. 12 - 1½வருஷம் - 1½ வருஷம்\ndo. 16 - பலி க்கும் - பலிக்கும்\nமலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2002\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n06.சரணாகதி என்ற முறையின் தத்துவமும், நடைமுறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://makizhnirai.blogspot.com/2015/05/", "date_download": "2018-07-19T11:49:42Z", "digest": "sha1:UJACCDHPPKDM6YPD5K2EJLI6YQSW5VLP", "length": 21420, "nlines": 228, "source_domain": "makizhnirai.blogspot.com", "title": "மகிழ்நிறை : May 2015", "raw_content": "\nஇது தன்னம்பிக்கைக்கட்டுரை இல்லை. மாறாக தற்கொலைக்கு உதவும் விதமாக வழிசொல்லும் பதிவும் இல்லை. தற்கொலை செய்து கொள்ள போகிறவர்களிடம் கேட்க நினைக்கும் ஒரு நியாயமான கேள்வி. அதற்கு பதில் தேடித்தான் இந்த பதிவு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 10 மே, 2015\nஅமுதுக்கு செம்மொழி என்று பேர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபார்ப்பனர்கள் ஏன் பகுத்தறிவுவாதிகளின் எதிரியாகிறார்கள்\nஊரெல்லாம் சாதி சங்கங்கள் இருக்க, குடிசைகள் பற்றி எரிய, தீண்டாமைச்சுவர்கள் வளர்ந்தோங்க, இளவரசன்கள் சாக, அத்தனையையும் விட்டுவிட்டு ஏன் பார்ப்பனர்களை மட்டும் பகுத்தறிவுவாதிகள் குறி வைக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், ப்ராமணியம், பகுத்தறிவு, பிள்ளையார், பெரியார்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோல��� சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகரந்தை அண்ணா, தமிழன் சகா, மற்றும் இனியாச்செல்லம் உங்க அன்பிற்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதுவரை செதுக்கியவை (யாரைன்னு கேட்காதிங்க)\nஅமுதுக்கு செம்மொழி என்று பேர்\nபார்ப்பனர்கள் ஏன் பகுத்தறிவுவாதிகளின் எதிரியாகிறார...\nதானாவும், நானாவும் சேர்த்த கூட்டம்ங்க இவங்க\nஒருவாரமா இந்தப்படங்கள் தான் ஓடிகிட்டிருக்கு\nபெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது\nஉலகமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்ப...\nஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்ப...\n“வலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய மின்தமிழ்...\nசாக்லேட் என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது...\nநானும் ரௌடி (நடிகை) தான்- நயன் தாரா\nகடும் மழை தயவால் நான்கு நாள் தீபாவளி விடுமுறை கிடைத்தது. நானும் ரௌடி தான் படம் பார்த்தேன். குறைந்த பட்ஜெட் வித்தியா...\nஇது டீத்தூள் பதிவு அல்ல:) மூன்று அறிமுகங்கள் பற்றிய பதிவு roses தான் இவர்கள் மூவரும் ஆனா அதில ரெண்டுபேர் படபட பட்டாசு. ஒருத்தர் அம...\nமன்னர்களுக்குத் தான் கோட்டையா என்ன நம்ம நட்புக்கும் கோட்டை உண்டு. நாம் எழுதும் தமிழுக்குக் கோட்டை உண்டு. நம் தமிழ்ப் பதிவுலக...\nஇணையத் தமிழே சகம் வெல்க\nஒரு தீபாவளிக்கு திரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களுக்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்...\nஅண்ணா பல்கலைக்கழகம் (1) அப்பத்தா (1) அமிலம் (1) அரசியல் (6) அறிவியல் (4) அனுபவம் (46) ஆங்கிலத் திரை���்படம். (1) ஆங்கிலம் (6) ஆசை. (1) ஆண் (1) ஆண்ட்ரு இவன்ச்கி (1) ஆயிஷா (1) ஆர்யா (1) ஆவி (1) இசை (5) இட்லி (1) இணையத்தமிழ் பல்கலைகழகம். (3) இரங்கல் (1) இளமதி (1) இளையராஜா (1) ஈழம் (2) உடன்படிக்கை (1) உத்தாரா உன்னிக்கிருஷ்ணன் (1) உப்புமா கவிதை (1) உளவியல் (4) எட்வர்ட் சிசர் ஹாண்ட்ஸ் (1) எரிவாயு (1) என் மகள். என் மருமகள். (1) என்னமோ எதோ (1) க்வெல்லிங் (1) கணக்கு (1) கணினியில் தமிழ் வளர்ச்சி (1) கத்தி (1) கதை (5) கம்யூனிஸ்ட் (4) கமல் (1) கயல் (1) கல்வி (26) கலாம் (1) கலைகள் (1) கவனிக்க வேண்டியவை (5) கவிதை (76) காங்கரஸ் (1) காதல் (17) காதல் போயின் காதல். (1) காமெடி (2) காயத்ரி வீணை (1) கார்த்திக் சரவணன் சகோ (1) கார்வர் (2) காலை பரபரப்பு (3) கிரேஸ் பிரதீபா (1) கிறிஸ்துமஸ் (1) குழந்தைகள் (11) குறும்படம் (1) குறும்பா (3) குஷ்பு (1) கே.எஸ்.ரவிக்குமார் (1) கைப்பை (1) கோச்சடையான் (1) கோப்பை (1) கோலங்கள் (1) சந்தனப்பேனா (1) சமூகம் (2) சாதி (1) சாதிவாரி கணக்கெடுப்பு (1) சாம் (1) சாம் அண்ணா (1) சாமானியன் (1) சாலை (1) சிறுகதை (2) சினிமா (2) சீனி (1) சும்மா (6) சுய ஆய்வு (1) சுயபரிசோதனை (3) செல்பி (1) சென்னை மழை (3) சேகுவேரா (2) ட்ராஜெடி (1) ட்விட் (1) டி.அர்.பி. (1) டெக்னாலஜி (1) தமிழ் (1) திரைப்பார்வை (2) திரையிசை (1) தீபிகா படுகோன் (2) துணுக்கு (1) துளசி அண்ணா (1) தூக்கம் (1) தூய்மை இந்தியா (1) தேசப்பற்று (1) தொடர்பதிவு (1) தோற்றல் (1) நகரம் (2) நகைச்சுவை (1) நகைசுவை (1) நட்பு (2) நடிகர் சங்கம் (1) நண்பர்கள் (1) நந்தன் ஸ்ரீதர் (1) நம்பர் ப்ளேட். (1) நயன்தாரா (1) நலமா (1) நன்றி (1) நாசா (1) நிலவன் அண்ணா (1) நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா (2) நினைவுப்பரிசு (1) நெரிசல் (1) நோபல் பரிசு (2) ப்ராமணியம் (1) பகுத்தறிவு (2) பணம் (2) பதிவர் சந்திப்பு. (5) பதிவர் விழா கட்டுரைப்போட்டி (3) பதிவர் விழா மரபுக்கவிதைப்போட்டி (1) பதிவுத்திருட்டு. (1) பயணம் (1) பரிசு (2) பரிசுப்போட்டி (1) பள்ளி வாகனம் (1) பாடகர்கள் (1) பாடகிகள் (1) பாடல் (2) பிசாசு. (1) பிரபுசாலமன் (1) பிள்ளையார் (1) புத்தகங்கள் (3) புத்தகம் (1) புத்தாண்டு (1) புதிய எழுத்துரு (1) புதுக்கோட்டை (1) புதுகை (1) புரவி (1) புலி (1) புவி வெப்பமடைதல் (1) பெண் (2) பெண் ரசனைகள் (1) பெண்கல்வி (1) பெண்ணியம் (2) பெப்ஸி (1) பெரியார் (7) பொதுஅறிவு (12) போட்டோஷாப் (1) மதச்சார்பின்மை (1) மது(கஸ்தூரி) (1) மதுரை தமிழன் (1) மழலை (1) மழை (7) மனிதம் (1) மார்கழி (1) மின்சிக்கணம் (1) மின்னல்வரிகள் (1) முங்கில் காற்று (1) முதுமை (1) மூங்கில் (1) மைக்கூ. (1) மொழிபெயர்ப்பு. (1) மோடி (3) யூத் (1) ரஜினி (2) ராஜேஷ் லக்கானி (1) ���ோடு (1) லிங்கா (1) லிமரிக் (1) லேடீஸ் ஹாஸ்டல் (1) வசனங்கள் (1) வடிவேலு (1) வயலின் (1) வர்க்கம் (2) வரலாறு (1) வரலாறு. (1) வளரிளம்பருவம் (1) வாழ்க்கை (1) விகடன் (1) விளம்பரம் (2) விஜய் (2) விஜய் . வடிவேலு (1) விஜய் சேதுபதி (2) வீதி கலை இலக்கியக் களம். (1) வெங்கட் நாகராஜ் (1) வெண்ணிலா (1) வைக்கம் விஜயலட்சுமி (1) ஜனநாதன் (1) ஸ்ருதி ஹாசன் (1) Bhopal (1) Chernobyl (1) craft (1) diy (1) earth hour (1) etc (1) GIVE IT UP (1) IPHONE (1) selfie (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mtt-news.blogspot.com/2009/07/blog-post_13.html", "date_download": "2018-07-19T11:24:35Z", "digest": "sha1:WJQXV7HO5TO4LTAOT6LQAJB6ZLFWNAHX", "length": 2220, "nlines": 42, "source_domain": "mtt-news.blogspot.com", "title": "முத்துப்பேட்டை செய்திகள்: திருமன பத்திரிக்கை", "raw_content": "\nநம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு\nதிமுக எனக்கு முழு உரிமை தந்துள்ளது\nமுத்துப்பேட்டையில் தென்னை விவசாயிகள் திடீர் சாலைமற...\nமுத்துப்பேட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 வாலி...\nவேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ...\nதீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க முத்துப்பேட்டையில் பு...\nசுனனுந் நஸாயீ நபிமொழி நூல் வெளியீடு\nமத்திய அமைச்சருடன் முத்துபேட்டை அதிரைப் சேர்ந்த சி...\nசென்னையில் ரஹ்மத் அறக்கட்டளையின் நபிகளாரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590866.65/wet/CC-MAIN-20180719105750-20180719125750-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://mugamoodi.blogspot.com/2006/02/blog-post_16.html", "date_download": "2018-07-19T11:09:43Z", "digest": "sha1:7QG5TYP5VAJFRPVTD6ZDZ44A2CRYSXN2", "length": 37430, "nlines": 81, "source_domain": "mugamoodi.blogspot.com", "title": "முகமூடி: கொறிக்க", "raw_content": "\n'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்\n(வழக்கம் போலவே) இதையும் ஆந்திரா தட்டிகிட்டு போனதை பற்றி ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இந்தியாவின் முதல் பெரிய சில்லுத்தொழிற்சாலை ஆந்திராவில் அமையும்னு சொல்லிட்டாங்க. மூணு பில்லியன் டாலர் ப்ராஜக்ட். உடனடியா 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மேலும் பல ஆயிரக்கணக்கானவுங்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு. வரும் வருடங்களில் இந்த முக்கிய தொழிற்சாலையை நம்பி பல சிறு தொழில்சாலைகள், அதன் மூலம் தொழில் மூலதனம், லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு எல்லாம் ஆந்திராவுக்கு ஸ்வாகா.\n1. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மூன்றும் போட்டியில்... தமிழ்நாடு இதில் அக்கரை காண்பிக்காததால் மற்ற விஷயங்களை கருத��தில் கொண்டு ஹைதராபாத்தை தேர்ந்தெடுத்தோம் என்கிறார் semindia தலைவர்.\n2. ஹைதராபாத்தில் அமையப்போகிறது என்ற அறிவிப்பை பெங்களூரில் அறிவித்தது தமிழக அமைச்சர் தயாநிதி மாறன்.\n3. இந்த நிருபர் சந்திப்பு முழுவதும் semindia தலைவர் அகர்வால், தனது ஆலோசகர் மற்றும் முதலீட்டாளர் கொண்டமூரி, மென்பொருள் பூங்கா பி.வி.நாயுடு மற்றும் தனது ஆலோசகர் சி.எஸ்.ராவ் ஆகியோருக்கே மேடையில் முக்கியத்துவம் கிடைக்கச்செய்து தான் அடக்கியே வாசித்தாராம் ஆந்திர முதல்வர் ராஜசேகர் நாயுடு... ஹும்.\nமேற்படி வெவகாரமெல்லாம் கிடக்கட்டும்... இத விட முக்கியமான வேற ஒரு விசயத்துக்காக மதுரைக்கார வக்கீலு ஒருத்தரு தலைக்கு மேல கோவம் வந்து ஷில்பா, ரீமா, தமிழ்முரசு மேல எல்லாம் கேஸ் போட்டுட்டாரு. பாண்டியன் காலத்துல இருந்து இன்னி வரய்க்கும் மதுரக்காரய்ங்களுக்கு கேஸுன்னா அம்பூட்டு பிரியம்...\nஅதாவது தமிழ்முரசுல வந்த ஷில்பா ஷெட்டி, ரீமா சென் ரெண்டு பேர் படமும் கவி(ர்)ச்சியா இருக்காம். அத பாத்தா பசங்க மனசு கெட்டுப்போயிருமாம். அத என்னான்னு விசாரிக்கணுமாம். அவங்கள மார்ச் 10 அன்னிக்கி பாத்து என்ன ஏதுன்னு கேக்கறேன்னு நீதிபதியும் சம்மன் அனுப்பிட்டார்.\nசரி, அவங்க போட்டோவ எங்கியோ புடிச்சி தமிழ்முரசுல படமா போட்டுட்டான், அதுக்கு ஷில்பாவும் ரீமாவும் வந்து என்ன செய்யணுமாம்... இந்த மாதிரி கேஸ எடுத்துகிட்டு எவனாவது நீதிமன்றத்துக்கு வந்தா, சர்தான் போயி வேற எதுனா ஒளுங்கான பொளப்ப பாருய்யான்னு சொல்றத வுட்டுபோட்டு நம்ம நீதிபதிங்களும் உடனே நடிகைங்க நேரில் ஆஜராகணும்னு ஒரு கட்டளைய போட்டுற்றாங்க...\nசரி எனக்கும் மாஸ்க் நாயகி காத்தரீன் ஜீட்டா ஜோன்ஸ், மிஸஸ் ஸ்மித் ஆன்ஜலீனா ஜோலியெல்லாம் பாக்கணும்னு ஆசையா இருக்கு. அவங்க என் மனச கெடுக்கறாங்கன்னு சிலுக்குவார்ப்பட்டி மாஜிஸ்திரேட்டுகிட்ட பிராது கொடுத்திருக்கேன். அவரும் அவங்க ரெண்டு பேரும் நேர்ல ஆஜராயி வெளக்கணும்னு கட்டளை போடுவாரு... கோர்ட்டுக்கு வர்றப்போ அவங்கள பாக்க பிரியப்படுறவங்க ஜோன்ஸுக்கு 10 ரூவா, ஜோலிக்கு 20 ரூவான்னு முன்கூட்டியே பணத்த கட்டி சீட்டு வாங்கிருங்க.. நீதிபதி, வக்கீல், போலீஸ் வேலை பாக்கறவங்களுக்கு தரிசன கட்டணத்துல தள்ளுபடி உண்டு...\n(அந்த ஷில்பா படம் இதுவாத்தான் இருக்கணும். மனசு கெட்டுப்போற வாய்ப்பு இருந்தா சுட்டிய க்ளிக்காதீங்க. ரீமா படம் கண்டுபிடிக்க முடியல)\nநீங்க ஜோசியம் பார்த்துவிட்டு, அதன்படி கட்சி ஆரம்பிச்சு இருக்கிறதா மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்காரே\n‘‘அய்யா, நான் ஜோசியம், ஜாதகம்னு கொஞ்சம் நம்பிக்கை உள்ளவன்தான். இல்லைனு சொல்லமாட்டேன். எங்களுக்கு எதிலும் நம்பிக்கை இல்லைனு சொல்லிட்டு, திருட்டுத்தனமாகப் போயி சாமி கும்பிடுவது, திருட்டுத்தனமாக ஜோசியம் பார்க்கிறது என் பிழைப்பு கிடையாது. உங்களுக்கு வேண்டுமானால் இது கைவந்த கலையாக இருக்கலாம். இதைப்பற்றி அவர் திரும்பத் திரும்பப் பேசினால், அவரைப் பற்றி புட்டுப்புட்டு வைப்பேன். ஏப்ரலுக்குப் பிறகு, அவர் முகத்திரையைக் கிழிப்பேன். யார், யார் எந்தக் கோயிலுக்குப் போறாங்க, வர்றாங்கன்னு எனக்குத் தெரியும். நீங்க திருச்சி மாநாட்டுக்கு வாழையிலை போட்டு, சாமி கும்பிட்டுப் பூமிபூஜை நடத்தலையா கே.என்.நேரு எலுமிச்சம்பழத்தைச் சுத்திப்போடலையா வெள்ளிக்கிழமை பத்தரை பன்னிரண்டு ராகுகாலம். போட்டியிடுகிற விண்ணப்பத்தைப் பத்துமணிக்குள்ளே வாங்கி, அடுத்து பன்னிரண்டு மணிக்கு விண்ணப்பம் வாங்கலையா ஏன் உங்களுக்குத்தான் ராகுகாலம், எமகண்டம் எதுவும் கிடையாதே. அதெல்லாம் எங்களை மாதிரி சாதாரண ஜனங்களுக்குத்தானே ஏன் உங்களுக்குத்தான் ராகுகாலம், எமகண்டம் எதுவும் கிடையாதே. அதெல்லாம் எங்களை மாதிரி சாதாரண ஜனங்களுக்குத்தானே\n- விஜயகாந்த், குமுதம் 15.02.06\n‘புயலுக்குப் பின்’ வாழ்க்கை எப்படியிருக்கு\n‘‘குஷ்புக்கு அசாத்திய துணிவு. என்னோட சைடில் அவங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் அவங்களுக்குப் பக்கபலமாக நின்னேன். சாஞ்சிக்க தோள் கொடுத்தேன். சொல்லாத ஒரு விஷயத்தை, ஊதிப் பெரிசாக்கி, பறக்கவிட்டாங்க. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மை ஆக்கப் பிரயத்தனப்பட்டாங்க. எல்லாம் ஓவர். அவங்க டி.வி., நான் ஹீரோன்னு வாழ்க்கை திரும்பி ஓடிக்கிட்டு இருக்கு. ஒரு சின்ன அளவில் சறுக்கினால், பின்னாடி சிரிக்க ஆயிரம் பேர் இருக்காங்க என்ற பயம் முதுகில் குறுகுறுப்பாக ஓடிக்கிட்டு இருக்கு.\n- சுந்தர் சி., குமுதம் 15.02.06\nபா.ம.க., மோனோ ரயில் திட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பது ஏன்\n‘‘மோனோ ரயில் என்பது நமக்குப் புதிது. இந்தியாவில் இது எங்கும் இல்லை. மோனோ ரயிலுக்கான பாதையை எப்படி அமைப்பது என்று நமக்குத் தெரியாது. மோனோ ரயிலை நாம் தயாரிப்பதில்லை. வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். அதை எப்படி இயக்குவது, பராமரிப்பது என்பதும் நமக்குத் தெரியாது. தப்பித் தவறி ஏதாவது ரிப்பேர் என்றால்கூட, அதைச் சரி செய்ய வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வரவேண்டும். இப்படி நமக்கு எள்ளளவுகூட பரிச்சயம் இல்லாத ஒரு திட்டத்தைத் தமிழக அரசாங்கம் கொண்டு வருவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்’’ என்று கேட்கிறார்கள் பா.ம.க. தலைவர்கள்.\nகோவிந்தராஜ் (பெட்டிக்கடைக் கடைக்காரர்): ‘‘இது வெளிநாட்டு விஷயம். நமக்குத் தேவையான்னு கேக்குறாங்க. பஸ், ரயில், விமானம்னு எல்லாமே வெளிநாட்டு விஷயம்தான். அதை நாம கத்துக்கிட்டு ஓட்டலையா\nபி.ஜீவன், திண்டுக்கல் :: ஒரு புதிய திரைப்படத்தில் திருமாவளவனின் ‘போஸ்’களைப் பார்த்தீர்களா\nஅரசு பதில் :: சில புலிகள் இருந்ததாம். சில அதைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டதாம்.\nவி.இராசு, திருப்பத்தூர் :: ‘கேபிள் டி.வி.க்களை அரசுடைமை ஆக்குவதை வரவேற்கிறேன் என்கிறாரே கருணாநிதி\nஅரசு பதில் :: வேறு வழி\nஅரசு ஊழியர்களுக்குச் சலுகைகள், சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை என்று, முதல்வர் வாரி வழங்குவதெல்லாம் தேர்தல் பயத்தினால்... என்று கிண்டலடிக்கிறாரே கருணாநிதி\nஎங்களுக்குத் தேர்தல் ஜுரமோ, பயமோ துளிகூட கிடையாது. அதுவும் எங்கள் அம்மாவுக்குப் பயமா (சிரிக்கிறார்) துணிச்சல்தான் அவரது மிகப் பெரிய பலம். நிதிநிலை சரியில்லாதபோது கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் கட்டுப்படுத்தினோம். சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டார் முதல்வர். குடும்ப வரவு செலவைப் பார்த்துக் கொள்ளும் ஒரு தாய், அப்படித்தானே செய்வார் (சிரிக்கிறார்) துணிச்சல்தான் அவரது மிகப் பெரிய பலம். நிதிநிலை சரியில்லாதபோது கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் கட்டுப்படுத்தினோம். சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டார் முதல்வர். குடும்ப வரவு செலவைப் பார்த்துக் கொள்ளும் ஒரு தாய், அப்படித்தானே செய்வார் ஒரு கட்டுக்குள் வந்ததும், இப்போது செய்யவேண்டியதைச் செய்கிறார் அம்மா.\nஎங்களை நக்கலடிக்கும் கருணாநிதி, எந்தப் பதவியிலும் இல்லாமல் வாராவாரம் அடிக்கல் நாட்டுகிறார். சேது சமுத்திரத் திட்டம், தேசிய நெடுஞ்சாலை, பாலங்கள் என்று மத்திய அரசின் திட்டங்களைத் த��் கட்சியின் சொந்தத் திட்டம் போல அறிவிக்கிறார். முழுப்பக்க விளம்பரத்தில் சிரிக்கிறார். இதெல்லாம் மட்டும் தேர்தலுக்காக இல்லையா பொழுது விடிந்து பொழுதுபோனால் அம்மாவைத் திட்டி அறிக்கை விடுவதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார். சரி, சட்டசபையில் வந்து மக்கள் பிரச்னையைப் பேசுங்கள் என்றால் பதுங்குகிறார்\n- அமைச்சர் வளர்மதி, குமுதம் 15.02.06\nவிரைவில் எதிர்பார்க்கப்படும் பதிவுகள் ::\n% குமுதம் காழ்ப்பின் பிண்ணனியில் உள்ள உள்குத்து அரசியல்\n% குமுதம் அரசுவின் நியூரான் நெட்வொர்க்ஸ் செயல்படும் முறையில் உள்ள குறைபாடுகள்.\n% குமுதம் ஆர்யர்களின் கைக்கூலியா\n% வளர்மதி என்பவர் ஆர்ய சூர்ப்பனகை.. விளக்குகிறார் மேட்ரிக்ஸ் ஹீரோ.\n@ February 16, 2006 8:12 PM க்கு நம்ம சொல்றது என்னன்னா ::\n@ February 16, 2006 8:29 PM க்கு நம்ம சொல்றது என்னன்னா ::\nஉங்கள் பதிவில் எப்பொழுதும் இருக்கும் ஒரு லாஜிக் எனக்குப் பிடிக்கிறது..\n@ February 16, 2006 9:43 PM க்கு நம்ம சொல்றது என்னன்னா ::\nbangalore 91-96 period ல டெவலப் ஆனதே அம்மாவல தான்னு இந்தியா டுடே ல படிச்ச ஞாபகம். ம்ம்ம்..... இப்ப ஆந்திரா.\nஎன்ன பண்றது, அவுங்களும் எத்தனை நாளைக்கு தான் கருப்பு கோட்டையும், காக்கி சட்டையும் பார்த்துக்கொண்டே இருப்பது ரீமாவும் ஷில்பாவும் எந்த உடை ல போஸ் கொடுத்தாங்களோ அதே உடையில் கோர்ட்க்கு வந்தால் உடனடி விடுதலை ரீமாவும் ஷில்பாவும் எந்த உடை ல போஸ் கொடுத்தாங்களோ அதே உடையில் கோர்ட்க்கு வந்தால் உடனடி விடுதலை (ஷில்பா படத்தையும் தேடிப்போட்டிருந்தா புண்ணியமாப் போயிருக்கும்)\n//தான் அடக்கியே வாசித்தாராம் ஆந்திர முதல்வர் ராஜசேகர் நாயுடு... ஹும்.//\nஏனுங்க.. ரெட்டிகாருவை நாயுடுன்னு சொல்லி கட்சியில கொழப்பம் வந்துடப் போவுது. ஆந்திராவுல சாதியோட ஆளுமை கொஞ்சம் சாஸ்தி..\n@ February 21, 2006 4:39 PM க்கு நம்ம சொல்றது என்னன்னா ::\nகூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::\nதேர்ந்தெடுங்க... அமெரிக்க அதிபர் தேர்தல் - சிறு குறிப்பு அம்பிகளுக்கு ரெமோ மேல் தமிழன் ஏன் இலக்கியம் வாங்குவதில்லை மாதொருபாகன் - செலக்டிவ் அறச்சீற்றம் < மாதொருபாகன் - செலக்டிவ் அறச்சீற்றம் <-