diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_1173.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_1173.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_1173.json.gz.jsonl" @@ -0,0 +1,473 @@ +{"url": "http://www.tamilpower.com/2017/04/blog-post_24.html", "date_download": "2021-08-02T08:56:29Z", "digest": "sha1:TC55HUWX2BZMJH3H5WPLIDSUQNOTPF2V", "length": 28913, "nlines": 153, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: தமிழர்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை த.ம.பேரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரை", "raw_content": "\nதமிழர்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை த.ம.பேரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரை\nதமிழர்களை அடிமைப்படுத்தும் விதத்தில் சிங்கள மக்கள் நடந்து கொண்டால் தமிழர்கள் அடிபணியப் போவதில்லை. போராடத்தான் முனைவார்கள் எனத் தெரிவித்த தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வட மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்களின் பாரம்பரியம் போராடுவதை ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் அடிபணிய வைப்பதை எம்மக்கள் விரும்பமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் பேரவையின் நிர்வாக சபைக் கூட்டம் நேற்றுக் காலை 10 மணிக்கு திருகோணமலை நகரில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றிருந்தது.\nஇதில் பங்கேற்று உரையாற்றும் போதே வடக்கு முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகிழக்கில் சந்தித்தாலும் கிழக்கின் அதிகாரபீடம் அமைந்திருக்கும் திருமலையில் சந்திக்கவில்லையே என்ற குறையை தற்போது நிவர்த்தி செய்துள்ளோம். வடகிழக்கு மாகாணமெங்கிலும் இருந்து வந்திருக்கின்ற எமது பிரதிநிதிகளாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது மனமார்ந்த நன்றியறி தலைத் தெரிவிக்கின்றோம்.\nஎமது இயக்கம் ஒருமக்கள் இயக்கம். மக்கள் மனமறிந்த இயக்கம். மயக்கம் எதுவுமின்றி மக்களுக்கு வேண்டியதை வெளிப்படையாக பேசிவருகின்ற ஒரு இயக்கம். எம்முள் பல மதத்தலைவர்கள் உள்ளார்கள், பல தொழில்களைப் புரிபவர்களின் பிரதிநிதிகள் உள்ளார்கள். பல கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகளாக உள்ளார்கள்.\nஇவர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்தும் கொழும்பில் இருந்தும் நாட்டின் ஏனைய இடங்களில் இருந்தும் வந்து சேர்ந்துள்ளார்கள்.தமிழ் மக்களின் இன்றைய நிலை அறிந்து அவர்களின் விமோசனத்திற்கு எதைச் செய்யலாம் என்று ஆராய்ந்தறிய இன்று நாமெல்லாம் கூடியுள்ளோம்.\nஇதுவரை காலமும் எமது சொற்ப கால வாழ்க்கையில் பலதைச் சாதித்துவிட்டோம் என்ற திருப்தி எமக்குண்டு.\nமுதலில் காலக்கெடு வைத்து அவசர அவசரமாக அரசியல் தீர்வொன்றுக்கான அடித் தளத்தினை மக்கள் கலந்துரையாடல் மூலமாக ஆக்கி அம்பலப்படுத்தினோம். அரசாங்கத்திடமும் ஆராயுமாறு கையளித்தோம். பின்னர் யாழ் மண்ணில் எதிர்பார்ப்பு எதிர்வு கூறும் விதத்தில் மக்கள் பேரணியை எழுக தமிழ் என்ற நாமத்தில் எழுச்சிமிக்க கூட்டமொன்றை நடத்தினோம்.\nஅதே போல் மட்டக்களப்பு மண்ணிலும் மக்களை ஒன்றிணைத்து மதிப்பான எழுக தமிழ் பேரணி ஒன்றை நடத்தினோம். இவற்றை பலரும் பல விதமாக சித்திரித்திருந்தாலும் அவற்றின் பயன் ஆக்கபூர்வமாக அமைந்திருந்துள்ளது என்பதில் எமக்கு மனமகிழ்ச்சியே. எமது தமிழ் மக்கட் சகோதரர்களும், சிங்கள சகோதரர்களும் வெளிநாட்டு உறவினர்களும் அந்நாடுகளின் அரசாங்கப் பிரதி நிதிகளும் ஏன் இந்த எழுக தமிழ் என்று மூக்கின் மேல் கைவைக்குமளவிற்கு மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தன. எமது உறுப்பினர்கள், பிரதிநிதிகள், மதத்தலைவர்களின் அயராத உழைப்பே அந்த வெற்றியை ஈட்டித்தந்தது என்று கூறுவதில் பெருமிதம் அடைகின்றேன்.\nதற்போதும் எமது குழுக்கள் பல மக்கள் மத்தியில் விழிப்பை உண்டாக்கி பொருளா தாரம், கலை, கலாசாரம் போன்ற விடயங்கள் பற்றி அலசி ஆராய்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஇந்த நிலையில் தான் நாம் எல்லோரும் தங்குமிடம் ஒன்றில் கூடியுள்ளோம். அடுத்து நாம் செய்யவேண்டியது என்ன, எப்படி, எவ்வாறு அதனைச் செய்யவேண்டும் யாவரை நாம் சிந்திக்க வைக்கவேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடைகாணவே இங்கு கூடியுள்ளோம்.\nஇதுவரையான எமது பயணங்களை பட்டியல் இட்டால் - நாம் கட்சி கடந்து, தேர்தல் தேர்வு கடந்து, மாகாண வரையறைகளைக் கடந்து மக்களை எம்பால் ஈர்த்துள்ளோம் என்பது புலனாகின்றது. இவற்றிற்கு எமது புலம் கடந்த மக்களும் கடினமாக உழைத்துள்ளார்கள் என்பதும் எமது பலமே.\nஅடுத்தது என்ன செய்யவேண்டும் என இங்கு பலரும் பல கருத்துக்களை கூற உள்ளார்கள். அவற்றை இன்று நாம் கலந்தாலோசிப்போம். எமது நடவடிக்கைகள் எவ்வாறான மேலார்ந்த கரிசனைகளை கவனத்தில் எடுத்து நெறி முறைப்படுத்த வேண்டும் என்பது சம்பந்தமாக எனது கருத்துக்கள் சிலவற்றை முன் வைக்க விரும்புகின்றேன்.\nஅதாவது எமது நடவடிக்கைகள் மூவின மக்கட் கூட்டங்களை நோக்கியதாக அமைய வேண்டும். ஒன்று எம்மக்கள். மற்றையது சிங்கள மக்கள். மூன்றாவது சர்வதேச மக்கள். இ���ர்கள் மூவருக்கும் எமது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.\nஇதுவரை காலமும் நாம் எமது மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி வந்துள்ளோம்.\nஆனால் எம்முடன் இந்த நாட்டில் வாழப் போகும் சிங்கள மக்களுக்கு எமது கருத்துக்கள், கரிசனைகள், கவலைகள் சென்றடையவில்லை. இன்று தெற்கில் எமது நிலை அறிய, எமது கலை அறிய, எமது கவலையில் பங்கு கொள்ள ஒரு ஆர்வம் ஏற்பட்டு வருகின்றது. இதுவரை காலமான இன ரீதியான முறுகல்கள் எமது பொருளாதாரத்தைச் சீரழித்துள்ளது என்ற ஒரு காரணம் அவர்களுக்கு கவலை அளிக்கின்றது. உண்மை நிலையை ஊக்கமுடன் செயற்பட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nமீண்டும் ஒரு ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டால் நாடு கொள்ளாது என்ற அவர்களின் ஆதங்கமும் அவர்களுக்கு இருக்கின்றது. இதனால் அந்த மக்கட் சக்தியுடன் சேர்ந்து சிங்கள மக்களுக்குச் சென்றடையும் விதத்தில் எமது கவலைகளை, கரிசனைகளை, கட்டாய தேவைகளை எடுத்துரைக்க வேண்டிய ஒரு கட்டம் பரிணமித்துள்ளது என்பது எனது கருத்து. சில காலத்திற்கு முன்னர் அன்பர் குசால் பெரேராவுடன் சேர்ந்து நாம் நடத்திய பத்திரிகைப் பேட்டி நன்மை தருவதாக அமைந்திருந்தது.\nஅவ்வாறான கூட்டங்கள் இனிமேலும் நடைபெறவேண்டும். தமிழ் மக்கள் பேரவை தம்முடன் ஒத்துழைக்கக்கூடிய தென் பகுதியைச் சேர்ந்தவர்களுடன் கூடி எமது கருத்துக்களை சிங்கள மக்கள் முன் வைக்கவேண்டும். ஆனால் மக்கள் எமது கருத்துக்களை அறிய ஆர்வமாக இருந்தாலும் கூட சிங்கள ஊடக உரித்தாளர்களை அல்லது ஆசிரியர்களை கொண்ட ஆங்கில நாளேடுகள் கூட எமது கருத்துக்களை சிங்கள மக்களிடம் சென்றடைய விடமாட்டார்கள் போலத் தெரிகின்றது.\nஅண்மையில் இலங்கைத் தமிழர் பற்றி அவர்தம் சரித்திரம் பற்றி இழிவாகப் பேசிய ஒரு சிங்கள அன்பருக்கு பதில் கடிதம் ஊடகத்தின் ஊடாக அனுப்பியிருந்தேன். அதனைப் பிரசுரிக்க ஆசிரியர் அனுமதியளிக்கவில்லை என அறிகின்றேன். உண்மைகள் வெளிவராதிருக்க இவர்கள் சிலர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஆகவே தான் தமிழ் மக்களை அண்டி அவர்களின் பிரச்சினைகளை அறியும் அதே நேரம் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் அதே நேரம் சிங்கள மக்களுக்கும் அறிவுறுத்தல்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தல் எமக்கு அவசியமாகி���ுள்ளது.\nமுன்னர் கட்சிகள் சார்ந்த சில ஒத்துழைப்புக்கள் இருந்து வந்தன. ஆனால் இப்போது கட்சிபேதம் இன்றி சிங்கள மக்கள் யாவருக்கும் எமது கருத்துக்கள் சென்றடைய நாம் வழிவகுக்க வேண்டும்.\nஏன் என்று நீங்கள் கேட்கலாம். இப்பொழுது ஜனநாயக முறையில் எமது உரிமைகளை வென்றெடுக்க உறுதி பூண்டுள்ளோம். ஜனநாயகம் மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியுள்ளது. அங்குள்ள மக்கள் மனமாற்றத்திற்கு ஆளானால் தான் இங்குள்ள எமது மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படலாம். இது ஜனநாயகத்தின் அவசியப்பாடு.\nஇங்கு நாங்கள் எமது சிந்தனைகளின் போக்கைச் சிறிது அறிந்து வைத்திருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் பண்டமாற்று அடிப்படையிலேயே தமது உரிமைகளைப் பெற்றெடுத்து வருகின்றார்கள். இன்று நாம் உங்களுக்கு இந்த உதவியை அளித்தால் இவ்விவற்றை நீங்கள் எமக்கு தருவீர்களா என்று கேட்டுப் பெற்று வருகின்றார்கள்.\nஆனால் எமது பாரம்பரிய ஆணவமும் மிடுக்கும் அவ்வாறான பண்டமாற்றத்தை வரவேற்பதில்லை. நாம் இந்த நாட்டின் நிரந்தர குடிமக்கள் இன்னொருவருடன் பண்ட மாற்றத்தில் ஈடுபட எமக்குத் தேவை இல்லை எமது உரித்துக்கள் தரப்பட வேண்டியவை. ஆகவே நீங்கள் தந்தே ஆகவேண்டும். என்ற கருத்திலேயே நாம் இதுவரை காலமும் பயணித்து வந்துள்ளோம். இதில் பிழை இல்லை.\nஆனால் உண்மை நிலை என்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு வீராப்பு பேசும் நாங்கள் வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றோம். இங்கு எமக்குப் பக்கபலம் இல்லை. அங்கு பணபலம் இருக்கின்றது. ஆனால் இங்கு பக்குவமாக பேசக்கூடிய பாங்கு எமக்கு இல்லா திருக்கின்றது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகளுக்கு நான் எதிரானவனல்ல. ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் உரிய பயன்பாட்டை எமக்கு நல்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். எதற்கும் சிங்கள மக்களுடன் எமக்கு ஒரு கருத்துப் பரிமாற்ற யன்னல் அமைக்கப்பட்டால் அது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.\nஅடுத்தது வெளிநாட்டு அரசாங்கங்களுடன் எமது உறவைப் பலப்படுத்த வேண்டும்.\nஎன்னை காணவரும் வெளிநாட்டவர்கள் இலங்கை அரசாங்கத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டே வருகின்றார்கள். அவர்களின் கேள்விகள் அதனைப் பிரதிபலிக்கின்றன. இன்று உத்தியோகபூர்வ ரீதியாக நான் மட்டுமே அவர்களின் எண்ணப்பாடுகளை மாற்ற எத்தனித்து வருகின்றேன். உங்களில் பலர் வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் உறவுகள் வைத்து அவற்றினூடாக அவர்களின் எண்ணங்களை மாற்ற எத்தனித்திருக்கக் கூடும்.\nஎது எவ்வாறிருப்பினும் நாங்கள் எங்கள் கொள்கைகளை, கேள்விகளுக்கான பதில்களை அரசாங்கம் உரைக்கும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களுக்கான மாற்றுக் கருத்துக்களை உடனுக்குடன் பன்னாட்டுப் பிரதிநிதிகளுக்கு அறிவிக்க முன்வர வேண்டும்.\nதமிழ் மக்கள் பேரவை வெறுமனே உணர்ச்சிபூர்வமான தீவிரபோக்குடைய ஒரு அரசியல் அலகல்ல. எதனையும் ஆறஅமர சிந்தித்து பதிலளிக்கக்கூடிய ஒரு பேரவையே என்று அவர்கள் அடையாளம் காணும் வகையில் எமது நடவடிக்கைகள் சிறக்கவேண்டும்.\nஅண்மையில் துருக்கி உயர்ஸ்தானிகர் ஒரு சுமுகமான தீர்வு வருவதற்கு நான் இடைஞ்சலாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டினார். ஏன் சமஷ்டியை முன்னிலைப்படுத்துகின்றீர்கள் என்று கேட்டார். ஏன் வட க்கு கிழக்கை இணைக்கக் கேட்கின்றீர்கள் என்று கேட்டார். சமஷ்டி செக்கோஸ்லாவாக்கியா, யுகோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகளில் பிரிவினைக்கு இடங்கொடுத்துள்ளது என்றார். பிரிவினை வேண்டுமா என்பது இருதரப்பு மக்களும் ஒருவரோடு ஒருவர் பழகும் விதத்திலேயே அமைந்துள்ளது என்று கூறி க்யூபெக் கனடாவிலிருந்து பிரிய முன்வரவில்லை. ஸ்கொட்லாண்ட் பிரித்தானியாவில் இருந்து பிரிய முன்வரவில்லை என்று எடுத்துக் காட்டினேன். பழகும் விதத்தில்தான் இவை அமைந்துள்ளன என்றேன்.\nஎம்மை அடிமைப்படுத்தும் விதத்தில் சிங்கள மக்கள் நடந்து கொண்டால் நாம் அடிபணிய வேண்டும் அல்லது போராட வேண்டும். எமது பாரம்பரியம் போராடுவதை ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் அடிபணிய வைப்பதை எம் மக்கள் விரும்பமாட்டார்கள் என்றேன்.\nஅத்துடன் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு ஏன் எமக்கு நன்மை பயக்கப் போவதில்லை என்பது பற்றியும் எடுத்துக் கூறினேன். வடக்கு கிழக்கு இணைப்பை அவசியப்படுத்த இன்று வரை நடந்திருக்கும் சிங்கள உள்ளீடல்களையும் குடியேற்றங்களையும் காரணங்காட்டினேன்.\nஅவர் எமது கருத்துக்களை மங்கள சமரவீர அவர்களிடம் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கின்றேன். எனவேதான் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் அறிவை வளர்க்கும் அதே நேரம் சிங்கள மக்களிடை��ேயும் பன்னாட்டு பிரதிநிதிகள் இடையேயும் எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம் என்று கருதுகின்றேன். உங்கள் யாவரதும் கருத்துக்களையும் அறிய ஆவலாய் உள்ளோம் என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nசசிகலா ராஜ்ஜியம் சரிந்த கதை\nதமிழர்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை த.ம.பேரவை ...\nஅழிக்கப்பட்டனர் 1 இலட்சம் மக்கள்\nவடகொரியா: ஒரு கொலையின் கதை\nஎர்­டோ­கானின் எழுச்சி ஒரு சுல்­தானின் உரு­வாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-08-02T10:19:58Z", "digest": "sha1:6TX37FXGSGYVEEP55Q3T4M4PSMQJVKBY", "length": 7622, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "உயிரிழந்த வீரர் உறுப்புகள் தானம்: கனடா மக்களை நெகிழ வைத்த உண்மை சம்பவம் . – EET TV", "raw_content": "\nஉயிரிழந்த வீரர் உறுப்புகள் தானம்: கனடா மக்களை நெகிழ வைத்த உண்மை சம்பவம் .\nபேருந்து விபத்தில் சிக்கிய ஜூனியர் ஹாக்கி வீரர் Humboldt Broncos இறப்பதற்குமுன் தனது உடல் உறுப்புகளை தான் வாழ்ந்த நாட்டிற்கு தானமாக கொடுத்துச் சென்றுள்ளார். அவரது உடல் உறுப்புகளைப் பெற்றவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக திடீரென்று கனடாவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னிருந்ததைவிட வார இறுதியில் உடல் உறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாக British Columbiaவின் உறுப்பு தான ஏஜன்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேபோல் Ontario அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை மட்டும் உடல் உறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nHumboldtஇன் ஞானத்தந்தையான Neil Langevin, ஆறு பேர் Humboldtஇன் உடல் உறுப்புகளைப் பெற இருப்பதாகவும் அவரது மீதி உடல் பாகங்கள் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். சில வாரங்களுக்குமுன் Humboldt தனது 21 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார். அவரது இந்த செயல் அவரது தன்னலமற்ற குணத்தையும் மற்றவர்கள் மீது அவர் வைத்திருந்த இரக்க சுபாவத்தையும் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.\nHumboldtஇன் முன்மாதிரியைப் பின்பற்றி 182பேர் உடல் உறுப்பு தானம் செய்வதற்காக ஞாயிற்றுக் கிழமை பதிவு செய்துள்ளதாக Ontarioவின் Trillium Gift of Life Networkஇன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். British Columbiaவில் 363பேர் உறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்தனர். இந்நிலையில் Humboldtஇன் சிறுநீரகத்தை தானமாக பெற்ற பெண் ஒருவரின் உறவினர் தனது அத்தைக்கு Humboldt கொடுத்த வாழ்வுக்காக ட்விட்டரில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nவினிபெக்கில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nலாரி கவிழ்ந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாப பலி .\nஒன்ராறியோவில் புதிதாக 218 பேருக்கு COVID-19 தொற்று, 2 பேர் உயிரிழப்பு\n இரண்டு வயதான தமிழ் சிறுவன் பலி\nதீவிரமாக பரவும் டெல்டா வைரஸ் – இலங்கையர்களுக்கு 3 தடுப்பூசிகள்\nரிஷாட்டின் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பெண்\nபுதிய அரசியல் மாற்றம் அவசியம்\nதுருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் புதிதாக 30,738 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,604 பேர் பலி\nஇமாசல பிரதேசம் – கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு, 37,582 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nவினிபெக்கில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nலாரி கவிழ்ந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாப பலி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-08-02T09:18:33Z", "digest": "sha1:6PK5HET7XGVYVSCFHILFFFPB7Y7MCW2C", "length": 5574, "nlines": 70, "source_domain": "eettv.com", "title": "புகலிடம் கோருவோர்களுக்கு கனடாவின் முக்கிய அறிவிப்பு !! – EET TV", "raw_content": "\nபுகலிடம் கோருவோர்களுக்கு கனடாவின் முக்கிய அறிவிப்பு \nகனடாவின் மாண்ட்ரீல் நகரம், கோடை காலத்தில் புகலிடம் கோருபவர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், அவர்களை வரவேற்க தயாராகி வருவதாக தகவல��� வெளியாகியுள்ளது.\nகடந்த ஆண்டு கனடாவில் புகலிடம் கோரி குடியேறியவர்களுக்காக, மாண்ட்ரீல் நகரில் உள்ள ஒலிம்பிக் மைதானம் வசிப்பதற்கு ஏற்றவாறு மாற்றி தரப்பட்டது.\nஆனால், தற்போது அந்த மைதானத்தில் புகலிடம் கோரி வருபவர்களுக்கு அனுமதி அளிக்க, மைதான அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.\nஇதற்கு காரணம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, புகலிடம் தேடி வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே ஆகும் என கூறப்படுகிறது.\nஎனினும், மைதானத்தைத் தவிர்த்து புகலிடம் கோரி வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர தயாராக இருப்பதாகவும், அவ்வாறு வரும் மக்களை தாங்கள் வரவேற்பதாகவும், நகர நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் Magda Popeanu தெரிவித்துள்ளார்.\nஜனவரி மாதத்தில் 1,458 பேரும், பிப்ரவரி மாதத்தில் 1,486 பேரும் கனடாவின் எல்லையில் நுழைந்துள்ளனர். ஆனால், மார்ச் மாதத்தில் எவ்வளவு பேர் நுழைந்துள்ளனர் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.\nவிரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் சிவாஜி\nகனடாவில் 15 பேருக்கு மர்மக்காய்ச்சல்: ஒரு குழந்தை பலி\nஒன்ராறியோவில் புதிதாக 218 பேருக்கு COVID-19 தொற்று, 2 பேர் உயிரிழப்பு\n இரண்டு வயதான தமிழ் சிறுவன் பலி\nதீவிரமாக பரவும் டெல்டா வைரஸ் – இலங்கையர்களுக்கு 3 தடுப்பூசிகள்\nரிஷாட்டின் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பெண்\nபுதிய அரசியல் மாற்றம் அவசியம்\nதுருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் புதிதாக 30,738 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,604 பேர் பலி\nஇமாசல பிரதேசம் – கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு, 37,582 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nவிரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் சிவாஜி\nகனடாவில் 15 பேருக்கு மர்மக்காய்ச்சல்: ஒரு குழந்தை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/oneminuteonebook/", "date_download": "2021-08-02T09:12:29Z", "digest": "sha1:TVWLAV5PUEMJYJ6OG2PJJBGNHD54CTRY", "length": 2974, "nlines": 23, "source_domain": "oneminuteonebook.org", "title": "oneminuteonebook Archives - One Minute One Book", "raw_content": "\nமனோவுடன் விவாகரத்து கிடைத்த சந்தோசத்துடன் கோர்ட்டை விட்டு வெளியே வந்த பிரபல நடிகை அனுலேகா, விரைவில��� தொழிலதிபர் சுபாஷை மறுமணம் செய்யப் போவதாக பிரஸ் மீட்டில் தெரிவிக்கிறாள். அனுவை நடிகையாக்குவதற்காக அவளின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மனோ தனித்து விடப்பட்டான். சுபாஷ் பணத்திற்காகத் தான் அனுவிடம் பழகுவதாக முன்னாள் கணவன் மனோ அவளை எச்சரித்துச் செல்கிறான். சுபாஷின் உண்மையான சுயரூபம் அனுவின் மேனேஜர் மூலமாகத் தெரிய வருகிறது. அதன் பிறகு, உடன் நடிக்கும் ஹேமந்த்தின் அன்பை புரிந்துகொண்டு அவனுடன்... Continue Reading →\nகற்பனைகள்… பெரிய உருண்டையான இந்த பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களிலும் மனிதனை மட்டும் தனித்துக் காட்டும் ஒரு சமாச்சாரம்தான் கற்பனைகளும், கனவுகளும். இங்கு நடக்கும் அத்தனைக்கும் விதை போட்டது இதுதான். who knows… நாம் இப்போது வாழும் வாழ்க்கையை ஏதோ ஒரு ஆதி மனிதன் கனவாக கூட பார்த்திருக்கலாம். இன்னும் விளக்கமாக சொன்னால், ஏதோ ‘ஒரு’ மனிதன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருப்பினைக் கண்டுபிடித்திருப்பான். ஆனால் அதை எப்படி கையாளுவதென வேறு வேறு மனிதர்கள் தங்களது மூளைகளில்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthuyir.org/2021/06/04/", "date_download": "2021-08-02T09:40:41Z", "digest": "sha1:STRI5OAI73LVOLYWMIALIKN34HELYJ6K", "length": 3598, "nlines": 37, "source_domain": "puthuyir.org", "title": "Puthuyir - 4th June 2021", "raw_content": "\nகாலைத் தியானம் – ஜூன் 04, 2021\nஅக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கையின்மேல் பொல்லாப்புச் செய்ய எத்தனம்பண்ணி\nகொடிய பாவங்களும், தீய செயல்களும் யோசித்துத் திட்டமிட்டே செய்யப்படுகின்றன. அவைகள் திடீரென்று நிகழ்ந்துவிடுவதில்லை. ஒருவனுடைய எண்ணங்களும் திட்டங்களும் அவனுடைய உள்மனதின் குணாதிசயத்தைப் பிரதிபலிக்கின்றன. (A man’s real character is reflected in his thoughts and plans.) இரவு நீ படுக்கையில் படுத்தவுடன், எப்படிப்பட்ட எண்ணங்கள் உன் மனதில் ஓடுகின்றன பேராசையும், இச்சையும், பிறரை ஒடுக்கியாவது என்னுடைய விருப்பங்களை அடைந்துவிட வேண்டும் என்ற வேகமும் உன் மனதில் ஓடிக்கொண்டிருந்தால் பகலில் உன் செயல்கள் அவற்றை நிறைவேற்றும். இனிமையான எண்ணங்களும், பிறருக்கு உதவவேண்டும் என்ற வாஞ்சையும் உன் உள்ளத்தை நிரப்பிக் கொண்டிருந்தால், உன் செயல்களும் அவற்றை பிரதிபலிக்கும். நாம் கவனிக்கவேண்டிய காரியம் இன்னொன்றும் இருக்கிறது. பிறருக்கு விரோதமாகப் பொல்லாப்பு செய்கிறவர்கள் தங்கள் கையில் வல்லமை (அல்லது அ���ிகாரம்) இருக்கிறது என்று நினைத்து அப்படிச் செய்கிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் உனக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்திருந்தால் அவற்றை தவறாகப் பயன்படுத்தாதே.\nஆண்டவரே, இரவிலும் நான் தனிமையில் இருக்கும் நேரங்களிலும் என் எண்ணங்களைத் தூய்மையாகக் காத்துக் கொள்ளும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/177", "date_download": "2021-08-02T08:59:44Z", "digest": "sha1:6BAQF7YMHF554IKR4ZXMDBWCUQMVBVGC", "length": 7209, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/177 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 175\nகன்னலி என்பவர். அவரது சாதனை 207, 3 1/2. இந்தப் போட்டியில் நமது நாட்டின் சாதனை 1997 அங்குலமே. இப்பொழுது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதிக்குரிய துரத்தைக் கூட கடக்க முடியவில்லையே\n6 7” உயரமுள்ள நமது வீரர் பிரவின் குமாரால் இந்த எல்லையைத் தாண்டி எறிய முடியவில்லை என் றால் நல்ல உயரம், பலம் இருந்தும் ஏன் அடைய முடிய வில்லை என்றால், பயிற்சி இன்னும் போதவில்லை. இன் னும் நம் நாட்டு இளைஞர்களுக்கு ஊக்கம் பிறக்கவில்லை என்றே பொருள்.இன்று உலக சாதனை 24771/2 அங்குல மாக ரஷ்ய வீரர் அனாடலி பாண்டர் சச் என்பவரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எல்லையைக் கடக்க நமக்கு வலிமையும் துணிச்சலும் மட்டும் இருந்தால் போதாது. உழைப்பதற்குரிய மனத்தோடு, செயலில் தொடர்ந்து ஈடுபடும் குன்றாத செயல் வேண்டும். செய் வார்களா நல்ல உயரம், பலம் இருந்தும் ஏன் அடைய முடிய வில்லை என்றால், பயிற்சி இன்னும் போதவில்லை. இன் னும் நம் நாட்டு இளைஞர்களுக்கு ஊக்கம் பிறக்கவில்லை என்றே பொருள்.இன்று உலக சாதனை 24771/2 அங்குல மாக ரஷ்ய வீரர் அனாடலி பாண்டர் சச் என்பவரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எல்லையைக் கடக்க நமக்கு வலிமையும் துணிச்சலும் மட்டும் இருந்தால் போதாது. உழைப்பதற்குரிய மனத்தோடு, செயலில் தொடர்ந்து ஈடுபடும் குன்றாத செயல் வேண்டும். செய் வார்களா என்றால், செய்தால்தானே நாமும் மானத் தோடு வாழ்கிறோம் என்று மற்ற நாட்டார்கள் உணர்வார் கள்\nஇனி, பயிற்சி முறைகளைக் காண்போம்.\nஎறிவதற்குமுன், காற்றின் திசையைக் கண்காணித் துக் கொள்க.\nஇரும்புக் குண்டுக்கு எதிர் திசையில் இடுப்பின் அசைவு இருக்க, கைகள் முழு அளவு நீண்டிருக்க, முழங்கால் வளைந்திருக்க, சுற்றுகின்ற முறையை நன்கு பழக வேண்டும்; -\nமுதல்சுற்றைவிட, இரண்டாம் சுற்றிலே வேகம் இருக்க வேண்டும். மூன்றாவது சுற்றிலே, தன்னம்பிக்கை,\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 05:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-08-02T09:56:27Z", "digest": "sha1:N4VHB5SZD4TOCBIL5MSMUH6PLF6NBLXO", "length": 4697, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "வேதாந்தன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2016, 09:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/seeman-wrote-death-condolence-for-anbazhagan-death-q6thy5", "date_download": "2021-08-02T09:34:59Z", "digest": "sha1:FKIHNCUCL7D5PG6F6HKDWFPBLJMVHA63", "length": 9046, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'பெருமதிப்பிற்குரிய பேராசிரியர்'..! அன்பழகன் மறைவால் துயருற்ற சீமான்..! | Seeman wrote death condolence for Anbazhagan death", "raw_content": "\n அன்பழகன் மறைவால் துயருற்ற சீமான்..\nஇதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலான பொறுப்புகளில் பணியாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 98 வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் காலனமானார். அவரது மறைவு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்பழகன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அன்பழகன் உடலுக்கு ஏராளமானோர் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.\nஅன்பழகனின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், இதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலான பொறுப்புகளில் பணியாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.\n இறப்பிலும் இணை பிரியாத உயிர்த் தோழர்கள்..\nஅவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்' என சீமான் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மறைத்த அன்பழகனின் உடல் இன்று மாலை 5 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட இருக்கிறது. இதனால் ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கீழ்ப்பாக்கத்தில் அவரது இல்லம் முன்பாக திரண்டு வருகின்றனர்.\n'அவர் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும் தான்'.. அன்பழகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி..\nதோல்வியை நோக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்... கதறவிடும் காட்பாடி..\n#BREAKING கொரோனாவில் இருந்து மீண்ட துரைமுருகன்.. மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்..\n#BREAKING 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா.. அதிர்ச்சியில் ஸ்டாலின்\nஸ்டாலின் கையில் வேல் எடுத்ததே உங்களை சூரசம்ஹாரம் செய்யத்தான்.. அதிமுகவை அலற விடும் துரைமுருகன்..\nதிமுக தேர்தல் பணிகளைத் தடுக்க சதி... எடப்பாடி அரசு மீது துரைமுருகன் ஆவேச அட்டாக்..\nஇந்திய அணிக்கு இப்போதைக்கு இதைவிட பெரிய குட் நியூஸ் இருக்கவே முடியாது..\n‘96’ பட பாடகி திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய பிரபல இயக்குநரின் குடும்பம்....\n1.50 கோடி ரூபாய் அரசு நிதியில் பாரதமாதாவுக்கு ஆலயம்.. திமுக அமைச்சர் திறந்து வைத்தார்.\nதல ஃபேன்ஸ் சரியா 7 மணிக்கு ரெடியா இருங்க... போனிகபூர் கொடுத்த லேட்டஸ்ட் ‘வலிமை’ அப்டேட்...\nபள்ளிகள், கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது.. அமைச்சர் அதிரடி முடிவு.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/deepika-padukone-tests-positive-for-covid19-082656.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T10:20:46Z", "digest": "sha1:P7SALN3MTDD5CKFTGLLJUBM7BIQJMSL6", "length": 14408, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குடும்பத்தினரை தொடர்ந்து தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி! | Deepika padukone tests positive for covid19 - Tamil Filmibeat", "raw_content": "\nAutomobiles 2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது\nNews TN Lockdown: தினந்தோறும் புது புது கட்டுப்பாடுகள்.. தமிழ்நாட்டில் விரைவில் முழு லாக்டவுன்\nFinance அம்பானி ஷாப்பிங் லிஸ்டில் புது நிறுவனம்.. டாடா உடன் போட்டி போடும் மாஸ்டர் பிளான்..\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nSports அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய \"ரெக்கார்டு\".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடும்பத்தினரை தொடர்ந்து தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி\nபெங்களுர் : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nநடிகைகள் வீட்டில் சோகம் | பறிபோன உயிர் | Pia Bajpiee, Deepika Padukone\nதீபிகாவின் தந்தை, அவரது தாயார், இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஆ��ாங்க ஐயா.. ஒரே பதட்டமா இருக்கு.. விமர்சித்த நெட்டிசனை விளாசித் தள்ளிய கார்த்தி பட நடிகை\nஇதையடுத்து தீபிகா மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக அதிகரித்திருக்கிறது.\nநாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 15 கோடியே 89 இலட்சத்து 32 ஆயிரத்து 921 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.\nதீபிகா கடந்த ஒருமாதமாக பெங்களுரில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுகு முன்பு தீபிகாவின் தந்தை பிரகாஷ் மற்றும் தாயார் உஜ்ஜாலா, இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்கள் அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதையடுத்து, தீபிகா மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் வீட்டில் தனிமையில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தீபிகாவோ, ரன்வீரோ தங்களது சமூகவலைத்தளப்பக்கத்தில் உறுதிப்படுத்தவில்லை.\nஅடேங்கப்பா.. 500 கோடி பட்ஜெட்டா.. பூஜையுடன் ஆரம்பமானது பிரபாஸ் 21.. அமிதாப் பச்சன் பங்கேற்பு\nசீதா ரோலில் இந்த நடிகையா...நோ சொல்லும் ராமாயண பட தயாரிப்பாளர்கள்\nதலைவர் 169...பியூட்டி அப்டேட்...ரஜினியின் அடுத்த ஹீரோயின் இவரா\nடுவாடா குட்டா டாமி சதா குட்டா குட்டா வித்தியாசமான முறையில் ரன்வீருக்கு வாழ்ந்து சொன்ன தீபிகா படுகோனே\nஎன்னுடைய தீபிகா படுகோன்...ஷாக் கொடுத்த செல்வராகவன்\nதீபிகா படுகோனே தந்தை மருத்துவமனையில் அனுமதி.. அம்மா மற்றும் சகோதரிக்கும் கொரோனா உறுதி\nவாத்தி கம்மிங் பாடலுடன் அசத்தல் வீடியோ வெளியிட்ட தீபிகா படுகோனே\nஎம்ஏஎம்ஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்த தீபிகா...காரணம் இது தானாம்\nதங்கமாய் ஜொலிக்கும் தீபிகா படுகோனோ..லேட்டஸ்ட் போட்டோசூட் \nபாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி\n ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோ���ின் ‘பதான்’ படம் அடுத்த வருஷம் தான் ரிலீஸ்\nஅதிரடியாக தயாராகும் தூம் 4... வில்லனுக்கு பதில் வில்லியா...அதுவும் இவரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொஞ்சம் காத்தடிச்சாலும் அவ்ளோ தான்.. விஜய் பட ஹீரோயின் பண்ற வேலையை பார்த்தீங்களா\nதிடீரென டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா....அக்கினேனி எங்கே போச்சு\nஇங்கே சார்பட்டா கலக்கியது போல.. அங்கே சர்காரு வாரி பாட்டா கலக்குமா\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/alia-bhatt/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-08-02T08:37:22Z", "digest": "sha1:HNGK4RSZ7XABJEE2WII7GQEJR2AB2FC3", "length": 7611, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Alia Bhatt News in Tamil | Latest Alia Bhatt Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nபாகுபலி இயக்குநர் இஸ் பேக்.. தீயாய் தெறிக்கும் ராஜமெளலியின் RRR மேக்கிங் வீடியோ\nகொடூரமான தண்டனை கொடுக்கணும்.. ப்ரூனோவை மீன் முள்ளால் மாட்டிக் கொன்ற விவகாரம்.. கொதிக்கும் நடிகைகள்\nஇன்னும் அது மட்டும் தான் பாக்கி.. இந்த ஆண்டே வெளியாக அசுர வேகத்தில் ரெடியாகும் ராஜமெளலி படம்\nகட்டுக்கதைகளையும் வதந்திகளையும் நம்புறாங்க.. தடுப்பூசி குறித்த உண்மையை விளக்க களமிறங்கும் ஆலியா பட்\nஆலியா, ரன்பீரோட வேலை செய்யறது ரொம்ப உற்சாகமா இருக்கு... நாகார்ஜூனா மகிழ்ச்சி\nபாதுகாப்பா இருங்க... வீட்லயே இருங்க... வெதரை என்ஜாய் பண்ணுங்க... பட்டியலிட்ட பாலிவுட் குயின்\nதடுப்பூசி போடுங்க... பாதுகாப்பாக இருங்கள்... திரைப்பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ \nகொரோனாவிலிருந்து மீண்ட காதல் ஜோடி… ஹாயாக மாலத்தீவு பறந்தனர் \nநெகடிவ் ஆன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்த ஆலியா...ரசிகர்கள் மகிழ்ச்சி\nராம்சரணையும், ஜூனியர் என்.டி.ஆரையும் தூக்கிக் கொண்டாடும் மக்கள்.. தெறிக்கும் ஆர்.ஆர்.ஆர் போஸ்டர்\nகாதலரை தொடர்ந்து பிரபல நடிகைக்கும் கொரோனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகையில் வில்லேந்தி.. பிரளயமாக வெடிக்கும் அல்லுரி சீதாராமராஜு.. ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://teakadaibench.com/varalatril-indru-july-10/", "date_download": "2021-08-02T09:34:45Z", "digest": "sha1:OFQLCHBU6VZHHWPUQGRP6RVBQOJQZ3K2", "length": 15435, "nlines": 144, "source_domain": "teakadaibench.com", "title": "வரலாற்றில் இன்று ஜூலை 10..!", "raw_content": "\nவரலாற்றில் இன்று ஜூலை 10..\n1796 – ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.\n1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர்.\n1869 – சுவீடனில் காவ்லி நகர் தீயில் அழிந்தது. நகரின் 80% குடிமக்கள் வீடுகளை இழந்தனர்.\n1882 – பெருவுடனான போரில் சிலி பெரும் இழப்பைச் சந்தித்தது.\n1890 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாகச் சேர்க்கப்பட்டது.\n1909 – செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.\n1913 – கலிபோர்னியாவின் சாவுப் பள்ளத்தாக்கில் வெப்பநிலை 134 °ப (57 °செ) ஆகப் பதியப்பட்டது. உலகில் பதியப்பட்ட அதியுயர் வெப்பநிலை இதுவாகும்.\n1921 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் துப்பாக்கிச் சூடு, மற்றும் வன்முறைகளில் 16 பேர் கொல்லப்பட்டன, 161 வீடுகள் சேதமடைந்தன.\n1925 – சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.\n1925 – இந்திய ஆன்மிகத் தலைவர் மெகர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவரின் பக்தர்களால் நினைவுகூரப்படுகிறது.\n1938 – ஓவார்டு இயூசு 91-மணி நேரத்தில் உலகைச் சுற்றிவரும் விமானப் பயணத்தை ஆரம்பித்தார். இது புதிய உலக சாதனை ஆகும்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாட்சி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1942 – நெதர்லாந்தும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.\n1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு சிசிலியில் ஆரம்பமானது.Samuel Eliot Morison (2002). Sicily-Salerno-Anzio. University of Illinois press.\n1947 – முகம்மது அலி ஜின்னா பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக பிரித்தானியப் பிரதமர் கிளமெண்ட் அட்லீயினால் பரிந்துரைக்கப்பட்டார்.\n1951 – கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள் கேசாங் நகரில் ஆரம்பமாயின.\n1962 – உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.\n1966 – மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சிகாகோ விடுதலை இயக்கம் 60,000 பேர் கலந்து கொண்ட பெரும் பேரணியை நடத்தியது.\n1973 – வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n1973 – பகாமாசு பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.\n1976 – அங்கோலாவில் நான்கு கூலிப் படையினர் (ஒரு அமெரிக்கர், மூன்று பிரித்தானியர்) தூக்கிலிடப்பட்டனர்.\n1978 – மூரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.\n1985 – கிரீன்பீஸ் கப்பல் ரெயின்போ வாரியர் ஓக்லாந்து துறைமுகத்தில் பிரெஞ்சு முகவர்களினால் குண்டு வைத்துத் மூழ்கடிக்கப்பட்டது.\n1985 – சோவியத் உசுபெக்கித்தானில் ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 200 பேரும் உயிரிழந்தனர்.\n1991 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் முடிவுக்கு வந்ததை அடுத்து தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் மீண்டும் சேர்க்கப்பட்டது.\n1991 – போரிஸ் யெல்ட்சின் உருசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\n1991 – யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.\n1992 – போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் பனாமாத் தலைவர் மனுவேல் நொரியேகா புளோரிடாவில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.\n1997 – நியண்டர்தால் மனிதனின் எலும்புக்கூட்டில் இருந்து பெறப்பட்ட டி. என். ஏ. ஆய்வுகளில் இருந்து கூர்ப்பின் \"நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாட்டுக்கு\" ஆதரவான முடிவுகள் இலண்டனில் பெறப்பட்டன.\n2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.\n2011 – உருசியப் பயணிகள் கப்பல் பல்கேரியா வோல்கா ஆறு தத்தாரித்தானில் வோல்கா ஆற்றில் மூழ்கியதில் 122 பேர் உயிரிழந்தனர்.\n2017 – ஈராக்கின் மோசுல் நகரம் இசுலாமிய அரசுப் போராளிகளிடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டது.\n1856 – நிக்கோலா தெஸ்லா, செர்பிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1943)\n1871 – மார்செல் புரூஸ்ட், பிரான்சிய எழுத்தாளர் (இ. 1922)\n1919 – கரிச்சான் குஞ்சு, தமிழக எழுத்தாளர் (இ. 1992)\n1920 – ஓவன் சேம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2006)\n1925 – மகாதீர் பின் முகமது, மலேசியாவின் 4வது பிரதமர்\n1930 – இந்திரா பார்த்தசாரதி, தமிழக எழுத்தாளர்\n1931 – ஆலிசு மன்ரோ, நோபல் பரிசு பெற்ற கனடிய எழுத்தாளர்\n1939 – சரத் அமுனுகம, இலங்கை அரசியல்வாதி.\n1940 – மேக்நாத் தேசாய், இந்திய-ஆங்கிலேய பொருளியலாளர், அரசியல்வாதி\n1944 – கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து-கனடிய நடிகர், நாடகக் கலைஞர் (இ. 2014)\n1945 – வெர்ஜினியா வேடு, ஆங்கிலேய டென்னிசு ஆட்டக்காரர்\n1947 – கோட்டா சீனிவாச ராவ், தென்னிந்திய நடிகர், பாடகர்\n1949 – சுனில் காவஸ்கர், இந்தியத் துடுப்பாளர்\n1950 – புரோகோபிசு பாவ்லோபூலோசு, கிரேக்க அரசியல்வாதி\n1951 – ராஜ்நாத் சிங், இந்திய அரசியல்வாதி\n1958 – எல். கைலாசம், தமிழக புதின எழுத்தாளர்\n1959 – எலன் குராஸ், அமெரிக்க இயக்குநர், ஒளிப்பதிவாளர்\n1960 – சேத் கோடின், அமெரிக்க எழுத்தாளர்\n1968 – அசின் விராத்து, பர்மிய பௌத்த துறவி\n1980 – ஜெசிக்கா சிம்சன், அமெரிக்க நடிகை, பாடகி\n1953 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1878)\n1990 – காந்தரூபன், விடுதலைப் புலிகளின் கரும்புலி (பி. 1971)\n2000 – நாவேந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)\n2006 – ஷமீல் பசாயெவ், செச்சினியப் போராளித் தலைவர் (பி. 1965)\n2014 – சோரா சேகல், இந்திய ந்டிகை (பி. 1912)\n2015 – உமர் சரீப், எகிப்திய நடிகர் (பி. 1932)\nஅலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நினைவு தினம்\nதேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் - National Coloring Book Day\nவரலாற்றில் இன்று ஆகஸ்டு 2..\nபனைமரம் சாகுபடி முறைகள் & பயன்கள்\nவரலாற்றில் இன்று 17 November 2020\nஜெமினி கணேசன் பிறந்த தினம்\nவரலாற்றில் இன்று 13 November 2020\nஉலக நிமோனியா தினம் (World Pneumonia Day)\nவரலாற்றில் இன்று 12 May 2021\nஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்‌‌ பிறந்த தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/680571-tree-planting.html?frm=rss_more_article", "date_download": "2021-08-02T10:06:37Z", "digest": "sha1:QZLY7FONQOUSCMK3AK656MPXJNBBG3O4", "length": 17187, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஒரு மரக்கன்றைத் தன் வாழ்நாளில் நடவேண்டும்: நடிகர் தாமு வலியுறுத்தல் | tree planting - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 02 2021\nஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஒரு மரக்கன்றைத் தன் வாழ்நாளில் நடவேண்டும்: நடிகர் தாமு வலியுறுத்தல்\nபுதுகும்மிடிப்பூண்டியில் காந்தி உலக மையம் சார்பில் நடந்த மரம் நடும் விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ், காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டியில் காந்தி உலக மையம் சார்பில், மரம் நடும் விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு பங்கேற்று, மரம் நடும் பணியைத் தொடங்கி வைத்தார்.\nகரோனா வைரஸ் பரவல் மூலம் ஆக்சிஜனின் அவசியம் குறித்து நம்மை உணர வைத்துள்ளது இயற்கை. அத்தகைய ஆக்சிஜனை அளிக்கக் கூடிய மரங்களை ஆக்சிஜன் தொழிற்சாலையாக இனிவரும் சமுதாயம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காந்தி உலக மையம் (காந்தி வேர்ல்டு ஃபவுண்டேஷன்) சார்பில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் மரம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ், வட்டாட்சியர் மகேஷ், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்வின்போது, செய்தியாளரிடம் நடிகர் தாமு தெரிவித்ததாவது:\n”ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த இயற்கை ஆக்சிஜனின் தேவை அவசியம். இயற்கை ஆக்சிஜனை அதிகரிக்க வன விரிவாக்கம் அவசியம். ஆகவே, நம் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஒரு மரக்கன்றைத் தன் வாழ்நாளில் நடவேண்டும்.\nதமிழகத்தில் தற்போதைய சூழலில், மாணவர்களின் திறனை அறிந்துகொள்ளத் தேர்வு நடத்துவதை விட, உடலின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்வதற்கான கல்வி அவசியம்''.\nபுதுகும்மிடிப்பூண்டி பகுதிகளில் காலை முதல், மாலை வரை நீடித்த மரம் நடும் பணியில் சுமார் 180 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதுமட்டுமல்லாமல், காந்தி உலக மையம் சார்பில், சென்னை, திருவண்ணாமலை, தேனி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ஈரோடு, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் த���ா 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.\nபுதுச்சேரி ஆளுநரின் ஆலோசகர்களுக்கு 2 மாதச் செலவு ரூ.24 லட்சம்: ஆர்டிஐயில் தகவல்\nகரோனா நோயாளிகளுக்கு கொடுக்கும் 2-டிஜி மருந்து: அதிகஅளவில் தயாரிக்க ஒப்பந்தம்\nஇலங்கையின் சீனச் சார்பு நிலை; அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்: பிரதமருக்கு வைகோ கடிதம்\nஇணையத்தில் வைரலாகும் கேத்ரீனா - விக்கி மீம்ஸ்\nஆக்சிஜன்மரம் நடும் விழாகும்மிடிப்பூண்டிதொழிற்சாலைகரோனாமருத்துவ சிகிச்சைதாமுதிமுகDmkOxigen\nபுதுச்சேரி ஆளுநரின் ஆலோசகர்களுக்கு 2 மாதச் செலவு ரூ.24 லட்சம்: ஆர்டிஐயில் தகவல்\nகரோனா நோயாளிகளுக்கு கொடுக்கும் 2-டிஜி மருந்து: அதிகஅளவில் தயாரிக்க ஒப்பந்தம்\nஇலங்கையின் சீனச் சார்பு நிலை; அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்: பிரதமருக்கு வைகோ கடிதம்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டும் பிரசாந்த் கிஷோர்:...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nகுரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ்...\nகரோனா 3-வது அலையை சமாளிக்க தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்; நெல்லை ஆட்சியர்...\nஆண்டுக்கு ரூ.1.09 கோடி செலவு: கடந்த இரு ஆண்டுகளாக ஒரு வழக்கு கூட...\nபுதுச்சேரியில் தொகுதி வாரியாக ரேஷன் அட்டை புதுப்பித்தல் மேளா; இடைத்தரகர்கள் மீது போலீஸ்...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ்...\nபிரபல பாடகி கல்யாணி மேனன் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்\n‘பாகிஸ்தானில் மசூத் அசார் நடத்தும் தீவிரவாத ராஜ்யம்’- அம்பலப்படுத்திய ஆல்வியின் ஐபோன்\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 2 முதல்...\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nமது என நினைத்து சானிடைசரைக் குடித்த ஆட்டோ ஓட்டுநர் பலி: 2 பேருக்குத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/mer/176-news/articles/guest/3208-2016-02-22-11-56-15", "date_download": "2021-08-02T09:12:07Z", "digest": "sha1:IFONE22GIJFJYPCIO5R4S7UGQBJZ3FIW", "length": 35074, "nlines": 125, "source_domain": "www.ndpfront.com", "title": "நான் உமர் காலித், ஆனால்..... தீவிரவாதியில்லை!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநான் உமர் காலித், ஆனால்..... தீவிரவாதியில்லை\n(ஜே என் யு - JNU மாணவர் சங்கமான DSU தலைவரான உமர் காலித், தீவிரவாத தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டப்பட்டார். தேசத்துரோக குற்றச் சாட்டுக்கும் உள்ளானவர். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்திற்கு பல அச்சுறுத்தல் வந்த நிலையில், சரணடைவதற்கு முன்னால், JNU வில், ஜேஎன்யு மாணவர்களுக்காக அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.)\nகடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ தோழர்களுக்கும், ஆசிரிய தோழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த போராட்டம் ஐந்தாறு மாணவர்களுக்கான போராட்டம் கிடையாது. இன்று இந்த போராட்டம் நம் அனைவருக்குமான போராட்டமாகும். இந்த போராட்டம் இந்த ஒற்றை பல்கலைக்கழகத்தின் போராட்டம் மட்டுமல்ல, நாடெங்கிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் போராட்டமாகும். இது சமூகத்திற்கான போராட்டம் ஆகும். வருங்காலத்தில் நாம் எப்படியான சமூகத்தை படைக்க விரும்புகிறோம் என்பதற்கான போராட்டமாகும்.\nகடந்த பத்து நாட்களாக என்னை பற்றி எனக்கே தெரியாத பல விசயங்களை என்னால் கேட்க முடிந்தது. நான் இரண்டு முறை பாகிஸ்தான் சென்று வந்ததாக கேள்விப்பட்டேன். என்னிடம் பாஸ்போர்ட் இல்லையென்றாலும், நான் பாகிஸ்தான் சென்று வந்ததாக அறிந்தேன். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த அறிவாளிகள் என்றாலும், நான்தான் மாஸ்டர் மைண்ட் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. 18 பல்கலைக்கழகங்களில் நான் இந்த (அப்சல் குருவைத் தூக்கு தொடர்பான ஒருங்கிணைப்பு) நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முயற்சி செய்தேனாம். எனக்கு இந்த அளவுக்கு ஆற்றல் உள்ளது என்று எனக்கே தெரியாது.\nகடந்து இரண்டு மூன்று மாதங்களாகவே நான் இதற்கு திட்டமிட்டு வந்தேனாம் . கடந்த சில நாட்களில் மட்டும் 800 போன் கால்களை பேசியிருக்கிறேனாம். ஊடகங்களுக்கு இது குறித்து எந்த ஆதாரமும் தேவையில்லை. பொய்யென்றாலும் அதை உண்மை போல உறுதியாக சொல்கின்றன. காஷ்மீருக்கு, வளைகுடாவுக்கு என்று தொடர்ந்து சொ��்கிறார்கள். ஒரு ஆதாரத்தையாவது காட்ட வேண்டாமா அப்படி கால் செய்திருந்தால் ஒன்றும் நிகழப்போவதில்லை என்பது வேறு விசயம், ஆனால், செய்திருந்தால் ஒற்றை ஆதாரத்தையாவது காண்பிக்க வேண்டாமா அப்படி கால் செய்திருந்தால் ஒன்றும் நிகழப்போவதில்லை என்பது வேறு விசயம், ஆனால், செய்திருந்தால் ஒற்றை ஆதாரத்தையாவது காண்பிக்க வேண்டாமா விசாரணையில்லாமல், ஆதாரமில்லாமல் எதை வேண்டுமானாலும் இவர்கள் சொல்வார்கள். அதாவது இவர்களுக்கு வெட்கம் என்பது வருவதேயில்லை. அவர்களுக்கு வெட்கம் வர வேண்டும் என்று எதிர்பார்த்தோமேயானால், நம்மை நாமே முட்டாள்களாக்குவதற்கு சமம்.\nநம்மை தவறாக சித்தரிப்பதற்காகவே இந்த ஊடகங்கள் நடத்திய விசாரணை, அரசாங்க தரப்பிலிருந்து மொஹம்மதோடு எந்த தொடர்பும் இல்லை என்று வந்த பிறகும், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று இவர்களுக்கு தோன்றவே இல்லை. இப்படி மிகக்கேவலமாக சொல்லப்பட்ட இந்த பொய்களால், ஊடகங்கள் நாங்கள் அடங்கிவிடுவோம் என்று நினைத்தால், அது நடக்காது. ஆதிவாசிகள் என்றால் மாவோயிஸ்டுகள் என்பதும், இஸ்லாமியர் என்றால் தீவிரவாதிகள் என்பதும் என்ற தொடர் பரப்புரையில் அரசு இயந்திரமும், ஊடகமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இப்படியான குற்றச்சாட்டுகளில் அகப்படுகிற அப்பாவிகளின் குரல் பல நேரம் வெளியில் கேட்பதில்லை. ஆனால், இந்த முறை தவறான இலக்கை அவர்கள் தேர்வு செய்து விட்டார்கள். ஜேஎன்யூ மாணவர்கள் இதற்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். ஒவ்வொரு ஊடகமும் இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் .\nநான் என்னை பற்றி கவலைப்பட்டதில்லை. நீங்கள் ஆயிரக்கணக்கில் என்னோடு இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், என் சகோதரி மற்றும் தந்தையின் பேட்டிகளை படித்த பிறகுதான் எனக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.\nஎனக்கு ஏராளமான சகோதரிகள் இருக்கிறார்கள், அவர்களையெல்லாம் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்ற வழிகளிலும் வன்புணர்ந்துவிடுவோம் என்றும், அமிலம் ஊற்றி விடுவோம் என்றும், கொலை செய்து விடுவோம் என்றும் கேவலமான முறையில் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கின்றனர். பஜ்ரங் தள் கூட்டம் கந்தமாலில் கிருஸ்துவ சகோதரியை வன்புணர்ச்சிக்குள்ளாக்கிய போது பாரத் மாதா கி ஜெய் என்றுதான் முழக்கமிட்டார்கள்.தோழர் கண்ஹையாவின் அன்றைய உர��யை நினைவுப்படுத்த விரும்புகிறேன். உங்கள் பாரத மாதாவில் எங்கள் அன்னையும், சகோதரியும் இல்லையென்றால், அதை எங்கள் பாரத மாதாவாக ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி சொல்வதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை.\nஎன் தந்தையிடம் விசாரணை என்ற பெயரில் அவரது பழைய செயல்பாடுகளை எடுத்து, அதை வைத்து என் மீது முத்திரை குத்த முயற்சி செய்கிறார்கள். அதாவது, எப்படியாவது குற்றம் சுமத்திவிட வேண்டும் என்ற முனைப்பு. சிலர் ஜீ நியூசில் இருக்கிறார்கள், டைம்ஸ் நவ்வில் ஒரு அண்ணன் இருக்கிறார், அவரின் பெயரை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை மேலும் சில ரிப்போர்ட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜேஎன்யூ மாணவர்கள் மீது இவ்வளவு வெறுப்பும், கோபமும் எங்கிருந்து வந்தது என்பது புரியவில்லை. இவ்வளவு வெறுப்பை எப்படி வந்தது\nஎன் மேல் நடந்த மீடியா விசாரணையை பற்றி ஒரு சிறிய விசயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வளாகத்தில் அரசியல் செய்து வருகிறேன். ஒரு கணம் கூட என்னை இஸ்லாமியனாக உணர்ந்தது கிடையாது. என்னை முஸ்லீமாக வெளிப்படுத்தியதும் கிடையாது. நான் புரிந்து கொண்டவரையில் சமூக ஒடுக்குமுறை என்பது இஸ்லாமியர்கள் மீதும் மட்டும் இல்லை, தலித்துகளின் மீதும், பழங்குடிகளின் மீதும் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் எங்களை போன்றவர்கள், உடனடி அடையாளத்திலிருந்து வெளிவந்து, அனைத்து பிரச்சினைகளையும் முழுமையாக பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இஸ்லாமியனாக எண்ணாத எனக்கு கடந்த பத்து நாளில்தான் நான் இஸ்லாமியன் என்று தோன்றியது. ரோஹித்தின் சொல்லில் கூற வேண்டுமானால், நான் என் உடனடி அடையாளத்தில் சுருக்கப்பட்டு இருக்கிறேன். என்னை பாகிஸ்தானின் ஏஜெண்ட் என்று சொல்கிறார்கள். நான் பாகிஸ்தான் கவிஞர் ஒருவரின் ஓரிரு வரிகளை இங்கே கூற ஆசைப்படுகிறேன்.\nஇரு நாட்டின் மீது அமெரிக்காவின் கரம் இறுகியுள்ளது,\nநீங்களோ அந்த கரம் பற்றிக் கொண்டு அலையும்\nதரகர் வேலையைத் தவிர ஒன்றுமே அறியாத இவர்கள், அரசாங்கம் என்ற பெயரில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் கனிம வளங்களை, இயற்கை வளங்களை, மனித வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ��ிற்று வருகிறது. கல்வியை விற்கிறது. உலக வர்த்தக ஒப்பந்த மாநாட்டில் மண்டியிட்டு நிற்கிறது. இவர்கள்தான் தேசபக்தி என்றால் என்ன என்று எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.அவர்கள் நம்மை தேசவிரோதிகள் என்கிறார்கள். உலக தேசவிரோதிகளே ஒன்று சேருங்கள். மக்களின் மீதான பிரியத்தில் ஊன்றி நின்று, மக்களின் உரிமைகளுக்காக போராடுங்கள். நமக்கு எல்லைகள் கிடையாது, கட்டுகள் கிடையாது. உலகெங்கிலும் இருக்கிற அரச ஆளும் வர்க்கத்திற்கு எதிராக திரள்வோம். இதுபோன்ற இழிவான உத்திகளால், அவர்கள் எம்மை அச்சுறுத்த முடியாது. எங்களை மெளமாக்க முடியாது.\nதோழர்களே, உங்களுக்கு நான் ஆலோசனை கூற வேண்டிய தேவையில்லை. நாம் அஞ்ச வேண்டிய, பதட்டப்பட வேண்டிய தேவையில்லை. அவர்களிடம் பெரும்பான்மை இருக்கலாம், நாடாளுமன்றத்தில் நிறைய சீட்டுகள் இருக்கலாம், அரசு இயந்திரம் காவல்துறை, இராணுவம் இருக்கலாம், இருந்தும், அவர்கள் கோழைகள். அவர்கள் நம்மை கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் நமது போராட்டங்களை கண்டு அஞ்சுகிறார்கள். நாம் சிந்திக்கிறோம் என்பதே அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.\nஎனது தோழன் நிர்பான் பிப்ரவரி 10-ஆம் தேதி ஊடகங்களில் கூறினார் “தேசவிரோதியாவது அனைத்திலும் எளியது. நீங்கள் சிந்திக்க தொடங்கிவிட்டாலே உங்களுக்கு தேசவிரோதி முத்திரை விழுந்துவிடும்.” ஒருவேளை இப்படியான வழிமுறைகளின் வழியாக எங்களை அச்சுறுத்திவிடலாம் என்று நினைத்தார்கள் என்றால், அவர்கள் பெரிய மாயை ஒன்றில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள்.\nநான் ஏற்கனவே கூறியதை போல, தவறான பல்கலைக்கழகத்தில் கை வைத்துவிட்டீர்கள் ஏற்கனவே, பல்வேறு பல்கலைக்கழகங்களை அச்சுறுத்த முயன்று வருகிறீர்கள். திரைப்பட கல்லூரியாகட்டும், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்ததாக இருக்கட்டும், ரோஹித் வெமுலா மற்றும் அவரது தோழர்களுக்கு நிகழ்ந்த அடக்குமுறைகளாகட்டும், ரோஹித் வெமுலா கொலை செய்யப்பட்டதாக இருக்கட்டும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சந்தீப் பாண்டேக்கு நேர்ந்ததாக இருக்கட்டும்...அனைத்து போராட்டங்களிலும் நாங்கள் தோளோடு தோள் நின்று போராடியிருக்கிறோம்.\nஒவ்வொரு போராட்டத்தையும் தெருவுக்கு, மக்களிடம் எடுத்து சென்றிருக்கிறோம். எங்களுக்கு எங்கள் கடமை என்ன எ���்பது புரிந்துதான் இருக்கிறது. ஜேஎன்யூ போராட்டங்களில் முன்னணியில் நிற்கிறது என்பதற்காக ஜேஎன்யூவை ஒழித்து கட்டுவோம் என்று முடிவு செய்திருந்தீர்கள் என்றால், உங்களை போல பலர் வந்து சென்றார்கள், அவர்களே முடிந்து போனார்கள் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.\nஒருவேளை, நீங்கள் இந்திரா காந்தியை மறந்திருக்கக் கூடும். எமெர்ஜென்சிக்கு பிறகு இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்த போது, அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் மன்மோகன்சிங்கை மறந்து போயிருக்கக் கூடும். அவர் நேருவின் சிலையை திறந்து வைக்க வந்திருந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இதே பல்கலைக்கழகம் போராடியது. ப.சிதம்பரம் இந்த பல்கலைகத்திற்கு வந்த போது, மாணவர்கள் அவரை வரவேற்பார்கள் என்று கருதினார். ஆனால், மாணவர்கள் யார் பக்கம் என்பதையும், அவருடைய இடம் எது என்பதையும் மாணவர்கள் அவருக்கு புரிய வைத்தார்கள். ஜேஎன்யூ என்றுமே விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் பக்கம்தான் நிற்கும். உங்களின் கீழ்த்தரமான உத்திகளால் நாங்கள் அஞ்சிவிடப்போவதில்லை.\nதோழர்களே, இவை அனைத்தும் நம்மை உளவியல் ரீதியாக சீண்டி பார்க்கும் திட்டம் கொண்டது. அவர்கள் நாம் பயந்து விடுவோமோ என்று சோதித்துப் பார்க்கிறார்கள். அவர்களின் சவாலை நாம் ஏற்றுக் கொண்டு, நாம் அஞ்சமாட்டோம், மாறாக, எதிர்த்து போராடுவோம் என்பதை அவர்களுக்கு உறுதியாக தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். நாங்கள் அனைத்து முனைகளிலிருந்து உங்களை எதிர்ப்போம்.\nஎந்தவித அச்சமும் இல்லாமல், அனைத்து பிரச்சினையிலும், எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டும். தோழர்களே, இவர்கள் பெரும் கோழைகள். அவர்களின் மாணவர் அமைப்பு அகில பாரதிய வித்யா பரிஷத், இந்த வளாகத்தின் குரங்கு படை. அவர்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. உங்களது செயல்திட்டம் முன்னுக்கு வரவில்லையா குழப்பம் விளைவியுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர், ரிஜிஸ்டிரார், காவல்துறை, எம்.பி என அனைவரும் உங்கள் பக்கம் நிற்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர்களுக்கு உறுதி வழங்கப்பட்டிருக்கிறது.\nஅப்பாராவுக்கு பதிலாக ஜக்தீஷ் குமாரை நியமித்ததாகட்டும், தத்தாத்ரேயாவுக்கு பதிலாக மகேஷ் கிரியை நியமித்ததாகட்டும் அவர்களுடைய செயல்வடிவம் ஒன்றே ஒன்றுதான்.\nஇனிமேலும், ரோஹித்துக்கு நடந்தது எங்கும் நடக்காது. நாங்கள் எங்கள் உடனடி அடையாளத்தோடு சுருங்கமாட்டோம். நாங்கள் இதற்கு தொடக்கமாக இருப்போம், சிறகு விரித்து பறப்போம், எதிர்கொள்வோம். நாங்கள் எதனால் உருவாக்கப்பட்டோம் என்பது எங்களுக்கு தெரியும். இந்த பல்கலைக்கழகத்தை நாங்கள் நேசிக்கிறோம். இந்த சுதந்திர வெளி நாங்கள் உருவாக்கியது. அதில் ஒரு இன்ச் இடத்தைக் கூட உங்களுக்கு தர மாட்டோம். நீங்கள் இந்த வெளியை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்.\nஏபிவிபி-க்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும், அவர்களால் மக்களிடம் சென்று, மக்களை அணி திரட்ட முடியாது. கடந்த பத்து நாட்களாக ஊடகங்களின் வழியாக, இத்தனை ஊடக விசாரணைக்கு பிறகும், பிரச்சாரங்களுக்கு பிறகும், பத்து நாட்களுக்கு முன் உறங்கி கிடந்ததை போல தேசபக்தியை எழுப்ப எடுக்கப்பட்ட முயற்சிக்கு பிறகும், அவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், நமக்கு ஆதரவான போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுக்கிறார்கள். இங்கே பதினைந்தாயிரம் பேர் திரண்டார்கள். ராகுல் காந்தி இந்த வளாகத்திற்கு வந்திருந்த போது ச்சீ(ஜீ) நியூஸ் தொலைக்காட்சி, மாணவர்களிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது என்று சொன்னதை கவனித்தேன். ஆனால், இந்தப்பக்கம் 3000 பேரும், அங்கே பத்து பன்னிரெண்டு பேரும்தான் இருந்தார்கள் என்று அதற்கு பிறகுதான் தெரியவந்தது.\nசெய்திகளை திரிப்பதற்கு கொஞ்சம் கூட வெட்கமின்றி எப்படி பொய் சொல்ல வேண்டும் என்ற திறன் இவர்களுக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது. தோழர்களே, இந்த பல்கலைக்கழகம்தான் நமக்கு கற்பித்திருக்கிறது. இங்கிருந்துதான் மாணவர் போராட்டங்களை நடத்தினோம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், எந்த பல்கலைக்கழகம் மாற்று கருத்துக்கு இடமளிக்க மறுக்கிறதோ, அது பல்கலைக்கழகம் அல்ல, அது சிறை. நம் பல்கலைக்கழகங்களை சிறைக்கூடங்களாக மாற்றும் இவர்களின் செயல்திட்டங்களை நாம் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நின்று கண்டிப்பாக தோற்கடிப்போம்.\nநாம் நம்மிடையே உள்ள அமைப்புகளுக்குள் இருக்கும் மாற்றுக் கருத்துகளை எப்படி எதிர்கொள்வது, எப்படி விவாதித்து முடிவை எட்டுவது என்பது நமக்கு தெரியும். தோழர் அசுதோஷ், தோ��ர் அனந்த்தின் அமைப்பு ஏதாவதொரு நிகழ்ச்சி நடத்தும் போதோ, அல்லது நாம் ஏதாவதொரு நிகழ்ச்சி நடத்தும் போதோ, நமக்குள்ளேயே எதிரெதிராக நிகழ்ச்சிகளை நடத்தினாலும், எந்த நிகழ்ச்சியிலும் புகுந்து குழப்பம் விளைவிக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. ஏனென்றால், மக்களை சந்திப்பது எப்படி என்பது நமக்கு தெரியும். இவர்களின் உத்திகளுக்கு நாம் கண்டிப்பாக அடிபணிய மாட்டோம்.\nஇந்த தாக்குதல் பல்கலைக்கழத்திற்கு எதிரானது மட்டும்தான் என்று புரிந்து கொள்ள வேண்டாம். என் உரையை முடிக்கும் முன்னர் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாடு முழுக்க பல்வேறு தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஹோண்டா தொழிலாளர்கள் மீதும், சோனி சோரியின் மீதும், ஜக்தல்பூர் சட்ட உதவிக் குழுவின் மீதும் நடத்திய தாக்குதல்களை எதிர்க்கும் அனைத்து போராட்டங்களையும் ஒருங்கிணைத்து நாம் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் பக்கம் நிற்க வேண்டும். ஜேஎன்யூவின் இந்த கலாச்சாரத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.soydemac.com/ta/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-02T08:33:49Z", "digest": "sha1:NUKLT3332NYG47IBVWSR3M6O4ZUYVI5T", "length": 41057, "nlines": 217, "source_domain": "www.soydemac.com", "title": "மேக் மினியில் ரேம் விரிவாக்க முடியுமா? | நான் மேக்கிலிருந்து வந்தவன்", "raw_content": "\nரேம் ஒரு மேக் மினிக்கு மேம்படுத்தவும்\nஜோர்டி கிமினெஸ் | | மேக் மினி, Mac OS X,, எங்களை பற்றி\nநாம் ஒரு மேக் வாங்கப் போகும்போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று, எங்கள் புதிய இயந்திரத்தை நாம் கொடுக்கப் போகும் பயன்பாடு மற்றும் உபகரணங்களை புதுப்பிக்க எடுக்கும் நேரம் ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையது. முன்பு ஆப்பிளில் பயனர் சிலவற்றைக் கொண்டிருந்தார் உங்கள் மேக் வன்பொருளை மேம்படுத்த விருப்பங்கள் உள்ளன சில மேக்ஸில் வன்பொருளைச் சேர்க்க முடியும் என்ற போதிலும், எதிர்மாறாகக் காட்டும் சில விவரங்களை இன்று நாம் காணப்போகிறோம். புதிய ஐமாக் வழக்கு இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு, அதாவது 2012 வரை இது எளிமையானது இப்போது அதிக ரேம் சேர்க்கவும் (தற்போதைய 27 ″ மாதிரியைத் தவிர) அல���லது வன் வட்டை மாற்றவும், ஆனால் இன்று நாம் பேசுவோம் மேக் மினி பற்றி மேலும் விரிவாக.\nநுழைவு நிலை மேக்ஸில் ஒன்று சந்தேகத்திற்கு இடமின்றி மேக் மினி ஆகும். இந்த கச்சிதமான மற்றும் மலிவான கணினி ஒரு கணினியிலிருந்து வரும் எந்தவொரு பயனரையும் மேக் வாங்குவதைப் பரிசீலிக்கிறது. வெவ்வேறு உள்ளமைவுகளுடன் கூடிய மேக் மினியின் வெவ்வேறு மாதிரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளும் கணினியை உருவாக்குகின்றன, என்றால், இந்த மேக்கில் மாதிரியை நன்றாகத் தேர்வுசெய்க விரிவாக்க விருப்பங்கள் இன்று குறைவாகவே உள்ளன.\n1 பழைய மேக் மினியில் ரேம் விரிவாக்கவும்\n2 தற்போதைய மேக் மினியில் ரேம் மாற்றுவது: சாத்தியமற்றது\nபழைய மேக் மினியில் ரேம் விரிவாக்கவும்\nநான் பழைய மேக் மினிஸைப் பற்றி பேசும்போது நான் சொல்கிறேன் ஆப்பிள் இனி விற்காத அனைவருக்கும். 2005 ஆம் ஆண்டில் சந்தைப்படுத்தத் தொடங்கிய மேக்ஸின் தொடர் என்பதால் குபெர்டினோவிலிருந்து வந்தவர்கள் நிறுத்திவிட்ட மேக் மினியை நான் வேறுபடுத்திப் பார்க்க மாட்டேன், இன்று அவை கணினியிலிருந்து வந்து பயனர்களைக் கொண்ட சிறந்த மேக் ஒன்றாகும் சொந்த மானிட்டர், விசைப்பலகை, சுட்டி.\nஆரம்பத்தில் நான் உங்களுக்கு மேக்கைப் பயன்படுத்தப் போவது குறித்து தெளிவாக இருப்பதைப் பற்றி சொன்னேன், இது ஆப்பிள் அடிப்படையில் இனி இந்த கணினிகளில் செயல்பட அனுமதிக்காத விரிவாக்க விருப்பங்களுடன் நேரடியாக தொடர்புடையது. இந்த விஷயத்தில், இந்த சாத்தியமான மேம்பாடுகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால் அல்லது சிறிய ஆனால் குறைந்த சக்திவாய்ந்த மேக் மினி பற்றி மேலும் சில விவரங்களை அறிய விரும்பினால், இப்போது தொடங்கப்பட்டதிலிருந்து வரலாற்றின் வழிகாட்டி அல்லது தொகுப்பிற்கு நான் உங்களைக் குறிப்பிடுகிறேன் சுமார் 11 ஆண்டுகள் சில நாட்களுக்கு முன்பு வலையில் எழுதினோம். அதில் நீங்கள் அதைப் பார்ப்பீர்கள் அலுமினியம் மேக் மினி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இயந்திரங்களை விரிவாக்குவதற்கான சாத்தியத்தின் அடிப்படையில் விஷயங்கள் மாறிவிட்டன ஆப்பிள் இந்த பிரச்சினையில் கடுமையானதாக மாறியது மற்றும் பயனர் தங்கள் மேக்ஸின் உள் வன்பொருளை மாற்றியமைக்க விரும்பவில்லை மற்றும் மினி விதிவிலக்கல்ல, ஏனெனில் இது நேரடியாக போர்டில் கரைக்கப்பட்ட பகுதிகளை கொண்டு வந்தது.\nதற்போதைய மேக் மினியில் ரேம் மாற்றுவது: சாத்தியமற்றது\nஇன்று, எந்தவொரு ஆப்பிள் கணினியையும் பயனரால் விரிவாக்க முடியாது என்று வகைப்படுத்தலாம், 27 அங்குல ஐமாக் தவிர, அதிக ரேம் சேர்க்க அதன் பின்புறத்தில் ஒரு சிறிய அட்டையை கூட சேர்க்கிறது, மீதமுள்ளவை எப்போதுமே அவை வந்தபடியே இருக்கும். ஆப்பிள் ஸ்டோர் . இந்த புதிய மேக் மினியில் பயனர் சிறிதளவு அல்லது எதுவும் செய்ய முடியாது, அதாவது அடிப்படையில் எல்லாம் மதர்போர்டில் ஒட்டப்பட்டுள்ளது அல்லது கரைக்கப்படுகிறது.\nபுதிய கூறுகள் மூலம் அதன் உள் வன்பொருளை அதிகரிக்கவோ அல்லது மேம்படுத்தவோ வாய்ப்புள்ள பழைய மேக் மினி ஒன்றை உங்கள் கைகளில் வைத்திருக்கும் பயனர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், அதை விற்க வேண்டாம், இந்த வாய்ப்பை அனுபவிக்கவும். இன்றும் அது உண்மைதான் \"மூத்த\" மேக் மினியை சமாளிப்பது கடினம் அவை மென்பொருள் புதுப்பிப்புகளை அனுமதிக்காததால், சில பயன்பாடுகளைப் பயன்படுத்துவது கடினம் அல்லது சாத்தியமற்றது என்பதால், அதைவிட மோசமானது, இதை ஒரு சிறிய புதையலாக வைத்திருக்க பரிந்துரைக்கிறோம்.\nதற்போது நாம் ஒரு மேக் மினி நுழைவு 549 யூரோக்கள் செலவாகும் மற்றும் வீட்டில் சேர்க்கிறது: 5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ 1,4 செயலி, 500 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம், 500 ஜிபி ஹார்ட் டிரைவ், இன்டெல் எச்டி கிராபிக்ஸ் 5000 கிராபிக்ஸ் மற்றும் ஓஎஸ் எக்ஸ் எல் கேபிடன். இந்த இயந்திரம் பிரித்தெடுக்கப்பட்ட ராஜாக்களால் பட்டியலிடப்பட்டுள்ளது, iFixit, ஒரு மதிப்பெண்ணுடன் 6 ஆம் தேதி 1 பழுதுபார்ப்புக்காகவும், இந்த ஆப்பிள் கணினிகளை ஒன்றிணைப்பதிலும் பிரிப்பதிலும் அவர்கள் வல்லுநர்கள் என்பது உண்மைதான் என்றாலும், சற்று அதிக சக்திவாய்ந்த கொள்முதல் செய்வதற்குச் சென்று இந்த மேக் மினி மாடலை ஒதுக்கி வைப்பது நல்லது. அதை கவனியுங்கள் ரேம் அல்லது வட்டு விரிவாக்கம் கிட்டத்தட்ட சாத்தியமற்றது இந்த மேக் மினிஸில் (உங்களால் முடியும், ஆனால் நாங்கள் அதை பரிந்துரைக்கவில்லை), எனவே தொடக்கத்திலிருந்தே உயர்ந்த அமைப்பைத் தேர்வுசெய்து இந்த மேக்ஸைத் திறப்பதை மறந்துவிடுவது நல்லது.\nநீங்கள் மேக் மினியை தொடக்கத்திலிருந்தே வாங்கினால், டெஸ்க்டாப் பிசி மூலம் நீங்கள் செய்யக்கூடியதைப் போலவே அதிக சக்திவாய்ந்த வன்பொருளையும் சேர்க்கலாம் என்று உங்களில் பலர் நினைப்பார்கள், ஆனால் உண்மையிலிருந்து எதுவும் இல்லை. இந்த மேக் மினி ஒன்றை நீங்கள் விரிவாக்க விரும்பினால், பாதுகாப்பான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஆப்பிளின் தொழில்நுட்ப சேவைக்கு அல்லது நம்பகமான கணினி தொழில்நுட்ப வல்லுநருக்குச் செல்ல வேண்டியிருக்கும், இது கூறுகளின் விரிவாக்கம் அல்லது மேம்பாட்டைச் செய்ய முடியும், எனவே சிறந்த ஆலோசனை இன்னும் கொஞ்சம் சேமித்து, சிறந்த மாடலுக்கு நேராகச் சென்று எதிர்காலத்தில் குறைந்து வருவதைத் தவிர்க்க.\nமேக் மினி மற்றும் அடுத்த தலைமுறையை விரிவாக்க ஆப்பிள் அதிக சிக்கல்களை ஏற்படுத்துகிறது அது 2016 இல் வர வேண்டும் (இது அவரது முறை) வித்தியாசமாக இருக்காது.\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: நான் மேக்கிலிருந்து வந்தவன் » மேக் கணினிகள் » மேக் மினி » ரேம் ஒரு மேக் மினிக்கு மேம்படுத்தவும்\n25 கருத்துகள், உங்களுடையதை விடுங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nதரவுக்கு பொறுப்பு: மிகுவல் ஏஞ்சல் கேடன்\nதரவின் நோக்கம்: கட்டுப்பாட்டு ஸ்பேம், கருத்து மேலாண்மை.\nதரவின் தொடர்பு: சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது.\nதரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம்\nஉரிமைகள்: எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம்.\nஇணைய சந்தைப்படுத்தல் வலைப்பதிவு அவர் கூறினார்\nநான் ஏற்கனவே எனது மேக் மினியை 2 ஜிபி மற்றும் 250 எச்டிக்கு விரிவுபடுத்தியுள்ளேன் \nஇணைய சந்தைப்படுத்தல் வலைப்பதிவிற்கு பதில்\nஎன்னிடம் 4 ஜிபி ராம் கொண்ட மேக் மினி ஜி 1.4 1 ஹெர்ட்ஸ் உள்ளது .. நீங்கள் 2 ஜிபி தொகுதியை வைக்கலாமா அல்லது அது 1 ஜிபி மட்டுமே ஏற்றுக்கொள்கிறதா\nஉங்களால் முடியாது, உங்களிடம் ஒரே ஒரு வங்கி மட்டுமே உள்ளது மற்றும் அதிகபட்சம் 1 ஜிபி ஆகும��, பார்க்க: http://tinyurl.com/8lzv4e\nஆர்லாண்டோ பேஸ் அவர் கூறினார்\nவணக்கம் வாழ்த்துக்கள். எனது மினி சக்தியை 1.4 முதல் சிறுத்தை வரை எவ்வாறு நிறுவுவது அல்லது புதுப்பிப்பது, எனக்கு ஏற்கனவே டிவிடி உள்ளது, நான் எல்லா வழிமுறைகளையும் பின்பற்றுகிறேன், எதுவும் பிழையைப் பெற முடியாது, நான் மீண்டும் புலிக்குச் செல்ல வேண்டும். தயவுசெய்து எனக்கு யார் உதவுகிறார்கள்… நன்றி.\nஆர்லாண்டோ பேஸ் ஜி அவர் கூறினார்\nஎன் மேக் பவர்பிசி ஒரு கிக் உள்ளது, நீங்கள் அதில் 2 கிக் வைக்கலாம். \nஆர்லாண்டோ பேஸ் கிராம் பதில்\nநான் உங்களுக்குச் சொல்லும் மற்ற ஜி 4 ஐப் போன்றது http://tinyurl.com/8lzv4e\nவணக்கம் மக்களே. நினைவகத்தை எனது பவர்பிசி ஜி 4 - 1.42 ஜிகாஹெர்ட்ஸ் வரை விரிவாக்க விரும்புகிறேன், மேலும் மற்றொரு ஹார்ட் டிரைவை வைக்கவும், இது 80 ஜிபி உடன் குறைந்துவிட்டது.\nவலையில் இருந்து எனது மேக்கிற்கு தேவையான நினைவகம் சரியாக இருப்பதை நான் காண்கிறேன், ஆனால் வன் வட்டு என்னவாக இருக்கும் என்று நீங்கள் என்னிடம் சொல்ல முடியுமா அல்லது எங்கிருந்து அதைக் கண்டுபிடிக்க முடியும்\nஅனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் சோய்டேமேக்.காம் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nசேவையகத்தில் ஏதேனும் நடந்திருக்க வேண்டும் மற்றும் படங்கள் நீக்கப்பட்டன, விரைவில் அவற்றை பதிவேற்றுவேன்\nநான் ஏற்கனவே அவற்றை மீண்டும் பதிவேற்றியுள்ளதைப் போல சுருக்கமாக (சேமிப்பவர் கண்டுபிடிப்பார்)\nடிஜிட்டல் டையோஜென்கள் அதன் நன்மைகளைக் கொண்டுள்ளன\nமேக் லோபஸ் அவர் கூறினார்\nஎன்னிடம் நான்கு யூ.எஸ்.பி போர்ட்களுடன் ஒரு மேக் மினி உள்ளது, நன்றாக, சரிபார்க்கிறது, அதிகபட்சம் 1 ஜிபி வைக்க வேண்டும் என்று நான் வடிவமைத்தேன், இப்போது அதில் 512 மட்டுமே உள்ளது, தலா இரண்டு 1 ஜிபி ரேம்களை 2 ஜிபி வைத்திருக்க பரிந்துரைக்கிறீர்களா நான் ஆர்வமாக உள்ளேன், மிகச் சிறந்த பக்கம் என்ற பதிலைக் காண விரும்புகிறேன், இது 100 வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்\nஇது அதிகபட்சம் 1 ஜிபி செல்லுபடியாகும் என்பதை நீங்கள் சோதித்திருந்தால், 512 இன் இரண்டு தொகுதிகள் வைக்கலாம் ...\nமேக் லோபஸ் அவர் கூறினார்\nஎனது கருத்துக்கு பதிலளித்தமைக்கு மிக்க நன்றி, நான் ஸ்கேன் rme ஐ நிறுவினேன், எனது மினி கேமை சரிபார்த்து, ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு 1 ஜிபி ராம் வைக்கலாம் என்று சொன்னேன், அதனால் நான் இரண்டு ராம் போடுவேன், பல குழாய்களை யூ டியூப்பில் பார்த்து போடுவேன் என்னுடையது போன்ற ஒரு மினியில் 2 ஜிபி மற்றும் இது பிரச்சினை இல்லாமல் வேலை செய்கிறது மிகவும் நன்றி இந்த பக்கம் எனது கணினியை ஸ்கேன் செய்வது ஒரு பெரிய உதவி, இது மிகவும் எளிதானது இந்த திங்கட்கிழமை நான் ராம் நன்றி கேட்பேன் இந்த பக்கம் எனது கணினியை ஸ்கேன் செய்வது ஒரு பெரிய உதவி, இது மிகவும் எளிதானது இந்த திங்கட்கிழமை நான் ராம் நன்றி கேட்பேன் இந்த கருத்தை யாராவது படித்தால் உங்கள் கணினியை ஸ்கேன் செய்யுங்கள், இது எளிதானது மற்றும் மிக விரைவானது மற்றும் நம்பகமானது\nசரி, நீங்கள் குறைந்தபட்சம் ஒரு மினி இன்டெல் கோர் மட்டுமே வைத்திருக்கிறீர்கள்…. பின்னர் 2 கிக்ஸை வைக்கவும் ...\nஎனது மேக் மினியின் ரேம் விரிவாக்க விரும்புகிறேன், நான் என்ன நினைவகத்தை வாங்க வேண்டும்\nமேக் லோபஸ் அவர் கூறினார்\nஇதே பக்கத்தில் உள்ள எனது நண்பர் உங்கள் மேக் மினியின் சோதனையை உங்களுக்கு வழங்குவதற்கான ஸ்கேனர், நான் அதைப் பார்க்கிறேன், மேலும் நீங்கள் வாங்கக்கூடியவற்றின் விருப்பங்களையும் வெவ்வேறு விலைகளையும் இது காட்டுகிறது, அவை சிறந்தவை, நான் ஆர்டர் செய்கிறேன், நான் உள்ளே செல்கிறேன் மூன்று நாட்கள் இப்போது என் மேக் செயல்படுகிறது முக்கியமான ஸ்கேன் எனவே சிறிய நிரல் மேலே அழைக்கப்படுகிறது இங்கே அழைக்கப்படுகிறது \nமேக் லோபஸ் அவர் கூறினார்\nராம் அன்பே வைப்பதன் மூலம் ஆடியோவைத் துண்டிக்கும்போது மேக்னிஃபிகோ எனக்கு ஒரு பயத்தைத் தருகிறது\nஅற்புதம், எனது மேக்மினி இப்போது (520 க்கு முன்) 2 ஜிபி உள்ளது \nஅனைவருக்கும் வணக்கம், எனக்கு ஒரு சிக்கல் உள்ளது, நான் எனது ராம் நினைவகத்தை அல்லது மினி மேக்கிலிருந்து மாற்றினேன், ஆனால் இப்போது அது வேலை செய்யவில்லை, அது இயங்குகிறது, ஆனால் அது ஒரு மானிட்டர் சிக்னலைக் கொடுக்கவில்லை, அல்லது பவர்-ஆன் ஒலியை வெளியிடுவதில்லை, முன்பு எனக்கு 1 இருந்தது ஜிபி இரண்டு அட்டைகளில் வைத்தது, நான் செய்த கார்டு ஒன்றை 2 ஜிபி ஒன்றுக்கு மாற்றினேன், அது வேலை செய்யவில்லை, பின்னர் நான் அசல் அட்டைகளைத் திருப்பித் தர முயற்சித்தேன், அதுவும் வேலை செய்யாது, யாராவது எனக்கு உதவ முடியுமா\nநான் படித்தவற்றைக் கொண்டு எனது சிக்கலைத் தீர்க்க நிறைய இருக்கி���து.\nநினைவுக் குறிப்புகள் என்ற தலைப்பில் சிறந்த கம் லாடன் பக்கம்.\nநல்லது, மெமரி ராம் அதிகரிக்கும் போது, ​​மேக் மினிக்கு, சி.டி.யைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது நினைவகம் நேரடியாக வேலை செய்யுமா அல்லது நினைவகம் நேரடியாக வேலை செய்யுமா என்னிடம் பதிப்பு 10.4.11 உள்ளது, அதை புதுப்பிக்க முடியும், ராம் மாற்றப்பட்டவுடன் என்னிடம் பதிப்பு 10.4.11 உள்ளது, அதை புதுப்பிக்க முடியும், ராம் மாற்றப்பட்டவுடன் பதிலை முன்கூட்டியே பாராட்டுகிறேன், மிகச் சிறந்த பக்கம்\nமார்கோஸ் சுரேஸ் அவர் கூறினார்\nநான் ஒரு வருடம் முன்பு அதை வாங்கினேன், ஆரம்பத்தில் இருந்தே 16 ஜிபி ரேம் வைக்கத் தேர்ந்தெடுத்தேன், அது அதிக விலை இருக்கும், ஆனால் நீங்கள் இந்த தலைவலியைத் தவிர்க்கிறீர்கள். நான் ஒரு பேஷன் புகைப்படக்காரர், எனவே நான் அதில் வைக்கும் கரும்பு கற்பனை செய்து பாருங்கள்.\nகூறுகள் ஏன் பற்றவைக்கப்படுகின்றன என்பதில் தெளிவாக இருக்கட்டும் எனவே நாங்கள் மிகவும் விலையுயர்ந்த உள்ளமைவுகளை வாங்குவோம் ... நிச்சயமாக எங்கள் கணக்கில் பணம் சம்பாதிக்க சொன்னேன்.\nராபர்டோ பெனாவிட்ஸ் அவர் கூறினார்\nஹாய், என்னிடம் 2011 மேக்மினி உள்ளது, இரண்டு ரேம் ஸ்லாட்டுகளுடன், நான் அதை 2 8 ஜிபி கார்டுகளாக மேம்படுத்தினேன், அது கிட்டத்தட்ட ஒரு வருடம் நன்றாக வேலை செய்தது; திரை அணைக்கப்பட்டு ஒவ்வொரு 3 வினாடிக்கும் இரண்டு பீப் கொடுக்கிறது. ரேம் சிக்கல்களைப் பற்றி அவர்கள் என்னிடம் சொன்னார்கள், இரண்டு அட்டைகளிலும் மாற்றங்களைச் செய்தேன், ஒரு ஸ்லாட் ஒரு அட்டையை ஏற்கவில்லை (பிழையைத் தருகிறது), மற்றொன்று எந்த பிரச்சனையும் இல்லை மற்றும் அட்டை வேலை செய்கிறது என்பதை நான் கவனித்தேன். நான் 8 ஜிபி வரை மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறேன், அது மெதுவாக உள்ளது வேலை செய்யாத ஸ்லாட்டை சரிசெய்ய ஒரு வழி இருக்கிறதா வேலை செய்யாத ஸ்லாட்டை சரிசெய்ய ஒரு வழி இருக்கிறதா அல்லது ஒரு அட்டை மூலம் செயல்திறனை மேம்படுத்த ஏதாவது இருக்கிறதா\nபெலிக்ஸ் போசா சாப்பரோ அவர் கூறினார்\nவணக்கம், என் விஷயத்தில் நான் புகைப்பட எடிட்டிங்கிற்காக 2014 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஒரு மேக் மினி வாங்கினேன், உண்மை என்னவென்றால், இது எனக்கு ஆபத்தானது, ஏனெனில் லைட்ரூமில் புகைப்படங்களைத் திருத்த இயலாது, நான் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் இது மெதுவாக உள்ளது கடற்கரை பந்து நூற்பு மற்றும் பொறுமை இழக்க வேண்டும், நான் வாங்கியதில் தவறு செய்தேன் என்று நான் ஏற்கனவே நம்புகிறேன். மாதிரி பின்வருமாறு.\n2,8 Ghz இன்டெல் கோர் I5 செயலி\nமேகிண்டோஷ் எச்டி துவக்க வட்டு\nஇன்டெல் ஐரிஸ் கிராபிக்ஸ் 1536 எம்பி\nஎனது கேள்வி என்னவென்றால், அதன் ராம் நினைவகத்தை நீட்டிக்க தொழில்நுட்ப சேவைக்கு அனுப்ப முடியுமா அது பிரச்சினையை தீர்க்கும் என்றால் என்ன செய்வது\nயாராவது எனக்கு வழிகாட்ட முடியுமா\nபெலிக்ஸ் போசா சாப்பரோவுக்கு பதில்\nராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமைகள் அறக்கட்டளை டிம் குக்கிற்கு \"ரிப்பிள் ஆஃப் ஹோப்\" விருதை வழங்குகிறது\nஆப்பிள் ஆர் அன்ட் டி யைப் போலவே வெற்றிகரமாக செலவழிக்கிறது\nஆப்பிள் மற்றும் மேக்கில் சமீபத்திய கட்டுரைகளைப் பெறுங்கள்.\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/47517/", "date_download": "2021-08-02T08:57:33Z", "digest": "sha1:CR5BIV6CELXPGFD4GRMMLBZ3ZECNCZLP", "length": 9316, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கில் தமிழரின் பலம் குறைந்ததனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்புத் தீர்மானம் வந்தது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கில் தமிழரின் பலம் குறைந்ததனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்புத் தீர்மானம் வந்தது\n“கிழக்கு மாகா­ணத்­தில் தமி­ழ­ரின் பலம் குறை­வாக இருக்­கின்­றது. இத­னால் கிழக்கு மாகா­ணத்­துக்கு துணை­யாக வடக்கு மாகாண மக்­க­ளின் பலம் கொடுக்­கப்­படவேண்­டும் என்­பதை அனை­வ­ரும் ஏற்­றுக் கொண்டே, வடக்கு – கிழக்கு இணைப்பை வலி­யு­றுத்­திய தீர்­மா­னம் 1949ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்­டது”\nஇவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.\nதந்தை செல்வா நினைவு நிகழ்வு மட்­டக்­க­ளப்­பில் நேற்று நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,\n1961ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் சத்­தி­யாக்­கி­ரத்­தில் நானும் மாண­வ­னாக இருந்தபோது பங்­கு­பற்­றி­யி­ருந்­தேன். அந்­தக் காலத்­தில் இடம் பெற்ற சம்­ப­வங்­களை நினைத்­துப் பார்க்­கின்­றேன். கிழக்கு மாகா­ணத்­தின் பல பிர­தே­சங் க­ளில் முஸ்­லிம் பெண்­கள் போராட்­டத்­த���ல் பங்­கேற்­றுக் கொண்­டமை இன்­னும் கண்­முன்னே இருக்­கின்­றது.\nஅந்­தக் காலத்­தி­லி­ருந்தே தமி­ழர் தாய­கத்­தில் முஸ்­லிம்­க­ளுக்­கும் பங்கு உள்­ளதை தந்­தை­செல்வா கூறி­யி­ருந்­தார். இந்த தமி­ழர் தாய­கப் பிர­தே­சம் முஸ்­லிம் மக்­க­ளுக்­கும் சொந்­த­மா­னது என்­ப­தையும் அவர் கூறி­யி­ருக்­கின்­றார். மறைந்த தலை­வர் அஷ்ரப்கூட தமி­ழர் விடு­தலை கூட்­டணி ஊடா­கவே அர­சி­ய­லுக்­குள் பிர­வே­சித்­தி­ருந்­தார். அவர் இறக்­கும் வரை எங்­க­ளுக்­கும் அவ­ருக்­கும் எந்­த­வித முரண்­பா­டு­க­ளும் ஏற்­பட்­ட­தில்லை.\nவடக்கு -– கிழக்கு மாகா­ணம் ஏன் இணைந்­தி­ருக்க வேண்­டும் என்­பதை 1949ஆம் ஆண்டு தந்தை செல்வா மிக­வும் தெளி­வாக சுட்­டி­க் காட்­டி­யிருக்­கின்­றார். யாழ்ப்­பா­ணம் தமி­ழர்­களை நிறை­வாகக் கொண்ட பிர­தே­சம். ஆனால் கிழக்கு மாகா­ணத்­தில் அவ்­வா­றில்லை. பல இனத்­த­வர்­கள் வாழ்­கின்­ற­னர். இங்கு தமி­ழ­ரின் பலம் குறை­வாக இருக்­கின்­றது. கிழக்கு மாகா­ணத்­தின் பலத்­துக்கு துணை­யாக வடக்கு மாகாண மக்­க­ளின் பலம் கொடுக்­கப்­பட வேண்­டும் என்­பதை அனை­வ­ரும் ஏற்­றுக் கொண்­ட­மை­யால் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது – என்­றார்.\nPrevious articleயாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக இரட்ணம் விக்னேஷ்வரன்\nNext articleஅம்பாறையில் தமிழ்தேசியகூட்டமைப்பு வெளியிட்ட மே தினப்பிரகடனம் பிரகடனம் 2017:-\nசுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தனது சொற்ப இலாபத்திற்காக சமூகத்திற்கு துரோகம் இழைக்கிறார்\nகருணா அம்மானின் கட்சியும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்.\nபடுவானின் பெரும் பொக்கிசம் சரிந்தது\nகூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்த மக்களையும் ஒன்று சேர்த்து கட்சியை கட்டியெழுப்புவேன் – இரா.சாணக்கியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/02/154.html", "date_download": "2021-08-02T08:44:25Z", "digest": "sha1:6MSMZUTHOA64WEQWAX4S6MCF67EX4HTD", "length": 6720, "nlines": 52, "source_domain": "www.yarlsports.com", "title": "ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம்! - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > Trending > ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம்\nரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம்\nபோர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக அவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரி���ல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடினார்.\n2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி ரூ.46 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது குறித்து மாட்ரிட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது ரொனால்டோ வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி மாட்ரிட் கோர்ட்டில் நேரில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபராத தொகையை கட்ட சம்மதம் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதமும், 23 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்தார். ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை. இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறை தண்டனையில் இருந்து தப்பினார்.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/06/blog-post_55.html", "date_download": "2021-08-02T10:21:16Z", "digest": "sha1:OMVJRRLLCWVQTBUP7CD7WIGUP7EAHMXW", "length": 5610, "nlines": 52, "source_domain": "www.yarlsports.com", "title": "அரியாலை சரஸ்வதியின் இல்லங்களுக்கு இடையிலான போட்டி முடிவு - Yarl Sports", "raw_content": "\nHome > Volly ball > அரியாலை சரஸ்வதியின் இல்லங்களுக்கு இடையிலான போட்டி முடிவு\nஅரியாலை சரஸ்வதியின் இல்லங்களுக்கு இடையிலான போட்டி முடிவு\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நிலைய அங்கத்தவர்களுக்கு இடையில் நடைபெறும் நிலையத்தின் முன்னால் உறுப்பினர்களின் பெயரில் உருவாக்கப்பட்ட தம்பாபிள்ளை, IS ராசா, விஸ்வநாதன் ஆகிய இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகளின் வரிசையில் இன்று நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியின் முடிவுகள்\n*IS ராசா இல்லம்-13 புள்ளிகள்\n*விஸ்வநாதன் இல்லம்- 6 புள்ளிகள் .மேற்படி இல்ல விளையாட்டு நிகழ்வுகள் பல ஆண்டு காலமாக சரஸ்வதி நிர்வாகத்தினால் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. போட்டிகள் சிறக்க yarlsports இன் வாழ்த்துக்கள்.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/08/12/10-most-popular-all-time-favorite-tamil-writers/", "date_download": "2021-08-02T10:11:35Z", "digest": "sha1:IYTZ6Y7XKVXR5W5YNH4XOVHGIE4ZRR5D", "length": 15260, "nlines": 203, "source_domain": "10hot.wordpress.com", "title": "10 Most Popular & All time Favorite Tamil Writers | 10 Hot", "raw_content": "\nஇந்தப் பட்டியல் கிடுக்கிப்பிடி எழுத்தாளர்கள் பற்றியது.\nதங்களை படிப்பவர்களை சிக்கெனப் பற்றிக் கொள்பவர்கள் இவர்கள்.\nஎன்ன ஆவி அடித்தாலும், புகுந்தவரை வெளியேற்றுவது இயலாது. பிறிதொரு படைப்பாளி நுழைய எத்தனித்தாலும் துரத்தியடிக்கப்படுவர்.\nதன்னுள் இருப்பவரை எதற்காக அனுப்பவேண்டும், பிறிதொருவரை ஏன் வாசிக்க வேண்டும் என்று லாஜிக்கலாக புரிய வைக்க முயன்றால், நீங்களே கீழே குறிப்பிடப்படுபவர்களுள் ஈர்க்கப்பட்டு, சுழலுக்குள் மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.\nஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம், ஆகர்ஷணம், மயக்கம் உண்டு.\nமு. வரதராசன் / அகிலன் / நா பார்த்தசாரதி\nராஜேஷ்குமார் / பட்டுக்கோட்டை பிராபகர்\nஈ வெ ரா பெரியார் / சோ ராமசாமி\nஇதில் ஜெயமோகன் பேரை காணோமே\nமு.வ./நா.பா./அகிலன் ஆகியோரை ஒரு காலத்தில் தமிழ் வாசகர்களை கட்டி வைத்தவர்களாக நினைக்கிறீர்கள் போல. ஆனால் தேவன், லக்ஷ்மி, மணியன், சிவசங்கரி போன்றவர்களும் அந்த வரிசையில் அடங்குவார்களே நான் ரமணி சந்திரன் எழுதிய எதையும் படித்ததில்லை, ஆனால் அவர்தான் லக்ஷ்மி, சிவசங்கரி ஆகியோரின் வாரிசு என்று தோன்றுகிறது.\nசமீபத்தில் சந்தித்த புத்தக வாசகரும், இந்தியாவில் திருமணத்தில் அறிமுகமானவரும் மு.வ./நா.பா./அகிலன் கொணர்ந்த ஆதர்ச நாயகனை சிலாகித்தார்கள். ‘இப்போ நீங்க சொல்லுற இ.பா., அ.மி. எல்லாருமே வேஸ்ட். அவங்க போல வருமா “புளிய மரத்தின் கதை”யில் என்ன இருக்கு “புளிய மரத்தின் கதை”யில் என்ன இருக்கு குறியீடா… ஹ்ம்ம்… கதை அப்படியே முடிஞ்சு போகுது குறியீடா… ஹ்ம்ம்… கதை அப்படியே முடிஞ்சு போகுது ஏதாவது நடக்க வேணாம்\nஅவர்களுக்கு என் செலவில் சில புத்தகம் வாங்கித் தந்தேன். இருந்தும் ‘சிலாக்கியமில்லை’ என்று முழுக்கவும் படித்தபிறகு, வெகு தீவிரமாக சு.ரா.வையும் ஜெயகாந்தனையும் விமர்சித்துத் தள்ளினார்கள். நான் விவாதங்களில் ஈடுபடவில்லை. ‘ம்ம்ம்’ கொட்டிவிட்டேன்.\n—தேவன், லக்ஷ்மி, மணியன், சிவசங்கரி போன்றவர்களும் அந்த வரிசையில் அடங்குவார்களே\n—இதில் ஜெயமோகன் பேரை காணோமே\nதேவனுக்கு பெரிய நம்பிக்கையான வாசகர் வட்டம் இருந்தது. அப்புறம் பாக்கியம் ராமசாமி, சோ என்று சிதறியிருக்கும்.\nலஷ்மியை அனுராதா ரமணன் பின் தொடர, தேவிபாலா அவர்களைக் கவர்ந்திழுக்கலாம். எனினு��், இவ்வளவு loyal வாசகர் இருந்திருப்பார்களா\nஅந்த வகையில் ஜெமோ வாசிப்பாளர்கள், நிச்சயம் எஸ்ரா, சாருவையும் படிப்பார்கள் தனித்துவமாக, “நான் ஜெமோ மட்டும்தான் படிப்பேன்”, “எனக்கு சாருதான் உலகம் தனித்துவமாக, “நான் ஜெமோ மட்டும்தான் படிப்பேன்”, “எனக்கு சாருதான் உலகம்” என்று அடைப்புட்டிருக்க மாட்டார்கள் என்பது என் அனுமானம்.\nகார்த்திக், முன்னவருக்கு தொண்டர் படை (ரீச்\n[…] பழைய பதிவு கண்ணில் பட்டது. கிடுக்கிப்பிடி […]\nபத்து கிடுக்கிப்பிடி தமிழ் எழுத்தாளர்கள் « சிலிகான் ஷெல்ஃப் 12 ஒக்ரோபர் 2011 at 9முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nkshajamydeen.blogspot.com/2011/05/blog-post_15.html", "date_download": "2021-08-02T08:08:20Z", "digest": "sha1:GDNGZMFJ7MONQNGWAHA3XSLNUXM6HBGS", "length": 21109, "nlines": 193, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: வேண்டாம்.....வலிக்குது....அழுதுடுவேன்....அடிவேலுவான வடிவேலு...", "raw_content": "\nதிமுகவின் தோல்வி குறித்து நேற்று ரூம் போட்டு யோசித்து வடிவேலு கொடுத்த பேட்டி......\nஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். (ஹி ஹி...இன்னும் எவ்வளவு பேருடா இதே சொல்ல போறீங்க...)அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.(வாங்குன காசுக்கு மேலே நல்லா கூவுரதுனா இதுதான்...)\nஅதிமுகவை வைத்துத்தான் விஜயகாந்த் ஜெயித்தார்\nதி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி.(கண்டு பிடித்துவிட்டார்யா கொலம்பஸ்...) அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை.(அப்படின்னா பெரிய கட்சியான திமுகவை வைத்துதான் காங்கிரஸ் கட்சியும், பாமகவும் தோல்வி அடைந்ததா\nஒரு உண்மையான முதல்வருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தேன். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார். (ஜெயலலிதாவின் அம்மா சந்தியாதான் இறந்துவிட்டாரே...\nஇந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள்.(திரும்ப திரும்ப பேசுற நீ ....)\nவெளில வாடா, எத்தனை நாளைக்குடா உனக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் என்று பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால் (வேண்டாம் வலிக்குது......அப்புறம் அழுதுடுவேன்...), உனக்கு மக்கள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க. ஆனால் அது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். என் வீட்டில் புகுந்து அடிப்பதற்கோ, என்னை வெட்டுவதற்கோ, என் வீட்டாரை தாக்குவதற்கோ அவர்கள் தீர்ப்பு கொடுக்கவில்லை. அது தப்பான விஷயம்.\nதேர்தலில் ஜெயித்தால், அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர். ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம் என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர். ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம்( ஆமாம் ...செத்த பாம்ப அடிக்குறது சின்ன புள்ள தனமாவுள்ள இருக்கு...)\nஅவருடைய டி.வி. மூலம் மூன்று பேர், என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். (சிங்கமுத்து இப்ப உனக்கு மூணு பேரா தெரியுறாரா)விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்...\nஎனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு விஜயகாந்த்தான் முழுப் பொறுப்பும்.( விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தவிர யாரையும் சுட மாட்டார்....டோன்ட் வொர்ரி ...பீ ஹேப்பி....)\nஎனது வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்புக்கு இருந்தவர்கள் போய் விட்டார்கள். எனது சென்னை வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து மிரடடியுள்ளனர். எனவே எனக்கும், எனது வீட்டாருக்கும் போலீஸார் உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வடிவேலு....( பேசாம நா பேசினது எல்லாம் சும்மாச்சுக்கும் விளையாட்டுக்குத்தான் ......அழகிரி சீரியஸா இருந்ததுனால அவரை சிரிக்க வைக்க அது மாதிரி பேசினேன் என்று சொல்லி விஜயகாந்திடம் சரண்டர் ஆக வேண்டியதுதானே....)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசக்தி கல்வி மையம் 11:43 முற்பகல், மே 15, 2011\nநான் இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் .. கலக்கல் பதிவு நண்பா.\nசக்தி கல்வி மையம் 11:44 முற்பகல், மே 15, 2011\nடெம்பிளேட் கலர் அடிக்குது நண்பா\nசக்தி கல்வி மையம் 11:45 முற்பகல், மே 15, 2011\nதமிழ் மனத்தை காண வில்லை..\nராஜேஷ், திருச்சி 12:25 பிற்பகல், மே 15, 2011\n௧. நேற்று ஜெயலலிதா எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்ததை ஒட்டி சென்னை அண்ணாசாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்\n௨. அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட புதிய சட்ட சபை புறக்கணிப்பு\n௩. செம்மொழி நூலகம் அகற்றம்\n\"நான் சும்மா வெளையாட்டுக்கு பேசுனதெல்லாம் உண்மைன்னு நம்பிட்டீங்க ..ஹையோ ஹையோ\"\nMANO நாஞ்சில் மனோ 1:12 பிற்பகல், மே 15, 2011\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nவடிவேலுவின் பீதி நன்றாக தெரிகிறது.\nஎன்னதான் இருந்தாலும் வடிவேலு நல்ல நடிகர்தான்.இனிமேல் அவரை நிம்மதியா பொழப்ப பாக்கவுடுவாங்களா...\nஅரசியல்னு வந்துட்டா கண்டவனும் சேத்த வாரி அடிக்கத்தான் செய்வான் அதை விஜயகாந் த் புரிந்துகொண்டிருப்பார் என நினைக்கிறேன்.வடிவேலுவை பழிதீர்ப்பதைவிட தனது கட்சியை பலப்படுத்த விஜயகாந் த் முயற்சி எடுத்தால் நலம். நிச்சயம் உங்களால் ஜெவுடன் இதேபோல் இணக்கமாக இருக்கமுடியாது.எனவே உங்களின் சக்தியை வீணாக்காமல் 2016 ஐ உங்களின் ஆண்டாக மாற்ற முயற்சியுங்கள்.....\nNKS.ஹாஜா மைதீன் 4:02 பிற்பகல், மே 15, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *\nநான் இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் .. கலக்கல் பதிவு நண்பா.#\nஇதற்க்கு காரணமான அடிவேலுவுக்கு நன்றி...ஹி ஹி....\nNKS.ஹாஜா மைதீன் 4:03 பிற்பகல், மே 15, 2011\nவிஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தவிர யாரையும் சுட மாட்டார்....டோன்ட் வொர்ரி ...பீ ஹேப்பி....)...............\nஹி ஹி நல்ல பதிவு ....\nNKS.ஹாஜா மைதீன் 1:13 பிற்பகல், மே 17, 2011\nவடிவேலு இனி பாதி த��ன் ஹிஹி\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nஇந்தி தெரியாதவன் இந்தியனாக முடியுமா\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nதாஜ்மகாலுக்கு போட்டியாக திஹார் சிறை....\nசிக்கியது லாரி.... விபத்தா ... கொலையா ...\nஆங்கிலத்தில் பொளந்து கட்டிய கேப்டன்...\nஜெயலலிதாவின் அடுத்த சறுக்கல்......காரணம் கருணாநித...\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் ...\nராஜீவ் காந்தியை கொன்றோம்.....ஜெயலலிதாவை கொல்லதிட்ட...\nராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி கருணாநிதி டெல்...\nமஞ்சள் துண்டின் மனசாட்சி பேசுகிறது.....\nஉலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை ...\nரஜினியை தொந்தரவு படுத்தும் மீடியாக்கள்....\nமுதல் நாளிலே ஆயிரம் கோடியை வீணாக்கிய ஜெ...\nஅரை பவுன் தங்கம் இலவசம்.....ஜெயலிதாவின் முதல் கைய...\nபுதிய அமைச்சர்கள் பட்டியல்.....வெளியிட்டார் ஜெயலல...\nஅமோக வெற்றி அடைந்த அதிமுகவும், எதிர்க்கட்சி அந்த...\nடோனியால் இந்த நாடே குடிக்கிறதா\nதிமுகவே ஜெயிக்கும்...சூப்பர் சுவாமி அடித்த பல்டி...\nஎன்னை குறி வைத்து வீழ்த்த முடியாது....கனிமொழி\nபின்லேடன் காலி ....ஒபாமா ஜாலி ..\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nkshajamydeen.blogspot.com/2012/09/blog-post_7.html", "date_download": "2021-08-02T08:53:47Z", "digest": "sha1:DAHI7TE4VV7A7332DWLXH3XMT4T6BMJF", "length": 10310, "nlines": 147, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: பயோ டேட்டா : மன் மவுன சிங்", "raw_content": "\nபயோ டேட்டா : மன் மவுன சிங்\nபெயர் : மன் (மோகன் )மவுன சிங்\nபிடித்த வேலை : மவுன விரதம் இருப்பது\nபிடித்த வார்த்தை : எனக்கு தெரியாது\nசோனியா : ஆட்டுவிக்கும் ரிங் மாஸ்டர்\nஇருக்கும் பதவி : சோனியாவின் கைக்கூலி (அதாங்க பிரதமர்)\nஸ்பெக்ட்ரம் : பாதி மானத்தை வாங்கியது\nநிலக்கரி சுரங்க ஊழல் : மிச்சமிருக்கும் மானத்தையும் காவு வாங்கியது\nமத்திய அமைச்சர்கள் : ஊழல் செய்வதற்காகவே தேர்ந்தெடுக்க பட்டவர்கள்\nஒரே சாதனை : ஒன்றுமே செய்யாமல் இரண்டு தடவை பிரதமராக இருப்பது\nநீண்ட கால எரிச்சல் : பாஜகவும், பத்திரிக்கைகளும்\nசமிபத்திய எரிச்சல்: அன்னா ஹசாரேவும், வெளிநாட்டு பத்திரிக்கைகளும்\nஅமெரிக்கா : நண்பனாக காட்டிகொள்ளும் எதிரி\nசீனா: எதிரியாகவே காட்டிகொள்ளும் விரோதி\nஇந்தியா : எப்படியோ போகட்டும் எனெக்கென்ன ......\nPosted by NKS.ஹாஜா மைதீன் at வெள்ளி, செப்டம்பர் 07, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், நிகழ்வுகள், நையாண்டி\nகும்மாச்சி 10:05 முற்பகல், செப்டம்பர் 07, 2012\nNKS.ஹாஜா மைதீன் 5:26 பிற்பகல், செப்டம்பர் 07, 2012\nதிண்டுக்கல் தனபாலன் 11:08 முற்பகல், செப்டம்பர் 07, 2012\n/// இந்தியா:எப்படியோ போகட்டும் எனெக்கென்ன... ///\nNKS.ஹாஜா மைதீன் 5:26 பிற்பகல், செப்டம்பர் 07, 2012\nNKS.ஹாஜா மைதீன் 5:46 பிற்பகல், செப்டம்பர் 07, 2012\nஎப்படி அடித்தாலும் தாங்கக் கூடிய\nNKS.ஹாஜா மைதீன் 10:48 முற்பகல், செப்டம்பர் 08, 2012\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nஇந்தி தெரியாதவன் இந்தியனாக முடியுமா\n��ன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nஜெயக்குமாருக்கு ஆப்பு வைத்த 6 காரணங்கள் \nகருணாநிதியை புகழ்ந்த ரஜினியும், சிண்டு முடியும் க...\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூச...\nவீட்டு உபயோக பொருட்களாலும் கேன்சர் வரும்\nசூடு போட்ட மம்தாவும் வைகோவும், சொரணை இல்லாத கரு...\nமத சண்டைகளை உருவாக்கும் ஐடியா மணி.....என்ன முடி...\nதமிழ்மணமும்,வாசகர் பரிந்துரையும், ஒரு முரணும்...\nஇந்தி தெரியாதவன் இந்தியனாக முடியுமா\nபயோ டேட்டா : மன் மவுன சிங்\n2022 -கருணாநிதி ..ஜெயலலிதா ..விஜயகாந்த் \nகருணாநிதி ......கொஞ்சம் திரும்பி பார்ப்போமா....\nஅப்ப இதை நீங்கள் படித...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-sharukhan-meer-foundation-help-2-child-qbcw44", "date_download": "2021-08-02T08:42:03Z", "digest": "sha1:N22O66RIVE5CDGLUDS2BOX2PIRTMKZJB", "length": 9009, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பசியால் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைகளை தத்தெடுத்த பிரபல முன்னணி நடிகர்! குவியும் பாராட்டு! | actor sharukhan meer foundation help 2 child", "raw_content": "\nபசியால் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைகளை தத்தெடுத்த பிரபல முன்னணி நடிகர்\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிற பழமொழி உண்டு. ஆனால் சமீபத்தில் குஜராத்திலிருந்து பீகார் மாநிலம் முசாபூருக்கு தனது 2 குழந்தையுடன் செல்ல இருந்த பெண் ஒருவர், கையில் கிடைத்த கொஞ்ச நஞ்ச உணவையும், குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு பசியால் உயிர் விட்ட கோர சம்பவம் உலகையே உலுக்கியது.\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிற பழமொழி உண்டு. ஆனால் சமீபத்தில் குஜராத்திலிருந்து பீகார் மாநிலம் முசாபூருக்கு தனது 2 குழந்தையுடன் செல்ல இருந்த பெண் ஒருவர், கையில் கிடைத்த கொஞ்ச நஞ்ச உணவையும், குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு பசியால் உயிர் விட்ட கோர சம்பவம் உலகையே உலுக்கியது.\nமேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சன்னி லியோன் போன்ற பிரபலங்களின் பாஸ்போட் புகைப்படத்தை பாத்துருக்கீங்களா\nமுசாபூர் ரயில் நிலையத்தை அடையும் முன்னரே உயிர் விட்ட தன்னுடைய தாய், இறந்தது கூட தெரியாமல், அவர் உடல் மேல் போத்தப்பட்டிருந்த போர்வையை இழுத்து, அவரது 2 வயது குழந்தை எழுப்ப முயன்ற வீடியோ வைரலாகியது.\nதாய் இறந்தது கூட தெரியாமல் அவருடைய பச்சிளம் குழ��்தை செய்த செயல் பார்ப்பவர்கள் கண்களையே குளமாக்கியது.\nமேலும் செய்திகள்: முன்னாள் காதலர் பிரபுதேவாவுடன் நயன்தாரா...\nஇந்நிலையில் தன்னுடைய தாயை இழந்து, நிற்கும் குழந்தைகளை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய 'மீர்' பவுண்டேஷன் மூலமாக தத்து எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை ஷாருக்கான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, தாயை இழந்த வலியை தாங்க இறைவன் குழந்தைக்கு வலிமை அளிக்க வேண்டும். அந்த வலி எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும், என கூறியுள்ளார். ஷாருக்கானின் இந்த மனிதாபிமானம் மிக்க செயலுக்கு அவருடைய ரசிகர்கள் மாற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.\nதளபதி விஜய் பற்றி ஒற்றை வார்த்தை... சமூக வலைத்தளத்தை கலக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பதில்\nபாலிவுட் படத்தில் டாப் ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\nஅட்லீ இயக்கத்தில் ஷாருகான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது\nதிடீர் என தேசிய அளவில் ட்ரெண்ட் ஆன அட்லீ பெயர்..\nமுன்னணி ஹீரோயின்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் ஷாருக்கான் மகள்.. டவல் போன்ற உடையில் தெறிக்கவிடும் கவர்ச்சி\nதல ஃபேன்ஸ் சரியா 7 மணிக்கு ரெடியா இருங்க... போனிகபூர் கொடுத்த லேட்டஸ்ட் ‘வலிமை’ அப்டேட்...\nபள்ளிகள், கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது.. அமைச்சர் அதிரடி முடிவு.\nவெளிநாட்டில் சந்தித்துக் கொள்ளப் போகும் விஜய் - அஜித்... எதற்காக தெரியுமா\nதிமுக அமைச்சர் முன் கைகட்டி நின்றேனா.. நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன்... கொந்தளிக்கும் திருமாவளவன்..\nசட்டப்பேரவையில் மட்டுமல்ல கருணாநிதியின் படம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும்.. சு.ப வீரபாண்டியன்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/tag/tnreginet-latest-news-2018/", "date_download": "2021-08-02T09:48:16Z", "digest": "sha1:NMEP2HGZIMWCV2WDZXRUOYAMDNX7KNBX", "length": 14953, "nlines": 73, "source_domain": "tnreginet.org.in", "title": "tnreginet latest news 2018 | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nTNREGINET – பிப். 1 2019 முதல் சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் பணம் பெற தடை\nபிப். 1 2019 முதல் சார்பதிவாளர்கள் ஆபிசில் பணம் பெற தடை; கிரெடிட், டெபிட் கார்டு மூலம் வசூலிக்க வேண்டும்\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nTNREGINET 2019| ஜனவரி 2ம் தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே வில்லங்க சான்று\nஆன்லைனில் மட்டுமே வில்லங்க சான்று வரும் ஜனவரி 2ம் தேதி முதல் புதிய நடைமுறை\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nதனியார் இருப்பிடத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா\nதனியார் இருப்பிடத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா\nTNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திரப் பதிவுத் துறை பத்திரப்பதிவு புதிய சட்டம் 2018\nபத்திரப் பதிவுத் செய்த ஒரு மணி நேரத்தில் பத்திரம்; புதிய வசதி வரும் 17-ம் தேதி தொடக்கம்\nபத்திரப் பதிவுத் செய்த ஒரு மணி நேரத்தில் பத்திரம்; புதிய வசதி வரும் 17-ம் தேதி தொடக்கம்\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nTNREGINET | பத்திர பதிவு ஆவணங்களை அன்றே திருப்பி கொடுக்கும் திட்டம்\nTNREGINET | பத்திர பதிவு ஆவணங்களை அன்றே திருப்பி கொடுக்கும் திட்டம்\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருப���ன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nபட்டா பதிவுக்கு பின்பு பட்டா பெயர் மாற்றுவது எப்படி தெரியுமா\nபட்டா பதிவுக்கு பின்பு பட்டா பெயர் மாற்றுவது எப்படி தெரியுமா\n பட்டாpatta name change process tamil TNREGINET tnreginet latest news 2018 தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பட்டா பதிவுக்கு பின்பு பட்டா பெயர் மாற்றம் பட்டா பெயர் மாற்றுவது எப்படி பட்டா மாறுதல் செய்ய பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nசார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஆவணபதிவிற்கு செல்லும்போது தெரிந்துகொள்ள வேண்டிய 3 முக்கிய விவரங்கள்\nசார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஆவணபதிவிற்கு செல்லும்போது தெரிந்துகொள்ள வேண்டிய 3 முக்கிய விவரங்கள்\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 சார் பதிவாளர் அலுவலகம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nதமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் இரட்டை திரை சிஸ்டம்\nநவம்பர் 30ம் தேதி அமல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இரட்டை திரை சிஸ்டம்\ntamilnadu sub registrar office tamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 சார் பதிவாளர் அலுவலகம் தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை அதிகாரி பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரபதிவு அலுவலகம் பத்திரப் பதிவுத் துறை\nமேம்பாட்டு கட்டணம் செலுத்திய ஆவணம் இணைத்தால் தான் பத்திரம் பதிவு செய்ய வேண்டும்\nமேம்பாட்டு கட்டணம் செலுத்திய ஆவணம் இணைத்தால் தான் பத்திரம் பதிவு செய்ய வேண்டும்\ntamilnadu sub registrar office tamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 சார் பதிவாளர் அலுவலகம் சார்பதிவாளர்களுக்கு அறிவுரை தமிழக பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரபதிவு அலுவலகம் பத்திரப் பதிவுத் துறை\n575 சார்பதிவு அலுவலகங்களில் 46 கோடி பழைய பத்திர பக்கங்களின் நகல்\n575 சார்பதிவு அலுவலகங்களில் 46 கோடி பழைய பத்திர பக்கங்களின் நகல்\n575 சார்பதிவு அலுவலகங்களில் tamilnadu sub registrar office tamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 சார் பதிவாளர் அலுவலகம் தமிழ்நாடு பத்திர பதிவு துறை பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரபதிவு அலுவலகம் பத்திரப் பதிவு பத்திரப் பதிவுத் துறை பழைய பத்திர பக்கங்களின் நகல்\nமோசடி பத்திரங்கள் ரத்து செய்யும் அதிகாரம்\nசொத்து பத்திரம் நகல் பதிவிறக்கம் | copy of document online tamilnadu | tnreginet |பழைய பத்திரம் நகல்\nTnreginet EC பார்க்க போறீங்களா பத்திரப்பதிவு துறையில் புதிய வசதி\n2021 தமிழ்நாடு அரசு பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு\nசார் பதிவாளர் அலுவலகங்களில் இன்றுமுதல் பத்திரப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/15101/", "date_download": "2021-08-02T10:10:06Z", "digest": "sha1:WQ43LBGQ2ELSR5AVELIHMUIGWYPPXZUE", "length": 3057, "nlines": 70, "source_domain": "www.akuranatoday.com", "title": "மேலும் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம் - Akurana Today", "raw_content": "\nமேலும் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 23 கைதிகளுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2867 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nlunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை\nநிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி\nஓட்டமாவடி மஜ்மா நகரில் அதிக ஜனாஸாக்கள் வேறு இடத்தை பரிந்துரைக்குக.\nபேருவளை-பன்னில கிராமம் முழுமையாக மூடப்பட்டது.\nநாட்டின் பொருளாதார நிலை – மீண்டெழ முடியா வீழ்ச்சி\nசிலர் ரணிலிடம் காட்டிய விளையாட்டை சஜித்திடம் காட்ட முடியாது: இம்ரான் MP\nஇணக்கப்பாடின்றி முடிந்த, ஜனாஸா எரிப்பு விவகாரப் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/indian-navys-community-kitchen-feed-nearly-10000-ppl-in-kerala-flood.html", "date_download": "2021-08-02T10:20:52Z", "digest": "sha1:RYYA2TDBMZPOYWUPK6ZQHIF3M4G4DMIW", "length": 8275, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Indian Navy's community kitchen feed nearly 10,000 ppl in kerala flood | தமிழ் News", "raw_content": "\nதினமும் பத்தாயிரம் பேருக்கு உணவளிக்கும் இந்திய கடற்படை \nகேரளாவில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 14 மாவட்டங்கள் சின்னாபின்னமாகி இருக்கின்றன. சாலைகள் பாலங்கள் என பல பகுதி��ள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன.சாலை போக்குவரத்து இன்னும் முழுமையாக சீராகவில்லை. கடந்த 2 நாட்களாக படிப்படியாக மழை குறைந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மெதுமெதுவாக தங்களின் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.\nஇருப்பினும் பல பகுதிகளில் வெள்ளமானது இன்னும் முழுமையாக வடியவில்லை.இதனால் பல மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் தவித்து வருகிறார்கள். வீடுகளுக்கு சென்ற மக்களுக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.\nவீடுகள் முழுமையாக களிமண்ணால் சூழப்பட்டு காட்சியளிக்கின்றது.மேலும் வீடுகளுக்குள் கொடிய விஷமுள்ள ராஜநாகம்,நாகப்பாம்பு மற்றும் கொடிய விஷபூச்சிகள் இருப்பதால் மக்கள் வீடுகளை சுத்தம் செய்வதற்கே மிகவும் அச்சப்படும் சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.\nஇது போன்ற பல காரணங்களால் மக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளார்கள்.இதனால் அவர்களுக்கு நேரத்திற்கு உணவு வழங்கும் சவாலான பணியை முகாம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். இதில் இந்திய கடற்படை அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவளிக்கும் மகத்தான பணியை கடற்படையை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.பம்பரமாய் சுழன்று மூன்று வேளையும் மக்களுக்கு நேரத்திற்கு உணவளித்து வருகின்றார்கள்.\nஇதில் நோயாளிகள் மற்றும் குழந்தைகளும் இருப்பதால் அவர்களுக்கு தகுந்தது போன்ற உணவுகளையும் சமைத்து வருகின்றார்கள்.இதற்காகவே பிரத்தியேகமாக சமையல் அறை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளித்து வருகின்றார்கள் நமது கடற்படை வீரர்கள்.\nமனித நேயத்தால் உயர்ந்த கேரள முஸ்லீம் இளைஞர்கள் \nசோதனை மேல் சோதனை..வெள்ளம் வடிந்த பின்பும் ஆபத்தில் சிக்கியுள்ள கேரள மக்கள் \nகேரள வனத்துறையினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஒரு வயது குழந்தை.\nதனது 'ரசிகரின்' பெயரில் ரூ.1 கோடி நிதியளித்த 'தோனி' ஹீரோ\n'கடவுளின் தேசம் மீண்டும் உயிர்த்தெழும்'.. வீடியோ வழியாக நம்பிக்கை விதைக்கும் ரம்யா நம்பீசன்\nஇளைஞர்களை உற்சாகப்படுத்த 'ஓ' போட்ட கலெக்டர்..மீட்பு பணியில் கலக்கும் சென்னை பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி \nகேரளாவிற்கு 700 கோடி வாரி வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம் \nதனி ஒருவராக கேரளாக்கு 50 கோடி வழங்கிய வெளிநாடுவாழ் இந்திய தொழில் அதிபர் \nவெள்ளத்தில் மிதந்துவரும் சூடான டீ.. மெல்லத் திரும்பும் கேரள மக்களின் இயல்புநிலை\nகேரளத்து மீனவர்களே எனது ராணுவம் ..முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் \n'தந்தை தனக்காக' சேர்த்து வைத்த நிலத்தை....'தானமாக வழங்கிய' 16 வயது மாணவி\n'பணமளித்து வேதனைப்படுத்தாதீர்கள்'.. நெகிழச்செய்த ரியல் ஹீரோக்கள்\n'கனவை விட கடவுளின் தேசமே முக்கியம்'..4 வருட சேமிப்பை நன்கொடையாக வழங்கிய சிறுமி\nவெள்ளப் பெருக்கில் சான்றிதழ்களை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவர்\nகேரள வெள்ள பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/india/tamilnadu_info/litreture_list/sangam_period/index2.html", "date_download": "2021-08-02T09:09:43Z", "digest": "sha1:MTI2ZYRXAGJL5YNTCIHIIWCIMO5WC5MI", "length": 7289, "nlines": 106, "source_domain": "www.diamondtamil.com", "title": "சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புலவர்கள், நூல்கள், சங்க, இலக்கிய, தமிழ், காலம், வைத்திய, தமிழ்நாட்டுத், சூத்திரம், தகவல்கள், sangam, வாதம், சிந்தாமணி, நூல், | , period, மகனார், tamilnadu, literatures, information, பலர், tamil, list", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 02, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசங்க காலம் - தமிழ் இலக்கிய நூல்கள்\nஇடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்\nகாவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புலவர்கள், நூல்கள், சங்க, இலக்கிய, தமிழ், காலம், வைத்திய, தமிழ்நாட்டுத், சூத்திரம், தகவல்கள், sangam, வாதம், சிந்தாமணி, நூல், | , period, மக��ார், tamilnadu, literatures, information, பலர், tamil, list\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ikolam.com/sashti", "date_download": "2021-08-02T09:50:08Z", "digest": "sha1:7UHXCKHJUDFD2X24X5NHOMWXB5P6F5IE", "length": 7454, "nlines": 145, "source_domain": "www.ikolam.com", "title": "Sashti | www.iKolam.com", "raw_content": "\nவைகாசி விசாகத்தின் சதகோடிச் சூர்ய. ப்ரகாசமேமுருகாஆறு தாரகைகளின் கூட்டமாம் விசாகம் ஆறுமுகத்தின் அம்சம் தானோபரமனின் நெற்றிக் கண் வரமாகத் தந்தது ஆறு அக்னிப் பொறிகள் அல்லவாபரமனின் நெற்றிக் கண் வரமாகத் தந்தது ஆறு அக்னிப் பொறிகள் அல்லவாசரவணத்தின் தவழ்ந்தது ஆறு ஆனந்த அலைகள் அல்லவாசரவணத்தின் தவழ்ந்தது ஆறு ஆனந்த அலைகள் அல்லவாஅது ஷடாட்சர தத்துவத்தின்சாரம் அல்லவாஅது ஷடாட்சர தத்துவத்தின்சாரம் அல்லவாகுருவின் நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து பரமகுரு ஞானத்தின் பூரணமாய் வந்துதித்தானோகுருவின் நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து பரமகுரு ஞானத்தின் பூரணமாய் வந்துதித்தானோபக்தர் விழிநீர் பெருக்கவும், மொழி தடுமாறவும், ஜாஜ்வல்லியமாக வந்த ஆறு வதனங்களேபக்தர் விழிநீர் பெருக்கவும், மொழி தடுமாறவும், ஜாஜ்வல்லியமாக வந்த ஆறு வதனங்களேஈராறு விழிகளில் பொங்கும் எழிலேஈராறு விழிகளில் பொங்கும் எழிலே அருளேமின்னோட்டமேதேவாதி தேவன் என உணர்த்த எடுத்த கோலம் ஒரு முன்னோட்டமேகாரண காரியம் கடந்த பூரணனேஆறுமுகத்துள் உன் ஆற்றலை தேக்கிக் கொண்டு அவதாரம் செய்ததன் காரணம் என்னய்யா, முருகையாகாரண காரியம் கடந்த பூரணனேஆறுமுகத்துள் உன் ஆற்றலை தேக்கிக் கொண்டு அவதாரம் செய்ததன் காரணம் என்னய்யா, முருகையாதீய சக்திகள் உன் பன்னிருதோள் திறனில் த்வம்சம் என உணர்த்தவோதீய சக்திகள் உன் பன்னிருதோள் திறனில் த்வம்சம் என உணர்த்தவோகலியுக வரதன் நீ என்று காட்டத்தானோகலியுக வரதன் நீ என்று காட்டத்தானோவள்ளி தத்துவம் என்னவென்று தெளிய வைக்கத் தானோவள்ளி தத்துவம் என்னவென்று தெளிய வைக்கத் தானோமாயத் திரை கிழிக்கத்தானோதுயர வெள்ளத்தை தடுக்க ஆறு அற்புத அணைகளோஆறுமுகா என்று அழைக்கு முன்னே ��ந்து விடும் ஆறுதலாம் துணையோஆறுமுகா என்று அழைக்கு முன்னே வந்து விடும் ஆறுதலாம் துணையோஅறுபடை வீடுகள் முக்தி வாசலின் ஆறு கதவங்கள் தானோஅறுபடை வீடுகள் முக்தி வாசலின் ஆறு கதவங்கள் தானோவிசாகனேசத்திய நித்தியனேசரணம் சரணம் சரவணபவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/blog-post_74.html", "date_download": "2021-08-02T08:29:12Z", "digest": "sha1:2IPMMQIPMGL3FBVBHKI6RHWEBZPEDBCA", "length": 12170, "nlines": 41, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "மேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\nமேற்கு வங்கத் தேர்தல் 'கணிப்பு' தொடர்பாக பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ தேசிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரசாந்த் கிஷோரும் விளக்கம் அளித்துள்ளார்.\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக அதிகாரபூர்வமாக வியூகம் வகுத்து வருகிறார் பிரசாந்த் கிஷோர். அவரின் ஆலோசனைப்படிதான் அங்கு மம்தாவின் அத்தனை செயல்பாடுகளும் இருந்து வருகின்றன.\nஇந்நிலையில் `பாஜகதான் மேற்கு வங்கத்தில் வெற்றி பெறும்' என்று பிரசாந்த் கிஷோர் பேசிய ஆடியோ ஒன்று புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளவர், பாஜக ஐ.டி விங் தலைவர் அமித் மால்வியா.\nபிரசாந்த் கிஷோர் பேசிய அந்த ஆடியோ 'க்ளப் ஹவுஸ்' (Clubhouse) என்ற சாட் செயலியில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து இருக்கும் பிரசாந்த் கிஷோர், \"இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தூக்கி எரியப்படும். திரிணாமுல் நடத்திய சர்வேயில் பாஜகவுக்கு ஆதரவு அலை இருப்பது தெரியவந்துள்ளது.\nஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சம அளவில் பிரபலமாக உள்ளனர். நாடு முழுவதும் மோடியைச் சுற்றி ஒரு வழிபாட்டு முறை உள்ளது. மோடியைக் கடவுளாகப் பா��்க்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் உள்ளனர். இதுதான் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரபலமாக இருக்க காரணம். இது ஒரு காரணி.\nகடந்த 30 ஆண்டுகளில் பார்த்திராத ஒன்றை பாஜக செய்யும் என்று மக்கள் நினைக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் மீது கோபம் இருக்கிறது. அது ஒரு காரணி. மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க மக்கள் மத்தியில் கோபம் உள்ளது. இந்தக் கோபம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீதான 10 ஆண்டு அதிருப்தி காரணமாக வந்தது.\nஇதேபோல் மற்றொரு காரணி வெற்றியை தீர்மானிக்கும். அது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் இஸ்லாமிய ஆதரவு அரசியல். திரிணாமுலின் இஸ்லாமிய ஆதரவு காரணமாக பட்டியலின வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக செல்லும். மேற்கு வங்கத்தில் மோடியின் ஆதரவு தளத்தில், முக்கியமானது இந்தி பேசும் மக்கள்தொகை. இங்கு இந்தி பேசுவோர் ஒரு கோடி பேர்.\nஇவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம். இதேபோல் மாதுவா சிறுபான்மையினரில் 75% பேர் பாஜகவுக்கு வாக்களிக்கலாம். மேலும் மூன்றாவது கூட்டணியாக இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணிகளுக்கு வாக்களிப்பவர்களில் 10 - 15% பேர் பாஜகதான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று கருதி அக்கட்சிக்கு வாக்களிக்கலாம். மேற்கு வங்கத்தில் வாழும் 50 - 55% இந்துக்களின் ஆதரவு பாஜகவுக்குதான் உள்ளது. இதேபோல் திரிணாமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து ஆதிகாரி வெளியேறியது இந்தத் தேர்தலில் சிறிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்\" என்று அவர் பேசிய அந்த ஆடியோ பதிவில் இருக்கிறது.\nபிரசாந்த் கிஷோர் பேசிய இந்த ஆடியோவை வெளியிட்ட அமித் மால்வியா, \"பொதுவெளியில் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பிரசாந்த் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆய்வில் கூட பாஜக வெற்றி பெறுகிறது என்பதை வெளிப்படையாக கூறி ஒப்புக்கொண்டுள்ளார்\" எனக் கூறியிருந்தார்.\nபிரசாந்த் கிஷோரின் பதில் என்ன\nபாஜகவின் கூற்றுகளுக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், ``பாஜக தலைவர்கள் எனது பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் பாஜக தைரியத்துடன், நான் பேசிய முழுப் பகுதியின் ஆடியோவையும் வெளியிட வேண்டும். மாறாக, நான் பேசிய சிறிய பகுதிகளை மட்டுமே வெளிப்படுத்தி உற்சாகமடைய வேண்டாம். இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மேற்கு வங்கத்தில் பாஜக 100 இடங்களை தாண்டாது\" எனக் கூறியிருக்கிறார்.\nதொடர்ந்து 'இந்தியா டுடே'-விடம் பேசிய பிரசாந்த் கிஷோர், முழு ஆடியோ பதிவையும் வெளியிடுமாறு பாஜகவுக்கு சவால் விடுத்தார். மேலும் \"நான் சொன்னதில் தவறில்லை. அந்த உரையாடலில் பாஜக 100-ஐ தாண்டாது என்றும் நான் சொன்னேன், அவர்கள் ஏன் அதை வெளியிடவில்லை எனக்கு முழு அறிவு இருந்தது, அது ஒரு பொதுத் தளம் என்று தெரிந்துதான் பேசினேன்\" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2020/12/", "date_download": "2021-08-02T10:16:06Z", "digest": "sha1:BKEGJ7RYCEDJBZRASEGJFZ3E7Y4USK6M", "length": 17125, "nlines": 150, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: December 2020", "raw_content": "\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nமுந்தைய பதிவு: ஆதாமிண்ட ஸ்வர்க்கம்\nவர்கலா பயணத்தின் அடுத்த பகுதிக்கு போகும் முன் என் பயணத்துணைகளாக வந்த இரண்டு அஃறிணை நண்பர்களைப் பற்றி குறிப்பிட்டுவிடுகிறேன்.\nமுதல் நண்பன் – சைக்கிள்: எனக்கு பைக் – ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது என்பதால் பயணத் திட்டத்தின் போது சைக்கிள் வாடகைக்கு கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தேன். சில இடங்களில் மெளன்டைன் பைக் என்று சொல்லப்படும் மலையேற்றத்திற்கான சைக்கிள் கிடைத்தது. கியர் வைத்த 21 ஸ்பீட் சைக்கிள் அது. நாளொன்றிற்கு வாடகை முன்னூற்றி ஐம்பது ரூபாய். நான் தேடியதோ மிதித்தால் ஒரே வேகத்தில் போகக் கூடிய சாதாரண சைக்கிள். பின்னர் கூகுள் மேப் வழியாக உன்னிக்கண்ணன் என்பவரிடம் சைக்கிள் வாடகைக்கு கிடைப்பதாக அறிந்தேன். கியர் வைத்தது தான், ஆனாலும் அந்த சைக்கிள் பழையது போல தோன்றியதால் ஒரு அ���ுக்கம் உண்டானது. தினசரி வாடகை நூற்றி ஐம்பது. வர்கலா சென்றதும் நேராக ஹெலிபேட் போய் இறங்கினேன் இல்லையா. அங்கு முதல் வேலையாக உன்னிக்கண்ணனை சந்தித்து சைக்கிளைப் பெற்றுக்கொண்டேன். உன்னிக்கண்ணன் ஒரு சிறிய ஹோம்ஸ்டே வைத்து நடத்துகிறார். டிராவல்ஸும் நடத்துகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் வாடகை சைக்கிளை பொறுத்தவரையில் அவர் அதனை தொழில்ரீதியாக செய்யவில்லை. அவரது சொந்த பயன்பாட்டிற்காக ஒரே ஒரு சைக்கிள் வைத்திருக்கிறார். அதைத்தான் உபரி சமயங்களில் வாடகைக்கு விடுகிறார். ப்ரொஃபஷனல் இல்லை என்பதால் உன்னிக்கண்ணனின் சைக்கிளில் பெல் இல்லை, பிரேக்கை கோபம் கொண்டு அழுத்தினால் பெருத்த ஒலியுடன் லேசாக வேலை செய்யும். ஆனாலும் எனது தேவைக்கு அது போதுமானதாக இருந்தது.\nஇரண்டாவது நண்பன் – மொபைல் ஸ்டாண்ட்: சுய புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கு பெரிய ஆர்வமில்லை என்றாலும் ஒரு ட்ரிப் முழுக்க புகைப்படங்கள் எடுக்காமல் இருக்க முடியாது அல்லவா. அது மட்டுமில்லாமல் அரபிக்கடலில் சூரியன் மறைவதை டைம் லாப்ஸ் வீடியோ எல்லாம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் இங்கிருந்து போகும்போதே மொபைல் போனுக்கான ட்ரைபாட் ஒன்றை வாங்கியிருந்தேன். அமெச்சூர் பொருள்தான். ஆனாலும் தேவையை பூர்த்தி செய்தது. அமேசானில் கிடைக்கிறது. விலை நானூறு. கூடவே ஒரு சிறிய ப்ளூடூத் ரிமோட்டும் கிடைக்கிறது. போனை ஸ்டாண்டில் செட் செய்துவிட்டு வந்து ரிமோட் பட்டனை அழுத்தினால் புகைப்படம் எடுக்கும். இந்த ட்ரிப் முழுக்க என்னை புகைப்படம் எடுத்துக் கொடுத்தவர் இவர்தான். எதிரில் நண்பர் இருந்து நம்மை புகைப்படம் எடுத்துக் கொடுத்தால் கூட நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கும். இவரிடம் அப்படி எந்த தயக்கமும் இல்லை.\nவர்கலா பயணத்தை வடக்கு, தெற்கு என்று பிரித்திருந்தேன் அல்லவா. முதலிரண்டு தினங்கள் வடக்கு. விடுதியில் போய் இறங்கி குளித்து முடித்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிய இடம் ஆழியிறக்கம் கடற்கரை. விடுதியின் பின்புறம் தான் கடற்கரை. கிட்டத்தட்ட பிரைவேட் கடற்கரை மாதிரி தான். விடுதியிலிருந்து செங்குத்தாக இறங்கும் படிக்கட்டுகள் வழியாக கடற்கரையை அடைந்துவிடலாம். ஆனால் சாலை வழியாக முக்கால் கி.மீ. நான் சாலை வழியைத் தேர்வு செய்தேன். சரிவான பாதையில் ப்ரேக் இல்லாத என் சைக்கிள் தறிகெட்டு ஓட, ஒரு கட்டத்தில் முதல் நாளே சில்லறை வேண்டாம் என்று இறங்கி தள்ளிக் கொண்டே போய்விட்டேன்.\nஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 1\nகுன்றின் இறக்கத்தில் கடற்கரை அமைந்திருப்பதால் ஆழியிறக்கம் என்கிற பெயர் அமைந்திருக்கக்கூடும். ஆஃப் பீட் கடற்கரை. அக்கம் பக்கம் ஒரு கடை, ஒரு வீடு எதுவும் கிடையாது. நான் சென்றபோது நான் ஒருவன் மட்டும் கடற்கரையில் மொட்டை வெயிலில் நின்றுக் கொண்டிருந்தேன். டைம் லாப்ஸ் எடுத்துப் பார்க்கும் ஆர்வத்தில் மொபைல் ஸ்டாண்டை செட் செய்தேன். அதற்குள் சில உள்ளூர் சிறுவர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். பருந்துகள் வேறு மிகத் தாழ்வாக பறந்துக் கொண்டிருந்தன. சூழல் எனக்கு ஒரு மாதிரி பதற்றமூட்டுவதாக அமைந்திருந்ததால் அதிக நேரம் அக்கடற்கரையில் செலவிட இயலாமல் கிளம்பினேன்.\nஆழியறக்கம் கடற்கரை - புகைப்படம் 2\nஅடுத்தது, அங்கிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாபநாசம் கடற்கரை. இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும், அஸ்தியை கரைக்கும் பழக்கம் இங்கிருக்கிறது என்று நினைக்கிறேன். கடற்கரையில் பத்தடிக்கு ஒரு பார்ப்பனர் குடை, போர்டு வைத்து கடை போட்டிருக்கிறார்கள். இந்த ப்ராஸஸுக்கு தேவையான துண்டு, வேட்டி, பூஜை சாமான்கள் போன்றவற்றின் விற்பனை ஒரு பக்கம் பரபரவென நடந்துக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் இவற்றையெல்லாம் விநோதமாகப் பார்த்துக்கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் கடக்கிறார்கள். எனக்கு இதிலெல்லாம் மனம் ஒட்டவில்லை. நான் வர்கலா சென்று இறங்கியதிலிருந்து அந்த நிமிடம் வரை ஒரு மிடறு மது கூட அருந்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபாபநாசம் கடற்கரை - புகைப்படம் 1\nபாபநாசம் கடற்கரையை ஒட்டிய சாலையில் வரிசையாக உணவகங்கள் இருந்தன. ஒவ்வொரு உணவகத்தின் வாசலிலும் ஒரு ஸ்டாண்ட் அமைத்து அதில் மெனு புத்தகத்தை வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்கிறேன். ஒன்றில் கூட மதுவின் விலைப்பட்டியல் இல்லை. ஒரு உணவகத்தில் கூட மது கிடைக்கும் என்கிற அறிவிப்பு இல்லை. அதிலும் ஒரு உணவகத்தின் மெனுவில் காழ்ப்புணர்வை தூண்டும் வகையில் “ஹாட் ட்ரிங்க்ஸ்” என்று காஃபி, டீ, பூஸ்ட், ராகிமால்ட் போன்றவற்றை பட்டியலிட்டிருந்தார்கள். எனக்கு படபடப்பாக ஆகிவிட்டது.\nபாபநாசம் கடற்கரை - புகைப்படம் 2\nஒரு கடைக்குள் நுழைந்து காண்டம் கேள் என்றால் சத்தமாகக் கேட்பேன். ஆனால் பியர் இருக்கிறதா என்று, அதுவும் வேற்றூரில், வேற்று மொழி ஆட்களிடம் கேட்க சங்கடமாக இருந்தது. யோசித்தபடி பாபநாசம் கடற்கரை மணலில் நடந்துக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு கீற்றுப் பந்தல் அமைத்து ஆபத்துதவிக்காக இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி மாதிரியே இருந்தார். அவரைக் கண்டதும் ஒரு அணுக்கம். அவருக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்கும் என்று உள்ளுணர்வு சொன்னதால், அண்ணா, இங்க எங்கே பியர் கிடைக்குமா என்று தமிழிலேயே கேட்டேன். அதற்கு அந்த வி.சே. அண்ணா நான் கடந்து வந்த உணவகங்களைக் காட்டி “அங்க இருக்குற எல்லா கடைலயும் கெடைக்கும்டா” என்று அச்சு அசலாக வி.சே. மாடுலேஷனிலேயே சொன்னார்.\nஅடுத்த பதிவு: மது மற்றும் சார்ந்தவை\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 11:00:00 வயாகரா... ச்சே... வகையறா: பயணம், வர்கலா\n2 பேர் கருத்து சொல்லியிருக்காங்க\nசுஜாதா இணைய விருது 2019\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/48616/", "date_download": "2021-08-02T09:01:42Z", "digest": "sha1:IDZLO5NPCGOHSUGQVA7R5CPVZJKXND62", "length": 10503, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "‘இந்திய ஆசிரியர்கள் தேவையில்லை’ – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமலையக தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு, இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்துவரும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்றைய தினம் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.\nஇந்தத் திட்டத்தை கல்வி அமைச்சு கைவிடவேண்டும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கோரிக்கை விடுத்தார்.\nஎனினும், இலங்கைக்கு கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறான வளமாகவே இந்த ஆசிரியர் திட்டமும் அமைந்துள்ளது என, கல்லவியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போதே, மேற்கண்டவாறு வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.\n“தோட்டப்பகுதிப் பாடசாலைகளுக்கு இந்தியாவிலிருந்து 100 ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவர் என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். இது தோட்டப் பகுதியிலுள்ள கல்விகற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். மலையகத்தில் கல்வி கற்றவர்கள் நிறையபேர் உள்ளனர்..\n“தோட்டப் பகுதியிலுள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லாவிட்டால், உயர்தரம் கற்றவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கலாம். இதனை விடுத்து, இந்திய ஆசிரியர்களை வரவழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என, கனக ஹேரத் எம்.பி சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன், இந்திய ஆசிரியர்களை அழைத்துவந்தால் அவர்களுக்கு தங்குமிட வசதி வழங்கவேண்டும். இதனால் செலவுகள் அதிகரிக்கும். சிலவேளை, கைச்சாத்திடப்படவுள்ள எட்கா உடன்படிக்கையின் ஓர் அம்சமாக இந்த திட்டம் உள்ளதா என்நு சந்தேகமாகவுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கு பதிலளித்த கல்வியமைச்சர், “தோட்டப்பகுதியிலுள்ளவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக ஆட்சேர்ப்பு செய்தோம். ஆனாலும், ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் தீரவில்லை. இது பற்றி கவனம் செலுத்தியுள்ளோம். நாடளாவிய ரீதியில் 16 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. மேலும், விஞ்ஞான பாடத்துக்கு இங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, தோட்டப்புறத்தில் உள்ளவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்க யோசனை செய்யப்பட்டுள்ளது.\n“அத்துடன், ஏனைய பிரசேதங்களில் உள்ளவர்கள் தோட்டப்புறங்களில் சென்று சேவையாற்ற விரும்புவது குறைவாக உள்ளது. இதனால்தான் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைப்பது பற்றி யோசனை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டால் அது, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவியாகவே காணப்படும் அவர்களுக்கான செலவீனங்களை இந்திய அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். இதனால் எமக்கு செலவுகள் ஏற்படப்போவதில்லை. சேவைக் காலம் முடிந்ததும் அவர்கள் திரும்பிச்சென்றுவிடுவர்” என்றார்.\nPrevious articleவெளிவாரிக் கற்கை அனுமதி உறுதிப்படுத்தாத போதும் கற்றலில் ஈடுபடும் கல்வி நிலையம்.\nNext articleஎட்டிய மட்டும் பாய்வது எவுகணையாக இருக்க, எட்டாத தூரம் எல்லாம் பட்டுருவிப் பாயும் எழுது கோல்.\nசுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தனது சொற்ப இலாபத்திற்காக சமூகத்திற்கு துரோகம் இழைக்கிறார்\nகருணா அம்மானின் கட்சியும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்.\nமா���்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் 50,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nபயிர்களை நாசம் செய்த 50 மாடுகள் பிடித்து கட்டிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vengadesa.com/%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-08-02T09:15:07Z", "digest": "sha1:FBIGZPQMX4CCTWEEXPTRVHMVKLDRL2T5", "length": 21539, "nlines": 34, "source_domain": "www.vengadesa.com", "title": "- மகோற்சவங்கள்", "raw_content": "\nவண்ணை ஸ்ரீவேங்கடேசனது மகோற்சவ வைபவங்கள்.\nஇந்து ஆகமங்களில் கூறப்பட்டுள்ள மும் மூர்த்திகளில் காத்தல் தொழிலுக்கு அதிபதியாக விளங்குபவர் திருமால் ஆவார். இவரை வைணவ மதத்தைச் சேர்ந்தோர் பல பெயர்களைக் கொண்டு அழைக்கின்றார்கள். திருமாலைத் தமது குல தெய்வமாக வணங்குபவர்களை வைணவர் என்று அழைப்பர். தென் இந்தியாவில் வைணவஸ்தலங்கள் 108 உள்ளன. தமிழ் நாட்டில் வடகலை தென்கலை வைணவர்கள் உள்ளனர். வடகலையைச் சார்ந்த வைணவர்கள் திருவேங்கடம் என அழைக்கப்படும் திருப்பதி தேவஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வேங்கடேசப்பெருமானின் முகூர்த்தத்தையே தமது குல தெய்வமாக வணங்குகின்றனர். இவர்களின் முதன்மைத்தலம் திருப்பதி ஆகும். பண்டைக்காலத்தில் இவ் வைணவர்கள் தமது நெற்றியில் இடும் நாமத்தைப் புருவம் வரை இடுவர். இவர்களை வடகலை வைணவர் என்றும், தமது நெற்றியில் இடும் நாமத்தை புருவத்தின் கீழ்ப்பாதம் இடுபவரை தென்கலை வைணவர் என்றும் அழைப்பர். இவர்களது முதன்மைத்தலம் ஸ்ரீரங்கமாகும். இவர்கள் தமது குல தெய்வமாக வரதராஜப்பெருமாளை வணங்குவர். இவ் இரு பாலாரும் ஸ்ரீரங்கநாதரை வணங்குவர். ஸ்ரீரெங்கத்தைப் பெரிய கோயில் என்று அழைப்பர். மேற்படி தேவஸ்தானத்தைப் பரிபாலிக்கும் பத்மசாலிச்செட்டிகளில் இவ் இரு பாலாரும் உள்ளனர். அத்துடன் இப்பத்மசாலி சாகியத்தினருள் சிறபான்மையினராக வீர சைவர்களும் உள்ளனர். இம் மூன்று வர்க்கத்தினரும் தமது குலதெய்வமாக ஸ்ரீவேங்கடேசவரதராஜப் பெருமாளையே வணங்கி வருகின்றனர்.\nஇத்தேவஸ்தானத்தைச் சார்ந்த வைஷ்ணவர்கள் கி.பி 1800 ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு சென்று வைஷ்ணவப் பட்டாச்சாரியார்களை அணுகி வைஷ்ணவத் தீட்சை பெற்றுக்கொண்டனர். அதற்குப் பின் இவ்வழக்கம் அருகி விட்டது. வைஷ்ணவ தீட்சை பெற்ற வைஷ்ணவர்கள் பன்னிரு இடங்களில் நாமத்தைத் தரிக்க வேண்டும். அக்காலத்தில் வைதீக அந்தணர்கள் கடல் கடந்து செல்லு���் பிரயாணங்களை ஏற்பதில்லை. வைணவத் தலங்களில் இருபெருங் கூறான கிரியை முறைகள் நடைபெறுகின்றன. அவை வைகானச ஆகம, பாஞ்சராத்திர ஆகம சம்ரதாயங்களுக்கேற்ப பூஜாவிதானங்களை அமைத்துள்ளனர். இத்தேவஸ்தானத்தில் வைகானச ஆகமத்திற்கு அமைவான பூஜாகாரியங்களே அன்று தொட்டு இன்றுவரை நடைபெற்று வருகின்றன. இத்தேவஸ்தானத்தில் மகோற்சவ காரியங்கள் அனைத்தும் வைகானச வைணவ ஆகமத்திற்கேற்ப கிரியா அம்சங்கள் யாவும் நிகழ்த்தப் பெறுகின்றன. இத்தேவஸ்தானம் வைஷ்ணவ சம்பிரதாயத்தையும் கோட்பாட்டையும் அனுசரிக்கும் ஒரு திவ்வியமான தேவஸ்தானமாக குடாநாட்டு மக்கள் கருதுகின்றனர்.\nஇத்தேவஸ்தானத்தில் கி.பி 1878 ம் ஆண்டு தொடக்கம் மகோற்சவங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அன்று தொடக்கம் இன்று வரை கஸ்தம் பாதச் சாத்துப்படி நடைபெற்று வருகின்றது. கஸ்தம் பாதச் சாத்துப்படியின் அவசியம் பற்றி எமது தேவஸ்தானத்தின் பத்ததியில் கூறப்பட்டுள்ளது. வைஷ்ணவ ஆகம சாஸ்த்திரங்களுக்கு ஏற்றவகையில் கஸ்தம் பாதச் சாத்துப்படி உருப்படிகள் இத்தேவஸ்தானத்தில் அமைந்துள்ளன. ஆதியில் வைஷ்ணவ அந்தணர்கள் சாத்துப்படியைச் செய்து வந்தனர். இப்பொழுது அவர்களிடம் பயிற்றி பெற்ற சைவ அந்தணர்கள் செய்து வருகின்றனர். இத் தேவஸ்தானத்தின் மகோற்சவங்களிவ் வீதிவலம் வரும் வாகனங்களாவன கருடன், ஆதிஷேசன் ஆகிய ஐந்து தலை நாகம், அன்னம், அனுமன், யானை, குதிரை, பூந்தண்டிகை, சப்பறம் ஆகும்.\nமகோற்சவ விழாக்கள் புரட்டாதி மாத்தில் பூர்வ பட்சத்து அத்தம் அல்லது சித்திரை நட்சத்திரத்தில் ஆரம்பமாகின்றது. முதல் நாள் விழா கொடியேற்ற விழாவாகும். கொடியேற்ற விழாவன்று சுவாமி தேவிமாருடன் சூரிய விருத்தச் சேவையில் எழுந்தருளுகின்றார். வைஷ்ணவ ஐதீகப்படி சேவை என்பது திருவிழாவையும் வாகனத்தையும் குறிக்கும் சொல்லாகும். கொடியேற்றத்தன்று இரவு சுவாமி மாத்திரம் அன்ன வாகனத்தில் வெளிவீதி உலா வருவார். பிரம்ம தேவனது படைத்தற் தொழிலை ஞாபகப் படுத்தும் விதமாக அன்ன வாகனம் அமைகிறது.\nஇரண்டாம் நாள் இரவு சுவாமி ஐந்து தலை நாகம் மீது சயனம் செய்யும் வகையில் அழகிய கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகின்றது. இக் காட்சி பகவான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் நிலையை உணர்த்துகின்றது.\nமூன்றாம் நாள் இரவு சுவாமி கருடன் மீது வீதிவலம் வ���ுகின்றார். இக் காட்சி பகவானது காத்தற் தொழிலை ஞாபகப்படுத்துகின்றது.\nநான்காம் நாள் இரவு சுவாமி அனுமன் மீது எழுந்தருளிக் காட்சி தருகின்றார். சுவாமியின் கையில் வில்லு அம்புடன் சாத்துப்படி நடைபெறுகின்றது. இக்காட்சி ஸ்ரீராமனது அவதாரத்தை உணர்த்துகின்றது.\nஐந்தாம் நாள் இரவு சுவாமி பூந்தண்டிகையில் வீதி வலம் வருகின்றார். சுவாமியை மிக அலங்காரமாக செல்வந்தக் கோலத்தில் கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகிறது. இது பகவானை செல்வந்தனாக சித்தரிக்கின்றது.\nஆறாவது நாள் இரவு சுவாமி யானை மீது வீதி வலம் வருகின்றார். சுவாமி கையில் துரட்டி கொடுத்து கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகின்றது. இக்காட்சி பகவான் முதலை வாயிலிருந்து யானையைக் காத்த செயலை உணர்த்துகின்றது.\nஏழாம் நாள் இரவு சுவாமி சப்பறத்தில் வெண்ணெய்த் தாளியுடன் எழுந்தருளுவார். இது ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் உண்ட காட்சியை கஸ்தம் பாதச் சாத்துப்படி மூலம் மக்களுக்கு உணர்த்தும் காட்சியாகும்.\nஎட்டாம் நாள் பகல் சுவாமி அம்பாள்மாருடன் சின்னக் கருட வாகனத்தில் உள்வீதி வலம் வருகின்றார். இரவு சுவாமி குதிரை மீது காட்சி தருகின்றார். கையில் சவுக்கு கொடுத்து மறுகையில் கடிவாளத்துடன் கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகிறது. இக்காட்சி பகவானைக் குபேரனாகவும் கல்கி அவதாரம் பெற்றவனாகவும் சித்தரிக்கின்றது.\nஒன்பதாம் நாள் பகல் சுவாமி தேவிமாருடன் மிக அலங்காரமாக சிம்மாசனத்தில் காட்சி தருகின்றார். ஜடாமுடி தரித்து சுவாமி தேவியருடன் அழகிய ரதத்தில் உலா வருவார். இரதோற்சவத்தன்று சுவாமி தேரினின்று இறங்கி தேவஸ்தானத்திற்குள் வரும் போது பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப் படுகிறார். பாத தீர்த்த வைபவம் நடைபெற்றதும் கோவில் ஓதுவார், ஊழியர்களாகிய மங்கள வாத்தியக்காரர், சங்க நாதம் ஒலிப்பவர், பூமாலை புனைபவர், திருத்தொங்கல் புனைபவர், தேருக்கு முண்டியிட்ட ஆசாரியார், சலவைத் தொழிலாளர், களஞ்சிய வேலை செய்வோர் ஆகியோருக்கு வேட்டி சால்வை வழங்கப்படுகின்றது. சுவாமி வசந்த மண்டபம் அடைந்ததும் சுவாமிக்கு சர்க்கரை, புளி, தயிர் சாதவகைகளுடன் பழவகைகளும் காளாஞ்சிகளும் பானகம் ஆகிய சர்க்கரையுடன் தேன் கலந்த நீர், மோர் ஆகியவை நிவேதனம் செய்யப்படுகின்றன. இதன் பின் மகா ஆசீர்வாத வைபவம் நடைபெறுகின்றது. இரவு தேரடி வைபவ விழா நடைபெறுகிறது.\nபத்தாம் நாள் காலையில் தீர்த்தோற்சவ அங்கம் ஆகிய பொற்சுண்ணம் இடித்தல் வைபவம் பொற்சுண்ணப் பாக்கள் இசைக்கப் பட்டு நடைபெறும். இதன் பின் பேரி தாடன உற்சவம் நடைபெற்று சுவாமி கருட வாகனத்தில் அம்பாள்மாருடன் தீர்த்தோற்சவத்திற்குச் செல்வார். தீர்த்த வைபவம் நிறைவு பெற்றதும் சுவாமி உள்வீதியில் யாக மண்டபத்தில் நின்று பூரணாகுதியை ஏற்றுக்கொண்டு கோபுர வாயில் சென்று பாத தீர்த்தம் பெற்று அமர்கிறார். கொடிக்கம்பத்தின் முன்னால் ஆதிஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு ஆசனம் கொடுக்கப் படுகின்றது. இவருக்கு திருவோணத் தீபப் பூஜை நடாத்தப் பட்டு திருவோணத் தீபம் ஏற்றப்படுகிறது. இதன் பின் மூல மூர்த்திக்கு யாக கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. இதன் பின் கோபுர வாயிலில் இருந்து சுவாமி வசந்த மண்டபத்தை அடைந்ததும் யாகப் பொட்டும் முளைப்பாலிகையையும் தீர்த்தமும் அடியவர்கட்கு வழங்கப்படும். இத்துடன் தீர்த்தோற்சவ விழா நிறைவு பெற்று இரவு கொடியிறக்க விழா நடை பெற்று சுவாமி அம்பாள்மாருடன் சந்திரப் பிறைச் சேவையில் வெளிவீதி உலா வருகின்றார்.\nபதினொராம் நாள் மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். சுவாமி மிக அலங்காரமாக மணவாளக் கோலத்தில் அழகாக சாத்துப்படி செய்யப்பட்ட அம்பாள்மாருக்கு திருமாங்கல்ய தாரணம் செய்து மணவாளக் கோலத்தில் பூந்தண்டிகையில் வெளிவீதிஉலா வருவார். தேவியருடன் மணவாளக் கோலத்தில் சுலாமி பூந்தண்டிகையில் வரும் காட்சியைக் காண பக்தர்கள் கூடுகின்றனர்.\nபன்னிரண்டாம் நாள் மாலையில் சுவாமி வசந்த மண்டபத்தில் பூஜையாகிய பின் திரு ஊஞ்சல் பாக்கள் ஓதுவார் இசைக்க திருவூஞ்சலில் ஆடுவார். பின்பு சுவாமி பூந்தொட்டியில் மிக அலங்காரமாக வீதிவலம் வருவார்.\nபதின்மூன்றாம் நாள் சுவாமியை யோகநாராயணர் சேவையில் கஸ்தம் பாதசாத்துப்படி செய்து இவருடன் கூட ஆதிஸ்ரீவேங்கடேஷ்ரவரையும் அலங்கரித்து இலந்தை விருட்சச் சேவையில் வெளிவீதி உலா வருவார்.\nபதின்நான்காம் நாள் காலை மூல மூர்த்திகளுக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று வாகன பூஜையும் நடைபெறும். அன்று மாலை ஆஞ்சனேய மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று அடியவர்கள் ஆஞ்சனேயருக்கு பொங்கல் வைப்பார்கள். உற்சவ மூர்த்தியாகிய ஆஞ்சனேயரை அலங்காரம் செய்து வெளிவீதியிலுள்ள ஆஞ்சனேயர் கோயிலில் எழுந்தருளப்பண்ணி அடியவர்களின் பொங்கற் பிரசாதங்கள் ஆஞ்சனேயர் முன் படைக்கப் பட்டு வடைமாலைகள் சாத்தப்பட்டு சோடசோப உபசாரப் பூஜை நடைபெறும். இதன் பின்பு ஸ்ரீஆஞ்சனேயர் வீதி வலம் வருவார். இத்துடன் மகோற்சவ விழா நிறைவு பெறுகிறது.\nவைஷ்ணவ பூஜை விதானத்திற்கேற்ப உபயகாரர் மற்றும் அர்ச்சனை செய்யும் அடியவர்க்கு மூலமூர்த்தியின் சந்நிதியில் சடகோபம் என்ற நாமமுடைய சாமியின் திருப்பாதம் பொருத்தப்பெற்ற முடி சாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/10/21/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-08-02T08:52:00Z", "digest": "sha1:QZOWQAEMJ4XJIZQG4QMEQFVX3BLTLDKU", "length": 7456, "nlines": 83, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "ஆறுமுகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம் – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › ஆறுமுகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம்\nமுருக பக்தர் வாரியார் வாழ்வில் ஆறுமுகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம் இது.\n1906ல் திருவண்ணாமலை மாவட்டம் காங்கேயநல்லூரில் பிறந்த வாரியாருக்கு வயது 22. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தங்கியிருந்தார்.\nஅவரது தந்தை மல்லையதாசர், தென்மடம் வரதாச்சாரியார் என்பவரிடம் வீணை கற்க ஏற்பாடு செய்தார். மூன்று ஆண்டுக்குப் பின், மல்லையதாசர் மகனிடம், ”வீணை கற்றுக் கொண்டது போதும் அப்பா உடனே ஊருக்கு வந்து விடு” என கடிதம் எழுதினார். தந்தையின் சொல்லை வேத வாக்காக ஏற்றார். ஆனால் தந்தையாரிடம், குரு காணிக்கையாக ஏதாவது தான் கொடுக்க விரும்புவதாக கடிதம் எழுதினார். அவர் அன்பளிப்பாக கிடைத்த இரண்டு எட்டு முழ வேட்டிகளை மகனுக்கு அனுப்பி வைத்தார். வாரியாருக்கோ சங்கடம் உண்டானது. ஏதாவது நல்ல நினைவுப்பொருள் தர வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது.\nவாரியார் தங்கிய வீட்டின் எதிரில் முருகன் கோயில் இருந்தது. ”முருகா ஞானபண்டிதா குருநாதருக்கு என்னால் காணிக்கை கொடுக்க முடியவில்லையே” என கண்ணீர் விட்டார்.\nஅற்புதம் நிகழ்த்தினான் ஆறுமுகப் பெருமான். புரசைவாக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் திடீரென சொற்பொழிவாற்ற அழைப்பு வந்தது. சன்மானமாக நாற்பது ரூபாய் கொடுத்தனர்.\nபுதையல் வந்தது போல துள்ளிக் குதித்தப��ி சைனா பஜாருக்கு ஓடினார் வாரியார்.அப்போது பவுன் விலை வெறும் பதின்மூன்று ரூபாய். இரண்டரை பவுனில் கைக்கு தங்கச் சங்கிலியும், அரைப்பவுன் பட்டாபிஷேக ராமர் டாலரும் வாங்கினார்.\nதாய்மாமா கொடுத்த மூன்று ரூபாயில், மற்ற பொருட்களான பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை, வாழைப்பழம், வெற்றிலைபாக்கு வாங்கினார். குருநாதரின் வீட்டுக்குச் சென்று தட்டில் பழவகைகள், இரண்டு வேட்டிகள், தங்க நகைகளை வைத்து கொடுத்தார்.\n ஏழை என்பதால் அதிகம் என்னால் கொடுக்க முடியவில்லை. அடியேன் அளிக்கும் சிறு காணிக்கையை ஏற்று ஆசி அளியுங்கள்” என்று சொல்லி குருவின் காலில் விழுந்தார்.\nகண்ணீர் சிந்திய குருநாதர், ”நீ உத்தமமான பிள்ளை. உனக்கு தெய்வம் நிச்சயம் துணைபுரியும்’ என்று ஆசியளித்தார்.\nவாரியாரும் குருதட்சணை வழங்கியதை எண்ணி மகிழ்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=20907241", "date_download": "2021-08-02T09:36:56Z", "digest": "sha1:BMIODOGUZWT7N3AXOLARRHBKJSIBLDWX", "length": 40783, "nlines": 155, "source_domain": "old.thinnai.com", "title": "அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஅரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து\nஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று கருதப்படும் இங்கிலாந்து பாரளுமன்றத்தில் அடித்த அரசியல் சூறாவளி, இங்கிலாந்து தனது ஜனநாயக அரசியல் கட்டமைப்பையே அத்திவாரத்தோடு அலசிப்பார்க்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்படி என்னதான் நடந்து விட்டது இந்தப் பீடிகை போடுகிறாயே என்று என்னை நோக்கி கேள்விக்கணைகளை வீடுகிறீர்கள் என்பது தெரிகிறது.\nபாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காக சேவை செய்ய்யும் சேவகர்கள் என்னும் அடிப்படையான் வரைவிலக்கணத்தை மீண்டும் நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கும் இங்கிலாந்து மக்களின் அபிமானக் கருத்துக்கள் அரசியல் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.\nகடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பதவியிலிருக்கும் இங்கிலாந்து தொழிற் கட்சி மக்களிடையே படுவேகமாக அரசியல் செல்வாக்கில் வீழ்ச்சியடைந்து வந்து கொண்டிருந்தது.\nஅத்ற்கான காரணங்கள் ஈராக் மீதான யுத்தம் கொடுத்த தாக்கங்கள், அதைத் தொடர்ந்து உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் அடைந்த தாக்கங்களின் எதிரொலி.\nஇந்தத் தாக்கங்கள் கொடுத்த வீழ்ச்சியிலிருந்து தம்மை மீட்டுக்கொள்வதற்காக மேற்கொண்ட பிராயத்தனங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவது போல விழுந்தது ஒரு பேரிடி.\nஅது இங்கிலாந்து அரசாங்கக் கட்சியான தொழிற் கட்சிக்கு மட்டுமில்லாது அனைத்து அரசியல் அமைப்புக்களின் மீதும் விழுந்த அடியாகக் கருதப்படுகிறது.\nஇங்கிலாந்தில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆத்ரவான ” டெய்லி டெலிகிராப் ” என்னும் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளே இப்பிரச்சனைக்கு அடித்தளமாக அமைந்தது.\nசில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அரசாங்கத்தினால் இதுவரை காலமும் ” அரசாங்க இரகசியங்கள் ” என்று கருதப்பட்ட செய்திகள் அனைத்தும் மக்களின் பார்வைக்காக பகிரங்கமாக்கப் படவேண்டும் என்னும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.\nஇந்தச் சட்டமே இந்த் அரசியல் அதிர்வலைகளுக்குக் காரணமாக அமைந்து விட்டது எனலாம்,\nஇந்த வருடம் ஜீன் மாதம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மந்திரிகள், பிரதம மந்திரி ஆகியோரின் மாதாந்த சம்பள்ம், அவர்கள் தமது வ்ர்ழ்க்கைச் செலவுகளுக்காய் கோரிய செலவுகளைப் பற்றிய விபரங்கள் ஆகியவற்றிற்கான விபரங்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஅதற்கு முன்னாலேயே இவ்விபரங்கள் அடங்கிய இறுவெட்டு (CD)\nஇந்தப் பத்திரிகையிடம் கையளிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் சிறிது, சிறிதாக இந்த அர்சியல்வாதிகளின் செலவுகளின் விபரங்கள் வெளியிடப்பட்டது.\n நமது பிரித்தானிய வாக்காளர்கள். பொங்கியெழுந்து விட்டார்கள் போங்கள்.\nஎமது வரிப்பணத்தில் இப்படியான் சுகபோக வாழ்க்கையா நார், நாராக கிழித்து விட்டார்கள் அரசியல்வாதிகளின் அந்தரங்கச் செலவுகளை.\nஇங்கிலாந்து என்னும் பழம் பெருமை வாய்ந்த பாராளுமன்ற அரசியலின் ஜனநாயகப் பலம் அப்போதுதான் புரிந்தது.\nசாதாரண் வாக்காளர்களாகிய மக்களின் மன்ம் கொதிப்படைந்தது. வரிப்பணத்தில் வசதி வாழ்க்கை நடத்தும் இந்த அநியாய வேலை பாராளுமன்ற அங்கத்தினர்களுக்குத் தேவையானதுதானா என்னும் தர்க்கம் வானோலி, தொலைபேசி, நாளாந்தப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என ஊடகங்கள் அனைத்திலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.\nஅரசியல் வானிலே எழுந்த வெப்பத்தை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டார்கள். உடனடியாக இந்தப் பிரச்சனைக்கு ���ரு தீர்வு முன்னெடுக்கப்படாவிட்டால், அரசியல் அரங்கத்தின் அடிக்கல்லே அசைக்கப்பட்டு விடும் என்னும் அச்சம் அனைத்து அரசியல்வாதிகளையும் பற்றிக்கொண்டு விட்டது.\nஅதுமட்டுமல்ல இதிலே உருவாக்கப்பட்ட மற்றுமொரு தாக்கம் இங்கிலாந்தைத் தமது வதிவிடமாகக் கொண்ட அனைத்து வெளிநாட்டவர்களையும் பாதிக்க வைத்தது.\nஇங்கிலாந்து அரசியலில் இதுவரை கோலோச்சிய அனைத்து முக்கிய அர்சியல் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற அங்கத்தினர்களும் இந்த முறையற்ற செலவுகளில் சம்மந்தப்பட்டிருந்தார்கள்.\nஎனவே மக்களின் அரசியல்வாதிகளின் மீதான கோப உணர்ச்சி ஒரு விரக்தி மிகுந்த நிலைக்கு அவர்களைத் தள்ளியிருந்தது. அவர்களின் மனநிலையில் அவர்கள் இந்தக் கட்சிகள் எதற்குமே வாக்களிக்க விரும்பவில்லை.\nவிளைவு தொடர்ந்து வந்த ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தலிலே ஒருமுறையும் இல்லாதவாறு இனத்துவேஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தும் “பிரித்தானிய தேசியக் கட்சியை”ச் சேர்ந்த இருவர் இங்கிலாந்திலிருந்து ஜரோப்பிய பாளுமன்றத்திற்கு அங்கத்தினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.\nஇங்கிலாந்து அரசியல் வரைபடத்தையே மாற்றக்கூடிய வல்லமை மிகுந்த ஒரு மாற்றமாக இத்தெரிவு அரசியல் அவதானிகளால் நோக்கப்பட்டது.\nஆளும் கட்சி, இரு பிரதான் எதிர்க்கட்சிகள் என்பன தமது கட்சியைச் சேர்ந்த பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் வந்த தாக்கங்களைச் சமாளிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.\nதமது கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை சந்தேகத்துக்குரியதாக இருந்தால் அவர்களின் விபரம் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.\nஇக்கட்சிகளைச் சேர்ந்த பல நீண்ட கால பாராளுமன்ற உறுப்பினர்களில் இத்தகைய பிரத்தியேகச் செலவுகளுக்கு பாராளுமன்றச் சலுகைகளை உபயோகித்தவர்கள் தாம் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.\nஜனநாயகத்திற்கு மக்கள்நாய்கம் என்னும் மறுபெயருண்டு. மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் சேவையாற்ற முன்வருவதே ஜனநாயக அரசியலின் முக்கிய பண்பாடாகக் கருதப்படுகிறது.\nஅதேசம்யம் மக்களுக்காக சேவை செய்ய முன்வருவோர் தனக்கென அபிலாஷைகளைக் கொண்டிருத்தல் கூடாது என்னும் எதிர்பார்ப்பு நியாயமானதா \nஇளையோர்கள் பெருமளவில் அரசியல் அரங்கில் நுழையவேண்டும், அப்போதுதான் இந்த ஜனநாயக நாட்டின் எதிர்காலம் தனது உண்மையான பலனை அடையும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஅப்படியாயின் அரசியலில் நுழைய விரும்பும் இளைய சமூகத்தினர் தமக்கென தனி வாழ்க்கை லட்சியங்களையோ அன்றி அபிலாஷைகளையோ கொண்டிருத்தல் கூடாது என்னும் எண்ணம் அந்த எதிர்பார்ப்புக்கு எதிர்மறையாக அமைந்து விடுமல்லவா\nமக்கள் செலுத்தும் வரிப்பணம் அந்த மக்களுக்காகவே செலவிடப்படவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நியாயமானதே ஆனால் அதற்காக அரசாங்கங்கள் தாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் மக்களிடம் கலந்தோசிக்க வேண்டும் என்பது எந்த அளவிற்கு சாத்தியமாகும் \nபாராளுமன்ற அரசியலின் பிறப்பிடம் என்று கருதப்படும் இங்கிலாந்து பாராளுமன்ற அரசியலில் அடித்த சுழல்காற்று அத்திவாரத்தையே ஆட்டிப்பார்க்கும் அளவிற்கு பலம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது.\nஅரசியல்வாதிகளின் மீது காணப்படும் இந்தக் கறுப்புக்கறை கழுவப்பட்டு இனிவரும் அரசியல் அழுக்கற்ற ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்குமா என்னும் கேள்வியோடு அகில உலகமுமே காத்திருக்கிறது.\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து\nஅரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1\nமேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்\nவேத வனம் விருட்சம்- 43\nவாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்\nஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)\nவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\nநிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் \nஇஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்\nஒரு பதிவை முழுமை செய்கிறேன்\nநண்பர��� சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்\n” புறநானூற்றில் கைக்கிளை “\nகடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nPrevious:இன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்\nNext: வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து\nஅரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1\nமேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்\nவேத வனம் விருட்சம்- 43\nவாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்\nஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)\nவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\nநிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் \nஇஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்\nஒரு பதிவை முழுமை செய்கிறேன்\nநண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்\n” புறநானூற்றில் கைக்கிளை “\nகடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-08-02T10:16:51Z", "digest": "sha1:BWOHQC2L36V6IXTOIOC7WORJK65TGXBO", "length": 10691, "nlines": 291, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:இறையியல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரி���ில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுலாமியம்‎ (2 பகு, 56 பக்.)\n► இந்துவியல்‎ (6 பகு, 788 பக்.)\n► கிறித்தவம்‎ (3 பகு, 149 பக்.)\n► ஆங்கிலம்-இறையியல்‎ (2 பகு, 250 பக்.)\n► தெலுங்கு-இறையியல்‎ (22 பக்.)\n► எசுப்பானியம்-இறையியல்‎ (1 பகு)\n► யூதம்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 655 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2010, 14:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-08-02T09:03:42Z", "digest": "sha1:UY6FRYNUQELIZIZHQH5OVGDCN35L4SPI", "length": 9934, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "வேலச்சேரி வெள்ளம் இல்லாத இடத்தை அறிவித்தது - ToTamil.com", "raw_content": "\nவேலச்சேரி வெள்ளம் இல்லாத இடத்தை அறிவித்தது\nஉள்கட்டமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டதாக சிவிக் அதிகாரிகள் கூறுகின்றனர்\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை நீர் தேங்குவதில் இழிவான வேலாச்சேரி வெள்ளம் இல்லாத மண்டலமாக மாறியுள்ளது என்று குடிமை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் மழைநீர் பல தெருக்களில் தேக்கமடைந்து வருவதால், அந்த இடம் நிர்வாகிகளால் “வெல்லாச்சேரி” (வெள்ள மண்டலம்) என்று பெயரிடப்பட்டது. இந்த ஆண்டு, மிதமான முதல் கனமழை இருந்தபோதிலும், நீர் தேக்கநிலை குறித்து பல புகார்கள் வரவில்லை என்று கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபல்லிகாரனை சதுப்பு நிலப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளும், கடலுடன் ஒப்பிடும்போது குறைந்த மட்டத்தில் ஒரு நிலப்பரப்பும் இருப்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டதாக குடிமை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மேற்கு வேலாச்சேரி மற்றும் ஆதம்பாக்கத்தில் பல குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கியது. நீரில் மூழ்கியுள்ள தெருக்களில் ��ுயல் நீர் வடிகால் (எஸ்.டபிள்யூ.டி) கட்டுமானம் சம்பந்தப்பட்ட பல உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக மூத்த குடிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபுயல் நீர் வடிகால் வலையமைப்பு வட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளுடன் இணைக்கப்பட்டிருந்தது மற்றும் வேலாச்சேரி ரயில் நிலையத்தின் இருபுறமும் அமைந்துள்ள கால்வாய்கள் உட்பட வடிகால் வலையமைப்பை சுத்தம் செய்தல், மழைநீர் சாலையில் இருந்து வெளியேற வழிவகுத்தது.\nவேலாச்சேரி-தாராமணி இணைப்பு சாலையில் நிலத்தடி புயல் நீர் வடிகால் நிறுத்தப்படுவது பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீரை விரைவாக வெளியேற்ற உதவியது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nஏஜிஎஸ் காலனி குடியிருப்பாளர்கள் நலச் சங்கத்தின் (ஏ.சி.ஆர்.டபிள்யூ.ஏ) செயலாளர் கீதா கணேஷ் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் வசிப்பவர்கள் மழை பெய்யும் போதெல்லாம் முழங்கால் ஆழமான நீரில் அலைந்து திரிவார்கள், ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமானது சாலைகள் ஈரமாக இருந்தன, நீரில் மூழ்கவில்லை.\nஏ.ஜி.எஸ் காலனியின் ஆறாவது மற்றும் ஏழாவது பிரதான சாலைகளில் புதிய வடிகால் அமைக்கப்பட்டதற்கும், நான்காவது பிரதான சாலை மற்றும் குறுக்குத் தெரு சந்திப்பில் அமைந்துள்ள பழைய எஸ்.டபிள்யு.டி.\nவீராங்கல் ஒடாயின் வெளிச்செல்லும் இடத்தில் புதிய ஸ்லூஸ் கேட் சரி செய்யப்பட்டவுடன், பிருந்தாவன் நகர், மகாலட்சுமி நகர், ஆண்டல் நகர், ஏஜிஎஸ் காலனி, மற்றும் புவனேஸ்வரி நகர் ஆகியவற்றை உள்ளடக்கிய பல குடியிருப்புப் பகுதிகள் வரவிருக்கும் ஆண்டுகளில் மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். .\nவடிகால் வலையமைப்பு குடியிருப்பு பகுதிகளிலிருந்து கல்கிநகர் வழியாக வீரங்கல் ஓடாய் வரை பாய்ந்தது. அவர் கூறினார்: “வீரங்கல் ஓடாய் நிரம்பி வழிகிறது என்றால், மழைநீர் ஓடாயில் பாய்வதை நிறுத்துகிறது, மேலும் நீர் நிரம்பி வழிகிறது. எனவே, மழைநீரை வெளியேற்றுவதற்காக ஹெவி டியூட்டி மோட்டார் பொருத்தப்பட்ட பம்ப் அறையுடன் ஒரு ஸ்லூஸ் கேட் கட்டப்பட்டு வருகிறது. Sl 30 லட்சம் செலவில் ஒரு ஸ்லூஸ் கேட் மற்றும் பம்ப் ரூம் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ”\nPrevious Post:COVID-19 தடுப்பூசி குறித்து ஜனாதிபதி ஷி இந்தியாவுக்கு வழங்குவது குறித்து விவாதிப்பார்: சீனா\nNext Post:‘ஜெமினி கணேஷ் ஒருபோதும் மக்களிடையே வேறுபாடு காட்டவில்லை’\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்\n“ஊழல் நடத்தைக்காக” ஜனநாயக சார்பு பாடகர் அந்தோனி வோங்கை ஹாங்காங் அதிகாரிகள் கைது செய்தனர்\nUNSC தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றுகிறது; வெளிநாட்டு தூதர்களுக்கு சிறப்பு உணவு தடையை அனுப்புகிறது\nஅனைத்து புதிய பட்டதாரிகளின் சம்பளத்துடன் ஒப்பிடக்கூடிய நுழைவு நிலை சமூக ஊழியர்களின் மாதாந்திர சராசரி சம்பளம்: மசாகோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/48824/", "date_download": "2021-08-02T09:20:02Z", "digest": "sha1:JN7ZEQA24E3SFE5PPZQ4YSHBMUYTRTBY", "length": 8584, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "இரண்டு வருடம் நேரஅட்டவனை இல்லை போராட்டத்தில் குதித்த விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇரண்டு வருடம் நேரஅட்டவனை இல்லை போராட்டத்தில் குதித்த விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்.\nதிருக்கோணமலை நகரில் அமைந்துள்ள பிரபல தேசிய பாடசாலையான தி/புனித மரியாள் பெண்கள் கல்லுாரியில் பணிபுரியும் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியரெருவர் 29/05/2017 நேற்று கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் முன்பாக அமைதியான போராட்டம்..\nகடந்த 02 வருடங்களாகத் தனக்கு நேர அட்டவணை வழங்கப் படவில்லை எனவும் இவ்விடையம் சம்பந்தமாக அதிகாரிகள் மட்டத்தில் எடுத்துக் கூறியும் பலன் கிடைக்காமையினால் அமைதியான போராட்டத்தில் இறங்க வேண்டிய தேவை ஏற்பட்டது எனக் கூறினார்..\nதிருக்கோணமலைக் கல்வி வலயத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானப் பட்டதாரிகள் பற்றாக் குறையாகவே உள்ளனர் என்பது யாவருக்கும் தெரிந்த விடயமாகும்.\nஆனால் தி/மூ/சேனையூர் மத்திய கல்லுாரியில் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியா் ஒருவா் இல்லாத காரணத்தால் வஞ்ஞானப் பிரிவை மூடும் அபாய நிலை காணப் படுவது வேதனைக்குரியதே.\n02 வருடமாகக் குறித்த ஆசிரியருக்கு வழங்கப்பட்டு வந்தசம்பளம் அரசநிதி மட்டுமல்ல மக்களுடைய வரிப் பணமும் ஆகும். மாகாண மட்டத்தில் செயற்பட்டு வரும் கணக்காய்வுக் குழு என்ன செய்கிறது அரச நிதியை வீண்விரையம் செய்த சம்பந்தப் பட்ட அதிபர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.\nஇதே போன்று குறித்த பாடசாலையில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளில் காணப்படுகிது .\nஇன்று கிழக்கு மாகாணம் கல்வித் துறையில் சாதனை படைக்க முடியாமைக்கு அதிகாரிகளின் அசமந்தப்போக்கே காரணமாகும்.\nஇன்று திருக்கோணமலை கல்வி வலயத்தில் ஒரு ஆசிரியா் வெளிப்பட்டாா் ஆனால் கிழக்கு மாகாணத்தில் இனனும் எத்தனை ஆசிரியா்களோ\nPrevious articleஜனாவின் ஜி .கே . அறக்கட்டளை மன்றத்தின் இலவச அமரர் ஊர்தியினை செயல்படுத்தும் ஆரம்ப நிகழ்வு\nNext articleமூதூர் சம்பவம் தொடர்பில் விசாரணை முதலமைச்சர் நடவடிக்கை\nஇலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் கொவிட் தடுப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nவாகனேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் வரலாற்றில் முதற் தடவையாக இடைப் போக விவசாயச் செய்கை\nஇலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் கொவிட் உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nயாழ். புகையிரத சேவை எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nஅம்பாரை மாவட்டத்தில் பொதுத்தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/49715/", "date_download": "2021-08-02T09:03:51Z", "digest": "sha1:L3VC4OBM3LSMX5GAZVNDEQL2WJDVTEBA", "length": 6260, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "வெல்லாவெளியில் விபத்து – ஒருவர் பலி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவெல்லாவெளியில் விபத்து – ஒருவர் பலி\n(பழுகாமம் நிருபர்) வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நேற்று(19) இரவு இடம்பெற்றுள்ளது.\nமரணமடைந்தவர் தும்பங்கேணி கிராமத்தினைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை கிருபையம்மா (வயது 70) என இனங்காணப்பட்டுள்ளது.\nவீதியால் நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதிலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.\nவிபத்தில் காயமடைந்த முதியவர், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.\nஇது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகுப்பைகள் அகற்றுவதை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவம்\nNext articleசெல்பி எடுத்த���ல் சிறைத்தண்டனை\nஇலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் கொவிட் தடுப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nவாகனேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் வரலாற்றில் முதற் தடவையாக இடைப் போக விவசாயச் செய்கை\nஇலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் கொவிட் உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nகேப்பாபுலவு குழப்பநிலை தணிந்தது போராட்டம் தொடர்கிறது பாதை திறந்துவிடப்பட்டுள்ளது\nதமிழரசுக்கட்சி செயலாளருக்கு மட்டக்களப்பு பட்டதாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2019/05/04/%E0%AE%A8%E2%80%8C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2021-08-02T09:34:49Z", "digest": "sha1:YA6UUSCMJ7HNGB5DG2UV3GDC3QEUXVTJ", "length": 22483, "nlines": 151, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ந‌யன்தாராவுக்கு மகளாக நடித்த குழந்தை யார் தெரியுமா? – விதை2விருட்சம்", "raw_content": "Monday, August 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nந‌யன்தாராவுக்கு மகளாக நடித்த குழந்தை யார் தெரியுமா\nந‌யன்தாராவுக்கு மகளாக நடித்த குழந்தை யார் தெரியுமா\nந‌யன்தாராவுக்கு மகளாக நடித்த குழந்தை யார் தெரியுமா\nதமிழ்த்திரையுலகில் தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன்\nசிறு சிறு காமெடி ரோல்களில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் கொட்டாச்சி என்கிற மாரிமுத்து. தற்போது, இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் படங்களில் அவரைப் பார்க்க முடிவதில்லை.\nஆனால் இவரது மகள், மானஸ்வி தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். இந்த மானஸ்வி யார் தெரியுமா இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்தவர் இவர்தான். மானஸ்விக்கு வயது 6 ஆகிறது.\nமேலும் எஸ்.டி கொரியர்ஸ், ஜிஆர்டி ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்கள் உட்பட பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், புதிய திகில் படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மானஸ்வி. ‘கண்மணி பாப்பா’ எனும் த்ரில்லர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் மானஸ்வி.\nஇந்த படத்தை தொடர்ந்து, த்ரிஷாவின் மகளாக ‘பரமபத விளையாட்டு’ படத்திலும் அவருக்கு மகளாக வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல விளம்பர ���டங்களிலும் நடித்து வருகிறார்.\nPosted in சினிமா செய்திகள், செய்திகள்\n, பரமபத விளையாட்டு, மானஸ்வி, மாரிமுத்து, விதை2விருட்சம்\nPrevதினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால்\n மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆய���ரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பால��யல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nVidhya karthik on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் ��ுடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lanka2020.com/114624-2/", "date_download": "2021-08-02T09:36:58Z", "digest": "sha1:ZYMFTHLOORVARHXLBWCUH2EHGFDDI5JS", "length": 18759, "nlines": 99, "source_domain": "lanka2020.com", "title": "இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஜனாதிபதியே... - லங்கா2020 Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nHome Important News இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஜனாதிபதியே…\nஇலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஜனாதிபதியே…\nஇலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஜனாதிபதியே வலுவான ஆதாரங்களை கொடுத்துள்ளார் என ஹெல பொது சவிய என்ற பௌத்த அமைப்பு எச்சரித்துள்ளது.\nநாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினரை இலக்கு வைத்து, ஜனாதிபதி வெயியிட்ட அச்சுறுத்தலான கருத்தானது, இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் தளபதிகள் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தத் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க கூடிய சட்சியாக அமைந்துள்ளது என ஹெல பொது சவிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nஎதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் முழுப்பெயரை சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில் கோபமாக கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் பித்தளை சந்தியில் குண்டு வீசியதாகவும், எனினும் பணிகளை ஆரம்பித்த காலத்தில் பதிலளித்த விதத்தில் செயற்படும் திறன் இன்னும் தன்னிடம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\n”எனினும் நான் இறுதியில் பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன். அந்த நிலைக்கு கொண்டு வர முடியும். எதற்கும் தயாராக இருக்கும் ஒரு கதாபாத்திரம் நான்”\nஅரசியல்வாதிகளுக்காக தன்னால் இவ்வாறு செயற்பட முடியுமென்ற கோட்டாபய ராஜபக்சவின் கருத்ததானது, நாட்டின் ஜனாதிபதியாக ‘இல்லாத பிரச்சினைகளை வரவழைப்பது’ போன்றது என ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவன்ச தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதியின் அறிக்கை வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் ஜினவன்ச தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n“இந்த கருத்து நமது ஆயுதப் படைகளின் தளபதியும், நமது நாட்டின் தளபதியும் போர்க்குற்றங்களைச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஒரு வலுவான சான்றாகும்.\nஎங்கள் ஜனாதிபதி ஒரு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி, இதுபோன்ற விடயங்களை இன்று எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியும் என்பதை அறிவார்.”\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜனாதிபதியின் உரை முன்வைக்கப்பட்டால் இது இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் விடயமாக மாறும்.\nதமிழ் புலம்பெயர்ந்தோருக்கு இது மற்றொரு விதை. முப்படையினர் யுத்தக் குற்றங்களை இழைத்தனர் என்பதை நிரூபிப்பதற்கான சாட்சி இது.”\nஎந்தவொரு விவேகமுள்ள ஆட்சியாளரும் இத்தகைய அறிக்கையை வெளியிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, அரச தலைவர் தனக்கு அறிவுரை கூறும் ஆலோசகர்கள், விழாக்களுக்கு உரைகள் எழுதுபவர்களை உடனடியாக நீக்கி, பொருத்தமானவர்களை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஇல்லையெனில் வாக்களித்த 69 இலட்சம் மக்களும் மேலும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்ற எச்சரிக்கையையும், ஜினவன்ச தேரர் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…\nவிஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை\nமன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஅசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.சைவ உணவுதான் உடலுக்கு...\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nவவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுவவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக...\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை மன்னாரை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் இன்று அதிகாலை 2.10...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…\nஇலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில்...\nபெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்\nபுகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல்,...\nவிஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை\nஉலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார்.விஷ உணவை...\nமன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…\nமன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் குறித்த வீட்டில் திடீரென தீப்...\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…\nஇலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...\nவவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…\nவவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...\nதிருகோணமலை-குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நபர்\nதிருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத்...\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hotspotkitchen.com/ta/non-veg-recipes-ta/prawn-thokku/", "date_download": "2021-08-02T09:54:56Z", "digest": "sha1:QV5DLRGDVYTADRHJFUQHII22LR7KCVGH", "length": 15112, "nlines": 173, "source_domain": "hotspotkitchen.com", "title": "இறால் தொக்கு சமையல் குறிப்பு » ஹாட்ஸ்பாட் கிச்சன்", "raw_content": "\n4 வகையான மேகி உணவு தயாரிப்பு\nகொள்ளு ரசம் சமையல் குறிப்பு\nசிந்தாமணி சிக்கன் சமையல் குறிப்பு\nதென்னிந்திய மத்தி மீன் மண்பானை குழம்பு\nவஞ்சிரம் மீன் குழம்பு சமையல் குறிப்பு\nமதுரை வெள்ளாட்டு கறிக்குழம்பு / மட்டன் குழம்பு\nஇறால் பிரியாணி செய்வது எப்படி\n4 வகையான மேகி உணவு தயாரிப்பு\nகொள்ளு ரசம் சமையல் குறிப்பு\nசிந்தாமணி சிக்கன் சமையல் குறிப்பு\nதென்னிந்திய மத்தி மீன் மண்பானை குழம்பு\nவஞ்சிரம் மீன் குழம்பு சமையல் குறிப்பு\nமதுரை வெள்ளாட்டு கறிக்குழம்பு / மட்டன் குழம்பு\nஇறால் பிரியாணி செய்வது எப்படி\nஹாட்ஸ்பாட் கிச்சன் > வலைப்பதிவு > அசைவம் > கடல் உணவு > இறால் தொக்கு சமையல�� குறிப்பு\nஇறால் தொக்கு சமையல் குறிப்பு\nஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த இறால் தொக்கை சுவைத்து மகிழுங்கள்.\nஇறால் தொக்கு கடல் உணவு பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனவே கூறலாம். எப்போதுமே நீங்கள் வீட்டில் இறால் தொக்கை வழக்கமான பானியிலேயே செய்து வரலாம். ஆனால், இன்று ஒரு மாற்றத்திற்காக, நான் சொல்லித்தரும் இந்த முறையில் இறால் தொக்கை முயற்சித்து பாருங்கள். நான் அடித்து சொல்லுவேன் நிச்சயம் நீங்கள் இந்த இறால் தொக்கை விரும்பி அதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருவீர்கள் என்பது உறுதி. சரி, இறால் தொக்கு செய்முறைக்கு நேராக போவோம் வாருங்கள்.\nஇறால் தொக்கு சமைக்க தேவையான பொருட்கள்:\nஇறால் – 1 கிலோ\nசீரகம் – 1 தேக்கரண்டி\nவெங்காயம் – 4 எண்ணிக்கை\nதக்காளி – 2 எண்ணிக்கை\nஇஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\nவீட்டில் செய்த குழம்பு மசாலா – 2 மேஜைக்கரண்டி\nகடலெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி\nமுதலில் இறாலை எடுத்து அதை இறால் தம் பிரியாணியில் எப்படி சுத்தம் செய்தோமே அதேப்போல இங்கும் சுத்தம் செய்துக்கொள்ளவும். இறாலில் கல்லுப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்யவும். எப்போது இறாலை சுத்தம் செய்தாலும் அதில் குடலை நீக்குவதை நினைவில் கொள்ளவும். பின்னர் 3 முதல் 4 முறை இறாலை நீரில் கழுவவும்.\n1/3 தேக்கரண்டி மஞ்சள் தூள், வீட்டில் செய்த குழம்பு மசாலா, உப்பு, மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கி அதில் இறாலை ஊற வைக்கவும்.\nஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அதிக தீயில் வைத்து வெங்காயத்தை வதக்கவும்.\nவெங்காயம் பாதியளவு வெந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு வாசம் நன்றாக வந்தவுடன், இறாலை சேர்த்து கடாயை மூடி நன்றாக சமைக்கவும். தொக்கில் நீர் வற்றும் வரை சமைத்தால் இறால் பாதியளவு வெந்துவிடும்.\nஇப்போது, தொக்கில் தக்காளி சேர்த்து வதக்கவும். இந்த பதத்தில் தக்காளி சேர்த்தால் தான் அசைவம் நன்றாக வெந்துவரும்.\nபின்னர் தொக்கை நன்றாக கிளறி கடாயை மூடி 1 நிமிடத்திற்கு வேகவிடவும்.\nபிறகு வீட்டில் செய்த குழம்பு மசாலாவையும் தேவையான அளவு நீரையும் சேர்த்து கிளறவும். உப்பு இறாலுக்கு போதுமான அளவு உள்ளதா என்பதை சரிபார்த்து பின்னர் கடாயை மூடி வேகவிடவும். முதலில் அடுப்பை அதிக தீயில் வைத்து 15 நிமிடங்களும் பின்னர் குறைந்த தீயில் வைத்து 5 நிமிடங்களும் இறால் தொக்கை சமைக்கவும்.\nதொக்கில் எண்ணெய் மிதந்து வந்தவுடன், இறால் தொக்கு தயார். இப்போது, தொக்கின் மீது கொத்தமல்லியை தூவி அடுப்பிலிருந்து கடாயை இறக்கவும்.\nஉங்கள் குடும்பத்திற்கு இந்த இறால் தொக்கை பரிமாறி சந்தோஷப்படுங்கள்.\nPrevious Article வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கன் சமையல் குறிப்பு\nNext Article வஞ்சிரம் மீன் குழம்பு சமையல் குறிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாரம்பரியமான தென்னிந்திய சமையலை வழக்கமான உணவுகளுடனும் அசல் சுவையுடனும் உங்கள் சமையலறைக்கே கொண்டு வருகிறது ஹாட்ஸ்பாட் கிச்சன்.\n4 வகையான மேகி உணவு தயாரிப்பு\nசிந்தாமணி சிக்கன் சமையல் குறிப்பு\nதென்னிந்திய மத்தி மீன் மண்பானை குழம்பு\nபாரம்பரிய தென்னிந்திய சமையலை வழக்கமான உணவுகளுடனும் அசல் சுவையுடனும் உங்கள் சமையலறைக்கே கொண்டு வருகிறது ஹாட்ஸ்பாட் கிச்சன். வடஇந்திய சமையற்கலை, சீனா மற்றும் அதிகளவு சிக்கன், மட்டன், கடல் உணவு, சைவம், முட்டை, பசியை தூண்டும் உணவு, இனிப்புகள், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை கொண்ட காண்டினென்டல் மற்றும் காலை உணவு மற்றும் இரவு உணவு சமையலையும் நாங்கள் செய்து காட்டுகின்றோம். சுவையும் நறுமணமும் நிறைந்த உலகிற்கு உங்களை வரவேற்கிறோம்\nஎங்கள் சேனலை ஸப்ஸ்க்ரைப் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/friday-new-releases-10-040466.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T10:23:20Z", "digest": "sha1:2NN334WW2TTPA2UNFCYQQ5DB6CHMK4QE", "length": 13677, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்றைய ஸ்பெஷல்... ஒரு நாள் கூத்து, வித்தையடி நானுனக்கு, பாண்டியோட கலாட்டா! | Friday new releases - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nAutomobiles 2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது\nNews TN Lockdown: தினந்தோறும் புது புது கட்டுப்பாடுகள்.. தமிழ்நாட்டில் விரைவில் முழு லாக்டவுன்\nFinance அம்பானி ஷாப்பிங் லிஸ்டில் புது நிறுவனம்.. டாடா உடன் போட்டி போடும் மாஸ்டர் பிளான்..\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nSports அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய \"ரெக்கார்டு\".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைய ஸ்பெஷல்... ஒரு நாள் கூத்து, வித்தையடி நானுனக்கு, பாண்டியோட கலாட்டா\nசென்னை: இன்று வெள்ளிக்கிழமை மூன்று நேரடி தமிழ்ப் படங்களும் இரண்டு ஹாலிவுட் படங்களும் வெளியாகின்றன.\nஒரு நாள் கூத்து, பாண்டியோட கலாட்டா தாங்கல, வித்தையடி நானுனக்கு ஆகியவை நேரடி தமிழ்ப் படங்கள்.\nகஞ்ஜுரிங் 2, வார்கிராஃப்ட்ஸ் ஆகியவை ஹாலிவுட் படங்கள்.\nநான்கு பெண்களின் கல்யாண கதைதான் இந்த ஒரு நாள் கூத்து. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மியா ஜார்ஜ், ரித்விகா, தினேஷ், ரமேஷ் திலக் நடித்துள்ளனர்.\nஒரு இயக்குநர், ஒரு நடிகை என இரண்டே கேரக்டர்கள்தான் படம் முழுக்க. கொஞ்சம் புதிதாக முயற்சித்திருக்கிறார்கள். ராமநாதன், சௌரா நடித்துள்ள இந்தப் படத்தை ராமநாதன் கேபி இயக்கியுள்ளார்.\nஇந்த வார பேய் ஸ்பெஷல் பாண்டியோட கலாட்டா தாங்கல. ஹாரர் காமெடி என்ற பெயரில் கன்னா பின்னாவென்று கற்பனை செய்திருக்கிறார்கள். மயில்சாமி, நிதின் சத்யா, இமான் அண்ணாச்சி, மனோபாலா என பெரிய காமெடிப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்தை எஸ்டி குணசேகரன் இயக்கியுள்ளார்.\nஹாலிவுட் ஹாரர் படங்களில் பெரும் வெற்றிப் பெற்ற காஞ்ஜூரிங் படத்தின் இரண்டாம் பாகம் இந்தப் படம். தமிழிலும் டப் செய்து வெளியிட்டுள்ளனர். நேரடி தமிழ்ப் படத்தைவிட அதிக திரைகளில் வெளியாகும் இந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் வெளியிடுகிறது.\nஇந்தப் படமும் தமிழ் / ஆங்கிலத்தில் வெளியாகிறது. 3 டி மற்றும் 2 டி வடிவில் வெளியாகும் இந்தப் படத்துக்கும் ஏகப்பட்ட தியேட்டர்கள்.\nஇன்றைய ரிலீஸ்... என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று\nஇன்றைய ரிலீஸ்... கதிரவனின் கோடை மழை, காகித கப்பல்\nபந்த் முடிந்தது... பகிரி, சூர்யகாந்தி, சதுரம் 2, நாயகி... என்ன படம் பார்க்க உத்தேசம்\nஇன்று குற்றமே தண்டனை, கிடாரி ரிலீஸ்\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... முத்தின கத்தரிக்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... மனிதன், சாலையோரம், களம், கண்டேன் காதல் கொண்டேன்\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... மகுடி உள்பட 8 படங்கள் ரிலீஸ்\nஇன்றைய படங்கள்... சாகசம், விசாரணை, பெங்களூர் நாட்கள், சேதுபூமி, நாமுகுமா\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... உப்புக் கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144\nஇன்று ஒரு நாள் இரவில், ஆரண்யம் மற்றும் ஸ்பெக்டர்\nஇன்று பாயும் புலி, சவாலே சமாளி, போக்கிரி மன்னன், ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ்\nதனி ஒருவன், தாக்க தாக்க, அதிபர், எப்போ சொல்லப் போற... - இன்றைய ஸ்பெஷல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாங்க வேற மாதிரி....வலிமை சிங்கிள் டிராக் எப்போ தெரியுமா...சுடசுட வந்த அப்டேட்\nதுணிந்த பின்’ ஒரு அற்புதமான அனுபவம்… ‘நவரசா‘ படம் குறித்து அதர்வாவின் ருசிகரத்தகவல் \nதிடீரென டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா....அக்கினேனி எங்கே போச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/director-lingusamy", "date_download": "2021-08-02T10:04:50Z", "digest": "sha1:55MI26N6YLAFYO5UYXMMU6SKTBZLNRAR", "length": 6243, "nlines": 134, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Director Lingusamy News in Tamil | Latest Director Lingusamy Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nகதையை திருடினாரா லிங்குசாமி.. சீமான் அளித்த பரபரப்பு புகார்.. தள்ளுபடி செய்த எழுத்தாளர்கள் சங்கம்\nஅய்க்கூ குழந்தை... அன்பின் மேகம், அடங்கா வேகம்... லிங்குசாமியை உச்சிமுகர்ந்த பாடலாசிரியர்\nமுதலில் சண்டக்கோழி... அடுத்து அல்லு அர்ஜூன் படம் - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்\nலிங்குசாமிக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்- 'ஜிகினா' ரவி நந்தா பெரியசாமி\nஇயக்குனர் லிங்குசாமி வீடு மற்றும் அலுவலகத்தில் ஐடி ரெய்டு\nலிங்குசாமிக்கு தமன்னா தந்த 'ஷ��க்'\nவிக்ரமைத் தொடர்ந்து ஆர்யாவுடன் ஜோடி சேரும் அமலா பால்\n'மைனா' பிரபுசாலமனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/caught-on-camera-horrific-assault-of-doctor/", "date_download": "2021-08-02T09:44:55Z", "digest": "sha1:LCFZMVSML2UQIO7LDONASY5KSWYSSGTO", "length": 8846, "nlines": 118, "source_domain": "tamil.newsnext.live", "title": "அரசு மருத்துவமனைகளில் புறநகர் சிகிச்சை பிரிவு சேவை புறக்கணிப்பு - தேசியசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nஅரசு மருத்துவமனைகளில் புறநகர் சிகிச்சை பிரிவு சேவை புறக்கணிப்பு\nடாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து அசாம் மருத்துவ சேவை சங்க உறுப்பினர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் புறநகர் சிகிச்சை பிரிவு சேவையை புறக்கணித்தனர்.\nஅசாம் மாநிலம் ஹோஜாய் நகரில் உள்ள உதலி மாடல் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.\nஇதனால் மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் அவசரம் அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். டாக்டர் சேனாபதி ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். ஆனால், அந்த கும்பல் கதவை உடைத்து டாக்டரை கொடூரமாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த டாக்டர், அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nடாக்டர் சேனாபதி தாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த நிலையா என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவு செய்தனர்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 24 பேரை கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அசாம் மருத்துவ சேவை சங்கம் வலியுறுத்தி உள்ளது. மேலும், சங்க உறுப்பினர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் புறநகர் சிகிச்சை பிரிவு சேவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை பிரிவு, கொரோனா வார்டுகளில் மட்டும் வேலை செய்தனர். அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுகின்றனர்.\nடெல்டா வைரஸ்தான் இப்போது கவலையளிக்கக் கூடியது- உலகச் சுகாதார அமைப்பு\nமத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nஜூலை மாதம் ஜிஎஸ்டி ரூ.1.16 லட்சம் கோடி\nகவனம் தேவை..அதிகரிக்க தொடங்கும் கொரோனா எச்சரிக்கும் ஒன்றிய அரசு \nஏடிஎம்களில் பணம் எடுக்கப்போகிறீர்களா.. இன்று முதல் கட்டண உயர்வு அமல் \nஇந்த மாதம் வங்கிகளின் விடுமுறை நாட்கள் பட்டியல் இதோ \nபுதுவையின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் \nமத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\nதொடர் சரிவில் தங்கம் விலை\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/News/all-party-consultative-meeting-on-conducting-plus-2-examination---minister-anbil-mahesh-information", "date_download": "2021-08-02T09:43:30Z", "digest": "sha1:OUEEQVDRMMML3FJWOGV3PBORBG6Z7TRJ", "length": 5169, "nlines": 86, "source_domain": "www.fnewsnow.com", "title": "பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் | All Party Consultative Meeting on Conducting Plus 2 Examination - Minister Anbil Mahesh Information - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nபிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைத்துக்கட்சியினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நாளை (சனிக்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.\nநாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்க ��ள்ளார். மேலும், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்.எஸ் பாலாஜி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.\nஇந்நிலையில், பிளஸ் 2 தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\nசளைக்காத உழைப்புக்கு ராகுல் டிராவிட்\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5018:2009-02-17-07-55-48&catid=286&Itemid=259", "date_download": "2021-08-02T09:37:49Z", "digest": "sha1:XEVN5OPYG4TVR4C4YB2VJJXHMLE6Z5I5", "length": 16049, "nlines": 140, "source_domain": "www.tamilcircle.net", "title": "வி.பி சிங்கு என்ன‌ க‌ல‌ப்பில்லாத‌ சொக்க‌த்த‌ங்கமா..?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவி.பி சிங்கு என்ன‌ க‌ல‌ப்பில்லாத‌ சொக்க‌த்த‌ங்கமா..\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 17 பிப்ரவரி 2009\nவி.பி. சிங்கை இழிவுபடுத்தும் 'புதிய ஜனநாயகம்'என்கிற பெயரில் ஒரு க‌ட்டுரையை பெரியார் முழ‌க்க‌ம் இத‌ழில் விடுத‌லை ராசேந்திர‌ன் எழுதியுள்ளார்.\nவி.பி.சிங்கை நாம் என்னமோ 2009 ல் தான் முதல் முறையாக விமர்சனம் செய்து எழுதியுள்ளதை போலவும் அதைக்கண்டு அவர் அதிர்ச்சியடைந்தவரை போலவும் கட்டுரையை இவ்வாறு துவங்கி எழுதியுள்ளார்.\n'மக்கள் கலை இலக்கியக் கழக'த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப் பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக 'இந்து' எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் - இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் 'புதிய ஜனநாயகம்' ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை - 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புப��� பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.\nஅவரைப் பற்றி நாம் கட்டுரை மட்டும் எழுதவில்லை நையாண்டியாக‌ பாட்டு கூட‌ பாடியுள்ளோம்,கிட்டத்தட்ட‌ ப‌தினைந்து ஆண்டுக‌ளுக்கு முன்பே. எனவே நாம் வி.பி.சிங் கால‌த்திலிருந்தே அவரை அம்ப‌ல‌ப்ப‌டுத்தி தான் எழுதி வ‌ருகிறோம்.ஒருவேளை விடுத‌லை ராசேந்திர‌னுக்கு அப்போதெல்லாம் புஜ‌,புக வும் நமது பாடல்களும் கிடைக்க‌வில்லையோ என்ன‌வோஅந்த பாடலின் சுட்டி கீழே உள்ள‌து.\nவி.பி சிங்கு என்ன‌ க‌ல‌ப்பில்லாத‌ சொக்க‌த்த‌ங்கமா..\nவிடுதலை ராசேந்திரன் இவ்வாறு ஒரு கட்டுரையை எழுதியிருப்பதில் நமக்கு ஒன்றும் வியப்பில்லை தான், அவரால் அதற்கு மேலே இந்த விமர்சனம் தொடர்பாக அதன் எல்லையை கடந்து நோக்க முடியாது தான்,\nகாரணம் அப்படியான ஒரு விமர்சன எல்லையை அவருடைய கண்னோட்டம் கடக்கும் எனில் அந்த விமர்சனம் வி.பி.சிங்குடன் நிற்காது என்பதை அவர் அறிவார் என நான் கருதுகிறேன். புஜ விமர்சனங்களுக்கு எதிராக அவர் வைக்கும்‌ வாத‌ங்க‌ள் அனைத்தும் சொத்தை க‌த்த‌ரிக்காயாக‌த்தான் இருக்கிற‌து. வி.பி.சிங் மீது பு.ஜ‌ முன்‌வைத்துள்ள‌ வரிசையான அனைத்து விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்கும் க‌ட்டுரையாளர் த‌க்க‌ ப‌தில்களை கூறி அதை ம‌றுக்க‌ முற்ப‌ட‌வில்லை,மாறாக தம‌து உப்புச்சப்பற்ற வாதங்களோடு அவர் தொடர்ந்து பார்ப்பனியம் பார்ப்பனியம் என்பதை மட்டும் தான் கூறிக்கொண்டிருக்கிறார்.\nம‌.க‌.இ.க‌ வை தாங்கள் எப்போதும் தோழ‌மை அமைப்பாக‌ தான் க‌ருதி வ‌ருகிறார்க‌ளாம் இந்நிலையில் வி.பி.சிங்கை புதிய ஜனநாயகம் இழிவுபடுத்திவிட்டதால் ம‌.க‌.இ.க வின் பார்ப்பன எதிர்ப்புப் பற்றி அவர்களுக்கு பல்வேறு அய்யங்கள் எழுந்துவிட்ட‌தாம்\nஅந்த‌ அய்ய‌ங்க‌ளை தீர்த்துக்கொள்வ‌து மிக‌வும் அவ‌சியம்.\nஆனால் எவ்வாறு இவர்களின் அய்யங்களை தீர்த்து வைப்பது\nஇவர்களுடைய கட்டுரைக்கு ப‌திலுக்கு ப‌தில் என்று நாம் வரிந்து கட்டிக்கொண்டு ப‌தில் கூறிக்கொண்டிருப்ப‌தால் ஒன்றும் இவ‌ர்க‌ளின் அய்ய‌ங்க‌ள் தீராப்போவ‌து இல்லை \nஉதார‌ண‌த்திற்கு ம‌.க‌.இ.க‌ இட‌ஒதுக்கீட்டுக்கு எதிரான‌‌ அமைப்பு என்கிற‌ பொய்யை யார் திரும்பத் திரும்ப‌ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் \nசாதி ஒடுக்குமுறையை அனுப‌விக்காத‌ ஆனால் தாழ்த்த��்பட்ட மக்களை ஒடுக்கி பார்ப்பனியத்திற்கு சேவை செய்து கொண்டே தானும் ஒடுக்கப்பட்டவன் தான் அதனால் எனக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று வெட்கமில்லாமல் கைகளை நீட்டிக்கொண்டு நிற்கும் ஆதிக்க சாதி இந்துக்களின் பிரதிநிதிகளாக கட்சிகளை நடத்திக்கொண்டிருப்பவர்கள்‌‌ தான் ம‌.க‌.இ.க‌ இட‌ஒதுக்கீட்டிற்கு எதிரான‌ அமைப்பு என்கிற‌ பொய் பிர‌ச்சார‌த்தை கூச்ச‌மின்றி தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள், அந்த பொய் பிரச்சாரத்திற்கு வஞ்சகமாக‌ தாழ்த்தப்பட்டவர்களையும் சேர்த்துக்கொள்கிறார்கள். அவ‌ர்க‌ளுக்கு நாம் ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ ப‌தில் கூறினாலும் மண்‌டையில் ஏறுவ‌தில்லையே ஏன் \nஏனென்றால் அவர்கள் சாதிய‌ ஒடுக்குமுறையின் கொடூர‌த்தை அனுப‌வித்த‌வ‌ர்க‌ள் அல்ல‌ அதை ஏட்ட‌ள‌வில் மட்டுமே வாசித்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு நாம் என்ன‌ விள‌க்க‌ங்க‌ள் த‌ந்தாலும் ம‌.க‌.இ.க‌ இட‌ஒதுக்கீட்டுக்கு எதிரான‌ அமைப்பு என்கிற‌‌ பொய்யை தான் சொல்லிக்கொண்டிருப்பார்க‌ள்.\nஎன‌வே அவ‌ர்க‌ள் சாதி இந்து க‌ண்ணோட்ட‌த்திலிருந்து விடுப‌டாத‌வ‌ரை,தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ஒடுக்கும் அவ்வகை க‌ண்ணோட்ட‌த்திலிருந்து இட‌ஒதுக்கீடை நோக்கும் வ‌ரை ம‌.க‌.இ.க‌ இவ‌ர்க‌ளுக்கு எதிரியாக‌த்தான் தெரியும்.என‌வே அவ‌ர்க‌ள் அதிலிருந்து‌ விடுப‌டாத‌வ‌ரை இட‌ஒதுக்கீடு, ம‌.க‌.இ.க‌ போன்ற‌ வார்த்தைக‌ளை உச்ச‌ரிக்க‌ அவ‌ர்க‌ளுக்கு எந்த தகுதியுமில்லை.\nஅதுவே தான் விடுத‌லை ராசேந்திர‌னுக்கும் பொருந்தும் என்று க‌ருதுகிறேன். என‌வே இத‌ற்கு ஒரே தீர்வு அவ‌ர் மீண்டும் புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் க‌ட்டுரையை நேர்மையாக‌ வாசிக்க‌ முயல்வது மட்டுமே,அவ‌தூறு செய்ய‌ வேண்டும் என்கிற‌‌ நோக்க‌த்தையும்,தமது விமர்சன கோட்டைத்தாண்டாமலும் க‌ட்டுரைக்குள் குதித்து புரண்டல் இப்ப‌டி தான்‌ ம‌.க‌.இ.க‌ க‌ன்ணுக்குத்தெரியும்,\nஎனினும் கான‌ல் நீர் நீர‌ல்ல‌வே.\nவிசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6719:2010-01-26-19-49-01&catid=324&Itemid=259", "date_download": "2021-08-02T08:03:36Z", "digest": "sha1:7LOMLS65K3RAJ3D4NWXV5HXJMSFR5CRE", "length": 8378, "nlines": 166, "source_domain": "www.tamilcircle.net", "title": "நிழலற்ற நகரத்தில் கால் பதித்த நாள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிழலற்ற நகரத்தில் கால் பதித்த நாள்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 26 ஜனவரி 2010\nபூக்கள் உதிர்ந்த எனது நகரத்தில் கால்களை\nஆடித் திரிந்த எனது நகரத்தில்\nஅழிவுகளின் துயரடைந்த காலத்தின் பின்னர்\nசற்று தூரம் வரை நடந்து திரிகிறேன்.\nஅந்த இரவு எனது நகரத்தில் இரண்டாவது முறையாக\nகுருதியும் சதையும் கலந்துகிடக்கிற மண்ணை\nஎன் பூர்வீக நகரத்தின் வசீகரம் இழந்த சுவர்களை\nநகரம் இருளால் நிரம்பி வெறுமையுள் அமுங்கியிருந்தது.\nபாதி மரங்களும் சிறிய துண்டு கட்டிடங்களும்\nஅந்த மூதாட்டி இன்னும் சத்தமாக சொல்லிக்கொண்டிக்கிறாள்.\nசாபங்களில் கிழிந்து போன நகரத்தில்\nகால் வைக்கிற இடங்களெல்லாம் புதைகிறது.\nமெல்ல மெல்ல எனது நகரத்தை பிடுங்கி எடுப்பேன்.\nமெல்ல மெல்ல எனது நகரத்தை செழிக்க வைப்பேன்.\nஎன் நகரத்தில் மீண்டும் பூக்களை நாட்டுவேன்.\nபூக்களின் நகரத்தில் கனவுகள் பூக்கும்.\nஎல்லோரும் வரும் நாட்களில் திரும்புவார்கள்\nஎன்ற நம்பிக்கையை நகரத்திலிருந்து வெளியேறிய\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=20907243", "date_download": "2021-08-02T09:07:25Z", "digest": "sha1:IVQQ5R4OR7UFCHB4Q67E6CNNGDFB4LK7", "length": 71047, "nlines": 151, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1\n(நிகழ்வு குறித்த சில தகவல்கள் – கண்ணோட்டங்கள்-கருத்துப்பதிவுகள்)\nதமிழ்க் கவிஞர்கள் இயக்கம் கடந்த இரண்டாண்டுகளாக சீரிய முறையில் தமிழ் இலக்கிய வெளி குறித்தும், இலக்கியவாதிகளின் சமூக, அரசியல் பார்வை, பங்கேற்பு குறித்தும் அக்கறையோடு இயங்கி வருகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து கண்டனக் கவிதை இயக்கம், தில்லியில் கண்டனப் போராட்டம் முதலிய செயல்பாடுகளை சீரிய முறையில் மேற்கொண்ட இந்த அமைப்பு ஜூன் 13-14 அன்று கவிதை-ஒன்றுகூடல்-உரையாடல் என்ற இருநாள் கலந்துரையாடல் அரங்கை வால்பாறையில் ஏற்பாடு செய்திருந்தது. சமீபத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகள் சில குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு அவை தொடர்பான கலந்துரையாடல்களும், விவாதங்களும் நடந்தேறின. அதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழ்க்கவிஞர்கள் சிலரின் கவிதைத் தொகுப்புகள் குறித்த அரங்கம் நிகழ்வு -2 : பன்முக வாசிப்பில் ஈழக் கவிதைகள் என்ற தலைப்பில் சென்னையிலுள்ள AICUF அரங்கில் கடந்த 16ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. அ.மங்கை தொகுத்த ஈழப்பெண்கவிஞர்களின் கவிதைகள் குறித்துப் பேசும் ‘பெயல் மணக்கும் பொழுது’ என்ற நூல் குறித்து கவிஞர் வ.ஐ.சு.ஜெயபாலன் பேசினார். கவிஞர் தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை என்ற கவிதைத்தொகுப்பு குறித்து எழுத்தாளரும் கவிஞருமான அரங்கமல்லிகா கருத்துரைத்தார். “புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ என்ற தலைப்பிட்ட மஜீத்தின் கவிதைத் தொகுப்பு குறித்து கட்டுரை வாசித்தார். சந்திரா. “எனக்குக் கவிதை முகம் என்ற அனாரின் கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞர் அனார் எழுதிய ‘எனக்கு கவிதை முகம்’ என்ற தலைப்பிட்ட தொகுப்பு குறித்து கவிஞர் செல்மா பிரியதர்ஷன் பேசினார். கருத்துரைத்தார். தனிமையின் நிழல் என்ற தலைப்பிட்ட பா.அகிலனின் கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞரும், எழுத்தாளருமான சுகுணா திவாகர் தனது கண்ணோட்டங்களை முன்வைத்தார். ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற தலைப்பிட்ட தமிழ்நதியின் கவிதைத் தொகுப்பு குறித்த திறனாய்வுக் கட்டுரையை ராஜேசுவரி வாசித்தார். நாடற்றவனின் குறிப்புகள் என்ற தலைப்பிட்ட கவிஞர் இளங்கோவின் கவிதைத் தொகுப்பு குறித்து நாடகக் கலைஞரும், படைப்பாளியுமான சோமீதரன் பேசினார்.\nகவிஞர் ஜெயபாலன் : அ.மங்கை எழுதிய பெயல் மணக்கும் பொழுது என்ற தலைப்பிலான ஈழத்தமிழ்ப்பெண்கவிஞர்களின் கவிதைகள் குறித்த நூலைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அ.மங்கை ஒரு சிறந்த பெண்ணிய எழுத்தாளர் என்று பாராட்டியவர் அவருடைய மணிமேகலை நாடகம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று என்றார். 1976-86 காலகட்டங்களில் இலங்கையில் பல பெண்கள் திறம்படக் கவிதைகள் எழுதத் தொடங்கினார்கள் என்றவர் அவர்களில் செல்வி, சிவர���ணி ஆகியோரின் கவிதைகள் தன்னை மிகவும் பாதித்தவை என்றார். சமூக, அரசியல் மற்றும் இயக்க முரண்பாடுகளால் தூண்டப்பட்ட தற்கொலை சிவரமணியுடையது என்று வேதனையோடு குறிப்பிட்டவர் அவருடைய கவிதையொன்றை வாசித்துக் காண்பித்தார். இந்தக் கவிதைகள் எம்முடைய துயரங்களும், அவமானங்களும் எங்களைப் புதையுண்டு போகச் செய்வதில்லை, முன்னைக் காட்டிலும் வலுவடையச் செய்கின்றன என்று குறிப்பிட்டவர் இப்போதைய சூழலில் அந்தக் கவிஞர்களின் கவிதைகளுக்குள் உட்புக இயலவில்லை என்றும் அவை தன்னை மீண்டும் மீண்டும் வெளியே வலியும், வேதனையுமாக வெளியே தூக்கியெறிவதாகவும் அதுவே அந்தத் தொகுப்பின் வெற்றியாகக் கொள்ள முடியும் என்றும் கூறினார்.\nபொதுவாக தமிழகம் ஈழம் ஆகிய இரண்டு நிலங்களில் கவிதை எழுதும் கவிஞர்களை ஒப்புநோக்குபவர்கள் ஈழக் கவிதைகள் மேலானவை என்பார்கள் என்றும் அதற்கு முக்கியக் காரணம் ஈழப் படைப்பாளிகளுக்கு ஒரு பொதுவான நோக்கமும் அக்கறையும் இருந்தது , அவர்கள் ஒரு குடையின் கீழ் பல முகங்களாக இருந்தார்கள், ஆனால், இங்கோ பல குடைகளின் கீழ் பல முகங்கள் என்றவர் ஈழத்தைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுக்கு ஒரு பொதுவான நோக்கமும், அக்கறையும் இருந்தாலும் அதனால் அவர்களுடைய பன்முகத்தன்மை தொலைந்துவிடாமல் காப்பாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். ஒப்புநோக்க, தமிழகக் கவிஞர்கள் ஒருவிதமான ‘standardized’ கொண்ட கருப்பொருள்களையே கையாள்கிறார்கள் என்று அவர் கூறியது விவாதத்திற்குரியது.\nகவிஞர் தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ என்ற கவிதைத்தொகுப்பு குறித்துப் பேசிய எழுத்தாளரும் கவிஞருமான அரங்கமல்லிகா “இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் படித்ததும் இயல்பாக இருக்க முடியாமல் போயிற்று. வகுப்பில் மாணவிகளிடம் படித்துக் காண்பித்தேன். அவர்களாலும் அதன் பாரத்தைத் தாங்க இயலவில்லை. ‘நமக்குச் சொரணையிருக்கா” என்று மட்டும் கேட்டேன். “இருக்கு” என்றவர்கள் ” இதுவரை இந்த விஷயத்தை சரிவர உள்வாங்கவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார்கள். தொலைக் காட்சிகளில் அதிகமாக மானாட-மயிலாட, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே அதிகம் பார்ப்பது வழக்கம் என்றார்கள். நாம் இனியும் இப்படித்தான் சொரணை கெட்டு இருக்கப்போகிறோமா” என்று மட்டும் கேட்டேன். “இருக்கு” என்றவர்கள் ” இதுவரை இந்த விஷயத்தை சரிவர உள்வாங்கவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார்கள். தொலைக் காட்சிகளில் அதிகமாக மானாட-மயிலாட, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே அதிகம் பார்ப்பது வழக்கம் என்றார்கள். நாம் இனியும் இப்படித்தான் சொரணை கெட்டு இருக்கப்போகிறோமா” என்ற கேள்வியை முன்வைத்த அரங்க மல்லிகா ஈழ விடுதலையின் பல குரல்களும் தீபச்செல்வனின் தொகுப்பில் ஒலிப்பதாகக் கூறினார். அம்பேத்கார் தமிழனுக்கு வலிமையைத் தரக்கூடியது சிங்கள பௌத்தம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை இன்றைய சூழலில் மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் எனக் கருத்துரைத்தார்.\n“புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ என்ற தலைப்பிட்ட மஜீத்தின் கவிதைத் தொகுப்பு குறித்து கட்டுரை வாசித்த சந்திரா அந்நியராய் உணரும் வலி மஜீத்தின் கவிதை வரிகளில் பரவித் தெரிகிறது என்று குறிப்பிட்டார். தமிழின பேரினவாத அச்சுறுத்தலால் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர்-திரைப்பட இயக்குனர் என்பது மஜீத்திற்கான அறிமுகக் குறிப்பாகத் தரப்பட்டது. எனது சகோதரனை/ புலி கொன்றது/ எனது நண்பனை/சிங்கம் கொன்றது / எங்கள் பெண்களை இரண்டும் கொன்றன’ – ‘இன விடுதலைக்கான/ போராட்டத்தில்/ எல்லாத் துரோகங்களும்/ மறக்கடிக்கப்படும்’ – ‘எனது வெளியை பங்கு போட்டு/ சிங்கங்களும் புலிகளும்/ பங்கு போட்டுக் கொண்டன முதலிய வரிகளை எடுத்துரைத்த திறனாய்வாளர் சந்திரா ‘கருத்தியல் ரீதியாகப் பார்க்கும்போது இது மிகைப்படுத்தப்பட்ட பதிவாகத் தோன்றுகிறது. மஜீத் இசுலாமியராகவே இலங்கைப் பிரச்னையைப் பார்த்திருக்கிறார், தமிழ்க் கவிஞராக இன்னொரு கோடைச் சித்திரத்தை அவர் வரைவாரா’ என்ற கேள்வியை முன்வைத்தார்.\nகவிஞர் அனார் எழுதிய ‘எனக்கு கவிதை முகம்’ என்ற தலைப்பிட்ட தொகுப்பு குறித்து கவிஞரும், தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் சீரிய முறையில் இயங்கி வருவதில் முக்கியப் பங்கு வகிப்பவருமான செல்மா பிரியதர்ஷன் பேசினார். ‘பெண் எழுத்து ஆண் எழுத்தை விட முற்றிலும் மாறுபட்டதே. அதேபோல் தான், வாசகரின் வாசிப்பிலும் இந்த பால் தன்மை கண்டிப்பாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர் ‘ அனாரின் இந்த கவிதைத் தொகுப்பை வாசித்தது ஆண் என்ற உணர்வோடு தான் என்ற புரிதலை வெளி��ிட்டார். போர்ச்சூழலில் இருக்கும் பெண்ணால் எப்படி காதல் கவிதைகளை எழுத முடிகிறது என்று தனக்கு ஏற்படும் ஆச்சரியத்தைத் தெரிவித்த அவர் கேள்விகளற்று சரணடையும் பெண் குரலையே அவருடைய கவிதைகளில் அதிகம் கேட்க முடிவதாகவும் குறிப்பிட்டார். தன் உடல் என்பதை தனக்குள்ளிருக்கும் அங்கமாக, ஒரு மனோநிலையாக உருவகப்படுத்துகிறார் அனார் என்ற செல்மா பிரியதர்ஷன் உலகின் பொதுவெளியை ஆண்களே அதிகம் அனுபவிக்கிறார்கள். ஆனால், பெண்களைப் போல் அவர்கள் தங்களை இயற்கையின் அம்சமாக உனர்வதில்லை; உருவகித்துக் கொள்வதில்லை. எனில், இந்தத் தன்மை பெண்களுடைய எழுத்தாக்கங்களில் அதிகம் காண முடிகிறது என்றவர் அனாரின் கவிதைகளில் தன்னை ஈர்த்த அம்சங்களையும் எடுத்துரைத்தார்.\nஒவ்வொரு பேச்சாளரையும்/திறனாய்வாளரையும் அவர்கள் பேசப்போகும் தொகுப்பை எழுதிய கவிஞர்களையும் பற்றி சுருக்கமாக எனில் கச்சிதமாக லீனா மணிமேகலை அறிமுகப்படுத்தினார். இந்தக் கூட்டம் பற்றி சக-படைப்பாளி என்ற முறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ரவிக்குமார் அவர்களுக்கு விவரம் தெரிவிக்கப்பட்டதற்கு ‘பேஷ்பேஷ் செத்தும் கொடுத்தார்கள் சீதக்காதிகள்” என்ற குறுஞ்செய்தி அவரிடமிருந்து கிடைத்த தகவலை சபையில் தெரியப்படுத்தி அதற்கு கவிஞர்கள் சங்கத்தின் சார்பில் தனது கண்டனத்தையும் அவையில் அழுத்தமாகப் பதிவு செய்தார் லீனா.\nநான்கு தொகுப்புகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள்/விரிவுரைகளுக்குப் பிறகு அவை தொடர்பான கருத்துரைக்கும் அமர்வு நடைபெற்றது. கருத்துரையாளர்களில் ஒருவராக நானும் இடம்பெற்றிருந்தேன். கூட்டம் நடைபெறும் அன்று காலை மின்னஞ்சலில் தமிழாராய்ச்சி குழுமம் சார்பாக அனுப்பப்பட்டிருந்த தாமரையின் ‘கண்ணகி மண்ணின் கருஞ்சாபம்’ என்ற கவிதை அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுத்த இந்தியா மண்ணோடு மண்ணாய் போகட்டும், அதன் ஆறுக ளெல்லாம் வற்றிப் போகட்டும், காடு கழனிகளெல்லாம் கருகிப் போகட்டும் என்று, இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களையெல்லாம் எண்ணப்புகாமல் எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையின் ஆங்காரமும், மிகையுணர்ச்சியும் கைத்தட்டலை வேண்டுமானால் தருவிக்குமே தவிர பிரச்னைகளை எந்தவிதத்திலும் தீர்க்க உதவாது ��ன்பது என் உறுதியான கருத்து. {மின்னஞ்சலில் வந்த கவிதையை எழுதியது இந்தியாவிலுள்ள கவிஞர் தாமரையா அல்லது இலங்கைத் தமிழ்க் கவிஞர் யாரேனும் அந்தப் பெயரில் உள்ளார்களா என்று எனக்கு அப்பொழுது உண்மையிலேயே தெரியவில்லை என்பதால் அந்த என் சந்தேகத்தை அவையில் எடுத்துரைத்தேன். (எனக்குப் பின்னர் பேசிய எழுத்தாளர் சுகுணா திவாகர் யாரிடமாவது கேட்டு நான் கவிஞர் இந்தியாவிலுள்ள கவிஞர் தாமரையா அல்லது ஈழத்தமிழ்க்கவிஞர் தாமரையா என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்க முடியும், அப்படிச் செய்திருப்பது தான் முறை என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.)\nஅந்தக் கவிதையின் சில வரிகளை அவையில் வாசித்துக் காட்டி ஒரு கவிஞரின் மனிதநேயம் என்பது இத்தனை வன்மமானதாக இருக்கலாகாது என்ற எனது கருத்தை முன்வைத்தேன். அதேபோல், ‘இலங்கைப் பிரச்னை குறித்து இங்கே மக்கள் சொரணையில்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்வதும் தவறு. இது குறித்த உண்மையான அக்கறையோடு விவாதிப்பவர்களும், எழுதுபவர்களும் செயல் படுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆங்கில தொலைக்காட்சி அலைவரிசைகள் இந்தப் போர் குறித்து மிகவும் மேம்போக்கான, ஒருதலைப்பட்சமான கருத்துகளையே முன்வைத்தன என்பதும் உண்மை. மேலும், இந்த விஷயத்தில் அதீத சொரணை இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்களால் தான் பிரச்னை தீவிரமடைகிறது” என்றேன். இலங்கைப் பிரச்னையை, போர்ச்சூழலைப் பற்றி ‘பாதுகாப்பான தொலைவிலுள்ளவர்கள் எழுதுவதற்கும், அந்த சூழலின் மத்தியில் இருப்பவர்கள் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் காணக்கிடைக்கின்றன. பாதுகாப்பான தொலைவில் இருந்துகொண்டு ‘மொக்கைச் சிங்களவன்’ என்றெல்லாம் எழுதுவதும், பேசுவதும் அங்கே முகாம்களில் அல்லலுறும் தமிழ்மக்களைப் இன்னும் பாதிப்புக்காளாக்க வழியுண்டு என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கூறினேன். போர்ச்சூழலில் இல்லாமல், அந்த அவலத்தை அனுபவிக்காமல் இருப்பவர்கள் தான் ‘போரை ‘ரொமான்டொஸைஸ்’ செய்து, அதை மறத்தமிழனின் மாண்பாக, மனித நாகரீகத்தின் வளர்ச்சியாகக் காட்டி வருகிறார்கள் என்றேன். இந்திய ராணுவத்தினர் எல்லோரையும் வன்புணர்ச்சியாளர்களாய் விவரித்தல், தமிழர்களை சுரணை கெட்டவர்களாய் ஒட்டுமொத்தமாய்ச் சாடுதல், சாபமிடுதல் போன்ற Sweeping generalizations தவிர���க்கப்பட வேண்டியவை என்ற கருத்தை முன்வைத்தேன்.\n{ஒரு சொட்டு தண்ணீருக்காக/விக்கி மடிந்த/ எங்கள் குழந்தைகளின் ஆத்மா/சாந்தியடைய/இனி ஒரு நூற்றாண்டுக்கு/உன் ஆறுகள் எல்லாம் வற்றிப்/போகட்டும் / மழைமேகங்கள் மாற்றுப்பாதை கண்டு/மளமளவென்று கலையட்டும்\nஒரு பிடிச் சோற்றுக்கு எங்களை/ஓட வைத்தாய்/ இனி உன் காடு கழனிகளெல்லாம்/ கருகிப் போகட்டும்’\nஇப்படி சாபமாய் கொடுத்துக் கொண்டே போகிறார் கவிஞர் தாமரை. இந்தக் கவிதை குறித்த எனது பார்வையை தமிழ் ஆராய்ச்சிக் குழுமத்தினருக்கும் அனுப்பி வைத்தேன். எனக்கு ஆதரவாய் ஓரிருவர் எழுதியிருந்தார்கள். என்றபோதும், நிறைய கடிதங்கள் இந்தியா மண்ணோடு மண்ணாகப் போக வேண்டும், சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை வீழ்த்திச் சாய்க்கும் நாள் வெகுதூரத்திலில்லை. அன்று நாங்கள் ஆனந்தமாய் கைகொட்டிச் சிரிப்போம் என்ற ரீதியில் அமைந்திருந்தன. வேறு சில கடிதங்கள் இந்தியாவில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றும், இந்திய தேசியம் என்பதன் அடிமைகளாக இருப்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் இந்தியாவிலுள்ள தமிழர்கள் என்று பேசியிருந்தன. (அப்படித்தான் இங்குள்ள தமிழர்கள் உண்மையாகவே கருதுகிறார்களா அப்படித்தான் அவர்கள் உண்மையிலேயே நடத்தப்படுகிறார்களா அப்படித்தான் அவர்கள் உண்மையிலேயே நடத்தப்படுகிறார்களா இதன் மறுபக்கமாக இன, மத, நிற, சாதி முதலான பல்வேறு பேதங்களை மீறிய அளவில் ‘all are equal; some are more equal’ என்ற நிலை தானே உலகெங்கும் நடப்புண்மையாக இருந்து வருகிறது இதன் மறுபக்கமாக இன, மத, நிற, சாதி முதலான பல்வேறு பேதங்களை மீறிய அளவில் ‘all are equal; some are more equal’ என்ற நிலை தானே உலகெங்கும் நடப்புண்மையாக இருந்து வருகிறது) இன்னும் சில கடிதங்கள் “அவர் தமிழச்சி. அப்படித்தான் எழுதுவார். ஆனால் நீங்கள்) இன்னும் சில கடிதங்கள் “அவர் தமிழச்சி. அப்படித்தான் எழுதுவார். ஆனால் நீங்கள்” என்று என்னை இடித்துரைத்திருந்தன. இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் தமிழையும், தமிழுணர்வையும் யாரும் தங்களுடையதே தங்களுடையதாக்கிக் கொண்டுவிட முடியாது ” என்று என்னை இடித்துரைத்திருந்தன. இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் தமிழையும், தமிழுணர்வையும் யாரும் தங்களுடையதே தங்களுடையதாக்கிக் கொண்டுவிட முடியாது \nஇங்கே ந���க்கு சொரணையே இல்லை என்று கூறுவதற்கு என்ன அர்த்தம் இங்கும் ரத்த ஆறு ஓட வேண்டுமா இங்கும் ரத்த ஆறு ஓட வேண்டுமா தொப்புள்கொடி உறவு என்ற சொற்பிரயோகத்தை உபயோகிக்கும் நாம் போர் என்பது உடனடியாக மக்களைக் கொன்று குவிக்கிறது என்றால் வறுமை மக்களை நாளுக்குநாள் நலிவடையச் செய்து கொன்றழிக்கிறது. தேர்தல் காலத்தில் இலங்கைப் பிரச்னை குறித்து மட்டுமே முன்னிலைப்படுத்திப் பேசியது, அந்த சமயத்தில் அம்பத்தூர் முதலான பல பகுதிகளில் ஏரி ஆக்ரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால், அது குறித்தெல்லாம் தேர்தல் பிரச்சாரங்களில் (தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டவற்றைக் கணக்கில் கொண்டு பார்க்க) மிகவும் குறைவாகவே பேசப்பட்டது. இவ்வாறு, மிக அதிகமாக ஈழப் போர்ச்சூழல் குறித்துத் தரப்பட்ட கவனம், இங்கு பற்றாக்குறை வாழ்வு வாழ்ந்து வரும் மக்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வழியுண்டு என்றேன். உரிமைப் போர், ஆதிக்கப் போர் என்ற வேறுபாடுகள் நாம் அறிந்தவையே. ஆனால், எந்த வகைப் போரானாலும் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக முடித்துவைக்கப் படுவதற்கான முயற்சிகள் உண்மையான அக்கறையோடு மேற்கொள்ளப் பட வேண்டும். அப்படியில்லாமல் போர் தான் மனிதனின் சொரணையுணர்வை நிரூபிப்பது என்பதான பார்வை எந்தவிதத்தில் சரி \nமனிதன் அதிகபட்சமாக முப்பது நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தால் அதிகம். அந்த குறுகிய வாழ்நாள் முழுக்க அவனைப் போர்ச் சூழலிலேயே இருக்கும்படி நிர்பந்தித்தல் எத்தனை அவலமானது இங்கே இருபது வருடங்களுக்கும் மேலாக அகதிகளாகவே முகாம்களில் வாழ்ந்து வருபவர்களின் நிலை எத்தனை துயரமானது. அவர்கள் இங்கேயும் நினைத்த இடத்திற்குப் போய் வர முடிவதில்லை. அவர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிதாகவே உள்ளது\n(நான் கருத்துரைத்துக் கொண்டிருக்கும்போது கவிஞர் ஜெயபாலன் ‘தமிழ் மீனவர்கள் தொடர்ந்து சாகடிக்கப்படுகிறார்களே, அது குறித்தும் பேசுங்கள்” என்றவிதமாய் இரண்டு மூன்று தடவைகள் என் பேச்சில் குறுக்கிட்டார். நான் கூறிய கருத்துக்களில் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் என்ன பேச வேண்டும் என்று வகுத்துரைக்க வேண்டிய தேவையென்ன தமிழக மீனவர்கள் குறித்து அ���ர் எதுவும் அங்கே கருத்துரைக்கவில்லை. இன்று தமிழக மீனவர் நிலையைப் பற்றிப் பேசுவதென்றால் ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் இவ்வாறு தாக்குதல்களுக்கு ஆளாகவில்லையென்ற நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையிருக் கிறதல்லவா தமிழக மீனவர்கள் குறித்து அவர் எதுவும் அங்கே கருத்துரைக்கவில்லை. இன்று தமிழக மீனவர் நிலையைப் பற்றிப் பேசுவதென்றால் ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் இவ்வாறு தாக்குதல்களுக்கு ஆளாகவில்லையென்ற நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையிருக் கிறதல்லவா சில மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதால் உடனே இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் அராஜகங்களை ஆதரிப்பதாகவோ, தமிழுணர்வு இல்லையென்றோ, ஈழத்தமிழர்களின் துயரம் குறித்த அக்கறை இல்லையென்றோ அர்த்தமல்ல. அப்படிப் பகுப்பதிலுள்ள அரசியல் அவதானிப்பிற்குரியது).\nஇறுதியாக, இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பாக்கங்கள் இந்தியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை விட தரமானவை என்ற கருத்து திரும்பத் திரும்ப எந்தவித முறையான ஒப்பாய்வும் இல்லாமல், போர்ச்சுழலைப் புகழ்ந்தேத்துவதே குறியாய் முன்வைக்கப்படுவதற்கும் என்னுடைய ஆட்சேபத்தைத் தெரிவித்தேன்.\n(நான் பேசி முடித்ததும் லீனா மணிமேகலை ஒருவர் தனது கருத்துகளை முன்வைக்கும்போது மற்றவர்கள் குறுக்கிட வேன்டாம் என்று அவையோரி டம் கேட்டுக் கொண்டார்).\nதனிமையின் நிழல் என்ற தலைப்பிட்ட பா.அகிலனின் கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞரும், எழுத்தாளருமான சுகுணா திவாகர் தனது கண்ணோட்டங்களை முன்வைத்தார். அவற்றில் சில:\nகவிஞரின் பிற ஐந்து கவிதைத் தொகுப்புகளோடு ஒப்புநோக்க இது காத்திரம் குறைந்ததாகவே எனக்குப் படுகிறது. வழக்கமான காதல் வர்ணணைகள் , விடலைக் காதல் கவிதைகளே இதில் அதிகம். ஈழக் கவிஞர் என்றால் நமக்கு ஒரு எதிர்பார்பு இருக்கும். அது இந்தத் தொகுப்பில் நிறைவேறவிலை என்றே குறிப்பிடத் தோன்றுகிறது. ஈழக் கவிஞர்கள் என்றால் போர் பற்றி, புலப்பெயர்வு பற்றிக் கவிதைகள் இருக்க வேண்டும் என்று எண்ணும் விதத்தில் நம் மனங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஈழக் கவிஞர் ஏன் காதலைப் பற்றி எழுதக் கூடாது ஆனால், முதிர்ச்சியான காதல் கவிதைகளை இந்தத் தொகுப்பில் காண முடி���வில்லை.\nஇந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் பொறுத்தவரை அவை வெளிப்படையாகப் பேசாத, தன்னைத் தனக்குள்ளாகவே சுருக்கிக் கொள்ளும் கவிதைகளாக அமைந்திருக்கின்றன. வேறு தன்னிலைகள் இடம்பெறுவதில்லை. வன்முறையை எதிர்க்கும் கவிதைகள் சில இத்தொகுப்பில் உள்ளன. நிச்சயமற்ற வாழ்க்கைத்தன்மையை பேசும் கவிதைகளும் சில உள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், அகிலனின் கவித்துவம் இத்தொகுப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படலாகாது.\n·\tஈழக் கவிஞர்களின் விரிவான புலம்பெயர் அனுபவங்கள் அவர்களுடைய கவிதைகளில் அரிதாகவே இடம்பெறுகின்றன. நாட்டைப் பிரிந்த ஏக்கமே அவர்களுடைய கவிதைகளில் அதிகம்\nதலித் கவிஞர்கள் என்னும்போது கவிஞர் மதிவண்ணன் போன்றவர்களை ஒதுக்கி விடுவது தான் நம் வாடிக்கையாக உள்ளது.\nதாமரை, சீமான் போன்றவர்களின் தொனியும், மொழியும் எனக்கும் உடன்பாடில்லை தான். ஆனால், சாபமிடுவது கவியின் உரிமை. பாரதி சாபமிடவில்லையா\nபௌத்தம் நேசமிக்கது என்றாலும் அதன் யதார்த்தத்தையும் பார்க்க வேண்டும்.\n·\tஇந்தியர்களை சாபமிட்டது நியாயம் தான். இந்திய தேசியம் என்பதே ஒரு பார்ப்பனீயக் கட்டமைப்பு தான்.\nதமிழ் நாட்டுத் தமிழ்க் கவிஞர்கள், ஈழத் தமிழ்க் கவிஞர்கள் என்று பிரித்துப் பார்ப்பதும், ஒப்புநோக்குவதும் தவிர்க்கமுடியாதது. அதேசமயம், ஈழத்தமிழ்க் கவிஞர்கள் என்ற ஒருபடித்தான அடையாளத்தையும் மறுக்கிறோம்.\nஒரு பக்கம், நம் அத்தனை செயல்களும் இன்று கண்காணிக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் ஈழப் படுகொலைகள் வெகு சுலபமாக உலகின் கண்களிலிருந்து மறைக்கப்படுகின்றன. இந்த வினோத சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.\n*(கட்டுரையாளர்கள், கருத்துரையாளர்களின் முக்கியக் கருத்துகளில் சில பதிவு செய்யப்படாது விடுபட்டிருந்தால் அது என் நினைவுகூரலின் குறைபாடே தவிர உள்நோக்கம் கொண்டதல்ல. முடிந்தவரை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன்)\nஎழுத்தாளர் சுகன் முன்வைத்த கருத்துகளின் தொகுப்பு பின்வருமாறு:-\nபௌத்தம் அன்புமயமானது. கோபமான மனநிலையிலிருந்து நாம் உரையடலைத் தொடங்கினால் பயன் விளையாது. ஆனால், ‘ காட்டிக் கொடுப்பவன் எங்கே- சாகும் வரை அடி’ என்ற திரு.காசி ஆனந்தன் கவிதையிலிருந்து தான் ஆரம்பத்தில் ஈழக் கவிதை கட்டமைக்கப் படுகிறது. அதற்கு அடுத்த தளம் ச���ரனது கவிதைகள். போரை கவிதையில் வலியுறுத்தினார்கள் கவிஞர்கள். ஆனால், அவர்கள் இப்போது எங்கே நிலைகொண்டிருக்கிறார்கள்.\nபோர் எல்லாவற்றையும் அழித்துவிடும். இலக்கியம் வாழ்க்கை எதுவுமே மிச்சமிருக்காது.\nதமிழர்கள் வேறு, தலித்துகள் வேறு என்று எழுதும் கவிஞர் எப்படி நியாயமாவார் சாதிகள் இன்னும் அங்கே இருக்கின்றன.\nமலைவாழ் தமிழக மக்கள் வெறும் இலக்கமாகப் பார்த்து அனுப்பப்பட்டார்கள். இரண்டாம் தலைமுறையாக முஸ்லீம்கள் அகதிகளாக இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள்.\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து\nஅரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1\nமேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்\nவேத வனம் விருட்சம்- 43\nவாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்\nஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)\nவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\nநிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் \nஇஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்\nஒரு பதிவை முழுமை செய்கிறேன்\nநண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்\n” புறநானூற்றில் கைக்கிளை “\nகடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nNext: தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து\nஅரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின�� அழைப்பு கவிதை -14 பாகம் -1\nமேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்\nவேத வனம் விருட்சம்- 43\nவாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்\nசங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1\nதமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்\nஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)\nவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\nநிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் \nஇஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்\nஒரு பதிவை முழுமை செய்கிறேன்\nநண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்\n” புறநானூற்றில் கைக்கிளை “\nகடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/indian-2-accident-inquiry-kamal-hassan-case-filed-againt-police-q7bs4f", "date_download": "2021-08-02T09:34:12Z", "digest": "sha1:ONTBKAINAECGPFLKTFRESCQY5B4C7JK7", "length": 9692, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்... காவல்துறை மீது கமல் ஹாசன் போட்ட வழக்கில் இன்றே விசாரணை...! | Indian 2 accident Inquiry Kamal Hassan Case Filed Againt Police", "raw_content": "\nவிசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்... காவல்துறை மீது கமல் ஹாசன் போட்ட வழக்கில் இன்றே விசாரணை...\nகமல் ஹாசனின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அவரது வழக்கை அவசர வழக்காக எடுத்து இன்று பிற்பகல் 2.15 மணி அளவில் விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.\nகடந்த மாதம் 19 ஆம் தேதி, 'இந்தியன் 2 ' இரவு நேர படப்பிடிப்பின் போது, கிரேன் கீழே சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கிருஷ்ணன், சந்திரன், மற்றும் மது ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் படைத்தனர். இதுதொடர்பாக நசரத் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், விபத்து தொடர்பான விசாரணை மத்திய குற்றப்புலனாய்வு போலீசாருக்கு மாற்றப்பட்டது.\nஇதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...\nஇதையடுத்து மார்ச் 3ம் தேதி நடிகர் கமல் ஹாசன் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. அன்று சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அலுவலகத்தில் ஆஜரான கமலிடம் இரண்டறை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. நம்மவரிடமே விசாரணையே என மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும், கமல் ஹாசனின் ரசிகர்களும் கொந்தளித்தனர். கமலிடம் விசாரணை நடத்தியதைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன அறிக்கை கூட வெளியிடப்பட்டது.\nஇதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...\nஇந்நிலையில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீட்டார். இந்தியன் 2 விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதாக கூறி காவல்துறை தன்னை துன்புறுத்துவதாக தெரிவித்தார். மேலும் காவல்துறையினர் தன்னை துன்புறுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கும் படியும், தனது வழக்கை அவசர வழக்காக ஏற்கவும் கோரிக்கை விடுத்தார்.\nஇதையும் படிங்க: ரஜினி இடத்திற்கு சிம்புவை தயார் செய்யும் கமல்... 100 கோடி சம்பளம் கேட்டதால் நட்பில் விழுந்த விரிசல்\nகமல் ஹாசனின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அவரது வழக்கை அவசர வழக்காக எடுத்து இன்று பிற்பகல் 2.15 மணி அளவில் விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.\n\"ஷங்கர் மீது லைக்கா தொடுத்த வழக்குகள் ரத்து\"- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஇடியாப்ப சிக்கலாய் நீளும் இந்தியன் 2 விவகாரம்... முற்றுப்புள்ளி வைக்க உயர் நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு\nசென்னையை தொடர்ந்து ஹைதராபாத்... லைக்காவின் செயலால் உச்சகட்ட அதிர்ச்சியில் புகார் தெரிவித்த ஷங்கர்..\n'இந்தியன் 2 ' விவகாரத்தில் லைகாவின் அதிரடி செயலால்... ஆட்டம் கண்ட ஷங்கர்..\nஇந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு லைகா நிறுவனமே காரணம் - உண்மையை உடைத்த இயக்குனர் ஷங்கர்\nஇந��திய அணிக்கு இப்போதைக்கு இதைவிட பெரிய குட் நியூஸ் இருக்கவே முடியாது..\n‘96’ பட பாடகி திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய பிரபல இயக்குநரின் குடும்பம்....\n1.50 கோடி ரூபாய் அரசு நிதியில் பாரதமாதாவுக்கு ஆலயம்.. திமுக அமைச்சர் திறந்து வைத்தார்.\nதல ஃபேன்ஸ் சரியா 7 மணிக்கு ரெடியா இருங்க... போனிகபூர் கொடுத்த லேட்டஸ்ட் ‘வலிமை’ அப்டேட்...\nபள்ளிகள், கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது.. அமைச்சர் அதிரடி முடிவு.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/manmohan-singh-tests-positive-for-covid-19/", "date_download": "2021-08-02T08:35:03Z", "digest": "sha1:MMAYUR5VDNEMLSOASSN32OVJ2NVFKMBS", "length": 6509, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி ! - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி \nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 88 வயதான மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமன்மோகன் சிங்கிற்கு முன்னதாக, காலையில் லேசான காய்ச்சல் இருந்தது. பின்னர் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஅவர் விரைவில் குணமைடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். நீங்கள் விரைவாக குணமடைய விரும்புகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு உங்கள் வழிகாட்டுதலும் ஆலோசனையும் தேவை என்று கூறியுள்ளார்.\nமே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – மத்திய அரசு \nஇன்று முதல் இரவு நேர ஊரடங்கு\nமோடி எதிர்காலத்துடன் விளையாடுகிறார்- ராகுல் காந்தி\nகுஜர��த் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்- அரவிந்த் கெஜ்ரிவால்\nஊரடங்கால் காய்கறி விலை அதிகரிப்பு – தமிழகம் \nகருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் பலி\nஇன்று முதல் இரவு நேர ஊரடங்கு\nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\nதொடர் சரிவில் தங்கம் விலை\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\nமுருதீசுவரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/today-rasi-palan-32/", "date_download": "2021-08-02T09:22:05Z", "digest": "sha1:F2TZRGOEX6EM3DFQE6M7ORKMCUJ2OQM6", "length": 14493, "nlines": 136, "source_domain": "tamil.newsnext.live", "title": "இன்றைய ராசி பலன் - கோவில் தரிசனம் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதுவும் ஏமாற்றம் உண்டு. நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுத்து வைத்த அடியை பற்றி சிந்திக்காதீர்கள். உத்யோகத்தில் மன அமைதி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் இணக்கம் ஏற்படும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சாதிக்க நினைக்கும் சில விஷயங்களுக்கு அடித்தளம் அமைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றமான சூழ்நிலை நிலவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். சக நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் மற்றவர்களை எளிதாக கவரக் கூடியதாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கை ஓங்கி இ��ுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு ஒப்படைக்கப்படும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை காண இருக்கிறீர்கள். புதிய தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புது உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்க்கவும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நவநாகரீக மோகம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அறிவாற்றல் மென்மேலும் வளரும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று நடக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். சக பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலம் அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலுவையிலிருந்த தொகைகள் படிப்படியாக வசூலாகும். பொருட் தேக்கம் எதுவும் ஏற்படாமல் இருக்கும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது மறைக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி மறுபடியும் சூடு பிடிக்க துவங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியம் சிறக்கும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.\nசத்தம் இல்லாமல் அதிகரிக்க தொடங்கிய டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு \nஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nகெனைன் பார்வோ வைரஸ் பற்றி தெரியுமா\nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\nதொடர் சரிவில் தங்கம் விலை\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil4.com/news/world-news/terrible-accident-on-the-busiest-road-in-britain/", "date_download": "2021-08-02T10:05:20Z", "digest": "sha1:C24TQWP6X75O4Y2TUUB3VGRLNQXS3UFO", "length": 8651, "nlines": 71, "source_domain": "tamil4.com", "title": "பிரித்தானியாவில் பரபரப்பு மிகுந்த சாலையில் பயங்கர விபத்து - Tamil4", "raw_content": "\nபிரித்தானியாவில் பரபரப்பு மிகுந்த சாலையில் பயங்கர விபத்து\nபிரித்தானியாவில் பரபரப்பு மிகுந்த சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் காரணமாக 3 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் Durham-க்கும் அருகே Bowburn-ல் இருக்கும் A1 மோட்டார் வே பகுதியில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 6.30 மணிக்கு நான்கு கார்கள் மற்றும் இரண்டு லொரிகள் மோதிக்கொண்ட பெரும் விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரி���ந்துள்ளனர்.\nஇதில் இரண்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் Toyota Hilux காரை ஓட்டி வந்த ஓட்டுனர் என்பதும், மற்றொரு ஆண் மற்றும் பெண் இருவரும் Vauxhall Crossland காரில் வந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்து காரணமாக இன்னும் சில காயமடைந்துள்ளனர். 41 வயது மதிக்கத்தக்க லொரி ஓட்டுனர் ஒருவர் இந்த வித்திற்கு காரணம், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது வரை Bradbury மற்றும் Carrville-க்கான இரு வழிகளும் மூடப்பட்டுள்ளது.\nகுறித்த விபத்து காரண்மாக லொரி டிரக் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், இதை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் Dave Ashton, ”இது ஒரு பயங்கரமான விபத்தாக உள்ளது.\nஇதனால், மக்கள் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது மிகவும் சிக்கலான மற்றும் நீண்ட விசாரணையாக இருக்கும் என்று கருதுகிறோம்.\nஏனெனில் விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் தீ பரவியுள்ளது, வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.\nஇதனால் இந்த பகுதியை சரிசெய்வதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கால தாமதம் ஆகலாம் என்பதால், வாகனஓட்டிகள் இப்பகுதியை தவிர்த்து, முன்னரே வேறொரு மாற்றுப் பாதையை தெரிவு செய்யவும்” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உறுதியானால், அவர்களின் புகைப்படம் மற்ற விபரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் – உயிர்களை பலி வாங்கிய வெள்ளம்\nமீண்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் பரிந்துரை செய்த ஜோ பைடன்\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\nகொரோனா அச்சம்; இங்கிலாந்து உள்பட 4 நாடுகளுக்கான பயண தடையை நீடித்த நாடு\nதம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிக��\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil4.com/sports/new-zealand-defeated-india/", "date_download": "2021-08-02T08:18:07Z", "digest": "sha1:F5RVEQRQY27XTEBYGIZ5JL67LOTUVSXJ", "length": 5663, "nlines": 65, "source_domain": "tamil4.com", "title": "இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து - Tamil4", "raw_content": "\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையைக் கைப்பற்றியது.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்றோடு முடிய உள்ளது. இந்நிலையில் மழை காரணமாக இரண்டு நாட்கள் போட்டி பாதிக்கப்பட்டதால் டிராவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் இரண்டு அணிகளும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை என ரசிகர்கள் விமர்சித்தனர்.\nஇருப்பினும் நிதானமாக ஆடிய நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nநியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் அதிகபட்சமாக 52 ரன்களும், ராஸ் டெய்லர் 47 ரன்களும் எடுத்தனர். அத்துடன் ஐசிசி கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் சாம்பியன் கோப்பை வென்ற அணி என்ற சாதனையும் படைத்ததுள்ளது. ரசிகர்கள் நியூசிலாந்து அணிக்கும் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.\nநடைமுறையை மீறிய இலங்கை வீரர்களுக்கு ஒரு வருட போட்டித்தடை\nகனவும் கலைந்தது ; கண்ணீருடன் வெளியேறிய செரீனா\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி; காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி\nடோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்குமா\nதம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-08-02T09:21:37Z", "digest": "sha1:WYTPCB3EPHY5HXHV3ELWQD7KLNYNWZUH", "length": 15288, "nlines": 136, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nதமிழ்நாட்டை இரா���ுவமயமாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு – உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்\nதமிழ்நாட்டை இராணுவமயமாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு...\n8 வழிச்சாலைஅணுவுலைஇராணுவமயமாக்ககனநீர் உலைதனுஷ்கோடிபூவுலகின் நண்பர்கள்ப்ளுட்டோனியம்\n’தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய உத்தரவிட வேண்ட்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் மனு\nதமிழக மீனவர்கள் நான்கு பேரை கொலை செய்த இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது....\nதமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை – படகினை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், அம்மீனவர்களின் படகினை அரசுடமையாக்கியும் இலங்கை ஊர்காவல்துறை...\nபுறக்கணிக்கப்படும் தமிழக ரயில் திட்டங்கள்: ‘தேவையோ கோடிகள்; கொடுப்பதோ ஆயிரங்கள்’ – சு.வெங்கடேசன் கண்டனம்\nதமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் 11 ஆயிரம் கோடி தேவையாக இருக்கும்போது, வெறும் 95 கோடி மட்டுமே...\nசு வெங்கடேசன்தனுஷ்கோடிபட்ஜெட் 2021மதுரைரயில்வே பட்ஜெட்\n‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்\nதமிழ்நாட்டில் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்படாவிட்டாலும், தொடர் பிரச்சனையாக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை உள்ளது. அதிலும், இராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு, அண்டை...\nஇராமேஸ்வரம்இலங்கை கடற்கரைகச்சத்தீவுதனுஷ்கோடிதமிழக மினவர்கள்மத்திய அரசு\n`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்\nகடந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும், சில நேரங்களில் சுட்டுக்கொள்ளப்படுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது....\nஇராமேஸ்வரம்இரால்இலங்கை அரசுதனுஷ்கோடிதமிழக மீனவர்கள்துப்பாக்கி சூடுபாக் நீரிணைபாம்பன்மத்திய ���ரசுமீனவர்கள்யாழ்ப்பாணம்விசைப்படகு\nகச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும் – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்\nஎதிரி நாடு என்று சொல்லப்படுகிற பாகிஸ்தானில் கூட இப்படியான சம்பவங்கள் நடப்பதில்லை. கைது செய்கிறார்கள். பின் சட்டப்படியான நடவடிக்கைகளை செய்கிறார்கள். ஆனால்...\nஇந்திரா காந்திஇராமேஸ்வரம்இலங்கைஇலங்கை கடற்படைஇலங்கை ராணுவம்கச்சத்தீவுஜெயலலிதாதனுஷ்கோடிதமிழக மீனவர்கள்துப்பாக்கி சூடுபாம்பன்மண்டபம்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படை அட்டூழியம்\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர் ஒருவர் தலையில் பலத்த காயம் எற்பட்டுள்ளது அப்பகுதி மீனவர்கள் இடையே...\n“மீண்டும் ஒரு தெர்மாகோல் சாதனை” – மீனவத் தொழிலாளர் சங்கம்\nதனுஷ்கோடியில் வீசும் மணல் புயலைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தால் ஆன தடுப்புவேலிகளை அமைத்துள்ளனர். கான்கிரீட் தடுப்புகளே கடல் காற்றின் சீற்றத்தைத்...\nஆமைதடுப்புவேலிதனுஷ்கோடிதெர்மாகோல்நெடுஞ்சாலைபுயல்பூர்வீகக்குடிமணல் தடுப்புமீனவ தொழிலாளர்கள்ரயில் பாதைராணுவம்ராமேஸ்வரம்வைகை\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின்...\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏ�� அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின் போராட்டம்\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் – தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தகவல்\n‘தற்போதைய பணவீக்கத்திற்கு 1947-ல் நேரு ஆற்றிய உரையே காரணம்’ – ம.பி. பாஜக அமைச்சர்\n‘பெகசிஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை வேண்டும்’ – நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்\nதகுதியான சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2021/07/05/i-have-cried-many-times-thinking-that-chandramuki-lost-the-film-opportunity/", "date_download": "2021-08-02T08:32:31Z", "digest": "sha1:QJIVVPPYOFCRC6ZNK4DQDX3TPSGMAMCQ", "length": 8937, "nlines": 162, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததை நினைத்து பலமுறை அழுதுள்ளேன்..! – Kuttram Kuttrame", "raw_content": "\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nசந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததை நினைத்து பலமுறை அழுதுள்ளேன்..\nதவிர்க்க முடியாத காரணங்களால் சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததை நினைத்து அழுது உள்ளதாக நடிகை சதா தெரிவித்துள்ளார். ஜெயம் படத்தின் மூலம் தாவணி தேவதையாக அறிமுகமான நடிகை சதா அந்த ஒரே படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டதையடுத்து சங்கரின் அந்நியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.\nஇந்த நிலையில் சந்திரமுகி படத்தில் நடிக்க தனக்கு இருமுறை அழைப்பு வந்ததாகவும் தவிர்க்க முடியாத காரணங்களால் அது நட��்க முடியாமல் போய்விட்டதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nமேலும் அந்த படத்தை இழந்ததற்காக சில சமயங்களில் அழுது உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சந்திரமுகி படத்தில் மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சதா அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் - சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nசிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nநடிகர் விஜய்யை சந்திக்க சென்ற ரசிகர்..\nகோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்..\n சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததை நினைத்து பலமுறை அழுதுள்ளேன்..\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nகிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/07/misalai.html", "date_download": "2021-08-02T08:26:55Z", "digest": "sha1:PAA3BD3H73NVPALWTZ66R74CPUGVPJDU", "length": 11460, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "மீசாலையில் இளைஞன் மீது வாள்வெட்டு!! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மீசாலையில் இளைஞன் மீது வாள்வெட்டு\nமீசாலையில் இளைஞன் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம் மீசாலை - புத்துார் சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று (01.07.2021) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக தொியவருகின்றது.\nசம்பவத்தில் மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபஸ்ஸில் பயணித்த குறித்த இளைஞன் மீசாலை - புத்துார் சந்தியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இளைஞனை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.\nசம்பவத்தில் தலை, கை, கால் ஆகியவற்றில் காயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்���ப்பட்டுள்ளார்.\nயாழில். அண்மைக்காலமாக வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் வாள்வெட்டு சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறைய��னரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2016/10/temples-in-kolli-hills.html", "date_download": "2021-08-02T10:30:11Z", "digest": "sha1:UVARRE3EBVID3POPXRUZXUWCESNYOIWF", "length": 17161, "nlines": 159, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: கொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்", "raw_content": "\nகொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்\nகொல்லிமலை என்றாலே நம் நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை சித்தர்கள் கொல்லியில் சித்தர்கள் வாழ்ந்த குகைகள் மட்டும் இப்போதும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் பிரதானமானது கோரக்கர் குகை. எப்படியாவது கோரக்கர் குகையை பார்த்துவிட வேண்டுமென்று கொல்லியில் இறங்கியதிலிருந்தே விசாரித்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல்களை சொல்கிறார்கள். ஒரு சிலர் அப்படியொரு குகை இல்லவே இல்லை என்கிறார்கள். தீர விசாரித்தபிறகு, ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் வழியிலிருந்து பிரிந்து காட்டுக்குள் நீண்டதூரம் சென்றால் கோரக்கர் குகையை காணலாம் என்று தெரிந்துக்கொண்டோம். ஆனால் அங்கே வழிகாட்டிகளின் உதவியுடன் மட்டும்தான் செல்ல முடியும் என்றும் குகைக்கு செல்வதென்றால் காலையிலேயே கிளம்பிவிட வேண்டுமென்றும் மீண்டும் திரும்பி வர மாலையாகிவிடும் என்றும் சொன்னார்கள். எனவே கோரக்கர் குகைக்கு செல்லும் எண்ணத்தை ஒருமனதாக கைவிட்டோம்.\nசித்தர்கள் குகையை தவிர்த்து கொல்��ியில் இருக்கும் சில முக்கிய கோவில்களைப் பற்றி பார்க்கலாம்.\nஆகாயகங்கை அருவியின் முகப்புக்கு எதிரிலேயே அமைந்திருக்கிறது அறப்பளீஸ்வரர் கோவில். கோவிலுக்கு சென்றுவிட்டு அருவிக்கு இறங்குவதோ அல்லது அருவியில் குளித்தபிறகு கோவிலுக்கு செல்வதோ உங்கள் செளகர்யம். ஆனால் கோவில் மதியம் ஒரு மணிக்கு மூடப்பட்டுவிடுகிறது. அத்துடன் மீண்டும் பிற்பகல் நேரத்தில் தான் திறக்கப்படுகிறது. எனவே அதற்கேற்றபடி திட்டம் அமைத்துக்கொள்வது நல்லது.\nஅக்காலத்தில் கொல்லிமலையில் வாழ்ந்த சிவனடியார்கள் இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றினை நிறுவி வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ‘அறை’ என்றால் சிறிய மலை, ‘அறைப்பள்ளி’ என்றால் மலைமேல் உள்ள கோவில், இறைவன் ஈஸ்வரர் என்பதால் அறைப்பள்ளி ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி அறப்பளீஸ்வரர் ஆனதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இவ்விடம் விளைநிலமாக மாறி, சிவலிங்கம் மண்ணுள் புதைந்தது. பின்னாளில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது அவருடைய கலப்பை சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் பட்டு அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மக்கள் இங்கு கோவில் அமைத்து வழிபட துவங்கியிருக்கின்றனர். இப்பொழுதும் கூட அறப்பளீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் அத்தழும்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nகோவிலின் அருகே அமைந்துள்ள பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. அப்போது ஒரு அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவன் இருப்பதாகக் கூறி ஒலித்தது. இச்சம்பவத்தால் இங்கிருக்கும் சிவனுக்கு அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.\n2. கொல்லிப்பாவை (அ) எட்டுக்கையம்மன் கோவில்\nஅறப்பளீஸ்வரர் கோவிலிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் மாசிலா அருவி போகும் வழியில் அமைந்திருக்கிறது எட்டுக்கையம்மன் கோவில். முன்பே வழி தெரியாததால் வாய்வழி கேட்டு கோவிலை அடை���்தபோது அங்கே கோவில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளை கண்டு அதிர்ந்தோம். ஏற்கனவே ஆகாயகங்கைக்காக ஆயிரம் படிகள் இறங்கி ஏறிய களைப்பு. இங்கே குறைந்த எண்ணிக்கை படிக்கட்டுகள் மட்டுமே என்பதை தீர விசாரித்தபின் இறங்கினோம்.\nஅக்காலத்தில் கொல்லிமலையில் தவம் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக்கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையுடையது. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். கொல்லிப்பாவை பற்றி நற்றிணை, குறுந்தொகை செய்யுட்களில் கூறப்பட்டுள்ளது. கொல்லிப்பாவை என்ற அக்காவல் தெய்வம் தான் தற்போது எட்டுக்கை அம்மனாக வழங்கப்படுகிறது.\nஇங்கே நுழைந்ததும் பல்வேறு அளவுகளில் மணிகளும், தாயத்துகளும், விசிட்டிங் கார்டுகளும் தொங்குவதை காண முடிந்தது. பூசாரி இருக்கிறார். புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்கிறார். சில கோவில்களில் ஏன் புகைப்பட அனுமதி மறுக்கப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா பூசாரி கவனிக்காத சமயத்தில் தந்திரமாக சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினோம். வெளியிலேயே மரத்தடியில் கேட்பாரற்று வீற்றிருக்கிறார் இன்னொரு எட்டுக்கையம்மன். சிறப்பு தரிசனம் கிடைத்த மனநிறைவுடன் கிளம்பினோம்.\n3. மாசி பெரியசாமி கோவில்\nஇதற்குள் கால தாமதமாகிவிட்டதால் மாசி பெரியசாமி கோவிலை தவிர்த்துவிட முடிவு செய்தோம். எனினும் சுருக்கமாக சில தகவல்கள். எட்டுக்கையம்மன் கோவிலிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மாசி பெரியசாமி கோவில். சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்கள் கொண்ட காவல்தெய்வம் தான் இந்த மாசி பெரியசாமி. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். கொல்லியில் அமைந்துள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்றான மாசிக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது.\nபொதுவாகவே கொல்லிமலையில் நிறைய சைவ, சமண கோவில்கள் இருக்கின்றன. தோராயமாக கூகுள் மேப்பில் உலவினால் கூட ஆங்காங்கே பழங்கால சமண கோவில் / சிலை காணப்படுகிறது. அவற்றில் குறிப்பாக நெகனூர்பட்டி என்கிற ஒதுக்குப்புற கிராமத்தில் ஒரு பழங்கால சமணர் கோவில் இருப்பதாக சொல்லப்பட்டதால் அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அங்கே சென்றால் இன்னொரு ஆச்சர்யம் கிடைத்தது. இவை தவிர்த்து ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதிலமடைந்த சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. இவற்றை பற்றியெல்லாம் அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்.\nஅதற்கு முன்பாக கொல்லிமலையில் ஆகாயகங்கை அல்லாமல் வேறு சில சிறிய அருவிகள் உண்டு. அவற்றை பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.\nஅடுத்த இடுகை: மற்ற அருவிகள்\nசுஜாதா இணைய விருது 2019\nகொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/08/suriya-sun-bio-data-tamil.html", "date_download": "2021-08-02T08:02:09Z", "digest": "sha1:7QJER27WK4DO4SR2OHEWCOYONAIXRCCV", "length": 11149, "nlines": 204, "source_domain": "www.scientificjudgment.com", "title": "சூரியன் பயோடேட்டா -Sun Bio data.", "raw_content": "\nமுகப்புவிண்வெளி அறிவியல்சூரியன் பயோடேட்டா -Sun Bio data.\nசூரியன் பயோடேட்டா -Sun Bio data.\nசூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் எனலாம். ''சக்தி இல்லையேல் சிவம் இல்லை'' என்கிற கூற்று இங்கு சூரியனுக்கே பொருந்தும். ஏனெனில் புவியின் இயக்கத்திற்குத் தேவையான அனைத்து விதமான அடிப்படை சக்திகளும் சூரியனிடம் இருந்தே பெறப்படுகின்றன.\nசூரியன் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டால் பூமியும் தன் அனைத்து அசைவுகளையும் நிறுத்திக் கொள்ளும். அது மட்டுமல்ல சூரியனுடைய ஈர்ப்பு விசையால்தான் பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.\nஅண்டவெளியில் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்களையும் கோள்களையும் உள்ளடக்கிய கேலக்சிகள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் நம் சூரியனை உள்ளடக்கிய பால்வீதி (Milky Way ). இது சுமார் சிறிதும், பெரிதுமாக 200 பில்லியன் நட்சத்திரங்களை அதாவது சூரியன்களை உள்ளடக்கியது.\nசூரியனின் வெளிப்புறம் 3 அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன - 1. போட்டோஸ்பியர் (Photosphere ). 2. குரோமோஸ்பியர் (Chromosphere ) 3. கொரோனா (Corona ).\nசூரியனில் இருக்கும் மிக முக்கியமான பொருட்கள் இரண்டு .... ஒன்று ஹைட்ரஜனும் மற்றொன்று ஹீலியமும்.\nஇங்கே நாம் இப்போது சூரியனை பற்றிய சில அடிப்படை விசயங்களை மட்டும் தெரிந்து கொள்வோம்.\nசூரியனுக்கு வழங்கப்படும் பல பெயர்கள் - சூரியன், கதிரவன், பகலவன், ஞாயிறு, அனலி, வெய்யோன்.\nபூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் - 144 × 10 ⁵ Km.\nசூரியஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் - 8 நிமிடங்கள்.\nசூரியனின் கோண விட்டம் - 0.53 ⁰.\nசூரியன் தன்னை தானே சுற்றும் கால அளவு - 25 . 38 நாட்கள்.\nசூரியனின் திசைவேகம் - 220 Km / s.\nநடுக்கோட்டில் தற்சுழற்சி திசை வேகம் - 7.189 × 10 ³ Km /h .\nவிட்டம் - 6 . 9599 × 10 ⁵. ( 14,00,000 கிலோ மீட்டர், பூமியின் விட்டத்தைவிட 109 மடங்கு நீளமானது ).\nநிறை - 1.989 × 10 ³⁰ Kg. ( பூமியைவிட 330,000 மடங்கு அதிகம் ).\nசராசரி அடர்த்தி - 1.409 g/cm ³.\nவிடுபடு வேகம் - 617.7 Km /s.\nமேற்பரப்பு வெப்பம் - 5800 கெல்வின். (சுமார் 5,700 டிகிரி செல்சியஸ் )\nமைய வெப்பம் - 15 × 10 ⁶ கெல்வின். (சுமார் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் )\nநட்சத்திர வகை - G 2 V .\nசூரியனில் அடங்கியுள்ள பொருள்களின் விவரம்.\nமேலும் சூரியனைப்பற்றி அறிந்துகொள்ள அடுத்துள்ள சுட்டியை சுட்டுங்க... >> சூரியன் - Sun star <<\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Keelanelli - Viral jaundice Hepatitis B.\nகீழாநெல்லி - வைரஸ் அழற்சி காமாலை. Viral jaundice Hepatitis B. [PART - 8]. மூலிகைகள் வர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/48349/", "date_download": "2021-08-02T08:22:22Z", "digest": "sha1:DZ2MA2BJ2ZQVHG7CJ7Z6WGWGZW2V54VQ", "length": 7394, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "சித்தாண்டியில் 70 வயது முதியவர் வாகன விபத்தில் படுகாயம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசித்தாண்டியில் 70 வயது முதியவர் வாகன விபத்தில் படுகாயம்.\nஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியில் இன்று (17) புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சித்தாண்டி -4, உதயன்மூலையைச் சேர்ந்த காத்தமுத்து தங்கராசா (வயது 70) என்ற முதியவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்..\nவிபத்துக்குள்ளான முதியவரை உடனடியாக மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nவிபத்துக்குள்ளான முதியவர் தனது முதியோர் கொடுப்பனவைப் பெறுவதற்காக சித்தாண்டி உப தபாலகத்திற்கு முச்சந்திப் பிள்ளையார் முன்னாள் உள்ள மஞ்சள் கடவையூடாக தனது சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தவேளையில் அதிவேகமாக வந்த சுங்காவில் இருந்து அக்கரைப்பற்று சென்ற தனியார் வாகனம் மோ���ியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.\nவிபத்தை ஏற்படுத்திய பேரூந்தை சித்தாண்டி பிரதேச பொது மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த தனியார் பேரூந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் வேறு பேரூந்தில் சென்றமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த இடத்திற்கு ஏறாவூர் போக்குவரத்துப் பொலிசார் வருகைதந்து மேலதிக தகவல்களை பதிவு செய்தனர்.\nPrevious articleகிழக்கில் முறையற்ற ஆசிரிய இடமாற்றங்கள் பொதுமக்கள் வீதிக்கு வரவேண்டிய கட்டாயம்\nNext articleகாத்தான்குடியில் அமைச்சர் றஊப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் பெருவிழாக்கள்\nசுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தனது சொற்ப இலாபத்திற்காக சமூகத்திற்கு துரோகம் இழைக்கிறார்\nகருணா அம்மானின் கட்சியும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்.\n13 வது திருத்தத்தை அதன் தற்போதைய வடிவத்தில் ஆதரிக்கின்றோம்.சஜித் பிறேமதாச\nகுருமண்வெளியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-08-02T10:45:49Z", "digest": "sha1:73B5O77HO4UFLPIRYC35M4KQYL6IFNOM", "length": 6544, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவய் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபவய் ஏரி மும்பையின் பவய் பகுதியில் உள்ள ஒரு மனிதர்களால் வெட்டப்பபட்ட ஒரு செயற்கை ஏரியாகும். மும்பை இந்திய தொழில்நுட்பக்கழகம் இந்த ஏரியி்ன் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1] இந்த ஏரி வெட்டப்பட்ட போது இதன் பரப்பளவு 2.1 ச.கி.மீ (520 ஏக்கர்கள்) ஆகவும் ஆழம் கரையோரத்தில் 3 மீட்டர் (9.8 அடி) முதல் அதிகபட்ச ஆழமாக 12 மீட்டர் (39 அடி) வரையும் இருந்தது.[2] இந்த ஏரி நீர் காலப்போக்கில் மாசடைந்து குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளைக் கவரக்கூடிய இடமாக உள்ளது.\n↑ \"Powai lake\". மூல முகவரியிலிருந்து 2014-09-24 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-08-30.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2018, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2805906", "date_download": "2021-08-02T08:41:08Z", "digest": "sha1:HDDB5IM4XEZS3PQMZSPKZ37WOYEMDNR3", "length": 24024, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏற்கனவே 7 அடி உயரம் இருப்பீர்கள். இன்னும் வளர்ந்தால் நன்றாக இருக்காது என அதிமுக நினைத்து இருக்குமோ...| Dinamalar", "raw_content": "\nஆக.,02: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'தினமலர்' வழிகாட்டி 2.0 நிறைவு\nவேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர்\nஇந்திய சீன படைகள் வாபஸ்\nகாந்தஹார் விமான நிலையத்தில் தலிபான்கள் 'ராக்கெட்' ...\nகோவிட்டை தடுக்குமா: அஸவகந்தா குறித்த ஆய்வு\n1976ல் நடந்த விமான விபத்தில் 'இறந்தவர்' வீடு ...\nஇது உங்கள் இடம்: மூன்றாவது அலையில் சிக்குவோமா\nமும்பையில் களை இழந்த விநாயகர் ஊர்வலம்\nஏற்கனவே 7 அடி உயரம் இருப்பீர்கள். இன்னும் வளர்ந்தால் நன்றாக இருக்காது என அதிமுக நினைத்து இருக்குமோ...\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 275\nகேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் ... 93\nஆதாரில் போன் எண் திருத்தம்: இனி வீட்டிலேயே செய்யலாம்\nடெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த மதுரை இன்ஸ்பெக்டர் ... 24\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nசட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,விடம் தென்மாவட்டங்களில் ஒரு தொகுதி கேட்டேன்; ஆனால், எங்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நான் வளர்ந்து விடக்கூடாது என்ற வகையிலும், நாங்கள் விரும்பாத எழும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினர்.- தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன்'ஏற்கனவே, 7 அடி உயரம் இருப்பீர்கள்... இன்னும் வளர்ந்தால் நன்றாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,விடம் தென்மாவட்டங்களில் ஒரு தொகுதி கேட்டேன்; ஆனால், எங்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நான் வளர்ந்து விடக்கூடாது என்ற வகையிலும், நாங்கள் விரும்பாத எழும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினர்.\n- தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன்\n'ஏற்கனவே, 7 அடி உயரம் இருப்பீர்கள்... இன்னும் வளர்ந்தால் நன்றாக இருக்காது என, அ.தி.மு.க., நினைத்திருக்குமோ... அது சரி... அணி மாறத் தயாராயிட்டீங்களோ...' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் பேச்சு.\nதிண்டுக்கல் லியோனியை விட தரமானவர்கள், தி.மு.க.,வில் எங்கே இருக்கின்றனர்... அவரை விட மோசமானவர்கள் தான் அங்கு மந்திரியாகவே இருக்கின்றனர். ஒரு காலத்தில் அறிவார்ந்த தலைவர்கள் அங்கு இருந்தனர்; இப்போது இல்லை.\n- மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் ஆலோசகர் பழ.கருப்பையா\n'லியோனியை விட மோசமானவர்களா... கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லையே... தமிழகத்தின் தலையெழுத்து இப்படியா ஆக வேண்டும்...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் ஆலோசகர் பழ.கருப்பையா பேட்டி.\nஎந்த பதவியும் இப்போது இல்லாவிட்டாலும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திக்க வருகின்றனர். போராட்டங்களில் கலந்து கொள்கிறேன். ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறேன். பதவி இருந்தால் தான் கட்சி பணியாற்ற வேண்டும் என்பதில்லையே\n- புதுச்சேரி முன்னாள் முதல்வர், காங்கிரசை சேர்ந்த நாராயணசாமி\n'ரிடையர்மென்ட் இல்லாத தொழில், அரசியல். ஐந்தாண்டுகளுக்கும், அவ்வப்போதும் யோகம் அடிக்கும். காத்திருப்பவர்கள் வெற்றி பெறுகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர், காங்கிரசை சேர்ந்த நாராயணசாமி பேட்டி.\nபா.ஜ.,வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, 'இனி பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் போட்டி' என்கிறார். அப்போ, அ.தி.மு.க., கதி அதோ கதியா\n- மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்\n'எல்லா கட்சி விவகாரங்களையும் பேசுகிறீர்கள்... நம்ம கட்சி எப்போது தனித்து நின்று, ஆட்சியைப் பிடிக்கப் போகிறது... அதை முதலில் சொல்லுங்க காம்ரேட்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.\nதமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், இப்போதைய மத்திய இணையமைச்சருமான முருகனின் பெற்றோர், இன்னமும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வயலில் உழைத்து கொண்டு இருக்கின்றனர். அதை அவர்கள் பெருமையாகவும் கருதுகின்றனர்.\n- பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ்\n'இதுபோல, காங்., - தி.மு.க., கட்சிகளில் எந்த தலைவர் குடும்பமாவது இருக்குமா... பா.ஜ., இது தான், ' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ் அறிக்கை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூபாய் 50 லட்சம் ‛ஆட்டைய' போட்ட மத்திய அமைச்சரின் ‛மாஜி' உதவியாளர்\nதி.மு.க.,வின் சிறுபான்மையின அரசியல்: ஹிந்துக்களிடம் எடுத்து கூற அண்ணாமலை உத்தரவு(83)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n\"ஒரு காலத்தில் அறிவார்ந்த தலைவர்கள் திமுக வில் இருந்தனர்\" பழ. கருப்பையா அவர்களே எப்பொழுதாவது பகல் கனவு கண்டீர்களா\nபல கட்சிமாறிகள் எதற்க்காக மாறுகிறார்கள். மக்கள் சேவை செய்யவா மக்கள் சேவை செய்ய பதவி தேவை இல்லை. ஒவ்வொரு கட்சியாக தாவிய நபர் பேசுவது வேடிக்கை. மக்களுக்கு நல்லது செய்பவர்கள் மட்டுமே பேச தகுதியான நபர்கள். அப்படி இந்தியா அரசியவாதிகளில் எவருமேயில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கரு��்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூபாய் 50 லட்சம் ‛ஆட்டைய' போட்ட மத்திய அமைச்சரின் ‛மாஜி' உதவியாளர்\nதி.மு.க.,வின் சிறுபான்மையின அரசியல்: ஹிந்துக்களிடம் எடுத்து கூற அண்ணாமலை உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/661279-refugees.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-08-02T08:23:15Z", "digest": "sha1:NAGIHOZGGZZKNRFODETCEKXCO4XCFUJY", "length": 23809, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "அகதிகளாக ஆக முடியாதவர்கள் | refugees - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 02 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nபிப்ரவரி 1-ம் தேதி மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து இந்தியாவின் எல்லைப்புறத்தில் வசிக்கும் மியான்மர் மக்கள், அடைக்கலம் தேடி மிசோரம், மணிப்பூர் மாநிலங்களுக்கு வருகிறார்கள். புகலிடம் தேடி வந்த மியான்மரின் சின் இன மக்களும், மிசோரம் மக்களும் ஒரே தொப்புள் கொடியில் கிளைத்தவர்கள். மாநில அரசுகளால் கதவடைக்க முடியவில்லை. இதுவரை வந்தவர்கள் 3,000 பேர் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் அவர்களால் அகதிகளாக முடியாது. ஏன்\nஏனெனில், ஐநா 1951-ல் உருவாக்கிய சர்வதேச ‘அகதி உடன்பா’ட்டில் இந்தியா அங்கம் வகிக்கவில்லை. இந்த உடன்பாடு யார் அகதி என்பதை வரையறுக்கிறது. இனம், மதம், தேசிய அடையாளம், அரசியல் சார்பு ஆகிய காரணத்தால் சொந்த நாட்டில் வசிக்க முடியாதவர்களும் வசிக்க அஞ்சுபவர்களும் அச்சுறுத்தப்படுபவர்களும் அகதிகள் ஆகிறார்கள். 1967-ல் இந்த வரையறைக்குள் யுத்தங்களாலும் வன்முறைகளாலும் சொந்த நாட்டில் வசிக்க முடியாமல் போனவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். ஒரு ப��திய நாடு ஒரு அகதியை ஏற்றுக்கொண்டால், அதன் பிறகு அவர் புதிய நாட்டின் குடிநபர் ஆவார். 1951-ஐநா உடன்பாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகள்தான் அகதிகளை ஏற்றுக்கொள்ளும். இதில் இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகள் அங்கம் வகிக்கவில்லை. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்திலும் அகதிகளை அனுமதிப்பதற்கோ பராமரிப்பதற்கோ கூறுகள் இல்லை.\nஅப்படியானால் இந்தியாவில் அகதிகளே இல்லையா இருக்கிறார்கள் - முதலாவதாக, 1959-ல் திபெத் போராட்டத்துக்குப் பிறகு இந்தியா, தலாய் லாமாவுக்கு அடைக்கலம் வழங்கியது. அப்போது இந்தியாவுக்கு வந்த திபெத்தியர்கள். இப்போது சுமார் ஒரு லட்சம் பேர். அடுத்ததாக, 1972-ல் இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பிறகு வந்த ஈழத்தமிழர்களும் இந்திய வம்சாவளி தமிழர்களும். சுமார் ஒரு லட்சம் பேர். மூன்றாவதாக ரோஹிங்கியா முஸ்லிம்கள். மியான்மரிலிருந்து வந்தவர்கள். 2017-ல் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக நடந்த வன்முறைக்குப் பிறகுதான் இவர்களின் இடப்பெயர்வு பெருமளவில் நிகழ்ந்தது. அப்போது அவர்கள் மிகுதியும் (7 லட்சம்) வங்கதேசத்துக்குப் போனார்கள். இந்திய அரசின் கட்டுப்பாடுகளால் குறைவானவர்களே (40,000 பேர்) இந்தியாவுக்கு வந்தார்கள். வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் கணிசமானவர்கள். அவர்களைக் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை. திபெத்தியர், ஈழத் தமிழர், ரோஹிங்கியர் ஆகிய மூன்று பிரிவினரும் அகதிகள் என்று பொதுவெளியில் அழைக்கப்பட்டாலும், சட்டம் அவர்களை அகதிகளாக ஏற்பதில்லை.\nகடந்த ஆண்டு அமலாக்கப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்த, துன்புறுத்தலுக்கு உள்ளாகிய மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க வகைசெய்கிறது. இவர்கள் இந்துக்களாகவோ சீக்கியர்களாகவோ பௌத்தர்களாகவோ சமணர்களாகவோ பார்சிகளாகவோ கிறிஸ்தவர் களாகவோ இருக்க வேண்டும். இந்தியாவில் குறைந்தது ஆறு ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின்படியும் மேற்கூறிய மூன்று பிரிவினரால் இந்தியக் குடியுரிமை பெற முடியாது. திபெத்தியர்கள் பௌத்தர்களாக இருந்தாலும், திபெத்தோ சீனாவோ புதிய சட்டத்தில் இடம்பெறவில்லை. ஈழத் தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும், இலங்கை எனும் நாடு குடியுரிமைச் சட்டத��துக்குள் வரவில்லை. ரோஹிங்கியாக்களுக்கு அவர்களது மதம், நாடு இரண்டுமே சட்டத்தில் இடம்பெறவில்லை.\nஹாங்காங்கும் 1951 உடன்படிக்கையில் ஒப்பம் இடவில்லை. ஆனால், புகலிடம் தேடி வந்தவர்களை ஹாங்காங் திருப்பி அனுப்புவதில்லை. அவர்கள் ஐநாவின் அகதி ஆணையத்தில் அகதிக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். ‘அரசப் படைகள் அல்லது பயங்கரவாத அமைப்புகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறோம், எங்களால் சொந்த நாட்டுக்குப் போக முடியாது’ என்று அவர்கள் நிறுவ வேண்டும். கோரிக்கை ஏற்கப்பட்டால் அவர்கள் அகதிகளாவார்கள். அதன் பிறகு அகதி உடன்படிக்கையில் ஒப்பமிட்டிருக்கும் ஒரு நாட்டுக்கு விண்ணப்பிப்பார்கள். அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால் புதிய நாட்டுக்கு அகதியாகப் போகலாம். சொந்த நாட்டில் அச்சுறுத்தல் இருப்பதை நிரூபிக்க முடியாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களால் அகதிகளாக முடியாது. இந்த வழக்கும் விசாரணையும் ஆண்டுக் கணக்கில் நடக்கும். அப்போது ஹாங்காங் அரசு அவர்களுக்கு இருப்பிடமும் அரிசி பருப்பும் சிறிய உதவித்தொகையும் வழங்கும். அவர்களது பிள்ளைகளைப் படிக்கவைக்கும். வளரும் நாடுகள் பலவும் மேலை நாடுகளும் அகதிகளை ஏற்கின்றன. ஆனால், நமது சட்டங்களில் மட்டுமல்ல, நமது குடிமைச் சமூகத்திலும் சிலருக்கு அகதிகளைக் குறித்து ஒவ்வாமை இருக்கிறது. சமீபத்தில் ஓர் இணைய இதழில் மியான்மரின் சின் அகதிகளை நாம் பேண வேண்டும் என்று ஒரு செய்தியாளர் எழுதியிருந்தார். அதற்கு, அகதிகளை அனுமதிக்கக் கூடாது என்று பல வாசகர்கள் கடுமையான சொற்களில் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.\nசமீபத்தில் மியான்மருக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்ட ரோஹிங்கியாக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால், நமது சட்டப் புத்தகத்தின் எந்தக் கூறும் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழையும் எவரும் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்தான். அவர்கள் அகதிகள் ஆக மாட்டார்கள்.\nநீண்ட வரலாறும் நாகரிகமும் பாரம்பரியமும் ஜனநாயக விழுமியங்களும் மிக்க இந்தியா, தனது அகதிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 1951 ஐநா உடன்பாட்டில் இணைவதைத் தொலைநோக்காக வைத்துக்கொள்ளலாம். முதற்கட்டமாக, குடிமக்கள், குடியேற்றக்காரர்கள், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், புகலிடம் நாடுபவர்கள், அகதிகள் முதலான ஒவ்வொரு பிரிவினருக்கும் சட்டரீதியிலான வரையறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அவை ஐநா அகதி ஆணையத்தின் வழிகாட்டல்களுக்கு இசைவாக இருக்க வேண்டும். இதன் மூலம் எல்லாப் பிரிவினருக்கும் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும். சட்டம் மாட்சிமையோடு விளங்கும். அகதிகளின்பால் பரிவோடு நடந்துகொள்ள வேண்டும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது முழக்கமாக மட்டுமில்லாமல் வாழ்க்கை நெறியாகவும் மாற வேண்டும்.\n- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.\nRefugeesஅகதிகளாக ஆக முடியாதவர்கள்மியான்மர்மியான்மர் மக்கள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டும் பிரசாந்த் கிஷோர்:...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகுரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஇந்தியக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் தமிழ்நாடு சட்டமன்றம்\nஅரசியல் அமைப்புக்கு எதிரானது தணிக்கை- அடூர் கோபாலகிருஷ்ணன் பேட்டி\nசீனப் பெருமழையின் துயரங்களும் பாடங்களும்\nசின்னச் சின்ன பெரிய விஷயங்கள்\nசீனாவின் பட்டுச் சாலை அமெரிக்காவின் எதிர் சால்\nஅனைத்து மத குருக்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை :\nமுதல்வர் 5: விவசாயிகளின் நலன்களுக்கு யார் பொறுப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2020/04/02/what-did-ar-rahman-say-to-doctors-working-on-coronary-artery-disease/", "date_download": "2021-08-02T08:31:35Z", "digest": "sha1:A3OOF3HQV33UHX54TF4HDSUXRVB56XER", "length": 9527, "nlines": 163, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "கொரொனா பாதிப்புக்காக பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஏ‌ஆர் ரஹ்மான் கூறியது என்ன? – Kuttram Kuttrame", "raw_content": "\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..விஜய் – சமந்���ாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nகொரொனா பாதிப்புக்காக பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஏ‌ஆர் ரஹ்மான் கூறியது என்ன\nPublish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்\nமத வழிபாட்டு தலங்களுக்கு கூட்டமாக வருவதற்கான நேரம் இது அல்ல என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற உதவிக்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர் தொற்று நோயை சமாளிக்க மருத்துவ ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுவதாகவும், உலகத்தை தலைகீழாக மாற்றி இருக்கும் இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக நம் வேறுபாடுகளை மறந்து ஒன்று படுவதற்கான நேரமிது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nகடவுள் உங்கள் இதயத்திற்குள் இருக்கிறார். அதுவே புனிதமான சன்னிதி என்று குறிப்பிட்டிருக்க கூடியவர் மத வழிபாட்டு தலங்களுக்கு கூடி வருவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல என்றும் அறிவுறுத்தியுள்ளார்.\nவிஜய் - சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nசிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nநடிகர் விஜய்யை சந்திக்க சென்ற ரசிகர்..\nஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, இலக்கியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு..\nஇரையை விழுங்கி விட்டு நகர முடியாமல் தவித்த பாம்பு..\nஆன்மீகம் இந்தியா சினிமா விரைவு செய்திகள்\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nகிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/02/blog-post_90.html", "date_download": "2021-08-02T09:57:34Z", "digest": "sha1:QPR74FJ4O5NEW3EJO25HGHLM4AAK4DFP", "length": 4772, "nlines": 32, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ஹைதராபாத்தில் மருத்துவ மாணவி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை..பெற்றோரை ஏமாற்ற நாடகமாடியது விசாரணையில் அம்பலம்..!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஹைதராபாத்தில் மருத்துவ மாணவி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை..பெற்றோரை ஏமாற்ற நாடகமாடியது விசாரணையில் அம்பலம்..\nஹைதராபாத்தில் 19 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.\n3 நாட்களுக்கு முன் தம்மை ஆட்டோ ஓட்டுனர் உள்பட 4 பேர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக அந்த மாணவி கூறியிருந்தார். ஆனால் கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்த போது அது போலியான புகார் என்று கண்டுபிடித்தனர்.\nகுடும்ப பிரச்சினை காரணமாக தமது பெற்றோரை ஏமாற்றி வீட்டை விட்டுச் செல்வதற்காக இவ்வாறு நாடகமாடியதாக அந்தப் பெண் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் இறங்கியதால் பயத்தில் அவர் கதை அளந்து விட்டிருப்பதும் அம்பலமானது.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/47666/", "date_download": "2021-08-02T09:09:25Z", "digest": "sha1:ZREX24RTQS2E7CYVO3KIFTTIK7JEYOP6", "length": 10995, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "போட்டி ரீதியான அழுத்தங்கள் காரணமாக சிறுவர்களின் மனநிலை பாதிக்கப்படுகின்றது தளபாடங்கள் வழங்கும் நிகழ்வில் ஷிப்லி பாறுக் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபோட்டி ரீதியான அழுத்தங்கள் காரணமாக சிறுவர்களின் மனநிலை பாதிக்கப்படுகின்றது தளபாடங்கள் வழங்கும் நிகழ்வில் ஷிப்லி பாறுக்\nசிறார்களுக்கு அவர்கள் சுயமாக இயங்குவதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவே எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளக்கூடியவர்களாக அவர்களை உருவாக்க முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். .\nபாலமுனை ஜாமியா பாலர் பாடசாலையில் போதியளவு தளபாட வசதியின்மை காரணமாக மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இது விடயமாக இப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர்.\nஇதற்கமைவாக தனது சொந்த நிதியிலிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் இப்பாலர் பாடசாலைக்கான தளபாடங்களை 2017.05.02ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்\nசிறுவர்களை சுயமாக இயங்கச் செய்வதன் மூலமாகவே அவர்களின் திறமைகளை உரிய விதத்தில் வெளிக்கொண்டுவர முடியும் என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகல்வியில் முதல் தரத்தில் திகழும் பின்லாந்து நாட்டின் கல்வி முறைமை தற்போது அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அந்த நாட்டில் 7 வயதினிலேயே மாணவர்கள் பாடசாலைக்கு சேர்க்கப்படுகின்றனர். அங்கு சிறார்களுக்கு சுயமாக இயங்குவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.\nஆனால் எமது பிரதேசங்களில் காணப்படும் போட்டி ரீதியான கல்வி மற்றும் அழுத்தங்கள் காரணமாக சிறுவர்களின் மனநிலை அதிகம் பாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாத ஒரு பலவீனமான நிலைமையும் ஏற்படுத்துகின்றது.\nகுறிப்பாக பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் அதிகமான மேலதிக வகுப்புகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல், ஏனைய பிள்ளைகளுடன் எமது பிள்ளைகள�� ஒப்பிட்டு பேசுதல் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிள்ளைகளை இயங்கச் செய்தல் போன்ற விடயங்கள் தற்காலத்தில் எமது பிள்ளைகள் அதிகம் உள ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாவதர்கான முக்கிய காரணங்களாக இனங்காணப்படுகின்றது.\nஎனவே பெற்றோர்கள் சிறார்களினுடைய விடயத்தில் மிகவும் அக்கறையோடு செயற்பட வேண்டும். எமது சிறார்களுக்குரிய ஓய்வு நேரங்களை சிறந்த வித்தத்தில் பயன்படுத்துவதற்குரிய வாய்ப்புக்களை ஏற்படுத்தி வழங்குவதோடு அவர்களை சுயமாக இயங்கச் செய்வதன் மூலமாக எமது பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்குரிய சந்தர்பத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.\nPrevious articleபுலம்பெயர் தமிழர்கள் இனப்பிரச்சனை தீர்வில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.வீ.ஆனந்தசங்கரி\nNext articleவடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு புதியவர்.\nவீதியை புனரமைத்துத் தருமாறு மகஜர் கையளிப்பு (எச்.எம்.எம்.பர்ஸான்)\nஇன்று 7கோடிருபா செலவில் கல்முனை காரைதீவு கடற்கரைவீதி கார்ப்பட் இடும் பணி ஆரம்பம்.\nகனடாவிலிருந்து தாயக உறவுகளுக்கு கல்வி உதவி\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nபடுவான்கரையில் சாதனை ஈட்டிய மாணவர்களை பாராட்டுதலும் கௌரவித்தலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/47963/", "date_download": "2021-08-02T09:42:14Z", "digest": "sha1:7HDPAVI5Q65QYA5KEIRVCYPF5VKYM52P", "length": 5908, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "மகிழடித்தீவில் அல்லி நாடகம் அரங்கேற்றம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமகிழடித்தீவில் அல்லி நாடகம் அரங்கேற்றம்\n(படுவான் பாலகன்) மகிழடித்தீவு கிராம மக்களினால் புதிதாக பழக்கப்பட்ட அல்லி தென்மோடிக் கூத்து அரங்கேற்ற நிகழ்வு திங்கட்கிழமை இரவு மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.\nஒரு வருட காலமாக பழக்கப்பட்ட குறித்த கூத்தில், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்துசாராரும் பாத்திரமேற்று ஆடியிருந்தனர்.\nஅரங்கேற்ற விழாவின் ஆரம்ப நிகழ்வுக்கு பேராசிரியர் சி.மௌனகுரு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், சுவாமி விபுலானந்த அழகியற்கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் மற்றும் கலாசார உ��்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்..\nPrevious articleமத்தியஅரசும் மாகாணஅரசும் எங்களை ஏமாற்றப்பார்க்கிறது. – அம்பாறை பட்டதாரிகளின் ஆக்ரோசம்\nNext articleமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டுப் போட்டி\nவீதியை புனரமைத்துத் தருமாறு மகஜர் கையளிப்பு (எச்.எம்.எம்.பர்ஸான்)\nஇன்று 7கோடிருபா செலவில் கல்முனை காரைதீவு கடற்கரைவீதி கார்ப்பட் இடும் பணி ஆரம்பம்.\nகனடாவிலிருந்து தாயக உறவுகளுக்கு கல்வி உதவி\n(CARES )அமைப்பினால் வறிய 50 தமிழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-படங்கள்.\nதுறைநீலாவணையில் வைத்தியர் தங்குமிடவசதியறை ஒருபகுதி இத்துப்போய் இடிந்து விழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/49448/", "date_download": "2021-08-02T08:28:02Z", "digest": "sha1:BTWZWLSPXUVK3NXXD7OCLLVDQZCW2WWO", "length": 12453, "nlines": 107, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் உலக ஆராய்ச்சி மாநாடு – 2017 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் உலக ஆராய்ச்சி மாநாடு – 2017\nபோரும் போருக்குப் பின்னரான காலத்தும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றின் முக்கியத்துவமும்\nபண்பாட்டு மரபுரிமைகள் பற்றிய உரையாடலில் மிகப் பெரும்பாலும் தொட்டுணரக் கூடியவை பற்றி பேசப்படுவதே அதிகமாதாகவும், அதிகாரபூர்வமானதாகவும் இருந்து வருகின்றது.\nசிற்பம், ஓவியம், கட்டடம், இடம் என்பவை இந்தவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.\nசடங்குகள், கொண்டாட்டங்கள், ஆற்றுகைகள் உள்ளிட்ட சமூகப் பண்பாட்டுப் புளக்கங்கள், வாழ்வியல் செயற்பாடுகள் என்பவை வாழ்வை வடிவமைப்பதில் அதிக செல்வாக்கைக் கொண்டிருப்பினும் அதிக கவனத்தைப் பெறுவதாக இல்லை.\nநாட்டுப்புற வழக்காற்று கற்கைகளில் இவை கவனத்தில் கொள்ளப்படினும் ஈழச் சூழலில் மேற்படி கற்கைகள் இன்னமும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பெற்றதாக இல்லை.\nஇந்நிலையில் போர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன, முக்கியமான பங்கையும் ஆற்றிவருகின்றன.\nபோரனர்த்த அழுத்தங்களில் இருந்து விடுவிப்பு, இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்ற வேளைகளில் ஒன்றிணைத்தல், சமுதாயமயப்படுத்தல், வாழ்க்கையை மீளத்தொடங்குவதற்கு ஆற்றுப்படுத்தல், ஆற்றல்களைக் கொண்டாடுதல், உள்@ர் அறிவு, திறன் என்பவை வாழ்க்கையை மீளவும் உருவாக்குவதற்கான மூலாதாரங்களாக விளங்குதல் எனப் பேசாப் பொருளாகவே இவை இயங்கி வருகின்றன.\nமேலும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் ஆவணப்படுத்தலுக்கோ வணிகத்திற்கோ உரிய விடயங்களாகவே அதிகம் பரப்புரை செய்யப்படுகின்றன.\nஆனால் அவை மனித சமூகங்களின் வாழ்வியல் வளத்திற்கும், வாழ்வியல் இயக்கத்திற்கும் பங்களிப்புச் செய்பவை. தலைமுறைகளின் சுயாதீன இருப்பிற்கும் அதேவேளை கட்டுப்பாடுகள், கட்டுப்பெட்டித் தனங்களுக்கும் காலாயிருப்பவை.\nஎனவே உணர்ந்தும் உணராமலும், அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக் கொண்டிருக்கின்ற, பேசாப் பொருளாகவே அதிகம் காணப்படுகின்ற தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் மீதான கவனத்தைக் கோரும் வகையிலும், அவற்றில் இக்காலத் தேவையை அறியவும் உணரவும் கூடிய வகையிலும் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.\nகிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் உலக ஆராய்ச்சி மாநாடு – 2016, பூகோளமயமாக்கற் சூழலில் பாரம்பரியக் கலைகள் என்ற தலைப்பில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅதன் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் உலக ஆராய்ச்சி மாநாடு – 2017 அமைகிறது.\nஅறிஞர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி கலைஞர்கள், தொழில்முறையாளர்கள், உள்@ர் அறிவுதிறன் வல்லுனர்கள் என விடயங்களுடன் நேரடியான உறவையும் தொடர்பையும் இணைத்ததான சூழ்நிலையில் அமைந்த, முக்கியமாகப் பங்குகொள் செயல்மைய ஆய்வுகள் அதிக கவனத்திற்குரியவையாகக் கொள்ளப்படுகின்றன.\nஇதன் காரணமாக ஆராய்ச்சிகளுங்கூட ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்கள் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்த வகையிலான ஆராய்ச்சி மாநாடு, முன்னெடுக்கப்பட்டுவரும் ஆராய்ச்சி செயற்பாடுகளின் மதிப்பீடுகளுக்கான சந்திப்பாகவும், புதிய சிந்தனைகள், புதிய தொடர்புகளுடன் தொடர்ந்த முன்னெடுப்புகளுக்கான உந்து புள்ளியாகவும் அமைகின்றது.\nஜூன் 15 மாலை 6.00 மணிக்கு தொடக்க வைபவத்துடன் ஆரம்பமாகும் மாநாட்டின் அமர்வுகள் 16, 17ம் திகதிகளில் இடம்பெறும். விருப்பத் தெரிவுக்குரிய கலைப் பண்பாட்டுக் களப்பயணம் 18ம் திகதி இடம்பெறுகின்றத���.\nPrevious articleவீதி விபத்துக்கள் 1161, ரயில்களில் மோதி 20பேர் மரணம்\nNext articleதமிழ் மக்களைப் பார்த்து இன்னும் இன்னும் ஏளனமாக சிரிக்கும் நிலையை இவர்கள் தமிழர்களுக்கு தந்து விட்டார்கள்.\nசாய்ந்தமருது றியலுள் ஜன்னாவுக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின அதிரடி தகவல்.\nமருதமுனையின் மூத்த கல்வி ஆளுமை ஓய்வு நிலை அதிபர் ஏ.எம்.ஏ.சமது அவர்கள் காலமானார்.\nமுன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எருவில் வேணு இந்தியா பயணம்”\nஅவசரகால சட்டத்தின் கீழ் ஊடக சுதந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/chandru-law-academy-inviting-judicial-aspirants-todays-session-on-subject-criminal-procedure-code-1973-timing-0600pm-0725pm-date-sun-19-apr-2020-organized-by-advocate-anjuman-986506996/", "date_download": "2021-08-02T10:14:54Z", "digest": "sha1:QIZ5ECSKFYJBZ2FGZRI6JMIKERKSMS22", "length": 6573, "nlines": 64, "source_domain": "www.sekarreporter.com", "title": "CHANDRU LAW ACADEMY INVITING JUDICIAL ASPIRANTS – TODAY’S SESSION ON Subject :CRIMINAL PROCEDURE CODE 1973 Timing : 06:00PM- 07:25PM Date: Sun, 19 Apr 2020 Organized by : Advocate Anjuman 9865069966 is inviting you to a scheduled Zoom meeting. Topic: CRIMINAL PROCEDURE CODE 1973 – LECTURE BY ADVOCATE R. CHANDRASEKARAN. I D AND PASSWORD WILL BE SENT TO THE REGISTERED PARTICIPANTS AND TO i THE PARTICIPANTS WHO HAVE ALREADY REGISTERED FOR REGISTRATION CONTACT 9003116090/ 7339650446 – SEKAR REPORTER", "raw_content": "\nமூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி இராஜலட்சுமி—376 IPC* : 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் மொத்தம் 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி* ஆய்வாளர் ஜோதிலட்சுமி W18 AWPS .\nகொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nமூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி இராஜலட்சுமி—376 IPC* : 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் மொத்தம் 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி* ஆய்வாளர் ஜோதிலட்சுமி W18 AWPS .\nகொரோனா பரவலை தடுக்��� சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/k-chandru-former-judge-of-highcourt-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-08-02T08:42:58Z", "digest": "sha1:UFDAK2RLCMU2GVOTIIKX5GKTHKX2ZDD6", "length": 8905, "nlines": 66, "source_domain": "www.sekarreporter.com", "title": "] K. Chandru Former Judge Of Highcourt: காணொளி மூலம் மட்டுமே நீதிமன்றங்கள் இயங்குவதால் வெள்ளைச்சீருடை கண்ணை கூச வைக்கும்.ஒளி அதன் மீது பட்டு திரும்பும் போது கண்ணை கூச வைக்கும்.(glare).எந்த ஒளிப்பதிவாளரைக்கேட்டாலும் கூறுவார்.தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிப் பதிவின் போது கூட அழுத்தமான கலர் இடையில்தான் வரச்சொல்லுவார்கள்!! எனவே பார்கவுன்சில் தனது முடிவைப் மீள் பரிசீலிக்கலாம்!! – SEKAR REPORTER", "raw_content": "\n] K. Chandru Former Judge Of Highcourt: காணொளி மூலம் மட்டுமே நீதிமன்றங்கள் இயங்குவதால் வெள்ளைச்சீருடை கண்ணை கூச வைக்கும்.ஒளி அதன் மீது பட்டு திரும்பும் போது கண்ணை கூச வைக்கும்.(glare).எந்த ஒளிப்பதிவாளரைக்கேட்டாலும் கூறுவார்.தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிப் பதிவின் போது கூட அழுத்தமான கலர் இடையில்தான் வரச்சொல்லுவார்கள் எனவே பார்கவுன்சில் தனது முடிவைப் மீள் பரிசீலிக்கலாம்\n[5/14, 18:59] Sekarreporter 1: [5/14, 18:48] Sekarreporter 1: [5/14, 18:47] K. Chandru Former Judge Of Highcourt: காணொளி மூலம் மட்டுமே நீதிமன்றங்கள் இயங்குவதால் வெள்ளைச்சீருடை கண்ணை கூச வைக்கும்.ஒளி அதன் மீது பட்டு திரும்பும் போது கண்ணை கூச வைக்கும்.(glare).எந்த ஒளிப்பதிவாளரைக்கேட்டாலும் கூறுவார்.தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிப்\nபதிவின் போது கூட அழுத்தமான கலர் இடையில்தான் வரச்சொல்லுவார்கள்\nஎனவே பார்கவுன்சில் தனது முடிவைப் மீள் பரிசீலிக்கலாம்\n[5/14, 18:57] K. Chandru Former Judge Of Highcourt: நமக்கு கருப்பு கோட்டு ,கவுன் வழங்கிய ஆங்கிலேயர்களே மாறிவிட்டார்கள்.லண்டனில் புதிய உச்சநீதிமன்றம் ஏற்படுத்திய பின் அங்குள்ள நீதிபதிகள் இந்த சீருடையை தூக்கி எறிந்து விட்டு ஒரு உடை வடிவமைப்பு நிபுணரை கலந்தாலோசித்து புதிய டிசைன் கோட்டு ,சூட்டு அணிந்து தான் நீதிபரிபாலனம் செய்கின்றனர்.\nஎனவே பார் கவுன்சில் கொரானா காலத்திற்கு பின்னரும் புதிய சீருடைக்கு தாவலாம்\nநான் பல வருடமாக கோரி வரும் கோரிக்கை\nஇது தவிர்க்கப்பட்டு வந்தாலும் தற்போழுது “கொரானா அம்மன்”நமது விழிகளை திறந்துள்ளார்.நாம் இப்பூவுலகை புதிதாக நோக்க முனையலாம்.\nஇதற்கு நீதிபதிகள் அனுமதியோ (அ)ஆதரவோ தேவையில்லை1961ம் வருடத்திய வழக்கறிஞர் சட்டம் பார் கவுன்சிலுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளது\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3663-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2021-08-02T09:48:08Z", "digest": "sha1:5QJI3J4YAZDHQ2RORTCIYLPWQDTZNV46", "length": 17774, "nlines": 191, "source_domain": "dailytamilnews.in", "title": "சூதாடிய 11 பேர் கைது… – Daily Tamil News", "raw_content": "\nசூதாடிய 11 பேர் கைது…\nசூதாடிய 11 பேர் கைது…\nமதுரை எஸ் எஸ் காலனியில் பணம் வைத்து சூதாடிய 11பேர் கைது 52000 ரூபாய் பறிமுதல்:\nமதுரை எஸ் எஸ் காலனியில்பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.\nமதுரை எஸ் எஸ் காலனி கென்னட்மெயின் ரோட்டில் பணம் வைத்து சுட்டுவதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில்,\nஎஸ்எஸ்ஐ மாயாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட மலையாண்டி 59 சேப்பல் மைதீன் 62 உள்பட 11 பேரை கைது செய்து அவர்கள் சூதாடிய சீட்டு கட்டிகளையும் பணம் ரூபாய் 51800ம் பறிமுதல் செய்தனர்.\nமதுரை தெப்பக்குளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளையன் கைது:\nமதுரை தெப்பகுளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.\nமதுரை தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் கணேசன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புது ராமநாடு ரோடு பள்ளிக்கூடம் அருகே பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் மருதுபாண்டியர் நகர் பழனி மகன் சிவகுமார் 27 என்று தெரியவந்தது.\nமேலும் , அவரிடமிருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்தபோது அவர் கொள்ளைஅடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஎனவே, போலீசார் உடனடியாக சிவக்குமாரை கைதுசெய்தனர்.\nதிருப்பணிக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nமதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.\nமதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:\nமதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.\nஇந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்\nஅனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.\nமேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nசோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:\nசோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:\nதமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.\nசிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.\nவணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nசென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும்.. பட்டையைக் கிளப்ப தயாராகும் தல ரசிகர்கள்\nதனித்தீவில் மிரட்டி நிர்வாண ஷூட்டிங்\nஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா\nஒலிம்பிக் இன்றைய போ��்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஓலா வின் எலக்ட்ரிக் பைக்\nஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]\nசென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]\nசெல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்\nகுகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-02T09:39:30Z", "digest": "sha1:YFBNDIY6FPJYFNNOBWKI4KXTZPYTUF5G", "length": 17303, "nlines": 138, "source_domain": "marxistreader.home.blog", "title": "உலகம் – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகியூபா: புரட்சியைப் பாதுகாக்கும் புதிய தலைமுறை\nமிகுவேல் டியாஸ் கேனல் இவ்வாறு பேசினார், “கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை இரண்டே வரிகளில் சுருங்கக் கூறுவதானால், ‘மக்களும் ஒற்றுமையும்’ எனலாம். அதனால்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கட்சியாக இருந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது... பெரும் அநீதியும், ஏற்றத்தாழ்வும் நிலவிய நாட்டின் நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மனித நேயசக்திகளின் அனைவரின் ஒற்றுமையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ஒரு கட்சியின் உறுதிப்பாடு என்பது நாட்டின் சக்தியை வளர்ச்சியை நோக்கி திரட்டி செலுத்தும் தன்மையே ஆகும்.\nசீனா & ஷின்ஜியாங்: உண்மைகளும் பொய்களும்\nஅபிநவ் சூர்யா தன் பேராதிக்கத���தை கேள்விக்குள்ளாக்குவோரை கட்டுக்குள் கொண்டு வர உலக ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஆயுதங்களில் ஒன்று \"பொய் பரப்புரைகள்\". தன்னை எதிர்க்கும் நாடு/இயக்கம் “படுகொலைகள்/மனித உரிமை மீரல்களில் ஈடுபடுகிறது\" என்றோ, “உலக அமைதிக்கு அச்சுறுத்தல்\" என்றோ கட்டுக்கதைகள் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு, இதை காரணமாக வைத்து அந்த நாடு/இயக்கம் மீது தடைகளை விதிப்பது முதல் போர் தொடுப்பது வரையிலான செயல்பாடுகள் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. சோவியத் ஒன்றியம், வட கொரியாவில் துவங்கி, பின் … Continue reading சீனா & ஷின்ஜியாங்: உண்மைகளும் பொய்களும்\nபொது சுகாதாரம்: முதலாளித்துவ பார்வையின் குறைபாடுகள்\nஒருவருடைய சிறப்பான உடல்நலம் அமைவது என்பது அவர் தேவையான மற்றும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் திறன், அவர் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பவைகளைப் பொறுத்தது ஆகும். அந்த இடம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும். கொள்கைகளை தீர்மானிக்கும் இடத்தில் யார் இருக்கிறார்கள், எந்த வர்க்கம் இருக்கிறது என்பது முக்கியமாகும்.\nசோஷலிச கியூபாவும் கொரோனா பெருந்தொற்றும்\nஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.)­ கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா தொற்றும், பொது சுகாதாரக் கட்டமைப்பும்\nஇதுவரை தடுப்பூசியோ, சிகிச்சைக்கான மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், “மந்தை நோய்எதிர்ப்புசக்தி” அல்லது ”திரள் நோய்எதிர்ப்புசக்தியை” (HERD IMMUNITY) குறித்து கருத்தாக்கம் பொதுவெளியில் பேசப்படுகிறது. ”திறன் எதிர்ப்புசக்தியை தடுப்பூசிகளைக் கொண்டு உருவாக்குவதுதான் மருத்துவ ரீதியாகப் பாதுகாப்பானது.\nஏகாதிபத்திய தாக்குதலும் உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்\nநவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க் குப் பின், முதன் முறையாக அரசியலும், அடிப் படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணவர், மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறு பான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர்.\nசோசலிசமே தீர்வு என்கிற கருத்தும் மக்களிடத் தில் அவ்வாட்சி உருவாகிற வரையிலும் அழுத் தமாக சொல்லப்படவுமில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததுமே சாவேசும் அவரது அரசும், முதலாளித் துவத்தின் காலடியில் மண்டியிட்டெல்லாம் எவ்வித சமூக மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்றும், சோசலிசப் பாதையை நோக்கி நடைபோடுவது மட்டுமே சரியான தீர்வை நோக்கை அழைத்துச் செல்லும் என்றும் பேசத் துவங்கினர்.\nஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்\n(ஏ ஆர் சிந்து, மத்திய குழு உறுப்பினர், சி பி எம்) தமிழில்: ஜி.பாலச்சந்திரன் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், வாழ்வின் நாள்தோறுமான மூலதனத்தின் தாக்குதலையும், அரசியல் ரீதியான ஏகாதிபத்திய தாக்குதலையும் தீவிரமான வர்க்க போராட்டத்தால் எதிர்கொண்ட வளமான அனுபவத்துடன் இந்த மே தினத்தை – சர்வதேச தொழிலாளர் தினத்தை - மிகுந்த உற்சாகத்துடனும், வர்க்க பெருமிதத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய தாக்குதலும், உலகளாவிய எதிர்ப்பும்: முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் பின்புலத்தில் ,சிஐடியு 2018 நவம்பரிலேயே கீழ்வருமாறு … Continue reading ஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்\nஏகாதிபத்திய தலையீட்டின் புதிய வடிவம் வெனிசுவேலாவின் அமெரிக்கத் தலையீடு\nமத்திய கிழக்கு நாடுகள் மீதான ஏகாதிபத்திய முயற்சிகளை எவ்விதத்திலும் விட்டு விடாமல், அங்கு நேரடியாக செயல்படுவதி லிருந்து படிப்படியாக அமெரிக்கா விலகி வரு கிறது என்பதாகும். இதன் காரணமாக, லத்தீன் அமெரிக்கா மீது தற்போது அமெரிக்காவால் கவனம் செலுத்த முடிகிறது.\nஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் நம் வரலாற்றுக் கடமை \nஉலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என மார்க்சும், ஏங்கெல்சும் 150 ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய அந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்த, இன்றைய உலகில் ஏற்பட்டுள்ள தேவை கிளர்ந்தெழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை ஒருங்கிணைப்பதில்தான் உள்ளது.\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (16)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nவாலிபர் மாணவரிடையே இடதுசாரி திரட்டல் ...\nபால்மிரோ டோக்ளியாட்டியின் பாசிசம் குறித்த விரிவுரைகள்; தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான வழிகாட்டி\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பும்\nசாதிய அமைப்பும் கம்யூனிஸ்ட் செயல்திட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/salem-eighty-road-project-at-rs-10-000-crore-qbibdp", "date_download": "2021-08-02T09:44:05Z", "digest": "sha1:QBTS6TVYWMCYTLOMHABG7UUS4HOMJOYW", "length": 19569, "nlines": 78, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரூ.10,000 கோடியில் சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம்.. பழனிச்சாமி போட்ட விவசாயி வேடம் கலைந்தது.. ஸ்டாலின் சாடல். | Salem Eighty Road Project at Rs 10,000 Crore", "raw_content": "\nரூ.10,000 கோடியில் சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம்.. பழனிச்சாமி போட்ட விவசாயி வேடம் கலைந்தது.. ஸ்டாலின் சாடல்.\nதமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட “எய்ம்ஸ்” மருத்துவமனை இதுவரை கட்டப்படவில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, “சேது சமுத்திரத் திட்டம்” இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் வசதியாக மறந்து விட்ட பா.ஜ.க. அரசு, “சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம். ஆகவே விரைந்து விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.\nதமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட “எய்ம்ஸ்” மருத்துவமனை இதுவரை கட்டப்படவில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, “சேது சமுத்திரத் திட்டம்” இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் வசதியாக மறந்து விட்ட பா.ஜ.க. அரசு, “சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம். ஆகவே விரைந்து விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.\nதிமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்\n“சேலம் முதல் சென்னை வரையிலான எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டை விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று, கொரோனா பேரிடர் காலத்திலும் உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு முறையிட்டிருப்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். “கொரோனா நோய்ப் பெருந்தொற்று தடுப்பு”, “ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்பது”, “மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பது” உள்ளிட்ட எதிலும் மத்திய அரசு கவனம் செலுத்துவதை விட - ஐந்து மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் தங்களது உயிரைப் பணயம் வைத்து எதிர்க்கும் சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தில், இவ்வளவு அவசரம் காட்டுவது வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.\nஉச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பே “எட்டுவழிச்சாலைப் பணிகள் நடைபெறும்” என்று நேற்றைய தினம் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் கூறியிருப்பது அகங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.\nகடந்த 8.4.2019 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த மிகத் தெளிவான தீர்ப்பின் மூலம், இந்த பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்குத் தேவையான நில எடுப்பு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன. “இத்திட்டத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகள், தாய்மார்கள், அப்பாவி மக்கள் ஆகியோரைக் காவல்துறையை வைத்து மிரட்டியது”, “அடக்குமுறை மூலம் இந்தச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற அ.தி.மு.க. அரசு கட்டவிழ்த்து விட்ட அராஜகங்கள்” அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக அந்தத் தீர்ப்பில் விமர்சனம் செய்திருந்தது.\nசேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைப் பாதிக்கும் இந்தத் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, “மேல்முறையீடு செய்ய மாட்டேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குறுதியளித்தார். ஆனால், தமிழகத்தில் 39-க்கு 38 தொகுதிகளிலும் - குறிப்பாக, இந்தத் திட்டத்தின் பாதிப்பு உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியை அ.தி.மு.க. சந்தித்தது. உடனே அந்த வாக்காளர்களைப் பழிவாங்க ��ேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.\nஉச்சநீதிமன்றத்தில் இந்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்த போது, பலமுறை “தடையுத்தரவு” பிறப்பிக்க மறுத்தும் - மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் உள்நோக்கத்துடன் கை கோர்த்துக்கொண்டு, திரும்பத் திரும்ப உச்சநீதிமன்றத்தின் கதவினைத் தட்டி எப்படியாவது இந்த 10 ஆயிரம் கோடி ரூபாய் சாலைத் திட்டத்தை நிறைவேற்றி, தமது சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொண்டு விட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்” என்ற புதிய வாதத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட “எய்ம்ஸ்” மருத்துவமனை இதுவரை கட்டப்படவில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, “சேது சமுத்திரத் திட்டம்” இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் வசதியாக மறந்து விட்ட பா.ஜ.க. அரசு, “சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம். ஆகவே விரைந்து விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.\nஅ.தி.மு.க. அரசும் போட்டி போட்டுக் கொண்டு இத்திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட தவியாய்த் தவிக்கிறது\n“விவசாயி” என்று புதிய அவதாரம் எடுத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் பா.ஜ.க.,வுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவசரப்படுகிறார். சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தும் விதத்தில் பசுமையான மரங்களை வெட்டி வீழ்த்தத் துடிக்கிறார். ஏழை விவசாயிகளின் உயிரோடும், வாழ்வோடும் கலந்து விட்ட சின்னஞ்சிறு துண்டு நிலங்களைக் கூடப் பறித்து, அவர்களின் கண்ணியத்தைச் சூறையாடுவதில் ஆர்வம் காட்டுகிறார். 10 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் ஒளிந்திருக்கும் மர்மத்தால், தான் போட்ட “விவசாயி” வேடத்தை “மேல்முறையீடு” மூலம் கலைத்து விட்டு - மக்கள் விரோதத் திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் பழனிசாமி அவசரப்படுகிறார்; ஆத்திரப்படுகிறார்\nவிவசாயம், சுற்றுச்சூழல், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் “அதிவேகமாக” நாசமாக்கி விட வேண்டும் என்ற�� அ.தி.மு.க. அரசும் - மத்திய பா.ஜ.க. அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி இருப்பது, அப்பாவித் தமிழக மக்களுக்கு எதிரான மாபாதகச் செயல் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\nஆகவே, மக்களின் நலன்களைக் காவு கொடுத்து, சுற்றுச்சூழலை பாழ்படுத்தி, விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து சேலம் எட்டுவழிப் பசுமைச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய – மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட்டு, அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஐந்து மாவட்ட மக்களின் எதிர்ப்பிற்கும், போராட்டத்திற்கும் ஜனநாயக ரீதியாக உரிய மதிப்பளித்து, இந்தப் பசுமைச் சாலைத் திட்டத்தை தற்போதுள்ள வழிக்குப் பதிலாக - விவசாயிகளுக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் - மாற்று வழிகளில் செயல்படுத்துவது குறித்து மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் ஆக்கபூர்வமாக ஆலோசிக்க முன்வரவேண்டும் - அப்படியும் இல்லையென்றால், ஏற்கனவே இருக்கின்ற சாலையை மேம்படுத்தி மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்; எத்தனையோ முன்னுரிமைப் பணிகள் அணிவகுத்து முன் நிற்க, இந்தத் திட்டத்தை மட்டும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதை நிறுத்திக் கொண்டு, மக்களுக்குக் குறைந்தபட்ச நிம்மதியையாவது தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்��் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oneplus-nord-ce-5g-first-sale-starts-tomorrow-via-amazon-029860.html", "date_download": "2021-08-02T09:58:31Z", "digest": "sha1:MMTF4XG4NEVNAEPAJFYBC3TJZ4CRYWGD", "length": 19733, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "நாளை விற்பனைக்கு வரும் அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன்.! | OnePlus Nord CE 5G First Sale Starts Tomorrow via Amazon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎக்ஸ்பாக்ஸ் 20வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இப்படி ஒரு முடிவா\n28 min ago Mi 11 Lite 4G இந்தியாவில் நிறுத்தப்பட்டதா இதற்கு பதில் கம்மி விலையில் 5ஜி Mi 11 லைட் வெளிவருமா\n1 hr ago பிளிப்கார்ட்: சாம்சங் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி.\n1 hr ago பூமியை நெருங்கும் சனிக்கோள்: வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே தெரியும்- ஏதும் ஆபத்து இருக்கா\n2 hrs ago சியோமி ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா\nFinance அம்பானி ஷாப்பிங் லிஸ்டில் புது நிறுவனம்.. டாடா உடன் போட்டி போடும் மாஸ்டர் பிளான்..\nMovies நம்பவே முடியல... 37 வருஷமாச்சு… அன்புள்ள ரஜினிகாந்த் படம் குறித்து மனம் திறந்த மீனா\nNews ஒரு டீச்சர் செய்ற வேலையா இது.. கிச்சனுக்குள் ஓடிச்சென்று.. வாயடைத்து போன வாழப்பாடி..\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nSports அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய \"ரெக்கார்டு\".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை விற்பனைக்கு வரும் அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன்.\nஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அண்மையில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான அமசங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் நாளை\nமதியம் 12 மணி அளவில் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைத்தளங்களில் விற்பனைக்கு வருகிறது.\n��ுறிப்பாக எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு அல்லது ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகள் மூலம் இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப்\n90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்\nஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.\nவங்கி கணக்கில் இருந்த 17 லட்சம் அபேஸ்.. இவர் செய்த 'இந்த' தவறை நீங்களும் செய்யாதீர்கள்.. உஷாராக இருங்கள்..\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர் வசதி\nகுறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடல். இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவை வரும் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் சரியான விலையில் 5ஜி உட்பட அனைத்து அமசங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் OxygenOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.\nஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30டி பிளஸ் வார்ப் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே 30 நிமிடங்களில் 70 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் Blue Void (matte), Charcoal Ink (glossy), Silver Ray நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த\n5 ஜி, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, டூயல் பேண்ட், வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.\nஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி விலை\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.\n12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.\nMi 11 Lite 4G இந்தியாவில் நிறுத்தப்பட்டதா இதற்கு பதில் கம்மி விலையில் 5ஜி Mi 11 லைட் வெளிவருமா\nஓபன் சேல் விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன்.\nபிளிப்கார்ட்: சாம்சங் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி.\nOnePlus Nord 2 5G இந்தியாவில் இன்று விற்பனை.. விலை மற்றும் சலுகை விபரம் இதோ..\nபூமியை நெருங்கும் சனிக்கோள்: வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே தெரியும்- ஏதும் ஆபத்து இருக்கா\nஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nசியோமி ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா\nஅசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅதிக டேட்டா நன்மையை வழங்கும் ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்.\nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்- உங்களுக்கு ஒரு நற்செய்தி., கிடைத்தது ஆண்ட்ராய்டு அப்டேட்\nவிரைவில் ஆன்லைன் டெலிவரி இப்படிதான்- உருவானது கேஸி ரோபோ: 5 கிலோமீட்டர் தூரத்தை 53 நிமிடத்தில் ஓடி அசத்தல்\nஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி வெளியீடு: ஜூலை 22 அன்று லைவ்ஸ்ட்ரீங் நிகழ்வைப் எப்படி பார்ப்பது\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇரவு முழுக்க இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வேண்டுமா அப்போ இதுதான் பெஸ்டான திட்டம்..\nநீங்க வீரர்னா., அப்ப நாங்க யாரு- முடிவுக்கு வந்த விவாதம்: பெசோஸ், பிரான்சனை இனி அப்படி கூப்பிட கூடாது\n7 சிறுகோள்களை கண்டுபிடித்து உலகின் இளைய வானியலாளராக தேர்வுசெய்யப்பட்ட சிறுமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/ifs-officer-s-unique-visiting-card-inspires-many-others-to-go-green-026715.html", "date_download": "2021-08-02T10:13:08Z", "digest": "sha1:W4JQXYGKMZ3BTNBU3RXXBLS4OFVW6JQK", "length": 20140, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "விசிட்டிங் கார்டை நட்டுவச்சா செடி வளரும் அதிசயம்! நெட்டிசன்ஸ்கள் பாராட்டு! | IFS officer’s unique visiting card inspires many others to go green - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎக்ஸ்பாக்ஸ் 20வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இப்படி ஒரு முடிவா\n43 min ago Mi 11 Lite 4G இந்தியாவில் நிறுத்தப்பட்டதா இதற்கு பதில் கம்மி விலையில் 5ஜி Mi 11 லைட் வெளிவருமா\n1 hr ago பிளிப்கார்ட்: சாம்சங் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி.\n1 hr ago பூமியை நெருங்கும் சனிக்கோள்: வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே தெரியும்- ஏதும் ஆபத்து இருக்கா\n2 hrs ago சியோமி ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா\nNews TN Lockdown: தினந்தோறும் புது புது கட்டுப்பாடுகள்.. தமிழ்நாட்டில் விரைவில் முழு லாக்டவுன்\nFinance அம்பானி ஷாப்பிங் லிஸ்டில் புது நிறுவனம்.. டாடா உடன் போட்டி போடும் மாஸ்டர் பிளான்..\nMovies நம்பவே முடியல... 37 வருஷமாச்சு… அன்புள்ள ரஜினிகாந்த் படம் குறித்து மனம் திறந்த மீனா\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nSports அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய \"ரெக்கார்டு\".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிசிட்டிங் கார்டை நட்டுவச்சா செடி வளரும் அதிசயம்\nஇந்திய வன சேவை அதிகாரி பிரவீன் கஸ்வான், கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் வனவிலங்கு வீடியோக்களையும், காட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது டிவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவரின் சமீபத்திய பதிவு நெட்டிசன்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரின் ஐடியா பிரமிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு நல்ல பாடத்தைப் புகட்டியுள்ளது.\nஅவரது சமீபத்திய வீடியோவில் தமிழகத்தின் நீலகிரியில் உள்ள வன அதிகாரிகள் பள்ளத்தில் சிக்கிய கரடியை மீட்பதைக் காட்டியது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஒரு காட்டு யானை அதன் அருகில் தரையிலிருந்து கழிவு காகிதத்தை எடுத்து அருகில் இருக்கும் கறுப்பு டஸ்��்பினுக்குள் போடும் வீடியோ காட்சி கூட அவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இவருடைய பல தகவல்கள் சமீபகாலமாக வைரல் ஆகிவருகிறது.\nதிங்களன்று, கஸ்வான் விலங்குகள் குறித்த தனது வழக்கமான இடுகைகளிலிருந்து ஓய்வு எடுத்து வேறு ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். அவர் தனது தனிப்பட்ட விசிட்டிங் கார்டின் புகைப்படத்தைப் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்துள்ளார், இது கடினமான காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு காகித அட்டை. இதில் அட்ரஸ் விபரங்கள் அல்லது போன் விபரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை, வெறும் அவரின் பெயர் மற்றும் இமெயில் ஐடி உடன் வருகிறது.\n30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.\nகஸ்வானின் கைகளில் காணப்படும் விசிட்டிங் கார்டின் கீழ் பகுதியில், \"இந்த கார்டை மண்ணில் நடும்போது இது ஒரு பிரகாசமான துளசி செடியாக வளரும்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என்னது விசிட்டிங் கார்டை புதைத்து வைத்தால் செடியாக வளருமா என்று தானே யோசிக்கிறீர்கள். உண்மையில் அப்படி தான் இந்த அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு உறுதியான காகிதத்திற்கு மத்தியில் துளசி விதைகள் வைக்கப்பட்டுள்ளது.\nஇதனால், இந்த அட்டையை மண்ணில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றி வந்தால் அது துளசிச் செடியாக வளரும் என்று அவர் கூறியுள்ளார். இப்போது என் அலுவலகத்திற்கு வரும் அனைவருக்கும் இது அன்பளிப்பாகக் கிடைக்கும் என்று அவர் பதிவில் கூறியிருந்தார். இந்த தனித்துவமான விசிட்டிங் கார்டின் புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகிவருகிறது. நெட்டிசன்ஸ்கள் மத்தியில் இந்த அட்டைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nAndroid மற்றும் iPhone-ல் இருந்து எப்படி டெலீட் ஆனா WhatsApp சாட்டை மீட்டெடுப்பது\nவிசிட்டிங் கார்டு அட்டைகளை யாரும் ஒருபோதும் நடப்போவது இல்லை அதை பாதுகாப்பாக வைக்கத்தான் பார்ப்பார்கள் என்று ஒரு டிவிட்டர் பயனர் கருது தெரிவித்திக்கிறார். ​​கஸ்வான் அதற்கு, இது ஒரு பிரிவினை பரிசு பொருள் என்றும் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் யோசனையுடன் உருவாக்கப்படவில்லை என்றும் விளக்கியுள்ளார். அட்டை பெறுபவர்களுக்கு இது நடப்பட வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.\nMi 11 Lite 4G இந்தியாவில் நிறுத்தப்பட்டதா இதற்கு பதில் கம்மி வில���யில் 5ஜி Mi 11 லைட் வெளிவருமா\n2 இடுப்பு.. 8 கால்களுடன் பிறந்த வினோதமான ஆட்டுக்குட்டி.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா\nபிளிப்கார்ட்: சாம்சங் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி.\nயாரு சாமி இவன்- பட்டையை கிளப்பும் 7 வயது சிறுவன்: ஒரே வீடியோ 148K பார்வையாளர்கள்\nபூமியை நெருங்கும் சனிக்கோள்: வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே தெரியும்- ஏதும் ஆபத்து இருக்கா\nவைரல்: உலகின் மிகச்சிறிய பசு மாடு இது தான்.. கும்பல் கும்பலாக திரளும் மக்கள் கூட்டம் எதற்காக தெரியுமா\nசியோமி ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா\nஅதிரடி நடவடிக்கையில் காவல்துறை- 75 பேர் மீது வழக்குபதிவு, 16 பேர் கைது: சமூகவலைதளத்தில் எல்லைமீறும் பதிவுகள்\nஅதிக டேட்டா நன்மையை வழங்கும் ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்.\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னா இது அடையாளமே தெரியலையே.\nவிரைவில் ஆன்லைன் டெலிவரி இப்படிதான்- உருவானது கேஸி ரோபோ: 5 கிலோமீட்டர் தூரத்தை 53 நிமிடத்தில் ஓடி அசத்தல்\nதகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய விதிகள்: ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகளுக்கு இந்திய பிரதிநிதி அலுவலகம் பதில்.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇரவு முழுக்க இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வேண்டுமா அப்போ இதுதான் பெஸ்டான திட்டம்..\nபோக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகம்: இதோ டாப் 5 அம்சங்கள்.\nRealme அறிமுகம் செய்யும் உலகின் முதல் மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜ்ர்.. ரியல்மி மேக்டார்ட் சிறப்பு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/model", "date_download": "2021-08-02T10:12:44Z", "digest": "sha1:MMEZH7S65BFVNZLHXNBSM2S4BJHDDZXK", "length": 6355, "nlines": 149, "source_domain": "ta.wiktionary.org", "title": "model - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒப்புரு - போல உள்ள பொருள்,\nஅறிவியல். ஒப்புரு, (வி.) ஒப்புருவாக்கு\nஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் (teachers should serve as models to students)\nஅவள் விளம்பர வடிவராக தான் திரைத்துறையில் அறிமுகமானார்.\nஅணுவைப் பற்றிய ஒப்புரவின் படி, நடுவில் உள்ள அணுக்கருவில் நேர்மின்னிகளும், நொதுமிகளும் உள்ளன; அதைச் சுற்றி எதிர்மின்னிகள் வலம் வருகின்றன என்பதாகும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 ஏப்ரல் 2021, 02:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2019/05/blog-post_46.html", "date_download": "2021-08-02T08:39:08Z", "digest": "sha1:WP7WPS4IIDKTMRJ3367URCZU73MBQD27", "length": 4014, "nlines": 88, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "சூ ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\nசூ ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nகொ | கோ | ச | சி | சு | சூ | செ |\nர&ரா | ல | வ | வி | ஜி ஜீ |\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு\nBaby Names - நச்சத்திரம்\nAnmigam - ஆன்மிகம் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2805907", "date_download": "2021-08-02T09:17:37Z", "digest": "sha1:Q2FV3BQWPFHPHL3MP62PLV3UXZLPNCGP", "length": 26629, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க.,வின் சிறுபான்மையின அரசியல்: ஹிந்துக்களிடம் எடுத்து கூற அண்ணாமலை உத்தரவு| Dinamalar", "raw_content": "\nஆக.,02: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'தினமலர்' வழிகாட்டி 2.0 நிறைவு\nவேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர்\nஇந்திய சீன படைகள் வாபஸ்\nகாந்தஹார் விமான நிலையத்தில் தலிபான்கள் 'ராக்கெட்' ...\nகோவிட்டை தடுக்குமா: அஸவகந்தா குறித்த ஆய்வு\n1976ல் நடந்த விமான விபத்தில் 'இறந்தவர்' வீடு ...\nஇது உங்கள் இடம்: மூன்றாவது அலையில் சிக்குவோமா\nமும்பையில் களை இழந்த விநாயகர் ஊர்வலம்\nதி.மு.க.,வின் சிறுபான்மையின அரசியல்: ஹிந்துக்களிடம் எடுத்து கூற அண்ணாமலை உத்தரவு\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 275\nகேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் ... 93\nஆதாரில் போன் எண் திருத்தம்: இனி வீட்டிலேயே செய்யலாம்\nடெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த மதுரை இன்ஸ்பெக்டர் ... 24\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\n'துாத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சிறுபான்மையினர் வாயிலாக தி.மு.க., அரசியல் செய்கிறது. அதனால், அங்கிருக்கும் பெரும்பான்மை சமூகமான ஹிந்துக்கள், தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 'எனவே, ஹிந்துக்களை பா.ஜ., பக்கம் திரு ப்ப, அந்த பகுதிகளில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'துாத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சிறுபான்மையினர் வாயிலாக தி.மு.க., அரசியல் செய்கிறது. அதனால், அங்கிருக்கும் பெரும்பான்மை சமூகமான ஹிந்துக்கள், தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 'எனவே, ஹிந்துக்களை பா.ஜ., பக்கம் திரு ப்ப, அந்த பகுதிகளில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மாநிலம் முழுதும், சிறுபான்மையின மக்களை பிரதானமாக வைத்தே அரசியல் செய்கின்றனர். இருந்தும், பெரும்பான்மை ஹிந்துக்கள், இதை புரிந்து கொள்ளாமல், அக்கூட்டணிக்கு ஓட்டு போடுவதால், அக்கூட்டணியினர் தேர்தலுக்கு தேர்தல் வெற்றி பெறுகின்றனர். குறிப்பாக, துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், முழுக்க முழுக்க சிறுபான்மை இனத்தவருக்கே முக்கியத்துவம் கொடுத்து, தி.மு.க., அரசியல் செய்கிறது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து, தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ், கிறிஸ்துவர்; துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சமூக நலத்துறை அமைச்சரான கீதா ஜீவன், கிறிஸ்துவர்; நெல்லை மாவட்டத்தில் இருந்து சபாநாயகரான ராதாபுரம் அப்பாவு, கிறிஸ்துவர். நெல்லை மாநகர் மாவட்ட செயலரும், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.,வுமான அப்துல் வகாப், முஸ்லிம்; நெல்லை எம்.பி., ஞானதிரவியம், கிறிஸ்துவர். அ.தி.மு.க.,விலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்திருக்கும் முன்னாள் எம்.பி., விஜிலா சத்யானந்தை, உள்ளாட்சி தேர்தலில் மேயராக்குவதாக வாக்குறுதி அளித்து உள்ளனர்; அவரும் கிறிஸ்துவர். நெல்லையைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்; அவரும் கிறிஸ்துவர்.\nஇப்படி கட்சியிலும், ஆட்சி பொறுப்பிலும் தொடர்ச்சியாக சிறுபான்மை இனத்தவருக்கே முக்கியத்துவம் கொடுத்து, தி.மு.க., அரசியல் செய்து வருகிறது. இதை ஹிந்துக்களிடம் எடுத்து சொன்னாலே பா.ஜ., தானாக வளரும் என, கட்சி நிர்வாகிகளிடம் கூறிய அண்ணாமலை, கட்சியை வளர்க்க, இது போன்ற விஷயங்களை கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த மாவட்டங்களில், ஹிந்துக்களிடம் இந்த விஷயத்தை தீவிர பிரசாரமாக எடுத்துச் செல்ல, எங்கள் கட்சியினர் களம் இறங்கி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதுாத்துக்குடி, நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களில், தி.மு.க.,வை முழுக்க முழுக்க சிறுபான்மையின கட்சியாக மாற்றி விட்டனர். மற்ற மாவட்டங்களிலும் இது தொடர்கிறது. அவர்கள் அப்படி செய்து விட்டு போவதில், எங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால், அரசையும் முழுமையாக சிறுபான்மையின மக்களுக்கானது என்பது போல மாற்றி, தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர். அவர்களின் செயல்பாடு நாட்டுக்கும், பெரும் பான்மையான ஹிந்துக்களுக்கும் எதிராக உள்ளது.\nஅதனால் தான், இதை பெரும்பான்மை ஹிந்துக்களிடம் எடுத்துச் சென்று, புரியவைக்க கூறியுள்ளோம். மத்திய உளவு அமைப்பும், இதை தீவிரமாக விசாரித்து, மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது. இதையடுத்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தி.மு.க. சிறுபான்மையின அரசியல் ஹிந்துக்கள் அண்ணாமலை உத்தரவு D.M.K DMK திமுக திராவிட முன்னேற்றக் கழகம்\nஏற்கனவே 7 அடி உயரம் இருப்பீர்கள். இன்னும் வளர்ந்தால் நன்றாக இருக்காது என அதிமுக நினைத்து இருக்குமோ...(2)\nதற்கொலைக்கு துாண்டினார்: 'மாஜி' அமைச்சர் மீது புகார்(15)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான்... “எந்த கோவிலுக்கு போனாலும் எல்லாச் சாமியும் ஒண்ணுதே... எந்த வீட்டுக்குப் போனாலும் எல்லாத் தாயும் ஒண்ணுதே”...ங்கற மாதிரி.. கடவுளில் நல்ல கடவுள், கெட்ட கடவுள் இல்லை... அதைப்போலவே... தாயில்... நல்ல தாய் என்பதும், கெட்ட தாய் என்பதும் கிடையாது...\nசிறுபான்மையினருக்கு பிரதிநிதுத்துவம் வேண்டும், அதற்க்காக இந்துக்களை வஞ்சிப்பதா கேவலம் காசுக்காக திமுகவிக்கு காவடி தூக்கும் இந்துக்கள் தான் இந்து மக்களின் எதிரிகள். அவர்களுக்கு என்ன, மணல் கொள்ளை, மலையையே குடைந்து கொள்ளையடிப்பார்கள், பொதுப்பணி, நீர்வளம் என அமைச்சர்கள் இருப்பது தாங்கள் வளமாக சம்பாதிக்க தான் இருக்கிறார்கள். கேவலம் ஓட்டுக்காக மிச்ச மீதி உள்ள இந்துக்களையும் மதமாற்றம் செய்துவிடும் அபாயம் உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வச��ி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏற்கனவே 7 அடி உயரம் இருப்பீர்கள். இன்னும் வளர்ந்தால் நன்றாக இருக்காது என அதிமுக நினைத்து இருக்குமோ...\nதற்கொலைக்கு துாண்டினார்: 'மாஜி' அமைச்சர் மீது புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/News/extension-of-time-to-pay-transport-vehicle-tax---government-of-tamil-nadu-order", "date_download": "2021-08-02T08:01:38Z", "digest": "sha1:TLDF5B5HTDEZ463NBGTUNIVSKP4CSSX7", "length": 5740, "nlines": 86, "source_domain": "www.fnewsnow.com", "title": "போக்குவரத்து வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு! | Extension of time to pay transport vehicle tax - Government of Tamil Nadu order! - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nபோக்குவரத்து வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் போக்குவரத்து வாகன வரி செலுத்த கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 09/05/2021 அன்று முதலமைச்சர் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் , போக்குவரத்து வாகன உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசாணை எண்: G.O.(D) No. 552 Home (Transport- I) Department dt 15/05/2021 அன்று தமிழக அரசால் போக்குவரத்து வாகனங்களுக்கான 30/06/2021 காலாண்டு முடிவிற்கான வரியினை அபராதம் இல்லாமல் செலுத்தும் கடைசித் தேதியான 15/05/2021- னை 30/06/2021 ஆக நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த உத்தரவினால் தமிழகத்தில் சுமார் 15,00000 போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\" இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்���ட்டுள்ளது.\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\nசளைக்காத உழைப்புக்கு ராகுல் டிராவிட்\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/engineering-students-land-jobs-in-japan-she-was-named-vendam", "date_download": "2021-08-02T10:15:34Z", "digest": "sha1:RDCR7LIMRJBUJX4AULXA3K4IDKIKKNVJ", "length": 12021, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 06 August 2019 - வேண்டாம் எங்களுக்கு வேண்டும்!|Engineering students land jobs in Japan She was named Vendam - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nதண்ணீர் சிக்கனத்துக்கு வழிவகுக்கும் வாட்டர் மீட்டர்\nபெருமிதம்: நான்கு பெண்களைப் பெற்றால் மகாராணி\nதண்ணீர் வீணாவதைத் தடுக்கும் ஏரேட்டர்கள்\nகுழந்தைகளின் எதிர்பாலின ஈர்ப்பு... எப்படிக் கையாள்வது\nகுழந்தை வளர்ப்பு பார்ட் டைம் ஜாப் அல்ல\nஅண்டார்ட்டிகாவில் வளரவேண்டிய நாயை அமிஞ்சிக்கரையில் வளர்க்கலாமா\nசுற்றுலா: மோனலிசாவும் உறைபனி உலகமும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஆடி, ஆவணி 30 வகை பண்டிகை ரெசிப்பிகள்\nஅந்த மரணம்தான் எனக்கு ஆற்றலைத் தந்தது\nஎதிர்க்குரல்: கறுப்பு என்பது நிறமல்ல\nஎங்களுக்கு ஏன் இந்த நிலை வரப்போகிறது\nருக்மிணி தேவி அருண்டேல்... கலைஞரல்ல, சகாப்தம் - எஸ்.சாரதா / கிருஷாங்கினி\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nமொபைலா, மூளை வளர்ச்சியா... எது முக்கியம்\nஅஞ்சறைப் பெட்டி: வசம்பு... அஞ்சறைப் பெட்டிக்காகவே அவதரித்த மூலிகை சுயம்பு\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: இப்போ இல்லாட்டி எப்போ\nதெய்வ மனுஷிகள் - மாடத்தி\nதொழிலாளி to முதலாளி - 12: அன்று மேடை நாடக நடிகை... இன்று 2,500 ஊழியர்களுக்கு முதலாளி\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nபெற்ற குழந்தையைத் தத்துக்கொடுக்க... - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nபத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு\nபுதுச்சேரி ஊரடங்கு நீட்டிப்பு : `திரையரங்கம், பார் மேலும் எவற்றுக்கெல்லாம் அனுமதி \n`அப்போ பார்வையாளர்கள்; இப்போ இயற்கை விவசாயிகள்' - வழிகாட்டிய பாரம்பர்ய விதைகள் திருவிழா\nமிரட்டிய போலீஸ்; ஆட்சியர் அலுவலகம் முன்பாகத் தீக்குளிக்க முயன்ற நபர்; நெல்லையில் பரபரப்பு\n`டிவியில் பாடம், வாட்ஸ்அப்பில் அசைன்மென்ட், பிறகு பரிசு' - அரசுப்பள்ளி ஆசிரியர்களின் புது முயற்சி\nவரதட்சணைக்காக மனைவியைக் கொன்ற கணவர்; ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு\nபி.காம், சமூகவியல் மற்றும் இதழியலில் முதுகலை படிப்பு. முழுநேர பத்திரிகையாளராக 27 ஆண்டுகளைக் கடந்த இனிய பயணம்... டி.வி உலகம், தினகரன், வாசுகி, குங்குமம், குங்குமம் தோழி, குங்குமம் டாக்டர் இதழ்களில் 22 வருட பணி அனுபவத்தோடு, இப்போது அவள் விகடனில் Chief Magazine Editor. 15-க்கும் மேலான புத்தகங்களின் ஆசிரியர். பெண்ணுலக வலிகளையும் வரங்களையும் எழுதுவதில் லயிப்பு. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஈர்ப்பு. ஏற்கெனவே அறியப்பட்ட நட்சத்திர முகங்களை மேலும் பிரபலமாக்குவதைவிடவும் அரிதாரமற்ற, அடையாளமற்ற மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதில் அலாதி ஆர்வம்.... சிறந்த பெண் பத்திரிகையாளர்களுக்கான லாட்லி மீடியா விருதை, பிராந்திய அளவில் 3 முறையும் தேசிய அளவில் ஒரு முறையும் பெற்ற பெருமைமிகு அங்கீகாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/08/blog-post_8.html", "date_download": "2021-08-02T10:11:49Z", "digest": "sha1:JHB34CSDBCJKVPPB6REQOQ355MKVEDFT", "length": 5186, "nlines": 60, "source_domain": "www.yarlsports.com", "title": "சம்பியனாகியது நல்லூர் மோட்டார் சைக்கிளை வெற்றி கொண்ட ஆட்டநாயகன் தனுஷன் - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > சம்பியனாகியது நல்லூர் மோட்டார் சைக்கிளை வெற்றி கொண்ட ஆட்டநாயகன் தனுஷன்\nசம்பியனாகியது நல்லூர் மோட்டார் சைக்கிளை வெற்றி கொண்ட ஆட்டநாயகன் தனுஷன்\nஅரச அதிபர் வெற்றி கிண்ண துடுப்பாட்ட தொடர் யாழ் பிரதேச செயலக அணியினை 20\nஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனாகியது நல்லூர் பிரதேச செயலகம்\nபோட்டியின் ஆட்ட நாயகனாக நல்லூர் பிரதேச செயலக வீரன் தனுஷன் தேர்வு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிள் பரிசளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2020/01/blog-post_10.html", "date_download": "2021-08-02T10:06:56Z", "digest": "sha1:STO4KEFW26PQC3PRTVRDLLSGS3BMK2IF", "length": 4594, "nlines": 49, "source_domain": "www.yarlsports.com", "title": "காலிறுதியில் வேரவில் கலைமகள் - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > காலிறுதியில் வேரவில் கலைமகள்\nபூநகரி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி மத்திய நண்பர்கள் விளையாட்டு கழகம் நடாத்தும் \"உழவர் கிண்ண\"உதைபந்தாட்ட தொடரின் 2வது சுற்றில் வலைப்பாடு மெசியா\"B\" விளையாட்டு கழகத்தினை 0:2 ரீதியில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது கிராஞ்சி வேரவில் கலைமகள் விளையாட்டு கழகம்.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/2019/06/13/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-08-02T09:35:57Z", "digest": "sha1:C3FEPSG73E53CV7WSEF5OANQPSCFOF6M", "length": 3134, "nlines": 27, "source_domain": "www.mukadu.com", "title": "வவுனியா விபத்தில் இளைஞன் பலி! | Mukadu", "raw_content": "\nவவுனியா விபத்தில் இளைஞன் பலி\nவவுனியா விபத்தில் இளைஞன் பலி\nவவுனியாவில், கற்பகபுரம் பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.\nவவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇவ்விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை சேர்ந்த சிவபெருமாள் கஜேந்திரன் (வயது 25) என்ற இளைஞன் உயிரிழந்தார்.\nஉயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்விபத்து தொடர்பாக ஹயஸ் ரக வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், ஹயஸ் வாகன சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nபுதிய தமிழ்நாதம் பத்திரிகை கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/court-denied-to-give-permission-for-kallazhagar-festival-in-madurai/", "date_download": "2021-08-02T08:23:56Z", "digest": "sha1:BAITBVI5TDTELTAEOTKCPXQUCCJTR6GZ", "length": 6733, "nlines": 117, "source_domain": "tamil.newsnext.live", "title": "புகழ்மிக்க அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி இல்லை ! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nபுகழ்மிக்க அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி இல்லை \nமதுரை அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு உய��்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது.கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் கோவிலுக்குள்ளேயே சித்திரைத் திருவிழா எளிமையாக நடைபெற்றது.\nஇந்த நிலையில், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி அருண் போத்திராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் கரோனா மீண்டும் பரவி வரும் சூழலில் இந்த நிகழ்வை நடத்துவது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பினர்.\nமேலும், வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை குப்பை மட்டும் தான் உள்ளது என்றும் விமர்சித்தனர். இதையடுத்து, அவ்விழாவிற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் அருண் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு – டெல்லி \nகரோனா கால கட்டுப்பாடுகள் தீவிரம் – சென்னை \nதொடர் சரிவில் தங்கம் விலை\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\n5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nகரோனா கால கட்டுப்பாடுகள் தீவிரம் - சென்னை \nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\nதொடர் சரிவில் தங்கம் விலை\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\nமுருதீசுவரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zw-trailer.com/product-tag/howo+6x4+%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-08-02T09:33:18Z", "digest": "sha1:WWC3XYL3UX3IMB34JSMHZEZ6NEUDT6KJ", "length": 9218, "nlines": 144, "source_domain": "ta.zw-trailer.com", "title": "", "raw_content": "\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nhowo 6x4 டம்ப் டிரக்\nhowo 6x4 டம்ப் டிரக்\nஹோவோ 6x4 ஏ 7 டம்ப் டிரக் 30 டன்\nஹோவோ 6x4 டம்ப் டிரக்கின் சிறப்பியல்பு என்னவென்றால், அதன் வண்டியை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சாய்த்து, வண்டியில் உள்ள பொருட்களை இறக்க முடியும். இது ஹோவோ ஏ 7 டம்ப் டிரக்கின் இயந்திரத்தால் இயக்கப்படுகிறது மற்றும் டம்ப் பொறிமுறையால் முடிக்கப்படுகிறது, ஏனெனில் ஏற்றுதல் தானாக ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பொருட்களை கொட்டுகிறது. இறக்கும் நேரத்தையும் உழைப்பையும் சேமிக்கவும், போக்குவரத்து சுழற்சியைக் குறைக்கவும், உற்பத்தி செயல்திறனை மேம்படுத்தவும், போக்குவரத்து செலவைக் குறைக்கவும் இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் போக்குவரத்து இயந்திரமாகும்.\nhowo a7 டம்ப் டிரக் ஹோவோ டம்ப் டிரக் 30 டன்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nஹோவ் டிரக் டிராக்டர் அலகுகள் பயன்படுத்தப்பட்டன\nசரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் பக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் கேரியர் டேங்கர் டிரெய்லர்\nகுறைந்த பிளாட்பெட் லோபெட் அரை டிரக் டிரெய்லர்\n ஷிஜோங் மாவட்டம், ஜினான் நகரம், சாண்டோங் மாகாணம்\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\n© ஷாண்டோங் ஜுவோவி இன்டர்நேஷனல் டிரேடிங் கோ, லிமிடெட் + 86-15216409270 ivan@zw-trailer.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-08-02T09:16:14Z", "digest": "sha1:TCBJ7T6KAZLJVZTEXSDCGXFIQEP6GS7D", "length": 8122, "nlines": 101, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஇருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து சென்ற அதிகாரிகள் – விசாரணைக்கு ஆஜராகும் சம்மனை திரும்ப பெற்ற காவல்துறை\nவேளச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராகுமாறு வழங்கப்பட்டிருந்த சம்மனை காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது. தமிழக...\nசம்மன்தமிழக சட்டப்பேரவை தேர்தல்தரமணி 100 அடி சாலைதிமுக கூட்டணிதேர்தல் ஆணையம்விசாரணைவேளச்சேரி\nநாடாளுமன்ற கூட்டுக் கு��ுவின் முன் ஆஜராக முடியாது – அமேசான் நிறுவனம் அறிவிப்பு\n‘தரவு பாதுகாப்பு மசோதா’ தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராக முடியாது என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 28ஆம்...\nஃபேஸ்புக்அமேசான்சம்மன்டிவிட்டர்தரவு பாதுகாப்பு மசோதாநாடாளுமன்ற கூட்டுக் குழு\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின் போராட்டம்\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் – தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தகவல்\n‘தற்போதைய பணவீக்கத்திற்கு 1947-ல் நேரு ஆற்றிய உரையே காரணம்’ – ம.பி. பாஜக அமைச்சர்\n‘பெகசிஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை வேண்டும்’ – நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்\nதகுதியான சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.emunahavodah.org/2018/02/12/hebrew-names-%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-part-2/", "date_download": "2021-08-02T08:11:40Z", "digest": "sha1:LX32PL6WJJTWFIDLDWQ5FJFH7MIL37WA", "length": 7471, "nlines": 171, "source_domain": "www.emunahavodah.org", "title": "Hebrew Names – எபிரேயப் பெயர்கள் – Part 2 – Emunah Avodah", "raw_content": "\nஇந்தப் பதிவில் நாம் நமக்கு நன்கு பரிச்சயமான மேலும் சில எபிரேயப் பெயர்களின் உச்சரிப்பைக் கேட்போம். இப்பெயர்கள் நம் மொழியிலும், ஆங்கிலத்திலும் எவ்வாறு திரிந்துள்ளன என்பதை நாம் இனம் காணலாம்.\n2 : அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.\n8 : நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.\n15 : பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.\n26 : பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்;\n16 : லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.\n16 : லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.\n2 சாமுவேல் : 12\n1 : கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்;\n9 : இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்;\n6 : தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான்.\n9 : அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/467", "date_download": "2021-08-02T10:15:38Z", "digest": "sha1:D65Y6T4IVWFA6MQDXMX2S454TJTPJ5IG", "length": 10047, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மதுரையில் வெளிப்பட்ட மனிதநேயம்", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 02 2021\nSearch - மதுரையில் வெளிப்பட்ட மனிதநேயம்\nதிருமங்கலத்தில் தேவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது எப்போது\nசிதையும் சமணர் படுகைகள் பாதுகாக்கப்படுமா- கவனிப்பாரற்று கிடக்கும் வரலாற்று பொக்கிஷம்\nமதுரை: பெண்களை புலம்பவிட்ட கேபிள் ஆபரேட்டர்கள்: 24 மணி நேர வேலைநிறுத்தத்தால்...\nதன் குடும்பத்துக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதியா- கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி\nநர்ஸிங் மாணவர் போராட்டம் 7-வது நாளாக நீடிப்பு: நோயாளிகள் பாதிப்பு\nஇன்னும் இருக்குது ரெண்டு பிறந்த நாள் மதுரையை கலக்கத் திட்டமிடும் அ.தி.மு.க., தி.மு.க\nமு.க.அழகிரியின் ஆதரவாளர் வீட்டில் துப்பாக்கி, ஆயுதங்கள் பறிமுதல்\nஅழகிரி பிறந்தநாள்: திமுக எம்.பி.க்கள் ரித்தீஷ், நெப்போலியன் நேரில் வாழ்த்து\nதிருச்சி: உசுப்பேற்றும் அழகிரி ஆதரவாளர்கள்... அமைதி காக்கும் ஸ்டாலின் அணியினர்\nஅதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை: அழகிரி\nஹை-டெக் பிரச்சாரத்தில் அதிமுகவின் பாசறைகள்- அரசின் சாதனைகளை வலைதளங்களில் புகுத்த திட்டம்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டும் பிரசாந்த் கிஷோர்:...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nகுரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/gisat-1-sriharikota-isro/", "date_download": "2021-08-02T09:25:11Z", "digest": "sha1:OD6UZQYHD5SCGXBNLCQMHWVRQGI4XW2N", "length": 2483, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "GISAT-1 | Sriharikota | ISRO | ஜனநேசன்", "raw_content": "\nமார்ச் 5ம் தேதி GISAT-1 அதிநவீன செயற்கைகோளை விண்ணில்…\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில்…\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/peoplestruggles/145-news/articles/nilatharan/2126-2013-10-10-08-41-21", "date_download": "2021-08-02T08:57:07Z", "digest": "sha1:UVQTU4VX62T6E7UKQFYAEGM2B43DRLID", "length": 31857, "nlines": 137, "source_domain": "www.ndpfront.com", "title": "நானும்... எனக்கும், நீயும்... உனக்கும் (சிறுகதை)", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநானும்... எனக்கும், நீயும்... உனக்கும் (சிறுகதை)\nஎன்ரை வீட்டுக்கிச்சின் ஜன்னலை முறுக்கி விட்டா முன்வீட்டு முற்றத்திலே நடக்கிறது எல்லாம் அப்படியே தெரியும். இப்ப நல்ல வெயில் காலம் முன்வீட்டு மனுசி வெளியிலே வந்து பூக்கண்டுகளுக்குள்ளே புல்லுப்புடுங்கும், மரங்களை வெட்டும், சாடிகளை மாற்றும, கொத்தும். புரட்டும் வெயில் வந்தா மனசி சும்மா இருக்க மாட்டாது.\nஅதிகாலை வேலைக்குப் வீடு திரும்ப எப்படியும் ஒரு எட்டு மணியாகும். தோட்டத்திலே நிண்ட மனுசி எனக்கு கையைக் காட்டியது. என்ன இவ்வளவு வேளைக்குத் தொடங்கிவிட்டாய்.... கிறேற்ரா, என்று பக்கத்தில் போய் விசாரித்த போது.... இந்த வீக்கன் என்ரை மகன் தன்ரை ஆளோடு வாறான் அது தான் கொஞ்சம் வடிவா இருக்க வேண்டும்.... நல்ல வெய்யில்........தானே, வேளைக்கே தொடங்கி விட்டேன் என்றா. அது இது என்று கதைத்து விட்டு நானும் வந்து விட்டேன்.\nவீக்கன் முடிஞ்சு வேலையால் வந்த போது மனுசி தோட்டத்திலே நிண்டதைக் கண்ட நான் கிட்டப்போய் என்னவாம் மகனும் மருகளும் என்றேன். என்ன... மருமகளா.... என்று வியப்போடு கேட்டாள்.... ஓ உன்ரை மகனின் காதலி... உனக்கு மருமகள் தானே என்ற போது, மனுசி ஒரு மாதிரி சிரித்தபடி உனக்கெல்லாம் தெரியும் என்றெல்லே நினைத்திருந்தேன். உன்ரை மனுசிக்கு இது தெரியும். சிலவேளை அவ சொல்லியிருக்கலாம், எண்டும் நினைத்திருந்தேன்...\nவாழ்க்கையில் சில மாற்றங்கள் நாங்கள் எதிர்பாராமலேயே நடந்து வீடுகின்றது. சில மாறுதல்கள் சத்தம் சலாரில்லாமல் நுழைந்து விடுகின்றது. சில நிகழ்வுகள் ஏன் எதற்கென்றே தெரிவதில்லை. அவன் இன்னொரு பொடியனோடு சேர்ந்து குடும்பமாயல்லவா இருக்கிறான். மூக்கை உயர்த்தி கண்ணை விழித்த போது, என்ன யோசிக்கிறாய்... விசித்திரமாய் இருக்கா.......\nமுதலிலே அவன் வந்து சொன்ன போது எனக்கும் விசித்திரமாக���ும் விசராகவும் கூட இருந்தது. ஆனால் என்ன செய்வது என் பிள்ளை தானே..... ஏற்றுக்கொள்ளத் தானே வேண்டும். இதிலே இரு, இந்தக் கோப்பியைக் குடி, என்ற படி ஒரு பெரிய குடையின் கீழிருந்த கதிரையைக் காட்டி தானும் வந்து அமர்ந்து கொண்டாள்.\nஇது பற்றி அவன் வந்து சொன்ன போது அவனது சகோதரர்கள் எதுவிதமான எதிர்ப்பையோ அல்லது எதுவிதமான மாற்றுக் கருத்துக்களையோ சொல்லவில்லை. மாறாக மிகச்சாதரணமாகவே எடுத்துக் கொண்டார்கள். தாயான என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இருந்தது. ஆனால் இவனுக்கென்ன இப்படி ஒரு ஆசை... இப்படியான வாழ்வை இவன் ஏன் தேர்ந்தெடுத்தான் என்று யோசித்து, யோசித்து இந்த தன்னினச்சேர்க்கை சம்பந்தமானவர்கள் பற்றி தேடி வாசிக்க வெளிக்கிட்ட போது உண்மையிலே எனக்கு அனுதாபமும் இரக்கமும், கவலையும் தான் வந்தது.\nஇந்த தன்னினச் சேர்க்கை என்பது ஏதோ இன்று நேற்று எற்பட்ட ஒன்றல்ல. இந்த உறவானது மனிதன் தோன்றிய காலங்களிலிருந்தே தொடர்ந்து வந்து தான் கொண்டிருக்கு. இது மனித இனத்துக்கு மட்டுமல்ல, விலங்கினங்கள் பறவையினங்கள் மற்றும் சகல ஜீவராசிகளிலும் இந்த உறவு முறையிருக்கு என்று அறிந்த போது ஆச்சரியமாகத் தான் இருந்தது.\nஇந்த உலகத்துக்கு புதிதாய் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதை எந்த இனத்திலோ எந்த மதத்திலோ அல்லது எந்த நிலையிலோ... எந்த அடையாளத்துடனோ வளர்தெடுக்கலாம். ஆனால் அது உற்பத்தியான வேளையில் இந்த ஒருபாலுறவுக்கான உணர்வுகள் ஏற்பட்டிருந்தால் அது எங்கே.... என்ன, எப்படி வளர்ந்தாலும் அதை யாராலும் உடனே மாற்ற முடியாது என்பது தான் உண்மை.\nஇது ஒரு உளவியல் காரணி என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தாயானவள் கற்பமாயிருக்கும் காலகட்டங்களில் ஏற்படுகின்ற மனத்தாங்கல்களினாலும் அந்தப்பாரத்தினாலும் கோர்மோன்களில் எற்படும் மாற்றத்தினாலும் அந்தக்குழந்தை இந்த விருப்பத்துக்கு வருகின்றது.\nஎன்ன நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் ஒன்றும் பேசாமல் இருக்கின்றாய்.... ஏதாவது சொல் என்றாள்.\nஇல்லை... இல்லை நீ சொல்வது சுவாரீசியமாகவும் புதிதாகவும் இருக்கிறது. அது தான் கேட்டுக்கொண்ருக்கிறேன்.\nகிட்டத்தட்ட ஒரு இருபத்தெட்டு இருபத்தொன்பது வருடத்துக்கு முன்னர் நான் இங்கே அகதியாய் வந்த போது எங்களுக்குப் பொறுப்பாயிருந்த அகதிகள் சங்கம் ஒருநாள் எங்கள் எல்லோரையும் கூட்டி ஒரு முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிலே நாங்கள் எப்படி வெளியே திரிய வேண்டும் என்றும், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கம் சொன்ன போது எமக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.\nஇப்ப நீ என்ன சொல்ல வருகிறாய்.... கொஞ்சம் தெளிவாய் சொல் என்ற போது எனக்குச் சிரிப்பு வந்தது. இல்லை... பொடியங்களான நாங்கள் வெளியிலே திரியும் போது கைகோத்துக் கொண்டு திரிவதும், கட்டிப்பிடிச்சுக் கொண்டு திரிவதும, நிக்கிற போது தோளின் மேல் சாய்ந்து நிற்பது மிகச் சாதாரணம். ஆனால் இங்கே அதுக்கு வேறு மாதிரி அர்த்தங்களாம் என்று விளக்கம் தரப்பட்ட போது ஆச்சரியத்தோடு சிரிப்பாயும் இருந்தது.\nஎங்கடை நாட்டிலே நண்பர்கள் மத்தியில் இது வெறும் சகசம். இவர்கள் இப்படிச் சொன்னதன் பின்னர் அதிலிருந்து விடுபடுவதற்கு கொஞ்சம் காலமும், கஸ்ரமாயும் இருந்தது.\nஒரு புது வாழ்வியலைத் தேடி வந்த உங்களுக்கு எத்தனை உளவியல் சிக்கல்கள், என்றபடி கிறேற்ராவும் சிரித்துக் கொண்டாள்.\nமுன்பிருந்த நிலையல்ல இப்போது... பொதுவாக நாங்கள் கட்டிக்காத்த புனிதங்கள், பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் எல்லாம் தவிடுபொடியாய் தகர்ந்து விழுந்து கொண்டிருக்கும் காலம்.\nஇன்று சர்வதேச அரங்கிலே இது ஒரு சாதரண விசயமாகி விட்டது. இன்று உலகம் முளுவதும் இந்த தன்பால் உறவுபற்றிய உரிமைக்குரல்கள் சகல தரப்புக்களிலிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமூக ஆர்வலர்களின் அழுத்தங்களால் சிறிது சிறிதாக உரிமைகள் வென்றெடுக்கப்படுகின்றன.\nஉனக்குத் தெரியும் தானே, இந்த மேற்குலகச் சமூகம் சுதந்திரமான கட்டுப்பாடற்ற இந்த ஆண்-ஆண் உறவையும், பெண்-பெண் உறவையும் விரும்புகின்றது. இந்த உலகமயமாக்கல் என்ற மூலம் இந்தப் பாழாய் போன நிலையை உருவாக்கி இப்ப இருக்கும் இந்த இறுக்கமான குடும்ப உறவை தகர்த்தெறிய முயற்சிக்கின்றது. இது முதலாளித்துவத்தின் முக்கிய கூறு.\nகொஞ்சம் சலித்தவளாய் தன் கைகள் இரண்டையும் பின் தலையிலே இறுக்கப்பிடித்து கால்களை நீட்டி தன்னைச்சரித்துக் கொண்டாள்.\nமனம் விட்டு யாருடனாவது கதைக்க வேண்டும் என்ற ஒரு ஆவலில் கதைப்பது போல் அவ இருந்ததை என்னால் உணர முடிந்தது.\nமீண்டும் கொஞ்சம் நிமிர்ந்த படி இப்ப எங்கடை நாட்டிலோ அல��லது வேறு முஸ்லீம் நாடுகளிலோ இது ஒரு தண்டனைக்குரிய ஒரு குற்றமாக இதை வைத்திருக்கின்றனர். இதிலே வேடிக்கை என்னவென்றால் இந்த ஆசிய நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தச் தன்னினச்சேர்க்கை அப்போயிருந்தே இருந்து கொண்டு தான் இருக்கு. எப்போ அங்கே இந்தப் பிரிட்டிஸ்காரர்கள் போனார்களோ சட்டங்களைப் போட்டார்களே அன்றிலிருந்து இன்று வரையிலும் அது தண்டனைக் குற்றமாக இருக்கு. ஆனால் பிரிட்டனோ அல்லது மற்ற ஜரோப்பிய நாடுகளோ இங்கே இந்தச் சட்டங்களை நீக்கி விட்டு இந்த ஒருசார்பால் உறவுக்காரர்கள் இன்று சட்டரீதியாவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்கு ஊக்கி வைத்துள்ளார்கள்.\nஇன்று பொதுவாக அரசியல்வாதிகள், வைத்தியர்கள், கலைஞர்கள், விரிவுரையாளர்கள், நீதவான்கள் என்று அதிஉயர்நிலையில் இருப்பவர்களும், இதற்கு அடிமையாய் இருக்கின்றார்கள் என்பது பெரிய மறுக்க முடியாத உண்மை. இவர்களையெல்லாம் ஏன் இப்படி நடந்து கொள்ளுகிறீர்கள் என்பது அவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கு என்று சில ஆய்வுகள் கூறுகின்றது. அதாவது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் சாதரண காதலைப் போன்றது தான் ஒரு ஆண் இன்னொரு ஆணை நேசிப்பது, அதே போல் ஒரு பெண் இன்னொரு பெண்ணை நேசிப்பது.\nஇதை நாம் விளங்கிக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் கொஞ்சம் கஸ்ரம் தான்.\nகிறேற்றா கதைத்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு விரிவுரையைக் கேட்பது போல நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nம்...ம்... யோசியாமல் இதைச் சாப்பிடு... உன்னோடு இது பற்றிக் கதைக்க ஏதோ பெரிய பாரம் ஒன்று இறங்குவது போல் உணருகிறேன். இவனுடைய சகோதரர்கள் இவனை ஏற்றுக் கொண்டது போல் என்னால் உண்மையாக முளுமையாக அவனை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வேதனையும் குற்றவுணர்வும் என் மனவடியில் எங்கேயோ தாண்டுபோயிருந்து, இப்படியானவர்களுக்கு வரும் நோய்கள் பற்றிய பயம் என்னைப் பெரிதும் பாதித்திருந்தது. அந்தக் கவலையெல்லாவற்றையும் ஒருவருடனும் கதைக்க முடியாமலும் பகிர்ந்து கொள்ள முடியாமலும் எனக்குள்ளேயே பூட்டிவைத்திருந்தேன். ஆனால் இப்போது அவனை நான் முளுமையாக ஏற்றுக் கொண்டுவிட்டேன் என்று மனம் குதூகலிக்கிறது, என்று அவள் சொல்லி ஆனந்தப்பட்டதை என்னால் கண்டு கொள்ள முடிந்தது.\nஉங்கடை நாட்டிலே இந்த நிலைகள் என்னமாதிரி..... ஏதாவது சொல்லேன் அறிய விருப்பமாயுள்ளேன் என்றாள்\nஎனக்கு உடனே சிரிப்புத்தான் வந்தது. ஏன் சிரிக்கிறேன் எண்டு பிறகு சொல்லுகிறேன் கிறேற்ரா.... பொதுவாக எங்கடை நாட்டிலேயும் இங்கேயும் சரி, எம்மவர் மத்தியில் சாதரணமான இந்த ஆண் பெண் செக்ஸ் விடையங்கள் பற்றிக் கதைப்பதே பாவம், என்றும,; குற்றம், என்றும் இவையெல்லாம் தடைசெய்யப்பட்டவை என்றும் இருக்கும் போது இந்தச்தன்னினச் செயற்கையாளர்கள் பற்றிக் கதைப்பதென்பது நினைக்க முடியாத ஒன்று என்று தான் நினைக்கிறேன்.\nதிருமணபந்தத்தில் இணைந்;தும் இதில் நாட்டம் கொண்டு இரகசியமாக இதில் ஈடுபாடுடைய பல ஆண்களை எனக்குத் தெரியும.; சின்னவயதில் எத்தனையோ பேரால் நான் கூட வற்புறுத்தபபட்டிருக்கிறேன். ஆனால் அதை யாரிடம் முறையிடவோ அதைப்பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை தான் அங்கே. ஏன் என்றால் இது ஒரு அவமானச் செயலாகவே இன்றும் இருக்கு.\nமனுசி வியப்பாக என்னைப் பார்க்க எனக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.\nஅங்கே ஆண் ஆண் பற்றிய உறவு போல் பெண் பெண் பற்றிய உறவுக்காரர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. ஆனால் பெரிய பள்ளிக்கூட விடுதிகளிலும் வேறு பெண்கள் தனித்து வாழும் இடங்களிலும் இது இருப்பதாய் அறிந்து கொண்டேன்.\nஎன்னையொன்றும் கேளாமலேயே மனுசி கோப்பியை எடுத்து எனது கோப்பையில் நிரப்பிபடியே இது மறைமுகமாக இருந்தாலும் இதை ஏற்றுக் கொள்வார்களா... எனக் கேட்டபடி தனக்கும் கோப்பியை நிரப்பினாள்.\nஎனக்கு மீண்டும் சிரிப்பு பொத்தென்று வந்தது. சிரித்துக் கொண்டே இருக்க என்ன ஒன்றும் சொல்லாமல் நெடுக சிரிக்கிறாய் எனக்கும் சொன்னால் நானும் சிரிப்பேனல்ல என்றபடி தானும் சிரித்தாள்.\nஇல்லை சாதாரண இளம் பருவத்திலே வரும் இயற்கையான ஆண் பெண் காதலையே இன்னும் ஏற்றுக் கொள்ளாத எமது சமூகம் இதையா.... ஏற்றுக் கொள்ளப் பொகிறது.\nஒரு பதினாறு பதினேழு வயதிலே காதல் கொண்டால் முளைச்சு மூன்று இலை விடலே அதிலே இவருக்கு ஒரு காதலா என்று கிண்டல் செய்வார்கள். ஒரு இருவது வயதிலே காதல் கொண்டால் படிக்கிற வயசிலே அவனுக்கு என்ன காதல் வேண்டிக்கிடக்கு என்பார்கள். பிறகு அதைத் தாண்டி கொஞ்சம் வயது வந்து காதல் கொண்டால் ஒரு வேலை வெட்டியில்லை கண்டறியாத காதலும் கத்தரிக்காயும் என்பார்கள். இப்படி இப்படி ஏதோ சொல்லி சொல்லி கிண்டல் பண்ணுவார்களே ஒழிய அதை ஏற்றுக் கொள்ள பெரிய கஸ்ரங்களைச் சந்திக்க நேரிடும். இது தான் எங்கடை யதார்த்தம்.\nநீ ஏன் சிரித்தாய் என்பது இப்போது புரிகிறது என்று கிறேறடராவும் சேர்ந்து சிரிச்சா...\nஇப்ப நாடு போற போக்கிலே இந்த உலகமயமாக்கல் என்ற பேரிலே திணிக்கப்படுகின்ற அரசியல் பொருளாதார கலாச்சார நெருக்கடிகளினாலும், போருக்குப் பின்னர் எனது மண்ணில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினாலும் இன்ரநெற்... ரீவி... போன்ற வருகைகளின் பாதிப்புக்களினாலும் எமது மண்ணிலும் இது பற்றிய சிந்தனைகள் விதைக்கப்படலாம்.\nஏற்கனவே அங்கே உல்லாசப் பிரயாணிகள் என்ற பேரிலே வந்து போகின்ற வெளிநாட்டவர்களால் வறுமைப்பட்ட பல குழந்தைகள், சிறார்கள் இளைஞர்கள் இந்தப் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது உலகம் அறிந்த விடையம். இனிவரும் காலங்களில் அந்நியநாட்டுச் செலவாணிகளுக்காக இவையெல்லாம் ஊக்கிவிகப்படலாம்.\nநாடு பற்றிய நினைவுகள் தோன்றிய போது போர்க்காலத்தில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் பற்றியும் சரணடைந்த இளம் ஆண்போராளிகள் கூட கொல்லப்படுவதற்கு முன்னர் எப்படியெல்லாம் பாலியல் முறையில் துன்பப்படுத்தப்பட்டிருப்பார்களோ என்ற எண்ணம் என் மனவெளியில் வந்து போனது.\nஎன்ன திடீரெனச் சோர்ந்து போனாய் வேலைக்களைப்பா நீயும் படுக்க வேண்டும் தானே நீ போய் படு ...போவதற்கு முன்னர் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இன்று பெரும்பாலனவர்களுக்கு இது பற்றிய அறிவோ அவர்களைப் புரிந்து கொள்ளும் மனோபக்குவமோ எம்மில் பலருக்கு இல்லை. மாறாக மற்றவர்களின் அந்தரங்களுக்குள்ளேயே நுழைந்து கிண்டலும் கேலியும் செய்பவர்களாகவே பொதுவாக எல்லோரும் இருக்கிறோம்.\nஇவர்கள் அன்பைத் தேடும் உறவுகள். இப்படியானவர்களை வெறுக்கக் கூடாது தான், இவர்களும் ஏற்றக் கொள்ளப்பட வேண்டியவர்கள் தான்... என்னுடைய குழந்தைகளோ அல்லது நெருங்கிய எனது உறவினர்களோ இப்படி இவளைப் போல் நானும் ஏற்றுக் கொள்வேனா... என்ற கேள்வியோடும்... ஏதோ புதிதாய் ஒரு பத்தகத்தைப் படித்தது போன்ற மனநிலையோடு எழுந்து வந்தேன்.\nவெயில் வெளியே கொழுத்திக் கொண்டிருந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/vizhiil-viluntha-nal-muthale.htm", "date_download": "2021-08-02T10:10:58Z", "digest": "sha1:ZDNJFNNQOQPXL4LBVXW5Q27NZDJTFWUJ", "length": 5387, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "விழியில் விழுந்த நாள் முதலே (சுதா ஹரி) - சுதா ஹரி, Buy tamil book Vizhiil Viluntha Nal Muthale online, Sutha Hari Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nதிருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)\nவிழியில் விழுந்த நாள் முதலே (சுதா ஹரி)\nவிழியில் விழுந்த நாள் முதலே (சுதா ஹரி)\nவிழியில் விழுந்த நாள் முதலே (சுதா ஹரி)\nவிழியில் விழுந்த நாள் முதலே (சுதா ஹரி) - Product Reviews\nகாக்கைச் சிறகினிலே (சஷி முரளி)\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை (அண்ணா ஸ்வீட்டி)\nசலசலக்கும் மணியோசை (சரண்யா ஹேமா)\nஎன் சோலை பூவே (நிதனிபிரபு)\nகந்தர் அனுபூதி (மூலமும் உரையும்)\nநாங்கள் ஏழைகள் என்றாலும் எண்ணற்றோர்\nசித்தர்களின் ரசவாத வித்தை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/entertainment", "date_download": "2021-08-02T10:07:11Z", "digest": "sha1:VQLIQDV5TKUTORT4APAIZXDR3AACUGFZ", "length": 6105, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "entertainment | entertainment Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஆலிஸ் பேக்கரி சின்ஸ் 1960 - சிறுகதை\n2K kids: 2கே கிட்ஸ் ஜேஜே சொல்லும் கொரியன் டிராமா... ஏன்\nஎன் வீட்டுக்கு யாரும் வராதீங்க... தற்சார்பு வாழ்க்கையால் ஈர்க்கும் யூடியூபர் ஜெனல்\n``வில்லன்களை வேரோடு அழிக்கிறதுதான் `முடக்கருத்தான்'\" - ஹீரோவாக அறிமுகமாகும் சித்த மருத்துவர் வீரபாபு\n`என் மீது என்ன தவறு' ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ விவகாரம்; அப்பீலுக்குப் போகும் விஜய் #VikatanExclusive\n``பானுசந்தர், ராகவி வரல; ரொம்ப எமோஷன் ஆன இர்ஃபான்..\" - `கனா காணும் காலங்கள்' ரீ-யூனியன் பற்றி ரேகா\n`திடீர் பிளான், லஞ்ச் மீட், நிறைய அன்பு பரிமாற்றம்' - 80'ஸ் நட்சத்திரங்கள் சந்திப்பு குறித்து ராதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/10/blog-post_61.html", "date_download": "2021-08-02T10:14:40Z", "digest": "sha1:O2P6IQZFHNZWXO3TDKERUTCUM7ITINWY", "length": 21504, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் மௌனம் கவலையளிக்கிறது - கணேஸ் வேலாயுதம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சம��்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் மௌனம் கவலையளிக்கிறது - கணேஸ் வேலாயுதம்\nஜனாதிபதியான மறுநாளே சிறையிலுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்வேனென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது” என, மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியானதும் நவம்பர் 17 ஆம் திகதி சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.\n“அவரது பேச்சில் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.\n\"அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன்போது வாக்குறுதிகள் வழங்கி உண்ணாவிரதங்கள் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் அவர்களின் விடுதலை என்பது முடிவின்றி தொடர்ந்து செல்கின்றது.\n“இவ்வாறான சூழ்நிலையில் சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் விடுவிக்கப்படுவர் என்ற கோட்டாபயவின் கருத்து இனவாதத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.\n\"மேலும், நல்லாட்சியில் 4 1/2 வருடமாக மறைந்திருந்த கடந்த கால இருண்ட யுகத்தை மீண்டும் நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கருத்து தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள தமிழ் கட்சிகள் மௌனம் காக்கின்றன.\n“இது கவலையளிக்கின்றது. எனவே, கோட்டாபயவின் கருத்து தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கிய��ு தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nபுளொட் உள்வீட்டு படுகொலைகளில் சக தோழி கற்பழிக்கப்பட்டாள். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் அஷோக்-\nதமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அடையாளமாக அதன் உள்வீட்டு படுகொலைகளே எஞ்சியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவிழ்கப்படாத முடிச்சு...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஎந்த பிரபாகரன் கமியூனிசமும் சேகுவரா கதைகளையும் படித்தவர்\nஇந்த மேதகு என்றொரு கதை வந்தாலும் வந்தது, ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். அதில் பிரபாகரன் கம்யூனிசம் படிக்கின்றானாம், சேகுவேரா புத்தகமெல்லாம் வ...\nஅலுக்கோசுகளின் சினிமா தான் \"மேதகு\"\nதூக்குமேடையில் தூக்கு போடும் அலுக்கோசுகள் போன்றே, பிழைப்புவாத ஈழ ஆதரவு தமிழக கும்பல்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளும் குறுகிய வழிபாட்டை ஊக்...\nகொரோணா தொற்றின் பின்னால் ஒழிந்து நின்று நாட்டின் எஞ்சியுள்ளவற்றையும் அரசு விற்கின்றாதாம். சாடுகின்றது ஜேவிபி\nமக்கள் பெரும்தொற்றுக்கு உள்ளாகி வீடுகளுள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எஞ்சியுள்ள சில நிலங்களை விற்க முற்படுகின்றது, பொருத்தமானதும் உ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\n சாத்திரி பேசுகிறேன் பாகம்: மூன்று\nபுலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சக்கைசாத்திரி என்பர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருக்கின்றார். அவர் அங்கு அருளின...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nரவிராஜ் புலிகளின் பெரும் விசுவாசி, அவ்வியக்க��்தினை நேசித்தவர் மட்டுமல்ல மரணத்தின் பின்னர் பிரபாகரனால் மாவீரல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டத��\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2584-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-2.html", "date_download": "2021-08-02T09:54:43Z", "digest": "sha1:SWNCTIGJKNNO7K5EOOOKAZD2GXFBTOW5", "length": 18569, "nlines": 185, "source_domain": "dailytamilnews.in", "title": "போலீஸாரை கண்டித்து பெண் தனியாக சாலை மறிய ல்.. – Daily Tamil News", "raw_content": "\nபோலீஸாரை கண்டித்து பெண் தனியாக சாலை மறிய ல்..\nபோலீஸாரை கண்டித்து பெண் தனியாக சாலை மறிய ல்..\nஇராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை: கண்டுகொள்ளாத காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரி தனி ஒரு பெண் சாலையில் செங்கல்களை அடுக்கி சாலை மறியல்:\nவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அய்யனார் கோவில் செல்லும் சாலையில் அம்பேத்கர் நகர் உள்ளது. இந்தப்பகுதி எதிரே தனியார் கல்லூரி மற்றும் 2 ஆங்கில வழி கல்வி தனியார் பள்ளிகள், கல்லூரிகளும் உள்ளன.\nஇந்நிலையில் , இந்த பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும், இதனால், கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வாழ்க்கை தொலைத்து போதைக்கு அடிமையாகி உள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மனைவி செல்வராணி (வயது 35) செங்கல்களை சாலையில் அடிக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nமறியலில் ஈடுபட்ட செல்வராணி கூறும்போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உட்பட அனைவரிடமும் புகார் அளித்துள்ளேன் . ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று அய்யனார் கோவில் செல்லும் சாலையில் சாலைகளில் செங்கல்களை அடுக்கி தனி ஒரு பெண்ணாக போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாகவும் தெரிவித்தார்.\nதகவல் அறிந்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், மறியல் ஈடுபட்ட பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இப் பகுதியில் கஞ்சா விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nமதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.\nமதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:\nமதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.\nஇந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்\nஅனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.\nமேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nசோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:\nசோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை ���ிகழ்ச்சி:\nதமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.\nசிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.\nவணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nசென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும்.. பட்டையைக் கிளப்ப தயாராகும் தல ரசிகர்கள்\nதனித்தீவில் மிரட்டி நிர்வாண ஷூட்டிங்\nஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா\nஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஓலா வின் எலக்ட்ரிக் பைக்\nஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]\nசென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]\nசெல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்\nகுகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/zara-mcdermott-pink-bikini-bathroom-selfie-shakes-the-internet-073345.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T09:22:59Z", "digest": "sha1:OOPK6PKPBU6OB7OGHORTYQABYSACVN5J", "length": 16290, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மறைப்பதற்கு ஒன்றுமில்லை.. உள்ளாடையுடன் ஒய்யார செல்ஃபி.. பிகினியில் வசீகரிக்கும் ரியாலிட்டி ஸ்டார்! | Zara McDermott pink bikini bathroom selfie shakes the internet! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nNews கொரோனாவுக்கு நன்றி சொல்லி.. ஆடியிலும் கொண்டாடித் தீர்க்கும் மாழ்பழ ரசிகர்கள்\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nFinance e-RUPI: மக்கள் இனி காத்திருக்க தேவையில்லை.. 8 வங்கிகளுக்கு அனுமதி..\nSports 50மீ துப்பாக்கி சூடு.. இந்திய வீரர்கள் பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் தோல்வி.. வெளியேற்றம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமறைப்பதற்கு ஒன்றுமில்லை.. உள்ளாடையுடன் ஒய்யார செல்ஃபி.. பிகினியில் வசீகரிக்கும் ரியாலிட்டி ஸ்டார்\nஸ்பெயின்: லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாரா மெக்டெர்மாட், பிகினி உடையில் வெளியிட்டு இருக்கும் பாத்ரூம் செல்ஃபி வைரலாகி வருகிறது.\n23 வயதாகும் இவர், ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவில், தனது ஆண் நண்பருடன் ஹ���லிடேவை கொண்டாடி வருகிறார்.\nஇந்த ஆண்டு இறுதியில், சாராவை அவரது ஆண் நண்பரான சாம் தாம்சன் புரொபோஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.\nதுல்கர் சல்மானின்..ராணுவ வீரன் ராம் போரூற்றி எழுதிய காதல் கதை..பர்ஸ்ட் லுக் போஸ்டர் \nஇபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வரும் ரியாலிட்டி ஸ்டாரான சாரா மெக்டெர்மாட், அங்குள்ள சாண்டா மெரினா எனும் இடத்தில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் நீல நிற பிகினியில் படு செக்ஸியாக நின்றபடி போஸ் கொடுத்து, சர்வதேச ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளார்.\nபச்சை நிற பிகினியில், பின்னழகு மொத்தமும் தெரியும் வண்ணம், உச்சகட்ட கவர்ச்சியில், சாரா வெளியிட்டுள்ள இந்த ஹாட் போட்டோவை பார்த்தாலே ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்வார்கள். மேலும், அந்த புகைப்படத்தை பதிவிட்டதோடு மட்டுமல்லாமல், ‘ஃபாலோ மீ' பின் தொடருங்கள் என்ற கேப்ஷனையும் சாரா பதிவிட்டுள்ளார்.\nஸ்லிம் பியூட்டியாக இருந்தாலும், சாப்பாடு விஷயம் என்று வந்துவிட்டா சாராவை கட்டுபடுத்தவே முடியாது. பீட்சா பிரியையான இவர், சமீபத்தில், ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கினார். குடும்பத்தை விட்டு விலகி இந்த வீக்கெண்டை உற்சாகமாக கழிப்பதாகவும் அவர் போட்டிருக்கும் கேப்ஷனுக்கும் லைக்குகள் குவிகின்றன.\n27 வயதாகும் சாம் தாம்சன் என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார் சாரா மெக்டெர்மாட். இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில், சர்ப்ரைஸாக சாம், சாராவை புரொபோஸ் பண்ண போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், பிங்க் நிற உள்ளாடையுடன் பாத்ரூமில் எடுத்த செல்ஃபியை போட்டு தனது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சாரா.\n2வது காதலருடன் லிப் லாக்.. உச்சக்கட்ட கவர்ச்சியில் டிவி நடிகை.. எல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ\nமிரர் செல்ஃபின்னா இப்படி இருக்கணும்.. டிவி நடிகையின் வேற லெவல் புகைப்படம்.. எகிறுது லைக்ஸ்\nஎன்ன கன்றாவி டிரெஸ் இது.. காத்தடிச்சா என்ன ஆகுறது.. டிவி நடிகையை நக்கல் அடிக்கும் நெட்டிசன்ஸ்\nஉள்ளாடை அணியாமல்.. சட்டை பட்டனை கழட்டி விட்டு.. அனலை மூட்டிய பிரபல டிவி நடிகை.. தெறிக்குது லைக்ஸ்\nஎவ்ளோ தின்னாலும் குண்டாகவே மாட்றீங்களே ஏன் ரசிகர்கள் கேள்விக்கு டிவி நடிகை கொடுத்த அட்டகாச பதில்\nஒட்டி.. உரசி.. காதலருடன் வெறும் உள்ளாடையுடன்.. டிவி நடிகை கொடுத்த ஹாட் போஸ்.. வேற லெவல் வைரல்\nவலையில் சிக்கிய பிகினி மீன்.. மணலில் புரண்டு படுத்திருக்கும் மெர்மெய்டு என ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nஇந்த பழம் வேண்டுமா.. தர்பூசணியுடன் பிகினியில் போஸ் கொடுத்த டிவி நடிகை.. வைரலாகும் போட்டோஸ்\nநீச்சல் குளத்தில் ‘நச்’.. காதலனுக்கு லிப் லாக் அடித்த ரியாலிட்டி ஷோ பிரபலம்.. வைரலாகும் போட்டோ\nசாதாரணமாவே நல்லாருக்கும்.. இதை சொல்லவா வேணும்.. பிகினியில் கதறவிடும் டிக்டாக் இலக்கியா\nபிகினியில் ரெஜினா… அட நீங்களுமா… கிளாமர் வேண்டாமே ப்ளீஸ்… கெஞ்சும் ரசிகர்கள் \nமுகத்தை மட்டும் மறைச்சி என்ன பண்றது.. உள்ளாடையுடன் கடலில் கும்மாளம் அடிக்கும் கிம் கர்தாஷியன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிரைவில் முடிய போகுதா பாண்டியன் ஸ்டோர்ஸ்...பிரபல நடிகை கொடுத்த சூப்பர் அப்டேட்\nகொஞ்சம் காத்தடிச்சாலும் அவ்ளோ தான்.. விஜய் பட ஹீரோயின் பண்ற வேலையை பார்த்தீங்களா\nதிடீரென டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா....அக்கினேனி எங்கே போச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil4.com/corona/sudden-decision-by-the-british-government/", "date_download": "2021-08-02T10:16:26Z", "digest": "sha1:CFET3WYMOB2I7PPDWTX6HDZ7RQZ3MKWW", "length": 7916, "nlines": 69, "source_domain": "tamil4.com", "title": "பிரித்தானிய அரசின் திடீர் முடிவு! - Tamil4", "raw_content": "\nபிரித்தானிய அரசின் திடீர் முடிவு\nபிரித்தானியர்கள் பலர் தனிமைப்படுத்துதல் மற்றும் அபராதம் போன்றவற்றில் இருந்து தப்பிப்பதற்காக, நாட்டிற்கு வேகமாக திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகின் பிரபல Spanish தீவுகள் இன்று(19) அதிகாலை 4 மணி வரை மட்டுமே பச்சை நிற நாடுகளுக்கான பட்டியலில் இருக்கும், அதன் பின் அது Amber நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nAmber நாடுகளின் பட்டியலில் ��ேர்க்கப்பட்டால், அங்கிருந்து வருபவர்கள், 10 நாட்களுக்கு வீட்டிற்குள்ளே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு கொரோனா பரிசோதனைக்கு பணம் செலுத்த வேண்டும்.\nபயணங்களின் போது கொரோனா நெகடிவ்விற்கான சோதனை சான்றிதழை காட்ட வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளது. அதன் படி Amber நாடுகளின் பட்டியலில் இருந்து பிரித்தானியாவிற்கு வருபவர்கள் 10 நாட்கள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்படுவர், அல்லது அவர்களுக்கு 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.\nஇதனால் குறித்த தீவுகளுக்கு விடுமுறைக்காக சென்ற பிரித்தானியார்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇது அவர்களின் திட்டங்களை சீர்குலைத்துள்ளது. சுற்றுலா சென்ற அவர்கள்(சுமார் அங்கிருக்கும் 100-க்கும் மேற்பட்டோர்) விதிக்கப்பட்டுள்ள குறித்த காலெக்கெடுவிற்குள் பிரித்தானியா வருவதற்கு முயற்சித்து வருகின்றனர்.\nஇதற்காக அங்கிருக்கும் விமானநிலையங்களில் பயணிகள் வருகை கூடிக் கொண்டே செல்வதாகவும், இதன் காரணமாக பிரித்தானியாவிற்கு பல விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும், பிரான்ஸில் இருந்து வருபவர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. ஏனெனில் அங்கு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதலிபான்களின் தாக்குதலில் மரணமடைந்த இந்திய புகைப்படச் செய்தியாளர்\nவெளிநாட்டிலிருந்து யாழ். திரும்பிய மருத்துவர் கொரோனாவால் மரணம்\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\nஇலங்கையில் 24 மணிநேரமும் தடுப்பூசிகள்\nதம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zw-trailer.com/product-list/used-flatbed-trailer", "date_download": "2021-08-02T08:34:44Z", "digest": "sha1:SBOW4XFYZS3EBWPABSQFUU5RT2CUDDHI", "length": 12957, "nlines": 154, "source_domain": "ta.zw-trailer.com", "title": "", "raw_content": "\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nபயன்படுத்திய ட்ரை ஆக்சில் 53 அடி பிளாட்பெட் அரை டிரெய்லர்கள்\nமலிவான பயன்படுத்தப்பட்ட அரை டிரெய்லர்கள் நடுத்தர கொள்கலன் பூட்டுதல் சாதனம் கொள்கலன் பூட்டுதல் சாதனத்தின் தாங்கி திறனை மேம்படுத்த ஒரு ஒருங்கிணைந்த நீண்ட கற்றை வழங்கப்படுகிறது.\nநாங்கள் பயன்படுத்திய 53 அடி பிளாட்பெட் டிரெய்லர் உயர் வலிமை கொண்ட சர்வதேச எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது, இது வெவ்வேறு சாலை சுமைகளைச் சுமக்கும் திறன்களைச் சந்திக்க முறுக்கு, அதிர்ச்சி மற்றும் புடைப்புகளுக்கு வலுவான எதிர்ப்பைக் கொண்டுள்ளது.\nபயன்படுத்தப்பட்ட ட்ரை ஆக்சில் பிளாட்பெட் டிரெய்லர்கள் வடிவமைப்பு நியாயமானதாகும், மேலும் ஐ-பீமின் முக்கிய கற்றை தாங்கும் திறனை அதிகரிக்கவும், மலிவான பயன்படுத்தப்பட்ட அரை டிரெய்லர்களின் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.\nஅரை டிரெய்லர்கள் பயன்படுத்தப்பட்டன ட்ரை அச்சு பிளாட்பெட் டிரெய்லர்கள் பயன்படுத்தப்பட்டன 53 அடி பிளாட்பெட் டிரெய்லரைப் பயன்படுத்தியது\nபயன்படுத்தப்பட்ட 45 அடி 53 கால் பிளாட்பெட் அரை டிரெய்லர்கள்\n3 அச்சுகள் 45 அடி பிளாட்பெட் டிரெய்லர்களைப் பயன்படுத்தின, பயன்படுத்தப்பட்ட 53 அடி பிளாட்பெட் டிரெய்லர் 45 அடி மற்றும் 53 அடி கொள்கலன்களின் போக்குவரத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட பிளாட்பெட் அரை டிரெய்லர் ஒரு நியாயமான அமைப்பு, நம்பகமான செயல்பாடு மற்றும் அழகான தோற்றத்தைக் கொண்டுள்ளது.\nநிலையான உற்பத்தி மற்றும் நம்பகமான செயல்திறன் கொண்ட முழு உற்பத்தியும் தொழில்நுட்பத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\n. வாடிக்கையாளர் தேவை மற்றும் தேசிய விதிமுறைகளின்படி வெவ்வேறு பிளாட்பெட் டிரெய்லர்களை நாங்கள் வழங்குகிறோம். இந்த டிரெய்லர் பொதுவாக துறைமுகங்களில் பயன்படுத்தப்படுகிறது. கொள்கலனை சரிசெய்ய பல பெட்டி பூட்டுகள் உள்ளன. டிரெய்லரை சரக்குகளை தட்டில் சரிசெய்ய முடிந்தால் சரக்குகளை கொண்டு செல்லவும் பயன்படுத்தலாம். இந்த டிரெய்லரின் எடை மற்ற வகைகளை விட குறைவாக உள்ளது, எனவே பொருட்களை கொண்டு செல்வது வசதியானது.\n45 அடி பிளாட்பெட் டிரெய்லர்கள் பயன்படுத்தப்பட்டன 53 அடி பிளாட்பெட் டிரெய்லரைப் பயன்படுத்தியது பிளாட்பெட் அரை டிரெய்லர்கள் பயன்படுத்தப்பட்டன\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nஹோவ் டிரக் டிராக்டர் அலகுகள் பயன்படுத்தப்பட்டன\nசரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் பக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் கேரியர் டேங்கர் டிரெய்லர்\nகுறைந்த பிளாட்பெட் லோபெட் அரை டிரக் டிரெய்லர்\n ஷிஜோங் மாவட்டம், ஜினான் நகரம், சாண்டோங் மாகாணம்\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\n© ஷாண்டோங் ஜுவோவி இன்டர்நேஷனல் டிரேடிங் கோ, லிமிடெட் + 86-15216409270 ivan@zw-trailer.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-08-02T09:52:28Z", "digest": "sha1:5RPA2CKTJPVLATV4PXOON47JHYGKNEHP", "length": 10878, "nlines": 116, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n“ஆக்சிஜன் கசிவால் மக்கள் இறந்துகொண்டிருந்ததை கண்முன்னே பார்த்தேன்” – 24 பேர் உயிரிழந்த சம்பவத்தின் சாட்சியம்\nமகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவின் காரணமாக 24 பேர் உயிரிழந்த சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பதை அப்போது...\nமகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டாங்கரில் இருந்து வாயுக்கசிவு – 22 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் வாயுக்கசிவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். டாங்கர் லாரியிலிருந்து மருத்துமனையின்...\nஆக்ஸிசன் டாங்கர்ஆக்ஸிஜன்ஜாகிர் உசேன் மருத்துவமனைடாங்கர் லாரிநாசிக்வாயுக்கசிவு\nகொரோனா பரவலை தடுக்க 25 வயது ஆனவர்களுக்கு தடுப்பூசி – பிரதமருக்கு உத்தவ தாக்கரே கடிதம்\nகொரோனா பரவலை தடுக்க 25 வயது ஆனவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை...\nஉத்தவ் தாக்கரேகொரோனா தடுப்பூசிதானேநாக்பூர் அவுரங்காபாத்நாசிக்பிரதமர் மோடிபுனேமகாராஷ்டிராமும்பை\nவிவசாயிகள் போராட்டம் – மும்பையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் கிளர்ச்சி\nஉள்ளிருப்புப் போராட்டம், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று கொடியேற்றி, விவசாயிகள் தொழிலாளர்கள் போராட்டத்தை எப்பாடு பட்டாவது வெற்றியடையைச் செய்வதற்கு உறுதி...\nஅகில இந்திய கிசான் சபாசம்யுக்த் கிசான் மோர்ச்சாசரத் பவார்நாசிக்மும்பைவிவசாயச் சட்டகள்விவசாயிகள் போராட்டம்\nஒன்றிணையும் இந்திய விவசாயிகள் : விவசாய சட்டத்திற்கெதிராகத் தீவிரமடையும் போராட்டம்\nநேற்று (டிசம்பர் 26), மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் குழு டெல்லி எல்லைகளில், விவசாயச் சட்டங்களை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன்...\nஅகில இந்திய விவசாயிகள் சபைடெல்லி சலோநாசிக்மகாராஷ்ட்ராவிவசாய சட்டங்கள்விவசாயிகள் போராட்டம்\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின்...\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம�� – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின் போராட்டம்\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் – தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தகவல்\n‘தற்போதைய பணவீக்கத்திற்கு 1947-ல் நேரு ஆற்றிய உரையே காரணம்’ – ம.பி. பாஜக அமைச்சர்\n‘பெகசிஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை வேண்டும்’ – நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/jagame-thandhiram-trailer-dhanush-aishwarya-karthik-subbaraj", "date_download": "2021-08-02T09:38:03Z", "digest": "sha1:FYVRL3VV35TPDJUBLCY4GXPCQQXUFYDA", "length": 5682, "nlines": 94, "source_domain": "www.cinibook.com", "title": "Jagame Thandhiram - Trailer -Dhanush, Aishwarya-Karthik Subbaraj", "raw_content": "\nNext story வலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nPrevious story பழைய 5 ரூபாய் நோட்டின் மதிப்பு ரூ.30000…\nSPB பெயரில் இசைப்பள்ளி- கௌரவித்த அரசு..\nதர்பார் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nவிஜய் வீட்டில் தொடரும் சோதனை- சிக்கியது 300 கோடி.\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nபுதிய கெட்டப்பில் விஜய்சேதுபதி….கடைசி விவசாயி படத்தில்…\nஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் தேனீர்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nமீரா மிதுன் அரைகுறை ஆடைகளுடன் ஆடும் ஆட்டத்தை பாருங்கள்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/News/gst-council-meeting-on-may-28-2021", "date_download": "2021-08-02T09:00:47Z", "digest": "sha1:HBQ2XOSXMBNY27NKVLCLGTTO7YPEWT24", "length": 5139, "nlines": 82, "source_domain": "www.fnewsnow.com", "title": "மே 28- ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! | GST Council meeting on May 28, 2021 - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nமே 28- ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மே 28- ஆம் தேதி அன்று 43- வது ஜிஎஸ்டி கவுன்சில் (Goods and Services Tax Council) கூட்டம் நடக்கிறது. காணொளி மூலம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில, யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மாநில நிதியமைச்சர்கள் வலியுறுத்துவார்கள் என்று தகவல் கூறுகின்றன. அதேபோல், கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டியை ரத்துச் செய்ய, மாநில நிதியமைச்சர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\nசளைக்காத உழைப்புக்கு ராகுல் டிராவிட்\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/48884/", "date_download": "2021-08-02T09:22:51Z", "digest": "sha1:WCPMTVILKWG6MRRRSP4N7IMBBTYXDD7S", "length": 7314, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "வாழைச்சேனை மீன்பிடி துறைமுக தமிழ் மொழி ஊழியர்களுக்கு சகோதர மொழி பயிற்சி. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவாழைச்சேனை மீன்பிடி துறைமுக தமிழ் மொழி ஊழியர்களுக்கு சகோதர மொழி பயிற்சி.\nமட்டக்களப்பு வாழைச்சேனை இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான சிங்கள மொழி பயிற்சிக்கான இறுதி நாள் நிகழ்வும் அதன் பாராட்டு வைபவமும் இடம்பெற்றது.\nமேற்படி நிகழ்வு வாழைச்சேனை மீன்பிடி துறைமுக அலுவலகத்தில் துறைமுக முகாமையாளர் ரி சிவரூபன் தலைமையில் இன்று(31) நடைபெற்றது..\nஅரச கரும மொழிப் பாடத்திட்டத்திற்கு அமைய இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபன தலைமை காரியாலயத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக ஊழியர்களுக்கு மே 22 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையான பத்து நாட்கள் நடைபெற்ற சிங்கள மொழி பயிற்சிகளை அடுத்து பரீட்சை வைக்கபட்டு சான்றிதழ் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nதலைமை காரியாலய வளதாரிகளால் சிங்கள மொழி இலகுவான முறையில் கற்பிக்கப்பட்டதுடன் சிங்களத்தில் தொலைபேசியில் உரையாடுவது, பேசுவது, நாடகம் நடிப்பது, போன்ற முறைகளை பயன்படுத்தி பயிற்சிகள் நடைபெற்றது அதன் மூலம் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக ஊழியர்கள் தமது தலைமை காரியாரியாலத்தில் சிங்கள மொழி மூலம் நடவடிக்கைகளை தாமாகவே நேரடியாக மேற்கொள்ளுவதற்கான வழிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்.\nNext articleகிழக்கு முதல்வரே கிழக்கில் தமிழ் மாணவர்களும் கல்விபயில்கின்றார்கள்.ஒரு கண்ணை தமிழர் மீதும் செலுத்துங்கள்.\nசாய்ந்தமருது றியலுள் ஜன்னாவுக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின அதிரடி தகவல்.\nமருதமுனையின் மூத்த கல்வி ஆளுமை ஓய்வு நிலை அதிபர் ஏ.எம்.ஏ.சமது அவர்கள் காலமானார்.\nஇலங்கை தமிழர் கெத்சி சண்முகத்திற்கு மெக்சேசே விருது\nகாதி நீதிமன்றங்கள் சட்ட நீதிமன்றம்.நீதி அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2021-08-02T08:22:02Z", "digest": "sha1:DXGCS6PNOJVEA526R2Z5SD6KONDIX65Y", "length": 11310, "nlines": 73, "source_domain": "eettv.com", "title": "நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல் தீர்வில் இல்லை என குற்றச்சாட்டு – EET TV", "raw_content": "\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல் தீர்வில் இல்லை என குற்றச்சாட்டு\nஇலங்கை அரசியல் வரலாற்றில் எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும் தமிழர்கள் இனப்பிரச்சினையை தீர்பதற்கான அக்கறை எவருக்குமே இல்லை தற்போதய நல்லாட்சி என்ற முலாம் பூசப்பட்ட இந்த அரசிலும் பிரதமர் எதிர்கட்சி தலைவர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு காட்டும் அக்கறை ஒற்றுமை இனப்பிரச்சினை தீர்வுக்கு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கைதமிழரசுகட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் குறிப்பிட்டார்.\nகொக்கட்டிச்சோலை கெவிளியாமடு மக்கள் சந்திப்பின்போது இன்று 20/04/2018 கருத்துக்கூறிய அவர் 2015,ல் புதிய அரசு பதவி ஏற்று நல்லாட்சி அரசு என்ற பெயருடன் தற்போது மூன்றுவருடத்தை எட்டும் இவ்வேளையில் பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு பல வழிநடத்தல் குழுக்கள் அமைக்கப்பட்டு அரசியல் யாப்பு திருத்தம் அதனூடாக அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பலரின் மத்தியில் இருந்தது.\nஅதற்காக கடந்த ஆறுமாதங்களுக்கு முன் இடைக்கால அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது\nஆனால் எதுவுமே செயல்வடிவம் பெறவில்லை நல்லாட்சி அரசில் உள்ள கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களானாலும்சரி ஆழும் கட்சி அமைச்சர்களானாலும்சரி அரசியல் யாப்பு சம்மந்தமாகவோ அரசியல் தீர்வு சம்மந்தமாகவோ எந்த நல்லெண்ண நடவடிக்கையும் காட்டவில்லை மாறாக யாருக்காவது நம்பிக்கை இல்லா பிரேரணையை சமர்பிப்பதிலும் அவர்கள் தொடர்பாக விவாதிப்பதற்குமே காலத்தை வீணடிக்கின்றனர்.\nஏற்கனவே பிரதமர் ரணில்விக்கிரமசிங்கா வுக்கு எதிராக கொண்டுவந்து பாராளுமன்றத்தில் விவாதித்து வாக்கெடுப்பு நடாத்தி அந்த பிரேரணை தோல்வி கண்ட நிலையில் தற்போது எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் ஐயாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாபிரேரணை கொண்டுவர கங்கணம் கட்டி செயல்படுகின்றனர்.\nஇதுபோலவே சில அமைச்சர்களுக்கு எதிராகவும் நம்பிக்கை இல்லாபிரேரணை கொண்டுவருவதாக கூறப்பட்ட கதைகளையும் நாம் அறிவோம் இந்த நம்பிக்கை இல்லாபிரேரணைகளை ஆராய்ந்து நோக்கும்போது தமிழ்மக்களின் இனப்பிரச்சனையை தீர்பதற்கு ஒன்றுபடாத இந்த சிங்களத்தலைமைகள் நம்பிக்கை இல்லாபிரேரணைக்குமட்டும் ஒற்றுமையுடன்\nசெயலாற்றுவதையும் அதற்காக அக்கறை காட்டுவதையும் கவனிக்கமுடிகிறது.\nஇதில் இருந்து ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும் பாராளுமன்றத்தேர்தல் இடம்பெற இன்னும் இரண்டுவருடங்கள் மட்டும் ஜனாதிபதிதேர்தல் இடம்பெற இன்னும் ஒருவருடங்கள் இருக்கும் நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளை கிடப்பில் போட்டுவிட்டு அதற்கிடையில் உள்ள காலத்தை கடத்துவதற்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் என்ற வெடிக்காத குண்டுகளை போட்டு காலத்தை கடத்தி அடுத்ததேர்தலில் எப்படி வெற்றிபெறவேண்டும் என்ற இலக்கை மட்டும் நோக்காக்க்கொண்டு அனைத்து பேரினவாத கட்சி தலைவர்களும் செயல்படுகிறார்கள் என்பதையே இவர்களின் நடவடிக்கைகள் கோடிட்டுக்காட்டுகிறது.\nதற்போது எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் ஐயாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாபிரேரணை என்ற நாடகமும் அரசியல் தீர்வை இல்லாமல் செய்யும் ஒரு சதிமுயற்சி என்பதை இலகுவாகபுரிந்து கொள்ள முடியும் நிட்சயமாக எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் ஐயாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாபிரேரணை பாராளுமன்றத்தில் சமர்பித்தால் அது இலங்கை அரசின் உச்ச இனவாதசெயல்பாடு என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும் என பா.அரியநேத்திரன் இவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nநிர்மலா தேவி விவகாரம்: ஆளுநரை போட்டுக்கொடுத்த உளவுத்துறை\nஉதயங்கவை நாடு கடத்த மறுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஒன்ராறியோவில் புதிதாக 218 பேருக்கு COVID-19 தொற்று, 2 பேர் உயிரிழப்பு\n இரண்டு வயதான தமிழ் சிறுவன் பலி\nதீவிரமாக பரவும் டெல்டா வைரஸ் – இலங்கையர்களுக்கு 3 தடுப்பூசிகள்\nரிஷாட்டின் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பெண்\nபுதிய அரசியல் மாற்றம் அவசியம்\nதுருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் புதிதாக 30,738 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,604 பேர் பலி\nஇமாசல பிரதேசம் – கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு, 37,582 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nநிர்மலா தேவி விவகாரம்: ஆளுநரை போட்டுக்கொடுத்த உளவுத்துறை\nஉதயங்கவை நாடு கடத்த மறுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hotspotkitchen.com/ta/non-veg-recipes-ta/", "date_download": "2021-08-02T09:32:23Z", "digest": "sha1:3WRCT4YCJZBOMRKSJ3VYMZAV5JTCK2QI", "length": 7653, "nlines": 140, "source_domain": "hotspotkitchen.com", "title": "அசைவம் » ஹாட்ஸ்பாட் கிச்சன்", "raw_content": "\n4 வகையான மேகி உணவு தயாரிப்பு\nகொள்ளு ரசம் சமையல் குறிப்பு\nசிந்தாமணி சிக்கன் சமையல் குறிப்பு\nதென்னிந்திய மத்தி மீன் மண்பானை குழம்பு\nவஞ்சிரம் மீன் குழம்பு சமையல் குறிப்பு\nமதுரை வெள்ளாட்டு கறிக்குழம்பு / மட்டன் குழம்பு\nஇறால் பிரியாணி செய்வது எப்படி\n4 வகையான மேகி உணவு தயாரிப்பு\nகொள்ளு ரசம் சமையல் குறிப்பு\nசிந்தாமணி சிக்கன் சமையல் குறிப்பு\nதென்னிந்திய மத்தி மீன் மண்பானை குழம்பு\nவஞ்சிரம் மீன் குழம்பு சமையல் குறிப்பு\nமதுரை வெள்ளாட்டு கறிக்குழம்பு / மட்டன் குழம்பு\nஇறால் பிரியாணி செய்வது எப்படி\nஹாட்ஸ்பாட் கிச்சன் > வலைப்பதிவு > அசைவம்\nசிந்தாமணி சிக்கன் சமையல் குறிப்பு\nதென்னிந்திய மத்தி மீன் மண்பானை குழம்பு\nவஞ்சிரம் மீன் குழம்பு சமையல் குறிப்பு\nஇறால் தொக்கு சமையல் குறிப்பு\nவீட்டில் சமைத்த தந்தூரி சிக்கன் சமையல் குறிப்பு\nரெஸ்டாரென்டு பானி சிக்கன் ப்ரைட் ரைஸ்\nவீட்டில் செய்த சிக்கன் ஷவர்மா சமையல் குறிப்பு\nநெத்திலி மீன் வறுவல் சமையல் குறிப்பு\nபாரம்பரியமான தென்னிந்திய சமையலை வழக்கமான உணவுகளுடனும் அசல் சுவையுடனும் உங்கள் சமையலறைக்கே கொண்டு வருகிறது ஹாட்ஸ்பாட் கிச்சன்.\n4 வகையான மேகி உணவு தயாரிப்பு\nபாரம்பரிய தென்னிந்திய சமையலை வழக்கமான உணவுகளுடனும் அசல் சுவையுடனும் உங்கள் சமையலறைக்கே கொண்டு வருகிறது ஹாட்ஸ்பாட் கிச்சன். வடஇந்திய சமையற்கலை, சீனா மற்றும் அதிகளவு சிக்கன், மட்டன், கடல் உணவு, சைவம், முட்டை, பசியை தூண்டும் உணவு, இனிப்புகள், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை கொண்ட காண்டினென்டல் மற்றும் காலை உணவு மற்றும் இரவு உணவு சமையலையும் நாங்கள் செய்து காட்டுகின்றோம். சுவையும் நறுமணமும் நிறைந்த உலகிற்கு உங்களை வரவேற்கிறோம்\nஎங்கள் சேனலை ஸப்ஸ்க்ரைப் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/35", "date_download": "2021-08-02T09:49:35Z", "digest": "sha1:YB744EYC3AA7RKNU6EMP72SNJY2U7ZME", "length": 7870, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஅவ்வாறே போற்றப்பட்டன. கல்வித்துறை நெறியில் மாவட்டக் கல்வி அலுவலர், வட்ட ஆய்வாளர்களின் நேர்முகப் பார்வையோடு, அம்மாவட்டக் கழக உறுப்பினர் அடிக்கடி பள்ளிகளைப் பார்வையிட்டு வந்தமையின் பள்ளிகள் முறையாக நடைபெற்றன எனலாம். கல்லூரி தவிர்த்து மற்றைய எல்லாப் பள்ளிகளும் இவர்கள் மேற்பார்வையிலேயே இருந்தன.\nஇன்றோ இந்த நிலை இல்லை. பஞ்சாயத்து ஒன்றியங்கள் என்று பெயரளவில் இருப்பினும் அதன் எல்லை விரிந்துள்ளமையின் தனி உறுப்பினர் நேர்முகப் பார்வை அருகிவிட்டது. முன் இருந்தமை போன்று ஒன்றியத்துக்கென, கல்வியைக் கவனித்துப் போற்ற, தனிக் கல்வி அலுவலகமும் கிடையாது. அரசியல் சூழலால் அடிக்கடி இந்த ஒன்றியங்களும் கலைக்கப் பெறுகின்றன. எனவே ஊர்தோறும் கல்வியில் முன்னேற்றம் காண முடியவில்லை எங்கிருந்தோ ஆய்வாளர்-முன் அறிவிப்புடன் வரும்போது எப்படியோ வகுப்புகளைச் சரிகட்டிக் காட்டிவிட்டுப் பல நாள் மூடிக் கிடக்கும் பள்ளிகள் பல உள. தனியாசிரியர் பள்ளிகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. தக்க நல்லாசிரியர்களும் தற்காலத்தில் கிடைப்பதரிது. எனவே கிராமப் பள்ளிகளில் நல்ல முறையில் கல்வி அமைய வேண்டுமாயின் நெருங்கிய தொடர்புடைய நல்லவர் குழுக்கள் தேவை. இங்குள்ள பிற நிலைகளைப்பற்றிப் பின்பு தனியாகக் காணலாம்.\nவயது வந்தோருக்கு எனக் கல்வி கற்பிக்கும் முறை நாட்டில் போற்றப்பெறுகின்றது. அதற்கெனக் கோடிக் கணக்கில் மத்திய அரசும் மாநில அரசும் போட்டியிட்டுக் கொண்டு செலவு செய்கின்றன. பல தனியார் நிறுவனங்களும்கூட ஓரளவு உதவுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனினும் செலவுக்கு ஏற்ற பயன் விளைவதில்லை. ஏட்டுக் கணக்கினை\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 26 சனவரி 2019, 12:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/today-corona-case-in-tamilnadu-5/", "date_download": "2021-08-02T09:46:23Z", "digest": "sha1:IOODQ4X4AFGCKZKSQGK2AM4DU4OMXELF", "length": 6570, "nlines": 117, "source_domain": "tamil.newsnext.live", "title": "தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று ! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று \nகொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்க தொடங்கியது நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து சென்றது.இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் தனி தனியே ஊரடங்கை அறிவித்தன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.தமிழகத்தில் இன்று 6,596 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது\nசென்னையில் 396 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 6,200 பேருக்குத் தொற்று உள்ளது.\nதொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,709 பேர். பெண்கள் 2,887 பேர்.இன்று கொரோனாநோய்த் தொற்றினால் 166 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதனுஷ் – செல்வராகவன் படத்தின் அப்டேட் \nசத்தம் இல்லாமல் அதிகரிக்க தொடங்கிய டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு \nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nதொடர் சரிவில் தங்கம் விலை\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\n5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nசத்தம் இல்லாமல் அதிகரிக்க தொடங்கிய டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு \nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\nதொடர் சரிவில் தங்கம் விலை\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil4.com/news/indian-news/trapped-groom-marriage-stopped-in-half/", "date_download": "2021-08-02T08:54:24Z", "digest": "sha1:47RXURJ3WJ7LHRMLO3TNXVPCYYQQCTXV", "length": 7191, "nlines": 68, "source_domain": "tamil4.com", "title": "வசமாக மாட்டிக்கொண்ட மாப்பிள்ளை – பாதியில் நின்ற திருமணம்! - Tamil4", "raw_content": "\nவசமாக மாட்டிக்கொண்ட மாப்பிள்ளை – பாதியில் நின்ற திருமணம்\nமாப்பிள்ளைக்கு உருது தெரியாததால் திருமணம் பாதியிலேயே நின்ற சம்பவம் ஒன்று இந்தியாவில் ���டம்பெற்றுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் மகராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் தங்கள் மகளுக்காக திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர்.\nமக்கள் மணமக்கள் இருவரும் பரஸ்பரம் சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமாகி இருந்தனர். இந்நிலையில் அந்த பெண் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். ஆண் வேறு மதத்தைச் சேர்ந்தவர்.\nஇந்நிலையில் ஆண் இஸ்லாம் மதத்தை சாராதவர் என்பதால் அவரை திருமணம் செய்ய பெண் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என இருவருக்கும் முன்னரே தெரிந்து இருவரும் சேர்ந்து அந்த ஆண் முஸ்லீம் தான் என அவர்களது பெற்றோரை நம்பவைத்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்தனர். இந்நிலையில் திருமணத்தின் போது மணமகன் இஸ்லாமிய முறைப்படி உருது பேச தெரியாமல் தவித்துள்ளார்.\nஇதனால் அங்கிருந்தவர்களுக்கு இவர் உண்மையிலேயே இஸ்லாமியர் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது பான் கார்டை வாங்கி சோதித்து பார்த்தபோது தான் அவர் இஸ்லாமியரே இல்லை என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அவர் அங்கிருந்து ஓட முயன்றபோது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். பொலிஸார் விசாரணை நடத்தும் போது தான் மணமகளுக்கு இவர் இஸ்லாமியர் இல்லை என்ற விஷயம் தெரியும் என்றும் இருவரும் சேர்ந்து வாழ்வதற்காகவே பொய் சொன்னதாகவும் கூறினார்.\nஇதையடுத்து திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது.\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா இல்லை\nகொரோனா தொற்றுடன் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n30 வயது இளைஞரை கடத்திச் சென்று திருமணம் செய்த 50 வயது பெண்\nதமிழகத்தில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிப்பு\nதம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2012-11-30-17-47-56/", "date_download": "2021-08-02T09:53:38Z", "digest": "sha1:J656RTSNXIWKWS7LE47L5AQZXWBO35JD", "length": 10809, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்திய முன்னாள் பிரதமர் ஐகே. குஜரால் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார் |", "raw_content": "\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க உத்தரவிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை.\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்\nஇந்திய முன்னாள் பிரதமர் ஐகே. குஜரால் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார்\nஇந்திய முன்னாள் பிரதமர் இந்தர் குமார் குஜரால் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93.\nநுரையீரல் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐகே. குஜரால், தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்\nசிகிச்சைபெற்று வந்தார். குஜராலுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர்கள், கைவிரித்துவிட்ட நிலையில் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு அவரது உயிர்பிரிந்தது.\nதிறமையான அரசியல் வாதியாகத் திகழ்ந்து, அரசியலில் தனக்கென ஒருஇடத்தைப் பிடித்தவர் மறைந்து முன்னாள் பிரதமர் ஐகே. குஜரால். 1919ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பிறந்த இந்தர் குமார் குஜரால், இந்தியாவின் 12வது பிரதமராக ஓராண்டு காலம் பதவி வகித்தவர்.\nசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1942ஆம் ஆண்டு “இந்தியாவை விட்டு வெளியேறு” இயக்கப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைச் சென்றவர் குஜரால். 1975ஆம் ஆண்டு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக குஜரால் பதவியேற்றார்.\nஇதற்கிடையே 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குஜரால், ஜனதா தளக் கட்சியில் சேர்ந்தார். 1989ஆம் ஆண்டு பஞ்சாப் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசுதந்திரப் போராட்ட வீரராகவும், அரசியல் வாதியாகவும், சிறந்த பிரதமராகவும் தனது பணியினை சிறப்பாக செயலாற்றியவர் ஐ.கே. குஜரால். இரண்டு முறை இந்தியாவின் அயலுறவுத் துறை அமைச்சராக இருந்து பல்வேறு அயல்நாட்டுடனான பிரச்னைகளை சுமூகமாக முடித்தவர்.\n1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், எச்.டி. தேவேகௌடா அரசுக்கு அளித்த வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்ள முடிவு எடுத்த போது பிரதமர் பதவிக்கு ஐ.கே. குஜரால் தேர்வு செய்யப்பட்டார். சரியாக ஓராண்டுகள் குஜரால் பிரதமர் பதவியை வகித்தார். அந்த கால��்கட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை குஜரால் திறமையாக சமாளித்தார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் இன்று காலமானார்\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஅடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார்\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் காலமானார்\nஐகே குஜரால், காரணமாக, நுரையீரல், பாதிப்பு\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nகோடை மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும்\nஅசாம் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் ப� ...\nரஷ்யாவை கதிர்வீச்சு தாக்கும் ஆபாயம்\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவ� ...\nராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறு ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unearthcom.blogspot.com/2015/02/", "date_download": "2021-08-02T10:05:48Z", "digest": "sha1:KTRGE4CL2IMKQC6A5DKLBGVUEJKL2B7A", "length": 14528, "nlines": 83, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: February 2015", "raw_content": "\nJaffna Muslim: ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய 1600 ஆவணங்கள் மீட்பு...\nJaffna Muslim: ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய 1600 ஆவணங்கள் மீட்பு...: ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் அடங்கிய 1600 ஆவணங்கள் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ ...\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி கையொப்பம் பெற்ற வெற்றுக் கடதாசிகளை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டினார்.\nபதவியிழந்த இந்நாள் ஜனாதிபதி ஒளித்து வைக்கப்பட்ட ஊழல் பேர்வழிகளின் கோப்புக்களை வைத்துக் கொண்டு பொம்மைகளாக்கியுள்ளார் மக்கள் பிரதிநிகளை\nமொத்தத்தில், தேசத்துரோகங்களே தேசபிதாக்களால் முன்னெடுக்கபட்டுள்ளன\nCOLOMBO MAIL.TODAY: மஹிந்தவின் குடும்பத்தைப் பாதுகாக்க 200 பாதுகாப்பு ...\nCOLOMBO MAIL.TODAY: மஹிந்தவின் குடும்பத்தைப் பாதுகாக்க 200 பாதுகாப்பு ...: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனைவிக்கு அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக 50 பேர் கொண்ட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை வழங்குமாற...\nதிருடர்களைப் பிடிப்பதற்காக படையணிகள் அமர்த்தப்பட்ட காலம் மாறி, திருடர்களுக்குப் பாதுகாப்பு வழங்கம் பாரம்பரியம் தோன்றியுள்ளதா என்ற சிந்தனை உருவாவதில் தவறில்லையே.\nமுன்னாள் ஜனாதிபதிக்கு நடைமுறைச் சட்டத்திற்கமைய பாதுகாப்பு கொடுக்க வேண்டியதுதான். ஆனால், முன்னாள் செயலாளர்களுக்கும் அப்படிக் கொடுப்பதற்கு இந்நாட்டு நடைமுறைச் சட்டம் இடமளிக்கின்றதா\nஅடுத்து, முன்னாள் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பை, அவர் வேறு யாருக்கும் கொடுக்க முடியுமா போன்ற வினாக்களும் எழவே செய்கின்றன\nCOLOMBO MAIL.TODAY: முஸ்லிம் தனவந்தரை கொலை வெறியோடு திட்டி விரட்டிய ம...\nCOLOMBO MAIL.TODAY: முஸ்லிம் தனவந்தரை கொலை வெறியோடு திட்டி விரட்டிய ம...: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவோடு மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு முஸ்லிம் தனவந்தருக்கு நடந்த உண்மையான கதையிது. கொழும்பிலுள்ள பிரபல ரெஸ...\nமுஸ்லிம்களை அழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர் போன்றே சென்ற ஆட்சியின் போது செயல்பட்டார் என்பதை யாரும் மறந்துவிடலாகாது. அவரது சூழ்ச்சிக்கு எதிராக அல்லாஹ் சூழ்ச்சி செய்ததன் விளைவே, அவரது வாயாலேயே தனது அழிவுக்கு நாள் குறிக்க வைத்தது. அனைப் பயன்படுத்தியது அரசியலில் எதிரணியான ஜவிபெ வும் ஐதேகவும், அதிருப்தியாளர்களான ஹெம்ல உரிமய வும், நலன்விரும்பிகளான மக்கள் தலைவர்களும். அவர்களோடு கைகோர்த்தனர், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும், அநீதிக்கு உள்ளான தமிழர்களும். ஆதலால், மஹிந்தரிடம் இதை விட எதிர்பார்ப்பதற்க இல்லை. அவர் ஆட்சியில் அமர்ந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை யூகிக்கவும் முடியாது\nJaffna Muslim: தோல்வியடைந்திருப்பின் மண்ணோடு கலந்திருப்பேன், ஜனா...\nJaffna Muslim: தோல்வியடைந்திருப்பின் மண்ணோடு கலந்திருப்பேன், ஜனா...: “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடு த்துள்ளோம். இலக்கை வெற்றிகொள்ள முடியும் என்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது”...\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் என்பது, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான போட்டியாளர்கள் மத்தியில் நட்த்தப்பட்ட தேர்தல் அல்ல. அது ஒரு ஜனாதிபதியுடன், அவரது முழு அதிகாரத்துடன் போட்டி ‌போடவைவைத்த தேர்தல். சாதாரண தேர்தல்களிலேயே இந்நாட்டில் நிலவிய அத்துமீறல் சிந்தித்துப் பார்க்க முடியாதவையாக இருந்ததென்றால், ஒரு அராஸக ஆட்சி நடத்திக் கொண்டிருந்த, ஒரு ஜனாதிபதியுடன் போட்டி போடுவதில் எவ்விதமான அச்சுறுத்தல், மனநிலை பாதிப்பு போன்றவையை முகங் கொள்ள வைத்திருக்கம் என்பது எழுத்தில் வடிக்க முடியாதது.\nஆனாலும், இந்த தேர்தலில் நடந்த ஒரு புதுமைதான், மக்கள் தாமாக முன்வந்து ஆட்சியிலிருப்பவரைத் தூக்கி எறியாமல் விட்டுவிட்டால், தமதும் தமது சந்ததியினருடைய எதிர்காலமே கேள்விக்குரியதாகிவிடும் என்ற மனநிலையில் எதிர் கொள்ளப்பட்ட உத்வேகம் இதனை இறை செயல் என்று கூறுவதைத் தவிர வழியில்லை. அதனால் மைத்திரி அவர்களுக்கு மக்கள் ஆதரவைப் பெறுவதற்காகச் செய்யப்பட வேண்டிய முயற்சிகள் வெகுவாகக் குறைந்திருந்தன. ஊடகங்கள், கருத்தாளர்கள், விமர்சகர்கள், சமூக முன்னோடிகள் தாமாகக் களமிறங்கிப் பல்றேு வழிகளில் தமது பங்கை அராஜகத்தை ஒழிப்பதில் செலுத்தினர்.\nஉண்மையில் இந்த ஜனாதிபதித்அ தேர்தலில் மஹிந்தர் தோற்றிராவிட்டால், மைத்திரி அவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரை இன்று இந்நாடு இழந்திருக்கும் என்பது யாவரும் அறிந்ததே இறைவன் இந்நாட்டையும் மக்களையும் அராஜகத்தின் பிடியிலிருந்து காப்பற்றிவிட்டான்.\nஇச்செயல், புலிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றியதைவிடப் பல மடங்கு மேலானது. காரணம், புலிகளை அனைவரும் எதிரியாகப் பார்த்தனர். ஆனால், இவர்கள் மக்கள் மத்தியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரம் கொடுக்கப்பட்ட ஆட்சியாளர்களாகவும், புலிகளை ஒழித்தவர்களாகவும் மக்கள் மத்தியில் அறிமுகமாகிக் கொண்டு சுதந்திரம் பெற்றுத் தந்த புருஷர்கள் எனக் கூறிக் கொண்டு இருந்தனர்.\nஅதனைத் தகுதியாகக் காட்டி மக்களை இருட்டிலும், மருட்சியிலும், வெருட்சியிலும் வாழ்க்கையை ஓட்ட வைத்தனர். அடிக்கடி புலிக்கதைகளைக் கூறி, அவர்களுக்கு எதிராக சிந்திக்கக் கூட முடியாத நிலையை உருவாக்கிய வண்ணம் இருந்தனர். மேலும், அத்தோடு அபிவிருத்தி என்ற மாய மானை மக்கள் முன்வைத்து மக்களை மயக்க நிலையில் வைத்திருந்தனர். சூறையாடுதலையே தமது முழுமையான இலக்காகக் கொண்டிருந்தனர். இத்தேர்தலில் பழைய நிலை களையப்படாதிருந்தால், இந்நாடும் ஒரு சோமாலியாவாக மாறி இருக்குமென்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.\nGossip Lanka tamil: முன்னால் ஜனாதிபதி விட்ட தமிழ் பிழை...\nGossip Lanka tamil: முன்னால் ஜனாதிபதி விட்ட தமிழ் பிழை...\n“முன்னால்“ என்பது பிழை, ”முன்னாள்” எ்னபதே சரி. அவருடைய தமிழைப் பிழை காண வந்தவர், பிழையாக எழுதுவது, ஆந்தையைப் பலித்த கூகையின் கதையாகி உள்ளது\nJaffna Muslim: ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய 1600 ...\nCOLOMBO MAIL.TODAY: மஹிந்தவின் குடும்பத்தைப் பாதுக...\nCOLOMBO MAIL.TODAY: முஸ்லிம் தனவந்தரை கொலை வெறியோட...\nJaffna Muslim: தோல்வியடைந்திருப்பின் மண்ணோடு கலந்...\nGossip Lanka tamil: முன்னால் ஜனாதிபதி விட்ட தமிழ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Think/sorry-to-say", "date_download": "2021-08-02T10:13:32Z", "digest": "sha1:KAAFT5A36E4ADPF7T6B3FJLJ4MEFNMYR", "length": 8137, "nlines": 124, "source_domain": "www.fnewsnow.com", "title": "மன்னிக்கப் பழகுவோம்... | Sorry to say - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nஊருக்காக நீங்கள் உழைத்தாலும் *உங்களை நினைத்துப் பார்க்காத* உலகம் இது மன்னித்து விடுங்கள்.\nஅவர்களுக்கு தெரியாது *நீங்கள் இவ்வுலகிற்காக உழைக்கப் பிறந்தவன்* என்று.\nஉங்களால் உதவிகள் பெற்றவர்கள் எல்லாம் உங்களை எண்ணிப்\nஅவர்களுக்கு தெரியாது *நீங்கள் பயன்கருதாது உதவிகள் செய்பவன்* என்று.\nஉங்கள் உழைப்பை கொண்டு வாழ்வோர், வாழ்ந்தவர் எல்லாம் உங்களை உதாசீனப்படுத்தினாலும்\nஅவர்களுக்கு தெரியாது *நீங்கள் சகிப்புத்தன்மை நிறைந்தவர்* என்று.\nஉங்கள் நிழலில் இளைப்பாறுபவர்கள் கூட உங்களை வெட்டி காயப்படுத்தினாலும்\nஅவர்களுக்கு தெரியாது *எத்தனை முறை உங்களை வெட்டினாலும் மீண்டும் தழைத்து வந்து நிழல் தரும் உங்கள் அருமை*\nஉங்களைப் பார்த்து சிரிப்பவர்கள் எல்லோரையும்\n*நீங்கள் சிரிக்கப் பிறந்தவன் , மற்றவர்களையும் சிரிக்க வைக்கப் பிறந்தவன்* என்பது அவர்களுக்கு தெரியாது.\nஉங்களைப் பார்த்துப் பழகியவர்கள் கூட பக்கத்தில் வந்து *பரிகாசம் செய்தாலும்*\nஅவர்களுக்கு தெரியாது *நீ பக்குவப்பட்டவன்* என்று.\nஅதிகாரம், ஆணவம், அகந்தை கொண்டு உங்களிடம் ஆட்டம் போட்டாலும்\n*அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்* என்பது அவர்களுக்கு தெரியாது.\nஉங்களுடைய பொருளை தனது என, தனக்கு என எடுத்துச் சென்றாலும்\n*நீங்கள் தானம் செய்யப்பிறந்தவன்* என்பது அவர்களுக்கு தெரியாது.\nதெரிந்தவர்கள் கூட *நீ* (ங்கள்) யார் என்று கேட்டாலும்\n*நீங்கள் இறைவனின் குழந்தை* என்பது அவர்களுக்கு தெரியாது.\nபொருள் மீது பற்று கொண்டு *போகும் வழி மறந்து* விடுவோரையும்\nஇங்கு *எதுவும் நிலையில்லை* என்பது அவர்களுக்கு தெரியாது.\nஒரு மனிதனுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை\nமன்னித்து மறக்கத் தெரிந்தவன் மகான்\nமன்னித்து, மறந்து, மறுபடியும் உதவி செய்பவன் இறைவன்\nஇறைவனைச் சேரும் வரை இறைவனைப்போல் வாழ்வோம்..\nபஞ்சபாண்டவரும் விடுகதையும் ஒண்ணு பாக்கலாமா\nஆய 64 கலைகள் என்ன தெரியுமா\nஎது நடந்தாலும் அது நன்மைக்கே....\nதோற்றுப்போனால் வெற்றி உண்டு எப்படி\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/KSL-MEDIA-LIMITED/Indhu-Tamizh-Thisai/Newspaper/362645", "date_download": "2021-08-02T10:32:26Z", "digest": "sha1:I3VPCLKYKJVGGX36PUL6WZHJN5JAYICY", "length": 6185, "nlines": 135, "source_domain": "www.magzter.com", "title": "Indhu Tamizh Thisai-August 01, 2019 Newspaper - Get your Digital Subscription", "raw_content": "\nதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு 3 லட்சம் பேருக்கு ரேஷன் அட்டை\nஇந்தியப் பொருளாதாரப் பணி தேர்வில் காஷ்மீர் விவசாயி மகன் 2-ம் இடம் பிடித்து சாதனை\nஸ்ரீநகர் இந்தியப் பொருளாதாரப் பணி தேர்வில் (ஐஇஎஸ்) ஜம்மு-காஷ் மீரைச் சேர்ந்த விவசாயியின் மகனுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது.\n24 மணி நேரத்தில் 41,831 பேருக்கு கரோனா\nபுதுடெல்லி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nடோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் பி.வி.சிந்து\n2-வது முறை பதக்கம் வென்று சரித்��ிர சாதனை படைத்தார்\nபி அண்ட் ஜிகுளோபல் சிஓஓ-வாக இந்தியர் சைலேஷ் நியமனம்\nமும்பை பிராக்டர் அண்ட் கேம்பிள்(பி அண்ட் ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஓஓ ) சைலேஷ் ஜெஜுரிகர் (54) நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்தப் பதவியைப் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது.\nபாமக நிறுவனர் ராமதாஸுக்கு இணையவழியில் பாராட்டு விழா\nவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு\nநாளை நடக்கும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க. குடியரசுத் தலைவர் சென்னை வருகை\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார்\nதமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம்\nநிலக்கரி கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ஓய்வு பெறும் டிஎன்பிஎல் முதன்மை பொதுமேலாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\n'பெகாசஸ்' பயன்படுத்த சில நாடுகளுக்கு தடை\nமுறைகேடு புகாரால் இஸ்ரேல் நிறுவனம் நடவடிக்கை\nகேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு விதிகளை பின்பற்ற ராகுல் வேண்டுகோள்\nகேரளாவில் கடந்த வியாழக்கிழமை புதிதாக 22,064 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/48795/", "date_download": "2021-08-02T09:11:31Z", "digest": "sha1:P2IELOSM7EOBJXEW2AHHOYQZKOTHIFO4", "length": 7839, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "எட்டு வயதுடைய சிறுமிகள் மூவர் வன்புணர்வு .சம்பவத்தைக் கண்டித்து மூதூரில் வெவ்வேறு ஆர்ப்பாட்டங்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஎட்டு வயதுடைய சிறுமிகள் மூவர் வன்புணர்வு .சம்பவத்தைக் கண்டித்து மூதூரில் வெவ்வேறு ஆர்ப்பாட்டங்கள்\nஎட்டு வயதுடைய சிறுமிகள் மூவர்; வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து மூதூரில் இன்று காலை வெவ்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.\nகிளிவெட்டிப் பாடசாலை, மல்லிகைத்தீவுப்; பாடசாலை மற்றும் மூதூர் கிழக்குப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.\nபெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர், நேற்று பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப���படுகின்றது.\nஇந்தச் சம்பவத்தைக் கண்டித்து மேற்படி சந்தேக நபர்களை தொழிலுக்கு அமர்த்தியிருந்த ஒப்பந்தக்காரரைப் பொதுமக்கள் தடுத்து வைத்திருந்ததாகவும் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உள்ளிட்டோர் பொதுமக்களுடன் கலந்துரையாடியதை அடுத்து, ஒப்பந்தக்காரர் விடுவிக்கப்பட்டார்.\nஇதன்போது, அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தவிர்ப்பதற்காகப் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்..\nஎனவே, இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.\nPrevious articleமகிழடித்தீவில் தொற்றுநோய், மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் நீங்க விசேட பூசை வழிபாடு\nNext articleநீதிமன்றக்கட்டளை கிழிப்பு- விளக்கமறியலில் வைக்கப்பட்ட பட்டதாரிகள் பிணையில் விடுதலை\nசுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தனது சொற்ப இலாபத்திற்காக சமூகத்திற்கு துரோகம் இழைக்கிறார்\nகருணா அம்மானின் கட்சியும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்.\nஓந்தாச்சிமட கிராமிய சித்த ஆயர்வேத வைத்தியசாலையில் புதிய பிரிவுகள் ஆரம்பித்து வைப்பு.\nமட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் இரு வேறு பிரதேச செயலக பிரிவு கிராம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/2019/06/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-08-02T10:03:16Z", "digest": "sha1:F5Z7PRW3UR52KHP47CG4KEHKKMWQUFUM", "length": 6760, "nlines": 32, "source_domain": "www.mukadu.com", "title": "பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள்: தந்தை மீது தாக்குதல். | Mukadu", "raw_content": "\nபெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள்: தந்தை மீது தாக்குதல்.\nவவுனியாவில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள்: தந்தை மீது தாக்குதல்.\nவவுனியா – எல்லப்பர், மருதங்குளம் பகுதியில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களின் செயற்பாட்டினை தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பர் ஆகியோர் மீது இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா – சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்ப���்ட எல்லப்பர் , மருதங்குளம் 8ம் ஒழுங்கையில் குறித்த பெண் கடந்த (09.06) அன்று இரவு தந்தையுடன் விழாவொன்றிற்கு சென்றுள்ளார். இதன்போது வீதியில் நின்ற இளைஞர்கள் பெண்ணிடம் தவறான சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பர் ஆகியோர் மீது இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் அயலவர்கள் ஒன்று கூடியதையடுத்து குறித்த இளைஞர்கள் அவ்விடத்தினை விட்டு தப்பித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅயலவர்களின் உதவியுடன் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பர் ஆகியோர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சுயநினைவினை இழந்த நிலையில் பெண்ணின் தந்தை அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற தினமே வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களின் புகைப்படம் மற்றும் தகவல்கள் அனைத்தும் பொலிஸாருக்கு வழங்கிய நிலையில் நான்கு நாட்கள் கடந்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.\nஇந்நிலையில் இன்றையதினம் பொலிஸாரின் தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பன் மீது தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரை அக்கிராம இளைஞர்கள் சூட்சுமமான முறையில் ஓர் இடத்திற்கு வரவழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதன்போது குறித்த இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இளைஞனை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவரது உதவிடன் மேலும் ஓர் இளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதல்கள் குறித்து ஹிஸ்புல்லாவிடம் விசாரிக்க தீர்மானம்.\nமுல்லைத்தீவில் தமிழன் குண்டு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-02T09:12:21Z", "digest": "sha1:NSTGPIVW53CUEQWMLBLFV6GIUU5ESQTP", "length": 8566, "nlines": 73, "source_domain": "eettv.com", "title": "அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு. – EET TV", "raw_content": "\nஅரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு.\nஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும். அவரை விடுதலை செய்ய முடியாதென்ற மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று (26) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை வெசாக் தினத்திற்கு முன்னர் விடுவிக்க வேண்டுமென பல தரப்பினரும் அழுத்தங்கள் கொடுத்து வரும் நிலையில், புத்தாண்டு தினத்திற்கு விடுவிக்கப்படுவார் என ஜனாதிபதி தெரிவித்திருந்தும் விடுவிக்கப்படவில்லை. ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியால் விடுவிக்க முடியாது நீதிமன்றமே விடுவிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை ஜனாதிபதி சம்பந்தப்பட்ட விடயம். ஆனந்தசுதாகரன் வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர் தண்டனை அனுபவிக்கும் கைதி. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் மட்டுமே அவரை விடுதலை செய்ய முடியும்.\nகடந்த வாரம் ஜனாதிபதியுடன் நான் தொலைபேசியில் உரையாடிய போது,\nஅனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதில் மாற்றம் இல்லை என்பதே தனது நிலைப்பாடும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nதமிழ் அரசியல் கைதிகள் மட்டுமன்றி பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததுள்ளார்.\nஅத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உள்ள தடங்கல்களை விசாரித்த போது, அதில் உள்ள தடைகளைப் பற்றி தெரிவித்தார். ஜனாதிபதியினால் கூறப்பட்ட காரணங்கள் ஏற்றுக்கொ��்ளமுடியாதவையாக இருந்தாலும் கூட, ஜனாதிபதியினூடாக இவற்றை நிறைவேற்ற வேண்டும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் விதிவிலக்குக் கிடையாது.\nஆகையினால், இவர்களின் விடுதலை தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் பேசியுள்ளேன்.\nவெசாக் தினம் முடிந்த பின்னர் தம்முடன் பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார் என்றார்.\nஅனைத்து அமைச்சுகளும் மைத்திரியின் நேரடிக் கண்காணிப்பில்\nபிரித்தானியாவில் திருடனை ஓடவோட விரட்டிய தமிழ் குடும்பம்\nஒன்ராறியோவில் புதிதாக 218 பேருக்கு COVID-19 தொற்று, 2 பேர் உயிரிழப்பு\n இரண்டு வயதான தமிழ் சிறுவன் பலி\nதீவிரமாக பரவும் டெல்டா வைரஸ் – இலங்கையர்களுக்கு 3 தடுப்பூசிகள்\nரிஷாட்டின் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பெண்\nபுதிய அரசியல் மாற்றம் அவசியம்\nதுருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் புதிதாக 30,738 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,604 பேர் பலி\nஇமாசல பிரதேசம் – கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு, 37,582 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nஅனைத்து அமைச்சுகளும் மைத்திரியின் நேரடிக் கண்காணிப்பில்\nபிரித்தானியாவில் திருடனை ஓடவோட விரட்டிய தமிழ் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81&limit=20", "date_download": "2021-08-02T08:06:02Z", "digest": "sha1:VZWEX56PUAZNGZXZKRWMYGYF6L2BJXJC", "length": 3272, "nlines": 32, "source_domain": "noolaham.org", "title": "\"வலைவாசல்:தினமுரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவலைவாசல்:தினமுரசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:வலைவாசல்கள் ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:வலைவாசல்கள்/பத்திரிகைகள் ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/nexon/price-in-new-delhi", "date_download": "2021-08-02T09:39:36Z", "digest": "sha1:UEHFH3WZG7ULZAOZZYFSZ3RIHCF2BY7G", "length": 92887, "nlines": 1493, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டாடா நிக்சன் 2021 புது டெல்லி விலை: நிக்சன் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா நிக்சன்\nமுகப்புபுதிய கார்கள்டாடாநிக்சன்road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு டாடா நிக்சன்\nஎக்ஸ்எம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.10,78,312**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.11,35,170**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம் டீசல் எஸ்(டீசல்)Rs.11.35 லட்சம்**\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,53,570**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.12.53 லட்சம்**\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in புது டெல்லி : Rs.13,32,611**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.32 லட்சம்**\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,52,371**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)Rs.13.52 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,93,050*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)Rs.13.93 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,02,353**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)Rs.14.02 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,02,353**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.14.02 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,22,113**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.14.22 லட்சம்**\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,22,113**அறி���்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)Rs.14.22 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.14,37,224**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,63,658*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)Rs.14.63 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,56,984**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.14.56 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,98,962*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)Rs.14.98 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.15,06,966**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.15.06 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.15,26,726**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)Rs.15.26 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்(டீசல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.15,69,571*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)(top model)Rs.15.69 லட்சம்*\non-road விலை in புது டெல்லி : Rs.8,10,408**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.9,15,756**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.9,72,819**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.9,81,598**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.10,25,493**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.1,038,661**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.10.38 லட்சம்**\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in புது டெல்லி : Rs.11,13,282**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.13 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.11,72,453**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.72 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,04,162*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு(பெட்ரோல்)Rs.12.04 லட்சம்*\non-road விலை in புது டெல்லி : Rs.12,21,360**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் எஸ்(பெட்ரோல்)Rs.12.21 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ர��ால்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,21,360**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.12.21 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,40,696**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)Rs.12.40 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,40,696**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)Rs.12.40 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.12,55,481**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,72,970*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு(பெட்ரோல்)Rs.12.72 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,74,817**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.74 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,89,602**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.12.89 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,07,374*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு(பெட்ரோல்)Rs.13.07 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,08,938**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)Rs.13.08 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,23,7,24**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.23 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,43,059**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.43 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.13,76,182*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு(பெட்ரோல்)(top model)Rs.13.76 லட்சம்*\nஎக்ஸ்எம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.10,78,312**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.11,35,170**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம் டீசல் எஸ்(டீசல்)Rs.11.35 லட்சம்**\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,53,570**அறிக்கை தவறானது ���ிலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.12.53 லட்சம்**\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in புது டெல்லி : Rs.13,32,611**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.32 லட்சம்**\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,52,371**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)Rs.13.52 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,93,050*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)Rs.13.93 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,02,353**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)Rs.14.02 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,02,353**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.14.02 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,22,113**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.14.22 லட்சம்**\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,22,113**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)Rs.14.22 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.14,37,224**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,63,658*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)Rs.14.63 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,56,984**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.14.56 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.14,98,962*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)Rs.14.98 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.15,06,966**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.15.06 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.15,26,726**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)Rs.15.26 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்(டீசல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.15,69,571*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்(டீசல்)(top model)Rs.15.69 லட்சம்*\non-road விலை in புது டெல்லி : Rs.8,10,408**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.9,15,756**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.9,72,819**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.9,81,598**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.10,25,493**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.1,038,661**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.10.38 லட்சம்**\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in புது டெல்லி : Rs.11,13,282**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.13 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.11,72,453**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.72 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,04,162*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு(பெட்ரோல்)Rs.12.04 லட்சம்*\non-road விலை in புது டெல்லி : Rs.12,21,360**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் எஸ்(பெட்ரோல்)Rs.12.21 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,21,360**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.12.21 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,40,696**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)Rs.12.40 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,40,696**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)Rs.12.40 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.12,55,481**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,72,970*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு(பெட்ரோல்)Rs.12.72 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,74,817**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.74 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,89,602**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.12.89 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,07,374*அறிக்��ை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு(பெட்ரோல்)Rs.13.07 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,08,938**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)Rs.13.08 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,23,7,24**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.23 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in புது டெல்லி : Rs.13,43,059**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.43 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.13,76,182*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு(பெட்ரோல்)(top model)Rs.13.76 லட்சம்*\nடாடா நிக்சன் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 7.19 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா நிக்சன் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல் உடன் விலை Rs. 13.23 லட்சம்.பயன்படுத்திய டாடா நிக்சன் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 7.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டாடா நிக்சன் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் க்யா சோநெட் விலை புது டெல்லி Rs. 6.79 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு விலை புது டெல்லி தொடங்கி Rs. 6.92 லட்சம்.தொடங்கி\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Rs. 13.08 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Rs. 13.52 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் Rs. 14.02 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு Rs. 13.07 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட் Rs. 13.43 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ் Rs. 12.89 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இ Rs. 8.10 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் Rs. 13.23 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு Rs. 13.76 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் Rs. 9.15 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு டீசல் Rs. 13.93 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) Rs. 12.74 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 12.21 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல் Rs. 15.06 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல் Rs. 15.69 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு Rs. 12.04 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் Rs. 14.22 லட்சம்*\nநிக்சன் எக்ஸ் இசட் பிளஸ் Rs. 11.13 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் எஸ் Rs. 9.72 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Rs. 12.40 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof Rs. 11.72 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இசட் பிளஸ் டீசல் Rs. 13.32 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் Rs. 10.38 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ் Rs. 12.53 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ் Rs. 12.21 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) Rs. 12.55 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு டீசல் Rs. 14.63 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு Rs. 12.72 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் Rs. 14.02 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Rs. 12.40 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் Rs. 9.81 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல் Rs. 14.98 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ் Rs. 11.35 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட் Rs. 15.26 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் Rs. 10.78 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Rs. 14.56 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல் Rs. 14.37 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் Rs. 10.25 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Rs. 14.22 லட்சம்*\nநிக்சன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் kiger இன் விலை\nபுது டெல்லி இல் சோநெட் இன் விலை\nபுது டெல்லி இல் வேணு இன் விலை\nபுது டெல்லி இல் ஆல்டரோஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா நிக்சன் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,591 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,190 1\nடீசல் மேனுவல் Rs. 2,591 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,640 2\nடீசல் மேனுவல் Rs. 6,071 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,190 3\nடீசல் மேனுவல் Rs. 4,591 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,640 4\nடீசல் மேனுவல் Rs. 6,391 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,190 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா நிக்சன் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா நிக்சன் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல���லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nIndl. பகுதி மோதி நகர் புது டெல்லி 110015\nதுவாரகா புது டெல்லி 110075\nsab motors - லஜ்பத் நகர்\nலஜ்பத் நகர் 3 புது டெல்லி 110024\nடாடா car dealers புது டெல்லி\nடாடா dealer புது டெல்லி\nSecond Hand டாடா நிக்சன் கார்கள் in\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ்\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்\nடாடா நிக்சன் 1.5 ரிவோடார்க் எக்ஸ்இசட்ஏ பிளஸ் டயல்டோன்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இசட்ஏ பிளஸ்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இசட்ஏ பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\ndiseal சிட்டி மற்றும் highway இல் Average மைலேஜ்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் நிக்சன் இன் விலை\nநொய்டா Rs. 8.10 - 14.85 லட்சம்\nகாசியாபாத் Rs. 8.10 - 14.85 லட்சம்\nகுர்கவுன் Rs. 8.15 - 14.64 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 8.15 - 14.96 லட்சம்\nசோனிபட் Rs. 8.14 - 15.02 லட்சம்\nரோஹ்டாக் Rs. 8.14 - 15.02 லட்சம்\nரிவாதி Rs. 8.14 - 15.02 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-08-02T09:14:48Z", "digest": "sha1:AOZRNAF44ZGNOZEKTQQNU2EWHEBYD7P7", "length": 8297, "nlines": 101, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n‘பிரதமர் கருணையைப் பற்றி பாடம் எடுப்பதை விடுத்து, போராடும் விவசாயிகளுக்கு கருணை காட்டுங்கள்’ – திரிணாமூல்\nமேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியால், மக்களுக்கு கொடூரமான ஆட்சியே கிடைத்தது என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு, “ம��்தாவை குறை சொல்வதற்கு பதிலாக...\nதிரிணமூல் காங்கிரஸ்பணமதிப்பிழப்பு நடவடிக்கைபிரதமர் மோடிமம்தா பானர்ஜிமேற்கு வங்கம்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் – குழந்தை இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல்\n2016-ம் ஆண்டு, நவம்பர் 8 அன்று, இந்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. கடுமையான இந்தக் கொள்கை முடிவால் அதிக மதிப்புள்ள...\nஆய்வுக் கட்டுரைஇந்திய அரசுஉத்தரபிரதேசம்குழந்தை இறப்பு விகிதம்சத்தீஸ்கர்ஜார்க்கண்ட்பணமதிப்பிழப்புபணமதிப்பிழப்பு நடவடிக்கைமத்தியப் பிரதேசம்ரூபாய் தாள்கள்\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின்...\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின் போராட்டம்\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் – தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தகவல்\n‘தற்போதைய பணவீக்கத்திற்கு 1947-ல் நேரு ஆற்றிய உரையே காரணம்’ – ம.பி. பாஜக அமைச்சர்\n‘பெகசிஸ் விவகாரத்தில் உச்ச ந��திமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை வேண்டும்’ – நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்\nதகுதியான சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/yesuvin-karangalai/", "date_download": "2021-08-02T10:12:42Z", "digest": "sha1:ZH4C7XWEP5MIKXYIOYNY2G7EDSJ6K2OD", "length": 11939, "nlines": 206, "source_domain": "www.christsquare.com", "title": "Yesuvin Karangalai Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஇயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான்\nஇயேசுவின் கரங்களை பற்றிக் கொண்டேன்\nஇயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்\nஇனிவரும் பலன் மேல் நோக்கமானேன்\nஅழிந்து போகும் பாராட்டு வேண்டாமே\nஅரவணைக்கும் இயேசு போதும் போதுமே\nஅதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்\nகர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்\nகடும் புயல் வந்தாலும் அசைவதில்லை\nஇனியும் சோர்ந்து போவதே இல்லை\nஅவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்\nவறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஉடம்பு சரி இல்ல சபைக்கு வர முடியலனு சொல்லுறவங்களுக்கு சமர்ப்பணம்..\nஒரே பிசி…உடம்பு சரி இல்ல ...\nகிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...\nதிருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்களா தயவு செய்து இதை படியுங்கள்.\nதன் சொந்த சகோதரன் ஏசாவின் ...\nலோத்தி மூன்…நற்செய்தியை அறிவிப்பதற்கு நீங்கள் ஆயத்தமா\nயார் இந்த தந்தை பெர்க்மான்ஸ் தந்தை SJ பெர்க்மான்ஸ் BIO-DATA\nபிறந்த நாள்: ஆகஸ்ட் 3 ...\nவேதாகமத்தை பற்றி Parveen Sulthana-வின் அருமையான பேச்சு.\nவேதாகமத்தை பற்றி Parveen Sulthana-வின் ...\nமே 01 மிஷனரி டேவிட் லிவிங்ஸ்டன் நினைவு தினம்\nஆப்பிரிக்கா. ஆம் , நீங்கள் ...\nகை கால்கள் இல்லாமல் பிறந்த மனிதனுடைய சாட்சி – நிச்சயம் இந்த வீடியோ பார்த்த பிறகு உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்.\nஇன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்…இந்த பாட���ை யார் பாடியது என்று உங்களுக்கு தெரியுமா\nஇன்ப இயேசு ராஜாவை நான் ...\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\nஉம் பேரன்பில் நம்பிக்கை …\nதேடி வந்து மீட்ட …\nகிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு …\nஉம்மாலே கூடாத அதிசயம் …\nஎன்னை அழைத்தவரே தினம் …\nதிருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்களா தயவு செய்து இதை படியுங்கள்.\nதன் சொந்த சகோதரன் …\nஆண்டவரை தங்கள் சொந்தஇரட்சகராக ஏற்றுக்கொண்ட உடனே அனைவரும் வேதத்தை நேசித்து வாசிப்பது உண்டு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/670491-why-do-deaths-occur-in-ambulances-outside-government-hospitals-ma-subramanian-explanation.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-08-02T09:22:11Z", "digest": "sha1:NOCUCRCA6T2F4URCSEB7ROVTJ7RS2OTC", "length": 16804, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸில் உயிரிழப்பு ஏற்படுவது ஏன்?- மா.சுப்பிரமணியன் விளக்கம் | Why do deaths occur in ambulances outside government hospitals? - Ma Subramanian Explanation - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 02 2021\nஅரசு மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸில் உயிரிழப்பு ஏற்படுவது ஏன்\nஅரசு மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸில் உயிரிழப்பு ஏற்படுவது ஏன் என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசும்போது, ''தனியார் மருத்துவமனைகளில் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் வரும்பொழுது தொற்றாளர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.\nஆனால், அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் வசதிக்கேற்பவே நோயாளிகளை அனுமதிக்க முடியும். ஒரே படுக்கையில் இருவரையோ, மூன்று பேரையோ அனுமதிக்க முடியாது.\nஅந்த வக���யில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 1,200 ஆக்சிஜன் படுக்கைகள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் சில படுக்கைகள் முழுமையாக இயங்காத நிலை உள்ளது. மீதமுள்ள படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.\nஇதற்குக் கூடுதலாக ஆக்சிஜன் வசதி நமக்குத் தேவை. ரூர்கேலாவில் இருந்து 80 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் வாகனங்கள் ரயிலில் புறப்பட்டு உள்ளன. இன்று நள்ளிரவு அல்லது நாளை காலைக்குள் அந்த வாகனம் வந்து விடும். அதன் பிறகு நிலைமை ஓரளவு சீராகும். அதற்குப் பிறகு ஆக்சிஜன் படுக்கைகளை இன்னும் அதிகரிக்கலாம்.\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அப்படியே கொடுத்து விட்டால், தொற்று எந்த அளவுக்குப் பரவும் என்பது எல்லோருக்குமே தெரியும். அதனால் உடலை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு, சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் கொடுத்த பின்பே உடலை அளிக்க முடியும்.\nசமூகப் பரவல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.\nசர்வதேச ஒப்பந்தம் மூலம் தமிழகத்துக்கு பெறப்படும் தடுப்பூசிகள் என்னென்ன\nமே 21-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் ரெம்டெசிவிர் கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nபுதுச்சேரியில் ஆக்சிஜன் படுக்கைகள் குறைவாக உள்ளன: சுகாதாரத்துறை செயலர் அருண் தகவல்\nஅரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு; புயலாக மாற வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nAmbulanceஅரசு மருத்துவமனைஆம்புலன்ஸ்ஆம்புலன்ஸில் உயிரிழப்புமா.சுப்பிரமணியன்மூச்சுத் திணறல்Ma Subramanian\nசர்வதேச ஒப்பந்தம் மூலம் தமிழகத்துக்கு பெறப்படும் தடுப்பூசிகள் என்னென்ன\nமே 21-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் ரெம்டெசிவிர் கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\nபுதுச்சேரியில் ஆக்சிஜன் படுக்கைகள் குறைவாக உள்ளன: சுகாதாரத்துறை செயலர் அருண் தகவல்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டும் பிரசாந்த் கிஷோர்:...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகுரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nபுதுச்சேரியில் தொகுதி வாரியாக ரேஷன் அட்டை புதுப்பித்தல் மேளா; இடைத்தரகர்கள் மீது போலீஸ்...\nபிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தீர்ப்பு வரும் 4-ம் தேதிக்கு தள்ளிவைப்பு\nசட்டப்பேரவை நூற்றாண்டு விழா: சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nசட்டப்பேரவை நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்காது: ஜெயக்குமார்\n‘பாகிஸ்தானில் மசூத் அசார் நடத்தும் தீவிரவாத ராஜ்யம்’- அம்பலப்படுத்திய ஆல்வியின் ஐபோன்\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் - (ஆகஸ்ட் 2 முதல்...\nகோவிட்-19 உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு: நிபுணர்கள் கருத்து\n‘‘130 கோடி இந்தியர்களும் தொடர்ந்து கடினமாக உழைப்பார்கள் என நம்புகிறேன்\"- பிரதமர் மோடி\nதிருப்பத்தூரில் மக்கள் வசதிக்காக தொலைத்தொடர்பு மருத்துவ சேவை தொடக்கம்: ஆட்சியர் தகவல்\nநெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் கரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக உறவினர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song51.html", "date_download": "2021-08-02T09:22:09Z", "digest": "sha1:OKBWR5LS55IT7WPB4LDV7UD3G5UARI37", "length": 5381, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 51 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், கேட்பாயாக, astrology, சென்மனுக்கு", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 02, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 51 - புலிப்பாணி ��ோதிடம் 300\nவீரப்பா விலகுமடா தோஷம் தோஷம்\nஇன்னுமொரு கருத்தையும் உனக்கு விளக்கமாகக் கூறுகிறேன் நன்கு கேட்பாயாக கதிர் மைந்தனாம் சனி 11இல் அமைந்து சிறப்புமிக்க குருபகவான் சப்தம (7ல்) ஸ்தானத்திலும் இராகு 4 ஆம் இடத்திலும், செவ்வாய் மூன்றிலும், சூரிய மூன்றில் போய் நிற்க (சனி பகவானால்) தோடம் உண்டெனினும் சென்மனுக்கு ஆயுள் உண்டென்று கூறுவதுடன் மேலும் நான் சொல்லும் கருத்துகளையும் கேட்பாயாக\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 51 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், கேட்பாயாக, astrology, சென்மனுக்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/yogibabu-acting-in-sundar-travels-2-movie/cid4076908.htm", "date_download": "2021-08-02T09:08:16Z", "digest": "sha1:IUYFBPRLMUNVLPK4G54JZIY6QBJQ7WTW", "length": 3533, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகம் - வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிப", "raw_content": "\nசுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகம் - வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபு\nமறைந்த நடிகர் முரளி, வடிவேல், ராதா, விணுசக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்து 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். ஒரு ஓட்டை பஸ்ஸை வைத்துக்கொண்டு முரளியும், வடிவேலும் செய்த காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. குறிப்பாக அந்த பேருந்தில் ஒரு எலி நுழைந்துவிட அதை கொல்ல வடிவேலு படாத பாடு படுவார்.\nதற்போது, சுந்தரா ட்ராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதில், வடிவேலுவும், நடிகர் கருணாகரனும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், வடிவேல் இடத்தை யாரும் பிடிக்க முடியாது, அவரைப் போல் யோகிபாபுவால் காமெடி செய்ய முடியாது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/thread/1330870295377240067.html", "date_download": "2021-08-02T09:15:37Z", "digest": "sha1:EYTSRQMNCD6C3SST7TNHTSLRGDR7Q6QX", "length": 22169, "nlines": 148, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @Kongunatan on Thread Reader App – Thread Reader App", "raw_content": "\nசிவன் சொத்தை மீட்ட ஐயா மோகன்ராஜ் அவர்கள் பாதம்பணிகிறேன்\nமயிலை லஸ் சர்ச் ரோட்டில் உள்ள Central Bank of India மயிலை கபாலீஸ்வரர்க்கு சொந்தமான நிலத்தில் இயங்கி வருவதாக கேள்வி பட்ட ஜெபமணி மோகன்ராஜ், வங்கியிடம் வாடகை யாருக்கு செலுத்துகிறீர்கள் என்று கேட்க, வங்கி ஒரு தனியார் பெயரை\nகுறிப்பிட்டது. திரு மோகன் ராஜ் அறநிலையத்துறை ஆணையரிடம் முறையிட, விஷயம் ஆணையர், துணை ஆணையர், செயல்அலுவலர் என்று முடிவில்லாமல் சுற்றி கொண்டிருந்தது. ஆகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் W.P. No. 8185 of 2019 என்ற பொதுநல வழக்கை தொடுத்தார்.\nநீதிமன்றத்தில் அறநிலையத்துறை வேறு வழியின்றி\nஅந்த சொத்தை பற்றிய உண்மைகளை கக்கியது.\n1898 ஆம் ஆண்டு சௌந்தரராஜ அய்யங்கார் என்பவர் 3333 லஸ் சர்ச் ரோட்டில் உள்ள 24 கிரௌட் கபாலீஸ்வரர் சொத்தை 100 ருபாய்க்கு 99 வருட‌ குத்தகை எடுத்தார். அந்த நிலத்தில் 4321 சதுர அடி நிலத்தை தனியார்க்கு உள்குத்தகை விட்டார். உள்குத்தகைகாரர் அங்கு.\nகட்டிடம் கட்டி Central Bank of India மற்றும் Rex Fashionனுக்கு வாடகை விட்டு சுகமாக வாழ்ந்து வந்தார் 2012 ஆம் ஆண்டு அறநிலையத்துறை ஒரு வழியாக விழித்து கொண்டு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க தொடங்கியது. ஆக்கிரமிப்பாளர்கள் கோர்ட் கேஸ் என்று இழுக்க 2017 ஆம் ஆண்டு அறநிலையத்துறை ஆணையர்\nவாடகை காரர்களிடம் நேரடியாக நியாய வாடகை வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். ஆனால் கோவில் நிர்வாகம் மறுபடியும் தூங்க தொடங்கியது ( வாடகை யின் ஒரு பகுதி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக சென்றது என்று கொள்க) திரு மோகன் ராஜ் தொடுத்த வழக்கில் இரண்டு மாதங்களுக்குள் அறநிலையத்துறை\nநியாய வாடகை சம்பந்தமாக இறுதி முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஒரு வழியாக இப்பொழுது அறநிலையத்துறை மாதம் ருபாய் 2.5 லட்சம் வாடகைதார்களிடம் வசூலிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. தகவல் உரிமை அறியும் சட்டம் மற்றும் நீதிமன்றம் துணை கொண்டு எப்படி அறநிலையத்துறையை தன் வேலையை\nசெய்ய வைக்க முடியும் என்பது திரு மோகன் ராஜ் அணுகுமுறை ஒரு சிறந்த உதாரணம்.\nதியாகி நெல்லை ஜெபமணியின் மகனான திரு மோகன் ராஜ் ‌கோவில் சொத்து மீட்பு சம்பந்தமாக மேலும் பல நல்ல வெற்றிகளை பெற்றுள்ளார். அவையாவன-\n1. மயிலாப்பூர் கிள கபாலீஸ்வரர் சொத்தை வைத்து கொண்டு வாடகை தராமல் டபாய்த்து\nகொண்டிருந்தது. திரு மோகன் ராஜ் எடுத்த முயற்சியால் சுமார் 15 கிரௌண்ட் நிலத்தை கோவிலுக்கு திருப்பி கொடுத்து விட்டது. அந்த நிலத்தில் கார் பார்க்கிங் மூலம் கோவிலுக்கு வருமானம் வருகிறது.\n2. சுமார் ருபாய் 2000 கோடிக்கு மேற்பட்ட நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரம் கோவில் சொத்துக்கள்\nசட்டபுறப்பாக விற்கப்பட்டது. திரு மோகன் ராஜ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த சொத்துக்களை மீட்க அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. இப்பொழுது இது சம்பந்தமாக நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு நடந்து வருகிறது.\n3. பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் வடபழனி\nவேங்கீஸ்வரர் கோவில் குளத்தை மீட்க திரு மோகன் ராஜ் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு ஆக்கிரமிப்புகளை நீக்க உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் உச்ச நீதிமன்றம் சென்று தடையுத்தரவு வாங்க திரு மோகன் ராஜ் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளார்.\n4. விருகம்பாக்கம் சுந்திரவரதராஜ பெருமாள் கோவில் குளத்தை தூர்ந்து பட்டா போட்டு மசூதி கட்ட ஒரு முஸ்லிம் கும்பல் முயல நீதிமன்ற உத்திரவின் பேரில் கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டது. கலெக்டர் இரண்டு வருடங்களாக தூங்க, திரு மோகன் ராஜ் குளத்தை காணவில்லை என்று வழக்கு தொடுத்து கலெக்டர்\nவிசாரணையில் இணைந்து கொண்டார். பிறகு விசாரணை முடிக்காத கலெக்டர் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை அவர் தொடுக்க கலெக்டர் அந்த சொத்து முஸ்லிம் பார்டிக்கு சொந்தமில்லை என்று தீர்ப்பு வழங்கினார். இப்பொழுது கோவில் குளத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.\nஇன்று இந்து கோவில் சொத்துக்களை\nமீட்க இந்துக்களிடையே ‌ஆர்வம் பெருகி வருகிறது. ஆனால் மக்களுக்கு அதை எப்படி செய்வது என்று சரியாக தெரியவில்லை. திரு மோகன் ராஜ் போன்றவர்களை முன் உதாரணமாக கொண்டு கோவில் சொத்துக்களை மீட்க மேலும் பல இந்துக்கள் முன்வர வேண்டும்.\nஇந்த கொடுங்கோலனை இந்திரன் சந்திரன் என்று புகழ்படியிருக்கிறார் திருவாளர் Stanley Rajan. அந்த கண்றாவி பதிவை இப்போதுதான் பார்த்தேன். அடேங்கப்பா விட்டால் இவரே போய் விழா எடுப்பார் போலிருக்கிறது. இதோ எழுதுகிறே��் திப்பு சுல்தானின் சுயரூபம் பற்றி\nஒரு சிறு கிராமம் மேல்கோட்டை. இன்றைக்கும் இங்கு வாழும் சமஸ்கிருத அறிஞர்களால் இந்த ஊர் பாரதம் முழுவதும் அறியப்பட்டுள்ளது.\nஇங்குள்ள சமஸ்கிருத ஆராய்ச்சி மையம் திரு.அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டுள்ளது. பாரத மக்கள் அனைவருக்கும் சொந்தமான சமஸ்கிருத மொழி ஒரு இனத்திற்கோ,\nநிலப்பரப்பிற்கோ சொந்தமானது அல்ல. இங்கு நடக்கும் ஆராய்ச்சிகள் இயற்கை விவசாயம் முதல், கம்பியூட்டர் மொழியியல் வரை பல துறைகளுக்கு உபயோகமாக இருக்கும் என்றும் அப்துல் கலாம் கூறியுள்ளார்.\nஇப்படி, நம் பாரம்பரியங்களைக் காப்பாற்றிவரும் மேலக்கோட்டையில் வாழும் அந்தணர்கள் பாரதத்தின் தேசியத்\nகோவையில் வேல் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை👌✌️\nகோவையில் வேல் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை👌✌️\nகோவையில் வேல் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை👌✌️\nகோவையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்களின் வேல் யாத்திரையில் மாநில துணை தலைவர் திரு அண்ணாமலை IAS அவர்கள் ஆற்றிய உரை👌✌️\nகோவையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்களின் வேல் யாத்திரையில் மாநில துணை தலைவர் திரு அண்ணாமலை IAS அவர்கள் ஆற்றிய உரை👌✌️\nகோவையில் பாஜக மாநில தலைவர் திரு முருகன் அவர்களின் வேல் யாத்திரையில் மாநில துணை தலைவர் திரு அண்ணாமலை IAS அவர்கள் ஆற்றிய உரை👌✌️\n1. தங்க செருப்பானாலும் தலைக்கு ஏறாது.\n2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.\n3. நாடு கடந்தாலும் நாய் குணம் போகாது.\n4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.\n5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.\n6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.\n7. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.\n8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.\n9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.\n10. கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான்.\nமரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.\n11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.\n13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,\nகும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,\n14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா\n15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.\n(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு\nபூனாவில் உள்ள ஒரு சிறிய அலுவலகத்தில் உள்ள ஒரு அறையின் ஒரு ஓரத்தில், கண்ணாடி பெட்டிக்குள் ஒரு வெள்ளி பேழையில் ஒரு தீவிரவாதியின் அஸ்தி கரைக்கப்படாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த தீவிரவாதியின் பெயர் நாதுராம் கோட்சே காந்தி என்கிற தேசத்தின் மிகப்பெரும் தலைவரை கொன்ற\nகுற்றத்திற்காக தூக்கிலிடப்படுகிறார் அந்த தீவிரவாதி. \"ஆர் எஸ் எஸ்\" இயக்கத்திற்கும் இவர் செய்த கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாவிடினும், நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி, ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தடை செய்கிறது.\nகாந்தி கொலையின் பின்புலம் என்ன \nபிரிக்க அனுமதி தரமாட்டோம் என்று காந்தி பிடிவாதமாக இருந்தார். ஆனால் எதுவுமே அவரின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜின்னா உட்பட முஸ்லீம் தலைவர்கள் அவரின் பேச்சை கேட்பதாக இல்லை. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை தங்களுக்கு தந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.\nபட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளை கொட்டி\nமரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை. பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. \"\nகொலைக்கு நானே பொறுப்பு\" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு\nஇருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது.\nஎன் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%2030", "date_download": "2021-08-02T09:53:28Z", "digest": "sha1:YZOYSSHLWJOY45Q4I7YHX2VDMOREW4HE", "length": 4435, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 2, 2021\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஒலிம்பிக் : புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி\nஇம்மாதமே தொடங்கும் கொரோனா 3 ஆம் அலை - ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 40134 பேருக்கு கொரோனா\nகாவிரி ஆற்றில் ஒரு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு.\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு- ஒருவர் படுகாயம்.\nதன்பாத் நீதிபதி மரணம்: 243 சந்தேக நபர்களை காவல்துறை விசாரித்தனர் .\nமேற்கு வங்காளத்தில் ஆண் , பெண் ஆயுள் கைதிகளை விடுவிக்க அரசு முடிவு\nஒலிம்பிக் பேட்மிண்டன்.... வெண்கலம் வென்றார் சிந்து....\nமருத்துவர் ரெக்ஸ் சற்குணம் மனைவி பிலிஸ் காலமானார்.... சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/21366/", "date_download": "2021-08-02T09:52:21Z", "digest": "sha1:GKSOEZG4VFVZBN7GEQUTL7C6WJT4UBJU", "length": 6409, "nlines": 77, "source_domain": "www.akuranatoday.com", "title": "சமூகத்தை காட்டிக்கொடுக்க வரவில்லை, வழி நடத்தவே வந்துள்ளேன் - அலி சப்ரி - Akurana Today", "raw_content": "\nசமூகத்தை காட்டிக்கொடுக்க வரவில்லை, வழி நடத்தவே வந்துள்ளேன் – அலி சப்ரி\nஇந்நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் சமூகம் அறிவுபூர்வமான அரசியல் சித்தாந்தத்திற்குள் நுழைந்து செயல்படுவதன் ஊடாக சிறந்ததோர் எதிர்காலம் உதயமாகும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.\nபேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.\nமேலும் கூறியதாவது-, நாட்டில் இன்னும் 20 அல்லது 30 வருடங்களுக்கு ராஜபக்‌ஷ ஆட்சி தொடரும். சென்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஐந்து சதவீதமளவே பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தனர். எனினும் பொதுத் தேர்தலில் அதை விட சிறந்த முறையில் வாக்களித்துள்ளனர்.\nஜனாதிபதி தேர்தலில் கோட்டா���ய ராஜபக்‌ஷ 68 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் என்றும் பொதுத் தேர்தலில் 137 ஆசனங்களை பொதுஜன பெரமுன கைப்பற்றும் என்று நான் கூறிய போது சிலர் சிரித்தார்கள்.\nதேசிய பட்டியல் மூலம் எம். பி. பதவியையோ அமைச்சர் பதவியையோ நான் கேட்கவில்லை. ஜனாதிபதியே இப்பதவியைத் தந்தார்.\nதேசிய ரீதியாக நாட்டு மக்களுககு சேவை செய்யவே எனக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.\nசமூகத்தை காட்டிக்கொடுக்க வரவில்லை. வழி நடத்தவே வந்துள்ளேன். சில விடயத்தில் விட்டுக்கொடுப்பு அவசியம். இனவாதம் பேசுவதில் பயனில்லை.\nகளவு செய்து பணம் சம்பாதிக்கவோ, கட்சி மாறி பணம் சம்பாதிக்கவோ நான் வரவில்லை. பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும். பதவிகள் அல்லாஹ் தந்த அமானிதமே.\nநாம் ஒவ்வொரு நாட்டினதும் வரலாற்றினைப் புரட்டிப்பார்க்கின்ற பொழுது அந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகத்தினை எதிர்த்து முட்டி மோதி வெற்றிபெற்ற வரலாறு கிடையாது.\nlunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை\nநிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி\nஓட்டமாவடி மஜ்மா நகரில் அதிக ஜனாஸாக்கள் வேறு இடத்தை பரிந்துரைக்குக.\nறிசாத், ஹிஸ்புல்லா, அசாத்சாலி போன்றோரை தூக்கிலிட வேண்டும் – நடராஜா ரவிக்குமார்\nதகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்ததாலே மாணவி கொலை செய்யப்பட்டதாக கைதாக சந்தேக நபர் தெரிவிப்பு.\n‘அம்மலட ஆசா கொல்லோ’ : பேஸ்புக் பக்கத்தை வைத்திருந்த பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி\nஅம்பிட்டிய சுமணரத்தன தேரர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கி சிறைப்பிடித்ததால் பரபரப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2019/10/amavasai.html", "date_download": "2021-08-02T09:52:25Z", "digest": "sha1:2URYNVSEB2J5OULFUE2A26DFEJNA2EMJ", "length": 3109, "nlines": 78, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "Amavasai Dates - அமாவாசை நாட்கள் | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\nAmavasai Dates - அமாவாசை நாட்கள்\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது ச��றப்பு\nBaby Names - நச்சத்திரம்\nAnmigam - ஆன்மிகம் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.mukadu.com/2020/11/19/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-08-02T08:09:30Z", "digest": "sha1:PJ3IY3EGAGGSKUF2S5LQYA6JEZQ7QL2T", "length": 6354, "nlines": 35, "source_domain": "www.mukadu.com", "title": "மக்களின் உள ஆரோக்கியம் மிக மோசம் தினசரி 20 ஆயிரம் அவசர அழைப்புகள். | Mukadu", "raw_content": "\nமக்களின் உள ஆரோக்கியம் மிக மோசம் தினசரி 20 ஆயிரம் அவசர அழைப்புகள்.\nமக்களின் உள ஆரோக்கியம் மிக மோசம்\nதினசரி 20 ஆயிரம் அவசர அழைப்புகள்.\nதொற்று நோய்ச் சூழ்நிலையும் அதனோடு தொடர்புடைய வாழ்வு முடக்கங்களும் பிரெஞ்சு மக்களது உள ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதித்திருக்கின்றன.\nகடந்த ஏப்ரல் முதல் சுமார் இரண்டு மில்லியன் பேர் உளநலப் பதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். எட்டாயிரம் பேர் மனநல மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தினசரி 20 ஆயிரம் பேர் வரை மனப்பாதிப்புக்கான உதவி கேட்டு அவசர இலக்கங்களோடு தொடர்பு கொள்கின்றனர்.\nதற்சமயம் அமுலில் உள்ள இரண்டாவது பொது முடக்க காலப்பகுதியில் பலரிடமும் ஒருவித “பயப் பதற்றம்” அதிகரித்துள்ளது.\nவாராந்த சுகாதார நிலைவரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக சுகாதார அமைச்சர் Olivier Véran இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த விவரங்களை வெளியிட்டார்.\n“தொற்று நோயின் ஓர் உண்மையான விளைவாக மனநலப் பாதிப்பு (psychological impact) மிக அதிகளவில் உருவெடுக்கிறது” என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\n“சோர்வு, நலமில்லா உணர்வு, பதற்றம்,பயம், மன அழுத்தம், தனிமை (fed up, ill-being, anxiety, depression) எனப் பல விதங்களில் மனரீதியில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்”\nநோய் தொற்றி விடும் என்ற பயம், மரணத்துக்கு நெருக்கமான உணர்வு, சமூக இடைவெளியின் பின் விளைவு, அல்லது தொழில் இழப்பு பற்றிய அச்சம் இவை போன்ற ஏதேனும் ஒன்றினால் பலரும் மனப்பாதிப்புக்கு உள்ளாகின்றனர் – என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.\nதற்போதைய கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது நாட்டை மூன்றாவது பொது முடக்கம் ஒன்றுக்கு இட்டுச் சென்றுவிடும் என்பதை அரசு உணர்ந்துள்ளது. எனவே அடுத்து வரும் வாரங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படவேண்டும் என்பதையே அதிபர் மக்ரோன் அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஆனால் நத்தார், புதுவருட பண்டிகைக் காலப்பகுதியை ஒட்டி கட்டுப்பாடின்றி நடமாடும் அனுமதியும் ஒன்று கூடலும் சற்று ஆறுதலும் கிடைக்கும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபொது முடக்கத்தில் இருந்து விடுபடும் விதமான முக்கிய அறிவுப்புகள் எதுவும் அடுத்தவாரம் நடுப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் அதிபரின் தொலைக்காட்சி உரையில் இடம்பெற வாய்ப்பில்லை என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.\nFiled in: உலக செய்திகள்\nRNA தொழில்நுட்பத்தை வைத்து உருவான கொரோனா தடுப்பூசி.\nதன் உழைப்பில் கனடாவில் சொந்த விமானம் வாங்கிய ஈழத்தமிழர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/06/t77.html", "date_download": "2021-08-02T08:15:10Z", "digest": "sha1:USJ5YJQE4MAU2KC5N52RSPSMYZHUVQ6V", "length": 10837, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் முடிவு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் முடிவு\nஎரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் முடிவு\n” எரிபொருள் விலை அதிகரிப்பானது அரசாங்கத்தின் முடிவாகும். அது என்னால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு கிடையாது. நிதி அமைச்சின் அறிவிப்பையே நான் அறிவித்தேன்.” – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.\n” எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே தீர்மானித்தது. ஜனாதிபதி, பிரதமர், வர்த்தகத்துறை அமைச்சர், அமைச்சர் நாமல் உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். எனவே, இது என்னால் தன்னிச்சை எடுக்கப்பட்ட முடிவல்ல என தெரிவித்துள்ளார்.\nஎரிபொருள் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கோரப்பட்டிருந்தது. இதன் மூலம் கோத்தா -மகிந்த பிளவு அம்பலமாகியுள்ளது.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் ப��ண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்���க்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/07/pla-nedumaaran-tamilnadu-eelam.html", "date_download": "2021-08-02T10:14:57Z", "digest": "sha1:YD36RQNFIYYP3HBRTKMSEVMFWE4DH7ZO", "length": 14586, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "போராட்டம் வெடிக்கும்! உலகத்தமிழர்கள் எங்களைத்தான் நம்பி இருக்கிறார்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / போராட்டம் வெடிக்கும் உலகத்தமிழர்கள் எங்களைத்தான் நம்பி இருக்கிறார்கள்\n உலகத்தமிழர்கள் எங்களைத்தான் நம்பி இருக்கிறார்கள்\nமுகிலினி Monday, July 12, 2021 தமிழ்நாடு\nதமிழகத்தை பிரிக்க முயன்றால் அதை எதிர்த்து கடும் போராட்டம் நடக்கும் எனத் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தை இரண்டாகப் பிரித்து கொங்கு நாடு என புதிய மாநிலம் அமைக்க உள்ளதாக பாஜகவினர் தகவல்கள் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து மத்திய அரசு எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் இது குறித்து நெட்டிசன்கள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர், ”தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது பற்றி இந்திய அரசு ஆராய்ந்து வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருக்குமானால், அதை எதிர்த்துத் தமிழர்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என எச்சரிக்க விரும்புகிறேன்.\nஒரு சில வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு எனப் பிரித்து இரு மாநிலங்களாக்கும் கோரிக்கையைச் சிலர் எழுப்பினர். அப்போது தமிழர்களின் கடும் எதிர்ப்பின் விளைவாக அத்தகைய கோரிக்கை கைவிடப்பட்டது. தமிழகம் சங்க காலத்திலிருந்து 1956ஆம் ஆண்டு மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலம் வரை என்றும் ஒரே நாடாக இருந்ததில்லை.\nமூவேந்தர்களும், வேறு பல மன்னர் குலத்தினரும் பிரித்து ஆண்ட சிறுசிறு நாடுகளாகத்தான் திகழ்ந்தது. பிறகு, அந்நியர்களின் படையெடுப்புக்கு ஆளாகி அடிமைப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்���ில் சென்னை மாகாணம் என்ற கூண்டிற்குள் தமிழகம் அடைக்கப்பட்டுத் தவித்தது. கடந்த 1956ஆம் ஆண்டில்தான் தமிழ்நாடு முதன்முதலாக ஒன்றுபட்ட மாநிலமாக ஆக்கப்பட்டது.\nஅப்போது சில பகுதிகளை நாம் இழக்க நேரிட்டது. தமிழகத் தமிழர்களும், உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவரும் இவ்வேளையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று போராடாவிட்டால், நம்மையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது, நம்மை நம்பியிருக்கிற உலகத் தமிழர்களையும் காக்க முடியாது.\nஆகவே, தமிழ்நாட்டைப் பிரிக்கும் செயல் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடத் தயாராகுமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/3.html", "date_download": "2021-08-02T08:15:43Z", "digest": "sha1:UGA7X5LD3SVCJIWNVQFQPBB65WLNNGAO", "length": 23336, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கோத்தாவுடன் போட்டியிடத் தகுதியானவர் கரு மட்டுமே...! சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகோத்தாவுடன் போட்டியிடத் தக��தியானவர் கரு மட்டுமே... சஜித் போட்டியிட்டால் 3ஆவது இடமே அவருக்கு\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முடியும் என, நாடளாவிய ரீதியல் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் சிசிர பின்னவல குறிப்பிட்டார்.\nபொதுஜன பெரமுனவின்ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடும்போது, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால், அவர் மூன்றாவது இடத்தையே பெறுவார் என்றும் பேராசிரியர் பின்னவல குறிப்பிட்டார்.\nபேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சேர்ந்த குழுவொன்றினால், வாக்காளர்களை 08 வலயங்களாகப் பிரித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும், கோத்தபாயவுக்கு சரிநிகராக 07 வலயங்களில் மக்கள் ஆதரவு உள்ளது தெளிவாகியுள்ளதாகவும், சஜித் பிரேமதாசவுக்கு 04 வலயங்களில் மட்டுமே ஆதரவு உள்ளது தெளிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅதற்கேற்ப கொழும்பு மாநகர சபை, ஹோமாகம, பன்னிப்பிட்டிய, மஹரகம, கோட்டை, உள்ளிட்ட தொழிற்பேட்டை, கண்டி, காலி, மாத்தறை, குருணாகலை உள்ளிட்ட நகர்ப் பிரதேசங்கள், தென் மற்றும் வட மேல் மாகாணம், வட மத்திய மாகாணம், கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட கிராமிய பெளத்த வலயங்கள், மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் வட மேல் மாகாணத்தின் வட பகுதி உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ள பகுதிகள், வடக்கு கிழக்கில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள், கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள், நாட்டின் உட்பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகள், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் என்பன இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.\nராஜகிரியில் அமைந்துள்ள நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் பிரதான அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பின்னவல அவ்வாறு தெரிவித்தார்.\nகாெழும்பு மாநகர எல்லைப் பிரதேசம், நாட்டில் அபிவிரு��்தியடைந்துவரும் பிரதேசங்கள், தோட்டங்கள், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மட்டுமன்றி, தமிழ்ப் பிரதேசங்கள், தெற்கில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசங்கள் என்பவற்றில் கரு ஜயசூரிய வெற்றிபெற முடியும் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nபுளொட் உள்வீட்டு படுகொலைகளில் சக தோழி கற்பழிக்கப்பட்டாள். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் அஷோக்-\nதமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அடையாளமாக அதன் உள்வீட்டு படுகொலைகளே எஞ்சியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவிழ்கப்படாத முடிச்சு...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஎந்த பிரபாகரன் கமியூனிசமும் சேகுவரா கதைகளையும் படித்தவர்\nஇந்த மேதகு என்றொரு கதை வந்தாலும் வந்தது, ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். அதில் பிரபாகரன் கம்யூனிசம் படிக்கின்றானாம், சேகுவேரா புத்தகமெல்லாம் வ...\nஅலுக்கோசுகளின் சினிமா தான் \"மேதகு\"\nதூக்குமேடையில் தூக்கு போடும் அலுக்கோசுகள் போன்றே, பிழைப்புவாத ஈழ ஆதரவு தமிழக கும்பல்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளும் குறுகிய வழிபாட்டை ஊக்...\nகொரோணா தொற்றின் பின்னால் ஒழிந்து நின்று நாட்டின் எஞ்சியுள்ளவற்றையும் அரசு விற்கின்றாதாம். சாடுகின்றது ஜேவிபி\nமக்கள் பெரும்தொற்றுக்கு உள்ளாகி வீடுகளுள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எஞ்சியுள்ள சில நிலங்களை விற்க முற்படுகின்றது, பொருத்தமானதும் உ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\n சாத்திரி பேசுகிறேன் பாகம்: மூன்று\nபுலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சக்கைசாத்திரி என்பர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருக்கின்றார். அவர் அங்கு அருளின...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nரவிராஜ் புலிகளின் பெரும் விசுவாசி, அவ்வியக்கத்தினை நேசித்தவர் மட்டுமல்ல மரணத்தின் பின்னர் பிரபாகரனால் மாவீரல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும��� சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3978-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A.html", "date_download": "2021-08-02T09:33:43Z", "digest": "sha1:5OPYHA7RLVDYMIF7V6ZGBU42VDMMFVKG", "length": 16349, "nlines": 181, "source_domain": "dailytamilnews.in", "title": "அப்பள நிறுவனத்தில் கனிமொழி எம்.பி. – Daily Tamil News", "raw_content": "\nஅப்பள நிறுவனத்தில் கனிமொழி எம்.பி.\nஅப்பள நிறுவனத்தில் கனிமொழி எம்.பி.\nதி.மு.க., மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி., மதுரையில் சுற்றுப் பயணம்\nமதுரையில் தி.மு.க., மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி., நேற்று பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காலையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அஜந்தா அப்பள நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவரை அஜந்தா அப்பள கம்பெனி உரிமையாளர்கள் சி.எஸ். பிரசாத், சி.எஸ். பிரதீஷ் ஆகியோர் சால்வை அளித்து வரவேற்றனர். அவர்களுடன் 92வது வட்ட கழக செயலாளர் பழனிசாமி, அவைத்தலைவர் குமரவேல், பொருளாளர் கருப்பசாமி, துணை செயலாளர் முத்து மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், இளைஞரணி, விவசாய அணி, மாணவர் அணி நிர்வாகிகள் வரவேற்றனர்.\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nமதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.\nமதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்��ர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:\nமதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.\nஇந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்\nஅனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.\nமேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nசோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:\nசோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:\nதமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.\nசிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.\nவணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nசென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும்.. பட்டையைக் கிளப்ப தயாராகும் தல ரசிகர்கள்\nதனித்தீவில் மிரட்டி நிர்வாண ஷூட்டிங்\nஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா\nஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஓலா வின் எலக்ட்ரிக் பைக்\nஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]\nசென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]\nசெல்ஃபி எ��ுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்\nகுகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thiruvarur-by-election-karunanidhis-daughter-selvi-contest-pkow35", "date_download": "2021-08-02T10:05:41Z", "digest": "sha1:6SVE26XU6CMRTIBLUG3AK7MUIEZ4A7SK", "length": 9513, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருவாரூரில் செல்விக்கு சீட்டு... கருணாநிதி குடும்பத்தினர் ஸ்டாலினுக்கு ஆலோசனை..!", "raw_content": "\nதிருவாரூரில் செல்விக்கு சீட்டு... கருணாநிதி குடும்பத்தினர் ஸ்டாலினுக்கு ஆலோசனை..\nதிருவாரூரில் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவதே நல்லது என்று ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nதிருவாரூரில் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவதே நல்லது என்று ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nகருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளன. திமுக சார்பில் 4-ம் தேதி விருப்ப மனு அளிப்பவர்கள் ஆராயப்பட்டு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் கருணாநிதி குடும்பத்தினர் போட்டியிட விரும்புகிறார்கள். இதுதொடர்பாக ஸ்டாலினிடம் குடும்பத்தினர் பேசி இருக்கிறார்கள்.\nகருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் 2011-ல் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 2016-ல் சுமார் 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் கருணாநிதி பிரமாண்டமாக வெற்றிபெற்றார். கருணாநிதியை வாரி அரவணைத்த அந்தத் தொகுதியில் அவரது குடும்பத்தினர் போட்டியிடுவதே நல்லது என்றும் ஸ்டாலினிடம் ஆலோசனை கூறியிருக்கிறார்கள் கருணாநிதி குடும்பத்தினர்.\nகடந்த காலங்களில் கருணாநிதி சார்பாக செல்வி இத்தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதால், அவரையே நிறுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, செல்வி இங்கே போட்டியிட்டால், அழகிரி கலகம் செய்யாமல் ஒதுங்கிவிடுவார் என்றும் சொ��்லியிருக்கிறார்கள். அதேநேரத்தில், திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் பூண்டி கலைவாணன் அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கலாம் என்று திமுக நிர்வாகிகள் சார்பிலும் ஸ்டாலினிடம் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத ஒரே திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் என்பதால், அவருக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் ஆதரவு உள்ளது. ஆனால், அவர் மீது சில வழக்குகள் உள்ளதால், அவரை நிறுத்த வேண்டாம் என அவருக்கு எதிர் கோஷ்டியினர் தலைமையை வலியுறுத்திவருகிறார்கள். இதில் ஸ்டாலின் என்ன முடிவு என்பதை திமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.\nதமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் . எப்போது நடைபெறும்.. தேர்தல் தலைமை ஆணையர் விளக்கம்\nபோதும்யா உங்க பொங்கச்சோறு.... இடைத்தேர்தல் ரத்துக்கு திருவாரூர் மக்கள் பேட்டி\nடோக்கன் கட்சிகளுக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்குமே அமமுகவை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை \nதிருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த மூன்று வழக்குகள்... உச்சநீதிமன்றம் முடித்து வைப்பு\nஏப்ரல் வரை தேர்தல் கிடையாது இன்னும் 3 மாதத்துக்கு இடைத் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை \nடி20 உலக கோப்பையில் இந்த 4 அணிகள் தான் அரையிறுதியில் மோதும்..\nதலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது.. கர்நாடக முதல்வருக்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகி..\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா..\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுங்க.. அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.\nஇந்திய அணிக்கு இப்போதைக்கு இதைவிட பெரிய குட் நியூஸ் இருக்கவே முடியாது..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/pakistan-beat-south-africa-in-last-t20-and-win-series-qokbqu", "date_download": "2021-08-02T08:00:01Z", "digest": "sha1:2GG2JVG4ZMPYRQUWI42APKSX36ZGFC4U", "length": 7532, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#PAKvsSA கடைசி டி20யில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற பாகிஸ்தான் | pakistan beat south africa in last t20 and win series", "raw_content": "\n#PAKvsSA கடைசி டி20யில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற பாகிஸ்தான்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-1 என டி20 தொடரை வென்றது.\nதென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று நடந்தது.\nடாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக ஆடவில்லை. பின்வரிசையில் இறங்கிய அதிரடி வீரர் டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி 45 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 85 ரன்களை விளாசினார். அவரது அதிரடியால் 20 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 164 ரன்கள் அடித்தது.\n165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடினர். ரிஸ்வான் 42 ரன்களும் பாபர் அசாம் 44 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தாலும், இலக்கு கடினமானது இல்லை என்பதால் நவாஸும் ஹசன் அலியும் இணைந்து 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-1 என டி20 தொடரை வென்றது.\n#PAKvsSA 2வது டி20 போட்டியில் பாகிஸ்தானை பந்தாடிய தென்னாப்பிரிக்கா அபார வெற்றி\n#PAKvsSA 2வது டி20: முகமது ரிஸ்வானின் அதிரடி அரைசதத்தால் டீசண்ட்டான ஸ்கோர் அடித்த பாகிஸ்தான்..\n#PAKvsSA முதல் டி20: ரிஸ்வான் அதிரடி சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி\n#PAKvsSA 2வது டெஸ்ட்டிலும் பாகிஸ்தான் வெற்றி.. தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது\n#PAKvsSA பாகிஸ்தானுக்கு பதிலடி.. 2வது டெஸ்ட்டில் வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா\n சார்பட்டா ரங்கன் வாத்தியாராக மாற்றப்பட்ட காமராஜர்..\nஅடிப்பாவி.. கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தை.. தீயில் வீசி கொன்ற காமக்கொடூர தாய்..\nடி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 2 முக்கியமான வீரர்களுக்கு இடம் இல்லை..\nஇனிமே இதுமாதிரி தப்பு பண்ண நினைக்கிறங்களுக்கு குலை நடுங்கணும்.. 3 இலங்கை வீரர்களுக்கு கடும் தண்டனை\nபிரியா பாவனிக்கு அடித்த ஜாக்பாட் இந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா இந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறாரா\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/18618/", "date_download": "2021-08-02T08:58:21Z", "digest": "sha1:ZG4JQOASEYFZJ3BPQHXSPVYPMO4YSAKE", "length": 14551, "nlines": 66, "source_domain": "www.jananesan.com", "title": "நீட் தேர்வின் விவகாரத்தால் மாணவர்களுக்கு ஏமாற்றத்தை திமுக முதல் பரிசாக அளித்துள்ளது : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு | ஜனநேசன்", "raw_content": "\nநீட் தேர்வின் விவகாரத்தால் மாணவர்களுக்கு ஏமாற்றத்தை திமுக முதல் பரிசாக அளித்துள்ளது : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nநீட் தேர்வின் விவகாரத்தால் மாணவர்களுக்கு ஏமாற்றத்தை திமுக முதல் பரிசாக அளித்துள்ளது : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nநம்பி ஓட்டு போட்டு போட்டோம் நடுத்தெருவில் நிற்கிறோம் என மக்கள் கருத்து தற்போது நீட் தேர்வின் விவகாரத்தால் மாணவர்களுக்கு ஏமாற்றத்தை திமுக முதல் பரிசாக அளித்துள்ளது\nஎன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்\nமதுரை புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது இதற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி தலைமை தாங்கினார். இந்த கூட்டதிற்கு முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் திருமண நிதி உதவி தொகை வழங்கினர்.\nமுன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களிடம் ஆட்சி பொறுப்பு இருந்தால் நீட் ரத்து செய்ய வழி தெரியும் என்று கூறினார்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்தில் கூட நீட்டை ரத்து செய்ய வழி எ���்களுக்கு தெரியும் என்று கூறி அதைத் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தார்கள்\nஅதிமுக ஆட்சியின்போது எடப்பாடியார் நீட் தேர்வில் கடைசி வரை சட்டப் போராட்டம் நடத்தினார் நீட்க்கு எதிராக மசோதாவை நிறைவேற்றி ஒப்புதலுக்கு வைத்தார்சமூக நீதிக்கு எதிரானது என்று கூட போரடினார். இது ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழி வகை கிடைக்கும் வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் 7.5சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி இதன் மூலம் இன்றைக்கு 435 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்\nஆனால் தற்போது திமுகஅரசு முன்னாள் நீதியரசர் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது அந்த குழுவோ நீட் தேர்வை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என்று கூறி உள்ளார்கள் நாங்களும் இதை வரவேற்கிறோம் ஆனால் இது அனைவருக்கும் முன்பே தெரியும் தெரியாது ரகசியத்தை கூறியுள்ளது போல் உள்ளது\nதற்போது இந்தாண்டு நீட் தேர்வு தேதி வெளியாகி உள்ளது இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் திமுகவின் 505 தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை மாணவருக்கு ஏமாற்றத்தை முதல் பரிசாக வழங்கி உள்ளனர் அதேபோல் சுகாதார அமைச்சரும் நீட் தேர்வு நல்லது என்றும் மருத்துவ படிப்புக்கு பயன்பெறும் என்று நேரத்திற்கு தகுந்தார் போல் பேசுகிறார்\nநம்பி ஓட்டு போட்டோம் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கும் என்று மக்கள் சொல்கிறார்கள் மாணவர்களை ஏமாற்றியது போதும் என்று இன்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் மாணவர் நலனுக்காக குரல் கொடுத்துள்ளார\nகடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதி அளித்தார் இதில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் அதை நடைபெறும் நிதி நிலையில் அறிவிக்க வேண்டும் வாக்குறுதியை நிறைவேற்ற தவறினால் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nமாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கூறியது தற்போது மாணவர்கள் கூட்டுறவு வங்கிகளில் மற்றும் தேசிய வங்கிகளில் வாங்கிய 20,000 கோடி கடனை அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்களில் நமது கூட்டணி வெற்றி பெற்றது 43 தொகுதி வெற்றி பெற்றால் நாம் ஆட்சியில் அமர்ந்திப்போம் 43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் பெற்று இருந்தால் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து ஹாட்ரிக் சாதனை படைத்து இருப்போம்\nமேகதாது பிரச்சனையில் அரசு வீரவசனம் பேசாமல் கவனம் செலுத்த வேண்டும் அதிமுக ஆட்சி இருக்கும் பொழுது தொடர்ந்து எதிர்க்கப்பட்டு அணை கட்டப்படாமல் தடுக்கப்பட்டது மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடகா கூறுகிறது அப்படி கட்டினால் நமது நெற்களஞ்சியம் எல்லாம் பாலைவனம் போல் ஆகிவிடும்\nஅதேபோல் கர்நாடக அரசு ஒரு அணை கட்டி உள்ளது அதை கொரோனா காலத்தில் கட்டி முடிக்க பட்டதாக செய்தி வருகிறது இந்த அணை திமுக காங்கிரஸ் கூட்டணி அரசின் போது பூமி பூஜை போடப்பட்டு 80 சகவீத வேலைகள் முடிவடைந்து விட்டது ஆகவே மேகதாதுவில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட எந்த தியாகத்தையும் அரசு மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்\nஉங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்று கூறிவருகிறார் அப்படியானால் எம்.எல்.ஏ.விற்கு வேலைக்கு எதற்கு இதே முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் முகாமிற்கு வந்த 10 லட்சம் மனுக்களுக்கு எடப்பாடியார் தீர்வு கண்டுள்ளார் அதேபோல் கடந்த பத்தாண்டுகளில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லை\nமுதியோர்ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 35 லட்சம் நபர்ளுக்கு வழங்கப்பட்டது அதேபோல் சாலை வசதி குடிநீர் வசதி சுகாதார வசதி குடிமராமத்து திட்டம் என்று கடந்த நான்கு ஆண்டுகளில் 40 ஆண்டுகால வளர்ச்சியை தமிழகத்திற்கு எடப்பாடியார் உருவாக்கித் தந்தார் என்று பேசினார்\nஇலங்கையைச் சேர்ந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட் : பாஸ்போர்ட் அதிகாரி உள்பட மூவர் மீது சிபிஐ வழக்கு.\nஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை: மாநிலங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி வழங்கியது மத்திய அரசு..\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்ட���டும் வகையில்…\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/Q2oX8T.html", "date_download": "2021-08-02T10:23:20Z", "digest": "sha1:LRWCZOWFHNFNDUEUQF3SKIXAIYCCRP57", "length": 6039, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "கொரோனா எதிரொலி: ‘மைக்’ மூலம் வைரஸ் பரவும் - பேட்டி எடுக்கக் கூடாது - நிரூபர்களுக்கு கேரள அரசு கட்டுப்பாடு", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nகொரோனா எதிரொலி: ‘மைக்’ மூலம் வைரஸ் பரவும் - பேட்டி எடுக்கக் கூடாது - நிரூபர்களுக்கு கேரள அரசு கட்டுப்பாடு\nஉலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த வைரஸ் கிருமி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.\nஇந்தியாவில் தற்போது வரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.\nகேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கெடுபிடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் மக்கள் எவ்வித நோய் தாக்கத்துக்கும் ஆட்படாமல் இருக்க இந்த அதிரடி உத்தரவுகள் உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் எந்த வகையிலும் பரவலாம் என்ற நிலை உள்ளதால், கேரளாவில் கொரொனா வைரஸ் பாதித்தவர்களையோ, அதன் அறிகுறி உள்ளவர்களையோ அல்லது அவர்களது உறவினர்களையோ செய்தியாளர்கள் பேட்டி எடுக்கக் கூடாது என பினராயி விஜயன் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.\nஏனெனில், அவ்வாறு பேட்டி எடுக்கும் போது மைக் மூலம் நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதாலேயே இந்த எச்சரிக்கை விடப்படுள்ளது. முன்னதாக கர்நாடகாவில் இதேப்போல பேட்டி எடுத்தவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த��� அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/38279/A-youngster-die-for-Selfi-with-Snake-in-Andhra", "date_download": "2021-08-02T10:27:54Z", "digest": "sha1:KNKIVFTIJTBJTEB5HTZXWFDT3FY4CQPO", "length": 7663, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு | A youngster die for Selfi with Snake in Andhra | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு\nஆந்திராவில் பாம்புடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூர் பேட்டை மண்டலம் மங்கலபாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் சூலூர்பேட்டையில் நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று பாம்புடன் போட்டோ எடுக்க வேண்டும் என ஜெகதீஷ் கேட்டுள்ளார். அந்தப் பாம்பாட்டியும் ஜெகதீஷ் விரும்பியது போல் பாம்புடன் செல்ஃபி எடுப்பதற்காக, பாம்பை அவர் தோள் மீது போட்டார். பின்னர் பாம்பை பிடித்தபடி ஜெகதீஷ் செல்ஃபி எடுக்க முயன்றார்.\nஅப்போது திடீரென அவரை பாம்பு கடித்தது. இதனால் அந்த இடமே பரபரப்பானது. பாம்பு கடித்த நிலையில் சில நிமிடங்களில் ஜெகதீஷ் மயங்கி விழுந்தார். ஜெகதீஷை மீட்ட அவரது நண்பர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். செல்ஃபி மோகத்தால் விபரீத முடிவெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ ப��யல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nதேர்வுக்காக விமானங்கள் பறக்கத் தடை‌ - அரசு விநோத நடவடிக்கை\nஅமைச்சரின் காலில் விழுந்து வேலை கேட்ட பெண்: நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர்\n’96’ பட ’காதலே காதலே’ பாடகி கல்யாணி மேனன் காலமானார்\nதிருச்சி: வடிவேலு பாணியில் குளத்தை கண்டுபிடிக்க சொல்லி ஆட்சியரிடம் மனு அளித்த நபர்\nஹைட்ரோகார்பன் பிரித்தெடுப்பு பணி நடக்கவில்லை - கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்\nவிரைவுச் செய்திகள்: சென்னையில் குடியரசுத் தலைவர் | 100 மீ. ஓட்டம் - இத்தாலி சாம்பியன்\nஉடைந்த ஹாக்கி பேட்டில் தொடங்கிய பயிற்சி முதல் 'சாதனை கேப்டன்' வரை - 'உத்வேக' ராணியின் கதை\nபயிற்சிக்கு ஷூ வாங்க சிரமப்பட்ட கமல்ப்ரீத் கவுர்... விடாமுயற்சியும் விஸ்வரூப வெற்றியும்.\n\"வீடு இல்லாமல் தெருவில் நிற்கிறோம்\" - கூவம் கரையோர மக்களின் அழுகுரலுக்கு என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n95 கிமீ தொலைவில் ‘கஜா’ புயல் - 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்\nதேர்வுக்காக விமானங்கள் பறக்கத் தடை‌ - அரசு விநோத நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2013/03/blog-post_13.html", "date_download": "2021-08-02T10:29:11Z", "digest": "sha1:S2BJ3JENCVFTYDGKFRNCXJNUEB262WOQ", "length": 25785, "nlines": 249, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: வசந்த மாளிகை", "raw_content": "\nகர்ணன் படம் டிஜிட்டலில் வெளியாகி சரியாக ஓராண்டு பூர்த்தியாகவிருக்கிறது. இப்படியொரு தருணத்தில் வசந்த மாளிகையின் மறு வெளியீடு. கிட்டத்தட்ட அதே கொண்டாட்டம், அதே ஆரவாரம். சம்பவ இடம் மட்டும் சாந்தியிலிருந்து ஆல்பட்டிற்கு மாறியிருக்கிறது. ஏன் சாந்தியில் வெளியாகவில்லை சொந்த திரையரங்கிலேயே ஓட்டிக்கொண்டார்கள் என்று வரலாறு பழிக்கக்கூடும். சென்ற ஆண்டு வெளிவந்த டிஜிட்டல் கர்ணன் சாந்தியில் ஓடியது ஏழு வாரங்கள், சத்யம் திரையரங்கில் 152 நாட்கள்... சொந்த திரையரங்கிலேயே ஓட்டிக்கொண்டார்கள் என்று வரலாறு பழிக்கக்கூடும். சென்ற ஆண்டு வெளிவந்த டிஜிட்டல் கர்ணன் சாந்தியில் ஓடியது ஏழு வாரங்கள், சத்யம் திரையரங்கில் 152 நாட்கள்...\nநான் திரையரங்கை சென்றடைந்தபோது சாலையெங்கும் பட்டாசுக் குப்பைகள் பரவிக்கிடந்து அங்கு ஏற்கனவே நடைபெற்ற உற்சவத்தை அறிவித்தன. விளம்பர பதாகைகள் ஆல்பட்டில் துவங்கி அருகிலிருந்த டாஸ்மாக்கையும் தாண்டி வியாபித்திருந்தன. வசந்த மாளிகை அவருடைய 159வது படம் என்ற புள்ளி விவரத்திற்கு ஒத்திசைந்து 159 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஒலிபெருக்கியில் அவருடைய படப்பாடல்கள் ஒலிக்க, ரசிகர்கள் உற்சாக மிகுதியுடன் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கழுத்தில் ஏதோவொரு மூவர்ண துண்டுடன் தீப்பூசணி ஏந்திக்கொண்டிருக்கிறார். கர்ணன் பார்த்தபோது அவர்கள் குடித்திருப்பார்களோ என்று சந்தேகித்தேன். சர்வநிச்சயமாக அது மது போதையல்ல. அவர் மீது கொண்ட அன்பின் உணர்ச்சிக்குவியல். அவர்தான் சிவாஜி...\nஒவ்வொரு காலகட்டத்திலும் இரு துருவங்களாக விளங்கிய நடிகர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கும். ஒருவர் திரைப்படங்களில் நல்லவராக மட்டுமே நடிப்பார், மற்றொருவர் கதைக்கு தகுந்தபடி நடிப்பார். ஒருவர் ஏழைப்பங்காளனாகவே பெரும்பான்மை படங்களில் நடிப்பார். மற்றொருவர் கோர்ட்டு சூட்டு போட்டும் நடிப்பார். முன்னவர் கோட்டு சூட்டு போட்டால் ஊரார் எள்ளி நகையாடுவர். பின்னவர் கோமணம் கட்டினால் கூட ரசிக்கப்படும். அதற்கேற்ப அவர்களுடைய ரசிகர்களும் வேறுபடுவார்கள். முன்னவருடைய ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக செயல்படக்கூடியவர்கள், பின்னவருடைய ரசிகர்கள் தர்க்கரீதியாக செயல்படுபவர்கள். ஆனால் அங்கே ஆல்பட் திரையரங்கில் அன்றைய தினத்தில் மட்டும் உணர்வுப்பூர்வமாக உருமாறியிருந்தார்கள் இதய வேந்தனின் ரசிகர்கள்.\nஒலிபெருக்கியில் மயக்கம் என்ன கசிந்திருக்கொண்டிருக்க, ஐம்பது அல்லது அறுபதைக் கடந்த பலரும் தன்னிலை மறந்து நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் தங்கள் அன்பிற்கினிய நாயகன் கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பதாக உணர்கிறார்கள். அப்போது அங்கே விவேக் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கும் சாத்தப்பன் வருகிறார், ஏற்கனவே கர்ணனுக்கு வந்திருந்தார். அந்த நேரம் பார்த்து என்னடி ராக்கம்மா என்று ஒலிபெருக்கி அலற, சாத்தப்பனை கூட்டத்தில் நடனமாட இழுத்துவிட்டனர். அவரும் தன் பங்குக்கு ரெண்டு சாத்து சாத்திவிட்டு போனார்.\nமிகுந்த நெருக்கடிக்கிடையில் திரையரங்கிற்குள் நுழைய, உள்ளே சிம்மக்குரலோன். (அந்த வார்த்தையை பயன்படுத்தியமைக்கு சிவாஜி ரசிகர்கள் மன்னிக்க). காருக்குள் பிண்ணனி பாடகர் T.M.செளந்திரராஜன். அவர் காரை விட்டு இறங்கிய சமயம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சூழ்ந்து நின்று கைதட்டி வரவேற்றது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய ட்ரிபியூட்... எழுத்துக்காக சொல்லவில்லை, எண்பதை கடந்த TMS, 50ரூபாய் டிக்கெட் வரிசையில் ரசிகர்களுடன் அமர்ந்து முழுப்படத்தையும் பார்த்தார்.\nவசந்த மாளிகையை பொறுத்தவரையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். அந்த காலகட்டத்தில் மட்டுமல்ல, முக்காலத்திற்கும். இப்போதும் கூட வசந்த மாளிகையின் எந்த பாடலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் ரிமோட் கண்ட்ரோல் செயலிழந்துவிடுகிறது. தெய்வீகமான காதல் பாடல் என்று வரும்போது சூப்பர் ஸ்டாரே கூட மயக்கம் என்ன பாடலைத் தானே தெரிவு செய்தார். கோவில் திருவிழாக்களில் நடைபெறும் இசை கச்சேரிகளில் யாருக்காக பாடலை பாடியே தீரவேண்டுமென்ற எழுதப்படாத விதிமுறை இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் காலத்தால் அழியாத கொண்டாட்டப் பாடல். அந்தப்பாடலின் இறுதியில் நடிகர்திலகம், கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச்சக்கரம் சுத்துதடா... அதில் நான் சக்கரவர்த்தியடா... என்று முடிக்கும்போது சிலிர்க்காத ரோமங்கள் உண்டா \nடிஜிட்டல் ப்ரிண்ட், ஸ்டீரியோஸ்கோபிக் ரெஸ்டோரேஷன், லொட்டு, லொசுக்கெல்லாம் இருந்தாலென்ன, இல்லையென்றால் என்ன அவருடைய படங்களை பெருந்திரையில் பார்க்கக்கிடைப்பதே போதுமே \nஇறுதியாக அறிந்துக்கொண்ட ஒரு தகவலோடு நிறைவு செய்கிறேன். வசந்தமாளிகை படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் திலகத்தின் தாயார் மறைந்துவிட்டார். இறுதிச் சடங்குகள் முடிந்து ஐந்தாம் நாள் வீட்டிலிருந்து நடிகர் திலகம், தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு, ‘வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வருகிறது, படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். மனம் அமைதியாகவாவது இருக்கும்' என்று கூறினார். அத்தனை சோகத்திலும் தயாரிப்பாளரின் நலன் கருதி, ஒத்துழைப்பை நல்கும் அவரின் உயர்ந்த குணத்தை எண்ணி வியந்த தயாரிப்பாளர், படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கினார். நடிகர்திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ‘மயக்கமென்ன... இந்த மெளனமென்ன...’ பாடல் காட்சி. கவலையின் ரேகையே தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சிய��ல் நடித்திருப்பார். அதுதான் சிவாஜி...\nகர்ணன் – கொண்டாட்டத் துளிகள்\nவசந்த மாளிகை - ரசிகர்களின் கொண்டாட்டமும்... டிஜிட்டல் ஏமாற்றமும்.\nவசந்தமாளிகை - சில தகவல்கள்:\nமுதன்முதலாக வண்ணத்தில் ஸ்லோ மோஷன் காட்சிகள் கொண்டது.\nஒரே ப்ரிண்டை வைத்து யாழ்ப்பாணம் வெலிங்டன் - லிடோ என இரு வெவ்வேறு திரையரங்குகளில் கால்மணிநேர இடைவெளிவிட்டு தினசரி 4 காட்சிகள் 17 வாரங்கள் வரை ஓடியது.\nஇந்தப்படம் இந்தியாவை விட இலங்கையில் அதிக நாட்கள் ஓடியது என்று நினைக்கிறேன்,அதிலும் யாழ்பாணத்தில் அதிக நாட்கள்.\nகாட்டான், கொழும்பு கேபிட்டல் திரையரங்கில் 287 நாட்கள் ஓடியது அதிகபட்சம்... யாழ்ப்பாணம் வெலிங்டனில் 208, மதுரையில் 205...\nஉங்களுக்கு உள்ள மெச்சூரிட்டி கூட இந்த \"ஓசை\"னு ஒப்பாரி வைக்கிற \"கிழ\"த்துக்கு இல்லை\nசினிமாவை சினிமாவாப் பார்க்கணும்னு தெரியாதா அந்த முண்டத்துக்கு\nஉங்க விமர்சனம் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது..\nஉலக சினிமா ரசிகன் said...\nஎன்பதை உங்கள் பதிவுதான் மிகச்சிறப்பாக சொல்லி இருக்கிறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nதமிழ்நாட்டை விட இலங்கையில் இப்படத்திற்கு வரவேற்பு என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.விமர்சனம் படத்தை பார்க்கத் தூண்டுகிறது. இன்றைய தலைமுறையினரையும் இப்படம் கவர்ந்திருப்பது ஆச்சர்யம்தான்.\nஎன் மாணவப் பருவத்தில் பார்த்து ரசித்த படம். அப்போது சிவாஜியி்ன் பிறந்த தினத்தி்ல வெளியானதால் ஏகக் கொண்டாட்டம் இப்போது இங்கே நடந்த மறு கொண்டாட்டத்தைப் பற்றிப் படித்ததும் மனசு இன்னும் இளமையாச்சு. திரையரங்கில் நிச்சயம் போய்ப் பார்த்துடணும்னு தோணிடுச்சு பிரபா\nசிம்மக்குரலோன் என்பது சிவாஜி கணேசனையே குறிக்கும். டி‌எம்‌எஸ் வெண்கலகுரலோன் என்று அழைக்கப்பட்டார். இது என் அம்மா சொன்னது\nமாம்சுக்காகவே சிவாஜி ரசிகனா மாறி இருக்கய்யா.\nநீ இந்த படத்துக்கு போனது உங்க மாமாவ தாஜா பண்ணவா இல்ல உண்மையிலேயே உனக்கு சிவாஜிய புடிக்குமா பிரபா\nபடத்துக்கு பாட்டு எழுதுன கவிஞர் கண்ணதாசனை பற்றி சில் வரிகள் எழுதியிருக்கலாம் ....\nபயனுள்ள மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .....\nகோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய\nஇனி அனைத்து படமும் ரீ - ரிலிஸ் செய்ய படும்\nபடம் நான் மதுரையில் பார்த்தேன்.அன்றும் ,இன்றும் என்றும் நான் சிவாஜி ரசிகன்\nஇந்த படம் வெளியிடும் போதெல்லாம் எங்க ஊர்ல மத்த தியேட்டர்ல கூட்டம் காத்தாடுமாமாம்....\nஇரண்டு வாரங்களாகக் குமுதத்தில் இந்த மகா நடிகன் பற்றி சோ எழுதி வருகிறார்;படித்தீர்களா பிரபா\nகொஞ்சம் குத்துப்பாடல்கள், கிளப் டான்ஸ் பாடல்கள் என்று வந்துகொண்டிருந்த சமயம்...'கவிஞரே ஒரு படத்தின் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கிறமாதிரியான பாடல்கள் எழுதி ரொம்ப நாட்கள் ஆகுதே' என்று பெங்களூர் வந்திருந்த கண்ணதாசனை உட்லண்ட்ஸ் ஓட்டலில் வைத்துக்கேட்டனர்.\"இன்னும் ஒரு ரெண்டு மாசம் பொறுங்க.வசந்தமாளிகை படம் வருது. அதுல எல்லாப் பாடல்களும் நல்லா வந்திருக்கு. எனக்கு ரொம்ப நாட்களுக்குப் பின் மனதுக்குப் பிடித்தமாதிரி எழுதின படம் அது. 'இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்'அப்படின்னு ஒரு பாட்டு எழுதியிருக்கேன். அது என்னைப்பற்றிய பாடல்தான்\" என்று அவர் சொல்லியது ஞாபகம் வருகிறது.\nஆடுபவர்களிடம் சிவாஜியை நேரில் பார்த்த சந்தோசம்...\nஇந்த படம் எங்க அம்மாக்கு ரொம்ப புடிக்கும்..அவங்க அதை இன்றும் ரசித்து பார்பப்பதை பார்க்கையில் சிவாஜி எத்தனை ஒரு வரவேற்பை பெற்றிருப்பார் என்று புரிகிறது..\nபொன் மகேஸ், மாமாவை தாஜா பண்ண இவ்வளவு மெனக்கெட வேண்டிய அவசியமில்லை...\nசென்னை பித்தன், குமுதம் - சோ இரண்டையுமே நான் படிப்பதில்லை...\n\"\"குமுதம் - சோ இரண்டையுமே நான் படிப்பதில்லை...\"\"\nசுஜாதா இணைய விருது 2019\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nபிரபா ஒயின்ஷாப் - 11032013\nஅந்தமான் - பாராடங் சுண்ணக்குகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Kyiv", "date_download": "2021-08-02T09:56:27Z", "digest": "sha1:RYBAIPOBMPPDU7CO5KGCIG4IBJMMMWCL", "length": 10510, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "கிவ் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nகிவீல் என்பது தலைநகர் மற்றும், மிகப்பெரிய நகரம், உக்ரைன், 2,611,300, மக்கள் தொகை (2001). கிவீல் Dnieper நதியில் நாட்டின் வட மத்திய பகுதி அமைந்துள்ளது. கிவீல் இது ஒரு முக்கியமான தொழில், அறிவியல், கல்வி மற்றும் கலாச்சார மையம் கிழக்கு ஐரோப்பா. இது பல உயர் தொழில் நுட்ப நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுவாமிகள் வரலாற்று நகரத்தில் வீடு. நகரம் ஒரு விரிவான கட்டமைப்பு, போக்குவரத்து, கிவீல் மாநகர் உள்ளிட்ட உயர் வளர்ந்த அமைப்பு உள்ளது.\nபோது அதன் வரலாறு, கிவீல், கிழக்கு ஐரோப்பா, பழமையான நகரங்களில் ஒன்றாக குழுமியிருந்தனர் சிறந்த prominence மற்றும் தொடர்புள்ள obscurity பல நிலைகளில். விரைவில் Slavs ஒருவேளை சில நேரம் 5th நூற்றாண்டில் நிறுவப்பட்டது, அது மெல்ல ஆனார் மத்திய கிழக்கு Slavic இருந்திருக்கிறது. Mongol கொள்கையும் 1240 ஆம் ஆண்டில் முழுமையாக அழிந்தால், நகரம் தொலைந்து பெரும்பாலான இல்லங்கள், வர அதன் செல்வாக்கு. நகரில் ரஷ்ய எம்பயர் தொழிற் புரட்சி மறைந்த 19 ஆம் நூற்றாண்டின் போது மீண்டும் prospered. உள்ள 1917, பிறகு Ukrainian தேசிய குடியரசு அறிவித்தது ரஷ்ய எம்பயர் பிரிந்துச் கிவீல் ஆனார் அதன் தலைநகர். ஒரு முக்கிய நகரம் Ukrainian சோவியத் சோஷலிச குடியரசின், மற்றும், 1934, இருந்து அதன் தலைநகர் கிவீல் இருந்தது 1921 முதல் இருந்து. உக்ரைன் தலைநகரை கிவீல் இந்நிலையில் சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் 1991, Ukrainian சுதந்திரம், வைத்தியம்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவ���்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nMario Matthew Cuomo, (ஜூன் 15, அரங்கில் 1932 – ஜனவரி 1, வாக்கில்) தான் ஒரு அமெரிக்க அரசியல்வாதி மற்றும் 1983 t0o இருந்து நியூயார்க், ஜனநாயக ஆளுநர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zw-trailer.com/faq", "date_download": "2021-08-02T09:36:47Z", "digest": "sha1:A4ODC2HWQ2NNFMFH2FSABOWUL4YOHWLB", "length": 10814, "nlines": 153, "source_domain": "ta.zw-trailer.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஷாண்டோங் ஜுவோவி இன்டர்நேஷனல் டிரேடிங் கோ, லிமிடெட்.", "raw_content": "\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\n1.கே: ஒரு ஆர்டர் வழங்க எவ்வளவு காலம் ஆகும்\nஉங்கள் 30% கட்டணம் செலுத்துதல் அல்லது 100% எல் / சி கிடைத்த 15 முதல் 20 வேலை நாட்கள். குறிப்பிட்ட விநியோக நேரம் உருப்படிகள் மற்றும் உங்கள் ஆர்டரின் அளவைப் பொறுத்தது.\n2.கே: உத்தரவாதத்தைப் பற்றி எப்படி\nப: எங்கள் நிறுவனம் ஒரு வருட உத்தரவாதக் காலத்தை உறுதியளிக்கிறது, இந்த காலகட்டத்தில், சாதாரண பயன்பாட்டின் கீழ் ஆபரணங்களுக்கு சேதம் ஏற்பட்டால், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய பாகங்கள் இலவசமாக வழங்குவோம்.\n3.கே: பிரசவத்திற்கான நேரம் என்ன\nப: நிலையான மாடல் எங்களிடம் இருந்தால், பணம் செலுத்திய 10 நாட்களுக்குள் அதை அனுப்ப முடியும். டிரெய்லர் அல்லது டிரக்கைப் பயன்படுத்தினால், பணம் செலுத்திய 10 நாட்களுக்குள் அதை அனுப்பலாம். ஏனென்றால் நாம் அதை புதுப்பித்து வண்ணம் தீட்ட வேண்டும். இது ஒரு புதிய தயாரிப்பாக இருந்தால், வழக்கமாக 20 நாட்களில் வழக்குகளை ஏற்றுமதி செய்ய முடியும்.\n4.கே: உங்கள் கட்டண விதிமுறைகள் என்ன\nடி / டி: டி / டி மூலம் 30% டெபாசிட், 70% நிலுவை கப்பலுக்கு முன் செலுத்தப்பட வேண்டும். எல் / சி: பார்வையில் 100% மாற்ற முடியாத கடன்.\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nகே: ஒரு ஆர்டர் வழங்க எவ்வளவு காலம் ஆகும்\nகே: உத்தரவாதத்தைப் பற்றி எப்படி\nகே: பிரசவத்திற்கான நேரம் என்ன\nகே: உங்கள் கட்டண விதிமுறைகள் என்ன\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nஹோவ் டிரக் டிராக்டர் அலகுகள் பயன்படுத்தப்பட்டன\nசரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் பக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் கேரியர் டேங்கர் டிரெய்லர்\nகுறைந்த பிளாட்பெட் லோபெட் அரை டிரக் டிரெய்லர்\n ஷிஜோங் மாவட்டம், ஜினான் நகரம், சாண்டோங் மாகாணம்\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\n© ஷாண்டோங் ஜுவோவி இன்டர்நேஷனல் டிரேடிங் கோ, லிமிடெட் + 86-15216409270 ivan@zw-trailer.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teakadaibench.com/tiruniirru-puucum-pootu-coll-veennttiy-slookm/", "date_download": "2021-08-02T09:47:18Z", "digest": "sha1:R4ZMELSF64PWLBXDU6EIXHZH4BROPWJJ", "length": 12155, "nlines": 104, "source_domain": "teakadaibench.com", "title": "திருநீறு -ஸ்லோகம்", "raw_content": "\nதிருநீறு எனப்படுவது மறைமுக மந்திர மருந்தாகப் பார்க்கப்படுகிறது. திருநீறு பல்வேறு நோய்களை போக்கக்கூடியதாக உள்ளது.\n`நீறு' என்றால் சாம்பல்; `திருநீறு' என்றால் மகிமை பொருந்திய நீறு என்று பொருள். திருநீறு `விபூதி' என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு’ என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம்.\nவடதிசை அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களை கொண்டு கீழே சிந்தாமல் மூன்று கோடுகளாக நெற்றியில் பட்டை பொடுவதே உத்தமம். திருநீறு அணிகையில் “சிவாய நம” என்று மனதிற்குள் சிவ மந்திரத்தை கூறியவாறே அணிவது மேலும் சிறந்தது.\nநெற்றியில் பட்டை போட உதவும் மூன்று விரல்களும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் குறிப்பதாக கூறப்படுகிறது. மேலும் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இறுதியில் பிடி சாம்பலாக போவதே உறுதி ஆகையால் என்றும் இறை சிந்தனையோடு அறநெறி தவறாமல் வாழ வேண்டும் என்ற அற்புத தத்துவத்தையும் இது உணர்த்துகிறது.\nஅறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடும் சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து எடுக்க வேண்டும். அதனை உமியில் மூடி வைத்து புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த சாணம் வெந்து திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும். இப்படி தயாராவதே உண்மையான திருநீறாகும்.\nநமது இந்து மத அடையாளங்களில் திருநீறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருநீறு பூசும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வரலாம்.\nநம்மை சுற்றி நல்லது கெட்டது என பல்வேறு அதிர்வுகள் இருக்கின்றன. நம்மை அறியாமல் நம் உடலுக்குள் அந்த எல்லா அதிர்வுகளும் சென்று வருகின்றன.\nஅருகம் புல் திருநீறு நம்மை சுற்றி இருக்கும் நல்ல கதிர்களையும், அதிர்வுகளை மட்டுமே உள்வாங்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நம் உடலில் பல்வேறு இடங்களில் திருநீறு இட்டுக் கொள்வதன் மூலம் அந்த நல்ல அதிர்வுகள் நம் உடல் ஏற்றுக் கொள்கின்றது.\nதிருநீறு உடலின் சில பாகங்களிலாவது அணிய வேண்டும் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நம் உடலில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வுகளை கொண்டுள்ள நெற்றியில் அணிவது மிகவும் அவசியம். நம் உடலிலேயே நெற்றி மிக அதிகமாக வெப்பத்தை உள் வாங்குவதும், வெளியிடும் பாகங்களாக இருக்கின்றன. இதன் காரணமாக நாம் நெற்றியில் திருநீறு அணிவது மிகவும் அவசியம். நெற்றி முழுவதும் நாம் திருநீறு அணியலாம். அல்லது நெற்றி பொட்டில் நாம் அணிவது அவசியம்.\nஅப்படி திருநீறு பூசும்போது சூரியக் கதிர்களின் சக்தியை நம் உடலினுள் இழுக்க பயன்படுகிறது. இதனால் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை தீர்க்கக் கூடிய அறுமருந்தாக மாறுகிறது.\nதிருநீறு இடும்போது நல்ல கதிர்களை ஈர்த்து உடலுக்கு கொடுப்பதைப் போல, சந்தனம் நம் உடலிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை நீக்குகிறது. அதே வெளியிலிருந��து வரும் வெப்பத்தையும் தடுக்கிறது. இதனால் வெப்ப மிகுதியால் ஏற்படக்கூடிய மூளை சோர்வு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.\nநாம் நம் விரலை நெற்றி பொட்டில் பட்டும் படாமல் சிறிது நேரம் வைக்க நம் மனம் ஒருநிலைப்படுவதை உணரலாம். அப்படிப்பட்ட மன ஒருநிலைப்பாட்டை அதிக நேரம் நீடிக்க வைக்கும் வல்லமை திருநீறுக்கு உண்டு. இதனால் தியானம் செய்த மன ஒருநிலைப்பாடு, பயன், சிந்தனைத் தெளிவு ஏற்படும்.\nதிருநீறு பூசும் இடங்களும் பயன்களும்:\nபுருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) - ஞானத்தை ஈர்க்க வல்லது.\nதொண்டைக்குழியில் பூசுதல் (விசுத்தி சக்கரம்) - நம் சக்தி அதிகமாகும்.\nநெஞ்சுக்கூட்டின் மத்தியில் திருநீறு தரித்தால் நம் உடல் தெய்வீக அமைப்பை பெறும்.\nநமது இந்து மத அடையாளங்களில் திருநீறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஸ்லோகத்தை திருநீறு பூசும் போது சொன்னால் சிறப்பு.\nபாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத்\nபூதி: பூதிகரீபும்ஸாம் ரக்ஷா ரக்ஷாகரீ சுபா.\nஅலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நினைவு தினம்\nதேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் - National Coloring Book Day\nவரலாற்றில் இன்று ஆகஸ்டு 2..\nபனைமரம் சாகுபடி முறைகள் & பயன்கள்\nவளம் தரும் வராகி அம்மன் \nஉன்னதம் மிக்க பிரதோஷ விரத வழிபாடு \nசோளிங்கர் யோகலட்சுமி நரசிம்மசாமி கோவில்\nஇன்னலை நீக்கும் எலுமிச்சை தீபம்\nதிருமால் திருவருள் கிட்ட ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/deepika-padukone", "date_download": "2021-08-02T09:33:03Z", "digest": "sha1:YFKYSMBPX22DRFRZDUNE64A6GKVWCGOC", "length": 4597, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரஜினியின் அடுத்த பட ஹீரோயின் இவங்களா \nவிஜய்க்கு Bollywodல் இருந்து வரும் ஹீரோயின், வில்லன்\nவிஜய் பாடலுக்கு நடனமாடிய பாலிவுட் ஹீரோயின்: வைரலாகும் தீபிகா படுகோன் வீடியோ\nஉன்னை பிடிச்சிருக்கு, ஆனால் வேறு யாரையாச்சும் பிடிச்சா நான்..: நடிகரை அதிர வைத்த நடிகை\nநடிகையின் பர்த்டே பார்ட்டியில் மாஜி காதலர்: கணவர் நடிகரை தூண்டிவிடும் ரசிகாஸ்\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே\nஅந்த பிரச்சனை மறுபடியும் வந்துடுமோனு பயமா இருக்கு: தீபிகா படுகோன்\nநடிகை தீபிகாவின் அழகான ஃபேஷன் லுக் - புகைப்படங்கள்\nஅந்த 2 பிரபல நடிகைகளை பார்த்து பொறாமையா இருக்கு: உண்மையை சொன்ன இளம் நடிகை\nநல்ல வேளை எனக்கு அப்படி நடக்கல: தீபிகா படுகோன்\nThalapathy 65 விஜய்க்கு பாலிவுட்டில் இருந்து வரும் ஹீரோயின், வில்லன்\n'அந்த' நடிகருக்கு முத்தம் கொடுத்துட்டு தான் தூங்க போவேன், தீபிகா படுகோனே பகீர் பதில்\nபாலிவுட் நடிகைகள் மட்டும் ஒல்லியாவே இருக்காங்களே... அவங்க காலைல என்னல்லாம் சாப்பிடுறாங்கனு தெரிஞ்சிக்கணுமா\nரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண நாள் ஸ்பெஷல் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/03/blog-post_66.html", "date_download": "2021-08-02T08:44:22Z", "digest": "sha1:AXZGOU2ROKOESTHOKLCGG5RMX3ID6IR5", "length": 6174, "nlines": 33, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மறைவு", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nநடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மறைவு\nகார்த்தி என்றழைக்கப்படும் நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார்.\nரேனிகுண்டா’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தீப்பெட்டி கணேசன். அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’, அஜித்தின் ‘பில்லா 2’, விஷ்ணு விஷாலின் ‘நீர்ப்பறவை’, நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கி, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்திருந்தார் தீப்பெட்டி கணேசன்.\nகொரோனா லாக்டவுன் சமயத்தில் தான் உடல்நலக் குறைவோடு, மிகுந்த பொருளாதார கஷ்டத்தில் இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து விஷால், ஸ்ரீமன், பிரேம் குமார், பூச்சி முருகன், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் தீப்பெட்டி கணேசனுக்கு உதவிகளை செய்தனர். அதோடு தன்னை படப்பிடிப்பு தளத்தில் கார்த்தி எனக் கூப்பிட்டது அஜித் தான் எனக் குறிப்பிட்டு, தனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என அவருக்கு கோரிக்கையும் வைத்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ், தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தீப்பெட்டி கணேசன், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த விஷயத்தை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/27.html", "date_download": "2021-08-02T08:49:26Z", "digest": "sha1:A4VWXLOKTZRAJUZFNWA7HFV6RDD4ETTI", "length": 4797, "nlines": 32, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "இணை நோய் இல்லாத 27 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஇணை நோய் இல்லாத 27 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 9,000-ஐ தாண்டியது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 39 பேர் உயிரிழந்தனர்.\nஅதிகபட்சமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 807 பேருக்கும், கோவையில் 652 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட சிறாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இரண்டாவது நாளாக 12 வயதுக்குட்பட்ட 300-க்கும் அதிகமான சிறார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nதமிழகம் முழுவதும் 65,635 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்காக சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று 1,00,804 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் 9 மாதங்களுக்கு பிறகு ஒரே நாளில் கொரொனா தொற்றால் 22 பேர் உயிரிழந்தனர்.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sokswitch.com/ta/tag/eu-power-socket/", "date_download": "2021-08-02T09:37:51Z", "digest": "sha1:ZG62WIDR7NNAVZZICMLSFH5FSOPORO6K", "length": 6658, "nlines": 153, "source_domain": "www.sokswitch.com", "title": "EU Power Socket", "raw_content": "\nபிஎஸ் ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nW50 தொடர் BS நிலையான வயரிங் சாதனம்\nW80 தொடர் பிஎஸ் நிலையான வயரிங் சாதனம்\nW86A தொடர் பிஎஸ் நிலையான வயரிங் சாதனம்\nயூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nஎஸ் 80 சீரிஸ் யூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nஎஸ் 81 சீரிஸ் யூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nM65 தொடர் யூரோ தரநிலை வயரிங் சாதனம்\nஎம் 20 தொடர் யூரோ நிலையான வயரிங் சாதனம்\nM44 தொடர் மேற்பரப்பு ஏற்றப்பட்ட ஐபி 44\nஇத்தாலி நிலையான வயரிங் சாதனம்\nW62 தொடர் இத்தாலி நிலையான வயரிங் சாதனம்\nW62B தொடர் இத்தாலி நிலையான வயரிங் சாதனம்\nபிஎஸ் ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nW50 தொடர் BS நிலையான வயரிங் சாதனம்\nW80 தொடர் பிஎஸ் நிலையான வயரிங் சாதனம்\nW86A தொடர் பிஎஸ் நிலையான வயரிங் சாதனம்\nயூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nஎஸ் 80 சீரிஸ் யூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nஎஸ் 81 சீரிஸ் யூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nM65 தொடர் யூரோ தரநிலை வயரிங் சாதனம்\nஎம் 20 தொடர் யூரோ நிலையான வயரிங் சாதனம்\nM44 தொடர் மேற்பரப்பு ஏற்றப்பட்ட ஐபி 44\nஇத்தாலி நிலையான வயரிங் சாதனம்\nW62 தொடர் இத்தாலி நிலையான வயரிங் சாதனம்\nW62B தொடர் இத்தாலி நிலையான வயரிங் சாதனம்\n��ல்இடி டிம்மர் ஸ்விட்ச் யூரோ ஸ்டாண்டர்ட்\nஒற்றை நீர்ப்புகா ஷுகோ மின் நிலையம் (திருகு-குறைவான முனையம்)\nகுவாங்டாங் ஜின்லி எலக்ட்ரிக்கல் அப்ளையன்ஸ் கோ., லிமிடெட்\nஎண் 36 யான்ஜியாங் தெற்கு Rd, லெலியு டவுன், ஷுண்டே மாவட்டம், ஃபோஷன் சிட்டி, குவாங்டாங், சீனா\nஎண் 36 யான்ஜியாங் தெற்கு Rd, லெலியு டவுன், ஷுண்டே மாவட்டம், ஃபோஷன் சிட்டி, குவாங்டாங், சீனா\nகுவாங்டாங் ஜின்லி எலக்ட்ரிக்கல் அப்ளையன்ஸ் கோ., லிமிடெட். © 2020 ALL RIGHTS RESERVED\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/anushka-sharma-person", "date_download": "2021-08-02T08:01:42Z", "digest": "sha1:3XFPSGOEKESW7EADMZCQG2GJBZSNBLGA", "length": 6147, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "anushka sharma", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகொரோனா நிவாரண நிதியாக ரூ.11 கோடி திரட்டிய விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா... எப்படிச் சாத்தியமானது\nகோலி - அனுஷ்கா வீட்டில் குட்டி ராஜமாதா\nதோனி, கோலிக்கு மட்டும் பாராட்டுகள் ஏன்... பேட்டர்னிட்டி என்பது ஆண்களுக்கு மட்டும் சாய்ஸா\nகர்ப்ப காலத்தில் அனுஷ்கா ஷர்மா செய்த சிரசாசனம் சரியா... மருத்துவம் சொல்வது என்ன\ǹஇன்னும் இது மட்டும் மாறவில்லை' - கவாஸ்கர் கமென்ட்ரியால் கொதித்த அனுஷ்கா\nபுதுமை விரும்பி தீபிகா படுகோன், கிளாஸிக் காதலி அனுஷ்கா ஷர்மா\nவினு விமல் வித்யா: கொஞ்சம் முறுக்கு... நிறைய கொரியன் சீரியல்\n`ஆஸ்திரேலியா - ஜனவரி...’ அன்று பார்டர், இன்று கோலி... வரலாற்றின் சுவாரஸ்ய தொடர்பு\nலைவில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான்... திட்டு வாங்கிய குஷ்பு... நாஸ்டால்ஜிக் நதியா... இந்த நாள் இப்படித்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/02/blog-post_10.html", "date_download": "2021-08-02T10:02:52Z", "digest": "sha1:25H5E2JYU2UGAPUNWSXJEXPT5QHCBWAZ", "length": 5653, "nlines": 52, "source_domain": "www.yarlsports.com", "title": "அரியாலை துடுபாட்ட தொடர் யூனியன் அபாரம்..... - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > Trending > அரியாலை துடுபாட்ட தொடர் யூனியன் அபாரம்.....\nஅரியாலை துடுபாட்ட தொடர் யூனியன் அபாரம்.....\nஇன்று யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா தொடரில் மூலாய் விக்ரி அணியினை 9இலக்குகளால் வீழ்த்தியது தெல்லிப்பளை யூனியன் விளையாட்டு கழகம்....\nநாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற யூனியன் அணித்தலைவர் முதலில் களதடுப்பினை தீர்மானிக்க முதலில் துடுப்பெடுத்தாடிய விக்ரி அணி கணேஸ் பெற்ற 34ஓட்டங்களின் உதவியுடன் 124/6(18) ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு ஆடிய யூனியன் அணி மோகன்ராஜ் இன் அரைசதத்தின் உதவியுடன் 11பந்து பரிமாற்றங்கலில் 1இலக்கினை மட்டும் இலந்து 9இலக்குகளால் வெற்றி பெற்றது அணி சார்பாக மோகன்ராஜ் 68ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.\nஅரியாலை தொடரின் முடிவுகளை உடனுக்குடன் அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamkarur.com/?action=viewnews&newsid=127", "date_download": "2021-08-02T09:12:01Z", "digest": "sha1:MCCBSAROFY3JX2DYKALITWVPG2J5UB7A", "length": 13988, "nlines": 146, "source_domain": "vanakkamkarur.com", "title": " மச்சான் ! என்னமா ஏமாத்திட்டாடா !", "raw_content": "\n1 year(s) ago - வீடு இருக்கு.. ஆள் இல்லை.. கவலையில் House Owners..\n5 year(s) ago - கண்ணீர் பேட்டி - குடிக்க தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லை- ஒலிம்பிக்கில்\n5 year(s) ago - இந்திய சினிமாவின் நம்பர் 1 யார்\n5 year(s) ago - பிரபஞ்சஷக்தியை உணரும் நாள் இன்று\n5 year(s) ago - அஜித் சாதனையை முறியடிக்க தவறிய கபாலி\nஉலகமே “பூச்சி மருந்து”ன்னு சொன்னாலும் வெறப்பா நின்னு, ‘கோக், பெப்சி குடிக்கறதுதான் ஸ்டைல் நம்பர் ஒன்’ என்று ஸ்டெடியாய் நிற்பவர்கள்தான் பலர். சமூக அவலங்களில் இவர்கள் சிக்கிக் கொள்வது அன்றாட நிகழ்வாகிவிட��டது.\nஇந்தியாவின் வல்லரசுக் கனவில் துண்டு போடும் வர்க்கத்திடம், அவர்கள் போகும் பாதையை குறித்து நாம் எச்சரித்தால், “எங்களுக்கேவா நாங்….கல்லாம் நாலும் தெரிஞ்சவங்க, பாருங்க எங்க கையில ஃபேஸ்புக், TAB, நெட்டு…. பாசிட்டிவ் அப்ரோச் பண்ணுங்க பாஸ் நாங்….கல்லாம் நாலும் தெரிஞ்சவங்க, பாருங்க எங்க கையில ஃபேஸ்புக், TAB, நெட்டு…. பாசிட்டிவ் அப்ரோச் பண்ணுங்க பாஸ்\n“உலகம் கருவிகளால் உணரப்படக்கூடியது அல்ல, கருத்துக்களால் ஆராயப்பட வேண்டியது” என்று வாயெடுத்தால் “வந்துட்டாருப்பா வள்ளுவரு” என்று நக்கலடிக்கும் இந்த மாடர்ன் மண் குதிரைகளை அதே ரூட்டில் காலி செய்திருக்கிறார்கள் இரண்டு பெண்கள்.\nநுனி நாக்கு ஆங்கிலம், மேற்கத்திய உடல் மொழி, நடை, உடை, பாவனைகளே நம்மை மூட்டலாக்க போதும் என்று சென்னையின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி வேலை வாய்ப்பு முகாம் நடத்தி பல ஆயிரங்களைச் சுருட்டியுள்ளோம் என்று டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சவுமியா, புதுச்சேரியைச் சேர்ந்த பீனா இருவரும் மார் தட்டி கூறுகின்றனர்.\nசவுமியா, சபானா இருவரும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு புதுடெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் பெயரில் பொறியியல் கல்லூரிகளுக்கு போலியான மின்னஞ்சல் அனுப்பி , கல்லூரிகளில் அனுமதி வாங்கி, போலியான வேலைக்கான தேர்வுகள் நடத்தி “நாங்கள் டெல்லியை தலைமையகமாகக் கொண்ட பிரபல சாப்ட்வேர் நிறுவனம், எங்களுடைய பெங்களூர், ஐதராபாத், சென்னை கிளைகளில் உங்களுக்கு உடனடி சொர்க்கம்” என்று சொல்லி மாணவர்களிடம் ரொக்கம் ரூ 1,500 -ஐ கறந்துள்ளனர். கடைசியாக, ஒரு கல்லூரியில் சந்தேகம் வந்து சில மாணவர்கள் புகார் செய்ய இப்போது பிடிபட்டுள்ளனர்.\n“எங்களுடைய இங்கிலீஷ் ஸ்டைல், அணுகுமுறையிலேயே பல கல்லூரிகள் அனுமதியளித்தன. யாருக்கும் சந்தேகம் வரவில்லை” என்று வாக்குமூலம் தந்திருக்கிறார்கள் இருவரும்.\nவாழ்க நம் தனியார் கல்லூரிகள்... வளர்க அவர்களின் சாதனைகள்\nபடம் : நன்றி தினகரன்\nபுகழ் பெற்ற மோனார்க் வகை வண்ணத்துப் பூச்சிகளின் வருடாந்திர இடம் பெய்வு தொடங்கியது\nமின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டி சாதனம்: ரூ.12,000 ரூ.15,000 விலையில் மார்ச் மாதம் சந்தைக்கு வருகிறது:\nதுபாயில் பிரம��மாண்ட மலர் பூங்கா மீண்டும் திறப்பு \n‘கால்நடை வளர்ப்புக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்’; தமிழக அரசுக்கு கோரிக்கை\nதமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக வழக்கு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு\nசிறுவர்களையும் சினிமா மோகத்தில் தள்ளிவிட வேண்டுமா\nஒரு சூறாவளியின் பயணம் விழித்துக்கொள்ளுமா தமிழக அரசு\nவானிலை முன்னறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை வாய்ப்பு\nநவ.:21 - சுதந்திரத்துக்கு பின் இந்தியாவில் முதன்முதலாக தபால் தலை வெளியிடப்பட்ட நாள் இன்று. (1947 ஆம் ஆண்டு)\n தமிழகம் மத்தியரசுக்கு கட்டும் வரி ஆண்டுக்கு\nமற்ற மொழிகளையும் கற்று கொள்வோம்.. தாய்மொழிக்கு முதலிடம் கொடுப்போம்: ஷார்ஜா விழாவில் வைரமுத்து பேச்சு:\nஒரு கண் மூடி தூங்கும் டால்ஃபின்\nபிறந்த குழந்தைகளின் மரபணுவை டெஸ்ட் பண்ணிக் கோரியவரின் ஆண்மையை பரிசோதிக்க ஆர்டர்\nரசம் தினமும் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்று சர்வதேச அமைதி தினம்\nபேரிக்காய் சர்க்கரை நோயைத் தடுக்கும்\nஉலகை வியக்கவைத்த ‘எக்ஸ்-ரே கண்ணழகி’\nநாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்..\nஇந்திய சினிமாவின் நம்பர் 1 யார்\nஅஜித் சாதனையை முறியடிக்க தவறிய கபாலி\nநடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம், வயது 69. நேற்று உடல்நல குறைவால் காலமானார்.\nசீனாவில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்ய 2017 ஜூன் வரை தடை\nஅட்டகாசமான ரெஸ்யூம்: இன்டர்வியூ இல்லாமல் லண்டனில் வேலை பெற்ற பெங்களூர் இளைஞர்\nஎம்.ஜி.ஆரிடம் மீன் குழம்பு கேட்ட முகமது அலி \n58ம்ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டி ஆரம்பம் ..\nமாநில அளவிலான தடகளப்போட்டிகளில் கே.எஸ்.வி பள்ளி பதக்கங்கள்\nமாநில குத்துச்சண்டை போட்டியில் P.A. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.\nதேசிய அளவிலான ரோப்ஸ்கிப்பிங் போட்டியில் கே.எஸ்.வி பள்ளி பதக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/11/blog-post_17.html", "date_download": "2021-08-02T09:56:06Z", "digest": "sha1:KDE45FDT5HRA23MIVEDMCHGFTDZCYZX7", "length": 20718, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியும் ஹிஸ்புல்லாவுக்கு கதவை இழுத்து மூடியுள்ளது.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலள���க்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியும் ஹிஸ்புல்லாவுக்கு கதவை இழுத்து மூடியுள்ளது.\nஅண்மையில் அழையாவிருந்தாளியாக அல்-ஹாமியா அரபுக் கல்லூரியினுள் நுழைந்த ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா அங்கு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை தனது தேர்தல் பிரச்சார பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றார்.\nஇவ்விடயத்தினை அறித்த கல்லூயின் பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா விஜயம் செய்தமை கண்டிக்கத்தக்கது என அறிவித்துள்ளார்.\nஅல்-ஹாமியா அரபுக் கல்லூரி (கல்முனை ஹிமாயதுல் இஸ்லாம் அமைப்பின்) பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nகடந்த 04.11.2019 அன்று அல்-ஹாஹாமியா அரபுக் கல்லூரிக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புள்ளா விஜயம் செய்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அவற்றை தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது அவரது கேவலமான அரசியலை பிரதி பலிக்கின்றது.\nமௌலவி மும்தாஜ் மதனி என்பவர் கல்வி நடவடிக்கைக்களுக்காக கல்லூரிக்கு விஜயம் செய்யவிருப்பதாகவே ஏற்கனவே அறிவிக்க்ப்பட்டிருந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஹிஸ்புள்ளா வருகை தந்திருந்தார் என்பதுடன் இந்நடவடிக்கைக்கு மத்ரஸா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியா���ு. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nபுளொட் உள்வீட்டு படுகொலைகளில் சக தோழி கற்பழிக்கப்பட்டாள். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் அஷோக்-\nதமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அடையாளமாக அதன் உள்வீட்டு படுகொலைகளே எஞ்சியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவிழ்கப்படாத முடிச்சு...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஎந்த பிரபாகரன் கமியூனிசமும் சேகுவரா கதைகளையும் படித்தவர்\nஇந்த மேதகு என்றொரு கதை வந்தாலும் வந்தது, ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். அதில் பிரபாகரன் கம்யூனிசம் படிக்கின்றானாம், சேகுவேரா புத்தகமெல்லாம் வ...\nஅலுக்கோசுகளின் சினிமா தான் \"மேதகு\"\nதூக்குமேடையில் தூக்கு போடும் அலுக்கோசுகள் போன்றே, பிழைப்புவாத ஈழ ஆதரவு தமிழக கும்பல்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளும் குறுகிய வழிபாட்டை ஊக்...\nகொரோணா தொற்றின் பின்னால் ஒழிந்து நின்று நாட்டின் எஞ்சியுள்ளவற்றையும் அரசு விற்கின்றாதாம். சாடுகின்றது ஜேவிபி\nமக்கள் பெரும்தொற்றுக்கு உள்ளாகி வீடுகளுள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எஞ்சியுள்ள சில நிலங்களை விற்க முற்படுகின்றது, பொருத்தமானதும் உ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\n சாத்திரி பேசுகிறேன் பாகம்: மூன்று\nபுலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சக்கைசாத்திரி என்பர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருக்கின்றார். அவர் அங்கு அருளின...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nரவிராஜ் புலிகளின் பெரும் விசுவாசி, அவ்வியக்கத்தினை நேசித்தவர் மட்டுமல்ல மரணத்தின் பின்னர் பிரபாகரனால் மாவீரல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறா���் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2011/02/blog-post_02.html", "date_download": "2021-08-02T10:28:35Z", "digest": "sha1:GDE5KYTM36LWODDRP6U65A6B75CH7SKD", "length": 65150, "nlines": 529, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: கொஞ்சம் சாரு, கொஞ்சம் சாண்டில்யன் ஒன்றாய்ச் சேர்ந்தால்...?", "raw_content": "\nகொஞ்சம் சாரு, கொஞ்சம் சாண்டில்யன் ஒன்றாய்ச் சேர்ந்தால்...\nமீண்டுமொரு நாள் புத்தக சந்தையில் பதிவுலக நண்பர் ஒருவருடன் மேயந்துக்கொண்டிருந்தேன். வானதி பதிப்பகம் வாசலில் நின்று புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று நண்பர் “நீங்க, சாண்டில்யனின் கடல்புறா நாவலை படித்திருக்கிறீர்களா...” என்றார். நான் சாண்டில்யனா...” என்றார். நான் சாண்டில்யனா... யாருங்க அவருன்னுற மாதிரி பேந்தப் பேந்த முழிச்சேன். அந்த ஜெர்க்கை வெளியே காட்டிக்கொள்ளாமல் ஏதோ நான் சாண்டில்யன் ஒருவரது புத்தகங்களைத் தவிர அனைத்து புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவன் போல “இல்லிங்களே...” என்று நெற்றிச்சுருக்கி பதில் சொன்னேன். சாண்டில்யன் எழுத்துக்களை படிக்காதவனெல்லாம் உயிரோட இருக்குறதே வேஸ்டுன்னு சொல்றா மாதிரி ஏற இறங்க ஒரு லுக் விட்டார்.\nஅதன்பிறகு அவருக்கே தெரியாமல் சில சாண்டில்யன் நாவல்களை நோட்டமிட்டபடி வந்தேன். ஒவ்வொன்றிலும் மன்னர் காலத்து கதை என்பது போன்ற ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. பொதுவாக இந்தமாதிரி நாவல்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. ஆன்மிக புத்தகமாக இருந்துவிடுமோ என்ற ஐயப்பாடு. நண்பர் பார்த்த பார்வை மனதை பாடாய்ப்படுத்திக்கொண்டிருந்தது. சரி, என்ன தான் இருக்கிறதென்று படித்துப் பார்த்துவிடுவோமே என்று எண்ணம் மெலிதாக எட்டிப்பார்த்தது. முப்பதிற்கும் மேற்பட்ட நாவல்களில் எதை வாங்குவது என்று தெரியவில்லை.\nமறுபடியும் அந்த நண்பரிடமே சென்று வெட்கத்தை விட்டு சாண்டில்யன் நாவல்களில் எது அருமையாக இருக்கும் என்றொரு வரலாற்று சிறப்புமிக்க கேள்வியைக் கேட்டேன். அவர் கடல் புறா என்று கையை நீட்டி காண்பித்தார். ஆங்கே உண்மைத்தமிழன் பதிவு சைஸில் மூன்று புத்தகங்கள் இருந்தன. வெளங்கிடும்ன்னு மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஒரு மரியாதைக்காக அந���த மூன்றில் ஒன்றினை கையில் தூக்கிப்பார்த்தேன். என்னுடைய புஜங்கள் இதுநாள் வரை பலமில்லாமல் இருந்ததன் ரகசியம் புரிந்தது. நண்பர் ஜீன்ஸ் போட்டிருந்த பிகர் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த கேப்பில் நைஸாக புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு நகர்ந்தேன்.\nஅடுத்தமுறை சாண்டிலயனைப் பற்றி கொஞ்சம் விக்கிபீடியா பார்த்து தெரிந்துக்கொண்டு மீண்டும் புத்தக சந்தைக்கு சென்றேன். ஓவர் டூ வானதி பதிப்பகம். அடுக்கி வைத்திருந்த நாவல்கள் ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ந்துக்கொண்டிருந்தேன். வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமென்றால் எது குறைந்த விலை, குறைந்த பக்கங்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது சாண்டில்யனின் எழுத்துக்களை ருசி பார்த்துவிடும் முனைப்பில் “ராஜ யோகம்” என்ற தலைப்பிட்ட நாவலை தேர்ந்தெடுத்தேன்.\nஅடுத்ததாக சாரு. பதிவுலகை பொறுத்தவரையில் இங்கே சாருவின் சாற்றை ஒருதுளி கூட விடாமல் பிழிந்துக்குடித்தவர்கள் அதிகம். (சாருவையே பிழிந்தவர்கள் அதைவிட அதிகம்). இவ்வாறாக சாருவை ஆராதிக்கும் ஒரு கூட்டமும், சாருவை அசிங்கப்படுத்தும் ஒரு கூட்டமும் இருக்குமிடத்தில் சாருவைப் பற்றி எழுதவே பயமாக இருக்கிறது. ஏனெனில் எனக்கு சாரு பற்றி எதுவும் தெரியாது என்பதே அப்பட்டமான உண்மை.\nசாருவைப் பற்றி முதல் முதலாக அறிந்துக்கொண்டது குமுதத்தில் தொடராக வெளிவந்த கோணல் பக்கங்களின் மூலமாகத்தான். நான் படித்த சில எபிசோடுகளும் மது, மாது சார்ந்தவையாகவே இருந்தன. அந்த போதையும் எழுத்துநடையில் இருந்த வசீகரமும் எனக்கு பிடிக்கவே செய்திருந்தது. அதைத் தொடர்ந்து வந்த புத்தக சந்தையில் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) சாருவின் எழுத்துக்களை இன்னும் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் “கலகம், காதல், இசை” என்ற கட்டுரைத்தொகுப்பை வாங்கினேன்.\nஏன் அந்த புத்தகத்தை வாங்கினேன் என்று பின்னாளில் என்னை நானே திட்டிக்கொண்டேன். சத்தியமா சொல்றேன், அந்த புத்தகத்தில் இருக்கும் எதுவுமே எனக்கு புரியவில்லை. ஒருவேளை பின்நவீனத்துவவாதிகளுக்கு மட்டும்தான் புரியுமோ என்னவோ... அதன்பிறகு அந்த புத்தகத்தை அலமாரியில் இருந்து எடுக்கவே இல்லை. பரிசளிக்கும் சாக்கில் யாருடைய தலையிலாவது கட்டிவிட வேண்டுமென்று உத்தேசம்.\nஅப்புறம், பதிவுலகம் வந்தபின்பு க���றிப்பாக நித்தியானந்தா டிவி சேனல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டிருந்த சமயம் சாருவை நக்கலடித்து ஆங்காங்கே சில பதிவுகள் எழுதப்பட்டு வந்தன. படிப்படியாக மனதில் சாருவின் மீதிருந்த மரியாதை தேய்ந்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரது எந்திரன், மன்மதன் அம்பு படங்களின் விமர்சனங்களை படிக்க நேர்ந்தது. அதன்பிறகு சொல்லவே வேண்டும். சாருன்னா யாருன்னு கேட்குற அளவுக்கு மாறினேன்.\nஎன்னதான் நடந்தாலும் ஒருசிலர் சாருவை சிலாகிப்பதை பார்க்கும்போது என்னதான் இருக்கிறது சாருவிடம் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் “தேகம்” நாவலை வாங்கியிருக்கிறேன். யாரோ ஒருவர் சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு நாவலைப் படிக்கும்போது எந்தவித எதிர்ப்பார்ப்பும் மனதில் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் மட்டுமே நாவலை முழுமையாக ரசிக்க முடியுமென்று. எனவே எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. யாரிடமும் கருத்து கேட்கவில்லை. கேட்டாலும் தெளிவான விடை கிடைப்பதில்லை. ஒருவர் ராஸ லீலா மாதிரி யாரும் எழுத முடியாதுன்னு சொல்றார். ஒருவர் ஜீரோ டிகிரி தான் சாருவின் மாஸ்டர் பீஸ் என்கிறார். மற்றொருவர் ஜீரோ டிகிரி படித்தால் தலைவலி நிச்சயம் என்கிறார். இப்படியாக சாருவைப் பற்றி தெளிவான எண்ணங்கள் கிடைக்காத நிலையில் எந்தவித எதிர்ப்பார்ப்புக்களுமின்றி தேகத்தில் இருந்து சாருவை படிக்க ஆரம்பிக்கிறேன்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:28:00 வயாகரா... ச்சே... வகையறா: நூல் அறிமுகம், புத்தகக் கண்காட்சி\nசக்தி கல்வி மையம் said...\nஅருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..\nநல்லா படிங்க.. நாளைக்கு கொஸ்டின் கேக்கறோம்.. ஒழுங்கா பதில் சொல்லனும்... பதில் தப்பா சொன்னா உ.த. அண்ணாச்சியோட ஒரு பத்து பதிவ எடுத்து ஆயிரம் தடவ இம்போசிஷன் எழுதனும் :)\nஉங்களுக்கும் எனக்கும் இருக்கிற இன்னொரு ஒற்றுமை; எனக்கும் சாரு நிவேதிதா பற்றி தெரியாது. வாசித்ததில்லை. கை கொடுங்க\nமுதலில் இருவரையும் கலந்தது தவறு. சாண்டில்யன் படிக்க ஆசைப்பட்டால் நீங்க படிக்கவேண்டியது கடல்புறா,யவன ராணி,ராஜ முத்திரை இது மூன்றும் அவருடைய பெஸ்ட்\nராஜயோகம்லாம் ரொம்ப பின்னால எழுதியதுங்க, அவர் எழுதிய பழைய நாவல்கள்தான் நல்லாயிருக்கும்\nஎதுக்கு காசு போட்டு வாக்ன்கிக்கிட்டு..லைப்ரரில கெடைக்காதா\nசாண்டில்யன் கதைகள் கடல்புறா,யவன ராணி படித்தது உண்டு .. சாரு இன்று தான் கேள்வி படுகிறேன்.. நிச்சயம் படிக்க ஆரம்பிப்பேன் :):)\n>>>நண்பர் ஜீன்ஸ் போட்டிருந்த பிகர் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த கேப்பில் நைஸாக புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு நகர்ந்தேன்.\nadadaa அந்த ஃபிகரை ஒரு ஃபோட்டோ எடுத்திருக்கலாம்\nசாண்டில்யனின் மாஸ்டர் பீஸ் யவன ராணீ\nகடல் புறாவில் கடல் போர் பற்றிய நுணுக்கங்களும் கப்பல்;ஐ செலுத்தும் முறைகள் பற்றியும் பிரமாதமாக வர்ணீக்கபாட்டிருக்கும்\nசாருவின் நாவல்களில் அதிக விற்பனை ஆனதில் ஃபேன்சி பனியனும் நாவல் அப்புறம் ஜீரோ டிகிரி. 2 மே சீன் இரூக்கும்னு நம்பிக்கைல சேல்ஸ் ஆனது.\nஒரு நல்ல படிப்பாளியே நல்ல படைப்பாளி ஆக முடியும் என்ற அடிப்படையில் நீங்களும் படிக்க ஆரம்பிச்சுட்டீங்க போல.. ம் ம் வாழ்த்துக்கள்\nபார்க்கும்போது என்னதான் இருக்கிறது சாருவிடம் என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் “தேகம்” நாவலை வாங்கியிருக்கிறேன்.\nஆனா ஒரு விசயம் மட்டும் சொல்லிக்கிறேன் நைனா..\nபுத்தகத்தை கீழ மட்டும் வெச்சுடாதீங்க...ஹி..ஹி\nமக்கா.. குனிந்து புத்தகம் எடுக்கும் நேரத்தில, பின்புறம் களவாடப்பட்டிருக்கும்..ஹி..ஹி\n( புத்தகத்தின் பின்புறம் எனப்படிக்கவும்) ...\nதேகம் நானும் படிக்கணும்னு நினைத்துக்கொண்டு உள்ளேன்,மும்பையில் எங்கு கிடைக்கும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே\nInteresting. உண்மையிலேயே, நல்ல எழுத்து நடை. நாவல்களை படித்து விட்டு அதைப் பற்றியும் எழுதுங்கள்.\nஎனக்கு ஏனோ சாருவைப் பிடிக்காது..\nதேகம் படித்துவிட்டு நல்லா இருக்க இல்ல நல்லா இல்லையானு சொல்லுங்க .நான் இதுவரைக்கும் அவருடைய கட்டுரை தொகுதியான 'தப்பு தாளங்கள் ' மட்டும்தான் படித்திருக்கிறேன் .\nபடித்து விட்டு அதைப் பற்றியும் எழுதுங்கள்.\nபரவாயில்லை புத்தகம் படிக்கும் அளவிற்கு உங்களுக்கு நேரமும் பொருமையும் உள்ளது\n\\\\எல் கே\\\\மேலே சொன்னதை அப்படியே நானும் வழிமொழிகிறேன் யுவர் ஆனர்\n//முதலில் இருவரையும் கலந்தது தவறு. சாண்டில்யன் படிக்க ஆசைப்பட்டால் நீங்க படிக்கவேண்டியது கடல்புறா,யவன ராணி,ராஜ முத்திரை இது மூன்றும் அவருடைய பெஸ்ட்//\nபடிச்சிட்டு அடுத்த விமர்சனப் பதிவுக்கு ரெடியாகுங்க. வாழ்த்துக்கள்.\nதமிழ்ல நாவல் படிக்கணும்ன�� இங்க போங்க\nசாருவோட\" ஜீரோ டிகிரி \" எல்லாம் வாங்கி படிச்சுராதீங்க . மண்டை காஞ்சுரும் .\nபதிவெழுதி, பின்னூட்டத்திற்கு பதிலளித்து, மத்தவங்களுக்கும் பின்னூட்டமிட்டு, ஒலக மற்றும் உள்ளூர் சினிமா பார்த்து, புத்தக கண்காட்சிக்கு போயி; இத்தனைக்கும் பிறகு புத்தகம் வாசிக்கவும் நேரமிருக்கா உங்களுக்கு ஒரு நாளைக்கு 48 மணித்தியாலமா\nகல்கிக்குப் பிறகு வரலாற்றுப் புதினங்கள் ரசிக்க எழுதியவர் சாண்டில்யன். என்ன, இவரது கொஞ்சம் இழுவையாக இருக்கும் அவ்வளவுதான். மற்றபடி சுவையானவை.\nசாருவின் பல புத்தகங்களின் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (என்று சொல்வார்கள்) நான் அவருடைய விமர்சனங்கள், ஓரிரு கதைகள் படித்திருக்கிறேன். நாவல் இதுவரை படித்ததில்லை... என்றாலும் நிறையபேர் அவருடைய எழுத்துக்கள் தனித்தன்மை வாய்ந்தது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nசாண்டில்யன் புத்தகங்கள் எல்லாம் என் அப்பா நிறைய படிப்பார் அப்போது அருகில் இருந்து வேடிக்கை பார்த்ததோடு சரி. அவர் எழுத்து நடை புரிபடாமலே போய்விட்டது. படிக்க தொடங்க வேண்டும்.\nசாரு பற்றி நோ காமெண்ட்ஸ்.\nஅதென்ன கேள்வி. ஆன்மிகம் மதவாதம் இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். ஆன்மீக புத்தகங்கள் இண்ட்ரெஸ்டிங்ஆக இருக்கும். படித்து பாருங்கள் மதத்தை தள்ளி வைத்து விட்டு. ஆன்மீகத்துக்கு வயது தேவை இல்லை. கடவுள் நம்பிக்கை தேவை இல்லை.\nநாங்க மட்டும் என்ன சாருவை கரைத்து குடித்தவர்களா இல்லை சாருவுடன் குடித்தவர்களா என்ன ஏதோ ப்ளாக் ஞானம். ஒண்ணு மட்டும் நிச்சயம். அவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு. (சரக்கை சொல்லல) ஏன்ன.. அவர் ரொம்ப நல்லவரு...\nசாண்டில்யன் கதையைக்கொண்டுபோவதில் மன்னர்தான்.ஆண், பெண் வர்னனைகள் விஸ்தாரமாக இருக்கும்.அதுதான் பொறுமையை சோதிக்கும்.சாரு வோட எழுத்துக்கள் அங்கொன்னும் இங்கொன்னுமாகத்தான் படிச்சிருக்கேன்.\nஎனது 12ம் வயதில் சாண்டில்யன் எழுதிய 'கன்னிமாடம்' என்ற சரித்திர நாவலை படித்தேன். அப்போதுதான் சரித்திர நாவல்களைப் படிப்பதில் ஆர்வம் தொடங்கிற்று. அதன் பின் கடல் புறா, யவன ராணி, ராஜமுத்திரை, அலை அரசி, ராஜ பேரிகை, கடல் புறா, மலை அரசி, ராஜதிலகம் இன்னும் சில புத்தகங்களை வாசித்ததுண்டு.\nசாண்டில்யன் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‍ கடல் புறா, யவன ராணி. ���ீண்டும் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இன்றும் உள்ளது.\nபிரபாகரன் அவர்களே ஒரு அட்வைஸ் நேரமும் ஆர்வமும் இருந்தால் சாண்டில்யன் அவர்களின் அனைத்து நாவல்களையும் படியுங்கள்.\nசாண்டில்யன் எழுத்துக்கள் அருமையா இருக்கும், சாருவை பத்தி அதிகமா தெரியலீங்கோ....\nசாருவின் எழுத்துக்கள் குப்பை என்று யாரும் சொல்லமாட்டார்கள் .........\nஅவரின் சிந்தனைகள்தான் குப்பை ........\nசாண்டில்யன் சரித்திர நாவல் எழுதுவதில் ஒரு சூப்பர் ஸ்டார்........\nஅவரும் சில மோசமான நாவல்களை எழுதி இருக்கிறார் .........\nஅது சரி நான் ஜீன்ஸ் போட்ட பிகர தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்னு எப்படியா கண்டுபிடிச்சே \nசாருவின் எழுத்துக்கள் குப்பை என்று யாரும் சொல்லவில்லை அவர் நல்ல எழுத்தாளர்தான் ........\nஅவரின் சிந்தனை தான் குப்பை ...........\nசாண்டில்யன் சரித்திர நாவல் எழுதுவதில் சூப்பர் ஸ்டார் ..........\nஆங்கில படம் பார்த்தது போல் இருக்கும் ......................\nஅது சரி நான் ஜீன்ஸ் போட்ட பிகர தான் பார்த்தேன் என்று எப்படியா கண்டுபிடிச்சே .\nசாருவின் பல புத்தகங்களின் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (என்று சொல்வார்கள்)-\nவேறு ஒருவருமில்லை சாரு தானே அடிக்கடி கூறுவார்.\nசாண்டில்யன் வேறு சாரு வேறு....முன்னவரை எல்லோருமே படிக்கலாம்; பின்னவரை எல்லோரும் படித்துவிட முடியாது.\nசாண்டில்யனின் கடல் புறா; யவன ராணி - பிரசித்தமானதும், சிறந்தவையும்\n>>> படிச்சிட்டு சொல்லுங்க. நல்லா இருந்தா வாங்கறேன். என் லெவலுக்கு ஆனந்த விகடன், குமுதம்..that's all.\nசாண்டில்யன் தமிழ் எழுத்துலகின் வரம்.சாரு நிகழ்கால தமிழ் எழுத்துலகின் சாபம்.\nகருத்து சொல்ல கூட பயமா இருக்குதுங்கோவ்..:((\nநான் தான் உங்கள் 300 வது follower என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்\nஎன்னமோ போங்கப்பா இந்த படிச்ச புள்ளைங்களே இப்படித்தான் ரொம்ப நல்லவங்க மாதிரியே.......ஹிஹி\nஎனக்கும் இந்தமாதிரி அறிவாளிக புத்தகங்களுக்கும் சம்பந்தமில்லைங்கோ\nபடித்த பின் கருத்து சொல்ல மறக்காதீர்கள்..\nதமிழில் எழுத முனைவோர் கண்டிப்பாய் சாண்டில்யனின் எழுத்தைப் படிக்க வேண்டும். யவன ராணி ,கடல்புறா,மலைவாசல்,ஜலதீபம்,\nமன்னன மகள் கண்டிப்பாய் படியுங்கள்.\n///// நான் தான் உங்கள் 300 வது follower என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன் // எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... நான் சில சமயங்க���ில் விஜய்யை கலாய்த்து பதிவு எழுதுவேனே... நீங்கள் படித்தால் வருத்தப்படுவீர்கள் அல்லது கோபப்படுவீர்கள்.//// அது எனக்கு தெரியும் ஆனால் நான் தல அஜித்தை கலாய்க்க மாட்டன்\nபாஸ், இருவருடைய புத்தகத்தையும் நான் படித்தது இல்லை.\n@ sakthistudycentre-கருன், இராமசாமி, சேட்டைக்காரன், எல் கே, வருண், கல்பனா, சி.பி.செந்தில்குமார், பட்டாபட்டி...., டெனிம், Thirumalai Kandasami, கொக்கரகோ..., சங்கவி, Samudra, நா.மணிவண்ணன், Speed Master, வசந்தா நடேசன், சே.குமார், ராஜகோபால், ஜி.ராஜ்மோகன், எப்பூடி.., ஆதவா, பாலா, ப்ரீதம் கிருஷ்ணா, Lakshmi, அருள்மொழிவர்மன், பன்னிக்குட்டி ராம்சாமி, அஞ்சா சிங்கம், getch, யோகன் பாரிஸ்(Johan-Paris), சிவகுமார் , jayaramprakash, தேனம்மை லெக்ஷ்மணன், Vinu, விக்கி உலகம், பார்வையாளன், மோகன்ஜி, இளம் தூயவன்\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...\n// நல்லா படிங்க.. நாளைக்கு கொஸ்டின் கேக்கறோம்.. ஒழுங்கா பதில் சொல்லனும்... பதில் தப்பா சொன்னா உ.த. அண்ணாச்சியோட ஒரு பத்து பதிவ எடுத்து ஆயிரம் தடவ இம்போசிஷன் எழுதனும் :) //\nஎன்னங்க இது தண்டனை இவ்வளவு கடுமையா இருக்கு... அவரு பதிவை ஒரு முறை எழுதினாலே விடிஞ்சிடுமே...\n// உங்களுக்கும் எனக்கும் இருக்கிற இன்னொரு ஒற்றுமை //\nஅப்படின்னா ஏற்கனவே ஒரு ஒற்றுமை இருக்கா... அது என்ன...\n// முதலில் இருவரையும் கலந்தது தவறு //\nஇடுகையில் தான் கலந்துவிட்டேன்... படிக்கும்போது தனித்தனியா தான் படிப்பேன்... கவலைப்படாதீங்க...\n// சாண்டில்யன் படிக்க ஆசைப்பட்டால் நீங்க படிக்கவேண்டியது கடல்புறா,யவன ராணி,ராஜ முத்திரை இது மூன்றும் அவருடைய பெஸ்ட் //\nநீங்க சொல்ற நாவல்கள் எல்லாம் பெரிய சைஸ் நாவல்கள்... பொறுமையை சோதிக்கும்...\n// எதுக்கு காசு போட்டு வாக்ன்கிக்கிட்டு..லைப்ரரில கெடைக்காதா\nலைப்ரரி பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு... ஆனால் ஏனோ இதுவரை விஜயம் செய்ததில்லை... நேரமில்லை என்று சொல்லி அலட்டிக்கொள்வேன்... ஒரு சோம்பேறித்தனம்...\n// சாரு இன்று தான் கேள்வி படுகிறேன். //\n இதை சாரு விசிறிகள் கேட்டால் வெட்டுகுத்து ஆகிடும் மேடம்...\n// adadaa அந்த ஃபிகரை ஒரு ஃபோட்டோ எடுத்திருக்கலாம் //\nஅப்புறம் நம்ம பதிவும் சாருவின் புத்தகம் மாதிரி ஆகிடுமே...\n// சாருவின் நாவல்களில் அதிக விற்பனை ஆனதில் ஃபேன்சி பனியனும் நாவல் அப்புறம் ஜீரோ டிகிரி. 2 மே சீன் இரூக்கும்னு நம்பிக்கைல சேல்ஸ் ஆனது. //\nதேகம் கூட அந்த நம்பிக்கையில் சேல்ஸ் ஆனதா தான் கேள்விப்பட்டேன்... இதில் சரோஜா தேவி புத்தகம்ன்னு மிஷ்கின் வேற பப்ளிசிட்டி கொடுத்துட்டார்... ஆனா சத்தியமா நான் அதுக்காக வாங்கலைங்கோ...\n// வாங்கியாச்சு.. என்ன பண்ண\nஆனா ஒரு விசயம் மட்டும் சொல்லிக்கிறேன் நைனா..\nபுத்தகத்தை கீழ மட்டும் வெச்சுடாதீங்க...ஹி..ஹி\nமக்கா.. குனிந்து புத்தகம் எடுக்கும் நேரத்தில, பின்புறம் களவாடப்பட்டிருக்கும்..ஹி..ஹி\n( புத்தகத்தின் பின்புறம் எனப்படிக்கவும்) ... //\nஒவ்வொரு முறையும் நீங்க போடும் பின்னூட்டங்கள் கூட சாருவின் எழுத்துக்கள் போலவே புரியவே மாட்டேங்குது... ஒருவேளை \"பின்\"நவீனத்துவவாதிகளுக்கு மட்டும்தான் புரியுமோ என்னவோ...\n// மும்பையில் எங்கு கிடைக்கும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே //\nம்ஹூம் தெரியவில்லை... ஆன்லைனில் வாங்கும் வசதி உள்ளதா என்று பார்க்கவும் அல்லது நண்பர்கள் யாரையாவது வாங்கி கூரியரில் அனுப்பச் சொல்லுங்கள்...\nபிரிவோம் சிந்திப்போம் சுஜாதா எழுதிய நாவலாச்சே... அதற்கே தலைவலியா...\n// நாவல்களை படித்து விட்டு அதைப் பற்றியும் எழுதுங்கள். //\nகண்டிப்பாக எழுதுகிறேன்... ஆனால் நாள் ஆகும்... ஏன்னா, நான் பேசிக்கல்லி ஒரு சோம்பேறி...\n// தேகம் படித்துவிட்டு நல்லா இருக்க இல்ல நல்லா இல்லையானு சொல்லுங்க .நான் இதுவரைக்கும் அவருடைய கட்டுரை தொகுதியான 'தப்பு தாளங்கள் ' மட்டும்தான் படித்திருக்கிறேன் . //\nகண்டிப்பா சொல்றேன்... பொறுமையா இருக்கணும்... தப்புத் தாளங்களா தலைப்பே ஒரு மாதிரியா இருக்கே...\n// எல் கே மேலே சொன்னதை அப்படியே நானும் வழிமொழிகிறேன் யுவர் ஆனர்\nநானும் அவருக்கு சொன்ன பதிலையே வழிமொழிகிறேன்...\nஇடுகையில் தான் கலந்துவிட்டேன்... படிக்கும்போது தனித்தனியா தான் படிப்பேன்... கவலைப்படாதீங்க...\n// தமிழ்ல நாவல் படிக்கணும்னா இங்க போங்க\nஇந்த தளத்தை ஏற்கனவே யாரோ ஒரு நண்பர் எனக்கு அறிமுகப்படுத்தினார்... பயனுள்ள தளம்தான்... ஆனால் சாருவின் நாவல்களோ, சாண்டில்யன் நாவல்களோ கிடைக்கப்பெறவில்லை... இருப்பினும் நன்றி...\n// பதிவெழுதி, பின்னூட்டத்திற்கு பதிலளித்து, மத்தவங்களுக்கும் பின்னூட்டமிட்டு, ஒலக மற்றும் உள்ளூர் சினிமா பார்த்து, புத்தக கண்காட்சிக்கு போயி; இத்தனைக்கும் பிறகு புத்தகம் வாசிக்கவும் ந��ரமிருக்கா உங்களுக்கு ஒரு நாளைக்கு 48 மணித்தியாலமா உங்களுக்கு ஒரு நாளைக்கு 48 மணித்தியாலமா\nஇப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க கேள்வியை கேட்டுட்டீங்களே...\nஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் மட்டுமே ஆன்லைனில் செலவிடுவேன்... மூன்று மணிநேரம் நண்பர்கள் பதிவை படித்து பின்னூட்டமிடுவேன்... பெரும்பாலும் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை... ஒரு மணிநேரம் எனக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் போடுவேன்... மேலும் ஒரு மணிநேரம் இதர பணிகளுக்காக செலவிடுவேன்...\nஅப்புறம் பதிவெழுதவதை பற்றி சொல்வதென்றால் வாரக்கடைசியில் உட்கார்ந்து நான்கைந்து பதிவுகள் எழுதி வைத்துவிடுவேன்... உலக சினிமா பார்ப்பது கூட வாரக்கடைசியில் தான்...\nபுத்தகக் கண்காட்சிஎல்லாம் வருடத்திற்கு ஒருமுறை தானே வருது... அதற்கு நேரம் செலவிட முடியாதா என்ன...\nதவிர்த்து நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன் என்று நீங்களாக கற்பனை செய்துக்கொள்ள வேண்டாம்... அதெல்லாம் எப்போதாவது மூடு வரும்போது உட்கார்ந்து ஒரே சிட்டிங்கில் படித்து முடிப்பேன்...\n// சாருவின் பல புத்தகங்களின் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (என்று சொல்வார்கள்) //\nஅதென்ன அடைப்புக்குறிகளுக்குள் என்று சொல்வார்கள்... அதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா...\n// ஆன்மிகம் மதவாதம் இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். ஆன்மீக புத்தகங்கள் இண்ட்ரெஸ்டிங்ஆக இருக்கும். படித்து பாருங்கள் மதத்தை தள்ளி வைத்து விட்டு. ஆன்மீகத்துக்கு வயது தேவை இல்லை. கடவுள் நம்பிக்கை தேவை இல்லை. //\nஅப்படிப்பட்ட புத்தகங்கள் கூட இருக்கின்றனவா... இந்த பின்னூட்டத்தை நீங்கள் படித்தால் அப்படிப்பட்ட புத்தகத்திற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்... எனக்கு பிடிக்குமா பிடிக்காதா என்று சொல்கிறேன்...\n// நாங்க மட்டும் என்ன சாருவை கரைத்து குடித்தவர்களா இல்லை சாருவுடன் குடித்தவர்களா என்ன ஏதோ ப்ளாக் ஞானம். ஒண்ணு மட்டும் நிச்சயம். அவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு. (சரக்கை சொல்லல) ஏன்ன.. அவர் ரொம்ப நல்லவரு... //\n ஆமா, அவருக்கு சரக்கு வாங்கிக் கொடுத்தா அவரோட தளத்துல நம்மள பத்தி நல்ல விதமா எழுதுவாராமே... அப்படியா...\n// சாண்டில்யன் கதையைக்கொண்டுபோவதில் மன்னர்தான்.ஆண், பெண் வர்னனைகள் விஸ்தாரமாக இருக்கும்.அதுதான் பொறுமையை சோதிக்கும் //\nபடிக்கும் ஆர்வத்தை மென்மேல��ம் தூண்டி விடுகிறீர்கள் மேடம்...\n// எனது 12ம் வயதில் சாண்டில்யன் எழுதிய 'கன்னிமாடம்' என்ற சரித்திர நாவலை படித்தேன். அப்போதுதான் சரித்திர நாவல்களைப் படிப்பதில் ஆர்வம் தொடங்கிற்று. அதன் பின் கடல் புறா, யவன ராணி, ராஜமுத்திரை, அலை அரசி, ராஜ பேரிகை, கடல் புறா, மலை அரசி, ராஜதிலகம் இன்னும் சில புத்தகங்களை வாசித்ததுண்டு. //\nநீங்க சொன்ன லிஸ்டில் ராஜயோகம் வரவே இல்லையே :(\n// பிரபாகரன் அவர்களே ஒரு அட்வைஸ் நேரமும் ஆர்வமும் இருந்தால் சாண்டில்யன் அவர்களின் அனைத்து நாவல்களையும் படியுங்கள். //\nஇந்தப்புத்தகத்தை முதலில் படிக்கிறேன்... என் மனம் கவர்ந்துவிட்டால் அடுத்து வரிசையாக படிக்க ஆரம்பித்துவிடுவேன்...\n// அது சரி நான் ஜீன்ஸ் போட்ட பிகர தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்னு எப்படியா கண்டுபிடிச்சே \nபதிவுல வந்த நண்பன் கேரக்டர் நீங்கதான்னு கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே... அப்படின்னா மெய்யாலுமே ஜீன்ஸ் போட்ட பிகரை பாத்தீங்களா... நான் ஒரு குத்துமதிப்பா தான் எழுதினேன்...\nஉங்கள் தாத்தாவின் பெயரை கேட்டதும் எப்படிப்பட்ட புத்தகங்களோ என்று பயந்தேன்... கேரளா ஆதிவாசிகள், நீலகிரி பாடகர்கள் என்று வசீகரமான தலைப்புகளாகவே இருக்கின்றன... பயணக்கட்டுரைகளின் தொகுப்பு என்று தெரிகிறது... ஆனால் எனக்கு ஆன்லைனில் புத்தகங்கள் வாங்கி பழக்கமில்லை... வானதி பதிப்பகம் தான் போல... சென்னையில் எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள்... வாங்கிப் படிக்கிறேன்...\n// முன்னவரை எல்லோருமே படிக்கலாம்; பின்னவரை எல்லோரும் படித்துவிட முடியாது //\nஅது என்ன பின்னவரை எல்லாரும் படித்து விட முடியாது... கஷ்டமான சிலபஸா...\n// சாரு நிகழ்கால தமிழ் எழுத்துலகின் சாபம். //\nஏன் இப்படி ஒரு ஆவேசம்.... யாராவது கோவிச்சிக்கப் போறாங்க...\nநல்ல பதிவு... ரீமேக் படங்களில் நடிப்பதில் தவறில்லை... அது எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் யாராக இருந்தாலும் சரி... இதற்காக தேவையில்லாமல் ஒப்பிட்டு காட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை... எம்.ஜி.ஆர், ரஜினி ரசிகர்கள் கோபம் கொள்ளக்கூடும்...\n// நான் தான் உங்கள் 300 வது follower என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன் //\nஎனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... நான் சில சமயங்களில் விஜய்யை கலாய்த்து பதிவு எழுதுவேனே... நீங்கள் படித்தால் வருத்தப்படுவீர்கள் அல்லது கோபப்படுவீர்கள்...\n// ���து எனக்கு தெரியும் ஆனால் நான் தல அஜித்தை கலாய்க்க மாட்டன் //\nநீங்கள் அஜித்தைப் பற்றி தவறாக எழுதினாலும் நான் ஏற்றுக்கொள்வேன்... ஆனால் எனது வாசகர் ஒருவர் வருத்தப்படுவதை விரும்பமாட்டேன்...\n// என்னமோ போங்கப்பா இந்த படிச்ச புள்ளைங்களே இப்படித்தான் ரொம்ப நல்லவங்க மாதிரியே... //\nநான் நல்லவன்னு உங்களுக்கு யாருங்க சொன்னது... நானெல்லாம் அல்கஞ்சாரி குல்கா பார்ட்டி...\nபடித்த பின் கருத்து சொல்ல மறக்காதீர்கள்.. //\nஅவ்வளவுதானா... உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேனே...\n// தமிழில் எழுத முனைவோர் கண்டிப்பாய் சாண்டில்யனின் எழுத்தைப் படிக்க வேண்டும். யவன ராணி ,கடல்புறா,மலைவாசல்,ஜலதீபம்,\nமன்னன மகள் கண்டிப்பாய் படியுங்கள். //\nநீங்க சொன்ன லிஸ்டில் ராஜயோகம் வரவே இல்லையே :(\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nஹ்ம்ம்.. சாரு அவர்களின் தேகம்.. புத்தகம் படித்து விட்டு உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஒரு விஷயம் உண்மை தான்.. எந்த புக் படிப்பதாக இருந்தாலும்.. எதிர்பார்ப்பு ஏதும் இல்லாம இருந்தா படிக்கணும்.. முன்னாடியே கருத்து கேட்டு பிறகு, படிப்பது.. அவ்ளோ சுவாரஸ்யம் இருக்காது தான்..\nஅந்த தளத்திற்கு சென்றேன்... கடையின் அட்ரஸ் கிடைத்தது... அடுத்த முறை தி.நகர் செல்லும்போது வாங்கிவிடுகிறேன்...\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 22022011\nநடுநிசி நாய்கள் – வக்கிரமான கிரியேட்டிவிட்டி\nநடுநிசி நாய்கள் – Border Town\nநையாண்டி பவன் – ஒரு அறிமுகம்\nபிரபா ஒயின்ஷாப் – காதலர் தின ஸ்பெஷல்\nடாகுடர் விஜய் – எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்\nநடிகர் விஜய் – எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 07022011\nயுத்தம் செய் – ஸ்டாண்டிங் ஓவேஷன்\nகொஞ்சம் சாரு, கொஞ்சம் சாண்டில்யன் ஒன்றாய்ச் சேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=21104241", "date_download": "2021-08-02T08:28:33Z", "digest": "sha1:ZVGSYTKCPYSJRSYFJU6UYPOEAB3QUHXE", "length": 39031, "nlines": 181, "source_domain": "old.thinnai.com", "title": "மகாகவி பாரதி விரும்பிய பாரதம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nமகாகவி பாரதி விரும்பிய பாரதம்\nஇருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் ஈடு இணையில்லாதக் கவிஞர் பாரதியே. வசன கவிதை என்ற ஒன்றை உலகுக்கு அளித்து, மரபை உடைத்தெறிந்த உன்னத கவிஞர் மகாகவி பாரதியார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ��ாட்டு விடுதலைக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பாடிய ஒரு பெரும் புலவர். பாரதியின் பார்வை விசாலமானது. நாடு விடுதலை பெறுவது மட்டும் அவரது நோக்கமல்ல இந்தியநாடு ஒரு வல்லரசாக பரிணமிக்க வேண்டும் என்று கனவு கண்டார். பிற்காலச் சமுதாயம் எப்படி ஆரோக்கியமாக மலர வேண்டும் என்பதை முன்னரே எடுத்துக் காட்டியவர் பாரதி. அவர் விரும்பிய பாரதத்தைப் பற்றிய செய்திகளை வெளிக் கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஅக்கால பாரதத்தின் நிலையைச் சாடுதல்\nநாடு அடிமைப்படவும், நாட்டின் முன்னேற்றம் தடைபடவும் காரணமாக விளங்குகின்ற சாதிமத பேதங்கள், மூடநம்பிக்கை, பெண்ணடிமை போன்றவற்றை கடுமையாக தனது பாடல்களில் சாடியுள்ளார். பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் சாதிமத இன உணர்வுகள் மேலோங்கி நின்றுவிடக்கூடாது என்பதற்காக,\n“சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்\nதாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” 1\nஎன்று குறிப்பிடுகிறார். மேலும் அவர் வாழ்ந்தக் காலத்தில் சமுதாயத்தில் நிலவிய மூட நம்பிக்கையை.\n“நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த\nநிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்\nஅஞ்சியஞ்சிச் சாவார் – இவர்\nஅஞ்சாத பொருளில்லை அவனியிலே” 2\nஎன்று நெஞ்சம் குமுறுகிறார். மேலும் பெண்ணடிமை ஒழிந்தாலே, பொன்னாட்டின் விலங்கொடியும் எனக் கண்ட பாரதி\n“மாதர் தம்மை இழிவு செய்யும்\nஎன்று தன்னுடையச் சிந்தனைகளைப் பதிவு செய்கிறார்.\nபாரதி உணர்ச்சி வேகத்தில் நாட்டைப் போற்றுவதும் வணங்குவதும் போதும் என நின்று விடுபவரல்லர். நாட்டை எவ்வெவ் வகைகளில் உயர்த்த வேண்டும் என்பது பற்றிய தீர்மானங்களை, கனவுகளைக் கொண்டிருந்தவர். கல்வி, அறிவியல், கலை, இலக்கியம், விவசாயம், தொழில், வாணிகம் எல்லாவற்றிலும் முன்னேற்றத்திற்கான வழிவகைகளைத் தீர்மானித்தவர்.\n“பாரத தேசமென்று பெயர்ச் சொல்லுவார் – மிடிப்\nபயங் கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்”4\nஎனத் தொடங்கி அந்த நிலை வருவதற்காக நாம் செய்ய வேண்டியவகைளை பாடலில் கூறுகிறார்.\nஇமயப் பனிமலையின் மீது உலாவுவோம்; மேற்குக் கடல் முழுதும் கப்பல் விடுவோம், பள்ளிகளை எல்லாம் கோயில்கள் போலப் புனிதத் தலங்களாகக்குவோம்; எங்கள் பாரத தேசம் இது என்று தோள் கொட்டுவோம்; சிங்களத் தீவுக்கு ஒரு பாலம் கட்டுவோம் ; சேது சமுத்திரத்தை மேடாக்கிச் சிங்களத்தையும் இந்���ியாவையும் இணைக்கும் சாலை அமைப்போம், வங்கத்தில் தேவைக்கதிகமாய் பாய்ந்து கடலில் வீணாகும் வெள்ளத்தைத் திசை திருப்பி மத்திய இந்தியப் பகுதிகளில் விவசாயம் பெருக்குவோம். தங்கம் முதலிய உலோகங்களை வெட்டி எடுப்போம் வெளிநாடுகளில் அவற்றை விற்று நமக்குத் தேவைப்படும் பொருள் அனைத்தும் வாங்கி வருவோம்.\nமொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே\nநத்தி நமக்கினிய பொருள் கொண்ர்ந்து\nஎன்று நம்முடைய வாணித்தைப் பற்றியும் பல நாட்டு வணிகர்களும் நமது மேற்குக் கடற்கரையில் நாம் விரும்பும் பொருள்களைக் கொண்டு வந்து நம் பொருளை விரும்பி நின்றனர். என்பதையும் குறிப்பிடுகிறார். மேலும்\nதோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்\nகாவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்”6\nமாராட்டியர் கவிதைகளைப் பெற்றுக் கொண்டு சேர நாட்டுத் தந்தங்களைப் பரிசளிப்போம் காசி நகர்ப் புலவர் பேசும் உரை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்று கனவு கண்ட பாரதியின் நோக்கம் என்ன வென்றால், பல மொழி, பல இனம், நதி, பலவிதமான நிலஅமைப்பு எனவிரிந்துள்ள பாரதத்தை ஒருமைப்படுத்தப் பாரதி எண்ணுகிறார்.\nகாதலால் ஒருமை கூடும், கொடுக்கல் வாங்கலால் இணைவு நேரும், செய்திப் போக்குவரத்தால் ஒற்றுமை கூடும், பண்டமாற்று வணிகத்தால் தொடர்புகள் பெருகும் இவையே பாரதியின் நோக்கமாகும். பாரதி பற்றி கவிஞர் வைரமுத்து குறிப்பிடும் பொழுது,\nநீளக் கனவு கண்ட கவி\nஎன்று நம்முடைய கடமையை நினைவு கூர்கிறார். பாரதியின் கவிதைப்புலமைப் பற்றியும் அவரது கனவு பற்றியும் கவிஞர் மீரா குறிப்பிடும் பொழுது\nஎன்று பாரதியின் கவிதை ஆற்றலையும் அவரது தீர்க்க தரிசனத்தையும் பற்றிக் குறிப்பிடுகிறார்.\nதொழில் வளம், செல்வ வளம் பெருக பாரதி கூறும் கருத்துக்கள்\nபட்டாடை, பருத்தியாடைகளைச் செய்து மலைகளெனக் குவிப்போம். செல்வங்களைக் கொண்டு வரும் உலக வணிகர்களுக்கு அவற்றை விற்போம். ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம், குடைகள், கோணிகள், ஆணிகள், வண்டிகள், கப்பல்கள் பலவும் செய்வோம் என்று தொழில் வளத்தைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை கூறுவதன் மூலம் இந்தியா பல துறைகளிலும் முன்னேற வேண்டும், மக்கள் அனைவரும் வளம்பெற்று சிறக்க வேண்டும் என்ற அவரின் ஆவலை, பரந்த மனதை நாம் உணர முடிகிறது. மேலும், மந்திரம் கற்போம் தொழில் தந்திரங்கள் கற்போம், விஞ்ஞான அறிவு கொண்டு வாணை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தின் இயல்புகளைக் கண்டறிவோம் காவியம் செய்வோம், ஒவியம் செய்வோம், அன்றாட வாழ்வுக்குத் தேவையான காடு வளர்ப்போம் என்றுரைப்பதிலிருந்து இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதோடு, கல்வி கேள்விகளில், கலைகளில், விஞ்ஞானத்தில் என அனைத்திலும் உயரவேண்டும் என்ற அவரின் விருப்பம் தெளிவாகிறது.\nபாரத நாட்டின் மேன்மைகளை மனக் காட்சியாகக் காணும் பாரதிக்கு, இக்காட்சிகள் நடைமுறையாக வேண்டுமென்றால் சாதிக் கொடுமையும் பல்வேறு உயர்வு தாழ்வு நிலைகளும் ஒழிய வேண்டும் என்று எண்ணுகிறார். அவரது சோசலிச சமதர்ம மனித நேயச் சிந்தனை, கண்ட கனவுகள் இன்றைய காலங்களில் பெருமளவு நடந்தேறியது என்றாலும், உலக நாடுகளிடையே இந்தியா வல்லரசாக பரிணமிக்கும் பொழுதுதான் பாரதி கணட கனவு உண்மையிலேயே பலிக்கும்.\nஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)\nமகாகவி பாரதி விரும்பிய பாரதம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76\n2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் (கவிதை -32 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -2)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33\n‘இவர்களது எழுத்துமுறை’ – 35 எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)\nவிஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்\nசூர்ப்பனகை என்றும் தவறானவள் தானா \nதாகூர் இலக்கிய விருது பெறும் எஸ் ராமகிருஷ்ணன்\nநியூஜெர்ஸி சிறுவ சிறுமியர்களுக்கு சமஸ்கிருத கேம்ப் பாணினி\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7\nபுத்தகம் பேசுது‍ மாத இதழ்\nமதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது\nதமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்\nதிருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை வேண்டுகோள்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -8\nPrevious:2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)\nஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)\nமகாகவி பாரதி விரும்பிய பாரதம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76\n2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் (கவிதை -32 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -2)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33\n‘இவர்களது எழுத்துமுறை’ – 35 எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)\nவிஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்\nசூர்ப்பனகை என்றும் தவறானவள் தானா \nதாகூர் இலக்கிய விருது பெறும் எஸ் ராமகிருஷ்ணன்\nநியூஜெர்ஸி சிறுவ சிறுமியர்களுக்கு சமஸ்கிருத கேம்ப் பாணினி\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7\nபுத்தகம் பேசுது‍ மாத இதழ்\nமதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது\nதமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்\nதிருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை வேண்டுகோள்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -8\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/after-128-years-the-test-came-in-the-form-of-corona-which-came-to-ezhumalaiman--q7gd0q", "date_download": "2021-08-02T10:32:12Z", "digest": "sha1:WBO3UFC4QFJT3HR7PYDKDGQLVAYS4FT2", "length": 9411, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "128 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையானுக்கு வந்த 'கொரோனா' வடிவில் வந்த சோதனை.!! | After 128 years, the test came in the form of 'Corona', which came to Ezhumalaiman !!", "raw_content": "\n128 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையானுக்கு வந்த 'கொரோனா' வடிவில் வந்த சோதனை.\nஊருக்கே படியளக்கும் பகவான் ஏழுமலையானையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய கோயிகள் அனைத்தையும் மூடும் அளவிற்கு கொரோனா தன் கட்டுபாட்டிற்குள் கடவுளையும் கொண்டுவந்து விட்டது.அந்த அளவிற்கு சக்திவாய்ந்ததாக கொரோனா விளங்குகிறது.\nஊருக்கே படியளக்கும் பகவான் ஏழுமலையானையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய கோயிகள் அனைத்தையும் மூடும் அளவிற்கு கொரோனா தன் கட்டுபாட்டிற்குள் கடவுளையும் கொண்டுவந்து விட்டது.அந்த அளவிற்கு சக்திவாய்ந்ததாக கொரோனா விளங்குகிறது.\nஆந்திரமாநிலம், திருமலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனால் இந்த தொற்று பரவாமல் தடுக்க ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கும் அனுமதியை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது. ஆந்திர அரசிடம் இதுகுறித்து கலந்து ஆலோசனை நடத்தியதில், திருமலை ஏழுமலையான் கோயிலை ஒருவாரம் மூட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.\nதற்போது திருமலையில் 18 ஆயிரம் பக்தர்கள் உள்ளனர். ஒரு மணிநேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்கள் என தரிசனத்திற்கு அனுமதித்து வெள்ளி காலை ஆர்ஜித சேவா டிக்கெட் பெற்ற பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதித்த பின், கோயிலில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட உள்ளது. ஒரு வாரத்திற்கு பின் கொரோனா தொற்றின் வேகம் குறையத் தொடங்கிய பின் பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. இல்லாதபட்சத்தில் தொற்றின் வேகம் அதிகரிக்கும் நிலையில் இந்த அனுமதி மறுப்பு வரும் மார்ச்.31ம் தேதி வரை நீடிக்கப்படவும் வாய்ப்புள்ளது.\nதிருமலை மட்டுமல்லாமல் திருப்பதி மற்றும் திருச்சானூரில் உள்ள தேவஸ்தானத்திற்கு சம்மந்தப்பட்ட கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1892ம் ஆண்டிற்கு பின் தற்போது 128 ஆண்டுகள் முன்பு இதுபோன்ற சம்பவம் நடைபெற்ற போது ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தற்போது அதே போன்ற நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதி; ஏழுமலையானை பாக்க போறீங்களா, காத்திருக்க வேண்டாம் நேராக போய் தரிசிக்கலாம் இது கொரோனா வழங்கும் OFFER\nஇன்று வைகுண்ட ஏகாதசி: திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பு ....\nவிநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை கொடுக்க மறுப்பு கண்ணாடிகளை உடைத்து வன்முறை வெறியாட்டம் போட்ட இந்து முன்னணி \n அப்ப உங்களுக்கு இங்கு வேலை இல்லை ஆந்திர தலைமைச் செயலாளர் அதிரடி அறிவிப்பு \nஇதுக்கெல்லாமா திருப்பதிக்கு பாத யாத்திரை போவீங்க சமந்தா\nபெண்களுக்கு இலவசமாக கொடுத���துவிட்டு அதற்கும் சேர்த்து மொத்தமாக ஆண்களிடம் வசூப்பதா..\nடி20 உலக கோப்பையில் இந்த 4 அணிகள் தான் அரையிறுதியில் மோதும்..\nதலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது.. கர்நாடக முதல்வருக்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகி..\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா..\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுங்க.. அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/will-the-bjp-slogan-become-4-or-150-in-tamil-nadu--qwc1gx", "date_download": "2021-08-02T07:54:52Z", "digest": "sha1:IFO4IFICPZZS2CCBAJ46TKA44S7DTPP7", "length": 9015, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் 4 ஆகுமா 150... எடுபடுமா பாஜக கோஷம்..? | Will the BJP slogan become 4 or 150 in Tamil Nadu?", "raw_content": "\nதமிழகத்தில் 4 ஆகுமா 150... எடுபடுமா பாஜக கோஷம்..\n2026 சட்டமன்றத் தேர்தலில் 150 இடங்களில் வெல்ல முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு என்ன வியூகம் வகுக்கப்போகிறார் அண்ணாமலை என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.\n2026ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக 150 எம்.எல்.ஏக்களை பெற்று ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.\nஅரசியலில் இணைவதற்காக ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர் அண்ணாமலை. அவரை பா.ஜ.க., மாநில தலைவராக நியமித்து அக்கட்சியின் தேசிய தலைமை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இந்நிலையில், கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை யாத்திரைப்போல வந்த இன்று பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை ’’2026ல் தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலிலி அமருவதே இலக்கு.\n20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. 2026ம் ஆண்டு 150 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைப்போம். இன்னும் 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதற்கான விதைகளை தூவுவோம்.\nசுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 2001ம் ஆண்டு கிருபாநிதி தமிழ்மாநில பாஜக தலைவராக இருந்தபோது திமுக கூட்டணியில் 21 இடங்களில் போட்டியிட்டு பாஜக 4 இடங்கங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அப்போது திமுக ஆட்சி அந்தஸ்தை இழந்தது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்து 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக மீண்டும் அதே 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் 2026ம் ஆண்டு பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியை அமைக்கும் அதன் மாநில தலைவர் அண்ணாமலை தொண்டர்களுக்கு உற்சாகமளித்து வருகிறார். இப்போதும் அதிமுக கூட்டணியில் 4 இடங்களில் வென்றுள்ளது பாஜக. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 150 இடங்களில் வெல்ல முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு என்ன வியூகம் வகுக்கப்போகிறார் அண்ணாமலை என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.\nபாஜக உண்ணாவிரதம்: வயிற்று செரிமான பிரச்சனை.. அண்ணாமலையை ஓங்கி அடித்த அழகிரி..\n தமிழகம் முழுவதும் கோவில்கள் திடீர் மூடல்.. பக்தர்கள் ஏமாற்றம்..\nதூதுவனாக செல்ல நான் தயார்.. உங்க மாமா ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா\nகர்நாடகாவுக்கு பாஜக மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம்... தயாநிதிமாறன் கிண்டல்..\nஅண்ணாமலை உண்ணாவிரதம் இருந்தால் எங்களுக்கு என்ன தமிழக பாஜகவை அதிர வைத்த கர்நாடக முதல்வர்.\nதிமுக அமைச்சர் முன் கைகட்டி நின்றேனா.. நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன்... கொந்தளிக்கும் திருமாவளவன்..\nசட்டப்பேரவையில் மட்டுமல்ல கருணாநிதியின் படம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும்.. சு.ப வீரபாண்டியன்.\nகுடிபோதையில் காதல் மனைவியை தினமும் கதறவிட்ட கணவன்.. வலி தாங்க முடியாமல் அடித்துக்கொன்ற அரசு பள்ளி ஆசிரியை.\nஆயிரம்தான் இருந்தாலும் அதிமுக செய்வது மிகப்பெரிய தவறு.. அழகிரி ஆதங்கம்.\nஇதையும் ஒரு கை பார்த்திடலாம்... சமந்தாவை அடுத்து ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்சேதுபதி...\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே எ���் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/interesting-information-shared-by-mayilsamy-about-sbp-075613.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T09:18:41Z", "digest": "sha1:WZO24OHMMUM5CAM2VOHWOKIYIUFXHCFU", "length": 23139, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எஸ்.பி.பிக்கு கால்கடுக்க நின்று அஞ்சலி செலுத்திய மயில்சாமி..உன்னதமான ஓர் கதை ! | Interesting information shared by Mayilsamy about SBP - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nNews கொரோனாவுக்கு நன்றி சொல்லி.. ஆடியிலும் கொண்டாடித் தீர்க்கும் மாழ்பழ ரசிகர்கள்\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nFinance e-RUPI: மக்கள் இனி காத்திருக்க தேவையில்லை.. 8 வங்கிகளுக்கு அனுமதி..\nSports 50மீ துப்பாக்கி சூடு.. இந்திய வீரர்கள் பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் தோல்வி.. வெளியேற்றம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎஸ்.பி.பிக்கு கால்கடுக்க நின்று அஞ்சலி செலுத்திய மயில்சாமி..உன்னதமான ஓர் கதை \nசென்னை: எஸ்.பி.பி மறைவுக்கு பல ஊர்களில் இருந்து பல ரசிகர்கள் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியது நம் அனைவருக்கும் தெரிந்ததே . இருப்பினும் பிரபலங்கள் பலர் கொரானா காலகட்டம் என்பதால் நேரில் செல்லவில்லை .\nSPB Prayer meet நினைக்கும் போதே கண்ணீர் வருது Mayilswamy Speech\nஇருப்பினும் சில பிரபலங்கள் எதை பற்றியும் கவலைபடாமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் மயில் சாமி , நடிகர் அர்ஜுன், இயக்குனர் பாரதிராஜா , விஜய் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் இரங்கலை தெரிவித்தனர் .\nமயில்சாமி அங்கும் இங்கும் ஓடி கொண்டு காவல்துறைக்கு உதவிகொண்டு இருந்தார் . ஒவ்வொரு காவலருக்கும் தனி பட்ட முறையில் நன்றி சொல்லி கொண்டு மிகவும் வேதனையான முகத்துடன் காணப்பட்டார். எஸ்.பி.பி மறைவு மயில்சாமி முகத்தில் பெரும் துயரமாக இருந்தத�� அனைவரும் உணர்ந்தனர் .\nமுழுக்க முழுக்க மொபைலில் படமாக்கப்பட்ட 'அகண்டன்'.. டீசர் ரிலீஸ் \nசமீபத்தில் ஒரு புகைப்படத்தை மயில்சாமி அனைவரிடமும் பகிர்ந்தார். அதில் எஸ்.பி.பி திருவண்ணாமலை வந்து பாடிய போது எடுக்க பட்ட போட்டோ கிளிக் . SPBயின் இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல் ஆன புகைப்படம் . எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம். இது பலரின் பார்வைக்கு வந்திருக்காது . இந்த படத்திற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.\nநடிகர் மயில்சாமி மிகச்சிறந்த அண்ணாமலையார் பக்தர் . எப்போதெல்லாம் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய தோன்றுகிறதோ அப்போதெல்லாம் திருவண்ணாமலைக்கு ஓடி வந்துவிடுபவர் .கார்த்திகை தீபத்திருவிழா என்றால் திருவண்ணாமலையை விட்டு எங்கும் நகர மாட்டார் . பத்தாம் நாள் திருவிழாவில் மனிதர் கோயிலுக்குள் தான் இருப்பார் .\nமயில்சாமிக்கு ஒரு ஆசை . பத்தாம் நாள் திருவிழாவில் மகாதீபம் ஏற்றும் சமயத்தில் ஆலயம் உள்ளே பல நூறு பக்தர்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் SPB யை எப்படியாவது அழைத்து வந்து பக்தி பாடல்களை பாடச்செய்வது என்பதுதான் .அதற்காகவே அடிக்கடி எஸ்பிபி யிடம் வேண்டிக் கொண்டிருப்பார் . எஸ்பிபி கும் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும் , முக்கியமான அந்த தீபத்திருவிழாவில் அவர் குரல் அண்ணாமலையார் ஆலயத்தில் ஒலிக்க வேண்டும் என்பது விருப்பம் தான் . ஆனால் சுமார் இருபது லட்சம் பேர் கலந்து கொள்ளும் விழாவில் , கூட்டத்தில் எப்படி போவது வருவது என்ற தயக்கம் .\n\"அண்ணே ... நீங்க வாங்க , உங்களை எப்படியாவது கோயிலுக்குள் அழைத்து செல்வது என் பொறுப்பு \" இப்படி மயில்சாமி சொல்ல , ஓகே நான் திருவண்ணாமலைக்கு வரேன் பாடுறேன் என்று ஒப்புக் கொண்டார் எஸ்பிபி பத்தாம் நாள் திருவிழா, மயில்சாமி கோயிலுக்குள் இருக்கும் நேரத்தில் , திருவண்ணாமலைக்கு பத்து கிலோமீட்டர் தூரத்தில் நான் இருக்கிறேன் என்று எஸ் பி பி தகவல் தந்ததும் மயில்சாமி கார் இருக்கும் இடத்திற்கு சென்று அவரை நகருக்கு அழைத்து வருகிறார் . அவருக்காக தனியே ஒரு தங்கும் விடுதியில் அறை தயாராக இருக்கிறது .\nவிடுதியை நோக்கி கார் செல்ல முயலும் போது ஒரு காவலர் தடுக்கிறார் . இந்த வழியாக காரை அனுமதிக்க முடியாது என்று . மயில்சாமி பதறிப்போய் விடுகிறார் . உள்ளே பாலு சார் இருக்கிறார் . அவர் கோயிலுக்கு உள்ளே பாட வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்று எடுத்துச் சொல்லியும் காவலர் மறுத்து விட , நல்லவேளை மயில்சாமிக்கு தெரிந்த மற்றொரு காவலர் சூழ்நிலைகளை புரிந்து விடுதிக்கு காரை கொண்டு செல்ல வழி செய்கிறார் .\nவிடுதிக்கு எஸ் பி பி வந்து சேர்ந்தாலும் மயில்சாமிக்கு இந்த நிகழ்வு மிகப்பெரிய வருத்தத்தை தந்தது . நாம் அவரை வற்புறுத்தி அழைத்து வந்து கோயிலுக்குள் அழைத்து செல்வதில் சிக்கல் உண்டானால் என்ன செய்வது என்ற கவலை ஒரு புறம் , அந்த காவலர் நடந்து கொண்டது மறுபுறம் . நேராக கலெக்டர் சாருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு சூழ்நிலையை சொன்னார் .அவ்வளவுதான் ... எஸ் பி பி தற்போது எங்கே இருக்கிறார் அவரை நம்ம வீட்டிற்கு அழைத்து வந்துவிடுங்கள் மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் கலெக்டர் கந்தசாமி .\nஅங்கிருந்து பாலு சாரை அழைத்துக்கொண்டு மயில்சாமி கலெக்டரின் வீட்டிற்கு சென்று விடுகிறார் . அங்கு பாலு சாருக்கு மிகப்பெரிய மரியாதையும் , உற்சாகமான வரவேற்பு கிடைத்தது . \"சொல்லுங்கள் மயில்சாமி நான் என்ன செய்ய வேண்டும் \" என்று கலெக்டர் கேட்க, பாலு அண்ணாவை பத்திரமாக கோயிலுக்குள் அவர் பாடல் பாடும் இடம் வரை அழைத்து போக உதவி செய்தால் நன்றாக இருக்கும் சார் என்கிறார் மயில்சாமி .\nஉடனே கலெக்டர் தன்னுடைய காரில் பாலு சாரை ஏற்றிக்கொள்கிறார் . கலெக்டரின் கார் கோயிலை நோக்கி பறக்கிறது சைரன் சத்தத்தோடு . அந்த காட்சியை கற்பனை செய்து பாருங்கள் . ஏகே 47 துப்பாக்கி கொண்ட காவலர்கள் இருவர் உடன் இருக்க , பாலு சாரை பத்திரமாக கோயிலுக்குள் அழைத்து சென்றார் கலெக்டர் கந்தசாமி . அன்றைய நாளில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்த பின்னர் பக்தி பாடல்களை பாடி பாடி கார்த்திகை தீபத்திருவிழா பத்தாம் நாளை பக்தர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாற்றி விடுகிறார் எஸ் பி பி அந்த விழா முடிந்ததும் மயில்சாமிக்கு மனதார நன்றி சொல்கிறார் எஸ் பி பி . பல இலட்சம் பக்தர்கள் கூடியிருந்த திருவிழாவில் இப்படி ஒரு தரிசனம் , இப்படி ஒரு பாடல் பாடும் வாய்ப்பு அமைந்தது உன்னால் தான் என்று நெகிழ்ந்து போகிறார் எஸ்.பி பி.\nகோட் சூட் அணிந்து கெத்தாக வலம் வரும் மயில்சாமி… அசந்துபோன ரசிகர்கள் \nபிகில் 'ராயப்பன்' லுக்கில் பிரபல நகைச்சுவை நடிகர்.. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்\nஎனக்கு டிவிட்டரில் அக்கவுண்ட் இல்லை.. அதை யாரும் பின்தொடர வேண்டாம்.. பிரபல நடிகர் விளக்கம்\nரொம்ப லேட் தலைவரே.. தடை பண்றதா வேற பேசிக்கறாங்க.. டிவிட்டரில் இணைந்த நடிகர்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்\nமயில்சாமி சொன்ன மகாபிரபு ...கல்யாணத்திற்கு பணஉதவி செய்த தயாரிப்பாளர்\nயோகிபாபு பயங்கர கஷ்டத்தில் உள்ளார்: ரசிகர்களை அதிர வைத்த மயில்சாமி\n2 மனைவிகள்... 2 மகன்கள்... இது வீட்டுக்குள் நடக்கும் ‘வாய்க்கா தகராறு’\nதூக்கு.. வைக்காதே.. இப்படியே பிரச்சனை பண்ணி பப்ளிசிட்டி கொடுங்க: மயில்சாமி மடேர்\nமழையால் தவித்த சென்னை மக்களுக்கு, போட்டி போட்டு உதவிய காமெடி நடிகர்கள்\nஅப்பா மயில்சாமி காமெடிதான்.. ஆனா மகன் ஹீரோவாயிட்டாரே\nகைத்தட்டல் வாங்குவதற்காக வாயில் வந்ததைப் பேசினால் இப்படித்தான் மயில்சாமி மாதிரி சிக்கி முழிக்கனும்\nகடைசியில் மயில்சாமி காமெடியைக் காப்பியடிச்சுட்டாரே ஷங்கர்... பேஸ்புக்கில் கிண்டல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதலை நிறைய மல்லிகைப் பூ வச்சிக்கிட்டு எங்கப் போறாங்க குஷ்பு.. ஓஹோ மறுபடியும் சீரியல் என்ட்ரியா\nதுணிந்த பின்’ ஒரு அற்புதமான அனுபவம்… ‘நவரசா‘ படம் குறித்து அதர்வாவின் ருசிகரத்தகவல் \nகொஞ்சம் காத்தடிச்சாலும் அவ்ளோ தான்.. விஜய் பட ஹீரோயின் பண்ற வேலையை பார்த்தீங்களா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/huawei-mate-x2-set-to-launch-on-february-22-specification-details-028357.html", "date_download": "2021-08-02T09:26:22Z", "digest": "sha1:JBPHTEO3QTDS7E2PZGZVRTHBCUNAA6TC", "length": 17005, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "Huawei Mate x2: பிப்., 22 அறிமுகமாகும் ஹூவாய் மேட் எக்ஸ் 2: இரண்டாக மடிக்கலாம், 50 எம்பி கேமரா இன்னும் பல! | Huawei Mate x2 Set to Launch on February 22: Specification Details! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகான�� க்ளிக் செய்யவும்.\nஎக்ஸ்பாக்ஸ் 20வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இப்படி ஒரு முடிவா\n34 min ago பிளிப்கார்ட்: சாம்சங் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி.\n52 min ago பூமியை நெருங்கும் சனிக்கோள்: வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே தெரியும்- ஏதும் ஆபத்து இருக்கா\n1 hr ago சியோமி ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா\n2 hrs ago அதிக டேட்டா நன்மையை வழங்கும் ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்.\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nMovies என்னப்பா நடக்குது இங்க ...பாதுகாக்கப்படும் விஜய் பட தகவல்கள்...ஆர்வத்தில் உளரும் பிரபலங்கள்\nNews கொரோனாவுக்கு நன்றி சொல்லி.. ஆடியிலும் கொண்டாடித் தீர்க்கும் மாழ்பழ ரசிகர்கள்\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nFinance e-RUPI: மக்கள் இனி காத்திருக்க தேவையில்லை.. 8 வங்கிகளுக்கு அனுமதி..\nSports 50மீ துப்பாக்கி சூடு.. இந்திய வீரர்கள் பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் தோல்வி.. வெளியேற்றம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிப்., 22 அறிமுகமாகும் ஹூவாய் மேட் எக்ஸ் 2: இரண்டாக மடிக்கலாம், 50 எம்பி கேமரா இன்னும் பல\nஹூவாய் மேட் எக்ஸ் 2 பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 8.01 அங்குல் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 50 எம்பி முதன்மை கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹூவாய் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஹூவாய் மேட் எக்ஸ் கடந்த பிப்ரவரி 2019 இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நிறுவனம் தனது அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை பிப்ரவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக வெய்போவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து மைக்ரோ பிளாக்கிங் வலைதளம் வெளியிட்ட காட்சியின்படி, ஹூவாய் மேட் எக்ஸ் 2, முன்னதாக வெளியான ஸ்மார்ட்போன் இல்லாமல் உள்நோக்கி மடிக்கக்கூடிய வடிவமைப்பில் வரும் என தெரிவிக்கிறது.\nமேலும் இதுகுறித்து வெளியான தகவலின்படி, ஹூவாய் மேட் எக்ஸ் 2., 8.1 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 2480x2220 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதிப்பிப்பு வீத ஆதரவுடன் வருகிறது. மேலும் வெளிப்புற காட்சியில் 6.45 இன்ச் உயரம் கொண்ட டிஸ்ப்ளே இருக்கும் எனவும் கிரின் 9000 5nm சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.\nமேலும் இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் முன்புற கேமரா கொண்டிருக்கும் எனவும் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 10 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் கேமராவுடன் வரும் என கூறப்படுகிறது.\nமேட் எக்ஸ் 2-ல் ஆண்ட்ராய்டு 10 எஸ் உடனான இஎம்யூஐ11, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4400 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை மூலம் இயக்கப்படுகிறது.\nஅதேபோல் ஹூவாய் மேட் எக்ஸ் ஓபன் செய்து பயன்படுத்தும்போது 8 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 2480 x 2200 பிக்சல்கள் தீர்மானம், பின்புறத்தில் 6.38 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்கத்தில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது.\nபிளிப்கார்ட்: சாம்சங் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி.\nஎல்லாமே உயர்தரம்: ஹூவாய் பி50 ப்ரோ 4ஜி இப்படிதான் இருக்கும்\nபூமியை நெருங்கும் சனிக்கோள்: வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே தெரியும்- ஏதும் ஆபத்து இருக்கா\nஅசத்தலான ஹூவாய் நோவா 8ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசியோமி ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா\nதூங்கிகிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிட்டீங்க- ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இணைமாற்று- ஹூவாயின் ஹார்மோனி ஓஎஸ்\nஅதிக டேட்டா நன்மையை வழங்கும் ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்.\nஹூவாய் பேண்ட் 6: 96-க்கும் மேற்பட்ட ஒர்க்அவுட் மோடு உடன் அறிமுகம்..\nவிரைவில் ஆன்லைன் டெலிவரி இப்படிதான்- உருவானது கேஸி ரோபோ: 5 கிலோமீட்டர் தூரத்தை 53 நிமிடத்தில் ஓடி அசத்தல்\nதரமான கேமரா வசதியுடன் ஹூவாய் மேட் 40இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசெவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்.. இதோ..\n- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n120W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் உடன் வருகிறதா எம்ஐ மிக்ஸ் 4: தகவல் சொல்வது என்ன\nRealme அறிமுகம் செய்யும் உலகின் முதல் மேக்னெட்டிக் வயர்லெஸ் சார்ஜ்ர்.. ரியல்மி மேக்டார்ட் சிறப்பு என்ன\nகண்ணால் காண்பது பொய்., கேமராவால் ஆராய்வதே மெய்- டோக்கியோ ஒலிம்பிக்கில் Nikon கேமராக்களின் அதீத பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/bjp-candidate-annamalai-tested-corona-positive/", "date_download": "2021-08-02T09:49:10Z", "digest": "sha1:DIMVBLGONCEHNEZBO2L46I46TX6IPSE5", "length": 5563, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nபா.ஜ.கவின் துணைத் தலைவரும் வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக சோதனை செய்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nமாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி\nகொரோனா தடுப்பூசி முகாம் – கொடிசியா வளாகம் \nமோடி எதிர்காலத்துடன் விளையாடுகிறார்- ராகுல் காந்தி\nகுஜராத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்- அரவிந்த் கெஜ்ரிவால்\nஊரடங்கால் காய்கறி விலை அதிகரிப்பு – தமிழகம் \nகருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் பலி\nகொரோனா தடுப்பூசி முகாம் - கொடிசியா வளாகம் \nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\nதொடர் சரிவில் தங்கம் விலை\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/hardik-pandya-breaks-the-internet-again-with-old-picture.html", "date_download": "2021-08-02T09:54:02Z", "digest": "sha1:MTRLZ7TJXPCEAL2MRHJ2WXAX36RLRU6R", "length": 6170, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Hardik Pandya breaks the Internet again with old picture | Sports News", "raw_content": "\n‘எத்தனையோ சேலஞ்ல ஜெயிச்சும் இத மிஸ் பண்ணிட்டாரே’.. வைரலாகும் ‘ஹிட்மே��்’ வீடியோ\n‘மிளிரும் கோப்பையுடன், 10 அணிகளின் கேப்டன்கள்’வெல்லப்போவது யார்\n'வேர்ல்டு கப் மேட்சுக்கு டிக்கெட் கிடைக்கலையா'... 'இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு'... விபரம் உள்ளே\nஉலகக்கோப்பை ஆர்வத்தில் தண்ணீர் ஊற்றி அணைத்த கேப்டன்..\n'என்ன பீலிங்கா'...'எனக்கு தாண்டா பீலிங்கு'... 'பிரபல வீரருக்கு நேர்ந்த கதி'...வைரலாகும் வீடியோ\n'வந்துட்டோம்.. இனி களத்துல எறங்குறதுதான் பாக்கி'.. உலகக் கோப்பை இந்திய அணியின் வைரல் வீடியோ\n‘எங்ககிட்ட இருக்கறது இந்தியாவிடம் இல்லவே இல்லை’.. இந்திய அணியை குறித்து கூறிய இங்கிலாந்து வீரர்\n‘உலகக்கோப்பையில எனக்கு நடந்தது மாதிரி விராட் கோலிக்கு நடக்க கூடாது’.. முன்னெச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்\n'எல்லாம் தலைக்கு குறிவைக்குறாங்க.. ஆனாலும் நெஞ்சுல அந்த பயம்.. அது இருக்கு\n‘கோலி மறைமுகமா சொன்னத இவரு வெளிப்படையாவே சொல்லிட்டாரு’.. காத்திருப்போம்\n'இந்தியர்களோட மூளையோ மூளை'... எப்படி எல்லாம் 'திங்க் பன்றாங்க'... ஆச்சரியப்பட்ட பிரபலம்\n.. பிரபல வீரரை புகழ்ந்த ரவி சாஸ்திரி\n'வானத்தை போல'... 'படத்தை போல தான் நாங்க'... எங்களுக்குள்ள 'போட்டி எல்லாம் இல்ல'\n‘பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதபோவது யார்’.. அட்டவணையை வெளியிட்டது ஐசிசி\n'ஐபிஎல்ல மிஸ் ஆயிடுச்சு.. ஆனா வேர்ல்டு கப்ல என் டார்கெட் கோலிதான்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/sun-tv-acquires-the-satellite-rights-of-ratsasan.html", "date_download": "2021-08-02T10:12:33Z", "digest": "sha1:2OOUAD2WNP4EIDGU353FGYIESBHN3MUY", "length": 2758, "nlines": 27, "source_domain": "www.behindwoods.com", "title": "Sun TV acquires the satellite rights of Ratsasan | தமிழ் News", "raw_content": "\nரசிகர்களின் 'பேவரைட்' படத்தை கைப்பற்றிய சன் டிவி\nஇந்த வருடம் வெளியான படங்களில் மிகச்சிறந்த திரில்லர் படம் என்ற பெயர் இயக்குநர் ராம்குமார்-விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்துக்குக் கிடைத்துள்ளது. ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டுவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை இருந்ததாக படம் பார்த்தவர்கள் பலரும் பாராட்டி இருந்தனர்.\nஇந்தநிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் டிஜிட்டல் உரிமையை சன் நெக்ஸ்ட் பெற்றுள்ளது.\nதியேட்டர்களில் வெற்றிகரமாக 3-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரி���ையை படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலே வாங்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/four-questions-to-ask-before-selecting-an-online-learning-resource/", "date_download": "2021-08-02T08:20:05Z", "digest": "sha1:N3MRPWTLE2BXSU3SDKF65XT57VYTA553", "length": 10965, "nlines": 38, "source_domain": "www.dellaarambh.com", "title": "உங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக ஒரு வெப்சைட்டை தேர்வு செய்வதற்கு முன் கேட்க வேண்டிய நான்கு கேள்விகள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஉங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக ஒரு வெப்சைட்டை தேர்வு செய்வதற்கு முன் கேட்க வேண்டிய நான்கு கேள்விகள்\nஸ்கிரீன் டைம் தான் உங்கள் குழந்தைகள் கற்பதற்கான ஒரு திறமையான வழி ஆகும். ஆனால் உங்கள் குழந்தைகள் படிப்பதற்கு சரியான வெப்சைட்டை தான் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகவும் முக்கியமாகும். கல்வி மற்றும் பொழுதுபோக்கு இடையே சமநிலையை பராமரிக்கும் இணையதளங்கள் என்பவை தான் குழந்தைகளை ஆர்வத்தோடு வைக்கிறது மேலும் இதையொட்டி அவர்கள் சிறப்பாக படிக்க உதவுகிறது.\nசரியான வெப்சைட்டை கண்டறிவது என்பது ஒரு சவாலான காரியம் தான். அந்த வெப்சைட்டை அவர்கள் பயன்படுத்துகையில், அது உங்கள் குழந்தைகளுக்கு சரியான தகவலை தான் வழங்குகிறதா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.\nஉங்கள் குழந்தைகள் சிறப்பாக கற்பதற்காக நீங்கள் சரியான ஒன்றை தேர்வு செய்வதற்கு உங்களுக்கு உதவுவதற்கான ஒரு செக்லிஸ்ட் இதோ இங்கே உள்ளது.\n1. இது உங்கள் குழந்தையின் கற்றலுக்கான தேவைகளை பூர்த்தி செய்யுமா\nநீங்கள் தேர்வு செய்யும் வெப்சைட்டானது உங்கள் குழந்தையின் கற்றல் மட்டத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். மிக முக்கியமான தீர்மானிக்கும் காரணி உங்கள் பிள்ளையின் வயது மற்றும் கிரேடு. இந்த இரண்டு காரணிகளையும் தவிர்த்து, பெற்றோர்கள் பாடத்தையும், திறன்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை[3]களுக்கு சவாலாக இருக்கும் இண்டர் ஆக்டிவ் வெப்சைட்களை பார்க்கவும்.\n2. இது பயன்படுத்துவதற்கு இலவசமானதா\nபல வெப்சைட்கள் ஃப்ரீமியம் மாடல்களில் நுகரக் கூடிய தகவல்களின் அளவானது வரையறையைக் கொண்டிருக்கும். ஹிடன் காஸ்ட் போன்ற எந்த எதிர்பாரா ஆச்சரியங்கள் உங்கள் குழந்தையின் கற்றலுக்கு தடையாய் இருக்கும் என்வே இது போன்றவற்றை தவிர்க்க முன்ன���ாகவே விலையை சரிபார்ப்பது சிறந்தது. யூசர் ரேட்டிங்ஸ், ரிவியூஸ் மற்றும் கல்வியாளர் பரிந்துரைகள் ஒரு வெப்சைட்டை அக்ஸஸ் செய்ய அதற்கு கட்டணத்தை செலுத்தலாமா அல்லது வேறு ஒரு ஆப்ஷனை பார்க்கலாமா என்பதை நீங்கள் தீர்மானிக்க உதவியாக இருக்கும்.\n3. இந்த தகவல் பொருத்தமானதாக இருக்குமா\nசரியான தகவல்கள் மற்றும் வளங்கள் ஒரு குழந்தையின் கற்றல் முறையில் அனைத்து வித்தியாசங்களையும் உண்டாக்கும். தளத்தில் உள்ள சகலவர்களிடமும் வல்லுனர்களிடமும் பரவலாக காணப்படும் இந்த வலைத்தளம் பிரபலமடைவது பொருத்தமான ஒரு சிறந்த மார்க்கர் ஆகும். பலதரப்பட்ட நபர்களின் ஆன்லைன் ரிவியூஸ் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களின் ஆலோசனையைக் கேட்டு அந்த வலைத்தளத்தின் உள்ளடக்கம் உங்கள் குழந்தைக்கு பொருத்தமானதாக இருக்குமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\n4. இது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதா\nஆன்லைன் பாதுகாப்பு என்பது பெற்றொருக்கு பெரும் கவலையாக தான் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பெற்றோர் பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மையை சோதிக்க தீம்பொருள், பாப் அப்கள், ஆக்கிரமிப்பு விளம்பரம் மற்றும் தவறான இணைப்புகள் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க அந்த வலைத்தளத்தை முழுமையாக ப்ரவுஸ் செய்ய வேண்டும். அதிகபடியான பாதுக்காப்போடு இருக்க, குழந்தைகள் விசிட் செய்யும் வெப்சைட்ஸ் பாதுகாப்பானதா என்பதை கண்டறிய Google Transparency Report Tool - ஐ பயன்படுத்தவும்.\nஸ்டெப் 1: நீங்கள் செக் செய்வதற்கு வெப்சைட் லிங்க்கை காபி பேஸ்ட் செய்யவும்.\nஸ்டெப் 2: எண்ட்ரை அழுத்தவும்\nஸ்டெப் 3: ரிசல்ட்டை பார்க்கவும்\nஉரையாடல்கள் முக்கியமானது. பெரிய குழந்தைகளின் பெற்றோருடனும், உங்கள் பிள்ளையின் வகுப்பு தோழர்களுடனும் அவர்களின் உள்ளுணர்வு குறித்து பேசுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் PC –யும் கூட சரியானது தான் என்பதை உறுதி செய்யுங்கள்: https://www.dellaarambh.com/tamil/pick-right-school-pc/\nதொழில்நுட்பத்தை அணைத்துக்கொள்ளுங்கள், அச்சப்படாதீர்கள் – என்\nஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்குக் கற்பிக்க வேண்டிய டிஜிட்டல் திறன்கள்\nகுருட்டு மனப்பாடம் செய்தல் - பயனற்ற கல்விமுற\nஆன்லைனில் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைக்க 5 வழிகள்\nமெய்நிகர் கற்றலில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூட்டுமுயற்சி\nஎ���்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/682670-madurai-youth-commits-suicide.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-08-02T09:55:30Z", "digest": "sha1:OVMN7AFYN5LHHJXL4ORBWTO5RE4XEFNX", "length": 17900, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "'நான் படிக்கணும் எனக்கு திருமணம் வேண்டாம்..' துணிச்சலாக எஸ்பி.க்கு தகவல் அனுப்பிய மதுரை சிறுமி திடீர் தற்கொலை | Madurai youth commits suicide - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 02 2021\n'நான் படிக்கணும் எனக்கு திருமணம் வேண்டாம்..' துணிச்சலாக எஸ்பி.க்கு தகவல் அனுப்பிய மதுரை சிறுமி திடீர் தற்கொலை\nமதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை மாவட்ட எஸ்.பி. உதவியுடன் துணிச்சலாக நிறுத்திய நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.\nமதுரை பாண்டியகோயில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பெற்றோர் திருமணம் செய்துவைப்பதிலேயே உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் சிறுமி எப்படியோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனின் தொடர்பு எண்ணைப் பெற்றிருக்கிறார். அந்த எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் தான் படிக்கவேண்டும் ஆகையால் தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமணத்தை உடனடியாக நிறுத்துமாறு வேண்டியுள்ளார்.\nமாவட்ட எஸ்.பி.யும் புகாரின் முக்கியத்துவத்தை அறிந்து உடனடியாக அதனை மாநகர காவல் சரகத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளார்.\nஅண்ணாநகர் போலீஸாரும் உடனடியாக செயல்பட்டு, சிறுமியையும் அவரது பெற்றோரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். காவல்நிலையத்தில் பெற்றோரைக் கண்டித்ததோடு சிறுமியின் விருப்பத்தைக் கேட்டுள்ளனர். சிறுமி தான் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும் மாறாக கருப்பாயூரணி பகுதியிலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கிக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.\nபோலீஸாரும் சிறுமியை அவரது பாட்டி வீட்டில் இருக்க அனுமதித்தனர். இந்நிலையில், அச்சிறுமி இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அவரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.\nதனது திருமணத்தை நிறுத்த எஸ்.பி.யின் துணையை நாடி துணிச்சலாக செயல்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகரோனா காலத்தில் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாகக் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் சிஆர்ஒய் (CRY) நடத்திய ஆய்வின்படி 2020-ம் ஆண்டு மே மாதத்தில் குழந்தைத் திருமணங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. அம்மாதத்தில் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.\nவிழுப்புரத்தில் 14 வகையான மளிகைப்பொருட்கள் முழுமையாக வழங்கவில்லை என புகார்\nதமிழகத்தில் தடுப்பூசி இல்லை; அறிவிக்கப்படாத மின்தடை: ஜெயக்குமார் கண்டனம்\nகரோனா; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி; முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்\nதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வழக்கு; மணிகண்டன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nமதுரை சிறுமி தற்கொலைகரோனா கால குழந்தை திருமணங்கள்குழந்தை திருமணம்மதுரை பாண்டிகோயில்\nவிழுப்புரத்தில் 14 வகையான மளிகைப்பொருட்கள் முழுமையாக வழங்கவில்லை என புகார்\nதமிழகத்தில் தடுப்பூசி இல்லை; அறிவிக்கப்படாத மின்தடை: ஜெயக்குமார் கண்டனம்\nகரோனா; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி; முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டும் பிரசாந்த் கிஷோர்:...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகுரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nதூத்துக்குடியில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை திருட்டு: போலீஸார் தீவிர...\nகரூ���் மாரியம்மன் கோயிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு\nமனிதத் தலையுடன் கோயில் திருவிழாவில் சாமியாட்டம்: போலீஸார் வழக்குப் பதிவு\nதிண்டிவனம்: கத்தி முனையில் 50 பவுன் நகை, 2.5 கிலோ வெள்ளி பொருட்கள்...\nமதுரை காவலரின் விழிப்புணர்வு பணி: பாராட்டு தெரிவித்த டிஜிபி\nமதுரை காவலரின் விழிப்புணர்வு பணி : பாராட்டு தெரிவித்த டிஜிபி\nமுதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல்: முதுபெரும் தமிழறிஞர் இளங்குமரனார் உடல் மதுரையில் அரசு மரியாதையுடன்...\nஅசாமில் மரணமடைந்த ராணுவ வீரர் உடல் மதுரையில் 21 குண்டுகள் முழங்க தகனம்\nவிழுப்புரம் அருகே சோழர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு\nபாஜகவுக்கு சென்றதால் உயர்ந்த பதவி அடைந்துள்ளேன்: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/5118-43648/52565/", "date_download": "2021-08-02T09:24:18Z", "digest": "sha1:IQGAOIH443JHV52SC4YCXL6LDUWN5DQT", "length": 27439, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 5118 டிராக்டர், 2020 மாதிரி (டி.ஜே.என்52565) விற்பனைக்கு காந்திநகர், குஜராத் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 5118\nவிற்பன���யாளர் பெயர் Ranjit dabhi\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 5118 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 5118 @ ரூ 3,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2020, காந்திநகர் குஜராத் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI டோனர்\nமஹிந்திரா 275 DI TU\nநியூ ஹாலந்து 3230 NX\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 5118\nஇந்தோ பண்ணை 1026 NG\nVst ஷக்தி MT 270 -விராட் 2w -அக்ரிமாஸ்டர்\nபார்ம் ட்ராக் Atom 22\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.ytcyglass.com/pharmaceutical-bottle/", "date_download": "2021-08-02T09:08:39Z", "digest": "sha1:R7MEMRB6CG7DPGEMBEISUVYQVXMOMKZ3", "length": 18103, "nlines": 180, "source_domain": "ta.ytcyglass.com", "title": "மருந்து பாட்டில் தொழிற்சாலை - சீனா மருந்து பாட்டில் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\n187 மிலி பழங்கால பச்சை கண்ணாடி பி ...\n150 மில்லி தக்காளி கெட்சுவை ஒட்டவும் ...\nடின் 18 கண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் ...\nஓட்கா ஜின் விஸ்கி ரம் ஸ்பிரி ...\nசீனா சப்ளையர் 50 மிலி 100 மிலி 150 மிலி அம்பர் பாஸ்டன் கிளாஸ் பாட்டில் வெற்று கண்ணாடி பாட்டில் ஸ்ப்ரேயர் தனிப்பயன் லோகோ திறன் கொண்டது\nதயாரிப்பு பெயர்: பழுப்பு கண்ணாடி தெளிப்பு பாட்டில் பொருள்: கண்ணாடி, பிளாஸ்டிக் நிறம்: அம்பர் பழுப்பு (கோரிக்கைகளின் அடிப்படையில் எந்த நிறமும் கிடைக்கிறது.) வடிவம்: சுற்று கொள்ளளவு: 50 மிலி 100 மிலி 150 மிலி சீல் வகை: தெளிப்பான் பயன்பாட���: அத்தியாவசிய எண்ணெய், திரவ, வாசனை திரவியம், எக்ட். குறுகிய விளக்கம்: FOB விலை: அமெரிக்க $ 0.16-0.20 / துண்டு MOQ: 50000PCS வழங்கல் திறன்: ஒரு நாளைக்கு 100000-200000 துண்டுகள் கொள்ளளவு: 50 மிலி 100 மிலி 150 மிலி (பிற திறன்களைத் தனிப்பயனாக்கலாம்) தொப்பி / மூடல்: பம்ப் விநியோகிப்பாளர்கள் லோகோ: அச்சிடுதல் அல்லது புடைப்பு, ஏற்றுக்கொள். ..\nமொத்த 2oz 4oz அம்பர் கிளாஸ் பாட்டில் பாஸ்டன் வெற்று வட்ட கண்ணாடி பாட்டில் ஸ்ப்ரேயருடன் தனிப்பயனாக்கவும்\nதயாரிப்பு பெயர்: வெற்று கண்ணாடி தெளிப்பு பாட்டில் பொருள்: கண்ணாடி, பிளாஸ்டிக் நிறம்: அம்பர் (கோரிக்கைகளின் அடிப்படையில் எந்த நிறமும் கிடைக்கிறது.) வடிவம்: சுற்று திறன்: 60 மிலி 120 மிலி சீல் வகை: தெளிப்பான் விண்ணப்பம்: வாய்வழி திரவ, வேதியியல், மருந்து குறுகிய விளக்கம்: FOB விலை: அமெரிக்க $ 0.15-0.23 / பீஸ் MOQ: 50000PCS வழங்கல் திறன்: ஒரு நாளைக்கு 100000 துண்டுகள் கொள்ளளவு: 60 மிலி 120 மிலி (பிற திறன்களைத் தனிப்பயனாக்கலாம்) தொப்பி / மூடல்: பம்ப் விநியோகிப்பாளர்கள் லோகோ: அச்சிடுதல் அல்லது புடைப்பு, வாடிக்கையாளரின் சின்னத்தை ஏற்றுக்கொள் ...\nசீனா உற்பத்தியாளர் விருப்ப 10 மில்லி வாய்வழி திரவ குப்பியை அம்பர் மருந்து கண்ணாடி பாட்டில் மருந்தக கண்ணாடி குப்பிகளை\nதயாரிப்பு பெயர்: மருந்து கண்ணாடி பாட்டில் பொருள்: கண்ணாடி நிறம்: அம்பர் (கோரிக்கைகளின் அடிப்படையில் எந்த நிறமும் கிடைக்கிறது.) வடிவம்: சுற்று திறன்: 10 மிலி சீல் வகை: அலுமினிய தொப்பி விண்ணப்பம்: வாய்வழி திரவ, வேதியியல், மருந்து குறுகிய விளக்கம்: FOB விலை: அமெரிக்க $ 0.07- 0.10 / பீஸ் MOQ: 50000PCS வழங்கல் திறன்: ஒரு நாளைக்கு 100000-200000 துண்டுகள் கொள்ளளவு: 10 மிலி (பிற திறன்களைத் தனிப்பயனாக்கலாம்) தொப்பி / மூடல்: தொப்பி லோகோ: அச்சிடுதல் அல்லது புடைப்பு, வாடிக்கையாளரின் சின்னத்தை ஏற்றுக்கொள் பயன்பாடு: வாய்வழி திரவ ...\nதொழிற்சாலை தனிப்பயன் 5 மிலி 10 மில்லி மருந்து கண்ணாடி பாட்டில் திரவ மருந்து கண்ணாடி குப்பிகளை\nதயாரிப்பு பெயர்: மருந்து கண்ணாடி பாட்டில் பொருள்: கண்ணாடி நிறம்: அம்பர் (கோரிக்கைகளின் அடிப்படையில் எந்த நிறமும் கிடைக்கிறது.) வடிவம்: சுற்று திறன்: 5 மிலி 10 மில்லி சீல் வகை: அலுமினிய தொப்பி விண்ணப்பம்: வாய்வழி திரவ, வேதியியல், மருந்து குறுகிய விளக்கம்: FOB விலை: அமெரிக்க $ 0.06 -0.12 / பீஸ் MOQ: 20000PCS வழங்கல் திறன்: ஒரு நாளை���்கு 100000-200000 துண்டுகள் கொள்ளளவு: 5 மிலி 10 மிலி (பிற திறன்களைத் தனிப்பயனாக்கலாம்) தொப்பி / மூடல்: தொப்பி லோகோ: அச்சிடுதல் அல்லது புடைப்பு, வாடிக்கையாளரின் சின்னத்தை ஏற்றுக்கொள் பயன்பாடு: ஓ ...\nமொத்த 10 மில்லி மருந்து கண்ணாடி பாட்டில் குப்பிகளை வாய்வழி திரவத்திற்கான அம்பர் கிளாஸ் டிராம் குப்பிகளைத் தனிப்பயனாக்கு\nதயாரிப்பு பெயர்: மருந்து கண்ணாடி பாட்டில் பொருள்: கண்ணாடி நிறம்: அம்பர் (கோரிக்கைகளின் அடிப்படையில் எந்த நிறமும் கிடைக்கிறது.) வடிவம்: சுற்று திறன்: 10 மிலி சீல் வகை: அலுமினிய தொப்பி விண்ணப்பம்: வாய்வழி திரவ, வேதியியல், மருந்து குறுகிய விளக்கம்: FOB விலை: அமெரிக்க $ 0.09- 0.15 / பீஸ் MOQ: 50000PCS வழங்கல் திறன்: ஒரு நாளைக்கு 100000 துண்டுகள் கொள்ளளவு: 10 மிலி (பிற திறன்களைத் தனிப்பயனாக்கலாம்) தொப்பி / மூடல்: தொப்பி லோகோ: அச்சிடுதல் அல்லது புடைப்பு, வாடிக்கையாளரின் சின்னத்தை ஏற்றுக்கொள் பயன்பாடு: வாய்வழி திரவம், பா ...\nசீனா தொழிற்சாலை 10 மில்லி சிலிண்டர் மருந்து கண்ணாடி குப்பிகளை வாய்வழி திரவத்திற்கான அம்பர் மருத்துவ கண்ணாடி பாட்டில்\nதயாரிப்பு பெயர்: மருந்து கண்ணாடி குப்பியை பொருள்: கண்ணாடி நிறம்: அம்பர் (கோரிக்கைகளின் அடிப்படையில் எந்த நிறமும் கிடைக்கிறது.) வடிவம்: சுற்று திறன்: 10 மிலி சீல் வகை: அலுமினிய தொப்பி விண்ணப்பம்: வாய்வழி திரவ குறுகிய விளக்கம்: FOB விலை: அமெரிக்க $ 0.08-0.12 / பீஸ் MOQ : 50000PCS வழங்கல் திறன்: ஒரு நாளைக்கு 100000 துண்டுகள் கொள்ளளவு: 10 மிலி (பிற திறன்களைத் தனிப்பயனாக்கலாம்) தொப்பி / மூடல்: தொப்பி லோகோ: அச்சிடுதல் அல்லது புடைப்பு, வாடிக்கையாளரின் சின்னத்தை ஏற்றுக்கொள் பயன்பாடு: வாய்வழி திரவ, மருந்து, மருந்து. அக்காஸ் ...\nஉற்பத்தியாளர் மொத்த விற்பனை 30 மிலி 50 மிலி 60 மிலி 75 மிலி 100 மிலி 200 மிலி 250 மிலி 300 மிலி 500 மில்லி அம்பர் கண்ணாடி சுற்று பழுப்பு மருந்து பாட்டில்கள் பாஸ்டன் மருத்துவ கண்ணாடி பாட்டில்\nதொழிற்சாலை மொத்த விற்பனை 450 மிலி லோகோ தனிப்பயன் பல சாய்வு நிறம் கைப்பிடி உடைக்க முடியாத கண்ணாடி மேசன் ஜாடி உடன் பிளாஸ்டிக் உலோகம் வைக்கோல் உலோகம் திருகு மூடி\nசீனா தொழிற்சாலை 30 மிலி 50 மிலி 60 மிலி 75 மிலி 100 மிலி 200 மிலி 250 மில்லி 300 மில்லி அம்பர் கிளாஸ் சுற்று பழுப்பு மருந்து கண்ணாடி பாட்டில்கள் பாஸ்டன் மருந்து கண்ணாடி பாட்டில்\nதொழிற்சாலை மொத்த விற்பனை 450 மிலி லோகோ தனிப்பயன் பல சாய்வு நிறம் கைப்பிடி உடைக்க முடியாத கண்ணாடி மேசன் ஜாடி உடன் பிளாஸ்டிக் உலோகம் வைக்கோல் உலோகம் திருகு மூடி\nமொத்த 500 மில்லி அம்பர் சுற்று பழுப்பு மருந்து கண்ணாடி பாட்டில்கள் பாஸ்டன் மருந்து கண்ணாடி பாட்டில்\nதொழிற்சாலை மொத்த விற்பனை 450 மிலி லோகோ தனிப்பயன் பல சாய்வு நிறம் கைப்பிடி உடைக்க முடியாத கண்ணாடி மேசன் ஜாடி உடன் பிளாஸ்டிக் உலோகம் வைக்கோல் உலோகம் திருகு மூடி\n30 மிலி 60 மிலி 75 மிலி 115 மிலி 120 மிலி 150 மிலி 200 மிலி 250 மிலி 300 மில்லி அம்பர் அகல வாய் கண்ணாடி குடுவை காப்ஸ்யூல்கள் கண்ணாடி பாட்டில் மாத்திரைகள்\nமருந்து மற்றும் ஊட்டச்சத்து தொழில்களுக்கு பரந்த அளவிலான மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல் கண்ணாடி கொள்கலன்களை நாங்கள் வழங்குகிறோம். நாங்கள் மிகவும் போட்டி விலையை வழங்க முடியும். இந்த கண்ணாடி கண்டங்கள் வெவ்வேறு வடிவங்கள், அளவு, வண்ணங்கள் மற்றும் பாட்டில் பூச்சு ஆகியவற்றில் வருகின்றன. இந்த கண்ணாடி பாட்டில் அனைத்தும் சோதனை, கெமிக்கல் மந்தம், 100% நச்சு இலவசம் மற்றும் பெர்மினம் அளவு ஆகியவற்றைக் கடந்துவிட்டன. அம்பர் நிறம் புற ஊதா கதிர்களுக்கு எதிராக திறம்பட பாதுகாக்க முடியும், எனவே இது மருந்து மற்றும் இயற்கை தொழில்களுக்கு முக்கியமானதாகும்.\nமுகவரி:அறை 1708, ஜியுகி கட்டிடம், 16 ஜிங்யுவான் சாலை, ஜிஃபு மாவட்டம், யந்தாய் நகரம், சாண்டோங் மாகாணம்\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-movie-update", "date_download": "2021-08-02T09:16:25Z", "digest": "sha1:E43SVBSH2QMOE6RCE6WC25JWXIEYVAZ2", "length": 9601, "nlines": 79, "source_domain": "www.cinibook.com", "title": "தமிழ் திரையுலகில் புதிய பாதையில் \"ஒத்த செருப்பு\"- ஆஸ்கர் விருது கிடைக்குமா???", "raw_content": "\nதமிழ் திரையுலகில் புதிய பாதையில் “ஒத்த செருப்பு”- ஆஸ்கர் விருது கிடைக்குமா\nநடிகர் சூர்யாவின் காப்பான் படம் வெளியாகின்ற அதே தேதியில் தான் பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் படம் வெளியிடப்போவதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்..\nபார்த்திபன் இயக்குனராக மட்டும் அல்லாமல், நடிகராகவும் தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர். சிறந்த படங்களை தந்தவ���். பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை பார்த்திபன் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பஉள்ளாராம். ஆம். அவர் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படம் ரொம்பவே வித்தியாசமான கதைக்களத்தில் பார்த்திபன் அமைத்துள்ளார்.\nபடத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல, படம் வித்தியாசமாக, தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் முயற்சிக்காத வகையில் கதைக்களத்தை அமைத்துள்ளார். அப்படி என்ன வித்தியாசம் என்று யோசிக்கிறாங்களா இப்படத்தில் ஒரே ஒரு காதாபாத்திரம் மட்டும் தான், அதுவும் ஒரே ஒரு லொகேஷன் தான். உலகில் இது போன்ற படங்கள் பன்னிரண்டு தான் உள்ளதாம். அதிலும்,இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் நடிகர் அனைத்தும் பார்த்திபன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் யாரும் முயற்சிக்காத புதிய பாதையை தமிழ் திரையுலகிற்கு மட்டும் அல்லாமல், உலக அளவில் சாதனை படைக்க போகிறார் என்று சொன்னால் அது மிகையாகது. படத்தை இயக்குனர் பார்த்திபன் தான் அந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தான் சிறப்பு. ஒரு காதாபாத்திரம் என்பதால் மற்ற தொழில்நுட்பங்கள் ரொம்ப சிறப்ப அமையனும். பின்னணி இசை தான் படத்திற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதால், ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தான் படத்திற்கு ஒலி அமைப்பாளர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.\nஆஸ்கர் விருது வாங்குவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளதால், பார்த்திபன் இப்படத்தை ஆஸ்கர் விருது வாங்க அனுப்ப உள்ளாராம். பார்ப்போம்…மக்கள் மனதில் இப்படம் இடம் பிடிக்குமா ஆஸ்கர் விருது வாங்குமா என்பது படம் வெளியானால் தெரியும்………\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nவிஜய்யின் பிகில் படத்தில் கல்லூரி மாணவியாக நயன்தாரா…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nபுதிய கெட்டப்பில் விஜய்சேதுபதி….கடைசி விவசாயி படத்தில்…\nஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் தேனீர்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சும�� ராமகிருஷ்ணன்…\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nமீரா மிதுன் அரைகுறை ஆடைகளுடன் ஆடும் ஆட்டத்தை பாருங்கள்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=21104242", "date_download": "2021-08-02T09:29:50Z", "digest": "sha1:TUPW7C53YLLCYWTVD7WLZGVCZO2QVUQA", "length": 163275, "nlines": 275, "source_domain": "old.thinnai.com", "title": "ஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)\nPosted by அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான் On April 24, 2011 0 Comment\nமுதற் பகுதியைத் தொடர்ந்து இப்பகுதியில் எழுதுவதற்கு முன், இஸ்லாமியத்தில் எனக்கு அறிமுக அறிவு எப்படிக் கிடைத்தது என்பது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஏற்றுக்கொண்ட வேலைகளுக்கிடையே, ஓய்வு நேரங்களில் இஸ்லாமைப்பற்றி படிப்பது எனும் ஆரம்ப வழக்கத்திற்கு பதிலாக, போகப் போக மிக கவனத்துடன் ஆழ்ந்து படிக்கவும் தொடங்கினேன். ஆரம்பத்தில், முகம்மது சொன்னது செய்தது ஆகியவைகளை பாரபட்ச மின்றி படித்தபின், இவைகளில் உள்ளவைகளை, அப்படியே முழுதுமாக பயனற்றது என வீசியெறிந்து விடுவதா, அல்லது மறுப்பதா என மனக் குழப்பம் தான் முதலில் எதிவிளைவாக ஏற்பட்டது\n•\t“இஸ்லாம் என்றால் அமைதி” என்று விளம்பரக் கவர்ச்சி வாசகங்களாகப் பறைசாற்றப் படுவதற்கும்,\n•\tஇஸ்லாமிய நூல்களில் உள்ளவைகளுக்கும், அதிலுள்ளவைகளில் உள்ளபடியே, முஸ்லிம்கள் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும்படி உண்மையாக செயலில் மெய்ப்பித்துக் காட்டுவதற்கும்,\n என வெளியில் யாரிடமாவது சொல்லிக் கொள்ள, இதைப்பற்றி விவாதம் செய்ய எனக்குள் மிக அச்சம்தான் முதலில் ஏற்பட்டது. சந்தேகங்களை யாரிடம் கேட்பது என தயக்கமும் அடுத்து உண்டானது. இஸ்லாமைப்பற்றி நான் படிக்கும் போதே இந்நூல்களில், எனக்கெழுந்த சந்தேகங்கள் எல்லாவற்றிற்கும் விடைகள் கருத்தியலாகக் கிடைத்தாலும் அது உண்மை நடைமுறையில் சரியா தவறா என இஸ்லாமிய நிபுணர் ஒருவர் பாகுபடுத்தி உறுதி���ட நிலை நிறுத்திச் சொல்வதற்குக் கிடைக்காததால், என்ன செய்வதென தெரியாமல், விழித்திருந்தேன். நமக்கு நேரடியான சம்பந்தமில்லாத இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றி முழு விவரம், உண்மையான நடைமுறைகள், ஆகிய மற்ற விஷயங்கள் அனைத்தையும் அறியாமல், இஸ்லாமியத்தைப் பற்றி சித்தாந்த விமர்சனம் செய்வது மிகத் தவறல்லவா ஆனால், என் மனதில் ஒன்று மட்டும் மிக உறுதியாகப் பதிவானது. அதாவது இஸ்லாமிய நூல்களில் உள்ளபடியே தான், உலகெங்கும் இஸ்லாமியர்கள் செயலில் காட்டும் நடவடிக்கைகள் உண்மையில் ஒத்திருக்கின்றன என கேட்டு, கண்டு, படித்த பிறகு, மனதில் என் செல்வழித் தடம் தவறல்ல என்பதை அப்போது உணர்ந்தேன்.\nஇணைய வசதி பற்றி அந்நாட்களில் அவ்வளவாக எனக்கு பழக்கத்தில் வைத்துக்கொள்ள ஏதேதோ காரணங்களுக்காக நேரவில்லை. முன் நாட்களில், இஸ்லாமியத்தைபற்றி, ஆங்கிலத்தில் மூல நூல் கிடைப்பதும் அரிதாக இருந்தது. அப்படிக் கிடைத்தாலும், அதிலுள்ள கவர்ச்சியற்ற உரைநடைகளை படித்து, அதன் உண்மைப் பொருளை அறிய முதலில் சற்று சிரமமாகவே இருந்தது. இதில் நமக்கு வழிகாட்டிகளாக இஸ்லாமிய நிபுணர்களான முல்லாக்களிடம் கேள்வி கேட்கும் போது நாமே தவறாக ஏதாவது ஏடாகூடமாக கேட்டு விடுவோமோ என உள்ளூர பயமாகவும் இருந்தது. இதன் விளைவு என்ன நேருமோ என மனதில் கலக்கம் சேர்ந்து உண்டானது. இதனால், என் சந்தேகங்களைக் களைய இஸ்லாமிய நிபுணர்களைக் கேட்கும் எண்ணத்தை முற்றிலும் தவிர்தேன். ஆனால், இன்று இஸ்லாமியத்தைப் பற்றி அறிவதற்குக் கிடைக்கும் மூல ஆவணங்கள், இணையத்தில் ஏராளம். குறைவொன்றுமில்லை.\nஇந்நாட்களில் மிக முக்கியமாக, இஸ்லாமிய செயல் பாடுகளில் உள்ளவைகளை, அவர்கள் நூல்களில் உள்ளது உள்ளபடி, அநேக கொள்கைகளை ஆங்கிலத்தில் விவரிக்கும் இஸ்லாமிய நிபுணர்களுடைய அபிப்பிராயங்கள் இன்று இணையங்களில் ஏராளமாகக் கொட்டிக் கிடைக்கின்றன. நான் கேட்க வேண்டிய பல கேள்விகளுக்கு முன்னரே பதில்களும் தயாராக இருந்தன. இவைகள் நான் எதிர்பார்த்தபடி, என் கருத்து சரியே என உறுதிபட நிலை நிறுத்தி சொல்வதற்குக் கிடைத்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. இஸ்லாமிய தமிழ் இணையங்கள் வாயிலாக தமிழ் ஒருங்குறியில், இன்று கிடைக்கும் குரான், ஹத்தீஸ்கள், முதலியவைகளும், ஆங்கிலத்தில் பல இஸ்லாமிய நிபுணர்களால் ���ப்புதலளிக்கப் பட்ட மொழிப்பெயர்ப்புகள், பல ஹத்தீஸ்கள், முதலியவைகளை படித்து ஒரு வழியாக முடிக்க, சில வருடங்கள் எடுத்துக் கொண்டேன். இதற்கும் மேலாக, என் மனதில் அவ்வப்போது இஸ்லாமியத்திற் கெதிராக எழும் சந்தேகங்களைக் களைய மின்னஞ்சல் மூலமாக நம்பிக்கைக்குகந்த, சில பிரசித்தி பெற்ற, இஸ்லாமிய நிபுணர்கள்-ஒத்த கருத்துடைய முன்னாள்-முஸ்லிம்கள், நிரந்தர உண்மை நண்பர்களாக எனக்குக் கிடைக்கும் பேறு பெற்றேன்.\nஆங்கில இணையங்களில் அவ்வப்போது கிடைக்கும் பலதரப்பட்ட கட்டுரைகளைப் படித்தவுடன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக உறுதி, தெளிவு, தைரியம் ஏற்பட்டது. இவைகளோடு, உலகில் நடக்கும் இஸ்லாமிய நடவடிக்கைகளையும், நிறைவேற்றும் பாணிகளையும் டெலிவிஷனில் பார்த்து, படித்து, சிந்தித்து, அனுபவித்தவுடன் மனதில் ஒரு அசைக்க முடியாத உறுதி தன்னால் ஏற்பட்டும் விட்டது. இந்திய மண்ணில், அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் எழுதப் படிக்க அறிந்தோர் பலருக்கு இஸ்லாமிய உண்மைகளைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இன்னும் இருக்கிறார்களே என்ற வருத்தம் தான் அதேசமயம் மனதில் ஓங்கியது. இஸ்லாமிய அபாயம் உலகை சூழ்ந்துள்ளது என நான் தமிழில் கட்டுரைகள், பற்பல தலைப்புகளில் (இஸ்லாமிய இந்திய அரேபிய சரித்திரம், இஸ்லாமிய வங்கி முறைகள் என) எழுதினாலும், அவைகளில் உள்ள உட்கருத்தை முற்றிலும் அறியாமல், ஏற்க மறுக்கப் பட்டது உண்டு. இருந்தும் என் முயற்சியைத் தளர விட்டுவிட என்றுமே நான் தயாராக இருந்ததில்லை. காரணம், எனது அபிப்பிராயங்கள் உண்மையின் அடிப்படையில் உள்ளது என எனக்குத் தெரியும். அந்த எண்ணமே இன்றும் இன்னும் உரமாக என்னை ஊக்குவித்தது.\nஇந்திய நாட்டில் தற்போது உயிருடன் இருப்பவர்களுக்குள் இஸ்லாமியரல்லாத-ஆனால், இஸ்லாமியத்தைப் பற்றி நன்கு கற்றறிந்த பெரியோர்கள், மிக மிகக் குறைவு. முந்நாட்களில், யோகி விவேகானந்தர், அரபிந்து மகரிஷி, சீதாராம் கோயல், ராம் ஸ்வரூப், போன்ற பெரியோர் இருந்தனர். அவர்கள் அன்று எழுதி விட்டுச்சென்றவைகள் இன்னும் உபயோகமாக உள்ளன. இன்று Dr. NS. ராஜாராம், அருண்ஷௌரி, டாக்டர் ராதேஷ்யாம் பிராம்மசாரி முதலியோர் வெளியீடுகளும் மிகவும் சிறந்தவை, மற்றும் ராபர்ட் ஸ்பென்சர், க்ரைக் வின், முன்னாள்-முஸ்லிம்களான, காலம் சென்ற பாகிஸ்தான் அன்வர் ஷேக் (பின்னர் அனிருத் ஞான் சீகா என பெயர் மாற்றம் செய்துகொண்டவர்), ஈரானைச் சேர்ந்த டாக்டர் அலி சினா, சிரியா நாட்டு வஃபா சுல்தான், டேனிஷ் நாட்டு கீர்ட் வில்டெர்ஸ், பங்களாதேஷ் அமில் இமானி, சையத் கம்ரான் மிர்ஸா, அபுல் காசம், ஆயீஷா அஹ்மத், இபின் வராஃக், எம். ஏ. கான், அஸ்கார் அலி இஞ்சினீயர், முகம்மது அஸ்கார், முதலியோர் எழுதியவை என்றும் படிக்கத்தக்கவை, மேலை நாட்டில் கிருத்தவர்களாகப் பிறந்தும் ஹிந்துவாக இருப்பவர்களான, ஸ்டீபன் நாப், டேவிட் பிஃராலி, கீன்ராட் எல்ஸ்ட், பிஃராங்காய் கௌடியர் போன்ற மேதைகள் எழுதியவைகளோடு பற்பல ஆங்கிலக் கட்டுரைகளை இணையத்திலிருந்து அவ்வப்போது தரவிறக்கம் செய்து, படித்து, சிந்தித்த பின், தன்னால் தெளிவுடன் மனதில் ஒரு புதிய சக்தி பிறந்தது. எல்லா விஷயங்களையும் ஆதாரத்துடன் தமிழில் உடனுக்குடன் எழுத மனம் துடித்தது. தங்களுக்கே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளைக் களைந்து, வெளி நாட்டு இணையங்கள் போல மனத் திண்மையுடன் வெளியிடும் தமிழ் இணையங்கள் இந்திய ஜன நாயக நாட்டில் கிடைக்க மாட்டார்களா எனவும் பலகாலம் ஏங்கியிருக்கிறேன். தினவடங்க வெளி நாட்டு ஆங்கில இணையங்களுக்கு எழுதி அவைகளும் முன்னாள் இஸ்லாமியர்- அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, பாராட்டுகளுடன் வெளியானால் மட்டும் மன நிறவு ஏற்பட்டு விடுமா இக்கருத்துக்களை நம் தமிழ் இணையங்களும் வெளியிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். தமிழ் இணையங்கள், இத் தொண்டை எவ்வளவு சீக்கிரம் செய்யத் தொடங்குகிறார்களோ அது நம் தமிழ் மக்களுக்குச் செய்யும், மிகச்சிறந்த, அரிய தொண்டாகும். தக்க ஆதாரங்களுடன் எழுதப்பட்ட தமிழ்க் கட்டுரைகளைத் தயங்காது வெளியிட்டால், வருங்கால தமிழ் மக்கள் இவ்விணைய நிருவனர்களை மனதாற வாழ்த்து வார்கள். இது என் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை. இப்போது கூட பெரும்பாலான தமிழ்மக்கள் இஸ்லாமியம் பற்றி திக்கு தெரியாத காட்டில் தான் உழல்கிறார்கள்.\nஇனி, இஸ்லாமிய வரையறைகளைப் பற்றி (definitions):\nஇஸ்லாமிய சட்டங்கள், அதாவது “ஷரியா” என்பது, குரானிலும், சுன்னாக்களிலும் கூறப்பட்டுள்ள விதிகளையே அடிப்படையாகக் கொண்டது. சுன்னாக்கள் என்பது, பல (ஸாஹீஹ்=நம்பக் கூடிய) ஹத்தீஸ்களாலும், “சிரா” எனும் முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இரு நூல்களின் கூ���்டுத் தொகுப்பு. ஆக, இவ்விரண்டும் (ஹத்தீஸும், சிராவும்) சேர்ந்து தான் “சுன்னாக்கள்” எனப்படும். ஹத்தீஸ்கள் என்பது, முகம்மதுவின் வாழ்க்கையில் நடத்திக்காட்டிய பழக்க வழக்கங்கள்; நிகழ்ச்சிகள்; முகம்மது அந்தந்த சமயத்தில் பலரிடம் செய்யச் சொன்ன சடங்குகள் ஆகியவைகளில் தொகுப்பு (Mohammad”s 7th century exotic Traditions and Practices). ‘சிரா’வை, இப்னு இஷாஃக் (Ibn Ishaq) முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை (biography) எழுதிவைத்தவர். ஆக இந்த மூன்றையும் சேர்த்து, அதாவது\n2. சுன்னாக்கள் (ஹத்தீஸ்கள்+சிரா) ஆகியவைகளை,\nஒன்றுக் கொன்றுடன் தொடர்புள்ள இஸ்லாமிய முத்தொகுப்புகள் (trilogy) என்ற பெயரும் உண்டு. இந்த முத்தொகுப்பு நூல்களில் உள்ளவைகள் அப்படியே அத்தனையும் ஷரியா சட்டங்கள் எனப்படும்.\nஇனி, முதற் பகுதியில் எழுதியதைத் தொடர்ந்து இப்பகுதியில் முக்கிய தலைப்புப் பொருள் பற்றி கவனிப்போம். 2004 ஜூன் 24இல், இரானிய தொலைக் காட்சியில், “அல்லாவின் கிருபையால், மக்களுக்கு அக்கிரமங்களை தொடர்ந்து அன்றாடம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அமெரிக்க, இஸ்ரைல் சமூகத்தினரை கூடிய சீக்கிரம் உலகிலிருந்து அகற்றிவிடுவோம்” அதற்கேற்ற திட்டம் முன்னரேயே தீட்டியாகிவிட்டது.” என தொலைக் காட்சி நிகழ்ச்சியில் அறிவித்துக் கொண்டிருந்தனர். பார்த்தவுடன் மிகவும் வருந்தினேன். மற்றோரு சமீபத்திய செய்தி: “”பல பெருங்கேடுகளை பயக்கக் கூடிய விஞ்ஞானிகளால், அணு ஆயுத அடிப்படையில், புதிதாக கண்டுபிடித்து பெருமளவில் தயாரிக்கப்பட்ட மிகக் செயல்திறமிக்க வெடிகுண்டுகளை (dirty radioactive IEDs) அல்-குவைதா தங்கள் வசம் தயாராக குவித்து வைத்துள்ளனர்”” என நம்பத்தகுந்த அரசியல் செயலாட்சிக்குறிய ஆவணங்கள் வழியாக தெரியவருகிறது”” . குறிப்பு:\nhttp://www.vancouversun.com/news/Qaida+brink+using+nuclear+bomb/4205104/story.html கீழ்த்தரமான இந்த வெடிகுண்டு வெடிக்கப்பட்டால் இதனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பிரதேசங்களில் புல் பூண்டுகளிலும் கூட நச்சைப் பரப்பி, ஒன்றையும் வளர விடாமல் தரிசு நிலங்களாக, மாசு படிய வைத்துவிடும். இதற்கும் மேலாக, மிக சமீப செய்தி. ஈரான் தன்னிடம் அணுகுண்டுகள் தயார் நிலையில் உள்ளன என பிரகடனப்படுத்தும், ஒரு தொலைக்காட்சி செய்தியை இச்சங்கிலியில் காணவும்: http://www.iraniumthemovie.com/ அணுகுண்டு வெடிப்பினால் உலகமே ஒரு தூசுகள் நிறைந்த மிகப் பெரும் பீப்பாயாக ஆகிவிடும் அபாயமும் உள��ளது.\nடெனிஷ் நாட்டில் மிகப் பெரிய சமூகமாக வசிக்கும் முஸ்லிம்களுக்கு, அந்நாட்டு முஸ்லிமல்லாத பொது (டேனிஷ்) மக்கள் வெளியிட்ட விசித்திர மன்னிப்புக் கடிதம் கீழே தமிழாக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது:\n“”கீழ்க்கண்ட எங்கள் குற்றங்களை தயவு செய்து மன்னித்துவிடவும்:\n•\tஇஸ்லாமிய நாட்டிலிருந்து இந்நாட்டுக்கு புதிதாக குடியேறிய முஸ்லிம்களாக இருப்பினும் நீங்களே அங்கிருந்து துரத்தியடிக்கப் பட்டவுடன், மற்ற நாட்டவர்கள் முஸ்லிம்களே ‘வேண்டாம்’ என்று உங்களை விரும்பாமல் ஒதுக்கிய போது, மனித நேய அடிப்படையில், எங்கள் அரசாங்கம் தான் உங்களுக்கு இருக்க இடமளித்தது, உணவளித்தது, உடையளித்தது, நல்ல படிப்பறிவுத் தந்தது, அதற்காக எங்கள் டேனிஷ் அரசாங்க சார்பாக மக்களாகிய நாங்கள் உங்களிடம் இன்று மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.\n•\tஉங்கள் மனைவிகள், மக்கள் உங்கள் நாட்டிலிருந்து உங்களை வந்தடையாதபோது, அவர்களையும் பாதுகாப்பாக டேனிஷ் நாட்டில் உங்களுக்காக வரவழைக்க ஏற்பாடு செய்து, அனைத்து செலவையும் டேனிஷ் அரசாங்கமே ஏற்று, இவர்களையும் உங்களுடன் நிரந்தரமாகத் தங்க வைக்க, எங்கள் அரசாங்கம் ஏற்பாடு செய்ததற்காக இன்று மிக வருந்து கிறோம்.\n•\tநன்றி உணர்ச்சி என உங்களிடம் எதிர்பார்ப்பது தவறு என இப்போது எங்களுக்கு நன்றாகப் புரிகிறது எங்களுக்காக இல்லாவிட்டாலும் இந்நாட்டுக்காகவாவது விசுவாச குடிமக்களாக உங்களால் இருக்கமுடியவில்லை. நீங்கள் இந்த நாட்டுக்குள் வந்ததிலிருந்து தான் எங்கும் சண்டை, சச்சரவு, அநாவசியக் கொலைகள், கொள்ளைகள் என ஏராளம் தினமும் நடக்கிறது. [[இதற்கு ஆதாரம்: ‘நிகோலாய் சென்னெல்ஸ்” (Nicholai Sennels) எனும் பிரசித்த உளநூல் வல்லுனர் உங்களைப்பற்றிக் கூறியவைகள்: (இதன் விவரங்கள் பின்வரும் பகுதியில் முழுதுமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\n•\tநீங்கள் வேலை செய்யாதிருக்கும் போது கூட எங்கள் அரசாங்கம்தான் மாதாமாதம் உங்களுக்குப் பண உதவியையும் செய்தது. ஆனால், வேலை செய்யாது வீட்டிலிருக்கும் 24 மணி நேரத்தையும், உங்கள் பல மனைவியருடன் உல்லாசமாக இனப் பெருக்கத்தில் நீங்கள் ஈடுபட்டதன் விளைவாக உண்டான முஸ்லிம் குழந்தைகள் பெருக்கத்தையும் டேனிஷ் நாட்டுக்கு இன்றைய சுமையாக ஏற்படுத்தினீர்கள். இதற்கும் டேனிஷ் அரசாங்கமே இலவசமாக பிரசவ செல��ையும் செய்தது; அதற்காக இன்று வருந்துகிறோம்.\n•\tஉங்களுக்கு இவ்வாறு எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்ததால் அரசாங்கத்திற்கு உண்டான, நஷ்டங்களான, குடைக்கூலி, தொலைபேசிச் செலவு, இணயம், வாகனம், முதலியன இருப்பினும், எல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் மனைவி ஒவ்வொருவருக்கும் குறைந்தது எட்டு குழந்தைகளென சராசரியாக பெற்றுத் தள்ளினீர்கள். (ஆக, உங்கள் நான்கு மனைவி களுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு 32 குழந்தைகளாகிறது).\n[[ஒரு தமிழ் வசனம் சொல்வார்கள், “வரவு செலவு எதிர்வீட்டுக்காரன் செய்யும்போது நெய்யிலேயே செய் பணியாரத்தை” என கணவன் தன் மனைவியிடம் சொல்வானாம்\nஇவர்களுக்கு ஆகும் பள்ளிச் செலவு ஆகியவைகளையும் மற்ற இஸ்லாமியரல்லாத மக்கள் அளித்த வரிப் பணத்திலிருந்து தான் எங்கள் அரசாங்கம் செலவு செய்தது. இருப்பினும் நீங்கள் எங்களுடைய டேனிஷ் மொழி கற்க மறுத்து விட்டீர்கள். அதற்காக இன்று வருந்துகிறோம்; எங்களை மன்னித்து விடவும்.\n•\tநீங்கள் விரும்பிய வண்ணமே உங்கள் இஸ்லாமிய நடவடிக்கைக்காக, ஒரு மசூதி கட்டும் செலவையும் எங்கள் அரசாங்கம் தான் உங்கள் இயல்பு தெரியாது ஏற்றுக்கொண்டது. அதனால், இதுவரை இருந்த அமைதியான சூழ்நிலையைக் கடந்து ஏதேதோ குரலில் ‘ஆதான்’ ஐ (நமாஸுக்குக் கூப்பிடும் குரல்) மசூதி ஸ்தூபியிலிருந்து (மனோராவிலிருந்து) ஒலிபெருக்கியின் மூலம் விபரீத எதிரொலியுடன் தொழுகைக்கு நீங்கள் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை விளித்ததையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டோம்; அதற்காக வருந்தி, மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.\n•\tமசூதிதான் உங்கள் ‘ஜிஹாத்’ கொள்கையைப்பறப்ப, உணர்ச்சி வெள்ளத்தை உருவாக உபயோகிக்கிறீர்கள் என எங்க்களுக்கும் தெரியும்.\nஆகிய இவையனைத்தையும் உங்களுக்கு ஏற்பாடு செய்த எங்களைத் தான் இன்று நொந்து கொள்கிறோம்.\nஎன மனம் நொந்து ஒரு மன்னிப்புக்கடிதத்தை ஒரு ‘திம்மி சங்கம்’ தெரிவித்துள்ளது. எப்படி இருக்கிறது\nஜெட் பாபின், (Jed Babbin – இவர் முன்னாள் United States Deputy Undersecretary of Defense, during the first Bush administration) இவர் எழுதிய புத்தகத்தில், In the Words of Our Enemies, “” ஹிட்லர் ஏற்படுத்திய நாஸிகள் போல, தீவிர இஸ்லாமியர்களும், எப்போதுமே தங்கள் கலாச்சாரத்தால் உண்டான தாழ்வு மனப்பான்மை உண்மையை உணராமல், அதை மறைக்க, தங்களுக்குப் பிறரால் தான் மிகவும் அநீ��ி இழைக்கப்பட்டதாகவும், தாங்கள் மிகக் கொடுமையாகத் நடத்தப்பட்டதாகக் கண்ணீர் வடிப்பது வழக்கம். அதையே, தங்கள் சீடர்களுக்கும் உபதேசித்து, தங்களுடைய எல்லா பிரச்சனைகளுக்கும், உலகத்திலுள்ள மற்றவர்களே, மிக முக்கியமாக, அமெரிக்கா, இஸ்ரைல் நாட்டு யூதர்களும் தான் காரணம் என எப்போதுமே கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள்””. இதற்கெல்லாம், இவர்களுக்கு வழிகாட்டி இஸ்லாமிய இயக்க நூல்களில் உள்ளவைகளே மூல காரணம்.\nஅதே சமயத்தில், தற்போது தாங்கள் வெகு நாட்களாக நிகழ்த்திக் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க யதார்த்தத்தை மறைப்பதும் இவர்களுக்கு மற்றொரு வழக்கம்: அதாவது, இவர்கள் கூட்டாளிகளான மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரேபியர்களால், தொன்று தொட்டு வட ஆப்பிரிக்க தேசங்களில் செயலாற்றும் இஸ்லாமியத்தால் மட்டுமே, அங்கு முடிவில்லாத குழப்பம், கிளர்ச்சி, அசாத்திய வன்முறை, ஒழுங்கின்மை முதலியவை நிலவுகின்றன என்பது பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள் சுமார் பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் (1400 வருடங்களுக்குப் பிறகும்), மத்திய கிழக்கு அரேபிய நாடுகளிலிருந்து ஆப்பிரிக்கர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு ஊட்டப் பட்ட இஸ்லாமியம் தான் அந்நாடுகளில் எவ்வித முன்னேற்றமும் அடையாதிருப்பதற்குக் காரணம். இதன் விவரம் முழுதுமாக தமிழில் வெளியிடப்பட்டால், மனசாட்சியுள்ள எந்த மானிடரையும் உலுக்கிக் கலக்கிவிடும். உலகிலுள்ளொருக்கு இது தெரியாதென இவர்களுடைய அபிப்பிராயம். இதில், இவர்கள் பாலைவன-நெருப்புக்கோழி போன்று, இருப்பார்கள். ‘தன் கண்ணை மூடிக்கொண்டு விட்டால், உலகம் முழுதுமே ஒரே இருட்டென’ நெருப்புக்கோழி சொல்லுமாம். அங்குள்ள மக்களுக்கு இன்றும் மிக முக்கிய வழிகாட்டும் இயக்கம் இஸ்லாம் தான். அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் ஆப்பிரிக்க இஸ்லாமின் யதார்த்தம்.\nஉலகம் முழுதும் ஒரு ரணபூமியாக நிரந்தரமாக இருக்க, 7வது நூற்றாண்டில் முகம்மதுவால் துவக்கி வைக்கப் பட்டு, அன்றிலிருந்து இந்நாட்கள் வரை தொடர்ந்து ஒவ்வொரு இடத்திலும் நடத்திவரும் ‘ஜிஹாத்”தான், இக்கேடுகளுக்கு அடிப்படை முழுமுதற்காரணம். சற்று யோசித்துப் பாருங்கள். முஸ்லிம்கள் ‘ஜிஹாத்’ நடத்தாத இடம் உலகில் மிச்சமீதி எங்காவது உண்டா இவர்கள் எது செய்தாலும் அதற்கு மக்கள் மற��� பேச்சு பேசக்கூடாது. இதை மீறினால், சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அங்கேதான் குழப்பமும், கிளர்ச்சியும், அசாத்திய வன்முறை, ஒழுங்கின்மை முடிவில் அமைதி இன்மை முதலியன தவறாது நடைபெறுகின்றன. இவைகளை இவ்வாறு நடந்து கொள்ள வைப்பது எது இவர்கள் எது செய்தாலும் அதற்கு மக்கள் மறு பேச்சு பேசக்கூடாது. இதை மீறினால், சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அங்கேதான் குழப்பமும், கிளர்ச்சியும், அசாத்திய வன்முறை, ஒழுங்கின்மை முடிவில் அமைதி இன்மை முதலியன தவறாது நடைபெறுகின்றன. இவைகளை இவ்வாறு நடந்து கொள்ள வைப்பது எது உதாரணமாக ஒரு எடுத்துக்காட்டை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 11-செப்டம்பர்-2001 லிருந்து 20-ஏப்ரல்-2011 வரை பயங்கர ஜிஹாத் வன்முறைகள் நடந்த மொத்தம்: 17086.\nஆனால், இந்த 20வது நூற்றாண்டிலும், இஸ்லாமிய ‘முல்லா சையத் குதுப்’ தீர்மானமாகக் கூறுகிறார்: “உலகை மனிதர்கள் ஆளவில்லை, அரசியல் முறைகளைச் சேர்த்து, ஆள்வது ‘அல்லா’ ஒருவர் தான்”. அல்லா ஒருவர்தான் உலகத்தின் உரிமையாளர். ஆகவே, அல்லா இயற்றிய இஸ்லாமிய புனித நூல்களில் உள்ள ஒழுங்குமுறைகளே, மற்ற சட்டங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது. இந்நூல்களில் தயாராக உள்ளவைகளை அப்படியே வழிகாட்டியாக பின்பற்றி விடலாமே இதில் சுதந்திரம் தேவையா ஆகையால் “‘அல்லா” இயற்றிய (ஷரியா) சட்டப்படி, உலக சமூகத்தை ஆளவேண்டுமே தவிர, அழியக் கூடிய வெறும் மனிதளால் இயற்றப்பட்ட சட்டங்களாலல்ல.” என்று திட்டவட்டமாக உலகுக்கு அறிவிக்கிறார் இஸ்லாமிய ஒழுங்குமுறை, ‘அல்லா’ மட்டுமே அதன் தலைவர், மற்றவர் அல்லவே அல்ல என அக்கடவுளாட்சி நம்பிக்கை கொண்டவர்களால், உறுதியான நிலைப்பாடு கொண்டது. ஆக, இஸ்லாமியப் புனித நூல்களில் உள்ளபடி, அல்லாவின் சட்டங்களை, முல்லாக்கள் அடங்கிய பேரவை எவ்வாறு விளக்கிப் பொருள் கூறுகிறார்களோ, அவைகளைத் தான் மக்கள் ஏற்க வேண்டுமே தவிர, வேறொருவரும் விளக்கிச் சொல்லவோ, திருத்தவோ, மாற்றிப் பொருள் கூறவும் கூடாது. எல்லா மக்களையும் சரிநிகர் சமானம் எனக் கருதும், மதம் சாரா அரசியல் ஒழுங்குமுறை சட்டங்களை அல்லாவின் சட்டங்கள் என்றுமே ஏற்காது, என செயல் முறைக் கொள்கைகளாகக் கொண்டது. அப்படி மீறி ஒருவர் செயல் பட்டால், அது அல்லா நிந்தனை (blasphemy) எனப் பிரகடனப் படுத்தப்பட்டு அதற்குறிய மரண தண்டனையை உடனுக்குடன் யாருக்காக இர���ந்தாலும் நிறைவேற்றப்படும். இதைப் போல, இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக நடப்பவர்களுக்கு ஷரியா நீதிபதியே, ஷரியா சட்டப்படி, தண்டனையை ஒரு பஃத்வா மூலம் எதிர்த்து வாதாட இடமின்றி, தீர்ப்பாக அளித்தும் விடுவார். இது தான் இஸ்லாமின் செயல் முறை. இதைத்தான் ஒரு அறிஞர் அழகாக, “இஸ்லாம் ஒரு ஒற்றையடிப்பாதை ”என்றார்.\n7வது நூற்றாண்டில் நாடோடியாக வாழ்ந்து, எழுத்தறிவில்லாத முகம்மது (குரான்: 07.157) என்றவரால், தன்னைச் சேர்ந்த “குரைஷ்” இன படிப்பறிவில்லா அக்கால நாடோடிகளையும் (bedouin), மற்ற எளிதில் நம்பவைக்க, தன் இஸ்லாமிய இயக்கத்திற்கு ஆள்சேர்க்கவும் பல உத்திகளைக் கையாண்டார்.\n[7:157] எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; ……………….\nஅதில் ஒன்று, மனிதத் தலை, குதிரை உடல், பறக்க இரு ராட்சத இறக்கைகளுடன் உள்ள “புர்ராஃக்” (Buraq – human faced, horse bodied with flying wings of a giant eagle) எனும் பறக்கும் வாகனத்தில் உட்காந்து, அல்லாவிடமிருந்து செய்தி கொண்டு செல்லும் பணியாளன் (courier), ‘காப்ரீல்’ வாயிலாக முகம்மதுக்காக, பிரத்யேகமாக அனுப்பப்பட்ட “”வாஹி” எனும் இறைச் செய்தி என சொல்லி, ‘இபின் சாரா’எனும் சீடனைக் கொண்டு எழுதவைத்தைத் தான் ‘குரான்’ எனப் பெயரிட்டு உருவாக்கினார். இஸ்லாமில் உள்ள மாசுகளைப்பற்றி, அப்படியே உள்ளபடி சொல்ல இஸ்லாமிய நூல்களே போதுமானவை. வேறெந்த ஆவணமோ அல்லது மிகைப்படக் கூட்டி எழுதவோ, தேவை இல்லை. ‘’இபின் சாரா’’வும், இப்படி செய்த குரானில் முகம்மது சொல்லச் சொல்ல தான் எழுதிய திரட்டை ஒரு ஆவணமாக ஆக்கி தன்னையும் இந்த கைங்கரியத்தில் ஒரு கருவியாக்கி விட்டதால், மிகவும் மனம் நொந்து மனசாட்சிக்குப் பயந்து, முகம்மதுவை விட்டு கடைசி காலத்தில் ‘மதீனா’விலிருந்து “மெக்கா”வுக்கே ஓடிவிட்டான். இவனையும் முதற்காரியமாக, ஆட்களை ஏவி, கைதியாக்கி, தன் ‘குட்டு வெளிப்படாதிருக்க’, “இபின் சாரா”வைத் தேடி கொன்று விட ஆட்களை முகம்மது அனுப்பினார். ஆனால், முகம்மது சார்ந்த அதே குஃரைஷ் இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஓத்மான், பெருமுயற்சியால், அக்கொடூரச் செயல் நிறுத்தப் பட்டது. (இப்னு இஷாஃக் சிராத் – p.550)\n��ுகம்மதுவின் பழக்க வழக்கங்கள், என சொன்னவைகளை ‘ஹத்தீஸ்கள்’ ஒன்றும் முகம்மது வாழ்ந்தபோது எழுதப்படவில்லை. முகம்மது இறந்து சுமார் 200 வருடங்களுக்கும் மேலாக கர்ணபரம்பரை என அக்கால படிப்பறிவில்லாத நாடோடி மக்கள் (Bedouin) சொன்னதாக சொல்லப்படுகிறது. இவைகளுக்கு “நம்பகமானவைகள்” அதாவது “ஸாஹீஹ்” என்ற பெயரும் சூட்டப் பட்டுள்ளது. இந்நூல்களில் அல்லாவுக்காக, இஸ்லாமை வளர்க்க, பரப்பச் சொன்னவைகளை புனிதமென (தக்கியா), அல்லாவுக்கு உவப்பளிக்கச் செய்யவேண்டியவை, அதாவது “ஹலால்” என பகிரங்கமாக எழுத்தில் எழுதிவைத்து, இஸ்லாமிய ஹரியா சட்டங்களாகி விட்டது. முஸ்லிம்கள் இப்புனித நூல்களின் எழுத்துக்களில் கண்டபடி, இஸ்லாமியத்தையே உலகம் முழுதும் நீக்கமற கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.\nஇஸ்லாமைப்பற்றி யோசிக்க, பேச, எழுத. நல்லானுக்கு என்ன தகுதி இருக்கிறது என எந்த முஸ்லிம் நண்பரும் நினைக்கலாம், கேட்கலாம். ஆமாம் எனக்கும் தகுதி உள்ளது. ஏனெனெல், இஸ்லாமிய ஷரியா, என்னையும் என் பரம்பரையையுமே பாதிக்கவல்லதாயிற்றே எனக்கும் தகுதி உள்ளது. ஏனெனெல், இஸ்லாமிய ஷரியா, என்னையும் என் பரம்பரையையுமே பாதிக்கவல்லதாயிற்றே நான் இவைகளைப்பற்றி யோசிக்காமல், பேசாமல், எழுதாமல் யார் எழுதுவார்கள் நான் இவைகளைப்பற்றி யோசிக்காமல், பேசாமல், எழுதாமல் யார் எழுதுவார்கள் எப்படி எழுதாமல் இருக்க முடியும் எப்படி எழுதாமல் இருக்க முடியும் இது ஒன்றும், ““நரி வலமாகப் போனால் என்ன, இடமாகப் போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி”” என்ற மாதிரி விட்டு விடும் விஷயமல்லவே இது ஒன்றும், ““நரி வலமாகப் போனால் என்ன, இடமாகப் போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி”” என்ற மாதிரி விட்டு விடும் விஷயமல்லவே முஸ்லிமல்லாத பொது மக்கள் விஷயமாயிற்றே முஸ்லிமல்லாத பொது மக்கள் விஷயமாயிற்றே நானும் இவ்வினத்தைச் சேர்ந்தவனாயிற்றே இது போனால் போகிறது, என எப்படி விட்டுவிட முடியும்\nமேலாக, இஸ்லாம் எனும் சொல்லுக்கு அமைதி, சாந்தம் என்ற அறிவிப்பும் சேர்ந்தது. இதைப்பற்றி விளக்கமாக இக்கட்டுரையில் ஆய்வுரை உள்ளது.\nஆனால் குரான் [8:39] இல் கூறியபடி, ””(முஃமின்களே இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் உலக முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவ��்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்””.\nஇந்நூல்களில் உள்ள மற்றவைகளை சற்று உள்நோக்கினால், பொதுவாக அமைதியை போதிக்கும், மதங்களால் எதிர்பார்க்கப்படும் எல்லாவித சமயக் கோட்பாடு கருத்துகளுக்கு நேர் எதிர்மாறாக, பண்பு நலம் மிக்க உலகம் ஒப்பாத பல நடத்தைகளால் நிறந்ததோடு, முன் சொன்னவைகளை மறுத்துப் பின்னர் மாற்றி எழுதப்பட்ட வசனங்கள் ஏராளமாக (inconsistencies & abrogations) உள்ளன. குரானை முகம்மதுவுக்கு அனுப்பிய கடவுள் என்ற “அல்லா”வால் சொல்லப்பட்டதானால், கடவுள்கூட முன் சொன்னவைகளுக்கு புறம்பாக மாற்றி மாற்றி வசனங்களை சொல்ல முடியுமா பின் விளைவுகளைப்பற்றி சிந்திக்க வில்லையா பின் விளைவுகளைப்பற்றி சிந்திக்க வில்லையா இதனால் நமக்குத் தெரியவருவது என்ன இதனால் நமக்குத் தெரியவருவது என்ன …………………… இவைகளை கேலிச்சித்திரங்களாக ஜன நாயக ரீதியில் விமர்சித்து சித்தரித்தால் கூட தவறா\nஇதற்கெல்லாம் சிகரமாக, இந்த இஸ்லாமிய முத்தொகுப்பு நூல்களைத் திருத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியாதது என முஸ்லிம் முல்லாக்கள் மேலும் உறுதிப்படுத்து கிறார்கள். முஸ்லிம்கள் உலகத்தில், முஸ்லிமாக இல்லாதவர்களுக்கு கிஞ்சிதும் இடமில்லை. ஆனால், இவர்களும் முஸ்லிம்களாகி விட்டால், இவர்கள் வரவேற்கப் பட்டு, இஸ்லாமில், உடன் இடமுண்டு.\nஅல்லாவின் சட்ட அமைப்பு, முழு நிறைவானதாகவும், எக்குறைபாடில்லாததாக அவர்கள் கருதுவதால், அச்சட்டங்களுக்கு பதிலாக வேறெந்த சட்டத்தையும் உபயோகப் படுத்த எவரும் நினைத்துப் பார்க்கவும் கூடவே கூடாது. ஆனால், உண்மையில் அல்லாவின் சட்டங்கள் யாவுமே ஒட்டுமொத்தமாக, உலகிலுள்ள மற்ற சமயங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களடங் கியவை. கீழே ஓரிரு உதாரணங்களை சற்று படித்துப் பாருங்கள்\n•\tஒரு நீதி மன்றத்தில் சாட்சியாக பிரமாண வாக்கு மூலம் கொடுக்கும் இடங்களில், ஆண்கள் இருவர் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்ற இடங்களில், ஷரியாபடி, நான்கு பெண்களுடைய வாக்கு மூலம் கட்டாயம் தேவை. அதாவது, ஒரு ஆணின் வாக்குமூலத்தில் ஒரு பெண்ணின் வாக்குமூலம் பாதியாகத்தான் மதிப்பிட முடியும்.\n•\tயூதர்களும், கிருஸ்தவர்களும், இஸ்லாமியர��களுக்கு எந்த நாளிலும் சரி சமானமாக ஆக முடியாது. இந்தப் பட்டியலில் ஷரியாபடி இஸ்லாமில் சேராதவர்கள் (formally), (உலகிலுள்ள மற்ற எல்லோரும்) அடங்கும்.\n•\tமுஸ்லிம்களை மேலாண்மை செய்ய மற்ற எந்த மதத்தவரையும் அனுமதிக்க இயலாது, ஆனால், முஸ்லிம்கள் மற்ற எல்லா மதங்களின் மீது ஆதிக்கம் செலுத்தலாம் இதற்கு உடன் படாவிட்டால், மற்ற மதத்தவர்களை, உலகினின்று நீக்கிவிட வேண்டும். முஸ்லிம்களே இந்நீக்கலைச் செய்தால், ஷரியா சட்டப்படி குற்றமாகாது. இக்குற்றத்திற்கு இவர்களுக்கு தண்டனை கிடையாது. கீழே கொடுத்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு பட்டியலை தக்க மேற்கோள் ஆதாரங்களுடன் உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் : ”ஷரியா”க்கள். முஸ்லிம்கள் இவ்வாறு செய்யவேண்டு மென முகம்மதுவே சொல்லியிருக்கிறார். இவைகளை கடைபிடித்தால் இஸ்லாமிய ‘ஜன்னத்’ – சுவர்க்கம் புக எளிதில் வழி உண்டாகும். கீழே மிகச் சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:\nஉதாரணமாக, volume- தொகுப்பு. 2; Book- புத்தகம். 22; Number-எண் 296 என்றால். தொகுப்புக்கு தொ; புத்தகம் – பு; எண் – எ) எனவே இனி, சொல்வோம். ஹத்தீஸ் புகாரியிலிருந்து மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதால். (Sahih Al-Bukhari) ஹத்தீஸ் புகாரி- என திரும்பத் திரும்ப கூறவில்லை. ஆனால், மற்ற ஹத்திஸ்களிலிருந்து கீழே கொடுத்திருந்தால், அவைகளை அந்தந்த ஹத்தீஸ் பெயர்கள் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.\n•\tமுஸ்லிமான நீயே நாயை ஒரு செல்லப் பிராணியாக வளர்க்காதே கண்டால் கொன்றுவிடு. அப்படி நீயே வளர்த்தால், உனது நற் செயல்களில் ஒவ்வொன்றாக (குரைத்) பிரதி தினமும் அல்லாவால் குறைக்கப்பட்டு விடும். ஆக நாயை உலகிலிருந்து அகற்றிவிடு. புகாரி –தொ: 4; பு.54; எ. 539; 540; 541; புகாரி –தொ: 7; பு:67; எ: 389-391\n•\tதங்கத்தாலோ அல்லது வெள்ளியிலோ, ஆன உயர்ந்த அணிகலங்கள் அல்லது பட்டு நூலால் செய்த ஆடைகள் எதையும் உபயோகிக்காதே — புகாரி தொ.7; பு. 69; 537; [[பிறகு அரேபியா, இந்தியா முழுதும், முஸ்லிம்கள் நிறுவிய கடைகள், ஏன் எங்குமே தங்கம், வெள்ளி, பட்டு நூல் (புடவை முதலிய) கடைகள் இவ்வளவு உள்ளன — புகாரி தொ.7; பு. 69; 537; [[பிறகு அரேபியா, இந்தியா முழுதும், முஸ்லிம்கள் நிறுவிய கடைகள், ஏன் எங்குமே தங்கம், வெள்ளி, பட்டு நூல் (புடவை முதலிய) கடைகள் இவ்வளவு உள்ளன\n•\tசதுரங்கம் எந்நாளிலும் விளையாடாதே\n•\tபெண்கள் தான் கையைத் தட்டலாம். ஆண்கள் ��� சுபா-ன்-அல்லா” என்று தான் சொல்ல வேண்டும். அதாவது ஆண்கள் கை தட்டக் கூடாது. – புகாரி தொ. 2; பு; 22; எ. 296\n•\tநின்றுகொண்டு தண்ணீர் குடிக்காதே முஸ்லிம் – பு:023; எ: 5022\n•\tவாயிலிருந்து துப்பினால், வலதுபக்கமோ அல்லது எதிரில் துப்பாதே அதை இடதுபுறமோ அல்லது உன் பாதங்களிலோ, துப்பிக்கொள். புகாரி – தொ1, பு:8; எ: 404\n•\tதொழுகை செய்யக் குனியும் போது அங்குள்ளவர்களில் எவராவது அபானத்துவார காற்று (Hadath) விட்டால், உடன் தொழுகையை நிறுத்தி விடு: புகாரி – தொ.1; பு. 4; எ. 139\n•\t“”தய்யமும்” – இந்த சடங்கு தண்ணீர் கிடைக்காத இடங்களில் மட்டுமே ‘வசூ’ (wazu) செய்யும் போது, புழுதியில் கையிரண்டையும் இட்டு, அப்புழுதிக் கையினால், முகத்தைத் தடவிக் கொள். புகாரி- தொ.1; பு.7; எ. 335;\n•\tமலங்கழித்தவுடன் உங்கள் உறுப்புகளை ஒற்றைப்படை கற்களால் துடைத்துக் கொள் இரட்டைப்பட கற்களாலல்ல.– புகாரி – தொ.1; பு. 4; எ. 163;\n•\tபேரீச்சம் பழத்தில் புழு, பூச்சி இருந்தால், அதை வீசி எறிந்துவிடாதே வேண்டுமானால் ஒரு தட்டு தட்டிவிட்டு, உண். ஒரு நல்ல பொருளை ஏன் வீணாக்குகிறாய் வேண்டுமானால் ஒரு தட்டு தட்டிவிட்டு, உண். ஒரு நல்ல பொருளை ஏன் வீணாக்குகிறாய்\n•\tநச்சுப் பொருளை உட்கொண்டிருந்தால் அதன் விளைவு முறிந்து அற்றுப்போக அஜ்வா பேரீச்சம்பழம் ஏழு சாப்பிட்டால் போதுமானது: புகாரி – தொ. 7; பு. 071; எ. 664;\nஇஸ்லாமில் இனி மற்றொரு சுவாரசியமான பகுதி:\nஇஸ்லாம் எனும் சொல்: ஒரு அரேபிய மூலச் சொல்லான “ சலாமா” (salaama) என்றால், அமைதி, புனிதம், கீழ்ப்படிதல் ஆகியவைகளின் எனப் பொருள்படும். ஆகவே, “”அஸ் ஸலாம்’ அலை-கும்”” என்றால் “உங்களுக்கு அமைதி இருக்கட்டும் / உண்டாகட்டும்” என, எப்போதும் ஒரு முஸ்லிம் மற்றொருவரை கண்ணுற்று வாழ்த்து சொல்லும் மரபுச் சொல்லாகும். [As-Salaum ‘alai-kum “The peace be on you,” the common salutation amongst Muslims]. இதைப்படிக்குமுன், குரான் வசனம்: 9.05 ஒரு முறை படித்து விடவும்: [9:05] (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் (=முஸ்லிமல்லாதவர்களைக்) கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து ஜகாத்தும் முறைப்படிக் கொடுத்து வருவார் களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப் போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ஒரு குரான் வசனம்:\n) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை (=முஸ்லிம்களை) உறுதிப்படுத்துஙகள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.\nஒருவேளை, இந்த வசனத்தில் உள்ளது உள்ளபடி, காஃபிர்களை கொன்று தீர்த்த பின்னர், பின்னர் ஏற்படும். மயான அமைதியைத் தான் இஸ்லாமியர்கள் ஒரு சாடைக் குறிப்பால், (சமிக்கை ) “”அஸ் ஸலாம்’ அலை-கும்”” என்றால் “உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்” என உபயோகிக்கிறார்களா\nகீழே “ஜிஹாத் – “இஸ்லாமிய இயக்கத் தாக்கியல் = “kinetic Islam” பற்றி குரானிலேயே 164 இடங்களில் தெளிவாக உள்ளன. ‘ஜிஹாத்’ என்றால் அல்லாவுக்காக, இஸ்லாமைப் உலக முழுதும் பரப்ப குரான் [8:39] இல் கூறியபடி,”” (முஃமின்களே இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் உலக முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்””.\nகுரானில் 164 இடங்கள் ஜிஹாதை பற்றி உள்ளன:\nகுறைந்தது, அடிக் கோடிட்ட எண்கள் கொண்ட குரான் வசனங்களை இந்த சங்கிலியில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். ஒரு சில குரான் வசனங்களை அப்படியே மேற்கோள் காட்ட இருக்கிறேன்.\n[2:216] – போர் செய்தல் – அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் – (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.\n[8:38] – நிராகரிப்போருக்கு (நபியே) நீர் கூறும்; இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு ���ெய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)\n[9:29] – வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.\n[9:123] – நம்பிக்கை கொண்டவர்களே உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் – நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறன். என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nமூல நூலிருந்து படிக்க வேண்டுமென்றால்,\nஆங்கிலத்தில் இங்கே: (search இல், எந்த ஹத்தீஸ் தொகுப்புக்காக volume எனவும்; புத்தகத்திற்காக Book எனவும்; எண்ணுக்காக Number எனவும் என கொடுத்துச் சொடுக்கி விட்டால் அந்தந்த ஹத்தீஸும் ஆங்கே தயாராகக் காணக் கிடைக்கும்.\nஇதில் ஹத்தீஸ் சேர்க்கவில்லை. எழுத்தில் இங்கு கொடுத்தும் மாளாது. ஆனால் பொறுக்கி எடுத்த சில ஹத்தீஸ் தலைப்பை தரப்பட்டுள்ளது: இதெலாமே மிக முக்கியமாகக் கருதப்படும், ஸாஹீஹ் (நம்பத்தகுந்த) அல்-புகாரி ஹத்தீஸிலிருந்து கொடுக்கப்பட்டவை:\nதொ. 4, பு. 52, எ. 46: & தொ. 4, பு. 53, எ.53: மற்றொன்று, அதே தொகுப்பைச்சார்ந்த 48 & 50; 42; 63 & 64 யும் பார்த்துக் கொள்ளவும்\nஇஸ்லாமின் பொருள், ‘அமைதி’ என்று அடிக்கடி மக்கள் மத்தியில், விளம்பரத் திற்காகச் சொல்வதிலிருந்து தான் ’இஸ்லாமியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புனித ஏமாற்றலான ’தக்கியா’ ஆரம்பமாகிறதா\nஇதற்காக, இஸ்லாமெனும் மதப் பெயரிலேயே தக்கியா’ எனும் இஸ்லாமிய ‘ஏமாற்றுதல்’ என்பது ஆரம்பித்து விடுகிறது. இதை அறியாத மக்கள், முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத பெரும்பான்மை மக்களை ஏமாற்றி அடி முட்டாள்களாக ஆக்குவதற்கென்றே செப்பப் பட்டும் பசப்பு வாய்வீச்சு. ’அமைதி’ என வெறும் பெயரை பெயரளவில் சூட்டிக்கொண்டு விட்டால் மட்டுமே, இம்மதத்தை அமைதியான சமயம் என ஒப்புக் கொண்டுவிட முடியுமா மேற்கூறிய குரான் வசனங்களால���ம், அவைகளை முஸ்லிம்கள் வாஸ்தவத்தில் நிரூபித்துக் காட்டும் நடைமுறைச் செயல்களாலும், ’இஸ்லாம்’ என்பதற்கு ‘அமைதி’ எனப் பொருள் கூறுவது மலையும் மடுவும் ஒன்றே ஒன்று தான் என சொல்வது போல உள்ளதே மேற்கூறிய குரான் வசனங்களாலும், அவைகளை முஸ்லிம்கள் வாஸ்தவத்தில் நிரூபித்துக் காட்டும் நடைமுறைச் செயல்களாலும், ’இஸ்லாம்’ என்பதற்கு ‘அமைதி’ எனப் பொருள் கூறுவது மலையும் மடுவும் ஒன்றே ஒன்று தான் என சொல்வது போல உள்ளதே இதற்கும் மேலாக,”Salamu alakum” (peace to you)”உனக்கு அமைதி உண்டாகட்டும்” என வாய் குளிர வாழ்த்தி, (நிறைய வெறும் வார்த்தையாகச் சொல்லி), ஒரேகாலத்தில் நீங்கள் பயணம் செய்யும் ரயில் வண்டியிலோ, அல்லது பேருந்திலோ, அல்லது தீபாவளி சந்தையில் பல காஃபிர்கள் குழுமி உள்ள வணிகக் களங்களில் வெடிகுண்டு வைக்கலாமா இதற்கும் மேலாக,”Salamu alakum” (peace to you)”உனக்கு அமைதி உண்டாகட்டும்” என வாய் குளிர வாழ்த்தி, (நிறைய வெறும் வார்த்தையாகச் சொல்லி), ஒரேகாலத்தில் நீங்கள் பயணம் செய்யும் ரயில் வண்டியிலோ, அல்லது பேருந்திலோ, அல்லது தீபாவளி சந்தையில் பல காஃபிர்கள் குழுமி உள்ள வணிகக் களங்களில் வெடிகுண்டு வைக்கலாமா வாய்ச் சொல்லை வாழ்க்கைச் செயலிலும் கடைபிடிக்க வேண்டாமா வாய்ச் சொல்லை வாழ்க்கைச் செயலிலும் கடைபிடிக்க வேண்டாமா\nகீழே இஸ்லாமியர்களால் “ஜிஹாத்” என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட அனேக நிழற்படங்களைப் பார்த்துக்கொள்ளவும்: முதலில் இந்தியாவில், பின் வெளி நாடுகளில் நடந்தவைகளைப் பார்க்கவும்.\nவெளுத்ததெல்லாம் பால் அல்ல’ என்பதற்கு,”Salamu alakum” என்பதும் மற்றொரு உதாரணமா இனி “சலாமு அலேகும்” என எந்த முஸ்லிம் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தால், — இவைகளை ஞாபகப்படுத்திக்கொள்ளவும்.\nகல்லால் அடித்துத் தண்டனை உயிருடன் புதைத்தல்\nஇஸ்லாமிய புனித நூல்களில் உள்ளது உள்ளபடியே தான் இன்றும் முஸ்லிம்களும் தங்கள் அரசியல் நடவடிக்கைகளில், நடத்திக்கொள்கிறார்கள். அதேசமயம், இஸ்லாம், எனும் சொல்லுக்குத் தக்கவாறு அமைதி விரும்பும் இயக்கமாக (விளம்பரத்திற்காகவும்) சித்தரிப்பதுண்டு இந்த படங்கள் தான் இஸ்லாம் என்றால் அமைதி என பொருளை காஃபிர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் இந்த படங்கள் தான் இஸ்லாம் என்றால் அமைதி என பொருளை காஃபிர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்\nஇக்கருத்தை முற்றிலும் ஐயமற அறிந்து கொள்ள “திம்மி” என்ற சொல்லின் கருத்தையும், திம்மிகளுடைய சமுதாயப் படி நிலையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇஸ்லாமியத்தில் “திம்மி”கள் எனும் பெயர் யூதர்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும், இஸ்லாமிய ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத வேற்று மதத்தவர் எவராக இருப்பினும் அவர்களுகே பிரத்யேகமாக படைத்துருவாக்கப் பட்டது, அவ்வாறே திம்மிகளை முஸ்லிம்கள் விளிக்கவும் செய்கிறார்கள். இவர்களையே, வேறொரு இடத்தில், ‘காஃபிர்’ எனவும் சொல்வார்கள். காஃபிர் எனும் சொல், முஸ்லிமல்லாத எல்லா மக்களையும் தான் குறிக்கும்.\nகுரான் சுரா [9:29]இல் உள்ளபடி, “”குரான் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் (முகம்மது) ஹராம் (விலக்கக் கூடியது) ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை (இஸ்லாமை) ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (காஃபிர்கள்) கையால் கீழ்ப்படிதலுடன் ‘ஜிஸ்யா’ (என்னும் சுங்கவரிக் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்””. [இதையும் தவிர, தனியாக ‘கரஜ் எனும் சொத்து வரியும் உண்டு].\nஅதாவது, மற்ற மதத்தவர்களுக்கு மூன்று விருப்பத் தேர்வைச் (option) செய்யலாம்:\n•\tமுஸ்லிம்களாக மாற்ற வேண்டும் அல்லது பல காரணங்களால், மாற்ற முடியாத இடங்களில், அவர்களிடம்,\n•\t“ஜசியா” என்னும் பிரத்யேக சுங்கவரியாக (பாதுகாப்பு வரியென) வசூலிக்கப்பட வேண்டும். மேற்கூறிய இரண்டில் ஒன்றுக்கும் ஒப்பாவிட்டால்\n•\tகாஃபிர்களை உலகினின்று நீக்கிவிட வேண்டும்\nகுரான்: [9:39] – “”நீங்கள் (அவ்வாறு ஜிஹாதுக்கு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது – அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்””.\n‘திம்மி’ களுக்கு கீழ்க்காணும் மற்ற கட்டுப்பாடுகளும் உண்டு “”.\n•\tஇதுவரை முஸ்லிம்கள் எங்கெங்கு ஆட்சி செலுத்தினார்களோ ஆங்கே திம்மிகள் ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதே வழக்கத்தில் இருந்தது.\n•\tநீதி மன்றங்களில் ‘திம���மி’கள் வாக்கு மூலம் ஏற்றுக் கொள்ளப் படாது.\n•\t‘திம்மி’ கள் பரம்பரை உரிமை எனும் “கொடுக்கல், வாங்கல்”களில் முஸ்லிம்களிடம் ஈடுபடக் கூடாது அஃதே போன்று முஸ்லிம்களும் ‘திம்மி’களிடம் “கொடுக்கல், வாங்கல்”களில் ஈடுபடக் கூடாது.\nநாட்டு சட்டங்களும், நிலைமையும் இவ்வாறு இருப்பதால், இஸ்லாமிய ஆட்சியாளர்களும், மற்ற முஸ்லிம் குடிமக்களும் முஸ்லிமல்லாதவர்களுக்கு எல்லாவிதத்திலும் ஊறு விளைவிக்க ஏற்ற இடமளித்தது. உண்மையில் எப்போதுமே முஸ்லிம்கள் எல்லா ஹிந்துக்களுக்கும் இத்தூண்டுதலால் இந்தியாவெங்கும் முகலாயர்கள், தீங்கு விளைவித்துக் கொண்டிருந்தனர். இப்படியே, இந்தியாவிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக ஆகிவிட்டால், நாளை இம்மாதிரி ஒரு சூழ் நிலை இந்தியாவெங்கும் உருவாகலாம்.\nபொதுவாகவே, திம்மிகள் பரம்பரை உரிமை எனும் கொடுக்கல், வாங்கல்களில் முஸ்லிம்களிடம் ஈடுபடக் கூடாது அஃதே போன்று முஸ்லிம்களும் ‘திம்மி’களிடமிருந்து ஈடுபடக் கூடாது என இருந்தால், எகிப்தில் ஒரு இஸ்லாமிய ஷரியா நீதிமன்ற தீர்ப்பாணையால் (பஃத்வா) இவ்வாறு ஒரு முஸ்லிம் மனைவிக்கு சாதகமாகவே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது: (Ref:- (Fatawa shar`iyya 2:233ம்-234ம்)–இத் தீர்ப்பு எகிப்திய முல்லா முகம்மது ஹசன்யான் முக்லுஃப்- http://www.muslimpersonallaw.co.za/inheritancedocs/Non%20Muslim%20Childrens%20Inheritance.pdf ) இந்த தீர்ப்பாணையின் (பஃத்வா) உள்ளடக்கம் இவ்வாறு இருந்தது.\n“”ஒரு கிருஸ்தவ ஆண் மற்றொரு கிருஸ்தப் பெண்ணை மணந்தான். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. பிறகு அக்கிருஸ்தவ ஆண், அடுத்து முஸ்லிமாக மதம் மாற்றிக் கொண்டு, மற்றொரு முஸ்லிம் நங்கையை மணந்தான். அவனும் கிருஸ்தவ மனைவியை மணவிலக்கு செய்யவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பின் இறந்தான். இருப்பினும் அவன் முந்தைய கிருஸ்தவ மனைவியை மணவிலக்கு செய்யாததால், இவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் கிருஸ்தவராகவே நிலைத்து இருந்தனர். தீர்ப்புக்காக: கிருஸ்தவக் குழந்தைகளுக்கும் இறந்தவர் சொத்து பரம்பரை உரிமையாகுமா”” இது ஷரியா நீதிமன்றத்தில் வழக்காடப் பட்டது.\nதீர்ப்பு: “”””இஸ்லாமிய மரபுரிமையாக முஸ்லிமாக இறந்தவன் சொத்து முழுதும், முஸ்லிம் மனைவிக்கே கொடுத்திட வேண்டும். ஷரியா சட்டப்படி, ஒரு முஸ்லிமின் சொத்து, முஸ்லிமல்லாதவர்களுக்கு வாரிசாகக் கூட அடையமுடியா���ு, ஏனெனில், பழைய மனைவியும் அவள் ஐந்து குழந்தைகளும் முஸ்லிமாக மதம் மாற்றிக்கொள்ளவில்லை. மதங்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தால், இஸ்லாமிய ஷரியா சட்ட ஆய்வுத் துறை இவ்வாறு நிர்ப்பந்திக்கிறது. மேலும் அல்லா எல்லாவற்றையும் மிக நன்கு அறிவார்”””. தீர்ப்பு இவ்வாறு இருந்தது:\nகேள்வி: தந்தையின் சொத்தின் மரபுரிமையாக இவன் பெற்ற ஐந்து திக்கற்ற குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு கொடுக்க ஷரியா சட்டங்கள் ஏன் இடங்கொடுக்கவில்லை இதிலிருந்து தெரிவது: இஸ்லாமிய நாட்டில், இஸ்லாம் ஷரியா மற்ற எல்லா மத மரபுகளுக்கும் அல்லது பொதுவான நியாயங்களுக்கும், நியமங்களுக்கும் எதிரானது. அங்கு ஷரியாவை வலிந்து செயல்படுத்துகிறது. பழைய மதத்தை முஸ்லிமல்லாதவர்கள் இறுக்கப் பிடித்திருந்தால், அவர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தில் இடமில்லை. ஆனால் இஸ்லாமிய சமூகம் ஒரு ஜன நாயக நாட்டில் இருந்தால், இவர்கள் தங்களுக்கும் எல்லா ஜனநாயக உரிமைகளும் இயல்பாகவே உண்டு எனவும், ஆனால், ஷரியா சட்டம் அமலாக்கப்பட வேண்டுமெனவும் ஆர்பரிப்பார்கள். ஒரே முனைப்பாக இவர்களுக்கோர் நீதி மற்றோருக்கு வேறு நீதி என்று பச்சையாக வாதாடிச் செயல்படுவார்கள். இஸ்லாமிய நாடுகளில், எல்லாமே ஜன நாயக சட்டங்களுக்கு எதிரானது. மேலும் மற்ற மதத்தவர்களை அவமதிப்பதாகும்.\nஇதனால், ‘திம்மி’க்களும் தங்கள் மத சடங்குகளை முஸ்லிம்களுக்குத் தெளிவாகத் தெரிகிறவாறு நிறைவேறிக் கொள்வதில்லை. இதனால், இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் அல்லாத மக்கள் தங்கள் மதங்களைப் பற்றி வன்முறைகளுக்கு எவரிடமும் பேச அஞ்சுவார்கள். இதன் விளைவு, எந்த ஹிந்து வீடுகளிலும், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் பூஜை மணியோசை கேட்பதில்லை; அதேசமயம் ஜன நாயக நாட்டில் மாத்திரம், இஸ்லாமியர்கள் தொழும் மசூதிகளில், இவர்கள் ஓதும் ‘ஆதான்’ அழைப்புக்கு, வானம் முட்டுமளவுக்கு ஒலிபெருக்கி மூலம் விசித்திரக் குரலில் ஓதுவார்கள். ஜன நாயக நாடுகளில் இவர்களுக்கு எல்லா உரிமை களும் உண்டு, ஆனால், தங்கள் இஸ்லாமிய நாடுகளில், மனித நேய அடிப்படையில் மிகச் சாதாரணமான உரிமைகூட கிடையாது. ஏன் இந்த இன்னல்கள் எனக் கேட்டால், உடன் கழுத்து “ஹலால்” முறையில் பையப்பைய (மெல்ல) அறுக்கப் பட்டு விடும். [[“ஜட்கா” முறை ‘ஹராம்” இது இஸ்லாமால் ஏற்கப்படாதது. இது ஒரு வெட்டு துண்டு இரண்டு என்ற முறை]] இது இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் இன்றைய யதார்த்தம். கிருஸ்தவ மதத்திலும் இஸ்லாமுக்கு இணையாக பல இடையூறுகள் மற்றோருக்கும் உண்டு. கிருஸ்தவர், கிருஸ்தரில்லா தவர்களிடம் தங்கள் மத தகவல்களைப் பற்றியோ அல்லது கிருஸ்தவ சரித்திரத்தைப் பற்றியோ பகிர்ந்து கொள்வது, இவர்களுக்குள்ள சர்ச் முறைகளுக்கு மாறானது. கிருஸ்தவர்கள் மற்ற மதத்தவர்களை மத மாற்றம் செய்ய விழைவார்கள், ஆனால், இவர்களிடத்தில் இந்த சௌகரியங்களை மற்ற மதத்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. கிருஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் இவ்விஷயத்தில் சளைத்தவர்களல்ல.\nமுஸ்லிம் அரசாட்சி சரித்திரத்தில், தொடக்கத்திலிருந்து முடிவு வரை, நடைபெற்ற உண்மை நடைமுறைகள்:\n•\tமுஸ்லிமல்லாதவர்கள் மத அடையாளங்களான ஹிந்துக்களுக்கு -ஸ்வஸ்திக், ஓம், சுதர்சன சக்ரம்; கிருஸ்தவர்களுக்கு சிலுவை, முதலிய சின்னங்களை எவ்விதத்திலும் காட்சிக்குரியதாக தங்கள் கட்டங்களிலோ, அல்லது உடுக்கும் உடுப்பிலோ, கழுத்தில் ஒரு சங்கிலி எனவோ வெளியில் காண்பித்துக்கொள்ள தடையுத்தரவு அதிகார பூர்வமாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற மதத்தவர் தங்கள் மதச் சின்னங்களை உள் உடுப்புக்கு அடியில் மறைத்துக் கொள்வார்கள். குறிப்பாக, ‘திம்மி’கள் பகிரங்கமாக, அவர்களுக்கே உரிய தனி வித மஞ்சள் நிற உடுப்பைத் தான் உடுத்த வேண்டும், அதன் மேல் ‘சுனார்” (zunar=wide belt) எனும் அகல (பட்டையான) இடுப்புக் கச்சை அணிய வேண்டும். இப்படி தனிப்பட்டவர்களுக்கே உரிய சீருடை நிறத்தால், இவர்கள் “திம்மிகள்” என காட்டிவிடும். ஆக இச்சீருடையைக் கண்டவுடன், முஸ்லிம்களுடைய நடத்தையில் விசேஷ வேறுபாடு தன்னாலேயே வெளிப்பட்டு விடும்.\n•\tமுதலில், திம்மிகளுடைய மதத் தலைவர் கூட, முஸ்லிம் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின் தான், சீடர்களுக்கு தங்கள் மதத் தலைவர் யார் யார் என தெரிந்துகொள்ள இயலும். ‘திம்மி’கள் மதத் தலைவர்களே முடிவு செய்து கொள்ளும் உரிமைகூட அவர்களுக்குக் கிடையாது. காரணம், மதத்தலைவர்கள் தங்கள் சீடர்களைக் கொண்டு முஸ்லிம் அரசியலுக்கு எதிராக நிலையில்லாமையை உருவாக்கத் தூண்டி விட்டு விடுவார்களோ என உள்ளூர பயம்\n•\tமுஸ்லிமல்லாதவர்கள் தங்கள் மத சம்பந்த இலக்கிய நூல்களை வெளியிடவோ, அல்லது ���ிற்கவோ தடை செய்யப்பட்டிருந்தது. இதனால்தான், சில இடங்களில், பலகாலம் மிகுந்த பிரயாசை யுடன் சேர்த்து வைத்திருந்த நூலகங்கள் முஸ்லிம்களால் தீக்கிறையாக்கப் பட்டன. அடுத்து,\n•\tகுரானில் உள்ளவைகளை திம்மிகள் எவரும் படிக்கவும் கூடாது, முதலில் திம்மிகள் முஸ்லிம் களாகிவிட வேண்டும். பின் குரானைப் படிக்கலாம். ஏனெனில், இந்நாளில், வெவ்வேறு இணைய தளங்கள் உதவி கொண்டு, (இதில் முஸ்லிம் இணைய தளங்கள் உள்பட) எத்தனையோ திம்மிகள் (காஃபிர்கள்) படித்துத் தெளிந்து இஸ்லாமில் குற்றங்களைக் கண்டு பல கட்டுரைகளை எழுதித் தள்ளுவது போல, ஆகிவிடக் கூடாதென எதிர்பார்த்து, தடையுத்தரவு பிறப்பித்திருந்தனர். இன்று இஸ்லாமிய அரசாங்கங்களே, இஸ்லாமிய கருத்துக்கு உடன்படாத பல இணைய தளங்களை மேயக் (browse) கூடாதென அந்நேரத்தில் தடையுத்தரவு உண்டு. இத் தடையுத்தரவு பாகிஸ்தானில், ஈரானில், இன்னும் பல முஸ்லிம் நாடுகளிலும் அமலில் உள்ளது. இன்னொரு சுமை திம்மிகள் தலையில் சுமத்தப்படும்,\n•\tஜசியா எனும் திம்மிகளுக்கென்றே பிரத்யேகமாக விதிக்கப்படும் தனி நபர் சுங்கவரி (அதாவது இஸ்லாமிய ஆட்சியில் காபிஃர்களாக உயிருடன் வாழ அனுமதி வரி) விதிக்கப்படும். அடுத்து,\n•\t‘கர்ஜ்’ எனும் காபிஃர்கள் சொத்துமீது வரியும் கூடுதலாக வசூலிக்கப்படும்.\nஇவ்வாறு வரி வசூலிப்பு / சுமை, என திம்மிகளுக்கு மிக இன்னல் உண்டாக்கி, வேறு வழியில்லாமல், இஸ்லாமை ஒப்புக்கொள்ள வைத்தது. இதைத் தான் முஸ்லிம்களுக்கும் விரும்பினர். மேற்கூறிய நிர்பந்தங்களை முஸ்லிம்கள் ஏறபடுத்தியதற்குக் காரணமே, திம்மிகளை திம்மிகளாக தொடர்ந்து வாழ விடாமல், எடுத்த எடுப்பில் கொலையில் இறங்கி இதனால், பெரும்பான்மையுள்ள திம்மிகள் உள்ள நாட்டில், ஒருவேளை, இஸ்லாமியர் ஆட்சிக்கெதிராக பெருந்திரளில், வன்முறையால் ஆட்சியைக் கைப்பற்றிக் கவிழ்க்க கிளர்ச்சியில் ஈடுபடாமல் இருக்க இவ்வரிச் சங்கடங்களைக் கொடுத்து மெதுவாக, திம்மிகள் முஸ்லிம்களாக தாங்களாகவே மாற்றிக் கொள்ளும் வரை தொடர்ந்து மறைமுகமாக மானசீகத் தாக்குதல்களாக இன்னல்களை அளித்து வந்தனர். இப்படி முஸ்லிமாக மாறிய ஹிந்துக்களின் சந்ததியர் தான் இன்றும் மிக அதிகமாக இந்தியாவில் இருக்கிறார்கள். ஒரு தடவை முஸ்லிமாக மதம் மாறிவிட்டால், மீண்டும் தன் தாய் மதத்திற்குச் செல்ல முடியாது. அவர்கள் “அபோஸ்டேட்’ (apostate) என கருதப்பட்டு இஸ்லாமிய துரோகிகளென உடனுக்குடன் கொலை செய்யப்படுவார்கள். ஏனெனில், குரான் வசனம்: [3:85]: “”இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து (அல்லாவிடமிருந்து) ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ (த்தகைய) வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பர்””.\nஒரு தடவை முஸ்லிமாக மாறிவிட்டால், அவர்கள் உளநிலையே சுத்தமாக மொத்தத்தில் மாறிவிடுகிறது. இதற்கு அனேக உதாரணங்களை அளிக்கலாம். ‘தக்கியா’ உதவி கொண்டு காந்தாரப் பேரரசர்களான, ஷாஹியாக்கள் (இன்றைய ஆஃப்கானிஸ்தான் = பழைய காந்தாரம்) ஒருவர் பின் ஒருவராக இஸ்லாமியரால் வீழ்த்தப்பட்டனர். அச்சமயத்தில் ஷாஹியாக்களுக்கு பேருதவி செய்த ‘கௌரி’ எனப்படும் ஹிந்து காந்தார வீரர்கள், தலைவர்கள் அற்றுப் போய், காட்டுக்குள் ஓடி மறைந்தனர். பின்னர் மலைப்பிரதேசங்களில் மாடு மேய்த்துப் பிழைத்துக் வந்தனர். போகப் போக இவர்களும் ஓரிரு தலை முறைகளுக்குப் பின்னர், இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு, தங்கள் குடும்பப் பெயரையும் ‘‘கௌரி’யிலிருந்து ‘கோரி”என மாற்றிக்கொண்டு, இந்தியாவில் வன்முறையில் படையெடுப்புகளில் இறங்கினர். அக்காலத்தில் இந்தியாவிலுள்ள பழைய ஹிந்துக்கள் அன்று முஸ்லிம்களாக மதம் (எப்படியோ) மாறியதால், இன்று இவர்கள் மரபினர் நடத்தை எவ்வாறு மாறி உள்ளது என ஒப்பீடு செய்து பாருங்கள், நன்கு புரியும். (“கௌ” என்றால் சமஸ்கிருதத்தில் பசு எனப் பொருள்)\n[[[பின்னர் ப்ருதிராஜ் சௌஹான் காலத்திலும் அதே நேர்ந்தது. ராஜஸ்தானில், பலர் இன்று தீவிர முஸ்லிம்களாக இருப்பவர்களுடைய முன்னோர்கள் ஹிந்துக்களாக இருந்து முஸ்லிமாக கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவர்கள் தான். ஆனால் இம்முஸ்லிம்கள் இன்று படு பயங்கர தீவிரவாதிகள்]]].\nஎந்த நீதி மன்றத்திலும், ஷரியா சட்டங்கள் அமலில் இருக்கும் போது, ஆங்கே ஒரு முஸ்லிமுக்கும் ஒரு திம்மிக்கும் இடையே வழக்கு ஏதாவதொரு தீர்ப்புக்கு வருமானால், திம்மியின் சாட்சியங்களைவிட முஸ்லிம் சாட்சி வாக்கு மூலத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படும். ஹனாஃபி சட்ட நிபுணர்கள் கூட ஷரியா சட்டப்பிரகாரம், விளக்கும் போது திம்மிகள் வாக்கு மூலமோ அல்லது சத்தியப் பிரமாணமோ முஸ்ல���ம்களுக்கெதிராக சரியென சட்டப்படி நிரூபிக்க முடியாதது அல்லது திம்மிகள் வாக்கு மூலம் வழுவற்றது என எடுத்துக் கொள்வதில்லை. திம்மிகளை ஒரு உளதாம் பொருளெனக் கூட (entity) எண்ணிக் கூடப் பார்ப்பதில்லை. அவர்களை மிக ஈனப்பிறவிகளாகவே முஸ்லிம்கள் கணிப்பார்கள். இதற்கு நேர் மாறாக, முஸ்லிம்கள் நீதி மன்றத்தில் திம்மிக்கெதிராக சான்றளிக்க முடியும். இந்த சட்டத் தகுதி இன்மை திம்மிகளை மிக இக்கட்டான சமுதாயப் படி நிலையில் வைத்துவிட்டது; ஏனெனில், திம்மிகள் தங்களை சட்ட ரீதியில் முஸ்லிம்களிடமிருந்து, அவர்கள் சாட்டும் அநியாய குற்றச்சாட்டுகளுக் கெதிராக தற்காத்துக் கொள்ள முடிவதில்லை. இந்நிலை மேன்மேலும் இரு சமூகத்தினிடையே எப்போதுமே சண்டை சச்சரவு, மனஸ்தாபம் ஆகியவைகளில் ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. திம்மிகளுக்கு தங்களை தற்காத்துக்கொள்ளக் கூட முடியவில்லை என்றால் எங்ஙனம் எதிர்கொள்வது எப்படி இருப்பினும் பலவீனமுள்ள திம்மிகள் தான் முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்துவிடும். இல்லாவிடில், திம்மிகள் நிலை இன்னமும் மிக மோசமாகிவிடும்.\nதிம்மிகள் குதிரையிலோ அல்லது ஒட்டகத்திலோ ஏறி சவாரி செய்யக் கூடாது; ஆனால், ஒரு அவமதிப்பாக, கழுதைகள் மீதேறி, சவாரி செய்யலாம் என காலிப் ஓமர் காலத்திலிருந்து ஒரு சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதை, 18வது நூற்றாண்டில் தமன்ஹூரி எனும் அல்-அசர் கலாசாலை முதல்வர், இஸ்லாமிய சட்ட நிபுணர்களுடைய ஏகோபித்த ஷரியா தீர்ப்புகளின் முடிவுச் சுருக்கத்தை: “”திம்மிகள் குதிரையிலோ அல்லது ஒட்டகத்திலோ ஏறி சவாரி செய்யக் கூடாது; ஆனால், ஒரு அவமதிப்பாக, கழுதைகள் மீதேறி, பெண்கள் குதிரையில் ஒருபக்கத்தில் இரு கால்களையும் தொங்கப் போட்டுக்கொண்டு சவாரி செய்வது போல சவாரி செய்யலாம்”” என இவ்வாறு வழிமொழிந்தார்“. இன்னும் இரண்டு நிபந்தனைகள்: முதலில், முஸ்லிம்கள் கூடவே இணையாக (astride) திம்மிகள் கழுதையிலும் சவாரி செய்யக் கூடாது; இரண்டாவதாக நகர்புறத்தில் (cities) கழுதையிலும் கூட சவாரி செய்யவே கூடாது; எங்கும் வெற்றுக் காலுடன்தான் நடந்தே செல்ல வேண்டும். காலுக்கு செருப்பு அணியக் கூடாது. இந்த வழக்கம், ‘’பிரமிட்’’ (Pyramid) கட்டும் நாளில் பழக்கத்தில் அடிமைகளுக்காக இவ்வழக்கம் அமலில் இருந்தது. ஒரு முஸ்லிம்கள் நாட்டில், இதற்கு அப்புறம் மற்ற மத ஆலயங்களுக்கு ஒப்புதல் எப்படிக் கிடைக்கும் இங்கு சகிப்புத்தன்மை எங்கு போயிற்று இங்கு சகிப்புத்தன்மை எங்கு போயிற்று எங்கு மரியாதை விடை பெற்றுக்கொண்டது எங்கு மரியாதை விடை பெற்றுக்கொண்டது இவ்விரண்டைப் பற்றியும் முஸ்லிம்களைக் கேட்டால், ஒவ்வொரு திம்மிக்கும், வெவ்வேறு பதில்களை சமயோசிதம்போல ‘தக்கியா’செய்வது, (பொய்சொல்லி) மழுப்புவது வழக்கம்.\nஇதைத்தான் இன்றைய எகிப்திய கிருஸ்தவர்களுக்கு இஸ்லாமிய முல்லாக்கள் செய்கிறார்கள். இவைகளை எதிர்த்துத் தான் எகிப்தில் தற்போது உள் நாட்டுப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ‘கிருஸ்தவ சர்ச்’சுக்களில், (Churches) அல்-குஃவைதா (al-Qaeda) எனும் பயங்கர வன்முறைக் கும்பல், தற்கொலை-வெடிகுண்டுகளால் (suicide bombers) தாக்கி அனேக கிருஸ்தவர்களை சர்ச்சிலேயே கொன்று தீர்த்தார்கள். உதாரணமாக,\nஇனி அங்கு, அடுத்து வரும் ஆட்சி, ஜன நாயக அரசாங்கமாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் எதையும் ஒரு முடிவாக, இன்றைய சூழ்நிலையில் சொல்வதற்கில்லை. இங்கு இப்போது நடக்கும் பொங்குக் கிளர்ச்சிகள் 1978-’79 இல் ஈரானில், “பஹல்வி” அரசாட்சிக்கெதிரான எழுச்சியை நினைவுப் படுத்துகிறது. இதேபோல, ஈரானில் நடந்து முடிந்த மூன்று நாட்களுக்குள், ‘டுனீசியா’விலும் கிளச்சி உண்டாகி, அந்நாட்டிலும் இஸ்லாமியரே ஆட்சிக்கு வந்தனர். எகிப்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் உள் நாட்டுப் போராட்ட முடிவு முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்தும் விட்டால், மத்திய, மேற்காசிய நாடுகளில் உள்ள அரசியல் ஸ்திரத்துவ-அமைதி இயல்பை இன்னும் கெடுக்கும். இஸ்லாமியர் அல்லாத மற்ற வகுப்பினர் கூறுவதெல்லாம், அவர்கள் தாய் மததை விட்டுவிடச் கட்டாயப்படுத்திச் சொல்லும் போதுதான் இஸ்லாமிய வன்முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார்கள். (“faith is not by force, we want to remain Christians and very simply, we do not wish to become Muslims at all. That’s all”என்கிறார்கள்). ஆனால், இன்று இஸ்லாமியரல்லாத நாடுகளில் இருக்கும் முஸ்லிம்களால், ஷரியா சட்டங்களை அமலுக்குக் கொண்டுவர வேண்டுமென பேரிரிரைச்சல், புகார், விடப்பிடியாக கட்டாயப் படுத்துவதென்பது, அதே குழப்பத்தைத்தை எங்கும் விளைவிக்கும். எந்த மானிடருக்கும் எதையும், எதிலும் கட்டாயப் படுத்துவது பிடிப்பதில்லை. இது குழப்பத்தில் விளைகிறது. ஆக, குழப்பங்களுக் கெல்லாம் ஷரியா சட்டங்களே அடிப்படை காரணம். இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் எங்கெங்கு உள்ளதோ, ஆங்கே, குழப்பம், சச்சரவு, சண்டை, போர், பயங்கர வன்முறை இருந்தாக வேண்டும் என தலைவிதியாகி விட்டது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம், இஸ்லாமியத்தை கட்டாயப் படுத்தும் நிலைப்பாடே தான். மற்றொரு உதாரணம்,\n1947 இல், 27% விழுக்காடு இருந்த ஹிந்து ஜனத்தொகை, இன்று 1%க்கும் கீழ் பாகிஸ்தானில் வந்துள்ளது. காரணம், ஷரியா சட்டங்களினால் நிகழும் நிர்பந்தம். அனேகர், இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர், பலர் கொல்லப்பட்டனர், பலர் முஸ்லிம்களாயினர், மிஞ்சியவர்களும் மிகுந்த இன்னலுக்கிடையில் ஒரு ஜட-வாழ்வு வாழ்கிறார்கள். 27%லிருந்து 1% என கீழ்வரும் போது, படிப்பவர்கள் என்னென்ன அங்கே நடந்திருக்குமென நன்றாக ஊகித்துக் கொள்ள இயலும்.\nகீழ்கூறியவைகள், கற்பனையானாலும் இன்னும் சிலருக்கு (வெளி நாட்டில் வசித்தவர்களுக்கு மாகச் சேர்த்து தான்) சில நேரங்களில் நேரில் அனுபவித்த பட்டறிவுகூட இருக்கலாம்: அல்லது ஒரு வாதத்திற்காக உண்மை என வைத்துக் கொள்வோம்.\n•\tநீங்கள் வசிக்கும் நாட்டில் இஸ்லாமிய ஷரியா சட்டகளே அமலில் உள்ளது என்ற நிலையும்; பக்கத்திலுள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் ஸ்தூபியிலிருந்து (மசூதி மனோராவிலிருந்து) தினமும் ஐந்து கால தொழுகைக்கு முஸ்லிம்களை அழைக்கும் குரல் கேட்கும் இடத்திற்கு அருகில் உங்கள் குடியிறுப்பு அமைந்து இருப்பது போலவும்;\n•\tதமிழ் மலராக ஒரு தினசரி, தங்கள் பத்திரிக்கையில் ஒரு நாளில், முஸ்லிம்கள் நடத்தியதை நடந்தவாறே எழுதிவிட்டு, அதற்காக, முஸ்லிம்கள் அந்த தினசரி அலுவலகத்தில் ஜபர்தஸ்தியில் நுழைந்து, அங்கிருக்கும், சிப்பந்திகளை அடித்துத் துன்புறுத்தி, மேலும் அங்கிருக்கும், தட்டுமுட்டு சாமாங்கள், கணினிகள், தொலை பேசிகளைத் துவசம் செய்து, அப்பத்திரிக்கை ஆசிரியரை பயமுறுத்தி, அவரிடன் மன்னிப்புக்கடிதத்தை அடைந்த கூச்சல், அருகிலிருக்கும் உங்கள் வீட்டுவரை எட்டுவது போலவும், அல்லது\n•\tநாட்டில், பெண்களைக் கல்லால் அடித்தே கொன்றுவிடல், அல்லது முஸ்லிமாக இருப்பவர், இஸ்லாமை விட்டு விட்டால், அதற்குத்தக்க ‘ஹலால்’ முறையில் தண்டனை வழங்கப்படும் இடம், உங்கள் வீட்டுக்கு அருகாமையில் அமைந்துவிட்டதெனவும் ;\n•\tமேலும், தப்பித் தவறி, உங்களைச் சேர்ந்த ஒருவர் யதார்த்தமாக ஏதாவது சொல்லப் போக, அதற்கு அல்லாவின் மீது தெய்வ நிந்தனை என முஸ்லிம்களால் அர்த்தம் கறிபிக்கப்பட்டு (BLASPHEMY) அதற்கேற்ற தண்டனை வழங்கப்படும் இடமும் உங்கள் இடத்திற்கு அருகாமையில் அமிந்துவிட்டது போலவும்;\n•\tஇதனால், ஏற்பட்ட மனக்குழப்பத்தால், உங்கள் உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாக வீக்கம், இழமை போன்றவைகளை ஏற்படுத்தும் சுற்றுப்புற சூழ் நிலை (Allergic environment);\n•\tஇஸ்லாமுக்கு முன் தோன்றிய மதத்தைச் சேர்ந்தவராக நீங்கள் இருப்பதால் மட்டுமே, உங்கள் கூட வசிக்கும் முஸ்லிம்கள் எவ்வித சகிப்புத்தன்மையும் இன்றி, அடிக்கடி உங்களைத் தொந்திரவு செய்தலும்;\n•\tதற்கொலைப் படையினர் அடிக்கடி அனேக நிரபராதிகளான மக்களை வெடிகுண்டு வைத்துத் தீர்த்துக் கட்டும் நாட்டில் நீங்களும் வசிப்பது போலவும்\n•\tமற்ற மதத்தவர் தினம் தொழுகை நடக்கும் இருந்த அதே இடத்தில், மசூதி கட்டும் நிகழ்ச்சிகள் நடக்கும் உங்கள் நாடு எனவும்;\n•\tஉங்கள் நாட்டில் பெண்டிரை ஒரு நிலச் சொத்தென, ஆண்களால் நடைமுறையில் நடத்தும் முறை உள்ளது எனவும்;\n•\tஉங்கள் நாட்டில், முஸ்லிம் பெண், வேற்று மத ஆணை மணந்தால், அவளை ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி தந்தை வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்கள் குடும்ப மானம் காக்க இந்த முஸ்லிம் பெண்ணை வெட்டிக் கொலை செய்தலும்; (Honour Killing for dishonouring the family);\n•\tஒசாமா பின் லேடனின் மிக நெருங்கிய சகா, அய்மான்-அல்-ஸவஹிரி சொன்னதை அடிக்கடி ஒலிபரப்பி, அதாவது: “”அமெரிக்கர்களுடன் சம நிலையை நாம் அடைந்தவர் களாக நம்மை ஆக்கிக் கொள்ளக் கூட நமக்கு விரும்பவில்லை, அல்லது அமெரிக்கர்களை நமக்கு சமமாக ஆக்கிவிடவும் நமக்கு விருப்ப மில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் எல்லா விஷயங்களிலும் முஸ்லிம் அல்லாதவர்களைக் காட்டிலும் மிக உயர்ந்தவர்கள். அகில உலகமே அல்லாவைச் சேர்ந்தது. இவ்வுலகம், சுவர்க்கம் ஆகியவைகளுக்கு அல்லாவே முழு சொந்தக்காரர். முஸ்லிம்களும் அல்லாவுக்கே சொந்தம். ஆகவே அமெரிக்காவிலுள்ள முஸ்லிமல்லாத மக்களை நிரந்தரமாக நீக்கிவிட முஸ்லிம்களுக்குக் கடமையாகிறது. ஆக, இவைகளைச் செய்ய முஸ்லிம்களுக்கு சகல உரிமையுண்டு; ஆங்கே பாதிபேர் பெண்டிர், குழந்தை களானாலும் சரி, முஸ்லிம்களாகிய நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. அப்படி எங்கள் செய்கை அமெரிக்கர்களுக்குப் பிடிக்க வில்லை யானால், அமெரிக்க நாட்டை விட்டே எங்காவது குடி பெயர்ந்து ஓடி ஒழியட்டுமே; அவர்களுடன் கூட நொண்டி முடமானவர்களையும் கூடவே அழைத்துச் செல்லட்டும்”” இதற்கும் மேலாக“” முஸ்லிமலாத தேசங்களில், உயிர்-நூலைச்சார்ந்த (biological) கொல்லும் ரசாயன (anthrax) ஆயுதங்களையும் (weapons), உபயோகித்து அவர்களுக்கு என்றென்றும் வேதனையை விளைவிக்கும் கோளாறு, அல்லது கொடிய நோயால் அவஸ்தைப்படுதல் (splenic fever) அல்லது மரணம் உண்டாக்கும் ஆயுதத்தால் எங்கள் இஷ்டப்படி நாங்கள் தாக்குவோம்””; ஜாக்கிரதை; அவர்களுடன் கூட நொண்டி முடமானவர்களையும் கூடவே அழைத்துச் செல்லட்டும்”” இதற்கும் மேலாக“” முஸ்லிமலாத தேசங்களில், உயிர்-நூலைச்சார்ந்த (biological) கொல்லும் ரசாயன (anthrax) ஆயுதங்களையும் (weapons), உபயோகித்து அவர்களுக்கு என்றென்றும் வேதனையை விளைவிக்கும் கோளாறு, அல்லது கொடிய நோயால் அவஸ்தைப்படுதல் (splenic fever) அல்லது மரணம் உண்டாக்கும் ஆயுதத்தால் எங்கள் இஷ்டப்படி நாங்கள் தாக்குவோம்””; ஜாக்கிரதை என அறிவிக்கும் தொ(ல்)லைக்காட்சியைக் காணும் பேறு ( என அறிவிக்கும் தொ(ல்)லைக்காட்சியைக் காணும் பேறு (\nமேற்கூறியவாறு நடக்கும் ஒரு நாட்டில் நீங்களும் வசிக்கிறீர்கள் என சற்று கற்பனை செய்து பாருங்கள். எப்படி இருக்கிறது. மேலே கொடுத்தவயனைத்தும் சில சாம்பிள் தான். இதற்கு மேல், பயங்கர வருணனை செய்ய இங்கு விரும்பவில்லை.\nமேற்கூறிய விவரங்கள் ஏதும் அறியாமல். திராவிடக் கழகங்களும், முஸ்லிம்களுடன் சேர்ந்து கூட்டிசைக்கிறார்கள். வருங்காலத்தில் இதே, கழகக் கண்மணிகளுக்கு இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டி வரும். இல்லாவிடில் அவர்களது கொலையில் தான் வந்து நிகழ்ந்துவிடும். அப்போது தெரியும், முஸ்லிம்களின் இயல்பான பண்பாடு. (Then it will be too late)\n•\tகழக ரத்தத்தின் ரத்தங்களும், முஸ்லிம்களாக ஆகி தைரியமாக ‘இஃப்தார்’ கஞ்சிக் குடிக்கலாம்.\n•\tகாஃபிர் /திம்மி என கருதப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பகுத்தறிவுக்கு உதை பட்டால் தன்னால் தெரியும்; புரியும். கூடிய சீக்கிரம் அக்காலமும் வரும். கழக ஆண்களுக்கு சுன்னத்தும், அவர்கள் தம் பெண்டிருக்கு ஹுஃபாத் அல்லது மக்ருமாஹ் செய்தால் அப்போது புரியும். இது நான் சொல்லவில்லை. சரித்திரம் பேசுகிறது. தான் ஏறிவந்த ஏணியை உதைத்துவிட்டு தான் இஸ்லாம் எ���்போதும் நிலை நாட்டிக் கொள்ள விரும்பும். இதன் இயல்பு தெரிந்தோ அல்லது தெரியாமலோ கழகங்கள், வருங்கால எதிரியுடன் ஒரே படுக்கையில் புரள்கின்றன. (presently Bedding with future enemy unknowingly). பார்க்கலாம்\nமேலும் முகம்மது நாட்களில் உண்மையில் நடந்த சில சரித்திர நிகழ்ச்சிகள் அடுத்த பகுதியில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இஸ்லாமியத்துக்கும், மற்ற மதங்களுக்கும் இருந்த உறவு எத்தகையது எனத் தெரியும்.\nஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)\nமகாகவி பாரதி விரும்பிய பாரதம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76\n2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் (கவிதை -32 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -2)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33\n‘இவர்களது எழுத்துமுறை’ – 35 எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)\nவிஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்\nசூர்ப்பனகை என்றும் தவறானவள் தானா \nதாகூர் இலக்கிய விருது பெறும் எஸ் ராமகிருஷ்ணன்\nநியூஜெர்ஸி சிறுவ சிறுமியர்களுக்கு சமஸ்கிருத கேம்ப் பாணினி\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7\nபுத்தகம் பேசுது‍ மாத இதழ்\nமதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது\nதமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்\nதிருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை வேண்டுகோள்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -8\nPrevious:2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)\nஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)\nமகாகவி பாரதி விரும்பிய பாரதம்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76\n2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் (கவிதை -32 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -2)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33\n‘இவர்களது எழுத்துமுறை’ – 35 எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)\nவிஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங��கள்\nசூர்ப்பனகை என்றும் தவறானவள் தானா \nதாகூர் இலக்கிய விருது பெறும் எஸ் ராமகிருஷ்ணன்\nநியூஜெர்ஸி சிறுவ சிறுமியர்களுக்கு சமஸ்கிருத கேம்ப் பாணினி\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7\nபுத்தகம் பேசுது‍ மாத இதழ்\nமதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது\nதமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்\nதிருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை வேண்டுகோள்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -8\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmeds.com/category/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-02T09:39:58Z", "digest": "sha1:5GLGFJIFGJ2SCAEU7CLKHFG7MY7KF6ZA", "length": 2707, "nlines": 18, "source_domain": "tamilmeds.com", "title": "இரத்தம் | தமிழ் மருந்துகள்", "raw_content": "\nஇரத்தம் சுத்தமாக எளிய வீட்டு வைத்திய முறைகள்\nஇரத்தம் என்பது அனைத்து உயிரினங்களின் உடலிலும் உள்ள சிவப்பு நிற திரவம் ஆகும். இரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அத்யாவசிய பொருளான ஆச்சிஜெனையும்[…]\nஉடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடைய வீட்டு மருந்துகள்\nஉடல் கொழுப்பு கரைய எளிய இயற்கையான வீட்டு மருந்துகள்\nபல் வலி உடனே போக இயற்கையான வீட்டு மருத்துவ முறைகள்\nபொடுகுத் தொல்லை நீங்க எளிய இயற்கையான வீட்டு மருந்துகள்\nபேன் தொல்லை நீங்க இயற்கையான தமிழ் மருத்துவ முறைகள்\nஅரிசி ஆப்பிள் இஞ்சி உடல் உப்பு உலர் திராட்சை எண்ணெய் எலுமிச்சை கடுக்காய் கருவேப்பிலை கறிவேப்பிலை கற்றாளை கிராம்பு கொத்தமல்லி சருமம் சர்க்கரை சீரகம் சுக்கு சுண்ணாம்பு சோம்பு தக்காளி தண்ணீர் தயிர் துளசி தூதுவளை தேங்காய் எண்ணெய் தேன் தோல் நல்லெண்ணெய் நெல்லிக்காய் பசலைக் கீரை பாகற்காய் பால் புதினா பூண்டு மஞ்சள் மிளகு வயிறு வாழைப்பழம் வெங்காயம் வெண்ணெய் வெந்தயம் வெற்றிலை வெள்ளரிக்காய் வேப்பிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/life-style/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2021-08-02T08:07:44Z", "digest": "sha1:DAP4WDFEMV6TD4ZJYV5ZMDQJ6BXY6CNO", "length": 17915, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "ஸ்டீல் க்ளாவிலிருந்து 'இரும்புகாய் மாயாவி' வரை - ரீலில் மலையாள காமிக்ஸின் வரலாறு - ToTamil.com", "raw_content": "\nஸ்டீல் க்ளாவிலிருந்து ‘இரும்புகாய் மாயாவி’ வரை – ரீலில் மலையாள காமிக்ஸின் வரலாறு\n1970 களின் காமிக் புத்தக ஹீரோ – இன்ஸ்பெக்டர் பிரகாஷை ஊக்கப்படுத்திய ஓய்வுபெற்ற காவலரான அப்துல் ஹமீத், திரைப்படத் தயாரிப்பாளர் டோனி டேவிஸ் மற்றும் எம்.பி.எஸ் மாணவர் ஸ்ரீராம் கே.வி ஆகியோருடன் பேசினார், அவர்களின் எட்டு பகுதி மலையாள ஆவணத் தொடர்களுக்காக காத வரா கதகல்.\nபிற ஆதாரங்களில் கேரளாவிலும் பிற இடங்களிலும் உள்ள காமிக் சேகரிப்பாளர்கள், வெளியீட்டை நிறுத்திய காமிக் புத்தகங்களின் ஒற்றை பிரதிகள், மறைந்துபோன நினைவுகளைக் கொண்ட படைப்பாளிகள், சமூக ஊடகங்கள் மற்றும் வெளியீட்டாளர்களில் காமிக் ஆர்வலர்களின் சமூகங்கள். இந்தத் தொடர் 1970 களில் இருந்து மலையாள காமிக்ஸ் மற்றும் காமிக் புத்தகங்களின் வரலாற்றைக் காட்டுகிறது. இப்போது, ​​அவற்றில் இரண்டு அத்தியாயங்கள் ஏற்கனவே YouTube இல் உள்ளன.\nடோனி மற்றும் ஸ்ரீராம் இந்த திட்டத்தை தலைப்பில் ஒரு காப்பகமாகவும் திறந்த தகவல்களாகவும் பார்க்கிறார்கள், இது பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாத மற்றும் சிதறடிக்கப்பட்டதாகும். அவர்கள் எப்படி புள்ளிகளில் சேர்ந்தார்கள், மலையாள காமிக்ஸ் வரலாற்றில் நிரப்பப்பட்ட இடைவெளிகள் மற்றும் அந்தக் காலத்தின் பாப் கலாச்சாரத்தைப் பற்றிய நுண்ணறிவைத் தரும் ஒருங்கிணைந்த தகவல்கள் ஆகியவற்றை இந்த கதை பின்வருமாறு கூறுகிறது.\nஇடமிருந்து டோனி டேவிஸ் நகைச்சுவை ஆர்வலர் ராஜேஷ் ஜி நாயர், நாராயண் ராதாகிருஷ்ணன், ஸ்ரீராம் கன்னடி விஸ்வநாதன் மற்றும் அவரது மனைவியுடன்\n“இந்த வேலைக்கான அனைத்து வரவுகளையும் நாங்கள் கோர முடியாது. சரியான திசையில் எங்களை வழிநடத்திய காமிக் கலெக்டர் நாராயண் ராதாகிருஷ்ணனிடமிருந்து எங்களுக்கு உள்ளீடுகள் உள்ளன, ”என்று கொச்சியில் கேரளாவின் முதல் காமிக் புத்தக நூலகத்தை அமைத்த டோனி கூறுகிறார். பெங்களூரில் சந்திப்பு கலெக்டர் அருண் பிரசாத், காமிக் கான் (2016) நிகழ்ச்சியில் கலந்து ���ொள்ள நகரத்தில் இருந்தபோது, ​​தலைப்பில் அவரது ஆர்வத்தைத் தூண்டினார்.\nஅதற்கும் நூலகத்திற்கும் இடையில், ஒரு ஆவணப்படத்தின் யோசனை வேரூன்றியது. பார்ப்பது செல்லுலாய்ட் நாயகன் (படம், காப்பகவாதியும், தேசிய திரைப்பட காப்பகங்களின் நிறுவனருமான பி.கே.நாயரை அடிப்படையாகக் கொண்ட சிவேந்திர சிங் துங்கர்பூர் எழுதிய படம்) சேகரிப்பு மற்றும் பாதுகாத்தல் குறித்த தனது முன்னோக்கை மாற்றி, அவரது தீர்மானத்தை பலப்படுத்தியது ..\nதிருவனந்தபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனை சந்தித்து மேலும் அறிய சி.ஐ.டி மூசா, 1970 களின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட ஒரு காமிக் புத்தகம், அவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. சி.ஐ.டி மூசா பிரபலமான மலையாள படத்தின் பெயரும் கூட, அசல் ‘சிஐடி மூசா’ (ஆன்லைன்) பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. முதல் கட்டமாக ராதாகிருஷ்ணனுடன் ஐந்து மணிநேர நீண்ட கலந்துரையாடல் இருந்தது, இது அவர்களுக்கு மலையாள காமிக்ஸின் வரலாறு குறித்த மகத்தான தகவல்களை அளித்தது.\nதகவல்களைத் தேடுவது அவர்களை கேரளா முழுவதும் சேகரிப்பாளர்களுக்கு அழைத்துச் சென்றது – திருவனந்தபுரம் முதல் இரின்ஜலகுடா (வினீத் ஆபிரகாம்) முதல் காலிகட் (அரூன் கலந்தி) வரை. “துரதிர்ஷ்டவசமாக, அசல் உள்ளடக்க படைப்பாளர்களில் சிலர் உயிருடன் இல்லை, இன்னும் உயிருடன் இருப்பவர்களுக்கு நினைவாற்றல் தோல்வியுற்றது” என்று டோனி கூறுகிறார். அவர்களின் தேடலின் முக்கிய புள்ளிகளில் மாயாவி என்ற சின்னமான கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் மோகன்தாஸ் மற்றும் டிங்கனின் படைப்பாளரான பேபி ஆகியோரைச் சந்திப்பதும் அடங்கும்.\nபடப்பிடிப்பு ஜூலை 2019 இல் தொடங்கியது, 2020 மார்ச் மாதத்தில் பூட்டுதல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், அவர்கள் பெரும்பாலான ஆதாரங்களுடன் நேர்காணல்களை முடித்திருந்தனர். நேரம் கிடைத்தவுடன், டோனி காட்சிகள் வழியாக சென்று ஒவ்வொரு அத்தியாயத்தையும் திருத்தும் வேலைக்கு இறங்கினார். “இந்த விஷயத்தில் நாம் ஆழமாக தோண்டினோம், மேலும் தகவல்களை நாங்கள் கண்டோம். நாங்கள் மற்றொரு பருவத்தைத் திட்டமிடுகிறோம், ”என்று அவர் கூறுகிறார். முன்னதாக, மறைந்த இயக்குனர் ராஜேஷ் பிள்ளை போன்ற படங்களுக்கு அவர் உதவி செய்திருந்தார் மிலி மற்றும் இந்தி ரீமேக் போக்குவரத்து.\nமலை��ாள காமிக் கீற்றுகள் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தாலும், காமிக் புத்தகங்கள் இல்லை.\nமலையாள ‘சூப்பர் ஹீரோ’வுடன் முதல் அதிரடி அடிப்படையிலான மலையாள காமிக்ஸில் ஒன்று சி.ஐ.டி மூசா எழுதியவர் கன்னடி விஸ்வநாதன், ஒரு தையல்காரர், அவருக்கு பெருமை விமானம் 731 மற்றும் இரும்புகாய் மாயாவி. ராதாகிருஷ்ணன் முன்னதாக பாலக்காட்டில் விஸ்வநாதனைக் கண்காணித்திருந்தார், அதை அறிந்து கொண்டார் விமானம் 731 (முதலில் ஒரு பார்ராகுடா சாதனை) மற்றும் இரும்புகாய் மாயாவி தமிழில் இருந்து மொழிபெயர்ப்புகள். இன் ஆங்கில அசல் இரும்புகாய் மாயாவி அழைக்க பட்டது எஃகு நகம்.\nஅதுவரை மலையாள காமிக்ஸின் தொனி இலகுவாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது போபனம் மோலியம் மற்றும் பச்சுவம்-கோவளனம். சி.ஐ.டி மூசா ஒருவேளை முதல் ‘அதிரடி’ காமிக். ராதாகிருஷ்ணனின் உள்ளீடுகள் காமிக்ஸ் பற்றிய நுண்ணறிவு மற்றும் அவற்றையும் அவற்றின் படைப்பாளர்களையும் கண்காணிக்கும் அனுபவத்தையும் வழங்குகிறது.\nஇந்த ஆவணப்படம் அற்பமானவை: மலையாளத்தில் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட முதல் காமிக் சி.ஐ.டி நசீர் (முந்தைய சூப்பர் ஸ்டார், பிரேம் நசீர் அடிப்படையில்). ஒரு கூட இருந்தது சி.ஐ.டி ரேகா காமிக் புத்தகம், ஒரு குற்றத்தைத் தூண்டும் பெண் முன்னணி கதாபாத்திரமாக.\nஆவணத் தொடர் பாலக்காட்டில் அன்ஜெனேரியன் விஸ்வநாதனுடன் தொடங்குகிறது, மேலும் சமகால படைப்பாளர்களான கோகாச்சி (டினா மற்றும் பிரதீக் தாமஸ்), அப்புபென் மற்றும் ஜோஷி பெனடிக்ட் ஆகியோருடன் இது மூடப்படும். பிந்தைய அத்தியாயங்கள் மலையாள காமிக் புத்தகங்களை – சூப்பர் ஹீரோ காமிக்ஸ் மூலம் வரைபடமாக்குகின்றன பாண்டம் மற்றும் மாண்ட்ரேக், அசல் காமிக் புத்தகங்கள், டாம்ஸ் போன்ற சின்னமான (கீற்றுகள்) போபனம்-மோலியம், G Aravindan’s வாலியா லோகம்வம் செரியா மனுஷ்யரம், 1990 கள் மற்றும் 2000 களின் பிரபலமான குழந்தைகள் இதழ்கள் மற்றும் காமிக் புத்தகங்களை சேகரிப்பவர்கள்.\nஷூஸ்டரிங் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தத் தொடருக்கு டோனி மற்றும் ஸ்ரீராம் முழு நிதியுதவி அளித்துள்ளனர். சில நேர்காணல்கள் அவர்களின் யூடியூப் சேனலிலும் வெளியிடப்படும். அவர்களிடம் ஏராளமான தகவல்கள் இருப்பதால், பின்னர் சில நேர்காணல்களை அவர்களின் யூடியூப் சேன���ில் முழுமையாக வெளியிடுவதே திட்டம். “எபிசோடுகள் சரியான நேரத்தில் வந்து இந்த பருவத்தை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதே முயற்சி” என்று டோனி மேலும் கூறுகிறார்.\nFitnessLife & Styleஇரமபகயகமகஸனகளவலரநதமயவமலயளமோட்டார் ஓட்டுதல்ரலலவரவரலறஸடல\nPrevious Post:ஃபயர்வால்கள், வி.பி.என். சில பழைய மேக்புக் ப்ரோ மாதிரிகள் செங்கற்கள்: அறிக்கைகள்\nNext Post:ஜோகோவிச் வழிகள் ஸ்வார்ட்ஸ்மேன் – தி இந்து\nயோகி ஆதித்யநாத் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெறுகிறார்\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி “திடீர்” பாதுகாப்பை மோசமாக்கியதற்காக அமெரிக்கா திரும்பப் பெறுவதாக குற்றம் சாட்டினார்\nமுற்போக்கான ஊதிய மாதிரி நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து 57 துப்புரவு நிறுவனங்கள் நிதி அபராதங்களை வழங்கின\nசீனா டெல்டா வெடிப்புக்கு எதிராக போராடும் போது கோவிட் -19 பூட்டுதலின் கீழ் மில்லியன் கணக்கானவர்கள்\nமலேசிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு அணிவகுத்து, பிரதமர் யாசின் ராஜினாமா கோரி | உலக செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/140160/", "date_download": "2021-08-02T08:50:52Z", "digest": "sha1:GNLE4XVKQSHR3BG6K7VWA5UXY46TDGUS", "length": 5356, "nlines": 74, "source_domain": "www.akuranatoday.com", "title": "ரிஷாத்தை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவைப் பெற நடவடிக்கை - Akurana Today", "raw_content": "\nரிஷாத்தை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவைப் பெற நடவடிக்கை\nகைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான உத்தரவை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,\nஉயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் நேற்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.\nசந்தேக நபர்கள் இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 72 மணிநேர தடுப்புகாவல் உத்தரவின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nஅவர்களை தொடர்ந்தும் 90 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்காக விசாரணை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கமைய உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.\nlunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை\nநிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி\nஓட்டமாவடி மஜ்மா நகரில் அதிக ஜனாஸாக்கள் வேறு இடத்தை பரிந்துரைக்குக.\nமேல் மாகாணத்தில் நாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது.\nகண்டியில், ஜப்பான்- கனடாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி\nஜனாஸா – 7ம் கட்டை ஹில்மி ஹாஜியார்\nமியன்மாரில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 12பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2019/02/tnpsc-current-affairs-quiz-7-February-2019.html", "date_download": "2021-08-02T09:28:51Z", "digest": "sha1:MBEKB7RLTFQJGFH3TQ5SFLHENJDC6F6D", "length": 18858, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz 6-7th February 2019 */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஅத்தியாவசிய மருந்துகளின் விலைகளை கண்காணிக்க \"விலைமதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி அலகை (PMRU)\" உருவாக்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம்\nதமிழ்நாடு வன்னியர் சொத்து வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nசெல்போன் திருட்டு மற்றும் வாகன திருட்டை குறைப்பதற்காக சென்னை போலீசார் அறிமுகப்படுத்தியுள்ள செல்போன் செயலி\nஇந்தியாவின் முதல் (Engineless Train) என்ஜின் இல்லாத ரெயில்\nஅண்மையில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி பெற்றுள்ள இடம்\nமலேசியாவின் 16-வது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்\nஇந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான (Repo rate) குறைக்கபட்டுள்ள வட்டி 6.5 சதவீதம்\nஆடைகள் நுகர்வு குறித்த ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசு துவக்கியுள்ள திட்டம்\nசியாமீஸ் சண்டை மீன்-ஐ (Siamese fighting fish) தேசிய நீர்வாழ் விலங்காக (national aquatic animal) அறிவித்துள்ள நாடு\nமத்திய அரசின் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் (Rashtriya Kamdhenu Aayog) திட்டத்தின் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/41s1w_.html", "date_download": "2021-08-02T10:01:18Z", "digest": "sha1:YBOVRVIJSK3B2AZGAC7XJPS3A57UBRN7", "length": 9926, "nlines": 51, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "க��ரோனா விழிப்புணர்வு, தனிமனித சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nகாரோனா விழிப்புணர்வு, தனிமனித சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகை கழுவுங்கள் வணக்கம் சொல்லுங்கள்.\nகாரோனா விழிப்புணர்வு, தனிமனித சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் தனி மனித சுகாதாரத்திற்கும் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தியது. நூலகர் தேவகி தலைமை வகித்தார்.\nவழக்கறிஞர் சித்ரா முன்னிலை வகித்தார். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,\nகரோனா வைரஸ் பற்றிய தகவல், உரிய மருத்துவ சிகிச்சை ஆகிய தொடர்பான செய்திகளை அரசு ஊடகம் மற்றும் பிற செய்தி ஊடகங்கள் வழியே தெரிந்துகொள்ளுங்கள்.\nசுகாதாரத் துறை கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்பவேண்டாம். இருமல் ,தும்மல், சளி, வறண்ட தொண்டை காய்ச்சல் போன்றவை தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.\nசமச்சீரான சத்தான உணவு, பாதுகாப்பான குடிநீர் எடுத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தும்மலின் போது மூக்கு, வாயை துணியால் மூடிக் கொள்வது அவசியமாகும். கைகழுவுதலும் மிக அவசியமான ஒன்றாகும்.\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை அவசியம் கழுவ வேண்டும்.\nவீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இருக்கும்பட்சத்தில், அதைத் தொட்ட பிறகு கைகளை கழுவ வேண்டும்.\nவீட்டிலுள்ள பெரியவர்கள் சிறு குழந்தைகளைத் தொடுவதற்கு முன்பு கை கழுவ வேண்டும்.\nஒவ்வொரு முறை கழிப்பறை சென்று வந்ததும் கை கழுவ வேண்டும்.\nஇருமல், சளி பிடித்திருந்தால் வீட்டில் உள்ள பொருளையோ, மற்றவர்களையோ தொடும் முன், தொட்ட பிறகு கை கழுவுதல் அவசியம்.\nகைகளை குறைந்தது 40 விநாடிகளிலிருந்து ஒரு நிமிடம் வரை கை கழுவ வேண்டும்.\nகுழாய்த் தண்ணீரில் ���ைகளை நீட்டிக் கழுவ வேண்டும். அல்லது ஆன்டி செப்டிக் லிக்வைட் சோப்பைப் பயன்படுத்தலாம்.\nஇரு உள்ளங்கைகளையும் நன்றாகத் தேய்க்க வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும்.\nவிரல்களை மடக்கி, இடது உள்ளங்கையின் மேல் வலது கை விரல்களை வைத்து அடிப்புறத்தில் தேய்க்க வேண்டும். அதேபோல வலது உள்ளங்கையின் மேல் இடது கை விரல்களை மடக்கி வைத்து அடிப்புறத்தில் தேய்க்க வேண்டும்.\nஇடதுகை கட்டை விரல் நுனியை, வலது உள்ளங்கையால் பிடித்து சுழற்றித் தேய்க்கவும். அதேபோல வலது கை கட்டை விரல் நுனியை, இடது உள்ளங்கையால் பிடித்து சுழற்றித் தேய்க்க வேண்டும்.\nவலது உள்ளங்கையால் இடது புறங்கையைத் தேய்க்கவும்; அதேபோல இடது உள்ளங்கையால் வலது புறங்கையைத் தேய்க்க வேண்டும்.\nஇரு உள்ளங்கைகளையும் சேர்த்து, விரல்களைக் கோர்த்து, விரல் இடுக்குகளைத் தேய்க்க வேண்டும்.\nவலது கை விரல்களால் இடது உள்ளங்கையிலும், இடது கை விரல்களால் வலது உள்ளங்கையிலும் சுழற்றிச் சுழற்றித் தேய்க்க வேண்டும்.\nஇதனால் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். நண்பர்களிடையே கைகொடுப்பதற்கு பதிலாக வணக்கம் சொல்லலாம் என்றார்.\nகிளை நூலக அலுவலர், வாசகர் வட்ட தலைவர், வாசகர்கள் அனைவரும் கைகழுவி, வணக்கம் தெரிவித்து தனிமனித சுகாதாரத்தை பேணி காக்க உறுதி மேற்கொண்டனர்.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/category/news/", "date_download": "2021-08-02T09:13:05Z", "digest": "sha1:3AN6R552EMP6FTUDUW26E7ND76OQ5KOM", "length": 7667, "nlines": 58, "source_domain": "eettv.com", "title": "News – EET TV", "raw_content": "\nஒன்ராறியோவில் புதிதாக 218 பேருக்கு COVID-19 தொற்று, 2 பேர் உயிரிழப்பு\nஒன்ராறியோ மீண்டும் 200-க்கும் மேற்பட்ட புதிய கோவிட் -19 வழக்க���களைப் பதிவு செய்து வருகிறது, ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் நாவலால் 218 புதிய நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இரண்டு...\n இரண்டு வயதான தமிழ் சிறுவன் பலி\nஸ்கார்பரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வயதான தமிழ் சிறுவன் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்க்கம்...\nதீவிரமாக பரவும் டெல்டா வைரஸ் – இலங்கையர்களுக்கு 3 தடுப்பூசிகள்\nதற்போது வேகமாக பரவும் டெல்டா வைரஸ் தொற்று வைத்தியர்கள் உட்பட சுகாதார துறையினரையும் தாக்குவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மூன்றாவது கொவிட்...\nரிஷாட்டின் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பெண்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய மற்றுமொரு பணிப்பெண்ணையும்,ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. ரிஷாட்டின் இல்லத்தில் பணியாளராக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி...\nபுதிய அரசியல் மாற்றம் அவசியம்\nஅதிகாரத்தில் உள்ள ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் முழுமையாக தோல்வி கண்டுள்ள நிலையில் பெரும்பான்மைவாதமற்ற மூவினங்களையும் ஒன்றிணைத்து இலங்கையர்களாக நாட்டை மீட்டெடுப்பதற்கான புதிய அரசியல் மாற்றம் அவசியம் என முன்னாள்...\nதுருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்\nதுருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 864 பேர் காயமடைந்து உள்ளனர். துருக்கியில் மத்திய தரைக்கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் கடந்த வாரம்...\nஇந்தோனேசியாவில் புதிதாக 30,738 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,604 பேர் பலி\nஇந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.89 கோடியை...\nஇமாசல பிரதேசம் – கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி\nஇமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்துள்ளதாக அம்மாந���ல அரசு தெரிவித்துள்ளது. இமாசல பிரதேசத்தில் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் கனமழை...\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nதேர்தல் அறிக்கையில் கூறியவாறு ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க திமுக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். ஈழச்சொந்தங்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக்கூறி, அவர்களுக்கு குடியுரிமை...\nபிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு, 37,582 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nபிரேசிலில் கொரோனா பாதிப்புகளால் ஒரே நாளில் 910 பேர் உயிரிழந்து உள்ளனர். தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் அதிபர் பொல்சனாரோ ஆட்சி செய்து வருகிறார். அந்நாட்டில் கொரோனா பாதிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=20310021", "date_download": "2021-08-02T09:18:57Z", "digest": "sha1:QSPRHW3TNAMZFPMRTYGTQEA2JTPMDVQC", "length": 43674, "nlines": 146, "source_domain": "old.thinnai.com", "title": "கடிதங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nஇந்த வாரத் திண்ணை தாமதமாக வெளிவருகிறது. தவிர்க்கமுடியாத தொழில்நுட்பப்பிரச்னைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டதனை தெரிவித்துக்கொள்கிறோம். அக்டோபர் 3 வரை திண்ணைகுழு பெற்ற படைப்புக்களே இங்கு வெளியாகின்றன. வரும் வார திண்ணை இதழ் வெள்ளியன்று வெளியாகும்\nஞாநியின் ‘பாய்ஸ் ‘ பற்றிய கட்டுரையை விமர்சித்து பெங்களூர் வாசகர் எழுதிய கடிதம் கண்டேன். ‘ஒரு பெண்ணைப்பார்த்து ‘உங்கள் மார்பகங்களை திண்மையாக்க என்ன செய்கிறீர்கள் ‘ என ஒரு ஆண் நேரிடையாகத்தானே கேட்கிறார். இதைவிட என்ன நேர்மையை ஞாநி எதிர்பார்க்கிறார் ‘ என ஒரு ஆண் நேரிடையாகத்தானே கேட்கிறார். இதைவிட என்ன நேர்மையை ஞாநி எதிர்பார்க்கிறார் ‘ எனக் கேட்பது சிறுபிள்ளைத்தனமான வாதம். நேர்மை என்பதன் முழு அர்த்தத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது கட்டுகிறது. நேரிடையாக கேட்பது மட்டுமே நேர்மையல்ல. புதுமணத் தம்பதியரிடம் போய் முதலிரவில் என்ன செய்தீர்கள் எனக் கேட்டுவிட்டு, நேரிடையாகத்தானே கேட்டேன். என்ன ஒரு நேர்மை என்று கூறமுடியாது. ‘இங்கிதம் ‘ என்பதாகத் தமிழில் ஒரு அருமையான வார்த்தையுள்ளது ‘ எனக் கேட்பது சிறுபிள்ளைத்தனமான வாதம். நேர்மை என்பதன் முழு அர்த்தத்தை அவர் புரிந்துகொ���்ளவில்லை என்பதையே அது கட்டுகிறது. நேரிடையாக கேட்பது மட்டுமே நேர்மையல்ல. புதுமணத் தம்பதியரிடம் போய் முதலிரவில் என்ன செய்தீர்கள் எனக் கேட்டுவிட்டு, நேரிடையாகத்தானே கேட்டேன். என்ன ஒரு நேர்மை என்று கூறமுடியாது. ‘இங்கிதம் ‘ என்பதாகத் தமிழில் ஒரு அருமையான வார்த்தையுள்ளது ஒரு கொலைக்குற்றவாளி ‘நான் கொலை செய்துவிட்டேன். ‘ என்று கூறினால் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டான் என்று தான் கூறுவார்களேயொழிய, அவன் நேர்மையாக நடந்து கொண்டான் என்று கூறமாட்டார்கள்\nஉண்மையோடு அறம் சேர்ந்தால் தான் அது நேர்மை. (எதிலும் அறத்தைக் கலப்பது பண்டைய தமிழர்களின் குணம்.). அறம் ஒழுக்கத்தோடு இருந்தால்தான் அதற்கே மதிப்பு. ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் ‘ என்று ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்திருக்கிறார் திருவள்ளுவர். ஒழுக்கத்தோடு இயைந்தால்தான் உண்மை, நேர்மை அனைத்திற்கும் மதிப்பே. ஒழுக்கத்தை புறக்கணிக்கும் உண்மைகளும் நேர்மைகளும் குப்பைகளே.\nஒழுக்கக்குறைவான படங்களும் – யார் எடுத்திருந்தாலும், யார் வசனம் எழுதியிருந்தாலும் – குப்பைகளே. ஒழுக்கக்குறைவான, இங்கிதமற்ற நாவல்களும், எழுத்துக்களும் – யார் எழுதியிருந்தாலும் – குப்பைகளே. ஒழுக்கக்குறைவாக நடப்பவர்களும் – யாராக இருந்தாலும் – மதிப்பற்ற குப்பைக்கு சமமே.\nஉங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அன்பும் அருளும் பொழியட்டும்.\nநான் திண்ணையை நேசித்து வாசிக்கும் (மலேசியாவிலிருந்து) வாசகன் .\nமாற்றுகருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதாக கூறிஆரம்பத்தில் ‘இஸ்லாமிய எதிர்ப்பு ‘ செய்திகளை, கட்டுரைகளை அடிக்கடி தாங்கி வந்த திண்ணையில் தோற்றம் தற்போது\n‘நடுநிலைமை ‘க்கு மாறியிருப்பது என் போன்ற வாசகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.\nதிண்ணையில் வெளியிடப்படும் கதைகள், இலக்கிய கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மிகவும் கருத்துள்ளதாக வாசிப்பவரை சிந்திக்கவைப்பதாக தோன்றுகிறது.\nஇரா.முருகன் மற்றிம் ஜெயமோகனின் எழுத்துக்கள் மீது என்னை மோகம் கொள்ளச் செய்தது திண்ணைதான். இன்னும் எழுத தோன்றுகிறது ஆனால் நேரமில்லை..முடிவாக..ஒவ்வொரு தடவையும் ‘திண்ணையை ‘ விட்டு வெளிவரும்போது புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டோம் என்ற உணர்வுடன் வருகிறேன்..திண்ணையின் பணி தொடர, வளர ஏக இ���ைவனை பிரார்த்திக்கிறேன்.\nஆபிதீன் எழுதிய சிறுகதை சென்ற இதழில் சிறப்பாக இருந்தது. அ.முத்துலிங்கத்தில் கட்டுரையும் சுவாரஸியமான வாசிப்பனுபவத்தை அளித்தது. பொதுவாக நம் இதழ்களில் குறைவாகவே நல்ல வாசிப்பனுபவம் அளிக்கும் கதைகள் கிடைக்கின்றன. ஆபிதீனின் கதையில் பல இடங்கள் நுட்ப்மான அங்கதங்கள் உள்ளன. காசர்கோட்டில் இஸ்லாமிய நண்பர்களுடன் நெருங்கி பழகிய காலத்தில் அறிந்த நல்ல அரபு சொற்களை இவரது எழுத்தில் அங்கதமாகவும் நுட்பமான மாறுதல்களுடனும் காணமுடிகிறது. [ஏறத்தாழ இதேபோன்ற சுவாரஸியமான ஒரு கதையை சமீபத்தைய /காலம்/ இதழில் மணிவேலுப்பிள்ளை எழுதியிருந்தார்] பாராட்டுக்கள்\nஅரசூர்வம்சம் அழகான அங்கதத்துடன் உள்ளது. [25 நண்பர்களுக்கு அதைபடிக்கும்படி எழுதினேன். பத்துபேர் பிரிண்ட் எடுத்து அனுப்பு என்று எனக்கே செலவு வைக்க முயன்றார்கள்]. ஆனால் முருகன் எவ்வளவு முயன்றாலும் சரித்திரம் எழுதப்படுவதில் உள்ள உண்மையான அபத்தத்தை தன் புனைவால் எட்ட முடியாது . ஓர் உதாரணம் . தர்மபுரிமாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின்பேர் ‘டெங்கனிக்கோட்டா ‘ .தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ள மிகவும் பிற்பட்ட பகுதி இது. டெங்கனிக்கோட்டா என்றால் தெலுங்கின் ஒரு கிளைமொழியில் தெற்குக் கோட்டை என்று பெயர். அதை இருபது வருடம் முன்பு தூய தமிழில் ‘தேன் கனி கோட்டை ‘ என்று மாற்றினார்கள். பிறகு எப்படியோ அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனியுடன் சேர்த்து தானமாக கொடுத்த ஊர் அது , ஆகவேதான் அப்பெயர் என்று ஒரு கூற்று ஆரம்பித்தது. அங்கே அவ்வையார்பெயரில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை. தர்மபுரிதான் அதியமான் ஆண்ட தகடூர் என்று ஒரு நம்பிக்கை ஏற்கனவே உண்டு .. ஆகவே அதையே தகடூர் என்கிறார்கள். அங்கே நெல்லிக்கனி சம்பந்தமான ஏகப்பட்ட அரசு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதற்கும் ஆதாரம் கிடையாது. ‘அதுமன்கோட்டை ‘ என்ற புராதன ஊரும் நடுவே சென்ராயபெருமாள் கோவிலும் உள்ளது. ஊர் 10 ஆம் நூற்றாண்டைத் தாண்டியது. அதை முப்பதுவருடம் முன்பு ‘அதியமான் கோட்டை ‘ என்று பெயர் மாற்றி ஒட்டுமொத்த தர்மபுரியையே தகடூர் ஆக மாற்றிவிட்டார்கள். இப்படித்தான் நமது ‘வம்ச ‘ கதைகள் எழுதப்படுகின்றன. முருகன் கதை எழுதுவதை விட இதே அரசூர்வம்சகதையை வரலாற்றாய்வா க மேலும் சி ல கல���வெட்டு ஆய்வுகளுடம் இருபதுவருடம் செய்தால் இதுவும் நம் வரலாறாகிவிடும்.\nதிரைப்படங்கள் மக்களை நல்லவர்களாக்குவதில்லை. இது போலவே இவை எவரையும் கெடுப்பதுமில்லை.\nஒரு திரைப்படத்தால் அழிந்து போகக்கூடிய அளவுக்கு ஓரினத்தின் பண்பாடு (ஓரினத்துக்கென்று ஒரு தனிப்பண்பாடு இல்லை என்பது என் எண்ணம்) அவ்வளவு உறுதியற்றதாக இருந்தால் அப்படிப்பட்ட பண்பாடு வாழ்வதை விட அழிவது மேல்.\nதங்களுக்குப் பிடிக்காத திரைப்படத்துக்குத் தணிக்கை கோருபவர்களுக்கும் தலிபான்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை.\nகுறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்னும் எச்சரிக்கை (A படம் என்றிருந்தது போல) தரவேண்டியது அரசின்,படத்தயாரிப்பாளரின் கடமை.\n‘மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநி ‘ என்னும் எனது சென்ற வாரக் கட்டுரையில் ஒரு சிறு தசமப் புள்ளி பிழை மின்சார உற்பத்தி எண்ணிகையில் காணப்பட்டது. கீழே அடைப்புக்குள் சாய்வு எழுத்துக்களில் திருத்தமான எண்ணிக்கையே சரியானது.\nஇந்தியாவைப் போல் மற்றும் 30 உலக நாடுகள் 438 அணுமின் உலைகளை இயக்கி [2001 அறிக்கை] 351,327 MWe மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன அடுத்து 31 அணு உலைகள் கட்டப்பட்டு இன்னும் 27,756 MWe அதிக மின்னாற்றல் உலகெங்கும் பெருகப் போகிறது அடுத்து 31 அணு உலைகள் கட்டப்பட்டு இன்னும் 27,756 MWe அதிக மின்னாற்றல் உலகெங்கும் பெருகப் போகிறது [2000 ஆண்டில் மட்டும் உலக நாடுகளில் 2,447.53 பில்லியன் யூனிட் [KWh] மின்சாரம் உற்பத்தியாகி யுள்ளது [2000 ஆண்டில் மட்டும் உலக நாடுகளில் 2,447.53 பில்லியன் யூனிட் [KWh] மின்சாரம் உற்பத்தியாகி யுள்ளது] மேலும் அமெரிக்கா, கனடா நாடுகளில் வயதாகி முன்பு மூடப்பட்ட பழைய அணு உலைகள், பல புதுப்பிக்கப்பட்டு மின்சாரம் பற்றாக் குறைப் பிரச்சனையை நிவர்த்தி செய்யத் தயாராக்கப் படுகின்றன.\nசூர்யாவின் கட்டுரை வலுவான ஆதாரங்கள் அற்றது,அவர் முன்வைக்கும் உதாரணங்களும் பொருத்தமானதாக இல்லை, ஆனால் ஏதோ உலக மகா உண்மையை சொல்கிற தொனி கட்டுரையில் உள்ளது.இந்த வித்ததில் அவர் ஜெயமோகன் எழுதும் கட்டுரைகளின் ‘தரத்தை ‘ எட்ட முயன்றுள்ளார்.கட்டுரையின் நீளம்தான் குறைவு.மற்றப்படி ஜெயமோகனின் கட்டுரைகளுடன் ஒப்பிடத்தக்கது அது.விக்ரமனின் முதல் படம் புது வசந்தம் பெரும் வெற்றி, ஆனால் அடுத்த படம் படு தோல்வி.அதன் பின் அவரது எல்லாப் படங்களும் ஒரே மாதிரியான வெற்றி/தோல்விப் படங்கள் என்று சொல்ல முடியாது.பாரதிராஜாவின்முதல் தோல்விப்படம் நிழல்கள்.அலைகள் ஒய்வதில்லை வெற்றி பெற்றது, காதல் ஒவியம் தோல்வியுற்றது.கொடி பறக்குது படமும் அவர் இயக்கியதுதான், வேதம் புதிதும் அவர் இயக்கியதுதான்.இளையராஜாவின் வீழ்ச்சிக்கு காரணம் ஒருவர் அவரை அறைந்ததா என்ன பிதற்றல் இது \nகாஞ்சி சங்கரமடம் ஆதிசங்கரர் நிறுவியது அல்ல என்ற சர்ச்சை பழையது.சமீபத்தில் கூட இப்போதுள்ள காஞ்சி சங்கராச்சாரியரை விமர்சித்து சில ஹிந்த்துவ அமைப்புகள் அறிக்கை விட்ட போது ஒரு ஹிந்த்த்வ ஆதரவு இணைய தளம் இதே சர்ச்சையைப் பற்றி எழுதியது. தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ மடாதிபதிகள் தீண்டாமை ஒழிப்பு,தமிழில் வழிபாடு,சமூக சீர்திருத்தம் போன்றவற்றை முன்னெடுத்து ஒன்றுபட்டு செயல்பட்டிருந்தால் காஞ்சி மடத்தின் செல்வாக்கினை குறைத்திருக்க முடியும். அவர்கள் ஊடகங்க்ளையும் பயன்படுத்தத் தவறினர். காஞ்சி மடத்தை இன்று கருணாநிதி விமர்சிக்கிறார், ஆனால் ஸ்டாலின் முன்பு குடும்பத்துடன் காஞ்சி சங்கராச்சாரியரை சந்த்தித்தாக செய்திகள் வெளியாயின. எனவே காஞ்சி மடத்தை மட்டும் விமர்சித்துப்பயனில்லை.\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் ���றிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nNext: கனடாவில் நாகம்மா -2\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/liquor-shops-closed-in-puducherry-upto-apr-30th/", "date_download": "2021-08-02T09:39:58Z", "digest": "sha1:MW3HOR4735KXQTLDEJ4BFAXN6WTN66UJ", "length": 6270, "nlines": 117, "source_domain": "tamil.newsnext.live", "title": "அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன - புதுச்சேரி ! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nஅனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன – புதுச்சேரி \nநாடு முழுவதும் கரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழலில் அதனை தடுக்க தடுப்பூசி, முகக்கவசம் ஆகியவற்றை தாண்டி வேறு வழியின்றி பொதுமுடக்கத்தையும் மாநில அரசுகள் அறிவித்துள்ளன.\nபுதுச்சேரி மாநிலத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியில் இரண்டு நாட்கள் பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nஅதன்படி, மருந்தகம், பால், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் மதுக்கடைகளை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூட அம்மாநில கலால்துறை துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇயக்குநர் தாமிரா கரோனாவால் காலமானார் \nதுருக்கி நாட்டை தாக்கும் கரோனா தொற்று \nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nதொடர் சரிவில் தங்கம் விலை\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\n5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதுருக்கி நாட்டை தாக்கும் கரோனா தொற்று \nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\nதொடர் சரிவில் தங்கம் விலை\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-08-02T10:28:59Z", "digest": "sha1:HCCU6R65NKVC2KODKYGZUTPG74CFMDHC", "length": 7805, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரை அச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிங்கப்பூரில் ஸ்ரென்சில் முறையில் அச்சிடப்பட்ட அபாயச் சமிஞ்ஞை\nவரை அச்சு எனப்படுவது ஒரு தட்டையான தடித்த பொருளின் மீது ஒரு சித்திரத்தை வரைந்து அதை வெட்டி அகற்றிய பின்னர் ஏற்படும் துளையினூடாக சாயங்களைப் பூசுவது மூலம் அச்சித்திரத்தை என்னொரு பொருளின் மீது பதித்தலாகும். இவ்வாறான ஸ்ரென்சில் தாள்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.\nபிரிஸ்டல் அட்டைத்��ுண்டு/ x-ray தாள்\nமுதலில் இலட்சனையை வரைந்து கொள்ளுங்கள்.\nதகடு மற்றும் இலட்சனை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது வெட்டி அகற்றக் கூடியவாறு இலச்சினையை வரைந்து கொள்ளல்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2015, 04:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-2020/", "date_download": "2021-08-02T08:37:56Z", "digest": "sha1:U7QYJJ2Z322WGAYTCJLBG5WQIRX74HJR", "length": 8870, "nlines": 51, "source_domain": "tnreginet.org.in", "title": "பட்டா 2020 | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nபட்டா மாறுதல் மேல்முறையீடை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்\nபட்டா மாறுதல் மேல்முறையீடை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nபட்டா பெயர் மாற்றம் தமிழக அரசின் புதிய திட்டம் மக்கள் மகிழ்ச்சி\nபட்டா பெயர் மாற்றம் – தமிழக அரசின் புதிய திட்டம் மக்கள் மகிழ்ச்சி\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nபொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு பட்டா மாறுதலில் தமிழக அரசு அதிரடி மாற்றம்\nபொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு; பட்டா மாறுதலில் தமிழக அரசு அதிரடி மாற்றம்\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nஇனி வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல்\nஇனி வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல்\n பட்டாpatta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nபத்திரப்பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறை|TNGovernment|Patta |TN Registration\nபத்திரப்பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறை|TNGovernment|Patta |TN Registration\n2020 TNREGINET tnreginet TNREGINET VIDEOS பட்டா பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020patta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\n2020 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பட்டா; தமிழக அரசு புதிய உத்தரவு\n2020 வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பட்டா; தமிழக அரசு புதிய உத்தரவு\n பட்டா பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020patta latest news 2020 tamilnadu patta news 2020 பட்டா பட்டா 2020 பட்டா மாறுதலில் பட்டா மாறுதல் பட்டா மாறுதல் online பட்டா மாறுதல் உத்தரவு பட்டா மாறுதல் செய்ய எளிய வழி பட்டா மாறுதல் தொடர்பாக\nமோசடி பத்திரங்கள் ரத்து செய்யும் அதிகாரம்\nசொத்து பத்திரம் நகல் பதிவிறக்கம் | copy of document online tamilnadu | tnreginet |பழைய பத்திரம் நகல்\nTnreginet EC பார்க்க போறீங்களா பத்திரப்பதிவு துறையில் புதிய வசதி\n2021 தமிழ்நாடு அரசு பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு\nசார் பதிவாளர் அலுவலகங்களில் இன்றுமுதல் பத்திரப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/mer/135-news/articles/vijayakumaran/3388-2016-09-07-21-20-14", "date_download": "2021-08-02T08:10:56Z", "digest": "sha1:2JA4H7DCLDMBSUUMPEEEOHQZRGK5YT46", "length": 18365, "nlines": 105, "source_domain": "www.ndpfront.com", "title": "தம்மை எதற்கும் இழக்காத போராளிகள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதம்மை எதற்கும் இழக்காத போராளிகள்\nதமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காண வாக்களியுங்கள் என்று வாக்குப்பிச்சை கேட்டு பாராளுமன்றம் சென்று அங்கு இனவெறி அரசுடன் கூடிக் குலாவி தமிழ் மக்களிற்கு துரோகம் செய்தவர்கள்; ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டத்தை கிண்டலடித்து சாதிவெறி பேசியவர்கள்; இன்றைய சம்பந்தனின் அன்றைய அவதாரங்களிற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அவர் ஒரு நல்லவர், வல்லவர் என்று அறிக்கைகள் வருகின்றன.\nதமிழ்மக்களிற்கு துரோகம் செய்தவர்களும், சாதிவெறியர்களும், கொலைகாரர்களும் மரணமடைந்த போது மக்கள் தலைவர்கள் என்று தூக்கிப் பிடித்தவர்கள் இன்று மெளனமாக இருப்பதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்று மக்களிற்காக தாம் மரணிக்கும் வரை உழைத்த மகத்தான சில போராளிகளின் மறைவின் போது எழுதப்பட்ட கட்டுரையின் மறுபிரசுரம்.\nஇழப்புகள் மிகுந்த வாழ்வு எனிலும், இழந்தவற்றை மீழப் பெறுகின்ற போரில் தம்மை எதற்கும் இழக்காத போராளிகள் சிலர் அண்மையில் மரணமடைந்தார்கள். தோழர் தவராசா, தோழர் குலரத்தினம், தோழர் தங்கவடிவேல் என்று வாழ்க்கையே போராட்டமாக, போரட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள் மரணமடைந்தார்கள். அவர்கள் மக்களிற்காக போராடினார்கள். சமுதாயத்தில் நிலவும் அநீதிகளிற்கு எதிராக போராடினார்கள். சமுதாயத்தை விட்டு விலகி தனித்து நின்று தாமொரு குழுவாய் போனவர்கள் போலில்லாமல் காட்டை விட்டு பறக்காத பறவையைப் போல் தம்மண்ணில் கால் பதித்து நின்று போராடினார்கள்.\nஇவர்கள் சாதி கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள். வாழ்நாள் முழுவதும் கரைய மறுத்த வறுமையை சுமந்த குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். கல்வியை தெய்வம் என்றும்,கல்லூரியை ஆலயமென்றும் புளுகிப் பொய் சொல்லும் தமிழ்ச்சமுதாயத்தில் கோயில் உயர்சாதியினருக்கு மட்டுமே கதவை திறந்தது போல் பள்ளிகள், கல்லூரிகளும் தாழ்த்தப்பட்ட மக்களிற்கு கதவை திறக்காத கோட்டைகளாக இருந்தன. எடுத்த வெண்கட்டியால் எழுத முடியாது அவர்களை சாதியும், பணமும் தடுத்தன. எமக்கு வேறுவழி இல்லை என்று அவர்கள் அயர்ந்து போய்விடவில்லை. அஞ்சாது போரிட்டார்கள். தமக்கு மட்டுமின்றி தம் போன்ற மற்றவர்களிற்காகவும் போரிட்டார்கள்.\nவல்வெட்டித்துறை ஊரிக்காடு சிதம்பரா கல்லூரிக்கு முன் வீட்டிலே தங்கவடிவேல் மாஸ்ரர் வசித்த போதும் அவரை அங்கே படிக்க சாதிவெறியர்கள் விடவில்லை. வல்வெட்டித்துறையிலிருந்து தொண்டைமானாறுக்கு ஒவ்வொரு நாளும் நடந்து போய் தொண்டைமானாறு பள்ளிக்கூடத்திலே படித்தார். சாதிவெறி பிடித்த ஆசிரியர்களின் கேலிகளும், ஆணவப்பேச்சுகளும் அவரை அங்கேயும் படிக்க விடவில்லை. அச்சுவேலியில் உள்ள ஒரு பாடசாலைக்கு மாறிச் சென்றார். சாதிவெறியர்களினால் அவரது படிப்பு அடிக்கடி தடைப்பட்டதால் அவருக்கு பதினைந்து வயதாக இருக்கும் போது அவர் பத்து வயது சிறுவர்களுடன் சேர்ந்து படிக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார்.\nதாம் உயர்ந்த சாதியினர் என்றும், மேலான தமிழர் என்றும் சாதிவெறி பிடித்து அலைந்தவர்கள் தானும்,தனது பெண்டாட்டியுமாக தன்னல வாழ்க்கை வாழ்ந்த போது இவர்கள் தமிழ் மக்களிற்காக, இலங்கை மக்களிற்காக சமத்துவத்தை சர்வதேசியத்தை ஏற்றுக் கொண்டு போராடினார்கள். கடல் அழுது வீழும் கரையில், தூரச் சிறைப்பட்ட காற்றில், நெடுந்தூரம் நீளும் இரவில் தோழர் தவராசா கடற்தொழில் செய்து விட்டு பகலில் கம்யுனிஸ்ட்டு கட்சிக்காக களப்பணி செய்தார். நெஞ்சக் கூட்டின் உயிர்த்துடிப்பில் நெருடும் முள்ளைப் போல் வறுமை குத்தித் துளைத்த வாழ்விலும் வளையாது நிமிர்ந்து நின்றார். முதுமை கலந்து மூச்சு வெளிப்படும் கடைசி நாட்களிலும் \"போராட்டம்\" பத்திரிகைகையை மக்களிடையை கொண்டு சென்றார்.\nஇலங்கைத் தமிழ்மக்கள் மேல் தொடர்ச்சியாக சிங்களப்பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி எதிர்த்து போராடி வந்தது. இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறை மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கூட்டத்தை ஒழுங்கு செய்ததில் குலரத்தினம் பெரும்பங்கு வகித்தார். கொந்தளிக்கும் கடலில் ஒரு சிறு துரும்பு தான் அத்தீர்மானம் எனினும் அப்பிரகடனம் விளக்குகள் அணைந்த வீட்டினுள் மினுங்கிய மின்மினி போல் ஒளிர்ந்தது . தமிழ்மக்களின் கட்சிகள் என்று சொல்லப்பட்டவைகள் சிங்களப்பேரினவாதக்கட்சிகளுடன் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு இருந்த போது போர்க்குரலாக எழுந்தது பொதுவுடமைத் தோழர்களின் சுயநிர்ணய உரிமைத் தீர்மானம்.\nஆலயங்களில், உணவு விடுதிகளில் அனுமதி இல்லை போன்ற அநியாயங்களிற்கு எதிராக அறுபதுகளில் தீண்டாமைக்கு எதிரான வெகுஜன முன்னணியும் கம்யுனிஸ்ட்டு கட்சியும் இணைந்து போராடின. ஆண்களும், பெண்களும் சேர்ந்து போராடினார்கள். உயர்சாதிகளில் இருந்த முற்போக்காளரை, நட்புசக்திகளை இணைத்துக் கொண்டு போராடினார்கள். குமுறி எழுந்த அந்த சூறாவளியில் ஆலயங்களின் தடைகள் தகர்ந்து போயின. இல்லாத மனிதர்கள் இணைந்தால் புதியகாலை புலரும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்தார்கள் அவர்கள். அந்த போராளிகளில் ஒருவர் தோழர் தங்கவடிவேல்.\nஇவர்கள் இன்று மறைந்து விட்டார்கள் ஆனால் தமிழ்ப்பொது வெளியில் அவர்களிற்கு எந்த விதமான அஞ்சலிகளும் இல்லை. மறைந்த தோழர்கள் மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக போராடவில்லை. ஆனால் தமிழ்மக்களிற்கு துரோகம் செய்தவர்களும், ச��திவெறியர்களும், கொலைகாரர்களும் மரணமடைந்த போது மக்கள் தலைவர்கள் என்று தூக்கிப்பிடித்தவர்கள் இன்று மெளனமாக இருப்பதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன. பெரும்பாலான உழைக்கும் தமிழ்மக்களை சூத்திரர் என்று இந்துமதம் பழிக்கும் போது தமிழும், தமிழரும் தழைக்க வந்தவர் என்று போற்றப்படும் ஆறுமுகநாவலர் பதறிப் போனார். தமிழரைப் பழித்ததற்காக பதறவில்லை. மற்றச்சாதியோடு வெள்ளாளரையும் ஒன்றாகச் சேர்ப்பதா என்று என்று தான் பதறிப் போனார். வெள்ளாளரை சற்சூத்திரர் என்று ஒரு புதிய பிரிவிற்குள் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆறுமுகம் போன்ற சாதிவெறியர்கள் தமிழரின் தலைகள் என்று போற்றப்படுவதில் உள்ள சதி என்ன\nபொன்னம்பலம் ராமநாதன், ஜீ.ஜீ பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் என்று தமிழ்மக்களை, தமிழ்மக்களின் போராட்டங்களை காட்டிக் கொடுத்தவர்களை தமிழர் தலைவர்கள் என்று தூக்கிப்பிடிக்கும் அரசியலின் பின்னுள்ள மர்மங்கள் என்ன. இவர்கள் இருமரபும் துய்ய வந்த உயர்வர்க்கத்தினர் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஒளிவட்டம் வீசும் தலைவர்களைக் காட்டி மீட்பர்கள் எல்லாவற்றையும் பெற்றுத் தருவார்கள் என்று சொல்லும் மக்கள்விரோத அரசியல் அது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் ஆழியின் அடியிலிருந்து வெளுப்பினூடு படரும் செவ்வரிகள் வானம் எங்கும் வளரத்தான் போகின்றன. அன்று மயில்தோகை நிலத்தை வாருதல் போல மக்கள் மனதை தோழர்களின் நினைவுகள் வருடிச் செல்லும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/02/blog-post_84.html", "date_download": "2021-08-02T09:41:10Z", "digest": "sha1:HC66EMBBNY6D5TTSFOP6ASPNKCVBJZQO", "length": 4655, "nlines": 31, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "தமிழகத்தில் தான் அமைதியாகத் தேர்தல் நடக்கிறது- தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதமிழகத்தில் தான் அமைதியாகத் தேர்தல் நடக்கிறது- தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி\nசட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, மாவட்ட எஸ்.பி. அபிநவ் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, \"தமிழகம் முழுவதும் 7,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலின் போது தமிழகத்தில் பாதுகாப்புப் பணிகள் சிறப்பாக இருக்கும். பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் தான் அமைதியான முறையில் தேர்தல் நடக்கிறது. 1,000- க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்படும்\" என்றார்.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sekarreporter.com/pakistan-sc-to-entertain-musharrafs-plea-only-after-he-surrenders-to-the-law-report-https-www-thehindu-com-news-international-pakistan-sc-to-entertain-musharrafs-plea-only-after-he-surren/", "date_download": "2021-08-02T09:13:48Z", "digest": "sha1:GEJ7OIOKOCLT27MIAU4LQO46FUHEUNT2", "length": 4513, "nlines": 56, "source_domain": "www.sekarreporter.com", "title": "Pakistan SC to entertain Musharraf’s plea only after he surrenders to the law: Report: https://www.thehindu.com/news/international/pakistan-sc-to-entertain-musharrafs-plea-only-after-he-surrenders-to-the-law-report/article30592575.ece – SEKAR REPORTER", "raw_content": "\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங���களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/08/cevvay-mars-bio-data-tamil.html", "date_download": "2021-08-02T09:29:28Z", "digest": "sha1:EE7O3ZWC76AV7YX6T5PC5PXWROKYXW3Y", "length": 10981, "nlines": 204, "source_domain": "www.scientificjudgment.com", "title": "செவ்வாய் - பயோடேட்டா - Mars bio data.", "raw_content": "\nமுகப்புவிண்வெளி அறிவியல்செவ்வாய் - பயோடேட்டா - Mars bio data.\nசெவ்வாய் - பயோடேட்டா - Mars bio data.\nபெயர் காரணம் - ஆகாயத்தில் இந்த கோளை உற்றுநோக்கும்போது செந்நிறத்தில் காட்சி அளிப்பதால் ''செவ்வாய்'' என்று பெயர் பெற்றது.\nஇதற்கு மார்ஸ் (Mars ) என்றொரு பெயரும் உண்டு. '' Mars'' என்பது ரோமானிய போர்க்கடவுளின் பெயர்.\nசூரியனிடமிருந்து தொலைவு - 227.9 மில்லியன் கி . மீ.\nபூமியிலிருந்து தொலைவு - 54.6 மில்லியன் கி . மீ.\nசூரியனை சுற்றும் வேகம் - 24.077 Km / s.\nசூரியனை சுற்றும் கால அளவு - 687 நாட்கள்.\nதன்னைத்தானே சுற்றும் கால அளவு - 24 மணி 37 நிமிடம்.\nதன்னைத்தானே சுழலும் வேகம் - 24 . 2 கி . மீ.\nநடுக்கோட்டில் பகல் நேர வெப்பநிலை - +27 ⁰ c முதல் -140⁰ c வரை.\nவிடுபடு திசைவேகம் - 5.027Km/s.\nசெவ்வாயின் சராசரி ஆரம் - 3,389.5 ± 0.2 Km .\nவிட்டம் - 6,755 . 2 கி. மீ.\nநிலநடுக்கோட்டு ஆரம் - 3,396.2 ± 0.1 Km.\nதுருவங்களில் ஆரம் - 3,376.2 ± 0.1Km.\nசுழல் அச்சு சாய்வு - 25.19 ⁰ .\nகாந்தப்புல வலிமை - காந்தப்புலம் இல்லை.\nசெவ்வாயின் சராசரி அடர்த்தி - 3.9335 ± 0.0004 g/cm³.\nமேற்பரப்பு ஈர்ப்பு விசை - நமது பூமியோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்புவிசை 37% .\n''ஃபோபாஸ்'' (Phobos) மற்றும் ''டெய்மாஸ்'' (Deimos) என்ற இரு துணைக்கோள்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இரண்டும் எதிர் எதிர் திசைகளில் சுற்றி வருகின்றன.\nசிலிக்கன், உலோகங்கள், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், குளோரைடு மற்றும் பல தனிம கனிமங்களை கொண்டுள்ளது.\nமெலிதான காற்று மண்டலம் உள்ளது. இதில் கார்பன் டை ஆக்சைடு, ஆர்கான், நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் மோனாக்சைடு அடங்கியுள்ளது. வளிமண்டல அழுத்தம் பூமியோடு ஒப்பிடும்போது 1% ற்கும் குறைவு.\nபூமியைவிட சிறியது. பூமிக்கு அடுத்து இருக்கிறது. சூரியனிலிருந்து 4 வது கிரகம்.\nசெவ்வாயில் இரும்புத்தாதுக்கள் அதிக அளவில் உள்ளதால் இரும்பு ஆக்ஸைடு - வின் செறிவால் இங்குள்ள மணல் பரப்புகள் மற்றும் பாற��கள் சிவப்பு நிறத்தில் உள்ளது. எனவே செவ்வாய் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது.\nபாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nமேலும் செவ்வாய் கிரகத்தைப்பற்றி அறிந்துகொள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சுட்டுங்க... >> செவ்வாய் கிரகம் - Mars planet <<\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Keelanelli - Viral jaundice Hepatitis B.\nகீழாநெல்லி - வைரஸ் அழற்சி காமாலை. Viral jaundice Hepatitis B. [PART - 8]. மூலிகைகள் வர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/athi-cultivation-brings-8-lakhs-income-for-an-acre", "date_download": "2021-08-02T08:36:35Z", "digest": "sha1:ENKH7JAAVOM5LNLA3THH2HDCP2V2TWQG", "length": 12526, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 January 2020 - அள்ளிக்கொடுக்கும் அத்தி! - ஏக்கருக்கு ரூ. 8,00,000 வருமானம்! | Athi cultivation brings 8 lakhs income for an acre - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n - ஏக்கருக்கு ரூ. 8,00,000 வருமானம்\nஏக்கருக்கு ரூ. 5,00,000 கொட்டிக்கொடுக்கும் கொடித் தக்காளி\n30 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த வெண்சாமரச் சோளம்\nஒன்றரை ஏக்கர் ரூ. 85,000... மதிப்புக்கூட்டலில் மகத்தான லாபம்\nஆஸ்பத்திரிக்குப் போவதைத் தடுக்கும் ஆரோக்கிய உணவுகள்\nமாணவர்களை ‘இயற்கை விவசாயி’ ஆக்கிய அரசுப் பள்ளி\nமத்திய பட்ஜெட் 2020-21 வேளாண் வளர்ச்சிக்கான பரிந்துரைகள்\nவீடு கொடுத்த விகடன்... நெகிழ்ந்த பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தால் விவசாயிகள் தற்கொலை குறைந்தது\nவறண்ட போர்வெல்லிலும் தண்ணீர் வரவைத்த விவசாயி\nபழ ஈக்களால் 70% மகசூல் குறையும் - முருங்கை விவசாயிகளே கவனம்\nமண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி\nபூச்சி மேலாண்மை: 20 - நல்லது செய்யும் நடுநிலைப் பூச்சிகள்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nமரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு\nநம்மாழ்வாருக்குப் பிடித்த இலவம்பாடி கத்திரி\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில்... 2020\nநெல்லையில் கொலை; தஞ்சையில் பதுங்கல் - 4 கொலையாளிகள் பிடிபட்டது எப்படி\n'வலிமை' : அஜித்துக்காக 'காதல் பொயட்' விக்னேஷ் சிவனின் எழுத்துகளில்... மாஸாக இருக்குமா முதல் பாடல்\nமும்பை: காவல் நிலையத்தில் பழைய வாகனத்தின் பாகங்கள் திருட்டு; ரூ.26 லட்சத்துக்கு விற்ற பெண் காவலர்\n\"- சிறார் வதை செய்த பாதிரியாருக்காக பாதிக்கப்பட்ட பெண் ஜாமின் மனு\nஆடிக் கிருத்திகை சிறப்புகள்: திருப்புகழ் பாராயணம் செய்தால் தீராத துன்பமும் தீரும்\n - ஏக்கருக்கு ரூ. 8,00,000 வருமானம்\nஇளங்கலைதமிழ் இலக்கியம் பயின்றவர்.. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் ஜல்லிப்பட்டி இவரது சொந்த ஊர். பல ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் இயங்கிவருகிறார். 1980களில் திருப்பூரில் இருந்து வெளியான உழவன் முரசு மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியர் ..அதைத்தொடர்ந்து தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில் ஊரக நிருபராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இடையில்,காலம்சென்ற திரைப்பட இயக்குனர் மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்த, வைதேகி கல்யாணம்,பெரியகவுண்டர் பொண்ணு,கட்டபொம்மன்,ராக்காயி கோயில்,படத்துராணி ஜல்லிக்கட்டுக்காளை,நாடோடி மன்னன் ஆகிய திரைப்படங்களின் கதை இலாகாவில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2007ம் ஆண்டு முதல் பசுமை விகடன் இதழில் செய்தியாளர் பணி... இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்.....ஐயா நம்மாழ்வார் ,ஜீரோ பட்ஜெட் வித்தகர் சுபாஷ்பாலேக்கர் ,,நாகரத்தினம் நாயுடு ஆகியோர் பங்கேற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தொடர்ந்து கோவை,ஈரோடு,திருப்பூர்,கரூர்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பசுமை விகடன் மற்றும் அவள் விகடன் சார்பில்.கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்த அனுபவம் பெற்றவர். இவர் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட,பஞ்சகவ்யா, ,வெற்றி பெற்ற விவசாயப்பெண்கள் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு இப்போதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. பத்திரிகையாளர் மட்டுமல்ல..பல்வேறு விவசாயிகள் பிரச்னைகளுக்காக போராடி வரும் களப்போராளியும் கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/07/gpl-tilko-riders.html", "date_download": "2021-08-02T10:13:11Z", "digest": "sha1:Y75QTWZJL44S25OELH5MVGJX7FBHJIVX", "length": 4361, "nlines": 56, "source_domain": "www.yarlsports.com", "title": "GPL முதலாவது வெற்றியுடன் TILKO RIDERS - Yarl Sports", "raw_content": "\nGPL முதலாவது வெற்றியுடன் TILKO RIDERS\nGPL இரண்டாவது போட்டியில் P.P SUPER KINGS அணியினை 30 ஓட்டங்களால் வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது TIKO RIDERS\nமதூஷன்-3/2(1) . TIKO RIDERS அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/soorarai-pottru-official-teaser", "date_download": "2021-08-02T08:15:13Z", "digest": "sha1:FE3FSCJ4AI6YPZK6WX2YXIK32SCCCNUX", "length": 7883, "nlines": 108, "source_domain": "www.cinibook.com", "title": "தெறிக்கவிட்ட சூரரைப் போற்று டீஸர்", "raw_content": "\nதெறிக்கவிட்ட சூரரைப் போற்று டீஸர்\nதெறிக்கவிட்ட சூரரைப் போற்று டீஸர்\nசூர்யாவின் நடிப்பில், சுதா கொங்கனா இயக்கத்தில் சூரரைப் போற்று. இதன் டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டீஸர் வெளிவந்து சில நிமிடங்களில் 5லட்சம் பேரால் பார்க்கபட்டது.\nடீசரில் வரும் ஒரு சில வார்த்தைகள் அனைவராலும் கவரப்பட்டு வருகிறது உதாரணத்திற்கு “ஆறாயிரம் ருபாய் வைத்து ஏரோபிளான் கம்பெனி ஆரம்பிக்க போவது” மற்றும் “ரத்தன் டாடாவை வைத்து வரும் ஒரு வசனம்” போன்றவை அனைவரின் கவனத்தை ஈர்த்தது.\nசுதா கொங்கனா இயக்கத்தில் சூரரைப் போற்று மூன்றாவது படமாக அமைந்துள்ளது இதற்க்கு முன் இவர் இறுதிச்சுற்று என்ற மாபெரும் வெற்றி���்படத்தை கொடுத்துள்ளார் அதனால் இந்த மக்கள் மத்தியில் படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.\nNext story மாஸ்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nபுதிய கெட்டப்பில் விஜய்சேதுபதி….கடைசி விவசாயி படத்தில்…\nஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் தேனீர்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nமீரா மிதுன் அரைகுறை ஆடைகளுடன் ஆடும் ஆட்டத்தை பாருங்கள்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://arealnews.com/dhukka-nivarana-ashtakam-lyrics-in-tamil/", "date_download": "2021-08-02T09:24:42Z", "digest": "sha1:3XUIPE2FKFJLZPYBPV5ZUIRJUGAACOTA", "length": 15914, "nlines": 254, "source_domain": "arealnews.com", "title": "Dhukka Nivarana Ashtakam Lyrics In Tamil By Sri Durgai Chiththa", "raw_content": "\nமங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே\nசங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே\nகங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி\nகான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்\nதான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்\nமான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nசங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே\nபொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே\nஎம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nதணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்\nகணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்\nபணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nபஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே\nகொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே\nசங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nஎண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே\nபண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்\nகண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nஇடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்\nசுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்\nபடர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி\nஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி\nஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.\nகங்கண பாணியன் கனிமுகம் கண்டனல் கற்பகக் காமினியே\nமான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்\nதணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்\nகணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்\nசுடர்தரு அமுதே சுருதிகள் கூரி சுகமது தந்திடுவாய்\nபாணியன்கண கனிமுகம் கண் டனல்கற் பகக்காமினியே் பாணியன\nமான்மொழியாள மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் விழியாள்\nதண தணதண்தணதண நவில்ஒளி தணதண்தண மதி்நீ வருவாய தந்\nகண கணகண்கணகண கதிர்ஒளி கணகண மணி்நீ வருவாய கண்\nஅமுதே்சுகமது சுடர சுருதிகள் அமுதே தந திடுவாய் .்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/vignesh-sivan-leak-nayan-secret-in-public/cid3462504.htm", "date_download": "2021-08-02T09:11:10Z", "digest": "sha1:W6R6EZUVSWZRECF2YZITZZKOIVY7R3DG", "length": 6036, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "தினமும் வீட்டில் பாத்திரம் கழுவும் நயன்தாரா... திருமணம் எப்ப", "raw_content": "\nதினமும் வீட்டில் பாத்திரம் கழுவும் நயன்தாரா... ரகசியத்தை சொன்ன சிவன்\nரகசிய புகைப்படம் ஒன்றை வெளியிடுமாறு ரசிகர் கேட்க, அதற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் நயன்தாராவுடன் எப்பொழுது திருமணம் என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.\nஇயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் ���ேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார்.\nநயன்தாரா பற்றி அவரிடம் நிறைய கேள்வி கேட்டார்கள். ஒரு ரசிகரோ, உங்களையும், நயன்தாராவையும் பற்றி சில ரகசியங்களை சொல்லுங்களேன் என்று கேட்டார். ஆனால் விக்னேஷ் சிவனோ, நயன்தாராவின் ரகசியத்தை போட்டுடைத்துவிட்டார்.\nஅதாவது தினமும் இரவு சாப்பிட்ட பிறகு அனைத்து பாத்திரங்களையும் நயன் தான் கழுவி வைப்பார் என்கிறார் விக்னேஷ் சிவன்.\nவிக்னேஷ் சிவனின் பதிலை பார்த்தவர்களால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை தினமும் வீட்டில் பாத்திரம் கழுவுகிறாரா, தலைவி தலைவி தான் என்று ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇது மட்டும் அல்ல ரகசிய புகைப்படம் ஒன்றை வெளியிடுமாறு ரசிகர் கேட்க, அதற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் நயன்தாராவுடன் எப்பொழுது திருமணம் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு விக்னேஷ் சிவனோ, திருமணத்திற்கு ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. அதனால் பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் கொரோனா போக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்தார்.\nவிக்னேஷ் சிவனின் பதிலை பார்த்தவர்கள், சத்தியமா இப்படி ஒரு விளக்கத்தை எதிர்பார்க்கவில்லை அன்பான இயக்குநரே என்கிறார்கள். நயன்தாராவை விரைவில் திருமதியாக பார்க்க வேண்டும் என்று துடிக்கிறார்கள் ரசிகர்கள்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/miya-george-marriage-engagement-is-over-qbagjr", "date_download": "2021-08-02T08:16:46Z", "digest": "sha1:5JUHTTRETXKCNMBOEDW7AS3UWE4ZYRWI", "length": 10375, "nlines": 76, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊரடங்கு ஓய்வில் சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல நடிகையின் நிச்சயதார்த்தம்! | miya George marriage engagement is over", "raw_content": "\nஊரடங்கு ஓய்வில் சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல நடிகையின் நிச்சயதார்த்தம்\nபிரபல தமிழ் பட நடிகை மியா ஜார்ஜுக்கு இந்த லாக் டவுன் நேரத்தில், அவசர அவசரமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்த���, அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nபிரபல தமிழ் பட நடிகை மியா ஜார்ஜுக்கு இந்த லாக் டவுன் நேரத்தில், அவசர அவசரமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nமேலும் செய்திகள்: 77 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் இளையராஜா இசை பயணத்தில் மறக்க முடியாத அரிய புகைப்பட தொகுப்பு\nமலையாள திரையுலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு ஸ்மால் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இதை தொடர்ந்து, மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், தமிழில் நடிகர் ஆர்யா அவருடைய சகோதரர், 'சத்யாவை' வைத்து தயாரித்த ’அமர காவியம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த இவர், பின் சேலை கட்டிய கிளியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.\nஇந்த படத்தை அடுத்து, விஷ்ணு விஷால் நடித்த ’இன்று நேற்று நாளை’ சசிகுமார் நடித்த ’வெற்றிவேல்’ தினேஷ் நடித்த ’ஒரு நாள் கூத்து’ விஜய் ஆண்டனி நடித்த ’எமன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் விக்ரம் நடித்து வரும், 'கோப்ரா' திரைப்படம் உட்பட, இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் செய்திகள்: ஸ்லீவ்லெஸ் உடையில்... சிம்புவுடன் ரொமான்ஸ் செய்த சமந்தா\nஇந்த நிலையில் நடிகை மீரா ஜார்ஜூக்கும் அஸ்வின் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து அஷ்வினுக்கும் - மியா ஜார்ஜுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்துள்ளது. இதில், இருவருடைய நெருங்கிய உறவினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்களுடைய திருமணம், வரும் செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் - மற்றும் மலையாளத்தில், பட வாய்ப்புகள் குறைந்து வருவதாலும், அம்மணி 28 வயதை கடந்து விட்டதாலும், கிடைத்த நல்ல வரனை தட்டி கழிக்க வேண்டாம் என திருமணத்திற்கு மியா ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. எனவே இவரை திருமணம் செய்து கொள்ள உள்ள அந்த நபர் யார் என்பதை தெரிந்து கொள்வதிலும் மிகவும் ஆர்வமாக உள்ளனர் இவருடைய ரசிக���்கள்.\nஉலகநாயகன் தலைமையில் நடிகை கன்னிகாவை கரம் பிடித்த கவிஞர் சினேகன்..\n8 ஆண்டுகளில் 2 ஆவது மனைவியை விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகையின் முன்னாள் கணவர் இவரும் பிரபல நடிகர் தான்\nஇந்த கல்யாணம் மட்டும் நடந்துச்சு நான் செத்துடுவ.. வீடியோ வெளியிட்டு கதறிய இளம்பெண்.. இறுதியில் நடந்த சம்பவம்\n“4 இல்ல 40 கல்யாணம் கூட செய்வேன் அது என் இஷ்டம்”... பிரஸ் மீட்டில் கொந்தளித்த பிக்பாஸ் வனிதா...\nபவர் ஸ்டாருடன் வனிதாவுக்கு 4வது திருமணமா. மனம் திறந்த வனிதா.. தன் தனிப்பட்ட விருப்பம் என பதிலடி.\nபள்ளிகள், கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது.. அமைச்சர் அதிரடி முடிவு.\nவெளிநாட்டில் சந்தித்துக் கொள்ளப் போகும் விஜய் - அஜித்... எதற்காக தெரியுமா\nதிமுக அமைச்சர் முன் கைகட்டி நின்றேனா.. நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன்... கொந்தளிக்கும் திருமாவளவன்..\nசட்டப்பேரவையில் மட்டுமல்ல கருணாநிதியின் படம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும்.. சு.ப வீரபாண்டியன்.\nகுடிபோதையில் காதல் மனைவியை தினமும் கதறவிட்ட கணவன்.. வலி தாங்க முடியாமல் அடித்துக்கொன்ற அரசு பள்ளி ஆசிரியை.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmeds.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-08-02T09:20:31Z", "digest": "sha1:SUHUZCUL64LSNAGY72IE4HDYIB3JFDZ5", "length": 2628, "nlines": 18, "source_domain": "tamilmeds.com", "title": "வெந்நீர் | தமிழ் மருந்துகள்", "raw_content": "\nமனிதனின் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது. நாம் உண்ணும் உணவானது குடலை அடைந்ததும் இந்த திரவங்களின் மூலமாக செரிக்க ஆரம்பிகிறது.[…]\nஉடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடைய வீட்டு மருந்துகள்\nஉடல் கொழுப்பு கரைய எளிய இயற்கையான வீட்டு மருந்துகள்\nபல் வலி உடனே போக இயற்கையான வீட்டு மருத்துவ முறைகள்\nபொடுகுத் தொல்லை நீங்க எளிய இயற்கையான வீட்டு மருந்துகள்\nபேன் தொல்லை நீங்க இயற்கைய���ன தமிழ் மருத்துவ முறைகள்\nஅரிசி ஆப்பிள் இஞ்சி உடல் உப்பு உலர் திராட்சை எண்ணெய் எலுமிச்சை கடுக்காய் கருவேப்பிலை கறிவேப்பிலை கற்றாளை கிராம்பு கொத்தமல்லி சருமம் சர்க்கரை சீரகம் சுக்கு சுண்ணாம்பு சோம்பு தக்காளி தண்ணீர் தயிர் துளசி தூதுவளை தேங்காய் எண்ணெய் தேன் தோல் நல்லெண்ணெய் நெல்லிக்காய் பசலைக் கீரை பாகற்காய் பால் புதினா பூண்டு மஞ்சள் மிளகு வயிறு வாழைப்பழம் வெங்காயம் வெண்ணெய் வெந்தயம் வெற்றிலை வெள்ளரிக்காய் வேப்பிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/200-year-old-shiva-temple/", "date_download": "2021-08-02T08:21:03Z", "digest": "sha1:BW3CYVTSRE4AOLYEYA7WJYPCOHQ24Q4O", "length": 2494, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "200-year-old Shiva temple. | ஜனநேசன்", "raw_content": "\n200 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் பூமிக்குள் புதைந்த…\nஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே மணல் தோண்டும் பணியின் போது பூமிக்குள் புதையுண்டு…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில்…\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\nபல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலமடைந்து உள்ளது :…\nகஞ்சா கடத்திய பெண் உட்பட 10 பேர் கைது…\nமதுரை : பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பெயர்…\nஇந்திய சுதந்திரதின 75-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, மரக்கன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/21dayslockdown-covid19-mask/", "date_download": "2021-08-02T09:54:12Z", "digest": "sha1:WN2RBQ7NPTAB4VRKI324QANUDRKYC2P3", "length": 2492, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "21DayslockDown | COVID19 | Mask | ஜனநேசன்", "raw_content": "\n5 மாநிலங்கள் எடுத்த அதிரடி முடிவு..\nஉலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுக்குள்…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில்…\nகாவல்துற�� மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukadu.com/2020/11/16/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-08-02T08:44:58Z", "digest": "sha1:VNQRSYGTO6W4DFKHJSUCQI4R2AYRYIAU", "length": 5915, "nlines": 33, "source_domain": "www.mukadu.com", "title": "கடைகளை டிசெம்பரில் திறக்க தீர்மானம் உணவகங்கள் இனி ஐனவரியில் தான். | Mukadu", "raw_content": "\nகடைகளை டிசெம்பரில் திறக்க தீர்மானம் உணவகங்கள் இனி ஐனவரியில் தான்.\nகடைகளை டிசெம்பரில் திறக்க தீர்மானம் உணவகங்கள் இனி ஐனவரியில் தான்\nஉணவகங்கள், அருந்தகங்கள்(cafes, bars and restaurants) என்பன இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. உத்தேசமாக ஜனவரி 15 ஆம் திகதி அவற்றைத் திறக்கமுடியும் என்று மதிப்பிடப்பட்டிருப்பினும் அது பற்றிய எந்த முடிவும் அரசு மட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை.\nஅரசாங்க வட்டாரங்களை ஆதாரம் காட்டி “பிரான்ஸ்இன்போ” (Franceinfo) செய்திச் சேவை இத்தகவலை வெளியிட்டிருக் கிறது.\nஉணவகங்கள் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு மேலதிக நிதி உதவிகளை வழங்குவதற்கான திட்டங்கள் தற்சமயம் பரிசீலிக்கப்படுகின்றன. பொருளாதார அமைச்சு ஜனவரி 15 ஆம் திகதி அளவிலேயே உணவகங்களை திறக்க உத்தேசித்துள்ளது. ஆனால் உறுதியான திகதியை அறிவதற்கு அடுத்தவாரம் பிரதமர் விடுக்கவிருக்கும் அறிவுப்புக்கு காத்திருக்க வேண்டும் – என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தற்சமயம் மூடப்பட்டிருக்கின்ற அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இம்மாத இறுதியில் – பெரும்பாலும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கறுப்பு வெள்ளி (Black Friday) மலிவு விற்பனை நாளன்று – திறக்கப்படலாம் என இன்று தகவல் வெளியாகி உள்ளது.\nநிதி அமைச்சர் புறுனோ லூ மேயர் இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n27 வெள்ளி அல்லது மறுநாள் 28 சனிக்கிழமை கடைகளைத்திறந்து நத்தார் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்க வாய்ப்புக் கிட்டும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடைகளில் கைக்கொள்ளவேண்டிய மேலும் புதிய பல சுகாதார விதிமுறைகள் அறிவிக்கப்படவுள்ளன.\nஇதற்கிடையில் நாடு முழுவதும் தேவாலயங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளைச் செய்வதற்கு அனுமதிக்கு��ாறு கேட்டு கத்தோலிக்க மதத்தவர்கள் அமைதிப் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.\nகத்தோலிக்க மதப் பிரதிநிதிகளுடன் இது குறித்து பிரதமர் இன்று கலந்துரையாடி உள்ளார். பெரும்பாலும் தேவாலயப் பிரார்த்தனைகளில் மக்கள் கூடுவதற்கான அனுமதியும் இம்மாத இறுதியில் வழங்கப்படலாம் எனத் தெரியவருகிறது.\nFiled in: உலக செய்திகள்\n95% வினைத்திறன் மிக்க கொவிட் 19 தடுப்பூசி கண்டுபிடிப்பு.\nசீன வைரஸுக்கு ஓராண்டு நிறைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sekarreporter.com/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-08-02T08:39:58Z", "digest": "sha1:4VXKLGT2VL5NOM4BXSA44REBWR7EWGCG", "length": 5619, "nlines": 58, "source_domain": "www.sekarreporter.com", "title": "ஜே.என்.யூ. மாணவர்களுடன் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு அவருடன், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் உள்ளனர் #JNUStudents #DMK #UdhayanidhiStalin #JNUProtests https://t.co/sh6OM7oyyM – SEKAR REPORTER", "raw_content": "\nஜே.என்.யூ. மாணவர்களுடன் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு அவருடன், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் உள்ளனர் #JNUStudents #DMK #UdhayanidhiStalin #JNUProtests https://t.co/sh6OM7oyyM\nஜே.என்.யூ. மாணவர்களுடன் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nஅவருடன், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் உள்ளனர்\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடு��்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/02/07/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-08-02T08:45:03Z", "digest": "sha1:IUO253JXCHLGXWIMV2WMJYTJ2LZETOMY", "length": 24951, "nlines": 160, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கதறிய நடிகை – மன, உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, August 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகதறிய நடிகை – மன, உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன்\nகதறிய நடிகை – மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன்\nமலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி, பின் தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசுதேவன் தற்போது\nநடிகை வனிதாவின் மகனை, வரும் 13ம் தேதி . . .\nகுழந்தை செல்வத்தை அடைய ஒரு பெண் படும் கஷ்டங்கள் ஒன்றா, இரண்டா\nடீன் ஏஜ்: அழகுக் கவலை\nபிரபல ஒளிப்பதிவாளர் மகனை, காதலித்து வந்த க‌டந்த 2005-ல் திருமணம் செய்து கொண்டார் மீரா வாசுதேவன். அதன்பிறகு கணவன் மனைவி இடையே 2010-ல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சட்டப்படி பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார். திருமண முறிவுகள் குறித்து மீரா வாசுதேவன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\n“திருமணம் முறிந்து விவாகரத்துக்கு சென்றால் இந்த சமூகம் பெண்கள் மீதுதான் குறை சொல்கிறது. ஆனால் அந்த பெண்கள் சந்தித்த தொல்லைகளை கண்டு கொள்வது இல்லை. நான் முதல் திருமணம் செய்து கணவரிடம் அனுபவித்த கொடுமைகள் அதிகம். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன். அதை ���ார்த்தையால் சொல்ல முடியாது.\nஅப்போது எனது உயிருக்கும் மிரட்டல் இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பு கேட்டேன். 2012-ல் மறுமணம் செய்தேன். அதுவும் மகிழ்ச்சியாக இல்லை. 2-வது கணவரிடமும் மன ரீதியாக சேர்ந்து இருக்க முடியவில்லை. இதனால் அதுவும் விவாகரத்தில் முடிந்தது.” இவ்வாறு மீரா வாசுதேவன் கூறினார்.\nPosted in சினிமா செய்திகள், சின்ன‍த்திரை செய்திகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevநெய்யை கூந்தலிலும், உச்சந்தலையிலும் தேய்த்து மசாஜ் செய்தால்\nNextசுருள்முடி கூந்தல் கொண்ட பெண்களே\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்கள���ம் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nVidhya karthik on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/04/blog-post_6.html", "date_download": "2021-08-02T08:38:29Z", "digest": "sha1:DURYGHQAKKAAYXB5V4Y2ZFHR4UZOJVYL", "length": 22857, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலிகளை அழித்தொழிப்பதற்கு நாங்கள் ராஜபக்சவிற்கு உதவினோம். கஜேந்திரன் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலிகளை அழித்தொழிப்பதற்கு நாங்கள் ராஜபக்சவிற்கு உதவினோம். கஜேந்திரன் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.\nபுலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவரான தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முழுமையான ஆதரவை வழங்கியிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nதனது கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததனூடாக தாங்கள் அவ்வியக்கத்தினை ஒழிப்பதற்கு உதவியதாக ஏற்றுக்கொண்டுள்ளார். புலிகள் இயக்கம் மீதான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு பிரித்தானியாவில் சுகபோகம் அனுபவித்த கஜேந்திரன், அங்��ிருந்து இலங்கை அரசிற்கு உதவியதாகவும், யுத்தம் முடிவடைந்த பின்னர் கோத்தபாய ராஜபக்சவுடன் ஒப்பந்தத்தை செய்து கொண்டு இலங்கை வந்ததாகவும் பா.உ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்த விடயம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் புலிகளை அழிப்பதற்கு அன்றைய அரசிற்கு உதவினார் என்பதன் ஊடாக அன்று அக்கூட்டமைப்பில் அங்கத்தவராக இருந்த கஜேந்திரன் தானும் அதற்கு உதவியதை ஏற்றுக்கொள்கின்றார்.\nமேலும் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருந்து தெரிவித்த கஜேந்திரன்:\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள கிராம புரட்சி என்ற 'கம்பெரலிய திட்டத்தை' சிபாரிசு செய்வதாகவும் சாடுகின்றார்.\nதமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காது தொடர்ந்து காலத்தைக் கடத்திவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்கள் நெருங்கி வருவதால், அந்தத் தேர்தல்களில் வாக்கு வங்கிககளை அதிகரித்துக்கொள்வதற்கான கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.\nதமிழ் மக்களை ஏமாற்றி தமக்கான வாக்கு வங்கிகளை அதிகரித்துக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் அரசாங்கத்தின் கம்பெரலிய திட்டத்திற்கு பேராதரவை வழங்குவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கூறுகின்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nபுளொட் உள்வீட்டு படுகொலைகளில் சக தோழி கற்பழிக்கப்பட்டாள். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் அஷோக்-\nதமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அடையாளமாக அதன் உள்வீட்டு படுகொலைகளே எஞ்சியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவிழ்கப்படாத முடிச்சு...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஎந்த பிரபாகரன் கமியூனிசமும் சேகுவரா கதைகளையும் படித்தவர்\nஇந்த மேதகு என்றொரு கதை வந்தாலும் வந்தது, ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். அதில் பிரபாகரன் கம்யூனிசம் படிக்கின்றானாம், சேகுவேரா புத்தகமெல்லாம் வ...\nஅலுக்கோசுகளின் சினிமா தான் \"மேதகு\"\nதூக்குமேடையில் தூக்கு போடும் அலுக்கோசுகள் போன்றே, பிழைப்புவாத ஈழ ஆதரவு தமிழக கும்பல்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளும் குறுகிய வழிபாட்டை ஊக்...\nகொரோணா தொற்றின் பின்னால் ஒழிந்து நின்று நாட்டின் எஞ்சியுள்ளவற்றையும் அரசு விற்கின்றாதாம். சாடுகின்றது ஜேவிபி\nமக்கள் பெரும்தொற்றுக்கு உள்ளாகி வீடுகளுள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எஞ்சியுள்ள சில நிலங்களை விற்க முற்படுகின்றது, பொருத்தமானதும் உ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\n சாத்திரி பேசுகிறேன் பாகம்: மூன்று\nபுலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சக்கைசாத்திரி என்பர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருக்கின்றார். அவர் அங்கு அருளின...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nரவிராஜ் புலிகளின் பெரும் விசுவாசி, அவ்வியக்கத்தினை நேசித்தவர் மட்டுமல்ல மரணத்தின் பின்னர் பிரபாகரனால் மாவீரல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/india/kapil-dev-admitted-to-hospital-due-to-chest-pain", "date_download": "2021-08-02T07:56:05Z", "digest": "sha1:ZOCINBSJN5DX6RHWHWVVCMNDJD6VY7OT", "length": 7957, "nlines": 54, "source_domain": "www.kathirolinews.com", "title": "நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கபில் தேவ்.! - KOLNews", "raw_content": "\nஇதுக்கும் அடிக்கலாம் ஒரு சல்யூட்.. - நெஞ்சில் ஈரத்துடன் டிஜிபி சைலேந்திரபாபு .\n - மத்திய அரசு சொல்வது என்ன ..\nமுதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு .. - டாக்டர்கள் ரவீந்திரநாத் முக்கிய கோரிக்கை\nஎய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை.. - தமிழக அரசு தரப்பில் முக்கிய தகவல்\n85 சதவீத கல்விக்கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்.. தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\n - தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு\nகொரோனா விஷயத்தில் மெத்தனம் வேண்டாம் .. - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு\nநெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கபில் தேவ்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான கபில்தேவ், நெஞ்சுவலி காரணமாக தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அவருக்கு வயது 61.\nகபில் தேவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், 'அதிகாலை ஒரு மணிக்கு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார் கபில்தேவ். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது..\nமுன்னாள் டெஸ்ட் வீரரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவருமான அசோக் மல்ஹோத்ராவும் கபில்தேவ் ஓரளவு தேறி வருவதாகவும் அவருடைய மனைவியுடன் பேசியதில், கபில்தேவ் நேற்று சிறிது உடல்நலக் குறைவுடன் இருந்துள்ளார் என்பது தெரியவந்ததாகவும், ருத்துவமனையில் அவருக்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, கபில்தேவ் விரைவில் குணமடைய வேண்டும் என விராட் கோலி, அணில் கும்லே, கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் ட்விட் செய்துள்ளனர்.\nஇதுக்கும் அடிக்கலாம் ஒரு சல்யூட்.. - நெஞ்சில் ஈரத்துடன் டிஜிபி சைலேந்திரபாபு .\n - மத்திய அரசு சொல்வது என்ன ..\nமுதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு .. - டாக்டர்கள் ரவீந்திரநாத் முக்கிய கோரிக்கை\nஎய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை.. - தமிழக அரசு தரப்பில் முக்கிய தகவல்\n85 சதவீத கல்விக்கட்டண���்தை வசூலித்துக் கொள்ளலாம்.. தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\n - தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு\nகொரோனா விஷயத்தில் மெத்தனம் வேண்டாம் .. - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு\n​இதுக்கும் அடிக்கலாம் ஒரு சல்யூட்.. - நெஞ்சில் ஈரத்துடன் டிஜிபி சைலேந்திரபாபு .\n - மத்திய அரசு சொல்வது என்ன ..\n​முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு .. - டாக்டர்கள் ரவீந்திரநாத் முக்கிய கோரிக்கை\n​எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை.. - தமிழக அரசு தரப்பில் முக்கிய தகவல்\n​ 85 சதவீத கல்விக்கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்.. தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/web-serial-queen-is-not-entirely-a-biopic-on-former-tn-cm-jayalalithaa-it-is-a-fictional-rendition-based-on-her-life-director-gowtham-vasudeva-menon-tells-madras-hc/", "date_download": "2021-08-02T10:05:22Z", "digest": "sha1:XY474MZKYH66HSML44QBIQUHJEB5ROUF", "length": 6030, "nlines": 58, "source_domain": "www.sekarreporter.com", "title": "Web serial Queen is not entirely a biopic on former TN CM Jayalalithaa. It is a fictional rendition based on her life, director Gowtham Vasudeva Menon tells Madras HC – SEKAR REPORTER", "raw_content": "\nNext story என் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள். நானே மனிதத்தின் எதிர்காலம்- நித்யானந்தா மீண்டும் அதிரடி https://t.co/ePtxTGdHRS\nமூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி இராஜலட்சுமி—376 IPC* : 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் மொத்தம் 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி* ஆய்வாளர் ஜோதிலட்சுமி W18 AWPS .\nகொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nமூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி இராஜலட்சுமி—376 IPC* : 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் மொத்தம் 27 வருட கடுங்காவல் தண்டன��� விதிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி* ஆய்வாளர் ஜோதிலட்சுமி W18 AWPS .\nகொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=20310023", "date_download": "2021-08-02T08:50:19Z", "digest": "sha1:VWO5DMZRSPW7SHBGWO3VTPFQ3SISIHYZ", "length": 36884, "nlines": 133, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\n(அதாவது, ‘தமிழ்ச்சினிமாவில் காரண காரியங்களைப் பார்க்கக் கூடாது என்று நினைப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டாம்’ என்னும் பழைய வேண்டுகோளை மீண்டும் நினைவூட்டுகிறேன்.)\nஎம்.ஜி.ஆர் தோன்றி வெளிவந்துள்ள படங்கள் ஒரு ஐந்தாறு இருக்கும். (தேவர் எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஒரு படம்தான் தயாரித்திருக்கிறார்) அவ்வாறே ரஜினி ஒரு நாலைந்து, கமல் ஒரு ஏழெட்டு, சிவாஜி ஒரு டசன் படங்களில் நடித்திருப்பார்கள். இக்காலத்தில் ஆண்டுக்கு மூன்று நான்கு படங்களே வெளிவருகின்றன.\nமுதல் காட்சியிலேயே பிரம்மாண்டமான ஒரு சண்டைக் காட்சியை அமைத்து பார்வையாளர்களை வியக்க வைப்பது ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வழக்கம். அது போல முதல் காட்சியிலேயே ஏதாவது நம்பமுடியாத ஒரு துணுக்குக் காட்சியைக் காட்டிப் பார்வையாளர்களை நறுக்கென்று கிள்ளுவதற்கு இயக்குநர்கள் படாதபாடு படுகிறார்கள். அப்படிக் கிள்ளும்போது இயக்குநரின் பெயரைத் திரையில் காட்டினால் இன்னும் நல்லது.\nஹீரோ, ஹீரோயினிகள் ஒவ்வொரு படத்திலும் தாம் தோன்றும் முதல் காட்சியில் முகத்தை அப்படியே நேராகக் காட்டிவிடுவதில்லை (பெண்களின் முகங்களைவிட மற்ற உறுப்புகள் அதிகக் கவனம் பெறும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்). முகத்தைப் பின்பக்கத்திலிருந்து முன்பக்கம் திருப்போ திருப்பென்று திருப்புகிறார்கள். சில நேரங்களில் அறிமுகமாகின்றவரின் பேச்சுக்குரல் முதலில் கேட்கும். பிறகுதான் கழுத்தை வளைத்து முகத்தைக் காட்டுவார்கள். அப்படியானால் அந்தப் பக்கம் இருக்கிற மரத்தையோ அல்லது சுவரையோ பார்த்தா முதலில் பேசினார்கள் \nஜெயிலர் வந்து ‘இன்று உனக்கு விட��தலை’ என்று சொன்னால்தான் பல கைதிகளுக்கு அன்று தமக்கு விடுதலை என்பதே தெரியும் (இவ்வளவு மூடர்களாக இருப்பவர்கள் சிறையிலேயே இன்னும் கொஞ்ச காலம் இருந்தாலும் பாதகமில்லை.)\nபெரும்பாலான பழைய படங்களில் கிழவன்கள் தமிழ்நாட்டின் கொளுத்தும் வெயிலில் கோட்டு, டையெல்லாம் அணிந்து கொண்டு மரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்து பாட்டுப் பாடிக் காதலிக்கிறார்கள். கோட்டு இல்லை என்றாலும் மற்ற படங்களில் மற்றவர்கள் வெயிலில்தான் ஆடிப் பாடுகிறார்கள். மெதுவோட்டம் ஓடுபவர்களும் நண்பகல் நேரங்களில் ஓடுகிறார்கள். வெயிலில் படிக்கும், வெயிலில் ஓய்வெடுக்கும் காட்சிகளும் உண்டு. (நடிப்புத் தொழில் சுலபம் என்று யார் சொன்னது \nபணக்காரர்கள் எப்போதும் கோட்டு, டையோடுதான் இருக்கிறார்கள்.\nஹீரோக்களைப் பொருத்த வரை அடிதடி சண்டையே பிரச்சினைக்குத் தீர்வு. (போலீஸ்காரர்களே நீதிமன்றத்தை நம்புவதில்லை என்னும் போது இவர்களைக் குற்றம் சொல்லவும் தயக்கமாக இருக்கிறது.) பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாம் என்பதை அறிந்தவர்கள் யாருமிலர்.\nகுழந்தைகள் குழந்தைகளாக இருக்கும் படங்கள் மிகக் குறைவு. அவர்கள் நன்கு பழுத்தவர்கள்; மகா அறிவாளிகள்; சகல கலா வல்லவர்கள். பழைய படங்களில் இவர்கள் குழந்தைகள் போல நடந்துகொள்ள வில்லையென்றாலும் சொந்தக் குரலில் பேசியாவது நடித்தனர். பிறகு குழந்தைக் குரல்களும் காணாமல் போய்விட்டன.\nஅறைக்குள்ளிருக்கும் அலமாரியைத் திறந்தால் கிட்டத்தட்ட எல்லா வீட்டிலும் துப்பாக்கி இருக்கும். துப்பாக்கி வைத்திருப்பது அவ்வளவு சுலபம்.\nவிருந்துச் சாப்பாட்டைப் பார்க்கிற அத்தனைப் பேரும் சோற்றை வாரி வாரி வாயில் போட்டு அப்பிக் கொள்கிறார்கள். தாயார் சோற்றைக் கவளங்களாக உருட்டிக் கையில் வைத்தால்தான் அவர் மடியில் படுத்திருக்கும் தடிப்பிள்ளை சாப்பிடுவான். பாசத்தில் மூழ்கி எழுந்த தாய்க்குலம் பெண் பிள்ளைகளுக்குச் சோறூட்டுவதில்லை.\nஏன் தமிழ்ப்பட நாயகர்களுக்குத் தங்கைகள் மட்டுமே இருக்கிறார்கள் வில்லன் அக்காளைக் கற்பழித்தால் ஆகாதா வில்லன் அக்காளைக் கற்பழித்தால் ஆகாதா அம்மாவையும் தங்கையையும் கட்டிக் கட்டிப் பிடிக்காமல் அன்பைக் காட்ட முடியாது.\nகுடும்பங்கள் தனித் தீவுகள். அக்கம் பக்கத்து வீட்டாரோ, குழந்தைகளின் நண்ப��்களோ இந்த வீடுகளுக்கு வருவதில்லை.\nபாட்டுச் சத்தம் கேட்கும். ஆனால் பாடுபவர்கள் அருகிலேயே இருந்தாலும் எங்கே இருக்கிறார்கள் என்பது தேடுபவர்களுக்குத் தெரியாது. தேடு தேடு என்று மூன்று நான்கு நிமிடங்கள் தேடுவார்கள்.\nதூரத்தில் இருப்பவர்கள் கேமராவின் ‘பிரேமுக்குள்’ தோன்றாதவரை அவர் இங்கிருக்கும் நடிகரின் கண்களுக்குத் தென்படமாட்டார் என்று முன்பு எழுதியிருந்தேன். இது தவறு. அருகில் இருக்கும் நபர் கூட ‘பிரேமுக்குள்’ தோன்றினாலொழிய பக்கத்திலிருக்கும் நடிகரின் கண்களில் தென்படுவதில்லை என்பதே உண்மை.\nமலைமேல் ஒரு கோயில்/நாயகியின் கழுத்தில் அவளது விருப்பமில்லாமல் தாலியைக் கட்ட வில்லன் தயாராகிறான்/சென்னையின் ஏதோ ஒரு சாலையில் நம் ஹீரோ மோட்டார் சைக்களில் விரைகிறான்/வில்லன் தாலியை எடுத்துவிட்டான்/ஹீரோ இன்னும் மோட்டார் சைக்களில் விரைகிறான் /வில்லன் தாலியைக் கட்ட…./அப்பாடா ஹீரோ தடுத்துவிட்டான். அது சரி, ஹீரோ என்ன சூப்பர் மேனா சாதாரண ஆளாக இருந்தால் முதலிரவு முடிவதற்குள் வில்லனைத் தடுப்பதே அரிதாயிற்றே.\nகழுதை வயது இருக்கும் கிராமத்துப் பெண்கள் கூட மாராப்புத் துணி இல்லாமல் பருத்த தனங்களின் மேல் ஒரு ரவிக்கை மட்டும் அணிந்து ஊரைச் சுற்றி வருகிறார்கள். எந்தக் கிராமம் என்றுதான் தெரியவில்லை.\nரகசியம் பேசுகிறவர்கள் கத்துகிற கத்தில் நம் காது கிழிகிறது.\nநடிக்கும் போது பேச்சைப் பதிவு செய்யும் வழக்கம் போய், டப்பிங் அரங்குகளில் வசனங்கள் பதிவு செய்யப்படுவது படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பல வகைகளில் நன்மை அளிக்கலாம். ஆனால் படம் பார்க்கும் போது குரல்கள் தட்டையாக இருப்பது (முக்கியமாகப் பெண் குரல்கள், ஐயோ\nஏதோ படங்கள் வருகின்றன. மக்களும் பார்க்கிறார்கள். பார்ப்பதோடு சரி, அவற்றையொட்டித் தம் வாழ்வை மாற்றிக் கொள்வதில்லை (ஓட்டுப் போடுவதைத் தவிர) என்பது ஆறுதலளிக்கக் கூடிய செய்தி.\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த ���ர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nNext: கனடாவில் நாகம்மா -2\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil4.com/sports/indian-players-fortified-at-the-last-moment-sri-lanka-scored-275-runs/", "date_download": "2021-08-02T09:39:05Z", "digest": "sha1:33E6LKTEJF3GZYQF5KDLEF3GWCBTKLR6", "length": 8376, "nlines": 71, "source_domain": "tamil4.com", "title": "கடைசி நேரத்தில் கோட்டைவிட்ட இந்திய வீரர்கள்; 275 ரன்கள் குவித்த இலங்கை அணி! - Tamil4", "raw_content": "\nகடைசி நேரத்தில் கோட்டைவிட்ட இந்திய வீரர்கள்; 275 ரன்கள் குவித்த இலங்கை அணி\nஇந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்துள்ளது.\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.\nஇந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.\nகொழும்பில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஇதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு பெர்னாண்டோ மற்றும் பனுகா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.\nபோட்டியின் முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்ந்திருந்த போது சாஹல் தனது துல்லியமான பந்துவீச்சால் இந்த கூட்டணியை பிரித்தார்.\nபோட்டியின் 13வது ஓவரின் 2வது பந்தில் பனுகாவின் (36 ரன்கள்0 விக்கெட்டை வீழ்த்திய சாஹல், அதற்கு அடுத்த பந்திலேயே பனுகா ராஜபக்சேவின் (0) விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.\nதுவக்க வீரரான பெர்னாண்டோ 71 பந்துகளில் 50 ரன்கள் குவித்துவிட்டு விக்கெட்டை இழந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாரித் அஸ்லான்கா இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார்.\nஅடுத்தடுத்து வந்த வீரர்கள் சற்று சொதப்பினாலும், கடைசி நேரத்தில் சற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீகா கருணாரத்னே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள இலங்கை அணி 275 ரன்கள் குவித்துள்ளது.\nஇந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் மற்றும் சாஹல் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் , தீபக் சாஹ��் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரைக் கைப்பற்றுமா இந்தியா\nஇலங்கைக்கு எதிரான த்ரில் வெற்றி; உற்சாகத்துடன் கண்டுகளித்த விராட் கோலி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி; காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி\nடோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்குமா\nதம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uber.com/global/ta/cities/texarkana/", "date_download": "2021-08-02T10:30:10Z", "digest": "sha1:POFBWO2VPPETUDRNG4VNIV4Z7WNYDCKN", "length": 11258, "nlines": 155, "source_domain": "www.uber.com", "title": "டெக்சர்கானா: a Guide for Getting Around in the City | Uber", "raw_content": "\nTexarkana: பயணத்தைப் பெறுங்கள். பயணம் செய்யுங்கள். உலகைச் சுற்றிவாருங்கள்..\nUber-இல் பயணத்தைத் திட்டமிடுவது எளிது. பயணம் செய்வதற்கான வழிகளை ஒப்பிட்டு, உங்களுக்கு அருகில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.\n Uber சேவை கிடைக்கின்ற எல்லா நகரங்களையும் பாருங்கள்.\nTexarkana-இல் Uber பயணத்திற்கு முன்கூட்டியே ரிசர்வ் செய்யுங்கள்\nTexarkanaUber-இல் பயணத்தை ரிசர்வ் செய்து, இன்று செய்யத் திட்டமிட்டுள்ள எல்லா வேலைகளையும் செய்து முடியுங்கள். பயணத் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணத்தை முன்பதிவு செய்யலாம்.\nTexarkana: ஒரு பயணத்தைத் தேர்வு செய்யுங்கள்\nஉங்கள் நாட்டில் உள்ள அதே அம்சங்களைப் பயன்படுத்தலாம் (24/7 உதவி, GPS டிராக்கிங், அவசரகால உதவி போன்ற அம்சங்கள் உட்பட).\nTexarkana-இல் Uber Eats டெலிவரி செய்யும் உணவக உணவுகள்\nTexarkana-இல் டெலிவரி செய்யப்படுகின்ற சிறந்த உணவுகள் எவையென்று பார்த்து, ஒரு சில படிகளில் எளிதாக உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்.\nஅனைத்து Texarkana உணவகங்களையும் காண்க\nஇப்போதே Fast food டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Pizza டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Mexican டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Family meals டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே American டெலிவரிக்கு ஆர்டர் செ���்யுங்கள்\nஇப்போதே Comfort food டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Seafood டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Desserts டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Wings டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Pasta டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Asian டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Japanese டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nநகரங்களுடன் நாங்கள் எவ்வாறு பார்ட்னராகச் செயல்படுகிறோம்\nஉங்களுடனான எங்கள் உறவு ஒரு கிளிக்கில்தான் தொடங்குகிறது, நகரங்களில் நீங்கள் இனிமையாகப் பயணிக்கும்போது அது இன்னும் சிறந்த உறவாகிறது. பிறர் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், எதிர்காலத்தில் இன்னும் ஸ்மார்ட்டான, இன்னும் செயல்திறன் மிக்க நகரங்களை உருவாக்கவும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.\nஅடையாளம் நீக்கப்பட்ட எங்களின் தரவு நகர்ப்புறத் திட்டமிடல் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் பகிரப்படும். இது உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமிடல் தொடர்பான முடிவுகளை அவர்கள் தகவலறிந்து எடுக்க உதவிடும்.\nUber ஆப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதை Uber சகித்துக்கொள்வதில்லை. உங்கள் ஓட்டுநர் போதைப்பொருட்கள் அல்லது மதுவின் தாக்கத்தில் இருக்கலாம் என்று நினைத்தால், ஓட்டுநரை உடனடியாகப் பயணத்தை நிறைவு செய்யச் சொல்லுங்கள்.\nவணிக வாகனங்களுக்குக் கூடுதல் மாநில அரசாங்க வரிகள் இருக்கலாம், அவை சுங்கக் கட்டணங்களுடன் கூடுதலாகக் கணக்கிடப்படும்.”\n© 2021 ஊபர் டெக்னாலஜீஸ், இன்க்.\nUber எவ்வாறு வேலை செய்கிறது\nவாகனம் ஓட்டுவதற்கு & டெலிவரி செய்வதற்கு, பதிவுசெய்க\nUber Eats மூலம் உணவு டெலிவரி பெறுக\nவாகனம் ஓட்டுவதற்கு & டெலிவரி செய்வதற்கு, உள்நுழைக\nUber Eats மூலம் உணவு டெலிவரி பெற, உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lanka2020.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F/", "date_download": "2021-08-02T08:37:54Z", "digest": "sha1:F456FTYEP5E66OQHS6U5EYLWT3PMXVSA", "length": 13925, "nlines": 90, "source_domain": "lanka2020.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு - லங்கா2020 Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nHome விளையாட்டு இங்கி���ாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிந்ததும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:\nவிராட் கோலி (கேப்டன்) ரோகித் சர்மா ( துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், இஷன் கிஷான், யுஸ்வேந்திர சகால், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர், திவேதியா, புவனேஷ் குமார், தீபக் சகார், ஷர்துல் தாகூர்,\nஇந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டி 20 போட்டி வரும் மார்ச் 12 ஆம் தேதி தொடங்க உள்ளது.\nவவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…\nநேற்று மதியம் தனியார் பேருந்தொன்றும் புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவன்\nமுடிவுக்கு வந்தது சாய் பல்லவியின் பாடல் சர்ச்சை…\nதைராய்டு பிரச்சனைக்கு குழந்தையின்மைக்கும் தொடர்பு இருக்கா…\nஇலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய ஒப்பந்தம்…\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஅசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.சைவ உணவுதான் உடலுக்கு...\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nவவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுவவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக...\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நில��யத்தில் நேர்ந்த கதி…\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை மன்னாரை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் இன்று அதிகாலை 2.10...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…\nஇலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில்...\nபெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்\nபுகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல்,...\nவிஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை\nஉலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார்.விஷ உணவை...\nமன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…\nமன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் குறித்த வீட்டில் திடீரென தீப்...\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…\nஇலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...\nவவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…\nவவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியு���்ளனர்.பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...\nதிருகோணமலை-குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நபர்\nதிருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத்...\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2012/12/blog-post.html", "date_download": "2021-08-02T10:01:24Z", "digest": "sha1:ARMUSEVR4QFHRKUQTNYKIA4DXFUBR4LX", "length": 16769, "nlines": 168, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்", "raw_content": "\nநடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்\nவித்தியாசமான தலைப்பு. படத்தைப் பற்றிய செய்தி வெளியானபோதே பார்க்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். குறுகியகால நினைவிழப்பு பற்றிய கதை என்று தெரிந்திருந்தாலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் திரையரங்கிற்குள் நுழைந்தேன்.\nசென்சார் சான்றிதழில் படத்தின் நீளம் 176 நிமிடங்கள் என்று பார்த்ததும் சற்றே பதற்றமானேன். இத்தனைக்கும் சுவாரஸ்யம் கருதி இருபத்தி ஐந்து நிமிடங்கள் கத்தரிக்கப்பட்டதாம்.\n“இவருதாங்க நம்ம ஹீரோ\" என்று வாய்ஸ் ஓவரில் கேட்டு வெறுத்துப்போன நமக்கு, டைட்டில் பாடலிலேயே ஹீரோ யார் எப்படிப்பட்டவர் என்று புரியவைப்பது புதுமை. டெம்ப்ளேட்டா சொல்லனும்னா “அடிச்சான் பார்யா மொத பால்லயே சிக்ஸர். தவிர குறைந்தது பத்து பதினைந்து நிமிடங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை மூன்றே முக்கால் நிமிடங்களிலேயே சொல்லி விடுகிறது டைட்டில் பாடல்.\nநாயகன் விஜய் சேதுபதி. தற்போதைய லோ பட்ஜெட் படைப்பாளிகளின் நாயகனாக உருவெடுத்திருக்கிறார். பீட்சாவில் பார்த்த மாதிரியே சிரத்தை எடுக்க தேவையில்லாத கேரக்டர். ஒரு செட் வசனங்களையும், முகபாவனைகளையும் சலிக்காமல் படம் முழுக்க தொடர���ந்திருக்கிறார். எனினும் தானும் சலிப்படையாமல் பார்ப்பவர்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தாமல் நடித்திருக்கிறார்.\nநாயகி காயத்ரியை பார்த்ததும் “ப்பா... யார்றா இந்தப்பொண்ணு... பேய் மாதிரி இருக்குறா...” என்று சொல்லத்தோன்றுகிறது. காயத்ரியை போட்டோஷூட்டில் தான் அதிகமாய் பயன்படுத்தியிருப்பார்கள் போலத் தெரிகிறது. முக்கால்வாசி படம் முடிந்தபிறகு தான் வருகிறார். நடிப்பையும் எதையும் காட்ட வாய்ப்பில்லாத கேரக்டர். பாவம்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலம் பக்ஸ், பஜ்ஜி, சரஸ். இவர்களுடைய முழுப்பெயரை இவ்வாறு சுருக்கி அழைப்பதே ஒரு சுவாரஸ்யம். மூவரும் நம்மைச் சுற்றியிருக்கும் நிஜ நண்பர்களை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். பஜ்ஜியுடைய உடல் மொழி, வசன உச்சரிப்பு நம்மை அநியாயத்திற்கு சிரிக்க வைக்கிறது. ஒவ்வொரு நண்பர்கள் குழுவிலும் பஜ்ஜி மாதிரி ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஉறவுக்காரர்களாக வருபவர்கள் பெரும்பாலும் புதுமுகங்களாகவே இருப்பதுகூட நமக்கு ஒருவித எதார்த்த உணர்வை தந்து படத்தின் பலத்தை கூட்டுகிறது.\nமதுபான கடைக்கு இசையமைத்த வேத் சங்கர் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அது தேவைப்படவும் இல்லை. பின்னணியிசையில் குறைவில்லை. வசனம் எழுதியவருக்கு அதிக வேலைகள் இல்லை. நான்கைந்து வசனங்களை வைத்து படம் முழுவதையும் ஓட்டி விடுகிறார் :) கேலிகள் ஒருபுறம். போங்காட்டம் ஆடுறான், அல்லு கெளம்புது என்று கிடைத்த இடைவெளிகளில் நேட்டிவிட்டி நிறைந்த வசனங்கள்.\nதேவையில்லாத காட்சிகள் படத்தில் இல்லையெனினும், கலைப்படங்கள் போல படியிறங்குவதையெல்லாம் காட்டுவது, ஆழமான விளக்கமளிக்கும் வசனங்கள் போன்றவற்றை தவிர்த்து இன்னுமொரு இருபத்தைந்து நிமிடங்களையாவது குறைத்திருக்கலாம். லோ பட்ஜெட் படம் என்பதால் திருமண மண்டபத்தில் சுமார் முப்பது, நாற்பது நாற்காலிகள் மட்டும் போடப்பட்டிருப்பதெல்லாம் லொள்ளு சபா விளைவு தருகிறது.\nஇது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்று சொல்வதை மட்டும் முழுமையாக நம்ப முடியவில்லை. based on a true story என்று போட்டுக்கொள்வது இப்போது ஃபேஷனாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குனர் உண்மை சம்பவம் என்று சொல்லி சினிமா எடுத்தார். படம் எடுத்து, ஓடி முடித்து வெகு நாட்கள் கழி���்து அது உண்மை சம்பவமெல்லாம் இல்லை, சுவாரஸ்யம் கூட்டுவதற்காகவே அப்படிச் சொன்னேன் என்றார். (அநேகமாக காதல் படமெடுத்த பாலாஜி சக்திவேல் என்றே நினைக்கிறேன்). இந்த பாலாஜியும் அப்படி நினைத்திருக்கலாம். ஏனென்றால் மணமகனுக்கே தெரியாமல் ஒரு திருமணம் நடந்தது என்று சொன்னால் நம்பவா முடிகிறது.\nகதைப்படி நாயகன் தன் பெரியப்பா மகனோடு சண்டைப்போட்டுக்கொள்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் நாயகனுக்கு மறந்துவிட்டது. தயங்கி தயங்கி மறுபடியும் வீட்டுக்கு வந்திருக்கிறார் பெரியப்பா மகன். நாயகன் அவரைக் கண்டதும் முகமலர்ந்து, கட்டியணைத்து, நலம் விசாரிக்கிறார். பெரியப்பா மகனும் ச்சே பழைய விஷயத்தை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் பாசமாக நடந்துக்கொள்கிறானே என்று நெகிழ்கிறார். படத்தில் இது நகைச்சுவையாகவே சொல்லப்பட்டிருந்தாலும் நாம் தத்துவார்த்தமாக புரிந்துக்கொள்ளுதல் நலம். ஞாபகம் என்பதே ஒரு நோய். சில மனக்கசப்புகளை, கவலைகளை ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் மாதிரி மறந்துவிட்டால் வாழ்க்கையை எளிதாக அணுகலாம் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.\nதர்க்க ரீதியாக யோசிக்க முற்படும்போது இது ஒன்றும் அவ்வளவு அருமையான படம் இல்லையே என்று தோன்றினாலும் மூன்று மணிநேரம் முழுக்க நம்மை அறியாமல் நாம் சிரித்திருக்கிறோம் என்பது ந.கொ.ப.கா குழுவினருக்கு கிடைத்த வெற்றி.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 11:00:00 வயாகரா... ச்சே... வகையறா: சினிமா விமர்சனம்\nஉங்க ரசனையே இவ்வளவு தானா சீரியல் டைப் காமெடி மட்டும் தான் படத்தில் இருக்கு.\nபட காமெடிய விட படம் நீங்க பார்த்துட்டு பண்ண காமெடி சூப்பர்.. :-)\n#தர்க்க ரீதியாக யோசிக்க முற்படும்போது இது ஒன்றும் அவ்வளவு அருமையான படம் இல்லையே என்று தோன்றினாலும் மூன்று மணிநேரம் முழுக்க நம்மை அறியாமல் நாம் சிரித்திருக்கிறோம் என்பது ந.கொ.ப.கா குழுவினருக்கு கிடைத்த வெற்றி.# உண்மையான வார்த்தைகள் . எனக்கு ஒரு பக்கம் படம் மிகவும் பிடித்திருந்தது இன்னொரு பக்கம் கொஞ்சம் காமெடி நாடகம் போன்ற உணர்வையும் கொடுத்தது . இருந்தாலும் இது போன்ற முயற்சிகளை பாராட்டுவது நல்ல சினிமா ரசிகனின் கடமை ...\nபிரபா... பெரும்பாலும் நான் சினிமா விமர்சனங்கள் படிப்பதில்லை... ஆனால் கொஞ்ச நாட��களாக உங்களுடைய விமர்சனங்களை மட்டும் ஒன்று விடாமல் படிக்கத்தொடங்கியிருக்கிறேன். ஒருசில படங்களையும் உங்கள் விமர்சனத்தின் விளைவாக பார்த்திருக்கிறேன்... நல்ல அனலைசிங் திறன் உங்களுக்கு... வாழ்த்துக்கள் பிரபா.\nசுஜாதா இணைய விருது 2019\nகனவுக்கன்னி 2012 - பாகம் 2\nகனவுக்கன்னி 2012 - பாகம் 1\nநான் ரசித்த சினிமா 2012\nநடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zw-trailer.com/product-list/flatbed-semi-trailer", "date_download": "2021-08-02T08:32:30Z", "digest": "sha1:JI2WBKZY2O4UJFSPCMOTW5QLBLIT3G62", "length": 30822, "nlines": 187, "source_domain": "ta.zw-trailer.com", "title": "", "raw_content": "\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nஷிப்பிங் டேன்டெம் பிளாட்பெட் கொள்கலன் டிரக் டிரெய்லர்\nடேன்டெம் பிளாட்பெட் அரை டிரெய்லர் பல்வேறு கொள்கலன்களின் போக்குவரத்துக்கு சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது. டேன்டெம் பிளாட்பெட் அரை டிரெய்லரை போதுமான வலிமையுடன் நீண்ட நேரம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். கொள்கலன் டிரான்ஷிப்மென்ட்டுக்கு பயன்படுத்தப்பட்டால், பொருட்களை நேரடியாக சரக்குதாரரின் கிடங்கில் ஏற்றலாம், பின்னர் இறக்குவதற்கு சரக்கு கிடங்கிற்கு அனுப்பலாம். வாகனம் அல்லது கப்பல் நடுப்பகுதியில் மாற்றப்படும்போது, ​​பெட்டியிலிருந்து பொருட்களை வெளியே எடுத்து அவற்றை மாற்ற வேண்டிய அவசியமில்லை.\nடேன்டெம் பிளாட்பெட் அரை டிரெய்லரை விரைவாக ஏற்றலாம் மற்றும் இறக்கலாம், மேலும் ஒரு போக்குவரத்திலிருந்து இன்னொரு போக்குவரத்திற்கு எளிதாகவும் நேரடியாகவும் மாற்றலாம். டேன்டம் பிளாட்பெட் அரை டிரெய்லர் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பொருட்களை நிரப்பவும் இறக்கவும் எளிதானது. வாடிக்கையாளர் தேவைகளின்படி டேன்டெம் பிளாட்பெட் அரை டிரெய்லர் நிலையான தரம் மற்றும் நம்பகமான செயல்திறனைக் கொண்டுள்ளது.\nகப்பல் கொள்கலன் டிரெய்லர் டேன்டெம் பிளாட்பெட் அரை டிரெய்லர் கொள்கலன் டிரக் டிரெய்லர்\nவணிக 48 அடி பிளாட்பெட் டிரெய்லர்\n48 அடி பிளாட்பெட் டிரெய்லர் என்பது ��ொள்கலன் அமைப்பைக் கொண்ட அரை டிரெய்லர் ஆகும். பிளாட்பெட் டிரெய்லர் முக்கியமாக கப்பல்கள், துறைமுகங்கள், வழிகள், நெடுஞ்சாலைகள், பரிமாற்ற நிலையங்கள், பாலங்கள், சுரங்கங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சாலை மற்றும் மல்டிமாடல் போக்குவரத்தின் தளவாட அமைப்பு.\n(1 various இது பல்வேறு கொள்கலன்களின் போக்குவரத்துக்கு சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இது போதுமான பலத்துடன் நீண்ட நேரம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படலாம்.\n(2) சரக்குகளை நேரடியாக சரக்குதாரரின் கிடங்கில் ஏற்றலாம் மற்றும் டிரான்ஷிப்மென்ட்டுக்கு கொள்கலனைப் பயன்படுத்துவதன் மூலம் சரக்குதாரரின் கிடங்கில் இறக்கலாம். வாகனம் அல்லது கப்பல் நடுப்பகுதியில் மாற்றப்படும்போது, ​​மாற்றுவதற்காக பெட்டியிலிருந்து பொருட்களை வெளியே எடுக்க வேண்டிய அவசியமில்லை.\n(3) இது வேகமாக ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றைச் செய்ய முடியும், மேலும் வணிக ரீதியான பிளாட்பெட் டிரெய்லரை ஒரு போக்குவரத்து வழிமுறையிலிருந்து இன்னொரு இடத்திற்கு நேரடியாகவும் எளிதாகவும் மீண்டும் ஏற்ற முடியும்.\n(4 customers வாடிக்கையாளர்களின் தனிப்பயனாக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் இது வசதியானது. வாடிக்கையாளருக்கு ஏற்ப கருவி உத்தரவாதம், நிலையான தரம், நம்பகமான செயல்திறன் தேவை.\n48 அடி பிளாட்பெட் டிரெய்லர் வணிக பிளாட்பெட் டிரெய்லர் பிளாட்பெட் டிரெய்லர்\nஹெவி டியூட்டி 40 அடி பிளாட்பெட் கொள்கலன் அரை டிரெய்லர்\nபிளாட்பெட் கொள்கலன் அரை டிரெய்லர் பல்வேறு கொள்கலன்களின் போக்குவரத்துக்கு சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது. ஹெவி டியூட்டி பிளாட்பெட் டிரெய்லரை நீண்ட நேரம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், போதுமான வலிமை, நிலையான தரம் மற்றும் நம்பகமான செயல்திறன்.\nஎங்கள் 40 அடி பிளாட்பெட் டிரெய்லர் அனைத்து ஆப்பிரிக்க பிராந்தியங்களுக்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வெவ்வேறு பாணிகள், வெவ்வேறு அளவுகள், வெவ்வேறு உள்ளமைவுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் சிறப்புத் தேவைகள் ஆகியவற்றின் படி, நாங்கள் தனிப்பயனாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளலாம்.\nஹெவி டியூட்டி பிளாட்பெட் டிரெய்லர் தயாரிப்பு பயன்பாடு: 40 அடி பிளாட்பெட் டிரெய்லர் கொள்கல��்கள், எஃகு, குறிப்பாக எஃகு ஆலைகள் மற்றும் எஃகு விநியோக மையங்களை எஃகு சுருள்கள் மற்றும் தட்டுகளை மாற்றுவதற்காக கொண்டு செல்ல முடியும்.\n40 அடி பிளாட்பெட் டிரெய்லர் பிளாட்பெட் கொள்கலன் அரை டிரெய்லர் ஹெவி டியூட்டி பிளாட்பெட் டிரெய்லர்\n53 அடி பிளாட்பெட் டிராக்டர் டிரெய்லர் பரிமாணங்கள்\nபிளாட்பெட் டிராக்டர் டிரெய்லர் 20 அடி, 40 அடி, 45 அடி மற்றும் 53 அடி போன்ற பல்வேறு கொள்கலன்களை கொண்டு செல்ல விசேஷமாக பயன்படுத்தப்படுகிறது. பிளாட்பெட் டிராக்டர் டிரெய்லர் பரிமாணங்கள் தனிப்பயனாக்கப்பட்டுள்ளன.\nபிளாட்பெட் டிராக்டர் டிரெய்லரின் பல்வேறு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பிளாட்பெட் டிராக்டர் டிரெய்லரின் உற்பத்தி நிலையான தரம் மற்றும் நம்பகமான செயல்திறனுடன் கருவி மூலம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. உயர் செயல்திறன் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அச்சுகள் ஏபிஎஸ் அமைப்புடன் விருப்பமாக கிடைக்கின்றன, இது ஓட்டுநர் பாதுகாப்பை கணிசமாக அதிகரிக்கும்.\nபிளாட்பெட் டிரெய்லர் பரிமாணங்கள் 53 அடி பிளாட்பெட் டிரெய்லர் பிளாட்பெட் டிராக்டர் டிரெய்லர்\n12 மீ 20 கால் பிளாட்பெட் அரை டிரெய்லர்\n12 மீ பிளாட்பெட் அரை டிரெய்லர் அரை டிரெய்லரின் அடிப்படை வகை, நடுத்தர மற்றும் நீண்ட தூர போக்குவரத்தில் பல்துறை. கட்டுமானப் பொருட்கள், மரம் வெட்டுதல் மற்றும் பிற சரக்குகளை பெரிய பரிமாணத்துடன் கொண்டு செல்லவும் இது பயன்படுத்தப்படலாம், எனவே இது உங்கள் செலவைக் குறைத்து வணிகத்தை எளிதாக்கும்.\nவாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப எங்கள் பொறியாளர்களால் உள்ளமைவு வடிவமைக்கப்படும். முக்கோணம், லிங்லாங் மற்றும் பிற சீனாவின் பிரபலமான பிராண்டுகள் போன்ற நம்பகமான டயர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம், அவை விருப்பமானவை. ஃபுவா மற்றும் பிபிடபிள்யூ போன்ற புகழ்பெற்ற அச்சு பிராண்டுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\n12 மீ பிளாட்பெட் அரை டிரெய்லர் 20 அடி பிளாட்பெட் டிரெய்லர் பிளாட்பெட் அரை டிரெய்லர்\n40 அடி 50 டன் பிளாட்பெட் கொள்கலன் அரை டிரெய்லர்\nஎங்கள் பிளாட்பெட் கொள்கலன் அரை டிரெய்லர் அரை டிரெய்லரின் அடிப்படை வகை, நடுத்தர மற்றும் நீண்ட தூர போக்குவரத்தில் பல்துறை. இது கொள்கலன்களைக் கொண்டு செல்வதற்க�� ஏற்றது, அதாவது 40 அடி பிளாட்பெட் அரை டிரெய்லர்கள் ஒரு 40 அடி கொள்கலன் அல்லது இரண்டு 20 அடி கொள்கலன்களைக் கொண்டு செல்ல முடியும். 40 அடி பிளாட்பெட் கொள்கலன் அரை டிரெய்லரை கட்டுமான பொருட்கள், மரம் வெட்டுதல் மற்றும் பிற சரக்குகளை கொண்டு செல்ல பயன்படுத்தலாம். அரை டிரெய்லர் பிரேம்களின் தொடர் பீம்-வகை கட்டமைப்பைக் கொண்டது, மற்றும் நீளமான விட்டங்கள் நேராக அல்லது கூசெனெக் வகையைச் சேர்ந்தவை. வலை உயரம் 400 மிமீ முதல் 550 மிமீ வரை, நீளமான கற்றை தானியங்கி நீரில் மூழ்கிய வில் வெல்டிங் மூலம் பற்றவைக்கப்படுகிறது, பிரேம் சுட்டுக்கொள்ளப்படுகிறது, பீம் ஸ்ட்ரிங்கரில் திருத்தப்பட்டு வெல்டிங் செய்யப்படுகிறது.\n40 அடி பிளாட்பெட் கொள்கலன் அரை டிரெய்லர் 40 அடி பிளாட்பெட் அரை டிரெய்லர் 50 டன் பிளாட்பெட் டிரெய்லர்\nமூன்று ஆக்சில் 48 அடி 40 டன் பிளாட்பெட் அரை டிரெய்லர்\nஅதிநவீன தொழில்நுட்பம்: மூன்று அச்சு பிளாட்பெட் டிரெய்லர்களின் முக்கிய கூறுகள் மேம்பட்ட உபகரணங்களால் செயலாக்கப்படுகின்றன, நீளமான விட்டங்கள் முழு தானியங்கி கண்காணிப்பு நீரில் மூழ்கிய வில் வெல்டிங் இயந்திரத்தால் பற்றவைக்கப்படுகின்றன; வாகனத்தின் பாகங்கள் சுடப்படுகின்றன, இது வண்ணப்பூச்சின் ஒட்டுதலை பெரிதும் அதிகரிக்கிறது, மேலும் சட்டசபை பாகங்கள் முதலில் வர்ணம் பூசப்பட்டு பின்னர் கைவினைத்திறனைக் கூட்டுகின்றன. மூன்று அச்சு பிளாட்பெட் டிரெய்லரின் பிரேம் என்பது 16Mn ஆட்டோமோட்டிவ் ஸ்டீல் தகடுகள் மற்றும் உயர் வலிமை கொண்ட எஃகு தகடுகள் மற்றும் விட்டங்களின் மூலம் ஒருங்கிணைந்த வெல்டட் நீளமான விட்டங்களால் ஆன ஒரு விண்வெளி சட்ட கட்டமைப்பாகும். கட்டமைப்பு நியாயமானது மற்றும் தாங்கும் திறன் வலுவானது. அச்சு: இறக்குமதி செய்யப்பட்ட அல்லது உள்நாட்டு உயர்தர பிராண்ட் அச்சுகளைப் பயன்படுத்துங்கள், மேலும் வாகனத்தின் ஓட்டுநர் பாதுகாப்பை மேம்படுத்த உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நன்கு அறியப்பட்ட பிராண்டுகளின் ஏபிஎஸ் எதிர்ப்பு பூட்டு பிரேக் முறையைத் தேர்வுசெய்க.\n48 அடி பிளாட்பெட் டிரெய்லர் 40 டன் பிளாட்பெட் அரை டிரெய்லர் மூன்று அச்சு பிளாட்பெட் டிரெய்லர்\n45 அடி பிளாட்பெட் டிரக் டிரெய்லர் யு.கே.\n45 அடி பிளாட்பெட் டிரெய்லர் பயன்பாடு மற்றும் சூழல்: (1) போக்குவரத்து தூரம்: குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூர போக்குவரத்துக்கு ஏற்றது. (2) சுற்றுச்சூழலின் பயன்பாடு: நகர்ப்புற சாலைகள், நெடுஞ்சாலைகள் போன்றவை (3) பொருட்களின் வகை: கொள்கலன், எஃகு , போன்றவை. பெரிய உள்நாட்டு எஃகு தொழிற்சாலையிலிருந்து எஃகு அயனி, உள்நாட்டு நல்ல பிராண்டுகளின் முக்கிய டிரெய்லர் பாகங்கள் அயனி. பெயிண்ட் நன்கு அறியப்பட்ட பிராண்ட் தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறது, ப்ரீ-ஸ்ப்ரே துருப்பிடிக்காத அண்டர்கோஸ்ட், பிளாட்பெட் டிரக் டிரெய்லரின் உடலில் நல்ல அரிப்பு தடுப்பு, துருப்பிடிக்காத செயல்திறன் இருப்பதை உறுதி செய்ய.\n45 அடி பிளாட்பெட் டிரெய்லர் பிளாட்பெட் டிரெய்லர் யு.கே. பிளாட்பெட் டிரக் டிரெய்லர்\n3 ஆக்சில் 40 அடி பிளாட்பெட் பிளாட் பெட் அரை டிரெய்லர்\n3 அச்சுகள் பிளாட்பெட் அரை டிரெய்லர் 2x20 அடி, 40 அடி போன்ற பல்வேறு கொள்கலன்களின் போக்குவரத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 40 அடி பிளாட்பெட் டிரெய்லர் ஒரு நியாயமான அமைப்பு, நம்பகமான செயல்பாடு மற்றும் அழகான தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிளாட் பெட் டிரெய்லரின் பல்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். நிலையான உற்பத்தி மற்றும் நம்பகமான செயல்திறன் கொண்ட முழு உற்பத்தியும் தொழில்நுட்பத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எஃகு பொருட்கள் உள்நாட்டு பெரிய அளவிலான எஃகு ஆலைகளிலிருந்து வருகின்றன; நம்பகமான தரத்துடன் உள்நாட்டு பிரபலமான பிராண்டுகளால் வாங்கப்பட்ட முக்கிய பாகங்கள். 40 அடி பிளாட்பெட் டிரெய்லர் சுடப்பட்டு வெல்டிங் அழுத்தத்தை நீக்குகிறது. பிளாட்பெட் அரை டிரெய்லர் உடலில் நல்ல அரிப்பு எதிர்ப்பு மற்றும் துரு எதிர்ப்பு செயல்திறன் இருப்பதை உறுதிப்படுத்த வண்ணப்பூச்சு நன்கு அறியப்பட்ட பிராண்ட் தயாரிப்புகளான ப்ரீ-ஸ்ப்ரே ஆன்டி-ரஸ்ட் ப்ரைமர் பயன்படுத்துகிறது.\n3 அச்சு பிளாட்பெட் அரை டிரெய்லர் 40 அடி பிளாட்பெட் டிரெய்லர் தட்டையான படுக்கை டிரெய்லர்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர���\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nஹோவ் டிரக் டிராக்டர் அலகுகள் பயன்படுத்தப்பட்டன\nசரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் பக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் கேரியர் டேங்கர் டிரெய்லர்\nகுறைந்த பிளாட்பெட் லோபெட் அரை டிரக் டிரெய்லர்\n ஷிஜோங் மாவட்டம், ஜினான் நகரம், சாண்டோங் மாகாணம்\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\n© ஷாண்டோங் ஜுவோவி இன்டர்நேஷனல் டிரேடிங் கோ, லிமிடெட் + 86-15216409270 ivan@zw-trailer.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sampspeak.in/2020/10/thirukkadanmallai-mahabalipuram-sri.html", "date_download": "2021-08-02T10:21:42Z", "digest": "sha1:43BCEJMBHFVDJQ5KCSIUSN6GSFPV6A3A", "length": 21285, "nlines": 343, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thirukkadanmallai [Mahabalipuram] - Sri Boothath Azhwar Sarrumurai 2020", "raw_content": "\nதமிழில் இலக்கியமோ, சரித்திரமோ அல்லது குறைந்தபட்சம் கதைகளோ படிக்கும் அனைவரும் இதை படித்திருப்பார்கள். இந்த நவீனம் இவ்வாறாக துவங்குகிறது.\n\"இளவேனிற் காலத்தில் ஒருநாள் மாலை மகேந்திர தடாகத்தின் கரை வழியாகச் சென்ற இராஜபாட்டையில் பிரயாணிகள் இருவர் காஞ்சி மாநகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஆறடி உயரத்துக்குமேல் வளர்ந்திருந்த ஆஜானுபாகு; காவி வஸ்திரம் தரித்த பௌத்த சந்நியாசி. கடுமையான தவ விரத அனுஷ்டானங்களினாலோ, வேறு கடினமான காரியங்களில் ஈடுபட்டதனாலோ, அந்தப் புத்த பிக்ஷுவின் தேகமானது வறண்டு கெட்டிப்பட்டுக் கடினமாகியிருந்தது. அவருடைய முகத் தோற்றமானது அன்பையோ, பக்தியையோ உண்டாக்குவதாயில்லை; ஒருவித அச்சத்தை ஊட்டுவதாயிருந்தது\"\n .. .. இது - \"சிவகாமியின் சபதம்,\" 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த கல்கி இரா கிருஷ்ணமூர்த்தி எழுதிய சரித்திர கதை. பல்லவர்களின் தலைநகரான காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். தலைப்பு எந்த மன்னர்களின் பெயரும் அல்ல. கதையில் ஒரு கற்பனை பாத்திரம் - ஒரு சிற்பி. ஆயனர் என்று பெயர் அவருக்கு - அவரது பெண்தான் 'சிவகாமி'. பதினொன்றாம் பாகத்தில் - ஆயனரின் கலைக்கூடம் விவரிக்கப்படுகிறது. கடல்மல்லைத் தீவின் தென்பகுதியில் விஸ்தாரமான வெட்டவெளிப் பிரதேசத்தில் வரிசையாக ஐந்து சிறு குன்றுகள் நின்றன. அவற்றில் மூன்று குன்றுகளில் நூற்றுக்கணக்கான சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குன்றையும் குடைந்து கோயில் வடிவமாக அமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கோயிலில் முன் மண்டபத்தைத் தூண்கள் வேலையாகிக் கொண்டிருந்தன.\nபகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் தாம் ஆழ்வார்கள், ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே தனி தெய்வம் என்று எம்பெருமானிடத்திலே அடிமை செய்து இருந்தவர்கள், மயர்வற மதிநலம் அருள்பெற்ற ஆழ்வார்கள். இவர்களில் பொய்கை, பூதம், பேய் எனும் மூவர் முதல் ஆழ்வார்கள் என போற்றப்படுவர்கள். இவர்கள் சம காலத்தவர் ~ மூவரும் மதிட்கோவல் இடைகழி என திருக்கோவலூரிலே ஒரு மழை காலத்திலே இருந்து, எம்பெருமானது பரம போக்கியதாலே அவனை போற்றி மூன்று திருவந்தாதிகளை நமக்கு அளித்தனர்.\nஇன்று (25.10.2020) பூதத்தார் அவதரித்த நாள். முதலாழ்வார் மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர் நம் பூதத்தாழ்வார். இவரும் தொண்டை நாட்டில் பிறந்தவரே. கடல்மல்லை ஸ்தலத்தில், குருக்கத்திப் பந்தலில், ஒரு குருக்கத்தி மலரில் ஐப்பசித் திங்களில் அவிட்ட நக்ஷத்திரத்திலே, எம்பெருமானின் கதையின் திருவம்சமமாய் அவதரித்தவர். வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள். எம்பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது. அதாவது பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமைசெய்யப்பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் நம் ஸம்ப்ரதாய பெரியவர்கள் வாக்கு. இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.\nதிறம்பா வழி சென்றார்க் கல்லால், - திறம்பாச்*\nசெடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்*\nபிறிதொரு தெய்வம் யாவையும் உபாசிக்காமல், தென்னரங்கத்திலே பள்ளிகொண்ட அந்த அரங்கநாதனே கதி என்றிருப்பாருக்கு - மிக்க அறணையுடைய அற்புத மாநகரத்தின் கதவுகள், தாமாகவே திறக்கும் என்கிறார் : பூதத்து ஆழ்வார்\nஅழகிய பட��்கள், ஆழ்வார் பற்றிய குறிப்புகள், மற்றும் சரித்திரம், கல்கியின் வர்ணனை எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது .nice.\nகைத்தலம் நோவாமே அம்புலீ கடிதோடி வா. `Moon's ...\nகரந்து எங்கும் பரந்துளன் ~ glory of Sriman Narayan...\nPurattasi Sani 4 - 2020 : வைட்டணவனென்னும் வன்மை\nSri Ramanujar Thiruther ~ எனக்குற்ற செல்வம் இராமான...\nThiruppanar ~ அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள்\nகேழலாய்ப் பூமி இடந்தானை ஏத்தியெழும் ~ Praying Em...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://teakadaibench.com/tag/gk/", "date_download": "2021-08-02T10:04:58Z", "digest": "sha1:R6DDBFAK2VNDPS4ZJVARV5EV3IFACYKZ", "length": 3456, "nlines": 114, "source_domain": "teakadaibench.com", "title": "gk - Tea Kadai Bench", "raw_content": "\nரூபாய் பற்றிய 24 சுவாரஸ்யமான உண்மைகள்..\nஅன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்\nபச்சை பயிறு நன்மைகள் (Green gram Benefits)\nவரலாற்றில் இன்று 12 May 2021\nஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்‌‌ பிறந்த தினம்\nவரலாற்றில் இன்று 12 May 2021\nசர்வதேச செவிலியர் தினம் - International Nurse Day\nயானை குறித்து சுவாரஸ்ய தகவல்கள்\nவரலாற்றில் இன்று 15 April 2021\nஆபிரகாம் லிங்கன் நினைவு தினம் இன்று ...\nபனைமரம் சாகுபடி முறைகள் & பயன்கள்\nகோனார் தமிழ் உரையின் வரலாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Cinema/actor-rajinikanth-donates-corona-funds-to-chief-minister", "date_download": "2021-08-02T09:34:31Z", "digest": "sha1:P6MUB542T7KQRXUBBVTEEUTMP7OKFKBZ", "length": 5152, "nlines": 87, "source_domain": "www.fnewsnow.com", "title": "முதலமைச்சரிடம் நேரில் கொரோனா நிதி அளித்த நடிகர் ரஜினிகாந்த்! | Actor Rajinikanth donates Corona funds to Chief Minister - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nமுதலமைச்சரிடம் நேரில் கொரோனா நிதி அளித்த நடிகர் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டப் பணிகளுக்கு தமிழக அரசுக்கு உதவிடும் வகையில், நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோர் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர்.\nஅந்த வகையில், இன்று (17/05/2021) சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ���ூபாய் 50 லட்சத்தை வழங்கினார்.\nஅதேபோல், நடிகர் விக்ரம் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வங்கிப் பரிவர்த்தனை மூலமாக ரூபாய் 30 லட்சம் வழங்கியுள்ளார்.\nஏ.பி. நாகராஜன் யார் தெரியுமா\nமறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் பற்றி தெரியாத தகவல்\nஉயர்ந்த மனிதன் (1968) படத்தை பற்றிய தகவல்\nவிஜய் நடிக்கும் 65-வது படத்தில் பெயர் ‘பீஸ்ட்’ (BEAST)\nசூர்யாவின் 40வது படத்தின் டைட்டில் ‘மாஸ்’ஆக இருக்கும்\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/", "date_download": "2021-08-02T10:25:16Z", "digest": "sha1:5VVJFWVLBQAZQ45E6WLAMD3GTEBU27AB", "length": 18500, "nlines": 217, "source_domain": "www.jananesan.com", "title": "ஜனநேசன்", "raw_content": "\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக சென்று சுகாதாரத் துறையினர் ஆய்வு\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5 நாட்களுக்கு தடை.\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை.\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில் “இஸ்லாமிய பெண்கள் உரிமை தினம்”: நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி கடைப்பிடிப்பு.\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும் – இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் மோடி உரையாடல்\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக சாதனை படைத்த சத்குரு\nபல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலமடைந்து உள்ளது : மத்திய அமைச்சர் தகவல்..\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில�� கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nவிடியல்கார அண்ணாச்சி டீசல் விலை என்னாச்சு..\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக, அதிமுக சார்பில் இன்று கவன…\nபழுதான சாலைகளை சீரமைக்க பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.\nமதுரை நகரில் பழுதான சாலைகளை, மாநகராட்சி நிர்வாகம் பழுது நீக்க வேண்டும் என,…\nமுஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது…\nமுஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல் ஏழை இந்து…\n“பெட்ரோல் – டீசல்” விலையை குறைப்போம் என தேர்தல்…\nபெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது தயக்கம்…\nநீட் தேர்வின் விவகாரத்தால் மாணவர்களுக்கு ஏமாற்றத்தை திமுக முதல்…\nநம்பி ஓட்டு போட்டு போட்டோம் நடுத்தெருவில் நிற்கிறோம் என மக்கள் கருத்து தற்போது…\nதமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம்..\nதமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nகொரோனா பரவலை கட்டுபடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி…\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\nதமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம்…\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்…\nதமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமதுரை மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் முயற்சியாக, மதுரையில் பக்தர்களின்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\nபிரபல சமூக வலைத்தளமான கிளப் ஹவுஸில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்ற…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nகொரோனா பரவலை கட்டுபடுத்��� முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ…\nதிருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு…\nகொரோனா தொற்று பரவல் 2-வது அலையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி…\nதிருப்பரங்குன்றம் கோவிலில் ஆடி மாத கிரிவல நிகழ்ச்சி ரத்து…\nமுருகனின் அறுபடைவீடுகளின் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில்…\nதிருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 60 கிலோ எடையிலான…\nஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று…\nஇந்தியா-ரஷ்யா கடற்படை கூட்டு பயிற்சியில் ஐஎன்எஸ் தபார் பங்கேற்பு.\nஇந்தியா, ரஷ்யா கடற்படை இடையே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைப்பெறும் ‘இந்திரா…\nஇந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு அமெரிக்கா ரூ.186 கோடி…\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அந்நாட்டின்…\nஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதன்முறையாக வங்கதேசத்திற்கு 200 மெட்ரிக்…\nஇந்திய ரயில்வேயின் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கின்றன. ஆக்சிஜன்…\nரஷ்யாவின் மேக்ஸ் சர்வதேச விமானக் கண்காட்சி : முதல்முறையாக…\nரஷ்யாவின் சுகோவ்ஸ்கையில் நடைபெறும் மேக்ஸ் சர்வதேச விமானக் கண்காட்சியில், முதன்முறையாக, இந்திய…\nபிரான்சுடன் பயிற்சியை முடித்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ்…\nபிரான்ஸ் பயணம் மேற்கொண்ட இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் தாபர், அந்நாட்டு…\n1-நிமிடத்தில் 37-கான்கிரீட் கற்களை காலால் உடைத்து கின்னஸ் சாதனை.\nமதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்த நாராயணன் சென்னையில் உள்ள பிரபல ஐடி…\nஅணில்களுக்காக இரு வாரங்கள் இருசக்கர வாகனத்தை எடுக்காமல் இருந்த…\nமதுரை ஆனையூர் சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ். இவருக்கு சொந்தமான…\nதூத்துக்குடி நகரில் மட்டும் 10 லட்சம் ஏக்கர் கோவில்…\nதூத்துக்குடி மாவட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதா உயர்நீதிமன்றத்தில் திருத்தொண்டர்கள்…\nஆன்லைன��� படிப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க 12 மாம்பழத்தை ரூ1.2…\nஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் துள்சி குமாரி (வயது 11). 6-ம்…\n500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2 வாகனங்கள் கோவையில் அமைச்சர்கள்…\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன்…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில்…\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/DVPpQn.html", "date_download": "2021-08-02T09:54:39Z", "digest": "sha1:WPA26IQ6XKIJY4OSCXWNM6C6V5APJUN5", "length": 7036, "nlines": 38, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல்\nதுரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇதில் கணக்கில் வராத அதிகளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோழிங்கநல்லூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் புதிய பட்டா பெறுவதற்கு அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.\nஇதையடுத்து ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி குமரன் உள்ளிட்ட 2 டிஎஸ்பிகள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5 மணியளவில் சோழிங்கநல்லூர், குமரன் நகர் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ���ந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.\nவட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நுழைந்ததும் வாயில் அருகே இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.\nஇதனால் பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதற்கிடையே அலுவலகத்தில் இருந்த அனைவரிடமும் போலீசார் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர்.\nமேலும் அலுவலகத்தில் இருந்தவர்களை சோதனை செய்து தீவிரமாக விசாரித்து வெளியே அனுப்பினர். மேலும் வட்டாட்சியர் அலுவலகம் பகுதியிலுள்ள கடைகளில் பணம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளதா\nஎன்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எந்த தகவலும் கூற மறுத்துவிட்டனர்.\nமுழுமையான சோதனை முடிந்த பிறகே வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/07/Sa45.html", "date_download": "2021-08-02T09:20:37Z", "digest": "sha1:VNQOBO53LDHSLXY7D5IAJEIBOQQ435Y5", "length": 11756, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "தென்னாபிரிக்காவில் வன்முறை! 72 பேர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / தென்னாபிரிக்காவில் வன்முறை\nஅஞ்சு Tuesday, July 13, 2021 உலகம், சிறப்புப் பதிவுகள்\nகடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளை உள்ளடக்கிய வன்முறையில் இப்போது குறைந்தது 72 பேர் இறந்துள்ளனர்.\nநாட்டின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் திங்கள்கிழமை இரவு கொள்ளையடிக்கப்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.\nகடந்த வியாழக்கிழமை தொடங்கி வார இறுதியில் வன்முறையாக மாறிய அமைதியின்மையில் கிட்டத்தட்ட 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதிகப்படியான காவல்துறையினருக்கு உதவ இராணுவம் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.\n1990 களில் இருந்து தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான வன்முறை என்று ஜனாதிபதி சிரில் ரமபோசா அழைத்தார்.\nபொலிஸ் மந்திரி பெக்கி செலே செவ்வாயன்று ஊடகவியலாளர்களிடம், கொள்ளையடித்தல் தொடர்ந்தால், அடிப்படை உணவுப் பொருட்கள் இல்லாமல் ஆபத்து நிறைந்த பகுதிகள் உள்ளன என்று கூறினார்.\nஎவ்வாறாயினும், வன்முறை தொடர்பாக அவசரகால நிலையை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாதுகாப்பு மந்திரி நோசிவிவே மாபிசா-நகாகுலா கூறினார்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\n வீடுகளில் குடியேறுங்க���் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-service-centers/powertrac/katihar/", "date_download": "2021-08-02T09:33:49Z", "digest": "sha1:5X3XC7646FMKRU7YZFKRTG65A3KK3GHJ", "length": 25112, "nlines": 187, "source_domain": "www.tractorjunction.com", "title": "4 பவர்டிராக் டிராக்டர் சேவை மையம் கடிஹார் - எனக்கு அருகிலுள்ள பட்டறை", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபவர்டிராக் சேவை மையங்கள் கடிஹார்\nபவர்டிராக் சேவை மையங்கள் கடிஹார்\nகடிஹார் இல் 4 பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தைப் பெறுங்கள். டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிட்டு, உங்கள் மாநில மற்றும் பிராண்டின் வடிகட்டியைப் பயன்படுத்துங்கள் மற்றும் 100% சான்றளிக்கப்பட்ட பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தை கடிஹார் இல் பெறுங்கள். அதன்பிறகு, கடிஹார் இல் உள்ள சிறந்த பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்துடன் இணைக்கலாம். உங்களுக்கு அருகிலுள்ள கடிஹார் இல் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையங்களின் பட்டியலைக் கண்டுபிடிக்கவும்.\n4பவர்டிராக் சேவை மையங்கள் கடிஹார்\nபிரபலமான நகரங்களில் டிராக்டர் சேவை மையங்கள்\nபிராண்டுகள் மூலம் டிராக்டர் சேவை மையங்களைத் தேடுங்கள்\nபவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nபவர்டிராக் யூரோ 45 பிளஸ்\nபவர்டிராக் யூரோ 55 அடுத்த\nமேலும் பற்றி பவர்டிராக் டிராக்டர்கள்\nகண்டுபிடிபவர்டிராக் டிராக்டர் சேவை மையம் கடிஹார்\nகடிஹார் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தைத் தேடுவதில் நீங்கள் சோர்வடைகிறீர்களா\nஇப்போது, உங்கள் தேடல் முடிந்தது. டிராக்டர்ஜங்க்ஷனில், கடிஹார் இல் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தைப் பற்றி விரைவாக அறிந்து கொள்ளலாம். கடிஹார் இல் பவர்டிராக் டிராக்டர் பட்டறைகள் பற்றிய விரிவான தகவல்களைப் பெறுங்கள். எங்களைப் பார்வையிட்டு, உங்களுக்கு அருகிலுள்ள கடிஹார் இல் உள்ள சிறந்த பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்துடன் இணைக்கவும்.\nஎனக்கு அருகிலுள்ள கடிஹார் இல் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தை எவ்வாறு பெறுவது\nகடிஹார் 4 பவர்டிராக் டிராக்டர் சேவை மையங்களைப் பெறுங்கள். உங்கள் நிலை மற்றும் பிராண்டை வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, உங்களுக்கு அருகிலுள்ள கடிஹார் இல் பவர்டிராக் டிராக்டர் பட்டறைகளைப் பெறலாம்.\nகடிஹார் இல் உள்ள பவர்டிராக் டிரா��்டர் சேவை மையம் பற்றிய விவரங்களை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷனில் கடிஹார் இல் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்தின் அனைத்து தொடர்பு விவரங்களையும் முழுமையான முகவரியையும் கண்டறியவும். எங்களைப் பார்வையிட்டு, உங்களுக்கு அருகிலுள்ள கடிஹார் இல் உள்ள பவர்டிராக் டிராக்டர் சேவை மையத்திற்குச் செல்லுங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/iyarkai-vivasayam-indraiku-avasiyam.htm", "date_download": "2021-08-02T08:04:53Z", "digest": "sha1:QS7VMQBWEPVYLWHM2VKS4OUPEKCMPM75", "length": 5651, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம் - சபீதா ஜோசப், Buy tamil book Iyarkai Vivasayam Indraiku Avasiyam online, Sabeetha Joseph Books, விவசாயம்", "raw_content": "\nதிருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)\nஇயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்\nஇயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்\nஇயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்\nஇயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம் - Product Reviews\nஜீரோ ப���்ஜெட்...பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி\nகடற்பாசி வளர்ப்பு (கடலோர மக்களுக்குத் தொழில் வாய்ப்பு)\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்\nசித்தூர் அதாலத்துக் கோர்ட்டு தீர்ப்பு\nஇன்பத் தமிழுக்கு எழில் சேர்த்த அறிஞர்கள்\nஇறந்து கிடந்த தென்றல் (ராஜேஷ் குமார்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events", "date_download": "2021-08-02T09:47:35Z", "digest": "sha1:NM337DT45ONSDX7DLW7ETMBGJG7T4GA6", "length": 7777, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Events: Get News, Information about Events from leading tamil magazine", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவரலாறுகளின் உறைவிடம் - மதுரை அமெரிக்கன் கல்லூரியின் வரலாறு குறித்த கட்டணமில்லா கருத்தரங்கு\nTNPSC தேர்வுகளுக்கான விரிவான இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி - பதிவு செய்வது எப்படி\nயமஹாவின் மைல்டு ஹைபிரிட் ஸ்கூட்டர்\n’ - சாதிக்கத் துடிப்போருக்கு வழிகாட்டிய நிகழ்ச்சி\nஒரு வருட இலவச பயிற்சி... ஐ.ஏ.எஸ் தொடர்பான இணையவழி வழிகாட்டல் நிகழ்ச்சியில் பங்கெடுப்பது எப்படி\n' - இலவச வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எப்படி\nAV Spaces: `என் உயிரினும் மேலான...' கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் சிறப்பு ஸ்பேசஸ்\n' - இலவச வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எப்படி\nநாணயம் விகடன் வாசகர் சர்வே\n' வெற்றிக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி - பங்கேற்பது எப்படி\n சில விநாடிகளில் விடை கண்டுபிடிக்கலாம் - உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு\nInternational Dance Day: டான்ஸ் வித் மாஸ்டர்ஸ்... சொல்லித்தர நாங்க ரெடி... கத்துக்க நீங்க ரெடியா\nசிக்கலான வாழ்வில் சிந்தனை தெளிய... `மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்\n`சமகாலத்தின் வாழ்வியல் சவால்களைப் பேசுவோம்'- மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G\nசிறந்த பேச்சாளர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/series-about-prison-experience-by-g-ramachandran-36", "date_download": "2021-08-02T09:49:43Z", "digest": "sha1:4QLD2VXPX73PCOXXUTD2FNJHLIWAV5EY", "length": 16579, "nlines": 253, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 05 July 2020 - ஜெயில்... மதில்... திகில்! - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து! | series-about-prison-experience-by-g-ramachandran-36 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n - அறிக்கை கேட்ட அமித் ஷா... அதிர்ச்சியில் எடப்பாடி\nRTI அம்பலம்: கமிஷனுக்காக நகராத மருத்துவ மேம்பாட்டுப் பணிகள்\n - மத்திய அரசு அதிரடி\nமிஸ்டர் கழுகு: சசிகலா விடுதலை ட்வீட்... ‘ஸ்மைலி’ போட்ட ஓ.பி.எஸ்\nசசிகலா விடுதலை ட்வீட்... யாருடைய அரசியல் வியூகம்\nபிஎம் கேர்ஸ் பிரைவேட் சொத்தா - அரசியல் தலைவர்களுக்கு ஆழ்ந்த புரிதல் இல்லையா\nபதறும் டாக்டர்கள்... நடுங்கும் நர்ஸ்கள்... நூறாவது நாளிலும் தீராத பரிதாபங்கள்\nகுலைநடுங்க வைக்கும் வேலூர் ரௌடிகள்\nகடைமடை விவசாயிக்கும் கிடைக்குமா காவிரி\n - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து\n`டிவியில் பாடம், வாட்ஸ்அப்பில் அசைன்மென்ட், பிறகு பரிசு' - அரசுப்பள்ளி ஆசிரியர்களின் புது முயற்சி\nவரதட்சணைக்காக மனைவியைக் கொன்ற கணவர்; ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு\nநெல்லையில் கொலை; தஞ்சையில் பதுங்கல் - 4 கொலையாளிகள் பிடிபட்டது எப்படி\n'வலிமை' : அஜித்துக்காக 'காதல் பொயட்' விக்னேஷ் சிவனின் எழுத்துகளில்... மாஸாக இருக்குமா முதல் பாடல்\nமும்பை: காவல் நிலையத்தில் பழைய வாகனத்தின் பாகங்கள் திருட்டு; ரூ.26 லட்சத்துக்கு விற்ற பெண் காவலர்\n - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து\n - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து\n - 54 - கம்பிகளுக்குள் அடைக்க முடியாத காற்று\n - 53 - சிறையில் கொந்தளித்த ஜெ... சமாதானம் செய்த சசி\n - 52 - குடத்துக்குள் கேட்ட டிக்... டிக்... டிக்...\n - 51 - கட்டளையிட்ட கலைஞர்... கற்பூரம் ஏற்றிய அசோக் சிங்கால்\n - 50 - மடத்தின் அதிபதி... சிறையில் கைதி\n - 49 - “இனி தமிழகத்தில் ஒரு குண்டுகூட வெடிக்காது\n - 48 - “எங்களைத் தொட்டால் குண்டு வெடிக்கும்\n - 47 - பயங்கரவாதிகளின் அட்டாக்... முறியடித்த காவலர்கள்\n - 46 - காஷ்மீர் அட்டாக் முதல் ஹார்ட் அட்டாக் வரை\n - 45 - ஆட்டோ சங்கர் எனும் அசுரன்\n - 44 - பூட்டாத பூட்டுகள்\n - 43 - வேலூர் சிறையில் ரௌடிகள் ராஜ்ஜியம்\n - 42 - சென்னைச் சிறையில் பிரபாகரனின் தளபதி\n - 41 - ஆசிரமத்தில் ஜாலி... ஆன்மிகத்தில் போலி\n - 40 - சென்னை மத்தியச் சிறையில் நடிகர் விஜய்\n - 39 - கைதிகளின் பாராட்டு... குழந்தை பாடிய தாலாட்டு\n - 38 - அன்று மருத்துவர்... இன்று தலைவர்\n - 37 - ஒரே சிறை முதல் ஒரே அறை வரை\n - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து\n - 35 - வைகோவின் பொடா நாள்கள்\n - 34 - ஸ்டாலினின் மிசா நினைவுகள்\n - 32 - பத்தடிக்கு எட்டடி கொட்டடி... மூவருக்கு இரண்டு சட்டி\n - 31 - வாஞ்சையுடன் அழைத்த வாஜ்பாய்... கம்பீரமாய் மறுத்த கலைஞர்\n - 30 - ‘‘வேலூர் சிறை வேண்டாம்’’ சென்னைச் சிறைக்கு வந்த கலைஞர்\n - 29 - கைதி உடையில் கருணாநிதி\n - 28 - சிறைக்குள் கலங்கிய கலைஞரின் கண்கள்\n - 27 - சிறை விதிகளை மீறினாரா சசிகலா\n - 26 - சசிகலா விடுதலைநாள் எப்போது\n - 25 - யாரைக் கொல்ல தப்பிச்சென்றார் ஆறுச்சாமி\n - 24 - கொலைசெய்யப்பட்டாரா கைதி\n - 23 - சிறுத்தையைப்போல் சீறிப்பாய்ந்த தாய்\n - 22 - தாய் அழுதாளே நீ வர... நீ அழுதாயே தாய் வர\n - 21 - சிறைக்கம்பிகள் தட்டப்படுவது ஏன்\n - 20 - வலையால் போர்த்தப்பட்ட பூந்தமல்லி கிளைச் சிறை\n - 19 - அன்பே வா அருகிலே..\n - 18 - கொரோனா... தமிழக சிறைக்குள் நுழைய முடியுமா\n - 17 - காலியான தோட்டாக்களும் அடிகளாரின் அருள்வாக்கும்\n - 16 - சிறையிலிருந்து தப்பிய தோட்டா\n - 15 - தொலைந்தது தோட்டாக்கள் மட்டுமல்ல... தூக்கமும்தான்\n - 14 - கலவரம்... பேட்டிகொடுத்த ஜெயலலிதா... கனிவுகாட்டிய கருணாநிதி\n - புதிய தொடர் - 12\n - புதிய தொடர் - 11 - நேர்மை, துணிவு, தியாகம்... ஜெயிலர் ஜெயக்குமார்\n - புதிய தொடர் - 10 - எப்படி நிகழ்ந்தது பாக்ஸர் வடிவேலுவின் மரணம்\n - புதிய தொடர் - 9\n - புதிய தொடர் - 8\n - புதிய தொடர் - 7\n - புதிய தொடர் - 6\n - 3 - ஆட்டோ சங்கரின் கடைசி முத்தம்\nவைகோவின் அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் வாழ்வில் பொடா கைதியாக அவர் சிறையிலிருந்த ஒன்றரை ஆண்டுகள் முக்கியமானவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/08/blog-post_71.html", "date_download": "2021-08-02T10:10:14Z", "digest": "sha1:NYX7VXVWGGB7K77B3LJQ4ODJM4SEOY5H", "length": 2284, "nlines": 31, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்ட முடிவுகள் மற்றும் படங்கள்", "raw_content": "\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்ட முடிவுகள் மற்றும் படங்கள்\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் 12.08.2014 அன்று நடை பெற்றது.\nகூட்டதிற்க்கு தோழர் S. தமிழ்மணி தலைமை ஏற்றார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால், கூட்ட நோக்கத்தை விளக்கி, அஜெண்டாவை அறிமுக படுத்தி பேசினார்.\nமாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.\nகீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.\n1. 7வது மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்த எதுவாக, நிதி வசூலை துரித படுத்துவது.\n2. நிதி வசூலை கண்காணிக்க, இலக்கை அடைய மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு கிளைகளை பகிர்ந்து பொறுப்பு வழங்க பட்டது.\n3. அடுத்த செயற்குழுவை 22.08.2014 அன்று சேலத்தில் நடத்துவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/5-14-1936-sekarreporter-1-5-14-1933-k-chandru-former-judge-of-highcourt-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-08-02T08:41:00Z", "digest": "sha1:4MQXO3FODVTVMACWHI7DXDER32FZXCAL", "length": 8256, "nlines": 72, "source_domain": "www.sekarreporter.com", "title": "5/14, 19:36] Sekarreporter 1: [5/14, 19:33] K. Chandru Former Judge Of Highcourt: இது டாஸ்மாக்கின் மேல்முறையீடு! கட்டாயம் உச்சநீதிமன்றம் அதை விசாரிப்பதோடு தகுந்த உத்திரவைப் பிறப்பிக்கும்.! எல்லா மாநிலங்களிலும் இதே பிரச்சினை வருவதால் அதன் வழிகாட்டல் – SEKAR REPORTER", "raw_content": "\n கட்டாயம் உச்சநீதிமன்றம் அதை விசாரிப்பதோடு தகுந்த உத்திரவைப் பிறப்பிக்கும். எல்லா மாநிலங்களிலும் இதே பிரச்சினை வருவதால் அதன் வழிகாட்டல்\nகட்டாயம் உச்சநீதிமன்றம் அதை விசாரிப்பதோடு\nஎல்லா மாநிலங்களிலும் இதே பிரச்சினை வருவதால் அதன் வழிகாட்டல் தேவைப்படலாம்\n[5/14, 19:37] Sekarreporter 1: [5/14, 19:31] Chandrasekar Kumar Associate: தொலைக்காட்சிகளில் உச்ச நீதி மன்றத்தில் TSMAC வழக்கு பட்டியல் இடப்படுள்ளதாக தகவல் அப்படியிருக்க FULL BENCH நடக்குமா\nகட்டாயம் உச்சநீதிமன்றம் அதை விசாரிப்பதோடு\nஎல்லா மாநிலங்களிலும் இதே பிரச்சினை வருவதால் அதன் வழிகாட்டல் தேவைப்படலாம்\n சினிமா எடுத்தா அதில் “ஒப்பனையும் & காஸ்டியூமும் முக்கியமல்லவா\n[5/14, 21:27] Sekarreporter 1: [5/14, 21:12] Patty Jeganathan Mhc Advt: Sekar, k. Balu நாளை உச்சநீதிமன்றத்தில் இதே வழக்கு. எத்தனையோ டாஸ்மாக் வழக்குகள். நீங்கள் போராடிக்கொண்டு இருக்கீங்க. முடிவு. உங்கள் கூட்டணி கட்சி தான் ஆட்சி. ஒரு பக்கம் கூட்டணி, மறுபக்கம் கோர்ட். சூப்பர்.\nஇன்று சூப்பர் விவாதமா. அதே பாயின்டா. பாலு பிரமாதம்.\nபக்கத்துலே பெங்களூர், மும்பை corono இல்லையா Tasmac மூடினால், சாராயம் காய்ச்சினால், பிரமாதம். டானிக் மக்களூக்கு நல்லது. வேடிக்கை, வாடிக்கை.\nNext story அருமை ஜேபி சார் 💐💐💐 வழக்கறிஞர்களின் நீதிபதி ஐயா மாண்புமிகு நீதியரசர் கே. என். பாஷா அவர்களுக்கு வணக்கத்துடன் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐 இரா. தாமரைச்செல்வன் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம்\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\nசட்டப் படிப்புகளில் சேர ஆ��.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-ramya-krishnan-reaction-on-vanitha/cid3486918.htm", "date_download": "2021-08-02T08:40:16Z", "digest": "sha1:XADJQA7STYUWW2A5E3T4SNFHQXA6IVM2", "length": 5283, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "நீ செம கூல் மச்சி!.. வனிதா புகாருக்கு ரம்யா கிருஷ்ணன் ரியாக்", "raw_content": "\nநீ செம கூல் மச்சி.. வனிதா புகாருக்கு ரம்யா கிருஷ்ணன் ரியாக்‌ஷன் இதுதானாம்.. வனிதா புகாருக்கு ரம்யா கிருஷ்ணன் ரியாக்‌ஷன் இதுதானாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் வனிதா விஜயகுமார் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்.. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அதன்பின் ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.\nஆனால், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக திடீரென அவர் அறிவித்தார்.. ஒரு சீனியர் பெண்மனி தன்னை அவமானப்படுத்துவதாக அவர் கூறியிருந்தார். கணவர், குடும்பம் என அந்த ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெறுவது சில பெண்களுக்கு பிடிக்கவில்லை என அவர் காரணம் கூறியிருந்தார்.\nதற்போது வனிதா விஜயகுமார் கூறும் அந்த பெண்மணி ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, வனிதாவின் நடிப்புக்கு மிகவும் குறைவான மதிப்பெண்ணை ரம்யா கிருஷ்ணன் கொடுத்தார் எனவும், 10க்கு வெறும் ஒரு மதிப்பெண்ணை மட்டுமே கொடுத்ததால் கடுப்பான வனிதா இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதுபற்றி ஒரு தொலைக்காட்சிக்கு பதில் கூறிய ரம்யா கிருஷ்ணன் ‘அந்த நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது என்பதை வனிதாவிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். இது எனக்கு பெரிய பிரச்சனை கிடையாது. இதில் நான் கூற எதுவுமில்லை. பதில் கூறவும் நான் விரும்பவில்லை’ என க���லாக பதில் கூறியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/2021/05/11/", "date_download": "2021-08-02T10:05:10Z", "digest": "sha1:DERLG2PSFNHYB67HWRJM7LBC6PXGKUUX", "length": 6565, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tamil Gizbot Archives of 05ONTH 11, 2021: Daily and Latest News archives sitemap of 05ONTH 11, 2021 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் 18 வயதிற்குள் PUBG விளையாட இப்படி ஒரு ரூலா 'இவர்கள்' மனசு வைத்தால் தான் விளையாட முடியும்\nஇதோ இந்த மே-18 வருகிறது: ஹானர் ப்ளே 5 தொடர் குறித்து வெளியான தகவல்\nபட்ஜெட் விலையில் அறிமுகமாகிறதா Infinix Hot 10T ஸ்மார்ட்போன்.. விலை என்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி ஏ12, கேலக்ஸி ஏ02எஸ் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\nரூ. 7,799 விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்போன் வாங்க ரெடியா Lava Z2 Max உடனே வாங்குங்க..\nFlipkart Realme Days Sale MAY 2021: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி எஃப் 52 5ஜி இப்படிதான் இருக்கும்: சுமார் ரூ.23,000 விலையில்\nஇனி வீடு வீடுக்கு மதுபானம் டெலிவரி- ஆன்லைன் ஆர்டர்- வேற வழியில்ல கடை பூட்டினால் கண்டதையும் குடிக்கிறாங்க\nஅசுஸ் சென்ஃபோன் 8 சீரிஸ் இந்தியா வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.\n2 வார முழு ஊரடங்கு: மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பாஸ் தேவையா\nஇரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டு., நீருக்கடியில் வெடித்தது.\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசி: பயனர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை வருமா\nஒப்போவின் அடுத்த அட்டகாசம்: ரெனோ 6 ப்ரோ, ரெனோ 6 ப்ரோ+ சிறப்பம்சங்கள் இதுவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2020/04/30/final-hearing-of-nirav-modi-scam-begins-from-11th/", "date_download": "2021-08-02T09:39:33Z", "digest": "sha1:MIZQCOS4GO7EZK2BLW4UIWKLWSIL55QA", "length": 8706, "nlines": 161, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "நிரவ் மோடி மோசடி வழக்கின் இறுதி விசாரணை 11 ந் தேதி தொடக்கம் – Kuttram Kuttrame", "raw_content": "\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..விஜய் – சம��்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nநிரவ் மோடி மோசடி வழக்கின் இறுதி விசாரணை 11 ந் தேதி தொடக்கம்\nPublish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்\nவங்கி மோசடி வழக்கில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரும் வழக்கின் இறுதி விசாரணை வரும் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்டார்.\nஅடுத்தடுத்து ஐந்து முறை நிரவ் மோடியின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை நாடு கடத்த கோரி இந்தியா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை வருகிற 11-ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆதாரங்களை நான்காம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு..\nஇரையை விழுங்கி விட்டு நகர முடியாமல் தவித்த பாம்பு..\nகோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்..\nஎன்ன நடந்தது என்று தெரியவில்லை ஏமாற்றிவிட்டனர்..\nதமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா தொற்று.. 26 பேர் பலி\nஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுந்த பெண்..\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nகிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2013/03/21-03-2013.html?showComment=1363922341794", "date_download": "2021-08-02T08:16:15Z", "digest": "sha1:MZ5C2SPSXPG36KX6D75VAJQFW6CG6NM2", "length": 54858, "nlines": 103, "source_domain": "www.padalay.com", "title": "வியாழமாற்றம் 21-03-2013 : ஈழத்தமிழரும் தமிழக சம்பவங்களும்", "raw_content": "\nவியாழமாற்றம் 21-03-2013 : ஈழத்தமிழரும் தமிழக சம்பவங்களும்\nதமிழகம் கொதித்துக்கொண்டிருக்கிறது. கலைஞர் வழமை போல இன்னொரு ஸ்டண்ட் அடித்து உள்ளார். இதைப்பற்றி நீங்களும் வியாழமாற்றத்தில் எழுதி, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை காட்டவேண்டும்.\nநண்பர் ஒருவரிடம் இருந்து வந்த ஈமெயில் இது. மாணவர் போராட்டம், தமிழக அரசியல் நிலைமை என்றெல்லாம் விரிவாக எழுதலாம் தான். தகுதி இருக்கிறதா என்று கேட்டு யாரேனும் கன்னத்தை பொத்தி அறைவார்களோ என்ற எண்ணம் வந்தது. கருணாநிதியை கொலைஞர், கிழம் என்றெல்லாம் கீழ்த்தரமாக திட்டுவதையும், 2009 இல் இதை செய்யாமல் இப்போது செய்வதை நாடகம் என்று ஏசுவதையும் பார்க்க கொஞ்சம் சங்கடமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. காலம் தாழ்த்திய, தவறான முடிவுகளை எடுத்தவர்களை எல்லாம் இப்படித்தான் திட்டவேண்டும் என்றால் நாங்கள் சேர் பொன் இராமநாதனிடம் இருந்து ஆரம்பித்து, ஜிஜி பொன்னம்பலம், செல்வா, அமிர்தலிங்கம், பிராபகரன், என் அப்பா, உங்கள் அப்பா, நான், நீங்கள் வரைக்கும் வரிசைப்படுத்த வேண்டி இருக்கும். தவறு விட்டவர்களை சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது, facebook இருக்கிறது என்பதற்காக கையில் கிடைத்த கற்களால் அடிக்க ஆரம்பித்தோமானால் நாம் எல்லோருமே மண்டை உடைபட்டு கிடக்க வேண்டிவரும். அத்தனை தவறுகள். தவறுகள் இல்லாமல் எங்கள் போராட்டம் இந்த நிலைக்கு வந்திருக்காது. எங்களுடைய எல்லா தவறுகளுமே கியூவில் நின்றால், கலைஞரது தவறுகள் கல்வியங்காடு சந்தி தாண்டி குச்சொழுங்கைக்குள் போய் நிற்கும். வேண்டாமே. எல்லோரையும் நக்கல் அடித்து நக்கல் அடித்து யாருமே இல்லாத அநாதைகள் ஆகவேண்டாமே. ஆகியிருக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன்.\nமாணவர்களின் எழுச்சி, வாசிக்கும்போது, கேட்கும்போது, பார்க்கும்போது கை துறுதுறுக்கிறது. ஏதாவது செய்யவேண்டும் போல. தோள் கொடுக்கவேண்டும் போல. “வாருங்கள் தோழர்களே, ஒன்றாய் சேருங்கள் தோழர்களே, போகுமிடம் வெகு தூரமில்லை, சாவு எமக்கொரு பாரமில்லை” என்று Facebook இல் ஒரு ஸ்டேடஸ் போட்டேன் என்றால் அடுத்த கணம் நான் போராளி. தோழர். காம்ரேட். புதுமண தம்பதிகள் படத்துக்கு விழும் லைக்குகளை விட அதிகமாக விழும். ஆனால் மனச்சாட்சி என்ற ஒரு சனியன் அதை செய்யாவிடமாட்டுதாம். எனக்கு அதை செய்ய எந்த தகுதியும் கிடையாது. இங்கே பக்கத்தில், வெறும் எட்டு மணி நேர டிரைவிங்கில் கான்பரா வந்துவிடும். தமிழர்கள் கொஞ்சப்பேர் பார்லிமெண்டுக்கு முன்னாலே போய் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அழைத்தார்கள். நான் போ���வில்லை. ஏன் என்றால் பயம். செம பயம். போனால் கொடி பிடிக்கவேண்டும். படம் பிடிப்பார்கள். கோத்தாவுக்கு போகும். இலங்கை போனால் விமானநிலையத்தில் வைத்து என்னை பிடிப்பார்கள். நாலாம் மாடியில் ஜட்டியோடு ஒரு கதிரையில் கட்டிவைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து, சேர் சேர் என்று கெஞ்சி, இல்லாத உண்மைகளை சொல்லி, யோசிக்கவே நடுங்குகிறது.\nபயத்தில் தான் அந்த நாடே வேண்டாம் என்று ஓடி வந்தேன். கொஞ்சம் படித்ததால் படகேறவேண்டிய தேவை இருக்கவில்லை. மற்றும்படி அகதி தான். பின்னங்கால் பிடரியில் பட ஒவ்வொரு அடிக்கும் ஓடி ஓடி மெல்பேர்ன் வரைக்கும் வந்திருப்பவன். சுதந்திரம் என்றால் என்ன என்பதை இந்த நாடு கற்றுத்தருகிறது. சுவாசிக்கிறேன். ஆனாலும் திடீரென்று அலுவலகத்துக்கு மேலால் சுப்பர்சொனிக் ஜெட் போகும்போதோ, ரெஸ்கியூ ஹெலிகப்டர்கள் தாழ பறக்கும்போதோ அடிவயிற்றில் மட்டத்தேள் ஊரும். இந்த போலீஸ்காரர் ஹை மேட் என்றாலே ஐஸியை தேடி கை சட்டைப்பையை தடவும். அந்த பயம் இன்னமும் போகவில்லை. அது என் எழுத்திலும் இருக்கிறது. சிட்டிசன் எடுத்தால் சிலவேளை கொஞ்சம் வீரம் வரலாம். அவ்வளவே.\nஇப்போது சொல்லுங்கள், நான் எந்த மூஞ்சியோடு ஆதரவு தெரிவிக்க ஆதரவு தெரிவிக்க ஒரு தார்மீக தகுதி வேண்டுமில்லையா ஆதரவு தெரிவிக்க ஒரு தார்மீக தகுதி வேண்டுமில்லையா எனக்கு அது இஞ்சி கூட கிடையாது. அரையில் கோவணம் கூட இல்லாமல் இருக்கும் நான் அரசியல் ஸ்டேட்மென்ட் விடக்கூடாது. அனேகமானோர் இங்கே அம்மணம் தான். அவர்களுக்கும் அது தெரியும். ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனக்கு அது முடியாது. குட்டிக்கு முன்னாலே சின்னவயதில் நின்ற குமரன் இந்த கழுதை வயதிலும் மாறவேயில்லை.\nஇறங்கு கண்ணினன் நான், நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட மீண்டும் ஒரு முறை நின்றேன்\nஆனாலும் சேஃபாக நான் செய்யக்கூடியது சிலது இருக்கிறது. பதின்மூன்று வயது சிறுவன் ஒருவன் படலையை அண்மையில் லைக் பண்ணினான். படலையின் பத்து சதவீத வாசகர்கள் இருபது வயதுக்கு குறைந்தவர்கள். அவர்களுக்கு இது தான் தண்ணீர் என்று குளத்தை கொஞ்சம் சுவாரசியமாக, அலுப்படிக்காமல் காட்டலாம். சினிமாவை தாண்டி வாசிக்கவும் பொழுதுபோக்கவும் சிந்திக்கவும், சுவையான விஷயங்கள் இருக்கென்று சொல்லலாம். அவனுக்கு போரடித்து, பிரவுசரை கிளோஸ் பண்�� முதல் சொல்லவேண்டும். அது தான் சவால். சமாளித்துவிட்டால், அப்புறம் எனக்கு தெரியாத நீச்சலை அவன் தானாகே பழகுவான். முயன்றால் நானும் அவனோடு சேர்ந்து நீச்சல் பழகலாம்.\nஇலங்கை அரசின் எத்தனை சுத்துமாத்துகளையும் மனிசி சும்மா சிம்பிளாக புறம்தள்ளும். “உங்களை மாதிரி ஆக்கள் என்ன பண்ணுவாங்கள் எண்டு எனக்கு தெரியாதா” என்ற தோரணையில் அவருடைய பேச்சுகளும் பதில்களும் இருக்கும். உலகத்தின் மிகச்சிறந்த இராஜதந்திரிகளுக்கு நன்றாக அவித்து தூள் உப்பு போட்டு கொடுக்கப்பட்ட பருப்பு மனிசியிடம் மட்டும் எப்படி வேகாமல் இருக்கிறது என்ற ஆச்சர்யம் ஓரிரு வருடங்களாகவே பிடுங்கித்தின்றது. அவரைப்பற்றி கொஞ்சம் விவரம் சேகரிக்க, மனிசிக்கு முன்னால் எவனும் ரீல் விட முடியாது என்பது புரிந்தது.\n1941, தென் ஆபிரிக்க, டேர்பனில் ஒரு ஏழை குடியிருப்பு பகுதியில் பிறந்தவர். தமிழ் வம்சாவளி. அப்பா பஸ் ஓட்டுனர். கூட இருந்த சக தமிழர்கள் செய்த உதவியில் படித்து 24 வயதில் சட்டத்தரணி ஆகிறார். அதே ஆண்டு திருமணம். கணவனும் ஒரு சட்டத்தரணி தான். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஹார்வார்டில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் தென் ஆபிரிக்கர் என்ற பெருமையையும் பெறுகிறார்.\nஊரிலே படித்து முடித்தபின், வெள்ளையராக இல்லாததால் எந்த சட்ட நிறுவனங்களும் இவருக்கு வேலை கொடுக்கவில்லை. இவரே சொந்தமாக ஒரு சட்டநிறுவனம் ஆரம்பித்தார். நீதிபதிகளின் சேம்பருக்கு கூட வெள்ளையர் அல்லாதோருக்கு அனுமதி இல்லை. அப்படிப்பட்ட அடக்குமுறை காலத்தில் 28 வருடங்கள் சட்டத்தரணியாக, அடக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்தவர். அரசியல் கைதிகளின் மோசமான நிலைமையை வெளி உலகத்துக்கு கொண்டுவந்தவர். நெல்சன் மண்டேலா, மற்றும் ஏனைய அரசியல் கைதிகளுக்கான சட்ட உரிமைகளுக்காக போராடி பலவற்றை வென்று கொடுத்தவர். வெள்ளையர் ஆதிக்கம் முடிவுக்கு வந்தபின்னர், நெல்சன் மண்டேலா செய்த வேலை, நவநீதம்பிள்ளையை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்தது தான்.\nபின்னர் ஆரம்பித்தது ஆட்டம். ரூவாண்டாவில் நடைபற்ற குற்றங்களை விசாரிக்கும் சர்வேதேச விசாரணைக்குழுவில் எட்டு வருடங்கள் வேலை பார்த்தார். யுத்தத்தின் போது செய்யப்படும் பாலியல் வல்லுறவுகள், பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல, அவையும் இன ஒழிப்பின் ஒரு கூறு தான் என்று ஆணித்தரமாக வாதிட்டு பல கொடியவர்களுக்கு தண்டனை வழங்கினார்.\nபின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைவர் பதவி. அப்புறம் 2008 முதல் ஐநா மனித உரிமை ஆணைக்குழு தலைவர். இந்த பதவியில் இருந்துகொண்டு தான் இலங்கையை ஒருவழிக்கு கொண்டுவர பிரயத்தனம் செய்கிறார். இந்த பதவி 2014 இல் முடிகிறது என்பது கொஞ்சம் கவலை அளிக்கும் விஷயம். அவருக்கு பிறகு வருபவர் மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பார். அதுவும் கமலேஷ் ஷர்மா, யசூசி அகாஷி வகையறாக்கள் வந்தால் சுத்தம்.\nநவநீதம் பிள்ளை ஒருமுறை சொன்ன திருவாசகம் இது.\n“ஆதி காலத்தில் பாலியல் வல்லுறவு என்பது போரின் கெடுதல்களாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இனிமேல் அது ஒரு போர் குற்றமாகவே பார்க்கப்படும். பாலியல் வல்லுறவு என்பது போரில் அடைகின்ற வெற்றி கேடயம் கிடையாது, எல்லோருக்கும் இதை அழுத்தமாக அறிவுறுத்துகிறோம்”\nஇலங்கை இந்திய அரசுகள் நவநீதம்பிள்ளையை கண்டு நடுங்குவதற்கு காரணம் இருக்கிறது.\nவேதவியாசர் எழுதிய திரில்லர் கதை\n“கதவு ஓட்டைக்கால செல்வா பார்க்கேக்க வெளிய நாலு பொலிஸ்காரங்கள் நிக்கிறாங்கள்”\nஇந்த முதல் வரியை கொண்டு எப்படி ஒரு கதை எழுதிமுடிப்பாய் என்று கேதாவிடம் கேட்டேன். இடம் கேதா-வீணா வீடு. “விளங்கின மாதிரி தான்” என்றாள் வீணா. கேதா திடீரென்று கிடைத்த பட்டிங் சான்ஸை மிஸ் பண்ணாத சேகர் தவான் போல அடித்தாட தொடங்கினான். அவன் சொன்ன கதை நகைச்சுவையாக இருந்தது. முடிவும் நகைச்சுவையாக முடிந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.\n“இப்ப இதையே திரில்லர் ஆக்க வேண்டும் என்றால் என்ன செய்வாய்\nபல திருப்பங்கள் சொன்னார்கள். எல்லாம் முடிந்து பொலிஸ் போனபிறகு, செல்வா கீழே பாண் வாங்க போகும்போது அவனை வெள்ளை வான் கடத்துகிறது என்ற வீணாவின் பதில் பிடித்திருந்தது. சிறுகதை வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்றேன். அப்படி என்றால் “பொலிஸிடம் மாட்டுப்பட போகிறேன் என்று தெரிந்த கணம், கக்கூஸ் பைப்பால் தப்பி ஓடுகிறான், பொலிஸ் சுடுகிறது என்று முடிக்கலாம் அண்ணே” என்றான் கேதா. ஆக மூவருமே ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தோம். இதிலே சந்தேகநபர்/குற்றவாளி/போராளி யார் என்றால் அவன் செல்வா தான். அதே சமயம் செல்வா கதையின் முக்கிய பாத்திரமும் கூட. ஆக துப்பறியும் வேலையை பொலிஸ்காரரிடம் விடமுடியா���ு. செல்வா தான் குற்றவாளி என்று முதலிலேயே சொல்லிவிடவும் முடியாது. அப்படி என்றால் யார் அதை கண்டுபிடிப்பது மூவருமே ஏகநேரத்தில் சொன்ன பதில் “வாசகன்”.\n“வாசகன்” துப்பறிகிறான் என்றால் அவனுக்கு கதை பூரா துப்பு கொடுக்கவேண்டும். வாசிக்கும்போது அவன் அதை துலக்கிக்கொண்டே வர, முடிவில் “அட செல்வா தான் சந்தேக நபர்” என்று ஊர்ஜிதப்படுத்திய பிறகு செல்வா வாளியில் இருக்கும் பொருளை எடுத்து குப்பை ஓட்டைக்குள் தொங்கப்போடுகிறான். இங்கே பொலிஸ் செல்வாவை கோட்டை விடுகிறது. வாசகன் கண்டுபிடிக்கிறான். கதையில் துர்நாற்றம் ஒரு deterrent ஆக, கவனக்கலைப்பானாக பயன்படும். முடிவில் அந்த வாளி, குப்பை துவாரம். அவன் ஏன் குப்பை துவாரத்தில் முதலிலேயே தொங்கவிடாமல் வாளிக்குள் அதை ஒளித்து வைக்கவேண்டும் இந்த கேள்விகளின் பதிலை வாசகனிடமே விட்டுவிடுவது. இது தான் ஸ்கெட்ச். டிசைன்.\nஇனி துப்புக்களை கொடுக்கவென்றே சம்பவங்களை கதையில் அமைக்கவேண்டும். “ஒண்டுக்கடிக்கிறான், தண்ணீர் ஊற்றவில்லை ஏன்”. “உடனே திறக்காமல், தப்பி ஓடுவதை பற்றி ஏன் ஒரு கம்பஸ் மாணவன் சிந்திக்கவேண்டும்”. “உடனே திறக்காமல், தப்பி ஓடுவதை பற்றி ஏன் ஒரு கம்பஸ் மாணவன் சிந்திக்கவேண்டும்”. “கம்பியூட்டரை ஏன் ஷட் டவுன் பண்ணவேண்டும்”. “கம்பியூட்டரை ஏன் ஷட் டவுன் பண்ணவேண்டும்”, “அவன் பெயர் செல்வா, ஆனால் கொம்பியூட்டரில் பாவித்த பாஸ்வேர்ட் வேறு, ஏன்”, “அவன் பெயர் செல்வா, ஆனால் கொம்பியூட்டரில் பாவித்த பாஸ்வேர்ட் வேறு, ஏன்”, இவை எல்லாம் குட்டி குட்டி துப்புகள்.\nமுக்கியமான தடயம் அந்த கார்ட்ஸ் ஆட்டம் சொல்லப்பட்ட விதம். முன்னை நாள் நடந்த காட்சியை கதை விவரிக்கிறது. அந்த காட்சியில், விளையாடிய ஆறுபேரில், செல்வாவும், ரெஜினொல்டும் இல்லை. ஆனால் செல்வா தானும் விளையாடியதாக பொலீஸிடம் சொல்லுகிறான். பொய். அதை சொல்லும்போது கூட கீழே நிலத்தை பார்த்து என்ன நடந்திருக்கலாம் என்று ஊகித்தபடி தான் சொல்லுகிறான். அது இன்னொரு துப்பு. குடிப்பழக்கம் இல்லாத செல்வாவுக்கு புகைப்பழக்கம் இருக்க சான்ஸ் இல்லை. அது இன்னொரு பொய். இப்படி கதை முழுக்க வாசகன் கண்டுபிடிக்கும் வண்ணம் பொய்களை திரும்ப திரும்ப சொல்லுகிறான். சிங்களம் தெரியாது என்பவனுக்கு போலீஸ் சிங்களத்தில் யாரோடோ பேசுவது புரிகிறது.\nஇத்தன�� தடயங்களும் செல்வாவிடம் சம்திங் ரோங் என்று சந்தேகப்பட போதுமானவை. வாசகன் நிச்சயம் எக்சைட் ஆவான் என்று நினைத்தேன். என் ராசி நடக்கவில்லை பொதுவாக வாசித்தவர்கள் அதனை ஒரு கொழும்பு தமிழ் இளைஞனின் வாழ்க்கை என்ற அடிப்படையிலேயே கருத்து சொன்னார்கள். ஏன் என்று யோசித்தேன். புரியவில்லை. லத்தீன் அமெரிக்க வாசகர்கள், கேரளா என்றால் இந்நேரம் இந்த கதையை கொண்டாடியிருப்பார்கள் என்று சும்மா டகால்டி விடமுடியாது. படலை வாசகர்கள் என்னை மண்டை காயவைப்பவர்கள். ஒருமுறை “கந்தசாமியும் கலக்ஸியும்” நாவலில் டார்க் மாட்டர் பற்றி எழுதும்போது ஒரு சின்ன சறுக்கல். கிழித்து எடுத்துவிட்டார்கள். ஆக வாசகனில் தப்பு இல்லை. அது என் கதையில் தான். ஏன் என்று நேற்று முழுக்க மண்டை காய்ந்தது. கஜன், “கார்ட்ஸ் விளையாட்டை தான் பகிடியாக தான் எழுதியிருக்கிறாய் எண்டு நினைச்சன்” என்றான். டொக் டொக் டொக் கதையை ஒரே மூச்சில் அட்சரம் பிசகாமல் உள்வாங்கி முதுகில் தட்டிக்கொடுத்த வாலிபன் இந்த கதையில் ஏனோ அரசியல் தேடினான். எங்கேயோ ஒரு பெரிய கோட்டை விட்டுவிட்டேன் என்று புரிந்தது. ஆனால் எங்கே\n“சட்டென நனைந்தது இரத்தம்” சிறுகதையிலும் இம்மாதிரி நிறைய முயற்சிகள் இருக்கும். எவற்றையும் தவறவிடாமல் வீணா அந்த கதையை உடைத்து விளக்கியபோது அப்பாடா என்ற நிம்மதி வந்தது. ஸோ இம்முறையும் வீணா தான் ஆள் என்று நினைத்து கேட்டேன். “அண்ணே சொதப்பீடீங்க” என்ற முதல் வரியுடன் ஆரம்பித்த சாட்டிங் அலுவலகம் முடியும் வரை தொடர்ந்தது. அந்த சாரம்சம் இன்னொருமுறை கதை எழுதும் பொது உதவலாம்.\nமுதல் தவறு, வாசகன் துப்பறிவாளன் என்றால், அதற்கு அவனை கதை தயார்படுத்தவில்லை. இது துப்பறியும் கதை என்று தெரியாத வரைக்கும் அவன் ஏன் தடயங்களை தேடப்போகிறான் என்பது வீணாவின் வாதம். சரி முதல் தடவை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் முடிவு இப்படியான பின்னர், மீண்டும் வாசிக்கும்போது புலப்படும் இல்லையா என்றேன். இரண்டாம் முறை வாசிக்கச்செய்யும் அளவுக்கு முடிவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. “It was a surprising end but not an exciting one” என்றாள். கிளீன் போல்ட்.\nஇரண்டாவது தவறு, கதை சொல்லும்பாணியில். கதையில் செல்வாவின் எண்ண ஓட்டங்கள் விவரிக்கப்படுகின்றன. அப்படியானால் அவனை வாசகன் சந்தேகிக்கமாட்டான். சொல்லும் வார்த்தையில் பொய் இருக்கலாம். ஆனால் எண்ணங்கள் பொய் சொல்லாது, சிலதை செலக்டிவ்வாக மறைத்து சிலதை மட்டும் நினைக்காது இல்லையா ஆக வாசிப்பவன் செல்வாவை சந்தேகிக்க சான்ஸ் குறைவு என்று வீணா சொன்னதை கேட்டபோது, என் மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்து விடவேண்டும் போல இருந்தது. அடச்சீ. இதை தானே தலைவர் படிச்சு படிச்சு சொல்லியிருக்கிறார். கணையாழியின் கடைசிப்பக்கங்களில் வந்த விஷயம் இது. 1972 இல் எழுதியிருக்கிறார்.\n“மனதின் எண்ணங்களை விவரமாக தருவதில் தவறில்லை, ஆனால் இந்த “அவன்”, “இவன்” கதைகளில் அது எனக்கு பிடிப்பதில்லை. “இவன் மனதின் ஆழத்தில் என்னவோ பிசைந்தது” என்றால் உனக்கு எப்படி அய்யா தெரியும் என்று கேட்கத்தோன்றுகிறது. “அவனுக்கு எப்பொழுதுமே விரை கொஞ்சம் பெரிசு” என்று வாசிக்கையில் “அவ்வளவு அன்யோன்யம் எப்படி ஏற்பட்டது என்று கேட்கத்தோன்றுகிறது. “அவனுக்கு எப்பொழுதுமே விரை கொஞ்சம் பெரிசு” என்று வாசிக்கையில் “அவ்வளவு அன்யோன்யம் எப்படி ஏற்பட்டது” என்று கேட்கத் தோன்றுகிறது”\nஅடிக்கடி எப்போது ஜேகே புத்தகம் வெளியிடப்போறீங்கள் என்று நண்பர்கள் கேட்பார்கள். அவர்களுக்கு என் பதில்.\nஅதற்கு ஏதாவது எழுத தெரியவேண்டுமே\n“எல்லாமே முடிஞ்சுது, இட்ஸ் ஓவர்” என்று திடீரென்று அவன் வந்து சொன்னபோது எப்படி இருந்தது தெரியுமா உனக்கெங்கே அது புரியப்போகிறது. சொன்னவன் திரும்பியேனும் பார்த்தானா உனக்கெங்கே அது புரியப்போகிறது. சொன்னவன் திரும்பியேனும் பார்த்தானா கேட்டால் இட்ஸ் ஓவராம். அப்படி முடிக்கமுடியுமா என்ன கேட்டால் இட்ஸ் ஓவராம். அப்படி முடிக்கமுடியுமா என்ன கொஞ்சம் காலம் தான். இதுவும் கடந்துபோகும். எனக்கு இது புதிதல்லவே. ஆனால் இந்த நேரத்தை நிச்சயம் நிதானமாக நான் கடக்க விரும்புகிறேன். அவன் சொல்லிய வார்த்தைகளுக்குள் மறைந்திருந்த சொல்லாத வார்த்தைகளை தேட எனக்கு அவகாசம் வேண்டும். அந்த வார்த்தைகள் எனக்கு பயன்படும். எதிர்காலத்தில், வயது ஏற ஏற, இன்னொரு தவறு நிகழாமல் இருக்க .. அது எனக்கு தேவை.\nஇப்ப நான் என்ன செய்வது உன்னை விட்டால் எனக்கு யாரு தான் கதி உன்னை விட்டால் எனக்கு யாரு தான் கதி உன்னிடம் வந்து சேருவோம் என்றால் இந்த சனியன் பிடித்த மலை இன்னமும் முன்னால் நிற்கிறது. தாண்டவேண்டும். ஏறி கடக்கவேண்டும். மொத்த உலகமுமே என் தோளில் ஏறி மி���ித்தால் நான் எப்படி ஏறுவேன் சொல்லு உன்னிடம் வந்து சேருவோம் என்றால் இந்த சனியன் பிடித்த மலை இன்னமும் முன்னால் நிற்கிறது. தாண்டவேண்டும். ஏறி கடக்கவேண்டும். மொத்த உலகமுமே என் தோளில் ஏறி மிதித்தால் நான் எப்படி ஏறுவேன் சொல்லு ஏற ஏற குளிர் வேறு ஏறுகிறது. நல்ல காலம், முகிழ்களுக்கிடையில் தெரிகின்ற சூரிய ஒளிகள், அது தரும் வெப்பம் . இந்த குளிருக்கு இதமாக, என்னை கணகணப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் எனக்கு அந்த சூரியன் வேண்டாம். இதோ இந்த நிமிடம் கிடைக்கும் இந்த காதல் போதும். சூரியன் தூர இருந்து ஒளி தர தான் லாயக்கு. அட என்று அருகில் போனால் சுட்டு பொசுக்கி விடும். வேண்டாம். எனக்கு நீ, பக்கத்தே நிலவு, அது போதும். எரிக்காது. இதமான இரவிலும் உன் மடி வைத்து தலை சாய்த்தால் எறிக்கவும் செய்யும். வேறொன்றும் வேண்டாமே.\nஇந்த வலி, காயம் எல்லாமே போதும் போதும் என்னுமளவுக்கு பார்த்துவிட்டேன். இனி முடியாது. ஒருத்தி எத்தனை ஏமாற்றங்களை தான் தாங்கிக்கொள்வாள் நான் என்ன பெண் இல்லையா நான் என்ன பெண் இல்லையா இதெல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றாலும் அது முடியுதில்லை. ஒரு பக்கம் தனிமை துரத்துகிறது. அதிலிருந்து தப்ப காதலை தானே தேடவேண்டி இருக்கிறது. இவ்வளவு தூரம் ஏறியும் ஆயிற்று. இனி இறங்கவும் முடியாது. இறங்கினாலும் அந்த தனிமை. வேண்டாம்.\nநீ என்றதும் ஏன் இத்தனை குறுகுறுப்பு ஒன்றுமில்லை, என்ன தான் இந்த காதல் ஒன்றுமில்லை, என்ன தான் இந்த காதல் அது தெரியவேண்டும். அதை நீ மட்டுமே எனக்கு காட்டமுடியுமடா. என்ன தான் இந்த காதல் அது தெரியவேண்டும். அதை நீ மட்டுமே எனக்கு காட்டமுடியுமடா. என்ன தான் இந்த காதல் உணரவேண்டும். அதையும் உன்னால் தான் எனக்கு உணர்த்த முடியும். உள்ளுணர்வு சொல்லுகிறது. அதை நம்பலாம். உள்ளுணர்வு ஒன்றும் ஆகாயத்தில் இருந்து வருவதில்லையே. அனுபவங்களில் இருந்து தானே வருகிறது. என் அனுபவங்களை விட வேறு சிறந்த பாடங்கள் எங்கே கிடைக்கப்போகிறது உணரவேண்டும். அதையும் உன்னால் தான் எனக்கு உணர்த்த முடியும். உள்ளுணர்வு சொல்லுகிறது. அதை நம்பலாம். உள்ளுணர்வு ஒன்றும் ஆகாயத்தில் இருந்து வருவதில்லையே. அனுபவங்களில் இருந்து தானே வருகிறது. என் அனுபவங்களை விட வேறு சிறந்த பாடங்கள் எங்கே கிடைக்கப்போகிறது உன்னை தான் இனி நம்பியிருக்கிறேன். சிக்கென பிடித்தேன் தேவனே. எழுந்தருள ஏன் இந்த தயக்கம் உன்னை தான் இனி நம்பியிருக்கிறேன். சிக்கென பிடித்தேன் தேவனே. எழுந்தருள ஏன் இந்த தயக்கம் பார் என்னை. மலை உச்சியில், தன்னந்தனிச்சியாக, ஒளிந்து கொள்ள கூட இங்கே இடமில்லை. என்னது அது. எங்கிருந்தோ வந்து எட்டும் தூரத்தில் திடீரென்று வந்து நிற்கிறாயே. இது நீதானா பார் என்னை. மலை உச்சியில், தன்னந்தனிச்சியாக, ஒளிந்து கொள்ள கூட இங்கே இடமில்லை. என்னது அது. எங்கிருந்தோ வந்து எட்டும் தூரத்தில் திடீரென்று வந்து நிற்கிறாயே. இது நீதானா என்ன இது கண்ணாமூச்சி ஆட்டம். இது இது தான் அந்த புள்ளியா என்ன இது கண்ணாமூச்சி ஆட்டம். இது இது தான் அந்த புள்ளியா கடையில் கண்டுவிட்டேனா. என் காதல் என்னை கண்டுவிட்டதா கடையில் கண்டுவிட்டேனா. என் காதல் என்னை கண்டுவிட்டதா\nசொல்லு சொல்லு சொல்லு…இப்போது பரவுகிறதே இந்த உணர்வா மறைக்காதே சொல்லு. எனக்கு புரிகிறது. புல்லரிக்கிறது பாரு. காதல். பார்த்தியா. நான் தான் ஏறவேயில்லையே. எல்லோரும் முடியாது என்று ஏளனம் செய்தார்களே. மலையை கடக்கமாட்டேன் என்று நினைத்தவர்களை எல்லாம் தவிடு பொடியாக்க, மலையையே குன்றாக்கினாயே என் தேவ இன்னும் ஏன் தயங்குகிறாய். வாயேன் பேசுவோம். காதலை, திகட்ட திகட்ட பேசுவோம். இந்த காதலை சொல்லித்தா. இதுவரை நான் செய்தது எல்லாமே காதலே இல்லை என்று சொல்லு. மேலும் இது தான் காதல் என்று சொல்லு. சொல்லு. சொல்லு\n80களில் வெளியான இந்த பாடலை மீண்டும் வடிவமைத்திருக்கிறார்கள். மரியா அதற்கு உயிரும் உள்ளமும் கண்ணீரும் சேர்த்திருக்கிறார். முதன்முதலில் அவர் American Idol இல் நான்கு வருடங்களுக்கு முதல் பாடியபோது என்னை வசப்படுத்திய பாட்டு. அன்றே டவுன் லோட் பண்ணி கேட்டு கேட்டு மீண்டும் கேட்டு, ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதுசாக ஒரு cry இருக்கும் பாட்டு இது. டிவைன்.\nமேஜர் நோட்டில் ஆரம்பிக்கிற பியானோ, திடீரென்று மைனருக்கு போவது, காதல் உணர்வு வந்த பெண் திடீரென்று தன் பழசை நினைத்து அச்சமுறுவதை காட்ட. அது முடிய மெல்லிய சாரீரத்தில் “I want to know what love is” என்று மரியா கிரே பாடி கொஞ்சம் கொஞ்சமாக மலை ஏறும் உணர்வு இருக்கிறதே. அதை தான் தமிழில் எழுத முயன்று தோற்றிருக்கிறேன். இசையும் வரியும் அதை நிஜமான உணர்வோடு பாடும் குரலையும் வெறும் வாரித்தைகளுக்குள் வடிக்கும் வல்லமை என் எழுத்துக்கு இன்னமும் படியவில்லை. ஆனாலும் ஒரு முயற்சி தான்.\nமச்சான் இளையராஜா ப்ரோகிராம் மெல்பேர்னில நடக்குது. டிக்கட் வாங்கிட்டியா\nஇல்லை மச்சி, அது ஷுவரா நடக்குமோ தெரியாது. எதுக்கும் முதல்நாள் போய் வாங்குவம்.\nஇல்லடா, போன வருஷம் நவம்பர் மாசம் என்று கனடாவில வைக்கவிடாமா தடுத்தாங்களே\nஅதுக்கென்னடா .. இது மே மாசம் தானே.\nஅதாண்டா யோசினையா இருக்கு. எவனாவது மே மாசம், சோகமான மாதம், நிகழ்ச்சி வைக்க கூடாது என்று Facebook ஸ்டேடஸ் போட்டு அதை ஒரு பத்து பேர் ஷேர் பண்ணினா கதை கிழிஞ்சுது\nடேய் தெரியாம தான் கேட்கிறன். உண்ட நாலு வயசு பெடியனுக்கு பேர்த்டே பெப்ருவரி தானே வந்தது.\nநல்ல காலம் அந்த டைம் ஒருத்தரும் ஸ்டேடஸ் போடேல்ல .. போட்டிருந்தா… சரி விடு\nஇளையராஜா கடிதங்கள் கட்டுரைகள் நகைச்சுவை வியாழ மாற்றம்\nyarl it hub (16) அரசியல் (12) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (28) இளையராஜா (44) ஊரோச்சம் (14) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (48) கட்டுரைகள் (99) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (10) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (9) சிறுகதை (82) சினிமா (28) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (83) நூல் விமர்சனம் (58) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (78)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (2) short story (6) yarl it hub (16) அரசியல் (12) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (28) இளையராஜா (44) ஊரோச்சம் (14) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (48) கட்டுரைகள் (99) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (10) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (9) சிறுகதை (82) சினிமா (28) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (83) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (58) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (7) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (78)\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\nமறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபோயின … போயின … துன்பங்கள்\nஅஷேரா - சிதறிய எறும்புகளின் கதை\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/07/EPDP_13.html", "date_download": "2021-08-02T08:46:06Z", "digest": "sha1:5Q25XK2GNQXFNV3AZB2AG475PYJTCDXT", "length": 10987, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "ஆக்கிரமிப்பு மீனவர்களிற்காக அனுதாபத்தில் டக்ளஸ்! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / ஆக்கிரமிப்பு மீனவர்களிற்காக அனுதாபத்தில் டக்ளஸ்\nஆக்கிரமிப்பு மீனவர்களிற்காக அனுதாபத்தில் டக்ளஸ்\nடாம்போ Tuesday, July 13, 2021 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் ஆக்கிரமித்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளாராம்.\nமேலும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறு வெளி மாவட்ட கடறறொழிலாளர்ளினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்hம்.\nதமிழ் தாயக கடற்பரப்பினை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்கள் தொடர்பிலேயே டக்ளஸ் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் க���்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/03/blog-post_24.html", "date_download": "2021-08-02T09:29:34Z", "digest": "sha1:PEFJUDSCCGS4OCLNLAMIYMZ45STMZQNF", "length": 3315, "nlines": 36, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: யூனியன் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்", "raw_content": "\nயூனியன் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nநமது BSNL நிறுவனம், யூனியன் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பேச்சு வார்த்தை நடந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதற்க்கான தொடர் முயற்ச்சியை எடுத்த நமது BSNLEU மத்திய சங்கத்திற்கு நன்றி.\n* தனி நபர்க்கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும்.\n* தனி நபர்க்கடன் வட்டி விகிதம் 12.15 சதம்.\n* பெண்களுக்கு 0.25 சதம் வட்டியில் சலுகை.\n* வங்கியில் கடன் பெற்ற ஊழியர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களது குடும்ப ஓய்வூதிய விண்ணப்பங்கள் வங்கியின் கடனைக் கட்டிய பின்பு தான் அனுப்பப்பட வேண்டும் போன்ற கடுமையான விதிமுறைகளை யூனியன் வங்கி கூறியதால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுல்படுத்தப்படவில்லை. தற்போது அது போன்ற விதிமுறைகள் இல்லாமல் ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது.\n* ஆயினும் கடன் பெறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் இருக்கக் கூடாதென புதிய கட்டுப்பாட்டை யூனியன் வங்கி விதித்துள்ளது.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/03/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-08-02T09:22:55Z", "digest": "sha1:3GVJDKRVKUM4I4RPJUP52JL3B7OMSTLP", "length": 6869, "nlines": 93, "source_domain": "eettv.com", "title": "சூப்பரான கிராமத்து மீன் குழம்பு – EET TV", "raw_content": "\nசூப்பரான கிராமத்து மீன் குழம்பு\nமீன் குழம்பை கிராமத்து ஸ்டைலில் வறுத்து அரைத்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான கிராமத்து மீன் குழம்பு\nமீன் – 1/2 கிலோ (எந்த மீனாகவும் இருக்கலாம்)\nகடுகு – 1 டீஸ்பூன்.\nசின்ன வெங்காயம் – 10.\nகறிவேப்பிலை – சிறிது .\nபுளி – (ஒரு சிறிய எலுமிச்சை அளவு).\nஉப்பு – தேவையான அளவு.\nதேங்காய் – 1 கப்.\nசின்ன வெங்காயம் – 10.\nதனியா – 2 டேபிள் ஸ்பூன்.\nசீரகம் – 1 டீஸ்பூன்.\nமீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nதக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபுளியை நீரில் அரைமணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\nவறுத்து அரைப்பத��்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, சூடு ஆறியதும் அதனை அம்மியில், தண்ணீர் சேர்த்து மென்மையாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். பின் இதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைக்கவும்.\nஅரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை கலந்து தனியாக வைக்கவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.\nகுழம்பிலிருந்து எண்ணெய் தனியே பிரியும்போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.\nசூப்பரான சூப்பரான கிராமத்து மீன் குழம்பு ரெடி.\nசிறிலங்காவை மையப்படுத்திய தொடர் பக்க நிகழ்வுகள் : சிறிலங்கா மௌனம் \nஒன்ராறியோவில் புதிதாக 218 பேருக்கு COVID-19 தொற்று, 2 பேர் உயிரிழப்பு\n இரண்டு வயதான தமிழ் சிறுவன் பலி\nதீவிரமாக பரவும் டெல்டா வைரஸ் – இலங்கையர்களுக்கு 3 தடுப்பூசிகள்\nரிஷாட்டின் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பெண்\nபுதிய அரசியல் மாற்றம் அவசியம்\nதுருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் புதிதாக 30,738 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,604 பேர் பலி\nஇமாசல பிரதேசம் – கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு, 37,582 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nசிறிலங்காவை மையப்படுத்திய தொடர் பக்க நிகழ்வுகள் : சிறிலங்கா மௌனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=20310026", "date_download": "2021-08-02T09:21:26Z", "digest": "sha1:TYPXYQG3HR7NKMJYDCETFZFB4KPNEJLM", "length": 62486, "nlines": 205, "source_domain": "old.thinnai.com", "title": "வாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\n‘இலக்கியக் கூட்டம் வச்சிருக்கோம். ‘\nசொன்னேன். யார் பேசப் போகிறார்கள். என்றைக்கு. எந்த இடத்தில். எத்தனை மணிக்கு.\n‘நீங்களும் அவசியம் கலந்துக்கிட்டா நல்லா இருக்கும் ‘.\nவரேன் என்றோ வர இயலாது என்றோ பதிலும், ஒரு நன்றியுமாக வழக்கம்போல் இந்தத் தொலைபேசி உரையாடலும் முடிந்திருந்திருக்கலாம்.\nஅப்படி இல்லை என்று விதிக்கப்பட்டிருந்தது.\n‘இப்ப என்ன எல்லாம் எழுதறீங்க \nஇது அறியா வினாவா அல்லது அறிந்த வினாவா என்று தெரியாவிட்டாலும், தொப்பியைக் கழற்றி பிரிட்டாஷ் ராஜாங்க காலத்து மேசையில் வைத்துவிட்டு கையில் லாட்டிக் கம்பை உருட்டிக் கொண்டு விசாரிக்கும் வயசான போலீஸ் கான்ஸ்டேபிள் குரலில் தட்டுப்பட்டார்.\n‘அப்ப என்னைத் திட்டி ஒண்ணுமே எழுதலீங்கறீங்களா \nசோட்டாணிக்கர பகவதியம்மே, எந்தா ப்ராந்தோ எனிக்கு \n‘நான் எதுக்கு சார் உங்களைத் திட்டணும் \n‘இப்ப நீங்க எங்கல்லாம் எழுதறீங்க \nகடைசியாகத் திண்ணை பெயரைக் கேட்டவுடன் அவர் குரலில் மகிழ்ச்சியும் மேலதிகக் கண்டிப்பும் தென்படத் தொடர்ந்தார்.\n‘அங்கே என்ன பெயர்லே எழுதறீங்க \nஇந்த விளையாட்டு போர் அடித்து விட்டது எனக்கு. நேரடியாக விஷயத்து க்கு வந்தால் என்ன இவர் \n‘ஆ.. அதான்.. என்னமோ நான் சோ பத்திப் பேசிட்டிருந்தேன். எல்லாரும் எழுந்து போய்ப் போண்டா சாப்பிடக் கிளம்பிட்டாங்க ‘ன்னு அங்கே எழுதினீங்களா இல்லியா \nஇது நிஜமான மொட்டைத்தலை – முழங்கால் அல்லது உள்ளங்கை போண்டா விவகாரம்.\nநான் அண்மையில் போன இலக்கியக் கூட்டத்தில் தொடக்க உரையாக இவர் பேசியதில் ஆரம்பித்து, வேறு யாரெல்லாமோ அப்புறம் வரிசையாகப் பேசிக் கொண்டிருக்கக் காராபூந்தி மெல்லும் இரைச்சலில் ஏதும் காதில் விழவில்லை என்று தொடர்ந்து, இலக்கிய விழாவில் சிற்றுண்டி வ்ிநியோகம் நடத்திக் கவனத்தைச் சிதறச் செய்ததை விமர்சித்து முடித்திருந்த ‘வாரபலன் ‘ கட்டுரையை நானே மறந்து போய்விட்டேன்.\nஅதை யாரோ சிரத்தையாக இவரிடம் தலையையும் வாலையும் மட்டும் ஒட்ட வைத்து நடுவில் இருக்கும் எல்லாவற்றையும் ஜாக்கிரதையாக நீக்கி விட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.\n‘ஏன் என்மீது விஷத்தைப் பொழிகிறாய் ‘ என்றார் சடாரென்று ஆங்கிலத்துக்குத் தாவி.\nவிஷம் என்ற பெயரில் நான் ஒரு காலத்தில் கணையாழியில் குறு நாவல் எழுதியிருக்கிறேன். அந்த வருஷம் பரிசு பெற்ற குறுநாவல் எல்லாமே பெ��ர் விஷயத்தில் ஒற்றுமை கொண்டவை (நண்பர் ஜெயமோகனின் ‘சவுக்கு ‘ மட்டும் நினைவு இருக்கிறது அவற்றில்). மற்றப்படி விஷத்தைப் பொழிய, குறைந்த பட்சம் ஸ்ப்ரே செய்யக்கூட என்னிடம் உபகரணம் எதுவும் இல்லை.\n‘நீங்க நான் என்ன எழுதினேன்னு படிச்சீங்களா சார் \n‘இல்லே, யாரோ வந்து சொன்னார்கள். ஆமா, ஏன் என்மீது விஷத்தைப் பொழிகிறாய் \n‘நீங்க படிக்காமே எப்படி சார் நான் எழுதினதைப் பத்திக் கருத்துச் சொல்ல முடியும் \nஇலக்கியப் பத்திரிகை என்றால் தேடி எடுத்து ஜெராக்ஸ் எடுத்து நாலாக மடித்துக் கவரில் போட்டு அனுப்பி வைக்கலாம். திண்ணை இணையப் பத்திரிகை.\n‘இல்லை. ஆனால், நீ என்மீது விஷத்தைப் பொழிந்திருக்கிறாய் ‘.\n‘சார் நீங்க நாளைக்கு நடக்கப் போற விழாவுக்கு வாங்க. நான் திண்ணையிலே வந்ததை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு வரேன். நீங்களே படிச்சுப் பாத்துட்டுச் சொல்லுங்க ‘.\n‘பாக்கலாம். ஆமா, ஏன் மீது விஷ ‘\nஜனகராஜ் (என்ன ஆச்சு அவருக்கு அற்புதமான குணச்சித்திர நடிகர் இல்லையா அற்புதமான குணச்சித்திர நடிகர் இல்லையா ) படத்தில் வரும் ‘தங்காச்சியை நாய் கடிச்சுடுச்சு ‘ நினைவுக்கு வர சிரிப்போடு தொலைபேசியை வைத்தேன்.\n‘தெலுங்குக் கவிஞர்கள் தங்களைப் படு சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்கள் ‘ என்று வந்த இலக்கிய விமர்சனத்தை இரண்டு வாரம் முன்னால் இந்தப் பகுதியில் மேற்கோள் காட்டியிருந்தேன்.\nநம் இலக்கிய விமர்சகர்களைப் பற்றி எல்லாம் இப்படி யாரும் நாக்கின் மேல் பல்லுப்போட்டுச் சொல்ல முடியாது. சொல்லவும் வேண்டாம். இவர்கள் இடதுசாரியாக இருந்து விட்டுப் போகட்டும். இல்லை, வலதுசாரியாக இருந்தால்தான் நமக்கு என்ன பேசாமல் ஒதுங்கிப் போவதே நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஆனாலும், அடுத்த மாதம் இன்னொரு இலக்கியக் கூட்டம் வரும். எல்லோரையும் அழைக்க வேண்டி இருக்கும். அதற்குள் இதையும் வெட்டி ஒட்டிப் போட்டுக் கொடுத்திருப்பார்கள் (ஆஹா, வாரபலனால் பிரயோஜனம் இல்லை, நிறுத்தி விடலாம் என்று நினைத்தது தப்பாப் போச்சே\n‘வணக்கம் சார், இலக்கியக் கூட்டம் வச்சிருக்கேன் ‘.\n‘அது இருக்கட்டும். இவரு வலம் போனா என்ன, இடம் போனா என்னன்னு என்னைப் பத்தி எழுதியிருந்தியா \n‘புலிநகக் கொன்றை ‘ ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ணனோடு ஒரு இலக்கியச் சந்திப்பு.\nதிருவான்மியூரில் ஸ்ரீராம�� நகர் முதல் குறுக்குத் தெருவுக்கு வந்துவிடுங்கள் என்று நண்பர்களிடம் தொலைபேசியபோது, ‘இடத்தைச் சரியாச் சொல்லு ‘ என்றார்கள் எல்லோரும்.\nஇத்தனை வருடம் சென்னையில் இருந்தாலும், இந்த விஷயத்தில் (இதில் மட்டும்தானா ) நான் ஞான சூனியம். லண்டனும் பாங்காக்கும் தான் எனக்குச் சுமாராகத் தெரிந்த நகரங்கள் என்றால் நீங்க நம்பப் போவதில்லை – ‘போய்யா பெரிய பிஸ்தா ‘.\nஆர்தர் கானண்டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸுக்குப் பத்தொன்பதாவது நூற்றாண்டு லண்டன் மாநகரத்தின் மூலை, முடுக்கு, சந்து பொந்தெல்லாம் தெரியும் என்பது போல், கடந்த ஐம்பது வருட சென்னையை முழுக்க அறிந்தவர்கள் எனக்குத் தெரிந்து மூன்று பேர் – மதராஸ் மிசல்லெனி முத்தையா, ராண்டார்கை மற்றும் அசோகமித்திரன்.\nஇலக்கியக் கூட்டம். அதுவும் எல்லோருக்கும் நண்பரான பி.ஏ.கிருஷ்ணனோடு சந்திப்பு என்பதால் இந்த மூவரில் அசோகமித்திரனுக்குத் தொலைபேச, அவரால் வர இயலாது என்று தெரிந்தது. கொஞ்சம் ஆர்வக் கோளாறோடு இலக்கியச் சந்திப்பு அமைப்பாளர்களான நானும், நண்பர்கள் வெங்கடேஷும் பா.ராகவனும் இன்னார் வரக்கூடும் என்ற பட்டியலை முன்கூட்டியே ஒப்பித்ததிற்கும் இதற்கும் தொடர்பில்லைதான்.\n‘தனியாக திருவான்மியூர் வரைக்கும் போய்த் திரும்ப சிரமம் ‘ என்றார் இந்திரா பார்த்தசாரதி.\n‘நான் கூட்டிட்டுப் போறேன் சார் ‘ என்று சொல்லி ஆழ்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் அவர் வீட்டுக்குப் போனேன். மகாத்மா காந்தி விஜயம் செய்த, மாதாமாதம் இலக்கியச் சிந்தனைக் கூட்டம் நடக்கிற,சுஜாதாவின் எழுத்தால் பிரபலமான தெரு இது ( ‘அன்றாடம் சென்னைத் தெருக்களில் பள்ளம் தோண்டி வேலை செய்யும் மாநில, மத்திய அரசுத் துறை எதிலாவது ஒரு நாள் வேலை இல்லாமல் இருந்தால், உடனே போய் அம்புஜம்மா தெருவிலே தோண்டுங்கய்யா என்று உத்தரவு போட்டு அனுப்புவார்கள் ‘).\nசுஜாதா தற்போது அங்கே இல்லை. தெருக் கோடி வீட்டில் கணையாழி கஸ்தூரிரங்கனும் அங்கே இல்லை. அவர் வீட்டில் காந்தி பாதம் பட்ட இடத்தில் அதைப் பதித்து மண்டபம் எழுப்பிக் காந்தி சிலை வைத்திருந்ததும் காணாமல் போய் அங்கே மிலிட்டரி ஓட்டல் நடந்து கொண்டிருக்கிறது.\nஆனாலும் அம்புஜம்மாள் தெரு வழக்கம் போலவே குண்டும் குழியும், அதில் முந்தின நாள் அதிகாலை மழைத் தண்ணீருமாக அப்படியே இருக்கிறது. சென்னையில் மழைநீர் சேகரிப்பில் முதல் பரிசைத் தட்டிக் கொண்டு போக சகல தகுதியும் வாய்ந்த தெருவாக்கும் அது.\nஇ.பாவோடு காரில் திருவான்மியூர் போய்க்கொண்டிருந்தபோது, அவருக்கு அமெரிக்காவில் சிகாகோ விமான நிலையத்தில் ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னார். வெள்ளை அல்லாத தோலைப் பார்த்தால் அமெரிக்கர்களுக்கு ஏற்படும் பயமும் அதிஜாக்கிரதை உணர்வும் இன்னும் நீங்கவில்லை என்று புரிந்தது.\n‘என்னை ஏன் குற்றவாளி போல் நிறுத்திக் கேள்வி கேட்கிறாய்(Why do you treat me like a convict on parole) ‘ என்று அவர் அமைதியான ஆங்கிலத்தில் கேட்க, இமிகிரேஷன் பெண்மணி அவர் சொன்னதில் கான்விக்ட் என்பதை மட்டும் கிரகித்து இன்னும் நாலு அதிகாரிகளைக் கொண்டு வந்து நிறுத்தியதை சுவாரசியமாக எடுத்துச் சொன்னார். செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத பிராணிகளைப் போல், செப்டம்பர் பதினொன்று பீதியும், புஷ் அரசின் பூச்சாண்டி வரான் பயமுறுத்தல்களும் சராசரி அமெரிக்கக் குடிமக்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.\nபின் லாடனுக்கும் இந்திரா பார்த்தசாரதிக்கும் வித்தியாசம் என்னெல்லாம் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி மெனக்கெடுவதை விடப் போண்டா விநியோகிக்கப்படும் இலக்கியக் கூட்டத்துக்குப் போய் அதைப் பற்றி இங்கே ரிப்போர்ட் எழுதலாம்.\nபயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கத் தற்காப்பு குறித்த பேச்சு, இந்த வாரம் ரத்தப் புற்றுநோயால் காலமான பாலஸ்தீனியரும் அமெரிக்காவை வசிப்படமாகக் கொண்டவருமான இலக்கிய விமர்சகர் எட்வர்ட் சையத் பற்றித் திரும்பியது. சியோனிச எதிர்ப்பாளரும், அதே நேரத்தில் யாசர் அராபத்தின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டவருமான சையத் தான் பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையேயான ஓஸ்லோ சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அடிகோலியவர். அந்தப் பேச்சுவார்த்தை சியோனிச ஆதரவுத் தளத்திலேயே இஸ்ரேலுக்குப் பட்சமாக முன்னேற அதைக் கடுமையாக விமர்சித்தவரும் அவர்தான்.\nஎட்வர்ட் சையட் பற்றிக் கிட்டத்தட்ட முழுப்பக்கம் இந்து பத்திரிகை எழுதியதை சிலாகித்த இ.பாவிடம், இது ராம் அப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டதன் விளைவா என்று கேட்க நினைத்தேன்.\nஆனாலும், நூற்று இருபத்தைந்து வருட வரலாறு கொண்ட இந்து சென்னையில் இருந்தும் தமிழ் இலக்கியத்தைக��� கண்டுகொள்வதே இல்லை என்ற குறைச்சலை மட்டும் எடுத்துச் சொன்னேன்.\nஇந்து ராம் விரைவில் ஆவன செய்ய முயற்சி எடுப்பார் என்று தெரிகிறது என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்.\n‘இதானே திருவான்மியூர். நாம எங்கே போகணும் \nஇ.பா மறந்து விடாமல் கேட்டார்.\nமொபைல் ஒலித்தது. நண்பர் மனுஷ்யபுத்திரன். அவரும் அதே கேள்வியோடு. பக்கத்தில் எங்கோ இருக்கிறார். அப்புறம் வழக்கறிஞர் விஜயனின் அழைப்பு. தொடர்ந்து இலக்கிய விமர்சகர் இந்திரனின் குரல்.\n‘எங்கேப்பா அந்த ஸ்ரீராம் நகர் முதல் குறுக்குத் தெரு \n‘இருங்க. கண்டு பிடிச்சுச் சொல்றேன் ‘.\nசார்போ, எதிரோ, எல்லா எஸ்டாபிலிஷ்மெண்டுகளையும் நிராகரித்த எட்வர்ட் சையத்.\nஇ.பாவோடு பேசியதை அசை போட்டுக்கொண்டே ஸ்ரீராம் நகர் முதல் குறுக்குத் தெருவில் நுழைந்து, இலக்கிய அன்பர் விஜயராகவனின் மனம் போல் விசாலமான இல்லத்தில் நண்பர்களோடு கம்பள விரிப்பில் உட்கார, நடுநாயகமாகப் புலிநகக் கொன்றை பி.ஏ.கிருஷ்ணன்.\nபி.ஏ.கேயும் எட்வர்ட் சையத் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு ஆரம்பித்தார்.\nநான் கூட்டத்தைப் பார்க்க, பின்னால் இ.பா, திரைப்பட வரலாற்றாளர் தியோடர் பாஸ்கரன். மாலன். பத்திரிகையாளர் கெளரி ராம்நாராயண். வழிகண்டு பிடித்து வந்து சேர்ந்த மனுஷ்யபுத்திரன். விஜயன். இந்திரன். ராயர் காப்பி கிளப் நண்பர்கள் வெங்கடேஷ், கவியோகி வேதம், கவிஞர் சேவியர், ஓவியர் நாகராஜன். வாஞ்சிநாதன். தாமதமாக வந்து நுழைந்த பா.ராகவன். கூடவே ஆசாத், ஐகாரஸ் பிரகாஷ், வெங்கடேஷின், ராகவனின் பத்திரிகைத்துறை நண்பர்கள். வீட்டுக் கூடம் நிறைந்து விட்டிருந்தது.\nபி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை பற்றிய கலந்துரையாடல் அவர் தயாரித்த இந்தியன் மாகசீன் தமிழ் இலக்கியச் சிறப்பிதழ் (அக்டோபர் வெளியீடு) பற்றிய குறிப்போடு தொடங்கியது.\nஇந்திய மொழிகளிலேயே தமிழில் தான் அதிக நூல்கள் வெளியாவதாகச் சொன்ன கிருஷ்ணன், பதினைந்து படைப்பாளிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான தமிழ்ப் புத்தகங்களை மதிப்பீடு செய்து எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு அது என்றார். அந்தக் கட்டுரைகள், அதில் இடம் பெற்ற நூல்கள் பற்றித் தான் எழுதிய அறிமுகக் குறிப்பையும் வாசித்தார்.\nஇந்தப் புத்தகங்களில் இலங்கையைச் சேர்ந்த ரபேல் எழுதிய ‘காபி டேபிள் புத்தகம் ‘ ஆன ��மிழ்நாட்டுக் கோயில்கள் பற்றி தியோடர் பாஸ்கரன் குறிப்பிட்டு அதன் பொருட் செறிவு மற்றும் தரம் பற்றிக் கேள்வி எழுப்பினார். அது தமிழில் வந்த அம்மாதிரியான முதல் புத்தகம் என்றார் மாலன்.\nதமிழ் – வடமொழி இலக்கிய உறவைப் பற்றிக் குறிப்பிட்ட கிருஷ்ணன், சில வடமொழி, பிராகிருதக் கவிதைகளை உள்வாங்கிக் கொண்டு வேறு தளத்தில் சிறப்பாக விரியும் சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டார். ‘காடா குன்றோ மிசையா குன்றோ ‘ என்ற அவ்வையின் பாடலையும் அதனோடு தொடர்பு இல்லாத ஆனால் பாதிப்பு இருக்கலாம் என்று தோன்றும் வடமொழிப் பாடலையும் அவர் சொன்னார்.\nதொடர்ந்து இ.பாவும், தியோடர் பாஸ்கரனும், மாலனும், நானும் மற்றவர்களும் மேலே நடத்திப் போன விவாதம் கவிதையை ரசிக்க அது தோன்றிய சமுதாய, கலாச்சார, வரலாற்றுப் பின்புலங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய, வேண்டாத அவசியங்களையும், பேசி எழுதிப் பழகும் மொழியான தமிழும், எழுத்து மட்டுமேயான வடமொழியும் கொண்ட உறவு, வடமொழியாதிக்கம் போன்றவற்றைத் தொட்டு நீண்டு ஜெயமோகனின் சங்கச் சித்திரங்களைப் பார்வையிட்டுத் திரும்பியது.\nகதா சிறந்த சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்ற தமிழ்ச் சிறுகதைகளோடு ஒப்பிட்டால் மற்ற பல மொழிப் படைப்புக்கள் கீழேதான் என்றார் கிருஷ்ணன்.\nஎனக்கென்னமோ இது அந்தந்த மொழிக்கான கதைத் தேர்வாளர்களின் அக்கறையின்மையினால் ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. உதாரணமாக, தமிழ் இலக்கிய வளர்ச்சியோடு மலையாள இலக்கிய வளர்ச்சியை ஒப்பிட்டால் – என்னத்துக்கு வம்பு – புதுமைப்பித்தனுக்குப் பிடித்த குரங்கு தான் எனக்கும் பிடிக்கும்.\nஓவர் டு புலிநகக் கொன்றை.\nபுலிநகக் கொன்றையைத் தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுத என்ன காரணம் என்று நான் கேட்டேன். மனதுக்குள் கான்ஸ்டபிள் லாட்டியை உருட்டியபடி என்னைப் பிரியமாகப் பார்த்தார்.\nபி.ஏ.கே பொறுமையாகப் பதில் சொன்னார். முறையாகத் தமிழ் படித்திருந்தாலும், தமிழில் இத்தனை நாள் கழித்து எழுதத் தயக்கமாக இருந்தது என்றும் அதை விரட்டியவர்கள் இ.பாவும் சு.ராவும் என்றும்.\nநாவல் இயல்பாக நீட்சியடைந்து முழுமை கொள்ளாமல் பாத்திர வார்ப்புக்கள் சில கேரிக்கேச்சர்களாக நிற்பதாகக் கெளரி ராம்நாராயண் கருத்துச் சொன்னார். மதுரகவி பாத்திரம் உருப்பெற்று எழ��மலேயே கலைந்து போவதை நான் குறிப்பிட்டேன்.\nபி.ஏ.கே இந்த நாவலின் களத்தையும், நீளத்தையும் மனதில் நிர்ணயித்துக் கொண்டே எழுத அமர்ந்ததாகவும், ஒரு திருநெல்வேலி தென்கலை வைணவக் குடும்பத்தில் தலைமுறைகளுக்கு இடையே ஏற்படும் ஒத்திசைவை, முரண்பாடுகளைக் குவிமையத்தில் வைப்பதே தன் நோக்கம் என்றும் இந்த முயற்சியில் சில பாத்திரங்கள் கேரிகேச்சர் தன்மையோடு அமைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். மதுரகவியின் பாத்திரம் மற்றவர்கள் பார்வையில் வெளிப்படுவதையே கதையாடல் உத்தியாகத் தான் அமைத்ததை விளக்கினார் கிருஷ்ணன்.\nஎறும்புகள் ஊறும், பொன்னா பாட்டிக்கு நாலாயிரமும் மறந்து போனதில் தொடங்கும் முதல் அத்தியாயம் ஆங்கில வாசகர்களை மனதில் வைத்து எழுதப் பட்டிருக்கலாம் என்றார் மாலன். சரிதான் என்றார் பி.ஏ.கே.\nஇந்த நாவலில் நம்மாழ்வார் திரும்பி வராமலே போயிருந்தால் கதைப் போக்கில் பெரிய மாறுதல் ஏதும் நிகழ்ந்திருக்குமா என்று கேட்டேன். அது வேறு கதையாகியிருக்கும் என்றார் மாலன். இதை ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்காமல், தமிழில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று விசாரித்தார் இ.பா. பி.ஏ.கேவுக்கே இந்த ஆல்டர்நேட் நாவல் பற்றி ஊகிக்க முடிந்திருக்கும் என்று தோன்றவில்லை.\nநாவலில் நெல்லை மாவட்ட வட்டார வழக்கு மிதமாகவே காணப்படுகிறது என்றார் மாலன். பி.ஏ.கே என்னைக் காட்டி, இவர் சொல்றார் அதுவே அதிகம்னு என்றார். பின்னே, பெரியாரையே நெல்லைத் தமிழ் பேச வச்சுட்டாங்களே நீங்க என்றேன்.\nநாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதை தான் அனுபவித்துச் செய்ததாகக் குறிப்பிட்டார் பி.ஏ.கே. வைணவக் குடும்பங்களில் வழங்கும் அரை மரியாதை விளியான ‘நீர் ‘, ஜீயர் மடத்துப் பரிபாஷை மற்றும் தமிழ் வேதமான பாசுரங்கள் அங்கங்கே பேச்சில் கலந்து இயல்பாக வருவது – இதெல்லாம் ஆங்கிலத்தில் அப்படியே கொண்டு வருவது இயலாத காரியம் என்றார் அவர். தமிழாக்கியதில் அவருக்கு இருக்கும் ஆனந்தம் எல்லோருக்கும் புரிந்திருக்கும்.\nநாவலில் இடைகலந்து வரும் வரலாற்றுச் செய்திகள் பற்றிய விவாதம் தொடர்ந்தது. ராஜாஜியைச் சந்தித்து முன்னுரை கேட்கத் தன் கந்தர்வ கானம் புத்தகத்தோடு வரும் கவிஞர் திருலோகசீத்தாராம் எப்படி இதற்குள் வந்தார் என்று பி.ஏ.கேயைக் கேட்டேன். அது உண்மையில் நடந்ததாகவும், குடும்ப நண்பரான திருலோக சீத்தாராமே சொன்னதாகவும் தெரிவித்த கிருஷ்ணன், ராஜாஜி எழுதிய ஆங்கிலக் கவிதை, அது பற்றிய கடிதம், ராஜாஜியின் பதில் கடிதம் எல்லாம் மெய்யாலுமே நடந்ததுதான் என்றார். நான் மதுரை லாட்ஜ் பற்றிக் கேட்கவில்லை.\nகூட்டம் முடிந்தபோது நான் கையில் திண்ணை வாரபலன் பகுதியைப் பிரிண்ட் அவுட் செய்து வைத்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.\n‘தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் – விமர்ச்கர்கள் இடையே நல்லிணக்கமும் நேசமும் இருக்கிறது. ஓவியக் கலையுலகில் இது அபூர்வம் ‘ என்றார் கிளம்பிக் கொண்டிருந்த இந்திரன்.\nநான் ஜனகராஜ் போல் அவரைப் பார்த்துக் கோணலாகச் சிரித்தது ஏன் என்று சத்தியமாக இந்திரனுக்குப் புரிந்திருக்காது.\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nNext: கனடாவில் நாகம்மா -2\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அற���வுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/terkini/", "date_download": "2021-08-02T09:52:59Z", "digest": "sha1:7NV7D5THSTL6EY5KEIKG6ZEJNRITKC55", "length": 8883, "nlines": 84, "source_domain": "selangorkini.my", "title": "Terkini - Selangorkini தமிழ்", "raw_content": "\nதடுப்பூசி மையம் செல்ல வெ.20 கட்டணக் கழிவு- 8,239 பேரின் விண்ணப்பம் அங்கீகரிப்பு\nஷா ஆலம், ஆக 2- கிராப் வாடகை கார் சேவையை பயன்படுத்தி தடுப்பூசி மையங்களுக்குச் செல்வோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவு வழங்கும் திட்டத்திற்கு நேற்று வரை 8,239 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்...\nகோவிட்-19 நோய்த் தொற்று இன்று 15,764 ஆக குறைந்தது\nஷா ஆலம் ஆக, 2- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 15,764 ஆக குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 17,150 ஆக இருந்தது. சிலாங்கூரில் 6,067 பேர் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக...\nநாடாளுமன்றக் கூட்டம் ஒத்தி வைப்பு- எதிர்கட்சிகள் கடும் ஆட்சேபம்\nகோலாலம்பூர், ஆக 2- நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்கும் பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. பிரதமரின் இந்த முடிவு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ந��டளுமன்ற...\nமுன்பதிவின்றி தடுப்பூசி பெறும் திட்டத்தின் வழி 2,500 பேர் பயனடைவர்- பண்டான் இண்டா தொகுதி நம்பிக்கை\nஅம்பாங், ஆக 2- சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பண்டான் இண்டா தொகுதியில் நேற்றும் இன்றும் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் சுமார் 2,500 பேர் பங்கு பெறுவர் என...\nநாடாளுமன்றக் கட்டிடத்தில் அனைத்துக் கூட்டங்களையும் ஒத்தி வைக்க வேண்டும்- நோர் ஹிஷாம் கோரிக்கை\nகோலாலம்பூர், ஆக 2– நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெறக் கூடிய கூட்டத் தொடர், தேர்வுக் குழு மற்றும் நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு உள்ளிட்ட அனைத்து கூட்டங்களும் கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கி...\nமாற்றுத் திறனாளிகளுக்கு வெ. 500 உதவித் தொகை- 7,300 பேர் விண்ணப்பம்\nஷா ஆலம், ஆக 2- மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு உதவித் தொகையாக 500 வெள்ளி வழங்கும் திட்டத்திற்கு கடந்த சனிக்கிழமை வரை 7,300 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 100 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு...\nநாட்டில் 50% பெரியவர்கள் இம்மாத இறுதிக்குள் 2 டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பர்- கைரி தகவல்\nஜெம்புல் ஆக 1- இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட 50 விழுக்காட்டு மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பர் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. இது வரை...\n97 விழுக்காட்டு கோல சிலாங்கூர் மக்கள் தடுப்பூசி பெற்றனர்- மந்திரி புசார்\nகோல சிலாங்கூர், ஆக 1- சுமார் 97 விழுக்காட்டு கோல சிலாங்கூர் மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சு வெளியிட்ட தரவுகளின்...\nஇன்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 17,150 பேர் பாதிப்பு- சிலாங்கூரில் 6,326 சம்பவங்கள் பதிவு\nஷா ஆலம், ஆக 1– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று நேற்று அதிகபட்சமாக 17,786 சம்பவங்களைப் பதிவு செய்த வேளையில் இன்று அந்த எண்ணிக்கை 17,150 ஆக குறைந்த து. சிலாங்கூரில் நேற்று 6,400...\nமீடியா சிலாங்கூர் சென். பெர்ஹட், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் அதிகாரத்துவ செய்தி ஸ்தாபனம் சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி புசார் இன்கோப்ரேட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது சிலாங்கூர் கினி டிவி , இணையத்தலம் மற்றும் மலாய், ஆங்கிலம் ,சீனம், தமிழ் பத்திரிக்கைகளையும் பிரசுரித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/naane-varuven-shoot-starts-from-august-084284.html", "date_download": "2021-08-02T10:17:27Z", "digest": "sha1:OXRZF5TND47ZLUDHST6F7WKPBK56SXKQ", "length": 16687, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷின் நானே வருவேன் படப்பிடிப்பு எப்போ ஆரம்பம் தெரியுமா? செல்வராகவன் போட்ட மாஸ் ட்வீட்! | Naane Varuven shoot starts from August! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews TN Lockdown: தினந்தோறும் புது புது கட்டுப்பாடுகள்.. தமிழ்நாட்டில் விரைவில் முழு லாக்டவுன்\nFinance அம்பானி ஷாப்பிங் லிஸ்டில் புது நிறுவனம்.. டாடா உடன் போட்டி போடும் மாஸ்டர் பிளான்..\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nSports அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய \"ரெக்கார்டு\".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனுஷின் நானே வருவேன் படப்பிடிப்பு எப்போ ஆரம்பம் தெரியுமா செல்வராகவன் போட்ட மாஸ் ட்வீட்\nசென்னை: நானே வருவேன் படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஇயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மீண்டும் இணைய உள்ள திரைப்படம் நானே வருவேன்.\nபிகினியில் ஆற்றில் ஆனந்தக் குளியல் போட்ட இடுப்பழகி ஸ்ரேயா\nபுதுப்பேட்டை 2 படத்தை இருவரும் இணைந்து செய்வார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நானே வருவேன் குறித்த ஷாக்கிங் சர்ப்ரைஸை செல்வராகவன் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.\nகாதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து மீண்டும் தம்பி தனுஷ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார் இயக்குநர் செல்வராகவன். அண்ணன் இயக்கத்தில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் தனுஷ்.\nநெஞ்சம் மறப்பதில்ல��� படத்தை இயக்கி இருந்த இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து அதே போல வித்தியாசமான ஒரு பேய் படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றார்போல த்ரில்லர் போஸ்டருடன் நானே வருவேன் என்கிற டைட்டிலையும் வெளியிட்டார் செல்வராகவன்.\nஹாலிவுட்டில் தி கிரே மேன், பாலிவுட்டில் அட்ரங்கி ரே மற்றும் கோலிவுட்டில் டி43 என படு பிசியாக பறந்து கொண்டு இருக்கும் தம்பி தனுஷ், அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி உள்ளார்.\nஇந்நிலையில், வரும் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என இயக்குநர் செல்வராகவன் Excited என ட்வீட் போட்டு அறிவித்துள்ள மாஸ்ட் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகர்ணன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் நானே வருவேன் படத்தையும் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்நிலையில், நானே வருவேன் படம் ஆரம்பம் ஆகும் தேதி அடங்கி உள்ள புதிய வொர்க்கிங் போட்டோவை பகிர்ந்து மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.\nஇயக்குநர் செல்வராகவன் தனுஷ் காம்போவில் இதுவரை வெளியான அனைத்து படங்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. ஆனால், சமீப காலமாக இயக்குநர் செல்வராகவன் இயக்கிய என்ஜிகே மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் படமும் சொதப்பிய நிலையில், நானே வருவேன் படத்தை நல்லா எடுங்க என இயக்குநருக்கு தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nதனுஷ், செல்வராகவன் படத்தின் கதை மாற்றம்… காரணம் என்ன தெரியுமா\nகுறைகளை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்... பாடம் எடுத்த டைரக்டர் செல்வராகவன்\nரெண்டாவது பாட்ட ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன்... உங்களுக்கு போட்டுக் காட்டணும்... யுவன் அப்டேட்\nபத்து வருஷத்துக்கு பிறகு ஜாய்ன் ஆகியிருக்காங்க... படத்த தயாரிக்கிறது பெருமையா இருக்கு -தாணு பாராட்டு\n23 வருஷமாச்சு... இப்ப தான் தோணுச்சு...செல்வராகவனின் புதிய அவதாரம்\nதட்றோம்.. தூக்கறோம்... செல்வராகவனின் \\\"நெஞ்சம் மறப்பதில்லை\\\"...ரிலீஸ் தேதி இதுதாங்க\nஇந்த உலகம் உங்களை குத்திக் கிழிக்கும் போது.. செம ட்வீட் போட்ட செல்வ���ாகவன்.. யுவனுக்கும் பாராட்டு\nநானே வருவேன்.. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்.. அடுத்த படம் அறிவிப்பும் மிரட்டுதே\nஅசர வேகத்தில் ரெடியாகும் தனுஷ் படங்கள்...டி 44 ஷுட்டிங் துவங்குவது எப்போ \nExclusive: வயதில் சிறியவராக இருந்தாலும் நடிப்பில் குரு…. தனுஷை பாராட்டிய ஜீவா ரவி\nஉறுதியான தனுஷின் அடுத்த தெலுங்கு திரைப்படம்.. பூஜா ஹெக்டே தான் கதாநாயகியா\nதனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. தலைவன் தங்கம்யா என கொண்டாடும் ஃபேன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதலை நிறைய மல்லிகைப் பூ வச்சிக்கிட்டு எங்கப் போறாங்க குஷ்பு.. ஓஹோ மறுபடியும் சீரியல் என்ட்ரியா\nதுணிந்த பின்’ ஒரு அற்புதமான அனுபவம்… ‘நவரசா‘ படம் குறித்து அதர்வாவின் ருசிகரத்தகவல் \nஅந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/tn-needs-more-oxygen-cm-palanisamy-letter-to-pm/", "date_download": "2021-08-02T08:27:08Z", "digest": "sha1:IZYC7FECAX7ALKUPZ2B32NKS2RTOGCHR", "length": 7048, "nlines": 118, "source_domain": "tamil.newsnext.live", "title": "ஆக்ஸிஜன் வழங்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nஆக்ஸிஜன் வழங்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் \nதமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.தமிழக அரசு பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.\nஇந்தநிலையில், தமிழகத்துக்கு வழங்கும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nஅவர் குறிப்பிட்டுள்ளது,விரைவில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவையில் அளவு 450 மெட்ரிக் டன்னை எட்டும் என்று தெரிகிறது. இது எங்களுடைய உற்பத்தி திறனான 400 மெட்ரிக் டன்னை விட அதிகம்.\n��டந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது கூட 58,000 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர்.\nஆனால், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. எனவே, மேலே குறிப்பிட்டதைவிட ஆக்ஸிஜனின் தேவை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் \nகோவேக்சின் தடுப்பூசி விலை நிர்ணயம் \nதொடர் சரிவில் தங்கம் விலை\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\n5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nகோவேக்சின் தடுப்பூசி விலை நிர்ணயம் \nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\nதொடர் சரிவில் தங்கம் விலை\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\nமுருதீசுவரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2011-08-06-18-33-45/", "date_download": "2021-08-02T10:23:59Z", "digest": "sha1:B66DMGZFRVQFJOFKOLGM3HXQ4PO2VHQ7", "length": 5947, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "என்று தணியும் இந்த சுதந்திர தாகம் |", "raw_content": "\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க உத்தரவிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை.\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்\nஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nசுதந்திரப் போராட்ட வீரர்களுடன் மோடி\nநேதாஜியின் கனவு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை\nபாரம்பரிய தலைப்பாகையுடன் சுதந்திர தினவிழாவில் மோடி\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி\nவாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி\nமிஷன் காஷ்மீர் பிரிதியடையும் பயங்கரவாதிகள்\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவ� ...\nராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறு ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/140", "date_download": "2021-08-02T09:05:44Z", "digest": "sha1:U7E4CAMX7LGEA5CFYD6GUIV5VUJIPKLK", "length": 3575, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 140 | திருக்குறள்", "raw_content": "\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nஉலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும்‌ முறையைக்‌ கற்காதவர்‌, பல நூல்களைக்‌ கற்றிருந்த போதிலும்‌ அறிவில்லாதவரே ஆவர்‌.\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்-உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்; பல கற்றும் அறிவிலாதார்-பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.\n(உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும், கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும் செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் ஒருவாற்றான் தொகுத்துக் கூறப்பட்டன.)\n(இதன் பொருள்) அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும், உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்,\n(என்றவாறு). இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலியுடைத்தென்பதூஉம் கூறிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/kedar-jadhav-will-be-out-of-ipl-2018.html", "date_download": "2021-08-02T10:11:13Z", "digest": "sha1:XEFMBKVZU2CFORAHBN4TQLM3GGJIVNGV", "length": 4650, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Kedar Jadhav will be out of IPL 2018 | தமிழ் News", "raw_content": "\nசென்னை அணியின் முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகல்\nமும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்த ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில், 14 ரன்கள் எடுத்து களத்தில் ஆடிக்கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் கேதர் ஜாதவ் காயம் காரணமாக, 13 வது ஓவரில் \"ரிடையர்ட் கட்' முறையில் பெவிலியன் திரும்பினார்.\nபின்னர், ஆட்டத்தின் இறுதி ஓவரில் களமிறங்கிய கேதர் ஜாதவ், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.\nஇந்நிலையில், இந்த போட்டியின் போது ஏற்பட்ட காயம் குணமாக இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என்பதால், கேதர் ஜாதவ் இனிவரும் போட்டிகளில் ஆடமாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல - பிரபல அரசியல்வாதி\nஆரம்பமே அமர்க்களம்: 'விராட்' அணியை வீழ்த்தி... கேப்டனாக முதல் வெற்றியை ருசித்த 'தினேஷ்'\nஐபிஎல் 2018: கேப்டனாக 'முதல்' வெற்றியைப் பதிவுசெய்த 'அஸ்வின்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.mukadu.com/", "date_download": "2021-08-02T10:02:29Z", "digest": "sha1:7QVKB3FJZNTHXV3GFBMHVYFNCTTGSCAN", "length": 22135, "nlines": 244, "source_domain": "www.mukadu.com", "title": "Mukadu |", "raw_content": "\nஒலிப்பிக்கில் 100 மீற்றர் ஓட்டத்தில் இத்தாலி வீரர் முதலிடம் பெற்றார்.\nபெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே வென்றனர்.\nசென் நதியில் மிதவைப் படகுகளில் பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா.\nஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார்.\nவவுனியாவில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை\nகுறைந்த விலை­யில் நெல் கொள்­வ­னவு\nஇன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்ட��� நினைவு நாள்.\nவான்கரும்புலிகள் கேணல் ரூபன் லெப்கேணல் சிரித்திரனின் 10ம் ஆண்டு நினைவு\nபொன்னம்மான் உட்பட பதினொரு வேங்கைகளின் 32ம் ஆண்டு நினைவு\nஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார்.\nவவுனியாவில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை\nகுறைந்த விலை­யில் நெல் கொள்­வ­னவு\nஒலிப்பிக்கில் 100 மீற்றர் ஓட்டத்தில் இத்தாலி வீரர் முதலிடம் பெற்றார்.\nபெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே வென்றனர்.\n14 வயதில் அகதியாக வந்த சிறுவன் பிரான்ஸுக்குப் பதக்கம் வென்றான்\nரோக்கியோ நகர வானில் ட்ரோன்கள் காட்சிப்படுத்திய ஒளிரும் பூமிப்பந்து\nயூரோ 2020: சாம்பியன் யாா் நாளை இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து மோதல்.\nஉலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை\nசிங்கள இராணுவமும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும் செய்த உடும்பன்குள படுகொலைகள்.\nதமிழில் விடுதலைப் புலிகள் உருவாக்கிய தூய தமிழ்ச் சொற்கள்\nஇறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட அசையும் சொத்துக்கள்\nஇன்று ஊடகவியலாளர் நிமல்ராஜனின் 18வது ஆண்டு நினைவு நாள்\nஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராகி’\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம்\nஉடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்.\nஎச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்\nஅழகான கொழுக்கொழு கன்னங்களை பெற இதை செய்யுங்கோ\nஅடம்பன் இயக்குனருடன் வண்ணாவின் சில நிமிடங்கள்.\nஉலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” – என் வாசிப்பில் கானா பிரபா\n‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது..சுதன்ராஜ்\nஎழுத்தாளர் S.ராமகிருஷ்ணன்அவர்கள் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் குறித்து.\nஉள்ளத்தை அழிப்பதுதான் மாபெரும் வாதை.. தீபச்செல்வன் உரை\nஎழுதித்தீராத பக்கங்களும் சொல்லித்தீராத சோகங்களும். AJ DANIAL\nஉலகின் மிக குறைந்த வயதுடைய புத்தக ஆசிரியராக மாறிய இலங்கை சிறுவன்.\nசம்பூரை மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்: சுவாமிநாதன்\nஇவளதிகாரம் ( சிறுகதை ) – த��ய்வீகன்\nசம்பூரை மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்: சுவாமிநாதன்\nவரலாறு எனது வழிகாட்டி என்றார் “மேதகு” வே.பிரபாகரன்.\n“நேர்கொண்ட பார்வை” ட்ரெய்லர் வெளியானது\n‘NGK’ – 10 நாட்களின் வசூல் விபரம்.\nவிஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரகுமான்…\nஇளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை\nஎது உங்களை பயம் கொள்ள செய்யும்\nஈழத்தின் யுத்த கால புகைப்படக் கலைஞர் அமரதாஸ் நேர்காணல்\nமாவீரர் போற்றி அகவல் 108 காணொளி பாடல்.\nமுகடு படைப்பகத்தின் “மாவீரர் போற்றி அகவல் 108” நாளை வெளியீடு.\nநான் சாதிய ஒழிச்சவன் சங்கரியார் அதகளம்.\nஅரசியல் பழகு பூவன் மீடியா பாகம் 2.\nஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.\nஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்..ஓர் படைப்பாளியின் பார்வை\nமழையோடு மண் விடியும். | கவிதை – தமிழ் சரண்.\nபுலிக்குணம் போகா தமிழர் தேசம் – (தமிழ் சரண்)\nஈழத்து இலக்கியவாதி வரதர் அவர்களின் பிறந்த நாள் நினைவின்று.\nஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்..ஓர் படைப்பாளியின் பார்வை\nவிகாரி வருடம் இன்று பிறக்கிறது செய்ய வேண்டிய விடயங்கள் என்ன\nவிகாரி வருஷம் 14ஆம் திகதி நண்பகல் பிறக்கிறது.\nதீபச்செல்வனின் “நடுகல்” நாவல் அறிமுகவிழா பாரீஸ்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற “நடுகல்” நாவல் அறிமுக நிகழ்வு\nஈழத்து இலக்கியவாதி வரதர் அவர்களின் பிறந்த நாள் நினைவின்று.\nஇலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – ஒபாமா\nஅந்தப் பொய்களின் சீவன் சேடம் இழுக்கும் காட்சிகளே.அகரமுதல்வன்\nஎழுத்து என்பது ஆயுதம். ஊடகத்துறை என்பது போர்க்களம்-சிவா சின்னப்பொடி\nஅம்பாறை மாவட்டத்தில் தாண்டவமாடும் வறட்சி\nதிருமலை மாவட்ட ஆக்கிரமிப்பு: நன்கு திட்டமிடப்பட்ட வரலாற்று நகர்வு\nபெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே வென்றனர்.\nசென் நதியில் மிதவைப் படகுகளில் பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா.\n14 வயதில் அகதியாக வந்த சிறுவன் பிரான்ஸுக்குப் பதக்கம் வென்றான்\nரோக்கியோ நகர வானில் ட்ரோன்கள் காட்சிப்படுத்திய ஒளிரும் பூமிப்பந்து\nதடுப்பூசியை எதிர்ப்பவர்களது சந்தேகங்களுக்கு பதில் என்ன\nபிரான்ஸ் தினசரி நடவடிக்கைகளில் ‘சுகாதாரப் பாஸ்’ கட்டாயமாகின்றது.\nசம்பூரை ��ண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்: சுவாமிநாதன்\nஈழத்து இலக்கியவாதி வரதர் அவர்களின் பிறந்த நாள் நினைவின்று.\nமாவீரர் போற்றி அகவல் 108 காணொளி பாடல்.\nமுகடு படைப்பகத்தின் “மாவீரர் போற்றி அகவல் 108” நாளை வெளியீடு.\nஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.\nஅந்தப் பொய்களின் சீவன் சேடம் இழுக்கும் காட்சிகளே.அகரமுதல்வன்\nவரலாறு எனது வழிகாட்டி என்றார் “மேதகு” வே.பிரபாகரன்.\nமுகடு படைப்பகத்தின் “மாவீரர் போற்றி அகவல் 108” நாளை வெளியீடு.\nஇணையத்தில் வெளியான “ஏணை”முழு நீளத்திரைப்படம்.\nஈழத்தின் மூத்த கலைஞர் திரு ஏ.ரகுநாதன் கனவுகளை சுமந்தபடி.\nஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார்.\nதன் உழைப்பில் கனடாவில் சொந்த விமானம் வாங்கிய ஈழத்தமிழர்.\nஅரசியலை விட்டு வெளியேற தயாராகும் மங்கள.\n : ஆம் சந்தித்தேன் – ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாதி சஹ்ரான் நடத்திய இரகசிய கலந்துரையாடல்\nபயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை\nஇலவச ரயில் சேவை ஆரம்பம்\nதமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி.\nசெய்தியாளரின் வாயில் சிறுநீர் அடித்த போலீசார்\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; 5 CRPF வீரர்கள் பலி\n‘வாயு’ புயல்; குஜராத்தில் 3 இலட்சம் பேர் இடம்பெயர்வு\nஇனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்\n4 நாட்களின் பின் கிணற்றிலிருந்து குழந்தை மீட்பு\nநெருப்பெடுக்கிறது இயற்கை கருகுகின்றது கனடா கிராமம்.\nசீனாவின் ரோபோ ஆய்வு ஊர்தி செவ்வாயில் தரையிறங்கியது \nவேற்றுக் கிரகம் ஒன்றில் முதல் விமானப் பறப்பு முயற்சி நாளை.\nசெவ்வாயில் தரையிறங்குகிறது நாசா அனுப்பிய ஆய்வூர்தி பெர்சிவரன்ஸ் விண்கலம்.\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்\n“அரவம் புணர்ந்த அடவி” கவிதை தொகுப்பு வெளியீடு\nபெருமதிப்பிற்குமுரிய எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் இன்று காலமானார் .\nவெளிவந்து விட்டது சயந்தனின் புதிய நாவல் “அஷோரா”\nஉலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது\nஇன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி\nஒரே ஒரு வழிதானுள்ளது – அதுதான் மகிந்த வழி.\nஒற்றுமை என்பது ஒரு கலைச்சொல் அவ்வள���ுதான்.ப.தெய்வீகன்\nசிறிசேனாவுக்கு எங்கிருந்து வந்தது இந்த திமிர்\nமஹிந்தவின் இனவாதத்தை தோற்கடிப்பாரா சம்பந்தன்\nஒலிப்பிக்கில் 100 மீற்றர் ஓட்டத்தில் இத்தாலி வீரர் முதலிடம் பெற்றார்.\nபெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே வென்றனர்.\nசென் நதியில் மிதவைப் படகுகளில் பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா.\n14 வயதில் அகதியாக வந்த சிறுவன் பிரான்ஸுக்குப் பதக்கம் வென்றான்\nரோக்கியோ நகர வானில் ட்ரோன்கள் காட்சிப்படுத்திய ஒளிரும் பூமிப்பந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/10/aEAQ_t.html", "date_download": "2021-08-02T09:53:10Z", "digest": "sha1:HRJKICKTFVPSCSQQMSTT6E4BFWCKUGZR", "length": 10162, "nlines": 42, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "அரசின் உத்தரவை மீறி பள்ளிக்கூடம் திறந்தாச்சி..! முககவசம் மறந்த மாணவர்கள்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஅரசின் உத்தரவை மீறி பள்ளிக்கூடம் திறந்தாச்சி..\nதமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் கொரோனா பரவி விடக்கூடாது என்று பள்ளிக்கூடம் திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் மதுரையில் அன்னை தெரசா மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.\nஆன் லைன் வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்கள் மாணவர்களுக்கு சரிவர புரியாததால் , கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..\nகொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்திவருகின்றனர்.\nஆந்திராவில் பள்ளிதிறக்கப்பட்ட நிலையில் 26 மாணவர்களுக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது என்பதை அரசு இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை.\nசில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் அளவுக்கு தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பெறாத காரணத்தால், கல்வி கட்டணத்தை இழக்க மனமில்லாமல் மாணவர்களை கலர் ஆடைகளி��் பள்ளிக்கு ரகசியமாக வரவழைத்து பாடம் நடத்தி வருகின்றனர்.\nகுறிப்பாக மதுரை பாலரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள அன்னை தெரசா மெட்ரிக்குலேசன் பள்ளியில் மாணவ மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து வகுப்பில் ஒன்றாக அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் எடுத்த சம்பவம் இந்திய மாணவர் சங்கத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇந்த பள்ளியில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத கூடிய மாணவர்களை தொலைபேசி மூலமாக அழைத்து பள்ளிக்கு கட்டாயம் நேரில் வரவேண்டும் என்று கட்டாயபடுத்துவதாக கூறப்படுகிறது.\nசெப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தினமும் காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவகுப்புகளில் அமர்ந்திருந்த மாணவர்கள் போதிய சமூக இடைவெளியின்றியும், முககவசம் அணியாமலும் அமர்ந்திருந்தனர்.\nஇதனையடுத்து பள்ளிக்கு சென்று இந்திய மாணவர்கள் சங்கத்தினர் இது குறித்து பள்ளி ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து அனைத்து மாணவர்களையும் அவசர அவசரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். என்னதான் ஆன்லைனில் வகுப்பு எடுத்தாலும் ஒருசில மாணவர்களே கவனிக்கின்றனர்.\nஅதனால் சந்தேகங்களுக்கு பதில் தெரிந்து கொள்ள மாணவர்கள் வந்து செல்லுங்கள் என்றும் காலை 9 மணி முதல் 12 மணி வரை மட்டும் ஸ்கூலுக்கு வரச் சொல்லியதாகவும், அதோடு மதுரையில் பெரிய பெரிய ஸ்கூல்களில் மாணவர்கள் யூனிபார்ம் போட்டே வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என அன்னை தெரசா பள்ளியின் முதல்வர் விளக்கம் அளித்தார்.\nஅன்னை தெரசா பள்ளியில் மாணவர்கள் சந்தேகம் கேட்பதற்காக வந்தார்கள் என்றும் மதியம் 12 மணிக்கே வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் பள்ளி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறிய மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் , மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த வேண்டாம் என அனைத்து பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்\nகொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து பள்ளி நிர்வாகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடு���்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?ajaxcatalog=true&dir=desc&mode=list&order=position&publishers=52", "date_download": "2021-08-02T10:24:07Z", "digest": "sha1:OA64QXP4UMATMMEHGOMFJJ5MKFWIDZNW", "length": 6088, "nlines": 186, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nதந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு புலவர் த.கோவேந்தன்)\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்)\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/07/countries-and-currency-part-9-tamil.html", "date_download": "2021-08-02T08:23:48Z", "digest": "sha1:KPEUBQPDSIGV7QEKWHNCKYQOPRKJBABY", "length": 11709, "nlines": 278, "source_domain": "www.scientificjudgment.com", "title": "நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Haiti.", "raw_content": "\nமுகப்புஅரசியல்நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Haiti.\nஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nசில நாடுகளைப்பற்றியும் அவைகள் வர்ததகத்திற்கு பயன்படுத்திவரும் நாணயங்களைப் பற்றியும் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.\nஇன்றைய பதிவில் ஹெயிட்டி (Haiti), லெபனான் (Lebanon), லைபீரியா (Liberia), ஜெர்மனி (Germany), ஜப்பான் (Japan), ஜமைக்கா (Jamaica) மற்றும் ஜோர்டான் (Jordan) ஆகிய நாடுகளின் நாணயங்களைப்பற்றி காண்போம்...\nContents - பொருளடக்கம் ⇅\nநாடு - Country Haiti ஹெய்ட்டி\nதலைநகரம் - Capital Port-au-Prince போர்ட் - ஓ - பிரின்ஸ்\nநாணயம் - Currency Haitian gourde ஹெய்ட்டின் கோர்ட்\nமத்திய வங்கி - Central bank Banque de Republique d'Haiti ஹெய்ட்டி குடியரசு வங்கி\nதலைநகரம் - Capital Beirut பெ��்ரூட்\nநாணயம் - Currency Lebanese pound லெபனான் பவுன்ட்\nமத்திய வங்கி - Central bank Banque du Liban லெபனான் வங்கி\nதலைநகரம் - Capital Monrovia மொன்ரோவியா\nமத்திய வங்கி - Central bank Central Bank of Liberia லைபீரிய மத்திய வங்கி\nதலைநகரம் - Capital Berlin பெர்லின்\nமத்திய வங்கி - Central bank European Central Bank ஐரோப்பிய மத்திய வங்கி\nதலைநகரம் - Capital Takyo டோக்கியோ\nமத்திய வங்கி - Central bank Bank of Japan ஜப்பான் வங்கி\nதலைநகரம் - Capital Kingston கிங்ஸ்டன்\nமத்திய வங்கி - Central bank Bank of Jamaica ஜமேக்கா வங்கி\nநாடு - Country Jordan ஜோர்டான்\nதலைநகரம் - Capital Amman அம்மான்\nநாணயம் - Currency Jordanian dinar ஜோர்தானிய தினார்\nமத்திய வங்கி - Central bank Central bank of Jordan ஜோர்டான் மத்திய வங்கி\nஇந்த தொடரின் 10 வது பகுதியை பார்வையிட கிளிக்குங்க >> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Lanka. <<\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஅபுதாபியில் ஜமேக்கா நாட்டு மேடம் ஒருவர் எனக்கு பழக்கமாக இருந்தார்.\nஅந்த மேடம் வயது 60 இருக்கும் அலுவலகத்தில் மேலாளராக இருந்தார்.\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Keelanelli - Viral jaundice Hepatitis B.\nகீழாநெல்லி - வைரஸ் அழற்சி காமாலை. Viral jaundice Hepatitis B. [PART - 8]. மூலிகைகள் வர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7063:-08&catid=332&Itemid=259", "date_download": "2021-08-02T09:51:45Z", "digest": "sha1:QIH6MNOP4EUXJEY5PRRIVKDQOO5S6VLD", "length": 18588, "nlines": 151, "source_domain": "www.tamilcircle.net", "title": "மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 08", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 08\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 18 மே 2010\nஇந்தத் தொடரில் சைக்கோபாத்(psychopath)(மனநிலை திரிந்தவர்) என்ற ஒரு முக்கியமான விடயத்தை பற்றி ஆராய்வோம்.\nஇவர்கள் பிரகாசமானவர்களாகவும், சராசரி மனிதரை விட புத்திக் கூர்மை உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாக இருப்பார்கள்,அதிபர்களாக இருப்பார்கள், பெரும் நிறுவனங்களில் முக்கிய பதவி வகிப்பவர்களாகவும் இருப்பார்கள்.\nஇவர்கள் பார்வைக்கு கண்ணியமானவர்களாக இருப்பார்கள். நெருங்கிப்ப் பழகாதவர்கழுக்கு இவர்கள் கண்ணியமானவர்கள் தான்.ஆனால் நெருங்கி வாழ்பவர்கள் பாடு அதோ கதி தான். அவர்களை மிகவும் சித்திரவதைக்கு உட்படுத்துவார்கள்.இவர்கள் புத்திசால���கள் என்ற படியால் சட்டத்துடனே கொடுமைப் படுத்துவார்கள்.இவர்களது வழ்க்கைத் துணை,பிள்ளைகளே பெரிதும் ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப் படுகிறார்கள்.\nநீங்கள் எவ்வளவு ஒரு சிறந்த வைதியசாலையை அமைத்து விட்டு சைக்கோபாத்தின்(Psychopath) வருகைக்காக காத்திருந்தால், எவரும் சிகிச்சைக்கு வர மாட்டார்கள்.இவர்களது நிலமை எல்லை மீறிப் போகும் பொழுது எங்கோ முறையாக மாட்டுவார்கள்.அப்படியாகச் சிறையில் சந்தித்தவர்களையும்,அவர்களால் பாதிக்கப் பட்டவர்களையும் வைத்தே ஆராட்சியாளர்கள் இவர்களின் குணாதிசயங்களை அறிகிறார்கள்.\nநோர்வேயியர்களில் 3% ஆனோர் சைக்கோபாத் , இது இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் 25% ஐயும் தாண்டலாம். (ஒரு புள்ளிவிபரமும் இல்லை).\nசைக்கோபாத் எனப்படுபவர் மூளைக்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்பைத் துலைத்தவர்கள்.இவர்கள் மிகவும் சுயநலவாதிகள், பதவிவெறி கொண்டவர்கள்,குற்ற உணர்வு அற்றவர்கள்,உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர்கள்,மற்றவர்களை புரிந்து கொள்ளாதவர்கள்,தங்களைச் சுற்றியே எல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.தங்களையே முதன்மைப் படுத்துவார்கள். செத்த்வீட்டில் கூட பிரேதமாக இவர்கள் இருந்தால் இவர்களுக்கு சந்தோசம் தான். இவர்களுக்கு உளச்சோர்வு(depression) போன்ற நோய் அறிகுறிகள் தெரியாது.மன அழுத்தம்(stress) உள்ளவர் போல் ஓடித்திரிந்து அவர்களுக்கு நெருங்கியவர்களை , மனச்சோர்வுக்கும் மன அழுத்ததிற்கும் உள்ளாக்குவார்கள்.\nஒரு பெண் நிகம் கடித்தல் நிற்பாட்டுவதற்காக வந்தார் . ஆரம்பித்த காரணத்தை அறிந்த பொழுது அவரின் தந்தை ஒரு சைக்கோபாத்.மகளை பாலியல் ரீதியில் அணுகிய பொழுது அப் பெண் ஓடிச்சென்று கழிவறையைப் பூட்டிவிட்டு நிகத்தைக் கடிக்கத் துவங்கினவர் தான்,தாய் வந்தது கதவைத் திறந்தாலும் நிகக் கடியை விடவில்லை . அவர் சிகிச்சையின் பின் குணமடைந்தார்.\nஇவர்களால் பாதிக்கப் பட்டவர்கள் பலர் என்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்தாலும் , இரு தமிழ் குடும்பங்களின் கதையைச் சொல்கிறேன்.\nஒரு குடும்பத்தில் அவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள். அவர்கள் பாடசாலையில் அமைதியாக இருந்தாலும் யாரும் எதிர்பாராத விதமாக சிறந்த புள்ளிகள் பெற்று வந்தார்கள்.அவர்களுக்கு மனக் கவலை,மன அழுத்தம் , சோர்வு போன்றன இருந்தது.அவர்களது தாயின் கட்டுப்பாட்டிலே வீடு இருந்தது.தாய் எப்பொழுதும் சுறு சுறுப்பாகவே தன்னைக் காட்டிக்கொள்வார்.தொடர்ச்சியாகக் கணவனையும் பிள்ளைகளையும் பேசியவண்னமும், திட்டியவண்ணமுமே இருப்பார்.பிள்ளைகளினதும், கணவனதும் தன்நம்பிக்கை குறையும்படியான கதைகளையே அடிக்கடி கூறுவார்.அவர் - கணவன் பிள்ளைகளை நோக்கிக் கூறும் வசனங்கள் சில.\nஉனக்கு ஒண்டும் உருப்படியாகச் செய்யதெரியாது.\nஉனக்கு 5 ம் வகுப்புப் படித்தவனின் அறிவு இல்லை..\nஉன்ன்னுடைய குணத்திற்கு உனக்கு ஒரு நண்பனும் இருக்க மாட்டார்கள்...\nஉன்னுடைய கூடாத குணத்திற்கு நீ அன்பு வைக்கிறவர்களும் உடனே செத்துப் போவார்கள்..\nஉண்மை அதுவல்ல , பிள்ளைகள் தமது பாடசாலையில், நல்ல புள்ளிகள் வேண்டுகிறார்கள்,அவர்களது அமைதியான குணத்தால் பல நண்பர்கள் அவர்களை வீடு தேடி வருவார்கள்.இவர்கள் அன்பு வைத்திருந்த தூரத்து உறவினர் விபத்தொண்றில் இறந்து விட்டார்.கணவன் உயர்வகுப்புப் படித்த ஒரு அமைதியானவர்.பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் பொழுது முழு பேச்சும் கணவருக்கே சென்றது.இப்பொழுது பிள்ளைகள் 14 வயதைத் தாண்டியதும் ,அவர்களுக்கும் பேச்சு திட்டு கிடைக்கின்றது.\nகணவர் அதிஸ்டவசமாக நோர்வேயிய வானொலியில் சைக்கோபாத் பற்றி கூறியதை கேட்டவுடனே, தனது மனைவி சைக்கோபாத் என்பதை உணர்ந்து பிள்ளைகளைச் சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.\nகணவர் வீட்டினிலே சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது, மனைவி யாருடனும் உரையாடினாலும் தனே, வீட்டு முழு வேலையும் செய்வதாகக் கூறுவார்.அவரது உரையாடலில் கனவன் என்று ஒருவர் வீட்டில் இருப்பதே வராது என்றார்கள்.கணவன் எப்படிச் சமைத்தாலும் அதில் குறை தொடர்ச்சியாகக் கூறுவார்.கணவனை சமைக்க வேண்டாம்,என்று சண்டை பிடிப்பார். மற்றவர்களது ஆலோசனயில்லாமல் தான் விரும்புவதையே சமைப்பார்.பிள்ளைகள் முறையிட்டால் சும்மா , கேள்விக்காக கேட்பார்.\nசைக்கோபாத் மனப்பூர்வமாக ஒருபொழுதும் தவறை ஏற்றுக் கொள்வதில்லை-தவறு செய்யாத மனிதனாகவே காட்டுவார்.பிள்ளைகளினதோ , கணவனதோ விருப்பத்தைக் கேளாது தானே பிள்ளைகள் என்ன கலை படிக்க வேண்டும்,யாரிடம் படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பார்.\nசைகோபாத் பரம்பரை இயல்பு என்று வானொலியில் சொல்லியதை கேட்ட சிறுவன் தானும் அம்மாவைப் போல் வருவனா என்று கேட்டான்.பரம்பரை இயல்பு மாத்திரம் அல்ல வளரும் சூள்நிலையும் தான் தீர்மானிக்கும் என்பதை அவர்களுக்கு விளக்கம் கொடுக்கப் பட்டது.\nஅச்சிறுவன் இப்பொழுதே சிகிச்சைக்கு வந்த படியால் அவருக்கு அப்படியான நோய்கள் வராது என்பதையும் விளங்கப் படுத்தினேன்.சைகோபாத் ஒருநாளும் சிகிச்சைக்குச் செல்லமாட்டார்கள் என்ற விளக்கத்தையும் பெற்றார்கள்.\nஅவர்கள் தமிழ் சமூகக் கட்டுக் கோப்பில் வாழ்ந்து வருகின்ற படியாலும், பிள்ளைகள் தாயின் சொற்படியே நடப்பதாலும் அவர்களால் அப்பெண்னை விட்டுப் பிரிய முடியவில்லை. அது தான் சைக்கோபாத்தின் திறமை- சேர்ந்து வாழ்வதுவும் கடினம் , பிரிந்து செல்வதுவும் கடினம். புலிவால் பிடித்த நாய் மனிதரின் கதை தான். விட்டால் கடித்து விடும்.ஆனால் பிடித்திருப்பாதோ புலி வால். அடுத்த தொடரில் அடுத்த குடும்பத்தைப் பார்ப்போம்..\n7.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 07\n6.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 06\n5.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 05\n4.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 04\n3.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 03\n2.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 02\n1.மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 01\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/tamilisai-soundararajan-speech-in-mandaikadu-temple-festival", "date_download": "2021-08-02T09:07:25Z", "digest": "sha1:Q7HFX6TT6NDBWAKCWXRST6FY2FRMNXSJ", "length": 17166, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "குமரி: `இந்தியாவின் தடுப்பூசியை வாங்குவதற்கு 50 நாடுகள் காத்திருக்கிறது!’ - ஆளுநர் தமிழிசை பெருமிதம் | Tamilisai soundararajan speech in mandaikadu temple festival - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nநெல்லையில் கொலை; தஞ்சையில் பதுங்கல் - 4 கொலையாளிகள் பிடிபட்டது எப்படி\n'வலிமை' : அஜித்துக்காக 'காதல் பொயட்' விக்னேஷ் சிவனின் எழுத்துகளில்... மாஸாக இருக்குமா முதல் பாடல்\nமும்பை: காவல் நிலையத்தில் பழைய வாகனத்தின் பாகங்கள் திருட்டு; ரூ.26 லட்சத்துக்கு விற்ற பெண் காவலர்\n\"- சிறார் வதை செய்த பாதிரியாருக்காக பாதிக்கப்பட்ட பெண் ஜாமின் மனு\nஆடிக் கிருத்திகை சிறப்புகள்: திருப்புகழ் பாராயணம் செய்தால் தீராத துன்பமும் தீரும்\nநெல்லையில் கொலை; தஞ்சையில் பத���ங்கல் - 4 கொலையாளிகள் பிடிபட்டது எப்படி\n'வலிமை' : அஜித்துக்காக 'காதல் பொயட்' விக்னேஷ் சிவனின் எழுத்துகளில்... மாஸாக இருக்குமா முதல் பாடல்\nமும்பை: காவல் நிலையத்தில் பழைய வாகனத்தின் பாகங்கள் திருட்டு; ரூ.26 லட்சத்துக்கு விற்ற பெண் காவலர்\n\"- சிறார் வதை செய்த பாதிரியாருக்காக பாதிக்கப்பட்ட பெண் ஜாமின் மனு\nஆடிக் கிருத்திகை சிறப்புகள்: திருப்புகழ் பாராயணம் செய்தால் தீராத துன்பமும் தீரும்\nகுமரி: `இந்தியாவின் தடுப்பூசியை வாங்குவதற்கு 50 நாடுகள் காத்திருக்கிறது’ - ஆளுநர் தமிழிசை பெருமிதம்\nமண்டைக்காடு சமயமாநாட்டில் பேசும் தமிழிசை செளந்தர்ராஜன்\n`வெளிநாடுகள் வியக்கும் வண்ணம் நாம் கொரோனாவிலிருந்து மீண்டு உள்ளோம். கொரோனாவை எதிர்க்கும் மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுவது உலக அரங்கில் நமக்கு பெருமை’ - ஆளுநர் தமிழிசை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். மாசி கொடை விழாவை முன்னிட்டு ஹைந்தவ சேவா சங்க மாநாட்டை தொடங்கிவைத்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், \"ஒவ்வொரு வருடமும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடியேற்று நிகழ்ச்சிக்கு எப்படியாவது வந்துவிடவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. கட்சி பொறுப்பில் இருந்த நான் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்திருப்பதற்கு காரணம் மண்டைக்காடு அன்னைதான்.\nகட்சிப்பணியில் இருந்த சமயத்தில் சாதாரண தொண்டனாக இருந்த நான் மண்டைக்காடு அன்னையின் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வந்து சென்றபோது தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்டேன். ஒவ்வொரு முறையும் அன்னை என்னை அழைத்து ஆசீர்வதித்து மேலும் மேலும் உயர்வடையச் செய்கிறார் என்றால் அவரது பொற்பாதத்திற்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடியேற்று விழா\nநான் ஏதோ ஒரு அரசியல் கட்சியில் இருந்து மக்களுக்கு பணியாற்ற உயர் பதவிக்கு வரவேண்டும் என நினைத்தது உண்டு. சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்று நினைத்தது உண்டு. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் அமர்ந்திருக்கும் ஒரு சபையில் ஆளுநராக உரையாற்���ுவேன் என்று நான் நினைத்ததே கிடையாது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என நினைத்த என்னை, பல சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் அவைக்கு அழைத்துச்சென்று ஆளுநராக உரையாற்ற வைத்திருக்கிறார் என்றால் அது அன்னை பகவதிதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nநான் மக்களுக்கு சேவை செய்யும் பிரதிநிதியாக பொறுப்பேற்க வேண்டும், அதற்காக பதவி பிரமாணம் எடுக்க வேண்டும் என நினைத்தது உண்டு. ஆனால் நானே மக்கள் பிரதிநிதிகளுக்கு அமைச்சராக பதவி பிரமானம் செய்துவைப்பேன் என்று நினைத்துப்பார்க்கவில்லை. வேறு மாநிலத்தில் பதவிபிரமாணம் எடுக்கும்போது ஆங்கிலத்தில்தான் எடுக்க முடியும். ஆனால், தாய்மொழியாம் தமிழ் என் பெயரில் மட்டுமல்ல என் உயிரிலும் கலந்திருக்கிறது என்று நான் அடிக்கடி சொல்வது உண்டு. அன்னை பகவதி அந்த தமிழில் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழில் பதவி ஏற்க வைத்தார்.\nமண்டைக்காடு ஹைந்தவ சேவா சங்க மாநாட்டில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்\nஒவ்வொரு முறை அன்னையை நாடி வரும்போது உயர்வை தந்திருக்கிறார். அது எனது உயர்வாக இல்லாமல் மக்களுக்கான உயர்வாக, மக்களுக்கு சேவை செய்யும் உயர்வாக நினைக்கிறேன்.\nகொரோனா பரவாமல் தடுக்க நமது உணவு பழக்கங்கள் ஒரு காரணம். பெருமாளை தரிசிக்கச் சென்றால் அங்கு துளசி தீர்த்தம் கொடுப்பார்கள். சிவனை கும்பிடும்போது வில்வதை கொடுக்கிறார்கள். அவற்றை சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கொரோனா வராது. நான் மூகாம்பிகை கோயிலுக்கு போவேன் அங்கு சுக்கு, மல்லி, மிளகு சேர்ந்த கஷாயம் கொடுப்பார்கள். அவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்து அதிகரித்து, கொரோனா வராது என்று இன்று சொல்கிறார்கள். எனவே தெய்வங்களை வணங்குவோம் கொரோனாவை விரட்டுவோம்\" என்றார்.\nபுதுச்சேரி: `தடுப்புகள் இனி இருக்காது; என் பாணியே தனி’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், \"வெளிநாடுகள் வியக்கும் வண்ணம் நாம் கொரோனாவிலிருந்து மீண்டு உள்ளோம். கொரோனாவை எதிர்க்கும் மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படுவது உலக அரங்கில் நமக்கு பெருமை. இந்தியாவின் தடுப்பூசியை வாங்குவதற்கு 50 வெளிநாடுகள் காத்திருக்கிறது என்பது இந்தியா மீது அவர்க��் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/09/22/audio-release-of-dheivathin-kural-vol1-by-sri-ganesa-sarma/", "date_download": "2021-08-02T09:54:12Z", "digest": "sha1:DXKGZNR25JZ6O2FDZPO5NS62Z4V6BPH2", "length": 16800, "nlines": 202, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Audio release of Dheivathin Kural Vol1 by Sri Ganesa Sarma – Sage of Kanchi", "raw_content": "\nதெய்வத்தின் குரல் – ஒலிப் பேழை வெளியீட்டு விழா\nவாரக் கடைசி, சனிக்கிழமை அன்று (26 செப்டம்பர் 2015) தெய்வத்தின் குரல் முதல் பகுதியின் ஒலிப் பேழை வெளியீடு வெகு தெய்வீகமாக நிகழ்ந்தது.\nஸ்ரீ சங்கரா தொலைக் காட்சியின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீ சுரேஷ் அவர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.\nஸ்ரீ மடத்தின் தலைமை வேத விற்பன்னர் ஸ்ரீ மகாலிங்க கனபாடிகள், ஐயனின் அடியார்கள் ஸ்ரீ (இந்திரா) கணேசன், ஸ்ரீ ஹோசூர் கணேசன், ஸ்ரீ ராஜசேகர் (சென்னை) மற்றும் பற்பல அடியார்கள் பெங்களூரு மாநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து பங்கேற்றனர்.\nமாலை 6.30 முதல் 7.30 வரை தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதியில் ‘மௌனம்’ பற்றி ஐயன் வாய் ஓயாமல் பேசிய (அருளிய) அருமையான அருளுரைகள் ஸ்ரீ கணேச சர்மா அவர்களால் பக்தர்களோடு பகிரப் பட்டன.\nசரியாக மாலை 7.30 க்கு வெளியீட்டு விழா தொடங்கியது.\nஸ்ரீ (இந்திரா) கணேசன் அனைவரையும் வரவேற்று, ஐயன், ஸ்ரீ ரா கணபதி அண்ணா, ஸ்ரீ கணேச சர்மா, பக்த அடியார்கள் அனைவருக்கும் உளமார நன்றி கூறினார்.\nஸ்ரீ சுரேஷ் அவர்கள் ஐயன் அருளிய பஞ்சேந்திரியங்கள் பற்றிய உரையில் இருந்து எந்த வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் வெகு சரளமாக ஓர் உரை நிகழ்த்தினார். வெகுவாக உள்ளம் தொட்ட உரை.\nஅருமை அண்ணா ஸ்ரீ ரா கணபதி பற்றி ஓரிரு நிமிடங்கள் உரையாற்ற இவனுக்கு ஒரு வாய்ப்பு தரப் பட்டது. பிறவிப் பயன். எவர் ஒருவர்(ஸ்ரீ அண்ணா) இல்லை என்றால், ‘எல்லாமுமான அவர் – ஐயன்’ இவனிடத்தில் வந்தே இருக்க மாட்டாரோ, அந்த ஸ்ரீ அண்ணா அவர்கள் பற்றி உளம் நெகிழ்ந்து ஓரிரு நிமிடங்கள் உணர்ச்சிவசப் படும் பேறு.\nஅதன் பின், ஸ்ர�� கணேச சர்மா அவர்கள் எப்படி ஸ்ரீ சத்ய சாய் பாபா ஸ்வாமி அவர்கள் ஸ்ரீ அண்ணா அவர்களை ‘தெய்வத்தின் குரல்’ எழுதுவது தான் உன் பிறவிப் பணி. நாளை உலகம் சனாதன தர்மத்தின் அதிகாரப் பூர்வ கிரந்தமாக இதனை எப்படி கொண்டாடப் போகிறது என்றெல்லாம் சொல்லி ஸ்ரீ அண்ணாவின் குழப்பம் தீர்த்தார் என்றும், அது போல, ஏழாம் பகுதி வர பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பெரியவா மற்றும் பூஜ்ய ஸ்ரீ பால பெரியவா எப்படி ஸ்ரீ அண்ணா அவர்களிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர் என்றும் விளக்கினார்.\nஇவர்களோடு அருமை அப்பன் ஸ்ரீ யோகி பகவான் ராம் சுரத் குமார் அவர்களும் ஸ்ரீ அண்ணா அவர்களின் கை விரல்களை பிடித்துக் கொண்டு ‘GANAPTHI WILL WRITE GANAPTHI WILL WRITE’ என்று அருள் மொழி பகர்ந்தார் என்று விவரித்தார். அப்போது ஒரு பட்டாம்பூச்சி (BUTTERFLY) ஸ்ரீ கணேச சர்மா அவர்களை வட்டம் இட்டதனையும் பக்தர்கள் தரிசித்தோம்.\nஆக, தெய்வத்தின் குரல் மகநீயர்களின் திட்டம், உள்ளக் கிடக்கை என்பது தெளிவு.\nகுரல் என்று சொல்லியும் குரல் இல்லையே, வெறும் எழுத்து வடிவம் தானே, என்ற ஸ்ரீ அண்ணா அவர்களின் ஏக்கம், 40 ஆண்டுகளுக்கு பின் எப்படி ஸ்ரீ கணேச சர்மா அவர்களின் குரல் வழி தீர்ந்தது என்று பக்தர்கள் பிரமித்துப் போனோம்.\nஸ்ரீ அண்ணா ஸ்ரீ கணேச சர்மா அவர்களிடம் கூறியது தான் நினைவுக்கு வந்தது.\n‘நான் ஒன்றும் எழுதவில்லை. கையில் புகுந்துகொண்டு அந்த பேய் தானே எல்லாவற்றையும் செய்தது. எழுத்துக்கு எப்படி என்னை ஆட்ப்படுத்தியதோ, அது போல, பேச உன்னை அதுவே தயார் செய்யும். நீ செய்யவில்லை. அது செய்துகொள்கிறது, உன் வழியாக’.\nஎத்தனை சத்தியமான வார்த்தைகள் என்று பக்த அன்பர்கள் உணர்ந்தோம்.\nஎல்லோரும் ஒலிப் பேழைகள் பெற்று நிறைந்தோம்.\nஸ்ரீ சங்கரா தொலைக் காட்சியில் கூடிய விரைவில் இவை வெளி வரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/karthick-naren-hint-about-naragasooran-release-071232.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T08:56:28Z", "digest": "sha1:NW5ALT6TQXWXFCB4U3ZJSU5ZENTC34XT", "length": 16361, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்? | Karthick Naren hint about Naragasooran release! - Tamil Filmibeat", "raw_content": "\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nFinance e-RUPI: மக்கள் இனி காத்திருக்க தேவையில்லை.. 8 வங்கிகளுக்கு அனுமதி..\nSports 50மீ துப்பாக்கி சூடு.. இந்திய வீரர்கள் பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் தோல்வி.. வெளியேற்றம்\nNews ஆலயங்களில் தமிழில் ஒலிக்கப்போகும் வேத மந்திரங்கள்... அர்ச்சனை செய்ய அர்ச்சகர் தயார்\nLifestyle ஹீரோயின் மாதிரி நீங்க அழகாக இருக்க புதினா உங்களுக்கு எப்படி உதவும் தெரியுமா\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nசென்னை: OTT தளத்தில் ஆவது நரகாசூரன் ரிலீஸ் ஆகுமா என்ற ரசிகர்களின் கேள்விக்கு இப்படியொரு பதிலை கார்த்திக் நரேன் கொடுத்துள்ளார்.\nதுருவங்கள் பதினாறு படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி ரிலீசாக முடியாமல் கிடப்பில் கிடக்கும் படம் தான் நரகாசூரன்.\nஇந்த படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா, சந்திப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nகொரோனா லாக்டவுன் முடிஞ்சு.. ஷூட்டிங் எப்ப தொடங்குவாங்கன்னு தெரியலையே.. பிரபல ஹீரோயின் கவலை\nமுதல் படத்திலேயே பெயர் வாங்கிய கார்த்திக் நரேனை அழைத்து பாராட்டித் தள்ளிய இயக்குநர் கெளதம் மேனன், நாம சேர்ந்து படம் பண்ணுவோம், நிச்சயம் இது ஒர்க்கவுட் ஆகும் என அழைக்க, மிகுந்த நம்பிக்கையுடன் நரகாசூரன் படத்தை இயக்கிக் கொடுத்தார் கார்த்திக் நரேன்.\nஆனால், கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணத்தால் அந்த படத்தின் ரிலீஸ் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உதவியுடன் மீண்டு வந்த கெளதம் மேனன் தொடர்ந்து பல படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். நரகாசூரன் படத்தை மட்டும் அவர் கண்டு கொள்ளாதது கார்த்திக் நரேனுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.\nஇந்நிலையில், சமீபத்தில் கார்த்திக் நரேனிடம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட படங்கள் ஆன்லைனில் ரிலீஸ் ஆகின்றன. அப்படியாவது, நம்ம படம் ரிலீஸ் ஆகுமா பாஸ் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, அந்த ரசிகரே அ���ந்து போகும் அளவுக்கு ஒரு பதிலை இயக்குநர் கூறியுள்ளார்.\nகிறிஸ்டோபர் நோலனின் டெனெட் படத்தின் மிரள வைக்கும் இரண்டாவது டீசர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் டிரெண்டானது. அந்த படத்தில் ராபர்ட் பேட்டின்ஸன் பேசும், ஒரு வசனத்தை பதிவிட்டு, ‘நரகாசூரன் நிச்சயம் வரும் ஆனால்\" என்ற கேள்வியுடன் பதில் கூறியுள்ளார் கார்த்திக் நரேன்.\n என்ற கேள்விக்கு கிறிஸ்டோபர் நோலன் வரை சென்ற கார்த்திக் நரேன் தெளிவாக எந்த விளக்கத்தையும் சொல்ல வில்லை. OTT தளத்தில் ரிலீசாகாது, லாக்டவுனுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகும் என்பதை தான் கார்த்திக் நரேன் சொல்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிலர் டெனெட் டீசர் போல இவர் பதிலும் புரியலையேப்பா என புலம்பி வருகின்றனர்.\nநீண்டநாள் பிரச்சனை தீர்ந்தது… நரகாசூரன் ஓடிடியில் வெளியாகிறது \nகார்த்திக் நரேனின் நரகாசூரன் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா\nஅடபாவிங்களா.. பெயர் மாற்றத்தை கலாய்த்த தனுஷ் பட இயக்குநர்.. அந்த படத்தின் பெயரை மாற்றவும் திட்டம்\nசாதாரன ஆள் இல்லை.. சினிமாவுக்கு கிடைத்த பரிசு.. நெகிழ்ந்த அரவிந்த்சாமி\nநடிகர் சந்தீப் செய்த 'வேலை'... ஓட்டல் அறையில் இருந்து வெளியேறிய நடிகை ஆத்மிகா\nநான் யாருன்னு காட்டுற நேரம் வந்துடுச்சு.. சவால் விட்ட தனுஷ் பட இயக்குநரை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்\nமாஃபியாவை தொடர்ந்து மாறன்.. டி43 படத்திற்கு கார்த்திக் நரேன் வைத்துள்ள டைட்டில் வொர்க்கவுட் ஆகுமா\nD43 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... இனி கொண்டாட்டம் தான் \nநரகாசுரன் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்... ரசிகர்கள் குஷி\nதனுஷ் -கார்த்திக் நரேன் இடையே மனஸ்தாபம்... வெளியேற்றப்பட்டாரா டைரக்டர்\nடி 43 அதிரடி அப்டேட்... தனுஷின் கேரக்டரை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய படக்குழு\nஅமெரிக்காவில் தனுஷ்...டி 43 படப்பிடிப்பை அறிவித்த கார்த்திக் நரேன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாங்க வேற மாதிரி....வலிமை சிங்கிள் டிராக் எப்போ தெரியுமா...சுடசுட வந்த அப்டேட்\nதிடீரென டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா....அக்கினேனி எங்கே போச்சு\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க மறுத்த படம்...ஸ்டார் படத்தின் 20 ஆண்டு கால பயணம்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓ���ியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/31997/", "date_download": "2021-08-02T09:40:51Z", "digest": "sha1:6SFA23NK46GW3UN4FJXM6ZOJ75FIBRL6", "length": 7281, "nlines": 74, "source_domain": "www.akuranatoday.com", "title": "சினமன் கிராண்ட் குண்டுதாரியின் வீட்டை போலி உறுதி மூலம் கையகப்படுத்த முயற்சி – சிஐடியில் ஐவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை - Akurana Today", "raw_content": "\nசினமன் கிராண்ட் குண்டுதாரியின் வீட்டை போலி உறுதி மூலம் கையகப்படுத்த முயற்சி – சிஐடியில் ஐவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியின் வீட்டை, போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து கையகப்படுத்த முயன்றதாக கூறப்படும் ஐவரைக் கைது செய்து தடுத்து வைத்து விசாரித்து வருவதாக சி.ஐ.டி. நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது.\nசினமன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் குறித்து இடம்பெறும் விசாரணைகள் தொடர்பிலான நீதிவான் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள், நேற்று கோட்டை பதில் நீதிவானும் கொழும்பு மேலதிக நீதிவானுமான சலனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அறை இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி, பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகே மேலதிக விசாரணை அறிக்கையுடன் நீதிமன்றில் ஆஜரனார்.\n‘சினமன் கிராண்ட் ஹோட்டல் தாக்குதல் தொடர்பில் இதுவரை 4 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம்.\nஇந்நிலையில், குறித்த ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய குண்டுதாரியான இன்சாப் அஹமட் வசித்த வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சிஐடிக்கு தகவல் கிடைத்தது. அது தொடர்பில் நாம் 5 சந்தேக நபர்களைக் கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றோம்.\nமேலதிக விசாரணைகளில், குண்டுதாரியான இன்சாப் அஹமட்டின் வீட்டை போலி உறுதிகளை தயாரித்து கையகப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம்.’ என பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகே தெரிவித்தார்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nlunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை\nநிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி\nஓட்டமாவடி மஜ்மா நகரில் அதிக ஜனாஸாக்கள் வேறு இடத்தை பரிந்துரைக்குக.\nஅக்குறணை கிராம சேவகர்கள் முழு விபரம் – Telephone\nபோலிச் செய்தியை பரப்பிய குழுவை கைது செய்ய இன்டர்போல் ஒத்துழைப்பு : அஜித் ரோஹண\nதப்லிக் ஜமாத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ள, வரலாற்று முக்கியத்துவமிக்க பரபரப்புத் தீர்ப்பு\nகண்டி மா நகரில் சர்ச்சைக்குறிய கொடிகள் – உடனடியாக நீக்கினார் ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-08-02T09:47:42Z", "digest": "sha1:PJM2UZZLIDC42L53GVWZ3QRHKUNVNFX2", "length": 10907, "nlines": 116, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\n‘தலைகீழாக தொங்கவிட்டாலும் எம்மக்களுக்கு துரோகமிழைக்க மாட்டேன்’ – பாஜக சார்பாக போட்டியிட மறுத்த பேராசிரியர்\nதனது முகநூல் பக்கத்தில், “நான் தலைகீழாக தொங்கவிடப்பட்டாலும், எம்மக்களுக்கு துரோகமிழைக்க மாட்டேன்.” என்ற வாசகத்துடன் அம்பேத்கர் படத்தை இணைத்துள்ளார்....\nவயநாடு பகுதியில் அதிகரித்து வரும் தனியார் விடுதிகள் – அச்சத்தில் பழங்குடியின மக்கள்\nகேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில், அரசாங்க விதிமுறைகளை மீறிக் காடுகளுக்குள் கட்டப்பட்டு வரும், தனியார் விடுதிகளால் அந்தப் பகுதியில் வாழும் பழங்குடியின...\nதனியார் விடுதிகள்பழங்குடியினர்வன விலங்கு சரணாலயம்வயநாடு\n ஆளுநராகவோ துணைவேந்தராகவோ எந்தப் பதவிக்கும் போகலாம்.’ – ராகுல் காந்தி விமர்சனம்\nஆளுநராகவோ, துணைவேந்தராகவோ ஒருவர் பதவியேற்க விரும்பினால், வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை ஆர்எஸ்எஸ்காரராக இருந்தால்போதும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இவ்வாண்டு...\nஆர்எஸ்எஸ்காங்கிரஸ்கேரளாபாஜகபுதிய கல்விக் கொள்கைராகுல் காந்திவயநாடு\nமாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்\nகேரளாவில் தண்ட���்போல்ட் கமாண்டோக் குழுவால், சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் வேல்முருகனின் உடல், சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள பொது மயானத்தில் எரியூட்டப்பட்டுள்ளது. தண்டர்போல்ட்...\nஅதிரடிப்படைஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிஉம்மன் சாண்டிகாங்கிரஸ்கேரளாகோழிக்கோடுதண்டர்போல்ட்பினராயி விஜயன்பெரியகுளம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மாவோயிஸ்ட்வயநாடு\nகேரளா காடுகளில் மீண்டும் ஒரு ” மோதல் ” – மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை\nஅதிரடிப்படையினர் மாவோயிஸ்டுகளை எதி்ர்பாராத விதமாக சுற்றி வளைத்ததாகவும், அந்தக் குழுவை சரணடையும்படி கூறியதாகவும் செய்தி தெரிவிக்கிறது....\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக்...\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின்...\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின் போராட்டம்\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் – தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் ��கவல்\n‘தற்போதைய பணவீக்கத்திற்கு 1947-ல் நேரு ஆற்றிய உரையே காரணம்’ – ம.பி. பாஜக அமைச்சர்\n‘பெகசிஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை வேண்டும்’ – நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/fujitsu-tablets/", "date_download": "2021-08-02T10:27:56Z", "digest": "sha1:RIAJIAB2DIAFNNSGERKL7HWDBF4C2CIG", "length": 9606, "nlines": 381, "source_domain": "www.digit.in", "title": "Fujitsu கேமிங் இந்தியாவின் விலை லிஸ்ட் August 2021| Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nநீங்கள் தொடர்ந்து பயணத்தில் இருந்தால், போர்ட்டபிள் மட்டுமல்ல, எங்கிருந்தும் வேலை செய்ய அனுமதிக்கும் ஒரு சாதனம் உங்களுக்குத் தேவைப்பட்டால், ஃப்யூஜிட்ஸு டேப்லெட் என்பது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இந்த சாதனங்கள் மிகவும் பயண நட்பு. சமீபத்திய ஃப்யூஜிட்ஸு டேப்லெட்டுகள் ஒரு லேப்டாப்க்கும் மொபைலுக்கும் இடையிலான சிறந்த கலவையாகும். அவை லேப்டாப்யின் அளவின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவை வேகமாக இருக்கும். ஃப்யூஜிட்ஸு டேப்லெட்டுகள் புதிய வேரியண்ட்கள் அதன் அருமையான பயன்பாட்டினைக் காரணமாக சமீபத்திய காலங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன - அவை திட்டமிடல், பட்ஜெட், வீடியோ கான்பரன்சிங் போன்ற உத்தியோகபூர்வ பணிகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம், டிஜிட்டில் நாங்கள் ஒரு பிரத்யேக ஃப்யூஜிட்ஸு டேப்லெட் விலை பட்டியலை உருவாக்கியுள்ளோம், குறிப்பாக உங்களுக்காக, எனவே உங்கள் புதிய டேப்லெட் மாடலை முழுமையான எளிதாக தீர்மானிக்க முடியும். ஆகவே, சமீபத்தில் சந்தையில் 2021 இல் தொடங்கப்பட்ட ஃப்யூஜிட்ஸு டேப்லெட்டுகளின் விரிவான பட்டியலுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பாருங்கள், மேலும் இந்தியாவில் புதிய ஃப்யூஜிட்ஸு டேப்லெட் விலையும் அடங்கும்.Read More...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Health/do-you-know-what-the-problem-is-with-saliva-secretion", "date_download": "2021-08-02T08:38:57Z", "digest": "sha1:JOX5MEWMFBPITEYXS7PUEVGHM5CEYH6G", "length": 10744, "nlines": 86, "source_domain": "www.fnewsnow.com", "title": "உமிழ்நீர் சுரக்கலன்னா என்ன பிரச்னை வரும் தெரியுமா? | Do you know what the problem is with saliva secretion? - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி ப���ன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nஉமிழ்நீர் சுரக்கலன்னா என்ன பிரச்னை வரும் தெரியுமா\nமனித உடலில் முக்கியமானவகைகளில் ஒன்று நமது உமிழ் நீர். நமக்கு தெரியாமல் நம் வாயை எப்பொழுதும் ஈரத் தன்மையை தக்க வைத்து காத்து வருகிறது.\nஉங்கள் வாயில் எச்சில் (SALIVA) குறைவாக சுரந்தால் நீரழிவு (DIABETICS) நிச்சயம்\n“உமிழ்நீர்” என்பது வாயில் ஊறும் நீர். இது நாம் உண்ணும் உணவை செரிக்க உதவும். தமிழில் உமிழ்நீர் என்பதை “எச்சில்” என்றும் சொல்வர் . ஒரு நாளைக்கு மனிதனின் வாயில் 1-2 லீட்டர் அளவும் உமிழ்நீர் சுரக்கின்றது. உமிழ் நீரில், 99 சதவீதம் தண்ணீரும், 1 சதவீதம் சோடியம், பொட்டாசியம் பைகார்பனேட் போன்ற பொருட்களும் இருக்கின்றன.\nஉமிழ் நீர் இல்லையென்றால் நம் வாய் என்ன ஆகும் இல்லை நமது உடல் தான் என்ன ஆகும்\nசாதாரணமாக உமிழ்நீரின் வேலை, நாம் உண்ணும் உணவினை செரிக்க செய்வது மற்றும் உடலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் தன்மைகளை கட்டுப்படுத்துவது.\nஇதைதான் நம் முன்னோர்கள் \"நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்றனர். “நொறுங்க” என்பது, ”நன்றாக மென்று” என்று பொருள். உணவை, நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி, நீண்டநாள் வாழலாம். நாம் புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால், வாயில் உமிழ் நீர் தானாக ஊறும். இதனாலேயே, முதலில் இனிப்பை நம் பண்டைய உணவு முறைகளில் சாப்பிட வைத்தார்கள். உமிழ் நீர், காரத்தன்மை கொண்டது. அதிக என்ஸைம்களை கொண்டது. இதில் “ஆன்டிபயாடிக்” அதிகம் உள்ளது. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. அதனால் தான், மதிய உணவில் கட்டாயமாக ஊறுக்காய் சேர்ந்தனர்.\nநம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமைத் தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். அதேபோல் உணவு உண்ணும் 30 நிமிடம் முன்னதாக உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும் நாம் கடலைமிட்டாய்,வெல்லம் பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி இவைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் நிச்சயம் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.\nவாயில் உமிழ்நீர் சுரப்பது குறைந்தால் பாக்டீரியாக்களின் தன்மை அதிகரித்துவிடும். வாயில் உமிழ்நீர் குறைந்தால் நா வறட்சி, ஈறுக���ில் வெடிப்பு போன்றவை ஏற்படலாம்.\nகுறிப்பாக, “சக்கரை வியாதி,“அதிகப்படியான மன அழுத்தம்” போன்றவை...... உண்டாகலாம். சர்க்கரை நோய்க்குக் காரணம் “இன்சுலின்” ஒழுங்காக சுரக்காதுதான். ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது தெரியுமா\nஉமிழ்நீர்தான் கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து. சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம். உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து. உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது. நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், இன்சுலின் சரியாக சுரப்பதில்லை. உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும். நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது.\nநாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும். நீரிழிவுநோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்.\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nதுரியன் பழத்தில் இவ்வளவு நன்மையா\nவசம்பு... குழந்தைகளின் அருமருந்து ஏன்\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Think/the-secret-of-our-success-av-meyyappa-chetty", "date_download": "2021-08-02T09:02:21Z", "digest": "sha1:4YMO5HRAEXQZ24GDSTSE6R2I23ROX6NC", "length": 9246, "nlines": 88, "source_domain": "www.fnewsnow.com", "title": "நம் வெற்றியின் ரகசியம்: ஏ.வி.மெய்யப்ப செட்டியார். | The secret of our success: AV Meyyappa Chetty - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nநம் வெற்றியின் ரகசியம்: ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.\n'இடையூறுகளை கண்டு அஞ்சக் கூடாது. அதைக் கண்டு கலங்கிப்போவதை காட்டிலும், எப்படி சமாளிக்கலாம் என்று யோசனை செய்து, வழியை காண்பதுதான் நம் வெற்றியின் ரகசியம். அது, பின்னால் எத்தனையோ பேர்களுக்கு வழி காட்டியாக கூட அமைந்து விடும்.\nஇவ்வாறு கூறியது பிரபல திரைப்பட தயாரிப்பாளர், ஏவி.மெய்யப்ப செட்டியார் தான் இந்தியாவின் பல மொழிகளில் தயாரித்து பெரும் வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். விதையாக இருந்து ஏ.வி.எம்., எனும் விருட்சமாய் வளர்ந்தது இவரால் தான்.\nஇயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் இலக்கியத்தை உள்ளடக்கியது தான் தமிழ் சினிமா. அதன் மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து ஏராளமான படங்களை இந்தியாவின் பல மொழிகளில் தயாரித்து பெரும் வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.\nதமிழ் திரையுலகின் மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படுபவர் இவர். (மற்ற இருவர் எஸ்.எஸ்.வாசன், எல்.வி.பிரசாத்). தமிழனின் பெருமையை வட இந்தியா வரை கொண்டு சென்றதோடு மட்டுமின்றி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் கலைப் பொக்கிஷத்தை தனது \"பராசக்தி\" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய திரைமேதை ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.\nகாரைக்குடி நகரத்திற்கு வெளியே, தேவகோட்டை ரஸ்தாவில் அமைந்திருந்த ஒரு நாடக கொட்டகையையும், அதனை சுற்றியுள்ள காலி இடத்தையும் மாத வாடகைக்கு பிடித்து தனது படப்பிடிப்பு தளமான ஏ.வி.எம் என்ற அந்த ஆலமரத்தின் விருட்சத்தை அங்கே தான் முதன் முதலில் விதைத்தார்.\nஅங்கே உருவான முதல் திரைப்படம் 1947ல் வெளிவந்த \"நாம் இருவர்\". இதனைத் தொடர்ந்து 1948ல் வேதாள உலகம் என்ற திரைப்படத்தையும் இங்கேயே தயாரித்து வெளியிட்டார். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு சினிமா வட்டாரத்தில் பெரும் மதிப்பையும், நற்பெயரையும் ஈட்டித் தந்தது.\nஏவி.எம்மின் முதல் தயாரிப்பு நாம் இருவர். அந்தப் படத்தில் பாரதியாரை பாடலாசிரியராக்கினார் மெய்யப்பன். பாரதியார் பாடல்களின் உரிமையை வைத்திருந்த ஜெய்சிங் லால் கே.மேதா என்பவரிடம் 10,000 ரூபாய் கொடுத்து பெற்ற��� மெய்யப்பன், படத்தில் பயன்படுத்தினார். `ஆடுவோமே... பள்ளு பாடுவோமே', `வெற்றி எட்டுத்திக்கும் என கொட்டுமுரசே' போன்ற பாரதியாரின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கத் தொடங்கின.\nமுதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பாரதியார் பாடல்களை அரசுடமையாக மாற்ற விரும்பினார். அவற்றின் உரிமையை வைத்திருந்த மெய்யப்பனை அணுகி, `எவ்வளவு பணம் வேண்டும்' என்று கேட்க, `பாரதி இந்தத் தேசத்தின் சொத்து... 1 ரூபாய்கூட வேண்டாம்' என்று மொத்தமாக அள்ளிக் கொடுத்தார் மெய்யப்பன்.\nபஞ்சபாண்டவரும் விடுகதையும் ஒண்ணு பாக்கலாமா\nஆய 64 கலைகள் என்ன தெரியுமா\nஎது நடந்தாலும் அது நன்மைக்கே....\nதோற்றுப்போனால் வெற்றி உண்டு எப்படி\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/mer/176-news/articles/guest/2918-2015-06-29-11-55-37", "date_download": "2021-08-02T09:30:40Z", "digest": "sha1:ME3DRAYN43CCDHROLIQUITOIHNIIQDBK", "length": 16379, "nlines": 101, "source_domain": "www.ndpfront.com", "title": "ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் உள்ள அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : மக்கள் ஆசிரியர் சங்கம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் உள்ள அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : மக்கள் ஆசிரியர் சங்கம்\nஅண்மையில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் அவ் ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகள் தொடர்பான பொதுக் கலந்துரையாடலை மக்கள் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கலந்துரையாடல் 2015.06.27 ஆம் திகதி காவத்தை இ/ஸ்ரீ கிருஸ்ணா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மக்கள் ஆசிரியர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளார் உட்பட சங்க செயற்குழு உறுப்பினர்கள் தலைமை வகித்த இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற அரசியலை மையப்படுத்திய பிரபல ஆசிரியர் சங்மொன்றின் அநாகரீகமான குழப்பும் நடவடிக்கைகளையும் மீறி ஆசிரிய உதவியாளர்கள் கலந்��ுகொண்டிருந்தனர்.\nசங்கத்தின் தலைவர் எஸ். மோகன் தமது தலைமை உரிமையில் மக்கள் ஆசிரியர் சங்கத்தின் தோற்றம், அதனது கொள்கை, வேலைத் திட்டம் என்பனவற்கை எடுத்துக் காட்டியதுடன் மக்கள் ஆசிரியர் சங்கத்தின் செயற்பாடு ஆசிரியர்களின் பொருளாதார பிரச்சினைகளை பற்றி மட்டும் பார்ப்பதாக அல்லாமல்; மாணவர்களின் கல்வி கற்பதற்கான சுதந்திரம், கட்டாயக் கல்வி, ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி, ஆசிரியர்களின் கற்பிப்பதற்கான சுதந்திரம், கல்விச் சமூகத்தின் ஐக்கியப்பட்ட செயற்பாடுகள் என பரந்துப்பட்ட வகையில் கல்வி உரிமைகளை வெல்வதற்கான திட்டங்களை கொண்டுள்ளது என விளக்கினார். வழமையான ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பார்வை, நோக்கு, செயற்பாடு என்பவற்றில் இருந்து மக்கள் ஆசிரியர் சங்கம் மாறுபட்டு நிற்கின்றது எனவேதான் அண்மையில் வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனத்தில் அவர்களின் கொடுப்பனவை உயர்த்த வேண்டும் என்ற கோசத்தை கடந்து இந்நியமனத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதிகள், அவ் அநீதிகள் மாணவர்களின் கல்வி உரிமையையும் ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்களையும் அவர்களின் கௌரவத்தையும் பாதிப்பதை உணர்ந்தே இவ்வாறான கலந்துரையாடலை பாதிக்கப்பட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுடன் மேற்கொள்கிறது என்றார்.\nஅதனை தொடர்ந்து ஆசிரியர் உதவிளார் நியமனத்தில் உள்ள அநீதிகள் தொடர்பாக பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் விளக்கமளிக்கையில், மலையக தலைவர்கள் தங்கள் பெற்றுக் கொடுத்தாக கூறும் எதனையும் முறையாக பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாகவே இருந்துள்ளனர். ஆசிரிய பிரமாண குறிப்பின் பிரகாரம் ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்றுள்ளவர்களின் தகைமை மற்றும் அவர்களை ஆட்சேர்ப்பதற்கு பின்பற்றிய நடவடிக்கை முறைகளை வைத்து பார்க்கும் போது அவர்களை ஆசிரிய சேவை தரம் 3-ஐஐற்கு சேர்த்துக் கொள்ள முடியும். எனினும் ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பில் இல்லாத ஆசிரிய உதவியாளர் என்ற பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் பொதுவாக ஆசிரியர்கள் செய்ய வேண்டிய அதே பணியை குறைந்த வேதனத்துடன் செய்வதற்கு நிற்பந்திக்கப்பட்டு உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு இதே தகைமையை கொண்டவர்கள் ஆசிரியர் சேவை தரம் 3-ஐஐற்கு சேர்க்கப்பட்ட நிலைய��ல் இம்முறை ஆசிரிய உதவியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளமை அநீதியானது.\nவழமையாக மலையக மக்களின் கல்வில் அக்கறை கொள்ளாத ஆளும் அரசாங்கங்கள் மலையக ஆசிரியர் நியமனத்திலும் தனது பாரபட்சத்தை காட்டியுள்ளது. பல்வேறு இழுத்தடிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டு நியமனக் கடிதம் பெறுவதற்கான அனுமதிக் கடிதம் போன்றதொரு கடிதம் வழங்கப்பட்டது. இதேநிலைதான் மலையக மக்களின் காணி உரித்து விடயத்திலும் இருக்கிறது. இவ்வாறான செயற்பாடுகள் தற்செயலானவையல்ல. இவைத்திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன. 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நியமனத்தின் போது டன்பார் மைதானத்துக்கு அழைக்கப்பட்டு நியமன கடிதம் வழங்கப்பட்ட நிகழ்வு ஆசிரியர்களை அகௌரவப்படுத்துவதாகவே இருந்தது. இந்நிலையில் ஆசிரிய உதவியாளர் என வழங்கப்பட்ட நியமனத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியர் சங்கம் என்ற வகையில் மக்கள் ஆசிரியர் சங்கம் தயாராக உள்ளது. எனவே இப்பிரச்சினைகளில் சம்பந்தபட்டவர்கள் என்ற வகையில் ஆசிரியர்கள் உதவியாளர்களின் நிலைப்பாடு பற்றி திறந்த கலந்துரையாடலுக்கும் அதனூடாக நடவடிக்கைகளை வகுத்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்குகின்றோம் என்றார்.\nகலந்துரையாடலின் போது கருத்துக்கூறிய ஆசிரிய உதவியாளர்கள் தங்களது குடும்ப பொருளாதார நிலைமைகள் பற்றி எடுத்து கூறியதோடு பெற்றார்களை கவனிக்க வேண்டிய காலத்தில் தொழில் கிடைத்த போதும் தொடர்ந்து அவர்களிடமே தங்கி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தினர். சிலர் இதற்கு முன்னர் அதிக சம்பளத்துக்கு வேலை செய்து அதனை கைவிட்டு இந்த நியமனத்தை பெற்று பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டனர். இந்நிலைமை ஐந்து வருடங்களுக்கு தொடருமாயின் தங்களினால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை முறையாகவும் இதயுசுத்தியுடனும் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் எனவும் கூறினர். இந்த நியமனத்தில் வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் உரிமைகளுக்கு அப்பால் சென்று பேச முடியாது என்றே நாங்கள் எண்ணி இருந்தோம் எனினும் மக்கள் ஆசிரியர் சங்கத்தின் வழிகாட்டல் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாக குறிப்பிட்டனர். இந்த அநீதி���்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பாக வழக்கு தொடர முடியுமாக இருந்தால் பாதிக்கபட்டவர்களாக முன்னிலையாவதற்கு தயாராக இருப்பதாக சிலர் முன்வந்தனர்.\nஇந்த விடயம் பற்றிய பரந்துபட்ட கலந்துரையாடலை மலையகம் முழுவதும் உள்ள ஆசிரிய உதவியாளர்களுடன் உடனடியாக மேற்கொண்டு பிரச்சினைகளை சட்ட ரீதியாக அணுகுவதற்கு மக்கள் ஆசிரியர் சங்கம் ஏற்பாடுகளை மேற்கொள்ளும். இது தொடர்பான விடயங்களை ஆசிரிய உதவியாளர்கள் 071-6070644 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என செயற்குழு சார்பாக செயலாளர் இரா.நெல்சன் மோகன்ராஜ் குறிப்பிட்டார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/06/mannar3784949.html", "date_download": "2021-08-02T07:58:20Z", "digest": "sha1:3X5AZLWP4PVHYV2SBNKGD6RCFH7QOXLS", "length": 11710, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "2 நாட்களின் பின் நீந்திக் கரை சேர்ந்த காணாமல்போன மீனவர்!! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மன்னார் / 2 நாட்களின் பின் நீந்திக் கரை சேர்ந்த காணாமல்போன மீனவர்\n2 நாட்களின் பின் நீந்திக் கரை சேர்ந்த காணாமல்போன மீனவர்\nஅஞ்சு Monday, June 14, 2021 சிறப்புப் பதிவுகள், மன்னார்\nஇரண்டு நாட்களாக காணமால்போயிருந்த மீனவரொருவர் நடுக்கடலிலிருந்து 30 கிலோ மீற்றர் தூரம் வரையில் நீந்தி மன்னார் கடற்கரைக்கு வந்து தப்பித்த சம்பவம் பதிவாகியுள்ளது.\nபுத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த டிலான் கொஸ்தா எனப்படும் இந்த மீனவர், மேலும் 10 மீனவர்களுடன் மீன்பிடிக்காக படகு மூலம் கடந்த 10 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்றுள்ளனர்.\nபடகில், இயந்திர கோளாறு ஏற்படவே அவர்கள் கடலில் விழுந்துள்ளனர். எனினும், அவர்களில் இரண்டு பேர் மாத்திரம் படகில் ஏறி எப்படியாவது தத்தளித்து மீண்டும் கரைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் 2 நாட்களாக காணமால் போயிருந்த மன்னார் கடற்கரைக்கு நீந்தி வந்த டிலான் கொஸ்தா எனும் மீனவரின் உடல்நிலை சரியில்லாததால் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த மூவருடன் சென்ற ஏனைய மீனவர்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெ���்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/08/viyalan-jupiter-bio-data-tamil.html", "date_download": "2021-08-02T09:54:22Z", "digest": "sha1:HL6SD4NNHC5F3VXUDP7EUWXYMAYRIYRZ", "length": 12784, "nlines": 206, "source_domain": "www.scientificjudgment.com", "title": "வியாழன் - பயோடேட்டா - Jupiter bio data.", "raw_content": "\nமுகப்புவிண்வெளி அறிவியல்வியாழன் - பயோடேட்டா - Jupiter bio data.\nவியாழன் - பயோடேட்டா - Jupiter bio data.\nபெயர் காரணம் :- ''வியா'' என்றால் பெரிய என்று பொருள். ''வியாபித்தல்'' என்றால் பெரிய அளவில் பரவுதல் என்று பொருள்படும். நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் இதுவே மிகப்பெரியது என்பதால் இதற்கு வியாழன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.\nசோதிடத்தில் இதற்கு ''குரு'' கிரகம் என்று பெயர். வானியலில் இதற்கு ''Jupiter'' என்று பெயர்.\nசூரியனிடமிருந்து தொலைவு - 77 . 83 கோடி கி . மீ.\nசூரியனை சுற்றும் வேகம் - 13.07 Km/s.\nசூரியனை சுற்றும் கால அளவு - 11 ஆண்டுகள் 10 மாதங்கள்.\nதன்னைத்தானே சுற்றும் கால அளவு - 9 மணி 50 நிமிடம். ( நொடிக்கு 8 மைல் வேகம் )\nதற்சுழற்சி வேகம் - வினாடிக்கு 13 . 06 கி . மீ.\nவிடுபடு திசைவேகம் - 59.5 Km /s.\nவியாழனின் சராசரி ஆரம் - 69,911 ± 6 Km.\nவியாழனின் நடுவரை ஆரம் - 71,492 ± 4 Km.\nவியாழனின் விட்டம் (நிலநடுக்கோடு வழியாக ) - சுமார் 142,984 கி.மீ. (88,846 மைல்) பூமியைப் போல் சுமார் 11 மடங்கு அதிக விட்டத்தை கொண்டது.\nவியாழனின் துருவ விட்டம் (வட தென் துருவம் வழியாக ) - 83,000 மைல்.\nசுழல் அச்சு சாய்வு கோணம் - 2 ⁰ சாய்வு கோணத்தில் சூரியனை சுற்றி வருகிறது.\nகாந்தப்புல வலிமை - நமது சூரிய குடும்ப கோள்களில் இதுவே மிக அதிக காந்தபுல வலிமை கொண்டது.\nவியாழனின் எடை - 1.8986 x 10²⁷ Kg. ( பூமியைப்போல் 318 மடங்கு அதிக எடைகொண்டது)\nவியாழனின் சராசரி அடர்த்தி - 1.326 கி/செ.மீ ³.\nமேற்பரப்பு ஈர்ப்பு விசை - பூமியின் ஈர்��்பு விசையுடன் ஒப்பிட்டால் வியாழனின் ஈர்ப்பு விசை 2 . 5 மடங்கு அதிகம்.\nவியாழனில் அடங்கியுள்ள பொருட்கள் - பலவிதமான தனிமம் மற்றும் பாறைகள் அடங்கியுள்ளன.\nவளிமண்டலம் - ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன், அமோனியா, ஈத்தேன், நீர்.\nநமது சூரியமண்டலத்தில் அமைந்துள்ள 5 - வது கிரகம். நமது சூரிய மண்டலத்திலுள்ள கோள்களில் மிகப்பெரியது இதுவே. சனிக்கிரக வளையம் போல் இதற்கும் வளையம் உண்டு. ஆனால் தெளிவாக தெரிவதில்லை.\nஇதன் மேற்பகுதியில் பல கிலோமீட்டர் உயரத்திற்கு வாயுக்களே சூழ்ந்துள்ளதால் இது ''வாயுக்கோளம்'' என அழைக்கப்படுகிறது.\nதன்னைத்தானே வேகமாக சுற்றி வருகிறது. துருவப்பகுதிகள் சிறிது தட்டையானது. பருவகால மாற்றங்கள் நிகழ்வதில்லை.\nதுணைக்கோள்கள் ஒன்றிரண்டல்ல சிறியதும் பெரியதுமாக 79 துணைக்கோள்களை கொண்டுள்ளது. இதன் துணைக்கோள்களில் மிகப்பெரியது ''கனிமிட்''. இது புதன் கோளைவிட பெரியது. நம் சூரிய குடும்பத்திலுள்ள துணைக்கோள்களில் மிகப் பெரியது இதுதான்.\nஉயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை என்றே தோன்றுகிறது. மனிதன் குடியேறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஏனெனில் எப்போதும் கடுமையான புயல்கள் வீசுகின்றன. இடி மின்னல்களுக்கும் பஞ்சமில்லை.\nபூமியில் ஏற்படும் இடி மின்னல்களை விட வியாழனில் ஏற்படும் இடி மின்னல்கள் ஆயிரம் மடங்கு வலிமையானதாம்\n.. எழும்பி நின்னது இப்போ படுத்துக்கிச்சு\nம்ம்ம் .. இனியும் வியாழனுக்கு போக ஆசைப்படுவீங்க\nமேலும் வியாழன் கிரகத்தைப்பற்றி அறிந்துகொள்ள அடுத்துள்ள சுட்டியை சுட்டுங்க... >> வியாழன் கோள் - Jupiter Planet <<\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Keelanelli - Viral jaundice Hepatitis B.\nகீழாநெல்லி - வைரஸ் அழற்சி காமாலை. Viral jaundice Hepatitis B. [PART - 8]. மூலிகைகள் வர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7878:2011-05-29-07-09-44&catid=351&Itemid=259", "date_download": "2021-08-02T08:45:47Z", "digest": "sha1:3DFWHS2HBN6KSAKH2M2U4BX3IXGQ4BPY", "length": 24077, "nlines": 169, "source_domain": "www.tamilcircle.net", "title": "புலுடா…..", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 29 மே 2011\nசாமத்தியக் கொண்டாட்டம் முடிஞ்சவுடன் இரவுப் பார்ட்டிக்கு நீ கட்டாயம் நிற்க்க வேண்டும் என்ற சிவாண்னையின் வேண்டு கோளுக்கிணங்கத் தான் நான் இங்கு வரவேண்டிய நிலை. தவிர்க்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.\nஎனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. குடிப்பதற்கல்ல இங்கே வருவதற்கு தான்.\nஅரசியல் வந்தா சண்டை வரும்.\nமுன்பு போல் சண்டையும் படவும் முடியாது.\nபிள்ளைகளும் வளர்ந்திடுத்துக்கள், மனுசியும் வளர்ந்திட்டுத்து.\nயார் யார் எந்தப் பக்கத்தில் நிக்கிறார்களோ..\nயாரையும் புரிந்து கொள்ளவும் முடியாது.\nஇப்ப இது தான் இன்றைய நிலை.\nஉள்ளே நுழையும் போதே செல்வராசா அண்ணையின் வரவேற்பு, என்னை மகிழ்ச்சிப்படுத்தியதோடு ஒரு ஆறுதலாயும் இருந்தது. தெரிந்த ஒருவர் இருப்பதால் ஏதோ தப்பி விட்டேன் என்ற மனநிலையோடு போய் அமர்ந்து கொண்டேன். அங்கே நின்றவர்களில் வெறியில் சில பேர். நல்ல உச்ச நிலையிலும், சில பேர் ஒரு ஆரம்ப நிலையிலும், கொஞ்சப் பேர் ஆடி ஓடி வேலை செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.\nசெல்வராசா அண்ணை நல்ல கணகணப்பாய்த் தான் இருந்தார். எவ்வளவு தான் குடிச்சாலும் நிதானமாய் இருக்கும் ஒரு நல்ல மனிசன்.\nஇந்தா கிளாஸ் …விடுடா… குடியடா.\nஎன்ன யூசா…தண்ணியா… கோலாவா…. என்றபடி என் பக்கத்தில் எல்லாம் எடுத்து வைத்தார்.\nமாட்டிறைச்சி ரோஸின் மணமும்… கோழிக்கால் பொரியல் மணமும் ஒரு தூக்கல் தூக்கியது.\nஒரு ரவுண்ட்… இரண்டாவது… மூன்றாவது… ரவுண்ட் எனப் போக, எல்லோரும் போதையின் உச்சத்தின்…தொங்கலில் நின்றார்கள்.\nபல பகிடிகளும், சேட்டைகளும், சிரிப்புக்களுமாக…பார்ட்டி களை கட்டியது.\nடேய் வாறாண்டா.. வாறாண்டா… இப்ப எல்லாத்தையும் குழப்பப் போறாண்டா என்று செல்வராசா அண்ணை சொல்லி முடிப்பதற்குள் சிவலிங்கமும் வந்து அமர்ந்து கொண்டான்.\nசிகரட்டை இழுத்தபடியே என்ன நீ இதுக்கை வந்த நிக்கிறாய்.. சம்பந்தமில்லாமல் என்ற அண்ணையின் நக்கலை சிவலிங்கம் அசட்டுச் சிரிப்போடு சமாளிச்சுக் கொண்டபடி குமாரின் பக்கத்தில் பேசாமல் இருந்தான்.\nகுடிக்கும் இடங்களிலோ அல்லது பொதுவான இப்படிச் சந்திக்கும் நிகழ்வுகளிலோ சிவலிங்கம் சேர்ந்து கொள்வது மிகக் குறைவு. ஆனால் அன்று வந்திருக்கிறான் என்றால், ஏதோ ஒரு முக்கிய விசையம் இருக்கத் தான் செய்யும். சொல்லு சொல்லு என்��� செல்வராசா அண்ணை நச்சரிக்க, இல்லை நான் இப்ப இங்கே ஏன் வந்தானான் என்றால், வாறமாதம் இங்கே எல்லோருக்கும் அடையாள அட்டை வழங்கப் போறம் அது தான் தெரிவிச்சுப் போகலாம் என்றான்.\nஎன்ன அடையாள அட்டையோ… என்ன அங்கே நாட்டிலை மாதிரி இங்கேயும் ஆக்களை செக் பண்ணி பிடிக்கப் போறையளோ…எனக் கேட்க எல்லோரும் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்.சிவலிங்கத்துக்கும் அசடு வழிந்தது.\nஇவர்களைப் போல் எத்தனை பேரைக் கண்டவன் இந்தச் சிவலிங்கன். வந்த காலத்திலிருந்து இன்று வரையும் காசு சேர்ப்பதற்கு பொறுப்பாயிருந்ததிலிருந்து ஊர்வலங்கள், அஞ்சலிக் கூட்டங்கள் என்றும் முள்ளிவாயக்கலிலே எல்லாம் முடிவடைஞ்சு பேச்சு என்றாலும் இன்றுவரையும், அது இது என்று ஏதோ சொல்லி இந்தச் சனங்களை மாய்ச்சு தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவனுக்கு இவர்கள் ஒரு சிறு தூசு.\n‘எல்லோரும் ஒருக்கா கேளுங்கோ’ என்ற சிவலிங்கத்தின் அதிகாரத் தொனி எல்லோரையும் ஒரு கணம் மௌனமாக்கியது. ‘தமிழீழத்தைச் சேர்ந்தவர்களது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் எங்கடை நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டுத் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தோடும் தமிழ்த் தேசியத்துக்கானவர்களுக்கு இந்த அடையாள அட்டையை வழங்கத் தீர்மானித்துள்ளோம்.’\nஎன்ன சிவலிங்கண்ணை சும்மாவோ குடுக்கப் போறையள் என பக்கத்தில் இருந்தவன் கேட்க, அது வெறும் பதினைந்து டொலர்கள் தான் சொல்லி முடித்தான்.\nஅது தானே பார்த்தேன், சோழியன் குடும்பி என்ன சும்மா ஆடுதென்று…\nஎன்ன வெறும் பதினைந்து டொலரா…, நாங்கள் என்ன பணத்தை மரத்திலையா புடுங்கிறம். எங்கடை அடையாளத்தை விட்டிட்டு உடுதுணியில்லாமல் உரிஞ்சு போட்டா திரியிறம். எல்லோரும் எங்கே வாழ்ந்தாலும் எங்கடை அடையாளத்தை காப்பாற்றிக் கொண்டு தானே இருக்கின்றோம். ஏன் இண்டைக்கு இவன் சிவாவின்றை மகளின் சாமத்திய வீடு பார்த்தனி தானே… எங்கடை பெண்டுகள் எல்லாம் நல்ல சீலைகளும் கட்டி, எத்தனை ஆம்பிளையளும் வேட்டி கட்டிக் கொண்டு தானே நிண்டவங்கள். இந்தச் சின்னப் பிள்ளைகளும் எங்கடை உடுப்புக்களோடும் பூவும் பொட்டுகளும் வைச்சுக் கொண்டு என்ன வடிவாத் திரிஞசதுகள் தானே. செல்வராசா அண்ணை ஆவேசப்பட்டுக் கதைத்துக் கொண்டிருந்தார். இவர் அடக்கி வைச்சிருந்த பசிக்கு நல்ல சாப்பாடு ��ிடைச்ச மாதிரி.\nஇல்லை தெரியாமல் தான் கேட்கிறன் உந்த அடையாள அட்டையை வைச்சு என்ன செய்யப் போறையள். ஏதாவது கடைகிடையிலே சாமான் வாங்கும் போது ஏதாவுது விலையிலே கழிவு போட்டுத் தருவார்களோ…. இல்லா விட்டால் எங்கேயாவது பெற்றோல் அடிக்கும் போதாவது ஏதாவது குறைஞ்ச விலையில் அடிக்க விடுவாங்களோ……\nஎல்லோருக்கும் சிரிப்பு தான் வந்தது. சிவலிங்கத்தையும் ஏன் பகைத்துக் கொள்வான் என நினைத்து அடக்கி கொண்டார்கள்.\nநான் என்ன சொல்ல இந்தாள் வெறியிலே என்ன சொல்லுது என்று மனதில் நினைத்துக் கொண்டாலும் பதில் சொல்லாமல் மௌனமாய் நின்றான் சிவலிங்கம்.\nஎல்லோரும் மௌனியாகவே இருந்தார்கள். இங்கே கனபேர் ஒன்றும் பேசாது மதில் மேல் பூனைகள் போல் பதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பிழை எனத் தெரிந்தாலும் ஏன் எதற்கு என்று கேட்காமல், ஏன் எனக்கு இந்தச் சோலி என்றும் வாய் பொத்தி மௌனிகளாகி பிணம் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஏன் எனக்கு என்று பேசாமல் இருந்ததால் தான் இன்று இவ்வளவு நிலைக்கு வந்திருக்கின்றோம்.\nஎன்னுடைய சந்தர்ப்பம் வரும் வரை பொறுத்திருப்போம். அது வரை மற்றவர்களைப் போல் நானும் பேசாமல் மௌனம் காத்து நின்றேன்.\nதம்பி சிவலிங்கம், உங்களை நம்பி நாங்கள் ஏமாந்தது காணும். இனிமேல் நாடென்றும் மக்கள் என்றும் இந்தப்பக்கம் தலை காட்டப்படா…\nஇனிமேல் நீங்கள் காசு கீசெண்டு என்ரை வீட்டுப்பக்கம் வரப்படா.. கண்டியோ முந்தி அந்த நிதி இந்த நிதியெண்டும் எத்தனை தரம் வந்து அள்ளிக்கொண்டு போனையள் கடைசியிலே நாட்டைப் பிரகடனப்படுத்தப் போறம் பெருந்தொகையா தாங்கோ இனிமேல் வரமாட்டோம் என்றியள், பிறகு வணங்கா மண் என்று வந்தியள். அதுக்கும் அள்ளித் தந்தம். வன்னியிலே செத்த சனங்களின் பிணவாடை கூட இன்னும் மாறவேயில்லை. அதுக்குள்ளே கண்டறியாத நாடுகடந்த அரசாங்கமும் அதுக்கு அடையாள அட்டையும் குடுக்கப் போகினமாம். இப்படி எத்தனை தரமடா வந்து இந்தச் சனத்தைப் பேக்காட்டிக் கொண்டிருக்கிறையள். செல்வராசா அண்ணை கோபப்பட்டாலும் அவரது குரல் தளதளத்தது. கோபம் அடங்கி கொஞ்சம் தணிந்தே போனார்.\nசிவலிங்கம் கொஞ்சம் நிலைகுலைந்து தான் போனான். இதில் யார் யார் தனக்கு சாதகமாக நிற்பாங்களோ யார் யார் தனக்கு எதிரானவர்களோ… தங்களுக்கு காசு தந்தவங்களும் இப்ப வெறியிலே நிக்��ிறாங்கள். தானும் கோபப்பட்டாமல் சமாளித்துக் கொள்ள வேண்டும் என உறுதியாக நின்றான். சீ என்ன செய்வது நாட்டிலே எல்லாம் முடிஞ்சு போச்சு. அங்கே இயக்கம் இப்பவும் இருந்திதால், இவரைப் போல் கனபேருக்கப் பாடம் படிப்பிச்சுக் காட்டியிருக்கலாம். என்ன செய்வது என மனதுக்குள் வெடித்துப் புளுங்கிக் கொண்டான் சிவலிங்கம்.\nநாங்கள் எங்கடை மக்களையும் எங்களுடைய மண்ணையும் மீட்டெடுக்கப் போராட வேண்டும். அதற்காகத் தான் இந்த நாடுகடந்த அரசும் எமது செயற்பாடுகளும்..\nஅங்கே தமிழீழம் இப்ப வருகுது நாளைக்கு வருகுது என்று முப்பது வருசமும் இந்த அப்பாவிச் சனங்களை வைச்சுக் கிழிச்சுக் கொட்டினது காணும். உங்களைப் போன்ற ஆக்களால்த் தான் அங்கேயிருக்கின்ற அப்பாவிச் சனங்களுக்கு இன்னும் அங்கே கெடிபிடியாய் இருக்கின்றது. போர் முடிஞ்சும் முடியாத நிலை போல வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலே நீங்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால், வாயைப் பொத்திக் கொண்டு பேசாமல் கிடவுங்கோ.. இதுவே நீங்கள் செய்யும் பெரிய புண்ணியமாகும். மாற்றுக் கருத்துள்ள மற்றவர்கள் அந்த மக்களின் விடிவுக்காய் போராடப் புறப்பட்டு விட்டார்கள்.\nபேரவை என்றும், வட்டுக்கோட்டை என்றும், நாடு கடந்த தமிழீழம் என்றும், மக்களவை என்றும் புலுடாக்கள் விட்டது காணும். இனிமேல் எங்களாலே இதுகளைத் தாங்கேலாது.\nமௌனமாயிருந்த அனைவரும்; சரியென ஆமோதிப்பது போல் சிவலிங்கத்தை உற்று நோக்கி முறைத்துப் பார்த்தனர்.\nபிழையென்று எதிர்த்து ஒரு பதிலும் சொல்ல முடியாதவனாய் மெல்லத் தலைகுனிந்த படியே எழுந்து அவ்விடத்தை விட்டு கழரத் தொடங்கினான்.\nகனகாலத்திற்குப் பிறகு ஒரு நல்ல பார்ட்டியில் இருந்த உணர்வு மேலோங்க,\nஎங்கேயோ திறந்து விடப்பட்ட ஐன்னலினுடாக வந்த குளிர்காற்று\nசூடாய் இருந்த உடம்புக்கும் மனதுக்கும் இதமாயிருந்தது…\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_venus_in_different_houses11.html", "date_download": "2021-08-02T09:59:49Z", "digest": "sha1:HKOGYSAMZPSI7G7CZCW3IVOKE65CUFLR", "length": 5519, "nlines": 53, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள் - சுக்கிரன், பரிகாரங்கள், பாவங்களில், ஜோதிடம், suffers, வெவ்வேறு, remedies, கிதாப், ஏற்டுத்தும், லால், விளைவுகள், native, family, ப‌ரிகார‌ங்க‌ள், ஜோதிடப்", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 02, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n11 வது வீட்டில் சுக்கிரன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள், சுக்கிரன், பரிகாரங்கள், பாவங்களில், ஜோதிடம், suffers, வெவ்வேறு, remedies, கிதாப், ஏற்டுத்தும், லால், விளைவுகள், native, family, ப‌ரிகார‌ங்க‌ள், ஜோதிடப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gamepron.com/ta/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-08-02T08:27:53Z", "digest": "sha1:SSWKZZ2F7FDCBJO3RXP27QIFZNMLSSK2", "length": 49956, "nlines": 402, "source_domain": "gamepron.com", "title": "ஒலிமா பனிப்போர் ஹேக் 🥇 ஏமாற்றுக்காரர்கள், ஐம்போட், ஈஎஸ்பி, வால்ஹாக் - கேம்பிரான்", "raw_content": "\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\nஒலிமா கால் ஆஃப் டூட்டி பிளாக் ஒப்ஸ்: பனிப்போர் ஹேக்\nஒலிமாவைப் பயன்படுத்தி ஒரு உண்மைய���ன ஹேக்கரைப் போல பனிப்போர் இறுதியாக அணுகப்படலாம்\nகேம்பிரானின் தற்காலிக உறுப்பினராகி, அது என்னவென்று பாருங்கள் 1 நாள் தயாரிப்பு விசையை இன்று வாங்கவும்.\nநீங்கள் கருவிகளை முயற்சித்தாலும், அவற்றை விரும்பினாலும், அல்லது சரியாக உள்ளே செல்ல விரும்பினாலும், இது உங்களுக்கானது 1 வார தயாரிப்பு விசையை இன்று வாங்கவும்.\nகேம் பிரான் எப்போதும் குடும்பத்தில் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களை கருணையுடன் வரவேற்கப் போகிறது 1 மாத தயாரிப்பு விசையை இன்று வாங்கவும்.\nபனிப்போர் என்பது நாம் இதுவரை கண்டிராத மிகவும் பிரபலமான கால் ஆஃப் டூட்டி வெளியீடுகளில் ஒன்றாகும், மேலும் இது மிகைப்படுத்தலுடன் பொருந்தக்கூடிய வகையில் எங்கள் ஒலிமா பனிப்போர் ஹேக்கை உருவாக்குவது மட்டுமே அர்த்தமானது. உங்கள் உலகத்தை மாற்றப் போகும் ஏமாற்றுக்காரருக்கான அணுகலைப் பெறுங்கள்\n எங்களைக் காண இங்கே கிளிக் செய்க எப்படி உபயோகிப்பது கையேடு\nசிஓடி பிளாக் ஒப்ஸ்: பனிப்போர் ஒலிமா ஹேக் தகவல்\nபனிப்போரில் போட்டியை வெல்ல உங்களுக்கு உதவும் ஒரு திடமான ஏமாற்றுக்காரரைத் தேடுகிறீர்களா எங்கள் பனிப்போர் ஒலிமா ஹேக் முழு அணிகளையும் நீங்களே வீழ்த்துவதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதால், மேலும் பார்க்க வேண்டாம். இன்று FOV வட்டம் பொருத்தப்பட்ட எங்கள் பனிப்போர் ஐம்போட்டைப் பயன்படுத்துவது என்னவென்று உணருங்கள் எங்கள் பனிப்போர் ஒலிமா ஹேக் முழு அணிகளையும் நீங்களே வீழ்த்துவதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதால், மேலும் பார்க்க வேண்டாம். இன்று FOV வட்டம் பொருத்தப்பட்ட எங்கள் பனிப்போர் ஐம்போட்டைப் பயன்படுத்துவது என்னவென்று உணருங்கள் இன்டெல் மற்றும் ஏஎம்டி சிபியுக்களுக்காக உருவாக்கப்பட்டது, இந்த ஏமாற்று ஆங்கிலத்தில் வருகிறது, இது என்விடியா மற்றும் ஏஎம்டி அடிப்படையிலான ஜி.பீ.யுக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏமாற்றுபவர் உள் மற்றும் பயன்படுத்த மிகவும் எளிதானது, எனவே ஒரு புதிய ஹேக்கர் கூட கேம்பிரானில் உள்ள கருவிகளிலிருந்து பயனடையலாம்.\nஹேக் மதிப்பீடு: ★★★★ ✩\nபயன்படுத்த எளிதாக: ★★★★ ✩\nFOV வட்டம், மென்மையான நோக்கம், எலும்பு முன்னுரிமை, மற்றும் உங்கள் எதிரிகளை ஒரு கேக்வாக் வீழ்த்துவதற்கான பல அற்புதமான அம்சங்களுடன் கூடிய பனிப்போர் ஐம்போட் போன்ற அற்புதமான அம்சங்களைக் கண்டறியவும். ஒரு ஈஎஸ்பி ஹேக் (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்சன்) சேர்க்கப்பட்டுள்ளது, இதனால் பயனர்கள் தங்கள் குழு உறுப்பினர்கள், எதிரிகள் மற்றும் பொருட்களை சுவர்கள் வழியாக கண்டுபிடிக்க அனுமதிக்கிறது.\nஎதிரி தகவல் (தூரம், குழு உறுப்பினர்கள், பெயர்கள், உடல்நலம்)\nஅனுசரிப்பு Aimbot FOV & மென்மையானது\nசிறப்பு அம்சங்கள் இல்லை, ஆனால் விரைவில் வரும்\nCOD பிளாக் ஒப்ஸ் பற்றி: பனிப்போர் ஒலிமா ஹேக்\nசிஓடி பிளாக் ஒப்ஸ்: பனிப்போர் ஒலிமா ஸ்ட்ரீம் ஆதாரம் அல்ல, ஆனால் மற்றவர்களை விட விரைவாக முன்னேற விரும்புவோருக்கு இது இன்னும் ஒரு திடமான வழி. உங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்க இது உகந்ததாக இருக்காது, ஆனால் உங்கள் கைகளை முன்னெப்போதையும் விட மோசமாக இருக்கும் அந்த வியர்வை விளையாட்டுகளுக்கு இது சரியானது எங்கள் பனிப்போர் ஒலிமா ஹேக்கைத் தொடங்குவதற்கு முன் நீங்கள் பாதுகாப்புகளை முடக்க விரும்புவீர்கள், ஏனெனில் தவறான நேர்மறை ஏமாற்றுக்காரர் சரியாக வேலை செய்வதைத் தடுக்கலாம். இந்த ஏமாற்றுக்காரரை நீங்கள் முழுத் திரையில் பயன்படுத்தலாம், மேலும் அதனுடன் கட்டுப்படுத்திகளையும் பயன்படுத்தலாம் (நீங்கள் ஒரு கருவியைக் கொண்டு கட்டுப்படுத்தியை மறுவடிவமைக்கும் வரை).\nசிஓடி பிளாக் ஒப்ஸை ஏன் பயன்படுத்த வேண்டும்: பிற வழங்குநர்களைக் காட்டிலும் பனிப்போர் ஒலிமா\nகருவி புதுப்பிப்புகள் அல்லது வாடிக்கையாளர் ஆதரவைப் பற்றி நீங்கள் கேட்கும்போது பிற வழங்குநர்கள் உங்கள் முகத்தில் சிரிப்பார்கள், இது கேம்பிரானில் இல்லை. அது மட்டுமல்லாமல், எங்கள் கருவிகள் அனைத்தும் நீண்ட காலம் நீடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன, அதாவது விளையாட்டுகளின் அட்டவணை முழுவதும் அவற்றை புதுப்பிக்க வைக்கப் போகிறோம். COD பிளாக் ஒப்ஸ்: பனிப்போர், முரண்பாடுகள் எப்போது வேண்டுமானாலும் எங்கள் பனிப்போர் ஒலிமா ஹேக்கிற்கான புதுப்பிப்பு வெளியேற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம் எங்கள் கருவிகளைப் புதுப்பித்து வைத்திருப்பது பயனர்களுக்கு கேம்பிரான் மூலம் சிறந்த ஹேக்கிங் அனுபவத்தைப் பெற அனுமதிக்கிறது, மேலும் இது கடந்த சில ஆண்டுகளாக எங்களுக்காக ஒரு பெயரை உருவாக்க எங்களுக்கு உதவியது.\nஜரோட் மெக்பிமுதல் முறை பயனர்\n\"நான் இதற்கு முன்பு ஹேக் செய்ததில்லை என்றாலும், கேம்பிரான் முழு விஷயத்தையும் மிகவும் எளிமையான செயல்முறையாக மாற்றியது.\"\nஅனீசா கால்ஹான்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் முன்பு பயன்படுத்திய பிற கருவிகளைக் காட்டிலும் மிகவும் மென்மையானது, மேலும் சக்தி வாய்ந்தது.\"\n\"ஒரு தொழில்முறை ஹேக்கராக எனக்கு நிறைய தேவைகள் உள்ளன, இவை அனைத்தும் கேம்பிரான் சந்திக்கிறது\nஜோன் சில்வாமுதல் முறை பயனர்\n\"இவை அனைத்திற்கும் நான் புதியவன் என்றாலும், முடிவுகளில் நான் இன்னும் திருப்தி அடைகிறேன்\nகிறிஸ்டோபர் வின்சென்ட்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"கேம்பிரானில் இருந்து நீங்கள் தவிர, ஹேக்ஸ் எப்போதும் பயனுள்ளதாக இருக்காது.\"\n\"எனது அணி வீரர்களை என்னால் நம்ப முடியாது என்பதால், போட்டித்தன்மையுடன் இருக்க நான் கேம்பிரானை நம்ப வேண்டும்\nயூசப் அமீன்முதல் முறை பயனர்\n\"இந்த கருவிகளைப் பயன்படுத்த நீங்கள் ஒரு நிபுணராக இருக்க வேண்டியதில்லை, இது ஒரு நல்ல தொடுதல்.\"\nசைமன் சானேஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் என்ன சொல்ல முடியும் என்பதிலிருந்து, உங்கள் திறன் அளவைப் பொருட்படுத்தாமல் கேம்பிரான் உங்களுக்காக ஒரு கருவியைக் கொண்டிருக்கும்.\"\n\"உங்கள் பக்கத்தில் ஒரு கேம்பிரான் ஹேக் மூலம் நீங்கள் இப்போதே வெற்றிபெறக்கூடிய அனைத்து வெற்றிகளையும் நினைத்துப் பாருங்கள்\nகால்வின் விலைமுதல் முறை பயனர்\n\"நீங்கள் ஒரு தொடக்கக்காரர் என்றால் இந்த ஏமாற்றுக்காரர்களை சோதிக்க பயப்பட வேண்டாம், ஏனெனில் இது மிகவும் நேரடியானது.\"\nஹார்மனி ப்ரொக்டர்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் சான்றளிக்கக்கூடிய ஒன்று இருந்தால், அது இந்த ஹேக்ஸ் & ஏமாற்றுக்காரர்களின் தரம்.\"\nஎம்மி ராட்க்ளிஃப்அனுபவம் வாய்ந்த பயனர்\n கேம்பிரானுடன் நான் விரும்பும் எல்லா விளையாட்டுகளிலும் என்னைத் தடுக்க முடியாது.\"\n\"தொழில்முறை ஹேக்கிங் காட்சிக்கு சில காலமாக கேம்பிரான் போன்ற ஒரு சேவை தேவைப்படுகிறது.\"\nஹார்மனி ப்ரொக்டர்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் சான்றளிக்கக்கூடிய ஒன்று இருந்தால், அது இந்த ஹேக்ஸ் & ஏமாற்றுக்காரர்களின் தரம்.\"\nமீராப் நல்லதுமுதல் முறை பயனர்\n\"இது எனது முதல் முறையாக ஹேக்கிங் மற்றும் நான் ஒப்புக் கொள்ள வேண்டும், கேம்பிரான் விஷயங்களை எளிதாக்கியது\nமைல்ஸ் ரீட்அனுபவம் வாய்ந்த ���யனர்\n\"அனுபவம் வாய்ந்த ஹேக்கராக, கேம்பிரான் இப்போது ஆன்லைனில் சிறந்த வழங்குநர் என்று சொல்வது பாதுகாப்பானது.\"\n\"அந்த மோசமான ஹேக்ஸ் மற்றும் ஏமாற்றுக்காரர்களுடன் ஏன் கவலைப்பட வேண்டும் வேலையைச் செய்ய நீங்கள் எப்போதும் கேம்பிரானை நம்பலாம்.\"\nடானிஷ் கிரேக்முதல் முறை பயனர்\n\"நீங்கள் ஒரு புதிய ஹேக்கர் என்றால் கவலைப்பட வேண்டாம், ஏனெனில் கேம்பிரான் பயன்படுத்த எளிதானது மற்றும் பயனடைகிறது.\"\nஜெய்தான் கவனாக்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"இந்த ஏமாற்றுக்காரர்கள் செயல்படுத்தப்படுவதால் நீங்கள் என்னை என் கணினியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்\n\"அவர்கள் என்னை “பீஸ்ட்வுட்” என்று அழைத்தாலும், அது கேம்பிரானின் அற்புதமான கருவிகள் காரணமாகும்.\"\nஜெய்தா பார்க்லேமுதல் முறை பயனர்\n\"நான் முதலில் மிகவும் பயந்தேன், ஆனால் கேம்பிரான் ஹேக்கிங்கை நம்பமுடியாத அளவிற்கு எளிதாக்கியது.\"\nமுனீப் மாகனாஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் பல மதிப்புரைகளை விடவில்லை .. ஆனால் கேம்பிரான் ஏமாற்றுக்காரர்களுடன் நான் கொண்டிருந்த வேடிக்கை என்னை கட்டாயப்படுத்தியது.\"\nஜாக் டாட்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"ஹேக்ஸ் எவ்வாறு இயங்குகிறது என்பது எனக்குத் தெரியும், அதாவது கேம்பிரானுக்கு ஒரு சிறந்த மதிப்பாய்வைக் கொடுப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.\"\n\"ஹேக்கிங் செய்யும் போது என்னால் எந்த ஸ்லிப்-அப்களும் இருக்க முடியாது, கேம்பிரான் அதற்கு ஏற்றது\"\nசமி-ஜோ கிராஃப்ட்முதல் முறை பயனர்\n\"ஹேக்கிங் பற்றிய சிந்தனை உங்கள் கேமிங் இலக்குகளை அடைவதைத் தடுக்க வேண்டாம்.\"\nஹார்மனி ப்ரொக்டர்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் சான்றளிக்கக்கூடிய ஒன்று இருந்தால், அது இந்த ஹேக்ஸ் & ஏமாற்றுக்காரர்களின் தரம்.\"\n\"ஒரு சிறந்த ஒயின் போன்றது, கேம்பிரான் எங்களுக்கு தொழில் வல்லுநர்களுக்கு சரியான வயதாகிவிட்டது போல் தெரிகிறது.\"\nஸ்னீகிபாய் ஜேக்கப்சன்முதல் முறை பயனர்\n\"முதலில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஹேக்கிங் அனுபவம் ஒரு அற்புதமான ஒன்றாகும்\nமுனீப் மாகனாஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் பல மதிப்புரைகளை விடவில்லை .. ஆனால் கேம்பிரான் ஏமாற்றுக்காரர்களுடன் நான் கொண்டிருந்த வேடிக்கை என்னை கட்டாயப்படுத்தியது.\"\nஅரோரா ஆல்ட்ரெட்அனுபவம் வாய்��்த பயனர்\n\"கேம்பிரானைப் பயன்படுத்த யாரும் ஏன் மறுக்கிறார்கள் இது இலவச பணத்தை மறுப்பது போன்றது இது இலவச பணத்தை மறுப்பது போன்றது\n\"நான் மலிவான ஹேக்ஸ் & ஏமாற்றுக்காரர்களைப் பெற்றிருக்கிறேன், அதனால்தான் நான் எப்போதும் கேம்பிரானில் ஷாப்பிங் செய்கிறேன்.\"\nமுனீப் மாகனாஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் பல மதிப்புரைகளை விடவில்லை .. ஆனால் கேம்பிரான் ஏமாற்றுக்காரர்களுடன் நான் கொண்டிருந்த வேடிக்கை என்னை கட்டாயப்படுத்தியது.\"\nமுனீப் மாகனாஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் பல மதிப்புரைகளை விடவில்லை .. ஆனால் கேம்பிரான் ஏமாற்றுக்காரர்களுடன் நான் கொண்டிருந்த வேடிக்கை என்னை கட்டாயப்படுத்தியது.\"\nஎலோடி மெக்கின்டைர்முதல் முறை பயனர்\n\"நீங்கள் என்னைப் போன்ற ஒரு தொடக்க வீரராக இருந்தாலும் இந்த கருவிகளிலிருந்து நீங்கள் பயனடையலாம்\n\"கேம்பிரான் கண்டறியப்படாத ஏமாற்றுகளை வழங்குகிறது, இது நான் விரும்பிய அனைத்துமே.\"\nப்ரான்ட் பொன்னர்முதல் முறை பயனர்\n\"இது ஒரு அம்போட் அல்லது வால்ஹாக் / ஈஎஸ்பி என்றாலும், கேம்பிரானுக்கு நீங்கள் தேடும் ஒன்று இருக்கும்.\"\nஜோன் மெரிட்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"அனுபவம் வாய்ந்த மற்றும் அனுபவமுள்ள ஹேக்கர்கள் கேம்பிரான் வழங்குவதை இன்னும் விரும்புவர்.\"\n\"வாழ்க்கை என்னைத் தாழ்த்தும்போது, ​​எனது கேம்பிரான் ஐம்போட்டை நிலைமாற்றி, சில வெற்றிகளுடன் ஓய்வெடுக்க விரும்புகிறேன்.\"\n\"கேம்பிரானுடன் ஏன் ஹேக் செய்ய விரும்பவில்லை அவர்கள் வேலையைச் சரியாகச் செய்கிறார்கள்.\"\nமிஸ்டி நீவ்ஸ்முதல் முறை பயனர்\n\"எனக்கு முதலில் சந்தேகம் இருந்தது, ஆனால் கேம்பிரான் சிறந்தது என்று நான் மிக விரைவாக அறிந்து கொண்டேன்.\"\n\"கேம்பிரானைப் பற்றிய சிறந்த பகுதி அவர்கள் வழங்க வேண்டிய பல்துறைத்திறன் இருக்க வேண்டும்.\"\nஎமா வால்ஷ்முதல் முறை பயன்பாடு\n\"ஓநாய்களுக்கு வீசப்படுவேன் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் கேம்பிரான் பதிவிறக்க / நிறுவல் செயல்முறையை மிகவும் எளிமையாக்கியது.\"\nஹன்னா கின்னிஅனுபவம் வாய்ந்த பயனர்\n\"பெரும்பாலான ஹேக் டெவலப்பர்கள் என்னை அழுக விடும்போது, ​​வாடிக்கையாளர் ஆதரவு உதவியது\n\"எனக்கு கேள்விகள் இருக்கும்போது, ​​வாடிக்கையாளர் ஆதரவு எனக்கு தேவையான உதவியை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்\nஆர்ச்சர் காரெ��்முதல் முறை பயனர்\n\"முதல் முறையாக பயனராக, ஹேம்பிங் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதை கேம்பிரான் மிகவும் எளிதாக்கியது.\"\nஆர்லி கிரஹாம்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"ஆச்சரியமான அம்சங்கள் மற்றும் கருத்தில் கொள்ள ஒரு சிறந்த விலை புள்ளியுடன், கேம்பிரான் ஏதோவொரு விஷயத்தில் இருக்கக்கூடும்.\"\n\"அதை நிபுணர்களிடம் விட்டு விடுங்கள் இந்த ஹேக்ஸ் & ஏமாற்றுக்காரர்கள் அனைவரையும் நான் அழிக்கிறேன்.\"\nஇசா வர்காஸ்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"எனது நண்பர்கள் யாரும் வீடியோ கேம்களை விளையாடுவதில்லை, மேலும் போட்டித்தன்மையுடன் இருக்க கேம்பிரானைப் பயன்படுத்துவதை நான் நாட வேண்டும்\n\"வாழ்க்கை என்னைத் தாழ்த்தும்போது, ​​எனது கேம்பிரான் ஐம்போட்டை நிலைமாற்றி, சில வெற்றிகளுடன் ஓய்வெடுக்க விரும்புகிறேன்.\"\nகெலன் ஹெஸ்முதல் முறை பயனர்\n\"கேம்பிரானில் இங்கிருந்து எடுக்க நிறைய விளையாட்டுகள் உள்ளன, எனவே அவர்களின் உதவியை மறுக்க எந்த காரணமும் இல்லை.\"\nஹென்றி வார்டில்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நான் \"வளாகத்தில் பெரிய மனிதன்\" என்று நினைத்தேன், அதாவது நான் கேம்பிரானைப் பயன்படுத்தும் வரை\n\"கேம்பிரானை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நீங்கள் பல வாய்ப்புகளை இழக்கப் போகிறீர்கள்\nயுஷா போப்அனுபவம் வாய்ந்த பயனர்\n\"நாம் அனைவரும் பெரியவர்களாக இருக்க முடியாது எல்லோரும் முன்னேற கேம்பிரானைப் பயன்படுத்தாவிட்டால் அதுதான்.\"\nஎங்கள் சிஓடி பிளாக் ஒப்ஸில் காணப்படும் விளையாட்டு மெனு: பனிப்போர் ஒலிமா ஹேக் அணுகுவது எளிதானது மட்டுமல்ல, உங்கள் விருப்பப்படி ஹேக்கைத் தனிப்பயனாக்க இது உங்களை அனுமதிக்கிறது. எங்கள் சிஓடி பிளாக் ஒப்ஸுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட எல்லா அமைப்புகளையும் நீங்கள் சரிசெய்யலாம்: பனிப்போர் ஒலிமா ஹேக், ஐம்போட் எவ்வளவு விரைவாக செயல்படப் போகிறது என்பதிலிருந்து, உங்கள் FOV வட்டம் எவ்வளவு பெரியதாக இருக்கும். இயக்கப்பட்ட ஹேக் மூலம் எந்த ஈஎஸ்பி காணப்படப்போகிறது என்பதை உள்ளமைக்கவும், அதே போல் எங்கள் பனிப்போர் ஏமாற்றுக்காரர் தொடர்பாக பல அமைப்புகளை சரிசெய்யவும். கேம்ப்ரான் எங்கள் ஹேக்குகளுக்கு வரும்போது, ​​குறிப்பாக விளையாட்டு மெனுவில் போட்டியை விட அதிகமாக உள்ளது என்று நாங்கள் கூறும்போது எங்களை நம்புங்கள்.\nQ1. இந்த ஏமாற்றுக்காரர் பயன்படுத்த எளிதானதா\nஎ 1. இந்த ஏமாற்றுக்காரர் பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் எளிமையானது. ஏற்றி பதிவு தேவை. “எவ்வாறு பயன்படுத்துவது” என்பதைப் பின்தொடரவும்\nQ2. இது ஏமாற்று ஸ்ட்ரீம் ஆதாரமா\nஅ 2. இல்லை, இந்த ஏமாற்றுக்காரர் ஸ்ட்ரீம் ஆதாரம் அல்ல, இது பார்வையாளர்களுக்குத் தெரியும்.\nQ3. ஏமாற்றுபவர் உள் அல்லது வெளிப்புறமா\nஅ 3. இந்த ஏமாற்று உள்.\nQ4. ஏமாற்றுக்காரரைப் பயன்படுத்த நான் பாதுகாப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு முடக்க வேண்டுமா\nஅ 4. பாதுகாப்புகள் முடக்கப்பட்டிருப்பது முக்கியம், குறிப்பாக பயாஸில் பாதுகாப்பான துவக்கத்தை இந்த ஏமாற்றுக்காரர் பயன்படுத்த முடியாமல் போக முடிகிறது, ஏனெனில் அது முடக்கப்பட்டிருக்காது.\nQ5. ஏமாற்றுக்காரர் வார்சோன் பயன்முறையில் செயல்படுகிறாரா\nஅ 5. இல்லை, இந்த ஏமாற்றுக்காரர் ஒரு ஹூவிட் ஸ்பூஃபர் சேர்க்கவில்லை. COD க்காக பிரிக்கப்பட்ட hwid spoofer ஐ நாங்கள் வழங்குகிறோம்\nQ6. நான் முழுத்திரை தெளிவுத்திறனில் விளையாடலாமா\nஅ 6. ஆம், இதை முழுத்திரையில் பயன்படுத்தலாம்.\nQ7. நான் கட்டுப்படுத்திகளைப் பயன்படுத்தலாமா\nஅ 7. ஆம், ஆனால் குறிக்கோள் ரீமேப் கருவி மூலம் மறுபயன்பாடு தேவை.\nகேம்பிரானின் தற்காலிக உறுப்பினராகி, அது என்னவென்று பாருங்கள் 1 நாள் தயாரிப்பு விசையை இன்று வாங்கவும்.\nநீங்கள் கருவிகளை முயற்சித்தாலும், அவற்றை விரும்பினாலும், அல்லது சரியாக உள்ளே செல்ல விரும்பினாலும், இது உங்களுக்கானது 1 வார தயாரிப்பு விசையை இன்று வாங்கவும்.\nகேம் பிரான் எப்போதும் குடும்பத்தில் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களை கருணையுடன் வரவேற்கப் போகிறது 1 மாத தயாரிப்பு விசையை இன்று வாங்கவும்.\nஉங்களுக்கு உதவ ரேண்டம்களை நம்புவதில் நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா, அல்லது “மறுபக்கம்” என்னவென்று நீங்கள் பார்க்க விரும்பினாலும், எங்கள் பனிப்போர் ஒலிமா ஏமாற்றுக்காரரைப் பயன்படுத்துவது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வெற்றிபெற உதவும்.\nமாற்றத்தை செய்ய நீங்கள் தயாரா இன்று ஒரு தயாரிப்பு விசையை வாங்கவும்\n எங்களைக் காண இங்கே கிளிக் செய்க எப்படி உபயோகிப்பது கையேடு\nதயாராக ஆதிக்கம் செலுத்துங்கள் எங்கள் COD BO Olima Hack உடன்\nபிளாக் ஒப்ஸ்: பனிப்போர் ஹேக்ஸ்\nஹெல் லெட் லூஸ் ஹேக்\nPUBG மொபைல் ஹேக்ஸ் (Android)\nPUBG மொபைல் ஹேக்ஸ் (முன்மாதிரி)\nரெயின்போ ஆறு முற்றுகை ஹேக்குகள்\nசிவப்பு இறந்த மீட்பு 2 ஹேக்ஸ்\nகிளர்ச்சி மணல் புயல் ஹேக்\nசிறந்த ஹேக்ஸ் & தயாரிப்புகள்\nஆட்டம் மூலம் அபெக்ஸ் ஹேக்ஸ்\nகிளாசிக் வழங்கிய அபெக்ஸ் ஹேக்ஸ்\nஇன்டெல் வழங்கிய அபெக்ஸ் ஹேக்ஸ்\nமல்டி-லெஜிட் வழங்கிய அபெக்ஸ் ஹேக்ஸ்\nஇன்டெல் வழங்கிய போர்க்களம் 5 ஹேக்ஸ்\nகேம்பிரானின் BO பனிப்போர் ஹேக்\nஇன்டெல் எழுதிய BO பனிப்போர் ஹேக்\nஒலிமா எழுதிய BO பனிப்போர் ஹேக்\nஎஸ்.சி.யின் பிஓ பனிப்போர் ஹேக்\nஇன்டெல் வழங்கிய DayZ ஹேக்ஸ்\nஹாப்லிட் எழுதிய பகல்நேர ஹேக்குகளால் இறந்தவர்\nஇன்டெல் எழுதிய பகல்நேர ஹேக்குகளால் இறந்தவர்\nஇன்டெல் வழங்கிய டெட் சைட் ஹேக்ஸ்\nடெஸ்டினி 2 ஹேக்ஸ் இன்டெல்\nபிரிவு 2 ஹேக்ஸ் ஆல்மா\nஆல்பாவின் தர்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க\nபோஷின் தர்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க\nஇன்டெல் வழங்கும் தர்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க\nஒலிமாவின் தர்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க\nஹாப்லிட் எழுதிய கைஸ் ஹேக் வீழ்ச்சி\nஜி.டி.ஏ 5 ஹேக் எஸ்.சி.\nகேம்பிரான் வழங்கும் வன்பொருள் ஐடி ஸ்பூஃபர்\nவன்பொருள் ஐடி ஸ்பூஃபர் QC ஆல்\nஇன்டெல் வழங்கிய ஹெல் லெட் லூஸ் ஹேக்\nஇன்டெல் வழங்கிய ஹன்ட் ஷோடவுன் ஹேக்ஸ்\nமேகக்கணி மூலம் ஹைப்பர் ஸ்கேப் ஹேக்\nகேம்பிரானின் ஹைப்பர் ஸ்கேப் ஹேக்\nஇன்டெல்லின் கடைசி ஒயாசிஸ் ஹேக்\nமல்டி-லெஜிட் மூலம் நவீன வார்ஃபேர் ஹேக்\nநவீன வார்ஃபேர் ஹேக் ஹுஷ்\nஇன்டெல் எழுதிய நவீன வார்ஃபேர் ஹேக்\nமல்டி ரேஜ் மூலம் நவீன போர் ஹேக்\nநியான் எழுதிய ஓவர்வாட்ச் ஹேக்\nஇன்டெல் வழங்கிய PUBG ஹேக்\nஜார் வழங்கிய PUBG லைட் ஹேக்\nகனவு மூலம் PUBG லைட் ஹேக்\nகுளோப்பின் PUBG மொபைல் ஹேக்\nTX ஆல் PUBG மொபைல் ஹேக்\nLD ஆல் PUBG மொபைல் ஹேக்\nமேக்னமின் PUBG மொபைல் ஹேக்\nவெனோம் வழங்கும் PUBG மொபைல் ஹேக்\nகிளாசிக் மூலம் ரெயின்போ சிக்ஸ் முற்றுகை ஹேக்\nகேம்பிரானின் ரெயின்போ சிக்ஸ் முற்றுகை ஹேக்\nஇன்டெல் வழங்கிய ரெயின்போ சிக்ஸ் முற்றுகை ஹேக்\nஓலிமாவின் ரெயின்போ சிக்ஸ் முற்றுகை ஹேக்\nஅக்ஸெண்டோவின் எலிசியம் ஹேக்கின் மோதிரம்\nஇன்டெல் வழங்கிய ரோக் கம்பெனி ஹேக்\nகிளாசிக் மூலம் ரஸ்ட் ஹேக்\nஹாப்லிட் வழங்கிய ரஸ்ட் ஹேக்\nஇன்டெல் வழங்கிய ரஸ்ட் ஹேக்\nபோஷ் எழுதிய ரஸ்ட் ஹேக்\nஇன்டெல் வழங்கிய ஸ்பெல் பிரேக் ஹேக்\nஇன்டெல் வழங்கிய ஸ்குவாட் ஹேக்ஸ்\nப்ளூ மூலம் வார்ஃபேஸ் ஹேக்\nமல்டி-லெஜிட் மூலம் வார்சோன் ஹேக்\nஹுஷ் எழுதிய வார்சோன் ஹேக்\nஇன்டெல் வழங்கிய வார்சோன் ஹேக்\nமல்டி ரேஜ் மூலம் வார்சோன் ஹேக்\nஜீரோவின் கிளர்ச்சி மணல் புயல் ஹேக்\nகிளாசிக் மூலம் தர்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க\nஹுஷ் எழுதிய BO பனிப்போர் ஹேக்\nWR ஆல் PUBG ஹேக்\nடார்கோவ் ஹேக்கிலிருந்து தப்பிக்க WR\nWR ஆல் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் ஹேக்\nWR ஆல் ரஸ்ட் ஹேக்\n© 2021 கேம்பிரான். சேவை விதிமுறைகள் · திரும்பப்பெறும் கொள்கை · தனியுரிமை கொள்கை . ஆதரவு தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hotspotkitchen.com/ta/veg-recipes-ta/kovil-puliyodharai/", "date_download": "2021-08-02T09:36:22Z", "digest": "sha1:U3AZLNH7QZF32ABANENJNAAD2F72MDUB", "length": 16152, "nlines": 180, "source_domain": "hotspotkitchen.com", "title": "கோவில் புளியோதரை / புளிசாதம் » ஹாட்ஸ்பாட் கிச்சன்", "raw_content": "\n4 வகையான மேகி உணவு தயாரிப்பு\nகொள்ளு ரசம் சமையல் குறிப்பு\nசிந்தாமணி சிக்கன் சமையல் குறிப்பு\nதென்னிந்திய மத்தி மீன் மண்பானை குழம்பு\nவஞ்சிரம் மீன் குழம்பு சமையல் குறிப்பு\nமதுரை வெள்ளாட்டு கறிக்குழம்பு / மட்டன் குழம்பு\nஇறால் பிரியாணி செய்வது எப்படி\n4 வகையான மேகி உணவு தயாரிப்பு\nகொள்ளு ரசம் சமையல் குறிப்பு\nசிந்தாமணி சிக்கன் சமையல் குறிப்பு\nதென்னிந்திய மத்தி மீன் மண்பானை குழம்பு\nவஞ்சிரம் மீன் குழம்பு சமையல் குறிப்பு\nமதுரை வெள்ளாட்டு கறிக்குழம்பு / மட்டன் குழம்பு\nஇறால் பிரியாணி செய்வது எப்படி\nஹாட்ஸ்பாட் கிச்சன் > வலைப்பதிவு > சைவம் > காலை உணவு > கோவில் புளியோதரை / புளிசாதம்\nகோவில் புளியோதரை / புளிசாதம்\nஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய (ஐயர்/ஐயங்கார்) சமையல் முறையில் தயாரான கோவில் புளியோதரை / புளிசாதத்தை சுவைத்து மகிழுங்கள்.\nஅநேக தென்னிந்தியர்களின் கடவுள் நம்பிக்கை என்பது மிகவும் ஆழமானதாகவும் உண்மையானதாகவும் காணப்படும். அதன் விளைவே அவர்கள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் கோவில் குளம் என அதிகம் பயணிப்பார்கள். அவ்வாறு அவர்கள் கோவில்களை தரிசிக்கும் போது கடவுளின் ஆசீர்வாதத்தை நாடுவார்கள், மேலும் அதை பிரசாத வடிவிலும் எதிர்பார்ப்பார்கள். அத்தகைய ஒரு திவ்ய உணவு அல்லது பிரசாதத்தை தான் நாம் இன்று ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்க்கப்போகிறோம். கோவில் புளியோதரை அல்லது புளிசாதம் என்ப���ு நல்ல சுவையுடன் கடவுள் அருளையும் நமக்கு பெற்றுத்தருகிறது. ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து கோவில் புளியோதரை / புளிசாதத்துடன் அசல் பாரம்பரிய சமையல் முறையை கொண்டாடுங்கள்.\nஇப்போது, புளியோதரை / புளிசாதம் செய்ய தேவையான பொருட்களை காண்போம்:\nவறுத்த வேர்க்கடலை, 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள், ½ தேக்கரண்டி\nகோவில் புளியோதரை / புளிசாதம் செய்ய முதற்படியாக, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.\nதனியா, கடலை பருப்பு, சிகப்பு மிளகாய், மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கடயால் தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.\nவறுத்த அந்த பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அறைக்கவும். இதில் பாதியை கோவில் புளியோதரை குழம்பிலும் மீதியை கோவில் புளியோதரை சாதத்தை கிளறும் போதும் சேர்க்க வேண்டும்.\nஒரு கடாயில் 100 மி.லி. நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன், வறுத்த வேர்க்கடலை, கடலை பருப்பு, கறுவேப்பிலை, மஞ்சள் தூள், மற்றும் பெருங்காயத்தூளை சேர்க்கவும்.\nபின்னர் அரைத்து வைத்துள்ள தூளில் பாதியையும் தயார் செய்துள்ள புளிகரைசலையும் கோவில் புளியோதரை குழம்பில் சேர்த்து கலக்கவும். சுவைக்கு உப்பை சேர்க்கவும்.\nஇந்த குழம்பை அதிக தீயில் நன்றாக கொதிக்கவிடவும். குழம்பில் எண்ணெய் மிதந்து வரும்போது கோவில் புளியோதரை குழம்பு தயாராகிவிடும். கடாயை அடுப்பிலிருந்து இறக்கவும்.\nஅதே வேளையில், ஒரு காய்ந்த மிளகாவையும் எள்ளையும் மிக்ஸியில் எடுத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.\nஒரு அகலமான கிண்ணம் அல்லது தட்டில் சிறிது சாதம் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு நன்றாக கிளறிக்கொள்ளவும். இது சாதம் உதிரியாக இருக்க உதவும்.\nஎண்ணெய் கலந்துள்ள சாதத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் மீதமுள்ள அரைத்த தூளையும் எள்ளு மிளகாய் தூளையும், மற்றும் தயார் செய்துள்ள புளி குழம்பையும் சேர்த்து கிளறவும்.\nஇறுதியில் சாதத்தில் கருவேப்பிலை, வறுத்த முந்திரி மற்றும் வேர்க்கடலை சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்தால் சுவை கமழும் கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற கோவில் புளியோதரை / புளிசாதம் பரிமாற உங்கள் சமையலறையில் தயாராகிவிடும்.\nதெய்வ பக்தியுடன் கோவில் புளியோதரை / புளிசாதத்தை பரிமாறுங்கள்.\nPrevious Article வஞ்சிரம் மீன் வறுவல்\nNext Article நண்டு மிளகு வறுவல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாரம்பரியமான தென்னிந்திய சமையலை வழக்கமான உணவுகளுடனும் அசல் சுவையுடனும் உங்கள் சமையலறைக்கே கொண்டு வருகிறது ஹாட்ஸ்பாட் கிச்சன்.\n4 வகையான மேகி உணவு தயாரிப்பு\n4 வகையான மேகி உணவு தயாரிப்பு\nசிந்தாமணி சிக்கன் சமையல் குறிப்பு\nபாரம்பரிய தென்னிந்திய சமையலை வழக்கமான உணவுகளுடனும் அசல் சுவையுடனும் உங்கள் சமையலறைக்கே கொண்டு வருகிறது ஹாட்ஸ்பாட் கிச்சன். வடஇந்திய சமையற்கலை, சீனா மற்றும் அதிகளவு சிக்கன், மட்டன், கடல் உணவு, சைவம், முட்டை, பசியை தூண்டும் உணவு, இனிப்புகள், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை கொண்ட காண்டினென்டல் மற்றும் காலை உணவு மற்றும் இரவு உணவு சமையலையும் நாங்கள் செய்து காட்டுகின்றோம். சுவையும் நறுமணமும் நிறைந்த உலகிற்கு உங்களை வரவேற்கிறோம்\nஎங்கள் சேனலை ஸப்ஸ்க்ரைப் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/02/28/sandhyavandhanam/", "date_download": "2021-08-02T09:48:24Z", "digest": "sha1:LY54N374NBHDXZ43X6ZIFUTOYM5ZWNVN", "length": 7029, "nlines": 67, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sandhyavandhanam – Sage of Kanchi", "raw_content": "\nநாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம். சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்;\nஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், “உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்” என்றால் அவன் விடுவானா ‘நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.’ என்று சொல்லுவான். கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான். இது “அகரணே ப்ரத்யவாய ஜனக”த்தைச் சேர்ந்தது.\nஅதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடன��த் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல. தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன. ‘கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள் ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது’ என்று சிலர் கேட்கலாம்.\nவேதத்தில் “தைத்திரீய ஸம்ஹிதை” (Vl-3) யில் “பிராம்மணன் பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான். ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் என்று மூன்று கடன்கள் உண்டு” என்று சொல்லியிருக்கிறது. “வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும், யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும், தர்ப்பணம் சிராத்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றன” என்கிறது. கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும். இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும். அதனால் தினமும் தவறாது ஸந்தியாவந்தனம் செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/217", "date_download": "2021-08-02T09:16:19Z", "digest": "sha1:HZOCGMYSQ4FSJ6VW3SCIHUDF2CY2XPOP", "length": 6484, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/217 - விக்கிமூலம்", "raw_content": "\nமுன்னே நிற்க வைத்து, ஒடச் செய்து, போட்டியிட வைப்பதாகும்.\nதிறன் குறைந்தவர்க்கு ஒரு வாய்ப்பு தருகிற சலுகைப் போட்டியேயாகும்.\n3. தகவல் வழிப் போட்டிகள் பல இடங்களில், ஊர்களில் போட்டிகளை நடத்தி, அந்த முடிவுகளை தந்தி, டெலிபோன் மூலமாகத் தகவல் தர வேண்டும்; அந்த சாதனைகளுக்கேற்ப, முடிவுகள் அறிவிக்கப்படும்.\nஇதில் ஒரு குறை என்னவெனில், பல இடங்களில் போட்டிகள் என்கிற போது, அந்தந்த இடம் சூழ்நிலை காரணமாக, சாதனைகள் வேறுபடும், திறமைகளை வெளிப்படுத்த முடியாத தன்மையும் அமையும் என்பது மற்றபடி, இந்த முறைப் போட்டியினால் நேரம் வீணாகாமல், பணச் செலவு அதிகமாகாமல் மிச்சம் பிடிக்கலாம். காப்பாற்றலாம்.\n4. திறனறியும் போட்டிகள் (Tabloid Sports) இந்த முறைப் போட்டிகளில் கலந்து கொள்பவர்க்காக, முதலிலேயே, சாதனை நேரத்தையும் தூரத்தையும் (Time and distance) தீர்மானமாகக் குறித்து வைத்து விட வேண்டும்.\n100 மீட்டர் தூரம் 12.5 வினாடி 13 வினாடி 14 வினாடி\nநீளம் தாண்டல் 15 அடி 14 அடி 13 அடி\nஇரும்புக்குண்டு எறிதல் (12) 30 அடி 28 36\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 15 நவம்பர் 2020, 12:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-2.pdf/12", "date_download": "2021-08-02T10:06:02Z", "digest": "sha1:PZBNNOKEBISFMHFKEDGV5WUNW7EB7ZZI", "length": 7954, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/12 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/12\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n(19) செங்கல்பட்டு என்பதற்குச் சாதாரணமாக செங்க்ல்பட்டு, செங்கல் சூளை போடும் சிற்றுர் என்று அர்த்தம் கூறிவிடலாம். ஆயினும் அப்படி கூறுவது தவருகும் இவ்வூரின் பழைய பெயர் செங்கழுநீர்ப்பட்டு என்று கல்வெட்டுகளில் இருக்கிறது. செங்கழுநீர்ப்பட்டு உச்சரிப்பது சற்று சிரமமாயிருப்பதால் அதைக் குறுக்கி செங்கல்பட்டு என்று வழங்கலாயிற்று. இங்ங்னமே திருச்சிலம் பேரூர் என்பது திருச்சூர் எனவும், பழைய பெயர்கொண்ட சோழபுரம் என்பது பழைய செங்கடம் எனவும், மயூரபுரம் என்பது மாயவரம் என்றும் குறிக்கப் பட்டிருப்பதைக் கவனிக்க,\n(20) கார்வேடி நகரம் என்பது காடுவெட்டி நகரமாம், காட்டையழித்து நகரமாக்கப்பட்டது என்று பொருள்படும். காடு வெட்டிச் சோழன் என்பதைக் காண்க.\n(21) சோளிங்கபுரம் என்பது சோழலிங்கபுரம் என்பதின் சிதைவாகும்.\n(22) கலிங்கம் இது ஒரு தேசத்தின் பெயர். அங்கிருந்து முதலில்வந்த ஒர்வகை ஆடைக்கு கலிங்கம் என்று பெயர் வழங்கலாயிற்று.\n(23) துயிலி இது ஒரு கிராமத்தின் பெயர். அக்கிராமத்தி லிருந்து முதன் முதலாக நெய்யப்பட்டுவந்த ஆடைக்கு துயிலி என்று பெயர் வந்தது.\n(24) அஷ்டக்கிராம என்பது மைசூரிலுள்ள ஓர் இடம். அவ் விடமிருந்து வரும் ���ர்வித வெள்ளைச் சர்க்கரைக்கு அப்பெயரே வந்துவிட்டது.\nஇனி தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளின் பெயர்களைப் பற்றி சற்று ஆராய்வோம். ஆறு அல்லது யாறு என்பது சுத்தத் தமிழ் மொழியாம். யாறு என்பது பழந் தமிழ் மொழி, நதம் நதி என்பவை சமஸ்கிருத மொழிகள்.\n(1) குமரி என்பது பழங் காலத்தில் ஒரு ஆற்றின் பெயரா யிருந்தது. தென் குமரி என்றது குமரியாற்றைக் குறித்தேயாம்: இது தமிழ்நாட்டிற்குத் தெற்கு எல்லையாயிருந்தது; இதைக் கடல்\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 10:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/atm-cash-withdrawal-debit-card-and-credit-card-charges-to-increase-from-august-1st-030225.html", "date_download": "2021-08-02T07:53:37Z", "digest": "sha1:UVJUC6HNXWENQXUZVFQIAPUY5GIUDKXP", "length": 25495, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "ATM Cash Withdrawal Debit Card and Credit Card Charges To Increase From August 1st | ATM கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு.. டெபிட் & கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதி..கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎக்ஸ்பாக்ஸ் 20வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இப்படி ஒரு முடிவா\n1 day ago டிஸ்ப்ளேவை மடிக்கக்கூடிய சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 3: அம்சங்கள் விலை இதுவா\n1 day ago போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\n1 day ago ஒரு நூற்றாண்டிற்கு பின் ஐன்ஸ்டீன் கோட்பாடு உண்மையானது.. கருந்துளைக்கு பின்னாலிருந்து வெளிவந்த ஒளி.\n1 day ago வா தலைவா., வா தலைவா- ஜியோ வழங்கும் Buy 1 Get 1 Free சலுகை: இனி ஒரு ஜிபி வாங்குனா ஒரு ஜிபி இலவசம்\nSports கேரளாவின் மகன்.. தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை.. ஹாக்கியின் \"சுவர்\" ஸ்ரீஜேஷை கொண்டாடும் 2 மாநிலங்கள்\nNews இலங்கை கடற்படை அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்\nMovies யாரடி நீ மோகினி சீரியலின் முடிவு உங்கள் கையில்… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஜீ தமிழ் \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரங்க பேசும் போது கவனமா இருக்கணும்…\nAutomobiles ரூ.15 லட்சத்திற்குள் ஆற்றல்மிக்க காரை வாங்க வேண்டுமா சிறந்த ஐந்தினை பற்றி காணுங்கள்\nFinance ஏடிஎம், கேஸ் முதல் வங்கி கட்டணங்கள் வரையில் ஆகஸ்ட் 1 மு���ல் அமலுக்கு வந்துள்ள முக்கிய மாற்றங்கள்..\nEducation TBSE திரிபுரா 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nATM கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு:டெபிட் & கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதி..கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க\nஏடிஎம் பரிவர்த்தனைகளில் வங்கிகள் வசூலிக்கக்கூடிய பரிமாற்றக் கட்டணத்தை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் உயர்த்தியது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வங்கிகள் வசூலிக்கக்கூடிய பரிமாற்றக் கட்டணம் புதிய கட்டண பட்டியலின் படி வசூலிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு தகவலை பார்க்கலாம்.\nஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் புதிய கட்டண முறையா\nATM பரிவர்த்தனை, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாட்டிற்கு இனி இந்த புதிய கட்டண முறை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தபடும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட மொத்தம் ஐந்து பரிவர்த்தனைகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.\nமீண்டும் அதிகரிக்கும் பரிமாற்றக் கட்டணம்.. புது கட்டணத்தின் விலை இது தான்\nநிதி பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணம் தற்பொழுது ரூ.15 ஆக இருக்கிறது. இந்த கட்டணம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ. 17 ஆக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படும் என்று தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த சேவைக்கான கட்டணம் ரூ. 5 ஆக இருந்தது, தற்பொழுது வெளியான அறிவிப்பின் படி இது இனி ரூ. 6 ஆக வசூலிக்கப்படும்.\nஎதற்காக இந்த கட்டணம் நம்மிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nஇந்த புதிய கட்டண விகிதங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, பரிமாற்ற கட்டணம் என்பது கடன் அட்டைகள் அல்லது டெபிட் கார்டு���ள் மூலம் பணம் செலுத்தும் வணிகர்களிடம் வங்கிகளால் வசூலிக்கப்படும் கட்டணமாகும். இந்த கட்டணம் வங்கிகளுக்கும் ஏடிஎம் நிறுவனங்களுக்கும் இடையிலான சேவையை தடை இல்லாமல் இயக்க முக்கிய பாலமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இப்போது தெரிகிறதா எதற்காக இந்த கட்டணம் நம்மிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது என்று.\nஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை வித்ட்ரா செய்யும் விதியில் என்ன மாற்றங்கள் உள்ளது\nஒவ்வொரு மாதமும் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட மொத்தமாக ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் தகுதியுடையவர்கள் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மற்ற வங்கி ஏடிஎம்களில் இருந்து இலவச பரிவர்த்தனைகளுக்கும் அவர்கள் தகுதியுடையவர்கள், இதில் பெருநகரங்களில் மூன்று பரிவர்த்தனைகளும், பெருநகரங்கள் அல்லாத இடங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளும் இதில் அடங்கும்.\nஇலவச பரிவர்த்தனைக்கு பின்பு இனி எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்\nஇலவச பரிவர்த்தனைகளுக்கு அப்பால் நடைபெறும் பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20 என்று வசூலிக்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1, 2022 முதல் ரூ.21 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை போல இதுவும் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்துகொண்டே வருகிறது.\nஅடுத்த ஆண்டு ஜனவரி 1, 2022 முதல் இந்த கட்டணமும் உயரும்\nஅதிக பரிமாற்றக் கட்டணத்திற்காக வங்கிகளுக்கு ஈடுசெய்ய மற்றும் செலவுகளில் பொதுவான அதிகரிப்பு கொடுக்கப்பட்டால், வாடிக்கையாளர் கட்டணத்தை ஒரு பரிவர்த்தனைக்கு ₹ 21 ஆக அதிகரிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த அதிகரிப்பு ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபுதிய ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் வித்ட்ரா விதிகள் மற்றும் காசோலை கட்டண விபரங்கள்\nஐசிஐசிஐ வங்கி பண பரிவர்த்தனைகள், ஏடிஎம் வித்ட்ரா மற்றும் காசோலை கட்டணங்கள் ஆகியவற்றின் திருத்தப்பட்ட வரம்புகள் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் ��டி, திருத்தப்பட்ட கட்டணங்கள் உள்நாட்டு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், சம்பளக் கணக்குகள் வந்திருக்கும் வாடிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.\nSBI பயனர்களுக்கு புதிய கட்டணங்கள் எவ்வளவு காசோலை பரிவர்த்தனை கட்டணம் எவ்வளவு\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI ) சமீபத்தில், ஜூலை தொடக்கத்தில் தனது ஏடிஎம்கள் மற்றும் வங்கி கிளைகளிலிருந்து பணத்தை எடுப்பதற்கான சேவை கட்டணங்களை திருத்தியது. அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகள் (BSBD) அல்லது SBI BSBD கணக்குகளுக்கு, ஏடிஎம் மற்றும் கிளை உள்ளிட்ட சேவைகளுக்கு 4 இலவச பரிவர்த்தனைகளுக்கு அப்பால் நடக்கும் பரிவர்த்தனைக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.\nஅவரவர் வங்கிக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை தெரிந்துகொண்டு செயல்படுங்கள்\nஇது தவிர, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முதல் 10 காசோலை இலைகளில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வரம்பைத் தாண்டிய காசோலை பரிவர்த்தனைக்கு ஜூலை 1,2021 முதல் நடைமுறையில் இருக்கும் கட்டணங்களுக்கு உட்பட்டது என்று வங்கி தெரிவித்துள்ளது. ஆகையால், வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் வங்கிக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தேவையற்ற கட்டணங்களை தவிர்க்க உதவும்.\nடிஸ்ப்ளேவை மடிக்கக்கூடிய சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 3: அம்சங்கள் விலை இதுவா\nஇன்றுமுதல் கட்டணம்: எஸ்பிஐ பயனர்கள் கவனத்திற்கு- எத்தனை முறை இலவசமாக ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்\nபோக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nசத்தமின்றி ஏடிஎம்களின் பணப் பரிவர்த்தனைகக்கான கட்டணம் உயர்வு: எப்போது முதல் தெரியுமா\nஒரு நூற்றாண்டிற்கு பின் ஐன்ஸ்டீன் கோட்பாடு உண்மையானது.. கருந்துளைக்கு பின்னாலிருந்து வெளிவந்த ஒளி.\nஅடேங்கப்பா...இனி ATM கார்டு இல்லாமல் நொடியில் பணம் எடுக்கலாம்.. வந்தது புதிய வசதி.\nவா தலைவா., வா தலைவா- ஜியோ வழங்கும் Buy 1 Get 1 Free சலுகை: இனி ஒரு ஜிபி வாங்குனா ஒரு ஜிபி இலவசம்\nடெபிட் கார்டு பயனர்களே உஷார்.. நடைமுறையில் உள்ள 'இந்த' புதிய விதி பற்றி உங்களுக்கு தெரியுமா\nகூகுள் அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்- இனி ரொம்ப எளிதாக வீடியோ கால் செய்யலாம்\nஇனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..\nவெறும் ரூ. 6,999 விலையில் இப்படி ஒரு சூப்பர் ஸ்மார்ட்போனா\nATM இயந்திரத்தில் இனி ரூ. 5000-திற்கு மேல் பணம் எடுக்க கட்டணமா\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஎல்லாமே உயர்தரம்: ஹூவாய் பி50 ப்ரோ 4ஜி இப்படிதான் இருக்கும்\nவளைந்த டிஸ்ப்ளே, எச்டிஆர், துல்லிய காட்சி: அட்டகாச கேமிங் மானிட்டர் அறிமுகம்- விலை என்ன தெரியுமா\nஆப்பிளின் சாதனை: அதிக வருவாயில் இந்தியாவிற்கு முக்கிய பங்கு.. டிம் குக் மகிழ்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/israel-scientists-have-found-a-way-to-extend-life-on-250-mice-and-it-can-be-replicated-on-humans-too-029722.html?ref_medium=Desktop&ref_source=GZ-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T09:19:43Z", "digest": "sha1:NZKOX3CTV6M76DXPZ7DDD4RSVLRMA2PS", "length": 27569, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "120 ஆண்டு இளமையோடு சாகாமல் உயிர் வாழ ஆசையா? 'சாகா வரத்திற்கான' விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. | Israel Scientists Have Found a Way to Extend Life on 250 mice and it can be replicated on humans too - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎக்ஸ்பாக்ஸ் 20வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இப்படி ஒரு முடிவா\n27 min ago பிளிப்கார்ட்: சாம்சங் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி.\n46 min ago பூமியை நெருங்கும் சனிக்கோள்: வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே தெரியும்- ஏதும் ஆபத்து இருக்கா\n1 hr ago சியோமி ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா\n2 hrs ago அதிக டேட்டா நன்மையை வழங்கும் ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்.\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nMovies என்னப்பா நடக்குது இங்க ...பாதுகாக்கப்படும் விஜய் பட தகவல்கள்...ஆர்வத்தில் உளரும் பிரபலங்கள்\nNews கொரோனாவுக்கு நன்றி சொல்லி.. ஆடியிலும் கொண்டாடித் தீர்க்கும் மாழ்பழ ரசிகர்கள்\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nFinance e-RUPI: மக்கள் இனி காத்திருக்க தேவையில்லை.. 8 வங்கிகளுக்கு அனுமதி..\nSports 50மீ ��ுப்பாக்கி சூடு.. இந்திய வீரர்கள் பிரதாப் சிங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் தோல்வி.. வெளியேற்றம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n120 ஆண்டு இளமையோடு சாகாமல் உயிர் வாழ ஆசையா 'சாகா வரத்திற்கான' விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..\nமனிதர்களின் நீண்ட நாள் கனவு, நிறைவேறாத மிகப் பெரிய ஆசை என்று பல நூறு ஆண்டுகளாக மனிதன் தேடி ஆராய்ந்து திரிந்த நிறைவேறாத ஆசைக்கான கதவு தற்பொழுது திறந்துள்ளது. இளமையோடு சாகாமல் இருப்பதற்கான வரத்தைத் தேடி மனித இனம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கான விடையாய் தற்பொழுது இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் சாகா வரத்திற்கான முதல் படியை எட்டியுள்ளனர். இந்த முதல் படியே மனிதனை 120 ஆண்டுகள் வரை உயிர் வாழ வைக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது.\nசாகா வரத்திற்கான முதல் படியை விஞ்ஞானிகள் எப்படி அடைந்தார்கள்\nஇஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் 250 எலிகள் மீது வெற்றிகரமாக ஒரு நம்ப முடியாத பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்த பரிசோதனை மூலம் 250 எலிகளின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த அசாதாரணமான சோதனையின் மூலம் மனிதர்களின் ஆயுட்காலத்தையும் இளமையையும் அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் பெரிதும் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் இந்த நம்பமுடியாத சாகா வரத்திற்கான முதல் படியை எப்படி அடைந்தார்கள் என்று தெரியுமா\nஉடல் பலவீனம் மற்றும் இளமையைப் பாதுகாத்து மேம்படுத்த முடியும்\nவிஞ்ஞானிகளின் சோதனை, SIRT6 என்ற புரதத்தை அதிகரிப்பதன் மூலம் துவங்கியது. இது முதலில் உயிர் உள்ள உடலில் நிகழும் வயதைக் குறைக்கத் தொடங்குகிறது. அதாவது உடலின் இளைமையைத் தக்கவைக்கிறது. \"இந்த கண்டுபிடிப்புகள் SIRT6 மூலம் வயதான காலத்தில் ஏற்பட்டும் ஹோமியோஸ்டாசிஸை (homeostasis) பலவீனப்படுத்துவதைத் தாமதப்படுத்துகிறது. அதேபோல், வயதான காலத்தில் ஏற்படும் உடல் பலவீனம் மற்றும் இளமையைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது என்பதை ஆராய்ச்சியின் முடிவுகள் நிரூபித்துள்ளது.\nமனிதர்களை பிரம��க்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்\nSIRT6 அதிகரிப்பதனால் ஏற்பட்ட நம்ப முடியாத மாற்றங்கள் என்ன-என்ன\nநேச்சர் கம்யூனிகேஷன் இதழில் \"SIRT6 ஆல் ஆற்றல் ஹோமியோஸ்டாசிஸை மீட்டெடுப்பது ஆரோக்கியமான ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது\" என்று ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்துவதாக வெளியிடப்பட்டுள்ளது. அதிகரித்த SIRT6 புரதம், இந்த விஷயத்தில் எலிகளின் ஆயுட்காலத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், சாதாரண எலிகளுடன் ஒப்பிடும்போது இந்த எலிகள் அதிக இளமையோடும், புற்றுநோயால் தாக்குதலுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகத் தோற்றமளித்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nமனிதர்கள் இளமையோடு சுமார் 120 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியுமா\nஆய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய பார்-இலன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹைம் கோஹன் கூறுகையில், ''பரிசோதனையைத் தொடர்ந்த எலிகளின் ஆயுட்காலம் மாற்றம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. எலிகளில் காணப்பட்ட அதே தாவல், மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டால், சராசரியாக ஒரு மனிதன் சுமார் 120 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். என்று அவர் கூறியுள்ளார்.\nஇதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.\nஎலிகளில் கண்ட மாற்றங்களை மனிதர்களிடமும் காண முடியுமா\n\"எலிகளில் நாங்கள் கண்ட மாற்றங்கள் மனிதர்களுக்கு மொழிபெயர்க்கக்கூடிய சாத்தியங்களை விஞ்ஞானிகள் நம்புகின்றனர், அப்படி அது நடந்தால் உண்மையில் உற்சாகமாக இருக்கும்\" என்று கோஹன் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம் கூறினார். அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர் ரபேல் டி கபோ உள்ளிட்ட சர்வதேச விஞ்ஞானிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இந்த நேரத்தில் எலிகளின் ஆயுட்காலம் அதிகரிப்பது எந்தவொரு குறிப்பிட்ட பாலினத்துடனும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.\nஎந்த பாலினத்தின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கிறது\nஇருப்பினும், ஆண் மற்றும் பெண் எலிகளிடையே காணப்பட்ட ஆயுட்காலம் சதவீதம் அதிகரித்தது முற்றிலுமாக வேறுபட்டது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். SIRT6 புரதம் அதிகரித்த ஆண் எலிகள் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் அதிகமாக வாழ்ந்தாலும், ஆ��ாய்ச்சியின் ஒரு பகுதியாக இல்லாத எலிகளை விடப் பெண் எலிகள் கிட்டத்தட்ட 15 சதவிகிதம் அதிகமான நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதை ஆராய்ச்சியின் முடிவுகள் காட்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nSBI பயனர்களின் கவனத்திற்கு: பணம் எடுக்கும் முறையில் புதிய மாற்றம்.. ATM சேவைக்கு GST உடன் கட்டணம்..\nகோஹன் மேற்கொண்ட 2012 பரிசோதனையின் முயற்சி\nகோஹன் மேற்கொண்ட 2012 பரிசோதனையின் முயற்சிக்குப் பின்னர் இந்த புதிய ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முந்தைய பரிசோதனையில் ஆண் எலிகளிடையே நிகழும் ஆயுட்காலத்தை கோஹன் அதிகரித்துக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. எலிகளின் ஆயுட்காலத்தை அதிகரித்த முதல் விஞ்ஞானியாக இவர் உருவாக்கினார். இருப்பினும், அந்த சோதனையில் பெண் எலிகளின் ஆயுட்காலம் மீது எந்த தாக்கத்தையும் ஆராய்ச்சி ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமனிதர்களிடமும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடிவு\nகோஹனின் ஆய்வகம் இப்போது மனிதர்களிடமும் இதேபோன்ற பரிசோதனையை மேற்கொள்ளப் புதுமையான முறைகளைத் தேடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எலிகள் மரபணு முறைப்படி மாற்றப்பட்டாலும், இதை மனிதர்களுக்கு முறையாய் செய்து முடிக்க சில மருந்துகள் தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மனிதர்கள் மீது இப்படியான ஒரு சோதனை நடத்தும் முன்பு, பல கோணங்களில் பலதரப்பட்ட பாதுகாப்பு யோசனைகளை விஞ்ஞானிகள் முன்பே மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.\nமொபைல்போன் முதல் இருசக்கர வாகனங்கள் வரை: தடுப்பூசி போடவைக்க புதிய முயற்சி.\nமனிதனை 120 ஆண்டுகள் வாழ அனுமதிக்கும் 'சாகா வரத்திற்கான' முதல் படி\nஆராய்ச்சியின் முடிவுகளை வைத்து விஞ்ஞானிகள் சிறிய மூலக்கூறுகளை உருவாக்கி வருகின்றனர். அவை SIRT6 இன் அளவை அதிகரிக்கக்கூடும், அல்லது இருக்கும் புரதத்தின் அளவை இன்னும் சுறுசுறுப்பாக மாற்றக்கூடும் என்று விஞ்ஞானி கூறுகின்றனர். இப்போதிலிருந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒரு உறுதியான முடிவுகளை விஞ்ஞானிகள் உருவாக்கிவிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சாகா வரத்திற்கான முதல் படியே மனிதனை 120 ஆண்டுகள் வாழ அனுமதிக்கும் என்பது உண்மையில் ஆச்சரியம் தான்.\nபிளிப்கார்ட்: சாம்சங் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி.\n7 சிறுகோள்களை கண்டுபிடித்து உலகின் இளைய வானியலாளராக தேர்வுசெய்யப்பட்ட சிறுமி.\nபூமியை நெருங்கும் சனிக்கோள்: வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே தெரியும்- ஏதும் ஆபத்து இருக்கா\nமீண்டும் பீதியைக் கிளப்பும் சீனா: 15,000 ஆண்டு பழமையான வைரஸ்கள் அழியாமல் கண்டுபிடிப்பு.. திடுக்கிடும் தகவல்.\nசியோமி ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா\nஇலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா\nஅதிக டேட்டா நன்மையை வழங்கும் ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்.\nசந்திரன் \"தள்ளாட்டம்\".. 2030-களில் கடலோரம் இப்படியொரு பிரச்சனை வருமா\nவிரைவில் ஆன்லைன் டெலிவரி இப்படிதான்- உருவானது கேஸி ரோபோ: 5 கிலோமீட்டர் தூரத்தை 53 நிமிடத்தில் ஓடி அசத்தல்\nகொரோனாவை கண்டறியும் அதிநவீன மாஸ்க்: 90 நிமிடங்கள் போதும்\nசெவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்.. இதோ..\nநாளை நிகழும் 'ஸ்ட்ராபெரி மூன்' நிகழ்வு.. இந்தியாவில் இந்த நிகழ்வை என்ன நேரத்தில் பார்க்க முடியும்\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசேவை உன்னுடையது., சாதனம் என்னுடையது- ஜியோவுடன் இணைந்து ஒப்போ 5ஜி சோதனை\nநீங்க வீரர்னா., அப்ப நாங்க யாரு- முடிவுக்கு வந்த விவாதம்: பெசோஸ், பிரான்சனை இனி அப்படி கூப்பிட கூடாது\nகண்ணால் காண்பது பொய்., கேமராவால் ஆராய்வதே மெய்- டோக்கியோ ஒலிம்பிக்கில் Nikon கேமராக்களின் அதீத பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/1057", "date_download": "2021-08-02T09:19:23Z", "digest": "sha1:K2F3JNN6VF7V4TFDVDKOBVYBGQDQIC6K", "length": 3238, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 1057 | திருக்குறள்", "raw_content": "\nஇகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்\nஇகழ்ந்து எள்ளாமல்‌ பொருள்‌ கொடுப்பவரைக்‌ கண்டால்‌, இரப்பவரின்‌ உள்ளம்‌ மகிழ்ந்து உள்ளுக்குள்ளேயே உவகை அடையும்‌ தன்மையுடையதாகும்‌.\nஇகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் த��்மையுடைத்து.\n(இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், ''உள்ளுள் உவப்பது உடைத்து'' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.)\n(இதன் பொருள்) இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி, அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது, வேண்டப்பட்டதனைக் கொடுப்பா ரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venpu.blogspot.com/2011/04/", "date_download": "2021-08-02T09:53:39Z", "digest": "sha1:EU5T7W3ZCWZY6IBBW3OASFTGUSSF3CZF", "length": 26591, "nlines": 93, "source_domain": "venpu.blogspot.com", "title": "வெண்பூ: April 2011", "raw_content": "\nகொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் அனுபவம்...\nஇது ப்ளாக்கிலீக்ஸ் / உண்மைக‌ள் சுடும் ப‌திவு அல்ல‌ :(\nஇந்த‌ ப‌திவின் த‌லைப்பு நிச்ச‌ய‌மாய் உங்க‌ளை க‌வ‌ர்ந்து இழுப்ப‌த‌ற்காக‌ ம‌ட்டுமே வைக்க‌ப்ப‌ட்ட‌ தலைப்பு அல்ல‌. அதே போல் இந்த‌ முக‌மூடிக‌ள் பெய‌ர்க‌ளில் எழுதுவ‌து நான் அல்ல‌ என்று அறிவிக்க‌ எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவும் அல்ல‌ இது.\nசில‌ நாட்க‌ளாக‌ ஏன் சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ ப‌திவுல‌கில் மறைக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஒரு விச‌ய‌ம் குறித்து பேச‌ ம‌ட்டுமே இந்த‌ ப‌திவு.\nஇதை வேறொரு முக‌மூடி அணிந்து அனானி பெய‌ரில் எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு என்றும் இருந்த‌தில்லை. என்னை ந‌ன்க‌றிந்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும், ச‌ரியென்றால் உட‌ன‌டியாக‌ வெளிப்ப‌டையாக‌ பாராட்ட‌வும், த‌வ‌றென்றால் முக‌த்திற்கு நேராக‌ சொல்ல‌வும் கூடிய‌ ஆண்மை என‌க்கு உண்டு. அத‌னாலாயே இந்த‌ ப‌திவை என் ப‌திவிலேயே எழுதுகிறேன்.\nமூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நான் ப‌திவெழுத‌ ஆர‌ம்பித்து இந்த‌ ப‌திவுல‌கில் என் அலைவ‌ரிசையுட‌ன் ஒத்துப்போன‌ சில‌ருட‌ன் நான் நெருக்க‌மாக‌ ப‌ழக‌ ஆர‌ம்பித்தேன். ப‌ரிச‌ல், அப்துல்லா, கார்க்கி, கேபிள், ஆதி (அப்போது தாமிரா) போன்ற‌வ‌ர்க‌ளுட‌ன் இய‌ல்பாக‌வே நெருங்க முடிந்த‌து. இந்த‌ குழுவுட‌ன் எந்த‌ பிர‌ச்சினைக‌ள் குறித்தும் வெளிப்ப‌டையாக‌ பேசிக் கொள்ள‌, உத‌விக‌ள் கேட்டுப் பெற‌ முடிந்த‌து.\nஅந்த‌ சூழ்நிலையில் எங்க‌ளுக்கு அறிமுக‌ம் ஆன‌வ‌ர்தான் அந்த‌ குறிப்பிட்ட‌ ப‌திவ‌ர். \"எதாச்சும் செய்ய‌ணும் பாஸ்\" என்று இற‌ங்கிய‌வ‌ர் என்னுட‌ன் நெருக்க‌மாக‌ ப‌ழ‌க‌ ஆர‌ம்பித்த‌ அவ‌ரின் ட‌வுன் டூ எர்த் ம‌ன‌ப்பான்மை பிடிந்திருந்த‌து. அவ‌ரின் பின்புல‌ம் குறித்து தெரிய‌வ‌ந்த‌போது \"அட‌ இவ‌ரெல்லாம் ந‌ம்ம‌ கூட‌ எல்லாம் எப்ப‌டி ப‌ழ‌குறாரே\" என்று ஆச்ச‌ர்ய‌ம் அடைந்தேன்.\nஐ ஐ எம் அக‌ம‌தாபாத்தில் எம் பி ஏ.. ஒரு பெரிய‌ அமெரிக்க‌ கார் நிறுவ‌ன‌த்தில் வைஸ் பிர‌சிட‌ன்ட்..\nஇர‌ண்டுமே என் க‌ன‌வு என‌லாம். ஒரு சாதார‌ண‌ குடும்ப‌த்தில் பிற‌ந்து டிப்ள‌மோ ப‌டித்து சிறிய‌ வேலைக்கு போய் மேல்ப‌டிப்பையே க‌ர‌ஸ்ஸில் செய்த‌ என் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு ஐ ஐ எம் என்ப‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ க‌ன‌வு என்ப‌து உங்க‌ளுக்கு புரியும். இப்போதும் எதாவ‌து ஒரு சிறிய‌ இடைவெளி (+ ப‌ண‌ம் ) கிடைத்தால் அங்கே எக்சிக்யூடிவ் ப்ரோக்ராம் ப‌டிக்க‌ வேண்டும் என்ப‌து என் ஆசை. அதேபோல் ஒரு எம் என் சியில் வைஸ் பிர‌சிட‌ன்ட் என்ப‌தும் என் கேரிய‌ர் க‌ன‌வு.\nஇர‌ண்டையும் ஒருங்கே சாதித்த‌ ஒருவ‌ரை நான் அண்ணாந்து பார்த்து பிர‌மித்த‌தில் விய‌ப்பேதும் இல்லை.\nஅவ‌ரைப் பார்த்து பிர‌மித்த‌ இன்னொரு விச‌ய‌ம் அவ‌ர‌து உத‌வி செய்யும் ம‌ன‌ம்.\n1. சென்னையைச் சேர்ந்த‌ ப‌திவ‌ர் மிக‌ அதிக‌ ப‌ண‌த்தேவையில் இருந்த‌ போது அவ‌ருக்காக‌ இவ‌ர் சில‌ ல‌ட்ச‌ங்க‌ளில் கொடுத்த‌தாக‌ சொல்லியிருக்கிறார் (அத‌ற்கு நானும் ஒரு சிறு அள‌வு ப‌ண‌ம் கொடுத்திருக்கிறேன்). அந்த‌ ப‌திவ‌ர் பிர‌ச்சினையில் இருந்து மீண்டு வ‌ர‌ இவ‌ர‌து ப‌ண‌ உத‌வி முக்கிய‌மான‌தாக‌ இருந்த‌தாக‌ இவ‌ரே என்னிட‌ம் சொல்லியிருக்கிறார்\n2. ஒரு வெளிநாட்டு ப‌திவ‌ரின் ம‌ருத்துவ‌ உத‌விக்காக‌ ப‌ண‌ம் திர‌ட்டிய‌தில் இவ‌ர‌து ப‌ங்கு முக்கிய‌மான‌து. மிக‌ப்பெரிய‌ ப‌ண‌த்தை ஆளுக்கு கொஞ்ச‌ம் என்று கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுக்க‌லாம் என்ற‌ ஐடியா நிறைய‌ பேரை ப‌ங்கெடுக்க‌ வைத்த‌து க‌ண்கூடு. இவ‌ரே சில‌ரிட‌ம் ப‌ண‌ம் திர‌ட்டி அனுப்பிய‌தும் தெரிந்த‌தே.\n3. ம‌ற்றொரு சென்னை ப‌திவ‌ரின் குழ‌ந்தை உட‌ல்நிலை ச‌ரியில்லாம‌ல் ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்த‌ போது, இவ‌ர் த‌ன‌து டெபிட் கார்டை கொடுத்துவிட்டு வ‌ந்த‌தாக‌ என்னிட‌ம் சொல்லியிருக்கிறார். என்னால் நினைத்துக்கூட‌ பார்க்க‌ முடியாத‌ உத‌வி இது.\n4. ஒரு சென்னை ப‌திவ‌ரின் த‌ந்தையார் இற‌ந்த‌ போதும், இதே போல் த‌ன‌து டெபிட் கார்டை கொடுத்த‌தாக‌ சொல்லியிருக்கிறார்.\nசென்ற‌ வ‌ருட‌ம் ஒரு பெண்ப‌திவருட‌ன் அவ‌ருக்கு ஏற்ப‌ட்ட‌ ம‌ன‌க்க‌ச‌ப்பு நிக‌ழ்வுக‌ள் ப‌திவுல‌கில் யாரும் ம‌றுக்க‌வோ ம‌றைக்க‌வோ முடியாத‌ விச‌ய‌ம். அந்த‌ நிக‌ழ்வில் நிச்ச‌ய‌ம் ந‌ண்ப‌ர்க‌ளாக‌ நாங்க‌ள் அவ‌ர் பின் நின்றிருக்கிறோம். அவ‌ருக்கு ஆத‌ரவாக‌ எங்கும் நான் பேச‌வில்லை என்ப‌தைப் போல‌வே அவ‌ரை எதிர்த்தும் எங்கும் பேசிய‌தில்லை.\nஅவ‌ர் மீது என‌க்கிருந்த‌ பிர‌மிப்பு + ம‌ரியாதையே அத‌ற்கு கார‌ண‌ம்\nக‌ட‌ந்த‌ செப்ட‌ம்ப‌ரில் ஒருநாள் அவ‌ர் என்னிட‌ம் வ‌ந்தார். \"எங்க‌ கார் க‌ம்பெனியே ஒரு கார் ரென்ட‌ல் க‌ம்பெனி ஆர‌ம்பிக்குது. நான் அங்க‌யே பெரிய‌ வேலையில‌ இருக்குற‌தால‌ என்னால‌ ஈஸியா ஃப்ரான்ச்சைஸ் வாங்க‌ முடிஞ்ச‌து. நீங்க‌ளும் கொஞ்ச‌ம் இன்வெஸ்ட் ப‌ண்ணுங்க‌\" என்றார். இவ‌ர் மீதிருந்த‌ ந‌ம்பிக்கையில் என் ம‌னைவியின் பெய‌ரிலிருந்த‌ சில‌ முத‌லீடுக‌ளை எடுத்து இவ‌ரிட‌ம் கொடுத்தேன்.\nஅதற்கான‌ அக்ரீமென்ட் கொடுத்தார். ப‌டித்துக்கூட‌ பார்க்காம‌ல் கையெழுத்திட்டு அனுப்பினேன். பின்ன‌ர் அத‌ன் காப்பி மெயிலில் வ‌ந்த‌போதுதான் விப‌ரீத‌ம் புரிந்த‌து. அந்த‌ அக்ரீமென்ட் முழுக்க‌ முழுக்க‌ அவ‌ர‌து க‌ம்பெனிக்கு சாத‌கமாக‌வே என் த‌ர‌ப்பில் மிக‌ மிக‌ ப‌ல‌வீன‌மாக‌ இருந்த‌து. அதிர்ச்சியில் கேட்ட‌வுட‌ன் \"அது வென்டாருங்க‌ளுக்கான‌து, உங்க‌ளுக்கு த‌ப்பா அனுப்பிட்டேன்\" என்று ம‌றுப‌டியும் வேறொரு அக்ரீமென்ட்டை கொடுத்தார். அதை ப‌டித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட்டு அனுப்பினேன்.\nஅத‌ன் பின்ன‌ர்தான் என‌க்கு ச‌னி ஆர‌ம்பித்த‌து. ஒவ்வொரு மாத‌மும் என‌க்கு ஸ்டேட்மென்ட்டும் ப‌ண‌மும் முத‌ல் இர‌ண்டு வார‌ங்க‌ளில் வ‌ரும் என்று கூறிய‌வ‌ர், இழுத்த‌டிக்க‌ ஆர‌ம்பித்தார். ஒவ்வொரு மாத‌மும் முந்தைய‌ மாத‌ ஸ்டேட்மென்ட் வ‌ருவ‌தே க‌டைசி வார‌த்தில்தான் என்றான‌து.\nஇத‌ற்கிடையில் அவ‌ரைப் ப‌ற்றின‌ ம‌ற்ற‌ உண்மைக‌ள் தெரிய‌ வ‌ந்த‌ன‌. இது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய‌து\n1. அவ‌ர் ஐ ஐ எம் ல் ப‌டித்த‌வ‌ர் அல்ல‌. த‌மிழ்நாட்டில் எதோ ஒரு அஆஇஈ க‌ல்லூரியில் எதோ ஒரு டிகிரி ப‌டித்த‌வ‌ர்(இதுவும் உண்மையா என்று தெரிய‌வில்லை)\n2. அவ‌ர் ச���ன்ன‌ கார் நிறுவ‌ன‌த்தில் வைஸ் பிர‌சிட‌ன்ட் அல்ல‌. எதோ ஒரு கார் வாட‌கை நிறுவ‌ன‌த்தில் மேலாள‌ர் ம‌ட்டுமே (இதுவும் உண்மையா என்று தெரிய‌வில்லை)\n3. ப‌திவ‌ர் ம‌ருத்துவ‌ உத‌விக்காக‌ இவ‌ரால் திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பண‌ம் அவ‌ருக்கு உட‌ன‌டியாக‌ அனுப்ப‌ப்ப‌ட‌வே இல்லை\n4. ப‌திவ‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ சூழ‌லில் அவ‌ர்க‌ளிட‌ம் டெபிட் கார்டு கொடுத்த‌தாக‌ இவ‌ர் சொன்ன‌து பொய். இவ‌ர் மேலோட்ட‌மாக‌ கேட்க‌ அவ‌ர்க‌ள் வேண்டாம் என்று ம‌றுத்திருக்கிறார்க‌ள்.\nஅவ‌ர் எங்கு ப‌டித்தால் என்ன‌, எங்கு வேலை செய்தால் உன‌க்கென்ன‌ என்று எதிர்கேள்வி கேட்ப‌வ‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ ப‌த்தி. அவ‌ர் யார் என்ன‌ என்று எதைப்ப‌ற்றியும் என‌க்கு க‌வ‌லை இல்லை. எங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌த்திலேயே மிக‌ உய‌ர்ந்த‌ பொறுப்பில் இருப்ப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள், வெற்றிக்கான‌ வாச‌லைத் தேடி போராடிக் கொண்டிருக்கிற‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். ஆனால் ந‌ட்பின் அடிப்ப‌டை ந‌ம்பிக்கை. அது பொய் சொல்வ‌தால் வ‌ர‌ப்போவ‌தில்லை. இந்த‌ ப‌திவு அவ‌ரை அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ அல்ல‌, அவ‌ர் சொன்ன‌ பொய்க‌ளால் அம்ம‌ண‌ப்ப‌ட்டு நிற்கும் அவ‌ர் மீதான‌ என் ந‌ட்பிற்கு ஒரு கோவ‌ண‌ம் க‌ட்டும் முய‌ற்சி அவ்வ‌ள‌வே.\nப‌திவ‌ரின் ம‌ருத்துவ‌ செல‌விற்காக‌ திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ண‌ம் குறித்து ஏற்க‌ன‌வே ஜோச‌ப் விள‌க்கி விட்டார். அவ‌ர் அந்த‌ ப‌ண‌த்தை அனுப்பிய‌த‌ற்குக் கார‌ண‌மே உண்மைக‌ள் சுடும் என்ற‌ அனானி அவ‌ருக்கு அனுப்பிய‌ மெயில்தான். யார் அந்த‌ உண்மைக‌ள் சுடும் என்று தெரிய‌வில்லை, ஆனால் அந்த‌ அனானி \"ப‌ண‌ம் ஏன் அனுப்பாம‌ வெச்சிட்டு இருக்கீங்க‌\" என்ற‌ ரீதியில் அவ‌ருக்கு மெயில் அனுப்பிய‌தும்தான் இவ‌ர் அதை அனுப்ப‌ முய‌ற்சி எடுத்தார் என்ப‌தே உண்மை.\nஇந்த‌ பிர‌ச்சினை ஓடிக்கொண்டிருந்த‌போது, என‌க்கு இவ‌ரைப் ப‌ற்றிய‌ உண்மைக‌ள் தெரியாது. நான் இவ‌ரிட‌ம் \"நீங்க‌தான் ஏற்க‌ன‌வே ஸ்டேட்மென்ட் ப‌ண‌ம் எல்லாம் அனுப்பிட்டீங்க‌ளே\" என்று கேட்க‌ \"இல்ல‌ ஜோச‌ப்தான் ப‌ண‌ம் என்கிட்ட‌யே இருக்க‌ட்டும், அப்புற‌ம் அனுப்புங்க‌ன்னு சொன்னாரு\" என்றார். ஆனால் பின்னால் பிர‌ச்சினை பெரிதாகி ஜோச‌ப் விள‌க்க‌ம் கொடுத்த‌து இவ‌ர் என்னிட‌ம் சொன்ன‌த‌ற்கு எதிராக‌ இருந்த‌துதான் இவ‌ர்மீது என‌க்கு விழுந்த‌ முக்கிய‌ ச‌ந்தேக‌ப்புள்ளி.\nஇது குறித்து பேசிக் கொண்டிருந்த‌ போது ஒரு முறை \"என்னோட‌ ப்ளாக் பேரை வெச்சி என்னோட‌ உண்மையான‌ பேரு ந‌ர‌சிம்ம‌ன்னு எல்லாரு நினைச்சிட்டு இருக்காங்க‌, என் பேர் அதில்லை, வேற‌\" என்றார். அதிர்ந்தேன். மூன்று வ‌ருட‌ம் நெருங்கிய‌ ந‌ட்புட‌ன் இருக்கும் ஒருவ‌னிட‌ம், பிர‌ச்சினைக‌ளின் போது த‌ன் பின் நிற்கும் ஒருவ‌னிட‌ம், ம‌ற்ற‌வ‌ருக்கு உத‌வ‌ ப‌ண‌ம் வாங்கும் ஒருவ‌னிட‌ம், த‌ன் புதிய‌ பிசின‌ஸில் முத‌லீடு செய்யும் அள‌வுக்கு ந‌ம்பிக்கை இருக்கும் ஒருவ‌னிட‌ம் எப்ப‌டி த‌ன் பெய‌ரைக்கூட‌ சொல்லாம‌ல் ம‌றைக்க‌ முடியும் எந்த‌ அள‌வு அழுத்த‌ம் வேண்டும்\nஇது எல்லாம் தெரிந்த‌ பின், நான் அவ‌ரிட‌ம் பிசின‌ஸில் இருந்து வெளிவ‌ந்துவிடுவ‌தாக‌ சொல்ல‌, ஒப்புக் கொண்டார். நிச்சய‌ம் என்னைப் பொறுத்த‌வ‌ரை அது ஒரு ந‌ல்ல‌ முத‌லீடே, மிக‌ச் சிற‌ந்த‌ ரிட‌ன்ஸ் கொடுத்த‌து. ஆனால் என்னை ந‌ம்பி த‌ன் பெய‌ரைக் கூட‌ சொல்லாத‌, த‌ன் பெய‌ரை பெரிதாக்கிக் காட்ட வார்த்தைக்கு வார்த்தை பொய் பேசும் ஒருவ‌ரால் என‌க்கு கோடி ரூபாய் வ‌ருமென்றாலும் என‌க்கு அது தேவை இல்லை.\nஒரு வார‌ம் டைம் கேட்டு, இப்போது மூன்று வார‌ங்க‌ள் க‌ழித்து என‌க்கு ப‌ண‌ம் கிடைத்துவிட்ட‌து. இனி இவ‌ர் தொட‌ர்பான‌ ம‌ன‌ உளைச்ச‌ல் குறையுமென்றாலும், ந‌ண்ப‌ர்க‌ளை தேர்வு செய்வ‌தில் நான் ம‌ற்றொரு முறை தோற்று விட்ட‌தின் வ‌லி நான் சாகும் வ‌ரை இருக்கும் என்ப‌தில் ஐய‌மில்லை.\nஇந்த‌ ப‌திவு வெளிவ‌ந்த‌தும் என்னைப் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் என்ன‌ சொல்வார் என்ப‌தும் என‌க்கு தெரியும். அவ‌ரிட‌ம் அதைக் கேட்ப‌வ‌ர்க‌ள் என‌க்கு தொலைபேச‌வும், அட்ச‌ர‌ம் பிச‌காம‌ல் வ‌ரிக்கு வ‌ரி அவ‌ர் என்ன‌ சொன்னார் என்ப‌தை நான் சொல்கிறேன். என்னைப் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் சொல்ல‌ப்போகும் பொய்க‌ள் குறித்து என‌க்கு கிஞ்சிந்தும் க‌வ‌லை இல்லை.\nஇத‌ற்கெல்லாம் அவ‌ர் சொல்ல‌க்கூடிய‌ எந்த‌ விள‌க்க‌மும் என‌க்குத் தேவை இல்லை. இங்கே நான் சொன்ன‌வை அவ‌ர் என்னிட‌ம் சொன்ன‌ பொய்க‌ளில் ஒரு சிறு துளி அள‌வே. இன்னும் நான் எழுதாம‌ல் விட்ட‌ ம‌லைய‌ள‌வு பொய்க‌ளை அவ‌ர் என்னிட‌ம் கூறியிருக்கிறார் (அடிக்க‌டி அவ‌ர் சொல்லும் \"ம‌றைமலை ந‌க‌ர் ஃபேக்ட‌ரியில‌ இருக்கேன்\" என்ப‌து. ரென்ட‌ல் க‌ம்பெனி மேனேஜ‌ருக்கு கார் உற்ப‌த்தி செய்யும் ஃபேக்ட‌ரியில் என்ன‌ வேலை என்ப‌து என் சிற்ற‌றிவுக்கு எட்ட‌வில்லை). என்னைப் போல‌வே அவ‌ருட‌ன் நெருங்கி இருந்த‌ ப‌ல‌ரும் அவ‌ரால் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு உள்ளாகி உள்ள‌ன‌ர் என்ப‌து தெரிய‌ வ‌ருகிற‌து. அத‌னால், நான் சொல்ல‌ வ‌ரும் முன்னெச்ச‌ரிக்கை ஒன்றே ஒன்றுதான்.\nப‌திவுல‌கில் யார் ஒருவ‌ர் சொல்வ‌தை வைத்தும், அவ‌ர்க‌ளைப் பற்றிய‌ பிம்ப‌த்தை க‌ட்ட‌மைத்துக் கொள்ள‌வேண்டாம். குறைந்த‌து அப்ப‌டி க‌ட்டமைக்க‌ப்ப‌டும் பிம்ப‌த்தை ந‌ம்பி ப‌ண‌மாவ‌து கொடுக்காம‌ல் இருப்ப‌து ந‌ல‌ம்..\nஇது ப்ளாக்கிலீக்ஸ் / உண்மைக‌ள் சுடும் ப‌திவு அல்ல‌ :(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/photos-of-children-taking-selfies-using-slippers-goes-viral.html", "date_download": "2021-08-02T08:12:42Z", "digest": "sha1:NRGZF6OVAOSQXZXNWVNPNVYPG6YVAOII", "length": 8584, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Photos of children taking selfies using slippers goes viral | தமிழ் News", "raw_content": "\nகண்கலங்க வைக்கும் சிறுவர்கள் எடுத்த செல்ஃபி..இணையத்தை கலக்கும் ஃபோட்டோ\nசெருப்பைக் கொண்டு குழந்தைகள் எடுத்த செல்ஃபி ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதற்போது சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. மேலும் செல்ஃபி மோகமும் உலகளவில் பரவிக்கிடக்கிறது. தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் செல்ஃபி எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிவிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பல்வேறு வகையான பிரச்சனைகளும் நடந்த வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவர்கள் சிலர் எடுத்த செல்ஃபி இதயத்தை கனக்கச் செய்ததோடு இணையத்தையே கலக்கி வருகிறது. அது 5 சிறுவர்கள் இணைந்து ஒரு காலணி மூலம் செல்ஃபி எடுப்பது போன்ற ஒரு புகைப்படம். வெகுளித்தனமான அந்த சிறுவர்கள் கள்ளம்கபடமற்று, குழந்தைத் தனத்தோடு சிரிக்கும் புகைப்படம் காண்பவர்களின் மனதை கனக்கச் செய்கிறது.\nஇந்த குழந்தைகளின் புகைப்படத்தை திரைப் பிரபலங்கள் பலரும் ஷேர் செய்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் போமன் ரானி இந்த புகைப்படத்தை பதிவிட்டு ‘நீங்கள் எதை தேர்ந்தெடுக்குறீர்களோ அதிலேயே மகிழ்ச்சி காண்கிறீர்கள். இது மிகவும் உண்மைய���ன ஒன்றாகும். இந்த செல்ஃபி பலரது அன்பையும் பெறும்’ என பதிவிட்டுள்ளார்.\nமேலும் இணையத்தை கலக்கிய சிறுவர்களின் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என எந்த தகவலும் தெரியவில்லை.\n‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘ஒரே பள்ளியில் படிச்ச சின்ன வயசு பிரண்ட்ஸா’ .. ட்ரெண்டிங்கில் தோனியும், கோலியும்\n11 முறை முயற்சி செய்து உருவத்தில் மைக்கேல் ஜாக்சனாகவே மாறிய வைரல் இளைஞர்\n‘மச்சான்.. என் மேரேஜ் இன்விட்டேஷன தூக்கி போட்ரு ப்ளீஸ்’.. அசரவைக்கும் காரணம்\n'.. என்னடா புது ட்ரெண்டா இருக்கு..வைரல் சேலஞ்ச்\nஸ்பைடர்மேனாக வந்து வைரல்மேனாகிய வங்கி ஊழியர்.. இதுதான் காரணம்\n‘அவர் என் சகோதரி’.. துப்பட்டா சம்பவம் பற்றி சித்தாராமையா அதிரவைக்கும் ட்வீட்\n'இதனை விரும்பவில்லை'.. சாம்பியன் பட்டம் வாங்கிய பிறகு சாய்னா வருத்தம்..வைரல் ட்வீட்\nகைதாகி போலீஸ் காவலில் இருக்கும்போதுகூட சின்சியாரிட்டி.. ஆசிரியருக்கு குவியும் பாரட்டுக்கள்\n'பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் இலவச WiFi தரும் மெஷின்’.. அசத்தும் மாநகராட்சி\nவகுப்புக்கு வந்த ஆசிரியரை டிக்-டாக் வீடியோ எடுத்து கேலி செய்த மாணவர்களுக்கு தண்டனை\n‘என்னை மன்னிச்சிரு ஸ்ரீசாந்த்’.. மனமுருகிய ஹர்பஜன்.. Exclusive பேட்டி\nகாலில் விழும் 75 வயது மூதாட்டி.. அலட்சியப்படுத்திய இன்ஸ்பெக்டரின் கதி\nஉலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் இவர்தான்.. பும்ராவைப் புகழ்ந்த வாசிம் அக்ரம்\n‘என் வாழ்வில் கிரிக்கெட் ஒரு அங்கம்தான்..ஆனால் முக்கியமானதல்ல’.. கோலியின் வைரல் பதில்\n அப்படி நில்லுங்க’.. பிரபல வீரரை நிறுத்திய செக்யூரிட்டி..வைரல் வீடியோ\n‘இன்ஸ்டாகிராமில் ஃபேமஸ் ஆகவேண்டி இளைஞர் செய்த விநோத காரியம்’ .. வைரல் வீடியோ\n'பேட்ட' எடுத்துக்கிட்டு 'கெத்தா' நடந்து செல்லும் 'தல'.. நாடிநரம்பு புடைக்கும் ஆரவாரம்\n‘இவ்வளவு பெரிய பணக்காரர் வரிசையில் நின்னது இதுக்காகவா\n‘மாத்திரைக்கு பதில் ஒரு மாத்திரை அட்டையையே விழுங்கிய பெண்மணி’.. அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?ajaxcatalog=true&dir=desc&mode=list&order=position&p=2", "date_download": "2021-08-02T09:46:17Z", "digest": "sha1:DCT7GCHTPV2IYLRL6M3ILKYMGQUKIZNW", "length": 11390, "nlines": 330, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள���, எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nபெரியார் டிரஸ்டுகள் ஒரு திறந்த புத்தகம்\nதந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும்\nதிராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே\nதவத்திரு தர்மதீர்த்த அடிகளார் (1)\nமுனைவர் கருவூர் கன்னல் (1)\nமுனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (1)\nபெரியார் ஆவணக் காப்பகம் (1)\nநாம் தமிழர் பதிப்பகம் (3)\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (50)\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் (4)\nதமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் (5)\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்)\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.hmknmedical.com/company-profile/", "date_download": "2021-08-02T07:54:27Z", "digest": "sha1:B4UFAX4ZID7FUTPXGHYMYJO57WNIQJI3", "length": 14294, "nlines": 160, "source_domain": "ta.hmknmedical.com", "title": "நிறுவனத்தின் சுயவிவரம் - செங்டு ஹெமிகைனெங் மருத்துவ உபகரணங்கள் நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nவிளையாட்டு, வீடு மற்றும் மருத்துவமனை மீட்பு\nபுற ஊதா ஸ்டெர்லைசர் வாண்ட்\nஆர் அன்ட் டி மையம்\nஆரோக்கியம் 1 க்கு சமம். ஆரோக்கியத்துடன் மட்டுமே மக்கள் கடினமாக உழைக்க முடியும், செல்வத்தை உருவாக்க முடியும், வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இவை ஒன்றின் பின்னால் உள்ள பூஜ்ஜியங்கள். இப்போதெல்லாம், நீங்கள் எந்தத் தொழிலில் இருந்தாலும், உங்கள் உடல் புரட்சியின் மூலதனம், ஆரோக்கியமான உடல் மட்டுமே உங்கள் தொழில் மற்றும் குடும்பத்திற்காக உங்களை அர்ப்பணிக்க முடியும். உண்மையில், ஒரு நபர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், அவருக்காக போராட ஆரோக்கியமான உடல் இல்லையென்றால், இறுதியில் அவர் தனது கொள்கைகளை உணரமுடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கையில் மிகவும் அஞ்சப்படும் விஷயம் தோல்வி அல்ல, ஆனால் ஆற்றல் இல்லாமை. நவீன மக்களின் வேலை மற்றும் வாழ்க்கை அழுத்தம் அதிகரித்து வருகிறது, மேலும் உடல் நீண்ட காலமாக துணை சுகாதார நிலையில் உள்ளது. அதே நேரத்தில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம், ஒரு சிறந்த வாழ்க்கைக்காக, மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து அதிக கவனம் செலுத்துகிறார்கள், மேலும் சுகாதார தயாரிப்புகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.\nஎச்.எம்.கே.என் தயாரிப்புகள் மக்களுக்கு சுகாதார பிரச்சினைகளை சிறப்பாக சமாளிக்க உதவும். எடுத்துக்காட்டாக, எங்கள் செலவழிப்பு மருத்துவ முகமூடிகளை நீங்கள் அணிந்தால், நீங்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை வடிகட்டலாம் மற்றும் COVID-19 போன்ற தொற்று நோய்களைத் தவிர்க்கலாம்; எங்கள் புற ஊதா கிருமி நீக்கம் குச்சிகளைப் பயன்படுத்தினால், பொருட்களின் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அகற்ற முடியும்; எங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டியைப் பயன்படுத்துவதால் நரம்பு சோர்வு நீங்கவும், உடலையும் மனதையும் தளர்த்தவும், மூளையின் ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்தவும், மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஒழுங்குபடுத்தவும் மட்டுமல்லாமல், ஆக்ஸிஜெனீமியாவின் குறைந்த அறிகுறிகளை மேம்படுத்தவும், மூச்சுக்குழாய் அழற்சியை அகற்றவும் முடியும் .\nசெங்டு ஹெமிகெய்னெங் மருத்துவ உபகரணங்கள் நிறுவனம், லிமிடெட் என்பது ஒரு சீன நிறுவனமாகும், இது பொதுமக்கள் மற்றும் அனைத்து மனித இனத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ளது. நாங்கள் 2013 இல் நிறுவப்பட்டோம், சிச்சுவான் செங்டூவை தலைமையிடமாகக் கொண்டுள்ளோம். இது முக்கியமாக தொற்று தடுப்பு பொருட்கள், கிருமிநாசினி உபகரணங்கள் மற்றும் மருத்துவ நுகர்பொருட்கள் போன்ற பல்வேறு சுகாதார மற்றும் மருத்துவ தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த தயாரிப்புகள் முக்கியமாக அனைத்து மட்டங்களிலும் உள்ள பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள், சில்லறை மருந்தகங்கள், பள்ளிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றில் உள்ளன.\nஇந்நிறுவனத்தில் தொழில்முறை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உள்ளனர். சரியான தயாரிப்புகளை உருவாக்க நாங்கள் கிட்டத்தட்ட கடுமையான தரங்களைப் பயன்படுத்துகிறோம், மேலும் உலக அங்கீகார அமைப்புகளால் வழங்கப்பட்ட 13485 சான்றிதழ், சி.இ. சான்றிதழ் மற்றும் எஃப்.டி.ஏ சான்றிதழ் ஆகியவற்றைக் கடந்துவிட்டோம். ISO9001 மற்றும் ISO13485 தரநிலைகளுக்கு ஏற்ப ஒரு தர மேலாண்மை முறையை நிறுவுதல், உற்பத்தி செயல்முறையை கண்டிப்பாக ஒழுங்குபடுத்துதல், தயாரிப்பு தரத்தின் கட்டுப்பாட்டை வலுப்படுத்த சிபி, எம்எஸ்ஏ, 5 எஸ் மற்றும் பிற நிர்வாகக் கருத்துகளைப் பயன்படுத்துதல் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமங்கள், மின்னணு துறைமுகங்கள் மற்றும் தொடர்புடைய ஒப்புதல் நுழைவு-வெளியேறும் ஆய்வு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பயன்பாட்டு நிறுவனங்களுக்கான நடைமுறைகள். எங்கள் சொந்த ஆர் & டி மற்றும் உற்பத்தி தயாரிப்புகளுக்கு மேலதிகமாக, நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தயாரிப்புகளுக்கான நிலையான தரக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம்: மூலப்பொருள் கொள்முதல், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விற்பனைக்குப் பின் அனைத்து நிலைகளையும் கண்டிப்பாக கட்டுப்படுத்துகிறோம்; மேலும், எங்களுடன் ஒத்துழைக்கும் உற்பத்தியாளர்கள் தொடர்புடைய அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும். உற்பத்தியின் அனைத்து நிலைகளிலும் ஒரு வழக்கமான அடிப்படையில் எங்கள் சொந்த பணியாளர்களை தொழிற்சாலைக்கு அனுப்புவோம்.\nதனிப்பட்ட உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க பொதுமக்களுக்கு உயர்தர மற்றும் மலிவான மருத்துவ மற்றும் சுகாதார தயாரிப்புகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதே நேரத்தில், வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளைத் தனிப்பயனாக்கலாம்.\nமுகவரி:எண் 811, 8 வது மாடி, கட்டிடம் 1, எண் 5 ஜியாலிங் சாலை, வுஹோ மாவட்டம், செங்டு\n© பதிப்புரிமை - 2020-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hmknmedical.com/news/", "date_download": "2021-08-02T09:10:29Z", "digest": "sha1:DQAYS65VHILY46HE6E3KPCGI44XM5NJL", "length": 10147, "nlines": 178, "source_domain": "ta.hmknmedical.com", "title": "செய்தி", "raw_content": "\nவிளையாட்டு, வீடு மற்றும் மருத்துவமனை மீட்பு\nபுற ஊதா ஸ்டெர்லைசர் வாண்ட்\nஆர் அன்ட் டி மையம்\nஇந்தியாவின் திடீர் பெரிய அளவிலான கொள்முதல், உள்நாட்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அவசரமாக உள்ளன\nதொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மே 25 அன்று டாஸ் அளித்த அறிக்கையின்படி, இந்தியா சீன நிறுவனங்களிடமிருந்து பெரிய அளவிலான ஆக்ஸிஜன் செறிவுகளை வாங்கியுள்ளது. சாதாரண சூழ்நிலைகளில், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் தேவை ஒப்பீட்டளவில் நிலையானது, மேலும��� இந்தியாவில் ஆச்சரியமான கொள்முதல் சீன நிறுவனங்களை பிடித்துள்ளது ...\nமனித அகச்சிவப்பு வெப்பமானியின் அறிமுகம் மற்றும் கொள்கை அறிவு\nஉற்பத்தி செயல்பாட்டில், தயாரிப்பு தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு, உபகரணங்கள் ஆன்லைன் தவறு கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு பாதுகாப்பு மற்றும் ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றில் அகச்சிவப்பு வெப்பநிலை அளவீட்டு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், தொடர்பு இல்லாத அகச்சிவப்பு மனித உடல் வெப்பமானிகள் ரா ...\nநாவல் கொரோனா வைரஸிற்கான பல சோதனை கருவிகளின் கண்டறிதல் கொள்கைகள்\n. -ஹுமன் ஐ.ஜி.எம், மற்றும் புதிய கொரோனா வைரஸ் ஆன்டிஜென் ...\nபுதிய கொரோனா வைரஸ் (COVID-19) நோயால் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் யாவை\nபுதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னர் மக்கள் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள்: சிலர் அறிகுறியற்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெளிப்படையான அச om கரியம் இல்லை, மேலும் அவர்கள் ஒரு நியூக்ளிக் அமில பரிசோதனையைச் செய்தபோது நேர்மறையாகக் காணப்பட்டனர். சிலர் லேசான நோயாளிகள். ஆரம்பத்தில் தொண்டை உணர்கிறேன் ...\nசெங்டு ஹெமிகைனெங் மருத்துவ உபகரணங்கள் நிறுவனம், லிமிடெட், மருத்துவ செலவழிப்பு பாதுகாப்பு ஆடை உற்பத்தியாளர், பெரிய அளவிலான உற்பத்தி, வேகமான கப்பல் தயாரிக்கும் செலவழிப்பு பாதுகாப்பு ஆடை சான்றிதழ் முடிந்தது, EU CE சான்றிதழ் ...\nமருத்துவ அறுவை சிகிச்சை முகமூடியின் முன் மற்றும் பின்புறத்தை எவ்வாறு வேறுபடுத்துவது\nபெரும்பாலான செலவழிப்பு மருத்துவ முகமூடிகள் வெளிர் நீலம், வெளிர் நீல நிறம் வெளிப்புறம், சற்று வெளிர் மற்றும் வெள்ளை பக்கமானது உள்ளே, இந்த பக்கம் சருமத்திற்கு நெருக்கமானது. பில்ட்-இன் மூக்கு கிளிப்பைக் கொண்ட பகுதி மேல் பகுதி, மற்றும் இரண்டு si இல் நீட்டிக்கக்கூடிய ரப்பர் பேண்டுகள் உள்ளன ...\nபுதிய கொரோனா வைரஸ் (COVID-19) நோயால் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் யாவை\nபுதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னர் மக்கள் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள்: சிலர் அறிகுறியற்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெளிப்படையான அச om கரியம் இல்லை, மேலும் அவர்கள் ஒரு நியூக்ளிக் அமில பரிசோதனையைச் செய்தபோது நேர்மறையாகக் காணப்பட்டனர். ���ிலர் லேசான நோயாளிகள். ஆரம்பத்தில் தொண்டை அச om கரியம், வறட்சி அல்லது ...\nமுகவரி:எண் 811, 8 வது மாடி, கட்டிடம் 1, எண் 5 ஜியாலிங் சாலை, வுஹோ மாவட்டம், செங்டு\n© பதிப்புரிமை - 2020-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://e-kalvi.com/author/admin/", "date_download": "2021-08-02T10:23:59Z", "digest": "sha1:YFKDDDXRHKEYVQZAT4QWGJYAUDRVJLUZ", "length": 7203, "nlines": 91, "source_domain": "e-kalvi.com", "title": "admin, Author at e-Kalvi", "raw_content": "\n20 Best Abdul Kalam Quotes in Tamil நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் மாணவர்களுக்கான முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது மாணவர்களை கேள்வி கேட்க வைப்போம் அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்து எடுங்கள் அதுதான் உண்மையான தலைமைப்பண்பு கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை. கனவு மட்டும் காண்பவர்களே தோற்கிறார்கள் வெற்றி என்பது உன் நிழல் …\n தரம் 2 புலமைப்பாதை வினாத்தாள் தரம் 2 கணித வினாத்தாள் தரம் 2 தமிழ் வினாத்தாள் தரம் 2 ஆங்கில வினாத்தாள்\nமின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள Subscribe செய்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=20310029", "date_download": "2021-08-02T09:51:06Z", "digest": "sha1:VYOJWHZFOW2QDFTZTJJSHPCF5ZOHON6L", "length": 55996, "nlines": 143, "source_domain": "old.thinnai.com", "title": "முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ] | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\nயோகத்தின் வரலாற்றுப்பின்னணி என்ன என்று புரிந்துகொள்வது யோகத்தை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல யோகத்தை புரிவதற்கும் அவசியமானது . தற்காலத்தில் யோக சாதனைகளில் பலவகைகளிலும் ஈடுபடுபவர்களிடம் அப்படிப்பட்ட புரிதல் ஏதும் இல்லை என்பது நாமறிந்ததே. யோகத்தை ஒருவிதமான பக்தியாக ‘ காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும் ‘ நிலையாக இவர்களில் சில விளக்கும் அபத்தமும் நமது சூழலில் நடந்துகொண்டுதான் உள்ளது. யோகம் எவ்விதமான மன எழுச்சிக்கும் எதிரான ஒன்று என்பதை அவர்கள் உணராமைக்கு காரணம் அதன் வரலாற்று இடத்தைப்பற்றிய அறிதல் இல்லாமையே.\nபாரத தத்துவ மரபின் தொடக்கப்புள்ளி என்று வேதங்களை சொல்வது வழக்கம். குறிப்பாக ரிக் வேதம் .அதிலும் குறிப்பாக ரிக்வேதத்தில் உள்ள பத்தாம் மண்டிலம். அதில்தான் ஆன்மீக சிந்தனைக்கு அடிப்படையாக அமையக்கூடிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன . ஆதி தரிசனங்கள் பேசப்பட்டுள்ளன. வேதங்களில் பெரும்பகுதி தோத்திரப்பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் அடங்கியதே. அவற்றில் தத்துவத்துக்கு மிக குறைவாகவே பங்கு உள்ளது .அனுஷ்டானங்கள் , அதாவது வேள்வி மற்றும் வழிபாட்டுச் சடங்குகளுக்கு பாடப்படவேண்டிய மந்திரங்களாகவே அவை உள்ளன. அச்சடங்குகளின் நோக்கம் திட்டவட்டமான சில நன்மைகளே. அதிகாரம் ,செல்வம், வெற்றி, புகழ் முதலியவையே வேதங்களில் வேண்டப்படுகின்றன ஆகவேதான் கீதை முதலிய பிற்கால தத்துவ நூல்கள் வேதங்கள் உலகியல் நோக்கங்களை [சம்சாரத்தை] முன்வைப்பவை என்று சொல்லி நிராகரிப்பின் தொனியில் பேசுகின்றன. வேதங்கள் தத்துவ விவாதங்களுக்கு அடிப்படைகளாக அமைவதைப்பார்க்கிலும் வேள்வி மந்திரங்களாகவே பெரிதும் கருதப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.\nவேதங்கள் ஒற்றைப்படையான கருத்துத் தரப்பினை முன்வைப்பவை அல்ல. அப்படி ஒரு மாயத்தோற்றம் இன்று உருவாக்கப்பட்டுள்ளது . வேதகால ஞானிகளில் ஒருமைத்தரிசனம் அடைந்தவர்கள் உள்ளனர் .இருமை தரிசனத்தின் பால் நின்று தன்னை வழிபாட்டாளனாக வைத்துக் கொண்டவர்கள் உள்ளனர். நாத்திகர்களும் உள்ளனர் .குறிப்பாக வேதரிஷியாகிய பிரகஸ்பதியே பாரத லெளகீகவாத மதங்களின் முதல்குரு ஆவார் .வேதங்களின் அடிப்படைக் கருத்துக்கள் ஒன்றோடொன்று மோதி விவாதித்து உருவானதே உபநிடத காலகட்டம் . உபநிடதங்கள் ஏராளமாக உருவாகியிருந்துள்ளன. ஏறத்தாழ ஒத்த கருத்துள்ள உபநிடதங்களே தற்போது தொகுக்கப்பட்டு கிடைத்துள்ளன. அவற்றிலும் பலவகையான அடிப்படை கருத்துமாறுபாடுகள் உள்ளன. உபநிடத காலம் மாபெரும் தத்துவ விவாதங்களின் காலம் என்பதை அவை வலியுறுத்துகின்றன.\nஅந்த தத்துவ விவாதங்களின் விளைவாக பலவகைப்பட்ட பிரபஞ்சப் பார்வைகள் தத்துவத் தரப்புகளாக வலுப்பெற்று வளர்ந்தன .அவற்றையே தரிசனங்கள் என்கிறோம் . ஆறுதரிசனங்கள் முக்கியமானவை. அவற்றில் ஒன்றுதான் யோகம். அதன் வரலாற்று நிலை அதுவே .\nஏன் அத்தனை மாறுபட்ட தரப்புகள் காணப்படுகின்றன அப்படியென்றால் பாரத மெய்ஞானிகள் முழுமுற்றான உண்மையை அடையவில்லையா அப்படியென்றால் பாரத மெய்ஞானிகள் முழுமுற்றான உண்மையை அடையவில்லையா பிற்காலத்தில் தனிமனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களுடன் ஒப்பிட்டால் நம் மரபின் கருத்து முரண்பாடுகள் நம்மை குழப்பக் கூடும். உபநிடதகாலத்தில் பல ஏசுக்கள் பல முகம்மதுக்கள் பல புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஏனெனில் உபநிடத காலம் என நாம் சொல்வது ஏறத்தாழ ஐநூறு வருட காலகட்டத்தையாகும். அக்கால முக்கிய நூல்கள் பிறகுதான் தொகுக்கப்பட்டன. அவர்களுக்குள் தரிசன வேறுபாடுகளும் காணப்பட்டுள்ளது சாதாரணமே. பிற்கால மெய்ஞானிகளுக்குள்தான் எத்தனை வேறுபாடுகள் உள்ளன அல்லவா பிற்காலத்தில் தனிமனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களுடன் ஒப்பிட்டால் நம் மரபின் கருத்து முரண்பாடுகள் நம்மை குழப்பக் கூடும். உபநிடதகாலத்தில் பல ஏசுக்கள் பல முகம்மதுக்கள் பல புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஏனெனில் உபநிடத காலம் என நாம் சொல்வது ஏறத்தாழ ஐநூறு வருட காலகட்டத்தையாகும். அக்கால முக்கிய நூல்கள் பிறகுதான் தொகுக்கப்பட்டன. அவர்களுக்குள் தரிசன வேறுபாடுகளும் காணப்பட்டுள்ளது சாதாரணமே. பிற்கால மெய்ஞானிகளுக்குள்தான் எத்தனை வேறுபாடுகள் உள்ளன அல்லவா . அப்பட்டமான மதவெறியர்களன்றி வேறு எவருமே அவர்களில் ஒருவர் மட்டுமே ஞானி அவர் சொன்னது மட்டுமே உண்மை என்று சொல்லமாட்டார்கள்.\nஉண்மை ஒன்றே. அதை விளக்கும் விதமே மாறுபடுகிறது .விளக்கப்படும் போது பேருண்மை ஓர் அனுபவமாக அல்லாமல் ஓர் கருத்தாகவே நம்மை அடைகிறது .பிறவிக் குருடனுக்கு நிறத்தை விளக்கமுயல்வதுபோலத்தான் அதுவும்.அனுபவத்தை பற்றிய எந்த விளக்கமும் அனுபவத்துக்கு பதிலாகாது.அனுபவித்தறிந்த மெய்ஞானிகளின் அனுபவத்தை அவர்களுடைய சொற்கள் வழியாக சென்று துளியேனும் அடைய முயல்வதே அவசியமானது.அவர்கள் விளக்கங்களை ஒப்பிட்டு குழப்பம் அடையும்போது நாம் நம்முடைய அறியாமையையே வெளிப்படுத்துகிறோம். ‘பிரக்ஞையே பிரம்மம் ‘, ‘இங்குள்ள எல்லாவற்றிலும் இறை உறைகிறது ‘, ‘ அளவில்லா கருணையும் நிகரில்லா கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் ‘, ‘ ஆதியில் வார்த்தை இருந்தது ‘ போன்ற வரிகளுக்கிடையே ஆழமான அனுபவத்தின் அடிப்படையில் பெரிய வேறுபாடுகளில்லை. வேறுபாடுகள் புர���தலில் , தர்க்கத்தில், சூழலில்தான் உள்ளன\nஉபநிடத காலத்த்திலேயே உருவாகி பிறகு வலுப்பெற்ற காலத்தை தரிசனங்களின் காலகட்டம் என்கிறார்கள் . தரிசனங்கள் ஆறு. சாங்கியம் யோகம் வைசேஷிகம் நியாயம் பூர்வ மீமாம்சம் உத்தர மீமாம்சம் [அல்லது வேதாந்தம்] . தரிசனங்கள் என்பவை அடிப்படையில் வேதங்களை விடவும் காலத்தால் முந்தியவை .அதிபுராதன காலத்தில் பழங்குடிகளாக வாழ்ந்த மனித மனத்தில் எப்படியோ உருக்கொண்டவை. பிறகு அவை மெல்ல மெல்ல தத்துவங்களாக வளர்ந்தன. உபநிடதங்களுடன் விவாதித்தே அவை வளர்ச்சி அடைந்தன என்று சொல்லலாம். அதேபோல உபநிடதங்களும் தரிசனங்களின் அடிப்படைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டன என்று படுகிறது. பிறகு சில முதல் குருநாதர்கள் தரிசனங்களை தொகுத்து சூத்திர நூல்களை ஆக்கி தத்துவத் தரப்புகளாக , மதங்களைப்போல ஆக்கினார்கள் . அவ்வாறு தரிசனங்கள் நமது சிந்தனையின் முக்கிய அடித்தளங்கள் ஆயின.\nசாங்கியத்தின் முதல்குரு ‘சாங்கிய காரிகை ‘ என்ற வகுத்துரை நூலை ஆக்கிய கபில மகரிஷி. யோகத்துக்கு ‘யோக சூத்திரங்களை ‘ ஆக்கிய பதஞ்சலி மகரிஷி முதல்குரு. ‘வைசேஷிக சூத்திர ‘ங்களின் ஆசிரியரான கணாத ரிஷி வைசேஷிகத்தின் முதல்குரு. ‘நியாய சூத்திரங்க ‘ளை ஆக்கிய கோதம ரிஷி நியாயத்தின் முதல்குரு எனப்படுகிறார்.பூர்வ மீமாம்சைக்கு ஜைமினியும் உத்தர மீமாம்சைக்கு பாதராயணரும் குருநாதர்கள் .\nசாங்கிய தரிசனம் இப்பிரபஞ்சமானது செயலூக்கம் , செயலின்மை ,சமநிலை [ ரஜஸ், தமஸ், சத்வம்] என்ற முக்குணங்களினால் ஆன ஆதிப்பிரகிருதியால் [அல்லது மூலயியற்கை] ஆனதாக இருந்தது என்கிறது . அக்குணக்கள் அதில் முழுமையான சமநிலையிலிருந்தன. அந்த சமநிலை குலைய நேரிட்டமையால் ஆதியியற்கை செயல்பட ஆரம்பித்து நாம் காணுமிந்த சலனவடிவ பிரபஞ்சம் உருவாயிற்று. மீண்டும் அந்த செயல்வடிவை அடைவதே அவ்வியற்கையின் நோக்கம் என்கிறது சாங்கியம் . ஆகவே சாங்கியத்தின் அடிப்படைக் கருத்து பொருளிலிருந்தே பொருள் உருவாக முடியும் என்பதாகும். கருத்திலிருந்து பொருள் உருவாக முடியாது என அது வாதிட்டது . இதை அவர்கள் சத் காரிய வாதம் என்றார்கள் .\nவேதங்கள் உபநிடதங்கள் போன்றவை பெரும்பாலும் முன்வைக்கும் கருத்து பிரக்ஞையே பொருளை நமக்கு கற்பித்துக் காட்டுகிறது என்பதாகும் . நமது பிரபஞ்சக்காட்சி நம் பிரக்ஞையின் விளைவு . ஒட்டுமொத்த பிரபஞ்சம் அதேபோன்ற ஓர் ஒட்டுமொத்த பிரக்ஞையின் விளைவு. பைபிள் கூட கடவுளின் சொல்லிலிருந்து பிரபஞ்சம் உருவானதாக சொல்கிறது . கடவுள் சக்தியால் பிரபஞ்சம் படைக்கப்பட்டதாக சொல்லும் குர் ஆன் கூட அதற்கு உரிய மூலப்பொருள் பற்றி சொல்லவில்லை. அறியமுடியாத மூலக்கருத்தையே அது உருவகம்செய்கிறது. அவை எல்லாமே கருத்துமுதல்வாத தரப்புகள் ஆகும். அந்த ஆதிமூலமான ‘கருத்தே ‘ கடவுள் அல்லது பிரம்மம் அல்லது அல்லா அல்லது யகோவா. ஆனால் சாங்கியம் பொருள்முதல்வாதத் தரப்பு. இந்த வேறுபாட்டை நாம் மிகத்தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.\nவைசேஷிகமும் பொருள்முதல்வாத தரப்புதான். அது ஆதிப் பொருள் அணுக்களே என்கிறது .அடிப்படைப்பொருட்களான நிலம், நீர்,காற்று, நெருப்பு ஆகியவை அவற்றின் ஆகச்சிறிய துகள்களினாலான அணுக்களினாலானவையாகும். அவற்றின் கூட்டு மூலமே பிற பொருட்கள் உருவாகின்றன. வைசேஷிகத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட துணைத்தரிசனமே நியாயம் ஆகும். நியாயம் இவ்வடிப்படைகளை தர்க்கபூர்வமாக எப்படி நிர்ணயிப்பது என்று பேசுகிறது. அதேபோல சாங்கியத்தின் துணைத்தரிசனமே யோகம் . நான்குமே அடிப்படையில் பொருள்முதல்வாதச் சிந்தனைகள். அதாவது அவை உருவகித்துக் காட்டும் பிரபஞ்சத்தில் கடவுளுக்கு ஸ்தானமே இல்லை .\nவேதங்களை முழுமுதல் ஞானமாகவும் வேத அடிப்படையிலான விதிகளையும் சடங்குகளையும் மனிதனை மீறியவையாகவும் குறிப்பிடும் பூர்வ மீமாம்சை புரோகிதர்களின் தரிசனமாகும்.காது இன்று தனியான தரிசனமாக இயங்கவில்லை . ஆனால் இந்துமத்தின் பெரும்பாலும் எல்லா உட்கூறுகளிலும் அது ஊடுருவி உள்ளது.\nமுழுமுதல் கருத்துவடிவமான பிரம்மமே உண்மை மீதி எல்லாமே அதன் மாயத்தோற்றங்கள் என்று வாதிடுகிறது உத்தரமீமாம்சம். அது பிற்பாடு அத்வைதவேதாந்தமாக வளர்ந்தது .\nசாங்கியத்தின் பிரபஞ்சக் கொள்கையே யோகத்துக்கும் ஏற்புடையது.ஆகவே யோகம் சாங்கியத்துடன் பிணைக்கப்பட்டு ‘சாங்கியயோகம் ‘ என்றே முன்பு குறிப்பிடப்பட்டு வந்தது .\nயோகம் எப்படி உருவாயிற்று என்றறிய நாம் ‘புருஷன் ‘ என்ற கருதுகோளை புரிந்துகொள்ளவேண்டும் . உபநிடதங்களுடன் சாங்கியம் விவாதித்தபோது ஒரு முக்கியமான வினா எழுந்தது . மூன்று குணங்கள் எப்படி ,எவரால் அறியப்படுக���ன்றன அறியப்படாதபோது அவை இல்லை என்றல்லவா பொருள் \nஅதற்குப் பதிலாக சாங்கியர் உருவாக்கிய கொள்கைதான் ‘புருஷன் ‘ என்பது. பிரகிருதி என்பதை எப்படி உருவகிக்கிறோம் பூமியில் உள்ள அத்தனை பொருட்களையும் ஒட்டு மொத்தமாக தொகுத்து ஒற்றைப் பொருளாக கணித்து பிரகிருதி என்கிறோம் .அதேபோல எல்லா மனிதமனங்களையும் ஒன்றாக சேர்த்து உருவகிக்கப்பட்ட ஒற்றைப் பேரிருப்பே புருஷன் .\nஆதியியற்கை போலவே புருஷனும் ஆதிவடிவம் . முதலிறுதி அற்றவன். அவனே பிரகிருதியை பார்ப்பவன், அதன் குணங்களை அவனே அறிகிறான். அவனது அறிதல் மூலமே அக்குணங்கள் உருவாகின்றன.ஒவ்வொரு மனிதனிலும் உறைவது அந்த புருஷனின் ஒரு துளியே .ஆனால் அவனும் முக்குணங்களின் சமநிீலை சிதறடிக்கப்பட்ட நிலையில்தான் காணப்படுகிறான். அவன் தன்னை ஒரு துளியாகவே அறியமுடிகிறது.ஆகவே அவன் காணும் பிரகிருதியும் துளிகளாக உள்ளது . புல்நுனியில் தத்தளிக்கும் பனித்துளிமீது உருமாறியபடியே மிதந்துசெல்லும் மேகத்தை பார்க்க முயல்வதுபோன்ற செயல் இது.\nஆகவே முழுமுதல் அறிதலை சாத்தியப்படுத்தும் பொருட்டு யோகம் பிறந்தது. நவீன மொழியில் அதைஇப்படி சொல்லலாம். நாம் பிரபஞ்சத்தை நமது தேவைகள் ,ஆசைகள், நோக்கங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அறிய முடிகிறது. அதாவது நாம் அறிவது நம்மால் திரிக்கப்பட்ட உண்மையையையே .[Distorted truth] மிகப் புறவயமானதாகக் கருதப்படும் அறிவியல் கருத்துக்களில்கூட அதுவே நிகழ்கிறது என கூறும் நவீன சிந்தனையாளர் உண்டு. அதேபோல நாம் நமது உடலின் அமைப்பு , நமது பிறப்பு வளர்ப்புச் சூழல் ,நமது பொதுவான அறிவுச்சூழல், நமது அறிவுத்துறைசார்ந்த தர்க்கங்கள் ,நமது ஆய்வு உபகரணங்கள் மற்றும் ஆய்வு முறை ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டே நாம் உண்மையை அறிய முடிகிறது .நாம் அறியும் உண்மையானது அவ்வாறு எல்லை வகுக்கப்பட்டதாக உள்ளது. அதைவிட முக்கியமாக நம் அறிதல்களை கட்டுப்படுத்துவது மொழி உருவாக்கும் எல்லையாகும். வழக்கமான மொழி மட்டுமல்ல , அறிவியலிலும் கணிதத்திலும் பயன்படுத்தப்படும் அடையாளமொழி கூட உண்மையைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது நாம் அம்மொழிகள் வழியாக அறிந்து விவாதித்து நிறுவும் எந்த உண்மையும் அம்மொழிகளின் அடிப்படைத் தர்க்கத்துக்கு கட்டுப்பட்டது தான்.\nஅதாவது நாம் தற்���ொழுது பல்வேறு அறிதல்முறைகள் வழியாக அடையும் உண்மையானது துண்டாடப்பட்ட உண்மையாகும் [Fragmented truth ] நவீன அறிவியலில் முக்கியமான குறைபாடாக பலகோணங்களில் பலரால் இது குறிப்பிடப்படுவதைக் காணலாம் .ஒரு துறையின் உண்மை பிற துறைகளால் நிராகரிக்கப்படுகிறது .மாசானபு ஃபுகுவேகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ‘ என்ற மகத்தான நூலில் அவர் அத்தகைய ‘துண்டு உண்மை ‘கள் வேளாண்மையில் செயல்படுத்தப்பட்டதன் மூலம் எப்படி உலகம் பேரழிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது என நிறுவுவதை காணலாம். ஒரு சிறு துண்டு தான் உண்மை என்றால் மீதியெல்லாமே பொய் என்றுதானே பொருள் ஃபுகுவேகா அவ்வடிப்படையில் ஐன்ஸ்டானை முற்றாக நிராகரிக்கிறார் .அவர் அது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை விளக்கும் அரை உண்மைதான் ,அதனால் எந்த பயனும் இல்லை என்கிறார் . ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ‘யில் ஒரு மகத்தான முழு உண்மையின் தரிசனத்தை ஃபுகுவேகா கண்டடைந்ததை அறியலாம்.\nஆகவேதான் மெய்ஞனிகள் ‘எல்லா கருத்துநிலை உண்மைகளும் அரை உண்மைகளே என்றார்கள் ‘ [All phenomenal truths are half truths – நடராஜ குரு Wisdom – The absolute is adorable என்ற நூலில்]பார்க்கும் தரப்பை முழுமைப்படுத்திக் கொள்ளுவதன் வழியாக பார்க்கப்படும் உண்மையை முழுமைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அறிதலே யோகத்தின் ஆதாரம். அது மனதின் சலனங்களை முழுமையாக அழித்து குணங்களில்லாத ,சலனமற்ற ஒரு மனதை அடைய முயல்கிறது . அம்மனம் அறியும் பிரபஞ்சமும் குணங்களில்லாத ,சலனமற்ற ஒன்றாக விளங்கும் .அதுவே முழுமனம் Absolute mind] அது அறியும் உண்மையே முழு உண்மை [Absolute truth ]\nமேற்கத்திய அறிவியங்கியல் [Epistemology] மீது மிதமிஞ்சிய நம்பிக்கையையும் மோகத்தையும் நமது கல்விமுறையிலிருந்து பெற்றுக் கொண்ட சிலர் உடனடியாக இந்தக் கருத்தை தூக்கி வீச முயலலாம். அவர்கள் மேற்கத்திய மொழியியல் [Linguistics] உளவியல் [psychology] போன்ற பல அறிவுத்துறைகளில் அதற்கான தேடல் உள்ளதைக் கவனிக்கவேண்டும். யோகம் ஒரு மாயத்தையோ மந்திரத்தையோ அல்லது அற்புதத்தையோ முன்வைக்கவில்லை . அது நம்பிக்கையையும் வலியுறுத்தவில்லை . அது வகுத்துரைப்பது பயிற்சிகளையே.\nமுழுமையான அறிதல் என்பது சாத்தியமா என்ற வினாவை , அறிவுத்துறைகளில் ஈடுபடும் நவீனமனதுக்கே உரிய [ஓர் எல்லைவரை அவசியமான ] ஐயநிலையுடன் [Skepticism ] அணுகலாம். ஆனால் யோகத்தின் பயன்க��் அதன் பல்வேறு திரிபு நிலைகளிலும் ,எளிமைப்படுத்தப்பட்ட நிலைகளிலும்கூட உலகங்கும் நிரூபிக்கப்பட்டவை என்பது நம் முன் உள்ள உண்மை. மிக ஆரம்பநிலையிலேயே கூட நம் மனதின் முழு சக்தியை பயன்படுத்த அவை உதவுகின்றன , நமது அறிதல்களில் மிக ஆழமான மாற்றங்களை உருவாக்குகின்றன .\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nNext: கனடாவில் நாகம்மா -2\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி\nபயணம் – ஒரு மைக்ரோ கதை\nகல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)\nவாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி\nதமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்\nகுறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4\nவைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)\nசூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]\nபஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)\nநியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்\nதேவை இன்னும் கொஞ்சம் தாகம்\nமனத்தில் பட���யும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)\nஅடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/marxist-communist-part-and-indian-communist-party-announce-agitation-against-central-government-qbawcs", "date_download": "2021-08-02T10:25:54Z", "digest": "sha1:CBR3BCQXAOANKWWILG7EDTMWBRTZ564H", "length": 19694, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எவ்வளவு சொல்லியும் கேட்காத மத்திய அரசு..!! அதிரடியாக களத்தில் குதித்த காம்ரேட்கள்..!! | Marxist communist part and Indian communist party announce agitation against central government", "raw_content": "\nஎவ்வளவு சொல்லியும் கேட்காத மத்திய அரசு.. அதிரடியாக களத்தில் குதித்த காம்ரேட்கள்..\nமத்திய அரசு மாநிலங்களை தவிக்க விட்டுவிட்டு எந்தவித உதவியும் செய்ய மறுத்து வருகிறது. இந்தப் போக்கை கைவிட்டுவிட்டு உடனடியாக மாநில அரசுகளுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கும் மாநில அரசுகள் கோரியுள்ள கடன் வாங்கும் வசதியை நிபந்தனைகள் ஏதுமின்றி வழங்கிடவும் வலியுறுத்துகிறோம்.\nகொரோனா பாதிப்புக்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி இடதுசாரிக் கட்சிகள் ஜூன் 9 மாநிம் தழுவிய அளவில் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த, மே-30ம் தேதி புதுதில்லியில் கூடிய இடதுசாரிக் கட்சிகளின் கூட்டம் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்தியா முழுவதும் போராட்ட இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. இந்த அறைகூவலை நிறைவேற்றுவதற்காக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் ஆகியோர் விவாதித்து கீழ்க்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஜூன் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தமிழகம் முழுவதும் இந்த இயக்கத்தை ஆர்ப்பாட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனாவிற்கு முன்பாகவே பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்நிலையில் எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் நான்கு மணி நேர அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அனைத்துப் பகுதி மக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nபிரதமரும் மத்திய அரசும் படாடோபமான வார்த்தைகளைத் தவிர உண்மையில் மக்களுக்குத் தேவையான நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. எனவே, இடதுசாரி கட்சிகள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இயக்கங்களை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு 7500 ரூபாய், மாநில அரசு 5000 ரூபாயும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது முறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பொருள்களும் அவர்களுக்கு முறையாகக் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். பல இடங்களில் ரேஷன் கடைகளில் முறையான ரேசன் விநியோகம் இல்லை எனவும் ஊழல் நடைபெறுவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மாநில அரசு உடனடியாக அதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மக்களுக்கான அனைத்து விதமான வருவாய் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பேரிடர் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் படி கிராமப்புறத்தில் உள்ள அனைத்து அட்டைதாரர்களுக்கும் 200 நாள் வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.\nஇதைப்போன்று பேரூராட்சி பகுதிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.இரண்டரை மாதங்களுக்கு மேல் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் பலன் பெறும் வகையில் அவர்களுக்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஊரடங்கால் ஏற்பட்ட சாகுபடி இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்புரிவோர் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் மத்திய அரசின் அறிவிப்பானது உடனடியாக இந்த பிரச்சினையிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கா�� எந்த உருப்படியான திட்டத்தையும் முன்வைக்கவில்லை. எனவே அவர்கள் உடனடியாக தொழில் துவங்கவும், தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் எந்தவித நிபந்தனையும் இன்றி ரூபாய் 10 லட்சம் கடன் வழங்க வேண்டும். பல்வேறு பகுதியினரும் வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வாங்கியுள்ள கடன்களுக்கு வட்டியை அந்நிறுவனங்கள் கட்டாயமாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. வேறு பலருக்கு வட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதே தவிர தள்ளுபடி செய்யப்படவில்லை. 6 மாதங்களுக்குப் பிறகு தள்ளி வைக்கப்பட்ட வட்டியையும் சேர்த்துக் கட்டுவது மிகப்பெரும் சுமையாகவும் இயலாத காரியமாகவும் இருக்கும். எனவே, கடனுக்கான வட்டியை 6 மாத காலத்திற்கு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.\nகொரோனாவை எதிர்த்த போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கும் நிலையில் மத்திய அரசு வஞ்சகமாக மின்சாரத்தை தனியாருக்கு அள்ளிக் கொடுக்கவும் மாநில அரசுகளுக்கு மின்துறை மீதுள்ள அதிகாரத்தை பறிக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரங்கள் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் ரத்து செய்யும் வகையிலும் மின்சார சட்டத்தில் திருத்தங்கள் செய்திருப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.இடம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்திட வேண்டும். அதுவரை அவர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை அரசு உத்தரவாதப்படுத்திட வேண்டும்.\nமருத்துவ இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் தமிழகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை மத்திய அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். மாநில அரசு இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nகொரோனா தொற்று பரவல் சென்னை உட்பட பல இடங்களில் அதிகரித்திருக்கும் நிலையில் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை வழங்க வலியுறுத்துவதோடு அவர்களது உடனடி தொடர்பாளர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.\nமத்திய அரசு மாநிலங்களை தவிக்க விட்டுவிட்டு எந்தவித உதவியும் செய்ய மறுத்து வருகிறது. இந்தப் போக்கை கைவிட்டுவிட்டு உடனடியாக மாநில அரசுகளுக்க�� தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கும் மாநில அரசுகள் கோரியுள்ள கடன் வாங்கும் வசதியை நிபந்தனைகள் ஏதுமின்றி வழங்கிடவும் வலியுறுத்துகிறோம்.இவற்றை வலியுறுத்தி, ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு, ஆனால் அதே சமயத்தில்இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ள அனைத்து இடங்களிலும் கூடுதலான இடங்களில்இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்றும் காலை 10 மணி தொடங்கி பத்தரை மணி முதல் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அனைத்து இடதுசாரி கட்சிகளின் தோழர்களும் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு இப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nரியல் கம்யூனிஸ்ட் லீடர்னா இதுதாங்க.. விருது தொகை 10 லட்சத்தை கொரோனா நிதிக்கு அறிவித்த தோழர் சங்கரய்யா.\n100 வயதை கடந்த தமிழர்.. சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது.. தமிழக அரசு அறிவிப்பு.\nகோஷ்டி பிரச்னையை தீர்க்க பிரதமர் மோடி அதிமுக தலைவரா.. ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸை பங்கம் செய்த பாலகிருஷ்ணன்.\nகட்சியில் உள்ள கோஷ்டி மோதலை தீர்க்க டெல்லி செல்லும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. பங்கபடுத்திய கம்யூனிஸ்ட்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்... சிபிஎம் செயலாளர் அதிரடி அறிவிப்பு..\nபெண்களுக்கு இலவசமாக கொடுத்துவிட்டு அதற்கும் சேர்த்து மொத்தமாக ஆண்களிடம் வசூப்பதா..\nடி20 உலக கோப்பையில் இந்த 4 அணிகள் தான் அரையிறுதியில் மோதும்..\nதலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது.. கர்நாடக முதல்வருக்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகி..\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா..\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுங்க.. அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/complete-lockdown-for-one-week-in-tn/", "date_download": "2021-08-02T08:08:57Z", "digest": "sha1:KYGZ73PCDHX4C7FXDREOMSK2AMLRL75K", "length": 6914, "nlines": 117, "source_domain": "tamil.newsnext.live", "title": "தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று முதல் தொடக்கம் - தமிழகம் ! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nதளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று முதல் தொடக்கம் – தமிழகம் \nதமிழக்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.\nமீண்டும் தற்போது இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கும்.\nமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.\nபெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்.உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.\nபிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடக்கும்- மகேஷ் பொய்யாமொழி\nதினமும் ஏன் நாம் நட்ஸ் சாப்பிட வேண்டும் \nதொடர் சரிவில் தங்கம் விலை\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\n5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nதினமும் ஏன் நாம் நட்ஸ் சாப்பிட வேண்டும் \nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\nதொடர் சரிவில் தங்கம் விலை\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\nமுருதீசுவரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/share-market-news-in-tamil", "date_download": "2021-08-02T09:21:08Z", "digest": "sha1:I2T32RIVNMUUKVHD3536VOP35GABHNAG", "length": 4221, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமாட்டுத்தாவணி மலர் சந்தையை மூடுங்க... மதுரை கலெக்டர் அதிரடி ஆக்ஷன்\n4 மாதத்தில் 31 லட்சம் கோடி.. இந்திய முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்\nசீனாவுக்கு குட்பை.. இந்திய நிறுவனங்களுக்கு ஜாக்பாட்\nஒரே நாள்.. 3 லட்சம் கோடி லாபம்.. பட்டையை கிளப்பிய பங்குச் சந்தை\nஎகிறிய சென்செக்ஸ்.. இந்த பங்குகள் எல்லாம் டாப்\nஎகிறி அடித்த சென்செக்ஸ்.. புதிய உச்சத்தில் நிப்டி.. முதலீட்டாளர்கள் ஹேப்பி\nசேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் \nஇலவம் பஞ்சு விலை வீழ்ச்சி விரக்தியில் விவசாயிகள் \nகொரோனா இரண்டாவது அலையால் பங்குச்சந்தை பங்குதாரர்கள் பயம்\nபணம் தர மறுத்த உரிமையாளர் : சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய திருநங்கை..\nமும்பையில் கொரோனா பயம் போச்சோ தாதர் சந்தையில் கூட்டம் கூடிடுச்சி\nகாலை முதல் திறக்கப்பட்ட சொர்க்கம்; குடிமகன்கள் கும்மாளமோ.. கும்மாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil4.com/cinema/actor-karthi-who-met-vijay/", "date_download": "2021-08-02T08:05:34Z", "digest": "sha1:FORTWY4G5DYRD6CVFQXVWWOB7YYNUO3P", "length": 5845, "nlines": 66, "source_domain": "tamil4.com", "title": "விஜய்யை சந்தித்த நடிகர் கார்த்தி - Tamil4", "raw_content": "\nவிஜய்யை சந்தித்த நடிகர் கார்த்தி\nதளபதி விஜய்யை நடிகர் கார்த்தி சந்தித்ததாக வெளிவந்துள்ள தகவல் கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை அளித்துள்ளது.\nதளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜாஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் அதே கோகுலம் ஸ்டுடியோவில் கார்த்தி நடித்துவரும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து படப்பிடிப்பின் இடைவெளியில் ���டிகர் கார்த்தி விஜய்யின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விஜய்யை சந்தித்தார்.\nஅப்போது விஜய் கார்த்தியை கட்டிப்பிடித்து வரவேற்றதாகவும் அவரது கெட்டப் சூப்பராக இருப்பதாக வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஅதன்பின்னர் தமிழ் திரையுலகம் குறித்து இருவரும் சில நிமிடங்கள் பேசியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய், கார்த்தி சந்திப்பு குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவலிமை தொடர்பில் கசிந்த புதிய தகவல்\nமீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை\nபுதிய சாதனை படைத்த விஜய் பாடல்; ரசிகர்கள் உற்சாகம்\nதிடீரென பெயர் மாற்றிய சமந்தா\nதம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/440", "date_download": "2021-08-02T09:07:04Z", "digest": "sha1:3BJPXBPCDH7RV5ZPJQNSCUITLE6DT3IX", "length": 3252, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 440 | திருக்குறள்", "raw_content": "\nகாதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nதன்‌ விருப்பம்‌ பிறர்க்குத்‌ தெரியாதபடி விருப்பமானவற்றை நுகர வல்லவனானால்‌, பகைவர்‌ தன்னை வஞ்சிப்பதற்காகச்‌ செய்யும சூழ்ச்சிகள்‌ பலிக்காமல்‌ போகும்‌.\nகாதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின்; ஏதிலார் நூல் ஏதில - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம்.\n(அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.)\n(இதன் பொருள்) காதலிக்கப்பட்ட யாவற்றின் மேலுஞ் செல்லுங் காதலைப் பிறர றியாமற் செலுத்துவனாயின், பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்���ாது அயலாம்,\n(என்றவாறு) நூலென்பது அவர் கற்ற கல்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/covid-19-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-25/", "date_download": "2021-08-02T07:59:54Z", "digest": "sha1:5Z3H73U4HPW36ZLHP77YGMLNYSPYKFOV", "length": 7671, "nlines": 65, "source_domain": "totamil.com", "title": "COVID-19 தடுப்பூசிக்கு மாடர்னா 25 அமெரிக்க டாலர் வசூலிக்க வேண்டும் - ToTamil.com", "raw_content": "\nCOVID-19 தடுப்பூசிக்கு மாடர்னா 25 அமெரிக்க டாலர் வசூலிக்க வேண்டும்\nஃபிராங்க்ஃபர்ட்: மாடர்னா தனது கோவிட் -19 தடுப்பூசி வேட்பாளரின் ஒரு டோஸுக்கு 25 அமெரிக்க டாலர் முதல் 37 அமெரிக்க டாலர் வரை வசூலிக்கும், இது உத்தரவிடப்பட்ட தொகையைப் பொறுத்து, தலைமை நிர்வாகி ஸ்டீபன் பான்செல் ஜெர்மன் வார இதழான வெல்ட் ஆம் சோன்டாக் (வாம்ஸ்) இடம் கூறினார்.\n“எனவே எங்கள் தடுப்பூசிக்கு ஒரு காய்ச்சல் ஷாட் போலவே செலவாகும், இது 10 அமெரிக்க டாலருக்கும் 50 அமெரிக்க டாலருக்கும் இடையில் உள்ளது” என்று அவர் மேற்கோள் காட்டினார்.\nதிங்களன்று (நவம்பர் 23), பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி, ஐரோப்பிய ஆணையம் தனது தடுப்பூசி வேட்பாளரின் மில்லியன் கணக்கான டோஸை ஒரு டோஸுக்கு 25 அமெரிக்க டாலருக்கும் குறைவான விலைக்கு வழங்குவதற்காக மாடர்னாவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகக் கூறினார்.\n“எதுவும் இதுவரை கையெழுத்திடப்படவில்லை, ஆனால் நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்துடனான ஒரு ஒப்பந்தத்திற்கு நெருக்கமாக இருக்கிறோம். நாங்கள் ஐரோப்பாவிற்கு வழங்க விரும்புகிறோம், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்” என்று பான்செல் வாம்ஸிடம் கூறினார், இது ஒரு ஒப்பந்தம் வரும் வரை இது ஒரு “நாட்களின் விஷயம்” தயாராக இருங்கள்.\nமாடர்னா தனது சோதனை தடுப்பூசி COVID-19 ஐத் தடுப்பதில் 94.5 சதவிகிதம் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறியுள்ளது, இது ஒரு தாமதமான மருத்துவ பரிசோதனையின் இடைக்கால தரவுகளின் அடிப்படையில், ஃபைசர் மற்றும் அதன் கூட்டாளர் பயோஎன்டெக்கிற்குப் பிறகு எதிர்பார்ப்புகளை மீறிய முடிவுகளைப் புகாரளிக்கும் இரண்டாவது டெவலப்பராக ஆனது.\nகுறைந்தபட்சம் ஜூலை முதல் ஐரோப்பிய ஒன்றியம் அதன் சோதனை COVID-19 தடுப்பூசிக்காக மாடர்னாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nCOVID-19COVID19today newsworld newsஅமரகககொரோனா வைரஸ்டலரதடபபசககதடுப்பூசிநவீனபோக்குமடரனவசலககவணடம\nPrevious Post:பிளாக் மெயில் செய்ததற்காக நிதி நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்\nNext Post:ஸ்டெபானி சன் தனது ‘ஹேர் சேலனில்’ ஹேர்கட் வழங்குகிறார்\nயோகி ஆதித்யநாத் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெறுகிறார்\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி “திடீர்” பாதுகாப்பை மோசமாக்கியதற்காக அமெரிக்கா திரும்பப் பெறுவதாக குற்றம் சாட்டினார்\nமுற்போக்கான ஊதிய மாதிரி நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து 57 துப்புரவு நிறுவனங்கள் நிதி அபராதங்களை வழங்கின\nசீனா டெல்டா வெடிப்புக்கு எதிராக போராடும் போது கோவிட் -19 பூட்டுதலின் கீழ் மில்லியன் கணக்கானவர்கள்\nமலேசிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு அணிவகுத்து, பிரதமர் யாசின் ராஜினாமா கோரி | உலக செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/siddiq-kappan-a-journalist-tortured-for-trying-to-report-hathras-case/embed/", "date_download": "2021-08-02T08:59:30Z", "digest": "sha1:4WUYDNNK3WFI6D6QPZG3J2OUA7A6WILY", "length": 5021, "nlines": 8, "source_domain": "www.aransei.com", "title": "சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை | Aran Sei", "raw_content": "சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருக்கும் புல்கர்கி கிராமத்தில், ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால், 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். கொடூரமான தாக்குதல், பெண்ணின் மரணம், அதனைத் தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினரின் சம்மதமே இல்லாமல் பெண்ணின் உடலை காவல்துறையினர் தகனம் செய்தது என இந்தச் சம்பவம் பல ஊடகங்களில் தலைப்பு செய்தியானது. இது தொடர்பாக அக்டோபர் … Continue reading சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப��பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-08-02T08:46:23Z", "digest": "sha1:ZCJ5I64J5NJAJKLN7LYWY4TR25JTLDMJ", "length": 7797, "nlines": 101, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஉத்தர்காண்ட் பாஜகவில் கோஷ்டி மோதல் – முதல்வர் பதவி விலகினார்\nபாஜக மேலிடத்தின் சார்பில் சத்தீஸ்கரின் முன்னாள் முதலமைச்சர் ரமண் சிங் மேலிட பார்வையாளராக உத்தரகாண்டின் டெஹ்ராடூனுக்கு அனுப்பப்பட்டுள்ளார்....\nஉத்தர்காண்ட்திரிவேந்திர சிங் ராவத்பாஜகமுதலமைச்சர்ரமண் சிங்\nசுவாமி அக்னிவேஷ் – மக்களுக்காக வாழ்ந்த சந்நியாசி\n“உண்மையான ஆரிய சமாஜ உறுப்பினராக இருப்பது என்பது பகுத்தறிவுவாதியாக இருப்பதும், ஏழைகளுக்காக பணியாற்றுவதுமே ஆகும்” – சுவாமி. அக்னிவேஷ் சுவாமி அக்னிவேஷின்...\nசத்தீஸ்கர்சல்வா ஜூடும்சுவாமி அக்னிவேஷ்ஜார்க்கண்ட்நர்மதாவை காப்போம்பா.ஜ.கமாவோயிஸ்ட்ரமண் சிங்\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின்...\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின் போராட்டம்\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\n’நாடாளுமன்ற வ��திப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் – தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தகவல்\n‘தற்போதைய பணவீக்கத்திற்கு 1947-ல் நேரு ஆற்றிய உரையே காரணம்’ – ம.பி. பாஜக அமைச்சர்\n‘பெகசிஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை வேண்டும்’ – நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்\nதகுதியான சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/urakkam-thelivom/", "date_download": "2021-08-02T09:14:55Z", "digest": "sha1:MCKBX7AK2E7XTSXPYWMSESNMSDSJ6R64", "length": 11294, "nlines": 201, "source_domain": "www.christsquare.com", "title": "Urakkam Thelivom Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஉறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்\nகல்வாரி தொனி தான் மழைமாரி பொழியும்\nஅசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்\nஅவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து\nஅச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்\nஇரத்த சாட்சிகள் நம்மிடை தோன்றி\nதரித்திரர் ஆனதில்லை – ராஜ்ய\nஉயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்\nநீங்கள் அறியா ஒருவர் உங்கள்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஉடம்பு சரி இல்ல சபைக்கு வர முடியலனு சொல்லுறவங்களுக்கு சமர்ப்பணம்..\nஒரே பிசி…உடம்பு சரி இல்ல ...\nகிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...\nதிருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்களா தயவு செய்து இதை படியுங்கள்.\nதன் சொந்த சகோதரன் ஏசாவின் ...\nலோத்தி மூன்…நற்செய்தியை அறிவிப்பதற்கு நீங்கள் ஆயத்தமா\nயார் இந்த தந்தை பெர்க்மான்ஸ் தந்தை SJ பெர்க்மான்ஸ் BIO-DATA\nபிறந்த நாள்: ஆகஸ்ட் 3 ...\nவேதாகமத்தை பற்றி Parveen Sulthana-வின் அருமையான பேச்சு.\nவேதாகமத்தை பற்றி Parveen Sulthana-வின் ...\nமே 01 மிஷனரி டேவிட் லிவிங்ஸ்டன் நினைவு தினம்\nஆப்பிரிக்கா. ஆம் , நீங்கள் ...\nகை கால்கள் இல்���ாமல் பிறந்த மனிதனுடைய சாட்சி – நிச்சயம் இந்த வீடியோ பார்த்த பிறகு உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்.\nஇன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்…இந்த பாடலை யார் பாடியது என்று உங்களுக்கு தெரியுமா\nஇன்ப இயேசு ராஜாவை நான் ...\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\nஉம் பேரன்பில் நம்பிக்கை …\nதேடி வந்து மீட்ட …\nகிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு …\nஉம்மாலே கூடாத அதிசயம் …\nஎன்னை அழைத்தவரே தினம் …\nதிருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்களா தயவு செய்து இதை படியுங்கள்.\nதன் சொந்த சகோதரன் …\nஆண்டவரை தங்கள் சொந்தஇரட்சகராக ஏற்றுக்கொண்ட உடனே அனைவரும் வேதத்தை நேசித்து வாசிப்பது உண்டு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/mRrRoT.html", "date_download": "2021-08-02T08:14:07Z", "digest": "sha1:XDJHCZU7IUO7G4IMZ5ZBKEQPAMPNHQJ2", "length": 8791, "nlines": 37, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "டெல்லி போலீஸுக்குத் தெரியாதா - அமித் ஷாவுக்கு கபில் சிபல் பதிலடி", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nடெல்லி போலீஸுக்குத் தெரியாதா - அமித் ஷாவுக்கு கபில் சிபல் பதிலடி\nடெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லி கலவரத்துக்கு பதிலளிக்கும் விதமாக நேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்து, இஸ்லாமியர் என்பதில் எனக்கு நம்பிக்கைய��ல்லை.\nடெல்லி கலவரத்தில் இறந்த அத்தனை நபர்களையும் நான் இந்தியனாகவே பார்க்கிறேன். காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்த கலவரங்களில்தான் 76 சதவிகிதம் இறந்தனர். எங்களை கேள்வி கேட்க அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை ” எனப் பதிலளித்திருந்தார்.\nஇந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பசுக்களைக் காப்பதற்காக நீங்கள் எதையும் செய்வீர்கள். உங்களால் மனிதர்களைக் காப்பாற்ற முடியுமா அதற்காக சட்டம் இயற்ற வேண்டுமா என்ன அதற்காக சட்டம் இயற்ற வேண்டுமா என்ன மனிதர்களையும் மனித வாழ்க்கையையும்விட பசு பாதுகாப்பு முக்கியமா என்ன மனிதர்களையும் மனித வாழ்க்கையையும்விட பசு பாதுகாப்பு முக்கியமா என்ன தற்போது உலகத்தில் இரண்டு வைரஸ்கள் இருக்கின்றன. ஒன்று கொரோனா வைரஸ் மற்றொன்று வகுப்புவாத வைரஸ். வகுப்புவாத வைரஸை ஆதரித்தது யார் தற்போது உலகத்தில் இரண்டு வைரஸ்கள் இருக்கின்றன. ஒன்று கொரோனா வைரஸ் மற்றொன்று வகுப்புவாத வைரஸ். வகுப்புவாத வைரஸை ஆதரித்தது யார் காயங்களுடன் ஒருவர் படுத்துக் கிடக்கிறார்.\nஅவரைத் தேசிய கீதம் பாடும்படி துன்புறுத்துகின்றனர். என்ன நடக்கிறது என எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால், டெல்லி போலீஸாருக்கு மட்டும் ஒன்றும் தெரியாது. இந்தக் கலவரத்துக்கு காரணமே வகுப்புவாத வைரஸ்தான்.\nஇந்த வகுப்புவாத வைரஸ் பரவுவதற்கு சிலரின் பேச்சுக்கள்தான் காரணமாக அமைந்தன. உள்துறை அமைச்சகம் அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, பரூக் அப்துல்லா ஆகியோர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஏதேனும் அறிக்கைவிட்டால், அதனால் அமைதியின்மை ஏற்படும் என சிறை வைத்தீர்கள்.\nடெல்லியில் கலவரம் ஏற்படும் வகையில் பேசியவர்களின் மீது ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை . இந்தியாவின் இரும்பு மனிதர் (சர்தார் வல்லபபாய் பட்டேல்) அமர்ந்திருந்த நாற்காலியில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nகலவரக்காரர்களுக்கு போலீஸார் உதவி செய்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸார் உதவியதன் காரணமாகத்தான் இத்தனை மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கலவரக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவி��்லை .\nபால்கோட்டில் நீங்கள் நடத்திய தாக்குதல் நன்றாக இருந்தது. ஏன் சொந்த மக்களின் மீதே தாக்குதல் நடத்த வேண்டும். கலவரக்காரர்களுக்கு டெல்லி போலீஸார் உதவியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இருந்தும் அந்தக் காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை \" என்றார்.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?ajaxcatalog=true&dir=desc&mode=list&order=position&p=3", "date_download": "2021-08-02T07:58:19Z", "digest": "sha1:AUB67WXMFAUQSKIBEXCLHAIAFK6C2XF6", "length": 11314, "nlines": 320, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nபெண் விடுதலை பெரியாரின் பார்வையில்\nவகுப்புவாரி பிரதிநிதித்துவம் திரு.வி.க - பெரியார் அறிக்கைப் போர்\nபெரியார் : ஆகஸ்ட் 15\nஆலயம் அழிவது சாலவும் நன்று\nதந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு புலவர் த.கோவேந்தன்)\nதவத்திரு தர்மதீர்த்த அடிகளார் (1)\nமுனைவர் கருவூர் கன்னல் (1)\nமுனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (1)\nபெரியார் ஆவணக் காப்பகம் (1)\nநாம் தமிழர் பதிப்பகம் (3)\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (50)\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் (4)\nதமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் (5)\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்)\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilrockz.net/2020/12/blog-post_60.html", "date_download": "2021-08-02T10:04:28Z", "digest": "sha1:77FRQ22RN2K6HUWT6YNTZUGT2XJ5PW72", "length": 9321, "nlines": 115, "source_domain": "www.tamilrockz.net", "title": "வெளியானது ஈஸ்வரன் படத்தின் வீடியோ – கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்...! - TamilRockZ - Tamil Movies - Tamil Cinema News | TamilRockZ.NeT", "raw_content": "\nவெளியானது ஈஸ்வரன் படத்தின் வீடியோ – கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்...\nசுசீந்தரன் இயக்கத்தில் , சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன். பழனி பின்னணியில் கதைக்களம் கொண்டுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா ம...\nதிரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தற்போதைக்கு மாஸ்டர் வெளியாகாது: தயாரிப்பாளர்\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு 129 நாட்கள் நடைபெற்று பிப்ரவரி இறுதியில் பட வேலைகள் நிறைவட...\nவெளியானது ஈஸ்வரன் படத்தின் வீடியோ – கொண்டாடும் சிம...\nவிமானத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெட்டிய பிறந...\nபிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் விசாரணையை கைய...\nகட்சி தொடங்குவது குறித்து....ஆலோசனைக்கு பின் ரஜினி...\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீ...\nவெளியானது ஈஸ்வரன் படத்தின் வீடியோ – கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்...\nசுசீந்தரன் இயக்கத்தில் , சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன். பழனி பின்னணியில் கதைக்களம் கொண்டுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பால சரவணன், முனீஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசை அமைக்கிறார்.\nஇந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையைக் குறைத்து படு ஸ்லிமாகி இருக்கிறார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் லிரிக்கல் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்தப் படத்தின் முதல் பாடலாக, தமிழன் பாட்டு இன்று காலையும், லிரிக்கல் வீடியோ மாலை 4 மணிக்கும் வெளியிடப்பட்டது. ’நாடே கிடுகிடுக்க’ என தொடங்கும் இந்தப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nவெளியானது ஈஸ்வரன் படத்தின் வீடியோ – கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்...\nசுசீந்தரன் இயக்கத்தில் , சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன். பழனி பின்னணியில் கதைக்களம் கொண்டுள்ள இந்தப் படத்தில் பாரத��ராஜா ம...\nதிரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தற்போதைக்கு மாஸ்டர் வெளியாகாது: தயாரிப்பாளர்\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு 129 நாட்கள் நடைபெற்று பிப்ரவரி இறுதியில் பட வேலைகள் நிறைவட...\nமாலத்தீவில் சமந்தாவின் அசத்தல் புகைப்படங்கள்...\nகடந்த சில நாட்களாக மாலத்தீவில் தமிழ் நடிகைகள் குவிந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏற்கனவே தேனிலவு கொண்டாட தனது கணவருடன் காஜல் அகர்வால் செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2020/02/gmpl.html", "date_download": "2021-08-02T09:45:03Z", "digest": "sha1:EMC7DEEXMUO6X6R47XKTOAUHJ7BUVZAJ", "length": 5251, "nlines": 51, "source_domain": "www.yarlsports.com", "title": "'GMPL' தொடரில் பங்குபற்றும் 'ஜப்னா றோயல்ஸ்' அணி வீரர்களின் விபரம் - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > 'GMPL' தொடரில் பங்குபற்றும் 'ஜப்னா றோயல்ஸ்' அணி வீரர்களின் விபரம்\n'GMPL' தொடரில் பங்குபற்றும் 'ஜப்னா றோயல்ஸ்' அணி வீரர்களின் விபரம்\nஞானபாஸ்கரோதயா சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள தொழில் முறை ரீதியான 'GMPL' தொடரின் யாழ் மண்ணில் இருந்து உரிமையினை பெற்ற அணியான 'ஜப்னா றோயல்ஸ்' அணியில் உள்வாங்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nயாழில் நடைபெறும் தொழில் முறைரீதியான தொடர்களில் 2வது தொடரில் பங்குபற்றும் அனுபவத்துடன் களமிறங்கும் அணியில் அனுபவ வீரன் மோகன்ராஜ் தலைமை தாங்குவது அணிக்கு பலமே.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீ���ியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lanka2020.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2021-08-02T09:37:41Z", "digest": "sha1:BL6X7ZY3TJNOQKXX4KYGSZFT3H7LBHDO", "length": 13839, "nlines": 102, "source_domain": "lanka2020.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மேத்தி கீரை சூப் - லங்கா2020 Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nHome ஆரோக்கியம் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மேத்தி கீரை சூப்\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மேத்தி கீரை சூப்\nஇந்த ‘வெந்தயக் கீரை சூப்’ (மேத்தி கீரை) சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு மட்டுமல்ல… கண்கண்ட மருந்துமாகும். காலை உணவுடன் சூப் அருந்தும் பலருக்கும் ‘வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றது.\nவெந்தயக் கீரை – ஒரு கப்\nபெரிய வெங்காயம் – 2\nசோள மாவு – ஒரு டீஸ்பூன்\nபூண்டு – 2 பல்\nகாய்ச்சிய பால் – அரை டம்ளர்\nமிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.\nவெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.\nகடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கவும்.\nபின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும்.\nகாய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும்.\nஎல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.\nஇந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.\nஇப்போது மேத்தி கீரை சூப் ரெடி.\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nபெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்\nகுழந்தைகளுக்கு விருப்பமான பீனட் பட்டரை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் வாங்க..\nதைராய்டு பிரச்சனைக்கு குழந்தையின்மைக்கும் தொடர்பு இருக்கா…\nபன்னீரில் சூப்பரான பிரியாணி செய்யலாம் வாங்க..\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஅசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.சைவ உணவுதான் உடலுக்கு...\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nவவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுவவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக...\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை மன்னாரை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் இன்று அதிகாலை 2.10...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…\nஇலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில்...\nபெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்\nபுகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல்,...\nவிஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை\nஉலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார்.விஷ உணவை...\nமன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…\nமன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் குறித்த வீட்டில் திடீரென தீப்...\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…\nஇலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...\nவவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…\nவவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...\nதிருகோணமலை-குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நபர்\nதிருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத்...\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=20305251", "date_download": "2021-08-02T10:01:26Z", "digest": "sha1:APDPLDZLWOSOJZMVTB5TI7UJAAEEBZH5", "length": 39130, "nlines": 146, "source_domain": "old.thinnai.com", "title": "வாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nவாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு\nஉ.வே.சாமிநதய்யர் எழுதிய ‘ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளைவர்கள் சரித்திரம் ‘ படிக்க எடுத்தேன். இரண்டு பாகங்களும் ஏராளமான செய்யுட்களுமாக அமைந்த இந்தப் புத்தகம் வெளிவந்தே எழுபது வருடமாகி விட்டது. அது சொல்லும் வரலாறு அதற்கும் நூறு வருடம் முன்னால் யமகம், திரிபு, பின் முடுகு வெண்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தலபுராணம் என்று சதா சுவாசித்துக் கொண்டு இருந்தவர்கள் பற்றியது.\nஇந்தத் தீவிரத்துக்கு இடையே அந்தக் காலப் பண்டிதர��கள் பலருக்கும் சுபாவமான உரைநடை கைகூடி இருந்திருக்கிறது. உவேசா மாத்திரம் இல்லை, அவரோடு தொடர்புடைய பெரியவர்கள் பலரிடமும் இதைக் காணலாம்.\n22.10.1900 தேதியிட்டுப் புதுவையிலிருந்து உவேசாவுக்கு புதுச்சேரி சவராயலு நாயக்கர் எழுதிய கடிதத்தை ‘ தாங்கள் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை எழுத எத்தனித்திருக்கிறதாக இம்மாதம் 8-ஆம் தேதி திங்கட்கிழமை வெளிப்பட்ட 146 நம்பர் சுதேசமித்திரன் பத்திரிகையால் அறிந்து நான் மெத்தவுஞ் சந்துஷ்டி அடைந்தேன் ‘ என்று தொடங்குவது உதாரணம்.\nஇது தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழல விட்டுக்கொண்ட (பாக்கெட்டில் ரீசார்ஜபிள் பேட்டரி வைத்திருப்பார்களோ) நம்முடைய நவீனத் தமிழ் இலக்கியப் பிரபலங்களின் ‘பின் பண்டித ‘ அ-கதை உரைநடைக்கு முற்றிலும் மாறுபட்டது.\nகொண்டவர் விண்டிலர் – விண்டவர் கொண்டிலர் என்றபடி இவர்கள் கொடுக்கும் இருட்டுக்கடை அல்வாவை விட பழைய ஒரிஜினல் பெங்களூர் எம்.டி.ஆர் பிராண்ட் இன்ஸ்டண்ட் குலோப்ஜாமுன் வகையறாக்கள் சிலாக்கியமானவை.\nமீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குக் கவிதை கைவாள் இல்லை. முதுகு சொரியும் பூணூலும் இல்லை. மூச்சு விடுவது, மூத்திரம் போவது போல் அது தினசரி வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்.\nசின்ன வயதில் வாவு நாள் (பெளர்ணமி) விடுமுறையின் போது திருச்சிரபுரம் என்ற திருச்சியில் வீட்டுக்கு மளிகை ஜாமான் வாங்கிக் கொண்டு வர நடக்கிறபோது சுங்கச் சாவடி சவுக்கிதார் கேட்ட மாத்திரத்தில் வெண்பா பொழிகிறார். அவர் கொடுத்த இரண்டணா உப்பு, புளியாகிறது.\nபிற்பாடு கொஞ்சம் பெயர் பிரபலமாகி, அதைவிடக் கொஞ்சம் போல் வருமானம் ஈட்டி, வீடு கட்டும்போது வாசல் கதவுக்கு மரம் வேண்டுமா – எடு ஏட்டை. அவரிடம் பிரியம் உடைய தனவான் ஒருத்தருக்குக் கவிதை வேண்டுகோள்.\nசாப்பாட்டுக்கு நன்கொடையாக அனுப்பிய புது நெல் வயிற்றில் வாயுத் தொல்லையை உண்டாக்குகிறதா அனுப்பியவருக்கு நன்றியோடு தேக அசெளகரியம் குறித்து ஒரு சிலேடை வெண்பா. அடுத்த நாளே பழைய அரிசி மூட்டை வீட்டுக்கு வந்து சேர்கிறது.\nதன்னை ஆதரித்த பட்டாச்சுவரம் ஆறுமுகத்தா பிள்ளை ஒரு மிராசுதார் ஐயரிடம் கைமாற்று வாங்கி வட்டிக்கு மேல் வட்டி கூடிப் போய் கடன் தொல்லையில் மூழ்கிக் கொண்டிருந்தபோதும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் செய்யுள் தான் கைகொடுக்கிறது.\nவட்டியைக் குறைக்கச் சொல்லி அந்த மார்வாடி ஐயருக்கு இவர் எழுதிய விருத்தம் ஆறுமுகத்தா பிள்ளை வயிற்றில் பாலை வார்க்கிறது.\nஇன்றைய சினிமாக் கவிஞர்கள் யாரேனும் ஒரு பாட்டாவது இப்படி எழுதி தண்ட வட்டிக் காரர்களுக்கு விடுத்தால் தயாரிப்பாளர்கள் சீலிங் ஃபேனைத் தேட வேண்டி வராது.\nநூற்று ஐம்பது வருடத்துக்கு முந்திய வாழ்க்கை பற்றி இந்தச் சரித்திரத்தில் இடம் பெற்ற பதிவுகள் முக்கியமானவை.\nசைவ மடத்தில் கிறிஸ்துவர்களும் சகஜமாக நடமாடிக் கல்வி பயின்று வந்திருக்கிறார்கள். சவரிமுத்துப் பிள்ளை கொஞ்ச காலம் சிவகுருநாதப் பிள்ளையாகிறார். அப்புறம் அவர் கல்யாணம் வர, சிவப் பழமான ஆசிரியரே அவரை சவரிமுத்து என்று அருகே விளித்து, கல்யாணத்துக்கு உதவச் சொல்லிப் பத்துக் கனவான்களுக்கு சீட்டுக் கவிதை அனுப்புகிறார்.\nபெர்சிவல் பாதிரியார் கேட்டுக்கொண்டபடி இன்னொரு சைவ சமயச் சான்றோரான ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சுப்போட சென்னை வருகிறார். இங்கே யாழ்ப்பாணத் தமிழரைத் துரும்பாகப் பார்க்கிறார்கள். மழவை மகாலிங்கய்யர் விவிலிய மொழிபெயர்ப்பைப் படித்து அதில் பிழையில்லை என்றும் யாழ்ப்பாணத் தமிழ் சிறப்பானதென்றும் சான்று வழங்கிய பிறகே பெர்சிவல் புத்தகம் அச்சாக அனுமதிக்கிறார். விவிலியத்தை மதம் சார்ந்த நூலாகப் பார்ப்பது அப்புறம் தான் தொடங்கி இருக்கும் போல் இருக்கிறது.\nரயிலும், தந்தியும் அறிமுகமான அந்தக் காலத்தில் புதிதாக ஏற்பட்ட போஸ்ட் மாஸ்டர், சிரஸ்ததார், எஞ்சினியர் போன்ற துரைத்தன உத்தியோகங்களில் இருக்கப்பட்டவர்களும் ஒழிந்த நேரத்தில் சுவடியை வைத்துக் கொண்டு கடினமான தமிழ்ப் பாடல்களைப் பதம் பிரித்துப் படிக்க முயன்றிருக்கிறார்கள். அல்லது தக்கவர்களை அணுகியிருக்கிறார்கள்.\nதமிழ்ச் செய்யுளில் ஈடுபட்டாலும், இங்கிலீசு நோட் மெட்டில் பாட்டு அமைப்பது கெளரவம் என்று சகலரும் நினைத்திருக்கிறார்கள்.\nமாம்பழக் கவிச்சிங்க நாவலர் புதுக்கோட்டை அரசர் தொண்டமானைப் பற்றி நோட்டுப் போட்டால், அதே மெட்டில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதினகர்த்தர் மேல் ‘துஞ்சம் தார் தரு துரைசை யில்வளர் சுப்ரமணிய தயாநிதியே ‘ என்று பாட்டு இயற்றுகிறார். சந்நிதானம் மகிழ, அந்தக் கானத்தை ஓதுவார்கள் மனனம் செய்து தினப்படி அவருக்கு முன்னால் பாடும் வழக்கம் ஏற்படுகிறது.\nமடத்து சிவ பூஜைக்கு இடைஞ்சல் வரவழைக்காத அந்த இங்கிலீசு மெட்டு இன்னும் கொஞ்சம் நீண்டு மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர் வண்டானத்தையும் பிடித்துக் கொள்கிறது. அவர் தன்னை ஆதரித்த வள்ளல் மேல் அதே மெட்டுக்குப் பாட்டுக் கட்டுகிறார்.\nதமிழ்த் திரை இசையமைப்பாளர்கள் தாம் தத்தகாரத்தில் பல்லவி கொடுத்து எந்தமிழ்க் கவிஞர்களைக் கெடுத்தார்கள் என்பதை இனியும் நம்ப முடியாது போலிருக்கிறது.\nஅந்தக் காலத்தில் காப்பி இருந்ததோ என்னவோ, வித்துவான்களிடம் ஊரில் பொதுவாக மரியாதை இருந்திருக்கிறது. கொஞ்சம் போல் பயமும் அதில் கலப்பு உண்டு.\nதலபுராணம் செய்யச் சொல்லி அழைத்த நகரத்தார்கள் பயபக்தியோடு திரண்டு வந்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள் – ‘தயவு செய்து அறம் வைத்துப் பாடி விடாதீர்கள். பாட்டுக்கு மூன்று வரிக்குக் குறைவாகப் பாட வேண்டாம் ‘\nஇயல்பாகவே நல்ல மனிதராகிய அவர் மாட்டேன் என்று உறுதிமொழி தருகிறார்.\nஆனாலும் காண்ட்ராக்ட் அடிப்படையில் இப்படிப் பாட்டு எழுதப் போகும்போது, ஆதரித்து முன்கை எடுத்த கவர்மெண்ட் உத்யோகஸ்தர்கள் துர்போதனையால் சட்டென்று கையைப் பின்னால் இழுத்துக் கொண்டு எழுத்து வேலையை நிலைகுலைய வைக்கிறார்கள். ருத்ராட்ச மாலையை அடமானம் வைத்துக் கடன் வாங்க வேண்டி வருகிறது.\nஆதரித்துக் கூப்பிட்ட இடத்திலும் ராத்திரி பனிரெண்டு மணிவரை கண் விழிக்க வைத்துச் சாப்பாடு போடுகிறார்கள்.\nஇத்தனைக்கும் நடுவிலும் மனிதர் அசராமல் மாணவர்களுக்குப் பாடம் சொல்கிறார். இறுதிப் படுக்கையில் கிடக்கும்போது, சாமிநாதய்யர் திருக்கோத்தும்பி படிக்கிறார்.\n‘நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாகி.. ‘\nமூச்சு வாங்கப் பிள்ளையவர்கள், ‘விருப்பமில்லாமல் செலுத்தப்பட்ட கன்று ‘ என்கிறார்.\nமொழியறிவிலும், கவித்திறத்திலும், தான் கற்றதை எல்லாம் பிறருக்கு வாரி வழங்க வேண்டும் என்று மனதார நினைப்பதிலும் இப்படியான உத்தமர்கள் இனி வரப் போவதில்லை.\nபறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு\nவாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4\n‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘\nஎவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது \nஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\nமண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.\nதனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து\nஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)\nஇலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு\nபறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு\nவாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4\n‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘\nஎவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது \nஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\nமண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.\nதனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து\nஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)\nஇலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnation.com/tamil/2020/06/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-08-02T09:35:45Z", "digest": "sha1:E3BJHYNQM5KPYWGCD6P5AK7U4GNMSTGV", "length": 6823, "nlines": 62, "source_domain": "www.ceylonnation.com", "title": "சஜித் பிரேமதாஸவின் முக்கிய கூட்டம் - பல தீர்மானங்கள்", "raw_content": "\nசிலோன் நேசன், இலங்கை செய்திகள், உலகம், விளையாட்டு, சினிமா, பல்சுவை செய்திகள், இன்றைய இலங்கை செய்திகள், ceylon news tamil, அனைத்து விதமான செய்திகளும் ஒரே இடத்தில்\nஇலங்கை / பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாஸவின் முக்கிய கூட்டம் – பல ���ீர்மானங்கள்\nசஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் 10ம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்காக வருகின்ற 10ஆம் திகதி சஜித் பிரேமதாஸ தலைமையில் விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளதோடு இதில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nதேர்தல் பிரசார செயற்பாடுகளுக்காக இதுவரை 15000 குழுக்களை நியமித்திருப்பதாகவும் இன்னும் பல குழுக்களை நிறுவவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவிக்கின்றனர்.\nமேற்படி 10ஆம் திகதி நடத்தப்படும் கூட்டத்தில் 291 பேர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை நாளை மறுநாள் திங்கட்கிழமை தேர்தல் திகதி குறித்து முடிவு செய்ய ஆணைக்குழு கூடுகிறது.\nஎவ்வாறாயினும் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தல், பிற்போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவில்லை.\nபிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை ஒன்லைனில் பெறும் வசதி\nதாயும் பிள்ளைகளும் உறங்கிய மெத்தையின் கீழ் இருந்த 30 நல்லபாம்புகள்\nரிசாத் பதியுதீன் விவகாரம் – அஜித் ரோஹண இன்று கூறிய விடயங்கள்\nPrevious Article வீட்டில் இருந்த படி அதிக பணம் சம்பாதிக்கும் விராட் கோலி\nNext Article நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மூன்று பேர்\nபிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை ஒன்லைனில் பெறும் வசதி August 2, 2021\nதாயும் பிள்ளைகளும் உறங்கிய மெத்தையின் கீழ் இருந்த 30 நல்லபாம்புகள் August 2, 2021\nரிசாத் பதியுதீன் விவகாரம் – அஜித் ரோஹண இன்று கூறிய விடயங்கள் August 2, 2021\nகல்வி அமைச்சின் தீர்மானத்தில் திடீர் மாற்றம் – ஆசிரியர்கள், அதிபர்களுக்கு விஷேட செய்தி August 1, 2021\nபாரிய இரத்தினக்கல் கொத்தணி செய்தி பொய்யானது\nமாகாணங்களுக்கு இடையிலான தடை நீக்கப்படவில்லை – சுகாதார பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு August 1, 2021\nநாட்டின் ஆட்சியை பொறுப்பேற்க தயார்; அநுரகுமார திஸாநாயக்க August 1, 2021\nதங்கத்தின் விலையில் ஒரே தடவையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு August 1, 2021\nகல்வி அமைச்சின் விஷேட அறிவிப்பு வௌியானது August 1, 2021\nநாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் தடை August 1, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Health/damn-so-good-at-guava-fruit", "date_download": "2021-08-02T08:27:00Z", "digest": "sha1:4MYOX23KCHKQ3GZ3YANA6DJBKWVSYCJU", "length": 8654, "nlines": 83, "source_domain": "www.fnewsnow.com", "title": "அடடே இவ்வளவு ந்ன்மையா கொய்யா பழத்தில்? | Damn so good at guava fruit? - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nஅடடே இவ்வளவு ந்ன்மையா கொய்யா பழத்தில்\nஅடடே இவ்வளவு ந்ன்மையா கொய்யா பழத்தில்\nமற்ற பழ வகைகளை விட விலை மலிவாகக் கிடைக்கும் பழமாகக் கொய்யா பழம் இருக்கிறது. இதனாலோ என்னவோ இதனைப் பலரும் அலட்சியமாக்கி விடுகின்றனர். ஆனால் மற்ற பழ வகைகளை விட அதிகளவு சத்துக்கள் நிறைந்த பழமாகக் கொய்யா இருக்கிறது. இது தவிரக் கொய்யா பழம் வழங்கும் மற்ற பயன்களை இங்குப் பாருங்கள்..\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கொய்யாப் பழம் அதிகரிக்கிறது. சிலருக்குத் தொடர்ச்சியாகத் தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாகத் தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம். இப்பழம் ரத்தத்தைச் சுத்திகரித்துத் தலைவலிக்கான மூலகாரணத்தைச் சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறையச் சாப்பிடலாம்.\nநீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும். கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாகச் சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரணக் கோளாறு, பேதி போன்றவற்றைக் குணப்படுத்தும்.\nகொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதயச் சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன. கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.\nகொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக்கூடாது. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.\nமது போதைக்க�� அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.\nகல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது. புகை பழக்கம் உடையவர்களின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றைக் கொய்யா சீராக்குகிறது.\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nதுரியன் பழத்தில் இவ்வளவு நன்மையா\nவசம்பு... குழந்தைகளின் அருமருந்து ஏன்\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/porattam/issue-27/176-news/articles/guest/3400-2016-09-23-18-05-53", "date_download": "2021-08-02T09:31:23Z", "digest": "sha1:6I3IFYTE3LAHWVLW4ETBEQFK2YILOYPB", "length": 15977, "nlines": 102, "source_domain": "www.ndpfront.com", "title": "எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்\nமன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டி ருந்த போது அங்கிருந்த முஸ்லீம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட விடயங்கள்: 'நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனது வீட்டின் பின்புறம் வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளினால் இப்போது பாதுகாக்கப்பட்ட காடாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு மண்வெட்டி செய்ய பிடி தேவை என்றால் கூட என்னால் பின்னுக்கு இருக்கிற மரத்தினை வெட்ட முடியாது. முசலி தெற்குப் பகுதியில் புதிதாகப் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் வடமாகாணத்தினைச் சேர்ந்தவர்களே. உங்களுடைய முதலமைச்சர் ஐயா ஏன் எங்களுடைய பிரச்சினைகள் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஒரு கை தட்டினால் சத்தம் கேட்குமா எல்லாரும் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரலாமே எல்லாரும் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரலாமே\nஎழுக தமிழ் என்ற தமிழ் மையவாத நிகழ்வினைப் பற்றிக் கேள்விப்பட்ட போதும் அது தொடர்பான பதிவுகளைப் பார்த்த போதும் எனது கண் முன்னே அந்த முஸ்லீம் பெரியவர் தான் முதலிலே தோன்றினார். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது என்னை நோக்கிப் பலர் ரிசாத் பதியுதீன் தானே முஸ்லீம்களுக்கு இருக்கிறார் என்று சொல்வதும் எனக்குக் கேட்கிறது. ரிசாத் பதியுதீன் என்ன செய்கிறார், யாருக்காகச் செய்கிறார் என்பதனை நான் கவனத்தில் எடுக்கப் போவதில்லை. அவர் செய்வது பிழையாகவேயும் இருக்கட்டும். தமிழ் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலும், வடமாகாணத்தில் வாழும் பெரும்பான்மை சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற வகையிலும் இந்த முஸ்லீம் பெரியவரின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியது எமது பொறுப்பு. எமது அரசியல் சிந்தனை எவ்வாறு குறுகிய தமிழ்த் தேசியவாதத்தினுள் சிக்கிப் போய் இருக்கிறது என்பதற்கு அந்த முஸ்லீம் பெரியவரின் கேள்வி ஒரு எடுத்துக்காட்டு.\nவடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டிலே வாழும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் ஏன் பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் சில தரப்புக்களுக்குக்கும் (காணாமற் போனோர் தொடர்பான விடயங்கள்) பொதுவான பிரச்சினைகள் சிலவற்றினைத் தமிழ்த் தேசியவாதம் என்ற வில்லையினூடாக சமூகத்துக்கும் மக்களுக்கும் முன்வைப்பது மிகவும் அபாயகரமான செயற்பாடு. இதனால் சமூகங்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொள்ளப் போவது இல்லை. சமூகங்கள் மேலும் துருவப்படும் நிலைமையினையே இது உருவாக்கும். இதனையே எழுக தமிழ் (பெயரிலேயே தெரிகிறது இந்த அரசியல்) என்ற நாளை நடைபெறப் போகும் நிகழ்வு செய்யப் போகிறது. இது அரசு எவ்வாறு தனது அடக்குமுறைகளைப் பல தரப்பட்ட வழிகளிலே மேற்கொள்கிறது என்பதனை மறைக்கும் ஒரு செயற்பாடு. இது எமது விடுதலைச் சிந்தனையின் போ��ாமைகளையே வெளிக்காட்டுகிறது.\nஎழுக தமிழ்ப் பேரணியிலே பல நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன: காணாமற் போனோர் தொடர்பாக, பௌத்த மயமாக்கம் தொடர்பாக, இராணுவ மயமாக்கம், நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக, சமஸ்டித் தீர்வு தொடர்பாக - ஆனால் இவை எல்லாவற்றினையும் ஒரு குறுகிய தமிழ்த் தேசியவாத நிகழ்ச்சிநிரலின் ஊடாக ஏற்பாட்டாளர்கள் முன்வைப்பதனை நாம் இங்கு நோக்க வேண்டும்.\nஇந்தியாவிலே தலித்துக்கள் முஸ்லீம்கள், கிறீஸ்தவர்கள், பழங்குடி மக்கள் போன்றோருக்கு எதிராகச் செயற்படும் விஸ்வஹிந்து பரிசத் போன்ற தீவிரமான இந்துத்துவ பாசிச சிந்தனையினைப் பிரதிபலிக்கும் அமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இந்துத்துவத்தினைத் தனது ஆசிரியர் தலையங்களிலே கக்கி எழுதும் வலம்புரிப் பத்திரிகை, 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஐ.நா. போர்க்குற்ற அறிக்கையிலே அரசினாலும் இராணுவத்தினராலும் மட்டும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களைப் பற்றிய பகுதிகளை மட்டும் (அதனுடைய அர்த்தம் விடுதலைப் புலிகள் பற்றியவற்றை அல்ல) தாம் வரவேற்பதாக அறிக்கை வெளியிட்ட, கடந்த காலம் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் சுயவிமர்ச்னம் எதனையும் முன்வைப்பதனை ஊக்குவிக்காத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், இலங்கையின் வரலாற்றினையும், இலங்கையிலே தமிழ் அடையாளம் தோன்றிய முறை பற்றியும் எந்த விதமான புரிதல் இல்லாமல் தமிழர்கள் வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு தேசமாகவும், வடகிழக்கினைத் தாயகமாகவும் கொண்டிருக்கிறார்கள் எனப் பிரசாரங்களில் ஈடுபடுவோரும், அறிக்கைகள் வெளியிடுவோரும், சர்வேதச சக்திகள் தமது நவதாராளவாத, நவ காலனித்துவ நலன்களை முன்னிறுத்தி எமது பிரச்சினைகளைக் கையாள்கிறார்கள் என்பதனைப் பற்றிப் புரிதல் அற்ற வகையில் சர்வதேசமே எமக்கு விடுதலையைத் தரும் என்று சொல்வோரும் இந்தப் பேரணியினை ஏற்பாடு செய்வதிலே முன்னணியில் இருக்கிறார்கள். இந்தப் பேரணி குறித்தும், இதனை ஏற்பாடு செய்வோரின் அபாயகரமான அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம்.\nஎழுக தமிழ்ப் பேரணியிலே முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகளின் நியாயப்பாடுகளை நாம் ஏற்றேயாக வேண்டும். இது தொடர்பான அரசியல் முன்னெடுப்புக்களையும், போராட்டங்களையும் சிறுபான்மையினர் மத்தியிலும், நாடு பூராவும் உள்ள இடதுசாரி முற்போக்கு சக்திகள் முன்னெடுக்க வேண்டும். இதனுடைய அர்த்தம் இடதுசாரிகள் எதுவும் செய்யவில்லை என்பது அல்ல. (உதாரணம் அண்மையில் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் அரசியற் கைதிகளின் விடுதலை பற்றி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள்). மாறாக நாம் மேலும் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எமது மௌனமும் செயற்றிறன் குறைவும் அபாயகரமான, குறுகிய தேசியவாதத்தினை முன்னெடுக்கும் சக்திகளும், இனங்களுக்கு இடையில் பிளவுகளைக் கூர்மைப்படுத்த முயலும் சக்திகளும் அரசியல் வலுப்பெறுவதனையே ஊக்குவிக்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2020/01/blog-post_95.html", "date_download": "2021-08-02T10:16:33Z", "digest": "sha1:2OTOHV3GPCE2KDBRZNPJMQIJCZCG7YXE", "length": 4771, "nlines": 51, "source_domain": "www.yarlsports.com", "title": "சம்பியனாகியது நெல்லியடி மத்திய கல்லூரி - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > சம்பியனாகியது நெல்லியடி மத்திய கல்லூரி\nசம்பியனாகியது நெல்லியடி மத்திய கல்லூரி\nயாழ் உதைபந்தாட்ட லீக் அனுமதியுடன்\nயாழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் இறுதியில் மன்னார் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலய அணியினை 0-1 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி.\nசிறப்பான போட்டியில் பங்குபற்றிய இரு அணி வீரர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lanka2020.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-08-02T09:44:07Z", "digest": "sha1:IXXVUJ4ENG3RNUHXUBVISFMT5B23EATX", "length": 15105, "nlines": 94, "source_domain": "lanka2020.com", "title": "இலங்கை பிரஜைகளை விரைவில் அழைத்து வர ஜனாதிபதி தீர்மானம் - லங்கா2020 Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nHome இலங்கை இலங்கை பிரஜைகளை விரைவில் அழைத்து வர ஜனாதிபதி தீர்மானம்\nஇலங்கை பிரஜைகளை விரைவில் அழைத்து வர ஜனாதிபதி தீர்மானம்\nகொரோனா தொற்று அபாயம் காரணமாக சவுதி அரேபியாவில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.\nCOVID – 19 அபாயம் காரணமாக நிர்க்கதியான இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் உள்ள சுமார் 150 காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஅவர்களை அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கைக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇதற்கமைய, 2 விமானங்களை சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.\nCOVID – 19 பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயலணியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார்.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதார சேவையின் உயர் அதிகாரிகள் பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.\nமுப்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட 72 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலர் அடுத்த 2 நாட்களில் வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.\nஇதற்கமைய, நாடு திரும்பவுள்ள இலங்கையர்களை குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…\nவிஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை\nமன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஅசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.சைவ உணவுதான் உடலுக்கு...\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nவவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுவவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக...\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை மன்னாரை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் இன்று அதிகாலை 2.10...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…\nஇலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில்...\nபெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்\nபுகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல்,...\nவிஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை\nஉலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார்.விஷ உணவை...\nமன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…\nமன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் குறித்த வீட்டில் திடீரென தீப்...\nஇலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…\nஇலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...\nவவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…\nவவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...\nதிருகோணமலை-குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நபர்\nதிருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத்...\nஅசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nநகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…\nஇத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/darbar-review-in-tamil", "date_download": "2021-08-02T08:50:38Z", "digest": "sha1:U6GTVQX2YFRNBK4CF2QAZQYPJT7DUJMY", "length": 14487, "nlines": 87, "source_domain": "www.cinibook.com", "title": "Darbar movie review in Tamil", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பல தடைகளை தாண்டி தற்போது வெளிவந்துள்ள தர்பார் படத்தின் திரைவிமர்சனத்தை பார்ப்போம். தர்பார் படத்தில் ரஜினி மிகவும் இளமையாகவும் தனது பழைய ஸ்டைலிலும் நடித்துள்ளது அவரது ரசிகர்கள் பட்டாளங்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nமும்பை சிட்டி போலீஸ் கமிஷ்னரான ரஜினிகாந்த், பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ளுவது, வெட்டி வீழ்த்துவது என்று வெறிப்பிடித்தவர் போல ரவுடிகளை வேட்டையாடுகிறார். இதனால், மனித உரிமை கமிஷன் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க அவர்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டும் ரஜினியின் அதிரடியைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைய, அவரது மகள் நிவேதா தாமாஸ் இறந்ததில் இருந்து தான், அவர் இப்படி மாறியதும், தனது மகள் கொலைக்கு பின்னால் இருக்கும் ரவுடியை தேடி தான், இந்த வெறித்தன வேட்டையை நடத்துகிறார், என்பது தெரிய வருகிறது. அவரது மகள் நிவேதா தாமாஸ் எப்படி இறந்தார், அவரது கொலைக்கு பின்னால் இருக்கும் ரவுடி யார், அவரை ரஜினி கண்டுபிடித்து பழி தீர்த்தாரா, இல்லையா என்பது தான் படத்தின் கதை.\nரஜினி என்றால் மாஸ் மற்றும் ஸ்டைல், அதை ரசிகர்களிடம் எப்படி சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும், என்பதில் மிக கவனமாக இருந்திருக்கும் இயக்குநர், படத்தின் முதல் பாதியை ரஜினி ரசிகர்களுடன் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில், எண்டர்டெயின்மெண்டாக நகர்த்தி சென்றாலும், இரண்டாம் பாதியில் மெயின் வில்லன் எண்ட்ரிக்குப் பிறகு சற்று தடுமாறியிருக்கிறார். பொதுவாக ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் ஹீரோவுக்கு நிகராக வில்லன் கதாப்பாத்திரம் இருப்பதோடு, ஹீரோவை எப்படி ரசிக்கிறோமோ அதுபோல் வில்லனையும் ரசிப்போம். ஆனால், இதில் சுனில் ஷெட்டி அப்படி ஒரு வில்லனாக இல்லாமல் போனது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. இருந்தாலும், படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டும், பண்டிகைக்கான ஒரு படமாக இருக்க வேண்டும், குறிப்பாக பேமிலி ஆடியன்ஸுக்கான படமாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். அதனால், மும்பை சிட்டியை கதைக்களமா�� வைத்தாலும், வன்முறை இல்லாமல் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்.\nரஜினி மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமாஸ், செண்டிமெண்ட் காட்சிகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பான பங்காற்றியிருக்கிறார்.\nயோகி பாபுவின் நகைச்சுவை பல இடங்களில் சிரிக்க வைக்கிறது. அதிலும் காமெடி என்ற பெயரில், வாய்க்கு வந்ததை எல்லாம் தாறுமாறாக பேசி கடுப்பேற்றாமல், அடக்கி வாசித்திருக்கும் யோகி பாபுவின் டைமிங் வசனங்கள் அனைத்தும் சிரிப்பு வெடிதான். கிடைக்கும் கேப்பில் எல்லாம் ரஜினியை கலாய்க்க, அதற்கு அவர் “உன்ன வச்சிக்கிறேன்…” என்று சொல்லும் இடங்களில் எல்லாம், தியேட்டரே அதிர்கிறது. வில்லனாக நடித்திருக்கும் சுனில் ஷெட்டி, தனது வேலையை கச்சிதமாக செய்திருந்தாலும், அவரது வேலை ரசிகர்களை கவரும் விதத்தில் இல்லை. அதே சமயம், அவரது கதாப்பாத்திரம் அறிமுகமானவுடன் படத்தின் ட்விஸ்ட்டே உடைந்து விடுவதால், வில்லன் வேடம் பலம் இல்லாமல் போய்விடுகிறது.\nஅனிருத்தின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகமாகவும், பின்னணி இசை மாஸாகவும் இருக்கிறது. சில இடங்களில் ‘பேட்ட’ படத்தை நினைவுப்படுத்துவது போலவும் இசை அமைந்திருக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக இருப்பதோடு, கதாப்பாத்திரங்களும் அழகாக இருக்கிறார்கள். குறிப்பாக ரஜினியை ரொம்ப இளமையாக காட்டியிருக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு மரணம் தான் சரியான தண்டனை, என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி என்ற மாஸான ஹீரோ மூலம் ஸ்டைலாகவும், பொழுதுபோக்காகவும், அதே சமயம் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.\nசினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம் என்றாலும், அதில் சமூகத்திற்கு தேவையானதை பாடமாக அல்லாமல், அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான நல்ல கமர்ஷியல் படமாக கொடுக்கலாம் என்பதை தொடர்ந்து நிரூபித்து வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இந்த முறையும் அதை நிரூபித்திருக்கிறார்.\nமொத்தத்தில், ரஜினிகாந்தை மீண்டும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கும் இந்த ‘தர்பார்’, பண்டிகை காலங்களில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஃபர்பெக்ட்டான பொழுதுபோக்கு படமாகவும் இருக்கிறது.\nNext story தர்பார் டும் டும் முழு வீடியோ பாடல்\nPrevious story மா��்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-\nதர்பார் டும் டும் முழு வீடியோ பாடல்\nதெறிக்கவிட்ட சூரரைப் போற்று டீஸர்\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nபுதிய கெட்டப்பில் விஜய்சேதுபதி….கடைசி விவசாயி படத்தில்…\nஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் தேனீர்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nமீரா மிதுன் அரைகுறை ஆடைகளுடன் ஆடும் ஆட்டத்தை பாருங்கள்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/electronic-evidence-in-absence-of-certification-under-section-65-b-cctv-footage-cannot-be-admitted-in-evidence-however-section-65-b-does-not-bar-dock-evidence-under-section-9-conduct-evidence-und/", "date_download": "2021-08-02T08:54:31Z", "digest": "sha1:NS3XRHALYMTDPFGJJEJTQSXD6BU6MYON", "length": 4372, "nlines": 56, "source_domain": "www.sekarreporter.com", "title": "Electronic evidence – In absence of certification under section 65-B CCTV footage cannot be admitted in evidence – However, Section 65-B does not bar dock evidence under section 9 conduct evidence under section 8 of the Act and evidence aliunde. (Madras)(DB)https://bit.ly/2WbDAA9 – SEKAR REPORTER", "raw_content": "\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/03/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-08-02T08:14:39Z", "digest": "sha1:2ZTVJXTXMJ4VN43OQWAJ75EV2LL4I2QZ", "length": 5337, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி? – EET TV", "raw_content": "\nரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்\nரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதாக சென்ற வருட இறுதியில் அறிவித்தது இந்தியா முழுவதும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nவிரைவில் அரசியல் கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிப்பார் என்ற எதிரிபார்ப்பு இருந்துவரும் நிலையில், சமீபத்தில் இமயமலைக்கு தன் ஆன்மீக பயணத்தை துவங்கினர் ரஜினி.\nரஜினியின் கட்சிக்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும்பணி தற்போது நடந்துவரும் நிலையில், விரைவில் ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழர்களை அடிமைப் படுத்த இவர்கள் குடும்பமே \nஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கானவர்களுக்கு தண்டிக்கப்படாதது, ஆபத்தானது எச்சரிக்கிறார் ஸ்டீவன் ரெப் ..\nரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறவும் : பிரிட்டன் பிரதமர் கெடு\nஒன்ராறியோவில் புதிதாக 218 பேருக்கு COVID-19 தொற்று, 2 பேர் உயிரிழப்பு\n இரண்டு வயதான தமிழ் சிறுவன் பலி\nதீவிரமாக பரவும் டெல்டா வைரஸ் – இலங்கையர்களுக்கு 3 தடுப்பூசிகள்\nரிஷாட்டின் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பெண்\nபுதிய அரசியல் மாற்றம் அவசியம்\nதுருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் புதிதாக 30,738 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,604 பேர் பலி\nஇமாசல பிரதேசம் – கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு, 37,582 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கானவர்களுக்கு தண்டிக்கப்படாதது, ஆபத்தானது எச்சரிக்கிறார் ஸ்டீவன் ரெப் ..\nரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறவும் : பிரிட்டன் பிரதமர் கெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2021-08-02T09:03:22Z", "digest": "sha1:HNK2IYPLIY2OEVDEB4OIGMPZ7D5OS2Q4", "length": 5974, "nlines": 66, "source_domain": "eettv.com", "title": "எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தன் விலகுவது நல்லது! – மனோ கணேசன் – EET TV", "raw_content": "\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தன் விலகுவது நல்லது\nபுதிய அரசமைப்புத் தொடர்பான பணிகளை ஆரம்பிக்க முடியாவிடின், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகுவதே நல்லது என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில், சிங்களத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி, வெளியிட்ட டுவீட்களிலேயே, இக்கருத்தை அவர் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள், தமிழ் மக்களின் பிரச்சினை அன்று. தமிழ் மக்களின் முன்னுரிமைப் பட்டியலில், இனப்பிரச்சினையே முதலிடம் வகிக்கிறது. புதிய அரசமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லையென்றால், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி, வெறுமனே ஒரு பக்க வாத்தியம் தான். புதிய அரசமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, சம்பந்தன் இராஜினாமா செய்தல் நலம். அதன் பிறகும் தொடர்ந்தால், அது பக்கவாத்திய ஊதல் தான். ஈழக் கோரிக்கையை, இரா. சம்பந்தன் கைவிட்டமையை, இலங்கையின் தெற்குப் பகுதி புரிந்து கொள்ளவில்லை என்பதோடு, அதை மதிக்கவுமில்லை எனத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு சோ தான் காரணம்…..\nஈழத்தமிழர் விவகாரத்தில் பொதுவாக்கெடுப்பு சாத்தியமா\nஒன்ராறியோவில் புதிதாக 218 பேருக்கு COVID-19 தொற்று, 2 பேர் உயிரிழப்பு\n இரண்டு வயதான தமிழ் சிறுவன் பலி\nதீவிரமாக பரவும் டெல்டா வைரஸ் – இலங்கையர்களுக்கு 3 தடுப்பூசிகள்\nரிஷாட்டின் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பெண்\nபுதிய அரசியல் மாற்றம் அவசியம்\nதுருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் புதிதாக 30,738 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,604 பேர் பலி\nஇமாசல பிரதேசம் – கனமழை மற்��ும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு, 37,582 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு சோ தான் காரணம்…..\nஈழத்தமிழர் விவகாரத்தில் பொதுவாக்கெடுப்பு சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guidetoislam.com/ta/videos/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-7615", "date_download": "2021-08-02T08:12:54Z", "digest": "sha1:H4XXUGMNRXZAR4Q2MMNYFYGWVJKKTCH4", "length": 9970, "nlines": 196, "source_domain": "guidetoislam.com", "title": "ரமழானில் பெண்களுக்குரிய சட்டங்கள் ரமழானில் பெண்களுக்குரிய சட்டங்கள் - Videos", "raw_content": "\nகாரணமின்றி நோன்பை விடுவதற்கான தண்டனை\nநோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nரமழான் மாதத்தின் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nகடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு\nநோன்பும் அதன் சட்ட திட்டங்களும்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது\nதுல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 02\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01\nஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்\nநீங்கள் என்ன தேடுகிறீர்கள் என எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை\nரமழானில் பெண்களுக்குரிய சட்டங்கள் - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nஇஸ்லாத்தின் சர்வ தேசத் தூது\nஇஸ்லாத்தை அறிவோம். (வண்ணப் படங்களில் விஞ்ஞான நுட்பங்கள்\nலாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nபெருமை - பகுதி 3\nபெருமை - பகுதி 2\nகடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு\nபுத்தகங்கள், கட்டுரைகள், அட்டைகள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை உங்கள் முக��கியத்துவம் கருதி காண்பிப்பதற்கு குக்கீகளை இவ் இணையத்தளம் பயன்படுத்துகிறது\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள், மற்றும் அல்குர்ஆன் பற்றியும் அறிந்துகொள்ள \"இஸ்லாத்தின் வழிகாட்டி\" அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது\nஉங்களை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில் இருங்கள்\nமின்னஞ்சல் முகவரி [email protected]\nமன்னிக்கவும், ‘பிடித்தவை’ பகுதியில் சேர்க்க நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைய அல்லது பதிவு செய்ய கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் Sign in", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.thinnai.com/?p=20305252", "date_download": "2021-08-02T08:31:44Z", "digest": "sha1:VZBDA2HOM2DRRRTMC5KPHUKOPMOZRETY", "length": 48277, "nlines": 161, "source_domain": "old.thinnai.com", "title": "கடிதங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\nமே மாதம் 23 ஆம் தேதி, 2003\nஅன்புள்ள திண்ணை இணைய ஆசிரியர் அவர்களுக்கு,\nகடந்த திண்ணையில் இதழில் ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரைக்கு சி. ஜெயபாரதன். கனடா பதிலளித்திருந்தார்கள்.\nஅவர் சொன்ன விளக்கங்களில் சில குறைபாடுகள் தெரிகின்றன. அவை கீழே வருமாறு:\n1. செர்நேபிள் அணுஉலை விபத்துக்குக் காரணம் மனிதத் தவறுதான் என்று சொல்லியிருக்கிறார் (முதல் விளக்கம்). அப்படிப்பட்ட மனிதத் தவறு கல்பாக்கத்திலும் கூடங்குளத்திலும் நிகழ்ந்தால் அதேபோல மரணங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக நான் கருதுவது தவறாகுமா \n2. சேர்நேபிள் அணுஉலையின் கட்டுமான வடிவமைப்பைப் போலவே தான் கூடங்குளத்தில் கட்டப்படும் அணுஉலையின் கட்டுமான வடிவமைப்பு என்று சொல்லப்படுகிறது. உண்மையா \n3. கூடங்குளத்தில் அணுஉலை கட்ட அப்பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தபோது, மக்களின் போராட்டத் தன்மையைத் தணிக்க ‘இங்கு அணுஉலை கட்டப்படுமானால் உங்களுக்கு (அந்தப் பகுதி மக்களுக்கு) வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ‘ என்று அரசு அறிவித்து (ஒரு உத்தியைக் கையாண்டு) போராட்டத்தைத் தணித்ததாக ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. அணுஉலையால் பாதிப்பில்லையெனில் இப்படிப்பட்ட உத்தியை அரசு ஏன் பயன்படுத்தவேண்டும் \n4. உணுஉலையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கப்பொருட்களின் கழிவுகள் எங்கே போடப்படுகிறது அல்லது சேமிக்கப்படுகிறது என்ற கேள்விகளுக்கு அரசுகளிடமிருந்து பதில் கிடைப்பதேயில்லை.\n5. நமது அரசுகள் விபத்து நடந்த பி��கு வெளுயிடும் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற விவரங்கள் பட்டியலலில் நமக்கு எப்போதுமே நம்பத்தன்மை கிடையாது.\nசென்னை தி. முரளி செர்நோபிள், கூடங்குள அணுமின் உலைகளைப் பற்றிச் சென்ற வாரத்தில் சில வினாக்களை எழுப்பி யிருந்தார். திண்ணை அறிவியல் பகுதியில் மார்ச் 23, 2003 இல் வெளி வந்த, ‘கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் ‘ என்னும் எனது கட்டுரையில் அவரது பல வினாக்களுக்குப் படங்களுடன் பதிலைக் காணலாம்.\n1. கேள்வி: செர்நோபிள் அணுமின் உலையில் நேர்ந்த மனிதத் தவறுகள், கூடங்குள அணுமின் உலையிலும் நிகழ்ந்தால், அதே போல மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா \n செர்நோபிள் அணு உலை வெடிப்புக்குக் காரணம் வெறும் மனிதத் தவறுகள் மட்டும் அல்ல அவற்றுடன் பழுதுகளும், பாதுகாப்பு முறிவுகளும் சேர்ந்து கொண்டு உண்டாக்கிய கோர நிகழ்ச்சி அது அவற்றுடன் பழுதுகளும், பாதுகாப்பு முறிவுகளும் சேர்ந்து கொண்டு உண்டாக்கிய கோர நிகழ்ச்சி அது [அடுத்தடுத்த மனிதத் தவறுகள் +மூல டிசைன் பழுதுகள் +துண்டிக்கப் பட்ட வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் +மிதவாக்கி திரள்கரிக் கட்டிகளின் உஷ்ணம் (Moderator, Graphite Blocks Temperature) +கோட்டை அரண் இல்லாமை]. வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் துண்டிக்கப் பட்ட பிறகும், செர்நோபிள் அணு உலை, டிசைன் பழுதால் இயங்கிக் கொண்டிருந்தது [அடுத்தடுத்த மனிதத் தவறுகள் +மூல டிசைன் பழுதுகள் +துண்டிக்கப் பட்ட வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் +மிதவாக்கி திரள்கரிக் கட்டிகளின் உஷ்ணம் (Moderator, Graphite Blocks Temperature) +கோட்டை அரண் இல்லாமை]. வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் துண்டிக்கப் பட்ட பிறகும், செர்நோபிள் அணு உலை, டிசைன் பழுதால் இயங்கிக் கொண்டிருந்தது செர்நோபிள் அணு உலைக்குக் கோட்டை அரண் தேவை யில்லை என்று புறக்கணித்தது, ரஷ்ய எஞ்சினியர்கள் செய்த மாபெரும் இமாலயத் தவறு\nகூடங்குள ரஷ்ய அணுமின் உலை VVER-1000 மாடல் V-392 முற்றிலும் வேறுபட்டது நீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது. கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்க இரட்டைக் கான்கிரீட் அரண்கள் [உள்ளரண் மட்டும் 4 அடித் தடிப்பு] அமைக்கப் பட்டுள்ளன. அத்துடன் வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் துண்டிக்கப் பட்டால், அணு உலையை இயக்க முடியாது நீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது. கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்க இரட்டைக் கான்கிரீட் அரண்கள் [உள்ளரண் மட்டும் 4 அடித் தடிப்பு] அமைக்கப் பட்டுள்ளன. அத்துடன் வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் துண்டிக்கப் பட்டால், அணு உலையை இயக்க முடியாது அணு உலைத் தானாக நின்று விடும்\n2. கேள்வி: செர்நோபிள் அணு உலையின் கட்டுமான வடிவமைப்பைப் போலவே தான் கூடங்குள வடிவமைப்பும் உள்ளதா \n செர்நோபிள் (1960-1970) ஆண்டுகளில் குறைந்த நிதியில் டிசைன் செய்யப் பட்ட பிற்போக்கான முதல் பிறப்பு [First Generation] அணு உலை ஆனால் கூடங்குளத்தில் நிறுவப்படும் VVER-1000 மாடல் V-392, (1990-2001) ஆண்டுகளில் மேம்படுத்தப் பட்ட மூன்றாம் பிறப்பு [Third Generation] நவீன அணு உலை. இரண்டின் கட்டுமான அமைப்புகள் முற்றிலும் மாறுபாட்டவை.\n3. கேள்வி: கூடங்குள அணுமின் உலைகள் வட்டார மக்களின் வேலை வாய்ப்புக்களுக்காகக் கட்டப்படுகிறது என்று அரசு ஓர் உத்தியைக் கையாண்டு, அப்பகுதி மக்களின் பலத்த எதிர்ப்பைத் தணித்தது\nஎனது பதில்: அணுமின் உலைகளைத் திட்டமிடுபவர், அவற்றை அமைக்க இடத்தைத் தேர்ந்தெடுப்பவர், ஐந்தாண்டுக்குப் பின் காணாமல் போகும் வாய்வீச்சு அரசியல் வாதிகள் அல்ல நிலையான பதவி வகிக்கும் அணு மின்சக்தித் துறை வல்லுநர்கள் [Dept of Atomic Energy, Nuclear Power Corporation of India Ltd], மற்றும் அணுசக்தி அமைச்சகத்தின் நிபுணர்கள் [Ministry of Atomic Energy] கூடி முடிவு செய்யும் நுணுக்கமான ஆய்வுப் பணிகள் அவை\nபாரத மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பது ஒரு வரப் பிரசாதம் மனிதனின் முதல் தேவை வயிற்றுக்கு உணவு மனிதனின் முதல் தேவை வயிற்றுக்கு உணவு அடுத்த தேவை மூளைக்கு அறிவு அடுத்த தேவை மூளைக்கு அறிவு முதலிரண்டு தேவைகளையும் நிச்சயம் பூர்த்தி செய்யும், கூடங்குளத்தில் உருவாகும் அணுமின் நிலையம்\n தெற்கு தேய்கிறது ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில் அடுக்கு மொழியில் முழக்கி ஆர்ப்பாட்டம் செய்தார் அது அந்தக் காலம் பாரதத்திலே மிகப் பெரிய அணுமின் திட்டம் கூடங்குளத்தில் கட்ட முடிவான போது, அணு உலை எதிர்ப்பாளிகள் யாவரும் ஒன்று திரண்டு அதை நிறுத்த இப்போது முற்படுபடுவது விந்தையாக இல்லையா \nஆனால் வேலை வாய்ப்புக்கு மட்டும் அணுமின் உலைகள் கட்டப்படுவ தில்லை அவற்றின் முதல் பயன், முக்கியப் பயன் மின்சக்தி உற்பத்தி. ஒரு பில்லியன் எண்ணிக்கையைத் தாண்டி இந்தியாவில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது அவற்றின் முதல் பயன், முக்கியப் பயன�� மின்சக்தி உற்பத்தி. ஒரு பில்லியன் எண்ணிக்கையைத் தாண்டி இந்தியாவில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது அவரது வீட்டு விளக்குகள் எதிர்காலத்தில் எப்படி ஒளி பெறும் அவரது வீட்டு விளக்குகள் எதிர்காலத்தில் எப்படி ஒளி பெறும் தேவைப்படும் நூற்றுக் கணக்கான தொழிற்சாலை யந்திரங்களளுக்கு எங்கிருந்து இராப் பகலாய் மின்சாரம் கிடைக்கும் தேவைப்படும் நூற்றுக் கணக்கான தொழிற்சாலை யந்திரங்களளுக்கு எங்கிருந்து இராப் பகலாய் மின்சாரம் கிடைக்கும் அணுசக்தித் துறை 2020 ஆண்டுகளுக்குள் தற்போதைய 2300 MWe ஆற்றல் மின்சக்தி யிலிருந்து, பத்து மடங்கு பெருக்கி 20,000 MWe ஆற்றலை உற்பத்தி செய்யத் திட்ட மிட்டுள்ளது. மனிதருக்கு உயிர் எப்படி முக்கிய மானதோ, அதுபோல் ஒரு நாட்டுக்குத் தேவையானது மின்சக்தி.\n4. கேள்வி: அணு உலைகளில் எவ்வாறு கதிரியக்கக் கழிவுகள் சேமிக்கப் படுகின்றன \nஎனது பதில்: அணு உலைகளில் தீய்ந்த எரிக்கோல்களைப் பாதுகாப்பாய் சேமிக்க முதல் சேமிப்பு நீர்த் தடாகம் [Primary Storage Pool], இரண்டாம் சேமிப்பு நீர்த் தடாகம் [Secondary Storage Pool], அடுத்து நீண்ட காலம் வைக்க நிரந்தரச் சேமிப்பு [Permanent Storage] என்று மூன்று நிலைச் சேமிப்பு முறைகள் கையாளப்படுகின்றன. சில அணு உலைகளில் இரண்டாம் நீர்த் தடாகம் இல்லாமல் முதல் தடாகம், நிரந்தரச் சேமிப்பு ஆகிய இரண்டு மட்டும் இருக்கும்.\nதீய்ந்த எரிக்கோல்களில் எஞ்சிய பிளக்காத யுரேனியம், உண்டான புளுடோனியம், கழிவுகள் ஆகியவை யாவும் 13 அடி ஆழ நீர்த் தடாகத்தின் கீழ் மூன்று அல்லது நான்கு மாதங்கள் மிஞ்சிய வெப்பம் தணிய சேமிக்கப்பட வேண்டும். அடுத்து இரண்டாம் நீர்த் தடாகத்தில் குறைந்தது இரண்டாண்டுகள் வைக்கப் பட்டு 95% வெப்பம் நீக்கப் பட்டு, மூடிய கான்கிரீட் கலன்களில் நிரந்தரமாகச் சேமிக்கப்பட்டு பூமிக்கு அடியில் குறைந்தது நூறடி ஆழத்தில் புதைக்கப்படும்.\nதிண்ணை இதழில் கோபிகிருஷ்ணன் பற்றிய ஜெயமோகன் அஞ்சலிக் குறிப்பில் அவரது வயது 53 என்று உள்ளது. அமரந்தா வீட்டில் நடக்கும் கோபியின் இரங்கல் கூட்டம் பற்றிய செய்தியில் அவரது வயது 58 என்று உள்ளது. தினமணி இரங்கல் செய்தியில் 57 என்று உள்ளது. நம்பகமான அவரது பிறந்த வருடமும் தேதியும் :\nஒரே இதழில் இருவேறு விபரங்கள்.\nஒரு அனுபவமும் ஒரு அஞ்சலியும்\nகோபி கிருஷ்ணனின் மறைவை ‘திண்ணை ‘ மூல��் அறிந்தேன். கடந்த வாரம் ஒரு மாலைநேரம் சுரங்க ரயிலுக்காக காத்திருந்த பொழுது, கறுப்பினப் பெண்பிள்ளை ஒருத்தி ஹலோ சொல்லி என் கையைப் பிடித்துக் குலுக்கினாள். ‘கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் நண்பனே ‘ என்று பிடித்த என் கையை குலுக்கியபடியே கூறிய அந்தச் சிறுமி, மந்திர உச்சாடனம்போல மிகக் காம்பீர்யமான குரலில் செபிக்கத் தொடங்கினாள். என் அருகே ரயிலுக்குக் காத்திருந்த சக யாத்திரிகர்கள் அத்தனை பேரும் மெல்ல மெல்ல எழுந்து விலகினர். என்னால் விலக முடியாதவாறு என் கரம் அவள் வசம் இன்னும் இருந்தது. ‘கர்த்தர் வந்துவிட்டார். இஸ்ராயேலுக்கும், மற்றும் மூன்றாமுலக நாடுகளுக்கும் அருள் பாலிப்பார். ஆனால் கண்டிப்பாக அமெரிக்காவுக்கு அருளமாட்டார் ‘ என்று திரும்பத் திரும்பக் கூறினாள். எனக்கு அவளைப் பிடித்துக் கொண்டது. அமெரிக்காவுக்கு கர்த்தர் வரவே மாட்டார். அப்படி வந்தாலும் ஒரு இயந்திரத் துப்பாக்கியை ஏந்தியே வருவார்(சேகுவேராவின் பிரதிமை) என எண்ணியிருந்த எனக்கு இந்தச் சிறுமியின் சங்கற்பம் மிக்கப்பிடித்தது. எனினும் வலு சீக்கிரத்திலேயே அவளது பிடிக்குள்ளிருந்து கையை விடுவித்துக் கொண்டு விலகிப் போய் விட்டேன். ஆனால் இதே இடத்தில் எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் இருந்திருந்தால் இந்தச் சிறுமிக்கு Hyper Religiosity என்ற நோய்க்குறி இருக்கிறது எனத் தெளிந்துகொண்டு தன்னாலான உளவியல் அறிவுரைப் பணியில் முனைந்திருப்பார் என எண்ணிக் கொண்டேன். ஆனால் கோபி கிருஷ்ணன் இன்றில்லை. அவரது சிறுகதைகள் இருக்கின்றன. அவற்றுள் தமிழுக்குப் புதிதான உளவியல்பார்வை கொண்ட கவனங்கள் இருக்கின்றன. திண்ணை வாசகர்கள் அவற்றைப் படிக்கவேண்டும். அதுதான் அவரது வாழ்வுக்கு அர்த்தமாக அமையும்…..\nஎனக்குப் படிக்கக்கிடைத்த அவரது நூல்கள்…\n(1) உள்ளேயிருந்து சில குரல்கள்.\n(3) மானிட வாழ்வு தரும் ஆனந்தம்\n(4) சமூகப்பணி, அ-சமூகப்பணி, எதிர் சமூகப்பணி (சஃபியுடன் கூட்டாக எழுதிய கட்டுரை நூல். முன்றில் வெளியீடு)\nநான் படிக்காத வேறு நூல்களையும். அவர் எழுதி வெளியிட்டிருக்கலாம். அல்லது எழுதி வெளியிடாமல் பல படைப்புகள் இருக்கலாம். அவரது நண்பர்கள் இனிமேல் வெளியிடுவார்கள் என்றே நம்புகிறேன். அதுதான் அவருக்கு சமர்ப்பணமும்கூட.\nபெயரின் முன்னெழுத்து குறித்து சின்னகருப்பன் இப்ப���ி புலம்பவேண்டியதில்லை.தாயின் பெயரின் முதலெழுத்தினைப் போடுவதால் பண்பாட்டின் வேர்கள் அழியுமெனில் அவை அழிவது நன்று. ஏன் இது தேவை என்பதற்கான காரணங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன.அவர் அதனைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.\nஜெயமோகன் உளவியல்சிகிச்சை குறித்த விமர்சனங்களை சரியாகப் புரிந்துகொண்டுள்ளாரா என்று சந்தேகம் எழுகிறது. அவர் முன்வைத்துள்ள தீர்வுகளையும், ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் சந்திப்பு உரையாடல்களின் தொகுப்பு நூல்களில், குறிப்பாக Commentaries On Living ல், கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளவற்றையும் ஒப்பிட்டால் ஜெயமோகன் முன் வைத்துள்ள கருத்துக்களின் பலவீனம் தெளிவாகும்.உள்வியல் சிகிச்சை குறித்த தன் விமர்சனங்களை அவ்ர் தனிக்க்ட்டுரையாக முன்வைத்தால் அதை விவாதிக்கலாம்.ஆனால் தமிழ் சிறு/இணைய பத்திரிகைகளில் ஒரு எழுத்தாளரை கேவலமாக சித்திரிக்க R.D.Laing, Oliver Sacks போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.எத்தகைய புரிதல்களின் அடிப்படையில் இவை முன்வைக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை.ஜெயபாரதன் முன்வைத்துள்ள கருத்துக்கள் பற்றி விரைவில் எழுதுகிறேன் , அல்லது குறைந்தபட்சம் ஒரு பட்டியல் (நூல்கள்,கட்டுரைகள்) தருகிறேன்.\nஇந்தியா டூடே மீதான விமர்சங்கள் சரியானவை. ஆனால் இலக்கிய கூட்டங்கள் நடத்துவோர் அக்கூட்டங்களை மதுபான கடைகள்/பார்களில் நடத்தினால் அதில் எல்லோராலும், குறிப்பாக பெண்கள் பங்கேற்க இயலாது. பிரமீள் போன்ற ஒரு படைப்பாளியைப் பற்றிய ஒரு கூட்டம் பலரும் பங்கேற்கும் விதத்தில் இருக்க வேண்டும். நாம் ஜீன் பால் சார்த்த்ரை நினைவில் கொள்ளவது அவர் மதுபான கடைகளில் விவாதித்தார் என்பதற்காக அல்ல, அவரது எழுத்துக்கள்,செயல்பாடுகளுக்காக.\nபறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு\nவாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4\n‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘\nஎவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது \nஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\nமண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.\nதனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து\nஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.ம��தவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)\nஇலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு\nபறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு\nவாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4\n‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘\nஎவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது \nஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\nமண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.\nதனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து\nஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)\nஇலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/category/pbt-tm/", "date_download": "2021-08-02T09:59:01Z", "digest": "sha1:OBP4BDYIUCTIVNLO5ZLZSPIRSKGV7VIN", "length": 12021, "nlines": 100, "source_domain": "selangorkini.my", "title": "PBT Archives - Selangorkini தமிழ்", "raw_content": "\n97 விழுக்காட்டு கோல சிலாங்கூர் மக்கள் தடுப்பூசி பெற்றனர்- மந்திரி புசார்\nகோல சிலாங்கூர், ஆக 1- சுமார் 97 விழுக்காட்டு கோல சிலாங்கூர் மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சு வெளியிட்ட தரவுகளின்...\nஇன்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 17,150 பேர் பாதிப்பு- சிலாங்கூரில் 6,326 சம்பவங்கள் பதிவு\nஷா ஆலம், ஆக 1– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று நேற்று அதிகபட்சமாக 17,786 சம்பவங்களைப் பதிவு செய்த வேளையில் இன்று அந்த எண்ணிக்கை 17,150 ஆக குறைந்த து. சிலாங்கூரில் நேற்று 6,400...\nநான்கு தொகுதிகளின் கூட்டு முயற்சியில் 4,000 பேருக்கு தடுப்பூசி\nபெட்டாலிங் ஜெயா, ஜூலை 31– சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் நான்கு ���ொகுதிகளின் கூட்டு முயற்சியில் 4,000 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இங்குள்ள டிரோப்பிகானா கார்டன்ஸ் மால் தடுப்பூசி மையத்தில்...\nகிள்ளான் மருத்துவமனை கூடுதல் நிபுணர்கள், உபகரணங்கள் கிடைக்கும்-சார்ல்ஸ் சந்தியாகோ நம்பிக்கை\nகிள்ளான், ஜூலை 31- கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை கூடுதல் மருத்துவ நிபுணர்களையும் ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் சாதனம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் விரைவில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை அம்மருத்துவனைக்கு...\nசவூதி அரோபியா வழங்கிய மருத்துவ சாதனங்கள் மலேசியா வந்தடைந்தன\nகோலாலம்பூர், ஜூலை 30- மன்னர் சல்மான் மனிதாபிமான மற்றும் நிவாரண உதவி மையத்தின் வாயிலாக மலேசியாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சாதனங்கள் இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தன. நாடு எதிர்நோக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை...\nநாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ளது- ஐ.ஜி.பி.\nகோலாலம்பூர், ஜூலை 30- நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக போலீஸ் துறை பொது மக்களுக்கு உறுதியளித்துள்ளது. நாட்டில் நிலைமை பாதுகாப்பாக இருப்பதை போலீசார் தொடர்ந்து உறுதி செய்து வருவர்...\nசெலாயாங் நகராண்மைக் கழகத் தலைவராக முகமது யாஸிட் நியமனம்\nஷா ஆலம், ஜூலை 30- செலாயாங் நகராண்மைக் கழகத்தின் (எம்.பி.எஸ்.) புதிய தலைவராக முகமது யாஸிட் சைரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் ஜூலை 19 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த செவ்வாய்க்...\nசெல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி வாங்க 6,200 நிறுவனங்கள் ஆர்வம்\nஷா ஆலம், ஜூலை 30– செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் தொழில் துறைக்கான தடுப்பூசித் திட்டத்தின் வழி தடுப்பூசி கொள்முதல் செய்ய 6,200 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. உற்பத்தி மற்றும் சேவைத்...\nஅந்நியத் தொழிலாளர்களுக்கு பிரத்தியேக தடுப்பூசி மையங்கள்-சி.ஐ.டி.எஃப். பரிசீலனை\nகோலாலம்பூர், ஜூலை 30- தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக அந்நியத் தொழிலாளர்களுக்கு மொழி வாரியாக பிரத்தியேக தடுப்புசி செலுத்தும் மையங்களை ஏற்படுததுவதற்கான சாத்தியத்தை சி.ஐ.டி.எஃப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசித் திட்ட சிறப்பு பணிக்குழு ஆராய்ந���து...\nசிலாங்கூர் சுகாதார இலாகாவுக்கு 7,000 சுய மதிப்பீட்டு கருவிகள்- மாநில அரசு வழங்கியது\nஷா ஆலம், ஜூலை 30- சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவுக்கு 7,000 கோவிட்- 19 சுய மதிப்பீட்டு கருவிகள் அடங்கிய பெட்டிகளை மாநில அரசு வழங்கியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகள் தங்கள் உடல்...\nதொழிலாளர்கள் தடுப்பூசி பெறுவதில் செல்வேக்ஸ் திட்டம் பேருதவி-டத்தோ தெங்\nஷா ஆலம், ஜலை 30– சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் மாநில மக்கள் தடுப்பூசி பெறுவதை விரைவுபடுத்தி நோய்த் தொற்றிலிருந்து விடுபட்ட சமுதாயத்தை உருவாக்குவதில் துணை புரிகிறது. உதாரணத்திற்கு, செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எனப்படும் ...\nதடுப்பூசி மையங்களுக்குச் செல்ல வெ. 20 கட்டணக் கழிவு- 8,500 பேர் விண்ணப்பம்\nஷா ஆலம், ஜூலை 29- தடுப்பூசி பெறுவதற்கு பி.பி.வி. எனப்படும் தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல கிராப் வாடகை கார்களை பயன்படுத்துவோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவை வழங்கும் சிலாங்கூர் அரசின் திட்டத்திற்கு நேற்று வரை...\nமீடியா சிலாங்கூர் சென். பெர்ஹட், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் அதிகாரத்துவ செய்தி ஸ்தாபனம் சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி புசார் இன்கோப்ரேட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது சிலாங்கூர் கினி டிவி , இணையத்தலம் மற்றும் மலாய், ஆங்கிலம் ,சீனம், தமிழ் பத்திரிக்கைகளையும் பிரசுரித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2013-04-05-17-01-25/", "date_download": "2021-08-02T09:19:06Z", "digest": "sha1:ZGLZJJ55XUFZNWLPWHXTC6BPPOOG6IF7", "length": 7399, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "டெல்லியில் பாஜக தேசிய செயலாளர் அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டார் |", "raw_content": "\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க உத்தரவிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை.\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்\nடெல்லியில் பாஜக தேசிய செயலாளர் அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டார்\nடெல்லியில் பாஜக தேசிய செயலாளர் வாணிதிரிபாதி குடிபோதையில் இருந்த அடையாளம் தெரியாத சிலரால் நேற்று இரவு தாக்கப்பட்டசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுடிபோதையில் இருந்த அடையாளம்தெரியாத 5 பேர்கொண்ட கும்பல் வாணி திரிபாதியை தாக்கியுள்ளனர். காவல் துறைக்கு தகவல்கிடைத்து வந்து பார்ப்பதற்குள், தாக்கியவர்கள் தப்பிச்சென்றனர்.\nபிறகு வாணிதிரிபாதியை காவலர்கள் பத்திரமாக அனுப்பிவைத்தனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nமகாராஷ்டிராவில் பாஜக உள்ளூர் தலைவர் உள்பட 5ந்து பேர்…\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை\nபா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nராமநாதபுரம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது\nநடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் கிடையாது\nஇப்போது எனது புரிதல் மாறியுள்ளது\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவ� ...\nராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறு ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-08-02T08:20:32Z", "digest": "sha1:24PJO2CO26EJ3Y26YQWR4HRFL3E6IMXI", "length": 12797, "nlines": 66, "source_domain": "totamil.com", "title": "வர்த்தகர்களுக்கு முகத்தில் இன்னொரு பஞ்ச் - ToTamil.com", "raw_content": "\nவர்த்தகர்களுக்கு முகத்தில் இன்னொரு பஞ்ச்\nபூட்டுதல் இழப்புகளிலிருந்து மீளலாம் என்ற நம்பிக்கையில் வணிகர்கள், மற்றொரு பணிநிறுத்தத்துடன் பிடிக்க வேண்டியிருக்கும்\nநகரத்தில் COVID-19 வழக்குகள் திடீரென ஏற்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக சந்தைகளை மூடுவதற்கான தில்லி அரசாங்கத்தின் முடிவு பூட்டப்பட்டதால் ஏற்பட்ட சில இழப்புகளை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையை இழக்கும் என்று வர்த்தகர்கள் மற்றும் சந்தைக் கழகங்கள் அஞ்சுகின்றன. தவிர, இது தற்போதைய திருமண பருவத்தில் வணிகத்தை பாதிக்கும்.\nஅதே நேரத்தில், திருமணங்களில் பங்கேற்பாளர்களைக் கட்டுப்படுத்தும் முடிவு குடும்பங்கள் மற்றும் விருந்து மண்டப ஆபரேட்டர்களின் ஆவிகளைக் குறைத்துவிட்டது.\n“கொனாட் பிளேஸில் வர்த்தகம் தொடங்கத் தொடங்கியது, இப்போது அது மீண்டும் பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது. நோயைக் கட்டுப்படுத்த தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுப்பதில் நான் முழுமையாக இருக்கிறேன், ஆனால் சமூக தொலைதூர விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதே தீர்வு. கடைகளை மூடவில்லை ”என்று புது தில்லி வர்த்தகர்கள் சங்கத்தின் (என்டிடிஏ) தலைவர் அதுல் பார்கவா கூறினார்.\nசாண்ட்னி ச k க் சர்வ் வியாபர் மண்டலத்தின் தலைவர் சஞ்சய் பார்கவா கூறுகையில், பூட்டப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகளை கூட உடைக்க வணிகர்களுக்கு ஒரு சிறிய சாளரம் உள்ளது. “தி [wedding] சீசன் ஜனவரி வரை உள்ளது. சாந்தினி ச k க் போன்ற பெரிய சந்தைகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகளுக்கு வரும்போது அமலாக்கமின்மைதான் பிரச்சினை, அங்கு சமூக-தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றுவது சாத்தியமற்றது, ”என்று அவர் கூறினார்.\nவைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஒரு எளிய தீர்வாக ஒரு பூட்டுதல் இருந்தது, ஆனால் அது கடைக்காரர்களுக்கு அவ்வாறு இல்லை என்று கிழக்கு டெல்லியின் லக்ஷ்மி நகரைச் சேர்ந்த ஒரு வணிகர் அனில் குப்தா தெரிவித்தார்.\n“நாங்கள் ஏற்கனவே சமூக தொலைதூர வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறோம். அரசாங்கத்திற்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர்கள் விதிமுறைகளை மீறியதற்காக பிஸியான சந்தைகளையும் சிறந்த கடை உரிமையாளர்களையும் தோராயமாக சரிபார்க்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.\nசி.ஆர் பூங்காவில், பூட்டுதல் விதிக்கப்படாமல், கடைக்காரர்கள் இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர். மளிகை விற்பனையாளரான சரஸ்வதி ஹால்டர் கூறினார்: “பூட்டப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டதும��, அரிசி போன்ற தானியங்களை சேமித்து வைக்க முடிவு செய்தோம். கடைசியாக பூட்டுதல் விதிக்கப்பட்டபோது, ​​அனைவருக்கும் தெரியாமல் பிடிபட்டது மற்றும் பொருட்கள் சில நிமிடங்களில் அலமாரிகளில் இருந்து பறந்து கொண்டிருந்தன. இந்த நேரத்தில், நாங்கள் முடிந்தவரை தயாராக இருக்க விரும்புகிறோம். ”\nநவம்பர் 25 ஆம் தேதி மேற்கு டெல்லியில் ஒரு விருந்தில் திருமணம் செய்து கொண்ட வடமேற்கு டெல்லியில் வசிக்கும் பூஜா கபூர், தனது குடும்பத்தினர் கவலைப்படுவதாகக் கூறினார்.\n“இது ஒரு பதட்டமான நிலைமை. முதலமைச்சர் அது போன்ற எண்களுடன் விளையாட முடியாது. அவர் முதலில் தளர்வு கொடுத்திருக்கக்கூடாது. திருமண கூட்டங்கள் மட்டுமே பரவுவதற்கு பங்களிப்பதில்லை. பொது சுகாதாரத்தில் அக்கறை இருந்தால், அவர் அனைத்து உணவகங்கள், சினிமா அரங்குகள், மத இடங்கள் மற்றும் பிற சமூக சேகரிப்பு இடங்களை வெறுமனே மூட வேண்டும், ”என்று அவர் கூறினார்.\nமுன்னதாக அனுமதிக்கப்பட்டபடி குடும்பம் 200 பேரை அழைத்துள்ளது, அவர்கள் வர வேண்டாம் என்று சொல்வது வெட்கமாக இருக்கும் என்று அவர் கூறினார்.\nஎஃப்.என்.பி கார்டனின் எம்.டி. விகாஸ் குட்குடியா கூறுகையில், வரவிருக்கும் நாட்களில் 11 இடங்களில் தலா 10-12 திருமணங்களை நடத்த அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், ஆனால் இப்போது மாற்றங்கள் அல்லது தாமதங்களை எதிர்பார்க்கிறார்கள். “மே மாதத்தில் திருமணம் செய்து கொள்ளவிருந்த பல வாடிக்கையாளர்கள் தங்கள் திருமணத்தை நவம்பர் முதல் டிசம்பர் வரை தள்ளினர். அதை மீண்டும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க அவர்கள் மீண்டும் பார்க்கிறார்கள். இந்த ரத்து மற்றும் மாற்றங்கள் காரணமாக, அதனுடன் தொடர்புடைய அனைத்து அலகுகளும் பாதிக்கப்பட்டுள்ளன, ”என்று திரு குட்குடியா கூறினார்.\n(நிகில் எம் பாபு, ஹேமானி பண்டாரி, ஜெய்தீப் தியோ பஞ்ச், ஷின்ஜினி கோஷ், சவுரப் திரிவேதி மற்றும் ஜடின் ஆனந்த் ஆகியோரின் உள்ளீடுகளுடன்)\nPrevious Post:டைஸ் மூலம், இந்தியர்கள் இப்போது தங்கள் சொந்த வீட்டில் கன்யே வெஸ்ட் அல்லது ராகவ் மீட்டில் உடன் ரேவ் செய்யலாம்\nNext Post:ஆப்பிள் மியூசிக், ஸ்பாடிஃபை, யூடியூப் மியூசிக் ஆகியவற்றிற்கான விரைவான அணுகலுக்கான உலாவியில் பிளேயர் அம்சத்தை ஓபரா ஒருங்கிணைக்கிறது\nபார்க்க: மகாராஷ்டிராவில் முதல் ஜிகா வைரஸ் வழக்கு; காரணங்கள் மற்றும் அறிகுறிகள் விளக்கப்பட்டுள்ளன\nயோகி ஆதித்யநாத் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெறுகிறார்\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி “திடீர்” பாதுகாப்பை மோசமாக்கியதற்காக அமெரிக்கா திரும்பப் பெறுவதாக குற்றம் சாட்டினார்\nமுற்போக்கான ஊதிய மாதிரி நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து 57 துப்புரவு நிறுவனங்கள் நிதி அபராதங்களை வழங்கின\nசீனா டெல்டா வெடிப்புக்கு எதிராக போராடும் போது கோவிட் -19 பூட்டுதலின் கீழ் மில்லியன் கணக்கானவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AF/", "date_download": "2021-08-02T10:03:35Z", "digest": "sha1:GBXEFV3KZPJ7LMZFWTQGZXYSCGY7N3HU", "length": 2656, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் | ஜனநேசன்", "raw_content": "\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்\nபிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 5 வருடத்தில் ரூ.15.97…\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்\nபிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், 2015 ஏப்ரல் முதல் ரூ.15.97 லட்சம் கோடி…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில்…\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?ajaxcatalog=true&dir=desc&mode=list&order=position&p=5", "date_download": "2021-08-02T09:51:03Z", "digest": "sha1:E3KZLA3QPSAZS2XS4BT5LKNY5NUW5PUU", "length": 11596, "nlines": 332, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nபெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க\nபெரியார் சொன்னார் கலைஞர் செய்கிறார்\nபெரியார் கொட்டிய போர் முரசு\nதந்தை பெரியாரும் டாக்டர் எம்.ஜி.ஆரும்\nஊடகங்கள் பார்வையில் பெரியார் திரைப்படம்\nதமிழ் வா��ின் விடிவெள்ளி தந்தை பெரியார்\nபுரட்சியாளர் பெரியார் (ராமையா பதிப்பகம்)\nயுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்\nதவத்திரு தர்மதீர்த்த அடிகளார் (1)\nமுனைவர் கருவூர் கன்னல் (1)\nமுனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (1)\nபெரியார் ஆவணக் காப்பகம் (1)\nநாம் தமிழர் பதிப்பகம் (3)\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (50)\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் (4)\nதமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் (5)\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்)\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/49124/", "date_download": "2021-08-02T08:54:48Z", "digest": "sha1:G6LEKZMX6LPWULH2TNFBKQZ7KIGX6BNA", "length": 7382, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "இன, மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு ஆப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇன, மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு ஆப்பு\nஇன, மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் குழுக்கள் மற்றும் தனிநபர்களை கைது செய்ய அரசாங்கத்தினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅமுல்படுத்துமாறு, நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.\nஇதனடிப்படையில் இனவாத, மதவாத கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்படுவதோடு அப்பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளே இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.\n2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் மூன்றாம் சரத்தின் பிரகாரம், எந்தவொரு நபரும் பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறைக்கு தூண்டுதலாக அமைந்த தேசிய, இன, அல்லது மத வெறுப்பை ஊக்குவிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசித்தாண்டியிலுள்ள ‘சிகண்டி பவுண்டேசன்” அமைப���பினர் கல்விக் கலைப்பண்பாடுகளை வளர்ப்பதில் ஆர்வம். ஜி.ஸ்ரீநேசன் பா.உ\nNext article“ஆரொடு நோகேன்” நாடக ஆற்றுகையும் சந்திரகுமாரும்.\nசுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தனது சொற்ப இலாபத்திற்காக சமூகத்திற்கு துரோகம் இழைக்கிறார்\nகருணா அம்மானின் கட்சியும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்.\nஇயல்புநிலை திரும்பிய பின்னரே பொதுத்தேர்தல். NFGG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2021/07/riythvika-reminisces-working-with_22.html", "date_download": "2021-08-02T09:15:46Z", "digest": "sha1:SJNBW6YIW4W6M6A3KVVDXYB2ERRIFZ34", "length": 14738, "nlines": 169, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: RIYTHVIKA REMINISCES WORKING WITH", "raw_content": "\nNetflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில் இயக்குநர்அரவிந்த் சுவாமியுடன் பணிபுரிந்தது, அற்புத அனுபவம் - நடிகை ரித்விகா \nதென்னிந்திய நடிகையும், பிக் பாஸ் வெற்றியாளருமான நடிகை ரித்விகா, Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமியுடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார். \"நவரசா\" ஆந்தாலஜி திரைப்படம், இந்திய தொன்மை விதிகளாக கூறப்படும், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறுஅழகான கதைகளை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள \"ரௌத்திரம்\" கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். நவரசங்களுல் கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது. \"நவராசா\" 2021 ஆகஸ்ட் 6 ஆம் தேதி Netflix இல் உலகளவில் திரையிடப்படவுள்ளது.\nஅரவிந்த் சுவாமியுடன் இணைந்து பணிபுரிந்த, தனது அனுபவத்தைப் பற்றி ரித்விகா கூறியதாவது...,\nஅரவிந்த் சுவாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது, என் வாழ்வில் மிகபெருமையயான தருணம். ஒரு நடிகராக இல்லாமல் இயக்குநராக அவரை அருகில் இருந்து பார்த்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு காட்சியை உருவாக்குவதில் அனைத்து தொழில் நுட்ப சாத்தியங்களையும் பயன் படுத்துவதில், தேர்ந்தவராக இருந்தார். சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும் அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது. இப்படத்திற்காக காட்சிகள் மற்றும் வசனங்களை ஒத்திகை செய்யும் ஆன்லைன் கூட்டங்களில் கலந்துகொண்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது என்றார்.\nமணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபாகேசன் இணைந்து நிறுவிய Justickets நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, \"நவராசா\" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.\nNetflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.\nடான்ஸிங்க் ரோஸ்\" பாராட்டு மழையில்\n\"ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற தமிழக அரசு\nஇந்திய சுதந்திரதின 75வது ஆண்டு\nநடிகர் அருண் விஜய் - இயக்குநர் ஹரி\nஆதி நடிக்கும் \"கிளாப்\" திரைப்படத்தின் இசை உரிமையை ...\n\"நவரசா\" ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் பிரியதர்ஷன்\nகாயமுற்ற நிலையிலும், துணிந்து படப்ப்டிபில் பங்கேற்ற\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது\n2020-ஒலிம்பிக் விளையாட்டில் பங்கெடுக்கும் இந்திய வ...\nநெகிழி மாசுபாட்டை கட்டுப்படுத்த பெருநகர சென்னை\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர்\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி\nவேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப்பள்ளியில் நான்காம்\nஒன்பது உணர்வுகள், ஒன்பது பார்வைகள், ஒன்பது\nதிரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான்\nவிஷால் ஆர்யா நடிக்கும் எனிமி படத்தின் டிரைலரை\nகுடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே\nஇயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா\n\"இன்மை\" உங்களை ஆச்சர்யப்படுத்தும் - நடிகர் சித்தார...\nபிரபுதேவா நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://theharvestworld.org/live-steam-ith/vila-elumbu-meaning-in-tamil-3432cd", "date_download": "2021-08-02T08:07:21Z", "digest": "sha1:DSMZITXAOB5CARGRNSIBEMLUHJOS6SZG", "length": 143167, "nlines": 68, "source_domain": "theharvestworld.org", "title": "vila elumbu meaning in tamil", "raw_content": "\n வயதானவர்களுக்கு எலும்புத் தேய்��ானம் வருவது இயற்கை. கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. Usage Frequency: 1 பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். Google's free service instantly translates words, phrases, and web pages between English and over 100 other languages. : 2. a bad person in a movie, book, etc. Quality: என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். Reply. Tamil 4 Health. ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும். மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the TAMIL … மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும். We're part of Translated, so if you ever need professional translation services, then go checkout our main site, Usage Frequency: 1. காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும். Quality: உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். Posted by bhaskaran on ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப. enakkum antha marinthinai anuppivaiyungal. Quality: baddy definition: 1. a bad person in a film, book, etc. Quality: எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது. Use this free dictionary to get the definition of friend in Tamil and also the definition of friend in English. சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். Usage Frequency: 1 Usage Frequency: 1 Contextual translation of \"elumbu theyumanam\" into English. எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். Reference: Anonymous, Last Update: 2016-07-08 Reference: Anonymous. OneIndia Tamil (available via ThatsTamil.com) is a live tamil Portal covers tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil, kollywood Cinema News in Tamil. எலும்ப பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. villa definition: 1. a house, usually in the countryside or near the sea, especially in southern Europe, and often…. Reference: Anonymous, Last Update: 2020-04-15 Usage Frequency: 1 Reference: Anonymous, Last Update: 2019-12-21 Quality: அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்��ு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும். See more ideas about tamil kavithaigal, photo album quote, tamil love quotes. Menu. Reference: Anonymous, Last Update: 2019-01-08 We use cookies to enhance your experience. Reference: Anonymous, Last Update: 2018-07-07 உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். house-warming - tamil meaning of புதுமனை புகுவிழா. Usage Frequency: 1 எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. Reference: Anonymous, Last Update: 2018-10-08 Hammer Head Shark in Tamil is known as உழவாரச் சுறா. Quality: Quality: Human translations with examples: skeleton, in tamil, vila maram, vila elumbu, kathani vila, elumbu majjai. கால்சியம் குறைபாடு ஏற்படும். thOl elumbu see narambu peeLai thundru kOzhai: The skin, the bones, the pus, the nerves, the mucus in the eyes, the congested phlegm, pongu sOri pinda mAy urundu vadivAna: and the gushing blood have all rolled into some kind of mould to form this shape of the body; Nov 16, 2020 - Explore Rama Mukundan's board \"Tamil Kavithaigal\", followed by 463 people on Pinterest. Users Tagged this page as: இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது. Quality: Human translations with examples: skeleton, in tamil, elumbu javu, vila elumbu, elumbu majjai, kaarai elumbu. Quality: MyMemory is the world's largest Translation Memory. Contextual translation of \"vila elumbu\" into English. பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. Reference: Anonymous, Last Update: 2017-11-05 Usage Frequency: 1 vile definition: 1. unpleasant, immoral, and unacceptable: 2. extremely unpleasant: 3. unpleasant, immoral, and…. Suggest a better translation அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம். Usage Frequency: 1 What's the Tamil translation of villa மறுமொழி . It is also called as Tamil Maruthuvam tips or Patti vaithiyam or Nattu maruthuvam or Siddha medicine or Tamil medicine or Siddha Vaithiyam or Chitha Maruthuvam in Tamil language. இதனால் தசையும் பலவீனம் அடையும். Buy Moottu Vali Elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam. Usage Frequency: 1 எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். Reference: Anonymous, Last Update: 2019-01-23 Contextual translation of \"vila elumbu in tamil\" into Tamil. VILLA meaning in tamil, VILLA pictures, VILLA pronunciation, VILLA translation,VILLA definition are included in the result of VILLA meaning in tamil at kitkatwords.com, a free online English tamil … Learn more. From: Machine Translation கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Tamil to English Translation tool includes online translation service, English text-to-speech service, English spell checking tool, on-screen keyboard for major languages, back translation, email client and much more. இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம். முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம். Reference: Anonymous, Last Update: 2015-01-09 Reply Delete. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக்குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. Quality: மெய்யெழுத்து பகுப்பு; க் : வல்லினம்: ங் : மெல்லினம்: ச் : வல்லினம்: ஞ் : மெல்� Like Like. அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். Reply Delete. பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். : . Usage Frequency: 1 இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. ஆசனவாயில் குடைச்சல் அதிகமாக இருக்கா மறுமொழி . It is also called as Tamil Maruthuvam tips or Patti vaithiyam or Nattu maruthuvam or Siddha medicine or Tamil medicine or Siddha Vaithiyam or Chitha Maruthuvam in Tamil language. இதனால் தசையும் பலவீனம் அடையும். Buy Moottu Vali Elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam. Usage Frequency: 1 எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். Reference: Anonymous, Last Update: 2019-01-23 Contextual translation of \"vila elumbu in tamil\" into Tamil. VILLA meaning in tamil, VILLA pictures, VILLA pronunciation, VILLA translation,VILLA definition are included in the result of VILLA meaning in tamil at kitkatwords.com, a free online English tamil … Learn more. From: Machine Translation கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Tamil to English Translation tool includes online translation service, English text-to-speech service, English spell checking tool, on-screen keyboard for major languages, back translation, email client and much more. இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம். முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம். Reference: Anonymous, Last Update: 2015-01-09 Reply Delete. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக்குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. Quality: மெய்யெழுத்து பகுப்பு; க் : வல்லினம்: ங் : மெல்லினம்: ச் : வல்லினம்: ஞ் : மெல்� Like Like. அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். Reply Delete. பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். : . Usage Frequency: 1 இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. ஆசனவாயில் குடைச்சல் அதிகமாக இருக்கா சனி பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� How to say villa in Tamil சனி பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� How to say villa in Tamil Reference: Anonymous, Last Update: 2016-06-29 காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். Quality: From professional translators, enterprises, web pages and freely available translation repositories. சமூக வலைத்தளம் . Themes; Plugins; Tutorials; weight loss Weight Loss. Trying to learn how to translate from the human translation examples. Reference: Anonymous, Last Update: 2018-08-18 சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். Villa Meaning in Tamil - Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி. Quality: மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்த��� கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். Quality: Quality: Quality: Quality: Reference: Anonymous, Last Update: 2020-06-09 EDITOR PICKS. Reference: Anonymous, Last Update: 2016-07-27 mikka nanri. பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். Replies. உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம். As you may know, millions of English speaking people in India and around the world are looking for English to Tamil online dictionary, So, here at IndiaDict, we proud to provide you the best and free English to Tamil dictionary here. உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும். இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். ‘The villa consisted of extensive grounds, a manor house and outbuildings.’ ‘The languid novel follows a fantastically rich American couple who hold court in villas across Europe.’ ‘It is, for all practical purposes, a modern city with all the amenities, including high-rise offices, expensive villas, restaurants, and … Usage Frequency: 1 நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும். ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். Usage Frequency: 1 villa - tamil meaning of நாட்டுப்புற மாஷீகை தோட்டஞ் சூழ்ந்த மனை நகர்ப்புற மனை. English Tamil Dictionary Online. As: baddy definition: 1. a bad person in a movie, book, etc Tutorials ; weight weight Reference: Anonymous, Last Update: 2016-06-29 காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். Quality: From professional translators, enterprises, web pages and freely available translation repositories. சமூக வலைத்தளம் . Themes; Plugins; Tutorials; weight loss Weight Loss. Trying to learn how to translate from the human translation examples. Reference: Anonymous, Last Update: 2018-08-18 சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். Villa Meaning in Tamil - Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி. Quality: மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். Quality: Quality: Quality: Quality: Reference: Anonymous, Last Update: 2020-06-09 EDITOR PICKS. Reference: Anonymous, Last Update: 2016-07-27 mikka nanri. பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். Replies. உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம். As you may know, millions of English speaking people in India and around the world are looking for English to Tamil online dictionary, So, here at IndiaDict, we proud to provide you the best and free English to Tamil dictionary here. உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும். இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். ‘The villa consisted of extensive grounds, a manor house and outbuildings.’ ‘The languid novel follows a fantastically rich American couple who hold court in villas across Europe.’ ‘It is, for all practical purposes, a modern city with all the amenities, including high-rise offices, expensive villas, restaurants, and … Usage Frequency: 1 நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும். ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். Usage Frequency: 1 villa - tamil meaning of நாட்டுப்புற மாஷீகை தோட்டஞ் சூழ்ந்த மனை நகர்ப்புற மனை. English Tamil Dictionary Online. As: baddy definition: 1. a bad person in a movie, book, etc Tutorials ; weight weight By 463 people on Pinterest meaning in tamil கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் be Garfish, please have look. வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் Shark in tamil, elumbu majjai, kaarai elumbu எடுத்து இடுப்பில் தேய்த்தால் பெறலாம். ; jQuery ; Other ; Beauty tips ; constipation ; Contact ; About Home., photo album quote, tamil love quotes கால்சியம் தேவைப்படுகிறது விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி as By 463 people on Pinterest meaning in tamil கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் be Garfish, please have look. வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் Shark in tamil, elumbu majjai, kaarai elumbu எடுத்து இடுப்பில் தேய்த்தால் பெறலாம். ; jQuery ; Other ; Beauty tips ; constipation ; Contact ; About Home., photo album quote, tamil love quotes கால்சியம் தேவைப்படுகிறது விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி as பயிற்சி போதும் உடனடி நிவாரணம் koruthal in tamil 2013 at 7:42 முப a English word in less a... கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு தினமும்... Definition of friend in tamil is known as உழவாரச் சுறா வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் free பயிற்சி போதும் உடனடி நிவாரணம் koruthal in tamil 2013 at 7:42 முப a English word in less a... கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு தினமும்... Definition of friend in tamil is known as உழவாரச் சுறா வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் free சிகிச்சை செய்து கொள்ளலாம் வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வ���லைகளும் இதற்கு கைகொடுக்கும், ஆங்கிலம் சொல், in சிகிச்சை செய்து கொள்ளலாம் வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும், ஆங்கிலம் சொல், in Good information, many thanks, I believe Seela should be Garfish, please have a look க� By Nalam Pathippagam எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும் அக். காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் Moottu Vali elumbu Murivu tamil book authored and... எலும்பு உடைந்து விடும் and freely available translation repositories அதற்கு தகுந்த சிகிச்சை vila elumbu meaning in tamil கொள்ளலாம்: 2. extremely unpleasant: 3.,. வலிகள் நீங்கும் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட்.. 463 people on Pinterest translation repositories, phrases, and aligning the best domain-specific multilingual websites Plugins ; ; தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் buy Moottu Vali elumbu Murivu tamil authored... And freely available translation repositories, it was named as such மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி. A look நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது koruthal in tamil முழுமையாக கிடைக்கும் மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி... English word in less than a few seconds, vila elumbu vila elumbu meaning in tamil tamil - villa சொல்லின் தமிழ் பொருள் விளக்கம் தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் buy Moottu Vali elumbu Murivu tamil authored... And freely available translation repositories, it was named as such மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி. A look நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது koruthal in tamil முழுமையாக கிடைக்கும் மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி... English word in less than a few seconds, vila elumbu vila elumbu meaning in tamil tamil - villa சொல்லின் தமிழ் பொருள் விளக்கம் Freely available translation repositories a few seconds கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் தினமும் Freely available translation repositories a few seconds கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் தினமும் செய்து பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் translation Suggest a better translation Quality: from translators., web pages and freely available translation repositories, it was named as such villa meaning in,. Maram, vila elumbu, ஆங்கிலம் சொல், koruthal in tamil '' into.... ஆங்கிலம் தமிழ் அகராதி a bad person in a movie, book, etc இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் பெறலாம் On ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும் hoe a பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் செய்யும் போது எலும்புக்கு த���வையான தசைப்பகுதியில் பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் செய்யும் போது எலும்புக்கு தேவையான தசைப்பகுதியில் Definition of friend in tamil, samarasam in tamil, samarasam in tamil elumbu., web pages and freely available translation repositories, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம எடுத்து தோட்ட வேலைகளும் இதற்கு vila elumbu meaning in tamil செய்து கொள்ள வேண்டும் உடல் எடை குறையும் தாக்க வாய்ப்புள்ளது வயது முதல் மற்றும், ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் known as உழவாரச் சுறா vila elumbu meaning in tamil... Tutorials ; weight loss vile definition: 1. a bad person in a movie, book, etc எடுத்து... மனை நகர்ப்புற மனை users Tagged this vila elumbu meaning in tamil as: baddy definition: unpleasant. தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் page as: baddy definition: 1. bad... போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கலந்து கொள்ளவும் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும் fish resembles the Indian hoe, was. Named as such புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் Home உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் theyumanam '' tamil... Translation of `` vila elumbu, elumbu majjai, kaarai elumbu உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தசைப்பகுதியில், ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் known as உழவாரச் சுறா vila elumbu meaning in tamil... Tutorials ; weight loss vile definition: 1. a bad person in a movie, book, etc எடுத்து... மனை நகர்ப்புற மனை users Tagged this vila elumbu meaning in tamil as: baddy definition: unpleasant. தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் page as: baddy definition: 1. bad... போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கலந்து கொள்ளவும் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும் fish resembles the Indian hoe, was. Named as such புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் Home உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் theyumanam '' tamil... Translation of `` vila elumbu, elumbu majjai, kaarai elumbu உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தசைப்பகுதியில் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது Meieluthukkal ) 18 எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது Meieluthukkal ) 18 Tamil Kavithaigal, photo album quote, tamil love quotes immoral, and… ; tips... புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் ��ுரப்பு குறையும் tamil Meieluthukkal ) தமிழ் மெய்யெழுத்துக்கள் ( tamil Meieluthukkal ) மெய்யெழுத்துக்கள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் Kavithaigal '', by Elumbu theyumanam '' into English அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா this free dictionary to get the definition of friend tamil. கூட எலும்பு உடைந்து விடும் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி, தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து.. சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம் டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து கொள்ளவும் Elumbu theyumanam '' into English அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா this free dictionary to get the definition of friend tamil. கூட எலும்பு உடைந்து விடும் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி, தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து.. சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம் டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து கொள்ளவும் Is a hoe, a gardening tool used to cut grass 3. unpleasant, immoral, and web and அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் உணவில். உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் நீங்கும் Of a English word in less than a few seconds பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் குறையும் Of a English word in less than a few seconds பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் குறையும் விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும், samarasam in tamil, samarasam in,... எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா constipation Contact... எடுத்து கொள்ள வேண்டும் உடனடி நிவாரணம் வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் look விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும், samarasam in tamil, samarasam in,... எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா constipation Contact... எடுத்து கொள்ள வேண்டும் உடனடி நிவாரணம் வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் look வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் Head of the fish resembles the Indian hoe, it was named such. வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் to visit this site you agree to our use of cookies is known as உழவாரச் சுறா புரோஜெஸ்ட்ரான்... ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் `` tamil Kavithaigal, photo album quote, love வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் Head of the fish resembles the Indian hoe, it was named such. வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் to visit this site you agree to our use of cookies is known as உழவாரச் சுறா புரோஜெஸ்ட்ரான்... ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் `` tamil Kavithaigal, photo album quote, love தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான எடுத்துக். கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும், கருவேப்பிலை, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் கொதித்த... மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் at 7:42 முப எலும்பு முறிவு ஏற்படும் காய்ச்சிய தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான எடுத்துக். கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும், கருவேப்பிலை, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் கொதித்த... மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் at 7:42 முப எலும்பு முறிவு ஏற்படும் காய்ச்சிய குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க. குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க. எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும், and web pages and freely available translation repositories 2. bad. சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து கை. Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி a bad person in a film, book,.. இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் aligning the best domain-specific multilingual websites தோட்ட வேலைகளும் இதற்கு.. செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் நாம் உண்ணும் உணவில் உள்ள உடல் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும், and web pages and freely available translation repositories 2. bad. சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து கை. Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி a bad person in a film, book,.. இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் aligning the best domain-specific multilingual websites தோட்ட வேலைகளும் இதற்கு.. செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் நாம் உண்ணும் உணவில் உள்ள உடல் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா எலும்பு முறிவு ஏற்படும் அரைத்துக் கொள்ளவும் Head of fish ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா எலும்பு முறிவு ஏற்படும் அரைத்துக் கொள்ளவும் Head of fish சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் people on Pinterest வலு சேர்க்கிறது எனவே இந்த பெண்கள் சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் people on Pinterest வலு சேர்க்கிறது எனவே இந்த பெண்கள்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி தங்கள். Extremely unpleasant: 3. unpleasant, immoral, and… இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் உணவுகள். A film, vila elumbu meaning in tamil, etc, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் samarasam... எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது this site you agree to our use cookies... Javu, vila elumbu in tamil and also the definition of friend in tamil, samarasam in,: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி தங்கள். Extremely unpleasant: 3. unpleasant, immoral, and… இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் உணவுகள். A film, vila elumbu meaning in tamil, etc, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் samarasam... எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது this site you agree to our use cookies... Javu, vila elumbu in tamil and also the definition of friend in tamil, samarasam in, ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கொள்ளு, பருப்பு கேழ்வரகு..., கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் lets... Buy Moottu Vali elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் சத்து... செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் குறையும். கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் கிராம் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கொள்ளு, பருப்பு கேழ்வரகு..., கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் lets... Buy Moottu Vali elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் சத்து... செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் குறையும். கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் கிராம் By bhaskaran on ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப, photo album quote, tamil love quotes translates,... அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும் on Pinterest எடுத்துக் வேண்டும். தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும் செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் சாப்பிட்டு. மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் வழக்கப்படுத்திக்... இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� 7.... எடுத்து அரைத்து கொள்ளவும் வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் ��ை, கால் வலிகள் நீங்கும் Pathippagam... இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி jQuery ; ; By bhaskaran on ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப, photo album quote, tamil love quotes translates,... அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும் on Pinterest எடுத்துக் வேண்டும். தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும் செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் சாப்பிட்டு. மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் வழக்கப்படுத்திக்... இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� 7.... எடுத்து அரைத்து கொள்ளவும் வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும் Pathippagam... இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி jQuery ; ; 463 people on Pinterest வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் சாப்பிட்டு வந்தால் உடல் குறையும்... United Nations, and unacceptable: 2. a bad person in a movie,,. To our use of cookies வைத்து vila elumbu meaning in tamil சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள்.. க� 7 அக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும் use this free to... It has been created collecting TMs from the European Union and United Nations, and web and. இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம், கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் அளவு. உங்கள் க� 7 அக், book, etc வழக்கப்படுத்திக் கொள்ளலாம் '' into English சுரப்பு குறையும் சுறா 463 people on Pinterest வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் சாப்பிட்டு வந்தால் உடல் குறையும்... United Nations, and unacceptable: 2. a bad person in a movie,,. To our use of cookies வைத்து vila elumbu meaning in tamil சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள்.. க� 7 அக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும் use this free to... It has been created collecting TMs from the European Union and United Nations, and web and. இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் த��ய்த்தால் நிவாரணம் பெறலாம், கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் அளவு. உங்கள் க� 7 அக், book, etc வழக்கப்படுத்திக் கொள்ளலாம் '' into English சுரப்பு குறையும் சுறா காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம் and over Other காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம் and over Other\n வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. Usage Frequency: 1 பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். Google's free service instantly translates words, phrases, and web pages between English and over 100 other languages. : 2. a bad person in a movie, book, etc. Quality: என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். Reply. Tamil 4 Health. ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும். மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the TAMIL … மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும். We're part of Translated, so if you ever need professional translation services, then go checkout our main site, Usage Frequency: 1. காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும். Quality: உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். Posted by bhaskaran on ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப. enakkum antha marinthinai anuppivaiyungal. Quality: baddy definition: 1. a bad person in a film, book, etc. Quality: எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது. Use this free dictionary to get the definition of friend in Tamil and also the definition of friend in English. சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். Usage Frequency: 1 Usage Frequency: 1 Contextual translation of \"elumbu theyumanam\" into English. எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். Reference: Anonymous, Last Update: 2016-07-08 Reference: Anonymous. OneIndia Tamil (available via ThatsTamil.com) is a live tamil Portal covers tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil, kollywood Cinema News in Tamil. எலும்ப பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. villa definition: 1. a house, usually in the countryside or near the sea, especially in southern Europe, and often…. Reference: Anonymous, Last Update: 2020-04-15 Usage Frequency: 1 Reference: Anonymous, Last Update: 2019-12-21 Quality: அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும். See more ideas about tamil kavithaigal, photo album quote, tamil love quotes. Menu. Reference: Anonymous, Last Update: 2019-01-08 We use cookies to enhance your experience. Reference: Anonymous, Last Update: 2018-07-07 உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். house-warming - tamil meaning of புதுமனை புகுவிழா. Usage Frequency: 1 எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. Reference: Anonymous, Last Update: 2018-10-08 Hammer Head Shark in Tamil is known as உழவாரச் சுறா. Quality: Quality: Human translations with examples: skeleton, in tamil, vila maram, vila elumbu, kathani vila, elumbu majjai. கால்சியம் குறைபாடு ஏற்படும். thOl elumbu see narambu peeLai thundru kOzhai: The skin, the bones, the pus, the nerves, the mucus in the eyes, the congested phlegm, pongu sOri pinda mAy urundu vadivAna: and the gushing blood have all rolled into some kind of mould to form this shape of the body; Nov 16, 2020 - Explore Rama Mukundan's board \"Tamil Kavithaigal\", followed by 463 people on Pinterest. Users Tagged this page as: இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது. Quality: Human translations with examples: skeleton, in tamil, elumbu javu, vila elumbu, elumbu majjai, kaarai elumbu. Quality: MyMemory is the world's largest Translation Memory. Contextual translation of \"vila elumbu\" into English. பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. Reference: Anonymous, Last Update: 2017-11-05 Usage Frequency: 1 vile definition: 1. unpleasant, immoral, and unacceptable: 2. extremely unpleasant: 3. unpleasant, immoral, and…. Suggest a better translation அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். அதிவ���டயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம். Usage Frequency: 1 What's the Tamil translation of villa மறுமொழி . It is also called as Tamil Maruthuvam tips or Patti vaithiyam or Nattu maruthuvam or Siddha medicine or Tamil medicine or Siddha Vaithiyam or Chitha Maruthuvam in Tamil language. இதனால் தசையும் பலவீனம் அடையும். Buy Moottu Vali Elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam. Usage Frequency: 1 எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். Reference: Anonymous, Last Update: 2019-01-23 Contextual translation of \"vila elumbu in tamil\" into Tamil. VILLA meaning in tamil, VILLA pictures, VILLA pronunciation, VILLA translation,VILLA definition are included in the result of VILLA meaning in tamil at kitkatwords.com, a free online English tamil … Learn more. From: Machine Translation கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Tamil to English Translation tool includes online translation service, English text-to-speech service, English spell checking tool, on-screen keyboard for major languages, back translation, email client and much more. இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம். முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம். Reference: Anonymous, Last Update: 2015-01-09 Reply Delete. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக்குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. Quality: மெய்யெழுத்து பகுப்பு; க் : வல்லினம்: ங் : மெல்லினம்: ச் : வல்லினம்: ஞ் : மெல்� Like Like. அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். Reply Delete. பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். : . Usage Frequency: 1 இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. ஆசனவாயில் குடைச்சல் அதிகமாக இருக்கா மறுமொழி . It is also called as Tamil Maruthuvam tips or Patti vaithiyam or Nattu maruthuvam or Siddha medicine or Tamil medicine or Siddha Vaithiyam or Chitha Maruthuvam in Tamil language. இதனால் தசையும் பலவீனம் அடையும். Buy Moottu Vali Elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam. Usage Frequency: 1 எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். Reference: Anonymous, Last Update: 2019-01-23 Contextual translation of \"vila elumbu in tamil\" into Tamil. VILLA meaning in tamil, VILLA pictures, VILLA pronunciation, VILLA translation,VILLA definition are included in the result of VILLA meaning in tamil at kitkatwords.com, a free online English tamil … Learn more. From: Machine Translation கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Tamil to English Translation tool includes online translation service, English text-to-speech service, English spell checking tool, on-screen keyboard for major languages, back translation, email client and much more. இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம். முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம். Reference: Anonymous, Last Update: 2015-01-09 Reply Delete. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக்குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. Quality: மெய்யெழுத்து பகுப்பு; க் : வல்லினம்: ங் : மெல்லினம்: ச் : வல்லினம்: ஞ் : மெல்� Like Like. அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். Reply Delete. பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். : . Usage Frequency: 1 இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. ஆசனவாயில் குடைச்சல் அதிகமாக இருக்கா சனி பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� How to say villa in Tamil சனி பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� How to say villa in Tamil Reference: Anonymous, Last Update: 2016-06-29 காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்���ிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். Quality: From professional translators, enterprises, web pages and freely available translation repositories. சமூக வலைத்தளம் . Themes; Plugins; Tutorials; weight loss Weight Loss. Trying to learn how to translate from the human translation examples. Reference: Anonymous, Last Update: 2018-08-18 சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். Villa Meaning in Tamil - Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி. Quality: மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். Quality: Quality: Quality: Quality: Reference: Anonymous, Last Update: 2020-06-09 EDITOR PICKS. Reference: Anonymous, Last Update: 2016-07-27 mikka nanri. பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். Replies. உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம். As you may know, millions of English speaking people in India and around the world are looking for English to Tamil online dictionary, So, here at IndiaDict, we proud to provide you the best and free English to Tamil dictionary here. உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும். இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். ‘The villa consisted of extensive grounds, a manor house and outbuildings.’ ‘The languid novel follows a fantastically rich American couple who hold court in villas across Europe.’ ‘It is, for all practical purposes, a modern city with all the amenities, including high-rise offices, expensive villas, restaurants, and … Usage Frequency: 1 நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும். ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். Usage Frequency: 1 villa - tamil meaning of நாட்டுப்புற மாஷீகை தோட்டஞ் சூழ்ந்த மனை நகர்ப்புற மனை. English Tamil Dictionary Online. As: baddy definition: 1. a bad person in a movie, book, etc Tutorials ; weight weight Reference: Anonymous, Last Update: 2016-06-29 காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். Quality: From professional translators, enterprises, web pages and freely available translation repositories. சமூக வலைத்தளம் . Themes; Plugins; Tutorials; weight loss Weight Loss. Trying to learn how to translate from the human translation examples. Reference: Anonymous, Last Update: 2018-08-18 சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். Villa Meaning in Tamil - Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி. Quality: மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். Quality: Quality: Quality: Quality: Reference: Anonymous, Last Update: 2020-06-09 EDITOR PICKS. Reference: Anonymous, Last Update: 2016-07-27 mikka nanri. பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். Replies. உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம். As you may know, millions of English speaking people in India and around the world are looking for English to Tamil online dictionary, So, here at IndiaDict, we proud to provide you the best and free English to Tamil dictionary here. உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும். இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். ‘The villa consisted of extensive grounds, a manor house and outbuildings.’ ‘The languid novel follows a fantastically rich American couple who hold court in villas across Europe.’ ‘It is, for all practical purposes, a modern city with all the amenities, including high-rise offices, expensive villas, restaurants, and … Usage Frequency: 1 நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும். ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். Usage Frequency: 1 villa - tamil meaning of நாட்டுப்புற மாஷீகை தோட்டஞ் சூழ்ந்த மனை நகர்ப்புற மனை. English Tamil Dictionary Online. As: baddy definition: 1. a bad person in a movie, book, etc Tutorials ; weight weight By 463 people on Pinterest meaning in tamil கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் be Garfish, please have look. வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் Shark in tamil, elumbu majjai, kaarai elumbu எடுத்து இடுப்பில் தேய்த்தால் பெறலாம். ; jQuery ; Other ; Beauty tips ; constipation ; Contact ; About Home., photo album quote, tamil love quotes கால்சியம் தேவைப்படுகிறது விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி as By 463 people on Pinterest meaning in tamil கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் be Garfish, please have look. வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் Shark in tamil, elumbu majjai, kaarai elumbu எடுத்து இடுப்பில் தேய்த்தால் பெறலாம். ; jQuery ; Other ; Beauty tips ; constipation ; Contact ; About Home., photo album quote, tamil love quotes கால்சியம் தேவைப்படுகிறது விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி as பயிற்சி போதும் ��டனடி நிவாரணம் koruthal in tamil 2013 at 7:42 முப a English word in less a... கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு தினமும்... Definition of friend in tamil is known as உழவாரச் சுறா வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் free பயிற்சி போதும் உடனடி நிவாரணம் koruthal in tamil 2013 at 7:42 முப a English word in less a... கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு தினமும்... Definition of friend in tamil is known as உழவாரச் சுறா வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் free சிகிச்சை செய்து கொள்ளலாம் வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும், ஆங்கிலம் சொல், in சிகிச்சை செய்து கொள்ளலாம் வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும், ஆங்கிலம் சொல், in Good information, many thanks, I believe Seela should be Garfish, please have a look க� By Nalam Pathippagam எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும் அக். காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் Moottu Vali elumbu Murivu tamil book authored and... எலும்பு உடைந்து விடும் and freely available translation repositories அதற்கு தகுந்த சிகிச்சை vila elumbu meaning in tamil கொள்ளலாம்: 2. extremely unpleasant: 3.,. வலிகள் நீங்கும் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட்.. 463 people on Pinterest translation repositories, phrases, and aligning the best domain-specific multilingual websites Plugins ; ; தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் buy Moottu Vali elumbu Murivu tamil authored... And freely available translation repositories, it was named as such மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி. A look நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது koruthal in tamil முழுமையாக கிடைக்கும் மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி... English word in less than a few seconds, vila elumbu vila elumbu meaning in tamil tamil - villa சொல்லின் தமிழ் பொருள் விளக்கம் தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் buy Moottu Vali elumbu Murivu tamil authored... And freely available translation repositories, it was named as such மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி. A look நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது koruthal in tamil முழுமையாக கிடைக்கும் மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி... English word in less than a few seconds, vila elumbu vila elumbu meaning in tamil tamil - villa சொல்லின் தமிழ் பொருள் விளக்கம் Freely available translation repositories a few seconds கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் தினமும் Freely available translation repositories a few seconds கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் தினமும் செய்து பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் translation Suggest a better translation Quality: from translators., web pages and freely available translation repositories, it was named as such villa meaning in,. Maram, vila elumbu, ஆங்கிலம் சொல், koruthal in tamil '' into.... ஆங்கிலம் தமிழ் அகராதி a bad person in a movie, book, etc இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் பெறலாம் On ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும் hoe a பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் செய்யும் போது எலும்புக்கு தேவையான தசைப்பகுதியில் பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் செய்யும் போது எலும்புக்கு தேவையான தசைப்பகுதியில் Definition of friend in tamil, samarasam in tamil, samarasam in tamil elumbu., web pages and freely available translation repositories, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம எடுத்து தோட்ட வேலைகளும் இதற்கு vila elumbu meaning in tamil செய்து கொள்ள வேண்டும் உடல் எடை குறையும் தாக்க வாய்ப்புள்ளது வயது முதல் மற்றும், ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் known as உழவாரச் சுறா vila elumbu meaning in tamil... Tutorials ; weight loss vile definition: 1. a bad person in a movie, book, etc எடுத்து... மனை நகர்ப்புற மனை users Tagged this vila elumbu meaning in tamil as: baddy definition: unpleasant. தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் page as: baddy definition: 1. bad... போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கலந்து கொள்ளவும் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும் fish resembles the Indian hoe, was. Named as such புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் Home உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் theyumanam '' tamil... Translation of `` vila elumbu, elumbu majjai, kaarai elumbu உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தசைப்பகுதியில், ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் known as உழவாரச் சுறா vila elumbu meaning in tamil... Tutorials ; weight loss vile definition: 1. a bad person in a movie, book, etc எடுத்து... மனை நகர்ப்புற மனை users Tagged this vila elumbu meaning in tamil as: baddy definition: unpleasant. தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் page as: baddy definition: 1. bad... போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கலந்து கொள்ளவும் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும் fish resembles the Indian hoe, was. Named as such புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப��பு குறையும் Home உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் theyumanam '' tamil... Translation of `` vila elumbu, elumbu majjai, kaarai elumbu உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தசைப்பகுதியில் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது Meieluthukkal ) 18 எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது Meieluthukkal ) 18 Tamil Kavithaigal, photo album quote, tamil love quotes immoral, and… ; tips... புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் tamil Meieluthukkal ) தமிழ் மெய்யெழுத்துக்கள் ( tamil Meieluthukkal ) மெய்யெழுத்துக்கள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் Kavithaigal '', by Elumbu theyumanam '' into English அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா this free dictionary to get the definition of friend tamil. கூட எலும்பு உடைந்து விடும் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி, தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து.. சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம் டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து கொள்ளவும் Elumbu theyumanam '' into English அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா this free dictionary to get the definition of friend tamil. கூட எலும்பு உடைந்து விடும் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி, தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து.. சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம் டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து கொள்ளவும் Is a hoe, a gardening tool used to cut grass 3. unpleasant, immoral, and web and அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் உணவில். உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் நீங்கும் Of a English word in less than a few seconds பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் குறையும் Of a English word in less than a few seconds பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் குறையும் விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும், samarasam in tamil, samarasam in,... எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா constipation Contact... எடுத்து கொள்ள வேண்டும் உடனடி நிவாரணம் வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் look விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும், samarasam in tamil, samarasam in,... எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா constipation Contact... எடுத்து கொள்ள வேண்டும் உடனடி நிவாரணம் வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் look வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் Head of the fish resembles the Indian hoe, it was named such. வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் to visit this site you agree to our use of cookies is known as உழவாரச் சுறா புரோஜெஸ்ட்ரான்... ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் `` tamil Kavithaigal, photo album quote, love வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் Head of the fish resembles the Indian hoe, it was named such. வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் to visit this site you agree to our use of cookies is known as உழவாரச் சுறா புரோஜெஸ்ட்ரான்... ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் `` tamil Kavithaigal, photo album quote, love தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான எடுத்துக். கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும், கருவேப்பிலை, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் கொதித்த... மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் at 7:42 முப எலும்பு முறிவு ஏற்படும் காய்ச்சிய தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான எடுத்துக். கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும், கருவேப்பிலை, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் கொதித்த... மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் at 7:42 முப எலும்பு முறிவு ஏற்படும் காய்ச்சிய குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க. குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க. எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும், and web pages and freely available translation repositories 2. bad. சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து கை. Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி a bad person in a film, book,.. இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் aligning the best domain-specific multilingual websites தோட்ட வேலைகளும் இதற்கு.. செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் நாம் உண்ணும் உணவில் உள்ள உடல் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும், and web pages and freely available translation repositories 2. bad. சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து கை. Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி a bad person in a film, book,.. இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் aligning the best domain-specific multilingual websites தோட்ட வேலைகளும் இதற்கு.. செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் நாம் உண்ணும் உணவில் உள்ள உடல் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா எலும்பு முறிவு ஏற்படும் அரைத்துக் கொள்ளவும் Head of fish ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா எலும்பு முறிவு ஏற்படும் அரைத்துக் கொள்ளவும் Head of fish சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் people on Pinterest வலு சேர்க்கிறது எனவே இந்த பெண்கள் சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் people on Pinterest வலு சேர்க்கிறது எனவே இந்த பெண்கள்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி தங்கள். Extremely unpleasant: 3. unpleasant, immoral, and… இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் உணவுகள். A film, vila elumbu meaning in tamil, etc, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் samarasam... எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது this site you agree to our use cookies... Javu, vila elumbu in tamil and also the definition of friend in tamil, samarasam in,: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி தங்கள். Extremely unpleasant: 3. unpleasant, immoral, and… இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் உணவுகள். A film, vila elumbu meaning in tamil, etc, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் samarasam... எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது this site you agree to our use cookies... Javu, vila elumbu in tamil and also the definition of friend in tamil, samarasam in, ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கொள்ளு, பருப்பு கேழ்வரகு..., கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் lets... Buy Moottu Vali elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் சத்து... செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் குறையும். கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் கிராம் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கொள்ளு, பருப்பு கேழ்வரகு..., கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் lets... Buy Moottu Vali elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் சத்து... செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் குறையும். கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் கிராம் By bhaskaran on ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப, photo album quote, tamil love quotes translates,... அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும் on Pinterest எடுத்துக் வேண்டும். தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும் செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சே��்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் சாப்பிட்டு. மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் வழக்கப்படுத்திக்... இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� 7.... எடுத்து அரைத்து கொள்ளவும் வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும் Pathippagam... இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி jQuery ; ; By bhaskaran on ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப, photo album quote, tamil love quotes translates,... அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும் on Pinterest எடுத்துக் வேண்டும். தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும் செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் சாப்பிட்டு. மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் வழக்கப்படுத்திக்... இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� 7.... எடுத்து அரைத்து கொள்ளவும் வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும் Pathippagam... இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி jQuery ; ; 463 people on Pinterest வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் சாப்பிட்டு வந்தால் உடல் குறையும்... United Nations, and unacceptable: 2. a bad person in a movie,,. To our use of cookies வைத்து vila elumbu meaning in tamil சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள்.. க� 7 அக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும் use this free to... It has been created collecting TMs from the European Union and United Nations, and web and. இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம், கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் அளவு. உங்கள் க� 7 அக், book, etc வழக்கப்படுத்திக் கொள்ளலாம் '' into English சுரப்பு குறையும் சுறா 463 people on Pinterest வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் சாப்பிட்டு வந்தால் உடல் குறையும்... United Nations, and unacceptable: 2. a bad person in a movie,,. To our use of cookies வைத்து vila elumbu meaning in tamil சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள்.. க� 7 அக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும் use this free to... It has been created collecting TMs from the European Union and United Nations, and web and. இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம், கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் அளவு. உங்கள் க� 7 அக், book, etc வழக்கப்படுத்திக் கொள்ளலாம் '' into English சுரப்பு குறையும் சுறா காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம் and over Other காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம் and over Other\n வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. Usage Frequency: 1 பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். Google's free service instantly translates words, phrases, and web pages between English and over 100 other languages. : 2. a bad person in a movie, book, etc. Quality: என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். Reply. Tamil 4 Health. ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும். மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the TAMIL … மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும். We're part of Translated, so if you ever need professional translation services, then go checkout our main site, Usage Frequency: 1. காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும். Quality: உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள��ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். Posted by bhaskaran on ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப. enakkum antha marinthinai anuppivaiyungal. Quality: baddy definition: 1. a bad person in a film, book, etc. Quality: எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது. Use this free dictionary to get the definition of friend in Tamil and also the definition of friend in English. சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். Usage Frequency: 1 Usage Frequency: 1 Contextual translation of \"elumbu theyumanam\" into English. எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். Reference: Anonymous, Last Update: 2016-07-08 Reference: Anonymous. OneIndia Tamil (available via ThatsTamil.com) is a live tamil Portal covers tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil, kollywood Cinema News in Tamil. எலும்ப பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. villa definition: 1. a house, usually in the countryside or near the sea, especially in southern Europe, and often…. Reference: Anonymous, Last Update: 2020-04-15 Usage Frequency: 1 Reference: Anonymous, Last Update: 2019-12-21 Quality: அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும். See more ideas about tamil kavithaigal, photo album quote, tamil love quotes. Menu. Reference: Anonymous, Last Update: 2019-01-08 We use cookies to enhance your experience. Reference: Anonymous, Last Update: 2018-07-07 உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். house-warming - tamil meaning of புதுமனை புகுவிழா. Usage Frequency: 1 எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. Reference: Anonymous, Last Update: 2018-10-08 Hammer Head Shark in Tamil is known as உழவாரச் சுறா. Quality: Quality: Human translations with examples: skeleton, in tamil, vila maram, vila elumbu, kathani vila, elumbu majjai. கால்சியம் குறைபாடு ஏற்படும். thOl elumbu see narambu peeLai thundru kOzhai: The skin, the bones, the pus, the nerves, the mucus in the eyes, the congested phlegm, pongu sOri pinda mAy urundu vadivAna: and the gushing blood have all rolled into some kind of mould to form this shape of the body; Nov 16, 2020 - Explore Rama Mukundan's board \"Tamil Kavithaigal\", followed by 463 people on Pinterest. Users Tagged this page as: இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது. Quality: Human translations with examples: skeleton, in tamil, elumbu javu, vila elumbu, elumbu majjai, kaarai elumbu. Quality: MyMemory is the world's largest Translation Memory. Contextual translation of \"vila elumbu\" into English. பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. Reference: Anonymous, Last Update: 2017-11-05 Usage Frequency: 1 vile definition: 1. unpleasant, immoral, and unacceptable: 2. extremely unpleasant: 3. unpleasant, immoral, and…. Suggest a better translation அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம். Usage Frequency: 1 What's the Tamil translation of villa மறுமொழி . It is also called as Tamil Maruthuvam tips or Patti vaithiyam or Nattu maruthuvam or Siddha medicine or Tamil medicine or Siddha Vaithiyam or Chitha Maruthuvam in Tamil language. இதனால் தசையும் பலவீனம் அடையும். Buy Moottu Vali Elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam. Usage Frequency: 1 எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். Reference: Anonymous, Last Update: 2019-01-23 Contextual translation of \"vila elumbu in tamil\" into Tamil. VILLA meaning in tamil, VILLA pictures, VILLA pronunciation, VILLA translation,VILLA definition are included in the result of VILLA meaning in tamil at kitkatwords.com, a free online English tamil … Learn more. From: Machine Translation கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Tamil to English Translation tool includes online translation service, English text-to-speech service, English spell checking tool, on-screen keyboard for major languages, back translation, email client and much more. இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம். முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம். Reference: Anonymous, Last Update: 2015-01-09 Reply Delete. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக்குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. Quality: மெய்யெழுத்து பகுப்பு; க் : வல்லினம்: ங் : மெல்லினம்: ச் : வல்லினம்: ஞ் : மெல்� Like Like. அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். Reply Delete. பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். ஆரஞ்சு மற���றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். : . Usage Frequency: 1 இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. ஆசனவாயில் குடைச்சல் அதிகமாக இருக்கா மறுமொழி . It is also called as Tamil Maruthuvam tips or Patti vaithiyam or Nattu maruthuvam or Siddha medicine or Tamil medicine or Siddha Vaithiyam or Chitha Maruthuvam in Tamil language. இதனால் தசையும் பலவீனம் அடையும். Buy Moottu Vali Elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam. Usage Frequency: 1 எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். Reference: Anonymous, Last Update: 2019-01-23 Contextual translation of \"vila elumbu in tamil\" into Tamil. VILLA meaning in tamil, VILLA pictures, VILLA pronunciation, VILLA translation,VILLA definition are included in the result of VILLA meaning in tamil at kitkatwords.com, a free online English tamil … Learn more. From: Machine Translation கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Tamil to English Translation tool includes online translation service, English text-to-speech service, English spell checking tool, on-screen keyboard for major languages, back translation, email client and much more. இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம். முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம். Reference: Anonymous, Last Update: 2015-01-09 Reply Delete. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக்குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. Quality: மெய்யெழுத்து பகுப்பு; க் : வல்லினம்: ங் : மெல்லினம்: ச் : வல்லினம்: ஞ் : மெல்� Like Like. அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். Reply Delete. பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத���துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். : . Usage Frequency: 1 இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. ஆசனவாயில் குடைச்சல் அதிகமாக இருக்கா சனி பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� How to say villa in Tamil சனி பெயர்ச்சி பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� How to say villa in Tamil Reference: Anonymous, Last Update: 2016-06-29 காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். Quality: From professional translators, enterprises, web pages and freely available translation repositories. சமூக வலைத்தளம் . Themes; Plugins; Tutorials; weight loss Weight Loss. Trying to learn how to translate from the human translation examples. Reference: Anonymous, Last Update: 2018-08-18 சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். Villa Meaning in Tamil - Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி. Quality: மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். Quality: Quality: Quality: Quality: Reference: Anonymous, Last Update: 2020-06-09 EDITOR PICKS. Reference: Anonymous, Last Update: 2016-07-27 mikka nanri. பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். Replies. உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம். As you may know, millions of English speaking people in India and around the world are looking for English to Tamil online dictionary, So, here at IndiaDict, we proud to provide you the best and free English to Tamil dictionary here. உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும். இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். ‘The villa consisted of extensive grounds, a manor house and outbuildings.’ ‘The languid novel follows a fantastically rich American couple who hold court in villas across Europe.’ ‘It is, for all practical purposes, a modern city with all the amenities, including high-rise offices, expensive villas, restaurants, and … Usage Frequency: 1 நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும். ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். Usage Frequency: 1 villa - tamil meaning of நாட்டுப்புற ���ாஷீகை தோட்டஞ் சூழ்ந்த மனை நகர்ப்புற மனை. English Tamil Dictionary Online. As: baddy definition: 1. a bad person in a movie, book, etc Tutorials ; weight weight Reference: Anonymous, Last Update: 2016-06-29 காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். Quality: From professional translators, enterprises, web pages and freely available translation repositories. சமூக வலைத்தளம் . Themes; Plugins; Tutorials; weight loss Weight Loss. Trying to learn how to translate from the human translation examples. Reference: Anonymous, Last Update: 2018-08-18 சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். Villa Meaning in Tamil - Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி. Quality: மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். Quality: Quality: Quality: Quality: Reference: Anonymous, Last Update: 2020-06-09 EDITOR PICKS. Reference: Anonymous, Last Update: 2016-07-27 mikka nanri. பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். Replies. உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம். As you may know, millions of English speaking people in India and around the world are looking for English to Tamil online dictionary, So, here at IndiaDict, we proud to provide you the best and free English to Tamil dictionary here. உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும். இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். ‘The villa consisted of extensive grounds, a manor house and outbuildings.’ ‘The languid novel follows a fantastically rich American couple who hold court in villas across Europe.’ ‘It is, for all practical purposes, a modern city with all the amenities, including high-rise offices, expensive villas, restaurants, and … Usage Frequency: 1 நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும். ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். Usage Frequency: 1 villa - tamil meaning of நாட்டுப்புற மாஷீகை தோட்டஞ் சூழ்ந்த மனை நகர்ப்புற மனை. English Tamil Dictionary Online. As: baddy definition: 1. a bad person in a movie, book, etc Tutorials ; weight weight By 463 people on Pinterest meaning in tamil கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் be Garfish, please have look. வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் Shark in tamil, elumbu majjai, kaarai elumbu எடுத்து இடுப்பில் தேய்த்தால் பெறலாம். ; jQuery ; Other ; Beauty tips ; constipation ; Contact ; About Home., photo album quote, tamil love quotes கால்சியம் தேவைப்படுகிறது விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி as By 463 people on Pinterest meaning in tamil கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் be Garfish, please have look. வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் Shark in tamil, elumbu majjai, kaarai elumbu எடுத்து இடுப்பில் தேய்த்தால் பெறலாம். ; jQuery ; Other ; Beauty tips ; constipation ; Contact ; About Home., photo album quote, tamil love quotes கால்சியம் தேவைப்படுகிறது விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி as பயிற்சி போதும் உடனடி நிவாரணம் koruthal in tamil 2013 at 7:42 முப a English word in less a... கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு தினமும்... Definition of friend in tamil is known as உழவாரச் சுறா வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் free பயிற்சி போதும் உடனடி நிவாரணம் koruthal in tamil 2013 at 7:42 முப a English word in less a... கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு தினமும்... Definition of friend in tamil is known as உழவாரச் சுறா வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் free சிகிச்சை செய்து கொள்ளலாம் வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும், ஆங்கிலம் சொல், in சிகிச்சை செய்து கொள்ளலாம் வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும், ஆங்கிலம் சொல், in Good information, many thanks, I believe Seela should be Garfish, please have a look க� By Nalam Pathippagam எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும் அக். காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் Moottu Vali elumbu Murivu tamil book authored and... எலும்பு உடைந்து விடும் and freely available translation repositories அதற்கு தகுந்த சிகிச்சை vila elumbu meaning in tamil கொள்ளலாம்: 2. extremely unpleasant: 3.,. வலிகள் நீங்கும் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட்.. 463 people on Pinterest translation repositories, phrases, and aligning the best domain-specific multilingual websites Plugins ; ; தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் buy Moottu Vali elumbu Murivu tamil authored... And freely available translation repositories, it was named as such மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி. A look நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது koruthal in tamil முழுமையாக கிடைக்கும் மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி... English word in less than a few seconds, vila elumbu vila elumbu meaning in tamil tamil - villa சொல்லின் தமிழ் பொருள் விளக்கம் தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் buy Moottu Vali elumbu Murivu tamil authored... And freely available translation repositories, it was named as such மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி. A look நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது koruthal in tamil முழுமையாக கிடைக்கும் மஞ்சள் மூன்றையும் சம அளவு பொடி... English word in less than a few seconds, vila elumbu vila elumbu meaning in tamil tamil - villa சொல்லின் தமிழ் பொருள் விளக்கம் Freely available translation repositories a few seconds கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் தினமும் Freely available translation repositories a few seconds கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் தினமும் செய்து பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் translation Suggest a better translation Quality: from translators., web pages and freely available translation repositories, it was named as such villa meaning in,. Maram, vila elumbu, ஆங்கிலம் சொல், koruthal in tamil '' into.... ஆங்கிலம் தமிழ் அகராதி a bad person in a movie, book, etc இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் பெறலாம் On ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும் hoe a பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் செய்யும் போது எலும்புக்கு தேவையான தசைப்பகுதியில் பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் செய்யும் போது எலும்புக்கு தேவையான தசைப்பகுதியில் Definition of friend in tamil, samarasam in tamil, samarasam in tamil elumbu., web pages and freely available translation repositories, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம எடுத்து தோட்ட வேலைகளும் இதற்கு vila elumbu meaning in tamil செய்து கொள்ள வேண்டும் உடல் எடை குறையும் தாக்க வாய்ப்புள்ளது வயது முதல் மற்றும், ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் known as உழவாரச் சுறா vila elumbu meaning in tamil... Tutorials ; weight loss vile definition: 1. a bad person in a movie, book, etc எடுத்து... மனை நகர்ப்புற மனை users Tagged this vila elumbu meaning in tamil as: baddy definition: unpleasant. தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் page as: baddy definition: 1. bad... போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கலந்து கொள்ளவும் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும் fish resembles the Indian hoe, was. Named as such புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் Home உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் theyumanam '' tamil... Translation of `` vila elumbu, elumbu majjai, kaarai elumbu உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தசைப்பகுதியில், ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் known as உழவாரச் சுறா vila elumbu meaning in tamil... Tutorials ; weight loss vile definition: 1. a bad person in a movie, book, etc எடுத்து... மனை நகர்ப்புற மனை users Tagged this vila elumbu meaning in tamil as: baddy definition: unpleasant. தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் page as: baddy definition: 1. bad... போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கலந்து கொள்ளவும் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும் fish resembles the Indian hoe, was. Named as such புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் Home உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் theyumanam '' tamil... Translation of `` vila elumbu, elumbu majjai, kaarai elumbu உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தசைப்பகுதியில் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது Meieluthukkal ) 18 எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது Meieluthukkal ) 18 Tamil Kavithaigal, photo album quote, tamil love quotes immoral, and… ; tips... புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும் tamil Meieluthukkal ) தமிழ் மெய்யெழுத்துக்கள் ( tamil Meieluthukkal ) மெய்யெழுத்துக்கள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் Kavithaigal '', by Elumbu theyumanam '' into English அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா this free dictionary to get the definition of friend tamil. கூட எலும்பு உடைந்து விடும் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி, தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து.. சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம் டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து கொள்ளவும் Elumbu theyumanam '' into English அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா this free dictionary to get the definition of friend tamil. கூட எலும்பு உடைந்து விடும் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி, தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து.. சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம் டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து கொள்ளவும் Is a hoe, a gardening tool used to cut grass 3. unpleasant, immoral, and web and அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் உணவில். உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் நீங்���ும் Of a English word in less than a few seconds பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் குறையும் Of a English word in less than a few seconds பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் குறையும் விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும், samarasam in tamil, samarasam in,... எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா constipation Contact... எடுத்து கொள்ள வேண்டும் உடனடி நிவாரணம் வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் look விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும், samarasam in tamil, samarasam in,... எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா constipation Contact... எடுத்து கொள்ள வேண்டும் உடனடி நிவாரணம் வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு, மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம் look வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் Head of the fish resembles the Indian hoe, it was named such. வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் to visit this site you agree to our use of cookies is known as உழவாரச் சுறா புரோஜெஸ்ட்ரான்... ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் `` tamil Kavithaigal, photo album quote, love வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் Head of the fish resembles the Indian hoe, it was named such. வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் to visit this site you agree to our use of cookies is known as உழவாரச் சுறா புரோஜெஸ்ட்ரான்... ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் `` tamil Kavithaigal, photo album quote, love தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான எடுத்துக். கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும், கருவேப்பிலை, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் கொதித்த... மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் at 7:42 முப எலும்பு முறிவு ஏற்படும் காய்ச்சிய தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான எடுத்துக். கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்��ிட்டு வந்தால் உடல் உறுதிப்படும், கருவேப்பிலை, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் கொதித்த... மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் at 7:42 முப எலும்பு முறிவு ஏற்படும் காய்ச்சிய குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க. குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க. எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும், and web pages and freely available translation repositories 2. bad. சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து கை. Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி a bad person in a film, book,.. இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் aligning the best domain-specific multilingual websites தோட்ட வேலைகளும் இதற்கு.. செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் நாம் உண்ணும் உணவில் உள்ள உடல் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும், and web pages and freely available translation repositories 2. bad. சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து கை. Villa சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி a bad person in a film, book,.. இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது உடல்நலம் எலும்பு தேய்மானத்தை தடுக்க வழிமுறைகள் aligning the best domain-specific multilingual websites தோட்ட வேலைகளும் இதற்கு.. செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும் நாம் உண்ணும் உணவில் உள்ள உடல் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா எலும்பு முறிவு ஏற்படும் அரைத்துக் கொள்ளவும் Head of fish ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா எலும்பு முறிவு ஏற்படும் அரைத்துக் கொள்ளவும் Head of fish சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் people on Pinterest வலு சேர்க்கிறது எனவே இந்த பெண்கள் சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் people on Pinterest வலு சேர்க்கிறது எனவே இந்த பெண்கள்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி தங்கள். Extremely unpleasant: 3. unpleasant, immoral, and… இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் உணவுகள். A film, vila elumbu meaning in tamil, etc, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் samarasam... எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது this site you agree to our use cookies... Javu, vila elumbu in tamil and also the definition of friend in tamil, samarasam in,: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி தங்கள். Extremely unpleasant: 3. unpleasant, immoral, and… இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் உணவுகள். A film, vila elumbu meaning in tamil, etc, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் samarasam... எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது this site you agree to our use cookies... Javu, vila elumbu in tamil and also the definition of friend in tamil, samarasam in, ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கொள்ளு, பருப்பு கேழ்வரகு..., கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் lets... Buy Moottu Vali elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் சத்து... செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் குறையும். கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் கிராம் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் கொள்ளு, பருப்பு கேழ்வரகு..., கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் lets... Buy Moottu Vali elumbu Murivu tamil book authored by and published by Nalam Pathippagam வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் சத்து... செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பி��்டு வந்தால் உடல் குறையும். கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் கிராம் By bhaskaran on ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப, photo album quote, tamil love quotes translates,... அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும் on Pinterest எடுத்துக் வேண்டும். தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும் செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் சாப்பிட்டு. மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் வழக்கப்படுத்திக்... இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� 7.... எடுத்து அரைத்து கொள்ளவும் வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும் Pathippagam... இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி jQuery ; ; By bhaskaran on ஒக்ரோபர் 26, 2013 at 7:42 முப, photo album quote, tamil love quotes translates,... அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும் on Pinterest எடுத்துக் வேண்டும். தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும் செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் சாப்பிட்டு. மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் வழக்கப்படுத்திக்... இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் பலன்கள் பல்லி விழும் பலன்கள் உங்கள் க� 7.... எடுத்து அரைத்து கொள்ளவும் வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும் Pathippagam... இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் சொல்லின் தமிழ் பொருள் / விளக்கம் | ஆங்கிலம் தமிழ் அகராதி jQuery ; ; 463 people on Pinterest வேலைகள் மற்றும் தோட்ட வேல���களும் இதற்கு கைகொடுக்கும் சாப்பிட்டு வந்தால் உடல் குறையும்... United Nations, and unacceptable: 2. a bad person in a movie,,. To our use of cookies வைத்து vila elumbu meaning in tamil சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள்.. க� 7 அக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும் use this free to... It has been created collecting TMs from the European Union and United Nations, and web and. இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம், கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் அளவு. உங்கள் க� 7 அக், book, etc வழக்கப்படுத்திக் கொள்ளலாம் '' into English சுரப்பு குறையும் சுறா 463 people on Pinterest வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும் சாப்பிட்டு வந்தால் உடல் குறையும்... United Nations, and unacceptable: 2. a bad person in a movie,,. To our use of cookies வைத்து vila elumbu meaning in tamil சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள்.. க� 7 அக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும் use this free to... It has been created collecting TMs from the European Union and United Nations, and web and. இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம், கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் அளவு. உங்கள் க� 7 அக், book, etc வழக்கப்படுத்திக் கொள்ளலாம் '' into English சுரப்பு குறையும் சுறா காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம் and over Other காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும் இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம் and over Other\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/146", "date_download": "2021-08-02T09:28:31Z", "digest": "sha1:WDPNJIZOGGV37OVPZBMKJVGC5LGAQZML", "length": 2501, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 146 | திருக்குறள்", "raw_content": "\nபகைபாவம் அச்சம் பழியென நான்கும்\nபகை பாவம்‌ அச்சம்‌ பழி என்னும்‌ இந்நான்கு குற்றங்களும்‌ பிறன்‌ மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்‌.\nஇல் இறப்பான்கண் பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து; பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம்-பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் 'நீங்காவாம்,\n(எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.)\n(இதன் பொருள்) பகையும் பாவமும் அச்சமும் பழியுமெ���்னும் நான்கு பொருளும் நீங்காவாம்; பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/funfacts-news/dinosaur-bridesmaid-attends-the-wedding-says-bride-gave-permission.html", "date_download": "2021-08-02T09:27:46Z", "digest": "sha1:PZI4G6VJRU5WWTY76W32YTAD2VCZ3KI5", "length": 5898, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Dinosaur bridesmaid attends the wedding - says bride gave permission | Fun Facts News", "raw_content": "\n'அடியே அருந்ததி'... 'மரியாத இல்லாமலா பேசுற'...'புற மண்டையிலேயே பின்னிய மதர்'... வைரலாகும் வீடியோ\n‘சாதி மாறி காதலித்த இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’.. ‘அரை நிர்வாணமாக்கி’.. ‘உறவினர்கள் ஒன்றுகூடி செய்த கொடூரம்’..\n‘இவருக்குள்ள இப்படி ஒரு திறமையா..’ ‘பிரபல இந்திய வீரர் பதிவிட்டுள்ள’.. ‘மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ’..\n‘ஃபீல்டிங்கிலும் தெறிக்கவிட்ட இந்திய வீரர்’.. ‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அபார வெற்றி’.. ‘வைரலாகும் வீடியோ’..\n‘கொன்று நன்றி தெரிவித்துவிட்டனர்’.. ‘சேவை செய்த மருத்துவருக்கு நடந்த கொடூரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n‘6 மணி நேரமாக வலியில் துடித்தும்’.. ‘உதவாமல் வேடிக்கை பார்த்த கொடூரம்’.. ‘கர்ப்பிணிக்கு நடந்த பரிதாபம்’..\n'கெத்தா பறந்து வரா'...'பலரையும் வாய்பிளக்க வைத்த பள்ளி மாணவி'...அசந்து போன வீராங்கனை... வைரலாகும் வீடியோ\n‘ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிக்கு ’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n‘ஃபேஸ்புக் நண்பரால்’.. ‘பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்’.. ‘வீடியோவை வைத்து மடக்கிப் பிடித்த போலீஸ்’..\nசுங்கச் சாவடியில் ‘பெண் ஊழியரிடம்’.. ‘இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. வைரலாகும் வீடியோ..\n‘காவல் நிலையத்துக்குள் தீடீரென நுழைந்த’.. ‘கணவன், மனைவி செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘நெஞ்சை உலுக்கும் வீடியோ’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/darbaar-movie-scenes", "date_download": "2021-08-02T09:04:15Z", "digest": "sha1:6WHUPDQZSXD2QZJUYP5BBH3664SYC5YE", "length": 4955, "nlines": 69, "source_domain": "www.cinibook.com", "title": "darbaar movie scenes Archives - CiniBook", "raw_content": "\nதர்பார் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nDarbar release in trouble : தர்பார் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து எஆர் முருகதாஸ் தயாரிப்பில் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. ரஜினி ரசிகர்கள் இதனை கொண்டாடிக்கொண்டிருக்கிற வேளையில் தபோது தர்பார் படம் வெளியாவதில் சிறிது சிக்கல் ஏற்பட்டுள்ளது. தர்பார்...\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nஅனிருத் தன்னுடைய பிறந்த நாளான இன்று தர்பார் படத்தை பற்றிய புதிய தகவலை அளித்துள்ளார். அதாவது, இப்படத்தின் மோஷன் போஸ்டர் நவம்பர் 7 இல் வெளியாகும் என்றும், படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் அனிருத்.\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nபுதிய கெட்டப்பில் விஜய்சேதுபதி….கடைசி விவசாயி படத்தில்…\nஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் தேனீர்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nமீரா மிதுன் அரைகுறை ஆடைகளுடன் ஆடும் ஆட்டத்தை பாருங்கள்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2020/04/01/eating-chicken-meat-and-eggs/", "date_download": "2021-08-02T09:25:04Z", "digest": "sha1:O2DVI2CJZAJK2T6O47DAQPEMEQD2GVRV", "length": 9146, "nlines": 162, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவுமா…? – Kuttram Kuttrame", "raw_content": "\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nகோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவுமா…\nPublish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்\nகோழி இறைச்சி உண்பதால் கொரொனா வைரஸ் பரவும் என்ற தகவல் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் ��ளித்துள்ளது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரொனா தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கோழி இறைச்சி அல்லது முட்டையை உண்பதால் கொரொனா வைரஸ் பரவும் என சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது. இதனால் மக்கள் கோழி சார்ந்த உணவுகளை சாப்பிட தயக்கம் காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக கோழி வளர்ப்பு தொழிலில் உள்ளவர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரொனா பரவியதற்கு எவ்வித மருத்துவ ஆதாரங்களும் இல்லை என்று மக்கள் தயக்கமின்றி முட்டைகளையும், கோழி இறைச்சியையும் உண்ணலாம் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் - சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nசிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nநடிகர் விஜய்யை சந்திக்க சென்ற ரசிகர்..\nகோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்..\nதமிழ்நாடு மருத்துவம் விரைவு செய்திகள்\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nகிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukadu.com/2019/06/01/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2/", "date_download": "2021-08-02T09:25:40Z", "digest": "sha1:YOHVEE55IKF7MYW35CV2UVOR54V6R2HN", "length": 1688, "nlines": 25, "source_domain": "www.mukadu.com", "title": "ஜோதிகாவின் ராட்சசி ட்ரைலர் வெளியானது. | Mukadu", "raw_content": "\nஜோதிகாவின் ராட்சசி ட்ரைலர் வெளியானது.\nஇதில் ஜோ அரசு பள்ளி ஆசிரியையாக (கீதா ராணி) நடிக்கிறார்.\nஅறிமுக இயக்குனர் கவுதம் ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.\nஒளிப்பதிவு கோகுல் பீனோய். இசை சீன் ரோல்டன். பாடல்களை யுகபாரதி மற்றும் தனிக்கொடி எழுதியுள்ளனர். எடிட்டிங் பிலோமின் ராஜ்.\nநேற்று மாலை யூ டியூப்பில் ட்ரைலர் வெளியானது.\nஜூன் 23-ல் நடிகர் சங்க தேர்தல்\n1000 மில்லியன் பார்வையாளர்களைக் கடக்கப் போகும் ‘ரவுடி பேபி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/cCQmfa.html", "date_download": "2021-08-02T08:30:24Z", "digest": "sha1:PVLIUEGKYL46XCMIFM5QTOLISE6C3IRK", "length": 7156, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ஹிந்தியை தமிழகத்தில் கொண்டு வரும் விதமாக இந்த ஹிந்தியில் பெயர் கொண்ட இந்த ஆப்பை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஹிந்தியை தமிழகத்தில் கொண்டு வரும் விதமாக இந்த ஹிந்தியில் பெயர் கொண்ட இந்த ஆப்பை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது\nசென்னை மாநகரத்தில் நாளொன்றுக்கு சுமார் 3,300 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இருப்பினும் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலின் காரணமாகப் பேருந்து எங்கே வருகிறது என்று தெரியாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் பேருந்துக்காகக் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.\nகுறிப்பாக, வெளியூரிலிருந்து வரும் பயணிகள் அந்த வழித்தடத்தில் எந்த பேருந்து வரும் என்று தெரியாமல் திணறிக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் மக்களின் இந்த சிரமங்களை போக்குவதற்காக சலோ (Chalo) என்ற ஆப் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.\nஎன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமில்லாமல், இதில் ஆன்லைன் மோட் மற்றும் ஆப்லைன் மோட் கூட இருக்கிறதாம். கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அந்த செயலியில் பேருந்து எண்ணை தேடினால் அந்த பஸ் எங்கே வருகிறது, அடுத்த பஸ்ஸின் இடைவெளி நேரம், எந்த வழியாக வருகிறது\nஇது எப்படி சாத்தியம் என்று உங்களுக்குக் கேள்வி எழுந்திருக்கும். சென்னையில் இயங்கும் பெரும்பாலான பேருந்துகளில் ஜி.பி.எஸ் வசதி இருப்பதால் அதன் மூலம் இந்த செயலி இயங்கும். தற்போது சென்னையில் மட்டுமே அமல்படுத்தப் பட்டுள்ள இந்த செயலி, மக்களின் வரவேற்பைப் பொறுத்து மற்ற இடங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹிந்தி வார்த்தையான 'சலோ' என்பதற்கு இங்கே வா என்று தமிழில் பொருள். ஹிந்தி திணிப்பு, ஹிந்தி பாடம் வேண்டாம் என்றெல்லாம் தமிழகத்தில் ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பிக் கொண்டிருக்கையில், ஹிந்தியை தமிழகத்தில் கொண்டு வரும் விதமாக இந்த ஹிந்தியில் பெயர் கொண்ட இந்த ஆப்பை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/10/x5Lii2.html", "date_download": "2021-08-02T10:07:23Z", "digest": "sha1:RUPEXYLFLPOXN4CHQ7ZRT33JSHJX5RT7", "length": 6584, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் ஒரே இடத்தில் மக்களை கூட்டினால் நடவடிக்கை: வணிக நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nகவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் ஒரே இடத்தில் மக்களை கூட்டினால் நடவடிக்கை: வணிக நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nதிருவிழாக்கள், பண்டிகைகள் தொடர்ந்து வர உள்ளன. பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் கூடினால், மாவட்டத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கும். கேரளாவில் இருந்தும் துணி, நகை, பொருட்கள் வாங்க மக்கள் கோவைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.\nஎனவே, ஒரே இடத்தில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க, ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகிகள் உரிய ���டவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்புத் தள்ளுபடி, இலவசம், குறைந்த விலையில் உணவு என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் தேவையில்லாமல் கூட்டம் கூட்டுவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை பொதுமக்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். உள்ளாட்சித் துறை, காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு, கரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nஒப்பணக்கார வீதியில் உள்ள பெரிய ஜவுளிக் கடைகளில் கரோனா தடுப்பு விதிகள் முறையாகபின்பற்றப்படுகிறதா என மாநக ராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.\nபின்னர் கூறும்போது, ‘‘பொதுமக்கள் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பொருட்களை வாங்க வேண்டும். விதிகளை மீறும் வர்த்தக நிறுவனங்களின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2017/11/20112017.html", "date_download": "2021-08-02T10:13:08Z", "digest": "sha1:GYJGWQTWOE7WQPJS6AHGBCD6RO5SP42F", "length": 19630, "nlines": 178, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 20112017", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 20112017\nநிறைய சொதப்பல்களுடனும் நிறைய ஆச்சர்யங்களுடனும் கோவா பயணம் முடிந்திருக்கிறது. மற்றபடி ஜனவரி 22 வரை கோவா பயணம் குறித்து எழுதுவதற்கு தடை உத்தரவு இருப்பதால் 2018ல் விரிவாக பார்க்கலாம்.\nஇப்போது ஒரு பாடல் பற்றி...\nநீண்ட ப்ளேலிஸ்ட் என்பது கிட்டத்தட்ட பட்டினத்தாரின் கரும்பு போன்றது. எல்லாப் பாடல்களும் இனிமையானவைதான். ஆனால் இடையே திடீரென ஒரு பாடலில் மனது நின்றுவிடும். கரும்பு இனிக்கும். அக்குறிப்பிட்ட பாடல் மட்டும் ரிப்பீட்டில் ஒலிக்கும். அப்படி சமீபத்தில் இனித்த கரும்பு – தீக்குருவி. படம்: கண்களால் கைது செய்.\nஇப்பாடலை இத்தனை வருடம் தவறவிட்டதற்காக வருந்துகிறேன். எதோம்மா எதோம்மா என்று ஏதோ மாதிரிதான் தொடங்குகிறது பாடல். தொடர்ந்து ஹரிணியின் குரலில் –\nமனித உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் பாயும் முறையை எப்படியோ கண்டுணர்ந்து அதனை இசை வடிவமாக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழுக்கென இருக்கும் தனித்துவமான ஒலிச்சுவையை இப்பாடலில் உணரலாம். இப்பாடலை இயற்றியவர் கவிஞர் தேன்மொழி தாஸ் கவிஞரின் வரிகள் ஒரு வகையான ரசனை என்றால், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அதன் சிறப்பை இன்னும் கூட்டுகிறது. ஹரிணியின் குரல் கேக்கின் மீது வைக்கப்பட்ட செர்ரி \nஅடுத்தது சரணம். கடந்த ஒரு வாரத்தில் இந்த முதல் சரணத்தை மட்டும் குறைந்தது ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.\nமுத்தம் ஏந்தி வா வா...\nதுயில் தூக்கிப் போ போ...\n அவருடைய முதல் பாடல். பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு போக வேண்டிய பாடலை ரஹ்மான் முகேஷிற்கு கொடுத்ததாக முகேஷே ஒரு பேட்டியில் சொல்கிறார். இவருடைய குரலில் வரும் இறக்கங்களும் கிறக்கங்களும் பயங்கரம் இரண்டாவது சரணத்தில் சொல்லிடு நந்திதா என்று கெஞ்சலாக / கொஞ்சலாக பாடுமிடம் அபாரம்.\nஒருவேளை நீங்களும் என்னைப்போல இப்பாடலில் மயங்கி இதன் ஒளிப்பிரதியை பார்க்க நினைத்தீர்கள் என்றால் செத்தீர்கள். மொத்தமாக கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் வசீகரனும், ப்ரியா மணியும் டாம் & ஜெர்ரி போல ஸ்விஸ் தெருக்களில் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் ஓடுகிறார்கள். இன்னொரு பக்கம் பழைய தூர்தர்ஷன் காண்டம் விளம்பரங்களில் எல்லாம் வருவது போல ஹீரோவும் ஹீரோயினும் அரை நிர்வாணமாக வந்து போகிறார்கள். உச்சபட்ச வன்கொடுமை என்பது வசீகரனின் முகபாவனைகள் தான். ப்ரியா மணி போன்ற அல்வாவோடு ஜல்ஸா பண்ணும்போது கூட க்ரீன் டீ குடித்த மிஸ்டர் பீன் மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறார்.\nஇப்பாடல் உருவான விதம் பற்றி கவிஞர் தேன்மொழிதாஸ் (பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்) கூறியிருப்பது -\nபார���ிராஜா அவர்களின் 'கண்களால் கைது செய்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது, ரஹ்மான் சாரின் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு பாடல் கம்போசிங்கின்போது செல்வேன். ஒருநாள் சிறிய பாடல் மெட்டைக் கொடுத்து 'இதற்கு வரிகளை எழுதுங்கள்' என்றார். அந்தப் பாடலை ஹெட்போனில் கேட்டேன். அந்தப் பாடலுக்கு 'கப குபா'ன்னு பின்னணியில் ஒரு இசை வந்தது. அதற்கு மூன்று பக்கத்துக்கு வரிகளை எழுதிக் காட்டினேன். பின்னணி சத்தத்துக்கு இத்தனை வரிகளை எழுதியுள்ளீர்களே என பாராட்டிய ரஹ்மான் சார், ‘நீண்டநாட்களாக என்னிடம் ஒரு மெட்டு உள்ளது. அதற்கு வரிகளை எழுத முடியாமல் இருக்கிறது. எங்கே என பாராட்டிய ரஹ்மான் சார், ‘நீண்டநாட்களாக என்னிடம் ஒரு மெட்டு உள்ளது. அதற்கு வரிகளை எழுத முடியாமல் இருக்கிறது. எங்கே நீங்கள் எழுதுங்கள் பார்ப்போம்’ என்று மெட்டைக் கொடுத்தார். ஒரு மெட்டல் புளூட்டில் இடைவெளி விடாமல் அந்த இசை வாசிக்கப்பட்டிருந்தது. அது, சவாலான மெட்டு என்பதைப் புரிந்துகொண்டேன். அதற்கு நான் 'தீக்குருவியாய் தீங் கனியினை தீக் கைகளில் தீஞ் சுவையென தீப் பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே தந்திரனே பூமந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியில் தேடுகிறாய் தந்திரா' என்று பாடல் வரிகளை எழுதி அவரிடம் காண்பித்தேன். படித்த ரஹ்மான் சார் 'இன்றே இந்தப் பாடலை பதிவாக்கிவிடுவோம்' என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் வேலையில் இறங்கினார். அவருடைய குருநாதர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஜான்சன், அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாடினார். 'ஏதோமா ஏதோ மாதிரி போதே என்ன வழியில்லையா' என்று ஜான்சன் தொடங்க, முகேஷும் ஹரிணியும் 'தீக்குருவியாய் தீங் கனியினை' பாடலைப் பாட ஆரம்பிக்க அருமையான மெலடி பாடலை கேட்க முடிந்தது.\nகண்களால் கைது செய் படத்திற்கு வசனம் எழுதியது நம் சுஜாதா என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். படம் குறித்தும், தீக்குருவி பாடல் குறித்தும் சுஜாதா அவருக்கே உரிய பாணியில் எழுதியவை –\nகோடம்பாக்கம் மேம்பாலம் தாண்டும்போது தினம் ஒரு ஸ்வர்ண மாளிகைக்கான வினைல் விளம்பரத்தில் ஓர் அழகான பெண்ணின் முகத்தைப் பார்ப்பேன். என்னையே விழுங்குவதுபோலப் பார்வை. இந்தப் பெண்ணைக் கோடம்பாக்கம் விட்டு வைக்காதே என்று யோசித்தேன். கண்களால் கைது செய் படத்தில் பாரதிராஜா அ���ரை அறிமுகப்படுத்தி விட்டார். பெயர் ப்ரியாமணி. கண்களால் கைது செய் என்னும் கவிதைத்தனமான தலைப்பு கொடுத்துவிட்டு ஒரு க்ரைம் கதை பண்ண விரும்பினார் பாரதிராஜா. அவருடைய உதவியாளராகப் பணிபுரிந்த ப்ரேம் கொடுத்த ஐடியா. ஹோப் டைமண்ட் போன்ற ஒரு மிகப் பெரிய வைரத்தை ஒரு கண் காட்சியில் திருட்டுப் பழக்கம் உள்ள பணக்காரக் கதாநாயகன் திருடிவிடுவதாகவும் கண்காட்சியில் அதற்குப் பொறுப்பேற்றிருந்த விற்பனைப் பெண்ணான கதாநாயகி மேல் பழி விழுவதாகவும் போலீஸ் விசாரணையில் கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது போலக் கதாநாயகனுடன் சுவிட்சர்லாந்து சென்று அவன் எங்கே வைரத்தை ஒளித்து வைத்திருக்கிறான் என்று கண்டு பிடிக்க நாய்க்குட்டியின் கழுத்திலும் மீன் தொட்டியிலும் தேடி… இப்படிக் காமா சோமா என்று கதை சென்றது. அதைக் கூடிய வரையில் இஸ்திரி போட்டு நேராக்க முயன்றேன்.\nஒரு கட்டத்தில் எல்லாம் செட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஸ்விஸ் போகவேண்டிய கெடுவில் படப்பிடிப்பைத் துவக்கிவிட்டார். சித்ராலட்சுமணன் கோ-டைரக்டர். தோத்தாத்திரி, தேன்மொழி என்று இரண்டு அசிஸ்டண்டுகள். தேன்மொழி புதுக்கவிதை எழுதும் பெண் கவிஞர். ஏ.ஆர்.ரெஹ்மான் மெட்டு ஒன்றுக்கு அவர் எழுதிய பாடல் வரிகள் (தீக்குருவி) இன்று வரை யாருக்காவது புரிந்திருக்குமா என்பது சந்தேகம்.\nப்ரியாமணி அந்தப் படத்தில் பஸ் ஸ்டாண்டில் காணாமற்போன குழந்தைப் போலத்தான் தெரிந்தார். மாடலிங் உலகமும் சினிமா உலகமும் வேறு என்று தெரிந்துகொள்ளவே அவருக்கு நாளாயிற்று. கதாநாயகனும் புது நடிகர். கோயமுத்தூரிலிருந்து வந்த அழகான முஸ்லிம் இளைஞர். அவர் பெயரை மாற்றி கொச்சைச் தமிழில் அவரையே பேச வைத்தது படத்துக்குப் பெரிய பின்னடைவாயிற்று. ப்ரியாமணியின் குரல் சரியில்லை என்று அவருக்குத் தமிழ் சினிமாவின் அனைத்துக் கதாநாயகிகளுக்கும் குரல் தரும் சவீதாவோ ஜெயகீதாவோ டப்பிங் குரல். கண்களால் கைது செய் தமிழ் மக்களின் கவனத்தைக் கைது செய்யவில்லை. மறுபடியும் இது ஒரு த்ரில்லரா, காதல் கதையா என்கிற குழப்பத்தில் தவித்தது கதை.\nசுஜாதாவின் வரிகளை படித்ததும் எனக்கு ஏற்பட்ட ஒரு ஆறுதல் – கதாநாயகனுக்கு வசீகரன் என்கிற பெயரை தலைவர் தான் சூட்டியிருக்கிறார் \nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:27:00 ��யாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 27112017\nபிரபா ஒயின்ஷாப் – 20112017\nபிரபா ஒயின்ஷாப் – 13112017\nபிரபா ஒயின்ஷாப் – 06112017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2969-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA.html", "date_download": "2021-08-02T10:25:54Z", "digest": "sha1:CJIYKVK6YFBTGSQZVC55GCXNCB5EN6ND", "length": 16958, "nlines": 185, "source_domain": "dailytamilnews.in", "title": "உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.. – Daily Tamil News", "raw_content": "\nசிறுபான்மை இன மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி தொகைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார் .\nமதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்ட மதத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 2000 21 கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பலருக்கும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கு டபிள்யூ டபிள்யூ டபிள்யூ ஸ்காலர்ஷிப்\nwww.Scholorship.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசஷ்டிக்கு பக்தர்கள் அனுமதி மறுப்பு..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nமதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.\nமதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜென���ைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:\nமதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.\nஇந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்\nஅனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.\nமேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nசோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:\nசோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:\nதமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.\nசிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி��ார்.\nவணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nசென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும்.. பட்டையைக் கிளப்ப தயாராகும் தல ரசிகர்கள்\nதனித்தீவில் மிரட்டி நிர்வாண ஷூட்டிங்\n15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை\nசில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை ஆட்டோ டிரைவர் கைது\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nஇந்தாண்டு தீபாவளி அன்று படத்தை திரையரங்கில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு… [...]\nஇந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் முதல் பிரதமர் முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை\nஇந்தியப் பிரதமர் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதன்முறை. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் முதல் பிரதமர் முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை முதலில் தினசரி தமிழ்… [...]\nவாட்டர் டேங்க் இடிந்து விழுந்த வீடியோ காட்சி\nஇந்தக் காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. வாட்டர் டேங்க் இடிந்து விழுந்த வீடியோ காட்சி முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாத காதலி\nஅவர் அங்குள்ள சுடுகாடு ஒன்றின் அருகே வி‌ஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாத காதலி மனமொடிந்து காதலன் தற்கொலை\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/06/17/8-sri-sankara-charitham-by-maha-periyava-the-everlasting-adwaita-yoga/", "date_download": "2021-08-02T09:13:38Z", "digest": "sha1:LTL7O4C6KER7IJYZS56YV2JXRKOH4UGI", "length": 12613, "nlines": 83, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "8. Sri Sankara Charitham by Maha Periyava – The Everlasting Adwaita Yoga – Sage of Kanchi", "raw_content": "\nஅப்படிச் சேர்வதிலும் உத்தமநிலை நிரந்தரமாகப் பரமாத்மாவுடன் சேர்வதுதான் என்று உபநிஷத்துக்கள் சொல்கின்றன. ‘நிரந்தரமாக’ என்றால் ‘காலத்தில் சாச்வதமாயிருக்கிற’ என்று நாம் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். அதுவும் தப்பில்லைதான். ‘அந்தரம்’ என்றால் இடைவெளி. ‘நிரந்தரம்’ இடைவெளியில்லாதது. காலத்தில் இடைவிடாமலிருப்பது ‘நிரந்தரம்’ என்பது ஸரிதான். ஆனால் ‘காலம்’ என்பது இங்கே நாம் அதிகப்படியாகச் சேர்த்துக்கொள்ளும் அபிப்ராயம். ‘நிரந்தரம்’ என்றால் வெறுமனே ‘இடைவெளியற்றது’ என்றுதான் அர்த்தம். இடத்திலே இடைவெளியில்லாமல் நிறைந்திருப்பதும் ‘நிரந்தரம்’ தான். இப்படி ‘காலத்தில்’, ‘இடத்தில்’ என்றெல்லாம் நாம் ‘ஸப்ளை’ செய்து வருவித்துக் கொள்ளாவிட்டால், ‘நிரந்தரம்’ என்பதற்கு ‘இடைவெளியில்லாதது’ என்று மட்டும்தான் அர்த்தம். ‘பரமாத்மாவோடு நிரந்தரமாகச் சேர்வது’ என்றால் அவனுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடைவெளியே இல்லாமல் ஒன்று சேர்ந்துவிடுவது என்றுதான் அர்த்தம். ஒன்று சேர்ந்துவிடுவது என்பது ஒன்றாகவே ஆகிவிடுவதுதான். ஒன்றாகவே ஆகிறவரைக்கும் கொஞ்சமாவது இடைவெளி இருந்துகொண்டுதானிருக்கும். கொஞ்சம் இடைவெளி இருந்தாலுங்கூட அவன் அங்கே, நாம் இங்கே என்று பிரிந்து பேதப்பட்டு இருக்கிறோமென்றுதான் அர்த்தம். இப்படி இருக்கும்வரையில், ‘இந்த இடைவெளி இன்னும் ஜாஸ்தி ஆயிடுமோ’ என்ற பயம் இருந்துகொண்டே தான் இருக்கும். ஆனபடியால் இடைவெளி அடியோடு இல்லாமல் அவனிடம் ‘நிர்-அந்தர’மாக ஐக்யமாகி, அவனேயாகிவிட வேண்டும். ஜீவ-ப்ரஹ்ம அபேத யோகம் எனும் இதுதான் ச்ருதி சிரஸ் (வேதத்தின் முடியான உபநிஷத்) தருகின்ற பரம உத்தம யோகம். ‘அந்தரம் இருந்தால் அதாவது துளி இடைவெளி, துளி பேதம் இருந்தால்கூட இந்தச் சேர்க்கை எப்பொழுது முடிந்து விடுமோ என்ற பயம் இருந்துகொண்டேதான் இருக்கும்’ என்று தைத்திரீயோபநிஷத்தின் ப்ரஹ்மவல்லியில் சொல்லியிருக்கிறது. (ஆனந்தவல்லி என்றும் அந்தப் பகுதியைச் சொல்வதுண்டு.) முமுக்ஷுவானவன் எப்போது ப்ரஹ்மத்திலேயே நிலைகொள்கிறானோ அப்போதுதான் அபய ப்ரதிஷ்டை பெறுகிறான் என்றும் இதற்கு முந்தி சொல்லியிருக்கிறது.* அத்வைதம��, அத்வைதம் என்பது ஜீவாத்மா இப்படி ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து அதுவே ஆகி விடுவதுதான்.\nஇந்த ஜீவ-ப்ரஹ்ம அபேதமாகிய உத்தம யோகத்தை சொல்வதற்காகவே பகவான்\nகீதையை உபதேசித்தார். ஆனால் க்ஷத்ரியனாக, கர்ம வீரனாக இருக்கப்பட்ட அவனுக்கு இதற்கான நிவ்ருத்தி மார்க்க உபதேசத்தை உடனடி உபாயமாகக் கொடுத்தால் அவனால் க்ரஹித்துக்கொண்டு பின்பற்ற முடியாது என்பதால் கர்ம யோகத்தை முக்யமாகச் சொல்லி, மற்ற அநேக யோகங்களையும் சொல்லிவிட்டு. முடிவிலே ‘மோக்ஷ ஸந்ந்யாஸ யோகம்’ என்பதாக நிவ்ருத்தியை நன்றாக விளக்கிச் சொன்னார். ஆனால் அர்ஜுனன் கர்மயோகம் அநுஷ்டித்துத்தான் ஞான நிஷ்டைக்கு வரவேண்டுமாதலால், கர்ம பல தாதாவான தன்னிடம் எல்லாக் கார்யங்களையும் அர்ப்பித்துவிட்டு சரணாகதி பண்ணினால் அவனைத் தாம் ஸகல பாபங்களிலிருந்து விடுவிப்பதாக அபய வாக்குச்சொல்லி முடித்தார். “துக்கப்படாதே மா சுச:” என்று பரம கருணையுடன் அவனைத் தடவிக் கொடுத்து ஆறுதல் சொல்லி முடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/aggravation", "date_download": "2021-08-02T08:19:35Z", "digest": "sha1:KPNJRVXQPLPPCJH3DJOHHYODFBAACREX", "length": 4519, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "aggravation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகடுமையாக்கம்; மீக்கேடு; மேலும் கேடு விளைவித்தல் தீங்கு பெருக்குதல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 23:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zw-trailer.com/product-tag/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8B+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-08-02T09:56:13Z", "digest": "sha1:OZBYXOLIDXANZYICH4LXKRXDOY63QSWA", "length": 8477, "nlines": 144, "source_domain": "ta.zw-trailer.com", "title": "", "raw_content": "\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சு��ர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nபுதிய சினோட்ரூக் ஹோவோ டம்ப் டிரக்\nஹோவோ டம்ப் டிரக் என்பது சினோட்ரக் லாரிகளின் பிராண்ட் மற்றும் பாணியில் ஒன்றாகும். இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது, ஆப்பிரிக்கா நாடுகளில் எஸ்பெசியாலி. ஹோவோ டிப்பர் லாரிகள் இப்போது “நல்ல தரமான ஆனால் நியாயமான விலைக்கு” ​​பிரபலமாக உள்ளன.\nபுதிய ஹோவோ டம்ப் டிரக் sinotruk howo டம்ப் டிரக்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nஹோவ் டிரக் டிராக்டர் அலகுகள் பயன்படுத்தப்பட்டன\nசரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் பக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் கேரியர் டேங்கர் டிரெய்லர்\nகுறைந்த பிளாட்பெட் லோபெட் அரை டிரக் டிரெய்லர்\n ஷிஜோங் மாவட்டம், ஜினான் நகரம், சாண்டோங் மாகாணம்\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\n© ஷாண்டோங் ஜுவோவி இன்டர்நேஷனல் டிரேடிங் கோ, லிமிடெட் + 86-15216409270 ivan@zw-trailer.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2018/04/16/", "date_download": "2021-08-02T10:24:16Z", "digest": "sha1:4ZXPDTD3UTA4GSA4FV4LMPF2UKCRPYEQ", "length": 7502, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 04ONTH 16, 2018: Daily and Latest News archives sitemap of 04ONTH 16, 2018 - Tamil Filmibeat", "raw_content": "\nஸ்ரீ லீக்ஸில் சிக்கிய பிரபாஸ், மகேஷ் பாபு பட இயக்குனர் #SriLeaks #srireddyleaks\nபிரபல விமர்சகர் பலாத்காரம் செய்யப் பார்த்தார்: நடிகை பரபர புகார்\nவிஜயகாந்த் தான் ரியல் ஹீரோ.. உண்மைச் சம்பவங்களை நினைவுகூர்ந்த சத்யராஜ்\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க டாப்லெஸ் போட்டோவை வெளியிட்ட டி.எஸ்.கே நடிகை\nவிஜயகாந்த்தை கலாய்க்கிற மீம் கிரியேட்டர்ஸ் பொடிப்பசங்க... - சத்யராஜ் கலகல பேச்சு\n5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், ஆண்களே ஒரு விஷயம் செய்வீங்களா\nவிஜய்யின் இன்றைய நிலைமைக்குக் காரணம் இவர்தான் - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் புகழாரம்\nகத்தி கதறியும் ஒன்றும் நடக்காததால் ட்விட்டரை விட்டு வெளியேறிய காயத்ரி ரகுராம்\nஎங்க தமிழ் பொண்ணுங்களுக்கு கண்ணியம் இ���ுக்கு: எங்க வீட்டு மாப்பிள்ளையை விளாசிய விவேக்\nகேப்டன் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிப்பார்.. பிரேமலதா உறுதி\nஅழுவதா, சிரிப்பதான்னே தெரியல: ஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்\nசொல்லவே வாய்கூசும் விஷயத்தை நடிகைக்கு செய்த இயக்குனர்\nஉயிரையே கொடுப்பேன்: ஒரேயொரு ட்வீட்டால் ரசிகர்களை சாச்சுப்புட்ட சன்னி லியோன்\nசமந்தாவால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி\nகேப்டன் மகன் ஆப்சென்ட்.. சுவையான நினைவுகளுடன் கலைத்துறையில் விஜயகாந்த் 40 ஆண்டுகள் விழா\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/malayalam-actor-anil-murali-passes-away-at-the-age-of-56-073378.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T10:19:04Z", "digest": "sha1:GLORPQGFMNDBNCXW4CUVECNBVKN5UT4J", "length": 15073, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனி ஒருவன் பட நடிகர் திடீர் மரணம்.. மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி! | Malayalam Actor Anil Murali passes away at the age of 56 - Tamil Filmibeat", "raw_content": "\nNews TN Lockdown: தினந்தோறும் புது புது கட்டுப்பாடுகள்.. தமிழ்நாட்டில் விரைவில் முழு லாக்டவுன்\nFinance அம்பானி ஷாப்பிங் லிஸ்டில் புது நிறுவனம்.. டாடா உடன் போட்டி போடும் மாஸ்டர் பிளான்..\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nSports அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய \"ரெக்கார்டு\".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனி ஒருவன் பட நடிகர் திடீர் மரணம்.. மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி\nசென்னை: தனி ஒருவன், கொடி உட்பட பல தமிழ் படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகரான அனில் முரளி காலமானார். அவருக்கு வயது 56.\nநிமிர்ந்து நில் நடிகர் Anil Suresh காலமானார்\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் அனில் முரளி. மலையாள தொலைக்காட்சித்துறையில் பணியாற்றிய அனில் முரளி.\nபின்னர் 1993ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் ஒரு கவிதா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.\nஎன் வாழ்க்கையில் சிறந்த நேரம்.. இதுதான் கல்யாண தேதி.. கன்பர்ம் பண்ணினார் பிரபல நடிகர் ராணா\nஏராளமான மலையாள படங்களில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார் அனில் முரளி. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nதமிழில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கனிதன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வால்டர் படம் ரிலீஸானது. இந்நிலையில் நடிகர் அனில் முரளி திடீரென காலமானார்.\nகல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அனில் முரளி கொச்சியில் உள்ள அஸ்டர் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.\nஅவரது மறைவு மலையாளம் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரண செய்தியை கேட்டு ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் பிரித்விராஜ் உட்பட திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nசூர்யா பட இசையமைப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் தமிழ் சினிமா.. பிரபலங்கள் இரங்கல்\nஇந்திய சினிமா ஜாம்பவான் திலீப் குமார் மறைவு... பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்\nஇந்திய சினிமா வரலாறு திலிப் குமாருக்கு முன் மற்றும் பின் என்றே எழுதப்படும்... அமிதாப் பச்சன் அஞ்சலி\nமாரடைப்பு.. பிரபல தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான பி.ஏ. ராஜு காலமானார்.. சோகத்தில் டோலிவுட்\nசுதா சந்திரனின் தந்தை காலமானார்… மீண்டும் உங்கள் மகளாக பிறக்க வேண்டும் உருக்கமான ட்வீட் \nஜோக்கர் துளசி மிக அற்புதமான மனிதர்…. ராதிகா இரங்கல் ட்வீட் \nமூத்த பழம் பெரும் நடிகர் ஜோக்கர் துளசி காலமானார் \nஅண்ணன் இறந்த 2 நாட்களில் தங்கையும் மரணம்.. இயக்குநர் எஸ்பி ஜனநாதன் வீட்டில் அரங்கேறிய சோகம்\nவீரபாண்டிய கட்டபொம்ம���் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்\nசிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல்\n'கருப்பன் குசும்புக்காரன்' நடிகர் தவசி காலாமனார்.. ரசிகர்கள்.. திரைத்துறையினர் அதிர்ச்சி\nபிரபல இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. 375 படங்களுக்குப் பணியாற்றியவர்.. திரையுலகம் இரங்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநண்பர்கள் தினத்துக்கு நச்சுன்னு பாட்டுப் போட்ட ராஜமெளலி.. மரகதமணி இசையில் அசத்தும் அனிருத்\nநாங்க வேற மாதிரி....வலிமை சிங்கிள் டிராக் எப்போ தெரியுமா...சுடசுட வந்த அப்டேட்\nஅந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/karthar-mel-barathai/", "date_download": "2021-08-02T10:17:48Z", "digest": "sha1:L3WEQVGE3VFTOQTMLQMKWP6NTEUSQD4U", "length": 11087, "nlines": 197, "source_domain": "www.christsquare.com", "title": "Karthar Mel Barathai Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nகர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு\nஅவரே நம்மை அணைத்துக் கொள்வார்\nகர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது\nநமக்கு எதிராய் நிற்பவன் யார்\nவாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்\nஅவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஉடம்பு சரி இல்ல சபைக்கு வர முடியலனு சொல்லுறவங்களுக்கு சமர்ப்பணம்..\nஒரே பிசி…உடம்பு சரி இல்ல ...\nகிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...\nதிருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்களா தயவு செய்து இதை படியுங்கள்.\nதன் சொந்த சகோதரன் ஏசாவின் ...\nலோத்தி மூன்…நற்செய்தியை அறிவிப்பதற்கு நீங்கள் ஆயத்தமா\nயார் இந்த தந்தை பெர்க்மான்ஸ் தந���தை SJ பெர்க்மான்ஸ் BIO-DATA\nபிறந்த நாள்: ஆகஸ்ட் 3 ...\nவேதாகமத்தை பற்றி Parveen Sulthana-வின் அருமையான பேச்சு.\nவேதாகமத்தை பற்றி Parveen Sulthana-வின் ...\nமே 01 மிஷனரி டேவிட் லிவிங்ஸ்டன் நினைவு தினம்\nஆப்பிரிக்கா. ஆம் , நீங்கள் ...\nகை கால்கள் இல்லாமல் பிறந்த மனிதனுடைய சாட்சி – நிச்சயம் இந்த வீடியோ பார்த்த பிறகு உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்.\nஇன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்…இந்த பாடலை யார் பாடியது என்று உங்களுக்கு தெரியுமா\nஇன்ப இயேசு ராஜாவை நான் ...\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\nஉம் பேரன்பில் நம்பிக்கை …\nதேடி வந்து மீட்ட …\nகிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு …\nஉம்மாலே கூடாத அதிசயம் …\nஎன்னை அழைத்தவரே தினம் …\nதிருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்களா தயவு செய்து இதை படியுங்கள்.\nதன் சொந்த சகோதரன் …\nஆண்டவரை தங்கள் சொந்தஇரட்சகராக ஏற்றுக்கொண்ட உடனே அனைவரும் வேதத்தை நேசித்து வாசிப்பது உண்டு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?ajaxcatalog=true&dir=desc&mode=list&order=position&publishers=59", "date_download": "2021-08-02T09:34:46Z", "digest": "sha1:BCJZQMK4NGG5SVUYBFTE4S3YBE5FV6S7", "length": 7726, "nlines": 248, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nதந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும்\nபெரியார் ஆயிரம் வினா - விடை\nபெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க\nபெரியார் சொன்னார் கலைஞர் செய்கிறார்\nபெரியார் கொட்டிய போர் முரசு\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்)\nபுது வரவ��கள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/06/bar.html", "date_download": "2021-08-02T10:16:33Z", "digest": "sha1:VO4QZW3QWKTWFWICO6EPWFLFZX7HVLB3", "length": 11396, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "ஓன்லைன் மதுபானம் கிடைக்காதாம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஓன்லைன் மதுபானம் கிடைக்காதாம்\nஇலங்கையில் ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதிப்பதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வந்த நிலையில், இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வெளியானதை அடுத்து இந்தத் தீர்மானம் வெளியாகியுள்ளது.\nமாணவர்கள் கல்வி கற்க இணைய வழிகள் போதியளவின்றி திண்டாடிவருகின்றனர்.\nஇதனிடையே இணையத்தின் மூலம் மதுபான விற்பனை : இலங்கை மருத்துவர் சங்கம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தன.\nபல்பொருள் அங்காடிகளில் இணையவழி மூலம் மதுபான விற்பனையை செயல்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.\nஅக்கடிதத்தில், இணையத்தில் மதுபானம் விற்பதை அனுமதிப்பதன் ஊடாக உடல்நலம் மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து இலங்கை மருத்துவர் சங்கம் எடுத்துரைத்துள்ளது.\nகோத்தா ஆட்சி பீடமேற மருத்துவ சங்கம் முன்னணியில் நின்றிருந்தமை குறிபபிடத்தக்கது.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவு���ையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/valimai-firstlook-poster-date-is-leaked/cid3464389.htm", "date_download": "2021-08-02T08:06:37Z", "digest": "sha1:RD5QMAFITV6IOCKOODIGMXUP7X2X65VT", "length": 5733, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "வலிமை ஃபர்ட்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி இதுதானாம்....உற்சாகத்த", "raw_content": "\n... வலிமை ஃபர்ட்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி இதுதானாம்....உற்சாகத்தில் தல ரசிகர்கள்....\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கி வருகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.\nஅவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும்தான் இப்போதைக்கு ரசிகர்களுக்கு ஆறுதல். வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவோம் என வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்தும் இதுவரை சத்தமே இல்லாமல் அமைதி இருக்கிறது படக்குழு.\nஇப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டதாக தெரிகிறது. பைக்கை மிகவும் வேகமாக ஓட்டும் பைக் ரேசர்களை வைத்து திருட்டு உள்ளிட்ட பல குற்றங்களை இப்படத்தின் வில்லன் கார்த்திகேயா செய்து வருகிறார். அதை போலீஸ் உயர் அதிகாரியான அஜித் எப்படி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறார் என்பதுதான் கதை என்பது தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடுவது பற்றி படக்குழு ஒரு முடிவுக்கு வந்துள்ளதாம். அதன்படி ஜூலை 3 வாரத்தில் வெளியிடலாம் என யோசித்து வருகிறதாம். அநேகமாக ஜூலை 15ம் தேதி அஜித்தின் செண்டிமெண்டான வியாழக்கிழமை வருவதால் அன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Vensatry", "date_download": "2021-08-02T10:35:17Z", "digest": "sha1:7UPRUFQ3W5B5S3FAI3TWH6HZERW4WLZB", "length": 15413, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Vensatry இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nVensatry இற்கான பயனர் பங்களிப்புகள்\nFor Vensatry உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n13:42, 26 சனவரி 2019 வேறுபாடு வரலாறு −3‎ சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடித்த நூறுகள் ‎ →‎நூறுகள்\n06:01, 4 ஆகத்து 2018 வேறுபாடு வரலாறு +19‎ அஞ்சலி மேனன் ‎ + புகைப்படம்\n06:01, 4 ஆகத்து 2018 வேறுபாடு வரலாறு +10‎ ஷீலா (நடிகை) ‎ + புகைப்படம்\n05:11, 26 சூலை 2017 வேறுபாடு வரலாறு +58‎ பார்வதி மேனன் ‎ +\n05:47, 4 சூலை 2017 வேறுபாடு வரலாறு 0‎ விஷ்ணுவர்தன் (நடிகர்) ‎ 1949->1950\n07:15, 23 மார்ச் 2017 வேறுபாடு வரலாறு +55‎ பு இ. வீ. சசிதரன் ‎ Vensatry பக்கம் இ. வீ. சசிதரன் என்பதை ஐ. வி. சசி என்பதற்கு நகர்த்தினார்: பொதுவாக அழைக்கப்படும் பெய... தற்போதைய\n07:15, 23 மார்ச் 2017 வேறுபாடு வரலாறு 0‎ சி ஐ. வி. சசி ‎ Vensatry பக்கம் இ. வீ. சசிதரன் என்பதை ஐ. வி. சசி என்பதற்கு நகர்த்தினார்: பொதுவாக அழைக்கப்படும் பெய...\n17:37, 22 சனவரி 2017 வேறுபாடு வரலாறு +15‎ சுவேதா மேனன் ‎ + படிமம்\n06:45, 16 செப்டம்பர் 2016 வேறுபாடு வரலாறு +19‎ ரம்யா நம்பீசன் ‎ + அடையாளம்: Visual edit: Switched\n16:25, 5 சூன் 2014 வேறுபாடு வரலாறு +238‎ பயனர்:Vensatry ‎ + தற்போதைய\n06:35, 3 ஏப்ரல் 2014 வேறுபாடு வரலாறு 0‎ மகேந்திரன் ‎ ஐந்து\n08:58, 16 பெப்ரவரி 2014 வேறுபாடு வரலாறு −3‎ பாலு மகேந்திரா ‎ →‎பிறப்பு: 1969\n14:35, 10 ஆகத்து 2013 வேறுபாடு வரலாறு −4‎ குஷ்பூ ‎\n14:22, 2 ஆகத்து 2013 வேறுபாடு வரலாறு +447‎ பயனர் பேச்சு:Sodabottle ‎ →‎உன்னைப்போல் ஒருவன் (1965 திரைப்படம்): புதிய பகுதி\n07:42, 16 சூன் 2013 வேறுபாடு வரலாறு +347‎ பயனர் பேச்சு:Sodabottle ‎ →‎பதிப்புரிமை: புதிய பகுதி\n07:35, 16 சூன் 2013 வேறுபாடு வரலாறு −4,024‎ ராதிகா சரத்குமார் ‎ காதல் வாழக்கை\n16:25, 12 மே 2013 வேறுபாடு வரலாறு 0‎ இளையராஜா ‎ →‎வாழ்க்கைச் சுருக்கம்\n16:20, 12 மே 2013 வேறுபாடு வரலாறு +373‎ பயனர் பேச்சு:Sodabottle ‎ →‎விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்: புதிய பகுதி\n11:22, 9 மே 2013 வேறுபாடு வரலாறு +3‎ விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள் ‎ →‎திரைத்துறை\n11:22, 9 மே 2013 வேறுபாடு வரலாறு +382‎ விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள் ‎ →‎திரைத்துறை: +\n11:20, 9 மே 2013 வேறுபாடு வரலாறு +705‎ நர்கிசு ‎ +\n11:06, 9 மே 2013 வேறுபாடு வரலாறு +3,467‎ பு நர்கிசு ‎ உருவாக்கம்\n10:29, 9 மே 2013 வேறுபாடு வரலாறு +2,616‎ பு அலீயா பட் ‎ உருவாக்கம்\n07:40, 1 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு +70‎ பு மதிவ் எய்டன் ‎ Vensatry பயனரால் மதிவ் எய்டன், மாத்யூ எய்டன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: corr pronounciation\n07:40, 1 செப்டம்பர் 2012 வேறுபாடு வரலாறு 0‎ சி மாத்தியூ எய்டன் ‎ Vensatry பயனரால் மதிவ் எய்டன், மாத்யூ எய்டன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: corr pronounciation\n12:06, 12 மே 2012 வேறுபாடு வரலாறு +33‎ பாலு மகேந்திரா ‎\n14:39, 3 பெப்ரவரி 2012 வேறுபாடு வரலாறு +33‎ தபூ ‎\n14:38, 3 பெப்ரவரி 2012 வேறுபாடு வரலாறு 0‎ தபூ ‎\n14:37, 3 பெப்ரவரி 2012 வேறுபாடு வரலாறு +1,099‎ பு தபூ ‎ c\n14:36, 3 பெப்ரவரி 2012 வேறுபாடு வரலாறு −181‎ பயனர்:Vensatry ‎ rd\n06:35, 27 அக்டோபர் 2011 வேறுபாடு வரலாறு +22‎ பயனர்:Vensatry ‎\n06:26, 27 அக்டோபர் 2011 வேறுபாடு வரலாறு 0‎ மீரா ஜாஸ்மின் ‎\n06:17, 27 அக்டோபர் 2011 வேறுபாடு வரலாறு +8‎ மீரா ஜாஸ்மின் ‎\n06:02, 27 அக்டோபர் 2011 வேறுபாடு வரலாறு +13‎ ஜெயபிரதா ‎\n14:43, 12 அக்டோபர் 2011 வேறுபாடு வரலாறு 0‎ சி தமிழக அரசு திரைப்பட விருதுகள் ‎ தமிழக அரச திரைப்பட விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டு...\n14:42, 12 அக்டோபர் 2011 வேறுபாடு வரலாறு +365‎ இரசினிகாந்து ‎ →‎நடித்துள்ள திரைப்படங்கள்: wl\n14:37, 12 அக்டோபர் 2011 வேறுபாடு வரலாறு +53‎ இரசினிகாந்து ‎ →‎நடித்துள்ள திரைப்படங்கள்: ta wl\n14:34, 12 அக்டோபர் 2011 வேறுபாடு வரலாறு −48‎ இரசினிகாந்து ‎ →‎நடித்துள்ள திரைப்படங்கள்\n06:28, 16 சூலை 2011 வேறுபாடு வரலாறு 0‎ சி வார்ப்புரு:சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது ‎\n06:28, 16 சூலை 2011 வேறுபாடு வரலாறு −11‎ ராதிகா சரத்குமார் ‎ இது வேரு புகைப்படம்\n06:26, 16 சூலை 2011 வேறுபாடு வரலாறு +274‎ வார்ப்புரு:சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது ‎ விரிவாக்கம்\n06:15, 16 சூலை 2011 வேறுபாடு வரலாறு 0‎ கமல்ஹாசன் ‎ →‎திரைப்படக் குறிப்பு\n06:05, 16 சூலை 2011 வேறுபாடு வரலாறு 0‎ இரசினிகாந்து ‎ 1950\n06:03, 16 சூலை 2011 வேறுபாடு வரலாறு −135‎ இரசினிகாந்து ‎ கைக்வாட் சரியான உச்��ரிப்பு\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nVensatry: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil4.com/corona/extreme-delta-virus-in-colombo/", "date_download": "2021-08-02T09:16:20Z", "digest": "sha1:HFYK3HEFAO7JYN3DJ3T4LPC6GVJZCWR4", "length": 5682, "nlines": 66, "source_domain": "tamil4.com", "title": "கொழும்பில் அதிதீவிர டெல்டா வைரஸ் – மக்களின் உதாசீனம் - Tamil4", "raw_content": "\nகொழும்பில் அதிதீவிர டெல்டா வைரஸ் – மக்களின் உதாசீனம்\nஇந்தியாவில் பரவும் டெல்டா எனப்படும் கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகொழும்பிலிருந்து பெறப்பட்ட சிலரின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த விடயம் கண்டறியப்பட்டதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நீர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.\nஇருப்பினும் முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை, பயணக் கட்டுப்பாட்டை பொருட்படுத்தாமை உள்ளிட்ட எந்தவொரு சுகாதார நடைமுறையையும் அந்த பகுதி மக்கள் கடைபிடிக்கவில்லை.\nஇந்தியாவில் பரவும் அதிதீவிர பாதிப்புக்களை எதிர்நோக்கக்கூடிய டெல்டா வைரஸ் பிரிவு, இன்று முதல் தடவையாக சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டது.\nஇந்த வைரஸ் பரவும் பட்சத்தில், பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிடுகின்றனர்.\nயாழ். மருத்துவபீடத்திற்கு பி.சி.ஆர் அன்பளிப்பு செய்த சுவிஸ் வாழ் தமிழர்\n4 மில்லியனை கடந்த கொவிட் உயிரிழப்புகள்\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\nஇலங்கையில் 24 மணிநேரமும் தடுப்பூசிகள்\nதம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/445", "date_download": "2021-08-02T08:16:12Z", "digest": "sha1:PWC55TQZ2SV4G4FQ3BXNYJDYWISVDDEX", "length": 3235, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 445 | திருக்குறள்", "raw_content": "\nசூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்\nதக்க வழிகளை ஆராய்ந்து கூறும்‌ அறிஞரையே உலகம்‌ கண்ணாகக்‌ கொண்டு நடத்தலால்‌, மன்னவனும்‌ அத்தகையாரை ஆராய்ந்து நட்புக்‌ கொள்ள வேண்டும்‌.\nசூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான்; மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க.\n(இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லானாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி, அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் -அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின் சிறப்புக் கூறப்பட்டது.)\n(இதன் பொருள்) அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல் ; காரிய மெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/finance-ministry/", "date_download": "2021-08-02T09:51:04Z", "digest": "sha1:Z4S3ZWHNCQYQHEGZJLHAGXJYPJQXVJEF", "length": 15446, "nlines": 136, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமை\nஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிதி அமைச்சகத்தின் திட்டத்தை எதிர்ப்பதில் கேரள அரசு உறுதியுடன் இருக்கிறது...\nFinance MinistryGST compensationKerala GovernmentNirmala SitharamanThomas Issacகேரளாஜிஎஸ்டிஜிஎஸ்டி இழப்பீடு தொகைதாமஸ் ஐசக்நிதி அமைச்சகம்நிர்மலா சீத்தாராமன்\nகொரோனா காலத்தில் மத்திய அரசின் செலவுகள் போதுமானதுதானா\nகொரோனா காலத்தில் 1 லட்சத்தி 35 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ‘பிரதமர் ஏழைகள் நல திட்டம்’ (PMGKY) மூலமாக பெண்களுக்கும்...\nCOVID-19 relief packageeconomic crisisFinance MinistryFiscal deficitIndian economylockdownஇந்தியப் பொருளாதாரம்கொரோனாநிதி அமைச்சம்பொது முடக்கம்பொருளாதார நிவாரணம்பொருளாதார மீட்பு\nஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு: எப்படி புரிந்து கொள்ளலாம்\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் செப்டம்பர் மாதம் ரூ.95,480 கோடி வசூலாகியுள்ளது என்று நேற்று நிதி அமைச்சகம் வெளியிட்ட...\nமத்திய அரசின் கடன்: வரலாறு காணாத அதிகர���ப்பு\nமத்திய அரசு இந்த ஆண்டில் கூடுதலாக ரூ.4.34 லட்சம் கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளதாக நேற்று (செப்டம்பர் 30) நிதி அமைச்சகம்...\nFinance MinistryFiscal deficitgovernment debtministry of financeNirmala Sitharamanஅரசுநிதி பற்றாகுறைஒன்றிய அரசுகடன் சுமைநிதி அமைச்சகம்நிதி பற்றாகுறை\nமத்திய அரசின் ஜிஎஸ்டி முறைகேடு: சிஏஜி குற்றச்சாட்டு\nஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை குறைத்து மதிப்பீடு செய்ததற்காக மத்திய அரசின் கணக்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை...\nகடன் தள்ளிவைப்பு: காப்பாற்றப்படுவார்களா வாடிக்கையாளர்கள்\nகொரோனா காலத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தள்ளிவைப்பு சலுகையை பெற்றவர்களின் கடன்கள் வட்டி மீது வட்டி விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதி...\nதமிழ்நாடு மின் பகிர்மான கழகம்: கிடைக்குமா நிதி உதவி\nகொரோனா காலத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகங்கள் சந்தித்து வரும் நெருக்கடியை சமாளிப்பதற்கு மத்திய நிதி அமைச்சர் சென்ற மே...\n3000 croresAmbedkarCoronaCoronaReliefDeepika padukonediscomsFinance MinistryNCBpower distribution companiesRakul preet singhShraddha kapoorTANGEDCOUDAYUnion governmentVijayakathZee tvஇந்தியாஉதய் திட்டம்ஒன்றிய அரசுதமிழ்நாடுதமிழ்நாடு அரசுதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்தமிழ்நாடு மின்சார துறை பிரச்சினைதமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் சங்கம்மத்திய அரசு\nசிறுகுறு தொழிலகங்களின் பிரச்சனை: கடன் உதவி போதுமா\nகொரோனா காலத்தில் அனைத்து சிறுகுறு தொழிலகங்களாலும் மத்திய அரசு வழங்கிய கடன் உதவிகளை பெற முடியவில்லை என்று நிதிசார் தகவல் வழங்கும்...\n3000 croresAmbedkarCoronaCoronaReliefCrediwatchDeepika padukoneFinance MinisterFinance MinistryIndian economyNCBNirmala SitharamanRakul preet singhShraddha kapoorVijayakathZee tvஅமைப்புசாரா துறைஅமைப்புசாரா நிறுவனங்கள்இந்தியப் பொருளாதாரம்சிறுகுறு தொழிலகங்கள்சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள்நிதி அமைச்சகம்நிர்மலா சீத்தாராமன்பாஜக\nகொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது – மத்திய அரசு\nகொரோனா காலத்தில் கடன் வாங்கியவர்களின் சுமையை குறைக்க கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி கடன் தள்ளிவைப்பை அறிவித்தது. முதலில் மார்ச்...\nFinance MinistryMoratoriumNon-performing assetsReserve Bank of IndiaSupreme Courtஉச்ச நீதிமன்றம்கடன் தள்ளி வைப்புநிதி அமைச்சகம்ரிசர்வ் வங்கிவாராக் கடன்\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்���ாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக்...\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின் போராட்டம்\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் – தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தகவல்\n‘தற்போதைய பணவீக்கத்திற்கு 1947-ல் நேரு ஆற்றிய உரையே காரணம்’ – ம.பி. பாஜக அமைச்சர்\n‘பெகசிஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை வேண்டும்’ – நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apbsingapore.com.sg/news-media/apb-foundation-donates-75000-to-help-overseas-employees/", "date_download": "2021-08-02T08:57:10Z", "digest": "sha1:JJVLUS2ZV47RMWVSG4DTRZRMMGZ42HRC", "length": 2567, "nlines": 33, "source_domain": "www.apbsingapore.com.sg", "title": "Seithi: வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ $75,000 நன்கொடை வழங்கும் Asia Pacific Breweries அறநிறுவனம் - Asia Pacific Breweries Singapore", "raw_content": "\nSeithi: வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ $75,000 நன்கொடை வழங்கும் Asia Pacific Breweries அறநிறுவனம்\nAsia Pacific Breweries அறநிறுவனம், COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழ��யர்களுக்கு உதவ 75,000 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது.\nவெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் அறநிதிப் பிரிவு நிர்வகிக்கும் வெளிநாட்டு ஊழியர் உதவி நிதியில் அந்தத் தொகை சேர்க்கப்படும்.\nவெளிநாட்டு ஊழியர்களின் அன்றாடத் தேவைகளுக்கும், பயணங்கள் ரத்தானதால் சொந்த நாடு திரும்ப முடியாமல் இங்கு தங்குமிடம் இன்றித் தவிப்போருக்கும் உதவ, அந்த நிதி பயன்படுத்தப்படும்.\nகிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் நடப்பிலிருக்கும் காலக்கட்டத்தில் வேலைசெய்ய முடியாதோருக்கு நிதியாதரவு வழங்கவும் அது வகைசெய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2020/04/27/kashmora-film-style-witchcraft-billy-cheating-gang-claiming-to-be-magic/", "date_download": "2021-08-02T07:53:45Z", "digest": "sha1:XQ4YCU3RXPEXAFZTHRXAZ6CZ232K3YQT", "length": 14010, "nlines": 167, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "காஷ்மோரா பட பாணியில் மாந்த்ரீகம், பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ஏமாற்றிய கும்பல்! – Kuttram Kuttrame", "raw_content": "\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nகாஷ்மோரா பட பாணியில் மாந்த்ரீகம், பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ஏமாற்றிய கும்பல்\nPublish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்\nயாருக்கும் தெரியாமல் தாங்கள் ஏற்கனவே மறைத்து வைத்த இடத்தில் இருந்து பில்லி சூனியம் எடுப்பதாக பண மோசடியில் ஈடுபட்டு இருந்த மோசடி கும்பல் ஒன்றை ராமநாதபுரம் கமுதி போலீசார் கைது செய்துள்ளனர். மாந்திரீக மோசடி கும்பல் சிக்கியது எப்படி\nகாஷ்மோரா படத்தில் நடிகர் கார்த்தி போலி சாமியாராக நடித்து பில்லி சூனியம் எடுப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அதுபோன்றே உண்மை சம்பவம் ராமநாதபுரம் கமுதி அருகே நடந்துள்ளது. டுபாக்கூர் மாந்திரிக கும்பல் கூண்டோடு சிக்கியது எப்படி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான செல்வகுமார்.\nதனது வீட்டிலேயே சிறிய கோவில் அமைத்து மாந்திரீக சித்து வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். செல்வகுமார் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இரவு நேரங்களில் குறிசொல்லும் செல்வகுமார் பில்லி சூனியம் எடுப்பதில் பிரபலமானவர் என அந்த பகுதியினர் கூறுகின்றனர். தன்னிடம் குறி கேட்க வந்த தோப்புபட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி மற்றும் அவரது நண்பர்களிடம் தங்கப் புதையல் இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்று சொல்லியுள்ளார்.\nஆனையூரில் உள்ள அந்த புதையலில் தங்கக்கட்டிகள், தங்கச் சிலைகள், வைர கற்கள் இருப்பதாக வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார் செல்வகுமார். மேலும் அந்த புதையலை எடுக்க நால்வரும் காணிக்கையாக தலா 50 லட்சம் என இரண்டு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். சாமியாடி சொல்வதெல்லாம் உண்மை என நம்பிய நால்வரும் காணிக்கையை சாமி குறைக்க கூடாது என பேரம் பேசியுள்ளனர்.\nஆனால் சாமியாடி காணிக்கையை குறைக்கவில்லை. இதில் கடுப்பான நால்வரும் சாமியாடிக்கு தெரியாமல் திட்டமொன்றை தீட்டியுள்ளனர். ரகசிய புதையல் நமக்கு தான் கிடைக்க வேண்டும் சாமியாடி அந்த புதையலை யாருக்கும் கொடுக்க கூடாது என்று முடிவு செய்துள்ளனர். செல்போன் ஒன்றிலிருந்து சாமியாடி புதையலை மறைத்து வைத்துள்ளார் என்று மாவட்ட எஸ்பி க்கு போன் செய்து இக்கும்பல் தகவல் சொல்லியுள்ளன.\nதகவல் சொன்ன கையுடன் அந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் சாமியாடியை செல்வகுமார் ரகசியமாக கண்காணித்தனர். மேலும் போலீசாரே சாமியாரிடம் குறி கேட்பது போன்று சென்றுள்ளனர். வந்தவர்கள் போலீசார் என தெரியாமல் அவர்களுக்கும் குறி சொல்லிய சாமியார் அவர்களிடமும் புதையல் விவகாரத்தை சொல்ல சாமியாடியை கையும் களவுமாக பிடித்தனர்.\nஅவரை பிடித்து விசாரித்ததில் அது போன்ற ஒரு புதையலே இல்லை என்பதும் பணம் பறிக்கும் நோக்கில் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சாமியாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் புதிய திட்டம் போட்ட தோப்புக் நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி மற்றும் முத்து மகாதேவன் அருள் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nமேலும் மாந்திரீகத்திற்கு பயன்படுத்திய மண்டைஓடுகள் சிலைகள் மற்றும் போலி வைர கற்களை போலீசார் கைப்பற்றினர். 5 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் - சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nசிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nநடிகர் விஜய்யை சந்திக்க சென்ற ரசிகர்..\nகோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்..\nகுற்றம் கொள்ளை தமிழ்நாடு விரைவு செய்திகள்\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nகிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/mer/176-news/articles/guest/3662-2017-06-20-10-56-27", "date_download": "2021-08-02T09:02:11Z", "digest": "sha1:GQY5R3D3WUXCFX4IVWV3F44HAPVFFSKI", "length": 55954, "nlines": 154, "source_domain": "www.ndpfront.com", "title": "தமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புக்கள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன. காலந்தோறும் மானிடர்களின் பரிணாம வளர்ச்சி இயற்கையுடன் இயைந்ததாகவே கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த மானுட இயக்கத்திற்கும் இயற்கையும் இயங்கியலுக்குமிடையிலேயே மனித சமூகத்தின் படைப்பாக்கங்கள் நிகழ்ந்துள்ளன. மொழியின் உருவாக்கத்துக்கு முன்னர் வேட்டையாடி வாழ்ந்த மாந்த சமூகம் தனக்குள் ஊடாடுவதற்கும், காட்டினுள் தனது இயக்கத்தினை தனது சமூகத்திற்கு தெரிவிப்பதற்கானதுமான குறிகாட்டியாக ஓசையைக் கண்டறிந்திருக்கலாம்.\nமனித வாழ்வியல் தொடர்ச்சியின் கண்டுபிடிப்புக்களில் இன்று இனத்தின் அடையாளமாகவும் உணர்வுத் தளத்தில் மக்களை ஒன்றிணைக்கக்கூடியதுமான இசைக்கருவியாக பறையினைக் குறிப்பிடலாம். பறை என்ற சொல் “பறைதல்” என்ற வேரினடியாகப் பிறந்திருக்கலாம். கல்தோன்றி மண்தோன்றி கடல்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழுக்கும் முன்தோன்றியது பறை என்று கூற முடியும். உலகின் தொல்குடிகள் அனைத்தினதும் வரலாற்றினை நோக்கின், அவர்களது வரலாற்றில் தோற்கருவியென்பது அவர்களின் அடையாளமாக இருக்கும். தொல்குடியான தமிழர்களின் வரழ்வியலிலும் “பறை” எனும் இசைக்கருவி தொல்கருவியாக இருந்து, சமூக இயங்கியல் மாற்றங்களுக்கு உட்பட்டு, இன்று தொன்மங்களின் எச்சங்களில் ஒன்றாகவும் மீளத்தேடப்படும் மரபுகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. தமிழினத்தின் அடையாளமொன்று இன்று வெறுமனே சாதிய அடையாளமாக மாற்றப்பட்டு அதன் ஆற்றுகை வெளியைக் குறைத்துள்ளது. இவ்வேளையில் பறை என்னும் இசைக்கருவி தமிழனின் வாழ்வியலில் எவ்வாறு ஒத்திசைந்திருக்கின்றது என்பதையும் இன்று அதன் அடையாளங்கள் உருமாற்றப்பட்டு ஒரு இனக்குழுமத்தின் அடையாளத்தை சிதைப்பதற்கான கருவிகளில் ஒன்றாக எவ்வாறாகக் கையாளப்படுகின்றது என்பதையும் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கின்றது.\nபறை என்பது தமிழர் தொல்குடியின் இசைக்கருவிகளின் பொதுப்பெயர். தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலுக்கு ஏற்ற வகையிலேயே அவர்களது வாழ்வியல் இயங்குநிலை கட்டமைக்கப்பட்டிருக்கும். நிலமும் அதுசார்ந்த இயற்கையும் கண்டுபிடிப்புக்களுக்கான காரணிகளாக இருக்கின்றன. ஐந்துதிணைகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வியற்கோலம் அவர்கள் சார்ந்த திணைகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும், “பறை” என்னும் பொதுப்பெயர் எல்லாத் திணைகளுக்கும் பொதுவினதாக தமிழர்களின் இசைக்கருவியாக இருந்திருக்கின்றது. சொல்லுதல், அறிவித்தல், கூறுதல் என்னும் பொருட்களில் காணப்படுகின்ற பறைதல் என்னும் சொல்லினடியாகவே பறை என்ற கருவியின் பயன்பாட்டினையும் நோக்குதல் வேண்டும்.\nகாட்டுமிராண்டி நிலையிலிருந்து வேட்டைச்சமூகமாக பரிணாம வளர்ச்சியடைகையில் திசையும் மொழியும் தெரியாத காலத்தில் பறை உருவாகியிருக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். பின்வந்த வேளாண் சமூகத்தில் ஆநிரை கவ���்தலும் காத்தலும் என்ற திணைப்பொருளினடிப்படையில் மக்களை ஓரிடத்தில் சேர்ப்பதற்குரிய கருவியாக பறை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தமிழரின் பிறப்பினை அறிவிப்பதிலிருந்து அவனது இறப்பு வரையிலும் பறைக்கும் அவனுக்குமான தொடர்பு ஒன்றுடனொன்று பின்னியுள்ளது எனலாம். அந்தப் பிணைப்பு இன்று நேற்று வந்ததல்ல. தொல்குடிச் சமூகமான தமிழர்களின் வாழ்வியல் அடையாளமாக தொன்றுதொட்டு நிலவிவருகின்றது. எமக்கான மரபுகளும் அதன் எச்சங்களும் இலக்கியங்களினடியாக அறியப்படலாம். அவ்வகையில் எம் மரபில் பறை அதன் இயங்கியலுடன் எவ்வாறு வந்திருக்கின்றது என்பதை நோக்கலாம்.\nவேட்டைப்பறை, வேளாண் பறை, புறப்பறை, அகப்பறை, கலைப்பறை என்று பெரும் பிரிவுகளால் பறையின் நோக்கத்தின் அடிப்படையில் பிரிக்கப்படலாம். ஆரியப் பறை, ஆறிருப் பறை,உவகைப் பறை,சாப் பறை,வெற்றியின் பறை,மீன்கோற் பறை,. மருதநிலப் பறை,குரவைப் பறை, தடாருப் பறை,குறும் பறை,கேற் பறை,தடாரிப் பறை, நிசாளம் பறை,தலைப் பறை, பண்டாரப் பறை,பான்றிப் படை,. முருகியம் பறை,வெறியாட்டுப் பறை, வீரணம் பறை, பஞ்சமாசதம் பறை போன்ற பல பறைகள் அவற்றினது நோக்கத்தினடிப்படையிலும் வடிவத்திலும் வேறுபடுத்தப்படுகின்றன.\nசெருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி\nவேல்லைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்”\nஎன்றவாறாக போர்ப்பறையைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. போரிற்குச் செல்லும் முன்னர் மன்னன் அத்திணைக்குரிய பூவினை வீரர்களுக்கு வங்குதல் மரபு. போரிற்கான அறைகூவல் முதல், போருக்கான தயார்ப்படுத்தலிலிருந்து படைகள் புறப்பாடு வரைக்கும் பறை ஒலியே வீரர்களை ஒருங்கிணைக்கின்றது. போரில் வெற்றி பெற்ற பின்னரும் கூட பறையைச் சார்ந்தே அவர்களது களவேள்வி அமைந்திருக்கும். அதாவது,\n“எடுத்தெறி அ(ய)னந்தற் பறைச்சீர் தூங்க\nபருந்தருந் துற்ற தானையொடு… …” (புறநா. 62:5)\n“நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்\nதணிபறை யறையு மணிகொ டேர்வழி” (புறநா. 68: 14)\n“இன்னிசைப் பறையொடு வென்றி நுவல” (புறநா. 225: 10)\nபோன்ற ஆதாரங்களினூடாக இதனை நிறுவலாம். வீரத்தில் பறை பேசப்பட்டிருப்பது போல அகப்பொருளிலும் பறை பதியப்பட்டிருக்கின்றது. உதாரணமாக ,\nஅதாவது படைகள் வீதியால் வரும்போது மக்களை அறிவுறுத்துவதற்காக பறையறிவிப்பார்கள். ஆனால் நீ வரும்போது அதனைச் செய்யாது விடுத்த அரசனே தவறிதை;தவன் என்று தலைவன் தலைவியிடம் கூறுவது போல அமைந்திருக்கிறது இப்பாடல்.\nபிறப்பு முதல் இறப்பு வரைக்கும் முக்கியம் வகித்த பறையானது, இன்று மனிதனின் இறுதிச் சடங்கில் பங்குபற்றும் இசைக்கருவியாகி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. நற்காரியங்களிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை,\nஅவ்வழிப், பறைஎழுந்து இசைப்பப், பல்லவர் ஆர்ப்பக்,\nகுறையா மைந்தர் கோள்எதிர் எடுத்த –\nநறைவலம் செய்விடா இறுத்தன ஏறு,.. “ முல்லைக்கலி.)\nகூறுகின்றது. அதாவது, களவு மணம் புரிந்த காதலனுக்கு உற்றார் சுற்றியிருக்க பறை இசை முழங்க திருமணம் நிகழ்ந்ததை குறிப்பிடுகின்றது.\nவேளாண் குடியில் வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையில் விலங்குகளிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும் பயிரைக் காப்பதற்காக பறை வாத்திய ஒலி எழுப்பப்பட்டிருக்கின்றது என்ற குறிப்பும் காணப்படுகின்றது.\n“குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த\nதொண்டகச் சிறுபறைப் பாணி அயலது\nபைந்தாட் செந்தினைப் படுகிளி ஓப்பும்” (நற்றிணை 4)\nவரகுப் பயிர்களினிடையே வளர்ந்திருக்கும் களையைப் பிடுங்கும் போது பறை ஒலிக்கப்பட்டதாக அகநானூறு பதிவுசெய்திருக்கின்றது. கதிரறுக்கும் போதும் பறை இசைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறது. பறையானது தானியத்தின் அளவை அளக்கின்ற கருவியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுவர்.\n“கறங்கபறைச் சீரின் இறங்க வாங்கிக்\nகளைகால் கழீஇய பெரும்புன வரகின்’(அகநா. 194: 7-9)\nஅரிப்பறையாற் புள்ளோப் புந்து” (புறநா. 396)\nதிணைகளின் இயல்பு சார்ந்து ஒலித்த பறை ஒரு கலைப்படைப்பாகவும் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றன. இயலிசை நாடகம் என முத்தமிழ் வளர்த்தது சங்ககாலம். மக்கள் தமது வெற்றிகளைக் கொண்டாட ஆடலையும் பாடலையும் நிக்த்தியிருக்கிறார்கள். அந்த ஆட்டங்களில் பறையும் ஒலிக்கப்பட்டிருக்கின்றது என்ற குறிப்புகள் காணப்படுகின்றன.\n“நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு\nமான்தோற் சிறுபறை கறங்கக் கல்லென\nவான்தோய் மீமிசை அயரும் குரவை” (மலைபடு. 320 – 322)\nஅதாவது, போருக்கு எந்த நாளில் நறவுக்கள்ளை ஊற்றித் தந்து அவர்களோடு சேர்ந்து மான்தோல் பறையை முக்கி கொண்டு கானவர் குரவை ஆடும் ஒலி என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து போரில் வெற்றி பெற்ற ப��ன்னர் தேரினைச் சுற்றி ஆடுகின்ற குரவைக்கூத்திலே பறை இசைக்கப்படுகின்றது என்பதை அறியலாம்.\nஇவ்வாறு ஒவ்வொரு திணைக்கும் உரியதாக பறை என்னும் இசைக்கருவி தமிழர்தம் வாழ்வியலில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், இன்று அது தன்போக்கில் இயங்கியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு வடிவங்களில் பறை என்னும் பெயர்கொண்டு அழைக்கப்படுகின்றது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் பிரதேச ரீதியாக பறை என்னும் பொதுப்பெயரில் சிறு சிறு மாற்றங்களைக் கொண்ட வடிவங்களில் பறை இசைக்கருவி இருப்பினும், இருபக்கமும் அடிக்கக்கூடிய இருபக்கப்பறையே பறை என அறியப்படுகின்றது. இரண்டுபக்கமும் ஒரே மாதிரியான வடிவமுடைய பறை பெரிய பறை மேளம் எனவும் ஒரு பக்கம் மட்டும் அடிக்கக்கூடிய சிறு பறை துந்துடி மேளம் எனவும் அழைக்கப்படுகின்றது. மரபுசார்ந்த கோவில்களிலும், சடங்கு சார் வழிபாடுகளிலும் இன்றும் பறையே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. தொன்மையான இசைக்கருவியொன்று இன்று இழிசொல்லாக மாற்றப்பட்டிருக்கிறது. பற தெமிழா என்று சிங்களவன் கூட அழைக்குமளவிற்கு அதன் உண்மைப்பொருள் திரிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. பறை வாத்தியத்தை இசைத்த பறையர்கள் சங்ககாலத்தில் அதன் அரசுசார்ந்து முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள்.\n“பாணன் “”பறையன்” துடியன் கடம்பன்\nஇந்நான்(கு) அல்லது குடியும் இலவே”\nஎன்பது புறநானூறு. அரச நெறிகளை அரசுக்கே “பறை”ந்த பறையர் என்ற இனம். இன்று சாதிய மேலாதிக்க மனப்பான்மையாலும் இந்துத்துவாவின் மேலாண்மையாலும் தீண்டத்தகாதவர்கள் என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். பறை என்ற தொன்மையான அடையாளமும் மெல்ல மெல்ல எம்மிடையே மருவிக்கொண்டு வர அதனது இடத்தை வேறு வாத்தியங்கள் பிடித்துக்கொள்ளத்தொடங்கியிருக்கின்றன. இது ஒரு சமூகத்தின் வீழ்ச்சியை மட்டுமல்ல ஒரு இனத்தின் அடையாளத்தையே அழிப்பதற்கான செயல்வடிவம் ஆகும். பறையின் அதிர்வலைகளில் மனித இயக்கத்தின் இயங்கியல் ஒன்றுபடுத்தப்படுகின்றது என்பது ஆய்வு.\nதமிழகத்தில் சமூகம் சார்ந்த மாற்றத்தின் ஒலியாக பறையின் இசையானது இன்று சாதிய அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்து மீண்டும் தமிழர்களிடத்தே பரவலாக இசைக்கப்பட்டு வருகின்றது. அவர்க��து பறையானது “தப்பு” எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும். ஈழமக்களின் தளத்தில் பறை என்பது வேறு வடிவம். ஒற்றைப் பக்க இசைத்தலுக்குரிய தப்பு அல்ல அது. இங்கே தான் சிக்கல் எழுகின்றது. தமிழர்களின் அடையாளம் என்ற பெயரில் “தப்பு” தமிழர் இருக்கும் இடமெங்கிலும் ஆற்றுகை செய்யப்படும் ஒரு வடிவமாக மாறிக்கொண்டிருக்கிறது. சமூக மாற்றம் வேண்டும்: ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களாய் பறை ஒலிக்கவேண்டும் என்ற கருத்தியல் “தப்பு” என்னும் பறையினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தினைப் பொறுத்தவரையில் அது தன் செயற்பாடு சார்ந்து சரியான வழியிலேயே சென்றுகொண்டிருக்கின்றது. ஒரே இனம் என்ற புள்ளியில் ஒன்றுபட்டாலும் ஒவ்வொரு குழுமத்திற்கும் அவர்கள் சார்ந்த மரபு அடையாளங்கள் தனித்தன்மையானவையாக இருக்கின்றன. திணை சார்ந்து மக்களின் வாழ்வியல் தனித்தனி அடையாளங்களுடன் கட்டமைக்கப்பட்டிருந்தது போல இன்றும் பிரதேசங்களினடிப்படையில் தொன்மையான பல மரபடையாளங்கள் பேணப்பட்டு வருகின்றன. ஈழமக்களிடையே பறை என்ற சொல்லானது தரும் அடையாளம் தப்பு என்னும் பறை அல்ல. ஆனால் இப்போது, தப்பு எனும் பறையும் தப்பாட்டம் என்னும் ஆற்றுகையும் பறையாட்டமாக ஈழத்திலும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஒடுக்கப்பட்டவர்களின் குரல் என்ற குறியீட்டுப்புள்ளியில் ஒன்றுசேர்பவர்களின் உணர்ச்சிநிலையைப் பயன்படுத்தி தப்பு இலகுவாக எம் மரபிலும் உள்நுழைந்திருக்கிறது.\nவரலாற்றிலே பறையானது திணையினடிப்படையிலும் பயன்பாட்டினடிப்படையிலும் பலவகைப்பட்ட பெயர்களையும் வடிவங்களையும் கொண்டிருந்தாலும் தற்போது மிகச் சில பறைகளே எஞ்சியிருக்கின்றன. ஈழத்து மரபில் பல வடிவங்களினாலான பறைகள் இசைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று எமக்கு எஞ்சியிருப்பது பறைமேளமே. ஆனால் பறைமேளம் மட்டுமே எமது மரபாக இருந்திருக்கிறது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. தப்பு வகைப் பறை கூட எம் மரபில் இருந்து, பின்னர் ஆற்றுகை செய்வோரற்று இல்லாமல் போயிருக்கலாம். அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியவை.\nஒடுக்கப்பட்டவர்களின் குரல்களுக்காய் நாம் குரல் கொடுக்க வேண்டுமெனின், எம்மிடமிருக்கும் பறையை அந்த சமூகத்தினரோடு இணைந்து வெளிக்கொணர்வதாகும். அ���ை விடுத்து ,இன்னொரு பிரதேசத்தின் மரபினை எம் மரபு எனச் சொல்லி, இங்கே இருக்கும் மரபினை பொதுவான மரபிற்கு மடைமாற்றம் செய்வது அபத்தமானது. கொள்கை வகுப்புக்களும் சமூகக் கோட்பாடுகளும் குறிப்பிட்ட சமூகத்தின் ஆழத்திலிருந்து தோன்றுபவை. அவை அந்த சமூகத்திற்கே பிரதியிடப்பட முடியும்.\nஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தலும் அவர்களுக்காக போராடுவதும் அதனூடாக எமது அடையாளங்கள் மீட்கப்படுவதும் நிகழப்படவேண்டிய ஒன்றேயாகும். ஆனால் அந்தச் செயல்வாதத்தில் எமது அடையாளங்களை இன்னொரு அடையாளம் தின்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பது அவசியமாகின்றது. ஈழத்தைப் பொறுத்தவரையில் பறைமேளக்கூத்து என்னும் ஆற்றுகை வடிவம் வன்னியிலும் மட்டக்களப்பிலும் ஆற்றுகை செய்யப்படுகின்றது. ஆனால் அது குறிப்பிட்ட சமூகம் சார்ந்த ஆற்றுகையாக இருப்பதனாலும், அதன் மூலம் சாதிய அடையாளம் வெளிக்காட்டப்படுகின்றது என்னும் சமூகக் கொடுமையினாலும் மருவிக்கொண்டுவரும் ஆற்றுகையாக இருக்கின்றது. அடையாள மீட்பெனவும் பறையாட்டம் என தப்பாட்டத்தை ஆடுபவர்களும் பறைமேளக்கூத்தின் மீட்டுருவாக்கத்தினைப் பற்றி சிந்தித்தார்களா ஆங்காங்கே ஒரு சில மீட்டுருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் முழுமூச்சாக அது நிகழவில்லை.\nஒவ்வொரு பிரதேசத்திலும் மொழியும் அதன் பயன்பாடும் அந்த சமூகத்தினைச் சார்ந்ததே. உதாரணமாக “தெருக்கூத்து” என்ற ஆற்றுகை வடிவம் தமிழகத்தில் சொல்லப்படும் போது பாரம்பரியக் கூத்து வடிவமாகவும், அதுவே ஈழத்தில் தெருவெளி நாடகங்களைக் குறிப்பதாகவும் இருக்கும். ஈழத்தில் தமிழக தெருக்கூத்து ஆற்றுகை செய்யப்படவேண்டுமெனின், அது தொடர்பான தெளிவு மக்களிடத்தில் கொண்டுசெல்லப்படவேண்டும். இல்லையெனில் தெருக்கூத்து பார்க்க வீதிகளில் மக்கள் குழுமுவார்கள். அதே போல தான் தப்பு எனப்படுகின்ற பறையும் குறிப்பிடப்பட வேண்டும். அந்த தெளிவுபடுத்தல்களுடன் ஆற்றுகைகள் மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் இப்போது ஈழத்தில் நடைபெறுகின்ற பயிற்சிப் பட்டறைகளிலோ ஆற்றுகைகளிலோ தப்பு என்ற பெயர் திட்டமிட்டு தவிர்க்கப்படுகின்றது. அவை சார்ந்த செய்திகளிலும் ஈழத் தமிழர்களின் அடையாளம் பறை என்ற தொனிப்பொருள் காணப்படுகின்றது. தமிழகத்தில் ஏறுதழுவுதலின் தைப்புரட்சியில் தமிழக மக்களை ஒருங்கிணைத்ததில் தப்பின் பங்கு அளப்பரியது. தமிழன் என்ற உணர்வுடன் அனைவரையும் ஒன்றிணைத்தது. பெண்ணுடலின் அரசியல் என்பது இன மத மொழிகளைக் கடந்தும் இன்னமும் முழுமையாகக் கட்டவிழ்க்கப்படாத ஒரு கட்டமைப்பிற்குள்ளேயே இருக்கின்றது. சாதிய விடுதலைக்கான பறை என்பதை தாண்டி, இன விடுதலைக்கான, பெண் விடுதலைக்கான ஒரு படிநிலையாகவே இதனை நோக்கலாம். பறை அடித்தால் சாதி குறைவு என்று எண்ணும் மனநிலையும் பெண் சிரித்தால் பிழை என்று நோக்கும் மனநிலையும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. இதையெல்லாவற்றையும் கடந்து இன்று பறையை எடுத்து ஆற்றுகை செய்வது என்பதை சாத்தியமாக்கியது அரங்க வெளி தான். அந்த ஒலியின் வீச்சம் தமிழரின் உயிரின் ஆழம் வரை சென்று ஆட்டுவிக்கக் கூடியது. தமிழக அரங்க வெளி அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இப்போதெல்லாம் மக்கள் போராட்டங்களில் தப்பு என்னும் பறை முதன்மை பெற்றிருக்கிறது. அது அவர்களது சமூகத்தின் இயங்கியல். ஆனால் அதையே எமது ஈழ சமூகத்திற்கு பிரதிசெய்து, மக்கள் போராட்டங்களிலும் ஊர்வலங்களிலும் தப்பு முன்னிலை வகிக்குமாக இருப்பின், எமது மரபில் இசைக்கப்படும் பறை மறைந்துபோய்விடக்கூடிய அபாயம் உண்டு.\nஇந்துத்துவாவும் பிராமணியமும் உட்புகாத ஆலயங்களிலும் காவடி போன்ற நேர்த்திக்காகச் செய்யப்படும் ஆற்றுகைகளிலும் மக்களை “உரு” ஏற்றுவது எனப்படும் சடங்கு சார் வழிபாட்டு நிகழ்வுகளிலும் பறை இசை அதிர்ந்து ஒலிக்கிறது. செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களிலும் இன்றுவரை பறை ஒலியுடன் வழிபாடுகள் நிகழ்கின்றன. ஆனால் ஆகமம் சாராத கோவில்கள் ஆகமம் சார்ந்தவையாக மாறிக்கொண்டிருப்பதனால் கோவிலின் உள்ளே பறை என்னும் இசைக்கருவியை அனுமதிக்காத ஆலயங்களாக மெதுமெதுவாக மாறிக்கொண்டிருக்கின்றன. தமிழனின் அடையாளம் இன்று மதம் என்னும் போர்வையில் தெருவில் நிற்கவிடப்படுகின்றது. மாற்றம் வருமா ஆனால் அதைப்பற்றி எமக்குக் கவலை இல்லை.. தப்பு என்னும் பறையை அடித்தால் சாதியம் மறைந்துவிடும் என்ற எண்ணப்பாங்கில் எமது செயற்பாடுகளைக் கட்டியமைத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு இசைக்கருவி.. ஒரு இனத்தின் அடையாளம்.. அதன் மண்ணிலேயே இன்று தெருவில் நிற்பதற்கு யார் பொறுப்பு\nஒடுக்கப்பட்டவர்களின் இசைக்கருவியாக தப��பு என்னும் பறையை ஆற்றுகை செய்ய முனைந்தவர்கள் ஏன் பறைமேளக்கூத்தினை ஆற்றுகை செய்ய முன்வரவில்லை இங்கே தான் மேலாதிக்க சிந்தனையின் எச்சங்கள் தாக்கம் செலுத்துகின்றன. ஈழத்தில் பறை என்னும் இசைக்கருவி அதன் சமூகப் பின்னணி, இயல்பு, அதன் சமூகப்பெறுமானம் என்னும் அனைத்துத் தளத்திலுமாக உணரப்படும். அந்த சமூகத்தின் தளத்திலிருந்து தான் அந்த இசைக்கருவியையும் நோக்க முடியும். ஆனால், தப்பு எனும் போது, ஈழத்திலிருக்கும் ஒருவரால் அதன் சமூகப்பெறுமானத்தை அதன் பெறுதியோடு உணர முடியாது. ஒரு இசைக்கருவியாகவே பார்க்க முடியும். ஒடுக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுப்போம் என்ற சமூகக் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தப்பு என்னும் முகமூடிக்குள் நின்றுகொண்டு சமூகத்தையும் தன்னுடைய சுய உளவியலையும் ஒருங்கே திருப்திப்படுத்துகின்ற செயற்பாட்டையே செய்கிறார்கள். அதை அவர்கள் உணராமல் செய்வதுதான் இன்னமும் அபத்தம்.\nதப்பு என்னும் பறையை ஈழநாட்டினுள் வலிந்து திணிக்கும் வேலைத்திட்டத்தில் பல ஆற்றுகைக் குழுக்களும் ஈடுபட்டிருக்கின்றன. அவர்களின் பதிவுகளெல்லாம் தமிழர்களின் அடையாளம் பறை என்ற தலைப்பில் தப்பு என்னும் பறையை முன்னிறுத்துவனவாகவும் இருக்கின்றன. அது இங்கே இருக்கும் ஒரு அடையாளத்தினை மடைமாற்றம் செய்வதற்கான இந்துத்துவாவின் திட்டம் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே. ஈழ தேசத்திற்கு ஒவ்வாத, அல்லது பொருந்தாத குறிகாட்டிகளாக பெரியார் வந்தார்.. தலித்தியம் வந்தது.. அதன் பின்னாலேயே தப்பும் வந்தது. அதில்கூட இந்துத்துவா தெளிவாக இருக்கின்றது. தப்பு என்னும் பறையை தமிழர்களின் அடையாளமாக ஊடுருவ வைக்கவில்லை. தலித்திய அடையாளமாகக் காட்டி, அதனையும் இனம் சார் அடையாளமென்ற நிலைப்பாட்டினின்றும் வழுவச் செய்கின்றது. இந்த அபத்தத்தை ஆற்றுகை வடிவம் என்னும் கலை நிலைப்பாட்டில் இந்தியம் முன்னெடுக்கின்றது. அந்த உள்ளர்த்தத்தை அறிந்தோ அறியாமலோ நாமும் எமது மரபைப் பலிகொடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த அறியாமையில் தனித்துவ அடையாளங்கள் தம் நிலையை இழக்கின்றன. மலையக மக்களின் பறையையும் தூசி தட்ட ஆட்களில்லை. பெருமரபொன்று சிறு மரபுகளுக்குள் புகும்போது, அச்சிறு மரபுகள் அந்த பெருமரபிற்குள் அமிழ்ந்து போவதென்பது சமூக நியதியாகும். அதன் கீழ் மரபுகளும் அழியும் ஆபத்தும் இருக்கின்றது.\nபறை எமது இனத்தின் பொது அடையாளம் என்ற கருத்தில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தொன்ம மரபினடிப்படையில் ஒவ்வொரு திணைக்கும் தனி மரபு இருந்திருக்கிறது. அந்த சுய மரபினை அதன் அடையாளத்தோடு கொண்டாடவேண்டும். அந்த மண்ணின் இயங்கியலிலிருந்து பிறக்கும் இசையில் தான் உயிர்ப்பு இருக்கும். அதில் தான் அவன் தனது மரபினை உணர முடியும். ஒவ்வொரு மரபும் அந்தந்த மண்ணில் அவரவர் வாழ்வியலில் சிறந்தவையே. ஒன்றுடனொன்று ஊடாடுவதும் தவறில்லை. ஆனால் ஒன்றையொன்று மேலாண்மை செய்வதென்பது மரபு அழிப்பிற்கு துணைநிற்பதற்கு ஒப்பாகும். தமிழரின் அடையாள இசைக்கருவியை இசைப்பவர்கள் என்ற காரணத்துக்காக ஓதுக்கப்பட்டவர்களாக மாற்றப்பட்டிருக்கும் பின்னணியின் சமூக அரசியலை உணர்ந்து, எம் தொல்குடியை, அதன் பெருமையை அதன் அடையாளத்துடன் பேண வேண்டியது தமிழராகிய ஒவ்வொருவரினதும் கடப்பாடாகும்.\nதமிழர்கள் மத்தியில் “பறை” என்பது இசைக்கருவி என்பதற்கு அப்பால் ஒரு சாதியத்தின் குறியீடாக பார்க்கப்படுகின்ற மேல்மட்ட மனநிலையை உடைத்து பறை இசை விடுதலைக்கான இசை, ஒன்றுகூடலுக்கான இசை என்பதை நிரூபித்து, பல்லாயிரம் மக்களை “பொங்கு தமிழ்” என்னும் ஒரு புள்ளியில் இணைய வைத்தது பறை. முதன்முதலாக சாதிய வேலிகளைத் தாண்டி ஒரு ஆற்றுகைக்கருவியாக, போர்ப்பறையாக, எதிரிக்கான அறைகூவலாக வீதிதோறும் ஒலித்த பொங்குதமிழ் பறை இன்னமும் எமக்கு நினைவில் வரலாம்.\nநிகழ் சூழலில் ஈழத்தமிழரின் மரபியலின் தனித்துவ அடையாளங்களை தமிழரின் பிற அடையாளங்களிற்குள் உள்ளீர்த்து, ஒருவகையான திட்டமிடப்பட்ட மரபு மடைமாற்றம் செய்யும் நிகழ்ச்சிநிரலினால் சூழப்பட்டிருக்கிறோம். அந்த நிகழ்ச்சி நிரலினுள் ஈழத்தவரின் பயன்பாட்டில் தற்போதுள்ள பறையினை தப்பு எனப்படும் பெரு மரபிற்குரிய பறை வடிவம் வல்வளைப்பு செய்வதாக ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. தப்பு என்னும் இசைக்கருவியை பயிலுவதோ அல்லது தப்பாட்டம் என்னும் ஆற்றுகையை பயின்று ஆற்றுகை செய்வதோ தவறல்ல. அது தமிழரின் அடையாளங்களில் ஒன்று. ஆனால் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று தலித்தியத் தொனியில் “தப்பு” என்கின���ற பறையை குறியீடாக வைத்திருப்பது என்பது எமக்கான மரபொன்றினை, அதன் மரபுத்தொடர்ச்சியை திசைதிருப்பும் செயலாகும். அத்துடன் இங்கேயிருக்கும் பறை ஆற்றுகைக் கலைஞர்களின் தொடர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்கி, இழிநிலைக்கான வடிவமாக பறைமேளம் நோக்கப்படுவதும் மாற்றத்திற்கு உட்படாத ஒன்றாகவே போகும். மாற்றங்கள் நிழவேண்டிய இடங்களில் மாற்றங்கள் நிகழாதபோது மாற்றங்களுக்கான குரல்களுக்கு என்ன பொருள் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் என்ற பொருளில் பொதுவெளியில் தப்பு என்னும் பறையை ஆற்றுகை செய்வது என்பது, இங்குள்ள ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அமையுமா ஒடுக்கப்பட்டவர்களின் குரல் என்ற பொருளில் பொதுவெளியில் தப்பு என்னும் பறையை ஆற்றுகை செய்வது என்பது, இங்குள்ள ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அமையுமா தப்பு என்னும் வடிவமும் சாதிய மறுப்புக்கான குறியீடாக மட்டும் மாறிவிடப்போகும் ஆபத்தும் இருக்கின்றது.இங்கே இருக்கின்ற அடையாளங்களினூடாகவே சாதி மறுப்பு என்பது பேசப்பட வேண்டும். அப்போதுதான் அதன் சமூகப் பெறுதி சமூகத்தால் உணரப்படும். இசைக்கருவியாக அறியப்படுகின்ற தப்பு என்னும் பறை ஒலிக்கும்போது, அங்கே கலை என்ற கருத்தே பதியப்படும். அதுவே, பயன்பாட்டிலிருக்கும் பறையினூடாகப் பேசும்போது, அதன் கருத்தியல் அதன் சமூகப் பின்னணி,வலிகள், அடக்குமுறைகள் என்பனவற்றின் பின்னணியில் வலிதான கருத்துருவாக்கத்தைச் செய்யக்கூடியதாக இருக்கும். தலித்தியப்போர்வையில் வரும் தப்பு எனும் பறையைச் சாடவேண்டிய புள்ளியும் அதுவேயாகும். தமிழர் மரபுகளில் ஒன்று என்ற அடையாளத்துடன் தப்பு ஒலிக்கும்போது அதற்குரிய தளம் வேறானதாக இருக்கும். அது இன்னொரு மரபில் ஏறியும் நிற்காது. சாவுப்பறையாக மட்டும் சுருங்கிக்கொண்டிருக்கும் தமிழர் மரபுகளில் ஒன்றான பறையை மீட்டெடுத்து, தமிழர்களுக்கான ஒலியை சாதிய மறுப்புக்கான ஒலியாக குறுக்கிவிடுகின்ற ஆபத்தினை கடந்து, எமக்கான இசைக்கருவியை எமது பொதுக்குரலாக எப்போது ஒலிக்கச்செய்யப்போகிறோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/10/4-10-k9Cxjw.html", "date_download": "2021-08-02T09:48:38Z", "digest": "sha1:TK4PFTQ7CQYBLQ3QN2QG52JHRO5WAGGI", "length": 4165, "nlines": 31, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "அஸ்ஸாமில் கள்ள நோட்டு அச்சடித்த 4 பேர் கைது; அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகள் பறிமுதல்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஅஸ்ஸாமில் கள்ள நோட்டு அச்சடித்த 4 பேர் கைது; அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகள் பறிமுதல்\nஅஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகர் கவுஹாத்தியில் கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசாரைக் கைது செய்துள்ளனர்.\nஅவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன. கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரம், ஏடிஎம் அட்டைகள், 14 மொபைல் போன்கள், லேப் டாப் உள்ளிட்ட பலவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து இக்கும்பலுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/mahindra+265-di-vs-vst-shakti+927/", "date_download": "2021-08-02T09:45:12Z", "digest": "sha1:U7BVBP3723SKGNRRVULGZKBXUHXMYYYG", "length": 21531, "nlines": 171, "source_domain": "www.tractorjunction.com", "title": "மஹிந்திரா 265 DI வி.எஸ் Vst ஷக்தி 927 ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ த��ளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக மஹிந்திரா 265 DI வி.எஸ் Vst ஷக்தி 927\nஒப்பிடுக மஹிந்திரா 265 DI வி.எஸ் Vst ஷக்தி 927\nமஹிந்திரா 265 DI வி.எஸ் Vst ஷக்தி 927 ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் மஹிந்திரா 265 DI மற்றும் Vst ஷக்தி 927, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். மஹிந்திரா 265 DI விலை 4.60-4.75 lac, மற்றும் Vst ஷக்தி 927 is 4.20-4.60 lac. மஹிந்திரா 265 DI இன் ஹெச்பி 30 HP மற்றும் Vst ஷக்தி 927 ஆகும் 27 HP. The Engine of மஹிந்திரா 265 DI 2048 CC and Vst ஷக்தி 927 CC.\nபகுப்புகள் HP 30 27\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1900 ந / அ\nகாற்று வடிகட்டி Dry type Dry Type\nமின்கலம் 12 V 75 AH ந / அ\nமுன்னோக்கி வேகம் 28.2 kmph ந / அ\nதலைகீழ் வேகம் 12.3 kmph ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 45 லிட்டர் 22 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 1790 KG ந / அ\nசக்கர அடிப்படை 1830 MM ந / அ\nஒட்டுமொத்த நீளம் 3360 MM ந / அ\nஒட்டுமொத்த அகலம் 1625 MM ந / அ\nதரை அனுமதி 340 MM ந / அ\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3040 MM ந / அ\nதூக்கும் திறன் 1200 Kg ந / அ\n3 புள்ளி இணைப்பு Dc and PC ந / அ\nவீல் டிரைவ் 2 4\nமுன்புறம் 6.00 x 16 ந / அ\nபின்புறம் 12.4 x 28 ந / அ\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபா��ி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/02/3.html", "date_download": "2021-08-02T08:17:44Z", "digest": "sha1:JUYNSY2Z6G7ARAXL5VSDECSCKTE6DTA6", "length": 6131, "nlines": 52, "source_domain": "www.yarlsports.com", "title": "மாகாண மட்ட பிரிவு 3 தொடர் சம்பியனாகியது யாழ் சென்றலைட்ஸ்..... - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > Trending > மாகாண மட்ட பிரிவு 3 தொடர் சம்பியனாகியது யாழ் சென்றலைட்ஸ்.....\nமாகாண மட்ட பிரிவு 3 தொடர் சம்பியனாகியது யாழ் சென்றலைட்ஸ்.....\nஇன்று பாம்பைமடு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற மாகணமட்ம பிரிவு-3 இறுதி ஆட்டத்தில் வவுனியா யுனிபைட் அணியினை 62 ஓட்டங்களால் வீழ்த்தியது சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம்....\nநாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற யுனிபைட்ஸ் அணித்தலைவர் முதலில் களதடுப்பினை தீர்மானிக்க முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி 251/6(45) அணி சார்பாக கௌதமன் 63 நிரோஜன் 47 பிரியலக்‌ஷன் 47 ஓட்டங்களையும் பெற்றுகொடுத்தனர் 252 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு ஆடிய வவுனியா யுனிபைட் அணி 189/9(43.5) பெற்று 62 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது அணி சார்பாக ருசாந்தன்-27, மதுஷன்-27 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்\nசென்றலைட்ஸ் சார்பாக பந்துவீச்சில் அலன்ராஜ் 3/24(8) ஜெரிக்துஷாந் 2/14(7) மாகாண சம்பியன் ஆகிய யாழின் சென்றலைட்ஸ் விளையாட்டு கழகத்திற்க்கு yarlsportsஇன் வாழ்த்துக்கள் தொடர்ந்தும் yarlsports உடன் இணைந்திருங்கள்\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இ���ுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/08/blog-post_1.html", "date_download": "2021-08-02T10:03:33Z", "digest": "sha1:NKKNA4266XHJHZU6XFQDLFBTCO32FJU3", "length": 4749, "nlines": 54, "source_domain": "www.yarlsports.com", "title": "காலிறுதியில் ஜொனியன்ஸ் - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > காலிறுதியில் ஜொனியன்ஸ்\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் யாழ் மாவட்ட ரீதியான T10 துடுப்பாட்ட தொடரின் ஆறாவது போட்டியில் திருநெல்வேலி வி.கழகத்தை 20ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரின் இரண்டாவது வெற்றியுடன் காலிறுதிக்குல் நுழைந்தது ஜொனியன்ஸ் வி.கழகம்\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/119503-naradhar-ula", "date_download": "2021-08-02T09:17:23Z", "digest": "sha1:HYGC7LIN2DIW63O7IQS6HBADVT2OARDX", "length": 8798, "nlines": 236, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 07 June 2016 - நாரதர் உலா | Naradhar Ula - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபிள்ளையார் திருத்தலங்கள் & வழிபாடுகள்...\nசர்ப்ப தோஷங்கள் நீங்கும்... சந்தோஷம் பெருகும்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27\nமனிதனும் தெய்வமாகலாம் - 41\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nஅடுத்த இதழுடன்...உங்கள் ராசிக்கு உகந்த கோயில்கள்\nவிகடன் தடம் - விரைவில்\nவரதட்சணைக்காக மனைவியைக் கொன்ற கணவர்; ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு\nநெல்லையில் கொலை; தஞ்சையில் பதுங்கல் - 4 கொலையாளிகள் பிடிபட்டது எப்படி\n'வலிமை' : அஜித்துக்காக 'காதல் பொயட்' விக்னேஷ் சிவனின் எழுத்துகளில்... மாஸாக இருக்குமா முதல் பாடல்\nமும்பை: காவல் நிலையத்தில் பழைய வாகனத்தின் பாகங்கள் திருட்டு; ரூ.26 லட்சத்துக்கு விற்ற பெண் காவலர்\n\"- சிறார் வதை செய்த பாதிரியாருக்காக பாதிக்கப்பட்ட பெண் ஜாமின் மனு\nநாரதர் கதைகள் - 21\nநாரதர் கதைகள் - 15\nநாரதர் கதைகள் - 14\nநாரதர் கதைகள் - 13\nநாரதர் கதைகள் - 11\nநாரதர் கதைகள் - 10\nநாரதர் கதைகள் - 9\nநாரதர் கதைகள் - 8\nநாரதர் கதைகள் - 7\nநாரதர் கதைகள் - 6\nநாரதர் கதைகள் - 5\nநாரதர் கதைகள் - 4\nநாரதர் கதைகள் - 3\nநாரதர் கதைகள் - 2\nநாரதர் கதைகள் - 1\nதிருக்கல்யாண உற்ஸவத்தில் பறிபோன திருமாங்கல்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/hero-official-trailer-sivakarthikeyan", "date_download": "2021-08-02T08:40:01Z", "digest": "sha1:4QUTA6TZPB5ZGI3S5VMFJLAYV3H2YZYH", "length": 4832, "nlines": 95, "source_domain": "www.cinibook.com", "title": "Hero Official Trailer | Sivakarthikeyan | Arjun | Yuvan Shankar Raja", "raw_content": "\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nபுதிய கெட்டப்பில் விஜய்சேதுபதி….கடைசி விவசாயி படத்தில்…\nஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் தேனீர்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உர���க்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nமீரா மிதுன் அரைகுறை ஆடைகளுடன் ஆடும் ஆட்டத்தை பாருங்கள்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://iphoneapp.dailymotion.com/video/x7950ub", "date_download": "2021-08-02T10:34:01Z", "digest": "sha1:7UZBK4NXIQ6SD2ODMWVLKD4CY36SJQFQ", "length": 5887, "nlines": 120, "source_domain": "iphoneapp.dailymotion.com", "title": "Tamilisai Soundararajan : ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என தமிழக மக்கள் உணர்வார்கள்-தமிழிசை-வீடியோ - video Dailymotion", "raw_content": "\nTamilisai Soundararajan : ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என தமிழக மக்கள் உணர்வார்கள்-தமிழிசை-வீடியோ\n\"திமுக தேர்தல் அறிக்கை: விமர்சிக்கும் உரிமை பாஜகவுக்கு உள்ளது\" - தமிழிசை\nபாமக, தேமுதிக நிர்வாகிகள் ஏன் வரவில்லை...\nகர்நாடக தேர்தல் முடிவுகள் ஏன் இப்படி \nலோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு... தமிழகத்திற்கு ஏப்.18ல் தேர்தல்\nஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nஜெயலலிதாவை தாய் என உரிமைக்கோறும் போது, சோபன் பாபுவை தந்தையாக உரிமை கோராதது ஏன் என நீதிபதி கேள்வி\nதெலங்கான உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது நடத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது.\nநாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே - தமிழிசை தடாலடி- வீடியோ\nTamilisai : தமிழிசை அக்காவுக்கு சூர்யா ரசிகனின் திறந்த மடல்- வீடியோ\nதேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை - தமிழிசை சௌந்தரராஜன் | Tamilisai\nTamilisai campaign | தேர்தலும் பாஜக வெற்றியும் நெருங்கிவிட்டது : தமிழிசை சொல்கிறார்\nமார்ச் 6ல் பிரதமர் மோடி சென்னை வருகை - தமிழிசை | Tamilisai | PM Modi\nதேமுதிக உடனான கூட்டணி திங்கட்கிழமை இறுதி செய்யப்படும் - தமிழிசை | DMDK | Tamilisai\n அதிமுக - பாஜக கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள்\nLok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக\nTamilisai tweets on P Chidambaram | தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி- வீடியோ\nTamilisai தமிழிசை ஒரு ஸ்லீப்பர் செல் - அருள்மொழி விளாசல் பேச்சு Arulmozhi\nலோக்சபா தேர்தல்.. தமிழகத்தில் இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nGV Prakash Pressmeet | முதல்ல தாய் மொழி தான் முக்கியம் | Freedom 75\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthuyir.org/2021/04/15/", "date_download": "2021-08-02T10:09:45Z", "digest": "sha1:Y5FQBTHJSMY6I4LNTK7JBGP3RGMOMMT2", "length": 2602, "nlines": 37, "source_domain": "puthuyir.org", "title": "Puthuyir - 15th April 2021", "raw_content": "\nகாலைத் தியானம் – ஏப்ரல் 15, 2021\nஒவ்வொரு ஜாதி அல்லது தேசத்து மக்கள்மீதும் ஒவ்வொரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இஸ்ரவேலர் மீதோ பல குற்றச்சாட்டுகள். அவர்கள் ஏழைகளை அடிமைகளாக விற்றார்கள். சிறுமையானவர்களின் வழியைப் புரட்டினாகள். (They exploited the poor.) தகாத உடலுறவு கொண்டார்கள். அந்நிய தேவர்களை வணங்கினார்கள். இது இஸ்ரவேலரைப் பற்றிய கதை என்று மாத்திரம் நினைக்காமல், நம்மிடத்தில் உள்ள குறைகளை நினைத்துப் பார்ப்போம். நாம் அறியாமல் செய்துவரும் குற்றங்கள் ஏதாவது உண்டா ஏழைகளை மதிக்கிறாயா உன் பணத்தை வைத்து எதையாவது சாத்தித்துவிடலாம் என்று நினைத்தால், அது பணமில்லாத ஏழைகளுக்கு விரோதமான செயலாக இருக்கலாம். கர்த்தரை அறிந்தவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.\nஆண்டவரே, நான் இதுவரை அறியாமல் செய்துவந்துள்ள குற்றங்களை மன்னியும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/rashid-latif-says-that-rahul-dravid-is-the-best-indian-batsman-qbhzvr", "date_download": "2021-08-02T09:55:09Z", "digest": "sha1:ACMP4UK7NS3AI5YJDIAMBUZNEQQVYOUT", "length": 13183, "nlines": 80, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கவாஸ்கர், சச்சின், கோலியை விட ஒரு படி மேல்.. இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் அவருதான்..! | rashid latif says that rahul dravid is the best indian batsman", "raw_content": "\nகவாஸ்கர், சச்சின், கோலியை விட ஒரு படி மேல்.. இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் அவருதான்..\nபேட்டிங் டெக்னிக்கின் அடிப்படையில், இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீஃப் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கவாஸ்கர், சச்சின், கோலி ஆகிய மூவரும் அவரவர் தலைமுறையின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகின்றனர். கபில் தேவ், குண்டப்பா விஸ்வநாத், அசாருதீன், ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக், யுவராஜ் சிங், லட்சுமணன், தோனி, ரோஹித் சர்மா ஆகியோரு��் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர்.\nரன்கள், சதங்கள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். ஆனால் ரன்களை கடந்து, பேட்டிங் டெக்னிக்கிலும், நெருக்கடியை சமாளித்து ஆடும் மன வலிமையின் அடிப்படையிலும் இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீஃப் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள ரஷீத் லதீஃப், பேட்டிங் டெக்னிக் மற்றும் நெருக்கடியான சூழலில் அழுத்தத்தை சமாளித்து ஆடுவது ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவில் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட ராகுல் டிராவிட் ஒரு படி மேல். ராகுல் டிராவிட், சேவாக் ஆகியோர் சச்சின் டெண்டுல்கரின் நிழலில் தான் ஆடினர்.\nசச்சின் டெண்டுல்கர் தன்னம்பிக்கை வாய்ந்தவர். தொடக்கம் முதலே அடித்து ஆடுவார். அதற்காக டிராவிட்டிடம் அந்த திறமை இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், டிராவிட்டின் ரோல் என்பது வேறு மாதிரியானது. இந்திய அணி 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்டால், அந்த போட்டியில் ராகுல் டிராவிட் தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம், ஹீரோ எல்லாமே.. அதனால் தான் டிராவிட், இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படுகிறார்.\nசச்சின், சேவாக், கங்குலியுடன் அதிகமான பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ஸ்கோர் அடித்த வீரர்களில் ராகுல் டிராவிட் பெயர் தான் நிறைய இருக்கும். ராகுல் டிராவிட் ஸ்கோர் செய்யாத ஒரு அந்நிய நாட்டை சொல்லிவிடுங்கள் பார்ப்போம்.. அவர் ஸ்கோர் செய்யாத இடமே கிடையாது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து என அனைத்து நாடுகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று ராகுல் டிராவிட்டை புகழ்ந்திருக்கிறார்.\nஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்தியாவின் ராகுல் டிராவிட். 1996லிருந்து 2012ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடிய ராகுல் டிராவிட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மொத்தமாக 509 சர்வதேச போட்டிகளில் ஆடி, 24208 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6வது வீரராக திகழ்கிறார்.\nசுயநலமாக ஒரு இன்னிங்ஸ் கூட ஆடாத வீரர் ராகுல் டிராவிட். அணியின் நலனையும் வெற்றியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆடி��வர். ராகுல் டிராவிட் டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர் அல்ல ராகுல் டிராவிட். சச்சின், தோனி மாதிரியான வீரர்கள் ஓவராக தூக்கி கொண்டாடப்பட்டதால், ராகுல் டிராவிட்டின் பெரும் பொதுவெளியில் பெரிதாக பேசப்படவில்லை.\nஸ்டிரைட் டிரைவ், கவர் டிரைவ், ஸ்வீப் ஷாட், ஃப்ளிக் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட், புல் ஷாட், கட் ஷாட், ஹூக் ஷாட் என அனைத்து விதமான ஷாட்டுகளையும் சிறப்பாக ஆடக்கூடியவர். அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடவல்லவர் என்பதால், ஃபாஸ்ட் - ஸ்பின் - மீடியம் ஃபாஸ்ட் என எந்தவிதமான பவுலிங்கும் அவரை பெரியளவில் டார்ச்சர் செய்ததில்லை.\nதனது கெரியரில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், மெக்ராத், சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், சக்லைன் முஷ்டாக், ஆலன் டொனால்ட், பிரெட் லீ, ஷோயப் அக்தர், ஷேன் பாண்ட் என உலகின் பல தலைசிறந்த மற்றும் மிரட்டலான பவுலர்களை எல்லாம் திறம்பட எதிர்கொண்டு ஆடி, அவர்களின் பாராட்டையும் பெற்றவர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாவம் அந்த பையனுக்குத்தான் இலங்கை டி20 தொடர் ரொம்ப மோசமா அமைஞ்சுருச்சு..\nஇந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளர்.. ராகுல் டிராவிட் ஓபன் டாக்\nடி20 உலக கோப்பைக்கு எந்தெந்த ஸ்பின்னர்களை இந்திய அணியில் எடுக்கலாம்.. ராகுல் டிராவிட் அதிரடி பதில்\nபென்ச் தேய்க்கவா அவங்கள டீம்ல எடுத்தது விளையாடுறதுக்குத்தானே.. அப்புறம் சான்ஸ் கொடுக்காம விளையாடுறதுக்குத்தானே.. அப்புறம் சான்ஸ் கொடுக்காம\nதம்பி இங்க வாடா.. இதை சீக்கிரமா கொண்டுபோய் தவானிடம் கொடு.. ராகுல் டிராவிட் அவசர அவசரமா அனுப்பிய மெசேஜ்\nடி20 உலக கோப்பையில் இந்த 4 அணிகள் தான் அரையிறுதியில் மோதும்..\nதலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது.. கர்நாடக முதல்வருக்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகி..\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா..\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுங்க.. அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.\nஇந்திய அணிக்கு இப்போதைக்கு இதைவிட பெரிய குட் நியூஸ் இருக்கவே முடியாது..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shraddha-srinath-to-act-with-vishal-059582.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T08:51:58Z", "digest": "sha1:WFMW4JR63575TR7T35QJUDIQP7TPMNKC", "length": 13143, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இரும்புத்திரை 2: விஷால் ஜோடியாகும் தல பட நடிகை, அப்போ சம்மு? | Shraddha Srinath to act with Vishal - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nFinance e-RUPI: மக்கள் இனி காத்திருக்க தேவையில்லை.. 8 வங்கிகளுக்கு அனுமதி..\nNews ஆலயங்களில் தமிழில் ஒலிக்கப்போகும் வேத மந்திரங்கள்... அர்ச்சனை செய்ய அர்ச்சகர் தயார்\nLifestyle ஹீரோயின் மாதிரி நீங்க அழகாக இருக்க புதினா உங்களுக்கு எப்படி உதவும் தெரியுமா\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports ஒரே நேரத்தில்.. ஹாக்கி செமியில் இந்திய ஆண்கள் & பெண்கள் அணி.. முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.. ஏன்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரும்புத்திரை 2: விஷால் ஜோடியாகும் தல பட நடிகை, அப்போ சம்மு\nசென்னை: விஷாலின் இரும்புத்திரை 2 படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறாராம்.\nபி. எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.\nமுதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்தை மித்ரன் இயக்கவில்லை. மாறாக இயக்குநர் எழிலின் முன்னாள் உதவியாளரான புதுமுகம் ஆனந்த் இயக்குகிறார். இந்த படத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறாராம்.\nஅப்படி என்றால் எங்க சம்மு இல்லையா என்று சமந்தா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இரும்புத்திரை 2 படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.\nஇரும்பு���்திரை மட்டும் அல்ல துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் விஷாலும் சரி, பிரசன்னாவும் சரி நடிப்பால் மிரட்டியிருப்பார்கள்.\nஇதற்கிடையே இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடித்தக்கது.\nஉலகத்துலயே ஆபத்தானவன் யார் தெரியுமா ஆர்யா, விஷால் அதிரடியில் வெளியான எனிமி டீசர்\nபெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்\nஆர்யா,விஷாலின் ‘எனிமி’… டீசர் எப்போ வெளியாகுது தெரியுமா\nசண்டைக் காட்சியில் மோதல்.. விஷால் முதுகில் பலத்த காயம்.. பதறிய பிரபல இயக்குநர்\nஷுட்டிங்கில் காயமடைந்த விஷால்...அப்படி என்ன தான் நடந்துச்சு \nவிஷால் – ஆர்யா இணைந்து மிரட்டும் எனிமி... நேரடி ஓடிடி.,யில் ரிலீஸுக்கு ரெடி\nவிஷால் & ஆர்யா நடிக்கும் எனிமி.. இறுதிக்கட்ட பணிகளை முடிக்க படக்குழு மும்முரம்\nவிஷால் 31ல் வில்லனாக நடிக்கப்போவது இந்த மலையாள நடிகரா.. அடி தூள்\nதீராத விளையாட்டு பிள்ளை விஷால்… கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது\nவிஷால் 31 படத்தில் இணைந்த கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகர்\nபணம் தொடர்பாக புகாரை சந்திப்பது இதுவே முதல் முறை.. விஷால் புகார் குறித்து ஆர்பி சவுத்ரி விளக்கம்\nதுப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டுதான்.. தீயாய் பரவும் தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொஞ்சம் காத்தடிச்சாலும் அவ்ளோ தான்.. விஜய் பட ஹீரோயின் பண்ற வேலையை பார்த்தீங்களா\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க மறுத்த படம்...ஸ்டார் படத்தின் 20 ஆண்டு கால பயணம்\nசாதாரணமாவே நல்லாருக்கும்.. இதை சொல்லவா வேணும்.. பிகினியில் கதறவிடும் டிக்டாக் இலக்கியா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.diamondtamil.com/english_tamil_dictionary/r/english_tamil_dictionary_r_121.html", "date_download": "2021-08-02T09:16:47Z", "digest": "sha1:RFO7C3O7CI2KTHFTHCGFT4YSUM6M46VJ", "length": 5532, "nlines": 70, "source_domain": "www.diamondtamil.com", "title": "R வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், ஆங்கில, அகராதி, வரிசை, series, செல்தடப், படுகுழிகள், மதகுக்கம்பம், ruttish, rutty, வார்த்தை, dictionary, english, tamil, word", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 02, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nR வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\n-1 a. மதங்கொண்ட, விலங்காண் வகையில் இணை விழைச்சு இச்சைமிக்க.\n-2 a. செல்தடப் படுகுழிகள் படுவிக்கிற, செல்தடப்படுகுழிகள் படத்தக்க.\n-1 a. செல்தடப் படுகுழிகள் நிறைந்த, மேடுபள்ளமான.\n-2 a. பருவ வெதுவெதுப்புமிக்க, இணைவிழைச்சு விருப்பம் நிரம்பிய.\nn. உணர்ச்சி வெறி, ஆத்திரம்.\nn. கம்புவகை, புல்லரிசி, கூலவகைப் பயிர், கூலவகைத் தேறல்.\nn. பரிசலை நிலைநிறுத்திவைக்க உதவும் இருப்புக் கழி.\nn. கழி அணை மதகுக்கம்பம், கால்வாய்ப்பூட்டு மதகுக்கம்பம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nR வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், ஆங்கில, அகராதி, வரிசை, series, செல்தடப், படுகுழிகள், மதகுக்கம்பம், ruttish, rutty, வார்த்தை, dictionary, english, tamil, word\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2806207", "date_download": "2021-08-02T10:10:08Z", "digest": "sha1:2WYXXEIPEHRG4WGVBGWCUKD7FGHE73DH", "length": 17458, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "கூட்டுறவு ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்குவதில் சிக்கல்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் 3வது அலை எதிர்கொள்ள 50 ஆயிரம் சுகாதார ...\nபுவனேஷ்வரில் 100% மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி ... 4\nரத்து செய்யப்பட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு: உச்ச ... 4\nஅமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் ... 5\nபா.ஜ., தலைவரின் பேச்சுக்கு சாம்னா நாளிதழ் கடும் ... 2\nசட்டசபை வரலாற்றை மாற்றி அமைக்கும் திமுக: ஜெயக்குமார் ... 33\nமஹா.,விலும் ஜிகா வைரஸ் பாதிப்பு; வீடு வீடாக ஆய்வு\nபெட்ரோல் பயன்பாடு; பெருந்தொற்றுக்கு முன் ... 3\nஇந்தியாவில் மேலும் 36 ஆயிரம் பேர் கோவிட்டில் இருந்து ... 1\nநடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் ... 3\nகூட்டுறவு ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்குவதில் சிக்கல்\nகாஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் நகரில் கூட்டுறவு சங்கம் சார்பில், 40 ரேஷன் கடைகளும், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அமுதம் ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன.இங்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, புழுங்கல் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்றவை வழங்கப்படுகின்றன.இந்நிலையில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகாஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.\nகாஞ்சிபுரம் நகரில் கூட்டுறவு சங்கம் சார்பில், 40 ரேஷன் கடைகளும், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அமுதம் ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன.இங்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, புழுங்கல் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்றவை வழங்கப்படுகின்றன.இந்நிலையில், பிள்ளையார்பாளையம் பகுதிகளில் ஆறு ரேஷன் கடைகள் மற்றும் சின்ன காஞ்சிபுரம் பகுதிகளில் சில கடைகளுக்கு, இம்மாதத்திற்குரிய பச்சரிசி வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.\nஇது குறித்து, கூட்டுறவு ரேஷன் கடை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிறுகாவேரிபாக்கம் குடோனில் இருந்து அரிசி ஏற்றி செல்லும் லாரிகளுக்கான 'டெண்டர்' விடுவதில் பிரச்னை இருக்கிறது. அதனால், லாரிகள் இயக்கப்படாததால் சில ரேஷன் கடைகளுக்கு, பச்சரிசி வழங்க முடியவில்லை. பிரச்னை சரி செய்து, விரைவில் அரிசி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் ச���னலில் பார்க்கலாம்\nஇலங்கை தமிழர்களுக்கு கொரோனா நிவாரண நிதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலங்கை தமிழர்களுக்கு கொரோனா நிவாரண நிதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/49065/", "date_download": "2021-08-02T08:42:05Z", "digest": "sha1:KA373OA73TIHR3VV6GDVH6KBZ7EMXT7G", "length": 9289, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் கட்டம் கட்டமாக குடிநீர் இணைப்புக்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் கட்டம் கட்டமாக குடிநீர் இணைப்புக்கள்\nமக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்கியாக வேண்டும் என்பதே எனது இலக்காகுமெனப் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.\nஅந்த வகையில், நீர் வழங்கல் வடிகால் சபையின் பிராந்திய முகாமையாளர் (திருD.A. பிரகாஸ்) மாவட்ட முகாமையாளர் (திரு.A.J.வசந்தராஜ்) பொறுப்பதிகாரி திரு.ஆ.விக்கினேஸ்வரன் உட்பட ஏனைய பணியாளர்கள் மேற்படி விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்..\nஅதே வேளை World Vision அமைப்பினர் எமது வேண்டுக்கோளுக்கு அமைவாக, நிதியுதவியினை வழங்கியிருந்தனர். அந்த வரிசையில் இன்று (04.06.2017) முறக்கொட்டாஞ்சேனை இ.கி.மி வித்தியாலயம், கோரகல்லிமடு ரமணரிசி வித்தியாலயம், கிரான் பாடசாலை என்பவற்றிற்கு நீர் வழங்கப்பட்டு விட்டது. எதிர்வரும் வாரத்தில் சந்திவெளி கிராமப் பாடசாலைக்கான குடிநீர் வழங்குவதற்கான செயற்பாடு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே களுவன்கேணியிலுள்ள இரு பாடசாலைகட்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. இதற்கான நிதியினை farm foundation வழங்கியது என்பதை நாம் மறக்கவில்லை ‘சுத்தமான குடிநீரே சுகமான வாழ்க்கையின் ஓர் அம்சமாகும்.’ என்ற வகையில் எமது மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற வழி செய்ய வேண்டும்.\nமேலும், மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலக்காடு, கரடிப்பூவல் ஆகிய பின் தங்கிய கிராமங்களுக்குரிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. அத்துடன் முள்ளாமுனைக் கிராமத்திற்கும் குடிநீர் இணைப்பு பூர்த்தியாகி விட்டது. இவற்றைப் விட, இன்னும் பல கிராமங்களுக்கு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. நீர் வழங்கலை விரைவாக ���ெய்ய வேண்டியுள்ளது.\nஇவ்விடயத்தில் திரு தெய்வேந்திரன் பொறுப்பதிகாரிக்கு நன்றி தெரிவிக்கின்றேன். மேலும் திகிலிவெட்டை வாகனேரி போன்ற கிராம மக்களும் தமது கிராமங்களுக்கு குடிநீர்வசதி செய்து தர வேண்டும் எனக் கோரிக்கையினை விடுத்துள்ளனர். இதற்கான அறிவுறுத்தல்களை உரிய உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கியுள்ளதாக ஜி.ஸ்ரீநேசன் பா.உ அவர்கள் குறிப்பிட்டார்.\nPrevious articleசிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 13ஆவது ஆண்டு நினைவுதினத்தையிட்டுகவனயீர்ப்புப் போராட்டம்\nNext articleகிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் சுரவணையடியூற்று விநாயகர் பாலர் பாடசாலைக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டம்\nசுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தனது சொற்ப இலாபத்திற்காக சமூகத்திற்கு துரோகம் இழைக்கிறார்\nகருணா அம்மானின் கட்சியும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்.\nஇருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கணிதமேதை கல்வியியல் மேதை.கோணேச பிள்ளை.முனைவர் மு.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/sakshi-agarwal-latest-photo-fans-shocking/cid3431871.htm", "date_download": "2021-08-02T08:23:13Z", "digest": "sha1:4YO66AR3SFNUE7B6NZZB5JCFXIBXG7MX", "length": 3829, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "கரெக்டா வீக்னெஸ்ஸை டச்சு பண்றீங்க!.. சாக்‌ஷி அகர்வாலின் செம", "raw_content": "\nகரெக்டா வீக்னெஸ்ஸை டச்சு பண்றீங்க.. சாக்‌ஷி அகர்வாலின் செம சூடான போஸ்.....\nமாடல், நடிகை என வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். காலா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின் ஆர்யா நடித்த டெடி மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். 'புரவி' என்கிற படத்தில் கதாநாயகி அவதாரம் எடுத்துள்ளார்.\nஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். குறிப்பாக வாலிப பசங்க விரும்பும் இடுப்பை காட்டி காட்டி போஸ் கொடுத்து வருகிறார்.\nஇந்நிலையில், ஒரு கவர்ச்சியான உடையில் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கரெக்டா வீக்னெஸ்ஸை டச்சு பண்றீங்க.’ என பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zw-trailer.com/product/cargo-transport-sidewall-side-wall-semi-trailer", "date_download": "2021-08-02T08:09:26Z", "digest": "sha1:2T72O7VWQ7YI7RDYLXOPJOQGZI6G3RCC", "length": 16010, "nlines": 161, "source_domain": "ta.zw-trailer.com", "title": "சரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் அரை டிரெய்லர்", "raw_content": "\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nசரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் பக்க சுவர் அரை டிரெய்லர்\nசரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் அரை டிரெய்லர்\nசரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் பக்க சுவர் அரை டிரெய்லர்\nடெலிவரி நேரம் 35 நாட்கள்\nவழங்கல் திறன் 150 செட்\nபக்க சுவர் அரை டிரெய்லர் ஒரு பரந்த அளவிலான பயன்பாடுகளுடன் அரை டிரெய்லர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பக்க சுவர் அரை டிரெய்லர் முக்கியமாக நடுத்தர மற்றும் கனரக மற்றும் மொத்த சரக்குகளின் நடுத்தர மற்றும் நீண்ட தூர போக்குவரத்துக்கு ஏற்றது. சைட்வால் டிரெய்லர் வலுவான பொருந்தக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது மற்றும் நடுத்தர மற்றும் நீண்ட தூர சரக்கு வாகனங்களுக்கான முதல் தேர்வாக மாறியுள்ளது. சைட்வால் டிரெய்லரின் உடல் உயர்தர எஃகு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் கடுமையான உற்பத்தி ஆகியவற்றால் ஆனது. பக்கவாட்டு டிரெய்லரின் அமைப்பு நியாயமானதாகும், செயல்திறன் நம்பகமானது, செயல்பாடு எளிது, மற்றும் தோற்றம் அழகாக இருக்கிறது. பக்கச்சுவர் டிரெய்லரின் சட்டகம் ஒரு பீம் வகை கட்டமைப்பாகும், மேலும் நீளமான கற்றை நேரான வகை அல்லது கூசெனெக் வகையை ஏற்றுக்கொள்கிறது.\nவலை உயரம் 400 மிமீ முதல் 550 மிமீ வரை மாங்கனீசு தட்டு வெல்டிங், நீளமான கற்றை தானியங்கி நீரில் மூழ்கிய வெல்டிங் மூலம் பற்றவைக்கப்படுகிறது, பிரேம் சுடப்பட்டு சுடப்படுகிறது, மற்றும் குறுக்குவெட்டு நீளமான கற்றைக்குள் ஊடுருவி முழுதும் பற்றவைக்கிறது. இடைநீக்கம் செங்குத்து அல்லாத எஃகு தகடு முத்திரையிடல் கடுமையான இடைநீக்���த்தை ஏற்றுக்கொள்கிறது, இது தொடர் இலை நீரூற்றுகள் மற்றும் இடைநீக்க தாங்கு உருளைகளால் ஆனது; கட்டமைப்பு நியாயமானதாகும், வலுவான விறைப்பு மற்றும் வலிமையுடன், சுமைகளை ஆதரிக்கவும் தாக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது.\n1. குறைந்த எடை: கலப்பு எஃகு மற்றும் அலுமினியம், புதிய அமைப்பு, முழு வாகனத்தின் 5.1 டன் 2. அதிக வலிமை: பாஸ்டீல் 980 பாதுகாப்பானது மற்றும் அதிக நீடித்தது 3. விரிவாக்க எதிர்ப்பு பெட்டி: கிடைமட்ட நெளி பெட்டி பலகை, விரிவாக்க எதிர்ப்பு மிகவும் நம்பகமானது; 4. வசதியான பிரித்தெடுத்தல்: சிறப்பு நெடுவரிசை அமைப்பு வாகன நெடுவரிசை மற்றும் தண்டவாளத்தை முழுவதுமாக அகற்றும்.\nதயாரிப்பு பயன்பாடு மற்றும் பயன்பாட்டு சூழல்: 1. போக்குவரத்து தூரம்: நடுத்தர மற்றும் குறுகிய தூர போக்குவரத்து வருவாய்க்கு ஏற்றது. 2. சுற்றுச்சூழலைப் பயன்படுத்துங்கள்: நகர்ப்புற நெடுஞ்சாலைகள், நெடுஞ்சாலைகள் போன்றவை 3. பொருட்களின் வகைகள்: எஃகு, குறிப்பாக எஃகு ஆலைகள் மற்றும் எஃகு விநியோக மையங்கள், எஃகு சுருள்கள், தட்டு பரிமாற்றம் போன்ற இலகுவாக வீசப்பட்ட பொருட்கள், விவசாய பொருட்கள், உலோக பொருட்கள் போன்றவை. .\nஅதிநவீன தொழில்நுட்பம்: பக்கவாட்டு டிரெய்லரின் முக்கிய கூறுகள் மேம்பட்ட உபகரணங்களால் செயலாக்கப்படுகின்றன, நீளமான விட்டங்கள் முழு தானியங்கி கண்காணிப்பு நீரில் மூழ்கிய வில் வெல்டிங் இயந்திரத்தால் பற்றவைக்கப்படுகின்றன; வாகனத்தின் பாகங்கள் சுடப்படுகின்றன, இது வண்ணப்பூச்சின் ஒட்டுதலை பெரிதும் அதிகரிக்கிறது, மேலும் சட்டசபை பாகங்கள் முதலில் வர்ணம் பூசப்பட்டு பின்னர் கைவினைத்திறனைக் கூட்டுகின்றன.\nகே: ஒரு ஆர்டர் வழங்க எவ்வளவு காலம் ஆகும்\nஉங்கள் 30% கட்டணம் செலுத்துதல் அல்லது 100% எல் / சி கிடைத்த 15 முதல் 20 வேலை நாட்கள். குறிப்பிட்ட விநியோக நேரம் உருப்படிகள் மற்றும் உங்கள் ஆர்டரின் அளவைப் பொ�...more\nசைட்வால் சைட் வால் டிராப் சைட் டிரக் டிரெய்லர்\nசரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் அரை டிரெய்லர் பக்க சுவர் அரை டிரெய்லர் பக்க சுவர் டிரெய்லர்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த ��ிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nஹோவ் டிரக் டிராக்டர் அலகுகள் பயன்படுத்தப்பட்டன\nசரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் பக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் கேரியர் டேங்கர் டிரெய்லர்\nகுறைந்த பிளாட்பெட் லோபெட் அரை டிரக் டிரெய்லர்\n ஷிஜோங் மாவட்டம், ஜினான் நகரம், சாண்டோங் மாகாணம்\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\n© ஷாண்டோங் ஜுவோவி இன்டர்நேஷனல் டிரேடிங் கோ, லிமிடெட் + 86-15216409270 ivan@zw-trailer.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil4.com/sports/euro-football-final-will-england-beat-italy/", "date_download": "2021-08-02T07:57:27Z", "digest": "sha1:DVOU24ILS5LJM5S2JBI2CJDVF5Q3RMPZ", "length": 8422, "nlines": 69, "source_domain": "tamil4.com", "title": "யூரோ கால்பந்து இறுதிப் போட்டி: சொந்த மண்ணில் இத்தாலியை வீழ்த்துமா இங்கிலாந்து? - Tamil4", "raw_content": "\nயூரோ கால்பந்து இறுதிப் போட்டி: சொந்த மண்ணில் இத்தாலியை வீழ்த்துமா இங்கிலாந்து\nயூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – இத்தாலி அணிகள் லண்டன் வெம்பிலி மைதானத்தில் மோதுகின்றன.\nயூரோ கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து தற்போது தான் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் தனது நாட்டு ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது இங்கிலாந்து அணிக்கு பெரிய ஊக்கத்தை கொடுக்கக் கூடும். இங்கிலாந்து அணி அரை இறுதியில் டென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.\nஇந்த ஆட்டத்தின் முடிவு கூடுதல் நேரத்திலேயே கிடைக்கப்பெற்றது. இத்தாலி அணியானது அரை இறுதியில் ஸ்பெயினை தோற்கடித்திருந்தது. இந்த ஆட்டத்தின் முடிவும் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கிடைக்கவில்லை. பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்ற இத்தாலி அணியானது, 53 வருடங்களுக்குப் பிறகு பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.\nஇங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் 55 வருடங்களாக பெரிய அளவிலான தொடரில் கோப்பையை வெல்ல முடியாத வறட்சியை முடிவுக்கு கொண்டுவர முடியும். எனினும் அது அவ்வளவு எளிதானதாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.\n2018-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாத இத்தாலி அணி, உலக அரங்கில் தன்னை புதுப்பித்துக்கொள்ள முயன்று வருகிறத���. அந்த அணி விளையாடிய கடைசி 33 ஆட்டங்களிலும் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது.\nஇதுவரை இங்கிலாந்து – இத்தாலி அணிகள் 27 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இத்தாலி 11 ஆட்டத்திலும், இங்கிலாந்து 8 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன. 8 ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளன. பெரிய அளவிலான தொடர்களில் இதுவரை இங்கிலாந்து அணியிடம் இத்தாலி தோல்வி கண்டது இல்லை.\n1980-ம் ஆண்டு யூரோ தொடரில் 1-0 என்ற கணக்கிலும் 1990 மற்றும் 2014 உலகக் கோப்பை தொடரில் தலா 2-1 என்ற கோல் கணக்கிலும் 2012-ம் ஆண்டு யூரோ தொடரில் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கிலும் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது இத்தாலி அணி.\nஇந்நிலையில் சொந்த மண்ணில் இத்தாலியை வீழ்த்தி வெற்றி கொள்ளுமா இங்கிலாந்து அணி என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தள்ளி வைப்பு\nயூரோ 2020 – இங்கிலாந்தை வென்றது இத்தாலி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி; காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி\nடோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்குமா\nதம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegreaterindia.in/news/world/srilanka/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-08-02T09:24:29Z", "digest": "sha1:MVXYM7CYI7H2DFJY37URCC2XLB2GMGPU", "length": 7199, "nlines": 183, "source_domain": "thegreaterindia.in", "title": "நீங்கள் நின்று கொண்டே சாப்பிடுபரா? அப்போ நிச்சயமா இந்த தகவல் உங்களுக்கு தான்!! - 24/7 News - The Greater India Network", "raw_content": "\nநீங்கள் நின்று கொண்டே சாப்பிடுபரா அப்போ நிச்சயமா இந்த தகவல் உங்களுக்கு தான்\nஅனைத்து வீடுகளிலும் இப்பொழுது டைனிங் டேபிள் வர தொடங்கிவிட்டது. பல உணவங்களில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் பரவ தொடங்கிவிட்டன.\nஇது மட்டுமின்றி இப்பொது திருமணங்களிலும் பஃபே(buffet) விருந்து என்று நின்று கொண்டு சாப்பிடும் பழக்கம் உண்டாகிவிட்டது.\nஇந்த நாகரிக வளர்ச்சியால் நாம் இழந்தது ந���து கலாச்சாரத்தை மட்டுமல்ல விலைமதிப்பற்ற நமது ஆரோக்யத்தையும்தான்.\nஇந்த பதிவில் நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்\nபெரும்பாலானோர் வீட்டில் அல்லது வெளி இடங்களில் நின்று கொண்டே சாப்பிட்டு பழகியிருப்பார்கள். ஆனால் சாப்பிடும் போது நாம் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.\nசாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிட்ட உடனேயோ நிறைய தண்ணீர் குடிக்க கூடாது.\nசாப்பிடும்போது பழங்களை உட்கொள்ளவும் கூடாது.\nநின்று கொண்டே சாப்பிடவே கூடாது. ஏனெனில் நின்றுகொண்டு சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் நாவின் சுவை அரும்புகள் பாதிக்கும்.\nநாம் சாப்பிடும்போது, நேராக அமர்ந்து சாப்பிட வேண்டியது அவசியம். அப்போதுதான் உணவின் ருசி அதிகமாக இருக்கும். நம் உடலில் உணவின் மணம் மற்றும் ருசியை கடத்த வெஸ்டிபுலார் சென்ஸ் மிகவும் அவசியம்.\nநின்று கொண்டு சாப்பிடும்போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் கீழ் நோக்கியே பாய்கின்றது. இதன் விளைவாக, உடலில் இரத்தத்தை மேல் நோக்கியும் பாய செய்வதற்காக, இதயம் பெரும்பாடுபடும்.\nமேலும் இது ஹைப்போதலாமிக் பிட்யூட்ரி அட்ரினலை தூண்டி மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. கார்டிசால் ஹார்மோனை சுரக்க செய்கின்றது.\nஇந்நிலை தொடர்ந்தால் உடலில் ருசியை அறியக்கூடிய மற்றும் உணர்வுகளை கடத்தக்கூடிய பகுதிகள் பாதிக்கப்படும்.\nஇதனால் மன அழுத்தமும் ஏற்படும். அதனால், எப்போதும் சம்மணமிட்டு சாப்பிட வேண்டும்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/5146/", "date_download": "2021-08-02T09:45:16Z", "digest": "sha1:BEHSGRMWW47P2DXXSCAI5ED5QLJC27OC", "length": 4143, "nlines": 70, "source_domain": "www.akuranatoday.com", "title": "\"பெற்றோர் திருமணமானவர்களா/இல்லையா\" என்ற பகுதி நீக்கப்படுகிறது - Akurana Today", "raw_content": "\n“பெற்றோர் திருமணமானவர்களா/இல்லையா” என்ற பகுதி நீக்கப்படுகிறது\nஅடுத்த இரண்டு மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய டிஜிட்டல் பிறப்பத்தாட்சி பத்திரத்தில் பெற்றோர் திருமணமானவர்களா/ இல்லையா என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளதாக பதிவாளர்கள் நாயகம் எம்.சீ. விதானகே தெரிவித்துள்ளார்.\nஇது பிள்ளைகளுக்கு பாதிப்பானது என்பதால், பழைய பிறப்பத்தாட்சி பத்திரத்தில் இ��ுந்த இந்த பகுதியை புதிய பிறப்பத்தாட்சி பத்திரத்தில் உள்ளடக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nமக்களின் வசதிகளுக்காக இம்மாத இறுதிக்குள் பிறப்பு, மரணம் மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களின் பிரதிகளை வழங்கும் அலுவலகம் ஒன்றை குடிவரவு, குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் ஆகியன அமைந்துள்ள சுஹூருபாயவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பதிவாளர்கள் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.\nlunch sheet தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு முற்றாக தடை: தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை\nநிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி\nஓட்டமாவடி மஜ்மா நகரில் அதிக ஜனாஸாக்கள் வேறு இடத்தை பரிந்துரைக்குக.\nக.பொ.த சா/த தோற்றிய மாணவ,மாணவிகளுக்கான விசேட பயிற்சிநெறி\nநேற்றைய தினம் கட்டாரில் இருந்து வருகை தந்த 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.\nவாட்ஸ்அப் இல் செட்களை தானாக இல்லாமல் ஆக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/tag/high-court/", "date_download": "2021-08-02T10:02:16Z", "digest": "sha1:XSN2UJ4HGU5MTE3SHGPO4RCEQ6W4CFTW", "length": 10199, "nlines": 111, "source_domain": "www.aransei.com", "title": "|", "raw_content": "\nகொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும், மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்\nகங்கைக் கரையோரம் 2000 உடல்கள் என்று அலறுகிறது உ.பி யில் வெளிவரும் தைனிக் பாஸ்கர் நாளேடு. மக்களின் சாவைத் தடுக்க வேண்டுமானால்,...\nCoronaEmergencyHigh CourtMarketSupreme CourtVaccineஅமித் ஷாஉயர்நீதிமன்றம்கங்கைகள்ளச் சந்தைகொரோனாசந்தைடெல்லிதடுப்பூசிபாஜகபிரதமர் மோடிமூன்று வேளாண் சட்டங்கள்விவசாயிகள் போராட்டம்வேளாண் சட்டங்கள்\n57 பிரேதப் பரிசோதனையில் ஒரே முடிவுகள் – உயர் நீதிமன்றம் அதிர்ச்சி\n2019-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை மதுரை அரசு ராசாசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பதிவுகளின்படி...\n57 பிரேத பரிசோதனைகளில் ஒரே முடிவுகள்Autopsy reportsCut and paste autopsy reportsGovernment Rajaji Medical College and HospitalHigh CourtMaduraiStanley Medical College and Hospitalசென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைபிரேத பரிசோதனைமதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nஹத்ராஸ் : ‘வேண்டியது நீதி; அவதூறுகள் இல்லை’ – பிரியங்கா காந்தி\nஹத்ராஸ் வழக்கில் சட்டவிரோதமாக வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி...\nபோலி என்ஓசியில் 91 பெட்ரோல் நிலையங்கள் : நீதிபதிகள் அதிர்ச்சி\nபோலி இசைவு சான்றிதழின் (என்ஓசி) அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 91 பெட்ரோல், டீசல் மற்றும் ஆட்டோ எரிவாயு சில்லறை விற்பனை நிலையங்கள்...\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக்...\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\n‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்\nநீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை\nவெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன\nசுற்றுலாத்துறையில் 813 கோடி மதிப்பில் ஏல அறிவிப்பை வெளியிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – புறக்கணிக்கப்படுகிறதா மக்களின் போராட்டம்\n‘சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றாதவர்கள் மக்களின் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்’– மகாராஷ்ட்ர காங்கிரஸ் தலைவர்\n’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் – தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தகவல்\n‘தற்போதைய பணவீக்கத்திற்கு 1947-ல் நேரு ஆற்றிய உரையே காரணம்’ – ம.பி. பாஜக அமைச்சர்\n‘பெகசிஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை வேண்டும்’ – நாடாளுமன்றத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/kartharukku-kaanikaiyitho/", "date_download": "2021-08-02T08:54:45Z", "digest": "sha1:OQM6LJVLU2QPSV5WYFSJZ7XEND3QHSW3", "length": 12075, "nlines": 211, "source_domain": "www.christsquare.com", "title": "Kartharukku Kaanikaiyitho Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nகர்த்தருக்குக் காணிக்கையிதோ தம்மையே தந்த\nஅநியாயம் நீங்க வேணும் உலகிலே மெய்\nஆபிரகாம் பத்திலொன்றையே மெல்கிசே தேக்குக்கு\nமா பிரியமாக வாசித்தேன் இஸ்ரயேல் பெத்தேல்\nகொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன் இதோ இத்தனை\nநஞ்சைவிளைவினி லோர்பாகம் சேர்த்து வைத்தேனான்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஉடம்பு சரி இல்ல சபைக்கு வர முடியலனு சொல்லுறவங்களுக்கு சமர்ப்பணம்..\nஒரே பிசி…உடம்பு சரி இல்ல ...\nகிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...\nதிருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்களா தயவு செய்து இதை படியுங்கள்.\nதன் சொந்த சகோதரன் ஏசாவின் ...\nலோத்தி மூன்…நற்செய்தியை அறிவிப்பதற்கு நீங்கள் ஆயத்தமா\nயார் இந்த தந்தை பெர்க்மான்ஸ் தந்தை SJ பெர்க்மான்ஸ் BIO-DATA\nபிறந்த நாள்: ஆகஸ்ட் 3 ...\nவேதாகமத்தை பற்றி Parveen Sulthana-வின் அருமையான பேச்சு.\nவேதாகமத்தை பற்றி Parveen Sulthana-வின் ...\nமே 01 மிஷனரி டேவிட் லிவிங்ஸ்டன் நினைவு தினம்\nஆப்பிரிக்கா. ஆம் , நீங்கள் ...\nகை கால்கள் இல்லாமல் பிறந்த மனிதனுடைய சாட்சி – நிச்சயம் இந்த வீடியோ பார்த்த பிறகு உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்.\nஇன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்…இந்த பாடலை யார் பாடியது என்று உங்களுக்கு தெரியுமா\nஇன்ப இயேசு ராஜாவை நான் ...\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்க���்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\nஉம் பேரன்பில் நம்பிக்கை …\nதேடி வந்து மீட்ட …\nகிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு …\nஉம்மாலே கூடாத அதிசயம் …\nஎன்னை அழைத்தவரே தினம் …\nதிருமணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறீர்களா தயவு செய்து இதை படியுங்கள்.\nதன் சொந்த சகோதரன் …\nஆண்டவரை தங்கள் சொந்தஇரட்சகராக ஏற்றுக்கொண்ட உடனே அனைவரும் வேதத்தை நேசித்து வாசிப்பது உண்டு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2020/04/22/people-who-violate-the-curfew-the-delhi-traffic-jam/", "date_download": "2021-08-02T09:38:50Z", "digest": "sha1:6RVSEXKJZA562RG72ZRFTMI3EZ6GBA2E", "length": 10710, "nlines": 164, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "டெல்லியில் ஊரடங்கை மீறும் மக்களால் போக்குவரத்து நெரிசல்! – Kuttram Kuttrame", "raw_content": "\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nடெல்லியில் ஊரடங்கை மீறும் மக்களால் போக்குவரத்து நெரிசல்\nPublish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்\nகொரொனா பாதிப்பு 19 ஆயிரத்து தாண்டிய நிலையில் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியே வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாடு முழுவதும் கொரொனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஊரடங்கை மீறி மக்கள் அதிகளவில் வெளியே வருவதால் நோய் தொற்று மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள காய்கறி சந்தையில் கடுமையான ப���க்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காய்கறி சந்தை 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டதால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெருமளவில் கூடினர்.\nடெல்லி, உத்திரப்பிரதேசம் எல்லையான காசியாபாத் பகுதியிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. கொரொனா பாதிப்பு அதிகம் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நவிமும்பை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன, இந்நிலையில் நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கு ஒருவர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅந்த ஊழியர் நாடாளுமன்றத்தின் பிரதான கட்டடத்தில் பணியாற்ற வில்லை என்றும் மக்களவை செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் மாளிகையில் ஊழியர்கள் யாருக்கும் கொரொனா பாதிப்பு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஊழியர் ஒருவரின் உறவினருக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் மாளிகையில் விளக்கமளித்துள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு..\nஇரையை விழுங்கி விட்டு நகர முடியாமல் தவித்த பாம்பு..\nகோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்..\nஎன்ன நடந்தது என்று தெரியவில்லை ஏமாற்றிவிட்டனர்..\nதமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா தொற்று.. 26 பேர் பலி\nஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுந்த பெண்..\nஇந்தியா செய்திகள் விரைவு செய்திகள்\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nகிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/48706/", "date_download": "2021-08-02T09:19:19Z", "digest": "sha1:7V2PO3XP3KYKJ3CG4HLAKJWAK3ON63DP", "length": 6961, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "சம்பந்தனின் உரையைக் குறுக்கீடு செய்து குழப்பிய பொதுமக்களின் செயற்பாட்டுக்கு : மன்னிப்புக் கோரும் விசேட பிரேரணை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசம்பந்தனின் உரையைக் குறுக்கீடு செய்து குழப்பிய பொதுமக்களின் செயற்பாட்டுக்கு : மன்னிப்புக் கோரும் விசேட பிரேரணை\nமுள்ளிவாய்க்காலில் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வின் போது, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் உரையைக் குறுக்கீடு செய்து குழப்பிய பொதுமக்களின் செயற்பாட்டுக்கு, அவரிடம் மன்னிப்புக் கோரும் விசேட பிரேரணை, வடமாகாண சபையில் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டது.\nவடமாகாண சபையின் 93ஆவது அமர்வு, நேற்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றபோது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், இவ்விசேட பிரேரணையைக் கொண்டுவந்தார்.\nஅதில், ‘கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருக்கையில், இடையில் குறுக்கிட்டு அவரின் உரையைத் தடுக்கும் வகையிhன கேள்விகள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து நாம் நாம் மனவருத்தம் அடைவதுடன், அவரிடம் மன்னிப்புக் கோருகின்றோம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nPrevious articleவிடுவிக்கப்பட்ட கிணற்றிலிருந்து மோட்டார் சைக்கிள்கள் மீட்பு\nNext articleபுதிய வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி கடமைப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்\nசுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் தனது சொற்ப இலாபத்திற்காக சமூகத்திற்கு துரோகம் இழைக்கிறார்\nகருணா அம்மானின் கட்சியும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்.\nகிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை\nமட்டக்களப்பில் தமிழ் பிரதி நிதிகள் 4 பேரை பெறவேண்டுமாயின் கைக்கூலிகளுக்கு வாக்களிக்கவேண்டாம்—, இரா.துரைரெத்தினம் வேண்டுகோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-08-02T09:34:03Z", "digest": "sha1:VN64TKMC6D44QMULDZ2KW4E7B32BHPS5", "length": 36307, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஹார்மோன் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, August 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்… ஏன் தாம்பத்தியத்திற்குமுன் சாக்லேட் சாப்பிட வேண்டும் தாம்பத்தியத்திற்குமுன் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற பதிவுக்கு கிடைத்த அமோக‌ வரவேற்பின் காரணமாக அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு… தாம்பத்தியத்திற்கு முன்பு சாக்லேட்டுக்கு பதிலாக வேறு என்ன மாதிரியான உணவை சாப்பிட வேண்டும் என்பதை இங்கு கண்போம். அந்த உணவு என்னவென்றால், அதுதான் வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தில் தாம்பத்தியத்தை சிறக்க காரணமான ஹார்மோன்களை அதிகளவில் சுரக்கச் செய்யும் ஊட்டசத்துக்கள் நிறைவான அளவில் உள்ள‍து. இதன் மூலமாக இருவரது உடலுக்கும் தேவைப்படும் முழு சக்தியானது விரைவாக செயல்பட்டு இருவரையும் சோர்வு தட்டாமல் சுறுசுறுப்பாக வைத்திருருக்க வழிவகை செய்து தாம்பத்தியத்தை உயிர்ப்புடன் செயல்பட உதவுகிறது. அதனால்தான் க‌ணவன் மனைவி இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு வாழைப் பழத்தை சாப்பிட்டு விட வேண\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\n தாம்பத்தியத்திற்குமுன் சாக்லேட் சாப்பிட வேண்டும் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோர்வாக இருந்தாலும் சரி இரண்டுக்கும் இருக்கும் பொதுவான மா மருந்து என்னவென்றால் அது தாம்பத்தியம்தான். அந்த தாம்பத்தியத்தை மென்மேலும் இனிமையாக்கும் அருமருந்துதான் இந்த‌ சாக்லேட். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோர்வாக இருந்தாலும் சரி இரண்டுக்கும் இருக்கும் பொதுவான மா மருந்து என்னவென்றால் அது தாம்பத்தியம்தான். அந்த தாம்பத்தியத்தை மென்மேலும் இனிமையாக்கும் அருமருந்துதான் இந்த‌ சாக்லேட். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா உண்மைதாங்க• நீங்கள் உங்கள் துணையுடன் தாம்பத்தியத்திற்கு முன்பு சாக்லேட் சாப்பிட்டபிறகு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் உங்கள் இருவரின் உடலிலும் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு மிகவும் சீரான அளவில் தூண்டவைத்து தாம்பத்தியத்தின் மீதுள்ள‍ ஆர்வத்தை தூண்டிவிடுவதோடு தாம்பத்தியத்தை சுவைக்க சுவைக்க‍ அதன் சுவை அதிகமாகும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். #தாம்பத்தியம், #பெண்கள், #Bed_Relationship, #Women, #Girl, #Health, #செக்ஸ், #ஹார்மோன், #சாக்லேட், #விதை2விருட்சம், #Sex, #Intercourse, #Hormone, #vidhai2\nஅதிர்ச்சி – அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமாம்\nஅதிர்ச்சி - அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமாம் இன்றைய காலக்கட்டத்தில் பலர் டயட்டை பின்பற்றுகின்றேன் என்ற பெயரில் அதிகம் பால், பழம், ஓட்ஸ், ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வர். ��வை அனைத்திலும் இயற்கையாகவே சர்க்கரையின் தன்மை அதிகமாக இருக்கும். இதை தவிர்த்து ஒரு சிலரோ காபி, டீ போன்றவற்றில் அதிகம் சர்க்கரை பயன்படுத்துபவர்களாகவும், அதிக அளவில் இனிப்புகள் உட்கொள்கின்றவர்களாக இருப்பர். இப்படி அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமாம். ஆம், அதிகப்படியான சர்க்கரை பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற முதன்மை ஹார்மோன்களின் உற்பத்தியையும் குறைக்கிறது. எனவே அளவான அளவிலான சர்கரையை மட்டும் பயன்படுத்துங்கள். #ஈஸ்ட்ரோஜன், #டெஸ்டோஸ்டிரான், #ஹார்மோன், #பாலியல், #உடலுறவு, #பாலுறவு, #சர்க்கரை, #விதை2விருட்சம்,\nதுளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்\nதுளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் சிலரது வீட்டு முற்றத்தில் வளர்க்கப்படும் இந்த துளசியில் கஷாயம் வைத்து குடித்து வந்தால், ஆச்சரியப்படும் அளவிற்கு சில நோய்களை குணப்படுததுகிறதாம். தினமும் தொடர்ந்து துளசி கஷாயத்தை குடித்து வந்தால் அந்த துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அது நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது. #துளசி, #துளசி_கஷாயம், #கஷாயம், #ஆக்சிஜன், #புத்துணர்ச்சி, #நரம்புகள், #மன_அழுத்தம், #ஹார்மோன், #தூக்கமின்னை, #தூக்கம், #இளமை, #விதை2விருட்சம், #Basil, #basil_tincture, #tincture, #oxygen, #freshness, #nerves, #stress, #hormone, #insomnia, #sleep, #youth, #seed2tree, #seedtotree, #vidhai2viru\nசுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்\nசுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும் கருவுற்ற தாய்மார்கள், தங்களது சுகப்பிரசவத்திற்கு அவர்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு இது மிகவும் இன்றியமையாதது. இது பெண்களின் கைகளில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். பெரிய மணிக்கட்டு உள்ள கையில் சிறிய அளவுள்ள வளையல் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக் கொள்ளும். ��கவே கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து, வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் க‌ட்டாயம் ஈடுபடுவது அவர்களுக்கு நலம் பயக்கும். அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள், தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யம்\nஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்\nஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் (more…)\nபெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்\nபெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்களுக்கே உரிய அவர்களின் உடலில் சுரக்கும் இரு முக்கிய (more…)\nஇளம்பெண்கள், அதிக நார்ச்சத்துள்ள‌ உணவுகளை சாப்பிட்டு வந்தால்\nஇளம்பெண்கள், அதிக நார்ச்சத்துள்ள‌ உணவுகளை சாப்பிட்டு வந்தால் இளம்பெண்கள், அதிக நார்ச்சத்துள்ள‌ உணவுகளை சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்கள் சரியாக சுரந்தால் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாது. அதனால்தான் (more…)\nஉங்களுக்கு காதல் வந்தால்- உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்- சிறு அலசல்\nஉங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள் - சிறு அலசல் உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள் - சிறு அலசல் உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள் - சிறு அலசல் மூளையின்உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார் மோன்தான் மனிதர்களின் (more…)\nஇளம்பெண்கள் தங்களது கருப்பை (கர்ப்பப்பை)ஐ பாதுகாக்க‍ சில எளிய குறிப்புக்கள்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பை (கர்ப்பப்பை)ஐ பாதுகாக்க‍ சில எளிய குறிப்புக்கள் இளம்பெண்கள் தங்களது கருப்பை (கர்ப்பப்பை)ஐ பாதுகாக்க‍ சில எளிய குறிப்புக்கள் பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வர�� சினை முட்டைப் பையில் இருந்து (more…)\nகாம‌ உணர்வை, ஒரு பெண்ணுக்கு நிர்ணயிப்ப‍து அவளது உடலில் சுரக்கும் ஹார்மோன்களே\nஒரு பெண்ணின் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள்தான், உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப் படுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்றுமுன் ஈஸ்ட்ரோஜ ன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார் மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார் மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன் களால் தான் பருவம் அடைகிறாள்.click her (more…)\nஆண்களுக்கு ஏன் பெண்களின் மார்பகங்கள்மீது தனிமோகம் என்று உங்களுக்குத் தெரியுமா கவர்ச்சி தான் காரணம் என்பது உங்களது பதிலாக இருந்தா ல் அது தவறு.. காரணம், ஹார்மோன் கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் என்று ஆய்வாள ர்கள் கூறுகிறார்கள். உணர்ச்சிகள், உடல் கூறுகள் மற்றும் கலாச் சாரம் என பல காரணங்கள் இதற்குக் கூறப் பட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் தான் மார்பகங்கள் மீதான ஆண்களின் கிளர்ச்சிக்குக் காரணம் என்பது இவர்களின் கூற்றாகும். இதுகுறித்து (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதும���ப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா ��ன்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nVidhya karthik on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham1_35.html", "date_download": "2021-08-02T08:58:20Z", "digest": "sha1:PZOMBTZZVSKVD3IKTRS3S2KPNGQGYUKP", "length": 52999, "nlines": 110, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 1.35. இரண்டாவது அரங்கேற்றம் - ஆயனர், நாவுக்கரசர், சிவகாமியின், அவருடைய, சிவகாமி, அபிநயம், சுவாமி, பார்த்தார்கள், அவர், என்றார், தோன்றும், தங்கள், முன்னால், அரங்கேற்றம், குமார, தங்களுடைய, சக்கரவர்த்தி, தாங்கள், கொண்டு, அடிகளே, நான், அப்போது, மறந்தார்கள், கூறி, ஆயனரே, வண்ணம், பெருமான், என்ன, கொன்றை, போது, இடம், கூறினார், சிறிது, இரண்டாவது, அவன், இன்னும், நாட்டிலும், வேண்டும், அவள், இவ்விதம், அந்த, எங்கள், மாமல்லர், வந்து, ஆதாரம், பாடல், பிறகு, குரலில், அவர்களுடைய, கண்கள், எல்லாரும், கண்களில், தமிழ், பார்த்து, சக்கரவர்த்தியின், சீடர், திருமேனி, உடனே, எனக்கும், பார்த்தார், எப்போது, சற்று, சபதம், நடனத்தைப், ஆகிய, ஜனங்கள், நடனக், கேட்டதும், மகிமை, பார்க்க, திருமேற்றளி, பற்றிய, மீது, பெருமானின், பயிலும், நின்ற, பிடிக்க, மூன்று, பிடித்தாள், கேட்டார், திருமேற்றளியில், இருப்பதால், மலர்களும், பாடலில், எல்லாக், கலைகளுக்கும��, குனிந்த, சிறந்த, காட்டிலும், திரும்பி, தெரியாது, என்றும், தான், பாடலுக்கு, தங்களை, நாவுக்கரசரை, கொண்டிருந்த, பிடித்தபோது, பொருளுக்கேற்ப, பிடித்துக், பாடிக்கொண்டு, சிறு, பிள்ளை, அங்கிருந்த, வரையில், நிலை, நேரே, நேருக்கு, பாடலைப், இனிய, கண்ணால், பெற்று, முதலில், நல்லது, புத்த, ஆயனருக்குச், உண்டு, யுத்தம், இப்போது, சிற்பியாரே, பின்வரும், கேட்க, பார்த்துக், கொண்டும், வார்த்தை, விளங்கிய, பேறு, பாடி, அவரிடம், மடாலயத்தில், வருகிறார், ஒருவேளை, அவருடன், எண்ணம், உண்டாயிற்று, நாவுக்கரசரின், திரும்பிப், ஆயனச், தத்தம், வாகீசப், வெண், கோயில், பிரகாரங்களில், ருத்திராட்ச, வெண்ணீறு, அமரர், கல்கியின், அந்தத், அமைந்திருந்த, சென்ற, ஒவ்வொரு, ஊர்க், பாடினார், உள்ள, யாத்திரை, சென்று, அடுத்த, கணத்தில், நானும், வருகிறேன், மிக்க, குமாரி, இந்தப், நின்று, பார்த்த, உங்கள், வேண்டுமென்று, கூறியபோது, முகத்திலும், பெருமிதம், நடுவில், நடனக்கலைதான், கேள்விப்பட்டேன், அன்று, மட்டும், ஆயனரும், வரும், பெண், நோக்கின, பின்னால், ஆயனருக்குப், இங்கு, நேரம், முகத்தில், பின், அபசாரம், திருப், கண்டதும், வரவேணும், எழுந்து, நடந்து, ஆனந்த", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 02, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 1.35. இரண்டாவது அரங்கேற்றம்\nதிருநாவுக்கரசு அடிகளுக்கு அப்போது ஏறக்குறைய ஐம்பத்தைந்து பிராயமிருக்கலாம். அப்பெருமானுடைய பொன் வண்ணத் திருமேனி முழுவதும் தூய வெண்ணீறு பூசியிருந்தது. அவருடைய கழுத்தையும் மார்பையும் ருத்திராட்ச கண்டிகைகளும் தாழ்வடங்களும் அலங்கரித்தன. சிரசிலும் கரங்களிலும் அவ்வாறே ருத்திராட்சங்கள் பொலி���்தன. காதுகளிலும் ருத்திராட்ச குண்டலங்கள் இலங்கின. இடையில் தூய வெண் துகில் உடுத்தியிருந்தார். அவருடைய திருமுகத்தில் ஞான ஒளி வீசிற்று. இறைவனை நினைந்து இடையறாது கண்ணீர்விட்ட அவருடைய கண்களில் பேரருள் ததும்பிற்று. கோயில் பிரகாரங்களில் புல் செதுக்குவதற்கான உழவாரப்படை அந்தத் தொண்டர் சிகாமணியின் திருத்தோளில் சாத்தப்பட்டிருந்தது.\nதிருநாவுக்கரசர் காஞ்சியில் அமைந்திருந்த சைவத் திருமடத்துக்கு அதிபராக விளங்கியபோதிலும், அவ்வப்போது ஸ்தல யாத்திரை சென்று திரும்புவது வழக்கம். தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலும் உள்ள பல சிவ ஸ்தலங்களுக்கு அவர் சென்று சிவாநந்தமும் தமிழின்பமும் ததும்பும் தெய்வத் திருப்பதிகங்களைப் பாடினார். சென்ற இடங்களிலெல்லாம் ஜனங்கள் அவரைச் சிவிகையில் ஏற்றி ஊர்வலம் நடத்திச் சிறப்பாக வரவேற்றார்கள். அவர் சென்ற ஒவ்வொரு ஸ்தலத்திலும் கோயில் பிரகாரங்களில் முளைத்திருக்கும் புல்லை அவர் தம் கையில் பிடித்த உழவாரப்படையினால் செதுக்கிச் சுத்தம் செய்தார். இந்தச் சிவகைங்கரியத்தை ஆயிரக்கணக்கான மக்கள் அதிசயத்துடன் பார்த்தார்கள். அதுமுதல் தங்கள் ஊர்க் கோயில்களைப் புதுப்பித்துச் சுத்தமாக வைத்திருக்கத் தீர்மானித்தார்கள்.\nவாகீசப் பெருமானுடைய திருவாக்கினால் தத்தம் ஊரிலுள்ள கோயிலுக்கு மகிமை உண்டாக வேண்டும் என்று ஜனங்கள் விரும்பினார்கள். \"எங்கள் ஊருக்கும் விஜயம் செய்யவேண்டும். எங்கள் ஊர்க் கோயிலைப் பற்றியும் பாடி அருள வேண்டும்\" என்று அவரிடம் வேண்டிக் கொண்டார்கள்.\nஅவ்விதம் அப்பெருமான் பாடிய பாடல்களை அந்தந்த ஊர்க்காரர்கள் ஓலைச் சுவடிகளில் எழுதிக் கொண்டு பெறுதற்கரிய பேறு அடைந்ததாக எண்ணி மகிழ்ந்தார்கள்.\nஇத்தகைய மகிமை வாய்ந்த நாவுக்கரசர் எழுந்தருளியிருக்கும் இடங்களில் ஜனங்கள் அருளொளி விளங்கிய அவருடைய திருமுகத்தைப் பார்த்துக் கொண்டும் அவருடைய திருவாக்கிலிருந்து எப்போது, என்ன அமுத வார்த்தை வருமோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டும் இருப்பார்கள்.\nஅங்ஙனமிருக்க, இன்று அவருடைய சொந்த மடாலயத்தில் அவரிடம் பக்தி பூண்டு தொண்டு செய்யும் சீடர்கள்கூட, \"ஆயனர் வருகிறார்\" என்ற சொல்லைக் கேட்டதும் ஒருமுகமாக வாசற்பக்கம் திரும்பிப் பார்த்தார்கள் என்றால், அதிலிருந்து மக��களின் உள்ளத்தில் ஆயனச் சிற்பியார் எப்பேர்ப்பட்ட இடம் பெற்றிருந்தார் என்று ஊகித்து அறியலாம்.\nஅங்கிருந்தோர் எல்லாரையும்விட நாவுக்கரசரின் அருகில் வீற்றிருந்த குமார சக்கரவர்த்தியின் உள்ளத்திலேதான் அதிகப் பரபரப்பு உண்டாயிற்று. 'இதோ ஆயனர் வருகிறார்' என்ற வார்த்தைகளைக் கேட்டதும், 'ஒருவேளை அவருடன் சிவகாமியும் வருவாளோ' என்ற வார்த்தைகளைக் கேட்டதும், 'ஒருவேளை அவருடன் சிவகாமியும் வருவாளோ' என்ற எண்ணம் அவர் மனத்தில் தோன்றிக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று. அடுத்த கணத்தில், 'அவள் எதற்காக இங்கு வருகிறாள்' என்ற எண்ணம் அவர் மனத்தில் தோன்றிக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று. அடுத்த கணத்தில், 'அவள் எதற்காக இங்கு வருகிறாள்' என்ற எண்ணம் மனச் சோர்வை உண்டாக்கியது. இவ்விதம் அவர் மாறி மாறிக் கிளர்ச்சியும் சோர்வும் அடைவது அதிக நேரம் நீடித்திராதபடி இதோ ஆயனர் வாசற்படியண்டை வந்து விட்டார்' என்ற எண்ணம் மனச் சோர்வை உண்டாக்கியது. இவ்விதம் அவர் மாறி மாறிக் கிளர்ச்சியும் சோர்வும் அடைவது அதிக நேரம் நீடித்திராதபடி இதோ ஆயனர் வாசற்படியண்டை வந்து விட்டார் ஆகா என்ன 'ஜல் ஜல்' சத்தம்; பாத சரத்தின் ஒலிபோல் இருக்கிறதே அதோ, ஆயனருக்குப் பின்னால் வரும் பெண் அதோ, ஆயனருக்குப் பின்னால் வரும் பெண்\nகுமார சக்கரவர்த்தியின் கண்கள் சிவகாமியின் முகத்தை நோக்கின. சிவகாமியின் கண்களும் முதன்முதலில் மாமல்லரின் ஆவல் ததும்பிய கண்களைத்தான் சந்தித்தன. வாடியிருந்த சிவகாமியின் முகத்தில் ஒருகணம் புதுமலர்ச்சி காணப்பட்டது. ஆனால், ஒருகண நேரந்தான் அடுத்த கணத்தில் அந்தச் செந்தாமரை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. தலை குனிந்து பூமியை நோக்கிய வண்ணம் சிவகாமி தன் தந்தையைப் பின் தொடர்ந்து அந்த மண்டபத்திற்குள்ளே நுழைந்தாள்.\nநயன பாஷையில் நடைபெற்ற மேற்படி நாடகத்தை வேறு யாரும் கவனியாத வண்ணம் மண்டபத்துக்குள் அப்போது பெரும் கலகலப்பு ஏற்பட்டிருந்தது.\nபணிவுக்குப் பெயர்போன நாவுக்கரசர் பெருமான், ஆயனர் மண்டபத்துக்குள்ளே நுழைந்ததும் தானும் ஆசனத்தை விட்டு எழுந்து நாலு அடி நடந்து எதிர்கொண்டு, \"வரவேணும் சிற்ப சக்கரவர்த்தியே\" என்று உபசரித்து அழைத்தார்.\nஆயனர் இதைக் கண்டதும் விரைந்து முன்னால் வந்து, \"அபசாரம் அபசாரம்\" என்று கூறி கொண்டே திருநாவு��்கரசரின் திருப் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.\nநாவுக்கரசர் ஆசனத்தைவிட்டு எழுந்தபோது அவருடன் எழுந்த சீடர்கள், நாவுக்கரசரும் ஆயனரும் அமர்ந்த பிறகு தாங்களும் தத்தம் இடத்தில் அமர்ந்தார்கள்.\nஎல்லாரும் உட்கார்ந்த பிறகும் சிவகாமி மட்டும் ஆயனருக்குப் பின்னால் தலைகுனிந்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அப்போதுதான் அவளைப் பார்த்த நாவுக்கரசர், \"ஆகா இந்தப் பெண் யார், ஆயனரே இந்தப் பெண் யார், ஆயனரே தங்கள் குமாரி சிவகாமியா\" என்று கேட்க, ஆயனர் \"ஆம், அடிகளே தங்களைத் தரிசிக்கப் போகிறேன் என்று சொன்ன போது சிவகாமி 'நானும் வருகிறேன்' என்றாள் தங்களைத் தரிசிக்கப் போகிறேன் என்று சொன்ன போது சிவகாமி 'நானும் வருகிறேன்' என்றாள் அழைத்துக் கொண்டு வந்தேன்\" என்றார்.\n\"மிக்க சந்தோஷம் உங்கள் குமாரியைப் பார்க்க வேண்டுமென்று நானும் மிக்க ஆவலாயிருந்தேன். நடனக் கலையிலே அவள் அடைந்திருக்கும் அபூர்வத் தேர்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சமீபத்தில் அரங்கேற்றம் நடந்ததாமே நான்தான் அச்சமயம் இல்லாமற் போய்விட்டேன்\" என்று நாவுக்கரசர் கூறினார்.\n\"எனக்கும் அது மிக வருத்தமாயிருந்தது, சுவாமி அன்று சிவகாமியின் நடனத்தைப் பார்த்துவிட்டு ருத்ராச்சாரியார் பிரமித்துப் போய்விட்டார். சிற்பம், சித்திரம், சங்கீதம் ஆகிய கலைகளுக்கெல்லாம் நடனக்கலைதான் ஆதாரம் என்பதை அன்றைக்குத்தான் அவர் ஒத்துக்கொண்டார். 'சிவகாமியின் நடனத்தைப் பார்த்த பிறகு சங்கீதக் கலையில் நான் கற்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறதென்பதை அறிந்தேன்' என்று சபை நடுவில் வாய்விட்டுச் சொன்னார்...\"\nஇவ்விதம் ஆயனர் கூறியபோது அவருடைய குரலிலும் முகத்திலும் பெருமிதம் கொந்தளித்தது. அப்போது வாகீசர், \"ஆயனரே சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகிய தெய்வக்கலைகளுக்கு ஆதாரமும் நடனந்தான் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகிய தெய்வக்கலைகளுக்கு ஆதாரமும் நடனந்தான் அண்ட பகிரண்டங்களையெல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் பெருமான் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயில்கிறார் அல்லவா அண்ட பகிரண்டங்களையெல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் பெருமான் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயில்கிறார் அல்லவா\" என்று திருவாய் மலர்ந்தார்.\nஇதுவரை மௌனமாக இருந்த குமார சக��கரவர்த்தி, \"சுவாமி நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தைப் பற்றிய தங்களுடைய பாடல் ஒன்றுக்கு, அன்று ஆயனர் மகள் அபிநயம் பிடித்தாள். தாங்கள் அதை அவசியம் பார்க்க வேண்டும் நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தைப் பற்றிய தங்களுடைய பாடல் ஒன்றுக்கு, அன்று ஆயனர் மகள் அபிநயம் பிடித்தாள். தாங்கள் அதை அவசியம் பார்க்க வேண்டும்\n தங்களுடைய மூன்று திருப்பாடல்களுக்குச் சிவகாமி அபிநயம் பிடிப்பதாயிருந்தாள். ஆனால், ஒரு பாடலுக்குத்தான் அபிநயம் பிடிக்க முடிந்தது. அரங்கேற்றம் நடுவில் நின்ற செய்தி கேட்டிருப்பீர்களே\" என்று ஆயனர் கூறியபோது, அதனால் ஏற்பட்ட வருத்தம் இன்னும் அவருக்குத் தீரவில்லையென்று தோன்றியது.\n யுத்தத்தினால் சிவகாமியின் அரங்கேற்றம் மட்டுந்தானா தடைப்பட்டது இன்னும் எத்தனையோ காரியங்கள் தடைபடும் போலிருக்கின்றன. உம்மை நான் அழைத்த காரியம் கூட அப்படித்தான் இன்னும் எத்தனையோ காரியங்கள் தடைபடும் போலிருக்கின்றன. உம்மை நான் அழைத்த காரியம் கூட அப்படித்தான்\" என்று வாகீசப் பெருமான் கூறினார்.\n என்ன காரியமாக என்னை வரச்சொல்லிப் பணித்தீர்கள்\" என்று ஆயனர் கேட்டார்.\n\"நமது திருமடத்தை இந்த ஏகாம்பரர் சந்நிதியிலிருந்து திருமேற்றளிக்குக் கொண்டு போக வேண்டுமென்று விரும்பினேன். இந்த இடம் நகரின் மத்தியில் இருப்பதால் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு உகந்ததாயில்லை. ஆனால் திருமேற்றளியில் அமைதி குடிகொண்டிருக்கிறது. கோயிலைச் சுற்றியுள்ள நந்தவனத்தில் மல்லிகை மலர்களும் கொன்றை மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. சந்தடி கூச்சல் ஒன்றும் கிடையாது. இறைவனைத் துதிப்பதற்கும் தமிழ் பயில்வதற்கும் திருமேற்றளி தக்க இடம்.\"\n திருமேற்றளி இறைவன் மீது பாடல் ஏதாவது பாடப் பெற்றதோ\" என்று ஆயனர் கேட்க, நாவுக்கரசர் தமது சீடர்களைப் பார்த்தார். உடனே ஒரு சீடர் திருமேற்றளிப் பதிகத்திலிருந்து பின்வரும் பாடலைப் பாடினார்:\nமேற்கண்ட பாடலைச் சீடர் இனிய குரலில் உருக்கமாய்ப் பாடிவந்தபோது நாவுக்கரசர் பெருமானின் கண்களில் நீர் ததும்பி நின்றது. திருமேற்றளிக் கோயிலில் மல்லிகையும் கொன்றை மலரும் சூடிச் சூரியனைப்போல் ஜோதிமயமாக விளங்கிய சிவபெருமானை மீண்டும் அகக் கண்ணால் அவர் நேருக்கு நேரே தரிசித்துப் பரவசமடைந்தவராகத் தோன்றினார். அந்தக் காட்சியை அங்கிருந்த மற்றவர்கள் பார்த்துப் பரவசமடைந்திருந்தார்கள்.\nபாடல் முடிந்து சிறிது நேரம் வரையில் மௌனம் குடிகொண்டிருந்தது. பின்னர், நாவுக்கரசர் பரவச நிலை நீங்கித் தம்மைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தார். உடனே ஆயனர், \"அடிகளே தாங்கள் உண்மையிலேயே நாவுக்கரசர்தான். தங்களுடைய திருவாக்கு அப்படி மகிமை வாய்ந்திருக்கிறது. தங்களுடைய பாடலில் இடம் பெற்று விட்டபடியால் இந்தக் காஞ்சி நகருக்கும் இதிலுள்ள திருமேற்றளிக்கும் இனி அழிவென்பதே இல்லை. தங்கள் விருப்பத்தின்படி திருமேற்றளியில் மடாலயத்திருப்பணியை மேற்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் துறைமுகப்பட்டினத்தில் ஒரு முக்கியமான திருப் பணியைத் துரிதமாகச் செய்து முடிக்கும்படி சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். எதை முதலில் செய்வது என்று குமார சக்கரவர்த்தி ஆக்ஞை இடவேண்டும்\" என்று கூறி, மாமல்லரை நோக்கினார்.\nஆயனருடைய கேள்விக்கு மாமல்லர் மறுமொழி கூறுவதற்குள், நாவுக்கரசர் சொல்லுவார்: \"அதற்கு இப்போது அவசியமேயில்லை. சிற்பியாரே தாங்கள் வரும்போதுதான் சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்தை மாமல்லர் எனக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தார். யுத்தம் முடியும் வரையில் என்னைச் சிஷ்யர்களுடன் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் உள்ள ஸ்தலங்களைத் தரிசித்து வரும்படி சக்கரவர்த்தி யோசனை கூறியிருக்கிறார். எனக்கும் வெகுகாலமாக அந்த ஆசை உண்டு. காஞ்சிக் கோட்டை ஒரு வேளை பகைவர் முற்றுகைக்கு இலக்கானாலும் ஆகலாம், அம்மாதிரி சமயங்களில் என் போன்ற துறவிகள் விலகியிருப்பதே நல்லது.\"\nஇவ்விதம் நாவுக்கரசர் கூறியதைக் கேட்ட நரசிம்மவர்மர் \"அடிகளே தாங்கள் இப்போது கூறிய அபிப்பிராயம் போற்றத்தக்கது. அதைச் சமண முனிவர்களும் புத்த பிக்ஷுக்களும் ஒப்புக் கொண்டு அரசியல் விஷயங்களில் தலையிடாமல் நடந்து கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் தாங்கள் இப்போது கூறிய அபிப்பிராயம் போற்றத்தக்கது. அதைச் சமண முனிவர்களும் புத்த பிக்ஷுக்களும் ஒப்புக் கொண்டு அரசியல் விஷயங்களில் தலையிடாமல் நடந்து கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்\nபுத்த பிக்ஷு என்ற வார்த்தையைக் கேட்டதும் ஆயனருக்குச் சுருக்கென்றது. அதோடு பரஞ்சோதியைப் பற்றிய நினைவும் வந்தது.\n ஒரு விஷயம் தெரிவ��க்க மறந்துவிட்டேன். தங்களுடைய மடாலயத்தில் சேர்ந்து தமிழ் கற்பதற்காக ஒரு பிள்ளை சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடியிலிருந்து வந்தான். திருவெண்காட்டு நமசிவாய வைத்தியரிடமிருந்து தங்களுக்கும் எனக்கும் அவன் ஓலை கொண்டு வந்திருந்தான். சித்திரக்கலை சம்பந்தமான ஒரு மகா இரகசியத்தை அறிந்து வருவதற்காக அவனை வடக்கே ஸ்ரீ பர்வதத்துக்கு அனுப்பியிருக்கிறேன்....\"\n அங்கேயெல்லாம் யுத்தம் நடக்கும் இடமாயிற்றே சிறு பிள்ளை என்று சொன்னீர்கள் சிறு பிள்ளை என்று சொன்னீர்கள்\" என்று நாவுக்கரசர் சிறிது கவலையுடன் கேட்டார்.\n\"சிறு பிள்ளையாயிருந்தாலும் மகா வீரன் சுவாமி\" என்று ஆயனர் கூறி, அரங்கேற்றத்தன்று மதயானை மீது அவன் வேல் எறிந்ததை விவரித்தார்.\nகடைசியாக, \"பரஞ்சோதி திரும்பி வந்ததும் உடனே தங்களிடம் அனுப்பிவிடுகிறேன், சுவாமி\n அவன் திரும்பிவரும் போது நான் எங்கே இருப்பேனோ, தெரியாது. எப்போது அவன் உங்கள் தொண்டில் ஈடுபட்டானோ, உங்களுடைய சீடனாகவே இருக்கட்டும். சிற்பக்கலை பயிலும் பேறு இலேசில் கிடைக்கக் கூடியதா என்றும் அழிவில்லாத ஈசனுக்கும் என்றும் அழியாத கற்கோயில்களை அமைக்கும் கலையை காட்டிலும் சிறந்த கலை உலகில் வேறென்ன உண்டு... என்றும் அழிவில்லாத ஈசனுக்கும் என்றும் அழியாத கற்கோயில்களை அமைக்கும் கலையை காட்டிலும் சிறந்த கலை உலகில் வேறென்ன உண்டு...\nஆயனர் அப்போது குறுக்கிட்டு, \"அடிகளே சிற்பக் கலையைக் காட்டிலும் சிறந்த கலை வேறொன்று இருக்கிறது. எங்களுடைய கற்கோயில்கள் சிதைந்து உருத்தெரியாமல் அழிந்து போகலாம். ஆனால் தங்களுடைய கவிதைக் கோயில்களுக்கு ஒருநாளும் அழிவில்லை. கற்பகோடி காலம் அவை நிலை பெற்றிருக்கும்\" என்றார்.\nஅப்போது குமார சக்கரவர்த்தி, \"சற்று முன்னால் பேசி முடிவு செய்ததை இரண்டு பேரும் மறந்துவிட்டீர்களே எல்லாக் கலைகளுக்கும் ஆதாரம் நடனக்கலையல்லவா எல்லாக் கலைகளுக்கும் ஆதாரம் நடனக்கலையல்லவா\" என்று சொல்லவே, அங்கிருந்த எல்லாருடைய முகத்திலும் புன்னகை பூத்தது. ஆனால், சிவகாமி மட்டும் குனிந்த தலை நிமிராமலிருந்தாள்.\nநாவுக்கரசர், \"நல்லது, குமார சக்கரவர்த்தி நாங்கள் மறந்து தான் போய்விட்டோ ம் நாங்கள் மறந்து தான் போய்விட்டோ ம் எல்லாக் கலைகளுக்கும் ஆதாரம் நடனக்கலைதான். தில்லையம்பலத்தில் ஆடும் பெருமான் முன்னால் நிற்கும் போது உள்ளமானது பொங்கிக் கவிதை வெள்ளமாய் வருவது போல் மற்ற மூர்த்தங்களுக்கு முன்னால் நிற்கும்போது வருவதில்லை எல்லாக் கலைகளுக்கும் ஆதாரம் நடனக்கலைதான். தில்லையம்பலத்தில் ஆடும் பெருமான் முன்னால் நிற்கும் போது உள்ளமானது பொங்கிக் கவிதை வெள்ளமாய் வருவது போல் மற்ற மூர்த்தங்களுக்கு முன்னால் நிற்கும்போது வருவதில்லை\" என்று கூறிவிட்டு, ஆயனரைப் பார்த்து, \"சிற்பியாரே\" என்று கூறிவிட்டு, ஆயனரைப் பார்த்து, \"சிற்பியாரே தங்கள் புதல்வியின் நடனத்தை நான் பார்க்க வேண்டாமா தங்கள் புதல்வியின் நடனத்தை நான் பார்க்க வேண்டாமா தென்னாட்டுக்கு யாத்திரை சென்றால் திரும்பி எப்போது வருவேனோ தெரியாது. நாடெல்லாம் புகழும் சிவகாமியின் நடனக் கலையைப் பார்க்காமல் போக எனக்கு மனமில்லை. ஒரே ஒரு பாடலுக்கு அபிநயம் பிடித்துக் காட்டினாலும் போதும் தென்னாட்டுக்கு யாத்திரை சென்றால் திரும்பி எப்போது வருவேனோ தெரியாது. நாடெல்லாம் புகழும் சிவகாமியின் நடனக் கலையைப் பார்க்காமல் போக எனக்கு மனமில்லை. ஒரே ஒரு பாடலுக்கு அபிநயம் பிடித்துக் காட்டினாலும் போதும்\n சிவகாமிக்கு அத்தகைய பாக்கியம் கொடுத்து வைக்கவேண்டுமே\" என்று கூறி, தமக்குப் பின்னாலிருந்த சிவகாமியைத் திரும்பிப் பார்த்தார். அவள் முகமலர்ச்சியின்றித் தலை குனிந்த வண்ணம் இருப்பதைக் கண்டதும் ஆயனருக்குச் சிறிது வியப்பு உண்டாயிற்று.\nஇதையெல்லாம் கவனித்த மாமல்லர், \"ஒருவேளை நான் இங்கு இருப்பதால் சிவகாமி ஆட விரும்பாமலிருக்கலாம். சுவாமி விடை கொடுங்கள் போய் வருகிறேன்\" என்று நாவுக்கரசரைப் பார்த்துக் கூறினார்.\nஇந்த வார்த்தை காதில் விழுந்ததும் சிவகாமி பளிச்சென்று துள்ளி எழுந்து, நடனத்துக்கு ஆயத்தமாக நின்று, \"அப்பா எந்தப் பாடலுக்கு அபிநயம் பிடிக்க வேண்டும் எந்தப் பாடலுக்கு அபிநயம் பிடிக்க வேண்டும்\" என்று கேட்டது அழகிய மான்குட்டி ஒன்று குயிலின் குரல் பெற்று அமுதத் தமிழ் மொழியின் மழலை பேசுவதுபோல் தொனித்தது.\n\"பூவணத்துப் புனிதனார் முதலில் தோன்றட்டுமே\" என்று ஆயனர் பெருமிதம் தோன்றக் கூறினார்.\nநாவுக்கரசர், கலை அரசர், இளவரசர் ஆகிய மூன்று மன்னர்களின் முன்னிலையில் சிவகாமியின் நடனக் கலை அரங்கேற்றம் இரண்டாவது முறை ஆரம்பமாயிற்று.\nமந்த மாருதத்��ில் மிதந்து வரும் தேன் வண்டின் ரீங்காரம் போன்ற குரலில் சிவகாமி பின்வரும் திருத் தாண்டகத்தைப் பாடிக்கொண்டு, அதன் பொருளுக்கேற்ப அங்கங்களின் சைகைகளினாலும் முகபாவத்தினாலும் அபிநயம் பிடித்தாள். பாடலில் ஒவ்வொரு வரியிலும், 'தோன்றும்' 'தோன்றும்' என்று வந்த போது, சிவகாமியின் பாதரசங்கள் 'ஜல்' 'ஜல்' என்று தாளத்துக்கிசைய ஒலித்தன.\n\"வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்\nவளர்சடைமேல் இளமதியும் தோன்றும் தோன்றும்\nகாதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்\nஇந்த தெய்வீகமான பாடலைப் பாடிக்கொண்டு சிவகாமி அதன் பொருளுக்கேற்ப அபிநயம் பிடித்தபோது, அங்கிருந்தவர்கள் எல்லாரும் தங்களை மறந்தார்கள். தாங்கள் இருக்குமிடத்தை மறந்தார்கள். அங்கு நடப்பது என்ன என்பதையும் மறந்தார்கள்.\nசற்று முன்னால் நாவுக்கரசரின் சீடர் பாடியபோது அவர்களுடைய செவிகளில் இனிய தமிழ்ச் சொற்கள் நின்றன. அவர்களுடைய கண்கள் நாவுக்கரசரை நோக்கின. அப்பாடலை அவர் அனுபவித்து உருகுவதைப் பார்த்து அவர்கள் மனமும் கசிந்தன.\nசிவகாமி அபிநயம் பிடித்தபோது அவர்களுடைய கண்கள் நாவுக்கரசரை நோக்கவில்லை. குமார சக்கரவர்த்தியையோ, ஆயனச் சிற்பியாரையோ அவர்கள் காணவில்லை. அந்த மடாலயத்தின் சுவர்களோ, தூண்களோ அவற்றில் அமைந்திருந்த சிற்பங்களோ, சித்திரங்களோ அவர்கள் கண்ணில் படவேயில்லை.\nஅவர்கள் கண்முன்னால் பாடி ஆடி அபிநயம் பிடித்துக் கொண்டிருந்த சிவகாமியைக்கூட அவர்கள் பார்க்கவில்லை பின் அவர்கள் யாரை அல்லது எதனைப் பார்த்தார்கள் பின் அவர்கள் யாரை அல்லது எதனைப் பார்த்தார்கள் சாக்ஷாத் சிவபெருமானையே தங்கள் கண் முன்னால் தத்ரூபமாக நேருக்கு நேரே பார்த்தார்கள் சாக்ஷாத் சிவபெருமானையே தங்கள் கண் முன்னால் தத்ரூபமாக நேருக்கு நேரே பார்த்தார்கள் அவருடைய கரத்தில் தோன்றிய திரிசூலத்தையும், அவருடைய வளர் சடைமேல் இயங்கும் இளமதியையும் பார்த்தார்கள். அவருடைய திருமிடற்றில் கொன்றை மாலையைப் பார்த்தார்கள். காதிலே வெண் குழையைப் பார்த்தார்கள். திருநீறு பொழியும் திருமேனி முழுவதையும் பார்த்தார்கள். அந்தத் தெய்வீகக் காட்சியில் தங்களை மறந்தார்கள்; இந்தப் பூவுலகையே மறந்தார்கள். பூவுலகிலிருந்து கைலாசத்துக்கு அவர்கள் போய்விட்டார்கள். பாட்டும் அபிநயமும் நின்ற சிறிது நேரத்துக்குப் பிறகு தான் எல்லாரும் சுய உணர்வு பெற்றுப் பூவுலகிற்கு வந்து சேர்ந்தார்கள்.\nசுய உணர்ச்சி தோன்றியதும், அனைவருடைய கவனமும் இயல்பாக நாவுக்கரசர்பால் சென்றது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகி வெண்ணீறு அணிந்த திருமேனியை நனைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். இத்தனை நேரமும் பாவனைக் கண்ணால் தாங்கள் தரிசித்துக் கொண்டிருந்த சிவபெருமான் இந்த மகான்தானோ என்று அவர்களில் பலர் எண்ணினார்கள்.\nசற்று நேரத்துக்கெல்லாம் நாவுக்கரசர் தழுதழுத்த குரலில், 'ஆயனரே திருக்கயிலையில் வீற்றிருக்கும் எம்பெருமானைத் தங்கள் குமாரி எங்கள் முன்னால் பிரத்தியட்சமாகத் தோன்றச் செய்துவிட்டாள் திருக்கயிலையில் வீற்றிருக்கும் எம்பெருமானைத் தங்கள் குமாரி எங்கள் முன்னால் பிரத்தியட்சமாகத் தோன்றச் செய்துவிட்டாள்\nஆயனரும் கண்களில் ஆனந்தக் காண்ணீர் ததும்ப, \"எல்லாம் தங்கள் ஆசீர்வாதந்தான், சுவாமி\" என்று கூறி சிவகாமியைப் பார்த்து, \"இன்னும் ஒரு பாட்டுக்கு அபிநயம் பிடிக்கிறாயா, அம்மா\" என்று கூறி சிவகாமியைப் பார்த்து, \"இன்னும் ஒரு பாட்டுக்கு அபிநயம் பிடிக்கிறாயா, அம்மா இது அகத்துறைப் பாடலாக இருக்கட்டுமே இது அகத்துறைப் பாடலாக இருக்கட்டுமே\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 1.35. இரண்டாவது அரங்கேற்றம், ஆயனர், நாவுக்கரசர், சிவகாமியின், அவருடைய, சிவகாமி, அபிநயம், சுவாமி, பார்த்தார்கள், அவர், என்றார், தோன்றும், தங்கள், முன்னால், அரங்கேற்றம், குமார, தங்களுடைய, சக்கரவர்த்தி, தாங்கள், கொண்டு, அடிகளே, நான், அப்போது, மறந்தார்கள், கூறி, ஆயனரே, வண்ணம், பெருமான், என்ன, கொன்றை, போது, இடம், கூறினார், சிறிது, இரண்டாவது, அவன், இன்னும், நாட்டிலும், வேண்டும், அவள், இவ்விதம், அந்த, எங்கள், மாமல்லர், வந்து, ஆதாரம், பாடல், பிறகு, குரலில், அவர்களுடைய, கண்கள், எல்லாரும், கண்களில், தமிழ், பார்த்து, சக்கரவர்த்தியின், சீடர், திருமேனி, உடனே, எனக்கும், பார்த்தார், எப்போது, சற்று, சபதம், நடனத்தைப், ஆகிய, ஜனங்கள், நடனக், கேட்டதும், மகிமை, பார்க்க, திருமேற்றளி, பற்றிய, மீது, பெருமானின், பயிலும், நின்ற, பிடிக்க, மூன்று, பிடித்தாள், கேட்டார், திருமேற்றளியில், இருப்பதால், மலர்களும், பாடலில், எல்லாக், கலைகளுக்கும், குனிந்த, சிறந்த, காட்டிலும், திரும்பி, ��ெரியாது, என்றும், தான், பாடலுக்கு, தங்களை, நாவுக்கரசரை, கொண்டிருந்த, பிடித்தபோது, பொருளுக்கேற்ப, பிடித்துக், பாடிக்கொண்டு, சிறு, பிள்ளை, அங்கிருந்த, வரையில், நிலை, நேரே, நேருக்கு, பாடலைப், இனிய, கண்ணால், பெற்று, முதலில், நல்லது, புத்த, ஆயனருக்குச், உண்டு, யுத்தம், இப்போது, சிற்பியாரே, பின்வரும், கேட்க, பார்த்துக், கொண்டும், வார்த்தை, விளங்கிய, பேறு, பாடி, அவரிடம், மடாலயத்தில், வருகிறார், ஒருவேளை, அவருடன், எண்ணம், உண்டாயிற்று, நாவுக்கரசரின், திரும்பிப், ஆயனச், தத்தம், வாகீசப், வெண், கோயில், பிரகாரங்களில், ருத்திராட்ச, வெண்ணீறு, அமரர், கல்கியின், அந்தத், அமைந்திருந்த, சென்ற, ஒவ்வொரு, ஊர்க், பாடினார், உள்ள, யாத்திரை, சென்று, அடுத்த, கணத்தில், நானும், வருகிறேன், மிக்க, குமாரி, இந்தப், நின்று, பார்த்த, உங்கள், வேண்டுமென்று, கூறியபோது, முகத்திலும், பெருமிதம், நடுவில், நடனக்கலைதான், கேள்விப்பட்டேன், அன்று, மட்டும், ஆயனரும், வரும், பெண், நோக்கின, பின்னால், ஆயனருக்குப், இங்கு, நேரம், முகத்தில், பின், அபசாரம், திருப், கண்டதும், வரவேணும், எழுந்து, நடந்து, ஆனந்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/nitish-kumar-takes-office---tejaswi-boycotted-the-cerem", "date_download": "2021-08-02T09:03:56Z", "digest": "sha1:NWTMPADHRFTDPKA5WIJNXVESWHTHFDKS", "length": 8002, "nlines": 53, "source_domain": "www.kathirolinews.com", "title": "பதவியேற்றார் நிதிஷ்குமார் ..! - விழாவை புறக்‍கணித்தார் தேஜஸ்வி - KOLNews", "raw_content": "\nஇதுக்கும் அடிக்கலாம் ஒரு சல்யூட்.. - நெஞ்சில் ஈரத்துடன் டிஜிபி சைலேந்திரபாபு .\n - மத்திய அரசு சொல்வது என்ன ..\nமுதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு .. - டாக்டர்கள் ரவீந்திரநாத் முக்கிய கோரிக்கை\nஎய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை.. - தமிழக அரசு தரப்பில் முக்கிய தகவல்\n85 சதவீத கல்விக்கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்.. தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\n - தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு\nகொரோனா விஷயத்தில் மெத்தனம் வேண்டாம் .. - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு\n - விழாவை புறக்‍கணித்தார் தேஜஸ்வி\nகடந்த வாரம் நடைபெற்றுமுடிந்த பீகார் மாநில சட்டசபைக்கான தேர்தல் வாக்குகள் கடந்த 10-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் முதல்வர்.நிதிஷ்குமார் தலைமையிலான, பா.ஜ.க. கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம்-காங்கிரஸ் மெகா கூட்டணியை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, தனிப்பெரும்பான்மையுடன் நிதிஷ்குமார் அரசு, ஆட்சியை தக்க வைத்தது.\nஅதையடுத்து, இன்று பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராக 7-வது முறையாக பதவியேற்ற்று கொண்டார். குறிப்பாக 4காவது முறையாக தொடர்ந்து அவர் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு, பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த,தர்கீஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர், துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் புறக்கணித்தார். , இந்த தேர்தல் முடிவுகளில் தங்கள் கட்சி வேட்பாளர்களின் வெற்றி சூழ்ச்சியால் பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பிவரும் நிலையில், அவரது புறக்கணிப்பு புரிந்துகொள்ளக்கூடியதே என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.\nஇதுக்கும் அடிக்கலாம் ஒரு சல்யூட்.. - நெஞ்சில் ஈரத்துடன் டிஜிபி சைலேந்திரபாபு .\n - மத்திய அரசு சொல்வது என்ன ..\nமுதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு .. - டாக்டர்கள் ரவீந்திரநாத் முக்கிய கோரிக்கை\nஎய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை.. - தமிழக அரசு தரப்பில் முக்கிய தகவல்\n85 சதவீத கல்விக்கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்.. தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\n - தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு\nகொரோனா விஷயத்தில் மெத்தனம் வேண்டாம் .. - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு\n​இதுக்கும் அடிக்கலாம் ஒரு சல்யூட்.. - நெஞ்சில் ஈரத்துடன் டிஜிபி சைலேந்திரபாபு .\n - மத்திய அரசு சொல்வது என்ன ..\n​முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு .. - டாக்டர்கள் ரவீந்திரநாத் முக்கிய கோரிக்கை\n​எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை.. - தமிழக அரசு தரப்பில் முக்கிய தகவல்\n��� 85 சதவீத கல்விக்கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்.. தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/https-wwwsekarreporter-wordpress-com-2019-12-22-home-india-india-nirbhayas-mother-welcomes-supreme-court-decision-to-reject-review-plea-the-supreme-court-wednesday-dismissed-the-review-petition-file/", "date_download": "2021-08-02T09:17:16Z", "digest": "sha1:N2YP6D4GRBFTTHJKXLWBDGN6OAURQXTR", "length": 7240, "nlines": 69, "source_domain": "www.sekarreporter.com", "title": "https://wwwsekarreporter.wordpress.com/2019/12/22/home-india-india-nirbhayas-mother-welcomes-supreme-court-decision-to-reject-review-plea-the-supreme-court-wednesday-dismissed-the-review-petition-filed-by-one-of-the-four-men-co/ – SEKAR REPORTER", "raw_content": "\nகொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/lockdown-extdened-to-one-more-week/cid3750394.htm", "date_download": "2021-08-02T09:56:33Z", "digest": "sha1:NEHZN7GACWFGYYGTABVAKR2J36SPBP5V", "length": 4391, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு....பரபர அப", "raw_content": "\nதமிழகத்தில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு....பரபர அப்டேட்....\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2 மாதங்களாகவே வாரங்களின் அடிப்படையில் ஊரடங்கு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. ஜூலை 12 தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வந்ததால், அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக அரசு பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ.பாஸ் தேவையில்லை போன்ற முக்கிய சலுகைகள் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மீண்டும் ஒரு வாரம், அதாவது ஜுலை 19 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், கடந்த வாரம் எதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டதோ அது அனைத்தும் அப்படியே நீடிக்கிறது. அதேநேரம் கடந்த வாரம் உணவகம், பேக்கரி, தேநீர் கடைகள் இரவு 8 மணி வரை திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது தற்போது ஒரு மணி நேரம் சேர்த்து இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் என்கிற ஒரு சலுகை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/the-story-of-batsha-movie-actor-sasi/cid3907169.htm", "date_download": "2021-08-02T10:11:33Z", "digest": "sha1:SEYXPG3CXN6FHQCB34DYRU4VKEH2RBAR", "length": 8123, "nlines": 67, "source_domain": "cinereporters.com", "title": "சொல்லுங்க! பாம்பாலே என்ன பன்னிட்டு இருந்தீங்க!...நடிகர் வாழ்", "raw_content": "\n பாம்பாலே என்ன பன்னிட்டு இருந்தீங்க...நடிகர் வாழ்வில் இவ்வளவு சோகமா...நடிகர் வாழ்வில் இவ்வளவு சோகமா\nபாட்சா படத்தில் ரஜினி தான் ஹீரோ. அது நமக்கு தெரியும். ஆனா அதுல நடிச்ச எல்லோருமே ஹீரோ தான்னு தெரியுமா விஜயகுமார், ரகுவரன், ஆனந்தராஜ், தேவன், சரண்ராஜ் எல்லோருமே ஹீரோக்கள். இவ்வளவு ஏன் இந்த ஜனகராஜ் கூட 'கல்யாண காலம்' படத்தில் ஹீரோ தான்.இவங்க கூட வேற ஹீரோவும் இருந்தாரு.\nபாட்சா மூலமா தென்னிந்தியா முழுக்க அறியப்பட்ட ரஜினி தம்பியா நடிச்ச கன்னட ஹீரோ சசிகுமார். அவரின் கதை நம்மை கலங்க வைக்கும்...\nசசிகுமார் ராஜ்குமார் மகனோடு 89ல் அறிமுகமானாலும் கன்னட பருவராகம் ரவிச்சந்திரனோட 'யுத்தகாண்டா' படத்தால் அறியப்பட்டார். யுத்தகாண்டா நம்ம டி.ஆரோட 'ஒரு தாயின் சபதம்' படத்தோட கன்னட ரீமேக். அதில் பப்லு நடிச்ச வில்லன் ரோலில் சசிகுமார் நடித்தார். தொடர்ந்து ஹிந்தி Chaalbaaz கன்னட ரீமேக்கில் அம்பரீஷோடு நடிக்க பாப்புலரானார் சசி. தொடர்ந்து மாலாஸ்ரீயோடு நாயகனாக நடிக்க கதாநாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து தாரா, ��ுதாராணி, சௌந்தர்யாவோடு நடித்து பல ஹிட்கள் கொடுத்தார்.\n1991ல் தமிழில் எஸ்.வி.சேகர் நடித்த 'வீட்ல எலி வெளியில புலி' படத்தில் ஒரு பாடலுக்கு ப்ரேக் டான்ஸ் ஆடிவிட்டு செல்வார். 1995ல் பாட்சா என்கிற மெகா ஹிட். அதில் ரஜினியின் தம்பியாக நடித்து தென்னிந்தியா முழுக்க பிரபலமானார்.\n90களின் மத்தியில் சிவானந்தா சர்க்கிள் பகுதியில் நடந்த கார் விபத்தில் அவர் முகத்தில் பலமாக அடிபட்டது. அதோடு அவர் முகம் பாழாகி போனது. பலகட்ட சர்ஜரிகளுக்கு பிறகு அவர் புதிய முகத்தை அவரே காண பயப்பட்டார். வெளியே வரவே பயந்து வீட்டினுள்ளேயே முடங்கினார். நண்பர்கள் யாருமே அவரை பார்க்க வர வில்லை. கடைசியாக ஒரு தயாரிப்பாளர் அவரை நடிக்க வைத்தார். ஆனால் பூஜை அன்று ஷூட்டிங்கிலேயே அவரது புதிய முகத்தில் எக்ஸ்பிரஷன்கள் வரவில்லை. பலரும் இயக்குனரை சமாதானப்படுத்த அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படங்களில் சிறிய வாய்ப்புகளே வந்தன.\nஉடனே திரையுலகில் சரிவராது என அரசியலுக்கு பார்வையை திருப்பினார் சசி. 2004ல் ஜனதா தள் கட்சியில் சேர்ந்தார். 2006ல் காங்கிரஸில் சேர்ந்து சித்ரதுர்கா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இப்போதும் அரசியலில் முழுநேரமும் நின்று கலக்கிக்கொண்டிருக்கிறார். மனைவி சரஸ்வதி. இரண்டு குழந்தைகள். மகன் அக்ஷித் ஹீரோவாக திரையுலகில் நுழைந்திருக்கிறார். இவரது முதல் படம் 'சீதாயனா' ஆகஸ்ட் 26ல் ரிலீசாக இருக்கிறது.\nபாட்சா படத்தில் ரஜினியை 'பாம்பேல என்ன பண்ணிட்டிருந்தீங்க' என கேட்டது போல இவர் வாழ்வும் பாட்சா படம் மாதிரியே விபத்துக்கு முன்பு பாட்சாவாகவும், விபத்துக்குப்பின் மாணிக்கமாகவும் இரண்டாக மாறியது துரதிர்ஷ்டம்.\n- முகநூலில் இருந்து செல்வன் அன்பு\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/5022-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2021-08-02T08:40:11Z", "digest": "sha1:HHF35BXWT3FFXFNZNARTOH2TZQJS56K4", "length": 22734, "nlines": 196, "source_domain": "dailytamilnews.in", "title": "புதிய மின்மாற்றி தொடங்கி வைப்பு: – Daily Tamil News", "raw_content": "\nபுதிய மின்மாற்றி தொடங்கி வைப்பு:\n���ுதிய மின்மாற்றி தொடங்கி வைப்பு:\nவெளிச்சநத்தம் மற்றும் ஆலாத்தூர் கிராமங்களில் புதிய\nமதுரை மாவட்டம் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெளிச்சநத்தம், மற்றும் ஆலாத்தூர் கிராமங்களில் புதிய மின்மாற்றியின் சேவை மற்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ,புதூரில் மின்மயானம் கட்டுவதற்கான பூமிபூஜை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்\nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்; சார்பில் ஏறத்தாழ 1 கோடி ரூபாய் செலவில் புதூரில் மின்மயானம் அமைப்பதற்கு பூமிபூஜை போடப்பட்டுள்ளது. மின்மயானம் அமைப்பது இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிக முக்கியமான தேவையாகும். இதுபோன்று கொரோனா காலத்தில் தொழில் வர்த்தக சங்கம் மூலம் அமெரிக்கன் கல்லூரியில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சையளிக்க 100 படுக்கை வசதிகள் கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைத்து செயல்பட்டு வருகிறது. அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய உபகரணங்களை நிறுவ தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்; ஏற்பாடு செய்து சிறப்பு சேர்த்தது.\nகொரோனா பெருந்தொற்றானது முதல், இரண்டு அலைகளைக் கடந்துள்ளது. மூன்றாவது அலை வருவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லா வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் உற்பத்தியைப் பொறுத்துவரை இன்றைக்கு போதுமான அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரேனா நோய் இரண்டாவது அலையின் போது அரசு மருத்துவமனையில் கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. கொரோனா மூன்றாவது அலை பரவல் எப்போது வந்தாலும் ,அதை எதிர்கொள்வதற்கு தயாராக ஏற்பாடுகள் செய்துள்ளனர்.\nமாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தவுடன் மாநகர, புறநகர் பகுதி மக்களுக்கு உடனுக்குடன் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.\nவணிகவரித்துறையில் போலி பில் தயாரிப்பவர்களை சர்வே செய்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மண்டலத்தில் இருக்கக்கூடிய அனைத்து வணிகப் பெருமக்களிடமும் கருத்து கேட்க ஏற்பாடு செய்து அதில் வந்து கலந்து கொண்ட அனைத்து வணிகப் பெருமக்களும் நேர்மையாக தொழில் செய்வதற்கு தமிழ்நாடு அரசு முழு உதவிகரமாக இருக்கும். அதேபோன்று, சிறு வணிகர்கள், நடுத்தர வணிகர் பெருமக்கள் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர்களாக இணைவதற்கு சந்தாத் தொகை ரூ.500-ஐ மூன்று மாத காலத்திற்கு செலுத்தத் தேவையில்லை. வணிகர் நல வாரியம் விரைவில் தொடங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , மக்கள் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு தொடங்குவதற்கு நடவடிக்கை எடுப்பார். வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை சோதனை சாவடிகளில் ஆராய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். திருநெல்வேலியில் 8 1.2 கோடி ரூபாய் செலவில் இழப்பீடு செய்யப்பட்டுள்ள தொழில் நிறுவனத்தை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,\nமற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமதுரை அருகே நாய்கள் விஷம் வைத்து கொலை:\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nதிருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:\nமதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.\nஇந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்\nஅனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.\nமேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nசோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:\nசோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:\nதமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பர��ாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.\nசிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.\nவணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபார்வையற்றோர்களுக்கு அரிசி வழங்கும் விழ ா:\nபாரதி யுவகேந்திரா சார்பில் பார்வையற்றோர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி:\nமதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில், பார்வையற்றோருக்கு\nமாதா மாதம் வழங்கப்படும், ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி மற்றும் போர்வை வழங்கும் நிகழ்ச்சி, மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதி ஹோட்டல் பிரேம் நிவாஸ் அரங்கில் நடந்தது. மதுரையின் அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, ரோட்டரி உதவி ஆளுநர் வி. கார்மேகம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், மதுரை ஊரக வளர்ச்சி துறை முன்னாள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரின் முன்னாள் நேர்முக உதவியாளர் சுப்பு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை முன்னிலை வகித்து, பார்வையற்றோருக்கு அரிசி மற்றும் போர்வை வழங்கினர். நிகழ்ச்சியில், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரபு கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.\nதிட்டம் இரண்டு: திரை வி��ர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nசென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும்.. பட்டையைக் கிளப்ப தயாராகும் தல ரசிகர்கள்\nதனித்தீவில் மிரட்டி நிர்வாண ஷூட்டிங்\nஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா\nஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஓலா வின் எலக்ட்ரிக் பைக்\nஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]\nசென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]\nசெல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்\nகுகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஆடிக் கிருத்திகை, ஆடிப் பெருக்கு ‘ஹிந்து’ பண்டிகைகள்: தமிழகம் முழுதும் முக்கியக் கோயில்களில் தரிசனத்துக்கு தடை\nபக்தனுக்காக பகவான் வளர்த்த கேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=The_Sri_Lanka_Monitor_1999.04_(135)&action=history", "date_download": "2021-08-02T10:18:46Z", "digest": "sha1:7OODADLOCCLF47TQ6ZAGQBM4OBXJGGZA", "length": 2756, "nlines": 32, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"The Sri Lanka Monitor 1999.04 (135)\" - நூலகம்", "raw_content": "\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்த��ப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 05:41, 18 ஆகத்து 2017‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (483 எண்ணுன்மிகள்) (+483)‎ . . (\"{{இதழ்| நூலக எண்=38744| வெளி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aishwarya-rajesh-spills-the-bean-on-her-first-time-role-in-bhoomika-083820.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T10:07:45Z", "digest": "sha1:DC6UWROGAZ73G4MXRK6KR2273USKLH5W", "length": 13157, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல் முறையாக ஹாரர், த்ரில்லர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh spills the bean on her first time role in 'Bhoomika' - Tamil Filmibeat", "raw_content": "\nFinance அம்பானி ஷாப்பிங் லிஸ்டில் புது நிறுவனம்.. டாடா உடன் போட்டி போடும் மாஸ்டர் பிளான்..\nNews ஒரு டீச்சர் செய்ற வேலையா இது.. கிச்சனுக்குள் ஓடிச்சென்று.. வாயடைத்து போன வாழப்பாடி..\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nSports அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய \"ரெக்கார்டு\".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல் முறையாக ஹாரர், த்ரில்லர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை : கோலிவுட்டின் பிஸியான ஹீரோயின் என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். தற்போது 6 மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், த்ரில்லர், ஹாரர் படமான பூமிகாவில் மிக முக்கியமான கேரக்டரில் தான் நடிப்பதாக தெரிவித்திருந்தார். இயற்கை எவ்வாறு மனித குலத்திற்கு எதிராக திரும்புகிறது என்பதை சொல்லும் படம்.\nரத்திந்திரன் ஆர் பிரசாத் இயக்கும் இந்த படத்தை பேசன் ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படம் நெட்��பிளிக்சில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.\nஇயக்குனர் பா ரஞ்சித் உடன் கூட்டணி அமைக்கும் சூர்யா\nஆனால் ஓடிடி தளங்களை விட சினிமா தியேட்டரிலேயே தனது படங்களை பார்க்க விரும்புவதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி இருந்தார். இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து க/பெ ரணசிங்கம் படத்தில் நடித்திருந்தார்.\nஇந்த படமும் ஓடிடி.,யில் தான் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பு மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது. அதன் பிறகு ஐஸ்வர்யா நடித்த படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.\nAishwarya Rajesh மக்களிடம் வேண்டுகோள் | நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்\nபூமிகா படத்துடன் துக் ஜெகதீஷ், நானி, டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை ஆகிய படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது திரைப்படம் \\\"பூமிகா\\\" நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது\nதொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்கள்... வெரைட்டி காண்பிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநீச்சல் உடையில் தெறிக்கவிடும் பூமிகா\nஹூலா ஹூப் வளையத்தை இடுப்பில் சுற்றி சர்க்கஸ் டான்ஸ் ஆடும் பிரபல தமிழ் நடிகை\nபடிக்கட்டில் பவ்யமாக போஸ் கொடுக்கும் பூமிகா.. புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் \nஅய்யோடா... அந்த அழகு தெய்வத்தின் மகளா இந்த பூமிகா\nபல ஆண்டுகளுக்குப் பின் தாயான நடிகை பூமிகா... ஆண் குழந்தை பெற்றார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிரைவில் முடிய போகுதா பாண்டியன் ஸ்டோர்ஸ்...பிரபல நடிகை கொடுத்த சூப்பர் அப்டேட்\nதுணிந்த பின்’ ஒரு அற்புதமான அனுபவம்… ‘நவரசா‘ படம் குறித்து அதர்வாவின் ருசிகரத்தகவல் \nஇங்கே சார்பட்டா கலக்கியது போல.. அங்கே சர்காரு வாரி பாட்டா கலக்குமா\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-rockers-replies-gnanavel-raja-044581.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T09:32:35Z", "digest": "sha1:MMU5YE4M63M2F67GPJYZBLMU6STBM54B", "length": 13088, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காலண்டர்ல குறிச்சிக்கோங்க ஞானவேல்ராஜா, இந்த நாள்.. தமிழ் ராக்கர்ஸ் தடாலடி பதில் சவால்! | Tamil Rockers replies to Gnanavel Raja - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nNews கொரோனாவுக்கு நன்றி சொல்லி.. ஆடியிலும் கொண்டாடித் தீர்க்கும் மாழ்பழ ரசிகர்கள்\nSports அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய \"ரெக்கார்டு\".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nFinance e-RUPI: மக்கள் இனி காத்திருக்க தேவையில்லை.. 8 வங்கிகளுக்கு அனுமதி..\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலண்டர்ல குறிச்சிக்கோங்க ஞானவேல்ராஜா, இந்த நாள்.. தமிழ் ராக்கர்ஸ் தடாலடி பதில் சவால்\nசென்னை: உங்கள் கேலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பிப்ரவரி 9ம் தேதி உங்கள் நாள் அல்ல எங்களின் நாள் என தமிழ் ராக்கர்ஸ் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பதில் அளித்துள்ளனர்.\nஹரி இயக்கத்தில் சூர்யாநடித்துள்ள சிங்கம் 3 படம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தை 9ம் தேதி காலை 11 மணிக்கு ஃபேஸ்புக் லைவில் வெளியிடுவோம் என்று படங்களை ரிலீஸான உடன் இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.\nஇதை கேட்ட படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடுப்பாகி எங்கள் படத்தை லைவாக வெளியிட்டால் தமிழ் ராக்கர்ஸை சிறையில் தள்ளாமல் விட மாட்டேன் என சவால் விட்டுள்ளார்.\nஇதையடுத்து தமிழ் ராக்கர்ஸ் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\nஞானவேல்ராஜா நல்ல உரை சார். உங்கள் கேலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பிப்ரவரி 9ம் தேதி உங்கள் நாள் அல்ல எங்களின் நாள் என தெரிவித்துள்ளனர்.\nமுன்னனி தயாரிப்பாளரின் பிறந்தநாள்.. ஆர்யாவின் வாய்ஸ் ஓவரில் வைரலாகும் வீடியோ\nசூது கவ்வும் டைரக்டரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ரெடி...ஹீரோ இவர் தான்\n வரியை ஏய்க்கவும் இல்ல மேய்க்கவும் இல்ல.. சேனல்கள் மீது பாய்ந்த தயாரிப்பாளர் வொய்ஃப்\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்.. எழும்பூர் நீதிமன்றம் அதிரடி\nகமல் vs ��ானவேல்ராஜா.. கோலிவுட்டில் நடக்கும் புதிய சண்டை.. என்ன பிரச்சனை\nஅந்த பத்து கோடி என்னாச்சு... உத்தமவில்லன் கமலுக்கு எதிராக ஞானவேல் ராஜா மல்லுக்கட்டு\nதமிழ் ஹீரோக்களை விளாசிய ஞானவேல்ராஜா: டோலிவுட்டுக்கு போயுடுவேன்னு எச்சரிக்கை\nதமிழ் சினிமா நடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேச்சு\nதானா சேர்ந்த கூட்டம் வெற்றி படமா... வெள்ளை அறிக்கை வெளியிடுவரா ஞானவேல் ராஜா\nஹிட்லரோட பட்லரா இருக்கக் கூட தகுதியில்லாதவர்கள் - ஞானவேல்ராஜாவை காய்ச்சிய டிஆர்\nதிரையுலகின் சூப்பர் ஸ்டாரை அவமதிப்பதா - ஞானவேல்ராஜாவுக்கு திரையுலகம் கண்டனம்\n\"சினிமா மாஃபியாக்களை ஒடுக்கத்தான் தேர்தலில் நிற்கிறேன்..\" - ஞானவேல்ராஜா சூளுரை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதலை நிறைய மல்லிகைப் பூ வச்சிக்கிட்டு எங்கப் போறாங்க குஷ்பு.. ஓஹோ மறுபடியும் சீரியல் என்ட்ரியா\nஅந்தகன் பட ரிலீஸ் எப்போ...படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்\nதிடீரென டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா....அக்கினேனி எங்கே போச்சு\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmeds.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-08-02T09:45:32Z", "digest": "sha1:KVAIRXK2SYCMWMIMAJXJOV7ETPHRRN65", "length": 6147, "nlines": 42, "source_domain": "tamilmeds.com", "title": "வெற்றிலை | தமிழ் மருந்துகள்", "raw_content": "\nகாது மந்தம் காது மந்தம் என்பது எபொழுதும் காதில் இரைச்சல் கேட்பது மற்றும் கேட்கும் திறன் குறைவதே ஆகும். காதின் உட்பகுதியில் உள்ள நரம்பு மண்டலம் (Auditory[…]\nஒற்றை தலைவலி குணமாக இயற்கையான தமிழ் மருத்துவ முறைகள்\nஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கம் மட்டும் வலி ஏற்படுவதாகும். பொதுவாக தலைவலி என்பது தலையின் முழுப்பகுதியும் வலி ஏற்படும். ஆனால் ஒற்றைத் தலைவலி சற்றே[…]\nஇருமல் சளி குணமாக எளிய வீட்டு வைத்திய முறைகள்\nHerbal Team தொண்டை, நுரையீரல், நெஞ்சு, மூக்கு, வாய்\nஇருமல் என்பது நுரையீரலை பாதுகாக்க நிகழும் ஒரு இயற்கையான நிகழ்வு. நுரையீரல் பாதையில் கிருமிகள் மற்றும் புகையினால் ஏற்படும் அரிப்பினை போக்குவதற்காக இருமல் உண்டாகிறது. இருமல் மூலம்[…]\nகிராமமானாலும் நகரமானாலும் பூச்சிகள் இல்லாத வீடே இன்று இல்லை. ஏதாவது ஒரு பூச்சியாவது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். நாம் எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் இந்த பூச்சிகளின் தொல்லை[…]\n“தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்ற பழமொழி தலைவலியின் கொடுமையை மிக எளிதாக உணர்த்துகிறது. ஐந்தே நிமிடத்தில் வீட்டில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை கொண்டு[…]\nசளி என்றாலே பெரும்பாலானவர்களுக்கு ஒரு அருவருப்பான விஷயம். தமக்கு சளி பிடித்தால் கூட அதை சிந்துவதற்கு வெட்கப்பட்டு சளியை சிந்தாமல் மூக்கை உறிஞ்சி கொண்டே இருப்பர். தம்[…]\nஅஜீரணம் என்பது அனைத்து வயதினருக்கும் வரும் ஓர் வயிற்றுத் தொல்லை.நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும் உணவை[…]\nஉடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடைய வீட்டு மருந்துகள்\nஉடல் கொழுப்பு கரைய எளிய இயற்கையான வீட்டு மருந்துகள்\nபல் வலி உடனே போக இயற்கையான வீட்டு மருத்துவ முறைகள்\nபொடுகுத் தொல்லை நீங்க எளிய இயற்கையான வீட்டு மருந்துகள்\nபேன் தொல்லை நீங்க இயற்கையான தமிழ் மருத்துவ முறைகள்\nஅரிசி ஆப்பிள் இஞ்சி உடல் உப்பு உலர் திராட்சை எண்ணெய் எலுமிச்சை கடுக்காய் கருவேப்பிலை கறிவேப்பிலை கற்றாளை கிராம்பு கொத்தமல்லி சருமம் சர்க்கரை சீரகம் சுக்கு சுண்ணாம்பு சோம்பு தக்காளி தண்ணீர் தயிர் துளசி தூதுவளை தேங்காய் எண்ணெய் தேன் தோல் நல்லெண்ணெய் நெல்லிக்காய் பசலைக் கீரை பாகற்காய் பால் புதினா பூண்டு மஞ்சள் மிளகு வயிறு வாழைப்பழம் வெங்காயம் வெண்ணெய் வெந்தயம் வெற்றிலை வெள்ளரிக்காய் வேப்பிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/videos/145-news/articles/nilatharan", "date_download": "2021-08-02T10:01:24Z", "digest": "sha1:D3SDKBTCWBQAUAMOZ26ILK445HN3WRTD", "length": 4221, "nlines": 114, "source_domain": "www.ndpfront.com", "title": "நிலாதரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇலவு காக்கும், கிளிகள்..... (சிறுகதை)\t Hits: 3455\nஇது..... அவன் சொன்ன கதை...... (சிறுகதை)\t Hits: 3531\nகாணாமல் போன அம்மா.... Hits: 3466\nஊமைக் காதல்...... (சிறு கதை)\t Hits: 3429\nநாங்கள் எல்லோரும் மனிதர்கள்...... (சிறு கதை)\t Hits: 3356\nபோர்க்களங்களில் இருந்து திரும்பாதவர்களின் தாய்மார்களுக்காக...\t Hits: 3510\nமனிதப்பண்டங்கள்........... சிறுகதை Hits: 3628\nநானும்... எனக்கும், நீயும்... உனக்கும் (சிறுகதை)\t Hits: 3685\nஓ….என் யாழ்ப்பாணமே…... (சிறுகதை)\t Hits: 3777\nவிஷ முட்கள்….....(சிறுகதை)\t Hits: 3593\nதீர்க்க தரிசனங்கள்…….(சிறுகதை)\t Hits: 3837\nகானல் நீர் (சிறுகதை) Hits: 3689\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/49508/", "date_download": "2021-08-02T08:49:24Z", "digest": "sha1:2WA5DG56C6BDWEVLBAFUWAFNTFQP56RD", "length": 8224, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "பிரதேசசபை, மாகாணசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபிரதேசசபை, மாகாணசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை\n(படுவான் பாலகன்) அரசியலுக்காக உதவிகளை வழங்கவில்லை, தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்காகவே உதவிகளை வழங்கி வருகின்றோம். பிரதேசசபைத் தேர்தலிலோ, கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலோ போட்டியிடப்போவதுமில்லை. என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.\nமண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட அதிபர்களுக்கு புதன்கிழமை(14) காரியாலய பை வழங்கி வைக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.\nஅரசியலில் செல்வாக்கு பெறுவதற்காக இவ்வாறான உதவிகளை வழங்கி வருகின்றோம் என சிலர் விமர்சிக்கலாம். அந்த நோக்கத்திற்காக இவ்வாறான உதவிகளை நாம் வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கல்வியினை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினை உருவாக்கி அதன்மூலமாக மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றோம். அத்தோடு வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வருகின்றோம். வரவிருக்கின்ற பிரதேசசபைத் தேர்தலிலோ, கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலோ போட்டியிடப்போவதுமில்லை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கல்விக்காக எவ்வாறான உதவிகளை வழங்கமுடியுமோ அவ்வாhறன உதவிகளை வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.\nஇராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் குறித்த தினத்தில் முனைக்காடு பாலர் பாடாசாலைக்கு மின்னிணைப்பும், முனைக்காடு சாரதா வித்தியாலய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும், நாற்பதுவட்டையில் விசேடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மேலதிக வகுப்பில் கற்பிக்கின்ற மூன்று ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவும், அதிபர்களுக்கு காரியாலய பையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார், பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை – யோகேஸ்வரன் பா.உ\nNext articleஅரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா\nசாய்ந்தமருது றியலுள் ஜன்னாவுக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின அதிரடி தகவல்.\nமருதமுனையின் மூத்த கல்வி ஆளுமை ஓய்வு நிலை அதிபர் ஏ.எம்.ஏ.சமது அவர்கள் காலமானார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒரு மோசடி அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது\nஉயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நிந்தவூருக்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/11/blog-post_27.html", "date_download": "2021-08-02T10:06:31Z", "digest": "sha1:NR2F4QNHUBOKU25XW7YMPX2LZWMLBHPW", "length": 3120, "nlines": 33, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: நாடு தழுவிய வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி! நன்றி!!", "raw_content": "\nநாடு தழுவிய வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி\nJAC போராட்ட அறைகூவல்படி நாடு முழுவதும் 27.11.2014 அன்று வேலை நிறுத்த போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. நமது மாவட்டத்தில் உள்ள மொத்த ஊழியர்கள் 1251 (STR 20 உட்பட) வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றவர்கள் 774\nவிடுப்பு 210 பணி புரிந்தவர்கள் 266\nமாவட்டம் முழுவதும் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் மூடப்பட்டன. பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர்.\n15 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்திற்க்காக தயாரிப்பு பணியில் ஈடுபட்ட JAC தலைவர்கள், அனைத்து சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் சேலம் மாவட்ட JAC யின் வாழ்த்துக்கள்\nமகத்தான வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற அனைத்து வீரர்களுக்கும் சேலம் மாவட்ட JAC சார்பான வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/https-www-sekarreporter-com-seniority-issue-among-sis-madras-hc-upholds-states-decisiontamil-nadu-special-police-subordinate-service-is-proper-and-we-do-not-see-any-reason-to-interfere-with-the-same/", "date_download": "2021-08-02T08:36:58Z", "digest": "sha1:KL4SGKTLYPAYWU54XOO26QIZLUYQ3WSN", "length": 4777, "nlines": 56, "source_domain": "www.sekarreporter.com", "title": "https://www.sekarreporter.com/seniority-issue-among-sis-madras-hc-upholds-states-decisiontamil-nadu-special-police-subordinate-service-is-proper-and-we-do-not-see-any-reason-to-interfere-with-the-same-a-divisio/ – SEKAR REPORTER", "raw_content": "\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுவை அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுங்கள்: ஷில்பா ஷெட்டி வேண்டுகோள் #ShilpaShetty #RajKundra https://t.co/CAacYLRIn5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2916-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3.html", "date_download": "2021-08-02T10:08:15Z", "digest": "sha1:B2MIKGJGTIZNSPGCW2FLG7TBNAFAVU4L", "length": 16464, "nlines": 182, "source_domain": "dailytamilnews.in", "title": "செய்தி – Daily Tamil News", "raw_content": "\nவில்லாபுரம் பகுதியில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை இருப்பதாக கூறி வாங்கிய பணத்தை திருப்பித் தர மறுப்பதாக புகார் இருவர் மீது வழக்கு பதிவு:\nமதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா இவர் அதே பகுதியில் உள்ள சந்தியா மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரிடம் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை வாங்க முன்பணமாக 15 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர் இந்த நிலையில் 15 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு பத்திரம் பதிவு செய்து தராமலும் பணத்தை தராமல் இழுத்தடித்தனர் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 லட்ச ரூபாயைக் கொடுத்து நிலையில் மீதமுள்ள ஐந்து லட்ச ரூபாய் தர மறுத்து மோசடி செய்ததாக ஜெயசுதா கீரத்துரை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nமதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.\nமதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற��றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:\nமதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.\nஇந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்\nஅனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.\nமேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nசோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:\nசோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:\nதமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.\nசிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.\nவணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nசென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும்.. பட்டையைக் கிளப்ப தயாராகும் தல ரசிகர்கள்\nதனித்தீவில் மிரட்டி நிர்வாண ஷூட்டிங்\n15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை\nசில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை ஆட்டோ டிரைவர் கைது\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nஇந்தாண்டு தீபாவளி அன்று படத்தை திரையரங்கில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு… [...]\nஇந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் முதல் பிரதமர் முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை\nஇந்தியப் பிரதமர் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதன்முறை. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் முதல் பிரதமர் முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை முதலில் தினசரி தமிழ்… [...]\nவாட்டர் டேங்க் இடிந்து விழுந்த வீடியோ காட்சி\nஇந்தக் காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. வாட்டர் டேங்க் இடிந்து விழுந்த வீடியோ காட்சி முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாத காதலி\nஅவர் அங்குள்ள சுடுகாடு ஒன்றின் அருகே வி‌ஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாத காதலி மனமொடிந்து காதலன் தற்கொலை\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3998-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2021-08-02T09:52:30Z", "digest": "sha1:GR54W3PHREKTSG7QPAQUXVNMCMKEW3XW", "length": 22422, "nlines": 184, "source_domain": "dailytamilnews.in", "title": "மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா… – Daily Tamil News", "raw_content": "\nமாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா…\nமாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா…\nமதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர்க்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது என்பது இயற்கையான ஒன்று தான். அதற்கெல்லாம் அஞ்சுபவர் முதலமைச்சர் இல்லை.\nஇது போன்ற சம்பவங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கும் வந்திருக்கிறது. அதனை காவல்துறை பார்த்துக் கொள்ளும். கனிமொழியின் பார்வை என்பது நாங்கள் எதுவும் செய்யாதது போல் இருந்து கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் பல்வேறு திட்டங்களை மதுரை மாநகருக்கு கொண்டு வந்துள்ளோம். கனிமொழியின் பார்வை எப்படி உள்ளது என தெரியவில்லை. வைகை ஆற்றுப் பாலத்தை கடக்கும் பொழுது கனிமொழி ஹெலிகாப்டர் மூலமாக சென்றாரா இல்லையே தரைவழியாக தான் சென்றார் அப்பொழுது பல்வேறு திட்டங்களை அவர் பார்த்திருக்கலாமே எனவும் கூறினார். செல்லூர் ராஜூ இங்கே இருப்பதால் தான் 1300 கோடிக்கு முல்லைப்பெரியாறு அணை குடிநீர் திட்டம் வந்துள்ளது. கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்பது நியாயமான முறையிலும், தீர்க்கமான முறையிலும், தன்னிச்சையாக முதலமைச்சர் மட்டுமே எடுத்த முடிவு. இதில் அனைத்து விவசாயிகளும், பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாக்கப் படுகிறார்க���் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கூட கடன் வாங்கி இருப்பவர்களுக்கு கூட விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது என்பது சாதனை. அதில் சிபிஐ விசாரணை கோருவது சரியானது அல்ல. ஒரு மாநில அரசு வரம்பு மீறி கடன் வாங்க முடியாது. ஒரு துறையை பற்றி தெரியாத ஸ்டாலின் எப்படி துணைமுதல்வராக மேயராக இருந்தார் என தெரியவில்லை. மத்திய வழிகாட்டுதல் படி குறைவாகவே கடன் வாங்கியுள்ளோம். தமிழக அரசு கடனில் தத்தளிக்கவில்லை. ஒரு முதலீட்டுக்கு கடன் வாங்கத்தான் செய்ய முடியும். கிருபானந்த வாரியார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. சில அமைச்சர்களை தவிர சசிகலா குறித்தான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பது ஏன் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்ட பொழுது,\nகோபமாக இது அரசின் நிகழ்ச்சி. அரசு சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என்று சொன்னார். ஆனால் ஸ்டாலின் பற்றிய கேள்விக்கு மட்டும் தொடர்ந்து அமைச்சர் பதில் கூறி வந்தார். 234 தொகுதிகளில் வெற்றி என ஸ்டாலின் சவால் விடலாம் ஆனால் எங்களைத்தான் 234 தொகுதியிலும் மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது என்று தெரிவித்தார். அதிமுக அடுத்த முறையும் ஆட்சி அமைக்கும் என்பது கனவே என்று கனிமொழி கூறியதற்கு, நாங்கள் கனவு காணவில்லை. முதலமைச்சர் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்து கொடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்பதில் மாற்றமில்லை. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஐந்தாண்டுகள் மக்களுக்கு எந்தக்குறையும் நாங்கள் வைக்கவில்லை. எல்லோரும் மகிழ்வாக உள்ளனர். திட்டங்கள் மக்களை முறையாக சென்று சேர்ந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் கொடுப்பார்கள் என பேசினார்.\nமதுரையில் காங்கிரஸ் கட்சி பிரசாரம்\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nமதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.\nமதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:\nமதுரை மாட்டுத் ���ாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:\nமதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.\nஇந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்\nஅனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.\nமேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nசோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:\nசோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:\nதமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி ப��ுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.\nசிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.\nவணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nசென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும்.. பட்டையைக் கிளப்ப தயாராகும் தல ரசிகர்கள்\nதனித்தீவில் மிரட்டி நிர்வாண ஷூட்டிங்\nஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா\nஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஓலா வின் எலக்ட்ரிக் பைக்\nஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]\nசென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]\nசெல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்\nகுகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/571716-fishermen-strike-in-thengaipattinam.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-08-02T09:39:49Z", "digest": "sha1:BG44F2HKN76OWSLODS32THPYN73HCEZP", "length": 17432, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு மாற்றுப்பாதை கோரி மீனவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம் | Fishermen strike in Thengaipattinam - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 02 2021\nதேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு மாற்றுப்பாதை கோரி மீனவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்\nதேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு மாற்றுப்பாதை அமைத்துத் தரக்கோரி இரையுமன்துறையில் மீனவர்கள் இன்று குடும்பத்துடன் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.\nஇரையுமன்துறை மீனவ கிராமத்தில் உள்ள ஊராட்சி சாலை வழியாக தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் வசிப்பிடங்களிடையே அதிக அளவில் செல்வதால் மக்களுக்கு விபத்து ஏற்படுவதுடன், அப்பகுதியில் உள்ள வீடுகளும் அதிர்வினால் சேதமாகி வருகின்றன.\nஎனவே தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்ல தாமிரபரணி ஆற்றின் கரையோரம் புதிதாக மாற்றுப்பாதை அமைக்கவேண்டும். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் படகுகள் அடித்துச் செல்வதைத் தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.\nஇரையுமன்துறை மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவுகள் அமைகக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இரையுமன்துறை புனித லூசியாஸ் ஆலயம் முன்பு மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.\nஉண்ணாவிரதத்திற்கு பங்குத்தந்தை ரெஜீஸ்பாபு தலைமை வகித்தார். இதில் இரையுமன்துறையை சேர்ந்த 600க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.\nஉண்ணாவிரதம் இருந்த மீனவர்களிடம் வருவாய்த்துறையினர், மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் இரவிலும் அப்பகுதியிலே மீனவர்கள் படுத்தவாறு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். இன்று 2-வது நாளாக ��ண்ணாவிரதம் நீடித்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\nஇதைத்தொடர்ந்து இன்று அதிகாரிகள் 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதிலும் உடன்பாடு ஏற்படாததால் மீனவர்களின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. தங்களது கோரிக்ககைளை அரசு தரப்பில் ஏற்றகொண்டால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்.\nஇல்லையேல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.\nஓடிடியில் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல: அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து\nபட்டாசு வியாபாரிகளிடம் ரூ.4.63 கோடி மோசடி: மார்க்கெட்டிங் நிறுவன அதிபருக்கு ஜாமீன் மறுப்பு\nகல்லூரிக் கனவில் காத்திருக்கும் மாணவர்கள்: பைசா செலவில்லாமல் படிக்க வைக்கும் மாற்றம் அறக்கட்டளை- எப்படி விண்ணப்பிக்கலாம்\nவெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸுடன் வருவோர் ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைத்தால் மட்டுமே குமரி மாவட்டத்திற்குள் அனுமதி: ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் கெடுபிடியால் பயணிகள் அவதி\nதேங்காய்பட்டணம் துறைமுகம்மீனவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்மீனவர்கள்கன்னியாகுமரி செய்திகுமரி செய்திதேங்காய்பட்டணம்\nஓடிடியில் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல: அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து\nபட்டாசு வியாபாரிகளிடம் ரூ.4.63 கோடி மோசடி: மார்க்கெட்டிங் நிறுவன அதிபருக்கு ஜாமீன் மறுப்பு\nகல்லூரிக் கனவில் காத்திருக்கும் மாணவர்கள்: பைசா செலவில்லாமல் படிக்க வைக்கும் மாற்றம் அறக்கட்டளை-...\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டும் பிரசாந்த் கிஷோர்:...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகுரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nபுதுச்சேரியில் தொகுதி வாரியாக ரேஷன் அட்டை புதுப்பித்தல் மேளா; இடைத்தரகர்கள் மீது போலீஸ்...\nபிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தீர்ப்பு வரும் 4-ம் தேதிக்கு தள்ளிவைப்பு\nசட்டப்பேரவை நூற்றாண்டு விழா: சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nசட்டப்பேரவ��� நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்காது: ஜெயக்குமார்\nபுத்திக்கூர்மை, தந்திரத்தால் வென்ற குளச்சல் போர் வெற்றி தினம்: நினைவுத் தூணுக்கு ராணுவ...\nகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் நீங்கியது; 3 துறைமுகங்களில் இருந்து விசைப்படகுகள்...\nகாஷ்மீரில் உயிரிழந்த குமரி ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்\nசர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nகார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/porattam/issue-27/176-news/articles/guest/3404-2016-10-05-14-16-26", "date_download": "2021-08-02T08:01:35Z", "digest": "sha1:ETXLJVMRFVBFCVFTCUZYPKTDPHCXTZCY", "length": 54856, "nlines": 113, "source_domain": "www.ndpfront.com", "title": "வாழ்வின் பின்னோக்கிய பயணமிது - பெண் போராளியின் வாக்குமூலம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nவாழ்வின் பின்னோக்கிய பயணமிது - பெண் போராளியின் வாக்குமூலம்\nஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்ட முதல் பெண் போராளிகளில் ஒருவரின் வாக்குமூலம் இது. உண்மைக்கான தேடல் (புளக்ஸ்பொட்) இணையத்தில் பிரசுரமான இந்த வாக்குமூலம், இதனை எழுதிய சிவகாமியின் (புனை பெயர்) அனுமதியுடன் பிரசுரம் செய்யப்படுகின்றது.\nசிவகாமிக்கு தான் பிறந்த தன் குக்கிராமத்தைப் பற்றி நிறையவே பெருமை தான். இயற்கையானவளின் அற்புதப் படைத்தலின் கைவண்ணம் அந்தக் கிராமத்தில் நிறையவே உண்டு. அடிப்படை வசதிகள் மிக மிக குறைந்த ஓர் கிராமம் அது. மரங்கள், வயல்கள், காடுகள், தென்னம் தோப்புகள், தோட்டங்கள் ஆறுகள், சிறிய குளங்கள், கடல் என்று அந்தக் கிராமத்தை சுற்றி அண்டையில் காணப்படும் இயற்கை தந்த கொடை.\nஅதே போல் அங்கு வாழ்ந்த மக்களும் எந்தக் கள்ளம் கபடமுமின்றி தாமும் தம்பாடும் உண்டு என்று வாழ்ந்தார்கள். எந்த நவீன நாகரீக வாழ்க்கையும் தீண்டாத தூய்மையான இயற்கையாகவிருந்தது அக்கிராமம். கிராமத்தில் ஆரம்ப பாடசாலைகள் இரண்டும் உயர் வகுப்புக்குரிய பாடசாலை ஒன்றுமிருந்தது. மிக முக்கியமாக அங்கு ஆங்கில மொழியின் வாசனை சிறிதாக கூட இல்லையெனலாம். அப்படி இருந்த பாடசாலையில் தான் அம்மக்கள் தம் பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். பிள்ளைகளும் கள்ளமில்லா கல்வியையும் தம் மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டிய வாழ்க்கையையும் பின்பற்றி வாழ்ந்தார்கள். பாடசாலை செல்வது மாலைநேரங்களில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பெற்றோருக்கு உதவியாக தோட்டங்களிலும் வயல்களிலும் உதவியாக இருப்பது போன்ற வற்றில் ஈடுபட்டதால் வாழ்வின் போக்கையும் அதன் தாற்பரியங்களையும் உணர்ந்தவர்களாயிருந்தார்கள் அந்தப் பிள்ளைகள்.\nசிவகாமி மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தபடியால் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் தன் கிராமத்தில் அமைதியாக வறுமையின் சுவடுகளுடனே வாழ்ந்தாள். படிப்பும் ஓரளவு புரிந்தும் புரியாமலும் தானிருந்தது. பாடமாக்கி ஒப்புவித்தலுக்காக படிக்கவுமில்லை. ஏதோ படித்தாள் வாழ்வில் எந்த இலட்சியமுமில்லை. இளமையில் வறுமை என்பது கொடுமை தான் என்பதை அவளது உள்ளுணர்வுக்குப் புரிந்தது என்னவோ, சிறுவயதில் தாயாரின் கடுமையான நோயும் அத்துடன் சேர்ந்திருந்த படியால் வாழ்வு என்னவோ இன்பமாக இருக்கவில்லை என்பது என்னவோ உண்மை தான். ஏழ்மையிலும் அவளிடம் ஏதோ ஓர் துடுக்குத்தனமிருந்தது. வாழ்வில் இரு சகோதரர்களை ஆறு மாதத்துக்குள் இழந்தது அவளுக்கு வாழ்வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இளவயது மிகவும் துன்பத்துக்குள்ளாகிய நேரமது அவளுக்கு. தனது இளைய தம்பி அவளின் அன்புக்கும் ஆசைக்குமுரிய கண்ணன். அவளின் தாயார் மிகவும் நோயுற்றிருந்த வேளை அவள் தான் 13 வயது காலகட்டத்தில் தாயாக தன் சகோதரன் சிவகரனை வளர்த்தாள். அவனின் இறப்பும் அவளின் தமையன் விக்கினேஸ்வரனின் இழப்பும் ஆறுமாதங்குள்ளாகவே அவளின் பிஞ்சு உள்ளத்தை வாட்டித் தான் போட்டு விட்டது. ஆனால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை யாராலும் தவிர்க்க முடியுமா என்ன சிறுவயதில் தாயாரின் கடுமையான நோயும் அத்துடன் சேர்ந்திருந்த படியால் வாழ்வு என்னவோ இன்பமாக இருக்கவில்லை என்பது என்னவோ உண்மை தான். ஏழ்மையிலும் அவளிடம் ஏதோ ஓர் துடுக்குத்தனமிருந்தது. வாழ்வில் இரு சகோதரர்களை ஆறு மாதத்துக்குள் இழந்தது அவளுக்கு வாழ்வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இளவயது மிகவும் துன்பத்துக்குள்ளாகிய நேரமது அவளுக்கு. தனது இளைய தம்பி அவளின் அன்புக்கும் ஆசைக்குமுரிய கண்ணன். அவளின் தாயார் மிகவும் நோயுற்றிருந்த வேளை அவள் தான் 13 வயது கா���கட்டத்தில் தாயாக தன் சகோதரன் சிவகரனை வளர்த்தாள். அவனின் இறப்பும் அவளின் தமையன் விக்கினேஸ்வரனின் இழப்பும் ஆறுமாதங்குள்ளாகவே அவளின் பிஞ்சு உள்ளத்தை வாட்டித் தான் போட்டு விட்டது. ஆனால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை யாராலும் தவிர்க்க முடியுமா என்ன அப்படியே வாழ்வு வசந்தங்களையும் அள்ளித்தருமா என்ன அப்படியே வாழ்வு வசந்தங்களையும் அள்ளித்தருமா என்ன அது தன் பாதையில் ஓடிக்கொண்டு தானிருந்தது. வறுமையிலிருந்து மீள ஆண்டவனும் எந்தக் கருணையும் காட்டவில்லை. இப்போ அவளுக்கு மூன்று சகோதரிகள். இவளே மூத்தவள். நல்லாகப் படித்து வாழ்வில் ஓர் அரச உத்தியோகத்தைப் பெற்று வீட்டாரின் வறுமைக்கு ஓர் முற்றுப்புள்ளி தேட வேண்டும் என்று ஓர் கட்டத்தில் நினைத்துப் படித்தாள்.\nஉயர்தரம் படித்த அவளால் மேற்கொண்டு எதுவுமே செய்ய முடியவில்லை. அரசவேலை வாய்ப்பும் கிடைக்க யாரின் ஆதரவோ சிபாரிசோ இல்லை. ஆதலால் அரச உத்தியோகமுமில்லை. அதன் பின் தோட்டம் செய்யத் தொடங்கி மழை பொய்த்து எல்லாம் அழிந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் தாயாரின் நோயும் மிகவும் துன்பத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கே பல தடவை முயன்றுமிருக்கிறாள் சிவகாமி. அவளைப் பொறுத்தவரையில் வாழ்வு மிகவும் அழுத்தமான கடுமையான பதிவுகளை அவள் வாழ்வில் பதி்த்திருந்தது. சாப்பாட்டுக்கே கஸ்டம். பட்டினி .ஒழுங்காக உடுத்த உடுப்பில்லை. அவள் பாடசாலையில் கல்வி கற்கும் போது அவளின் பாடசாலை சீருடை மிகவும் கிழிந்து நைந்து போய் அதற்கு அவள் ஒட்டுப் போட்டுத் தைத்திருப்பாள். ஓர் முறை அவள் படித்த பாடசாலைக்கு நாட்டின் அரசியல் பிரமுகர் ஒருவர் வந்தார். அப்போது அவளிடம் காலுக்கு வெள்ளைப் பாதணி சப்பாத்து வாங்க காசில்லாமல் அவள் அந்த பிரமுகரின் வருகையின் போது மக்கள் கூட்டத்தினரோடு சேர்ந்து அந்த பிரமுகரின் வருகையை எதிர்கொண்டு ரசித்தாள்.\nஇப்படியான வாழ்வில் சிவகாமி வாழ்ந்த காலத்தில் தான் நாட்டில் விடுதலைப் போராட்டம் மிகவும் தீவிரமடைந்திருந்தது. விடுதலையைப்பற்றி எதுவித அறிவுமற்ற அவள் அவளின் தோழியின் உதவியுடன் அதில் இணைந்தாள். எதுவுமே தெரியாத அவள் எந்த விடுதலை இயக்கத்தில் இணைகிறாள் என்றே தெரியாது. அவளின் தோழியுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறினாள். அவளைப் பொறுத்தவரை அவள் எல்லாவற்றிலும் தோற்று வீட்டுக்கு எதுவும் செய்ய முடியாது என்ற விரக்தியில் வெளியேறியது தான். எந்தக் கொள்கையோ பற்றோ அன்றில் விளக்கமோ இல்லை. சொந்த மண்ணிலிருந்து அவள் வேறு நாட்டிற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டாள். ஆரம்பத்தில் அவளால் அங்கும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தான் சாப்பிடும் ஒவ்வொருகணமும் தன் குடும்பத்தார் சாப்பி்ட்டார்களா என்று ஏங்கி கண்ணீர் விட்டிருக்கிறாள். வாழ்வு வடுக்களை மட்டுமல்ல ஆறாத காயங்களையும் சேர்த்து விடுவது என்னமோ உண்மை தான்.\nசிவகாமி தனக்கான தன் பெயரை இயக்கத்தில் மாற்றி வேறு ஓர் அடையாளப் பெயருடன் செயலாற்றத் தொடங்கினாள். அங்கு போன பின்பு தன்னை சிவகாமி நிறைய கற்றலுக்குட்படுத்தினாள். தேடலுக்குட்படுத்தினாள். ஆனால் என்னவோ அவளின் சித்தத்தில் தர்மமும் நீதியும் இருந்தது. அப்போது தான் அவளுக்கு வழிகாட்ட சுதாக்கா, மனோ மாஸ்டரின் பேச்சுக்கள் புரிந்தது. பிடித்தும் போய் விட்டது. அவர்களை அவள் நேசித்தது மட்டுமல்ல மதித்து நடந்து அவர்களின் உரைகளைக் கவனித்து தன்னைச் செதுக்கினாள். பல தேடல்களை தானே தேடினாள். ஆனால் விடை எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும் கூட உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காத எண்ணத்தை மட்டும் அவள் சித்தத்தில் பதிய விட்டிருந்தாள்.\nஇக்கட்டத்தில் தான் அவள் சார்ந்த இயக்கத்தில் உட்கட்சி முரண்பாடு ஏற்பட்டது. அக்கட்டத்தில் தான் அவள் மனோ மாஸ்டரின் கருத்துக்களில் இருந்த நியாயத்தைப் புரிந்து மனோ மாஸ்டருடன் பிரிந்து சென்ற குழுவுடன் இணைந்தாள். இந்த நேரத்தில் அவள் தன்னை ஓர் கருத்தும் இலட்சியமும் கொண்ட ஓர் போராளியாக சீரமைத்திருந்தாள். அந்த நேரம் அவள் தமிழ் சிங்களம் முஸ்லீம் என்று பிரித்துப்பார்க்காமல் எல்லோருமே மனிதர்கள் தான் எல்லோரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு அவர்கள் பெறவேண்டும் என்பதிலும் இதை யாராலும் தட்டிப்பறிக்கவோ திருடவோ முடியாது என்பதை உணர்ந்திருந்தாள். உட்கட்சிப் போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போது சிவகாமியுமிருந்தாள். வெற்றி பெற்றது என்பதை விட அக்குழு அதை நடத்தி காட்டியது. அப்படியான ஒரு முற்போக்குக் குழுவில் சிவகாமி இருந்து நிறையவற்றைக் கற்றாள். எதிர்காலத்தில் அக்குழுவினருடனேயே இணைந்து மக்களுக���கான விடுதலைக்கு உழைக்க வேண்டுமென்பதில் குறியாயிருந்த சிவகாமிக்கு அந்த விடுதலையில் தன்குடும்பமும் அதைப் போன்ற குடும்பங்களும் வசந்தத்தைப் பெறும் என்று பெரிய எதிர்பார்ப்பிருந்தது. அந்த நேரம் அந்த சிந்தனை அவளை மிகவும் சந்தோசத்தின் உச்சிக்கு அழைத்து தான் சென்றிருந்தது. அது மிகவும் கற்பனை என்பதை அவள் பின்னாளில் உணர்ந்து குமுறி அழுதிருக்கின்றாள்.\nதான் சார்ந்த முற்போக்குக் குழுவுக்கு சரியான தலைமை மனோ மாஸ்டர் என்பது அவளுக்குத் தெரியும். அப்போது தான் அந்த கொடூர துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. கொடூரப்புலிகளால் மனோ மாஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டது. அவ்வேளை அந்தக் குழுவில் எல்லோருமே திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட ஓர் உணர்வோடு செயலற்றிருந்தார்கள். அது மிகவும் வேதனை மிகுந்த காலகட்டம். போராளிகளினது நிலை ஒரு புறம், சரியான தலைமையை தமிழ்மக்கள் இழந்து விட்டது மிகவும் பேரிடியாகவே அவள் அதைப் பார்த்து மிகவும் அழுதாள். வேறொர் நாட்டில் சாப்பாட்டுக்கும் இருப்பிடத்துக்கும் மிகவும் கஸ்டமான நிலையில் மனோ மாஸ்ரின் தம்பி ராஜனும், ரஞ்சித்தும் ஏனைய தோழர்களும் பெண் போராளிகளை மிகவும் நல்ல முறையில் பாதுகாத்தார்கள். மனோ மாஸ்டரின் அக்காவின் கழுத்து தங்கச்சங்கிலியைக் கூட விற்று சாப்பாட்டுக்கு பயன்படுத்தினார்கள். மறக்க முடியாத எதையும் எதிர்பார்க்காத இவ்வுதவிகள் இன்றும் நினைவு கூரப்பட்டு நன்றிக்குரியவையாக பேணப்படுகிறது சிவகாமியின் இதயத்தில். மனோ மாஸ்டரின் மரணமும் சரியான வழிகாட்டலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல பொருளாதார வசதியோ பாதுகாப்பு வசதியோ இல்லாத காரணத்தால் சிவகாமியினதும் அவளின் முற்போக்கு சிந்தனையாளர்களின் கனவும் எல்லாமே அவர்கள் எல்லோரையும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு திரும்பி விடத்தூண்டி விட்டது. உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களை மட்டும் சுமந்தபடி வாழ்வு மிகவும் வரட்சியாக ஓடவும் தான் தொடங்கியது எல்லோரையும் போல் சிவகாமிக்கும்.\nசிவகாமி தான் தனது போராட்டத்தை தொடர முடியாமல் திரும்பி நாட்டுக்கு வந்த நேரம் அவளின் தாயார் இறந்து பதினாறு நாட்களாகி விட்டிருந்தது. மிகவும் வேதனையையும் துன்பத்தையும் எதிர் கொண்டு சுக்கு நூறாகியிருந்தாள். வீட்டின் பொருளாதார நிலையும் ம��கவும் மோசமாக இருந்தது. ஏதாவது வேலை தேட வேண்டும் வீட்டைப் பார்க்க வேண்டுமென்ற நிலையில் மீண்டும் தோட்டம் செய்யத் தொடங்கினாள். அதிலும் முன்னேற முடியவில்லை. சிறு சிறு தொழில்கள் செய்து பார்த்தாள் எதிலும் முன்னேறி குடும்பத்துக்காக எதையும் செய்ய முடியவில்லை. மிகவும் வெறுத்த நிலையிலிருந்த போது தான் ஓர் மருந்தகத்தில் முந்நூறு ரூபா சம்பளத்தில் வேலை கிடைத்தது. அப்போது விடுதலை இயக்கங்கள் பல இருந்த காலகட்டம். அந்த மருந்தகமும் ஓர் விடுதலை இயக்கத்தின் ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டது. ஏதோ ஓர் நிம்மதியுடன் வருமானம் குறைவு என்றாலும் அந்த மருந்தகம் அந்தக் கிராமத்துக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் விடயமாக இருந்தது. அது ஓர் மக்களுக்கான சேவையுமாக இருந்தது. அதில் திருப்தியுடன் வேலை பார்த்த போது தான் விடுதலைப்புலிகளால் அந்த மருந்தகம் அதன் பெயர் மக்கள் நல மருத்துவச் சங்கம் என்பது புலிகளின் துணைத்தளபதி சுசிலனால் அடாவடியாக கைப்பற்றப்பட்டது. சிவகாமியிடமிருந்து பல விளக்கங்கள் கூறப்பட்டும் அந்த கொடிய மிருகமான சுசிலனால் தலைமையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் எந்த விளக்கமுமில்லாமல் அந்த கிராமத்துக்கான சேவை நிலையமான அந்த மருந்தகம் தடைசெய்யப்பட்டது. உண்மையிலேயே அந்த மருந்தகம் தாழ்த்தப்பட்ட சாதியினர் பத்து பேர்கள் கொண்ட ஓர் குழுவினரால் தொடங்கப்பட்டது. முழுக்க முழுக்க அந்த பத்து பேரின் பணம் தான் முதலீடு. ஆனால் EPRLF இல் இருந்த ஓர் போராளி அவர் சிவகாமியின் ஊரைச் சேர்ந்த ஓர் முற்போக்குப் போராளி சுந்தர் என்ற அமலனின் ஆலோசனையின் பெயரில் கிராமத்தின் நன்மை கருதி தொடங்கப்பட்ட ஓர் சேவை மையம். அதில் யாருக்கும் எந்தவித இலாப நோக்கமும் இல்லை. முழுக்கு முழுக்க மக்களுக்காக உதவுவதிற்காக தொடங்கப்பட்டு அது நிறைய கடுமையான நோயாளிகளையும் காப்பாற்றியிருந்தது. கடுமையான நோயாளிகளின் அந்த நேர நோயின் கொடுமைகளையும் தீர்த்திருந்தது. அதை பிரபாகரனின் கொடூர மனம் அதிகார வெறிபிடித்த கோழைகளால் தாங்க முடியாமல் தடை செய்யப்பட்டது.\nஅந்த நேரம் EPRLF தடை செய்யப்பட்ட இயக்கமாக புலிகளால் அறிவிக்கப்பட்டது. அவ்வேளை சிவகாமியும் கண்காணிக்கப்பட்டாள். தடைசெய்யப்பட்ட இயக்கத்திலிருந்த போராளிகள் தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் சாப்பிட வழியற்ற நிலையில் நோயும் தாக்கி காடுகளுக்குள் மறைந்து வாழ்ந்தார்கள். அவ்வேளை சிவகாமியால் சிலர் பாதுகாக்கப்பட்டு வேறிடங்களுக்கு அனுப்பப் பட்டார்கள். இந்த வேளை தான் புலிகள் காட்டிக்கொடுக்குப்பின் சிவகாமியைக் கைது செய்து 49 நாட்கள் சித்திரவதை செய்தார்கள். உடல் சித்திரவதை இல்லாமல் விசாரணை என்ற போர்வையில் நிறைய மன உழைச்சலை ஏற்படுத்தினார்கள். தனது சொந்தக் கிராமத்திலிருந்து சிவகாமி மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் இருபாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர விசாரணக்குட்படுத்தப்பட்டாள்.\nஇதில் சுவாரசியம் என்னவென்றால் ஆரம்ப காலகட்டத்தில் சிவகாமியிருந்த விடுதலை இயக்கமான TELO விலிருந்து வெளியேறிய சோதியா, தீபா போன்ற பெண் போராளிகளும் சிவகாமியை விசாரணை செய்தார்கள். அவர்கள் பின்பு விடுதலைப்புலிகளுடன் இணைந்து மிக முக்கிய முன்னிலைப் போராளிகளாக அவ்வியக்கத்திலிருந்தார்கள். இவ்வேளை தான் தீபா சிவகாமியை ஆரம்பத்திலேயே இயக்கத்துக்கு கூட்டிச் சென்ற தீபா பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைகுரிய போராளியாக இருந்தபடியாலும் அவரின் சொல்லை வேதவாக்காக எடுத்து பல கொலைகளைச் செய்த காரணத்தாலும் தீபாவின் சிபாரிசின் பெயரில் பிரபாகரன் சிவகாமியை யாழ் இருபாலை பெண்கள் முகாமில் வந்து சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேர சந்திப்பின் போது பல விடயங்கள் பேசப்பட்டது. சிவகாமி ஓர் பெரிய அறிவாளியோ நிறைய கருத்துக்களைக் கொண்ட ஓர் தியாகியோ அல்ல. ஆனாலும் துடுக்காக கருத்துக்களைக் கூறும் ஓர் வெளிப்படையான துணிவுள்ளவள் என்பது பிரபாகரனுக்கு தெரியப்படுத்தியிருந்த படியால் தான் பிரபாகரன் சிவகாமியைச் சந்திக்க வந்த நோக்கமே. வேறு எதுவுமல்ல. இதில் பிரபாகரனுக்கு தனது இயக்கத்தை மேலும் மேலும் நம்பிக்கைக்குரியவர்களை வைத்து விரிவுபடுத்த வேண்டிய கட்டமிருந்தபடியால் தீபா போன்ற சொல்வதைக் கேட்டு நடக்கும் மந்தை போல் சிவகாமியையும் பிரபாகரன் நினைத்திருக்கலாம். அவ்வளவே. மேலும் சுவாரசியம் சிவகாமியை பிரபாகரன் பேரமும் பேசினார். உயர்பதவிகள் தருவாதாக மேற்படிப்பு படிப்பிப்பதாக.தனக்கு தேவையானவர்களை தன்னோடு சேர்ப்பதற்கு அவர் பலரிடம் பேரம் பேசியிருப்பார் என்பது ஒவ்வொரு த���ிப்பட்ட போராளிகளினதும் அனுபவமாயிருக்கும் என்பது சிவகாமியின் ஆழமான கருத்து.\nசிவகாமி புலிகளின் சிறையில் அரசியல் கைதிகயாக இருந்தபோது அவளுடன் வேறு அரசியல் கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தார்கள். அது ஓர் சிறிய அறை எல்லாப்பக்கமும் அடைக்கப்பட்டிருந்தது. அதில் யன்னலில் மாத்திரம் ஓர் சிறிய வெடிப்பிருந்தது. அதிலிருந்து வெளியில் நடப்பதை ஓரளவு பார்க்கக்கூடியதாக இருந்தது. பிரபாகரன் சிவகாமியைச் சந்திக்க வந்தபோது அவர் முழுக்க முழுக்க பாதுகாப்புடனேயே இருந்தார். அறைக்கு வெளியில் அவரின் பாதுகாவலர்கள். ஒரு மணிநேர பேச்சுக்கிடையில் பிரபாகரன் தண்ணீர் குடித்தார். பின்பு ஒருமுறை மருந்து அவரின் பாதுகாவலர்களிடமிருந்து கொடுக்கப்பட்டது. அவர் அந்த பெண்கள் முகாமிலிருந்தே எதையும் வாங்கி குடிக்கவோ சாப்பிடவோ இல்லை. இது 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு. பிரபாகரன் அந்தக முகாமுக்கு வர முன்பே சிவகாமிக்கு முகாமின் தலைமைப் போராளியினால் அறிவிக்கப்பட்டது. பெயர் சுதா மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சுதா. மிகவும் அமைதியான சுபாபமுடையவர். இவ்வளவு காலமும் அண்ணன் அங்கு வரவில்லை உங்களுக்காகத் தான் வருகிறார். சந்திக்க வருகிறார் என்று சிவகாமிக்கு சொன்னார். மிகவும் பெண்மையும் தாய்மையும் அன்பும் நிரம்பிய அந்த சுதா போன்றவர்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டது மிகவும் துரதிஸ்டமே. ஏனெனில் பெண்மையென்பது எதையும் அழித்து சீரழிக்காது. அது தாய்மையின் வெளிப்பாடு இயற்கையின் கொடை. எதிரியானலும் அதுவும் ஓர் உயிரே. அதை அழிக்க ஆயுதமேந்தியது எமக்கேற்பட்ட அதாவது தமிழ்மக்களுக்கேற்பட்ட துன்பியலா இல்லை உலக வல்லரசுகளின் திணிப்பா என்பது ஆழமான நோக்கோடும் கலந்துரையாடலோடும் அணுகி புரிதலுக்குட்படுத்த வேண்டிய விடயம். பிரபாகரனுடனான சந்திப்பின் போது விடுதலைப்புலிகளுடன் இணைந்து வேலை செய்வதை சிவகாமி தனது குடும்பத்தின் நிலையைப் புரிய வைத்து மறுப்புத் தெரிவித்தாள். ஆனால் உண்மையிலேயே சிவகாமிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கொள்கையிலோ நடைமுறையிலோ எந்த வித உடன்பாடுமில்லை. கொலைதான் எல்லாவற்றுக்கும் முடிவு சொல்லும் என்பதும் ஆயுதத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று கருதும் கொலைக்குழுவுக்ககும், மனோ மாஸ்டர் போன்�� உன்னத மனிதர்களால் ஆயுதமென்பது யாருக்கு எதிராக தூக்க வேண்டும் அப்பாவி தனது சகோதர இனத்துக்கெதிராகவா இல்லை தன் எதிரிக்கு எதிராகவாக எதிரிக்கு எதிராகவும் கடுமையாக பயன்படுத்தும் கட்டத்தில் தான் அதை தூக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டது. அது அப்படியான ஓர் உன்னத பாசறை. அதிலிருந்த நேர்மையானவர்களால் எப்போதுமே புலிகளுடன் இணைந்து செயல்பட முடியாது. ஆனால் இதில் விதிவிலக்காக சோதியா தீபா சுகி வசந்தி சாந்தி சுபாங்கி போன்ற சிவகாமியுடனிருந்த பெண்போராளிகள் இணைந்தது என்பது துரதிஸ்டம் தான்.\nஇந்தப் பிரபாகரன் - சிவகாமி சந்திப்புக்குப் பின் சிவகாமி ஓரளவு வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டு முகாமில் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டாள். மனோ மாஸ்டர் கொலைக்கு, சில போராளிகளின் கொலைக்கு பிரபாகரனால் சிவகாமிக்கு மிகவும் சின்னத்தனமான காரணங்கள் கூறி நியாயப்படுத்தப்பட்டது. அப்போது என்னால் உங்களுடன் இப்படியும் பேச முடியும் ஆயுதத்தாலும் பேச முடியும் என்று பிரபாகரனால் சிவகாமி அச்சுறுத்தப்பட்டதும் கூட நடந்தது. எப்படியாவது வெளியேறி விடவே ண்டுமென்பது அவளின் நோக்கம்.\nஅந்த 49 நாட்கள் சிறைவாசத்தின் போது சில காட்டிக்கொடுப்பவர்கள் என்று ஓர் நள்ளிரவில் 3 பெண்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ஓர் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட படித்த பெண். அவர் அங்கிருக்கும் வரைக்கும் யாருடனும் பேசவேயி்ல்லை. மற்ற பெண்கள் இரவு உடைகள் மிகவும் கிழிந்த நிலையில் முகமெல்லாம் காயங்களுடன் கொண்டு வரப்பட்டாரார்கள். அப்போது அடைத்து வைத்திருந்த அறைக்குள்ளேயே முகாமின் தலைவி சுதா என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது அந்தப் பெண்களில் ஒருவர் அண்ணாமார் அதாவது ஆண் போராளிகள் இப்படிச் செய்ததாக கூறிவிட்டார். கொண்டு வரும்போது வாகனத்தில் அப்படி கீழ்த்தரமாக நடந்திருக்கிறார்கள் அந்த ஆண் போராளிகள். அதை பின்பு அந்த பெண் விரிவாக நடந்ததைக் கூறினார் சிவகாமி போன்றவர்களுக்கு. புலிகளின் பெண் போராளியான ரஜனி என்பவர் சிவகாமியை விட வயதும் குறைவு அவர் ஓமந்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எப்போதும் கைதிகளை முறைப்பாகப் பார்ப்பதும், உங்களுக்கெல்லாம் என்னடி தினவெடுக்கிறதா என்று ஏசுவதுண்டு. எப்போதும் ஓர் அதிகார கொடுமையான தோரணையுடன் பார்க்கவ�� பயமாக இருக்கும்படி நடந்து கொள்வார். கையில் பெரிய கம்புடனேயே கைதிகளைப் பார்த்து மிரட்டுவார். இவர்களெல்லாம் பெண்ணினத்துக்கு இழுக்கானவர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் மூளைச்சலவை செய்யப்பட்ட மனது பவவீனமானவர்கள். அவர்களால் என்ன செய்ய முடியும் அவர்களின் கருத்தை வேதவாக்காக எடுத்து நடக்க மட்டும் தான் முடியும். அந்தப் பெண்ணைப் பார்த்து சிவகாமிக்கு பயமென்றாலும் இரக்கமும் கூட இருந்தது. அந்த உண்மையைக்கூறிய பெண் கடுமையான விசாரணக்குட்படுத்தப்பட்டார். அங்கு விசாரணை என்பது ஒருவரினால் நடத்தப்படுவதில்லை. பலபேரினால் பலமுறைகள் நடத்தப்படுவது. மிகவும் கொடுமையாக இருக்கும். அப்படியே அந்தப் பெண்ணையும் விசாரணை என்ற போர்வையில் விசாரித்தார்கள். இந்த விசாரணை அறை என்பது சிவகாமி போன்றவர்களை அடைத்து வைத்த அறைக்குப் பின்பக்கத்தில் இருந்த நீண்ட பெரிய அறை அது யாழ்ப்பானத்தில் அதிகமான வீடுகளில் இருக்கும் போலும். சிறை அறைக்கும் விசாரணை அறைக்குமிடையில் ஓர் யன்னலுமிருந்தது. அது மூடித்தான் இருக்கும். அந்த விசாரணை அறையில் அந்தப் பெண்ணை அடித்து சித்திரவதை செய்ய அந்தப்பெண்ணின் அவல அலறல் இன்றும் சிவகாமியால் மறக்க முடியாது. அவ்வளவு கொடூரம் அது. சித்திரவதையில் கால் அடித்து முறிக்கப்பட்டும் விட்டது. அந்தப் பெண் அந்த விசாரணை அறையிலேயே விடப்பட்டும் விட்டார். அதன் பின்பு அந்தப் பெண்ணை சிவகாமி இரண்டு தடவை பார்த்திருக்கிறாள். தன்னை விடுவதாக கூறியிருந்தார் அந்தப் பெண். தான் தன் இரு பிள்ளைகளையும் பார்க்க வேணும் என்றும் சக கைதிகளிடம் தெரிவித்திருந்தார் அப்பெண். அவர் ஏன் சந்தேகிக்கப்பட்டாரென்றால் ஓர் வயதானவரை கொழும்புக்கு ஓய்வூதியம் எடுக்கக்கூட்டிச் சென்றபடியால் தான் சந்தேகம். வேறு எதுவுமே அப்பெண் செய்யவில்லை. கடைசியில் அவரிடமிருந்து எல்லா உண்மைகளையும் எடுத்து விட்டு அந்தப் பெண்ணை துரோகி எனப்பட்டம் சூட்டி சந்தியில் கட்டி சுட்டுக்கொன்றார்கள். அப்பெண் உரும்பிராயைச் சேர்ந்த நடுத்தர வயதுடையவர் அப்போது. மற்றப்படி எந்தத் தகவலும் சிவகாமிக்குத் தெரிவில்லை. அவரைப்பற்றிய உண்மையை அவர்களின் பிள்ளைகளுக்காவது தெரிவிக்க சிவகாமி நீண்டகாலத்தின் பின்பு புலம்பெயர் தேசம் ஒன்றில் உரும்பிராயைச் ���ேர்ந்த ஓர் வேறு பெண்ணிடம் கூறினாள். அப்போது அந்தப் பெண் கூறிய வார்த்தை அவரின் பிள்ளைகள் கனடாவில் வாழ்வதாகவும், தாய் துரோகி என்பதை நம்பி விட்டதாகவும் கூறியிருந்தது வருத்தத்துடன் பதிவுசெய்ய வேண்டியது. ஒருதாயை இழந்தது மட்டுமல்ல நடத்தை கெட்டவள் என்றும் முத்திரை குத்தப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. கடைசி நாள் சுடக்கொண்டு போகும் நேரத்தில் கண்களெல்லாம் கட்டிய பின் நீங்கள் என்னை விடுதலை செய்வதாகக் கூறினீர்களே ஏன் என்னை இப்படி செய்கிறீர்கள் என்ற வார்த்தையும் ஓலமும் சிவகாமிக்கு மாளாத்துயரம் வாழ்வில். இதுதான் புனித விடுதலை. மக்களுக்காக ஆயுதமேந்திய அராஜகக்கும்பலின் அட்டூழியம். தம்மைக் காப்பாற்றி அதிகார சிம்மாசனத்தில் வீற்றிருக்க செய்த கொலைகள் எதுவும் சிம்மாசனத்தையும் கொடுக்கவில்லை. விடுதலையையும் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.\nமல்லி ,விசு ,மாத்தையா போன்றவர்கள் மிகவும் கொடுமையானவர்களாக இருந்தார்கள். அவர்களின் குரலே சிறைக்குள்ளிருக்கும் போது அந்த வெடிப்பு யன்னல் வழியாக பார்த்துக் கேட்கும் போது பயங்கரமாகவிருக்கும். சிவகாமி இவர்கள் வந்தால் வெளியில் நிற்பதைப் வெடிப்பினூடே பார்த்தால் இரண்டு காதுகளையும் மூடிவிடுவதுண்டு. கடைசியில் மல்லி என்பவர் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். விசு கொழும்பில் கொலை செய்யப்பட்டார். மாத்தையாவுக்கு என்ன நடந்தது என்பது உலகறிந்த விடயம். இவர்களை நினைக்கும் போது பயமேற்பட்டது உண்மை. ஆனால் இவர்களெல்லாம் அறியாமையில் சிதைந்து போனவர்கள். நிச்சயமாக இவர்களின் ஆன்மா நிம்மதியுற வேண்டும்.\nஅந்த 49 நாட்கள் சிறைக்குப் பின் சிவகாமி விடுதலை செய்யப்பட்டாள். ஆனால் இந்த கேடுகெட்ட சமுகம் மிகவும் கேவலமாகப் பார்த்தது. புலிகளால் பிடிக்கப்பட்டிருந்த போது மொட்டை அடித்து துரோகியைக் கொன்று விட்டதாக அவளின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டதுமுண்டு. வறுமை அதனிடையில் இப்படியொரு துர்ப்பாக்கிய நிலை. சமூகத்தின் கேடுகேட்ட பார்வையும் விமர்சனமும் சிவகாமியை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்ல மிகவும் தடையாக இருந்தது என்னவோ உண்மை தான். உண்மையையும் நீதியையும் நீ விரும்பினால் இப்படியான தண்டனையும் துன்பமும் தவிர்க்க இயலாது என்னவோ சமூகத்தில் எ���ுதாத சட்டம் என்னவோ\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/Tamil+actor+vadivelu?page=1416", "date_download": "2021-08-02T10:16:38Z", "digest": "sha1:V2CX6Z4KI6AHDUPLNHVUQPJMF25GER3Q", "length": 4049, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஇடைவிடாது 12‌4 மணி நேர...\nபாபர் மசூதி இடிப்பு வழ...\nபெட்ரோல், டீசல் விலை ...\nஉடைந்த ஹாக்கி பேட்டில் தொடங்கிய பயிற்சி முதல் 'சாதனை கேப்டன்' வரை - 'உத்வேக' ராணியின் கதை\nபயிற்சிக்கு ஷூ வாங்க சிரமப்பட்ட கமல்ப்ரீத் கவுர்... விடாமுயற்சியும் விஸ்வரூப வெற்றியும்.\n\"வீடு இல்லாமல் தெருவில் நிற்கிறோம்\" - கூவம் கரையோர மக்களின் அழுகுரலுக்கு என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2012-01-24-07-29-21/", "date_download": "2021-08-02T10:21:11Z", "digest": "sha1:UMBEEZNRTKYITPTRY7QXIPJ65L52TRAP", "length": 6510, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "ஈரானின் மீது ஐரோப்பிய யூனியன் தடை |", "raw_content": "\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க உத்தரவிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை.\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்\nஈரானின் மீது ஐரோப்பிய யூனியன் தடை\nஈரான் தயாரித்து_வரும் அணு ஆயுத திட்டத்திற்க்கு எதிர்ப்பை காட்டும் வகையில் ஈரானின் மீது ஐரோப்பிய யூனியன் தடைவிதித்துள்ளது.\nஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு\nஐரோப்பிய யூனியன் தடைவிதித்துள்ளது. மேலும் பல தடைகளை ஈரானின் மீது விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nஎதிா்க் கட்சிகள் காஷ்மீா் செல்வதை யாரும் தடுக்க வில்லை\nஜம்மு காஷ்மீர் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக…\nஎதிர் காட்சிகளை விட ஐரோப்பிய யூனியன் எம்பி.,க்கள்…\nபாலிமர் செய்திகள் ஒன்றுதான் நியாயமாக செய்தி போடுகிறது\nபயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிரச்னை; ஐரோப்பிய…\nஈரான் விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுவது\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவ� ...\nராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறு ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/2013-03-22-03-19-01/", "date_download": "2021-08-02T10:02:17Z", "digest": "sha1:RVQB4NU46TX7VJNBFATWFVEAWYMKXQDJ", "length": 10257, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "சிபிஐ., சோதனை சமாஜ்வாதி பகுஜன்சமாஜ் கட்சிகளுக்கு, மறைமுகமாக விடப்பட்ட எச்சரிக்கை |", "raw_content": "\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க உத்தரவிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை.\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்\nசிபிஐ., சோதனை சமாஜ்வாதி பகுஜன்சமாஜ் கட்சிகளுக்கு, மறைமுகமாக விடப்பட்ட எச்சரிக்கை\n“ஸ்டாலின் வீட்டில், சிபிஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது.\nஇது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர், ராஜிவ் பிரதாப்ரூடி\nசெய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டாலின் வீட்டில், சிபிஐ., மேற்கொண்ட சோதனை, சிபிஐ., அமைப்பை, காங்கிரஸ் தவறாக பயன்படுத்திவருகிறது என்று , நாங்கள் பலகாலமாக தெரிவித்து வரும் குற்றச்சாட்டை உறுதிசெய்கிறது. அரசை காப்பாற்ற, சிபிஐ.,யை மத்திய அரசு பயன் படுத்தியுள்ளது. திமுக., பொருளாளர், ஸ்டாலின் வீட்டில் நடத்தப்பட்டசோதனை மூலம், சமாஜ்வாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகளுக்கு, மத்திய அரசு, மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஎங்களை விட்டு விலகினால், உங்களுக்கும், இதே நிலைதான் ஏற்படும் என, மறை முகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்று ராஜிவ் பிரதாப்ரூடி கூறினார்.\nதமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.மு., கூட்டணி ஆட்சியில் மத்திய புலனாய்வுதுறை என்பது காங்கிரஸ் புலனாய்வு துறையாக மாற்றப்பட்டுள்ளது. பொதுவாகவே சிபிஐ. ஆளும் கட்சியால் எதிர்கட்சியை மிரட்ட தவறாக பயன்படுத்தப் படுவதாக பல கால கட்டங்களில் புகார் எழுத்துள்ளது.\nஇந்தமாதிரி உயரிய அமைப்புகளை ஆளும் கட்சியினர் தங்கள் ஏவல்துறையாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. திமுக. கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்தது. மத்திய அமைச்சரவையிலும் பங்கேற்றது. அப்போதெல்லாம் இல்லாத நடவடிக்கை இன்று காலையில் திடீரென்று வெடித்ததுஎன்பது காங்கிரஸ் கட்சி அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தான் காட்டுகிறது.என்றார்\nஅபிஷேக் பானர்ஜியின் மனைவி ரூரிஜா பானர்ஜிக்கு சிபிஐ., சம்மன்\nநேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்களுக்கு பிரதமர் சம்மன்\nமமதா துரோகம் இழைக்கிறார்: சாரதா நிதிநிறுவனத்தில்…\nஇந்த கூட்டணி நாட்டு நலனுக்கானது அல்ல, அவர்களது…\nபிரதமர்வேட்பாளர் குறித்து எந்த வித கர� ...\nஇதுபோன்ற சிரிப்பை வரவழைக்கும் சூழ்நில ...\nபாகிஸ்தான் ராணுவத்தின் மீது நடவடிக்கை ...\nகேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தா� ...\nராசா கைது மிக தாமதமான நடவடிக்கை ; பாரதி� ...\nவறட்சி நீக்கி பசுமை நிலைபெற செய்த பென்� ...\nதென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச்செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக். அரசு கட்டமறுத்த அணையை, தன் சொந்தசெலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித ...\nஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப ...\nசாதாரண தொண்டரை ராஜமரியாதையோட கவனிக்க � ...\nபுதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழ� ...\n100% குழாய் பாசன திட்டத்தை செயல்படுத்திய ...\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவ� ...\nராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறு ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவாய், தொண்டை சம்ப��்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/747", "date_download": "2021-08-02T08:27:09Z", "digest": "sha1:CNATEJEWRXKXOBE25I6XYMD7VXHITNVD", "length": 2820, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 747 | திருக்குறள்", "raw_content": "\nமுற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்\nமுற்றுகையிட்டும்‌, முற்றுகையிடாமல்‌ போர்‌ செய்தும்‌, வஞ்சனை செய்தும்‌ எப்படியும்‌ பகைவரால்‌ கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண்‌ ஆகும்‌.\nமுற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் - அகத்தோரை அவர் தௌ¢ந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது.\n(இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும் உடைமையானும், ஏனைய நல்லாளுடைமையானும் வாயாவாயின.)\n(இதன் பொருள்) சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/category/technology/", "date_download": "2021-08-02T08:52:53Z", "digest": "sha1:U42UJTU2VKZ5E723ZI2RNKCMET5BY6GC", "length": 7063, "nlines": 93, "source_domain": "www.akuranatoday.com", "title": "Technology Archives - Akurana Today", "raw_content": "\nவாட்ஸ்அப் இல் செட்களை தானாக இல்லாமல் ஆக்கலாம்\nடிக்டொக்கை வாங்கும் ஒரக்கள்; மைக்ரோசொப்டுக்கு தோல்வி\nமைக்ரோசொப்டை தொடர்ந்து டுவிட்டர் டிக்டொக்கை வாங்க முயற்சிக்கிறதா\nவட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரை ஒன்றிணைக்க திட்டம்\nபேஸ்புக் மெசஞ்சருடன் வட்ஸ்அப்பை ஒன்றிணைக்கும் புதிய திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் பரிசோதித்து வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இவ்வாறு இணைக்கும் போது வட்ஸ்அப் பயன்படுத்துவோர் மெசஞ்சர் செயலியை பயன்படுத்துவோருடன் தகவல் ...\nSamsung -Foldable phone மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு கிடைக்கக்கூடியதாய் இருக்கும்\nஇலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான Samsung, நாட்டில் முதலாவது foldable ஸ்மார்ட் ஃபோனினை அறிமுகப்படுத்தியதன் மூலம் வரலாறு படைத்துள்ளது. இலங்கையில் முதலாவது...\nமத்தியதர ஸ்மார்ட்போன் Nova 7i தற்போது இலங்கையில்\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, வசதியான விலைக்கேற்ற பெறுமதியை வழங்கும் Nova ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக இணைந்து கொண்ட, பல சிறப்பம்சங்களால் நிரம்பிய...\nWhatsApp – இனி 8 பேருடன் குரூப் call பண்ணலாம்\nகொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பொதுவெளியில் நடமாடுவது அதிகளவில் குறைந்திருக்கிறது. இதனால், பொழுதுபோக்குக்காக மக்கள் தொலைக்காட்சி மற்றும் செல்ஃபோனையே நம்பி காலத்தைக் கடத்தி...\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் செய்திகளை Whatsappல் பெற.\nWhatsApp செயலியில் WHO உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனா தகவலை பெறுவது எவ்வாறு \nபெண்களின் அந்தரங்கங்களை பேஸ்புக்கில் பகிரும் செயலிகள் – அவதானம்\nஇன்றைய தலைமுறையினரிடையே ஸ்மார்ட் போன்கள் இன்னொரு மினி உலகம் என்று கூறும் அளவுக்கு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. ஸ்மார்ட் போன்களை உயிரோட்டமாக்குவது செயலிகள். இந்த செயலிகள் முதலில்...\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா\nஒவ்வொரு ஆண்டும் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிடப்படும் திறன்பேசிகளுக்காக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்; ஆனால், திறன்பேசி பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி அதன் தயாரிப்பாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள்...\nபேஸ் அப் குறித்து அவதானமாக இருங்கள்\nசமூக வலைதளங்களில் தற்போது தீயாக பரவி வரும் பேஸ் அப் என்ற செயலியை பயன்படுத்தும் போது தங்களின் தனியுரிமை குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் தகவல்...\nஇன்றைய தங்க விலை (25-01-2021) திங்கட்கிழமை\nஇன்றைய தங்க விலை (11-12-2020) வெள்ளிக்கிழமை\nஇன்றைய தங்க விலை (17-03-2021) புதன்கிழமை\nரிஷாத் – ரியாஜ் பதியுதீன் கைதுக்கான காரணம் (காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-news-features", "date_download": "2021-08-02T09:59:40Z", "digest": "sha1:7EHKV6JWPECS3ZBZLLJEHD67Q3REOZ7V", "length": 8561, "nlines": 97, "source_domain": "www.army.lk", "title": " செய்தி விமர்சனம் | Sri Lanka Army", "raw_content": "\n52 வது படைப்பிரிவினரால் விகாரை நிர்மாணத்திற்கு உதவி\nயாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 52 வது படைப்பிரிவினர் நாவற்குழி சமூர்த்தி சுமன விகாரை விகாராதிபதியினால் விடுக்கப்பட்ட...\n54 வது படைப்பிரிவின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்பு\nமன்னாரிலுள்ள 54 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 11 வது தளபதியாக மேஜர் ஜெனரல் தர்ஷன வீஜேசேகர புதன்கிழமை (28) கடமைகளை பொறுப்பேற்றுக்...\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்த மேலும் 531 பேர் வீடு திரும்பினர்\nஇன்று காலை (31) இலங்கையில் 2,460 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 05 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு...\nஅறக்கட்டளைகளின் நிதியுதவியில் 231 வது பிரிகேட் படையினரின் ஒருங்கிணைப்பில் நிவாரணப் பொதிகளில்\n231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 11 (தொ) இலங்கை சிங்க...\nமேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 61வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட்டின் 3 (தொண்டர்) கெமுனு ஹேவா படையின் (ஜி.டபிள்யூ) படையினர் வியாழக்கிழமை (29) மாத்தறை வெலிகம கடற்கரையினை சுத்தம் செய்யும் திட்டத்தை...\nபாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nகொவிட் 19 பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பருத்தித்துறை கிராம சேவையாளர் பிரிவின் 285 தகுதியான குடும்பங்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட மதிய...\nமுல்லைத்தீவு தளபதி 681 வது பிரிகேட் தலைமையகம் விஜயம்\nமுல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய பின்னர், புதன்கிழமை (22) 68 வது படைப்பிரிவின் தலைமையகத்தின் 681 வது பிரிகேட் தலைமையகத்திற்கு தனது...\nதொடரும் யாழ்ப்பாண தளபதியின் களப் பயணங்கள்\nயாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு பொறுப்பேற்றதனட பிறகு 52 வது படைப்பிரிவுத் தலைமையகத்திற்கு வெள்ளிக்கிழமை (25) தனது முதல் களப் பயணத்தை மேற்கொண்டார்...\n65 வது படைப்பிரிவின் புதிய தளபதி தனது கட்டுப்பாட்டு அலகுகளுக்கு விஜயம்\nபுதிதாக நியமிக்கப்பட்ட 65 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் அணில் சமரசிறி ஜூலை மாதம் 21 - 25 காலப்பகுதியில் தனது கட்டளையின் கீழுள்ள பிரிகேட்கள் மற்றும் படை அலகுகளுக்கு...\n11 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் 300 நிவாரண பொதிகள் விநியோகம்\nஅண்மையில் 11 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களின் ஏற்பாட்டில் வெவ்வேறான மூன்று பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 300 நிவாரண ...\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD002925/STROKE_pkkvaatinnnaal-paatikkpttttu-viittttil-irukkum-neeaayaalliklukku-cikiccai-caar-punnnrvaalllvu", "date_download": "2021-08-02T09:15:09Z", "digest": "sha1:R3WBSBTXQ2QK4JBZGRRQNYWJUT6DV7SL", "length": 6691, "nlines": 100, "source_domain": "www.cochrane.org", "title": "பக்கவாதினால் பாதிக்கபட்டு வீட்டில் இருக்கும் நோயாளிகலுக்கு சிகிச்சை-சார்-புனர்வாழ்வு சேவைகள் | Cochrane", "raw_content": "\nபக்கவாதினால் பாதிக்கபட்டு வீட்டில் இருக்கும் நோயாளிகலுக்கு சிகிச்சை-சார்-புனர்வாழ்வு சேவைகள்\nசமீபத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் சிகிச்சை சேவைகளை பெற செய்தால் தினசரி நடவடிக்கைகளை முன்னெடுக்க தங்கள் திறனை பராமரிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பக்கவாததத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இயன்முறை மருத்துவர்கள், தொழில்சார் மருத்துவர்கள் அல்லது பல்முனை குழுக்கள், ஆகியவர்களின் பரிந்துரையின் பெயரில் அளிக்கப்படுவதும் சிகிச்சை சார்ந்த புனர்வாழ்வு சேவைகளில் உள்ளடங்கும். 1617 பங்கேற்பாளர்கள் கொண்ட14 ஆய்வுகளில் சம்பந்தப்பட்ட விமர்சனத்தில், பக்கவாத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்கள் வீட்டில் சிகிச்சை சேவைகளை பெற்றார்கள் என்றால் சுதந்திரமாக தனிப்பட்ட தினசரி வாழ்கை நடவடிக்கைகளில் ஈடுபடவும்,அத்திறனை பராமரிக்க இயலும் என்பதும் கண்டறியப்பட்டது. எனினும் நன்மையின் அளவு கேள்விக்குறியாக உள்ளது.\nமொழியாக்கம்: இ. நவீன் குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2021/01/blog-post_72.html", "date_download": "2021-08-02T08:57:55Z", "digest": "sha1:BPIXTL7UWOQNKQ7S3VXH4QYLGB6YT2TF", "length": 5195, "nlines": 61, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "மூட்டு வலி பிரச்னை | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\n40 வயதை கடந்து விட்டாலே மூட்டு வலி ஏற்படும் என்பதெல்லாம் அந்த காலங்க. இப்போதெல்லாம் இளம் வயதுள்ளவர்களுக்கும் மூட்டு வலி பிரச்னை ஏற்பட��கிறது.\nமூட்டு வலி, மூட்டு அழற்சி (Osteo Arthritist), முடக்கு வாதம் (Rheimatoid Arthristis) என்று இரு வகைப்படுகிறது.\nமூட்டு அழற்சி, பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.\nமுடக்கு வாதம், எந்த வயதினருக்கும் வரலாம். இது பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.\nமூட்டு வலி அவதியைக் குறைக்க உதவும் சில இயற்கை மருத்துவ முறைகளைப் பற்றி இங்கு காண்போம்.\nநல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி, ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nபுதிய உருளைக்கிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு நல்ல மருந்தாகும்.\nஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால்கோப்பை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு\nBaby Names - நச்சத்திரம்\nAnmigam - ஆன்மிகம் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2020/04/06/kamal-haasans-letter-to-pm-modi/", "date_download": "2021-08-02T09:54:06Z", "digest": "sha1:6YXEWV7T6TRKTHBGG3TRA5BELJUE5OZU", "length": 10127, "nlines": 163, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதம்! – Kuttram Kuttrame", "raw_content": "\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nபிரதமர் ம��டிக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதம்\nPublish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்\nமுறையாக திட்டமிடப்படாமல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கடித நகலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செய்யப்பட்ட மிகப்பெரிய தவறு ஊரடங்கு உத்தரவின் போதும் செய்யப்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார்.\nசேமித்து வைத்த பணத்தையும், வாழ்வாதாரத்தையும் அப்போது தொலைத்த ஏழை மக்கள், தற்போது ஊரடங்கு உத்தரவால் வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். விளக்கு ஒளி ஏற்றுவது போன்ற உளவியல் ரீதியான சிகிச்சைகள் பால்கனியில் இருக்கும் மக்களுக்கே தவிர கூரை கூட இல்லாத மக்கள் என்ன செய்வார்கள் என்று அந்த கடிதத்தில் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதங்களது பால்கனிகள் எண்ணெய் விளக்குகளால் ஒளிரும் அதே நேரத்தில் அடுத்த வேளை ரொட்டிக்கு எண்ணெய் இல்லாமல் ஏழை மக்கள் போராடுவதாகவும் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். பால்கனியில் இருக்கும் மக்களுக்கான அரசாக மட்டுமே தாங்கள் இருக்க விரும்ப மாட்டீர்கள் என தான் நம்புவதாக தெரிவித்த கமல்ஹாசன், இந்த முறை தங்களது பார்வை தோல்வி அடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் மீது கோபம் இருந்தாலும் இன்னும் உங்கள் பக்கமே இருப்பதாக கூறி கடிதத்தை கமல்ஹாசன் நிறைவு செய்துள்ளார்.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு..\nஇரையை விழுங்கி விட்டு நகர முடியாமல் தவித்த பாம்பு..\nகோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்..\nஎன்ன நடந்தது என்று தெரியவில்லை ஏமாற்றிவிட்டனர்..\nதமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா தொற்று.. 26 பேர் பலி\nஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுந்த பெண்..\nஇந்தியா செய்திகள் விரைவு செய்திகள்\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nகிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wishesquotesintamil.in/2021/07/pongal-wishes-in-tamil.html", "date_download": "2021-08-02T07:57:47Z", "digest": "sha1:HU6Z32LD2AKY4VZ42NQH7GWT5FUPFY2N", "length": 6801, "nlines": 74, "source_domain": "www.wishesquotesintamil.in", "title": "Pongal Wishes In Tamil | Pongal Greeting In Tamil 2021 | Happy Pongal Images | Pongal Festival In Tamil | பொங்கல் வாழ்த்துக்கள் - Wishes Quotes in Tamil", "raw_content": "\nஎங்கள் இணைய பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம். நீங்கள் பொங்கல் வாழ்த்துக்களை தமிழில் தேடுபவர்களா கவலை வேண்டாம் இந்த பதிவில் அற்புதமான பல பொங்கல் வாழ்த்துக்களை கொடுத்துள்ளோம். பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியமான பண்டிகையாகும். இது உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட படுகிறது. பொங்கல் பண்டிகையானது போகி , தை பொங்கல், மாட்டு பொங்கல் , உழவர் திருநாள் என நான்கு தினங்களாக கொண்டாட படுகிறது. எனவே மக்கள் பொங்கல் வாழ்த்துக்களை தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புகின்றனர். இப்போது சில பொங்கல் வாழ்த்துக்களை தமிழில் பார்க்கலாம்.\nஇது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.\nபொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் download\nபிறந்தநாள் வாழ்த்துகள் | Happy Birthday Wishes In Tamil | Piranthanal Valthukkal | பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/06/blog-post_42.html", "date_download": "2021-08-02T10:08:18Z", "digest": "sha1:QG6GFSANM6LTOIQSVJEL465INH6ZRNAQ", "length": 7981, "nlines": 56, "source_domain": "www.yarlsports.com", "title": "பழிதீர்த்த பாகிஸ்தான் வீழ்ந்தது இங்கிலாந்து - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > பழிதீர்த்த பாகிஸ்தான் வீழ்ந்தது இங்கிலாந்து\nபழிதீர்த்த பாகிஸ்தான் வீழ்ந்தது இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிராக 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.\n12 ஆவது உலககிண்ணத் தொடரின் ஆறவாது லீக் போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நோட்டிங்கமில் ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 348 ஓட்டங்களை குவித்தது.\n349 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் விக்கெட்டுக்கள�� இழந்து 334 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 14 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.\nஇங்கிலாந்து அணி சார்பில் ஜோசன் ரோய் 8 ஓட்டத்துடனும், பெயர்ஸ்டோ 32 ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ் 13 ஓட்டத்துடனும், இயன் மோர்கன் 9 ஓட்டத்துடனும், ரூட் 107 ஓட்டத்துடனும், பட்லர் 103 ஓட்டத்துடனும், மொய்ன் அலி 19 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 21 ஓட்டத்துடனும், ஜோப்ர ஆர்ச்சர் ஒரு ஓட்டத்துடனும் ஆடுகளத்தில் மார்க்வூட் 10 ஓட்டத்துடனும், அடில் 3 ரஷித் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் வஹாப் ரியாஸ் 3 ஷெடப் கான், மொஹமட் அமீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஹபீஸ், மலிக் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்துடனான தொடரில் அடைந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணி பழி தீர்த்ததுடன், கடந்த 11 ஒரு நாள் போட்டிகளிலும் அடைந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nபாகிஸ்தான் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aliyardam.com/category/aliyar-tourism/", "date_download": "2021-08-02T09:47:19Z", "digest": "sha1:GYTZSMECRSBCIPOTHAJQBYZDXZI6VRWW", "length": 2891, "nlines": 37, "source_domain": "www.aliyardam.com", "title": "Aliyar Tourism Archives - Aliyardam.com", "raw_content": "\nகுரங்கு அருவி குளியல்… வால்பாறை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற பொழுதுபோக்கு நிறைந்த இடமாக உள்ளது குரங்கு அருவி(Monkey Falls). குளிக்க ஏற்ற இடமாக உள்ள குரங்கு அருவியின் நீர், குளு குளுவென உள்ளதால் அனைவரும் குளிப்பது வழக்கம். கோடை காலங்களில் சில நேரம் தண்ணீர் இல்லாமல் அருவி வரண்டு போவதும் உண்டு. குறிப்பாக ஏப்ரல் மே … Continued\nஆழியார் சுற்றுலா ஆழியார் அணை தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். இங்கு மனமகிழ்விற்காக பூங்கா,மீன் காட்சியகம் உள்ளன. 1962ஆம் ஆண்டு ஆழியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் … Continued\nJebaraj on குரங்கு அருவி\nalfred on குரங்கு அருவி\nRaj on குரங்கு அருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/sarpatta-parambarai-movie-review/cid4252380.htm", "date_download": "2021-08-02T08:58:46Z", "digest": "sha1:UBNAMDULA336KTT5FGNEL5SOZ4LNY7F4", "length": 10503, "nlines": 68, "source_domain": "cinereporters.com", "title": "ரஞ்சித் படமா? ஆர்யா படமா?.. ரசிகர்களை கவர்ந்ததா ‘சார்பட்டா பரம்பரை?’.....", "raw_content": "\n.. ரசிகர்களை கவர்ந்ததா ‘சார்பட்டா பரம்பரை\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், அனுபமா குமார், சந்தோஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.\nஎமர்ஜென்சி கால மெட்ராசில் பாக்சிங் விளையாட்டை கௌரவமாக கருதும் சார்பட்டா, இடியப்ப பரம்பரைக்களுக்கு இடையேயான பகை தலைமுறை தலைமுறையாக தொடர்வதே கதைக்களம். குத்துச்சண்டையில் இடியப்ப பரம்பரையின் கை ஓங்கியிருக்க, இழந்த கௌரவத்தை மீட்க சார்பட்டா பரம்பரை களம் இறங்க, யாரும் எதிர்பாரத வண்ணம் பாக்ஸிங்கில் அனுபவே இல்லாத கபிலன்(ஆர்யா) சாம்பினாக வந்து சார்பட்டா பரம்பரை சார்பாக இறங்க பாக்ஸிங் ரிங்குக்குள் நடக்கும் அரசியலே படத்தின் திரைக்கதை.\nமுதல் பாதி ஸ்போர்ட்ஸ் டிராமாவாக நகர்கிறது. அந்த கால பாக்சிங் நுணுக்கங்கள், ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு ஸ்டைலில் விளையாடுவது என படம் சுவாரஸ்யமாக செல்கி���து. படக்குழுவும் அதற்கு மெனக்கெட்டுள்ளது. அதிரடி பாக்சிங் சண்டை காட்சிகள் முதல் பாதி விறுவிறுவென செல்ல உதவுகிறது. அங்கங்கு சாதிய ஒடுக்குமுறையை உள்ளே புகுத்தியிருக்கிறார் ரஞ்சித்.\nஆனால், 2ம் பாதி நம்மை சோதித்து விடுகிறது. கதை எங்கெங்கோ சென்று இது பாக்சிங் விளையாட்டு தொடர்பான படமா இல்லை கபிலன் எங்கிற தனிமனிதன் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டும் படமா என நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதாவது பாக்சிங் ரிங்குக்கு வெளியே கதை மிகவும் மெதுவாக நகர்ந்து நம்மை அயர்ச்சி அடைய செய்கிறது.\nகபிலனா ஆர்யா உடலை ஏற்றி மெனக்கெட்டுள்ளார். அவரின் அர்ப்பணிப்பை பாராட்டியே ஆக வேண்டும். அதேபோல் கோபம், ஆக்ரோஷம், இயலாமை என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தி நம்மை கட்டிப்போடுகிறார். ஆர்யாவை இப்படி பார்ப்பதே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆனால், படத்தின் முக்கியமான கதாபாத்திரமான பாக்சிங் வாத்தியார் பசுபதியை 2ம் பாதியில் காணவே இல்லை. அது பெரிய குறை.\nமற்றபடி பட்டர் இங்கிலீஸ் பேசி வரும் கதாபாத்திரமாக ஜான் விஜய், மாரியம்மாவாக வரும் துஷரா விஜயன் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்துள்ளனர். அதேபோல், டான்சிங் ரோஸாக வரும் ஷபீரின் உடல் மொழி ரசிகர்களை நிச்சயம் கவரும். அவருடன் ஆர்யா மோதும் சண்டை காட்சி ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக அமைந்துள்ளது. அந்த சண்டைக் காட்சிக்காகவே அன்பறிவு டீமுக்கு பெரிய கைதட்டல்.\nபாக்சிங் ரிங்கை முரளியின் கேமரா அற்புதமாக சுற்றிவந்துள்ளது. பழைய மெட்ரஸை ராமலிங்கத்தின் கலை கண்முன்னே கொண்டு வந்துள்ளது. பாடல்கள் இல்லை என்றாலும் சண்டை காட்சிகளில் வரும் பின்னணி இசை மற்றும் படத்தின் இறுதி காட்சியில் வரும் அந்த ராப் பாடல் மூலம் படத்தில் நானும் இருக்கிறேன் என சந்தோஷ் நாராயணன் நிரூபித்துள்ளார்.\nமுதல் பாதிலேயே படம் முடிந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தி விடுவதுதான் திரைக்கதையின் பெரிய பலவீனம். அரசியல், சாதி பாகுபாடு, கள்ளச்சாராய தொழில், பழிவாங்கும் முயற்சி, மதுபழக்கத்திற்கு அடிமையாகும் ஆர்யா என இரண்டாம் பாதி ஒரு தனிப்படமாக பயணிக்கிறது. ஆர்யா ஏன் அப்படி மாறினார் குழப்பமான கலையரசன் கதாபாத்திரம் என இது ரஞ்சித் திரைப்படம்தானா என நமக்குள் கேள்விகளை எழுப்புகிறது.\nஅரசியல் ரீதியாக தான் என்ன சொல்ல வருகிறோம் என்பதை ரஞ்சித் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பதிவு செய்ய தவறிவிட்டது படத்தின் இலக்கை தீர்மானிக்க தவறிவிட்டது. பாக்சிங் காட்சிகளுக்கு மெனக்கெட்டது போல் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருந்தால் சார்பட்ட பரம்பரை எல்லோரையும் ஈர்த்திருக்கும்...\nஆனாலும், படத்தின் முதல் பாதி, ஆர்யாவின் மெனக்கடல், பழைய மெட்ராஸ், புதிய கதைகளம், விளையாட்டில் உள்ள அரசியல் ஆகிய காரணங்களுக்காக இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.\nசார்பட்டா பரம்பரைக்கு நாம் தரும் மதிப்பென் 3/5...\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-06/38730-2019-10-03-16-21-38", "date_download": "2021-08-02T10:13:43Z", "digest": "sha1:7FSGSYC4CLHINMYCE2GXFLRV36DBNEQB", "length": 25746, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "வழக்கு தொடரப்பட்ட சட்டத் திருத்தங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2006\nஅர்ச்சகர் பயிற்சி பெற்று 19 ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள்\nகண்கட்டி வித்தையாகிப் போகும் சட்ட ரீதியான நடவடிக்கைகள்\nNEET தேர்வு ஏன் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும்\nஆண்ட பரம்பரை பட்டம் வேண்டுமா\nதலித் மக்கள் வீடுகளை சூறையாடிய பா.ம.க.\nஉச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்புகள்\nநீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி மறுப்பு\nஉயர் நீதி மன்றத்தின் ஒப்புதல் வாக்கு மூலமும், புரிந்து கொள்ள முயலாத ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும்\nதமிழக அரசுக்கு நீதிமன்றம் ‘கிடுக்கிப்பிடி’ ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றப்படுமா\nஏழைகளின் வாழ்வை சிரிப்பாய் சிரிக்க வைத்து இறைவனைக் காணும் அரசுகள்\nமார்க்சிய - லெனினிய குழுக்களின் நிலைபாடுகள் மீதான விமர்சனக் குறிப்புகள்\nவிசாரணைக் கைதிகளின் உரிமைக்காகப் போராடியவர்…\nசமூகப் புரட்சியாளர் சாகு மகாராஜ்\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் தாகம் தீர்க்குமா தமிழக அரசு\nகடவுள் அரசியல் வடநாடும், தமிழ்நாடும்\nம.பொ.சி பர்னிச்சர் - ஊரும் உணர்வும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ��க்டோபர் 2006\nவெளியிடப்பட்டது: 27 அக்டோபர் 2006\nவழக்கு தொடரப்பட்ட சட்டத் திருத்தங்கள்\nதற்போது, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 77, 81, 82, 85 பிரிவுகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்காகும். இந்தத் திருத்தங்களுக்காக அரசியல் சட்டப் பிரிவில் 16(4ஏ), 16(4பி) என்ற பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இந்தத் திருத்தங்கள் என்ன கூறுகின்றன\n1995 ஆம் ஆண்டு 77வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. மண்டல் பரிந்துரைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் - தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதைத் தடை செய்தது. இதை மாற்றியமைக்க வந்ததே இந்த சட்டத் திருத்தம். அரசியல் சட்டப் பிரிவில் 16ல் 4ஏ என்ற உறுப்பு இதற்காக சேர்க்கப்பட்டது.\n81வது சட்டத்திருத்தம் நிரப்பப்படாத - தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான அரசுப் பணிகள் தொடர்பானது. ஒவ்வொரு ஆண்டும் ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் போனால், அடுத்த ஆண்டுகளில், அந்தக் காலியிடங்களை நிரப்ப வேண்டும். அப்படி, இடங்களை சேர்த்து நிரப்பும்போது, இடஒதுக்கீடு சதவீதம் அதிகரிக்கும். அந்த நிலையில் 50 சதவீதத்துக்குமேல் போகக் கூடாது என்ற உச்சவரம்பு, பொருந்தாது என்பதே இந்த சட்டத்திருத்தம். இதற்காக அரசில் சட்டப் பிரிவு 16(1)ல் (4பி) என்ற உறுப்பு சேர்க்கப்பட்டது.\n82வது சட்டத்திருத்தப்படி தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு ஆதரவாக, எந்த ஒரு தேர்விலும் தகுதிக்காக நிர்ணயிக்கப்பட்ட மதிப் பெண்ணைக் குறைக்க முடியும். இந்தத் திருத்தம் அரசியல் சட்டப்பிரிவு 335-ல் கொண்டு வரப்பட்டது.\n85வது சட்டத்திருத்தம் என்பது, இடஒதுக்கீடு மூலம் பதவி உயர்வு பெறும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினரின் பதவி மூப்பைப் பாதிக்காமல் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டத்தின் 16வது பிரிவில் இத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தங்களை எதிர்த்துத்தான் இப்போது வழக்கு தொடரப்பட்டது; திருத்தங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘கிரிமிலேயரை’ உள்ளே நுழைத்து விட்டது\nகேரளாவில் பார்ப்பனருக்கு தனி சுடுகாடு\n20 ஆண்டுகளுக்கும் மேலாக - தமிழ், மலையாளத் திரைப்பட உலகில் கதாநாயகியிலிருந்து அம்மா பாத்திரம் வரையில் ஏற்று நடித்த நடிகை ஸ்ரீவித்யா புற்றுநோயால் மரணமடைந்தது வேதனைக்குரியதாகும். தனது சொத்துக்களைக் கூட அவர் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காக உயில் எழுதி வைத்துள்ளார். ஆனால், அவர் மறைவையொட்டி வந்துள்ள ஒரு செய்தியைக் குறிப்பிட வேண்டும். கேரள அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடல் திருவனந்தபுரத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உள்ள “பிராமண” சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டதாம். சுடுகாட்டிலும் இன்னும் பார்ப்பனர்களுக்கு தனி சுடுகாடு இருக்கிறது. இதுதான் வெட்கக் கேடு\n50 சதவீத உச்சவரம்பு தமிழகத்துக்கு பொருந்தாது\n50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள உச்சவரம்பு தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று, தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பத்தாண்டு காலம் கிடப்பில் போடப்பட்டதற்குப் பிறகு, வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல், விசாரணைக்கு வருகிறது. 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இதற்காக கடந்த 19 ஆம் தேதியன்று (50 சதவீதத்துக்கு மேல் ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று தீர்ப்பளித்த அதே நாளில்) தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.\n69 சதவீத இடஒதுக்கீட்டுக்காக 31(சி) பிரிவின் கீழ், தமிழக சட்டமன்றம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டம் இயற்றியது. இச்சட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதலோடு அரசியல் சட்டத்தில் 9வது அட்டவணையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம், 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தமிழ்நாடு அரசின் சட்டம், உச்ச நீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டதாக, சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ‘வாய்ஸ்’ என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குதான் இப்போது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு, தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:\nஇந்த 69வது சட்டத்திருத்தத்தை 9வது அட்டவணையில் சேர்த்ததில் அரசியலமைப்பின் அடிப்படை எதுவும் மீறப்படவில்லை. அரசியல் சட்டம் நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள அதிகாரத்திலும், குறுக்கிடவில்லை. எந்த ஒரு பிரச்சினையிலும், நீதிமன்றம் தலையிட்டு பரிசீலனை செய்வதற்கு, அரசியல் சட்டம் அனுமதித்திருந்தாலும், அந்த அனுமதிக்கும் வரம்பு உண்டு. எல்லையற்ற வரம்பை அரசியலமைப்பு நீதித்துறைக்கு வழங்கவில்லை.\nபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்ற தேவை பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே உணரப்பட்டது. 1927 ஆம் ஆண்டிலேயே அன்றைய ‘சென்னை மாகாணமாக’ இருந்த காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு அமுலில் இருந்து வருகிறது. மண்டல் குழு தொடர்பான வழக்கிலேயே (இந்திரா சகானி வழக்கு) இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு 68 சதவீதமாகவும், 1990-ல் 69 சதவீதமாகவும் தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் 88 சதவிதம் பேர் இருக்கிறார்கள்.\nஇடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த ‘மண்டல்’ வழக்கிலேயே சில தனித்தன்மையான சூழல்களில், இதற்கு விதிவிலக்கு உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது. “உச்சவரம்பு 50 சதவிதம் தான் என்பது விதியாக இருந்தாலும், அதே நேரத்தில், பல்வேறு கலாசாரப் பிரிவினரையும் மக்களையும் கொண்டுள்ள இந்த நாட்டில், இதனால் எழும் அசாதாரணமான சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு இதுபற்றி பரிசீலிக்கலாம். 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கவே கூடாது என்பது மறு பரிசீலனைக்கு உட்பட்டதுதான்” என்று அதே தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.\n50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்பது, அரசியல் சட்டத்தின் அடிப்படை உணர்வுக்கும் நோக்கத்துக்கும் எதிரானது. மேல்தட்டு வர்க்கத்தினரும், செல்வாக்குள்ள பிரிவினரும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதிக்கும் எந்த சட்டமும் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்குவதைத் தடைப்படுத்துவதாகும். இது அரசியல் சட்டத்தின் அடிப்படை உணர்வுக்கு எதிரானதாகும்.\nசமூக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் வாய்ப்புகள் வழங்கினால்தான் ஏற்கனவே ஒப்பீட்டளவில் மேல் நிலையில் இர���க்கும் பிரிவினரோடு போட்டியிட முடியும்” என்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தனது நிலையைத் தெளிவாக்கியுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Njaanam", "date_download": "2021-08-02T10:44:15Z", "digest": "sha1:FV2FYEINIYIPDQOCQTD7Z3VLHPCPS7N2", "length": 23839, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Njaanam - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழகத்தின் தொண்டை மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டையில் பிறப்பு.\nதந்தை - திரு.அ.நடராசன். B.A (Hons). ஓய்வுபெற்ற மாவட்டத் தண்டல் நாயகம் (District Collector)\nதாய் - திருமதி.சீதை அம்மாள்\nஎளிமையான வாழ்க்கையிலும், சைவத்தைத் தந்தையூட்ட, திருச்சி சமால் முகமது கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (பவுதீகம்) பெற்று, ஆசிரியராக 2 ஆண்டுகள் கழிந்தன. பின்னர் State Bank of India ல் எழுத்தராகச் சேர்ந்து, படிப்படியாக முதுநிலை மேலாளராகப் பதவி உயர்ந்து 2001ம் ஆண்டு ஓய்வு.\n1960லேயே ஆன்மீகத் தேட்டம் மிகுந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபாடு. பல பொய்க் குரு பிரான்களிடம் ஏமாந்து 1966ல் ஞானகுரு கிட்டி, ஞானவினைச் செயலாரம்பம்.\nவிருப்பம் - பல வழக்கிழந்த நூல்களில் சிறிதேனும் வழக்கிற்கு கொண்டுவந்து இளைய தலைமுறைக்குத் தரவேண்டும். எவ்வகையிலாகிலும் தமிழுக்குத் தொண்டு செய்யவேண்டும்.\n1 தமிழ் மொழியின் எதிர்காலம்\nஞாலம் போற்றும் உயர்தனிச் செம்மொழிகளில் அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் மக்களின் அறியாமை, அலட்சியப் பாங்கு ஆகியவைகளால் நெருப்பு, நீர், கரையான் ஆகியவற்றால் அழிந்துபட்டது போக எஞ்சியிருக்கும் எண்ணற்ற நூல்களும், அவைகள் சுட்டும் கருத்துக்களும் தமிழ் தொன்மையானது என்பதற்கு ஆதாரம். தமிழர்களின் நாகரீகத்தின் மேம்பட்ட நிலையினை தெள்ளத் தெளிவாய்க் காட்டும் ஆடியாகவும் விளங்குகிறது.\nஇலக்கிய வளம், இலக்கணச் செறிவு, தத்துவப் பான்மை ஆகிய எல்லாம் அமைந்த மொழி. ��ெறிகளில் உயர்ந்த திருநெறியைச் சுட்டுவதால் \"திருநெறியத் தமிழ்\" எனவும், தெய்வத்தன்மை வாய்ந்ததாலும், தெய்வத்திடம் வழிப்படுத்தும் மொழியாகவிருப்பதாலும் \"தெய்வத்தமிழ்\" எனவும் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார். மும்மூர்த்திகளாம், குமரகுருபரர், சிவப்பிரகாசர், சிவஞான முனிவர் ஆகியோர், இறைவனையும் இறை உணர்வினையும் உரைநடைகளாக ஆக்கி பேச்சுமொழியைத் தெய்வத் தன்மை பொருந்தியதாகச் செய்தனர்.\nகத்தொலிகள்(ஓ, கோ, கூ), ஒப்பொலிகள்(கூ, மா, குர்), வாய்ச்சைகை ஒலி(வா, போ), இன்னும் பிற ஒலிக்குறிகள் ஆகியவைகளிலிருந்து ஒலிகள்(சொற்கள்) பிறந்தன. விலங்கு, பறவை முதலிய உயிரினங்களின் ஒலிக்குறிப்புகளும் சொற்பிறப்பிற்கு அடிப்படையாயின. இதைவைத்து முதன் முதலில் தோன்றியவை தனிச்சொற்களே. குறிஞ்சியில் வாழ்ந்தபொழுது தமிழர்கள் புழங்கியது சில சொற்களே. பின்னர், முல்லை முதலிய ஏனைய திணைகளுக்குப் புலம் பெயர்ந்தபொழுது, ஒவ்வொன்றிலும் சிற்சில புதுச் சொற்கள் தோன்றின. பல சொற்கள் மருதத்தில் தோன்றியவை.\nமருத நிலத் தலைவன் மற்ற திணைகளில் புழங்கிய சொற்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்க ஒரு முழு மொழியாகியது. அடுத்தடுத்த இடங்களுக்குச் சென்றபோது சொல்வளம் பெருகிற்று.\nஇடம், பொருளீட்டல், தொழில் ஆகியன விரிவுபட்டபோது புதுச் சொற்கள் தோன்றின. சொற்களை வைத்து சொற்றொடர்கள் தோன்றின. சொற்றொடர்களை வைத்து இலக்கியம் தோன்றிற்று. முதலிலக்கியம், காதல் வெளிப்பாடுகள், முன்னோர் சரித்திரம், போர்ப்பாடல்கள், திருமன்றாட்டுகள், மறைநூல் என்னும் வரிசையில் வெளிவந்தன. பின்னர், இலக்கணிஞர்கள் இலக்கணம் யாத்தனர். அதன் பின்னர், எழுதுபவரின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே இலக்கியம் வளர்ந்தது. அறநூல் எழுதும்பொழுது, எழுதுபவரின் சொல்லாக்கமும், இறைச்சிந்தனையாளர்கள் பெருநெறியாம் திருநெறி பற்றி எழுதும்பொழுது அவர்களின் சொல்லாக்கமும் தமிழை வளப்படுத்தின. தமிழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாயிருந்தது திருநெறி இலக்கியமே. அப்பொழுது, தமிழ்ச் சங்கங்கள் தோன்றித் தமிழை வளர்த்தன.\nவேதங்களை (ரிக், யசுர், சாம, அதர்வணம்) தமிழருக்கு அறிமுகப்படுத்துங்கால், அதிலுள்ள செங்கிருதச் சொற்களுக்கிணையான தமிழ்ச் சொல் வேர்களையெடுத்துக்கொண்டு, முன்னொட்டு அல்லது பின்னொட்டு சேர��த்து சொற்களை உருவாக்கினர். பின்னர், அதுதான் மூலம்; அங்கிருந்துதான் தமிழுக்கு வந்தது என வாதிடவும் செய்தனர். வைணவம் தமிழகத்தில் அறிமுகப் படுத்தப்பட்டபின் செங்கிருதமும் தமிழும் கலந்த நடை உருவாயிற்று. அதை மணிப்பிரவாள நடை என்றனர். இதன் தாக்கத்திலிருந்து தமிழைக் காக்க பல சமயக் குறவர்கள் போராடியுள்ளனர். அத்துடன் நில்லாது, தெலுங்கு, கன்னட, கேரள மன்னர்களின் ஆதிக்கத்திற்குள் சென்ற பகுதியினர் அம்மொழிகளின் சொற்களையும் தமிழுடன் கலந்து பலுக்க(பேச) ஆரம்பித்தனர். இதனால், பல வேர்ச்சொர்கள், கிளைச் சொற்கள் ஆகியன மறைந்து விட்டன. மறைமலையடிகள் போன்ற ஆன்றோர்கள் தமிழைக் காக்க அரும்பாடுபட்டு, தங்களின் ஆக்கங்களில் இனம் காட்டியுள்ளனர்.\nநிகழ்காலத்தின் தமிழ் மிகவும் வருந்தத்தக்க நிலயில் உள்ளது. மடிக்குழைப் பள்ளிகளில் கல்வி பயின்றுவந்த தலைமுறையினர் மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோரும், மற்றையோரும், ஆங்கிலம் கலந்து உரையாடுவதுதான் மதிப்பைத் தரும் என்னும் கருத்துகொண்டு, தாய்மொழிச் சொற்களைப் புறக்கணித்து ஆங்கிலச் சொற்களைப் பாவிக்கின்றனர்.\nஎடுத்துக்காட்டாக:\"எனக்கு health சரியாக இல்லைங்கிறதால lateஆ எந்திரிச்சு shave பண்ணாம autoவில collegeக்குப்போய் first period attend பண்ணிட்டு ப்ரொபெசர்கிட்ட half day leave கேட்டுகிட்டு hostelல்ல என் friend roomல rest எடுத்தேன்.\"\nஆங்கிலம் வேண்டாமெனக் கூறவரவில்லை. புழங்கினால் முழுவதும் ஆங்கிலத்திலேயே புழங்கவேண்டும்(அலுவலகம் போன்ற இடங்களில், அல்லது தமிழ் மொழி தெரியாதோரிடம்). அதில் தமிழ் கலப்பு கூடாது. மற்ற இடங்களில், முக்கியமாக, இல்லத்தில், தமிழ் தெரிந்தோரிடத்தில் உரையாடும்போது, தமிழில் மற்றமொழிக் கலப்பின்றி உரையாடுதல் வேண்டும். செந்தமிழில் உரையாடாவிடினும், பேச்சுத் தமிழில் கலப்பின்றி பேசுதல் வேண்டும்.\nஊடகங்களில், தமிழ் எழுத்துக்களின் ஒலிக்குறிப்பு கொலை செய்யப்படுகிறது. யாருக்கும் கவலை இல்லை. எடுத்துக்காட்டு:\n\"ச\" என்னும் எழுத்து \"ஸ\" என பலுக்கப்படுகிறது(ராசா=ராஸா). \"பலனியில் மளை பேஞ்சதால் பக்தர்கள் மளை ஏறமுடியாமல் வலுக்கி விளுந்தனர்.\" ஊடகங்களைத் திருத்த முடியாது. அவர்களின் குறிக்கோள் \"பணம்....பணம்.\" விளம்பரப் படங்களின் தரம் கொடிது. அவர்கள் செய்யும் தமிழ்க்கொலையை காணக் கண்கூசும்; கேட்கும் செவிப் பறை க��ழிந்து போகும்.\nஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்வளம் குறைவு. அதனால், பிறமொழிகளிலுள்ள சொற்களைக் கடன் பெற்றது. அப்பொழுதும் அது ஆங்கில ஒலிக்குறிப்பிலேயே அச்சொல்லைப் பலுக்கியது. தமிழ் பெருவளமொழி. இல்லாத சொற்களேயில்லை. கடன்பெற வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், இதுவரை புகுத்தப்பட்ட பிறமொழிச்சொற்கள் எல்லாம் தமிழின் வளத்தைக் குறைத்து அதன் தூய்மையைக் குலைத்து வந்துள்ளன. பல சொற்கள் வழக்கிழந்தன. சற்றொப்ப இருநூறு ஆண்டுகளாக ஆங்கில் வல்லாண்மையை எதிர்த்துப் போராடி வந்தும் முன்னேற்றமின்மை தமிழனின் ஆங்கில மோகத்தைத்தான் காட்டுகிறது.\"பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்\", \"உண்பாடின்றேல் பண்பாடில்லை\" என்னும் முதுமொழிக்கிணங்க, தரமுடன் வாழ்ந்த தமிழரில் சிலர், தவத்திரு மறைமலயடிகளைத் தவிர, பொருளுக்கும், புகழுக்கும் ஆசைகொண்டு தமிழ் முழக்கத்தையே கைவிட்டிருக்கின்றனர். தமிழின் இந்நிலையை நீக்க:\nஇவ்விழிநிலையிலிருந்து தமிழைக் காக்க, தமிழ் கற்றறிந்த ஆன்றோரும், மாணாக்க சமுதயமுமே ஏற்றவர்கள். இவர்கள்தாம் எதிர்காலக் குடிவாணர்கள்; அமைச்சர்கள்; அரசு. நம் தமிழைக் காக்க, வரும் இளைய தலைமுறையினர் தவறுவார்களேயாயின், பின்னர் தமிழன் என்ற இனம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\n.முன்னோர் ஆக்கிய சொற்களைக் கையாளுதல் வேண்டும்.\n.பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும்.\n.நேர் தமிழ்ச் சொல் இல்லாத பிறமொழிச் சொல்லுக்கு வேர்ச்சொல் அறிந்து, அதற்கொப்ப புதிய தமிழ்ச் சொல் உருவாக்குதல் வேண்டும். அதையும் தமிழ் ஒலிக்குறிப்பில் பலுக்குதல் வேண்டும்.\n.பிற மொழிகளில் உள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்தல் வேண்டும்.\n.திரைப்படம், சின்னத்திரையில் அழுகை புலம்பல் நாடகங்கள், பண்பலை வானொலியின் பண்பற்ற உரையாடல்கள் ஆகியவைகளைப் பார்த்தோ அல்லது கேட்டோ, அதை உள்வாங்கி அப்படியே பலுக்கக் கூடாது.\n.தமிழில் புகுத்தப்பட்ட சொற்களில் நாளொன்றுக்கு ஒரு சொல் நீக்கிப் புழங்க முயன்றால் போதும்.\n.ஒவ்வொருநாளும், அகரமுதலியிலிருந்து முன்னர் புழக்கத்தில் இருந்த தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு சொல் புதியதாகத் தெரிந்து கொள்ள முயலவேண்டும்.\nமொழி என்பது மக்கள் வாயில் வழங்கும் ஒலித்தொகுதியே. அவரினும் வேறான ஓர் உயிர் அல்லது உருவமல்ல. மக்கள் தம் தாய்மொழியைப் பேசினால் அது வாழும்; இல்லையேல் மாளும். தமிழின்றேல் தமிழனில்லை. தமிழ் அழிந்தால் தமிழன் என்னும் இனமும் அழியுமென்பதில் ஐயமேதுமில்லை. தமிழின் தூய்மையைக் காப்பது தமிழனின் தலையாய கடமை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/dado2", "date_download": "2021-08-02T10:15:00Z", "digest": "sha1:SDHTDST2ZFSRPRXYYCPGTO6VRQFN6ZU7", "length": 8090, "nlines": 114, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி பேச்சு:தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2 - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி பேச்சு:தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n< விக்சனரி பேச்சு:தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு\nபடத்தில் 2 என்னும் பகுதி (example) (பீடவிடை என்னும் பொருளில்)\nபடத்தில் சுவர்ப்பட்டி என்னும் பொருளில் (example)\nமரத்தில் அல்லது வேறு செதுக்கக்கூடிய ஒரு பொருளில் வெட்டப்படும் நீளமான குழி அல்லது காடி\nஒலிப்பு: / xடே6டோ6 /\nதமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2 (பெயர்ச்சொல்)\nமரத்தில் அல்லது வேறு செதுக்கக்கூடிய ஒரு பொருளில் வெட்டப்படும் நீளமான குழி அல்லது காடி; ப-வடிவக்குழி, செவ்வகக் குழி\nஇவ்வேலைப்பாடு கட்டிடக்கலையில், பெரும்பாலும் அழகுக்காக அமைக்கப்படுகிறது.\ndado என்னும் இத்தாலியச் சொல் datum என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து வருகிறது. அதற்கு \"தரவு\", \"அடிப்படை\", \"முன்னிடுகை\" என்பது பொருள். ஆங்கிலத்தில் 1664 முதல் வழங்குகின்றது.\n(நீண்ட குழி என்னும் பொருளில்) When viewed in cross-section, a dado has three sides (குறுக்கு வெட்டு வடிவில் பார்த்தால் * xடே6டோ6 (Dado)உக்கு (செவ்வகக் குழிக்கு) மூன்று பக்கங்கள் இருக்கும்.)\nசான்றுகள்:---தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + (தமிழிணைய மாநாடு 2010)1\nஒலிப்பு: / டா6டோ6 /\nதமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2 (பெயர்ச்சொல்)\nசெவ்வியல் அரபி اعداد (’aʕdād) (எண்கள்) என்னும் சொல்லில் இருந்து பிறந்தது.\nதா, வெளிவிடு முத���ான பல பொருள்கள் கொண்ட dar என்னும் வினையின் முடிவுற்ற இறந்தகால வடிவம் (past participle).\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 சூன் 2018, 15:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a8-and-mercedes-benz-s-class.htm", "date_download": "2021-08-02T09:36:46Z", "digest": "sha1:Y67UBZSRODYU23C35EV44JKNJFMN2MCX", "length": 29402, "nlines": 673, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ8 vs மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ஏ8 விஎஸ் எஸ்-கிளாஸ்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ8\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் s450 4மேடிக்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஏ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ8 அல்லது மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ8 மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.57 சிஆர் லட்சத்திற்கு 55 tfsi (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 2.17 சிஆர் லட்சத்திற்கு s400d 4மேடிக் (டீசல்). ஏ8 வில் 2995 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எஸ்-கிளாஸ் ல் 2999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ8 வின் மைலேஜ் 11.7 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எஸ்-கிளாஸ் ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின Yes No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்daytona கிரே pearlescentமூன்லைட் ப்ளூ மெட்டாலிக்புத்திசாலித்தனமான கருப்புபுளோரெட் சில்வர் மெட்டாலிக்டெர்ரா கிரே metallicmyth கருப்பு உலோகம்seville ரெட் metallicஇம்பலா பீஜ் முத்து விளைவுnavarra நீல உலோகம்+7 Moreஏ8 colors டிசைனோ டயமண்ட் வைட் பிரைட்ஓனிக்ஸ் பிளாக்ரூபலைட் சிவப்புஆந்த்ராசைட் நீலம்மரகத பச்சைஎஸ்-கிளாஸ் colors\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம்\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் Yes Yes\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக��ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No Yes\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nமிரர் இணைப்பு No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி ஏ8 மற்றும் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஒத்த கார்களுடன் ஏ8 ஒப்பீடு\nபேண்டம் போட்டியாக ஆடி ஏ8\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆடி ஏ8\nடான் போட்டியாக ஆடி ஏ8\nபெரரி sf90 stradale போட்டியாக ஆடி ஏ8\nராய்த் போட்டியாக ஆடி ஏ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எஸ்-கிளாஸ் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஆடி ஆர்எஸ்7 போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nபோர்ஸ்சி 911 போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nநிசான் ஜிடிஆர் போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-hope-you-will-bring-the-big-change-that-people-expected-director-bharathiraja-082605.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T10:20:19Z", "digest": "sha1:YMEAFMCNV4R4DYRYN6T4OOHC3HAV6FFF", "length": 17559, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மக்கள் எதிர்பார்த்த பெரிய மாற்றத்தைத் தருவீர்கள் என நம்புகிறேன்.. ஸ்டாலினுக்கு பாரதிராஜா வாழ்த்து! | I hope you will bring the big change that people expected: director Bharathiraja - Tamil Filmibeat", "raw_content": "\nAutomobiles 2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது\nNews TN Lockdown: தினந்தோறும் புது புது கட்டுப்பாடுகள்.. தமிழ்நாட்டில் விரைவில் முழு லாக்டவுன்\nFinance அம்பானி ஷாப்பிங் லிஸ்டில் புது நிறுவனம்.. டாடா உடன் போட்டி போடும் மாஸ்டர் பிளான்..\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nSports அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய \"ரெக்கார்டு\".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கள் எதிர்பார்த்த பெரிய மாற்றத்தைத் தருவீர்கள் என நம்புகிறேன்.. ஸ்டாலினுக்கு பாரதிராஜா வாழ்த்து\nசென்னை: தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள முக ஸ்டாலின் மக்கள் எதிர்பார்த்த பெரிய மாற்றத்தை தருவார் என நம்புவதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nமிக முக்கிய தருணத்தில் தமிழக முதல்வராகிறீர்கள்.. வாழ்த்தோடு அதையும் சொன்ன நடிகர் கார்த்தி\nஇதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கவுள்ளது.\nமுதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,\n\"ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றிகள் பகிரும் வேளையில் புதிதாகத் தேர்ந்தெ���ுக்கப்பட்டிருக்கும் அரசுக்கும், முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசென்னை மாநகர மேயராகப் பணியாற்றிய போது மிகச் சிறந்த நிர்வாகியைக் கண்டிருக்கிறோம். அதேபோல் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் நிர்வாகத்தை தங்களின் தலைமையில் அமைய உள்ள அரசிடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். தந்தையின் வழியில் தமிழின் மேன்மைகளைப் பாதுகாத்து, தமிழக உரிமைகளை மீட்டெடுத்து, தமிழையும் தமிழர்களையும் காக்க வேண்டிய பொறுப்பை முதன்மையானதாக எடுத்துக் கொள்ள தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nதிரைத்துறை சார்ந்த நலங்களை இன்னும் சிறப்பாக்குவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த பெரிய ஒரு மாற்றத்தைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. கொரானா காலகட்டம். மிகவும் சவாலான நாட்கள் தங்கள் முன் நிற்கிறது. பொருளாதாரப் பிரச்சனைகளைச் சரிசெய்து மக்களைப் பாதுகாக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களை எதிர் நோக்கி நிற்கிறோம்.\nஉங்கள் வெற்றி பல நல்லவற்றைத் தமிழகத்திற்குக் கொண்டு வரட்டும். மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துகளைத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்\" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் டிரேட் மார்க் சிரிப்பை இனி எங்கே காண்பது நெல்லை சிவா மரணம்.. பிரபலங்கள் உருக்கம்\nமுதல் பால்லயே சிக்ஸர்.. புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து\n'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து\nஏளனம் செய்தவர்களின் முன் எடுத்துக்காட்டாக நிமிர்ந்து நிற்கிறீர்.. ஸ்டாலினுக்கு பிரபலங்கள் வாழ்த்து\nகலைஞரின் பொற்கால ஆட்சியை கொடுத்து தமிழகத்தை மீட்டெடுத்து முத்திரை பதிக்க வேண்டும்.. தாணு வாழ்த்து\n\\\"ஸ்டாலின் ஆகிய நான்\\\" என்று பதவியேற்றாலும்.. \\\"நாம்\\\" என்றுதான் நாடாளுவீர்கள்.. குவியும் வாழ்த்து\nஅவசியம் அறிந்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள் ஸ்டாலினுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து\nமிக முக்கிய தருணத்தில் தமிழக முதல்வராகிறீர்கள்.. வாழ்த்தோடு அதையும் சொன்ன நடிகர் கார்த்தி\nசமூக நீதி.. வரலாறு காணாத வளர்ச்சியடைய.. வாழ்த்து சொன்ன ஏஆர் ரஹ்மான்.. அப்படியே ஏற்ற ஸ்டாலின்\nஅரசியல் தளத்தில் முதன்முறையாக அழுத்தமான வெற்றி.. ஸ்டாலினுக்கு குவியும் சினிமா பிரபலங்களின் வாழ்த்து\nகன்னியாகுமரி தொகுதியை கைப்பற்றிய விஜய் வசந்த்.. வாழ்த்து மழை பொழியும் சினிமா பிரபலங்கள்\nஆட்சிக் கட்டிலில் திமுக.. முதல் முறையாக சட்டசபையில் தடம் பதிக்கும் உதயநிதி.. பிரபலங்கள் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதல் காதல், திருமணத்துடன் தொடர்கிறது… 7 ஆண்டுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த கன்னிகா \nதுணிந்த பின்’ ஒரு அற்புதமான அனுபவம்… ‘நவரசா‘ படம் குறித்து அதர்வாவின் ருசிகரத்தகவல் \nகொஞ்சம் காத்தடிச்சாலும் அவ்ளோ தான்.. விஜய் பட ஹீரோயின் பண்ற வேலையை பார்த்தீங்களா\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/astrology/benefits-light-lamping-worship/photoshow/62083648.cms", "date_download": "2021-08-02T09:07:32Z", "digest": "sha1:QT7YVW45UR4IGYJOVYFMEQARJMMPCK6L", "length": 9780, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்தில் இரண்டற கலந்த ஒன்றாகும். பொதுவாக தீபம் ஏற்றுவதற்கு கடலை எண்ணெயைத் தவிர நெய் மற்றும் சில எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். நாம் தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய்க்கு ஏற்றபடி நமக்குப் பலன் கிடைக்கும்.\nநெய்தீபம் ஏற்றுவது சிறந்தது. நெய் தீபம் ஏற்றி, இறைவனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைப்பதோடு, இல்லத்தில் நன்மைகள் பெருகும்.\nவிளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் .\nவிளக்கெண்ணெய் தீபம் தேக நலம் தரும். புகழ் ஓங்கும். நல்ல நட்பு வாய்க்கப் பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கச் செய்யும். சுகங்கள் பெருகும். சுற்றத்தாரும் சுகம் அடைவர். இல்லற இன்பம் கிட்டும்.\nவேப்ப எண்ணெய்யில் தீபம் ஏற்���ினால் .\nவேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றினால் சகல சுகங்களும் சித்திக்கும். நன்மைகள் வந்து சேரும்.\nஐவகை எண்ணெய்களையும் கலந்து தீபம் ஏற்றினால்.\nநெய், எள்ளெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் போன்ற ஐந்து எண்ணெய்களையும் கலந்து தீபமிட்டு ஒரு மண்டலம் பூஜை செய்தால் அம்பிகையின் அருள் தட்டாமல் கிட்டும். சகல நலன்களும் பெறலாம்.\nதீபம் ஏற்றும் திசை, நேரம், கிடைக்கும் பலன்கள.\nபிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் விடியற்காலை நேரம் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபமேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும். கிழக்கு திசை நோக்கி தீபமேற்றினால் வாழ்வின் அனைத்துத் துன்பங்களும் தீரும். மேற்கு திசை நோக்கி தீபமேற்றினால் கடன் தொல்லை தீரும், சனிபீடை தொலையும், வீட்டில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அகலும், குடும்ப ஒற்றுமை கூடும். வடக்கு திசை நோக்கி தீபமேற்றினால் செல்வம் பெருகும், திருமணத் தடைகள் அகலும், மங்கள காரியங்கள் நடைபெறும். தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது.\nதீபம் ஏற்றும் முகங்களும் பலன்களும்…\nஒருமுகம் கொண்ட தீபம் ஏற்றினால், வாழ்வில் மத்திமமான பலன் ஏற்படும்; இரண்டு முக தீபத்தால், குடும்ப ஒற்றுமை ஓங்கும்; மும்முக தீபம், புத்திர சுகம் தரும்; நான்கு முக தீபம் பசு, பூமியால் லாபம் கிட்டும்; ஐந்து முக தீபம் செல்வவளம் மலையெனப் பெருகும். புண்ணியங்கள் பெருகும்.\nதீபம் ஏற்றும் திரியும் பலனும்…\nஐந்துமுகத் திரி போட்டு தீபமேற்றுவது மிக நல்லது. முன்வினைப் பயன்கள் தொலைய, செல்வவளம் பெருக தாமரைத் தண்டு நாரில் தீபம் ஏற்றலாம். மழலை வரம் வேண்டுவோர் வாழை நாரில் தீபம் ஏற்றலாம்.\nமகாலட்சுமியை நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும். நாராயணனுக்கு நல்லெண்ணெயையும் இலுப்ப எண் ணெயையும் கலந்து தீபம் ஏற்றி வழி படவேண்டும்.\nவிநாயகரை தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். அம்பிகையை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும். அனைத்து தெய்வங்களையும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\n2018-ல் உங்க ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் இதுதான்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venpu.blogspot.com/2010/", "date_download": "2021-08-02T10:03:33Z", "digest": "sha1:PYFZE2DB2WH6ML6QICJPXK47Y5A56TJS", "length": 79203, "nlines": 283, "source_domain": "venpu.blogspot.com", "title": "வெண்பூ: 2010", "raw_content": "\nகொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் அனுபவம்...\nப்ராஜ‌க்ட் மேனேஜ‌ரை குத்து விட‌ நினைக்கும் ப‌த்து த‌ருண‌ங்க‌ள்\n1. காலையில‌ இருந்து சும்மாவே இருக்கோம், இன்னிக்கு அஞ்சு ம‌ணிக்கு கிள‌ம்பிட‌லாம்னு நினைக்குற‌ப்ப‌ 4:58க்கு வ‌ந்து ஒரு நாள் முழுக்க‌ செய்யுற‌ வேலையை குடுப்பாங்க‌ளே, அப்ப‌\n2. அப்ப‌டி க‌டைசி நேர‌த்துல‌ குடுக்குற‌ வேலைய‌ முடிக்க‌ நேர‌மாயிடுச்சின்னா \"வீட்டுக்கு போக‌ க‌ம்பெனியோட‌ கார் புக் ப‌ண்ணிக்க‌லாமா\"ன்னு கேட்டா, ச‌ரின்னும் சொல்லாம‌ வேணாம்னும் சொல்லாம‌ ஒரு பார்வை பாப்பானுங்க‌ளே, அப்ப‌\n3. வேலைய‌ முடிச்ச‌வுட‌னே அதை ச‌ரி பாக்காம‌ அதை அப்ப‌டியே க்ளைய‌ன்ட்டுக்கு அனுப்பிட்டு அவ‌ன் திட்டுறான்னு ந‌ம்ம‌ள‌ காச்சுவாங்க‌ளே, அப்ப‌\n4. ந‌ல்ல‌தா எவ்வ‌ள‌வு வேலை செஞ்சாலும் க‌ண்டுக்க‌வே செய்யாம‌, எதாவ‌து சின்ன‌ த‌ப்பு செஞ்சாலும் மொத்த‌ டீமும் இருக்குற‌ப்ப‌ ப‌ப்ளிக்கா திட்டுவாங்க‌ளே, அப்ப‌\n5. ஜீன்ஸ் பேன்ட்டும், தோல் செருப்பும் போட்டுட்டு வ‌ந்துட்டு, ந‌ம்ம‌கிட்ட‌ \"வொய் யூ ஆர் நாட் ஃபாலோயிங் ட்ரெஸ் கோட்\"ன்னு கேப்பானுங்க‌ளே, அப்ப‌\n6. ரொம்ப‌ நாள் க‌ழிச்சி ந‌ம்ம‌ க்ளோஸ் ஃப்ர‌ண்ட் ஃபோன் ப‌ண்ணி பேசிட்டு இருக்குற‌ப்ப‌, \"ஹேய், இங்க‌ வா, நீ க‌ம்ப்ளீட் ப‌ண்ணுன‌ வேலையில‌ ஒரு ட‌வுட்\" அப்ப‌டின்னு க‌த்துவானுங்க‌ளே,அப்ப‌\n7. டெய்லி 11 ம‌ணிக்குதானு வ‌ருவாங்க‌ன்னு நினைச்சி ஒரே ஒரு நாள் கொஞ்ச‌ம் லேட்டா 10 ம‌ணிக்கு ஆபிஸ் போனா அன்னிக்கு ம‌ட்டும் 9 ம‌ணிக்கே வ‌ந்துட்டு \"வொய் ஆர் யூ க‌ம்மிங் லேட் எவ்ரி டே\n8. ல‌ஞ்ச் முடிச்ச‌ப்புற‌ம் மொத்த‌ டீமையும் கான்ஃப்ர‌ன்ஸ் ரூமுக்கு கூப்புட்டு \"க‌ம்பெனியோட‌ எதிர்கால‌த் திட்ட‌ம்\"னு புரியாத‌ பாஷையில‌ ஒண்ணே முக்கா ம‌ணி நேர‌ம் ப்ளேடு போடுவாங்க‌ளே, அப்ப‌\n9. ரெண்டு வ‌ருச‌ம் பிர‌ச்சினை இல்லாம‌ வேல‌ செஞ்சிட்டு, க‌ரெக்டா நாம‌ லோன் எடுத்து காரோ, வீடோ வாங்கின‌ அடுத்த‌ நாளே கூப்பிட்டு, \"கிளைய‌ன்ட் ப்ராஜ‌க்ட் டீம் சைசை குறைக்க‌ச் சொல்லிட்டான். உங்கள‌ இந்த‌ மாச‌த்தோட‌ ப்ராஜ‌க்ட்ல‌ இருந்து ரிலீஸ் ப‌ண்ணுறேன்\"ன்னு சொல்லி வ‌ய‌த்துல‌ புளிய‌ க‌ரைப்பாங்க‌ளே, அப்ப‌\n10. ஆறு மாச‌ம் இர‌வு ப‌க‌லா உழ���ச்சிட்டு, அப்ரைச‌ல் டிஸ்க‌ஷ‌னுக்கு போனா நாம ப‌ண்ணுன‌ எல்லா த‌ப்பையும் (ம‌ட்டும்) பேசிட்டு \"நீ இன்னும் இம்ப்ரூவ் ப‌ண்ண‌ணும், உன‌க்கு ரேட்டிங் 3க்கு மேல‌ குடுக்க‌ முடியாது, உன‌க்கு என்ன‌ உத‌வி வேணும்னாலும் கேளு\"ன்னு சிரிச்சிட்டே சொல்லுவானுங்க‌ பாரு, அப்ப‌ வ‌ர்ற‌ கோவ‌த்துக்கு...\nLabels: அனுப‌வ‌ம், ந‌கைச்சுவை, நையாண்டி, ப‌த்துப‌திவு\nகார்க்கி வ‌ழ‌ங்கும் \"ஃபோனை போட்டு, கேளு பாட்டு\"\nத‌மிழ் ப‌திவுல‌கின் ச‌மீப‌த்திய‌ வ‌ள‌ர்ச்சியைத் த‌ன் விள‌ம்ப‌ர‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ நினைக்கும் டுபாக்கூர் எஃப் எம், ப‌திவ‌ர் ஒருவ‌ரை வைத்து நிக‌ழ்ச்சி ஏற்பாடு செய்கிறது. நிக‌ழ்ச்சிக்கு \"யூத்தான‌ ப‌திவ‌ர் தேவை\" என்ற‌ விள‌ம்ப‌ர‌ம் பார்த்து சென்ற‌வ‌ர்க‌ளில் கார்க்கி தேர்வு செய்ய‌ப்ப‌டுகிறார். முத‌ல் நாள் மாலையில் இருந்தே காத்திருந்து தேர்வு ஆகாத‌த‌தால் கோப‌த்துட‌ன் அங்கிருந்து செல்கின்ற‌ன‌ர் யூத் கேபிளும், நைஜீரியா ராக‌வ‌னும்.\nகார்க்கி: இது உங்க...ள் டுபாக்கூஊஊஊஊஊஊஊர் எஃப் எம்மின் \"ஃபோனைப் போட்டு, கேளு பாட்டு\" நிக‌ழ்ச்ச்ச்ச்ச்ச்ச்சி.. உட‌னே உங்க‌ ஃபோனை எடுத்து சிங்கிள் சீரோ ட‌புள் சீரோ ட்ரிபுள் சீரோ அடிங்க‌, எங்கிட்ட‌ பேசுங்க‌, உங்க‌ளுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க‌\nஹ‌லோ.. இது டுபாக்கூர் எஃப் எம், நீங்க‌ யாரு\nநானு விருக‌ம்பாக்க‌த்துல‌ இருந்து குர்சிம் பேசுறேங்க‌..\nசொல்லுங்க‌ குர்சிம், நீங்க‌ என்ன‌ ப‌ண்ணுறீங்க‌\nஎன்ன‌த்த‌ ப‌ண்ணுற‌து, ஒண்ணும் ப‌ண்ணாம‌ சும்மாத்தான் இருக்கேன்.\n ந‌ல்ல‌ விச‌ய‌மே எதுவும் இல்லையா என்ன‌\nகுடும்ப‌த்தோட‌ செல‌வு ப‌ண்ண‌ நிறைய‌ டைம் கிடைக்குது, நானும் ச‌ந்தோச‌மா இருக்கேன், என் ஃபேமிலியும் ச‌ந்தோச‌மாத்தான் இருக்கு\nந‌ல்ல‌ விச‌ய‌ம்.. ச‌ரி சொல்லுங்க‌, உங்களுக்கு என்ன‌ பாட்டு வேணும்\n\"நான் செத்துப் பொழ‌ச்ச‌வ‌ன்டா, எம‌னைப் பாத்து சிரிச்ச‌வ‌ன்டா\"\n எத்த‌னை பேர் வ‌யிறெரிய‌ப் போறாங்களோ அதெல்லாம் ப‌ழைய‌ பாட்டு, இப்ப‌ போட‌ முடியாது.. அடுத்த‌ கால‌ரை பாப்போம்.\nநானு கோய‌முத்தூர்ல‌ இருந்து தென்க‌ரை சூல‌ன் பேசுறேங்க‌..\nசொல்லுங்க‌ சூல‌ன், ஆயிர‌த்தில் ஒருவ‌னைத் த‌விர‌ வேற‌ எந்த‌ ப‌ட‌த்துல‌ இருந்து வேணும்னா பாட்டு கேளுங்க‌, போடுறோம்.\nஎன‌க்கு சிம்லா ஸ்பெஷ‌ல்ல‌ இருந்து\nயோவ் ம���ழுசா கேளுய்யா, \"உன‌க்கென்ன‌ மேலே நின்றாய், ஓ ந‌ந்த‌லாலா\" பாட்டு போடுங்க‌..\nஉங்க‌ளுக்கு ஏன் அந்த‌ பாட்டு புடிக்கும் சூல‌ன்\nஅதுல‌ ரெண்டு வ‌ரி வ‌ரும் பாருங்க‌..\nயார் யாரோ ந‌ண்ப‌ன் என்று, ஏமாந்த‌ நெஞ்ச‌ம் உண்டு\nபால் போல‌ க‌ள்ளும் உண்டு, நிற‌த்தாலே ரெண்டும் ஒன்று\nஇருங்க‌.. தேடிப்பாக்குறேன், அட‌ அந்த‌ பாட்டும் இல்லைங்க‌.. இருங்க‌ அடுத்த‌ கால‌ரை பாப்போம்.\nஹ‌லோ இது டுபாக்கூர் டிவிங்க‌ளா\nஅப்ப‌டிங்க‌ளா, மாத்தி கூப்பிட்டுட்டேன் போல‌, கொஞ்ச‌ம் குழ‌ப்ப‌மாத்தான் இருக்கு.\nநீங்க‌ எங்க‌ இருந்து பேசுறீங்க‌\nநான் கீழ்பாக்க‌த்துல‌ ஆஸ்பிட்ட‌ல்ல‌ இருந்து பேசுறேன்.\n(கார்க்கி ம‌ன‌துக்குள்): அட‌ப்பாவிங்க‌ளா, இதை எல்லாம் க‌ண்பார்வையில‌யே வெச்சுக்க‌மாட்டாங்களா, குறைஞ்ச‌து ஃபோனையாவ‌து கைக்கு எட்டாம‌ வெக்க‌ மாட்டாங்க‌ளா (ச‌த்த‌மாக‌) நீங்க‌ ஃபோனை ப‌க்க‌த்துல‌ யாராவ‌து அட்டென்ட்ட‌ர் இல்ல‌ டாக்ட‌ர் இருந்தா குடுங்க‌..\nநாம‌ அடுத்த‌ கால‌ரை பாக்க‌லாம்.\nஒரு நிமிச‌ம் இருங்க‌, என‌க்கு ஒரு கால் வ‌ருது..\nசெல்ஃபோனில் \"ஹா.. சொல்லு செல்ல‌ம்.. சாய‌ங்கால‌ம் மீட் ப‌ண்ண‌லாம்.. ஓகே. ஓகே.. ம்ம்ம்\"\nபேசி முடித்து மீண்டும் நிக‌ழ்ச்சியில்,\nசொல்லுங்க‌.. நீங்க‌ யார் பேசுறீங்க‌\n என்ன பாட்டு வேணும் உங்களுக்கு\nபாட்டெல்லாம் வேணாங்க. அதை நானே பாடி அடுத்தவங்களை கொன்னுக்குறேன்.ஒரே ஒரு வசனம் மட்டும் போடுங்க.\nஎன்ன வசவுங்க‌.. ச்சீ.. வ‌ச‌னங்க\n என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று.எதிரிகளை நான் பாத்துக்குறேன்\nம்க்ம்.. இதுக்கு ஒண்ணும் குறைச்ச‌ல் இல்ல‌..\nஎல்லாம் ஆம்ப‌ளைங்க‌ளா கூப்பிடுறாங்க‌ப்பா.. இதோ ஒரு பெண்ணோட‌ குர‌ல்\nசொல்லுங்க‌ மேட‌ம், உங்க‌ பேர் என்ன‌\nநான் ம‌துரையில‌ இருந்து பேசுறேங்க‌, பேரு ம‌ஞ்சுளாங்க‌..\nந‌ல்ல‌ ம‌ங்க‌ள‌க‌ர‌மான‌ பேருங்க‌.. சொல்லுங்க‌ என்ன‌ பாட்டு வேணும்\nஎன‌க்கு \"புதுமைப்பெண்\" ப‌ட‌த்துல‌ இருந்து \"ஒரு தென்ற‌ல் புய‌லாகி வ‌ருதே\" பாட்டு போடுங்க‌\n(சிறிது நேர‌த் தேட‌லுக்குப் பின்) அட‌டா அந்த‌ பாட்டு இல்லைங்க‌, ந‌ன்றிங்க‌.. அடுத்த‌ நேய‌ரைப் பாக்குறேன்.\n(க‌ர‌டு முர‌டான‌ ஒரு குர‌ல்) டேய் ஒரு பெண் நேய‌ர் கேக்குற‌ப் பாட்டைப் போடாத‌ பார்ப்ப‌ன‌ப் பொறுக்கி த‌டியா\nஹ‌லோ என்ன‌ங்க‌, இப்ப‌டி பேசுறீங்க‌, நீங்க‌ யாரு\n யேய்... நீதா���‌ கொஞ்ச‌ நேர‌த்துக்கு முன்னால‌ கீழ்பாக்க‌த்துல‌ இருந்து பேசுன‌, இப்ப‌ எதுக்கு வேற‌ வாய்ஸில‌ பேசுற‌..\nஅதெல்லாம் தெரியாது நீ ஒரு பொறுக்கி, உன் வீட்டுக்கு நாங்க‌ வ‌ந்து ர‌க‌ளை ப‌ண்ணுவோம்.\nதிடீரென‌ அடுத்த‌ குர‌ல்... ச்சீ த்தூ.. ஆணாத்திக்க‌ சமூக‌த்தின் நீட்சிதான் இந்த‌ நிக‌ழ்ச்சியே, ஒரு பெண் கேட்கும் பாட‌லைக் கூட‌ ஒலிப‌ர‌ப்பாத‌ நீங்க‌ள் எல்லாம் நாய்க‌ளை விட‌ கீழான‌வ‌ர்க‌ள்.. த்தூ.. த்தூ.. த்தூ.. த்தூ..\nஏங்க‌, எதுக்கு இப்ப‌ நாய்னெல்லாம் சொல்றீங்க‌, இந்த‌ ப்ரோக்ராம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு, போலீஸ்க்கு போவோம் தெரியும்ல‌\nஹ‌லோ, ரீசீவ‌ரை தொட‌ச்சிட்டு பேசுங்க‌, நீங்க‌ துப்புன‌ எச்சி ரிசீவ‌ர்ல‌ ரொம்பி என‌க்கு ஒண்ணுமே ச‌ரியா கேக்குல‌,\nநாய் என்று நான் என்னையே சொல்லிகிட்டேன்\nஇன்னிக்குதான்யா நீ க‌ரெக்டா பேசியிருக்க..\n(குர‌ல் மாறுகிற‌து) விடுங்க‌ அங்கிள், நீங்க‌ என்ன‌ சொன்னாலும் சில‌ ப‌ன்னிங்க‌ளுக்கு புரியாது\nஇதுக்கு அந்த‌ ஆளே ப‌ர‌வாயில்ல‌, நாய்ன்னு ம‌ட்டும் சொன்னாரு, நீ என்ன‌மோ ப‌ன்னின்ற‌, இன்னிக்கு என்ன‌ எல்லாரும் க‌ண்ணாடி முன்னால‌ நின்னு பேசிட்டு இருக்கீங்க‌ளா\nஇன்னிக்கு என‌க்கு டைம் ச‌ரியில்ல‌.. அடுத்த‌ கால‌ரை பாப்போம்..\nஹலோ.. பேர சொல்லுங்க சார்..\nஎங்க வீட்டுக்கு நீ கால் போட்டா டீசண்ட்டா பேசனுமா\nசாரி. நீங்கதான் கால் பண்ணியிருக்கிங்க‌.\nநீ முதல்ல‌ பண்ணத பார்த்துட்டுதான் நான் பேசறேன்டா பேமானி\nநான் நெருப்பு நீல‌மேக‌ம் பேசறேன்டா.\n வ‌டிவேலு தீப்பொறி திருமுக‌மா வ‌ர்ற‌ ப‌ட‌த்துல‌ சிங்க‌முத்து வ‌ருவாரே, அந்த‌ கேர‌க்ட‌ரா சார்\nஎன்ன பாட்டு சார் வேணும்\n உனக்கு வேட்டு வைக்க போறேன்டா.\n(கார்க்கி ச‌லிப்புட‌ன் ம‌ன‌திற்குள்) இன்னிக்கு எவ‌ன் முக‌த்துல‌ விழிச்சேன்னு தெரிய‌லையே.. அட‌ ச‌ட்.. அந்த‌ புது க‌ண்ணாடிய‌ பெட்டுக்கு நேரா மாட்டாத‌ன்னு சொன்னேன், கேட்டாங்க‌ளா..\nஏதோ ஒரு எஸ்.டி.டீ கால் வருகிற‌து.\nசொல்லுங்க சார் உங்க பேர்\nநான் பெங்க‌ளூர் ப‌வா பேசுறேன்.\nநியாயம் வேணும். ஆதாரம் வேணும்.\nசார். அதெல்லாம் கிடைக்காது, என்ன‌ பாட்டு வேணும்னு ம‌ட்டும் சொல்லுங்க‌..\nபோடா என் வென்ட்ரு.. என்னை ஒருத்த‌ன் திட்டுறான்னு சொல்லிட்டு இருக்கேன், நீ பாட்டு கேக்குற‌..\nநிக‌ழ்ச்சி இய‌க்குன‌ர் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ உள்ளே வ‌���ுகிறார். கையில் ஒரு நீள‌மான‌ துணி..\nஇதாண்டா அடுத்த‌ கால‌ர்.. வெளில இந்த நிகழ்ச்சியை கண்டிச்சும் ஆதரிச்சும் சட்டையக் கிழிச்சுட்டு சண்டை போட்டத சமாதானப்படுத்தப்போய் கிழிஞ்ச என்னோட சட்டை காலர்தான் இது, இந்தா வெச்சுக்க. மொதல்ல சீட்டை விட்டு எந்திரிச்சு ஓடிப்போய்டு.. ஆமா.\nகார்க்கி எழும்முன் ஃபோன் அடிக்கிற‌து.. தெரியாம‌ல் கை ப‌ட்டு அடுத்த‌ முனையில் இருப்ப‌வ‌ர் பேச‌ ஆர‌ம்பிக்கிறார்.\nஹ‌லோ, நான் காதி பேசுறேங்க‌\n(கார்க்கி ம‌ன‌துக்குள்) ந‌ல்ல‌ வேளை பேதின்னு சொல்லாம‌ போனாரு..\nசொல்லுங்க‌ காதி, என்ன‌ பாட்டு வேணும்\nபாட்டெல்லாம் வேணாங்க‌, ஒரு பேட்டி ம‌ட்டும்...\n\"ம‌றுப‌டியும் ஆர‌ம்ப‌த்திலேர்ந்தா\" என்ற‌ அல‌ற‌லுட‌ன் பீதியாகி கார்க்கி, டைர‌க்ட‌ர் எல்லாம் பின்ன‌ங்கால் புட‌னியில் அடிக்க‌ ஓடுகிறார்க‌ள்.\nLabels: அனுப‌வ‌ம், சொற்சித்திர‌ம், ந‌கைச்சுவை, புனைவு\nப‌திவுல‌க‌ பெண்ணுரிமைக் காவ‌ல‌ன் ஆவ‌து எப்ப‌டி\n1. முத‌லில் ப‌திவுல‌கில் இருக்கும் பெண் ப‌திவ‌ர்க‌ள் அனைவ‌ரைப் ப‌ற்றிய‌ டேட்டாபேஸ் இருப்ப‌து முக்கிய‌ம்\n2. புதிதாக‌ எந்த‌ பெண் ப‌திவ‌ர் எழுத‌ வ‌ந்தாலும் அவ‌ரையும் டேட்டாபேஸில் சேர்த்துக் கொள்ள‌வும்\n3. அனைத்து பெண் ப‌திவ‌ர்க‌ளையும் ஃபாலோ செய்ய‌வும். அவ‌ர்க‌ள் உங்க‌ளை ஃபாலோ செய்ய‌வில்லை என்றாலும் க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டாம்\n4. பெண் ப‌திவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ள் ரீட‌ரில் தெரிந்த‌ உட‌னே ஓடிப் போய் முத‌ல் பின்னூட்ட‌ம் போட‌ வேண்டும். \"அருமை\", \"பாராட்டுக‌ள்\", \"உங்க‌ள் எழுத்துக்கு ராய‌ல் ச‌ல்யூட்\", \"எப்ப‌டி இப்ப‌டி எல்லாம் :)))\" போன்ற‌ டெம்ப்ளேட் பின்னூட்ட‌ங்க‌ளே போதுமான‌து\n4.1 நீங்க‌ள் ப‌திவை ப‌டிக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம் இல்லை, முத‌ல் பின்னூட்ட‌ம் ரெக்கார்ட் ஆவ‌துதான் முக்கிய‌ம்\n4.2 நீங்க‌ள் த‌ற்போதுதான் காவ‌ல‌ராக‌ முய‌ற்சி செய்ப‌வ‌ராக‌ இருப்பின், முத‌ல் பின்னூட்ட‌ம் போடுவ‌து கொஞ்ச‌ம் க‌டின‌மாக‌ இருக்க‌லாம். ஏற்க‌ன‌வே பொறுப்பில் இருக்கும் சீனிய‌ர் காவ‌ல‌ர்க‌ள் / ஏட்டைய்யாக்க‌ளை தாண்டி முத‌லிட‌த்தை பிடிக்க‌ போராட‌ வேண்டி இருக்கும்\n5. பாஸிட்டிவ் ஓட்டு போட‌வும்\n5.1 ஒருவேளை அந்த‌ ப‌திவ‌ர் த‌மிழ்ம‌ண‌த்திலோ, த‌மிழிஷ்ஷிலோ இன்னும் இணைக்க‌வில்லை என்றால் நீங்க‌ளே இணைத்து ஓட்டு போட‌ வேண்டி இருக்க‌லாம்.\n6. உங்க‌ள் ஜிடாக், யாஹீ மெச‌ன்ஜ‌ர், ட்விட்ட‌ர், ப‌ஸ், ர‌யில், மாட்டுவ‌ண்டி, மூணு ச‌க்க‌ர‌ சைக்கிள் எல்லா இட‌த்திலும் அந்த‌ ப‌திவிற்கு லிங்க் குடுக்க‌வும்\n7. எப்பாடு ப‌ட்டாவ‌து பெண் ப‌திவ‌ர்க‌ளின் இமெயில் முக‌வ‌ரியை க‌ண்டுபிடிக்க‌வும்.\n7.1 அவ‌ர்க‌ளுக்கு \"ஹாய், எப்ப‌டி இருக்கீங்க‌\" என்று மெயில் அனுப்ப‌லாம்\n7.2 அவ‌ர்களுக்கு சாட் ரிக்வெஸ்ட் அனுப்ப‌லாம்.\n7.3 அவ‌ர்க‌ளிட‌மிருந்து ரிப்ளை வ‌ர‌வில்லை என்றாலோ, அவ‌ர்க‌ள் திட்டி ரிப்ளை செய்தாலோ ம‌ன‌ம் த‌ள‌ர‌மால் மீண்டும் மீண்டும் முய‌ற்சிக்க‌வும். விக்ர‌மாதித்த‌ன், க‌ஜினி முக‌ம‌து க‌தைக‌ளைப் ப‌டிப்ப‌து இத‌ற்கு உத‌வ‌லாம்.\n8. யாராவ‌து, எதாவ‌து, யாரைப் பற்றியாவ‌து சொன்னாலும் \"பாருங்க‌, அவ‌ன் உங்க‌ள‌த்தான் கேவ‌லமா பேசுறான்\" என்று பெண் ப‌திவ‌ர்க‌ளிட‌ம் வ‌த்தி வைக்க‌லாம். 7.3ஐ மீண்டும் ப‌டித்துக் கொள்ள‌வும்.\n9. நீங்க‌ இதை எல்லாம் ப‌ண்ணுவ‌து அந்த‌ பெண் ப‌திவ‌ர்க‌ளுக்கு அசூசையை ஏற்ப‌டுத்தி அவ‌ர்க‌ளின் நண்ப‌ர்க‌ள் உங்க‌ளை பிடித்து காச்சு காச்சு என்று காச்ச‌லாம். அமைதியாக‌ கேட்டுக் கொண்டு மீண்டும் மேற்க‌ண்ட‌ அனைத்தையும் தொட‌ர‌வும். வ‌ன்முறை உத‌வாது என்று காந்தி ம‌கான் சொன்ன‌தை இத‌ற்கு ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து சால‌ச் சிற‌ந்த‌து.\nபினா குனா (அட‌, பின்குறிப்புங்க‌)\n1. மேலே உள்ள சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரேனும் தனக்கென்று எடுத்துக் கொள்வாராயின் அவரே முழுக் குற்றவாளி,\n2. இவ‌ற்றை எல்லாம் முய‌ன்று அத‌ன் விளைவாக‌ வெற்றியோ, தோல்வியோ, த‌ர்ம‌ அடியோ எது ந‌ட‌ந்தாலும் க‌ம்பேனி பொறுப்பேற்காது\n3. இந்த‌ ப‌திவைப் ப‌டித்த‌தும், if you feel uncomfortable... கைய‌ குடுங்க‌ சார்.. நீங்க‌ ஏற்க‌ன‌வே த‌மிழ்ப் ப‌திவுல‌கின் பெண்ணுரிமைக் காவ‌ல‌ராய்ட்டீங்க‌.. வாழ்த்துக‌ள்.\nLabels: ந‌கைச்சுவை, ப‌திவ‌ர்வ‌ட்ட‌ம், ம‌ர‌ண‌மொக்கை, மொக்கை\nதூர‌த்தில் தெரிந்த‌ க‌ட‌லின் அலைக‌ளைவிட‌ அதிக‌மாக‌ அலைபாய்ந்து கொண்டிருந்தேன் நான். நான் நாராய‌ண், ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் அலுவ‌ல‌க‌த்திலும் மாட‌ர்னாய் ந‌ரேன். அம‌ர்ந்திருந்த‌து ராதாகிருஷ்ண‌ன் சாலையில் இருக்கும் அந்த‌ பெரிய‌ ஹோட்ட‌லின் மொட்டை மாடி பார். உட‌ன் என் ந‌ண்ப‌ன் ஈஸ்வ‌ர்.\n\"என்ன‌டா ரொம்ப‌ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே\n\"இல்ல‌ ஈஸ்வ‌ர், க‌ம்பெனியில‌ சேந்து போன‌ ஜ‌ன‌வ‌ரியோட‌ மூணு வ‌ருச‌ம் முடிஞ்சிடுச்சி. இன்ன‌மும் எந்த‌ மாற்ற‌மும் இல்லை. அதே டெஷிக்நேஷ‌ன், அதே ச‌ம்ப‌ள‌ம், அதே வேலை.. ரொம்ப‌ க‌டுப்பா இருக்குடா\"\n இப்ப‌ நீ சீனிய‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்ட்டா இருக்க‌, ஆனா வேலை பாக்குற‌ ரோல் என்ன‌வோ ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர்தான். ஏற‌த்தாழ‌ ஒன்ற‌ரை வ‌ருச‌மா இந்த‌ 15 பேர் டீமை க‌ட்டி மேச்சிட்டு இருக்குற‌. பெரிசா பிர‌ச்சினைக‌ளும் ஒண்ணும் வ‌ர‌லை, அத‌னால‌ இந்த‌ முறை உன‌க்கு க‌ண்டிப்பா ப்ரோமோஷ‌ன் கிடைச்சிடும் க‌வ‌லைப்ப‌டாத‌\"\nஈஸ்வ‌ருக்கு எல்லா விச‌ய‌மும் தெரிவ‌த‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ன் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் என்பது ம‌ட்டும‌ல்ல‌, அவ‌னும் என் க‌ம்பெனியிலேயே வேலை செய்ப‌வ‌ன். இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் என் ரெஃப‌ர‌ல் மூல‌ம் என் க‌ம்பெனியில் சேர்ந்த‌வ‌ன், ஏற்க‌ன‌வே ஒரு டிய‌ர் ஒன் க‌ம்பெனியில் வேலை செய்த‌வ‌ன் ஆகையால் சுல‌ப‌மாக‌ மேனேஜ‌ர் டெசிக்நேஷ‌னிலேயே சேர்ந்த‌வ‌ன். சேர்ந்த‌ ஒரே வ‌ருட‌த்தில் ப்ரோமொஷ‌னுட‌ன் அசோசிய‌ட் டைர‌க்ட்ராகி 120 மெம்ப‌ர் அக்க‌வுன்ட்டை வ‌ழிந‌ட‌த்திக் கொண்டிருப்ப‌வ‌ன்.\n\"நீ என் அக்க‌வுன்ட்ல‌ இருந்தா பிர‌ச்சினையே இல்ல‌, பிஸின‌ஸ் யூனிட் ஒண்ணாவே இருந்தாலும் நீ வேற‌ அக்க‌வுன்ட்ல‌ இருக்குற‌, அது ம‌ட்டுமில்லாம நாம‌ ரெண்டு பேரும் ஃப்ர‌ண்ட்ஸ்னு ஊருக்கே தெரியும். அத‌னால‌ என்னால‌ உன‌க்கு ப‌ரிஞ்சு பேச‌வும் முடியாது, ஸாரிடா ந‌ரேன்\"\n\"ச்சீ.. இதுக்கு எதுக்கு ஸாரி எல்லாம் கேட்டுகிட்டு என‌க்கு க‌வ‌லை என்னான்னா ந‌ம்ம‌ பி.யூ.வோட‌ சைசே ரொம்ப‌ சின்ன‌து. இதுல‌ சீனிய‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்ட்ல‌ இருந்து மேனேஜ‌ர் ப்ரொமொஷ‌ன் அதிக‌ப‌ட்ச‌ம் ஒருத்த‌ருக்குதான் கிடைக்கும். அதுதான் க‌வ‌லையா இருக்கு\"\n\"ந‌ல்ல‌தே ந‌ட‌க்கும்னு நினை. ஏன் எதுனா பிர‌ச்சினை இருக்கும்னு நினைக்கிற‌யா\n\"ஒரே விச‌ய‌ம்தான் அரிச்சிட்டு இருக்கு. போன‌ அக்டோப‌ர் டூ டிச‌ம்ப‌ர் க்வார்ட‌ர்ல‌ நான் குடுத்த‌ ரெவின்யூ ஃபோர்காஸ்ட்டை அச்சீவ் ப‌ண்ண‌ முடிய‌லை. ரெண்டு டெவ‌ல‌ப்ப‌ர்ஸ் க‌ல்யாண‌ம்னு மூணு மூணு வார‌ம் லீவு போட்டுட்டாங்க‌. அதுல‌ ரெண்டு வார‌ம் கோஇன்சைட் ஆன‌துனால‌ நான்பில்ல‌பிள் ரிசோர்ஸ‌சை வெச்சிம் பில்லிங்கை ச‌ரி ப‌ண்ண‌ முடிய‌லை. எப்ப‌டியோ அப்ப‌ பேசி ச‌மாளிச்சிட்டேன். இப்ப‌ ப்ரோமொஷ‌ன் ரேட்டிஃபிகேஷ‌ன்ல‌ இதைப் பேசுனா பிர‌ச்சினையாகுமேன்னு பாக்குறேன்\"\n\"அட‌ விடுறா.. பி.யூ லெவ‌ல் மேனேஜ‌ர் ப்ரோமொஷ‌ன் ரேட்டிஃபிகேஷ‌ன் மீட்டிங்ல‌ நானும்தான் இருப்பேன். பாக்க‌லாம் உங்க‌ ஆளு உன்னை எப்ப‌டி டிஃப‌ன்ட் ப‌ண்ணுறாருன்னு, ச‌ரி கிள‌ம்புறேன்டா நானு\"\nஒரு மாத‌த்தை ம‌ன‌ அழுத்தத்‌துட‌னே ஓட்டிய‌ பின், அன்று மாலை என் அக்க‌வுன்ட் ஓன‌ர் சுந்த‌ர் என்னை அழைத்தார். உள்ளுக்குள் ஏதோ குறுகுறுவென‌ ஏற‌த்தாழ‌ அவ‌ர‌து கேபினுக்கு ஓடினேன்.\nச‌ம்பிர‌தாய‌மான‌ ப்ராஜ‌க்ட் அப்டேட்ஸ், ந‌ல‌ விசாரிப்புக‌ள் முடிந்த‌தும் அவ‌ரே மேட்ட‌ருக்கு வ‌ந்தார்.\n\"ந‌ரேன், நீ இந்த‌ க‌ம்பெனியில‌ சேந்து மூணு வ‌ருச‌மாச்சி. ஏற‌த்தாழ‌ க‌ட‌ந்த‌ ரெண்டு வ‌ருச‌மா இந்த‌ ப்ராஜ‌க்ட்டை அழ‌கா ஹேண்டில் ப‌ண்ணிட்டு இருக்க‌\"\n\"நான்தான் உன‌க்கு தேங்க்ஸ் சொல்ல‌ணும். நான் இந்த‌ அக்க‌வுன்ட்டுக்கு சார்ஜ் எடுத்துட்ட‌ க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருச‌த்துல‌ என‌க்கு அதிக‌மா பிர‌ச்சினையே குடுக்காம, ஸ்டேட்ட‌ஸ் ரிப்போர்ட் எவ‌ர் க்ரீனா இருக்குற‌ ஒரே ப்ராஜ‌க்ட் உன்னோட‌து\"\n\"ஐ நோ.. நீ உன்னோட‌ ப்ரோமொஷ‌னை எதிர்பார்த்துட்டு இருக்குற‌. என்னைக் கேட்டா, ஐ வுட் ஸே யூ டிஸ‌ர்வ் த‌ட்\"\nசில‌ விநாடிக‌ள் என் க‌ண்க‌ளையே தீர்க்க‌மாக‌ பார்த்தார் சுந்த‌ர்.\n\"ப‌ட், ஐ'ம் ஸாரி ந‌ரேன்.. இந்த‌ முறை என்னால‌ உன‌க்கு ப்ரோமோஷ‌ன் வாங்கித்த‌ர‌ முடிய‌லை\"\nகாலுக்கு கீழே பூமி ந‌ழுவிய‌து. க‌ண்க‌ளில் எதாவ‌து நீர் திரையிடுவ‌து தெரிந்து விட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ த‌லையை கீழே க‌விழ்த்தேன்.\n\"ஐ நோ ஹ‌வ் இட் ஃபீல்ஸ்.. நான் எவ்வ‌ள‌வோ முய‌ற்சி ப‌ண்ணுனேன். இந்த‌ முறை ப்ரோமோஷ‌ன் ப்ராச‌ஸ் ரொம்ப‌ ஸ்ட்ரிக்ட். ந‌ம்ம‌ பிஸின‌ஸ் யூனிட்ல‌ இருந்து ஒரே ஒருத்த‌ரைத்தான் மேனேஜ‌ரா ப்ரோமோஷ‌ன் ப‌ண்ண‌முடியும்னு சொல்லிட்டாங்க‌. இருந்த‌து நாலு க‌ன்டெஸ்டென்ட்ஸ். லாஸ்ட் ரெண்டு வ‌ரைக்கும் நீ ரேஸில் இருந்த‌, ப‌ட்..\"\nத‌லையைக் குனிந்த‌வாறே கையை உய‌ர்த்தி அவ‌ர் பேசுவ‌தை இடைம‌றித்தேன்.\n\"இந்த‌ அக்க‌வுன்ட்டுக்கு மூணு வ‌ருச‌ம் உழைச்ச‌துக்கு என‌க்கு இவ்வ‌ள‌வுதான் ம‌ரியாதை இல்லையா ஒருவேளை ஈஸ்வ‌ரோட‌ அக்க‌வுன்ட்ல‌ இருந்திருந்தா இந்நேர‌ம் என‌க்கு க‌ண்டிப்பா ப்ரோமோஷ‌ன் கிடைச்சிருக்கும் இல்லையா சார் ஒருவேளை ஈஸ்வ‌ரோட‌ அக்க‌வுன்ட்ல‌ இருந்திருந்தா இந்நேர‌ம் என‌க்கு க‌ண்டிப்பா ப்ரோமோஷ‌ன் கிடைச்சிருக்கும் இல்லையா சார்\" அந்த‌ சார் என்ப‌தில் இருந்த‌ கேலி அவ‌ருக்கும் புரிந்திருக்கும்.\nசிறிது நேர‌ம் அவ‌ர் எதுவும் பேசாம‌ல் போக‌, த‌லையை உய‌ர்த்தி அவ‌ரைப் பார்த்தேன். எந்த‌ உண‌ர்ச்சியும் காட்டாத‌ வ‌ழ‌க்க‌மான‌ போக்க‌ர் ஃபேஸுட‌ன் என்னையே தீர்க்க‌மாக‌ பார்த்துக் கொண்டிருந்தார்.\n உங்க‌கிட்ட‌ இதுக்கு ப‌தில் கிடையாதுன்னு தெரியும். நான் சீட்டுக்கு போறேன்\" என்று வெறுப்பாக‌ பேசிவிட்டு எழுந்து திரும்பி க‌த‌வில் கை வைத்தேன்.\nஅவ‌ர் இப்போது ப‌தில் பேசினார் \"நான் இப்ப‌ என்ன‌ சொன்னாலும் உன‌க்கு ம‌ன‌சு ஆறாதுன்னு என‌க்கு தெரியும். ஆனா ஈஸ்வ‌ரோட‌ அக்க‌வுன்ட்னு சொன்ன‌து என்னை ஹ‌ர்ட் ப‌ண்ணின‌தால‌ நான் இதை சொல்றேன். நான் இப்போ சொல்ல‌ப் போற‌து கான்ஃபிட‌ன்ஷிய‌ல் விச‌ய‌ம், ஆனாலும் சொல்லுற‌துக்குக் கார‌ண‌ம் உன் திற‌மை மேல‌ என‌க்கு இருக்குற‌ ம‌ரியாதைதான்\"\nக‌த‌வில் இருந்து கை எடுக்காம‌ல் அப்ப‌டியே நின்றேன்.\n\"லாஸ்ட் டூல‌ இருந்து நீ வெளிய‌ப் போன‌துக்குக் கார‌ண‌ம் போன‌ வ‌ருச‌ம் க‌டைசி க்வார்ட்ட‌ர்ல‌ நீ ரெவின்யூ டார்க்கெட்டை அச்சீவ் ப‌ண்ண‌ முடியாம‌ போன‌துதான். உன்னோட‌ ரெவ்ன்யூ ஃபோர்காஸ்ட் வெர்ச‌ஸ் டார்கெட் அச்சீவ்டு க்ராஃபை காட்டி, உன்னை விட‌ த‌ன்னோட‌ டீம்ல‌ இருக்குற‌ ஷ‌ர்மிளாதான் பெஸ்டுன்னு ப்ரூஃப் ப‌ண்ணி, ஷ‌ர்மிளாவுக்கு இந்த‌ ப்ரோமோஷ‌னை வாங்கிக் குடுத்த‌தே ஈஸ்வ‌ர்தான்\"\nசங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்\nசென்னை வலைப்பதிவர் சங்கம் (அ) குழுமம் ஆரம்பித்தல் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் நிகழும் எந்த விச‌ய‌மும் த‌மிழ் வ‌லையுல‌க‌ எதிர்கால‌த்திற்கு ந‌ல்ல‌தாக‌ப் ப‌ட‌வில்லை. புதிதாக‌ பார்ப்ப‌வ‌ர்க‌ள் / வருபவர்கள் \"இவ்வ‌ள‌வு அர‌சிய‌லா இங்கே\" என்று நினைத்து வில‌க‌க்கூடிய‌ அள‌வுக்கு பிர‌ச்சினைக‌ள் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌, எதிர்வினையாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌, ப‌தில‌ளிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. பெரும்பாலானோருக்கு ஏன் இவ்வ‌ள‌வு பிர‌ச்சினை என்றே புரிய‌வில்லை. பிர‌ச்சினைக்குக் கார‌ண‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் க‌றுப்பும் வெள்ளையுமாக‌ ப‌திவிட‌வும் முன்வ‌ர‌வில்லை.\nத‌ற்போதைய‌ பிர‌ச்சினைக‌ள் குறித்த‌ என் ���ார்வையே இந்த‌ ப‌திவு. அதே நேர‌ம் விவ‌ர‌ம் அறிந்த‌ ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளின் மன‌திலும் இதே எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள் இருக்கும் என்ப‌தையும் அறிந்தே இருப்ப‌தால் இந்த‌ ப‌திவு எழுதுவ‌து அவ‌சிய‌மாகிற‌து.\nவலைப்பதிவுகள் முன் எப்போதையும் விட அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களாலும், திரைத்துறையினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவது உண்மை. சமீபத்தில் லீனா மணிமேகலை பிரச்சினை குறித்து ஜூனியர் விகடனில் வந்த கட்டுரையும், அதிக அளவில் கதை, கவிதைகளை அச்சு ஊடகங்களில் பார்க்க முடிவதும், \"கம்ப்யூட்டர் இருந்தா என்ன வேணும்னா சினிமாவைப் பத்தி எழுதுறாங்க\" என்ற ரீதியில் வரும் பேட்டிகளுமே இதற்கு அத்தாட்சி.\nசமீபத்திய கேபிள் சங்கர் & பரிசல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் சி.எஸ்.அமுதன் \"என் படத்தோட முதல் ரிசல்ட்டை நான் தெரிஞ்சுகிட்டதே பரிசல்காரனோட வலைதளத்துல இருந்துதான்\" என்று சொல்லியதில் இருந்தே வலைப்பூக்களின் வீச்சையும், திரைத்துறையினர் அதற்கு தரும் முக்கியத்துவத்தையும் உணரலாம்.\nஇது மட்டுமின்றி, வலைப்பூக்களின் வளர்ச்சி இன்னும் அபரிதமாக இருக்கும் என்பதில் இதை எழுதும் எனக்கோ அல்லது படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எந்த சந்தேகமும் இருக்கப் போவதில்லை. ஆகவே ஊடகங்களும், திரைத்துறையினரும் வலைப்பதிவர்களின் மீது இன்னும் அதிக அளவில் கவனிப்பை செலுத்தப் போகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.\nதற்போதைய நிகழ்வுகளை இந்த பின்புலத்துடனேயே அணுக வேண்டி இருக்கிறது.\nசில கேள்விகளும், என் கருத்துகளும்:\nஇப்போது பொதுவான சில கேள்விகள் எல்லோருக்கும் இருக்கின்றன.\n1. வலையுலக சூழ்நிலை இப்படி இருக்கிறது, சரி. இப்போது சங்கம் ஆரம்பிக்க வேண்டிய தேவை / நோக்கம் என்ன\n2. இவ்வளவு அவசர அவசரமாக கூட்டத்தைக் கூட்டி, முடிவெடுப்பதாகக் காட்டி, ப்ளாக்கர் ஃப்ரொஃபைல் உருவாக்கி, வலைப்பூவை உருவாக்கி, அதில் எழுத்துப் பிழைகளைக் கூட சரி செய்யாமல் அவசரமாக பதிவிட வேண்டிய நிர்பந்தம் என்ன\n3. பதிவுலகில் மிகவும் மதிக்கப்படும் / அனைவரும் அறிந்த / மூத்த பதிவர்களே இது குறித்து கேள்விகள் எழுப்புவது ஏன்\n4. ஏன் ஒரு ஒருமித்த கருத்து ஏற்படுத்த முன் நிற்பவர்கள் முயலவில்லை அல்லது அப்படி ஒரு கருத்து ஏற்படும் வரை பொறுத்திருக்க முடி���வில்லை\nஇந்த எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பொறுத்தவரை ஒரே காரணம்தான் தோன்றுகிறது. இந்த சங்கம்/குழுமம் பதிவர்களுக்காகவோ அல்லது பதிவர் நலனுக்காகவோ ஏற்படுத்தப்படவில்லை. முற்றிலும் முன்னெடுத்துச் செல்பவர்களின் சொந்த நலனுக்காவே துவங்கப்படுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.\n1. சமீபத்திய லீனா மணிமேகலை குறித்த ஜூவி கட்டுரையையே எடுத்துக் கொள்வோம். அது குறித்து சம்பந்தப்படவர்கள் மட்டுமின்றி பலதரப்பட்டவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. ஒரு எழுத்தாளர், அரசியல்வாதி, பெண்ணியல்வாதி, பதிவர் என்ற ரீதியில். தற்சமயம் சங்கம் என்ற ஒன்று இல்லாத நிலையில் ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் நண்பர் அப்துல்லாவிடம் கேட்கப்பட்டிருந்தது. ஒரு உறுதியான சங்கம் அமைந்தால் \"சென்னை வலைப்பதிவர் சங்கத் தலைவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்\" என்ற ரீதியில் அவர்களிடம்தான் கருத்து கேட்க எல்லா ஊடகங்களும் விரும்பும்.\n2. திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனர்கள், கலைஞர்கள் வலைப்பதிவர்களை வெகுசுலபமாக அடைய இந்த சங்கத்தின் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதையே விரும்புவார்கள்.\n3. சென்னை மாரத்தான் (அ) எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா போன்ற பொது விழாக்களில் வலைப்பதிவர்களின் பிரதிநிதியாக இந்த சங்கத்தின் தலைவரோ நிர்வாகிகளோ மேடையேற்றப்படுவார்கள்.\nஎப்படிப் பார்த்தாலும் வலைப்பதிவர்கள் அனைவருக்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாக இந்த சங்க நிர்வாகிகள் முன்நிறுத்தப்படுவார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இதைவிட வேறு நல்ல வழிமுறை இல்லையென்றே தோன்றுகிறது.\nஇந்த சங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் யாருக்கும் சங்கத்தின் நிர்வாகி ஆகும் எண்ணம் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அன்றைய கூட்டத்தில் நடந்ததும், அதன் பின்னான பின்னூட்ட பதில்களும், பதிவுகளும் அவர்களுக்கு தங்களை நிர்வாகிகளாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அளவு கடந்த ஆசையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.\nஉண்மையில் இந்த சங்கத்திற்கு நிர்வாகிகளாக தகுதி பெற்றவர்கள் யார் நம் ஒவ்வொரு பதிவுகளையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளை நடத்துபவர்களும், தன் கைக்காசைப் போட்டு பதிவர்களின் எழுத்துகளை அச்சில் கொண்டு வரும் பதிப்பாளர்களும் (உதாரணம் அகநாழிகை வாசு, கிழக்கு பத்ரி, நாகரத்னா குகன்) மற்றும் அவ்வப்போது போட்டிகளையும் பட்டறைகளையும் நடத்தி பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் உரையாடல் நண்பர்களும்தான்.\nஆனால் இவர்கள் யாரையும் முன்னிறுத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்ள விழைவது மட்டுமில்லாமல் \"இந்த சங்கம் ஆரம்பிப்பதில் உரையாடல் குழுவினருக்கு விருப்பமில்லை / மாசம் ஒரு படம் காட்டுங்க போதும்\" என்ற ரீதியிலான வசைகளையும் பொழியும் சோ கால்டு சங்க நிறுவனர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன\nசரி, இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளதான் சங்கம் ஆரம்பிக்கிறார்கள் என்று எப்படி சொல்கிறாய், ஆதாரம் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு, இவர்கள் போட்ட பின்னூட்டங்களையும் பதிவுகளையும் ஒருமுறை படியுங்கள். அதே போல் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ப்ளாக்கர் ப்ரொஃபைலையும் ஒரு முறை பாருங்கள்.\nஅக்டோபர் 2009ல் இருந்து இந்த ப்ரொஃபைல் இருக்கிறது. ஏன் இதுவரை யாருடனும் விவாதிக்கப்படவில்லை, யார் இதை உருவாக்கியது, ஏன் இத்தனை நாட்களாக இது குறித்து மவுனமாக இருந்தார்கள், இப்போது ஏன் திடீரென்று ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறார்கள், அப்படி என்றால் யாருக்கும் தெரியாமல் இத்தனை நாட்களாக திரைமறைவு வேலைகள் நடந்து வந்ததா\nநான் ஏன் இதை எழுதுகிறேன்\nஅமைதியாக சிறு சிறு ஊடல்களுடன் மட்டுமே சென்று கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவுலகை இந்த நிகழ்வு சுக்கு நூறாக சிதைத்துவிடும் என்று நான் அஞ்சுவது முதல் காரணம்.\nபைத்தியக்காரனுக்கும் வாசுவுக்குமே உரசல் வந்திருப்பதும், லக்கியின் இன்றைய பதிவுமே அத‌ற்கு உதார‌ண‌ம்.\nஅடுத்தது, இந்த சங்கம் ஆரம்பிப்பது குறித்த மாற்றுக் கருத்துகளை அவர்கள் எதிர்கொண்ட விதம், முக்கியமாக பைத்தியக்காரன் அவர்கள் மீதான வசை. ஒரு மூத்த பதிவரையே இப்படி நடத்துபவர்கள் சங்க நிர்வாகிகளாக இருந்தால் ம‌ற்ற‌ இளைய‌, புதிய‌ ப‌திவ‌ர்க‌ள் எப்ப‌டி ந‌ட‌த்த‌ப்ப‌டுவார்க‌ள் என்று எழுந்த‌ ப‌ய‌ம்.\nபெரும்பாலான பதிவர்களின் மனதிலும் இதே இருப்பதாக நான் கருதுகிறேன், ஆனால் ஏனோ அவர்கள் சொல்லத் தயங்குவதாகப் படுகிறது. அப்பட்டமான உண்மைகளைப் பேசுவதன் மூலம் இந்த பிரச்சினை முட��வுக்கு வரும் என்ற நம்பிக்கையே முக்கிய காரணம்.\nஎல்லாவற்றையும் விட முக்கியமாக காரணம், எனக்கு பைத்தியக்காரனும் நண்பர், கேபிள் சங்கரும் நண்பர், லக்கிலுக்கும் நண்பர். இவர்களுடன் சில விசயங்களில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும் அது கருத்து அளவில் மட்டுமே. இந்த பிரச்சினையின் மூலம் இவர்கள் யாருடனான நட்பும் முறிவதை நான் விரும்பவில்லை என்பதே இதை எழுதத் தூண்டியது.\nஇவ்ளோ பேசுறியே நீ இதை எழுதுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்பார்களேயானால், \"தமிழ் வலைப்பதிவர்கள்\" என்ற வார்த்தை குறிக்கும் குழுவில் நானும் ஒரு சிறு பகுதி. அவர்கள் தங்களைப் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ள முயல்வது என்னையும் உள்ளிட்ட குழுவிற்குதான். என்னை மற்றவர்கள் தங்களின் நலனுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதாலும் என் கருத்துகளை மிக நீண்ட யோசனைக்குப் பின் வெளியிடுகிறேன்.\nகடைசியாக, உங்களை சுய விளம்பரப் படுத்திக் கொள்ள வலைப்பதிவர்களாகிய எங்களை உபயோகித்துக் கொள்ளாதீர்கள். வலைப்பதிவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் (அ) அவர்கள் மூலம் சமூகத்திற்கு நல்லது செய்தல் (அ) வலைப்பதிவர்கள் சிறப்பாக செயல்பட உதவுதல் போன்ற காரணங்களுக்காக யார் என்ன குழுமம் / சங்கம் துவங்கினாலும் நான் என்னை இணைத்துக் கொள்வது மட்டுமல்ல, ஆக்கப்பூர்வமாக செயல்படவும் ஆயத்தமாகவே இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nLabels: அனுபவம், நிகழ்வு, பதிவர் சங்கம், விமர்சனம்\nகொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்\nகடந்த ஒரு மாதத்திற்குள் நான் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் தமிழ் சினிமா ஒரு தேவையான திருப்பத்தைக் கடந்திருப்பதைக் காட்டுவதாகத் தோன்றியது. இரண்டிலும் பெரிய ஹீரோக்கள் இல்லை, ஆனாலும் பேசப்பட்ட படங்கள்.\nமுதலில் தமிழ்ப்படம். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்த அத்தனை விசயங்களையும் அழகாக ஒரு கதைக்குள் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார்கள். தாலி சென்டிமென்ட் மட்டும் மிஸ்ஸிங், எப்படி மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சர்யமான விசயம் நம் மக்கள் அந்த படத்தை எதிர்கொண்ட விதம். தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சிரிக்கத் தயாராக இருக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nசில வருடங்களுக்கு முன்பு பேராசியர் ஞான சம்பந்தன் குறித்து சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தவுடன் நான்கைந்து ஜோக்குகளை சொல்லி தயார்படுத்தி விடுவார். அதன்பின் அவர் \"இன்னிக்கு வெள்ளிக்கிழமை\" என்று சொன்னாலும் நாம் சிரிப்போம் என்று சொல்வார். இந்த படமும் அதே வகைதான். ஹாட்ஸ் ஆஃப் அமுதன் & டீம்..\nஅடுத்த படம் நாணயம். தமிழ்ப்படத்திற்கு முற்றிலும் எதிர் வகையான சீரியஸ் டைப் படம். எஸ்.பி.பி தயாரிப்பில் வந்திருக்கும் இந்த படத்தின் ஹீரோ பிரசன்னா உலகின் பாதுகாப்பான வங்கி ஒன்றை வடிவமைக்க அவரை ப்ளாக்மெயில் செய்தே அந்த வங்கியை சிபி கொள்ளையடிக்க முயல்வதுதான் கதை. நல்ல திரைக்கதை, ஆங்காங்கே திடுக்கிடும் திருப்பங்கள் என்று நல்ல திரைப்படம்.\nவிளம்பரம் சரியாக இல்லாததும், அவ்வப்போது ஸ்பீட் ப்ரேக்கர் போடும் தேவையில்லாத அளவுக்கதிமான பாடல்களும் படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ். ஜேம்ஸ் வசந்தன் இசையில் \"நான் போகிறேன் மேலே மேலே\" பாடல் கலக்கல் மெலடி, லேசான இளையராஜா டச்சுடன் இருக்கும் இந்த பாடலில் எஸ்.பி.பி.யின் குரல்.... ம்ம்ம்ம்... ரோஸ் ஈஸ் எ ரோஸ்..\nசென்ற வார இறுதியில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் மாமல்ல‌புரம் சென்றிருந்தோம். உலகம் எல்லாம் ரிசஸனில் அடிபட்டாலும் ஈ.சி.ஆர்.ல் மட்டும் வளம் கொழிப்பது கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. பங்களாக்களும் பண்ணை வீடுகளும் மட்டுமல்ல, மாமல்ல‌புரம் சென்று சேர்ந்த ஒரு மணி நேர பயணத்தில் பார்த்த வாகனங்களில் பெரும்பாலானவை மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஹையர் என்ட் ஹோண்டோ, டொயோட்டோ கார்கள்தான். ஒருவேளை ஈ.சி.ஆர்.க்கு மட்டும் ரிசஸன் இல்லையோ\nமாமல்ல‌புரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் \"வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க\" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது\nஇனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.\nடிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.\nஅரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.\nஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆசிறியர்கள் விடப்போவதில்லை.\nLabels: அனுபவம், துணுக்ஸ், நகைச்சுவை, நிகழ்வு\nப்ராஜ‌க்ட் மேனேஜ‌ரை குத்து விட‌ நினைக்கும் ப‌த்து ...\nகார்க்கி வ‌ழ‌ங்கும் \"ஃபோனை போட்டு, கேளு பாட்டு\"\nப‌திவுல‌க‌ பெண்ணுரிமைக் காவ‌ல‌ன் ஆவ‌து எப்ப‌டி\nசங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்\nகொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/4817/", "date_download": "2021-08-02T08:13:08Z", "digest": "sha1:57EK3VDXKVVYK2MV4DBGKAMRPPYEOQRZ", "length": 5622, "nlines": 73, "source_domain": "www.akuranatoday.com", "title": "டக்டொக் உள்ளிட்ட சீன செயல���கள் குறித்து எச்சரிக்கிறது அமெரிக்கா - Akurana Today", "raw_content": "\nடக்டொக் உள்ளிட்ட சீன செயலிகள் குறித்து எச்சரிக்கிறது அமெரிக்கா\nஇந்தியா போன்ற நாடுகளில் டிக்டொக், உள்ளிட்ட கையடக்கத் தொலைபேசி செயலிகளுக்கு தடை விதிப்பதானது சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு பெரும் இழப்பாகும் என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியொருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nசீனாவின் டிக்டோக், வீ சட் போன்ற செயலிகளின் பயன்பாடுகள் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் மிகவும் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபர்ட் ஓ பிரையன் வெளிநாட்டு செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா முன்னதாகவே இந்த பயன்பாடுகளை தடைசெய்துள்ளது. அதுபோல் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இவற்றை தடைசெய்து விட்டால் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது மிகப்பெரிய உளவு மற்றும் கண்காணிப்பு சாதனத்தை இழந்து விடும்.\nடிக்டொக்கில், முகத்தை அடையாளம் காணும் வசதி உள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட நபரின் தரவுகள் மற்றும் உறவினர்களின் தரவுகள் திருடப்படுகின்றன.\nநண்பர்கள் யார், பெற்றோர் யார் என்பதை இந்த டிக்டொக் செலயில் மூலம் சீனா அறிந்து கொள்கின்றது. இதன் மூலம் நபர் ஒருவரின் உறவுகளை அவர்களால் வரைபடமாக்க முடியும்.\nட்ரம்ப் நிர்வாகம், டிக்டொக்கை மட்டுமல்ல, வீ செட் மற்றும் வேறு சில சீன பயன்பாடுகள்தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தியுள்ளது, ஏனென்றால் சீனர்கள் அமெரிக்காவின் தனிப்பட்ட தரவின் தீவிர நுகர்வோர் என்றும் ஓ பிரையன் மேலும் தெரிவித்தார்.\nதொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை திறக்க அனுமதி\nசவூதியில் உள்ள 60 ஆயிரம் பேர் மாத்திரம் இம்முறை ஹஜ் செய்வர்\nடெல்டா வகை கொவிட் தொற்று; ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவும் அபாயம்\nஇலங்கையில் அடுத்த 72 மணித்தியாலங்கள் தீர்மானம் மிக்கது\nகுறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில், தகைமைகள் என்ன\nபாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை ; இலங்கையிலிருந்து சென்ற பெண்...\nவீழ்ச்சியடைந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/puducherry-assembly", "date_download": "2021-08-02T07:58:26Z", "digest": "sha1:PT7IWER4NAKYLXSD7AEEJPMYOCNUP56L", "length": 7104, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "puducherry assembly", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n`செல்போன் ஒட்டுக் கேட்பும், புதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பும்’ - நாராயணசாமி கூறுவது என்ன\nஅதே அறை, அதே இருக்கை; அப்போ சிறுமி, இப்போ அமைச்சர்; வைரல் புகைப்படத்தின் சுவாரஸ்ய பின்னணி\nபுதுச்சேரி: ’அலுவலகம் செல்லாத 500 கல்வித்துறை ஊழியர்கள்’- சம்பளத்தைப் பிடிக்கக் கோரிக்கை\nபுதுச்சேரி: `சில்லறை மதுக்கடைகள், சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி’ - தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nமேக்கேதாட்டூ: `விரைவில் சட்டரீதியான நடவடிக்கையும் எடுப்போம்' - புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர்\n`பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு; ஆன்லைன் மூலம் தேர்வு’ - புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர்\nமேக்கேதாட்டூ அணைக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு; பிரதமருக்கு கடிதம் எழுத ரங்கசாமி முடிவு\nமேக்கேதாட்டூ:`விவசாயிகளைக் காக்க புதுச்சேரியும் இதைச் செய்யவேண்டும்' - ரவிக்குமார் எம்.பி\nபுதுச்சேரி: ’அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு’ - யார் யாருக்கு எந்தெந்த துறைகள் \nபுதுச்சேரி:``கூட்டணிக் கட்சிப் பேச்சுவார்த்தைக்குள் தலையிட முடியாது\nபுதுச்சேரி: `200 ஆண்டுகள்; 87,120 சதுர அடிகள்' - இடம் மாறும் சட்டப்பேரவை வளாகம்\nபுதுச்சேரி: தோல்வியடைந்த ஏனாம்; வெற்றிபெற்ற தட்டாஞ்சாவடி -முதல்வரின் தேர்தல் செலவு எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zerodegreepublishing.com/products/valar-kaathal-inbam-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-08-02T09:00:03Z", "digest": "sha1:B7LVLMALNAFXDFFKKVVP4O3WBWCZBSGO", "length": 7812, "nlines": 315, "source_domain": "www.zerodegreepublishing.com", "title": "VALAR KAATHAL INBAM/வளர் காதல் இன்பம்-கே .எஸ்.சுதாகர் – Zero Degree Publishing 1", "raw_content": "\nVALAR KAATHAL INBAM/வளர் காதல் இன்பம்-கே .எஸ்.சுதாகர்\nகாதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஒருதலைக் காதலாக இருந்தாலும் அது வாழ்க்கையில் ஒரு அனுபவமே சிலருக்குக் காதல் கசப்பாக இருக்கலாம், சிலருக்கு இனிப்பாக இருக்கலாம், எல்லாமே அவரவர் மனநிலையைப் பொறுத்தது. காதல் திருமணமாக இருந்தாலும், விட்டுக் கொடுப்பும், புரிந்துணர்வும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்றுமே இனிக்காது. இந்தக் குறுநாவலின் கதைக்களம் புலம்பெயர்ந்த மண் என்பதால் வாழ்க்கைமுறை எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டிருப்பதை, நாவலின் உபதலைப்புகளில் இருந்தே அறிய முடிகின்றது. காதல், இன்பம், துன்பம், சோகம், விருப்பு, வெறுப்பு, பொறாமை என்று கதையில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவரின் மாறுபட்ட மனநிலையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் ஆசிரியர்.\nஉள்மனதில் ஏற்படும் உணர்வு மோதல்களை அடிக்கடி நினைவூட்டக்கூடிய படைப்புக்களே அழியாத காவியங்களாய் நிலைக்கின்றன. அத்தகைய ஒரு குறுநாவலே\nVALAR KAATHAL INBAM/வளர் காதல் இன்பம்-கே .எஸ்.சுதாகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/high-court-accept-vijay-case-again/cid4251892.htm", "date_download": "2021-08-02T09:42:57Z", "digest": "sha1:7S7VUZWQJ5HIACAPTCJ6IIJF32QGLYOP", "length": 4973, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "விஜயின் சொகுசு கார் வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு", "raw_content": "\nவிஜயின் சொகுசு கார் வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவிஜய் 2012ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார் செய்தார். இந்த காருக்கு செலுத்தும் நுழைவு வரி தொடர்பாக விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ.1 லட்சம் அபாரதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த அபாரத தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஅதோடு, திரைப்படங்களில் சமூக நீதிக்கு பாடுபடுவது போல் நடிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோவாக இருக்க கூடாது எனவும் நீதிபதி அறிவுரையும் செய்தார். இதையடுத்து, விஜயை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். நாம் தமிழர் சீமானும் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.இதையடுத்து தன்னை பற்றி நீதிபதி வைத்த விமர்சனத்திற்கு எதிராக விஜய் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.\nஇந்நிலையில், விஜயின் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. எனவே, இன்னும் சில நாட்களில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு ��ரவுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3521-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-27-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2021-08-02T10:17:00Z", "digest": "sha1:3IXFT4WLFCMHNW55EJLGYVEESRYOBRSL", "length": 16469, "nlines": 186, "source_domain": "dailytamilnews.in", "title": "டிச. 27-ல் சனிப் பெயர்ச்சி… – Daily Tamil News", "raw_content": "\nடிச. 27-ல் சனிப் பெயர்ச்சி…\nடிச. 27-ல் சனிப் பெயர்ச்சி…\nமதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் டிச. 27-ல் சனிப்பெயர்ச்சி மஹாயாகம்:\nமதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் டிச. 27…ல் சனிப்பெயர்ச்சி மகாயாகம் பரிகார அர்ச்சணைகள் காலை 10 மணிக்கு நடைபெறும்.\nசனிபகவான் இம் மாதம் 27…ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.25…மணிக்கு பெயர்ச்சியாவதையொட்டி, பரிஹார ஹோமும், யோக சனீஸ்வரருக்கு பரிஹார அர்ச்சணைகள் நடைபெறும்.\nதுலாம், கும்பம், தனுசு, மிதுனம், மகரம், கடகம் ஆகிய ராசிநேயர்கள், பரிஹார அர்ச்சணைக்கு பெயர் நட்சத்திரம் ஆகியவற்றை கோயில் செயலாளரிடம் முன் கூட்டியே பதிவு செய்யலாம்.\nபரிஹார பொருட்களான நெய், பழங்கள், கறுப்பு வஸ்திரம், கறுப்பு எள் ஆகியவை வாங்கித் தரலாம்.\nவாகனம் மோதி மான் பலி\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nமதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.\nமதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:\nமதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:\nமதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.\nஇந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்\nஅனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.\nமேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nசோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:\nசோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:\nதமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.\nசிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.\nவணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிட்டம் இரண்டு: திரை விமர்சனம்\nவலிமை ரிலீஸ்க்கு நெருக்கும் போனி கபூர்\nகதாநாயகியை தயாரிப்பாளரிடம் படுக்க அனுப்பாததால் விலக்கிவிட்டார்: இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nசென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும்.. பட்டையைக் கிளப்ப தயாராகும் தல ரசிகர்கள்\nதனித்தீவில் மிரட்டி நிர்வாண ஷூட்டிங்\n15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை\nசில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை ஆட்டோ டிரைவர் கைது\nதல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு ரிலீஸ்\nஇந்தாண்டு தீபாவளி அன்று படத்தை திரையரங்கில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு… [...]\nஇந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் முதல் பிரதமர் முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை\nஇந்தியப் பிரதமர் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதன்முறை. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் முதல் பிரதமர் முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை முதல் முறையாக யுஎன்எஸ்சி கூட்டத்திற்கு தலைமை முதலில் தினசரி தமிழ்… [...]\nவாட்டர் டேங்க் இடிந்து விழுந்த வீடியோ காட்சி\nஇந்தக் காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. வாட்டர் டேங்க் இடிந்து விழுந்த வீடியோ காட்சி முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]\nபிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாத காதலி\nஅவர் அங்குள்ள சுடுகாடு ஒன்றின் அருகே வி‌ஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறாத காதலி மனமொடிந்து காதலன் தற்கொலை\nஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthuyir.org/author/noughttoagility/", "date_download": "2021-08-02T09:49:58Z", "digest": "sha1:URNPFT6YZDRQ3AF2MJDADQSVK3JJLVG3", "length": 3400, "nlines": 40, "source_domain": "puthuyir.org", "title": "புத்துயிர் – Puthuyir", "raw_content": "\nகாலைத் தி��ானம் – ஆகஸ்ட் 02, 2021\nசகரியா 9: 1 – 8\nதீரு . . . சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்\nதீரு கிட்டத்தட்ட கி.மு. 2750ம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு பட்டணம் என்று விக்கிப்பீடியா சொல்லுகிறது. வடக்கிலும் தெற்கிலும் இரண்டு உலகப் புகழ்பெற்ற துறைமுகங்களை வைத்துக்கொண்டு, உலக வர்த்தகத்தையே கலக்கிக் கொண்டிருந்த தீரு, சகரியா தீர்க்கதரிசி இந்த தீர்க்கதரிசனத்தைக் கண்ட நாட்களில் (கி.மு. 480), தூளைப் போல வெள்ளியையும் வீதியின் சேற்றைப்போல தங்கத்தையும் வைத்திருந்ததென்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட தீரு கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் விரோதமாகச் செயல்பட்டதால், அதின் பலன் முறிக்கப்பட்டு அக்கினிக்கு இரையாகும் என்று சகரியா தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தர் சொன்னார். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பின் கி.மு. 332ம் ஆண்டில் மகா அலெக்ஸாந்தரால் தீரு கைப்பற்றப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இன்றும் தீரு லெபனோனின் ஒரு பகுதியாக இருக்கின்றது. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒன்றாகிலும் பொய்யானதில்லை; பொய்யாகப் போவதுமில்லை.\nஆண்டவரே, உம்முடைய வார்த்தையின் வல்லமையை நான் ஒருபோதும் சந்தேகித்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/dock", "date_download": "2021-08-02T09:46:21Z", "digest": "sha1:VKHFRRPBBZKJYOHXY7QFCL2QN3MB32S6", "length": 5075, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "dock - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகப்பற் தளம்; கப்பல் மேல் தளம்; கலத் துறை; கலத்துறை; குற்றவாளிக் கூண்டு; குற்றவாளிக் கூண்டு / கைதி நிற்குமிடம்; செயற்கைத் துறைமுகம்\nமீன்வளம். கப்பல் கூடம்; கப்பல் துறை; செயற்கைத் துறைமுகம்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dock\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/the-lives-of-the-poor-must-be-redeemed-at-no-cost-stalin-in-the-corona-field/embed/", "date_download": "2021-08-02T08:14:41Z", "digest": "sha1:V5AH4FORLNKRRHXOW5TXHNWK6UW7UBWA", "length": 4728, "nlines": 8, "source_domain": "www.aransei.com", "title": "ஏழைகளின் உயிரை ��ெலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும் - தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் | Aran Sei", "raw_content": "ஏழைகளின் உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும் – தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோரா இரண்டாம் அலை பரவிப் பெரும் உயிர் சேதங்களை விளைவித்து வரும் சூழலில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுபேற்க உள்ள ஸ்டாலின் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் பெறகூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ”கொரோனாவை பரவலைத் தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் (மே- 6) செயல்பாட்டுக்கு வருகின்றன என்று தெரிவித்த அவர், உடனடியாக கட்டளை மையம் (war room) ஒன்றைத் … Continue reading ஏழைகளின் உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும் – தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/monkey-drives-bus-in-karnataka-video-goes-viral.html", "date_download": "2021-08-02T07:57:17Z", "digest": "sha1:RZGJOOPPZYMV7IYH3I3YGKGKONJDKTAN", "length": 4640, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Monkey drives bus in Karnataka, video goes viral | India News", "raw_content": "\nஅரசு பேருந்தை இயக்கும் குரங்கு : டிரைவர் சஸ்பெண்ட்..வைரல் வீடியோ\nஇடி சத்தத்திற்கு பயந்து வளர்ப்பு நாய் ஒளியும் இடத்தை பாருங்கள்\n’4 மணி நேரம் நனைந்தபடி, அரசு பேருந்தை இயக்க வேண்டியுள்ளது’: ஓட்டுநரின் வைரல் வீடியோ\nஎஜமானி கேட்டதும், ‘ஐ லவ் யூ’ சொல்லும் குறும்பு நாய்.. வைரல் வீடியோ\n’: அழகிப்போட்டியில் பெண் சொன்ன பதில் வைரல்\nஅம்மாவின் பிறந்த நாளில் பிச்சைக்காரராக நடித்து அதிர்ச்சி கொடுத்த மகன்\nதிடீரென பாரில் புகுந்த குதிரையால் குடிமகன்கள் பதற்றம்.. வைரல் வீடியோ\nகஸ்டமரின் உணவை கள்ளத்தனமாய் சாப்பிடும் டெலிவரி பாய் ..வைரல் வீடியோ\nசெய்தி வாசித்துக்கொண்டே மேலே போகும் பெண்: வைரல் வீடியோ\n‘உங்கள் முதலாளியிடம் சொல்லுங்கள்’..மனதை உருக்கும் மழலையின் பேச்சு\nநாயை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு.. காப்பாற்றும் 3 சிறுவர்கள்.. பரவி வரும் வீடியோ\n’நில்லுங்கடா டேய்’...திருடர்களை விரட்டிப் பிடிக்கும் 8 வயது சிறுமி.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/thalapathy-63-movie-team-scouting-locations-in-los-angels.html", "date_download": "2021-08-02T08:54:19Z", "digest": "sha1:QPFIJMR7PMKSYWYDN6BU7XAUKYHNO4EE", "length": 6509, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Thalapathy 63 Movie Team scouting locations in Los Angels | தமிழ் News", "raw_content": "\n'கோலிவுட் டூ ஹாலிவுட்'... லாஸ் ஏஞ்சல்ஸில் 'தளபதி 63' படக்குழு\n'தெறி','மெர்சல்' படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மிகப்பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.\n'தளபதி 63' என அழைக்கப்படும் இப்படத்தில் விஜய் டிரெய்னராக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், லொகேஷன் பார்ப்பதற்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு படக்குழு சென்றுள்ளது. இயக்குநர் அட்லீ, ஒளிப்பதிவாளர் விஷ்ணு, கிரியேட்டிவ் புரொடியூஸர் அர்ச்சனா கல்பாத்தியுடன், அட்லீயின் மனைவி பிரியாவும் சென்றுள்ளார்.\nஇது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அர்ச்சனா,''கோலிவுட் டூ ஹாலிவுட்,'' என, மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.\nதல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தினைக் கைப்பற்றிய 'பிரபல' நிறுவனம்\nதென்னிந்திய சினிமா+ இந்தியா ட்ரெண்டிங் இரண்டிலுமே நம்பர் 1\n'ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியளித்த விஜய்'.. குவியும் பாராட்டுக்கள்\n'ஆர்வம்' இருக்கலாம் அதுக்காக இப்படியா\nஹெலிகாப்டர் நிறுவனத்துடன் 'தல அஜித்' ஆலோசனை.. கொண்டாடும் ரசிகர்கள்\n'தளபதி 63' படத்தில் நடிக்கிறேனா.. பிரபல நடிகை விளக்கம்\n'தல வர்ராரு'..உங்க காதுகளை பத்திரமா வச்சுக்கோங்க கண்ணா\n'அடாவடி+தடாலடி'.. அடுத்தடுத்து சாதனைகள் படைக்கும் 'தல'யின் விஸ்வாசம்\nமுதல்வன் 2-வில் 'தளபதி விஜய்' நடிப்பாரா.. பிரமாண்ட இயக்குநரின் பதில் இதுதான்\nதளபதி 64: மணிரத்னத்துடன் கைகோர்க்கும் விஜய்\n'தல அஜித் கூட படம் பண்ணனும்'.. சாய்பாபா கருணை கெடைக்குமான்னு தெரியல\n'விஸ்வாசம்' அப்டேட்டினைத் தள்ளிவைத்ததா படக்குழு\n'ஜெய் ஹிந்துக்காக' இசைப்புயல்-கிங் கானுடன் கைகோர்த்த நயன்தாரா\n'தளபதி 63 ஹீரோயின்'.. எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் பிரபல நடிகை வேண்டுகோள்\n#தளபதி63: '10 வருடங்களுக்குப்' பின் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்\n#தளபதி63: 'தொழில்நுட்பக்குழு+ரிலீஸ்'.. முழு விவரங்கள் உள்ளே\n#தளபதி63: விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது இவரா\n'விவசாயி, ஆளப்போறான் தமிழன்'.. தெறிக்க வ���டும் தளபதி ரசிகர்கள்\nபூஜையுடன் தொடங்கிய 'தளபதி 63'.. ரசிகர்கள் கொண்டாட்டம்\n'பைட்டுக்கு நடுவுல செம டான்ஸ்'.. தளபதியைப் புகழும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-08-02T09:03:14Z", "digest": "sha1:3BG34VTABN5ZL54VI5W4MV44ZIQETPJP", "length": 3053, "nlines": 52, "source_domain": "www.jananesan.com", "title": "வி.எம்.எஸ்.முஸ்தபா | ஜனநேசன்", "raw_content": "\nவீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு : அரசு…\nவீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு வைத்த நடத்த அரசு அனுமதி அளிக்க…\nபக்ரீத் பெருநாளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்…\nபக்ரீத் பெருநாளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில்…\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukadu.com/2019/06/05/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2021-08-02T10:15:20Z", "digest": "sha1:UDQL23FS53Y4AHZDRTICW5T3UYDDS7OJ", "length": 2960, "nlines": 26, "source_domain": "www.mukadu.com", "title": "யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் மோசமான செயல்! | Mukadu", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் மோசமான செயல்\nயாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் மோசமான செயல்\nயாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய பெண்ணொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.\nபோதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான குறித்த பெண், மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.\nகுறித்த பெண் நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது குறித்த பெண்ணை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்தநபர் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.\nஇதனையடுத்து தப்பி ஓடிய குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடிவருகின்றனர். மேலும் குறித்த நபரை கைது செய்ய திறந்த பிடியானை உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் தலைவர்களின் பதவி விலகல் பௌத்தர்களின் ஆதிக்கத்திற்கு சாட்சி\nதமிழர்களை பலியெடுத்த சிங்­கள பேரி­ன­வா­தம் முஸ்லிம் மக்­கள் மீது திரும்­பியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/2018/02/14/how-to-create-user-registration-account-in-new-tnreginet-website-in-tamil/", "date_download": "2021-08-02T10:05:39Z", "digest": "sha1:DCSKJWF6NRGNH5HOX36AHAG4V3VZJHOO", "length": 4280, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "how to create user registration account in new tnreginet website in tamil | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nTNREGINET வெப்சைட்-ல் User Registration செய்வது எப்படி\nதமிழ்நாடு பத்திரப் பதிவுக்கான புதிய இணையதளம் தொடக்கம்\nTNREGINET.GOV.IN ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை எப்படி இருக்குனு தெரியுமா\nமோசடி பத்திரங்கள் ரத்து செய்யும் அதிகாரம்\nசொத்து பத்திரம் நகல் பதிவிறக்கம் | copy of document online tamilnadu | tnreginet |பழைய பத்திரம் நகல்\nTnreginet EC பார்க்க போறீங்களா பத்திரப்பதிவு துறையில் புதிய வசதி\n2021 தமிழ்நாடு அரசு பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு\nசார் பதிவாளர் அலுவலகங்களில் இன்றுமுதல் பத்திரப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://ta.hmknmedical.com/protective-clothing/", "date_download": "2021-08-02T09:40:43Z", "digest": "sha1:QNZRXJA4HZNXI5ENHZD4IXKLU7QZEK27", "length": 8046, "nlines": 184, "source_domain": "ta.hmknmedical.com", "title": "பாதுகாப்பு ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா பாதுகாப்பு ஆடை தொழிற்சாலை", "raw_content": "\nவிளையாட்டு, வீடு மற்றும் மருத்துவமனை மீட்பு\nபுற ஊதா ஸ்டெர்லைசர் வாண்ட்\nஆர் அன்ட் டி மையம்\nவிளையாட்டு, வீடு மற்றும் மருத்துவமனை மீட்பு\nபுற ஊதா ஸ்டெர்லைசர் வாண்ட்\nகண் பாதுகாப்பு மருத்துவ பிரிவு ...\nசெலவழிப்பு மருத்துவ பாதுகாப்பு ...\nசெலவழிப்பு தூள் இலவச மெடி ...\nஅல்லாத நெய்த 3 பிளை செலவழிப்பு எஸ் ...\nஅல்லாத நெய்த 3 பிளை செலவழிப்பு எம் ...\nசெலவழிப்பு மருத்துவ திறந்த பின் தனிமை கவுன்\nஇந்த தயாரிப்பு மலட்டுத்தன்மையற்றது; இது மருத்துவமனையில் பயன்படுத்தப்படலாம் மற்றும் நல்ல ஊடுருவலும் தடையும் கொண்டது.\nஇது பாக்டீரியா, வைரஸ்கள், ஆல்கஹால், இரத்தம், உடல் திரவங்கள், காற்று தூசி துகள்கள் ஆகியவற்றின் ஊடுருவலை திறம்பட எ���ிர்க்கும், மேலும் அணிபவரை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க முடியும்.\nசெலவழிப்பு Nonwoven தனிமைப்படுத்தப்பட்ட கவுன்\nவெட்டுதல், தையல் மூலம், மூலப்பொருட்களை முக்கிய மூலப்பொருட்களாகப் பயன்படுத்துதல். மலட்டு மற்றும் செலவழிப்பு.\nமருத்துவ பயன்பாட்டிற்கான செலவழிப்பு பாதுகாப்பு வழக்கு\nபாதுகாப்பு ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது செயல்பாடு, அளவு, வகை, பொருந்தக்கூடிய சந்தர்ப்பம், பாதுகாப்புத் தரம் போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, வகைகளில் இணைந்த, பிளவு, வேலை உடைகள், சுடர் குறைக்கும் ஆடை, மருத்துவ பாதுகாப்பு ஆடை போன்றவை அடங்கும்.\nஇந்த தயாரிப்பு மலட்டுத்தன்மையற்றது; இது மருத்துவமனையில் பயன்படுத்தப்படலாம் மற்றும் நல்ல ஊடுருவலும் தடையும் கொண்டது.\nஇது பாக்டீரியா, வைரஸ்கள், ஆல்கஹால், இரத்தம், உடல் திரவங்கள், காற்று தூசி துகள்கள் ஆகியவற்றின் ஊடுருவலை திறம்பட எதிர்க்கும், மேலும் அணிபவரை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க முடியும்.\nமுகவரி:எண் 811, 8 வது மாடி, கட்டிடம் 1, எண் 5 ஜியாலிங் சாலை, வுஹோ மாவட்டம், செங்டு\n© பதிப்புரிமை - 2020-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/04/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-08-02T09:08:37Z", "digest": "sha1:KHHCANWQINT6V5ORXV4KN7X6ZBZV42RZ", "length": 16057, "nlines": 76, "source_domain": "eettv.com", "title": "ஈழத்தமிழர் விவகாரத்தில் பொதுவாக்கெடுப்பு சாத்தியமா? – EET TV", "raw_content": "\nஈழத்தமிழர் விவகாரத்தில் பொதுவாக்கெடுப்பு சாத்தியமா\nதமிழீழ மக்கள் பொதுவாக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். இந்நிலையில், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியற்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு (Referendum)ஒன்று சாத்தியமா என்ற கேள்விக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமான் பதில் அளித்துள்ளார்.\nஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற தகுதியினை அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் கொண்டுள்ளனர். இத் தகுதிக்கான அங்கீகாரத்தை நாம் அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றோம். இதனை வெளிப்படுத்த��ம் ஒரு வடிவம்தான் இப் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கான அரசியற்பரப்புரை இயக்கம். உலக அரசியல் நீதியின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது.\n“ஈழத் தமிழ் மக்களுக்கு வாய்ப்பான ஒரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும். நிலைமாறுகால நீதி தொடர்பாக சிறிலங்காவின் கபடடும், இந்து சமுத்திரத்தில் இன்று உருவாகிவரும் பூகோள அரசியல் நிலைப்பாடுகளும், ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதுவான அரசியல் சூழலை உருவாக்குவதற்கு வாய்ப்புக்களாக அமைகின்றன.\nஅத்தகைய ஒரு அரசியற் சூழலில் சர்வதேச அங்கீகாரத்தை பெறும் வகையிலான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படக் கூடியதாக இருக்கும். அதுவரை எமது சுதந்தரவேட்கையினை உலகுக்கு முரசறைந்து கொண்டிருப்பது அவசியமானதாகும்” என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nபொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயகத்தின் முதலாவது மக்கள் அரங்கம் கனடாவில் ஞாயிறன்று இடம்பெற்றிருந்தது. இதில் காணொளிவாயிலாக உரையாற்றியிருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரையின் முழுவடிவம், இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாட்டுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இன்றைய பொது வாக்கெடுப்புக் கோரும் மக்கள் அரங்கம் அமைகிறது.\nதமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பரிகார நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினை வெளிப்படுத்தும் ஜனநாயக வழிமுறையாகவே இப் பொது வாக்கெடுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது\nதேசிய இனப்பிரச்சினைக்கு அரசியற்தீர்வாக தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவு தமிழ��ழ மக்களின் முன்வைக்கப்பட்டு, பொதுவாக்கெடுப்பில் மக்கள் வெளிப்படுத்தும் ஜனநாயக முடிவுக்கு ஏற்ப அரசியற்தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை இவ் அரசியற்பரப்புரை இயக்கம் மேற்கொள்ளும். அண்மையில் நடைபெற்று முடிந்த குர்திஸ்தான், கத்தலோனியா பொதுமக்கள் வாக்கெடுப்புகள் நமக்கு ஒரு தெளிவான செய்தியினைத் தெரிவிக்கின்றன.\nவிடுதலைக்கு அவாவும் மக்களே அதற்கான பொறிமுறையையும் தமது கையில் எடுத்துத் தமது சுதந்திர வேட்கையினை முன்னோக்கித் தள்ள வேண்டும் என்பதே அச் செய்தியாகும். தமிழீழ மக்களும் பொதுவாக்கெடுப்பு என்ற பொறிமுறையினைக் கையில் எடுத்தாக வேண்டும். பொதுவாக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் அழுத்தமாக வலியுறுத்தியாக வேண்டும்.\nஇவ் அரசியல் பரப்புரை இயக்கத்தில் ஈழத்தாயகமும் தமிழகமும் இணைந்து கொள்ளுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையில் அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிறிலங்காவின் அரசியலமைப்பின் 6வது திருத்தத்துக்கு முரணானது அல்ல. இதனால் சட்டவரையறை என்ற அச்சம் தவிர்த்து ஈழத்தாயகத்தில் இப் பரப்புரை இயக்கத்தினை மேற்கொள்ள முடியும்.\nஇத்தகைய ஒரு பொதுவாக்கெடுப்பு நடாத்துவதன் நடைமுறைச் சாத்தியம் குறித்த கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதனையும் நாம் அறிவோம். இவ் விடயத்தில் எமது கருத்து இதுதான். ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற தகுதியினை அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் கொண்டுள்ளனர். இத் தகுதிக்கான அங்கீகாரத்தை நாம் அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றோம். இதனை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் இப் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கான அரசியற்பரப்புரை இயக்கம்.\nஉலக அரசியல் நீதியின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது. ஈழத் தமிழ் மக்களுக்கு வாய்ப்பான ஒரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும். நிலைமாறுகால நீதி தொடர்பாக சிறிலங்காவின் கபடடும், இந்து சமுத்திரத்தில் இன்று உருவாகிவரும் பூகோள அரசியல் நிலைப்பாடுகளும், ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதுவான அரசியல் சூழலை உருவாக்குவதற்கு வாய்ப்புக்களாக அமைகின்றன.\nஅத்தகைய ஒரு அரசியற் சூழலில் சர்வதேச அங்கீகாரத்தை பெறும் வகையிலான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படக் கூடியதாக இருக்கும். அதுவரை எமது சுதந்தரவேட்கையினை உலகுக்கு முரசறைந்து கொண்டிருப்பது அவசியமானதாகும். இப் பரப்புரை இயக்கத்துக்கான ஆதரவினை வழங்குமாறு உலகத்தமிழ் மக்களைக் கோருவதுடன் இப் பரப்பரை இயக்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தன் விலகுவது நல்லது\nசுவிஸ் விபத்தில் 12 இலங்கையர் உட்பட 15 பேர் படுகாயம்\nஒன்ராறியோவில் புதிதாக 218 பேருக்கு COVID-19 தொற்று, 2 பேர் உயிரிழப்பு\n இரண்டு வயதான தமிழ் சிறுவன் பலி\nதீவிரமாக பரவும் டெல்டா வைரஸ் – இலங்கையர்களுக்கு 3 தடுப்பூசிகள்\nரிஷாட்டின் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பெண்\nபுதிய அரசியல் மாற்றம் அவசியம்\nதுருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் புதிதாக 30,738 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,604 பேர் பலி\nஇமாசல பிரதேசம் – கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு, 37,582 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தன் விலகுவது நல்லது\nசுவிஸ் விபத்தில் 12 இலங்கையர் உட்பட 15 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/i20-active/specs", "date_download": "2021-08-02T07:57:16Z", "digest": "sha1:UNZTI3SMFHSJYAYVNKFXTG4CY2A7EFQO", "length": 29297, "nlines": 531, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்சிறப்பம்சங்கள்\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.19 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 16.36 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 45.0\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை vtvt பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 190\nசக்கர பேஸ் (mm) 2570\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்க��் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் அம்சங்கள் மற்றும் Prices\nஐ20 ஆக்டிவ் பேஸ் பெட்ரோல்Currently Viewing\nஐ20 ஆக்டிவ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஐ20 ஆக்டிவ் 1.2 எஸ்எக்ஸ் உடன் ஏவிஎன்Currently Viewing\nஐ20 ஆக்டிவ் 1.2 எஸ்எக்ஸ் இரட்டை டோன்Currently Viewing\nஐ20 ஆக்டிவ் எஸ்எக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஐ20 ஆக்டிவ் எஸ்எக்ஸ் இரட்டை டோன் பெட்ரோல்Currently Viewing\nஐ20 ஆக்டிவ் எஸ் டீசல்Currently Viewing\nஐ20 ஆக்டிவ் 1.4 எஸ்எக்ஸ் உடன் ஏவிஎன்Currently Viewing\nஐ20 ஆக்டிவ் 1.4 எஸ்எக்ஸ் இரட்டை டோன்Currently Viewing\nஐ20 ஆக்டிவ் எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nஐ20 ஆக்டிவ் எஸ்எக்ஸ் இரட்டை டோன் டீசல்Currently Viewing\nஎல்லா ஐ20 ஆக்டிவ் வகைகள் ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஐ20 ஆக்டிவ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 ஆக்டிவ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/actress-keerthi-suresh-got-vaccinated/", "date_download": "2021-08-02T09:47:51Z", "digest": "sha1:SMNQ7G4COJALEK24XV5JG42EONXMDSS3", "length": 6528, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "நடிகை கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வைரல் ! - சினிமா - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nநடிகை கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வைரல் \nகரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க தடுப்பூசி அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில்,பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் இவர்கள் தடுப்பூசி போட்டுகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்கிறார்கள்.\nதற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் இன்று கரோனா ��டுப்பூசி செலுத்திக்கொண்டார். நடிகர் கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nடிகர் ரஜினிகாந்த், அசோக் செல்வன், சூரி, ஹரீஷ் கல்யாண், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், குஷ்பு, ஸ்ரீபிரியா, நயன்தாரா, ரம்யா பாண்டியன், ராதிகா ஆப்தே ஆகியோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.\nதினமும் ஏன் நாம் நட்ஸ் சாப்பிட வேண்டும் \nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி \nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\nமுருதீசுவரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சிம்பு\nமணிவண்ணன் என்ற மாமேதை பிறந்த தினம் \nநடிகை யாஷிகா தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றம்..\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி \nசென்னை வந்தார் குடியரசுத் தலைவர்\nரஷ்யாவில் அஜித், விஜய் சந்திப்பு\nதொடர் சரிவில் தங்கம் விலை\n‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..\nகருணாநிதி உருவப்பட திறப்புவிழாவிற்கு ஜனாதிபதி வருகை\n18வது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nஆடி கிருத்திகை: கோயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nபிக்பாஸ் 5ஆவது சீசன் அடுத்த மாதம் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil4.com/news/canadian-news/extreme-heat-in-canada-also-kills-marine-life/", "date_download": "2021-08-02T08:53:37Z", "digest": "sha1:7PTBW5UU4UPHZKD3ABVIXOIUOFCIYFF3", "length": 5913, "nlines": 67, "source_domain": "tamil4.com", "title": "கனடாவில் அதீத வெப்பத்தால் கடல் உயிரினங்களும் உயிரிழப்பு - Tamil4", "raw_content": "\nகனடாவில் அதீத வெப்பத்தால் கடல் உயிரினங்களும் உயிரிழப்பு\nகனடாவில் அதீத வெப்பத்தால் கடல் உயிரினங்களும் உயிரிழந்துள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக கடல் உயிரியலாளரான Chris Harley வன்கூவரின் Kitsilano கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.\nஅப்போது மரணத்தின் வாசனையை தான் உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Chris. கடற்கரை முழுவதிலும் mussels, clams, sea stars மற்றும் நத்தைகள் முதலான சிப்பி வகை உயிர்கள் உயிரிழந்து கிடப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஅத்துடன், அவை இறந்து அழுகிப்போனதால் அங்கு கடுமையான துர்நாற்றமும் வீசுகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலவும் வரலாறு காணாத வெப்பத்தால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடற்கரை வாழ் உயிரினங்களைக் கொன்றிருக்கலாம் எனவும் அவர் கருதுகிறார்.\nஇதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், இறந்து அழுகிப்போன இந்த கடல் உயிரினங்களால் தண்ணீரின் தரமும் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகனடாவில் வரலாறு காணாத வெப்பம்; 5 நாட்களில் 486 பேர் உயிரிழப்பு\nதடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு அனுமதி இல்லை; கனேடியப் பிரதமர்\nஉய்குர் இனப்படுகொலைக்கு எதிராக கனடாவில் போராட்டம்\nகனடா சென்ற இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் இரு தமிழர்களை தேடும் பொலிஸார்\nதம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/48766/", "date_download": "2021-08-02T09:21:29Z", "digest": "sha1:3JLVITJUBRTQXK4GVCXRATD5QBTAPHNR", "length": 19809, "nlines": 116, "source_domain": "www.supeedsam.com", "title": "திருக்கோணமலை பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருக்கோணமலை பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம்\nஅரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருக்கோணமலை. பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு,மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\n”இலங்கைத்தீவில் வாழும் பூர்வீக பழங்குடிகளான நாங்கள் இயக்கர் நாகர் வழிவந்த வழித்தோன்றல்களாக எம்மைக்கருதுகிறோம். எம்மில் ஒரு பிரிவினர் மகியங்கனையை அண்டிய பகுதிகளில் ஒரு பிரிவாகவும் நாம் வாகரை, வெருகல் மற்றும் மூதூரை அண்டியும் சுமார் 35 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியிலும் வாழ்ந்து வருகின்றோம். எமக்கான பூர்வீக மொழி ஒன்றை நாம் பேச்சு வழக்கில் கொண்டுள்ளோம். எம்மில் சிலர் இன்னும் அதனைப்பேசி வருகின்றனர். ஆனாலும் நாம் தமிழ் மொழியையே பேச்சு மொழியாகக் கொண்டுள்ளோம். இப்பிரதேசத்தின் மிக மூத்த குடிகளா��� நாம் இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன..\nகடந்து போன வன்முறைச்சூழல் முழுவதும் யுத்தத்திற்கும் வறுமைக்கும் இடையில் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கான காலம் கனிந்துள்ளதாக நம்பிக்கை துளிர்த்திருந்த காலங்களில் எம்மீது திட்டமிடப்பட்ட வகையில் ஏவிவிடப்படும் பொருளாதார ரீதியான முற்றுகை மூலமான நில ஆக்கிரமிப்பு எனும் செயற்பாடு எம்மை இன்று இப்போராட்டக் களத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.\nஎமது பூர்வீக கிராமங்களான சாலையூர், சந்தோசபுரம், இளக்கந்தை, பாட்டாளிபுரம் வீரமாநகர், மலைமுந்தல், நீனாக்கேணி, நல்லூர், உப்பூறல், சந்தனவெட்டை, சீனன்வெளி மற்றும் இலங்கைத்துறை முகத்துவாரம் தொடக்கம் வாகரை வரையான நீண்ட நிலப்பரப்பில் நாங்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றோம். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கென 50 களில் மதிப்பிற்குரிய டி.எஸ். சேனாநாயக்க பிரதமர் அவர்களால் நல்லூரிலே உல்லை குளத்தையும் 700 ஏக்கர் வயற்காணிகளையும் ஏற்படுத்தித் தந்ததன் பின்னர் எமது வாழ்க்கை முன்னேற்றம் காணத் தொடங்கிற்று. இக்காலப்பகுதியில் அரசினால் உருவாக்கப்பட்டு எம்மால் இயக்கப்பட்ட பத்தினியம்மன் விவசாய சம்மேளனம் இப்பகுதியின் விவசாய மேம்மபாட்டு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபாட்டைக் காட்டி வந்தது. ஆயினும் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டிலே நிலவிய கடுமையான யுத்தம் எம்மை மீண்டும் வறுமைக்கோட்டினுள் தள்ளி விட்டதை யாவரும் அறிவீர்கள். மீள முடியாத வறுமையையும் இடப்பெயர்வையும் சொத்து உயிரிழப்புக்களையும் தந்த யுத்தம் முடிவடைந்ததன் பின்பு அயற் கிராமமான தோப்பூரிலே வசிக்கின்ற முஸ்லீம் முதலாளிகள் சிலரின் திட்டமிடப்பட்ட பொருளாதார சுரண்டல் காரணமாக இன்று நல்லூர் மற்றும் உப்பூறல் ஆகிய கிராமங்கள் முற்று முழுதாக எமது கைகளை விட்டு பறிபோய்விட்டது. அத்துடன் உல்லைக் குளமும் 700 ஏக்கர் வயற்காணிகளும் எம்மிடமிருந்து அடாவடியாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. எமது மேய்ச்சல் நிலங்கள் அவர்களது தென்னந் தோப்புகளாகியிருக்கின்றது. எமது மேட்டு நிலங்கள் அவர்களது முந்திரிகைத் தோட்டமாகியிருக்கிறது.\nஅரசினால் எமக்கென வழங்கப்பட்டிருக்கும் காணி அனுமதிப்பத்திரங்கள் எம்வசம் ��ருக்கும் போதே முஸ்லிம் விவசாயிகளாக தம்மை இனங்காட்டிக்கொள்ளும் முதலாளிகள் அரசின் அனுமதிப்பத்திரத்துடன் தமது விவசாய நடவடிக்கைகளை எமது பூர்வீக மண்மீது ஆரம்பித்து விட்டனர். விவசாய சம்ளேனம் கூட அவர்களுக்கானதாக மாற்றம் கண்டுவிட்டது.\nஅரச இயந்திரம் அரசியற் செல்வாக்கின் பலம் கொண்டு பாமர பழங்குடி மக்களாகிய எம்மீது கோர ஒடுக்குமுறை ஆயுதம் கொண்டு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வன்முறைக்கெதிராக நாங்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளைச் செய்தும் எமது அரசியல் தலைமைகளிடமும் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எது வித பலனும் இல்லாத ஒரு சூழலில் நாம் வேறு வழிகளின்றி இப்போராட்டத்தை நடாத்த வேண்டிய வரலாற்று தேவை எம் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.\nஅதே வேளை எமது வாழ்வாதாரத்தின் பெரும் பகுதி தங்கியிருக்கும் எமக்குச் சொந்தமான வனப்பகுதி அரசினால் வனஇலாகாவிற்குச் சொந்தமானதாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்பு அப்பகுதியில் எதுவித பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே விளைச்சல் காணிகளைப் பறிகொடுத்திருக்கும் நாம் மேற்படி நடவடிக்கை மூலம் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டு தற்போது வாழவழியின்றி தவித்து வருகின்றோம். சுய கௌரவத்துடனும் சுயசார்பு பொருளாதார கட்டமைப்புடனும் வாழ்ந்து வந்த ஒரு இனம் யுத்தம் நிறைவடைந்ததன் பின் வீதி வீதியாக யாசகம் கேட்டுப் பிழைப்பு நடாத்தும் கொடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்பதனை இங்கு பதிவு செய்ய முனைகின்றோம். இந்நிலைக்கான முக்கிய காரணம் எம்மீதான ஒடுக்குமுறையை ஆதரித்து நின்ற அரச இயந்திரமும் அதிகார வர்க்கமேயாகும்.\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போராட்டம் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அன்றி மதத்திற்கோ எதிரானதல்ல. இது எமது இருப்பிற்கான போராட்டம் மட்டுமே. எம்மிடமிருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட எமது மண் எமக்கே மீண்டும் திருப்பித் தரப்பட வேண்டும். எங்கள் முற்றத்தின் மீது அமர்ந்து நீங்கள் உங்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை கவனத்திற் கொள்ளுமாறு இத்தால் எமது நில ஆக்கிமிப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.\n1. சேனைப்பயிர்ச்செய்கை எமது பாரம்பரிய உரி��ை, அந்நிலங்கள் எமக்கே சொந்தம்.\n2. எமது பாரம்பரிய தொழில்கள் காப்பாற்றப்பட வேண்டும்.\n3. எமது குடியிருப்புக்களிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்.\n4. மலை நீலியம்மன், பெரியசாமி கோவில்களை ஆக்கிரமித்து இருக்கும் பௌத்த ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.\n5. எங்கள் பாலக்காட்டு மடு இக்பால் நகரமாகியதும் கோபாலபுரபட்டணம் 30 வீட்டுத்திட்டமாகியதும் எவ்விதம் என விசாரணை செய்யப்பட்டு அவை எம்மிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும்.\n6. மலைமுந்தல், நல்லூர், உப்பூறல் பகுதிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் சாஹிப் நகர் கிராம வேலைத்திட்டம் நிறுத்தப்படுதல் வேண்டும்.\n7. உல்லக்குளம் எம்மிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும்.\n8. இறால்குளி, சுவாந்திர ஆறு, கொக்கட்டி ஆறுகளில் நாம் தொழில் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.\n9. முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள பௌத்த தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nஆகிய கோரிக்கைகளை இத்தால் நாம் முன்வைக்கின்றோம்.\n இவ்விடயம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கையை மேற்கொண்டு எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை எமக்கே மீளளிப்பதுடன் எமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வதுடன் மீளவும் இவ்விதமான ஆக்கிரமிப்புக்கள் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என இத்தால் கோருகின்றோம்.\nபழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு,\n2017 வைகாசி மாதம் 28\nபழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு\nPrevious articleஏறாவூர்பற்றில் முனைப்பின் இரு வேலைத்திட்டங்கள்\nNext articleஇயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146\nஇலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் கொவிட் தடுப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nவாகனேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் வரலாற்றில் முதற் தடவையாக இடைப் போக விவசாயச் செய்கை\nஇலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் கொவிட் உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nஅடிப்படை உரிமை மீறல் மனுவும் பிள்ளையானின் காலை வாரியது\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தில் மகா வேள்விக்கான வேலைகள் மும்முரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7902:-1-&catid=352&Itemid=259", "date_download": "2021-08-02T09:40:49Z", "digest": "sha1:JNY6J5LGPZNXVWBM7P4PQMEDJWJSMZJG", "length": 20850, "nlines": 134, "source_domain": "www.tamilcircle.net", "title": "சர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும்: சில குறிப்புகள் - (பகுதி 1)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும்: சில குறிப்புகள் - (பகுதி 1)\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 21 ஜூன் 2011\nஇன்று லிபியாவில் நேற்று ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் என எல்லாவற்றிலிலும் “சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பற்றி வியப்பதற்கு எதுவுமில்லை. அது எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதற்கிடையில் லிபியாவில் பொதுமக்களைக் காப்பாற்ற தலையிட்ட ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் இலங்கைத் தமிழர் விடயத்தில் அவ்வாறு நடந்துகொள்ளாமல் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. நாங்கள் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இற்றைக்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் ருவாண்டாவில் நூறு நாட்களில் எட்டு இலட்சம் டுட்சி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட போது ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இக் காலப்பகுதியில் ஐ.நாவின் அமைதிகாக்கும் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரோமியோ டிலார் (Romeo Delaire) தனது ‘பிசாசுடன் கை குலுக்குதல்” (Shaking Hands with the Devil) என்ற நூலிற் பின்வருமாறு எழுதுகிறார்:\n“மேற்குலகுக்கும் ஐ.நாவிற்கும் ருவாண்டாவில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று படுகொலைகள் தொடங்கிய போதே தெரியும். ஆனால் யாருக்கும் ஆபிரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் உள்ள நாடு பற்றி அக்கறை இல்லை. மூலோபாய ரீதியில் தேவைப்படாத கறுப்பர்களைக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இனப் படுகொலைகளைப் பற்றிக் கவலைப்பட யாரும் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், ருவாண்டாவில் நடந்து கொண்டிருந்ததெல்லாம் நாகரீகமற்ற பழங்குடி இனக் குழுமங்களுக்கிடையிலான சண்டை மட்டுமே”.\nஇது ருவாண்டாவிற்கு மட்டுமல்ல, இலங்கை உட்பட்ட பல நாடுகளிலும் “சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது, இனியும் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கான வரலாற்றின் சாட்சியாக இருக்கிறது. அடக்குமுறையாளர்களும் ஆளும் வர்க்கங்களும் சர்வதேசச் சமூகம் பற்றி அதிகமாகவே பேசுவதைக் கேட்கிறோம். தங்களின் அடக்குமுறைகளையும் அராஜகங��களையும் கேள்விக்கு உட்படுத்தாத வரை, சர்வதேசச் சமூகம் பற்றி மகிழ்ச்சி உடையவர்களாகவே ஆளும் வர்க்கத்தினரும் அடக்குமுறையாளர்களும் இருப்பர்.\nஅடக்குமுறைகளினதும் ஆதிக்கங்களினதும் ஒட்டு மொத்த வடிவமாக இருக்கும் சர்வதேசச் சமூகம் எனப்படுகின்ற ஏகாதிபத்தியத்தின் தலையீட்டின் மூலம் அடக்கி ஆளப்படும் மக்களினது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்புவது இன்றைய பொதுவான போக்காக இருக்கிறது. அடக்குமுறை அரசு யந்திரத்திற்கு எதிராக மக்களின் போராட்ட சக்தியைப் புதிய போக்கிற்கு ஏற்பக் கட்டி வளர்க்க முடியாத ஜனநாயக இடதுசாரிச் சக்திகளும் சர்வதேசத் தலையீடுகளைத் தத்தம் நிலையில் நின்று வரவேற்பவர்களாகவே இருக்கின்றனர்.\nஅதேபோல, முரண்பாடுகளை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கி யுத்தங்களைத் திணித்து அதிற் பாதிக்கப்படுவர்களுக்கும், அதே வேளை, அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் மனிதாபிமான ரீதியாக உதவுவதாகக் கூறி உலக மேலாதிக்க சக்திகள் செயலாற்றுகின்றன. மேலும், இயற்கை அனர்த்தங்களின் போதும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் எனவும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க எனவும் மேலாதிக்கச் சக்திகள் நாடுகளில் தலையிடு கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேசச் சமூகம் என்ற போர்வைக்கு உள்ளிருக்கும் ஏகாதிபத்தியத்தை வரவேற்று உபசரிக்கும் நிலையில் பல்வேறு பிரிவினர் இருக்கின்றனர்.\nஇதன் பின்ணணியிலேயே விடுதலை பற்றியும் விடுதலைக்கான போராட்டம் பற்றியும் பேச முடிகிறது. விடுதலைப் போராட்டம் தேசிய வாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பல சந்தர்ப்பங்களில் தேசியவாதம் சர்வதேசச் சமூகத்துடன் ஒட்டி உறவாடுகிறது. அந்நியத் தலையீட்டைக் கூவி அழைக்கிறது. விடுதலைப் போராட்டத்திற்கு குழி பறிக்கிறது. இவை வரலாற்று நோக்கில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை.\nஏனெனில் தேசியத்தின் திசைவழியானது வரலாறு பற்றிய புனைவுகளாலும் நம்பிக்கைகளாலுமே கட்டியமைக்கப் படுகிறது. நம்மிடம் வந்து நாம் பழங்காலத்தில் நாகரீகச் சிகரங்களை தொட்டுக் கொண்டு இருந்தோம் என்று யாராவது சொல்லிவிட்டால், நாம் புளகாங்கிதம் அடைகிறோம். நாம் தற்போது எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் முன்னேறாமல் பின் தங்கி இருந்திருந்தால் உடனே அதற்கான காரணத்தை குறிப்பிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுச் சதிகாரர்களிடம் நாம் தேட ஆரம்பித்து விடுகிறோம். பெனடிக்ற் அன்டர்சனின் (Benedict Anderson)கற்பனையான சமூகங்கள் (Imagined Communities) என்ற நூல், தற்போதைய நவீன யுகத்தில் புதிதாக நாம் சுவீகரித்த தேசிய விருப்பின் அடிப்படையில் நமது கடந்த காலத்தை கற்பனையில் மீளக் கட்டமைப்பது குறித்து நமது கவனத்தை ஈர்க்கிறது. உண்மையில் இந்த குறுகிய வாதம் வெறுமனே திரிந்து போன தேசியவாதம் மட்டும் அல்ல. சொல்லப்போனால், மதம், இனம், சாதி என்பது போன்ற ஒரு கற்பனை விசித்திரம் தான். இதுபோன்ற பல்வேறு அடையாளங்கள் கலந்தும் முரண்பட்டும் உள்ளார்ந்து வினை புரிந்தும் இருக்கும் ஆசிய மற்றும் ஆபிரிக்க சமூகங்களில் நீண்ட நெடுங்காலமாகத் தமது சார்புநிலைக்கு தகுந்தாற் போல் வரலாற்றை மீளக் கட்டமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.\nவரலாற்றின் ஆபத்துக் குறித்து வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் (Irfan Habib) பின்வருமாறு சொல்கிறார்:\n“கடந்த கால மோகம் என்பது ஒரு தனிமனிருக்கு எப்படியோ அது போலத் தான் வரலாறு என்பது நாட்டு மக்களுக்கு என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ‘சிலரது சதிகாரர்களின் சதி காரணமாய் என்னை நான் உணர்ந்து கொள்வது தவறிவிட்டது’ என எனது மனதுக்குள் முடிவு செய்தால் அது என்னை எங்கு கொண்டுபோய் விடும் இந்த மாதிரியான தவறான எண்ணங்கள் நான் எனது சக மனிதர்களுடன் சுமுகமான உறவு கொண்டிருப்பதைப் பாதிப்பதோடு மட்டுமன்றிக் கடைசியில் எனக்குள் புதைந்து கிடக்கும் ஊனங்களையும் துகிலுரிந்து காட்டிவிடும். இப்படியாகத் தனி யொருவருக்கு நடப்பதே, கண்டிப்பாகக் கற்பனை வரலாறு தந்த போதையில் மிதக்கும் நாட்டு மக்களுக்கும் நடக்கும். பொய் வரலாறு எவ்வளவுதான் உடனடி, குறுகிய காலப் புகழாரங்களைச் சூட்டிய போதிலும், அது, மக்களுடைய ஒழுக்கநெறி எனும் உயிர் நரம்பைக் கத்தரித்து, முன்னேறுவதற்கான அவர்களுடைய திறனை அறுத்து எறிந்து விடும். ஆகவே இந்த மாதிரியான கதையளக்கும் வரலாறுகளை எந்த விதத்திலும் நாம் நியாயப்படுத்தி விடமுடியாது”.\nவரலாற்றின் கைதியாக ஒரு சமூகம் இருக்கும்வரை, அச் சமூகம் தனது முன்னேற்றத்திற்கான தடையைத் தானே இட்டுக் கொள்கிறது. இன்றைய நவகொலனித்துவ உலக ஒழுங்கில், தேசியம் பல புதிய வடிவங்களை எடுக்கிறது. எல்லோரும் உலகமயமாகி இருக்கிறோம். ஆனால் எம் நினைவுகளையும் பூர்வீக வீரப்பிரதாபங்களையுஞ் சுமந்தபடி தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். வரலாற்றைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாதபடி நம் முன்முடிவுகளோடு நாம் கட்டுண்டிருக்கிறோம். உரிமைகட்கான அவாவும் ஜனநாயகத்திற்கான தேவையும் விடுதலைக்கான போராட்டங்களும் வரலாறு முழுவதிலும் நிறைந்து இருக்கிறது. இனிவரும் வரலாற்றிலும் அவ்வாறே இருக்கும். அதனடிப்படையில் விடுதலைக்கான போராட்டங்களில் சர்வதேசச் சமூகம் எவ்வாறு நடந்துகொண் டிருக்கிறது என்பதையும் வரலாற்று நோக்கிலும் போக்கிலும் பார்க்கும் முயற்சியே இக் கட்டுரை.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/thambikku-annavin-kaditham-part-7.htm", "date_download": "2021-08-02T08:41:05Z", "digest": "sha1:G7HWMBRJFDYZE4UZW2FT5YHVQARSCUQC", "length": 5658, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்(தொகுதி 7) - அறிஞர் அண்ணா, Buy tamil book Thambikku Annavin Kaditham Part 7 online, Anna Books, கடிதங்கள்", "raw_content": "\nதிருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்(தொகுதி 7)\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்(தொகுதி 7)\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்(தொகுதி 7)\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்(தொகுதி 7) - Product Reviews\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்(தொகுதி 7)\nஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள்\nஅன்புள்ள தியோ(வான்காவின் கடிதங்கள் )\nதங்கள் பதிலை எதிர்பார்த்து ...\nஉலகம் நமது ஒரே வீடு அதை காப்பது நமது கடமை (தேவாலயங்களுக்கு போப் ப்ரான்சிஸ் மடல்)\nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் (Vijaya)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-08-02T10:00:10Z", "digest": "sha1:SYIPSBW53GMT63CXTG2RUZXZHSAQKA3Q", "length": 3543, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மயக்கவியல் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉலக மயக்கவியல் நாள் (World Anaesthesia Day) ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஆம் நாள் நினைவுகூரப்படுகிறது.\n1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள், ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற��கொள்ளப்பட்டது. வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் என்பவர் மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இதனைப் பரிசோதித்தார். வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக்கண்டுபிடிப்பு மிகவும் உதவியது. மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். எனவே இந்த நாள் உலக மயக்கவியல் நாளாக கொண்டாடப்படுகிறது.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2017, 01:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2021-08-02T08:14:28Z", "digest": "sha1:QCCHRUWJMEDP2J4PFIBE4B76AKCJETJS", "length": 4108, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மோகன் சின்கா மேத்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமோகன் சிங் மேத்தா (Mohan Sinha Mehta)(1895-1986) [1] இந்தியாவின் ராஜஸ்தானின் உதய்பூரில் அமைந்துள்ள வித்யா பவன் நிறுவனங்கள், சேவா மந்திர் ஆகியவற்றின் நிறுவனராவார்.\nமோகன் சிங் மேத்தா ராஜஸ்தானின் பில்வாராவில் 1895 ஏப்ரல் 20 அன்று ஜீவன் சிங் மேத்தா என்பவருக்கு பிறந்தார். இவரது மனைவியின் பெயர் உலாஸ் குமாரி மேத்தா, இவர்களுக்கு ஜகத் சிங் மேத்தா என்ற ஒரு மகன் இருக்கிறார். அவர் இந்திய அரசாங்கத்தில் வெளியுறவு செயலாளராக இருந்தார்.\nமேத்தா, ஆக்ராவின் ஆக்ரா கல்லூரியில் 1916இல் தனது இளங்கலைப் பட்டம் பெற்றார். 1918இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், சட்டம் (1919) படித்தார். 1927இல் இலண்டன் பொருளியல் பள்ளியில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தார். 1927ஆம் ஆண்டில் பார் அட் லா ஆனார்\nபரணிடப்பட்டது 10 ஆகத்து 2007 at the வந்தவழி இயந்திரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2021, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-08-02T10:24:47Z", "digest": "sha1:N4XIX7N3WGTBOYYPUD2ANK4I7VH6BCP5", "length": 15048, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "நகரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநகரி (Nagari) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இம்மாநிலம் 676 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சித்தூர் வருவாய் கோட்டத்திலுள்ள 66 மண்டலங்களுள் நகரி மண்டலத்தின் தலைமையிடம் நகரி நகரமாகும்.[1][2].\nநகரி நகரம் 13.33 ° வடக்கு 79.58 ° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 116 மீட்டர் அல்லது 380 அடி உயரத்தில் இந்நகரம் உள்ளது. மேலும் இது ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாம் வகுப்பு நகராட்சியாகும். 25.6 சதுர கி.மீ பரப்பளவில் நகரி நகரம் பரவியுள்ளது. நகரி நகரம் திருப்பதி முதல் சென்னை வரை செல்லும் நெடுஞ்சாலையில் திருப்பதியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் சென்னை நகரத்திலிருந்து 95 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. பருத்தி நெசவு புடவைகள், லுங்கிகள் ஆடை பொருட்கள், தேசம்மா கோயில், கரியமானிக்யம் வெங்கடேசுவர சுவாமி கோயில், சாய் பாபா கோயில் மற்றும் வாழைப்பழங்களுக்கு இந்நகரம் பிரபலமானது ஆகும்.\nநகரி நகரம் தலைநகரில் இருந்து 444 கி.மீ தொலைவிலும் மாவட்ட தலைமையகத்திலிருந்து 67 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆம் வகுப்பு நகராட்சியாக நிறுவப்பட்டது. இந்த நகராட்சியில் 4 மண்டலங்களும் 27 தேர்தல் வார்டுகளும் உள்ளன.\nநகரி நகரம் பொதுவாக வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. குளிர்காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும், கோடை காலம் மார்ச் முதல் சூன் வரை நீடிக்கும். ஆண்டு மழை அளவு 1.62 மி.மீ ஆகும். இதில் பெரும்பாலானவை அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையிலிருந்து பெறப்பட்டன.\nதட்பவெப்ப நிலைத் தகவல், நகரி , இந்தியா\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\n2001 ஆம் ஆண்டில் 56832 ஆக இருந்த நகரத்தின் மக்கள் தொகை 2011 ல் 62275 ஆக அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இது 8.74% ஆக அதிகரித்துள்ளது. நகரி நகரத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 985 பெண்கள். கல்வியறிவு விகிதம் 77.85%. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்��ள் தொகை கணக்கெடுப்பின்படி நகரி நகரத்தின் மக்கள் தொகை 96,152 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 48,058 ஆண்கள் மற்றும் 48,094 பெண்கள் அடங்குவர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1000 பெண்கள் ஆக இருந்தது. இது தேசிய பாலின விகித சராசரியான 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்பதை விட அதிகமாகும். 10,518 குழந்தைகள் 0–6 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 5,471 சிறுவர்கள் மற்றும் 5,047 சிறுமிகள் - இது 1000 சிறுவர்களுக்கு 922 சிறுமிகள் என்ற பாலின விகிதமாகும். மக்கள் தொகையில் 62,640 பேர் கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர். நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 65.14% ஆக உள்ளது, இது தேசிய சராசரியான 73.00% ஐ விட குறைவாகும். தெலுங்கு மொழி இந்த ஊரில் அதிகாரப்பூர்வமாகவும் பரவலாகவும் பேசப்படும் மொழியாகும்.\nதமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி துறையின் மூலம் இங்கு தொடக்கக் கல்வி, உயர் நிலைக்கல்வி, மேல் நிலைக்கல்வி படிப்புகள் தமிழக அரசால் நடத்தப்படுகின்றன.[4][5]\nஇந்த மண்டலத்தின் எண் 45. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நகரி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[6]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 22:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:11_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-08-02T10:14:01Z", "digest": "sha1:35MY2FH7U3NHEQJ5NQ5QGP4G5X2T2YAG", "length": 13630, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 223 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய ���க்கம்) (அடுத்த பக்கம்)\nஇ. எஸ். எஸ். இராமன்\nஈ. ஏ. பி. சிவாசி\nஎசு. எசு. முகமது இஸ்மாயில்\nஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்\nஎம். எம். எஸ். அபுல் ஹசன்\nஎம். என். ஜோதி கண்ணன்\nஎன். எஸ். ராஜ்குமார் மன்றாடியார்\nஎன். கே. கே. பெரியசாமி\nஎஸ். என். எம். உபயத்துல்லா\nஎஸ். எஸ். மணி நாடார்\nஎஸ். வி. திருஞான சம்பந்தம்\nஏ. ஆர். ஆர். சீனிவாசன்\nஏ. வி. அப்துல் நாசர்\nகே. ஆர். ஜி. தனபாலன்\nகே. வி. வி. இராஜமாணிக்கம்\nசோ. பாலகிருஷ்ணன் (முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர்)\nபன்னீர்செல்வம் (சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்)\nபி . எம் . செங்குட்டுவன்\nபி. டி. ஆர். பழனிவேல்ராசன்\nபி. வி. எஸ். வெங்கடேசன்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2020, 06:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-02T10:12:04Z", "digest": "sha1:W4UIT4FVPV2DZMMUSMUBMPT45U3SJ7TA", "length": 5951, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "புனுகுச்சட்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎனில் புனுகுப்பூனையின் உடலின் ஓர் உறுப்பு--உடலினுள் மலவழியருகே அமைந்துள்ள ஓர் சுரப்பி\nபுனுகு உற்பத்தியாகும் பூனையின் உறுப்பு\nபுனுகுப்பூனையின் சட்டத்தினின்றும் வெளிப்படும் வாசனைப் பண்டம்\nஇச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 பெப்ரவரி 2016, 23:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-08-02T08:24:18Z", "digest": "sha1:LTS7TNKNTUANLKCFLEON6SS7PSD7RUMO", "length": 2588, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "கால்நடை மருத்துவர் | ஜனநேசன்", "raw_content": "\nஅணில்களுக்காக இரு வாரங்கள் இருசக்கர வாகனத்தை எடுக்காமல் இருந்த…\nமதுரை ஆனையூர் சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ். இவருக்கு சொந்தமான இரு…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில்…\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\nபல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலமடைந்து உள்ளது :…\nகஞ்சா கடத்திய பெண் உட்பட 10 பேர் கைது…\nமதுரை : பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பெயர்…\nஇந்திய சுதந்திரதின 75-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, மரக்கன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2020/03/19/accounts-of-rumors-about-corona-will-be-frozen/", "date_download": "2021-08-02T08:42:47Z", "digest": "sha1:3POH5Z3DWJWT7JNBRWD7SV2GTY77VGAX", "length": 8500, "nlines": 161, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "கொரோனா குறித்து வதந்தி பரப்புவோரின் கணக்குகள் முடக்கப்படும் – Kuttram Kuttrame", "raw_content": "\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nகொரோனா குறித்து வதந்தி பரப்புவோரின் கணக்குகள் முடக்கப்படும்\nPublish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்\nகொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ் மிகவும் ஆபத்தானது ,குணப்படுத்த முடியாது, வைரஸ் தொற்று ஏற்பட்டால் இறப்பு நிச்சயம் என்ற வதந்திகளை பதிவிடு வோரின் பதிவுகள் அழிக்கப் படுவதுடன் அவர்களது கணக்கு முடக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய்த் தொற்றுக்கான மருந்து கண்டறியும் குறிப்புகள் குறித்த பதிவுகள் இருந்தால் ஊக்குவிக்கப்படும் என்றும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு..\nஇரையை விழுங்கி விட்டு நகர முடியாமல் தவித்த பாம்பு..\nகோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்..\nஎன்ன நடந்தது என்று தெரியவில்லை ஏமாற்றிவிட்டனர்..\nதமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா தொற்று.. 26 பேர் பலி\nஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுந்த பெண்..\nஉலக செய்திகள் விரைவு செய்திகள்\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nகிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2020/04/16/kita-cut-curry-party-named-corona-celebration-2/", "date_download": "2021-08-02T09:17:51Z", "digest": "sha1:3F5A5YUJ5IMXCUR66ZVTQPH7UF2Q5AO4", "length": 13666, "nlines": 166, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "வெளவால்கள் மூலமாக பரவும் கொரோனா வைரஸ்.கலக்கத்தில் கிட்டாம்பாளையம் ஊராட்சி மக்கள் !!! – Kuttram Kuttrame", "raw_content": "\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nவெளவால்கள் மூலமாக பரவும் கொரோனா வைரஸ்.கலக்கத்தில் கிட்டாம்பாளையம் ஊராட்சி மக்கள் \nகொரோனா பற்றி நான்கு மாநிலங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில வெளவால்களில் ஒருவகையான வைரஸ் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளதால் கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.\nகோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கிட்டாம்பா��ையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் 2 ஆயிரம் வெளவால்கள் அங்குள்ள பல்வேறு அரச மரங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்து வருகிறது.இவைகள் உணவு தேடி தினசரி, ஊட்டி, குன்னூர், சத்தியமங்கலம், தாளவாடி,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று இரவு நேரங்களில் உணவு தேடிச்சென்று பின்பு மீண்டும் கிட்டாம்பாளையம் பகுதியில் உள்ள மரங்களில் பகல் நேரங்களில் தங்கிவிடுகிறது. இந்த வெளவால்களை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் செல்ல பிள்ளைகள் போல பாதுகாத்து வருகின்றனர்.\nஇங்குள்ள மக்கள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் முதல் வருடம் முழுவதும் பட்டாசு வெடிக்காமல் பல ஆண்டுகளாக இந்த பழம் தின்னி வெளவால்களை பாதுகாத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் வெளவால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் இருப்பதாக தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்ததால் கிட்டாம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதனையடுத்து கிட்டாம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோரிடம் வெளவால்கள் குறித்தான நோய்த்தொற்றில் உரிய ஆராய்ச்சி செய்து, மனித இனத்திற்கு பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதனை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் வெளவால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் இருப்பதாக தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ள நிலையில் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்,ஆட்சியர் உள்ளிட்டோரிடம் தெரிவித்துள்ளதாகவும்,\nஉடனடியாக இதுகுறித்து கிட்டாம்பாளையம் பகுதியில் ஆய்வு செய்ய ஒரு மருத்துவ குழுவை அனுப்புவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாகவும், கிட்டாம்பாளையத்தில் வாழ்ந்து வரும் வெளவால்கள் மூலம் வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என்றும்,வெளவால்களிடமிருந்து முழுமையாக மக்களை பாதுகாக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும், இதனால் மனிதர்களுக்கு எந்த தாக்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு கோவை மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்ட���ாகவும் தெரிவித்தனர்.\nஅதன் அடிப்படையில் இன்று கிட்டாம்பாளையம் ஊராட்சி பகுதியில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வெளவால்களால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் - சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nசிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nநடிகர் விஜய்யை சந்திக்க சென்ற ரசிகர்..\nகோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்..\nகோயம்புத்தூர் தமிழ்நாடு விரைவு செய்திகள்\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nகிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/09/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2021-08-02T08:42:59Z", "digest": "sha1:J6SIT4XU6UY4FX6AUQR4BV7HDMLCV6WE", "length": 24252, "nlines": 191, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "சித்தம் போக்கு..சிவன் போக்கு! – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › சித்தம் போக்கு..சிவன் போக்கு\nபெரியவா ஜன்னல் வழியாக பக்தர்களுக்கு தரிசனம் தரும் இடம். பெரியவாளுக்கு அருகில் அணுக்கத் தொண்டர்கள். அவர்களில் ஒருவன் என் மருமான் நாராயணன்.\n”நாராயணா” என இயல்பாகவே பெரியவா குரல் ஒலிக்கிறது.\n”ஏன் ”என்ற பதில் குரம் என் மருமான் நாராயணனிடமிருந்து வருகிறது. விஷ்ணுபுரம் சாது நாராயணன் என்றால் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.\n” என்று புன்முறுவலுடன் பெரியவா கேட்கிறார்கள்.\n”கடிகாரம் மாதிரி அது டக்..டக் என்று அடித்துக் கொள்கிறதே கன கணக்காய் அது எப்படி\nபெரியவா எந்தப் பேச்சுக்கு அடி போடுகிறார் என்று தெரியாமல் அவன் மௌனம் சாதிக்கிறான்.\n”கடிகாரத்தைப் பார்த்து இதயம் ஓடுகிறதா அல்லது இதயத்தைப் பார்த்து கடிகாரம் கண்டுபிடித்தார்களா அல்லது இதயத்தைப் பார்த்து கடிகாரம் கண்டுபிடித்தார்களா\n”கடிகாரத்தில் பல்சக்கரம் பழுதானால் துடிப்பு தடுமாறிப்போகிறது;அத�� போல் இதயத் துடிப்பும் அப்படி தடுமாறுவது உண்டாமே..உனக்குத் தெரியுமோ\n”ஆமாம்..இப்படி ஒரு இதயக் கோளாறு ஏற்படுவதுண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறோம்”..பலர் சேர்ந்து கோரஸாகக் குரல்\nஅப்போதைக்கு அந்தப் பேச்சு நின்றுவிடுகிறது.\nநாராயணன் சென்னை செல்லும் பஸ்ஸில் அமர்கிறான்..பக்கத்தில் அமர்பவர் ”சென்னைக்கா\nகண்டக்டர் வரும்போது இவனுக்கும் சேர்த்து டிக்கட் வாங்க முனைகிறார். இவன் ஏன் அவர் தனக்காக வாங்க வேண்டுமென மறுத்துவிடுகிறான்.\n;;நான் ஒரு இதய டாக்டர்..பெரியவா உங்களிடம் பேசியதைக் கேட்டேன். நீங்கள் சொன்னால் நான் ECG கருவியோது வந்து பெரியவா அநுமதி தந்தால் முறைப்படி டெஸ்ட் செய்கிறேன்” என்றார்.\n”சித்தம் போக்கு சிவன் போக்கு” என நினைத்து மறுத்து விடுகிறான் நாராயணன்.\nஆனால் டாக்டர் விடுவதாயில்லை.”.நாம் முயன்று பார்க்கலாமே” என்று சொல்லி , மறு நாள் கருவியோடு வந்து விடுகிறார்.\nஅன்று குருவாரம்..என் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கிறது. காரில் வந்த டாக்டரை எனக்கு அறிமுகம் செய்து வைத்து”புறப்படு” என்கிறான் நாராயணன்.\nநாராயணன் அணுக்கத் தொண்டர்களில் ஒருவனாகக் கலந்து, மேற்படி விஷயத்தை அவர்களிடம் சொல்கிறான்.\n”அதெல்லாம் முடியாது, அன்று ஏதோ சொன்னார் என்று நீ பாட்டுக்கு அழைத்து வந்தால், நாங்கள் பாட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளமுடியாது” வேண்டுமானால் நீயே போய் சொல்லிக்கொள்”\nநாராயணன் ஒன்றும் பேசாமல் எங்கள் அருகில் வந்து நிற்கிறான்.\nதரிசனம் கொடுக்க ஜன்னல் அருகில் வந்த பெரியவா”இன்னிக்கி வெங்குடி டாக்டர் வருவார் இல்லையா குருவாரமாச்சே”என்று கேட்கிறார்.\n நான் வரச் சொன்னதாக அவருக்குச் சொல்லி அனுப்பு”\nபெரியவா சொன்ன சில நேரத்தில் டாக்டர் வெங்குடி தாமாகவே வந்துவிடுகிறார்\nதிரென்று பெரியவா”நாராயணா.. யாரையோ கூட்டிக் கொண்டு வந்திருக்கியே.. அவர் யாரு\n”ஒரு டாக்டர், என் மாமா எல்லாருமாக வந்திருக்கோம்…\n அவரை வரச் சொல்…” தொண்டர்கள் என்னை துரத்தாத குறையாய் என்நை ஓரம் கட்டுகிறார்கள்.\nஉடனே எல்லாரும் வரிசையில் நகர்கிறோம்.\n”பக்கவாத்யக் காரன் போல் உன் கையில் என்ன அது..கருவி\n”ECG கருவி அன்று பெரியவா பேசியதைக் கேட்டு எடுத்து வந்திருக்கேன்”\nகருவியை ஜன்னலில் வைத்து ரப்பர் குழாயை நீட்டுகிறார் டாக்டர்.\n”ஒத்தரும் தொடாமல் நானே வெச்சுக்கலாமா\nடாக்டர் எப்படி பசையை ஒட்டிக் கொள்ளவேண்டும் என்று சொல்ல அது போலேயே செய்கிறார் பெரியவா..\nபெரியவா பொருத்திக் கொண்டதும் ECG கருவியை இயக்குகிறார் டாக்டர்.\n”பெரியவா வயசுக்கு ஏற்ப இதயத்துடிப்பு சரியாக இருக்கு”\n”அது நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா\nடாக்டர் உடனே கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்.\n”சிலசமயம் பல்ஸ் மிஸ் ஆகிறது என்கிறாளே.. அது என்னது\n”இரண்டு, மூன்று பல்ஸ் தப்பினால் ஒண்ணும் இல்லை”\n.. எது மிஸ் ஆனாலும்.. நாம் மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள ஒருத்தன் இருக்கான் இல்லையா”\n”உடம்புக்கு ஒன்றும் இல்லையே…உடம்பைப் பார்த்துக் கொள் என்றெல்லாம் சொல்கிறோம்; யார் உடம்பை..யார் பார்த்துக் கொள்றது உயிர் பிரிந்தால் உடம்பைப் பார்த்துக் கொள்ள முடியுமா உயிர் பிரிந்தால் உடம்பைப் பார்த்துக் கொள்ள முடியுமாஉடம்பையும் உயிரையும் பார்த்துக் கொள்கிறவன் அவன்உடம்பையும் உயிரையும் பார்த்துக் கொள்கிறவன் அவன் அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோமே…அவன்தான் பெரிய வைத்யன், வைத்யோ நாராயண ஹரி: என்கிறோமே அதனால்தான்.உடம்புக்கு உடம்பு வராமலும் பார்த்துக் கொள்வான்;உடம்பே ..வராமல் ..மறு ஜன்மா இல்லாமலும் பார்த்துக் கொள்வான்…மக்களுக்குப் பிணி வந்தால் உங்களைப் போல் டாக்டர்கள் வைத்யம் பார்க்கிறீர்கள் . அதனால் உங்கள் தொழில் புனிதமானது; அதனால் ஏழை எளியவர்களுக்கு இலவச வைத்யம் செய்யணும்” என ஒரு நீண்ட சொற்பொழிவே நிகழ்த்தினார்.\nஇதுதான் சித்தம் போக்கு..சிவன் போக்கோ\n“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்\nதிடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்\nஉடம்பை வளர்க்கு முபாயம் அறிந்தே\nஉடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே ” என்பதை எளிமையாய் புரோய வைக்கிறார்\nஉடம்பையும் உயிரையும் பார்த்துக் கொள்கிறவன் அவன் அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோமே…அவன்தான் பெரிய வைத்யன், வைத்யோ நாராயண ஹரி: என்கிறோமே அதனால்தான்.உடம்புக்கு உடம்பு வராமலும் பார்த்துக் கொள்வான்;உடம்பே ..வராமல் ..மறு ஜன்மா இல்லாமலும் பார்த்துக் கொள்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/h-raja-openion-on-godman-web-serial-qbif65", "date_download": "2021-08-02T08:28:37Z", "digest": "sha1:W7DKZPFO4PQSWM56ZSAT2I3LPP5RXYM3", "length": 12297, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவுக்கு கு��மடைவோர் உலகில் 25%, இந்தியாவில் 48.6%.. மோடியால் சாத்தியம் என ஹெச்.ராஜாவின் புள்ளிவிவர வாய்ஸ்! | H.Raja Openion on Godman web serial", "raw_content": "\nகொரோனாவுக்கு குணமடைவோர் உலகில் 25%, இந்தியாவில் 48.6%.. மோடியால் சாத்தியம் என ஹெச்.ராஜாவின் புள்ளிவிவர வாய்ஸ்\nஉலக அளவில் கொரோனாவால் மரணமடைவோர் எண்ணிக்கை 4.5 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் 2.6 சதவீதமாக உள்ளது. இதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை சர்வதேச அளவில் 25 சதவீதம்தான். இது இந்தியாவில் 48. 6 சதவீதமாக உள்ளது. பிரதமர் மோடி தக்க நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால்தான் இது சாத்தியமாகியுள்ளது.\n‘காட்மென்’ வெப் சீரியல் சிறுவர்களை சீரழிக்கும் வகையில் உள்ளது. இதை கருத்துரிமை என்று பேசுபவர்களை சமூக விரோதிகள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.\nஹெச். ராஜா திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ளது. கடந்த மோடி ஆட்சியில் செய்த சாதனைகள் மற்றும் கொரோனா வைரஸுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து கையேடு தயாரிக்க உள்ளோம். இத்துடன் பிரதமர் மோடி எழுதிய கடிதத்தையும் இணைத்து நாடு முழுவதும் 10 கோடிப் பேருக்கு வழங்க உள்ளோம். தமிழகத்தில் 25 லட்சம் பேருக்குக் கொடுப்போம்.\nகடந்த ஓராண்டில் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த 370-வது சிறப்பு சட்டப் பிரிவை ரத்து செய்தது, காஷ்மீர், லடாக் பகுதிகளை முழுமையாக இந்தியாவுடன் இணைத்தது, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது, முஸ்லீம் பெண்களுக்கு எதிரான முத்தலாக் முறையை ஒழித்தது போன்றவற்றைச் சொல்லலாம். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 80 கோடி குடும்ப அட்டைகளுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை முழு மானியத்துடன் மத்திய அரசு வழங்கியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை ரத்து செய்து விடுவார்கள் என்று ப.சிதம்பரம் பிரசாரம் செய்தார். ஆனால், மோடி அந்தத் திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோட�� ஒதுக்கினார். காங்கிரஸ் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு 100 ரூபாய்தான் கூலி வழங்கப்பட்டு வந்தது. தற்ஓது அதை 182 ரூபாயாக பிரதமர் உயர்த்தியுள்ளார். தற்போது மேலும் ரூ.40 ஆயிரம் கோடி அந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுய சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் இரண்டே மாதங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ரேபிட் கிட்ஸ் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனாவால் மரணமடைவோர் எண்ணிக்கை 4.5 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் 2.6 சதவீதமாக உள்ளது. இதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை சர்வதேச அளவில் 25 சதவீதம்தான். இது இந்தியாவில் 48. 6 சதவீதமாக உள்ளது. பிரதமர் மோடி தக்க நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால்தான் இது சாத்தியமாகியுள்ளது. மின்சார திருத்த சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றன. மத்திய அரசு ஒரு போதும் ரத்து செய்யாது.\nகாட்மென்’ வெப் சீரியல் சிறுவர்களை சீரழிக்கும் வகையில் உள்ளது. இதை கருத்துரிமை என்று பேசுபவர்களை சமூக விரோதிகள் என்றுதான் சொல்ல வேண்டும். பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும் என்று பேசிய கரூர் எம்.பி. ஜோதிமணியையும், திமுகவின் தமிழன் பிரசன்னாவையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.\nஅடுத்தவங்க குழந்தைக்கு தனது இன்ஷியலா போடுற வேலையை செய்யாதீங்க.. திமுகவுக்கு சவுக்கடி கொடுத்த பொன்னார்..\n' தில் ’ இருந்தா மோதிபார்.. நாங்க அடிச்சா நீங்க எழுந்துக்க மாட்டிங்க.. பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.\nஇங்கே வாங்க... டி.டி.வி.தினகரனுக்கு பாஜக அழைப்பு... சசிகலாவுக்கு சமிக்ஞை காட்டும் அமித் ஷா..\nயார் வெற்றியை யாரு சொந்தம் கொண்டாடுவது.. திமுக எதிராக எரிமலையாய் வெடிக்கும் வி.பி.துரைசாமி..\nதல ஃபேன்ஸ் சரியா 7 மணிக்கு ரெடியா இருங்க... போனிகபூர் கொடுத்த லேட்டஸ்ட் ‘வலிமை’ அப்டேட்...\nபள்ளிகள், கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது.. அமைச்சர் அதிரடி முடிவு.\nவெளிநாட்டில் சந்தித்துக் கொள்ளப் போகும் விஜய் - அஜித்... எதற்காக தெரியுமா\nதிமுக அமைச்சர் முன் கைகட்டி நின்றேனா.. நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன்... கொந்தளிக்கும் திருமாவளவன்..\nசட்டப்பேரவையில் மட்டுமல்ல கருணாநிதியின் படம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும்.. சு.ப வீரபாண்டியன்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/with-ramaleela-you-gave-me-my-life-back-sachy-dileep-072050.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T08:49:32Z", "digest": "sha1:XIDY2RZE52RPHQJKMWEQAXB3GBB2AKLX", "length": 17009, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் வாழ்க்கையைத் திருப்பிக் கொடுத்தவர் நீங்கள்.. இயக்குனர் சச்சி மறைவுக்கு பிரபல ஹீரோ உருக்கம்! | 'With Ramaleela, you gave me my life back, sachy: Dileep - Tamil Filmibeat", "raw_content": "\nNews ஆலயங்களில் தமிழில் ஒலிக்கப்போகும் வேத மந்திரங்கள்... அர்ச்சனை செய்ய அர்ச்சகர் தயார்\nFinance பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்யும் இ-ருபி.. 10 சிறப்பம்சங்கள் இதோ..\nLifestyle ஹீரோயின் மாதிரி நீங்க அழகாக இருக்க புதினா உங்களுக்கு எப்படி உதவும் தெரியுமா\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\nSports ஒரே நேரத்தில்.. ஹாக்கி செமியில் இந்திய ஆண்கள் & பெண்கள் அணி.. முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.. ஏன்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் வாழ்க்கையைத் திருப்பிக் கொடுத்தவர் நீங்கள்.. இயக்குனர் சச்சி மறைவுக்கு பிரபல ஹீரோ உருக்கம்\nதிரிச்சூர்: என் வாழ்க்கையை திருப்பி கொடுத்தவர் நீங்கள்தான் என்று இயக்குனர் சச்சி மறைவுக்கு பிரபல ஹீரோ உருக்கமாக கூறியுள்ளார்.\nபிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், அய்யப்பனும் கோஷியும்.\nஇதில், பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.\nஉடம்புக்கு கட்டுப்பாடு இருக்கு.. மனசுக்கு இல்ல.. ஒரே மாதத்தில் உருமாறிய பிருத்விராஜ்\nஇதை இயக்கியவர் சச்சி என்ற கே.ஆர்.சச்சிதானந்தம். இவர் சேது என்பவருடன் இணைந்து சில படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிவந்தார். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து தனியாக ஸ்கிரிப்ட் எழுதினார். திலீப் நடித்த ராம்லீலா, டிரைவிங் லைசன்ஸ் உட்பட சில படங்களுக்கு எழுதினார். இதில், பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடித்திருந்த டிரைவிங் லைசன்ஸ் கவனிக்கப்பட்டது.\nஏற்கனவே அனார்கலி என்ற படத்தை இயக்கிய சச்சி, அடுத்து அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கினார். இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சச்சிக்கு, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.\nஇதனால் ஜூபிளி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவருக்கு, மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் சீராக இல்லை. இதையடுத்து நேற்றிரவு மரணமடைந்தார். அதிர்ச்சி அடைந்த மலையாள திரையுலகினர், முக்கியமான ஸ்கிரிப்ட் டைரட்டரையும் இயக்குனரையும் இழந்துவிட்டதாகக் கூறி வருகின்றனர்.\nஅய்யப்பனும் கோஷியும் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ள நடிகர் ஜான் ஆப்ரஹாம், துல்கர் சல்மான் உட்பட பல திரை பிரபலங்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு, லால், முகேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, பிரபல ஹீரோ திலீப், உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.\n'ராம் லீலா படம் மூலம் எனக்கான வாழ்க்கையை திரும்ப கொடுத்தவர் நீங்கள் சச்சி. இது புறப்படும் நேரம். உங்களை போன்ற ஒரு சகோதரரை பிரியும்போது ஏற்படும் உணர்வை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை' என்று கூறியுள்ளார். மறைந்த சச்சியின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.\nஎன்னுடைய ஒரு பகுதி உங்களுடன் சென்றுவிட்டது.. சச்சி மறைவுக்கு பிரபல ஹீரோவின் டச்சிங் போஸ்ட்\n'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்.. சச்சி விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்.. பார்த்திபன் ட்வீட்\nஅட இது நல்லாருக்கே.. 'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கிற்கு அந்த ஹீரோக்களை பரிந்துரைத்த சச்சி\nமீண்டும் சந்திக்கும் வரை.. ’குட்பை’ நண்பா.. இயக்குநர் சச்சி மறைவு.. அமலா பால் போட்ட உருக்கமான பதிவு\nஅய்யப்பனும் கோஷியும் இயக்குநர் திடீர் மரணம்.. சோகத்தில் மலையாள திரையுலகம்.. பிரபலங்கள் அஞ்சலி\n'அய்யப்பனும் கோஷியும் ' படத்தின் இயக்குநர் சச்சிதானந்தன் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரைத்துறை\nதீவிர சிகிச்சை.. பிரபல இயக்குனர் தொடர்ந்து கவலைக்கிடம்.. உதவ முன்வந்த நடிகர்கள், இயக்குனர்கள்\nஅடுத்த ஷாக்.. திடீர் மாரடைப்பு.. அய்யப்பனும் கோஷியும் இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி\nஅய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு ராக்கெட் வேகத்தில்... மிரட்டலான மேக்கிங் வீடியோ\nஅஜித் கைகோர்க்க நினைத்த டைரக்டர்...நிறைவேறாமல் போன ஆசை\n'சினிமாவுல பாடினதால வேலைக்கு கூப்பிட மாட்டேங்கிறாங்க..' அட்டப்பாடி நஞ்சம்மா அப்செட்\nஅந்த சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்.. சம்பளமாக ரூ.2 கோடி கேட்கிறாராமே சாய் பல்லவி.. தயாரிப்பு ஷாக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாங்க வேற மாதிரி....வலிமை சிங்கிள் டிராக் எப்போ தெரியுமா...சுடசுட வந்த அப்டேட்\nதிடீரென டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா....அக்கினேனி எங்கே போச்சு\nஇங்கே சார்பட்டா கலக்கியது போல.. அங்கே சர்காரு வாரி பாட்டா கலக்குமா\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil4.com/news/srilankan-news/swiss-tamil-donates-pcr-machine/", "date_download": "2021-08-02T09:31:08Z", "digest": "sha1:53MQ7NBOVHALOTDI62OA6RS4FCPKBYKX", "length": 9896, "nlines": 68, "source_domain": "tamil4.com", "title": "யாழ். மருத்துவபீடத்திற்கு பி.சி.ஆர் அன்பளிப்பு செய்த சுவிஸ் வாழ் தமிழர்! - Tamil4", "raw_content": "\nயாழ். மருத்துவபீடத்திற்கு பி.சி.ஆர் அன்பளிப்பு செய்த சுவிஸ் வாழ் தமிழர்\nயாழ். மருத்துவபீட பி.சி.ஆர் ஆய்வுக்கூடம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலான காலமாக வடமாகாணத்தின் பிசிஆர் மாதிரிகளை பரிசோதனை செய்யும் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த காலங்களில் நோய்த் தொற்று குறைவாகக் காணப்பட்ட காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவான மாதிரிகளை ஆய்வு கூடத்தில் பரிசோதிக்க முடிந்த போதிலும் தற்போது நிலவுகின்ற அதிகர��த்த தொற்று நிலைமை காரணமாக நாளாந்தம் செய்யப்பட வேண்டிய பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஎனினும் எமது ஆய்வுக் கூடத்தில் இருந்த உபகரணங்களின் மட்டுப்படுத்தப்பட்ட நிலைமை காரணமாக நம்மால் மேலதிக மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. நாட்டில் இயங்கிவரும் ஏனைய ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் தானியங்கி கரு அமில பிரித்தெடுப்பு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் மேலதிகமான மாதிரிகளை பரிசோதனைகளை பரிசோதிப்பது தடங்கல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் மேற்படி இயந்திரங்களை பெற்று தருமாறு பல தரப்புகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் நமக்கு சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது ஐக்கிய ராச்சியத்தில் இருக்கும் எமது யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களின் சுவிஸ் நாட்டில் இருக்கும் கொடையாளர் சுப்ரமணியம் கதிர்காமநாதன் (SKT நாதன் கடை உரிமையாளர்) அவர்களுடன் எம்மை இணைப்பை ஏற்படுத்தி எமது தற்போதைய நிலைமையை விளக்கிக் கூறினார்.\nநமது தேவையை உணர்ந்து கொண்ட கொடையாளர் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் அவ் இயந்திரத்தை பெற்றுத் தருவதற்கான முழு பொறுப்பையும் தானாக முன்வந்து முழுமனதோடு ஏற்றுக்கொண்டார். நமக்கு உறுதியளித்தபடி இயந்திரத்தை மிகவும் சொற்ப காலத்தில் நமது ஆய்வு கூடத்துக்கு பெற்றுக்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மிக விரைவாக மேற்கொண்டார்.\nஅதன் பயனாக மேற்படி இயந்திரமானது மிகக்குறுகிய காலத்தில் எமது ஆய்வு கூடத்தை வந்தடைந்தது. கொடையாளர் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் வழங்கிய\n5 மில்லியன் பெருமதியான இந்த இயந்திரமானது 30 நிமிடங்களில் 48 மாதிரிகளின் கரு அமிலத்தை தன் இயக்கிய முறையில் பிரித்தெடுக்கும் ஆற்றல் மிக்கது. சுவிஸ்லாந்து சூரிச் நகர் எஸ்.கே.ரி வாணிப உரிமையாளர் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் இந்த உபகரணங்களை எமக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்.\nஇவ் உபகரணம் மூலம் மேலும் பலருக்கு விரைவாக கொரோனா பரிசோதனையை செய்வதன் மூலம் எமது உறவுகளை காக்க முடியும் என்பதில் ஐயமில்லை. காலத்தின் தேவை கருதி கொடையாளர் திரு சுப்ரமணியம் கதிர்காம���ாதன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்துவருகின்றன.\nஇலங்கை சிறுவர்களை தாக்கும் மற்றுமொரு நோய்; வெளியான அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் அதிதீவிர டெல்டா வைரஸ் – மக்களின் உதாசீனம்\nஇலங்கையில் 24 மணிநேரமும் தடுப்பூசிகள்\nவிடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் சித்தரிக்கப்பட்ட NIKE காலணிகள்\nகோப்பாய் பொலிஸாருக்கு எதிராக 7 நாட்களில் 4 மனித உரிமை மீறல் முறைப்பாடுகள்\nதம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-08-02T10:31:36Z", "digest": "sha1:JI34JYYO5Q5XQZLFFWTPP26Q524YIR6R", "length": 7905, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசைக் குழுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க இசைக்குழுக்கள்‎ (10 பக்.)\n► அயர்லாந்து இசைக்குழுக்கள்‎ (1 பக்.)\n► ஆங்கில இசைக்குழுக்கள்‎ (4 பக்.)\n► கொரியன் பரப்பிசை இசைக் குழுக்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► சிம்போனிக்கு மெட்டல் இசைக்குழு‎ (2 பக்.)\n► செருமானிய இசைக்குழுக்கள்‎ (5 பக்.)\n► ராக் இசைக் குழுக்கள்‎ (1 பகு, 12 பக்.)\n► ராப் இசைக் குழுக்கள்‎ (3 பக்.)\n\"இசைக் குழுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஇசை, கலை மற்றும் நடன உலகம்\nரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jusaitn.org/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-08-02T08:35:51Z", "digest": "sha1:LJWEGC5SIMKXRPX2BGPTXDRXRFDQ2VPZ", "length": 30368, "nlines": 61, "source_domain": "www.jusaitn.org", "title": "நபி(ஸல்) அவர்களின் உம்மத்தில் இறைவனால் நியமிக்கப்பட்ட இமாம்களின் வருகையின் தேவை! – Jamaat Ul Sahih Al Islam Tamilnadu", "raw_content": "\nஉம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல\nஒரு நபி வருகையின் நோக்கம்\nமிர்ஸா குலாம் அஹ்மத் (அலை)\nநபி(ஸல்) அவர்களின் உம்மத்தில் இறைவனால் நியமிக்கப்பட்ட இமாம்களின் வருகையின் தேவை\nநமது பெருமானார் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஷரியத்தை கொண்டுவராத நபிமார்களின் வருகையின் முக்கிய நோக்கம் இதுவாகும், அதாவது இஸ்லாம் உலகப் பொதுமறையாக தோன்றிய மார்க்கமாகும் என்பதால் இதன் தூய போதனையை உலகம் முழுவதும் எத்திவைப்பது அவசியமாகின்றது என்பதாகும். இந்த உன்னத நோக்கத்தை அடைவதற்கு முதலாவதாக உம்மத்திற்குள் மார்க்க சீர்திருத்தம் அதாவது முஸ்லிம்களுக்குள் இஸ்லாத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்துவது இரண்டாவதாக அதன் மூலம் இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரவச் செய்வது இவ்விரண்டிற்கும் நல்லொழுக்கம் மற்றும் ஒரு தலைமை, ஒரு இமாம் இல்லாமல் இது சாத்தியமானதன்று இதைப்பற்றி அல்லாஹ் சுபஹான ஹுதாலா திருமறையில் கூறும்போத:-\nதூயவர்களிலிருந்து, தீயவர்களை வேறுபடுத்திக் காட்டாத வரையில் நீங்கள் இருக்கும் நிலையிலேயே நம்பிக்கையாளர்களை இறைவன் விட்டு வைக்க மாட்டான். அல்லாஹ் உங்களுக்கு மறைவானதைப் பற்றி ஒரு போதும் அறிவிக்க(வும்)மாட்டான்.ஆனால் அல்லாஹ் தனது தூதர்களிலிருந்து, தான் நாடிய வரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். எனவே நீங்கள் அல்லாஹ்விடத்தும், அவனுடைய தூதர்களிடத்தும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொள்வீர்களாயின் உங்களுக்குப் பெரும் நற்பலன் கிடைக்கும். (திருகுரான் 3:180)\n நான் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன், மேற்கூறிய திருமறை வசனத்திலிருந்து நன்மையும் தீமையும் ஒன்றாக கலந்துள்ள நிலையில் இஸ்லாம் மிகவும் பலகீனமடைகின்றது, இந்த நிலையில் தொடர அந்த ஏக இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அவன் நிச்சயமாக தன் நபிமார்களை அனுப்பி நன்மையையும் தீமையையும் பிரிக்கின்றான், மேலும் இன்று வரை நன்மை எது என்பதன் இரகசியத்தையும், அதை எவ்வாறு அவன் தூதரை கொண்டு பிரிக்கின்றான் என்பதையும் அவனுக்குள்ளே வைத்துள்ளான். மேலும், இந்த ப���ிக்காக உங்களுக்கிடையில் இறைச்சம் கொண்ட ஒருவரை அவனே தேர்வு செய்து அவர்முலமாக அவன் உங்களை பிரிப்பான். எனவே நம்பிக்கை கொண்டோர்களே “அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்”\nஉங்களிடையில் தூதர் வரமாட்டார் என்றால் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு காலம் வரும் அப்போது நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசத்தை காட்ட ஒரு தூதரை அனுப்பிவைப்பான் என்று ஏன் கூறவேண்டும் மேலும், அந்த நபி மீது நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொள்ள ஏன் நமக்கு கட்டளையிடப்பட்டுள்ளது மேலும், அந்த நபி மீது நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொள்ள ஏன் நமக்கு கட்டளையிடப்பட்டுள்ளது இது நாம் அஞ்சவேண்டிய விஷயமல்லவா, சிந்திப்போருக்கு இதில் நிச்சயமாக விஷயமுள்ளது.\n நாம் வாழும் இந்த காலத்தில் கோடான கோடி முஸ்லீம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் கையில் ஆட்சி அதிகாரமும் மற்றும் செல்வசெழிப்பும் உள்ளது மேலும் எண்ணிலடங்கா மார்க்க உலமாக்களும் அவர்களிடையே உள்ளனர், ஆனாலும் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் நாடுகளுக்கு எதிராக ஒன்றுமே செய்வதில்லை, மேலும் இவர்களின் கருத்துக்கள் உண்மையான இஸ்லாத்தின் போதனையை பிரதிபலிப்பதில்லை.\nமறுபுறம் இஸ்லாம் அதன் அழகிய பொலிவை நாளுக்குநாள் இழந்து கொண்டே செல்கின்றது, உண்மையான இஸ்லாமிய போதனைகள் தூக்கி எறியப்பட்டுவருகின்றது , மேலும் இவர்கள் எடுத்துக்காட்டும் இஸ்லாமால் இஸ்லாத்திற்கு மேலும் கெட்ட பெயரே மிஞ்சுகின்றது, இன்னும் கூறுவதென்றால் இவர்களின் செயல்களால் இஸ்லாம் ஒரு கொடிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமாக சித்தரித்துக்காட்ட காரணமாக அமைகின்றது . தன்னை இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று இவர்களால் இஸ்லாத்தின் இனிய போதனைகள் இழிவுபடுத்தப்படுகின்றது, மேலும் இந்த முழுமை பெற்ற தலைசிறந்த மார்க்கம் உலகெங்கிலும் உள்ள ஏனைய மதங்களுக்கு முன் மிகவும் கெட்ட மார்க்கத்தைப்போல சித்தரித்து காட்டுகின்றனர்.\n இதிலிருந்து இஸ்லாத்தின் அழகிய போதனைகளை எடுத்து செல்வத்தற்கு ஆட்சி அரசாங்கமோ , செல்வமோ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ தேவையில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். மாறாக இந்த வேலைக்கு இறையச்சம் மற்றும் இறை நம்பிக்கையே தேவையானதாகும். அல்லாஹ்வின் அருளால் இந்த பணியை ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் பல்வேறு விதமான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் இஸ்லாத்தின் தூய போதனைகளை உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றது, இந்த ஜமாத்தில் உலக செல்வச்செழிப்போ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ இல்லை மாறாக எளிமையான மிக சொற்ப எண்ணிக்கையிலான மக்களே உள்ளனர். இருந்த போதும் இதன் பணியை உண்மை இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரப்பும் பணியை எவராலும் தடுக்க முடியாது.\nஏனென்றால், இவர்களுடன் அந்ததூய அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட கலீபஃதுல்லாஹ் உள்ளார். மேலும் அவர் இந்நூற்றாண்டின் இமாமாகவும் திகழ்கின்றார், இம்மக்களின் இதயத்தில் இறைநம்பிக்கையும் இறையச்சமும் நிரம்பி மேலும் ஒவ்வொரு கணமும் திருகுரானின் போதனைகளின்படி வாழ்வதற்காக முயலுகின்றார்கள் அவர்கள் தங்கள் செல்வத்தையும் உயிரையும் தியாகம் செய்வதற்காக எப்போதும் தயாராக உள்ளனர். இஸ்லாத்திற்காக இவர்களால் செய்யப்படும் அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு வழிகாட்ட அந்த ஏக இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட உயரிய நல்லொழுக்கம் நிறைந்த ஒரு இமாம் உள்ளார். மேலும், இவர்கள் அனைவரும் இந்த ஜமாத் மட்டுமே நமது தலைவர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் வருகையின் நோக்கத்தை எடுத்து செல்கின்றது என்பதை திட்டமாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nநிச்சயமாக, அல்லாஹ் சுபஹானஹுதாலா இம்மக்களை அருளுக்குரியவர்களாக ஆக்கியுள்ளான், ஏனென்றால் இவர்கள் அவனால் அனுப்பப்பட்ட கலீபாத்துல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவராகவுள்ளனர். இந்த அதிஷ்டத்திற்குரிய மக்கள் இன்னும் அதிகமாக உழைத்து மேலும் இந்த உண்மையை அதிகமான மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், இன்னும் அதிகமாக மக்கள் இந்த உண்மையான இஸ்லாத்தை நோக்கி வருவார்கள். இந்த உண்மையான இஸ்லாத்தின் தூது செய்தியை உலகெங்கிலும் கொண்டு செல்ல அந்த ஏக இறைவனே அவனது மாபெரும் அருளால் வழிகாட்டுவான் இன்ஷா அல்லாஹ், மீண்டும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக எந்த தடையுமின்றி ஓரிறைவனை எந்த இணை வைத்தலுமின்றி வணங்குவார்கள். இந்த விஷயத்தில் நிச்சயமாக அல்லாஹூம் அவனது கலீபாதுல்லாஹ்வும் மிகைத்து விடுவார்கள் இறுதி வெற்றி இஸ்லாதிற்க்கே, இன்ஷா அல்லாஹ்\nமேலும் அல்லாஹ் அ��னது கலீபாவை பற்றி திருக்குரானில் கூறும்போது:-\nஅல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும் அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதியளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்கமாட்டார்கள். இதன் பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுபடாதவர்களாவார்கள். (திருகுரான் 24:56)\nஎனவே எனதருமை முஸ்லீம் சகோதர சகோதிரிகளே துஆவுடனும், விழிப்புடனும் இருங்கள், ஏனென்றால் இஸ்லாம் அதன் உண்மையான பொழிவை சிறிது சிறிதாக இழந்து வருகின்றது. நீங்களும் உங்கள் குழந்தைகளும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளிலிருந்து விலகி சென்று கொண்டுள்ளீர்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஸகாபிகளின் உறுதியானஅந்த நம்பிக்கையும் ஒற்றுமையும் இப்போது எங்கே போயிற்று துஆவுடனும், விழிப்புடனும் இருங்கள், ஏனென்றால் இஸ்லாம் அதன் உண்மையான பொழிவை சிறிது சிறிதாக இழந்து வருகின்றது. நீங்களும் உங்கள் குழந்தைகளும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளிலிருந்து விலகி சென்று கொண்டுள்ளீர்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஸகாபிகளின் உறுதியானஅந்த நம்பிக்கையும் ஒற்றுமையும் இப்போது எங்கே போயிற்று\n அதே போன்ற ஒற்றுமையையும் நம்பிக்கையையும் இறைவன்அவனது கலீஃபா மூலம் முழு உலகிலும் மீண்டும் மீட்டெடுக்க எண்ணுகின்றான். இப்போது முஸ்லிம்கள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றனர் மறுபுறம் இறை மறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் எனும் சூறாவளிகள் இஸ்லாத்தைத் துடைத்தெறிய எண்ணுகின்றனர், இப்போது நமது இறைவன் அவனுடைய வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் எப்போது நிறை வேற்றுவான் என்பதை சிறிது சிந்தியுங்கள் நிச்சயம் இறைவன் அவனுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவான். இதனால் தான் அவன் இந்நூற்றாண்டில் அவனது முஜத்தித் மற்றும் கலீபஃதுல்லாஹ்வை உங்களுக்காக அனுப்புவதன் மூலம் அதை நிறை வேற்றுகின்றான்.\nஉங்களுக்காக அவன் இக்காலத்தில் அருளாக அனுப்பிய கலீபஃதுல்லாஹ் மீது ஏன் விரோத மனப்பான்மையில் உள்ளீர்கள் நீங்கள் இ��்த உலமாக்களின் பித்துக்களில் வீழ்ந்துவிடாதீர்கள் நீங்கள் இந்த உலமாக்களின் பித்துக்களில் வீழ்ந்துவிடாதீர்கள் அவர்கள் என்றோ நபிமார்கள் மற்றும் இறை வஹியின் கதவை அடைத்துவிட்டு பித்அத்களின் கதவுகளை திறந்து வைத்துள்ளனர். இவர்களுக்கு (உலமாக்கள்) முக்கியத்துவம் போய்விடும் என்பதிற்காக திருக்குரானில் உண்மை ஞானத்திலிருந்து உங்களை தூர விலக்கி வைத்துள்ளனர். இதைப் போன்ற தீய உலமாக்களை பற்றி பெருமானார் (ஸல்) நம்மை எச்சரித்தது உங்களுக்கு நினைவில்லையா அவர்கள் என்றோ நபிமார்கள் மற்றும் இறை வஹியின் கதவை அடைத்துவிட்டு பித்அத்களின் கதவுகளை திறந்து வைத்துள்ளனர். இவர்களுக்கு (உலமாக்கள்) முக்கியத்துவம் போய்விடும் என்பதிற்காக திருக்குரானில் உண்மை ஞானத்திலிருந்து உங்களை தூர விலக்கி வைத்துள்ளனர். இதைப் போன்ற தீய உலமாக்களை பற்றி பெருமானார் (ஸல்) நம்மை எச்சரித்தது உங்களுக்கு நினைவில்லையா சிறிது கண்களை திறந்து பாருங்கள்,\nமேலும் பெருமானார் (ஸல்) “ஒரு காலம்வரும் அப்போது இவர்களின் உலமாக்கள் வானத்தின் கீழ் மிக கெட்ட ஜந்துக்களாக இருப்பார்கள்” என்று கூறியதும் உங்களுக்கு தெரியவில்லையா எனவே சகோதரர்களே அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள் வாருங்கள் எங்களுடன் கைகோர்த்து அந்த உண்மையான இஸ்லாத்தை உலகங்கிலும் பரப்புவோம், மேலும் நமது தலைவரும் எஜமானருமாகிய நபி (ஸல்)அவர்களின் உண்மை நோக்கத்தை இந்த பூமிமுழுவதும் வெற்றியடைய செய்வோம்.\n நமது அன்பிற்கும் பாசத்திற்குரிய கண்ணியமிக்க நபி(ஸல்) அவர்களை முழுமையாக பின்பற்றுவதன் மூலமும் அவருடைய முத்திரையுடனும் வரும் நுபுவ்வத் என்றென்றும் நிலைத்திருக்கும். நிச்சயமாக, இனிவரும் அனைத்து நபிமார்களும் அன்னாருடைய அடிமைகளாகவும் அன்னாரை பின்பற்றுபவர்களாகத்தான் வருவார்கள். மேலும் இவர்களை அந்த ஏக இறைவன் கியாமத்நாள் வரை அனுப்பிக்கொண்ட இருப்பான், இதை தடுக்க எவராலும் இயலாது. இது நமது இறைவன் உறுதியளித்த மாபெரும் அருளாகும் அவன் ஒருபோதும் அவனுடைய வாக்குறுதியை மீறுபவன் அல்லன், இதன்முலமே, இந்த மார்க்கத்தை புதுப்பிக்கின்றான்.\nஇறைவன் ஒரு நபியையோ அல்லது ஆன்மிக சீர்திருத்தவாதியையோ அனுப்புவதன் நோக்கமே உலகத்தில் மூழ்கிக்கிடக்கும் மனிதனை மீட்டு அவனை படைத்த இறைவனடி சேர்ப்பதாகும். அவ்வாறாக தோன்றும் ஆன்மிக சீர்திருத்தவாதி அவர்களிடம் இறைவனுக்காக கடினமாக உழைக்கும்படியும், மேலும் அவனுக்காக எல்லாவித தியாகங்களும் செய்யும்படியும் கோருகின்றார் .முக்கிமாக இதை மிகவும் பொறுமையாகவும், அந்த நிரந்தர வாழ்க்கைக்காக இந்த தற்காலிக வாழ்க்கையை கொடுக்க தயாராக இருக்க வேண்டுகின்றார். மேலும், அவர்களை கண்முடித்தனமான மூற்க குணம்கொண்ட மார்க்க எதிரிகளின் துன்புறுத்தல்களையும் வேதனைகளையும் ஏச்சு பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டு மிக நீண்ட பயணம் மேற்க்கொள்ள தயார்படுத்துகின்றார்.\nஉண்மையில் இந்த போதனையே ஒரு உண்மையான ஆன்மீகத்தை சீர்திருத்தும் இறை நீதியின் தத்துவமாகும். இதற்கு முன் எந்த ஒரு தத்துவமும் கற்பனையானே, மேலும் இறுதியாக அனைத்து முஸ்லிம்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன் நீங்கள் எந்த முஸ்லீம் பிரிவை சார்ந்தவர்களாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் இறைவன் ஒருவன் என்று நம்புகின்றீர்கள், மேலும் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், இன்னும் நாம் அனைவருமே இஸ்லாமே மனித குலத்தின் இரட்சிப்பிற்கு ஒரே வழி என்று எற்றுக் கொள்கின்றோம், இஸ்லாம் மார்க்கமே இறுதிநாள் வரை மனிதனின் ஆன்மீக தேடலுக்கு ஒரே தீர்வு என்பதை நாம் அனைவரும் திட்டமாக நம்புகின்றோம்.\nஅனைத்து முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்கள் நமக்களித்த ஷரியத்தே இறுதியானது என்றும் அது ஒருபோதும் மாறாது என்றும் இறைவன் நமக்கருளிய திருக்குரான் இறக்கப்பட்டதிலிருந்து இதுவரை அவனே பாதுகாக்கின்றான் என்றும் பெருமானார்( ஸல்) நமக்கு வழங்கிய போதனைகள் கடந்த காலத்தைப் போன்று இன்றும் ஏன் கடைசி மனிதன் வரை ஒரு சிறந்த பாடமாக விளங்கும் என்றும் அன்னாரை பின்பற்றுவதன் மூலமே அந்த ஆன்மீக வெளிச்சத்தை பெறமுடியும் என்றும் ஏற்றுக் கொள்கின்றோம். நான் மேற்குறிய அனைத்து விஷயத்திலும் நாம் அனைவரும் ஒத்த கருத்திலுள்ளோம் ஆனால் உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு அடிப்படை இஸ்லாமிய கோட்பாட்டில் மாறுபடுகின்றோம் அதாவது நீங்கள் நபிமார்களின் வருகை மற்றும் இறை வஹியின் வருகை என்னும் அந்த அருளுக்குரிய கதவை அடைத்து விட்டீர்கள் என்பதேயாகும்.\nஎனவே அந்த தூய இறைவனால் படைக்கப்பட்ட எனதருமை உண்மையாளர்களே நேர்மையானவர���களே அந்த அற்புத இறை இலக்கையடைய உதவிகரங்கள் நீட்டுங்கள் இதன்முலம் இந்த ஏக இறைவனின் அருளுக்கு வாரிசு ஆகுங்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த அருளுக்குரிய வாரிசாகும் சந்தோஷத்தை தந்தருள்வானாக\nபதிப்புரிமை © 2020 ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்.அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-08-02T08:12:10Z", "digest": "sha1:NAMQO7XTYKP32BXZ6FVNWUW6PDGGXDDO", "length": 2523, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "ஓடிடி தளங்கள் | ஜனநேசன்", "raw_content": "\nராணுவ சீருடையைக் கிழிப்பது போல் காட்சி – இனி…\nஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. நேரடியாக…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில்…\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\nபல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலமடைந்து உள்ளது :…\nகஞ்சா கடத்திய பெண் உட்பட 10 பேர் கைது…\nமதுரை : பேருந்து நிலையத்திற்கு அன்னை மீனாட்சி பெயர்…\nஇந்திய சுதந்திரதின 75-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, மரக்கன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/blog-post_737.html", "date_download": "2021-08-02T09:42:40Z", "digest": "sha1:6QGGLIN2736TZ5DAVP7CTWEGBPJSVFIQ", "length": 6006, "nlines": 32, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ஆட்டோ டிரைவருக்கு கார் வாங்கிக் கொடுத்து உதவிய நடிகை சமந்தா", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஆட்டோ டிரைவருக்கு கார் வாங்கிக் கொடுத்து உதவிய நடிகை சமந்தா\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோருடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். 1987-ம் ஆண்டு கேரள மாநிலம் ஆழப்புலாவில் பிறந்த சமந்தா சென்னை பல்லாவரத்தில் தான் வளர்ந்தார். ஸ்டெல்லாமேரிஸ் கல்���ூரியில் பட்டப்படிப்பு பயின்ற அவர் 2010-ம் ஆண்டு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.\nதிரைப்படங்களைத் தாண்டி ‘சாம் ஜாம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் சமந்தா. இந்நிலையில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் குடும்பத்தைக் காப்பாற்றவே ஆட்டோ ஓட்டி வருவதாகவும் சமந்தாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தனக்கு போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை கேட்டு தெரிந்து கொண்ட சமந்தா உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.\nசொன்னபடியே அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.12.5 லட்சம் செலவில் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் சமந்தா. 7 சகோதரிகள் உடன் குடும்பத்தை நடத்துவதற்கே கஷ்டப்பட்டு வந்த ஏழை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சமந்தா செய்த மிகப்பெரிய உதவி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/06/basil78.html", "date_download": "2021-08-02T10:14:22Z", "digest": "sha1:5UYI4AB3YOBALY2PABM6TVTY4LYF3O5K", "length": 10326, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு? - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு\nநான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு\nதெற்கு அரசியல் மீண்டும் ரணில்-பஸில் என சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு தமிழ் சினிமா சொற்றொடர் பிரசித்தமாகியுள்ளது.\nஏற்கனவே ரணில் நாடாளுமன்றிற்��ு வருகை தந்த போது நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு என பதாகை வைத்து கவனத்தை ஈர்த்திருந்தது கொழும்பு ஊடகமொன்று.\nதற்போது பஸில் வருகை தரவள்ள நிலையில் மீண்டும் நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு பதாகையுடன் விளம்பரம் செய்துள்ளது குறித்த தொலைக்காட்சி ஊடகம்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க ���ுயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/06/karadi.html", "date_download": "2021-08-02T08:03:53Z", "digest": "sha1:VXQTZBELJVD7NCHMLA6BW6JEGJ7TQOM4", "length": 10629, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சியில் விபத்து! காவல்துறை உத்தியோகத்தர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / கிளிநொச்சியில் விபத்து\nகிளிநொச்சியில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.\nகரடி போக்கு சந்தியில் இருந்து பெரிய பரந்தன் ஊடாக பூநகரி வீதிக்குச் செல்லும் வழியில் 5 ஆம் வாய்க்கால் பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.\nவேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருறுளி வாய்க்காலுக்குள் வீழந்ததன் காரணமாக காவல்துறை உத்தியோகத்தர் பலியாகியுள்ளார்.\nசடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nமேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல���\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nஅடுத்த இடி:வடக்கில் கடற்கரைகள் போகின்றன\nவடக்கின் பெருமளவு நிலப்பரப்பை உள்ளடக்கியவகையில் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி கைச்சாத்திடப்படவுள்ளது. 2009இன் பின்னராக வன்னியில்...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/11/jeyistika-asana-yoga-tamil.html", "date_download": "2021-08-02T08:46:57Z", "digest": "sha1:LQA42B6WZRPF6PTEDQS6PYXACVVUJ53C", "length": 10916, "nlines": 195, "source_domain": "www.scientificjudgment.com", "title": "ஜெயிஷ்டிகாசனம் - Jyestika asana.", "raw_content": "\nமுகப்புயோகாஜெயிஷ்டிகாசனம் - Jyestika asana.\nஜெயிஷ்டிகாசனம் - Jyestika asana.\nநோயணுகாமல் உடலைக் காப்பதில் உடற்பயிற்சிக்கு பெரும் பங்கு உண்டு. அவ்வாறான பயிற்சிகளில் உடலின் வெளி உறுப்புகளை மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளையும் இதமாக மசாஜ் செய்து உடலை நோயணுகாமல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் ஆசனங்களே சிறப்பானது எனலாம்.\nஆசனங்களில் செய்வதற்கு கடினமான ஆசனங்கள் பல இருந்தாலும் அனைவராலும் எளிதில் பயிலும் யோகாசனங்களும் பல இருக்கின்றன. அவைகளுள் ''ஜெயிஷ்டிகாசன''மும் ஒன்று.\nகுப்புற படுத்துக்கொண்டு செய்யப்படும் இந்த ஆசனமானது மிக எளிது. ஆனால் பலனோ மிக பெரியது.\nபொதுவாக தொந்தியுடன் கூடிய பருமனான உடலைக் கொண்டவர்களால் எந்த பயிற்சியையும் செய்ய முடியாது. அவ்வாறான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் ''ஜெயிஷ்டிகாசனம்'' செய்வதின் மூலம் அதிகப்படியான தொப்பையைக் குறைத்து சீரான உடலமைப்பைப் பெறமுடியும்.\nஇனி ஜெயிஷ்டிகாசனம் பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்ப்போம்..\nமுதலில் விரிப்பில் நெற்றி தரையில் தொடும்படி குப்புற படுக்கவும். இரண்டு கால்களையும் சிறிது அகட்டி வைத்துக் கொள்ளலாம். குதிகால்கள் மேல் நோக்கியும் மேல் பாதங்கள் தரையில் படிந்தபடியும் இருக்கட்டும்.\nஇரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து தலையின் பின்பகுதியில் வைக்கவும். கையின் மூட்டுப் பகுதி தரையில் படும்படி இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும்.\nஇந்த நிலையில் சிலநிமிடங்கள் இருக்கவும். பின் இயல்பான நிலைக்கு வரவும்.\nஇது பார்ப்பதற்கும் பயிற்சி செய்வதற்கும் எளிதான ஆசனமாக இருந்தாலும் உடல் பருமனானவர்களுக்கு இதன் பலன்களோ அற்புதமானது.\nகடினமான ஆசனங்களை பயி��்சி செய்ய முடியாதவர்கள் எளிதான ஆசனங்களுடன் இந்த பயிற்சியையும் தொடர்ந்து செய்வதினால் முக்கியமாக வயிற்றிலுள்ள கொழுப்புகள் கரைந்து தொந்தி குறையும். வயிற்றுப்பகுதி தட்டையாகும். முதுகு வலியை குணப்படுத்தும். கழுத்து இறுக்கம் நிவர்த்தியாகும். இது எல்லாவற்றையும் விட மன அழுத்தத்தை போக்கும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\n .... அப்படியே படுத்து தூங்குவதற்கா\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகீழாநெல்லியும் வைரஸ் அழற்சி காமாலையும் - Keelanelli - Viral jaundice Hepatitis B.\nகீழாநெல்லி - வைரஸ் அழற்சி காமாலை. Viral jaundice Hepatitis B. [PART - 8]. மூலிகைகள் வர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/09/blog-post_6.html", "date_download": "2021-08-02T09:40:49Z", "digest": "sha1:Q6AKWUSXCD3HPR7FXANW6GFIM5R7EI6K", "length": 5269, "nlines": 53, "source_domain": "www.yarlsports.com", "title": "அரையிறுதியில் நாவற்குழி அன்னை - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > அரையிறுதியில் நாவற்குழி அன்னை\nஅரையிறுதிக்குள் நுழைந்தது நாவற்குழி அன்னை அணி…\nயாழ் உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்படும் அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்று போட்டியில்\nஇன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து நாவற்குழி அன்னை அணி மோதியது.\nஆட்ட நேர முடிவில் இரு அணிகளாலும் எதுவித கோல்களையும் பதிவு செய்ய முடியாது போக வெற்றி தோல்வியை தீர்மானிக்க வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 03:01 என்ற கோல் கணக்கில் அன்னை அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.\nஅன்னை அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/12/gps.html", "date_download": "2021-08-02T09:55:52Z", "digest": "sha1:36MKRXEYYJVGTABIZS5KXQCF6PX25EEZ", "length": 5528, "nlines": 49, "source_domain": "www.yarlsports.com", "title": "GPS இன் தொழில் முறை ரீதியான துடுப்பாட்ட தொடர்... - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > GPS இன் தொழில் முறை ரீதியான துடுப்பாட்ட தொடர்...\nGPS இன் தொழில் முறை ரீதியான துடுப்பாட்ட தொடர்...\nகல்வியங்காடு ஞானபாஸ்கறோதயா சனசமூக நிலையம் தனது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் முதன்முறையாக மின்னொளியில் நாடாத்தும் தொழில் முறை ரீதியான 8அணிகள் பங்குபற்றும் பிரமாண்ட துடுப்பாட்டத்தொடரின் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தொடரில் பங்குபற்றும் அணிகளின் உரிமையாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் 08/12 ஞாயிற்றுகிழமை இரவு யாழ் தனியார் விடுதியில் பிரமாண்ட முறையில் நடைபெற ஏற்பாடாகியுள்ள அதேவளை போட்டி தொடர் மாசிமாத முதல் வாரத்தில் மின்னொளியில் கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது... தொடரின் ஏனைய விபரங்களை அறிய yarlsports உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2014/01/08/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-8/", "date_download": "2021-08-02T09:22:35Z", "digest": "sha1:ET7IYXXNFCM5ZVVQXVSCOPRDFEMYULBJ", "length": 16030, "nlines": 188, "source_domain": "10hot.wordpress.com", "title": "ஜெமோபாரதம் – 8 | 10 Hot", "raw_content": "\n1. “அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது”\nஇதை ”மாறுபடுபுகழ் நிலையணி”யாகக் கொள்ளலாம். இதில் அஸ்தினாபுரி அரசர்களின் செயலூக்கமும் வீரமும் புகழப்படுகிறது. இவ்வாறு கோழைகளைப் பழிப்பதற்காக மூதாதையர்களின் பெருமை சொல்லப்படுகிறது.\n2. “விசித்திரவீரியனுக்கு மருத்துவம் பார்க்கும் சூதர்களை அவனிடம் அனுப்பவேண்டுமாம்… அவர்களைக் கேட்டபின் யோசித்து முடிவெடுப்பானாம்…”\nஇன்று திருமணங்களுக்கு நடைமுறையில் இருப்பது அன்றே இருப்பதாக சொல்வது ”தன்மை நவிற்சி அணி” எனக் கொள்ளலாம். தற்காலத்தை அந்தக் காலத்தின் மீது பொருத்துவதற்கு ஏதாவது அணி உண்டா\n3. “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்”\nஇது “இல்பொருள் உவமையணி”க்கான அபாரமான எடுத்துக்காட்டு. யானை சேற்றில் சிக்கலாம்; ஆனால், அப்பொழுது நாயும் உள்ளே புகுந்தால் அதுவும் மாட்டிக் கொள்ளாதா என நீங்கள் லாஜிக் பார்ப்பதால் கற்பனையால் மட்டுமே அனுபவிக்கக் கூடியது.\n4. “எட்டுத்திசைகளிலும் எண்ணிய பின்புதான் இதைச் சொல்கிறேன்”\nஇப்பொழுது மோனை. ஈற்றுச்சீரைத்தவிர 1, 2 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் கீழ்க்கதுவாய்த்தொடை விகற்பம் எனப்படும்.\n5. “விரல்நீளமே கொண்ட சிறிய அம்புகளை ஒன்றின் பின்பக்கத்தை இன்னொன்றால் பிளந்து எய்துகொண்டே இருந்தார்.”\nஇது உயர்வு நவிற்சி அணி. தக்கினியூண்டு அம்பு; அதுவும் பாய்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் அம்பு; அதை இரண்டாக பிய்க்கிறார். நல்ல சாமுராய் கத்தியைக் கொண்டு பொறுமையாக வகிரவே இயலாத ஒன்றை, தொடர்ச்சியாக செய்து வர��வதாக சொல்வது ரசனையுடன் உயர்த்திக் கூறுவது.\n6. “அவர்களை நான் மணம்புரிந்துகொள்வேனென்றால் மட்டுமே நான் அவர்களைக் கவர்ந்து வரலாம்… அதை காந்தர்வம் என்கின்றன நூல்கள். விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…”\nஒழித்துக்காட்டு அணி எனலாம். அதாவது ராஜ்ஜிய தர்மப்படி இதெல்லாம் தவறு என்பதற்காக மூலநூல்களைக் கொண்டு சத்தியவதியின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதை விட தன் நீதிநெறியை முன்னிறுத்திக் கொள்வதால் தன்மேம்பாட்டுரை அணி என சொல்வோம்\n7. ”அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது”\nஇது டி இராஜேந்தர் அணி என்று தற்போது அழைக்கப்படும் அந்தக் கால சொற்பொருள் பின்வருநிலையணி.\n8. “அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.”\n”படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர்.”\nஏகதேச உருவக அணி என்போம். எங்கும் அடைபடாமல் பறக்கின்ற யானையாக உருவகம் செய்கிறார். அப்படி பிறப்பவர் பிள்ளையாராக என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்.\n9. ”புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.”\nகதை நெடுக தற்குறிப்பேற்ற அணி பல்கிப் பெருகிக் கிடைக்கிறது. இயல்பான நிகழ்வுகளான தலைமுழூகுவதையும் ஆபிரகாமிய மதங்களின் ஏழு பெரும்பாவங்களான கோபம், பேராசை, சோம்பல், அழுக்காறு, ஆணவம், காமந்தகம், பேருண்டியைக் கொள்வதையும் கற்பனையினால் குறிப்பாக்குகிறார்.\nசுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 8\n[…] முந்தைய பகுதி […]\nஜெமோபாரதம் – 9 | 10 Hot 9 ஜனவரி 2014 at 2முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nAfterஜெமோபாரதம் – 9 ஜனவரி 9, 2014 »\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2014/01/09/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-9/", "date_download": "2021-08-02T10:02:13Z", "digest": "sha1:KVN4TWDYDRY544X5PCX54IQZWL4PH6I6", "length": 15600, "nlines": 182, "source_domain": "10hot.wordpress.com", "title": "ஜெமோபாரதம் – 9 | 10 Hot", "raw_content": "\nஅடிமை, கருப்பர், கருப்பு, கறுப்பர், கறுப்பு, ஜெமோபாரதம், ஜெயமோகன், பீஷ்மர், பெண், மகாபாரதம், முதற்கனல், வெண்முரசு, Bheeshmar, Bhishma, Jayamohan, Jeyamohan, JM, Maha Bharatham, Mahabharat, Ven Murasu\nஇந்தியர்களுக்கு விதியின் மீது பழி போடுதல் மிகவும் பிடித்தமான காரியம்.\nவிபத்து நடந்ததா… வினைப் பயன்.\nபுற்றுநோய் வந்ததா… போன ஜென்மத்து பாவம்.\nகுழந்தை பிறக்கவில்லையா… முற்பிறவி மீது பாரத்தைப் போடலாம்.\nகாரணமில்லாததற்கு காரணம் கற்பிக்க… தலைவிதி உதவுகிறது. மேலும் மேலும் ஆராய்ந்து மண்டை காயாமல், பிரச்சினைக்கு மூடுவிழா போட பூர்வஜென்மத்து தோஷம் பழியேற்கிறது.\nநல்ல படிப்பறிவும், படித்ததை கிரகிக்கும் திறனும் கொண்ட பீஷ்மர் செய்த குளறுபடிகளின் தொகுப்பே மகாபாரதம். அடிமைகளாக மூன்று பெண்களைப் பிடித்து வந்தார். அவர் கற்ற நீதிநெறிகளை பின்பற்றாமல், குற்றம் புரிய சொன்னவர்களிடம் இடித்துரைக்காமல், அறமற்ற சேவகனாக தன்னை வெளிக் காட்டிக் கொண்டார்.\nகருப்பர்களை நீக்ரோக்கள் என விளித்து அடக்கியாண்டதை எண்ணி அமெரிக்கா நாள்தோறும் விசனப்பட்டு, மாற்றுப் பாதையில் நடப்பதை பார்க்கிறோம். காரோட்டும் உரிமை கூட இல்லாத இஸ்லாமிய நாட்டுப் பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் குரல் எழுப்புகிறோம். இன்னமும் இந்த மகாபாரத அட்டுழியங்களை நாட்டுப் பிரஜைகளோ, அரசியின் சிப்பந்திகளோ உரையாடாத, அரசல் புரசலாகவாவது அங்கலாய்க்காத காலத்தில் இருக்க வேண்டாம்.\nபீஷ்மர் ஒரு நாள் கூட ராஜ்ஜிய சுகத்தை அனுபவிக்காமல் இல்லை. பிரம்மச்சாரி என்னும் பட்டத்தை வைத்துக் கொண்டார். சத்தியவதியை நினைத்து கைமைதுனம் செய்திருப்பார் என்பதில் கற்பனையை விட நிஜத்தின் விகிதாச்சா��ம் நிறையவே இருக்கும்.\nஇராமரை அவருடைய குடிமக்கள் விமர்சித்தது போல் வால்மீகியும் கம்பரும் எழுதியிருக்கலாம். ஏனென்றால், அங்கே சீதை பெண். ஆனால், பீஷ்மர் கொத்தடிமைகளை அபகரித்து, தன்னுடைய விருப்பத்திற்கேற்ப வாழ்ந்ததை, பீஷ்ம அரசின் கீழ் வாழ்ந்த எந்த குடிமகனும் வம்பு பேசியதாக மகாபாரத எழுத்தாளர்கள் சொல்வதில்லை. எழுதுவது எல்லாமே ஆண்கள்.\nஅம்பையும் இன்ன பிற மருமகள்களின் வாழ்வு நாசமாகியதற்கு முழுமுதற் காரணம் மாமியார்களே என சன் டிவியும் சோப்ராக்களும் வியாசரும் ஓதுவார்கள்.\nபீஷ்மர் மற்றவர்களிடம் இருந்து நல்ல பேரைப் பெற வேண்டும் என்பதற்காக நாய் போல் நன்றியுடன் இயங்கி இருக்கிறார். ”அப்பாவால் மெச்சப் பட வேண்டும்; இவனைப் போல் பிள்ளை கிடைப்பானா” என ஊரார் மதிப்பு கொள்ள வேண்டும் என்பதற்காக பீஷ்ம சபதம். அந்த சபதத்திற்குப் பின் அதிகாரபூர்வமாக மணம் புரியவில்லை. இக்காலமாக இருந்தால் தற்பால் விரும்பி என அம்பை சரியாக ஊகித்திருப்பாள்.\nஅப்பா போன பின் சித்தியிடமிருந்து பெரிய பாராட்டும் நற்சான்றிதழும் கிடைப்பதற்காக சத்யவதி ஏவிய காரியங்களை நிறைவேற்றுதல். அதன் பிறகு திருதராஷ்டிரனுக்கு… அதன் பிறகு துரியோதனனுக்கு. அரசு ஊழியராக ஓய்வு பெறும் திருப்தி அவருக்கு வேண்டியிருந்திருக்கிறது. முகஸ்துதிக்கும் அங்கீகாரத்திற்கும் வாழ்நாள் முழுக்க அர்ப்பணித்திருக்கிறார்.\nவெறும் கறுப்பு – வெள்ளையாக அமையாமல், நேர்க்கோடில் பலாபலன்களைச் சொல்லிச் செல்லாததால், மேற்கூறிய எண்ணங்களை உருவாக்க வைத்ததால், இன்றைய பகுதி முக்கியமான பகுதி.\nசுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 9 :: பகுதி இரண்டு : பொற்கதவம்\n[…] முந்தைய பகுதி […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« Before ஜெமோபாரதம் – 8 ஜனவரி 8, 2014\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத��தும் பறக்கும்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/shivani-wear-glamour-saree/cid3748331.htm", "date_download": "2021-08-02T09:43:38Z", "digest": "sha1:LS6VTPFND3FASBJL5DGTUTTMXAR5ZLWT", "length": 4340, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "முதன் முறையாக... கொஞ்சம் கவர்ச்சி.... பின்னழகை எடுப்பாக காட்", "raw_content": "\nமுதன் முறையாக... கொஞ்சம் கவர்ச்சி.... பின்னழகை எடுப்பாக காட்டி... புடவையில் ஷிவானி\nவெளியிட்ட புகைப்படங்களில் புடவையில் இருக்கும் போட்டோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் நல்ல பேர் வாங்கி சினிமாவில் நட்சத்திரங்களாக இருந்து வருகிறார்கள். அப்படி தொலைக்காட்சி சிரீயல் நடிகையாக அறிமுகமாகி பின் பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன்.\nபகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் நடித்து சில காதல் சர்ச்சையிலும் சிக்கினார். பின் பிக்பாஸுல் காதல் வயப்பட்டு அம்மாவிடமே திட்டுவாங்கி பின் அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார்.\nதற்போது போட்டோஹூட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ஷிவானி க்ளாமரில் தாராளம் காட்டி வருகிறார். இவர் வெளியிட்ட புகைப்படங்களில் புடவையில் இருக்கும் போட்டோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nசும்மா சொல்லக்கூடாது புள்ளை நச்சுனு தான் இருக்கு... அப்புறம் எதுக்குமா கிளாமர் காட்டுற என நெட்டீசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavasri.in/Printed-book-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-Sree-Sri-Churna-Choorna-Paripalanam-p228224129", "date_download": "2021-08-02T09:26:49Z", "digest": "sha1:ASMA2CWDFQ2P3L3VVHLEBXJFGJFNXSNF", "length": 7433, "nlines": 63, "source_domain": "srivaishnavasri.in", "title": "Printed book - ஸ்ரீசூர்ண பரிபாலனம் - Sree / Sri Churna / Choorna Paripalanam", "raw_content": "\nஒருவனுடைய வாழ்நாளில் அவன் உடல், உள்ளம் ஆகியவை எம்பெருமானுக்கும், எம்பெருமான் அடியார்களுக்��ும் தொண்டு செய்திருக்கக் கூடுமானால், அவனுடைய ஆத்மா அந்த உடலைவிட்டு பிரிந்து சென்றபிறகு, அந்த உயிர் பிரிந்த உடல், ஓர் புனிதப் பொருளாக கருதப்படுகிறது.\nஅந்த உடலை சிதையிலே வைப்பதற்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடு களின்படி, சில ஸம்ஸ்காரங்களை செய்வது ஒரு காலத்தில் அனைத்து வர்ணத்தைச் சார்ந்தவர்களின் முக்கியமான சடங்காக அமைந்திருந்தது.\nஅதனுடைய ஓர் எச்சம்தான் ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருமாளிகைகளில் நடைபெற்றுவரும், ஸ்ரீசூர்ண பரிபாலனம் என்னும் நிகழ்ச்சி.\nஅப்போது ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒன்றுகூடி, நம்மாழ்வாருடைய முதற்பிரபந்தமாகிய திருவிருத்தம் நூறு பாட்டுக்களை ஸேவித்தும்,\nஓர் மரஉரலில் ஸ்ரீசூர்ண கலவையை இடித்து, இறந்தவருடைய புனித உடலுக்கு ஸ்நாநம் செய்வித்த பிறகு, அவருடைய திருமேனியில் பன்னிரெண்டு திருமண் காப்புகளை சாற்றிய பின்னர் ஈமச்சடங்குகளைத் தொடர்ந்து செய்வர்.\nஇந்தச் சடங்கும் எம்பெருமானார் தர்சனத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அமைந்துள்ள இரண்டாவது தர்மமாகும்.\nமூன்றாவது தர்மந்தான் ஸ்ரீவைஷ்ணவனுக்கு, (ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந் தாலும்) அதாவது பஞ்சஸம்ஸ்காரம் ஆனவர்களுக்கு (எக்குலத்தவராயினும்) அவர்கள் பரமபதித்து ஓராண்டு நிறைபெறுவதற்குள் (வருஷ ஆப்திகத்திற்கு முன்) அவர்களுக்காகச் செய்யும் சடங்கு 'கரும்புவில்லும் குடமும்' என அழைக்கப்படும் திவ்யப்பிரபந்த பாராயண, ததீய ஆராதன (ததீ நெடில், ததி குறில் என்பது தயிர்) வைபவம் (திருமால் அடியார்களுக்குச் செய்யும் விருந்தோம்பல்).\nபரமபதித்த சேதனின் பொருட்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, மூன்று நாள்கள் அல்லது ஐந்து நாள்கள் நடைபெறும்.திருவாய்மொழி மட்டுமோ அல்லது நாலாயிர திவ்யப்பிரபந்தம் சேவையினை நடத்தலாம்.அதற்கு அங்கமாக ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், ஸ்ரீராமாயணம், ஈடு, ரஹஸ்யக்ரந்தங்கள் முதலானவை அனுஸந்திக்கப்படுகின்றன.\nஇப்படிப்பட்ட ஸ்ரீசூர்ண பரிபாலனத்தை எப்படி அனுஷ்டிப்பது என நமக்கு உதவும் பொருட்டு உருவனதே இந்நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/budget/news/government-increases-digital-india-program-fund-allocation-by-23-percent-in-2020-21-budget/articleshow/73873256.cms", "date_download": "2021-08-02T09:59:58Z", "digest": "sha1:EFM627M67XB6SVUXZHVIRRYXPL7JTF4D", "length": 12486, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Digital India: ��ிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ரூ.3,900 கோடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ரூ.3,900 கோடி\n2020-21 நிதியாண்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அரசின் சேவைகளைப் பொதுமக்களுக்கு எளிதாகக் கொண்டு செல்லும் நோக்கத்தில் 2015ஆம் ஆண்டின் ஜூலை மாதம் மத்திய மோடி அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் டிஜிட்டல் இந்தியா திட்டம். தொழில்நுட்பப் பிரிவில் இந்தியாவைத் தலைசிறந்த நாடாக உருவாக்கவும், நாட்டில் இணைய வசதி சிறப்பாகக் கிடைப்பதை உறுதி செய்யவும் இத்திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு 2020-21 நிதியாண்டில் ரூ.3,958 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்றைய தினத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு சென்ற ஆண்டைவிட 23 சதவீதம் கூடுதலான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு சாதனங்கள் உற்பத்தி, ஆராய்ச்சி - மேம்பாடு, எலெக்ட்ரானிக் துறையில் மனிதவளத்தை உயர்த்துவது, சைபர் பாதுகாப்பு, ஐடி சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். சென்ற ஆண்டு பட்ஜெட்டில் இதற்கு ரூ.3,750.76 கோடி ஒதுக்கப்பட்டு, பின்னர் அது ரூ.3,212.52 கோடியாகக் குறைக்கப்பட்டது.\nவிளையாட்டுத் துறைக்குக் கூடுதல் நிதி\nஇந்தியாவில் மின்னணு சாதனங்கள் உற்பத்தியை மேம்படுத்துவதில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், இத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளதாகவும், மின்னணு சாதனங்கள் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மின்னணு மேம்பாடு மற்றும் ஐடி வன்பொருள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான சலுகைத் திட்டத்துக்கு ரூ.980 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இதற்கு ரூ.690 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்ஜெட் 2020: பால் உற்பத்தியைப் பெருக்கத் திட்டம்\nசைபர் பாதுகாப்பு மற்றும் ஐடி மேம்பாட்டுப் பிரிவுகளுக்கு தலா ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய அறிவுசார் நெட்வொர்க் அமைப்புக்கான நிதி ஒதுக்கீடு ரூ.274 கோடியிலிருந்து ரூ.400 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிளையாட்டுத் துறைக்குக் கூடுதல் நிதி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையை மூடுங்க... மதுரை கலெக்டர் அதிரடி ஆக்ஷன்\nAdv: அமேசான் பெஸ்ட் டீல் ரூ.1,499 முதல் ஹெட்போன்கள்\nசென்னை குடும்பத்துடன் வந்து சம்பள பாக்கி கேட்ட நிர்வாகி... நடிகர் விஜய் வீட்டின் முன் பரபரப்பு\nசேலம் திருநங்கைகளை வாழ விடாத திருநங்கைகள்; மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி\nசெய்திகள் சீரியல் நடிகை சஹானா ஷெட்டி திடீர் திருமணம்\nகோயம்புத்தூர் கோவை சாலையோர மரத்தில் பிணமாகத் தொங்கிய ஆட்டோ டிரைவர்\nதமிழ்நாடு திருமாவுக்கு பிளாஸ்டிக் நாற்காலி, சர்ச்சையில் திமுக அமைச்சர்..\nகிரிக்கெட் செய்திகள் ‘கிரிக்கெட்’ பெஸ்ட் பினிஷர் இவர்தான்…தோனி கிடையாது: ஆஸி வீரர் ஆஸ்டன் கணிப்பு\nவணிகச் செய்திகள் இன்று முதல் எல்லாம் மாறிடுச்சு... இனி அதிகம் செலவாகும்\nமகப்பேறு நலன் கர்ப்பிணிக்கு 35 வாரம்: பிரசவ வலி போல் கடுமையான பொய் வலி அடிக்கடி வரும் வாரம், வேறு என்ன அறிகுறிகள் இருக்கும்\nடிரெண்டிங் சீரியல் பார்த்துக்கொண்ட பைக் ஓட்டியவருக்கு போலீஸ் ஆப்பு... நடந்தது என்ன\nடெக் நியூஸ் வெறும் ரூ.5-க்கு 1GB டேட்டா; இந்த Airtel பிளான் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\nவார ராசி பலன் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான வார ராசிபலன் (ஆகஸ்ட் 2 முதல் 8ம் தேதி வரை)\nவீடு பராமரிப்பு கறிவேப்பிலையை நீண்ட நாட்கள் பசுமை மாறாமல் சேமித்து வைப்பது...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/dwayne-bravo-and-pollard-in-the-reserve-list-for-worldcup.html", "date_download": "2021-08-02T09:41:44Z", "digest": "sha1:YRL3K7LZNZUO5OLXGFKCRU2I2MAY4ZHF", "length": 4438, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Dwayne Bravo and Pollard in the reserve list for worldcup | Sports News", "raw_content": "\n‘தனித்தனியா இருக்கும்போதே தாறுமாறு, இப்போ ஒன்னா சேர்ந்தா’.. உலக்கோப்பையை கலக்க வரும் சிஎஸ்கே, மும்பை அணியின் அதிரடி வீரர்கள்\n'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே'.. டெல்லி கேபிடல்ஸின் ட்வீட்டுக்கு சிஎஸ்கேவின் ‘செம்ம’ ரிப்ளை\n'அப்பெல்லாம் நாங்க கூல் கேப்டன் தோனியை தீவிரவாதின்னுதான் கூப்டுவோம்'\n'கோவத்துல அம்பயரை திட்டிட்டேன்'... 'அப்படி பேசுனது தப்புதான்'... 'சாரி சொன்ன வைரல் சிறுவன்\n'தெனம் 200 கமெண்ட்டுங்க.. ட்விட்டரே கருகிடும் போல.. தோனி பத்தின அந்த ட்வீட்ட டெலிட் பண்றேன்.. ஆனா'.. கதறும் வீரர்\n‘எல்லோருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ்’.. அடுத்த வருடம் விளையாட வருவாரா காயத்துக்கு பின் வாட்சனின் உருக்கமான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2806487", "date_download": "2021-08-02T10:09:26Z", "digest": "sha1:FOT6CMK3AZ23KMKARWMHPWUKFZ5T4UC5", "length": 18958, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "அமெரிக்கர்கள் இந்தியா செல்லலாம் பயண கட்டுப்பாடுகளில் தளர்வு | Dinamalar", "raw_content": "\nவாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது: தமிழக ...\nஇன்று தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா: சிறப்பு ...\nஆக.,02: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'தினமலர்' வழிகாட்டி 2.0 நிறைவு\nவேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர்\nஇந்திய சீன படைகள் வாபஸ்\nகாந்தஹார் விமான நிலையத்தில் தலிபான்கள் 'ராக்கெட்' ...\nகோவிட்டை தடுக்குமா: அஸவகந்தா குறித்த ஆய்வு\n1976ல் நடந்த விமான விபத்தில் 'இறந்தவர்' வீடு ...\nஅமெரிக்கர்கள் இந்தியா செல்லலாம் பயண கட்டுப்பாடுகளில் தளர்வு\nவாஷிங்டன் : அமெரிக்காவை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான பரிந்துரையில் அந்நாட்டு அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.நம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்த போது அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு நான்காம் நிலை எச்சரிக்கை விடுத்தது.இதன்படி அமெரிக்க குடிமக்கள் யாரும் இந்தியாவுக்கு பயணம் செய்ய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன் : அமெரிக்காவை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான பரிந்துரையில் அந்நாட்டு அரசு தளர்வுகளை அறிவித்துள்ள���ு.\nநம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்த போது அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு நான்காம் நிலை எச்சரிக்கை விடுத்தது.இதன்படி அமெரிக்க குடிமக்கள் யாரும் இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. தற்போது நம் நாட்டில் தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. 125 நாட்களுக்கு பின் ஒரு நாள் தொற்று பாதிப்பு 30 ஆயிரமாக நேற்று குறைந்தது.\nஇதையடுத்து இந்தியா செல்வதற்கான பயண கட்டுப்பாடுகளில் அமெரிக்க அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. நான்காம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அது மூன்றாம் நிலை எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா செல்ல விரும்பும் அமெரிக்கர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி செல்லும்படி கூறப்பட்டுள்ளது.\nமேலும் பயண திட்டத்தை ஒரு முறை மறுபரிசீலனை செய்யும்படியும் அறிவுறுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கான பயண பரிந்துரையையும் நான்காம் நிலையில் இருந்து மூன்றாம் நிலைக்கு அமெரிக்கா தளர்த்தி உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா அமெரிக்கா பாதிப்பு குறைவு கட்டுப்பாடு தளர்வு இந்தியா அனுமதி பயணிகள் பரிந்துரை\n1:10:100 - பா.ஜ., இலக்கு உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி(28)\n'நீட்' தேர்வுக்கு யார் காரணம் தி.மு.க.,வுக்கு காங்., பதிலடி(29)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்ய, அமெரிக்கா என்று அனுமதிக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n1:10:100 - பா.ஜ., இலக்கு உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி\n'நீட்' தேர்வுக்கு யார் காரணம் தி.மு.க.,வுக்கு காங்., பதிலடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/07/1GTctm.html", "date_download": "2021-08-02T08:54:39Z", "digest": "sha1:QOPNCXSQ2G2LPTNVDVY5BOCRCMPDSUL5", "length": 5085, "nlines": 33, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு.", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு.\nதமிழகத்தில் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கையொட்டி, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.\nஅந்த வகையில், நாளை 4-வது முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து காய்கறி,மளிகைக் கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருக்கும்.\nசாலைகளில் வாகனப் போக்குவரததுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி ஊர் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அத்தியாவசிய பொருட் களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தத் தடையும் இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் செய்தி சேகரிக்க செல்லவும் தடை இல்லை என்று கூறப்பட்டுள்ளது\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/07/Kovil%20corona.html", "date_download": "2021-08-02T08:52:52Z", "digest": "sha1:6YWCZ6FQTUXCMYHQ4NPB5QRJRHS4BAE5", "length": 12683, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனாவுக்கு கோயில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / கொரோனாவுக்கு கோயில்\nகொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.\nஇந்நிலையில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் ‘கொரோனா தேவி' சிலை வைத்த��� வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகொரோனாவுக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.\nஇந்தநிலையில், தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராஜரத்தினம் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கொரோனாவுக்கு கோவில் கட்டும் பணியை தொடங்கி உள்ளார்.\nஅம்மச்சியாபுரத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் கொரோனா கோவில் என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. கம்புகள் நடப்பட்டு, அதில் வேப்பிலை கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜரத்தினத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-நான் மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது விவசாயம் செய்து வருகிறேன். கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துள்ளது.\nகண்ணுக்கு தெரியாத அந்த வைரஸ் உலகில் பல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனாவுக்கு ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன்.\nமுந்தைய காலத்தில் அம்மை நோய் தாக்கம் அதிக அளவில் இருந்தபோது, அது வழிபாடாக மாறியது. இதேபோல் தான் கொரோனாவையும் பார்க்கிறேன். அதனால் கோவில் கட்ட முடிவு செய்தேன். விரைவில் மேடை வடிவில் கோவில் கட்ட உள்ளேன். பூஜை, வழிபாடு எல்லாம் கிடையாது. இந்த வழியாக கடந்து செல்பவர்கள் கொரோனா கோவிலை பார்த்து கும்பிட்டு செல்லட்டும். அதன் மூலம் அவர்கள் பாதுகாப்பான சூழலில் வாழட்டும் என்பதற்காக இதை கட்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்தி���ன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/twitter-statistics/", "date_download": "2021-08-02T10:03:44Z", "digest": "sha1:6OM7KRXFRBPLYGSUFHLTDBZXWINAQWPV", "length": 34007, "nlines": 220, "source_domain": "www.websitehostingrating.com", "title": "50 க்கான 2021+ ட்விட்டர் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்", "raw_content": "\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nஃப்ளைவீல் vs WP இன்ஜின்\nஇலவசமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்கவும்\nபிளாக்கிங்கிற்கு Wix & Shopify ஐப் பயன்படுத்தவும்\nநிலையான தொடர்பு Vs Mailchimp\nஇலவச குளிர் மின்னஞ்சல் அவுட்ரீச் கையேடு\nWordPress வளங்கள் மற்றும் கருவிகள்\n50 க்கான 2020+ ட்விட்டர் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகள்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nTwitter இல் பகிர் Facebook இல் பகிர் சமுதாயம்\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம். மேலும் அறிக.\nமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றாலும், ட்விட்டர் ஒரு பிரபலமான சமூக ஊடக தளமாக அதன் நிலையைத் தொடர்கிறது. மிகவும் புதுப்பித்தவற்றின் விரிவான தொகுப்பு இங்கே 2020 க்கான ட்விட்டர் புள்ளிவிவரங்கள். ட்விட்டர் இறந்துபோகும் வரை, தேதியால் பயன்படுத்தப்பட்டதை அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது - ஆனால் இந்த பழைய பறவையில் இன்னும் வாழ்க்கை இருக்கிறது.\nஏனெனில் புள்ளிவிவரங்கள் பிடிக்கும் 330 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் (MAU கள்), 500 மில்லியன் ட்வீட்டுகள் ஒவ்வொரு நாளும் வெளியிடப்படுகின்றன 23 சதவீதம் இணைய மக்கள்தொகை ட்விட்டரில் இல்லையெனில் சொல்லுங்கள்.\nபுதிய புள்ளிவிவரங்களுடன் உங்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க, 2020 ஆம் ஆண்டில் செயல்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அவை புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த எங்கள் எண்களை ஒரு முறை வழங்கியுள்ளோம்.\nபொது ட்விட்டர் புள்ளிவிவரம் 2020\nட்விட்டர் பயனர் / பயன்பாட்டு புள்ளிவிவரங்கள்\nபொது ட்விட்டர் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகள்\n2020 க்கான பொதுவான ட்விட்டர் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகளின் தொகுப்பு\nமொத்தம் 1.3 பில்லியன் ட்விட்டர் கணக்குகள் உள்ளன.\nட்விட்டரில் 330 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் (MAU கள்) உள்ளனர்.\nஒவ்வொரு நாளும் 500 மில்லியன் ட்வீட்டுகள் அனுப்பப்படுகின்றன.\nமொத்தம் உள்ளது 1.3 பில்லியன் ட்விட்டர் கணக்குகள், ஆனால் 330 மில்லியன் மட்டுமே செயலில் உள்ள பயனர்கள்.\nட்விட்டர் உள்ளது 330 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் (MAU கள்). Q4 2019 தினசரி செயலில் உள்ள பயனர்கள் (DAU கள்) 152 மில்லியன்.\nஅந்த 50 மில்லியன் MAU களில் 330 மில்லியன் மட்டுமே அமெரிக்காவில் உள்ளன 290 மில்லியன் (88 சதவீதம்) சர்வதேசம். உலகெங்கிலும் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களைக் கொண்ட சர்வதேச பயனர்களை ட்விட்டர் ஆதரிக்கிறது.\nட்விட்டரின் பணமாக்கும் தினசரி செயலில் உள்ள பயனர்கள் (mDAU) உலகளவில் இருந்தது Q152 4 இல் 2019 மில்லியன், 126 ஆம் ஆண்டின் Q4 இல் 2018 மில்லியனுடன் ஒப்பிடும்போது, ​​21% உயர்ந்து முதன்மையாக தயாரிப்பு மேம்பாடுகளால் இயக்கப்படுகிறது.\nQ4 2019 க்கான ட்விட்டரின் வருவாய் $ 1.01 பில்லியன், Q11 4 க்கு எதிராக 2019% அதிகரித்துள்ளது.\nஉள்ளன ஒவ்வொரு நாளும் 500 மில்லியன் ட்வீட் அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் 350,000 ட்வீட்டுகள் அனுப்பப்படுகின்றன.\nசுற்றி உள்ளன 200 பில்லியன் ஆண்டுக்கு ட்வீட்.\nஎல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான ட்வீட் இருந்து வந்தது @BarackObama, அவரது \"நிறத்தின் காரணமாக யாரும் மற்றொரு நபரை வெறுக்க பிறக்கவில்லை ..\" 2017 இல் ட்வீட் பெறப்பட்டது 4.3 மில்லியன் லைக்குகள் இதுவரை.\nஇருந்து முதல் ட்வீட் பில்லியனுக்கு, இது 3 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 1 நாள் எடுத்தது.\nட்விட்டர் பயனர் புள்ளிவிவரம் & உண்மைகள்\nட்விட்டர் பயனர் மற்றும் பயன்பாட்டு புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகளுக்கான தொகுப்பு 2020\nஜனவரி 2020 நிலவரப்படி, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ட்விட்டரில் (113 மில்லியன் பின்தொடர்பவர்கள்) அதிகம் பின்தொடர்கிறார்.\nட்விட்டரில் செலவழித்த சராசரி நேரம் 3 நிமிடங்கள் 39 வினாடிகள்.\nசராசரி ட்விட்டர் பயனர் XX பின்பற்றுபவர்கள்.\n391 மில்லியன் ட்விட்டர் கணக்குகள் பின்தொடர்பவர்கள் யாரும் இல்லை.\nட்விட்டரில் செலவழித்த சராசரி நேரம் 3 நிமிடங்கள் மற்றும் XX விநாடிகள்.\nட்விட்டர் மதிப்பீடுகள் 48 மில்லியன் அதன் செயலில் உள்ள பயனர்கள் உண்மையில் போட்களே.\nகொரிய பாப் குழு பிடிஎஸ் 2019 ஆம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட ட்வீட்டைக் கொண்டிருந்தது. இசைக்கலைஞர்கள் மற்றும் பிரபலங்களைப் பற்றி அதிகம் ட்வீட் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் கே-பாப் குழுவும் முதலிடத்தில் உள்ளது. இந்த ட்வீட் முடிவடைந்தது 1 மில்லியன் லைக்குகள்.\nஜனவரி 2020 நிலவரப்படி மிகவும் பிரபலமான ட்விட்டர் கணக்குகள், அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த மாதத்தில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கணக்கு பராகோபாமாவுக்கு 113 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்தனர். ரன்னர் அப் பாடகர் ஜஸ்டிங் பீபர் கணக்கு 109 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஜஸ்டின்பீபர்.\nபெரிய படத்தை கிளிக் செய்யவும்\n83 சதவீதம் உலகத் தலைவர்கள் ட்விட்டரில் உள்ளன.\nபத்திரிகையாளர்கள் உருவாக்குகிறார்கள் சரிபார்க்கப்பட்ட 24.6 சதவீதம் ட்விட்டர் கணக்குகள்.\nடொனால்டு ஜே. டிரம்ப், @realDonaldTrump என்றும் அழைக்கப்படுகிறது, அனைத்து ட்விட்டர் பயனர்களிடமும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் 52 மில்லியன் ட்விட்டர் பின்தொடர்பவர்கள் 18 வது இடத்தில் உள்ளனர்.\nட்விட்டர் அதன் செயலில் உள்ள பயனர்களில் 23 மில்லியன் பேர் உண்மையில் இருப்பதாக மதிப்பிடுகிறது போட்களை.\nசெயலில் உள்ள பயனர்களில் 80 சதவீதம் பேர் தளத்தை அணுகுவர் மொபைல் வழியாக.\nமக்கள் பார்க்கிறார்கள் ட்விட்டரில் ஒவ்வொரு நாளும்.\nட்விட்டர் புள்ளிவிவர புள்ளிவிவரங்கள் & உண்மைகள்\n2020 க்கான ட்விட்டர் புள்ளிவிவர புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகளின் தொகுப்பு\nட்விட்டரில் 56 சதவீத பயனர்கள் ஆண்கள், 44 சதவீதம் பெண்கள்.\n12 சதவீத அமெரிக்கர்கள் தங்களது செய்திகளை ட்விட்டரில் இருந்து பெறுவதாகக் கூறுகிறார்கள்.\n40 முதல் 18 வயதுடைய அமெரிக்கர்களில் 29 சதவீதம் பேர் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர்.\n56 சதவீதம் ட்விட்டரில் பயன்படுத்துபவர்களில் ஆண்கள், 44 சதவீதம் பெண்கள்.\nஇன் 24 சதவீதம் அமெரிக்க பெரியவர்கள் சமூக ஊடக வலையமைப்பைப் பயன்படுத்தவும்.\n40 முதல் 18 வயதுடைய அமெரிக்கர்களில் 29 சதவீதம் பேர் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர், வேறு எந்த வயதினரையும் விட அதிகம். வயது அதிகரிக்கும்போது பயன்பாடு குறைகிறது, 27 முதல் 30 வயதுடையவர்களில் 49 சதவீதம் பேர் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர், 19 முதல் 50 வயதுடையவர்களில் 64 சதவீதம் பேர், 8 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் வெறும் 65 சதவீதம் பேர்.\nட்விட்டர் தனது பயனர்களில் 80 சதவீதம் பேர் என்று கூறுகிறது \"வசதியான மில்லினியல்கள்.\"\n12 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் என்று கூறுகிறார்கள் அவர்களின் செய்திகளைப் பெறுங்கள் ட்விட்டரிலிருந்து.\nகல்லூரி பட்டம் பெற்ற அமெரிக்கர்களில் 32 சதவீதம் பேர் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர், சில கல்லூரிக் கல்வி கற்றவர்களில் 25 சதவீதம் பேரும், உயர்நிலைப் பள்ளி டிப்ளோமா அல்லது அதற்கு குறைவானவர்களில் 18 சதவீதத்தினருடன் ஒப்பிடும்போது. தங்கள் செய்திகளைப் பெற ட்விட்டரைப் பயன்படுத்துபவர்களில், 45 சதவீதம் பேர் கல்லூரி பட்டம் பெற்றவர்கள்.\n77 டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானம் ஈட்டும் அமெரிக்கர்களில் 75,000 சதவீதம் பேர் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர், $ 74 முதல், 50,000 வரை சம்பாதிப்பவர்களில் 74,999 சதவிகிதத்தினருடன் ஒப்பிடும்போது, ​​74 முதல் 30,000 டாலர் வரை சம்பாதிப்பவர்களில் 49,999 சதவிகிதம், ஆண்டுக்கு 63 டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்களில் 30,000 சதவிகிதத்தினர்.\nட்விட்டரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஆண்களின் சதவீதம் 24 சதவீதம்; அமெரிக்க பெண்களுக்கு இது 25 சதவீதம்.\nசற்று அதிகம் நகர்ப்புற அமெரிக்கர்கள் அவர்களின் கிராமப்புற மற்றும் புறநகர் சகாக்களை விட ட்விட்டரைப் பயன்படுத்துங்கள். அமெரிக்க நகரவாசிகளில் 29 சதவீதம் பேர் ட்விட்டரைப் பயன்படுத்துகிறார்கள், 23 சதவீத புறநகர் மக்களும், 17 சதவீத கிராமப்புற அமெரிக்கர்களும்.\nகணக்கெடுக்கப்பட்ட ட்விட்டர் பயனர்களில் 58 சதவீதம் பேர் இருந்தனர் பயன்பாட்டை நிறுவியது கடந்த மாதத்தில்.\nட்விட்டர் பயனர்களில் 80 சதவீதம் பேர் நெட்வொர்க்கை அணுகலாம் கைபேசி, மற்றும் ட்விட்டர் வீடியோ காட்சிகளில் 93 சதவீதம் மொபைலில் நிகழ்கின்றன.\nட்விட்டர் பயனர்களில் 46 சதவீதம் பேர் ஒவ்வொரு நாளும் பயன்பாட்டை அணுகுகிறார்கள், ஒவ்வொரு வாரமும் 25 சதவீதம் பேர் நெட்வொர்க்கைப் பயன்படுத்துகின்றனர், மொத்தம் 71 சதவீத பயனர்கள் குறைந்தது வாரந்தோறும் தளத்தை அணுகலாம்.\n79 சதவீத கணக்குகள் உள்ளன அமெரிக்காவிற்கு வெளியே.\nட்விட்டரின் தொழில்நுட்பம் 18 குவிண்டிலியனைக் கையாள முடியும் பின்பற்றுபவர்கள்.\nதி சிஐஏ ஒரு நாளைக்கு 5 மில்லியன் ட்வீட்களைப் படிக்கிறது.\nட்விட்டர் சந்தைப்படுத்தல் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகள்\n2020 க்கான ட்விட்டர் சந்தைப்படுத்தல் மற்றும் வணிக புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகளின் தொகுப்பு\nஅனைத்து பி 67 பி வணிகங்களிலும் 2 சதவீதம் ட்விட்டரை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் கருவியாகப் பயன்படுத்துகின்றன.\nட்விட்டரில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 164 மில்லியன் விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன.\n66+ ஊழியர்களைக் கொண்ட வணிகங்களில் 100 சதவீதம் பேர் ட்விட்டர் கணக்கைக் கொண்டுள்ளனர்.\n65.8+ ஊழியர்களைக் கொண்ட அமெரிக்க நிறுவனங்களில் 100 சதவீதம் மார்க்கெட்டிங் செய்ய ட்விட்டரைப் பயன்படுத்தவும்.\nஈமார்க்கெட்டரின் கூற்றுப்படி, 66 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட வணிகங்களில் கிட்டத்தட்ட 100 சதவீதம் பேர் ட்விட்டர் கணக்கைக் கொண்டுள்ளனர்.\nட்விட்டர் பயனர்களில் 77 சதவீதம் பேர் ஒரு பிராண்டைப் பற்றி மிகவும் நேர்மறையாக உணர்கிறார்கள் ட்வீட் பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nJoy மகிழ்ச்சியின் கண்ணீர் மிகவும் ட்வீட் செய்யப்பட்ட ஈமோஜி ஆகும் 14.5 பில்லியன் ட்வீட்ஸ்.\nட்விட்டர் விட அதிகமாக சேவை செய்கிறது தினமும் 2 பில்லியன் தேடல் வினவல்கள், சமீபத்திய டெவலப்பர் வேலை இடுகைகளின்படி.\nநவம்பர் 7, 2013 அன்று, ட்விட்டர் அவற்றின் விலை ஐபிஓ ஒரு பங்குக்கு $ 26 இது நிறுவனத்தை மதிப்பிட்டது $ 14.2 பில்லியன்.\nஅனைத்து பி 67 பி வணிகங்களிலும் 2 சதவீதம் ட்விட்டரை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் கருவியாகப் பயன்படுத்துங்கள்.\nட்விட்டர் பயனர்களில் 40 சதவீதம் பேர் பதிவாகியுள்ளனர் ஏதாவது வாங்குவது அதை ட்விட்டரில் பார்த்த பிறகு.\nசராசரியாக உள்ளன 164 மில்லியன் விளம்பரங்கள் ஒவ்வொரு நாளும் ட்விட்டரில் காண்பிக்கப்படுகிறது, இது Q23 1 இலிருந்து 2019% அதிகரித்துள்ளது.\nஎண்களின் மூலம் ட்விட்டர்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள், பயன்பாட்டு புள்ளிவிவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள். மார்ச் 2006 இல் ட்விட்டர் உருவாக்கப்பட்டது என்பது இப்போது அனைவருக்கும் தெரியும் ஜாக் டோர்சி, இவான் வில்லியம்ஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் நோவா கிளாஸ்ஒரு சமூக ஊடக தளமாக பயனர்கள் ட்வீட் எனப்படும் குறுகிய 140 எழுத்து செய்திகளை அனுப்ப அனுமதித்தனர்.\nஇங்கே நான் தொகுத்துள்ளேன் 50 புதுப்பித்த ட்விட்டர் புள்ளிவிவரங்கள் 2020 ஆம் ஆண்டில் ட்விட்டரின் தற்போதைய நிலையை உங்களுக்கு வழங்க, அதன் பயனர்கள் அதில் என்ன செய்கிறார்கள், அவர்கள் எவ்வாறு தளத்தை பயன்படுத்துகிறார்கள்.\nமேலும் புள்ளிவிவரங்களில் நீங்��ள் ஆர்வமாக இருந்தால், எங்களைப் பாருங்கள் இணைய புள்ளிவிவரங்கள் பக்கம் இங்கே.\nமுகப்பு » வலைப்பதிவு » புள்ளிவிவரம் மற்றும் உண்மைகள் » 50 க்கான 2020+ ட்விட்டர் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகள்\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிட தேவையான புலங்கள் குறிக்க *\n40 க்கான 2020+ இன்ஸ்டாகிராம் புள்ளிவிவரங்கள் மற்றும் உண்மைகள்\n25 க்கான 2021+ மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் புள்ளிவிவரங்கள்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் கம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2021 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://e-kalvi.com/category/gce-al/", "date_download": "2021-08-02T10:20:15Z", "digest": "sha1:4CJJ3CYNFBH2TYVRRSGHTA25ZUMQZXXI", "length": 9087, "nlines": 108, "source_domain": "e-kalvi.com", "title": "GCE A/L Archives - e-Kalvi", "raw_content": "\nG.C.E A/L Business Studies Model Paper 2021 Tamil Medium Download G.C.E A/L Business Studies Model Paper 2021 Tamil Medium Free PDF. வணிகக்கல்வி | Business Studies சில்பாலோக்க வேலைத்திட்டம் கல்விப்பொது தராதரப்பத்திர (உ/த) பரீட்சைப் பெறுபேற்றை அதிகரித்தல் – 2021 வணிகக்கல்வி தரம் – 12 & தரம் 13 சுயகற்றலுக்கான கையேடு மத்தியமாகாணக் கல்வித் திணைக்களம். \nG.C.E A/L Bio System Technology Download G.C.E A/L Bio System Technology Model Paper 2021 Tamil Medium Free PDF. உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல் சில்பாலோக்க வேலைத்திட்டம் கல்விப்பொது தராதரப்பத்திர (உ/த) பரீட்சைப் பெறுபேற்றை அதிகரித்தல் – 2021 உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல் தரம் – 12 & தரம் 13 சுயகற்றலுக்கான கையேடு மத்தியமாகாணக் கல்வித் திணைக்களம். \nG.C.E A/L Art Model Papers Tamil Medium 2021 Download GCE AL Art Model Papers Tamil Medium 2021. சில்பாலோக்க வேலைத்திட்டம் கல்விப்பொது தராதரப்பத்திர (உ/த) பரீட்சைப் பெறுபேற்றை அதிகரித்தல் – 2021 சித்திரக்கலை தரம் – 12 & தரம் 13 சுயகற்றலுக்கான கையேடு மத்தியமாகாணக் கல்வித் திணைக்களம். Art | சித்திரக்கலை  Download Grade-12 Art PDF \nG.C.E A/L Agriculture Science Model Paper Tamil Medium 2021 Download G.C.E A/L Agriculture Science Model Paper Tamil Medium 2021 Free PDF. சில்பாலோக்க வேலைத்திட்டம் க���்விப்பொது தராதரப்பத்திர (உ/த) பரீட்சைப் பெறுபேற்றை அதிகரித்தல் – 2021 விவசாய விஞ்ஞானம் தரம் – 12 & தரம் 13 சுயகற்றலுக்கான கையேடு மத்தியமாகாணக் கல்வித் திணைக்களம். Agriculture Science | விவசாய விஞ்ஞானம் \nG.C.E A/L Accounting Model Papers Tamil Medium 2021 Download GCE AL Accounting Model Papers Tamil Medium 2021. சில்பாலோக்க வேலைத்திட்டம் கல்விப்பொது தராதரப்பத்திர (உ/த) பரீட்சைப் பெறுபேற்றை அதிகரித்தல் – 2021 கணக்கீடு தரம் – 12 & தரம் 13 சுயகற்றலுக்கான கையேடு மத்தியமாகாணக் கல்வித் திணைக்களம். Accounting | கணக்கீடு  Download Grade-12 Accounts PDF \nமின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள Subscribe செய்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2021/06/29/sage-with-eyes-of-light-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-17/", "date_download": "2021-08-02T10:11:30Z", "digest": "sha1:4MSLYN4E5JOT3U2LW5IRWBRB4TF5FY2D", "length": 20555, "nlines": 74, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 17 – RVS – Sage of Kanchi", "raw_content": "\n17. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி\nபிரபஞ்ச பூஜை: கார்வெட்டிநகர், 2, செப்டம்பர் 1971, வியாழக்கிழமை\nமதியநேரத்தில் எனக்குச் சில உடல் உபாதைகள் இருந்தது. ஆனாலும் இந்த ஏகாதசி இரவில் ஸ்ரீ மஹாஸ்வாமியின் பிரபஞ்ச பூஜையைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.\nதனது ஆஸ்ரமக் குடிலுக்கு வெளியே உட்கார்ந்து பலதரப்பட்ட பார்வையாளர்களுடன் மூன்று மணிநேரங்கள் தொடர்ந்து ஏகப்பட்ட விஷயங்களை ஸ்வாமிஜி பேசி முடித்தபோது மணி இரவு 9.\nஎனக்குத் தெரிந்த அரிச்சுவடி தமிழ் மொழி ஞானத்தினால் நான் புரிந்துகொண்டது என்னவென்றால் ஸ்ரீ மஹாஸ்வாமி பல விஷயங்களைப் பற்றி மக்களிடம் பேசும் போது அவர் நேரடியாக சில உத்திகளைக் கையாளும்படி சொல்லிக்கொடுப்பது இல்லை. அவர் அப்படி யோசனை கூறினார் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் அவர்களையும் அறியாமல் அவரது பேச்சினால் கவரப்பட்டு சொற்களுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தங்களை தாங்களாகவே எடுத்துக்கொள்கிறார்கள். இப்படியாக அவர்களுடைய கெட்ட நடத்தைகள் கூட அவரது வார்த்தைகளினால் மாறிவிடுகிறது.\nநான் அவரைத் தொட்டுவிடும் அருகில் இருந்தேன். என்னுடைய மனதையும் உடம்பையும் அழுத்தும் சில வெளியுலகக் காரணிகள் எப்படி அவரது குரல் மூலம் மட்டுமே அழிந்தது என்பதை உணர்ந்தேன். நான் ஏற்றுக்கொள்ளும் யோக்யதையை வளர்த்துக்கொண்டுவிட்டேன், இன்னும் என்னால் நிறைய சங்கதிகளை ஏற்றுக்கொள்ளமுடியும் என்றாகிவிட்டால் ஸ்ரீ மஹாஸ்வாமி தயக்கமில்லாமல் பொழிய ஆரம்பிப்பார். அவர் எப்பொழுதுமே அவசரப்பட்டது கிடையாது. அதாவது எப்பொழுதுமே அவரது நேரத்தை மிகவும் சரியாகக் கவனித்து துல்லியமாக உபயோகப்படுத்துவார்.\nதாமரைக்குளத்தில் பதினைந்து படிகள் விடுவிடுவென்று இறங்கினார். அவரது ஓலைப்பாய் அங்கே விரிக்கப்பட்டிருந்தது. கிழக்கிலிருக்கும் குளத்து நீரைப் பார்க்க அந்தப் பாயில் அமர்ந்தார். இரவு விளக்கொளியின் பெரிய நிழல் குளத்தில் பட்டு அவரது காவி உடலில் நெளி நெளியாக நடனமாடியது. அவரது வலதுபுறத்தில் ஐந்து மீட்டர் இடைவெளியில் கடைசிப் படியில் குளத்து நீர் காலைத் தழுவ நின்றுகொண்டிருந்தேன். எப்போதுமே எனக்கு எதாவது கட்டளையிட அவர் விரும்பினால் என்னை மட்டும் குறிபார்த்து மற்றவர்களை மானசீகமாக விலக்கிவிடுவார். முழுவிளக்கு வெளிச்சத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அனுஷ்டானங்கள் செய்யும் போது அவரது வலது கண் எவ்வளவு பிரகாசமாக இருந்தது என்பதை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தேன். அவரது தலை கேசமும் தாடியும் அவரது சக்தி மிகுந்த முகத்தைச் சுற்றி வெள்ளையாய் ஒரு “ஓம்” போட்டிருந்தது.\nஸ்ரீ மஹாஸ்வாமிகள் இப்போது நிமிர்ந்து அந்த குளத்தின் எதிர்திசையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அங்கே அந்த நீர்ப் பரப்பிலிருந்தோ அல்லது அக்கரையிலிருந்தோ எதோ தோன்றுவதற்கு காத்திருப்பது போலிருந்தது. ஒவ்வொரு இரவும் திரள் திரளாக வட்டமிடும் பூச்சிகள் குளக்கரையைச் சுற்றியிருந்த புதர்களில் அடங்கியது. பூச்சிகள் சாப்பிடும் தட்டான்கள் தங்களது குறுக்கும்நெடுக்குமான உலாத்தலை விட்டுவிட்டு துளிர்விடும் தாமரை இலைகளில் தஞ்சமடைந்தன. வௌவால்கள் மாமுனியின் ஆஸ்ரம முகாமிற்கு பின்னால் இருக்கும் நெடிய மரங்களிலிருக்கும் தங்கள் கூடுகளை அடைத்து “ச்சீப்..ச்சீப்” என்ற அதன் ஒலிகளை எழுப்பாமல் அமைதியடந்தன. குளத்திலிருந்த மீன்களும் தவளைகளும் தண்ணீரில் குதிக்காமல் இருந்ததால் நீர்ப்பரப்பு அலையெழும்பாமல் அமைதியாகக் கிடந்தது. அப்போது நக்ஷத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வானத்தின் கீழே அந்தக் குளமானது பளபளக்கும் கருப்பு வண்ணக் காகிதமான ஒரு மேடை போல தரையில் தென்பட்டது. இ��ற்கை எதற்கோ காத்திருப்பது போலத் தெரிந்தது. அந்த இருள் கவியத் துவங்கிய மாலை நேரத்தில் குளத்தின் கரையிலிருந்த மரங்களின் உச்சியில் அரைவட்டமான கருப்பு நிற பள்ளங்களைப் பார்ப்பதற்குதான் ஒருவரின் கண்களுக்கு உற்சாகமாக இருக்கலாம். ஆனால் அந்த கண்கள், ஆயிரக்கணக்கான ஜோடிக் கண்கள், ஸ்ரீ மஹாஸ்வாமி என்னும் ஒரு வெளிச்சப் புள்ளியில் நிலைக்குத்தியிருந்தன.\nதேகத்தையும் தண்டத்தையும் புனிதப்படுத்தும் விதமான பாரம்பரியச் சடங்குகளை கூரிய நோக்குடன் ஆரம்பித்தார். அதுவே புனிதம் அதைப் புனிதப்படுத்த வேண்டுமா சிறிது நேரம் பூஜித்தார். சட்டென்று ஸ்ரீ மஹாஸ்வாமி உள்ளங்கைகளை ஒன்றாகச் சேர்த்து விரல்களைப் பின்னி கைகளை ஆகாசத்தை நோக்கி உயரத் தூக்கினார். இது போல பத்து முறைகள் இந்து பாரம்பரியத்தில் இருக்கிறது. கைகளை ஆகாசத்துக்கும் பூமிக்குமாக உயர்த்தியும் தாழ்த்தியும் செய்துகொண்டிருக்கும் போது அந்தந்த திசையை நோக்கி அவரது தலையும் சென்றுகொண்டிருந்தது. எல்லாத் திசைகளிலிருந்து அவர் மட்டுமே பார்த்த அவருக்குத் தெரிந்தவர்களையும், சில விருந்தாளிகளையும் அழைத்து அவர் பக்கத்தில் உட்காரச் சொல்வது போலிருக்கிறது என்று அதைக் காணும் ஒருவர் சொல்லலாம் என்று நான் நினைக்கிறேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தக் குளத்தைச் சுற்றி இருந்த பிரதேசமே நிரம்ப சக்திபெற்றது போலிருந்தது. மிகவும் நெருக்கடியாக மூச்சு விடக்கூடச் சிரமப்படும்படியாக எல்லா இடங்களிலும் “யாரோ” இருப்பது போல தோன்றியது.\nஇவையெல்லாம் எதற்காகச் செய்யப்பட்டது என்பதைச் சொல்ல நேரம் வந்துவிட்டது. அவரது உள்ளங்கைகளைத் திறந்து அமானுஷ்யமாக அங்குக் கூடியிருந்த எல்லோரிடமும் சைகைகள் மூலம் பேச ஆரம்பித்துவிட்டார். ஆகாயத்தில் கைகளை வட்டமிட்டுக் காட்டி ஏதோ ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போலவும் அது சௌக்கியமாக இருக்கிறதா என்பதை விஜாரிப்பது போலவும் இருந்தது. பின்னர் அதன் பக்கத்திலிருந்த அடுத்ததைப் பார்க்கப் போனார். பின்னர் மூன்றாவதிற்கு தாவினார். இப்படி நிறைய தூரம் சென்றுவிட்டு கடைசியாக திரும்பவும் முதலாவதிடம் வந்தார். அங்கே ஒரு வார்த்தைச் சொல்ல வேண்டியிருந்தது. இப்படியாக அவரால் மட்டுமே பார்க்க முடிந்த நூற்றுக்கணக்கான ஆன்மாக்களை அழைத்து தனது சைகைகளினால் பெரிதாகவும் விளக்கமாகவும் ஆக்கினார். அவைகளை எதற்காக அங்கே வர உத்தரவிட்டிருக்கிறார் என்பதை சொல்வது போலிருந்தது. சிலவற்றுக்குப் புரியவில்லை. அவர் திரும்பவும் செய்தார். சிலவற்றுக்கு சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டியிருந்தது. பின்னர் அவை எல்லாவற்றுக்கும் இது என்ன என்பதைப் பற்றி தெரிவிக்கப்பட்டது.\nஇப்போது உரையாடல் பொதுவாகிப்போனது. ஸ்ரீ மஹாஸ்வாமியின் பெரிய அழகிய விரல்கள் எல்லோரையும் ஒரு வார்த்தையுமின்றி பேசவைத்தது.\n“இன்னும் சத்தமா… எங்களால கேட்க முடியலை”\n” என்று அந்த கண்ணுக்குத் தெரியாத சபையில் இன்னொரு பக்கம் திரும்பிக் கேட்கிறார்.\n“உன்னோட முறைக்குக் காத்திரு” என்கிறார்.\n“பின்னாடி இருக்கும் குழுவினரைப் பற்றி உன் கருத்து என்ன… ஆமாம்… உன்னுடைய கேள்வியைக் கொஞ்சம் தெளிவாக்கலாமோ… ஆமாம்… உன்னுடைய கேள்வியைக் கொஞ்சம் தெளிவாக்கலாமோ\nஅங்கே ஒரு சிம்பொனியின் ஆர்கெஸ்ட்ராவை அவருக்கு மட்டுமே தெரிந்த இசையமைப்பில் தனது விரலசைவுகளால் நடத்திக்கொண்டிருப்பது போலிருந்தது. இறுதியாக ஓங்கி ஒலிக்கும் ஒரு நிறைவான இசைக்கு தயாராகிக்கொண்டிருந்தார்.\nஇப்போது ஸ்ரீ மஹாஸ்வாமி திடீரென்று கட்டளைகள் பிறப்பிக்க ஆரம்பித்தார். மிகவும் வேகமான கை அசைவுகளின் மூலம் எல்லாவற்றையும் கவர்ந்து கொள்வது போல இருந்தது. அவர் பிரார்த்திப்பதின் சைகைகளாக அவை அறியப்பட்டது. அவர் கண்களுக்கு மட்டுமே புலப்பட்ட ஒரு பொருளை, நிஜத்தில் அது இருக்கிறதா என்ற கேள்விக்கே இடமில்லை, பிடிப்பது போன்ற சைகைகள். அவரது கரங்களை பல இடங்களை நோக்கி விரித்து நீட்டிய விரல்களை அங்குமிங்கும் காட்டி மௌனமான விளக்கங்களை அளித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது தெளிவு வேண்டுபவர்களுக்காக திருப்தியடைந்தது போல சில சைகைகளைக் காட்டினார்.\nஇப்படி அவரது மெல்லிய விரல்கள் மூலமாகக் காட்டப்படும் சைகைள் சத்தமில்லாத இடிமின்னல் போல எனக்குத் தோன்றியது. அவரது வெள்ளையான உள்ளங்கைகளிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தை எதிரில் இயற்கையாகச் சூழ்ந்திருந்த மரங்களுக்கு மேலே நிழல்போலே கருமையாக்கப்பட்டு நட்சத்திரம் வரை நீண்ட அந்த ஆகாயவெளி பிரசாதமாகப் பெற்றுக்கொண்டது.\nகௌரீ மாயூரம் ஶ்ரீமத் அபயப்ரதாம்பிகை வைபவம்: ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/46", "date_download": "2021-08-02T08:32:58Z", "digest": "sha1:5DIKDN4JIQZBH3XVFPVQ7TBUVYKBOMYZ", "length": 8168, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nமுதலிய இடங்களில் உள்ளவை தம்முடன் பல கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்துகின்றன. சென்னை நகரிலேயே இன்று பல்கலைக் கழகங்கள் உள்ளன. எனினும் அவை தனிப்பட்டவை. சென்னைப் பல்கலைக் கழகம் மட்டுமே கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்துகின்றது. இங்கே எல்லாப் பல்கலைக் கழகங்களைப் பற்றியும் எண்ணிப் பார்த்து எழுத இடமில்லை. முற்றும் என்னால் அறிந்து கொள்ளவும் முடியர்து. எனவே சென்னைப் பல்கலைக் கழகத்தை மட்டும் எடுத்துக் காண நினைக்கின்றேன். இது அறிவு வளம் பெற்றவனாக்கி என்னை வளர்த்துப் பெயரிட்டு உலகில் உலவவிட்ட பல்கலைக் கழகம் அல்லவா இது பற்றி நான் காட்டும் நல்லவையோ அல்லவையோ பிறவற்றிற்கும் பொருந்தும் என்றும் கூறமாட்டேன்.\nநான் முன்பே சுட்டியபடி மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களின் செயல்திறனை ஒப்பு நோக்கும்போது நாம் எங்கோ பின்னிலையில்தான் உள்ளோம். அங்கெல்லாம் பயிற்று முறையும், பாட அமைப்பும், தேர்வு முறையும், பிற செயல்முறைகளும் நமக்கு வழிகாட்டிகளாக உள்ளன. ஓர் ஆசிரியர்-அத்துறையில் தெளிந்த அறிவும் திறனும் உடையவர், தம் கீழ் ஒருசில மாணவரையே தெரிந்தெடுத்துக் கொண்டு, ஏதேனும் ஒரு பாடத்தில் தனித் திறமை காட்டும் வகையில் பயிற்றுவித்து, பாடம் போற்றி, தேவையானபோது வகுப்புகளமைத்து-நல்ல நூல் நிலையங்களில் ஆய்வு செய்யப் பணித்து, எடுத்த பொருளை நன்கு விளக்கி, உலகுக்கு உணர்த்தும் வகையில் தயாராக்கிப் பட்டமளிக்க வாய்ப்பு அளிக்கும் முறை உண்டு. இங்கோ யாரோ என்றோ வரையறுத்த பாடங்களைக் கூடிக் கூட்டமாக இருந்து, ஏதோ பேசி எப்படியோ எழுதிப் பட்டம் பெறும் நிலையினைக் காண்கிறோம். வகுப்பிற்கு வராமலேயே மாணவர் வந்ததாகக் காட்டியும், ஆசிரியர் கல்லூரிக்கு வாராமலேயே வந்ததாகக் காட்டியும் மாணவருக்கும் தமக்கும் தம்மை அறியாமலேயே பிழை புரிவோர் சிலர் உள்ளனர்.\n-- replacing விக்கிமூலம்:ஆலமரத்தடி|ஆலமரத்தடி -->\nஇப்பக்கம் கடைசியாக 27 சனவரி 2019, 16:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்��ுப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/losliya-share-the-recent-photo-and-said-proud-to-be-women-q6ys7j", "date_download": "2021-08-02T09:53:42Z", "digest": "sha1:KGHSUOOVUIGLZLII4KKBVHRL36OZU34W", "length": 7659, "nlines": 78, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெண் என்பதில் பெருமை கொள்கிறேன்..! லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் வெறித்தன லைக்ஸ்! | losliya share the recent photo and said proud to be women", "raw_content": "\nபெண் என்பதில் பெருமை கொள்கிறேன்.. லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் வெறித்தன லைக்ஸ்\nஇலங்கை செய்திவாசிப்பாளராக, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிய லாஸ்லியா, தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார்.\nஇலங்கை செய்திவாசிப்பாளராக, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிய லாஸ்லியா, தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார்.\nமேலும் அவ்வப்போது, விதவிதமான போட்டோ ஷூட் நடத்திஅதன் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதே போல் பல்வேறு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு செம்ம பிஸியாக வலம் வருகிறார் லாஸ்லியா.\nஹர்பஜன் சிங்குடன் ஒரு படம், மற்றும் நடிகர் ஆரியுடன் ஒரு படம் இவரின் கை வசம் உள்ளது. ஆனால் லாஸ்லியா ஆர்மியை சேர்ந்தவர்கள், எப்போது கவினுடன் ஜோடி சேர்வார் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் லாஸ்லியா கவின் பற்றிய கேள்வியை எழுப்பினால் அவர் யார் என்று கேட்காத குறையாய் பதில் சொல்லி எஸ்கேப் ஆகிறார்.\nஇது ஒரு புறம் இருக்க, தற்போது லாஸ்லியா, மெரூன் கலர் உடையில்... நகைகள் அணிந்தபடி உள்ள, அழகிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெண் என்பதில் பெருமை கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.\nஇந்த பதிவிற்கு அவருடைய ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.\n குண்டா கொழுக்கு... மொழுக்கு பேபியா மாறிட்டாங்களே\n ஆளே அடையாளம் தெரியாமல் செம்ம ஒல்லியாக மாறிய அதிர்ச்சி புகைப்படம்..\nபார்பி டால் போல்... பளீச் அழகில் பம்பரமாய் சுற்றி... இளம் நெஞ்சங்களை சுழட்டி போட்ட லாஸ்லியா..\nஒன்சைடு ஸ்லீவ்லெஸ் உடையில்.. ஓவர் மாடர்ன் பெண்ணாக மாறிய பிக்பாஸ் லாஸ்லியா\nஆக்ஷனில் தெறிக்கவிடும் ஹர்பஜன் சிங் கொள்ளை அழகில் லாஸ்லியா... வெளியானது 'ப்ரெண்ட்ஷிப்' டீசர்\nடி20 உலக கோப்பையில் இந்த 4 அணிகள் தான் அரையிறுதியில் மோதும்..\nதலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது.. கர்நாடக முதல்வருக்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகி..\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா..\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுங்க.. அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.\nஇந்திய அணிக்கு இப்போதைக்கு இதைவிட பெரிய குட் நியூஸ் இருக்கவே முடியாது..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-panic-6-months-jail-if-not-isolated-q7jh0r", "date_download": "2021-08-02T09:27:38Z", "digest": "sha1:LI3PR32L67U7BECEO5APQY3IHLRKOROG", "length": 8372, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா பீதி... தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் 6 மாத சிறை... அதிரடி உத்தரவு..! | Corona Panic ... 6 months jail if not isolated", "raw_content": "\nகொரோனா பீதி... தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் 6 மாத சிறை... அதிரடி உத்தரவு..\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா விதிகளை மீறினால் 6 மாத சிறை தண்டனையோ, ரூ.1,000 அபராதமோ, அல்லது இவ்விரண்டுமோ விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.\nமராட்டியத்தில் அதிகபட்சமாக 52 பேரும், கேரளாவில் 40 பேரும் பாதிக்க்பட்டு உள்ளனர். 22 மாநிலங்களில் அசுர வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅவற்றில் ஒரு பகுதியாக, நாளை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளும் வித���ாக 'மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு' கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு கடுமையாக்கி வருகிறது.\nகுறிப்பாக, தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனையோ, ரூ.1,000 அபராதமோ, அல்லது இவ்விரண்டுமோ விதிக்கப்படலாம். தொற்று நோய்கள் சட்டத்தின் பிரிவு 10 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 10 ன் படி இத்தண்டனை விதிக்கப்படும். மக்கள் வீட்டு தனிமைப்படுத்தலை உடைத்து நோய் பரவாமல் இருக்க, கடுமையான சட்ட விதிகளை பின்பற்றுவதற்கான உரிமைகளை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளோம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா... கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..\n99% பேருக்கு கிடைச்சாச்சு மக்களே... ஜூலை 31க்குள் வாங்கிடுங்க... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...\nஇப்படியெல்லாம் செஞ்சா கொரோனா 3வது அலை ஏன் வராது... மிரள வைக்கும் வீடியோ...\nகொரோனா போரில் மற்றொரு மைல்கல்... இந்தியாவில் எத்தனை கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது தெரியுமா\nபாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா... மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் விளக்கம்\nஇந்திய அணிக்கு இப்போதைக்கு இதைவிட பெரிய குட் நியூஸ் இருக்கவே முடியாது..\n‘96’ பட பாடகி திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய பிரபல இயக்குநரின் குடும்பம்....\n1.50 கோடி ரூபாய் அரசு நிதியில் பாரதமாதாவுக்கு ஆலயம்.. திமுக அமைச்சர் திறந்து வைத்தார்.\nதல ஃபேன்ஸ் சரியா 7 மணிக்கு ரெடியா இருங்க... போனிகபூர் கொடுத்த லேட்டஸ்ட் ‘வலிமை’ அப்டேட்...\nபள்ளிகள், கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது.. அமைச்சர் அதிரடி முடிவு.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7999:2011-09-06-06-32-40&catid=308&Itemid=259", "date_download": "2021-08-02T08:15:08Z", "digest": "sha1:O35VFP6ZI4DNNBK7NKHAJX4GIVIDUSY2", "length": 7523, "nlines": 164, "source_domain": "tamilcircle.net", "title": "பேயரசு ஆட்சியில் வேறெது உலாவும்?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபேயரசு ஆட்சியில் வேறெது உலாவும்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2011\nஎரியும் உணர்வுகள் பொறியடங்கிக் கிடக்கிறது\nநந்திக் கடலில் குடித்த இரத்தமும்\nபேயரசு ஆட்சியில் —வேறெது உலாவும்\nஎலி வளைக்குள் கிடந்த பூதங்கள்\nஇரை தேடி அலையத் தொடங்கியிருக்கின்றன\nகோத்தாபாய மடியுள் போய் உறங்குகின்றன\nபேயரசு ஆட்சியில் —வேறெது உலாவும்\nபோரினுள் சிதைந்து புண்ணான இதயங்கள்\nஏன் எல்லா ஏகாதிபத்தியங்களின் சொத்து\nமக்கள் திரள் எதிர்த்தெழும்போது மட்டும்\nபீதியில் வைத்திருக்க இராணுவப் பூதங்கள் மிரட்டுகிறது\nபேயரசு ஆட்சியில் —வேறெது உலாவும்\nமக்கள் அணிக்கு தலைமை பிறக்கும்\nமானுட மீட்சியின் கதவுகள் திறக்கும்\nஅடக்க அடக்க வெடித்துக் கிளம்பும்\nமக்கள் அரசை நோக்கி நகர்வு செல்லும்\nபேரழிவை கண்ட எம்சனங்கள் கொதிக்கும்\nபெரும் புயலாய் மாறும் பேய்கள் மிரளும்\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-08-02T08:53:45Z", "digest": "sha1:YA5NXOBZYMB5VMONAE22CY4FRK2WAFUY", "length": 4831, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 2, 2021\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஒலிம்பிக் : புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி\nஇந்தியாவில் ஒரே நாளில் 40134 பேருக்கு கொரோனா\nகாவிரி ஆற்றில் ஒரு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு.\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு- ஒருவர் படுகாயம்.\nஒலிம்பிக் பேட்மிண்டன்.... வெண்கலம் வென்றார் சிந்து....\nமருத்துவர் ரெக்ஸ் ��ற்குணம் மனைவி பிலிஸ் காலமானார்.... சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி....\nசுமார் 2000 பேரை ஆய்வு செய்ததில் 65 சதவீதத்தினருக்கு வேலை இல்லை... சிபிஎம் ஆய்வுக்குழு அறிக்கை....\nதேசிய சிறுபான்மை ஆணையத் தலைவர் பதவியும் 60 சதவீத பணியிடங்களும் காலியாக உள்ளன... சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு அமைச்சர் பதில்....\nமின்துறையை தனியார்மயமாக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறுக... ஆக. 10 வேலைநிறுத்தத்தில் அனைத்து சங்கங்கள் பங்கேற்பு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/Spiritual/puthan-sabarimala-temple", "date_download": "2021-08-02T07:51:30Z", "digest": "sha1:LNC4SS2KKNRUQIZV6FXL3C4DYJHXRBGX", "length": 9851, "nlines": 80, "source_domain": "www.fnewsnow.com", "title": "புத்தன் சபரிமலை கோவில் | Puthan Sabarimala Temple - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nகேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில் உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஇந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பழமையானது. இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் முன்னர் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை சுமார் நூறு வருடங்களாக மட்டுமே இருமுடி கட்டி பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். தற்போது பிரதான சபரிமலை அமைந்துள்ள இதே பத்தனம்தெட்டா மாவட்டத்தில் திருவல்லாவிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தடியூர் எனும் இடத்தில் மிக புராதான ஆலயமாக பழமை மாறாது காணப்படுகிறது இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் ஆலயம்.\nபிரதான சபரிமலை கோவிலுக்கு இணையான தெய்வ சக்தி இங்கும் பரந்து விரிந்து வியாபித்துள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலையில் உள்ளது போன்றே அதே வடிவிலான ஐம்பொன்னால் ஆன அய்யப்பன் விக்கிரகம் இங்கும் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள���ள 18 படிகளும் கரும் கற்களால் சபரிமலையில் உள்ளது போன்றே செங்குத்தாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டாலும் இருமுடி கட்டு இல்லாத எவர் ஒருவரும் படிக்கட்டுக்கள் மீது செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருமுடி கட்டு இல்லாதவர்கள் கோவிலின் வடக்கு பகுதி வழியாக செல்லவே அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் பின்பற்றப்படும் பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் அபிஷேக வகைகளும் குறிப்பாக சந்தனாபிஷேகம், நெய்யபிஷேகம், பூ அபிஷேகம் போன்றவைகள் அப்படியே சற்றும் மாறாது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது.\nசபரிமலையை போன்றே ஒவ்வொரு மலையாள மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பக்தர்கள் இங்கும் அய்யப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையை போன்றே அப்பமும் அரவணை பாயாசமும் இங்கும் பிரதான பிரசாதங்கள். தை முதல் நாளில் மகர சங்கராந்தியன்று எப்படி சபரிமலையில் மகர விளக்கு காணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் மகரவிளக்கு தரிசனத்தை பக்தர்கள் காணலாம். எல்லாவற்றையும் விட சபரிமலை தந்தரியாக செயல்படுபவர்களே இங்கும் தந்தரியாக செயல்படுகிறார்கள்.\nஎல்லா வகைகளிலும் பிரதான சபரிமலைக்கு இணையாக காணப்பட்டு வரும் இந்த புத்தன் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பிராதான சபரிமலைக்கு மட்டுமே நாங்கள் செல்வோம் என உச்சநீதி மன்றத்தின் உத்தரவை தலைமீது வைத்து கொண்டு பிடிவாதம் பிடித்து செயல்படும் இளம் பெண்களின் எண்ணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அது உண்மையான பக்தியின் அடையாளமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே பிரதான சபரிமலைக்கு செல்ல முடியாத 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டிக் கொண்டு இந்த புத்தன் சபரிமலை என்று அழைக்கப்படும் அய்யப்பன் கோவிலில் உள்ள புராதான 18 படிக்கட்டுக்கள் வழியே கடந்து சென்று அய்யப்பனை வழிபடலாமே.\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nஅருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், விராலிமலை\nகுளிகை நேரம்... யார் அந்தக் குளிகன்\nஆறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன்கள் என்ன\nஆடியில் கூழ் வார்ப்பது ஏன்\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன ��ருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/actor-shilpa-shettys-husband/", "date_download": "2021-08-02T10:17:05Z", "digest": "sha1:PBH5SDBZMVGWVCHPQKFPZWROECYMRVTL", "length": 2474, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "Actor Shilpa Shettys Husband | ஜனநேசன்", "raw_content": "\nஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்…\nபிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத்…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில்…\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-dec-19/11365-2019-12-27-05-47-07", "date_download": "2021-08-02T09:27:53Z", "digest": "sha1:Q66W4AASANN7V7JP4S7SB75MSVOTJFGK", "length": 19987, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "நூல் அறிமுகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2019\nசமூக விழிப்புணர்வு - அக்டோபர் 2008\nபரமக்குடி படுகொலைகள் - அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்\nதிப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது\nவெண்மணி - பெரியாரின் எதிர்வினை\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nகால்டுவெல் முதல் கவிதாசரண் வரை\nமுதுகுளத்தூர் கலவரத்தில் பெரியார் அணுகுமுறை என்ன\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\nமுதுகுளத்தூர் கலவரமே சாதி எரிப்புப் போராட்டத்தின் பின்னணி\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nஏழைகளின் வாழ்வை சிரிப்பாய் சிரிக்க வைத்து இறைவனைக் காணும் அரசுகள்\nமார்க்சிய - லெனினிய குழுக்களின் நிலை���ாடுகள் மீதான விமர்சனக் குறிப்புகள்\nவிசாரணைக் கைதிகளின் உரிமைக்காகப் போராடியவர்…\nசமூகப் புரட்சியாளர் சாகு மகாராஜ்\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் தாகம் தீர்க்குமா தமிழக அரசு\nகடவுள் அரசியல் வடநாடும், தமிழ்நாடும்\nம.பொ.சி பர்னிச்சர் - ஊரும் உணர்வும்\nபிரிவு: சமூக விழிப்புணர்வு - அக்டோபர் 2008\nவெளியிடப்பட்டது: 15 அக்டோபர் 2008\n‘‘இலங்கைக் கடற்படைக்கு இந்திய கடற்படை கங்காணியாக இருக்கிறது. நம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்க உரிமை உண்டு. அப்படியிருக்கும்போது இலங்கைக் கப்பல்படைக்குச் சுடுவதற்கு என்ன அதிகாரம் உள்ளது குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கே சென்றனர். ஆனால் நமக்கும் பாகிஸ்தானுக்கும் கடுமையான விரோதம் இருந்தாலும் அப்போது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை தாக்குதலோ, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமோ செய்யவில்லை.\nஒரு சமயத்தில் லண்டனில் லிபியாக்காரர்கள் தங்களது சொந்தப் பிரச்சனைக்காக லிபியா தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியபொழுது துப்பாக்கி சூட்டில் பிரிட்டிஷ் காவல்துறை சார்ந்த பெண்மணி மீது சுடப்பட்டு அந்தப் பெண்மணி இறந்து விட்டாள். உடனே பிரதமர் தார்ச்சர் எங்கள் நாட்டுப் பிரஜையைச் சுட உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது என்று கேட்டு லிபியா நாட்டு ராஜ்ஜிய உறவுகளை முறித்துக் கொண்டார். அவ்வாறு இந்தியா நமது மீனவர் விஷயத்தில் ஏன் கடமையாற்றவில்லை என்பேத நம் வினா’’.\nநூல்: கனவாகிப் போன கச்சத்தீவு\nவெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018.\nபக்கங்கள் : 64. விலை: ரூ.40.\nதலித் சமூகம் தனது மீது சுமத்தப்பட்ட அடக்குமுறைக்கு எதிராக வரலாறு நெடுகிலும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. அவற்றில் முக்கியமானது 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்தமிழ்நாட்டில் முதுகுளத்தூரில் நடைபெற்ற போராட்டம். அன்றைய பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தில் உ.முத்துராமலிங்கமும், அவரது சாதியினரும் தலித் மக்கள் மீது ஏவிய கொடுமைகளையும், அதற்கு எதிராக இமானுவேல் சேகரன் தலைமையில் தலித்துகள் போராடியதையும் இந்நூல் விவரிக்கிறது. பத்திரிக்கையாளர் டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதியது. பி.மருதையாவின் அறிக்கை, சகஜானஸ்தாவின் சட்டமன்ற உரை ஆகியவற்றைத் தொகுத்து வெ���ியிட்டுள்ளனர். முதுகுளத்தூர் கலவரம் நடைபெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள வேளையில் இந்த நூல் முழுவதும் அதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும்.\nஆசிரியர், டி.எஸ்.சொக்கலிங்கம். வெளியீடு- கவின் நண்பர்கள், ஆர்.சி.நடுத்தெரு, வ.புதுப்பட்டி 626 116. விருதுநகர் மாவட்டம். விலை ரூ. 100. பேசி: 99940 61508.\nதமிழகச் சிறைகளில் முஸ்லிம் கைதிகள்\nபல்வேறு காரணங்களுக்காகச் சிறையில் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைக் கைதிகளுக்கு, மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமைகளான பரோலில் விடுதலை, மருத்துவ சிகிச்சை, பொது மன்னிப்பு என அனைத்து உரிமைகளும் புறக்கணிக்கப்படுவதை இந்த நூல் விவரிக்கிறது பல்வேறு சிறைகளில் வாடும் முசுலிம் கைதிகளின் விபரம், பாகுபாடின்றி 10 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்துச் சிறைக் கைதிகளையும் விடுதவை செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு விடுதலைக்குத் தகுதியான நபர்களின் பட்டியல், என பல்வேறு ஆவணங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அண்ணா நூற்றாண்டினையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுதும் இஸ்லாமிய கைதிகள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை என்னும் சூழலில் இந்த கவனம் பெறுகிறது.\nநூல்: தமிழகச் சிறைகளில் முஸ்லிம் கைதிகள்\nவெளியீடு: பயணி பதிப்பகம், 6/11, 4வது குறுக்குத் தெரு, எல்லையம்மன் காலனி, தேனாம்பேட்டை,\nசென்னை 86. விலை ரூ.20.\nசென்ற நூற்றாண்டில் வாழ்ந்த திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களையும், அவர்தம் சமூகப்பணிகளையும் தொகுத்து இந்த நூல் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு தலைவர்களின் வாழ்க்கையிலும் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள், அவர்தம் சமூகப் பணிகள் என இரண்டு தொகுதிகளாக விரியும் இந்த நூல்களில் மொத்தம் 35 தலைவர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.\nதந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, குத்தூசி குருசாமி, சிவகங்கை ராமச்சந்திரன், இரட்டைமலை சீனிவாசன், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சௌந்தரபாண்டியன் உட்பட பல தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் உதவும்.\nநூல்: திராவிட இயக்க வேர்கள், தொகுதி I, II\nஆசிரியர்: க.திருநாவுக்கரசு, வெளியீடு நக்கீரன் பதிப்பகம், 76, கற்பகம் அவென்யூ, இராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, சென்னை 28.\nபேசி: 98415 & 45516. விலை ஒவ்வொரு தொகுதியும் ரூ.100.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/mer/176-news/articles/guest/2317-2014-03-22-10-09-47", "date_download": "2021-08-02T09:00:00Z", "digest": "sha1:YUM6C3CB2H2IGK5AE3Y4RCHFCNVYDWWS", "length": 12098, "nlines": 102, "source_domain": "www.ndpfront.com", "title": "போரை நடத்த சொன்னவர்களே போர் நடந்தப்பட்ட விதம் பற்றி கேள்வி கேட்பதை ஏன் தடுக்க வேண்டும்?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபோரை நடத்த சொன்னவர்களே போர் நடந்தப்பட்ட விதம் பற்றி கேள்வி கேட்பதை ஏன் தடுக்க வேண்டும்\nஉள்நாட்டில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ள முடியாவிட்டாலும் அநீதி இழைக்கப்பட்டவர்கள் உள்நாட்டு பொலிஸ் நிலையங்களையும் நீதி மன்றங்களையும் நாடுகின்றனர். உள்நாட்டில் நீதி மறுக்கப்படும் போது சர்வதேச பொறிமுறையை நாடுவதற்கு வழிவகைகள் இருக்கின்றன. இதில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிடினும் நீதி கேட்கும் உரிமை போராட்டத்தை கைவிட வேண்டியதில்லை. அப்பேராட்டத்தை அங்கும் கொண்டு சொல்லலாம். இவ்விதமான நீதி கேட்கும் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு பல படிப்பினைகளை கொண்டு வந்து சேர்க்கும். அவற்றினூடே எதிர்கால அரசியல் மார்க்கங்களை வளர்த்து கொள்ள முடியும் என்று இலங்கை கொம்யூனிஸட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.\nஜெனிவாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் என்பது இலங்கையில் போரை நடத்த உதவிய அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா போன்றன, போரை நடத்திய இலங்கை அரசாங்கத்தை ஐ.நா விற்கு பொறுப்புக் கூறக் கடமைப்படுத்துவதாகும். இன்றைய உலக ஒழுங்கின் நவ காலனித்துவ கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் இலங்கை அரசிற்கு இது மேலும் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளாக இருப்பதுடன் அதிலே அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு பொற���ப்பு கூறும் அம்சமும் இருக்கிறது. அதனால் ஜெனிவா நடவடிக்கைகளை இலங்கை மக்களுக்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதல்கள் என்ற மேலோட்டமான அடிப்படையிலோ அல்லது ஏகாதிபத்திய நீதி தமிழ் மக்களுக்கு தேவை இல்லை என்ற கொச்சை அடிப்படையிலோ பொறுப்பற்றவகையில் கணிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.\nகார்ல் மாக்சின் 131வது நினைவு தினத்தையொட்டி கடந்த 15.03.2014 அன்று கொழும்பு பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிலைய கேட்போர் கூடத்தில் 'ஏகாதிபத்தியத்தின் நவ-கொலனித்துவ, நவ-தாராளவாத தாக்குதலுக்கு எதிராக இலங்கை மக்களின் பணிகள்' எனும் தலைப்பில்; நினைவு பேருரையை நிகழ்த்தும் போது மேற்படி அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அமைப்பாளர் டிபில்யூ.வீ. சோமரத்ன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நினைவு பேருரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது.\nஇன்று ஜெனீவா நடவடிக்கைகள் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதனை புலம்பெயர்ந்த புலிகளின் ஆதரவாளர்களின் அழுத்தம் காரணமாக முன்னெடுக்கப்படும் இன்னொரு பிரிவினைவாத முயற்சி என அரசாங்கம் கூறுகின்றது. வேறு சிலர் சீனா இலங்கையை தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள நகர்வுகளை மேற்கொள்ளுவதால் அதற்கு பதிலடியாக இலங்கையை பழிவாங்க அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு செயற்பாடு என்கின்றனர்.\nஇலங்கையில் போரை நடத்தி புலிகளை அழிக்க கட்டளையிட்ட அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இந்தியா அந்த போர் நடத்தப்பட்ட விதத்தை அவற்றுக்கு சார்பான ஐ.நா மூலம் பொறுப்புக்கூற கோரும் போது அதனை ஏகாதிபத்திய தாக்குதல் என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிடுவது எவ்வகையிலும் நியாயம் ஆகாது. சீனா மௌனமாக போருக்கு தனது ஆதவை வழங்கி இருந்தது. ஏகாதிபத்தியவாதிகள் போரை நடத்தி முடிக்க கூறிய போது அதனை செய்த இன்றைய அரசாங்கத்தாலும் அதன் தலைவராலும் இராணுவ ரீதியாக மட்டுமன்றி பொருளாதார, பண்பாடு என்று ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்பட்டு இலங்கை நவ-கொலனியாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையை நவ-கொலனியாக பகிர்ந்து கொள்வதற்கு ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்க ஐரோப்பா, இந்தியா, சீனாவிற்கிடையே நடக்கும் போட்டிகளின் விளைவாக போர்குற்ற விசாரணைகள், மனிதாபிமான சட்ட மீறல்கள் மேலெழுந்துள்ளன. அதற்கு அமெரிக்க தலைமை தாங்குகிறது. இன்று தமிழர் பிரச்சினை அமெரிக்க கையில் உள்ளது. எனவே அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கான இந்த ஜெனிவா செயற்பாடுகளில் தமிழ் மக்கள் பார்வையாளர்கள் தான். ஆனால் போரில் நிகழ்ந்த அநீதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் நீதி கேட்க தமிழ் மக்களுக்கு இருக்கும் உரிமையை மறுக்க முடியாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/07/vavuniya%20protest.html", "date_download": "2021-08-02T08:16:07Z", "digest": "sha1:V3TLWIHMO2DGFVBPOCU2JTUPFRHSDEAG", "length": 12677, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "வித்தியாவைத் தொடர்ந்து இஷாலியா? வவுனியாவிலும் போராட்டம்!! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / வித்தியாவைத் தொடர்ந்து இஷாலியா\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த இஷாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (22.07.2021) முன்னெடுக்கப்பட்டது.\nநீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்,\nநாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கெதிரான குற்றங்கள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்தவகையில் கொழும்பில் மரணமடைந்த இஷாலினி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் தீக்காயமடைந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.\nஇது ஒரு பாரிய குற்றமாக காணப்படுவதுடன் குறித்த குற்றத்தினை மறைப்பதற்காக சிறுமி எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று தொடர்புடைய அதிகாரிகளை கோரி நிற்கின்றோம்.\nஅதேபோன்று கிளிநொச்சி கல்மடுப்பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.\nஅத்துடன் இணையத்தளங்களில் சிறுமிகள் விற்பனை போன்ற துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது எமக்கு கவலையளிக்கின்றது.\nஇதனால் நாட்டின் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது கேள்விக்குறியாகவுள்ளது. எனவே எமது நாட்டின் பெண்கள் சிறுவர்கள் சுயகௌரவத்துடன் பாதுகாப்பாக வாழும் சூழ்நிலையை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசி��ா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/10/blog-post_77.html", "date_download": "2021-08-02T08:56:27Z", "digest": "sha1:BWJFEO7XQ6CHZH3G4GWOJ5QRIFP2GT7M", "length": 5406, "nlines": 58, "source_domain": "www.yarlsports.com", "title": "அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பூப்பந்தாட்ட தொடரின் முடிவுகள் - Yarl Sports", "raw_content": "\nHome > Others Sports > அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பூப்பந்தாட்ட தொடரின் முடிவுகள்\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பூப்பந்தாட்ட தொடரின் முடிவுகள்\nஅரியாலை சரஸ்வதி் சனசமூக நிலையம் தீபதிருநாளை முன்னிட்டு அமரர் கனகலிங்கம் மகாலிங்கம் ஞாபகார்த்த வடமாகாண ரீதியில் 40 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு இடையில் நடாத்திய பூப்பந்தாட்ட தொடரின் முடிவுகள்.\n1)1ம் இடம்- திரு ச.காண்டீபன்\n2)2ம் இடம்- திரு தி.தயாபரன்\n3)3ம் இடம்- திரு கு.உதயன்\n1)1ம் இடம்- திரு ச.காண்டீபன் & திரு நா.குகதாஸ் இணை\n2)2ம் இடம்- Dr கோபிஷங்கர் & திரு தயாபரன் இணை\n3)3ம் இடம்- திரு சகிலன் & திரு உதயன் இணை...\nஅனைத்து வீரர்களிக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யா���் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/potato/", "date_download": "2021-08-02T08:00:44Z", "digest": "sha1:WT6Y6OMCZPMKAQJCWAJPQKUM4BUS3OQH", "length": 32390, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Potato – விதை2விருட்சம்", "raw_content": "Monday, August 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் ஒரு சிலரைத் தவிர அனைவருக்கும் இந்த உருளை கிழங்கு என்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் சாம்பார் சாதத்துடன் இந்த உருளை கிழங்கு வறுவலை வைதது சாப்பிட்டால் ஆஹா பிரம்மாதம் பிரம்மாதம் என்பார்கள். அத்தகைய உருளை கிழங்கு மசியலை ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோய்களால் பாதிக்கப் பட்டவர் சாப்பிட்டால் வெகு விரைவில் அந்நோய்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்கிறார்கள் உணவியலாளர்கள். #உருளை_கிழங்கு, #உருளை, #பொட்டேடோ, #சொறி, #கரப்பான், #ஸ்கர்வி, #விதை2விருட்சம், #Potato, #Drip, #Cockroach, #Scurvy, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,\n, பளபளக்கும் சருமம் வேண்டுமா\n, பளபளக்கும் சருமம் வேண்டுமா கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா, பளபளக்கும் சருமம் வேண்டுமா என்னது இரண்டு கேள்விகள், மிருதுவான சருமத்திற்கு ஆசைப்பட்டால் பளபளப்பான சருமம் போய்விடுமா என்னது இரண்டு கேள்விகள், மிருதுவான சருமத்திற்கு ஆசைப்பட்டால் பளபளப்பான சருமம் போய்விடுமா அல்ல‍து பளபளக்கும் சரமத்திற்கு ஆசைப்பட்டால், கருமையில்லாத‌ சருமம் போய்விடுமா அல்ல‍து பளபளக்கும் சரமத்திற்கு ஆசைப்பட்டால், கருமையில்லாத‌ சருமம் போய்விடுமா என்ற அச்ச‍ம் கொள்ள்த் தேவையில்லை. இரண்டுக்கும் சேர்த்து ஒரே மருந்து அது என்னவென்றால் உருளைக்கிழங்கு. என்ன‍ இது உருளைக்கிழங்கா என்ற அச்ச‍ம் கொள்ள்த் தேவையில்லை. இரண்டுக்கும் சேர்த்து ஒரே மருந்து அது என்னவென்றால் உருளைக்கிழங்கு. என்ன‍ இது உருளைக்கிழங்கா ஐ அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பலரும், ச்சீ எனக்கு பிடிக்க‍வே பிடிக்காதுப்பா என்று சிற்சிலரும், உருளைக் கிழங்கு வாயு, எனக்கு ஒத்துக்காதுப்பா என்று சிலரும் எண்ணுவதுண்டு. இந்த உருளை கிழங்கு என்பது ஆரோக்கிய உணவு மட்டுமல்ல‍ அழகுக்கான‌ மருந்தும் கூட இந்த உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பிளிச்சிங் தன்மை, அது உங்கள் சருமத்தில் இருக்கும் கருமையை முற்றிலுமாக மறையச் செய\nபதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால்\nபதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால் ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில், சுத்திகரிக்கப்பட்ட மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை அதிகம் காணப்படுகின்றன‌. மேலும் இதில் உணவு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சில இரசாயனங்களையும் சில நிறமிகளையும் சேர்க்கின்றன• இவற்றில் எதிலும் நமது உடலுக்கு முக்கியத் தேவையான புரதச்சத்து, விட்டமின், நார்ச்சத்து உட்பட பலது இருப்பதில்லை. பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கினால், அதை உடனடியாக‌ நிறுத்துவது அவ்வ‍ளவு எளிதான காரியமல்ல‍. ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப் பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் உடல் எடை மிக வேகமாக‌ அதிகரிக்கும் என்றும் இதன் விளைவாக அவர்கள\n பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்\n பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும் கண்கவர் கண்களை உடைய பெண்களின் மனத்தை ஆட்டிப் படைக்கும் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றுதான் இந்த கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம். அந்த கருவளையத்தை போக்க என்னென்னமோ செய்து பார்த்தாலும் தீர்வு இல்லையே என்று விரக்தியில் இருக்கும் பெண்களே இதோ உங்களுக்கான மிக எளிதான குறிப்பு இது. பன்னீரில் ஒரு மெல்லிய வெள்ளை துணியை நனைத்து, உங்களின் இருகண்களின் மீது வைத்து, அதன் மேல் வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்த கலவையை ��ைத்து அப்படியே 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரைக் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஏனென்றால் அந்த கலவையின் வீரியம் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை நீக்கும். அதனால் பெண்கள், அப்ப‍டியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். ஒரு நாள் இரண\nஉருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால்\nஉருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால் உருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால் பலதரப்பட்ட மருத்துவ பண்புகள் நம்ம ஊர் உருளைக்கிழங்கில் (more…)\nசுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி\nசுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி உணவுகளில் சற்று வித்தியாசமான சுவையுடையது இந்த கட்லட். கட்லட் நிறைய (more…)\nதோலுடன் உருளைக் கிழங்கை சாப்பிட்டு வந்தால்\nதோலுடன் உருளைக் கிழங்கை சாப்பிட்டு வந்தால்... சிறியவர் முதல் பெரியவர் வரை உருளைக்கிழங்கை விரும்பாதவர்கள் யாரும் (more…)\n365 நாட்களும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை குடித்து வந்தால்\n365 நாட்களும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை குடித்து வந்தால் . . . 365 நாட்களும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை குடித்து வந்தால் . . . 365 நாட்களும் அதாவது நாள்தோறும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை (more…)\nஇரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nஇரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . சமீபகால ஆய்வுகளில், உருளை கிழங்கில் எண்ண‍ற்ற‍ சத்துக்கள் இருப் ப‍தாகவும், மேலும் (more…)\nவாரத்துக்கு 3 நாட்கள் உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்\nவாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்... வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்... கிழங்கு வகைகளில் இந்த உருளைக் கிழங்குக்கு என்று தனித்துவம் உள் ள‍து. வீட்டில் (more…)\nசர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்\nசர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்... சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்ப��து சாப்பிட்டு வந்தால்... இந்த உலகத்திலேயே மிகவும் சத்தான உணவு வகைகளில் மிகவும் இன்றியமையாத இடத்தினை (more…)\nஅடிக்கடி உருளைக்கிழங்கை வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால்\nஅடிக்கடி உருளைக்கிழங்கை வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . அடிக்கடி உருளைக்கிழங்கை வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . உருளை கிழங்கு என்ற கிழங்கு வகையில் வைட்ட‍மின்-C-யும் பொட்டாசி மும் உள்ள‍ நார்ச்ச‍த்துமிக்க‍ கிழங்காகும்• மேலும் இந்த (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந��தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nV2V Admin on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nசொலல்வல்லன் on முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nசொலல்வல்லன் on A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nChandrasekaran on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDayalan A on தாலி பிரித்து கோர்த்தல் – ஏன் பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது\nVidhya karthik on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nமாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்த‍ம் கொடுத்தால் என்ன‍ தவறு – வீடியோ\nமுதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்\nஎன்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்\nபெண்களே வயிற்றின் வலது பக்க‍த்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க‌\nதினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாத���ங்க\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/gaanda-kannazhagi-video-song", "date_download": "2021-08-02T08:31:42Z", "digest": "sha1:YPGDGEBHBOVBNB5V2B6BSXLCY75ZDHMC", "length": 5351, "nlines": 95, "source_domain": "www.cinibook.com", "title": "Gaanda kannazhagi HD video Song", "raw_content": "\nசிவகார்த்திகேயன் மற்றும் அனு இம்மானுவல் நடத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் காந்த கண்ணழகி வீடியோ பாடல் கிழே இணைக்கப்பட்டுள்ளது அனைவரும் பார்த்து மகிழ்வீர்.\nNext story ஒத்த செருப்பு வெற்றிக்கு பிறகு வித்தியாசமான முயற்சியுடன் அடுத்த படம்-பார்த்திபன் அறிவிப்பு\nPrevious story தர்பார் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nபுதிய கெட்டப்பில் விஜய்சேதுபதி….கடைசி விவசாயி படத்தில்…\nஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் தேனீர்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி உறுதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nமீரா மிதுன் அரைகுறை ஆடைகளுடன் ஆடும் ஆட்டத்தை பாருங்கள்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை உருக்கம்.. இந்தியாவுக்கு பெருமை…\nவனிதாவின் புகைப்படத்தை பார்த்து சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham1_19.html", "date_download": "2021-08-02T09:41:05Z", "digest": "sha1:USMJ2IRUNDGSRGVGIFSQYY5QRVEHCM6Y", "length": 34688, "nlines": 72, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 1.19. புத்தர் சிலை - ஆயனர், சிவகாமி, சக்கரவர்த்தி, சிவகாமியி��், குமார, என்றார், சிற்பியாரே, என்ன, சக்கரவர்த்தியின், புத்தர், எவ்வளவு, பார்த்துக், சொல்ல, சக்கரவர்த்தியும், மகேந்திர, பல்லவர், அவருடைய, அவர், ஆயனரே, செய்து, அவள், பிரபு, எத்தனையோ, இத்தனை, சிறிது, மகேந்திரர், வீட்டு, உம்முடைய, கண்களின், அந்த, அபிநயம், அல்லவா, நேரம், அல்ல, சிற்ப, ஆயனரும், இந்தச், இருந்த, உடனே, போல், முகம், சிலை, சிவகாமிக்கு, இந்தப், சபதம், புத்த, நீர், பல்லவ, முன்னால், சற்று, அந்தக், ஆயனரின், நோக்கி, மீண்டும், பெருமானே, பூர்த்தி, எவ்வளவோ, மறுபடியும், பார்த்து, நாட்டில், நான், புருவ, உம்மை, வரையில், தூக்கிப், கொண்டு, அமரர், குதிரைகள், வீட்டுக்குள், வந்தது, நரசிம்மர், குதிரை, மறைந்து, கண்ணிமைகளும், முடிவு, இடம், அப்போது, போகும், பெயர்கள், வாக்கு, அழிவு, வருங்காலத்தில், சொல்லிக்கொண்டே, இவ்விதம், இல்லை, திரும்பிப், அச்சமயம், கல்கியின், மற்றவர்கள், கூறினார், வளர்ப்பதற்கு, தெரியாது, உணர்ச்சி, மேற்கொண்டு, மொழிகள், தமது, பெற்று, காலம், திரும்பி, குறைவு, பார்த்துவிட்டு, கடைசியாகச், சென்றார்கள், இல்வாழ்க்கையை, கிடையாது, உமது, ஏற்பட்ட, சிவகாமியும், நடந்தார், கலைப், உற்சாகக், எழுந்து, முக்கியமான, சிலைகளைப், இங்கு, கண்களும்", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 02, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 1.19. புத்தர் சிலை\nநழுவித் தரையில் விழுந்த முத்துமாலையைக் குமார சக்கரவர்த்தி குனிந்து எடுத்துக் கொடுத்ததையும், அதைச் சிவகாமி முகமலர்ச்சியுடன் வாங்கி அணிந்து கொண்டதையும் பார்த்த ஆயனரின் முகம் மீண்டும் பிரகாசம் அடைந்தது.\nசக்கரவர்த்தி இதையெல்லாம் கவனியாததுபோல் கவனித்தவராய், ஆயனரைப் பா��்த்து, \"மகா சிற்பியாரே இந்த முத்துமாலையைப் போல் எவ்வளவோ உயர்ந்த பரிசுகளையெல்லாம் உமது புதல்வி வருங்காலத்தில் அடையப் போகிறாள் இந்த முத்துமாலையைப் போல் எவ்வளவோ உயர்ந்த பரிசுகளையெல்லாம் உமது புதல்வி வருங்காலத்தில் அடையப் போகிறாள் இந்தப் பல்லவ ராஜ்யத்துக்கே அவளால் புகழும் மகிமையும் ஏற்படப் போகின்றன. வருங்காலத்தில் எது எப்படியானாலும், சிவகாமியின் நடனக் கலைப் பயிற்சி மட்டும் தடைப்படக்கூடாது. அவளுக்கு எவ்விதத்திலும் உற்சாகக் குறைவு நேரிடாமல் நீர் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்தப் பல்லவ ராஜ்யத்துக்கே அவளால் புகழும் மகிமையும் ஏற்படப் போகின்றன. வருங்காலத்தில் எது எப்படியானாலும், சிவகாமியின் நடனக் கலைப் பயிற்சி மட்டும் தடைப்படக்கூடாது. அவளுக்கு எவ்விதத்திலும் உற்சாகக் குறைவு நேரிடாமல் நீர் பார்த்துக் கொள்ள வேண்டும்\n தாங்களும் குமார சக்கரவர்த்தியும் உற்சாகப்படுத்துவதற்கு இருக்கும்போது சிவகாமிக்கு உற்சாகக் குறைவு ஏன் ஏற்படப்போகிறது எனக்குத்தான் என்ன கவலை\" என்று சொல்ல, மகேந்திர பல்லவர் கூறினார்: \"அப்படியில்லை, ஆயனரே இந்த யுத்தம் காரணமாக நானும் குமார சக்கரவர்த்தியும் சில காலம் இவ்விடம் வரமுடியாமலும், உங்களைப் பார்க்க முடியாமலும் போகலாம். அதனாலே உங்கள் இருவருடைய கலைப் பணிக்கும் எந்தவிதமான குந்தகமும் ஏற்படக்கூடாது. சிவகாமி புத்த பிக்ஷுணியாக விரும்புவதாகச் சற்று முன்னால் சொன்னீரல்லவா இந்த யுத்தம் காரணமாக நானும் குமார சக்கரவர்த்தியும் சில காலம் இவ்விடம் வரமுடியாமலும், உங்களைப் பார்க்க முடியாமலும் போகலாம். அதனாலே உங்கள் இருவருடைய கலைப் பணிக்கும் எந்தவிதமான குந்தகமும் ஏற்படக்கூடாது. சிவகாமி புத்த பிக்ஷுணியாக விரும்புவதாகச் சற்று முன்னால் சொன்னீரல்லவா ஒருவிதத்தில் அது பொருத்தமானதுதான். சிவகாமி சாதாரணமான பெண் அல்ல. மற்றப் பெண்களைப் போல் உரிய பருவத்தில் இல்வாழ்க்கையை மேற்கொண்டு அற்ப சுகங்களில் காலம் கழிக்கப் பிறந்தவள் அல்ல. பெண்ணாய்ப் பிறந்தவர்களில் லட்சத்திலே ஒருவருக்குத்தான் இப்பேர்ப்பட்ட கலை உணர்ச்சி ஏற்படும். அதைப் போற்றி வளர்க்கவேண்டும். சம்சார வாழ்க்கையைப் பொருத்தவரையில் சிவகாமி தன்னைப் பிக்ஷுணியாகவே நினைத்துக் கொள்ளலாம். தெய்வீகமான நடனக்க���ைக்கே அவள் தன்னை அர்ப்பணம் செய்து கொள்ளவேண்டும் ஒருவிதத்தில் அது பொருத்தமானதுதான். சிவகாமி சாதாரணமான பெண் அல்ல. மற்றப் பெண்களைப் போல் உரிய பருவத்தில் இல்வாழ்க்கையை மேற்கொண்டு அற்ப சுகங்களில் காலம் கழிக்கப் பிறந்தவள் அல்ல. பெண்ணாய்ப் பிறந்தவர்களில் லட்சத்திலே ஒருவருக்குத்தான் இப்பேர்ப்பட்ட கலை உணர்ச்சி ஏற்படும். அதைப் போற்றி வளர்க்கவேண்டும். சம்சார வாழ்க்கையைப் பொருத்தவரையில் சிவகாமி தன்னைப் பிக்ஷுணியாகவே நினைத்துக் கொள்ளலாம். தெய்வீகமான நடனக்கலைக்கே அவள் தன்னை அர்ப்பணம் செய்து கொள்ளவேண்டும்\nஇந்த மொழிகளைக் கூறியபோது மகேந்திரபல்லவரின் மனத்திலே என்ன இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவருடைய மொழிகள் அங்கிருந்த மூன்று பேருடைய உள்ளங்களிலும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை உண்டாக்கியிருக்கவேண்டுமென்பது அவர்களுடைய முகபாவ மாறுதல்களிலிருந்து நன்கு தெரிந்தது.\nஆயனர் தமது உள்ளக் கிளர்ச்சியை வார்த்தைகளினாலே வெளியிட்டார்: \"பிரபு, என்னுடைய மனத்தில் உள்ளதை அப்படியே தாங்கள் கூறிவிட்டீர்கள். இல்வாழ்க்கையை மேற்கொண்டு குழந்தைகுட்டிகளைப் பெற்று வளர்ப்பதற்கு எத்தனையோ லட்சம்பேர் இருக்கிறார்கள். இந்த அபூர்வமான தெய்வக்கலையைப் பயின்று வளர்ப்பதற்கு அதிகம் பேர் இல்லை தானே\" -இவ்விதம் ஆயனர் சொல்லிக்கொண்டே சிவகாமியைத் திரும்பிப் பார்த்து, \"சக்கரவர்த்தியின் பொன்மொழிகளைக் கேட்டாயா, குழந்தாய்\" -இவ்விதம் ஆயனர் சொல்லிக்கொண்டே சிவகாமியைத் திரும்பிப் பார்த்து, \"சக்கரவர்த்தியின் பொன்மொழிகளைக் கேட்டாயா, குழந்தாய்\nசிவகாமியின் முகமானது அச்சமயம் கீழ்த்தரச் சிற்பி அமைத்த உணர்ச்சியற்ற கற்சிலையின் முகம்போல் இருந்தது. எத்தனையோ விதவிதமான உள்ளப்பாடுகளையெல்லாம் முகபாவத்திலே கண்ணிமையிலே, இதழ்களின் மடிப்பிலே அற்புதமாக வெளியிடும் ஆற்றல் பெற்றிருந்த சிவகாமி, அச்சமயம் தன் சொந்த மனோநிலையை முகம் வெளியிடாதபடி செய்வதில் அபூர்வத் திறமையைக் காட்டினாள் என்றே சொல்லவேண்டும்.\nஆனால், நரசிம்மவர்மர் அபிநயக் கலையில் தேர்ச்சி பெறாதவரானபடியால், சக்கரவர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டதும் அவருடைய முகம் சிவந்தது, இதழ்கள் துடித்தன. மற்றவர்கள் கவனியாதவண்ணம் உடனே அவர் திரும்பி பக்கத்தில் இருந்த சிலைகளையும் சித்திரங்களையும் பார்ப்பவர் போல் இவரிடமிருந்து பெயர்ந்து அப்பால் சென்றார்.\nசக்கரவர்த்தியும் தாம் இத்தனை நேரம் வீற்றிருந்த சிற்ப சிம்மாசனத்திலிருந்து எழுந்து, \"சிற்பியாரே எவ்வளவோ முக்கியமான அவசர வேலைகள் எனக்கு இருக்கின்றன. இருந்தாலும் இங்கு வந்துவிட்டால் எல்லாம் மறந்து விடுகிறது. உமது புதிய சிலைகளைப் பார்த்துவிட்டுச் சீக்கிரம் கிளம்பவேண்டும்\" என்று சொல்லிக்கொண்டே நடந்தார். ஆயனரும் சிவகாமியும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.\nமகேந்திர பல்லவர், புதிதாகச் செய்திருந்த நடனத்தோற்றச் சிலைகளைப் பார்த்துக்கொண்டே, 'இது கஜஹஸ்தம்' 'இது அர்த்த சந்திர ஹஸ்தம்' என்று சொல்லிய வண்ணமாக நடந்து, ஆயனர் கடைசியாகச் செய்து முடித்திருந்த சிலையண்டைப் போனதும் \"ஆஹா என்று கூறிவிட்டு நின்றார். சற்று நேரம் அதை உற்றுப் பார்த்துவிட்டு, \"ஆயனரே என்று கூறிவிட்டு நின்றார். சற்று நேரம் அதை உற்றுப் பார்த்துவிட்டு, \"ஆயனரே தொண்டை மண்டலத்திலுள்ள மகா சிற்பிகளுக்குள்ளே உமக்கு நிகரானவர் எவருமில்லை. ஆனால், நீர் கூட இத்தனை காலமும் இந்தச் சிலையைப்போல் ஜீவ களை பொருந்திய சிலையைச் செய்தது கிடையாது. அன்பிற்குரியவர் நெடுங்காலம் வராதபடியினால் ஏற்பட்ட இருதய தாபத்தை இந்தச் சிலையின் முகபாவமும் மற்ற அங்கங்களின் நெளிந்த தோற்றமும் எவ்வளவு நன்றாய் வெளியிடுகின்றன தொண்டை மண்டலத்திலுள்ள மகா சிற்பிகளுக்குள்ளே உமக்கு நிகரானவர் எவருமில்லை. ஆனால், நீர் கூட இத்தனை காலமும் இந்தச் சிலையைப்போல் ஜீவ களை பொருந்திய சிலையைச் செய்தது கிடையாது. அன்பிற்குரியவர் நெடுங்காலம் வராதபடியினால் ஏற்பட்ட இருதய தாபத்தை இந்தச் சிலையின் முகபாவமும் மற்ற அங்கங்களின் நெளிந்த தோற்றமும் எவ்வளவு நன்றாய் வெளியிடுகின்றன கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும்கூட அல்லவா நம்மோடு வார்த்தையாடுகின்றன கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும்கூட அல்லவா நம்மோடு வார்த்தையாடுகின்றன ஆயனரே சிவகாமியின் அரங்கேற்றத்துக்குப் பிற்பாடு இந்தச் சிலையைப் பூர்த்தி செய்திருக்கிறீர், இல்லையா\n இன்று காலையில்தான் பூர்த்தி செய்தேன். சிவகாமி பெரிய மனது செய்து இன்றைக்கு எனக்காக மறுபடியும் ஆடி அபிநயம் பிடித்தாள்\nமகேந்திரர் மந்தஹாஸத்துடன் சிவகாமியைப் பார்த்துவிட்டு, \"சிற்பியாரே பரத சாஸ்திரத்தைத் தொகுத்து எழுதிய முனிவர் 'ஏழு வகைப் புருவ அபிநயம்' என்றுதானே சொல்லியிருக்கிறார் பரத சாஸ்திரத்தைத் தொகுத்து எழுதிய முனிவர் 'ஏழு வகைப் புருவ அபிநயம்' என்றுதானே சொல்லியிருக்கிறார் அவர் நமது சிவகாமியின் நடனத்தைப் பார்த்திருந்தால், புருவ அபிநயம் ஏழு வகை அல்ல, எழுநூறு வகை என்று உணர்ந்து அவ்விதமே சாஸ்திரத்திலும் எழுதியிருப்பார் அவர் நமது சிவகாமியின் நடனத்தைப் பார்த்திருந்தால், புருவ அபிநயம் ஏழு வகை அல்ல, எழுநூறு வகை என்று உணர்ந்து அவ்விதமே சாஸ்திரத்திலும் எழுதியிருப்பார்\nஇவ்விதம் உல்லாசமாகப் பேசிக்கொண்டு சென்ற சக்கரவர்த்தியின் பார்வை சிறிது தூரத்தில் இருந்த ஒரு பிரம்மாண்டமான புத்தர் சிலையின்மீது விழுந்தது. அவ்விடத்திலேயே சற்று நின்று புத்த விக்ரகத்தைப் பார்த்தவண்ணம், \"ஆஹா கருணாமூர்த்தியான புத்த பகவான் பூவுலகத்திலிருந்து ஹிம்சையையும் யுத்தத்தையும் அடியோடு ஒழிக்க முயன்றார். அவருடைய உபதேசத்தை இந்த உலகிலுள்ள எல்லா மன்னர்களும் கேட்டு நடந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும் கருணாமூர்த்தியான புத்த பகவான் பூவுலகத்திலிருந்து ஹிம்சையையும் யுத்தத்தையும் அடியோடு ஒழிக்க முயன்றார். அவருடைய உபதேசத்தை இந்த உலகிலுள்ள எல்லா மன்னர்களும் கேட்டு நடந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும் அவ்விதம் நடந்த புண்ணிய புருஷர் மௌரிய வம்சத்து அசோக சக்கரவர்த்தி ஒருவர்தான். அப்புறம் அத்தகைய அஹிம்சாமூர்த்தியான அரசர் இந்த நாட்டில் தோன்றவில்லை அவ்விதம் நடந்த புண்ணிய புருஷர் மௌரிய வம்சத்து அசோக சக்கரவர்த்தி ஒருவர்தான். அப்புறம் அத்தகைய அஹிம்சாமூர்த்தியான அரசர் இந்த நாட்டில் தோன்றவில்லை\nஆயனர் மௌனமாய் நிற்கவே, சக்கரவர்த்தி, \"நல்லது, சிற்பியாரே உம்மை இராஜாங்க விரோதியாகப் பாவித்து நியாயமாகத் தண்டிக்கவேண்டும்...\" என்று சொன்னபோது, ஆயனரின் முகத்தில் பெரும் கலவரம் காணப்பட்டது. சக்கரவர்த்தி அடுத்தாற்போல் கூறிய மொழிகள் அந்தக் கலவரத்தை ஒருவாறு நீக்கின.\n\"ஆமாம்; இங்கு வந்துவிட்டு உடனே திரும்பவேண்டும் என்று எண்ணியிருந்த என்னை இத்தனை நேரம் இங்கே தங்கும்படி வைத்து விட்டீர் அல்லவா அதனால் எவ்வளவு காரியங்கள் தடைப்பட்டு விட்டன அதனால் எவ்வளவு காரியங்கள் ��டைப்பட்டு விட்டன போகட்டும் இந்தத் தடவை உம்மை மன்னித்து விடுகிறேன் போகட்டும் இந்தத் தடவை உம்மை மன்னித்து விடுகிறேன்\" என்று கூறி ஹாஸ்ய நகைப்புடன் மகேந்திரர் வாசலை நோக்கி நடந்தார். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்து சென்றார்கள்.\nவீட்டு வாசற்படியைத் தாண்டியதும் சக்கரவர்த்தி ஆயனரைத் திரும்பிப் பார்த்துக் கூறினார்: \"ஆயனரே உம்முடைய சிற்பத் திருக்கோயிலுக்கு மீண்டும் நான் எப்போது வருவேனோ, தெரியாது. ஆனால், ஒன்று சொல்லுகிறேன், பூர்வீகமான இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஒரு காலத்தில் அழிவு நேர்ந்தாலும் நேரலாம்..\"\n ஒரு நாளும் இல்லை, அப்படிச் சொல்ல வேண்டாம்\" என்று ஆயனர் அலறினார்.\n உலகத்தில் இதற்குமுன் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் இருந்திருக்கின்றன; மறைந்திருக்கின்றன. ஹஸ்தினாபுரம் என்ன, பாடலிபுத்திரம் என்ன, உஜ்ஜயினி என்ன இவையெல்லாம் இப்போது இருந்த இடம் தெரியவில்லை. அதுபோல் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கும் ஒருநாள் முடிவு ஏற்படலாம். ஆனால், உம்முடைய கலாசாம்ராஜ்யத்துக்கு ஒரு காலத்திலும் அழிவு கிடையாது. தெய்வத் தமிழ்மொழியும், தமிழகமும் உள்ள வரையில் உம்முடைய சிற்ப சம்ராஜ்யமும் நிலைபெற்றிருக்கும்\nஅப்போது ஆயனர் உணர்ச்சி ததும்பிய குரலில், \"பிரபு என்னைப்போல் ஆயிரம் சிற்பிகள் தோன்றுவார்கள்; மறைவார்கள் என்னைப்போல் ஆயிரம் சிற்பிகள் தோன்றுவார்கள்; மறைவார்கள் எங்களுடைய பெயர்களும் மறைந்தொழிந்து போகும். ஆனால், இந்த நாட்டில் சிற்ப சித்திரக் கலைகள் உள்ளவரைக்கும், தங்களுடைய திருப்பெயரும் குமார சக்கரவர்த்தியின் பெயரும் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கும்\" என்றார்.\nஅந்த மகாசிற்பியின் வாக்கு எவ்வளவு உண்மையான வாக்கு மாமல்லபுரத்தை ஒரு சொப்பன உலகமாகச் செய்த தமிழ்நாட்டு மகாசிற்பிகளின் பெயர்கள் உண்மையில் மறைந்து போய்விட்டன மாமல்லபுரத்தை ஒரு சொப்பன உலகமாகச் செய்த தமிழ்நாட்டு மகாசிற்பிகளின் பெயர்கள் உண்மையில் மறைந்து போய்விட்டன ஆனால், மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவரின் பெயர்கள் சரித்திரத்தில் இடம் பெற்று இன்றைக்கும் சிரஞ்சீவிப் பெயர்களாய் விளங்குகின்றன அல்லவா\nசக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் தத்தம் குதிரை மீது ஏறிக்கொண்டார்கள். மகேந்திரர் குதிரைமேல் இருந்தபடியே, ஆயனரை மறுபடியும் நோக்க��, \"பார்த்தீரா வெகு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன்; 'நான் வடக்கே கிளம்புவதற்கு முன்னால் மாமல்லபுரத்தில் நடக்கவேண்டிய வேலைகளைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்யவேண்டும். நாளை பிற்பகல் நீர் துறைமுகத்துக்கு வரவேண்டும்\" என்றார்.\n\" என்றார் ஆயனர். போகும் குதிரைகளைப் பார்த்துக்கொண்டு ஆயனரும் சிவகாமியும் வீட்டு வாசலில் நின்றார்கள்.\nமகேந்திர பல்லவர் ஆயனர் வீட்டு வாசலுக்கு வந்ததிலிருந்து அவர் திரும்பிக் குதிரைமீதேறிய வரையில் அவரும் ஆயனரும் சம்பாஷணை நடத்தினார்களே தவிர, குமார நரசிம்மராவது, சிவகாமியாவது வாய்திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குள்ளே கண்களின் மூலமாகச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பேசிக்கொள்ளவில்லையென்று நாம் சத்தியம் செய்து சொல்ல முடியாது.\nகடைசியாகச் சிவகாமியிடம் விடை பெற்றுக் கொள்வதற்கும் குமார சக்கரவர்த்தி அந்தக் கண்களின் பாஷையையே கையாண்டார்.\nநரசிம்மரின் குதிரை சிறிது தூரம் சென்றதும், அவர் தமது தலையைமட்டும் திரும்பிச் சிவகாமி ஆவல் ததும்பப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தார். உடனே தம் கையிலிருந்த வேலினை உயரத் தூக்கிப் பிடித்துப் புன்னகை புரிந்தார். மறுகணத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு குதிரையைத் தட்டி விட்டார்.\nகுமார சக்கரவர்த்தியின் சமிக்ஞையைச் சிவகாமி அறிந்து கொண்டாள். அவளுடைய கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும் கலீரென்று சிரித்தன. குதிரைகள் காட்டுக்குள் மறையும் வரைக்கும் சிவகாமி இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரைகள் மறைந்து சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அவள் திரும்பி வீட்டுக்குள் செல்ல யத்தனித்தாள்.\nநரசிம்மர் வேலைத் தூக்கிப் பிடித்துச் சமிக்ஞை செய்ததை நினைத்து உவகை கொண்ட சிவகாமிக்கு இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது. அந்த வேலுக்கு உடையவனான இளைஞன் எங்கே நரசிம்மர் பலமுறை இந்தக் கேள்வியைக் கண்களின் மூலமாகவே கேட்டதையும், தான் மறுமொழி சொல்லமுடியாமல் விழித்ததையும் நினைத்தபோது சிவகாமிக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது. தனக்கு முன்னால் வீட்டுக்குள் போய்விட்ட ஆயனரிடம் அந்த வாலிபனைபற்றிக் கேட்கவேண்டுமென்னும் எண்ணத்துடன் அவள் உள்ளே புகுந்தபோது புத்தர் சிலைக்கு அருகாமையில் ஆயனர் ச���ல்வதையும் அந்தச் சிலைக்குப் பின்னாலிருந்து புத்தபிக்ஷுவும் அவருடன் வந்த இளைஞனும் திடீரென்று எழுந்து நிற்பதையும் கண்டாள். அப்போது சிவகாமிக்கு ஏற்பட்ட வியப்பையும் திகைப்பையும் சொல்ல இயலாது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 1.19. புத்தர் சிலை, ஆயனர், சிவகாமி, சக்கரவர்த்தி, சிவகாமியின், குமார, என்றார், சிற்பியாரே, என்ன, சக்கரவர்த்தியின், புத்தர், எவ்வளவு, பார்த்துக், சொல்ல, சக்கரவர்த்தியும், மகேந்திர, பல்லவர், அவருடைய, அவர், ஆயனரே, செய்து, அவள், பிரபு, எத்தனையோ, இத்தனை, சிறிது, மகேந்திரர், வீட்டு, உம்முடைய, கண்களின், அந்த, அபிநயம், அல்லவா, நேரம், அல்ல, சிற்ப, ஆயனரும், இந்தச், இருந்த, உடனே, போல், முகம், சிலை, சிவகாமிக்கு, இந்தப், சபதம், புத்த, நீர், பல்லவ, முன்னால், சற்று, அந்தக், ஆயனரின், நோக்கி, மீண்டும், பெருமானே, பூர்த்தி, எவ்வளவோ, மறுபடியும், பார்த்து, நாட்டில், நான், புருவ, உம்மை, வரையில், தூக்கிப், கொண்டு, அமரர், குதிரைகள், வீட்டுக்குள், வந்தது, நரசிம்மர், குதிரை, மறைந்து, கண்ணிமைகளும், முடிவு, இடம், அப்போது, போகும், பெயர்கள், வாக்கு, அழிவு, வருங்காலத்தில், சொல்லிக்கொண்டே, இவ்விதம், இல்லை, திரும்பிப், அச்சமயம், கல்கியின், மற்றவர்கள், கூறினார், வளர்ப்பதற்கு, தெரியாது, உணர்ச்சி, மேற்கொண்டு, மொழிகள், தமது, பெற்று, காலம், திரும்பி, குறைவு, பார்த்துவிட்டு, கடைசியாகச், சென்றார்கள், இல்வாழ்க்கையை, கிடையாது, உமது, ஏற்பட்ட, சிவகாமியும், நடந்தார், கலைப், உற்சாகக், எழுந்து, முக்கியமான, சிலைகளைப், இங்கு, கண்களும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4-2/", "date_download": "2021-08-02T09:22:18Z", "digest": "sha1:ROSTDKJFFUNST3OEHWGPXA7TTH64FFVH", "length": 6038, "nlines": 56, "source_domain": "www.sekarreporter.com", "title": "ஆதார் அட்டையின் நகலைத் தந்தால்தான் மது என்ற ஆணைக்கும் தடை. எந்த வழிவகைகளில் மது விற்கலாம் என்பதை அரசு் தீர்மானிக்க வேண்டும் – SEKAR REPORTER", "raw_content": "\nஆதார் அட்டையின் நகலைத் தந்தால்தான் மது என்ற ஆணைக்கும் தடை. எந்த வழிவகைகளில் மது விற்கலாம் என்பதை அரசு் தீர்மானிக்க வேண்டும்\nஆதார் அட்டையின் நகலைத் தந்தால்தான் மது என்ற ஆணைக்கும் தடை. எந்த வழிவகைகளில் மது விற்கலாம் என்பதை அரசு் தீர்மானிக்க வேண்டும்\nPrevious story ஆதார் அட்டையின் நகலைத் தந்தால்தான் மது என்ற ஆணைக்கும் தடை. எந்த வழிவகைகளில் மது விற்கலாம் என்பதை அரசு் தீர்மானிக்க வேண்டும்\nநீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி இராஜலட்சுமி—376 IPC* : 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் மொத்தம் 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி* ஆய்வாளர் ஜோதிலட்சுமி W18 AWPS .\nகொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\nநீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி இராஜலட்சுமி—376 IPC* : 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் மொத்தம் 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை அதிகாரி* ஆய்வாளர் ஜோதிலட்சுமி W18 AWPS .\nகொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nசட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு https://t.co/TsgV5nfDPB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://e-kalvi.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-08-02T10:03:40Z", "digest": "sha1:PI2ZGX6IRKBB7XJLP4TOZHCP3FGA2GTL", "length": 2762, "nlines": 54, "source_domain": "e-kalvi.com", "title": "தமிழ் எழுத்தாளர்கள் Archives - e-Kalvi", "raw_content": "\nMay 16, 2020\tA/l Tamil, தமிழ் எழுத்தாளர்கள் 0\nபாரதிதாசன் வாழ்க்கை வரலாறு “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, …\nமின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள Subscribe செய்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sinthanaigal-simplified-talk-show-participation-actress-ramya-nambeesan-076110.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-08-02T10:22:29Z", "digest": "sha1:6NNZPKVYKRN43BZYWDAIL2OPSKU4L6NB", "length": 18659, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரம்யா நம்பீசனுடன் ஒரு ஜாலியான டாக் ...ரவிசங்கர் சொல்லும் புதிய வாழ்க்கை யுக்திகள் ! | 'Sinthanaigal Simplified‘ Talk show Participation Actress Ramya Nambeesan - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nAutomobiles 2021 ஆடி ஆர்எஸ்5 காரின் இந்திய அறிமுக தேதி வெளியீடு மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடியது\nNews TN Lockdown: தினந்தோறும் புது புது கட்டுப்பாடுகள்.. தமிழ்நாட்டில் விரைவில் முழு லாக்டவுன்\nFinance அம்பானி ஷாப்பிங் லிஸ்டில் புது நிறுவனம்.. டாடா உடன் போட்டி போடும் மாஸ்டர் பிளான்..\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nSports அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய \"ரெக்கார்டு\".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரம்யா நம்பீசனுடன் ஒரு ஜாலியான டாக் ...ரவிசங்கர் சொல்லும் புதிய வாழ்க்கை யுக்திகள் \nசென்னை : சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு இந்த வார நிகழ்வில் சிந்தனையை தூண்டும் உரையாடலில் ரவிசங்கர் உடன் ஈடுபடும் ரம்யா நம்பீசன் பல வித்யாசமான கேள்விகளை கேட்டு உள்ளார் .\nமனதை ஆக்கபூர்வமான மாற்றத்திற்கு கொண்டு செல்கிற உரையாடலை வருகின்ற அக்டோபர் 18, ஞாயிறு காலை 11:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் கண்டு மகிழலாம்\nஇந்த உலக வாழ்க்கை மற்றும் சமுதாயம் மீது சிந்தனைகளை தூண்டுகிற உள்நோக்குகள் மற்றும் கண்ணோட்டங்���ள் நிறைந்த உரையாடலில் ரவிசங்கர் பல வித சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார்.\nபிரபல நடிகரும், பாடகருமான ரம்யா நம்பீசனுடன் இந்த நவீன உலகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடுவதை கல்ர்ஸ் தமிழில் தொடர்ந்து ஒளிபரப்பாகிவரும் சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடில் காணலாம்.\nஅக்டோபர் 18ம் தேதி வரும் ஞாயிறு அன்று காலை 11:00 மணிக்கு கல்ர்ஸ் தமிழ் அலைவரிசையில் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்க்க வேண்டும் என்பதற்கான பல காரணங்கள் சொல்லப்படுகிறது . அதில் முதன்மை ஆனது பாலின சமநிலை: தற்போதைய சமூகத்தில் நிலவிவரும் பாலின சமத்துவம் மீது ரவிசங்கர் அவர்களின் பார்வை மற்றும் கருத்து என்ன என்ற கேள்வியை முன்வைப்பதன் மூலம் சிந்தனையைத் தூண்டும் இந்த உரையாடலை ரம்யா நம்பீசன் தொடங்குகிறார்.\nரம்யா நம்பீசனின் இந்த கேள்விக்கு அழுத்தமான பதிலை வழங்கும் ரவிசங்கர் , பாலினம் தொடர்புடைய பல்வேறு பிரச்சனைகள் மற்றும் அம்சங்களுக்குள் நம்மை அழைத்துச் சென்று தெளிவான விளக்கங்களை வழங்குகிறார். மகளிரின் கல்வி மற்றும் அவர்கள் திறனதிகாரம் பெறுவதற்கான அவசியம் பற்றி விரிவாகப் பேசும் ரவிசங்கர் , ரம்யா நம்பீசன் உடனான அவரது உரையாடல் பயணத்தின்போது சமூக விரோத சக்திகள் பற்றிய அவரது கருத்துக்களை மனம் திறந்து பகிர்ந்துகொள்வதை காணலாம்.\nமௌனம், அமைதி நிலையின் முக்கியத்துவம்: ஒரு நபரின் வாழ்க்கையில் வெவ்வேறு கூறுகளின் முக்கியத்துவம் பற்றி ரம்யா நம்பீசனுடன் நடத்துகிற உரையாடலானது, ஆர்வத்தையும் சிந்தனையையும் தூண்டுகிற பாதையில் நம்மை திருப்புகிறது. இந்த உலகில் பல்வேறு விஷயங்களை சிறப்பாக புரிந்துணர ஒரு தனிநபர் மீது அமைதி நிலை எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி ரவிசங்கர் தெளிவான விளக்கத்தை வழங்குகிறார். மௌனமும், அமைதியும் அதிக படைப்பூக்கத் திறனுள்ளவர்களாக எப்படி ஆக்குகிறது என்று அவரது விளக்கம் ஆர்வமூட்டுகிறது.\nவிவாகரத்து குறித்த தவறான எண்ணம் பற்றியும் இந்தியாவில் விவாகரத்து குறித்து நிலவுகிற கருத்துகள் பற்றியும் , மக்களின் தவறான கண்ணோட்டங்கள் பற்றியம் ரவிசங்கரின் பார்வை என்ன என்பதை அறிவதற்காக ரம்யா கேள்விகளை தொடுக்கும்போது இந்த உரையாடல் இன்னும் அதிக சுவாரஸ்யமானதாக மாறுகிறது. சமுதாயத்தில் நிலவுகிற பல்வேறு வகைப்பட்ட தவறான எண்ணங்கள் மற்றும் கண்ணோட்டங்கள் பற்றி அவர் வழங்கும் உறுதியான பதில் பலரது கண்களை திறக்கும் திறன்கொண்டதாக இருக்கும் என்பது நிச்சயம்.\nசுவாரஸ்யமிக்க கருத்துகளும், விவாதங்களும் நிறைந்த இந்த வார எபிசோட், பார்வையாளர்களுக்கு கிளர்ச்சியூட்டும் சிந்தனைகளை வரவழைக்கும் என்பது நிச்சயம். சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியை கண்டு பயனடைவதற்காக வரும் 18 ஞாயிறு காலை 11:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்து ஆனந்த படலாம் என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.\nஅம்பியா இருக்க பிரபுதேவா திடீர்னு அந்நியனா மாறுறாரே.. மிரட்டும் பஹீரா ’சைக்கோ ராஜா’ பாட்டு\n‘’பிளான் பண்ணி பண்ணனும்’' ரிலீஸ் தேதியை பிளான் பண்ணி அறிவித்த படக்குழு \n பிளான் பண்ணி பண்ணனும் டீமுடன் ரியோ ராஜ் கொடுத்த கலகல பேட்டி\nரியோவின் காலை பிடித்துக் கெஞ்சும் ரம்யா.. வைரலாகும் பரபரப்பான வீடியோ.. பிளான் பண்ணி பண்ணனும்\nநடிகை ரம்யா நம்பீசனின் 'சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்..' இணையத்தில் இது புதிய முயற்சியாம்ல\nஅவர் கூட நடிச்சா.. நிறைய கத்துக்கலாம்.. பிரபல ஹீரோ குறித்து மனம் திறந்த ரம்யா நம்பீசன்\nபாவனாவின் பாவாடை தாவணி.. பரவசமூட்டும் பிளாஷ்பேக்.. நெருங்கிய தோழிகள் \nபிங்க் நிற உடையில்.. க்யூட் க்யூட் ரியாக்சன்.. ரம்யா நம்பீசனின் பிக்ஸ்\nடிடி போற இடமெல்லாம் மகிழ்ச்சி கொரோனாவா பரவும் .. ரோபோ சங்கர் கலகல\nநல்ல பிளான்.. செம புரொமோஷன்.. பிளான் பண்ணி பண்ணனும் டிரைலர் எப்படி இருக்கு\nபிளான் பண்ணி பண்ணனும் ஆடியோ.. இன்று டிரெய்லர் வருதுங்கோ\nஅமித்ஷா மாதிரி ஐடியா.. சந்தான பாரதி மாதிரி எக்ஸிக்யூட்.. இவனுங்க எதுக்கு பிளான் பண்ணுறாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநண்பர்கள் தினத்துக்கு நச்சுன்னு பாட்டுப் போட்ட ராஜமெளலி.. மரகதமணி இசையில் அசத்தும் அனிருத்\nதுணிந்த பின்’ ஒரு அற்புதமான அனுபவம்… ‘நவரசா‘ படம் குறித்து அதர்வாவின் ருசிகரத்தகவல் \nதிடீரென டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா....அக்கினேனி எங்கே போச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடை���ில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vanitha-slams-actress-kasthuri-for-talking-about-vijayalakshmi-issue-073275.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Deep-Links", "date_download": "2021-08-02T10:19:58Z", "digest": "sha1:J72ULD2OCTAOYUHDYZCWCJPAQC4667ZT", "length": 18199, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜயலக்ஷ்மி விவகாரம் குறித்து பேசியதால் கடுப்பான வனிதா.. கஸ்தூரி ஒரு பாய்சன் என கடும் விமர்சனம்! | Vanitha slams Actress Kasthuri for talking about Vijayalakshmi issue - Tamil Filmibeat", "raw_content": "\nNews TN Lockdown: தினந்தோறும் புது புது கட்டுப்பாடுகள்.. தமிழ்நாட்டில் விரைவில் முழு லாக்டவுன்\nFinance அம்பானி ஷாப்பிங் லிஸ்டில் புது நிறுவனம்.. டாடா உடன் போட்டி போடும் மாஸ்டர் பிளான்..\nLifestyle எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...\nSports அலை கடலென மெடல்கள்.. ஒரே ஒலிம்பிக்கில் புதிய \"ரெக்கார்டு\".. உலகை வியக்க வைத்த ஆஸி., வீராங்கனை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி சுஸுகி செலிரியோ... உருமறைப்பு செய்யப்படாத ஸ்பை படங்கள் லீக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயலக்ஷ்மி விவகாரம் குறித்து பேசியதால் கடுப்பான வனிதா.. கஸ்தூரி ஒரு பாய்சன் என கடும் விமர்சனம்\nசென்னை: விஜயலக்ஷ்மி விவகாரம் குறித்து பேசியதற்காக நடிகை கஸ்தூரியை விஷம் என கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை வனிதா.\nநடிகை வனிதாவுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டிலேயே இருவருக்கும் முட்டலும் மோதலுமாக இருந்தது.\nகஸ்தூரி வனிதாவை வாத்து என்று கூறியதற்காக சர்ச்சைக்கு ஆளானார். அதன்பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் இருவரும் சண்டை போட்டு வந்தனர்.\nஆஸ்கர் விருதை வென்ற பிறகு.. பாலிவுட்டில் என்னையும் ஒதுக்கினார்கள்.. ரசூல் பூக்குட்டி பரபரப்பு\nவனிதாவின மூன்றாவது திருமண விவகாரத்தில் கூட பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் விவகாரத்தில் கஸ்தூர��� அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதனால் கடுப்பான வனிதா கஸ்தூரியை ஃபிராடு, பைத்தியம், முட்டாள், காமெடி பீஸ் என வாய்க்கு வந்தப்படி விமர்சித்தார்.\nபிரச்சனை வரும் போதெல்லாம், வனிதா கஸ்தூரியை பிளாக் செய்வதாக கூறி பிளாக் செய்வார். பின்னர் மீண்டும் அவர் டிவிட்டுகளை விமர்சிப்பார். இதேபோல் கடந்த வாரம் கஸ்தூரியை பிளாக் செய்தார் வனிதா. இந்நிலையில் தற்போது கஸ்தூரி விஜயலக்ஷ்மி குறித்து பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் வனிதா.\nவிஜயலக்ஷ்மியின் குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்தேன். அவர்களுக்கு தேவையான உதவியை செய்துள்ளேன் என குறிப்பிட்டிருந்தார் கஸ்தூரி. இதனை பார்த்த நடிகை வனிதா, கஸ்தூரியை விஷம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது.. ஓ மை காட்.. இந்த மக்களை பாருங்க.. இந்த போலி வக்கீல் விசாரணை ஸ்பெஷலிஸ்ட், எஃப்பிஐ ஆஃபிசர்... அவர் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார். எல்லா பிரபலங்களின் பர்சனல் குறித்து விசாரணை நடத்தவது பப்ளிக்கில் விவாதிப்பது, அவர்களை விமரசிப்பது. அவர் ஒரு பாய்சன் என கஸ்தூரியை விமர்சித்துள்ளார்.\nவனிதாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள்தான் கஸ்தூரியை பிளாக் செய்துவிட்டேன் என்று கூறினீர்களே பின்னர் ஏன் அவர் டிவிட்டையெல்லாம் ஃபாலோ செய்கிறீர்கள் என சாடியிருக்கின்றனர்.\nமற்றொரு நெட்டிசன் உங்களுக்கு ஏதோ மெண்டல் பிராப்ளம் இருக்கு என்று நினைக்கிறேன். உங்க அப்பாவோட பிரச்சனையில் இருந்து இப்போ வரை உங்கள் சம்பந்தப்பட்ட எல்லாமே காரி துப்பும் அளவுக்கு உள்ளது. உங்கள் பின்னால் நிறைய சாக்கடை உள்ளது முதலில் அதை கழுவுங்கள்.. என சாடியுள்ளார்.\nகேவலமான அக்கறை.. எந்த சப்போர்ட்டும் இல்லாம இந்தளவுக்கு வந்திருக்கேன்.. கடுப்பான வனிதா\nவைரல் ஸ்டார் வனிதா... ஒரே ஃபோட்டோவால் ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிட்டாரே\nஎன்னது பவர் ஸ்டார் கூட கல்யாணம் ஆயிடுச்சா.. மாலை மாற்றிய போட்டோவை ஹார்ட்டின்களோடு ஷேர் செய்த வனிதா\nவரிசைக்கட்டும் படங்கள்.. புதிய படத்தில் நீயா நானா கோபிநாத்துடன் இணைந்த வனிதா\nசாக்கடை என தெரியாமல் கல் எறிந்துவிட்டேன்.. வனிதா குறித்து பிரபல நடிகை பரபரப்பு பேச்சு\nநோ மீன்ஸ் நோ.. எங்கே வேணுமோ அங்கு ஃபுல் ஸ��டாப் வச்சுடணும்.. என்னதான் நடந்துச்சு.. வனிதா ஆவேசம்\nடீப் லோ நெக்கில் நாயை கொஞ்சும் வனிதா விஜயகுமார்.. இதெல்லாம் ஓவர் என விளாசும் நெட்டிசன்ஸ்\nமட்டமல்லாக்க படுத்து மசாஜ் செய்து கொண்ட வனிதா.. வேலைக்கு முன்னாடி ரிலாக்ஸிங்.. வைரலாகும் போட்டோஸ்\nசீரியல் நடிகர் சஞ்சீவுக்கும் வனிதாவுக்கும் உள்ள உறவு தெரியுமா போட்டோவால் வெளி வந்த உண்மை\nரசிகையிடம் இருந்து வந்த அந்த லெட்டர்.. பூரித்துப்போன வனிதா அக்கா.. வைரலாகும் டிவிட்\nகுக்கூ.. குக்கூ.. இது வனிதா அக்கா வெர்ஷன்.. வேற லெவல்.. லைக்ஸை அள்ளும் வீடியோ\nநடமாடும் நகைக்கடை ஹரி நாடாருக்கு ஜோடியான வனிதா.. தொடங்கியது 2கே அழகானது காதல் படப்பிடிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதல் காதல், திருமணத்துடன் தொடர்கிறது… 7 ஆண்டுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த கன்னிகா \nவிரைவில் முடிய போகுதா பாண்டியன் ஸ்டோர்ஸ்...பிரபல நடிகை கொடுத்த சூப்பர் அப்டேட்\nஇங்கே சார்பட்டா கலக்கியது போல.. அங்கே சர்காரு வாரி பாட்டா கலக்குமா\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil4.com/news/world-news/stricter-restrictions-in-france/", "date_download": "2021-08-02T09:25:23Z", "digest": "sha1:SO4OI3T2KGJFRTU6XEGPH2TICUWVJTJI", "length": 6553, "nlines": 67, "source_domain": "tamil4.com", "title": "பிரான்சில் கடுமையாகும் கட்டுப்பாடுகள் - Tamil4", "raw_content": "\nபிரான்சில் டெல்டா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nஅதன்படி ஷாப்பிங் மால், மருத்துவமனை, நீண்ட தூர ரயில் பயணம் மற்றும் உணவகம் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறப்பு கொரோனா சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என பிரதமர் இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்திருக்கிறார்.\nஇந்த கொரோனா சான்றிதழ் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது அல்லது சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை காட்டும். 12 வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் திரையரங்கம், தீம்பார்க், அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார மையம் ஆகிய மக்கள் கூடும் பகுதிகளுக்கு செல்ல இந்த சான்றிதழ் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதோடு நாட்டு மக்���ள் அனைவரும் தடுப்பூசிகளை விரைவில் செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது. வரும் 21ம் தேதியிலிருந்து இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வரும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nமேலும் சுகாதார மற்றும் ஓய்வூதிய இல்லங்களில் இருக்கும் பணியாளர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.\nமேலும் இதற்கு ஒத்துழைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் பிரதமர் இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron)தெரிவித்துள்ளார்.\nராஜபக்ஷ குடும்பத்தின் நிறுவனமாக மாறும் இலங்கை அரசு\nரஷ்யத் தடுப்பூசியினைத் தயாரிக்கும் இந்திய நிறுவனம்\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\nகொரோனா அச்சம்; இங்கிலாந்து உள்பட 4 நாடுகளுக்கான பயண தடையை நீடித்த நாடு\nதம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்\nஅரைகுறை ஆடையால் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிய விஜய் பட நடிகை\nகொரோனாவிற்கு எதிராக பிரித்தானியாவின் புது முயற்சி\nஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்\nஉலகம் முழுவதும் 19.90 கோடியை அண்மிக்கும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venpu.blogspot.com/2008/", "date_download": "2021-08-02T09:09:31Z", "digest": "sha1:R3TGH2FXJNJLCTGORG45ZBVPQFA6SVV5", "length": 238677, "nlines": 800, "source_domain": "venpu.blogspot.com", "title": "வெண்பூ: 2008", "raw_content": "\nகொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் அனுபவம்...\nஎன் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு\nஎன் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு,\nகடந்த சில‌ வாரங்களாகவே என்னால் வலைப்பூ உலகில் முற்றிலுமாக இயங்க முடியவில்லை. நான் பதிவு எழுதி ஒன்றரை மாதங்கள் ஆனதே இதற்கு சாட்சி. சில வெளியில் சொல்ல இயலாத காரணங்களால் என்னால் கடந்த இரு வாரங்களாக சக பதிவர்களின் பதிவுகளை படிக்கக் கூட முடியவில்லை.\nசிலர் என்னை மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் கேட்டதற்கும் என்னால் சரிவர பதில் சொல்ல முடியவில்லை அல்லது சொல்லத் தெரியவில்லை. தற்போதைய நிலை இன்னும் சில வாரங்களுக்காவது (மாதங்கள்) தொடரும் என்பதால் என்னை நீங்கள் வலையுலகில் பார்ப்பது அரிதாகவே இருக்கும்.\nஏற்கனவே என்னுடன் மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் தொடர்பிலிருக்கும் நண்பர்கள் அவ்வப்போது அழையுங்கள். நேரம் கிடைக்க���ம்போதெல்லாம் மறக்காமல் அனைவரின் பதிவுகளையும் படிப்பேன்.\nசில நாட்கள் (அல்லது மாதங்கள்) கழித்து மீண்டும் பழைய வேகத்துடன் என்னால் திரும்பி வர முடியும் என்று நம்புகிறேன். அதனால் என் மொக்கையிலிருந்து உங்களுக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டதாக எண்ணி யாரும் மகிழ்ச்சியடைய வேண்டாம். :)))\nசென்னையில் பதிவர் சந்திப்பு நடந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவிக்கவும். வருவதற்கு முயற்சி செய்கிறேன்.\nஎன் பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.. நன்றி..\nLabels: அனுபவம், நிகழ்வு, பதிவர், விடுமுறைக்கடிதம்\nசென்ற வாரத்தில் ஒருநாள் நானும் தங்கமணியும் உட்கார்ந்து தாமிராவின் தங்கமணி பற்றிய புலம்பல்களை படித்து சிரித்தபின் தங்கமணி கிச்சனுக்கு சென்றார். அதன்பின் நடந்த உரையாடல்..\nநான் (ஹாலில் இருந்து சத்தமாக): என்னம்மா\nதங்கமணி: அடுத்தது நீங்க என்ன பதிவு போடப் போறீங்க\nநான்: ஒரு சிறுகதை போடலாம்னு இருக்கேன்.\n நீங்களும் என்னை வெச்சி எதுனா புலம்பப் போறீங்களா\nநான் (ச‌ரியாக‌ அவ‌ர் சொன்ன‌தை காதில் வாங்காம‌ல்): த‌லைப்பு \"பேய் பிடித்த‌வ‌ன்\" அப்ப‌டின்னு வெக்க‌லாம்னு இருக்கேன்.\n\"டிட‌ங்க்...\" (ஹி..ஹி.. அவ‌ங்க‌ கையில‌ இருந்த‌ க‌ர‌ண்டி ஹால்ல‌ லேண்ட் ஆன‌ ச‌த்த‌ம் அது)\nபலமுறை நான் யோசித்ததுண்டு, பிரபலங்களை விளம்பரத்துக்கு உபயோகப்படுத்துவதால் எந்த அளவுக்கு மக்களை கவரமுடியும் என்று. இதுகுறித்து லக்கி கூட ஏற்கனவே ஒருமுறை பதிவெழுதியிருக்கிறார். ஆனால் சிலநாட்களுக்கு முன் எனக்கு பிராக்டிகலாக அதை உணரும் வாய்ப்பு கிடைத்தது.\nஎன் பையனுக்கு இரண்டு வயது ஆவதால், அவனை ப்ளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில் அவனுக்கு விளையாட வேறு குழந்தைகள் இல்லை. மேலும் நாங்கள் குடியிருக்கும் ஏரியாவும் சிறிது மோசமாக இருப்பதால் அவ‌ன் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் வெளியே விளையாட‌ செல்ல முடிவதில்லை.\nஆனால் என் தங்கமணிக்கு இந்த ஏரியாவில் நல்ல ப்ளேஸ்கூல் கிடைக்காது என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதற்காகவே மற்ற நல்ல பகுதிகளுக்கு வீடு மாற்றவேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பார். நெட்டில் தேடியபோது அருகில் ஒரு நல்ல ப்ளேஸ்கூல் செயின் இருப்பது தெரிந்தது. ஏற்கனவே நான் அந்த ப்ளேஸ்கூல் பெயரை அறிந்திருந்தேன். கொஞ்சம் பணம் அதிகம் என்றாலும் குழந்தைக்கு நல்ல இடமாக இருக்கும், மேலும் எனக்கும் ஆபிஸ் அருகில் என்பதால் அவனை கொண்டு விட, அழைத்து வர என்று சுலபமாக இருக்கும் என்பதால் அங்கேயே அவனை சேர்த்தோம்.\nமுதல் இரண்டு நாள் தங்கமணியும் அவனுடன் சென்று வந்தார். என்ன செய்வாங்க தெரியலயே நாம பாத்துக்குறமாதிரியே பாத்துகுவாங்களா என்ற கவலைகள் வேறு அவருக்கு.\nஇரண்டாம் நாள் திரும்பி வந்தவுடன் தங்கமணி என்னிடம் \"என்னங்க.. உங்களுக்கு தெரியுமா இந்த ஸ்கூல்லதான் ***** நடிகை கூட அவங்க குழந்தையை சேத்திருக்காங்க. இன்னிக்கு கூட்டிட்டு போக வந்திருந்தாங்க\" என்று சின்னத்திரையில் கோலம் போடும் நாயகி பெயரை கூறினார்.\nஇப்போதெல்லாம் என் தங்கமணிக்கு அந்த ஸ்கூல் நல்லதா என்பது பற்றி எந்த சந்தேகமும் எழுவதில்லை. யாரிடமாவது பையனை ஸ்கூலுக்கு அனுப்பவதைப் பற்றி சொல்லும்போதும் \"நல்ல ஸ்கூல்தான்.. ***** கூட அவங்க குழந்தையை அங்கதான் போட்டிருக்காங்க\" என்கிறார்..\nஎன் அலுவலகத்தின் பார்க்கிங் லாட் அருகே புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. எப்போதுமே குறைந்தது ஐந்து பேராவது அங்கே நின்று ஊதிக்கொண்டு இருப்பார்கள். தடை வந்தவுடன் அலுவல வளாகம் முழுவதும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.\n அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு முட்டுச்சந்து (20 அடி அகலம் இருக்கும்) உள்ளே ஒரு டீக்கடை இருக்கும். அங்கே சென்று தம் அடிக்க ஆரம்பித்தனர். மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்வாங்கி இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் போலீஸார் கண்ணை ஈர்க்காது என்பதால் அங்கு எப்போதும் கூட்டம்தான்.\nஅங்கே டீ நன்றாக இருக்கும் என்பதால் அவ்வப்போது நானும் செல்வதுண்டு (டிஸ்கி: டீ மட்டும்தான்). சென்ற வாரத்தில் ஒருநாள் மாலை நேரம் அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தபோது மெயின் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிள் திரும்பி பார்த்துவிட்டு எங்களை நோக்கி வர ஆரம்பித்தார்.\nஅந்த நேரம் ஒரு 10 பேர் அங்கே தம் அடித்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல் சிலர் டீ மட்டும் குடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தோம். எனக்கா வயிற்றைக் கலக்குகிறது, வருகிறவன் இங்கிருக்கும் எல்லோரையும் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என் மானமும் கப்பலேறி விடுமே ஒரு நல்ல டீ குடிக்க ஆசைப்பட்டது தப்ப��� ஒரு நல்ல டீ குடிக்க ஆசைப்பட்டது தப்பா\nதம் அடிப்பவன்களும் அதே மனநிலைதான் போல. எல்லோரும் 'தம்'மை வெளியே தெரியாதவாறு மறைத்துக்கொண்டு ஓரக்கண்ணால் அந்த கான்ஸை பார்த்துக்கொண்டிருந்தனர். வந்த கான்ஸ் சுற்றியும் பார்த்துவிட்டு கடைக்காரனை பார்த்து மெல்லிய குரலில் கேட்டார்.. \"ஒரு கோல்ட் ஃப்ளேக் குடு\"\nஇரண்டு, மூன்று வாரத்திற்கு முன்னால் நானும் தங்கமணியும் வெளியே சென்றுவிட்டு மதியம் சாப்பாடு வெளியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். வீட்டில் தங்கமணியின் தம்பியும் இருந்ததால் பார்சல் வாங்க அந்த உயர்தர சைவ உணவகத்துக்கு சென்றோம். சென்னையில் மிக மிக பிரபலமான அந்த உணவகத்தில் பார்சல் ஆர்டர் செய்தோம். இரண்டு சாம்பார் சாதம், ஒரு தக்காளி சாதம், ஒரு தயிர் சாதம் என்று நான்கு ப்ளேட் ஆர்டர் செய்தால் பில் 130 ரூபாய் வந்தது.\n ஆவரேஜா ஒரு ப்ளேட் விலை ரூபாய் 32.50 என்று மனதிற்குள் திட்டினாலும், சரி, பரவாயில்ல குவாலிட்டியும் டேஸ்டும்தான முக்கியம், அதுக்குதான தேடி புடிச்சி இங்க வரோம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு பார்சலை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.\nவீட்டிற்கு வந்து பார்சலை பிரித்தப்புறம்தான் கிளைமேக்ஸே படுபாவிகள், வைத்திருந்த சாப்பாட்டின் அளவு ஒவ்வொரு பாக்ஸிலும் இரண்டு கரண்டி அளவில்தான் இருந்தது. இரண்டு வயதாகும் என் மகனுக்கே கண்டிப்பாக அந்த அளவில் இரண்டு ப்ளேட் சாப்பாடு வேண்டும். நாங்களோ வெளியே சுற்றிவிட்டு பசியோடு வந்திருக்கிறோம்.\nஅந்த அளவு சாப்பாடு போடுவதுபோல் அளவாக பிளாஸ்டிக் டப்பா வேறு. தட்டில் அந்த சாப்பாட்டை கொட்டினால் இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் சாம்பார் சாதத்தில் இரண்டு பெரிய சைஸ் காய்கறி வேறு. அதை எடுத்துவிட்டால் ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே சாப்பாடு இருந்தது.\nவந்த கோபத்திற்கு என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே மானசீகமாக அவன்களை நன்றாக திட்டிவிட்டேன், சாபமிட்டேன் என்பது சாலப் பொருத்தமான வார்த்தை. ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் பேர் இது போல் பார்சல் வாங்கிப்போய் ஏமாந்து சாபமிடுவார்கள் அந்த உணவக அதிபருக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனது ஏன் என்று புரிந்தது.\nLabels: அனுபவம், நகைச்சுவை, நிகழ்வு\nஎனக்கு அவனை பாத்தாலே பயமா இருக்கு. மந்திரவாதியாம், எதிர்�� சடைய விரிச்சி போட்டுகிட்டு நெத்தி நெறய விபூதியோட நடுவுல அம்மாம் பெரிய குங்கும பொட்டு.. அவன் அடிக்கிற உடுக்கை சத்தம் வேற காது டமாரமே கிழிஞ்சிடும் போல இருக்கு..\nஎனக்கு பேய் புடிச்சி இருக்காம். ஏன்டா.. பேய் உங்கள மாதிரி படிக்காதவனுங்களாதானடா புடிக்கும். நான் படிச்சவன்டா. எங்க ஊர்லயே மொத மொதலா காலேஜ் போய் எம்.எஸ்.சி பயோ டெக் படிச்சவன்டா நானு. என்னை எந்த பேய்டா புடிக்கப்போவுது யார்றா இப்படி ஒரு புரளிய கெளப்புனது\nஇந்த இடமே ஒரு மாதிரி பயமாத்தான் இருக்கு. என் கைய வேற ரெண்டு பக்கமும் ரெண்டு பேரு இழுத்து புடிச்சிட்டு இருக்கானுங்க. அவனுங்கள பாத்தா இந்த‌ ம‌ந்திர‌வாதியோட‌ சிஷ்ய‌னுங்க‌ மாதிரி ரெண்டு பேர் இருக்கானுங்க‌. ம‌ந்திர‌வாதிக்கு கொஞ்ச‌மும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ மாதிரி ரெண்டு பேர், அதுல‌ ஒருத்த‌ன் என்னை விட‌ வய‌சு க‌ம்மியா இருந்தான்.\nம‌ந்திர‌வாதி கேக்குற‌ எந்த‌ கேள்விக்கும் ப‌தில் சொல்ல‌க்கூடாது. இவ‌ன் ஏற்க‌ன‌வே என‌க்கு பேய் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இருக்கான். நான் பேசுனா அத‌ வெச்சி எதுனா த‌ப்பா புரிஞ்சிகிட்டாலும் புரிஞ்சிக்குவான்.\nபோன‌ வார‌ம் இப்ப‌டித்தான். டவுனுக்கு போனப்ப ப‌ண்ணையாரோட‌ பொண்ணை பாத்து பேசிட்டு இருந்தேன். சின்ன‌ வ‌ய‌சில‌ இருந்தே என்கூட‌ ப‌டிச்ச‌ பொண்ணு அது. சிரிச்ச‌ முக‌மா அழ‌கா இருக்கும். எங்க‌ பாத்தாலும் பேசிட்டுதான் போகும். எதோ க‌ம்ப்யூட்ட‌ர் சென்ட‌ருக்கு வ‌ந்த‌தாம். அவ‌ங்க‌ அப்பா தீவிர‌மா மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காராம். ரெண்டு பேரும் பேசிட்டு இருந்துட்டு ப‌க்க‌த்து க‌டையில‌ போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டோம்.\nநாதாரிப்பயலுவ, எவனோ இத பாத்துட்டு தப்பா நெனச்சிட்டு பண்ணையார்கிட்டபோய் எதோ சொல்லிட்டான் போல. அந்த ஆளுக்காவது அறிவு வேணாம். ஒண்ணும் விசாரிக்காம கரும்பு காட்டுக்குள்ளாற போட்டு என்னை அடி அடின்னு அடிச்சிட்டானுங்க. மரண அடின்னு கேள்விப்பட்டு இருக்கேன். அன்னிக்குதான் அனுபவிச்சேன். ஊரை விட்டு ஓடிடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.\nஇன்னிக்கு என்னடான்னா இவன் எனக்கு பேய் புடிச்சிருக்குன்றான். பேய்ன்னு ஒண்ணு இல்லடா, அது மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் அப்படின்னு யார் இவனுங்களுக்கு புரிய வெக்கிறது. எங்க அப்பா அம்மா வேற எங்கன்னு தெரியல. எப்��டி தப்பிக்கிறதுன்னும் தெரியலயே\nஅவன் கையில சாட்டையை எடுக்கிறான். அடப்பாவி அந்த சாட்டையால என்னை அடிக்கப்போறீயா அந்த சாட்டையால என்னை அடிக்கப்போறீயா போனவாரம் வாங்குன அடியே இன்னும் வலிக்குற மாதிரி இருக்கு. இதுல மறுபடியுமா போனவாரம் வாங்குன அடியே இன்னும் வலிக்குற மாதிரி இருக்கு. இதுல மறுபடியுமா உடுக்கை சத்தம், சாம்பிராணி புகை, இவன் சொல்ற மந்திரம் இதுக்கு மேல சாட்டை அடியா உடுக்கை சத்தம், சாம்பிராணி புகை, இவன் சொல்ற மந்திரம் இதுக்கு மேல சாட்டை அடியா இது ஆகறதில்ல. முடிஞ்சவரைக்கும் திமிறி தப்பிக்கணும்.\nகைய முறுக்கி, ஒரு கைய விடுவிச்சி, இன்னொரு கைய புடிச்சி இழுத்து, புடிச்சிட்டு இருந்தவனுங்கள விடுவிச்சிட்டு, பக்கத்துல இருந்த டேபிள் மேல காலை வெச்சி ஒரே ஜம்ப். நம்பவே முடியல. நானா இப்படி மேட்ரிக்ஸ் படம் மாதிரி ஜம்ப் பண்ணுறேன். மேல சீலிங் பேன்ல உக்காந்துட்டேன். கீழ பாத்தா யாரோ ஒரு சின்ன பையன எல்லாரும் புடிச்சிட்டு இருக்காங்க. அந்த மந்திரவாதி அந்த பையனை போட்டு அடிச்சிருப்பான் போல. அவனுக்கு விபூதி வெச்சிவிட்டு \"இனிமே பிரச்சினை இல்லை\" அப்படின்னு சொல்றான்.\n பைத்தியக்காரனுங்க. இனிமே இங்க இருக்கக்கூடாது. வேற எங்கியாவது போக வேண்டியதுதான். எங்க போறது ஹலோ உங்க வீட்டுல எனக்கு இடம் இருக்கா\nஎன் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்\nஇது என்னோட 25வது பதிவு. முதல்ல இத்தனை நாளா என் பதிவுகளையும் படிச்சி எனக்கு பின்னூட்டம் போட்டு என்னை ஊக்கப்படுத்தின உங்க எல்லாருக்கும் நன்றி. போன ஜீன் மாசம் எழுத ஆரம்பிச்சேன். இந்த அஞ்சு மாசத்துல மொத்தமாவே 25 பதிவுதான்னு சொன்னாலும் உங்க மனசுல நிக்குற மாதிரி எழுதியிருக்கேன்னுதான் நெனைக்கிறேன். அதனால எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு ஷொட்டு, அதேநேரம் பல காரணங்களால நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல, அதுக்கு எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு குட்டு..\nஇந்த பதிவுல என்ன போடுறதுன்னு ரொம்ப யோசிச்சப்ப, அட அப்படின்னு சொல்லமுடியாட்டாலும் கொஞ்ச நாளா என் மனசை அரிச்சிட்டு இருக்குற ஒரு விசயத்த உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சேன். அதுதான் இங்க.. (படிச்சிட்டு திட்டாதீங்க)..\nஎங்க ஊர்ல ஐப்பசி மாச வாக்குல மாரியம்மன் பண்டிகை ரொம்ப விமர்சையா கொண்டாடுவோம். அதுக்காக ஒ��்வொரு நாளும் பாட்டு கச்சேரி, பட்டி மன்றம், விளையாட்டு போட்டின்னு களை கட்டும். இப்படிதான் கொஞ்ச வருசத்துக்கு முன்னால எங்க ஊர்ல இருக்குற ஒரு பெரிய மனுசன் சைக்கிள் ரேஸ் ஏற்பாடு பண்ணுனாரு. போட்டியில் கலந்துகிட்டு ஜெயிக்கிறவங்கள அனவுன்ஸ் பண்றதுக்கும் பரிசு குடுக்குறதுக்கும் எங்க ஊர்லயே பெரிய சைக்கிள் கடை வெச்சிருக்குற அண்ணாச்சியை கூப்புட்டிருந்தாங்க.\nநானும் என் ஃப்ரண்ட்ஸும், ஆஹா ஊருக்குள்ள நம்மள ப்ரூஃப் பண்ண இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சே, இதை விடக்கூடாதுன்னு எங்க சைக்கிளுங்கள நல்லா சர்வீஸ் பண்ணி தெனமும் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம். சின்ன ஊர் அப்படின்றதால யார் யாரெல்லாம் கலந்துக்குவாங்க, யாருக்கு ஜெயிக்கறத்துக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னெல்லாம் ஓரளவுக்கு தெரியும். நானும் இது வரைக்கும் இப்படி ரேஸ்ல எல்லாம் கலந்துகிட்டதே இல்ல. இருந்தாலும் பரவாயில்லை நாமளும் ரவுடிதான்னு உலகம் எப்படி நம்பும்னு வடிவேலு கணக்கா ப்ளான் போட்டேன்.\nபோட்டி வித்தியாசமா இருந்திச்சி. ஏறத்தாழ‌ 30, 40 பேர் கலந்துகிட்டாங்க. எல்லாரையும் ஒரே டைம்ல விட்டா டிராஃபிக் ஜாம் ஆகும்னு, கொஞ்சம் கொஞ்சம் பேரா பிரிச்சி விட்டாங்க. கிளம்புற நேரத்தையும் போய் சேர்ற நேரத்தையும் தனித்தனியா நோட் பண்ணிகிட்டாங்க. இதுல என்ன பிரச்சினைன்னா, நாம ஃபர்ஸ்ட் ப்ரைஸா இல்லையான்னு நமக்கே தெரியாது. அவங்க சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்.\nஆனா ரேஸ் பாத்துகிட்டு இருந்த என் ஃப்ரண்ட்ஸ்லாம் \"கண்டிப்பாக உனக்கு ப்ரைஸ் கிடைக்கும்டா, ரொம்ப நல்லா ஓட்டுன\" அப்படின்னாங்க. ஒரே சந்தோசம். முதல் ப்ரைஸ் இல்லாட்டினாலும் மொத மூணு இடத்துல ஒருத்தனா வந்தா சந்தோசமுன்னு நானும் நெனச்சிகிட்டு இருந்தேன்.\nசாயங்காலம் வரைக்கும் போட்டி நடந்தது. நாங்க எல்லாரும் சாயங்காலமே ஜெயிச்சவங்க பேர் சொல்லிடுவாங்கன்னு நெனச்சோம். ஆனா அவங்க ஒண்ணுமே சொல்லல. சரின்னு மறுநாளும் போய் பாத்தோம். அப்பவும் ஒண்ணும் சொல்லல. சரி, நாப்பது பேரு கலந்துகிட்டாங்க. அத்தனை பேரோட டைம் டீடெய்லயும் சரியா கணிச்சிதானு சொல்ல முடியும் அப்படின்னு நெனச்சோம். சோதனையா, அடுத்த ஒரு வாரத்துக்கு ஒண்ணுமே சொல்லல. எங்களுக்கா ரொம்ப கஷ்டமா போச்சி. \"என்னடா இது ரேஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு மாசம் முன்னாலயே ���ப்படி வெளம்பரம் பண்ணுனாங்க. இப்ப என்னடான்னா இப்படி இழுத்தடிக்கிறாங்களே\"ன்னு பேசிக்குவோம்.\nஅப்படி, இப்படின்னு ஒரு மாசம் கழிச்சி, பண்டிகையெல்லாம் முடிஞ்சப்புறம் ஒருநாளு பக்கத்து ஊட்டு ஃப்ரெண்டு வந்து \"டேய்.. இன்னிக்கு அங்க ரிசல்டு சொல்றாங்களாண்டா வா, ஒனக்கு ப்ரைஸ் குடுக்கப் பேர் கூப்புடுறப்ப நீ இல்லைன்னா நல்லா இருக்காது\" அப்படின்னு சொன்னான். ஆஹா.. அப்படின்னு விழுந்தடிச்சி ஓடுனேன் (அந்த வேகத்துலயும், போட்டோ எடுத்தா பளிச்சின்னு தெரியுறதுக்காக பவுடரை அப்பிட்டு ஓடுனது வேற கதை).\nஅங்க போனா ஒரு சின்ன மேடையில ஊர் பெரிய மனுசனுங்க எல்லாம் உக்காந்திருந்தாங்க. இத்தன பேருக்கு நடுவுல நம்ம பேரை சொல்லத்தான் போறாங்கன்னு அப்படியே இளிச்சிகிட்டே நின்னுகிட்டு இருந்தேன். சைக்கிள் ஷாப் ஓனர் கையில ஒரு லிஸ்ட் இருந்தது. அதை ஒரு தடவை படிச்சிட்டு அவர் மைக் முன்னால நின்னாரு..\n\"எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் இந்த சைக்கிள் ரேஸ்க்கு இவ்ளோ ஆதரவு தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கையில உங்க எல்லோரோட டைம் டீடெய்லும் இருக்கு. இதுல மூணுபேருக்கு ப்ரைஸ் குடுக்கப் போறோம்.\"\nஅப்படின்னு நிறுத்தினாரு. எனக்கா தாங்கல. இந்த மனுசன் ஏன் இப்படி நீட்டி முழக்குறாரு. சொல்லவேண்டியதுதான அப்படின்னு நெனச்சிகிட்டே அவர் சொல்றத கேட்டுகிட்டு இருந்தேன்.\n\"ஆனா பாருங்க.. உலகத்துல எத்தனையோ சைக்கிள் இருக்குது, ஆனா நான் விக்குற அட்லஸ் சைக்கிள் மாதிரி வேற எதுவுமே கிடையாது. அதனால அட்லஸ் சைக்கிள் வெச்சி இந்த ரேஸ்ல கலந்துகிட்டவங்கள்ல இருந்து மொத மூணு பேரை தேர்ந்தெடுக்கப்போறேன்\" அப்படின்னாரு..\nஎங்க மாமா வீட்டு லேத் பட்டறையில இரும்பை வெட்றதுக்கு வெட்டிரும்பை கம்பி மேல வெச்சி சம்மட்டியால ஓங்கி அடிப்பாங்க. அதை என் தலையில அடிச்ச மாதிரி இருந்திச்சி. பின்ன, நாம ஓட்டுனது எங்க அப்பாவுக்கு அவரோட அப்பா வாங்கி குடுத்த ஹீரோ சைக்கிளாச்சே.\nமனசே கனத்து போச்சி.. ஆனா ஒரே சந்தோசம், ஜெயிச்ச மூணு பேருமே திறமைசாலிங்க அப்படின்றதுதான். அதுலயும் மொதோ பிரைஸ் வாங்குனவரு பயங்கரமா சைக்கிள் ஓட்டுவாரு. கைய விட்டுட்டு ஓட்டுறது, சைக்கிள் மேல நின்னுகிட்டு ஓட்டுறது, பின்னால திரும்பி பெடல் பண்ணுறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். அவர் எங்கியாவது ச��க்கிள் ஓட்டுறார்னா ஓடிப்போய் பாக்குறவங்கள்ல நானும் ஒருத்தன். அதனால அவரை பாத்து கை குடுத்துட்டு பாராட்டிட்டு திரும்பி வந்துட்டோம்.\nதிரும்பி வர்றப்ப என் ஃப்ரெண்டு கேட்டான் \"அவங்க மூணு பேரும் திறமைசாலிங்க, ப்ரைஸுக்கு தகுதியானவங்க அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லடா. ஆனா இந்த சைக்கிள் ஷாப் ஓனர் இப்படி பண்ணிட்டாறேடா ரேஸ் எல்லாம் முடிஞ்சப்புறம் அட்லஸ் சைக்கிள் மட்டும்தான் போட்டிக்கு எடுத்துக்குவேன் அப்படின்னு சொல்லிட்டாரேடா ரேஸ் எல்லாம் முடிஞ்சப்புறம் அட்லஸ் சைக்கிள் மட்டும்தான் போட்டிக்கு எடுத்துக்குவேன் அப்படின்னு சொல்லிட்டாரேடா அட, நீ ப்ரைஸ் வாங்காதது பிரச்சினை இல்லை, ஆனா உன்னை ப்ரைஸுக்கு கன்ஸிடர் கூட பண்ணலியேடா அட, நீ ப்ரைஸ் வாங்காதது பிரச்சினை இல்லை, ஆனா உன்னை ப்ரைஸுக்கு கன்ஸிடர் கூட பண்ணலியேடா எதுக்கெடுத்தாலும் கத்துவ.. நீ ஏன்டா அங்கியே சத்தம் போடலை எதுக்கெடுத்தாலும் கத்துவ.. நீ ஏன்டா அங்கியே சத்தம் போடலை\nஅதுக்கு நான் அவன்கிட்ட சொன்னேன் \"டேய், எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது அப்படின்றது நெஜந்தான். ஜெயிச்ச மூணு பேரும் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க பாத்தியா அங்க நான் போய் ஏன் நீங்க இதை மொதல்லியே சொல்லலன்னு சத்தம் போட்டா ஜெயச்சவங்களோட கொண்டாட்டம் அப்படியே அடிபட்டு போயிடும். ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்லடா அங்க நான் போய் ஏன் நீங்க இதை மொதல்லியே சொல்லலன்னு சத்தம் போட்டா ஜெயச்சவங்களோட கொண்டாட்டம் அப்படியே அடிபட்டு போயிடும். ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்லடா ஏமாற்றம்லாம் நமக்கு புதுசா என்னா ஏமாற்றம்லாம் நமக்கு புதுசா என்னா\nபதிலுக்கு என்னை பாத்த பார்வைக்கு அவன��� என்னை முறைச்சானா இல்லை பரிதாபப்பட்டானா அப்படின்றதுதான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்லை. ஒரு சிலது புரியாம இருக்குறதுதான் நல்லதோ..\nமேல சொன்ன கற்பனை கதைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க\nLabels: 25ம் பதிவு, அனுபவம், நகைச்சுவை, நிகழ்வு\nபோடுறா.. சினிமா தொடர் பதிவை...\nஏறத்தாழ தமிழ்பதிவு எழுதுற பதிவர்கள்ல 90% பேர் ஏற்கனவே எழுதிட்ட இந்த தமிழ் சினிமா தொடர் விளையாட்டுல என்னையும் அழைத்த பரிசல், நர்சிம் மற்றும் துக்ளக் மஹேஷ் மூணு பேருக்கும் நன்றி.\nமுடிஞ்ச வரைக்கும் எல்லா கேள்விக்குமான பதிலையும் ஷார்ட் & ஸ்வீட்டா (இதுக்கு தமிழ்ல என்னப்பா) குடுக்க‌ முய‌ற்சி ப‌ண்றேன்.\n1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nஎன் சின்ன வயதில் நாங்கள் சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த ஹவுசிங் போர்டில் இருந்த போது அருகிலுருந்த பச்சியம்மாள் தியேட்டருக்கு சென்றது மங்கலாக நினைவில் இருக்கிறது. பெயருடன் நினைவில் நிற்கும் படம் என்றால் 20 வருடங்களுக்கு முன் பாப்பிரெட்டிபட்டியில் ஜெயஷ்ரீ திரையரைங்கில் பார்த்த \"இளமைக் காலங்கள்\". ஈரமான ரோஜாவே பாடல் மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. என்ன உணர்ந்தேன் என்று நினைவில்லை.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nஎன் மகனை வைத்துக் கொண்டு மூன்று மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முற்றிலும் முடியாத காரணம், அதனால் ஆசை இருந்தாலும் அதிகமாக தியேட்டரில் படம் பார்ப்பதில்லை. டிரைவ் இன் தியேட்டரை அரங்கு என்று சொல்லமுடியுமா என்று தெரியாது. சென்னை பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் பார்த்த சந்தோஷ் சுப்பரமணியம். என் தங்கமணியின் நண்பி குடும்பத்துடன் இரவு காட்சிக்கு சென்றிருந்தோம். காருக்கு முன்னால் பெரிய பெட்ஷீட்டை விரித்து குழந்தையை தூங்க வைத்துவிட்டு நாங்களும் அவனுடனே படுத்துக்கொண்டு ஜாலியாக பார்த்த படம். படமும் பிடித்திருந்தது. ஒரு திருப்தியான ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியுடன் திரும்பினோம். அதற்கு முன்னால் பார்த்தது Die Hard 4 (சேலம் சங்கீத் தியேட்டரில்)\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nதசாவதாரம்.. இதுகுறித்து ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.\n4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nதாக்கிய என்பதற்கு மிகவும் பிடித்த என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால் பல படங்களை சொல்ல முடியும், பாட்ஷா, உள்ளத்தை அள்ளித்தா, கேப்டன் பிரபாகரன், Armour of God, Independance Day, அபூர்வ சகோதரர்கள் என்று கலவையாக இருக்கும். ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு படங்களுமே மிகவும் பிடிக்கும்.\n5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\nஅட.. தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந்தமே என்னை ரொம்ப கடுப்பாக்கி தாக்குகிறது, இதில் எதை சொல்ல...\n5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nசமீபத்தில் தசாவதாரம் படத்தின் சில காட்சிகள். நிச்சயமாக ஹாலிவுட் அளவிற்கு சொல்ல முடியாதெனினும், கண்டிப்பாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது மிக அதிகம்தான். முக்கியமாக மருத்துவமனை காட்சி, அத்தனை கமல்கள் ஒரே நேரத்தில் காட்டப்படுவதில் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் அந்த காட்சியில் மட்டும் 27 லேயர் இருந்ததாக சொன்னார்.\nஅப்புறம், எந்த கிராமத்து காதலர்களா இருந்தாலும் டூயட் பாட எல்லா வெளிநாட்டுக்கும் போய்ட்டு பாட்டு முடிந்ததும் சரியா கிராமத்துக்கே திரும்பி வர்றது, அந்த தொழில்நுட்பம் என்னை ரொம்ப தாக்கிடுச்சி..\n6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nகுமுதம், விகடன், வாரமலர், முரளிகண்ணன் இவ்வளவுதான் நம்ம சினிமா பத்தின வாசிப்பு. கிசுகிசுக்களை படிச்சி அது யாரை பத்தினதுன்னு டீ கோட் பண்றதுல இன்ட்ரெஸ்ட் அதிகம்.. ஹி..ஹி..\nஎன் ப்ரொஃபைலில் சொல்லியிருப்பேன், \"ராசா இசைன்னா சோறு தண்ணி கூட வேண்டாம்\" அப்படின்னு. இளையராஜாவின் இசையை ரொம்ப பிடிக்கும்னாலும் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களும் நல்லா இருந்தா ரசிப்பேன். மிக மிக பிடித்த குரல், ஆண்களில் எஸ் பி பி, பெண்களில் சுசிலா & சித்ரா. என்னோட டாப் 5:\n1. இளைய நிலா பொழிகிறது : பயணங்கள் முடிவதில்லை : இளையராஜா : எஸ் பி பி\n2. இது ஒரு பொன் மாலைப் பொழுது : நிழல்கள் : இளையராஜா : எஸ் பி பி\n3. உதய கீதம் பாடுவேன் : உதயகீதம் : இளையராஜா : எஸ் பி பி\n4. காதல் வந்தால் சொல்லியனுப்பு : இயற்கை : வித்யாசாகர் : திப்பு\n5. காதல் ரோஜாவே : ரோஜா : ஏ ஆர் ரஹ்மான் : எஸ் பி பி\n(அட அஞ்சுமே ஆண் குரல் சோலோ பாடல்கள்)\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nசின்ன வயதிலிருந்தே ஆங்கில படங்கள் பார்ப்பதுண்டு, ஜாக்கிசானை பிடிக்கும். ஹாலிவுட் படங்களில் நல்ல ஆக்சன் படங்களை விரும்பி பார்ப்பேன். மிக அரிதாக மற்றவகை ஆங்கிலப் படங்களையும் பார்ப்பதுண்டு. அப்படி மனதை கொள்ளை கொண்ட படம் \"50 First Dates\". ஏன் இன்னும் அதை தமிழில் யாரும் காப்பி அடிக்கவில்லை என்று தெரியவில்லை.\nஹைதராபாத்தில் 3 வருடம் இருந்ததால் கொஞ்சம் தெலுங்கு படங்களும் பார்த்ததுண்டு. ரசித்து பார்த்தது \"சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்\". வசூல்ராஜாவை விட பலமடங்கு நன்றாக இருந்ததாக எண்ணம்.\n9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nஇப்போதைக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இரண்டு வருடம் கழித்து இந்த கேள்விக்கான பதில் \"ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆகியோர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்\" என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\n10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nதொழில்நுட்ப ரீதியாக நல்ல வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 30 வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போல ஒரு சாதாரண மனிதனால் இந்த துறையில் இன்று நுழைய முடியாது என்ற உண்மைதான் முகத்தில் அறைகிறது. பணம், அரசியல் பின்புலம், பிரபலத்தின் வாரிசு என்ற மூன்றில் ஒன்றாவது இருந்தால்தான் சினிமாவில் நுழைய முடியும் என்பதுதான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியை சந்தேகப்பட வைக்கிறது.\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஇந்த நினைப்பே வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. சென்னையில் இருக்கும் நமக்கு பீச், தீம் பார்க் என்று பல பல பொழுது போக்குகள். ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் நடுத்தர, ஏழை மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. அதனால் அது இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்ப்பது கூட கடினமாக இருக்கிறது.\nஎனக்கு தெரிஞ்ச எல்லா பதிவர்களும் இந்த ���ொடர்ல ஏற்கனவே எழுதிட்டதால நான் யாரையும் கூப்பிட முடியல. தொடர் விளையாட்டுல லேட்டா பதிவு போட்டா இதுதான் பிரச்சினை. அதனால நான் யாரையும் கூப்பிடல. எல்லாரும் சந்தோசமா இருங்க.. :))))\nசுழல் கதைகள் (5 இன் 1)\nடிஸ்கி: இந்த பதிவுல மொத்தம் 5 சின்னக்கதைகள் இருக்கு. ஒவ்வொரு கதையும் தனித்தனி. அதனால போர் அடிச்சா அப்படியே மீதியை விட்டுட்டு பின்னூட்டம் போட போயிடலாம். ஒவ்வொரு கதையோட முடிவும் அடுத்த கதையோட ஆரம்பம் அப்படின்ற மாதிரி எழுதியிருக்கேன். நல்லாயிருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க.\nஇதயத்திற்குள் நுழைந்த துப்பாக்கி குண்டை கைகளால் அழுந்தியபடி சரிந்த சரவணபாண்டியன் நம்ப முடியாமல் எதிரில் இருந்தவனைப் பார்த்தான்.\n பி.ஏ.கிட்ட மினிஸ்டரு பணம் குடுத்துவிட்டதா சொன்னாரு, ஆனா இவன் சுட்டுட்டானேன்னா ஹா..ஹா..ஹா.. எதிர்க்கட்சியில இருந்து இங்க வந்து நீ சேந்ததே ஏதாவது ஆதாயம் கிடைக்குமுன்னுதான். அதே மாதிரி உன்னால என்ன ஆதாயம் கிடைக்குமுன்னு எங்க மினிஸ்டரும் யோசிக்க மாட்டாரா ஹா..ஹா..ஹா.. எதிர்க்கட்சியில இருந்து இங்க வந்து நீ சேந்ததே ஏதாவது ஆதாயம் கிடைக்குமுன்னுதான். அதே மாதிரி உன்னால என்ன ஆதாயம் கிடைக்குமுன்னு எங்க மினிஸ்டரும் யோசிக்க மாட்டாரா நீ இங்க வந்து சேந்தது இப்ப மொத்த தமிழ்நாட்டுக்கும் தெரியும், இப்ப உன்னை கொன்னது எதிர்கட்சிக்காரன்னுதான் எல்லாரும் நெனப்பாங்க. அது எங்களுக்கு வரப்போற தேர்தல்ல உதவப்போகுது. வரட்டா நீ இங்க வந்து சேந்தது இப்ப மொத்த தமிழ்நாட்டுக்கும் தெரியும், இப்ப உன்னை கொன்னது எதிர்கட்சிக்காரன்னுதான் எல்லாரும் நெனப்பாங்க. அது எங்களுக்கு வரப்போற தேர்தல்ல உதவப்போகுது. வரட்டா\nஎன்றவாறே கிளம்பி சென்றவனை பார்த்தவாறே கண்களை மூடினார் சரவணபாண்டியன்.\nஅமைச்சருக்காக அரைமணி நேரம் காத்திருந்து அவர் வந்தவுடன் நடந்ததை விளக்கி பணம் வாங்கிக் கொண்டு கிளம்பும்போது கதவு தட்டப்பட்டது. திற‌ந்த அமைச்சர் இன்ஸ்பெக்டரை பார்த்து அதிர்ந்தார்.\n\"ஆளுங்கட்சி பணம் கொடுத்து ஆளுங்களை இழுக்குறத நிரூபிக்கறதுக்காக எதிர்கட்சிக்காரங்க ஏற்பாடு பண்ணின ஸ்டிங் ஆபரேசன்தான் சரவணபாண்டியன் உங்க கட்சிக்கு வந்து சேர்ந்தது. நீங்க பணம் குடுக்குறத படம் புடிக்க உங்களுக்கே தெரியாம வெச்சிருந்த வீடியோ கேமிரால உங்க பி.ஏ. ��ுட்டதும், பேசுனதும் தெளிவா பதிவாயிடுச்சி. சி.எம் உங்களை அமைச்சர் போஸ்ட்ல இருந்தும், கட்சியில இருந்தும் நீக்கிட்டாரு. போலாமா சார்\nஎன்றவாறே கை விலங்கை காட்டியவரை அதிர்ச்சியுடன் பார்த்தார் முன்னாள் அமைச்சர்.\nகை விலங்குடன் அழைத்து வரப்பட்ட அவனை பயத்துடன் பார்த்தனர் கோர்ட் வளாகத்தில் இருந்த அனைவரும். அவன் பீட்டர் சக்திவேல். தென்னிந்தியாவின் மிகக் கொடூரமான தீவிரவாதி. 2003ல் முத்துநகர் எக்ஸ்பிரஸிலும், 2004ல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸிலும், 2005ல் சென்னை வடபழனி பேருந்திலும் நடந்த குண்டுவெடிப்புகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்குமே. அதன் சூத்திரதாரி.\nகடந்த மாதம் அரிசிக் கடத்தலை தடுக்க நடந்த இரவு நேர சோதனையில் காவல்துறையே நம்பமுடியாத வகையில் மாட்டியவன். எதற்காக அவன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தான் என்பது புரியாமல் காவல்துறை பெருந்தலைகள் இல்லாத முடியை பிய்த்துக்கொண்டிருப்பது அறிந்ததே.\nஇதோ ஒரு வழக்கு விசாரணைக்காக மதுரை வந்துவிட்டு சென்னை திரும்பும் காவல் வாகனத்தில் 5 காவலர்கள் புடை சூழ வந்து கொண்டிருந்தவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தான்.\n'இன்னிக்கு மதுரையில அழகர் ஆத்துல இறங்கப்போறாரு. அந்த இடத்துல வெக்கிறதுக்காக நான் பாம் செஞ்சு குடுத்துட்டு வர்றப்பதான் என்னை புடிச்சிட்டீங்க. இதோ நான் மதுரையில இருந்து கிள‌ம்பிட்டேன். இன்னும் 2 ம‌ணி நேர‌த்துல‌ வெடிக்க‌ப்போகுது. போங்க‌டா போக்க‌த்த‌வ‌னுங்க‌ளா'\nஎன்று நினைத்துக் கொண்டிருந்த‌ அதே வேளையில், அவ‌ன் போலீஸில் சிக்கிய‌தும், போலீஸுக்கு பயந்த அவன் கூட்டாளி வெடிகுண்டை ஒரு பப்ளிக் டாய்லெட்டில் வீசிவிட்டு சென்றதும், அடுத்த பத்து நிமிடத்தில் உணவகத்தில் நிற்கும்போது டாய்லெட் செல்லும் அவன் வெடித்து சிதறப்போவதும் தெரியாம‌ல் ச‌ந்தோச‌ப்ப‌டும் அவ‌னை நினைத்து அழ‌க‌ர் சிரித்துக் கொண்டிருந்தார்.\n\"என்னா சோலை.. வறட்சி நிவாரணம் பணம் முழுசும் உனக்கே குடுத்துட்டா அப்புறம் எங்களுக்கு நிவாரணம் யாரு குடுக்குறது ஒனக்கு ஏக்கருக்கு ரெண்டாயிரம்னு மொத்தம் பத்தாயிரம் சாங்ஷன் ஆகியிருக்கு, வெளியில போயி முருகன் இருப்பான், அவன்கிட்ட ஆயிரம் ரூபா குடுத்துட்டு வா, ஒனக்கு நான் டோக்கன் குடுக்குறேன்\"\nவெளியில் வந்த சோலை \"படுபாவிங்க, 6 மாசமா மழையே இல்லாம கடவுள்தான் கழுத்தறுக்குறாருன்னா, கவர்மென்டு குடுக்குற வறட்சி நிவாரணத்தைக் குடுக்குறதுக்கு இவனுங்களும் கழுத்தறுக்கிறானுங்க\" என்று நினைத்தவாறே, கடன் வாங்கி வந்திருந்த ஆயிரம் ரூபாயை ஆபிசர் சொல்லியவனிடம் கொடுத்து, பின் டோக்கன் வாங்கி, வரிசையில் காத்திருந்து பணம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தான்.\n'இன்னும் அஞ்சு கிலோமீட்டர் போகணும். ஆண்டவனே எவ்ளோ நல்லா விவசாயம் நடந்துட்டு இருந்த கிராமம். மழை சரியா பேஞ்சு முப்போகமும் வெளஞ்சி கிராமமே பச்சப் பசேல்னு இருக்குமே எவ்ளோ நல்லா விவசாயம் நடந்துட்டு இருந்த கிராமம். மழை சரியா பேஞ்சு முப்போகமும் வெளஞ்சி கிராமமே பச்சப் பசேல்னு இருக்குமே கொஞ்சம் கொஞ்சமா மழை கொறஞ்சி இந்த வருசம் சுத்தமா இல்லாம போச்சே.. ஏன் எங்கள இப்படி சோதிக்கிற' என்று புலம்பியவாறே வறண்டு கிடந்த ஏரிக்குள் நுழைந்தான்.\nலேசாக வானம் கறுக்க ஆரம்பித்திருந்தது, அவன் அணிந்திருந்த அழுக்கான மெல்லிய சட்டையைத் தாண்டி லேசான குளிர் தெரிய ஆரம்பித்தது. த‌லையைத் தூக்கி வான‌த்தைப் பார்த்த‌வ‌ன் ஆண்ட‌வ‌னை வேண்ட‌ ஆர‌ம்பித்தான்..\n இன்னும் ரெண்டு கிலோமீட்ட‌ர் ஊருக்கு போக‌ணும். இந்த பணத்தை நம்பிதான்யா எங்க எதிர்காலமே இருக்கு. ஏரியைத் தாண்டி வூட்டுக்கு போற‌ வ‌ரைக்கும் ம‌ழை வ‌ராம‌ நீதாம்பா காப்பாத்துணும்'\n\"என்னாது நான் உன்ன காப்பாதுறதா நான் என்னைய‌ காப்பாத்திக்கவே போராடிட்டு இருக்கேன்\" என்றான் மாணிக்கம்.\n\"அதில்ல மச்சான்.. உனக்குதான் தெரியுமே நான் அந்த சீட்டு கம்பெனியில வேலைக்கு சேந்தது. எங்க குப்பத்துல என்னைய எல்லாருக்கும் நல்லா தெரியும்ன்றதால எல்லார்கிட்டயும் பேசி சீட்டு சேத்து விட்டேன். எனக்கும் கமிஷன் கிடைச்சிது. அந்த நாதாரி இப்படி ஒரே நைட்ல எல்லா பணத்தையும் எடுத்துட்டு ஓடுவான்னு எனக்கென்னா தெரியும்\n\"சரி.. சரி.. அழுவாத.. அதுக்குதான் நான் மொதல்லயே சொன்னேன். இப்பல்லாம் ஏமாத்துறவனுங்க டைரக்டா செய்யுறதில்ல, இப்படி அந்த ஏரியாவுல நல்ல பேர் இருக்குறவனா பாத்து புடிச்சு போடுறானுங்க.. நீயும் அதுக்கு பலிகடா ஆயிட்ட\"\n\"சரி.. ஒண்ணு பண்ணு.. சாப்டுட்டு போய் நம்ம போட்டாண்ட நில்லு, கபாலி வருவான், இன்னிக்கு அவன் மட்டும்தான் கடலுக்கு போறான். நீயும் அவன் கூ�� போயிட்டு வா. தரையில இருக்குறது ஒனக்கு இப்ப சேஃப் இல்ல\"\nஒரு மணிநேரம் கழித்து கபாலி வந்தான். அவனிடம் விவரம் எதுவும் சொல்லாமல் ஒரு சிறிய பிரச்சினை என்று மட்டும் சொல்லி, அவனுடன் படகில் கிளம்பினான்.\nகபாலியும், மச்சானும்தான் சேர்ந்து இந்த படகை வாங்கினார்கள். கபாலி ரொம்ப நல்லவன். 15 வருசமாக இருவரும் சேர்ந்து தொழில் செய்தாலும் இதுவரை தகராறு எதுவும் வந்ததில்லை. ஆனால் அவன் ஒரு வாயாடி.. பேசிக்கொண்டே வந்தான். 2 மணிநேரத்திற்கு பிறகு மெதுவாக கபாலி கேட்டான்..\n\"ஏன் முத்து.. நமக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் புதுசா சீட்டு கம்பெனி ஆரம்பிச்சிருக்காரு.. நல்ல மனுசந்தான்.. நானே சேத்து உடறேன்.. நீ வேணா ஒரு அம்பதாயிரம் ரூபா சீட்டு போடேன்\"\n\" என்று மெதுவான குரலில் கேட்டான் கிருஷ். அவர்கள் இருந்தது நகரின் பிரபலமான காஸினோவின் ப்ளாக் ஜாக் டேபிளில்..\n\"விளையாண்டுட்டுதானேடா இருக்கோம்\" சிரித்தான் சித்தார்த்.\n\"ஏற்கனவே 18 இருக்கு, இன்னும் கார்டு கேக்குற, ரெண்டு, மூணு இல்லை ஏஸ் வரலைன்னா நீ தோத்துடுவ\"\n\"பரவாயில்ல, டிரை பண்ணுவோம், லைஃப்ல ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாதுடா. அதுவும் இது என்னா சுண்டைக்கா, ரெண்டாயிரம் டாலர்தான, போயிட்டு போவுது\"\nஅடுத்த சீட்டு 2 வந்தது. சித்தார்த் ஜெயித்தான். அவன், அமெரிக்க ராணுவத்திற்கு தளவாடம் சப்ளை செய்யும் மிக முக்கியமான நிறுவனத்தின் ஆர் & டி பிரிவின் மிக மிக முக்கியமான நபர். மறுநாள் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு நடக்க இருக்கும் ரகசிய டெமோவிற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ரிலாக்ஸேஷனுக்காக காஸினோ வந்திருந்தனர்.\n\"என்னமோ போடா.. உன்னை பாராட்டுறதா திட்டுறதான்னு தெரியல. ஒரு விசயம், எல்லா நேரத்திலயும் அதிர்ஷ்டம் கை குடுக்காது. பாத்து நடந்துக்க\"\n\"கம்முனு இருடா.. சும்மா பாட்டி மாதிரி புத்தி சொல்லிட்டு\" சிரித்துக் கொண்டே காரை கிளப்பினான்.\nமறுநாள், புதிதாக வடிவமைக்கப்பட்ட குறைந்த எடையுடைய ஆனால் அதி நவீன துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டாவையும் தடுக்கக்கூடிய கவச உடை டொமோ. கடந்த ஒரு மாதமாக எல்லா விதமாக டெஸ்டிங்கும் செய்து அறிக்கை அளித்திருந்த அவனது டீமிற்கு நன்றி சொல்லிவிட்டு டெமோ பீஸுடன் கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தான் சித்.\n\"ஹாய் சித்.. ஏன் இந்த டெமோவை வெளியில வெச்சிக்கக் கூடாது. ஏன்னா ரியல் டைம் டெமோவா இருக்கணும்னு பார்க்குறோம்\"\n\"ஷ்யூர்.. வாங்க போகலாம்\" வெளியே வந்தான். மே மாத வெயில் 98 டிகிரியில் கொளுத்திக்கொண்டிருந்தது. லேசாக வியர்க்க ஆரம்பித்தது.\n\"இப்போ நானே இதை போட்டுக்கிறேன்.\"\n\"அப்படி பண்ணினா, இந்த ப்ராடக்ட் மேல எனக்கே நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்\" ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தான் சித்.\n\"நீங்க என் உடம்பை குறி பாத்து சுடுங்க ஜாக்..\"\n\"நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க சித்\" என்று கூறியவாறே குறி பார்த்து சுட்டான் ஜாக்.\nஅவன் டிரிக்கரை அழுத்திய வினாடி, சித்தார்த்திற்கு முதல் நாள் டெஸ்ட் ரிப்போர்டில் படித்த ஃபெய்லியர் கேஸஸ் லிஸ்ட் நினைவுக்கு வந்தது.\n'வெப்பநிலை 95 டிகிரிக்கு அதிகமாகவும் ஈரப்பதம் 30%க்கு அதிகமாகவும் செல்லும்போது கவச உடையில் உள்ள ஃபைபர் நெகிழ்ந்து துப்பாக்கி குண்டை தடுக்கும் சக்தியை இழக்கிறது. 116க்கு 1 முறை இந்த நிகழ்வு காணப்பட்டது'\nவெப்பநிலை கிட்டதட்ட 100 இருக்கும். தன் வேர்வையில் ஏற்கனவே உடை முழுதும் நனைந்துள்ளது. அதிர்ந்து போய் பார்த்தான். துப்பாக்கி குண்டு அவன் நெஞ்சுக்கு நேராக வந்துகொண்டிருந்தது.\n(இப்போ முதல் கதையை படிக்க ஆரம்பிங்க)\nLabels: சிறுகதை, சின்னக்கதைகள், சுழல்கதைகள்\nசென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு\nசென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு நடக்க இருப்பதாக சென்னை பதிவர் சங்க தற்காலிக பொறுப்பாளர் அதிஷா தெரிவித்துள்ளார். இதன் விவரங்கள் பின்வருமாறு:\nஇன்று சென்னை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த பதிவர் சங்க பொறுப்பாளர் அதிஷா, சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பதிவர்கள் சந்தித்து மொக்கை போடாமல் இருப்பதாக கடற்கரை சாலையில் கால்கடுக்க நின்றிருக்கும் காந்தியடிகள் கவலைப்பட்டுள்ளதாகவும், இதை முன்னிட்டு வரும் அக்டோபர் நான்காம் தேதி மாலை மாபெரும் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்க ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து கொண்டு தமிழ் வளர்த்து வரும் அண்ணன் பொட்\"டீ\"க்கடை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை லக்கிலுக் தலைமையிலான பதிவர் படை இறுதி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஇந்த மாநாடு டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிவர்களிடையே அரசியல் மிகுந்து இருப்பதாகவும் ஆனால் அந்த அரசியலால் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது என்பதால் எந்த டிவியும் கண்டுகொள்ள போவதில்லை என்றும் தெரிவித்தார்.\nசென்னையில் இருக்கும் அனைத்து தமிழ் பதிவர்களும் அலைகடலென திரண்டு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், மாநாடு முடிந்தபின் டமாரு கொமாருவுடன் காண்டு கஜேந்திரனை சந்திக்க செல்வதாக முடிவு செய்திருப்பதாகக் கூறினார். இந்த செய்தியை அவர் சொன்னதற்கு காரணம் தாமிரா மற்றும் வால்பையனை வரவழைக்கவே என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.\nமாநாட்டிற்கான ஏற்பாடுகளில் பதிவர் முரளிகண்ணன் முழுவீச்சில் ஈடுபட்டிருப்பதால் பெரும் கூட்டம் கூடும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.\nதிருமணத்திற்கு பிறகு பதிவு எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட தல பாலபாரதிக்கு மாநாட்டில் கறுப்புக் கொடி காட்ட வெண்பூ உள்ளிட்ட பதிவர்கள் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்திகளை அடியோடு மறுத்த அவர் இது போன்ற செய்திகளுக்கு வெளிநாட்டு சதியே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.\nநாள்: அக்டோபர் 4, 2008 (சனிக்கிழமை)\nநேரம்: மாலை 6 மணி\nஇடம்: சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புறம்\nகலந்து கொள்பவர்கள்: சென்னைவாழ் பதிவர்கள் அனைவரும்\nஎதிர்ப்பார்க்கப்படுபவர்கள்: புதிய பதிவர்கள் மற்றும் இதுவரை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத பதிவர்கள்\nஅதிஷா மின்னஞ்சல் முகவரி - dhoniv@gmail.com\nஅதிஷா அலைபேசி எண் - 9941611993\nசந்திப்பு குறித்த மற்ற பதிவுகள்:\nஅதிஷா : சென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008\nமுரளிகண்ணன் : அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு\nLabels: அக்டோபர், சென்னை, நிகழ்வு, பதிவர் சந்திப்பு, பதிவர்வட்டம்\n( டிஸ்கி 1: திட்டுவதற்கு முன் லேபிளை பார்க்கவும்.\nடிஸ்கி 2: இந்த பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனவே விக்கியை யாரும் திட்டவேண்டாம் )\nLabels: கவுஜ‌, கொலைவெறி கவிதை, நகைச்சுவை\nஅதிஷாவிற்கு வாழ்த்துக்கள் (விகடனில் அவரது படைப்பு)\nலக்கிலுக், குசும்பன், பரிசலை அடுத்து மற்றொரு பதிவரின் படைப்பு விகடனில் வந்துள்ளது.\nகும்மி நண்பர் அதிஷாவின் \"தமிழ் வாழ்க\" இன்று யூத்புல் விக‌ட‌னில் வ‌ந்துள்ளது. அவ‌ருக்கு வாழ்த்துக்க‌ள் ம‌ற்றும் பாராட்டுக்க‌ள்.\nதொட‌ர்ந்து ப‌திவ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளித்துவ‌ரும் விக‌ட‌ன் குழும‌த்துக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌.\nஅவ‌ர‌து ப‌திவை வாசிக்க‌ இங்கே செல்ல‌வும்.\nபின்குறிப்பு: இந்த நல்ல செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்ட பரிசலுக்கு நன்றி.\nLabels: அதிஷா, பதிவர்வட்டம், விகடன்\nகாணாமல் போனவை: சைக்கிள், நண்பர்கள் அப்புறம் .... நேர்மை\n\"கால ஓட்டத்தில் காணாமல் போனவை\" என்ற தலைப்பில் பதிவர் சுரேகா ஆரம்பித்த தொடரில் என்னையும் இணைத்த நண்பர் பரிசலுக்கு நன்றி.\nகடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் ஒவ்வொருவருக்குமே கால ஓட்டத்தில் காணாமல் போன ஒரு விசயமாவது நினைவுக்கு வரும் என்பதும் அது இல்லாமல் போனது குறித்த பெருமூச்சும் வெளிப்படுவது நடக்கக் கூடியதே. இந்த தொடருக்காக நான் திரும்பிப் பார்த்த போது என்னை பெருமூச்சு விட செய்த மூன்று விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஎன் பால்ய பருவத்தில் நாங்கள் இருந்தது பாப்பிரெட்டிபட்டி வனத்துறை க்வார்ட்டர்ஸில். அந்த கொஞ்சம் பெரிய கிராமத்தில் / சிறு நகரத்தில், மொத்தமாக ஒரு 3 ஏக்கர் பரப்பளவில் பெரிய க்வார்ட்டர்ஸ். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 7 வீடுகள். க்வார்ட்டர்ஸின் நட்ட நடுவில் பெரிய கட்டிடத்தில் வன அலுவலகம் என்று அற்புதமான சூழ்நிலை. அவ்வளவு பெரிய இடமுமே எங்களுக்கான விளையாட்டு மைதானம்தான். அதிலும் அப்போது அருகில் வாணியாறு அணை கட்டப்பட்டு வந்ததால் அங்கு வெட்டப்பட்ட சிறிய, பெரிய மரங்களும் (சில மரங்களின் விட்டம் 10 அடிக்கு மேல்) அங்கே அடுக்கப்பட்டிருக்கும். (டிராக் மாறி போறேனோ..)\nஅங்கேதான் நான் முதல் முதலாக சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தது. அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் குரங்கு பெடல் போட கற்றது, கீழே விழுந்து சிராய்த்துக் கொண்டது (எப்போதுமே கால் முட்டியில் ஒரு காயம் இருந்து கொண்டே இருக்கும்), பூட்டிய சைக்கிளின் பெடலை பின்னால் சுற்றி விரல் செயினில் மாட்டிக் கொண்டு அலறியது என்று மறக்க முடியாத நினைவுகள்\nஇப்போது நினைத்துப் பார்த்தால் இன்று எனக்கு பயணத்தின் மீது இருக்கும் நாட்டம் அப்போதே வெளிப்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது.\nஅதன்பின் அங்கிருந்து இராசிபுரம் வந்து இரண்டு வருடங்களில் அப்பா டிவிஎஸ் 50 வாங்கிய பிறகு அவரது சைக்கிள் அண்ணனுக்கும் அண்ணனின் கொஞ்சம் குட்��ையான சிவப்பு சைக்கிள் எனக்கும் வந்தது. அதை எடுத்துக்கொண்டு சில பல வருடங்களுக்கு நான் சுற்றாத இடமே இராசிபுரத்தில் இல்லை. எங்கு செல்வதென்றாலும் சைக்கிள்தான் (காலை கடனுக்கு மட்டும்தான் நடந்து, திரும்பி வரும்போது சைக்கிளில் உட்கார முடியாது என்பதால்)\nஅதன்பின் சேலத்தில் வேலையில் சேர்ந்தது, ஹைதரபாத் போய், முதல் வாகனமாக என் வருமானத்தில் ஸ்பெலன்டர் பைக் வாங்கி, அமெரிக்கா போனபோது ஃபோர்டு கார் வாங்கி, சென்னை திரும்பி வந்து என்று எல்லாமே நல்லவிதமாகவே நடந்தாலும் சைக்கிளை கண்டிப்பாக நான் மிஸ் செய்கிறேன்.\nஇதோ கடந்த வாரம் கொடைக்கானல் போனபோது அங்கே ஏரியை சுற்றி வர சைக்கிள் வாடகைக்கு எடுத்து முன்னால் என் குழந்தையை அமர வைத்து ஓட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (என் தங்கமணியிடமும் அதே விளைவு என்பது நானே எதிர்பாராதது).\nகண்டிப்பாக சொந்த வீட்டிற்கு மாறியவுடன் மீண்டும் சைக்கிள் வாங்கத்தான் போகிறேன்..\nகால ஓட்டத்தில் ஒவ்வொரு பகுதியுமே ஒரு இரயில் பயணம் போலதான். அதில் ஒரு சில நண்பர்கள் நெருங்கியவர்களாகவே இருந்தாலும் தொடர்பற்று போவது நடக்கும். அப்படிப்பட்ட தொடர்பறுந்த என் நண்பர்கள் இங்கே. இவர்களில் ஒருவராவது தொடர்பு கொண்டால் சந்தோசம‌டைவேன்.\nசுபாஷ்: என் நினைவு தெரிந்து என் முதல் நண்பன். பாப்பிரெட்டிபட்டி செல்வதற்கு முன் என் 5 வயது வரை நாங்கள் சேலம் ஹவுசிங் போர்டில் குடியிருந்த போது இவன் என் நண்பன் (1982, 83 இருக்கும்). 25 வருடம் கழித்தும் இவனது முகம் நினைவில்லாத போதும் இவன் பெயர் நினைவிருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.\nகுருபிரசாத்: பாப்பிரெட்டிபட்டியில் என்னுடன் துவக்கப்பள்ளியில் படித்தவன். அப்பா அங்கே டீக்கடை வைத்திருந்தார். பள்ளி இடைவேளைகளில் இவனது கடைக்கு சென்று பஜ்ஜி சாப்பிட்டது நன்றாக நினைவிருக்கிறது (இவனது முகம் சுமாராத்தான் ஞாபகத்துல இருக்குன்றது வேற விசயம்)\nராம்குமார்: என்னுடன் இராசிபுரத்தில் ஒன்பதாவது வரை படித்தவன். மிக நெருக்கமானவனாக இருந்தாலும், அதன்பின் அவன் கோவைக்கு இடம் பெயர்ந்த பிறகு தொடர்பற்று போய்விட்டது. அங்குள்ள பீளமேடு சர்வஜீன மேல்நிலைப்பள்ளியில் இவன் படித்ததாக நினைவு.\nஅதற்கு பிறகு என்னுடன் பழகியவர்களையெல்லாம் முடிந்தவரை தொடர்பில் வைத்திருக்கிறே���் என்பது நல்ல விஷயம்தான்.\nஎனக்கு பிடிக்காத விஷயம் புதிய படங்களை திருட்டு விசிடியில் பார்ப்பது. மென்பொருள் துறையில் இருப்பதால் \"பைரசி\"யின் நஷ்டங்களையும் வேதனைகளையும் நன்கு அறிவேன். நான் சிடியில் படம் பார்க்கும் தருணங்கள்,\n* அந்த படத்தை தியேட்டரில் பார்க்கத் தவறியிருப்பேன், வேறெங்கும் ஓடிக் கொண்டிருக்காது\n* நீண்ட தூர பயணங்களில் பஸ்களில் ஒளிபரப்படும்போது (வேறு வழியில்லாமல் பார்க்க வேண்டியிருக்கும். எனக்கு அமைதியான இருட்டான சூழல் இல்லாவிட்டால் தூக்கம் வராது)\nஎனது இந்த பார்வை / செயல்பாடு கடந்த மூன்று வருடங்களில் மாறியிருக்கிறது என்பது கேவலமான உண்மை. அமெரிக்காவில் நாங்கள் இருந்த பஃபல்லோ நகருக்கு எந்த தமிழ் படமும் வராது. இந்தியன் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் தயவால் இந்தி படங்கள் மட்டுமே அவ்வப்போது ஓட்டப்படும். தங்கமணிக்கு இந்தி தெரியாததால் அதற்கும் போக முடியாது.\nஅதை விட்டால் 2 மணிநேரம் + 160 கி.மீ பயணம் செய்து டொரொன்டோ போக வேண்டும். போனாலும் கைக்குழந்தையுடன் படத்தை மனம் ஒன்றி பார்க்க முடியாது. கேஸினோ ராயல் படத்திற்கு சென்றுவிட்டு குழந்தை அழ ஆரம்பித்ததால் தங்கமணி முக்கால்வாசி படத்தை பார்க்க முடியாமல் வெளியே உட்கார்ந்த அனுபவத்திற்கு அப்புறம் ஆங்கில படமும் கட்.\nஅதனால் இணையத்தில் இருந்து டவுன்லோட் பண்ணி பார்க்க ஆரம்பித்தோம். காரணங்கள் சரியாக இருந்தததால் குற்ற உணர்வு இல்லை (அல்லது குறைவாக இருந்தது).\nஆனால் மிக சமீபத்தில் பலமுறை முயன்றும் தசாவதாரம் பார்க்க முடியவில்லை. (சத்யம் தியேட்டருக்கு சென்று டிக்கெட் இல்லாமல் திரும்பி வந்தது, பணம் செலுத்திய பிறகு இன்டெர்நெட் டிரான்ஸாக்ஷன் ஃபெய்லியர் ஆனது என்று பல தடங்கல்கள்). முடிவாக இன்டர்நெட்டில் தங்கமணி தேடிக் கொடுத்த முகவரியில் இருந்து படத்தை டவுன்லோட் செய்து சென்ற வார இறுதியில் பார்த்தோம்.\nபடத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் அந்த படத்திற்காக கமல் போட்டிருக்கும் உழைப்பு அபரிமிதமானது என்பது உணர முடிந்தது. நாங்கள் இருவரும் அந்த படத்தை இணையத்தில் பார்த்தததால் அவருக்கு பைசா பிரயோஜனமில்லை என்பதும் என்னை வேதனைப்படுத்தியது. ஸாரி கமல்.\nஅதனால்தான் படம் குறித்து எந்த பதிவையும் இடவில்லை. நான் ஏன் இப்படி மாறினேன் அல்லத��� எது இப்படி மாற்றியது என்று பதில் எனக்கு தெரியவில்லை.\nபார்க்கலாம். இனி மேலாவது இது போன்ற நேர்மையற்ற செயல்களை நான் செய்யாமல் இருக்கிறேனா என்று. :(\nLabels: அனுபவம், காலஓட்டம், நிகழ்வு\nஇன்று (ஆகஸ்ட் 27, 2008) என் செல்லத்தின் பிறந்தநாள்...\nஇன்று எங்கள் சந்தோசத்தின் மொத்த உருவம் பிறந்த நாள்.. நான் கணவன் என்ற வேலையில் அடிஷனலாக அப்பா என்ற பொறுப்பையும் சுமக்கத் துவங்கிய நாள்..\nஆம்.. எங்கள் வீட்டின் கொண்டாட்டம் ஆரம்பித்து இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றன.\nஎங்கள் செல்லம் ஆதர்ஷ் இன்றோடு இரண்டு வயதை முடித்து மூன்றாவது வயதில் அடியெடுத்து வைக்கிறான்.\nபின்குறிப்பு: இந்த முறை அவன் பிறந்த நாளுக்கு எங்களின் நான்கு நாட்களை அவனுக்கே அவனுக்காக பரிசளிக்க இருக்கிறோம். அலுவலக வேலை, வீட்டு வேலை, கணினி, இணையம், வலைப்பூ எல்லாவற்றிலிருந்தும் நான்கு நாட்கள் விலகி அவனுடன் கொடைக்கானலில் தங்கியிருக்கலாம் என்று திட்டம். இந்த பதிவுகூட சனிக்கிழமையே பதிவிடப் பட்டு 27ம் தேதி பப்ளிஷ் ஆவதுபோல் செட் செய்யப்பட்டுள்ளது.\nஅதனால்தான் இந்த வாரம் முழுவதும் என்னை நீங்கள் வலையில் பார்த்திருக்க மாட்டீர்கள். புரிதலுக்கு நன்றி.\nLabels: அறிவிப்பு, அனுபவம், நிகழ்வு, பிறந்தநாள்\nசென்னைப் பதிவர் சந்திப்பு 10.ஆகஸ்ட்.2008 (படங்களுடன்)\nநாள்: ஆகஸ்ட் 10, 2008 ஞாயிற்றுக்கிழமை\nஇடம்: சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புறம், மரத்தடி மற்றும் டீக்கடை\nநேரில் சிறப்பித்த பதிவர்கள்: அதிஷா, ஜிங்காரோ, பாலபாரதி, லக்கிலுக், டோண்டு ராகவன், வெண்பூ, ரமேஷ் வைத்யா, கடலையூர் செல்வம், முரளி கண்ணன், டாக்டர் புருனோ\nபோனில் சிறப்பித்தவர்கள்: வால்பையன், பரிசல்காரன்\nஎதிர்பாராத வருகை: மழை (பதிவர் இல்லை, நிஜ மழைதான்)\nநடந்த நிகழ்வுகளும் போடப்பட்ட மொக்கைகளும்:\n1. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்\n2. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்\n3. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்\n4. புதிய பதிவர்கள் அறிமுகம்\n6. முரளிகண்ணன் வீட்டில் சொன்ன காரணம் குறித்த விளக்கம்\n7. மழைக்கு மரத்தடி ஒதுங்கல்\n8. பாலபாரதியின் புத்தகம் குறித்த விவாதம்\n9. அதிஷா ஸ்பான்சரில் குல்பி ஐஸ்\n10. வலைப்பதிவு மூலம் தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது எப்படி என்பது பற்றிய லக்கிலுக்கின் பேச்சு\n11. தமிழ் வலைப்பதிவுலகின�� வரலாறு குறித்து டோண்டு, புருனோ, லக்கிலுக் மற்றும் பாலபாரதியின் உரை\n12. டோண்டு ராகவன் ஸ்பான்சரில் டீ மற்றும் பிஸ்கட்\n13. விகடனின் புதிய வடிவம் குறித்த வருத்தங்கள்\nபதிவர் சந்திப்புக்கு வந்த அனைவருக்கும் நன்றிகள். புகைப்படங்கள் கீழே...\nLabels: நகைச்சுவை, நிகழ்வு, பதிவர் சந்திப்பு\nடிபிசிடி.. சென்னை பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன\n(சரோஜ் நாராயண்சாமி ஸ்டைலில் படிக்கவும்)\nநேற்று 6.8.2008 புதன்கிழமை மாலை காந்தி சிலை அருகில் டிபிசிடி அவர்கள் சென்னைப் பதிவர்களை சந்தித்துள்ளார். அப்போது சில திடுக்கிடும் நிகழ்வுகள் நடந்ததாக தெரியவந்துள்ளது.\nடிபிசிடியை அனைவரும் வரவேற்று பேசியபின், புதிய பதிவர் ஒருவர் அவரிடம் \"உங்க சைட்ல புதசெவின்னு போட்டிருக்கீங்களே அப்படின்னா என்னா புரியலயே தயவு செஞ்சி விளக்குங்க\" என்று கேட்டு தனது செவுளில் பொளேர் என்று அடி வாங்கியதாகத் தெரிகிறது. அந்த பதிவர் \"அப்படி நான் என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி அடிக்கிறாரு\" என்று கேட்டு தனது செவுளில் பொளேர் என்று அடி வாங்கியதாகத் தெரிகிறது. அந்த பதிவர் \"அப்படி நான் என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி அடிக்கிறாரு நான் இனிமே பதிவே எழுத மாட்டான்டா நான் இனிமே பதிவே எழுத மாட்டான்டா\" என்று புலம்பியவாறு அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார். இது குறித்து நமது நிருபரிடம் பேசிய டிபிசிடி தமிழ் வலையுலகில் ஒரு மொக்கை பதிவர் குறைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.\nஅங்கிருந்த லக்கிலுக்கிடம் பிளீச்சிங் பவுடர் என்ற பதிவர் லக்கிலுக் தனது பின்னூட்டங்களை, முக்கியமாக கலைஞரை திட்டும் பின்னூட்டங்களை ஏன் வெளியிடுவதில்லை என்று கேட்டுள்ளார். தனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 100 பின்னூட்டங்களாவது வருவதாகவும் அதில் ஒரு சிலது இப்படி தவறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் லக்கி தெரிவிக்க அதை ஒத்துக்கொள்ளாத பி.ப மேலும் ஏதோ கேட்க, கடுப்பான லக்கி \"அதுதான் ஜெயலலிதாவ திட்டுறதுக்கு உடன்பிறப்பும், கருணாநிதிய திட்ட அதிமுககாரங்களும் சைட் வெச்சிருக்காங்கள்ள.. அங்க போய் திட்டுங்கடா.. என்னை விடுங்கடா..\" என்று காட்டுக்கத்தல் கத்தியுள்ளார்.\nஅவரது கத்தலைக் கேட்டு அந்த பகுதியிலிருந்த அனைவரும் (சிலையாக இருந்த காந்தி உட்பட) லக்கியின் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளனர். இன்று க���லையில் காந்தி சிலை ஏன் தலையை திருப்பிக் கொண்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருப்பது கூடுதல் செய்தியாகும்.\nஇதற்கிடையே அங்கு வந்த பைத்தியக்காரன் \"நான் உன்னைக் கொலை பண்ணப்போறேன்டா\" என்று கத்தியவாறே வேகமாக பாலபாரதியின் மீது பாய்ந்து அவருக்கு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இதை சிறிதும் எதிர்பார்க்காத பாபா உடனியாக மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த பதிவர்கள் அவருக்கு முதலுதவி செய்து 10 நிமிடம் கழித்து அவரை மயக்கம் தெளிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து பேசிய பைத்தியக்காரன், தான் மூன்று நாட்களுக்கு முன்பே பல் விளக்கியதாகவும், ஏன் பாபா மயக்கமானார் என்பது தனக்குப் புரியவில்லை எனவும் தெரிவித்தார். அதிர்ச்சியிலிருந்து மீண்ட பதிவுலக சூப்பர் ஸ்டார் பாலபாரதி, தான் எழுதிய, எழுதப்போகும் எந்த புத்தகத்தையும் இனி யாருக்கும் ஓசியில் தரப்போவதில்லை என்றும் தான் இந்த சம்பவத்திலிருந்து ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.\nஅப்போது அங்கு வந்த அதிஷாவிடம் டிபிசிடி, நீங்க ஏன் தலையில ஸ்கார்ப் கட்டியிருக்கீங்க என்று கேட்க, அதற்கு அவர் கவலையுடன் \"வண்டி ஓட்டுறப்ப இருக்குற நாலு முடியும் பறந்துடக் கூடாதுல்ல என்று கேட்க, அதற்கு அவர் கவலையுடன் \"வண்டி ஓட்டுறப்ப இருக்குற நாலு முடியும் பறந்துடக் கூடாதுல்ல\" என்று பதில் அளித்துள்ளார். இதைக் கேட்ட அனைவரும் 'கொல்' என சிரிக்க அதிர்ச்சியான அதிஷா, நான் உடனே தற்கொலை பண்ணிக்கப் போறேன் என்று கூறியவாறே லைட் ஹவுஸ் மீது ஏறியுள்ளார்.\nஆஹா.. பதிவு போட சூப்பர் மேட்டர் கிடைச்சிடிச்சிடா என்றவாறே கீழே கூடிய பதிவர்கள் எவ்வளவு கேட்டும் கீழே இறங்காத அதிஷா, அந்த பக்கம் காற்று வாங்க வந்த பத்து பத்து சோனாவை ஏரியல் வியூவில் பார்த்து விட்ட ஜொள்ளில் தானே வழுக்கி படிக்கட்டு வழியாக கீழே வந்து சேர்ந்துள்ளார்.\nஅவர் பாதுகாப்பாக கீழே வந்ததை சற்றும் எதிர்ப்பாக்காத பதிவர்கள், ஒரு சூடான பதிவு மிஸ்ஸான சோகத்தை காண்டு கஜேந்திரனை பார்த்து தணித்துக் கொள்ள வேளச்சேரி பக்கமாக வண்டிகளை கிளப்பிக் கொண்டு போனதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஹி...ஹி... நேத்து காந்தி சிலை பக்கமா போக முடியல.. அதனால அங்க என்ன நடந்திருக்கும்னு கற்பனையில யோச���ச்சதுல..\nLabels: நகைச்சுவை, நிகழ்வுகள், நையாண்டி\nகர்நாடக கண்டக்டரும் கவுண்ட பெல்லும்\nகாமெடி ந‌டிக‌ர் க‌வுண்ட‌ பெல் அவ‌ர‌து தோட்ட‌த்துக்கு த‌ண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ வ‌ருகிறார் உத‌வி இய‌க்குன‌ர்.\n நீங்க‌ ந‌டிக்கிற‌ புதுப்ப‌ட‌த்துல‌ உங்க‌கிட்ட‌ அடிவாங்குற‌ கேர‌க்ட‌ர‌ ந‌டிக்கிற‌துக்கு செந்தேள் ஒத்துக்க‌ மாட்டேன்னு சொல்லிட்டாருணே\"\n\"அந்த ப‌ச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்க‌ல‌\n\"அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே\"\n\"சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்\"\n\"கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்கத்து ஊருக்கு போறான். அங்க போயி வியாபாரம் பண்ணி பெரிய ஆளா ஆயிடுறான். கொஞ்ச நாள் கழிச்சி உங்க ஊருக்கும் அந்த ஊருக்கும் வாய்க்கால் தகறாரு ஆயிடுதுன்னே. அந்த பையன் என்னா பண்றான்னா தன் சொந்த ஊருன்னுக்கூட பாக்காம உங்க ஊரைக் கேவலமா பேசிடுறான்\"\n\"அவன் செவுட்டுலயே அறைய வேண்டியதுதான\"\n\"கரெக்டா சொன்னீங்கண்ணே... அதத்தான் நீங்க பண்ணீறீங்க. அவன் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கலன்னா அவன் உங்க ஊருக்கு வியாபாரமே பண்ண வரக்கூடாதுன்னு சொல்றீங்க. அவனும் மூணாவதா ஒரு ஊருக்கு போயி அங்க இருந்து போன் பண்ணி மன்னிப்பு கேக்குறான்\"\n அவன் கடை வச்சிருக்குற ஊர்காரனுங்க அவனை சும்மா விடுவானுங்களா\n\"அட அவனுங்க எல்லாம் சொரணை கெட்டவனுங்கண்ணே. இவன் மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்குறப்பவே அவன் கடையில பொருள் வாங்குறதுக்கு க்யூல நிப்பானுங்கண்ணே\"\n\"அது எல்லாம் நம்ம கதையில இல்லைண்ணே. எத்தனைப் பேரை அப்புவீங்க‌. இப்ப சொல்லுங்க. யாரை போடலாம் அந்த பையன் கேரக்டருக்கு\"\n\"ம்ம்ம்ம்... அவனைப் போடுங்க\" என்று ஒரு பெயரை சொல்கிறார்.\n அவராண்ணே.. அவரு எவ்ளோ பெரிய ஆளு.. அவரு போயி எப்படிண்ணே\n\"டேய் இன்னிக்கு தேதிக்கு அந்த மாங்கா மண்டையன விட்டா இந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்கு இந்த இந்தியாவிலயே ஏன் உலகத்துலயே ஆளு கெடையாது. பணம் நிறையா குடுக்குறதா சொல்லு.. பன்னாடை பல்லு இளிச்சிட்டு வந்துடுவான்.. என்ன இருந்தாலும் அவனும் \" அடுத்த வார்த்தைகளை முணுமுணுக்கிறார்.\n\"அடங்கொய்யால.. அவனும் வியாபாரிதான அப்படின்னு சொன்னேன். உனக்கு வேற மாதிரி கேட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது.\"\nLabels: நகைச்சுவை, நாட்டு நடப்பு, நையாண்டி\nஒரு பாடல் உருவாகிறது – பார்ட் 3\n நான்பாட்டுக்கு ஏதோ எனக்கு இருக்குற அறிவை() வச்சி யோசிச்சி, யோசிச்சி() வச்சி யோசிச்சி, யோசிச்சி() அறிவியல் கதையா எழுதி குமிச்சிட்டு() அறிவியல் கதையா எழுதி குமிச்சிட்டு() இருந்தா, ஒரு மனுசனுக்கு அது அடுக்கலை. நான் அந்த போட்டியில பரிசு வாங்கிட்டாம பண்ணிடனும்ன்றதுக்காக என்னை இந்த மொக்கையில இழுத்து விட்டுட்டு அவரு வேலையை பாத்துக்கிட்டு நல்ல புள்ளன்னு பேரு வாங்கிட்டு இருக்காரு.\nஅதனால இந்த மொக்கைக்காக திட்டறதா இருந்தா என்னை திட்டாதீங்க.. அவரை திட்டுங்க.. எல்லா புகழும் இறைவனுக்கே அப்படின்ற மாதிரி, எல்லா வசவும் பரிசலுக்கே\nஎல்லோரும் தலைதெறிக்க ஓடிவிட...வெண்பூ ஃபோனை எடுத்து எல்லா பதிவர்களுக்கும் கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்..\n“எல்லாரும் மன்னிச்சிடுங்க. என்னையில்ல. பரிசல்காரனை. தெரியாம எழுதிட்டாரு. முடிஞ்சா நான் பார்ட் 3 ல கொஞ்சமாவது காமெடியா எழுதப்பாக்கறேன். ஆனா எப்ப எழுதுவேன்னு தெரியாது. எழுதுவேனா-ன்னே தெரியாது\n\"யாருய்யா இவன்.. நம்ம போனை நம்மள கேக்காம எடுத்து பேசுறான்.. லேண்ட்லைன்ல கான்ஃப்ரன்ஸ் கால்ன்றான்..\" என்கிறார் டைரக்டர்.\nமீஜிக்.. \"அதுகூட பரவாயில்லங்க.. அந்த போன் 3 நாளா டெட். நானே டெலிபோன் டிபார்ட்மென்ட்டுக்கு போன் பண்ணி அலுத்துப் போயிட்டேன். அதுல எடுத்து பேசிட்டு போவுது பைத்தியம்\"\n\"இப்பதான் புரியுது மீஜிக். இவன் எதுனா வலைப்பதிவரா இருப்பான். ஒருத்தருமே படிக்கலைன்னாலும் தினமும் 4 பதிவு போடுவானுங்க. யாருமே பின்னூட்டம் போடுலைன்னா அவனுங்களே அனானியா பின்னூட்டம் போட்டு ஹிட் கவுண்ட் ஏத்துவானுங்க. ரொம்ப முத்திப்போயி இப்படி டெட்டான போன்ல பேசுறான். இவன் பெரும்பதிவரா இருப்பான்னு நினைக்கிறேன்\"\n\"இவனை விடுங்க, கதவை யாரோ தட்டுறாங்க. யாருன்னு பாருங்க\"\nகதவைத் திறந்தவுடன் டைரக்டர் டெர்ரராகிறார்.. அங்கே நிற்பது..\nடைரக்டர் மனதிற்குள் 'இன்னிக்கு காலையில ராசிபலன்ல எதிர்பாராத வரவுன்னு போட்டிருந்தப்பவே டவுட் ஆனேன். இப்படி மாட்டிகிட்டேனே' என்றவர் சத்தமா \"வாங்க..வாங்க.. நீங்கல்லாம் வருவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை, என் பொண்டாட்ட��யோட சின்ன பாட்டி வயசுக்கு வந்துட்டாங்களாம். இப்பதான் போன் வந்தது.. மன்னிக்கணும் நான் உடனே கிளம்பியாகணும்\" என்றவாறே எஸ்ஸாகிறார்.\nதப்பிக்க வழியில்லாமல் மீஜிக் நடுங்கி கொண்டே உட்காருகிறார்.\nகார்த்திக்: நாங்க.... இங்க... எதுக்கு... வந்தமுன்னா... இப்ப.. எனக்கு அரஷியல்ல... கொஷ்சம்.. ரெஸ்ட் கிடைச்சிருக்கு\nமீஜிக் (மனதிற்குள்): 'அதுக்கு மறுபடியும் படத்துல‌ நடிக்கப் போறியா\nகார்த்திக்: நான் ஒரு படம்... ப்ரொட்யூஷ்... பண்ணப்போறேன்.. அதை ஸீர்யா டைர‌க்ட்.. பண்றாரு.. ரித்தீஷ் தம்பிதான் ஹீரோவா நடிக்கப்போறாரு..\nமீஜிக் : 'உலகம் அழிஞ்சிரும்டா மக்கா' (ச‌த்த‌மாக‌) அதுக்கு...\nஎஸ்.ஜே: நீங்க‌தான் ம்யூஸிக் போட‌ணும்...\nமீஜிக் : 'உன் ப‌ட‌த்துக்கு எதுக்குடா த‌னியா ம்யூசிக்..எதோ ரெண்டு பாரின் சி.டி.யிலருந்து சவுண்ட் எஃபக்ட் காப்பி பண்ணாபோதாதா'.. க‌ண்டிப்பா ப‌ண்ணிட‌லாம் சார்.\nரித்தீஷ்: ப‌ட‌த்துக்கு டைட்டில் \"பாட்ஷா\" அப்ப‌டின்னு வெச்சிக்க‌லாமா\nமீஜிக் : 'வாடா உன்னைத்தான் எதிர்பாத்துகிட்டு இருக்கேன் கமல் முடிஞ்சது அடுத்தது ரஜினியா கமல் முடிஞ்சது அடுத்தது ரஜினியா' சார் டைட்டானிக் அப்ப‌டின்னு வேணும்னா வெக்க‌லாமே\nரித்தீஷ்: ந‌ல்லாயிருக்கே.. இந்த‌ ப‌ட‌த்துக்கு அப்புற‌ம் ந‌டிக்க‌ப்போற‌ அடுத்த‌ ப‌ட‌த்துக்கு இந்த‌ பேரையே வெச்சிக்கிறேன்..\nமீஜிக் : 'ஆஹா.. இன்னும் ஒரு ப‌ட‌மா... நானெல்லாம் இன்னும் கான‌ல் நீர் பாதிப்புல‌ இருந்தே வெளியில‌ வ‌ருல‌'\nரித்தீஷ்: சூர்யா சார்... இந்த‌ ப‌ட‌த்துக்காக‌ நான் எதுனா கெட்‍அப் சேஞ்ச் ப‌ண்ண‌னுமா\nசூர்யா : ஆஆ.. அதெல்லாம் தேவையில்ல‌.. நான் ரொம்ப‌ இய‌ற்கையா எல்லாத்தையும் காட்டுவேன்..\nமீஜிக் : 'ஆமா.. எல்லா நடிகைகளையும் இவரு ரொம்ப‌ இய‌ற்கையா காட்டுவாரு'\nரித்தீஷ்: இந்த படத்துக்கு எனக்கு ஆஸ்கார் அவார்டு கெடக்கணும். நீங்கதான் பொறுப்பு. என்னா செலவானாலும் பரவாயில்ல..\n அது என்னா அர‌சாங்க‌ அவார்டா ஆளுங்க‌ட்சி மேடையில‌ எதிர்க‌ட்சிகார‌னை கெட்ட‌வார்த்தையில‌ பேசுனா குடுக்குற‌துன்னு நென‌ச்சியா ஆளுங்க‌ட்சி மேடையில‌ எதிர்க‌ட்சிகார‌னை கெட்ட‌வார்த்தையில‌ பேசுனா குடுக்குற‌துன்னு நென‌ச்சியா\nகார்த்திக் போனை எடுத்து \"ஷொல்லுங்க...நான் கட்சித்தலைவர்தான்... பேசுறேன்..என்னது கட்ஷியில.. சேரப்போறீங்களா..ஒரு நிமிஷம்..\" என்றவர் ம��ஜிக் பக்கம் திரும்பி \"என் கட்ஷி பேர் மறந்துட்டேன்.. உங்களுக்கு.. ஞாபகம் இருக்கா\nமீஜிக்: 'உருப்பட்டாப்புலதான்.. எதாவது சொல்லுவோம்.. வெளங்காத வெண்ணை கட்சின்னு சொல்லுவோம்'.. வெ.வெ.க அப்படின்னு ஷொல்லுங்க..ச்சீ.. சொல்லுங்க..\nகார்த்திக் போனில்.. \"அப்படியா.. உடனே வர்றேன்..\" என்றவர் மற்றவர்களிடம் \"வாங்க ஸீர்யா..ரித்தீஷ் தம்பி.. போய் அவரை பாத்துட்டு அப்புறமா வரலாம்\" என்றவாறு கிளம்புகிறார்.\n எனக்கு நேரம் நல்லா இருக்கு வேற எவனுக்கோதான் சரியில்லன்னு நெனக்கிறேன்.. போன் பண்ணி தனக்கு தானே சூனியம் வெச்சிகிட்டான்\" என்றாவாறு உட்கார,\nசென்று கதவைத் திறக்கிறவர் அதிர்ச்சியின் எல்லைக்கே போகிறார். அங்கே..\nஇந்த இடத்திலிருந்து திருப்பூர் தங்கம், நொய்யல் ஆற்றங்கரை நல்லவர், கொங்கு நாட்டு சிங்கம் அண்ணன் பரிசல் தொடர்வாராக...\nமாயா..மாயா..எல்லாம் மாயா.. (அறிவியல் சிறுகதை)\n2008 ஆகஸ்ட் 15, நேரம் மாலை 6.45 மணி\nதன்னைச் சுற்றிலும் இருந்த பெரிய பெரிய இரும்பு பெட்டிகளையும் அதற்குள்ளே செல்லும் பல‌வண்ண வயர்களையும் பார்த்து வியந்து நின்று கொண்டிருந்த நாதனின் தோளில் தட்டினான் கிருஷ்ணா.\n\"என்ன புரொபசர், திகைச்சி போய் நின்னுட்டீங்க போலிருக்கு\"\n\"க‌ண்டிப்பா கிருஷ். நீ ஐ.ஐ.டி.ல‌ ப‌டிச்ச‌ப்ப‌ நான் உன்னோட‌ புரொப‌ச‌ர். ரொம்ப‌ ப்ரைட்டா இருந்த‌தால‌ எல்லாருக்கும் உன்னை ரொம்ப‌ பிடிக்கும். நீ உன்னோட‌ பி.எச்.டிக்கு என்னை கைடா செல‌க்ட் ப‌ண்ணின‌துக்கு உன்னை விட‌ நான் ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌ட்டேன். இதோ 13 வ‌ருச‌ம் க‌ழிச்சி இப்ப‌ உன்னை ஏர்போர்ட்ல‌ பாத்தப்ப‌ என‌க்கே உன்னை அடையாள‌ம் தெரிய‌ல‌. என்னை பாத்த‌வுட‌னே சின்ன‌க்குழ‌ந்தை மாதிரி என்னை க‌ட்டிபிடிச்சி சீன் கிரியேட் ப‌ண்ணிட்டே. உன்கூட‌ வ‌ந்தே ஆக‌ணும்னு ஒரே அட‌ம்பிடிச்சி என்னை இங்க கூட்டிட்டு வந்தே. இங்க வந்து பாத்தா இந்த லேப் என்னோட கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டதா இருக்கு. என்ன பண்ணிட்டு இருக்க நீ கிருஷ்\n\"புரொபசர், உங்களுக்கே தெரியும்.. எனக்கு கம்ப்யூட்டர்னா உயிர்னு. அதனாலதான் சூப்பர் கம்ப்யூட்டர் பத்தி பி.எச்.டி. பண்ணினேன். அது முடிஞ்சதும் அமெரிக்காவில வேலை கிடைச்சி போனதும் உங்களுக்குத் தெரியும். அங்க போயி கொஞ்ச நாள்லயே எனக்கு அது போரடிக்க ஆரம்பிச்சிடுச்சி. அதனாலதான் இந்தியா திரும்பி வந்து இந்த லேப் ஆரம்பிச்சேன்\"\n\"அதுவும் எனக்கு தெரியும் கிருஷ். உன்னைப் பத்திதான் எல்லா மீடியாவும் பேசிட்டிருக்கே\"\n\"நான் உங்களை இங்க கூட்டிட்டு வந்தது என்னோட புது கண்டுபிடிப்பைப் பத்தி உங்களுக்கு சொல்றதுக்காகதான். இதுபத்தி இன்னும் யாருக்கும் சொல்லவேயில்லை. நீங்கதான் முதல்ல தெரிஞ்சிக்கப் போறீங்க\"\n\"சொல்லு கிருஷ்\" என்றார் நாதன் சிறிதும் கலப்படமில்லாத நிஜமான ஆர்வத்துடன்.\n\"இப்ப இருக்கிறதுலயே அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் எதுன்னு சொல்லுங்க\"\n\"ஐ.பி.எம். மூணு மாசத்துக்கு முன்னால அறிவிச்ச ரோடுரன்னர் (IBM RoadRunner). சரியா அதோட வேகம் கூட 1 பீட்டா ஃப்ளாப்க்கு (Peta Flops - Floting Point Operations Per Second) மேலன்னு ஞாபகம்\"\n\"ரொம்ப சரி புரொபசர். சாதாரண கம்ப்யூட்டரோட வேகம் சில மெகா ஃப்ளாப்ல இருக்குறப்ப இந்த ரோடுரன்னர் அதை விட லட்சக்கணக்கான மடங்கு வேகத்துல செயல்படுது\"\n\"ரொம்ப சரி கிருஷ். அவங்க அடுத்த ப்ராஜக்ட் கூட ஆரம்பிச்சிட்டதா கேள்விப்பட்டேன். அது இதை விட ரெண்டு அல்லது மூணு மடங்கு வேகம் கொண்டதா இருக்கும்னும் அது 2010ல வந்துடும்னும் பேசிக்கிறாங்க\"\nபதில் சொல்லாமல் லேசான புன்னைகையுடன் தீர்க்கமாக பார்த்தான் கிருஷ்ணா.\n\"என்ன கிருஷ்.. அப்படி பாக்குற\n\"நீங்க நம்பமாட்டீங்க புரொபசர். நான் அதை விட பல மடங்கு சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கிட்டேன்\"\n\" ஆச்சரியம் + அதிர்ச்சியுடன் கேட்டார் நாதன்.\n\"ஆமா சார். நீங்க இப்ப அதுக்கு நடுவுலதான் நிக்கிறீங்க\"\nஆச்சரியம் விலகாமல் சுற்றி இருந்த அனைத்தையும் பார்த்தார் நாதன்.\n\"எங்கப்பா எனக்காக விட்டுட்டு போன ஆயிரக்கணக்கான கோடிகள்ல பாதிக்கும் மேல விழுங்கிட்டு இதோ இங்க 8 ஏக்கர் பரப்பளவில நிக்குதே இதுதான் என்னோட கண்டுபிடிப்பு. இதோட ஸ்பெசிஃபிகேஷன் சொல்றேன் கேக்குறீங்களா புரொபசர்\nமொத்தம் இதுல 2048 சப்சிஸ்டம் (sub-system) இருக்கு. ஒவ்வொரு சப்சிஸ்டத்திலயும் 1024 யூனிட், ஒவ்வொரு யூனிட்லயும் 64 க்வாட் கோர் ப்ராசஸர் (quad core processor). மொத்தம் 2048 * 1024 * 64 = 134 மில்லியன் ப்ராசஸர்ஸ் இருக்கு. நம்ப முடியல இல்லை. அது மட்டுமில்ல. இந்த எல்லா சப்சிஸ்டமும் அதி நவீன ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமா இணைக்கப்பட்டிருக்கு. இதுல இருக்குற மொத்த மெமரி பவர், கூகுள் கம்பெனி வெச்சிருக்கிற எல்லா சர்வர்கள்லயும் இருக்குறத விட அதிகம்.\"\n\"இன்னிக்கு உலகத்தில பயன்பாட்டில இருக்கிற அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரைவிட இது ஏறத்தாழ‌ 3,000 மடங்கு சக்தி வாய்ந்தது. என்ன ஒண்ணு, சின்ன நகரத்துக்கு ஒரு மாசத்துக்குத் தேவைப்படுற மின்சாரம் இதுக்கு ஒவ்வொரு நாளும் தேவை\"\n\"நீ சொன்னது நிஜம்தான் கிருஷ்.. என்னால நம்பவே முடியல\"\n\"ஆனா உன்னை நான் பாராட்டணும் கிருஷ். உனக்குள்ள இருந்த அந்த வேகம் வெறியா மாறிடுச்சின்னுதான் சொல்லுவேன். ஆனா அதை நீ சரியான திசையில செலுத்தியிருக்க. அதுதான் இன்னிக்கு இப்படி உருமாறி நிக்குது\"\n\"ஆமா இதை எதுக்காக உபயோகப்படுத்தப் போற\n\"சாதரணமா சூப்பர் கம்யூட்டர்கள் ஒரு சில குறிப்பிட்ட வேலைகளுக்குத்தான் உபயோகப்படுத்தப்படுது. உதாரணமா காலநிலை மாற்றங்கள், அணுகுண்டு ஆராய்ச்சி இப்படி. நான் செய்யப் போறது முற்றிலும் வேற மாதிரி\"\n\"இந்த உலகத்தில முதல் முதல்ல உயிரினம் எப்படி தோன்றிச்சி அப்படின்றதப் பத்திதான் என்னோட இந்த குழந்தை ஆராய்ச்சி பண்ணப் போகுது\"\n\"அணுகுண்டுகளை வெடிக்காம ஆனா அதே நேரத்தில அது வெடிச்சா எப்படி இருக்கும் அப்படின்றத பத்திதான் இன்னிக்கு பெரும்பாலான சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கு. என்ன பண்ணுவாங்கன்னா அணுகுண்டு வெடிக்கிறதுக்கு முன்னால இருக்குற எல்லா விசயங்களையும் சூப்பர் கம்ப்யூட்டர்ல ஏத்திடுவாங்க. அதுக்கப்புறம் தன்னோட ப்ராசஸிங் பவரை வெச்சி குண்டு வெடிச்சா என்ன ஆகும், எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும், கதிர்வீச்சு எந்த அளவில இருக்கும் அப்படின்றத சூப்பர் கம்ப்யூட்டர் கணக்கிடும்.\nநான் அதேமாதிரி, இந்த பூமி உருவானப்ப எப்படி இருந்தது, அதோட இயல்புகள் என்ன அப்படின்றத என்னோட கம்ப்யூட்டர்ல ஏத்திட்டு இருக்கேன். அது முடிஞ்சதும் என்னோட கம்ப்யூட்டர் எப்படி உயிர்கள் தோன்றியது அப்படின்னு கணக்கிடப் போகுது. இதுக்குப் பேர் சிமுலேசன் (Simulation).\nஎல்லாம் சரியா நடந்தா மனுசன் எப்படி உருவானான் அப்படின்ற குழப்பமான கேள்விக்கும் கூட விடை தெரிய வாய்ப்பு இருக்கு புரொஃபசர்\"\n\"அற்புதம் கிருஷ். நீ எது செஞ்சாலும் அதுல வெற்றியடையத்தான் போற. எனக்கு இன்னும் ஒரு சில டீடெய்ல்ஸ் தெரிஞ்சிக்கணும்\"\nகி.பி.2908 ஆகஸ்ட் 15, மாலை 7.00 மணி\n\"மிஸ்டர் கே89. என்னை எதுக்காக அவசரமா கூப்பிட்டீங்க\n\"இதோ இதைப் பாருங்க\" என்றவாறே எதிரில் இருந்த 30 அடி நீள சுவர் ம���திருந்த மானிட்டரைத் தொட்டான். அது உலக வரைபடத்தைக் காட்ட அதில் இந்தியாவை தொட அது இந்தியாவை மட்டும் பெரிதாக்கிக் காட்டியது. அப்படியே தொடர்ந்து நான்கைந்து தொடல்களுக்குப் பிறகு நாதனையும், கிருஷ்ணாவையும் காட்டியது.\n\"அவங்க பேசுறதை கேளுங்க ஜே40\"\nஇருவரும் பேசிக் கொள்வது தெள்ளத் தெளிவாகக் கேட்டது.\nசரியாக 30 நிமிடங்களில் அவர்கள் ஒரு அறையில் குழுமியிருந்தார்கள். நாட்டின் அதிபர், முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அமர்ந்திருக்க ஜே40 பேச ஆரம்பித்தார்.\n\"அதிவேக கம்ப்யூட்டர்கள் மூலமா இந்த சிமுலேசன் ஆரம்பிக்கப்பட்டு இன்னியோட 140 வருசம் ஆச்சு. இந்த உலகத்துல முதல் ஒரு செல் உயிரினம் தோன்றுனதுல இருந்து பரிணாமத்தோட ஒவ்வொரு கட்டத்தையும் இந்த சிமுலேசன் மூலமா நாம தெரிஞ்சிட்டு வந்திருக்குறோம். மனுசன் எப்படி தோன்றுனான் அப்படின்றது உட்பட பல விடை தெரியாத கேள்விகளுக்கு நமக்கு இந்த ப்ராஜக்ட் விடை தந்திருக்கு.\nஇப்ப இந்த சிமுலேசனோட முக்கியமான கட்டத்துல இருக்கோம். கோடிக்கணக்கான வருசத்தப் பத்தி தெரிஞ்சிட்ட நாம இப்ப கி.பி.2008ம் வருசத்துல இருக்கோம். இன்னும் அடுத்து வரப்போற 400 வருசங்களைப் பத்தியும் தெரிஞ்சிட்டாதான் இன்னிக்கு உலகத்துல நாம எதிர்கொண்டிருக்குற கடுமையான வியாதிகள், காலநிலை மாறுபாடுகள் மாதிரியான‌ பல விதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.\nஆனா இப்ப நாம பாக்கிற இந்த கிருஷ்ணான்ற‌ என்டிட்டி (Entity) சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுபிடிச்சியிருக்குறதாகவும், அது மூலமா சிமுலேசனை ஆரம்பிக்கப் போறதாகவும் சொல்லுது. இது நமக்கு தலைவலிதான்.\nஏன்னா, ஏற்கனவே இவங்க இருக்கிறது சிமுலேசன்ல. அதுல இருந்து இன்னொரு சிமுலேசன் ரிகர்ஸிவா (recursive) ஆரம்பிக்கறதுன்றது தேவையில்லாதது மட்டுமில்ல, நிறைய எனர்ஜி மற்றும் ரிசோர்ஸ் தேவைப்படுற ஒண்ணு.\nஇதனால நம்ம இப்ப எதிர்பார்க்கறமாதிரி 2923ம் வருசத்துக்குள்ள கி.பி.2500ம் வருசத்த தொட முடியாமக் கூட போகலாம்.\"\nசிறிது நேரம் அந்த அறையில் மயான அமைதி நிலவியது.\n\"சரி..இப்ப என்ன பண்ணலாம்னு சொல்றீங்க ஜே40\n2008 ஆகஸ்ட் 16, நேரம் காலை 7.00 மணி\nடி.வி.யில் அழகான அந்த பெண் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள்.\n\"இந்தியாவின் பிரபல கணிப்பொறி விஞ்ஞானி கிருஷ்ணா நேற்று இரவு அவரது ஆராய்ச்சிக்கூடத்தில் ஏற்பட்ட வெட��விபத்தில் சிக்கி மரணமடைந்தார். மின்கசிவின் காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் அவரது கல்லூரி விரிவுரையாளார் நாதன் உள்ளிட்ட மேலும் ஆறு பேரும் பலியானர்கள் என்றும் மருத்துவமனையில் படுகாயத்துடன் பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன\"\n*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான மூன்றாவது இடுகை ***\nLabels: அறிவியல், சிறுகதை, புனைக்கதை, போட்டி\nபுது ப்ராஜக்ட் (சின்னக் கதைகள் - 1)\n\"உங்களையெல்லாம் நான் எதுக்கு கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு கூப்டிருக்கன்னா, ஒரு புது ப்ராஜக்ட் வருது, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ப்ராஜக்ட், டெக்னிகலி சேலஞ்சிங்..\nஅதுக்காக கம்பெனியில இருக்குற உங்களை மாதிரி திறமையான ஆளுங்களை எல்லாம் அசைன் பண்ண சொல்லி மேலிடத்துல இருந்து ஆர்டர். உங்களுக்கெல்லாம் சந்தோசம்ன்றது உங்க முகத்துல இருந்தே தெரியுது..\nபல‌ வருசம் போகபோற இந்த ப்ராஜக்டுக்கு வருசத்துக்கு 10 மில்லியன் டாலர்னு கான்ட்ராக்ட் சைன் ஆகியிருக்கு..\nசொல்றேன்..சொல்றேன்.. நம்ப மாட்டீங்க.. இந்த ப்ராஜக்ட் சித்திரகுப்தனோட பிரம்மச்சுவடிய மேனேஜ் பண்ண வேண்டிய 'சொர்க்கலோகம் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்' ப்ராஜக்ட்தான். நேத்துதான் சித்திரகுப்தன் வந்து நம்ம மார்க்கெட்டிங் ஹெட் கூட பேசி ஆர்டர் கன்ஃபர்ம் பண்ணிட்டு போயிருக்காரு..\nகுட்.. ரொம்பவும் ரியல் டைம் டேட்டா இருக்கப்போறதால செக்யூர்டாவும் அதே நேரம் டைம் கிரிட்டிகலா இருக்கறதுனால பெர்ஃபார்மென்ஸும் நல்லா இருக்கணும்...\nஓகே.. இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. போன அப்ரைசல்ல யாரெல்லாம் ஆன்சைட் வேணும்னு கேட்டீங்க\nLabels: சிறுகதை, சின்னக்கதைகள், நகைச்சுவை\nவெகுநாட்களாக தமிழ்மணத்தில் சுற்றிவரும் நீங்கள் பின்நவீனத்துவவாதியா என்று ஒரு கேள்வி இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.\n1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா\n2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா\n3. அப்படிப்பட்ட பதிவுகளு��்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா\n4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா\n5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா\n6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா\n7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா\n8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் \"கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்...\" என்று எழுதாமல் \"இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்\" என்று எழுதுகிறீர்களா\n9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா\n10. \"இயல்பாக\" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் \"இயல்\" என்ற சொல்லையும், \"இசக்கிமுத்து\" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் \"இச\" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா\nநீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.\nநீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக தமிழ்மணத்தில் நகைச்சுவை, மொக்கை என்ற லேபிளுடன் வரும் இடுகைகளை ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும்.\nமூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்...\"இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு...\nபின்குறிப்பு: மேலும் கேள்விகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.\nLabels: நகைச்சுவை, நையாண்டி, பின்நவீனத்துவம்\nஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகத்தில்...\nடிஸ்கி 1: இந்த இடுகையில் வரும் எல்லா பாத்திரங்களும் கற்பனையே. கண்டிப்ப��க உண்மையில்லை\nடிஸ்கி 4: இடுகையின் தலைப்பிலோ அல்லது முதல் 3 வரிகளிலோ சாமம், சட்டி போன்ற தவிர்க்கப்படவேண்டிய போன்ற வார்த்தைகள் வரவில்லை.\nஅது ஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகம். வடிவேலு அமர்ந்திருக்க வேக வேகமாக ஓடி வருகிறார் ஒரு அடிப்பொடி.\n\"அண்ணே, அண்ணே, அந்த ஜ்யோலட்சுமண கந்தர் மறுபடியும் சாமக்கதைகள போட்டிருக்காரு\"\n\"அந்த சைடுநவீனத்துவ கும்பலுக்கு இதுவே வேலயா போச்சி, உடனே கிளம்புறேன்\"\n\"கால்புள்ள கோவமா கிளம்பிட்டான் போல இருக்கு, இன்னிக்கு எத்தன பதிவர்கள் தலை உருளப்போவுதோ\nவடிவேலு வருகிறார். அங்கே ஜ்யோலட்சுமண கந்தர், பைத்தியம் தெளிந்தவன், களர், லக்கியில்லாத லுக் எல்லாம் நிற்கின்றனர்.\n\"டாய் கந்தர்...எதுக்குடா அதைப் போட்ட\n\"ம்ம்ம்ம்ம்ம்... என்ன சொல்றன்னு புரியல... உன் டெர்ம்ஸ் அன்ட் கண்டிஷன் ரொம்ப சின்ன எழுத்துல இருக்கு.. கொஞ்சம் பெரிய ஃபான்ட்ல போடு\"\n\"டாய் கந்தர், நீ ஒரு கீ போர்டுல டைப் பண்ற ஆளா இருந்தா இன்னொரு இடுகை போடுறா பாக்கலாம்\"\nஅதற்குள் லக்கியில்லாத லுக் \"சட்டி சுட்டதடா, கை விட்டதடா\" என்று ஒரு பதிவிடுகிறார்.\n\"ஒத்துக்கறேன்.. நீங்க எல்லாம் ஒரே கீ போர்டுல டைப் பண்றவங்கன்றதான்கறத‌ ஒத்துக்குறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்\"\nதிரும்பி நடக்கிறார். எல்லோரும் சுற்றி நிற்கிறார்கள்.\n\"உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு. இதுவரைக்கும் யாரும் என்னை கும்முனதில்ல\"\n\"போன மாசம்தான ஆங்கிலச்சி விசயத்துல உன் டவுசர கிழிச்சோம்\"\n\"அது போன மாசம் நான் சொன்னது இந்த மாசம்...\"\nபைத்தியம் தெளிந்தவர் ஒரு பதிவிடுகிறார் \"ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு விண்ணப்பம்\" என்ற தலைப்பில்.\nலக்கியில்லாத லுக் \"ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு அவசர கடிதம்\" என்ற தலைப்பில் அடுத்த பதிவிடுகிறார்.\nஅங்கே இருப்பவர்கள் மட்டுமில்லாமல் எல்லாரும் வரிசையாக பின்னூட்ட கும்மியை ஆரம்பிக்கிறார்கள்.\nLabels: தற்போதைய நிகழ்வுகள், நகைச்சுவை, பகடி\nகி.பி. 2058 ல் ஒருநாள். அவன் இருந்தது சென்னை அதி பாதுகாப்பு சிறைச்சாலையின் தலைமை பொறுப்பாளருடன்.\n\"நண்பரே, உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றுவதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்\" என்றார் த.பொ. அவனிடம். அவன் மரணதண்டனைக் கைதி. அவன் செய்த குற்றம் நமது கதைக்கு தேவையற்றது என்பதால் நேரடியாக அவனது கடைசி ஆசைக்கு செல்வோம்.\n\"அரசிடம் ��ருந்து ஒப்புதல் வந்துவிட்டதா\n\"ஆம் நண்பரே, இன்னும் 1 மணிநேரத்தில் தங்களது தண்டனை நிறைவேற்றப்படப் போகிறது. எனவே உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றச் செல்வோமா\n\"கண்டிப்பாக\" என்றான் மனதெங்கு‍‍‍ம் மகிழ்ச்சியுடன்.\n\"நண்பரே, இதுதான் கால இயந்திரம். உங்கள் கடைசி ஆசையின்படி நீங்கள் இதில் பயணம் செய்யப்போகிறீர்கள்...ஆனால் ஒரு சில நிபந்தனைகளுடன்\"\n\"முதலில், நீங்கள் இறந்த காலத்திற்குத்தான் செல்ல முடியும், எதிர்காலத்திற்கு அல்ல, நீங்கள் மரணதண்டனை குற்றவாளி என்பதால். அடுத்தது உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் 55 நிமிடங்கள் மட்டுமே, அதன்பின் நீங்களாகவே திரும்பிவிட வேண்டும், 1 நிமிட தாமதம் கூட பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மூன்றாவது ஏதேனும் ஒரே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்ல முடியும், அங்கேயிருந்து வேறு ஒரு காலத்திற்கு உங்களால் செல்ல முடியாது, திரும்பி இங்கே வருவது மட்டுமே சாத்தியம். புரிகிறதா\n\"எந்த காலகட்டத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள்\n\"நல்ல தேர்வு, மாசுபடாத காற்று, சுத்தமான நீர், அபரிமிதமான இயற்கை வளம் எல்லாம் அனுபவிக்க முடியும்.\"\nமறுபுறம் திரும்பி அங்கே இருந்த க்வான்டம் கணினியில் ஒரு சில உள்ளீடுகளைச் செய்தார்.\n\"உலகின் எந்த பகுதிக்கு செல்ல விரும்புகிறீர்கள் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதிக்கா இந்தியாவின் ஏதோ ஒரு பகுதிக்கா கிழக்கு அல்லது மேற்கு பகுதிக்கா கிழக்கு அல்லது மேற்கு பகுதிக்கா\nஅவன் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவன். காதலியுடன் ஐரோப்பா முழுவதையும் ரசித்தவன். எனவே\n\"கிழக்காசிய நாடுகளில் ஏதேனும் ஒன்று\"\nமீண்டும் ஏதோ உள்ளீடுகளைச் செய்தார்.\n\"அனைத்தும் தயார். இதை அணிந்து கொள்ளுங்கள். இது இன்னும் எத்தனை நிமிடங்கள் மீதி உள்ளன என்று காட்டும். இதோ இந்த கதவில் உள்ளே செல்லுங்கள். கடைசியாக சில அறிவுரைகள், நீங்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்குச் செல்லப் போகிறீர்கள். இந்த கால இயந்திரம் நவீன க்வாண்டம் கணிணியின் உதவியுடன் உங்களை குறிப்பிட்ட காலத்திற்கு அனுப்ப உதவும். சரியாக கிளம்பிய 55 நிமிடத்தில் நீங்கள் மீண்டும் இதற்குள் வந்து இந்த சிவப்புப் பொத்தானை அழுத்தினால் நீங்கள் இங்கேயே திரும்பி வந்து சேருவீர்கள். மீண்டும் சொல்கிறேன். கால தாமதம் ஏற்றுக்கொள்ளப்ப���ாத ஒன்று. மேலும் இது 16 மெகா பிட் நீளமுள்ள பாதுகாப்புத் தகவலுடன் இயங்குகிறது, தற்போதுள்ள அதிவேக க்வாண்டம் கணினியால் இதை உடைக்கவே 16 பில்லியன் ஆண்டுகள் ஆகும். எனவே உங்களுக்கு இருக்கும் 55 நிமிடத்தில் முயற்சி செய்யாதீர்கள்.\"\n\"நான் தயார்\" என்றான் அவன்.\n\"உற்சாகமான பயணத்திற்கு வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்.\"\nத‌.பொ. மீண்டும் அனைத்தையும் சரி பார்த்த பின் பச்சை நிறத்தில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினார்.\nஅவன் சடாரென உள்ளிழுக்கப்பட்டான் அல்லது பட்டதாக உணர்ந்தான். அடுத்த வினாடி அவனது கால் மற்றும் கை விரல்களில் ஆரம்பித்த வலி உடலெங்கும் பரவ ஆரம்பித்தது. அவன் உடல் வெப்பநிலை திடீரென்று உயர்ந்தது.\n'என்ன இது.. நான் ஏமாற்றப்பட்டேனா எனது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா எனது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா\nஅவன் வலியால் கத்த ஆரம்பித்த நேரம் அவன் பனி வெள்ளத்திற்குள் விழுந்தது போல் உணர்ந்தான். வலி முற்றிலும் இல்லாமல் காற்றில்லா தளத்தில் மிதப்பது போல். அவன் மனதை அதுவரை அவன் கடந்த மகிழ்ச்சியான தருணங்களால் நிரப்பினான்.\nபத்து வயது சிறுவனாக அம்மா மடியில் தலை வைத்து படுத்தான். பதினைந்து வயதில் சக தோழியிடம் இருந்து முதல் முத்தம் பெற்றான். கைத்தட்டல்களுக்கு நடுவே பல்கலை கழகத்தின் மேடையில் தங்கப்பதக்கம் பெற்றான். காதலியுடன் ஐரோப்பிய தங்கும் அறைகளில் கட்டிப் புரண்டான்.\nஅவன் நினைவு தடைபட்டது. எதன் மீதோ மோதி பிடிமானமில்லாமல் விழுந்தான். மெல்ல கண்களைத் திறந்து, சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் அதனதன் இடத்தில் இருந்தன. கால இயந்திரம் ஏதோ ஒரு அழகான பூங்காவின் பச்சைப் புல்வெளியில் நின்றிருந்தது.\nமணிக்கட்டைப் பார்த்தான். இன்னும் 54 நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. கதவைத் திறந்து வெளியே வந்து சுதந்திரக்காற்றை சுவாசித்தான்.\n'இதோ இங்கே இரண்டாயிரம் காவலர்களின் பாதுகாப்பு இல்லை. கதவுகளைத் திறக்க இருநூற்று ஐம்பத்தாறு எழுத்துகளை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு மாத்திரைகள் இல்லை. தப்பிச் செல்லாமல் இருக்க பதினாறு வளைய சுற்றுச் சுவர்கள் இல்லை. வான் வழித் தப்புதலைத் தடுக்க கண்ணிற்குத் தெரியாத லேசர் படலங்கள் இல்லை. சுரங்கம் தோண்டி ���தன் வழியாக தப்பிக்க நினைப்போரை பொடிப் பொடியாக்கிக் கரைக்கும் அமிலக் குழாய்கள் இல்லை.\nநினைக்கும் போதெல்லாம் நாவிற்கு சுவையான உணவு, சுதந்திரமான சுற்றுப்புறம், அபரிமிதமான பெட்ரோல், அழகான பெண்கள்.\nஇல்லை. நான் திரும்பிப் போவது இல்லை. இங்கேயே நிரந்தரமாக தங்கப் போகிறேன். முதலில் இங்கேயிருந்து தொலைவில் செல்ல வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு. ஒருவேளை அவர்கள் என்னைத் தேடி வந்தாலும், என்னைப் பிடிப்பது அவர்களுக்கு சுலபமாக இருக்கக் கூடாது. திரும்பிச் சென்றால் உடனடியாக நான் லேசர் அறைக்குள் அனுப்பப்பட்டு என் சாம்பல் கடலில் கரைக்கப்படும். இங்கேயே இருப்பதன் மூலம் அவர்கள் வந்து என்னைப் பிடித்தாலும் குறைந்தது எனது ஆயுள் ஒரு மணிநேரமாவது நீட்டிக்கப்படும்.\nஒருவேளை அவர்கள் வராமலே போனால் புதிய வாழ்க்கையை தொடங்குவேன். ஆம் அதுதான் சரி'\nநினைத்துக்கொண்டே கால இயந்திரத்தை விட்டு நகரம் தெரிந்த திசையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.\n\"இவர் திரும்பி வருவார் என்று நம்புகிறீர்களா\nபதில் சொல்லாமல் புன்னகைத்தார் த.பொ.\nஅது ஒரு அற்புதமான காலை நேரம். சூரியன் லேசாக மேலே எழும்பிக் கொண்டிருந்தது. வழியில் பார்த்த எல்லா முகங்களும் ஒரே மாதிரி இருப்பதாக பட்டது அவனுக்கு. எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர்; தெருவை சுத்தப்படுத்திக் கொண்டும், பள்ளிக்கு சென்று கொண்டும், தினப் பத்திரிக்கைகளை விற்றுக் கொண்டும், இரு சக்கர மிதிவண்டிகளில் அலுவலகங்களுக்குப் போய்க் கொண்டும்....\n'ம்ம்ம்ம் நூறு ஆண்டுகளில் உலகம் எவ்வளவுதான் மாறிவிட்டது'\nஅவனுக்கு அப்பொழுது ஒரே பிரச்சினை, தான் எங்கே இருக்கிறேன், எந்த தேதியில் இருக்கிறேன் என்று தெரியாதது. எல்லா அறிவிப்புப் பலகைகளிலும் சித்திர எழுத்துகளே பிரதானமாக இருந்தது. எந்த நாடு என்பதைக் கூட யூகிக்க முடியவில்லை.\nஎதிப்பட்டவர்களிடம் \"இங்கிலீஷ்\" என்றான். எல்லோரும் அவனை ஒருமாதிரி பார்த்துவிட்டு தலையை இட வலமாக அசைத்தனர்.அரை மணி நேர நடைக்குப் பின்னர் நகரத்தின் முக்கிய வீதியை வந்தடைந்தான். மற்ற இடங்களை விட இது பரபரப்பாக இருந்தது. மணிக்கட்டை பார்த்தான் 22 என்று காட்டியது.\nவீதியில் நடக்க ஆரம்பித்தான். வழியிலிருந்த தண்ணீர் குழாயில் குளிர்ந்த நீரை உடலெல்லாம் வழிய வயிறு முட்டக் குடித்தான். சின்ன சின்னதாக கால்களை ஆட்டியவாறு நடைபாதையிலேயே குட்டி ஆட்டம் ஆடினான்.\nஎதிர்ப்பட்டவர்களிடம் ஆட்களைத் தேர்ந்தெடுத்து \"இங்கிலீஷ்\" என்றான், வெகு நேரத்திற்கு வெற்றி இல்லாமல். கடைசியாக ஒருவன் \"யெஸ்\" என்றான்.\nமனம் நிறைந்த மகிழ்வுடன் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தான்.\n\"ஆச்சரியமான கேள்வி. நீங்கள் என்னை சோதிக்கிறீர்களா நீங்கள் இருப்பது எம்பயர் ஆஃப் ஜப்பான்\"\n'அற்புதம், சரியான இடத்தில்தான் இருக்கிறேன். ஜப்பானின் வேகமான வளர்ச்சியில் நானும் பங்கு கொள்ளப் போகிறேன், தொண்ணூறுகளில் பொருளாதார தாழ்நிலை ஏற்படும்போது நான் இயற்கையாகவே மரித்திருப்பேன்'\n\"இன்னும் 2 நிமிடங்கள்தான் இருக்கின்றது\" என்றார் உதவிக்காவலர் தவிப்புடன்.\n\"நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறீர்கள்\n\"என் பணி நிமித்தமாக நான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதனால்தான். நீங்கள்\n\"இந்தியன். ஆனால் படித்தது மட்டும் அமெரிக்காவில். இனி பிழைக்கப் போவது இந்த ஜப்பானில்\"\nஅவர் சிரித்துக் கொண்டே \"நல்வரவு\" என்றார்.\nஉதவிக்காவலர் பதறினார் \"55 நிமிடங்களிக்கு மேலே 15 வினாடிகள் ஆகிவிட்டன. அவர் திரும்பி வருவதாகத் தெரியவில்லை. இன்னும் கால இயந்திரம் திரும்புவதற்காக ஆரம்பிக்கப்படவே இல்லை. அவர் திரும்பி வரப் போவதில்லை\"\nத‌.பொ. எந்த உணர்ச்சியும் காட்டாமல் எழுந்து சுவரிலிருந்த தகவல் பலகைக்குப் போனார். அங்கே அவன் புகைப்படத்திற்கு நேராக இருந்த 'தண்டனை நிறைவேற்றப்பட்டது' என்ற பொத்தானை அழுத்தினார்.\nஅவன் உற்சாகமாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.\n\"ஹா..ஹா..ஹா..நீங்கள் என்னவோ வேறு கிரகத்தில் இருந்து வந்தவரைப் போல் கேட்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். இன்று திங்கட்கிழமை ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி, 1945ம் வருடம், நேரம் காலை 8.14 மணி. நீங்கள் நின்று கொண்டிருப்பது நகரின் பிரபலமான‌ ஷிமா மருத்துவமனை வாசலில். போதுமா தகவல்கள்\nஏதோ நெருடியது...'06 ஆகஸ்ட் 1945, காலை 8.14 மணி'\nநடுங்கும் குரலில் கேட்டான் \"இது என்ன நகரம்\nஅவர் உற்சாகமாக பதிலளித்தார் \"ஹிரோஷிமா\"\n32,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் ஓசை அவன் காதில் கேட்டது.\n*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான இரண்டாவது இடுகை ***\nLabels: அறிவியல், சிறுகதை, புனைக்கதை, போட்டி\n\"சொல்லுங்��� மாமா. நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன். இந்த போட்டித்தேர்வில நான் முதல் 3 இடத்துகுள்ள வரணும்\" என்றேன் நான்.\nஎன்னால் மாமா என்றழைக்கப்பட்ட மருதமூர்த்தி அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். என் அப்பாவும் அவரும் பால்ய காலத்து நண்பர்கள் என்பதாலும், என் அப்பா அகால மரணமடைந்த பின்னர் தாயும் இல்லாமல் தனி மரமாக நான் நின்ற போது என் படிப்பிற்கான முழு செலவையும் செய்தவர் அவர் என்பதாலும் அவர் மீது எனக்கு முழு மரியாதை உண்டு. மற்றவர்கள் அவரை அங்கிள் என்று விளித்தபோதும் மாமா என்று கூப்பிடுவது என்னவோ எனக்கு அவரை மிக நெருக்கமாக உணர்த்தியதால் எனக்கு மாற்றத் தோன்றவில்லை.\nமருதமூர்த்தி மாமா ஒரு சராசரி அறிவியல் ஆராய்ச்சியாளனுக்குரிய எல்லா இயல்புகளையும் கொண்டிருந்தார்; சரியான உடை உடுத்தாதது, முக்கியமான விசயங்களை மறந்து போவது என்று. அவரது சகா கிருஷ்ணகுமாருடன் இணைந்து ஏதோ ஒரு ராணுவ தளவாடங்களைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதாக நினைவு. கிருஷ்ணகுமார் அங்கிளும் அப்பாவின் நண்பர்தான்.\nநான் மருதமூர்த்தி மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தது அடுத்த வாரம் நடக்க இருக்கும் முக்கியமான போட்டித் தேர்வைப் பற்றி. அதில் வெற்றி பெற்றால் எனக்கு மேற்படிப்புக்கான அமெரிக்க நுழைவு சுலபமாக இருக்கும், அதன்பின் என் கனவான நாசாவில் நுழைவதற்கு எனக்கு எந்த தடையும் இருக்காது. ஆனால் அந்த தேர்வுக்கு நான் படித்த முதுகலை இன்சினியரிங் மிகக் குறைந்த அளவே உதவப் போகிறது. அது பற்றி ஏற்கனவே அவரிடம் சொல்லியிருக்க, அது பற்றி பேச என்னை பார்க்கிற்கு அழைத்திருந்தார்.\n\"ஒரு வழி இருக்குப்பா. ஆனா அது 100% இல்லீகல்\" என்றார்.\n\"நான் என்ன‌ ஆராய்ச்சி ப‌ண்ணிட்டு இருக்கேன்னு உன‌க்குத் தெரியுமா\n\"ஏதோ ராணுவத்துக்காக‌ அதிந‌வீன‌ க‌ருவிக‌ள் ச‌ம்ப‌ந்த‌மான்ற‌ அள‌வுக்கு தெரியும் மாமா. ராணுவ‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌தா இருக்குற‌தால‌ நான் இதைப்ப‌த்தி மீரா கிட்ட‌க் கூட‌ எதுவும் கேட்கிற‌தில்லை\" மீரா அவ‌ர‌து அழ‌கான‌ திரும‌ணமாகாத‌ மகள். என் சிறுவ‌ய‌துத் தோழி. அவ‌ள்தான் ஆராய்ச்சியாள‌ர்க‌ள் இருவ‌ருக்குமான‌ ஒரே உத‌வியாளினி. நான் அவ‌ரை மாமா என்ற‌ழைப்ப‌த‌ற்கு அவ‌ளும் ஒரு கார‌ண‌ம்.\n\"அந்த‌ ஆராய்ச்சி நான், கே.கே.கூட‌ சேர்ந்து ப‌ண்ற‌து. அடிப்ப‌��ையில‌ நான் உயிரிய‌ல் விஞ்ஞானின்ற‌தால‌ மூளையைப் ப‌த்தியும் ஆராய்ச்சிப் ப‌ண்ணிட்டிருக்கேன். இது வெளிய‌ யாருக்கும் தெரியாது. கே.கே.க்குக் கூட‌ முழு விவ‌ர‌ம் தெரியாது\"\n\"ஒரு மனுசனோட மூளையோட திறனை அதிகரிக்கறது எப்படின்றதுதான் என்னோட ஆராய்ச்சி, மூளைக்கு ரெண்டு விதமான திறமைகள் இருக்கு, கம்ப்யூட்டர் மாதிரியே, ஒண்ணு தகவல்களை சேமிச்சிக்குற மெமரி பவர், இன்னொன்னு சேமிச்சத் தகவல்கள தேடற ப்ராசசிங் பவர், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் மாதிரின்னு வெச்சிக்கேன்\"\n\"என்னோட ஆராய்ச்சியின் மூலமா நான் இது ரெண்டையுமே அதிகப்படுத்தறதுல வெற்றியடைஞ்சிட்டேன்னுதான் சொல்லணும்\"\n\"இத வெளிய சொல்றதா வேணாமான்னு இன்னும் முடிவு பண்ணல. ஏன்னா இது எவ்வளவுக்கு எவ்வளவு நல்லதோ அவ்வளவுக்கு அவ்வளவு கெட்டதும் கூட\"\nஅமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\n\"நீ படிச்சி முடிச்ச உடனே என்கூட என் ஆராய்ச்சியில சேர்ந்துடுவன்னு நெனச்சேன். ஆனா உன்னோட லட்சியம் வேறயா இருக்கு. பரவாயில்ல. இந்த புதுகருவியின் மூலமா உனக்கு நல்லது நடந்தா எனக்கு சந்தோசம்தான். ஆனா நீ ஒரு விசயத்தை மறந்துடக்கூடாது\"\n\"என்னோட இந்தக் கருவி இப்போதைக்கு 100% சரியா வேலை செய்யுது. ஆனா இதுவரைக்கும் நான் மனுசங்ககிட்ட உபயோகிச்சதில்லை. குரங்குகள்கிட்ட மட்டும்தான் உபயோகிச்சிருக்கேன். அதனால நான் என்னோட ஆராய்ச்சிக்கு உன்னை பயன்படுத்திக்கிறேன்னு நினைச்சிடக் கூடாது.\"\n\"புரியுது மாமா. நான் இந்த விசயத்துல எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்கத் தயாரா இருக்கேன். இது எப்படி வேலை செய்யுது மாமா\n\"நான் இந்த கருவியை உன் தலைக்குள்ள ஆபரேசன் பண்ணி பொருத்திடுவேன். இது தனியா செயல்படுற சின்ன கம்ப்யூட்டர் மாதிரின்றதால வெளிய இருந்து எந்த சிக்னலும் இதுக்குத் தேவை இல்ல. இதோட அளவும் ரொம்ப சின்னதா இருக்குறதால ஸ்கல்ல ஓபன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. சின்னதா ஒரு ஓட்டையிலயே வேலை முடிஞ்சிடும், ஒரு மணி நேர ரெஸ்ட்க்கு பின்னால நீ எல்லா வேலையும் செய்யலாம். இதுல 6 GB அளவுக்கு மெமரி இருக்கு அது மட்டும் இல்லாம ஒரு சின்ன ப்ரோகிராமும் இருக்கு. டெஸ்ட்டுக்கு முதல் நாள் நான் இதை உன் தலையில வெச்சிடுவேன், உன் டெஸ்ட்டுக்குத் தேவையான எல்லா விசயங்களோட‌.\"\n\"அது மறுபடியும் எப்ப எடுப்பீங்க மாமா\n\"தேவையே இல்லை. இது ச���ியா 24 மணிநேரம்தான் வேலை செய்யும், அதுக்கப்புறம் தானா கரைஞ்சிடும், கரையாத பாகங்கள் எல்லாம் உன்னோட கழிவுகள் வழியா வெளியேறிடும். அதுக்கப்புறம் நீயே சத்தியம் பண்ணி சொன்னாலும் எந்த கொம்பனாலயும் நிரூபிக்க முடியாது\"\n\"அட்டகாசம் மாமா. என்னால நம்பவே முடியலை\"\nஅமைதியா சிரித்தார் மருதமூர்த்தி மாமா.\n\"மாமா, நான் ஒரு விசயம் சொல்லணும். உங்க கூட இருக்குற எங்களுக்குத்தான் தெரியும் நீங்க எவ்வளவு உழைக்கிறீங்க, எவ்வளவு திறமையானவர்னு. ஆனா உங்களோட பல வெற்றிகள் கே.கே. அங்கிளுக்குத்தான் போகுது. நீங்க வேலை செய்றீங்க ஆனா அவர் பேர் தட்டிட்டுப் போறாரு. \"\nமாமாவின் முகம் மாறியது, கண்டிப்பாக அவர் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் இருந்தே தெரிந்தது.\n\"மன்னிக்கணும் மாமா. அப்பா இருந்தவரைக்கும் பலதடவை இதைப்பத்திப் பேசியிருக்காரு, நீங்க ரெண்டு பேருமே அவருக்கு நல்ல நண்பர்களா இருந்தாலும். ஏதோ சொல்லணும்னு தோணுனது அவ்வளவுதான் மாமா\"\n\"ஹே..மை பாய்... இதெல்லாம் பத்திக் கவலைப்படாதே. வர வியாழக்கிழமை சாயங்காலம் என் ஆய்வுக்கூடத்துக்கு வந்துடு. அதுக்கு முன்னால இன்னிக்கு வீட்டுக்குப் போன உடனே எனக்கு உன்னோட ஸ்டடி மெட்டீரியல் எல்லாத்தையும் மெயில் அனுப்பிடு\"\n\"கண்டிப்பா மாமா. மீராவை கேட்டதா சொல்லுங்க. பை\"\nஎல்லாம் எதிர்பார்த்தபடி சென்றது. எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆபரேசன் முடிந்தது. அங்கேயே ஒருமுறை சாம்பிள் டெஸ்ட் எழுத எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வந்து விழுந்தது, மந்திரத்தில் மாங்காய் விளைந்தது போல.\nமறுநாள் போட்டித்தேர்விலும் அட்டகாசமாக எழுதினேன். கண்டிப்பாக முதல் இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெளியே வந்து முதல் வேலையாக மாமாவிற்கு போன் செய்தேன். மாலை வந்து பார்க்குமாறு கூறினார்.\nசந்தோசமாக வந்து பைக்கை எடுத்த போது கண்கள் இருண்டது.. எல்லாமே இருட்டாக மயங்கி விழ ஆரம்பித்தேன்.\nகண் விழித்த போது ஏதோ ஒரு அழுக்கான எட்டுக்கு எட்டு அறையின் கட்டாந்தரையில் மல்லாந்து இருந்தேன். ஒன்றும் புரியாமல் சுற்றும் முற்றும் பார்க்க அதிர்ந்தேன். அது ஒரு லாக்‍‍ அப்.\nதட்டுத் தடுமாறி எழுந்து அமர, கம்பிக்கு வெளியே வந்து நின்ற கான்ஸ்டபிள்\n\"ங்கொய்யா... உன்னப் பத்திதான்டா இன்னிக்கு பேப்பர்ல முதல் பக்கத்துல போட்��ிருக்கு. படி. ஒழுங்கு மரியாதையா ஏன் பண்ணினன்னு சொல்லு\"\nஎன்றவாறே அன்றைய நாளிதழை எறிந்தார். நடுங்கும் விரல்களால் அதை பிரிக்க, அதில் இருந்த உண்மை முகத்தில் அறைந்தது.\n\"கல்லூரி மாணவனால் விஞ்ஞானி கிருஷ்ணக்குமார் கொலை: கொலைக்கான காரணத்தைப் போலீஸ் துப்புத் துலக்குகிறது\"\n*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான முதல் இடுகை ***\nLabels: அறிவியல், சிறுகதை, புனைக்கதை\nசெய்தி: ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பைலட்கள் தூங்கியதால் பரபரப்பு.\nவெறும்பயல்: அதுக்குதான் ஃப்ளைட்ல 'குருவி' படம் போடாதீங்கன்னு சொன்னேன். கேட்டாங்களா\nசெய்தி: பூரண மதுவிலக்கை கொண்டுவரக் கோரி பா.ம.க.வினர் டாஸ்மாக் கடைகளின் முன் ஆர்பாட்டம் நடத்துவார்கள்.\nவெறும்பயல்: கலந்துக்குற தொண்டர்களுக்கு பிரியாணி கிடைக்குதோ இல்லையோ குவாட்டர் பாட்டில் கிடைக்கிறதுல பிரச்சினை இருக்காது\nசெய்தி: விலைவாசி உயர்வுப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிப்பதற்காக கூடிய கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ முடிவெடுக்காமல் கலைந்தது. மீண்டும் 29ம் தேதி கூடப் போவதாக அறிவிப்பு.\nவெறும்பயல்:கண்டிப்பா 29ம் தேதி முடிவை அறிவிச்சிடுவாங்க - மறுபடியும் எப்ப பொலிட் பீரோவ கூட்டறதுன்ற முடிவை \nசெய்தி: பணவீக்கம் இன்னும் அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்குத் தொடரும் என நிபுணர்கள் கருத்து\nவெறும்பயல்: மொத்தத்துல பர்ஸ் வீக்கம் இன்னும் கம்மியாயிடும்ன்றீங்க. சரிதான். ஏற்கனவே ஆரஞ்சு மாதிரி இருந்த பர்ஸ் இப்ப சுருங்கி எலுமிச்சம்பழம் ரேஞ்க்கு ஆயிடுச்சி. அத எலந்த பழம் ரேஞ்சுக்கு கொண்டு வந்துடுவீங்க போல.\nஅமெரிக்க துணைத் தூதர்: உயர் படிப்பிற்காக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெறும்பயல்: நம்ம ஊர் மெடிக்கல் காலேஜ்லயும் இஞ்சினியரிங் காலேஜ்லயும் கேக்கற டொனேசன விட அமெரிக்கா போய் படிக்க கம்மியாத்தான் செலவாவுன்றது படிக்கற பசங்களுக்குத் தெரியாதா என்ன\nLabels: செய்தி விமர்சனம், நையாண்டி\nடிஸ்கி: இந்த பதிவில் ஒரு சில மிகச்சிறந்த பதிவர்களின் பெயர்களை உபயோகப்படுத்தி உள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் கோபப் பட மாட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களின் பெயர்களை நான் சொல்லவில்லை. நீங்கள் கண்டுபிடிக்க முடிந்தாலே எனக்கு வெற்றிதான்.\nமதுரை செல்லும் டெக்கான் ஏர்வேஸ் விமானத்துக்குள் ஏறுகிறார் விஜயகாந்த். \"வெல்கம் சார்\" என்ற விமானப் பணிப்பெண்ணிடம் \"ஏதாவது அரசியல்வாதிகள் இருக்காங்களா\" என்று செக் செய்து கொள்கிறார். பணிப்பெண் \"இருக்காங்க சார், அது மட்டும் இல்ல, இந்த தடவை வலைப்பதிவர் மாநாடு மதுரையில நடக்குதாம். அதனால கொஞ்சம் வலைப்பதிவர்களும் இருக்காங்க\" என்கிறார். \"அவங்களால நமக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை\" என்று நினைத்துக் கொண்டே சென்று காலியான ஒரு சீட்டில் உட்கார்கிறார் விஜயகாந்த் வரவிருக்கும் பிரச்சினைகள் குறித்து தெரியாமல்.\nஅருகில் இருப்பவர் \"வணக்கம் சார்\" என்கிறார், பார்த்தால் பண்ருட்டி ராமச்சந்திரன்.\nவி: நீங்க எப்படி சார் இங்க\nப.ரா: நீங்க வரதா சொன்னாங்க, அதுதான் நானும் ஒரு டிக்கெட் போட்டுட்டேன். ஒரு முக்கியமான விசயம். 2011ல் நம்ம ஜெயிச்ச உடனே துணை முதலமைச்சர்னு ஒரு பதவிய ஏற்படுத்தி, அதுல ஒங்க கூடவே இருக்குற ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிய போடுங்க, அது உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்\nவி: (மனதுக்குள்) நானே ராமு வசந்தன கழட்டி விட்டுட்டு நெம்பர் 2 இடத்துல சுதீஷ ஒக்கார வெக்க படாத பாடு பட்டுட்டு இருக்கேன். இதுல இவரு வேற (சத்தமாக) இந்த சீட் செரியில்ல, நான் பின்னால உக்காந்துக்கிறேன்..\nஎழுந்து பின்னால் அமர்கிறார், அருகில் பார்த்தால் சுதீஷ்..\nசு: மாமா 2011 நம்ம ஜெயிச்ச உடனே பதவியேற்பு விழாவ எங்க வெச்சுக்கலாம் மெட்றாஸ் யுனிவர்சிட்டி ஆடிட்டோரியத்திலயா\nவி: (மனதுக்குள்) இப்பதான் குழந்தை பொறந்து தவழவே ஆரம்பிச்சிருக்கு, அதுக்குள்ள வயசுக்கு வர சடங்குக்கு வளையல் என்ன டிசைன்ல போடறதுன்னு இவனுக்கு கவலை. திட்டவும் முடியாது, உடனே அவங்க அக்காட்ட வத்தி வெச்சுடுவான் (சத்தமாக) எது நல்லா பெருசா இருக்கோ அதிலயே வெச்சுக்கலாம் மாப்ளே.\nஎழுந்து வேறு ஒரு சீட்டில் அமர்கிறார். அருகில் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பவர் திரும்புகிறார்...ஓ.பி.எஸ். விஜயகாந்த் சுதாரித்து எழுவதற்குள் ஓ.பி.எஸ் விஜயகாந்த் கையை பிடித்துக்கொண்டு தனது துண்டை எடுத்து இருவரின் கையயும் மூடுகிறார்.\nவி: சார்... சார்... என்ன பண்றீங்க ஏன் என்னோட ஒரு விரல மட்டும் புடிச்சி இந்த அழுத்து அழுத்துறீங்க\nஓ.பி.எஸ்: உஷ்.. கூட்டணி பத்தி பேச்���ு வார்த்தை நடத்திட்டு இருக்குறப்ப சத்தம் போடாதீங்க. இதுக்கு ஒத்துக்குறீங்களா இல்லயா\nவி: (மனதுக்குள்) ஒத்துக்கலன்னா விட மாட்டான் போல இருக்கே இந்த ஆளு, கை வேற இந்த வலி வலிக்குதே (சத்தமாக) ஒத்துக்கிறேன் சார், கைய விடுங்க.\nசிரித்துக்கொண்டே ஓ.பி.எஸ்.: அப்பாடா வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு தொகுதிக்கே ஒத்துகிட்டீங்க. நான் அம்மாட்ட பேசிடறேன், உங்களுக்கு பொட்டி வந்துரும். எந்த தொகுதின்னு முடிவு பண்ணி அம்மா சொல்வாங்க, நீங்க உடனே தமிழகம் முழுசும் சூறாவளி சுற்றுப்பயணம் ஆரம்பிச்சிடுங்க.. அனேகமா உங்களுக்கு பாண்டிச்சேரி தொகுதிய அம்மா கொடுப்பாங்கன்னு நினக்கிறேன்...\nவிஜயகாந்த் டெரர்ராகி வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் இருப்பவர் புதிய முகமாக ஜெர்மானிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க தைரியமாக பேச ஆரம்பிக்கிறார்.\nவி: வணக்கம் சார். அரசியல்வாதிங்கள பாத்தாலே பயமா இருக்கு.\nஅவர்: கவலையே படாதீங்க. வரலாறுல எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலம வரும். இப்படித்தான் 1972ல இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சின வந்தது, உடனே அவங்க அமெரிக்காகிட்ட ஆலோசனை கேட்டாங்க. அதே மாதிரி நீங்களும் என்கூட வாங்க \"சோ\" சார்கிட்ட போய் ஆலோசனை கேப்போம். என்ன சொல்றீங்க\nவி: (என்னாது சோ கிட்ட போய் ஆலோசனையா விளங்குனா மாதிரிதான்) பரவாயில்ல சார், நான் அந்த சீட்ல போய் உக்காந்துக்கிறேன்.\nஉட்கார்ந்த பின்புதான் கவனிக்கிறார், அருகில் சுப்பிரமணிய சாமி.\nசு.சாமி: இங்க பாருங்கோ.. நான் ஜெயலலிதாட்ட பேசிட்டேன், அவா உங்களுக்கு 2 சீட் தர சம்மதிச்சுட்டா. இப்படியே நாம கோயமுத்தூர் போயி அங்க இருந்து கார்ல கொடநாடு போயிறலாம். ஃப்ளைட் மதுரைக்கு போகுதேன்னு கவலப்படாதேள், இந்த ஏர் டெக்கான் பைலட் ஜெட் ஏர்வேஸ்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினதோட சி.டி. எங்கிட்ட இருக்கு, அதை சொல்லி அவாள மிரட்டி கோயமுத்தூருக்கு போக சொல்லலாம்.\nவி: நான் யோசிச்சி சொல்றேன்\nசு.சாமி: இதுக்கு நீங்க ஒத்துக்கலேன்னா, ஒபாமாவ தோக்கடிக்கறது எப்படின்னு உங்க மச்சான் சுதீஷ், பி.ஜே.பி வட்டச் செயலாளர்கிட்ட பேசிட்டு இருந்த சி.டி. இருக்கு, ஆதாரத்தோட வெளிய விட்டுடுவேன், பாத்துகோங்க.\n(கொல்றானுங்களே) என்று நினைத்துக் கொண்டு வேறு சீட்டில் அமர்கிறார்.\nஅருகிலிருப்பவர்: நீங்க என்கிட்டதான் வருவீங்கன்னு தெரியும். ���துரை போனதும் அஞ்சா நெஞ்சன போயி பாத்துடுவோம். அப்படியே கிளம்பி சென்னை வந்தீங்கன்னா, மடிப்பாக்கத்துல ஒங்களுக்கு ஒரு வார்டு கவுன்சிலர் பதவி உறுதி. தேர்தல்ல நான், நம்ம உடன்பிறப்புங்க எல்லாம் உங்களுக்கு வேலை செய்றோம். உண்மைத்தமிழன்ட மட்டும் போயிடாதீங்க, அவரு அம்மா கட்சிக்காரரு..\nவி: (என்னது வார்டு கவுன்சிலரா இதுக்கு அவனுங்களே பரவாயில்லயே) ஆமா யாரு நீங்க\nஅருகிலிருப்பவர்: கட்சியல உப்புமா போஸ்ட்ல இருக்குறானே இவன் வந்து கூட்டணி பத்தி பேசுறானேன்னு நினைக்காதிங்க. நான் மடிப்பாக்கத்துலயே ரொம்ப லக்கியான ஆளு..\nவி: யேய் அவனா நீயி....\nஅலறியடித்துக் கொண்டு போய் வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் அ.இ.நா.ம.க கார்த்திக். (ஆஃப் ஆன லேப்டாப்பையே கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்)\nகா: அது.. வந்து... நீங்களும்... நானும்... கூட்டணி வெஷ்ஷா...நாமதான் ஜெயிப்போம்... என்...கட்சிக்காரங்க 190... தொகுதியில நிக்கறதுக்கு....ரெடியா இருக்காங்க...மீதியில ... உங்க ஆளுங்கள....நிறுத்துங்க...\nவி: அது என்னா 190 கணக்கு\nகா: அது... வந்து.. கட்ஷியில... இது...வரைக்கும்... 190.... பேர்தான்.... சேர்ந்திருக்காங்க. அதுதான்....\nவி: (இன்னிக்கு யார் மொகத்துல முழிச்சேன்னே தெரியலயே)\nஃப்ளைட் முழுக்கத் தேடி சாந்தமான ஒருவர் அருகில் அமர்கிறார்.\nவி: (லேசான ஏமாற்றத்துடன்) நாந்தான் விஜயகாந்த், நல்லா ஆக்சன் படம்லாம் நடிப்பேன், இப்பதான் கட்சி ஆரம்பிச்சிருக்கேன். நீங்க\nஅவர்: நான் ஒரு வாத்தியார், ரொம்ப நாளா நம்ம பசங்களுக்கு பாடம் எடுத்துட்டு இருக்கேன். என் கையில பிரம்பு எல்லாம் இல்ல. அடிச்சு சொல்லிக் குடுக்காம அன்பா சொல்லிக் கொடுப்பேன். ஆமா இன்னும் 3 வருசத்தில நீங்க என்னாவா ஆகப் போறீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா\nவி: (இவரும் அதயே நோண்டுராறே) அது வந்து..நான் சி.எம்.மா இருப்பேன்\nஅவர்: அது எப்படி நீங்க சொல்றீங்க\nவி: அத எதுக்கு நான் பார்க்கணும்\nஅவர்: எல்லாருமே அவங்கவங்க ஜாதகத்தை நல்லா மனப்பாடம் பண்ணிக்கனும். ஜோசியம் அப்படின்றது ஒரு கடல் மாதிரி, நான் அதுல உங்கள ஒரு பயணம் அழைச்சிட்ட்டுப் போறேன்.\nவி: நீங்க எதுக்கு என்னை அழைச்சிட்டுப் போறீங்க\nஅவர்: உங்களுக்கு விருப்பமில்லேன்னா வேண்டாம், கரையிலயே நின்னுக்கங்க, விருப்பம் இருக்கறவங்க மட்டும் வந்தா போதும். அலோ எங்க போறீங்க\nவி: அது... எல்லார்கிட்டயும் பேசுனதுல எனக்கு வயித்த கலக்குது, நான் பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்.\nவேக வேகமாக நடக்கிறார். பக்கத்திலிருந்து ஒரு குரல்\nஅவர்: வாங்க கேப்டன் வந்து என் பக்கத்தில உக்காரதுக்கு நன்றி\nவி: நாந்தான் உங்க பக்கத்திலேயே உக்காரவே இல்லயே\nஅவர்: ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நானே ஒரு சின்னப் பையன்ங்க. இப்பிடியே பின்னூட்டம் போட்டு போட்டு பழக்கமாயிடுச்சி. வருத்தப்படாதீங்க\n\"ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேடேய்\" என்று ஒரு ஐம்பது, அறுபது குரல்கள் கேட்க திடுக்கிடுகிறார்,\nவி: என்னங்க இப்படி கத்துறாங்க\nஅவர்: அவங்கள்லாம் என்னோட கருத்த வழிமொழியுறாங்களாம், இதெல்லாம் உங்களுக்கு புரியாது. விடுங்க.\nவி: (எனக்கு இன்னிக்கு சனி உச்சத்துல இருக்குன்னு நெனக்கிறேன்)\nபாத்ரூம் அருகில் இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஒருவர்: கவலப்படாதீங்க அய்யா. அந்த ஆளூ இந்த வண்டியிலதான் வராரு. ஏரோப்ளேன் ஸ்டேன்ட்லயே அவனைத் தூக்குறோம்.\nமற்றவர்: என்ன சொல்ற குரு, ஏரோப்ளேன் ஸ்டேன்டா\nமுதலாமவர்: ஆமாங்கய்யா, பஸ் நிக்கற இடம் பஸ் ஸ்டேன்ட். அதே மாதிரி ஏரோப்ளேன் நிக்கற எடம் ஏரோப்ளேன் ஸ்டேன்ட்தான. அங்கதான் நம்ம பசங்க சுமோவோட நிக்கறாங்க. தூக்கிட்டு தோட்டத்துக்கு கொண்டாந்துறோம்.\n\"எங்க போனாலும் விட மாட்டேன்றானுங்களே\" என்று புலம்பியபடி பயத்துடன் கதவைத் திறக்கிறார் விஜயகாந்த். அது பாத்ரூம் இல்லை, பாராசூட் ரேம்ப்.\n\"ஆகா, இதுதான்டா இவங்க எல்லார்கிட்ட இருந்து தப்பிக்க நல்ல வழி. கீழப்போயி ஒரு லாரியோ, ஷேர் ஆட்டோவோ புடிச்சி மதுரைக்கு போயிட வேண்டியதுதான்\" என்று நினைத்துக் கொண்டு ஒரு பாராசூட்டை எடுக்கிறார்.\nஅப்போது பின்னாலிருந்து ஒரு குரல்,\n\"எங்க கூட கூட்டணி வெச்சீங்கன்னா நாம கண்டிப்பா ஜெயிக்கறோம். நீங்கதான் துணை முதலமைச்சர்\"\n\"ஆகா, காலையில இருந்து இப்பதான் ஒரு நல்ல வார்த்தையை காதில் கேக்குறேன்\" என்று நினைத்தவாறு திரும்புகிறவர் அதிர்ச்சியில் சிலையாகிறார்.\nஅங்கே நிற்பது விஜய டி.ராஜேந்தர்..\nஆனா உனக்காகவே காத்திருக்குயா ல.தி.மு.க\nசிம்பு செட் பண்றான்டா ட்ரெண்ட்\nஎல்லா கம்பெனியிலயும் இருப்பாங்க ஜி.எம்.மு\nஎன் கூட நீ கூட்டணி வெச்சா நாந்தாங்க சி.எம்.மு\"\nடி.ஆர்: 2011ல நாந்தாங்க சி.எம்.மு\nவிஜயகாந்த்: (அழுகிற குரலில்) இன்னொரு த���ா சொல்லுங்க\nடி.ஆர்: (தலையை ஸ்டைலாகக் கோதியபடி) 2011ல நாந்தாங்க சி.எம்.மு\nவிஜயகாந்த் பாராசூட் இல்லாமலேயே வெளியே குதிக்கிறார்.\nஎன் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு\nஎன் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்\nபோடுறா.. சினிமா தொடர் பதிவை...\nசுழல் கதைகள் (5 இன் 1)\nசென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு\nஅதிஷாவிற்கு வாழ்த்துக்கள் (விகடனில் அவரது படைப்பு)\nகாணாமல் போனவை: சைக்கிள், நண்பர்கள் அப்புறம் .... ந...\nஇன்று (ஆகஸ்ட் 27, 2008) என் செல்லத்தின் பிறந்தநாள்...\nசென்னைப் பதிவர் சந்திப்பு 10.ஆகஸ்ட்.2008 (படங்களுடன்)\nடிபிசிடி.. சென்னை பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன\nகர்நாடக கண்டக்டரும் கவுண்ட பெல்லும்\nஒரு பாடல் உருவாகிறது – பார்ட் 3\nமாயா..மாயா..எல்லாம் மாயா.. (அறிவியல் சிறுகதை)\nபுது ப்ராஜக்ட் (சின்னக் கதைகள் - 1)\nஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.emunahavodah.org/parashah/feb-2021-terumah/", "date_download": "2021-08-02T10:17:52Z", "digest": "sha1:XP4S43A6OLAJND3PDQ3HVL33H4IQUC5K", "length": 28881, "nlines": 152, "source_domain": "www.emunahavodah.org", "title": "Terumah – Emunah Avodah", "raw_content": "\nபராஷா டெரூமா (காணிக்கை ): உடன்படிக்கைப் பெட்டி\nடெரூமா (காணிக்கை ) תְּרוּמָה\nயாத்திராகமம் 25:1–27:19; 1 இராஜாக்கள் 5:26–6:13; 2 கொரிந்தியர் 9:1–15\nபராஷா பெயர் – 19 டெரூமா, תְּרוּמָה\nஇந்த வார டோரா வாசிப்பின் இந்த தலைப்பு, டெரூமா (תְּרוּמָה) என்பது எபிரேய வார்த்தையிலிருந்து காணிக்கை, பரிசு அல்லது பங்களிப்பு என்று பொருள். இந்தப் பராஷாவில், வனாந்தரத்தில் ஒரு சரணாலயம் கட்டுவதற்காக இஸ்ரயேல் மக்களிடமிருந்து ஒரு உற்சாகபலி எடுக்க கர்த்தர் மோஷேக்கு கட்டளையிடுகிறார்.\nமிஷ்கான் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயம், கடவுளின் புனித பிரசன்னம் மக்களுக்கு மத்தியில் காணக்கூடிய ஒரு நினைவூட்டலாக இருந்தது.\nவிலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கற்கள், நேர்த்தியான கைத்தறி, விலங்குகளின் தோல்கள், மரம், விளக்குகளுக்கு எண்ணெய், தூபத்திற்கான மணம் மசாலா ஆகியவை காணிக்கை பொருள்களில் அடங்கும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\n“விருப்பத்தோடும் இருதயத்திலிருந்தும்” கொடுத்தவர்களிடமிருந்து மட்டுமே காணிக்கை எடுக்கும்படி கர்த்தர் மோஷேக்கு அறிவுறுத்தினார்.\nநம்முடைய பாவ இயல்பு காரணமாக, நாம் சுயநலவாதிகளாகவும், எதைப் பெற முடியுமோ அதைத் தேடுகிறோம்; ஆனால் பெறுவதை விட கொடுப்பது மிகவும் பாக்கியம் என்று வேதாகமம் சொல்கிறது. (அப்போஸ்தலர் 20:35)\nஇந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், நாம் குறிப்பாக இறைவனின் வேலையை நோக்கி கொடுக்கும்போது, நாம் கொடுத்ததை விட மிக அதிகமாக திரும்பப் பெறுகிறோம். நாம் தாராளமாகக் கொடுக்கும்போது, அதற்குப் பதிலாக தாராளமாகப் பெறுவோம்.\nஇஸ்ரயேலர் கடவுளின் பிரசன்னத்திற்காக ஒரு சரணாலயத்தையும் அதன் அனைத்து அலங்காரங்களையும் உருவாக்க வேண்டும். அவர்கள் கற்பனை செய்த எந்தவொரு வடிவமைப்பினாலும் அவை உருவாக்கப்படக்கூடாது, ஆனால் கடவுளின் குறிப்பிட்ட வரைபடத்தின்படி மட்டுமே, கடவுள் மோஷேயை மலையில் காட்டினார்.\nஇந்த வனப்பகுதி சரணாலயம் பரலோகத்தில் சாட்சியத்தின் கூடாரத்தின் உண்மையான ஆலயத்தின் நகலாக இருந்தது. வெளிப்படுத்துதல் 15: 5)\nகூடாரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த “அலங்கரித்தல்” என்பது ஆரோன் ஹப்ரீத் הַבְּרִית אָרוֹן அல்லது “உடன்படிக்கைப் பெட்டி” ஆகும், இது தங்கத்தால் மூடப்பட்ட அகாசியா மரத்திலிருந்து தயாரிக்கப்பட வேண்டும். அதில், கற் பலகைகளில் எழுதப்பட்ட பத்து கட்டளைகள் வைக்கப்பட்டு இருந்தன.\nபுதிய உடன்படிக்கையில் எபிரேயர் புத்தகத்தின்படி, அதில் மன்னா மற்றும் ஆரோனின் தடியுடன் ஒரு தங்கப் பானையும் இருந்தது, ஆனால் அது சாலொமோன் ராஜாவின் காலத்தில், இராஜாக்கள் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தாலும், பேழையில் இரண்டு கற் பலகைகள் மட்டுமே இருந்தன. (1 இராஜாக்கள் 8: 9)\nஆரோன் ஹப்ரீத் குறித்து டனாக்கில்(பழைய ஏற்பாடு) பல கதைகள் உள்ளன, அவை அதன் வரலாற்றின் ஒரு பகுதியை நமக்குத் தருகின்றன.\nவனாந்தரத்தில் அலைந்து திரிந்த 40 ஆண்டுகளில், இஸ்ரயேலர் நான்கு தங்க வளையங்கள் ஊடாக வைக்கப்பட்ட கம்பங்களை பயன்படுத்தி தொங்கலிட்டு பேழையை எடுத்துச் சென்றனர்.\nஅவர்கள் முகாமிட்டபோது, பேழை கூடாரத்திற்குள் வைக்கப்பட்டது.\nயோசுவா தலைமையிலான இஸ்ரயேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் சென்றபோது ஆசாரியர்கள் பேழையை யோர்தான் நதிக்குள் கொண்டு சென்றார்கள்.\nஏழு நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை எரிகோ நகரைச் சுற்றி பேழை எடுத்துச் செல்லப்பட்டது. ஏழாம் நாளில், ஏழு பூசாரிகள், ஏழு ஷோஃபரோட் (ஆண் ஆட்டின் கொம்புகளால் ஆன எக்காளம்) ஊதி, ஏழு முறை பேழையுடன் அணிவகுத்து���் சென்றனர், ஒரு பெரிய கூச்சலுடன், எரிகோவின் சுவர்கள் கீழே விழுந்தன, அவர்கள் உள்ளே சென்று நகரத்தை கைபற்றினர். (யோசுவா 6: 16-20)\nஏலியின் காலத்தில், இஸ்ரயேலர் பேழையை போருக்கு கொண்டு சென்றனர், அதன் இருப்பு பெலிஸ்தர்களுக்கு எதிராக வெற்றியைப் பெறும் என்று நம்பினர்.\nமாறாக, அது பெலிஸ்தர்களால் கைப்பற்றப்பட்டது. பெலிஸ்தர்கள் பேழையைக் கொண்டுவந்த ஒவ்வொரு இடத்திலும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது, எனவே அவர்கள் அதை இஸ்ரயேலுக்கு திருப்பி அனுப்பினார்கள்.\nதாவீது ராஜா அதை எருசலேமில் கூடாரத்தில் அதன் சரியான இடத்திற்கு கொண்டு வரும் வரை இது சுமார் 20 ஆண்டுகளாக கிரியாத்-யாரீமில் இருந்தது. (2 சாமுவேல் 6:17-20; 1 நாளாகமம் 15: 1–3; 2 நாளாகமம் 1: 4)\nஇன்றும், பேழையின் இடம் ஒரு மர்மமாகவே உள்ளது.\nஉடன்படிக்கைப் பெட்டிக்கு இறுதியில் என்ன நடந்தது என்பது குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. கிமு 587ல் எருசலேம் மற்றும் சாலமன் ஆலயத்தை அழித்தபோது பாபிலோனியர்கள் கப்பல்களையும் பெட்டியையும் எடுத்துச் சென்றதாக பொதுவாக நம்பப்படுகிறது (1 எஸ்ட்ராஸின் புத்தகத்தின்படி):\n“அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பாத்திரங்கள் அனைத்தையும் பெரியதாகவும் சிறியதாகவும் தேவனுடைய பெட்டியின் பாத்திரங்களையும், ராஜாவின் பொக்கிஷங்களையும் எடுத்து பாபிலோனுக்கு எடுத்துச் சென்றார்கள்.” (1 எஸ்ட்ராஸ் 1:54)\nஎவ்வாறாயினும், பாபிலோனியர்கள் பேழையை எடுத்துச் சென்றதாக வேதாகமத்தில் சொல்லப்படவில்லை, மேலும் பல கண்டுபிடிப்புகள் அறிவிக்கப்பட்டது, இருந்தபோதிலும், அதன் இருப்பிடம் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nரோமர்களால் இயேஷூவா (இயேசு) தூக்கிலிடப்பட்ட இடத்தில்தான் இது இருப்பதாக சிலர் நம்புகிறார்கள், அவருடைய இரத்தம் பூமிக்குக் கீழே உள்ள கருணை இருக்கை மீது தெளிக்கப்பட்டது.\nஅதேபோல், மேற்கு சுவர் சுரங்கங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் பார்வையாளர்கள் உடன்படிக்கைப் பெட்டி புதைக்கப்பட்டதாக மற்றவர்கள் நம்பும் இடத்திற்கு மிக அருகில் அழைத்துச் சென்று காட்டப்படுகிறார்கள்.\nகருணை இருக்கைக்கு மேல் தங்க கெருவீம்\nபேழையின் மூடி மற்றும் கருணை இருக்கைக்கு மேல் இரண்டு தங்க கெருவீம்கள் வைக்கப்பட்டன. பேழையின் மூடி மேலேயும் இந்த இரண்டு கெருவீம்கள் நடுவே நின்றும் கடவுள் மோஷேயுடன��� பேசினார்.\nசில வேதவசனங்கள் இதை கடவுளின் சிம்மாசனம் என்று பேசுகின்றன. (2 சாமுவேல் 6:2; ஏசாயா 37:16)\nஎசேக்கியா ராஜா ஜெபித்தபோது, ​​அவர் YHVHஐ, கெருவீம்களுக்கு மேலே சிங்காசனம் செய்தவர் என்று உரையாற்றினார் (உடன்படிக்கைப் பெட்டியின் கருணை இருக்கையைக் குறிப்பிடுகிறார்).\n“சட்டம்” பேழையின் அஸ்திவாரத்தை உருவாக்கியது என்பதை நாம் கவனிக்கலாம், மேலும் கடவுளுடனான தொடர்பு கருணை இருக்கையிலிருந்து வெளிவந்தது.\nகடவுளுடனான நமது உறவு எப்போதும் அவருடைய கருணையால் வடிகட்டப்படுகிறது.\nஆனால் “கருணை இருக்கை” என்றால், சரியாக என்ன அது எபிரேய மொழியில் இது Kapporet / כַּפֹּרֶת / கப்போரெத் என்று அழைக்கப்படுகிறது, இது Kapparah / கப்பாரா என்ற வார்த்தையிலிருந்து வந்தது, பிராயச்சித்தம் என்பது இதன் பொருள். இந்த வார்த்தையின் வேர்ச்சொல் கஃபார், அதாவது “மறைப்பது” பொருள்.\nகருணை இருக்கை உடன்படிக்கைப் பெட்டிக்கு ஒரு பொன் மறைப்பாக இருந்தது, ஆனால் அது கடவுள் தனது கருணையின் மூலம் நமக்குக் கொடுக்கும் நம்முடைய பிராயச்சித்தத்தைக் குறிக்கிறது.\nஆனால் கெருவீம்கள் (כְּרֻבִים) என்றால் என்ன\nபிரபலமான நவீன நாட்டுப்புறக் கதைகள் அவர்களை புஷ்டியான, நிர்வாணக் குழந்தைகளாகக் குறிக்கின்றன, அவை சிறிய இறக்கைகளைக் பறக்க கொண்டுள்ளன, ஆனால் வேதாகமம் அவர்களை வித்தியாசமாக விவரிக்கிறது.\nஅவர்கள் முதலில் ஆதியாகமத்தில் எரியும் வாள்களுடன் வலிமைமிக்க தேவதூதர்களாகத் தோன்றுகிறார்கள். ஆதாமும் ஏவாளும் வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்கள் ஏதேன் தோட்டத்தின் நுழைவாயிலையும், வாழ்வு தரும் மரத்தையும் பாதுகாத்தனர். (ஆதியாகமம் 3:24)\nகெருவீம்கள் கடவுளிடம் கபணி செய்யும் சிறகுகள் கொண்ட தேவதூதர்கள். எசேக்கியேல் தீர்க்கதரிசி தனது தரிசனங்களில் (எசேக்கியேல் 1 மற்றும் 10 அத்தியாயங்கள்) கண்ட கெருவீம்களின் உருவங்களை நான்கு முகங்கள், நான்கு இறக்கைகள் மற்றும் ஒரு மனிதனின் கைகள் கொண்டதாக விவரித்தார். அவர் கெருவீம்கள் பேசும் போது சர்வவல்லவரின் சத்தம் போல அவர்களின் சிறகுகளின் சத்தத்தை அவர் விவரிகிறார்.\nயூத மதத்தின் பெரும்பாலான பிரிவுகள் (பாரம்பரிய ரபினிக் யூத மதம் உட்பட) கெருவீம்கள் உள்ளிட்ட தேவதூதர்களின் இருப்பை நம்புகின்றன, இருப்பினும் நம்பிக்கைகள் பரவலாக வேறுபடுகின்றன.\nகெருவ���ம்களின் படங்கள் மகா பரிசுத்த இடத்திலும் (கோடேஷ் ஹாகோடெஷிம்) தோன்றுகிறது, இது சரணாலயத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தடிமனான, கனமான முக்காடு அல்லது துணியால் பிரிக்கப்பட வேண்டும். முக்காடு நார்த்துணி வகையால் ஆனது. அது நீலம், ஊதா மற்றும் கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்டு, தங்க கெருவீம்கள் பூத்தையல் செய்யப்பட்டிருந்தது.\nமோஷேயால் கட்டப்பட்ட சரணாலயத்தின் மிகவும் புனிதமான மற்றும் உள்ளார்ந்த பகுதியாக மகா பரிசுத்த இடமும், எருசலேமில் உள்ள பண்டைய புனித ஆலயமும் இருந்தது.\nKohen HaGadol / כֹּהֵן הַגָּדוֹל / கோஹேன் ஹகாடோல் (யூத உயர் பூசாரி) மட்டுமே இந்த புனித இடத்திற்குள் நுழைய முடியும், அதன்பிறகு அவர் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே யோம் கிப்பூரில் (பாவநிவாரண நாள்) நுழைய முடியும்.\nமிகவும் புனிதமான இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, கோஹேன் ஹகாடோல் தன்னை நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு, இந்த ஒரு நிகழ்விற்கு என்றே நியமிக்கப்பட்ட சிறப்பான சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.\nஉள்ளே நுழைந்ததும், அவர் தூபத்தை எரிப்பார், இதனால் புகை கண்களை மூடிக்கொண்டு கடவுளை நேரடியாகப் பார்ப்பதற்கு ஒரு தடையாக அமைகிறது. பின்னர் அவர் தனது மக்களின் பாவங்களுக்கும், அவருடைய சொந்த பாவங்களுக்கும் பரிகாரம் செய்வதற்காக உடன்படிக்கைப் பெட்டியின் கருணை இருக்கையின் மீது ஒரு பலியிடப்பட்ட மிருகத்தின் இரத்தத்தைத் தெளிப்பார்.\nகடவுளின் பரிசுத்தத்தை நாம் லேசாக அல்லது கவனக்குறைவாக கையாண்டு அவருடைய பிரசன்னத்திற்குள் நுழைய முடியாது என்பதை இது வலியுறுத்துகிறது.\nஆகவே, ரோமானிய மரணதண்டனைக் கட்டத்தில் இயேஷூவா ஹமாஷியாக் (மேசியா) இறந்தபோது, ​​முக்காடு இரண்டாகக் கிழிக்கப்பட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஎந்த மனிதனும் இந்த முக்காட்டை இரண்டாக கிழிக்கவில்லை; இது கடவுளின் அமானுஷ்ய செயலின் விளைவாக கிழிந்தது. இது யூதர்களின் துக்க வழக்கத்தின் பிரதிபலிப்பாகும். ஒருவர் இறந்த தன் அன்பானவருக்காக துக்கப்படுகையில், துக்கப்படுபவரின் ஆடை மேலிருந்து கீழாக கிழிப்பர்.\nஇந்த வழியில்தான் நம்முடைய பரலோகத் தகப்பன் தன் குமாரன் இயேஷூவாவின் மரணம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை பகிரங்கமாகக் வெளிக்காட்டினார்.\nஇந்த ஆச்சரியமா��� நிகழ்வு, இயேசுவின் பிராயச்சித்த பலியின் மூலம் கடவுளின் பிரசன்னத்தில் இலவசமாக நாம் அணுகலாம் என்பதைக் குறிக்கிறது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதில் இயேசு இறந்ததால், மனிதன் இனி கடவுளிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது, ஆகையால் இயேசு மூலம் கடவுளின் அருள், உதவி மற்றும் இரக்கம் பெற எந்த நேரத்திலும் கருணை சிம்மாசனத்தில் தைரியமாக வர முடியும்.\nமோஷேயின் நாட்களில், கடவுளுக்கு முன் சென்றிருக்க முடியாதவாறு ஒரு வலிமையான அரணாக கெருவீம்கள் பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டிருந்தது, இப்போது கிழிந்த திரைச்சீலை மூலம் நமக்குத் திறக்கப்பட்டுள்ள ஒரு புதிய வழி மிகுந்த பரிசுத்த இடத்திற்குக் கூட நம்பிக்கையுடனும் சுதந்திரமாகவும் நுழைய முடியும் என்னும் உரிமையைத் தந்துள்ளது – இங்கு இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தம் மற்றும் துளைக்கப்பட்டுள்ள உடல் இந்த திரைச்சீலையோடு ஒப்பிடப்பட்டு மறைபொருள் விளங்கப் பெறுகிறது.\nமோஷே மற்றும் இஸ்ரயேல் மக்களால் கட்டப்பட்டதை விட, மிகச் சிறந்த மற்றும் பரிபூரணக் கூடாரத்தின் கோஹேன் ஹகாடோல் (பிரதான ஆசாரியராக) இயேஷூவா வந்தார்; அவருடைய ஆலயம் சாலமன் மன்னனின் நாளில் இருந்ததைப் போல மனித கைகளால் உருவாக்கப்படவில்லை, ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்டது.\nகாளைகளின் அல்லது ஆடுகளின் ரத்தத்தோ அல்லது வேறு எந்த பலியிடப்பட்ட மிருகங்களோடும் அவர் மிக பரிசுத்த இடத்திற்குள் நுழையவில்லை, ஏனென்றால் அவற்றின் இரத்தம் ஒருபோதும் பாவத்தை முழுமையாக மறைக்க முடியாது, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும்.\nநம்முடைய பாவங்களை நம்மிடமிருந்து முற்றிலுமாக அகற்றுவதற்காக அனைவருக்கும் ஒரே முறையாக தனது சொந்த இரத்தத்தோடு இயேஷூவா கோடேஷ் ஹாகோடெஷிமுக்குள் நுழைந்தார்\nஅவருடைய நாமத்தை என்றென்றும் புகழ்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/681669-pudukottai-farmers-protest-against-hydrocarbon.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-08-02T08:11:24Z", "digest": "sha1:SNDU25WXP4BV6GELPMW5JRKJK573O6PG", "length": 20203, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்போவதாக மத்திய அரசு அறிவிப்பு: விவசாயிகள் எதிர்ப்பு | Pudukottai: Farmers protest against hydrocarbon - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 02 2021\nபுதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுக்���ப்போவதாக மத்திய அரசு அறிவிப்பு: விவசாயிகள் எதிர்ப்பு\nபட விளக்கம்: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு அருகே கரு வடதெருவில் எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த 2017 -ம் ஆண்டு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் அறிவித்ததைத் தொடர்ந்து, நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பல்வேறு கட்டங்களாக 200 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன் விளைவாக நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது.\nஇவ்வாறு அறிவிக்கப்பட்டிருப்பதால் இப்பகுதியில் விவசாயத்துக்கு தொடர்பில்லாத எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தபடமாட்டாது என விவசாயிகள் நம்பியிருந்தனர்.\nஇந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கோட்டைக்காடு அருகே கருவட தெரு உட்பட இந்தியா முழுவதும் 75 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு 10 -ம் தேதி ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.\nஇந்த அறிவிப்பானது இப்பகுதி விவசாயிகளுக்கு தற்போது தெரியவரவே, இத்திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வட தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் நிறுவனமான ஓஎன்ஜிசி மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இன்று (ஜூன் 13) விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எம்.கே.ஆரோக்கியசாமி தலைமையில் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டனர்.\n\"ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஏலஅறிவிப்பை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நடத்தியதைப் போன்று இங்கும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்\" என விவசாயிகள் தெரிவித்தனர்.\nநெடுவாசல் ஹைட���ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் சூழலில், வேறொரு இடத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத்துக்கு எதிராக எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படமாட்டாது என ஏற்கெனவே தமிழக சுற்றுச்சூழல்- காலமாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகருவடதெருவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஓரிரு நாட்களில் தமிழக முதல்வர் அறிவிப்பார் எனவும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிவ.வீ.மெய்யநாதன், எஸ்.ரகுபதி ஆகியோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது வினோதம்: செல்லூர் ராஜூ கண்டனம்\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை கட்டாயப்படுத்துவதாக ராமேசுவரத்தில் புகார்\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு: 27,463 பேர் குணமடைந்தனர்\nபுதுக்கோட்டைபுதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன்விவசாயிகள் எதிர்ப்புமத்திய அரசு அறிவிப்பு\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nகாங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டும் பிரசாந்த் கிஷோர்:...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெ���்.ராஜா...\nகுரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nசட்டப்பேரவை நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்காது: ஜெயக்குமார்\nதுப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்; அத்துமீறிய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய...\nஇழந்தவை போதும்; கரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்ப கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்போம்: ராமதாஸ்\nஆகஸ்ட் 02 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\n'கற்போம் எழுதுவோம்' இயக்கம்: புதுக்கோட்டையில் வயது வந்தோருக்கான தேர்வு நிறைவு\nசங்ககாலப் பழமை வாய்ந்த பொற்பனைக் கோட்டையில் அகழாய்வுப் பணி தொடக்கம்: அமைச்சர் மெய்யநாதன்...\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை\nஓவியத்தில் தேசிய அளவில் சாதித்த அரசுப் பள்ளி மாணவர்\nரூ.80 கோடி தொகையை நிலுவை வைத்த மாநகராட்சி நிர்வாகம்: முதல்வரிடம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர்...\nஒரு பூமி, ஒரே மாதிரியான சுகாதார அணுகுமுறை: ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/07/Vvtcouncoil154.html", "date_download": "2021-08-02T09:53:22Z", "digest": "sha1:PJPF2QATVUDQFXPX7DFDBDCO5PTMCZ6T", "length": 12181, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழரசு தலையிடி:வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் வெளியே! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / தமிழரசு தலையிடி:வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் வெளியே\nதமிழரசு தலையிடி:வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் வெளியே\nடாம்போ Sunday, July 18, 2021 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதமிழ் அரசுக்கட்சி தலையிடியை தொடர்ந்து வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணானந்தராசா, தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.\nவல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற���றி பெற்ற அவர் அந்தக் கட்சியின் நகர சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் தமிழ் தேசியக் கட்சியை எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஆரம்பித்த நிலையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதால் தமிழ் அரசுக் கட்சி அவரை வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தது. எனினும் அது பின்னர் கைவிடப்பட்டது.\nஅந்நிலையில் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நகர சபைத் தலைவராகத் தொடர விரும்பாத காரணத்தினால் பதவி விலகுகின்றேன் என்று கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவித்தார்.\nஅவர் தனது பதவி விலகல் கடிதத்தை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கும் அனுப்பிவைத்துள்ளார்.\nநிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்\nதென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர்\nஇறுதி யுத்தம்:வவுனியாவில் பாலியல் லஞ்சம் கோரிய றிசாட் கும்பல்\nஇறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்களது பெருமளவு சொத்துக்களை கோத்தபாய ஆசீர்வாதத்துடன் சூறையாடிய றிசாத் கும்பல் வவுனியாவில் பெருமளவு தமிழ் பெண்க...\nகொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பிரத...\nஒருவாறு வெளியே வந்தார் கண்ணதாசன்\nதேர்தல் காலத்தில் விடுவித்து விட்டதாக எம்.ஏ.சுமந்திரன் கூவித்திரிந்த விரிவுரையாளர் கண்ணதாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி...\nமணி விவகாரம்: முன்னரே தீர்மானிக்கப்பட்டதா\nபிரதான வீதிகளுக்குக் குறுக்காக யாழ் நகரில் மாநகர சபைக்குத் தெரியாமல் ஐந்து முக்கிய இடங்களில் வீதிக்கு குறுக்காக - மேலே - பாரிய விளம்பர தட்ட...\nபாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா\nதனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற\nரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் வைப்பு\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான\nமுல்லைத்தீவு ட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை சீனாவிற்கு தாரை வார்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவ...\nஇலங்கை காவல்துறை தண்ணீர் சகபாடியே பின்னணி\nஇலங்கை காவல்துறையினரின் தண்ணீர் சகபாடியொருவருடன் இணைந்து பொதுமக்களை தாக்கியமை தொடர்பான விவகாரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பொதுமகனான உள்ள...\nArrest அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilrockz.net/2020/11/tncini.html", "date_download": "2021-08-02T08:12:30Z", "digest": "sha1:Y4AJZRL55HEBZJZLMNU6UYJN4P2OOTUV", "length": 8697, "nlines": 106, "source_domain": "www.tamilrockz.net", "title": "‘அவன் இவன்’ படத்திற்கு பின் விஷால், ஆர்யா இணையும் பட டைட்டில்...! - TamilRockZ - Tamil Movies - Tamil Cinema News | TamilRockZ.NeT", "raw_content": "\nவெளியானது ஈஸ்வரன் படத்தின் வீடியோ – கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்...\nசுசீந்தரன் இயக்கத்தில் , சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன். பழனி பின்னணியில் கதைக்களம் கொண்டுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா ம...\nதிரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தற்போதைக்கு மாஸ்டர் வெளியாகாது: தயாரிப்பாளர்\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு 129 நாட்கள் நடைபெற்று பிப்ரவரி இறுதியில் பட வேலைகள் நிறைவட...\nமூக்குத்தி அம்மன் திரைப்பட பாடல்கள் | Mookuthi Amm...\nமாலத்தீவில் சமந்தாவின் அசத்தல் புகைப்படங்கள்...\n‘அவன் இவன்’ படத்திற்கு பின் விஷால், ஆர்யா இணையும் ...\n‘அவன் இவன்’ படத்திற்கு பின் விஷால், ஆர்யா இணையும் பட டைட்டில்...\nநடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஆனந்த்ஷங்கர் இயக்க உள்ளதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பும் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nபாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்திற்கு பின் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷாலின் 30வது படமாகவும், ஆர்யாவின் 32வது படமாகவும் உருவாகி வரும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக மிருணாளினி மற்றும் ஆர்யா ஜோடியாக சமீரா ரெட்டி நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு விஷால், ஆர்யா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் அறிவிக்கவுள்ளனர்.\nவெளியானது ஈஸ்வரன் படத்தின் வீடியோ – கொண்டாடும் சிம்பு ரசிகர்கள்...\nசுசீந்தரன் இயக்கத்தில் , சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன். பழனி பின்னணியில் கதைக்களம் கொண்டுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா ம...\nதிரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தற்போதைக்கு மாஸ்டர் வெளியாகாது: தயாரிப்பாளர்\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு 129 நாட்கள் நடைபெற்று பிப்ரவரி இறுதியில் பட வேலைகள் நிறைவட...\nமாலத்தீவில் சமந்தாவின் அசத்தல் புகைப்படங்கள்...\nகடந்த சில நாட்களாக மாலத்தீவில் தமிழ் நடிகைகள் குவிந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏற்கனவே தேனிலவு கொண்டாட தனது கணவருடன் காஜல் அகர்வால் செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/1116-johnson-p", "date_download": "2021-08-02T08:43:46Z", "digest": "sha1:3N2WKQQ57JA655TK4GY7W62WDYZ2JG44", "length": 5534, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "பா.ஜான்ஸன்", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகில்லி கதை உருவான கதை தெரியுமா\nசூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன��ன் ஆரம்பகால கெட்டப் இதுதான்\nக்யூட் பாப்பா முதல் 'குலேபகாவலி' வரை ஹன்சிகா ட்ரான்ஸ்ஃபர்மேஷன்\n‘சிங்கிள் டேக்’ சிம்பு... ‘சைவப் பிரியர்’ தனுஷ் - சிம்பு-தனுஷ்-விகடன் ரேப்பர் கலெக்‌ஷன் #AVWrappers #VikatanPhotoCards\nரஜினிக்கு டைரி... அஜித்துக்கு பென்ட்ரைவ்... புது பில்லாவில் எதெல்லாம் மாறியது..\nஒரே வருடத்தில் ரஜினி, தனுஷ், விஷாலுக்கு ரெண்டு படங்கள்... 2018 தமிழ் மூவிஸ் லிஸ்ட்..\nபாகுபலி, பல்வாள் தேவனோடு மல்லுக்கட்டும் 'கைபுள்ள' வடிவேலு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/bookmarks/view/412392/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E2%80%93-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-08-02T09:26:11Z", "digest": "sha1:WCQLU5WEFOXUKUJTCF4TZXSRDZGAE4PZ", "length": 3610, "nlines": 111, "source_domain": "connectgalaxy.com", "title": "சொல் புதிது சுவை புதிது – கட்டுரைகள் – எஸ் விஸ்வநாதன் : Connectgalaxy", "raw_content": "\nசொல் புதிது சுவை புதிது – கட்டுரைகள் – எஸ் விஸ்வநாதன்\nநூல் : சொல் புதிது சுவை புதிது\nஆசிரியர் : எஸ் விஸ்வநாதன்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : ஐஸ்வர்யா லெனின்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 729\nசொல் புதிது சுவை புதிது – கட்டுரைகள் – எஸ் விஸ்வநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-08-02T08:44:25Z", "digest": "sha1:TMWGJX5PWUIVNHIO4MZBBLWFAAQYIMQR", "length": 12423, "nlines": 129, "source_domain": "marxistreader.home.blog", "title": "புரட்சியின் நூற்றாண்டு – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதமிழகத்தில் சோவியத் புரட்சியின் தாக்கம்\nஇந்திய விடுதலைப் போராளிகள் பலர் ரஷ்யா வில் மேதை லெனினை நேரில் சந்தித்து இந்திய விடுதலைப்போராட்ட நிகழ்வுகள் குறித்து விவாதித்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.டி ஆச்சார்யாவும் ஒருவராவார். 1920ம் ஆண்டு அக்டோபர் 17 அன்ற தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கியவர் களில் எம்.ப���.டி ஆச்சார்யாவும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.\nசோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு\nஇயந்திர தொழில்மயமாக்கலும், கூட்டுப் பண்ணை அமைப்பு முறைகளும் எவ்வாறு நிகழ்ந் தேறின. அதன் பலன்கள் எப்படி சோசலிசத்தை உயர்த்திப் படிக்க உதவிற்று போன்றவை மிக விரிவாக நூலில் படித்து அறிய முடியும்.\nமகத்தான சோவியத் புரட்சியின் பொருளாதார சாதனைகள்\nசோவியத் அனு பவமும் உலகளவில் தொடரும் முதலாளித்துவ நெருக்கடியும் மானுடம் எதிர்கொள்ளும் எந்த பிரச்னையையும் லாப வேட்டை அடிப்படையி லான முதலாளித்துவ அமைப்பால் தீர்வு காண முடியாது என்று மக்கள் அன்றாடம் கண்டு வருவதும் எதிர்காலத்தில் சோவியத் சோசலிசம் தரும் வெளிச்சத்தில் மானுடம் முன்னேறும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன.\nரஷ்ய புரட்சியும் பெண்களும் …\nஇந்தியாவிலும், இந்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, பெரு மளவு பெண்களை இடதுசாரி அரசியலின் பங்கேற் பாளர்களாக மாற்றி, புரட்சிகரப் பாதையில் முன்செல்ல வேண்டும்.\nஅக்டோபர் புரட்சியின் முக்கியத்துவம் … – ஹர்கிசன் சிங் சுர்ஜித்\nமார்க்சியம்-லெனினியம் என்பது இயல் பாகவே பொருள்முதல்வாதத்தை உள்ளடக் கியது, புத்தாக்க தன்மை கொண்டது. இயக் கவியலை உள்ளடக்கியது. எனவே அது வரட்டு தனமற்றது. விடுதலை என்ற பார்வையும், அதற் கான உயர்ந்த நோக்கங்களையும் வெளிப் படுத்தும் உலகப் பார்வையை கொண்டது.\nநவம்பர் புரட்சியின் விழுமியங்களும் நமது கடமைகளும்\nசோவியத்தின் சாதனைகளைக் கூறி சோவியத் நாட்டிற்கு சென்றுவந்தவர்களின் வாக்கு மூலத் தைக்காட்டி பேசுவதைக் காட்டிலும் நவம்பர் புரட்சி விதைத்த விழுமியங்களை நினைவில் இருத்தி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. அந்த விழுமியங்கள் இன்று உலகெங்கிலும் அளவு கோலாக ஒவ்வொரு நாட்டிலும் வெவ் வேறு பெயர்களில் இருப்பதை நாம்அறிவோம். மானுட வளர்ச்சி குறியீட்டென் (Human Developement Index) அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் வலிமையை அளக்கும் நடை முறைக்கு வந்ததே நவம்பர் புரட்சியின் கதிர்வீச்சு செய்த மாயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nவிரக்தியின் தத்துவம் உலகம் உருக்குலைந்து போய்க் கொண்டிருப்பதாகவும் பண்பாடு அழிந்து கொண்டிரு���்பதாகவும் அவலக் குரல் எழுப்புகின்றது. ஆனால் அதே வேளையில் மார்க்சிஸ்டுகள் புதிய உலகு தோன்றும் பிரசவ வலியின் ஒலியினை கேட்கிறார்கள் அந்த பிறப்பின் வலியினை குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள். ஜார்ஜ் லூகாஸ் நவம்பர் புரட்சியின் நினைவுகள், உலகை விளக்கிச் சொல்வதோடு நில்லாமல் மாற்ற முனையும் சக்திகளுக்கு என்றும் உத்வேகம் கொடுக்கும். அண்மை காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகள் அதற்கு தடையாக இருந்தன என்பதும் உண்மை. சோவியத் … Continue reading நவம்பர் புரட்சிக்குப் பின்….\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (16)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nவாலிபர் மாணவரிடையே இடதுசாரி திரட்டல் ...\nபால்மிரோ டோக்ளியாட்டியின் பாசிசம் குறித்த விரிவுரைகள்; தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான வழிகாட்டி\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பும்\nசாதிய அமைப்பும் கம்யூனிஸ்ட் செயல்திட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/gold-rate-sudden-hike-as-on-2nd-march-2020-q6kd4a", "date_download": "2021-08-02T09:43:23Z", "digest": "sha1:WQN4YMQEDKNSHV3WARIPROVRSU7PNEK3", "length": 7445, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை..! | gold rate sudden hike as on 2nd march 2020", "raw_content": "\nமாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை..\nகிராமுக்கு ரூ.7 ரூபாய் அதிகரித்து 4005.00 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 152 ருபாய் உயர்ந்து உள்ளது.\nமாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை..\nதங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருந்த தருணத்தில் மீண்டும் தற்போது சற்று குறைந்து உள்ளது.\nஅதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் நெருங்கும் தருணத்தில் இருந்தது. அதன் பின்னர் மெல்ல குறைந்து தற்போது இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 3998 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 984 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.\nகிராமுக்கு ரூ.7 ரூபாய் அதிகரி��்து 4005.00 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 152 ருபாய் உயர்ந்து உள்ளது.\nவெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து 48.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து வர்த்தகத்தில் தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தை கண்டு வந்தது. இந்த நிலையில் சில சமயங்களில் ஏற்றமும் சில சமயத்தில் குறைந்தும் காணப்படுகிறது.\nசரசரவென உயர்ந்த தங்கம் விலை... சவரன் விலையைக் கேட்டு மயக்கம் போட்டுடாதீங்க...\nகுட்நியூஸ்... சரசரவென சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா\nதங்கம் வாங்க இன்றே முந்துங்கள்... எதிர்பாராத வகையில் சரசரவென குறைந்த தங்கம் விலை...\nபொதுமக்களுக்கு குட்நியூஸ்... யாரும் எதிர்பாராத வகையில் சரசரவென குறைந்த தங்கம் விலை..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nபோற போக்கைப்பார்த்தா இப்போதைக்கு நடக்காது போல... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்..\nடி.டி.வி.தினகரன் பெயரை நீக்கி திருத்தம்... சசிகலாவுக்கு அதிமுக எதிர்ப்பு..\nடாடி, மம்மி வீட்டில் இல்ல.. இளம் பெண் நண்பர்களுடன் உல்லாசம்.. தடையாக இருந்த காவலாளியின் மண்டை உடைந்தது.\nதூஃபான் ஒரு குப்பை... சார்பட்டா பரம்பரை ஒரு கோகினூர் வைரம் ...\nடி20 உலக கோப்பைக்கு எந்தெந்த ஸ்பின்னர்களை இந்திய அணியில் எடுக்கலாம்.. ராகுல் டிராவிட் அதிரடி பதில்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-thangamani-explain-tasmac-shop-closing-at-assembly-session-q766js", "date_download": "2021-08-02T10:10:03Z", "digest": "sha1:VZFAHIBS4ZANUUWYPF3LI6SCLVYHIZUO", "length": 10709, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கள்ளச்சாராத்தை தடுக்கத்தான் டாஸ்மாக் நடத்துகிறோம்...!! விளக்கம் சொன்ன அமைச்சர், தலைசுற்றிய திமுக...!! | minister thangamani explain tasmac shop closing at assembly session", "raw_content": "\nகள்ளச்சாராயத்தை தடுக்கத்தான் டாஸ்மாக் நடத்துகிறோம்... விளக்கம் சொன்ன அமைச்சர், தலைசுற்றிய திமுக...\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றுதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தவிற 5 ஆண்டுகளில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று எங்கேயும் சொல்லவில்லை என்றார்,\nதமிழகத்தில் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் அடுத்த 5 ஆண்டுகளில் மூடப்படும் என அமைச்சர் தங்கமணி திடீரென அறிவித்துள்ளார் . பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் அதிமுக கூறியிருந்த நிலையில் அமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார், சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கமணி இவ்வாறு பதிலளித்தார் . திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் எழுப்பிய கேள்வியில், கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் படிப்படியாக மது பானக் கடைகள் மூடப்படும் என்று மக்களிடம் சொல்லி தான் ஆட்சிக்கு வந்தீர்கள் ஆனால் நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது இன்னும் உள்ள ஒரு ஆண்டில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு விடுமா என கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றுதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தவிற 5 ஆண்டுகளில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று எங்கேயும் சொல்லவில்லை என்றார், தொடர்ந்து பேசிய அவர் திடீரென மதுபான கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உள்ளே வந்துவிடும் என்றார் . இடையே குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்றபோது படிப்படியாக தான் எல்லாம் செய்யமுடியும் குறிப்பிட்ட காலத்திலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது கள்ளச்சாராயம் வந்து விடக்கூடாது என்பதால்தான் அரசு கவனமாக இருந்து அதைப் பின்பற்றி படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்றார் . இதனையடுத்து மேலும் ஒரு கேள்வி எழுப்பிய ஆஸ்டின் கலைஞர் ஆட்சியில் தான் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது என்றார்.\nஅதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி , ஜெயலலிதா ஆட்சியில்தான் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது என்றார் . அதேபோல் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டத்திலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கிடைக்கவில்லை , சுமார் 4.25 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள் , டெல்டா பகுதிகள் பாதுகாப்பு சிறப்பு மண்டலமாக அறிவிக்க சட்டத்தில் பல குறைகள் உள்ளது என்றார் . அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா விவசாயிகளுக்கு முழுமையான சட்ட பாதுகாப்பு பொருத்தப்பட்டுள்ளது சட்டத்தில் எந்த ஓட்டையும் இல்லை என்றார் இப்படியாக நேற்று சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது .\nமாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கு எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவெற்றுங்க.. மாஜி அமைச்சர் தங்கமணி.\nஅதிமுக ஆட்சியில் ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை... செந்தில்பாலாஜி பகிரங்க குற்றச்சாட்டு..\nமின்சார வாரியத்தில் நஷ்டம் ஏற்பட்டது ஏன்.. மாஜி அமைச்சர் தங்கமணி மீண்டும் விளக்கம்..\nஅதிமுக ஆட்சியில் மின் துறையில் ஊழல் இல்லை... இழப்பு மட்டும்தான்.. விலாவரியாக விளக்கிய மாஜி அமைச்சர் தங்கமணி.\nநாங்கள் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே செந்தில் பாலாஜியை திணறடித்த தங்கமணி..\nடி20 உலக கோப்பையில் இந்த 4 அணிகள் தான் அரையிறுதியில் மோதும்..\nதலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது.. கர்நாடக முதல்வருக்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகி..\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா..\nடெங்குவை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தீவிர நடவடிக்கை எடுங்க.. அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.\nஇந்திய அணிக்கு இப்போதைக்கு இதைவிட பெரிய குட் நியூஸ் இருக்கவே முடியாது..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-08-02T10:41:16Z", "digest": "sha1:XO2V25AJF7XCWVU7MPJ4YOGLMNXLY22H", "length": 17950, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹாட்லிக் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபருத்தித்துறை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்\nபொது மாகாணப் பாடசாலை 1AB\nஹாட்லி கல்லூரி (Hartley College) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சியில் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஒரு பாடசாலையாகும்.[1][2] 1838 ஆம் ஆண்டில் பிரித்தானிய மெதடிச மதப்பரப்புனர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இலங்கையில் மிகப் பழமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றாகும். இது வெசுலிய மதகுரு வண. மார்சல் ஹார்ட்லி என்பவரின் நினைவாக 1916 ஆம் ஆண்டில் ஹார்ட்லி கல்லூரி எனப் பெயர் பெற்றது.\n1814 சூன் 29 இல் மெதடிஸ்த\nமதப்பரப்புனர்கள் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தனர். 1834 ஆம் ஆண்டில் வண. பீட்டர் பெர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாண நகரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை ஆரம்பித்தார். பின்னர் 1838 இல் பருத்தித்துறை உவெசுலியன் மிசன் மத்தியப் பாடசாலையை (Wesleyan Mission Central School) 50 மாணவர்களுடன் ஆரம்பித்தார்.[3][4][5]\n1860 ம் ஆண்டளவில் இப்பாடசாலை மூடப்பட்டு 1861ம் ஆண்டு டி.பி. நைல்ஸ் என்பவரால் திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது. இது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இருந்து இயங்கி வந்தது. நைல்சு 1861-1868ம் ஆண்டு வரை தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்குப் பின்னர் சாமுவேல் என்சுமன் என்பவர் தலைமை ஆசிரியரானார்.[5] 1874 ஆம் ஆண்டில் தற்போதைய இடத்தில் இருந்து இயங்க ஆரம்பித்து வளர்ச்சி பெறத் தொடங்கியது.[3] இதன் இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக தாமோதிரம்பிள்ளை செரட் நியமிக்கப்பட்டார். 1912 ஆம் ஆண்டில் இப்பாடசாலை Christ Church School எனப் பெயர் மாற்றப்பட்டது.[3] 1916 ஆம் ஆண்டில் வண. மார்சல் ஹார்ட்லி என்பவர் இக்கல்லூரியில் வேதியியல் ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டிச் சென்றார். இதனால் இக்கல்லூரி “ஹார்ட்லிக் கல்லூரி” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[5] தாமோதிரம்பிள்ளை 28 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். 1943 இல் கே. பூரணம்பிள்ளை தலைமையாசிரியரானார்.\n1960களில் அனேகமான தனியார் பாடசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டதை அடுத்து ஹார்ட்லி கல்லூரியும் 1960 டிசம்பர் 1 இல் அரசு உதவி பெறும் பாடசாலையானது.[4] ஈழப்போர்க் காலத்தில் 1985 முதல் 1990 வரை புத்தளையில் இருந்து இயங்கியது.[3] 1989 இல் இக்கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்பட்டது.[3] 1996 முதல் 2002 வரை இப்பாடசாலையின் பெரும்பாலான பக்திகளை இராணுவத்தினர் தமது தேவைக்காகப் பயன்படுத்தி வந்தனர். பாடசாலை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டது.[6]\nஇங்கே இலங்கையின் பல பிரபலங்கள் கல்விகற்றமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக முன்னாள் சபாநாயகர் கே.பி.ரத்னாயக்கா இங்கே கல்விகற்றார். இப்பாடசாலைக்கு கொழும்பு உட்பட இலங்கையின் பல பிரதேசங்களில் பழைய மாணவர் சங்கம் இருக்கின்றது.1989 இல் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக இலங்கை அரசு முத்திரை வெளியிட்டுக் கௌரவித்தது. 1998 இல் கல்லூரி இணையத்தளம் ஒட்டாவா, கனடாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.\n1838-60 வண. பீட்டர் பெர்சிவல்\n1861-68 வண. டி. பி. நைல்ஸ்\n1874 ஜே. சி. தாமோதரம்பிள்ளை செரார்ட்[9]\n1906 எஸ். ஏ. பவுல்பிள்ளை\n1906-12 எஸ். எஸ். கணபதிப்பிள்ளை[9]\n1912-15 ஈ. எஸ். ஏபிரகாம்\n1975-85 டபிள்யூ. என். எஸ். சாமிவேல்\nகே. எஸ். அருள்நந்தி - அறிவியல் ஆசிரியர்[13]\nவீரசிங்கம் ஆனந்தசங்கரி, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்[15][16]\nகே. டி. அருள்பிரகாசம் - கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்[17]\nசி. ஜே. எலியேசர் - கணிதப் பேராசிரியர்[18][19][20]\nகே. கணேசலிங்கம் - முன்னாள் கொழும்பு மாநகரசபை முதல்வர்[19][21]\nகே. பி. இரத்திநாயக்க - சபாநாயகர்[19][22][23]\nஅ. துரைராஜா - முன்னாள் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர்[24]\nஇரத்தினசிறி விக்கிரமநாயக்க - முன்னாள் இலங்கை பிரதமர்.\n↑ 5.0 5.1 5.2 \"பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழா\". தினகரன் (25 ஆகத்து 2013).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2018, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zw-trailer.com/product-list/used-box-trailer", "date_download": "2021-08-02T08:46:42Z", "digest": "sha1:6TYJVD37ROVL5B2DKFBMXGIW6L7IWZ52", "length": 9754, "nlines": 146, "source_domain": "ta.zw-trailer.com", "title": "", "raw_content": "\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எ��ிபொருள் டேங்கர் டிரெய்லர்\nஇரண்டாவது கை பயன்படுத்தப்பட்டது 53 அடி உலர் வேன் பெட்டி டிரெய்லர்\nசெகண்ட் ஹேண்ட் பாக்ஸ் வேன் டிரெய்லர்கள் வேன் வகை கார்களின் சேஸில் மாற்றியமைக்கப்படுகின்றன அல்லது தனித்தனியாக தயாரிக்கப்படுகின்றன, மேலும் அவற்றின் கார்களின் வேறுபாட்டிற்கு ஏற்ப பயணிகள் வகை மற்றும் வேன் வகைகளாக பிரிக்கலாம். வேன்-வகை பெட்டிகளும் வண்டிகளும் பொதுவாக ஒரு ஒற்றைக் கட்டமைப்பைக் கொண்டவை, வேன் வகை பெட்டிகளும் வண்டிகளும் பொதுவாக வேன் வகை லாரிகள், குளிரூட்டப்பட்ட மற்றும் காப்பிடப்பட்ட வாகனங்கள் போன்ற பிளவு கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இரண்டாவது கை பெட்டி வேனின் குறிப்பிட்ட அமைப்பு டிரெய்லர்கள் அதன் செயல்பாட்டிற்கு ஏற்ப மாறுபடும்.\nஇரண்டாவது கை பெட்டி வேன் டிரெய்லர்கள் 53 அடி உலர் வேன் டிரெய்லர்களைப் பயன்படுத்தியது அரை பெட்டி டிரெய்லர்கள் பயன்படுத்தப்பட்டன\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\nஎண்ட் டம்ப் அரை டிரெய்லர்\nசைட் டம்ப் அரை டிரெய்லர்\nபக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் டிரெய்லர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய பக்க சுவர் டிரெய்லர்\nபயன்படுத்திய எரிபொருள் டேங்கர் டிரெய்லர்\nஹோவ் டிரக் டிராக்டர் அலகுகள் பயன்படுத்தப்பட்டன\nசரக்கு போக்குவரத்து பக்கச்சுவர் பக்க சுவர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் கேரியர் டேங்கர் டிரெய்லர்\nகுறைந்த பிளாட்பெட் லோபெட் அரை டிரக் டிரெய்லர்\n ஷிஜோங் மாவட்டம், ஜினான் நகரம், சாண்டோங் மாகாணம்\nஆயில் டேங்கர் அரை டிரெய்லர்\nமொத்த சிமென்ட் அரை டிரெய்லர்\n© ஷாண்டோங் ஜுவோவி இன்டர்நேஷனல் டிரேடிங் கோ, லிமிடெட் + 86-15216409270 ivan@zw-trailer.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevinandavanam.forumta.net/", "date_download": "2021-08-02T09:23:14Z", "digest": "sha1:JVYV64XGICHOQTMM372Z3NF5F53ZPKTU", "length": 3393, "nlines": 85, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "உஜிலாதேவி நந்தவனம்", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nநந்தவனம் உங்களை அன��புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nபுதிய நண்பர்கள் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mukadu.com/2019/06/08/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-08-02T09:45:28Z", "digest": "sha1:SWFC6QZOCA66WHBK4WDHOHWZCVR3GKNS", "length": 7248, "nlines": 32, "source_domain": "www.mukadu.com", "title": "மைத்திரி தீர்மானிக்க முடியாது! | Mukadu", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் பெற புலனாய்வு அதிகாரிகளை அழைக்க இடமளிக்க போவதில்லை என்றும், தெரிவுக்குழுவை உடனடியாக ரத்துச் செய்யுமாறும், பாதுகாப்பு அதிகாரிகள் எவரையும் இனி தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டாமென தாம் உத்தரவிட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதலடி கொடுத்துள்ளார்.\nநேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவசரமாக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.\nஇதன்போது, நாடாளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான கருத்துக்களை முன்வைத்ததாகவும், விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு சாட்சியங்கள் மூலம் பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அதேசமயம் தவறுகளை தன் மீது சுமத்த முயல்வதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும், இதனையடுத்து, பேசிய ஜனாதிபதி, இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது இரகசிய தகவல் சட்டத்தையும் மீறி செயற்படுகிறது.\nபுலனாய்வு அதிகாரிகளை தெரிவுக்குழுவிற்கு அழைத்து, ஊடகங்களுக்கு எதிரில் அவர்களிடம் தகவல்களை கேட்பது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய புலனாய்சு சேவைகளுக்கு பெரிய அச்சுறுத்தலானது.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஐந���து மனுக்கள் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணைகளுக்கு தடையாக இருப்பதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.\nசட்டமா அதிபரின் அந்த அறிக்கை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.\nதெரிவுக்குழு இவ்வாறுதான் செயற்படுமாயின், அரசாங்கத்தின் வேலைகளுக்கு உதவ போவதில்லை. ஜனாதிபதி என்ற வகையில் எனது பணிகளை மட்டும் செய்ய போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதேவேளை, விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் பெற புலனாய்வு அதிகாரிகளை அழைக்க இடமளிக்க போவதில்லை என்றும், தெரிவுக்குழுவை உடனடியாக ரத்துச் செய்யுமாறும், பாதுகாப்பு அதிகாரிகள் எவரையும் இனி தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டாமென தாம் உத்தரவிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஜனாதிபதியின் இந்த முடிவு தொடர்பாக இன்று தகவல் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், தெரிவுக்குழுவின் உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்,\nநாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தீர்மானம் எடுப்பது நாடாளுமன்றத்தின் வேலையேயன்றி, நிறைவேற்று அதிகாரத்தின் வேலை இல்லை. எனக்கு தெரிந்தவரை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவில் தொழில் நிறுவனமொன்றை திறந்து வைத்த மைத்திரி\nகனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் தீப்பிடித்த சொகுசு வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/blog-post_25.html", "date_download": "2021-08-02T09:22:31Z", "digest": "sha1:OBEHXQ3QUF5IWFJ43KBHAIULT6FU6IDC", "length": 17436, "nlines": 43, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தையே இழிபடுத்துகிற ஓர் உளவியலை அன்புமணி வெளிப்படுத்தி இருக்கிறார்; \"அன்புமணியின் நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்!\"", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தையே இழிபடுத்துகிற ஓர் உளவியலை அன்புமணி வெளிப்படுத்தி இருக்கிறார்; \"அன்புமணியின் நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்\n\"என்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தையே இழிபடுத்துகிற ஓர் உளவியலை அன்புமணி வெளிப்படுத்தி இருக்கிறார்; அவரின் நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்\" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nஅரக்கோணத்தில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் “அரக்கோணம் கொலைகளுக்குப் பின்னால் சாதிப் பிரச்னை இல்லை. திருமாவளவன்தான் இதனை சாதிப் பிரச்னையாக மாற்றுகிறார். படித்த இளைஞர்கள் யாரும் திருமாவளவனுடன் நிற்பதில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார்.\nஇதற்கு பதில் தரும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் கல்வித்தகுதியை பதிவு செய்து, 'நான் திருமாவளவனுக்கு ஆதரவாக நிற்கிறேன்' என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.\nஇதன் காரணமாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் #standwiththiruma , #myleaderthiruma , #isupportthiruma போன்ற ஹேஷ்டேக்குகள் கவனம் ஈர்த்துள்ளன.\nதனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம் என சமூக வலைதளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவ பார்வையையும் வழங்குவதே சிறந்தகல்வி. படித்தவர்கள், படிக்காதவர்கள் என மக்களை பாகுபடுத்தி உயர்வு தாழ்வு காண்பது சனாதனப்புத்தியின் விளைச்சலாகும்” என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும், இது தொடர்பாக காணொலி மூலமாக பேசியவர், “திருமாவளவனை படித்த இளைஞர்கள் நம்புவதில்லை என்று அன்புமணி ராமதாஸ் என் மீது தனிநபர் விமர்சனம் வைத்துள்ளார். அவர் என்னைக் கொச்சைப்படுவதாக எண்ணிக்கொண்டு படிப்பதற்கு வாய்ப்பில்லாத இளைஞர்களை கொச்சைப்படுத்துகிறார். படித்தவர்கள் படிக்காதவர்களை விட மேலானவர்கள் என்பதைப் போன்று உளவியலின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். படித்தவர்கள் ஆதரித்தால்தான் அவர்கள் உயர்ந்தவர்கள். படிக்காதவர்கள் ஆதரித்தால் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து அதி��ே தொனிக்கிறது. உழைக்கிற மக்கள் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் தரம் தாழ்ந்தவர்களா\nகல்வியைப் பெற்றவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று பொருள். கல்வி பெற இயலாதவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறாதவர்கள் என்றுதான் பொருள். கல்வி பெற்றவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்கிற மனோநிலை என்பதே ஒரு பாகுபாடு உளவியல்தான். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்கிற சிறுமைப்படுத்துதல் அதிலே இருக்கிறது.\n1990-களில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, என் பெயருக்கு பின்னால் இரா.திருமாவளவன், M.A.,B.L., என்று தோழர்கள் போடுவார்கள். நாம் பணியாற்றுகின்ற களம், உழைக்கும் மக்களின் களம். அவர்களிடத்திலே திருமாவளவன் M.A.,B.L., என்று போட்டுக்கொள்வது தம்பட்டம் அடிப்பதாக இருக்கும். அவர்களுக்கும் நமக்கும் ஒரு இடைவெளி ஏற்படுவதாக அமையும். ஆகவே, என் பெயருக்குப் பின்னால் பட்டத்தை ஒருபோதும் போடக்கூடாதென்று தொடக்கத்தில் இருந்தே கடைபிடித்து வந்தவன். அவ்வாறு போடும் தோழர்களைக் கடிந்து கண்டித்தவன். 1999 வரை என்னுடைய படத்தைக்கூட போட்டுக்கொள்ள அனுமதித்ததில்லை.\nபடித்தவர்களை விட படிக்க வாய்ப்பில்லாதவர்களிடம்தான் நான் அதிகம் கருத்துக் கேட்பதுண்டு. நான் எழுதுகிற முழக்கங்களில் எது உங்களுக்கு பிடிக்கிறது என்று கேட்பேன். நான் எழுதுகிற கவிதைகளில் எது உங்களுக்கு புரிகிறது என்று கேட்பேன். அவர்கள் எதை தேர்வு செய்கிறார்களோ அதைத்தான் நான் துண்டறிக்கையிலே சுவரொட்டியிலே அச்சிடுவேன். படிக்காதவர்களை அலட்சியப்படுத்துவது கொச்சைப்படுத்துவது துச்சமென நினைப்பது மிக மோசமான ஆதிக்க உணர்வு கொண்ட உளவியல். அது தலைக்கணம், கர்வம் சார்ந்த உளவியல்.\nஎன்னுடைய சொந்த ஊரில் நான் பல்கலைக்கழகம் வரை சென்று படித்தும் கூட கிராமத்தில் பேன்ட் சட்டை போட்டுக்கொண்டு நடந்ததில்லை. ஆற்றைக் கடக்கும்போது கூட என் ஆடைகளைக் கழட்டி பையில் வைத்துக்கொண்டு லுங்கிக் கட்டிக்கொண்டு கிராமத்திற்குள் நடந்துசெல்வேன். இது யாருக்கும் அஞ்சியல்ல. என் உறவுக்காரர்கள் என்னை வேற்றுமைப்படுத்தி பார்த்துவிடக் கூடாது. அவர்களில் ஒருவனாகவே நான் இருக்க வேண்டுமென்று ஊருக்குள் போகிறபோதே ஆடைகளை மாற்றிக்கொண்டு அவர்களில் ஒருவனாகத்தான் ஊருக்குள்ளே நுழைவேன். இது என்னுடைய இயல்பு. எனக்கு வாய���ப்புக் கிடைத்ததால் சட்டம் பயின்றேன். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ஊரிலே இருந்து வேலை செய்கிறார்கள். ஆடு, மாடு மேய்க்கிறார்கள். அனைத்துச் சமூகங்களைச் சார்ந்தவர்களையும்தான் நான் குறிப்பிடுகிறேன்.\nகல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் எந்தவகையிலும் தாழ்ந்தவர்கள் இல்லை. இழிவானவர்கள் இல்லை. படித்திருந்தும் சாதி புத்தி இருந்தால் அவன்தான் இழிவானவன். படிப்பதற்கு வாய்ப்பில்லாமல் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று சொன்னால் அவன்தான் உயர்ந்தவன்.\nடாக்டர், எஞ்சினீயர், பி.எச்டி என்று படித்திருந்தாலும் கூட சனாதன புத்தி, சாதி புத்தி, மதவெறி, சாதிவெறி சுயநலம் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு தன்னுடைய பெண்டு பிள்ளைகள் பிழைத்தால் போதும் யாரை வேண்டுமானாலும் ஏய்க்கலாம். யாரை வேண்டுமானாலும் எத்திப்பிழைக்கலாம் யார் எக்கேடு கெட்டால் என்ன. நான் வெற்றி பெற்றால் போதும், அதற்காக அப்பாவி மக்களை மோதலுக்கு தூண்டிவிட்டு அவர்களை இரையாக்கலாம் என்ற எண்ணம்தான் இழிவான எண்ணம்.\nஎனவே என்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தையே இழிபடுத்துகிற ஓர் உளவியலை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார், அவரின் நிலையை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன்.\n'திருமாவளவன் சமூகநீதிக் களத்தில் போராடுகிற ஒரு சகத் தோழன். எனவே நாங்கள் அவர் பக்கம் நிற்கிறோம். சாதி மத வரம்புகளை எல்லாம் கடந்து நிற்கிறோம்' என்று குரல் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இத்தகைய ஆதரவு என்பது எனக்குள் ஊறிக்கிடக்கும் சமத்துவத்திற்கான போர்க்குணத்தை மேலும் ஊக்கப்படுத்துகிறது. வலுவூட்டுகிறது” என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Mentally%20?page=1", "date_download": "2021-08-02T08:03:56Z", "digest": "sha1:YOQMPPW6D6CPG3IRRZZRGERDHXY4AHEJ", "length": 4608, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mentally", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்க...\nமனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளை...\nபப்ஜி கேம் விளையாடி மனநலம் பாதிக...\nபப்ஜி கேம் விளையாடி மனநலம் பாதிக...\nபப்ஜி கேம் விளையாடி மனநலம் பாதிக...\nபப்ஜி கேம் விளையாடி மனநலம் பாதிக...\nவராண்டாவில் தூங்கிய வயதான தம்பதி...\nசெல்போன் டவர் மீது அமர்ந்திருந்த...\nமனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல...\n“அண்ணா சிலைக்கு காவிக்கொடி போட்ட...\n’எப்போது நடக்கும் என்று தெரியாது...\nஜோசியரை வெட்டிக் கொன்றது ஏன்\nகுணப்படுத்த முடியாத மூளை பாதிப்ப...\nபயிற்சிக்கு ஷூ வாங்க சிரமப்பட்ட கமல்ப்ரீத் கவுர்... விடாமுயற்சியும் விஸ்வரூப வெற்றியும்.\n\"வீடு இல்லாமல் தெருவில் நிற்கிறோம்\" - கூவம் கரையோர மக்களின் அழுகுரலுக்கு என்ன காரணம்\nஅம்பாசமுத்திரத்தில் நூற்றாண்டு பாரம்பரியம்... மரச்செப்புக்கு கிட்டுமா புவிசார் குறியீடு\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மூன்றாம் அலை வருமா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/06/blog-post_16.html", "date_download": "2021-08-02T09:15:22Z", "digest": "sha1:FUY5LXTH4CJANYNF4SKJ3N7LQAI7S6VE", "length": 4705, "nlines": 50, "source_domain": "www.yarlsports.com", "title": "இறுதியில் ஞானமுருகன் - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > இறுதியில் ஞானமுருகன்\nதூயஒளி வெற்றிக்கிண்ணம்2019 குருநகர் பாடுமீன் விளையாட்டு கழகத்தின் அனுமதியுடன் புனித சூசையப்பர் வி.கழகம் நடாத்தும் தூய ஒளி வெற்றி கிண்ண தொடரில்\n13.06.2019 நடைபெற்ற 1வது அரையிறுதிபோட்டியில் நாவாந்துறை சென்மேரிஸ் அணியினை 1:0 ரீதியில் வீழ்த்தி முதலாவது அணியாக இறுதிக்குள் நுழைந்தது மயிலங்காடு ஞானமுருகன் அணி. ஞானமுருகன் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/01/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2021-08-02T10:06:33Z", "digest": "sha1:EJ75DBRLRGO3TARPEGJYZ3F6UAF6YDU3", "length": 6592, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "அமெரிக்காவில் சரமாரி துப்பாக்கிச் சூடு..பெண்ணை காப்பாற்றிய பொலிசார் : 5 பேர் பலி – EET TV", "raw_content": "\nஅமெரிக்காவில் சரமாரி துப்பாக்கிச் சூடு..பெண்ணை காப்பாற்றிய பொலிசார் : 5 பேர் பலி\nஅமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் Pennsylvania பகுதியில் உள்ள Fayette County-இன் Melcrof-ல் இருக்கும் கார் கழுவும் கடை ஒன்றில், இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 02.45 மணி அளவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து அங்கிருக்கும் நபர் ஒருவர் கூறுகையில், திடீரென்று துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், அது சுமார் 30 முறை கேட்டதாகவும் கூறியுள்ளார். பின் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போது, அங்கு விரைந்த வந்த பொலிசார் அங்கிருந்த டிரக் வாகனத்தில் சிக்கியிருந்த பெண்ணை மீட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு பக்கத்தில் Toyota டிரக் மற்றும் Dodge கார் போன்றவைகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த சம்பவம் என்ன காரணத்திற்காக நடந்தது என்பது குறித்து தெரியவில்லை எனவும், 5 பேர் இறந்ததில் 3 ஆண்கள் 2 பெண்கள் எனவும் அவர்களுக்கு 20 முதல் 30 வயது இருக்கும் என்றும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.\nஜப்பான்: இணையத்துக்குள் ஊடுருவி 66 கோடி டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை களவாடிய ஹேக்கர்கள்\nஈராக்கில் அமெரிக்க போர் விமானங்கள் தவறுதலாக குண்டுவீச்சு: போலீஸ்காரர்கள் உள்பட 8 பேர் பலி\nஒன்ராறியோவில் புதிதாக 218 பேருக்கு COVID-19 தொற்று, 2 பேர் உயிரிழப்பு\n இரண்டு வயதான தமிழ் சிறுவன் பலி\nதீவிரமாக பரவும் டெல்டா வைரஸ் – இலங்கையர்களுக்கு 3 தடுப்பூசிகள்\nரிஷாட்டின் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பெண்\nபுதிய அரசியல் மாற்றம் அவசியம்\nதுருக்கி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு; 864 பேர் காயம்\nஇந்தோனேசியாவில் புதிதாக 30,738 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,604 பேர் பலி\nஇமாசல பிரதேசம் – கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 211 பேர் பலி\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு, 37,582 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nஜப்பான்: இணையத்துக்குள் ஊடுருவி 66 கோடி டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை களவாடிய ஹேக்கர்கள்\nஈராக்கில் அமெரிக்க போர் விமானங்கள் தவறுதலாக குண்டுவீச்சு: போலீஸ்காரர்கள் உள்பட 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guidetoislam.com/ta/videos/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B7%E0%AE%B7%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%A4-7612", "date_download": "2021-08-02T09:15:59Z", "digest": "sha1:GJUSHXUURZ64CESSG6JC7X6FABVGNH35", "length": 10351, "nlines": 196, "source_domain": "guidetoislam.com", "title": "நோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத் நோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத் - Videos", "raw_content": "\nகாரணமின்றி நோன்பை விடுவதற்கான தண்டனை\nநோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு - அஷ்ஷேக் மு���ம்மத் ரியாழ் பின் ரஷீத்\nரமழான் மாதத்தின் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nகடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு\nநோன்பும் அதன் சட்ட திட்டங்களும்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது\nதுல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 02\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01\nஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்\nநீங்கள் என்ன தேடுகிறீர்கள் என எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை\nநோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nநோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nஇஸ்லாத்தை அறிவோம். (வண்ணப் படங்களில் விஞ்ஞான நுட்பங்கள்\nலாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nஅல்லாஹ்வுக்கும் அவனது படைப்புக்கும் இடையில் உள்ள தொடர்பு\nபுத்தகங்கள், கட்டுரைகள், அட்டைகள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை உங்கள் முக்கியத்துவம் கருதி காண்பிப்பதற்கு குக்கீகளை இவ் இணையத்தளம் பயன்படுத்துகிறது\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள், மற்றும் அல்குர்ஆன் பற்றியும் அறிந்துகொள்ள \"இஸ்லாத்தின் வழிகாட்டி\" அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது\nஉங்களை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில் இருங்கள்\nமின்னஞ்சல் முகவரி [email protected]\nமன்னிக்கவும், ‘பிடித்தவை’ பகுதியில் சேர்க்க நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைய அல்லது பதிவு செய்ய கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் Sign in", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-08-02T10:30:54Z", "digest": "sha1:ZLA72KHYOUCVJA7KSTO35TWMWSW5ILZV", "length": 16759, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலைப்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர். த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமுதலைப்பட்டி ஊராட்சி (Muthalaipatti Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3830 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1946 பேரும் ஆண்கள் 1884 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 14\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊருணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 39\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 12\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தோகைமலை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெ���ியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2019, 21:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-08-02T09:22:58Z", "digest": "sha1:7BDMSA6KC3ZMYLLLP7YMGKHA7JGP2H7H", "length": 10216, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "பத்மசரோவரம் பண்டை இடிக்க ஐகோர்ட் உத்தரவு - ToTamil.com", "raw_content": "\nபத்மசரோவரம் பண்டை இடிக்க ஐகோர்ட் உத்தரவு\nஉத்தேச பத்மசரோவரம் திட்டத்திற்காக சிலவானூர் ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக கட்டையை அகற்றுமாறு கொச்சி கார்ப்பரேஷன் மற்றும் கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் (கே.எம்.ஆர்.எல்) க்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிட்டிலாவைச் சேர்ந்த ஜி.மோகன்தாஸ் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி பி.பி.சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அவரைப் பொறுத்தவரை, சிலவன்னூர் ஏரியின் குறுக்கே உத்தேச பத்மசரோவரம் திட்டத்தின் கீழ் ஒரு சைக்கிள் தடத்தையும் நடைபாதையையும் அமைக்க நிறுவனம் முடிவு செய்து, கட்டுமானத்தை கே.எம்.ஆர்.எல். சைக்கிள் தடத்தையும் நடைபாதையையும் நிர்மாணிப்பதற்காக ஏரிக்கு குறுக்கே ஒரு தற்காலிக மூட்டை நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்காலிக பண்ட் கட்டப்பட்டதன் காரணமாக, மழைக்காலத்தில் ஏரியின் இருபுறமும் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக அவர் கூறினார். மனுதாரர் பொதுக் கருவூலத்தில் இருந்து பெரும் தொகையைச் செலவழித்து, விஞ்ஞானமற்ற முறையில் கட்டப்பட்டதால், அதை இடிக்க முயன்றார். பத்மசரோவரம் திட்டம் ஏற்கனவே நிறுவனத்தால் கைவிடப்பட்டதால், பண்ட் அகற்றப்படலாம் என்று அவர் வாதிட்டார்.\nமனு விசாரணைக்கு வந்தபோது, ​​கே.எம்.ஆர்.எல். வக்கீல் சி.ஆர்.இசட் -1 பிரிவில் சேர்க்கப்பட்ட சிலவானூர் ஏரி நீர்வழியாக இருப்பதால், இந்த திட்டத்திற்கு கேரள கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் (கே.சி.இசட்.எம்.ஏ) ஒப்புதல் தேவை என்று கே.எம்.ஆர்.எல். KCZMA இலிருந்து ஒப்புதல் பெறுவதற்கு முன்பே மொட்டு கட்டுமானம் தொடங்கப்பட்டது. உண்மையில், 2019 டிசம்பர் 13 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், கே.சி.இசட்.எம்.ஏ, நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலித்து, குடிமை அமைப்பு கோரிய ஒப்புதலை நிராகரித்தது. ஏனென்றால், முன்மொழியப்பட்ட சரோவரம் நடைபாதை மற்றும் சைக்கிள் பாதையை நிர்மாணிப்பது அலை பாதிப்புக்குள்ளான நீர்வழங்கல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளின் ஓட்டத்தைத் தடுக்கும். இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி பிப்ரவரி 13 அன்று கார்ப்பரேஷன் KCZMA க்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால் அது மறுபரிசீலனை செய்யப்படவில்லை.\nஇந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று நீதிமன்றம் கூறியது. இந்த திட்டத்தை செயல்படுத்த முடிந்தால், சைக்கிள் பாதை மற்றும் நடைபாதை அமைப்பதற்காக ஏரியில் கட்டப்பட்ட தற்காலிக கட்டைகளை அகற்றுவது கே.எம்.ஆர்.எல் மற்றும் நிறுவனத்தின் கடமையாகும்.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:அரசியல் ஆதாயங்களுக்காக ஸ்டாலின் முதலை கண்ணீர் சிந்துகிறார்: சட்ட அமைச்சர்\nNext Post:மேற்கு ஜெர்மன் சுங்க அலுவலகத்தில் இருந்து 7.7 மில்லியன் அமெரிக்க டாலர் திருடப்பட்டது\nவாட்ச்: லக்னோவில் போலீஸ்காரருக்கு முன்னால் பெண் வண்டி ஓட்டுநரை அடித்தார்; வீடியோ வைரலாகிறது\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்\n“ஊழல் நடத்தைக்காக” ஜனநாயக சார்பு பாடகர் அந்தோனி வோங்கை ஹாங்காங் அதிகாரிகள் கைது செய்தனர்\nUNSC தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றுகிறது; வெளிநாட்டு தூதர்களுக்கு சிறப்பு உணவு தடையை அனுப்புகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/News/government-of-tamil-nadu-orders-to-open-water-from-kudirayaru-dam", "date_download": "2021-08-02T09:05:49Z", "digest": "sha1:TGBRSEBUFVRIAVLNYUWAVUUBMLKUBUVA", "length": 5085, "nlines": 82, "source_domain": "www.fnewsnow.com", "title": "குதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு! | Government of Tamil Nadu orders to open water from Kudirayaru dam! - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nகுதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nகுதிரையாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், \"திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், குதிரையாறு அணையிலிருந்து வலது பிரதானக் கால்வாய் பாசனம், இடது பிரதானக் கால்வாயில் நேரடி பாசனம் மற்றும் பழைய நேரடி ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரியுள்ள வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திண்டுக்கல் மாவட்டத்தில் பழைய மற்றும் புதிய பாசனப் பரப்பு 4455.52 ஏக்கர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பழைய நேரடி பாசனப் பரப்பு 185.65 ஏக்கர் ஆக மொத்தம் 4641.17 ஏக்கர் பயன்பெறும் வகையில், 21/05/2021 முதல் 04/07/2021 வரை 45 நாட்களுக்கு, வினாடிக்கு 31 கனஅடி வீதம் மொத்தம் 99.00 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.\" இவ்வாறு பொதுப்பணித்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\nசளைக்காத உழைப்புக்கு ராகுல் டிராவிட்\nஆடி கிருத்திகை சிறப்பு என்ன தெரியுமா\nவீட்டிலேயே பயன்படுத்தும் 50 வகை மருத்துவங்கள் என்ன\nரோஜா பூவில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் \nஅதிமதுரம் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி\nஉண்மையே பேசு - சிறுகதை\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-08-02T09:49:36Z", "digest": "sha1:5ICMITYGOYRJFPA43E25AVQWLYAKYXTO", "length": 5893, "nlines": 84, "source_domain": "www.jananesan.com", "title": "பாதுகாப்புத்துறை அமைச்சர் | ராஜ்நாத் சிங் | ஜனநேசன்", "raw_content": "\nபாதுகாப்புத்துறை அமைச்சர் | ராஜ்நாத் சிங்\nமுன்னாள் ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது…\nபாதுகாப்புத்துறை அமைச்சர் | ராஜ்நாத் சிங்\nமுன்னாள் ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர்…\nபாதுகாப்புத்துறை புத்தாக்கத்துக்கு ரூ.498.8 கோடி செலவு செய்ய பாதுகாப்புத்துறை…\nபாதுகாப்புத்துறை அமைச்சர் | ராஜ்நாத் சிங்\nபாதுகாப்புத்துறை புத்தாக்கத்துக்கு ரூ.498.8 கோடி செலவு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nரூ.43,000 கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கான…\nபாதுகாப்புத்துறை அமைச்சர் | ராஜ்நாத் சிங்\nசுமார் ரூ.43,000 கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளி…\nடிஆர்டிஓ தயாரித்த மூன்று கருவிகளை, முப்படைத் தளபதிகளிடம் வழங்கினார்…\nபாதுகாப்புத்துறை அமைச்சர் | ராஜ்நாத் சிங்\nராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் தயாரித்த மூன்று கருவிகளை, முப்படைத் தளபதிகளிடம், பாதுகாப்புத்துறை…\nபிரமோஸ் சூப்பர்சோனிக் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி –…\nபாதுகாப்புத்துறை அமைச்சர் | ராஜ்நாத் சிங்\nஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில், மொபைல் லாஞ்சர் மூலம், இன்று காலை 10:30 மணியளவில்…\nசுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க 101 வகையான பாதுகாப்பு…\nபாதுகாப்புத்துறை அமைச்சர் | ராஜ்நாத் சிங்\nஇந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வண்ணம் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் என்ற…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில்…\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹ���ுஸ் – உலக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/isros-pslv-c49/", "date_download": "2021-08-02T09:36:18Z", "digest": "sha1:UKMVEMC6Y5WHGPOPUGYYAMHCKZKBLAFS", "length": 2494, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "ISROs-PSLV-C49 | ஜனநேசன்", "raw_content": "\nபி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வெற்றி பெற பள்ளி மாணவர்கள்…\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து…\nமஹாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு – வீடு வீடாக…\nதியானலிங்க வளாகம் தற்காலிகமாக மூடல்..\nபேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.\n5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்…\nதிருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனம் செய்ய 5…\nமதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல்…\nமுத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில்…\nகாவல்துறை மீதான மக்களின் தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும்…\nஹவுஸ் ஃபுல் ஆன கிளப் ஹவுஸ் – உலக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuttramkuttrame.com/2020/04/30/plan-to-provide-food-for-20-lakhs-of-poor-people/", "date_download": "2021-08-02T09:09:59Z", "digest": "sha1:TFJRVZ3DKXMTX7WDTBADPU25BDEJNKI6", "length": 8182, "nlines": 161, "source_domain": "www.kuttramkuttrame.com", "title": "ஏழை எளியோருக்கு உணவு 20 லட்சம் பேருக்கு வழங்க திட்டம்! – Kuttram Kuttrame", "raw_content": "\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..விஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..கிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..சிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nஏழை எளியோருக்கு உணவு 20 லட்சம் பேருக்கு வழங்க திட்டம்\nPublish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்\nபசியில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிப்பதற்காக ஏழை, எளியோருக்கு உணவு என்னும் முயற்சியை துவங்கி இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர் வீடின்றி சாலையோரம் தங்கியிருக்கும் ஒரு சிலருக்கு அத்தியாவசிய பொருட்களை கொடுத்தாலும் சமைக்க வழியின்றி தவிப்பதாக கூறியுள்ளார். அதனால் 25 நகரங்களில் பசியில் இருக்கும் 20 லட்சம் பேருக்கு உணவளிக்க ஏழை, எளியோருக்கு உணவு என்னும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் - சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nசிம்பு மற்றும் கௌதம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..\nநடிகர் விஜய்யை சந்திக்க சென்ற ரசிகர்..\nகோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்..\nஉணவகத்தில் சாப்பாட்டில் பல்லி விழுந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nமீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்..\nவிஜய் – சமந்தாவின் செல்பிபுள்ள பாடல் படைத்த சாதனை..\nகிரிக்கெட் போட்டியின் போது பேய் நுழைந்துவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/10/17-7EXH-n.html", "date_download": "2021-08-02T08:09:20Z", "digest": "sha1:YRMWFCL6HV3OGR5VUFHSXYRTTGIC44S4", "length": 4451, "nlines": 32, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ஹரியானா மாநிலத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 17 இளம் குற்றவாளிகள் தப்பி ஓட்டம்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஹரியானா மாநிலத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 17 இளம் குற்றவாளிகள் தப்பி ஓட்டம்\nஹரியானா மாநிலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 17 இளம் குற்றவாளிகள் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.\nஹிசார் பகுதியில் இருந்த அந்த சீர்திருத்தப் பள்ளியில் இருந்த இவர்கள் பாதுகாப்புப் படையினரைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இவர்களில் 8 பேர் கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று மாலை நடந்த இந்த நிகழ்வில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். தப்பியவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளதாக ஹிசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வான் சிங் தெரிவித்துள்ளார்.\nகடலூர் தலைமை அரசு மருத்துவ��னை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/blog-post_35.html", "date_download": "2021-08-02T08:06:59Z", "digest": "sha1:UNS7ZZMIM3K4UZX2ELNT5NVKPKKCR2JU", "length": 5363, "nlines": 32, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "திருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதிருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்\nதிருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nதிருப்பூரை அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீதும், சாலையில் நின்றிருந்தவர்கள் மீதும் மோதியதாக தெரிகிறது. இதில் சாலையோரம் நின்றிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nகார் மோதியதில் ஐந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், விளம்பர பலகைகள் ஆகியவை சேதமடைந்ததாக தெரிகிறது. விபத்திற்கு காரணமான காரில் இருந்தவர்களை பிடித்து, காருடன் பூண்டி காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்தார்களா அவர்கள் யார் என பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். பூண்டி சிக்னலில் போலீசார் இல்லாத காரணத்தால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.\nகடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை\nஅரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..\nமுகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/06/blog-post_26.html", "date_download": "2021-08-02T08:38:00Z", "digest": "sha1:WLYD3A6XVB3KD67TQ5L2R3DKD4IKWK7T", "length": 8185, "nlines": 55, "source_domain": "www.yarlsports.com", "title": "சம்பியனாகியது கரணவாய் கொலின்ஸ் - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > சம்பியனாகியது கரணவாய் கொலின்ஸ்\nதிருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலையத்தின் 71ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கலாமன்ற சனசமூக நிலையமும் , கலாமன்ற விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய மாபெரும் மென்பந்து சுற்று போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.\nதிருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் சனமூக நிலைய தலைவர் இ. பகீரதன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சனமூக நிலையத்தின் போசகர் பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக ந. ஆறுமுகதாஸ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முத்துத்தம்பி மகா வித்தியாலய அதிபர் இ.பசுபதீஸ்வரன் , நல்லூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகஸ்தர் க.மயூரன் மற்றும் J/ 114 கிராம சேவையாளர் ம.வசந்தரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇறுதிப்போட்டியானது 7 வீரர்கள் - ஆறு பந்து பரிமாற்ற போட்டியாக நடைபெற்றது. அதில் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகமும் கொட்டடி இளங்கதிர் விளையாட்டு கழகமும் மோதின.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை கொலின்ஸ் விளையாட்டு கழகம் நிர்ணயிக்கப்பட்ட ஆறு பந்து பரிமாற்றத்தில் மூன்று இலக்குகளை இழந்து 58 ஓட்டங்களை பெற்றனர். துவாரகன் 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.\nஅதனை அடுத்து 59 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொட்டடி இளங்கதிர் விளையாட்டு கழகத்தினர் நிர்ணயிக்கப்பட்ட ஆறு பந்து பரிமாற்றத்தில் 55 ஓட்டங்களையே பெற்றனர்.\nமூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் பருத்தித்துறை கொலின்ஸ் விளையாட்டு கழக அணி வெற்றி பெற்று வெற்றி கேடயத்தை பெற்றுக்கொண்டதுடன் , 20 ஆயிரம் ரூபாய் பண பரிசிலையும் பெற்றனர். இரண்டாம் இடத்தை பெற்ற இளங்கதிர் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்திற்கான கேடயத்தினை பெற்றுக்கொண்டது 10ஆயிரம் ரூபாய் பண பரிசிலையும் பெற்றனர். கொலின்ஸ் விளையாட்டு கழகத்திற்க்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\nவடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்\nவடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகிய...\nவடமாகாண பிரீமியர் லீக் 2020 வெற்றிவாகை சூடியது யாழ் அணி. வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் மு...\nஇறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மறைந்த நடுவர்கள் கிண்ண ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154310.16/wet/CC-MAIN-20210802075003-20210802105003-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}